text
stringlengths 11
513
|
|---|
பகுதிகளிலும்இவ்வகை ஒதக்காடுகள் காணப்படுகின்றன.இவை " மாங்குரோவ் காடுகள் " என்றும் அழைக்கப்படுகின்றன. க ஆதிக்கத்திற்கு வன உயிரினங்கள் உலகிலுள்ள 1.5 மில்லியன் வகையான வன விலங்கு உயிரினங்களில் இந்தியாவில் மட்டும் 81,251 க்கும் மேற்பட்ட வகையான வன விலங்கினங்கள் உள்ளன. இந்திய வனவிலங்கு வாரியம் 1952 ( IBWL ) 1952 ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும். வனவிலங்குக களைப் பாதுகாக்கவும் , வேட்டையாடுதல் , கடத்துதல் மற்றும் சட்டவிரோத
|
வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்திய அரசு 1972 இல் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்திய வனவிலங்கின் செழுமைத் தன்மையையும் , பன்மையையும் பாதுகாக்க 102 தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள்உருவாக்கப்பட்டன. இந்திய அரசாங்கம் 18 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973 இல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன. 32 இந்தியாவின் உயிர்க்கோள காப்பகங்கள்
|
இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் ( மன்னார் வளைகுடா , நந்தா தேவி , நீலகிரி , நோக்ரேக் , பச்மாரி , சிம்லிபால் , சுந்தரவனம் , அகத்திய மலை , பெரிய நிக்கோபார் , கஞ்சன்ஜங்கா மற்றும் அமர்கண்டக் ) யுனெஸ்கோவின் ( UNESCO ) மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. அவை 1. வண்டல் மண் 29.69 % 2. கரிசல் மண் 28 % 3. செம்மண் 22.16 % 4. சரளை மண் 6.13 %
|
5. காடு மற்றும் மலை மண் 6. வறண்ட பாலை மண் ந வண்டல் மண் 7.94 % 2.62 % 7. உப்பு மற்றும் காரமண் 2.17 % 8. களிமண் மற்றும் சதுப்பு நில மண் 1.29 % IE வேதியியல் பண்புகள் : Lag மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக உள்ளது. அ காதர் : வெளிர் நிறமுடைய மணற்பாங்கான மண். பாங்கர் : சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் படிவுகள் , அடர் நிறம் உடையது. ப உருவாக்கம் : சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன. பொட்டாசியம் , சுண்ணாம்பு பாஸ்போரிக் அமிலம் , 6 காணப்படுகின்றன. நைட்ரஜன் குறைவாக
|
மண்ணின் தன்மைகள் : வண்டல் , மண்மண்டி ( Silt ) களிமண் போன்ற கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் , உத்தரப்பிரதேசம் , உத்தரகாண்ட் , பஞ்சாப் , ஹரியானா , மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளிப் பகுதிகள் , கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆற்று முகத்துவாரப் பகுதி. முக்கிய பயிர்கள் : நெல் , கோதுமை , கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் 33 கரிசல் மண் உருவாக்கம் தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது. நிறம் : டைட்டானியம் மற்றும்
|
இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது. வேதியியல் பண்புகள் : கால்சியம் , மக்னீசியம் , கார்போனேட்டுகள் , அதிக அளவிலான இரும்பு , அலுமினியம் , சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன. நைட்ரஜன் , பாஸ்போரிக் அமிலம் , மற்றும் , இலை மக்குகள் குறைவாக உள்ளன. மண்ணின் தன்மைகள் : ஈரமாக இருக்கும் போது சேறாகவும் , ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது. மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம் , தெலங்கானா , ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின்
|
வடபகுதி முக்கிய பயிர்கள் : பருத்தி , தினை வகைகள் , புகையிலை மற்றும் கரும்பு செம்மண் உருவாக்கம் பழமையான படிக பாறைகளான கிரானைட் , நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. வேதியியல் பண்புகள் : இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது. நைட்ரஜன் , இலைமட்குகள் , பாஸ்போரிக் அமிலம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக காணப்படுகின்றன. மண்ணின் தன்மைகள் : மென்துகள்கள் குறிப்பிடப்பட்டுள்ளஉப்புக்கரைசல் , வெண்களிப் பாறைத்தாதுக்கள் , சிறு வெடிப்புகளுடன் கூடிய செம்மண் படிவு. தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி ,
|
தென் மாநிலங்களான கேரளா , தமிழ்நாடு , கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி , ஜார்க்கண்ட் முக்கிய பயிர்கள் : கோதுமை , நெல் , பருத்தி , கரும்பு மற்றும் பருப்பு வகைகள் சரளை மண் உருவாக்கம் வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் ( leaching ) காரணமாக உருவாகிறது. வேதியியல் பண்புகள் ; இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் உருவானது. மண்ணின் தன்மை : உயரமான மலைப் பகுதிகளில் அதிகமான அமிலத்தன்மையுடனும் தாழ்வான பகுதிகளில் குறைந்த அளவும் உள்ளது.பொதுவாக இது ஈரப்பதத்தை தக்கவைத்துக்
|
கொள்வதில்லை. ஆனால் களிமண் கலந்த வண்டல் படிவுகளைக் கொண்ட சமவெளிப் பகுதிகளில் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்கிறது. 34 அசாம் குன்றுகள் , கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின்அடிவாரப் பகுதிகள் , ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் முக்கிய பயிர்கள் : காபி , இரப்பர் , முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு காடு மற்றும் மலை மண் வேதியியல் பண்புகள் : பொட்டாஷ் , பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் குறைவாகக் காணப்படுகிறது. தன்மை : மென்மையான மணல் மற்றும் பாறை துகள்கள் கலந்து காணப்படுகிறது. இம்
|
மண்ணின் தன்மை தாய்பாறைக் கேற்ப மாறுபடுகிறது. அதிக இலை மட்குச் சத்துகள் உடையது மெதுவாக மட்குகளால் சிதைவுறுவதால் காரத்தன்மை கொண்டதாக உள்ளது. ஜம்மு - காஷ்மீர் , லடாக் பகுதிகள் இமாச்சலப் பிரதேசம் , உத்தரகாண்ட் , சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள ஊசியிலைக் காடுகளின் பகுதிகள் , மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் முக்கிய பயிர்கள் காபி , தேயிலை , நெல் , மக்காச் சோளம் , உருளைக் கிழங்கு , பார்லி , வெப்ப மண்டல பழவகைகள் மற்றும் , பல்வேறு வகையான வாசனைப் பொருள்கள் வறண்டபாலை மண் தாவரங்கள் இல்லாமையால்
|
இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது. வேதியியல் பண்புகள் : அதிக அளவிலான உப்பு , அமிலத்தன்மை , பாஸ்பேட் , பல்வேறு அளவுகளில் உள்ள கால்சியம் கார்பனேட் , உயிர்சத்துக்கள் மற்றும் நைட்ரஜன் குறைவாகவும் காணப்படுகிறது. தன்மை : வெளிர்நிறம் குறைந்த இலை மட்கு சத்து புரைத்தன்மையுடையது , குறைந்த ஈரப்பதம் உடையது. இராஜஸ்தான் , குஜராத்தின் பாசன வசதியுடன் தினை வகைகள் , பயிரிடப்படுகின்றன. உப்பு மற்றும் கார மண் வேதியியல் பண்புகள் : சோடியம் , மக்னீசியம் , அமிலம் காணப்படுகிறது. வட பகுதி , பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதி. நீர்
|
உடையது. கால்சியம் மற்றும் சல்பூரிக் தன்மை : சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை 35 ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் , பீகார் , உத்தரப்பிரதேசம் , ஹரியானா , பஞ்சாப் , இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகள் அதிக காரத்தன்மை காரணமாக இங்கு பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. சதுப்பு நிலமண் இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மையுடையது.அதிக மழையளவு , அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது. வேதியியல் பண்புகள் : பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் , சத்துகள் குறைவாகவும் ,
|
காணப்படுகிறது. தன்மை : ஈரத்தன்மையுடன் இலை மட்கைக் கொண்டும் கருமை நிறத்திலும் உள்ளது. கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழைமாவட்டங்கள் , ஒடிசா தமிழ்நாடு உள்ள சுந்தரவனப் பகுதிகள் , பீகார் , கடற்கரைப் பகுதிகள் , மேற்குவங்கத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டம். முக்கிய பயிர்கள் : நெல் , சணல் மண் சீரழிவு : இந்தியாவில் மண் சீரழிவு என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்திய தொலை நுண்ணுணர்வு ( IIRS ) , 2015 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.
|
இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் € 49 1. மண் அரிப்பு ( தாள் அரிப்பு , நீரோட்ட மண்ணரிப்பு , நீர் பள்ள மண்ணரிப்பு , பள்ளத்தாக்கு மண்ணரிப்பு ). 2. மண் சீரழிவு 3. நீர் தேங்குதல் க. உப்பு படிவுகள் ஆகியவகும். வெல்லும் மண் வளப்பாதுகாப்பும் மண்வள மேலாண்மையும் 1. காடுகள் உருவாக்கம் 2. அணைகள் மற்றும் குறுக்கணைகள் கட்டுதல். 3. அதிக மேய்ச்சலை த் தடுத்தல் 4. மேம்பட்ட பயிர்ச்சாகுபடி முறைகளைப் பின்பற்றல் சம உயரம் உழுதல் , பயிற்சுழற்சி முறை , கரைகள் கட்டுதல் , படிக்கட்டு வேளாண்மை , பட்டை பயிரிடல் , காற்றெ திர்
|
திசையில் மரங்கள் நடல் , நிலைத்த 36 உ வேளாண் நுட்பத்தையும் மண் மேலாண்மைக்கு உகந்த பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றுதல். நீர்ப்பாசனம் வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால் , வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. நீர்ப்பாசன ஆதாரங்கள் ( அ ) மூலங்கள் நிலத்தோற்றம் , மண் , மழைப் பொழிவு , நிலநீர் மற்றும் நிலத்தடி நீர் இருப்பு
|
ஆற்றின் இயல்பு ( வற்றும் ஆறு , வற்றாத ஆறு ) பயிர்களின் தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையான நீர்ப்பாசன வகைகள் பயன்பாட்டில் உள்ளன. பாசன மூலங்களாவன 1. கால்வாய் பாசனம் 2. கிணற்றுப் பாசனம் மற்றும் ஏரிப் பாசனம் Flash கால்வாய் பாசனம் இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர்ப்பாசன ஆதாரமாகும். தாழ்வான மற்றும் சமமான நிலப்பகுதி , பருமன் மிகுந்த வளமான மண் , வற்றாத நீர் மூலங்கள் மற்றும் அதிக நீர்பிடிப்புக் கொண்ட பகுதிகளில் கால்வாய் பாசனம் முக்கிய ஆதாரமாக உள்ளது. கால்வாய்ப் பாசனத்தை இரண்டு வகைகளாகப்
|
பிரிக்கலாம். 1. வெள்ளப் பெருக்கு கால்வாய் மயே வெல்ல ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் எடுக்கப்படுகிறது. இவ்வகை கால்வாய்கள் வெள்ளக் திருப்பப் பயன்படுவதோடு மழைக்காலங்களில் இவ்வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதலாகும். கால்வாய் பாசனத்தில் 60 சதவிகிதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன. 37 கிணற்றுப் பாசனம் கிணறு என்பது புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியின் மேற்பரப்பிற்கு
|
கொண்டுவருதல் ஆகும். இது நாட்டின் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பான ஆதாரமாக உள்ளது. மழைப்பொழிவு குறைவான பகுதிகளிலும் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாத பகுதிகளிலும் கிணற்றுப் பாசனம் அவசியமாகிறது. கிணறுகள் இரண்டு வகைப்படும் அவை : 1. திறந்தவெளிக் கிணறுகள் 2. ஆழ்துளைக் கிணறுகள் 1. திறந்த வெளிக் கிணறுகள் நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகின்றது. இப்பாசனம் கங்கை சமவெளி , மகாநதி , கோதாவரி , கிருஷ்ணா , காவிரி , நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில்
|
அதிகம் காணப்படுகிறது. 2. ஆழ்த்துளைக் கிணறு மின் மிகை பகுதிகள் மற்றும் ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள் , கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. குஜராத் , மகாராஷ்டிரா , பஞ்சாப் , மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது. மென்பாறைகள் கெ இ ) ஏரிப்பாசனம் ப வ இந்தியாவின் ளங்கை. மிகப் பழமையான இப்பாசனமுறை ஏரிகள் மற்றும் குளங்களையும் உள்ளடக்கியது. நவீன நீர்ப்பாசன முறைகள் சொட்டு நீர்ப்பாசனம் , தெளிப்பு முறை பாசனம் மற்றும் மையச்சுழல்
|
நீர்ப்பாசனம் ஆகியனவாகும். சொட்டு நீர்ப்பாசனம் இவ்வகை நீர்ப்பாசனம் இஸ்ரேல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் நீரானது குழாய்களில் உள்ள துவாரங்கள் வழியாக நீர் துளிகளாக பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் 70 சதவிகித நீர் சேமிக்கப்படுகிறது. 38 தெளிப்பு நீர்ப்பாசனம் இது மிகவும் எளிமையான மற்றும் சுலபமான நீர்ப்பாசன வகையாகும். இம்முறையில் குழாயில் போடப்பட்டுள்ள நுண் துளைகள் வழியாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. பாசனத்தை சமனற்ற நிலப்பகுதிகளிலும் பயன்படுத்தலாம். இவ்வகை வேகத்
|
தெளிப்பு நீர்ப்பாசனம் இவ்வகை நீர்ப்பானத்தில் நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படுகிறது. 4 மீட்டர் உயரம் வரை உள்ள பயிர் வகைகளுக்கும். இவற்றின் மூலம் நீர் பாசனம் செய்யலாம். கரும்பு மற்றும் சோளப் பயிர்களுக்கும் பாசனம் உதவிகரமாக உள்ளது. மையத் தெளிப்பு நீர்ப்பாசனம் இவை வட்டச் சக்கர நீர்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றிற்கான உபகரணத்தின் மையப்பகுதியில் உள்ள கருவி சுழன்று அவற்றைச் சுற்றியுள்ள பயிர்களுக்கு நீர்ப் பாசனத்தை அளிக்கிறது. பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் பிரதான் மந்திரி கிருஷி
|
சிஞ்சாயி யோஜனா - ( PMKY ) குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். வாய்மையே வெல்லும் 39 வேளாண்மை இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்கள் பெயர் மாநிலம் அசாம் ஜூம் கேரளா பொன்னம் பொடு பீவார் , மாசன் , பென்டா , பீரா ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா , மத்தியப்பிரதேசம் பல்நோக்கு திட்டத்தின் பெயர் ஆறுகள் பயனடையும் மாநிலங்கள் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் தாமோதர் மேற்கு வங்காளம் , ஜார்கண்ட் பக்ரா நங்கல் திட்டம் ( உலகின் பெரிய புவி
|
ஈர்ப்பு அணை ) சட்லஜ் பஞ்சாப் , ஹரியானா , இராஜஸ்தான் ஹிராகுட் திட்டம் ( உலகின் மிக நீளமான அணை ) மகாநதி ஒடிசா கோசி திட்டம் கோசி பீகார் மற்றும் நேபாளம் துங்கபத்ரா திட்டம் துங்கபத்ரா ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா 58 தெகிரி அணை பாகீரதி உத்தரகாண்ட் சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம் சம்பல் இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் நாகார்ஜுன சாகர் திட்டம் கிருஷ்ணா ஆந்திரப் பிரதேசம் சர்தார் சரோவர் திட்டம் நர்மதை மத்தியப்பிரதேசம் , மகாராஷ்டிரா , இராஜஸ்தான் wanan angg anevoimis , BiLLib. Blevel porteroganch , unberü ,
|
profumant மேட்டூர் அணை காவிரி தமிழ்நாடு இந்தியாவின் முக்கியப் பயிர்கள் இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். 1. உணவுப் பயிர்கள் - நெல் , கோதுமை , மக்காச்சோளம் , தினைப்பயிர்கள் , பருப்பு இன்னும் பிற. 2. வாணிபப் பயிர்கள் கரும்பு , புகையிலை , பருத்தி , சணல் , எண்ணெய் வித்துக்கள் 3. தோட்டப்பயிர்கள் - தேயிலை , காபி , இரப்பர் 4. தோட்டக்கலைப் பயிர்கள் பழங்கள் , மலர்கள் , மற்றும் காய்கறிகள் 40 அதிக விளைச்சல் தரும் விதைகள் ( CR தான் 205 , A.R. தான் 306 , CRR 451 , போன்றவை )
|
அதிகரித்ததன் காரணமாக பல பழமையான நெல் வகைகள் மறைந்து போயின. மேற்கு வங்காளம் , ( முதல் மாநிலம் ) உத்தரப்பிரதேசம் , பஞ்சாப் , தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம் , பீகார் , சத்தீஸ்கர் , ஒடிசா , அசாம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளன. கோதுமை நெற் பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும். நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவிகிதமும் , மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 34 சதவிகித பங்கையும் கோதுமை வகிக்கிறது.
|
இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10-15 ° C வெப்பமும் , முதிரும் பருவத்தில் 20- 25 ° C வெப்பநிலையும் தேவைப்படுகிறது. சுமார் 85 சதவிகிதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம் , பஞ்சாப் , ஹரியானா , இராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது. இதைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது. ன சோளம் தி முக்கிய உ நம் நாட்டின் மூன்றாவது உணவுப்பயிர் சோளம் ஆகும். இது ஆப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்ட
|
பயிராகும். இப்பயிர் வறட்சியான காலநிலையிலும் நன்கு வளரக் கூடியது. இத்தானியத்தில் கார்போ - ஹைட்ரேட் , புரதச்சத்து , தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பெரும்பாலான ஏழை மக்களுக்கு மலிவான உணவாக விளங்குகிறது. இது நாட்டின் பல பகுதிகளில் தீபகற்ப இந்தியாவின் ஒரு கர்நாடகா மற்றும் கால்நடைதீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.ற. இப முக்கியப்பயிராகவும் இது விளங்குகிறது. மகாராஷ்டிரா , இவற்றின் மத்தியப்பிரதேசம் உற்பத்தியாளர்களாகும். கம்பு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிராகும். இது வறண்ட பகுதிகளில் நன்கு
|
வளரக்கூடியது. இந்தியாவில் இராஜஸ்தான் முதன்மை உற்பத்தியாளராகவும் அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் , ஹரியானா , குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக உற்பத்தியை தருபவைகளாகவும் உள்ளன. 42 எண்ணெய் வித்துக்கள் இந்தியாவில் குஜராத் மாநிலம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது. 3. தோட்டப்பயிர்கள் தேயிலை , காபி , இரப்பர் மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும்.
|
இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு முக்கிய தேயிலை வகைகள் : 1. பூகி ( BOHEA ) பிறப்பிடம் சீனா 2. அசாமிகா ( ASSAMICA ) பிறப்பிடம் இந்தியா இவ்விரண்டின்கலப்பின் மூலம் பல வீரியமுள்ள தேயிலை பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகத்தேயிலை உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் அசாம் ஆகும். தமிழ்நாடு , கேரளா மற்றும் மேற்கு வங்காளம் தேயிலை பயிரிடும் மற்ற மாநிலங்களாகும். காபி இவை நிழல்களில் நன்றாக வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து சுமார்
|
1000 மீ முதல் 1500 மீ உயரம் கொண்ட மலைச் சரிவுகளில் நன்றாக வளர்கிறது. காபியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை : 1. அராபிகா தரம் மிக்கதும் , இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமாகும். 2. ரொபஸ்டா - தரம் குறைந்த வகை உலக காபி உற்பத்தியில் இந்தியா 7 வது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் காபி உற்பத்தியில் கர்நாடகம் முதன்மையான உற்பத்தியாளராக திகழ்கிறது. இம்மாநிலம் இந்திய உற்பத்தியில் 71 % , உலக உற்பத்தியில் 2.5 % அளிக்கிறது. ( ஆதாரம் : இந்திய காபி வாரியம் , 2018 ). 60 இரப்பர் முதலில்இரப்பர் தோட்டம் 1902 ஆம் ஆண்டு
|
கேரளாவில் முதன் வெப்ப ஈரப்பத அயன உருவாக்கப்பட்டது. மண்டல காலநிலைஇரப்பர் பயிரிடஏற்றதாகும். ( வெப்பநிலை 20 ° C க்கும் அதிகம் , மழைப்பொழிவு 300 செ.மீக்கு மேல் ) பெரும்பாலான இரப்பர் தோட்டங்கள் சிறு நில உடைமையாளர்களிடம் உள்ளன. கேரளா , தமிழ்நாடு , கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் இரப்பர் உற்பத்தியில் முக்கியமான பகுதிகளாகும். கேரளா நறுமணப் பொருள்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மையான மாநிலம் ஆகும். 44 தோட்டக்கலை பயிர்கள் பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் வகிக்கிறது.
|
கால்நடைகள் , மாடுகள் இந்தியாவில் மொத்த கால்நடைகளில் மாடுகள் 37.3 சதவிகிதமாகும். உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மாடுகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. உத்திர பிரதேசம் அதிகப்படியான எருமைகளையும் ( 28.2 % ). அதனைத் தொடர்ந்து இராஜஸ்தான் ( 9.6 % ) மற்றும் ஆந்திரப்பிரதேசம் ( 7.9 % ) முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வகிக்கின்றன. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு 1919 இல் மிகக் குறைந்த பால் பண்ணை கால்நடைகளுடன் றந்த எடுக்கப்பட்டது , நீ நம் நாட்டின் மொத்த பால் உற்பத்தியில்
|
உத்தரப்பிரதேசம் , இராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் முதன்மை மாநிலங்களாகத் திகழ்கின்றன , இறைச்சியைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து நாட்டின் இறைச்சி உற்பத்தியில் மகாராஷ்டிரா , மேற்குவங்காளம் ஆகியவை உள்ளன. நம் நாட்டின் மொத்த ரோம உற்பத்தியில் இராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தையும் , அதனைத் இரண்டாம் இடத்தையும்வகிக்கின்றது. நறுமணப் பயிர்கள் தொடர்ந்து கர்நாடகம் டம் PO பழங்காலம் தொட்டே நறுமணப் பொருட்களுக்கு இந்தியா உலக புகழ் பெற்றதாகும். இந்நறுமணப்பொருள்கள்பெரும்பாலும் உணவிற்கு
|
சுவையூட்டியாகவும் , மருந்துப்பொருள்கள் மற்றும் சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மிளகு , மிளகாய் , மஞ்சள் , இஞ்சி , ஏலக்காய் , இலவங்கம் , மக்கள் தொகைக்கும் அதிகமானோருக்கு வும்படி வேலை வாய்ப்பை அளிக்கிறது. உலக மீன் உற்பத்தியில் 3 சதவிகிதத்துடன் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மீன் பிடி தொழில் இருவகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1 ) கடல் மீன் பிடிப்பு 2 ) உள்நாட்டு ( அ ) நன்னீர் மீன்பிடிப்பு 45 மீன்பிடித்தல் 1. கடல் மீன் பிடிப்பு கடற்கரைப்பகுதி , கடற்கரையை ஒட்டியபகுதி
|
மற்றும் ஆழ்கடல் முக்கியமாக கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது. கேரளா கடல் மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது. 2. உள்நாட்டு மீன் பிடிப்பு நீர்த்தேக்கங்களான ஆறுகள் , ஏரிகள் , கால்வாய்கள் , குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும். நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதம் உள்நாட்டு மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது. இந்தியாவில ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவில் மீனவர்களால்
|
பிடிக்கப்படும் முக்கியமான மீன் வகைகள் கெளுத்தி , ஹெர்கிங்ஸ் , கானாங் கெளுத்தி , பெர்சல் , ஈல்மீன் முல்லட்டை மீன் போன்றவையாகும். 3.6 மீன் வளர்ப்பு இந்தியாவில் மீன் வளர்ப்பு ஒரு முக்கியப் பொருளாதார நடவடிக்கையாகும். இத்துறை வளர்ந்து வரும் துறையாகவும் பல்வேறு வளங்களைக் கொண்டதாகவும் உள்ளது. இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகள் உற்பத்திகள் எண்ணெய் வித்துக்கள் ( குறிப்பாக கடுகு மற்றும் சூரிய காந்தி மீன்கள் உற்பத்தி BLO ) 0 ேபழங்கள் , தேன் மற்றும் தோட்டக்கலைப் பயிர் தோல் , கோக்கோ , மரபுசாரா உற்பத்தி சணல் உற்பத்தி
|
புரட்சிகள் மஞ்சள் புரட்சி நீலப் புரட்சி பழுப்புப் புரட்சி தங்க நூலிழைப் பொன் புரட்சி சாம்பல் புரட்சி இளஞ்சிவப்புப் புரட்சி பசுமைப் புரட்சி வெள்ளிப் புரட்சி வெள்ளி இழைப் புரட்சி சிவப்புப் புரட்சி வட்டப் புரட்சி வெண்மைப் புரட்சி உரங்கள் வெங்காயம் , மருந்து பொருள்கள் , இறால் உற்பத்தி அனைத்து வேளாண் உற்பத்தி முட்டை மற்றும் கோழிகள் பருத்தி இறைச்சி உற்பத்தி , தக்காளி உற்பத்தி உருளைக்கிழங்கு பால் உற்பத்தி 46 இந்தியா- வளங்கள் மற்றும் தொழிலகங்கள் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை அ.
|
உலோகக் கனிமங்கள் ஆ. அலோகக் கனிமங்கள் அ. உலோகக் கனிமங்கள் உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும். உலோகக் கனிமங்கள் அரிதாகவும் இயற்கையான அடர்ந்த தாது படிவங்களாகவும் காணப்படுகின்றன. உலோகப் படிவுகளில் இரும்பு , மாங்கனீசு , தாமிரம் , பாக்சைட் , நிக்கல் , துத்தநாகம் , காரியம் , தங்கம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன. 1. இரும்புத்தாது இரும்புத்தாது புவியின் மேலோட்டில் அதிகம் பரவி காணப்ப டும் ஒன்றாகும். இவை தனித்த நிலையில் அரிதாகக் காணப்படுகிறது. இது தீப்பாறைகள்
|
மற்றும் உருமாறியப் பாறைகளின் கலவையாக காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் இரும்புத்தாது வளங்கள் ஹேமடைட் வகையை யும் , மேக்னடைட் வகையையும் சார்ந்தவை. பொதுவாக இரும்புத்தாது கீழ்க்கண்ட வடிவங்களில் காணப்படுகிறது. இரும்புத் தாது படிவு இரும்பின் அளவு மேக்னடைட் 72.4 % ஹேமடைட் 69.9 % கோதைட் சிடரைட் நாட்டின் மொத்த இரும்புத்தாது உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலம் 25 % உற்பத்தி செய்து முதன்மையான உற்பத்தியாளராகத் திகழ்கிறது. ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி மாவட்டங்கள் இம்மாநிலத்தின் முக்கிய உற்பத்தியாளர்களாகும். ஒடிசா மாநிலம் 21
|
சதவிகித உற்பத்தியுடன்இரண்டாம் நிலையில் உள்ளது. சுந்தர்கார் , மயூர்பஞ்ச் , சம்பல்பூர் மற்றும் கீயோஞ்சர் மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்தி மாவட்டங்களாகும். சத்தீஸ்கர் மாநிலத்தின் மேக்னடைட் உற்பத்தி 18 சதவிகிதமாகும். ராஜ்கார் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்தியாளராகும். கர்நாடக மாநிலத்தின் 20 சதவிகித மேக்னடைட் உற்பத்தி சித்திரதுர்கா , சிக்மங்களூர் , சிமோகா மற்றும் தார்வார் மாவட்டங்கள் உற்பத்தி செய்கின்றன. 47 ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஒவ்வொன்றும் சுமார் 5 சதவிகித உற்பத்தியைச்
|
செய்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் கர்னூல் , குண்டூர் , கடப்பா மற்றும் அனந்த பூர் மாவட்டங்களும் தமிழ்நாட்டில் சேலம் , நாமக்கல் , திருவண்ணாமலை , திருச்சிராப்பள்ளி , கோயம்புத்தூர் , மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களும் குறிப்பிடத்தக்க அளவு இரும்புத்தாது உற்பத்தி செய்கின்றன. இந்திய இரும்பு எஃகு ஆணையம் ( SAIL ) இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுகிறது. 2. மாங்கனீசு மாங்கனீசு ஒரு வெளிர் சாம்பல் நிறமுடைய மிகவும் கடினமான ஆனால் எளிதில் உடையும்
|
தன்மையுடையதாகும். மாங்கனீசு எப்பொழுதும் இரும்பு , லேட்ரைட் மற்றும் பிற தாதுக்களுடன் கலந்து காணப்படும். இது இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையானமூலப்பொருள் ஆகும். ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு 10 கிலோ மாங்கனீசு தேவைப்படுகிறது. வெளுக்கும் தூள் , பூச்சிக்கொல்லிகள் , வண்ணப்பூச்சிகள் , மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மாங்கனீசு பயன்படுகின்றது. நாக்பூரை தலைமையிடமாகக் க மொண்டு இயங்கி வரும் இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் ( Manganese ore India Ltd ) 50 சதவிகித மாங்கனீசை உற்பத்திச்
|
செய்து , உலகச் சந்தை மதிப்பீட்டில் முதன்மையானதாக திகழ்கிறது. மாங்கனீசு படிவுகள் பெரும்பா லும் உருமாறிய பாறைகளில் காணப்படுகிறது. அதிக மாங்கனீசு படிவுகள் ஒடிசா , கர்நாடகா , மத்தியப்பிரதேசம் , மகாராஷ்டிரா , கோவா , ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. இராஜஸ்தான் , குஜராத் , தெலங்கானா , நானா , மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இணைந்து இந்திய மாங்கனிசு உற்பத்தியில் 2 சதவிகிதத்தை அளிக்கின்றன. உலக அளவில் மாங்கனிசு உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடு ஆகும். 3. தாமிரம் முந்தைய ஆகிய
|
வரலாற்றிற்கு தாமிரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகமாகும். தாமிரத்தை துத்தநாகத்துடன் கலந்து பித்தளையையும் , தகரத்துடன் சேர்த்து வெண்கலமும் உருவாக்கப்படுகின்றது. இந்துஸ்தான் தாமிர நிறுவனம் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமாகும். தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் இராஜஸ்தான் ஆகும். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மற்றும் காலத்திலேயே 48 மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகிறது. ஆந்திரப்பிரதேசம் , குஜாராத் , ஹரியானா
|
, மகாராஷ்டிரா , மேகாலயா , நாகலாந்து , சிக்கிம் , தமிழ்நாடு , தெலங்கானா , உத்ரகாண்ட் மற்றும் மேற்குவங்காளம் மாநிலங்கள் சேர்ந்து 7.9 சதவிகித தாமிர இருப்பைப் பெற்றுள்ளன. ஒடிசா , 4. பாக்சைட் மண் அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது. சரளை காணப்படும் பகுதிகளில் புவியின் மேற்பரப்பில் படிவுகளாக பாக்சைட் தாது பரவிக் காணப்படுகிறது. குறைந்த எடை மற்றும் கடினத்தன்மைக் கொண்ட பண்புகளால் அலுமினியமானது விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட் மற்றும் இரசாயனத்
|
தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாக்சைட் தாதுக்கள் ஒடிசா மாநிலத்திலும் , குஜராத்திலும் ( ஜீனாகத் , அம்ரேலி , பாபு நகர் மாவட்டங்கள் ) ஜார்கண்ட் மாநிலத்திலும் ( ராஞ்சி , குமிளா மாவட்டங்கள் ) மகாராஷ்டிரா மாநிலத்திலும் ( சிந்துர்க் , இரத்தனகிரி மாவட்டங்கள் ) சத்திஸ்கர் மாநிலத்திலும் ( பல்லார்பூர் , துர்க் மாவட்டங்கள் ) தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றன. பாக்சைட் என்பது அலுமினியத்தின் ஒருவகையான ஆக்சைடு ஆகும். இது பிரெஞ்சு வார்த்தையான லீ பாக்ஸ் என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. லீ பாக் ஆ அலோகக் கனிமங்கள்
|
இவ்வகைக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை. மைக்கா , சுண்ணாம்பு , ஜிப்சம் , நைட்ரேட் , பொட்டாஷ் டோலமைட் , நிலக்கரி , பெட்ரோலியம் முதலியன அலோகக் கனிமங்களாகும். மைக்கா பண்டைய காலத்தில் மைக்கா ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது. மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்ர தொழிலக வளர்ச்சியால் மைக்கா வகை ஒரு நல்ல தரமான மெல்லிய மைக்காவாகும். மைக்கா எளிதில் மிக பட்டைகளாக பிரித்தெடுக்கக்கூடியவை , நிறமற்றவை , நெகிழும் தன்மையுடையவை. மேலும் குறைந்த மின் இழப்பையும் , அதிகமின் அழுத்தத்தை தாங்கக்கூடிய திறன்
|
பெற்றதால் மின் ( Insulators ) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரப்பிரதேசம் , இராஜஸ்தான் , ஒடிசா , ஜார்கண்ட் ஆகியன முக்கிய மைக்கா உற்பத்தியாளர்களாகும். காப்பான்கள் சுண்ணாம்புக்கல் கால்சியம் கார்போனேட் கொண்ட பாறைகளிலோ அல்லது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அல்லது இரண்டும் கலந்த பாறைகளிலோ சுண்ணாம்புக்கல் காணப்படுகிறது. சுண்ணாம்புக்கல் , சிறிய அளவிலான சிலிக்கா , அலுமினா , இரும்பு ஆக்ஸைடு , பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் ஆகியவற்றைக் 49 கொண்டுள்ளன. சோடா சாம்பல் , எரிசோடா , வெளுக்கும் தூள் ( bleaching powder ) ,
|
காகிதம் , சிமெண்ட் , NALCO என்று அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனம் 1981 இல் தொடங்கப்பட்டது. இதன் மையங்கள் ஒடிசா மாநிலத்தில் அஞ்சுல் , டாமன் , சோடி போன்ற இடங்களில் உள்ளன. இது இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது. தெலங்கானா , இராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் , தமிழ்நாடு , மேகாலயா , குஜராத் , சத்தீஸ்கர் மற்றும் ஆகிய மாநிலங்கள் ஆகும். ஜிப்சம் ஜிப்சம் என்பது கால்சியம் சல்ஃபேட்டின் நீர்மக் கனிமமாகும். இது சுண்ணாம்புப்பாறை , மணற்பாறை , மாக்கல் போன்ற
|
படிவுப்பாறைகளில் ஒளிப்புகும் , வெண்ணிறமான தாதுவாக காணப்படுகிறது. இது சிமெண்ட் , உரங்கள் , சுவர்ப்பட்டிகள் , வளமூட்டியாகவும் பாரிஸ் சாந்து ( plaster of paris ) போன்றவற்றின் உற்பத்திற்கு மூலப்பொருளாகவும் , மண் பயன்படுகிறது. இராஜஸ்தான் , தமிழ்நாடு , குஜராத் , இமாச்சலப்பிரதேசம் , கர்நாடகம் , உத்தரகாண்ட் , ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிப்சம் காணப்படுகின்றன. ஆற்றல் வளங்கள் ஆற்றல் வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள் என வகைப்படுத்தப்படுள்ளன. புதுபிக்க
|
இயலா வளங்கள் 1. நிலக்கரி கரிம வகைப்படுத்தப்படுகிறது. அளவின் அடிப்படையில் மையே நிலனும் வெனி கீழ்க்கண்டவாறு ஆந்தரசைட் : 80 முதல் 90 % பிட்டுமினஸ் : 60 முதல் 80 % பழுப்பு நிலக்கரி : 40 முதல் 60 % மரக்கரி : 40 % த்திற்கும் குறைவு. இந்தியாவில் காணப்ப டும் நிலக்கரி வயல்கள் , கோண்டுவானா தொடர் பறைகளோடு தொடர்புடையவை. இவை தீபகற்ப இந்தியப் பகுதிகளில் அதிகம் காணப்ப டுகின்றன. நாட்டின் மொத்த நிலக்கரி படிவுகளில் 90 சதவிகிதத்தை ஜார்கண்ட் , ஒடிசா , மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் கொண்டுள்ளன. ( 2 % நிலக்கரி
|
மூன்றாம் நிலையைச் சார்ந்தது. அசாம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் இவ்வகை அதிகமாகக் காணப்படுகிறது ). ஜார்கண்ட் மாநிலம் இந்தியாவில் 50 அதிக நிலக்கரி உற்பத்தியைச் செய்கிறது. சத்தீஸ்கர் , மேற்கு வங்காளம் , மத்தியப்பிரதேசம் , ஆந்திரப்பிரதேசம் மற்றும் மகராஷ்டிரா மாநிலங்கள் நிலக்கரி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென் மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியப் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் பழுப்பு நிலக்கரி படிவுகள் காணப்படுகின்றன. இந்திய நிலக்கரி அமைச்சகமானது , நிலக்கரி அகழாய்வு
|
மற்றும் உற்பத்தி மேம்பாட்டு கொள்கைகளை முடிவு செய்கிறது. இந்திய நிலக்கரி நிறுவனம் ( CIL ) , இந்திய தேசிய பழுப்பு நிலக்கரி நிறுவனம் ( NLCIL ) மற்றும் சிங்கரேனி கோலாரிஸ் நிலக்கரி நிறுவனம் ( sccL ) ஆகியன இவ்வமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களாகும். இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது உலக அளவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். 2. பெட்ரோலியம் / கச்சா எண்ணெய் பெட்ரோலியம் என்ற சொல் " பெட்ரோ " ( பாறை )
|
மற்றும் ஒலியம் ( எண்ணெய் ) என்ற இரு இலத்தின் சொற்களிலிருந்து பெறப்பட்டது. எனவே பெட்ரோலியம் என்பது புவியிலுள்ள பாறைப்படிவுகளில் பெறப்படும் எண்ணெய் ஆகும். இது தாது எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. 90-95 சதவிகிதம் நீரக கரிமமும் , மீதமுள்ள 5-10 சதவிகிதம் ஆக்ஸிஜன் , ஹைட்ரஜன் , கந்தகம் மற்றும் கரிம உலோகங்களையும் கொண்ட எளிதில் எரியக்கூடிய ஒரு திரவமாகும். பெட்ரோலியமானது எரிசக்தி உற்பத்திக்கும் , மற்றும் இரயில்களுக்கு வாகனங்கள் , வானூர்திகள் , கப்பல்கள் எரிபொருளாகவும் பயன்படுகிறது. மசகு எண்ணெய் , மண்ணெண்ணெ ய் ,
|
களிம்புகள் , தார் , சோப்பு , டெர்லின் , மெழுகு ஆகியன இதன் உப 2 எண்ச ) யொலி | உற்பத்தி பொருள்கள் ஆகும். பகுதிகளிலும் , உள்நாட்டுப் கச்சா கடற்கரைப் பல இந்தியாவில் பகுதிகளிலும் கிடைக்கின்றது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ( MOP & NG ) இது இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைச்சகமாகும். இவ்வமைச்சகம் ஆய்வு செய்தல் , உற்பத்தி , சுத்திகரித்தல் , விநியோகம் , ஏற்றுமதி , இறக்குமதி , எண்ணெய் பாதுகப்பு , இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்திப் பொருள் போன்றவற்றிற்கு பொறுப்பு ஏற்கிறது. இ. இயற்கை
|
எரிவாயு இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயுவாகும். இவற்றின் 51 பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள மதுக்கரியம் ( alkaline ) சிறிய சதவிகிதத்திலான கார்பன்- டை- ஆக்ஸைடு , நைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் சல்பைடு கலந்த கலவைகளால் ஆனது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மட்குவதன் மூலம் உண்டாக்கூடிய ஒரு வாயு. இது வெப்பப்படுத்தலுக்கும் , மேற்கு
|
கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் 1. மும்பை ஹை எண்ணெய் வயல் ( 65 % மிகப்பெரியது ) பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு , ( திப்ருகார் , சில்சாகர் , மாவட்டங்கள் அசாம் ) 2. குஜராத் கடற்கரை ( 2 வது பெரியது ) திக்பாய் எண்ணெய் வயல் ( நாட்டின் மிகப்பழமையான எண்ணெய் வயல் ) 3. பேஸ்ஸைம் எண்ணெய் வயல் மும்பை ஹையின் தென்பகுதி நாகர்காட்டியா எண்ணெய் வயல் ( திக்பாய்க்கு தென்மேற்கு பகுதி ) 4. அலியாபெத் - எண்ணெய் வயல் ( பவ் நகரின் தென்பகுதி ) மோரான் ஹக்ரிஜன் - எண்ணெய் வயல் (
|
நாகர்காட்டியாவின் தென்மேற்கு பகுதி ) DESIGN 5. அங்கலேஸ்வர் ருத்ரசாகர் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம் ) எண்ணெய் வயல்கள் ( அசாம் 6. காம்பே- லூனி பகுதிகள் சர்மா பள்ளத்தாக்கு- ( பதர்பூர் , மாசிம்பூர் , பதாரியா ) 7. அகமதாபாத்- கலோல் பகுதி அந்தமான் நிகோபாரின் உட்பகுதிகள் , மன்னார் வளைகுடா , பலேஷ்வர் கடற்கரை , ஹரியானா , பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் லாவா இந்தியா- எண்ணெய் கெயில் நிறுவனம் ( GAIL ) : இந்திய இயற்கை எரிவாயு நிறுவனமானது மாநில ஒரு இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களுள் ஒரு
|
மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது. வட இந்தியப் பகுதிகள் அதிக அளவிலான மூன்றாம் நிலைப் பாறைகள் மற்றும் வண்டல் படிவுகளைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் ஆழம் எரிபொருள்களை விட ஆபத்து குறைவானதாகும். விவசாயக் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் உயிரிவாயு , புதுடெல்லி , அகமதாபாத் , மும்பை , பூனா , கொல்கத்தா , லக்னோ , கான்பூர் , வாராணாசி போன்ற நகரங்களில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறைந்த , கடலுக்கு அடியில் இருந்த படிவுப்பாறைக ள் , எண்ணெய் மற்றும் இயற்கை வாயுப் படிவுகளாக
|
உருவாகின. அதிக அளவிலான இயற்கை எரிவாயு மும்பை ஹை மற்றும் 52 பேஸ்ஸைம் எண்ணெய் வயல் பகுதிகளில் காணப்படுகிறது. குஜராத் , அசாம் , தமிழ்நாடு ( நெய்பள்ளத்தூர் மற்றும் மங்கமடம் ( தஞ்சாவூர் ) , திரிபுரா , இராஜஸ்தான் , அருணாச்சலப் பிரதேசம் , பஞ்சாப் , மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளது. மரபுசார் ஆற்றல் வளங்கள் அ ) அனல் மின்சக்தி எரிவாயு உயிரினப் படிமங்களான நிலக்கரி , பெட்ரோலியம் , டீசல் மற்றும் இயற்கை போன்றவற்றிலிருந்து அனல் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. தேசிய அனல்மின் நிறுவனம் ( NTPC
|
) 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்சமயம் தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் 13 நிலக்கரி சார் அனல்மின் திட்டங்களும் இயற்கை எரிவாயு திரவ எரிப்பொருள் சார்ந்த அனல்மின் திட்டங்களும் அசாம் , பீகார் , ஜார்கண்ட் , சத்தீஸ்கர் , மிசோரம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. நெய்வேலி , மேட்டூர் , தூத்துக்குடி மற்றும் எண்ணூர் ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்களாகும். ஆ அணுசக்தி 5 திருச்சி J அணுக்கரு பிளவு அல்லது இணையும் போது வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி அணுமின்சாரம்
|
தயாரிக்கப்படுகிறது. யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களிலிருந்து அணுசக்தி பெறப்படுகிறது. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் 1969 ஆம் அண்டு மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவிற்கு அருகில் உள்ள ( 100 மெகாவாட் ) இரவத் பட்டா ( 335 மெகாவாட் ) என்னுமிடத்தில் அணுமின்நிலையங்கள் காவம்ய ஏற்படுத்தப்பட்டன. இந்திய அணு மின்சக்தி நிறுவனம் ( NPCIL ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசு
|
நிறுவனமாகும். இந்நிறுவனம் அணு மின்சக்தி உற்பத்திக்கான பொறுப்பை வகிக்கிறது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் ( 440 மெகாவாட் ) மற்றும் கூடங்குளம் ( 2,000 மெகாவாட் ) , உத்தரப்பிரதேசத்தில் நரோரா ( 235 மெகாவாட் ) , கர்நாடகாவில் கைகா ( 235 மெகாவாட் ) , குஜராத்தில் காக்கரபாரா ( 235 மெகாவாட் ) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 53 புதுப்பிக்கக்கூடிய வளங்கள் அ ) நீர்மின்சக்தி நீர் மின்சக்தி உலக மின்தேவையில் 7 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்கிறது. புதுப்பிக்கக்கூடிய வளத்திலிருந்து பெறப்படுவதால் மற்ற மின்சார
|
ஆற்றல்களோடு ஒப்பிடுகையில் குறைந்த உற்பத்திச் செலவை உடையதாகவுள்ளது. இது தேவைக்கு ஏற்ப உற்பத்தியைஉடனடியாக அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடிய தன்மையுடையது. இந்தியாவானது நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான மிக அதிக திறனை பெற்றுள்ள ஒரு மிகச் சிறந்த ஒரு நாடாக உள்ளது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது. இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ளது. ஆ ) சூரியஆற்றல் / சக்தி சூரியஆற்றல் சூரிய ஒளியை நேரடியாகவோ மின்அழுத்திக் கொண்டோ செறிவூட்டம் கொண்ட சூரிய
|
ஆற்றல் மூலம் மின்னாற்றலாக மற்றப்படுதலாகும். செறிவூட்டல் முறையில் பெரிய பரப்பளவில் உண்டாகும் சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள் அல்லது கண்ணாடிகள் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாக ஒரு கலத்தின் மீது குவிக்கப்படுகிறது. மின்அழுத்திகள் , ஒளிமின் விளைவு செயல்பாட்டின் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன. இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு உள்ளது. இதனை மரபுசாரா எரிசக்தி வள அமைச்சகம் ( MNES ) செயல்படுத்தி வருகிறது. சூரியஆற்றலானது நீர் கொதிகலன்கள் , குளிர் சாதனப்பெட்டிகள் , உலர்ப்பான சமையல் ,
|
நீரேற்றுதல் , மின்சார உற்பத்தி , மின்அழுத்திகள் , ஆந்திரப்பிரதேசம் , குஜராத் , இராஜஸ்தான் , மகாராஷ்டிரம் , மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது ஆந்த இ ) காற்று சக்தி அல்லது இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் பெருங்குடிப்பகுதி உலகிலேயே அதிக காற்றாலைகளைக் கொண்ட பெரிய காற்றாலை பண்ணை ஆகும். இந்தியாவில் காற்றாலை மின்
|
உற்பத்தி 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் குஜராத்தில் உள்ள கடற்கரைப்ப குதியான ஓகா , மகாராஷ்டிரா கடற்கரைப்பகுதியான இரத்தினகிரி , தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைப்பகுதியான தூத்துக்குடியில் 55 கிலோவாட் உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்ட காற்றாலைகள் 54 மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களாக இதன் உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தியா உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது. உ ) ஓத மற்றும் அலை சக்தி காம்பே வளைகுடா ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது.
|
இவற்றிற்கு அடுத்தாற்போல் கட்ச் வளைகுடா பகுதி ( 1000 MW ) , சுந்தரவனப்பகுதி ( 100 MW ) ஆகியன இதர குறிப்பிடதக்க திறன் பெற்ற பகுதிகளாகும். 150 KW உற்பத்தி திறன் கொண்ட அலை சக்தி ஆலை , திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள விழிஞ்சம் என்ற பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூலப்பொருள்களின் ஆதாரங்களின் அடிப்படையில் தொழிலகங்கள் 1. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் E 2. காடுகள் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் 3. கனிமம் சார்ந்த தொழிலகங்கள் என
|
வகைப்படுத்தப்படுகின்றன. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் இத்தொழிலகங்கள் வேளாண் துறையிலிருந்து மூலப்பொருள்களை பெறுகின்றன.வேளாண் சார்ந்த தொழிலகங்களைப் பற்றி இங்கு காண்போம். இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை 1818 ஆம் அண்டு , என்னும் இடத்தில் அருகில் உள்ள போர்ட் க்ளாஸ்டர் கொல்கத்தாவிற்கு தொடங்கப்பட்டது. அ ) பருத்தி நெசவாலைகள் ைமலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாரம்பரிய இந்தியா இத்துறையில் தொழில்களான கைத்தறி , கைவினைப்பொருள்கள் , சிறிய விசைத்தறிகள் போன்றவை லட்சக்கணக்கிலான கிராமப்புற மற்றும் புறநகர்
|
மக்களுக்குவேலைவாய்ப்பினை அளிக்கும் ஆதாரங்களாக உள்ளன. தற்போது இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகள் , நூற்பு கருவிகளின் எண்ணிக்கையில் முதன்மையான நாடாகவும் உள்ளது. தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிக பெரிய நவீன தொழிலக பிரிவாக உள்ளது. பருத்தி இழையிலிருந்து , விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர். மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை , இந்தியாவின் “ மான்செஸ்டர் ” என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில்
|
காணப்படும் வல்லும். 55 கரிசல் மண் , ஈரப்பத காலநிலை , மும்பைத் துறைமுகம் , எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி , சந்தை வசதி , சிறந்த போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு காரணங்களாக அமைகிறது. எண்ணிக்கையிலான பருத்தி மகாராஷ்டிரம் , குஜராத் , மேற்கு வங்காளம் , உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் ' தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
|
தமிழ்நாட்டில் உள்ள 435 நெசவாலைகளில் 200 நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதியில் அமைந்துள்ளன. ஈரோடு , திருப்பூர் , கரூர் , சென்னை , திருநெல்வேலி , கைத்தறி மதுரை , தூத்துக்குடி , சேலம் மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும். ஆ ) சணல் , ஆலைகள் செறிந்து பருத்தி நெசவாலைகளுக்கு அடுத்தாற்போல் சணல் ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறையாக உள்ளது. இயற்கையான சணல் என்பது புதுப்பிக்கக் கூடிய எளிதில் மட்கக்கூடிய , சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகவும் உள்ளதால் இது தங்க இழைப்பயிர் என்றும்
|
அழைக்கப்படுகிறது. தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. தேசிய காற்றாற்றல் நிறுவனம் ( NIEW ) சென்னையிலுள்ள இந்நிறுவனம் 1998 இல் ஒரு தன்னாட்சி நிறுவனமாக புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. இதன் பணிகளானது காற்று வள மதிப்பிடு ஆய்வு மற்றும் சான்றளித்தல் ஆகும். இந்தியாவின் முதல் சணல் ள்ள ை ஆலை , ஆங்கிலேயேரான ஜார்ஜ் ஆக்லாண்டு என்பவரால் 1854 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. இந்தியா
|
உற்பத்தியில் முதலிடத்திலும் , சணல் பொருள்கள் உற்பத்தியில் வங்காளதேசத்திற்கு அடுத்தாதாக இரண்டாமிடத்திலும் உள்ளது. சணல் பைகள் , கூடார துணிகள் , சிப்பப்பைகள் , தரைவிரிப்பு , திரைச்சீலைகள் , கயிறுகள் , துணிகள் , கால்மிதியடிகள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் ரோமத்துடன் கலந்து நெகிழிலானஅறைக்கலன்கள் காப்பிடப்பட்ட உறைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவை பருத்தியுடன் கலந்து போர்வைகள் மற்றும் கம்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. சணல் உற்பத்திபகுதிகள் மேற்கு வங்காளத்தில் உள்ளஹூக்ளி ஆற்றங்கரை
|
நெடுகிலும் அமைந்துள்ளது. டிட்டகார் , ஜகட்டட் , பட்ஜ் - பட்ஜ் , ஹவுரா மற்றும் பத்ரேஸ்வர் முதன்மை சணல் பொருள்கள் உற்பத்தி மையங்களாகும். ஆந்திரப்பிரதேசம் , பீகார் , சணல் 56 அசாம் , உத்தரப் பிரதேசம் , சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற பிற மாநிலங்களாகும். இ ) பட்டு நெசவாலைகள் பழங்காலம் தொட்டே இந்தியா பட்டு உற்பத்திக்குப் பெயர் பெற்றது. கச்சா பட்டு உற்பத்தியில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் உள்ளது. கர்நாடக மாநிலம் பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது. மேற்கு
|
வங்காளம் , ஜம்மு காஷ்மீர் , பீஹார் , ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர் , உத்தரப் பிரதேசம் , பஞ்சாப் , அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகியன குறிப்பிடத்தக்க பட்டு உற்பத்தியாளர்கள் ஆகும். இந்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் நவம்பர் 20 , 1975 இல் தொடங்கப்பட்ட கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது இந்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் உள்ள உத்யோக் பவனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஈ ) சர்க்கரை தொழிற்சாலை பருத்தி நெசவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் இதுவாகும். உலக கரும்பு
|
உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. கரும்பு எளிதில் எடை இழக்கும் தன்மையுடையதாகும். போக்குவரத்திற்கு அதிக எடை கொண்டதாகவும்உள்ளதால் இத்தொழிற் சாலைகள் கரும்பு பயிரிடும் பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் 50 சதவிகிதத்தை கொண்டு முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரா , கர்நாடகா , ஆந்திரப் பிரதேசம் , தமிழ்நாடு , பீகார் , பஞ்சாப் , குஜராத் , ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 90 சதவிகித சர்க்கரைஆலைகளையும் , உற்பத்தி
|
செய்யும் மாநிலங்களாகவும் உள்ளன. வன வளம் சார்ந்த தொழிற்சாலைகள் காகித தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் , அரக்கு , விளையாட்டு பொருள்கள் , ஒட்டுப் பலகை ( Plywood ) போன்ற பொருள்களைத் தருகின்றன. அ ) காகிதத் தொழிற்சாலைகள் இந்தியாவில் ராயல் பெங்கால் காகிதத் தொழிற்சாலை கொல்கத்தாவிற்கு அருகில் இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை 1812 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. உள்ள பாலிகஞ்ச் என்னும் இடத்தில் 1867 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மரக்கூழ் , மூங்கில் , சலாய் மற்றும் 57
|
சவாய் புற்கள் , உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்கள் , கரும்பு சக்கை போன்றவை காகிதத் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள்களாகும். மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில் நுட்ப நிறுவனம் ( CSTRI ) பட்டு வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேற்கு வங்காளம் இந்தியாவில் காகிதஉற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமாகும். மத்தியப்பிரதேசம் , ஒடிசா , தமிழ்நாடு
|
போன்றவை காகித உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாநிலங்களாகும். தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் ( NEPA ) மத்தியப்பிரதேச மாநில பர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது கனிமம் சார் தொழிற்சாலைகள் அ ) இரும்பு எஃகு தொழிற்சாலைகள் பொறியியல் , கனரக இயந்திரங்கள் , இயந்திரக் கருவிகள் , வாகனங்கள் , இரயில் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்இரும்பை முதன்மை மூலப்பொருள்களாகப் பயன்படுத்துகின்றன. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
|
டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை , 1907 ஆம் ஆண்டு " சாக்சி " என்றழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட முதல் நவீன தொழிற்சாலையாகும். ஜார்க்கண்ட் , மேற்கு வங்காளம் , ஒடிசா , ஆகிய மாநிலங்களில் இன்ஜின்கள் இரயில்வே செறிந்து காணப்படுகின்றன. ஜாரியா ராணிகஞ்ச் , பொகாரோ , கரன்புரா ஆகிய நிலக்கரி வயல்களும் மற்றும் மயூர்பஞ்ச் , இயோன்ஜர் மற்றும் புரேனா ஆகிய இரும்பு தாது சுரங்கங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருப்பது இதன் காரணமாகும். இத்தொழிற்சாலைக்குத் தேவையான டோலமைட் , மாங்கனீஷ் மற்றும் சிலிகான் போன்ற தாது
|
படிவுகள் போதுமான அளவில் கிடைக்கின்றன. இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன் முதலில் 1830 இல் தமிழ்நாட்டில் போர்டோ நாவோவில் அமைக்கப்பட்டது வாகனத் தானியங்கி தொழிலகங்கள் இந்தியா , உள்நாட்டு வாகன சந்தையின் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய வாகனச் சந்தையிலும் ஒரு முக்கிய பங்காற்றும் வகையில் வாகன உற்பத்தியில் முன்னேறி வருகிறது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலகங்களில் இதுவும் ஒன்றாகும். 58 வ.எண் தொழிலகங்களின் பெயர்கள் இடம் மற்றும் மாநிலம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி பொருள்கள் 1.
|
டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் ( TISCO ) தேனிரும்பு 2. இந்தியா இரும்பு எஃகு நிறுவனம் ( IISCO ) வங்காளம் 1972 தேனிரும்பு , கட்சா எஃகு ஜாம்ஷெட்பூர் -ஜார்க்கண்ட் 1911 பர்ன்பூர் , ஹிராப்பூர் , குல்டி - மேற்கு 3. விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு நிறுவனம் ( VISL ) - பத்ராவதி , கர்நாடகா 1923 கலப்பு தேனிரும்பு மற்றும் கடல் பாசி எஃகு 4. இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ரஷ்யா தொழில்நுட்ப உதவியுடன். ( HSL ) பிலாய் - சத்தீஸ்கர் 1957 ரயில்வே மற்றும் கப்பல் கட்டும் உபகரணங்கள் 5.இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ஜெர்மனியின் தொழில்நுட்ப
|
உதவியுடன் ( HSL ) ரூர்கேலா- ஒடிசா 1965 வெப்ப மற்றும் குளிர்ந்த உருளை தகடுகள் மின்முலாம் பூசப்பட்ட தகடுகள் மற்றும் மின்சாதன தகடுகள் 6. இந்துஸ்தான் எஃகு நிறுவனம் இங்கிலாந்தின் தொழில்நுட்ப உதவியுடன் ( HSL ) துர்காபூர் - மேற்கு வங்காளம் 1959 உலோக கலவை , கட்டுமானபொருள்கள் , இரயில்வே வெப்ப உலோகம் உபகரணங்கள் 7. இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் ( HSL ) பொகாரோ - ஜார்க்கண்ட் 1972 இரும்பு கழிவு மற்றும் இரும்பு உலோகம். 8. சேலம் எஃகு ஆலை சேலம் - தமிழ்நாடு 1982 துருப்பிடிக்காத இரும்பு 9. விஜய நகர்
|
எஃகு ஆலை டோர்நகல் - கர்நாடகா 1994 நீண்ட மற்றும் பட்டை எஃகுகள் வானம் 10. விசாகப்பட்டி எஃகு ஆலை ( VSP ) விசாகப்பட் மையே வெல்டின ம்- ஆந்திரப்பிரதேசம். 1981 மின்னியல் மற்றும் மின்னணுவியல் தொழிலகங்கள் இந்தியாவில் கனரக மின்சாதன தொழிலகங்களில் மிக முக்கியமானது பார்த மிகு மின் ( BHEL ) நிறுவனமாகும். இந்நிறுவனம் ஹரிதுவார் , போபால் , ஹைதராபாத் , ஜம்மு , பெங்களூரு , ஜான்சி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனமானது தொலைக்காட்சிப் பெட்டிகள் , வானொலிப் பெட்டிகள் , மற்றும் தொலைபேசி
|
இணைப்பகங்கள் , செல்லுலார் தந்தி , கணினிகள் மற்றும் அஞ்சல் , இரயில்வே பாதுகாப்பு , வானிலையியல் போன்ற துறைகளுக்கும் தேவையான பல்வேறு சாதனங்களை உற்பத்திச் செய்கிறது. 59 இந்தியாவில் அதிக மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நகரம் பெங்களூருவாகும். எனவே பெங்களூரு " இந்தியாவின் மின்னியல் தலைநகரம் " என்று அழைக்கப்படுகிறது. ஹைதராபாத் , புதுதில்லி , மும்பை , சென்னை , கொல்கத்தா , கான்பூர் , பூனா , லக்னோ , ஜெய்ப்பூர் மற்றும் கோயம்புத்தூர் இதர முக்கிய மின்னியல் உற்பத்தி மையங்களாகும். மென்பொருள் தொழிலகம் இந்தியா உலகில் உள்ள
|
மிகச்சிறந்த சில மென்பொருள் நிறுவனங்களின் தாயகமாக உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் ஆகும். இது 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துடன் எல் & டி. இன்போடெக் , ஜ - பிளக்ஸ் , அசெஞர் , காக்னிசன்ட் , கேலக்ஸி - இ - சொல்யுசன்ஸ் , இந்தியா பிரைவேட் லிமிடெட் , ஜ.டி.சி. போன்றவைகளும் இந்தியாவின் முக்கியமான மென்பொருள் தொழிலகங்களாகும். தற்சமயம் , இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட மென்பொருள் தொழிலகங்கள் உள்ளன. இன்போடெக் இந்தியாவின் முதல் வாகனத் தொழிலகம் மும்பைக்கு அருகில் உள்ள குர்லா
|
என்னும் இடத்தில் 1947 இல் பிரீமியர் வாகன நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து 1948 இல் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள உத்தர்பாரா என்னும் இடத்தில் இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியா வாகன உற்பத்தியில் ஏழாவது பெரிய நாடாக விளங்குகிறது. இரு சக்கர வாகனங்கள் , மகிழுந்துகள் , ஜீப் , மூன்று சக்கர இந்நிறுவனமானது வாகனங்கள் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. மும்பை , சென்னை , ஜாம்ஷெட்பூர் , ஜபல்பூர் , கொல்கத்தா , பூனா , புது தில்லி , கான்பூர் , பெங்களூரு ,
|
சதாரா , லக்னோ மற்றும் மைசூர் நகரங்கள் முக்கிய உற்பத்தி TULISM மையங்களாக உள்ளன. பிரதான வாகனத் தொழிற்சாலைகளும் அதனை. சார்ந்த தொழிற்சாலைகளும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதால் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் , மாருதி சுசுகி , மஹிந்திரா & மஹிந்திரா , இந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் மக்கள் பயணிக்கும் பெரிய கார்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களாகும். இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களான மெர்சிடிஸ் , பென்ஸ் , ஃபியட் ஜெனரல் மோட்டார்ஸ் , டொயோட்டா
|
மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்துள்ள பிஎம்டபிள்யூ , ஆடி , வோக்ஸ்வேக ன் , வால்வோ ஆகியன இந்திய வாகன தயாரிப்பை மேலும் சிறப்புற செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் , அசோக் லைலேண்ட் , இஷர் மோட்டார்ஸ் , மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஃபோர்டு மோட்டார்ஸ் ஆகிய இந்திய 60 நிறுவனங்கள் வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. MAN , ITEC , மெஸ்சிடர்ஸ்- பென்ஸ் , ஸ்கேனியா மற்றும் ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்களான
|
ஹீரோ , பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிறுவனங்கள் உலகின் சுமார் 95 நாடுகளுக்கு மென்பொருள் ஏற்றுமதி சேவையை செய்கிறது. சென்னை , கோயம்புத்தூர் , திருவனந்தபுரம் , பெங்களூரு , மைசூரு , ஹைதராபாத் , விசாகப்பட்டினம் , மும்பை , பூனா , இந்தூர் , காந்திநகர் , ஜெய்ப்பூர் , நொய்டா , மொகாலி மற்றும் ஸ்ரீநகர் இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்களாகும். இந்தியா மக்கள் தொகை , போக்குவரத்து , தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள்
|
அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 ஆகும். உலகின் மக்களடர்த்தி மிகுந்த பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக பீகாரும் மிக குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட மாநிலமாக அருணாச்சலப் பிரதேசமும் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் புதுடெல்லி அதிக மக்களடர்த்தியைக் கொண்டதாக வும் , அந்தமான் நிக்கோபார் தீவுகள் குறைந்த மக்களடர்த்தியைக் கொண்டதாகவும் உள்ளன. பிறப்பு விகிதம் , இறப்பு விகிதம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. மேலும் இவை
|
மூன்றும் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும். மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவில் அதிக மக்கள்தொகை மாநிலமாகும். மகாராஷ்டிரா , பீகார் , மேற்கு வங்காளம் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் 199.5 நாட்டின் மக்கள் தொகையில் பாதியைக் கொண்டுள்ளன. இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிக்கிம் ஆகும். புதுடெல்லி 16.75
|
மில்லியன் மக்கள்தொகையுடன் யூனியன் பிரதேசங்களிடையே முதலிடம் வகிக்கிறது. நாட்டின் மக்கள்தொகை பரவல் சீரற்று காணப்படுவதற்கு பௌதீக , சமூக பொருளாதார மற்றும் வரலாற்று காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பௌதீக காரணிகள் என்பது நிலத்தோற்றம் , காலநிலை , நீர் , இயற்கைத் தாவரங்கள் , கனிமங்கள் மற்றும் ஆற்றல் வளங்களை உள்ளடக்கியது. மதம் , கலாச்சாரம் , அரசியல் பிரச்சினைகள் , பொருளாதாரம் , மனித போக்குவரத்து குடியிருப்புகள் , வலைப்பின்னல் , தொழில்மயமாக்கல் , நகரமயமாதல் , வேலை இந்தியாவில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் 29.5
|
சதவிகிதமும் , 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 61 சதவிகிதமும் உள்ளனர். ஆதலால் சார்ந்துள்ள மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 37.5 சதவிகிதமாக உள்ளது. மீதமுள்ள 62.5 சதவிகிதம் உழைக்கும் மக்கள் தொகையாக உள்ளது. பாலின விகிதம் பாலின விகிதம் என்பது மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 940 பெண்களாக உள்ளது. இது மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. கேரள. கேரளாவில் 1084 பெண்களும் , புதுச்சேரியில் 1038
|
பெண்களும் உள்ளனர். ஆனால் யூனியன் பிரதேசமான டையூ டாமனில் குறைந்த பாலின விக் ( 618 ) பதிவாகியுள்ளது. இந்தியாவில் கல்வியறிவு வளர்ச்சியில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்ப டுகின்றது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் 74.04 % ஆகும். இவற்றில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.14 % ஆகவும் மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 65.46 % ஆகவும் உள்ளது. இது ஆண் மற்றும் பெண் எழுத்தறிவு விகிதத்தில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் காட்டுகிறது ( 16.68 % ). கேரள மாநிலம் எழுத்தறிவில் 93.9
|
% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகவும் , இலட்சத்தீவுகள் 92.28 % இரண்டவதாகவும் உள்ளது. குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகார் ( 63.82 % ) உள்ளது. முதன்மைத் தொழிலாளர்கள் எனப்படுவர் ( குறைந்த பட்சம் வருடத்தில் 6 மாதம் அல்லது 183 நாட்கள் ). ஒரு ஆண்டில் 6 மாதங்களுக்குக் குறைவாக போக்குவரத்து கேரளாவில் சாலைகளின் அடர்த்தி மிக அதிகமாகவும் ஜம்மு - காஷ்மீர் , லடாக் பகுதிகளில் மிகக் குறைவாகவும் உள்ளது. சாலை அமைத்தல் மற்றும் பராமரிப்பு நோக்கத்திற்காக இந்திய சாலைகள் , தேசிய நெடுஞ்சாலைகள் ( NH ) , மாநில நெடுஞ்சாலைகள்
|
கிராமப்புறச்சாலைகள் , எல்லையோர " மற்றும் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் எனன சாலைகள் இந்திய சாலைகளின் வகைகள் அ. தேசிய நெடுஞ்சாலைகள் ( NH ) இத்தேசியநெடுஞ்சாலைகள் வடக்கு - தெற்கு , கிழக்கு- மேற்காக நாட்டின் எல்லைகளையும் , மாநிலங்களின் தலைநகரங்கள் , முக்கியத் துறைமுகங்கள் , இரயில் நிலையங்கள் , முக்கிய சுற்றுலாமையங்கள் , தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பத ற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பொறுப்பா கும். இந்தியாவில் மிக
|
நீளமான தேசிய நெடுஞ்சாலை NH 44 ஆகும். இது உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 2,369 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும். வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறைவான நீளமுடைய தேசிய கி.மீ சாலையை சிந்து எர்ணாகுளத்திலிருந்து கொச்சின் துறைமுகத்தை ( வில்லிங்டன் தீவு ) இணைக்கிறது. ஷெர்சா சூர் தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் சாஹி ( ராயல் ) பள்ளத்தாக்கிலிருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தார். கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை உள்ள இச்சாலை ஆங்கிலேயர்
|
ஆட்சி காலத்தில் கிராண்ட் ட்ரங்க்சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இச்சாலை அமிர்தரசிலிருந்து கொல்கத்தாவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உ எல்லைப்புறச் சாலைகள் கொண்ட எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலை வகைகளா கும். இவைகள் எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வமைப்பு 1960 இல் நிறுவப்பட்டது. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எல்லைப்புறச் சாலை
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.