{ "chunk_id": "ta_edu_Grade10His_49", "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", "sub_heading": "புராதன சிதைவுகள்", "text": "எமது முன்னோர்களின் ஆடையணிகள், கலையாற்றல்கள், பயன்படுத்திய ஆபரணங்கள், நிறப்பயன்பாடுகள், சமய நம்பிக்கைகள் என்பன பற்றி அறிந்து கொள்வதற்கு சித்திர, சிற்ப, செதுக்கல் கலையம்சங்கள் பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக,சீகிரி சுவர் ஓவியங்களை எடுத்துக் கொண்டால் பண்டைய இலங்கைப் பெண்களின் ஆடை, ஆபரணங்கள், கூந்தல் அலங்காரம், அவர்கள் மேற்கொண்ட அலங்காரக் கலை நுட்பம் என்பன பற்றிய பல்வேறு விடயங்களை அவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 49, "source_file": "Grade_10_History_Chapter_01", "overlap_reference": "எமது முன்னோர்களின் ஆடையணிகள், கலையாற்றல்கள், பயன்படுத்திய ஆபரணங்கள், நிறப்பயன்பாடுகள், சமய நம்பிக்கைகள் என்பன பற்றி அறிந்து கொள்வதற்கு சித்திர, சிற்ப, செதுக்கல் கலையம்சங்கள் பெரிதும் உதவுகின்றன.", "created_at": "2026-02-28T07:23:06.348315", "created_by": "chunker", "text_length": 419, "status": "approved", "approved_at": "2026-02-28T10:09:49.151999" }