{ "chunk_id": "ta_edu_Grade10His_28", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்", "text": "அநுராதபுரத்தின் ஆரம்ப காலம் முதல் இலங்கை வெளிநாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணியமையால் இந்து சமுத்திரத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கை பற்றி அறிந்திருந்தனர். எனவே, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட நூல்களில் இலங்கை பற்றிய சில குறிப்புகள் அடங்கியுள்ளன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 28, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-28T06:13:17.269547", "created_by": "chunker", "text_length": 323, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.142515" }