text
stringlengths
11
513
ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளரஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி , முக்கூடற்பள்ளு , இராமநாடகக் கீர்த்தனை , நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும். தமிழ் நாடக முன்னோடிகள் பம்மல் சம்பந்தம் முதலியார் , சங்கரதாசு சுவாமிகள் , பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம். பம்மல் சம்பந்தம் இவர் எழுதிய மொத்த
நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல் , துன்பியல் , கேளிக்கை , அங்கதம் , நையாண்டி , – புராணிகம் , பலதரப்பட்டவையாகும். இவர் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழுவினரால் நடத்தப் படும் நாடகத்தில் கற்றவர்களையும் அறிஞர்களையும் நடிக்கச் செய்தார். நாடகக் 81 கலைக்குத் தம் வரலாறு , மொழிபெயர்ப்பு எனப் டிக வரை பெரும்பணி ஆற்றினார். கண் பார்வை மங்கிய சொல்லியே பிறரை எழுத வைத்தார். பத்ம பூஷண்
பெற்றவர். ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் , ஆஸ் ஆவது வயது நிலையிலும் தாம் பல விருதுகளைப் லைக் இட் உள்ளிட்ட அமலாதித்யன் , நீ விரும்பியபடியே என்ற பெயர்களில் தமிழ் 9 ள்ளிட்ட நாடகங்களை நாடகங்களாக மொழிபெயர்த்தார். சதி சுலோச்சனா , யயாதி , சந்திர ஹரி , தாசிப் பெண் , சபாபதி போன்ற இவரது நாடகங்களில் சில திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. பரிதிமாற் கலைஞர் நாடகம் படித்தல் , நடித்தல் , இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி , கலாவதி ,
மானவிஜயம் , சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும். 310 சங்கரதாசு சுவாமிகள் முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர். ஆரம்ப காலத்தில் எமன் , இராவணன் போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் நாடக ஆசிரியரானார். இவர் சமரச சன்மார்க்க சபை என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார். இக்குழு சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு நடத்தப்பெற்ற முதல் பாலர் நாடக சபையாகும். அதன் பிறகு
தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என நாடகக்குழுவினை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார். அபிமன்யு சுந்தரி , இலங்காதிலகம் , கோவலன் , நல்லதங்காள் , பிரகலாதன் உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும். நாடகங்களின் வகை தமிழ்நாடகங்களை அதன் கருப்பொருளைக் கொண்டு புராண நாடகம் , இலக்கிய நாடகம் , துப்பறியும் நாடகம் , வரலாற்றுநாடகம் , நகைச்சுவை நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , என வகைப்படுத்தாலாம். சான்றாக புராண நாடகங்கள் , இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின. பிரகலாதன் ,
ஐயப்பன் , தசாவதாரம் , சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும். இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில் , சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் , பாரதிதாசனின் பிசிராந்தையார் , மறைமலையடிகளின் அம்பிகாபதிஅமாராவதி , அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கிய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும். தற்கால நாடகங்கள் மையே காலங்கள் மாற நாடக வளர்ச்சியும் மாற்றத்தினைக் கண்டது. விடுதலைப் போராட்டித்தில் எழுச்சியூட்டும் நாடகங்கள் தம் பங்கினைச்
சிறப்பாகவே செய்தன.காந்தி குல்லாய் , சர்க்கா , மூவர்ணம் போன்ற நாடகங்கள் அக்காலத்தில் விடுதலை உணர்வினைத் தூண்டின. தொழில்நுட்ப வளர்ச்சி திரையிலக்கியத்திற்குத் துணை புரிந்தனவே அன்றி நாடகத் துறை நலிவடைய காரணமாயின. என்றாலும் ஒய்.ஜி.மகேந்திரன் , எஸ்.வி.சேகர் , கிரேஸி மோகன் போன்ர் நகைச்சுவை நாடகங்களை நடத்தி வருகின்றனர். மதுவந்தி அருண் அவர்கள் தியேட்டர் ஆஃப் மகம் என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து 311 தமிழ்நாட்டிலும் குறிப்பிடத்தகுந்ததாகும். காலந்தோறும் நாடகம் வெளிநாட்டிலும் நாடகம் நடத்தி வருவதும் சொல்லாட்சி செயிற்றியம்
, தொல்காப்பியத்தில் நாடக வழக்கு என்னும் முறுவல் , அகத்தியம் , சயந்தம் , காணப் பெறுகின்றது. பரதம் , குணநூல் , பஞ்சமரபு , பரத சேனாபதீயம் , மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக இலக்கண நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்தமையைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையின்வழி அறியலாம். கலித்தொகை , பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நன்றாகக் காணமுடிகின்றது. கலைகள் காமத்தை மிகுவிப்பன என்ற எண்ணமுடைய சமணர்களால் களப்பிரர் காலத்தில் நாடகம் தன் செல்வாக்கை இழந்தது. இராஜராஜசோழன் காலத்தில் ராஜராஜேஸ்வர விஜயம் என்னும்
நாடகம் இயற்றப்பட்டு நடிக்கப் பெற்றது. பிறகு கி.பி.17 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மீண்டும் நாடகங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. பள்ளு , குறவஞ்சி , நொண்டி நாடகம் முதலியன எளிய நடையில் அமைந்து மக்களை மிகவும் கவர்ந்தன. கி.பி.18 ஆம் நூற்றாண்டளவில் , இராமநாடகக் கீர்த்தனை , நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றன. கி.பி.19 ஆம் நூற்றாண்டு தொடங்கி , நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை , ஆங்கில மொழியின் இரகசிய வழி ( The secret way ) என்னும் நூலைத் தழுவி ,
மனோன்மணீயம் என்னும் நாடகத்தை யாத்தளித்தார். இதனைப் போன்று அடுத்தடுத்துக் கவிதை நாடகங்கள் பல தமிழில் எழுந்தன. பிறகு , உரைநடை உரையாடல்கள் கொண்ட நாடகங்கள் பலவும் தோன்றலாயின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு நாடகமே இன்றும் , முன்னோடி என்பது ஒன்றேயாகும். யாவரும் அறிந்த தொலைக்காட்சிகளில் நாடகத்தின் செல்வாக்குச் சிறந்து விளங்கி வருவது கண்கூடு. காசி விசுவநாத முதலியார் , திண்டிவனம் ராமசாமி ராஜா , தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் , பேராசிரியர் சுந்தரம் பிள்ளை , பரிதிமாற் கலைஞர் , பம்மல் சம்பந்த முதலியார் , நவாப்
ராஜமாணிக்கம் , எம்.ஆர்.ராதா , ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். சமூக நாடகங்கள் சமூக நாடகங்கள் சமூகச் சூழல்களின் பின்னணியில் எழுதப் பெற்றவை ; அன்றாட வாழ்வியல் , சராசரி மக்களின் வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் 312 அமைவன ; சீர்த்திருத்த நோக்கம் கொண்டவை. வீடு , அலுவலகம் , சீர்வரிசை எனப் பல நிலைகளிலும் காணும் அவலங்களை அடையாளம் காட்டுவன ; சிக்கல்களை எடுத்துரைத்துத் தீர்வுகளையும் புலப்படுத்துவன ஆண்டில் காசிவிசுவநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி இவை. 1867 - ஆம் விலாசம் இவ்வகையில்
முதல் நாடகமாகும். புராண இதிகாச நாடகங்கள் சிறுத்தொண்டர் , அரிச்சந்திரன் , மார்க்கண்டேயன் முதலானோரின் புராண மகாபாரதங்களாகிய இதிகாசங்களையும் மகாபார்த் பழங்கால வரலாறுகளையும் , இராமாயண , அடிப்படையாகக் கொண்டு புனையப்படுவன இவ்வகையின. லவகுசா இராமாயண அடிப்படையிலும் , கிருஷ்ணன் தூது , கர்ண மோட்சம் என்பன அடிப்படையிலும் இயற்றப் பட்டனவாகும். இவற்றில் வசனங்கள் நடையினவாக அமைதல் வேண்டும். ஒப்பனைகளும் கற்பனை நிலையில் பல்வேறு அணிகலன்களும் கிரீடங்களும் ( மணிமுடி ) கொண்டு அமைக்கப்படுதல் மரபு. பாடல்கள் இவற்றில் மிகுதியாகக்
காணப்படும். இவை மேடை நாடகங்களில் செல்வாக்குப் பெற்றவை. இயற்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல தெய்வீக நிலையில் இவற்றில் இடம்பெறும். இதற்கேற்ப மேடையமைப்பு ஏற்பாடுகளும் அமையும். இ சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி பவளக்கொடி , அபிமன்யு , பிரகலாதா முதலான குறிப்பிடத்தக்கனவாகும். வரலாற்று நாடகங்கள் திருமணம் - சதி அனுசூயா , நாடகங்கள் இவ்வகையில் நடந்த நிகழ்ச்சிகளை உண்மைக்கு மாறுபாடின்றி எ நாடகங்களின் இயல்பாகும். சு சுவை மிகுதிப்பாட்டிற்காகச் சில நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்களும் இவற்றில் படைத்துக் கொள்ளப் பெறும். ஒரு
சில வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்திப் பிற பகுதிகள் புனைந்து எழுதப் பெறுதல் வழக்கம். டு எடுத்துரைப்பது வரலாற்று சோழன் , அரு.ராமநாதனின் இராஜராஜ திருமலைநாயக்கர் , கண்ணதாசனின் சிவகங்கைசசீமை போன்றன அமைந்த நாடகங்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இலக்கிய நாடகங்கள் ஆறு.அழகப்பனின் இவ்வகையில் சங்க இலக்கியம் , காப்பியங்கள் ஆகியவற்றில் காணப்பெறும் சிற்சில கதாபாத்திரங்களையும் , குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளையும் மையப் பொருளாகக் கொண்டு புனையப்பெறுவன இவ்வகை நாடகங்கள் ஆகும். இவற்றில் தலைமைப் 313 பாத்திரங்கள் செந்தமிழ்
நடையிலும் , சராசரிக் குடிமக்கள் பாத்திரங்கள் வழக்குத்தமிழ் நடையிலும் வசனம் பேசுதலாக அமைப்பது இயல்பு. இவற்றைக் கவிதையில் அமைப்பதும் உண்டு. உரைநடையில் அமைப்பதும் உண்டு , பாரதிதாசனின் பிசிராந்தையார் , சேரதாண்டவம் , வ.சுப.மாணிக்கனாரின் மனைவியின் உரிமை ( வள்ளல் பேகன் வரலாறு ) , புலவர் பழநியின் அனிச்ச அடி ( பெண் கொலை புரிந்த நன்னன் கதை ) , மறைமலையடிகளின் அம்பிகாபதி அமராவதி , அ.ச.ஞானசம்பந்தனாரின் தெள்ளாறெறிந்த நந்தி போன்றன இவ்வகை நாடகங்களுக்குத் தக்க சான்றுகளாகும். வாழ்க்கை வரலாற்று நாடகங்கள் ஒருவருடைய வாழ்க்கை
வரலாறு முழுவதும் தெரிந்த நிலையில் , அவை விடுபடாத வண்ணம் புனைந்துரை அதிகமின்றி உள்ள வண்ணம் , எழுதுவது இத்தகு நாடகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் யாவும் இதில் இடம்பெறும். மு.வரதராசனாரின் பச்சையப்பர் நாடகம் இதற்குத் தக்க எடுத்துக் காட்டாகும். அழகிரிசாமியின் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்பதும் பல நிகழ்ச்சித் தொகுப்பாக அமைந்து இவ்வகை நாடகமாக அமைகின்றது. அரசியல் நாடகங்கள் அரசியல் உணர்வும் , சிந்தனையும் அமைந்த நாடகங்கள் இவை. ஊட்டின. விடுதலைப் போராட்டக் காலத்தில் வீறுணர்ச்சியை எஸ்.டி.சுந்தரத்தின் வீர
சுதந்திரம் என்பது திருப்பூர் குமரன் , சுப்பிரமணிய பாரதி , அரவிந்தர் போன்றோர் தம் வீர வரலாறு கொண்டு தொகுக்கப் பெற்றதாகும். நகைச்சுவை நாடகங்கள் ப்ை கவல் மக்களைச் சிரிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு , உருவம் , மொழிநடை , அறியாமை , அப்பாவித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப் பெறுவது இது. இதன் தலைப்பே இதனியல்பைப் புலப்படுத்துவதாக அமைவதுண்டு. கிண்டல் , தரக்குறைவு முதலியன இவற்றில் மிகுந்திருத்தல் இயல்பு. சங்கீதப் பைத்தியம் , வைகுண்ட வைத்தியர் , சோம்பேறி , சபாபதி , சகுனம் பார்த்தது போன்றன இவ்வகை நாடகங்களாகும்.
பம்மல் சம்பந்த முதலியார் கேலி , இவ்வகை நாடகங்களில் ஆற்றல் படைத்தவராவார். 314 துப்பறியும் நாடகங்கள் இவ்வகை நாடகங்கள் திருட்டு , ஈடுபட்டவர்களைத் தடயங்களைக் கொலை , சதி போன்றவற்றில் கொண்டு கண்டுபிடிப்பதாக அமைந்திருக்கும். இது மேனாட்டு நாடகங்களைத் தழுவி எழுந்த வகைப்பாடு , தக்க இன்ஸ்பெக்டர் , சதுரங்கம் , கொலை போன்றவை இத்தகு நாடகங்களாகும். பரமகுரு எழுதிய வினை விதைத்தவர் என்னும் நாடகம் இவ்வகைக்குத் தக்க சான்றாகும். மொழிபெயர்ப்பு நாடகங்கள் சமஸ்கிருதம் , ஆங்கிலம் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்ற பிறமொழிகளில்
படைக்கப்பட்ட சிறந்த நாடக இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் இவ்வகையில் அடங்கும். மறைமலையடிகளின் சாகுந்தல நாடகம் , வடமொழியில் அமைந்த காளிதாசனின் சாகுந்தலத்தின் மொழிபெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் அமைந்த சேக்ஸ்பியரின் நாடகங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் , ஆங்கிலத்தில் லிட்டன் என்பார் எழுதிய இரகசிய வழி ( The Secret Way ) என்னும் நாடகத்தின் தழுவலாகும். இவ்வாறு தொடர்ந்து நாடகங்கள் பல வகைப்படும். வார இதழ் , மாத இதழ்களில் நாடகங்களாக வெளிவரும் நாடகங்களும் இக்காலத்தில்
மிகவும் குறிப்பிடத் தக்கனவாகும். மேடை நாடகங்களுக்கென நாடகக் குழுக்கள் , நாடக சபாக்கள் பல இன்றும் நின்று நிலவுகின்றன. காட்ராடகா தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தமிழ் நாடகக் குழுக்கள் பம்மல் சம்பந்தம் முதலியார் சுகுணவிலாச சபை சங்கரதாசு சுவாமிகள் - சமரசசன்மார்க்க சபை லும் சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் - பாலமனோகரசபா என்.எஸ்.கே , பாலாமணி அம்மையார் , கே.பாலசந்தர் , எஸ்வி.சேகர் , விசு ஆகியோரும் நாடகக்குழுக்கள் வைத்து நாடகம் வளர்த்தனர். முடிவுரை இன்றை சூழலில் கல்விச்சாலைகளில் ஓரங்கநாடகம் , நாட்டிய நாடகங்கள்
நடித்துக்காட்டப்படுகின்றன , வானொலி வார , தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் இன்று வருகின்றன. மாத இதழ்களிலும் , நடித்துக்காட்டப்படுகின்றன. படங்கள் அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய 315 இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது. ன Б ந C அ ர வாய்மையே வெல்லும் 316
இந்திய திட்ட நேரம் மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசதம் வரை இந்தியா ஏறத்தாழ 30 தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது. இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக , இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82 ° 30 ' கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம் , இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இத்தீர்க்கரேகை மிர்சாபூர் ( அலகாபாத் ) வழியாக செல்கிறது. இந்திய திட்ட நேரமானது
கீரீன்வீச் திட்ட நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது. ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும். ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி 2024 வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும். இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள் இந்தியா வடக்கில் உள்ள கம்பீரமான இமயமலை முகடுகளையும் , தெற்கில் அழகான கடற்கரைகளையும் மேற்கில் இந்திய பாலைவனத்தையும் கிழக்கில் புகழ்பெற்ற இயற்கைப் பாரம்பரியத்தையும் கொண்ட சிறந்த புவியியல் தோற்றங்களைக் கொண்ட ஒரு வல்லமை
பெற்ற நாடாக அமைந்துள்ளது. இந்திய நிலப்பகுதி பல மாறுபட்ட இயற்கை நிலத் தோற்றங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இயற்கை அமைப்பை 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். 1. வடக்கு மலைகள் 2. வட பெரும் சமவெளிகள் 3. தீபகற்ப பீடபூமிகள் 4. கடற்கரைச் சமவெளிகள் 5. தீவுகள் வடக்கு மலைகள் ரிகமயே வெல்லும் இமயமலைகள் ( வடக்கு மலைகள் ) உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் ஆகும். ஏனெனில் இம்மலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னார்தான் உருவாகியவை. மேலும் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு ,
மடிப்பு மலைகளாக உருவாகின. மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் 2500 கி.மீ நீளத்திற்கு நீண்டு பரவியுள்ளது. இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கி.மீ அகலத்துடனும் , அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கி.மீ அகலத்துடனும் வேறுபடுகிறது. 11 பிரபலமான பாமீர் முடிச்சு " உலகின் கூரை " என அழைக்கப்படுகிறது. இது மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இமயமலை பாமீர் முடிச்சியிலிருந்து கீழ்நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. இமாலயா (
Himalaya ) என்ற சொல் சமஸ்கிருத மொழியில் " பனிஉறைவிடம் " ( Abode of Snow ) என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பெரும் அரணாக இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம். 1. ட்ரான்ஸ் இமயமலைகள் ( The Trans Himalayas or Western Himalayas ) 2. இமயமலைகள் ( Himalayas or Central Himalayas ) 3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் ( Eastern Himalayas or Purvanchal Hills ) ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடராகும். 1. ட்ரான்ஸ் இமயமலை ( மேற்கு இமயமலைகள் ) இம்மலைகள் ஜம்மு - காஷ்மீர்
மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை " திபெத்தியன் இமயமலை " எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும். உள்ள ஒரு பகுதி உருமாறிய பாறைப் இப்பாறைகளின் படிமங்களாக , இமயமலைத்தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது. இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர் ,
லடாக் , கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும். பமைன் 2. இமயமலை இவை வடக்கு மலைகளின் பகுதியாக அமைந்துள்ளது. இது ஒரு இளம் மடிப்பு மலையாகும். வடக்கே இருந்த யுரேசியா ( Eurasia ) பின் பெரிய வெல் நிலப்பகுதியும் , தெற்கே இருந்த கோண்ட்வானா. இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ( i ) உள் இமயமலைகள் / இமாத்ரி ( ii ) மத்திய இமயமலை / இமாச்சல் ( iii ) வெளி இமயமலை / சிவாலிக் நிலப்பகுதியும் ( Gondwana Landmass ) ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை
உருவானது. இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது. 12 ( i ) உள் இமயமலை அல்லது இமாத்ரி ( Greater Himalayas / Himadri ) உள் இமயமலை , மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது. இதன் சராசரி அகலம் 25 கி.மீ மற்றும் சராசரி உயரம் 6000 மீ ஆகும். சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும் போது இப்பகுதியில் ப பௌதீக சிதைவாகவே உள்ளது. இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. அதில் முக்கியமானவை
எவரெஸ்ட் ( 8848 மீ ) மற்றும் கஞ்சன் ஜங்கா ( 8586 மீ ) ஆகும். எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திலும் , கஞ்சன் ஜங்கா சிகரம் நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையேயும் அமைந்துள்ளது. இமயமலை பல சிகரங்களின் இருப்பிடமாக உள்ளது. உலகிலுள்ள ஏனைய மலைத்தொடர்களைக் காட்டிலும் அதிகமான சிகரங்களைக் கொண்டுள்ளது. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் கொண்டுள்ளது. கங்கோத்திரி , சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன. ( ii ) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் ( Lesser Himalayas or Himachal ) சிகரங்களை தன்னகத்தே இது இமய மலையின் மத்திய மலைத்
தொடராகும். இதன் சராசரி அகலம் 80 கி.மீ ஆகும். இதன் சராசரி உயரம் 3500 மீ முதல் 4500 மீ வரை வேறுபடுகிறது. வெண்கற்பாறை கள் , சுண்ணாம்புப் பாறைகள் , மற்றும் மணற்பாறைகள் இத்தொடரில் காணப்படுகின்றன. நகரமயமாக்கல் , காடுகள் அழிப்பு மற்றும் அதிக மழைப்பொழிவின் காரணமாக மண்ணரிப்பு பீர்பாஞ்சல் , தவ்லதார் மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் காணப்படுகின்றன. புகழ் நைனிடால் , அல்மோரா , ரானிகட் ஏடம்படு கிறது கா பெற்ற கோடை வாழிடங்களான சிம்லா , முசௌரி. அமைந்துள்ளன. மிக இம்மலைத்தொடரில் மற்றும் டார்ஜிலிங் போன்றவை காரகோரம் கணவாய் ( ஜம்மு -
காஷ்மீர் ) , ஜொஷிலா கணவாய் , சிப்கிலா கணவாய் ( இமாச்சல் பிரதேசம் ) பொமிடிலா கணவாய் ( அருணாச்சல பிரதேசம் ) நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய் ( சிக்கிம் ) ஆகியன இமயமலையின் முக்கியக் கணவாய்களாகும். பாகிஸ்தானையும் , ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கைபர் கணவாய் மற்றும் பாகிஸ்தானிலுள்ள போலன் கணவாயும் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள முக்கியக் கணவாய்களாகும். 13 ( iii ) வெளி இமயமலை / சிவாலிக் இம்மலைத் தொடரானது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை பரவிக் காணப்படுகிறது. இத்தொடரின் ஒரு பகுதி ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது.
இதன் உயரம் 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது. இதன் சராசரி உயரம் 1000 மீ ஆகும். இதன் சராசரி அகலமானது மேற்கில் 50 கி.மீ. முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது. இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும். குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள் , சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன. இவை கிழக்கு பகுதியில் டூயர்ஸ் ( Duars ) எனவும் மேற்கு பகுதியில் டூன்கள் ( Duns ) எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது. 3. பூர்வாஞ்சல்
குன்றுகள் இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும். இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது. பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன. மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன. டாப்லா , அபோர். மிஸ்மி , பட்காய்பம் , நாகா , மாணிப்பூர் , மிக்கீர் , காரோ , காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றது. இமயமலையின் முக்கியத்துவம் தென்மேற் பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய கொடுக்கிறது. • இந்திய
துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது. • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உ க மற்றும் பிற ஆறுகள். இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது , • பல கோடைவாழிடங்களும் , புனித தலங்களான அமர்நாத் , கேதர்நாத் , பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன. வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை . குளிரிலிருந்து பாதுகாக்கிறது. க்கு கனமழையைக் உள்ளது. ( எ.கா )
சிந்து , கங்கை , பிரம்மபுத்திரா * இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை. 14 வடபெரும் சமவெளிகள் வளமான சமவெளிகள் , வடக்கு மலைகளின் தென்புறம் பரந்து காணப்படுகிறது. சிந்து , கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்ட உலகிலேயே வளமான சமவெளியாக இது உள்ளது. இதன் நீளம் சுமார் 2400 கி.மீ இதன் அகலம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 240 கி.மீ காதர் மணல் , களிமண் , சேறு மற்றும் வண்டலைக் கொண்ட வளமிக்கச் சமவெளியாகும். டெல்டா கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளால்
முகத்துவாரத்தில் உருவாக்கப்பட்ட வளமான முக்கோண வடிவ நிலப்பகுதியே சுந்தரவன டெல்டா எனப்படுகிறது. இது இருப்பதால் , உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வேகத்தில் உருவாகும் டெல்டா ஆகும். இப்பகுதியில் ஆறுகளின் வேகம் படிவுகள் படியவைக்கப்படுகின்றன. டெல்டாசமவெளி புதிய வண்டல் படிவுகள் , பழைய வண்டல் படிவுகள் மற்றும் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது. வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி குறைவாக 9 " பில்ஸ் " ( Bils ) எனவும் " சார்ஸ் " ( Chars ) எனவும் சதுப்பு நிலப்பகுதி அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் வட இந்திய பெரும்
சமவெளியைக் காலநிலை மற்றும் நிலப்பரப்பின் பண்புகளைக் கொண்டு 4 வகையாக பிரிக்கலாம். 1. இராஜஸ்தான் சமவெளி : இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் ஏறத்தாழ 1,75,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது. இச்சமவெளி லூனி மற்றும் மறைந்து போன சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ளது. பல உப்பு ஏரிகள் இராஜஸ்தான் சமவெளியில் காணப்படுகின்றன. உள்ள சாம்பார் ஏரி இந்திய ஜெய்பூருக்கு அருகில் ( அ ) புஷ்கர் எரி அவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். பெரிய பாலைவனம் , தார் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய
துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வறண்ட நிலப்பகுதியாக உள்ளது. 2 இலட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. இது உலகின் 17 வது மிகப்பெரிய பாலைவனமாகும். இப்பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே , இராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்த பாலைவனப் பகுதி மருஸ்தலி என்றும் , அரை பாலைவனப்பகுதி ( Semi Desert ) பாங்கர் என்றும் இரு பகுதிகளாக 15 அழைக்கப்படுகின்றன. இப்பாலைவனப் பகுதியில் பல உப்பு ஏரிகளும் (
Dhands ) , மணல் திட்டுகளும் உள்ளன. 2. பஞ்சாப் ஹரியானா சமவெளி : ஏறத்தாழ 1.75 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பஞ்சாப் - ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன. இச்சமவெளி சட்லெஜ் பியாஸ் மற்றும் ராவி ஆறுகளினால் ஏற்படும் படிவுகளால் உருவானது. முதல் 320 கி.மீ. வரை காணப்படுகிறது. இது 7 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. வட இந்திய பெரும் சமவெளி மேடு பள்ளமற்ற ஒரு சீரான சம பரப்பாக அமைந்துள்ளது. இவை இமயமலை மற்றும் விந்திய மலைகளி ள ஆறுகளின் படியவைத்தல் செயல்முறைகளால்
உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறுகள் மலையடிச் சமவெளிகள் சமவெளிகளில் அதிகமான வண்டல் படிவுகளைப் மற்றும் வெள்ளச் படியவைக்கின்றன. வட பெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள் : அ. பாபர் சமவெளி இச்சமவெளி இமயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆனது. இப்படிவுகளில் நுண் துளைகள் அதிகமாக உள்ளதால் , இதன் வழியாக ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விடுகின்றன. இதன் அகலம் மேற்கில் ( ஜம்மு ) அகன்றும் கிழக்கில் ( அஸ்ஸாம் ) குறுகியும் 8 கி.மீ முதல் 15 கி.மீ வரை உள்ளது. இதன் வழ ஆ
தராய் மண்டலம் தராய் மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும் , காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விதமான வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது. இம்மண்டலம் பாபர் பகுதிக்கு தெற்கில் அமைந்துள்ளது. இது சுமார் 15 கி.மீ முதல் 30 கி.மீ வரை அகலம் கொண்டது. இவை கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் தராய் காடுகள் வேளாண்மை சாகுபடிக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. பாங்கர் சமவெளி பெரும் சமவெளியில் காணப்படும் பாங்கர் என்பது மேட்டு
நில வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம். இங்குள்ள படிவுகள் யாவும் பழைய வண்டல் மண்ணால் ஆனவை. இவை வெள்ளப்பெருக்கு ஏற்படா உயர்நிலப் பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மண்ணானது கருமை நிறத்துடன் , வளமான 16 இலைமக்குகளைக்கொண்டும் , நல்ல வடிகலாமைப்பையையும் கொண்டுள்ளதால் இது வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது. ஈ. காதர் சமவெளி ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படியவைக்கப்படும் புதிய வண்டல் மண் காதர் ( அ ) பெட் நிலம் ( betland ) என்று அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வண்டல் படிவுகள் படியவைக்கப்படுகின்றன. இச்சமவெளி
நீர்பிரி மேடாகவும் , கங்கை யமுனை , யமுனை சட்லெஜ் ஆற்றிடைச் சமவெளியாகவும் உள்ளது. 3. கங்கைச் சமவெளி : கங்கைச் சமவெளி மேற்கிலுள்ள யமுனை ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்காளதேசம் வரை சுமார் 3.75 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கங்கையும் அதன் துணை ந்து கி ஆறுகளான காக்கரா , காண்டக் , கோசி , சாம்பல் , அதிக அளவில் வண்டல் படிவுகளைப் படிய வைத்து இந்தியாவின் மிகப்பெரிய சமவெளியை உருவாக்கியுள்ளன. கங்கைச் சமவெளி கிழக்கு மற்றும் தென்கிழக்கு நோக்கி மென் சரிவாக அமைந்துள்ளது. 4. பிரம்மபுத்திரா சமவெளி :
பிரம்மபுத்திரா பெட்வாபோன்றவைகளும் யமுனை , சமவெளியின் பெரும்பகுதி அஸ்ஸாமில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 56.275 வண்டல் விசிறிகளாகவும் , தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது. 275 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தீபகற்ப பீடபூமிகள் வாய்மையே வெல்லு தீபகற்ப பீடபூமி வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ளது. இது சுமார் 16 லட்சம் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டு ( இது நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார்
பாதியாகும் ) இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவாக உள்ளது. தீபகற்ப பீடபூமி தொன்மையான பாறை அமைப்புகளையும் , பல குன்றுகளையும் பல்வேறு சிறு பீடபூமிகளையும் , ஆற்றுப் பள்ளத்தாக்குகளால் பிளவுபட்டும் காணப்படுகின்றன. வடமேற்கே ஆரவல்லி மலைத்தொடர் , வடக்கு மற்றும் வடகிழக்கே பண்டல் கண்ட் உயர்நிலப்பகுதி , கைமூர் , ராஜ்மகால் குன்றுகள் , மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் , கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியன இப்பீடப்பூமியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இப்பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீ. 17
உயரத்தைக் கொண்டது. ஆனைமலையில் அமைந்துள்ள 2695 மீ உயரமுடைய ஆனைமுடிச்சிகரம் இப்பீடப்பூமியின் உயர்ந்த சிகரமாகும். இப்பீடபூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளது. இது கோண்டுவானா நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும். ஆற்றின் மூப்பு நிலைக்காரணமாக ஆறுகள் , அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளன. நர்மதை ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது. இதன் வட பகுதியை மத்திய உயர்நிலங்கள் என்றும் , தென் பகுதியை தக்காண பீடபூமி என்றும் அழைப்பர். விந்திய மலைக்கு தென் பகுதியில் பாயும் ஆறுகளான
கோதாவரி , காவிரி , மகாநதி , கிருஷ்ணா போன்றவை கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. விந்தியமலையின் தென்பகுதியிலுள்ள பிளவு பள்ளத்தாக்குகளின் வழியே நர்மதை மற்றும் தபதி ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. அ. மத்திய உயர் நிலங்கள் மத்திய உயர் நிலங்கள் நர்மதை ஆற்றிற்கும் வடபெரும் சமவெளிக்கும் இடையே அமைந்துள்ளன. இப்பகுதியின் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லையில் ஆரவல்லி மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் வடமேற்காக குஜராத்திலிருந்து வரை சுமார் 700 கி.மீ வரை நீண்டுள்ளது. வடக்கில்
டெல்லிக்கு அருகில் சராசரியாக சுமார் 400 மீ உயரத்தையும் ந்து ராஜஸ்தான் வழியாக டெல்லி தென் மேற்கில் 1500 மீ உயரத்தையும் கொண்டுள்ளது. ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் குருசிகார் ( 1722 மீ ) ஆகும். மேற்கு பகுதியிலுள்ள மத்திய உயர்நிலங்கள் மாளவப் பீடபூமி எனப்படுகிறது. இப்பீடபூமி ஆரவல்லி மலைத்தொடருக்கு தென்கிழக்கிலும் விந்திய மலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சம்பல் , பீட்வா , கென் போன்ற ஆறுகள் இப்பீடபூமியில் பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்கின்றன. மயே வெ மாளவப் பீடபூமியின் கிழக்குத் தொடர் பகுதியை பண்டல்கண்ட்
என்றும் இதன் தொடர்ச்சியை பாகல்கண்ட் என்றும் அழைப்பர். சோட்டாநாகபுரி பீடபூமி மத்திய உயர் நிலங்களின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பீடபூமி ஜார்கண்ட மாநிலத்தின் பெரும் பகுதி , மேற்கு வங்காளம் , பீகார் , சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இப்பகுதி இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிம வளத்திற்கு புகழ் பெற்றது. ஆ தக்காண பீடபூமி தக்காண பீடபூமி , தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டதாகும். இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது. 18 வடமேற்கு திசையில் விந்திய ,
சாத்பூரா மலைத் தொடர்களையும் வடக்கில் மகாதேவ் , மைக்கா லா குன்றுகளையும் , வடகிழக்கில் இராஜ்மகால் குன்றுகளையும் , மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளையும் , கிழக்கில் கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் எல்லைகளாகக் கொண்டது. சுமார் 7 லட்சம் சதுர கி.மீ பரப்பளவையும் கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது. I. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது. இவை மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று
அழைக்கப்படுகிறது. இதன் உயரமானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லச் செல்ல அதிகரிக்கிறது. ஆனைமலை , ஏலக்காய் மலை மற்றும் பழனிமலை ஆகியவை பகுதியில் மலைவாழிடமான கொடைக்கானல் பழனி மலையில் அமைந்துள்ளது. சந்திக்கும் ஆனைமுடிச்சிகரம் அமைந்துள்ளது. II. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் , மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ,
கர்நாடக , தமிழ்நாடு எல்லையிலுள்ள நீலகிரி மலையில் ஒன்றினைகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகளைப் போன்று கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியான மலைகள் அல்ல. மகாநதி , கோதாவரி , கிருஷ்ணா , பென்னாறு மற்றும் காவிரி போன்ற ஆறுகளால் அரிக்கப்பட்டு பிளவுபட்ட குன்றுகளாக காட்சியளிக்கின்றன. கடற்கரைச் சமவெளிகள் இந்திய தீபகற்ப பீடபூமி குறுகலான , வேறுபட்ட அகலத்தையுடைய கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது. இக்கமற் தெற்காக அமைந்துள்ள இக்கடற்கரைச் சமவெளிகள் ஆறுகள் , கடல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் சமவெளிகளை இரு பெரும் பிரிவுகளாகப்
அலைகள் ஆகியவற்றின் உருவானவை. இந்திய கடற்கரைச் பிரிக்கலாம். நீண்டு அ. மேற்கு கடற்கரைச் சமவெளி ஆ. கிழக்கு கடற்கரைச் சமவெளி அ. மேற்கு கடற்கரைச் சமவெளி 6.9 வட மேற்கு கடற்கரைச் சமவெளி மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ளது. இது வடக்கில் உள்ள ரானா ஆப் கட்ச் முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டு , 10 கி.மீ முதல் 80 கி.மீ வரை அகலம் 19 கொண்டதாகவுள்ளது. இச்சமவெளி , மணற்கடற்கரை , கடற்கரை மணல்குன்றுகள் , கழிமுகங்கள் , காயல்கள் , எஞ்சிய குன்றுகள் மற்றும் சரளை மணல் மேடுகள் போன்ற
நிலத்தோற்றங்களைக் கொண்டுள்ளது. மேற்கு கடற்கரையின் வடபகுதி கொங்கணக் கடற்கரை எனவும். மத்திய பகுதி கனரா கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது. 20-100 கி.மீ வரை அகலமும் , 550 கி.மீ நீளமும் கொண்ட இதன் தென்பகுதி மலபார் கடற்கரை என அழைக்கப்படுகிறது. ஆழமில்லாத பல காயல்கள் , உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ் போன்றவை இக்கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன. வேம்பநாடு ஏரி இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாகும். கிழக்கு கடற்கரை சமவெளி கிழக்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே மேற்கு
வங்காளம் , ஒடிசா , ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது. இச்சமவெளியானது கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் படிய வைக்கப்பட்ட வண்டல் படிவுகளால் உருவானது. இச்சமவெளி புதிய வண்டல் படிவுகளால் நன்கு வரையறுக்கப்பட்ட கடற்கரையைக் கொண்டது. மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும் , கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றிற்கு ற்கு இடைப்பட்டப் பகுதி சோழமண்டல கடற்கரை எனவும் விற்கு தெ அழைக்கப்படுகிறது. மகாநதி டெல்டாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ள சிலிகா ஏரி இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரியாகும்.
கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே கொல்லேறு ஏரி அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில் பழவேற்காடு ( புலிகாட் ) ஏரி அமைந்துள்ளது. இவைகள் கிழக்கு கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள முக்கியமான ஏரி யே னெ தீவுகள் மையே வெல்லு " தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள் என இரண்டு பெரும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் தீவுக் கூட்டங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. 572 தீவுகளைக் கொண்ட அந்தமான் நிக்கோபர் தீவுகள் வங்காள விரிகுடாவிலும் , 27 தீவுக் கூட்டங்களைக் கொண்ட இலட்சத்தீவுகள் அரபிக் கடலிலும் அமைந்துள்ளன.
இவற்றில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் புவி உள் இயக்க விசைகள் மற்றும் எரிமலைகளால் உருவானதாகும். இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை அந்தமான் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில் உள்ள பாரன் தீவாகும். ய்ை 20 அ. அந்தமான் நிக்கோபர் தீவுகள் இத்தீவுக் கூட்டங்கள் மலைத்தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளன. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதாலும் , அதிக ஈரப்பதம் , அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும் அடர்ந்த காடுகள் இங்கு கடலடி காணப்படுகின்றன. இத்தீவின் பரப்பளவு 8,249 ச.கி.மீ ஆகும். இத்தீவுக் கூட்டத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
அவை வட பகுதி தீவுகள் , அந்தமான் எனவும் தென் பகுதி தீவுகள் , நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டங்கள் நாட்டின் அமைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும். அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 10 ° கால்வாய் பிரிக்கிறது. நிக்கோபரின் தென்கோடி முனை " இந்திரா முனை " என்று அழைக்கப்படுகிறது. ஆ இலட்சத்தீவுகள் ந பள்ள ஐ இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது. இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ
பரப்பளவைக் கொண்டதாகும். இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும். இலட்சத்தீவுக்கூட்டங்களை கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது. இங்கு மனிதர்கள் வசிக்காத பிட் தீவு ( Pitt Island ) பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்றது. இலட்சத் தீவு , மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் 1973 ஆம் ஆண்டு முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது. இ. மற்ற கடல் தீவுகள் 8 ° இந்தியாவின் இரு பெரும் தீவுக் கூட்டங்களைத் தவிர்த்து பல்வேறு சிறிய தீவுகள் , மேற்கு கடற்கரை , கிழக்கு கடற்கரை , கங்கை டெல்டா பகுதி மற்றும் மன்னார் வளைகுடா
பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் பல தீவுகள் மனிதர்கள் வசிப்பதில்லை. இத்தீவுகளை அருகாமையில் உள்ள அந்தந்த மாநிலங்கள் நிர்வாகம் செய்கின்றன. 21 இந்தியாவின் வடிகாலமைப்பு முதன்மையாறுகளும் , என்பது ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ , ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ துணையாறுகளும் சேர்க்கும் செயலாகும். முதன்மை ஆறுகளும் , துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால் கொப்பரை என்று அழைக்கப்படுகின்றது. வடிகால் அமைப்பானது. ஒரு பிரதேசத்தில் உள்ள நிலவியல் அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. இந்தியாவின் அமைவிட அடிப்படையில்
வடிகாலமைப்பை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை ( i ) இமயமலையில் தோன்றும் ஆறுகள் ( ii ) தீபகற்ப இந்திய ஆறுகள் ஆறுகள் F வடிகாலமைப்பு இமயமலை ஆறுகள் இமயமலையில் தோன்றும் ஆறுகள் இவ்வாறுகள் வட இந்தியாவில் பாய்கின்றன. வடக்கே உள்ள இமயமலையில் இந்த ஆறுகள் உற்பத்தியாவதால் இமயமலை ஆறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள் ஆகும். அ. சிந்து நதி தொகுப்பு சிந்து நதி 2850 கி.மீ நீளத்துடன் ( இந்தியப் பகுதியில் 709 கி.மீ நீளம் மட்டுமே பாய்கிறது ) உலகில் உள்ள நீளமான நதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. திபெத்
பகுதியில் உள்ள கைலாஷ் மலைத் தொடரின் வடக்கு சரிவில் மானசரோவர் ஏரிக்கு அருகில் 5150 மீ. உயரத்தில் உற்பத்தியாகிறது. இந் நதிபாயும் மொத்த வடிகாலமைப்பு பரப்பான 11,65,500 ச.கி.மீட்டரில் 3,21,289 ச.கி.மீட்டர் பரப்பு இந்தியாவிலுள்ளது. இது லடாக் மற்றும் ஜாஸ்கர் மலைத்தொடர் வழியாக பாய்ந்து குறுகிய மலை இடுக்குகளை உருவாக்குகிறது. ஜம்மு - காஷ்மீர் வழியாக பாய்ந்து பின் தென்புறமாக பாகிஸ்தானின் சில்லார் பகுதியில் நுழைந்து , பின் அரபிக்கடலில் கலக்கிறது. இதன் துணையாறுகள் ஜீலம் , சீனாப் , ராவி , பியாஸ் மற்றும் சட்லெஜ்
ஆகியனவாகும். சிந்துநதியின் மிகப்பெரிய துணையாறு சீனாப் ஆகும். ஆ கங்கை நதி தொகுப்பு கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும். கங்கை சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகவும் உள்ளன. கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 7010 மீ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் 22 உற்பத்தியாகிறது. இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும். வட பகுதியிலிருந்து கோமதி , காக்ரா
, கண்டக் , கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை , சோன் , சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன. வங்கதேசத்தில் , கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. இ. பிரம்மபுத்திரா ஆற்றுத்தொகுப்பு திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் சுமார் 5150 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகிறது. இதன் மொத்த வடிகாலமைப்பான 5,80,000
ச.கி.மீட்டரில் இந்தியாவில் பாயும் பரப்பு 1,94,413 ச.கி.மீ ஆகும். திபெத் பகுதியில் சாங்போ ( தூய்மை ) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் நீளம் சுமார் 2900 கி.மீ. இதில் 900 கி.மீ. மட்டுமே இந்தியாவில் பாய்கிறது. பிரம்மபுத்திரா ஆறு அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. திஸ்டா , மனாஸ் , பராக் , சுபன்ஸ்ரீ ஆகியவை இவ்வாற்றின் துணையாறுகளாகும். வங்களாதேசத்தில் ஜமுனா எனவும் கங்கை ஆற்றுடன் இணைந்த போது மேக்னா சில முக்கிய எனவும் அழைக்கப்படுகிறது. இமயமலையில் தோன்றும்
ஆறுகளின் சிறப்பு இயல்புகள் 1 ) நீளமானவை மற்றும் அகலமானவை 2 ) வற்றாத நதிகள் 3 ) நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை 4 ) ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் த்திற்கு ஏற்றது. தீபகற்ப இந்திய ஆறுகள் தென் இந்திய பெரும்பாலான இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன. இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும். நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது. இவ்வாறுகள் செங்குத்து சரிவுடன் கூடிய பள்ளத்தாக்கு வழியே பாய்கிறது. தீபகற்ப ஆறுகளை அவைபாயும்
திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை எனப்படுகின்றன. 1 ) கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் 2 ) மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் 23 கிழக்கு நேக்கி பாயும் ஆறுகள் அ. மகாநதி இந்நதி சத்தீஸ்கார் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 851 கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது. சீநாத் , டெலன் , சந்தூர் , சித்ரட்லா , கெங்குட்டி மற்றும் நன் ஆகியவை இதன் முக்கிய துணையாறுகளாகும். மகாநதி பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது. இந்நதி வங்காள
விரிகுடாவில் கலக்கிறது. ஆ கோதாவரி தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறான ( 1465 கி.மீ ) கோதாவரி , மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது. இது 3.13 இலட்சம் சதுர.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டது. இது ஆந்திரப்பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பூர்ணா , பென்கங்கா , பிரனிதா , இந்திராவதி , தால் மற்றும் சாலாமி போன்றவை இவற்றின் துணையாறுகள் ஆகும். இந்நதி ராஜமுந்திரிக்கு அருகில் கவுதமி
மற்றும் வசிஸ்தா என இரண்டு கிளைகளாகப் பிரிந்து பெரிய டெல்டாவை உருவாக்குகிறது. கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு ஏரி அமைந்துள்ளது. கிருஷ்ணா மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகா பலேஷ்வர் என்றபகுதியில் ஊற்றாக உருவாகி சுமார் 1400 கி.மீ நீளம் வரையும் 2.58 இலட்சம் ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டிரு இது தீபகற்ப ஆறுகளில் போன்றவை இவ்வாற்றின் முக்கிய துணையாறுகளாகும். இந்நதி ஆந்திரப்பிரதேசத்தின் வழியாக பாய்ந்து ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஈ. காவிரி
காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகி சுமார் 800 கி.மீ நீளத்துக்கு பாய்கிறது. இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் இரண்டாக பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய புனித ஆற்றுத் தீவுகளை உருவாக்குகிறது. பின்பு தமிழ்நாட்டில் நுழைந்து தொடர்ச்சியான மற்றும் குறுகலான மலையிடுக்குகள் வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. 24 அலகு II. காலநிலை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம் ,
கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு , பருவக்காற்று , நிலத்தோற்றம் , ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும். அட்சங்கள் இந்தியா 8 ° 4 ' வட அட்சம் முதல் 37 ° 6 ' வட அட்சம் வரை அமைந்துள்ளது. 23 ° 30 ' வட அட்சமான கடகரேகைநாட்டைஇரு சமபாகங்களாகபிரிக்கிறது. கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிகவெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக்கொண்டுள்ளது. உயரம் புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000
௫ 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5 ° C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு " வெப்ப குறைவு விகிதம் " என்று பெயர். எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கும். உதகை தென்னிந்தியாவின் இதர மலை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி , சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளைவிட மிகவும் குளிராக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6.7LB உயரத்தில் அமைந்துள்ள சென்னையின் வெப்பநிலை 35 ° c ஆக இருக்கும்பொழுது 2240 மீ உயரமுள்ள உதகை வெப்பநிலையைக் கண்டறிக. நிலத்தோற்றம் மதில் ஆசியா இந்தியாவின் நிலத்தோற்றம்
, காலநிலையின் மு கூறுகளான வெப்பநிலை , வளிமண்டல அழுத்தம் , காற்றின் திசை மற்றும் மழையளவை பெருமளவில் பாதிக்கின்றது. இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்க்காற்றை தடுத்து , இந்திய துணைக் கண்டத்தை வெப்பப் பகுதியாக வைத்திருக்கிறது. இதனால் குளிர் காலத்திலும் வடஇந்தியா வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுப்பகுதி கன மழையைப் பெறுகிறது. மாறாக மகாராஷ்ட்ரா , கர்நாடகா , தெலங்கானா , ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள்
மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழைமறைவுப் பகுதி அல்லது காற்று மோதாப்பக்கத்தில் அமைந்திருப்பதால் மிகக்குறைந்த அளவு மழையைப் பெறுகின்றன. இப்பருவத்தில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மங்களூர் 280 செ.மீ மழைப்பொழிவையும் , 25 மழைமறைவுப் பகுதியில் அமைந்துள்ள பெங்களூரு 50 செ.மீ மழைப்பொழிவையும் பெறுகின்றன. ஜெட் காற்றோட்டங்கள் வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் " ஜெட்காற்றுகள் ” என்கிறோம். ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி , துணை அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய
பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது. கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன. பருவக்காற்று " மான்சூன் " என்ற சொல் " மௌசிம் " என்ற அரபு சொல்லிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம் ஆகும். இக்காற்று கோடைக் காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கியும் , குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் வீசுகிறது. கடலிலிருந்து அமைந்துள்ள தூரம் இந்தியாவின் பெரும்பகுதி
குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் கடல் இல் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. கடல்களின் ஆதிக்கமின்மை காரணமாக மத்திய மற்றும் வட இந்திய பகுதிகள் வெப்பநிலையில் பருவகால மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. இங்கு கோடையில் கடும் வெப்பமும் மற்றும் குளிர் காலத்தில் கடும் குளிரும் நிலவுகிறது. கொச்சி , கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் இதன் வருடாந்திர சராசரி வெப்பம் 30 ° c
அளவுக்கு மிகாமல் உள்ளது. மாறாக கடற்கரையிலிருந்து வெகு SR தொலைவில் அமைந்துள்ள புதுடில்லியின் வருடாந்திர சராசரி வெப்பம் 40 ° C க்கும் அதிகமாக உள்ளது. கடற்கரை பகுதியில் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருப்பதால் இவை அதிக மழைத்தரும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு அருகிலுள்ள கொல்கத்தாவில் மழைப்பொழிவு 119 செ.மீ ஆகவும் உள் பகுதியில் அமைந்திருக்கும் பிகானிரில் ( இராஜஸ்தான் ) 24 செ.மீக்கு குறைவான மழைப்பொழிவே பதிவாகின்றது. பருவக்கால காற்று இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும். இந்தியா ஒரு ஆண்டின் கணிசமான காலத்தில் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது. இந்தியாவில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் ஜூன் மாத மத்தியில் விழுகின்றபொழுதிலும் கோடைக்காலம் மேமாத இறுதியில் 26 முடிவடைகிறது. ஏனெனில் தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது. இதேபோல் தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது. சூரியனின்
செங்குத்துக்கதிர் கடக ரேகையின்மீது விழுகின்றது. இதனால் அனைத்து வளி அழுத்த மற்றும் காற்று மண்டலங்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றன. இச்சமயத்தில் வெப்ப மண்டல இணைப்பு பகுதி ( ITCZ ) வடக்கு நோக்கி நகர்வதால் இந்தியாவின் பெரும் பகுதி தென் கிழக்கு வியாபாரக் காற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகின்றன. இக்காற்று பூமத் யரேகையைக் கடக்கும் போது புவி சுழற்சியால் ஏற்படும் விசையின் காரணமாக வடகிழக்கு நோக்கி வீசுகிறது. இது தென்மேற்கிலிருந்து வீசுவதால் தென்மேற்கு பருவக்காற்றாக மாறுகிறது. மண்டலங்கள் தெற்குநோக்கி உருவாகின்றது. இவ்வாறு
குளிர்பருவத்தில் நகர்வதன்மூலம் வளியழுத்தத மற்றும் காற்று வடகிழக்கு பருவக்காற்று பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்றுகளைப் பருவக்காற்று என்கிறோம். பருவக்காலங்கள் வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில் நான்கு பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர். அவை. 1. குளிர்காலம் : ஜனவரி முதல் பிப்ரவரி வரை 2. கோடைக்கா லம் : மார்ச் முதல் மே வரை 3. தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம் : ஜுன் முதல் அக்டோபர முதலி டி மையே வெ செப்டம்பர் வரை 4. வடகிழக்கு பரு ருவக்காற்று காலம் : 1. குளிர்காலம்
டிசம்பர் வரை சூரியனின் செங்குத்து இக்காலத்தில் கதிர்கள் இந்தியாவிலிருந்து வெகுதொலைவிலுள்ள மகரரேகையின் மீது செங்குத்தாக விழுகிறது. இதனால் இந்தியப் பகுதி சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகிறது. இதுவே குறைந்த வெப்பத்திற்கு காரணமாக உள்ளது. தெளிவான வானம் , சிறந்த வானிலை , மென்மையான வடக்கு காற்றுகள் , குறைந்த ஈரப்பதம் மற்றும் மிகுந்த தினசரி பகல்நேர வெப்ப வேறுபாடுகள் ஆகியன இப்பருவத்தின் பண்புகளாகும். இப்பருவத்தில் வட இந்தியாவில் ஓர் உயர் அழுத்தம் உருவாகி காற்று வடமேற்கிலிருந்து சிந்து கங்கை பள்ளத்தாக்குகள் வழியாக
வீசுகிறது. தென்னிந்தியாவில் காற்றின் திசையானது 27 கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது. மேற்கு இமயமலை , தமிழ்நாடு , கேரளா ஆகிய பகுதிகள் இப்பருவத்தில் மழையைப் பெறுகின்றன. இக்காலத்தில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் உருவாகும் மேற்கத்திய இடையூறுடன் தாழ்வழுத்தங்கள் வட இந்தியாவில் மழையைத் தருகின்றன. இக்காற்றை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் ஜெட் காற்றோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்றானது பஞ்சாப் , ஹரியானா , இமாச்சலப் பிரதேசத்தில் மழைப் பொழிவையும் , ஜம்மு காஷ்மீரின் மலைப் பகுதிகளில் பனிப் பொழிவையும் தருகிறது. இம்மழை
குளிர்கால கோதுமை பயிரிடலுக்கு மிகவும் பயனளிக்கிறது. ப இப்பருவத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் இந்திய தீபகற்பத்தின் மீது விழுகிறது. எனவே வெப்பநிலைதெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிகரிக்கிறது. கோடைக்காலத்தின் முற்பகுதியில் நாடு முழுவதும் வெப்பமான வறண்ட வானிலை நிலவுகிறது. கோடைக்காலத்தின் மத்தியிலும் , இறுதியிலும் நிலப்பகுதி இடியுடன்கூடியஆலங்கட்டி மழையின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது. இப்பருவத்தில் இந்தியா முழுவதும் வெப்பம் அதிகரிக்கின்றது. ஏப்ரல் மாதத்தில் தென் இந்திய உட்பகுதிகளில் தின சராசரி வெப்பநிலை 30 ° C
- 35 ° C ஆக பதிவாகிறது. மத்திய இந்திய நிலப்பகுதியின் பல பகுதிகளில் பகல் நேர உச்ச வெப்பநிலை 400C ஆக உள்ளது. வளிமண்டல அழுத்த நிலையின் வேறுபாட்டால் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் காற்றானது தென் மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசுகிறது. இக்காற்றுகள் மே மாதத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு முன் பருவகால மழையைத் தருகின்றன. “ மாஞ்சாரல் " ( Mango shower ) என்ற இடியுடன்கூடிய மழையானது கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் விளையும் “ மாங்காய்கள் " விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது. ஏப்ரல் மற்றும் மே
மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் அல்லது கால்பைசாகி என்று அழைக்கப்படுகிறது. இக்காற்று கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளான பீகார் , மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது 3. தென்மேற்கு பருவக்காற்று காலம் ( மழைக்காலம் ) 2. கோடைக்காலம் இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவக்காற்று விளங்குகிறது. பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது
வாரத்திலும் ஜூலை 15 இல்அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46 ° C வரை உயருகிறது. இப்பருவக்காற்றின் இடி மற்றும் 28 மின்னலுடன் கூடிய துவக்கம் ( தென் இந்தியாவில் ) பருவமழை வெடிப்பு ' எனப்படுகிறது. இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது. இதன் ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது. தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின்
மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது. இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது. ஆரவல்லி மலைத்தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை. வங்காள விரிகுடா கிளை , வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. இது காசி , காரோ , ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் ( mawsynram ) மிக கனமழையைத் தருகிறது. பிறகு
இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது. 4. வடகிழக்கு பருவக்காற்று காலம் கு பருவக்காற்று செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியிலிருந்து வங்காளவிரிகுடா நோக்கி வீசுகிறது. பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் ( கொரியாலிஸ் விசை ) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு
வடகிழக்கிலிருந்து வீசுகிறது. எனவே இக்காற்று வடகிழக்கு பருவக்காற்று என அழைக்கப்படுகிறது. இப்பருவக்காலம் இந்திய துணைக்கண்ட பகுதியில்வட கீழைக் காற்றுத் தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது எனலாம். இப்பருவகாற்றின் மூலம் கேரளா , ஆந்திரா தமிழ்நாடுமற்றும்தென்கர்நாடகாவின்உட்பகுதிகள் நல்ல மழைப்பொழிவைப் பெறுகின்றன. இப்பகுதிகள் மொத்த மழைப்பொழிவில் சுமார் 35 சதவீதத்தைப் பெறுகின்றன.உலகில் மிக அதிக அளவு மழை பெறும் ( 1141 செ.மீ ) பகுதியான மௌசின்ராம் ( Mawsynram ) மேகாலயாவில் அமைந்துள்ளது. மழைப் பரவல் இந்தியாவில் ஆண்டு சராசரி
மழையளவு 118 செ.மீ இருப்பினும் நாட்டின் மழைவீழ்ச்சியின் பரவல் சீரற்று காணப்படுகிறது. மேற்கு கடற்கரை , அசாம் , மேகாலயாவின் தென்பகுதி , திரிபுரா , நாகலாந்து , அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன. இராஜஸ்தான் மாநிலம் முழுவதும் , பஞ்சாப் , ஹரியானா , உத்திரப்பிரதேச மாநிலத்தின் 29 மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் , மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதி மற்றும் தக்காணப் பீடபூமி பகுதி மற்றும் தமிழக கடற்கரையின் ஒரு
குறுகியப்பகுதி போன்றவை 100 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறுகின்றன. மற்ற பகுதிகள் 100 முதல் 200 செ.மீ வரையிலான மழைப்பொழிவைப் பெறுகின்றன. இயற்கைத் தாவரங்கள் இயற்கைத் காலநிலை , மண் வகைகள் , மழைப்பொழிவு மற்றும் நிலத்தோற்றங்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் இந்தியாவின் இயற்கைத் தாவரங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. அயனமண்டல பசுமை மாறாக் காடுகள் ஆகியவை ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும் ஆண்டு வெப்பநிலை 22 ° c க்கு அதிகமாகவும் , சராசரி
ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ள பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகிறன. மேற்குதொடர்ச்சி மலை , கர்நாடகா , மகாராஷ்ட்ரா அந்தமான் நிக்கோபர் தீவுகள் , கேரளா , அசாம் , மேற்கு வங்காளம் , நாகலாந்து , திரிபுரா , மிசோரம் , மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன. இரப்பர் , எபனி , ரோஸ் மரம் , தெ னை , மூங்கில் , சின்கோனா , சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன. அயன மண்டல இலையுதிர்க் காடுகள் 1 தாவரங்கள் இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழி ரை உழைக்கலாம். அளவு சுமார் 100
செ.மீ 200 செ.மீ பகுதிகளில் காணப்படுகின்றன. இதனை பருவக்காலக்காடுகள் என்றும் இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை 27 ° C ஆகவும் மற்றும் சராசரி ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 70 சதவீதமாகவும் உள்ளது. இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள் , வடசமவெளிகள் , பஞ்சாப் , ஹரியானா , ஆந்திரப் பிரதேசம் , பீகார் , மேற்கு வங்காளம் , மத்திய இந்தியா , ஜார்கண்ட் , மத்தியப்பிரதேசம் ,
சத்தீஸ்கர் , தென் இந்தியா , மகாராஷ்ட்ரா , கர்நாடகா , தெலங்கானா , ஆந்திரப்பிரதேசம் , கேரளா , தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இங்கு தேக்கு மற்றும் சால் மிக முக்கிய மரங்களாகும். இதைத் தவிர சந்தனமரம் , ரோஸ்மரம் , குசம் , மாகு , பாலாங் , ஆம்லா , 30 முதல் மூங்கில் , சிசம் மற்றும் படாக் ஆகியவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களாகும். இக்காடுகள் நறுமண திரவியங்கள் , வார்னீஷ் , சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன. அயனமண்டல வறண்டக் காடுகள் ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100
செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயனமண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. அயனமண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகைக் காடாகும். கிழக்கு இராஜஸ்தான் , ஹரியானா , பஞ்சாப் , உத்திரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி , மத்தியப்பிரதேசம் , கிழக்குப்பகுதி , தெலங்கானா , மேற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இலுப்பை ( mahua ) , ஆலமரம் , ஆவாராம் பூ மரம் ( Amaldas ) , பலா , மஞ்சக்கடம்பு ( Haldu ) , கருவேலம் ( Babool ) மற்றும் மூங்கில் ஆகிய முக்கிய மரவகைகளாகும். பாலைவன மற்றும் அரைப்
பாலைவனத் தாவரங்கள் : இக்காடுகளை " முட்புதர் காடுகள் " என்றும் அழைப்பர். இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும் , அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகள் வடமேற்கு இந்தியப் பகுதிகளான மேற்கு இராஜஸ்தான் , தென்மேற்கு ஹரியானா , வடக்கு குஜராத் மற்றும் தென்மேற்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும் , தக்காண பீடபூமியின் கர்நாடகா , மகராஷ்ட்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் வறண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. கருவேலம் ( Babool ) , சீமை கருவேல மரம் ( Kikar ) ,
ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன. அல்பைன் / இமயமலைக் காடுகள் 905 Lipen உயரம் வல்லும் வகைப்படுத்தப்படுகின்றன. i. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள கிழக்கு இமயமலைச் சரிவுகளில் 1200-2400 மீ உயரம்உள்ள பகுதிகளில் காணப்படும் இக்காடுகளில்சால் , ஓக் , லாரஸ் , அமுரா , செஸ்ட்நெட் , சின்னமன் போன்ற மரங்கள் வளர்கின்றன. 2400-3600 உயரங்களில் ஓக் , பிர்ச் , சில்வர் , பெர் , பைன் , ஸ்புரூஸ் , ஜுனிப்பர் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. II. இமாச்சலப்பிரதேசம் , உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப் பொழிவு உள்ள
பகுதிகளில் சுமார் 900 மீட்டர்உயரமுள்ள பகுதிகளில் அரை பாலைவனத் தாவரங்களான சிறு புதர் செடிகள் , சிறு மரங்கள் போன்றவை மற்றும் மகாராஷ்ட்ராவின் மழையளவின் அடிப்படையில் இக்காடுகள் 31 வளருகின்றன. சுமார் 900 1800 மீ உயரம் உள்ள மலைகளில் சிர்பைன் எனப்படும் மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 1800 முதல் 3000 மீ உயரமுள்ள பகுதிகளில் மித வெப்ப மண்டலஊசியிலைக் காடுகள் பரவியுள்ளன. அல்பைன் காடுகள் சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இவ்வகைக்காடுகள் ஊசியிலை மரங்களைக்
கொண்டுள்ளன. ஓக் , சில்வர் பிர் , பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள் இக்காட்டின் முக்கிய மரவகைகளாகும். கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன. அலையாத்திக் காடுகள் இக்காடுகள் டெல்டாக்கள் , பொங்கு முகங்கள்மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை ஓதங்களின் உள்ளாவதால் சதுப்புநிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. கங்கை பிரம்மப்புத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. மகாநதி , கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா