{ "chunk_id": "ta_edu_Grade10His_44", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "அரசியல் மறுமலர்ச்சி", "text": "இதனால் அரசியலில் அரசன் முக்கியத்துவம் பெற்றதுடன், அனைத்து அதிகாரங்களும் அரசனை மையமாகக் கொண்டு விளங்கின. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வர்த்தக முன்னேற்றத்துடன் நடுத்தர வர்க்கம் ஒன்றும் தோன்றியது. நடுத்தர வர்க்கினர் என்போர் வர்த்தகத்தின் மூலம் பணத்தைச் சேகரித்த செல்வந்தர்களாவர். இந்த வர்க்கத்தில் வர்த்தகர்கள், வங்கியாளர்கள், கப்பல் உரிமையாளர்கள், போக்குவரத்து வண்டிகளின் உரிமையாளர்கள் போன்றோர் அடங்குவர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 44, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "பல பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு அரசனின் கீழ் ஆட்சி செய்யும் முறை இதன் மூலம் உருவானது", "created_at": "2026-02-27T18:45:19.339848", "created_by": "chunker", "text_length": 402, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.450068" }