text
stringlengths
0
2.93k
சூழ்ந்து கொண்ட
மேகமாய்
அனைத்தையும்
மறைத்து விடுகிறாய்
நீ நினைவாகி
நானேவுன் ரசனையென்று
மல்லிகையும்
காத்திருக்கு
மன்னவனுன்
கரங்களினால்
குடியேற கூந்தலில்
உன் கிறக்கத்தில்
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகின்றது
சிறகடிக்கும்
நம் நினைவுகளை
சிதறாமல்
கோர்க்கின்றேன்
உன் அன்பெனும்
நார்க்கொண்டு
உதிர்ந்திடாத
மாலையாய்
இயந்திரமாய்
சுழலும் வாழ்க்கையில்
என் இதயமும்
சில எதிர்பார்புகளோடு
வாழ்ந்துக்கொண்டு
இருக்கென்றால்
அது நீகாட்டும்
அன்பினால் மட்டுமே
உனக்காக
கரையும் நிமிடத்தில்
அழகாய் வளர்கின்றது
நம் காதல்
விழிகளில்
ஜீவனும் ஏது
நீ விடைபெறும்
போது உனைக்காண
அன்பை விட
சண்டையே
அதிகம் என்றாலும்
மனம் சலிக்காமல்
தேடுகிறதே
விட்டு விட்டால்
மறைந்து போகும்
என்பதாலோ
நினைவில்
என் நிழலில்
என அனைத்திலும்
நீயாகிப்போனாய்
சாய்ந்து கொள்ள
தோள் தேடினேன்
ஏந்தி கொண்டாய்
அன்பாய்
எங்கும் நிறைந்தவனாய்
நினைவாகி
ஆள்கின்றாய்
அன்பில் வாழ்கின்றேன்
மன மகிழ்வாய்
ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்
இரு மனங்கள்
இணைந்தபின்
இடைவெளியும்
அழகுதான்
மௌனத்தில்
உரையாடும்
காதல் மொழியில்
காணாத தூரத்தில்
இருந்தாலும்
எனை கடத்தி
கொண்டிருக்கின்றாய்
நினைவில்
உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே
எனக்கென்று
பயணங்கள் இல்லை
உன் தொடரலுக்காகவே
நடை போடுது