{ "chunk_id": "ta_edu_Grade10His_48", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "பொருளாதார மறுமலர்ச்சி", "text": "வர்த்தக வளர்ச்சியின் காரணமாக பணப்புழக்கம் அதிகரித்தது. நாணயத்தாள்கள், நாணயக் காசுகள் போன்றவை பணப்புழக்கத்திற்கு வந்தன. பணத்தைத் தூர இடங்களுக்கு கொண்டு செல்லுதல் சிரமமாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததால் காசோலை முறையும் வங்கி முறையும் ஆரம்பமானது. வர்த்தகர்கள் தமது வர்த்தகத்திற்குத் தேவையான பணத்தை வங்கி மூலம் கடனாகப் பெற முடிந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 48, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "கொள்கை என்பன செயல்படத் தொடங்கின. நாடு பயணங்களின் விளைவாக புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.", "created_at": "2026-02-27T18:46:49.820099", "created_by": "chunker", "text_length": 332, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.452033" }