title
stringlengths 18
42
| sections
listlengths 3
14
|
|---|---|
பரிபாடல் - 1. திருமால்
|
[
{
"content": "ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை\nதீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,\nமாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்\nசேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,\nவாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை;\n5\nஎரிமலர் சினைஇய கண்ணை; பூவை\nவிரிமலர் புரையும் மேனியை; மேனித்\nதிரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்\nதெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை\nஎரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-\n10\nசேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்\nஏவல் உழந்தமை கூறும்,\nநா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.\nஅமர் வென்ற கணை\nஇணைபிரி அணி துணி பணி எரி புரை\nவிடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்\n15\nநெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு\nகடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி\nநெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்\nதார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்\nஎரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்\n20\nறுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு\nஇமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்\nமலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி\nமணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை\nஉடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப்\n25\nபோரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்\nசிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்\nஉதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.",
"heading": "அரு மறைப் பொருள்"
},
{
"content": "'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து,\nசெரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்!\n30\nஇருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!\nதெருள நின் வரவு அறிதல்\nமருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:\nஅன்ன மரபின் அனையோய்! நின்னை\nஇன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?\n35\nஅருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்\nபெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை\nமெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்\nதிரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.",
"heading": "சொல்லில் அடங்காப் பெரும் புகழ்"
},
{
"content": "விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்\n40\nஅறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;\nதிறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்\nமறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;\nஅம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்\nதிங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;\n45\nஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்\nமைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;\nநலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்\nபுலமும், பூவனும், நாற்றமும், நீ;\nவலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,\n50\nநிலனும், நீடிய இமயமும், நீ.\nஅதனால்,\n'இன்னோர் அனையை; இனையையால்' என,\nஅன்னோர் யாம் இவண் காணாமையின்,\nபொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய\n55\nமன்னுயிர் முதல்வனை ஆதலின்,\nநின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!\nநின் ஒக்கும் புகழ் நிழலவை;\nபொன் ஒக்கும் உடையவை;\nபுள்ளின் கொடியவை; புரி வளையினவை;\n60\nஎள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;\nமண்ணுறு மணி பாய் உருவினவை;\nஎண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,\nஆங்கு,\nகாமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை\nயாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,\nஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-\nவாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே;\n68",
"heading": "துதி மொழிகள்"
}
] |
பரிபாடல் - 2. திருமால்
|
[
{
"content": "தொல் முறை இயற்கையின் மதியொ\n... ..... ... மரபிற்று ஆக,\nபசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,\nவிசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,\nகரு வளர் வானத்து இசையின் தோன்றி,\n5\nஉரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;\nஉந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;\nசெந் தீச்சுடரிய ஊழியும்; பனியொடு\nதண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று\nஉள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,\n10\nமீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்\nஉள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;\nநெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,\nமை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய\nசெய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை-\n15",
"heading": "ஊழிகளின் தோற்றம்"
},
{
"content": "கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய\nஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு\nஊழி யாவரும் உணரா;\nஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்",
"heading": "வராக கற்பம்"
},
{
"content": "நீயே, 'வளையொடி புரையும் வாலியோற்கு அவன்\n20\nஇளையன்' என்போர்க்கு இளையை ஆதாம்,\n'புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு\nமுதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,\nவடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த\nகெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்,\n25\nஇந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை\nநின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.",
"heading": "திருமாலின் நிலைகள்"
},
{
"content": "ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்\nபூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில\nநித்தில மதாணி அத்தகு மதி மறுச்\n30\nசெய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-\nவளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்\nவை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு\n'புள்ளி நிலனும் புரைபடல் அரிது' என\nஉள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று.\n35",
"heading": "திருமாலின் சிறப்பு"
},
{
"content": "ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,\nஇடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்\nகொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,\nமுடிகள் அதிர, படிநிலை தளர,\nநனி முரல் வளை முடி அழிபு, இழிபு,\n40\nதலை இறுபு தாரொடு புரள-\nநிலை தொலைபு, வேர், தூர், மடல்,\nகுருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்\nபல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-\nநில்லாது, ஒருமுறை கொய்பு கூடி,\n45\nஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,\nஅளறு சொரிபு, நிலம் சோர,\nசேரார் இன் உயிர் செகுக்கும்-\nபோர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:\nஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே;\n50",
"heading": "படைச் சிறப்பு"
},
{
"content": "திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்\nநின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;\nகண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;\nவாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த\nநோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும்,\n55\nசாயல் நினது, வான் நிறை-என்னும்\nநா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:\nஅவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்\nஎவ் வயினோயும் நீயே.\nஉருவமும், உணவும், வெளிப்பாடும்\nசெவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!\n60\nகேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,\nபடி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,\nபுகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்\nதிகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,\nநின் உருபுடன் உண்டி;\n65\nபிறர் உடம்படுவாரா\nநின்னொடு புரைய\nஅந்தணர் காணும் வரவு.",
"heading": "பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே."
},
{
"content": "வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,\nமூவா மரபும் ஓவா நோன்மையும்\n70\nசாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்\n... ... ... மரபினோய் நின் அடி\nதலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;\nகலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,\nகடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-\n'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!' எனவே.\n76",
"heading": "பல் புகழும் பரவலும்"
}
] |
பரிபாடல் - 3. திருமால்
|
[
{
"content": "திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்\nமா அயோயே! மாஅயோயே!\nமறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி\nமணி திகழ் உருபின் மா அயோயே!\nதீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,\nஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,\n5\nதிதியின் சிறாரும், விதியின் மக்களும்,\nமாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,\nதா மா இருவரும், தருமனும், மடங்கலும்,\nமூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,\nமாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்\n10\nமாயா வாய்மொழி உரைதர வலந்து:\n'வாய்மொழி ஓடை மலர்ந்த\nதாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,\nநீ' என பொழியுமால், அந்தணர் அரு மறை.",
"heading": "கடவுள் வாழ்த்து"
},
{
"content": "'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்,\n15\nபயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;\nபயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்\nநிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்\nசேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்\nகீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;\n20\nதீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,\nமாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்\nஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு\nகேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும்,\n'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்\n25\nசேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,\nஞாலத்து உறையுள் தேவரும் வானத்து\nநால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்\nபாடும் வகையே: எம் பாடல்தாம் அப்\nபாடுவார் பாடும் வகை.\n30\nவடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்\nகூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்\nஎரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;\nநகை அச்சாக நல் அமிர்து கலந்த\nநடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,\nஇரூ கை மாஅல் !\n35\nமுக் கை முனிவ! நாற் கை அண்ணல்!\nஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!\nஎழு கையாள! எண் கை ஏந்தல்!\nஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!\nபதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!\n40\nஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!\nபதினாயிரம் கை முதுமொழி முதல்வ!\nநூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!\nஅனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்\nஇனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!\n45\nநின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,\nமுன்னை மரபின் முதுமொழி முதல்வ!",
"heading": "முனிவரும் தேவரும் பாடும் வகை"
},
{
"content": "நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,\nவலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-\nவனப்பு வரம்பு அறியா மரபினோயே!\n50\nஅணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,\nபிறை வளர், நிறை மதி உண்டி,\nஅணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;\nதிணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,\nநின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்\n55\nஅன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;\nஅதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும்\nவகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?\nஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட\nசேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்!\n60\nஓ!' எனக் கிளக்கும் கால முதல்வனை;\nஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;\nசாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்\nதீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;\nகல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;\nஅறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;\n65\nவேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;\nவெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;\nஅனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,\nஉறையும் உறைவதும் இலையே; உண்மையும்\nமறவியில் சிறப்பின் மாயமார் அனையை;\n70\nமுதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்\nபிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;",
"heading": "வனப்பும் வலியும்"
},
{
"content": "பறவாப் பூவைப் பூவினோயே!\nஅருள் குடையாக, அறம் கோலாக,\nஇரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்\n75\nஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;\nபாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,\nஇரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,\nஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,\nநால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை;\n80",
"heading": "நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு"
},
{
"content": "செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!\nபொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!",
"heading": "நால் வகை வியூகம்"
},
{
"content": "இடவல! குட அல! கோவல! காவல!\nகாணா மரப! நீயா நினைவ!\nமாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!\n85\nதொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!\nமாலைச் செல்வ! தோலாக் கோட்ட!\nபொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண\nபருதி வலவ! பொரு திறல் மல்ல!\nதிருவின் கணவ! பொரு விறல் மள்ள!\n90\nமா நிலம் இயலா முதல்முறை அமையத்து,\nநாம வெள்ளத்து நடுவண் தோன்றிய\nவாய்மொழி மகனொடு மலர்ந்த\nதாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!\n94",
"heading": "பல திறப் பெயரியல்புகள்"
}
] |
பரிபாடல் - 4. திருமால்
|
[
{
"content": "ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்\nஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,\nநின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு\nஇறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,\nநகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப;\n5\nதிருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,\nவரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;\nமாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை;\nநோனார் உயிரொடு முரணிய நேமியை;",
"heading": "புகழ்தலை ஒழியோம்"
},
{
"content": "செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ-\n10\nபுகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்\nபிருங்கலாதன் பலபல பிணி பட\nவலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து\nஅலர்ந்த புகழோன், தாதை ஆகலின்\nஇகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா\n15\nநன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,\nஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-\nபடிமதம் சாம்ப ஒதுங்கி,\nஇன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,\nவெடி படா ஒடி தூண் தடியொடு,\n20\nதடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;",
"heading": "இரணியனைத் தடித்தமை"
},
{
"content": "புருவத்துக் கரு வல் கந்தத்தால்\nதாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்\nஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;\nஉலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்\nநின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;\n25\nநின் தண்மையும் சாயலும் திங்கள் உள;\nநின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;\nநின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;\nநின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;\nநின் தோற்றமும் அகலமும் நீரின் உள;\n30\nநின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;\nநின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;\nஅதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,\nஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,\nமேவல் சான்றன, எல்லாம்.\n35",
"heading": "வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை"
},
{
"content": "சேவல் ஓங்கு உயர் கொடியோயே!\nசேவல் ஓங்கு உயர் கொடி\nநின் ஒன்று உயர் கொடி பனை;\nநின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;\nநின் ஒன்று உயர் கொடி யானை;\n40\nநின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;\nவிடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;\nஅவன் மடிமேல் வலந்தது பாம்பு;\nபாம்பு தொடி; பாம்பு முடி மேலன;\nபாம்பு பூண்; பாம்பு தலைமேலது;\n45\nபாம்பு சிறை தலையன;\nபாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை\nகொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;",
"heading": "கருடக் கொடி"
},
{
"content": "கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,\nகொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும்\n50\nஉள்வழி உடையை; இல்வழி இலையே;\nபோற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,\nமாற்று ஏமாற்றல் இலையே; 'நினக்கு\nமாற்றோரும் இலர்; கேளிரும் இலர்' எனும்\nவேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே:\n55\nமனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;\nகோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,\nநக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;\nபொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!\nநின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை\n60\nஅன்ன நாட்டத்து அளப்பரியவை;\nநின்னின் சிறந்த நின் தாள் இணையவை;\nநின்னில் சிறந்த நிறை கடவுளவை;\nஅன்னோர் அல்லா வேறும் உள; அவை\nநின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை.\n65",
"heading": "பகையும் நட்பும் இன்மை"
},
{
"content": "அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை\nஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,\nகால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,\nஅவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!\nஎவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்\n70\nதொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;\nஅவரவர் ஏவலாளனும் நீயே;\nஅவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே.\n73",
"heading": "பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்"
}
] |
பரிபாடல் - 5. செவ்வேள்
|
[
{
"content": "பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,\nசேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,\nதீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,\nநோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,\nவென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய\n5\nகொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை\nமாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,\nநாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,\nகுருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,\nமலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை!\n10\nமூ-இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,\nஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!\nகாஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!\nசால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள்,\nவேலன் ஏத்தும் வெறியும் உளவே;\n15\nஅவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,\nநீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;\nசிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;\nசிறப்பினுள் உயர்பு ஆகலும்,\nபிறப்பினுள் இழிபு ஆகலும்,\n20\nஏனோர் நின் வலத்தினதே;",
"heading": "வேலனது வெறிப்பாட்டு"
},
{
"content": "ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,\nவேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,\nநாகம் நாணா, மலை வில்லாக,\nமூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய,\n25\nமாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்\nபாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்\nஉமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,\nஅமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி\nஇமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு,\n30\nவிலங்கு என, விண்னோர் வேள்வி முதல்வன்\nவிரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது\nஅரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,\nஎரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு\nதிரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள;\n35\nகருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை\nநொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,\nவசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,\nமனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,\nசாலார்; தானே தரிக்க என, அவர் அவி\n40\nஉடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்\nதடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,\nவடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்\nகடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,\nஅறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்;\n45\nமறு அறு கற்பின் மாதவர் மனைவியர்\nநிறைவயின் வழா அது நிற் சூலினரே;\nநிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்\nபயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;\nபெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,\n50\nஅரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,\nஎரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,\nஅறு வேறு துணியும் அறுவர் ஆகி,\nஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!",
"heading": "முருகப் பிரானின் பிறப்பு"
},
{
"content": "ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய\n55\nபோரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,\nஅல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,\nசெல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து\nவளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத்\nதிகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;\n60\nதிருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,\nஇருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;\nஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த\nமறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,\nபொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,\n65\nசெறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்\nதெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும்,\nவேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,\nமறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்\nபொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.\n70",
"heading": "தேவர் சேனைக்குத் தலைவனாதல்"
},
{
"content": "நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,\nமன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை-\nசெறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,\nசேரா அறத்துச் சீர் இலோரும்,\nஅழி தவப் படிவத்து அயரியோரும்,\n75\nமறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்\nநின் நிழல்;",
"heading": "முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்"
},
{
"content": "அன்னோர் அல்லது இன்னோர்\nசேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை\nபொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்\nஅருளும், அன்பும், அறனும், மூன்றும்-\nஉருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!\n81",
"heading": "முருகப் பெருமானிடம் வேண்டுதல்"
}
] |
பரிபாடல் - 6. வையை
|
[
{
"content": "நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்\nபொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;\nநிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,\nமலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,\nமலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்\n5\nமலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,\nமாசு இல் பனுவற் புலவர் புகழ் புல\nநாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,\nமேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்\nதாயிற்றே தண் அம் புனல்.\n10\nபுதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்\nபுகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,\nநகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்\nவகைசாலும், வையை வரவு.\nவையையின் கரை உடைதலும், ஊரார்கிளர்ந்து எழுதலும்\nதொடி தோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்\nகொடி சேரா, திருக் கோவை காழ் கொளத்\n15\nதொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,\nஉகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,\nநகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,\nஇலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,\nமுலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,\n20\nவிருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,\nவரைச் சிறை உடைத்ததை வையை: ' வையைத்\nதிரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக எனும்\nஉரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று",
"heading": "வைகையில் பெரு வெள்ளம்"
},
{
"content": "அன்று, போர் அணியின் புகர்முகம் சிறந்தென,\n25\nநீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல:\nஏர் அணி அணியின் இளையரும் இனியரும்--\nஈரணி அணியின், இகல் மிக நவின்று,\nதணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்\nதுணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்\n30\nஅணி அணி ஆகிய தாரர், கருவியர்,\nஅடு புனலது செல அவற்றை இழிவர்;\nகைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,\nநெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,\nவெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,\n35\nசாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை\nஓர் இயவு உறுத்தர ஊர்ஊர்பு இடம் திரீஇச்",
"heading": "மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்"
},
{
"content": "சேரி இளையர் செல அரு நிலையர்,\nவலியர் அல்லோர் துறைதுறை அயர,\nமெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,\n40\nசாறும் சேறும் நெய்யும் மலரும்\nநாறுபு நிகழும், யாறு வரலாறு.",
"heading": "ஆற்றினது நீரோட்டம்"
},
{
"content": "நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து\nவேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,\nபுலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு.\n45",
"heading": "அந்தணர்கள் கொண்ட கலக்கம்"
},
{
"content": "மாறு மென் மலரும், தாரும் கோதையும்,\nவேரும் தூரும், காயும் கிழங்கும்,\nபூரிய மாக்கள் உண்பது மண்டி\nநார் அரி நறவம் உகுப்ப 'நலன் அழிந்து,\nவேறாகின்று இவ் விரி புனல் வரவு' என,\n50",
"heading": "பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்"
},
{
"content": "வரை அழி வால் அருவி வாதாலாட்ட,\nகரை அழி வால் அருவிக் கால் பாராட்ட,\n'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்\nபுரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு\n55\nஉரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடிச்,\nசலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்\nபுலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்\nதான் மலர்ந்தன்றே\nதமிழ் வையைத் தண்ணம் புனல்.\n60",
"heading": "சேறு ஆடு புனலது செலவு"
},
{
"content": "'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்,\n'தளிர் அறிந்தாய், தாம் இவை.'",
"heading": "இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது"
},
{
"content": "'பணிபு ஒழி பண்ப!--பண்டெல்லாம் நனி உருவத்து;\nஎன்னோ துவள் கண்டீ?--\nஎய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக்\n65\nகொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்\nசெய்ததும் வாயாளோ? செப்பு.'",
"heading": "களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்"
},
{
"content": "'புனை புனை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை\nநீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்\nபெருக்கு அன்றோ, வையை வரவு?'\n70",
"heading": "தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என"
},
{
"content": "'ஆம் ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்\nஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்\nசுருக்கமும் ஆக்கமும் --- சூள் உறல்!--- வையைப்\nபெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.\nஅருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,\n75\nகுருகு இரை தேரக் கிடக்கும்___பொழி காரில்,\nஇன் இளவேனில், இது அன்றோ வையை? நின்\nவையை வயமாக வை.\nசெல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,\nவவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;\n80\nஎன்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;\nவையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்\nபின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்\nஅனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,\nபனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்\n85\nகனற்றுபு காத்தி, வரவு!'",
"heading": "தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து உரைத்தல்"
},
{
"content": "'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,\nநில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்\nஅல்லா விழுந்தாளை எய்தி, எழுந்து ஏற்று யான்\nகொள்ளா அளவை, எழுந் தேற்றாள்: கோதையின்\n90\nஉள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது?' என--",
"heading": "தலைமகன் மேலும் கூறுதல்"
},
{
"content": "தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்\nயாறு உண்டோ? இவ் வையை யாறு .",
"heading": "காதற் பரத்தை கூற்று"
},
{
"content": "'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்\nதலை தொட்டேன், தண் பரங்குன்று!'\n95",
"heading": "தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை"
},
{
"content": "'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்\nதுனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி\nகன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்\nஅல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே\nவல் இருள் நீயல்; அது பிழையாகும்' என,\n100\nஇல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து\nவல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!\nகளிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,\nஅளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;\nஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்\nவாடற்க, வையை! நினக்கு.\n106",
"heading": "விறலிக்குத் தலைமகள் கூறுதல்"
}
] |
பரிபாடல் - 7. வையை
|
[
{
"content": "திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,\nஉர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,\nகரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,\nவரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--\nஇரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,\n5\nவலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய\nநிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன--\nபெயலான் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,\nநலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்த\nவந்தன்று, வையைப் புனல்.\n10",
"heading": "வையைப் புனலின் வருகை"
},
{
"content": "நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,\nஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,\nதுளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்\nவளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,\nஉய்ர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;\n15\nஉழவர் களி தூங்க, முழவு பணை முரல,\nஆடல் அறியா அரிவை போலவும்,\nஊடல் அறியா உவகையள் போலவும்,\nவேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;\nவிதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்\n20\nபொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்\nசெய்கின்றே, செம் பூம் புனல்.",
"heading": "புனலின் செயல்"
},
{
"content": "'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்\nஅவிழ்ந்த மலர் மீதுற்றென, ஒருசார்;\nமாதர் மடநல்லார், மணலின் எழுதிய\n25\nபாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;\n'அகவயல் இள நெல் அரிகால் சூடு\nதொகு புனல் பரந்தெனத் துடி பட, ஒருசார்;\n'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;\n'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்;\n30\n'பாடுவார் பாக்கம் கொண்டென,\nஆடுவார் சேரி அடைந்தென,\nகழனி வந்து கால் கோத்தென,\nபழன வாளை பாளை உண்டென,\nவித்து இடு புலம் மேடு ஆயிற்றென,\n35\nஉணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்\nபுணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,\nசினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,\nபழன உழவர், பாய் புனல் பரத்தந்து,",
"heading": "வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்"
},
{
"content": "இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,\n40\nவரை புரை உருவின் நுரை பல சுமந்து,\nபூ வேய்ந்து, பொழில் பரந்து;\nதுனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,\nஅலர் தண் தாரவர், காதில்\nதளிர் செரீஇ, கண்ணி பறித்து;\n45\nகை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,\nமேகலை, காஞ்சி, வாகுவலயம்,\nஎல்லம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்\nஒன்னார் உடை புலம் புக்கற்றால்---மாறு அட்ட\nதானையான் வையை வனப்பு.\n50",
"heading": "வையைப் புனலின் வனப்பு"
},
{
"content": "புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்\nதுரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்\nஅமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,\nகை புதைஇய வளை\nஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்\n55\nபோக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு\nபரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;\nஇரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்\nசெம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;\nவையைப் பெருக்கு வடிவு.\n60",
"heading": "தோழி புனலணி இன்பம் கூறுதல்"
},
{
"content": "விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,\nசுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;\nபேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,\nகூர் நறா ஆர்ந்தவள் கண்.\nகண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்\n65\nபாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்\nபேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,\n'என்னை வருவது எனக்கு?' என்று, இனையா,\nநன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;\nசிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர,\n70\nவகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்\nபகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,\nயாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்\nசேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,\nதீர்விலதாகச் செருவுற்றாள்___ செம் புனல்\n75\nஊருடன் ஆடுங்கடை.",
"heading": "தோழி தலைமகன் காதன்மை கூறுதல்"
},
{
"content": "புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்\nஎழூஉப் புணர் யாழும், இசையும், கூட;\nகுழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;\nமன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;\n80\nபொருது இழிவார் புனல் பொற்பு-அது\nஉரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்\nதிருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்\nதாமம் தலை புனை பேஎம் நீர் வையை!\nநின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க---\n85\nநின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.",
"heading": "தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்"
}
] |
பரிபாடல் - 8. செவ்வேள்
|
[
{
"content": "மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்\nபுள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,\nமலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி\nஉலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,\nமருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,\n5\nஆதிரை முதல்வனின் கிளந்த\nநாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,\nயாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,\nமேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்---\nபற்றாகின்று, நின் காரணமாக;\n10\nபரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.\nஇமயக் குன்றினில் சிறந்து\nநின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை\nமின் ஈன்ற விளங்கு இணர் ஊழா\nஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின்\n15\nஅருவி தாழ் மாலைச் சுனை.\nமுதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட\nகதியிற்றே காரின் குரல்.\nகுரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,\nமத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,\n20\nஎதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.",
"heading": "திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்"
},
{
"content": "ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்\nவீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,\nகொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்\nமன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,\n25\nநன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,\nதென்றல் அசைவரூஉம் செம்மற்றே-- அம்ம! நின்\nகுன்றத்தான் கூடல் வரவு.",
"heading": "குன்றத்திற்கும் கூடாக்கும் இடையிலுள்ள வழி"
},
{
"content": "குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்\nமன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,\n30\nகாலொடு மயங்கிய கலிழ் கடலென,\nமால் கடல் குடிக்கும் மழைக் குரலென,\nஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,\nமன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்\nகுன்றம் குமுறிய உரை.\n35",
"heading": "குன்றத்தின் முழக்கம்"
},
{
"content": "'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்\nகாதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;\nவடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,\nநெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்\nஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,\n40\nவரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;\nமுடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,\nஅடியோர் மைந்தர் அகலத்து அகலா\nஅலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,\nபுலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்\n45\nசிறப்பிற்றே---தண் பரங்குன்று.'",
"heading": "தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்புக் கூறுதல்"
},
{
"content": "'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்\nபனி மலர்க் கண்ணாரோடு ஆட--நகை மலர்\nமாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்--\nகாலைப் போய் மாலை வரவு.'\n50\nதலைமகன் சூளும் தலைவி விலகலும்\n'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்\nபனி பொழி சாரலும், பார்ப்பாரும்;....\nதுனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்\nகனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;\nதுனியல் நனி 'நீ நின் சூள்.'\n55",
"heading": "தலைமகள் புலந்து உரைத்தல்"
},
{
"content": "'என் பாணி நில் நில்---எலாஅ!--பாணி நீ, நின் சூள்;\nசான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!--\nஈன்றாட்கு ஒரு பெண், இவள்.\n\"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு\nஅரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா;\n60\nவரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்\nதண் பரங்குன்றத்து அடி தொட்டேன்\" என்பாய்;\nகேளிர் மணலின் கெழுவும் இதுவோ?\nஏழ் உலகும் ஆளி திரு வரைவேல் அன்பு அளிதோ?\nஎன்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,\n65\nநின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;\nவிறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;\nஅறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;\nகுறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;\nஐய! சூளின், அடி தொடு குன்றொடு\n70\nவையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'",
"heading": "தோழி தலைமகனைச் சூள் விலகக்கூறுதல்"
},
{
"content": "யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?\n'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!\nகய வாய் நெய்தல் அலர், கமழ்முகை மண நகை\nநயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;\n75\nமுகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்____\nநகை சான்ற கனவு அன்று; நனவு அன்று___ நவின்றதை:\nஇடு துனி கை ஆறா என், துயர் கூரச்\nசுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்_____\nமிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,\n80\nகேட்டுதும் பாணி; எழுதும் கிணை_____முருகன்\nதாள் தொழு தண் பரங்குன்று!",
"heading": "தலைமகனது உரை"
},
{
"content": "'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,\nஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;\nபருவத்துப் பல் மாண் நீ சேறவின் காண்டை____\n85\nஎருமை இருத் தோட்டி எள்ளீயும் காளை\nசெருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,\nஅருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,\nநிரைவளை ஆற்று, இருஞ் சூள்,",
"heading": "தோழி தலைமகளின் கற்புடைமை கூறல்"
},
{
"content": "வளி பொரு சேண் சிமை வரையகத்தால்\n90\nதளி பெருகும் தண் சினைய\nபொழில் கொளக் குறையா மலர,\nகுளிர் பொய்கை அளறு நிறைய,\nமருதம் நளி மணல் ஞெமர்ந்த\nநனி மலர்ப் பெரு வழி,\n95\nசீறடியவர் சாறு கொள எழுந்து;\nவேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,\nஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,\nநாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,\nமணியும், கயிறும், மயிலும், குடாரியும்,\n100\nபிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;\nஅரு வரைச் சேராத் தொழுநர்,\n'கனவின் தொட்டது கை பிழையாகாது\nநனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை\nவரு புனல் அணிக எனவரம் கொள்வோரும்,\n105\n'கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்,\n'செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்,\n'ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்,\nபாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,\nமஞ்சு ஆடு மலை முழக்கும்,\n110\nதுஞ்சாக் கம்பலை______\nபைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்\nஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,\nதாட் தாமரை, தோட்தமனியக் கய மலர்,\nஎம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,\n115\nசெவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,\nபுனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்\nகூர் ஏயிற்றார் குவிமுலைப் பூணொடு,\nமாரண் ஒப்பார் மார்பு அணி கலவி;\nஅரிவையர் அமிர்த பானம்\n120\nஉரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;\nமைந்தர் மார்வம் வழி வந்த,\nசெந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;",
"heading": "தலைமகளிரது செய்தி"
},
{
"content": "என ஆங்கு,\nஉடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,\n125\nகடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண____\nமறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த____\nநெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,\nமண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,\nதண் பரங்குன்றம்! நினக்கு.\n130",
"heading": "பரங்குன்றை வாழ்த்தல்"
}
] |
பரிபாடல் - 9. செவ்வேள்
|
[
{
"content": "இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,\nஅரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,\nஉருமுச் சூழ் சேண் சிமை___உயர்ந்தவர் உடம்பட_____\nஎரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி\nவிரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,\n5\nதணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி\nமணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.\nமை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,\nஐ-இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,\nமணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று,\n10\nதணி மழை தலையின்று, தன் பரங்குன்று.",
"heading": "முருகவேளை வாழ்த்துதல்"
},
{
"content": "நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்\nவாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;\nகாதற் காமம், காமத்துச் சிறந்தது;\nவிருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி:\n15\nபுலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்\nஇரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்\nபரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,\nதோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற\nநாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;\n20\nகேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;\nசுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே.\nஅதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்\nஇகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்\nதள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்\n25\nகொள்ளார், இக் குன்று பயன்.",
"heading": "தமிழது சிறப்பிற்குக் காரணம்"
},
{
"content": "ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த\nகாழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,\nகேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,\n'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும்\n30\nகேழ் இலார்____ மாண் நலம் உண்கோ, திரு உடையார்\nமென் தோள்மேல் அல்கி நல்கலம் இன்று?____\nவை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்\nபெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!'\nகரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின்\n35\nஇகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி\nதிருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,\n'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை,\n'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக\nஇறுகிறுக யாத்துப் புடைப்ப;\n40\nஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,\nஇருவர் வான் கிளி ஏற்பில் மழலை,\nசெறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,\nவெறி கொண்டான் குன்றத்து வண்டு.",
"heading": "வள்ளியும் முருகனும் சிறந்தவாறு"
},
{
"content": "தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்;\n45\nமார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;\nகோதை வரிப் பந்து கொண்டு எறிவார்____\nபேதை மட நோக்கம் பிறிதாக, ஊத\nநுடங்கு நொசி நுசுப்பார்______நூழில் தலைக்கொள்ள:\nகயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்;\n50\nவயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்\nதேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்\nவரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்\nவாளி வாளிகள் நிலைபெற மறலுவார்\nதோள் வளை ஆழி சுழற்றுவார்___\n55\nமென் சீர் மயில் இயலவர்\nவாள் மிகு வய மொய்ம்பின்\nவரை அகலத்தவனை____வானவன் மகள்\nமாண் எழில் மலர் உண்கண்\nமட மொழியவர் ____உடன் சுற்றி,\n60\nகடி சுனையுள் குளித்து ஆடுநரும்,\nஅறை அணிந்த அருஞ் சுனையான்\nநற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,\nசிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;\nகோகுலமாய்க் கூவுநரும்,\n65\nஆகுலம் ஆகுநரும்____\nகுறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்\nவித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு\nஒத்தன்று, தண் பரங்குன்று.",
"heading": "வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகழ்தல்"
},
{
"content": "கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்\n70\nஅடும் போராள! நின் குன்றின்மிசை\nஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,\nபாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,\nவல்லாரை வல்லார் செறுப்பவும்,\nஅல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்,\n75\nசெம்மைப் புதுப் புனற்\nதடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,\nபடாகை நின்றன்று;\nமேஎ எகினவை;\nவென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;\n80\nகற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை\nநயத் தகு மரபின் வியத் தகு குமர!\nவாழ்த்தினேம் பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்____\nநயத்தலின் சிறந்த எம் அடியுறை,\nபயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே.\n85",
"heading": "வாழ்த்தி வேண்டல்"
}
] |
பரிபாடல் - 10. வையை
|
[
{
"content": "மலைவரை மாலை அழி பெயல்_____காலை,\nசெல வரை காணாக் கடல்தலைக் கூட____\nநில வரை அல்லல் நிழத்த, விரிந்த\nபலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,\nவரி அரி ஆணு முகிழ் விரி சினைய\n5\nமாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,\nஆய்ந்து அளவா ஓசை அறையூஉப், பறை அறையப்\nபோந்தது____வையைப் புனல்.\nபுனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,\nதாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை\n10\nஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,\nநெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்\nமுத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;\nபுக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,\nமிக வரினும் மீது இனிய வேழப் பிணவும்,\n15\nஅகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்\nசகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;\nவகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;\nமுதியர், இளையர்: முகைப் பருவத்தர்,\nவதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்____\n20\nஇரு திரு மாந்தரும் இன்னினியோரும்_____\nவிரவு நரையோரும் வெறு நரையோரும்_____\nபதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;\nஅதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள\nவிதி கூட்டிய இய மென் நடை போல,\n25\nபதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி_____",
"heading": "புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்"
},
{
"content": "நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;\nபேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;\nமா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;\nவீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி,\n30\nதாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,\nயாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;\nகாமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,\nசேமத் திரை வீழ்த்து சென்று, அமளி சேர்குவோர்:",
"heading": "கரை சேர்ந்த மகளிர் செயல்"
},
{
"content": "தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட,\n35\nபூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம\nமட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து,\nதாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்\nஏழுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,\nயாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்_____\n40",
"heading": "முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்"
},
{
"content": "ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்\nமடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,\nநலத்த நடவாது நிற்ப; மடப் பிடி,\nஅன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்\nசெல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக்\n45\nகை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,\nமை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,\nசெய் தொழில் கொள்ளாது, மதி செத்துச் சிதைதர;\nகூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி\nநீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து\n50\nவாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,\nசிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்______\nஇதையும் களிறும் பிணையும் இரியச்\nசிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்\nதிசை அறி நீகானும் போன்ம்.\n55",
"heading": "களிறு பிடிகளின் ஒத்த அன்பு"
},
{
"content": "பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்\nஅருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,\nஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின்,\nபல் சனம் நாணிப் பதைபதைப்பு_____மன்னவர்\nதண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை\n60\nஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,\nநின்ற நிகழ்ச்சியும் போன்ம்.\nகாமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,\nஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை_____\nகள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி,\n65\nஉள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்\nபரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்\nகரப்பார், களி மதரும் போன்ம்.\nகள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும்\nவெள்ளம் தரும், இப் புனல்.\n70",
"heading": "மகளிர், மைந்தர் இவர்கள் செயல்"
},
{
"content": "புனல் பொருது மெலிந்தார் திமில் விட,\nகனல் பொருத அகிலின் ஆவி கா எழ,\nநகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து\nதிகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்\nஉறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்,\n75\nஅரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,\nஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,\nமதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;\nமீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்\nவெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்;\n80\nசெங் குங்குமச் செழுஞ் சேறு,\nபங்கம் செய் அகில் பல பளிதம்,\nமறுகுபட அறை புரை அறு குழவியின்\nஅவி அமர் அழலென அரைக்குநர்;\nநத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை,\n85\nவித்தி அலையில், 'விளைக! பொலிக! என்பார்;\nஇல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,\nநல்லது வெ·கி, வினை செய்வார்;\nமண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,\nதண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்;\n90\nஎண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;\nமாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,\nகோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்\nஉண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்\nவண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக்\n95\nகண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை\nஆட்டு அயர்ந்து_____அரி படும் ஐ விரை மாண் பகழி\nஅரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்___________\nபின்னும், மலர்க் கண் புனல்",
"heading": "மகளிரது நீர் விளையாட்டு"
},
{
"content": "தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும்,\n100\nகண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,\nவெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்,\nமெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்\nபைய விளையாடுவாரும், மென் பாவையர்\nசெய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்,\n105\nஇடுவார் மறுப்பார் சிறுகு இடையார்\nபந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,\nஅம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்\nஒளிறு இலங்கு எ·கொடு வாள் மாறு உழக்கி,\nகளிறு போர் உற்ற களம்போல, நாளும்\n110\nதெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்.",
"heading": "புனல் விளையாட்டால் மெலியாத மைதர் செயல்"
},
{
"content": "மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்\nவதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை\nநாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,\nதோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்;\n115\nபாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,\nஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,\nநல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,\nபண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,\nகொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,\n120\nதென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,\nநளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்\nபனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து\nஉள் நின்று தூய பனிநீருடன் கலந்து,\nகால் திரிய ஆர்க்கும் புகை.\n125",
"heading": "புனலாடி மீண்டவாறு"
},
{
"content": "இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்\nபொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,\nசெய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க____\nவருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,\nஅருங் கறை அறை இசை வயிரியர், உரிமை\n130\nஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.",
"heading": "வையையை வாழ்த்துதல்"
}
] |
பரிபாடல் - 11. வையை
|
[
{
"content": "'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,\nஎரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,\nதெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்___\nஉருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,\nவருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி\n5\nபுந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்\nஅங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்\nஇல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்\nவில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை\nமதியம் மறைய, வரு நாளில்____வாய்ந்த\n10\nபொதியில் முனிவன் புரை வரைக் கீறி\nமிதுனம் அடைய, விரி கதிர் வேனில்\nஎதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்\nபுரை கெழு சையம் பொழி மழை தாழ,\nநெரிதரூஉம் வையைப் புனல்.\n15",
"heading": "மழை பொழிய வையையில் நீர் பொருகி ஓடுதல்"
},
{
"content": "'வரையன புன்னாகமும்,\nகரையன சுரபுன்னையும்,\nவண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்\nமனைமாமரம், வாள்வீரம்,\nசினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,\n20\nதாய தோன்றி தீயென மலரா,\nஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,\nவேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்\nபாய் திரை உந்தித் தருதலான்____ஆய் கோல்\nவயவர் அரி மலர்த் துறை என்கோ?\n25\nஅரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,\nதிரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்\nஅரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்\nபருகு படி மிடறு என்கோ?____பெரிய\nதிருமருத நீர்ப் பூந் துறை.'\n30",
"heading": "தோழி திருமதத் துறையின் சிறப்புக் கூறுதல்"
},
{
"content": "'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,\nநாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,\nநிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,\nஉலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்\nவழியது பக்கத்து அமரர் உண்டி\n35\nமதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;\nஎண் மதி நிறை, உவா இருள் மதி போல\nநாள் குறைபடுதல் காணுநர் யாரே?\nசேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!\nவயத் தணிந்து ஏகு, நின் யாணர் இறு நாள் பெற!\n40\nமா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,\nகாமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,\nமல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்\nஇல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:'\nஎன ஆங்கு_______\n45\nகடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை\nபடையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்\nஇடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை\nஆடற்கு நீர் அமைந்தது, யாறு",
"heading": "கண்டார் கூற்று"
},
{
"content": "ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் குந்தம் ஏந்துவோர்,\n50\nகொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,\nபுள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை\nவெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,\nகண் ஆரும் சாயற் கழித் துரப்போரை\nவண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,\n55\nமணம் வரு மாலையின் வட்டிப்போரைத்\nதுணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,\nதெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்\nஉருகெமு தோற்றம் உரைக்குங்கால், நாளும்\nபொரு களம் போலும் தகைத்தே____பரி கவரும்\n60",
"heading": "வையை போர்க்களத்தை ஒத்தல்"
},
{
"content": "இளவேனிற் காலத்து ஆடல்\nநீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்\nதார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை\nஒளி திகழ் தகை வகை செறி பொறி\nபுனை வினைப் பொலங் கோதையவரொடு,\n65\nபாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,\nநாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,\nகாரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,\nசீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,\nஉம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்\n70\nஅம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை\nகார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,\nநீர் ஒவ்வா வையை! நினக்கு.",
"heading": "பாய் தேரான் வையை அகம்."
},
{
"content": "கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,\nபனிப் படு பைதல் விதலைப் பருவத்து,\n75\nஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,\nமா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை\nவிரிநூல் அந்தணர் விழவு தொடங்க,\nபுரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,\n'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என\n80\nஅம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,\nமுனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,\nபனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்\nஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்\nநெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,\n85\nதையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,\nவையை! நினக்கு மடை வாய்த்தன்று.\nமையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,\nபொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்\nதீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,\n90\nதாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?\nநீ உரைத்தி, வையை நதி!",
"heading": "தைந் நீராடல்"
},
{
"content": "ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,\nவேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,\nசாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;\n95\nபாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;\n'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்\nஇவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று____\nநெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,\nகொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண்.\n100\nபவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்\nகுவளைப் பசுந் தண்டு கொண்டு.\nகல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,\n'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே_____\nமல்லிகா மாலை வளாய்.\n105",
"heading": "மகளிர் செயல்கள்"
},
{
"content": "தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,\nகண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,\nநெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,\nநேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்\nதாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப;\n110\nஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,\nதாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்;\nஆயத்தில் கூடு' எந்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே____\nசேய் உற்ற கார் நீர் வரவு.\n'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும்,\n115\n' \"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,\nவிழுத் தகை பெறுக!\" என வேண்டுதும்' என்மாரும்,\n'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,\nயாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும்,\n' \"கிழவர் கிழவியர்\" என்னாது, ஏழ்காறும்,\n120\nமழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!\" என்மாரும்_____",
"heading": "மகளிர் கருத்தும், வேண்டுகோளும்"
},
{
"content": "'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:\nபண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:\nநீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,\nபூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்:\n125\nகொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட\nகிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஒர்மின்:\nபண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,\nகொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்\nதண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ நெரித்தாளை\n130\nமுனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, பின்னும்,\nகனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்.\nஎன ஆங்கு________\nதலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்\nஇன்ன பண்பின் நின் தைந் நீராடல்_______\nமின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட\n135\nகன்னிமை கனியாக் கைக்கிளைக் காம\nஇன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்_____\nமுன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;\nமறு முறை அமையத்தும் இயைக!\nநறு நீர் வையை நயத் தகு நிறையே!\n140",
"heading": "ஒருவன் உவந்தவை காட்டுதல்"
}
] |
பரிபாடல் - 12. வையை
|
[
{
"content": "வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,\nவிளிவு இன்று, கிளையொடு மெல் மலை முற்றி,\nதளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;\nஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,\nஅகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய\n5\nதகரமும், ஞாழ்லும், தாரமும், தாங்கி,\nநளி கடல் முன்னியது போலும், தீம் நீர்\nவளி வரல் வையை வரவு.",
"heading": "வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்"
},
{
"content": "'வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,\nஅம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு,\n10\nமின் அவிர் ஒளி இழை வேயு மோரும்,\nபொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,\nஅகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்\nபுகைகெழு சாந்தம் பூசுவோரும்,\nகார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்,\n15\nவேர் பிணி பல் மலர் வேயுமோரும்,\nபுட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,\nகட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;\nவாச நறு நெய் ஆடி, வான் துகள்\nமாசு அறக் கண்ணாடி வயக்கி, வண்ணமும்\n20\nதேசும் ஒளியும் திகழ நோக்கி,\nவாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;\nஇடு புணர் வளையொடு தொடு தோள்வளையார்,\nகட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,\nஓசனை கமழும் வாச மேனியர்,\n25\nமட மா மிசையோர்,\nபிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்______",
"heading": "புனல் வரவு காண மகளிர் சென்ற வகை"
},
{
"content": "கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,\nவடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,\nவிரைபு விரைபு மிகை மிகை ஈண்டி,\n30\nஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்\nஉரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்\nகரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;\nநிவந்தது, நீத்தம் கரைமேலா: நீத்தம்\nகவர்ந்தது போலும், காண்பவர் காதல்.\n35",
"heading": "நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்"
},
{
"content": "முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி\nஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை\nஎல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை\nகில்லா; கேள்வி கேட்டன சிலசில:\nஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்\n40\nமத்தரி தடாரி தண்ணுமை மகுளி\nஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;\nநித்தம் திகழும் நேர் இறை முன்கையால்\nஅத் தக அரிவையார் அளத்தல் காண்மின்.",
"heading": "கண்டவர் காணவருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக் கூறல்கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக் காரணம் உரைத்தல்"
},
{
"content": "'நாணாள்கொல்______தோழி! \"நயன் இல் பரத்தையின்\n45\nதோள் நலம் உண்டு, துறந்தான்\" என, ஒருத்தி\nயாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி\nசேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,\nநாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?' என்மரும்,\n'கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்\n50\nஓட்டை மனவன்; உரம் இலி' என்மரும்,\n'சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;\nநெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின்: நிறை\nஅஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?' என்மரும்,\n'பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்;\n55\nநாணாள் அவனை, இந் நாரிகை என்மரும்_____\nகண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்\nஅமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,\nகமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்\nஇழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,\n'பிழையினை என்ன, பிழை ஒன்றும் காணான்,\n60\nதொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்.\n'பார்த்தாள், ஒருத்தி நினை என, 'பார்த்தவளைப்\nபொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்' என்று இரந்து,\nமெய்ச் சூள் உறுவானை, மெலியல், ' பொய்ச் சூள்' என்று,\nஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல;\n65\nஉறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்\nபுல்லாது ஊடிப் புலந்து நின்றவள்\nபூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,\nவேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்\nபாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர,\n70\nநில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து\nமல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,\nஎல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்\nநல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல், எஞ்ஞான்றும்\nவல்லதால், வையைப் புனல்.\n75\nஎன ஆங்கு______\nமல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,\nஅல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,\nகுல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,\nநல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,\n80\nஎல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;\nதேறித் தெளிந்து, செறி இருள் மால் மலை;\nபாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;\nதுறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:\nகார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே____\n85\nபோர் அடு தானையான் யாறு\nசுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த\nகடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,\nவிடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,\nஅடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்\n90\nகாரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,\nநேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.",
"heading": "கேட்டன கூறல்"
},
{
"content": "துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று ;\n'புனல்' என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை ;\nஉரையின் உயர்ந்தன்று, கவின்\n95\nபோர் ஏற்றன்று, நவின்று ; தகரம்\nமார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று ;\nதுகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று\nவிசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.",
"heading": "நீர்விழவின் சிறப்பு"
},
{
"content": "இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர்,\nநன்பல நன்பல நன்பல--வையை!--\nநின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே.\n100",
"heading": "வையையை வாழ்த்துதல்"
}
] |
பரிபாடல் - 13. திருமால்
|
[
{
"content": "மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று\nஅணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,\nஇறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்\nநிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,\nவிண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத்\n5\nதண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!\nபருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த\nஇரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,\nநேமியும் வளையும் ஏந்திய கையாந்--\nகருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்,\n10\nஅருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்\nதிரு வரை அகலம் --தொழுவோர்க்கு\nஉரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.",
"heading": "திருமாலைத் தொழுவார் பெறும் பேறு"
},
{
"content": "சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,\nஅவையும் நீயே, அடு போர் அண்ணால்!\n15\nஅவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;\nமுந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,\nஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;\nஇரண்டின் உணரும் வளியும் நீயே;\nமூன்றின் உணரும் தீயும் நீயே;\n20\nநான்கின் உணரும் நீரும் நீயே;\nஅதனால், நின் மருங்கின்று--மூ-ஏழ் உலகமும்,\nமூலமும், அறனும், முதன்மையின் இகந்த\nகாலமும், விசும்பும், காற்றொடு கனலும்\n25",
"heading": "எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை"
},
{
"content": "தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,\nமின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த\nகவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்\nதுளவம் சூடிய அறிதுயிலோனும்--\nமறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால்,\n30\nதிறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்\nவிறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,\nநிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்--\nநானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய\nபொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி\n35\nஇலங்கு ஒளி மருப்பின் களிறும் -- ஆகி,\nமூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!",
"heading": "பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்"
},
{
"content": "படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்\nகொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;\nஏவல் இன் முது மொழி கூறும்,\n40\nசேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;\nகார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,\nஅவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;\nவலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,\nஅவை நான்கும் உறழும்--அருள், செறல், வயின் மொழி;\n45\nமுடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்\nகடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;\nஇருமை வினையும் இல, ஏத்துமவை;\nஒருமை வினை மேவும் உள்ளத்தினை;\nஅடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை--\n50\nஅடியும், கையும், கண்ணும், வாயும்;\nதொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,\nதாளும், தோளும், எருத்தொடு, பெரியை;\nமார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;\nகேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை;\n55\nவேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;\nஅறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,\nசெரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்\nஎரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்\nபுரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!--\n60\nஅன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;\nபல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்--\nமுன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;\nஇன்னும் இன்னும் எம் காமம் இதுவே!\n64",
"heading": "புகழ்ந்து போற்றுதல்"
}
] |
பரிபாடல் -
14. செவ்வேள்
|
[
{
"content": "கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற\nநீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;\nதண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்\nவண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;\nஅடியுறைமகளிர் ஆடும் தோளே,\n5\nநெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;\nவாகை ஒண் பூப் புரையும் முச்சிய\nதோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,\n'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;\nநாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன;\n10\nவெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,\nஅழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;\nநீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்\nவார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,\nவிடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்\n15\nபவழத்து அன்ன வெம் பூத் தாஅய்,\nகார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து,",
"heading": "முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்"
},
{
"content": "சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே!\nகறை இல் கார் மழை பொங்கி அன்ன\nநறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!\n20\nஅறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி\nநறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!\nகெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை\nஎழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!\nபிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்\n25\nசிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!\nஇரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,\nஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!--",
"heading": "முருகனைப் புகழ்ந்து போற்றுதல்"
},
{
"content": "அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,\nதுன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்\nஇன்னும் இன்னும் அவை ஆகுக--\nதொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!\n32",
"heading": "விண்ணப்பம்"
}
] |
பரிபாடல் - 15. திருமால்
|
[
{
"content": "புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,\nநில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்\nதொலையா நேமி முதல், தொல் இசை அமையும்\nபுலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்\nபல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும்,\n5\nநிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்\nநின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே:\nசிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்\nமலர் அகல் மார்பின் மை படி குடுமிய\nகுல வரை சிலவே: குல வரை சிலவினும்\n10\nசிறந்தது--கல் அறை கடாம் கானலும் போலவும்,\nபுல்லிய சொல்லும் பொருளும் போலவும்,\nஎல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்\nதாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.\nநாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை\n15\nஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?\nஅரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்\nஎளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.",
"heading": "திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு"
},
{
"content": "அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்\nமரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி,\n20\nஅலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,\nசிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்\nசோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்--\nதாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்--\nநாமத் தன்மை நன்கனம் படி எழ,\n25\nயாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,\nமன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,\nபொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே\nநினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!",
"heading": "திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துகா \r\n எனல்"
},
{
"content": "சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ்\n30\nசினையெலாம் செயலை மலர, காய் கனி\nஉறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,\nமாயோன் ஒத்த இன் நிலைத்தே.",
"heading": "மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்"
},
{
"content": "சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே--\nஇருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே\n35\nபெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது\nகண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.",
"heading": "சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்"
},
{
"content": "மக முயங்கு மந்தி வரைவரை பாய,\nமுகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,\nமணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ,\n40\nகுருகு இலை உதிர, குயிலினம் கூவ,\nபகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்\nநா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,\nசிலம்பின் சிலம்பு இசை ஓவாது--ஒன்னார்க்\nகடந்து அட்டான் கேழ் இருங்குன்று.\n45",
"heading": "குன்றத்தில் பிறக்கும் ஓசைகள்"
},
{
"content": "தையலவரொடும், தந்தாரவரொடும்,\nகைம் மகவோடும், காதலவரொடும்,\nதெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்--\nபுவ்வத் தாமரை புரையும் கண்ணன்,\nவௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்,\n50\nஎவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்\nமன்பது மறுக்கத் துன்பம் களைவோன்\nஅன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.",
"heading": "குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்"
},
{
"content": "கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;\nஒள் ஒளியவை, ஒரு குழையவை;\n55\nபுள் அணி பொலங் கொடியவை;\nவள் அணி வளை நாஞ்சிலவை,\nசலம் புரி தண்டு ஏந்தினவை;\nவலம்புரி வய நேமியவை;\nவரி சிலை வய அம்பினவை;\n60\nபுகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;\nஎன ஆங்கு-\nநலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி\nஇது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,\n'இருங்குன்றத்து அடி உறை இயைக!' என,\nபெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே.\n66",
"heading": "பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்"
}
] |
பரிபாடல் - 16. வையை
|
[
{
"content": "கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,\nமை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,\nநெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,\nஎவ் வயினானும்--மீதுமீது அழியும்.\nதுறையே--முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,\n5\nபொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி\nவலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்\nகயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,\nதம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்\nதத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே.\n10\nசெறுவே--விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,\nபடு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,\nகளி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.\nகாவே--சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்\nநரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே--\n15\nகரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.\nகான்-அலம் காவும், கயமுன், துருத்தியும், தேன்\nதேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்\nபூத்தன்று--வையை வரவு.",
"heading": "வையையில் நீர் வரவு"
},
{
"content": "கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,\n20\nகுரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள்,\nபெருந் தகை மீளி வருவானைக் கண்டே,\nஇருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை;\nபூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர்--\nதோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்\n25\nநாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,\nஇருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,\nமகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,\nகுருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,\n'பூத்தனள் நங்கை; பொலிக!' எனநாணுதல்\n30",
"heading": "தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு \r\n வாய்த்தல்"
},
{
"content": "வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்\nமலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்\nகரை மரம் சேர்ந்து கவினி; மடவார்\nநனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்\nமலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தா அய்;\n35\nமீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய\nவானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,\nதேன் இமிர் வையைக்கு இயல்பு.",
"heading": "வாய்த்தன்றால்--வையை வரவு."
},
{
"content": "கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,\nஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை,\n40\nபல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,\nவெல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்\nஅடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து\nவடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,\nஎடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத்\n45\nதொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்--\nகொடித் தேரான் வையைக்கு இயல்பு.",
"heading": "வையைக்கு உரிய இயல்பு"
},
{
"content": "வரை ஆர்க்கும் புயல்; கரை\nதிரை ஆர்க்கும், இத் தீம் புனல்;\nகண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர்,\n50\nபண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்\nநாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,\nபூத்த புகையும், அவியும் புலராமை\nமறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்\nவறாஅற்க, வைகை! நினக்கு.\n55",
"heading": "தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்"
}
] |
பரிபாடல் - 17. செவ்வேள்
|
[
{
"content": "தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,\nஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,\nவிடை அரை அசைத்த, வேலன், கடிமரம்\nபரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,\nவிரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து--\n5\nகோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ--\nமாலை மாலை, அடி உறை, இயைநர்,\nமேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?",
"heading": "மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்"
},
{
"content": "ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,\nஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ,\n10\nஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,\nஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,\nஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,\nஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,\nஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க,\n15\nஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,\nஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்\nநீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,\nஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,\nமாறுமாறு உற்றன் போல் மாறு எதிர் கோடல்--\n20\nமாறு அட்டான் குன்றம்--உடைத்து.",
"heading": "மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்"
},
{
"content": "பாடல் சான்று பல் புகழ் முற்றிய\nகூடலொடு பரங்குன்றின் இடை,\nகமழ் நறுஞ் சாந்தின் அவர்அவர் திளைப்ப,\nநணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து;\n25\nமகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்\nசோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.\nவசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,\nதிசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு\nஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை\n30\nவாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;\nதேயா மண்டிலம் காணுமாறு இன்று.",
"heading": "பரங்குன்றிற்கும் கூடாக்கும் இடைப்பட்ட நிலம்"
},
{
"content": "வளை முன் கை வணங்கு இறையார்,\nஅணை மென் தோள் அசைபு ஒத்தார்\nதார் மார்பின் தகை இயலார்,\n35\nஈர மாலை இயல் அணியார்,\nமனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,\nசுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;\nஅனைய, பரங்குன்றின் அணி.",
"heading": "பரங்குன்றின் அலங்காரம்"
},
{
"content": "கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ;\n40\nமேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ;\nதெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,\nஅவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,\nதொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,\nகொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும்,\n45\nகை ஊழ் தடுமாற்றம் நன்று.",
"heading": "தெய்வ விழவும் விருந்தயர்வும்"
},
{
"content": "என ஆங்கு,\nமணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,\nபிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!\nபணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,\n50\nஅணி நெடிங் குன்றம் பாடுதும்; தொழுதும்;\nஅவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்--\nஏம வைகல் பெறுக, யாம் எனவே.\n53",
"heading": "முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்"
}
] |
பரிபாடல் - 18. செவ்வேள்
|
[
{
"content": "போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,\nகார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,\nநீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,\nசூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்\nசீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,\n5",
"heading": "இமயத்தொடு நிகர்க்கும் குன்று"
},
{
"content": "தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்\nஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்\nஉள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:\n'உள்ளியது உணர்ந்தேன்; அது உரை இனி, நீ எம்மை\nஎள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து, அவன்,\n10\n'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்\nபேதுற்ற இதலைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை\nஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல்\nஆய் தேரான் குன்ற இயல்பு.",
"heading": "ஏறுமாறு ஏற்கும் இக் குன்று."
},
{
"content": "ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல்,\n15\nமை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,\nகை வளம் பூத்த வடு வொடு, காணாய் நீ?\nமொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:\nமெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி--\nநை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம்\n20\nபூத்தன--பாணா! நின் பாட்டு.",
"heading": "பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின் \r\n கூற்று"
},
{
"content": "தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,\nமங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,\nகண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,\nஇருள் போழும் கொடி மின்னால்--\n25\nவெண் சுடர் வேல் வேள்! விரை மயில் வேல் ஞாயிறு!--நின்\nஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,\nஎழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்\nதொழில் வீற்றிருந்த நகர்.",
"heading": "பரங்குன்றத்திலுள்ள அம்பலம்"
},
{
"content": "ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி--\n30\nசூர் ததும்பும் வரைய காவால்,\nகார் ததும்பு நீர் ததும்புவன சுனை,\nஏர் ததும்புவன பூ அணி செறிவு,\nபோர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்\nகாந்தள், செறிந்த கவின்,\n35\nகவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்\nபுரி நெகிழ்ப்பார் போன்றன கை.\nஅச்சிரக்கால் ஆர்த்து--அணி மழை--கோலின்றே,\nவச்சிரத்தான் வானவில்லு.",
"heading": "குன்றத்துக் காட்சிகள்"
},
{
"content": "வில்லுச் சொரி பகழியின், மென் மலர் தாயின--\n40\nவல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.\nவட்டு உருட்டு வல்லாய்! மலைய--நெட்டுருட்டுச்\nசீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,\nபோர் ததும்பும் அரவம் போல்,\nகருவி ஆர்ப்ப, கருவி நின்றன--குன்றம்.\n45\nஅருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;\nகுருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;\nஎருவை கோப்ப, எழில் அணி திருவில்\nவானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,\nகூனி வளைத்த--சுனை,\n50",
"heading": "குன்றத்தின் சிறப்பு"
},
{
"content": "புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,\nசுருதியும் பூவும் சுடரும் கூடி,\nஎரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,\nசெரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,\nஉரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,\n55\nபிரியாது இருக்க--எம் சுற்றமோடு உடனே!",
"heading": "முருகவேளை வாழ்த்துதல்"
}
] |
பரிபாடல் - 19. செவ்வேள்
|
[
{
"content": "நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,\nபுல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,\n'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்\nஇரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின்\nதண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு\n5\nசாறு கொள் துறக்கத்தவளொடு\nமாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.",
"heading": "வள்ளியை முருகன் வதுவை கொண்டது"
},
{
"content": "புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,\nகலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,\nஅறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,\n10\nசிறந்தோர் உலகம் படருநர் போல,\nஉரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,\nபுரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,\nதெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்\nகுன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு--\n15\nநேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய\nதார் போலும், மாலைத் தலை நிறையால்--தண் மணல்\nஆர் வேலை யாத்திரை செல் யாறு.",
"heading": "கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி"
},
{
"content": "சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்\nபுடை வரு சூழல்--புலம் மாண் வழுதி\n20\nமட மயில் ஓரும் மனையவரோடும்,\nகடன் அறி காரியக் கண்ணவரோடும்--நின்\nசூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்\nபாடு வலம் திரி பண்பின்-- பழ மதிச்\nசூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,\n25\nபாடிய நாவின், பரந்த உவகையின்,\nநாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,\nபடு மணி யானை நெடியாய்! நீ மேய\nகடி நகர் சூழ் நுவலுங்கால்.",
"heading": "பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி"
},
{
"content": "தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,\n30\nவம்பு அணி பூங் கயிறு வாங்கி, மரன் அசைப்பார்--\nவண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;\nதிண் தேர் வழியின் செல நிறுப்பார்--கண்டக்\nகரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து\nபரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,\n35\nகுருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற\nஇடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!",
"heading": "குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை"
},
{
"content": "குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,\nகரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,\nதெய்வப் பிரமம் செய்குவோரும்,\n40\nகை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,\nயாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,\nவேள்லியின் அழகு இயல் விளம்புவோரும்;\nகூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,\nஊழ் உறமுரசின் ஒலி செய்வோரும்;\n45\nஎன்றூழ் உற வரும் இரு சுடர் நேமி\nஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்;\n'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,\nவிரகியர் வினவ, வினா இறுப்போரும்;\n'இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்\n50\nசென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு\nஒன்றிய படி இது' என்று உரை செய்வோரும்:\nஇன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,\nதுன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,\nநேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்\n55\nசோபன நிலையது--துணி பரங்குன்றத்து\nமாஅல் முருகன் மாட மருங்கு.",
"heading": "மலைச் சிறப்பு - வழுதியுடன் ஏறியோர் கண்டவை"
},
{
"content": "பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,\nபிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான்\nவந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்\n60\nஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க,\n'ஏஎ, ஓஒ' என்று ஏலா அவ் விளி\nஅவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்\nசெல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை\nமீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே--\n65\nவாழ்த்து உவப்பான் குன்றின் வகை.",
"heading": "குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி"
},
{
"content": "நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்\nசினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப,\nஉதிர்த்த சுனையின் எடுத்த தலைய\nஅலர் முகிழ் உற, அவை கிடப்ப,\n70\n'தெரி மலர், நனை, உறுவ,\nஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த\nமைந்தன்; அருகு ஒன்று மற்று-இளம் பார்ப்பு' என\nஆங்கு இள மகளிர் மருள-- பாங்கர்,",
"heading": "இள மகளிரின் மருட்சி"
},
{
"content": "பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,\n75\nகைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,\nஎருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,\nஉருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,\nபருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;\nநிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க\n80\nமணந்தவை, போல, வரை மலை எல்லாம்\nநிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;\nவிடியல் வியல் வானம் போலப் பொலியும்--\nநெடியாய்! நின் குன்றின்மிசை.",
"heading": "குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்"
},
{
"content": "தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்\nநின யானைச் சென்னி நிறம் குங்குமத் தால்\n85\nபுனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா.\nபொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,\nமலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,\nபல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,\nகன்னிமை கனிந்த காலத்தார், நின்\n90\nகொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்--\nமறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்\nமுறுவல் தலையளி எய்தார்--நின் குன்றம்\nகுறுகிச் சிறப்பு உணாக்கால்.",
"heading": "கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்"
},
{
"content": "குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்\n95\nசிறப்பு உணாக் கேட்டி செவி.\nஉடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே\nபடையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;\nஉருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்\nவிரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;\n100\nஎவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,\nதெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,\nஅவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்\nகடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;\nஉடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!\n105",
"heading": "முருகப் பெருமானை வாழ்த்துதல்"
}
] |
பரிபாடல் - 20. வையை
|
[
{
"content": "கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,\nஉடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை\nமுற்றுபு முற்றுபு, பெய்து--சூல் முதிர் முகில்--\nபொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்\nகுருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று.\n5\nகாலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி\nமாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்\nவான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்,\nதேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால\nகான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;\n10\nதான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.\nபுதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வசை\nதன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று\nவெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,\nஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில்\nநீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,\n15\nதிண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,\nவங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,\nவயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,\nகயமாப் பேணிக் கலவாது ஊரவும்,\nமகளிர் கோதை மைந்தர் புனையவும்,\n20\nமைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,\nமுந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,\nஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்\nகோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,\nமாட மறுகின் மருவி மறுகுற,\n25\nகூடல் விழையும் தகைத்து--தகை வையை.",
"heading": "புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்"
},
{
"content": "புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,\nதகை வகை தைஇயினார் தார்;\nவகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்\nசூட்டும் கன்ணியும் மோட்டு வலையமும்\n30\nஇயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்\nஅயல் அயல் அணி நோக்கி--ஆங்கு ஆங்கு வருபவர்\nஇடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,\nகெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,\nநொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க,\n35",
"heading": "தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த \r\n நிகழ்ச்சி"
},
{
"content": "தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;\nசெருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன\nநேர் இதழ் உண்கணார் நிரை காடாக,\nஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.\nதன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்\nஎன--ஆங்கு,\n40\nஒய்யப் போவாளை, 'உறழ்த்தோள் இவ் வாணுதல்'\nவையை மடுத்தால் கடல் எனத் தெய்ய\nநெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,\n'செறி நிரைப் பெண்' --வல் உறழ்பு--'யாது தொடர்பு?' என்ன\nமறலினாள், மாற்றாள் மகள்.\n45",
"heading": "தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதாம்"
},
{
"content": "வாய் வாளா நின்றாள்,\nசெறிநகை சித்தம் திகைத்து.",
"heading": "தலைமகளின் திகைப்பு"
},
{
"content": "ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம்\nமாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!\nபெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்\n50\nதுற்றவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!\nமுற்றா நறு நறா மொய் புனல் அட்டி,\nகாரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,\nமூரி தவிர முடுக்கு முது சாடி!\nமட மதர் உண்கண் கயிறாக வைத்துத்\n55\nதட மென் தோள் தொட்டு, தகைத்து, மட விரலால்\nஇட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்\nதொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்\nபொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்\nவையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து,\n60\nமத்திகை மாலையா மோதி, அவையத்துத்\nதொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓட\nவிடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம்,\nதன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,\nநின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்--\n65",
"heading": "ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்"
},
{
"content": "தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு\nஊடினார், வையையகத்து,\n'சிந்திக்க தீரும் பிணியாட் செறேற்க;\nமைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை\nவந்திக்க வார்' என --- 'மனத் தகக நோய் இது;\n70",
"heading": "பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று"
},
{
"content": "வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;\nபோற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,\nமாற்றாளை மாற்றாள் வரவு.'",
"heading": "பரத்தையின் பதில் உரை"
},
{
"content": "'அ... சொல் நல்லவை நாணாமல்\nதந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;\n75\nஎந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்\nவந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,\nதந்தானைத் தந்தே, தருக்கு.'",
"heading": "தலைவி கூற்று"
},
{
"content": "மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்\nகால சிலம்பும் கழற்றுவான்; சால,\n80\nஅதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;\nகதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'\nஎன ஆங்கு--",
"heading": "பரத்தையின் மறுமொழி"
},
{
"content": "பரத்தையை நோக்கி உரைத்தல்\nவச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு\nநச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே.\n85",
"heading": "கண்டார் சிலருடைய கூற்று"
},
{
"content": "சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்\nகாக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;\nதகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்\nஇகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;\nநிகழ்வது அறியாது--நில்லு நீ, நல்லாய்!\n90\n'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்\nஅகலம் கடிகுவேம்' என்பவை யார்க்கானும்\nமுடி பொருள் அன்று--முனியல்!\nகட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!'\nவையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின்\nகருங்கை வழியே பாயும் காட்சி\nஎன--ஆங்கு\n95\nஇன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும்,\nதென்னவன் வையைச் சிறப்பு,\nகொடி இயலார் கைபோல் குவிந்த முகை,\nஅரவு உடன்றவைபோல் விரிந்த குலை,\nகுடை விரிந்தவை போலக் கோலும் மலர்,\n100\nசுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,\nசினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,\nஅருவி சொரிந்த திரையின் துரந்து;\nநெடு மால் கருங்கை நடு வழிப் போந்து--\nகடு மா களிறு அணைத்துக் கைவிடு நீர் போலும்--\n105\nநெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்\nகடி மதில் பெய்யும் பொழுது.",
"heading": "தலைமகளுக்கு முனிவி நீங்க உரைத்தல்"
},
{
"content": "நாம் அமர் உடலும் நட்பும், தணப்பும்,\nகாமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,\nதாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்\n110\nபூ மலி வையைக்கு இயல்பு.",
"heading": "பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு"
}
] |
பரிபாடல் - 21. செவ்வேள்
|
[
{
"content": "ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,\nபொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.\nதொட்டதை--தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை\nதுப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,\nவெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த,\n5\nவரி மலி அர உரி வள்பு கண்டன்ன,\nபுரி மென் பீலிப் போழ் புனை அடையல்.\nகையதை--கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து,\nபுள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;\nபூண்டதை--சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த\n10\nஉருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார்.\nஅமர்ந்ததை--புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,\nநிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை\nஅரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,\nதரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்.\n15\n'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்--\nவென்றிக் கொடி அணி வெல்வ! நிற் தொழுது.",
"heading": "பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்"
},
{
"content": "சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,\nதுடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,\nஅடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்,\n20\nநுனை இலங்கு எ·கெனச் சிவந்த நோக்கமொடு\nதுணை அணை கேள்வணைத் துனிப்பவள் நிலையும்;\nநிழல் காண் மண்டிலம் நோக்கி,\nஅழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;\nபொதிர்த்த முலையிடைப் பூசிக் சந்தனம்\n25\nஉதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;\nபல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்\nஓவத்து எழுது எழில் போலும்--மா தடிந்-\nதிட்டோய்! நின் குன்றின்மிசை.",
"heading": "பரங்கின்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்"
},
{
"content": "மிசை படு சாந்தாற்றி போல, எழிலி\n30\nஇசை படு பக்கம், இரு பாலும் கோலி,\nவிடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;\nவிரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,\nமுரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;\nயாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க;\n35\nபாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;\nஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்-\nஇரங்கு முரசினான் குன்று.",
"heading": "குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்"
},
{
"content": "தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்\nமீ நீர் நிவந்த விறலிழை, ' கேள்வனை\n40\nவேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என,\nபூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது\nஅரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,\nகொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,\nதழுவும் தகை வகைத்து--தண் பரங்குன்று.\n45",
"heading": "சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்"
},
{
"content": "வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய\nதண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,\nகயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த\nபுயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,\nஉருள்இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த\n50\nமுருகு கமழ் புகை நுழைந்த வளியும்,\nஅசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த-\nபசும் பூண் சேஎய்!-நின் குன்றம் நன்கு உடைத்து.",
"heading": "குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுக்கள்"
},
{
"content": "கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்,\nஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த\n55\nசெண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,\nமணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்\nபிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,\nபூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்\nசீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான்,\n60\nகோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஓசிபவள் ஏர்-\nஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்\nவாடை உளர் கொம்பர் போன்ம்.\nவாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்\nதோள் ஊழ் பெயர்ப்பவள் கண்.\n65",
"heading": "சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்"
},
{
"content": "மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;\nஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;\nநன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை\nஇன்று போல் இயைக!' எனப் பரவுதும்-\nஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே.\n70",
"heading": "முருகவேளை வாழ்த்துதல்"
}
] |
பரிபாடல் - 22. வையை
|
[
{
"content": "ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த\nகளிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,\nஅரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்\nமுரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,\nஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை\n5\nவிடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,\nகண் ஒளிர் எ·கின் கடிய மின்னி, அவன்\nவண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்மிசை\nஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்\nதானையின் ஊழி....தாவூக் கத்தின்,\n10\nபோன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-\n..... ......... நீக்கிப் பு.. ..... .....\nகான மலைத்தரை கொன்று மணல பினறி\nவான மலைத்த ......வ ........ ....... ........\n..... லைத்தவ மண முரசு எறிதா,\n15\nதானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,",
"heading": "மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்"
},
{
"content": "பொறிவி யாற்றுறி--துவர், புகை, சாந்தம்\nஎறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற,\nநறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,\nபிற தொழின ....ம் பின்பின் தொடர;\n20\nசெறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,\nஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,\nதார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;\nமாவும், களிறும், மணி அணி வேசரி,\nகாவு நிறையக் கரை நெரிபு ஈண்டி;\n25\nவேல் ஆற்றும் பொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்\nபோல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,\nதார் அணி மைந்தர் தவப் பயன் ஆம் எனக்\nகார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,\nவார் அணி கொம்மை, வகை அமை மேகலை,\n30\nஏர் அணி இலங்கு எயிற்று, இலங்கு நகையவர்-\n'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்\nநீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்? எனத்\nதேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-\nதீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்.\n35",
"heading": "மைந்தரும் மகளிரும் கரையையும் வையையும் சேர்கின்ற அழகு"
},
{
"content": "மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு\nஎதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,\nகவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்\nபுகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,\nஊது சீர்த்தீம் குழல் இயம்ப, மலர்மிசைத்\n40\nதாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,\n..... துடிச் சீர் நடத்த வளி நடன்\nமெல் இணர்ப் பூங்கொடி மேவர நுடங்க,\nஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-\nதீம் புனல் வையைத் திருமருத முந்துறையால்.\n45\nகோடுளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,\n.... ..... .......புரை தீர் நெடு மென்\nதோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,\nநீள் தாழ்பு தோக்கை, நித்தில வரிச் சிலம்பு,",
"heading": "திருமருத முன்துறைக் காட்சிகள்"
}
] |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.