text stringlengths 515 1.8k | chunk_id int64 1 246 | author stringclasses 1
value | book stringclasses 1
value |
|---|---|---|---|
புதுமைப்பித்தன் படைப்புகள்
புதுமைப்பித்தன் படைப்புகள்
Acknowledgements:
பாகம் 1
அகல்யை
செல்லம்மாள்
கோபாலய்யங்காரின் மனைவி
இது மிஷின் யுகம்
கடவுளின் பிரதிநிதி
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
படபடப்பு
ஒரு நாள் கழிந்தது
தெரு விளக்கு
காலனும் கிழவியும்
பொன்னகரம்
இரண்டு உலகங்கள்
மனித யந்திரம்... | 1 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் அதில் அரசன் இருப்பான் அதனால் அது தலைநகர்.
இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இட... | 2 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.
கௌதமரும் இவளைக் காதலிக்கிறார். ஆனால் அவர் காதல் காட்டாறு போன்றதன்று சாந்... | 3 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
வெகு துரிதமாக நடக்கின்றன.
உடைகளையெல்லாம் களைந்து பாறையின் மீது வைத்துவிட்டு நீரில் குதிக்கிறாள். அந்தக் குளிர்ந்த நீரில் நீந்தி விளையாடுவதில் என்ன இன்பமோ! ஆழமான சிந்துவில் முக்குளிப்பதும், மறுபடியும் பாறையில் ஏறிக் குதித்து நீந்துவதுமாக அதிலேயே லயித்துப் போய் விட்டாள்.
அப்பொழுது எங்கிருந்தோ இந்திரன் எதிர்க் கரையில் வந... | 4 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ஈடேறச் சமயம் எதிர்ப்பார்த்திருந்தான்.
இதெல்லாம் அகல்யைக்குத் தெரியாது. ஏதோ ஒரு பெருங்குற்றத்தை, மனத்திற்கு ஒவ்வாத குற்றத்தைச் செய்ததுபோல் அவள் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
கௌதமருடைய அன்பும் காதலும் அவளைத் தேற்றின. அன்று அவர்கள் தூங்க நெடுநேரம் சென்றது.
“உனக்காக எல்லாரும் குருடராக இருக்க முடியுமா?” என்றார் கௌதமர... | 5 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அறிவு வருகிறது. தன் பைத்தியக்காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை!…அவன் உள்ளமே வெடித்துவிடும் போல் இருக்கிறது!
நதிக்குச் சென்ற கௌதமர் இன்னும் விடியாததைக் கண்டு, ஏதோ சூது நடந்திருக்கிறதென்று விரைந்து வருகிறார்.
உள்ளே சரேலென்று நுழைந்ததும், அகல்யை கிடக்கும் கோலத்தில், காரியம் மிஞ்சிவிட்டது என்று அறிந்தார். உடனே தம் மனைவிய... | 6 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு... | 7 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
பிரமநாயகம் பிள்ளையின் தகப்ப... | 8 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.
செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் ப... | 9 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.
சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. ... | 10 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
வரும்போது நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்” என்று சொல்லி விட்டாள்.
பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.
“அதற்கு என்ன, பார்த்துக் கொ... | 11 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
க் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.
மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.
நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை... | 12 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி வந்தார்.
சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி,... | 13 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.
திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, “அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்… துரோகி! துரோகி…” என்... | 14 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.
அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு.
ச... | 15 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
க் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.
கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், “உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?” என்றாள்.
“நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே” என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட... | 16 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.
“அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?” என்றார்.
“வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்” என்றாள் செல்லம்மாள்.
... | 17 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.
காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், “நீங்க என்ன சாப்பிட்டிய?” என்றாள்.
“பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்க... | 18 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.
“இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்.”
“நீ ஏந்திரி” என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.
“நீங்க போங்க. நானே வருதேன்” என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின் தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்... | 19 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
யா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா” என்று அனுப்பினார்.
“என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க” என்றாள் செல்லம்மாள்.
“அடெடே! மறந்தே போயிட்டேன... | 20 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.
அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும் பிட... | 21 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
வெளியே புறப்பட்டார்.
“சுருங்க வந்து சேருங்க; எனக்கு ஒருபடியா வருது” என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.
அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது வர... | 22 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து ‘ஸ்பிரிட்’ விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று ... | 23 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பறந்து, எங்கு அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது.
“தூ தூ” என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.
சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டு... | 24 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
. மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம் பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.
“நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது” என்றாள் மறுபடியும்.
“எல்லாம் தளர்ச்சியின் கோ... | 25 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
” என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.
அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.
அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.
அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப... | 26 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
நோட்டுகளை நீட்டினான்; “அம்மாவுக்கு எப்படி இருக்கு?” என்றான்.
“அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா” என்றார்.
நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல் தொனிக்கவில்லை.
பிரமித்துப்போன முனிசாமி... | 27 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பேச்சு. எதிரில் பேச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்; அதுவும் தஞ்சாவூரில். சிலர் போயும் போயும் இடைச்சிதானா அகப்பட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். படியாதவர்கள், யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார் என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமான் செய்தி என்பதால் வேறு வழியின்றி நம்பிக் கொண்... | 28 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடம் தன்னை மறந்த பாசம், லயம் பிறப்பித்ததே கிடையாது.
“என்ன மீனா! உனக்கு எத்தனை தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். கண்ணா! இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?” என்றார்.... | 29 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ாரகனை நியமித்தார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்ற ஆசையும், கலெக்டர் அய்யங்கார் என்ற பயமும் இருந்தால் ஒரு ஏழைப் பிராமணன் அகப்படாமலா போகிறான்?
ஆனால் கலெக்டருக்கும் பரிசாரகனுக்கும் ஒரு சமரச ஒப்பந்தம். கோபாலய்யங்கார் தஞ்சை ஜில்லாவிற்குப் பூராவாகவும் எதேச்சாதிகாரியாக இருப்பது என்றும், சமயலறையைப் பொறுத்தமட்டில் பரிசாரகன் ச... | 30 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அது ஒண்ணும் கெடையாது இப்போ?” என்றாள்.
கோபாலய்யங்காருக்குச் சுறுக்கென்று தைத்தது. நல்ல காலமாக சுப்புவைய்யர் காப்பியைக் கொண்டு வந்து கொடுக்க உள்ளே நுழைந்தார். கோபம் அவர் மேல் பாய்ந்தது.
“தடியா! காப்பியை வைத்துவிட்டுப் போ!” என்று இரைந்தார்.
அய்யங்காருக்கு கொஞ்சம் ‘டோஸ்’ ஜாஸ்தி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு போய்விட... | 31 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
.
கோபாலய்யங்காரின் மனைவி
3
கோபாலய்யங்கார் மாமிசப்பட்சணியான பிறகு சுப்புவைய்யரின் எதேச்சாதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரகலட்சுமியானாள்.
இரண்டு வருஷ காலம் அவர்களுக்கு சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.
தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு ... | 32 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே! உள்ளே போகிறான்.
“ஒரு ஐஸ் வாட்டர்!”
“என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”
“என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”
“இதோ வந்துவிட்டது, ஸார்!” என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.
“காப்பி இரண்டு கப்!”
இவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன்... | 33 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மணிக்கொடி, 25.11.1934
1
சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.
அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக... | 34 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.
கோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்... | 35 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ம் தளும்பியது.
பிறகு
ஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.
சுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
கோவிலுக்குள்ளா?
“அடா பாபி! உன் நாக்கு வெந்துபோகாதா?” என்றார்.
“காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார... | 36 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.
இதை எதிர்பார்க்கவில்லை.
திரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.
3
சுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.
அதிதியின் கொள்கைகள் எப்படி... | 37 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
கலைமகள், அக்டோ பர், நவம்பர் 1943 1
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு... | 38 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.
மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத... | 39 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.
இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.
இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், “சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!” என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.... | 40 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கொண்டிருந்தது.
“இதோ இருக்கிறதே!” என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.
“என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்” என்றார் பிள்ளை.
“ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்” என்று... | 41 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ூன்று சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!”
“நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது” என்றார் கடவுள்.
ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.
வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.
கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந... | 42 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
End of preview. Expand in Data Studio
Tamil புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 Dataset by புதுமைப்பித்தன்
Description
This dataset contains Tamil புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 texts by புதுமைப்பித்தன், processed for language model pretraining.
Contents
- 246 text chunks
- Author: புதுமைப்பித்தன்
- Genre: புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
- Total chunks: 246
Usage
from datasets import load_dataset
dataset = load_dataset("Naveen934/tamil_data_Puthumaipithan_Padaipugal")```
- Downloads last month
- 5