text
stringlengths
0
2.93k
பாதங்கள் உனக்காக
மனதோடு
உரையாடுவதும்
சுகம்தான்
அது உன்னோடு
என்றால்
தொலைவும்
ஒரு தொலைவில்லை
நீ யென்னை
தொலைக்காத
வரையில்
ஒரு நொடி
இமை மூடினாலும்
ஒளியாகிறாய்
விழிகளுக்குள்
உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே
இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
நீ எனக்காக
காத்திருப்பதால்
தட்டிக்கழிக்க நினைத்தாலும்
மனம் எட்டிப்பார்த்து
தொலையிது
கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்
தளராத பிடிக்குள்
துளிர் விடுகிறது
நம் காதல்
என்னுள்
நினைவுகளை
புதைத்துவிட்டு
எங்கோ உலாவி
கொண்டிருக்கின்றாய்
சில நேரங்களில்
சிக்கிக்கொள்கிறேன்
சிந்தனைக்குள்
நீவரும் போது
எனை எரித்தாலும்
அணைக்க விரும்பாத
அழகிய தீ
நீ...!
எண்ணற்ற
ஆசையிருந்தாலும்
உனை கண்டதும்
மனம்
நீ மட்டும்
போதுமென்கிறது
இரை தேடும்
பறவையாய்
உனை தேடுது
இதயம்
என் அன்பை
சுவாசிக்கும்
உயிராகவே இருந்திடு
உன் சுவாசத்தில்
கலந்த உறவாகவே
நானும் வாழ்ந்திடுவேன்
நீ நான்
நம் பேரன்பு
சிறு உலகமென்றாலும்
நிறைவான அழகிய
வாழ்க்கை
எல்லைக்குள்
வைத்திருந்தாலும்
நீயென்று வரும்போது
மனம் எல்லையை
தாண்டுகிறது
உனக்காக நான்
இதுவும்
கடந்துபோகும்
என்றாலும் நீயின்றி
எதுவும் கடந்திடாது
என்பதே உண்மை
அலங்கோலம்
கூட அழகுதான்