{ "chunk_id": "ta_edu_Grade10His_01", "heading": "கண்டி இராச்சியம்", "sub_heading": "அறிமுகம்", "text": "கோட்டை, சீதாவாக்கை இராச்சியங்கள் வீழ்ச்சியுற்றதன் பின்னர், நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கண்டி இராச்சியத்தையே சார்ந்தது. இந்நாட்டில் நிலவிய எவ்விராச்சியமும் எதிர்கொள்ளாத சவால்கள் பலவற்றிற்கும் முகங்கொடுத்து, அவ்விராச்சிய அரசர்களும் பொதுமக்களும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை கி.பி. 1815 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்தனர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 1, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-27T19:14:43.978288", "created_by": "chunker", "text_length": 350, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.128353" }