| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_07", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "கொன்ஸ்டாண்டினோப்பிள் துருக்கியர் வசமானது", | |
| "text": "எனினும் கி.பி. 1453 ஆம் ஆண்டு இந்த நகரம் இஸ்லாமியரான துருக்கியரின் கைகளுக்கு வந்ததால், கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றிய அறிஞர்களால் தொடர்ந்து அந்நகரில் வாழ முடியாமல் போனது. இதனால் அவர்கள் கிரேக்க, உரோம நூல்களுடன் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்குச் சென்று அங்கு கிரேக்க, லத்தீன் மொழிகளைப் பரப்பினர். இதன் விளைவாக கிரேக்க, உரோமப் பண்பாடுகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 7, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "் கிரேக்க, உரோம இலக்கிய நூல்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அறிஞர்கள் அவற்றைக் கற்பதில் ஈடுபட்டிருந்தனர்.", | |
| "created_at": "2026-02-27T18:30:15.291411", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 358, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.441127" | |
| } |