id
int64
1
150
title
stringlengths
26
30
poem
stringlengths
412
3.16k
poet
stringclasses
5 values
1
கலித்தொகை - 1. கடவுள்வாழ்த்து
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி; மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி; படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ, 5 கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல், கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ? மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து, பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள், வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? 10 கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள, தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால், முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ? என வாங்கு; பாணியும், தூக்கும், சீரும், என்று இவை 15 மாண் இழை அரிவை காப்ப, வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி.
பெருங்கடுங்கோ
2
கலித்தொகை - பாலைக் கலி - 2
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக் கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும் உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், 5 சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில் ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை- மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்றைஇய! 10 தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள், முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை; இல் என, இரந்தார்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, 15 கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள் புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை; இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- 20 வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை; என, இவள் புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல் அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, 25 காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல் யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின் தொல் கவின் தொலைதல் அஞ்சி, என் சொல் வரைத் தங்கினர், காதலோரே.
பெருங்கடுங்கோ
3
கலித்தொகை - பாலைக் கலி - 3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்- இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க, பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி; 5 'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை; கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை, அடையொடு வாடிய அணி மலர்-தகைப்பன; 'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, 10 ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை; செல்லு நீள் ஆற்றிடைச், சேர்ந்து எழுந்த மரம் வாட, புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன; 'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப், பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை; 15 துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து அணி செல, வாடிய அம் தளிர்-தகைப்பன; எனவாங்கு யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை; ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, 20 மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும் கானம் தகைப்ப, செலவு.
பெருங்கடுங்கோ
4
கலித்தொகை - பாலைக் கலி - 4
வலி முன்பின், வல்லென்ற யாக்கைப், புலி நோக்கின்- சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும்-கடுங்கண் மறவர் தாம் கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், 5 புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி; 'காழ் விரி வகை ஆரம் மீ வரும் இள முலை போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் 10 தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர் சூழ்வதை எவன்கொல்? அறியேன்!' என்னும் 'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என் ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் 15 உள்ளுவது எவன்கொல்? அறியேன்!" என்னும் 'நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என் ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர் எண்ணுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்; 20 எனவாங்கு, 'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என!' என் தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர், பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே. 25
பெருங்கடுங்கோ
5
கலித்தொகை - பாலைக் கலி - 5
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம் இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் உமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், 5 நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக், கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்? நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே, கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், 10 புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ? ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல், பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ? ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? 15 எனவாங்கு, பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு, எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது, அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே.
பெருங்கடுங்கோ
6
கலித்தொகை - பாலைக் கலி - 6
மரையா மரல் கவர, மாரி வறப்ப- வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர், சுரை அம்பு, மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம், உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்- தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் 5 கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால், என், நீர் அறியாதீர் போல இவை கூறல்? நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும், அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு துன்பம் துணையாக நாடின், அது அல்லது 10 இன்பமும் உண்டோ , எமக்கு?
பெருங்கடுங்கோ
7
கலித்தொகை - பாலைக் கலி - 7
வேனில் உழந்த வறிது உயங்கும் ஒய் களிறு வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று உசாவுகோ-ஐய! சிறிது;- நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின் 5 கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே; இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல், மை இல் வாண் முகம் பசப்பு ஊரும்மே; நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி, புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே; 10 இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல், இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே; நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய, வலம் படு திகிரி வாய் நீவுதியே; இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், 15 இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே என நின், செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின், தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ- 20 முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?
பெருங்கடுங்கோ
8
கலித்தொகை - பாலைக் கலி - 8
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க, கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின், உறல் ஊறு கமழ் கடாஅத்து ஒல்கிய எழில் வேழம், வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர; 5 விறன் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய! வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறூஉம் 10 யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது, பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும் திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை 15 வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும் அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? எனவாங்கு; நச்சல் கூடாது பெரும! இச் செலவு ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று; 20 மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பி, தன் நகர் விழையக் கூடின், இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே.
பெருங்கடுங்கோ
9
கலித்தொகை - பாலைக் கலி - 9
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!- வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை, 5 என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!' 'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை; ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய 10 மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்; பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15 நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20 எனவாங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.
பெருங்கடுங்கோ
10
கலித்தொகை - பாலைக் கலி - 10
வறியவன் இளமை போல், வாடிய சினையவாய், சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி, யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல், வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின், அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, 5 கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல் உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம் இடை கொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின், உடைபு நெஞ்சு உக, ஆங்கே ஒளிஓடற்பாள்மன்னோ- படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ 10 புடைபெயர்வாய்ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்? முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின், பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்மன்னோ- நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகையாகத் துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? 15 பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின், மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்மன்னோ இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின் அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்? எனவாங்கு; 20 'வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர்' எனப், புனையிழாய்! நின் நிலை யான் கூறப், பையென, நிலவு வேல் நெடுந் தகை நீள் இடைச் செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே!
பெருங்கடுங்கோ
11
கலித்தொகை - பாலைக் கலி - 11
'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும், புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என, பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி: 5 'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் காட்டுள், துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே 'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால், 10 துன்புறூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள், அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை மென் சிறகரால் ஆற்றும், புறவு' எனவும் உரைத்தனரே 'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள், 15 இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை' எனவும் உரைத்தனரே என ஆங்கு இனை நலம் உடைய கானம் சென்றோர் புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின் 20 பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே.
பெருங்கடுங்கோ
12
கலித்தொகை - பாலைக் கலி - 12
இடு முள் நெடு வேலி போல, கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி, உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு, 5 வெறி நிரை வேறாகச் சாரச்சாரல் ஓடி, நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்! உரனுடை உள்ளத்தை; செய் பொருள் முற்றிய 10 வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்! இளமையும் காமமும் நின் பாணி நில்லா இடை முலைக் கோதை குழைய முயங்கும் முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை 15 போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்! கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி
பெருங்கடுங்கோ
13
கலித்தொகை - பாலைக் கலி - 13
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, எரி வெந்த கரி வறல்வாய், புகுவ காணாவாய், பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட, மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, 5 உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை, ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது, சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும் புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ் சுரம் எல்வளை! எம்மொடு நீ வரின், யாழ நின் 10 மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல, கல் உறின், அவ் அடி கறுக்குந அல்லவோ? நலம் பெறும் சுடர்நுதால்! எம்மொடு நீ வரின், இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் 15 துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ? கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின், தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட, முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த 20 வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ? என ஆங்கு, அனையவை காதலர் கூறலின், 'வினைவயிற் பிரிகுவர்' எனப் பெரிது அழியாதி, திரிபு உறீஇ; கடுங் குரை அருமைய காடு எனின், அல்லது, 25 கொடுங்குழாய்! துறக்குநர்அல்லர் நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே
பெருங்கடுங்கோ
14
கலித்தொகை - பாலைக் கலி - 14
'அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண், மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல், மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல், அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல், 5 சில நிரை வால் வளை, செய்யாயோ!' என, பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி, இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது, இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே 'பொருள் அல்லால் பொருளும் உண்டோ ?' என, யாழ நின் 10 மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ? 'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு' என, ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ? செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? 15 அதனால், எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள் நாம் கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து அவவுக் கைவிடுதம்; அது மனும் பொருளே.
பெருங்கடுங்கோ
15
கலித்தொகை - பாலைக் கலி - 15
அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் இணைப் படைத் தானை அரசோடு உறினும் கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின், எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை 5 மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி, உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர், பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப் 10 பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம் பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்; பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ 15 தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம், பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்; பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா, 20 திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்; என ஆங்கு, அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்; வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள் முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த 25 இளமையும் தருவதோ, இறந்த பின்னே.
பெருங்கடுங்கோ
16
கலித்தொகை - பாலைக் கலி - 16
பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க, வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர, ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர்திறத்து, இனி நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன் அதுவும்தான் தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார், 5 துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை, 'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என, இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ; புனையிழாய்! ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி, முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை, 10 'சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!' என, கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ? ஒளியிழாய்! ஈங்கு நாம் துயர் கூர, பொருள்வயின், அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை, 'முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக!' என, 15 வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ? என ஆங்கு, செய் பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு, இனையன தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் தேமொழி! 'வறன் ஓடின் வையத்து வான் தரும் கற்பினாள் 20 நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு' என, அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினைத் திறத்தே.
பெருங்கடுங்கோ
17
கலித்தொகை - பாலைக் கலி - 17
படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணை புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும், 'உடையதை எவன் கொல்?' என்று ஊறு அளந்தவர்வயின் நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கற்காண் நறுநுதால்! 'தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப, துறந்து நீ, 5 வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை, நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது, நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ? ஆற்றல் நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ, தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன்; முயல்வளவை, 10 நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக் கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ? வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ, பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவை, தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் 15 முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?' என ஆங்கு, பொருந்தி யான் தான் வேட்ட பொருள்வயின் நினைந்த சொல், திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல், மருந்து ஆகி, மனன் உவப்ப 20 பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே.
பெருங்கடுங்கோ
18
கலித்தொகை - பாலைக் கலி - 18
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப, பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ, என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்: சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; 5 ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்; இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள், ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரேஆயினும், 10 ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ, சென்ற இளமை தரற்கு!
பெருங்கடுங்கோ
19
கலித்தொகை - பாலைக் கலி - 19
செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம் பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய! அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து, பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்; 5 மகன் அல்லை மன்ற, இனி செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி, அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை என் திறம் யாதும் வினவல்; வினவின், 10 பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய, தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு.
பெருங்கடுங்கோ
20
கலித்தொகை - பாலைக் கலி - 20
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற, செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின், தணிவு இல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும் பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும் மணி திகழ் விறல் மலை வெம்ப, மண் பக, 5 துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ் சுரம் 'கிளி புரை கிளவியாய்! நின் அடிக்கு எளியவோ, தளி உறுபு அறியாவே, காடு?' எனக் கூறுவீர்! வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து அளி என, உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ; 10 'ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின், ஆறு நீர் இல' என, அறன் நோக்கிக் கூறுவீர்! யாறு நீர் கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும் தேறு நீர், உடையேன் யான்; தெருமந்து ஈங்கு ஒழிவலோ; 'மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும் 15 மாண் நிழல் இல, ஆண்டை மரம்' எனக் கூறுவீர்! நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும் தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ; என ஆங்கு, 'அணை அரும் வெம்மைய காடு' எனக் கூறுவீர்! 20 கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை, பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப் பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே;
பெருங்கடுங்கோ
21
கலித்தொகை - பாலைக் கலி - 21
'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி, ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து, பொருள்வயிற் பிரிதல் வேண்டும்' என்னும் அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; 5 நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு' என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே! 'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள்தான், 10 பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்; அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று இமைப்புவரை வாழாள் மடவோள் அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே.
பெருங்கடுங்கோ
22
கலித்தொகை - பாலைக் கலி - 22
உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும் புதுவது அன்றே புலனுடை மாந்திர்! தாய் உயிர் பெய்த பாவை போல, 5 நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால், ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை; நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின் 10 பறி முறை பாராட்டினையோ? ஐய! நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல் செய்வினை பாராட்டினையோ? ஐய! குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் 15 இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில் தளர் முலை பாராட்டினையோ? ஐய! என ஆங்கு, அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட, சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண் 20 படர் கூற நின்றதும் உண்டோ ? தொடர் கூர, துவ்வாமை வந்தக்கடை.
பெருங்கடுங்கோ
23
கலித்தொகை - பாலைக் கலி - 23
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல் நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: 5 இனி யான், உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன் தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்; நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் 10 அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்; கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓரன்னர்; என ஆங்கு, யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது, 15 கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப, வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல, நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே.
பெருங்கடுங்கோ
24
கலித்தொகை - பாலைக் கலி - 24
'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும்'என்னும் சொல் இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட, யானும், 'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர, 5 மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், பாயல் கொண்டு என் தோள் கனவுவார், 'ஆய் கோல் தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள், கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் 10 நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்றெஞ், செய் பொருள் முற்றும் அளவு?' என்றார்; ஆயிழாய்! தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின், 'தொய்யில் துறந்தார் அவர்' என, தம்வயின், 15 நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு போயின்று, சொல், என் உயிர்.
பெருங்கடுங்கோ
25
கலித்தொகை - பாலைக் கலி - 25
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா, கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு, களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, 5 முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம் 10 குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ் சுரம் இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்: மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய், சிறிது நீர் தணக்குங்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ சிறப்புச் செய்து உழையராப் புகழ்போற்றி, மற்று அவர் 15 புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்; ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர் நீங்குங்கால், நெகிழ்பேகும் வளை எனவும் உள அன்றோ செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர் ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு போல்; 20 ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து, ஒரு நாள் நீர் பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்; என ஆங்கு, 25 யாம் நிற் கூறுவது எவன் உண்டு எம்மினும் நீ நற்கு அறிந்தனை; நெடுந் தகை! வானம் துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் நின் அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே.
பெருங்கடுங்கோ
26
கலித்தொகை - பாலைக் கலி - 26
'ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு, 5 தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல, போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற, நோ தக வந்தன்றால், இளவேனில் மேதக பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து, தொல் கவின் தொலைந்த வென் தட மென் தோள் உள்ளுவார் 10 ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர் திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை, வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம் 15 இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்; அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி, திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்' 20 என, நீ தெருமரல் வாழி, தோழி! நம் காதலர், பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் செரு மேம்பட்ட வென்றியர்; 'வரும்' என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே 25
பெருங்கடுங்கோ
27
கலித்தொகை - பாலைக் கலி - 27
'ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த; பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்; மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப; காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு 5 தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற; பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு, ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில் நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க; 10 கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய, புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்? கன்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற, தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க; ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, 15 வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்? மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள, பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க; தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்;' 20 என ஆங்கு, நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி! நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின், காமவேள் விழவாயின், 'கலங்குவள் பெரிது' என, ஏமுறு கடுந் திண் தேர் கடவி, 25 நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே.
பெருங்கடுங்கோ
28
கலித்தொகை - பாலைக் கலி - 28
'பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும் நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல், தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண் தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற, செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு, 5 தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான் விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின், பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின், அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது 10 வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ? புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின், அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின், மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ? 15 தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின், மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின், பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?' என ஆங்கு, 20 ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும் தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர், பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே.
பெருங்கடுங்கோ
29
கலித்தொகை - பாலைக் கலி - 29
'தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர; வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள; 5 இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார; மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல், ஆய் இதழ்ப் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர; மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்; சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி! 10 நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன் நிறை நீவி, வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி, நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்; போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச் சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன் கைநீவி 15 வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்; தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர் வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மண் வலிப்பவும், நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட 20 கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்' என ஆங்கு, வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப் பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம் அருந் துயர் களைஞர் வந்தனர் 25 திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே.
பெருங்கடுங்கோ
30
கலித்தொகை - பாலைக் கலி - 30
'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி, புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும், இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்; துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி, 5 மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ 'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில் குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளராயின்; பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள் மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ 10 'ஆனார் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை, தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளராயின்; உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ 'பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து, 15 அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்' என ஆங்கு, தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற, அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின் காமர் கழல் அடி சேரா 20 நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே.
பெருங்கடுங்கோ
31
கலித்தொகை - பாலைக் கலி - 31
'கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல் வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக, பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப் புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, 5 மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால், கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன் "பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை; மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர், தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ 10 பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு, வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு, வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, 15 தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை; பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி;' 20 என ஆங்கு, வாளாதி, வயங்கிழாய்! 'வருந்துவள் இவள்' என, நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, மீளி வேல் தானையர் புகுதந்தார் நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே. 25
பெருங்கடுங்கோ
32
கலித்தொகை - பாலைக் கலி - 32
எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல், பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ நெறி கொள 5 துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும், ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும், வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும், நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், 10 உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும், புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில் எம் போல; பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம் இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய 15 காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப் போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் தூது வந்தன்றே தோழி! துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே.
பெருங்கடுங்கோ
33
கலித்தொகை - பாலைக் கலி - 33
'வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற, மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல, பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக, துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, 5 மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய, காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது, தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம் போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்! எரி உரு உறழ இலவம் மலர, 10 பொரி உரு உறழப் புன்கு பூ உதிர, புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப, தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து, ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம் போர்ப்பது போலும் பசப்பு 15 நொந்து நகுவன போல் நந்தின, கொம்பு; நைந்து உள்ளி உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளி, தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில் உகுவன போலும், வளை; என் கண் போல் இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; 20 மிகுவது போலும், இந் நோய்; நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத தூது அவர் விடுதரார் துறப்பார்கொல் நோதக, இருங் குயில் ஆலும் அரோ;' 25 என ஆங்கு, புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி நீல் இதழ் உண்கணாய்! நெறி கூந்தல் பிணி விட, நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் 30 கால் உறழ் கடுந் திண் தேர் கடவினர் விரைந்தே
பெருங்கடுங்கோ
34
கலித்தொகை - பாலைக் கலி - 34
'மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று, பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின், சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற, முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண் பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல், 5 பன் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப, இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும், பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, 10 எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும்ஆயின், எவன் செய்கோ; பொறை தளர் கொம்பின்மேல் சிதரினம் இறை கொள, நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன் மறைப்பவும், முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு, பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ; 15 தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும், கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று, வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள்ஆயின், எவன் செய்கோ;' என ஆங்கு, 20 நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம் எண்ணிய நாள்வரை இறவாது, காதலர் பண்ணிய மாவினர் புகுதந்தார் கண் உறு பூசல் கை களைந்தாங்கே
பெருங்கடுங்கோ
35
கலித்தொகை - பாலைக் கலி - 35
'மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப; மாயவள் மேனி போல் தளிர் ஈன், அம் மேனித் தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக; மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, 5 அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார; நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், துறந்து உள்ளார் அவர்' எனத் துனி கொள்ளல் எல்லா! நீ 'வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர், தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ 10 கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால், ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர், வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ "வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், 15 ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை; 20 என ஆங்கு, உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி, எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன் வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே. 25
பெருங்கடுங்கோ
36
கலித்தொகை - பாலைக் கலி - 36
'கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர, வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப, தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர, இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென, 5 கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத, மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப, இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற, குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும், வந்தன்று 10 வாரார், தோழி! நம் காதலோரே; பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன, தோள்; நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய பனி அறல் வாரும், என் கண்; 15 மலையிடைப் போயினர் வரல் நசைஇ, நோயொடு முலையிடைக் கனலும், என் நெஞ்சு; காதலின் பிரிந்தார்கொல்லோ; வறிது, ஓர் தூதொடு மறந்தார்கொல்லோ; நோதக, காதலர் காதலும் காண்பாம்கொல்லோ? 20 துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர்கொல்லோ; யாவது;' 'நீள் இடைப் படுதலும் ஒல்லும்; யாழ நின், வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி! நாள் அணி சிதைத்தலும் உண்டு' என நய வந்து, கேள்வி அந்தணர் கடவும் 25 வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே.
பெருங்கடுங்கோ
37
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 37
கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன் வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு, முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; 5 பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின் சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்; பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் 10 தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர் நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல், ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை, 'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூற, 15 'தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து, ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென, 20 'ஒண்குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன்
கபிலர்
38
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 38
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5 உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன் கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 10 நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை, கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின் தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்; இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால், பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15 அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்; மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால், அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை, திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20 புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்; என ஆங்கு, நின் உறு விழுமம் கூறக் கேட்டு, வருமே, தோழி! நல் மலை நாடன் வேங்கை விரிவு இடம் நோக்கி, 25 வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.
கபிலர்
39
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 39
'காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான், நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால், பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம் வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி 5 அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே; அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும் வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரை, 'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும் கான் அகல் நாடன் மகன்; 10 சிறுகுடியீரே! சிறுகுடியீரே! வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா; கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் அல்ல புரிந்து ஒழுகலான்; காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் 15 வாங்கு அமை மென் தோட் குறவர் மட மகளிர் தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்' என ஆங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட 20 என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்; அவரும் தெரி கணை நோக்கி, சிலை நோக்கி, கண் சேந்து, ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி, 'இருவர்கண் குற்றமும் இல்லையால்' என்று, தெருமந்து சாய்த்தார் தலை 25 தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர, வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள் கொண்டுநிலை பாடிக்காண்; நல்லாய்! 30 நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத் தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்? புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில், நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ; நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே 35 கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ; விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ; பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ; 40 மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ; என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான் நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன; என ஆங்கு, 45 நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ, தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக, வேய் புரை மென் தோட் பசலையும், அம்பலும், மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க, சேய் உயர் வெற்பனும் வந்தனன் 50 பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே!
கபிலர்
40
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 40
'அகவினம் பாடுவாம், தோழி!' 'அமர் கண் நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல், தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ, முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின் வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி, 5 பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி, அகவினம் பாடுவாம், நாம்; ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள், தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை; 10 கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல், எடுத்த நறவின் குலை அலங்காந்தள் தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார் இடுக்கண் தவிர்ப்பான் மலை; கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து, 15 மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும் அல்லற்படுவான் மலை; புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத் தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான் 20 அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்; விண் தோய் வரை, பந்து எறிந்த அயா வீட, தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே பெண்டிர் நலம் வௌவி, தன் சாரல் தாது உண்ணும் வண்டின் துறப்பான் மலை; 25 ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத் தீம் கண் கரும்பின் கழை வாங்கும் 'உற்றாரின் நீங்கலம்' என்பான் மலை; என நாம், 30 தன் மலை பாட, நயவந்து கேட்டு, அருளி, மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா மென் முலை ஆகம் கவின் பெற, செம்மலை ஆகிய மலைகிழவோனே.
கபிலர்
41
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 41
பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா, ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று; இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், 5 கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து, பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் நெடு வரை ஆசினிப் பணவை ஏறி, கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின், 10 இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி, ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா, தேன் செய் இறாஅல் துளைபடப் போகி, நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி, குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா, 15 பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப் பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று; இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே; வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற சூள் பேணான் பொய்த்தான் மலை; 20 பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ? 'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ? குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின், திங்களுள் தீத் தோன்றியற்று; இள மழை ஆடும்; இள மழை ஆடும்; 25 இள மழை வைகலும் ஆடும் என் முன்கை வளை நெகிழ வாராதோன் குன்று; வாராது அமைவானோ? வாராது அமைவானோ? வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன் ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து 30 நீருள் குவளை வெந்தற்று; மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத் துன்னான் துறந்தான் மலை; துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; 35 தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில் சுடருள் இருள் தோன்றியற்று; என ஆங்கு நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள் 40 ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி, மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து, மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே.
கபிலர்
42
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 42
'மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி, கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன் மறந்தான்; மறக்க, இனி; எல்லா! நமக்குச் 5 சிறந்தன நாம் நன்கு அறிந்தனம், ஆயின்; அவன் திறம், கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம், வள்ளை அகவுவம், வா' 'இகுளை! நாம் வள்ளை அகவுவம், வா' காணிய வா வாழி, தோழி! வரைத் தாழ்பு 10 வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா நாணிலி நாட்டு மலை; ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன்; 15 தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம் பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக் கொன்னாளன் நாட்டு மலை; கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத் 20 தேர் ஈயும் வண் கையவன்; வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல் மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ எவ்வம் உறீஇயினான் குன்று; எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி 25 அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என் நெஞ்சம் பிணிக்கொண்டவன்; என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன், தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா, சாயல் இன் மார்பன் சிறு புறம் சார்தர, 30 ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என் ஆயிழை மேனிப் பசப்பு.
கபிலர்
43
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 43
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும் சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம், ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற 5 மை படு சென்னிப் பய மலை நாடனை, தையலாய்! பாடுவாம், நாம்; தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள் முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின், கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் 10 தோற்றலை நாணாதோன் குன்று; வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம், இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும் வருடைமான் குழவிய வள மலை நாடனைத் தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை; 15 நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக் கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன் குன்று; புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட 20 புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை; கடுங் கண் உழுவை அடி போல வாழைக் கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால் 25 இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால், தன் மெய் துறப்பான் மலை; என ஆங்கு, கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு வாடிய மென் தோளும் வீங்கின 30 ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே.
கபிலர்
44
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 44
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல் எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து, அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ, முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை, வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, 5 புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப! தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி, 10 கூரும் நோய் சிறப்பவும் நீ, செய்த அருள் இன்மை சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு, 'ஓரும் நீ நிலையலை' எனக் கூறல் தான் நாணி; நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, 15 மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி, என ஆங்கு, இனையன தீமை நினைவனள் காத்தாங்கு, அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள் அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் 20 மருந்து ஆகிச் செல்கம், பெரும! நாம் விரைந்தே.
கபிலர்
45
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 45
விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை, கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை, அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து, பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல் உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, 5 நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென, சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப! கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி 10 பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை; புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின் அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை; 15 சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை; என ஆங்கு, 20 தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான், பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம் உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே.
கபிலர்
46
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 46
வீயகம் புலம்ப, வேட்டம் போகிய மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி, வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின், 'வேங்கை அம் சினை' என விறற் புலி முற்றியும், 5 பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும் அயம் இழி அருவிய அணி மலை நல் நாட! ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன், 10 மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப் பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக; அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன், வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப 15 நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப் பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக; கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன், புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன் 20 அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக; என ஆங்கு, கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின் புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச் 25 சிலம்பு போல், கூறுவ கூறும், இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே
கபிலர்
47
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 47
ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம் புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்; வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல், நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்; இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க 5 வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்; அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச் சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்; 'நின் இன்றி அமையலேன் யான்' என்னும் அவன் ஆயின், அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின், 10 என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்! 'அறியாய் நீ; வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின், தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின், அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்; 'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின், 15 'ஏழையர்' எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின், சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்; சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம் 'அவனை, நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; 20 "பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன் வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக் கூறுவென் போலக் காட்டி, மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே!
கபிலர்
48
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 48
ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல, தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த, வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகப் படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய, கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும் 5 பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின் இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட! வீழ்பெயற் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால், வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ தாழ் செறி கடுங் காப்பின் தாய் முன்னர், நின் சாரல் 10 ஊழ் உறு கோடல் போல், எல் வளை உகுபவால்; இனைஇருள் இது என ஏங்கி, நின் வரல் நசைஇ, நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ 'இனையள்' என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக் கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்; 15 பல் நாளும் படர், அட பசலையால் உணப்பட்டாள், பொன் உரை மணி அன்ன, மாமைக்கண் பழி உண்டோ இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள், நின் சோலை மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்; என ஆங்கு 20 பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு என நீவிப் பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய அருந் துயர் அவலம் தூக்கின், மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே.
கபிலர்
49
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 49
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை, நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின், கனவில் கண்டு, கதுமென வெரீஇ, புதுவதாக மலர்ந்த வேங்கையை 5 'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி, பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம் காணும் பொழுதின் நோக்கல் செல்லாது, நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட! போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன 10 காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே, மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய், இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை; இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே, 15 மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து, அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை; இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே, ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது, 20 களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை அதனால் இரவின் வாரல், ஐய! விரவு வீ அகல் அறை வரிக்கும் சாரல், பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே. 25
கபிலர்
50
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 50
வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல், மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி, தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர் வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் இருள் தூங்கு சோலை, இலங்கு நீர், வெற்ப! 5 அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவு வில்மேல் அசைத்த கையை, ஓராங்கு நிரைவளை முன்கை என் தோழியை நோக்கி, படி கிளி பாயும் பசுங் குரல் ஏனல் கடிதல் மறப்பித்தாய்ஆயின், இனி நீ 10 நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே பல் கோட் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள் நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும் 15 தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு அளியொடு கைதூவலை; அதனால், கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும் கொடுமை இலையாவது அறிந்தும், அடுப்பல் 20 வழை வளர் சாரல் வருடை நன் மான் குழவி வளர்ப்பவர் போல, பாராட்டி, உழையின் பிரியின், பிரியும், இழை அணி அல்குல் என் தோழியது கவினே.
கபிலர்
51
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5 உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை, 'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10 'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், 'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15 செய்தான், அக் கள்வன் மகன்.
கபிலர்
52
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 52
முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று, மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை, மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், 5 கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்: தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை, நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின், 'மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் அணங்கு' என அஞ்சுவர், சிறுகுடியோரே; 10 ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை, சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின், ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர், 'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே ஆர மார்பினை, அண்ணலை, அளியை, 15 ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின், 'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப் புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே என ஆங்கு விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்; இவள் அன்றி, 20 புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்; அதனால், பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி, வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்கு, புதுவை போலும் நின் வரவும், இவள் வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே. 25
கபிலர்
53
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 53
வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல் விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா, மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான், புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல, உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன, 5 அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும் பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப! மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்தபின், இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன் அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்; 10 கயல் உமிழ் நீர் போல, கண் பனி கலுழாக்கால்; இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின், 'பனி இவள் படர்' என பரவாமை ஒல்லும்மன் ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி, நறு நுதல் பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்; 15 'அஞ்சல்' என்று அகன்று, நீ அருளாது துறத்தலின், நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன் நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர் கனவினால் அழிவுற்று, கங்குலும் அரற்றாக்கால்; என ஆங்கு, 20 விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை தளி பெறத் தகைபெற்றாங்கு, நின் அளி பெற நந்தும், இவள் ஆய் நுதற் கவினே
கபிலர்
54
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 54
"கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற, பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை, தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்! அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு?" என்ன, நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி, 5 பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை, நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்; நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு, செறாஅச் செங் கண் புதைய வைத்து, 10 பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்; தொய்யில் இள முலை இனிய தைவந்து, தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும் மையல் யானையின், மருட்டலும் மருட்டினன் அதனால், 15 அல்லல் களைந்தனன், தோழி! நம் நகர் அருங் கடி நீவாமை கூறின், நன்று' என நின்னொடு சூழ்வல், தோழி! 'நயம் புரிந்து, இன்னது செய்தாள் இவள்' என, மன்னா உலகத்து மன்னுவது புரைமே. 20
கபிலர்
55
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 55
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல், பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு, போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை, இன் நகை, இலங்கு எயிற்று, தேம் மொழி துவர்ச் செவ் வாய், நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி: 5 'நில்' என நிறுத்தான்; நிறுத்தே வந்து, நுதலும் முகனும், தோளும், கண்ணும், இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ, 'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று; மை தீர்ந்தன்று, மதியும் அன்று; 10 வேய் அமன்றன்று, மலையும் அன்று; பூ அமன்றன்று, சுனையும் அன்று; மெல்ல இயலும், மயிலும் அன்று; சொல்லத் தளரும், கிளியும் அன்று' என ஆங்கு, 15 அனையன பல பாராட்டி, பையென, வலைவர் போல, சோர் பதன் ஒற்றி, புலையர் போல, புன்கண் நோக்கி, தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்; காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன் 20 தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!
கபிலர்
56
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 56
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால், கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு, கழும முடித்து, கண் கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து, 5 ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே, ஓர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல் வெறுப்பினால், வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார், கடிது, இவளைக் காவார் விடுதல் கொடி இயல், 10 பல் கலை, சில் பூங் கலிங்கத்தள் ஈங்கு, இது ஓர் நல்கூர்ந்தார் செல்வ மகள்! இவளைச் சொல்லாடிக் காண்பேன், தகைத்து நல்லாய்! கேள்: ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என, 15 தூது உண் அம் புறவு என, துதைந்த நின் எழில் நலம் மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! நிற் கண்டார்ப் பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ? நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என, முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் 20 வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்! நிற் கண்டார்க்கு அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ? முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என, பெயல் துளி முகிழ் என, பெருத்த நின் இள முலை மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! நிற் கண்டார் 25 உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ? என ஆங்கு, பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய், யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய்! கேள், இனி: நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப் 30 போதர விட்ட நுமரும், தவறு இலர்; நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு, 'பறை அறைந்தல்லது செல்லற்க!' என்னா இறையே தவறு உடையான்.
கபிலர்
57
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 57
வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, 5 வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி: பூந் தண் தார், புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல், தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண், ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், 10 சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? சின்மொழி! பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள், கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை, பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? கனங்குழாய்! 15 வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின்மேல், தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்! மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் கதவவால் தக்கதோ? காழ் கொண்ட இள முலை என ஆங்கு, 20 இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி, நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள், மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே.
கபிலர்
58
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 58
வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள், பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின், கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல், கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்! நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை, 5 ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்: உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக, இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம் வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்; 10 நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய் மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம் உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்; அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய் 15 சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும், ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம் செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்; என ஆங்கு ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய் 20 பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்! மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி, நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே.
கபிலர்
59
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 59
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி, அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை, சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் 5 விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி: மருளி, யான் மருள் உற, ' "இவன் உற்றது எவன்?" என்னும் 10 அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? உருளிழாய்! ' "ஒளி வாட, இவன் உள் நோய் யாது?" என்னும் அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், 15 பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ? ஆய்தொடி! ' "ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?" என்னும் நோய் இலை இவட்கு' என நொதுமலர் பழிக்குங்கால், சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ 20 நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ? என ஆங்கு, அனையவை உளையவும், யான் நினக்கு உரைத்ததை இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்! செய்ததன் பயம் பற்று விடாது; 25 நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே.
கபிலர்
60
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 60
சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல், மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல், நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல், வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்! 'கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு 5 உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல் பெண் அன்று, புனையிழாய்!' எனக் கூறி தொழூஉம்; தொழுதே, கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்! என் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண் பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள் 10 உருகுவான் போலும், உடைந்து; தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ, வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில நீ நின்மேல் கொள்வது; எவன்? 'அலர்முலை ஆய்இழை நல்லாய்! கதுமென, 15 பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்; மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ! நின் முகம் காணும் மருந்தினேன்' என்னுமால்; நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே 20 மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்! என் செய்வாம்கொல், இனி நாம்? பொன் செய்வாம், ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன் கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம், 25 'தேறல், எளிது' என்பாம் நாம் 'ஒருவன் சாம் ஆறு எளிது' என்பாம், மற்று; சிறிது, ஆங்கே 'மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க' என, நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி பூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம் 30 கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று, நாண் அடப் பெயர்த்த நயவரவு இன்றே.
கபிலர்
61
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 61
எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்: செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர் அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று, சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், 5 மெல்ல இறைஞ்சும் தலை; எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை; நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்! என், நீ பெறாதது? ஈது என்? சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்? 10 செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின், சாதலும் கூடுமாம் மற்று இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்; யாது, நீ வேண்டியது? பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ 15 மருளி மட நோக்கின் நின் தோழி என்னை அருளீயல் வேண்டுவல், யான் "அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?' ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் 20 ஆயின், ஏஎ! 'பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி, மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல் நல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வானாம் எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் 25 கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன் உள்ளம் குறைபடாவாறு.
கபிலர்
62
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 62
ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் 'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம் நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5 புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா! தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா செய்வது நன்று ஆமோ மற்று?' சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்! வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10 உண்பவோ, நீர் உண்பவர்? செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா? 'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; 15 'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி, கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.
கபிலர்
63
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 63
நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார் தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப் போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம் காக்கும் இடம் அன்று, இனி எல்லா! எவன் செய்வாம்? 5 பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய் விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல் கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங்கு ஆக இருந்தாயோ?' என்று ஆங்கு இற; அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் 10 மருந்து நீ ஆகுதலான்; இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்தை; உடம்பட்டாள் என்னாமை என் மெய் தொடு இஃதோ? அடங்கக் கேள்: நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா, 15 என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன் தன்னொடு நின்று விடு.
கபிலர்
64
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 64
அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும், மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண் விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப, அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும் 5 விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப் பெரும் பொன் படுகுவை பண்டு ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; தொய்யில் எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்; உழுவது உடையமோ, யாம்; 10 உழுதாய் சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின் திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ, கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த 15 குவளையும், நின் உழவு அன்றோ? இகலி முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல, என் உழுவாய் நீ, மற்று இனி எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு; முற்று எழில் நீல மலர் என உற்ற, 20 இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம், பெரும் பொன் உண்டு என்பாய்! இனி நல்லாய்! இகுளை! கேள்: ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின், வேந்து கொண்டன்ன பல; 25 'ஆங்கு ஆக!' 'அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ, முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம் உத்தி எறிந்துவிடற்கு' 30
கபிலர்
65
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 65
திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும் பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல், அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ, நம் இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக 5 தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும், காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை, தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே, பாரா, குறழா, பணியா, 'பொழுது அன்றி, 10 யார், இவண் நின்றீர்?' எனக் கூறி, பையென, வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது, 'தையால்! தம்பலம் தின்றியோ?' என்று, தன் பக்கு அழித்து, 'கொண்டீ' எனத் தரலும் யாது ஒன்றும் வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, 15 'கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' 'மற்று யான் ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின், இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்' எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, 20 ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே, கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே, ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண், இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன் 25 காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான் வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து.
கபிலர்
66
கலித்தொகை - மருதக் கலி 66
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு, ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான், வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் 5 தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர! அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ, 'மண மனையாய்' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ 10 பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின் வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை; கனலும் நோய்த் தலையும், 'நீ கனங் குழையவரொடு புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின் 15 ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை; தணந்ததன் தலையும், 'நீ தளரியலவரொடு துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை; 20 என ஆங்கு, அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது வேட்டோ ர் திறத்து விரும்பிய நின் பாகனும், 'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடுந் திண் தேர்; பூட்டு விடாஅ நிறுத்து. 25
மதுரை மருதனிளநாகனார்
67
கலித்தொகை - மருதக் கலி 67
கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து, சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம் தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன் நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார் போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்; 5 நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா! புலப்பேன் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே; கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி, 10 பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா! ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே; இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின், நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா! 15 துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே; என ஆங்கு, பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம் துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே 20 அறை போகும் நெஞ்சு உடையார்க்கு.
மதுரை மருதனிளநாகனார்
68
கலித்தொகை - மருதக் கலி 68
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர் செது மொழி சீத்த செவி செறு ஆக, முது மொழி நீரா, புலன் நா உழவர் புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! 5 'ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன், வாளாது, ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி, களையா நின் குறி, வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை வளையின்வாய் விடன் மாலை மகளிரை நோவேமோ 'கேள் அலன், நமக்கு அவன்; குறுகன்மின்' என, மற்று எம் 10 தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்; 'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்வயின் மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள, வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்; 15 சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன், தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல், 'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்; என ஆங்கு 20 நனவினான் வேறாகும் வேளா முயக்கம் மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட, 'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்கு, கனவினான் எய்திய செல்வத்து அனையதே ஐய எமக்கு நின் மார்பு. 25
மதுரை மருதனிளநாகனார்
69
கலித்தொகை - மருதக் கலி 69
போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக, ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5 ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர; தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின் உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய் துணிந்தது பிறிதாக, 'துணிவிலள் இவள்' என, 10 பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ; பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும் விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய் நெஞ்சத்த பிறவாக, 'நிறையிலள் இவள்' என, வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ; 15 இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய் தருக்கிய பிறவாக, 'தன் இலள் இவள்' என, செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ; என ஆங்கு 20 தருக்கேம், பெரும! நின் நல்கல்; விருப்புற்றுத் தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது, சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.
மதுரை மருதனிளநாகனார்
70
கலித்தொகை - மருதக் கலி 70
மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென, கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி, துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி, 5 பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்: நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின், பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்; துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட, மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே 10 அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம் புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்; நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே 15 நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்; நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் தேர் பூண்ட நெடு நல் மான் தௌ஢ மணி வந்து எடுப்புமே; என ஆங்கு மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல், 20 எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர் இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப் பாணன் புகுதராக் கால்!
மதுரை மருதனிளநாகனார்
71
கலித்தொகை - மருதக் கலி 71
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர, புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, 5 நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர! 'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து, தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல் 10 ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய; 'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும் எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல் அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண் 15 எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய; 'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின் குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய; 20 என்று, நின் தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர் யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு, ஆராத் துவலை அளித்தது போலும், நீ 25 ஓர் யாட்டு ஒரு கால் வரவு.
மதுரை மருதனிளநாகனார்
72
கலித்தொகை - மருதக் கலி 72
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ, சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி, ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல, புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க, 5 மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி, கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர! கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழ, பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ 10 'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான், மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை; நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர் ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில், 15 ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை; வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல் குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை; 20 என ஆங்கு செறிவுற்றேம், எம்மை நீ செறிய; அறிவுற்று, அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்ப; கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே, அழிந்து நிற் பேணிக் கொளலின் இழிந்ததோ 25 இந் நோய் உழத்தல் எமக்கு.
மதுரை மருதனிளநாகனார்
73
கலித்தொகை - மருதக் கலி 73
அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை, கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான், தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல, வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர! 5 'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல்வழி, 'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து, இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்; கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி, 10 'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்; என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி, முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் 15 நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள, கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்; என ஆங்கு மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும் 20 புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின், தோலாமோ, நின் பொய் மருண்டு.
மதுரை மருதனிளநாகனார்
74
கலித்தொகை - மருதக் கலி 74
பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம், கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 5 'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்; நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்; முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து, 10 பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்; என ஆங்கு 'கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என, ஊரவர் உடன் நகத் திரிதரும் 15 தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே.
மதுரை மருதனிளநாகனார்
75
கலித்தொகை - மருதக் கலி 75
'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார், சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும் ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து, ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி 5 உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி, அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய் தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும் உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், 10 வதுவை நாளால் வைகலும், அஃது யான் நோவேன், தோழி! நோவாய், நீ' என எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென: 'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச் சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, 15 விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்; 'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என ஊடியிருப்பேனாயின், நீடாது, அச்சு ஆறாக உணரிய வருபவன் 20 பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல் 'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான் இகலியிருப்பேனாயின், தான் தன் முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் 25 ஆங்க விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும், ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது, அவ்அவ் இடத்தான் அவைஅவை காண 30 பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவேன், தோழி! கடன் நமக்கு எனவே.
மதுரை மருதனிளநாகனார்
76
கலித்தொகை - மருதக் கலி 76
'புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ?' என வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி: 5 'செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய்' என்று, அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ 'கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை; ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு, 10 நெடுங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை; 'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றி, தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ 15 புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை என ஆங்கு, அரிது இனி, ஆயிழாய்! அது தேற்றல்; புரிபு ஒருங்கு, அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, 20 தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோ நாம் செயற்பாலது, இனி.
மதுரை மருதனிளநாகனார்
77
கலித்தொகை - மருதக் கலி 77
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள் அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல், தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, 5 மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர் அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்: தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் 10 பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்; பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல; தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்; 15 மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல் வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்; ஆங்க 20 'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும், இடையும், நிறையும் எளிதோ நிற் காணின், கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு உடன் வாழ் பகை உடையார்க்கு.
மதுரை மருதனிளநாகனார்
78
கலித்தொகை - மருதக் கலி 78
பன் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி, உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென, அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற் 5 பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப் பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர! 10 'நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து, நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோதான் எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை; 'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் 15 தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோதான் அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல் மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை; 'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான் செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோதான் 20 மூடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார் தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை; ஆங்க, ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ, வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின் 25 முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே, தண் பனி வைகல் எமக்கு.
மதுரை மருதனிளநாகனார்
79
கலித்தொகை - மருதக் கலி 79
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர், அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் 5 தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்; 'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின் சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ; 10 புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில் பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்; மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ; கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி 15 வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்; 'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின் கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ; என ஆங்கு பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி, 20 நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி; ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான் ஈங்கு எம் புதல்வனைத் தந்து.
மதுரை மருதனிளநாகனார்
80
கலித்தொகை - மருதக் கலி 80
நயம் தலை மாறுவார் மாறுக; மாறா, கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ், பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப் பவழம் புனைந்த பருதி சுமப்ப, 5 கவழம் அறியா நின் கை புனை வேழம் புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி, அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே வருக! எம் பாக மகன்! கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் 10 தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே, 'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார் வளை நெகிழ்பு யாம் காணுங்கால்; ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே, 15 உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் எவ்வ நோய் யாம் காணுங்கால்; ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே, நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் 20 அல்குல் வரி யாம் காணுங்கால்; ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும், போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய 25 கோதை பரிபு ஆட; காண்கும்.
மதுரை மருதனிளநாகனார்
81
கலித்தொகை - மருதக் கலி 81
மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன் மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர, பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர, உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் 5 அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப, பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக் கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா, ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் போல, வரும் என் உயிர்! 10 பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய், பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற, திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப, மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா, பெருந்தகாய்! கூறு, சில; 15 எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா, 'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட, ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன் 20 வாயுள்ளின் போகான்அரோ; உள்ளி உழையே ஒருங்கு படை விடக் கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை எள்ளுமார் வந்தாரே, ஈங்கு ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர் 25 கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல, சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின் ஆணை கடக்கிற்பார் யார்; அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல், முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி 30 உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப எதிர் வளி நின்றாய்; நீ செல் இனி, 'எல்லா! யாம் தீதிலேம்' என்று தெளிப்பவும், கைந்நீவி யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின், மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், 35 தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும் ஆ போல் படர் தக, நாம்.
மதுரை மருதனிளநாகனார்
82
கலித்தொகை - மருதக் கலி 82
ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு, காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை; புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு புக்க வழி எல்லாம் கூறு; 5 கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக் காயாமை வேண்டுவல், யான்! காயேம். மடக் குறு மாக்களோடு ஓரை அயரும் அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற 10 தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும் மருப்புப் பூண் கையுறையாக அணிந்து, 'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும் 15 மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து, முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே, 'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று, வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள், ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் 20 பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்; அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித் தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா! 25 வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும் பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே, தொடியும் உகிரும் படையாக நுந்தை கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள், வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி; 30 அன்ன பிறவும், பெருமான் அவள்வயின் துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக் கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்; அமைந்தது, இனி நின் தொழில். 35
மதுரை மருதனிளநாகனார்
83
கலித்தொகை - மருதக் கலி 83
பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை, பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர, இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய், உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம் 5 நீட்டித்த காரணம் என்? கேட்டீ, பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக் குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும் பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண், 10 அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக் கால்கோள்' என்று ஊக்கி, கதுமென நோக்கி, 15 திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால், 'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச் செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்! 20 நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த புலம்பு எலாம் தீர்க்குவேம் மன்' என்று இரங்குபு, வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி, ஒள்ளிழாய்! யான் தீது இலேன் 25 எள்ளலான், அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண் அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி, முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு 30 தந்தையும் வந்து நிலை.
மதுரை மருதனிளநாகனார்
84
கலித்தொகை - மருதக் கலி 84
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் நறு வடி ஆர் இற்றவை போல் அழிய, கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச் சுரந்த என் மென் முலைப் பால் பழுதாக நீ நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா! 5 கடவுட் கடி நகர்தோறும் இவனை வலம் கொளீஇ வா' என, சென்றாய் விலங்கினை ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் யார் இல் தவிர்ந்தனை? கூறு; நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட 10 குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ, 'இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல்நகர் வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர் தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர் 15 தம்தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு, ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார் 'பிறன் பெண்டிர் ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன்; சீத்தை, செறு தக்கான் மன்ற பெரிது; சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட, 20 மோதிரம் யாவோ; யாம் காண்கு; அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச் சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும் செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில் 25 பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்' என்பது தன்னை அறீஇய செய்த வினை; அன்னையோ? இஃது ஒன்று முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர், வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று 30 தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண் தந்தார் யார், எல்லாஅ! இது; 'இஃது ஒன்று என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு' என்னும் தன் நலம் பாடுவி, தந்தாளா நின்னை, 'இது தொடுக' என்றவர் யார்; 35 அஞ்சாதி; நீயும் தவறிலை; நின் கை இது தந்த பூ எழில் உண்கண் அவளும் தவறிலள்; வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்? மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள் தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன் 40 யானே தவறுடையேன்!
மதுரை மருதனிளநாகனார்
85
கலித்தொகை - மருதக் கலி 85
காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ்; மேல் மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல் தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை; 5 கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி; பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும் செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த, பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின் 10 மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்; சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல் சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக, அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண, 15 சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை; ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின் செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப் பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ, 20 செம்மால்! நின் பால் உண்ணிய; பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத் தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார் நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும் நுந்தைபால் உண்டி, சில; 25 நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக, பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா ஞாயர்பால் உண்டி, சில; அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத் தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை 30 வருக என்றார், யார்கொலோ, ஈங்கு; என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என் பாராட்டைப்பாலோ சில; செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும் வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை 35 தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.
மதுரை மருதனிளநாகனார்
86
கலித்தொகை - மருதக் கலி 86
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல், கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ, பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய் கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல் 5 பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப, கடி அரணம் பாயா நின் கை புனை வேழம், தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என் போர் யானை, வந்தீக, ஈங்கு! 10 செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி; கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும் வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, 'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல், 15 மென் தோள் நெகிழ விடல்; பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக் கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல், சால்பு ஆய்ந்தார் சாய விடல்; 20 வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி, மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல், நோய் கூர நோக்காய் விடல்; ஆங்க, 25 திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம் மகன் அல்லான் பெற்ற மகன்; மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர் 'ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ ? காவாது ஈங்கு ஈத்தை, இவனை யாம் கோடற்கு' சீத்தை; யாம் 30 கன்றி அதனைக் கடியவும், கை நீவி, குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு, தந்தை வியன் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா அன்பிலி பெற்ற மகன்.
மதுரை மருதனிளநாகனார்
87
கலித்தொகை - மருதக் கலி 87
ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை வெரூஉதும், காணுங்கடை; தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய், மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு, ஏடா! நினக்குத் தவறு உண்டோ ? நீ வீடு பெற்றாய்; 5 இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி; நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் புலப்பார் உடையர், தவறு; அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி; காயும் தவறு இலேன் யான்; 10 மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின் ஊடுதல் என்னோ, இனி; 'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும் தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் 15 பாடு இல் கண் பாயல் கொள.
மதுரை மருதனிளநாகனார்
88
கலித்தொகை - மருதக் கலி 88
ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக, தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர்; கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று; 5 வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் மாயம், மருள்வாரகத்து; ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா என்கண் எவனோ, தவறு; இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல், 10 வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும், ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார் சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும், தவறாதல் சாலாவோ? கூறு; 'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை 15 தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு; இனித் தேற்றேம் யாம், தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி, நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி 20 யார் மேல்? விளியுமோ? கூறு.
மதுரை மருதனிளநாகனார்
89
கலித்தொகை - மருதக் கலி 89
யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை வாரல்; நீ வந்தாங்கே மாறு; என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் 5 ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது; ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா! பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு, வருந்தல் நின் வஞ்சம் உரைத்து; மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ ? நீ நயந்த, 10 இன்னகை! தீதோ இலேன்; மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர் புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப் பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன் என்று அடி சேர்தலும் உண்டு! 15
மதுரை மருதனிளநாகனார்
90
கலித்தொகை - மருதக் கலி 90
கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா, மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின் பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு; ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு? கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, 5 பாடு பெயல் நின்ற பானாள் இரவில் தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும், வடிவு ஆர் குழையும், இறையும், பொறையா ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா, ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் 10 சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின் போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ? ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர் தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ? மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில் 15 நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ? 'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ? கூறு இனி; காயேமோ, யாம்; தேறின், பிறவும் தவறு இலேன் யான்; 20 அல்கல் கனவுகொல் நீ கண்டது; 'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! நின்றாய்; நின் புக்கில் பல' 25 மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை பொறை ஆற்றேம் என்றல் பெறுகுமோ, யாழ நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்.
மதுரை மருதனிளநாகனார்
91
கலித்தொகை - மருதக் கலி 91
அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம், புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின் இன்று நன்று, என்னை அணி; 5 அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன், ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை தெய்வத்தான் கண்டீ தெளிக்கு; மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார் செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் 10 கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின் தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின், பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும் செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி; 15 தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை ஆற்றின் நிறுப்பல் பணிந்து; அன்னதேல், ஆற்றல் காண் வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின், மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் 20 கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய், பேணாய் நீ பெட்பச் செயல்.
மதுரை மருதனிளநாகனார்
92
கலித்தொகை - மருதக் கலி 92
புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக் கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே: முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி, மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது, உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; 5 அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும், உரிதின் ஒருதலைப்பு எய்தலும் வீழ்வார்ப் பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் தருதல் தகையாதான் மற்று; நனவினால் போலும், நறுநுதால்! அல்கல் 10 கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக் கரை அணி காவினகத்து; உரை, இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக் கண்டது எவன் மற்று நீ; 15 கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும் மட நடை மா இனம், அந்தி அமையத்து, இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால், இறை கொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன், துறை கொண்டு உயர் மணல்மேல் ஒன்றி நிறைவதை, 20 ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து வேட்டதே கண்டாய், கனா; 'கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய்!' 'உரை' 'ஆண்டு இதுவாகும், இன் நகை நல்லாய்! பொதுவாக தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் 25 பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில் துனை வரி வண்டின் இனம் மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் 30 காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச, அவருள், ஒருத்தி, செயல் அமை கோதை நகை; ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப; ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்; 35 ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க, ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்; ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப: ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் 40 தண் தார் அகலம் புகும்; ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த கடி கயம் பாயும், அலந்து ஒருத்தி, கணம் கொண்டு அவை மூச, கை ஆற்றாள், பூண்ட 45 மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி, வணங்கு காழ் வங்கம் புகும்; ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள், பறந்தவை மூசக் கடிவாள், கடியும் இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை; 50 ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக் கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல், தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு வண்டலவர்; கண்டேன், யான்' நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர் 55 முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண் கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான் செய்வது இல் என்பதோ? கூறு; பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் நல் வாயாக் காண்டை நறுநுதால்! 'பல் மாணும் 60 கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப் பிரிந்தீர்! புணர் தம்மின்' என்பன போல, அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில் ஆனாது அகவும் பொழுதினான், மேவர, நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் 65 தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார், ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு வேனில் விருந்து எதிர்கொண்டு.
மதுரை மருதனிளநாகனார்
93
கலித்தொகை - மருதக் கலி 93
வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய, தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப! பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய, கண்டது எவன்? மற்று உரை; நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின் 5 உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் கடவுளர்கண் தங்கினேன்; சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ கடவுண்மை கொண்டு ஒழுகுவார்; அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன் 10 'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால், "இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும் நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்; மாயமோ; கைப்படுக்கப் பட்டாய் நீ; கண்டாரை 15 வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி; பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப் பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு இறு முறை செய்யும் உருவொடு, நும் இல், செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ; 20 நறுந் தண் தகரமும் நானமும் நாறும் நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப, நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ; ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் 25 சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும், ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ; கண்ட கடவுளர்தம்முளும், நின்னை வெறி கொள் வியன் மார்பு வேறாகச் செய்து, 30 குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும் சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்! தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல், நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும் 35 முட்டுப்பாடு ஆகலும் உண்டு.
மதுரை மருதனிளநாகனார்
94
கலித்தொகை - மருதக் கலி 94
என் நோற்றனைகொல்லோ நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை; அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான், 5 ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை, 'வேண்டுவல்' என்று விஇலக்கினை; நின் போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி, நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் 10 பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்; நீ நல்கின் உண்டு, என் உயிர் குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை, 'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின் 15 பெண்டிர் உளர்மன்னோ? கூறு; நல்லாய்! கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான் புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின், அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, 20 பக்கத்துப் புல்லச் சிறிது 'போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனி; தொக்க மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல, நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப் புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை என் 25 பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின் இழிந்ததோ, கூனின் பிறப்பு?' 'கழிந்து ஆங்கே, "யாம் வீழ்தும்" என்று தன் பின் செலவும், உற்றீயாக் கூனி குழையும் குழைவு காண்'; 30 'யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி, யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும் காமர் நடக்கும் நடை காண்' 'கவர் கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க'; ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் 35 உசாவுவம்; கோன் அடி தொட்டேன்; ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; 'ஏஎ! பேயும் பேயும் துள்ளல் உறும்' எனக் கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்; தண்டாத் தகடு உருவ! வேறாகக் காவின் கீழ்ப் 40 போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம் துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை முகடு காப்பு யாத்துவிட்டாங்கு.
மதுரை மருதனிளநாகனார்
95
கலித்தொகை - மருதக் கலி 95
நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி, ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த 5 குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும் அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது; குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்; புதுவன ஈகை வளம் பாடி, காலின் பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின் 10 இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின், தபுத்த புலர்வில் புண்; ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின் தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு, 15 போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும் பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம் ஈரமாய் விட்டன புண்; கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின் துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் 20 ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு; ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை போற்றிய, நின் மெய் தொடுகு; 'அன்னையோ!' 'மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று 25 அறிகல்லாய் போறிகாண், நீ; நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து, கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி' அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் 30 விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்; நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.
மதுரை மருதனிளநாகனார்
96
கலித்தொகை - மருதக் கலி 96
'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்; பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை; சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை; யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி: ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 5 குதிரை வழங்கி வருவல்' அறிந்தேன், குதிரைதான்; பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல், மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை, நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ் 10 ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை, மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி, நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை, தார் மணி பூண்ட தமனிய மேகலை, 15 நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை, ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள், ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை, 20 வாதுவன்; வாழிய, நீ! சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண் குதிரையோ, வீறியது; கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே 25 கோரமே வாழி! குதிரை; வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண் குதிரையோ, கவ்வியது; சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே 30 வியமே வாழி! குதிரை; மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை; பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட பருமக் குதிரையோ அன்று; பெரும! நின் ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர் 35 வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த் திரி; குதிரை ஏறிய செல்.
மதுரை மருதனிளநாகனார்
97
கலித்தொகை - மருதக் கலி 97
அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான் சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர, 'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல்; 5 முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர் புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்; ஒக்கும் அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்: அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு 10 ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை, தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு, தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி, உத்தி பொறித்த புனை பூண் பருமத்து முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து, 15 நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து, தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும், தொடர் தொடராக வலந்து; படர் செய்யும் மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார் நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை 20 இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ; எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித் தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ; குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா, உவா அணி ஊர்ந்தாயும் நீ; 25 மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ; சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல, விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை 30 கடாஅம் படும்; இடத்து ஓம்பு;
மதுரை மருதனிளநாகனார்
98
கலித்தொகை - மருதக் கலி 98
யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும் புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர, பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் 5 பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் கேட்டும் அறிவேன்மன், யான்; தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை 10 வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன்; ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக, 15 கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம், நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ் யாணர்ப் புதுப் புனல் ஆடினாய், முன் மாலை, பாணன் புணையாகப் புக்கு; ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, 20 வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி, குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே போர்த்த சினத்தால் புருவத் திரை இடா, ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச் சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு, 25 ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்; ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க, புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும் கரை கண்டதூஉம் இலை; நிரைதொடீஇ! பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன் 30 வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத் தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன்; மெய்யதை, மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக் 35 களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரோடு இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் முறுவலார்க்கு ஓர் நகை செய்து.
மதுரை மருதனிளநாகனார்
99
கலித்தொகை - மருதக் கலி 99
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து, அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5 பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்! அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப் புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 10 பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின் செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை! ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின் ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா 15 வேய் நலம் இழந்த தோள் கவின் வாட உழப்பாளை! ஆங்கு நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி தொடி கொட்ப நீத்த கொடுமையைக் 20 கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே.
மதுரை மருதனிளநாகனார்
100
கலித்தொகை - மருதக் கலி 100
ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல், வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும், நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக் காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும், மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து 5 யாண்டோ ரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்! 'ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல் பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோதான் நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள் பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்; 10 'சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ நின்று யாவர்க்கும் இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோதான் கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள் இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்; 'உறை வரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல், 15 முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோதான் அழி படர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள் பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்; ஆங்கு தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்; 20 இன் உறல் வியன் மார்ப! 'இனையையால்; கொடிது' என, நின்னை யான் கழறுதல் வேண்டுமோ, என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே.
மதுரை மருதனிளநாகனார்