{ "chunk_id": "ta_edu_Grade10His_33", "heading": "கண்டி இராச்சியம்", "sub_heading": "II ஆம் இராஜசிங்க மன்னன் (கி.பி.1635 - 1687)", "text": "ஒல்லாந்தர் கரையோரப் பிரதேசங்களில் தமது ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டமையால், முழுநாட்டிற்கும் மன்னனாகும் ஆசை கைகூடி வரவில்லை. என்றாலும் போர்த்துக்கேயரை இந்நாட்டில் இருந்து வெளியேற்றியபோது அவர்களிடமிருந்த கணிசமான பிரதேசங்களைத் தனது ஆட்சிக்கு உட்படுத்திக் கொள்ள மன்னனால் இயலுமாயிருந்தது. கற்பிட்டி, சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய துறை முகங்கள் இக்காலத்தில் கண்டி இராச்சியத்திற்கு உரித்தாயின.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 33, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-27T20:02:08.757421", "created_by": "chunker", "text_length": 396, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.139798" }