text
stringlengths 11
513
|
|---|
நிறுவனம் உலகிலேயே உயரமான எல்லைப்புறச் சாலையை லடாக்கில் உள்ள லேவில் இருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,270 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஊ. தங்க நாற்கரச் சாலைகள் இது 5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி கொல்கத்தா சென்னை மும்பை புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எ. வட- தென் மற்றும் கிழக்கு 2 மேற்கு ய வெல்லு பகுதிகளை இணைக்கும் சாலைகள் வட
|
தென் பகுதிகளை இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியையும் 4,076 கி.மீ நீளத்தைக் கொண்ட சாலை மூலம் இணைப்பதாகும். ( கொச்சின் , சேலம் உள்பட ) கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் அசாம் மாநிலத்தில் சில்சரையும் குஜராத்தில் உள்ள துறைமுக நகரான போர்பந்தரையும் இணைக்கும் வகையில் 3,640 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாலைகளும் ஜான்சியில் சந்திக்கின்றன. 63 ஏ. விரைவுச் சாலைகள் விரைவுச் சாலைகள் என்பன நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப்
|
பாதைகளைக் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும். முக்கியமான சில விரைவுச் சாலைகள் 1 ) மும்பை பூனா விரைவுச் சாலை 2 ) கொல்கத்தா - டம்டம் விமான நிலைய விரைவுச்சாலை 3 ) துர்காப்பூர் - கொல்கத்தா விரைவுச்சாலை 4 ) புதுடெல்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை. மும்பை - பூனா விரைவுச் சாலை பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ( ESCHP ) உ OHP ) உடன்படிக்கையின் கீழ் உலக வங்கி நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள் பாகிஸ்தான் , நேபாளம் , பூடான் ,
|
வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன. இரயில் போக்குவரத்து இந்திய இரயில் போக்குவரத்து அமைப்பு ஆசியாவில் மிகப் பெரியதும் உலக அளவில் இரண்டாவது பெரியதும் ஆகும். அ. இந்திய மெட்ரோ இரயில் போக்குவரத்து இந்தியாவில் 8 பெரு நகரங்களில் மெட்ரோ இரயில்சேவை வழங்கப்படுகிறது. அவைகள் கொல்கத்தா ( மேற்கு வங்காளம் ) சென்னை ( தமிழ்நாடு ) புதுடெல்லி , பெங்களூரு ( கர்நாடகா ) குர்கயோன் ( ஹரியானா ) மும்பை ( மகாராஷ்டிரா ) ஜெய்ப்பூர் ( இராஜஸ்தான் ) மற்றும் கொச்சி ( கேரளா ) ஆகும்.
|
இந்தியாவில் இந்த இரயில் சேவை முதன் முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இது அதிக மக்களை விரை ஏற்றிச் செல்லும் அமைப்பாகக் கருதப்படுகிறது. MRTS செப்டம்பர் 2018 இன்படி இந்தியாவில் 507 கி.மீ நீள மெட்ரோ இருப்பு பாதைகள் 381 இரயில் நிலையங்களுடன் இயங்கிவருகிறது. மேகாலயா மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை. குழாய் வழிபோக்குவரத்து 63 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும் , எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு
|
வருகிறது. அசாமில் உள்ள எண்ணெய் வயலில் இருந்து கான்பூர் வரையிலும் , குஜராத்தில் உள்ள சலாயா பகுதியிலிருந்து பஞ்சாபிலுள்ள ஜலந்தர் வரையிலும் , குஜராத்தில் உள்ள 64 ஹஜிராவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜெகதீஷ்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்துகள் இந்தியாவின் முக்கிய குழாய் போக்குவரத்து அமைப்புகளாகும். நீர்வழிப் போக்குவரத்து நீர்வழிப் போக்குவரத்து இரண்டு வகைகள் களாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து 2. கடல் வழிப்போக்குவரத்து 1. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து இந்திய உள்நாட்டு
|
நீர்வழிப் போக்குவரத்து ஆறுகள் , கால்வாய்கள் , ஏரிகள் மற்றும்காயல்களைக் கொண்ட மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்புடன் நடைபெற்றுவருகிறது. நீர்வழிப் போக்குவரத்து நீரின்ஆழம் , அகலம் மற்றும் தொடர் நீரோட்டத்தைப் பொறுத்து அமைகிறது. உள்நாட்டு போக்குவரத்து வளர்ச்சி , பராமரிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக 1986 இல் உள்நாட்டு நீர் வழிப்போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய தேசிய நீர்வழிப் போக்குவரத்துகள் 1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.1 இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ நீளத்தை கொண்டு ,
|
கங்கை - பாகிரதி ஹுக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது. 2. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 2 இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. 3. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 3 இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு 205 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து வசதியை அளிக்கக்கூடிய இந்தியாவின் தேசிய நீர்வழி போக்குவரத்து இதுவாகும். 9910 வேன் முதல் தேசிய 2. கடல் வழிப் போக்குவரத்து கடல்வழி போக்குவரத்து இந்தியப்
|
பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்திய வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 95 சதவிகித அளவுக்கு 70 சதவிகித மதிப்புள்ள சரக்குகள் கடல்வழிப் போக்குவரத்து மூலமாக நடைபெறுகிறது. இந்தியாவின் கனரக பொருள்கள் மற்றும் அதிக அளவிலான சரக்குகளை கையாளுவதில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. இது மிகவும் சிக்கனமான போக்குவரத்து மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ஒன்றாகும். கடல் மற்றும் பெருங்கடல் வழிகள் பெரும்பாலும் சர்வதேச வணிகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வழிகள் துறைமுகங்கள் மூலம் இணைக்கப்ப டுகின்றன.
|
65 தென்மேற்கு இரயில்வே தென் கிழக்கு மத்திய இரயில்வே பிலாஸ்பூர் கொங்கன் இரயில்வே நவி மும்பை இந்திய இரயில்வே துறை இருப்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. அகலப்பாதை ( 1.676 மீ அகலம் ) 2. மீட்டர் பாதை ( 1.00 மீ அகலம் ) 3. குறுகிய பாதை ( 0.762 மீ. அகலம் ) மற்றும் 4. குறுகிய தூக்குப் பாதை ( 0.610. அகலம் ) ஆகியவையாகும். இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து மும்பையில் 1925 இல் தொடங்கப்பட்டது. காத்திமன் ( GATHIMAN ) அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிகவேக
|
இரயில்வண்டி ஆகும். இந்த இரயில்வண்டி புதுடெல்லியையும் ஆக்ராவையும் இணைக்கிறது. வான்வழி போக்குவரத்து ஹுப்ளீ வான்வழிப் போக்குவரத்து விரைவான , பயணசெலவு மிகுந்த , நவீன மற்றும் வசதியான போக்குவரத்தாகும். விமான போக்குவரத்து தேசிய , பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான இணைப்பு வசதியை வழங்குகிறது. உயர்ந்த மலைகள் , பாலைவனங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகள் போன்ற பகுதிகளை எளிதில் இணைக்கவல்லது. முதல் இந்திய விமானப் போக்குவரத்து பிப்ரவரி 1918 இல் ஹென்றி பிக்யூர் என்பவரால் அலகாபாத்திலிருந்து நைனிக்
|
என்ற இடத்திற்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் ஆரம்பமானது. 1953 ஆம் ஆண்டு நாட்டில் செயல்பட்டு வந்த 8 பல்வேறு விமான தேசியமயமாக்கப்பட்டன. ன்றிணைக்கப்பட்டு அவைகள் மையே இவளன நிறுவனங்கள் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ( NHAI ) 1995 இல் நிறுவப்பட்டது. இது தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். உள்நாட்டு வான் வழிப்போக்குவரத்து ஒரு நாட்டினுடைய எல்லைக்குள்ளும் சர்வதேச வான்வழிபோக்குவரத்து உலகின் முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா என்ற விமான
|
சேவையை வழங்குகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு போக்குவரத்து சேவையையும் , ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு போக்குவரத்து சேவையையும் வழங்குகின்றன. இந்தியாவில் தற்பொழுது 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. 67 பவன் – ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி ( ஹெலிகாப்டர் ) நிறுவனம் பவன் ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி நிறுவனம் ( ஹலிகாப்டர் ) பெட்ரோலிய நிறுவனங்களான ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் கடல்சார்ந்த பணிகளுக்கு வானுலங்கு சேவையை அளிக்கிறது. இது புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாகும். இது
|
மும்பையின் மேற்கு வில்பார்லேவில் உள்ள ஜூகு விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது. பவன் ஹான்ஸ் நிறுவனம் ஒரு மினி ரத்னா − | பிரிவின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு இந்திய மாநில அரசுகளுக்கு குறிப்பாக வட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு இடையில் உள்ள தீவுகளுக்குச் சேவையை அளிக்கிறது. இது அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கும் இலட்சத்தீவுகளுக்கும் பயணப் படகுச் சேவையையும் வழங்குகிறது. இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் ( AAI ) இந்திய விமான நிலையப் பொறுப்பு ஆணையம் 1995 இல்
|
ஆரம்பிக்கப்பட்டது. இது இந்திய விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இந்திய குடிமை விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் , பராமரித்தல் , மேம்படுத்துதல் , மற்றும் நிர்வாகம் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது. உலக அளவில் மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு கொண்ட இந்திய அஞ்சல் துறை 1,55,000 அஞ்சல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,39,000 ற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளன. இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1857 ஆம் ஆண்டு
|
தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை 1852 ஆம் ஆண்டு கராச்சியில் வெளியிடப்பட்டது. அஞ்சல்களை சேகரித்தல் மற்றும் விநியோகம் செய்வது இந்திய அஞ்சல் துறையின் முக்கிய பணியாகும். இத்துறை விரைவு அஞ்சல் சேவையை 1975 இல் அறிமுகம் செய்தது. 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விரைவு தபால் சேவை செயல்படுகிறது. இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை , மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 1936 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957 ஆம் ஆண்டு முதல் “
|
ஆகாச வாணி " எனவும்பெயர் மாற்றம்செய்து அழைக்கப்பட்டு வருகிறது. 68 ஏற்றுமதி பொருள்கள் தொடர்ச்சியாக காபி , தேயிலை , கடல்சார் பொருள்கள் , தாதுக்கள் , கனிமங்கள் , தோல் பொருள்கள் , நவரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் , விளையாட்டு சாமான்கள் , இரசாயனம் மற்றும் இரசாயனம் சார்ந்த பொருள்கள் , நெகிழிகள் , இரப்பர் செயற்கைக்கோளானது மிகப்பெரும் பரப்பிலான பதிமம் மற்றும்தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது. செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு ,
|
வானிலை முன் அறிவிப்பு , இயற்கைபேரழிவு கண்காணிப்பு , எல்லை பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1969 ஆம் ஆண்டு இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத்தொடர்பு பரிமாற்றத்தில் செயற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக்கொண்டது. ஏற்படுத்தியுள்ளன. 1. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு ( INSAT ) 2. இந்திய தெ கொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு ( IRS ) 1983 இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு
|
தொலைத்தொடர்பு , வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது. இன்சாட் வரிசை செயற்கைக்கோள் , கைபேசி , தொலைப்பேசி , வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்பபயன்படுகிறது. மேலும் இது வானிலையை கண்டறியவும் , இராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இன்சாட் வரிசை , ஜி - சாட் வரிசை , கல்பனா 1 , ஹேம்சாட் , எஜுசாட் ( Edusat ) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோள்களாகும். டிசம்பர் 19 , 2018 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 7A தகவல்
|
தொடர்புக்காக சமீப காலத்தில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். ஆகஸ்ட் 30 , 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும். 16 69 தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் அமைவிடம் மற்றும் பரப்பளவு இந்தியாவின் 28 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இது இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 8 ° 4 வட அட்சம் முதல் 13 ° 35 ′ வட அட்சம் வரையிலும் , 76 ° 18 ´ கிழக்கு தீர்க்கம் முதல் 80 ° 20 கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் கடைக்கோடிப்
|
பகுதிகளாக கிழக்கில் கோடியக்கரையும் மேற்கில் ஆனைமலையும் வடக்கில் பழவேற்காடு ஏரியும் தெற்கில் குமரியும் அமைந்துள்ளன. தமிழகத்தின் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர்களாகும். இது இந்தியாவின் பதினோராவது பெரிய மாநிலமாகும். இந்தியப் பரப்பில் சுமார் 4 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளது. எல்லைகளும் அதன் அண்டை மாநிலங்களும் கிழக்கே வங்காள விரிகுடாவும் , மேற்கே கேரளாவும் , வடக்கே ஆந்திரப் பிரதேசமும் , வடமேற்கே கர்நாடகாவும் , தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன. மன்னார் வளைகுடா மற்றும் பாக்
|
நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும் இந்தியாவின் தமிழ்நா தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன. குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 940 கிலோமீட்டர் நீளமுடன் இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அரசியல் பிரிவுகள் கள் தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன என்பதை முன்பே அறிந்தோம். அதன்பிறகு நிர்வாக வசதிக்காக மாநிலம் பல முறை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இயற்கை அமைப்பு வாய் தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது. இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில்
|
135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும். தமிழ்நாடானது நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை , கிழக்கு தொடர்ச்சி மலை , பீடபூமிகள் , கடற்கரைச் சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை ல்லும் மேற்கு தொடர்ச்சி மலை வடக்கே நீலகிரி முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்ட சுவாமிதோப்பில் உள்ள மருதமலை வரை நீண்டுள்ளது. இம்மலைத்தொடரின் உயரம் 2,000 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரை
|
வேறுபட்டுள்ளது. இது 2,500 சதுர கிலோ 70 மீட்டர் பரப்பளவை உடையது. இம்மலைத்தொடர் தொடர்ச்சியாக இருந்தாலும் சில கணவாய்கள் காணப்படுகின்றன. சென்னை , நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பிரித்தமைக்கப்பட்டன. தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் பழனி மலை ஏலக்காய் மலை தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இம்மலைகள் ஏலமலைக் குன்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இங்கு அதிகமான ஏலக்காய் பயிரிடப்படுவதால் இப்பெயர் பெற்றது. மிளகு மற்றும் காபி ஆகியன இம்மலைப்பகுதியில்
|
பயிரிடப்படும் முக்கிய பயிர்களாகும். இவை வடமேற்கில் ஆனைமலையோடும் வடகிழக்கில் பழனி மலையோடும் , தென்கிழக்கில் ஆண்டிப்பட்டி மற்றும் வருச நாடு குன்றுகளோடும் இணைகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சிகரங்கள் உயரம் ( மீட்டரில் ) தொட்டபெட்டா 2,637 முக்குருத்தி 2,554 வேம்படி சோலை 2,505 பெருமாள் மலை 2,234 கோட்டை மலை 2,019 பகாசுரா 1,918 வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலைக்குன்றுகள் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு ஆண்டிப்பட்டி குன்றுகள் ஆகும். மேகமலை , மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இம்மலைகளில் காணப்படுகின்றன.
|
இம்மலையின் தெற்கு சரிவுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அணில் சரணாலயம் ' விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை மற்றும் அதன் துணை ஆறுகள் இப்பகுதியில் உருவாகின்றன. பொதிகை மலை இம்மலையின் பெரும்பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும் இதன் தென்சரிவு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. சிவஜோதி பர்வத் , அகத்தியர் மலைகள் மற்றும் தெற்கு கைலாயம் என பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகிறது. பாலக்காட்டு கணவாய் , கணவாய் , 71 நீட்சி வருசநாடு மற்றும் குரங்கனி மலை , சுருளி செங்கோட்டைக் ஆரல்வாய்மொழி கணவாய் மற்றும்
|
அச்சன்கோவில் கணவாய் ஆகியன இத்தொடரின் முக்கிய கணவாய்களாகும். நீலகிரி , ஆனைமலை , பழனிமலை , ஏலக்காய் மலை , வருசநாடு , ஆண்டிப்பட்டி மற்றும் அகத்தியர் மலைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய மலைகளாகும். நீலகிரி மலை நீலகிரி மலை தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையில் 2,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட 24 சிகரங்கள் காணப்படுகின்றன. இம்மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ( 2,637 மீட்டர் ) ஆகும். முக்குருத்தி 2,554 மீட்டர் உயரம் கொண்ட மற்றுமொறு சிகரமாகும். ஊட்டி , குன்னூர் ஆகியவை
|
இம்மலையில் அமைந்துள்ள முக்கிய மலை வாழிடங்களாகும். 2,700 க்கும் அதிகமான பூக்கும் தாவர வகைகள் மற்றும் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இங்கு காணப்படுகின்றன. ஆனைமலை ழ் ஆனைமலை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப்பகுதியில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் , ஆழியாறு பாதுகாக்கப்பட்ட காடுகள் , வால்பாறை மலைவாழிடம் , காடம்பாறை நீர்மின் நிலையம் போன்றவை இம்மலைப்பகுதியில் அமைந்துள்ளன. ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் இம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன பழனி மலை பழனி மலை , மேற்கு
|
தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியாகும். மற்றவை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளன. பழனி மலையின் மிக உயரமான சிகரம் வந்தராவ் ( 2,533 மீ ) ஆகும். வேம்படிசோலை ( 2,505 ( 2,505 மீ ) இதன் இரண்டாவது உயர்ந்த சிகரமாகும். மலைவாழிடமான கொடைக்கானல் ( 2,150 மீ ) பழனிமலையின் தென் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை உயிர்ப்பன்மை செறிந்த ஒன்றாகத் திகழ்கிறது. இப்பகுதி வளமான பசுமை மாறாக் காடுகள் , நீர்வீழ்ச்சிகள் மற்றும் பழமையான கோயில்கள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றதாகும். களக்காடு - முண்டந்துறை ' புலிகள்
|
காப்பகம் ' இப்பகுதியில் அமைந்துள்ளது. மகேந்திரகிரி மலைக்குன்றுகள் இம் மலைத்தொடர் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லை பகுதிகளாகவும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியாகவும் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 1,645 மீ ஆகும். 72 கிழக்கு தொடர்ச்சி மலை மேற்கு தொடர்ச்சி மலையைப் போலன்றி கிழக்கு தொடர்ச்சி மலையானது ஒருதொடர்ச்சியற்ற குன்றுகளாகும். இம்மலையானது பல இடங்களில் வங்காள கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மலையின் உயரம் 1,100 மீட்டர் முதல் 1,600 மீட்டர் வரை மாறுபடுகிறது.
|
இக்குன்றுகள் பீடபூமியை சமவெளியிலிருந்து பிரிக்கின்றன. ஜவ்வாது , சேர்வராயன் , கல்வராயன் , கொல்லி மலை மற்றும் பச்சை மலை ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் முக்கிய குன்றுகளாகும். இவைகள் மாநிலத்தின் வட மாவட்டங்களில் அமைந்துள்ளன ஜவ்வாது மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் நீட்சியான இம்மலைகள் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவியுள்ளன. இம்மலை இவ்விரண்டு மாவட்டங்களையும் பிரிக்கிறது. சுமார் 1,100 முதல் 1,150 மீட்டர் உயரம் கொண்ட பல்வேறு சிகரங்கள் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. இம்மலையின் மிக உயரமான சிகரம் மேல்பட்டு
|
ஆகும். ஜவ்வாது மலையின் பல பகுதிகள் நீல நிற சாம்பல் கிரானைட் பாறைகளால் உருவானது. பல்வேறு பழ மரங்கள் , மருத்துவ மூலிகைகள் மற்றும் சந்தன மரங்கள் போன்றவற்றிற்கு இப்பகுதி பெயர் பெற்றது. சட்டவிரோத மரம் வெட்டுதலால் தற்பொழுது இப்பகுதியின் சந்தன மரங்கள் அழிந்துவிட்டன. மற்றும் வேலூர் கல்வராயன் மலை " கல்வராயன் " என்ற சொல் தற்போதுள்ள ப பழங்குடியினரின் பண்டைய கால பெயரான ' கரலர் ' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு முக்கிய மலை கல்வராயன் மலையாகும். இம்மலை ஜவ்வாது மற்றும்
|
சேர்வராயன் மலைகளுடன் இணைந்து காவிரி மற்றும் பாலாறு ஆகியவற்றின் ஆற்று வடிநிலப் பகுதியைப் பிரிக்கிறது. இம்மலைத் தொடரின் உயரம் 600 மீ முதல் 1,220 மீ வரை காணப்படுகிறது. சேர்வராயன் மலை 1,200 முதல் 1,620 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட சேர்வராயன் மலைத் தொடர் சேலம் நகருக்கு அருகே அமைந்துள்ளது. இம்மலைத்தொடரின் பெயரானது உள்ளூர் தெய்வமான ' சேர்வராயன் ' என்ற பெயரில் இருந்து வந்ததாகும். இவற்றில் அமைந்துள்ள 1,620 மீட்டர் உயரம் கொண்ட ' சோலைக்கரடு ' என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள உயரமான
|
சிகரமாகும். ' ஏழைகளின் ஊட்டி ' என்று அழைக்கப்படும் ஏற்காடு மலைவாழிடம் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளது. 73 இங்குள்ள சேர்வராயன் கோவில் இப்பகுதியின் உயரமான பகுதி ஆகும் ( 1,623 மீட்டர் ). கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள சிகரங்கள் உயரம் ( மீட்டரில் ) சேர்வராயன் மலை 1,623 பழனிமலை 1,500 உருகமலை 1,486 குட்டிராயன் 1,395 முகனூர் 1,279 வலசமலை 1,034 கொல்லி மலை அரப்பளீஸ்வரர் கோவில் கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். இது சுமார் 2,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 1,300 மீட்டர் வரை
|
உயரம் கொண்ட இம்மலைத் தொடரானது , தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் இங்கு பசுமைமாறா காடுகள் அல்லது சோலை காடுகள் அதிகம் காணப்படுகின்றன. பல காபி தோட்டங்கள் , பழங்கள் , பூக்கள் மற்றும் சவுக்குப் பண்ணைகள் இம்மலைப் பகுதியில் காணப்படுகின்றன. பீடபூமிகள் தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. ஏறக்குறைய முக்கோண
|
வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பாரமஹால் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பீடபூமியானதுமைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும். இதன் உயரம் சுமார் 350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை காணப்படுகிறது. இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. கோயம்புத்தூர் பீடபூமியானது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது. இப்பீடபூமி சேலம் , கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு
|
மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மோயர் ஆறு இப்பீடபூமியைமைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி , நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன. நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மதுரை பீடபூமி , மதுரை மாவட்டத்தில் 74 காணப்படுகிறது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது. வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன. சமவெளிகள்
|
தமிழ்நாட்டில் காணப்படும் சமவெளிகளை இருபிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. உள்நாட்டு சமவெளிகள் 2. கடற்கரை சமவெளிகள் பாலாறு , பெண்ணையாறு , காவிரி மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்நாட்டு சமவெளிகளை உருவாக்கியுள்ளது. காவிரியாற்றுச் சமவெளி தமிழ்நாட்டிலுள்ள வளமான சமவெளிகளுள் ஒன்றாகும். காவிரி சமவெளியானது சேலம் , ஈரோடு , கரூர் , திருச்சிராப்பள்ளி , புதுக்கோட்டை , தஞ்சாவூர் , திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரைச் சமவெளியானது கோரமண்டல் அல்லது சோழமண்டல சமவெளி ( சோழர்கள் நிலம்
|
) எனவும் அழைக்கப்படுகிறது. இச்சமவெளி சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது. இச்சமவெளி கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இவை 80 கிலோ மீட்டருக்கும் அதிகமான அகலத்துடன் காணப்படுகிறது. 50 தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைகள் அவை : மாவட்டங்கள் கோயம்புத்தூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு வேலூர் நாமக்கல் சேலம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் பெரம்பலூர் கன்னியாகுமரி திருநெல்வேலி நீலகிரி மலைகள் மருதமலை , வெள்ளியங்கிரிமற்றும் ஆனைமலை தீர்த்த மலை , சித்தேரி
|
மற்றும் வத்தல் மலை பழனிமலை மற்றும் கொடைக்கானல் சென்னிமலை மற்றும் சிவன்மலை ஜவ்வாது , ஏலகிரி மற்றும் இரத்தினமலை கொல்லிமலை சேர்வராயன் , கஞ்சமலை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகள் கல்வராயன் செஞ்சிமலை பச்சை மலை மருதுவாழ் மலை மகேந்திரகிரி மற்றும் அகத்திய மலை நீலகிரி மலை 75 திருச்சிராப்பள்ளி , பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் உயரம் குறைந்த குன்றுத் தொடராக இது காணப்படுகின்றது. தமிழ் மொழியில் ' பச்சை ' என்பது பசுமையைக் குறிக்கிறது. இம்மலைகளில் காணப்படும் தாவரங்கள் மற்ற பகுதியை விட பசுமையாக காணப்படுவதால் இது
|
பச்சைமலை என அழைக்கப்படுகிறது. இம்மலைகளில் பலாப்பழம் ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளைபொருளாக உள்ளது. இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ' தேரி ' என்று அழைக்கப்படுகிறது. கிழக்குக் கடற்கரைச் சமவெளிப் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடாவில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. கடற்கரைகள் ஞ வங்காள விரிகுடாக் கடலையொட்டிய சோழமண்டலக் கடற்கரை பல அழகான மற்றும் சிறப்புவாய்ந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தங்க மணல் கடற்கரை பகுதியில் பனை மரங்களும் , சவுக்குத்
|
தோப்புகளும் பரவலாகக் காணப்படுகின்றன. சென்னையின் மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளும் கோவளம் ( காஞ்சிபுரம் ) மற்றும் வெள்ளி கடற்கரை ( கடலூர் ) ஆகியவை புகழ்பெற்ற தமிழக கடற்கரைகளாகும். வடிகாலமைப்பு ஆறுகள் தமிழ்நாட்டின் உயிர்நாடிகளாகும். தமிழ்நாட்டில் பல ஆறுகள் காணப்பட்டாலும் காவிரி , பாலாறு , பெண்ணை , வைகை மற்றும் தாமிரபரணி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். தமிழ்நா ட்டின் பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. தாமிரபரணி ஆற்றைத் தவிர
|
ஆறுகள் அனைத்தும் வற்றும் ஆறுகளாகும். தாமிரபரணி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவமழை காலங்களிலும் மழைபெறுவதால் வற்றாத ஆறாக உள்ளது. சுமேற்தகு தவிர மற்ற காவிரி காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இதில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு தமிழ்நாட்டில் பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக
|
உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. ஸ்டான்லி 76 நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக வலதுகரையில் காவிரியுடன் இணைகிறது. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது. கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை
|
ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன. இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால் , இது " அக ன்ற காவிரி ' என அழைக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது. இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது. சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும் இவ்விரு கிளைகள் இணைந்து ஒரு " ஸ்ரீரங்கம் தீவை ' உருவாக்குகின்றன. ' கிராண்ட் அணைகட் ' என்றழைக்கப்படும் கல்லணை
|
காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு " தென்னிந்தியாவின் தோட்டம் ' என்று அழைக்கப்படுகிறது. பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது. PERS பாம்பன் , முயல் தீவு , குருசடை , நல்லதண்ணி தீவு , புள்ளி வாசல் , ஸ்ரீரங்கம் , உப்புதண்ணித் தீவு , தீவுத்திடல் , காட்டுப்பள்ளித் தீவு , குவிப்பில் தீவு மற்றும்
|
விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும். பமையே வெ பாலாறு பாலாறு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது. இது சுமார் 17,871 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாய்கிறது. இதில் 57 % தமிழகத்திலும் மீதிமுள்ள பகுதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ளன. பொன்னி , கவுண்டினியா நதி , மலட்டாறு , செய்யாறு மற்றும் கிளியாறு ஆகியன பாலாற்றின் துணை ஆறுகளாகும். இவ்வாற்றின் மொத்த நீளம் 348 கிலோமீட்டர் ஆகும். இதில் 222 கி.மீ. தொலைவு தமிழ்நாட்டில்
|
பாய்கிறது. இது வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாகப்பாய்ந்து , கூவத்தூருக்கு அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 77 தென்பெண்ணையாறு / தென்பொருணையாறு இது கிழக்கு கர்நாடகாவின் நந்தி துர்கா மலைகளின் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது. இதன் வடிநிலப்பரப்பு சுமார் 16,019 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 77 % தமிழ்நாட்டில் உள்ளது. கிருஷ்ணகிரி , தர்மபுரி , வேலூர் , திருவண்ணாமலை , கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக தென்கிழக்கு திசையில் சுமார் 247 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்நதி பாய்கிறது. கெடிலம்
|
மற்றும் பெண்ணையாறு என இரண்டு கிளைகளாக திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு அருகில் பிரிகிறது. கெடிலம் ஆறு கடலூருக்கு அருகிலும் பெண்ணையாறு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அருகிலும் வங்கக் கடலில் கலக்கின்றன. சின்னாறு , மார்க்கண்ட நதி , வாணியாறு மற்றும் பாம்பன் ஆறு ஆகியன முக்கிய துணை ஆறுகளாகும். இந்த ஆறுஉற்பத்தியாகும் இடங்களில் கனமழை காரணமாக திடீர் , குறுகியகால வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகிறது. இது தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது. ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்கள்
|
உருவாக்கப்பட்டுள்ளன. பெண்ணையாறு இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது. மேலும் தமிழ் மாதமான தை மாதத்தில் இந்த ( ஜனவரி , பிப்ரவரி ) பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. த ஆற்றுப் பகுதியில் வைகை வைகையாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருச நாட்டு குன்றுகளின் கிழக்குச் சரிவில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலம் சுமார் 7,741 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இப்பரப்பளவு முழுவதும் தமிழகத்தில் அமைந்துள்ளது. இது மதுரை , சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்கிறது. இதன் மொத்த
|
நீளம் சுமார் 258 கிலோ மீட்டராகும். இவ்வாற்றின் நீரானது இராமநாதபுரத்தின் பெரிய ஏரி மற்றும் சிறிய ஏரிகளில் நிரப்பப்பட்டு பின் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரானது இராமநாதபுரம் அருகில் உள்ள பாக் நீர்ச்சந்தியில் கலக்கிறது. " உபா நீர பலசி தாமிரபரணி தாமிரபரணி எனும் பெயர் தாமிரம் ( காப்பர் ) மற்றும் வருணி ( சிற்றோடைகள் ) என்பதிலிருந்து பெறப்பட்டது. இவ்வாறுகளில் கரைந்திருக்கும் செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின் நீரானது செந்நிறத் தோற்றத்துடன் காணப்ப டுகிறது. தாமிரபரணி , அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள
|
மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது. 78 பருவக்காற்றின் மழைமறைவுப் இந்தியப் பெருங்கட லிலிருந்து வடக்கு நோக்கி வீசுகிறது. இது தென்மேற்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது. இப்பருவத்தில் அரபிக் கடலிலிருந்து வீசும் தென்மேற்கு பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப்பொழிவையேப் பெறுகிறது.இப்பருவத்தின் மழைப் பதிவு மேற்கிலிருந்துகிழக்கு நோக்கி குறைகிறது. கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக 50 செ.மீ மழையைப் பெறுகிறது. எனினும் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி , திருநெல்வேலி மற்றும்
|
நீலகிரி மாவட்டங்கள் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன. மாநிலத்தின் கிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழைஅளவைப் பெறுகின்றன. வடகிழக்கு பருவக்காற்று காலம் வட வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தின் முதல் பாதி வரை நீடிக்கிறது. மத்திய ஆசியா மற்றும் வட இந்திய பகுதிகளில் அதிக அழுத்தம் , வடகிழக்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது. இப்பருவத்தில் சூரியன் கடகரேகையிலிருந்து மகர ரேகைக்குச் செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இந்தியாவிலிருந்து வங்கக்
|
கடலை நோக்கி காற்று வீசுகிறது. இக்காற்று கொரியாலிஸ் விசை காரணமாக ( பூமியின் சுழற்சியால் ஏற்படும் விசை ) திசை விலக்கப்பட்டு வடகிழக்கு திசையிலிருந்து வீசுகிறது. ஆகையால் இக்காற்று வடகிழக்கு பருவக் காற்று என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவக் காற்றானது திரும்பிவரும் தென் மேற்கு பருவக் காற்றின் ஒரு பகுதியாதலால் இக்காற்றைப் ' பின்னடையும் பருவக்காற்று " என்றும் அழைப்பர். இப்பருவம் தமிழ்நாட்டின் மழைக்காலமாகும். தமிழ்நாட்டின் வருடாந்திர மழையளவில் 48 % இப்பருவத்தில் கிடைக்கிறது. இப்பருவத்தில் கடற்கரை மாவட்டங்கள் 60
|
சதவீதமும் உள்மாவட்டங்கள் 40 முதல் 50 சதவீதம் வரையிலான வருடாந்திர மழையையும் பெறுகின்றன. பொதுவாக இப்பருவத்தில் வெப்ப மண்டல சூறாவளிகள் உருவாகின்றன. வங்கக் கடலில் உருவாகின்ற சூறாவளிகள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மிக கனத்த மழையைத் தோற்றுவிக்கின்றன. தமிழ்நாட்டின் 50 சதவிகித மழை வெப்ப மண்டல சூறாவளி மூலம் கிடைக்கிறது இப்பருவத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் 100 முதல் 200 செ.மீ. வரை மழையைப் பெறுகின்றன. மத்திய மற்றும் வடமேற்கு தமிழகம் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன. இச்சூறாவளி காற்றுகள் சில
|
நேரங்களில் பயிர்கள் , உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. 81 வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியாகவும் , இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் மண் வகைகள் தமிழ்நாட்டில் காணப்படும் மண்வகைகளை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை 1. வண்டல் மண் 2. கரிசல் மண் 3. செம்மண் 4. சரளை மண் மற்றும் 5. உவர் மண். வண்டல் மண் வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன.
|
தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது. தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , விழுப்புரம் , கடலூர் , திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது. சில உள் மாவட்டங்களின் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிறிய அளவில் இவை காணப்படுகிறது. கரிசல் மண ந தீப்பாறைகள் சிதைவடைவதன்மூலம் கரிசல் மண் உருவாகிறது. இது ரீகர் மண் ( Regur soil ) என்றும் அழைக்கப்படுகிறது. இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மதுரை , விருதுநகர் ,
|
மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் கோயம்புத்தூர் , மண் என்றும் அழைக்கப்படு கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி காணப்படுகிறது. செம்மண் தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது. இவை குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றது. 82 சரளை மண் சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது. இவை ஒரு வளமற்ற மண்ணாகும். காஞ்சிபுரம் , திருவள்ளூர்மற்றும்
|
தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் , நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகின்றது. உவர் மண் தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது. வேதாரண்யப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர் மண் காணப்படுகிறது. டிசம்பர் 26 , 2004 இல் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் Օդա வைத்துள்ளன. இதனால் கடற்கரையில் சிலபகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை. மண் அரிப்பு மண் ஒரு புதுப்பிக்க இயலாத வளமாகும். மண் அரிப்பு ஒரு முறை ஏற்படின் அவற்றை
|
புதுப்பிப்பது எளிதான செயல் அல்ல. காடுகள் உருவாகும் இயற்கைத் தாவரங்கள்.1988 தேசிய வனக்கொள்கையின்படி , புவிப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மொத்த காடுகளின் பரப்பளவு இவற்றைவிட மிக குறைவாகும். 2017 ஆம் ஆண்டு மாநில வன அறிக்கையின்படி , தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவு 26.281 ச.கி. மீட்டர்களாகும். இது மொத்த பரப்பளவில் 20.21 சதவீதமாகும். இந்தியாவில் உள்ள காடுகளில் தமிழகத்தின் பங்களிப்பு 2.99 சதவீதமாகும். ஈரப்பத பசுமைமாறா காடுகளிலிருந்து புதர்
|
காடுகள் வரை தமிழ்நாட்டின் காடுகள் வேறுபடுகின்றன.. காடுகளின் வகைகள் தமிழகத்தில் உள்ள காடுகள் கீழ்க்கண்டவாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் இவ்வகைக்காடுகள் அதிக மழைபெறும் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை அடர்ந்த மற்றும் மரக்கிளை அடுக்குகள் கொண்டதாக காணப்படுகின்றன. திருநெல்வேலி , கன்னியாகுமரி , நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளில் இவை காணப்படுகிறது. இலவங்க மரம் , மலபார் , கருங்காலி மரம் , பனாசமரம் , ஜாவாபிளம் , ஜமுன் , பலா மருது ,
|
அயனி , கிராப் மிர்ட்டல் போன்றவை இக்காடுகளில் காணப்படும் முக்கிய மர வகைகளாகும். அரை பசுமைமாறா வகைக் 83 காடுகளானது உப அயனமண்டலக் காலநிலை நிலவும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. சேர்வராயன் மலை , கொல்லி மலை. பச்சை மலை ஆகியன இவ்வகை காடுகள் காணப்படும் முக்கிய பகுதிகள் ஆகும். இந்திய மகோகனி , குரங்கு தேக்கு , உல்லி காசியா , பலா மற்றும் மா மரங்கள் ஆகியன இப்பகுதியில் காணப்படும் முக்கிய மரங்களாகும் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது 1,100 ஹெக்டேர்
|
பரப்பளவுடன் ( 11 சதுர கிலோமீட்டர் ) உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடாக உள்ளது. வங்க கடலிலிருந்து மணல் திட்டுகளால் இக்காடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது அவிசீனியா மற்றும் ரைசோபோரா போன்ற தாவர இனங்களைக் கொண்டது. பசுமையானதாகவும் மிதமான உயரம் உடையதாகவும் தோல் போன்ற இலைகளுடனும் காணப்படுகின்றன. இவ்வகை தாவரங்கள் உவர் நிலங்கள் மற்றும் உவர் நீரில் வாழும் தன்மையுடையன. ஆசிய மாங்குரோவ் , வெள்ளை மாங்குரோவ் , காட்டுமல்லி இந்தியன் ப்ரிவெட் மரங்கள் போன்றவைஇங்கு வளரும் குறிப்பிடத்தக்க மரங்களாகும். பிச்சாவரம் ,
|
வேதாரண்யம் , முத்துப்பேட்டை , சத்திரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இக்காடுகள் அமைந்துள்ளன. கடல் பாதுகாப்பு மேலாண்மையில் , சதுப்புநிலத் தாவரங்களின் பங்கு : கடல் அலைகள் மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கின்றது. மேலும் பவளப்பாறைகளையும் , கடலோர புல்வெளிகளையும் மணல் படிவுகளால் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கின்றது. வெப்பமண்டல முட்புதர்க்காடுகள் தமிழ்நாட்டில் மிகக்குறைவான மழை பெரும்பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகள் சமவெளியில்
|
இருந்து 400 மீட்டர் உயரத்திற்கு மேல் காணப்படுகின்றன. பனை , வேம்பு , கருவேலம் , OG இவற்றில் பொதுவாக காணப்படும் மரங்களாகும். இவற்றில் புதர்செடிகளும் அதிகமாக காணப்படும். தர்மபுரி , இராமநாதபுரம் , விருதுநகர் மற்றும் பிற மாவட்டங்களின் சில பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. மித வெப்ப மண்டல மலைக்காடுகள் உள்ள பகுதிகளில் இவ்வகை காடுகள் ஆனைமலை , நீலகிரி மற்றும் பழனி மலைகளில் சுமார் 1,000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகின்றன. இவ்வகை காடுகள் சோலாஸ் ( sholas ) எனவும் அழைக்கப்படுகிறது.
|
இவ்வகை காடுகளில் மரங்கள் பொதுவாக குறைந்த உயரத்துடன் பசுமையாகக் காணப்படுகின்றன. 84 பொதுவாக நீலகிரி , சாம்பா , வெள்ளைலிட்சா , ரோஸ்ஆப்பிள் போன்ற மரங்கள் இக்காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. வெப்பமண்டல இலையுதிர்க்காடுகள் இவ்வகைக்காடுகள் பசுமைமாறாக்காடுகள் மற்றும் அரை பசுமைமாறா காடுகளின் விளிம்புப்பகுதிகளில் காணப்படுகின்றன. இக்காடுகளில் உள்ள மரங்கள் கோடை பருவங்களில் தங்களது இலைகளை உதிர்த்து விடுகின்றன. இக்காடுகளில் உள்ள மரங்கள் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன. பருத்திப் பட்டு மரம் , இலவம் , கடம்பா , டாகத்
|
தேக்கு , வாகை , வெக்காளி மரம் மற்றும் சிரஸ் போன்றவை இங்கு காணப்படும் முக்கிய வகைகளாகும். மூங்கில்களும் , இக்காடுகளில் இக்காடுகளில் காணப்படும் சில மரவகைகள் பொருளாதார மர காணப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். [ மாங்குரோவ் காடுகள் இவ்வகைக்காடுகள் கடலோரப்பகுதிகள் , ஆற்றின் டெல்டா பகுதிகள் , தீவுகளின் கடைப்பகுதிகள் , மற்றும் ஆற்று முகத்துவாரங்களில் காணப்படுகின்றன. பொதுவாக இத்தாவரங்கள் அழிப்பு , அதிக மேய்ப்பு , நகரமயமாக்கம் , அதிக மழைப்பொழிவு ஆகியன மண் அரிப்பின் முக்கிய காரணங்களாகும். மண் அரிப்பு மண்வளத்தை
|
குறைத்து , விளைச்சலைக் குறைக்கிறது. எனவே மண்வளத்தை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். வன உயிரினங்கள் காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளை வனவிலங்குகள் என்கிறோம். பல்வேறு வகையான வன விலங்குகள் , பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியன தமிழ்நாட்டில் உள்ளன. யானைகள் , மற்றும் குரங்குகளுக்கு ஓக்காயானைகள் காட்டு எருமைகள் , புலிகள் , மார்வன அடைக்கலமாக உள்ளன. வனவிலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு வனவிலங்குகள் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வ. எண் தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோளப்
|
பெட்டகங்கள் 1 நீலகிரி உயிர்க்கோளப் பெட்டகம் 2 மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பெட்டகம் 3 அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம் மாறுபட்ட காலநிலைகள் , நில அமைப்புகள் மற்றும் பல்வேறு வளங்கள் ஆகியவற்றைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 85 இதனால் இந்தியாவில் தமிழ்நா டு தனித்துவம் பெற்ற மாநிலமாக திகழ்கிறது. இருக்கின்ற வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தினால் , இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானதாகத் திகழும். எனவே இவ்விலக்கை அடைய முயற்சி செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். தமிழ்நாட்டில் அதிகக்காடுகளைக் (
|
பரப்பளவு ) கொண்ட மாவட்டங்கள் மாவட்டம் பரப்பளவு ( சதுர கிலோமீட்டர் ) தர்மபுரி 3,280 கோயம்புத்தூர் 2,627 ஈரோடு 2,427 வேலூர் 1,857 நீலகிரி 1,583 திண்டுக்கல் 1,662 ந களான " " அக்ரிகல்சர் " என்ற சொல் இலத்தீன் வார்த்தைகளான " அகர் " மற்றும் " கல்சரா " என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் நிலம் மற்றும் வளர்த்தல் என்பதாகும். வேளாண்மை தமிழ்நாட்டின் வேளாண் காரணிகள் , முக்கியப் பயிர்கள் மற்றும் அதன் பரவலைப் புரிந்துகொள்ளல் தமிழ்நாட்டின் நீர் வளங்களைப் பற்றி தெரிந்துகொள்ளல் தமிழ்நாட்டின் கனிம மற்றும் தொழிலக வளங்கள்
|
பற்றி கற்றறிதல் தமிழ்நாட்டின் மக்கள் தொகை மற்றும் அதன் கூறுகள் பற்றி பகுப்பாய்வு செய்தல் தமிழ்நாட்டின் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடரைப் பற்றி தெரிந்துகொள்ளல் கற்றலின் ந�போக்கங்கள் என்பது விவசாய நடைமுறைகளான பயிர்கள் சாகுபடி , கால்நடை வளர்த்தல் , பறவைகள் வளர்த்தல் , காடுகள் வளர்த்தல் , மீன்பிடித்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும். தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் சுதந்திரமடைந்ததிலிருந்து 65 % க்கும் மேற்பட்ட மக்கள் இந்தியா மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறையைச் சார்ந்துள்ளனர்.
|
மாநிலத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மையே பிரதானமாக இருந்து வருகிறது. வேளாண்மை , கிராமப்புற மக்களுக்கு பெருமளவில்வேலை வாய்ப்பை அளிக்கிறது. வளர்ச்சிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. நெல் , தினைவகைகள் மற்றும் பருப்பு வகைகள் மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிர்களாகும். கரும்பு , பருத்தி , சூரியகாந்தி , தென்னை , முந்திரி , மிளகாய் , எள் , நிலக்கடலை , தேயிலை , காபி , ஏலக்காய் மற்றும் இரப்பர் ஆகியவை முக்கிய வணிகப் பயிர்களாகும். வேளாண்மைக்கும் பொருளாதார வேளாண்மையாகும். 86 வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல்
|
காரணிகள் நிலத்தோற்றம் , காலநிலை , மண் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய புவியியல் காரணிகளாகும். தமிழ்நாடு - மானுடப் புவியியல் நிலத்தோற்றம் தமிழ்நாடானது மலைகள் , பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய பல்வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்டுள்ளது. மேற்கண்டவற்றுள் சமவெளிகள் வேளாண் உற்பத்திக்கு ஏற்ற வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளதால் சமவெளிப் பகுதிகள் வேளாண் தொழிலுக்கு ஏற்றதாக உள்ளது. எ.கா. வண்டல் மண் நிறைந்துள்ள காவிரி சமவெளி தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க வேளாண் பகுதியாகும். பீடபூமி
|
, வேளாண்மைக்கு ஓரளவிற்கு ஏற்றதாகவும் , மலைப் பிரதேசங்களில் வேளாண் நடவடிக்கைகள் மிகக்குறைந்த அளவிலும் உள்ளன. காலநிலை மண்டலத்திலும் தமிழ்நாடு பூமத்தியரேகைக்கு அருகிலும் , வெப்ப அமைந்துள்ளதால் வெப்ப மண்டலக் காலநிலையைப் பெறுகிறது. ஆகையால் தமிழ்நாட்டின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் அதிகமாக உள்ளது. எனவே வெப்பமண்டலப் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. நீர் , வேளாண்மையைக் கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாகும். வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாட்டிற்கான முக்கிய நீர்ஆதாரமாக உள்ளதால் , பயிரிடப்படும் முக்கிய காலம்
|
இப்பருவத்தில் தொடங்குகிறது. இப்பருவத்தில் பெறும் மழையின் அளவு மற்றும் நீர்ப்பாசன வசதி போன்றவை வேளாண்மையை மிக அதிக அளவில் பாதிக்கிறது. பமையே வெலி * மண் வேளாண்மையின் மிக முக்கியமான கூறுகளுள் ஒன்று மண் ஆகும். இது பயிர்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்குத்தேவையான கனிமசத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. ஆற்றுப்பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரைச் சமவெளிப் பகுதிகளில் வளமான வண்டல் மண் நிறைந்துள்ளதால் இப்பகுதிகள் மாநில வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. நீர்ப்பாசனம் மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற
|
நிலையில் உள்ளது. மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது. எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக 87 நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும். வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்கள் வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை அடிப்படையாகக் கொண்டு பருவகாலத்திற்கு ஏற்ற பல்வேறு விவசாயிகள் பயிரிடுகிறார்கள். மாநிலத்தின் வேளாண் பருவகாலங்கள் பின்வருமாறு : பருவம் விதைக்கும் காலம் அறுவடை காலம் முக்கிய பயிர்கள் சொர்ணவாரி ( சித்திரைப் பட்டம் ) ஏப்ரல் - மே
|
செப்டம்பர்பருத்தி மற்றும் சம்பா ( ஆடிபட்டம் ) ஜூலை ஆகஸ்டு கரும்பு நவரை நவம்பர் - டிசம்பர் காய்கறிகள் , வெள்ளரி , தர்பூசணி தமிழ்நாட்டின் முக்கிய பயிர்களின் பரவல் நெல் வகையான பயிர்களைப் தினை வகைகள் ஆகஸ்டு ஜனவரி -பிப்ரவரி நெல் மற்றும் பிப்ரவரி - மார்ச் பழங்கள் , தமிழ்நாட்டின் முக்கியமான உணவுப்பயிர் நெல் ஆகும். பொன்னி மற்றும் கிச்சடி சம்பா தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய நெல் வகைகளாகும். இப்பயிர் தமிழ்நாட்டின் வேளாண் முறைகளின் வகைகள் மற்றும் பகுதிகள் வேளாண் வகை பயிரிடப்படும் பகுதிகள் தீவிர தன்னிறைவு வேளாண்மை
|
தமிழ்நாட்டில் சில பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது தோட்ட வேளாண்மை மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள் கலப்பு வேளாண்மை காவிரி மற்றும் தென்பெண்னை ஆற்றுப்படுகைகள் நெல் பயிர் சாகுபடி லும் தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டாலும் தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , விழுப்புரம் , கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி அதிக
|
நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும். ( பிரிக்கப்படாத தஞ்சாவூர் ) எனவே இப்பகுதி தமிழ்நாட்டின் " நெற்களஞ்சியம் " என்றழைக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் ( TANU ) கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் ( TRRI ) நெல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் இந்திய நிறுவனமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னுமிடத்தில் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இப்பகுதியிலுள்ள 88 கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி முறை குறித்த
|
ஆராய்ச்சிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. தினை வகைகள் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பகுதியினரின் முக்கியமான உணவு தினை வகைளாகும். சோளம் , கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியன முக்கிய தினைப் பயிர்களாகும். இவ்வகை பயிர்கள் வறண்ட பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கடற்கரைச் சமவெளிகளிலும் விளைகின்றன. கோயம்புத்தூர் பீடபூமியிலும் , கம்பம் பள்ளத்தாக்கிலும் சோளம் பயிரிடப்படுகின்றன. கோயம்புத்தூர் , தர்மபுரி , வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இராமநாதபுரம் ,
|
திருநெல்வேலி , கரூர் , பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கம்பு பயிரிடப்படுகிறது. இந்தியா , 2018 ஆம் ஆண்டை தினைப் பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது. உலக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் ( FAO ) , 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அனுசரிக்கத் தீர்மானித்துள்ளது. S பருப்பு வகைகள் சென்னை , நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் ப கொண்டக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதன்நிலை வகிக்கிறது. வேலூர் மற்றும்
|
கன்னியாகுமரி மாவட்டங்களில் துவரம் பருப்பு கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. திருவாரூர் , நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அதிக அளவில் பச்சைப் பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொள்ளுப் பயிர் கூடுதலாக பயிரிடப்படுகிறது. எண்ணெய் வித்துக்கள் மையே நிலக்கடலை , எள் , ஆமணக்கு , தென்னை , சூரியகாந்தி மற்றும் கடுகு ஆகியன தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்கள் ஆகும். வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , சேலம் மற்றும்
|
புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்தியானது செறிந்து காணப்படுகிறது. தர்மபுரி , கடலூர் , பெரம்பலூர் , மதுரை , ஈரோடு. தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது. நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகின்றது. நீலகிரி 89 வெ மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சவுகளில் காபி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.
|
திண்டுக்கல் , மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச் சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகின்றது. காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது. இரப்பர் கன்னியாகுமரியில் காணப்படுகிறது. அதிகமாகக் தோட்டங்கள் தமிழ்நாட்டிலுள்ள , மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சிமலை களின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது. கடலூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது. இராமநாதபுரம் , சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய
|
மாவட்டங்களில் இவை சிறிய அளவில் பயிரிடப்படுகிறது. கோயம்புத்தூர் , தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. கரும்பு கரும்பு தமிழ்நாட்டின் முக்கியமான வாணிபப் பயிராகும். இது ஓராண்டு பயிராகும். இதற்கு அதிக வெப்பநிலை மற்றும் அதிகமழைப் பொழிவும் தேவைப்படுகிறது. இது வெப்பமண்டல பிரதேசங்களில் நன்கு வளரக்கூடியவை. திருவள்ளூர் , காஞ்சிபுரம் , வேலூர் , கடலூர் , திருநெல்வேலி , கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகியன கரும்பு பயிரிடும் மாவட்டங்களாகும். பருத்தி en City பருத்தி ஓர் இழைப்பயிர்
|
மற்றும் வாணிபப் பயிராகும். கரிசல்மண் , நீண்ட பனிப்பொழிவற்ற காலம் , மிதவெப்பம் மற்றும் ஈரப்பத வானிலை ஆகியவை பருத்தி பயிரிடுவதற்குஉகந்தவையாகும். பருத்தி வளரும் காலத்தில் ஈரப்பத காலநிலையும் , அறுவடை காலத்தில் வறண்ட காலநிலையும் பயிருக்கு ஏற்றதாகும். கோயம்புத்தூர் பீடபூமி பகுதியிலும் , வைகை மற்றும் வைப்பாறு ஆற்றுவடிநிலப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்படுகின்றது. மதுரை , இராமநாதபுரம் , விருதுநகர் , திருநெல்வேலி , தூத்துக்குடி , சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் இவைப் பயிரிடப்படுகின்றது. தோட்டப்பயிர்கள்
|
தேயிலை , காபி , இரப்பர் , மற்றும் முந்திரி ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்டப் பயிர்களாகும். இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசானது தேசிய இயற்கை கரிம வேளாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , இயற்கை உரங்களை மேம்படுத்துதல் , பயிற்சியளித்தல் போன்றவற்றை இத்திட்டம் செயல்படுத்துகிறது. மேலும் கரிமப் பொருள்களை மறுசுழற்சி செய்யவும் , 90 தொழிற்கூடங்கள் , உயிரிஉரங்கள் , உயிரி பூச்சிகொல்லிகள் உற்பத்தி செய்யவும் தொழிற்கூடங்களுக்கு
|
மாநிலத்தில் நிதி உதவி அளித்தல் , தரமேம்பாட்டு வளர்ச்சி மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் குழுமத்தின் மனிதவளத்தை மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. டான டீ ( TANTEA ) இந்நிறுவனம் இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் , கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் முன்னனி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும். ( தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் ) இந்நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4,500 ஹெக்டேர் ஆகும். தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் என்றஅமைப்பானது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்
|
கூட்டுறவு சங்கம் என்ற புதிய அமைப்பாக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பிரபலமாக ஆவின் என்று அழைக்கப்படுகிறது மீன் பிடித்தல் கட்டராகும். றது கடடி ல் மீன் தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் 1,076 கிலோமீட்டராகும். ஏறத்தாழ 41,412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ' கண்டத்திட்டு ' உள்ளதால் கடற்கரை மீன்பிடிப்புக்கு சாதகமாக உள்ளது. தமிழ்நாடு ' கடல் மீன் ' உற்பத்தியில் முதன்மையான மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. மீன்பிடித்தலுக்கு பெரிய மற்றும் இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. பெருங்கடல் அல்லது கடற்கரையில் இருந்து சில
|
கிலோமீட்டர் தூரம் வரை மீன்பிடித்தல் ' கடலோர மீன்பிடிப்பு ' என அழைக்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து பொதுவாக 20 முதல் 30 மைல்கள் தூரம் வரையிலும் , 100 அல்லது 1000 க்கும் மேற்பட்ட அடிகள் ஆழத்தில் மீன்பிடித்தல் நடக்கிறது. இது ' ஆழ்கடல் மீன்பிடிப்பு ' என அழைக்கப்படுகிறது. சுறா , பறவை மீன் , சங்கு மீன் , கெளுத்தி , வெள்ளி வயிறு மீன் போன்ற மீன் வகைகள் மற்றும் நண்டு வகைகள் இங்குப் பிடிக்கப்படுகின்றன. சென்னை , கன்னியாகுமரி , திருநெல்வேலி , நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தின் கடல் மீன்
|
உற்பத்தியில் ஏறத்தாழ 40 % சதவிகிதம் பங்களிப்பைத் தருகின்றன. கடற்கரையின் அமைவிடம் இப்பகுதிகளில் மீன் பிடித்தலுக்கு சாதகமாக உள்ளன. உள்நாட்டு மீன்பிடிப்பு ஏரிகள் , ஆறுகள் , குளங்கள் , கழிமுகங்கள் , காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடித்தல் நடைபெறுகிறது. சிப்பிகள் மற்றும் இறால்கள் மீன் பண்ணைகளில் கட்டுமரம் , டீசல் படகுகள் மற்றும் மீன்வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் நடைபெறுகிறது. மீன்பிடித்தலை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மீன் வளத்துறை பல திட்டங்களை
|
அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில உள்நாட்டு மீன் உற்பத்தியில் வேலூர் மாவட்டம் 10 சதவிகித உற்பத்தியுடன் முன்னிலையில் உள்ளது. வளர்க்கப்படுகின்றன. ܘܦ ܗ 91 கடலூர் , சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தலா 9 சதவிகிதம் உள்நாட்டு மீன் உற்பத்தி செய்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன. மாநிலப் பொருளாதாரத்தில் மீன் பிடித் துறையானது 1.25 % சதவிகிதம் பங்களிப்பைச் செய்கிறது. நீர் வளம் தமிழ்நாட்டின் நீர் வளங்கள் இந்தியப் பரப்பளவில் 4 சதவிகிதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவிகிதத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு , இந்திய நீர்
|
வளத்தில் 2.5 சதவிகிதத்தை மட்டுமே பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீரில் 95 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் மேம்பாட்டிற்காகவும் நீர் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் , அடிப்படையில் வேளாண் நீர்ப்பா மற்றும் மின்சக்தி உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேட்டூர் அணை சன ன காவிரி ஆறு
|
சமவெளியில் நுழையும் இடத்திற்கு முன்னுள்ள மலையிடுக்குப் பகுதியில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும். இது சேலம் , ஈரோடு , கரூர் , திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர் , திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விளை நிலத்திற்கு நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது. ருத்தறேத்தா பவானி சாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி சாகர் அணை , கோயம்புத்தூர் நகரிலிருந்து ஏறத்தாழ 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை நாட்டின்
|
மண் - கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். அமராவதி அணை அமராவதி அணை , திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டையில் இருந்து ஏறத்தாழ 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணைகாவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இவ்வணை நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அண்மையில் ஒரு சிறிய நீர் மின் நிலையமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. 92 கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி அணை , கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
|
சாத்தனூர் அணை சென்னகேசவ சாத்தனூர் அணை செங்கம் தாலுகாவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது மலையின் நடுவே அமைந்துள்ளது. தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள். இதன்மூலம் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன. இங்கு பெரிய முதலைப்பண்ணையும் வண்ணமீன் பண்ணையும் அமைந்துள்ளன. சுற்றுலா பயணிகளுக்காக அணையின் உள்ளே பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பூங்காக்கள் திரைப்படப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு ஆங்கிலேய
|
நிர்வாகத்தால் கட்டப்பட்டது. கேரளாவில் , தேக்கடி மலையில் உருவாகும் பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வறட்சிக்குள்ளாகும் சில வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிப்பதற்காக இது கட்டப்பட்டது. வைகை அணை ஆண்டிப்பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 111 அடி உயரம் கொண்ட இவ்வணையில் 71 அடி உயரம் மட்டுமே நீரை சேமிக்க முடியும். இவ்வணை மதுரையிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் ஆண்டிப்பட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள்
|
திறக்கப்பட்டது. மையே வெல் மணிமுத்தாறு அணை திருநெல்வேலி நகரிலிருந்து ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது. பாபநாசம் அணை திருநெல்வேலியிலிருந்து 49 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் அணை “ கரையார் அணை ' என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலங்கள் இதன் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன. 93 பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் இது தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின்கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு பகுதியில் உள்ள ஏழு
|
ஆறுகளின் நீரினைப் பெற்று அங்குள்ள ஏழு நீர்த்தேக்கங்களையும் ஒன்றோடொன்று இணைக்கும் எதிர்கால நோக்கத்தின் விளைவாக உருவானத் திட்டமாகும். பரப்பலாறு திட்டம் ஒட்டஞ்சத்திரம் அருகே அமைந்துள்ளது. இதன் நீர் கொள்ளளவுத் திறன் 167 மில்லியன் கன அடிகளாகும். பழனி தாலுகாவில் அமைந்துள்ள இவ்வணை மதுரையிலிருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நீர்வள மேலாண்மை நீர்வள மேலாண்மை என்பது திட்டமிடல் , செயல்படுத்துதல் , நீர்வளத்தைப் பெருக்குதல் , விநியோகித்தல் மற்றும் நீர்வளங்களின் உகந்த பயன்பாட்டை நிர்வகிப்பதற்கான
|
நடவடிக்கையைமேற்கொள்வதாகும். தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு , பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபரின் நுகர்வு காரணமாக நீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. மக்களின் நீர்ப் பயன்பாடு , தொழில் துறைக்கான தேவைகள் மற்றும் இதர தேவைகளுக்கான பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றது. மாநிலமானது நீர் தேவைக்கு பருவமழையைப் பெரிதும் சார்ந்துள்ளது. பருவ மழை பொய்ப்பதால் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு , வறட்சிக்கு வழி வகுக்கின்றது. எனவே நீர் சேமிப்பது நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.