topic stringlengths 17 82 | poems listlengths 1 4 |
|---|---|
கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல் | [
{
"explanation": [
"பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார்.",
"கூத்தர் கூட்டத்தில் பாணன் வைத்திருக்கும் இசைக்கருவிகள் பேரியாழ் பாடலடி மீட்டும் பாணன் பாடலடி தன் இசைக் கருவிகளைத் துணிப்பையில் போட்டுத் தோளில் சுமந்துகொண்டு செல்கிறான்.",
"கலப்பை கலம் என்னும் சொல் பொது வகையில் இசைக் கருவிகளையும் சிறப்பு வகையால் யாழையும் குறிக்கும். எனவே இவற்றை வைத்திருக்கும் பை கலப்பை.",
"முழவு யாழோசை மழை பொழிவது போல எல்லாராலும் விரும்பப்படும் தன்மையதாக இருக்கும். முழவு ஓசை மழை பொழியும்போதே முழங்கும் இடி போல இருக்கும்.",
"ஆகுளி யாழோடும் முழவோடும் சேர்ந்து முழங்குவது ஆகுளி என்னும் சிறுபறை. கஞ்சரா?",
"பாண்டில் வெண்கலத்தை உருக்கிச் செய்த தாளம்.",
"உயிர்த்தூம்பு யானை பிளிறுவது போல உயிர்ப்பொலி தரும் கொம்பு. அதன் வளைவமைதி தன் தலையைப் பின்புறமாகத் திருப்பிப் பார்க்கும் மயிலின் பீலிபோல் அமைந்திருந்தது.",
"குறும்பரந்தூம்பு மெல்லிய இரங்கல் ஓசை தரும் ஊதுகொம்பு.",
"குழல் அழைத்திழுக்கும் ஒலிதரும் குழல்.கண்ணன் குழலோசை ஆடுமாடுகளை அழைத்திருத்தியதை இங்கு நினைவு கூரலாம்.",
"தட்டை ஒருபுறம் கோலால் உரசி இழுத்தும் மறுபுறம் கோலால் தட்டியும் இசை எழுப்பும் உருமிமேள வகை. சப்பளாக் கட்டையுமாம்.",
"எல்லரி மோத ஒலிக்கும் பெரிய தாளவகை.",
"பதலை கடம் என்று நாம் கூறும் பானை.",
"மற்றும் பல.",
"இவற்றை யெல்லாம் வேரில் காய்த்துத் தொங்கும் பலாக்காய் போலப் பாணர்கள் சுமந்து சென்றனர்."
],
"poem": [
"திருமழை தலைஇய இருணிற விசும்பின்விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்திண்வார் விசித்த முழவொ டாகுளி நுண்ணுருக்குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும்பீலி அணித்தழைக் கோட்டொடு",
"கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடுவிளிப்பது கவரும் தீங்குழல் துதைஇநடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டைகடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி",
"நொடிதரு பாணிய பதலையும் பிறவும்கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்பநேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்"
]
}
] |
அவர்கள் கடந்து வந்த மலை வழி | [
{
"explanation": [
"நீங்கள் செல்லும் வழியில் வழிப்பறி செய்ய",
"அம்பு தொடுத்துக்கொண்டு காத்திருக்கும் கானவர்",
"உங்களுக்குத் துன்பம் செய்யமாட்டார்கள்.",
"துணைபுணர் கானவர்",
"துணைபுரியும் கானவர்.",
"கண்ணுக்கு எட்டிய தூரம் நெருங்கித் தழைத்திருக்கும் மரம் அடர்ந்த காட்டில் படுக்க வைத்தது போன்ற பாறைகளும் நிறுத்தி வைத்தது போன்ற பாதை வழிகளும் இருக்கும்.",
"வில்லம்பு வைத்திருக்கும் கானவர் அந்த இடங்களில் உங்களுக்குத் துணையாக வருவர்.",
"துன்பம் செய்யாமல் வழி காட்டுவர்."
],
"poem": [
"கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில்படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்",
"எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறிதொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்"
]
},
{
"explanation": [],
"poem": [
"அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாதுஇடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித"
]
}
] |
பேரியாழின் இயல்பு | [
{
"explanation": [
"அருப்பம் என்பது மக்கள் செல்லாத அருகிய இடங்கள். பாண! அருப்பத்தில் நீங்கள் செல்லக் கூடாது.",
"மக்களின் கால்தடம் பதிந்த இயவு வழிகளிலேயே செல்ல வேண்டும்.",
"பேரியாழின் உறுப்புக்கள்",
"திவவு முறுக்கிய வளையல்போல் இருக்கும்.",
"கேள்வியாழ் கடியப்படும் பகை நரம்புகளில் விரல் போகாமல் இசைத்துப் பழக்கப்பட்டது.",
"நரம்பு செம்மையாக முறுக்கப்பட்டுள்ளதால் குரலின் ஒலிபோல் இனிமையாக ஒலிக்கும்.",
"அரலை அரற்றும் ஒலி தராதது.",
"துளை நரம்பு கோத்திருக்கும் துளை. இது வரகு அரிசி போல் இருக்கும்.",
"பத்தல் இங்கிருந்துதான் மலையின் எதிரொலி போல் யாழின் மிழலை எதிரொலிக்கும்.",
"ஆணி புதிய வெண்ணரம்புகள் ஆணியில் கட்டித் துளையில் முடுக்கப்பட்டிருக்கும்.",
"பச்சை பத்தலுக்குத் தீட்டப்பட்ட இலை வண்ணம்.",
"உந்தி மணம் கமழும் கூந்தல் இரு பிளவாய் மார்பில் விழும். மடந்தையின் கொப்புளில் அழகுடன் மயிர் ஒழுகியிருப்பது போன்ற வரைவுகளுடன் இரு பிளவாய்க் கிடக்கும் யாழின் வயிறு.",
"மாமை காதல் பருவத்தில் பெண்கள் மேனியில் தோன்றும் பொன் நிறம். இது பொன்னை அரத்தால் அராவும்போது உதிர்ந்த துகள்போல் அழகு தரும் நீர்மை பட்டுக் கிடக்கும். யாழிலும் இப்படிப்பட்ட அழகமைப்பு தீட்டப்பட்டிருந்தது.",
"உரு களாப்பழம் போன்ற கருமையால் பளபளக்கும் பாங்கினைக் கொண்டிருந்தது. பெண்ணின் இந்தப் பளபளப்புப் பொலிவை யாழும் கொண்டிருந்தது.",
"அது பேரியாழ்.",
"பேரியாழ் வளைந்து நிமிர்ந்த கொம்பு போன்றது.",
"யாழிசை",
"சீறியாழின் இசை இன்பத்தில் தோய்த்துக் கேட்போரை மயக்கும்.",
"பேரியாழின் உயிர்ப்பிசை எழுச்சியூட்டும்."
],
"poem": [
"தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக்குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்அரலை தீர உரீஇ வரகின்குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச்",
"சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்திஇலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப்புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்புதுவது போர்த்த பொன்போற் பச்சைவதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால",
"மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்துஅடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்பஅகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாதுகவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்திநுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்",
"களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்"
]
}
] |
பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல் | [
{
"explanation": [
"பேரியாழ்ப் பாணரோடு அவர்களின் தலைவன் உயர்ந்தோங்கிய மலையில் ஏறுகிறான்.",
"யாழை இசைத்துக்கொண்டே களைப்புத் துன்பம் தெரியாமல் பாணர் கூட்டம் ஏறுகிறது.",
"அவர்களிடம் இசைச் செல்வம் இருந்தது.",
"அதனை அவர்கள் அருள்தரும் பாங்கில் அள்ளி வழங்குவார்கள்.",
"அமைந்த விருப்பத்தோடு பண்ணிசைத்து வழங்குவார்கள்.",
""
],
"poem": [
"அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாதுஇசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்துறைபல முற்றிய பைதீர் பாணரொட",
"உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்"
]
}
] |
'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல் | [
{
"explanation": [
"ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனுக்குச் சொல்கிறார்.",
"மீமிசை நல்யாறு",
"மலையில் உதிர்ந்த மலர்களை ஆற்றுநீர் சுமந்துகொண்டு கடலை நோக்கி வருவதுபோல் நன்னன் அள்ளாமலும் அளக்காமலும் கொட்டிய வளங்களைச் சுமந்துகொண்டு நாங்கள் அவனது செங்கண்மா நகரிலிருந்து எங்களது இருப்பிடம் நோக்கிச் செல்கையில் இங்கு வந்துள்ளோம்."
],
"poem": [
"தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்குயாமவ ணின்றும் வருதும் நீயிரும்"
]
},
{
"explanation": [
"கனிமழை பொழியும் கானத்தைச் சிறகடிக்கும் பறவைகள் தேடிக்கொண்டு விரைந்து துனை பரப்பது போல மாலையில் வண்டு மொய்க்கும் மார்பினை உடையவன் அவன்.",
"அவனது மனைவியரின் கண்கள் மலர்போல் பூத்து மழைபோல் குளிர்ந்து அவனது மார்பை மொய்த்துக் கொண்டிருக்கும்.",
"அப் பெண்டிரின் தோள் மூங்கில் போல் வளைந்தும் முலை முகிழ்த்தும் கிடக்கும்.",
"குறிப்பிட்டுச் சொன்னால் அன்புமழை பொழியும் அழகியரின் கணவன் அவன்."
],
"poem": [
"கனிபொழி கானம் கிளையொ டுணீஇயதுனைபறை நிவக்கும் புள்ளின மானப்",
"புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோள்மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்"
]
},
{
"explanation": [
"நன்னனை நாடி நசை ஏர் உழவர்",
"அவன் நன்னன் சேய் நன்னன். அவனிடம் செல்வீர் ஆயின்",
"நல்லேர் உழவர் என்றும் சொல்லேர் உழவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதை அறிவோம்.",
"நெல்லும் சொல்லும் விளைய அவர்கள் உழவு செய்பவர்கள்.",
"இங்கு ஆசையை ஏராகப் பூட்டி உழும் மறவர் குலம் வருகிறது.",
"இவர்கள் பாராட்டுச் சொல் விளைச்சலைப் பெறுவதற்காக உழவு செய்பவர்கள்.",
"புனல் அம் சாயல்",
"ஆற்றில் ஊற்று நீர் சாய்ந்து வந்து வழங்குவது போல எதிரிகளின் போர்முனையைப் பாழ்படுத்துவதில் தம்மை நெருங்கமுடியாத வலிமை கொண்ட வீரர்களுக்குப் புத்தமுது நறைக்கள்ளை வழங்கும் தன்மை கொண்டவன் நன்னன்.",
"நன்னன்சேய்தன்னன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இவனது பெயரில் வரும் சேய் என்னும் சொல்லிக்கு மகன் என்றும் முருகன் என்றும் பொருள் காணமுடியும்.",
"எனவே நன்னன் மகன் நன்னன் என்று ஒரு விளக்கம் அமையும்.",
"முதலில் உள்ள நன்னன் தந்தை பெயர் என்றும் அடுத்து வரும் சேய்நன்னன் இவன் பெயர் என்றும் கொள்ளமுடியும். சேட்சேன்னி நலங்கிள்ளி என்னும் பெயர் இவ்வாறு அமைந்திருத்தலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.",
"அவன் வில்லுக்குச் சொல்லித்தரும் வலிமை மிக்க கையை உடையவன். அதாவது வில்லாண்மை உடையவன். அதனைக் குறிக்கும் வகையில் கையில் பூண் அணிந்தவன்.",
"இதுவா அதுவா இப்படிப்பட்டவரா அப்படிப்பட்டவரா என்று அறிவு தடுமாறாமல் ஆராந்துகொண்டிருக்காமல் நல்லதைத் தீர்மானிக்கும் திறம் கொண்டவன். இதுதான் அவனது மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி.",
"நன்று உணர் சூழ்ச்சி",
"ஆளைப் பார்த்து அறிவு மாறுபடும் குணம் அவனுக்கு இல்லை. எல்லாரிடமும் நல்லனவற்றையே காணும் இயல்பினை உடையவன் அவன்.",
"வில்லாண்மையில் அவன் வல்லவன். தனக்குக் கிடைக்கும் பெருமையையே அணிகலனாகப் பூண்டவன்.அவனிடம் சென்றால்."
],
"poem": [
"முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப்",
"புதுநிறை வந்த புனலஞ் சாயல்மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சிவின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடுஉள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த"
]
},
{
"explanation": [],
"poem": [
"புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின்"
]
}
] |
கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல் | [
{
"explanation": [
"வழியில் அவன் நாடு சுரக்கும் வளங்களையும் பெறலாம்.",
"உங்களுக்கு நல்ல நேரம் புள்ளினிர்",
"வெயில் பட்டு வாடும் எல் தாக்குறுதலின் நீங்கள் இனி வாட வேண்டா.",
"அவன் ஆற்று வளமும் ஓய்வு கொள்ளும் இடமும் உங்களுக்கு ஆறுதல் தரும்.",
"அவற்றின் வளத்தால் உணவுப் பொருள்களை வழங்குவதில் பெருமை கொண்டது அவன் நாடு"
],
"poem": [
"ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்"
]
},
{
"explanation": [
"நன்னன் தன் அரசாட்சி முழுவதையும் பிறருக்குக் கொடுத்தாலும் நிறைவடையாமல்",
"மேலும் மழை போல வழங்குவதற்காக நாள்மகிழ் இருக்கையில் காத்திருப்பான்.",
"அவனது அரண்மனை விலங்குகள் விரும்பி விளையாடும் மலை சோலை கானம் ஆகியவற்றுக்கு இடையே இருந்தது.",
"அரசவை நாளெல்லாம் மக்கள் மகிழும் இருப்பிடமாகத் திகழ்ந்தது.",
"அதனை உலகமெல்லாம் காலமெல்லாம் புகழ்ந்துகொண்டேயிருந்தது.",
"பகைவரை வென்று அவர் தந்த வளங்களை மாரிபோல் அவன் புலவர்களுக்கு வழங்கி வந்தான்.",
"மக்கள் தந்த வரிப்பணத்தை நாட்டு நலனுக்குச் செலவிட்டான்.",
"அவன் தன்னை இகழ்பவர்களை மாற்றித் தன்வயப்படுத்தி விடுவான்.",
"புகழ்பவர்களுக்குத் தன் ஆட்சி உரிமையையே கொடுத்தாலும் அவன் மனம் நிறைவடையாது.",
"இன்னும் கொடுக்க ஏதுமில்லையே என்று ஏங்குவான்.",
"இடைவிடாமல் பெய்யும் தூறல் மழைபோல் மற்றவர்களுக்கும் வழங்கிக்கொண்டேயிருப்பான்."
],
"poem": [
"மலையும் சோலையும் மாபுகல் கானமும்தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப",
"பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப்புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும்இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்குஅரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடுதூத்துளி பொழிந்த பொய்யா வானின்",
"வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்"
]
},
{
"explanation": [
"அவன் அவையில் நல்லவர்களே குழுமியிருப்பர்.",
"நாட்டை நல்வழிப்படுத்தும் வழிகளை அவர்கள் கூறுவர்.",
"அவனது அவைக்குச் சென்றவர் வல்லவரல்லாதவர்கள் ஆயினும் அதனை மறைத்து அவர்களிடமுள்ள திறமைகளை மட்டும் சொல்லிக் காட்டி நன்மை செய்து அனுப்பி வைப்பர்.",
""
],
"poem": [
"நல்லோர் குழீஇய நாநவில் அவையத்துவல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கிநல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும்"
]
}
] |
வழியினது நன்மையின் அளவு கூறுதல் | [
{
"explanation": [
"அவன் நாட்டில் வளமெல்லாம் பழுத்துக்கிடக்கும். புதுப்புது வருவாய் கிடைத்துக்கொண்டேயிருக்கும். இது அந்த நாட்டுக்குப் புதியது அன்று. அந்த நாட்டுப் பண்பு அப்படி. பருவமழை தவிராது பொழிந்து போட்டதெல்லாம் பொன்னாக விளைந்ததால் வந்தது."
],
"poem": [
"மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்",
"புதுவது வந்தன் றிதுவதன் பண்பேவானமின்னு வசிவு பொழிய ஆனாதுஇட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து"
]
},
{
"explanation": [
"முசுண்டை கறிசமைக்க உதவும் முசுண்டைக் கீரையின்கொடி ஆலமரம் போல வெண்ணிறப் பூக்களோடு விரிந்து கிடந்தது.",
"எள் வாய் விரிந்து வெடிக்காத எள்ளுக் காய்கள் கைப்பிடி அளவுக்குள் காய்கள் என்னும்படி நெருக்கமாகக் காய்த்திருந்தன. அவை ஈரம் பட்டு எண்ணெய்க் கொழுப்பேறிக் கிடந்தன. காரணம் எள் பயிரிட்ட வயலில் மண்ணின் சத்தை உறிஞ்சி மண்வளத்தைக் கெடுக்கும் மகுளிச்செடி முளைப்பதில்லை. அதற்குக் காரணம் நல்ல மழை. ஆங்காங்கே நிலம் குழிந்து பள்ளம் பட்டுக் கிடக்கும் இடங்களில் நீர் தேங்கிய சுனைகள்.",
"தினைக்கதிர்கள் யானைக்குட்டியின் கை போல வளைந்து காய்த்திருந்தன.",
"அவரை தினைத்தட்டையில் ஏறி வளைந்திருக்கும் கோளியவரை கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தது. அது குளிர் என்னும் விளையாட்டுக் கருவி போலக் காணப்பட்டது.",
"வரகு எருமைகள் போல் ஆங்காங்கே பாறைகள். அடுத்திருந்த வழி மண்ணில் தென்னம் பாளைபோல் விரிந்து வரகு விளைந்திருந்தது."
],
"poem": [
"அகலிரு விசும்பி னாஅல் போல",
"வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டைநீலத் தன்ன விதைப்புன மருங்கின்மகுளி பாயாது மலிதுளி தழாலின்அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்கெளவை போகிய கருங்காய் பிடியேழ்",
"நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும்குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவர",
"மேதி யன்ன கல்பிறங்கு இயலின்வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சிஇரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே"
]
},
{
"explanation": [
"ஐவன வெண்ணெல் இது புழுதியில் விளையும் நெல். பால் பிடித்து விளைந்திருக்கும். காற்றை உள்ளே நுழைய விடுவதால் உதிராது.",
"கரும்பு வேல் நட்டதுபோல் நிற்கும். எனினும் காற்றால் வளைந்து சாயும் இறைஞ்சும். அது வெட்டிக் கரும்பாலைக்குக் கொண்டுசெல்லும் விளைச்சலைப் பெற்றிருந்தது.",
"துவரை தோரை புயல்காற்று வீசி புனிறு போகி மண் பூத்திருக்கும் முல்லைநிலத்தில் அவல் போலப் பொதிவு கொண்டு பதமாக விளைந்திருக்கும்.",
""
],
"poem": [
"பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்புவாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்",
"வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக்காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்குறையறை வாரா நிவப்பி னறையுற்றுஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பேபுயற்புனிறு போகிய பூமலி புறவின்",
"அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை"
]
}
] |
கானவர் குடியின் இயல்பு | [
{
"explanation": [
"காந்தள் பூ சிவப்பு நிறத்தில் பூத்திருந்தது.",
"அதனைப் புலால்கறித்துண்டு என்று கருதி எடுத்துச் சென்ற கழுகு உண்ணாமல் உதிர்த்தது.",
"அவை அகன்ற பாறைகளில் விழுந்து நெருப்புப் பிழம்புகள் போலக் கிடந்தன.",
"மணலில் உதிர்ந்தவை மணம் பரப்பிக்கொண்டிருந்தன.",
"முருகனை வேண்டி வெறியாடிய களத்தில் புலவுத் துண்டுகள் ஆங்காங்கே கிடக்கும். அதுபோலக் காந்தள் பூக்கள் பாறைமேல் பூத்துக் கிடந்தன."
],
"poem": [
"தீயி னன்ன ஒண்செங் காந்தள்",
"தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்துஅறியா தெடுத்த புன்புறச் சேவல்ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தெனநெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்",
"மணஇல் கமழு மாமலைச் சாரல்"
]
},
{
"explanation": [
"கானவர் சிறுகுடியில் தேனும் கிழங்கும் பெறலாம்.",
"ஆங்காங்கே கானவர் வாழும் வளம் மிக்க சிறுகுடிகள் இருந்தன.",
"அங்குள்ள கானவர் யானைத் தந்தத்தில் இருபுறமும் உறி கட்டி உணவுப்பண்ட வட்டில்களை வட்டில் கூடை தம் இருப்பிடங்களுக்குச் சுமந்து சென்றனர். தேன் கிழங்கு புலால் முதலானவை அவர்கள் சுமந்துசென்ற உணவுப் பொருள்கள்.",
"காட்டுப் பன்றிக் கறியும் அதில் இருந்தது. அந்த உணவுப் பொருள்களை அங்குச் சென்றவர் தம் சுற்றத்துடன் சேர்ந்து உண்ணும் அளவுக்கு அவர்கள் விருந்தாகப் படைப்பர்."
],
"poem": [
"தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப்பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்தூவொடு மலிந்த காய கானவர்",
"செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினேஇரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்"
]
}
] |
வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து | [
{
"explanation": [
"கானவர் பாக்கத்தில் அன்று இரவு தங்கியிருந்துவிட்டு மறுநாள் ஆரியப் படுகர் வாழும் பாக்கம் செல்லுங்கள்.",
"எரிபோல் தழைத்துச் சிவந்திருக்கும் செயலையந் தளிர்களை மாலையாகத் தொடுத்து சுற்றத்தார் அனைவரும் அணிந்துகொண்டு செல்லுங்கள்.",
"மூங்கில் அடர்ந்து அடைந்துகிடக்கும் அப் பாக்கத்துக்குச் சென்றபின்",
"நாங்கள் மான விறல் வேல் நன்னனைப் பார்க்க வந்த பாணர்கள் என்று சொன்னவுடனேயே..",
""
],
"poem": [
"அன்றவ ணசைஇ அற்சேர்ந் தல்கிக்கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்துசேந்த செயலைச் செப்பம் போகி",
"அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச்சிலம்படைந் திருந்த பாக்க மெய்திநோனாச் செருவின் வலம்படு நோன்றாள்மான விறல்வேள் வயிரிய மெனினே"
]
}
] |
நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள் | [
{
"explanation": [
"வீடுதோறும் பெறும் உணவு வகைகள்.",
"தேன் மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் மலைத் தாரம். தரும் பொருளைத் தாரம் என்பது பழந்தமிழ் வழக்கு",
"தேறல் தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிப் பருகத் தருவது தேறல்.",
"நறவு உண்டார்கண் அல்லது அடுநறா குறள் காய்ச்சி வடித்த மணநீர். இது மகிழ்ச்சி தரும் குடிவகை.",
"தேங்காய் அருவி அடித்துக்கொண்டு வந்த பழம். இதைச் சிதைத்தால் உள்ளே இருப்பது வெள்ளை வித்துப் பொருள்.",
"கடம்புமான் கறி வருவிசை அம்பால் பெற்றது.",
"முள்ளம் பன்றிக் கறி கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முளவுக் கறி பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டுவந்த விலங்குக்கறி",
"பழன் இது நெருப்புக் கட்டி வெண்மையாகும் வரையில் புடையடுப்பின் மேல் புலாலை வைத்து வாட்டிப் பழுப்பாக்கிய பழன்.",
"மாங்காய் போட்ட மோர்க்குழம்பு இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய்",
"நெல்லரிசிச் சோறு மூங்கில் போல் வளர்ந்த நெல்",
"இதனைச் சமைத்த குறமகள் தன் கூந்தலை உச்சிக் கொண்டையாகப் போட்டு முடிந்திருந்தாள்.",
"இந்த முச்சியில் மணம் கமழும் பூவைச் சூடியிருந்தாள்.",
"அவள் சமையலின் மணம் வழைமரம் மிக்க மலைச்சாரல் எல்லாம் கமழ்ந்தது.",
"சோறு வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்தது.",
"தன் மக்களுக்கு இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று தடுத்து வட்டியில் போடுவது போல் படைத்தாள்.",
"இவ்வாறு படைப்பதை ஒவ்வொரு மனையிலும் பெறுவீர்கள்."
],
"poem": [
"ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொட",
"வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல்குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீரஅருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை",
"முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவைபிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇவெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்இன்புளிக் கலந்து மாமோ ராகக்கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்த",
"வழையமை சாரல் கமழத் துழைஇநறுமலர் அணிந்த நாறிரு முச்சிக்குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சிஅகமலி உவகை ஆர்வமொ டளைஇமகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்"
]
}
] |
மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல் | [
{
"explanation": [
"நீங்கள் போராற்றல் மிக்க அரசனாகிய நன்னனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.",
"அவனிடம் பெறவேண்டிய பரிசிலை மறந்துவிட்டு மலைக்குறவர் விருந்தில் மயங்கி அங்கேயே தங்கி விடுதலும் கூடும்.",
"அப்படிப் பட்டது நன்னனின் மலைநாடு."
],
"poem": [
"செருச்செய் முன்பிற் குருசில் முன்னியபரிசில் மறப்ப நீடலும் உரியிர்அனைய தன்றவன் மலைமிசை நாடே"
]
},
{
"explanation": [
"நிறைந்த இதழ்களை உடைய குவளை மலர்களின் மணத்தை மிகுதியாக முகர்ந்தாலும் வரையர மகளிர் தங்கி விளையாடும் இடங்களைக் கண்டாலும் உயிர் பதைத்து நடுங்க நேரும்.",
"எனவே அம் மலைநாட்டில் பலநாள் தங்காமல் நிலநாட்டை நோக்கிச் செல்லுங்கள்."
],
"poem": [
"நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்வரையர மகளிர் இருக்கை காணினும்",
"உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர்பலநா ணில்லாது நிலநாடு படர்மின்"
]
}
] |
வழியின் அருமை எடுத்துரைத்தல்'பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல் | [
{
"explanation": [
"விளைச்சலைப் பாழாக்கும் காட்டுப்பன்றியை அழிப்பதற்காக ஆங்காங்கே கானவர் பொறி வைத்திருப்பர்.",
"பெரிய பாறாங்கல்லைத் தூக்கிச் சாய்த்து நிறுத்தி கவட்டைக் கோலில் குச்சி நிறுத்தி அந்தக் குச்சியின் ஒரு முனையில் சாய்ந்திருக்கும் கல்லை நிறுத்தி மற்றொரு முனையில் கயிறு கட்டி அந்தக் கயிற்றை நிறுத்தி வைத்திருக்கும் கவட்டைக் குச்சியின் அடியில் இரண்டு சுற்று சுற்றி கயிற்றின் மற்றொரு நுனியை மற்றொரு குச்சியின் ஒரு நுனியில் கட்டி இந்தக் குச்சியின் மற்றொரு முனையைத் தூக்கி நிறுத்தியுள்ள பாறையில் பொருத்திப் பாறை விழாமல் நிறுத்தியிருப்பர். குச்சியில் காட்டுப்பன்றி விரும்பி உண்ணும் இரையைக் கட்டியிருப்பர். பன்றி இரையை இழுத்ததும் பாறை பன்றியின்மீது விழுந்து பன்றியைக் கொன்றுவிடும். இதற்கு இருங்கல் அடாஅர் என்று பெயர்.",
"இரவில் செல்லும்போது அறியாமல் அதில் மோதினால் பொறி வைத்திருக்கும் பாறாங்கல் விழுந்து துன்புற நேரும். எனவே இருள் நீங்கி விடிந்தபின் செல்லுங்கள்."
],
"poem": [
"விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சிப்புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்அரும்பொறி உடைய வாறே நள்ளிருள்",
"அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்"
]
}
] |
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை | [
{
"explanation": [
"மரமடர்ந்த காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத வழியில் செல்லக் கூடாது.",
"அங்கு வெடிப்பு நிலங்களில் பரல் கற்கள் மூடிய வளைக்குள் பாம்பு இருக்கலாம்.",
"பின்னே வருபவர்களுக்கு வழி தெரிவதற்காக மரத்தைக் கல்லால் கொட்டி அடையாளம் செய்து வைத்துவிட்டுச் செல்லுங்கள்.",
"அப்படிப்பட்ட இடங்களைக் காணும்போது விறலியர் அதனைச் சுற்றிவந்து வாழ்த்துவர்.",
"அவ்வாறு செய்துவிட்டுச் செல்லுங்கள்.",
""
],
"poem": [
"நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவேகுறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச்",
"செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்சவறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின்"
]
}
] |
கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம் | [
{
"explanation": [
"விளைநிலங்களில் குறவர்கள் பரண்மீது ஏறி இருந்துகொண்டு விளைச்சலைத் தின்னவரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர். அதன் தாக்கத்துக்குப் பயந்து கருமையான விரல்களை உடைய ஊகக் குரங்குகள் மூங்கிலின்மீது தத்திப் பயந்து பாய்ந்தோடும். அந்த விசைக்கல் உங்கள்மீது பட்டால் கூற்றம்போல் உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். எனவே அக் காலத்தில் மரமறைவில் செல்லுங்கள்."
],
"poem": [
"புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉஅகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப்",
"பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்கருவிர லூகம் பார்ப்போ டிரியஉயிர்செகு மரபிற் கூற்றத் தன்னவரும்விசை தவிராது மரமறையாக் கழிமின்"
]
}
] |
காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல் | [
{
"explanation": [
"ஆற்று மடுக்களில் முதலைகள் இருக்கும்.",
"ஆழமான அந்த மடுக்களில் நீர்ச்சுழிகள் இருக்கும்.",
"மலையில் மர அடர்த்தியால் இரவு போன்ற இருள் இருக்கும்.",
"ஆற்றின் ஓரமாகச் சென்றாலும் வழுக்கும் இடங்கள் உண்டு.",
"அங்கெல்லாம் பருமனாக உள்ள கொடிகளைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும்.",
"குழந்தைகளை நடக்க விடாமல் தூக்கிக் கொண்டு ஒருவர் கடந்தபின் மற்றொருவர் என்று செல்ல வேண்டும்."
],
"poem": [
"உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கிஇரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவைவழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப்",
"பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்துருவி னன்ன புன்றலை மகாரோடுஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்"
]
}
] |
பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல் | [
{
"explanation": [
"சில இடங்களில் வழுக்கும் இடங்களைப் பாசிகள் படர்ந்து மூடிக் கொண்டிருக்கும்.",
"வழுக்கி விழுந்தால் ஆழமான மடுவில் விழுந்து ஏற வழியின்றி உயிர் விட நேரும்.",
"ஒரு கையில் மூங்கில் கோலும் மற்றொரு கையில் எருவைக் கோலும் ஊன்றிக் கொண்டு செல்ல வேண்டும்.",
"எருவைக்கோல் பருந்தைப் போல் பற்றிக்கொள்ளும் கோல் இக்காலத்தில் கால் எலும்பு மருத்துவத்துக்குப் பின் கால் நன்றாகக் கூடும் வரையில் ஊன்றிக்கொண்டு நடப்பதற்குத் தரும் கோல் போன்றது. இது தரையில் ஊன்றும் பகுதியில் பருந்தின் கால்விரல் போல பிளவுகளைக் கொண்டிருத்தலை எண்ணுக."
],
"poem": [
"அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா",
"வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசிஅடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடையமுழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடுஎருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்"
]
}
] |
காரி உண்டிக் கடவுளைத் தொழுதல் | [
{
"explanation": [
"ஓங்கி உயர்ந்த பெரிய கற்பாறை.",
"அங்கே யானைச்சிலை புகர்முகம்.",
"இது இந்திரன் முருகனுக்கு வழங்கிய ஐராவதம் என்னும் தெய்வயானைத் தெய்வம் போலும். முருகன் குறிஞ்சிக்கடவுள்.",
"அதன் கழுத்தில் மாலை.",
"அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை.",
"மழை பொழிவது போன்று அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை.",
"அந்த யானைக்குப் பக்கத்தில் இலஞ்சி பொய்கை.",
"போர்த்திறம் கற்ற யானை முகத்தில் காணப்படும் சூழி என்னும் முகப்படாம் போல சுடரும் பூக்கள் மலர்ந்திருக்கும் பொய்கை.",
"அது தனித்துச் செல்லும் ஆற்று வழி இயவு.",
"அந்த யானைக்கோயிலுக்குச் சுற்றுமதில். மூத்த கற்களை அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதில்.",
"அதற்குள்ளே யானைச்சிலைக் கடவுள்.",
"மரபு வழியே தொழப்பட்டுவரும் கடவுள்.",
"அதனைக் காணும்பொழுது தொழுதுவிட்டுச் செல்லுங்ககள்.",
"அங்கெல்லாம் உங்களது இசைக்கருவிகளை வறிதே கொண்டுசெல்வதைத் தவிர்த்து முழக்கித் தெய்வத்தைப் பரவிவிட்டுச் செல்லுங்கள்."
],
"poem": [
"உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய",
"மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சிஓரியாற் றியவின் மூத்த புரிசைப்பராவரு மரபிற் கடவுட் காணிற",
"தொழாஅநிர் கழியின் அல்லது வறிதுநும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி"
]
},
{
"explanation": [],
"poem": [
"மாரி தலையுமவன் மல்லல் வெற்பே"
]
}
] |
மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல் | [
{
"explanation": [
"வளம் மிக்க அவன் மலையில் மழை மிகுதியாகப் பொழியும். அப்போதெல்லாம் மயில் கூட்டம் அலகைப் பேய் போல் ஆடும்.",
"பறை முழக்கும் கோடியர்களின் சிறுவர்கள் துள்ளி விளையாடுவது போல மூங்கில் கொம்புகளில் ஆண்குரங்குகள் பாய்ந்து விளையாடும்.",
"உயர்ந்தோங்கிய மலையில் அச்சம் தரும் பாறை இடுக்குகளில் வண்டிச்சக்கரம் போலத் தேன் கூடு கட்டியிருக்கும்.",
"இவற்றைத் திடீரென உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.",
"இவற்றைப் பார்த்துக் கொண்டே சென்றால் தடுக்கி விழவும் செல்லும் வழி தடுமாறவும் நேரும்.",
"எனவே செல்லும் வழியில் கவனம் வைத்துச் செல்லுங்கள்."
],
"poem": [
"அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்",
"கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்னநெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்தசூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும்ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று",
"நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்"
]
}
] |
இரவில் குகைகளில் தங்குதல் | [
{
"explanation": [
"கல்லுக் குகையில்",
"மலைப்பாதை வரைசேர் வகுந்து வழியே கானகத்தில் செல்லுங்கள்.",
"கானவன் கழுது என்னும் பந்தலின்மேல் இருந்துகொண்டு எய்த அம்பு பட்டுக் காட்டுப்பன்றி விழுந்துகிடக்கும்.",
"காய்ந்த மூங்கில் உரசித் தானே பற்றி எரியும் காட்டுத்தீ விழுந்துகிடக்கும் காட்டுப்பன்றியை மணம் கமழாமல் சுட்டு வைத்திருக்கும்.",
"அதனைத் தூய்மைப் படுத்தி உண்ணுங்கள்.",
"அருகில் குவளை பூத்த சுனையில் இருக்கும் தூய்மையான தெளிந்த நீரைப் பருகுங்கள்.",
"மீதமுள்ள கறியைப் பொதியாகக் கட்டி எடுத்துச் செல்லுங்கள்.",
"பறவைச் சிறகு போல் பறந்து திரியும் மக்களோடு வழியில் தங்காதீர்கள்.",
"கற்குகைகளில் வீட்டில் தங்குவது போலப் பாதுகாப்பாகத் தங்குங்கள்."
],
"poem": [
"வரைசேர் வகுந்திற் கானத்துப் படினேகழுதிற் சேணோன் ஏவொடு போகிஇழுதி னன்ன வானிணஞ் செருக்கிநிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்",
"நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்இருள்துணிந் தன்ன ஏனங் காணின்முளிகழை இழைந்த காடுபடு தீயின்நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்துதுகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர்",
"குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகிமிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர்புட்கை போகிய புன்றலை மகாரோடுஅற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்இல்புக் கன்ன கல்லளை வதிமின்"
]
}
] |
விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல் | [
{
"explanation": [
"இரவில் நடக்காமல் வெளிச்சம் தெரியும் விடியலில் நல்ல பாதையைப் பார்த்துச் செல்லுங்கள்.",
"அல் இரவு எல் பகல்",
"வான்கண் வானத்தின் கண்ணாகிய எல்லோன் சூரியன்",
""
],
"poem": [
"அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பிவான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்துகானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்"
]
}
] |
வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள் | [
{
"explanation": [
"குளம் போன்ற அகன்ற வாயைக் கொண்ட மலைப்பாம்பு யானையின் வலிமையையும் அழிக்க வல்லது. அது தூங்கும் மரம் போலக் கிடக்கும். விலகிச் செல்லுங்கள்.",
"கண்ணில் பட்ட பூக்களையெல்லாம் முகராதீர்கள்.",
"விழுந்து கிடக்கும் பழங்களையெல்லாம் சாப்பிடாதீர்கள்.",
"இடப்புறமும் வலப்புறமும் உள்ள பெரிய மரங்களையும் பூக்களையும் பார்த்துக் கொண்டு வழியைத் தவற விட்டுவிடாதீர்கள்."
],
"poem": [
"கயம்கண் டன்ன அகன்பை யங்கண்மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும",
"துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கிஇகந்துசேட் கமழும் பூவும் உண்டோர்மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்துபெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்",
"இடனும் வலனும் நினையினர் நோக்கிக்குறியறிக் தவையவை குறுகாது கழிமின்"
]
},
{
"explanation": [
"கூட்டில் வாழ்வது போல் ஆலமரக் கிளைகளில் ஒலிக்கும் பறவைகளின் ஒலியைக் கேட்டுக்கொண்டே செல்லுங்கள்."
],
"poem": [
"கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின்"
]
}
] |
குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன | [
{
"explanation": [],
"poem": [
"மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத்தேஎ மருளும் அமைய மாயினும்இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்குறவரு மருளுங் குன்றத்துப் படினே",
"அகன்கட் பாறை துவன்றிக் கல்லெனஇயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்"
]
}
] |
வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல் | [
{
"explanation": [
"வெயில் படாத மரமடர்ந்த காடாயினும் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்திலும் மானைத் தேடிக்கொண்டு குறவர்கள் வில்லும் கையுமாக அலைவர். அவர்களே திசை தடுமாறும் ஞாயிறு தெரியாக் கானகம் அது.",
"அக் குன்றங்களுக்குச் சென்றால் பாறைமீது அமர்ந்துகொண்டு உங்களுடைய இசைக்கருவிகளை முழக்குங்கள்",
"காட்டைக் காப்பாற்றிக்கொண்டு வாழும் கானவர்கள் அங்கெல்லாம் இருப்பார்கள்.",
"வழி தவறியவர்களுக்கெல்லாம் உதவ ஓடோடி வருவார்கள்.",
"தண்ணீரின் ஓசை போல் பாதுகாப்புக் குரல் கொடுத்துக் கொண்டே உங்களிடம் வந்து சேர்வார்கள்."
],
"poem": [
"பாடின் அருவிப் பயங்கெழு மீமிசைக்காடுகாத் துறையுங் கானவர் உளரேநிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள",
"புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி"
]
},
{
"explanation": [
"கானவர் நீங்கள் உண்ணுவதற்குச் சுவையான பழங்களைத் தருவார்கள்.",
"உங்களை மகிழ்விக்கப் பூ மாலை போடுவார்கள்.",
"உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் நேர்ந்த உடல்துன்பம் உள்ளஉளைச்சல் அகிய அவலத்தைப் போக்குவார்கள்.",
"நீங்கள் அவர்களுக்கும் அவர்களது சுற்றத்தார்களுக்கும் இனியவர் ஆகிவிடுவீர்கள்."
],
"poem": [
"உண்டற் கினிய பழனுங் கண்டோர்மலைதற் கினிய பூவுங் காட்டிஊறு நிரம்பிய ஆறவர் முந்துறநும்மி னெஞ்சத் தவலம் வீட",
"இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்"
]
},
{
"explanation": [
"திசை காட்டும் அறிஞர்கள் கூறிய வழியில் செல்ல வேண்டும்.",
"குறுகிய நீண்ட வழிகளைக் கடைப்பிடித்துச் செல்ல வேண்டும்.",
"புதியவர்களைப் பார்த்தால் அச்சம் வரும்.",
"பலவகையான பூக்கள் உதிர்ந்து வரி வரியாகக் கிடக்கும் நிழலில் அசதியைப் போக்க அமர்ந்திருக்கும் போது மலையோசை மலைபடுகடாம் பலவற்றைக் கேட்கலாம்."
],
"poem": [
"அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்புகுறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்துஅலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற்",
"பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ"
]
}
] |
மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல் | [
{
"explanation": [
"குரங்குகள் பலாப்பழங்களைத் தோண்டுவதால் பலாப்பழத்தின் புண் மலை முழுவதும் மணம் வீசிக் கமழும்.",
"கொட்டும் அருவியைத் துய்க்கும் வான்அரமகளிர் நீர் கொட்டும் விசையையெல்லாம் வாங்கிக்கொண்டு நீராடும் ஒலியானது பாணர்கள் தம் இசைக்கருவிகளை முழக்குவது போல் கேட்கும்.",
"அரம்பை என்பது வாழைமரம்.",
"வாழைமரம் போல் அழகிய தோற்றம் கொண்டவர் அரம்பையர்.",
"அரம்பையர் என்போர் அரமகளிர்.",
"அரம்பையர் கற்பனைத் தெய்வம்.",
"பெண்தெய்வம்.",
"இது தமிழ்ச்சொல்."
],
"poem": [
"கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும்அருவிய நுகரும் வானர மகளிர்வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்",
"தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை"
]
},
{
"explanation": [
"யானை ஒலி தன் கூட்டத்திலிருந்து பிரிந்த யானை கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் சங்கூதுவது போன்ற யானையின் ஒலி.",
"கானவன் அழுகை கானவன் குகையில் படுத்திருந்தான். அவன் பாறைமேல் வைத்திருந்த அம்பு நழுவி அவன்மேல் விழுந்துவிட்டது. அப்போது அவன் அழும் ஒலி",
"கொடிச்சியர் பாடல் புலி பாய்ந்ததால் தன் கணவன் மார்பில் உண்டான புண்ணை ஊசிநரம்பால் தைக்கும்போது அவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காகக் கொடிச்சியர்கள் பாடும் காப்புப் பாடலின் ஒலி.",
""
],
"poem": [
"இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல்விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்சேயளைப் பள்ளி எகுறு முள்ளின்",
"எய்தெற இழுக்கிய கானவர் அழுகைகொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பெனஅறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்"
]
}
] |
நன்னனது மலை வழியில் செல்லும் வகை | [
{
"explanation": [
"இப்படி இந்த மலையோசைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மலையின் மேல் பகுதியிலிருந்தும் கீழ்ப் பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும்.",
"இப்படி அளக்க முடியாத பல ஒலிகளும் கேட்கும்.",
"நாலாத் திசைகளிலும் கேட்கும்.",
"எந்த ஒலியின் மீது கவனம் செலுத்துகிறார்களோ அந்த ஒலியைப் பல்வேறு ஒலிகளுக்கிடையே கேட்க முடியும்.",
"திருவிழாக் காலத்தில் தெருவெல்லாம் முழவோசை கேட்டுக் கொண்டேயிருப்பது போல நன்னன் மலைமீது மலைபடு கடாம் கேட்டுக்கொண்டேயிருக்கும்.",
"சிவந்த கண்களோடு பூத் தொடுக்கும் மகளிர் தூங்காமல் இருப்பது போல முழவோசை தெருக்களில் கேட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கும்.",
"அதுபோல மலைபடு கடாமும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.",
"இந்த ஓசைகள்தாம் மலைபடுகடாம்."
],
"poem": [
"குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர்முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண்",
"விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே"
]
},
{
"explanation": [
"மலையின் காட்சிகளைக் கண் குளிரக் காணலாம்.",
"மலை ஒலிகளைக் காது குளிரக் கேட்கலாம்.",
"வாய் இனிக்கப் பழம் போன்றவற்றை உண்ணலாம்.",
"மற்றவற்றையும் இன்னும் கிடைக்க வேண்டு மென்று மரபு நெறி பிறழாமல் கேட்டுப் பெற்றுப் பாராட்டி மகிழலாம்.",
"நன்னன் திரு அமர் மார்பன்.",
"போர் என்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை.",
"அவனைப் பலமுறைப் பாராட்டலாம்."
],
"poem": [
"கண்ண் டண்ண்னெனக் கண்டுங் கேட்டுங்உண்டற் கினிய பலபா ராட்டியும்இன்னும் வருவ தாக நமக்கெனத்தொன்முறை மரபினி ராகிப் பன்மாண்",
"செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன்"
]
},
{
"explanation": [
"வியப்பூட்டும் இனிய குரலமைந்த விறலியர் மகிழ்ச்சிப் பெருக்கில் இனிய குரலோடு குறிஞ்சிப் பண்பாடுவதைக் கேட்டுக் கொண்டே செல்லுங்கள்.",
"இடி முழக்கத்துடன் மேகம் மேயும் மலையின் புதுமைப் பொலிவைப் பாராட்டிக் கொண்டும் மலைத்தெய்வத்தைக் முருகனைக் கைகூப்பித் தொழுதுகொண்டும் செல்லுங்கள்."
],
"poem": [
"உருமுரறு கருவிய பெருமலை பிற்படஇறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின்"
]
}
] |
குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி | [
{
"explanation": [
"பூரித்திருக்கும் பஞ்சைப் போல மேகங்கள் மலைமேல் மேயும்.",
"துவலைத் தூறல்கள் கை ஈரம் படத் தூறிக்கொண்டேயிருக்கும்.",
"செல்லவேண்டிய இடங்கூடத் தெரியாது.",
"அப்போது நீங்கள் இசைக் கருவிகளில் பண் பாட முடியாது.",
"எனவே கைகளும் கருவிகளும் காய்வதற்காகவும் இசைக்கருவிகள் ஈரம் படாமல் இருப்பதற்காகவும் கூவல் குடிசை போன்ற பாறை வெடிப்புக் குகைக்குச் சென்று தங்குங்கள்."
],
"poem": [
"மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக்கைதோய் வன்ன கார்மழைத் தொழுதிதூஉ யன்ன துவலை தூற்றலின்தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடுகாஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற்",
"கூவல் அன்ன விடரகம் புகுமின்"
]
},
{
"explanation": [
"பெரிய பாறைகள் உடைந்து உருளும் வழியில் இகுப்பம் செல்லாதீர்கள்.",
"ஆங்காங்கே குன்றுகளுக்கு இடையே துன்பம் தரும் காடுகள் உண்டு.",
"அவற்றை உற்று நோக்கினால் கண் கலங்கும்.",
"அங்கெல்லாம் முழவுமுகம் கொண்ட தலைக்கோலை ஊன்றுகோலாகப் பயன்படுத்திக்கொண்டு ஏறிச் செல்லுங்கள்.",
"இன்றேல் நேரும் துன்பம் பலப் பல."
],
"poem": [
"இருங்கல் இகுப்பத் திறுவரை சேராதுகுன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்துநின்று நோக்கினும் கண்வாள் வெளவும்மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு",
"தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பிஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவே"
]
},
{
"explanation": [
"கூரிய கல்லாகிக் கிடக்கும் பாறைகள் வெயிலைப் பிரதிபலித்துப் புறத்தே தூவிக் கொண்டிருப்பதால் காய்ச்சி வைத்திருக்கும் வேலைப் போல் நடக்கும்போது துன்பம் தரும்.",
"எனவே வெயிலின் சினம் தணிந்த பின்னர் நடந்து செல்லுங்கள்."
],
"poem": [
"அயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறைவெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக்கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின்"
]
}
] |
அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள் | [
{
"explanation": [
"கொடிகள் பின்னிக் கிடக்கும் பிணங்கர் காட்டில் நுழையும்போது ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லச் செல்லுங்கள்.",
"அந்த பிணங்கர்க் காடு அரசன் படையில் முன்னே செல்லும் தோல் படையையே நிலைகலங்கச் செய்ய வல்லவை.",
"முன்னே செல்பவன் தன் அம்பால் தன்மேல் மோதும் முள்ளை ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு செல்வான்.",
"தான் கடந்ததும் அதை விட்டுவிடுவான்.",
"அது பின்னே வருபவர்மேல் மோதித் தாக்கும்.",
"உங்களின் யாழ் பத்தர் முழவு போன்ற இசைக் கருவிகள் மீதும் மோதித் தாக்கும்.",
"எனவே அவற்றையும் பாதுகாத்துக் கொண்டு கவனமாகச் செல்லுங்கள்.",
"அரசன் நன்னனின் சுற்றம் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு புகழையே வெறுத்திருந்தது.",
"இங்குச் சுற்றம் என்பது படை.",
"அது அவனை விட்டு அகலாமல் பாதுகாப்பாக இருந்துவந்தது.",
""
],
"poem": [
"உரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடுபுரைதவ உயரிய மழைமருள் பறோல்அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடையபின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல்.",
"இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணிமண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்கைபிணி விடாஅது பைபயக் கழிமின்"
]
}
] |
புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல் | [
{
"explanation": [
"உங்களுக்கு விருப்பமான யாழை மீட்டிப் பாடிக்கொண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் வழக்கம் போல் கொம்புகளை ஊதிக்கொண்டும் செல்லுங்கள்.",
"முன்பு நீங்கள் அறியாத புதிய வழியில் செல்லும்போது வழியிலுள்ள முட்புதர்களை வெட்டித் தூய்மைப் படுத்திக்கொண்டு செல்லுங்கள். அடுத்து வருபவர்களுக்கு வழி காட்டுவதற்காகக் கல்லிலே புல்லை முடிந்து ஆங்காங்கே வைத்து அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள்."
],
"poem": [
"பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்சந்து நீவிப் புன்முடிந் திடுமின்"
]
}
] |
நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள் | [
{
"explanation": [
"இப்பாதை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை மரத்தில் கல்லால் கொட்டி எழுதி வைத்திருந்தனர்.",
"பாதைகள் பிரியும் சந்தியின் நடுவில் கைகாட்டி மரங்கள் மட்டும் அல்லாமல் பலரும் போற்றிப் புகழும் கடவுளைச் செதுக்கிய காட்டு மரங்களும் இருந்தன.",
"அவற்றின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே பகைவர்கள் நடுங்குவர். இப்படிப்பட்ட காட்டுப் பாதைகள் பல இருந்தன."
],
"poem": [
"செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து",
"கடவு ளோங்கிய காடேசு கவலைஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர்சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே"
]
},
{
"explanation": [
"நன்னன் தேனொழுகும் பூ மாலையைத் தலையில் அணிந்திருந்தான்.",
"நம்மைப் போன்றவர்களுக்கு அவன் தேர்களை வழங்குவான்.",
"கவிந்து வழங்கும் அவன் கைகள் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் வீசும் கொடைத்தன்மை கொண்டவை.",
"அவனது முன்னோர்களும் அத்தகைய கொடையாளிகள்.",
"அவன் ஊரும் அப்படிப்பட்டது.",
"விரும்பிய இடத்தில் தங்கி அச்சமின்றிச் செல்லுங்கள்."
],
"poem": [
"தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகைஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே",
"மேம்பட வெறுத்தவன் தொறிணை மூதூர்ஆங்கன மற்றே நம்ம னோர்க்கேஅசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்"
]
}
] |
கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம் | [
{
"explanation": [
"கானத்தில் கலை பெண் மானைப் புலி தாக்கிக் கொன்று விட்டது. ஆண்மான் தன் பெண்மானை நினைத்துக் கொண்டே தவித்தது. இது ஒரு புறம்.",
"மரைவிடை கானவன் தன் வில்லில் நாணைத் தெரித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஒலியைக் கேட்ட காட்டாட்டுக் கடா தன் இனத்தைக் கூட்டிக்கொண்டு வேறு காட்டுக்கு ஓடியது.",
"ஆவின் பால் கோவலன் தான் வளைத்து வைத்திருக்கும் பசுக்களின் பாலைக் கறந்து கொண்டு வந்து தன் மனைவியின் கலத்தில் ஊற்றுவான். அதனை அவள் உங்களுக்கு விருந்தாக அளிப்பாள். அதனால் தெம்பு பெற்ற நீங்கள் வருத்தம் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்."
],
"poem": [
"புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து",
"சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடைதலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின்வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்தவளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்",
"பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்"
]
},
{
"explanation": [
"வயலில் இருக்கும் நெல்லுக் கட்டுகளைப் போலக் குரும்பையாடு செம்மறியாடு வெள்ளாடு ஆகியவை ஆங்காங்கே கலந்து மேயும் வழியில் சென்றால் கடல் இரைச்சல் போல் அவற்றின் ஒலியைக் கேட்கலாம்.",
"பகல் வேளையில் அவ் வழியே சென்றால் அவற்றின் பாலை உலையாக வைத்து மலைமக்கள் பொங்கிய சோற்றை நீங்கள் சமைக்காமலேயே பெறலாம்."
],
"poem": [
"பகர்விரவு நெல்லின் பலவரி யன்னதகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்",
"பல்யாட் டினநிரை எல்லினிர் புகினேபாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்"
]
},
{
"explanation": [
"அன்னத்தின் தூவி மயிரைத் திணித்துச் செய்த மெத்தை போல இருக்கும் மான் தோலை உரித்து மிதித்துச் செம்மைப்படுத்திய தோல் விரிப்புப் படுக்கையின்மேல் தீப் பந்த வெளிச்சச் சூடு சாயும் படுக்கையின் மீது உறங்கிவிட்டுச் செல்லலாம்.",
""
],
"poem": [
"துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்னமெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின்"
]
}
] |
நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை | [
{
"explanation": [
"கூளியர் அம்பு விட்டால் கூப்பிடு தூரம் சென்று இலக்கைச் சரியாகத் தாக்கும்.",
"அவர்கள் வாழும் கூவைக் குடிசைகளைக் கண்டால் நன்னனைப் பார்க்கச் செல்கிறோம் என்று சொல்லுங்கள்.",
"அவர்கள் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள்.",
"யாரும் உங்களிடம் குறும்பு செய்ய மாட்டார்கள்.",
"சமைத்த கிழங்கும் புலால் கறியும் எல்லாருடைய வீட்டிலிருந்தும் வாங்கிவந்து உண்ணத் தருவார்கள்.",
"நன்னன் உலகிலுள்ள பகைவர் அனைவரையும் நெருஞ்சி முள்ளைத் தேய்ப்பது போல் காலால் தேய்த்துப் போட்டவன்.",
"பணியாத ஆளுமைத் திறம் பெற்றவன்.",
"நில மடந்தையின் கணவன்."
],
"poem": [
"கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்கொடுவிற் கூளியர் கூவை காணிற்படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக்கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினேதடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ",
"ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லைஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே"
]
}
] |
மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல் | [
{
"explanation": [
"முருகனுக்குச் சூட்டும் வெண்கடம்பப் பூவையும் மேட்டு நிலங்களில் பூத்த பல்வேறு தளிர்களையும் சேர்த்து மரல் நாரில் கட்டித் தலையில் சூடி அழகு படுத்திக் கொள்ளுங்கள்.",
"முரம்பு நிலம் கண் உடைந்து அதில் ஊற்றாக வந்து நடந்தோடும் நீரில் விளையாடுங்கள்.",
"அது ஊற்றெடுக்கும் பகுதியிலுள்ள நீரைப் பருகுங்கள்.",
"தொடர்ந்து செல்லுங்கள்."
],
"poem": [
"தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்தளிரொடு மிடைந்த காமரு கண்ணி",
"திரங்குமர னாரிற் பொலியச் சூடிமுரம்புகண் ணுடைந்த நடவை தண்ணெனஉண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்"
]
}
] |
புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல் | [
{
"explanation": [
"வேங்கைப் பூ சிவப்பாக மலரும்.",
"வெந்தால் அதுபோல் மலரக்கூடியது மூங்கில் அரிசிச் சோறும் நன்செய் அல்லாத புன்செய் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லஞ்சோறும் ஆகும்.",
"அந்தச் சோற்றுக்கு அவரைக்காய்ப் புளிக்குழம்பு.",
"தெருக்களில் மூங்கில் கழிகளின்மேல் புல்லால் வேய்ந்த குடிசை.",
"அந்தக் குடிசைகளில் எல்லாம் அந்த அவரைக்காய்ப் புளிக்குழம்புச் சோற்றை நடந்துவந்த களைப்புத் தீரப் பெறலாம்."
],
"poem": [
"செவ்வீ வேங்கைப் பூவி னன்னவேய்கொள் அரிசி மிதவை சொரிந்த",
"சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்அற்கிடை உழந்தநும் வருத்தம் வீடஅகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றியபுல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்"
]
},
{
"explanation": [
"அமலை என்பது பொங்கல் சோறு.",
"அது தங்கம் இறைந்து கிடப்பது போன்று காணப்பட்டது.",
"வழுவழுப்பாக உள்ள நுண்ணிய இழுது போன்ற வெண்ணெய் போட்டுச் சமைக்கப் பட்ட நெய்ச்சோறு அது.",
"அசதிக்குத் தங்கும் இடங்களில் எல்லாம் இதனை நீங்கள் பெறலாம்."
],
"poem": [
"பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி",
"வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலைதண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாகஅசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்"
]
},
{
"explanation": [
"நுவணை என்பது தினை.",
"விசயம் என்பது அல்வாப் பண்ணியம் பலகாரம்.",
"நுண் இடி என்பது தினைமாவு",
"விசயம் நுவணை ஆகியவற்றை உண்ணத் தருவார்கள்.",
"தங்கும் இடங்களில் எரியும் கனப்புக்கட்டையின் ஞெகிழியின் வெதுவெதுப்பு மலையின் குளிரைப் போக்கும்.",
"அந்த மலைமக்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் உறங்கலாம்.",
"பொழுது புலர்ந்து விடியும்போது பறவைகள் ஒலியெழுப்பும்.",
"அதைக் கேட்டு எழுந்து நன்னன் இருப்பிடம் நோக்கிச் செல்லலாம்."
],
"poem": [
"விசையங் கொழித்த பூழி யன்னஉண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை",
"நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப்புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்"
]
}
] |
நன்னனது தண் பணை நாட்டின் தன்மை | [
{
"explanation": [
"காவிலும் களத்திலும் யாழிசை மீட்டிக்கொண்டு ஆங்காங்கே பலநாள் தங்கியும் செல்லலாம்.",
"புல்லைப் போல் வேர் பிரியும் அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம்.",
"அதில் ஆற்றுப்புனல் பாய்ந்து பாதி வேரை அரித்து விட்டது.",
"மீதி பாதி வேர் மேட்டுநிலத்தில் பிடித்துக் கொண்டு நின்றது.",
"அது போல் மரம்கொண்ட ஊர்கள் பல.",
"அந்த ஊர்களில் சீரிய யாழ்ப்பண்ணைப் போல் ஒலி தரும் காடுகள் பல.",
"பள்ளிகளிலும் அந்த ஒலி.",
"பல நாள் அங்குத் தங்கினாலும் அந்த ஊருக்குப் போனவுடனேயே சென்று விட்டாலும் நன்னன் வளவயல் நாட்டில் பெறும் நன்மைகள் பலப்பல."
],
"poem": [
"புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப்",
"பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே"
]
}
] |
உழவர் செய்யும் உபசாரம் | [
{
"explanation": [
"பழனம் பழமையான வளவயல் பகுதிகளிலெல்லாம் மீன் வாடை வீசும்.",
"வலையோர் பழனங்களில் வாளை மீனை வலை போட்டுப் பிடித்து வருவார்கள்.",
"நிலையோர் வரால் மீனைத் தூண்டில் போட்டுப் பிடித்து வருவார்கள். இந்த வரால் மீன் யானையின் துதிக்கை போல உருவம் கொண்டிருக்கும்.",
"பழையர் மகளிர் வாளை மீன்களைத் துடியின் வாய் போல் நறுக்கி வயலில் பிடித்து வந்த நண்டையும் சேர்த்துச் சமைப்பார்கள். சமைத்த அந்தக் குழம்பைத் தராய் என்னும் தூக்குப்பாத்திரத்தில் வைக்கோல் போரின் ஓரத்தில் வைத்துக்கொண்டு வழங்குவார்கள்.",
"வளஞ்செய் வினைஞர் உழவர் மலைபோல் குவித்து நெல்லை வல்சி என்னும் உணவுப்பண்டம் அடித்துக் கொண்டு வந்து நல்குவார்கள்.",
"பசும்பொதித் தேறல் உழவர் மகளிர் வடித்த பச்சரிசிக் கஞ்சியைப் பதப்படுத்திய தேறலைத் தருவார்கள்.",
"இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் வெயில் இளகிய காலையிலும் மாலையிலும் வயலில் உள்ள போர்களங்களில் சொம்பு சொம்பாக தசும்பு இவற்றைப் பெறலாம்.",
""
],
"poem": [
"கண்புமலி பழனங் கமழத் துழைஇவலையோர் தந்த இருஞ்சுவல் வாளை",
"நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற்பிடிக்கை யன்ன செங்கண் வராஅல்துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த",
"விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇவளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்"
]
}
] |
சேயாற்றின் கரைவழியே செல்லுதல் | [
{
"explanation": [
"நெல் அறுக்கும் உழவர்கள் தண்ணுமை முரசை முழக்கிவர். அந்த ஒலியைக் கேட்டு எருமைக் கடா தன் இனத்தை விட்டுவிட்டுப் பிரிந்து ஓடும். கனைத்துக் கொண்டு தன் வலிமையைக் காட்டும் சினத்தோடு சேயாற்றுக்குள் இறங்கும்.",
"அங்கே அந்த எருமைக்கடா நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு சுழலும். குயவன் பானை வனையும்போது சக்கரத்தில் பானை சுழல்வது போலச் சுழலும்.",
"வெள்ளம் வேகமாகப் பாயும். அப்போது அது மதகை அடைத்து வைக்கும் ஓப்பலகை இடுக்குகளில் பீரிட்டுக் கொண்டு பீச்சும். இதனைக் கண்டவர்கள் மீண்டும் காண ஆசைப்படும்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும்.",
"பார்த்துக் கொண்டே சேயாறு ஆற்றங்கரையில் செல்லுங்கள்."
],
"poem": [
"வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றிவனைகலத் திகிரியிற் குமிழி சுழலும்துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும்",
"காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்"
]
}
] |
நன்னனது மூதூரின் இயல்பு | [
{
"explanation": [
"வரைப்பு என்னும் ஊர் செங்கண்மா என்பது சேயாற்றின் கரையில் உள்ளதோர் ஊர். அங்குப் பயன்படுத்திய செல்வம் போக மிஞ்சியிருக்கும் செல்வம் கேட்பாரற்றுத் தூங்கிக் கிடக்கும்.",
"குடிமக்கள் குடிமக்கள் அந்த ஊரை விட்டு வெளியூர் செல்லாமல் பழமையான குடிமக்களாகவே வாழ்வர்.",
"நியமம் காலியிடம் இல்லாமல் நெருக்கமாகக் கட்டப்பட்ட வீடுகளுடன் அதன் கடைவீதி அமைந்திருக்கும்.",
"தெரு நீரோடும் ஆறுபோல் மக்கள் நடமாடும் தெருக்கள் அமைந்திருக்கும். அந்த ஊரைக் காண்பதற்கு முன்னர் அதனை இகழ்ந்து பேசியவர்கள் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியப்படைவர்.",
"கவலை மறுகு சந்திகள் உள்ள குறுந்தெருக்களில் மக்களின் ஆரவாரம் கடலொலி போலவும் இடிமுழக்கம் போலவும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.",
"மாடம் மலைபோல் மழைமேகத்தைத் தொடும் அளவு ஓங்கியிருக்கும்.",
"பனிவார்கா ஊரைச் சுற்றியுள்ள காட்டில் பனி பொழிந்துகொண்டேயிருக்கும். பனித்துளி நீர்மூட்டம் அக் காட்டின்மீது ஊடல் கொண்டு ஒட்டுறவாடுவது போல் இருக்கும்.",
"வண்டினங்கள் பனி பொழியும் அந்தக் காட்டில் பல்வேறு வண்டினங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும்.",
"நன்னன் அரண்மனை அந்த இடத்துக்குச் சென்று விட்டால் நன்னன் அரண்மனை அங்கிருந்து அதிக தொலைவில் இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள். அண்மையில் தான் உள்ளது."
],
"poem": [
"நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇவியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து",
"யாறெனக் கிடந்த செருவிற் சாறெனஇகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடுமலையென மழையென மாட மோங்கித்துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும்",
"பனிவார் காவிற் பல்வண் டிமிரும்நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்"
]
}
] |
மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல் | [
{
"explanation": [
"படைக் கொட்டிலில் வாளும் வேலும் தாறுமாறாகச் சாத்தப் பட்டிருக்கும்.",
"அவை நன்னனின் மறவர்கள் பருந்துகள் பின்தொடரப் பகைவர் தலைகளைத் துண்டாக்கியவை.",
"அவற்றைக் கண்டு சோர்ந்து விடாமல் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே செல்லுங்கள்."
],
"poem": [
"பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர்கருங்கடை எகஞ் சாத்திய புதவின்",
"அருங்கடி வாயில் அயிராது புகுமின்"
]
},
{
"explanation": [
"உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அரசனுக்கு வரி செலுத்துவது போலக் கடமையாகக் கருதி விருந்துணவைச் சுமந்துகொண்டு வந்து உங்களுக்குத் தருவார்கள்.",
"உங்களை விருப்பத்தோடு பார்ப்பார்கள்.",
"இவர்கள் பொதுமன்றத்தில் வாழ்பவர்கள்.",
"வெற்றிவேல் முருகன் நன்னனின் பெருமையை எண்ணி நெடுந் தொலைவிலிருந்து வருபவர்கள். இரக்கம் காட்டி அளிக்கத் தக்கவர்கள். என்றெல்லாம் உங்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்.",
"விருந்து தருவார்கள்.",
""
],
"poem": [
"மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளிவந்தோர் மன்ற அளியர் தாமெனக்கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி",
"விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப்"
]
}
] |
அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம் | [
{
"explanation": [
"நன்னன் அரண்மனை வாயிலில் அவன் நாட்டு மலைமக்கள் கொண்டு வந்து குவிக்கும் பொருள்கள் பல. அவற்றை நீங்கள் உங்களது வழிநடை வருத்தம் நீங்க வேடிக்கைப் பார்க்கலாம்.",
"அவற்றோடு விளையாடித் திளைக்கலாம்.",
"ஆமான் விளக்கு எரிவது போலப் பூத்திருக்கும் மரா மரத்தடியில் கூடி விளையாடிய பசுவைப் போன்ற பெரிய மான்களின் தொகுதி வேறிடம் சென்ற போது திக்குத் தெரியாமல் நின்றுவிட்ட தனிமான்.",
"கயமுனி குட்டி யானை.",
"எண்கின் குருளை வட்ட அடியையுடைய வாய் பேசாத கரடிக் குட்டி.",
"வருடை பிளவு பட்ட அடி கொண்ட மலையாட்டின் கடா.",
"தீர்வை படமெடுத்தாடும் நல்ல பாம்பைப் பிடித்துண்ணும் கருடன்.",
"உழுவை குகையில் வாழும் புலி.",
"மரையான் புலியிடம் தப்பிய காட்டுப் பசுவின் கன்று."
],
"poem": [
"எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்தொழுதி போக வலிந்தகப் பட்டமடநடை ஆமான் கயமுனிக் குழவி",
"ஊமை எண்கின் குடாவடிக் குருளைமீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வைஅளைச்செறி உழுவை கோளுற வெறுத்த",
"மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி"
]
},
{
"explanation": [
"நன்னன் அரண்மனைப் பகுதியில் காணும் உயிரினங்களும் கிடைக்கும் உணவுப் பொருள்களும்.",
"உடும்பு அரக்கு போன்ற செம்மண் பரலில் கொடுக்குப் பிடி பிடித்து மேயும் ஆண் உடும்பு.",
"மஞ்ஞை மலைக்கே அழகு தந்து நடந்தாடும் மடக்கண் மயில்.",
"கானக்கோழிச் சேவல் விட்டிசை தந்து கூவும் காட்டுக் கோழிச் சேவல்.",
"இனி வருவன தின்பண்டம்.",
"பலாப்பழம்",
"மாம்பழத்தாரம்",
"இனிப்பு மாம்பழத்தில் பிழிந்தெடுத்து வடித்து விளையச் செய்த மாம்பழச்சாறு இக்காலத்து மாஸா போன்றது இது இடித்த மாவு போல் இனிப்பது.",
"இனி மீண்டும் மகிழ் பொருள்."
],
"poem": [
"அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றைவரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞைகானக் கோழிக் கவர்குரற் சேவல்",
"கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்இடிக்கலப் பன்ன நறுவடி மாவின்வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம்"
]
},
{
"explanation": [
"நன்னன் வாயிலில் கிடந்த செல்வவளங்கள்.",
"நூறை தூறலிலேயே செழித்து வளர்ந்து நுகம் போல் கிழங்கு விட்டிருக்கும் வள்ளிக்கிழங்கு.",
"திருமணி பருத்த பளிங்குகள் போலப் பளிங்குப் பாறைகள் மேல் உதிர்ந்து கிடக்கும் திருமணிகள்.",
"யானைத் தந்தம் வரிப்புலியோடு பொருது புண்பட்ட யானைத் தந்தங்கள்.",
"காந்தள் உடைந்த வளையல்கள் போல் ஊழ்த்தும் உதிர்ந்தும் கிடக்கும் காந்தள் மலர்கள்.",
"நாகக்கட்டை",
"திலகக்கட்டை",
"வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டை."
],
"poem": [
"தூவற் கலித்த இவர்நனை வளர்கொடிகாஅய்க் கொண்ட நுகமரு ணூறை",
"பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணிகுரூஉப்புலி பொருத புண்கூர் யானைமுத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்நாகந் திலக நறுங்காழ் ஆரம்"
]
},
{
"explanation": [
"முற்றத்தில் நிறைந்திருக்கும் பிற.",
"மிளகுக் கொத்து கருநிறக் கொடியில் காய்த்தது.",
"தேறல் மூங்கில் குழாயில் விளைய வைத்த கஞ்சிக் கள் தேன் கள்ளுமாம்.",
"காட்டெருமைத் தயிர் மூங்கில் குழாயில் பிறை ஊற்றப்பட்டது.",
"தேன் பாறை இடுக்கில் கட்டிய தேன் கூட்டின் மீது நீல நிற ஓரிக்குரங்கு பாய்ந்து வீழ்த்திய சக்கரம் போன்ற கூட்டுடன் கூடிய தேன்வட்டு.",
"ஆசினி உடம்புக்குத் தனித் தெம்பைத் தரும் குறும்பலா.",
"இவையும் இவை போன்று குடமலையில் விளைந்த அனைத்துப் பொருள்களும் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன.",
"இவை காவிரியாறு கடலோடு சேருமிடத்தில் புகார் கடல் வழியே கொண்டுவரப்பட்ட பண்டங்கள் குவிந்து கிடப்பது போல் குவிந்து கிடந்தன.",
"இவற்றில் எதுவுமே போரில் பெறப்பட்டது அன்று."
],
"poem": [
"கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறிதிருந்தமை விளைந்த தேக்கள் தேறல்கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர்நீனிற வோரி பாய்ந்தென நெடுவரைநேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல்",
"உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரிகடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்பநோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி"
]
}
] |
முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல் | [
{
"explanation": [
"இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பகுதியிலேயே நின்றுவிடாதீர்கள்.",
"முற்றத்துக்கு வாருங்கள்.",
"அங்கே வானம் போல் உயர்ந்ததாய் யானை நிற்கும்.",
"அதன் எரு வளம் மலிந்ததாய்க் கிடக்கும்."
],
"poem": [
"வானத் தன்ன வளமலி யானைத்",
"தாதெருத் ததைந்த முற்ற முன்னி"
]
},
{
"explanation": [
"அம்முற்றத்தில் இருந்துகொண்டு உங்களின் இசைக்கருவிகளை முழக்குங்கள்.",
"முழவு இடிபோல் முழங்கட்டும்.",
"மூங்கிலில் செய்த கொம்பை ஊதுங்கள்.",
"கருங்கோட்டுச் சீறியாழில் மருதப் பண்ணை எழுப்புங்கள்.",
"அப்போது யாழ் நரம்பின் பண்ணிசைக்கு ஏற்ப விறலியர் பாடட்டும். ஆடட்டும்.",
"தொன்று தொட்டு இருந்துவரும் மரபுமுறை வழுவாமல் கடவுளை வாழ்த்திய பின்னர் அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குங்கள்.",
""
],
"poem": [
"மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்பக்கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிரமருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்",
"கடவ தறிந்த இன்குரல் விறலியர்தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅதுஅருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை"
]
}
] |
கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல் | [
{
"explanation": [
"கொடைக்கடன் தீர்க்கும் செம்மலோய் என்று பாடும்போது",
"விருந்திற்பாணி அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குவதற்கு முன் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் புதிய பண்ணிசைப் பாடல்களைப் பாடுங்கள்.",
"பின்னர் நன்னனை வாழ்த்துங்கள்.",
"உலகில் அழியாத புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அரசர்கள் பலரின் வழிவந்தவன் நீ என்றாலும் அவர்களுக்குள் நீ யானை போன்றவன்.",
"வல்லவர்களிடையே வறுமையில் வாடும் நல்லவர் யார் என்று தெரிந்துணரும் பெரியோர்கள் பலர் இன்று இந்த உலகத்தில் வாழ்வு முடிந்து உலகின் பொது நியதியாகிய இறப்பைத் தழுவி நிற்கிறார்களே என்று எண்ணி கொடைக் கடமையை நீயே எடுத்துக்கொண்டு செம்மாந்து நிற்கும் செம்மலோய் !",
"என்றெல்லாம் நீங்கள் அவனைப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே"
],
"poem": [
"விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல்",
"இன்றிவட் செல்லா துலகமொடு நிற்பஇடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்கொடைக்கட னிறுத்த செம்ம லோயென"
]
},
{
"explanation": [],
"poem": [
"வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்சென்றது நொடியவும் விடாஅன்"
]
}
] |
நன்னன் கூறும் முகமன் உரை | [
{
"explanation": [],
"poem": [
"நசைதரவந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்"
]
}
] |
நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல் | [
{
"explanation": [
"வந்ததே போதும் என்று சொல்லி அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரோடு அமர்த்திக்கொள்வான்.",
"சுற்றத்தாரின் வலப்புறம்",
"மேலே சொன்னவாறெல்லாம் நன்னனின் வெற்றிப் புகழை அவனது பெருமையோடு சேர்த்துப் பாடுங்கள்.",
"நீங்கள் அவனிடம் எதற்காகச் சென்றீர்கள் என்று சொல்வதற்கு முன்னரே அவன் உங்களின் கருத்தை அறிந்தவனாகப் பேசத் தொடங்கி விடுவான்.",
"நீங்கள் என்னிடம் வந்ததே போதும். உங்கள் வருத்தம் பெரிது என நான் அறிவேன். என்பான்.",
"போரிட வந்த எதிரிகளை எதிர்கொள்ளப் போர்வீரர்களோடு சென்ற அவன் தன் அரண்மனை முற்றத்தில் தங்கச் செய்வதற்காகத் தன் சுற்றத்தாரை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்படைப்பான்.",
"உங்களை அவர்களுக்கு வலப்புறம் இருக்கச் செய்வான்."
],
"poem": [
"பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்துதிருநகர் முற்றம் அணுகல் வேண்டிகல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ"
]
}
] |
நன்னனது குளிர்ந்த நோக்கம் | [
{
"explanation": [
"தம் பெயரைத் தம்மோடு கொண்டுசென்ற மக்கள் சேயாற்று மணலைக்காட்டிலும் பலர்.",
"நன்னன் சேயாற்று வெள்ளம் போலப் பயன்படுபவன்.",
"பல அரசர்கள் உயர்ந்த அரியணையில் வீற்றிருப்பர்.",
"தம்மோடு உருமுதல் இல்லாத உரிமைச் சுற்றத்தோடு வீற்றிருப்பர்.",
"மிக விரிவான ஆட்சிப் பரப்பைக் கொண்டிருப்பர்.",
"ஆனால் அவர்களது அறிவு நுட்பம் சுருங்கியதாக இருக்கும்.",
"இல்லை இல்லை என்று சொல்லி எப்போதும் கையேந்திக் கொண்டும் இருப்பதைக் கூடத் தராமல் கையை விரித்துக் கொண்டும் வாழ்வார்கள்.",
"இப்படிப்பட்டவர்கள் நன்னன் நாட்டில் ஓடும் சேயாற்று மணலின் எண்ணிக்கையைவிட மிகுதியானவர்கள்.",
"சேயாற்று வெள்ளம் உயர்ந்த மலைகளிலிருந்து இறங்கி வரும்.",
"வயல்களில் பாய்ந்து கலங்கலாகி மீண்டும் ஆற்றில் விழும்.",
"இப்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும்.",
"நன்னன் சேயாற்று வெள்ளம் போன்றவன் என்பது கருத்து."
],
"poem": [
"உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து",
"அகன்ற தாயத் தகிய நுட்பத்துஇலமென மலர்ந்த கைய ராகித்தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று",
"வடுவாழ் எக்கர் மணலினும் பலரே"
]
},
{
"explanation": [
"நன்னன் ஆற்று மணலைப்போல் மாய விரும்பாதவன்.",
"ஆற்று வெள்ளம் போல் வாழ விரும்புபவன்.",
"தனக்கென்று வரையறுக்கப்பட்ட நாள்கள் புகழோடு கழியட்டும் என்று விரும்புபவன்.",
"அதுதான் பரந்து கிடக்கும் வானம் போன்று விரிந்து கிடக்கும் உள்ளம்.",
"நீங்கள் அவனை நயந்து செல்கிறீர்கள்.",
"அவனோ உங்களைக் காட்டிலும் உவந்த உள்ளம் கொண்டவனாய் ஆசையோடு உங்களைப் பார்த்து வரவேற்பான்.",
"அதுதான் விசும்பு தோய் உள்ளம்.",
""
],
"poem": [
"அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடுநயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிதுஉவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி"
]
}
] |
நன்னனது கொடைச் சிறப்பு | [
{
"explanation": [
"உடுக்க ஆடை உண்ணக் கறிச்சோறு பலநாள் தங்கினும் தருவான். இப்படித்தான் நன்னன் விருந்து இருக்கும்.",
"புத்தாடை இழை தெரியாத மெல்லிய நூலால் உடல் தெரியாத அளவுக்கு நெருக்கமாக நெய்யப்பட்ட பழிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பினைக் கொண்ட புத்தாடையை முதலில் அணிந்துகொள்ளச் செய்வான். வெள் அரை அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டிருந்த இடை",
"விருந்து முடுவல் என்னும் வேட்டை நாய் முடுக்கித் தான் கொண்டுவந்த விலங்கினக் கறியோடு நீண்ட அரிசியைக் கொண்ட நெல்லஞ் சோற்றை விருந்தாகப் படைப்பான்.",
"பலநாள் தங்கினாலும் முதல் நாளில் காட்டிய அதே விருப்பத்தோடு வழங்குவான்.",
"செல்வேம் தில்ல நாங்கள் எங்கள் பழைய ஊருக்குச் செல்ல விரும்புகிறோம் என்று மெல்ல செய்தி சொல்லி அனுப்பினால் போதும். அவன் முந்திக் கொள்வான்."
],
"poem": [
"இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇமுடுவல் தந்த பைந்நிணத் தடியொடுநெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாதுதலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து",
"பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாதுசெல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தெனமெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்"
]
},
{
"explanation": [
"தாமரை தலைவன் தலையில் அணியத் தாமரை என்னும் அணிகலமுடி",
"இழை விறலியர் மார்பில் அணிய ஒளிவீசும் அணிகலன்கள்",
"தேர் தண்ணீர் பாய்வது போல் நிறைவுடன் குளுமையாகச் செல்லும் தேர்",
"வேழம் ஆற்றுவாரி கொள்ளாத அளவுள்ள குன்று போன்ற யானை",
"ஆனிரை காளைகளுடன் கழுத்தில் மணி கட்டிய மாட்டு மந்தை",
"புரவி காலில் லாடம் கட்டிய குதிரைகள்.",
"நிதியம் ஏற்றிச் செல்ல முடியாமல் நிலம் தின்னட்டும் என்று எறிந்துவிட்டுச் செல்லக் கூடிய அளவில் பேரளவு நிதியம்"
],
"poem": [
"தலைவன் தாமரை மலைய விறலியர்சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய",
"நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர்வாரிக் கொள்ளா வரைமருள் வேழம்கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரைபொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவிநிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும்"
]
},
{
"explanation": [
"மூங்கிலடர்ந்த நவிரமலையில் பொழியும் மழை போல வழங்குவான்.",
"தலைநாள் போல் வழங்குவான்.",
"வழங்கும் கை வறுமையால் வாடிக் கையேந்தும் புலவர்களுக்குக் கைநிறையத் தருவான்.",
"வாய்வளம் பொருள் வளத்தை வாய்வளம் பழுக்க இனிய கூறித் தருவான்.",
"நவிரம் அவனது நவிர மலைமேல் திடீர் திடீரென்று மழை கொட்டுவது போல் கொடைப் பொருள்களைக் கொட்டுவான்.",
"தலைநாள் வாழ்நாளிலேயே தமக்கு வாய்த்த தலைமையான நாள் என்று எண்ணிக்கொண்டு ஏற்போர் அவர்களது வாழ்நாளில் தலைமையான நாள் என்று கருதும்படிப் பரிசில் வழங்குவான்.",
"அருவி நவிர மலையில் இறங்கிவரும் அருவியானது நன்னன் தன் பகைவர்களை வென்று மீளும்போது பிடித்துக்கொண்டு வரும் கொடிபோல் தோன்றும்.",
"குன்று சூழ் இருக்கை நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு பல குன்றுகளைத் தன்னகத்தே கொண்டதாக விளங்கிற்று.",
"இந்த நாட்டின் கிழவன் அவன்.",
"இந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன் இந்த நன்னன்."
],
"poem": [
"இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக்கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரெனமழைசுரந் தன்ன ஈகை நல்கித்",
"தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்வென்றெழு கொடியிற் றோன்றும்குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே."
]
},
{
"explanation": [
"நன்னன் ஏதோ ஒரு போரில் மாண்டது போன்ற மாய எண்ணத்தைச் சூரியன் பாம்பின் வாய்ப் பட்டானோ என்று பாடலில் பயின்று வரும் பிறிது மொழிதல் அணி தோற்றுவிக்கிறது.",
"இராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்கி உமிழும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது என்பது அக்காலத்துக் கற்பனை",
"சூரியன் தெரியவில்லை. ஏன்?",
"அவனது அரண்மனையில் வந்தவர்களுக்கெல்லாம் விருந்து படைக்க உணவு மிகப் பேரளவில் சமைக்கும்போது எழும் புகை வானத்தைப் போர்த்திச் சூரியனை மறைத்துள்ளதோ?",
"சூரியனைப் பாம்பு விழுங்கி விட்டதோ?",
"அன்ன நடையும் அழகிய முகமும் கொண்ட மகளிரின் மாந்தளிர் போன்ற நிறம் பசுமை பூத்துக் கிடக்கிறதே! காரணம் என்ன?",
"நன்னன் வானுலகம் சென்றுவிட்டானோ?",
"அவன் இல்லாததால் மகளிர் மேனியில் பசலை பூத்துக் கிடக்கிறதோ?",
"இப்படிப் பார்க்கும்போது இது அகப்பொருள் பற்றிய பாடல்.",
"மலைபடுகடாம் முற்றிற்று.",
""
],
"poem": [
"தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்?பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்?மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார்மாஅமை எல்லாம் பசப்பு!"
]
}
] |
🏞️ மலைபடுகடாம் (Malaipadukadam) Dataset
மலைபடுகடாம் (Malaipadukadam) is one of the Pathupattu (பத்துப்பாட்டு / Ten Idylls) in Sangam Literature, composed by the poet Perunkaucikanar (பெருங்கௌசிகனார்).
It contains 583 lines in a single long poem and is notable for its panoramic description of mountain life, nature, landscapes, seasonal changes, customs, and hospitality of the hill people. The poem also vividly portrays flora, fauna, rivers, and human culture of the Kurinji (mountain) landscape.
This dataset provides a structured digital format of Malaipadukadam, segmented into topics, poems, and explanations, which is suitable for Tamil NLP research, verse alignment, cultural entity extraction, and digital preservation of Sangam heritage.
📂 Dataset Structure
topic (string) → Thematic section heading
poems (list) → Contains poem segments with explanation
poem (list of strings) → Original Tamil poem lines
explanation (list of strings) → பொருளுரை (commentary / explanation in Tamil)
Example
[
{
"topic": "கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்",
"poems": [
{
"poem": [
"திருமழை தலைஇய இருணிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்ப",
"பண்ணமைத்து திண்வார் விசித்த முழவொடு ஆகுளி நுண்ணுருக் குற்ற",
"விளங்கடர் பாண்டில் மின்னிரும்பீலி அணித்தழைக் கோட்டொடு..."
],
"explanation": [
"பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து புலவர் சொல்கிறார்.",
"கூத்தர்கள் பேரியாழ், முழவு, ஆகுளி, பாண்டில், தூம்பு, குழல், தட்டை போன்ற பலவகை இசைக்கருவிகளைச் சுமந்து செல்கின்றனர்.",
"இவை மழையின் முழக்கத்தைப் போன்ற ஒலி தருவதால், விருந்தினரை மகிழ்விக்கும் வாத்தியங்கள் எனப் போற்றப்படுகின்றன."
]
}
]
}
]
📊 Dataset Statistics
Total Topics: ~12–15 thematic divisions
Total Lines: 583 (single poem segmented)
Language: Tamil (ta)
Format: JSON / JSONL
Size: ~600 KB
💡 Use Cases
Tamil NLP & Deep Learning (poem-to-explanation mapping, segmentation, entity recognition)
Cultural & Anthropological Studies (hill life, customs, landscape studies)
Text Summarization & Translation (Tamil ↔ English)
Poetic Structure Analysis (meter, sound, semantic segmentation)
Digital Preservation of Kurinji (mountain) cultural heritage
Educational Resources for Sangam Tamil literature
🔑 Licensing
License: Open Data – for research and educational purposes
Attribution: Required when using this dataset in publications or applications
#மலைபடுகடாம் #பத்துப்பாட்டு #சங்கஇலக்கியம் #தமிழ் #Malaipadukadam #SangamLiterature #TamilPoetry #ClassicalLiterature #AncientTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #TamilClassics #PoetryDataset #TamilAI #OpenSource
- Downloads last month
- 10