text stringlengths 0 4.77k |
|---|
ப கப் 7) மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் ராமய்யலை எிணன்மஊவஹப்ஙன: ர லாரி 8 மா1ைை6/பாா-8 ௦ா௱லி இளைம 116 1௫ 106 ௯5 ஙி ராஹகாக ஈவா ௩. ௩ருலாகபானைகா, ட௮ப58௱ா6, 026180 80 868560 1॥ 08 1998 85 றனர் 01 1ா0)84 1080பா௨ 60160010௦8. ட் ௦0௦-680 00918 1௦2: 14. 14. ॥160பா௱னலா, 14518 |[ஈ... |
திருக்குறள் - ஒரு அறிமுகம் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் எள்ள என்... |
"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப... |
கூடி முயங்கப்பெறின்" என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்"னுடன் முடித்திருக்கிறார். வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து. தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற... |
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் 1. அறத்துப்பால் 1.1 கடவுள் வாழ்த்து 1.1.1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இ... |
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்கும... |
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. அந்தணர் என்போர் அறவோர்மற் நறெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். 1.1.4. அறன்வலியுறுத்தல் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. ஒல்லும் வகையான் அற... |
இல்வாழ்வான் என்பான் துணை. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போய்ப் பெறுவ தெவன்? இயல... |
நிறைகாக்கும் காப்பே தலை. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. 1.2.3 புதல்வரைப் பெறுதல் பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. எ... |
புன்கணீர் பூசல் தரும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. அறத்திற்கே அன்புசார் ... |
நல்வருந்து வானத் தவர்க்கு. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. 1.2.6 இனியவைகூறல... |
1.2.7 செய்ந்நன்றி அறிதல் செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் ச... |
கோடாமை சான்றோர்க் கணி. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரிஇ அல்ல செயின். கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப... |
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 1.2.10. ஒழுக்கமுடைமை ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக்... |
தேரான் பிறனில் புகல். எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்... |
இன்னாச்சொல் நோற்கிற் பவர். உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். 1.2.13 அழுக்காறாமை ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக... |
மற்றின்பம் வேண்டு பவர். இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெ... |
என்னைகொல் ஏதிலார் மாட்டு. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 1.2.16. பயனில சொல்லாமை பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற்... |
தீயினும் அஞ்சப் படும். அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப... |
பெருந்தகை யான்கண் படின். இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. 1.2.19. ஈகை வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. நல்லாறு எனினும் க... |
ஊதியம் இல்லை உயிர்க்கு. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. தோன்றின் புகழொடு தோன்றுக அ... |
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால... |
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். 1.3.3 தவம் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் த... |
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்த... |
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு. 1.3.6. வாய்மை வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும... |
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைப... |
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும். நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். 1.3.9 கொல்லாமை அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோ... |
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உ... |
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. 1.3.12 மெய்யுணர்தல் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப... |
தவாஅப் பிறப்பினும் வித்து. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல். தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. ... |
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின். நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்? ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். ஊழியல... |
2. பொருட்பால் - 2.1 அரசியல் 2.1.1 இறைமாட்சி படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. அஞ்சாமை ஈகை அறிவுக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்... |
அனைத்தே புலவர் தொழில். உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. தாமின் புறுவது உலகின் பு... |
2.1.3 கல்லாமை அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். கல்லாதான் ஒட்பம் கழியநன் நாயினும் கொள்ளார் அறிவுடை யார். கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோ... |
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவிய... |
என்னுடைய ரேனும் இலர். 2.1.6 குற்றங்கடிதல் செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. வருமுன்னர்க் காவ... |
வன்மையு ளெல்லாந் தலை. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் க... |
இனநலத்தின் ஏமாப் புடைத்து. அல்லற் படுப்பதூஉம் இல். 2.1.9 தெரிந்துசெயல்வகை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏ... |
இடைக்கண் முரிந்தார் பலர். அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை ... |
காணின் கிழக்காம் தலை. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. 2.1.12 இடனறிதல் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். ஆற்றாரும் ஆற்ற... |
நாணுடையான் சுட்டே தெளிவு. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை... |
அதனை அவன்கண் விடல். வினைக் குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. 2.1.15 சுற்றந்தழால் பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்ப... |
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். இழுக்காமை யார்மாட்டு... |
கோலதூஉங் கோடா தெனின். இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். 2.1.18 கொடுங்கோன்மை கொலைமேற்க... |
2.1.19 வெருவந்தசெய்யாமை தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். அருஞ்செவ்வி இன்னா முகத்தான்... |
புண்ணென்று உணரப் படும் மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர... |
புறப்படுத்தான் ஆகும் மறை. 2.1.22 ஊக்கமுடைமை உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்... |
மாண்ட உஞற்றி லவர்க்கு. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். குடியாண்மை யுள்வந்த குற்றம்... |
மெய்வருத்தக் கூலி தரும். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். 2.1.25 இடுக்கணழியாமை இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். மடுத்தவா யெல்லாம் பகடன்... |
ஐந்துடன் மாண்டது அமைச்சு. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. செயற்கை அறிந்த... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.