{ "chunk_id": "ta_edu_Grade10His_46", "heading": "கண்டி இராச்சியம் நாயக்க அரச வம்ச ஆட்சி (கி.பி.1739 - 1815)", "sub_heading": "கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் (கி.பி.1747-1781)", "text": "பௌத்த சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை \nஇம்மன்னன் மேற்கொண்டான். அதன் பொருட்டு அவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு : \n•1760 - 1765 காலகட்டத்தில் கண்டி இராச்சியத் திற்கும் ஒல்லாந்தருக்கும் இடையே நல்லுறவு முறிவடைந்தது. இதனால் இருசாராருக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டன. 1766 இல் அரசனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரே அந்த மோதல்கள் முடிவடைந்தன. இம்மன்னன் 1781 ஆம் ஆண்டு வாரிசு உரிமையின்றி மரணமடைந்தான்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 46, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-28T15:11:07.185736", "created_by": "chunker", "text_length": 450, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.145624" }