Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
141
389k
புதுச்சேரி-நேருக்கு நேர் விவாதம் செய்தால் மீசை அல்ல, மொட்டையே அடித்துக் கொள்ள நேரிடும் என முன்னாள் அமைச்சருக்கு, கல்யாணசுந்தரம் எம். எல். ஏ. , சவால் விடுத்துள்ளார். அவரது அறிக்கைஃ காலாப்பட்டில் கடந்த 9ம் தேதி நடந்த காங். , நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஷாஜகான், அவர் கொண்டு வந்த திட்டங்களை நான் கொண்டு வந்ததாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க போவதாகவும், அவ்வாறு இல்லை என நிருபித்தால், ஒருபக்க மீசையை எடுத்துக் கொள்வதாக சவால் விட்டுள்ளார். அவரது சவால், எனது மக்கள் நலத்திட்ட பணிகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக கருதுகிறேன். எந்த திட்டத்தை யார் கொண்டு வந்தது என்பது காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும், நான், அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்தால் அவ் மீசையை மட்டும் அல்ல மொட்டை அடித்துக் கொள்ள நேரிடும். பிள்ளைச்சாவடி கடல் அரிப்பு சம்பந்தமாக அவர் பேசியதற்கு, நான் கடந்த டிசம்பர் 13ம் தேதி நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயார் என அறைக்கூவல் விடுத்திருந்தேன். அதற்கு பதில் கூறாதவர் தற்போது தனியார் விடுதியில் நான்கு சுவற்றுக்கு மத்தியில் சவால் விடுத்திருப்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அவரது விருப்பத்தை போலவே, நேருக்கு நேர் பொது மேடையில் நான் கடந்த 2011 முதல் 2016 வரை ஆட்சியில் இருந்தபோதும், தற்போது 2021 முதல் இன்று வரை என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன் என ஆதாரத்துடன் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். அதேபோன்று, அவர் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என்று ஆதாரத்துடன் பொதுமேடையில் அறிவிக்க தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
செய்முறைஃ பச்சரிசி மற்றும் பச்சைப்பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பயறுடன், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். சுவையான பச்சை பயறு தோசை ரெசிபி ரெடி.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர எல்லையில் உள்ளது. இதன் அருகே ஆந்திர மாநில கோதாவரி படுகையில் மும்முடிவரம் தொகுதியில் ஜியோர்ஜிபேட்டா என்னும் கிராமத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சேவல் பந்தயம் நடத்தப்படுவது முக்கியமான சிறப்பு அம்சம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் பணம் கட்டி நடத்தப்பட்டு வந்த இந்த சேவல் பந்தயம், தற்போது கோடிக்கணக்கில் பணம் கட்டி பகிரங்கமாக நடத்தப்படுகிறது. கட்சி பாகுபாடு இன்றி எம். எல். ஏ. க்கள், எம். எல். சி. க்கள் முதல் ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா பிரமுகர்களும் நேரடியாகவே இந்த சேவல் பந்தயங்களில் கலந்துகொள்கின்றனர். ஒரு போட்டியில் 5 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சேவல் சண்டை நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. 10 ஏக்கர் பரப்பிலான மைதானத்தில் இந்த பந்தய போட்டி நடைபெற்றது. இதற்கான மைதானம் 3 ஏக்கர் பரப்பளவிலும் வாகனங்கள் நிறுத்துமிடம் 7 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் புதுச்சேரியில் ஏனாம் பகுதி, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த சேவல்கள் போட்டிக்கு வந்தன. வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள். . புதுவையில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம். . புதுச்சேரியில் 1 கிலோ தக்காளியின் விலை எவ்வளவு தெரியுமா? ரேசன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் மானியம் ரூ. 300. . . அதிரடியாக அரசாணை வெளியிட்ட புதுச்சேரி அரசு. . புதுவையில் விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட். . ! இங்கு இதுதான் ஸ்பெஷல். . ! புதுவையில் பழைய நாணயங்களுக்கு மவுசு அதிகம். . ! ஆர்வமுடன் வாங்கிச்சென்ற மக்கள். . ! புதுச்சேரி வில்லியனூரில் முதியோர்களுக்கு சிறப்பு மருத்து முகாம். . ! அரசு மருத்துவமனையில் உள்ள 116 காலி பணியிடங்கள். . உடனே அப்ளை பண்ணுங்க! Puducherry Weather Update : புதுச்சேரியில் ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை. . ! புதுவை முல்லா வீதி தர்காவில் மேளதாளத்துடன் நடைபெற்ற கந்தூரி விழா. . ! QR-கோடு மூலம் தியாகிகளின் வரலாறு தெரிஞ்சுக்கலாம். . புதுவை தியாகப் பெருஞ்சுவர் பற்றி தெரியுமா? உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil. com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரைச் சேர்ந்த ஜெயராமன், கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், காளம்பாளையத்தைச் சேர்ந்த பைனான்சியர் சபரிநாதனை அணுகி, தன்னிடம் 30 லட்ச ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 10 சதவீத கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி, 500 ரூபாய் நோட்டுகளாக 30 லட்ச ரூபாயைக் கொடுத்த சபரிநாதனிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஜெயராமன் தப்பிச் சென்றார். இதுதொடர்பாக, பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் சபரிநாதன் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயராமனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சிவராமன், சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அதிவேக ரயில்களில் ஒன்றான இஸ்தான்புல் அங்காரா YHT, இந்த இரண்டு நெரிசலான மற்றும் அதிக ட்ராஃபிக் நகரங்களில் போக்குவரத்தை எளிதாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. TCDD Tasimacilik இந்த துறையில் உள்ள அனைத்து புதுமைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அதன் அமைப்பில் மிக விரைவான முறையில் ஒருங்கிணைத்து, இந்த அதிவேக ரயில்களுடன் தனது பயணிகளுக்கு வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான பயண வாய்ப்பை வழங்கியது. இஸ்தான்புல்-அங்காரா அதிவேக ரயில் ஒரு நாளைக்கு அங்காரா இஸ்தான்புல் மற்றும் இஸ்தான்புல்-அங்காரா இடையே 6 பரஸ்பர பயணங்களை செய்கிறது. இஸ்தான்புல் பெண்டிக்கில் இருந்து புறப்படும் ரயில் முறையே கெப்ஸே, இஸ்மித், அரிஃபியே, பிலேசிக், போசுயுக், எஸ்கிசெஹிர், பொலாட்லி மற்றும் சின்கான் வழியாக 4 மணி 15 நிமிடங்களில் அங்காராவை வந்தடைகிறது. இஸ்தான்புல் அங்காரா அதிவேக ரயில் சில நிறுத்தங்களில் நிற்காது என்பதால், ரயில் வரும் நேரத்தில் வேறுபாடுகள் இருக்கலாம். இஸ்தான்புல் மற்றும் அங்காரா இடையே பாதுகாப்பான, வேகமான மற்றும் மிகவும் வசதியான பயணத்தை வழங்கும் அதிவேக ரயில்கள், ஒரு நாளைக்கு 6 பயணங்களுடன் பயணிகளுக்கு சேவை செய்கின்றன. இஸ்தான்புல்லுக்கும் அங்காராவுக்கும் இடையே அதிவேக ரயிலில் அதிக ஆர்வம் மற்றும் அடர்த்தி இருப்பதால், அவ்வப்போது டிக்கெட்டைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். உங்கள் முதல் முறையாக 06.35ல் தொடங்கும் ரயில், கடைசியாக 19.35 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் பொருளாதாரம் மற்றும் வணிகம் என இரண்டு வகையான வேகன்கள் உள்ளன. பயணிகள் தங்கள் பயண நேரம் மற்றும் நாட்களின் படி, அவர்கள் விரும்பும் வேகனில் இருந்து டிக்கெட்டுகளை வாங்கலாம். TCDD Tasimacilik பயணிகளுக்கு ஆன்லைன் டிக்கெட்டையும் வழங்குவதால், இது சம்பந்தமாக பலவிதமான சேவைகள் வழங்கப்படுகின்றன மற்றும் பயணிகளுக்கு டிக்கெட் வாங்க ஒரு போர்டல் வழங்கப்படுகிறது. இதன் மூலம், பயணிகள் எந்த நேரத்திலும், இடத்திலும், நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தங்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம். இஸ்தான்புல்லில் இருந்து அங்காராவுக்கு அதிவேக ரயிலில் எத்தனை மணிநேரம்? இஸ்தான்புல்லில் இருந்து அங்காரா செல்லும் அதிவேக ரயிலில் எக்ஸ்பிரஸ் பயணிகளின் பயண நேரம் 3 மணிநேரம் 58 நிமிடங்கள் ஆகும், அதே சமயம் எக்ஸ்பிரஸ் அல்லாத பயணிகளின் பயண நேரம் 4 மணி 15 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை மாறுபடும். கீழே, ரயில் நிலையங்களுக்கு ஏற்ப ரயில் புறப்படும் நேரங்கள் உங்களுக்காக அட்டவணையில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. |இஸ்தான்புல் (எஃப்) |கெப்ஸ் (எஃப்) |அரிஃபியே (கே) |பிலெசிக் (கே) |போசாயிக் (எஃப்) |எஸ்கிஷீர் (கே) |பொலட்லே (கே) |எரியமான் (வ) |அங்காரா (வி) இஸ்தான்புல்-அங்காரா YHT டிக்கெட் விலைகள் நிலையான டிக்கெட்டுகளில் உள்ளன 70.00 TL, நெகிழ்வான டிக்கெட்டுகளில் 84.00 TL, வணிக நிலையான டிக்கெட்டுகளில் 101,50 TL மற்றும் வணிக நெகிழ்வான டிக்கெட்டுகள் 122,00 TLஇருக்கிறது . பல்வேறு வயதுக் குழுக்களுக்கும் தள்ளுபடி விகிதங்கள் உள்ளன. அங்காரா எஸ்கிசெஹிர் அதிவேக ரயில் டிக்கெட் விலைகள், - இலவச டிக்கெட்டுகளுக்கு தகுதியுள்ள நபர்கள் 0-6 க்கு இடைப்பட்ட குழந்தைகள், போர் வீரர்கள் மற்றும் முதல் பட்டம் உறவினர்கள், கடுமையாக ஊனமுற்ற குடிமக்கள், மாநில விளையாட்டு வீரர்கள் மற்றும் முதல் பட்டம் உறவினர்கள். - பயணிகள், இளைஞர்கள், ஆசிரியர்கள், 20-13 இன் குடிமக்கள், பத்திரிகை உறுப்பினர்கள், 26 நபர்களுக்கு டிக்கெட் பெறும் குழுக்கள், துருக்கிய ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் ஒரே நிலையத்திலிருந்து சுற்று பயண டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு% 60 தள்ளுபடி பயன்படுத்தப்படுகிறது. - 50 தள்ளுபடி விகிதம் பயணிகள், 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள், 7-12 வயதுடைய குழந்தைகள் மற்றும் கோரிக்கையின் பேரில் 0-6 வயதுடைய குழந்தைகளுக்கு பொருந்தும்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று ஒரு டெஸ்ட் போட்டியில் டிரா செய்த நிலையில் நேற்று முடிந்த் 3வது டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி பெற்றதால் தொடரை வென்றுள்ளது. கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கோர் விபரம்ஃ முதல் இன்னிங்ஸில் சதமடித்ததோடு மூன்று விக்கெட்டுக்களை எடுத்த அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரையும் வென்றது. நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஆகஸ்D 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது. - பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு சந்திரன் தலத்தில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது. அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள சந்திரன் தலத்தில் சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து யாகமும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீதிகளில் ஆதரவின்றித் திரியும் நாயினங்கள், கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும், உணவு வழங்கவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் இன்று வெளியிட்ட அறிக்கைஃ "நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று தமிழ்நாட்டில் தீவிரமாகாமல் தடுக்க தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதன. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களின் நன்மை கருதி போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனினும் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியவாசியத் தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும், கால்நடை, கோழி, முட்டை, இறைச்சி, கால்நடை மற்றும் கோழித்தீவனம் ,கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும் விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டது. மேலும் வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாயினங்கள், மற்றும் கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியனவற்றுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செல்லப் பிராணிகளுக்கு உணவு வழங்கவும் ஏதுவாக தகுந்த அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உணவின்றி சிரமப்படும் நாயினங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் பிராணிகள் நலன் பேணுதல் குறித்த தகவல்களை உடனுக்குடன் கவனிக்க கால்நடை பராமரிப்புத் துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களிள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இயங்கும் SPCA, கால்நடை பராமரிப்புத்துறை தமிழ்நாடு விலங்குகள் நலவரியம் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் மூலம் ஆதரவின்றித் திரியும் கால்நடைகளுக்கு உணவளித்து பேணப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூந்தமல்லி சாலையில் ரிப்பன் மாளிகை எதிரிலுள்ள குதிரை லாயத்தில் முழு அடைப்பினால் குதிரை உல்லாச நடை, கல்யாணத் திருவிழா போன்ற நிகழ்ச்சி நடைபெறாததால் உணவு மற்றும் ஆதரவின்றி அல்லலுறும் தொழிலாளர் மற்றும் அவர்தம் குதிரைகளின் நிலையினை கருத்திற்கொண்டு அவற்றிற்குப் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிக்காக உதவி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விலங்குகள் நலவரியம் மூலம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத்துறையின் அரசு முதன்மைச் செயலாளரின் வழிகாட்டுதலின்படி 525 கிலோ குதிரை தீவனம் ஏப். 16 அன்று வழங்கப்பட்டது. மேலும் குதிரை சவாரி தொழிலாளர்களின் நிலையறிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி மூட்டை வீதம் 15 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது". இவ்வாறு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். Sign up to receive our newsletter in your inbox every day!
பொள்ளாச்சிஃ பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை, எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும், முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டு செல்ல, எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்னும் திட்டத்தின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெகமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி வடக்கு வட்டாரக்கல்வி அலுவலர் யோகேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கோமதி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்தியக்கலா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் சத்தியமூர்த்தி, திட்டத்தின் முக்கிய அம்சங்களை பெற்றோர்களிடம் விளக்கி கூறினார். பள்ளியின் எண்ணும் எழுத்தும் வகுப்பை கையாளும் ஆசிரியர்கள் திட்டம் குறித்து பேசினர். இதில், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், வரைபடங்கள், கைவினைப் பொருட்கள் காட்சி படுத்தப்பட்டன. வகுப்பறைகளில் செயல்பாட்டு களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னை அறிமுகம் செய்தல், உரையாடல், பாடல்கள், போன்ற செயல்பாடுகள் மாணவர்களும், எண்களை வரிசைப்படுத்துதல், பிங்கோ கேம் போன்ற செயல்பாடுகளை பெற்றோர்களும் செய்தனர். செயல்பாட்டுக் களங்களின் முன் நின்று பெற்றோர்களும், குழந்தைகளும் செல்பி எடுத்தனர். பள்ளி ஆசிரியை தங்கம் மாரியம்மாள் நன்றி கூறினார். * சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியை அமுதாராணி வரவேற்றார். எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர்களின், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் அழகாக வண்ணமயமாக காட்சிப்படுத்தப்பட்டன. அதன் பயன்பாடுகள், கற்பித்தல் முறைகள், பற்றி ஆசிரியர் ராஜேஷ் விளக்கினார். பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில், எண்ணும் எழுத்தும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என் மேடை, என் பள்ளி என்ற தலைப்பில் மாணவர்கள் பேசினர். பெற்றோர்கள், 'எண்ணும் எழுத்தும் கற்பித்தலுக்கு முன்னும், பின்னும்,' என்ற தலைப்பில் பல கருத்துக்களை எடுத்துக்கூறினர். பெற்றோர்களுக்கான புதிர் விளையாட்டு போட்டி நடத்தி வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர் ஆனந்தராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் பங்கேற்றனர். * கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கற்றல் கற்பித்தல் பொருட்கள் பெற்றோர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. அதன் பயன்பாடுகள், கற்பித்தல் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை சத்தியா, எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள், உட்கூறுகள், மாணவர்களின் தரம் பங்கேற்றல், திறன் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தார். மாணவ, மாணவியர் ஆடல், பாடல், ஆங்கிலம் வாசித்தல், நடித்தல், குழு விளையாட்டு ஆகியவற்றில் திறமைகளை வெளிப்படுத்தினர். பெற்றோர்களுக்கென சிறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் தினகரன் செய்து இருந்தார்.
"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!, India vs Australia: Matthew Hayden Takes Pot Shot At Virender Sehwag, War Of Words Begins - NDTV Sports\n"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!\nUpdated: 12 February 2019 17:52 IST\nஆஸ்திரேலிய குழந்தைகள் பலர் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளனர். குழந்தைகளுடன் பேபி சிட்டராக வலம்வருவது போன்று படமாக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்\nமேத்யூ ஹெய்டன், சேவாக்கின் புதிய விளம்பரத்துக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். © Screengrab/YouTube\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் விரேந்தர் சேவாக்கின் விளம்பரத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த டிம் பெய்ன் - ரிஷப் பன்ட் பேபி சிட்டர் உரையாடலை மையமாக வைத்து அந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. இதனை பார்த்துவிட்டு தனது ட்விட்டில் மேத்யூ ஹெய்டன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஅதில், "எச்சரிக்கை விடுக்கிறேன். ஆஸ்திரேலியர்களை வைத்து நகைச்சுவை செய்ய வேண்டாம். சேவாக் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இருவருக்கு நினைவிருக்கிறதா. உலகக் கோப்பையை பேபிசிட்டராக வைத்திருப்பது யார்?" என்று கூறி விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் உலகக் கோப்பை போட்டியின் நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக சேவாக் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக நடித்த விளம்பரம் வைரலானது. பிப்ரவரி 24ம் தேதி துவங்கவுள்ள இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடருக்கான விளம்பரத்தில் சேவாக் நடித்துள்ளார். ஐந்து ஒருநாள் போட்டி மற்றும்2டி20 போட்டிகளுக்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விளம்பரத்தில் ஆஸ்திரேலிய குழந்தைகள் பலர் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளனர். குழந்தைகளுடன் பேபி சிட்டராக வலம்வருவது போன்று படமாக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்.\nசமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் பேபிசிட்டர் ஜோக்குகள் பிரபலமாகின. ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன், இந்திய கீப்பர் ரிஷப் பன்ட்டை "என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பேபிசிட்டராகிராயா?" என்று வம்பிழுத்தார். பின்னர் ஒரு சந்திப்பில் பெய்ன்னின் மனைவியுடன் குழந்தைகளை வைத்துக் கொண்டு பன்ட்டின் படம் இணையத்தில் வைரலானது. பேபிசிட்டர் புகைப்படங்கள் இந்திய ஆஸ்திரேலிய தொடரை சுவாரஸ்யமாக்கின.\nமேலும் பன்ட்டை பார்த்து ஹரிக்கேன் அணிக்கு பரிந்துரை செய்கிறேன். தோனி வந்துவிட்டால் உனக்கு வேலை இருக்காது என்று சொல்ல அதுவும் சர்ச்சையானது. பிறகு ரோஹித் ஷர்மாவும் பேபிசிட்டருக்கு பன்ட்டை அழைத்தது குறிப்பிடத்தக்கது.\nசேவாக்கில் வீடியோவிற்கு ஹெய்டன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்\n"ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பேபி சிட்டர் தேவை" மேத்யூ ஹெய்டன்\nஆஸ்திரேலியர்களை வைத்து நகைச்சுவை செய்ய வேண்டாம்ஃ எச்சரிக்கும் ஹெய்டன்\n"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்\nகிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!\nசேவாக் விமர்சிக்கப்பட்ட ட்விட்டை ரீ-ட்விட் செய்த ரவீந்திர ஜடேஜா!
'முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அவசரமாக கூடுகிறது' என்ற தலைப்பில் இன்றைய (12.02.2018) வீரகேசரி பத்திரிகையில் செங்கலடி நிருபரால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.நயீமுல்லாஹ் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார். கட்சிக்கூட்டங்களுக்கான அழைப்பு விடுக்கும் அதிகாரம் கட்சி செயலாளரிடம் மாத்திரமே இருக்கையில் இணைத்தலைவர் ஒருவரால் இவ்வாறான கூட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது எவ்விதத்திலும் செல்லுபடியாகாது எனவும், அவ்வாறான கூட்டங்களில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் தமது கட்சி அங்கீகரிக்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி கட்சியின் செயலாளர் என்ற வகையில் தனக்கோ மற்றுமொரு இணைத்தலைவர் உட்பட பல உயர்பீட உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டம் பற்றிய எதுவித அறிவித்தலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், இப்படியானதொரு முறையற்ற கூட்டம் குறித்து பத்திரிகை வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாகவும் கூறிய அவர் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற முடிவுகளின் படி பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் விரைவில் உரிய முறையில் கூட்டப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். எனவே, கட்சியின் ஆதரவாளர்கள் இந்த விடயத்தில் எதுவித தடுமாற்றமும் கொள்ளத் தேவையில்லை எனவும், முறையற்ற விதத்தில் அதிகாரமற்ற ஒருவரால் கூட்டப்படவுள்ளதாக வெளிவந்துள்ள இச்செய்தி பற்றி தேர்தல் ஆணைக்குழுவிற்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னைஃ சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் ஏற்கெனவே பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் என்ற 4 ஆண்டுகால பட்டப் படிப்பை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் என்ற 4 ஆண்டுகால ஆன்லைன் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்கவிழா சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நேற்று நடந்தது. ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி, ஐஐடி ஆட்சிக்குழு தலைவர் பவன் கே. கோயங்கா, பேராசிரியர் பேபி ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக புதிய படிப்பை தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறும்போது, "தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல்மயமாகி வரும் சூழலில் இந்த புதிய ஆன்லைன் பட்டப் படிப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சென்னை ஐஐடி ஏற்கெனவே ஆன்லைனில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் படிப்பை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. ஆன்லைன் படிப்புகள் மூலம் அனைவருக்கும் உயர்தர கல்வி கிடைக்கும் நிலை ஏற்படும்" என்று குறிப்பிட்டார். ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி கூறும்போது, "இன்றைய உலக சூழலில் எலெக்ட்ரானிக்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. செல்போன்கள் உற்பத்தி பெருகி வருகிறது. மின் வாகனங்கள் தயாரிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எம்பெடெட் உற்பத்தி துறையில் நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த புதிய ஆன்லைன் படிப்பு இத்துறையில் ஏற்படும் தேவையை எதிர்கொள்ள பெரிதும் உதவும்" என்றார். இப்புதிய படிப்பு குறித்து பேராசிரியர் பேபி ஜார்ஜ் கூறும்போது, "பிளஸ் 2-வில் இயற்பியல், கணிதம் படித்தவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள், பணியில் இருப்போரும் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த படிப்பில் சேரலாம். இதற்கான வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும். ஆய்வக வகுப்புக்கு மட்டும் ஐஐடிக்கு நேரில் வரவேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://study. iitm. ac. in/es/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்" என்றார். Sign up to receive our newsletter in your inbox every day!
சாமானிய மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை, நாங்கள் எதிர்க்கட்சிகள் என்ற அடையாளத்துக்காக மட்டுமே அரசை எதிர்க்கவில்லை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் கடந்த 15-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய எதிர்க்கட்சித் தலைவராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் அடுத்த இரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகக் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கொல்லம் நகரில் காங்கிரஸ் சார்பில் ஐஸ்வர்ய கேரள யாத்திரை எனும் பிரச்சாரத்தில் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் சேர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்றார். அதன்பின் பின், திருவனந்தபுரத்தில் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில் கூறியதாவதுஃ நாங்கள் எதிர்க்கட்சிகள் என்பதால் மட்டும் அரசின் அனைத்து விஷயங்களையும் எதிர்க்கவில்லை. சாமானிய மக்களைப் பாதிக்கும் அரசின் அனைத்து தவறான கொள்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். சாமானிய மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை. எனக்கு இந்தப் பதவியை வழங்கும்போது கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கூறிய அறிவுரையில், சாமானிய மக்களின் பிரச்சினைகள் மீது அதிகமாக அக்கறை செலுத்துங்கள், அதைப்பற்றிப் பேசி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்கள். நாங்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை எழுப்புவது விளம்பரத்துக்காக மட்டுமல்ல. அது சாமானிய மக்களைப் பாதிப்பதால், அந்த விவகாரங்களை எழுப்புகிறோம். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று, அதை நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் குரல்களை பிரதமர் மோடியும், பாஜகவும் செவிமடுத்துக் கேட்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், மண்டி முறையை வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோருகிறார்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் விவசாயிகளின் திருப்திப்படுத்த அரசு தவறவிட்டது. மத்திய அரசு தனது அனைத்து அதிகாரிகளையும், துறைகளையும் பயன்படுத்தி, போராடும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றும், பாகிஸ்தானியர்கள் என்றும் அடையாளப்படுத்துகிறது. குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த சம்பவத்தில் ஏதோ சதி நடந்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. எரிபொருள் விலையை உயர்த்தி மத்திய அரசு மக்களுக்கு அநீதி இழைக்கிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். Sign up to receive our newsletter in your inbox every day!
"தற்கொலை செய்துக் கொள்ளாமல் காப்பாற்றியது வடிவேலு தான்" - மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி. ! கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சேவாக்! எதற்காக தெரியுமா? கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சேவாக்! எதற்காக தெரியுமா? கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த இரண்டு மாத சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று T20, 4 டெஸ்ட் போட்டி போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 21-ம் தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ம் தேதியும், ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதியும் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் வெற்றிகளை குவித்து வரும் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாகவே உள்ளது. அதே நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி சற்று வலுவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அந்த அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விரேந்திர சேவாக் கூறுகையில், "கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என எந்த நாட்டிலும் சிறப்பாக ஆடி வெற்றியை பறிக்கும் திறமை பெற்ற அணி. ஆனால் அதற்கு முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி ஆதிக்கம் செலுத்த வேண்டும். அப்படி ஆடினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தலாம். இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சரிவை சந்தித்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவில்லாமல் தான் இருக்கிறது. இருந்தாலும் தற்போதைய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொந்த மண்ணில் அதிகமாக விளையாடி உள்ளார்கள். அங்கு நடைபெற்ற முதல் தர போட்டிகளில் அதிகளவில் விளையாடிய அவர்கள் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்கள் என்பது போல் தோன்றுகிறது. எனவே இந்திய அணி சற்று எச்சரிக்கையுடன் ஆடவேண்டும்" என்று கூறியுள்ளார்.
- தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். - வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வந்து அளித்த மனுவில், நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் பெரியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து அளித்த மனுவில், இளங்கோவடிகள் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு தெற்கு பக்கமாக கழிவு நீர் ஓடை செல்வதற்கு கிழக்கிலிருந்து வாறுகால் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு அந்த சாக்கடை குறிச்சி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டதால் எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏற்படும் சூழல் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளிவருகிறதாம். சங்கத்தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள கமலா கலாசா லிரிக் வீடியோ நேற்று வெளியானது. இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள குத்து பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். விஜய்சேதுபதி மற்றும் ராஷி கண்ணா நடனமாடுகின்றனர். இந்த பாடல் வெளியான சற்று நேரத்திலேயே படத் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ், தீபாவளி கொண்டாட்டமாக சங்கத்தமிழன் ரிலீசாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக விஜய்சேதுபதியின் சங்கத் தமிழன் களமிறங்குகிறது. விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வாலு, ஸ்கெட்ச் படங்கள் அடைந்த தோல்வியை மாற்றி அவருக்கு வெற்றியை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வெளியீடு!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் ஆகியோரை விசாரணை செய்து நீதிமன்றம் வரை கொண்டுசென்றமை தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், இவ்விடயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, நீதியை எதிர்பார்த்து காத்திருந்த மக்களை சஞ்சலத்திற்குள்ளாக்கியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற முப்படையினரின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, அவன்ட் கார்ட் உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதுகுறித்து விசாரிப்பதற்கு ஒரு வழிமுறை உள்ளதென்றும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நாட்டின் நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் இவ்விடயம் தொடர்பாக தமக்கு அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் நோக்கம் கருதி விசாரணை ஆணைக்குழுக்கள் செயற்படுமாயின் தாம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படுமென மேலும் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற மீறல்களின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறார். கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடனும் கோட்டா தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு வருகின்றது. பல குற்றச்செயல்களுக்கு கடற்படையினரையே கோட்டா பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான நிலையில், கோட்டாவையும் கடற்படையினரையும் விசாரணைக்கு உட்படுத்துவது தவறென ஜனாதிபதி கூறியுள்ளமையானது, நல்லாட்சியின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவிடுபொடியாக்கும் செயலென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் பங்குதாரராக கருதப்படும் கோட்டா மற்றும் இராணுவத்தினரை, சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டுசெல்ல வேண்டுமென்பதே நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகும். எனினும், உள்நாட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கே ஜனாதிபதி அதிருப்தியை வெளியிடுவாராயின் யுத்தக் குற்ற விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றம் என்பன சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.
சொந்த வாழ்வைத் தியாகம் செய்வதா? சொந்த வாழ்வென்பது முள் நிறைந்ததாக இருக்கையில் அதை விட்டுவிடுவது தியாகமா? உன் சொந்த வாழ்வையும் இந்த வெளிப் பிரச்னையையும் இணைத்துக் கொள்ளாதே என்றார். இணைக்காமல் எப்படி வெவ்வாறாகப் பார்க்கமுடியும்? உலக வரலாறுகள், சமுதாயப் போராட்டங்கள், தொழில் வளர்ச்சிகள் தோற்றுவிக்கும் வாழ்க்கை மாற்றங்கள், பண்பாட்டு மாற்றங்கள் என்றெல்லாம் படித்தும் சிந்திக்கவும் தெரிந்து கொண்டவள், சொந்த வாழ்வு வேறு என்று கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டு அவள் சிந்தையைப் பாதிக்கும் பிரச்னைகளைச் சம்பந்தமில்லை என்று புறக்கணிக்கலாமா? மயிலேசனை அவள் மணந்துகொள்ள விழைந்தது கூட அவன் வெளித் தோற்ற கவர்ச்சிக்காகவோ, பொருளுக்காகவோ, உல்லாச வாழ்க்கைக்காகவோ அல்ல. அவன் இவள் கருத்துக்களை, முற்போக்கான தன்மைகளைப் புரிந்து கொண்டவனாகப் பேசினான். "எனக்கு 'இன்டிபென்டன்ட் வ்யூஸ்' உள்ள பெண் தான் வேண்டுமென்று தேடிட்டிருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அவளை இங்கே காண்கிறேன்... விஜி... நான் இப்படி அழைக்கலாமா?..." என்று கேட்ட அந்தக் குரலின் மென்மையும் பண்பும் இன்னமும் அவள் நெஞ்சத்துடிப்பில் எதிரொலிக்கிறது. அத்தனையும் பொய்யாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லையே! பெண்மையை மதித்து சம உரிமை கொடுக்கும் பண்பாளென்று அவள் நினைத்திருந்தால், அவன் குடிப்பதைக் கூட மாற்றிவிடலாம் என்று தெம்பு கொண்டிருப்பாள். ஆனால் அவள் அவனிடம் பணத் திமிர் படைத்த ஆணவக்காரனைத்தான் காண்கிறாள். அப்படிச் சிந்திக்க உரிமை தராததோர் மணவாழ்வு அவளை அடிமையாகக் கருதுகிறது என்பதில் ஐயமில்லை. மணவாழ்வு என்பது, கணவனின் உடலாசைத் தேவையை நிறைவேற்றுவது என்று மட்டும் அவள் கருதவில்லை. விஜி தீரத் தெளியச் சிந்தனை செய்கிறாள். இந்தப் பெரிய தொழிற் பிரச்னை, தனது வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே சக்தி வாய்ந்ததாக ஆகிறது என்று தோன்றுகிறது. விஜி, 'குழந்தைத் தொழிலாளர்' என்ற தலைப்பில் நீண்டதோர் கடிதத்தை வரைந்து, புகழ் பெற்றதோர் ஆங்கில நாளிதழுக்கு அனுப்பி வைக்கிறாள். அடுத்த சில நாட்களில் அவளை அழைத்து, அந்த நாளிதழ் ஆசிரியரிடம் இருந்து ஓர் கடிதம் வருகிறது. வீட்டாருக்கு, விஜி வந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவள் கணவனிடமிருந்தோ வீட்டாரிடமிருந்தோ கடிதம் ஏதும் வரவில்லையே என்ற சந்தேகம் இல்லாமலில்லை. இவர்களும் நகை, புடைவை, குளிரலமாரி என்றெல்லாம் விசாரிக்காமலில்லை. பத்திரிகை அலுவலகத்திலிருந்து 'டைப்' செய்த முகவரிக் கடிதம் வந்ததும் சித்திதான் அதை அவளிடம் கொடுக்கிறாள். "நாலு நாளா வரிஞ்சி வரிஞ்சி எளுதிட்டிருந்தே டைப் அடிச்சிட்டு வந்தே. அங்கேந்தும் கடிதாசி மாப்பிள உடனே போட்டுட்டாப் பாரு, வரச்சொல்லி!" என்று கேலி செய்கிறாள். சங்கடத்தைச் சிரிப்பால் மறைத்துக் கொண்டு அவள் பஸ் ஏறி அந்த நாளிதழ் அலுவலகத்துக்குச் செல்கிறாள். "வரும் ஆண்டு, குழந்தைகள் ஆண்டு. இந்த விவரங்கள் உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் இதைப் படங்களுடன் கட்டுரையாக எழுதித் தந்தால் வெளியிடுவோம்" என்று தெரிவிக்கிறார், தலை நரைத்த பொறூப்பாசிரியர். விஜிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்ணாசாலை அஞ்சல் அலுவலகத்தில் இறங்கி அங்கேயே தந்தைக்கு ஒரு கடிதம் எழுதிப் போடுகிறாள். ஒரு வாரம் பொறுப்பது மிகுந்த தவிப்பாக இருக்கிறது. "தொழிற்சாலைக்குள் புகுந்து படம் எடுப்பது இலகுவாக இல்லை என்றாலும் மூன்று படங்கள் எப்படியோ சமாளித்து அனுப்பி இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். தொழிற்சாலை எதென்று தெரியவில்லை. வாயிலில் குழந்தைகள் கையில் சாப்பாட்டுத் தூக்குடனும் சிட்டைகளுடன் நிற்கும் படம் ஒன்று. மற்றொன்று குச்சியடுக்கும் சிறு குழந்தைகளின் வரிசை; இன்னொன்று, மருந்துப் பொடி சலிக்கும் பையன், ஃபயர் வொர்க்ஸ் போலிருக்கிறது. உடனே தயாராக வைத்திருக்கும் கட்டுரையுடன் படங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கிறாள். 'சின்னச் சின்ன விரல்கள் இயக்கும் தொழிலகங்கள்!' என்ற தலைப்பில், அந்த ஆங்கில நாளிதழின் ஞாயிறுப் பதிப்பில் அது வெளியாகி இருக்கிறது. இவர்கள் வீட்டில் ஆங்கில நாளிதழ் வாடிக்கை கிடையாது. எனினும் விஜி வந்த நாளிலிருந்து ஆங்கில நாளிதழ் போடச் சொல்லி இருக்கிறாள். அந்தக் கட்டுரையைப் பார்க்கையில் விஜியின் மகிழ்ச்சிப் பூரிப்புக்கு எல்லையே தெரியவில்லை. "சின்னம்மா! பாத்தீங்களா? தீப்பெட்டி ஆபீசுப் பிள்ளைங்களைப் பத்தி வந்திருக்கு!" என்று படங்களைக் காட்டுகிறாள். ராசுச் சித்தப்பா பரபரப்புடன் வந்து பார்க்கிறார். "அட... நீ தானாம்மா? நீதானா எழுதியிருக்கியா? அட சபாசு! பாரல? விஜியக்கா இங்கிலிசு பேப்பரில எழுதியிருக்கா! ஏம்மா? நீ சொல்லவேயில்லையே...?" என்று பூரித்துப் போகிறார். எதிர்வீட்டு வீரராகவன் எல்.ஐ.சி. அலுவலகர். சிற்றப்பா அவரிடம் கடைக்குச் செல்கையில் சைகிளை மிதித்த வண்ணம், "பார்த்தீங்களா? நம்ம விஜி இன்னிக்குப் பேப்பரில எழுதியிருக்கு!" என்று பெருமை பொங்க விளம்பரம் செய்து கொண்டு போகிறார். "விஜி... எம்புட்டுப் படிச்சிருக்கு! சும்மாவா பெரிய வீட்டிலேந்து மாப்பிள வந்து கட்டியிருக்கா?" என்று அத்தையின் மாமியாரான ஆச்சி முதல் அதிசயப்படுகிறார்கள். "ஒரு நாளைக்குப் பத்துமணி நேரமா வேலை வாங்குறாங்க? முதலாளிகள் அக்கிரமம்! யூ ஹேவ் பிராட் அவுட் எ ப்ளாக் ஹோம் டு லைம் லைட்!" என்று புகழ்ந்துரைக்கிறான். தேசிகாச்சாரி ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர். "விஜி நீ எழுதியிருக்கிறேன்னு இப்பதா உன் சித்தப்பா சொன்னார். உன் இங்கிலீஷ் நடை பிரமாதம் போ, என்னால் நம்ப முடியல. ஆமாம்... உங்க வீட்டுக்காரங்க கூட, எதோ மாட்ச் ஃபாக்டரி பிஸினஸ்னு சொன்ன நினைப்பு... அப்படீன்னா நீயே எழுதுவியோ?" என்று கழுகுக் கண்களால் பார்க்கிறார். "ஏன் சார் எழுதக் கூடாது, யாரானாலும் நியாயம் நியாயம்தானே?" என்று அவள் சிரிக்கிறாள். "அதெல்லாம் இல்ல சார்...! உங்க கமன்ட்ஸுக்கு ரொம்ப நன்றி..." விஜி அந்தப் பத்திரிகைத்தாளை அவர்களிடமிருந்தெல்லாமும் வாங்கிக் கவனமாக நான்கு பிரதிகள் கத்தரித்து வைத்துக் கொள்கிறாள். ஒன்றை எடுத்துக் கொண்டு பேராசிரியை வீட்டுக்குச் செல்கிறாள். பேராசிரியை கண்ணாடியைப் போட்டுக் கொண்டு முழுதும் படித்து முடிக்கும்வரை, அறையில் உள்ள அலமாரிப் புத்தகங்கள், ஜப்பானிய ஓவியம், தொலைக்காட்சி செட் என்று ஆராய்ந்து பொழுதைத் தள்ளுகிறாள். சாந்திதேவி கண்ணாடியைக் கழற்றும்போது ஆவல் துடிக்க அவள் முகத்தைப் பார்க்கிறாள். விஜியின் ஆவல் அப்படியே விழுந்து உயிரை விடுகிறது. அவளால் உடனே எந்த மறுமொழியையும் கூறமுடியவில்லை. 'சீ!' என்று தோன்றுகிறது, விஜி அடக்கிக் கொள்கிறாள். அவளும் சமாளித்துக் கொண்டு புன்னகை செய்கிறாள். "...ஸோ, யூ வில் ஷைன் ஆஸ் எ ஜர்னலிஸ்ட்!" விஜிக்குக் கத்த வேண்டும் போலிருக்கிறது. "இல்லை. இந்த அநியாயத்தை வெளி உலகுக்குத் தெரிவிக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறேன். இதன் எதிரொலியை நான் எதிர்பார்க்கிறேன்..." என்று கூறுகிறாள். அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை. அந்தக் கட்டுரை பலர் கண்களில் படுகிறது. ஒரு வாரத்துக்குள் கற்றையாகக் கடிதங்கள் சேர்ந்துவிட்டன. எல்லாம் நாளிதழிலிருந்து அனுப்பப் பெற்றவை. அவற்றில் ஒன்று, சமுதாய சேவையில் குழந்தை நலம் என்ற பிரிவில் பழுத்த அநுபவம் வாய்ந்தவராகப் புகழ்பெற்ற ஒரு பெண்மணியிடமிருந்து வந்திருந்தது. வடநாட்டைச் சேர்ந்த அவர், சென்னையில் தங்கியிருந்தாலும், பல மாதங்கள் பம்பாயிலும் இருப்பார். அவர் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, வரப்போகும் குழந்தைகள் ஆண்டை ஒட்டி, திட்டங்கள் தீட்டுவதற்கு முன்னோடியாக ஒரு குழு அமைக்கப் போவதாகவும், கட்டுரையில் வந்த விவரங்கள் தமது கருத்தைக் கவர்ந்திருப்பதாகவும், தம்மைச் சந்திக்க இயலுமா என்றும் கோரியிருந்தார். விஜி உடனே சென்று அவரைச் சந்திக்கிறாள். பிரமிளா தாயிக்கு அவளுடைய தந்தையைக் கூடத் தெரிந்திருக்கிறது. "மிக மகிழ்ச்சி விஜி, உன்னை நான் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன். பம்பாயில் இதற்காக ஒரு மாநாடுபோல் கூட்ட இருக்கிறோம். நீ அவசியம் வரவேண்டும். இந்தப் பிரச்னையை ஆராய ஒரு கமிஷன் வைக்க வேண்டும் என்று கோருவோம். நிச்சயமாக நாம் செயலாற்றினால் பிரச்னைக்கு விமோசனம் வரும்!" என்று சொல்கிறாள். "இருபதாயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் விட்டுவிட முடியாது. வேலை நேரம் குறைய சத்துணவு, கல்வி இவற்றுக்கு ஏற்பாடு செய்ய, கோரிக்கை விடுப்போம்!" என்றெல்லாம் பேசியதும், விஜி ஆகாயத்தில் மிதப்பதாக உணருகிறாள். தன்னாலும் ஓர் செயலைச் செய்யத் தூண்ட முடியும் என்ற தன்னம்பிக்கை எத்துணை இனிமையானது! இந்தக் கிளர்ச்சியில், அவளுடைய கட்டுரை, சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களைக் கவர்ந்து, அவர்கள் பத்திரிகைக்காரர் பலரை அழைத்து, அந்தக் கடுமையான தொனிக்கு மாற்றாக, மறுப்புக் கட்டுரை எழுதச் சொல்லி பரவலாக அது வெளியானதும் கூட அவளைப் பாதிக்கவில்லை. வைகாசி இறுதியில் அவள் சென்னை புறப்பட்டு வந்தாள். ஆனி முழுதும் ஓடி ஆடியும் பிறந்துவிட்டது. அன்று பிரமிளா தாயின் வீட்டுக்குச் சென்று அவள் திரும்பி வருகையில் ஒரே ஊமைப் புழுக்கமாக இருக்கிறது. வீடு திரும்புகையில் பகல் ஒன்றரை மணி இருக்கும். வாயில் முன் அழிவராந்தாவில் ஆறுமுகநேரியிலிருந்து வந்திருக்கும் சித்தியின் தந்தை அமர்ந்து வெற்றிலை போடுகிறார். சித்தப்பாவும் இருக்கிறார். விஜி உள்ளே சென்று சாப்பிட அமருகிறாள். சின்னம்மா இருவரிடமும் ஏதோ மாறுதல் வந்துவிட்டாற் போல் இருக்கிறது. சொர்ணம் பரிமாறிக் கொண்டே மெதுவாக, "இங்கே இந்த ஆபீசுக்கெல்லாம் போகணும்னுதான் தங்கியிருக்கியா விஜி?" என்று கேட்கிறாள். விஜி சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பவள் நிமிர்ந்து பார்க்கிறாள். அவள் பொருட்படுத்தாததோர் அலட்சியத்துடன் கூறிவிட்டுச் சாப்பாட்டை முடித்துக் கொள்கிறாள். சித்தப்பா அவளிடம் வந்து கேட்கிறார். "அதுக்கில்ல விஜி, மாமா வந்து எதோ சொல்கிறார். எங்களுக்கெல்லாம் கவலையாயிருக்கு... அதனால..." என்று நிறுத்துகிறார். குப்பென்று செவிப்பறையில் எதோ மோதிவிட்டாற் போன்று அதிர்ச்சியாக இருக்கிறது. மறுகணம் சமாளிக்கிறாள். நிதானமாக அவள் கேட்பது சின்னம்மாவைத் திகைக்கச் செய்கிறது. "என்னம்மா சொல்றே? அவங்க எதுக்காக வேற பொண்ணு பாக்கணும்? உன்ன விலக்கணும்னு அவங்க எதுக்காக நினைக்கிறாங்க? நாங்க விடுவமா? பழைய காலத்துல இஷ்டத்துக்குப் பொண்ணு கட்டினா! அது சரியா?" என்று உள்ளே வருகிறார் சிற்றப்பன். படிப்பு விபரீதத்துக்குப் பாய்ந்துவிடும் என்று அவர்கள் அதுகாறும் கருதியிருக்கவில்லை. "பொம்பிளப் புள்ளக்கு என்னலே இன்னும் படிப்பு? சும்மாப் படிச்சிட்டு?" என்று ஒரு சமயம் அம்மா சொன்னாள். விஜி படித்த காரணத்தினால்தான் கணவன் வீட்டாரை உதாசீனம் செய்கிறாளா? ஒருகால் மாமியார் நாத்தி இல்லாமல் தனியாக இருக்கவேண்டும் என்று கோரி மாப்பிள்ளை இடம் கொடுக்கவில்லையா? "அப்ப... எல்லாம் நெசந்தானாம்மா?" அவள் மீது அடங்காப் பெருமை கொண்டிருந்த அவருக்கே அவள் உறுதி கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. அவள் முகம் இரத்தமாகச் சிவக்கிறது. விஜியின் கண்கள் பனிக்கின்றன. அவளை அதுவரையிலும் ஒருவர் கேவலமாகப் பேசியதில்லை; பள்ளியிலும் கல்லூரியிலும் அவளை எல்லோரும் உயர்வாகவே கொண்டாட உருவாகியிருக்கிறாள். இந்த அபாண்டம் கருக்கரிவாளாக விழுந்து அவள் மென்மை உணர்வுகளைக் கிழிக்கின்றது. உதிரும் கண்ணீர் முத்துக்களை 'சீ!' என்று மனசோடு தள்ளிக்கொண்டு துடைத்துக் கொள்கிறாள்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவச் சட்டம் பிரிவு 59-ன் கீழும் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழும் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல், குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இந்திய தரப்பில் மேல்முறையீடும் செய்யப்படவுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளரை, கடந்த வாரம் சந்தித்த பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கௌதம் பம்பாவாலே, இந்த விஷயத்தை அவரிடம் தெரிவித்ததுடன், குற்றப்பத்திரிகை மற்றும் தீர்ப்பு நகலையும் கோரினார். மேலும், குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் தூதரக அணுகல் உதவியையும் கோரினார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 13 முறை தூதர அணுகல் கோரப்பட்டு அது நிராகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், தற்போது, 14-வது முறையாக தூதர உதவி கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால், உளவு பார்த்த விவகாரத்தில், சட்டப்படி தூதர உதவி வழங்கப்பட மாட்டது என அப்போதே அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் காஃபூர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவி வழங்குவது குறித்து தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா கூறியதாவதுஃ தூதரக உதவி தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு இருக்கிறது. ஆனால், அனைத்து வழக்குகளிலும், தகுதி அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். ஜாதவுக்கு தூதரக உதவிகள் வழங்குவது தொடர்பாக பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இதில் புதிய விஷயம் ஒன்றும் அல்ல என்றார்.
- #Chennaiதிடீரென சென்னையில் பல இடங்களில் போட்டுத்தாக்கும் மழை. . சென்னைவாசிகள் செம ஹேப்பி! சென்னைஃ ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும்நிலையில், மேலிடம் அளவுக்கு அதிகமாகவே குழம்பி போயுள்ளதாம். . அதேசமயம், எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி என்ன தான் செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது. எப்படித்தான் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்வது? எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது என்பது தெரியாமல் மண்டை காய்ந்து போயுள்ளதாம். காரணம், எடப்பாடிக்கு டெல்லி மேலிடம் ஒரு கொக்கியை போட்டால், அதை பிடுங்கி வீசிவிட்டு, இன்னொரு செக்கை எடப்பாடியே வைக்கிறாராம். . டிசம்பர் 24ஆம் தேதி எம். ஜி. ஆர். நினைவுநாள் மரியாதை! ஓ. பன்னீர்செல்வத்தை முந்திய எடப்பாடி பழனிசாமி! கடந்த வாரத்தில் நடந்த ஜி20 மாநாடு, நேற்றைய தினம் குஜராத் முதல்வர் பதவியேற்பு என 2 விதமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளதில், 2 விதமான தாக்கங்கள் தமிழக அரசியல் களத்தை அதிர வைத்து வருகின்றன. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பல வகைகளில் தெளிவுபடுத்தி விட்டார். . . "தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சிதான். . அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, எம்பி தேர்தலில் பாஜக வெற்றி பெறும்" என்று மூத்த தலைவர் செல்லூர் ராஜூவும் சொல்லிவிட்டார். அதனால்தான் 2 நாட்களுக்கு முன்புகூட, பாஜக மேலிடம் இன்னொரு முயற்சியை எடுத்துள்ளது. . 2 முக்கியமான நபர்களை, டெல்லியில் இருந்து அனுப்பி எடப்பாடி பழனிசாமியிடம் சமாதானம் பேசப்பட்டதாம். . ஒருங்கிணைந்த அதிமுக என்ற பேச்சையும் அவர்கள் எடப்பாடியிடம் எடுத்துள்ளதாக தெரிகிறது. . 2 தூதுவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியும்கூட, எடப்பாடி கறாராக நோ சொல்லிவிட்டாராம். . பெருமளவு கட்சியும், நிர்வாகிகளும் தன் பக்கம் உள்ளபோது, தன்னை மட்டுமே கட்சியின் தலைமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும், ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடமில்லை என்பதையும், தினகரன் இல்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராக என்பதையும், மீண்டும் ஒருமுறை அழுத்தமாக தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டாராம் எடப்பாடி. அதுமட்டுமல்ல, குஜராத்துக்கு சென்றிருந்தால்கூட, அங்கேயும் ஓபிஎஸ்ஸையும், தன்னையும் ஒருங்கிணைந்து செயல்படும்படி மேலிடம் அழுத்தம் தரும் என்பதால்தான், நிகழ்ச்சிக்கு போகாமல் தவிர்த்ததாகவும் காரணம் சொல்லப்படுகிறது. . ஆக, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் தொடர்வதுபோலவே, மேலிடத்தின் அழுத்தமும் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. . இதில் ஓபிஎஸ்ஸுக்கு இப்போது வரை உள்ள நம்பிக்கை என்னவென்றால், பாஜக மேலிடமும், தேர்தல் ஆணையமும் தன்னை கைவிடாது என்று நம்புகிறார். . நேற்றைய தினம் குஜராத்தில், ஜேபி நட்டாவிடமும் சில விஷயங்களை ஓபிஎஸ் பேசியதாக தெரிகிறது. . காவித்துண்டை ஓபிஎஸ் கழுத்தில் அணிந்து கொள்ளாவிட்டாலும்கூட, அவர் பாஜகவின் அபிமானி என்பதில் மேலிடத்துக்கு சந்தேகம் இல்லை. . அதேசமயம், தென்மண்டலத்தில் பாஜக காலூன்ற வியூகங்கள் அமைத்து வரும்நிலையில், தன்னை தவிர்த்துவிட வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் பெருத்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம். . அதுமட்டுமல்ல, அதிமுக முகாமில் புதிய மாற்றங்களுக்கு, நட்டா - ஓபிஎஸ்ஸின் சந்திப்பு விரைவில் வித்திடும் என்றும் சொல்கிறார்கள். கூட்டணி தொடர்பாக, பிடிவாதம் பிடிப்பதும், செக் வைப்பதும், பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவாகவே இருந்து வரும்நிலையில், எடப்பாடியிடம் மட்டும் அந்த கணக்கு உல்டாவாகி இருப்பது வியப்பை தந்து வருகிறது. . எனினும், பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர போகிறார்களா? இந்த கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றனவா? எடப்பாடி பாஜகவை கழட்டி விடப்போகிறாரா? அல்லது பாஜக, எடப்பாடி பழனிசாமியை கழட்டி விடப்போகிறதா? 6 மாத காலமாகவே நீடித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் முடிவுக்கு வரப்போகிறதா? அல்லது ஓபிஎஸ்ஸின் "காவித்துண்டு" வெற்றி பெறுகிறதா? என்பதெல்லாம் தினம் தினம் குழப்பமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
பெரிய எலுமிச்சைஅளவு புளியை வெறும் பாத்திரத்தில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரை கிலோ பழுத்த தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 8 டேபில் ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துஈ அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி விட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். பிறகு அரை டிஸ்பூன் பெருங்காத்தூள், தேவையான அளவு உப்பு, 4 டிஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை டிஸ்பூன் வெந்தயப் பொடி, 1 டிஸ்பூன் கடுகுப் பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி, கைபடாமல் ஒரு ஜாடிியில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மருந்து, ஊசி இன்றி 40 ஆயிரம் பேரைக் குணப்படுத்தியுள்ளோம் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று (ஜூன் 26) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை, எஸ். பி. ஜெயக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் , மருத்துவக் கல்லுாரி முதல்வர் குந்தவிதேவி மற்றும் மருத்துவர்கள், அரசு அதிகாரிகளோடு, மாவட்டத்தில் நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவதுஃ "தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா வைரஸை நாம் துரத்திக் கொண்டிருக்கிறோம் என்ற நிலைப்பாட்டில் நாம் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக அளவில் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் நோயை தமிழகத்தில் மட்டும் நேற்று (ஜூன் 25) வரை 40 ஆயிரம் பேரை எவ்வித மருந்தும் இல்லாமல், ஊசியும் இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் . இந்தியாவில் தமிழகத்தில் நாம் குறைந்த இறப்பு விகிதத்தைப் பராமரித்து வருகிறோம். விலை உயர்ந்த வீரியம்மிக்க மருந்துகளை தமிழ்நாடு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் வரவழைக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளோம், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஊசியை 30 பேருக்குச் செலுத்தி குணமடைந்து வருகின்றனர். போதிய அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அதேபோன்று பிபிஇ, முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கூடுதலாக மருத்துவர்கள், பணியாளர்கள், டெக்னீஷியன்கள் கேட்டதன்பேரில் நியமனம் செய்ய தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். முதல்வர் தலைமையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அடைந்தவர்களைக் குணப்படுத்தியும், பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் அவர்களைத் தனிமைப்படுத்தியும், நோய் எப்படி வந்தது எனக் கண்டறியும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது". இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். Sign up to receive our newsletter in your inbox every day!
ஒன்றிய அரசு கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பும் youtube மற்றும் சமூகவலைத்தள பக்கங்களை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக முடக்கி வருகிறது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட youtube சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இந்நிலையில் 10 youtube சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. அக்னிபாத் திட்டம், இந்திய ஆயுதப் படைகள், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற பிரச்சனைகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதால் இந்த 45 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
'इदं सर्वे सृष्ठे: पुरा एकं एव अद्वितीयकं सत् एव आसीत् नामरूपे न அனி" அன்ஃ 'ிஃ 11 "தோற்றுகின்ற இந்தச் சகலஜகத்தும் சிருஷ்டிக்குமுன் ஒரே இரண் டற்ற சத்காரணமாகவே இருந்தது.நாமரூபங்கள் இல்லவே இல்லை" என்று ஆருணி என்னும் உத்தாலகரது வசன மிருக்கின்றது. இது அருணி என்னும் இருஷியினது புத்திரராகிய உத்தாலகமுனிவர் தனது புத்திரனாகிய சுவேதகேதுவை நோக்கிக் கூறிய வசனமாம். (ககூ) கூ. உலகத்துள்ள சுவகதமுதலிய மூன்றுபேதம். [அரு] ாள் : वृक्षांतरात्सजातीयो विजातीयः शिलादितः ॥ २० ॥ முற்கூறிய சுருதியிலுள்ள னும் மூன்றுபதங்களால் சத்வஸ்துவில் அடைந்திருக்கும் சுகதமுதலிய மூன்று டூேதங்களையும் நிவர்த்திக்க உலகத்திலுள்ள சுகதமுதலிய மூன்று பேதங்களையும் முதலிற் காட்டுகின்றார்ஃ" " वृक्षस्य पत्रपुष्पफलादिभिः स्वगतः भेदः वृक्षांतरात् सजातीयः शिलादितः ளவுஃ ! விருக்ஷத்திற்கு இலை புஷ்பம் பழமுதலியவற்றினின்றும் *எஅ. சுகத பேதமும், வேறு விருக்ஷத்தினின்றும் * எகூ. சஜாதீய பேதமும், கல்முத லியவற்றினின்றும் * அ0 விஜாதீய *அக. பேதமும் இருக்கின்றன.(உO) எஅ. சுவகதமென்பது அவயவத்திற்காம். அதனாலாகிய பேதம் சுவகதபே தம். இதனையே சுகதபேத மென்றும் கூறுவர். அது பிராஹ்மணனுக்குத் தனது அவயவமாகிய கைகால்முதலியவற்றினோடிருப்பதுபோலவாம். எகூ. இனமுடையதாலாகிய பேதம் ஸஜாதீயபேதம். அது பிராஹ்மண னுக்கு அந்நியபிராஹ்மணனோடுள்ள பேதம்போலவாம். * அ0. வேறு ஜாதி (வேற்றினம்) உடையதாலாகிய பேதம் விஜாதீய பேதம். அது பிராஹ்மணனுக்குச் சூத்திரர்முதலியோர்களோடுள்ள பேதம்போல் *அக. பரஸ்பர அபாவத்திற்கு (ஒன்றிலொன்றின்மைக்கு)ப் பேத மென்று பெயராம். அது கடத்திற்கும் படத்திற்குமுள்ள பேதம்போல, அதில் பரஸ்பர அது யோகி (ஆசிரயம்) பிரதியோகி (நிரூபகங்) க ளிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் போட்டியில் இருந்து தான் முழுவதுமாக வெளியேறவில்லை என்பதை ராகுல் காந்தி மறைமுகமாக தெரிவித்துள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி இதுகுறித்து பேசுகையில், "நான் காங்கிரஸ் தலைவராக வருகிறேனோ? இல்லையோ? என்பது உள்கட்சி தேர்தல் (பதவிக்கு) நடக்கும்போது தெளிவாகத் தெரியும். நான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். எந்த வித குழப்பமும் இல்லை. யாத்திரை மூலம் என்னைப் பற்றியும் இந்த அழகான நாட்டைப் பற்றியும் ஓரளவு புரிந்துகொள்வேன். மேலும் இந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் அனுபவம் பெற்றவனாக மாறுவேன்" என்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும். செப்டம்பர் 24 முதல் 30 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். கபில் சிபல், அஸ்வனி குமார், குலாம் நபி ஆசாத் உள்பட மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், காங்கிரஸ் தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காந்தி அல்லாத ஒருவர் கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த முடியுமா என்ற கேள்விக்கு மத்தியில் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. குழந்தைத்தனமாகவும் முதிர்ச்சியற்றத்தன்மையுடனும் நடந்து கொண்டதாக ராகுல் காந்தி மீது குலாம் நபி ஆசாத் விமர்சனம் மேற்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி, அனுபவம் இல்லாத போதிலும் தன்னை புகழ்ந்தவர்களை கட்சியை நடத்த அனுமதித்துள்ளார் என்றும் ராகுல் காந்தியை சாடி இருந்தார். 2019ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றபோது, பொதுத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அதே ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, மீண்டும் தலைவராக வருவதற்கு மறுத்துவிட்டார். செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், காலக்கெடு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற 49 சட்டப்பேரவை தேர்தலில், 39 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி பெற்றது. இச்சூழலில், கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொங்கி உள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட நடை பயணம், 150 நாள்களுக்கு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீ நடை பயணத்தை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.
- கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. - தி. மு. க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைஃ சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கான அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இருக்கைகளை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதன் காரணமாக கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தி. மு. க. அரசின் திறமையின்மையே இது போன்ற நிலைக்கு காரணம். தி. மு. க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒரு பணக்கார மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இந்த இரண்டு பிள்ளைகளில் இளைய மகன் தந்தையை நோக்கி, "நமக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்திலும் இரண்டாகப் பகிர்ந்து எனது பங்கை எனக்குத் தாருங்கள்" என்று கூறினான். தந்தையும் ஒற்றுமையாக இருந்தால் இருக்கும் வளம் மேலும் பெருகும். அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக இருக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் அவனோ அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. தந்தையும் சில நாட்களில் தனது அனைத்துச் சொத்துக்களையும் இரண்டாகப் பங்கிட்டு இருவரிடமும் சமமாக வழங்கினார். சில நாட்கள் கழித்து இரண்டாவது மகன் தனக்குக் கொடுத்த சொத்துக்களையெல்லாம் விற்றுப் பணமாக்கி அதை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். வேறொரு தூரதேசத்திற்குப் பயணமானான். அங்கு அவன் பணத்தை மூடனைப் போல் வீணாகச் செலவு செய்தான். கடைசியில் அவன் கொண்டு வந்திருந்த பணம் முழுவதும் காலியாகி விட்டது. கையில் பணமில்லாமல் பசியால் மிகவும் துன்பப்பட்டான். எனவே அந்நாட்டிலிருந்த ஒருவனிடம் தனக்கு வேலை தரும்படி கேட்டான். அவனும் அவனை வேலக்கு அமர்த்தினான். அவனுக்குப் பன்றிகளுக்குத் தீவனமிடும் வேலை கொடுக்கப்பட்டது. அவனுக்கு உணவு தருவதற்கு யாரும் தயாராயில்லை. அவன் பசி மிகுதியால் பன்றிகள் சாப்பிடும் உணவையாவது உண்ண வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அந்த உணவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவனுக்குத் தன்னுடைய மூடத்தனம் தெரிந்தது. தன் தந்தை வீட்டில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பஞ்சமில்லாமல் உணவு வழங்கப்படுகிறது. இங்கு தனது பங்கைப் பிரித்து வாங்கி வந்து அந்தப் பணத்தையெல்லாம் மூடத்தனமாகச் செலவு செய்து விட்டு இப்படி கஷ்டப்படுகிறோமே என்று வருந்தினான். தன் தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டு அந்த வீட்டில் ஒரு வேலைக்காரனைப் போல் வேலை செய்தாவது நாம் பசியேயில்லாமல் வாழ்வோம் என்று முடிவு செய்தான். உடன் தந்தை வீட்டை நோக்கிப் பயணம் செய்தான். தொலைவில் மகன் முகம் வாடி பசியுடன் வருவதைப் பார்த்த அவன் தந்தை அவனை நோக்கி வேகமாக ஓடினார். மகனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். மகனும் அழுதான். அப்பாவின் பேச்சைக் கேட்காமல் பிரிந்து சென்று கஷ்டப்பட்டதைக் கூறி அழுதான். தன்னை வீட்டில் ஒரு வேலைக்காரனாகவாவது வைத்துக் கொள்ளும்படி கெஞ்சினான். ஆனால் அவன் தந்தை வேலைக்காரர்களை அழைத்து நல்ல விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களைக் கொண்டு வந்து கொடுக்கச் செய்தான். வீட்டில் நல்ல உணவைச் சமைக்கச் செய்தார். அங்கிருக்கும் வேலைக்காரர்கள் அனவருக்கும் சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்தார். மூத்த மகன் வயலில் இருந்து திரும்பி வந்தான். வீட்டில் விருந்து நடப்பதைப் பார்த்து வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து விசாரித்தான். அவனது சகோதரன் திரும்பி வந்திருப்பதை அறிந்தான். தந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதாக அறிந்தான். பங்கைப் பிரித்து வாங்கி வீட்டை விட்டு வெளியேறிய மகனுக்குத் தடபுடலாக விருந்து நடப்பதை அறிந்து வேதனையடைந்தான். அவன் தந்தை மேல் கோபமடைந்தான். வீட்டுக்குச் செல்லாமல் அப்படியே திரும்பினான். இதையறிந்த தந்தை தனது மூத்த மகனைத் தேடிச் சென்றார். எல்லா நேரங்களிலும் நீ என்னுடன் இருக்கிறாய். உன்னுடைய பங்கிலுள்ள சொத்துக்கள் தவிர என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் உனக்கே உரியது. நாம் சந்தோஷமாக உணவு உண்ண வேண்டும். இறந்து போயிருந்த உன் சகோதரன் இன்று திரும்பி வந்திருக்கிறான். திருந்தியும் வந்திருக்கிறான். அவனிடம் நாம் காட்டும் அன்புதான் அவனை மீண்டும் மனிதனாக்கும். என்றார். மூத்த மகனும் தந்தை சொல்வதை சரியென்றபடி வீட்டுக்குத் திரும்பினான். தம்பி அண்ணனைப் பார்த்து கதறியழுதான். அண்ணனும் தன் தம்பியைக் கட்டிப்பிடித்து இனியாவது நல்லவனாக நடந்து கொள் என்றான்.
புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை! கமலுடன் கைகோர்க்கும் சிம்பு? வீடியோவுடன் வெளியான முக்கிய அறிவிப்பால் எகிறிய எதிர்பாப்பு! Actor Bala Health: ICU-வில் இருக்கும் நடிகர் பாலா உடல்நிலை குறித்து மனைவி கூறிய தகவல்! இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த நடிகர் சூர்யா! அவரை பகிர்ந்த ஸ்க்ரீன் ஷார்ட! Nayanthara : Twins குழந்தைகளுடன் மும்பையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி! சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஊதி தள்ளிய தீபிகா படுகோன்! தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது. தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ். மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ். இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின். இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார். தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது உலக நாடுகள் முடங்கி கிடைக்கும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்திலும் இந்த ஊரடங்கு தற்போது ஐந்தாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் தேவை இல்லாத காரணத்தினால் வெளியே வரும் நபர்களை சென்னை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை திருவான்மியூர் சந்திப்பில் கடந்த 20ஆம் தேதி பொது குழு முடக்கம் காரணமாக போக்குவரத்து துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆல் ரவுண்டர் ராபின் சிங் தனது காரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்துள்ளார். அவரை மடக்கிய சென்னை திருவான்மியூர் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் என்பவர் இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு ராபின் சிங் ஆங்கிலத்தில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அவரின் அந்த பதில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அந்த ஆய்வாளருக்கும் ராபின் சிங்குக்கும் இடையே மொழி புரிதலில் சற்று முரண்பாடுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இ-பாஸ் இல்லாததால் அவரது காரை பறிமுதல் செய்த போலீசார் பொதுமுடக்க நேரத்தில் காரில் தேவையின்றி வந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் தற்போது வாகனத்தில் தேவையின்றி சுற்றித் திரிந்ததால் அவருக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் தற்போது பெசன்ட் நகரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் நிதித் தொழில்நுட்பத் துறையில் திறனாளர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவு வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 'மைக்கல் பேச்' எனும் வேலைக்கு ஆள்சேர்க்கும் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், இத்துறையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக 94 விழுக்காடு நிறுவனங்கள் கூறியுள்ளன. நிதித் தொழில்நுட்பத் திறனாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக 64 விழுக்காடு முதலாளிகள் தெரிவித்துள்ளனர். உயர்திறன் பெற்ற ஊழியர்கள் வேலை மாறுவதும் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, கடந்த 12 மாதங்களில் தாங்கள் வேறு வேலைக்கு மாறிவிட்டதாக ஆய்வில் பங்கெடுத்த 37 விழுக்காடு நிதித் தொழில்நுட்ப நிபுணர்கள் கூறினர். வேலையில் புதிய பொறுப்பை ஏற்கும்போது 12 முதல் 15 விழுக்காடு வரை சம்பள உயர்வு கிடைப்பதைத் தாங்கள் எதிர்பார்ப்பதாக 21 விழுக்காடு நிதித் தொழில்நுட்பத் திறனாளர்கள் கருத்துரைத்தனர். நிதித் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கான பற்றாக்குறையைத் தீர்க்க, கல்வி மூலம் உயர்தர, தொழில்துறைக்கு ஏற்ற திறனாளர்களை சிங்கப்பூர் உருவாக்க வேண்டும் என 'மைக்கல் பேச்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலே கந்தேல்வால் கூறினார். நிதித் தொழில்நுட்பத் துறை தொடர்ந்து வளர்வதற்கான ஆற்றல் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றார் அவர். கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நிதித் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறைகளைச் சேர்ந்த 160 நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் பங்கெடுத்தனர். ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் நீண்ட இடைவெளிக்கு பின் துவங்க உள்ளன. இங்கிலாந்து நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டு இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்க உள்ளன. இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில், உயிர் பாதுகாப்பு சூழல் உருவாக்கப்பட்டு இரு அணிவீரர்களும் பாதுகாப்பாக விளையாட உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8 அன்று துவங்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தங்கள் அணிக்குள் பயிற்சிப் போட்டிகளில் ஆடி தயாராகி உள்ளது. இங்கிலாந்து அணியும் ஒரு மாத காலம் பயிற்சி மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் என்றாலும், முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அவரது மனைவிக்கு இன்னும் சில தினங்களில் பிரசவம் ஆக உள்ளதால், அவர் முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார். அதனால், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் கேப்டனாகி உள்ளார். அவர் எதிர்காலத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தகுதி உள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தான் 2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக இருந்தார். முக்கிய போட்டிகளில் மட்டுமின்றி, இறுதிப் போட்டியிலும் சரிவில் இருந்த அணியை மீட்டவர் அவர்தான். அதன் பின்னரே அவருக்கு டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்ஸ் தான் முதல் டெஸ்ட்டுக்கு கேப்டன் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை சக வீரர் ஸ்டூவர்ட் பிராடு உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், அவருக்கு சிறந்த கேப்டன் மூளை உள்ளது. கடந்த சில வருடங்களில் அவர் முதிர்ச்சி அடைந்துள்ளார் என்றார். இரண்டாவது டெஸ்ட் கேப்டன் யார்? முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. ஜோ ரூட் மருத்துவமனைக்கு சென்று வர வேண்டும் என்பதால் ஒரு வார தனிமைக்கு பின் இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் அணியுடன் இணைவார் என தெரிகிறது. இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடிய உடன் அடுத்து பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர்கள் வெற்றிகரமாக நடந்தால் மற்ற அணிகளும் தொடர்ந்து இதே வழிமுறையில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் பல்லவர் பொக்கிஷமாக, வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அதன் தாழக்கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் கீழே உள்ளன. வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவில், விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மலை மீது அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6:30 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் கொடியேற்றப்பட்டு, பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து, வேதகிரீஸ்வரர், மலையடிவாரத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடந்தது. அவருடன், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் சென்றனர். இரவு, 9:00 மணிக்கு, புண்ணியகோடி விமானம், பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்தது. இதில், கோவில் செயல் அலுவலர், குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக்கிய விழாவாக, நாளை காலை, 6:00 மணிக்கு, வெள்ளி அதிகார நந்தி மலைவலம் மற்றும், 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவம் நடைபெறும்.
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி. . விநாயகர் சிலையை கரைத்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம். . ! ! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார்.... சென்னை : போதைப்பொருள் குறித்து அமைச்சர் பொன்முடி பொய்யான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.... பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து கூறிய வழக்கில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.... திருவள்ளூர் : திருமணத்திற்கு சென்ற இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தயாரிப்பதற்கான பொருட்களோ அவர்களிடம் இல்லை. பசியின் கொடுமை தாளாமல் தருமர் பீமனை அனுப்பி உணவு கொண்டு வரச்சொன்னார். உணவு தேடியலைந்த பீமனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. பசி மயக்கத்தில் இத்தலத்தில் உள்ள சிவன் கோயிலில் மயங்கி விழுந்தான். உடனே இறைவன் பார்வதி தேவியை அனுப்பி அவனுக்கு சுவையான பாலை அளிக்கச் செய்தார். மயக்கம் தெளிந்து பசியாறிய பீமன் இறைவனையும் இறைவியையும் உணர்ந்து வழிபட்டான். பின் தனது சகோதரர்களுக்கு வேண்டிய அளவு பாலை எடுத்துக் கொண்டான். கூடவே, இறைவா! எங்களது பசியை போக்கியது போன்று சாதாரண மக்களின் பசி, துன்பங்களையும் தாங்கள்தான் போக்க வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே வாக்களித்தார். பீமன் பூஜித்ததால் இறைவன் பீமேஸ்வரர் என்றும், பாண்டவர்களுக்கு பசியாற பால் வழங்கியதால் இறைவி பாலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். புராண வரலாறுஃ என்பது அயன், ஹரி, ஹரன் ஆகியோரை உ ள்ளடக்கிய பிரணவ மந்திரமாகும். 'அந்தூர்' என்ற சொல்லிற்கு பாதகிண்கிணி என்பது பொருள். ஓம் எனும் பிரணவமந்திரத்தின் பரம்பொருளாக விளங்கக்கூடிய சிவபொருமான், மகரிஷிகளின் தவத்திற்கு இறங்கி ஆனந்த தாண்டவம் நிகழ்த்தியபோது திருக்கயிலை நாதனான பரமேஸ்வரனின் பாத கிண்கிணி சத்தம் முதலில் கேட்ட ஊர் ஓமந்தூர் (ஓம் + அந்தூர்) என்று அறியப்படுகிறது. ஏகாதச ருத்ரர்களின் ஒருவரான பீமனும் திருக்கயிலாயத்தில் நிருதி (தென்மேற்கு) திசையின் காவலனாக விளங்கக்கூடிய ஸ்ரீ பீமநாதனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பராக்கிரமம் மிக்க பீமனும் வணங்கியதால் இத்தல இறைவனுக்கு பீமேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வூர் பண்டைக் காலத்தில் 'கிடங்கில்' எனும் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நல்லியக்கோடனின் ஒய்மா நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை சிறுபாணாற்றுப்படை என்ற பழந்தமிழ் இலக்கியத்தின் மூலம் அறிய முடிகின்றது. இத்திருக்கோயிலில் உள்ள ராஜராஜ சோழனின் பதினொன்றாவது ஆட்சியாண்டு (885-1014) கல்வெட்டு இத்தலத்தை 'ஒவ்வூர்' என்றும் முதலாம் ராஜநாராயண சம்புவராயர் (1337-1368) கல்வெட்டு 'ஒய்மா நாட்டு ஓகந்தூர்' என்றும் குறிப்பிடுகின்றது. 'ஒவ்வூர்' 'ஓகந்தூர்' என்பதே மருவி தற்போது ஓமந்தூராக வழங்கி வருகின்றது. பழமையான இத்திருக்கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் வந்த முதலாம் ராஜநாராயண சம்புவராயனால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆண்ட விஜயநகரப் பேரரசர்களும் சம்புவராய மன்னர்களும் இத்திருக்கோயிலில் திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர். திருக்கோயில் அமைப்புஃ இங்கு இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் கருவறை, இடைக்கட்டு, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பின் மண்டபம் ஆகியவை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன. சதுரமான கருவறையின் நடுவே சுமார் 6 அடி உயரமுள்ள லிங்க வடிவில் ஸ்ரீ பீமேஸ்வரர் பிரம்மாண்டமாக காட்சி தருகின்றார். கருவறையின் புறச்சுவரில் உள்ள தேவகோட்ட மாடங்களில் தெற்கே தாமரை மலரின் மீது நின்று நர்த்தனமாடும் விநாயகப்பெருமானும் தெற்கே கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானஉபதேசம் வழங்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, கிழக்கே சங்கு, சக்கரம் ஏந்தி நிற்கும் திருமால், வடக்கே திசைக்கு ஒரு முகமாக அருள்பாலிக்கும் நான்முகன், திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் துர்க்கை போன்ற திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் வெளியே வலப்புறம் பைரவரும், ராஜராஜேஸ்வரியும், இடப்புறம் சூரிய சந்திரரும் தரிசனம் தருகின்றனர். மகாமண்டபத்தூணில் ஆஞ் சநேயர் வடிவம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் வரசித்தி விநாயகரும், மேற்கு மூலையில் ராகு -கேது தோஷம் நீக்கும் வல்லமை பெற்ற நாகர் கோயிலும், வடமேற்கில் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமானும், அன்னை பாலாம்பிகையும், தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். கருவறைக்கு நேர் எதிரே மகா மண்டபத்தின் வெளியே தனி மண்டபத்தில் நந்தி பகவான் அமர்ந்து சாளரத்தின் வழியே இறைவனை தரிசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. உடன் பலி பீடமும், வடகிழக்கு மூலையில் நவகிரக சன்னதியும் உள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்டும் கலை அழகுடனும் காட்சித்தரும் இத்திருக்கோயிலின் தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளன. பிரதோஷ வழிபாட்டின்போது இறைவனை மனமுருக வேண்டினால் சகல செல்வங்களும் வந்து சேரும். பாண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட பின்புதான் இழந்த ராஜ்யத்தை போரிட்டு மீட்டனர். அதனால் பீமேஸ்வரனை வழிபட்டால் இழந்த சொத்துக்கள், செல்வங்கள் மீண்டும் நம்மை தேடி வந்தடையும். திருமணம் ஆகாதவர்கள் இறைவனை வழிபட்டால் திருமணம் கைகூடும் பிரார்த்தனை தலமாகவும்
ரூ வது காண்டம். கண்டேனே புலிப்பாணி மைந்தாகேளு காசினியில் சுவனியாம மைவித்தை, விண்டிடவே சீனபதிதேசத்தார்க்குவிருப்பமுடலுரைப் பதற்குயானுஞ்சொல்வேன் சண்டமாருதம்போன்ற புரவுதன்னைசட் டமுடன் சைனத்தார்காணவென்று, கொண்டுமேயான், போறேனப் பாகேளு குவலயத்திலாச்சரிய மகிமைதானே. போகர் ஆகாயபுரவியின் மல் சைனதேசம்போகிறது. தானானகாலங்கி சொன்னநீதி தப்பாமல்புலிப்பாணிமைந் தாகே ளு,கோனானயெ தையர் கடாத்தாலே கொற்றவனே ஆகயபுரயிகொ ண்டு, மானானலோகமெல்லாஞ் சுத்தியே தான்மகத்தான செம்புரவிகடி வாளேந்தி,தேனானசைனபதி தேசமல்லோ சிறப்புடனேயான்போ றே னென்றிட்டாரே. இட்டாரே புலிப்பாணி மைந்தருக்கு யெழிலானவார்த்தையது மிகவுங்கூறி, சட்டமுடன் செம்பு விமேலேறி தாரணியெல்லாஞ்சுத் தி மகிமைபூண்டு, திட்டமுடன்சைனபதி தேசந்தன்னில் சிறப்புட னே செம்புரவியிறக்கினேன்யான், மட்டவிழ் பூங்கோதையர்க ளெல் லாருந்தான் மார்க்கமுடனெந்தனையே சூழ்ந்திட்டாரே. போகரை சைனதேசத்துப் பெண்கள் காணல் சூழ்ந்தாரேசைனபதி பெண்களோடு சுத்தமுள்ளமாண்பார்களு மொன்றாய்க்கூடி, தாழ்ந்ததொரு ஆகாயபுரவிதன்னை சட்டமுடனெ ல்லவருங் கண்டுஏங்கி, வாழ்ந்தோமே வையகத்தில் வெகுகாலந்தான் வளமையுள்ள வதிசயங்க ளனேகங்கண்டோம், வீழ்ந்ததொரு ஆகா யந்தனிலிறங்கி விடுபுரவி மகிமையது கூறப்போமோ. கூறவென்றால் நாவில்லைப் பாவுமில்லை குவலயத்தில் பொற்புரவி புதுமையாவும், மாறலுடன் வெகுகோடி வித்தைதானும்மன்னவனே போகமுனிநா தர்நீயும், தூறலன்றியெங்களுக்கு வதிதமாற்கம் துப்புர வால்வுபதேசஞ் செய்வீரல்லோ, சீறலதுவாராமல் நாங்களுந் தான் சிறப்புடனே வுபதேசம் பெற்றோங்காணே. காணவேயுபதேசம் மதிகங்கொண்டு கருத்துடனே சைனப வாழ்ந்திருந்தோம். பூணவேவெகுதேச வதிசயங்கள் புகழாகத்தாமு ரைப்பீரெங்களுக்காய், ஆணவமாம்சுவமதின் மகிமைதன்னை வன்பு டனே வையகத்தில் கண்டதில்லை, நீணவேவாகாய புரவிதானும் நே O ர்மையுடன் கண்டதொரு மகிமைபாரே Digitized By Roja Muthiah Research Library
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். மாதத்தில் மூன்று நோன்பும், ரமளான் தோறும் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். இப்படி பாவங்களுக்குப் பரிகாரங்கள் பல உண்டு. அவற்றைச் செய்வதன் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். ஆனால் இப்படி பரிகாரம் உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டு பாவத்தைச் செய்து விட்டு அவ்வப்போது பரிகாரம் செய்யலாம் என்று நினைத்து விடக் கூடாது. இந்தப் பரிகாரங்கள் யாவும் திருந்துகின்ற மக்களுக்கு உரியதாகும். நாம் பாவம் செய்து விட்டோம்; இனிமேல் இது போன்று செய்யக் கூடாது என்று முடிவு செய்பவரே திருந்தியவர் ஆவார். மடிப்பாக்கம் : மடிப்பாக்கம் பகுதியில், மூன்று சக்கர வாகனங்கள் பழுதடைந்ததால், வீடு, வீடாக குப்பை சேகரிக்க முடியாமல், துப்புரவு தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 187வது வார்டு, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் பகுதியில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.அப்பகுதியில், துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக மூன்று சக்கர வாகனங்கள் மூலம் குப்பை சேகரித்து வந்தனர். சில வாகனங்கள், இரண்டு மாதங்களுக்கு மேல் பாழடைந்த நிலையிலேயே உள்ளன.அவை, இன்றளவிலும் சீரமைக்கப்படவில்லை. இதனால், துப்புரவு ஊழியர்கள், வீடு, வீடாக நடந்து சென்று, குப்பை சேகரித்து வருகின்றனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். 4 கோடி ரூபாய் சம்பளப் பாக்கி தர உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த மனுவில் சம்பளப் பாக்கியை செலுத்தும்வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை என சிவகார்த்திகேயன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
End of preview. Expand in Data Studio
YAML Metadata Warning: The task_categories "language-modeling" is not in the official list: text-classification, token-classification, table-question-answering, question-answering, zero-shot-classification, translation, summarization, feature-extraction, text-generation, fill-mask, sentence-similarity, text-to-speech, text-to-audio, automatic-speech-recognition, audio-to-audio, audio-classification, audio-text-to-text, voice-activity-detection, depth-estimation, image-classification, object-detection, image-segmentation, text-to-image, image-to-text, image-to-image, image-to-video, unconditional-image-generation, video-classification, reinforcement-learning, robotics, tabular-classification, tabular-regression, tabular-to-text, table-to-text, multiple-choice, text-ranking, text-retrieval, time-series-forecasting, text-to-video, image-text-to-text, image-text-to-image, image-text-to-video, visual-question-answering, document-question-answering, zero-shot-image-classification, graph-ml, mask-generation, zero-shot-object-detection, text-to-3d, image-to-3d, image-feature-extraction, video-text-to-text, keypoint-detection, visual-document-retrieval, any-to-any, video-to-video, other

Sangraha Tamil (Cleaned & Verified)

Dataset Description

This dataset is a cleaned, processed subset of the AI4Bharat Sangraha (Verified) dataset, specifically targeting the Tamil language. It was prepared for the purpose of Continuous Pre-Training (CPT) of Large Language Models (LLMs) like Llama 3 and Qwen 2.5/3 to improve their performance on Indic languages.

  • Original Source: AI4Bharat Sangraha (Verified Split)
  • Language: Tamil (ta)
  • Format: Parquet
  • Approximate Size: ~7.8 Million Rows (Processed)

Data Processing Pipeline

To ensure high-quality training tokens, the following cleaning heuristics were applied to the raw data: (most heavyduty preprocessing tasks were handled by the AI4Bharat/Sangraha folks )

  1. Unicode Normalization: Applied NFC normalization.
  2. HTML Removal: All HTML tags and artifacts stripped.
  3. Script Density Filter: Rows were dropped if Tamil characters constituted < 50% of the text. This filters out English-heavy content mixed into the dataset.
  4. Length Filtering: Sentences with fewer than 20 characters were removed to reduce noise.
  5. Heuristic Noise Filtering: Removed common web-scrape noise phrases (e.g., "home screen", "click here", "amazon card").
  6. Deduplication: Relied on the original Sangraha "Verified" pipeline (MinHash LSH).

Usage

Since the dataset is large, it is recommended to use streaming=True or load it via load_dataset in chunks.

from datasets import load_dataset

# Load in streaming mode (Recommended for local PCs)
dataset = load_dataset("Azri-Muhsin/sangraha-tamil-cleaned", split="train", streaming=True)

for sample in dataset.take(3):
    print(sample["text"])
Downloads last month
47