id
int64
1
150
title
stringlengths
26
30
poem
stringlengths
412
3.16k
poet
stringclasses
5 values
1
கலித்தொகை - 1. கடவுள்வாழ்த்து
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி; மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி; படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ, 5 கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல், கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ? மண்...
பெருங்கடுங்கோ
2
கலித்தொகை - பாலைக் கலி - 2
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக் கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும் உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், 5 சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில் ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் ஆறு கெட விலங்கிய அ...
பெருங்கடுங்கோ
3
கலித்தொகை - பாலைக் கலி - 3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்- இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க, பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி; 5 'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை; கடைஇய ஆற்ற...
பெருங்கடுங்கோ
4
கலித்தொகை - பாலைக் கலி - 4
வலி முன்பின், வல்லென்ற யாக்கைப், புலி நோக்கின்- சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும்-கடுங்கண் மறவர் தாம் கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், 5 புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், உள்ளினிர் என்பது அறிந...
பெருங்கடுங்கோ
5
கலித்தொகை - பாலைக் கலி - 5
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம் இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் உமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், 5 நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக், கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்? நாளும் கோள் மீன் தகைத்த...
பெருங்கடுங்கோ
6
கலித்தொகை - பாலைக் கலி - 6
மரையா மரல் கவர, மாரி வறப்ப- வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர், சுரை அம்பு, மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம், உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்- தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் 5 கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால், என், நீர் அறியாதீர் போல இவை கூறல்? நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும், அன்பு ...
பெருங்கடுங்கோ
7
கலித்தொகை - பாலைக் கலி - 7
வேனில் உழந்த வறிது உயங்கும் ஒய் களிறு வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று உசாவுகோ-ஐய! சிறிது;- நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின் 5 கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே; இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல், மை இல் வாண் முகம் பசப்பு ஊரும்மே; நீயே...
பெருங்கடுங்கோ
8
கலித்தொகை - பாலைக் கலி - 8
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க, கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின், உறல் ஊறு கமழ் கடாஅத்து ஒல்கிய எழில் வேழம், வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர; 5 விறன் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் சொல்லுவது உடையே...
பெருங்கடுங்கோ
9
கலித்தொகை - பாலைக் கலி - 9
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!- வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை, 5 என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; அன்னார் இரு...
பெருங்கடுங்கோ
10
கலித்தொகை - பாலைக் கலி - 10
வறியவன் இளமை போல், வாடிய சினையவாய், சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி, யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல், வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின், அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, 5 கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல் உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம் இடை கொண்டு பொர...
பெருங்கடுங்கோ
11
கலித்தொகை - பாலைக் கலி - 11
'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும், புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என, பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி: 5 'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் க...
பெருங்கடுங்கோ
12
கலித்தொகை - பாலைக் கலி - 12
இடு முள் நெடு வேலி போல, கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி, உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு, 5 வெறி நிரை வேறாகச் சாரச்சாரல் ஓடி, நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் ...
பெருங்கடுங்கோ
13
கலித்தொகை - பாலைக் கலி - 13
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, எரி வெந்த கரி வறல்வாய், புகுவ காணாவாய், பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட, மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, 5 உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை, ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது, சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும் புயல் துளி மாறிய, போ...
பெருங்கடுங்கோ
14
கலித்தொகை - பாலைக் கலி - 14
'அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண், மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல், மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல், அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல், 5 சில நிரை வால் வளை, செய்யாயோ!' என, பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி, இனிய சொல்லி, இன்னாங்குப் பெய...
பெருங்கடுங்கோ
15
கலித்தொகை - பாலைக் கலி - 15
அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் இணைப் படைத் தானை அரசோடு உறினும் கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின், எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை 5 மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி, உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர், பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு அருள் புறம் மாறிய ஆர்...
பெருங்கடுங்கோ
16
கலித்தொகை - பாலைக் கலி - 16
பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க, வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர, ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர்திறத்து, இனி நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன் அதுவும்தான் தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார், 5 துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை, 'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என...
பெருங்கடுங்கோ
17
கலித்தொகை - பாலைக் கலி - 17
படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணை புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும், 'உடையதை எவன் கொல்?' என்று ஊறு அளந்தவர்வயின் நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கற்காண் நறுநுதால்! 'தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப, துறந்து நீ, 5 வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை, நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது, நா...
பெருங்கடுங்கோ
18
கலித்தொகை - பாலைக் கலி - 18
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப, பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ, என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்: சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; 5 ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்; இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள், ஒரோஒ கை தம்முள...
பெருங்கடுங்கோ
19
கலித்தொகை - பாலைக் கலி - 19
செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம் பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய! அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து, பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்; 5 மகன் அல்லை மன்ற, இனி செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி, அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை என...
பெருங்கடுங்கோ
20
கலித்தொகை - பாலைக் கலி - 20
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற, செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின், தணிவு இல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும் பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும் மணி திகழ் விறல் மலை வெம்ப, மண் பக, 5 துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ் சுரம் 'கிளி புரை கிளவியாய்! நின் அடிக்கு எளியவோ, தளி உறுபு அறி...
பெருங்கடுங்கோ
21
கலித்தொகை - பாலைக் கலி - 21
'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி, ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து, பொருள்வயிற் பிரிதல் வேண்டும்' என்னும் அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே; 5 நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு' என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே அவற்றுள் யாவோ வாய...
பெருங்கடுங்கோ
22
கலித்தொகை - பாலைக் கலி - 22
உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும் புதுவது அன்றே புலனுடை மாந்திர்! தாய் உயிர் பெய்த பாவை போல, 5 நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால், ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் ...
பெருங்கடுங்கோ
23
கலித்தொகை - பாலைக் கலி - 23
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம் தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல் நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே: 5 இனி யான், உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன் தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்; நல்குநர் புரிந்து நலன் ...
பெருங்கடுங்கோ
24
கலித்தொகை - பாலைக் கலி - 24
'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும்'என்னும் சொல் இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட, யானும், 'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர, 5 மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், பாயல் கொண்டு என் தோள் கனவுவார், 'ஆய் கோல் தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள...
பெருங்கடுங்கோ
25
கலித்தொகை - பாலைக் கலி - 25
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா, கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு, களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, 5 முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப...
பெருங்கடுங்கோ
26
கலித்தொகை - பாலைக் கலி - 26
'ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு, 5 தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல, போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற...
பெருங்கடுங்கோ
27
கலித்தொகை - பாலைக் கலி - 27
'ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த; பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்; மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப; காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு 5 தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற; பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு, ஏதிலான் படை போல, இ...
பெருங்கடுங்கோ
28
கலித்தொகை - பாலைக் கலி - 28
'பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும் நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல், தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண் தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற, செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு, 5 தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான் விரிந்து ஆனா மலராயின...
பெருங்கடுங்கோ
29
கலித்தொகை - பாலைக் கலி - 29
'தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர; வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள; 5 இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார; மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல், ஆய் இதழ்ப் பன் மலர் ஐய கொங்க...
பெருங்கடுங்கோ
30
கலித்தொகை - பாலைக் கலி - 30
'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி, புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும், இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்; துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி, 5 மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ 'வெயில் ஒளி அறியாத விரி மலர...
பெருங்கடுங்கோ
31
கலித்தொகை - பாலைக் கலி - 31
'கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல் வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக, பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப் புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, 5 மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால், கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன் "பொ...
பெருங்கடுங்கோ
32
கலித்தொகை - பாலைக் கலி - 32
எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல், பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ நெறி கொள 5 துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும், ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லா...
பெருங்கடுங்கோ
33
கலித்தொகை - பாலைக் கலி - 33
'வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற, மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல, பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக, துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, 5 மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய, காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது, தாது அவிழ்...
பெருங்கடுங்கோ
34
கலித்தொகை - பாலைக் கலி - 34
'மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று, பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின், சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற, முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண் பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல், 5 பன் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப, இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் விரி...
பெருங்கடுங்கோ
35
கலித்தொகை - பாலைக் கலி - 35
'மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப; மாயவள் மேனி போல் தளிர் ஈன், அம் மேனித் தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக; மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, 5 அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார; நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், துறந்து ...
பெருங்கடுங்கோ
36
கலித்தொகை - பாலைக் கலி - 36
'கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர, வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப, தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர, இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென, 5 கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத, மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப, இருங் குயில் ஆல, பெ...
பெருங்கடுங்கோ
37
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 37
கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன் வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு, முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; 5 பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின் சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்; பெண...
கபிலர்
38
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 38
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5 உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன் கோடு புய்க்கல்லாது, உழக்...
கபிலர்
39
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 39
'காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான், நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால், பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம் வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி 5 அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே; அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உ...
கபிலர்
40
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 40
'அகவினம் பாடுவாம், தோழி!' 'அமர் கண் நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல், தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ, முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின் வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி, 5 பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி, அகவினம் பாடுவாம், நாம்; ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள், தேன் நாறு கதுப்பினாய்! யா...
கபிலர்
41
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 41
பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா, ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று; இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், 5 கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து, பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் நெடு...
கபிலர்
42
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 42
'மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி, கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன் மறந்தான்; மறக்க, இனி; எல்லா! நமக்குச் 5 சிறந்தன நாம் நன்கு அறிந்தனம், ஆயின்; அவன் திறம், கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம், வள்ளை அகவுவம், வா' 'இகுளை! நாம் வள்ளை...
கபிலர்
43
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 43
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும் சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம், ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற 5 மை படு சென்னிப் பய மலை நாடனை, தையலாய்! பாடுவாம், நாம்; தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள் முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின், கூற்ற...
கபிலர்
44
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 44
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல் எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து, அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ, முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை, வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, 5 புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப! தன் எவ்வம் கூரினும், ...
கபிலர்
45
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 45
விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை, கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை, அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து, பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல் உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, 5 நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென, சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப! கால் பொர நுடங்கல ...
கபிலர்
46
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 46
வீயகம் புலம்ப, வேட்டம் போகிய மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி, வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின், 'வேங்கை அம் சினை' என விறற் புலி முற்றியும், 5 பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும் அயம் இழி அருவி...
கபிலர்
47
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 47
ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம் புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்; வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல், நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்; இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க 5 வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்; அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச் சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும...
கபிலர்
48
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 48
ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல, தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த, வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகப் படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய, கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும் 5 பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின் இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட! வீழ்பெயற் கங்...
கபிலர்
49
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 49
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை, நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின், கனவில் கண்டு, கதுமென வெரீஇ, புதுவதாக மலர்ந்த வேங்கையை 5 'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி, பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம் காணும் பொழுதின் நோக்கல் செல்லாது, நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட! போது எழில் ...
கபிலர்
50
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 50
வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல், மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி, தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர் வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் இருள் தூங்கு சோலை, இலங்கு நீர், வெற்ப! 5 அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவு வில்மேல் அசைத்த கையை, ஓராங்கு நிரைவளை முன்கை என் தோழியை நோக்கி, படி கிளி பாயும் பசுங் குரல் ஏ...
கபிலர்
51
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5 உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை, 'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யா...
கபிலர்
52
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 52
முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று, மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை, மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், 5 கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்: தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை, ...
கபிலர்
53
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 53
வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல் விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா, மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான், புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல, உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன, 5 அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும் பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப! மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துற...
கபிலர்
54
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 54
"கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற, பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை, தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்! அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு?" என்ன, நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி, 5 பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை, நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி, மோக்க...
கபிலர்
55
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 55
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல், பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு, போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை, இன் நகை, இலங்கு எயிற்று, தேம் மொழி துவர்ச் செவ் வாய், நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி: 5 'நில்' என நிறுத்தான்; நிறுத்தே வந்து, நுதலும் முகனும், தோளும், கண்ணும், இயலும், சொல்லும், நோக்குபு...
கபிலர்
56
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 56
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால், கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு, கழும முடித்து, கண் கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து, 5 ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே, ஓர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல் வெறுப்பினால், வேண்டு உருவம் க...
கபிலர்
57
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 57
வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, 5 வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி:...
கபிலர்
58
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 58
வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள், பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின், கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல், கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்! நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை, 5 ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்: உளனா, என் உயிரை ...
கபிலர்
59
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 59
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி, அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை, சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் 5 விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும்...
கபிலர்
60
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 60
சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல், மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல், நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல், வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்! 'கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு 5 உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல் பெண் அன்று, புனையிழாய்!' எனக் கூறி தொழூஉம்; ...
கபிலர்
61
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 61
எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்: செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர் அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று, சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், 5 மெல்ல இறைஞ்சும் தலை; எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை; நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்! என்...
கபிலர்
62
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 62
ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் 'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம் நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5 புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா! தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா செய்வது நன்று ஆமோ மற்று?' சுடர்த் தொடீ...
கபிலர்
63
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 63
நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார் தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப் போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம் காக்கும் இடம் அன்று, இனி எல்லா! எவன் செய்வாம்? 5 பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய் விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல் கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங...
கபிலர்
64
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 64
அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும், மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண் விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப, அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும் 5 விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப் பெரும் பொன் படுகுவை பண்டு ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; ...
கபிலர்
65
கலித்தொகை - குறிஞ்சிக் கலி 65
திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும் பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல், அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ, நம் இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக 5 தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும், காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை, தோழி! ...
கபிலர்
66
கலித்தொகை - மருதக் கலி 66
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு, ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான், வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் 5 தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீ...
மதுரை மருதனிளநாகனார்
67
கலித்தொகை - மருதக் கலி 67
கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து, சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம் தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன் நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார் போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்; 5 நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன...
மதுரை மருதனிளநாகனார்
68
கலித்தொகை - மருதக் கலி 68
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர் செது மொழி சீத்த செவி செறு ஆக, முது மொழி நீரா, புலன் நா உழவர் புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! 5 'ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன், வாளாது, ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி, களையா நின் குறி, வந்த...
மதுரை மருதனிளநாகனார்
69
கலித்தொகை - மருதக் கலி 69
போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக, ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5 ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர; தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெர...
மதுரை மருதனிளநாகனார்
70
கலித்தொகை - மருதக் கலி 70
மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென, கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி, துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி, 5 பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்: நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின், பல நாளும் படாத...
மதுரை மருதனிளநாகனார்
71
கலித்தொகை - மருதக் கலி 71
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர, புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, 5 நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் தனி மலர் தளை விடூஉம...
மதுரை மருதனிளநாகனார்
72
கலித்தொகை - மருதக் கலி 72
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ, சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி, ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல, புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க, 5 மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி, கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் வடி தீண்ட, வாய் விடூஉ...
மதுரை மருதனிளநாகனார்
73
கலித்தொகை - மருதக் கலி 73
அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை, கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான், தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல, வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர! 5 'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல்வழி, 'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து, இதழ்...
மதுரை மருதனிளநாகனார்
74
கலித்தொகை - மருதக் கலி 74
பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம், கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 5 'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்; நஞ்சு உயிர் செகு...
மதுரை மருதனிளநாகனார்
75
கலித்தொகை - மருதக் கலி 75
'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார், சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும் ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து, ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி 5 உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி, அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய் தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும் உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் புதுவோர்ப் புணர்தல் ...
மதுரை மருதனிளநாகனார்
76
கலித்தொகை - மருதக் கலி 76
'புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ?' என வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி: 5 'செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய்' என்று, அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்...
மதுரை மருதனிளநாகனார்
77
கலித்தொகை - மருதக் கலி 77
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள் அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல், தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, 5 மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர் அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்: தண் தளிர்த்...
மதுரை மருதனிளநாகனார்
78
கலித்தொகை - மருதக் கலி 78
பன் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி, உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென, அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற் 5 பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப இறை பகை தணி...
மதுரை மருதனிளநாகனார்
79
கலித்தொகை - மருதக் கலி 79
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர், அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் 5 தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; மணி புரை செவ் வாய் நின் மார்...
மதுரை மருதனிளநாகனார்
80
கலித்தொகை - மருதக் கலி 80
நயம் தலை மாறுவார் மாறுக; மாறா, கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ், பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப் பவழம் புனைந்த பருதி சுமப்ப, 5 கவழம் அறியா நின் கை புனை வேழம் புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி, அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே வருக! எம் பாக மகன்! கிளர் மணி ஆர்ப்ப...
மதுரை மருதனிளநாகனார்
81
கலித்தொகை - மருதக் கலி 81
மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன் மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர, பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர, உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் 5 அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப, பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக் கால் வல் தேர் கையின் இயக்கி, ...
மதுரை மருதனிளநாகனார்
82
கலித்தொகை - மருதக் கலி 82
ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு, காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை; புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு புக்க வழி எல்லாம் கூறு; 5 கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக் காயாமை வேண்டுவல், யான்! காயேம். மடக் குறு மாக்களோடு ஓரை அயரும் அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற 10 தொ...
மதுரை மருதனிளநாகனார்
83
கலித்தொகை - மருதக் கலி 83
பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை, பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர, இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய், உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம் 5 நீட்டித்த காரணம் என்? கேட்டீ, பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக் குட வாய்க்...
மதுரை மருதனிளநாகனார்
84
கலித்தொகை - மருதக் கலி 84
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் நறு வடி ஆர் இற்றவை போல் அழிய, கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச் சுரந்த என் மென் முலைப் பால் பழுதாக நீ நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா! 5 கடவுட் கடி நகர்தோறும் இவனை வலம் கொளீஇ வா' என, சென்றாய் விலங்கினை ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் யார் இல் தவிர்ந்தனை? கூறு; நீருள் அடை...
மதுரை மருதனிளநாகனார்
85
கலித்தொகை - மருதக் கலி 85
காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ்; மேல் மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல் தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை; 5 கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி; பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும...
மதுரை மருதனிளநாகனார்
86
கலித்தொகை - மருதக் கலி 86
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல், கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ, பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய் கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல் 5 பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப, கடி அரணம் பாயா நின் கை புனை வேழம், தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த தேரை வாய்க் கிண்கிணி ...
மதுரை மருதனிளநாகனார்
87
கலித்தொகை - மருதக் கலி 87
ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை வெரூஉதும், காணுங்கடை; தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய், மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு, ஏடா! நினக்குத் தவறு உண்டோ ? நீ வீடு பெற்றாய்; 5 இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி; நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் புலப்பார் உடையர், தவறு; அணைத் தோளாய்! தீயாரைப் போல...
மதுரை மருதனிளநாகனார்
88
கலித்தொகை - மருதக் கலி 88
ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக, தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர்; கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று; 5 வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் மாயம், மருள்வாரகத்து; ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா என்கண் எவனோ, தவ...
மதுரை மருதனிளநாகனார்
89
கலித்தொகை - மருதக் கலி 89
யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை வாரல்; நீ வந்தாங்கே மாறு; என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் 5 ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது; ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா! பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்...
மதுரை மருதனிளநாகனார்
90
கலித்தொகை - மருதக் கலி 90
கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா, மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின் பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு; ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு? கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, 5 பாடு பெயல் நின்ற பானாள் இரவில் தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும், வடிவு ஆர் குழையும், இறையும், பொறையா ஒடிவது போலும் நுசுப்போடு, அடி...
மதுரை மருதனிளநாகனார்
91
கலித்தொகை - மருதக் கலி 91
அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம், புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின் இன்று நன்று, என்னை அணி; 5 அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன், ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை தெய்வத்தான் கண்டீ தெளிக்கு; மற்றது, அறிவல், யான் நின...
மதுரை மருதனிளநாகனார்
92
கலித்தொகை - மருதக் கலி 92
புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக் கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே: முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி, மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது, உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; 5 அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும், உரிதின் ஒருதலைப்பு எய்தலும் வீழ்வார்ப் பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் தருதல் தகையாதான...
மதுரை மருதனிளநாகனார்
93
கலித்தொகை - மருதக் கலி 93
வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய, தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப! பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய, கண்டது எவன்? மற்று உரை; நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின் 5 உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் கடவுளர்கண் தங்கினேன்; சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ கடவுண்மை கொண்டு ஒழுகுவார்; அவருள...
மதுரை மருதனிளநாகனார்
94
கலித்தொகை - மருதக் கலி 94
என் நோற்றனைகொல்லோ நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை; அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான், 5 ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை, 'வேண்டுவல்' என்று விஇலக்கினை; நின் போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி, நெறித்...
மதுரை மருதனிளநாகனார்
95
கலித்தொகை - மருதக் கலி 95
நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி, ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த 5 குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும் அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது; குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்...
மதுரை மருதனிளநாகனார்
96
கலித்தொகை - மருதக் கலி 96
'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்; பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை; சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை; யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி: ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 5 குதிரை வழங்கி வருவல்' அறிந்தேன், குதிரைதான்; பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல...
மதுரை மருதனிளநாகனார்
97
கலித்தொகை - மருதக் கலி 97
அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான் சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர, 'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல்; 5 முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர் புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்; ஒக்கும் அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்: அ...
மதுரை மருதனிளநாகனார்
98
கலித்தொகை - மருதக் கலி 98
யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும் புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர, பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் 5 பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் கேட்டும் அறிவேன்மன், யான்; தெரி கோதை அம் நல்லாய்! தேறீ...
மதுரை மருதனிளநாகனார்
99
கலித்தொகை - மருதக் கலி 99
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து, அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5 பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்! அறன் நிழல...
மதுரை மருதனிளநாகனார்
100
கலித்தொகை - மருதக் கலி 100
ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல், வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும், நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக் காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும், மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து 5 யாண்டோ ரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்! 'ஐயம் தீர்ந்து யார்கண்ணும் ...
மதுரை மருதனிளநாகனார்