text
stringlengths
11
513
கவிகளைத்தான் கவிகள் என்று சொல்ல வேண்டும். மின்மினிப் பூச்சியையும் ' காக்காப் ' பொன்னையும் பார்த்து ஏமாந்து போகக் கூடாது. திருநெல்வேலி ஜில்லா நெடுகிலும் உண்மையான கவிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்களையும் மக்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள். பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் ந...
கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான். பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள். அவர்களை விட்டுவிட்டு , கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப...
முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான். சாதாரணமாக மழை பெய்யாத இடத்தில் மழை பெய்கிறது என்றால் குடியானவர்களுக்கு ஒரே கும்மாளி அல்லவா ? அந்தக் கும்மாளி , ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி - மலை யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே ! என்ற அடியிலே இருக்கிறது. குடியானவர்களுக்கு இடிமுழக்கம்தா...
நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயைத் தரிசித்தார். ரொம்ப ரொம்ப உரிமை பாராட்டி , சுவாமியிடம் சிபாரிசு செய்யவேண்டும் என்று முரண்டுகிறார். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெரு...
தமிழ்ப்பாட்டில் ( திருவாய்மொழியில் ) வெளியிட்டார். இது தமிழுக்குக் கிடைத்த யோகம். இனி மோட்டார் வண்டியை ஒரு முக்கியமான ஊருக்கு விட வேண்டும். கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர். பல தேசங்களிலுமிருந்து வர்த்தகர்கள் வந்து முத...
பாடினார். திருச்செந்தூருக்குச் சுவாமி தெரிசனம் செய்யப் போக வேண்டியதுதான் இனி. வழியிலே , காயல்பட்டணத்தில் கொஞ்சம் இறங்கிவிட்டுப் போகலாம். காயல்பட்டணத்தில் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வாணிகர் இருந்தார். அவருடைய கப்பல்கள் பல தேசங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலமாக மிகுந்த திரவியத்தைச் சம்பாதித...
பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் நாமாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக் கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச் சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே ! உண்மையான உணர்ச்சி. இனிப் போக வேண்டியது திருச்செந்தூருக்குத்தான். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் வந்து , நந்தவனங்களைப் பார்த்து அனுபவ...
வண்டியைத் திருப்பி , நேரே கழுகுமலைக்குப் போவோம். இக்காலத்தில் பாடுகிற காவடிப்பாட்டெல்லாம் கழுகுமலை முருகன் மேல்தான். இக்காவடிச்சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார். காவடிப்பாட்டைக் கேட்க வேண்டுமானால் , பம்பை , மேளம் , ஆட்டம் எல்லாவற்றோடும் கேட்டால்தான் ரஸமும் , சக்தியும் தெரியும். இங்கிருந்து சங்கரன்கோயில் பன்னிரண்டு மைல். ப...
அம்ம உனைக் கூடாதென்றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே ! பக்தியானது தமிழுக்குள்ளே வளைந்து வளைந்து ஓடுவது அழகாய் இருக்கிறது ! சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர். இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் ...
பாடப் பாட நாவுக்கு இனிமை தந்து கொண்டிருக்கின்றன. இனி , குற்றாலத்துக்கு நேராகப் போகவேண்டும். கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில் , அருவி , சோலை பொதிந்த மலை , தென்றல் எல்லாம் சேர்ந்து அமைந்திருப்பதைப் பார்த்தால் , உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு...
யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே ! 160 பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு ம...
குற்றாலமலையின் பெருமையைக் கொழிக்கிறாள் : கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே ! கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே ! துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே ! இப்பாட்டு , மலையிலுள்ள அருவிகளைப் போல் கும்மாளி போடுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருநெல்வேலிக் கவிகளின் கவிதைகளைப் படி...
மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும். நூல் வெளி டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர் ; தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர் ; இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர். இவர் தமது வீட்டில் ' வட்டத்தொட்டி ' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். ...
இருந்து தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக. மதிப்பீடு டி.கே.சி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. அணி இயல் உவமை அணி கற்கண்டு அணி இலக்கணம் அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும் , பொருளால...
ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை ( மயில் , மீன் ) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள ' போல ' , ' போன்ற ' என்பவை உவம உருபுகளாகும். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை ( பொறையுடைமை ) பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் ...
வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் ( உவமேயம் ). ' போல ' என்பது உவம உருபு. ஒரு பாடலில் உவமையும் , உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். போல , புரைய , அன்ன , இன்ன , அற்று , மான , கடுப்ப , ஒப்ப , உறழ போன்றவை உவம உருபுகளாக வரும். எடுத்துக்காட்டு உவமை அணி தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்...
எட்டு ஒப்புரவு ஒழுகு கற்றல் நோக்கங்கள் பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல் அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல் ஒரு கருத்தை மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து பயன்படுத்துதல் படக்காட்சிகள் வழி கருத்துகள...
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப்பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும். அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும். அதனைப் பற்றிய சிந்தனைகளை அறிவோம். ஒப்புரவு நெறி இந்த மானுடப் பிறவி தற்செயலாகவோ விபத்தின் காரணமாகவோ ...
வாழ்ந்தோம் என்பதே கேள்வி. வாழ்ந்த காலம் எந்தமுத்திரையைப் பெற்றது ? வாழ்ந்த காலம் ஏதாவது அடையாளங்களைப் பெற்றதா ? நம் பெயர் காலந்தோறும் பேசப்படுமா என்றெல்லாம் சிந்திப்பவர்கள் வாழும்நெறி பற்றிக் கவலைப்படுவார்கள் ; குறிக்கோளுடன் வாழத்தலைப்படுவார்கள். வாழ்வின் குறிக்கோள் வாழ்க்கை குறிக்கோள் உடையது. அக்குறிக்கோள் எது ? தாம் ...
தொண்டினையே குறிக்கோளாக உடையது. இந்தக் குறிக்கோளுடன்தான் ஒப்புரவு நெறியைத் திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது. திருக்குறள் நெறியில் மக்கள் ஒருவருக்கொருவர் கடமைகளைச் செய்வதற்கு உரியவர்கள். உரிமைகளைப் பெறுவதற்கும் உரியவர்கள். ஒருவர் எல்லாருக்காகவும் , எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும்...
செய்து கொள்ளுதல் மட்டும் போதாது. உதவி செய்தல் எதற்காக ? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும்கூட உதவி செய்யலாமே ! சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான். அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன் , உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி , உரிமை உடையவராக நினைந்து , உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும...
இல்லை. ஒப்புரவுநெறி சார்ந்த வாழ்க்கையில் உடைமைச்சார்பு இறுக்கமான தனியுடைமையாக இல்லாமல் அறநெறி சார்ந்த குறிக்கோளுடைய உடைமையாக அமையும். ஒப்புரவில் ஈதல் ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர்- இரவலர் உறவு இல்லை. ஒப்புரவுநெறி சார்ந்த வாழ்க்கை உரிமையும் கடமையும் உடைய வாழ்வு முறையாக அமைவதால் கடமைகள் உரிமைகளை வழங்குகின்றன. பொர...
பாதுகாப்பும் அன்று. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால் வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும். இம்முறையை அப்பரடிகள் எடுத்துக் கூறினார். அண்ணல் காந்தியடிகள் வழிமொழிந்தார். பாவேந்தர் பாரதிதாசனும் உலகம் உண்ண உண் ; உடுத்த உடுப்பாய் என்றார். செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை. பொருளீட்டல் தான்ம...
உரிய கரு. இரப்பார்க்கு இல்லென்று இயைவது கரத்தல் அறிவியல் அன்று ; அறமும் அன்று. செய்வது செய்து பொருள் ஈட்டி இரப்பார் துன்பத்தை மாற்றுவதே சமூகத்தின் பொது நிலை. பொருள் ஈட்டல் , சேர்த்தல் , பாதுகாத்தல் மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு பணி இல்லை ஒரு போராட்டம். பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம். அதைவிடப் பெரிய காரியம் அதை முறை...
அறிவும் பண்பும் உடையவர்களுக்குப் பணம் பணியாள். ஆனால் , இவை இல்லாதவர்க்கோ மோசமான எசமானன். வாழ்க்கையை உணர்ந்து கொள்ளச் செல்வம் மட்டுமன்றி வறுமையும்கூடத் துணை செய்யும். பொருளும் தேவை ; அதைத் துய்க்கத் திறனும் தேவை. பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம். செல்வத...
யாருமில்லை. ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம். பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல. மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப்பெறுகிறது. நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பய...
ஒப்புரவும் கடமையும் ஊருணியை அகழ்ந்தவன் மனிதன். அந்த ஊருணியில் தண்ணீரைக் கொணர்ந்து தேக்கியது யார் ? மனிதர்தாம். ஊருணியை அமைத்துத் தண்ணீரைத் தேக்கும் கடமை பொறுப்புணர்வுடன் கூட்டுப் பொறுப்புடன் செய்யப் பெற்றால்தான் ஊருணியில் தண்ணீர் நிறையும். பலரும் எடுத்துக் குடிக்கலாம். பயன்தரும் மரங்களை வளர்த்தால்தான் கனிகள் கிடைக்கும்...
ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது உழைப்பு ; கூட்டு உழைப்பு. பொருள்களைப் படைக்கும் கடமைகள் நிகழாத வரையில் ஒப்புரவு வாழ்வு மலராது. கடமைகள் இயற்றப் பெறாமல் ஒப்புரவு தோன்றாது. ஒரோவழி தோன்றினாலும் நிலைத்து தெரிந்து தெளிவோம் ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. ( குறள். 215 ) உலகினர் விரும்புமாறு உதவி ...
ஊருக்குள் பயன் தரும் மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது. நில்லாது.கடமைகளில் , பொருள் செய்தலில் ஒவ்வொருவரும் கூட்டு உழைப்பில் ஈடுபட்டால்தான் ஒப்புரவுநெறி தோன்றும் ; வளரும் ; நிலைத்து நிற்கும். நிறைவாக நாம் இன்று வாழ்வது உண்மை. நமக்கு வாய்த்திருக்கும் வாய்ப்புகளும் அருமையானவை. ஏன் காலம் கடத்த வேண்டும் ? இன்று நன்ற...
பொறுப்பை ஏற்போம். பொதுமையில் இந்தப் புவியை நடத்துவோம். பொதுவில் நடத்துவோம். உலகம் உண்ண உண்போம். உலகம் உடுத்த உடுத்துவோம். எங்கு உலகம் தங்கியிருக்கிறதோ அங்கேயே நாமும் தங்குவோம். மண்ணகத்தில் விண்ணகம் காண்போம். நூல் வெளி மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளா...
கடமையாகக் கொண்டவர். நாயன்மார் அடிச்சுவட்டில் , குறட்செல்வம் , ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அருளோசை , அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார். ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கற்பவை கற்றபின் பிறருக்கா...
என்பது ஆ ) பொதுவுடைமை ஈ ) ஒழுக்கமுடைமை 176 அ ) தனியுடைமை இ ) பொருளுடைமை இயல் எட்டு உருவக அணி ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர்க் கற்றோம். உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னு...
இன்பத்தை ' இன்ப வெள்ளம் ' என்று கூறுவதும் கடல் போன்ற துன்பத்தைத் ' துன்பக்கடல் ' என்று கூறுவதும் உருவகம் ஆகும். வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே என்று இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும் , கடல் நெய்யாகவும் , கதிரவன் சுடராகவும் உருவகப்...
அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி , மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். ( ஏகதேசம் - ஒரு பகுதி ) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். விளக்கம் வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல...
பொருள் : பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது. அரண் 7. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண். பொருள் : தெளிந்த நீரும் , நிலமும் , மலையும் , அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும். 8. எனைமாட்சித்து ஆகியக் க...
சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். * பொருள் : பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை , தீமையாகிய செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை. 10. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். பொருள் : உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் ச...
குணத்தால் 189 ஈ ) தெளிந்த நீர் ஈ ) பணத்தால் பாடலின் பொருள் ( தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார். ) சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனி...
சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும். இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு. மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வ...
அவர்கள் தன்னாடு என்றும் , பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. வை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும். நூல் வெளி கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா , இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும...
எழுதியுள்ளார். இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன. கற்பவை கற்றபின் இயேசுவின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்துவந்து வகுப்பறைய...
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து அதில் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது இளைஞர் ஒருவர் திருச்சி தூயவளனார் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். காந்தியடிகளின் வேண்டுகோள் அவருக்குள் தீராத விடுதலை வேட்கையை ஏற்படுத்தியது. தமது கல்வியைவிட நாட்டின் விடுதலையே மேலானது என்று...
, பொறுமை , நாட்டுப்பற்று முதலிய பண்புகளை ஒருங்கே கொண்டு சிறந்து விளங்கிய தலைவர் ஒருவர் ' கண்ணியமிகு ' என்னும் அடைமொழியால் அழைக்கப்படுகிறார். அப்பெருமைமிகு எளிமையின் சிகரம் அந்த இளைஞர் பிற்காலத்தில் பெரிய அரசியல் தலைவராக வளர்ந்தார். அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்குத் தனி மகிழுந்தில் செல்லமாட்டார். தொடர்வண்டி ,...
அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் சார்பாக அவருக்கு ஒரு மகிழுந்தும் பெருந்தொகையும் பரிசளிக்கப்பட்டன. அவற்றையும் தாம் தொடங்கி வைத்த கல்லூரியின் பயன்பாட்டிற்கு அளித்துவிட்டார். I ஆடம்பரம் அற்ற திருமணம் அவரது குடும்ப நிகழ்வுகளிலும் எளிமையைக் காணமுடிந்தது. அவர் தம் ஒரே மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் மிகப்பெரிய...
பெண் வீட்டாரிடம் மணக்கொடை பெறுவது பெருகியிருந்த அக்காலத்தில் மணக்கொடை பெறாமல் அத்திருமணத்தை நடத்தினார். மேலும் " மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் " என்று வெளிப்படையாக அறிவித்தார். நேர்மை அந்தத் தலைவர் ஒருமுறை தமது இயக்க அலுவலகத்தில் இருந்தபோது அங்கிருந்த பணியாளரை அழைத்தார். அவரிடம் ஓர் உறையையும் பண...
அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒட்டி விடுகிறேன் " என்றார். அதற்கு அந்தத் தலைவர் , " வேண்டாம். இது நான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது " என்று கூறினார். மொழிக்கொள்கை இந்தியா விடுதலை பெற்ற பிறகு அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் நாட்ட...
பரிந்துரை செய்தனர் வேறு சிலர். அப்போது அந்தத் தலைவர் " பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால் , அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் திராவிட மொழிகள்தாம் இந்த மண்ணிலே முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள். அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவுகொண்ட தமிழ...
இருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1962 ஆம் ஆண்டு போர் மூண்டது. அப்போது தனது ஒரே மகனைப் போர்முனைக்கு அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அந்தத் தலைவர் அப்போதைய முதன்மை அமைச்சர் ஜவகர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினார். இத்தகைய சிறப்புகளுக்கெல்லாம் உரிய தலைவர் யார் தெரியுமா ? அவர்தான் கண்ணியமிகு காயிதே மில்ல...
மக்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார் அவர். தெரிந்து தெளிவோம் தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார். அரசியல் பொறுப்புகள் காயிதே மில்லத் 1946 முதல் 1952 வரை அப்போதைய சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். இந்தி...
– அறிஞர் அண்ணா இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர். - தந்தை பெரியார் கல்விப்பணி கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத். " கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை " என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார். திருச்சிய...
நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். இதனால் இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைப் பெற்றனர். தலைவர்கள் பலராலும் பாராட்டப்பட்ட பண்பாளர் அவர். எல்லாரிடமும் வேறுபாடு இல்லாமல் எளிமையாகப் பழகும்...
அடையாளமாகத் திகழ்ந்த பிற தலைவர்கள் குறித்து வகுப்பறையில் பேசுக. தான் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மனிதப்பண்பு அன்று.பிறருக்கு உதவி செய்வதும் பிறரது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றி அவர்களது மகிழ்ச்சியைக் கண்டு இன்பம் அடைவதும் சிறந்த மனிதப்பண்பு ஆகும். இதனையே ஈத்துவக்கும் இன்பம் என்று நம் முன்னோர் குறிப்பிட்டனர். பிறரு...
மிதிவண்டி வாங்கினேன். நூற்றி எண்பது ரூபாய். மிதிவண்டியில் ஏறிப் புறப்படுவதுதான் என் பொழுதுபோக்கு. காற்றுத் தழுவ ஓட்டத் தொடங்கியதுமே அப்படியே ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றும். தெரிந்த ஊர்கள் , தெரியாத ஊர்கள் எல்லா இடங்களுக்கும் மிதிவண்டியிலேயே செல்வதுதான் என் பெரிய மகிழ்ச்சி. இரண்டு கூட்டாளிகளைச் சேர்த்துக் ...
கால ஆசை. வழிநெடுக காடு , மலை ஆகியவற்றின் தோள்களில் என் மிதிவண்டியை உருட்டிச் செல்ல ஆர்வம் கொண்டிருந்தேன். அதிகாலையிலேயே கிளம்பினேன். எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி வந்திருப்பதில் மனம் உற்சாகமுற்றிருந்தது. இரண்டு நாட்களில் ஹாசன் சேர்ந்துவிட்டேன். பகல் வெப்பத்தை ஈடு கட்டுவது போல் இரவில் கடும் மழை. விடியும்போது குளிரத்...
தூறலில் நனைவது கூட மகிழ்ச்சியாக இருந்தது. நிற்காமல் சென்று கொண்டிருந்தேன். பெரிய இறக்கத்தில் இறங்கும்போது மிதிவண்டிச் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒட்டுகிற கருவிகளும் காற்றடிக்கும் கருவியும் எப்போதும் கைவசம் இருப்பதுதான் வழக்கம். இந்த முறை தன் வேலைக்காகக் கடன் வாங்கி எடுத்துச் சென்ற உற...
எட்டுகிற உயரத்தில் பெரிய பெரிய பலாப்பழங்களின் தொங்கலாட்டம். அதற்குப்பின் தேக்கு மரங்கள். தாவும் குரங்குகள். ஆள் சந்தடி எதுவும் கண்களில் படவில்லை. எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ , எனக்குத் தெரியாது. மழையின் வேகத்தையும் மீறி எழுந்த குரல் என்னைத் தடுத்து நிறுத்தியபோது பாதையோரம் ஒரு குடிசை தெரிந்தது. அதன் கதவுக்கு அருகில் இர...
எடுத்து வந்து தந்தான். மிதிவண்டியில் இருந்த என் தோள் பையை எடுத்தான். அதன் மீது இருந்த நீரை அவனே வழித்து உதறி ஓரமாக வைத்தான். இதற்குள் உள்ளே இருந்து ஒரு நடுவயதுப் பெண்மணி கதவருகே வந்து நின்றார். " அம்மா , பாவம்மா இவரு " என்று என்னைக் காட்டி அவரிடம் சொன்னான் அச்சிறுவன். பேசக் காத்திருந்த மாதிரி அச்சிறுவன் உற்சாகமாகக் கேள...
எங்க அம்மாகூட பெரியவனாய்ட்ட பிறகுதான் வாங்கித் தந்தாங்க " என்றேன். அந்தப் பதில் அவனுக்கு மன நிறைவாக இருந்தது. " அப்படியாம்மா ? " என்று தன் அம்மாவைப் பார்த்தான் அச்சிறுவன். அவர் " ம் " என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். " உனக்கு ஓட்டத் தெரியுமா ? " " குரங்கு பெடல் போட்டுத்தான் ஓட்டுவேன் " " மழை நிக்கட்டும் நான் கத்துக் ...
மிதிவண்டி ஓட்டக் கத்துக்கிட்டேன். ஆனா மாமா ரொம்பக் கண்டிப்பு. அவர் இல்லாத நேரத்தில் தான் மிதிவண்டியைத் தொடமுடியும். " அச்சிறுவன் என்னோடு சுவர் ஓரம் படுத்துக்கொண்டான். என்னிடம் கதை கேட்கத் தொடங்கினான். நான் சுற்றிய ஊர்களைப் பற்றியும் பார்த்த மனிதர்களைப் பற்றியும் கேட்டான். நான் என் சிறுவயசுக் காலத்தை எண்ணியபடி எல்லாவற்ற...
இறங்கிப் போன சக்கரத்தைக் கையால் சுற்றிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். சக்கரக் கம்பியில் சிவப்பு நிறத் துண்டுத் துணி ஒன்றைக் கட்டிவிட்டு அது மேலும் கீழும் மாறி வருவதை ஓட்டிக் காட்டினான். நான் சிரித்தேன். " மொதல்ல சக்கரத்தைச் சரி செய்யணும் " என்றேன். " பக்கத்தூர்ல சந்திரேகௌடா மிதிவண்டிக் கடை வைச்சிருக்...
ஏறிப் பறந்து விடுவான் போலத் தோன்றியது. மணியை அழுத்தி சத்தமெழுப்பிக் கொண்டே வந்தான். என்னைப் பற்றி விசாரித்தபடியே சந்திரேகௌடா சக்கரத்தைச் சரி செய்து , காற்றடைத்துத் தந்தார். நான் கொடுத்த பணத்தை நன்றியுடன் வாங்கிக் கொண்டார். வரும்போது அவனை மிதிவண்டியில் ஏறி ஓட்டி வரும்படி சொன்னேன். அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குரங்கு ...
எட்டாமல் போகும்போது இடுப்பை அதிகமாக வளைத்து விழுந்தான். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஓட்டிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பினோம். அவனது அம்மா சூடாக அவல் வறுத்துத் தந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மழை பிடித்துவிட்டது. மழை நின்றதும் நான் கிளம்பிட நினைத்தேன். ஆனால் சிறுவன் " எனக்கு நல்லா ஓட்ட கத்துத்தரன்னுதானே சொன்னீங்க...
அடிக்கடி தலை குனிந்து பார்த்தான். அதுதான் ஒரே குறை. மற்றபடி இடுப்பு படிந்துவிட்டது. மிதிவண்டி ஓட்ற மாதிரியே இல்ல. ஏதோ றெக்க கட்டி பறக்கிற மாதிரி இருக்குது " என்றான். அவன் கண்களைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நண்பகலில் மீண்டும் மழை தொடங்கியது. சாயங்காலம்தான் நின்றது. நான் " கிளம்பட்டுமா ? " என்றேன். அச்சிறுவன்...
மிதிவண்டிப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். " விடிஞ்சதும் நானும் உங்களோடு வரட்டுமா ? " " ம் " என்று உற்சாகமூட்டினேன். " அரிசிக்கெரெல என்ன விட்டுடுங்க. மாமா வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு திரும்பிடுவேன் ". விடிந்தபோது மழை விட்டிருந்தது. அவர்களுக்குக் கொஞ்சம் பணம் தரலாம் என்று தோன்றிய எண்ணத்தை உடனடியாய் விலக்கினேன். ...
பத்தரம் " என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அவரது அக்கறையையும் கவலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் புறப்பட்டோம். அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டான். அந்தச் சூழல் மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. பெரிய பெரிய மரங்கள். குன்றுகள். சிறுவன் பேசியபடி வந்தான். மிகவும் தயங்கி " நான் கொஞ்சம் ஓட்டட்டுமா " ?...
பதினைந்து மைலுக்கு அப்புறம் மீண்டும் அவன் ஓட்டினான். வழியில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டோம். அரிசிக்கெரே நெருங்கியதும் வீடுகள் தென்பட்டன. வாகனங்களும் மனித நடமாட்டமும் தெரிந்தன. மூன்று நாட்களுக்கப்புறம் மனித நடமாட்டத்தைப் பார்த்தபோது மனம் கிளர்ச்சியுற்றது. " இன்னும் கொஞ்ச தூரம்தான் எங்க மாமா வீடு. அது வரைக்கும் நானே மிதிவண...
உற்சாகத்தைக் குலைக்க விருப்பமில்லை. " சரி " என்றேன். " பார்த்து பார்த்து " என்று எச்சரிப்பதற்குள் அவன் பாய்ந்துவிட்டான். நான் தேநீர் குடிக்கச் சென்றேன். குடித்து விட்டு வெளியே வந்து அவனுக்காகக் காத்திருந்தேன். சாலை மிகவும் பரபரப்பாக இருந்தது. வேகவேகமாகச் செல்லும் வாகனங்கள்.. மஞ்சள் துணி போர்த்திய ஆட்டோக்கள். லாரிகள். ந...
தெரிவது போல் இருந்தது. என்னைப் பார்த்துப் பெருமிதமாய் அவன் சிரிப்பது போலவும் இருந்தது. எதிர்பாராதவிதமாக முன்னால் வந்து நின்ற ஹாசன் பேருந்தில் சட்டென்று ஏறி உட்கார்ந்துவிட்டேன். வண்டியும் உடனே கிளம்பி விட்டது. நூல் வெளி பாவண்ணன் சிறுகதை , கவிதை , கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார். கன்னட ம...
எழுதியுள்ளார். பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் 1. நீங்கள் சென்று வந்த பயணம் குறித்து வகுப்றையில் கலந்துரையாடுக. 2. நீங்கள் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் பற்றிப் பேசுக. ஏற்க மதிப்பீடு ' பயணம் ' கதையைச் சுருக்கி எழுதுக. இயல் ஒன்பது பொருளாகுபெயர் தோட்டத்...
நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. இவ்வாறு ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். மல்லிகை சூடினாள். பொருள் , இடம் , காலம் , சினை , பண்பு , தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு. கற்கண்டு திசம்பர் சூடினாள். ஆகுபெய...
கூறுவர். இடவாகுபெயர் சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது. தமிழ்நாடு என்னும் இடப்பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இஃது இடவாகுபெயர் ஆகும். காலவாகுபெயர் சினையாகுபெயர் தலைக்கு ஒரு பழம் கொடு. இத்தொடரில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் இது காலவாகுபெயர் ஆயிற்...
இனிப்பு என்னும் பண்புப்பெயர் அப்பண்பை உடைய தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று. தொழிலாகுபெயர் பொங்கல் உண்டான். $ இத்தொடரில் பொங்கல் ( பொங்குதல் ) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகுபெயர் ஆகும். இரட்டைக்கிளவி தங்கை விறுவிறுவென நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களை...
பிரித்துப் பார்த்தால் பொருள் தரவில்லை. இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து , பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர். அடுக்குத்தொடர் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அமுதன் திடீரென , பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே ? என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவனருகே ஓடிவந்தனர். " இல்லை இல்லை. ...
முறை இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அச்சம் , விரைவு , சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர். அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது. அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி - ஒப்பீடு அடுக்குத்தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்...
அடுக்குத்தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். இரட்டைக்கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும். அடுக்குத்தொடர் விரைவு , வெகுளி , உவகை , அச்சம் , அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும். கீழ்க்காணும் அறிவிப்பைப் படித்து அதன்பின் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க. த...
ஒலிப்பான்கள் பொருத்தப் பட்டிருக்கவேண்டும். எச்சரிக்கை ஒலி எவ்வாறு இருக்கும் என்பதைப் அறிந்திருக்கவேண்டும். தரமான மின் சாதனங்களையே பயன்படுத்தவேண்டும். பணியாளர்கள் சமையல் செய்யும்போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில் , பெரியவர்களின் மேற்பார்வையில்தான் வெடிக்க வேண்டும். நிறுவனங...
வேண்டும் தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை உடனடியாகத் தீயணைப்பு மீட்புப் பணித் துறைக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பொழுது தீவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தினைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும். தீ...
தீக்காயம் பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும். பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல் , அவசரகால வழியில் வெளியேற வேண்டும். அருகில் இருக்கும் கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்யவேண்டும். தீ திருக்குறள் எளிய உரை – டாக்டர் வ.சுப. மாணிக்கனார் 17. அழு...
வளர்ச்சிக்குப் பொறாமைப்படுவான். பொறாமையால் தமக்குத் தீதுவரும் ஆதலின் பொறாமையால் பிறர்க்குத் தீது செய்யார். 17. அழுக்காறாமை ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்....
இன்ரிக் கெடும். அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் வெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். 19. புறங்கூறாமை அறம் கூறான் அல்ல செயினும் ஒருவ...
முன்இன்று பின்நோக்காச் சொல். அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும். பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். துண்ணியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் பு...
பொறாமைப்படுபவன் உண்மையில் வளர்கிறானா ? நல்லவன் கெடுகிறானா ? எண்ணிப்பார். 10. பொறாமையால் வாழ்வு விரிந்தவரும் இல்லை ; பொறுப்பதால் வளர்ச்சி குறைந்தவரும் இல்லை. 19. புறங்கூறாமை - எளிய உரை 1. ஒருவன் அறத்தைப் பழித்துத் தீமை செய்யினும் கோள் சொல்லான் என்பது காதுக்கு இனியது. பொறாமையாளரைக் கெடுக்க அதுவே போதும் ; பகைவர் கெடுக்கத்...
தீமையினும் தீது புறத்தே இகழ்ந்து முன்னே புகழ்வது. கோள்சொல்லி நடித்து உயிர் வாழ்தலினும் சாவது நல்லது ; அறத்தின் பயன் கிடைக்கும் , எதிரே கடுமையாகச் சொல்லினும் சொல்லலாம் ; ஆளில்லாத போது கோள் சொல்லற்க. இவன் நெஞ்சத்தில் நேர்மை இல்லை என்பது கோள் சொல்வதிலிருந்து கண்டு கொள்ளலாமே ? பிறரது குறையை நீதேடிக் கூறின் உன் பெரிய குறையை...
புறங்கூறுபவனை உலகம் சுமக்கிறது ; அதுவும் ஓர் அறமோ ? பிறர்குறை காண்பதுபோல் தங்குறை காணின் வாழும் உயிர்க்குத் தீது உண்டோ ? அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு...
சுடும். உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய் வாரின் தலை. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். எல்லா விளக்கும் விள...
துன்பமும் உடைய உலகத்தை அருள்நெஞ்சம் கொண்டவர் அடைய மாட்டார். எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனுக்குத் தன்னுயிர் பற்றிய கவலை வினை இல்லை. அருளாளர்க்குத் துன்பம் என்பது இல்லை ; காற்றுடன் வளமுடைய இவ்வுலகமே சான்று. அருள் இல்லாமல் கொடுமைகள் செய்பவர் பொருளிழந்து வாழ்வும் வழுவினார் ஆவர். பொருளில்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை ; ...
10. உன்னினும் எளியவனை நீ வருத்தும்போது உன்னினும் வலியவன்முன் உன்னை நினை. 30. வாய்மை - எளிய உரை 1. வாய்மை என்று போற்றப்படும் பண்பு எது ? சிறிதும் தீமை இல்லாத சொற்களைக் கூறுவது. அருளிலான் அறஞ்செய்தான் என்பது பேதை இறைவனைக் கண்டான் என்பது போலாம். 2. பொய்யினால் பிறர்க்குத் துயநன்மை வரின் அப்பொய்யையும் மெய்யாகக் கொள்ளலாம். 3...
6. பொய்சொல்லாமை பெரும் புகழாம் ; 7. உண்மையை உண்மையாகவே கடைப்பிடித்தால் பிறஅறங்கள் செய்யவும் வேண்டுமோ ? 8. புறத்தூய்மை நீரால் உண்டாகும் ; மனத்தூய்மை பொய் சொல்லாமையால் விளங்கும். பொய் சொல்லத் தெரியாமை பேரறமாம். எல்லா ஒளியும் ஒளியல்ல ; சான்றோர்க்கு உண்மை ஒளியே ஒளி. யாம் உண்மையாகக் கண்ட உண்மைகளுள் வாய்மையினும் நல்லறம் வேறி...
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு , 8. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள் பவர்க்கு. அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. 10. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன...
கற்றபின் நிற்க அதற்குத் தக. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. 5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர். தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. கண்உடையர் என்பவர் கற்றார் முகத்துஇரண்டு புண்உடையர் கல்லா தவர். உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனை...
காமுறுவர் கற்றறிந் தார். கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை , படைகுடி உணவு அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையவன் அரசரிற் சிறந்தவன். 2 அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் நான்கும் வேந்தனுக்கு நன்கு வேண்டும். 3. காலத்தாழமை கல்வி துணிவு மூன்றும் நிலன் ஆள்பவனுக்கு நீங்காது வேண்டியவை. அறம் வழுவாது தீமைகளை நீக்கி மறம் வழுவ...
மன்னன் குடிகட்குக் காணும் கடவுள் ஆவான். கசப்பான சொல்லையும் கேட்கும் பண்புள்ள வேந்தனது குடைக்கீழ் உலகம் தங்கும். கொடை , அன்பு , நேர்மை , குடிபோற்றல் உடையவனே மன்னர்க்கு ஒளியாவான். எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டும் வாழ்வார்க்குக் கண்கள் என்பர். கற்றோர்க்கே கண் உண்டு ; கல்லாதவர்க்கோ முகத்தில் இரண்டு புண் உண்டு. மகிழுமாறு பழக...
மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும் ; நூல்கள் கற்கக்கற்க அறிவூறும் , எந்நாடும் தன்னாடாம் ; எவ்வூரும் தன்னூராம் ; ஏன் ஒருவன் சாகும்வரை படிப்பதில்லை ? ஒரு பிறப்பில் படித்த படிப்பு ஒருவர்க்கு எழுபிறப்பிலும் வந்து உதவும். அழியாத சிறந்த செல்வம் கல்வியே ; பிறபொருள்கள் செல்வம் அல்ல. 3. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார்...
பற்றற்ற கண்ணும் பழைமையா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. 10. தெளிவு இவதனைத் தொடங்கார் இளிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர...
அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும். அளவளாவு இல்வாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல். காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக...
இழைத்திருந்து எண்ணிக் கொளல். 2. சேர்ந்தவர்களைக் கலந்து செய்பவர்க்குச் செய்ய இயலாதது ஒன்றுமே இல்லை. 3. வருவதை நம்பி உள்ளதை இழக்கும் காரியத்தில் ஈடுபடார் அறிவு இருப்பவர். வெட்க உணர்ச்சிக்கு அஞ்சுகின்றவர் விளங்காத காரியத்தை மேற்கொள்ளார். 6. செய்ய வேண்டாதன செய்தாற் கெடுவான் ; வேண்டியன செய்யாவிட்டாலும் கெடுவான். நன்றாக நினை...
வெற்றிக்குப் பாத்தி பிடிப்பதாகும். 53. சுற்றம் தழாஅல் எளிய உரை 1. பற்றில்லாத போதும் பழைய உறவைப் போற்றுதல் சுற்றத்தாரிடமே உண்டு. 2. அன்பு குறையாத சுற்றம் இருப்பின் வளர்ச்சி குறையாத முன்னேற்றம் வரும். முறைப்படி உழையாத உழைப்பு பலர்துணை இருப்பினும் ஓட்டைபடும். 3. கலந்து பழகாதவன் வாழ்க்கை பெருகாது ; குளம் கரையின்றி நீர் நிர...
சுற்றப்படை சூழ்ந்து விடும். உன் நிலைக்கு ஏற்காததை உலகம் ஏற்காது ; உலகம் இகழாதவற்றை எண்ணிச் செய்க. 8. அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின் அதனால் வாழும் சுற்றத்தார் பலர். கொடுப்பான் கடுகடுக்க மாட்டான் என்றால் அவன்போல் சுற்றமுடையார் உலகத்தில்லை. காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும் : அப்பண்பினர்க்கே முன்னேற்றம் உண்டு. ...
குன்றா விளக்கம் மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும். மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும். கெடுநீரார் காமக் கலன். படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடி...
இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும். மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு. 63. இடுக்கண் அழியாமை இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்துஊர்வது அஃதொப்பது இல். வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் ...
கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 61. மடி இன்மை - எளிய உரை குடும்பம் என்னும் அணையாத விளக்கு சோம்பல் என்னும் இருளால் அணைந்துவிடும். 7. ச...