news_id
int64
201
2.26M
news_date
stringlengths
25
29
news_category
stringclasses
3 values
news_title
stringlengths
1
636
news_article
stringlengths
1
138k
201
2010-03-25T01:55:00+05:30
தமிழகம்
மின் தடையை கண்டித்து கிராம மக்கள் மறியல் : போலீஸ் தடியடியால் பதட்டம்
புதுக்கோட்டை : மின்தடையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் மீது, போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் ஊராட்சி தலைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். ஆவேசமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல்வீசி எதிர் தாக்குதல் நடத்தியதில் போலீசார் ஐந்து பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்ற...
202
2010-03-25T01:55:00+05:30
தமிழகம்
விஷத்தன்மையுடன் கோதுமை இறக்குமதி; மூவர் கைது
சென்னை : ஆஸ்திரேலியாவிலிருந்து விஷத் தன்மையுடன் சென்னை வந்த 1,250 டன் கோதுமையை, சுங்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். தரமானது தான் என போலி சான் றிதழ் கொடுத்து எடுத்துச் செல்ல முயன்ற சுங்கத்துறை ஏஜன்டுகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். கோதுமை இறக்குமதியில் சதிவேலை உள்ளதா எனவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள...
203
2010-03-25T01:56:00+05:30
தமிழகம்
சாருலதாவுடன் தொடர்பு உதவி கமிஷனர் சஸ்பெண்ட்
சென்னை : போலி ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி சாருலதாவிடம் தொடர்பு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், உதவி கமிஷனர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை நகரில், சாருலதா என்பவர் தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி என்று கூறிக் கொண்டு, பல இளைஞர்களிடம், போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நகை, பணம் பெற்றுள்ளார். காவல் துறையிலேயே இ...
204
2010-03-25T01:56:00+05:30
தமிழகம்
பழைய தலைமை செயலக ராணுவ குடோனில் தீ விபத்து
சென்னை : பழைய தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ குடோனில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய தலைமைச் செயலகத்தில் ராணுவ குடோன் உள்ளது. இந்த குடோனில் ராணுவத்தினர் பயன்படுத்திய தஸ்தாவேஜுகள், நோட்டு புத்தகங்கள், பொருட்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று இரவு 10.30 மணியளவில் ராணுவ குடோனில்...
207
2010-03-25T02:00:00+05:30
இந்தியா
11 பேரை பலி வாங்கிய பஸ் ஆற்றில் பாய்ந்தது எப்படி?
கோட்டயம் : கேரள மாநிலம், சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி வந்த தனியார் பஸ் மின் கம்பத்தில் மோதி, ஆற்றில் விழுந்த விபத்தில் 11 பேர் இறந்தனர். ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றப் போனவரும் மூச்சுத் திணறி இறந்தார். கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி நேற்று முன்தினம் பிற்பகல், 40 பயணிகளுடன் தன...
208
2010-03-25T02:00:00+05:30
இந்தியா
மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை
புவனேஸ்வர் : ஒரிசா, பீகார் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நேற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இங்கு நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், பாதுகாப்பு படையினர் மூவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் கோபமடைந்துள்ள மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு பட...
210
2010-03-25T02:01:00+05:30
இந்தியா
கொலைக் குற்றத்தில் தொடர்பு பாலிவுட் நடிகர் ஹாஸ்மி கைது
புதுடில்லி : பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவன், கொலைக் குற்றத்தில் தொடர்புடையதால் போலீசார் நேற்று அவனை கைது செய்தனர். ரகீமுதீன் என்ற பால்லே என்ற இம்ரான் ஹாஸ்மி (26) என்பவன், டில்லியிலுள்ள வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டான். இவன், உத்தரபிரதேசத்தில் இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடையவன்...
212
2010-03-25T02:02:00+05:30
இந்தியா
குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரி, திப்ராயப்பேட்டையில் அடுக்கு மாடி வீடுகளின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுச்சேரி உப்பளம் தொகுதி திப்ராயப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 12 அடுக்கு மாடி கட்டடங்கள் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 30 ஆண...
213
2010-03-25T02:04:00+05:30
தமிழகம்
100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது வெயில்
சென்னை : தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாலை 4 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு, காலை 8 மணி வரை நீடித்தது. பருவ மழை...
215
2010-03-25T02:06:00+05:30
தமிழகம்
கதர் வாரியத்தில் அவசியமாகி உபரியாகி போன ஊழியர்கள்
மதுரை : கதர் கிராமத் தொழில் வாரியத்தில் உபரி ஊழியர்கள் அவசியமானவர்களாகி, மீண்டும் உபரியாக மாறிய வினோதம் நடந்துள்ளது. கதர் கிராமத் தொழில் வாரியத்தில், 2001 முதல் 2005 வரை 1196 பதவிகள் நீக்கம் செய்யப்பட்டன. அதில் சில பதவிகள், பதவி உயர்வு பெற முடியாத அளவிற்கு இருக்கிறது. ""இதனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இல...
216
2010-03-25T02:06:00+05:30
தமிழகம்
கருத்து கணிப்பு வெளியிட தடை மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை : பிரசாரம் ஓய்ந்த பின்னும், தேர்தல் நாளன்றும் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேர்தல் விதிகளின்படி, தேர்தல் நாளன்று (27ம் தேதி), ஓட்டு அளித்து விட்டு வெளியே வருபவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவதும், அதை ...
218
2010-03-25T02:08:00+05:30
தமிழகம்
டெண்டர் விண்ணப்பங்களை இணையதளத்தில் எடுக்கலாம்
சென்னை : டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய டெண்டர்களில், கான்ட்ராக்டர்கள் விண்ணப்பம் பெறுவதே பெரும் சிக்கலாக இருந்தது. பல இடங்களில் அரசியல் முக்கிய புள்ளிகளின் தலையீட்டால், கான்ட்ராக்டர்களை விண்ணப்பம் வாங்க விடாமலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்க விடாமலும்...
219
2010-03-25T02:08:00+05:30
தமிழகம்
மருந்துகளை திருப்பி அனுப்பிய மதுரை வணிகர்கள்
மதுரை : கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் காலாவதியானவை என தெரியவந்ததை தொடர்ந்து, 400 பாட்டில்களை மதுரை மருந்துக்கடை உரிமையாளர்கள் திருப்பி அனுப்பினர். சென்னையில் காலாவதியான மருந்துகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் உயிரோடு விளையாடியவர்களை போலீசார் கைது செய்தனர். மருந்துகளையும் பறிமுத...
220
2010-03-25T02:09:00+05:30
தமிழகம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் புறக்கணிப்பு
திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் மாநில தலைவர் தம்பித்துரை கூறியதாவது: ஏப்ரலில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மு...
221
2010-03-25T02:09:00+05:30
தமிழகம்
பென்னாகரத்தில் பட்டுவாடா சுறுசுறுப்பு இன்றுடன் பிரசாரம் முடிவு
தர்மபுரி:பென்னாகரம் தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பணம், பரிசுப் பொருட்கள் வினியோகம் சுறுசுறுப்பாக நடக்கிறது.துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் இன்று காலை முதல்...
223
2010-03-25T02:10:00+05:30
தமிழகம்
கூடுதல் விலை அறிவிப்பால் இனித்த கரும்பு பாசனநீர் பற்றாக்குறையால் கசக்கிறது
தியாகதுருகம் : பருவமழை பொய்த்ததால் தியாகதுருகம் பகுதி கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கிணறுகளில் பாசனத்திற்கு போதுமான நீர் கிடைக்கும் என்று நம்பி கூடுதல் பரப்பில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்த...
224
2010-03-25T02:11:00+05:30
தமிழகம்
இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்
சென்னை : திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் இளைஞர்களுக்கான பன்னாட்டு பயிற்சி முகாம் ஏப்., 20ல் துவங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ணா தபோவனத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில், ஒரு மாத பன்னாட்டு பயிற்சி முகாம் வரும் ஏப்., 20ம் தேதி துவங்கி, மே மாதம் 20ம் தேதி வரை நடை...
225
2010-03-25T02:11:00+05:30
தமிழகம்
நெல்லை மாநகராட்சி பட்ஜெட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.திருநெல்வேலி மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் சுப்ரமணியன் நேற்று சமர்ப்பித்தார். கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வரவு 91.28 கோடி ரூபாயாகவும், செலவு 101.72 கோடி ரூபாயாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்...
229
2010-03-25T02:14:00+05:30
தமிழகம்
தமிழகம் முழுவதும் முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாட புத்தகங்கள்
கடலூர் : தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 1 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திலிருந்து, அந்தந்த மா...
230
2010-03-25T02:14:00+05:30
தமிழகம்
இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை
சென்னை:மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் அடங்கிய சட்டசபை தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஓட்டுப் பதிவு எண்ணிக்கை நேற்று மாலை வெளியானது. தோல்வி அடைந்த இளைஞர் காங்கிரசார் மறுதேர்தலை நடத்த வலியுறுத்தி, நாற்காலியை எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் ...
231
2010-03-25T02:15:00+05:30
தமிழகம்
பத்து ஆண்டுகளாக புகை பிடிப்பவருக்கு காச நோய் வாய்ப்பு பத்து மடங்கு அதிகம்
தேனி : பத்து ஆண்டுகளாக தொடர்ந்து புகை பிடித்து வருபவருக்கு, காச நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. வளர்ச்சி செயலாக்க குழுமம் மற்றும் பங்குதாரர்கள் சார்பில், உலக காசநோய் தினம் குறித்த கருத்தரங்கம் தேனியில் நடந்தது. திட்ட இயக்குனர் வனஜா தலைமை வகித்தார். தேனி மருத்துவ கல்லூ...
235
2010-03-25T02:17:00+05:30
தமிழகம்
தொழில் நுட்ப உதவியாளர் 2-வது பட்டியல் : மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கு
தேனி : மின்வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் இரண்டாவது பட்டியலை வெளியிடாமல், மின்வாரிய நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. தமிழக மின்வாரியத்தில் 2,600 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,200 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை பூர்த்தி செய்ய நடத்திய போராட்டங்களுக்கு பின...
236
2010-03-25T02:17:00+05:30
தமிழகம்
சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்
சுற்றுச் சூழல்பாதிப்பால் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது. இதற்கு காரணம் இயற்கையை மனிதர்கள் சின்னா பின்னமாக்குவதே. இன்றைய அவசர உலகில் தம்வீட்டு குப்பையை அடுத்த வீட்டு வாசலில் குவிப்போரே அதிகம். நம்மை சுற்றியுள்ள பகுதியை, சுத்தமாக, ஆரோக்கியமாக, மாசுபடுவதில் இருந்து பாதுகாக்கும் பொதுநலம் உள்ளோர் வெகு சிலரே. சுற...
237
2010-03-25T02:18:00+05:30
தமிழகம்
போராட தயாராகும் பள்ளி அலுவலர்கள்
மதுரை: தமிழ்நாடு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் துரைராஜ் அறிக்கை:சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. வேலை நியமன தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டு நான்காண்டுகளாகி விட்டது. அதன் பின்னும், பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், கா...
238
2010-03-25T02:18:00+05:30
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேச்சு :சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு கிடைக்காத வாய்ப்பான தமிழகத்தை ஆளும் வாய்ப்பை கருணாநிதிக்கு மக்கள் கொடுத்தனர். வீராணம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டதைப்போல ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டார். மீனுக்கு தூண்டில் போடுவதுபோல் கலர், "டிவி' உள்ளிட்...
240
2010-03-25T02:19:00+05:30
தமிழகம்
பங்குனி உத்திர திருவிழா பழநிக்கு சிறப்பு பஸ்கள்
திண்டுக்கல்: பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்காக, பல் வேறு இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அறிக் கை:பழநி கோயிலில், மார்ச் 29ல் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற் காக மார்ச் 28 முதல் மார்ச் 30வரை, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப...
242
2010-03-25T02:20:00+05:30
தமிழகம்
காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த காங்.,தொகுதி பொறுப் பாளர் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. தண்டபாணி எம்.எல்.ஏ., தலையிட்டு சமாதானப்படுத்தினார். திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய மூன்று சட்டசபை தொகுதிக்கு காங்., பொறுப்பாளர் கள் தேர்தல் நேற்று திண் டுக்கல் நாராயண அய்யர் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக...
243
2010-03-25T02:20:00+05:30
இந்தியா
தேசிய நெடுஞ்சாலையாக 10 ஆயிரம் கி.மீ., மாநில சாலைகள் தரம் உயர்வு
புதுடில்லி : மாநில அரசின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 50 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தக் கோரி,...
245
2010-03-25T02:21:00+05:30
இந்தியா
மின் திருட்டால் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு: கட்டண வசூலில் குளறுபடி
புதுடில்லி : இந்தியாவில், மின் திருட்டு மற்றும் சரியான கட்டண வசூலிப்பு நடைமுறை இல்லாமை போன்றவற்றால், மின் துறைக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மின்சாரத்தை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவு, கடந்த 2005-06ம் ஆண்டு யூனிட்டிற்கு 3.60 ரூபாயா...
246
2010-03-25T02:21:00+05:30
தமிழகம்
மூணாறில் கட்டுமான பணிகள் நிறுத்தத்தால் தொழிலாளர் பாதிப்பு
மூணாறு: மூணாறில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கேரளா ஐகோர்ட் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்துள்ளதால், கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்காத நிலையில் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மூணாறில் அரசு நிலங்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்கப்படும், சட்ட விரோதமாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனால் மூணாறில் சுற்றுப்புற...
249
2010-03-25T02:22:00+05:30
தமிழகம்
கேராள செல்லும் ஜீப்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது: அதிவேகம், கூடுதல் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் விபரீதம்.
கூடலூர்: கேரளாவில் உள்ள எஸ்டேட் வேலைக்கு தமிழகத்திலிருந்து பெண்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் அதிவேகமாகவும், கூடுதலான ஆட்களையும் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. கூடலூர், கம்பம் பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட் வேலைகளுக்கு செல்கின்றனர். இவர்களை...
250
2010-03-25T02:22:00+05:30
இந்தியா
வரதட்சணை தண்டனையில் தப்ப புது சட்டம் வருகிறது
புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது...
251
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
தீயணைப்பு வீரர் தற்கொலை
போடி: போடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் (29). போடி தீயணைப்பு நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், மனைவி தாமரைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த முத்துச்செல்வம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிராந்தியில் பூச்சை மருந்தை கலந்து குடித்தார். தேனியில் தனியார் ஆஸ்பத்திரிய...
252
2010-03-25T02:23:00+05:30
இந்தியா
குளுகுளு சிம்லாவில் வெயில் தலைதூக்குது
சிம்லா : கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 8 டிகிரி முதல் 10 டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, சிம்லா வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது: கடந்த 2004ம் ஆண்டு, மார்ச் மாதம் 7ம் தேதி வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியசை எட்டியது. இந்தாண்டு,...
253
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
அரசு இடத்தை அதிக தொகைக்கு வாடகை கேட்டும் குறைவாக விடுவது ஏன் : கவுன்சிலர்கள் கேள்வி
சிவகாசி: சிவகாசி நகராட்சி கூட்டம் தலைவர் ராதிகாதேவி தலைமையில், துணைத்தலைவர் அசோகன், கமிஷனர் விஜயராகவன் முன்னிலையில் நடந்தது.முனீஸ்வரன்: பஸ்ஸ்டாண்டில் காலியிடத்தை மாதவாடகைக்கு குத்தகை அடிப்படையில் விடுவதற்கு 1200, 1300 ரூபாய்க்கு அதிக தொகை என நிர்ணயம் செய்து தீர்மானம் வந்துள்ளது. ஆனால் அதே இடத்தை மாதம் ரூ.3000க்கு வாடக...
254
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
ஹர்கிஷன் சிங் பிறந்த நாள் பிரகாஷ் கராத் புது தகவல்
புதுடில்லி:விவசாய குடும்பத்தில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங்கின் உண்மையான பிறந்த தேதி தெரியாததால், தியாகி பகத் சிங் மறைந்த தினத்தை தனது பிறந்த தேதியாக அறிவித்துக் கொண்டார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் 94வது பிறந்த நாள், டில்லியில் உள்ள கட்சி தலைமையக...
255
2010-03-25T02:24:00+05:30
இந்தியா
முஸ்லிம் வாரிய பதவிகளில் பெண்கள் பலம் அதிகரிப்பு
லக்னோ : அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் 21வது மாநாடு நடந்தது. இதன் உறுப்பினர்களில் பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே வாரியத்தின் நிறுவனரும் உறுப்பினரு...
257
2010-03-25T02:24:00+05:30
தமிழகம்
கிராமங்களில் மின் தடை நேரம் அதிகரிப்பு: 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு
விருதுநகர்: கிராமப்புறங்களில் மின்தடை அதிகரிப்பு செய்திருப்பதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோடைகாலம் துவங்கி விட்டதால், மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் சப்ளை செய்ய முடியாமல் திணறும் மின்வாரியம் வருகின்றனர். அறிவிக்கப்படாமல் மின் தடை செய்கின்றனர...
258
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ராணுவ வீரர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி அருகே வைத்தியலிங்காபுரத்தை சேர்ந்தவர் அக்னி ராஜ்(27). ராணுவ வீரரான இவரது மைத்துனி சாந்தி(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளி மாணவர் ராஜாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அ...
260
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ராஜதானி எக்ஸ்பிரசை காப்பாற்றியவர்களுக்கு மம்தா பரிசு
புதுடில்லி:புவனேஸ்வரிலிருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில், மாவோயிஸ்ட்களால் தகர்க்கப்பட்ட தண்டவாளத்தில் வரும் போது தடம் புரண்டது. இச்சம்பவத்தில் ரயிலை திறமையாகக் கையாண்டு, பாதிப்பு ஏற்படாமல் காத்த அதன் பணியாளர்களுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பரிசு அறிவித்துள்ளார். சமீபத்தில், ஒரிசா தலைநகர் புவன...
261
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ஏ.டி.எம்., மையங்களில் கள்ளநோட்டு ?
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், பரமக்குடி பகுதி ஏ.டி.எம்., களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக, வாடிக்கையாளர்கள் பீதியடைந்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேவைக்காக ஏ.டி.எம்., சேவை மையங் களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. இங்கு எடுக்கும் பணத்தில் சில நோட்டுக்கள் கள்ள நோட்டுகளாக உள்ளன. இது த...
265
2010-03-25T02:27:00+05:30
தமிழகம்
அழிந்து வரும் தோட்டக்கலை பண்ணை ரூ. பல லட்சம் பொருட்கள் மாயம்
கமுதி: கமுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணை கட்டடம் பராமரிப்பின்றி அழிந்து வருவதோடு, இங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் மாயமாகி உள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மர கன்றுகள் வளர்த்து விற்பனை செய்ய ,கமுதியில் மாதிரி தோட்டக் கலை பண்ணை துவங்கப் பட்டது. இங்கு போதிய இடம் , தண்ணீர் வசதிகள் இருந...
266
2010-03-25T02:27:00+05:30
தமிழகம்
புத்தக சுமையை குறைக்க புதிய வழி ஆராய்ந்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : மாணவர்களுக்கு பாடப் புத்தக சுமையை குறைக்கும் புதிய வழிமுறையை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க நான் புதிய வழியை கண்டுபிடித்துள்ளேன். ஒவ்வொரு பாடப் புத்தகத்...
268
2010-03-25T02:28:00+05:30
தமிழகம்
மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வக்கீல்கள் வாதம்
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று நடந்த வழக்கு விசாரணைகளின் போது வக்கீல்கள் தமிழில் வாதாடினர். ஐகோர்ட்டில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும், தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், மதுரை ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வக்கீல்கள் துவக்கினர். பிறகு தமிழில் வாதாட...
272
2010-03-25T02:29:00+05:30
தமிழகம்
மகளுடன் நர்ஸ் தற்கொலை வழக்கு : ஜாமீன் கேட்டு டாக்டர் மனு
கோவை : விஷ ஊசியால் மகளை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்ட நர்ஸ் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி (40). கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திர...
273
2010-03-25T02:30:00+05:30
தமிழகம்
சிங்கப்பூரில் தமிழர்களுக்கு சித்ரவதை : தப்பி வந்தவர் ஐகோர்ட்டில் தகவல்
மதுரை : சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் சித்ரவதைக்குள்ளாவதாக, 12 ஆண்டுகளுக்கு முன் மாயமான வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை அருகே மேலப்பூங்குடியை சேர்ந்த சிட்டு தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் கணவர் கிருஷ்ணன், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். 1998ல் சொந்த...
274
2010-03-25T02:31:00+05:30
தமிழகம்
வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன், மாமியாருக்கு சிறை
திருநெல்வேலி : வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்திய கணவர்,மாமியாருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்த பலவேசம் மகள் சங்கரிக்கும், அம்பாசமுத்திரம், வாகைகுளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கணேசனுக்கும் கடந்த 2007 டிச.,16ல் திருமணம் நடந்தது. பெண் வீ...
275
2010-03-25T02:33:00+05:30
தமிழகம்
காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த வழக்கு : சரணடைந்த இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
சென்னை : காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளிகள் இருவர், இன்று கோர்ட் அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் காலாவதியான மருந்துகளை சேகரித்து, சென்னை நகர் முழுவதும் விற்பனை செய்த வழக்கில் கொடுங்கையூர் ரவி என்ற பிரபாகரன்(40),...
276
2010-03-25T02:36:00+05:30
தமிழகம்
தந்தையுடன் செல்ல மைனர் பெண்ணுக்கு ஐகோர்ட் அனுமதி
மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடத்தல் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட மைனர் பெண்ணை தந்தையுடன் செல்ல அனுமதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரை சேர்ந்த சாமிநாதன் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் 14வயது மகள் பிப்ரவரி 26ம் தேதி பள்ளி சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என...
277
2010-03-25T02:36:00+05:30
தமிழகம்
ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு இன்சூரன்ஸ்: ஐகோர்ட் யோசனை
மும்பை : ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வகையில், இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தை மும்பை ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2004ல் சமீர் ஜவேரி (39) என்பவர், புறநகர் ரயிலில் அடிபட்டு தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். ரயில்வே விபத்துக்களில் இறந்தோரின் குடும்பத...
278
2010-03-26T01:18:00+05:30
தமிழகம்
காலாவதியான மருந்துகளுடன் உள்ள குடோன்களுக்கு சீல் : தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள், போலீஸ் தீவிரம்
சென்னை : தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகளை பதுக்கி வைத்துள்ள குடோன்கள் மற்றும் மருந்துக் கடைகளில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர சோதனை நடத்தி, "சீல்' வைத்து வருகின்றனர். சென்னையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், பல இடங்களில் உள்ள குடோன்கள்,"சீல்' வைக்கப்பட்டன. காலாவதியான மருந்துகளை...
288
2010-03-26T03:41:00+05:30
தமிழகம்
மதுரையில் ஏப்.6,7,8 ல் தினமலர் வழிகாட்டி ஒரே இடத்தில் 67 கல்வி நிறுவனங்கள்: 20 கல்வி வல்லுநர்களின் கருத்துரைகள்
மதுரை:பிளஸ் 2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் என்று நீங்கள் குழம்பவேண்டாம். ஏப்., 6 வரை காத்திருங்கள். தினமலர் சார்பில் மதுரையில் மூன்று நாட்கள் நடக்கும் கல்வி கண்காட்சி, கருத்தரங்கு உங்களுக்கு வழிகாட்டும்.பெற்றோர்களே...உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வின் அடிப்படை கல்லூரி படிப்பு தான். அவர்கள் டாக்டர் ஆக வேண்டுமா, இன்ஜி...
289
2010-03-26T03:43:00+05:30
தமிழகம்
குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ஏப்., 15ல் ரயில் போக்குவரத்து துவக்கம்:சீரமைத்த பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி
குன்னூர்:குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், நிலச்சரிவால் சேதமடைந்த 66வது எண் கொண்ட பாலத்தில் சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, நேற்று சோதனை ஓட்டம் விடப்பட்டது.நீலகிரியில் கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழையால், ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பல இடங்களில்...
290
2010-03-26T03:45:00+05:30
தமிழகம்
தனியாரிடம் உள்ள கோவில் நிலங்களை மீட்க அதிகாரிகளை நியமித்தது அரசு
தேனி:தமிழகம் முழுவதும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டெடுக்க அரசு, அதிகாரி களை நியமித்து துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நில உடைமை மேம் பாட்டு திட்டத்தின் கீழ், கோவில் நிலங்களை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆயிரக் கணக்கான இந்து கோவில...
291
2010-03-26T12:53:00+05:30
தமிழகம்
பாஸ்போர்ட் வழங்கும் முறையை எளிமைப்படுத்த முடியாது: மத்திய அமைச்சர் சசி தரூர் திட்டவட்டம்
கோவை:''பாதுகாப்பு காரணங்களால், சாதாரண பாஸ்போர்ட் தரும் முறையை எளிமைப்படுத்த சாத்தியமில்லை,'' என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பின், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, நாடு முழுவ...
293
2010-03-26T23:52:00+05:30
இந்தியா
மாவோயிஸ்டுகள் கையில் தெலுங்கானா போராட்டம்
தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கை போராட்டத்துக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜே.ஏ.சி.,), தொடர்ந்து பலவீனப்பட்டு வருவதையடுத்து, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, தலைமையை கையில் எடுக்க முயலுகின்றனர்.இதனால், இதுவரை அரசியல் ரீதியில் சென்று கொண்டிருந்த தெலுங்கானா போராட்டத்தின் முகம் முற்றிலும் வ...
299
2010-03-26T23:56:00+05:30
தமிழகம்
புதுசெல்லாம் பழசாகுது!கட்டி முடித்த கட்டடங்களில் பூட்டு :
செம்மொழி மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடக்கும் நிலையில், ஏற்கனவே நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நகரில் உருவான பல புதிய கட்டடங்கள், திறக்கப்படாமலே பழமையாகி வருகின்றன.கோவை மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் வேகம் பெற்றுள்ளன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், பில்லூர் இரண்டாவது குடிநீ...
300
2010-03-26T23:57:00+05:30
தமிழகம்
அரசு பஸ் டிரைவர்களுக்கு கிடுக்கிப்பிடி : டீசலை சேமிக்க நடவடிக்கை
சிவகங்கை : டீசலை சிக்கனப்படுத்த, குறைவான பயணிகள் உள்ள நிறுத்தங்களில் நிற்க வேண்டாம், என அரசு பஸ் டிரைவர்களுக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அவ்வப்போது டீசல் கட்டணம் உயர்த்தப்படுவதாலும், முறைகேடுகளாலும், போக்குவரத்து கழகம், ஒன்பது கோடி ரூபாய் நஷ்டத...
301
2010-03-27T04:24:00+05:30
தமிழகம்
மூத்த வக்கீல் பெயரில் நூலக கட்டிடம் ஏப்., 2ம் தேதி அடிக்கல் நாட்டு விழா
சேலம்: மூத்த வக்கீல்கள் பெயரில் சேலம் நீதிமன்றத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஏப்ரல் 2ம் தேதி நடக்கிறது. சேலம் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டப்புத்தகங்கள் உள்ளன. அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க, இந்நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முட...
302
2010-03-27T04:25:00+05:30
தமிழகம்
பொட்டல் காடாக மாறி வரும் விளைநிலங்கள்கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி
வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியால், விளைநிலங்கள் பொட்டல் காடாக மாறி வருகின்றன. ஒரு லாரி வைக்கோல் 9,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி வந்து, தீவனத்திற்கு வழியின்றி பரிதவித்து வரும் கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்  ஈடுபட்டுள்ளனர்.  சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெ...
303
2010-03-27T04:25:00+05:30
தமிழகம்
துஷ்ட ஆவிகளை விரட்டுவதாக நம்பிக்கை வாசலில் வெள்ளெருக்கு வளர்க்கும் மக்கள்
மேட்டூர்: வெள்ளெருக்கு செடிகள் துஷ்ட ஆவிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதாகவும், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை முடக்குவதாகவும் நம்புவதால், மேட்டூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வீட்டு முன் வெள்ளெருக்கு செடி வளர்க்கின்றனர். எருக்கஞ்செடிகளில் நீல எருக்கன், வெள்ளை எருக்கன், முத்து எருக்கன் என பல்வேறு வகைகள் ...
304
2010-03-27T04:26:00+05:30
தமிழகம்
ஓடை அபிவிருத்தி பணி துரிதம் : உயிர் சேதங்களை தவிர்க்க நடவடிக்கை
சேலம்: சேலம் மாநகராட்சியில் உயிர் சேதங்களை தவிர்க்கும் பொருட்டு வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 31 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திருமணி முத்தாறு இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் ஒரு கோடியே 46 ...
305
2010-03-27T04:26:00+05:30
தமிழகம்
தகவல் கொடுத்ததால் விபரீதம் குடும்பத்தை வெட்டிய கும்பலுக்கு வலை
சேலம்: சேலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்தவர் குறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்த குடும்பத்தை, அரிவாளால் வெட்டிய கும்பலை, ஓமலூர் போலீஸார் தேடி வருகின்றனர்.ஓமலூர் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள். அவரது மனைவி கோவிந்தம்மாள். அவர்களது மகள் தாரணி(15), அதே பகுதியில் உள்ள பள்ளியில...
306
2010-03-27T04:27:00+05:30
தமிழகம்
அச்சமின்றி ஓட்டளிக்க பலத்த பாதுகாப்பு: தேர்தல் கமிஷன் உறுதி
புதுடில்லி:இன்று நடக்கும் பென்னாகரம் இடைத்தேர்தலில், எல்லா தரப்பு வாக்காளர்களும் அச்சமின்றி ஓட்டளிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைமைத் தேர்தல் கமிஷன் எடுக்கும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.டில்லியில் நேற்று மாலை 5 மணியளவில், தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கட்சியின் தலைமை கொறடா டி.கே.எஸ்.இளங்கோ...
307
2010-03-27T04:29:00+05:30
இந்தியா
மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை: பா.ஜ., எதிர்ப்பு
புதுடில்லி: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது: மதம் மாறிய தலித்துகளுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் படி ரங்கநாத் மிஸ்...
308
2010-03-27T04:29:00+05:30
இந்தியா
ராகுல் உ.பி., வருகையால் தேனீக்கள் விரட்டியடிப்பு
சுல்தான்பூர்:ராகுல் பங்கேற்க இருக்கும் கூட்டம் நடக்கும் இடத்திலுள்ள இரண்டு தேன்கூட்டை, மாவட்ட நிர்வாகம் கலைத்து, அவை பாதுகாப்பான இடம் என்று அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி ராகுல் நேற்று  சுல்தான்பூர் வந்து சேர்ந்தார். அவர், அமேதி தொகுதியில் கிராமம் கிராமமாக செல்லவிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில், "விகாசபவ...
311
2010-03-27T04:33:00+05:30
தமிழகம்
ரூ. 1,749 கோடிக்கு இறுதி துணை பட்ஜெட் தாக்கல்
சென்னை:சட்டசபையில், 2009-10ம் ஆண்டிற்கு 1,749 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக் கோரும் இறுதி துணை பட்ஜெட்டை, நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.அப்போது, அன்பழகன் கூறியதாவது:சபையில் வைக்கப்பட்ட துணை மதிப்பீடுகள், 1,749 கோடியே 73 லட்சம் ரூபாய்க்கு நிதி ஒதுக்குவதற்கு வகை செய்கின்றன. இதில், 1,364 கோடியே 97 லட்சம் ரூபாய் வருவாய...
312
2010-03-28T03:58:00+05:30
தமிழகம்
திருச்சியில் புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து: சொத்து பிரச்னையில் நேர்ந்த விபரீதம்
திருச்சி: திருச்சி பாலக்கரையில் சொத்து பிரச்னை காரணமாக திருமணமாகி ஐந்து நாட்களே ஆன புதுமாப்பிள்ளை உள்ளிட்ட இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய எட்டு பேரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் மருந்து விற்பனை பிரதிநிதி நாராயணன் (25). இவரது பெரியப்பா மகன்...
315
2010-03-28T04:03:00+05:30
தமிழகம்
எஸ்.ஐ.டி., முன் ஆஜரானார் முதல்வர் மோடி:பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை
காந்திநகர்:குஜராத் வன்முறை குறித்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.,) முன், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நேற்று ஆஜரானார். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர், பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ஏராளமான கேள்விகளுக்கு மோடி பதில் அளித்தார்.குஜராத்தில் 2002ம் ஆண்டு ...
316
2010-03-28T04:04:00+05:30
தமிழகம்
சூரிய சக்தியால் பார்லிமென்ட்டை ஒளிர செய்ய முடிவு
புதுடில்லி:பார்லிமென்ட்டின் சுற்றுச்சூழல் கெடாதவாறு சூரிய சக்தியால் மின் விளக்குகளை எரியவிடவும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களை இந்த வளாகத்தில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நம் நாட்டு ஜனநாயகத்தின் பாரம்பரிய சின்னமாக கருதப்படும் பார்லிமென்ட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து கடந்த வாரம் சபாநாயகர் மீரா குமார் தலைம...
317
2010-03-28T04:06:00+05:30
General
பக்கவாதம் தடுக்க தக்காளி சாறு போதும்
லண்டன்:தக்காளி சாறு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது என்று பிரிட்டன் ஆய்வு தெரிவிக்கிறது.லண்டன் அபர்தீன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தக்காளி சாறு பக்கவாதம், இதயநோய்களை தடுக்கும் சக்தி கொண்டது என்று தங்கள் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர். பொதுவாக, இந்த நோய்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்த...
319
2010-03-28T04:08:00+05:30
General
பிரிட்டன் வாழ் ஆசிய கோடீஸ்வரர்களில் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் முதலிடம்
லண்டன்:வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல், பிரிட்டனில் வாழும் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு, 1.22 லட்சம் கோடி ரூபாய்.ஆசியன் மீடியா அண்ட் மார்க்கெட்டிங் குரூப்பின், "ஈஸ்டர்ன் ஐ' என்ற பத்திரிகை, "ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2010'ஐ, லண்டனில உள்ள சாபிடெல் ஓட்டலில்...
320
2010-03-28T04:09:00+05:30
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் தமிழறிஞர்களுக்கு அடையாள அட்டை
கோவை:ஆய்வரங்கத்தில் பங்கேற்கும் தமிழறிஞர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென்று, ஆய்வரங்க அமைப்புக் குழுச் செயலர் கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.கோவை கொடீசியாவில், செம்மொழி மாநாட்டிற்கான மாதிரி அரங்கங்களை, ஆய்வரங்க அமைப்புக் குழுச் செயலர் கனிமொழி நேற்று பார்வையிட்டார்.ஆய்வரங்கங்களில் பங்கேற்க வரும் தமிழறிஞர்களை எளிதில் அ...
321
2010-03-28T04:10:00+05:30
தமிழகம்
கலெக்டர் காரை முற்றுகையிட்ட பா.ம.க.,
பென்னாகரம்:ஓட்டுப்பதிவை பார்வையிட சென்ற கலெக்டர் காரை, பா.ம.க.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமிசெட்டிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியை, கலெக்டர் அமுதா பார்வையிட சென்ற போது, அவருடன் வந்த கோவை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார், ஓட்டுச்சாவடி முன் நின்றிருந்த க...
322
2010-03-28T04:17:00+05:30
தமிழகம்
விடைத்தாள் திருத்தும் பணியில் கல்வித்துறை விதிப்படி ஆசிரியர் நியமனம் : புதியதாக உருவாகியுள்ள சர்ச்சையால் பரபரப்பு
தூத்துக்குடி, மார்ச் 28-பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணியில் கல்வித்துறை விதிமுறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். சிபாரிசுக்கு இடம் அளிப்பதால் மாணவர்களுக்கு மார்க்கில் பாதிப்பும், ஆசிரியர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படும் என்று ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக...
323
2010-03-28T04:18:00+05:30
தமிழகம்
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கர்சிப் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் : அமைச்சர் அறிவுரை
தூத்துக்குடி : காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக கர்சிப் வைத்திருக்க வேண்டும். பிறருக்கு எளிதில் பரவிவிடக் கூடாது என்பதால் அவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.என்று தூத்துக்குடியில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.தூத்துக்குடியில் நேற்று உலக காசநோய் தினவிழா நடந்தது. இதனை ஒட்டி காலையில் ராஜாஜி பூங...
324
2010-03-28T04:18:00+05:30
தமிழகம்
மின்சாரம் திடீர், திடீரென தடைபடுவதால் ஆபரேஷன் போன்ற பணிகள் பாதிப்பு : தமிழக அரசு மருத்துவக்கல்வி இயக்குநரிடம் டாக்டர்கள் புகார்
தூத்துக்குடி : மின்சாரம் திடீர், திடீரென தடைபடுவதால் ஆபரேஷன் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக இயக்குநரிடம் டாக்டர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதற்கு உயர் அதிகாரிகள் மூலம்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர் விநாயகம் தெரிவித்தார்.நேற்று தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் விநாயகம் த...
325
2010-03-28T04:18:00+05:30
தமிழகம்
தூத்துக்குடியில் புதிய கோர்ட் கட்டும் பணிகள் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆய்வு
தூத்துக்குடி :  தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த கோர்ட் கட்டும் பணியினை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். இலவச சட்ட பணிகளில் வக்கீல்கள் அதிகமாக ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் சுமார் ஏழரை கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்டும்...
326
2010-03-28T04:19:00+05:30
தமிழகம்
கடம்பாகுளம் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா
தூத்துக்குடி : தென்திருப்பேரை கடம்பாகுளம் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா மற்றும் பூர்ணகலா புஷ்பகலா சமேத கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.தென்திருப்பேரை கடம்பாகுளம் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயிலில் நாளை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு தாமிரபரணியில் இருந்துபுனிதநீர் எடுத்துவரப...
327
2010-03-28T04:20:00+05:30
தமிழகம்
தேனியில் போக்குவரத்தை சீர்படுத்துவதில் சிக்கல் : போலீசார் பற்றாக்குறையால் திணறும் இன்ஸ்பெக்டர்.
தேனி : தேனியில் போக்குவரத்து போலீசார் ஒருவர் கூட இல்லாததால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஒருவரே தனியாக நகரை வலம் வந்துகொண்டிருக்கிறார்.  தேனி அல்லிநகரம் நகராட்சியில் மக்கள் தொகை பல மடங்கு பெருகி விட்டது. வர்த்தக மையமாக விளங்குவதால் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வியாபாரிகளும...
328
2010-03-28T04:20:00+05:30
தமிழகம்
நீர் திருட்டை கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைப்பு
தேனி :  கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் மாவட் டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுருளியாறு, வைகையாறு ஆற்றுப்படுகைகளில் மின் மோட்டார் மற்றும் ஆயில் இன்ஜின் மோட்டார்களை பயன்படுத்தி விவசாயத்திற்கும், உறைகிணறுகள் மூலமும் தண்ணீர் எடுப்பதும் தடை...
329
2010-03-28T04:21:00+05:30
தமிழகம்
போடியில் தே.மு.தி.க., கூட்டம்
போடி : போடிநகர தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது.   நகர செயலாளர் முரசு பாலு, பொருளாளர் கல் யாணகுமார், செயற்குழு உறுப்பினர் மோகன் துணை செயலாளர் தெய் வேந்திரன் முன்னிலை வகித்தனர்.   ரேஷன் பொருட்களை கேரளா பகுதிக்கு கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும்,  எடை குறைவின்றி ரேஷன் பொருட்கள் ...
330
2010-03-28T04:21:00+05:30
தமிழகம்
அரசு விடுதிக்கு தள்ளு வண்டியில் தண்ணீர் எடுக்கும் மாணவர்கள்
ஆண்டிபட்டி :  ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் உள்ளன. 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வெளியூர் மாணவர்கள் இந்த விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.  விடுதி வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு பழுதான ஆழ்குழாய் மோட் டார் சரிசெய்யப்படவில்லை.  விடுத...
331
2010-03-28T04:22:00+05:30
தமிழகம்
உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தேடி கொட்டில்பாடு மீனவ கிராம மக்கள் தஞ்சம்
குளச்சல் : கோஷ்டி மோதலால் மூட்டை முடிச்சுகளுடன் குடும்பமாக கொட்டில்பாடு கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர்.கொட்டில்பாடு கிராமத்தில் கடந்த டிசம்பர் 27ம் தேதி பங்கு பேரவை தேர்தல் நடந்தது. இத்தேர்தல் சம்பந்தமாக இருதரப்பினரிடையே கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. அடிக்கடி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வந்ததால் கொட்டில்பாடு கி...
332
2010-03-28T04:22:00+05:30
தமிழகம்
குமரிக்கு படையெடுக்கும் செம்மரி ஆடுகள்
வில்லுக்குறி : குமரி மாவட்டத்தில் செம்மரி ஆடுகளுக்கான மேய்ச்சல் அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் தற்பொழுது கும்பப்பூ அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது. குறிப்பாக வில்லுக்குறி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை முடிந்துள்ளது. சிலர் தங்களுடைய வயல்களில் உளுந்து பயிரிட்டுள்ளனர். அது முளைவிட்டு வளரும் பருவத்தில் உ...
334
2010-03-28T04:23:00+05:30
தமிழகம்
தனித்தேர்வு ஹால் டிக்கெட்டில் குழப்பம் : மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு
புதுக்கடை : புதுக்கடை அருகே எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவனுக்கு மெட்ரிக்., தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கியதால் மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.தமிழகத்தில் 2009-2010ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்., ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் கடந்த 23ம் தேதி துவங்கியது. கடந்த ஆண்டு...
335
2010-03-28T12:35:00+05:30
இந்தியா
ண்ச்ஞீச் ஞீச்ண்ஞீ
awdasdasd asda
336
2010-03-28T14:49:00+05:30
இந்தியா
ஞீஞ்ஞீ
dfgdgd
337
2010-03-29T01:28:00+05:30
தமிழகம்
லாரிகள் ஸ்டிரைக்கை தவிர்க்க மத்திய அரசு இன்று பேச்சு
நாமக்கல் : நான்கு அம்ச கோரிக் கையை வலியுறுத்தி, ஏ.ஐ. எம்.டி.சி.,யினர் வரும் 5ம் தேதி அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக, அதன் நிர்வாகிகளுடன்  டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகிறது."டயர் விலை குறைக்க வேண்டும், அனைத்து சுங்கச் சாவடியிலும் ஒரே கட்டணம் வசூல் செய்ய வேண்டும்; என்பது உட்பட நான்கு அம்ச கோரி...
340
2010-03-29T01:31:00+05:30
தமிழகம்
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க  தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  தமிழகம் முழுவதும் இரண்டு கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மின்தேவையும...
341
2010-03-29T01:32:00+05:30
இந்தியா
முழுவதும் எழுத படிக்க தெரிந்த கேரளாவின் கண்ணூர் மாவட்டம்
கண்ணூர் : கேரளாவின் கண்ணூர் மாவட்டம், முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கல்வி கற்றவர்கள் அதிகம் என்றாலும், முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்ணூர் மாவட்டத்தில், கண்ணவம் காலனி என்ற குடிசை பகுதியில் முழு எழுத்தறிவு பிரசாரம் துவக்கப்ப...
342
2010-03-29T01:33:00+05:30
தமிழகம்
காலாவதி மருந்துகளை திரும்ப பெற்று அழிப்பது யார் கடமை?
காலாவதி மருந்துகளை ஒரு கும்பல் மீண்டும் புழக்கத்தில் விட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதைத் தொடர்ந்து, காலாவதியான மருந்துகளை அழிக்கும் நடைமுறையை கடுமையாக்குவதுடன், மருந்துக் கடைகளில் டாக்டர்களின் மருந்துச் சீட்டு இல்லாமலும், பில் இல்லாமலும் மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்ட...
343
2010-03-29T01:34:00+05:30
இந்தியா
சொத்து குவிப்பில் முதலிடம் காங்கிரஸ் : மூன்றாமிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுடில்லி : அரசியல் கட்சிகளில், அதிகளவுக்கு சொத்து சேர்த்துள்ள கட்சியாக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது. அக்கட்சிக்கு 340 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. இரண்டாமிடத்தில் பா.ஜ.,வும், மூன்றாம் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளன.நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் 2008-09ம் ஆண்டுக்கான வரி தொடர் பாக சமர்ப்பிக்கப்பட்...
345
2010-03-29T01:36:00+05:30
இந்தியா
ஐ.பி.எல்., மீது கில் பாய்ச்சல்!
புதுடில்லி : வர்த்தக நோக்கில் நடத்தப்படும் ஐ.பி.எல்., போட்டிகளால் கிரிக்கெட் உணர்வு பாதிக்கப்படுவ தாக, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் குற்றம் சாட்டினார்.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் (பி.சி.சி.ஐ.,) இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப் பட்டது. மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் தற...
348
2010-03-29T01:39:00+05:30
தமிழகம்
தாலி கட்டிய இரண்டு நாளில் விவாகரத்தா? சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
புதுடில்லி : திருமணம் ஆன இரண்டு நாட்களுக் குள் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த தம்பதியினர் மற்றும் அவர்களின் சார்பில் வாதாடிய  வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்  கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. விவாகரத்து கேட்பவர்கள் மணம் ஆகி ஆறு மாதம் கழிந்த பின்பே அதற்காக விண்ணப்பிக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.டில்ல...
357
2010-03-29T10:46:00+05:30
தமிழகம்
இளைஞர் காங்., தேர்தல்:பல இடங்களில் அதிருப்தி
சென்னை:சில தொகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு அக்கட்சியில் எழுந்துள்ளது. மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சத்தியமூர்த்தி பவனில் நேற்று இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்தது. சேப்பாக்கம் சட...
358
2010-03-29T10:51:00+05:30
தமிழகம்
முதலீடுகளை ஈர்க்கும் மாநிலம் தமிழகம்: துணை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
செங்கல்பட்டு:தமிழகம் தலைசிறந்த முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது என ஒரகடத்தில், சான்மினா நிறுவன திறப்பு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சான்மினா எஸ்.சி.ஐ., என்ற மின்னணு தயாரிப்பு சேவை நிறுவனம் தனது அதிநவீன ஸ்டேட் ஆப் தி ஆர்க் தொழில்நுட்ப தயாரிப்பு தொழிற்சாலையை, சென்னை அருகே ஒரகடம் சிறப்பு பொருளாதார...
362
2010-03-30T01:07:00+05:30
இந்தியா
காங்கிரசுக்கு பயம்! லோக்சபாவில் பெண்கள் மசோதா தாக்கலாகுமா? ஆதரவு எம்.பி.,க்கள் கணக்கு போட்டு தயக்கம்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே லோக்சபாவிலும் நிறைவேற்ற வேண்டுமென்று இதற்கு ஆதரவு தந்த முக்கிய எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் கோரி வருகின்றன. ஆனால், ஆளும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள பயம் காரணமாக இந்த மசோதாவை தாக்கல் செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பெண்களுக்கு 33 சதவீத இட ஒத...
363
2010-03-30T01:07:00+05:30
தமிழகம்
மூன்று மணி நேர மின் தடையால் பொருட்கள் விலை உயரும் அபாயம்
சேலம் : தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று மணி நேர மின் தடையால், அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, தினசரி, மின் தடையின் நேரம் மூன்று மணி நேரமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில்களில் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதால், விலைவாசி அதிகரிக்...
369
2010-03-30T01:11:00+05:30
இந்தியா
சானியா-சோயப் மாலிக் திருமணம்?
ஐதராபாத் : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான ...