topic stringlengths 17 82 | poems listlengths 1 4 |
|---|---|
கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல் | [
{
"explanation": [
"பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார்.",
"கூத்தர் கூட்டத்தில் பாணன் வைத்திருக்கும் இசைக்கருவிகள் பேரியாழ் பாடலடி மீட்டும் பாணன் பாடலடி தன் இசைக் கருவிகளைத் துணிப்பையில் போட்டுத் தோளில் சுமந்துகொண்டு ச... |
அவர்கள் கடந்து வந்த மலை வழி | [
{
"explanation": [
"நீங்கள் செல்லும் வழியில் வழிப்பறி செய்ய",
"அம்பு தொடுத்துக்கொண்டு காத்திருக்கும் கானவர்",
"உங்களுக்குத் துன்பம் செய்யமாட்டார்கள்.",
"துணைபுணர் கானவர்",
"துணைபுரியும் கானவர்.",
"கண்ணுக்கு எட்டிய தூரம் நெருங்கித் தழைத்திருக்கும் மரம் அடர்ந்த காட்டில் படுக்க ... |
பேரியாழின் இயல்பு | [
{
"explanation": [
"அருப்பம் என்பது மக்கள் செல்லாத அருகிய இடங்கள். பாண! அருப்பத்தில் நீங்கள் செல்லக் கூடாது.",
"மக்களின் கால்தடம் பதிந்த இயவு வழிகளிலேயே செல்ல வேண்டும்.",
"பேரியாழின் உறுப்புக்கள்",
"திவவு முறுக்கிய வளையல்போல் இருக்கும்.",
"கேள்வியாழ் கடியப்படும் பகை நரம்புகளில் விர... |
பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல் | [
{
"explanation": [
"பேரியாழ்ப் பாணரோடு அவர்களின் தலைவன் உயர்ந்தோங்கிய மலையில் ஏறுகிறான்.",
"யாழை இசைத்துக்கொண்டே களைப்புத் துன்பம் தெரியாமல் பாணர் கூட்டம் ஏறுகிறது.",
"அவர்களிடம் இசைச் செல்வம் இருந்தது.",
"அதனை அவர்கள் அருள்தரும் பாங்கில் அள்ளி வழங்குவார்கள்.",
"அமைந்த விருப்பத்தோட... |
'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல் | [
{
"explanation": [
"ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனுக்குச் சொல்கிறார்.",
"மீமிசை நல்யாறு",
"மலையில் உதிர்ந்த மலர்களை ஆற்றுநீர் சுமந்துகொண்டு கடலை நோக்கி வருவதுபோல் நன்னன் அள்ளாமலும் அளக்காமலும் கொட்டிய வளங்களைச் சுமந்துகொண்டு நாங்கள் அவனது செங்கண்மா நகரிலிருந்து எங்களது இருப்பிடம் நோக்கிச் செல்கை... |
கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல் | [
{
"explanation": [
"வழியில் அவன் நாடு சுரக்கும் வளங்களையும் பெறலாம்.",
"உங்களுக்கு நல்ல நேரம் புள்ளினிர்",
"வெயில் பட்டு வாடும் எல் தாக்குறுதலின் நீங்கள் இனி வாட வேண்டா.",
"அவன் ஆற்று வளமும் ஓய்வு கொள்ளும் இடமும் உங்களுக்கு ஆறுதல் தரும்.",
"அவற்றின் வளத்தால் உணவுப் பொருள்களை வழங்கு... |
வழியினது நன்மையின் அளவு கூறுதல் | [
{
"explanation": [
"அவன் நாட்டில் வளமெல்லாம் பழுத்துக்கிடக்கும். புதுப்புது வருவாய் கிடைத்துக்கொண்டேயிருக்கும். இது அந்த நாட்டுக்குப் புதியது அன்று. அந்த நாட்டுப் பண்பு அப்படி. பருவமழை தவிராது பொழிந்து போட்டதெல்லாம் பொன்னாக விளைந்ததால் வந்தது."
],
"poem": [
"மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்",
... |
கானவர் குடியின் இயல்பு | [
{
"explanation": [
"காந்தள் பூ சிவப்பு நிறத்தில் பூத்திருந்தது.",
"அதனைப் புலால்கறித்துண்டு என்று கருதி எடுத்துச் சென்ற கழுகு உண்ணாமல் உதிர்த்தது.",
"அவை அகன்ற பாறைகளில் விழுந்து நெருப்புப் பிழம்புகள் போலக் கிடந்தன.",
"மணலில் உதிர்ந்தவை மணம் பரப்பிக்கொண்டிருந்தன.",
"முருகனை வேண்டி ... |
வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து | [
{
"explanation": [
"கானவர் பாக்கத்தில் அன்று இரவு தங்கியிருந்துவிட்டு மறுநாள் ஆரியப் படுகர் வாழும் பாக்கம் செல்லுங்கள்.",
"எரிபோல் தழைத்துச் சிவந்திருக்கும் செயலையந் தளிர்களை மாலையாகத் தொடுத்து சுற்றத்தார் அனைவரும் அணிந்துகொண்டு செல்லுங்கள்.",
"மூங்கில் அடர்ந்து அடைந்துகிடக்கும் அப் பாக்கத்துக... |
நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள் | [
{
"explanation": [
"வீடுதோறும் பெறும் உணவு வகைகள்.",
"தேன் மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் மலைத் தாரம். தரும் பொருளைத் தாரம் என்பது பழந்தமிழ் வழக்கு",
"தேறல் தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிப் பருகத் தருவது தேறல்.",
"நறவு உண்டார்கண் அல்லது அடுநறா குறள் காய்ச்சி... |
மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல் | [
{
"explanation": [
"நீங்கள் போராற்றல் மிக்க அரசனாகிய நன்னனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.",
"அவனிடம் பெறவேண்டிய பரிசிலை மறந்துவிட்டு மலைக்குறவர் விருந்தில் மயங்கி அங்கேயே தங்கி விடுதலும் கூடும்.",
"அப்படிப் பட்டது நன்னனின் மலைநாடு."
],
"poem": [
"செருச்செய் முன்பிற் குருசி... |
வழியின் அருமை எடுத்துரைத்தல்'பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல் | [
{
"explanation": [
"விளைச்சலைப் பாழாக்கும் காட்டுப்பன்றியை அழிப்பதற்காக ஆங்காங்கே கானவர் பொறி வைத்திருப்பர்.",
"பெரிய பாறாங்கல்லைத் தூக்கிச் சாய்த்து நிறுத்தி கவட்டைக் கோலில் குச்சி நிறுத்தி அந்தக் குச்சியின் ஒரு முனையில் சாய்ந்திருக்கும் கல்லை நிறுத்தி மற்றொரு முனையில் கயிறு கட்டி அந்தக் கயிற்றை நி... |
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை | [
{
"explanation": [
"மரமடர்ந்த காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத வழியில் செல்லக் கூடாது.",
"அங்கு வெடிப்பு நிலங்களில் பரல் கற்கள் மூடிய வளைக்குள் பாம்பு இருக்கலாம்.",
"பின்னே வருபவர்களுக்கு வழி தெரிவதற்காக மரத்தைக் கல்லால் கொட்டி அடையாளம் செய்து வைத்துவிட்டுச் செல்லுங்கள்.",
"அப்படிப்பட்ட இடங... |
கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம் | [
{
"explanation": [
"விளைநிலங்களில் குறவர்கள் பரண்மீது ஏறி இருந்துகொண்டு விளைச்சலைத் தின்னவரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர். அதன் தாக்கத்துக்குப் பயந்து கருமையான விரல்களை உடைய ஊகக் குரங்குகள் மூங்கிலின்மீது தத்திப் பயந்து பாய்ந்தோடும். அந்த விசைக்கல் உங்கள்மீது பட்டால் கூற்றம்போல் உங்கள் உயிருக்கு உல... |
காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல் | [
{
"explanation": [
"ஆற்று மடுக்களில் முதலைகள் இருக்கும்.",
"ஆழமான அந்த மடுக்களில் நீர்ச்சுழிகள் இருக்கும்.",
"மலையில் மர அடர்த்தியால் இரவு போன்ற இருள் இருக்கும்.",
"ஆற்றின் ஓரமாகச் சென்றாலும் வழுக்கும் இடங்கள் உண்டு.",
"அங்கெல்லாம் பருமனாக உள்ள கொடிகளைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும... |
பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல் | [
{
"explanation": [
"சில இடங்களில் வழுக்கும் இடங்களைப் பாசிகள் படர்ந்து மூடிக் கொண்டிருக்கும்.",
"வழுக்கி விழுந்தால் ஆழமான மடுவில் விழுந்து ஏற வழியின்றி உயிர் விட நேரும்.",
"ஒரு கையில் மூங்கில் கோலும் மற்றொரு கையில் எருவைக் கோலும் ஊன்றிக் கொண்டு செல்ல வேண்டும்.",
"எருவைக்கோல் பருந்தைப் போ... |
காரி உண்டிக் கடவுளைத் தொழுதல் | [
{
"explanation": [
"ஓங்கி உயர்ந்த பெரிய கற்பாறை.",
"அங்கே யானைச்சிலை புகர்முகம்.",
"இது இந்திரன் முருகனுக்கு வழங்கிய ஐராவதம் என்னும் தெய்வயானைத் தெய்வம் போலும். முருகன் குறிஞ்சிக்கடவுள்.",
"அதன் கழுத்தில் மாலை.",
"அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை.",
"மழை பொழிவது போன்று அம்புகளால... |
மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல் | [
{
"explanation": [
"வளம் மிக்க அவன் மலையில் மழை மிகுதியாகப் பொழியும். அப்போதெல்லாம் மயில் கூட்டம் அலகைப் பேய் போல் ஆடும்.",
"பறை முழக்கும் கோடியர்களின் சிறுவர்கள் துள்ளி விளையாடுவது போல மூங்கில் கொம்புகளில் ஆண்குரங்குகள் பாய்ந்து விளையாடும்.",
"உயர்ந்தோங்கிய மலையில் அச்சம் தரும் பாறை இடுக்குகள... |
இரவில் குகைகளில் தங்குதல் | [
{
"explanation": [
"கல்லுக் குகையில்",
"மலைப்பாதை வரைசேர் வகுந்து வழியே கானகத்தில் செல்லுங்கள்.",
"கானவன் கழுது என்னும் பந்தலின்மேல் இருந்துகொண்டு எய்த அம்பு பட்டுக் காட்டுப்பன்றி விழுந்துகிடக்கும்.",
"காய்ந்த மூங்கில் உரசித் தானே பற்றி எரியும் காட்டுத்தீ விழுந்துகிடக்கும் காட்டுப்பன்றிய... |
விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல் | [
{
"explanation": [
"இரவில் நடக்காமல் வெளிச்சம் தெரியும் விடியலில் நல்ல பாதையைப் பார்த்துச் செல்லுங்கள்.",
"அல் இரவு எல் பகல்",
"வான்கண் வானத்தின் கண்ணாகிய எல்லோன் சூரியன்",
""
],
"poem": [
"அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பிவான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்துகானகப் பட்ட செந்நெறிக்... |
வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள் | [
{
"explanation": [
"குளம் போன்ற அகன்ற வாயைக் கொண்ட மலைப்பாம்பு யானையின் வலிமையையும் அழிக்க வல்லது. அது தூங்கும் மரம் போலக் கிடக்கும். விலகிச் செல்லுங்கள்.",
"கண்ணில் பட்ட பூக்களையெல்லாம் முகராதீர்கள்.",
"விழுந்து கிடக்கும் பழங்களையெல்லாம் சாப்பிடாதீர்கள்.",
"இடப்புறமும் வலப்புறமும் உள்ள ... |
குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன | [
{
"explanation": [],
"poem": [
"மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத்தேஎ மருளும் அமைய மாயினும்இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்குறவரு மருளுங் குன்றத்துப் படினே",
"அகன்கட் பாறை துவன்றிக் கல்லெனஇயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்"
]
}
] |
வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல் | [
{
"explanation": [
"வெயில் படாத மரமடர்ந்த காடாயினும் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்திலும் மானைத் தேடிக்கொண்டு குறவர்கள் வில்லும் கையுமாக அலைவர். அவர்களே திசை தடுமாறும் ஞாயிறு தெரியாக் கானகம் அது.",
"அக் குன்றங்களுக்குச் சென்றால் பாறைமீது அமர்ந்துகொண்டு உங்களுடைய இசைக்கருவிகளை முழக்குங்கள்",
"கா... |
மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல் | [
{
"explanation": [
"குரங்குகள் பலாப்பழங்களைத் தோண்டுவதால் பலாப்பழத்தின் புண் மலை முழுவதும் மணம் வீசிக் கமழும்.",
"கொட்டும் அருவியைத் துய்க்கும் வான்அரமகளிர் நீர் கொட்டும் விசையையெல்லாம் வாங்கிக்கொண்டு நீராடும் ஒலியானது பாணர்கள் தம் இசைக்கருவிகளை முழக்குவது போல் கேட்கும்.",
"அரம்பை என்பது வாழைம... |
நன்னனது மலை வழியில் செல்லும் வகை | [
{
"explanation": [
"இப்படி இந்த மலையோசைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மலையின் மேல் பகுதியிலிருந்தும் கீழ்ப் பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும்.",
"இப்படி அளக்க முடியாத பல ஒலிகளும் கேட்கும்.",
"நாலாத் திசைகளிலும் கேட்கும்.",
"எந்த ஒலியின் மீது கவனம் செலுத்துகிறார்களோ அந்த ஒலியைப் பல்வ... |
குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி | [
{
"explanation": [
"பூரித்திருக்கும் பஞ்சைப் போல மேகங்கள் மலைமேல் மேயும்.",
"துவலைத் தூறல்கள் கை ஈரம் படத் தூறிக்கொண்டேயிருக்கும்.",
"செல்லவேண்டிய இடங்கூடத் தெரியாது.",
"அப்போது நீங்கள் இசைக் கருவிகளில் பண் பாட முடியாது.",
"எனவே கைகளும் கருவிகளும் காய்வதற்காகவும் இசைக்கருவிகள் ஈரம்... |
அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள் | [
{
"explanation": [
"கொடிகள் பின்னிக் கிடக்கும் பிணங்கர் காட்டில் நுழையும்போது ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லச் செல்லுங்கள்.",
"அந்த பிணங்கர்க் காடு அரசன் படையில் முன்னே செல்லும் தோல் படையையே நிலைகலங்கச் செய்ய வல்லவை.",
"முன்னே செல்பவன் தன் அம்பால் தன்மேல் மோதும் முள்ளை ஒ... |
புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல் | [
{
"explanation": [
"உங்களுக்கு விருப்பமான யாழை மீட்டிப் பாடிக்கொண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் வழக்கம் போல் கொம்புகளை ஊதிக்கொண்டும் செல்லுங்கள்.",
"முன்பு நீங்கள் அறியாத புதிய வழியில் செல்லும்போது வழியிலுள்ள முட்புதர்களை வெட்டித் தூய்மைப் படுத்திக்கொண்டு செல்லுங்கள். அடுத்து வருபவர்களுக்கு வழி காட்டு... |
நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள் | [
{
"explanation": [
"இப்பாதை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை மரத்தில் கல்லால் கொட்டி எழுதி வைத்திருந்தனர்.",
"பாதைகள் பிரியும் சந்தியின் நடுவில் கைகாட்டி மரங்கள் மட்டும் அல்லாமல் பலரும் போற்றிப் புகழும் கடவுளைச் செதுக்கிய காட்டு மரங்களும் இருந்தன.",
"அவற்றின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே பகைவர... |
கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம் | [
{
"explanation": [
"கானத்தில் கலை பெண் மானைப் புலி தாக்கிக் கொன்று விட்டது. ஆண்மான் தன் பெண்மானை நினைத்துக் கொண்டே தவித்தது. இது ஒரு புறம்.",
"மரைவிடை கானவன் தன் வில்லில் நாணைத் தெரித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஒலியைக் கேட்ட காட்டாட்டுக் கடா தன் இனத்தைக் கூட்டிக்கொண்டு வேறு காட்டுக்கு ஓ... |
நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை | [
{
"explanation": [
"கூளியர் அம்பு விட்டால் கூப்பிடு தூரம் சென்று இலக்கைச் சரியாகத் தாக்கும்.",
"அவர்கள் வாழும் கூவைக் குடிசைகளைக் கண்டால் நன்னனைப் பார்க்கச் செல்கிறோம் என்று சொல்லுங்கள்.",
"அவர்கள் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள்.",
"யாரும் உங்களிடம் குறும்பு செய்ய மாட்டார்கள்.",
... |
மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல் | [
{
"explanation": [
"முருகனுக்குச் சூட்டும் வெண்கடம்பப் பூவையும் மேட்டு நிலங்களில் பூத்த பல்வேறு தளிர்களையும் சேர்த்து மரல் நாரில் கட்டித் தலையில் சூடி அழகு படுத்திக் கொள்ளுங்கள்.",
"முரம்பு நிலம் கண் உடைந்து அதில் ஊற்றாக வந்து நடந்தோடும் நீரில் விளையாடுங்கள்.",
"அது ஊற்றெடுக்கும் பகுதியிலுள்ள ... |
புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல் | [
{
"explanation": [
"வேங்கைப் பூ சிவப்பாக மலரும்.",
"வெந்தால் அதுபோல் மலரக்கூடியது மூங்கில் அரிசிச் சோறும் நன்செய் அல்லாத புன்செய் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லஞ்சோறும் ஆகும்.",
"அந்தச் சோற்றுக்கு அவரைக்காய்ப் புளிக்குழம்பு.",
"தெருக்களில் மூங்கில் கழிகளின்மேல் புல்லால் வேய்ந்த குடிசை.",... |
நன்னனது தண் பணை நாட்டின் தன்மை | [
{
"explanation": [
"காவிலும் களத்திலும் யாழிசை மீட்டிக்கொண்டு ஆங்காங்கே பலநாள் தங்கியும் செல்லலாம்.",
"புல்லைப் போல் வேர் பிரியும் அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம்.",
"அதில் ஆற்றுப்புனல் பாய்ந்து பாதி வேரை அரித்து விட்டது.",
"மீதி பாதி வேர் மேட்டுநிலத்தில் பிடித்துக் கொண்டு நின்றது.",
... |
உழவர் செய்யும் உபசாரம் | [
{
"explanation": [
"பழனம் பழமையான வளவயல் பகுதிகளிலெல்லாம் மீன் வாடை வீசும்.",
"வலையோர் பழனங்களில் வாளை மீனை வலை போட்டுப் பிடித்து வருவார்கள்.",
"நிலையோர் வரால் மீனைத் தூண்டில் போட்டுப் பிடித்து வருவார்கள். இந்த வரால் மீன் யானையின் துதிக்கை போல உருவம் கொண்டிருக்கும்.",
"பழையர் மகளிர் வாளை... |
சேயாற்றின் கரைவழியே செல்லுதல் | [
{
"explanation": [
"நெல் அறுக்கும் உழவர்கள் தண்ணுமை முரசை முழக்கிவர். அந்த ஒலியைக் கேட்டு எருமைக் கடா தன் இனத்தை விட்டுவிட்டுப் பிரிந்து ஓடும். கனைத்துக் கொண்டு தன் வலிமையைக் காட்டும் சினத்தோடு சேயாற்றுக்குள் இறங்கும்.",
"அங்கே அந்த எருமைக்கடா நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு சுழலும். குயவன் பானை வ... |
நன்னனது மூதூரின் இயல்பு | [
{
"explanation": [
"வரைப்பு என்னும் ஊர் செங்கண்மா என்பது சேயாற்றின் கரையில் உள்ளதோர் ஊர். அங்குப் பயன்படுத்திய செல்வம் போக மிஞ்சியிருக்கும் செல்வம் கேட்பாரற்றுத் தூங்கிக் கிடக்கும்.",
"குடிமக்கள் குடிமக்கள் அந்த ஊரை விட்டு வெளியூர் செல்லாமல் பழமையான குடிமக்களாகவே வாழ்வர்.",
"நியமம் காலியிடம் இ... |
மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல் | [
{
"explanation": [
"படைக் கொட்டிலில் வாளும் வேலும் தாறுமாறாகச் சாத்தப் பட்டிருக்கும்.",
"அவை நன்னனின் மறவர்கள் பருந்துகள் பின்தொடரப் பகைவர் தலைகளைத் துண்டாக்கியவை.",
"அவற்றைக் கண்டு சோர்ந்து விடாமல் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே செல்லுங்கள்."
],
"poem": [
"பொருந்தாத் தெவ்வர் இருந... |
அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம் | [
{
"explanation": [
"நன்னன் அரண்மனை வாயிலில் அவன் நாட்டு மலைமக்கள் கொண்டு வந்து குவிக்கும் பொருள்கள் பல. அவற்றை நீங்கள் உங்களது வழிநடை வருத்தம் நீங்க வேடிக்கைப் பார்க்கலாம்.",
"அவற்றோடு விளையாடித் திளைக்கலாம்.",
"ஆமான் விளக்கு எரிவது போலப் பூத்திருக்கும் மரா மரத்தடியில் கூடி விளையாடிய பசுவைப் ப... |
முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல் | [
{
"explanation": [
"இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பகுதியிலேயே நின்றுவிடாதீர்கள்.",
"முற்றத்துக்கு வாருங்கள்.",
"அங்கே வானம் போல் உயர்ந்ததாய் யானை நிற்கும்.",
"அதன் எரு வளம் மலிந்ததாய்க் கிடக்கும்."
],
"poem": [
"வானத் தன்ன வளமலி யானைத்",
"தாதெருத் ததைந்த முற்... |
கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல் | [
{
"explanation": [
"கொடைக்கடன் தீர்க்கும் செம்மலோய் என்று பாடும்போது",
"விருந்திற்பாணி அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குவதற்கு முன் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் புதிய பண்ணிசைப் பாடல்களைப் பாடுங்கள்.",
"பின்னர் நன்னனை வாழ்த்துங்கள்.",
"உலகில் அழியாத புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அரசர்கள்... |
நன்னன் கூறும் முகமன் உரை | [
{
"explanation": [],
"poem": [
"நசைதரவந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்"
]
}
] |
நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல் | [
{
"explanation": [
"வந்ததே போதும் என்று சொல்லி அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரோடு அமர்த்திக்கொள்வான்.",
"சுற்றத்தாரின் வலப்புறம்",
"மேலே சொன்னவாறெல்லாம் நன்னனின் வெற்றிப் புகழை அவனது பெருமையோடு சேர்த்துப் பாடுங்கள்.",
"நீங்கள் அவனிடம் எதற்காகச் சென்றீர்கள் என்று சொல்வதற்கு முன்னரே அவன் உ... |
நன்னனது குளிர்ந்த நோக்கம் | [
{
"explanation": [
"தம் பெயரைத் தம்மோடு கொண்டுசென்ற மக்கள் சேயாற்று மணலைக்காட்டிலும் பலர்.",
"நன்னன் சேயாற்று வெள்ளம் போலப் பயன்படுபவன்.",
"பல அரசர்கள் உயர்ந்த அரியணையில் வீற்றிருப்பர்.",
"தம்மோடு உருமுதல் இல்லாத உரிமைச் சுற்றத்தோடு வீற்றிருப்பர்.",
"மிக விரிவான ஆட்சிப் பரப்பைக் கொ... |
நன்னனது கொடைச் சிறப்பு | [
{
"explanation": [
"உடுக்க ஆடை உண்ணக் கறிச்சோறு பலநாள் தங்கினும் தருவான். இப்படித்தான் நன்னன் விருந்து இருக்கும்.",
"புத்தாடை இழை தெரியாத மெல்லிய நூலால் உடல் தெரியாத அளவுக்கு நெருக்கமாக நெய்யப்பட்ட பழிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பினைக் கொண்ட புத்தாடையை முதலில் அணிந்துகொள்ளச் செய்வான். வெள் அரை... |
🏞️ மலைபடுகடாம் (Malaipadukadam) Dataset
மலைபடுகடாம் (Malaipadukadam) is one of the Pathupattu (பத்துப்பாட்டு / Ten Idylls) in Sangam Literature, composed by the poet Perunkaucikanar (பெருங்கௌசிகனார்).
It contains 583 lines in a single long poem and is notable for its panoramic description of mountain life, nature, landscapes, seasonal changes, customs, and hospitality of the hill people. The poem also vividly portrays flora, fauna, rivers, and human culture of the Kurinji (mountain) landscape.
This dataset provides a structured digital format of Malaipadukadam, segmented into topics, poems, and explanations, which is suitable for Tamil NLP research, verse alignment, cultural entity extraction, and digital preservation of Sangam heritage.
📂 Dataset Structure
topic (string) → Thematic section heading
poems (list) → Contains poem segments with explanation
poem (list of strings) → Original Tamil poem lines
explanation (list of strings) → பொருளுரை (commentary / explanation in Tamil)
Example
[
{
"topic": "கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்",
"poems": [
{
"poem": [
"திருமழை தலைஇய இருணிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்ப",
"பண்ணமைத்து திண்வார் விசித்த முழவொடு ஆகுளி நுண்ணுருக் குற்ற",
"விளங்கடர் பாண்டில் மின்னிரும்பீலி அணித்தழைக் கோட்டொடு..."
],
"explanation": [
"பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து புலவர் சொல்கிறார்.",
"கூத்தர்கள் பேரியாழ், முழவு, ஆகுளி, பாண்டில், தூம்பு, குழல், தட்டை போன்ற பலவகை இசைக்கருவிகளைச் சுமந்து செல்கின்றனர்.",
"இவை மழையின் முழக்கத்தைப் போன்ற ஒலி தருவதால், விருந்தினரை மகிழ்விக்கும் வாத்தியங்கள் எனப் போற்றப்படுகின்றன."
]
}
]
}
]
📊 Dataset Statistics
Total Topics: ~12–15 thematic divisions
Total Lines: 583 (single poem segmented)
Language: Tamil (ta)
Format: JSON / JSONL
Size: ~600 KB
💡 Use Cases
Tamil NLP & Deep Learning (poem-to-explanation mapping, segmentation, entity recognition)
Cultural & Anthropological Studies (hill life, customs, landscape studies)
Text Summarization & Translation (Tamil ↔ English)
Poetic Structure Analysis (meter, sound, semantic segmentation)
Digital Preservation of Kurinji (mountain) cultural heritage
Educational Resources for Sangam Tamil literature
🔑 Licensing
License: Open Data – for research and educational purposes
Attribution: Required when using this dataset in publications or applications
#மலைபடுகடாம் #பத்துப்பாட்டு #சங்கஇலக்கியம் #தமிழ் #Malaipadukadam #SangamLiterature #TamilPoetry #ClassicalLiterature #AncientTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #TamilClassics #PoetryDataset #TamilAI #OpenSource
- Downloads last month
- 19