id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
|---|---|---|---|
6034
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
|
உரல்
|
உரல் () என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.
உரலில் தானியங்களைப் பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிதுநேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிக்கப்படும். அதன் பின்னர் சுளகு (முறம்) பயன்படுத்தி புடைப்பதன் மூலம் அரிசியையும் உமியையும் வேறாக்குவர்.
பண்டைய தமிழர் வாழ்க்கையில், இயந்திரங்களின் வரவின் முன்னர் உரல் வீடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வந்தது. இன்றும் சிற்றூர்களில் சிறு அளவில் நெல் குற்றவும் பலகாரங்கள் செய்வதற்காகத் தானியங்களை இடிப்பதற்கும் உரல் பயன்படுத்தப்படுகிறது. இப்படி உரலில் இடித்து உருவாக்கப்படும் மாவு கைப்பக்குவம் மிகுந்து சுவையான பலகாரங்களைச் செய்வதற்கு உதவுவதாகக் கருதுகின்றனர்.
குறிப்பு
பாவித்தல் (இலங்கைப் பயன்பாடு) = பயன்படுத்துதல்
இவற்றையும் பார்க்கவும்
தமிழர் சமையலறைக் கருவிகள்
மேற்கோள்கள்
கற்கருவிகள்
தமிழர் சமையல் கருவிகள்
|
6035
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF.%20%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
|
யாழ் பரி. யோவான் கல்லூரி (St. John's College, Jaffna) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்று. நல்லூரில் 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் யாழ்ப்பாண நகரில் சுண்டிக்குளி என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.
பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.
வெளி இணைப்புகள்
பரி.யோவான் கல்லூரி 97ஆம் ஆண்டு மாணவர்களின் விபரம்
பரி.யோவான் கல்லூரி
இலங்கையின் கிறித்தவப் பாடசாலைகள்
இலங்கையின் ஆண்கள் பாடசாலைகள்
|
6037
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
மின் விளக்கு
|
மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒளித் தேவைக்காக ஒளியை உருவாக்கும் சாதனமே மின் விளக்கு ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய நேரத்தை இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.
வரலாறு
மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், மின் முனைகள் மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல் என்பவர், மின்சாரம் ஒரு மின்தடையுள்ள கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் வெப்பசக்தி மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிழைகளைச் செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேர் ஜோசப் வில்சன் ஸ்வான் என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய வெற்றிடத்தை நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தொமஸ் அல்வா எடிசனுக்குக் கிடைத்தது.
மின் விளக்கின் வகைகள்
சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வகையான மின் விளக்குகள் இன்னும் சில முன்னேற்றங்களுடன் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு பல வகையான மின் விளக்குகளும் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமான சில மின்விளக்கு வகைகள் வருமாறு:
வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp)
உடனொளிர்வு விளக்கு (Fluorescent Lamp)
உலோக ஹேலைட்டு விளக்கு (Metal Halide Lamp)
தங்ஸ்தன் - அலசன் விளக்கு (Tungstan-Halagen Lamp)
பாதரச ஆவி விளக்கு (Mercury Vapour Lamp)
சோடியம் ஆவி விளக்கு (Sodium Vapour Lamp)
இவற்றையும் பார்க்கவும்
ஒளியமைப்பு
ஒளியமைப்பு
மின் உறுப்புகள்
விளக்குகள்
|
6038
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
ஆஸ்திரியா
|
ஆத்திரியா (Austria ) அல்லது ஆத்திரியக் குடியரசு (Republic of Austria) என்பது ஐரோப்பாவில் உள்ள நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடு ஆகும். இங்கு 8.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடக்கே செருமனி, செக் குடியரசு, கிழக்கே சிலோவாக்கியா, அங்கேரி, தெற்கே சுலோவீனியா, இத்தாலி, மேற்கே சுவிட்சர்லாந்து, இலீக்கின்சுடைன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் அரசியல் தலைநகர் வியென்னா ஆகும். ஆல்ப்சு வானிலை உள்ள இந்நாடு பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆல்புசு மலைத்தொடர்கள் பல உள்ள ஒரு அழகான நாடு ஆகும். நாட்டின் 32% நிலப்பகுதியே கீழாக உள்ளது; மிக உயரமான சிகரம் உள்ளது. பெரும்பாலான மக்கள் இடாய்ச்சு மொழியின் உள்ளூர் பவேரிய வழக்குமொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆத்திரிய இடாய்ச்சு மொழி நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. மற்ற உள்ளூர் அலுவல் மொழிகளாக அங்கேரிய, பர்கென்லாண்ட் குரோசிய, சுலோவேனிய மொழிகள் உள்ளன.
இலங்கை தமிழர்
இலங்கை தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆத்திரியாவும் ஒன்று.
ஆஸ்திரியாவின் பெரும்பகுதி புனித உரோமைப் பேரரசு ஆளுகையில் ஆப்சுபர்கு மன்னர்களின் கீழ் இருந்தது. கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் போது பேரரசரின் அதிகாரத்தை எதிர்த்து பல வடக்கத்திய செருமன் இளவரசர்கள் சீர்திருத்தத் திருச்சபையை ஆதரித்தனர். முப்பதாண்டுப் போர், சுவீடன், பிரான்சு, பிரசியாவின் எழுச்சி, நெப்போலியப் போர்கள் ஆகியனவற்றால் பேரரசின் அதிகாரம் வடக்கு செருமனியில் வெகுவாகக் குறைந்தது; ஆனால் தெற்கும் செருமனியல்லாத பகுதிகளும் பேரரசு மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்தன. 17ஆம்,18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் உலக வல்லமைகளில் ஒன்றாக ஆஸ்திரியா இருந்தது. பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரான்சு பேரரசராக முடி சூடியபோது அதற்கு எதிர்வினையாக ஆத்திதிரிய பேரரசு 1804இல் நிறுவப்பட்டது. நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு ஆத்திரியா செருமனியின் பெரும்பகுதியை கட்டுப்படுத்த பிரசியா முதன்மை போட்டியாளராக இருந்தது. 1866இல் ஆத்திரிய-பிரசியாப் போரில் தோற்றதால் பிரசியா செருமனியின் பெரும்பகுதியை கையகப்படுத்தியது. 1867இல் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஆத்திரியா-அங்கேரி உருவானது. 1870இல் பிரசியாவுடனான போரில் பிரான்சு தோற்றபிறகு புதிய செருமானியப் பேரரசு உருவாக்கப்பட்ட போது ஆஸ்திதிரியா சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பிந்தைய ஆண்டுகளில் ஆத்திரியாவின் அரசியலும் வெளியுறவுக் கொள்கையும் பிரசியாவுடன் இணைந்திருந்தது. 1914ஆம் ஆண்டில் பிரான்சு பேர்தினண்டின் கொலையை அடுத்த சூலை சிக்கலின்போது செருமன் அரசு வழிகாட்டுதலில் செர்பியாவிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது; இதுவே முதல் உலகப் போர் மூளக் காரணமாயிற்று.
முதல் உலகப் போரின்
முதல் உலகப் போரின் முடிவில் 1918இல் ஆப்சுபர்கு பேரரசு குலைந்த பிறகு ஆத்திரியா வீமார் குடியரசின் செருமனியுடன் இணையும் எண்ணத்துடன் செருமன்-ஆத்திரியா குடியரசு (, பின்னர் ) எனப் பெயர் சூட்டிக்கொண்டது. ஆனால் 1919இல் செயின்ட்-செருமைன்-ஆன்-லாயெ உடன்பாட்டின்படி இது தடை செய்யப்பட்டது. 1919இல் முதல் ஆத்திரிய குடியரசு நிறுவப்பட்டது. 1938இல் நாட்சி செருமனி ஆத்திரியாவைக் கைப்பற்றியது. 1945இல் இரண்டாம் உலகப் போர் முடியும்வரை இந்நிலை நீடித்தது. செருமனியை கைப்பற்றிய நேசநாடுகள் ஆத்திரியாவின் முந்தைய குடியரசு அரசியலமைப்பை மீள்வித்தது. 1955இல் ஆத்திரியா இறையாண்மையுள்ள நாடாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் ஆத்திரிய நாடாளுமன்றம் நடுநிலை சாற்றுரையை நிறைவேற்றியது; இதன்மூலம் இரண்டாம் ஆத்திரியக் குடியரசு நிரந்தரமாக நடுநிலை நாடாக உருவானது.
இன்று ஆத்திரியா ஒன்பது கூட்டாண்மை மாநிலங்களைக் கொண்ட நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சி ஆகும். 1.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வியன்னா தலைநகராகவும் மிகப் பெரும் நகருமாகவும் உள்ளது. $46,330 (2012 மதிப்பீடு) ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி கொண்ட ஆத்திரியா உலகின் செல்வமிக்க நாடுகளில் ஒன்றாகும். நாட்டின் வாழ்க்கைத்தரம் மிக உயர்ந்ததாக உள்ளது; 2011இல் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் உலகில் 19ஆவது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் 1955 முதல் உறுப்பினராக உள்ளது; 1995இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது; பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நிறுவன நாடாக உள்ளது. ஆத்திரியா 1995இல் செஞ்சென் உடன்பாட்டிலும் கையொப்பிட்டுள்ளது. 1999இல் ஐரோப்பிய நாணயமாற்றான ஐரோவை ஏற்றுக் கொண்டது.
வரலாறு
பண்டைய காலம்
பண்டைய காலத்தில் நீண்ட காலத்துக்கு முன் பல மனிதக் குடியிருப்புக்கள் இருந்த இடமே தற்போது ஆஸ்திரியாவாக உள்ளது. முதல் குடியேறிகள் குடியேறியது பழைய கற்காலத்திலேயே ஆகும். அது நியண்டர்தால் மனிதனின் காலம் ஆகும். கற்காலத்தில் மக்கள் அங்கு செப்பு போன்ற கனிய வளங்களை தோண்டுவதற்காகவே வாழ்ந்து வந்தனர். பண்டைய ஆஸ்திரியாவில் ஏட்சி எனும் ஒருவகை பனிமனிதன் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் ஒடும் பனியாற்றில் கண்டுபிடிக்கப்பட்டான். வெண்கலக் காலத்தில் மக்கள் பெரிய குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் கட்டினர், குறிப்பாக கனிய வளங்கள் எங்கு அதிகமாகக் காணப்பட்டதோ அவ்விடங்களுக்கு அருகில் குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் அமைத்துக்கொண்டனர். அவர்கள் ஆஸ்திரியாவின் மேல்பகுதியில் உப்புச் சுரங்கங்களையும் அமைக்கத் தொடங்கினர்.
ரோமானிய நகரங்களும் அவற்றின் நவீன பெயர்களும்
ரோமானியர்கள் ஆஸ்திரியாவுக்கு கி.மு. பதினைந்தாம் ஆண்டில் வந்தார்கள், இவர்களின் வருகையின் பின் ஆஸ்திரியா மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நவீன ஆஸ்திரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன,
ரேட்டியா (Raetia)
நொரிசும் (Noricum)
பனோனியா (Pannonia) என்பவையாகும்.
நவீன நேரங்களில்
நவீன காலங்களில் ஆஸ்திரியா ஆஸ்திரிய பேரரசால் ஆளப்பட்டு வந்தது. இக்காலம் கிமு 800க்கும் 1918க்கும் இடைப்பட்ட காலமாகும். இது அக்காலங்களில் ஆஸ்திரியா பேரளவாக ஹப்ஸ்பர்க் அரச வம்சத்தினாலேயே ஆளப்பட்டு வந்தது.
சமயங்கள்
இருபதாம் நூற்றாண்டின் முடிவில் எழுபத்து நான்கு வீதமான மக்கள் சனத்தொகை ரோமன் கத்தோலிக்கமாகவே காணப்பட்டது.
புவியியல்
எல்லைகள்
ஆஸ்திரியா ஏழு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. வடக்குத் திசையில் செக் குடியரசும், கிழக்குத் திசையில் சிலோவாக்கியா மற்றும் ஹங்கேரியும், தெற்குத் திசையில் சிலோவேனியா மற்றும் இத்தாலியும் மேற்கு வடமேற்குத் திசைகளில் முறையே சுவிஸ்ர்லாந்தும், செருமனியும் உள்ளன.
நிர்வாகப் பிரிவுகள்
ஆஸ்திரியா ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்பது பிரிவுகளும் மாவட்டங்களாகவும் சட்டரீதியான நகரங்களாகவும் (statutory cities) பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் நகராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
படத் தொகுப்பு
மேற்கோள்கள்
ஆஸ்திரியா
நிலம்சூழ் நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
6045
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
|
தாமசு ஆல்வா எடிசன்
|
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.
தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் சில, இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும்.. எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.
இளமை
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார்.
கல்வி
தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும், பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11.
தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கைச் சோதனைத் தத்துவம் ' (Natural & Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.
பணி
1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பறிபோனது.
அதன் பின்னர் இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார். சில காலம் பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று (மின் வாக்குப்பதிவி) முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
ஆய்வுகள்
முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். நியூ செர்சியிலுள்ள மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று.
தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி
1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் மத்திய புகைவண்டி நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால், அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையைக் காட்டினார். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின்குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .
எடிசன் தனது தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு, நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி '(Carbon Transmitter) என்னும் சாதனம்.
முதல் ஒலிவரைவி கண்டுபிடிப்பு
1877 இல் எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும். பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!
எடிசன் அடுத்து ஓர் உருளை மீது தகரத் தாளைச் சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் இவரது ஒலிவரைவி ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர பத்தாண்டுகள் ஆயின.
மின்குமிழி, மின்சக்தி சேமிப்புக்கலன் கண்டுபிடிப்பு
எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது.
எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது.
மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள்.
1881 ஜனவரியில் முதல் 'மின் விளக்கொளி அமைப்பு ' வணிகமாக்கும் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' அச்சக மாளிகையில் நடந்தது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார நிறுவனம் ', எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.
மின்சார மோட்டார்
இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும்.
எடிசன் விளைவு
விளக்கு எரியும் போது, வெற்றிட மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1898 இல் ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதல் 'எதிர் மின்னணுத் துகளைக் ' [Electron] கண்டுபிடித்தார். அதன் பின்னரே அறிவியலறிஞர்கள் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எலக்ட்ரான்கள் சூடான முனையிலிருந்து குளிர்ச்சியான முனைக்கு வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எலக்ட்ரான் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு' இது அடிகோலியது.
நியூயார்க் நகரமும் மின்விளக்குகளும்
அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை.
ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித்தரமாகக் கூறினர்.
1. மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது.
2. அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது.
3. மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல.
அக்காலகட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்திருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது.
வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார்.
இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார்.
கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.
பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.”
எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது
திரைப்பட படப்பிடிப்புக் கருவி
கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது:
.
முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.
மறைவு
ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன், சி. ஜெயபாரதன்
எடிசனின் வாழ்க்கை வரலாறு -
எடிசன் எழுதிய புத்தகங்கள் -
http://srkvijayam.com/2014/04/29/1-அறிவு-99-உழைப்பு/
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்
புத்தியற்றுநர்
மின் பொறியியலாளர்கள்
1847 பிறப்புகள்
1931 இறப்புகள்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
ஆங்கில அமெரிக்கர்கள்
|
6046
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D
|
வைக்கோல்
|
வைக்கோல் (Hay) கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புல், கூலம், போன்றவற்றின் தாள்செறிந்த தட்டாகும். இது வெட்டித் துண்டாக்கப்பட்டு உலர்த்தி ஆடு, மாடு, செம்மறி, குதிரை போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படும். என்றாலும், இது கினியா பன்றி, முயல் போன்ற வீட்டு விலங்குகளின் தீவனமாகவும் பயன்படுகிறது. பன்றிகள் வைக்கோலைத் தின்று பிற தாவர்வுண்ணிகளைப் போல நன்கு செரித்துக் கொள்ள முடிவதில்லை.
வைக்கோல் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையிலும் மேயமுடியாத மழைக்காலங்களிலும் தீவனமாகிறது. கால்நடைகள் தொழுவத்திலோ கொட்டகையிலோ கட்டிவைத்துள்ள போதும் வைக்கோல் தீவனமாகிறது.
புல்லரிசி, பார்லி, கோதுமை போன்றவற்றின் தாள்கள் பச்சையாகவே அறுத்து உலர்த்தி தீவனம் ஆக்கி கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன; என்றாலும் அவை அறுவடைக்குப் பின் நெல்மணிகளை போரடித்து உதிர்த்ததும் நேரடியாக தாளாகவே முதன்மையான தீவனமாக கால்நடைகளுக்குப் பயன்படுகின்றன. கதிருடன் பச்சையாக வெட்டித் தீவனமாக்கிய வைக்கோலினும் தாள்வைக்கோலில் ஊட்டச் சத்து மிகவும் குறைவாகவே உள்ளது.
தாளும் கதிரும் சேர்ந்த வைக்கோலில் தான் தரமான ஊட்டச் சத்து உள்ளது. ஏனெனில், கதிரில் தான் தாளைவிட ஊட்டச் சத்து மிகுந்துள்ளது. எனவே உழவர் முற்றிய கதிர் உள்ள தாளை வயலில் அறுவடை செய்து வெட்டித் துண்டுகளாக்கி ஈரம் முழுவதும் வற்றும்படி மணிகள் உதிராதபடி உலர்த்துவர். பிறகு அவற்றைக் கட்டுகளாகக் கட்டி சிப்பங்கள் ஆக்கிப் போர்களில் அல்லது கிடங்குகளில் தேக்கிவைப்பர். .
வைக்கோலை அறுவடைக்குப் பிறகு கவனமாக வானிலை ஊறுகளில் இருந்து பேணவேண்டியுள்ளது. வறட்சிக் கால அறுவடைகளில் கதிரளவை விட தாள் அளவு கூடுதலாகி விடுவதால், மிகக் குறைந்த ஊட்டச் சத்துள்ள வைக்கோலையே தருகின்றன. மிக ஈரமான வானிலைகளில் வயலில் வைக்கோல் மட்கி விடுவதால் அவற்றைக் கட்டுகளாக்கிச் சிப்பம் கட்ட இயலாமல் போகிறது. எனவே அறுவடை காலத்தின் சில வாரங்கள் உழவருக்கு வானிலை மிக அறைகூவலான காரணியாகி விடுகின்றன. நல்ல வானிலைக் காலத்தில் உழவர் அறுப்பு, கதிரடிப்பு, கட்டுகட்டுதல் பணிகளில் முனைப்பாக ஈடுபடுவர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இதை நமக்கு உணர்த்துகிறது. ஈர வைக்கோல் போரில் போரில் வைக்கோல் மட்கிவிட வழிவகுக்கும். இதனால் தீவனம் நஞ்சாகி கால்நடைகளை நோய்வாய்ப்படச் செய்யும்.
அறுவடைக்குப் பின் வைக்கோல் நனையாமல் பேணப்படும். மட்குதலும் காளான் பீடிப்பும் வைக்கோலின் ஊட்டத்தைக் குறைப்பதோடு கால்நடைகளுக்கு நோய்களையும் ஏற்படுத்தும். வைக்கோலின் இணைவாழ்வுப் பூஞ்சை மாடுகளிலும் குதிரைகளிலும் நோய்களை உருவாக்கும்.
உயர்தர பெரும வைக்கோலின் அறுவடை உகந்தநிலப் பயிரீடு, வளமானவயல், உகந்த வானிலை ஆகிய காரணிகளைச் சார்ந்துள்ளது. இந்நிலைமைகளில் பயிரிடும் பண்ணைகளில் வானிலை கேடுறும்வரை விரைவும் செறிவும் மிக்க செயல்பாடுகள் அமையும்.
தமிழகத்தில் நெற் பயிர் அறுவடைக்குப் பின் நெல் தாள் உலர்த்தப்பட்டு கால்நடைகளுக்குக் (குறிப்பாக மாடுகளுக்கு) உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வைக்கோல் என்று அழைக்கப்படுகிறது. வைக்கோல், அதன் உலர்ந்த நிலையிலேயே கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகையால், உழவர்கள் வைக்கோல் ஈரப்படாமலும் மழையில் நனையாமலும் காக்க முயல்வர். அப்படி ஈரப்பட்டாலும் வெயிலில் ஓரிரு நாட்கள் காய வைப்பதன் மூலம் வைக்கோலை உலர வைத்து கால்நடைகளுக்கு உண்ணத் தர முடியும். ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்ட வைக்கோலை வைக்கோல் போர் அல்லது வைக்கோல் படப்பு என்பர். அவ்வாறு குவித்து வைத்த வைக்கோல் காற்றில் பறந்து விடாமல் காக்க, வைக்கோல் போரை சுற்றி வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிரியை சுற்றி வைப்பர். வைக்கோல் போர்களைக் கூல (தானிய) மூட்டைகளை பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் கிடங்காகவும் உழவர்கள் பயன்படுத்துவர். இது தவிர வைக்கோலைக் குடிசைகளின் மேலும் இட்டு கூரை கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவதும் உண்டு
உட்கூறுகள்
வட்டாரம் சார்ந்து வழக்கமாக வைக்கோல் பலவகைத் தாவரக் கலவையால் ஆனதாக அமையும். இவற்றில் மேய்ச்சல் புல், புல்லரிசிப் புல் (உலோலியம் சிறப்பினங்கள்), திமோத்தி, புரோம், பெர்முடா, பூஞ்செடிப் புல்லினங்களும் இன்னும்பிற சிறப்பினங்களும் அடங்கும். தீவன வைக்கோலாக அல்பால்பா, சிவப்பு, வெள்ளைக் கிராம்பு, மிதவெப்ப மண்டலக் கிராம்பு போன்ற பருப்புவகைப் பயிர்த் தட்டுகளும் பயன்படுகின்றன. பருப்புவகைத் தீவன வைக்கோல் பூக்கும் முன்பேனைளந்தட்டுகளை வெட்டி உலர்த்தித் தீவனமாக்கப்படுகின்றன. சில மேய்ச்சல் நிலப் பூடுகளும் தீவனமாகப் பயன்படுகின்றன. என்றலும், சில பூடுகள் சில கால்நடைகளுக்கு நஞ்சாகின்றன.
வைக்கோலின் வேதி உட்கூறுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Hay Harvesting in the 1940s instructional films, Center for Digital Initiatives, University of Vermont Library
.
பயிர்கள்
தீவனங்கள்
|
6048
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
இயங்குபடம்
|
இயங்குபடம் என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகும்.
இந்த ஆறு சட்டங்களை கொண்டது தான் கீழே இருக்கும் இயங்குப்படம்.
இந்த இயங்குப்படம் ஒரு வினாடிக்கு ஆறு சட்டங்கள் வீதம் நகருகிறது.
இயங்குப்படங்களை தயாரிக்க இன்று பல மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயக்கமூட்டலுக்கு 1 நொடிக்கு 24 சட்டங்கள் (frames) தேவைப்படுகின்றன. இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.
சொற்பிறப்பியல்
இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation), அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.
நுட்பங்கள்
இயங்குபடத்தில் அதன் காலகட்டத்திற்கு ஏற்ப பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
பாரம்பரிய இயங்கு படங்கள்
பாரம்பரிய இயங்கு படங்கள் கையால் வரையப்பட்ட படங்கள் என்றும் கூறப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டுகளின் திரைப்படங்கள் பலவற்றில் இந்த வகையான தொழினுட்பம்களை பயன்படுத்தினர். இவ்வகையான படங்கள் முதலில் தாளில் வரையப்பட்டன. பின்பு மாய உணர்ச்சி தோற்றத்தை அதில் உருவாக்கினர். அதில் ஒவ்வொரு இயங்குபடங்களிலும் சிறிய முன்னேற்றங்களை செய்தனர். பின்பு வரைந்ததை செல் என்று கூறப்படும் உப்புத்தாளில் அதில் வைத்து அதனை வண்ணங்கள் கொண்டு நிரப்புவர்.
நிறுத்தும் இயக்க இயங்கு படங்கள்
நிறுத்தும் இயக்க இயங்கு படங்கள் என்பது நிஜ உலகில் உள்ள பொருட்களை புகைப்படங்களின் சட்டகங்களாக வைத்து அதனை மாயத்தோற்றத்தில் அசையும் வகையில் வைக்கப்படுவது ஆகும். பல வகையான நிறுத்தும் இயங்குபடங்கள் உள்ளன. இன்றைய நவீன காலங்களில் கணிப்பொறியின் உதவியுடன் இவ்வகையான இயங்குபடங்களை உருவாக்கலாம். ஆனால் பாரம்பரிய இயங்குபடங்களும் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன. கணிப்பொறியுடன் ஒப்பிடுகையில் பாரம்பரிய நிறுத்தும் இயங்குபடங்கள் செலவு குறைவானதும், நேரங்களை மிச்சப்படுத்தவும் செய்கின்றன.
கைப்பாவை இயங்குபடம் கைப்பாவை இயங்குபடம் தான் நிறுத்தும் இயங்குபடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வைகையான இயங்குபடங்களில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அதனுடைய மூட்டுகளில் கட்டுப்படுத்தும் வகையிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக தி டேல் ஆஃப் த பாக்ஸ் (பிரான்ஸ், 1937), த நைட்மேர் பிஃபோர் கிறிஸ்துமஸ் (யு.எஸ்., 1993), கார்பஸ் ப்ரைட் (யு.எஸ்., 2005), கோரலின் (யு.எஸ்., 2009).களிமண் இயங்குபடம் களிமண் கொண்டு நிறுத்தும் இயங்குபடங்கள் உருவாக்கப்படுகின்றன. பொம்மை இயங்குபடத்தைப் போன்றே இதற்குள்ளும் மூட்டில் வயரினால் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தி கும்பி ஷோஸ் (யு.எஸ்.1957-1967), மோர்ப் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து 1977-2000), வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து, 1989) வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ், தெ ட்ராப் டோர் (இங்கிலாந்து, 1984) சிக்கன் ரன், தி அட்வென்சர்ஸ் ஆஃப் மார்க் ட்வைன்.
கொள்கைகள்
வால்ட் டிஸ்னி நிறுவனம் இயங்குபடத்திற்கான கொள்கைகளை அதன் இயங்குபட உருவாக்குநர்களான ஆல்லி ஜான்சன், ஃப்ரான்க் தாமஸ் ஆகியோர் 1981 ஆம் ஆண்டில் வாழ்க்கையின் மாயத்தோற்றம் ( தி இல்லுயூசன் ஆஃப் லைஃப்) என்ற நூலில் வரையறை செய்தனர்.
நசுக்குதல் மற்றும் நீட்டுதல்
நசுக்குதல் மற்றும் நீட்டுதல் என்ற கொள்கை மிக முக்கியமானதாக உள்ளது. ஒரு வரையப்பட்ட பொருளின்எடை மற்றும் நெகிழ்வுத்தன்மைகளுக்கு உணர்ச்சிகளைக் கொடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது ஆகும். மேலும் பௌன்சிங் பால் (bouncing ball) போன்ற சிறிய பொருள்களை விளக்குவதற்கும், அல்லது முகத்தின் தசைகள் போன்ற சிக்கலானவற்றிற்கும் இந்த வகையான கொள்கைகள் பயன்படுகின்றன.
எதிர்பார்த்தல்
பார்வையாளார்களின் எண்ணத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உண்மையான உனர்வுகளை கொடுக்க இந்த கொள்கைகள் உதவுகிறது.நடனக் கலைஞர்கள் முதலில் முழங்காலகளை மடக்க வேண்டும். சிறிய செயல்களை செய்வதற்கு இவைகள் பயன்படுகின்றன. உதாரணமாக யாரோ ஒருவரின் வருகையை எதிர்பார்ப்பது, அல்லது ஏதேனும் ஒரு பொருளை உற்று நோக்க்குவது போன்றவை ஆகும்.
நாடக அரங்கேற்றம்
நாடக அரங்கேற்றம் என்பது மேடைகளில் அரங்கேற்றப்படும் நாடகங்களைப் போன்றது ஆகும். இதனை திரையரங்கு மற்றும் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் பார்வையாளர்களை ஒரு காட்சியில் அவர்களின் முழுக் கவனத்தையும் வைத்திருப்பது ஆகும். ஜான்ஸ்டன் என்பவர் அரங்கேற்றம் என்பதனை நடிகர்கள் தாங்கள் கூற வந்த கருத்தினை எந்த விதமான பிழைகளுமின்றி தெளிவாக கூற விளைவது ஆகும் என்று வரையறை செய்துள்ளார்.
இயங்கு படத்தின் பிரிவுகள்
இருபரிமாண இயங்குப்படம்
முப்பரிமாண இயங்குப்படம்
இருபரிமாண இயங்குப்படம்
இருபரிமாணங்கள்(x,y) கொண்டது.இருபரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக பிளாஷ் (flash), டுன் பூம் (toonboom) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முப்பரிமாண இயங்குப்படம்
முப்பரிமாணங்கள் (x,y,z) கொண்டது. முப்பரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக மாயா maya) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இயங்குபடத்தின் வரலாறு
முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றை குகைகளிலும், பழங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர்.
பழைய கற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்ததை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனர்கள் ’’’ஜோட்ரோப்’’’ எனும் சாதனத்தை கி.பி 180-இல் கண்டுபிடித்துள்ளனர்.
1404-1438-களில் வாய்னிச் கையெழுத்துப் பிரதிகளில் பந்து போன்ற ஒரே மாதிரியான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதனை நடுவிலிருந்து சுழற்றிவிட்டால் பந்து ஓடுவது போன்ற மாயயை உருவாக்குவது போல் அமைத்துள்ளனர்.
இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும். இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது. இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்றமே காரணம்.
திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி (Projector), அச்சுப்பொறி (Printer), புகைப்படக்கருவி (Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும். இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதரர்கள் ஆவர். உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும். ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832), ஜோட்ரோப்(1834), பிராக்ஸினோ ஸ்கோப் (1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும்.
முதல் இயக்கத்திரைப்படம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார். இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்படச் சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார். 1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும். தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.
விருதுகள்
ஊடகவியல் துறையில் உள்ள மற்ற பிரிவிகளுக்கு வழங்கப்படுவதைப் போல இந்தத் துறைக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இயங்குபடத்திற்கான விருதுகளை கலை மற்றும் இயங்குபட நிறுவனமானது 1932 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இதன் முதல் விருது சிறிய பூக்கள் மற்றும் மரங்கள்(short Flowers and Trees) என்பதனை தயாரித்ததற்காக வால்ட் டிஸ்னிக்கு வழங்கப்பட்டது.
இதே போன்றே மற்ற நாடுகளிலும் சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
ஆப்பிரிக்கா திரைப்பட அகாதமியானது 2008 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
பிஏஎஃப்டிஏ நிறுவனம் 2006 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
செஸார் சிறந்த இயங்குபட விருது ,
1981 ஆம் ஆண்டிலிருந்து கோல்டன் ரோஸ்டர் சிறந்த இயங்குபடத்திற்கான விருது வழங்கி வருகிறது.
கோயா சிறந்த இயங்குபடத்திற்கான விருது,
யப்பான் அகாதமியானது 2007 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
தேசிய சிறந்த இயங்குபடத்திற்கான விருது,
ஆசியா சிறந்த இயங்குபடத்திற்கான விருது 2006 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பா அளவில் சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை ஐரோப்பிய திரப்பட விருது விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னீ விருதானது இயங்குபட துறையில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக்கூடிய ஒரு விருது ஆகும். 1990 களில் இந்த விருதினை பெரும்பாலும் வால்ட் டிஸ்னி, ட்ரீம் ஒர்க்ஸ், நியூயர் ஸ்டுடியோஸ் ஆகியவை தான் வென்றன.
அன்னீ விருது - சிறந்த இயங்குபட திரைப்படம்
அன்னீ விருது- சிறந்த இயங்குபட குறும்படம்
அன்னீ விருது - சிறந்த தொலைகாட்சி இயங்குபடம். போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
இயக்கமூட்டிய கேலிச் சித்திரம்
இயக்கமூட்டலின் வரலாறு
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Anderson, Joseph and Barbara, "The Myth of Persistence of Vision Revisited", Journal of Film and Video , Vol. 45, No. 1 (Spring 1993): 3-12
Culhane, Shamus, Animation Script to Screen
Laybourne, Kit, The Animation Book
Ledoux, Trish, Ranney, Doug, & Patten, Fred (Ed.), Complete Anime Guide: Japanese Animation Film Directory and Resource Guide, Tiger Mountain Press 1997
Lowe, Richard & Schnotz, Wolfgang (Eds) Learning with Animation. Research implications for design Cambridge University Press, 2008
Masson, Terrence, CG101: A Computer Graphics Industry Reference Unique and personal histories of early computer animation production, plus a comprehensive foundation of the industry for all reading levels.
Serenko, Alexander, The development of an instrument to measure the degree of animation predisposition of agent users, Computers in Human Behavior Vol. 23, No. 1 (2007): 478-495.
Thomas, Frank and Johnston, Ollie, Disney Animation: The Illusion of Life, Abbeville 1981
Walters, Faber and Helen (Ed.), Animation Unlimited: Innovative Short Films Since 1940, HarperCollins Publishers, 2004
Williams, Richard, The Animator's Survival Kit
Bob Godfrey and Anna Jackson, 'The Do-It-Yourself Film Animation Book' BBC Publications 1974 Now out of print but available s/hand through a range of sources such as Amazon Uk.
Lawson, Tim and Alisa Persons. The Magic Behind the Voices: A Who's Who of Cartoon Voice Actors. University Press of Mississippi. 2004. (A history of cartoon voice-overs and biographies and photographs of many prominent animation voice actors.)
Ball, R., Beck, J., DeMott R., Deneroff, H., Gerstein, D., Gladstone, F., Knott, T., Leal, A., Maestri, G., Mallory, M., Mayerson, M., McCracken, H., McGuire, D., Nagel, J., Pattern, F., Pointer, R., Webb, P., Robinson, C., Ryan, W., Scott, K., Snyder, A. & Webb, G. (2004) Animation Art: From Pencil to Pixel, the History of Cartoon, Anime & CGI. Fulhamm London.: Flame Tree Publishing.
Crafton, Donald (1982). Before Mickey. Cambridge, Massachusetts.: The MIT Press.
Solomon, Charles (1989). Enchanted Drawings: The History of Animation. New York.: Random House, Inc.
வெளியிணைப்புகள்
Experimental Animation Techniques
The making of an 8-minute cartoon short
Introduction to animation video production
"Animando" , a 12-minute film demonstrating 10 different animation techniques (and teaching how to use them).
இயங்குபடம்
கணினி வரைகலை
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
அனிமே
கருத்தோவியங்கள்
திரைப்படம் மற்றும் காணொளித் தொழினுட்பம்
|
6049
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
சும்மாடு
|
தலையில் சுமை தூக்கும்போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பர். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணி சும்மாடு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவர். சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது சுமடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது எனும் பழமொழியே இன்று திரிந்து "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று வழங்குகிறது.
வெளி இணைப்புகள்
சும்மாடு - ஆறாந்திணை
உடைகள்
தமிழர் உடைகள்
தமிழர் தொழில்நுட்பம்
|
6050
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
முக்காடு
|
முக்காடு, தலை மற்றும் முகத்தின் சில பகுதிகளை மறைக்க, பெரும்பாலும் பெண்கள் அணியும் துணியாகும். வெயிலை மறைக்கவும் சமயக் காரணங்களுக்காகவும் சில திருமண வைபவங்களிலும் இது அணியப்படுகிறது. சமயத் தொடர்புள்ள ஒன்றாக, இது ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ மதிப்புக் கொடுப்பதற்காக அணியப்படுவதாகக் கருதப்படுகிறது.
முக்காட்டின் உண்மையான சமூக பண்பாட்டு, உளவியல், மற்றும் சமூக பால்சார் செயற்பாடுகள் குறித்து பரந்த அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஆனாலும், சமூகத் தொலைவைப் பேணுதல், சமூகத் தகுதியைக் காட்டுதல், பண்பாட்டு அடையாளம் என்பன முக்காட்டில் செயற்பாடுகளுக்குள் அடங்கும் எனலாம்.
அறியப்பட்ட வரலாற்றின்படி கி.மு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசிரியச் சட்டத்தில் முக்காடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில்
இந்தியாவை ஆண்ட முகலாயர்களின் பண்பாட்டுத் தாக்கத்தால், வட இந்தியாவில் பெண்கள் முக்காடு இடும் வழக்கம் கிபி 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் பரவலாயிற்று.ஆனால் சீக்கியப் பெண்கள் முக்காடு அணியும் வழக்கத்தை, சீக்கிய சமய குரு அமர் தாஸ் கடுமையாக எதிர்த்தார்.
இதனையும் காண்க
பர்தா
ஹிஜாப்
புர்க்கா
குறிப்புகள்
இசுலாமிய உடைகள்
|
6051
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
வரப்பு
|
விளை நிலங்களுக்கு இடையே உள்ள மண் தடுப்புகள் வரப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஓர் ஆள் நடந்து செல்லத்தக்க அகலத்தில் அமைந்திருக்கும்.
வேளாண் அறிவியல்
பயிர் சாகுபடிக்கு முன் வரப்பு வெட்டித் திருத்துவது முக்கியப் பணியாகும். அதுமட்டுமல்லாமல் நீர் நிலைகளில் நீரைத் தேக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறு நீர்பிடிப்புகள்
சரிவுப்பகுதிகளில் வி வடிவ வரப்புகள் 5 மீ - 5 என்றஅளவில் அமைத்து மரங்கள் அதன் நடுவில் நடப்படுகிறது. வரப்புகளின் உயரம் மழை அளவு, சரிவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். மேலும் சரிவுக்கு குறுக்கே அரை வட்ட வடிவ வரப்புகள் 2 மீ விட்டத்தில் 15.20 செ.மீ உயரத்தில் அமைக்கப்படுகிறது. இவை மழைக்கலங்களில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
பயன்பாடுகள்
நில அளவை (தமிழ்நாடு) முறைகளிலும் வரப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
இவை நிலத்தில் மழை நீரையும் பாசன நீரையும் தேக்கி வைக்கவும், மேம்பட்ட விரைந்த நீர்ப்பாசனத்திற்கும் உதவுகின்றன.
நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொழுது வயலை கடந்து செல்ல உதவும் பாதைகளாகவும் அண்டை நிலங்களுடன் எல்லையை வரையறுக்கவும் இவை பயன்படுகின்றன.
வரப்பில் வளரும் புல், கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றது.
நிலத்தை பார்வையிடப் பயன்படும் ஓர் உயர்ந்த தளமாகவும் வரப்புகள் உதவுகின்றன.
உழைப்பிற்கு நடுவே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேலை செய்யும் ஆட்களுக்கு பயன்படுகிறது.
வரப்பினால் வரும் பிரச்சினைகள்
வரப்புகளை உட்புறமாக அதிகமாக வெட்டுவதன் மூலம் வரப்பை நகர்த்தி அண்டை நிலத்தை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் சில சமயங்களில் வரப்புகள் நில உரிமை தகராறுகளுக்கு காரணமாய் அமைவதும் உண்டு.
ஔவையார் பாடல்
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான்'''
என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியுள்ளார்
உசாத்துணைகள்
வேளாண்மை
|
6059
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
சித்தூர்
|
சித்தூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது.. இந் நகரின் மக்கள்தொகை 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1,52,654 ஆகும். இது மாங்காய்கள், தானியங்கள், கரும்பு ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் அரிசி ஆலைகளும் அமைந்துள்ளன. இங்கு தமிழ் பேசுவோரும் தெலுங்கு பேசுவாரும் சம எண்ணிக்கையில் உள்ளனர் தமிழ் பேசுவோர் பெரும்பான்மையாக சித்தூர் மாவட்டத்தின் வேங்கட மலைக்கு தெற்கே உள்ளனர்.
வெளி இணைப்புகள்
சித்தூர் பற்றிய வலைத்தளம்
மேற்கோள்கள்
சித்தூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம்
நகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
|
6060
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
|
கடப்பா
|
கடப்பா () இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகவும் விளங்குகிறது. இது ஆந்திராவின் இராயலசீமை பகுதியில் உள்ள இது ஆந்திரப்பிரதேசத்தின் தென்மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பெண்ணாறு ஆற்றின் தெற்கே ௮ (8) கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே உள்ள டெக்டோனிக் நிலப்பரப்பில் அமைந்துள்ள நல்லமலா மற்றும் பால்கொண்டா மலைகளால் நகரம் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு இரும்பு மண் பகுதியில் உள்ளது. திருமலையின் மேற்கில் இருந்து மலைக்கு செல்லும் நுழைவாயில் என்பதால் இந்நகரம் "கடபா" ('வாசல்') எனப் பெயர் பெற்றது.
புவியியல் கூறுகள்
௨௦௦௧ (2001) ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நகரத்தின் மக்கள்தொகை ௩,௨௫,௭௨௫ (3,25,725).
வரலாறு
பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் ௧௫௬௫ (1565)-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். ௧௮௦௦ (1800) முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
புஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும்.
கடப்பா மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம்
|
6061
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
அனந்தபூர்
|
அனந்தபூர் (Anantapur) (அதிகாரப்பூர்வமாக: அனந்தபுராமு ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தின் தலைநகராகும். இது அனந்தபுராமு மண்டலத்தின் மண்டல தலைமையகமாகவும், அனந்தபூர் வருவாய் பிரிவின் பிரதேச தலைமையகமாகவும் உள்ளது. நகரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது 1799 இல் தத்தா மண்டலத்தின் (ஆந்திராவின் இராயலசீமா மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம்) தலைமையகமாகவும் இருந்தது. இது இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையாகவும் இருந்தது.
நிலவியல்
அனந்தபூர் இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 335 மீட்டர் ஆகும் . இது ஐதராபாத்திலிருந்து 356 கி.மீதொலைவில் அமைந்துள்ளது,விஜயவாடாவிலிருந்து இருந்து 484 கி.மீ., மற்றும் பெங்களூரிலிருந்து 210 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
காலநிலை
அனந்தபூர் அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது, ஆண்டின் பெரும்பகுதி வெப்பமான மற்றும் வறண்ட சூழ்நிலைகளைக் கொண்டுள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் கோடைக்காலம் தொடங்கி மே மாதத்தில் உச்சநிலை அடைகிறது. அனந்தபூருக்கு மார்ச் மாத தொடக்கத்தில் மழைக்காலத்திற்கு முந்தைய மழை பெய்யும், முக்கியமாக கேரளாவிலிருந்து வடகிழக்கு காற்று வீசுகிறது. பருவமழை செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து நவம்பர் தொடக்கம் வரை மழைப்பொழிவு வரை நீடிக்கும் . வறண்ட மற்றும் லேசான குளிர்காலம் நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி பிப்ரவரி ஆரம்பம் வரை நீடிக்கும்; சிறிய ஈரப்பதம் மற்றும் சராசரி வெப்பநிலையுடன் இருக்கும். மொத்த ஆண்டு மழை சுமார் ஆகும் .
தட்பவெப்ப நிலை
மக்கள் தொகை
2011ம் ஆண்டின் தொகை கணக்கெடுப்புப்படி , அனந்தபூர் நகரத்தின் மக்கள் தொகை 262,340 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் மற்றும் மக்கள் தொகையில் 9% 6 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர். கல்வியறிவு 82%, ஆண் கல்வியறிவு 89%, பெண் கல்வியறிவு 75%. தெலுங்கு மொழி உத்தியோகபூர்வ மற்றும் பரவலாக பேசப்படும் மொழி ஆகும்.
பொது பயன்பாடுகள்
அனந்தபூர் குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை ஆகியவை சுத்தமான குடிதண்ணீரை வழங்குவதில் முன்னேறி, முக்கியமாக புளூரோசிஸை ஒழிப்பதில் கவனம் செலுத்துகின்றன. நகரத்தில் அமைந்துள்ள கோடைகால சேமிப்பு தொட்டியில் இருந்து நகரத்திற்கு ஆசலனேற்ற தண்ணீரை மாநகராட்சி வழங்குகிறது.
கலாச்சாரம்
அரசியல், திரைப்படத் துறை மற்றும் பிற துறைகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகளுடன் ஊரிலிருந்து குறிப்பிடத்தக்க சில நபர்கள் உள்ளனர். நீலம் சஞ்சிவ ரெட்டி இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியாகவும், ஆந்திராவின் முதல் முதல்வராகவும் இருந்தவர், அனந்தபூர் அனந்தபூர் மக்களவைத் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பைடி லட்சுமயா இருந்தார்; கல்லூர் சுப்பா ராவ் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் ஆந்திர சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராக இருந்தார்; கதிரி வெங்கட ரெட்டி ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர், சத்ய சாய் பாபா, இந்து ஆன்மீகத் தலைவர் ; பெல்லாரி ராகவா ஒரு இந்திய நாடக ஆசிரியர், தெஸ்பியன் மற்றும் திரைப்பட நடிகர் ஆகியோர் குறிப்பிடதக்கவர்கள் ஆவர்.
உணவு
சோளம், கம்பு, ராகி போன்ற தினை உணவு உணவுகள் பெரும்பாலும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன
மேலும் காண்க
மக்கள்தொகை அடிப்படையில் ஆந்திராவின் நகரங்களின் பட்டியல்
அல்லசாணி பெத்தண்ணா
சான்றுகள்
ஆந்திர ஊர்களும் நகரங்களும்
வெளி இணைப்புகள்
அனதாபூர் மாவட்டம்
ஆந்திர ஊர்களும் நகரங்களும்
தலைநகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
அனந்தபூர் மாவட்டம்
|
6063
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
நெல்லூர்
|
நெல்லூர் (Nellore) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். மக்கள்தொகை அடிப்படையில் நெல்லூர் ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும். பெண்ணாற்றின் (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி ஆகும் . மாவட்டத்தின் தலைநகரம், நெல்லூர் மண்டலம், நெல்லூர் வருவாய்க் கோட்டம் என்ற பலவாறாக நெல்லூர் அறியப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் நெல்லூர் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. நெல்லூர் மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்திற்கு தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நெல்லூர் வழியாக செல்லுகிறது.
பெயர்க்காரணம்
இங்கு நெல்லி மரத்தினடியில் லிங்க வடிவில் ஒரு கல் இருந்ததாக தொல் புராணக் கதை ஒன்று கூறுகிறது. நெல்லி ஊர் என்பது நாளடைவில் நெல்லூராக மாறியது என்பது வரலாறு ஆகும். நெல்லிக்கு தெலுங்கில் உசிரி என்ற பெயர் இருந்தாலும் மெட்ராசு மாகாணத்தில் ஆட்சி மொழியாக இருந்த தமிழின் தாக்கத்தால் இவ்வாறு மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
வரலாறு
சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மௌரியப் பேரரசு, சேதி வம்சத்தின் காரவேலன் , சாதவாகணர்கள், காக்கத்தியர்கள், கலிங்கத்தின் கீழைக் கங்கர்கள் , விஜயநகரப் பேரரசு, ஆற்காடு நவாபு போன்றவர்கள் நெல்லூரை ஆட்சி செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மௌரியப் பேரரசின் கீழ் முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி செய்த சோழர்களின் காலத்திலிருந்தே நெல்லூர் இருந்து வந்துள்ளது. மற்றும் 3 ஆம் நூற்றாண்டில் மௌரிய அரசர் அசோகராலும் நெல்லூர் ஆளப்பட்டுள்ளது. பின்னர் நெல்லூர் பல்லவ வம்சத்தின் ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டு கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை அவர்கள் ஆட்சியில் அகப்பட்டிருந்தது. பின்னர் சோழ ஆட்சியாளர்கள் நெல்லூரை நீண்ட காலம் ஆட்சி செய்தனர். தெலுங்கு சோழர்கள் 13 ஆம் நூற்றாண்டில் அவற்றின் வீழ்ச்சியை சந்தித்தனர். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவை வீழ்ச்சியடையும் வரை இது சோழ இராச்சியத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்திருந்ததாக தமிழ் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பின்னர் காகதியர்கள் , விஜயநகர பேரரசு, கோல்கொண்டாவின் சுல்தான்கள் , முகலாய பேரரசு மற்றும் ஆற்காட்டு நவாப் என பலரும் நெல்லூரை ஆண்டனர். 18 ஆம் நூற்றாண்டில், நெல்லூரை ஆங்கிலேயர்கள் ஆர்காட்டு நவாப்களிடமிருந்து கையகப்படுத்தினர் நெல்லூர் பிரித்தானிய இந்தியாவின் மெட்ராசுமாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
தெலுங்கு மொழி தோன்றுவதிலும், ஆந்திர மாநிலம் உருவாவதிலும் இந்த நகரம் முக்கிய பங்கு வகித்தது. ஆந்திரா உருவாவதற்கு மரணம் வரை உண்ணாவிரதம் இருந்த பொட்டி சிறீ ராமுலு நெல்லூரைச் சேர்ந்தவர்.
புவியியல்
அமைவிடம்
நெல்லூர் .என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 18 மீட்டர் உயரத்தில் நெல்லூர் அமைந்துள்ளது..
தட்பவெப்பம்
வெப்பமும், ஈரப்பதமுமான கோடை மற்றும் மிதமான குளிர்காலம் கொண்ட ஒரு பொதுவான வெப்பமண்டல கடல் காலநிலை நெல்லூரில் நிலவுகிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகவெப்பமான மாதங்களாகும். மற்றும் வெப்பமான நிலை பொதுவாக சூன் மாத இறுதி வரை நீடிக்கும். டிசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் மிகக் குளிரான மாதங்களாகும். வங்காள விரிகுடா நகரத்திலிருந்து 24 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் இருப்பதால், கடல் காற்று நகரத்தின் காலநிலையை குளிர்காலத்திலும் கோடைகாலத்திலும் மிதமாக்குகிறது. கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதால் நகரத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை நெல்லூருக்கு கிடைக்காது. வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நெல்லூரில் மழை பெய்யும். இந்த காலம் நகரத்தின் ஆண்டு மழையில் 60 சதவீதத்தை அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் நகரத்தில் சூறாவளிகள் பொதுவானவை, இதனால் வெள்ளம் மற்றும் அழிவு இங்கு அதிகம் ஏற்படுகிறது .
நெல்லூரில் கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 46 ° செல்சியசு வரை பதிவாகிறது. மற்றும் குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 25 ° செல்சியசு வரை இருக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழியாக மழையளவு 700 முதல் 1,000 மி.மீ (28 முதல் 39 அங்குலம்) வரை இருக்கும். நெல்லூர் பருவங்களின் அடிப்படையில் வற்ட்சி மற்றும் வெள்ளம் இரண்டுக்கும் உட்படுகிறது
.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
ஆந்திர ஊர்களும் நகரங்களும்
நெல்லூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
|
6064
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
வெள்ளொளிர்வு விளக்கு
|
நுண்ணிழை ஒன்றினூடு மின்சாரத்தைச் செலுத்தும்போது அது ஒளிர்கின்ற தோற்றப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மின் விளக்கு, வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp) எனப்படுகின்றது. இது வெற்றிடமாக்கப்பட்ட அல்லது சடத்துவ வாயுக்களால் (Inert Gas) நிரப்பபட்ட கண்ணாடிக் குமிழொன்றினுள் பொருத்தப்பட்ட நுண்ணிழை ஒன்றைக் கொண்டது. இந்த நுண்ணிழையினூடாக வெளியிலிருந்து மின்சாரம் பாய்ச்சுவதற்கு ஏதுவாக இழையின் இரு முனைகளிலும் பொருத்தப்பட்ட மின் கடத்திகள் குமிழுக்கு வெளியே முடிவடைகின்றன.
ஆரம்ப காலங்களில், 1879 தொடக்கம் 1905 வரை இந்த நுண்ணிழைகள் பெரும்பாலும் காபனினாலேயே செய்யப்பட்டன. பின்னர் இது உலோகத்தினால் செய்யப்பட்டது. இக்காலத்தில் தங்ஸ்தன் உலோகமே இதற்குப் பயன்படுகின்றது.
நுண்ணிழையூடு மின்சாரம் பாயும்போது அது சூடாகி ஒளிர்கின்றது. இதன் மூலம் அது வெப்பத்தையும் ஒளியையும் வெளிவிடுகின்றது. ஆரம்ப கால விளக்குகளைவிட இக்காலத் தங்ஸ்தன் இழை விளக்குகள் முன்னேற்றமானவையாக இருந்தும், இவற்றால் வெளியிடப்படும் சக்தியில் 5% மட்டுமே ஒளிச் சக்தியாகும். இதனால் செலுத்தப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்பமாக வீணாகி விடுகின்றது. இதனால் வெள்ளொளிர்வு விளக்கு செயல்திறன் மிகவும் குறைந்த ஒரு விளக்காகும்.
நுண்ணிழையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது கூடிய ஒளி வெளிவிடப்படுமாயினும், தங்ஸ்தன் ஆவியாகி நுண்ணிழை மேலும் மெல்லியதாகி விரைவிலேயே அறுந்து விடுகிறது. இதனால் மின் விளக்கின் ஆயுட் காலமும் குறைவதற்கு ஏதுவாகின்றது.
இன்று பல புதிய வகை விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பல கூடிய செயல்திறனும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை. எனினும், வெள்ளொளிர்வு விளக்குகள் இன்னும் பிரபலமாகவே உள்ளன. இவற்றுக்கான ஆரம்பச் செலவுகள் குறைவாக இருப்பதும், வேறு சில ஒளியியல் இயல்புகளும் இதற்குக் கரணங்களாகும். இன்றும் உலகில் மிக அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள மின் விளக்குகள் வெள்ளொளிர் விளக்குகளே.
வெள்ளொளிர்வு விளக்கு வரலாறு
வெப்பவெளியீட்டு விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது யார் என்ற கேள்வி முகவரி உள்ள, வரலாற்று ராபர்ட் ஃப்ரெய்டெல் மற்றும் பால் இஸ்ரேல் [3] பட்டியலில் முன் ஒளிர்வு விளக்குகள் 22 கண்டுபிடிப்பாளர்கள் ஜோசப் ஸ்வான் மற்றும் தாமஸ் எடிசன் . ஒரு பயனுள்ள: அவர்கள் எடிசன் பதிப்பு ஏனெனில் மூன்று காரணிகள் கலவையை மற்றவர்கள் விஞ்ச முடிந்தது என்ற முடிவிற்கு வெப்பவெளியீட்டு பொருள், அதிக வெற்றிடம் மற்றவர்கள் அடைய முடிந்தது விட (பயன்படுத்தி Sprengel பம்ப் ) மற்றும் ஒரு உயர் எதிர்ப்பு சக்தியை விநியோகம் செய்த சிக்கனமாய் நிலைத்திருக்கத்தக்கதாகவும் ஒரு மையப்படுத்தப்பட்ட மூல.
மற்றொரு வரலாற்று, தாமஸ் ஹக்ஸ், வளர்ச்சி அவரது பாணியில் எடிசன் வெற்றி காரணம். எடிசன் முதல் வெற்றிகரமான விளக்கை மின்சார விளக்குகள் ஒரு அமைப்பு இணைந்து ஒரு துணை அமைப்பு இருந்தது.
ஆரம்ப முன் வணிக ஆராய்ச்சி
1802 இல், ஹம்ப்ரி டேவி பின்னர் மிக சக்திவாய்ந்த என்ன இருந்தது மின்சார பேட்டரி உலகில் ராயல் நிறுவனம் கிரேட் பிரிட்டன். அந்த ஆண்டில், அவர் ஒரு மெல்லிய ஆடை அவிழ்ப்பு மூலம் தற்போதைய தேர்ச்சி முதல் வெப்பவெளியீட்டு ஒளி உருவாக்கப்பட்ட பிளாட்டினம் உலோக ஒரு மிக உயர்ந்த ஏனெனில் தேர்வு, உருகுநிலை . இது போதுமான பிரகாசமான இல்லை அல்லது அது நீண்ட போதும் நடைமுறையில் நீடிக்கும், ஆனால் அடுத்த 75 ஆண்டுகளில் பரிசோதனைகளுக்கு மதிப்பெண்களை முயற்சிகளை பின்னால் முன்னோடி இருந்தது. [7] 1809 இல், டேவி முதல் உருவாக்கப்பட்ட வில் விளக்கு இரண்டு கார்பன் கரி தண்டுகள் ஒரு 2000-செல் பேட்டரி இணைக்கப்படும்; அது 1810 ல் ராயல் நிறுவனம் நிரூபிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பல பரிசோதனைகளுக்கு பிளாட்டினம் அல்லது உறுதியம் கம்பிகள், கார்பன் தண்டுகள், மற்றும் காலி அல்லது அரை காலி இணைப்புகள் பல்வேறு சேர்க்கைகளை பணியாற்றினார். இந்த சாதனங்கள் பல ஆர்ப்பாட்டம் மற்றும் சில காப்புரிமை இருந்தன. [8]
1835 இல், ஜேம்ஸ் போமேன் லிண்ட்சே டண்டீ, ஸ்காட்லாந்து ஒரு பொது கூட்டத்தில் ஒரு நிலையான மின் ஒளி நிரூபித்துள்ளது. அவர் "ஒரு தூரத்தில் ஒரு புத்தகம் மற்றும் ஒரு அரை அடி வாசிக்க" என்று கூறினார். எனினும், அவரது சொந்த திருப்தி சாதனத்தை perfected நிலையில், அவர் பிரச்சினையை திரும்பி கம்பியில்லா தந்தி மற்றும் எந்த மேலும் மின்சார ஒளி உருவாக்க வில்லை. அவர் Challoner பலர் உள்ள வரவு என்றாலும் அவரது கூற்றுக்கள் நன்றாக, ஆவணங்கள் இல்லை. [9] "ஒளிரும் லைட் பல்பு" கண்டுபிடிப்பாளர் உடன்.
1840 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விஞ்ஞானி வாரன் டி லா Rue ஒரு இணைக்கப்பட்டுள்ளது சுருண்ட ஒரு பிளாட்டினம் இழை வெற்றிட குழாய் மற்றும் அது மூலம் மின்சார நிறைவேற்றியது. வடிவமைப்பு உயர் கருத்தை அடிப்படையாக கொண்டது உருகுநிலை பிளாட்டினம் இது உயர் வெப்பநிலையில் இயங்க மற்றும் காலி அறை அதன் ஆயுளை மேம்படுத்துவது, பிளாட்டினம் செயல் படும் குறைவான வாயு மூலக்கூறுகள் உள்ளன என்று அனுமதிக்கும். ஒரு திறமையான வடிவமைப்பு என்றாலும், பிளாட்டினம் செலவு வணிக பயன்பாட்டிற்கு இது சாத்தியமற்றதாக இருந்தது.
1841 ஆம் ஆண்டில், இங்கிலாந்து ஃபிரடெரிக் டி Moleyns ஒரு வெற்றிடம் விளக்கை அடங்கியுள்ள பிளாட்டினம் கம்பிகளை பயன்படுத்தி ஒரு வடிவமைப்பு, ஒரு வெப்பவெளியீட்டு விளக்கு முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. [10]
1845 இல், அமெரிக்க ஜான் டபிள்யூ ஸ்டார் [11] கார்பன் இழைகளை பயன்பாடு தொடர்புடைய அவரது ஒளிரும் லைட் பல்பு ஒரு காப்புரிமை வாங்கியது. [12] அவர் விரைவில் காப்புரிமை பெறுவதற்கான இறந்தார், அவரது கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக உற்பத்தி இல்லை. வேறு லிட்டில் அவரை பற்றி அழைக்கப்படுகிறது. [13]
1851 இல், ஜீன் யூஜின் ராபர்ட்-Houdin பகிரங்கமாக Blois, பிரான்ஸ் தனது எஸ்டேட் அன்று வெப்பவெளியீட்டு லைட் பல்புகள் நிரூபித்துள்ளது. அவரது ஒளி விளக்குகளின் அருங்காட்சியகத்தில் நிரந்தர காட்சி இருக்கும் நாட்டுப்புற வீடு டி Blois . [14]
1872 ஆம் ஆண்டில், ரஷியன் அலெக்சாண்டர் Lodygin ஒரு ஒளிரும் லைட் பல்பு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1874 இல் ஒரு ரஷியன் காப்புரிமையை பெற்றார். அவர் ஒரு கண்ணாடி பெறுபவரின் குறைக்கப்பட்ட பிரிவின் ஒரு பர்னர் இரண்டு கார்பன் கம்பிகள் பயன்படுத்தப்பட்டது, காற்றுப்புகா முத்திரையிடப்பட்ட, மற்றும் நைட்ரஜன் நிரப்பப்பட்ட, மின்சார தற்போதைய முதல் நுகரப்படும் இருந்த போது இரண்டாவது கார்பன் அனுப்ப வேண்டும் என்று ஏற்பாடு. [15] பின்னர் அவர் வாழ்ந்தார் ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அலெக்சாண்டர் டி Lodyguine மற்றும் கொண்ட ஒளிர்வு விளக்குகள் விண்ணப்பித்திருந்தார் பெறப்பட்ட காப்புரிமை தனது பெயரை மாற்றினார் குரோமியம் , இரிடியம் , ரோடியம் , ருத்தேனியம் , கருநீலீயம் , மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் நாரிழைகளின், [16] மற்றும் ஒரு மாலிப்டினம் இழை பயன்படுத்தி ஒரு குமிழி உள்ள நிரூபிக்கப்பட்டது உலகம் நியாயமான பாரிசில் 1900 இன். [17]
ஹென்ரிச் Göbel 1893 இல் அவர் ஒரு மெல்லிய காபனாக்கிய கொண்டு, 1854 முதல் ஒளிரும் லைட் பல்பு வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிவித்தார் மூங்கில் உயர் எதிர்ப்பு இழை, பிளாட்டினம் முன்னணி-ல் அனைத்து கண்ணாடி உறையின், மற்றும் ஒரு உயர் வெற்றிடத்தில் கம்பிகள். நான்கு நீதிமன்றங்களின் நீதிபதிகள் கூறப்படும் கோபெல் எதிர்பார்ப்பு பற்றி சந்தேகம் எழுப்பி, ஆனால், எடிசன் காப்புரிமை காலாவதியாகும் தேதி காரணமாக ஒரு இறுதி விசாரணைக்கு ஒரு முடிவை அங்கு இல்லை. 2007 வெளியான ஒரு ஆய்வு பணி 1850 ல் கோபெல் விளக்குகள் கதை ஒரு புராணக்கதை என்று முடித்தார். [18]
ஜூலை 1874 24, ஒரு கனடிய காப்புரிமை தாக்கல் ஹென்றி உட்வர்ட் மற்றும் மேத்யூ எவன்ஸ் ஒரு நைட்ரஜன்-நிரப்பப்பட்ட கண்ணாடி உருளையில் ஏற்றப்பட்ட கார்பன் கம்பிகள் கொண்ட ஒரு விளக்கு வேண்டும். அவர்கள் விளக்கு வர்த்தகத்திற்குள் தோல்வியடைந்தது இருந்தனர், அவர்களின் காப்புரிமை (உரிமைகளை விற்பனை ஐக்கிய அமெரிக்க காப்புரிமை 0,181,613 1879 ல் தாமஸ் எடிசன் வேண்டும்).
வணிக மயமாக்கல்
இவற்றையும் பார்க்கவும்
ஒளியமைப்பு
மின் விளக்கு
ஒளியமைப்பு
விளக்குகள்
19-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
|
6065
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
உடனொளிர்வு விளக்கு
|
மின்சாரத்தின் மூலம் அருட்டப்படுகின்ற பாதரச அயன்கள் புற ஊதாக்கதிர்களை வெளிவிடுகின்றன. இக் கதிர்கள் பொஸ்பர் போன்ற உடனொளிர் பூச்சுக்களில் படும்போது கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளியாக மாற்றப்படுகின்றது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடனொளிர்வு விளக்கு (fluorescent lamp) வகையாகும். ஆரம்பகால இவ்வகை விளக்குகள், ஆர்கன், அல்லது நியான் வாயுவுடன் பாதரச ஆவி நிரப்பப்பட்ட நீண்ட குழாய் அமைப்புக் கொண்டவை. இதனாலேயே இவ் விளக்குகள் பொதுவாக குழாய் விளக்குகள் (Tube Lights) எனப்படுகின்றன. இக் குழாய்களின் உட் பகுதியில் பொஸ்பர் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். மின்சாரத்தைப் பாய்ச்சும்போது குழாயின் முழு நீளத்திலிருந்தும் ஒளி வெளிவிடப்படுகின்றது.
உடனொளிர்வு விளக்குகள் கூடிய செயல் திறன் கொண்டவை. வெள்ளொளிர்வு விளக்குகளுடன் ஒப்பிடும்போது, சம அளவு மின்சாரத்தைப் பயன்படுத்திப் பல மடங்கு ஒளிச் சக்தியை இவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
இவற்றையும் பார்க்கவும்
மின் விளக்கு
மின்பொறி விளக்கு
ஒளியமைப்பு
விளக்குகள்
|
6067
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
சீம்பால்
|
கடும்புப்பால் என்றும் அழைக்கப்படும் சீம்பால் (colostrum) என்பது பாலூட்டி விலங்குகளில் கன்று ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலைகளில் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் பொதுவாக மாட்டினங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சீம்பால் மனிதர்களிலும், மாடுகளிலும் மஞ்சள் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இது கூடுதலான அளவு மாவுச் சத்து, புரதம், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் கன்றுகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஏதுவாகிறது. அதே நேரம், முழுமையாக வளர்ச்சியடையாத கன்றின் செரிமான முறைமை வலு குன்றியிருக்குமென்பதால் ஓரளவு வயிற்றுப்போக்கு ஏற்படவும் இது காரணமாகிறது. இவ்வயிற்றுப்போக்கும் ஒருவகையில் குழந்தையின் உடலில் தங்கியுள்ள (இறந்துபட்ட இரத்த சிவப்பணுக்களை உடைப்பதால் உருவாகும்) பைலிருபின் போன்ற வீண்பொருட்கள் வெளியேற உதவுகிறது. இதன் மூலம் மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
மேலும், இதிலுள்ள நோய் எதிர்ப்பு புரதப்பொருட்கள் கன்றின் தொண்டை, நுரையீரல் மற்றும் குடல்களைப் பாதுகாக்கின்றன. சில நன்மை பயக்கும் கோலுரு நுண்ணுயிர்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது.
இதன் நோய் எதிர்ப்புப் பண்பின் காரணமாக, பசுவின் சீம்பாலை சமைத்து உட்கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் ஏலக்காய், கருப்பட்டி அல்லது வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்வதும், இட்லி செய்வதுபோல ஆவியில் வேகவைத்து உட்கொள்வதும் பொதுவானது.
வெளி இணைப்புகள்
யாகூ! ஹெல்த்தில் சீம்பால் பற்றி
நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சீம்பால்
பால்
உயிரித் தொழில்நுட்பம்
உணவுக் குறைநிரப்பிகள்
|
6076
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
அலசன் விளக்கு
|
அலசன் விளக்கு (Halogen lamp) அல்லது தங்குதன்-அலசன் விளக்கு ( tungsten halogen lamp) என்பது அடிப்படையில் வெள்ளொளிர் விளக்குப் போன்றதே. எனினும் இவ்வகை விளக்கின் குமிழினுள் நிரப்பபடும் வாயுக்களுடன் அலசன்களும் உள்ளன.
தங்ஸ்தன் நுண்ணிழையாலான வெள்ளொளிர் விளக்குகளில், இழை சூடாகி ஒளிரும்போது தங்ஸ்தன் ஆவியாகி குமிழின் உட் பகுதியில் படிகின்றது. இது குமிழை மங்கச் செய்வதுடன், விளக்கிலிருந்து கிடைக்கும் ஒளியின் அளவும் குறைகின்றது. அத்துடன் இழையும் மெல்லியதாகி விரைவில் அறுந்து விடுகிறது. தங்ஸ்தன் - அலசன் விளக்கு இதற்கு ஒரு தீர்வாக அமைகின்றது. இங்கே வெப்பத்தினால் இழையிலுள்ள தங்ஸ்தன் ஆவியாகும் போது குமிழினுள் உள்ள அலசன்கள் அதனுடன் தாக்கமுறுவதனால் அது குமிழ்ச் சுவரில் படிவது தடுக்கப்படுகின்றது. இதனால் விளக்கின் வாழ்க்கைக் காலம் முழுதும் அதிலிருந்து ஏறத்தாள ஒரேயளவு ஒளியே கிடைக்கிறது. இது மட்டுமன்றி தங்ஸ்தனும், அலசனும் சேர்ந்து உருவாகும் சேர்வைகளின் (Compounds) மூலக்கூறுகள் (Molecules) சூடாக இருக்கும் நுண்ணிழைக்கு அருகில் செல்லும்போது மீண்டும் பிரிவடைந்து, தங்ஸ்தன் உலோகம் நுண்ணிழையில் மீண்டும் படிகின்றது. இதன் காரணமாக ஆவியாதல் மூலம் தங்ஸ்தன் இழை மெலிந்து அறுந்து போவதற்குக் கூடிய காலம் எடுக்கும். எனவே விளக்கின் ஆயுட் காலமும் அதிகரிக்கின்றது.
இவ்விளக்கின் ஒளியில் நிறங்கள் கூடிய ஒளிர்வு (vibrant) பெறுவதுடன், மேற்பரப்புகள் ஒருவித மினுங்கல் தன்மையுடனும் தோற்றமளிக்கின்றன. சாதாரண வெள்ளொளிர்வு விளக்குடன் ஒப்பிடும்போது தங்ஸ்தன் - அலசன் விளக்குகள் கூடிய ஒளிதருகின்றன. ஒப்பீட்டளவில் குறைந்த வாட்டளவு (Wattage) கொண்ட விளக்குகளிலிருந்து கூடிய ஒளிப் பாயத்தைப் (Luminous Flux) பெறமுடிகின்றது.
ஒளியமைப்பு
விளக்குகள்
மின் உறுப்புகள்
de:Glühlampe#Sonderformen
|
6078
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
ஒளிப் பாயம்
|
ஒளிப்பாயம் அல்லது தன்னொளிர்வு (luminescence) என்பது ஒரு ஒளிமூலத்தினால் வெளிவிடப்பட்டுக் கண்களால் பார்க்கப்படுகின்ற ஒளிச் சக்தியின் அளவைக் குறிக்கும். இன்னொரு வகையில் இதனைப் பார்வைத் தாக்கத்தின் அடிப்படையில் அளவீடு செய்யப்படும், ஒளிமூலமொன்றால் வெளியேற்றப்படுகின்ற, ஒளிச்சக்தியின் அளவு என்று கூறலாம். இதன் அலகு லுமென் ஆகும்.
ஒரு பொருள் வெப்பத்தினாலல்லாத ஒளி உமிழும் தன்மையைத் தன்னொளிர்வு எனலாம். எனவே, இதனை குளிர் நிலை கதிர்வீச்சென்றும் கூறலாம். வேதிவினைகள், மின்னாற்றல், அணுவக அசைவுகள் அல்லது படிகத்தின் மீதான அழுத்தங்கள் ஆகியவற்றால் தன்னொளிர்வு ஏற்படுகிறது. இதனால், வெப்பத்தினால் ஒளி உமிழும் வெள்ளொளிர்வு (incandescence) நிகழ்விலிருந்து ஒளிப்பாயம் வேறுபடுகிறது. முதலில் கதிரியக்கம், கதிரியக்கத் தன்னொளிர்வாகக் கருதப்பட்டதென்றாலும், மின்காந்தக் கதிர்வீச்சைத் தவிர மற்ற நிகழ்வுகளும் கதிரியக்கத்தில் நடைபெறுவதால், தற்பொழுது கதிரியக்கம் தன்னொளிர்விலிருந்து வேறாகப் பிரித்தறியப்படுகிறது. தன்னொளிர்வு என்னும் சொல் செருமானிய இயற்பியலாளரான எயிலார்ட் வீடெமான் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது,.
மேற்கோள்கள்
ஒளியியல்
|
6080
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D
|
மின்னூல்
|
மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும்.
மின்னூலானது பொதுவாக பதிப்பாளர்களால், மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் தமது புத்தகங்களை விநியோகிப்பதற்காக உருவாக்கப்படுகிறது.
இவை வெற்று உரை வடிவமாகவோ, நூல் சம்பந்தப்பட்ட சிறப்பு தகவல்களை தம்மகத்தே கொண்டவையாகவோ இருக்கும்.
வடிவங்கள்
மின்னூல் சமுதாயமானது ஏகப்பட்ட மின்னூல் வடிவத் தெரிவுகளை கொண்டிருக்கிறது.
எந்தவடிவம் சிறந்தது, வடிவங்களிலுள்ள குறைபாடுகள் எவை, நிறைகள் எவை என்பதுபற்றியெல்லாம் ஏகப்பட்ட விவாதங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளது.
எவ்வாறாயினும், கடைக்கோடிப்பயனாளரைப் பொறுத்தவரையில் புத்தகத்தை படிக்கவேண்டும் என்பதே முதன்மையான தேவையாகும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு மின்னூல் வடிவங்களும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளையும் போதாமைகளையும் கொண்டிருக்கின்றன.
பிம்பக் கோப்புகள்
பிம்ப (பட) கோப்புத்தொடர்கள் மூலம் மின்னூல் ஒன்று உருவாக்கப்படலாம். எத்தகைய பிம்பக்கோப்பு வடிவமும் இதற்கென பயன்படுத்தப்படலாம். இவ்வாறாக உருவாக்கப்படும் மின்னூல்கள் ஏனைய வடிவங்களை விட அதிக மின்கனத்தை கொண்டிருக்கும். அத்தோடு பயனர் அதன் உரைப்பகுதியினை தெரிவுசெய்ய, நகலெடுத்து வேறிடத்தில் உரையாக பயன்படுத்த முடியாது. உரத்துப்படிக்கும் செயலிகள் இதனை படிக்க முடியாது.
இத்தகைய மின்னூல் வடிவங்கள் சித்திரக் கதை நூல்களுக்கே மிக பொருத்தமானதாகும்.
செழிய உரை வடிவம் (rich text format)
இது, நிறம், தடிப்பு, எழுத்துரு போன்ற உரை வடிவமைப்பு தகவல்களை தன்னகத்தே கொண்ட கோப்பமைப்பாகும்.
மீயுரை குறியீட்டு மொழி (Hyper Text Markup Language)
இது பொதுவில் HTML என அழைக்கப்படுகிறது.
உரையின் செழிய வடிவமைப்புக்கள், பிம்பங்கள் , தொடுப்புக்கள் போன்ற பல தகவல்களை இவ்வடிவத்தில் உள்ளடக்கலாம். இவ்வடிவமைப்பிலுள்ள மின்னூல் ஒன்றினை படிக்க சாதாரண வலை உலாவி ஒன்றே போதுமானது. சிறப்பான செயலிகள் எதுவும் தேவைப்படாது.
அச்சில் வெளிவரும் நூல்களுடனான ஒப்பீடு
நற்பயன்கள்
உரை தேடலுக்குள்ளாக்கப்படமுடியும். பிம்ப வடிவத்திலிருந்தால் முடியாது..
சின்னஞ்சிறிய இடத்தையே பிடித்துக்கொள்ளும்.
பல்லாயிரக்கணக்கான மின்னுற்களை ஒரு சாதனத்தில் கொண்டு சென்றுவிடலாம்
இவற்றையும் பார்க்கவும்
தமிழ் இணைய நூலகங்கள்
மின்னூலகம்
உலக மின்னூலகம்
மின்னூல் வர்த்தகம்
வெளி இணைப்புக்கள்
தமிழ் மின்னூற் திட்டங்கள்
மதுரைத் திட்டம்
நூலகம் திட்டம்
சென்னை நூலாக்ம்
ஆங்கில மின்னூற் திட்டங்கள்
குட்டன்பேர் திட்டம்
http://print.google.com/googleprint/about.html
http://www.opencontentalliance.org/
http://www.archive.org/texts
http://www.nap.edu/
http://www.ebrary.com/corp/index.htm
இணையம்
புதிய ஊடகம்
|
6081
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29
|
காகம் (பேரினம்)
|
காகம் அல்லது காக்கை (உயிரியல் வகைப்பாடு: Corvus) என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமான இது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இலத்தீன் மொழியில் 'கார்வுச்' என்ற சொல்லுக்கு 'பெரிய உடலமைப்பு கொண்டவை' என்று பொருள். காகங்களில் 40 இனங்கள் உள்ளன. சிறிய புறா அளவிலிருந்து பெரிய 'ஜாக்டா' எனப்படும் இனம் வரை இவற்றில் அடங்கும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.
இவற்றை மிக இலகுவாகப் பயிற்றுவிக்க முடியும். காகங்களைப் பழக்கி இலகுவாகச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றைச் செல்லப்பறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்.
காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய இனங்கள் பல உள்ளன.. கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும்.
பண்பாடு
உலகெங்கும் உள்ள மக்களின் பண்பாட்டில் காகத்திற்கு ஓர் இடமுண்டு. காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவர் என்பது தமிழர் நம்பிக்கை ஆகும். மேலும் ஒற்றுமைக்கும் பகிர்ந்து உண்ணலுக்கும் காக்கை எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிமக்களின் கருத்துப்படி காக்கைகள் கலாச்சாரத்தின் சின்னமாகவும் மூதாதையரின் அம்சமாகவும் கருதப்படுகிறது. காகங்களைப் பற்றி எழுதப்பட்ட 'கில்காமேஷ்' என்ற நூல் உலகின் பழைமையான இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நூல் மெசபடோமிய நாகரிகத்தைப் பற்றிக் கூறும் ஐந்து கவிதைகள் கொண்ட இதிகாசம் ஆகும். திபெத்திய கலாச்சாரத்தில் 'தருமபாலா' பூமியில் எடுத்துள்ள அவதாரங்களில் ஒன்றாகக் காகம் கருதப்படுகிறது. ஐரிஷ் புராணங்களின்படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான 'மாரிகின்' என்ற கடவுளாகக் கருதப்படுகிறது.
பழம்பெரும் இந்து மத வேத தத்துவ நூலாகக் கருதப்படும் 'யோகவசிஷ்டா' வில் மிக வயதான ஞானி ஒருவர் காகவடிவில் குறிப்பிடப்படுகிறார். இந்து மத நம்பிக்கையின்படி காகங்கள் மூதாதையரின் வடிவமாகக் கருதப்படுகிறது. அதனால் சிறப்பு நாள்களில் அமாவாசை, திதி, தீபாவளி போன்ற நாள்களில் முதலில் காக்கைக்கு உணவு படைக்கப்படுகிறது. பல வீடுகளில் காகத்திற்கு படைப்பது ஓர் அன்றாட நிகழ்வாகவும் உள்ளது.
வாழ்வியல்
18 ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ்பெற்ற இயற்கை அறிவியல் ஆய்வாளரான கரோலஸ் லின்னேயஸ் எழுதிய 'இயற்கை முறை எனும் நூலில் காகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். The name is derived from the Latin corvus meaning "raven". காக்கைகள் எந்தப் பருவ நிலை உள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை. தென் அமெரிக்கா மற்றும் பெருங்கடல்களுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காக்கைகள் காணப்படுகின்றன.
மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் காகங்கள் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாகக் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. பெண் காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வயதில் பருவத்தை அடைந்து விடுகின்றன. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இதுவரை உலகில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த காகமாகக் கருதப்படுவது அமெரிக்காவின் காடுகளில் வாழ்ந்த காகம் ஆகும். அது 30 வருடம் வரை வாழ்ந்துள்ளது.
நடத்தையியல்
காகங்கள் சேர்ந்திருக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்தின் அலகு, உடல் போன்ற பகுதிகளில் உள்ள கடினமான ஓடு உடைய பேன்களைச் சுத்தம் செய்யும். இச்செயல் ஆண் காகங்களுக்கும், பெண் காகங்களுக்கும் இடையேயான ஓர் ஈர்ப்பு நிகழ்வாகும். அண்மையில் காகங்களைக் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் அவை முக வடிவமைப்பைக் கொண்டு ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காணக்கூடிய திறன் படைத்தவை என்பதை மெய்ப்பிக்கின்றன. மேலும் கிளிகளைப் போல காகங்களும் மனிதக் குரலில் பேசும் திறன் பெற்றவை என்று சொல்லப்படுகின்றன. இவ்வாறு பேசுவதற்குப் பழக்கப்பட்ட காகங்கள் கிழக்கு ஆசியாவில் நல்வாய்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து 1500 கிமீ தொலைவில் மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூ கலிடோனியா என்ற தீவில் வாழ்கின்ற காகங்கள் தம் அலகையும் பிற உடல் உறுப்புகளையும் பயன்படுத்தி தம் இரையை மிகத் திறமையாகப் பெறுகின்றன. கடினத்தன்மையுள்ள பற்களை இலையைக் கத்தரிப்பதற்கும் இரையைக் குத்திக் கிழிப்பதற்கும் பயன்படுத்துகின்றன. Another skill involves dropping tough nuts into a trafficked street and waiting for a car to crush them open. மேலும் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்துவில் உள்ள ஒரு வகைக் காக்கை நச்சுத்தன்மையுள்ள தேரைகளைப் பிடித்து அவற்றின் தொண்டையைக் கிழித்து அதன் நஞ்சை நீக்கிவிட்டு மற்ற பகுதிகளை உணவாக உட்கொள்கின்றன.
உணவு
காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள் ஆகும். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு போன்றவற்றையும் உண்ணும். வயல்களில் உள்ள பூச்சிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறது. இறந்த உடல்களையும் தின்னும்.
அறிவுத்திறன்
அறிஞர்களின் கருத்துப்படி பறவைகளில் அதிக அறிவுத் திறன் பெற்ற பறவை காகம் ஆகும். இவற்றின் அறிவுத்திறனுக்குக் காரணம் அவற்றின் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நிடோபோடாலியம் ஆகும். ஜாக்டா எனப்படும் அமெரிக்க மற்றும் கன்டாவில் காணப்படும் காக்கை இனம், சிம்பன்சி மற்றும் மனிதனின் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நியோகார்டெக்ஸ்' பகுதிக்குக் கிட்டத்தட்ட சமமானதாகவும் சிம்பன்சிகளில் உள்ள நியோகார்டெக்ஸ்' பகுதியை விட பெரிய அளவிலும் நிடோபோடாலியத்தைப் பெற்றிருப்பதே ஆகும். நிடோபோடாலியம் என்பது பறவைகளின் அறிவுத்திறனுக்குக் காரணமாக உள்ள மூளையின் செயல்பாட்டுப் பகுதியாகும்.
ஆய்வுகள்
ஜொஷா கிளெயின் என்ற அறிவியல் அறிஞர் காகங்களை நாம் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் பழக்கப்படுத்தலாம் என ஆய்வு மேற்கொண்டார். அதில் காகங்களைத் தானியங்கி இயந்திரங்களின் துணைகொண்டு தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளைப் பொறுக்க வைக்கலாம் என்பதே அதுவாகும். இயந்திரத்தில் குப்பையைப் பொறுக்கிப் போட்டவுடன் அவைகளுக்கு விருப்பமான உணவு வகைகள் இயந்திரத்திலிருந்து வருமாறு செய்யலாம்.
அழிவாய்ப்பு இனங்கள்
அமெரிக்க மீன் மற்றும் வன உயிரினங்கள் சேவை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி “ஹவாயன் காகம்’(Hawaiian Crow) மரியனா காகம்’(Mariana Crow) ஆகிய இனங்கள் உலகில் அழிந்துவிட்ட உயிரினங்களின் வகைகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஹவாய்த் தீவுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் கி.பி. 2002 வரை அங்கு காணப்பட்டன. ஆபத்தான நிலையில் உள்ளதாக அமெரிக்கக் காகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டுக் கணக்கின்படி இந்த இனத்தில் 45 விழுக்காடு காகங்கள் 'வெடிசனல் வைரஸ் என்னும் ஒருவகை நுண்ணுயிர் நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டன.
படிமங்கள்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Gill, B. J. (2003): Osteometry and 1: 43-58. (HTML abstract)
வெளி இணைப்புக்கள்
காகங்கள் பற்றிய தளம்
Frequently Asked Questions About Crows
Crow: by Bird Houses 101
crows.net: The Language & Culture of Crows
In the Company of Crows and Ravens by John M. Marzluff and Tony Angell
Crow Photographs and Comments
Video of Crow Making and Using Tools
Info on Tool use by Crows
Crow Videos on the Internet Bird Collection
TED Talk: The Amazing Intelligence of Crows by Joshua Klein
Corvid Corner - A Site about the Crow Family
Video: A Crow uses Electrical Wire as Nest-building Material
A Murder of Crows, 2010 PBS documentary
6 Terrifying Ways Crows Are Way Smarter Than You Think
|
6086
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88
|
பனையோலை
|
பனை மரத்தின் இலை பனையோலை (பனை + ஓலை) எனப்படும். பனையோலை விசிறி போன்ற வடிவத்தையுடையது. ஏறத்தாழ ஐந்து அடி விட்டம் கொண்டதாக இருக்கும். பனம் மட்டை அல்லது பனை மட்டை என்று அழைக்கப்படும் இதனுடைய காம்பு உறுதியானது, அரை வட்ட வடிவமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டது. அத்துடன் இதன் விளிம்புகளில் கருநிறமான, வாளின் பற்கள் போன்ற அமைப்பு உள்ளது இது கருக்கு எனப்படும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சோமசுந்தரப் புலவர் இந்தக் கருக்கை மன்னர்களின் வாளுக்கு ஒப்பிட்டு
என்று இலக்கியச் சுவையுடன் பாடியுள்ளார்.
பனையோலைக் குருத்து இள மஞ்சள் நிறம் கொண்டது. விரிந்து முதிரும் போது கரும் பச்சை நிறமாகத் தோற்றமளிக்கும். காய்ந்து விழும் நிலையிலுள்ள ஓலைகள் மண்ணிறமாக ஆகி விடுகின்றன.
பயன்கள்
ஒவ்வொரு நிலையிலும் இவ்வோலைக்கு வெவ்வேறு பயன்கள் உள்ளன. குருத்தோலைகளை வெட்டிக் காய விட்டு அதனைப் பயன்படுத்திப் பல விதமான கைப்பணிப் பொருட்கள் செய்யப்படும். பச்சை ஓலைகள் மாடுகளுக்கு உணவாவதுடன், வேலியடைத்தல், கூரை வேய்தல், முறம் செய்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. மட்டைகளும், வேலியடைத்தல், குடிசைகள் அமைத்தல், பலவகை நார்களின் உற்பத்தி ஆகியவற்றில் உதவுகின்றன. காய்ந்து விழும் ஓலைகளும் பயிர்களுக்கு உரமாகின்றன.
படத் தொகுப்பு
மேற்சான்றுகள்
தோட்டக்கலை: மலைத்தோட்டப் பயிர்கள்: பனை
பனையிலிருந்து பெறப்படும் உணவல்லாப் பொருட்கள்
பனை
|
6092
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
|
லினக்சு
|
குனூ/லினக்ஸ் (GNU/Linux) என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்குதளமாகும். இவ்வியக்குதளம் பொதுவாக லினக்ஸ் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் குனூ/லினக்ஸ் என்பதேயாகும்.லினக்ஸ் பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை பென்குயின் பறவைச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் மாக்கின்டோஷ், யுனிக்ஸ், சொலாரிஸ், பீ எஸ் டீ (BSD), மைக்ரோசாப்ட் விண்டோஸ் போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.
தத்துவம்
குனூ/லினக்ஸ் இயக்கத்தளம் கட்டற்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதன் மென்பொருட் பகுதிகள் யாவும் திறந்த ஆணைமூலமாக, பொதுமக்கள் உரிமத்தின்அடிப்படையில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இதன் ஆணைமூலத்தினை அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாணை மூலத்தை கற்றுக்கொண்டு, அதனை மேம்படுத்துவதன் மூலம் இவ்வியக்குதளத்தின் பகுதிகளில் மாற்றங்களை மேம்பாடுகளை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மேற்கொள்ளலாம். இதனை எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி நகலெடுத்து பொதுமக்கள் உரிம அடிப்படையில் வழங்கலாம் (பகிர்ந்துகொள்ளலாம்) அல்லது பொதுமக்கள் உரிம ஒப்பந்தத்தின்படி பணத்துக்கு விற்கலாம்.
இவ்வியக்குதளதளம், லினக்ஸ் கரு, குனூ திட்ட மென்பொருட்கள், ஏனைய திறந்த ஆணைமூல மென்பொருட்கள் என்பவற்றின் தொகுப்பாகும்.
வழங்கல்கள்
தனிக் கட்டுரை: லினக்ஸ் வழங்கல்கள்
குனூ/லினக்ஸ் பற்றி முதன்முதல் அறிந்துகொள்பவர்களுக்கு பெரும் விளக்கப் போதாமையை கொடுக்கும் எண்ணக்கரு வழங்கல்கள் என்பதாகும்..
இவ்வியக்குதளம் பொதுவாக பயனர்மட்டத்தில் வழங்கல்களாகவே கொடுக்கப்படுகிறது. வழங்கல்களை பெற்று க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதே வசதியானதாகும். தேர்ந்த பயனர் ஒருவரே க்னூ/லினக்ஸ் இயக்குதளத்தை அடிப்டையிலிருந்து நிறுவிக்கொள்ள முடியும்.
வரலாறு
யூனிக்ஸ்
யூனிக்ஸ் இயக்குதளம் கென் தாம்சன் , டென்னிஸ் ரிட்சி , டக்ளஸ் மேக்ள்ராய் மற்றும் ஜோ ஒச்சன்னா மூலம் அமெரிக்காவில் AT&T பெல் ஆய்வகத்தில் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.அது 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ஆரம்பத்தில் முற்றிலும் சில்லு மொழியில் (அசெம்பிளி) எழுதப்பட்டது. பின்னர் , 1973 ஆம் ஆண்டு ஒரு முன்னோடியான அணுகுமுறையில் , யூனிக்ஸ் டென்னிஸ் ரிச்சி மூலம் சி நிரலாக்க மொழியில் மீண்டும் எழுதப்பட்டது. ஒரு உயர் மட்ட மொழியில் எழுதப்பட்ட ஒரு இயக்க அமைப்பு கிடைக்கும் பல்வேறு கணினி தளங்களில் எளிதாக பெயர்வுத்திறன் அனுமதித்தது.1984 இல் , AT&T பெல் லேப்ஸ் என்ற தாமாகவே விலகிய பின் இலவச உரிமம் தேவைப்படும் தனியுரிம மென்பொருளாக யூனிக்ஸின் விற்பனை தொடங்கியது.
குனு
1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மேன் தொடங்கிய குனு திட்டம்,முற்றிலும் இலவசமான மென்பொருளாக " யுனிக்ஸ் இணக்கமான மென்பொருள் அமைப்பு " உருவாக்கும் நோக்கத்துடன் 1984 இல் தொடங்கியது. பின்னர்,1985 ஆம் ஆண்டு, ஸ்டால்மேன் இலவச மென்பொருள் அறக்கட்டளை தொடங்கி 1989 இல் பொது மக்கள் உரிம குனு-ஐ( குனு ஜிபிஎல் ) எழுதினார்.
1990 ல் குனூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான செயலிகள், காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.
பி.எஸ்.டி
இணைய பி.எஸ்.டி , ஓப்பன் பி.எஸ்.டி மற்றும் ஃப்ரீ லினக்ஸ்லிருந்து உருவாக்கப்பட்டது.சட்ட சிக்கல்கள் காரணமாக 1992 வரை இது வெளியிடப்படவில்லை.லினஸ் டோர்வால்ட்ஸ் 386BSD உரிய நேரத்தில் கிடைக்க இருந்திருந்தால் , அவர் ஒருவேளை லினக்ஸ் உருவாக்கிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மினிக்ஸ்
மினிக்ஸ் என்பது ஆண்ட்ரூ எஸ் தனென்பாம் எழுதிய ஒரு மலிவான யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு ஆகும்.2005 ஆம் ஆண்டு இதன் 3 பதிப்புலிருந்து,மினிக்ஸ் இலவசமாக மாறியது.
1991-ல் லினஸ் டோர்வால்ட்ஸ் என்பவர், மினிக்ஸ் என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது.
1991 செப்டெம்பர் 17''': லினக்ஸ் தனது இயங்குதளத்தை இணையத்தில் கிடைக்கச்செய்கிறார். இதன் ஆணைமூலத்தை பெற்ற ஏராளமான நிரலாளர்கள் லினக்சை மேன்மேலும் வளர்த்தெடுக்கிறார்கள்.
அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை (கருனியை) செயற்படுத்த ஒரு சிறந்த இயக்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் க்னூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
பயன்பாடுகள்
இது பொது நோக்கத்திற்காக பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இயக்குதளமயினும் இதன் கணினி கட்டமைப்பு ஆதரவு, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு,பல்வேறு மொழி ஆதரவு ஆகியவற்றிக்காக மீத்திறன் கணினிகள் மற்றும் வழங்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட பயனரின் சூழலில் நிபுணத்துவத்திர்க்காக சில வழங்கல்களுக்கென்றே பிரத்யேக இலவச மென்பொருள் உள்ளன.
தற்போது, முன்னூறு வழங்கல்கள் உருவாக்கப்பட்டாலும் ஒரு டஜன் வழங்கல்கள் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
லினக்ஸ் பரவலாக ஏற்கப்பட்ட இயங்குதள கர்னலாக உள்ளது.லினக்ஸ் கர்னல் கணினி கட்டமைப்புகள் மிகவும் பலவித பயன்பாடுகளை கொண்டது. கையடக்க ARM,அடிப்படை ஐபெக் மற்றும் IBM இன் z9,Z10 மைய கணினிகள்,அலைபேசிகளில் இருந்து மீக்கணினிகள் வரை பல சாதனங்களில் விசேஷ வழங்கல்களக உள்ளன.
தனிநபர் கணினி
தனிநபர் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் தரத்தினால் லினக்ஸின் பயன்பாடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தற்போது மிகவும் பிரபலமாக 2 வழங்கல்கள் உள்ளன அவை குநோம், மற்றும் கே டீ ஈ பிளாஸ்மா இயக்குதளம்
வழங்கிகள்,மைய அலுவலககணினிகள் மற்றும் மீக்கணினிகள்
லினக்ஸ் வழங்கி இயக்க அமைப்புகள் நீண்ட காலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, Netcraft அமைப்பின் செப்டம்பர் 2006 அறிக்கையில் உலகின் பத்து மிகவும் நம்பகமான இணைய நிறுவனங்களில் எட்டு தங்கள் இணைய வழங்கிகளில் லினக்சை பயன் படுத்துவதாக கூறியது.
ஜூன் 2008 ல் பத்தில் ஐந்து லினக்ஸ்,மூன்று ஃப்ரீ பி.யஸ்.டி , மற்றும் இரண்டில் மைக்ரோசாப்ட் பயன்படுவதாகவும்,பிப்ரவரி 2010 ல் இருந்து, பத்தில்சிறந்த பத்தில் ஆறு பத்தில்,இரண்டு ஃப்ரீ பி.யஸ்.டி, மற்றும் ஒன்று மைக்ரோசாப்ட் இயக்குதளம் என் குறிப்பிட்டது.
உட்பொதிக்கப்பட்ட சாதனங்கள்
லினக்ஸின் குறைந்த விலை மற்றும் எளிமை காரணமாக, உட்பொதிக்கப்பட்ட சாதனஅமைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.லினக்ஸ் கர்னல் அடிப்படையிலான அண்ட்ராய்டு பதிப்பு நோக்கியாவின் பழைய சிம்பியன் திறன்பேசி இயக்குதளத்தை பின் தள்ளியது.2013 ஆம் வருட இரண்டாவது காலாண்டில்,உலகளவில் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளில் 79.3%, அண்ட்ராய்டு ஆகும்.லினக்ஸ் தளங்களில் இயங்கும் அலைபேசிகள் மற்றும் பிடிஏ 2007 இருந்து மிகவும் அதிகரித்தது.
உதாரணங்கள்: நோக்கியா N810, ஓப்பன்மோக்கோ இன் Neo1973, மற்றும் மோட்டோரோலா ROKR E8
லினக்ஸ் வலைதளங்கள் தமிழில்
கணியம்(ஓப்பன் சோர்ஸ் பற்றிய தமிழ் மாத இதழ்)
GNU/Linux குறிப்பேடு
சுதந்திர மென்பொருள்
வெளியிணைப்புக்கள்
http://www.praveen.ws/pub/doc/linux/glfb-ta/gnu-linux-for-beginners-tamil-unicode-p1.txt லினக்ஸ் - பயிற்சி மு. கே. சரவணன்
Graphical map of GNU/Linux OS Internals
Linux kernel website and archives
Linux.org
The History of Linux in GIT Repository Format 1992–2010
கணியம் எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1
குனூ
லினக்சு
பல்லியக்குதள மென்பொருட்கள்
|
6093
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
குத்துவிளக்கு
|
குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும் இந்த வகை விளக்கு, சமய சார்பான சடங்குகளிலும், மற்றும் பொது விழாக்களிலும் இடம் பெறுகின்றன.
குத்து விளக்கின் அமைப்பு
வட்ட வடிவமான அடியில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரங்களைக் கொண்ட தண்டு குத்து விளக்கின் தலைப்பகுதியைத் தாங்கியுள்ளவாறு அமைந்ததே குத்து விளக்கின் அமைப்பாகும். தலைப் பகுதியும் வட்ட வடிவமானதே. இவ் வட்ட வடிவத்தின் மையப் பகுதியில் கலசம் போன்ற உச்சிப் பகுதி பொருத்தப்பட்டிருக்கும். இக் கலச வடிவம் வட்டத் தலைப் பகுதியுடன் பொருந்தும் இடத்தைச் சுற்றிய பகுதி குழிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவே இவ்விளக்கின் எண்ணெய் தாங்கியாகும். இதன் வட்ட வட்ட வடிவான விளிம்பிலிருந்து சமமான இடை வெளிகளில் அமைக்கப்பட்ட ஐந்து நீட்சியான அமைப்புக்கள் இருக்கும். இவையே விளக்கின் சுவாலையை ஏற்றுவதற்கான திரிகளைக் கொண்டிருக்கும் இடமாகும். முன்னர் குறிப்பிடப் பட்ட கலசம் போன்ற உச்சியமைப்பில் சில சமயங்களில் பலவகையான அலங்கார வடிவங்களும், உருவங்களும் பொருத்தப்படுவதுண்டு. பொதுவாகப் பெரிய அளவிலான விளக்குகள், அன்னப் பட்சி, மயில் போன்ற உருவங்களையும், சில விளக்குகளில், தெய்வ உருவங்களையும் இவ்விடத்தில் கொண்டிருப்பதைக் காணலாம்.
குத்துவிளக்கின் தத்துவம்
குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர்.இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.
தயாரிக்கப் பயன்படும் பொருட்கள்
பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். இவ்வுலோகம் வேண்டிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அச்சுக்களில் உருக்கி வார்க்கப்பட்டுப் பின்னர் அதனை வெளியில் எடுத்துக் கண்ணுக்குத் தெரியக் கூடிய பகுதிகள் மினுக்கம் செய்யப் படுகின்றன. சுலபமாக உருக்கி வார்க்கக் கூடிய தன்மையும், தங்கத்தை ஒத்த அதன் நிறமும் இவ்வுலோகம் விரும்பப் படுவதற்கான காரணங்களாகும். இக் காலத்தில் துருவேறா உருக்கையும் குத்து விளக்குகள் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் சிறிய விளக்குகளே இவ்வாறு செய்யப்படுகின்றன. இவ்வுலோகத்தைப் பயன்படுத்தும் போது, உருக்குத் தகடுகளையே பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய விளக்குகள் விலை குறைவானவையாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகா.
எரி பொருள்
குத்து விளக்கில் தாவர நெய்களே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில்களில் முற்காலத்தில் பசு நெய்யையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
இவற்றையும் பார்க்கவும்
குத்து விளக்குக் கோலம்
எண்ணெய் விளக்குகள்
குத்துவிளக்கு (திரைப்படம்)
தமிழர் உலோகத் தொழில்நுட்பம்
விளக்குகள்
தமிழர் பயன்பாட்டுப் பொருட்கள்
|
6097
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
|
சோமசுந்தரப் புலவர்
|
சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878 – யூலை 10, 1953) தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா புகழ் பெற்றவை.
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரர்; க. வேலுப்பிள்ளை இவருடன் உடன்பிறந்தவர். 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள்.
செய்யுள் இயற்றல்
நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார்.
இயற்றிய பிரபந்தங்கள்
பதிகம், ஊஞ்சல் என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.
சைவத் தலங்களை மையமாக அட்டகிமுக் கலம்பகம், தில்லை அந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது.
இயற்றிய நாடகங்கள்
உயிரிளங்குமரன்
வேறு நூல்கள்
கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற் கருத்தும்
கந்தவனக் கடவை நான்மணிமாலை
சாவித்திரி கதை ( உரைநடை நூல் )
கந்தபுராண நுண்பொருள் விளக்கம் ( சைவாங்கில வித்தியாசாலை வெளியீடு )
தந்தையார் பதிற்றுப்பத்து
நல்லை முருகன் திருப்புகழ்
நல்லையந்தாதி
அருணாசலந்துரை சரித்திரச் சுருக்கம்
சுகாதாரக் கும்மி ( சைவபரிபாலன சபையார் பதிப்பு )
சூரியவழிபாடு
மருதடி விநாயகர் பாமாலை
கந்தவனநாதர் திருப்பள்ளியெழுச்சி
அட்டகிரிப் பதிகம்
கல்லுண்டாய் வைரவர் பதிகம்
கதிரைமலை வேலவர் பதிகம்
செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை
சிறுவர் பாடல்கள்
ஸ்ரீ பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஜீவிய சரித்திரச் சுருக்கம், செய்யுள் நடையில் எழுதப்பட்டது, 1928
இவற்றையும் பார்க்கவும்
இலங்கைவளமும் தாலவிலாசமும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கழையோடை வேற்பதிகம்
பவளக்கொடி
சாய்ந்தாடம்மா
ஈழத்து எழுத்தாளர்கள்
ஈழத்துப் புலவர்கள்
ஈழத்து சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள்
1953 இறப்புகள்
1878 பிறப்புகள்
யாழ்ப்பாணத்து நபர்கள்
|
6098
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
|
நவாலி
|
நவாலி (Navaly) என்பது இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஏறத்தாழ 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு ஊராகும்.
இங்குள்ள கோயில்கள்
நவாலி அருள்மிகு சிந்தாமணி பிள்ளையார் ஆலயம்
நவாலி அருள்மிகு ராாஜராஜேஸ்வரி அம்மன் கோவில்
நவாலி அருள்மிகு இத்தியடி பிள்ளையார் கோவில்
நவாலி அருள்மிகு அந்திரான் முருகமூர்த்தி கோயில்
நவாலி கதிர்காம முருகன் ஆலயம்
நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோவில்
இங்கு வாழ்ந்தவர்கள்
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, தமிழறிஞர், புலவர்
சோமசுந்தரப் புலவர்
சோ. இளமுருகனார், தமிழ்ப் பண்டிதர்
சோ. நடராசன், எழுத்தாளர்
எஸ். இராமச்சந்திரன், மெல்லிசைப் பாடகர்
கலையரசு சொர்ணலிங்கம், நாடகக்கலைஞர்
ஐசக் இன்பராஜா, நாடகக்கலைஞர்
இவற்றையும் பார்க்கவும்
நவாலி தேவாலயத் தாக்குதல்
மேற்கோள்கள்
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
|
6099
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
|
மதில்
|
ஒரு நிலப் பகுதியைச் சுற்றி, அதன் எல்லை வழியே அமைக்கப்படும் சுவரே மதில் ஆகும். இது மதிற்சுவர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
மதிற்சுவர்கள் பல்வேறு கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்படுகின்றது. ஒரு சுவர் என்பது ஒரு பகுதி மற்றும் ஒரு பகுதியை வரையறுக்கும் மேற்பரப்பு; ஒரு சுமை சுமக்கிறது; பாதுகாப்பு , தங்குமிடம் அல்லது ஒலிபெருக்கி ஆகியவற்றை வழங்குகிறது ; அல்லது, அலங்காரமானது. இதில் பல வகையான சுவர்கள் உள்ளன:
சில நேரங்களில் தீ பாதுகாப்புக்காக , சூப்பர் ஸ்ட்ரக்சரின் அடிப்படை பகுதியாக அல்லது தனி உள்துறை அறைகளை உருவாக்கும் கட்டிடங்களில் சுவர்கள்
கண்ணாடி சுவர்கள் (முதன்மைக் கட்டமைப்பானது கண்ணாடியால் ஆனது; கண்ணாடி உறைகளைக் கொண்ட சுவர்களுக்குள் திறப்புகளைக் கொண்டிருக்கவில்லை: இவை ஜன்னல்கள் )
நாடுகளுக்கு இடையிலான எல்லை தடைகள்
செங்கல் சுவர்கள்
தற்காப்பு சுவர்கள் உள்ள வலுவூட்டல்கள்
நிரந்தர, திட வேலிகள்
அழுக்கு, கல், நீர் அல்லது இரைச்சல் ஒலியைத் தடுக்கும் சுவர்களைத் தக்கவைத்தல்
கல் சுவர்கள்
சமுத்திரங்கள் (இருந்து பாதுகாக்க சுவர்கள் seawalls ஆறுகள்) அல்லது ( அணைகள் )
சொற்பிறப்பியல்
கால சுவர் லத்தீன் இருந்து வருகிறது vallum பொருள் "... மண்ணாலான சுவர் அல்லது பாதுகாப்பு அரண் அமைக்க பாலிசேட்ஸ் , ஒரு வரிசை அல்லது அவர் பங்குகளின் வரி, ஒரு சுவர், ஒரு பாதுகாப்பு அரண், வலுவூட்டல் ..." லத்தீன் வார்த்தை போது murus ஒரு தற்காப்பு கல் சுவர் அர்த்தம். வெளிப்புற சுவர் மற்றும் ஒரு அறையின் உள் பக்கங்களைக் குறிக்க ஆங்கிலம் ஒரே வார்த்தையைப் பயன்படுத்துகிறது, ஆனால் இது உலகளாவியது அல்ல. பல மொழிகள் இரண்டையும் வேறுபடுத்துகின்றன. ஜெர்மன் மொழியில், இந்த வேறுபாட்டை வாண்ட் மற்றும் ம au ர் இடையே காணலாம் , ஸ்பானிஷ் மொழியில் பரேட் மற்றும் முரோ இடையே காணலாம் .
மேற்கோள்கள்
மதில்களும் வேலிகளும்
வீடு
|
6100
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81
|
கிடுகு
|
கிடுகு எனப்படுவது, தென்னையின் ஓலையை நெடுக்குவாட்டில் பிளந்து, பின்னிப் படல்கள் போல் உருவாக்கப்படுவது ஆகும். கிடுகு கூரை வேய்வதற்கும், வேலிகள் அடைப்பதற்கும் பயன்படுகின்றது. தென்னையின் ஓலை மிகவும் பெரிதாக இருப்பினும், அது ஒரு நடுத்தண்டின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள ஒடுக்கமான பகுதிகளாக அமைந்துள்ளதால் அதை அப்படியே கூரை வேய்வதற்கோ வேலிகளுக்கோ பயன்படுத்த முடியாது. ஆனால் அவற்றைப் பின்னுவதன் மூலம் மறைப்பாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற தட்டையான பெரிய அளவு உடையதாக ஆகின்றது.
தென்னை அதிகம் வளரும் பகுதிகளின் நாட்டுப்புறங்களில் கிடுகு ஒரு முக்கியமான கட்டிடப் பொருள் ஆகும். சுற்றாடலிலேயே கிடைப்பதனால் இது பொதுவாக மலிவானது. நகரப் பகுதிகளிலும் கூடத் தற்காலிகமான அமைப்புக்களுக்குக் கூரை அமைப்பதில் கிடுகுக்கான தேவை உண்டு. இதனால் நாட்டுப் புறங்களில் பின்னப்படும் கிடுகுகள் நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுவது உண்டு.
கிடுகு விரைவில் அழிந்துவிடக்கூடிய ஒரு பொருள். ஆகவே, இதனால் அமைக்கப்படும் கூரைகளோ, வேலிகளோ நீண்ட நாள் நிலைத்திருப்பது இல்லை. இதனால் அடிக்கடி அவற்றைப் புதுப்பிக்க வேண்டியிருப்பது இதன் முக்கிய குறைபாடுகளில் ஒன்று. எனினும் இது சூழலை மாசுபடுத்தாத ஒரு கட்டிடப்பொருள் ஆகும்.
தென்னை விளையும் பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கிடுகு பின்னுதல் ஒரு வருமானம் தரும் ஒரு தொழிலாகவும் உள்ளது. ஆங்காங்கே இது ஒரு குடிசைத் தொழிலாகவும் இருக்கிறது. தென்னோலைகளைத் தண்ணீரில் சில நாட்கள் ஊறவிட்டுப் பின்னர் நெடுக்குவாட்டில் இரண்டாகப் பிளந்து கிடுகு பின்னப்படுகிறது. ஒவ்வொரு ஓலையிலிருந்தும் இரு கிடுகுகள் இழைக்கலாம். கிடுகு பொதுவாகக் குந்தியிருந்தே இழைக்கப்படுகிறது.
வெளி இணைப்பு
நலிந்து வரும் தென்னங் கிடுகு தொழில் தினமலர்
கட்டிடப் பொருட்கள்
தமிழர் கைத்தொழில்கள்
|
6101
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
பாலக்காடு மாவட்டம்
|
பாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும். இங்கு மலையாளம் பரவாலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் மிகுதியாக உள்ளனர் பாலக்காடு மாவட்டத்தின் அதிகார பூர்வ மொழிகள் தமிழ் மற்றும் மலையாளம் ஆகும்
பெயர்க்காரணம்
முற்காலத்தில் பாலக்காடு ஆனது பாலக்காட்டுச்சேரி எனவும் வழங்கப்பட்டது. இது வறண்ட நிலம் எனப்பொருள் தரும் பாலநிலம் (பாலை நிலம்) என்பதில் இருந்து வந்திருக்கலாம் என சொற்பிறப்பியல் ஆயவாளர்கள் கருதுகின்றனர். பாலமரங்கள்(Alstonia) நிரம்பிய காடு என்பதால் பாலக்காடு எனப்பட்டது என்னும் கருத்தும் உண்டு.
வரலாறு
பாலக்காடு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இது சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1956-இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பாலக்காடு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை ஆலத்தூர், சிற்றூர், மண்ணார்க்காடு, ஒற்றப்பாலம், பாலக்காடு, பட்டாம்பி, அட்டப்பாடி ஆகிய வட்டங்களாகப் பிரித்துள்ளனர். பாலக்காடு, ஷொர்ணூர், சிற்றூர்-தாத்தமங்கலம், ஒற்றப்பாலம் ஆகியவை நகராட்சிகளாகும்.
இது கேரள சட்டமன்றத்திற்கான் 12 தொகுகளைக் கொண்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
கொடும்பு சுப்பிரமணிய சுவாமி கோவில்
இதனையும் காண்க
கேரளம்
கேரளா மாவட்டப் பட்டியல்
மாவட்டம்(இந்தியா)
மேற்கோள்கள்
கேரள மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்
பாலக்காடு மாவட்டம்
|
6102
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF
|
தருமபுரி
|
தருமபுரி அல்லது தர்மபுரி (ஆங்கிலம்: Dharmapuri) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இதுவே தருமபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.
இது சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து, பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாகச் செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவி உள்ளது. இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்கள் உள்ளன.
சொற்பிறப்பு
தருமபுரி ஆனது சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தகடூர் என்ற பெயர், இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது, "தகடு" அதாவது இரும்பு (இரும்பு தாது) என்று பொருள் மற்றும் "ஊர்" அதாவது "இடம்" என்று பொருள்படும். தகடூர் என்ற பெயர் சங்க காலத்திற்குப் பிறகு தருமபுரி என மாற்றப்பட்டது, இது விஜயநகரப் பேரரசு காலத்திலோ அல்லது மைசூர் அரசு காலத்திலோ இருக்கலாம்.
வரலாறு
சங்ககாலத்தில் அதியமான் என்னும் அரசன் தகடூரை ஆண்டு வந்தார். தகடூர் யாத்திரை என்னும் நூல் அவன்மீதோ, அவனது முன்னோன் மீதோ பாடப்பட்ட நூலாகும். சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்.
இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடர் பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), திப்பு சுல்தான் இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவான, மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று தருமபுரி மாவட்டம் நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
தருமபுரி நகராட்சி வரலாறு
1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5 ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ஆம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் டிசம்பர் 02, 2008 ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 68,619 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.5%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.99%, முஸ்லிம்கள் 9.65%, கிறிஸ்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
தருமபுரி நகராட்சியானது தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த செ. செந்தில்குமார் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை பாமகவை சேர்ந்த எஸ். பி. வெங்கடேஸ்வரன் வென்றார்.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
தருமபுரி ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 உடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது வடக்கு-தெற்கு பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகரிலிருந்து தோன்றி இந்நகரின் வழியாக சென்று, கன்னியாகுமரியில் முடிகிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையானது தருமபுரி வழியாக செல்கிறது.
தொடருந்துப் போக்குவரத்து
தருமபுரியில் ஒரு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையமானது, பெங்களூரு - சேலம் பாதையை இணைக்கிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் இரயில் பாதையானது, தருமபுரி வழியாக செல்கிறது. அதேசமயம் 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தருமபுரி - மொராபூர் என்ற மற்றொரு பாதை, இந்திய அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவை காரணமாக மின்மயமாக்கலுடன் இந்த பாதை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்த புதிய பாதை தருமபுரி மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு, மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை பெங்களூர் - சென்னை செல்வதற்கான மாற்று பாதையாகவும் (தருமபுரி வழியாக) இருக்கும்.
வானூர்தி போக்குவரத்து
இங்கிருந்து 47 கி.மீ. தொலைவில் கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள சேலம் வானூர்தி நிலையமும் மற்றும் 162 கி.மீ. தொலைவில் பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமும் அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.
வானிலை மற்றும் காலநிலை
தருமபுரியில் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை உள்ளது (கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென்). மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களின் கோடை காலங்களில் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 38 ° C அல்லது 100.4 ° F வரை அடையும். டிசம்பரில் வெப்பநிலை குறைகிறது மற்றும் குறைந்த வெப்பநிலை பிப்ரவரி வரை தொடர்கிறது, சனவரி மாதத்தில் குறைந்தபட்சம் 14 ° C அல்லது 57.2 ° F ஐத் தொடும். மாவட்டத்தில் சராசரியாக 910 மில்லிமீட்டர் அல்லது 35.83 அங்குல மழை பெய்யும். இங்குள்ள வெப்பமண்டல காடுகளில் பொதுவாக குறுகிய புதர்கள் மற்றும் முள் செடிகள் உள்ளன.
சுற்றுலாத் தளங்கள்
ஒகேனக்கல் அருவி
தீர்த்தமலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தர்மபுரி நகராட்சி இணையதளம்
தேர்வு நிலை நகராட்சிகள்
அதியர் தலைநகரங்கள்
சேரர் போர்கள்
|
6105
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D
|
ஆதிலாபாத்
|
ஆதிலாபாத் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.
போக்குவரத்து
சான்றுகள்
தெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும்
தலைநகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
ஆதிலாபாத் மாவட்டம்
|
6106
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
குண்டூர்
|
குண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மொழி
தெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
ஆந்திர ஊர்களும் நகரங்களும்
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
பண்டைய இந்திய நகரங்கள்
|
6107
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
|
வாரங்கல்
|
வரங்கல் அல்லது வாரங்கல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வரங்கல் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.
ஆட்சி
இந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது. இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது.
மேற்கோள்கள்
இந்தியத் தொல்லியற்களங்கள்
வரங்கல் மாவட்டம்
தெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும்
|
6108
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
விசாகப்பட்டினம்
|
விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும்.
ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது. விசாகப்பட்டினம் இரும்பு ஆலை இங்குள்ளது.
இந்நகரத்திற்கு அருகே பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா போன்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் கொண்ட வளாகங்கள் உள்ளது.
தட்ப வெப்ப நிலை
மேற்கோள்கள்
ஆந்திர ஊர்களும் நகரங்களும்
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
விசாகப்பட்டினம் மாவட்டம்
|
6113
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை
|
புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை என்பது ஏற்கனவே இருக்கும் தமிழ் யுனிகோடு குறிமுறைக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் எழுத்துக்குறிமுறையாகும்.
தற்போது பாவனையிலிருக்கும் குறிமுறையின் போதாமைகள் மீதான தொடர்ச்சியான விவாதங்களின் விளைவாக இக்குறிமுறை தமிழ் நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடப்பிலிருக்கும் தமிழ் யுனிகோடு குறிமுறையின் சர்ச்சைக்குரிய அம்சம், அதில் தமிழ் எழுத்துக்கள் அத்தனைக்கும் இடம் ஒதுக்கப்படாது, விசிறி, கொம்பு, புள்ளி போன்றவற்றுக்கு தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டு, முழுமையான உயிர்மெய் எழுத்துக்கள், இத்தகைய குறியீடுகளின் தொகுக்கப்பட்ட வடிவமாகவே வெளியீடு செய்யப்படுகிறது என்பதாகும்.
கீழ்க்காணும் படம் தற்போது நடப்பிலிருக்கும் தமிழ் யுனிகோடு குறிமுறை அட்டவணையை காண்பிக்கிறது.
பொதுவாகவே தமிழ் யுனிகோடு இனை பயன்படுத்தத்தக்க மென்பொருட்கள் மிகக்குறைவு.
சில மென்பொருட்கள் யுனிகோடுக்கு ஆதரவு வழங்கியிருந்தபோதும் தமிழ் யுனிகோடினை சரியாக கையாள்வதில்லை.
(எ.கா: ''AbiWord')
இதற்கான முக்கியக் காரணம், முதல் நிலை யுனிகோடு ஆதரவு வழங்கப்பட்டிருந்தும், விசிறி கொம்பு போன்றவற்றை தொகுத்து எழுத்துக்களை காண்பிக்கும், சிக்கலான மொழிகளை கையாளும் இரண்டாம் நிலை யுனிகோடு ஆதரவு வழங்கப்படாமையாகும்.
கருத்தறிகைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய தமிழ் யுனிகோடு குறிமுறையானது இந்த போதாமையை போக்கி, தமிழ் மொழியின் எல்லா எழுத்துக்களுக்கும் இட ஒதுக்கீடு செய்கிறது.
இக்குறிமுறை, முதனிலை யுனிகோடு ஆதரவுள்ள எல்லா செயலிகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கையாளப்படக்கூடியதாக உள்ளது.
புதிய தமிழ் யுனிகோட் குறிமுறையின் வைப்பு அட்டவணை இதனை விளக்குகிறது
மாற்றுக்கருத்துக்கள்
இவ்வாறான புதிய குறிமுறை நியமம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பான தீவிர மாற்றுக்கருத்துக்களும் உண்டு.
14 வருடகாலமாக படிப்படியாக நடைமுறைப் படுத்தப்பட்டு இன்னமும் கூட பயன்பாட்டு முழுமையை எட்டாமலிருக்கும் தமிழ் யுனிகோடு குறிமுறையை மறுபடி ஒருமுறை மாற்றத்துக்குள்ளாக்குதல் பெரும் நெருக்கடிகளை உருவாக்கும் எனவும், இவ்வாறான மாற்றம் தேவையற்றது எனவும் சில வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளடைவில் இரண்டாம்நிலை யுனிகோடு ஆதரவினை எல்லா மென்பொருட்களும் வழங்கும்படி மாறிக்கொண்டபிறகு எந்த சிக்கலுமில்லை. அதற்காக இருக்கின்ற குறிமுறை ஏன் மாற்றவேண்டும் என்ற கருத்துக்களும் உண்டு.
தற்போது எண்ணிக்கையிலடங்கா வலைப்பக்கங்களும் தமிழ் உள்ளடக்கங்களும் நடப்பு யுனிகோடு குறிமுறையிலேயே அமைந்துள்ளன. விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்கள் அனைத்தும் நடப்பு தமிழ் யுனிகோட் குறிமுறையிலேயே உள்ளன.
இவ்வாறு கணிசமான அளவுள்ள பக்கங்களையும், உள்ளடக்கங்களையும் புதிய குறிமுறைக்கு மாற்றுவதென்பது
சாத்தியமற்றதெனவும் கருத்துக்களை சிலர் தெரிவிக்கின்றனர்.
வெளி இணைப்புகள்
ஃபயர் ஃபாக்சு (Firefox 1.5 - 3.0) உலாவிக்குரிய நீட்சி
TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா??? சாபமாகுமா???
விமர்சனங்கள்
தமிழ் ஒருங்குறி - நியூ - Critical Analysis
New tamil unicode encoding proposal - My opinion - Mugunth
Why I believe adopting TUNE will isolate Tamilnadu?
At the TONE, it will not be TUNE, but TANE
ஒருங்குறி
|
6115
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
|
திண்டுக்கல்
|
திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது மாநிலத்தின் 11-ஆவது மாநகராட்சியாக, 2014 ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 48 மன்ற உறுப்பினர்களைக் கொண்டது. ஐதர் அலி காலத்தில் திண்டுக்கல் கோட்டை முதன்மையான இடமாக இருந்து வந்தது.
பெயர்க் காரணம்
காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் 'திண்டுக்கல்' என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர் ஆகும். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களைத் துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.
'திண்டு' அதாவது 'தலையணை' போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும், மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதாலும் 'திண்டு', 'கல்' ஆகிய இரண்டு சொற்கள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது. அதாவது நகரத்தை நோக்கி காணப்படும் வெறுமையான மலைகளை, இது குறிக்கும் விதத்தில் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வரலாறு
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. மதுரை நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்றாகும்.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 48 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இம்மாநகரத்தின் மக்கள்தொகை 207,327 ஆகும். அதில் 103,027 ஆண்களும், 104,300 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.47% மற்றும் பாலின விகிதம், 1000 ஆண்களுக்கு, 1008 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திண்டுக்கல்லில் இந்துக்கள் 69.11%, முஸ்லிம்கள் 14.17%, கிறிஸ்தவர்கள் 16.59%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.01%, 0.1% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.
மொழிகள்
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியான தமிழ் மொழியுடன், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், உருது மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன.
மலைக்கோட்டை
ஆங்கிலேயர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில், தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் திருமலை நாயக்கர் இம்மலை மீது கோட்டை கட்டினார். பொ.ஊ. 17-ஆம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், ஹைதர் அலி போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். பொ.ஊ. 1784-இல் திப்பு சுல்தான் இங்கு வந்துள்ளார். பொ.ஊ. 1788-இல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாளையக்காரர்களை அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த கோபால் நாயக்கரும், அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4-இல் கைது செய்து, நவம்பர் 5-இல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன. மதுரையை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. பொ.ஊ. 1790-இல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம் தான் இது.
மலைக்கோட்டை கோவில்
திண்டுக்கல் மலையில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சியாகும். மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.
முக்கிய வழிபாட்டு தலங்கள்
அபிராமி அம்மன் கோவில்
திண்டுக்கல்லில் முன்பிருந்தே ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது.
இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர்.
இங்குள்ள அபிராமிதேவியின் சிலை இஸ்லாமிய மன்னன் ஒருவனால் மலை மீது இருந்து அகற்றப்பட்டு தற்போது திண்டுக்கல் நகர் நடுவே அமைந்துள்ளது.
இந்த அபிராமிதேவியின் நின்ற கோலத்தில் இருந்து அவள் வயிற்று பகுதியிலிருந்து ஒரு தாமரை மலர் (பத்மம்) வளர்ந்து அதில் பத்மகிரிசுவராக (சிவபெருமான்) வணங்கப்படுகிறார்.
இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.
கோட்டை மாரியம்மன்
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.
பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்
பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம், இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.
புனித ஜோஸப் தேவாலயம்
1866-ஆம் ஆண்டிற்கும் 1872-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
முக்கியத் தொழில்கள்
பூட்டு
திண்டுக்கல்லில் பூட்டு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பூட்டு, யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது. திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது.
திண்டுக்கல் பூ வணிக மையம்
திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமிழ்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.
தோல் தொழிற்சாலைகள்
திண்டுக்கல் நகரில் பேகம்பூர், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, தொழில்பேட்டை, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. திண்டுக்கல் தோல்கள் பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில்,மாட்டுத் தோல்களை விட ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்..
இலக்கியச்சிறப்பு
திண்டுக்கல் நகரில் உள்ள பத்மகிரீசர் மீது பலபட்டடை சொக்கநாதர் எனும் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் "பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது" எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றியுள்ளார்.
ஆன்மீகச்சிறப்பு
திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி அருளாளர்கள் பலர் இருந்துள்ளனர். ஓதச்சாமியார் எனும் சித்தர் அவ்வாறு மலைக்கோட்டையை ஒட்டிய குகையில் இருந்து அருள் புரிந்துள்ளார். பகவான் ரமணர் கூட திண்டுக்கல்லில் சில காலம் வசித்துள்ளார்.
முக்கிய இடங்கள்
திண்டுக்கல் மணிகூண்டு
திண்டுக்கல் மணிகூண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இது திண்டுக்கல் நகரின் மையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. கோபுர தூணின் உச்சியில் கண்ணாடிப் பேழைக்குள் நான்கு புறமும், கடிகாரம் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு பயன்படுகிறது. அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் இதன் அருகில்தான் நடைபெறும்.
திப்பு சுல்தான் மணிமண்டபம்
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு 2014-இல் அறிவித்தது. அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் பேகம்பூர் , அரண்மனை குளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்தின் இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
.
கோபால் நாயக்கர் மணிமண்டபம்
ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி, ராணி வேலு நாச்சியார்க்கும், ஊமைத்துரைக்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும், கேரளா வர்மா, தூந்தாசிவாக் , திப்பு சுல்தான் என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
குமரன் பூங்கா
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா உள்ளது. சுமார் 3½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, கடந்த 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், அலங்கார நுழைவுவாயில்,பறவை,விலங்கு கூடங்கள், சிற்றுண்டி உணவகம் உள்ளிட்டவை உள்ளன.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
திண்டுக்கல் மாநகராட்சியானது திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த பி. வேலுச்சாமி வென்றார்.
2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் வென்றார்.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-திண்டுக்கல்-மதுரை-கன்னியாகுமரி)
தேசிய நெடுஞ்சாலை 45 (சென்னை -விழுப்புரம்-திருச்சிராப்பள்ளி-திண்டுக்கல்-தேனி)
தேசிய நெடுஞ்சாலை 209 (கொள்ளேகால் - சாமராஜநகர் - பண்ணாரி - சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல்) ஆகியவை திண்டுக்கல் வழியாக செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்.
தொடருந்து நிலையம்
திண்டுக்கல் தொடருந்து நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. வாராந்திர இரயில்கள் உட்பட 86 இரயில்கள் தினமும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. பெங்களூர், கொல்கத்தா, புதுடில்லி, மும்பை நகரங்களுக்கு செல்ல தொடருந்து வசதி உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
பொறியியல் கல்லூரிகள்
பி. எஸ். என். ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9213)
ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9215,9214)
எஸ். பி. எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9216)
அண்ணா பல்கலைக்கழகம், திண்டுக்கல் வளாகம்.(கலந்தாய்வு எண்.9223)
எஸ். எஸ். எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9221)
ஜெய்னி பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9236).
கலை மற்று அறிவியல் கல்லூரிகள்
ஜி. டி. என். கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
எம். வி. முத்தையா மகளிர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.
பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.
பி. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
ஸ்ரீ வீ கல்லூரி, தாடிக்கொம்பு.
செவிலியர் கல்லூரி
கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
தொழில்நுட்பக் கல்லூரிகள்
ஆர். வி. எஸ். தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
எஸ். பி. எம். தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
ஸ்ரீ ரமணாஸ் ஏ. பி. சி. தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
மேற்கோள்கள்
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
|
6116
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
கரூர்
|
கரூர் (Karur) இந்தியாவின், தமிழகத்திலுள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் ஆகும். கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
வரலாறு
2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர். கரூர், காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
கரூர், பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே, 'வஞ்சி மாநகர்' அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டு, 'கரூர்' என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.
கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.
பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் உள்ளது. இந்த நகரம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து 370 கிமீ (230 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றின் கரையில் கரூர் அமைந்துள்ளது. இங்கே உள்ள மண் வகைகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன, இவை காவிரி டெல்டாவில் பொதுவான பயிர்களுக்கு உகந்தவை.
அமைவிடம்
கரூரானது, தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ. தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 66 கி.மீ. தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ. தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கரூரில் 2,34,506 மக்கள் வசிக்கின்றார்கள். கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது, இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கரூரில் இந்துக்கள்
91.41%, முஸ்லிம்கள் 5.62%, கிறிஸ்தவர்கள் 2.88%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, 0.07% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.
போக்குவரத்து
கரூர், அருகில் உள்ள பெரிய நகரங்களுடன், சாலைகள் வழியாகவும், இருப்புப் பாதைகள் வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இது, பல நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7 மற்றும் எண். 67 கரூர் வழியாகச் செல்கின்றன. மேலும் கரூரில் இருந்து, சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் கேரளா, ஆந்திரா, கருநாடகம் போன்ற அண்டை மற்றும் பிற மாநிலங்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
கரூர் ஒரு மாநகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநகராட்சி, 48 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, மாநகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிருவகிக்கப்படுகிறது. 338 தெருக்களை உடைய இந்த மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும்
குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
கரூர் மாநகராட்சியானது, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவை சேர்ந்த வே. செந்தில்பாலாஜி வென்றார்.
கல்லூரிகள்
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 அரசு கல்லூரிகளும், 3 மகளிர் கல்லூரிகளும் அடங்கும்.6 பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியும் ஒன்று உள்ளது.
ஆடிப்பெருக்கு விழா
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, அமராவதி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக அமராவதி நதித் தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, அமராவதி நதித் தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.
வானிலை மற்றும் காலநிலை
மேற்கோள்கள்
கரூர் மாவட்டம்
சேரர் தலைநகரங்கள்
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
பண்டைய இந்திய நகரங்கள்
|
6117
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
கிருஷ்ணகிரி மாவட்டம்
|
கிருட்டிணகிரி மாவட்டம் (Krishnagiri district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிருட்டிணகிரி ஆகும். இந்த மாவட்டம் 5143 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 30-ஆவது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மலைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
வரலாறு
கிருட்டிணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருட்டிணகிரி, மற்றும் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.
இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருட்டிணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாசா மலை. இந்த கோட்டை விசயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருட்டிணகிரி மாவட்டத்தின் "குந்தானி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், பிற்காலத்தில் செகதேவிராயர், செகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.
முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருட்டிணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஐதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஐதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.
" சிரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மகால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராசு மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருட்டிணகிரி மாறியது.
மூதறிஞர் இராசாசி, கிருட்டிணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்..
திருவள்ளுவருக்கு திருவுருவம் தந்த ஓவியப் பெருந்தகை கே. ஆர். வேணுகோபால் சர்மா ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள காமாட்சிபட்டியில் பிறந்தவர்.
கிருட்டிணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த (சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [சிரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருட்டிணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.
கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்தி பெற்ற சிரீ சந்திர சூடேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.
வருவாய் கோட்டங்கள்
கிருட்டிணகிரி
ஓசூர்
வருவாய் வட்டங்கள்
கிருட்டிணகிரி
ஓசூர்
போச்சம்பள்ளி
ஊத்தங்கரை
தேன்கனிகோட்டை
பர்கூர்
சூளகிரி
அஞ்செட்டி வட்டம்
உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்
இம்மாவட்டம் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.
மாநகராட்சி
ஓசூர்
நகராட்சிகள்
கிருட்டிணகிரி
பேருராட்சிகள்
காவேரிப்பட்டணம்
கெலமங்கலம்
தேன்கனிக்கோட்டை
நாகரசம்பட்டி
பருகூர்
ஊத்தங்கரை
ஊராட்சி ஒன்றியங்கள்
கெலமங்கலம்
தளி
ஓசூர்
சூளகிரி
வேப்பனபள்ளி
கிருட்டிணகிரி
காவேரிப்பட்டணம்
மத்தூர்
பருகூர்
ஊத்தங்கரை
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,879,809 ஆகும். அதில் ஆண்கள் 960,232; பெண்கள் 919,577 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 2.61% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 367 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 71.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 78.72% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 217,323 ஆக உள்ளனர்.
இம்மாவட்டத்தில் இந்துக்கள் 1,723,737 (91.70%); கிறித்தவர்கள் 35,956 (1.91%); இசுலாமியர்கள் 115,303 (6.13%); மற்றவர்கள் 0.25% ஆக உள்ளனர்.
இம்மாவட்டத்தில் தமிழ், கன்னடம்,
தெலுங்கு, ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.
அரசியல்
மக்களவைத் தொகுதி
கிருட்டிணகிரி மக்களவைத் தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்
ஊத்தங்கரை (தனி)
பர்கூர்
கிருட்டிணகிரி
வேப்பனபள்ளி
ஓசூர்
தளி
அமைவிடம்
கிருட்டிணகிரி மாவட்டமானது கிழக்கே திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கருநாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கருநாடக மாநிலங்களையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது.
கிருட்டிணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காசுமீர் வரை தேசிய நெடுஞ்சாலை 44) மற்றும் கிருட்டிணகிரி - வாலாசா தேசிய நெடுஞ்சாலை 46, கிருட்டிணகிரி - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல், ஜோலார் பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது.
பொருளாதாரம்
இங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. கிருட்டிணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சார்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும், அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் மாநகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எசு, பிரிமியர் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து உரோசா மலர் சாகுபடி செய்வதில் ஓசூர் மாநகராட்சி சிறந்து விளங்குகிறது.
போக்குவரத்து
சாலை
இந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது.
தேசிய நெடுஞ்சாலை:
தேசிய நெடுஞ்சாலை -7 (கன்னியாகுமரி - காசுமீர்)
தேசிய நெடுஞ்சாலை-46 (சென்னை - பெங்களூர்)
தேசிய நெடுஞ்சாலை-66 (பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூர்)
தேசிய நெடுஞ்சாலை-207 (சர்ச்சாபூர் -பாகலூர் - ஓசூர்)
தேசிய நெடுஞ்சாலை-219 (கிருட்டிணகிரி - குப்பம்)
மாநில நெடுஞ்சாலைகள்:
மாநில நெடுஞ்சாலை 17: மாலூர்- ஓசூர் - அதியமான் கோட்டை
மாநில நெடுஞ்சாலை 17 ஏ: ஓசூர் - தேன்கனிகோட்டை
மாநில நெடுஞ்சாலை 17 பி: ஓசூர் - தேன்கனிகோட்டை (தளி வழியாக)
மாநில நெடுஞ்சாலை 131: பர்கூர் - திருப்பத்தூர்
மாநில நெடுஞ்சாலை 85: அத்திப்பள்ளி - இராயக்கோட்டை
மாநில நெடுஞ்சாலை 60: ஒகேனக்கல் - திருப்பத்தூர் (மத்தூர் வழியாக)
மாநில நெடுஞ்சாலை 514: குப்பம் - பச்சூர் - நாட்டறம்பள்ளி
மாநில நெடுஞ்சாலை 433: வேப்பனப்பள்ளி - குப்பம்
தொடருந்து
சேலம் - பெங்களூரு பாதையில் ஓசூர் தொடருந்து நிலையம் உள்ளது. கோவை - ஈரோடு - சோலார்பேட்டை அகல இருப்புப் பாதையானது சாமல்பட்டி வழியாக செல்கிறது.
கிருட்டிணகிரி மாவட்டத்தின் விவரங்கள்
புவியியல் அமைப்பு
இது 11 ° 12 'N மற்றும் 12 ° 49' N அட்சரேகை, 77 ° 27 'E முதல் 78 ° 38' E தீர்க்கரேகை வரை அமைந்துள்ளது.
தட்பவெப்பநிலை
(1) சமவெளியில்:
அ. அதிகபட்சம் - 37.20 C
ஆ. குறைந்தபட்சம் - 16.40 C
மழையளவு (மி.மீட்டரில்)
(1) சாதாரணமாக:
அ. தென்மேற்கு பருவமழை - 399.0
ஆ. வடகிழக்கு பருவமழை - 289.4
(2) உண்மையாக:
அ. தென்மேற்கு பருவமழை - 359.1
ஆ. வடகிழக்கு பருவமழை - 442.5
விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள்
அ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (எக்டேரில்) - 2,13, 748
ஆ. நிகர பயிரிடப்பட்ட பரப்பு - 1,72,884
இ. ஒன்றுக்கு மேற்பட்ட பயிரிடப்பட்ட பரப்பு - 40,86
முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு
விவசாய நிலங்கள்
அ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11) - 281392
ஆ. பரப்பு எக்டேரில் - 2,25,410
இ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (எக்டேரில்) - 0.80
முக்கிய உணவுப்பயிர்கள்
நெல், கேழ்வரகு, சோளம், துவரை, உளுந்து, மாங்காய், தென்னை, முட்டைக்கோசு, வாழை, தக்காளி, நிலக்கடலை
பிற பயிர்கள்
மலர் சாகுபடி (உரோசா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி), பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டைக்கோசு, முள்ளங்கி, வாழை, பீன்ஸனசு, தக்காளி, கத்தாி)
நீர்ப்பாசனம்
அ. நிகர பாசனப்பகுதிகள் (எக்டேரில்)
(i) அரசு கால்வாய்கள் - 858
(ii) அரசுடமையல்லாத கால்வாய்கள் --
(iii) ஏரிகள் - 8192
(iv) ஆழ்துழை கிணறுகள் - 17674
(v) இதர கிணறுகள் - 41452
மொத்த நிகர பாசன வசதிபெறும் பகுதிகள் - 57268 எக்டேர்
ஆ. மொத்த பரப்பு (எக்டேரில்) - 68301
இ. ஆறுகளின் பெயர் - பெண்ணையாறு, பாம்பாறு
ஈ. ஏரியின் பெயர் - பாரூரா பெரிய ஏரி
கால்நடை வளர்ப்பு
அ. கால்நடை நிறுவனங்கள்
(i) கால்நடை மருத்துவமனைகள் - 2
(ii) கால்நடை மருந்தகங்கள் - 67
(iii) மருத்துவர் மையங்கள் - 1
(iஎ) துணை மையங்கள் - 22
(எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் - 10
காடுகள்
அ. காடுகள் பரப்பு (எக்டேரில்)
1. காப்பு காடுகள் - 141622.2663
2. காப்பு நிலங்கள் - 8345.37
3. இனம் பிரிக்கப்படாத காடுகள் - 54310
நீர்தேக்கங்கள்
கிருட்டிணகிரி அணைக்கட்டு நீர்த்தேக்கம்
சூளகிரி-சின்னாறு நீர்த்தேக்கம்
தங்கரை நீர்த்தேக்கம்
பாம்பாறு நீர்த்தேக்கம்
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்
பாரூர் ஏரி நீர்த்தேக்கம்
இதன் மூலம் 18,965 எக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)
(i) நவீன மருத்துவம்:
அ. மருத்துவமனைகள் - 6
ஆ. மருந்தகங்கள் - 4
இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 56
ஈ. சுகாதார துணை நிலையங்கள் - 239
உ. இதர மருத்துவ நிறுவனங்கள் - 41
(ii) இந்திய மருத்துவம்:
அ. மருத்துவமனைகள் --
ஆ. மருந்தகங்கள் --
இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள்(மையங்கள்) - 23
ஈ. படுக்கை வசதி மற்றும் மருந்தகங்களுடன் இயங்கும் மருத்துவமனைகள் --
உ. சித்தா மருத்துவர்கள் - 21
ஊ. செவிலியர்கள் --
எ. சித்தா --
(iii) ஓமியோபதி::
அ. மருத்துவமனைகள் --
ஆ. மருந்தகங்கள் --
இ. ஆரம்ப சுகதார மையங்கள் - 2
ஈ. மருத்துவர்கள் - 2
உ. செவிலியர்கள் --
கல்வி
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 10
பொறியியல் கல்லூரிகள் - 7
முதன்மை ஆரம்ப பள்ளிகள் - 32
ஆரம்ப பள்ளிகள் - 1281
இடைநிலை பள்ளிகள் - 306
உயர்நிலை பள்ளிகள் - 169
மேனிலைப் பள்ளிகள் - 108
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 10
தகவல் தொடர்பு
தலைமை தபால் நிலையங்கள் - 1
சார் அஞ்சல் நிலையங்கள் - 38
கிளை அஞ்சல் நிலையங்கள் - 263
கூட்டுறவு நிறுவனங்கள்
முதன்மை வேளாண் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் - 3
கூட்டுறவு ஐ.டி.ஐ. பர்கூர் - 1
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் - 21
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் - 120
நகர கூட்டுறவு வங்கிகள் - 2
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் - 120
உயர் பாசன கூட்டுறவு சங்கங்கள் - 1
ஊழியர்கள் கடைகள் - 3
வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் - 4
ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு கடைகள் - 3
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை
காவல்படை 23
உள்ளுர் - 957
ஆயுதப்படை - 279
காவல் நிலையங்கள் (ஆண்) - 30
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் - 4
சிறப்பு அலகுகள் (ஆயுதப்படை உள்பட) - 19
தீயணைப்பு துறை - 7 நிலையங்கள். அவை:
கிருட்டிணகிரி
ஒசூர்
பருகூர்
போச்சம்பள்ளி
ஊத்தங்கரை
இராயக்கோட்டை
தேன்கனிக்கோட்டை
விவசாயம்
மாவட்டத்தின் விவசாயத்தில்
நெல் 20,687 எக்டேரிலும், கேழ்வரகு 48,944 எக்டேரிலும், பயிறுவகைகள் 48,749 எக்டேரிலும், கரும்பு 4,078 எக்டேரிலும், மாங்கனி 30,017 எக்டேரிலும், தேங்காய் 13,192 எக்டேரிலும், புளி 1,362 எக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.
சுற்றுலாத் தலங்கள்
கிருட்டிணகிரி அணை
கிருட்டிணகிரி அணை கிருட்டிணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் கிருட்டிணகிரி, தருமபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
தளி
தளி கருநாடக மாநில எல்லையில், ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.
பெட்டமுகிளாலம்
இது கிருஷ்ணகிரியின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உயர்ந்த மலை சிகரம் ஆகும். இந்த மலையில் தான் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிக அதிகளவில் காட்டு யானைகள் உள்ளது. இங்குள்ள சாமி ஏரி யானைகளின் தாகம் போக்கும் நீர் நிலை ஆகும். மாரண்டஹள்ளி சாலையில் உள்ள அண்ணாநகர் காட்சி முனையில் இருந்து பார்த்தால் மாரண்டஹள்ளி மற்றும் இராயக்கோட்டை நகரங்கள் சிறப்பாக தெரியும்.
சந்திர சூடேசுவரர் திருக்கோயில்
சந்திர சூடேசுவரர் திருக்கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஒரு பழமையான கோயிலாகும். இக்கோயில் ஒசூரின் கிழக்கே உள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோயில் இது ஒன்றேயாகும்.
.
இக்கோயிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி அன்று நடக்கிறது. அதையொட்டி 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கூடுவது வழக்கமாகும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
கிருஷ்ணகிரி மாவட்ட வரைபடம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்
தமிழ்நாடு மாவட்டங்கள்
|
6118
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
தார்ப் பாலைவனம்
|
பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார்ப் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாக்கித்தான் நாட்டிலும் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தின் பகுதி, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானில் அமைந்துள்ளது.
இப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
சோலிஸ்தான் பாலைவனம்
மேற்கோள்கள்
பாலைவனங்கள்
இந்தியப் புவியியல்
ராஜஸ்தான் புவியியல்
ஆசிய பாலைவனங்கள்
|
6119
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
இணைகரம்
|
இணைகரம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு தள வடிவமாகும். இதன் இரண்டு சோடி எதிர்ப் பக்கங்களும் ஒன்றுக்கொன்று இணையாகவும் (சமாந்தரமாகவும்), சம நீளம் கொண்டவையாகவும் இருக்கும். அத்துடன் இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். ஒவ்வொரு இணைகரமும் ஒரு பல்கோணமாகும். மேலும் குறிப்பாக ஒரு நாற்கரம் ஆகும்.
வேறு வடிவில் சொல்வதானால் சம நீளமான, இரட்டை சமாந்தரக் கோடுகளால் அடைக்கப் பெற்ற வடிவம் இணைகரம் ஆகும், கோணங்கள் செங்கோணம் என்று வரும்போது அவ்விணைகரம் செவ்வகம் என்றும், கோணங்கள் செங்கோணங்களாகவும் அத்துடன், அயற்பக்கங்களும் சமனாக வரும்போது அவ்விணைகரம் சதுரம் என்றும் அழைக்கப்படும்.
இயல்புகள்
எதிரெதிர் பக்கங்கள் சமமானவை.
எதிரெதிர் கோணங்கள் சமமானவை.
எதிர்ப்பக்கங்கள் ஒருபோதும் இணைவதில்லை.
இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சமமாக வெட்டும்.
இணைகரத்தின் பரப்பளவானது அடிப்பக்கத்தை செங்குத்துயரத்தால் பெருக்கி வரும் பெறுமானமாகும்.
இணைகரத்தின் பரப்பளவானது மூலைவிட்டங்களால் ஏற்படும் இரு முக்கோணங்களின் பரப்பளவின் கூட்டுத் தொகையாகும்.
வகைகள்
செவ்வகம் - கோணங்களை செங்கோணமாகக் கொண்ட இணைகரம்
சாய்சதுரம் - நான்கு பக்கங்களும் சமமாகக் கொண்ட இணைகரம்.
சதுரம் - கோணங்கள் செங்கோணங்களாகவும், நான்கு பக்கங்களும் சமமாகவும் கொண்ட இணைகரம்.
இணைகரத்தின் பரப்பளவு
இணைகரத்தின் பரப்பளவானது அடிப்பக்கத்தை செங்குத்துயரத்தால் பெருக்கி வரும் பெறுமானமாகும்.
A = B X H
நாற்கரங்களின் வகைகள்
|
6122
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
|
எனியாக்
|
எனியாக் (Electronic Numerical Intergrator Analizer and Computer -ENIAC) என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கப் படைத்துறையினரால் (ராணுவத்தினால்) உருவாக்கப்பட்ட ஒரு மின்னணுவியல் கணினி ஆகும். இராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் சார்ந்த தேவைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டது.
இதுவே உலகின் முதல் முழுமையான மின்னணுவியல் கணினியாக கருதப்படுகிறது. இக்கணினியின் எடை 30 டன் (தொன்), நீளம் 100 அடி, உயரம் 8 அடி.
இதில் 17,468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இதனை இயக்க 200 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. அத்தோடு மிக அதிகளவான வெப்பத்தையும் வெளியிட்டது. இவ்வெப்பம் காரணமாக இதன் பகுதிகள் பழுதடைந்து விடுவதால் இது அடிக்கடி செயலிழந்தமை அக்காலத்தில் எனியாக்கின் முக்கிய போதாமைகளுள் ஒன்றாக இருந்தது.
இக்கணினி 1943 க்கும் 1945 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.
எனியாக் இன் பெறுமதி அக்காலத்தில் 500,000 அமெரிக்க டாலர்களாகும்.
முக்கிய பாகங்கள்
எனியாக் கணினியின் முக்கிய பாகங்கள் வருமாறு,
Cycling Unit
Master Programmer Unit
Function Table
Accumulator
Digit Trays
இவைதவிர மேலும் சில பாகங்களையும் இக்கணினி கொண்டிருந்தது.
Punch Card Reader
Card Puncher
Card Printer
Division Unit
Square-root Unit
கணினி வகைகள்
|
6131
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
பல்கோணம்
|
பல்கோணம் அல்லது பல்கோணி (Polygon) என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்கங்களைக் கொண்ட மூடிய தள வடிவமாகும். பல்கோணத்தை ஆக்குகின்ற நேர்கோட்டுப் பகுதிகள் பக்கங்கள் அல்லது விளிம்புகள் எனப்படும். அடுத்தடுத்த பக்கங்கள் சந்திக்கும் புள்ளிகள் உச்சிகள் என அழைக்கப்படும். குறிப்பிட்ட பல்கோணம் ஒரு எளிய பல்கோணமாயிருப்பின், அதன் பக்கங்கள் ஒரு பல்கோணப் பகுதியின் எல்லையைக் குறிக்கும். அத்துடன் பல்கோணம் என்பது சில சமயம் பல்கோணப் பகுதியின் உட்பகுதியையோ அல்லது பகுதியையும் எல்லையையும் சேர்த்தோ குறிப்பதுண்டு.
பெயர்களும் வகைகளும்
பல்கோணங்கள் அவற்றின் பக்கங்களின் (கோணங்களினதும்) எண்ணிக்கையைக் கொண்டு பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக எட்டுப் பக்கங்களைக் கொண்ட பல்கோணம் எண்கோணம் ஆகும்.
பெயரிடல் வகைப்பாடு
பல்கோணங்களின் பெயரிடல் வகைப்பாடு (Taxonomic Classification) கீழேயுள்ள படத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது:-
பல்கோணம்
/ \
எளிமையான சிக்கலான
/ \
குவிவு குழிவு
/
சுழற்சிமுறை
/
ஒழுங்கான
பல்கோணம் ஒன்று தனியான ஒன்றையொன்று குறுக்கிடாத எல்லைகளைக் கொண்டிருப்பின் அது எளிமையான பல்கோணம் எனப்படும். அல்லாவிடின் அது சிக்கலான பல்கோணம் ஆகும்.
ஓர் எளிமையான பல்கோணத்தின் உட்கோணங்கள் 180°இற்குக் குறைவாகக் காணப்படின் அது குவிவுப் பல்கோணம் எனவும் 180°இற்கு மேற்படின் அது குழிவுப் பல்கோணம் எனப்படும்.
குவிவுப் பல்கோணியொன்றின் உச்சிகள் யாவும் ஒரு வட்டத்தின் பரிதியிலிருப்பின் அப்பல்கோணி வட்டப்பல்கோணி எனப்படும்.
வட்டப்பல்கோணியொன்றின் பக்கங்கள் அல்லது கோணங்கள் யாவும் சமனாயின் அப்பல்கோணி ஒழுங்கான பல்கோணி எனப்படும். ஒரே பக்க எண்ணிக்கை கொண்ட ஒழுங்குப் பல்கோணிகள் வடிவொத்தவையாக இருக்கும்.
ஒழுங்கான பல்கோணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
சமபக்க முக்கோணம்
சதுரம்
ஒழுங்கான ஐங்கோணம்
ஒழுங்கான அறுகோணம்
இயல்புகள்
கோணம்
ஒரு பல்கோணம், அது ஒழுங்கானதாயினும், ஒழுங்கற்றதாயினும், சிக்கலானதாயினும், எளிமையானதாயினும், அதன் பக்கங்களின் எண்ணிக்கையளவு கோணங்களைக் கொண்டிருக்கும். n பக்கங்களைக் கொண்ட ஒரு பல்கோணத்தின் உட்கோணங்களின் கூட்டுத்தொகை (n−2)π ஆரையன்கள் (அல்லது (n−2)180°), அத்துடன் ஒரு ஒழுங்கான பல்கோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு (n−2)π/n ஆரையன்கள் (அல்லது (n−2)180°/n, அல்லது (n−2)/(2n).
ஒரு சமகோண முக்கோணியானது சமபக்க முக்கோணியாகும்..
இவற்றையும் பார்க்கவும்
ஒயிலரின் தொடர்பு
பல்கோணிகள்
|
6134
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
|
திருக்கோணமலை
|
திருக்கோணமலை அல்லது திருகோணமலை (Trincomalee) இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
அமைவிடம்
இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
மக்கள்தொகை
2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருக்கோணமலை மாவட்டம் 379,541 மக்களைக் கொண்டுள்ளது இந்த நகரம். தமிழர், சிங்களவர், முசுலிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
வரலாறு
இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் , இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருக்கோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது.இது தமிழர்களால் கோரப்பட்ட தனிநாடான தமிழீழத்தின் தலைநகராகவும் விடுதலைப் புலிகளால் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது.
இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.
நிர்வாகக் கட்டமைப்பு
திருக்கோணமலை மாவட்டம் ஆனது 11 பிரதேசசபைகளாக வகுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன.
திருக்கோணமலை பட்டினமும் சூழலும் - பெரும்பான்மையாகத் தமிழர்களைக் கொண்ட திருக்கோணமலை நகரப்பகுதி
குச்சவெளி - பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம்.
பதவிசிறிபுர - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
கோமரன்கடவல - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமரேசன்கடவை, தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
மொரவெவ/முதலிக்குளம் (பழைய வழக்கில்) - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான முதலிக்குளம், தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
தம்பலகாமம் - பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
கந்தளாய் - தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
கிண்ணியா - பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசம்.
சேருவில - பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
ஈச்சிலம்பற்றை - தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
மூதூர் - முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். தமிழர்கள் உள்ள பிரதேசம், இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.
பிரித்தானியர் ஆட்சி
1957 வரை திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன். சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே பிரித்தானியரின் முக்கியக் கடற்படைத்தளமாக செயற்பட்டது.
காலநிலை
கிழக்குப் பல்கலைக்கழகம்
திருக்கோணமலையில் தனியான பல்கலைக்கழகம் இல்லாத போதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று திருமலையில் உள்ளது. இது திருக்கோணமலை வளாகம் என அழைக்கப்படுகின்றது. முன்னர் திருக்கோணமலை நகரப் பகுதியில் அமைந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவருகின்றது.
தொலைத் தொடர்பு
தொலைபேசி
குறியீடு: 026 (வேறு மாவட்டங்களில் இருந்தும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ள).
ஆரம்பிக்கும் இலக்கங்கள்
026-2 திருக்கோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்
026-4 திருக்கோணமலை சண்ரெல்
026-5 திருக்கோணமலை லங்காபெல்
060-226 திருக்கோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA இணைப்பு
கம்பி இணைப்புக்கள்
இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம் கம்பியிணைப்புக்களை வழங்கி வருகினறது.
கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)
திருக்கோணமலையில் கம்பியற்ற இணைபுக்கள் தற்போதுள்ள யுத்த சூழ்நிலையாலால் அடிக்கடித் துண்டிக்கப் பட்ட நிலையிலேயே உள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் கம்பி இணைப்புக்களே அநேகமாகத் துண்டிக்கபடுவது குறைவாகவுள்ளது.
CDMA இணைப்புக்கள்
சண்டெல்
இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்
லங்காபெல்
TDMA (GSM) இணைப்புக்கள்
மோபிட்டல் , இலங்கைத் தொலைத் தொடர்ப நிலையத்தின்
மோபிற்றல் கோபுரங்கள் திருக்கோணமலை நகரம், கந்தளாய், புல்மோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. புல்மோட்டையில் அமைந்துள்ள கோபுரமானத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையோரமாக நகர்பேசியூடாகத் தொடர்புகொள்ளக் கூடியதாகவுள்ளதாகத் தெரிகின்றது.
டயலொக்
எடிசலாட்
ஹச்
எயார் டெல்
போக்குவரத்து
புகையிரதம்
திருக்கோணமலையில் இருந்து கொழும்பிற்கு காலை 10.00 மணிக்கும் மாலை 7.00 மணிக்கும் புகையிரதங்கள் புறப்படுகின்றன. மட்டக்களப்பு, பகுதிகளிற்குச் செல்பவர்கள் கல் ஓயா சந்தியில் பிரிந்து கொள்ளலாம் (வவுனியா செல்பவர்கள் மாஹோ பகுதியூடாகப் பிரிந்து கொள்ளலாம் எனினும் பெரும்பாலும் இது சாத்தியமாவதில்லை). அதாவது அங்கு புகையிரதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கொழும்பிலிருந்து காலை புகையிரதம் காலை 6.05 இற்குப் புறப்படும் திருக்கோணமலை புகையிரதத்திலேயே ,மட்டக்களப்பு பெட்டியும் இணைக்கப்படுவதால் திருக்கோணமலைப் பெட்டியில் ஏறியதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று. தொடரூர்தியின் பிற்பகுதியில் உள்ள மூன்று பெட்டிகள் மட்டக்களப்பிற்கும் ஏனைய முற்பகுதியில் திருக்கோணமலைக்கும் ஆனவை. மட்டக்களப்பு நோக்கி பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் புகையிர பெட்டிகளில் மாறவேண்டியதில்லை.
கொழும்பிலிருந்து இரவு 7:15 இற்குப் புறப்படும் மட்டக்களப்பு கடுகதி புகையிரதத்தில் திருக்கோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் ஏறிக்கொள்வதன் மூலம் மட்டக்களப்புக்கு செல்ல முடியும்.
பேருந்து
திருக்கோணமலை-கொழும்பு
திருக்கோணமலையில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கும் நேரடியாக பேருந்து சேவையானது .ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் உண்டு திருக்கோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்து எடுப்பது சிரமமாக இருந்தால் திருக்கோணமலையில் இருந்து குருநாகலிற்கோ அல்லது தம்புள்ளவிற்கோ பேருந்து எடுத்து அங்கிருந்து கொழும்பிற்குச் செல்லலாம். திருக்கோணமலையில் இருந்து நேரடியாக் கொழும்பு செல்லும் பேருந்து இலக்கம் 49 ஆகும்.
படம்
இவற்றையும் பார்க்கவும்
திருக்கோணேச்சரம்
திருகோணமலை கோட்டை
நிலாவெளி கடற்கரை
சம்பூர்
கன்னியா வெந்நீர் ஊற்று
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
Detailed map of Trincomalee, pdf format
பல்லவர்
சோழர்
யாழ்ப்பாண அரசு
கண்டி இராச்சியம்
கிழக்கு மாகாணம், இலங்கை
இலங்கை மாவட்ட தலைநகரங்கள்
|
6143
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF
|
மலாவி
|
மலாவி (Malawi) தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பியா, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இது 'ஆப்பிரிக்காவின் இதமான இதயம்' என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது.
2016 ஜனவரி 1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவியில் ஏறக்குறைய 17.7 மில்லியன் மக்கள் தொகை இருக்கின்றது. இந்நாட்டின் தேசிய மொழியாக சிச்சேவா (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன.
இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று. விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. மலாவியில் எயிட்ஸ் நோய் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதுடன், அதுவே இறப்பிற்கான முக்கிய காரணியாகவும் உள்ளது.
மலாவியின் கிழக்குப் பகுதியில் ஏரி மலாவி என்று அழைக்கப்படும் ஒரு பாரிய ஏரி அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது தன்சானியாவின் தெற்குப் பகுதியிலும், மொசாம்பிக்கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும், உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும் இருக்கின்றது. உயிரியல் பல்வகைமையில், முக்கியமாக நன்னீர் மீன் வகைகளில், மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இந்த ஏரி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தெரிவு செய்திருக்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த ஏரியின் உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நாட்டின் ஊடே ஷயர் ஆறும் ஓடுகின்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
CIA World Fact Book - Malawi
http://www.tourismmalawi.com/
Critical window closing fast for 12 million hungry Southern Africans, UN warns
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
நிலம்சூழ் நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
6145
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
|
துடிப்பு அகல குறிப்பேற்றம்
|
நிலை மாற்றியின் துடிப்பின் நீள அளவை மாற்றுவதன் மூலம், வெளியீட்டில் வெளிப்படும் மின்னழுத்தை மாற்றக்கூடியவாறு அமையும் கட்டுப்பாட்டு அமைப்பே துடிப்பு அகல குறிப்பேற்றம் - து.அ.கு (Pulse Width Modulation). பொதுவாக, நிலை மாற்றியின் அலை எண் மாறாமல் இருக்கும், ஆனால் அதன் துடிப்பு நீளம் அமைப்பு இயக்க நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாறி அமைப்பின் கட்டுப்பாட்டை நிர்வகிக்க உதவும்.
துடிப்பின் நீள வித்தியாசங்களில் தகவல்களை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் து.நீ.ப தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படுகின்றது.
கணித விபரிப்பு
துடிப்பு காலம்/அலை நீள காலம் (உள்ளீடு மின்னழுத்தம்) = வெளியக மின்னழுத்தம்
நுட்பிய சொற்கள்
நிலை மாறி - Switch
துடிப்பு - Pulse
உள்ளீடு - Input
வெளியீடு - Output
பண்பேற்றம் - Modulation
மின்னழுத்தம் - Voltage
அலை எண் - Frequency
அமைப்பு - System
அமைப்பு கட்டுப்பாடு - Control System
நிலவரம் - State, Performance, Situation
தொலைத்தொடர்பு
மின்னணுவியல்
|
6146
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF
|
வைகாசி
|
தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஆண்டின் இரண்டாவது மாதம் வைகாசி ஆகும். இம் மாதப் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேட இராசியை விட்டு, இடப இராசிக்குள் புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் இடப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். வைகாசி மாதம் 31 நாள் 24 நாடி 12 விநாடிகளைக் கொண்டது.
இவற்றையும் பார்க்கவும்
தமிழ் மாதங்கள்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6148
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
|
எடிசன் விளைவு
|
தாமஸ் அல்வா எடிசன்(Edison effect) மின் விளக்குக்கு ஏற்ற கடத்தி பற்றி ஆராய்ச்சியில் இருந்தபொழுது, மின்குமிழ் சுற்றுடன் தொடர்பில்லாத ஒரு கம்பி அருகில் இருந்தது. எடிசன் நேர் மின்னழுத்தத்தை பிரயோகித்தபொழுது ஒரு மின் பொறி அருகிலிருந்த கம்பிநோக்கி பாய்ந்தது. ஆனால், எதிர்ம மின்னழுத்ததை பிரயோகித்தபொழுது அப்படி நிகழவில்லை. இவ் முக்கிய விளைவை எடிசன் அவதானித்து காப்புரிமை பெற்றதால், இவ் விளைவு எடிசன் விளைவு என கூறப்படுகின்றது. இதுவே இருமுனையம், திரிதடையம் ஆகியவறுக்கு பின்னர் அடிப்படையாக அமைந்தது.
வெப்ப அயனிகள் (Thermions) உலோகங்களில் ஏராளமான தனித்த அயனிலுள்ளன. இந்த உலோகங்களை சூடாக்கும் போது,எலக்ட்ரான்கள் அதிக ஆற்றலை வெப்பத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றன. இவ்வாற்றல் ஒரு திட்ட அளவைவிட அதிகமாக உள்ளபோது, எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவ்வகை அயனிகள் வெப்ப அயனிகள் எனப்படுகின்றன. இவ்வகை அயனிகளின் சீரான ஓட்டமே வெப்ப அயனி மின்னோட்டத்திற்குக் காரணமாகும். எக்சு கதிர் குழாய்களில் வெப்ப அயனிகளே , இலக்கில் மோதி எக்சு கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.
மேற்கோள்கள்
மின்காந்தவியல்
அணு இயற்பியல்
|
6152
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF
|
ஆனி
|
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 36 நாடி, 38 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 32 நாட்கள், 33 நாட்கள் அல்லது 34 நாட்கள் உடையதாகக் கொள்ளப்படும். 1974 ஆம் ஆண்டு தமிழ் வருடத்தில் ஆனி மாதம் 35 நாட்கள் கொண்டது.
ஆனி மாதத்தில் பிறந்த பெரியார்கள்
அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில் பிறந்தவர் என்பர்.
பெரியாழ்வார் ஆனி மாதம் சுக்கில பட்சம் ஏகாதசி ஞாயிறு சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
நாதமுனிகள் ஆனி மாதம் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்.
குருபூசைகள்
மாணிக்கவாசகர் குருபூசை ஆனி மாதம் மகம் நட்சத்திரம்
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6153
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20%28%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29
|
ஆடி (மாதம்)
|
தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி () ஆகும். சூரியன் கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 30 அல்லது 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்காலத்தில் தமிழர் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ்வழக்கம் அருகிவிட்டது. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதிக் கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன.
இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:
ஆடிப்பட்டம் தேடிவிதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி மாதம் தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். காலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு தென்கிழக்கு திசை ஏகுவான். இந்து தொன்மவியலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக குறிப்பிடப்படுகிறது.
ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
ஆடித் தள்ளுபடி
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6154
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF
|
ஆவணி
|
காலக்கணிப்பில் தமிழர் வழக்கப்படி, ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி () ஆகும். சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே வலம் வரும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக் கொண்டதே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
ஆவணி அவிட்டம்
ஆவணி சதுர்த்தி
ஆவணி மூலம்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6158
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20%28%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29
|
ஆடி (நிறுவனம்)
|
குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
ஆடி ஏஜி (Audi AG) என்பது ஆடி அல்லது அவுடி என்ற வணிகப்பெயரில் கார்களைத் தயாரிக்கும் ஒரு செர்மானிய நிறுவனமாகும். இது வாக்ஸ்வேகன் குழுவில் ஒரு அங்கமாகும். ஆடி என்ற பெயர் இதன் நிறுவனரான ஆகஸ்ட் ஹார்ச்சின் குடும்பப்பெயரின் இலத்தீன் மொழியாக்கத்தின் அடிப்படையில் வந்ததாகும். ஆடி என்ற வார்த்தைக்கு ஜெர்மன் மொழியில் “கவனி!” என்ற அர்த்தமாகும்.
ஆடியின் தலைமை அலுவலகம் இன்கோல்ஸ்டாட், பவேரியா, ஜெர்மனியில் உள்ளது.
இது 1964 ஆம் ஆண்டு முதல் வாக்ஸ்வேகன் குழுவின் (வாக்ஸ்வேகன் AG ) ஒரு முழுவதும் உரிமையாக்கப்பட்ட (99.55%) துணை நிறுவனமாகும். வாக்ஸ்வேகன் குழு ஆடி 60/72/75/80/சூப்பர் 90 தொடரின் (ஒரு சில ஏற்றுமதி சந்தைகளில் வெறும் “ஆடி” என்றே விற்கப்படுவது) அறிமுகத்துடன் 1965 ஆம் ஆண்டில் ஆடி என்ற வணிகப்பெயரை மறுமுறை சந்தையில் புகுத்தினார்கள். இந்த பெயரை முந்தைய உரிமையாளரான டெய்மளர்-பென்ஸிடமிருந்து ஆட்டொ யூனியன் சொத்துகளை வாங்கியபோது இது செய்யப்பட்டது.
வரலாறு
நிறுவனம் உருவானதும் பெயரும்
இந்த நிறுவனத்தின் உருவாக்கம் 1899 ஆம் ஆண்டு மற்றும் ஆகஸ்ட் ஹார்ச்சுக்கும் பின்னே செல்கிறது. முதல் ஹார்ச் வாகனம் 1901 ஆம் ஆண்டில் ஸ்விக்காவ்வில் தயாரிக்கப்பட்டது. 1909 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய நிறுவனத்திலிருந்து ஹார்ச் வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு ஹார்ச் ஸ்விக்காவ்வில் ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பித்து, ஹார்ச் என்ற வணிகப்பெயரை தொடர்ந்து பயன்படுத்தினார்.
அவருடைய முன்னால் பங்காளர்கள் வர்த்தகச்சின்னம் சட்டமீறலுக்காக அவர் மீது வழக்குத் தொடுத்தார்கள். ஒரு ஜெர்மன் நீதிமன்றம் ஹார்ச் என்ற வணிகப்பெயர் முன்னால் நிறுவனத்திற்குதான் சொந்தமானதென்று தீர்மானித்தது. ஆகஸ்ட் ஹார்ச் தன்னுடைய சொந்த கார் வணிகத்தில் தன்னுடைய சொந்த குடும்பப் பெயரையே பயன்படுத்தமுடியாமற்போனது. இதனால் அவர் ஃபிரான்ஸ் ஃபிக்கெண்ட்ஷெருடைய அபார்ட்மென்டில் தன்னுடைய நிறுவனத்திற்கான ஒரு புதிய பெயரை பிறப்பிக்க ஒரு கூடுகையை அமர்த்தினார். இந்த கூடுகையின் போது ஃபிரான்ஸின் மகன் அறையின் ஒரு மூலையில் அமைதியாக இலத்தீன் படித்துக் கொண்டிருந்தார். பலமுறை அவர் ஏதோ சொல்ல முயன்று தன்னுடைய வார்த்தைகளை விழுங்கிக்கொள்வார். ஆனால் இறுதியில் “அப்பா, audiatur et altera pars ... ஹார்ச் என்றழைப்பதற்கு பதிலாக ஆடி என்றழைத்தால் நன்றாயிருக்காதா?” என்று உளறிக் கொட்டிவிட்டார். "ஹார்ச்!" ஜெர்மன் மொழியில் “ஹார்க்!” என்றால் “கவனி!” அல்லது ‘கேள்” என்று அர்த்தம். இது இலத்தீனில் “ஆடி” (கேட்கக் கூடிய என்ற ஆங்கில வார்த்தையை ஒப்பிட்டுப் பார்க்கவும்) என்று மொழிபெயர்க்கப்படலாம். கூடுகையில் கலந்துக் கொண்ட அனைவரும் இந்த யோசனையை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். சில நேரங்களின் ஆடி என்பது “ஆட்டோ யூனியன் டாய்ச்சலாண்ட் இங்கோல்ஸ்டாட்” என்பதின் சுருக்கப்பெயரென்று தவறாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது சொற்களை திறமையாக பின்வாட்டில் பொருத்தி அமைக்கப்பட்ட நிகழ்வாகும். உண்மையில் இந்த நிறுவனத்தின் பெயருக்கான பிறப்பிடம் அது கிடையாது.
ஆடி 2612 cc (2.6 லிட்டர்) நான்கு கலன் வடிவத்திலும், அதைத் தொடர்ந்து 3564 (3.6லி) வடிவம், மற்றும் 4680 cc (4.7லி) மற்றும் 5720 cc (5.7லி) வடிவங்களுடனும் துவங்கியது. இவை விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் வெற்றிகரமாக காணப்பட்டன. முதலாவது ஆறு கலன் வடிவம் 4655 cc (4.7 L) 1924 ஆம் ஆண்டில் தோன்றியது.
ஆகஸ்ட் ஹார்ச் 1920 ஆம் ஆண்டில் ஆடி நிறுவனத்தை விட்டு, போக்குவரத்து துறையில் ஒரு உயர்ப்பதவிக்குச் சென்றார். ஆனால் தொடர்ந்து ஆடியின் பொறுப்புரிமையாளர்கள் குழுவில் ஒரு அங்கத்தினராக இருந்தார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆடி நிறுவனம் இடது-கை ஓட்டுதல் உடைய தயாரிப்பு கார், ஆடி வகை K வைச் செய்து வழங்கி முதல் ஜெர்மன் கார் தயாரிப்பாளராக இருந்தது. 1920களில் இடது-கை ஓட்டுவது பிரபலமானது. ஏனென்றால் அப்படி ஓட்டுவதால் முன்னே வரும் வாகனங்கள் தெளிவாக தெரிந்ததால், முந்தி செல்வது இன்னும் பாதுகாப்பானது.
ஆட்டோ யூனியன் காலம்
1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் DKW ன் உரிமையாளரான யோர்கன் ராஸ்முஸன், ஆடிவெர்க் AGன் பெரும்பாலான பங்குகளை வாங்கினார். அதே வருடத்தில், ராஸ்முஸன் US வாகன தயாரிப்பாளர் ரிக்கன்பேக்கரின் எட்டு கலன் இயந்திரங்களை செய்வதற்கான உற்பத்திக் கருவி உட்பட, ரிக்கன்பேக்கரில் மீதமுள்ளவைகளை வாங்கிக்கொண்டார். இந்த இயந்திரங்கள் 1929 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி ஸ்விக்காவ் மற்றும் ஆடி டிரெஸ்டன் வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் ஆறு கலன் மற்றும் நான்கு கலன் (பூஜோவிடமிருந்து உரிமம் பெறப்பட்டது) வடிவங்கள் தயாரிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்திலான ஆடி கார்கள் அதி சொகுசானவைகளாகவும் சிறப்பு வேலைப்பாடுகள் உள்ளவைகளாகவும் இருந்தன.
1932 ஆம் ஆண்டில் ஆடி ஹார்ச், DKW , வாண்டரர் ஆகியவற்றுடன் ஒன்றாக இணைந்து ஆட்டோ யூனியன் உருவானது. இந்தக் காலகட்டத்தின் போது தான் அந்த நிறுவனம் ஆடி ஃப்ரண்ட் என்ற காரை அளித்தது. முன்-சக்கரம் ஓட்டுதலுடன் ஒரு ஆறு கலன் இயந்திரத்தை சேர்த்த முதல் ஐரோப்பிய கார் இது தான். இதில் வாண்டர்ருடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட ஒரு உடல் அமைப்பு, ஆனால் செலுத்தற் தண்டு முன்னோக்கிப் பார்க்கும் வண்ணம் 180 பாகைகள் திரும்பியது.
இரண்டாம் உலகப் போருக்கு முன் இந்த நான்கு வணிகப்பெயர்களை குறிக்கும் வண்ணம், இன்றைய ஆடி சின்னத்தைக் குறிக்கும் நான்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வளையங்களை ஆட்டோ யூனியன் பயன்படுத்தியது. இந்த சின்னம் அந்தக் காலகட்டத்தில் ஆட்டோ யூனியன் பந்தயக் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதில் அங்கமாயிருந்த நிறுவனங்கள் தத்தம் சொந்த பெயர்களையும் முத்திரைகளையும் பயன்படுத்தினர். தொழில் நுட்ப முன்னேற்றங்கள் அதிகமதிகமாக செறிவுற்று சில ஆடி வடிவங்கள் ஹார்ச் அல்லது வாண்டரரால் செய்யப்பட்ட இயந்திரங்களால் செலுத்தப்பட்டன.
அந்தக் காலக் கட்டத்துடைய பொருளாதார சிக்கல்களை பிரதிபலிக்கும் வகையில் 1930களில் ஆட்டோ யூனியன் சற்று சிறிய கார்களில் கவனம் செலுத்தியாது. இதனால் 1938 ஆம் ஆண்டு வாக்கில் அந்த நிறுவனத்துடைய DKW வணிகம் ஜெர்மானிய கார் சந்தையில் 17.9% பங்கை கைப்பற்றியது ஆனால் ஆடி 0.1% மட்டுமே கைக்கொள்ள முடிந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்
பெரும்பாலான ஜெர்மன் உற்பத்தி இயக்கங்களைப் போல, இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது ஆட்டோ யூனியன் தொழிற்சாலைகள் இராணுவ உற்பத்திக்காக மாற்றியமைக்கப்பட்டன. மேலும் உடனே மீதமுள்ள போர் முழுவதிலும் பலத்த குண்டு வீச்சினால் அவை பாதிக்கப்பட்டு கடுமையான சேதமடைந்தன.
ரஷிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு 1945 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் இராணுவ நிர்வாகத்தின் ஆணைகளுக்கிணங்க அவை போர் இழப்புகளுக்காகத் தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் மொத்த சொத்துகளும் எந்த நஷ்ட ஈடும் இல்லாமல் சொத்துப்பறிப்பு செய்யப்பட்டன. ஆகஸ்ட் 17 1948 அன்று செம்னிட்ஸின் ஆட்டோ யூனியன் AG, வர்த்தக பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இந்த செயல்களால் ஜெர்மனியின் ஆட்டோ யூனியன் AG முடிவை எட்டும் நிலையை அடைந்தது. ஸ்விக்வா ஆடி தொழிற்சாலையின் எஞ்சிய ஆலை VEB (“மக்கள் சொந்தமாக்கப்பட்ட நிறுவனம்” என்பதற்கான ஜெர்மன்) ஆட்டோமொபில்வர்க் ஸ்விக்வா, சுருக்கமாக AWZ (ஆங்கில மொழிபெயர்ப்பு வாகன தொழிற்சாலை ஸ்விக்வா) ஆனது.
1949 ஆம் ஆண்டில் ஸ்விக்வாவின் ஆடி தொழிற்சாலை போருக்கு-முந்தைய வடிவங்களை மறுபடியும் கட்டியமைக்கத் துவங்கியது. இந்த DKW வடிவங்கள் IFA F8 மற்றும் IFA F9 என்று மறுபெயரிடப்பட்டு மேற்கு ஜெர்மனிய வடிவங்களைப் போல காணப்பட்டன. மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மன் வடிவங்கள் பாரம்பரியமான, புகழ்பெற்ற DKW இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களோடு பொருத்தப்பட்டன.
புதிய ஆட்டோ யூனியன்
மேற்கு ஜெர்மனியில் ஒரு புதிய தலைமை அலுவலகம் கொண்ட ஆட்டோ யூனியன் இங்கோல்ஸ்டாட், பவேரியாவில் துவங்கப்பட்டது. இதற்கு பவேரியா மாநில அரசாங்கமும் மார்ஷல் பிளான் எய்டும் கடன்கள் வழங்கியிருந்தன. மறுமுறை உருவாக்கப்பட்ட நிறுவனம் செப்டம்பர்-3 ,1949 அன்று துவங்கப்பட்டு, முன் -சக்கரம் ஓட்டப்படும் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களையுடைய DKW பாரம்பரியத்தைத் தொடர்ந்தது. இதில் ஒரு சிறிய ஆனால் உறுதியான 125 cc மோட்டர்சைக்கிள் மற்றும் DKW F 89 L என்ற ஒரு DKW டெலிவரி வேனுடைய உற்பத்தியும் அடங்கியது.
டெய்ம்லர்-பென்ஸின் கீழ் சற்று காலம் சொந்தம் கொண்டாடபட்டபின் 1964 ஆம் ஆண்டில் வாக்ஸ்வேகன் குழு இங்கோல்ஸ்டாடிலுள்ள தொழிற்சாலையையும் ஆட்டோ யூனியனின் வணிகக் குறி உரிமைகளையும் வாங்கினது. 1960களின் மத்தியில் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்கள் வரவேற்பை இழந்தன. ஏனென்றால் வாடிக்கையாளர்கள் சௌகரியமான நான்கு-ஸ்டிரோக் இயந்திரங்களின் பக்கம் கவர்ந்திழுக்கப்பட்டனர். 1965 செப்டம்பரில் DKW F102ல் ஒரு நான்கு-ஸ்டிரோக் இயந்திரம் பொருத்தப்பட்டது மற்றும் சில முன்பக்க மற்றும் பின்பக்க தோற்ற மாற்றங்களையும் அடைந்தது. வாக்ஸ்வேகன் DKW என்ற வணிகப்பெயர் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களோடு சம்பந்தப்படுத்தப்பட்டதால், அதை கைவிட்டனர். இந்த வடிவமும் நிறுவனத்திற்கு உள்ளே F103 என்று அழைக்கப்பட்டது, ஆனால் வெறும் “ஆடி” என்றே விற்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த வடிவங்கள், அதனுடைய குதிரைத் திறனின் தரத்தை அடிப்படையாக கொண்டு பெயரிடப்பட்டது மற்றும் 1972 ஆம் ஆண்டு வரை, ஆடி 60, 75, 80 மற்றும் சூப்பர் 90 என்ற பெயர்களில் விற்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு NSUவுடன் ஆட்டோ யூனியன் இணைந்தது. இது ஸ்டட்கார்ட்டுக்கு அருகில் உள்ள நெக்கர்சும்மில் அமைந்துள்ளது. 1950களில் மோட்டார் சைக்கிள் தயாரித்தலில் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனமாக NSU இருந்துவந்தது. ஆனால் அதற்கு பிறகு NSU பிரின்ஸ், TT மற்றும் TTS ரகம் போன்ற சிறிய கார்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த கார்கள் தொன்மையான பந்தய கார்களில், இன்னும் பிரபலமாகத்தான் உள்ளன. ஃபெலிக்ஸ் வாங்கிலின் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சுழலும் இயந்திரங்களைத் தயாரிப்பதில் NSU தன்னுடைய கவனைத்தைத் திருப்பியது. 1967 ஆம் ஆண்டில் புதிய NSU Ro 80 என்பது விண்வெளி-யுக காராக இருந்தது. அக்காலத்தில், காற்றியக்கம் சார்ந்தவைகள், லேசான எடை மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்ப விவரங்களில் முன்னோடியாக இருந்தது. சுழலும் இயந்திரங்களில் ஏற்பட்ட ஆரம்பகால பிரச்சனையின் காரணத்தினால் NSU தன்னிச்சையாக இயங்க முடியாமல் போய்விட்டது. இப்போது, A6 மற்றும் A8 ஆடி வடிவங்கள், மிகவும் பெரியளவில் தயாரிக்கப்படுவதற்கு நெக்கர்சும் ஆலை பயன்படுத்தப்படுகிறது. குவாட்ரோ நிறுவனம் கூட நெக்கர்சும் தொழிற்சாலையில்தான் அமைந்துள்ளது. ஆடியின் அதிகமான திறனுடைய கார்களான R8 மற்றும் "RS" போன்ற வடிவங்களை தயாரிப்பதும், உருவாக்குவதும் இந்த நிறுவனத்தின் வேலையாக இருக்கிறது.
நடுநிலை அளவுடைய கார்களை உருவாக்குவதில், NSU கவனம் செலுத்தி வருகிறது. பின்பக்க இயந்திரமுடைய ப்ரின்ஸ் வடிவங்கள் மற்றும் வருங்காலத்தை பிரதிபலிக்கும் NSU Ro 80 ஆகியவைற்றிற்கு இடையே, ஒரு பிளவை ஏற்படுத்தும் வகையில் K70 உருவாக்கப்படுகிறது. எனினும், வாக்ஸ்வேகன் K70 யை தன்னுடைய தயாரிப்புத் தொடரில் ஏற்றுக் கொண்டதால், NSU என்ற தனியான வணிகத் தயாரிப்பு அற்றுப்போனது.
நவீன காலம்
புதிதாக இணைந்த நிறுவனம், ஆடி NSU ஆட்டோ யூனியன் AG என்று அழைக்கப்படுகிறது. போருக்கு முந்தைய காலத்திலிருந்து, முதல் முறையாக, ஆடியின் வெளிப்பாடு, ஒரு தனி வணிக சின்னமாக பார்க்கப்பட்டது. 1970 ஆம் வடிவ ஆண்டில், வால்ஸ்வாகன் ஆடியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி வைத்தது.
இந்த நிர்வாகத்தில் 1968 ஆம் ஆண்டில் ஆடி 100 தான் முதலாவதாக வந்த புதிய காராகும். 1972 ஆம் ஆண்டில் ஆடி 80/ஃபாக்ஸுடன் (1973 வால்ஸ்வாகன் பாசட் உருவாக்கப்படுவதற்கு இது அடித்தளமாக இருந்தது) இது இணைந்துக்கொண்டது. 1974 ஆம் ஆண்டில் ஆடி 50துடன் (அதற்கு பின்பு, வால்ஸ்வாகன் போலோ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது) இணைந்துக்கொண்டது. பல வழிகளில், ஆடி 50 ஒர் வித்து வடிவமாக இருந்து வந்தது. ஏனெனில் கல்ஃப்/போலோ கருத்துப்படிவம் உருவாவதற்கு இது காரணமாக இருந்தது. இது உலகத்திலேயே மிகவும் வெற்றிகரமான கார் உருவாவதற்கு வழிவகுத்தது.
இந்த நேரத்தில் ஆடியின் பேர், மாறாத ஒன்றாக இருந்தது. அதனால், அடித்தட்டு பொறியாளரான ஜோர்க் பென்சிங்கரிடமிருந்து வந்த செயற்குறிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது என்னவெனில், ஆடி செயற்திறன் கார் மற்றும் நெடுந்தூர பந்தய காருக்காக, வால்ஸ்வாகனின் இல்டிஸ் இராணுவ வாகனத்தில், நான்கு சக்கர இயக்க தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகும். "ஆடி குவார்ட்ரோ" என்று பெயரிடப்பட்ட செயற்திறன் கார், 1980 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது இரண்டு கதவுகளையுடைய சுழலி ஊட்டப்பட்ட காராகும். இது ஜெர்மனில், முதல் முறையாக அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட வாகனமாகும். இந்த வாகனம், மைய வகையீட்டின் மூலம் எல்லா சக்கரங்களும் இயங்கும் நிரந்தரத் தன்மையை கொண்டதாக உள்ளது. இது பொதுவாக "Ur-Quattro" என்று தான் அழைக்கப்படுகிறது (இந்த வார்த்தையின் முற்பகுதியான "Ur-" என்பது, ஜெர்மன்னில் மிகைப்படுத்தல் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் "ஒரிஜினல்" (அசல்) என்று அர்த்தமாகும் மற்றும் இது ஆடியின் S4 மற்றும் S6 ஸ்போர்ட் செடனின் முதல் சந்ததியை குறிப்பதாகவும் உள்ளது. இதில் "UrS4" மற்றும் "UrS6"ம் அடங்கும். இதில் ஒரு சில வாகனங்களே (இவை அனைத்தும் ஒரே ஒரு குழுவின் மூலம் கைகளினாலேயே செய்யப்பட்டவையாகும்) தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த வாகனம், நெடுந்தூர கார் பந்தயங்களில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. பந்தய கார்களின் அனைத்து-சக்கரமும் இயங்கும் மாறும்தன்மை, மிகவும் பிரபலமான வெற்றியை நிரூபித்துவிட்டது. ஆடியின் பெயர், தானியங்கி தொழில்நுட்பத்தில் உள்ள நவீனத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
1985 ஆம் ஆண்டில் ஆட்டோ யூனியன் மற்றும் NSU தரவகையும் செயலற்று போனது. ஆடி AG ஐ எளிதாக்குவதற்காக இப்போது இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான பெயர் சுருக்கப்பட்டுவிட்டது.
1986 ஆம் ஆண்டில் பேசட் வகை ஆடி 80, ஒரு "வயதான கார்" வகையாக உருவாக்க ஆரம்பிக்கும் போது, வகை 89 என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டது. முழுமையான இந்த புதிய உருவாக்கம், மிகவும் நன்றாகவே விற்கப்பட்டது. எனினும், அதன் வெளிப்புறத்தோற்றம் நவநாகரிகமாகவும் உற்சாகமூட்டக்கூடியதாகவும் இருந்து, அதன் அடித்தள இயந்திரத்தின் குறைந்த செயல்திறனை மழுப்பக்கூடிதாகவே இருந்தது. அதனுடைய அடித்தள அமைப்பு மிகவும் எளிமையாகவே இருந்தது (பயணி-பக்க கண்ணாடிக் கூட ஒரு விருப்பத்தேர்வாகவே அளிக்கப்பட்டது). 1987 ஆம் ஆண்டில் ஆடி ஒரு புதிய மற்றும் வெகு நளினமான ஆடி 90யை அறிமுகப்படுத்தினார்கள். அதில் நிலையான அம்சங்களின் அதி உயரிய அமைப்பிருந்தது. 1990 ஆம் ஆண்டின் ஆரம்பகாலங்களில், ஆடி 80 தொடரின் விற்பனை சரிய ஆரம்பித்து சில அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகள் மேலெழும்பின.
தங்களது கார்களை மோதிய பிறகு ஆடி மீது வழக்கு தொடர்ந்த ஆறு பேரின் உணர்ச்சி பூர்வமான நேர்காணல்கள் மற்றும் ஆடி 5000ல் தடுப்பு மிதியை மிதித்தவுடன் “எதிர்பாராத முடுக்கம்” ஏற்படுவதாக காட்டப்பட்ட போலியான படம் ஆகியவை ஒரு 60 நிமி ஆவணமாக காட்டப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவில் ஆடி விற்பனையில் இருந்த சரிவை மேலும் அதிகமாக்கியது. தனிப்பட்ட சோதனையாளர்கள் எந்த வித இயந்திரக் கோளாறும் இல்லை என முடிவுக்கு வந்தனர். சில அமெரிக்க கார்களை விட வேகம் அதிகரிக்கும் சாதனமும் தடுப்பு மிதியும் அருகாமையில் இருப்பதை ஓட்டுனர்கள் சரியாக கவனிக்காதது ஓரளவு காரணமாக இருக்கலாம் எனக் கருதினர். இந்த வேறுபாடு, ஐரோப்பிய ஓட்டுனர்கள் மிருதுவான குதிகால் மற்றும் முன்கால் ஓட்டும் முறைகளை விரும்புவதனால் இருக்கலாம். ஐரோப்பாவில் மிகப் பெரிய பிரச்சனையாக ஆகாததற்கு, ஐரோப்பிய ஓட்டுனர்களின் மத்தியில் மனித ஆற்றலுடன் கூடிய அதிகப்படியான அனுபவமும் கூட காரணமாக இருக்கலாம்.
இந்த அறிக்கை உடனடியாக ஆடி விற்பனையைக் குறைத்தது மற்றும் பாதிக்கப்பட்ட மாதிரி வடிவத்தின் பெயரை மாற்றினர் (மற்ற இடங்களில் உள்ளதைப் போல 1989 ஆம் ஆண்டில் 5000 100/200 ஆக மாறியது). 1990களின் இடையில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதற்கு முன் ஆடி அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறுவதைப் பற்றி கூட யோசித்தது. 1996 ஆம் ஆண்டில் A4ன் விற்பனை மற்றும் A4/A6/A8 வரிசைகளின் வெளியீடு ஆகியவை ஆடிக்கு திருப்புமுனனயாக அமைந்தது. இவை VW மற்றும் மற்ற கூட்டு நிறுவனங்களோடு இணைந்து தயாரிக்கப்பட்டது (“பிளாட்ஃபார்ம்” என அழைக்கப்படுவது).
21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆடி ஜெர்மன் பந்தய களத்தில் கலந்து கொண்டு அதி வேக தாங்காற்றல் போன்ற பல உலக சாதனைகளை நிகழ்த்தி அவற்றை தக்கவைத்துக்கொண்டது. இந்த முயற்சி, 1930களின் ‘சில்வர் ஏரோஸ்’ பந்தயங்களில் இருந்து வந்த நிறுவனத்தின் பாரம்பரியத்தை ஒட்டி அமைந்தது.
தற்போது, ஐரோப்பாவில் ஆடியின் விற்பனை அதிகப்படியாக வளர்ந்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் தொடர்ந்து 11வது முறையாக விற்பனை அதிகரித்தது, உலகெங்கும் 779,441 கார்கள் விற்பனையானது. 50 முக்கியமான விற்பனை சந்தைகளில் 21ல் சாதனை எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. மிக அதிகமான விற்பனை அதிகரிப்பு கிழக்கு ஐரோப்பா (+19.3%), ஆப்பிரிக்கா (+17.2%) மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (+58.5%) ஆகிய இடங்களிலிருந்தது. இந்தியாவில் விற்பனை அதிகப்படியாக வளர்நததால் 2005 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆடி தனது முதல் இரண்டு விற்பனை மையங்களை அமைத்தது.
இந்த தரவகையின் மற்றொரு சாதனையாக 2007 ஆம் ஆண்டின் இதன் உலகளாவிய விற்பனை 964, 151 ஆக வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் தொடர்ந்து 13வது சாதனை வருடமாக, 1,003,400 கார்கள் விற்பனை செய்து 1 மில்லியன் எல்லையை தாண்டியது.
தொழில்நுட்பம்
வாகனத்தின் உடல் பகுதி
அரித்தலை தவிர்க்க 100% வெள்ளியம் பூசப்பட்ட கார்களை ஆடி தயாரிக்கிறது. இந்த முறையை போர்ஷே நிறுவனம் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய பிறகு முதன் முதலில் அதனை செய்த பெரிய சந்தை வாகனம் இது தான். மற்ற தடுப்பு நடவடிக்கைகளுடன் முழு மேற்பரப்பில் உள்ள துத்தநாக மேற்பூச்சு துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாப்பதில் மிக பயனுள்ளதாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நிலைப்பு தன்மை ஆடியின் எதிர்பார்ப்பையே மிஞ்சியதால், முதலில் அளிக்கப்பட்ட 10 வருட துருப்பிடித்தலில் இருந்து உத்தரவாதத்தை தற்போது 12 வருடமாக நீடித்துள்ளது (துருப்பிடிக்காத அலுமினியம் மேற்பரப்புகளுக்குத் தவிர).
முழுவதுமாக அலுமினியத்தால் ஆன காரை ஆடி நிறுவனம் கொண்டுவந்தது. 1994 ஆம் ஆண்டில் அலுமினிய இடைவெளி சட்டக தொழிநுட்பத்தை (ஆடி ஸ்பேஸ் ஃபிரேம் என அழைக்கப்படுகிறது) கொண்ட ஆடி A8ஐ அறிமுகப்படுத்தியது. தொண்ணூறுகளின் நடுவில் ஆடி பல புதிய வரிசை வாகனங்களை அறிமுகப்படுத்தியது மற்றும் தொடர்ந்து முதன்மையான தொழில்நுட்பம் மற்றும் உயரிய செயல்திறனை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இந்த முயற்சிக்கு முன், இந்த தொழில்நுட்பத்தைப் பரிசோதனை செய்ய ஆடி வகை 44ஐ சேர்ந்த அலுமினியத்தால் மேற்பூச்சு செய்யப்பட்ட அடிச்சட்டங்களை உதாரணங்களாக உபயோகித்தது.
ஓட்டும் முறை
வாக்ஸ்வேகன் யுக மாதிரிகளுக்குப் பின்னர் தனது இரண்டு நீண்ட-நாள் போட்டியாளர்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMW ஆகியவை விரும்பும் பாரம்பரிய பின்சக்கர ஓட்டு முறையை உபயோகிக்க திட்டவட்டமாக மறுத்தது. இதற்கு பதிலாக முன் சக்கர ஓட்டு முறை அல்லது நான்கு சக்கர ஓட்டு முறையை விரும்பியது. இதை அடைவதற்காக, ஆடி தனது கார்களை, அச்சாணிக்கு முன்னால், முன் சக்கரங்களில் மேல், “மேல்தொங்கும்” முறையில், நீளவாக்கில் முன்புறத்தில் பொருத்தப்பட்ட இயந்திரம் இருப்பது போல வடிவமைத்தது. இதனால் நான்கு சக்கர ஓட்டு முறையை எளிதாக பின்பற்ற முடிந்தாலும், சரியான 50:50 எடை விநியோகம் (அனைத்து முன் சக்கர ஓட்டு முறை உள்ள கார்களில் இருப்பதுபோல) இல்லாமல் போகின்றது.
A3 மற்றும் TT போன்ற மாதிரிகளுக்கு குவாட்ரோ பேட்ஜை ஆடி அண்மையில் பயன்படுத்தியுள்ளது. இந்த மாதிரிகள் முந்தைய ஆண்டுகளில், இயந்திரம் சார்ந்த மைய வகையீடுகளை பயன்படுத்தியது போன்று டார்சன் அடிப்படையிலான கருவியை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, சுவீடன் நாட்டு ஹால்டெக்ஸ் இழுவை மின் இயந்திர கிளட்ச் 4WD கருவியை பயன்படுத்துகிறது.
இயந்திரங்கள்
1980களில் பாரம்பரியமான 6 கலன் இயந்திரங்களுக்கு பதிலாக, அதிகமாக உழைக்கும் உட்வரிசை 5 கலன் 2.1/2.2L இயந்தியங்களை உபயோகிப்பதில் ஆடி வோல்வோவுடன் இணைந்து தலைசிறந்த நிறுவனங்களாக விளங்கின. இந்த இயந்திரம் அவர்களது பொது கார்களில் மட்டும் இல்லாமல் பந்தய கார்களிலும் பொருத்தப்பட்டது. 1980களில் இந்த 2.1 L உட்வரிசை 5 கலன்கள் கொண்ட இயந்திரங்கள் பந்தய கார்களுக்கு அடிப்படையாக உபயோகப்படுத்தப்பட்டது. இது மாற்றங்களுக்குப் பிறகு 400 குதிரைத் திறன் (298 KW) வரை அளித்தது. 1990 ஆம் ஆண்டுக்கு முன் 2.0L மற்றும் 2.3L இடையே இடப்பெயர்ச்சி உடைய இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டது. இந்த வகையிலான இயந்திர சக்தி, எரிபொருள் சிக்கனம் (1980களில் இருந்த அனைத்து வாகன ஓட்டிகளின் மனதிலும் இருந்தது) மற்றும் அதிக வலிமையைக் கொடுக்கும் நல்ல இணைப்பாக இருந்தது.
சொகுசு போட்டியாளர்கள்
1990களின் தொடக்கத்தில் ஆடி நிறுவனம், உலகளாவிய சொகுசு கார் நிறுவனங்களில் முதன்மையாக இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMWக்கு சரியான போட்டியாளராக சந்தையில் உருவெடுத்தது. இந்த நிலை 1990 ஆம் ஆண்டில் ஆடி V8 வெளியிட்ட பிறகு உருவானது. இது ஆடி 100/200ன் மேற்பரப்பில் சில வேறுபாடுகளைச் செய்து ஒரு புது இயந்திரத்தைப் பொருத்தப்பட்டதாகும். மிகத் தெளிவான மாறுதல் முன் பகுதியில் பொருத்தப்பட்ட ஒரு புதிய கம்பிக் கதவாகும்.
1991 ஆம் ஆண்டில் ஆடியிடம் 4 கலன்கள் கொண்ட ஆடி 80, 5 கலன்கள் கொண்ட ஆடி 90 மற்றும் ஆடி 100, சுழலி ஊட்டப்பட்ட ஆடி 200 மற்றும் ஆடி V8 ஆகியவை இருந்தன. 4 மற்றும் 5 கலன் இயந்திரம் பொருத்தப்பட்ட இரண்டு கதவுகள் கொண்ட சிறிய காரும் இருந்தது.
ஐந்து கலன்கள் கொண்ட இயந்திரம் மிக வெற்றிகரமான மற்றும் திடமான வலிமை உடையதாக இருந்தாலும் அது இலக்கு சந்தையில் சற்று வித்தியாசமாகவே இருந்தது. 1992 ஆம் ஆண்டில் முற்றிலும் புதிய ஆடி 100 அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஒரு 2.8L V6 இயந்திரத்தையும் ஆடி அறிமுகப்படுத்தியது. இந்த இயந்திரம் முன் புறம் சற்று தூக்கப்பட்ட ஆடி 80லும் பொருத்தப்பட்டு (அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் தற்போது 80 என்று பெயர் அளிக்கப்பட்ட அனைத்து 80 மற்றும் 90 மாதிரிகள்), 4,5 மற்றும் 6 கலன் இயந்திரத் தேர்வுகளும், சலூன்/செடான், இரு கதவுகள் கொண்ட சிறிய கார் மற்றும் காபிரியோலே பாணிகளும் இந்த மாதிரிகள் கிடைக்கப்பெறுவதாக இருந்தன.
விரைவில் இந்த 5 கலனும் முக்கிய இயந்திரத் தேர்வாக இல்லாமல் கைவிடப்பட்டது: ஆயினும், சுழலி ஊட்டப்பட்ட 230 குதிரைச் சக்தி வடிவம் நிலைத்திருந்தது. 1991ன் 200 குவாட்ரோ 20 Vல் முதலில் பொருத்தப்பட்ட இயந்திரம் விளையாட்டு குவாட்ரோவில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் ஒரு வழிப்பொருளாகும். இது ஆடியின் இரு கதவு கொண்ட சிறிய காரில் பொருத்தப்பட்டு அது S2 என்றும் ஆடி 100 மேற்பரப்பில் பொருத்தப்பட்டு அது S4 என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு மாதிரிகளும் அதிகப்படியாக தயாரிக்கப்பட்ட S வரிசை செயல்திறன் கார்களுக்கான தொடக்கமாக அமைந்தது.
இடைவெளி சட்டகம்
1994 ஆம் ஆண்டில் எடையைக் குறைப்பதற்காக “ஆடி இடைவெளி சட்டகம்” என அழைக்கப்படும். அலுமினிய இடைவெளி சட்டகத்தோடு வந்த ஆடி A8, V8க்கு பதிலாக கொண்டு வரப்பட்டது. குவாட்ரோ நான்கு சக்கர ஓட்டு முறை இந்த எடை குறைப்பை ஈடு செய்தது. இதன் காரணமாக இந்த கார் தனது போட்டியாளர்களைப் போன்ற செயல்திறன் கொண்டிருந்தது. ஆனால் அவர்களை விட அதிகப்படியான சாலை பிடிமானத்தைக் கொண்டிருந்தது. ஆடி A2 மற்றும் ஆடி R8 ஆகிய வாகனங்களும் ஆடி இடைவெளி சட்டக வடிவங்களை உபயோகித்தன.
ஆடி A2
ஆடி A2 என்பது A12 கருத்திலிருந்து பிறந்த, வருங்காலத்தின் மிகத் திறமையான சிறிய வடிவத்தை கொண்டதாக உள்ளது. பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்த தொழில்நுட்பத்தில் முதல் இடத்தை இதில் உள்ள பல புதிய சிறப்பம்சங்கள் ஆடிக்கு வழங்கியது. உதாரணமாக கார் வடிவ தயாரிப்புக்களிலேயே முதன் முறையாக அலுமினியம் இடைவெளி சட்டகம் உபயோகிக்கப்பட்டது. ஆடி A2வில் விலைக் குறைவான மூன்று கலன் இயந்திரத்தை உபயோகித்து, ஆடி மேலும் தனது TDI தொழில்நுட்பத்தை விரிவாக்கியது. A2 மிகுந்த காற்றியக்க கட்டுப்பாடுடையது மற்றும் ஒரு காற்றுப்புழையை சுற்றி உருவாக்கப்பட்டது. அதிக விலையின் காரணத்தினால், ஆடி A2 குறைகூறப்பட்டது. விற்பனையின் அடிப்படையில் வெற்றியடையவில்லை, ஆனால் இது ஆடியை ஒரு சிறந்த தயாரிப்பாளராக நிலைநிறுத்தியது.
ஆடி A4
ஆடி 80க்கு பதிலாக ஆடி A4 கொண்டு வரப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அடுத்த முக்கியமான வடிவ மாற்றமாகும். புதிய பெயரிடும் முறை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆடி 100, ஆடி A6 ஆக மாறியது (ஒரு சிறிய மாற்றத்துடன்). இதனால் S4, S6 ஆனது மற்றும் A4ன் மேற்பரப்பில் புதிய S4 அறிமுகப்படுத்தப்பட்டது. S2 நிறுத்தப்பட்டது. இயந்திர வளர்ச்சிகளோடு 1999 ஆம் ஆண்டு வரை ஆடி காப்ரியோலே (ஆடி 80இன் களத்தின் அடிப்படையில்) தொடரப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் ஒரு புதிய A3 பின்புற உயர்த்துக் கதவுமாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது (வாக்ஸ்வேகன் கோல்ஃப் MK4 களத்தின் அடிப்படையில்) மற்றும் இதே கீழ்ச்செருகல்களின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் ஆடி TT இரு கதவுகள் கொண்ட சிறிய கார் மற்றும் ரோட்ஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் A-பிரிவுக்கு போட்டியாக மற்றொரு சுவாரஸ்யமான மாதிரியான ஆடி A2 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை, ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையானது. ஆயினும், 2005 ஆம் ஆண்டில் இது நிறுத்தப்பட்டது மற்றும் ஆடி உடனடியாக ஒரு மாற்று வடிவத்தை தயாரிப்பதில்லை என முடிவெடுத்தது.
தற்போது கிடைக்கப்பெறக் கூடியதாக இருக்கும் இயந்திரங்களாவன: 1.4L, 1.6L மற்றும் 1.8L 4 கலன்கள், 1.8L 4-சுழலூட்டப்பட்ட கலன், 2.6L மற்றும் 2.8L V6, 2.2L சுழலூட்டப்பட்ட 5 கலன்கள் மற்றும் 4.2L V8 இயந்திரம் 1998 ஆம் ஆண்டில் வலிமை, முறுக்குத் திறன் மற்றும் மென்மை ஆகியவை அதிகரிக்கப்பட்ட 2.4L மற்றும் புதிய 2.8L 30V V6 ஆகியவை V6க்கு பதிலாக கொண்டுவரப்பட்டது. 3.7L V8 மற்றும் A8க்கான 6.0L W12 இயந்திரமாகும். மேலும் பல இயந்திரங்கள் வந்து கொண்டிருந்தன.
நேரடி மாற்று பல்சக்கரப்பெட்டி
நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு வகையான இரட்டை கிளட்சு வெளியீடுடைய நேரடி மாற்று பல்சக்கரப்பெட்டியை (DSG) வாக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியது. இது ஒரு வழக்கமான தானியங்கி வெளியீடு போல ஓட்டக்கூடிய தானியங்கு ஓர் அரை-தானியங்கி வெளியீடாகும் குழு B S1ல் இருக்கும் பல்சக்கரப் பெட்டியின் அடிப்படையில், இந்த முறையில் முறுக்குத்திறன் மாற்று கருவிக்கு பதிலாக இரண்டு மின்திரவாற்றலால் கட்டுப்படுத்தப்பட்ட கிளட்சுகள் அடங்கும். இது, DSG S-டிரோனிக் என்று அழைக்கப்படும் சில VW கோல்ஃப்கள், ஆடி A3 மற்றும் TT மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது.
எரிபொருள் படுகை உட்செலுத்துதல்
பழைய 1.8லிட்டர் இயந்திரங்களுக்கு பதிலாக தற்போது புதிய எரிபொருள் படுகை உட்செலுத்து (FSI) இயந்திரங்கள் வந்த பின்னர், புதிய A3, A4, A6 மற்றும் A8 மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கீழே குறிப்பிடப்பட்டவை உள்ளிட்ட இந்த வகைக்குள் அடங்கும் அனைத்து பெட்ரோல் இயந்திர மாதிரிகள், இந்த எரிபொருள் சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது:
கேஸோலின் இயந்திரங்கள்:
1.6 லிட்டர் 4 கலன்
2.0 லிட்டர் 4 கலன் (TSI பொறிகளுக்கு வழியை ஏற்படுத்தும் வகையில் இந்த பொறிகள் மெதுவாக பயன்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன கீழே உள்ள பிரிவைப் பார்க்கவும்)
2.0 லிட்டர் சுழலி ஊட்டப்பட்ட 4 கலன்
2.0 லிட்டர் சுழலி ஊட்டப்பட்ட 4 கலன்
2.5 லிட்டர் சுழலி ஊட்டப்பட்ட 5 கலன்
3.0 லிட்டர் சூப்பர்ச்சார்ஜ்டு v6 -
3.2 லிட்டர் V6
4.2 லிட்டர் V8
4.2 லிட்டர் V8
5.2 லிட்டர் V10 -
5.2 லிட்டர் V10 525 bhp
5.2 லிட்டர் இருசெயற்திறன் கொண்ட V10
6.0 லிட்டர் W12
ஆடி தரவகையின் தயாரிப்புகளில், விற்பனையில் உள்ள மற்ற இயந்திரங்களாவன:
1.4 4 கலன்
1.4 லிட்டர் TDI 3 கலன்
1.4 லிட்டர் TDI 3 கலன்
1.6 லிட்டர் 4 கலன்
1.9 லிட்டர் TDI 4 கலன்
2.0 லிட்டர் TDI 4 கலன்
2.0 லிட்டர் TDI 4 கலன்
2.5 லிட்டர் TDI V6 (110 kW )
2.7 லிட்டர் TDI V6
3.0 லிட்டர் TDI V6
4.2 லிட்டர் TDI V8
6.0 லிட்டர் TDI V12 /1750 rpm
(எல்லா TDI மாதிரிகளும் சுழலி ஊட்டப்பட்ட டீசல் இயந்திரங்களை உடையதாக உள்ளது.)
மின் தொழில்நுட்பம்
ஆடி ஜெப்பானின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமான சான்யோவுடன் வாக்ஸ்வேகன் குழுமத்திற்காக ஒரு முன்னோடியான கலப்பின மின் திட்டத்தில் கூட்டமைப்பை திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த கூட்டமைப்பினால் வருங்கால வாக்ஸ்வேகன் குழுமத்தின் மாதிரிகளில் சான்யோ மின்கலங்கள் (பாட்டரிகள்) மற்றும் மற்ற மின் உபகரணங்கள் பயன்படுத்தப்படக் கூடும்.
பின்வருவன கலப்பின மின் வாகனங்களில் உட்படும்:
ஆடி A1 ஸ்போர்ட்பேக் (விளையாட்டு) மாதிரி
ஆடி A4 TDI மாதிரி E
முழு-மின் வாகனங்கள்:
ஆடி ஈ- ட்ரான் கான்செப்ட் சூப்பர்கார்
LED பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள்
2006 ஆம் ஆண்டு துவக்கி, ஆடி பகல் நேரங்களில் எரியும் விளக்குகளை தங்களுடைய வாகனங்களில் கொண்டு வந்தார்கள். இதில் ஆடி வெள்ளை LED தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். DRLகளின் தனித்தன்மைவாய்ந்த வடிவம் ஆடிக்கு ஒரு வணிகத்தனித்தன்மையை அளித்திருக்கிறது. இந்த பாணி முதல் முறையாக R8ல் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிலிருந்து அதனுடைய அனைத்து மாதிரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பல்லூடக இடை இணைப்பு
ஆடி அண்மையில் அதனுடைய கார்களுக்கு ஒரு கணிணி வழி கட்டுப்படுத்தும் அமைப்பை அளிக்கத் துவங்கியுள்ளது. இது பல்லூடக இடை இணைப்பு (MMI) என்றழைக்கப்படுகிறது. BMWவின் ஐடிரைவ் கட்டுப்படுத்தும் அமைப்பு மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் இது வந்தது. இது உண்மையில் ஒரு சுழலும் கட்டுப்படுத்தும் திருகியும் ‘பகுதிப்படுத்தப்பட்ட’ பொத்தான்களுள்ள ஒரு அமைப்பு அவ்வளவு தான். இந்த அமைப்பு அனைத்து உள்-கார் பொழுதுபோக்கு கருவிகளை (வானொலி, CD சேஞ்சர், ஐபாட், TV ட்யூனர்) செயற்கைக்கோள் வழிநடத்துதல், சூடாக்குதல் மற்றும் காற்றோட்டத்தை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. BMWவின் ஐடிரைவை விட கணிசமாக மேம்படுத்தப்பட்டதாக பரவலாக அறிவிக்கப்பட்டது. எனினும், அதிலிருந்து BMW தன்னுடைய ஐடிரைவில் பயன்படுத்துவர் விருப்பத்திற்கேற்ற அதிக முன்னேற்றங்களைச் செய்துள்ளது.
MMIயில் நடுவில் உள்ள திருகியைச் சுற்றி பகுதிப்படுத்தப்பட்ட பொத்தான்கள் இருப்பதால் மென்யுவில் (முக்கிய பட்டியலில்) அதிக நேரம் தேடவேண்டிய அவசியம் குறைகிறது. மேலும், இதில் ‘முக்கிய செயற்பாட்டிற்கு’ நேரடியாக செல்லக்கூடிய பொத்தான்களும் வானொலி அல்லது தொலைபேசி இயக்கங்களுக்கு குறுக்குவழிகளும் இருக்கிறது. இத்தகைய அம்சங்கள் இருப்பதால், MMI பொதுவாக நன்றாகவே வரவேற்கப்பட்டிருக்கிறது. திரையானது பல வண்ணத்திலோ ஒரு வண்ணத்திலோ எந்த வகையாக இருந்தாலும் செங்குத்தான டேஷ்போர்டில் (கட்டுப்பாட்டகம்) நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் A4 (புதிய), A5, A6, A8, மற்றும் Q7 மாதிரிகளில் இந்த கட்டுப்பாட்டு பொத்தான்கள் கிடை மட்ட வாக்கில் உள்ளன.
கேட்டல் வழிநடத்துதல் அமைப்பு (ஆடியோ நேவிகேஷன் ஸிஸ்டம்) (RNS-E) உடன் செயற்கைக்கோள் வழிநடத்தும் அமைப்பிருக்கும்போது A3, TT, A4 (B7), மற்றும் R8 மாதிரிகளிலும் ஒரு “MMI-போன்ற” அமைப்பு காணப்படுகிறது.
தற்போதைய மாதிரிகள்
S மாதிரிகள்
RS மாதிரிகள்
குறிப்பு: இது தொடரப்படாத மாதிரிகளைச் சேர்க்கவில்லை
மோட்டார் விளையாட்டுகள்
ஆடி, பல வகையான மோட்டார் விளையாட்டுகளில் கலந்துகொண்டுள்ளது. மோட்டார் விளையாட்டில் ஆடியின் உயரிய பாரம்பரியம், அதன் முந்தைய நிறுவனமான ஆட்டோ யூனியனிலிருந்து 1930களில் தொடங்கியது. 1990களில், வட அமெரிக்காவின் சுற்று பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு ஆடி மோட்டார் பந்தயத்தின் டூரிங் மற்றும் சூப்பர் டூரிங் வகைகளில் ஆதிக்கம் செலுத்தியது.
பந்தயம்
1980 ஆம் ஆண்டில் ஆடி ஒரு சுழலூட்டப்பட்ட நான்கு சக்கர ஓட்டு முறை கொண்ட குவாட்ரோவை வெளியிட்டு அதன் மூலம் பல உலக அளவில் திரளணிகள் மற்றும் பந்தயங்களை வென்றது. போட்டிப் பந்தயங்களில் நான்கு சக்கர ஓட்டு முறையை உபயோகிக்கலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்ட பின்னர் அதனை முதலில் உபயோகித்த காரணத்தினால் இது அனைத்து காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பந்தயக் காராகக் கருதப்படுகிறது. இவை எடை மிகுந்ததாகவும், சிக்கலானதாகவும் இருப்பதால் பல திறனாய்வாளர்கள் நான்கு சக்கர ஓட்டு முறை பந்தய ஓட்டுனர்களின் நிலைக்கும் தன்மையை சந்தேகித்தனர் ஆயினும் குவாட்ரோ வெற்றி பெற்ற காரானது. முதல் திரளணியில் முதன்மை பெற்று இருக்கும் சாலையை விட்டு வெளியேறினாலும், பந்தய உலகுக்கு 4WD தான் வருங்காலத்தில் இருக்கப் போகிறது என்பதை பறைசாற்றியது. உலக திரளணி வகையகத்தில் குவாட்ரோ மேலும் வெற்றிகளை ஈட்டியது. 1983 (ஹானு மிக்கோலா) மற்றும் 1984 (ஸ்டிக் புலோம்க்விஸ்ட்) ஆகிய ஓட்டுனர் பட்டங்களை வென்றது. 1982 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் இதன் மூலம் ஆடி சிறந்த தயாரிப்பாளருக்கான பட்டத்தையும் வென்றது.
1984 ஆம் ஆண்டில் மோண்டே கார்லோ மற்றும் ஸ்வீடன் நாட்டின் திரளணி பந்தயங்களில் ஆதிக்கம் செலுத்திய சிறிய சக்கர அடித்தளமுடைய விளையாட்டு குவாட்ரோவை அறிமுகப்படுத்தி இந்த பந்தயங்களில் அனைத்து இடங்களையும் பிடித்தது. ஆனால் தொடர்ந்து WRCல் கலந்துக்கொள்ளும் போது பிரச்சனைகளுக்கு உள்ளானது. 1985 ஆம் ஆண்டில், பல சுமாரான முடிவுகளுக்குப் பின்னர் வால்டர் ரோல் தனது விளையாட்டு வகை குவாட்ரோ S1ல் பருவத்தை முடித்து, ஆடியை தயாரிப்பாளர் புள்ளிகளில் இரண்டாம் இடத்திற்குச் செல்ல உதவினார். ஆடிக்கு திரளணி பாராட்டுகள் அதே வருடத்தில் ஹாங்காங்கில் இருந்து பீஜிங் செல்லும் திரளணியிலும் கிடைத்தது. ஆடியும் ஓட்டுனரும், உலக திரளணி பந்தயத்தில் ஒரு சுற்றை வென்ற ஒரே பெண் ஓட்டுனரனுமான மிஷேல் மௌடன், தற்போது வெறும் S1 என்று அழைக்கப்பட்ட விளையாட்டு வகை குவாட்ரோ S1 காரில் பைக்ஸ் பீக் சர்வதேச மலை ஏறும் பந்தயத்தில் பங்கு பெற்றார். இந்த மலை ஏறும் பந்தயத்தில் கொலரேடோவில் உள்ள 4,302 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏற வேண்டும். 1985 ஆம் ஆண்டில் மிஷேல் மௌடன் ஒரு புதிய உலக சாதனையான 11:25.39 ஐ நிகழ்த்தி, இதன் மூலம் பைக்ஸ் பீக் சாதனை புரிந்த முதல் பெண்மணியானார். 1986 ஆம் ஆண்டில் போர்சுகலில், ஓட்டுநரான ஜோகுவிம் சாண்டோஸ், தனது ஃபோர்டு RS200 தொடர்புடைய விபத்தைத் தொடர்ந்து ஆடி சர்வதேச திரளணி பந்தயங்களில் இருந்து விலகியது. சாண்டோஸ் சாலையில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது பந்தய வழியை விட்டு விலகி பார்வையாளர் பக்கத்தில் புகுந்ததனால் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். பாபி அன்சர் அதே வருடத்தில் ஒரு ஆடியை உபயோகித்து பைக்ஸ் பீக் மலை ஏற்றத்தில் ஒரு புதிய உலக சாதனையான 11:09.22ஐ நிகழ்த்தினார்.
1987 ஆம் ஆண்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பே WRCல் இருந்து ஓய்வு பெற்ற தனது ஆடி S1ல் வால்டர் ரோரல் ஒரு புதிய பைக்ஸ் பீக் சர்வதேச மலை ஏறும் சாதனையான 10:47.85ஐ நிகழ்த்தி ஆடிக்கு பட்டத்தை வென்றார். தனது கடைசி மாதிரியில் கால சோதனை செய்யப்பட்ட, சுழலூட்டப்பட்ட உள்வரிசை ஐந்து கலன்கள் கொண்ட ஆடி இயந்திரத்தை ஆடி S1ல் உபயோகிக்கப்பட்டது. இந்த இயந்திரம் ஆறு வேக முறைகள் கொண்ட பல் சக்கரப் பெட்டியுடன் பிரபலமான ஆடியின் நான்கு சக்கர ஓட்டு முறையையும் கொண்டிருந்தது. இந்த காரை ஓட்டிய, ஆடியின் அனைத்து சிறந்த ஓட்டுனர்கள்: ஹானு மிக்கோலா, ஸ்டிக் புலோம்க்விஸ்ட், வால்டர் ரோல் மற்றும் மிஷேல் மௌடன். இந்த ஆடி S1 ஆடியின் 'S' கார்களுக்கு தொடக்கமாக அமைந்து தற்போது இது முக்கிய வரிசை ஆடி மாதிரி வகைகளோடு அதிகமான விளையாட்டு செயல்திறனுடைய கருவிகளுக்கான சான்றாகவும் அமைகிறது.
அமெரிக்காவில்
ஆடி நெடுந்தூர பந்தயத்திலிருந்து சுற்றோட்ட பந்தயத்திற்கு வந்த போது, அவர்கள் முதலில் அமெரிக்காவில் டிரான்ஸ்-ஆம் உடன் 1988 ஆம் ஆண்டு நுழைய முடிவு செய்தார்கள்.
1989 ஆம் ஆண்டு, ஆடி 90 என்ற மாதிரியுடன் ஆடி நிறுவனம் சர்வதேசிய மோட்டார் விளையாட்டு நிறுவனத்தின் (IMSA) GTOவிற்கு வந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றும், இரண்டு நீடித்து உழைக்கும் திறம் நிகழ்ச்சிகளை (டேடோனா மற்றும் செப்ரிங்க்) தவிர்த்ததால் அவர்கள் வெற்றிவாகையை இழந்தார்கள்.
சுற்றுப்பயணக் கார்கள்
1990 ஆம் ஆண்டில், வட அமெரிக்காவில் தங்களுடைய கார்களை சந்தைப்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளை அடைந்துவிட்டு, ஆடி ஐரோப்பாவிற்குத் திரும்பினார்கள். இந்த முறை முதலாக ஆடி V8 உடன் Deutsche Tourenwagen Meisterschaft (DTM) தொடருக்கு திரும்பினார்கள். புதிய தேவைகளுக்கேற்ப கார்களை தயாரிக்க முடியாமல், 1993 ஆம் ஆண்டில் தொடர் தேசிய போட்டிகளை உள்ளடக்கிய அதிவேகமாக வளர்ந்து வரும் சூப்பர் டூரிங்க் தொடரின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். ஆடி முதலில் ஃப்ரென்ச் சூப்பர்டூரிஸம் மற்றும் இத்தாலியன் சூப்பர்டுரிஸ்மோவில் நுழைந்தார்கள். அடுத்த வருடம், ஆடி ஜெர்மன் சூப்பர் டூரன்வேகன் கோப்பைக்கு (STW என்றழைக்கப்படுவது) சென்றது. அதனையடுத்து பிரிட்டிஷ் டூரிங்க் கார் போட்டிக்கு (BTCC) சென்றது.
Fédération Internationale de l'Automobile (FIA) குவாட்ரோ நான்கு சக்கர ஓட்டும் அமைப்பை முறைப்படுத்துவதிலும், போட்டியாளர்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் எதிர்கொண்டதால், 1998 ஆம் ஆண்டில் அனைத்து நான்கு சக்கர ஓட்டும் அமைப்பு கார்களையும் போட்டியிடுவதிலிருந்து விலக்கியது. ஆனால் அதற்குள் ஆடி தங்களுடைய அனைத்து வேலைப் பணிகளையும் விளையாட்டு கார் பந்தயத்திற்கு நேர்முகப்படுத்திவிட்டார்கள்.
2000 ஆம் ஆண்டு வரும்போது, ஆடி தொடர்ந்து அமெரிக்காவில் தன்னுடைய RS4ஐக் கொண்டு SCCA ஸ்பீட் வர்ல்ட் GT சேலஞ்சில் பங்கேற்றது. டீலர்/ அணி சேம்பியன் ரேசிங்க் மூலமாக போட்டியிடுவதால் கோர்வே, வைப்பர் மற்றும் சிறிய BMWகளுடன் (இந்த தொடர் மட்டுமே 4WD கார்களை அனுமதிக்கிறது) போட்டியிட்டது. 2003 ஆம் ஆண்டில், சேம்பியன் ரேசிங்க் ஒரு RS6ஐ அறிமுகப்படுத்தியது. மறுபடியும் குவாட்ரோ நான்கு சக்கரம் ஓட்டுதல் அதிக திறனுள்ளதாக இருந்து, சேம்பியன் போட்டியை ஆடி வென்றது. 2004 ஆம் ஆண்டு திரும்பவும் வந்து தங்களுடைய வெற்றிவாகையை தக்கவைத்துக்கொள்ள திரும்பி வந்தனர். ஆனால் காடிலாக் தங்களுடைய புதிய ஒமேகா சாஸிஸ் CTS-Vஐ அறிமுகப்படுத்தி ஆடிக்கு பலமான போட்டியை அளித்தது. நான்கு முறை தொடர்ந்து வெற்றிவாகை சூடினபின்பு, ஆடியில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த மாற்றங்கள் காருடைய செயற்திறனில் தாக்கம் ஏற்படுத்தின. கூடுதல் சரளை எடைகள் மற்றும் வித்தியாசமான டையர்கள் மற்றும் சுழல் ஊட்டலின் உந்து அழுத்தத்தை குறைத்தல் போன்ற மாற்றங்களை சேம்பியன் ஆடி செய்தது.
உயிரூட்டப்பட்ட DTM தொடரில் TT-Rஉடன் பல வருடங்கள் தனியார் அணியான ஏப்ட் ரேசிங்குடன்/கிறிஸ்டியான் அபட் 2002கோப்பையை வென்றார் (லாரண்ட் எயிலோவுடன் போட்டியிட்டப்பின் ஆடி 2004 ஆம் ஆண்டில் இரண்டு தொழிற்சாலை ஆதரவுபெற்ற ஜோஎஸ்ட் ரேஸிங்க் A4 DTM கார்களை நுழைத்து ஒரு முழு தொழிற்சாலை முனைப்பாக திரும்ப வந்தது.
விளையாட்டு கார் பந்தயம்
1999ம் ஆண்டு தொடங்கி, ஆடி விளையாட்டு கார் பந்தயத்தில் போட்டியிடுவதற்காக ஆடி R8Rஐயும் (ஓட்டுநர் இடம்-திறந்தவெளி ‘சாலை’ மாதிரி) ஆடி R8Cஐயும் (ஓட்டுநர் இடம்-மூடப்பட்ட 'coupé' GT-மாதிரி) அறிமுகப்படுத்தினார்கள். இதில் 24 மணி நேர லெமான்ஸ் போட்டியில் கலந்துக்கொள்வதற்கான லெமான்ஸ் முன்மாதிரி LMP900ம் அடங்கும். 2000ம் ஆண்டின் பந்தய காலத்தின் போது, ஓட்டுநர் இடம்-திறந்தவெளி மாதிரிகளுக்கான சாதகமான விதிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஆடி தன்னுடைய புதிய ஆடி R8 மாதிரியில் கவனம் செலுத்தியது. தொழிற்சாலை-ஆதரிக்கப்பட்ட ஜோஎஸ்ட் ரேஸிங்க் அணி ஆடி R8ஐக் கொண்டு லெமான்ஸ்சில் மூன்று முறை (2000 — 2002) தொடர்ந்து வெற்றிபெற்றது. அதனோடு அதன் முதல் வருடத்தில் அமெரிக்க லெமான்ஸ் தொடரின் ஒவ்வொரு போட்டியையும் வென்றது. ஆடி அந்த காரை சேம்பியன் ரேஸிங்க் போன்ற வாடிக்கையாளர் அணிகளிடமும் விற்றது.
2003 ஆம் ஆண்டில் ஆடியால் வடிவமைக்கப்பட்ட இயந்திரப் பொறிகளையுடைய இரண்டு பெண்ட்லி ஸ்பீட் 8 கார்கள், உடன் பணியாற்றும் வாக்ஸ்வேகன் குழுமம் நிறுவனத்திற்கு கடனாக அளிக்கப்பட்ட ஜோஎஸ்ட் ஓட்டுநர்களால் ஓட்டப்பட்டு, GTP வகுப்பில் போட்டியிட்டு முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. சேம்பியன் ரேஸிங்க் R8 ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது, LMP900 பிரிவில் முதலிடத்தில் வந்தது. 2004 ஆம் ஆண்டின் பந்தயத்தில் ஆடி வெற்றிமேடையின் மூன்று இடங்களையும் கைப்பற்றியது: ஆடி ஸ்போர்ட் ஜப்பான் டீம் கொ முதலிடம், ஆடி ஸ்போர்ட் UK வெலாக்ஸ் இரண்டாவது இடம் மற்றும் சேம்பியன் ரேஸிங்க் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது.
2005 ஆம் ஆண்டின் 24 மணி நேர லெமான்ஸ்சில், சேம்பியன் ரேஸிங்க் இரண்டு R8களை போட்டியில் நிறுத்தியது. அதோடு ஆடி பிளேஸ்டேஷன் அணி ஒரேகாவிலிருந்து ஒரு R8ஐயும் நிறுத்தியது. இந்த R8களில் (பழைய LMP900 கட்டுப்பாடுகளுக்கிணங்க தயாரிக்கப்பட்ட இவை) ஒரு நெருக்கமான காற்று உள்வழி தடுப்பு இருந்தது. மேலும் இதன் சக்தி குறைக்கப்பட்டு, அதன் புதிய LMP1 அடித்தட்டோடு ஒப்பிடும்போது கூடுதல் எடையுடையதாயிருந்தது. சராசரியாக, R8கள் பெஸ்காரலோ-ஜட்டுடன் ஒப்பிடப்படும் போது 2 - 3 நோடிகள் பின் தங்கியிருந்தன. ஆனால் அனுபவமும் திறமையுமுள்ள ஓட்டுனர்களுள்ள அணியின் துணையால், சேம்பியன் R8ன் இரண்டு கார்களும் முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றின. ORECA அணி நான்காவது இடத்தை பிடித்தது. 1967 ஆம் ஆண்டில் கல்ஃப் ஃபோர்டின் GTக்கு பிறகு சேம்பியன் டீம் தான் லெமான்ஸ்சில் வெற்றிபெறுவதற்கான முதல் அமெரிக்க அணியாகும். இது R8ன் நீண்ட சகாப்தத்தையும் முடிக்கிறது; எனினும், 2006 ஆம் ஆண்டின் அதின் மாற்றாக, ஆடி R10 TDI என்றழைக்கப்பட்ட கார், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி வெளிக்கொண்டுவரப்பட்டது.
R10 TDIல் பல புதிய அம்சங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது, இரட்டை-சுழலூட்டப்பட்ட நேரடி உட்செலுத்துதல் டீசல் இயந்திரப் பொறியாகும். அதன் முதல் பந்தயம் 2006 ஆம் ஆண்டின் 12 மணி நேர செப்ரிங்காகும். இது 2006 ஆம் ஆண்டின் 24 மணி நேர லெமான்சிற்கு சோதனைக்களமாக இருந்தது. இந்த லெமான்ஸ்சையும் இந்த கார் வென்றது. ஆடி, விளையாட்டு கார் பந்தயத்தின் முன்னணியில் இருந்திருக்கிறது. செப்ரிங்கில் 12 மணி நேர போட்டியை வென்ற முதல் டீசல் விளையாட்டு கார் என்ற வரலாற்றுப் பெருமையையும் சம்பாதித்தது. 2006ம் ஆண்டில் R10 TDI சரித்திரம் படைத்து, அதன் ஆற்றல்களை வெளிப்படுத்தி, 24 மணி நேர லெமான்ஸ்சை வெல்வதோடு பூஜோவை 908 HDi FAPவையும் தோற்கடித்தது. 2008ம் ஆண்டில் பூஜோவை மறுபடியும் தோற்கடித்தது.
சந்தைப்படுத்துதல்
சின்னங்கள்
ஆட்டோ யூனியனின் நான்கு வணிகச்சின்னங்களைக் குறிக்கும் நான்கு பிணைந்த வளையங்களை ஆடியின் வணிகச் சின்னம் கொண்டிருக்கிறது. ஆடியின் வணிகச்சின்னம் DKW, ஹார்ச் மற்றும் வாண்டரருடன் ஆடி சேர்ந்ததைக் குறிக்கிறது: முதல் வளையம் ஆடியை, இரண்டாவது, DKWஐ, மூன்றாவது ஹார்சையும் நான்காவது இறுதி வளையம் வாண்டரரையும் குறிக்கின்றது.
ஒலிம்பிக் வளையங்களுடன் அது ஒப்பிடக்கூடியதால், 1995 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கமிட்டி ஆடியின் மீது ரோஷெஸ்டர், MN சிறிய கோரிக்கைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
ஆடியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் தன்னுடைய சின்னத்தை புதுமைப்படுத்தியது. எழுத்துருவை இடது-பக்கம் சாய்ந்த ஆடி வகை ஆக்கியது. பிணைந்த வளையங்களின் நிழல் வளைவை மாற்றியது.
கோஷங்கள்
ஆடியின் வணிக கோஷம் Vorsprung durch Technik ஆகும். இதன் அர்த்தம் “தொழில்நுட்பத்தின் மூலம் முன்னேற்றம்” என்பதாகும். ஜெர்மன் மொழியிலான இந்த கோஷம், இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்கா, ஓசியானியா மற்றும் ஜப்பான் உட்பட ஆசியாவின் சில பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு வட அமெரிக்காவில் “தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிப்பு” என்ற வணிக கோஷம் இருந்தது. ஆனால் கனடாவில் விளம்பரங்களில் Vorsprung durch Technik என்றே பயன்படுத்தப்பட்டது. இன்னும் அன்மையில், ஆடி அமெரிக்காவில் “பொறியியலில் உண்மை” என்ற வணிக கோஷமாக புதுமைப்படுத்தியிருக்கிறது.
நிதியளிப்புகள்
ஆடி பலவிதமான விளையாட்டுகளை வலுவாக ஆதரிக்கிறது. கால்பந்தாட்டத்தில், ஆடிக்கும் FC பேயர்ன் ம்யூனிக், ரியால் மாட்ரி CF, FC பார்சிலோனா, AC மிலான் மற்றும் அயாக்ஸ் ஆம்ஸ்டெர்டாம் போன்ற கிளப்புகளும் நெடுங்கால கூட்டாளிகளாக இருக்கின்றனர். ஆடி பனி விளையாட்டுகளையும் ஆதரிக்கிறது: ஆடி FIS ஆல்பைன் (ஆல்ப்ஸ் மலை சார்ந்த) பனிச்சறுக்கு உலகக் கோப்பை இந்த நிறுவனத்தின் பேரில் பெயரிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக ஆடி ஜெர்மன் பனிச்சறுக்கு அமைப்பு (DSV) மற்றும் ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், லீஷ்டென்ஸ்டைன், இத்தாலி, ஆஸ்த்ரியா மற்றும் அமெரிக்காவின் ஆல்பைன் பனிச்சறுக்கு அணிகளையும் ஆதரித்துவருகிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக ஆடி கால்ஃப் விளையாட்டை ஆதரித்துவருகிறது: உதாரணத்திற்கு ஆடி குவாட்ரோ கோப்பையும், ஹைப்போவெரியின்ஸ்பாங்க் மகளிர் ஜெர்மன் ஓப்பனும் ஆடியின் மூலம் வழங்கப்படுகிறது. பாய்மரப்படகோட்டுதலில் (செய்லிங்க்), ஆடி மெட்கப் படகுப்போட்டியில் (ரெகாட்டா) ஈடுபட்டுள்ளது. அதோடு லூயி வியுட்டன் பசிபிக் தொடரில் லூனா ரோஸா அணியையும் ஆதரிப்பதுடன், மெல்ஜஸ் 20 பாய்மரப் படகில் முதனிலை நிதியளிப்பவராகவும் இருக்கிறது. மேலும், ஆடி ERC இன்கோல்ஸ்டாட் (ஹாக்கி) மற்றும் FC இன்கோல்ஸ்டாட் (கால்பந்து) ஆகிய உள்ளூர் அணிகளையும் ஆதரிக்கிறது.
2009 ஆம் ஆண்டில், ஆடியின் 100வது ஆண்டில், முதல் முறையாக, ஆடி நிறுவனம் ஆடி கோப்பையை நடத்துகிறது. FC பேயர்ன் ம்யுனிக், AC மிலான், மான்சஸ்டர் யுனைடட் FC மற்றும் CA போக்கா ஜூனியர்ஸ் ஆகிய கிளப்புகள் இரண்டு-நாள் போட்டியில் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்.
அச்சுக்கலை
மெடாடிசைனுக்காக ஒலெ சாஃபர் 1997 ஆம் ஆண்டில் முதலில் ஆடி சான்ஸை (யுனிவெர்ஸ் எக்ஸ்டண்டடின் அடிப்படையில்) உருவாக்கினார்.
பிற்பாடு போல்ட் மண்டேயின் பால் வான் டெர் லான் மற்றும் பீட்டர் வான் ரோஸ்மாலென் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஆடி டைப் என்ற ஒரு புதிய வணிக அச்சுமுகத்தை அமுல்படுத்த மெடாடிசைன் அமர்த்தப்பட்டனர். இந்த எழுத்துரு ஆடியின் 2009 ஆம் ஆண்டின் தயாரிப்புப் பொருட்களிலும் சந்தைப்படுத்தும் பொருட்களிலும் தோன்றத் துவங்கியது.
வீடியோ கேம்களில்
பிளேஸ்டேஷன் 3ன் இணையத்தள சமூக-அடிப்படையிலான சேவையான, பிளேஸ்டேஷன் ஹோமில், ஆடி ஹோமிற்கு அதன் தியேட்டர் வடிவத்தில் நிகழ்ச்சி உருவாக்கலுக்காக உதவிபுரியும். பிற்பாடு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஹோம்ஸ்பேஸ் உண்டாக்க உதவி செய்யும். ஹோமுக்கு ஒரு ஸ்பேஸ் உண்டாக்கிய முதல் கார் வடிமைப்பாளர் ஆடியாகும். இந்த ஸ்பேஸ் “ஆடி ஸ்பேஸ்” என்றழைக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டின் பிந்தையப் பகுதியில் வெளியிடப்படும். முதலில் ஒரு ஆடி TV சேனல் வீடியோ நிகழ்ச்சிகளை வழங்குவதாக வெளியிடப்படும். 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆடியுடைய ஈ-டிரான் கருத்தாக்கத்தை முக்கியப்படுத்தும் ஒரு எதிர்கால சிறு-விளையாட்டான, சிறு-விளையாட்டு வெர்ட்டிக்கல் ரன் சேர்க்கப்படுவதற்கென விரிவாக்கப்படும். விளையாடுபவர்கள் மிக உயர்ந்த வேகம் எட்டும்போது சக்தி சேகரிக்கிறார்கள். மிகவும் வேகமான ஆட்டக்காரர்கள் ஆடி ஸ்பேஸின் மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் அமைந்திருக்கும் ஆடி அபார்ட்மெண்ட்ஸில் ஒரு இடத்தைப் பெறுகிறார்கள். கூடுதல் நிகழ்ச்சிகள் 2010 சேர்க்கப்படுமென்று ஆடி கூறியிருக்கிறது.
ஆடியின் இணையத்தள விற்பனையில் வீடியோ விளையாட்டுகளுக்கும் மெய்நிகர் உலகங்களையும் உருவாக்கும் பொறுப்பையும் கொண்ட காய் மென்சிங்க், “பெரும்பாலான இளையோர் தங்களுடைய முதல் ஓட்டும் அனுபவத்தை வீடியோ விளையாட்டுகளிலிருந்து பெறுகிறார்கள்” என்றார். “இந்த சாராரான மக்களுக்கு எங்களுடைய அதி உணர்ச்சி-ததும்பும், ஊடாடும் சூழலில், எங்களுடைய 'Vorsprung durch Technik' ஐ வெளிக்காட்டவும், எங்களுடைய மெய்நிகர் ஈ-ட்ரான் பந்தயத்துடன் தொடர்பில் கொண்டுவரவும் எங்களுடைய வணிகப்பெயருடன் அறிமுகப்படுத்தவும் ஆடி ஸ்பேஸ் உதவுகிறது.”
ஆடி TDI
2009 ஆம் ஆண்டில் ஆடி தன்னுடைய டீசல் தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஆடி மைலேஜ் நீண்டத் தூர ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கியது. இந்த ஓட்டும் நெடும் பயணத்தின் போது 4 மாதிரிகளிலிருந்து (ஆடி Q7 3.0 TDI, ஆடி Q5 3.0 TDI, ஆடி A4 3.0 TDI, S ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுடன் ஆடி A3 ஸ்போர்ட்பேக் 2.0 TDI) 23 ஆடி TDI வாகனங்கள் நியுயார்க் முதல் லாஸ் ஏஞ்சலிஸ் வரை அமெரிக்க கண்டத்தின் குறுக்கே சென்றன. இந்த 13 தினசரி கட்டங்களின் போது சிகாகோ, டல்லாஸ் மற்றும் லாஸ் வேகஸ் ஆகிய நகரங்களினூடாக இந்த கார்கள் சென்றதோடு இயற்கை அதிசயங்களான ராக்கி மலைகள், டெத் வேலி மற்றும் த கிராண்ட் கான்யன் ஆகியவற்றினூடாகவும் சென்றன.
குறிப்புகள்
புற இணைப்புகள்
கிளோபல் கார்பரேட் போர்ட்டல்
மோட்டர்ஸ்போர்ட்டில் ஆடி
ஆடியின் (ஆட்டோ யூனியன்) விற்பனை சிற்றேடு, 1939
செருமானிய தானுந்து வணிக நிறுவனங்கள்
கூகுள் தமிழாக்கம்-செருமானிய நிறுவனங்கள்
|
6160
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D
|
அங்கெலா மேர்க்கெல்
|
ஆங்கலா மேர்க்கெல் (Angela Dorothea Merkel, பிறப்பு: சூலை 17, 1954) செருமானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2005 முதல் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். இவர் 2002 முதல் 2005 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும், 200 முதல் 2018 வரை கிறித்துவ சனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவராகவும் பதவியில் இருந்தார். இவரே செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார். மேர்க்கல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடைமுறைப்படியான தலைவராகவும், உலகின் வலிமைமிக்க பெண்ணாகவும் கருதப்படுகிறார்.
ஆங்கலா மேர்க்கெல் அன்றைய-மேற்கு செருமனியில் ஆம்பர்கு நகரில் பிறந்து, குழந்தையாக இருக்கும் போதே, கிழக்கு செருமனிக்கு அவரது தந்தை லூதரனிய மதகுருவாக பணியாற்றச் சென்ற போது, குடும்பத்துடன் அங்கு குடியேறினார். கிழக்கு செருமனியில் படித்த ஆங்கலா 1986 இல் குவைய வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, 1989 வரை அறிவியலாளராகப் பணியாற்றினார். 1989 புரட்சிகளை அடுத்து அவர் தீவிர அரசியலில் இறங்கினார். கிழக்கு செருமனியின் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசில் துணைப் பேச்சாளராகப் பணியாற்றினார். 1990 இல் செருமானிய மீளிணைவை அடுத்து, மெக்கிலன்பர்க்-வோர்பொம்மர்ன் மாநிலத்தில் இருந்து செருமானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய அரசுத்தலைவர் எல்முட் கோலின் தீவிர ஆதரவாளராக, மேர்க்கல் 1991 இல் பெண்கள், இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார், பின்னர் 1994 இல் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சரானார். இவரது கட்சி 1998 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, மேர்க்கெல் கட்சியின் பொதுச் செயலாளரானார், தொடர்ந்து கட்சியின் முதலாவது பெண் தலைவராகவும், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் முதலாவது பெண் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.
2005 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, கெர்காத் சுரோடருக்குப் பிறகு செருமனியின் அரசுத்தலைவராக மேர்க்கெல் நியமிக்கப்பட்டார், இதன் மூலம் இவர் கிறித்துவ சனநாயக ஒன்றியம், பவேரிய கிறித்தவ சமூக ஒன்றியம், சமூக சனநாயகக் கட்சி ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய கூட்டணியை வழிநடத்தினார். மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவரும், செருமானிய மீளிணைவுக்குப் பிறகு கிழக்கு செருமனியில் இருந்து உருவான முதல் அரசுத்தலைவரும் ஆவார். 2009 கூட்டாட்சித் தேர்தலில், கிறித்துவ சனநாயக ஒன்றியக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று, திறந்த சனநாயகக் கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது.. 2013 தேர்தலில், மெர்க்கலின் கட்சி 41.5% வாக்குகளுடன் பெரும் வெற்றியைப் பெற்று, சமூக சனநாயகக் கட்சியுடன் இரண்டாவது பெரும் கூட்டணியை உருவாக்கியது. 2017 தேர்தலில், மேர்க்கலின் கிறித்துவ சனநாயக ஒன்றியம் நான்காவது முறையாக மிகப்பெரிய கட்சியாக வெற்றியீட்டியது. 2018 மார்ச் 14 அன்று அவர் நான்காவது முறையாக அரசுத்தலைவரானார்.
வெளியுறவுக் கொள்கையில், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகியவற்றின் பின்னணியில் பன்னாட்டு ஒத்துழைப்பையும், அத்திலாந்திக்குப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும் மேர்க்கெல் வலியுறுத்தினார். 2007 இல், மேர்க்கெல் ஐரோப்பியப் பேரவையின் தலைவராக பணியாற்றிய போது, லிசுபன் ஒப்பந்தம், பெர்லின் பிரகடனம் ஆகிய பேச்சுவார்த்தைகளிலும், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் ஐரோப்பியக் கடன் நெருக்கடியை நிர்வகிப்பதில் மேர்க்கெல் முக்கிய பங்கு வகித்தார். பெரும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வதற்காக உள்கட்டமைப்பு செலவுகள் மற்றும் பொது முதலீடுகளில் கவனம் செலுத்தி 2008 இல் ஒரு ஊக்கத் தொகையை வழங்குவதில் வெற்றி கண்டார். உள்நாட்டுக் கொள்கையில், மேர்க்கல் எதிர்கால எரிசக்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். செருமனியில் பைங்குடில் வளிம உமிழ்வைக் குறைக்கவும், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிகரிக்கவும் செயலாற்றினார். படைக்குக் கட்டாய ஆள் சேர்த்தலை நிறுத்தினார். சுகாதார சீர்திருத்தம் மற்றும் 2010களின் புலம்பெயர்வோர் நெருக்கடி, 2020 கோவிட்-19 தொற்று ஆகியவை இவரது அரசுக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தன. 2011 முதல் 2012 வரையும், பின்னர் 2014 முதல் ஜி7 நாடுகளின் மூத்த தலைவராகப் பணியாற்றினார். 2014 இல் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசுத்தலைவரானார். அக்டோபர் 2018 இல், கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சி மாநாட்டில் அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், 2021 இல் ஐந்தாவது முறையாக அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.
மேற்கோள்கள்
1954 பிறப்புகள்
செருமானிய அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
பெண் அரசுத் தலைவர்கள்
பெண் வேதியியலாளர்கள்
இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்
|
6161
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%2096.8
|
ஒலி 96.8
|
ஒலி 96.8 என்பது பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும், சிங்கப்பூரின் ஒரே 24 மணி நேர தமிழ் வானொலிச் சேவையாகும்.
ஒலி 96.8 காலக்கோடு
1936 - ஜூன் 1 இல் பிரித்தானிய மலாயா ஒலிபரப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக 4 மணி நேர இந்திய ஒலிபரப்பாகத் தொடங்கியது.
1959 - இந்நிறுவனத்தின் பெயர் ரேடியோ சிங்கப்பூர் என மாற்றப்பட்டது.
1965 - ஆகஸ்ட் மாதம் இந்நிலையம் ரேடியோ சிங்கப்பூர் நிலையம், ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர் (RTS), ரேடியோ சிங்கப்பூர் எனப் பெயர் மாற்றம் கண்டது. இந்திய மொழி ஒலிபரப்பு இந்தியச் சேவை என்றழைக்கப்பட்டது.
1980 - RTS சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் (SBC) என்ற ஆணை பெற்ற கழகம் ஆனது.
1982 - இந்திய வானொலிச் சேவை ஒலிவழி 4 எனப் பெயர் மாற்றம் கண்டது.
1992 - ஒலிவழி 4, ஒலிக்களஞ்சியம் என்ற பெயரைப் பெற்றது.
1994 - சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகம் தனியார் மயமாகி சிங்கப்பூர் வானொலிக் கழகம் என்ற பெயரைப் பெற்றது.
1997 - ஏப்ரல் 14 இல் ஒலிக்களஞ்சியம் என்ற பெயர் சுருங்கி ஒலி 96.8 ஆனது.
1998 - மே மாதத்தில் ஒலியின் முதல் நூல் வெளியீடாக, மீனாட்சி சபாபதி எழுதிய அறிவோமா நாம் புத்தகம் வெளியிடப்பட்டது. நம்மவர்களின் பண்பாட்டின் பின்னணியில் உள்ள அறிவியல் அடிப்படையை விளக்கி ஈராண்டு தொடர்ந்து ஒலியேற்றிய அறிவோமா நாம் எனும் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விவரங்களை இந்நூல் கொண்டிருந்தது.
1998 - ஜூலை 4 இல் ஒலிக்கு முதல் அறப்பணி விருது, நியூயார்க்கில் வழங்கப்பட்டது. நாராயண மிஷன் முதியோர் இல்லத்திற்கு $250,000 வெள்ளி திரட்டியதற்காக அந்த அங்கீகாரம்.
2000 - அக்டோபர் 16இல் ஒலி 96.8-இன் புதுப்பிக்கப்பட்ட இணையத் தளம் செயல்படத் தொடங்கியது. 60 -க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் இணையம் வழியாகக் கேட்கத் தொடங்கினர்.
2001 - ஜூன் 21இல் சமூக சேவைக்குரிய பெருமைமிகு வோர்ல்ட்மெடல் விருது நியூயார்க் விழாவில் வழங்கப்பட்டது. அது குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக மூன்றே வாரங்களில் $2.6 மில்லியன் வெள்ளியைத் திரட்டிக் கொடுத்த ஒலியின் சாதனை முயற்சிக்காக வழங்கப்பட்டது.
2001 - ஆகஸ்ட் 10 இலிருந்து 24 மணி நேரமும் இடைவிடாத ஒலிபரப்பு வழங்கத் தொடங்கியது.
2002 - பெப்ரவரி 22இல் ஒலி 96.8 -க்கு குஜராத் நிதி திரட்டு முயற்சிக்காகப் பிரிசம் விருது (மானிடச் சேவையில் பொதுச் சேவை விருது) சிங்கப்பூர் பொதுத் தொடர்புக் கழகத்தால் வழங்கப்பட்டது.
2002 - மே 26இல் வழக்கமாகத் தொலைக்காட்சிக் கலைஞர்களைக் கௌரவிக்கும் பிரதான விழாவில் முதன் முறையாகப் பங்கேற்றது ஒலி. மிகப் பிரபலமான ஒலி படைப்பாளர் விருதை ரஃபி வென்றார். மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக வரலாற்றில் இன்று தேர்வு பெற்றது.
2002 - ஆகஸ்ட் 10-11 ஒலியின் 24 மணி நேரச் சேவையின் முதலாண்டு நிறைவை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடா மேடை/கலை நிகழ்ச்சியை செந்தோசாவில் நடத்தியது. சுமார் 7000 பேர் கலந்து கொண்டனர். புதுப்பிக்கப்பட்ட இணையப் பக்கமும் அரங்கேறியது.
2002 - நவம்பர் 9இல் ஒலியின் முதல் தீபாவளி அறநிதி விருந்து நிகழ்ச்சி. வானொலி மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் வழி 2 வாரங்களில் $60, 000வெள்ளி திரட்டப்பட்டது. சிண்டாவின் புரொஜெக்ட் கிவ் திட்டத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டது. 2003 நவம்பர் 1இல் நடந்த இரண்டாவது விருந்து நிகழ்ச்சியின் போது $32,000 வெள்ளி திரட்டப்பட்டது.
2002 - டிசம்பர் 9இல் ஒலியும் CLAV நிறுவனமும் இணைந்து 180, சிராங்கூன் சாலையில் குறுவட்டு விற்பனை மையத்தைத் தொடங்கின. இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
2003 - மார்ச் 30இல் வானொலியின் வெற்றிப் படைப்பான 'வரலாற்றில் இன்று' நூலாக வெளியிடப்பட்டது.
2003 - ஆகஸ்ட் 9-10இல் ஒலியின் 24 மணி நேரச் சேவை தொடங்கி ஈராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு மாபெரும் தீவு தழுவிய 24 மணி நேர தமிழ் வாசிப்பு நிகழ்ச்சி, மிக வெற்றிகரமாக நடைபெற்றது. ஒலியும் தேசிய நூலக வாரியமும் இணைந்து மேற்கொண்ட இம்முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன. 2003 ஆகஸ்ட் 10 -ம் தேதி, ஒலி முதன் முறையாக இரத்த நன்கொடை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தது. 212 அலகு இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, மீடியாகார்ப் வானொலிகளின் ஆறு மாத நடவடிக்கைகளில் மிகச் சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2003 - ஆகஸ்ட் 10 உலகத் தமிழ் வரலாற்றில் புது முயற்சியாக ஒலியுடன் தமிழில் எனும் குறுவட்டை வெளியிட்டது ஒலி. இவ்வட்டின் வழி, நேயர்கள் ஒலி படைப்பாளர்களுக்கு நேரடியாகத் தமிழில் மின்னஞ்சல் (மின் கடிதம்) அனுப்ப முடியும். 10,000 வட்டுகள் நேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
2004 - மார்ச் 5இல் ஒலி 96.8 இரண்டாம் முறையாகப் பிரிசம் விருது பெற்றது. இம்முறை தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து நாடு முழுவதும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை 24 மணி நேரம் நடத்தியமைக்காக அந்த விருது கிடைத்தது.
2004 - டிசம்பர் 30 – ஜனவரி 2 2005 இல் ஒலியும் வசந்தம் சென்ட்ரலும் இணைந்து சுனாமி பேரிடருக்காக கேம்பல் லேனில் நிதி திரட்டு நிகழ்ச்சியை நடத்தின. Lisha மற்றும் வேறு சில இந்திய அமைப்புக்களின் ஆதரவோடு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்காக நான்கே நாட்களில் 426 000 வெள்ளி திரட்டப்பட்டது. மேலும் ஒலியின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிமிடத்திற்கு எங்கள் ஒலி அலை ஓய்ந்தது. சுனாமியில் மாண்டோரின் நினைவாக 2004 டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2005 - ஜனவரி 15 தைப்பொங்கலை முன்னிட்டு, முரசு அஞ்சல் முத்து நெடுமாறனின் தொழில்நுட்ப உதவியுடன், உலகின் முதல் முயற்சியாகத் தமிழ் குறுஞ்செய்திச் சேவையை அறிமுகம் செய்தது ஒலி.
வெளி இணைப்புகள்
ஒலி 96.8 இணையத்தளம்
சிங்கப்பூர் தமிழ் வானொலிகள்
|
6163
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
தெற்கு
|
தெற்கு(South) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும்.
பலுக்கல்
ஒரு வரைபடத்தில் கீழ் நோக்கி இருப்பது தெற்கு திசையாகும்.. இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். தெற்கு திசை வடக்கு திசையிலிருந்து 180° திசைவில் அமைந்து இருக்கும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
தெற்கு திசை அறியும் வழி
திசைகள்
|
6166
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
கிழக்கு
|
கிழக்கு(EAST) என்பது ஒரு திசையைக் குறிக்கும். தமிழில் இது கீழ்த்திசை என்றும் அறியப்படுகிறது. இத்திசை சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும்.இச்சொல் பெயர்ச்சொல், உரிச்சொல் அல்லது வினையுரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் (திசைகாட்டி புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. மேற்கு திசைக்கு எதிர்புறத்திலும், வடக்கு, தெற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது..
பலுக்கல்
ஒரு வரைபடத்தில் வலது புறம் இருப்பது கிழக்குத் திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். கிழக்குத் திசை வடக்குத் திசையிலிருந்து 90° திசைவில் அமைந்து இருக்கும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பூமி சுழலும் திசை
திசைகள்
|
6167
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
வடக்கு
|
வடக்கு(North) என்பது நான்கு திசைகளில் ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையான கிழக்குத் திசையை நோக்கி நிற்பவருக்கு இடது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும்.
நிலப்படம் குறித்தல்
வழக்கமாக, எப்போதும் நிலப்படங்களை வரையும்போது அதன் மேற்பகுதியானது வடக்குத் திசையாக இருக்கும்படி வரைவதே வழக்கம். குறிப்பாக வடக்குத் திசையானது, மேற்கத்தைய கலாச்சாரத்தின் படி அடிப்படை அல்லது நியம திசையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்குத் திசையானது (வெளிப்படையாக அல்லது மறைமுகமாக) மற்றைய அனைத்துத் திசைகளையும் வரையறுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
காந்த வடக்கு
சரியாகச் செயற்படும் காந்தத் திசையறி கருவி காட்டும் வடக்குத் திசையே காந்த வடக்கு ஆகும். காந்த வடக்கு உண்மை வடக்கில் இருந்து சற்று விலகியுள்ளது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு காந்த விலக்கம் எனப்படுகிறது. பெரும்பாலான நடைமுறைத் தேவைகளுக்கு இந்த வேறுபாடு கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், துல்லியமான திசை தேவைப்படும் இடங்களில் இந்த வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
திசைகள்
da:Kompasretning#Nord
|
6170
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
மேற்கு
|
மேற்கு (West) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் மறையும் திசையைக் குறிக்கும்.
காலையில் கதிரவன் எழும் திசையை நோக்கி நின்று நம் கைகள் இரண்டையும் தோளுயரத்திற்கு உயர்த்தி நின்றால், நம் வலக்கை காட்டும் திசை தெற்கு, இடக்கை காட்டும் திசை வடக்கு, நம் முதுகுப்புறம் மேற்கு. திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது
மரபுப்படி ஒரு வரைபடத்தின் இடது பக்கம் மேற்கு ஆகும்.
பலுக்கல்
ஒரு வரைபடத்தில் இடது புறம் இருப்பது மேற்கு திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். மேற்கு திசை வடக்கு திசையிலிருந்து 270° திசைவில் அமைந்து இருக்கும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பூமி சுழலும் திசை
திசைகள்
|
6171
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
லினக்சு வழங்கல்கள்
|
லினக்ஸ் கருவினை அடிப்படையாகக்கொண்டு, கணினிப்பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருட்களை தொகுத்து ஆக்கப்படும் இயங்குதளங்கள் லினக்ஸ் வழங்கல்கள் எனப்படுகிறது. இவை பெரும்பாலும் க்னூ, திறந்த ஆணைமூல மென்பொருட்களை பெரும்பாலும் கொண்டிருக்கும். சிலவேளைகளில் லினக்ஸ் வழங்கல்களில் மூடிய ஆணைமூல மென்பொருட்களும் சேர்க்கப்படலாம்.
விளக்கம்
வின்டோஸ் இயங்குதளத்துக்கு பழக்கப்பட்டவர்கள் இத்தகைய வழங்கல்களை, 98, 2000, xp போன்று வெவ்வேறு பதிப்புகள் என நினைத்துவிடுகின்றனர். இது தவறாகும். உண்மையில் ஒரே நேரத்தில் பல வழங்கல்கள் ஒன்றாக வெளிவருகின்றன. ஒவ்வொரு வழங்கல்களும் தமக்கென பதிப்பு எண்களை கொண்டிருக்கின்றன. அதன்படி தமது வெளியீடுகளின் பிந்தைய பதிப்புக்களை குறித்த காலத்துக்கொருமுறை வெளியிடுகின்றன. (எ.கா Fedora core 3, Fedora core 4, Fedora Core 5, பெடோரா கோர் 6)
திறந்த ஆணைமூல மென்பொருள் உற்பத்தியானது உலகெங்கும் பரந்திருக்கும் கோடிக்கணக்கான ஆர்வலர்களால் வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு வலைத்தளங்கள் மூலம் இடம்பெற்றவண்ணமுள்ளது.
மேலே கூறப்பட்ட கரு, x server, பணிச்சூழல், செயலிகள் போன்றன இத்தகைய வெவ்வேறான மென்பொருள் விருத்தி திட்டங்களாகும்.
க்னூ/லினக்ஸ் இயங்குதளம் என்பது இவ்வாறான மென்பொருட்களின் தொகுப்பாகும். இவ்வாறான கோடிக்கணக்கான மென்பொருட்களுள் பயனர் தனது தெரிவுகளை உரிய முறைப்படி தனித்தனியாக காம்பைல் செய்து நிறுவிக்கொண்டால்தான் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பயன்படுத்த முடியும்.
இது கடைகோடிப் பயனருக்கு மிகவும் சிரமமானது என்பதால், மேற்குறித்த வழங்கல்களை வழங்குவோர் தமக்கு பிடித்த தெரிவுகளை கொண்டு க்னூ/லினக்ஸ் இயங்குதளம் ஒன்றினை உருவாக்கி அதனை இறுவட்டுக்களில் எழுதி வெளியிடுகிறார்கள். இவ்வாறான இறுவட்டுக்களை பெறும் பயனர், மிக இலகுவாக தனது கணினியில் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ள முடியும்.
பலலட்சக்கணக்கான திறந்த ஆணைமூல மென்பொருட்களுள் எவற்றை தொகுத்து இயங்குதளம் உருவக்கப்படுகிறது என்பதுதான் ஒவ்வொரு வழங்கல்களிடையேயும் உள்ள பிரதான வேறுபாடாகும்.
ஒவ்வொரு நிறுவனமும், தனது சிறப்பான தேவைகளுக்கும், ரசனைக்கும் ஏற்றபடி வெவ்வேறான மென்பொருட்களை தொகுத்து வெவ்வேறு வழங்கல்களை உருவாக்குகின்றன.
சில வழங்கல்களை இலவசமாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். சில வழங்கல்களை பொதி வடிவத்தில் நிறுவன ஆதரவுடன் பெற்றுக்கொள்ள சில வேளைகளில் பணம் கொடுக்கவேண்டியிருக்கும். உபுண்டு போன்றவழங்கல்கள் தபால் செலவைக்கூட செலுத்தாது இலவசமாக பெறப்படக்கூடியனவாகும்.
திறந்த ஆணைமூல மென்பொருட்கள் இலவசமாகவே பெரும்பாலும் கிடைத்தபோதும் வழங்கல்களை விலைக்கு விற்பது சாத்தியமானதே. பொது மக்கள் உரிம ஒப்பந்தம் இவ்வாறு விற்பதற்கு இடமளிக்கிறது.
வரலாறு
வழங்கல்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலங்களில் சாதாரண லினக்ஸ் பயனாளர் ஒருவர் லினக்சை பயன்படுத்துவதற்கு யுனிக்ஸ் தொடர்பான சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் , கோப்புக்களை எங்கே வைப்பது, என்னென்ன நிரல்கள் தேவைப்படும், என்னென்ன மென்பொருட்களை எப்படி நிறுவிக்கொள்வது போன்றவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டிய நிலைஇருந்தது. லினக்சை கணினியில் ஆரம்பிக்கக்கூட சிறப்பு தேர்ச்சி தேவையாயிருந்தது.
லினக்ஸ் உருவாக்குனர்களை தவிர்ந்த பிறர் லினக்சினை பயன்படுத்த ஆரம்பித்தபோதுதான் வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது. செயலிகளையும் மென்பொருள்களையும் உருவாக்குவதை விட, அவற்றை பொதிசெய்தல், இறுவட்டுக்களில் வழங்கல், பயனர் எளிமை மிக்கதாக்கல், வசதியான ஆரம்பத்தில் உருவான வழங்கல்களாவன,தி முகாமைத்துவக்கட்டமைப்பினை உருவாக்கல் போன்றவற்றிற்கு அதிக் முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆரம்பகலங்களில் உருவான வழங்கல்களாவன,
MCC Interim Linux - இது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ftp வழங்கிகளில் பெப்ரcஅரி 1992 இல் கிடைப்பிலிருத்தப்பட்டது.
TAMU - Texas A&M பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த தனி நபர்களால் ஏறத்தாழ இதே காலப்பகுதியில் (1992) உருவாக்கப்பட்டது.
SLS (Softlanding Linux System).
இதில் எந்த வழங்கலும் ஒழுங்காக பராமரிக்கப்படாதுபோகவே, Patrick Volkerding என்பவர் SLS இனை அடிப்படையாகக்கொண்டு Slackware என்ற பெயருடைய லினக்ஸ் வழங்கலை உருவாக்கியளித்தார். இதுவே இன்றுவரை பராமரிக்கப்பட்டுவரும் மூத்தல் லினக்ஸ் வழங்கலாகும்.
வழங்கல்களின் பட்டியல்
இப்பட்டியலானது லினக்ஸ் வழங்கல்களை கிளைவழங்கல்கள், அடிப்படை வழங்கல்கள் எனும் அடிப்படையில் காண்பிக்கிறது.
அடிப்படை வழங்கல்கள் ஆரம்பத்தில் உருவானவை என்பதோடு, தமக்கென தனியான பொதி முகாமைத்துவக்கட்டமைப்பை கொண்டுள்ளன. தம்மளவில் தனித்துவமானவை. அவற்றினை அடிப்படையாக கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட கிளை வழங்கல்கள் உருவாகின்றன.
AMSEL
Arch Linux
Core Linux
Crux
Debian
Xandros
பாஸ் லினக்ஸ்
DamnSmallLinux
Floppix
நொப்பிக்ஸ் (Knoppix)
பெடோரா கோர்
BioKnoppix
ClusterKnoppix
Feather
Gnoppix
Kanotix
KnopILS
Kurumin
MEPIS
Morphix
PHLAK
Libranet
Linspire, formerly LindowsOS
Skole Linux
உபுண்டு (Ubuntu)
Kubuntu
BeatrIX
Underground Desktop
Devil-Linux
Dyne:Bolic
Gentoo
SystemRescue
Vida Linux
Goppex
Pardus
GoboLinux
IPCop
IpodLinux
Linux From Scratch
LNX-BBC
Lunar Linux
Lycoris
Mandows
muLinux
Red Hat
Ark linux
Aurox
BLAG
cAos
Conectiva
Fedora
ASPLinux
tinysofa
Lorma
Mandrake
PCLinuxOS
ALTLinux
Turkix
Redhat Enterprise Linux (RHEL)
CentOS
Whitebox_Linux
SOT Linux
Thiz
Trustix Secure Linux
TurboLinux
Whitebox Linux
Yellow Dog Linux
ROCK Linux
Rubyx
Slackware
Zenwalk Linux formerly MiniSlack
Amigo Linux
BasicLinux
CollegeLinux
DeLi Linux
DragonLinux -- currently inactive
Peanut
Slax
Ultima Linux
VectorLinux
Buffalo
SmoothWall
SOL (Server Optimized Linux)
Source Mage
SPB-Linux
SuSE
Sun JDS
Yoper
மேலும் பார்க்க
லினக்சு அடிப்படையிலான இயக்குதளங்களின் பட்டியல்
உபுண்டு லினக்ஸ்
டெபியன்
பாஸ் லினக்ஸ்
வெளி இணைப்புக்கள்
க்னூ/லினக்ஸ் வழங்கல்களின் அண்மைய வெளியீடுகளும் பதிப்புகளும்
லினக்ஸை ISO image ஆக இத்தளத்தில் இருந்து பெறலாம்
கைகொடுத்த லினக்ஸ்
லினக்சு வழங்கல்கள்
கட்டற்ற மென்பொருட்கள்
|
6173
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF
|
புரட்டாசி
|
புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6174
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF
|
ஐப்பசி
|
தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலா இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 54 நாடி, 07 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6175
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29
|
கார்த்திகை (தமிழ் மாதம்)
|
பெரும்பாலான தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மரபுவழி நாட்காட்டியின்படி ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை ஆகும். தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் விருச்சிக இராசியுள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
கார்த்திகை (நாள்மீன்)
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6177
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88
|
தை
|
தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும். இது தைசிய என்றும் பௌச/பௌட என்றும் வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் தமிழர் திருநாள் என்றும், அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6178
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF
|
மாசி
|
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
6187
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள்
|
விசைப்பலகை ஒன்றின்மூலம் தமிழ் எழுத்தொன்றை உள்ளிடுவதற்கு/அச்சிடுவதற்கு அழுத்தவேண்டிய விசை/விசைகளின் ஒழுங்கும் வைப்புமுறையும் தமிழ் விசைப்பலகை தளக்கோலம் என்ப்படுகிறது.
தட்டச்சுப்பொறி பயன்பாட்டிலிருந்த காலத்தில் ஆரம்பித்து விசைப்பலகைகளை பயன்படுத்தி கணினி உள்ளீடுகளை செய்யும் இன்றைய காலம்வரை ஏராளமான விசைப்பலகை தளக்கோலங்கள் தமிழுக்கென உருவக்கப்பட்டு புழக்கத்திலிடப்பட்டிருக்கின்றன.
இவற்றை பருமட்டாக இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம்.
எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்
ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்you தட்டச்சுப்பொ
எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்
இம்முறையில்,. ஒரு விசையை அழுத்துவதன்மூலம் ஒரு எழுத்து அல்லது எழுத்தின் பகுதி (எ.கா. கொம்பு, புள்ளி) அச்சிட/ உள்ளிடப்படுகிறது.
கீழே இவ்வாறான சில தளக்கோலங்கள் விபரிக்கப்படுகின்றன.
தமிழ் தட்டச்சுப்பொறி வடிவம்
ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்
குறித்த ஓர் எழுத்தை அச்சிட/உள்ளிட அவ்வெழுத்துக்குரிய ஒலியினை ஆக்கும் ஒலியன்களை குறிக்கும் விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவேண்டியபடி வடிவமைக்கப்பட்ட தளக்கோலங்கள் இவையாகும். (எ.கா. கு = க் + உ)
இத்தகைய தளக்கோலங்கள் கணிப்பொறியின் வருகையின் பின் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்படுகின்றன.
இவ்வாறான தளக்கோலங்கள் சில..
தமிழ் 99 தளக்கோலம் (அல்லது தமிழ் ஒலியியல் முறை)
பார்க்க: தனிக்கட்டுரை தமிழ் 99
இதுவே தமிழ் உள்ளீடுகளுக்கான நியம விசைப்பலகை தளக்கோலமாகும்.
ஆங்கில ஒலியியல் முறை
தமிழ் உள்ளீட்டு முறைகளில் புழக்கத்திலிருக்கும் பிரபலமான இன்னொரு நியமமாகும். புலம்பெயர் தமிழர்களை கவனத்திற்கொண்டு இதுவும் ஒரு நியமமாக அங்கீகரிக்கப்படதெனினும், இதுவே மிகப்பிரபலமானதாக மாறியிருக்கிறது.
தமிழ் எழுத்துக்களின் ஒலிக்கு சமமான ஆங்கில எழுத்துக்களை அல்லது எழுத்துக்களின் கோலத்தை தட்டுவதன் மூலம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடும் முறை, ஆங்கில ஒலியியல் முறை ஆகும்.
(எ.கா. அம்மா = a+m+m+a+a)
இம்முறையில் ஆங்கில எழுத்துக்களை பார்த்தவாறே நாம் உள்ளீடுகளை மேற்கொள்வதால் தனியாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளை வாங்கவேண்டிய தேவை இல்லை. அத்தோடு, விசைப்பலகையில் எந்தெந்த விசை எந்தெந்த தமிழ் எழுத்துக்குரியது என நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட விசைபலகையையும் பயன்படுத்தி இலகுவாக தமிழை உள்ளிடலாம். இதுவே ஆங்கில ஒலியியல் விசைப்பலகையின் பிரபலத்தன்மைக்கு காரணம்.
தமிழ் VP தளக்கோலம்
இன்ஸ்க்ரிப்ட் தளக்கோலம்
மேலும் காண்க
எழுத்துரு
தமிழ் விசைப்பலகைகள்
|
6200
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
|
தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 192 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வத்திக்கான் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.
குறிப்புகள்
கீழே குறிப்பிட்டவை தவிற அனைத்து கணிப்புக்களும் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உலக ஆதார புத்தகத்தின் 2005 ஜூலை மாத பதிப்பை தழுவியது.
2005 ஜூலை மாத இறுதியில் ஹங்கேரியின் மத்திய எண்ணிக்கை அலுவலகத்தில் கிடைத்த தகவல்
ஹாங்காங் (Hong Kong), மக்காவு (Macau) மற்றும் சீனக்குடியரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகள், தாய்வான், பெஸ்கோடெரஸ், க்யூமோய் மற்றும் மட்ஸு உள்ளடக்கவில்லை.
செப்டெம்பர் 18, 2005ல் அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீடு.
Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected
Brazil took a count in August 2000, which reported a population of 169,799,170; that figure was about 3.3% lower than projections by the US Census Bureau, and is close to the implied underenumeration of 4.6% for the 1991 census
Estimate for first quarter of 2005 by the Federal Statistical Office of Germany
Only includes the geographical area of Metropolitan France
Estimate for சூலை 1 2005 by Spain's National Statistics Institute
Includes 5,576,076 non-nationals
Estimate by Department of Statistics Malaysia , metholodgy used explained here ; CIA World Factbook estimate July 2005: 23,953,136
Includes சீனக் குடியரசு, Pescadores, Quemoy and Matsu, which are claimed by the சீனா
Since the outbreak of hostilities between the government and armed Tamil separatists in the mid-1980s, several hundred thousand Tamil civilians have fled the island; as of yearend 2000, approximately 65,000 were housed in 131 refugee camps in south India, another 40,000 lived outside the Indian camps, and more than 200,000 Tamils have sought refuge in the West
The 1997 Mozambican census reported a population of 16,099,246
In addition, about 40,000 people live in the Israeli-occupied Golan Heights - 20,000 Arabs (18,000 Druze and 2,000 Alawites) and about 20,000 Israeli settlers
Estimate for சூன் 30 2005 by Chile's Instituto Nacional de Estadísticas
This estimate was derived from an official census taken in 1975 by the Somali Government; population counting in Somalia is complicated by the large number of nomads and by refugee movements in response to famine and clan warfare
Estimate for அக்டோபர் 1, 2005 by the Israeli Bureau of Statistics. Includes about 187,000 Israeli settlers in the West Bank, about 20,000 in the Israeli-occupied Golan Heights, and fewer than 177,000 in East Jerusalem. Does not include 188,000 foreign workers.
Includes 166,510 non-nationals
Estimated resident population for சூன் 30 2005 by Statistics New Zealand . Excludes the Cook Islands, Niue, Tokelau and the Ross Dependency.
Includes 577,293 non-nationals
Includes an estimated 1,606,079 non-nationals; the 17 December 1995 census presents a total population figure of 2,377,453, and there are estimates of 3.44 million for 2002
In addition, there are about 187,000 Israeli settlers in the West Bank and fewer than 177,000 in East Jerusalem; estimate for சூலை 2004 by the ஐக்கிய அமெரிக்கா நடுவண் ஒற்று முகமை's த வேர்ல்டு ஃபக்ட்புக்
Includes 1,291,354 non-nationals
Other estimates range as low as 810,000
Other estimates range as low as 800,000
Includes 235,108 non-nationals
An estimated 8,000 refugees left the island following the resumption of volcanic activity in July 1995; some have returned
Estimated resident population at ஏப்ரல் 2005 published செப்டம்பர் 14 2005 by Central Statistics Office (Ireland) .
இவற்றையும் பார்க்கவும்
உலக நாடுகளின் பட்டியல்
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்
கண்டங்கள் வாரியாக நாடுகளின் பட்டியல்
மக்கள் தொகை அடிப்படையில்
|
6203
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81
|
புதுநிலவு
|
190px|புதுநிலவின் தோற்றம்|thumb|right
புதுநிலவு, மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும். இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் கதிரவ வெளிச்சத்தால் ஏற்படும் நிலவின் நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது கதிரவ மறைப்பு நிகழும்.
புதுநிலவு ஒரு இருள் நிறைந்த வட்டம் போன்று இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைக் காண இயலாமல் போகிறது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.
சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
இவற்றையும் பார்க்கவும்
முழுநிலவு
கதிரவ மறைப்பு
ஆதாரம்
வானியல்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
|
6215
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF
|
முதலாம் சங்கிலி
|
சங்கிலியன் பண்டாரம் அல்லது முதலாம் சங்கிலி பண்டாரம் அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவரை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவரையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.
குடும்பம்
முதலாம் சங்கிலி 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனுக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட அவனது மகனான பரராசசேகரனின் மகன் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இதே நூலின்படி, பரராசசேகரனுக்கு இராசலட்சுமியம்மாள், வள்ளியம்மை என இரண்டு மனைவிகளும் மங்கத்தம்மாள் என ஒரு வைப்புப் பெண்ணும் இருந்தனர். இராசலட்சுமியம்மாளுக்கு சிங்கவாகு, பண்டாரம் என இரண்டு ஆண் மக்களும், வள்ளியம்மைக்கு பரநிருபசிங்கம் உட்பட நான்கு பிள்ளைகளும் பிறந்தனர். சங்கிலி மங்கத்தம்மாளுக்குப் பிறந்தவன். எனினும் யாழ்ப்பாணத்தை நீண்டகாலம் ஆண்ட சங்கிலி வைப்பு பெண்ணின் மகன் என்பதைப் பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அரசனாதல்
பரராசசேகரனின் பட்டத்தரசியின் மூத்தமகன் சடுதியாக இறந்தான். பின்னர் இளவரசுப் பட்டம் சூட்டிக்கொண்ட இரண்டாவது மகனும் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டான். இருவரையும் சங்கிலியே கொன்றான் என்றும், இரண்டாவது மனைவியின் மூத்த மகனான பரநிருபசிங்கத்தை ஏமாற்றி அரசுரிமையைச் சங்கிலி கைப்பற்றிக் கொண்டான் எனவும் வைபவமாலை கூறுகிறது.
போத்துக்கீசருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரின் சங்கிலியைப் பற்றிய குறிப்பு ஒன்றில் அவனைச் சியங்கேரி என்னும் பெயரால் குறித்துள்ளனர். இக்குறிப்பில் இவ்வரசன் 42 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாணத்தை ஆண்டதாகவும், பின்னர் போத்துக்கீசர் அவனது அரசாட்சியை அழித்துவிட்டு 97 ஆண்டுகள் ஆண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சுவாமி ஞானப்பிரகாசர் சங்கிலி ஆட்சி 1519 ஆண்டிலிருந்து 1561 வரை இருந்ததாகக் கணித்துள்ளார்.
சங்கிலியனும் போத்துக்கேயரும்
சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். போத்துக்கீசர் இந்தியாவிலும், இலங்கையிலும் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் படை பலத்தை மட்டுமன்றிக் கத்தோலிக்க சமயத்தையும், வணிகத்தையும் கூட ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை அறிந்திருந்த சங்கிலி, போத்துக்கீசரின் இத்தகைய எல்லா நடவடிக்கைகளையுமே கடுமையாக எதிர்த்து வந்தான். அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை போனவர்களையும் இரக்கம் பாராமல் தண்டித்தான். இதன் காரணமாகவே போத்துக்கீசர், முக்கியமாகப் போத்துக்கீச மத போதகர்கள் இவனை வெறுத்தனர். இதன் பின்னணியிலேயே சங்கிலியைப் பற்றிப் போத்துக்கீசர் எழுதிவைத்திருக்கும் குறிப்புக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற நாட்டவரான போத்துக்கீசர் மிக மோசமாகச் சங்கிலி மன்னனைத் தூற்றி எழுதியதானது சங்கிலி நாட்டுப்பற்று மிக்கவனாகவும், அந்நியர் ஆதிக்கத்தை வெறுப்பவனாகவும் இருந்தான் என்பதையே காட்டுவதாகச் சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். இவன் மிகவும் தைரியமுள்ள, கடும்போக்கான மன்னன் என்பது அவர்களது கருத்து.
சங்கிலி மன்னன் காலத்தின் முற்பகுதியிலும், அதற்கு முன்னரும் யாழ்ப்பாண அரசு கடலில் குறிப்பிடத்தக்க பலம் கொண்டதாக இருந்ததுடன், கடல் கடந்த வணிகத்தின் மூலமும் பெருமளவு வருமானம் பெற்று வந்தது. இப்பகுதியில் போத்துக்கீசரின் வணிக முயற்சிகள் யாழ்ப்பாண நாட்டின் நலனுக்குப் பாதகமானது என்பதை உணர்ந்திருந்த சங்கிலி, 1940 களில், போத்துக்கீச வணிகக் கப்பல்கள் முதன் முதலாக யாழ்ப்பாணத் துறைமுகங்களுக்கு வர முயன்றபோது தனது படைகளை அனுப்பிக் கப்பல்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தான்.
தான் போத்துக்கீசருக்கு எதிராகச் செயற்பட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிராகச் செயற்பட்ட சிங்கள மன்னர்களுடனும் சங்கிலி சேர்ந்து செயற்பட்டான். போத்துக்கீசருக்கு எதிராகப் போராடிய தென்னிலங்கை சீதாவாக்கை இராச்சியத்தின் மன்னன் மாயாதுன்னை தென்னிந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தபோது, அப்படைகள் யாழ்ப்பாண நாட்டினூடாகச் செல்ல சங்கிலியன் உதவினான். அக்காலத்தில் கோட்டே அரசனான புவனேகபாகு போத்துக்கீசருடன் உறவு கொண்டு அவர்களுக்குத் தனது நாட்டில் பல வசதிகளையும் அளித்திருந்தான். அத்தோடு யாழ்ப்பாண அரசையும் தனதாக்கித் தந்தால் மேலும் பல சலுகைகளை அளிப்பதாகவும் உறுதி அளித்தான். இதனால் கோட்டே அரசனின் உடன்பிறந்தானும், அவனுக்கு எதிரியுமாயிருந்த சீதாவாக்கை இராச்சியத்தின் அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்து, சங்கிலி புவனேகபாகுவை எதிர்க்க முற்பட்டான். கண்டி அரசனான விக்கிரமபாகுவையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு 1545 ஆம் ஆண்டில் கோட்டே மீது இவர்கள் படையெடுத்தனர். ஆயினும் வெற்றி கிட்டவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூர் நாயக்க மன்னனிடம் இருந்து பெற்ற படை உதவியுடன் மாயாதுன்னையையும் சேர்த்துக்கொண்டு சங்கிலி மன்னன் கோட்டேயைத் தாக்கினான். தொடக்கத்தில் போர் நிலை யாழ்ப்பாண-சீதாவாக்கைக் கூட்டுப் படைகளுக்குச் சாதகமாக இருந்தது எனினும், இறுதி வெற்றி கிடைக்கவில்லை.
1549ஆம் ஆண்டளவில் மாயாதுன்னை, கோட்டே அரசனுக்கு எதிராக போத்துக்கீசருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். போத்துக்கீசரும் கோட்டே அரசன் மீது ஐயுறவு கொண்டனர். இதை அறிந்த புவனேகபாகு, போத்துக்கீசருக்கு எதிராக இலங்கை அரசர்களை ஒன்றிணைக்க முற்பட்டான். அவனது வேண்டுகோளைப் பிற இலங்கை அரசர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், சங்கிலியன் தான் இனிமேல் கோட்டேயைத் தாக்குவதில்லை எனப் புவனேகபாகுவுக்கு வாக்குக் கொடுத்தான். இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து சங்கிலி மன்னனின் வெளியுறவுக் கொள்கை போத்துக்கீசரை எதிர்ப்பதையே மையமாகக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது.
மன்னார்ப் படுகொலைகள்
தாம் கைப்பற்ற எண்ணியிருக்கும் நாடுகளில் தமது மதத்தைப் புகுத்துவதன் மூலம் தமக்கு ஆதரவான மக்களை உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொள்ளும் உத்தியை போர்த்துகீசர் கொண்டிருந்தனர். தமது மத நிறுவனங்களைப் போர் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்த்து எடுத்தனர்; உள்நாட்டு அரசுகளைப் படைபலத்தின் மூலமாயினும் கட்டுப்படுத்தித் தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்வதில் போத்துக்கீசக் குருமார்கள் தீவிரம் காட்டினர். இதை முன்னரே உணர்ந்து கொண்ட சங்கிலி மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராகவும் கடுமையாக நடந்து கொண்டான். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான்.
தமது மதமாற்ற முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சங்கிலியைப் பழி வாங்கவேண்டும் என்பதில் போத்துக்கீசக் குருவான புனித சவேரியார் மிகவும் தீவிரமாக இருந்தார். கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநரைக் கண்டு தனது வேண்டுகோளை அவர் முன்வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுனர், அதை உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார். இதனால் நேரடியாகவே லிசுப்பனில் இருந்த போத்துக்கலின் அரசனுக்குக் கடிதம் எழுதினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கான அனுமதி லிசுப்பனில் இருந்து கோவாவுக்கு அனுப்பப்பட்டது. எனினும் சவேரியாரின் விருப்பம் எளிதில் கைகூடிவிடவில்லை. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்குச் சவேரியார் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள் பற்றி குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் விபரமாகக் குறித்துள்ளார்.
முதல் படையெடுப்பு முயற்சி
1543 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு எதிரான முதலாவது போர்த்துகீசப் படையெடுப்பு முயற்சி நடந்ததாகத் தெரிகிறது. மார்ட்டின் அல்போன்சோ தே சோசா என்னும் போத்துக்கீசப் படைத்தலைவனின் தலைமையில் வந்த கப்பல்கள் காற்றினால் திசைமாறி நெடுந்தீவை அடைந்தன. அவர்கள் அங்கே தங்கியிருந்தபோது, அதையறிந்த சங்கிலியால் ஏமாற்றப்பட்டதாகக் கருதப்படும் அவனது தமையனான பரநிருபசிங்கன், அங்கு சென்று சங்கிலியைப் பதவியிலிருந்து அகற்றித் தன்னை அரசனாக்கினால் அவர்களுடைய வணிக விருத்திக்கும், மத வளர்ச்சிக்கும் உதவுவதாக வாக்களித்து அவர்களது உதவியைக் கோரினான். அவ்வாறு செய்வதாக வாக்களித்து அவனிடம் இருந்து பெறுமதியான முத்துக்களைப் பெற்றுக்கொண்ட தளபதி, சங்கிலியுடனும் உடன்பாடு செய்துகொண்டு பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான்.
உள்நாட்டுப் பிரச்சினைகள்
தென்னிலங்கையில் அரசுரிமைப் போட்டிகள் காரணமாக எதிரெதிராகப் போரிட்டுக்கொண்டவர்கள் தமது நலனுக்காக போத்துக்கீசரின் உதவியை நாடினர். இந்த நிலைமையைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசர், நாட்டிலே தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வுகளால் தூண்டப் பெற்ற சிலர் யாழ்ப்பாண இராச்சியத்திலும் போத்துக்கீசரின் தலையீட்டைக் கொண்டுவர முயற்சி செய்தனர். முக்கியமாக, அவனது தமையனான பரநிருபசிங்கன் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுரிமையைத் தான் பெறுவதற்காகப் போத்துக்கீசரின் துணையை நாடினான். அத்துடன், மதம் மாறிக் கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். எனினும், இவனுக்கு அரசுரிமையைப் பெற்றுக்கொடுக்கப் போத்துக்கீசரால் இயலவில்லை.
1751 ஆம் ஆண்டில் திருகோணமலையை ஆண்டு வந்த வன்னியன் இறந்தான். அவனுடைய வாரிசான இளவரசன் எட்டு வயதே நிரம்பிய சிறுவனாக இருந்ததால், இன்னொரு வன்னியர் தலைவன் ஆட்சியை நடத்தலானான். திருகோணமலை வன்னிமை யாழ்ப்பாண அரசுக்குக் கட்டுப்பட்டது என்பதால் சங்கிலி இப்பிரச்சினையில் தலையிட்டான். ஆனால், வன்னியர் தலைவன் இளவரசனையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே கத்தோலிக்கராக மாறிய பரதவர்களின் உதவியால் போத்துக்கீசருடன் தொடர்பு கொண்டு தானும் கத்தோலிக்கனாக மாறிப் போத்துக்கீசரின் உதவியைக் கோரினான். தொடர்ந்து 1000 பரதவர்களைக் கொண்ட படையுடன் திருகோணமலையில் இறங்கினான். ஆனால், சங்கிலி இந்த நடவடிக்கைகளை முறியடித்தான். இளவரசன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பினான். சங்கிலியை யாழ்ப்பாண ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டுத் திருகோணமலை இளவரசனையே யாழ்ப்பாண இராச்சியத்துக்கு மன்னனாக்கவும் போத்துக்கீசர் எண்ணியிருந்ததாகத் தெரிகிறது.
நல்லூர் வீழ்ச்சி
1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான். சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.
சங்கிலியனின் தந்திரம்
இந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந்நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர், அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக ஒரே சமயத்தில் மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர்.
சங்கிலியின் முடிவு
சங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கலகம் செய்து சங்கிலியை அகற்றிவிட்டு அவனது மகனான புவிராச பண்டாரத்தை அரசனாக்கினர் என்றும், புவிராசன் ஆண்மையற்றவனாய் இருந்தமையால் சங்கிலியே ஆட்சியை நடத்தி வந்தான் எனவும் செ. இராசநாயகம் கூறுகிறார். இவரது கூற்றுப்படி சங்கிலி 1565 ஆம் ஆண்டு காலமானான்.
இவற்றையும் பார்க்கவும்
சங்கிலி குமாரன்
ஆரியச் சக்கரவர்த்தி
யாழ்ப்பாண வரலாறு
குறிப்புகள்
உசாத்துணைகள்
இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேசனல் சர்வீசஸ், புது டில்லி, 1999. (முதற் பதிப்பு 1933, யாழ்ப்பாணம்)
சபாநாதன். குல. (பதிப்பாசிரியர்), மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995 (மூன்றாம் பதிப்பு).
ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எடுகேசனல் சர்வீசஸ், புது டில்லி, 2003. (முதல் பதிப்பு 1928, அச்சுவேலி)
குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 - கி.பி. 2000), எம்.வி. வெளியீடு தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.
வெளி இணைப்புகள்
சங்கிலியன் சிலை மீள்கட்டுமானம் (குறிப்பு: இணைப்பில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் என சங்கிலியன் குறிப்பிடப்படுவது தவறானதாகும்)
யாழ்ப்பாண அரசர்கள்
1565 இறப்புகள்
|
6216
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
|
கனகசூரிய சிங்கையாரியன்
|
கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.
சப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.
இவற்றையும் பார்க்கவும்
யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்
யாழ்ப்பாண அரசர்கள்
1478 இறப்புகள்
|
6221
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88
|
ஆதிப் பொதுவுடைமை
|
ஆதிப் பொதுவுடைமை என்பது மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட ஒரு சமுதாய ஒழுங்கமைப்பு ஆகும்.
இந்த ஒழுங்கமைப்பு நிலவிய காலத்தில் மனிதர் குழுக்களாகவும் குலங்களாகவும் வாழ்ந்துவந்தனர்.
மானிடவியல் ஆய்வுகளின் அடிப்படையில், இச்சமுதாய ஒழுங்கமைப்பில் பெண்ணே குலங்குழுக்களுக்கு தலைமை தாங்குபவளாகவும், தேடிப்பெறப்படும் பண்டங்கள் யாவும் குழுக்களிடையே சமமாக பகிரப்பட்டு நுகரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குழுக்களின் கருவிகள், உணவு, உடை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தன.
மெய்யியல்
மானிடவியல்
பொருளாதார முறைமைகள்
|
6222
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
மார்க்சியப் பொருள்முதல் வாதம்
|
பொருள்முதல்வாதக் கொள்கை மீதான கார்ல் மார்க்சின் விரிவான விளக்கமே மார்க்சியப் பொருண்முதல் வாதம் (Historical materialism) எனப்படுகிறது.
மரபான பொருண்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருண்முதல் வாதத்தினை இயக்கவியல் தத்துவத்தோடு இணைத்து இயங்கியற் பொருண்முதல் வாதமாக வளர்த்தெடுத்தார்.
இயக்கவியற் பொருண்முதல் வாதமும் வரலாற்றுப் பொருண்முதல் வாதமும் மார்க்சிய லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படை பகுதிகள் ஆகும். சமூகத்தின் வாழ்க்கையை ஆராய்கின்ற பகுதி வரலாற்றுப் பொருள் முதல் வாதமாகும்.
பின்னணி
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காண்ட் முதலான தத்துவஞானிகள் பொருள் முதல்வாதத்தை இயக்க மறுப்பியலுடன் பயன்படுத்தி வந்தார்கள். பொருள் முதல்வாதத்தை இயங்கியலுடன் இணைத்து இயக்கவியல் பொருள் முதல் வாத தத்துவத்தை மார்க்ஸ் உருவாக்கினார்.
பொருண்முதல் வாதமும் கருத்துமுதல் வாதமும்
மனம், கடவுள், ஆன்மா எனும் கருத்துருவங்களே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம் படியானது எனும் கருத்து முதல் வாதிகளின் முடிவினை முற்றாக கழித்ததாக பொருண்முதல் வாதத் தத்துவம் அமைகிறது.
கடவுள், மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித எண்ணம் ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது எனக் கருதுவதே பொருண்முதல் வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாகக் கழித்து விலக்குகிறது.
முக்கியக் கூறுகள்
மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பின்வரும் முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கிறது.
உலகம் என்பது அதன் தன்மையிலேயே இயல்பிலேயே ஒரு பொருளாக அமைந்துள்ளது.
பொருள் அடிப்படையானது. மனம் அல்லது கருத்து இரண்டாம் படியானது. சிந்தனை என்பது மூளை என்ற பொருளின் விளைவு. மூளைக்கு வெளியில் சிந்தனை இருக்க முடியாது. இல்லவும் இல்லை.
நமது உணர்வு நிலை, அதாவது சிந்தனை உட்பட அனைத்தினதும் தோற்றுவாய்கள் வாழ்வின் பொருள் சார்ந்ந்த விடயங்களிற் காணப்படக்கூடியனவும் நம்மைச்சூழவுள்ள பொருட்களை எதிரொளிப்பனவும் ஆகும்.
நடைமுறை அனுபவம்தான் எதற்கும் உரைகல். அதாவது பரிசோதித்தலும் உழைத்தலும்தான். நாம் கொண்டுள்ள கருத்தை சரி என்று நிரூபிக்க அதை செய்து காட்ட வேண்டியிருக்கிறது.
இப்போது பொருள் அதன் மிகுவுயர்ந்த வடிவாக வளர்ந்துள்ளது. அதை நாம் மனம் என்கிறோம். பொருள் சார்ந்த எச்சூழலிலிருந்து மனம் தோன்றியதோ, அதை மாற்றும் வலிமை மனதிற்கு இப்போது உண்டு. இந்த ஊற்று மூலத்தினின்றே எல்லா கருத்துக்களும் எழுந்தன.
பொருள் புறவயமானதும், மனிதனது மனவிருப்பினின்று தனித்து இயங்கும் தன்னுரிமையுடையதுமாகும்.அதேவேளை பொருள் அனைத்துமே அறியப்படக்கூடியனவாகும். அறிய இயலாததெனவும், "தன்னளவிலான பொருள்" எனவும் எதுவுமே இல்லை. இதுவரை அறியப்படாதனவே உள்ளன. மனிதனது ஆற்றலைக் கடந்தது எனவோ , இயற்கையை மீறியது எனவோ எதுவும் இருக்க இயலாது.
மார்க்சியம்
|
6228
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
உறவுமுறைச் சொற்கள்
|
ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனிக்குடும்பத்திலிருந்து தொடங்கித் தலைமுறை தலைமுறையாகவும், கிளைவழியாகவும் பரந்து விரிந்து செல்கின்ற பலவகையான உறவுகள் உருவாகின்றன. இவ்வாறான உறவுமுறைகளைக் குறிக்கும் சொற்களே உறவுமுறைச் சொற்கள் எனப்படுகின்றன.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பு, உடன் பிறந்தோருக்கு இடையிலான தொடர்பு, உடன்பிறந்தோர் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு என ஏராளமான உறவுமுறைத் தொடர்புகள் மனிதருக்கிடையே ஏற்படுகின்றன. இவ்வாறான தொடர்புகளின் தன்மை மனித சமுதாயங்கள் எல்லாவற்றிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வெவ்வேறு சமுதாயங்களின் உலக நோக்கு, பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவ்வாறான தொடர்புகளின் முக்கியத்துவங்கள் வேறுபடுகின்றன. இத்தகைய வேறுபடுகின்ற உறவுமுறைத் தொடர்புகளின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு உறவுமுறைச் சொற்கள் பற்றிய ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன.
உறவுமுறைச் சொற்களின் இயல்புகள்
உறவுமுறைகளைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன எனினும், அச் சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பண்பாட்டு அம்சங்கள், மொழிக்கு மொழி, சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபடுகின்ற காரணத்தால் குறிப்பிட்ட உறவுகளைக் குறிக்கின்ற சொற்களும் பல வழிகளில் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகின்றன. பொதுவாக உறவுமுறைச் சொற்களின் ஆய்வில் பின்வரும் அம்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
பயன்பாட்டு அடிப்படையில் உறவுமுறைச் சொற்களின் வேறுபாடுகள்
உறவுமுறைச் சொற்களில் மொழியியல் அமைப்பு
உறவுமுறைச் சொற்களின் வீச்சு.
பயன்பாட்டு அடிப்படையில் உறவுமுறைச் சொற்கள்
பயன்பாட்டு அடிப்படையில் நோக்கும்போது, இருவகையான உறவுமுறைச் சொற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் அம்மா என்ற சொல்லைத் தனது தாயை அழைப்பதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் நடைமுறையில் தாய் என்ற சொல் அவ்வாறு பயன்படுத்தப் படுவதில்லை. தாய் என்ற சொல் உறவுமுறையைக் குறிப்பிட்டுப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. எனவே உறவினரை விளிக்கப் பயன்படும் சொற்கள், உறவுமுறையைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் என இரண்டு வகை உறவுச் சொற்களை அடையாளம் காண முடியும். முதல் வகை விளிச் சொற்கள் எனவும், இரண்டாம் வகை குறிக்கும் சொற்கள் எனவும் அழைக்கப்படும்.
உறவுமுறைச் சொற்களின் அமைப்பு
தமிழ் மொழியில் தாய், தந்தை, அண்ணன், தம்பி போன்ற உறவுமுறையைக் குறிக்கும் சொற்கள் வேறெந்த உறவுமுறைச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்படாத தனித்துவமான சொற்களாகும். இவ்வகையான சொற்களைத் தனிமச் சொற்கள் அல்லது ஆரம்பநிலைச் சொற்கள் எனக் கூறலாம். பொதுவாக மிக நெருக்கமான உறவுமுறைகளைக் குறிக்கவே தனிமச் சொற்கள் உள்ளன. வேறு சில உறவுமுறைச் சொற்கள் தனிமச் சொற்களுடன் பொருள் வேறுபாட்டை ஏற்படுத்தும் விதமான உறவுமுறை சாராத முன்னொட்டுக்களையோ, பின்னொட்டுக்களையோ சேர்ப்பதன் மூலம் பெறப்படுகின்றன. இத்தகைய ஒட்டுக்கள் பொதுவாக வயது வேறுபாடு, தலைமுறை வேறுபாடு முதலியவற்றைத் தனிமச் சொற்களுக்கு அளிப்பதன் மூலம் வெவ்வேறு உறவுகளைக் குறித்து நிற்கின்றன. பெரிய, சிறிய, மூத்த, இளைய போன்ற பண்புச் சொற்கள் தனிமச் சொற்களுடன் சேர்ந்து பெரிய தந்தை, சிறிய தாய், மூத்த அம்மான், இளைய தம்பி போன்ற வயது வேறுபாடு குறிக்கும் உறவுச் சொற்களை உருவாக்குகின்றன. அதேபோல, கொள்ளு போன்ற முன்னொட்டுக்கள் பாட்டன், கொள்ளுப் பாட்டன் என்னும் உறவுச் சொற்களிடையேயான தலைமுறை வேறுபாட்டைக் குறிக்கின்றன. சிலசமயங்களில் ஒரேவகையான உறவுகளிடையே வேறுபாடு காண்பிப்பதற்காக முன்னொட்டுச் சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாகத் தமிழர் வழக்கப்படி, சொந்த மகனையும், உடன்பிறந்த ஒத்த பாலினர் மகன்களையும், மகன் என்ற உறவுச் சொல்லே குறிக்கின்றது. எனினும் தேவை ஏற்படும்போது பெறா மகன் என்ற முன்னொட்டுடன் கூடிய தனிமச் சொல் பயன்படுத்தப் படுகின்றது. இது போலவே ஒன்றுவிட்ட அண்ணன், ஒன்றுவிட்ட தங்கை போன்ற சொல் வழக்குகளையும் குறிப்பிடலாம்.
சிலவேளைகளில் இரண்டு உறவுமுறைச் சொற்களைச் சேர்த்துப் புதிய உறவுமுறைச் சொல் உருவாக்கப்படுவதுண்டு. பெற்றோருடைய பெற்றோரைத் தாய்வழி தந்தைவழி வேறுபாடின்றிக் குறிக்கும் பாட்டன், பாட்டி போன்ற சொற்களுக்குப் பதிலாக இக்காலத்தில், தாயின் பெற்றோரை அம்மம்மா, அம்மப்பா என்றும், தந்தையின் பெற்றோரை அப்பம்மா, அப்பப்பா என்றும் அழைப்பதைக் காணமுடிகின்றது.
உறவுமுறைச் சொற்களின் வீச்சு
சில உறவுமுறைச் சொற்கள் ஒருவகை உறவினரை மட்டுமே குறிக்க, வேறு சில சொற்கள் வெவ்வேறு வகையில் உறவினராவோரைச் சேர்த்துக் குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட உறவுமுறைச் சொல் உள்ளடக்கும் வெவ்வேறு வகை உறவு முறைகளின் தொகுதி அச் சொல்லின் வீச்சு எனலாம். தனியொரு வகை உறவினரை மட்டுமே குறிக்கும் சொற்கள் குறித்துக் காட்டும் சொற்கள் (Denotative Terms) எனவும், பல வகை உறவுகளை உள்ளடக்கும் சொற்கள் வகைப்பாட்டுச் சொற்கள் (Classificatory Terms) எனவும் குறிப்பிடப்படுகின்றன. தமிழிலுள்ள தாய், கணவன் போன்ற சொற்கள் குறித்துக்காட்டும் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். மச்சான் அல்லது மைத்துனன் என்னும் சொல், தாய்மாமனுடைய மகன், தந்தையின் சகோதரியுடைய மகன், மனைவியுடைய சகோதரன் என்னும் உறவுமுறைகள் அனைத்தையும் குறிப்பிடுகின்றது. இதனால் இச்சொல் ஒரு வகைப்பாட்டுச் சொல் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
உறவுமுறை
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
உசாத்துணைகள்
பக்தவச்சல பாரதி. பண்பாட்டு மானிடவியல். மெய்யப்பன் பதிப்பகம். சென்னை. 2003
மார்கன், லெவிஸ் ஹென்றி. பண்டைய சமூகம் (Ancient Society) (ஆங்கிலம்). 1827.
வெளியிணைப்புகள்
உறவுமுறையும் சமுதாய நிறுவனங்களும் (ஆங்கிலம்)
உறவுமுறை
|
6230
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
|
உலகம் முழுவதிலும் பரந்து வாழும் சமுதாயங்கள் உறவுமுறைகளுக்குப் பெயரிடுவதில் எவ்வித நியமங்களும் கிடையாது. உண்மையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுமுறைப் பெயரிடும் முறைமைகள் கட்டுப்பாடற்ற முறையில் உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் மானிடவியலாளரின் ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் காணப்படும் ஆயிரக்கணக்கான உறவுமுறைப் பெயரிடல் முறைமைகள் ஆறு வகைகளுக்குள் அடங்கி விடக் கூடியன என அறிந்தார்கள். இந்த ஆறு வகைகளும் இவ்வகைகளுக்குள் அடங்கும் முதலில் ஆய்வு செய்யப்பட்ட சமுதாயங்களின் பெயர்களினால் வழங்கப்படுகின்றன.
சூடானிய முறை (Sudanese System)
அவாய் முறை (Hawaiian System)
எசுகிமோ முறை (Eskimo System)
இரோகுவாயிசு முறை (Iroquois System)
ஒமஃகா முறை (Omaha System)
குரோ முறை (Crow System)
உறவுமுறை
en:Kinship and descent
|
6231
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
கிழக்கு கோதாவரி மாவட்டம்
|
கிழக்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் ராஜமுந்திரி ஆகும்.
மாவட்டம் பிரிப்பு
4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய கொனசீமா மாவட்டம் மற்றும் காக்கிநாடா மாவட்டம் நிறுவப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்
இம்மாவட்டம் 19 மண்டலங்களுடன் ராஜமகேந்திராவரம் மற்றும் கோவூர் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது .
மண்டலங்கள்
கிழக்கு கோதாவரி பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:
அரசியல்
ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:
(மக்களவை தொகுதி)
சட்டமன்றத் தொகுதிகள்:
இதனையும் காண்க
ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்
கொனசீமா மாவட்டம்
காக்கிநாடா மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்(இந்தியா)
மேற்கோள்கள்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்
கிழக்கு கோதாவரி மாவட்டம்
|
6232
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
மேற்கு கோதாவரி மாவட்டம்
|
மேற்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம், ஆந்திர பகுதியில் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் பீமாவரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் நிலவியல் பரப்பளவு 7,742 கி.மீ. என அளவிடப்பட்டுள்ளது. இம்மாவடத்தின் மொத்த மக்கள் தொகை, 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, 3,936,966 ஆகும். இதன் மேற்கில் கிருஷ்ணா மாவட்டமும், கிழக்கில் கிழக்கு கோதாவரி மாவட்டமும், தெற்கே வங்காள விரிகுடாவும், வடக்கில் தெலுங்கானா மாநிலமும் அமைந்து, நில, நீர் எல்லைகளால் சூழப்பட்டுள்ளது.
மாவட்டம் பிரிப்பு
4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய ஏலூரு மாவட்டம் நிறுவப்பட்டது.
வரலாறு
கிழக்கு சாளுக்கியர்கள், 700 முதல் 1200 வரை கடலோர ஆந்திராவை ஆட்சி செய்தனர். அப்பொழுது வெங்கியுடன் பெடவேகி கிராமத்திற்கு அருகில், அவர்களின் தலைநகர் அமைந்து இருந்தது. பெடவேகி மற்றும் குண்டுப்பள்ளி ஜிலகரகுடம் கிராமங்களில், இதற்குரிய வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன. எலுரு பின்னர் கலிங்கப் பேரரசின் ஒரு பகுதியாக, 1471 வரை இருந்தது. அதன் பின்னர், அது கஜபதிகளின் கைப் பற்றி ஆட்சி நடத்தினர். 1515 இல், ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர் இ்ந்த நிலப்பகுதியைக் கைப்பற்றினார். இறுதியாக, விஜயநகர இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்நிலப்பகுதியினை கோல்கொண்டாவின் சுல்தான், குதுப் ஷா ஆட்சி செய்தார்.
1925 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம்15 ஆம் நாள், மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவுடன் அதன் தலைமையகமாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், அனைத்து மாவட்ட அலுவலகங்களும், வட்டார அலுவலகங்களும் எலுரு நகரில் அமைக்கப்பட்டன. மேற்கு கோதாவரி மாவட்டம், 1925 ஆம் ஆண்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி பழைய கோதாவரி மாவட்டத்தில் இலிருந்து உருவாக்கப்பட்டது. கோதாவரி மாவட்டம் பின்னர், கிழக்கு கோதாவரி மாவட்டம் எனப்பெயர் மாற்றப்பட்டது. இந்த புதிய மாவட்டத்திற்கு, மேற்கு கோதாவரி மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.
ஆங்கிலேயர்கள், மெட்ராஸ் ராஜதானியில் மசுலீபட்டணத்தை மையமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டனர். 1794-ல் காகினாடவிலும் ராஜமுந்திரியிலும் இரண்டு ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1859-ல் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. 1925 ஏப்ரல் 15 அன்று கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாக பிரித்தும், புதிதாக மேற்கு கோதாவரி மாவட்டத்தை அமைத்தும் சென்னை அரசு முடிவெடுத்தது. முந்தைய கோதாவரி மாவட்டத்தின் பெயர் கிழக்கு கோதாவரி மாவட்டம் என பெயர் மற்றப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகளும் தொகுதிகளும்
ஆட்சிப் பிரிவுகள்
இம்மாவட்டத்தை 19 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.
தொகுதிகள்
இதன் தலைநகரம் பீமவரம் ஆகும். இம்மாவட்டத்தை 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பகுதிகள் நரசாபுரம் மக்களவை தொகுதிகளில் உள்ளன.
7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
சுற்றுலா
பீமவரத்தில் பஞ்சாராமர் கோயில் (ஸோமாராமம்), பால்கொல்லில் பஞ்சாராமர் கோயில் (க்ஷீராராமம்), சின்னத் திருப்பதி எனப்படும் துவாரகா திருமலையும், படட்டிசீமையில் உள்ள ஶ்ரீ வீரபத்திரர் திருக்கோயில் ஆகிய புகழ் பெற்ற இந்து கோயில்களாகக் கருதப்படுகின்றன. கொல்லேரு ஏரியும், பாபி மலையும், சின்ன திருமலையும் கண்கவர் காட்சிகளைத் தன்னகத்தே உடைய சுற்றுலா இடங்களாக அமைந்துள்ளது. நரசபுரம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெருபாலம் கடற்கரையும், சர் ஆர்தர் காட்டன் பேரேசும், ஹேவ்லாக் பாலமும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கிறது. ராஜமுந்திரி விமான நிலையத்தைப் பன்னாட்டு வானூர்தி நிலையமாக மேம்பாடு செய்வதில் ஆர்வமாக உள்ளது. அவ்வாறு மாறினால், வெளிநாட்டுப் பயணிகளாலும், இம் மாவட்டம் சுற்றுலாவுக்கு முக்கிய இடம் பெறும். கோதாவரி மாவட்டங்களின் சுற்றுலா இடங்களைக் காண, ராஜமுந்திரி விமான நிலையத்திலிருந்து, உலங்கு வானூர்திச் சுற்றுலாவும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பொருளாதாரத்தினை பெருக்க தனித்திட்டமும் வகுத்து வருகிறது.
இதனையும் காண்க
ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்
ஏலூரு மாவட்டம்
சான்றுகள்
மேற்கு கோதாவரி மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்
|
6233
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
நாற்கரம்
|
நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பல்கோணம் நாற்கரம் அல்லது நாற்பக்கல் (quadrilateral) எனப்படும். மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட நாற்கோணம் நான்கு சமனற்ற பக்கங்களைக் கொண்டது. , , and என்ற நான்கு உச்சிகளைக்கொண்ட நாற்கரம் எனக் குறிக்கப்படுகிறது.
எளிய நாற்கரம் ABCD இன் உட்கோணங்களின் கூடுதல் 360 பாகைகள், அதாவது,
ஒரு n-கோணியின் உட்கோணங்களின் கூடுதலுக்கான வாய்பாடு (n − 2) × 180° இல் n = 4 எனப் பதிலிட இம்மதிப்பு கிடைக்கும்
நாற்கர வகைகள்
நாற்கரங்கள் எளிமையானவையாக (தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாதவை) அல்லது சிக்கலானவையாக (தன்னைத் தானே வெட்டிக்கொள்கிற) இருக்கலாம்.
எளிமையான நாற்கரங்கள்
எளிமையான நாற்கரங்கள் குவிந்த நாற்கரங்களாகவோ அல்லது குழிந்த நாற்கரங்களாகவோ இருக்கக் கூடும். குவிந்த நாற்கரங்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்:
குவிந்த நாற்கரங்கள்
சரிவகம் (Trapezium): ஒரு சோடி எதிர்ப் பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணையானவை.
இருசமபக்க சரிவகம் (Isosceles trapezium): ஒரு சோடி எதிர்ப் பக்கங்கள் இணையானவையாகவும், மற்ற இரண்டு பக்கங்களும் சமனானவையாகவும் இருக்கும். அடிக்கோணங்கள் இரண்டும் கோணங்கள் சமனானவையாகும்.
இணைகரம் (Parallelogram): இரண்டு சோடி எதிர்ப்பக்கங்களும் ஒன்றுக்கொன்று இணையானவை; எதிர்ப் பக்கங்கள் சமனானவை; எதிர்க் கோணங்கள் சமனானவை.
பட்டம்: இரண்டு சோடி அயல் பக்கங்கள் இரு வேறு சம நீளங்கள் கொண்டவை. இதனால் ஒரு சோடி எதிர்க் கோணங்கள் சமனானவை. மூலை விட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று வெட்டும்.
சாய்சதுரம் (Rhombus): நான்கு பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனானவை. எதிர்ப் பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணையானவை, எதிர்க் கோணங்களும் ஒன்றுக்கொன்று சமனானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் சமகூறாக வெட்டுகின்றன.
செவ்வகம் (Rectangle):எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை. ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
சதுரம் (square) (ஒழுங்கான நாற்கரங்கம்): நான்கு பக்கங்களும் சம நீளம் கொண்டவை. ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
வட்ட நாற்கரம் (Cyclic quadrilateral): நான்கு உச்சிகளும் ஒரு வட்டத்தின் பரிதியில் அமைந்திருப்பன.
தொடுகோட்டு நாற்கரம் (Tangential quadrilateral): நான்கு பக்கங்களும் உள்ளே வரையப்பட்ட வட்டமொன்றின் தொடுகோடுகளாகும்.
இருமைய நாற்கரம் (Bicentric quadrilateral): முன் குறிப்பிட்ட இரண்டுமாக இருக்கும்.
குழிந்த நாற்கரங்கள்
குழிந்த நாற்கரத்தில் ஒரு உட்கோணம் 180° விட அதிகமாக இருக்கும். மேலும் இரண்டு மூலைவிட்டங்களில் ஒன்று நாற்கரத்துக்கு வெளிப்புறத்தில் இருக்கும்.
சிக்கலான நாற்கரங்கள்
தன்னைத்தானே வெட்டிக்கொள்ளும் நாற்கரம், சிக்கலான நாற்கரம் எனப்படும். இது குறுக்கு-நாற்கரம் என்றும் அழைக்கப்படும். ஒரு குறுக்கு நாற்கரத்தின் குறுக்குக்கு ஒரே பக்கத்தில் அமையும் (இடப்புறம் அல்லது வலப்புறம்) நான்கு உட்கோணங்களின் (2 குறுங்கோணம், 2 பின்வளை கோணம்) கூடுதல் 720° ஆக இருக்கும்.
குறுக்கு சரிவகம்: ஒரு சோடி அடுத்தில்லாத பக்கங்களை இணையாகக் கொண்ட குறுக்கு நாற்கரம்.
எதிர் இணைகரம்: ஒவ்வொரு சோடி அடுத்தில்லாத பக்கங்களும் சமநீளமுள்ளவையாகக் கொண்ட குறுக்கு நாற்கரம்.
குறுக்கு செவ்வகம்: ஒரு செவ்வகத்தின் இரு எதிர்ப்பக்கங்களையும் இரு மூலைவிட்டங்களையும் கொண்ட குறுக்கு நாற்கரம்.
குறுக்கு சதுரம்: இரு பக்கங்கள் செங்கோணத்தில் வெட்டிக்கொள்ளும் குறுக்கு செவ்வகம்.
பெயரிடல் வகைப்பாடு
நாற்கரங்களின் பெயரிடல் வகைப்பாட்டைக் (taxonomic classification) கீழேயுள்ள வரைபு காட்டுகின்றது. கீழுள்ள வடிவங்கள் மேலுள்ள வடிவங்களின் சிறப்பு நிலைகளாகும்.
குவிந்த நாற்கரத்தின் பரப்பளவு
ஒரு குவிந்த செவ்வகத்தின் பரப்பளவு காண்பதற்கு பல வாய்பாடுகள் உள்ளன.
எடுத்துக்கொள்ளப்படும் குவிந்த நாற்கரம் ABCD இன் பக்கங்கள்: ; பரப்பளவு .
முக்கோணவியல் வாய்பாடுகள்
, செவ்வகத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள்; அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் .
செங்குத்து மூலைவிட்ட நாற்கரமாக இருந்தால் (எ.கா. சாய்சதுரம், சதுரம், பட்டம் போன்றவை)), பரப்பளவின் இவ்வாய்பாடு பின்னுள்ளபடி சுருங்கும்:
( = , = ).
இருநடுக்கோடுகளின் வாயிலாகப் பரப்பளவின் வாய்பாடு:
இருநடுக்கோடுகளின் நீளங்கள் and ; அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் .
குறுக்கு நாற்கரமல்லாதவற்றுக்கு கீழுள்ள இரு வாய்பாடுகள் பயன்படும்:
(, , பக்கங்கள்; , கோணங்கள்)
( பக்கங்கள்; கோணங்கள்)
நாற்கரம் சரிவகமாக இருந்தால் ஆகும். எனவே பரப்பளவின் வாய்பாடு கீழுள்ளவாறு சுருங்கும்:
பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு, நாற்கரத்தின் பரப்பளவை அதன் பக்கங்கள், இரு எதிர்கோணங்கள் வாயிலாகத் தருகிறது:
இதில், , , , நான்கும் நாற்கரத்தின் பக்கங்கள்; அரைச்சுற்றளவு; , இரு எதிர்கோணங்கள். ஆக இருந்தால், நாற்கரம் வட்ட நாற்கரமாகும். அதன் பரப்பளவின் வாய்பாடு பிரம்மகுப்தரின் வாய்பாடு ஆகச் சுருங்கும்..
பக்கங்கள் , பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் ; , பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் எனில் பரப்பளவின் வாய்பாடு:
வட்ட நாற்கரமாக இருந்தால் இதே வாய்பாடு பின்வருமாறு அமையும்:
( => sinC=sin(180-A)=sinA)
இணைகரத்தின் இரு சோடி எதிர்ப்பக்கங்களும் கோணங்களும் சமம் என்பதால், பரப்பளவின் வாய்பாடு: (; , )
நாற்கரத்தின் பக்கங்கள், மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் கோணம் (, ஆக இருக்கக் கூடாது) வாயிலாக பரப்பளவு:
இணைகரத்துக்கு இந்த வாய்பாடு:
(, )
, , , ஆகிய நான்கு பக்கங்கள் வாயிலாக மற்றொரு வாய்பாடு:
இதில், ஆனது மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்; என்பது இருநடுக்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்.
முக்கோணவியல் சார்புகளற்ற வாய்பாடுகள்
இதில் நாற்கரத்தின் பக்கங்கள் , , , ; அரைச்சுற்றளவு ; மூலைவிட்டங்கள் , வட்ட நாற்கரத்தில் ஆக இருக்கும் என்பதால் இது பிரம்மகுப்தரின் வாய்பாடு ஆகச் சுருங்கும்.
இருநடுக்கோடுகள் , , மூலைவிட்டங்கள் , வாயிலாகப் பரப்பளவு:
, , , நான்கும் எனத் தொடர்புடையவை. இவை நான்கில் எவையேனும் மூன்றின் அளவுகளை மட்டும்கொண்டும் பரப்பளவு காண முடியும். எனவே கீழுள்ள வாய்பாடுகள் கிடைக்கின்றன:
இருநடுக்கோடுகளின் நீளங்களும் ஒரு மூலைவிட்டமும் பயன்படுத்தி பரப்பளவின் வாய்பாடு:
இரு மூலைவிட்டங்களும் ஒரு இருநடுக்கோடும் கொண்ட வாய்பாடு:
திசையன் வாய்பாடுகள்
திசையன்களைப் பயன்படுத்தி நாற்கரம் இன் பரப்பளவின் வாய்பாடு:
(, திசையன்கள், நாற்கரத்தின் மூலைவிட்டங்கள்)
இது, , திசையன்களின் குறுக்குப் பெருக்கத்தின் மட்டு அளவில் பாதியாகும். இரு பரிமாண யூக்ளிடிய தளத்தில் இவ்விரு திசையன்களும் , எனில் பரப்பளவின் வாய்பாடு பின்வருமாறு அமையும்:
மூலைவிட்டங்கள்
மூலைவிட்டங்களின் பண்புகள்
கீழுள்ள அட்டவணையில் சில அடிப்படையான நாற்கரங்களின் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடுபவையா, செங்குத்தானவையா அல்லது சமமானவையான எனத் தரப்பட்டுள்ளது.
மூலைவிட்டங்களின் நீளங்கள்
ABCD நாற்கரத்தின் இரு பக்கங்கள், ஒரு மூலைவிட்டம் ஆகியவற்றால் அமையும் முக்கோணங்கள் ஒவ்வொன்றிலும் கோசைன் விதியைப் பயன்படுத்தி மூலைவிட்டங்களின் நீளங்களைக் காணலாம்:
மேலும் சமச்சீர்மையுள்ள பிற வாய்பாடுகள்:
இணைகரவிதியும், தொலெமியின் தேற்றத்தின் பொதுமைப்படுத்தலும்
எந்தவொரு குவிவு நாற்கரத்திலும் அதன் நான்கு பக்க நீளங்களின் வர்க்கங்ளின் கூட்டுத்தொகையானது, அதன் மூலைவிட்ட நீளங்களின் வர்க்கங்கள், மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நீளத்தின் வர்க்கத்தின் நான்கு மடங்கு இவற்றின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும். அதாவது குவிவு நாற்கரம் ABCD எனில்:
இதில், மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நீளம் x. இம்முடிவானது ஆய்லரின் நாற்கரத் தேற்றம் என அறியப்படுவதோடு, இணைகர விதியின் பொதுமைப்படுத்தலுமாக உள்ளது.
1842 இல் செருமானியக் கணிதவியலாளர் கார்ல் ஆன்டன் பிரெட்ஷ்ணைடர், தொலெமியின் தேற்றத்தின் பொதுமைப்படுத்தலைக் கீழுள்ளவாறு தந்துள்ளார். இது குவிவு நாற்கரத்தின் இரு மூலைவிட்ட நீளங்களின் வர்க்கங்களின் பெருக்குத்தொகையினைத் தருகிறது:
இதனை நாற்கரங்களுக்கான கோசைன் விதியாகக் கொள்ளலாம். வட்ட நாற்கரத்தில் A + C = 180° என்பதால் cos (A + C) = −1. எனவே இம்முடிவு pq = ac + bd எனச் சுருங்கும்.
கோண இருசமவெட்டிகள்
ஒரு குவிவு நாற்கரத்தின் உட்கோண இருசமவெட்டிகள் ஒரு வட்ட நாற்கரத்தை அமைக்கும் (அதாவது அடுத்துள்ள கோணங்களின் இருசமவெட்டிகள் சந்திக்கும் புள்ளிகள் ஒரே வட்டத்தின் மீதமையும்) அல்லது, நான்கு உட்கோண இருசமவெட்டிகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும். பிந்தைய வகையில் நாற்கரமானது, தொடு நாற்கரமாக இருக்கும்.
ABCD நாற்கரத்தின் A, C கோணங்களின் இருசமவெட்டிகள் சந்திக்கும் புள்ளி மூலைவிட்டம் BD இன் மீதமைந்தால். B, D கோணங்களின் இருசமவெட்டிகள் மூலைவிட்டம் AC இன் மீது அமையும்.
இருநடுக்கோடுகள்
ஒரு நாற்கரத்தின் எதிர்ப்பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் இருநடுக்கோடுகள் எனப்படும். இரு நடுக்கோடுகள் வெட்டும்புள்ளி நாற்கரத்தின் உச்சிகளின் திணிவு மையம் ஆகும்.
எந்தவொரு நாற்கரத்தின் (குவிந்த, குழிந்த, குறுக்கு நாற்கரங்கள்) பக்கங்களின் நடுப்புள்ளிகள் ஒரு இணைகரத்தின் உச்சிப் புள்ளிகளாகும்.
இந்த இணைகரத்தின் பண்புகள்:
இணைகரத்தின் ஒவ்வொரு சோடி எதிர்ப்பக்கங்களும் மூல நாற்கரத்தின் மூலைவிட்டத்திற்கு இணையாகும்.
இணைகரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் அப்பக்கம் எந்த மூலைவிட்டத்திற்கு இணையாக இருக்கிறதோ அதன் நீளத்தில் பாதி.
இணைகரத்தின் பரப்பளவு, மூல நாற்கரத்தின் பரப்பளவில் பாதி.
இணைகரத்தின் சுற்றளவு, மூல நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.
இணைகரத்தின் மூலைவிட்டங்கள் மூல முக்கோணத்தின் இருநடுக்கோடுகளாக இருக்கும்.
மூல நாற்கரத்தின் இரண்டு இருநடுக்கோடுகளும் மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டும் ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகளாக இருக்கும். மேலும் அவை சந்திக்கும் புள்ளி அவற்றை இருசமக்கூறிடும்.
ஒரு குவிவு நாற்கரத்தின் பக்கங்கள் a, b, c, d எனில், a, c பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் இருநடுக்கோட்டின் நீளம்:
(p, q மூலைவிட்ட நீளங்கள்)
b, d பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் இருநடுக்கோட்டின் நீளம்:
இவ்விரு முடிவுகளிலிருந்து பின்வரும் மதிப்பைப் பெறலாம்.
இருநடுக்கோடுகளின் நீளங்களை எதிர்ப்பக்க நீளங்கள், மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம் ஆகியவற்றின் வாயிலாக எழுதலாம். ஆய்லரின் நாற்கரத் தேற்றத்தைப் பயன்படுத்தி இதனைப் பெறலாம்:
ஒவ்வொரு இருநடுக்கோட்டு நீள வாய்பாட்டிலும் உள்ள எதிர்ப்பக்கங்கள், அந்த இருநடுக்கோடுகள் இணைக்கும் எதிர்ப்பக்கங்கள் இல்லை.
குவிவு நாற்கரத்தில், இருநடுக்கோடுகளுக்கும் மூலைவிட்டங்களுக்குமிடையே பின்வரும் இரும இணைப்பு இருப்பதைக் காணலாம்:
இரு மூலைவிட்டங்களும் செங்குத்தாக இருந்தால், இருந்தால் மட்டுமே, இருநடுக்கோடுகள் இரண்டும் சமநீளமுள்ளவை.
இரு மூலைவிட்டங்களும் சமநீளமுள்ளவையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, இருநடுக்கோடுகள் இரண்டும் செங்குத்தானவை.
முக்கோணவியல் முற்றொருமைகள்
நாற்கரம் ABCD இன் நான்கு கோணங்களும் பின்வரும் முற்றொருமைகளை நிறைவு செய்யும்:
tan 90° இன் மதிப்பு வரையறுக்கப் படாததால், கடைசி இரு முற்றொருமைகளிலும் எந்தவொரு கோணமும் செங்கோணமாக இருக்க முடியாது.
, , , குவிவு நாற்கரத்தின் பக்கங்கள்; அரைச்சுற்றளவு; எதிர்கோணங்கள் எனில்:
.
இவற்றைப் பயன்படுத்தி பிரெட்ஷ்ணைடரின் வாய்பாட்டைப் பெறலாம்.
சமனிலிகள்
பரப்பளவு
குவிவு நாற்கரத்தின் பக்க நீளங்கள் a, b, c, d; மூலைவிட்டங்கள் p, q எனில் பரப்பளவு K நிறைவு செய்யும் சமனிலிகள்:
செவ்வகத்துக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்.
சதுரத்துக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்.
மூலைவிட்டங்கள் செங்குத்தாக இருந்தால் மட்டுமே சமக்குறி பொருந்தும்.
செவ்வகத்துக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்.
பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு மூலம் நாற்கரத்தின் பரப்பளவு:
வட்ட நாற்கரமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, சமக்குறி பொருந்தும்.
பரப்பளவு நிறைவு செய்யும் மற்றொரு சமனிலி:
நாற்கரத்தின் சுற்றளவு L எனில்
சமக்குறி சதுரத்துக்கு மட்டுமே பொருந்தும்.
p, q மூலைவிட்டங்கள் எனில்:
, மூலைவிட்டங்கள் செங்குத்தாக இருந்தால் மட்டுமே சமக்குறி பொருந்தும்.
சதுரத்துக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்.
சதுரத்துக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்.
மூலைவிட்டங்கள், இருநடுக்கோடுகள்
ஆய்லரின் நாற்கரத் தேற்றத்தின் கிளைமுடிவுச் சமனிலி:
இணைகரத்துக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்.
வட்ட நாற்கரத்துக்குச் சமனியாகவுள்ள தொலெமியின் தேற்ற முடிவைப் பொதுமைப்படுத்தி குவிவு நாற்கரத்துக்கு சமனிலியாக ஆய்லர் மாற்றியுள்ளார்:
பெரும்பாலும் இது தொலெமியின் சமனிலி எனப்படுகிறது.
இருநடுக்கோடுகள் m, n; மூலைவிட்டங்கள் p, q எனில் அவற்றைத் தொடர்புபடுத்தும் சமனிலி:
மூலைவிட்டங்கள் சமமாக இருந்தால் மட்டுமே, சமக்குறி பொருந்தும். முற்றொருமையிலிருந்து இச்சமனிலி நேரிடையாகப் பெறப்படுகிறது.
பக்கங்கள்
நாற்கரத்தின் பக்கங்கள் a, b, c, d நிறைவுசெய்யும் சமனிலிகள்:
பெரும, சிறுமப் பண்புகள்
குறிப்பிட்ட சுற்றளவுள்ள எல்லா நாற்கரங்களிலும் மிக அதிகப் பரப்பளவுள்ள நாற்கரம் ஒரு சதுரமாக இருக்கும். இதனைக் கீழுள்ள சமனிலியிலிருந்து பெறலாம்.
, K - பரப்பளவு; L சுற்றளவு. நாற்கரம், சதுரமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, சமக்குறி பொருந்தும். இதேபோல ஒரே பரப்பளவுள்ள நாற்கரங்களில் மிகச் சிறியளவு சுற்றளவுள்ளது சதுரம்.
தரப்பட்ட பக்கநீளங்கள் கொண்ட நாற்கரங்களில் அதிகபட்ச பரப்பளவு கொண்டது வட்ட நாற்கரம்.
தரப்பட்ட மூலைவிட்டங்களையுடைய குவிவு நாற்கரங்களில் மிக அதிகப் பரப்பளவு கொண்டது செங்குத்து மூலைவிட்ட நாற்கரம். இதனை நேரிடையாகக் பின்வரும் பரப்பளவு சமனிலியிலிருந்து பெறலாம்:
மூலைவிட்டங்கள் p, q க்கு இடைப்பட்ட கோணம் θ. θ = 90° ஆக இருந்தால், இருந்தால் மட்டுமே, சமக்குறி பொருந்தும்.
குவிவு நாற்கரம் ABCD இன் உள்ளமையும் புள்ளி P எனில்::
இச்சமனிலியிலிருந்து, நாற்கரத்தின் உச்சிகளிலிருந்துள்ள தூரங்களின் கூட்டுத்தொகையை சிறுமமாகக் கொண்ட உள்ளமை புள்ளி மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளி என அறியலாம். எனவே இப்புள்ளி குவிவு நாற்கரத்தின் பெர்மா புள்ளியாகும்
குவிவு நாற்கரங்களின் பிற பண்புகள்
நாற்கரத்தி எல்லாப் பக்கங்களின் மீதும் வெளிப்புறமாக சதுரங்கள் வரையப்பட்டால், எதிரெதிர் சதுரங்களின் மையங்களை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் சம நீளமுள்ளவை; செங்த்தானவை. இவை ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரத்தின் உச்சிகளாக இருக்கும்.
ஒரு எளிய நாற்கரத்தின் பக்கங்களுக்கு சமமான பக்கங்களைக் கொண்ட ஒரு வட்ட நாற்கரம் இருக்கும்.
நாற்கரத்தின் மூலைவிட்டங்கள், பக்கங்களால் உருவாகும் நான்கு முக்கோணங்களில், ஒரு சோடி எதிர் முக்கோணங்களின் பரப்பளவுகளின் பெருக்குத்தொகை மற்ற இரு முக்கோணங்களின் பரப்பளவுகளின் பெருக்குத்தொகைக்குச் சமமாக இருக்கும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Quadrilaterals Formed by Perpendicular Bisectors, Projective Collinearity and Interactive Classification of Quadrilaterals from cut-the-knot
Definitions and examples of quadrilaterals and Definition and properties of tetragons from Mathopenref
A (dynamic) Hierarchical Quadrilateral Tree at Dynamic Geometry Sketches
An extended classification of quadrilaterals at Dynamic Math Learning Homepage
The role and function of a hierarchical classification of quadrilaterals by Michael de Villiers
நாற்கரங்கள்
|
6234
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
விஜயரகுநாத தொண்டைமான்
|
இராஜா விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் (Vijaya Raghunatha Tondaiman) (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் புதுக்கோட்டையை 1789 முதல் 1807 பெப்ரவரி முதல்தேதி வரை வரை ஆண்ட மன்னர் ஆவார்.
துவக்க வாழ்கை
விஜய ரகுநாத தொண்டைமான் 1759 மே அன்று திருமலைராயா தொண்டைமான் சாகிப்புக்கு மகனாக பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.
ஆட்சி
இராயரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரீசு இன்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார். விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது தென்னிந்தியாவில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். விஜய ரகுநாத தொண்டைமான் பிரித்தானியருக்கு ஆதரவாக போரிட்டார். 1796 அக்டோபர் 17 அன்று ஆற்காடு நவாபான முகமது அலி கான் வாலாஜா இவருக்கு "ராஜா பகதூர்" என்ற பட்டத்தை வழங்கினார். பாளையக்காரர் போர்களில் விஜயரகுநாத தொண்டைமான் முக்கிய பங்கு வகித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை பிடிக்க பிரித்தானியருக்கு உதவியாக இருந்தார். இவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக 1803 ஆம் ஆண்டு கீழாநிலைப் பிரதேசத்தை பிரித்தானியர் இவரிடம் ஒப்படைத்து அங்கீகரித்தனர்.
தஞ்சாவூர் மராத்திய அரசை 1799 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்றவை நாடு என்ற நிலையில் இருந்து சமீன்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டன. 1801 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் கர்நாடகப் பிரதேசங்களையும் தன் இராச்சியத்துடன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு புதுக்கோட்டை அரசர்கள் வழங்கிய உதவியை அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியான புதுக்கோட்டை சமஸ்தானத்தை சுயாதீனமாக இருக்க அனுமதித்தனர்.
குடும்பம்
விஜயரகுநாத தொண்டமான் முதலில் ராணி பிரயநாயகி ஆய் சாகீப்பை மணந்தர். பின்னர் ராணி ஆயிஅம்மாள் ஆயை மணந்தார். விஜயரகுநாத தொண்டமானுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர், அவர்களின் இரு மகன்களான விஜயரகுநாதராய தொண்டைமான் (1797-1825) மற்றும் ரகுநாத தொண்டைமான் (1798-1839) ஆகியோர் அவருக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர்.
இறப்பு
விஜய ரகுநாத தொண்டமான் 1807 பிப்ரவரி முதல் நாள் அன்று தன் 47 ஆம் வயதில் இறந்தார். இளைய ராணியாகிய ஆயிஅம்மாள் ஆய் உடன் கட்டை ஏறினார்.
மேற்கோள்கள்
புதுக்கோட்டை சமஸ்தானம்
1759 பிறப்புகள்
1807 இறப்புகள்
|
6240
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
சரிவகம்
|
இயூக்கிளிடிய வடிவியலில், ஒரு சரிவகம் (trapezoid அல்லது trapezium) என்பது ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக (இணையாக) அமைந்துள்ள ஒரு குவிவு நாற்கரம் ஆகும். இரு சோடி எதிர்ப்பக்கங்களும் இணையாக உள்ள சரிவகம் இணைகரம் என்று அழைக்கப்படும்.
இணை பக்கங்கள் இரண்டும் சரிவகத்தின் "அடிப்பக்கங்கள்" எனவும், மற்ற இணையற்ற இரு பக்கங்களும் "தாங்கி பக்கங்கள்" எனவும் அழைக்கப்படும். இரு சோடி எதிர்ப்பக்கங்களும் இணையானவையாக இருந்தால், சரிவகம் ஒரு இணைகரமாகி விடும். இந்நிலையில் அதற்கு இரு சோடி இணை பக்கங்களும் அடிப்பக்கங்களாக இருக்கும். எந்த பக்கங்களும் சமமாக இல்லாவிடில் அச்சரிவகம், "அல்சமபக்கச் சரிவகம்" எனப்படும்.
மாறுபட்ட வரையறைகள்
இரு சோடி இணைபக்கங்களுடைய இணைகரங்களைச் சரிவகங்களாக எடுத்துக்கொள்ளலாமா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் சரிவகத்தை ஒரேயொரு சோடி இணைபக்கங்கள் கொண்ட நாற்கரமாகவும், வேறு சிலர் குறைந்தது ஒரு சோடி இணைபக்கங்கள் கொண்ட நாற்கரமாகவும் வரையறுக்கின்றனர். முதல் வரையறையின் படி இணைகரங்களை சரிவகங்களாகக் கருத முடியாது. Others இரண்டாவது வரையறையின்படி இணைகரங்கள் ஒரு சிறப்புவகையான சரிவகங்களாக இருக்கும்.)
நுண்கணிதம் போன்ற உயர் கணிதத்தில் இரண்டாவது வரையறை பயனுள்ளதாக அமைகிறது. இந்தக் கட்டுரையிலும் இரண்டாவது வரையறையே கணக்கில் கொள்ளப்படுகிறது. சாய்சதுரங்கள், செவ்வகங்கள், சதுரங்கள் உட்பட்ட அனைத்து இணைகரங்களும் சரிவகங்களாகும். செவ்வகங்கள் நடு-விளிம்புகளைப் பொறுத்து ஆடி சமச்சீர்மை உடையது; சாய்சதுரங்கள் உச்சிகளில் ஆடி சமச்சீர்மை கொண்டவை; சதுரங்கள் நடு-விளிம்புகள், உச்சிகள் இரண்டையும் பொறுத்து ஆடி சமச்சீர்மை உடையவை.
சிறப்பு வகைகள்
இரு அடுத்துள்ள கோணங்களைச் செங்கோணங்களாகக் கொண்ட சரிவகம், நேர் சரிவகம்
நீள அடிப்பக்கத்தின் இரு அடுத்துள்ள கோணங்களைக் குறுங்கோணங்களாகக் கொண்ட சரிவகம், குறு சரிவகம் (acute trapezoid) என்றும் ஒவ்வொரு அடிப்பக்கத்தின் இரு அடுத்துள்ள கோணங்களில் ஒன்று குறுங்கோணமாகவும் மற்றொன்று விரிகோணமாகவும் இருந்தால் அச்சரிவகம் விரி சரிவகம் (obtuse trapezoid) எனவும் அழைக்கப்படுகிறது.
அடிப்பக்க கோணங்கள் இரண்டும் சமமாக இருந்தால் அச்சரிவகம், இருசமபக்க சரிவகம் ஆகும். இருசமபக்க சரிவகத்தின் இரு தாங்கிப் பக்கங்களும் சமமாக இருப்பதோடு எதிரொளிப்பு சமச்சீர்மை கொண்டவையாக இருக்கும். இது குறு சரிவகங்களுக்கும் நேர் சரிவகங்களுக்கும் சாத்தியமாகும்.
இரு சோடி எதிர்ப்பக்கங்களும் இணையாகவுள்ள சரிவகம் இணைகரம் ஆகும்.
தொடு சரிவகம் என்பது அதன் நான்கு பக்கங்களும் அதனுள் அமையும் வட்டத்துக்குத் தொடுகோடுகளாக அமைந்துள்ள சரிவகம்.
சரிவகம் அமைவதற்கான நிபந்தனைகள்
a, c, b, d - நான்கு பக்கங்களின் நீளங்கள் எனில்,
a, b பக்கங்களை மட்டும் இணையாகக் கொண்ட சரிவகம் அமையக் கட்டுபாடு:
இணைகரமாக இருப்பதற்கான கட்டுபாடு:
ஆக இருந்தால் வெளி-தொடு நாற்கரமாக இருக்கும் (வெளி-தொடு நாற்கரம் ஒரு சரிவகம் இல்லை).
பண்பாக்கங்கள்
ஒரு குவிவு நாற்கரத்தில், கீழே தரப்பட்டுள்ள பண்புகள் அனைத்தும் சமானமானவை என்பதுடன் அவை ஒவ்வொன்றும் அந்நாற்கரம் சரிவகமாக இருப்பதற்கான என்பதைக் காட்டுகிறது:
இரு அடுத்துள்ள கோணங்கள் மிகைநிரப்பு கோணங்கள் (அதாவது கூட்டுத்தொகை 180 பாகைகள்.
ஒரு பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டத்திற்கு இடைப்பட்ட கோணம், எதிர்ப்பக்கத்திற்கும் அதே மூலைவிட்டத்திற்கும் இடைப்பட்ட கோணத்திற்குச் சமம்.
மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று ஒரே விகிதத்தில் வெட்டிக்கொள்கின்றன (இந்த விகிதம், இணை பக்கங்களின் விகிதத்திற்குச் சமம்)
மூலைவிட்டங்கள் நாற்கரத்தை நான்கு முக்கோணங்களாகப் பிரிக்கும். அவற்றுள் ஒரு சோடி எதிர் முக்கோணங்கள் சம பரப்பளவு கொண்டவை.
ஒரு மூலைவிட்டத்தால் கிடைக்கும் இரு முக்கோணங்களின் பரப்பளவுகளின் பெருக்குத்தொகை, மற்றொரு மூலைவிட்டத்தால் கிடைக்கும் இரு முக்கோணங்களின் பரப்பளவுகளின் பெருக்குத்தொகைக்குச் சமமாக இருக்கும்.
மூலைவிட்டங்களால் உருவாகும் நான்கு முக்கோணங்களில் ஏதாவது இரு முக்கோணங்களின் பரப்பளவுகள் S, T எனில், கீழுள்ள சமன்பாடு நிறைவு செய்யப்படும்.
(K - நாற்கரத்தின் பரப்பளவு)
இரு எதிர்ப்பக்கங்களின் நடுப்புள்ளிகளும் மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளியும் ஒரே கோட்டிலமையும்.
ABCD நாற்கரத்தின் கோணங்கள் பின்வரும் முடிவை நிறைவு செய்யும்:
இரு அடுத்துள்ள கோணங்களின் கோசைன் மதிப்புகளின் கூடுதல் பூச்சியமாக இருக்கும். இது மற்ற இரு அடுத்துள்ள கோணங்களுக்கும் பொருந்தும்.
இரு அடுத்துள்ள கோணங்களின் கோடேன்ஜென்ட்டின் மதிப்புகளின் கூடுதல் பூச்சியமாக இருக்கும். இது மற்ற இரு அடுத்துள்ள கோணங்களுக்கும் பொருந்தும்.
நாற்கரத்தின் இருநடுக்கோடுகளில் (எதிர்ப்பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு) ஒன்று, நாற்கரத்தை சம பரப்பளவுள்ள இரு நாற்கரங்களாகப் பிரிக்கும்.
இரு எதிர்ப்பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் இருநடுக்கோட்டின் நீளத்தின் இருமடங்கு, நாற்கரத்தின் மற்ற இரு பக்க நீளங்களின் கூட்டுத்தொகைக்குச் சமம்.
கூடுதலாகப் பின்னுள்ள பண்புகள் சமானமானவை; எதிர்ப்பக்கங்கள் a, b இணை என்பதைத் தருகிறது.
தொடர்ச்சியான நான்கு பக்கங்கள் a, c, b, d மற்றும் மூலைவிட்டங்கள் p, q நிறைவுசெய்யும் சமன்பாடு:
மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம் v நிறைவு செய்யும் சமன்பாடு:
நடுக்கோடும் உயரமும்
சரிவகத்தின் தாங்கிப் பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு சரிவகத்தின் "நடுக்கோடு" ஆகும். இந்த நடுக்கோடு இரு இணை அடிப்பக்கங்களுக்கும் இணையாக இருக்கும். இதன் நீளம் (m) அடிப்பங்களின் நீளங்களின் (a, b) சரிசரியாக இருக்கும்.
சரிவகத்தின் "உயரம்" என்பது அதன் இணை அடிப்பக்கங்களுக்கு இடைப்பட்ட செங்குத்து தூரமாகும். அடிப்பக்கங்களின் நீளங்கள் சமமில்லையென்றால் (a ≠ b) சரிவகத்தின் உயரத்தை அதன் நான்கு பக்கங்களின் நீளங்களைக் கொண்டு காணும் வாய்பாடு:
( a, b இணை பக்கங்கள்; c, d தாங்கி பக்கங்கள்)
பரப்பளவு
சரிவகத்தின் பரப்பளவு K:
a, b - இணை பக்கங்களின் நீளங்கள்; h - உயரம்; m - இணை பக்க நீளங்களின் கூட்டுச் சராசரி. கிபி 499 இல், பண்டைய இந்தியக் கணிதவியலாளரும் வானிலையாளருமான ஆரியபட்டர் அவரது ஆர்யபட்டியம் (பிரிவு 2.8) நூலில் இதனைப் பயன்படுத்தியுள்ளார். ஒரு சரிவகத்தின் ஒரு இணைபக்கம் புல்ளியாகச் சுருங்குவதால் கிடைப்பதாக ஒரு முக்கோணத்தைக் கொண்டால் இவ்வாய்பாட்டின் சிறப்பு வகையாக, முக்கோணத்தின் பரப்பளவுக்கான வாய்பாட்டைப் பெறலாம்.
7 ஆம் நூற்றாண்டின் இந்தியக் கணிதவியலாளர் முதலாம் பாஸ்கரர் கீழ்வரும் வாய்பாட்டைத் தருவித்தார்:
சரிவகத்தின் தொடர்ச்சியான நான்கு பக்கங்களின் நீளங்கள் a, c, b, d எனில் சரிவகத்தின் பரப்பளவு:
a, b இணை பக்கங்கள்; b > a.
இவ்வாய்பாட்டை மேலும் சமச்சீரான வடிவில் காரணிப்படுத்தி எழுதலாம்:
இணை பக்கங்களில் ஒன்று புள்ளியாகச் சுருங்கினால் ( a = 0), இந்த வாய்பாடு முக்கோணத்தின் பரப்பளவிற்கான ஈரோனின் வாய்பாடாகக் கிடைக்கும்.
ஈரோனின் வாய்பாட்டை ஒத்த, சரிவகப் பரப்பளவுக்கான மற்றொரு வாய்பாடு:
- சரிவகத்தின் அரைச்சுற்றளவு.
பொது நாற்கரத்துக்கான பிரெட்ஷ்ணைடரின் வாய்பாட்டின் சிறப்பு வகையாகவும் இவ்வாய்பாடு உள்ளது.
பிரெட்ஷ்ணைடரின் வாய்பாட்டிலிருந்து கிடைப்பது:
இணை பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோடு சரிவகத்தின் பரப்பளவை இருசமக்கூறிடும்.
மூலைவிட்டங்கள்
சரிவகத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள்
a - சிறிய அடிப்பக்கம்; b - பெரிய அடிப்பக்கம்; c, d தாங்கி பக்கங்கள்.
AC, BD மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளி O. இம்மூலைவிட்டங்களால் சரிவகம் நான்கு முக்கோணங்களாகப் பிரிக்கப்படுகிறது (படம்).
இன் பரப்பளவு = இன் பரப்பளவு}
, முக்கோணங்களின் பரப்பளவுகளின் பெருக்குத்தொகையும் , முக்கோணங்களின் பெருக்குத்தொகையும் சமம்.
அடுத்துள்ள முக்கோணங்களின் பரப்பளவுகளின் விகிதம், இணை அடிப்பக்க நீளங்களின் விகிதத்திற்குச் சமம்.
சரிவகத்தின் வரிசையான உச்சிகள் A, B, C, D; இணை பக்கங்கள் AB, DC; மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி E; F, DA பக்கத்தின் மீதும், G, BC பக்கத்தின் மீதும் FEG ஆனது AB, CD க்கு இணையாக உள்ளவாறு அமையும் புள்ளிகள் எனில், AB, DC இன் இசைச் சராசரி FG ஆகும்:
இணையில்லாத இரு பக்கங்களின் நீட்டிப்புக்கோடுகள் வெட்டும் புள்ளி மற்றும் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி வழியாகச் செல்லும் கோடானது, அடிப்பக்கம் ஒவ்வொன்றையும் இருசமக்கூறிடும்
பிற பண்புகள்
சரிவகத்தின் பரப்பளவின் மையம், இணை பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டின் மீதமையும். இந்த மையம், நீளமான இணைபக்கம் b இலிருந்து உள்ள செங்குத்து தூரம் x:
இக்கோட்டுத்துண்டை பரப்பளவு மையம் பிரிக்கும் விகிதம் (சிறிய இணை பக்கத்திலிருந்து நீள இணை பக்கத்துக்கு எடுத்துக்கொள்ள)
A, B கோணங்களின் இரு சமவெட்டிகள் வெட்டும் புள்ளி P; C, D கோணங்களின் இருசமவெட்டிகள் வெட்டும் புள்ளி Q எனில்:
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Trapezium at Encyclopedia of Mathematics.
Trapezoid definition Area of a trapezoid Median of a trapezoid With interactive animations
Trapezoid (North America) at elsy.at: Animated course (construction, circumference, area)
Trapezoidal Rule on Numerical Methods for Stem Undergraduate
Autar Kaw and E. Eric Kalu, Numerical Methods with Applications, (2008)
நாற்கரங்களின் வகைகள்
|
6241
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
சாய்சதுரம்
|
இயூக்ளீட் வடிவியலில், சாய்சதுரம் (rhombus) என்பது எளிய பல்கோணம் (தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாது). அதன் நான்கு பக்கமும் சம அளவில் கொண்டுள்ளது. இதனை சமபக்க நாற்கரம் என்றும் அழைப்பார்கள். இதனைச் சிலர் வைரம் என்று அழைப்பார்கள் ஏனெனில், இது சீட்டுக்கட்டிலுள்ள டயமண்ட் போன்று இருப்பதால் அவ்வாறு அழைப்பார்கள். இந்த வடிவம் எண்முக முக்கோணகத்தின் அல்லது லோஜெங்கேயின் முன்னிருத்தலைப் போன்றுள்ளது. எண்முக முக்கோணகத்தின் 60°யிலும் லோஜெங்கேயின் 45° யிலும், ஒரு சாய்சதுரத்தையும் காணலாம்.
அனைத்து சாய்சதுரமும் இணைகரம் மற்றும் பட்டமே. எல்லா கோணங்களையும் செங்கோணமாகக் கொண்ட சாய்சதுரம் சதுரம் ஆகும். .
சொற்பிறப்பியல்
சரிவகம்(ஆங்கிலத்தில் ரொம்பஸ்) என்னும் சொல் ரோம்போஸ் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ரோம்போஸ் என்ற சொல்லுக்கு மீண்டும் மீண்டும் சுற்றுதல் (கிரேக்கத்தில் ரெம்போ) என்று பொருள். , யூக்ளிடு, ஆர்க்கிமிடீஸ் என்ற இரு அறிஞர்களும் இந்த சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரே அடிப்பாகத்தைக் கொண்ட இரு செங்கோண வட்டக் கூம்பினை “திடமான சரிவகம்” என்று அழைக்கின்றனர்.
சாய்சதுரம் என்ற இந்த வடிவம், திடமான சாய்சதுரத்தில் இரு கூம்பின் உச்சியில் குறுக்காக வெட்டும் பொது ஏற்படுகிறது.
குணங்கள்
ஒரு எளிய பல்கோணம்(தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாது) கீழ்க்கண்ட நிபந்தங்களைச் சந்திக்கும் பட்சத்தில் மட்டுமே அது ஒரு சாய்சதுரம் என்று அழைக்கப்படும்:
நான்கு சமபக்கங்களைக் கொண்ட நாற்கரமாக இருக்க வேண்டும்.
இரண்டு மூலைவிட்டங்களும் ஒன்றை ஒன்று செங்குத்தாக இருகூறாக வெட்டும் நாற்கரமாக இருக்க வேண்டும்
எதிர் எதிர் உள்கோணங்களை இருகூறாகவெட்டும் மூலைவிட்டங்களைக் கொண்ட நாற்கரமாக இருக்க வேண்டும்.
உள்கோணங்களை இருகூறாக்கும் மூலைவிட்டங்களைக் கொண்ட இணைகரமாக இருக்க வேண்டும்.
அடுத்தடுத்த இரு பக்கங்களும் சமமான அளவைக் கொண்ட இணைகரமாக இருக்க வேண்டும்.
செங்குத்தான இரு மூலைவிட்டங்களைக் கொண்ட இணைகரமாக இருக்க வேண்டும். ( செங்குத்து மூலைவிட்ட நாற்கரம்).
அடிப்படை இயல்புகள்
எல்லா சாய்சதுரமும் எதிர் எதிர் உச்சிகளை இணைக்கும் மூலைவிட்டத்தைகயும், இரு சோடி இணை கோடுகளையும் கொண்டுள்ளது. சர்வசமமான முக்கோணத்தைக் கொண்டு, சாய்சதுரம் மூலைவிட்டத்தின் இருபக்கமும் சர்வசமமாக உள்ளது என்று நிரூபிக்கலாம். கீழ்க்கண்டவை சாய்சதுரத்தின் இயல்புகள் ஆகும்.
சாய்சதுரத்தின் எதிர்க்கோணங்கள் ஒரே அளவிலானவை.
சாய்சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் செங்குத்தாக உள்ளன; சாய்சதுரம் ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம் ஆகும்.
சாய்சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் எதிர் எதிர் கோணங்களை இருசமக்கூறாக்குகிறது.
முதல் இயல்பிலிருந்து எல்லா சரிவகமும் ஒரு இணைகரம் என்று புரிகிறது. ஒரு சாய்சதுரம் இணைகரத்தின் எல்லா இயல்புகளையும் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, எதிர் எதிர் பக்கங்கள் இணைகோடுகள்;அருகிலிருக்கும் கோணங்கள் துணைக் கோணங்கள் ஆகும். இரு மூலைவிட்டங்களும் ஒன்றை ஒன்று இருசமக்கூறாக்குகின்றது. நடுப்புள்ளியின் வழியாகச் செல்லும் எந்த கோட்டுத்துண்டும் பரப்பளவை இரண்டாகப் பிரிக்கிறது. நான்கு பக்கங்களின் சதுக்கத்தின் கூட்டுத் தொகையும் இரண்டு மூலைவிட்டத்தின் சதுக்கத்தின் கூட்டுத் தொகையும் ஒன்றே. (இணைவக விதி). ஒவ்வொரு பக்கத்தையும் ‘a’ என்ற எழுத்தாலும், இரு மூலைவிட்டங்களை ‘p’, ‘q’ என்ற எழுத்தாலும் குறிக்கலாம்.
எல்லா இணைகரங்களும் சாய்சதுரம் ஆகாது. செங்குத்தான மூலைவிட்டங்களைக் கொண்ட இணைகரம்(இரண்டாவது குணம்) சாய்சதுரம் ஆகும். பொதுவாக, எந்த சரிவாகத்தில் செங்குத்தான மூலைவிட்டங்கள் உள்ளதோ, அதில் ஒன்று, சமச்சீரான நேர்கோட்டாக இருந்தால் அது பட்டம் என்று அழைக்கப்படும். எல்லா சாய்சதுரமும் ஒரு பட்டமே. எந்த சாய்சதுரம் பட்டமாகவும் இணைகரமாகவும் உள்ளதோ அது சாய்சதுரம் ஆகும்
ஒரு சாய்சதுரம் தொடுகோட்டு நாற்கரம் ஆகும். இந்த இந்த வடிவம் சாய்சதுரத்தின் நான்கு பக்கங்களுக்கும் தொடுகோடாக ஒரு உள்தொடு வட்டத்தைக் கொண்டுள்ளது.
பரப்பளவு
இணைவகத்தைப் பொறுத்த வரைக்கும், சாய்சதுரத்தின் பரப்பளவு K, அதன் அடிக்கும் உயரத்திற்குமான( h) பெருக்கலின் அளவு. அடி என்பது பக்கத்தின் நீலம் a:
மாறாக, பரப்பளவு அடியின் சதுக்கத்திற்கும் கோணத்தின் சைனிற்குமான பெருக்கலின் மதிப்பு. :
அல்லது உயரம் மற்றும் உச்சி கோணத்தின் அடிப்படையில்:
அல்லது இரு மூளைவிட்டங்களைப் பெருக்கி, அதில் பாதியைக் கண்டுபிடித்தால் பரப்பளவு கிடைக்கும்:
அல்லது, சாய்சதுரத்தின் உள்தொடு வட்டத்தின் ஆரத்தையும், சாய்சதுரத்தின் அரைச்சுற்றளவையும் பெருக்குவதால் பரப்பளவு கிடைக்கும். :
உள்ஆரம்
உள்ஆரம்(உள்தொடுவட்டத்தின் ஆரம்) r, மூலைவிட்டம் p, q யின் அடிப்படையில் :
இரட்டை குணங்கள்
சாய்சதுரத்தின் இரட்டை பலகோணம் செவ்வகம் ஆகும் :
சாய்சதுரத்தின் எல்லா பக்கங்களும் ஒரே அளவுடையவை; செவ்வகத்தின் எல்லா கோணங்களும் ஒரே அளவுடையவை.
சாய்சதுரத்தின் எதிர் எதிர் கோணங்கள் ஒரே அளவிலானவை; செவ்வகத்தின் எதிர் எதிர் பக்கங்கள் ஒரே அளவிலானவை.
சாய்சதுரம் உள்தொடு வட்டத்தைக் கொண்டுள்ளது;செவ்வகம் சூழ்தொடுவட்டத்தைக் கொண்டுள்ளது.
சாய்சதுரம் எதிர் எதிர் உச்சிக் கோணங்கள் வழியாக செல்லும் ஒரு சோடி சமச்சீர் அச்சினைக் கொண்டுள்ளது; செவ்வகம் எதிர் எதிர் பக்கங்கள் வழியாகச் செல்லும் ஒரு சோடி சமச்சீர் அச்சினைக் கொண்டுள்ளது.
சாய்சதுரத்தின் நீள்வட்டங்கள் சமகோணத்தில் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்கிறது;செவ்வகத்தின் நீள்வட்டங்கள் ஒரே நீளமுடையவை.
சாய்சதுரத்தின் பக்கங்களின் மையப்புள்ளியை இணைத்தால் ஒரு செவ்வகம் உருவாகும். இந்த விதியின் மறுதலையாகவும் பொருந்தும்.
பலகோணத்திண்மத்தின் பக்கங்கள்
சாய்சதுரத்திண்மம் என்பது கனசதுரத்தைப் போன்ற மூன்று பரிமாண உருவம். அதன் ஆறு பக்கங்களும் சாய்சதுரம் ஆகும்.
சாய்சதுர பன்னிரண்டுமுக ஐங்கோணகம் என்பது ஒரு குவி பல்கோணத்திண்மம் ஆகும்; அதன் 12 பக்கங்களும் சர்வசமமான சாய்சதுரம் ஆகும்.
பார்க்கவும்
சாய்செவ்வகம், இணைகரத்திண்மையைக் குறிக்கும்; சாய்சதுரமும் அல்லாது செவ்வகமும் அல்லாது.
மேற்கோள்கள்
நாற்கரங்களின் வகைகள்
|
6244
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
தொடுகோட்டு நாற்கரம்
|
நாற்கரம் அல்லது நாற்கோணம் ஒன்றின் நான்கு பக்கங்களும், அந்த நாற்கரத்தின் உள்ளே வரையப்பட்ட வட்டம் ஒன்றுக்குத் தொடுகோடுகளாக அமையும் என்றால் அந்த நாற்கரம் தொடுகோட்டு நாற்கரம் அல்லது தொடுநாற்கரம் (Tangential quadrilateral) எனப்படும். இந்த வட்டமானது நாற்கரத்தின் உள்வட்டம் என்றும் அதன் மையம் உள்வட்டமையம் என்றும் ஆரம் உள்வட்ட ஆரம் எனவும் அழைக்கப்படுகின்றன. தொடு பல்கோணங்களின் ஒரு வகையாகத் தொடுநாற்கரங்கள் அமையும்.
எல்லா முக்கோணங்களுக்கும் உள்வட்டம் உண்டு. ஆனால் எல்லா நாற்கரங்களுக்கும் உள்வட்டம் இருக்காது. எடுத்துக்காட்டாக, செவ்வகத்திற்கு உள்வட்டம் கிடையாது. அதாவது செவ்வகம் ஒரு தொடுநாற்கரமல்ல.
சிறப்பு வகைகள்
தொடு நாற்கரங்களுக்கான எடுத்து பட்டங்கள் தொடு நாற்கரங்களாகும். சாய்சதுரங்கள் பட்டங்களுக்குள் அடங்குவதால் அவையும் தொடுநாற்கரங்கள். சதுரங்கள், சாய்சதுரங்களுக்குள் அடங்கும் என்பதால் சதுரங்களும் தொடுநாற்கரங்கள். சதுரம். பட்டங்கள், செங்குத்து மூலைவிட்ட நாற்கரங்களாகவுமுள்ள தொடுநாற்கரங்கள். ஒரு செங்கோணப் பட்டத்துக்குச் சுற்றுவட்டமும் உண்டு என்பதால் அது தொடுநாற்கரமாகவும் வட்டநாற்கரமாகவும் இருக்கும். தொடுநாற்கரமாகவும் வட்டநாற்கரமாகவுமுள்ள நாற்கரங்கள் இருமைய நாற்கரங்கள் எனப்படும். தொடு நாற்கரமாகவும் சரிவகமாகவுமுள்ள நாற்கரம், தொடு சரிவகம் எனப்படும்.
பண்பாக்கங்கள்
ஒரு தொடுநாற்கரத்தின் நான்கு கோண இருசமவெட்டிகளும் உள்வட்ட மையத்தில் சந்திக்கும். மறுதலையாக, ஒரு குவிவு நாற்கரத்தின் நான்கு கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால் அந்த நாற்கரம் தொடுநாற்கரமாக இருக்கும். மேலும், அந்த சந்திக்கும் புள்ளி நாற்கரத்தின் உள்வட்ட மையமாக இருக்கும்.
பீட்டோ தேற்றத்தின்படி, ஒரு தொடுநாற்கரத்தின் இரு சோடி எதிர்பக்கங்களின் நீளங்களின் கூடுதல் சமமாகவும் நாற்கரத்தின் அரைச்சுற்றளவாகவும் (s) இருக்கும்:
(நாற்கரத்தின் பக்கங்கள்: a, b c, d)
மறுதலையாக, ஒரு குவிவு நாற்கரத்தில் a + c = b + d ஆக இருந்தால் அந்நாற்கரம் கண்டிப்பாகத் தொடுநாற்கரமாகும்.
குவிவு நாற்கரம் ABCD (சரிவகமற்ற) இன் எதிர்பக்கங்கள் வெட்டும் புள்ளிகள் E, F எனில்:
அல்லது என இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்நாற்கரம் தொடுநாற்கரமாக முடியும்.
இரண்டாவது முடிவு கிட்டத்தட்ட உர்க்கார்ட்டின் தேற்றத்தின் சமனிகளுள் ஒன்றாகும். இருபுறமுமுள்ள குறிகள் மட்டுமே வேறுபடுகின்றன. இரண்டாவது முடிவில் வித்தியாசங்களும், உர்க்கார்ட்டின் தேற்ற முடிவில் கூடுதல்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
ABCD நாற்கரம் ஒரு தொடுநாற்கரமாக இருப்பதற்கான மற்றுமொரு தேவையானதும் போதுமானதுமான கட்டுப்பாடு: ABC, ADC ஆகிய இரு முக்கோணங்களின் உள்வட்டங்கள் இரண்டும் ஒன்றையொன்று தொடும் வட்டங்களாக இருக்க வேண்டும்.
என இருந்தால், இருந்தால் மட்டுமே, குவிவு நாற்கரம் ABCD ஒரு தொடுநாற்கரமாகும்.
என இருந்தால், இருந்தால் மட்டுமே, a, b, c, d ஐ தொடர் பக்கங்களாக்கொண்ட குவிவு நாற்கரம் தொடுநாற்கரமாக இருக்கும். இதிலுள்ள Ra, Rb, Rc, Rd என்பவை a, b, c, d பக்கங்கள் ஒவ்வொன்றையும், அவற்றின் இரு அயல்பக்கங்களின் நீட்சிகளையும் வெளிப்பக்கமாகத் தொடும் வட்டங்களின் ஆரங்கள்.
சிறப்பு கோட்டுத்துண்டுகள்
தொடுநாற்கரத்தின் உள்வட்டத்திற்கு எட்டு தொடுகோட்டுத் துண்டுகள் உள்ளன. தொடுநாற்கரத்தின் ஒவ்வொரு உச்சியையும் அந்த உச்சியைப் பொதுப்புள்ளியாகக் கொண்ட இரு பக்கங்களை உள்வட்டம் தொடும் புள்ளிகளையும் இணைக்கும் கோட்டுத்துண்டுகளே தொடுகோட்டுத்துண்டுகளாகும். (e, f, g, h ) ஆகும். ஒவ்வொரு உச்சியிலிருந்தும் அமையும் இரு தொடுகோடுகளும் முற்றொத்தவை (சமநீளமுள்ளவை).
தொடுநாற்கரத்தின் எதிரெதிர் பக்கங்களிலுள்ள தொடுபுள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் தொடுநிலை நாண்களாகும் (படத்தில் k, l). நான்கு தொடுபுள்ளிகளால் அமையும் நாற்கரத்தின் மூலைவிட்டங்களாக இந்நாண்கள் அமையும்.
பரப்பளவு
முக்கோணவியலற்ற வாய்பாடுகள்
தொடுநாற்கரத்தின் பரப்பளவு (K):
s - அரைச்சுற்றளவு; r - உள்வட்ட ஆரம்.
p, q மூலைவிட்டங்கள்; a, b, c, d பக்கங்கள்.
தொடுகோட்டு நீளங்கள் e, f, g, h.
பக்கங்கள் a, b, c, d, தொடுகோட்டு நீளங்கள் e, f, g, h
இருமைய நாற்கரங்களாக இருந்தால், இருந்தால் மட்டுமே eg = fh ஆக இருக்கும் என்பதால், தொடுநாற்கரம் ஒரு இருமைய நாற்கரமாக இருந்தால் மட்டுமே, அதன் பரப்பளவு மிகப்பெரியளவாக இருக்கும்.
பெருமப் பரப்பளவு:
முக்கோணவியல் வாய்பாடுகள்
பக்கங்கள் a, b, c, d; கோணங்கள்: A, B, C, D
தொடுநாற்கரம் ஒரு இருமைய நாற்கரமாக இருந்தால் மட்டுமே, அதன் பரப்பளவு மிகப்பெரியளவாக இருக்கும். மேலும், இருமைய நாற்கரம் ஒரு வட்டநாற்கரமுங்கூட என்பதால் எதிர்கோணங்களின் கூடுதல் 180°. எனவே பெருமப் பரப்பளவு:
, உள்வட்ட மையம்: I..
இரு மூலைவிட்டங்களுக்கு இடைப்பட்ட ஒரு கோணம் θ. பட்டங்களில் θ = 90° ஆக இருக்கும் என்பதால் இவ்வாய்பாடு பட்டங்களுக்குப் பொருந்தாது.
சமனிலிகள்
தொடுநாற்கரத்தின் பக்கங்கள் a, b, c, d. இருமைய நாற்கரங்களுக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்.
அரைச்சுற்றளவு s; உள்வட்ட ஆரம் r எனில் (சதுரங்களுக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்) இதனைத் தொடுநாற்கரத்தின் பரப்பளவு வாய்பாடு K = rs இல் பயன்படுத்தக் கிடைக்கும் சமனிலி
(சதுரத்துக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்)
பிரிப்பு பண்புகள்
உள்வட்ட மையத்தையும், உள்வட்டம் தொடுநாற்கரத்தின் பக்கங்களைத் தொடும்புள்ளிகளையும் இணைக்கும் நான்கு கோட்டுத்துண்டுகளும் நாற்கரத்தை நான்கு நேர் பட்டங்களாகப் பிரிக்கும்.
தொடு நாற்கரத்தை சமபரப்பளவும் சம சுற்றளவுமுள்ள இரு பல்கோணங்களாகப் பிரிக்கும் கோடு உள்வட்ட மையத்தின் வழியாகச் செல்லும்.
உள்வட்ட ஆரம்
தொடர்ச்சியான பக்கங்கள் a, b, c, d கொண்ட தொடுநாற்கரத்தின் உள்வட்ட ஆரத்திற்கான வாய்பாடு:
பரப்பளவு K; அரைச்சுற்றளவு s. இருமைய நாற்கரமாக இருக்கும்போது உள்வட்ட ஆரம் பெரும மதிப்பு கொண்டிருக்கும்.
தொடுகோட்டு நீளங்கள் e, f, g, h.
நாற்கரம் ABCD இன் உள்வட்டமையம் I; u = AI, v = BI, x = CI, y = DI எனில்:
.
ABC, BCD, CDA, DAB முக்கோணங்களின் உள்வட்ட ஆரங்கள் முறையே எனில்:
.<ref>Bogomolny, Alexander (2016), An Inradii Relation in Inscriptible Quadrilateral, Cut-the-knot, .</ref>
கோணங்களின் வாய்பாடு
தொடு நாற்கரம் ABCD இன் உச்சிகள் A, B, C, D களிலிருந்து உள்வட்டத்துக்குத் தொடுகோட்டு நீளங்கள் முறையே e, f, g, h எனில் நாற்கரத்தின் கோணங்களின் வாய்பாடுகள்:
தொடுநிலை நாண்கள் k, l இரண்டுக்கும் இடைப்பட்ட கோணம்:
மூலைவிட்டங்கள்
தொடுகோட்டு நீளங்கள் e, f, g, h எனில், மூலைவிட்டங்களின் நீளங்கள் p = AC, q = BD இன் மதிப்புகள்:
தொடுநிலை நாண்கள்
தொடுநாற்கரத்தின் தொடுகோட்டு நீளங்கள் e, f, g, h எனில், அதன் தொடுநிலை நாண்களின் நீளங்கள்:
இதில், தொடுநாற்கரத்தின் a = e + f, c = g + h பக்கங்களை இணைக்கும் நாண் k; b = f + g, d = h + e பக்கங்களை இணைக்கும் நாண் l.
தொடுநிலை நாண்களின் வர்க்கங்களின் விகிதங்கள் பின்னுள்ளவாறு அமையும்:
தொடுநாற்கரத்துக்கு சுற்றுவட்டம் இருந்தால், இருந்தால் மட்டுமே (இருமைய நாற்கரமாக) அதன் தொடுநிலை நாண்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை.
தொடுநாற்கரம் ஒரு பட்டமாக இருந்தால், இருந்தால் மட்டுமே அதன் தொடுநிலை நாண்கள் சமநீளமுள்ளவை.
தொடுநாற்கரம் ABCD இன் AB, CD பக்கங்களுக்கு இடையேயுள்ள இருநடுக்கோட்டைவிட, BC, DA பக்கங்களுக்கு இடையேயுள்ள இருநடுக்கோடு நீளமானதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, AB, CD பக்கங்களுக்கு இடையேயுள்ள தொடுநிலை நாணானது BC, DA பக்கங்களுக்கு இடைப்பட்ட தொடுநிலை நாணைவிட நீளமானது.
தொடு நாற்கரம் ABCD இல் AB பக்கத்தின் தொடுநிலை புள்ளி W; CD பக்கத்தின் மீதான தொடுநிலை புள்ளி Y. மேலும் WY நாண், BD மூலைவிட்டத்தைச் சந்திக்கும் புள்ளி M எனில்:
ஒருகோட்டுப் புள்ளிகள்
தொடுநாற்கரம் ABCD இன் மூலைவிட்டங்கள் AC, BD இன் நடுப்புள்ளிகள் முறையே M1, M2; உள்வட்டமையம் I; எதிர்பக்க சோடிகள் சந்திக்கும் புள்ளிகள் J, K; JK இன் நடுப்புள்ளி M3 எனில், M3, M1, I, M2 ஆகிய நான்கு புள்ளிகளும் ஒரே கோட்டின் மீதமையும். அவை அமையும் கோடு, தொடுநாற்கரத்தின் நியூட்டன் கோடு ஆகும்.
தொடுநாற்கரத்தின் எதிர்பக்கங்களின் நீட்சிகள் J, K புள்ளிகளிலும், தொடுநிலை புள்ளிகளாலான நாற்கரத்தின் எதிர்பக்கங்களின் நீட்சிகள் L, M புள்ளிகளிலும் சந்தித்தால், J, L, K',' M நான்கும் ஒருகோட்டுப் புள்ளிகள்
தொடுநாற்கரத்தின் AB, BC, CD, DA பக்கங்களை உள்வட்டம் தொடும்புள்ளிகள் முறையே T1, T2, T3, T4. மேலும் இப்புள்ளிகளின் சமவியல்பு இணையியங்கள் முறையே N1, N2, N3, N4 (அதாவது, AT1 = BN1 ...) எனில், N1N3, N2N4. கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியானது தொடுநாற்கரத்தின் நாகெல் புள்ளியென வரையறுக்கப்படுகிறது. இவ்விரு கோடுகளும் நாற்கரத்தின் சுற்றளவை இரு சமபாகங்களாகப் பிரிக்கின்றன.நாகெல் புள்ளி N, நாற்கரத்தின் பரப்பளவு திணிவுமையம் G, உள்வட்டமையம் I மூன்றும் இதே வரிசையில் ஒரே கோட்டிலமையும். மேலும் NG = 2GI. இக்கோடு தொடுநாற்கரத்தின் நாகெல் கோடு எனப்படும்.
தொடுநாற்கரம் ABCD இன் உள்வட்டமையம் I. அதன் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி P. AIB, BIC, CID, DIA முக்கோணங்களின் செங்குத்து மையங்கள் HX, HY, HZ, HW எனில், P, HX, HY, HZ, HW நேர்கோட்டிலமையும்.
ஒருபுள்ளியில் சந்திக்கும் கோடுகளும் செங்குத்துக்கோடுகளும்
தொடுநாற்கரத்தின் இரு மூலைவிட்டங்களும் இரு தொடுநிலை நாண்களும் ஒருபுள்ளியில் சந்திக்கும் கோடுகள்.
தொடுநாற்கரத்தின் எதிர்பக்கங்களின் நீட்சிகள் J, K புள்ளிகளிலும் மூலைவிட்டங்கள் P இலும் சந்தித்தால், JK, IP இன் நீட்சிக்குச் செங்குத்தானது (I உள்வட்டமையம்).
உள்வட்ட மையம்
தொடுநாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் நியூட்டன் கோட்டின்மீது உள்வட்டமையம் அமையும்.
தொடுநாற்கரத்தின் எதிர்பக்கங்களின் விகிதத்தை அதன் உச்சிகளுக்கும் உள்வட்டமையத்துக்கும் இடைப்பட்ட தூரங்களின் வாயிலாக எழுதலாம்:
தொடுநாற்கரம் ABCD இன் அடுத்துள்ள பக்கநீளங்களின் பெருக்குத்தொகை:
தொடுநாற்கரம் ABCD இல்
The incenter I in a tangential quadrilateral தொடுநாற்கரம் ABCD இன் உச்சி திணிவுமையத்துடன் உள்வட்டமையம் ஒன்றுபடுவதற்குத் தேவையானதும் போதுமானதுமான கட்டுப்பாடு:
AC, BD மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகள் முறையே Mp and Mq எனில்:
A, B, C, D உச்சிகளிலிருந்தமையும் தொடுகோட்டு நீளங்கள் முறையே e, f, g, h.
ஒரு நான்கு தண்டு இயங்கமைவு தொடுநாற்கர வடிவிலமைக்கப்பட்டிருந்தால், இணைப்புகளை நெகிழ்த்தினாலும் குவிந்ததாக இருக்கும்வரை தொடுநாற்கரமாகவே இருக்கும். (எடுத்துக்காட்டாக, ஒரு சதுரத்தின் வடிவை சாய்சதுரமாக்கினாலும் தொடுவட்டம் சிறிதாவதைத் தவிர,அதன் தொடுநாற்கரத்தன்மை மாறுவதில்லை). ஒரு பக்கத்தை நிலையாக வைத்துக்கொண்டு நாற்கரத்தை நெகிழ்த்தும்போது அதன் உள்வட்டமைய வழிப்பாதை ஆரமுள்ள ஒரு வட்டமாக இருக்கும். இதில் a, b, c, d நாற்கரத்தின் தொடர்பக்கங்கள்; s அரைச்சுற்றளவு.
நான்கு உள்முக்கோணங்களில் பண்பாக்கங்கள்
குவிவு நாற்கரம் ABCD இன் முக்கோணங்கள் P புள்ளியில் வெட்டிக்கொள்கின்றன. இதனால் நாற்கரம் ஒன்றுக்கொன்று பொதுப்பகுதிகள் இல்லாத APB, BPC, CPD, DPA ஆகிய நான்கு முக்கோணங்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்நாற்கரம் தொடுநாற்கரமாக அமைவதற்கான பண்பாக்கங்கள்:
APB, BPC, CPD, DPA முக்கோணங்களின் உள்வட்ட ஆரங்கள் முறையே r1, r2, r3, r4 எனில் கீழுள்ள முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, தொடுநாற்கரமாக இருக்கும்:
மேலே தரபட்ட அதே நான்கு முக்கோணங்களின் குத்துக்கோடுகள் h1, h2, h3, h4 எனில் கீழேயுள்ள முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, தொடுநாற்கரமாக இருக்க முடியும்.
அந்நான்கு முக்கோணங்களின் வெளிவட்ட ஆரங்கள் முறையே ra, rb, rc, rd எனில் பின்வரும் முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, தொடுநாற்கரமாகும்.
APB, BPC, CPD, DPA முக்கோணங்களின் சுற்றுவட்ட ஆரங்கள் முறையே R1, R2, R3, R4 எனில் கீழுள்ள முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, நாற்கரம் ABCD, தொடுநாற்கரமாகும்
APB, BPC, CPD, DPA முக்கோணங்களின் உள்வட்ட மையங்கள் ஒரு வட்டநாற்கரத்தை (செங்குத்து மூலைவிட்ட வட்ட நாற்கரம்) அமைத்தால், அமைத்தால் மட்டுமே நாற்கரம் தொடுநாற்கரமாக இருக்கும். இதேபோல மேலுள்ள நான்கு முக்கோணங்களின் வெளிவட்ட மையங்கள் ஒரு வட்ட நாற்கரத்தின் உச்சிகளாக இருந்தால், இருந்தால் மட்டுமே, நாற்கரம் தொடுநாற்கரமாக இருக்கும்.
தொடுநாற்கரமாக இருப்பதற்கான மற்றுமொரு தேவையானதும் போதுமானதுமான கட்டுப்பாடு:
இதில் ∆(APB) = முக்கோணம் APB இன் பரப்பளவு.
AP = p1, PC = p2, BP = q1, PD = q2 எனில், பின்வரும் முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே தொடுநாற்கரமாகும்:
(அல்லது)
(அல்லது)
தொடுநாற்கரம் மற்றொரு வகை நாற்கரமாக இருப்பதற்கான கட்டுப்பாடுகள்
சாய்சதுரம்
ஒரு தொடுநாற்கரத்தின் எதிர்கோணங்கள் சமமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அது ஒரு சாய்சதுரமாகும்.
பட்டம்
பின்வரும் முடிவுகளுள் ஏதாவது ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு தொடுநாற்கரம் பட்டமாக இருக்க முடியும்:
மூலைவிட்ட நீளங்களின் பெருக்குத்தொகையில் பாதியாக நாற்கரப் பரப்பளவு இருக்க வேண்டும்.
மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்க வேண்டும்.
எதிரெதிர் தொடுநிலைப் புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் (தொடுநிலை நாண்கள்) சமநீளமுள்ளவை
ஒரு சோடி எதிர் தொடுகோட்டு நீளங்கள் சமம்
தொடுநாற்கரத்தின் இருநடுக்கோடுகள் சமநீளமுள்ளவை.
தொடுநாற்கரத்தின் எதிர்பக்க நீளங்களின் பெருக்குத்தொகைகள் சமம்.
சுழற்சி அச்சாகவுள்ள மூலைவிட்டத்தின் மீது உள்வட்டமையம் அமையும்.
இருமைய நாற்கரம்
நாற்கரம் ABCD இன் பக்கங்களை (AB, BC, CD, DA) உள்வட்டம் தொடும் புள்ளிகள் முறையே, W, X, Y, Z எனில், கீழுள்ள முடிவுகளில் ஏதாவது ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, நாற்கரம் இருமைய நாற்கரமாக இருக்கும்:
WY, XZ க்கு செங்குத்து.
முதல் முடிவிலிருந்து நாற்கரம் WXYZ, ஒரு செங்குத்து மூலைவிட்ட நாற்கரம் என அறியலாம்.
சமமான தொடர் பக்க நீளங்களுடைய தொடுநாற்கரங்களில், மிக அதிக உள்வட்ட ஆரமுள்ள நாற்கரமே இரு மைய நாற்கரமாக இருக்கும்.
சரிவகம்
தொடுநாற்கரத்தின் AB, CD பக்கங்களை உள்வட்டம் தொடும்புள்ளிகள் முறையே W, Y எனில், கீழுள்ள முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, தொடுநாற்கரம் ABCD ஆனது AB, CD பக்கங்களை இணைபக்கங்களாகக் கொண்ட சரிவகமாக இருக்கும்:
AD, BC இணைபக்கங்களாகக் கொண்ட சரிவகமாக இருப்பதற்கு:
இவற்றையும் பார்க்கவும்
வட்ட நாற்கரம்
சூழ்தொடு வட்டம்
வெளி-தொடு நாற்கரம்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
நாற்கரங்களின் வகைகள்
|
6245
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29
|
பட்டம் (வடிவவியல்)
|
யூக்ளீடிய வடிவவியலில் பட்டம் (kite) என்பது ஒருவகை நாற்கரம். இதன் நான்கு பக்கங்களில் அடுத்துள்ள இரண்டிரண்டு பக்கங்களும் சமமாக இருக்கும். இணைகரத்திலும் ஒரு சோடி பக்கங்கள் சமமாக இருக்கும். ஆனால் அவை அடுத்துள்ள பக்க சோடி அல்ல, அவை எதிரெதிர் பக்கங்கள் கொண்ட சோடிகளாகும். இந்த வடிவில் அமைவதால்தான் காற்றில் பறக்கும் பட்டங்கள், இப்பெயரைப் பெற்றுள்ளன. மேலும் இதிலிருந்துதான் வேகமாக பறக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட வகைப் பறவையும் கைட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இக்கட்டுரையில் இனிவரும் பகுதிகளில் இச்சிறப்பு வகை நாற்கரங்கள், அவற்றின் வடிவமைப்பின் காரணத்தால் பட்டவடிவ நாற்கரங்கள் என அழைக்கப்படும். பட்டவடிவ நாற்கரங்கள், குவிவு அல்லது குழிவாக அமையலாம். ஆனால் பட்டவடிவ நாற்கரம் என்பது பெரும்பாலும் குவிவு பட்டவடிவ நாற்கரங்களையே குறிக்கும்.
சிறப்பு வகைகள்
ஒரு பட்டவடிவ நாற்கரத்தின் நான்கு பக்கங்களும் சமமாக இருந்தால் அது ஒரு சாய்சதுரமாகும்.
நான்கு கோணங்களும் சமமாக இருந்தால் அதன் பக்கங்களும் சமமாகவே இருக்கும் எனவே அது ஒரு சதுரமாகும்.
அனைத்து நாற்கரங்களிலும் சுற்றளவுக்கும் விட்டத்துக்கும் இடையேயான விகிதம் மிகப்பெரிய அளவாக இருப்பது π/3, 5π/12, 5π/6, 5π/12 கோணங்கள் கொண்ட பட்டவடிவ நாற்கரத்தில்தான்.
வட்ட நாற்கரமாக அமையும் ஒரு பட்டவடிவ நாற்கரம், (ஒரு வட்டத்துக்குள் வரையக் கூடியது). இரு சர்வசம செங்கோண முக்கோணங்கள் சேர்ந்து உருவானதாக இருக்கும். இவ்வகையான பட்டவடிவ நாற்கரத்தின் சமச்சீர் அச்சின் எதிர்ப்புறங்களில் அமையும் இரு சமகோணங்கள் ஒவ்வொன்றும் 90° ஆக இருக்கும். இவை செங்கோண பட்டவடிவ நாற்கரங்கள் என அழைக்கப்படும்.
பண்புகள்
பின்வரும் கூற்றுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே ஒரு நாற்கரம் பட்டவடிவ நாற்கரமாக அமையும்:
இரு மூலைவிட்டங்களில் ஒன்று:
மற்றொரு மூலைவிட்டத்தின் நடுக்குத்துக்கோடாக இருக்கும்.
நாற்கரத்தை இரு சர்வசம பாகங்களாகப் பிரிக்கும்
சமச்சீர்
பட்டவடிவ நாற்கரத்தில் ஒரு சோடி எதிர்க் கோணங்கள் சர்வசமமாக இருக்கும். ஒரு மூலைவிட்டம் ஒரு சோடி எதிர்க்கோணங்களை இருசமக்கூறிடும்.
பட்டவடிவ நாற்கரங்கள் ஒரு மூலைவிட்டத்தைப் பொறுத்து சுழற்சி சமச்சீர் கொண்டவை.
தனக்குத்தானே வெட்டிக்கொள்ளாத எந்தவொரு நாற்கரமும்:
மூலைவிட்டத்தைச் சமச்சீர் அச்சாக கொண்டிருந்தால் ஒரு பட்டவடிவ நாற்கரமாகவும்,
சமச்சீர் அச்சு இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளின் வழியாகச் சென்றால் ஒரு இருசமபக்க சரிவகமாகவும் அமையும்.
இரு சமச்சீர் அச்சுகள் கொண்ட சாய்சதுரமும் செவ்வகமும் பட்டவடிவ நாற்கரங்கள்.
நான்கு சமச்சீர் அச்சுகள் கொண்ட சதுரம் பட்டவடிவ நாற்கரமாகவும் இருசமபக்க சரிவகமாகவும் அமையும்.
தன்னைத்தானே வெட்டிக்கொள்ளும் நாற்கரங்களையும் சேர்த்துக் கொண்டால் சமச்சீர் அச்சுகளுடைய நாற்கரங்களின் பட்டியலில் எதிர் இணைகரகமும் இடம்பெறும். பட்டவடிவ நாற்கரங்களும் இருசமபக்க சரிவகங்களும் ஒன்றுக்கொன்று இருமமாக (dual) அமையும். பட்டவடிவ நாற்கரத்தின் போலார் வடிவம் (polar figure) இருசமபக்க சரிவகம், இருசமபக்க சரிவகத்தின் போலார் வடிவம் பட்டவடிவ நாற்கரம்.
பரப்பு
பட்டவடிவ நாற்கரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமையும். மேலும் ஒரு மூலைவிட்டம் (சமச்சீர் அச்சு) மற்றதன் நடுக்குத்துக் கோடாகவும், அது சந்திக்கும் இரு கோணங்களின் கோண இருசமவெட்டியாகவும் அமையும்.
மூலைவிட்டங்களின் நீளங்கள் p, q எனில் பட்டவடிவ நாற்கரத்தின் பரப்பு:
மாறாக இரு சமமில்லா பக்கங்கள் a மற்றும் b , அவற்றுக்கு இடையேயுள்ள கோணம் θ எனில் பட்டவடிவ நாற்கரத்தின் பரப்பு:
பட்டவடிவ நாற்கரத்தை, சமச்சீர் அச்சாக அமையும் மூலைவிட்டம் இரண்டு சர்வசம முக்கோணங்களாகவும் மற்றொரு மூலைவிட்டம் இரண்டு இருசமபக்க முக்கோணங்களாகவும் பிரிக்கின்றன. சமச்சீர் அச்சின் எதிர்ப்பக்கங்களில் அமையும் உட்கோணங்கள் இரண்டும் சமமாக இருக்கும்.
கூடுதல் பண்புகள்
ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரத்துக்கும் அதன் உட்புறம் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வட்டம் ஒன்று வரைய முடியும். எனவே ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரமும் ஒரு தொடு நாற்கரமாக அமையும் கூடுதலாக சாய்சதுரமல்லாத ஒரு குவிவுப் பட்ட நாற்கரதிற்கு வெளியே அதன் பக்கங்களின் நீட்சிக்கோடுகளைத் தொடும் வட்டம் ஒன்று வரையலாம். அதாவது சாய்சதுரமல்லாத ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரமும் ஒரு வெளி-தொடு நாற்கரமாக அமையும்.
ஒவ்வொரு குழிவுப் பட்டவடிவ நாற்கரத்திற்கும் அதன் பக்கங்களைத் (அல்லது பக்க நீட்டிப்புகள்) தொடும் வட்டங்கள் இரண்டு உள்ளன. ஒரு வட்டம், நாற்கரத்துக்குள் குழிவு கோணத்திற்கு எதிராக அமையும் இரு பக்கங்களைத் தொட்டுக் கொண்டு அமையும். மற்றொன்று வட்டத்திற்கு வெளியே குழிவு கோணத்தைத் தாங்கும் பக்கங்களைத் தொட்டுக்கொண்டு அமையும்.
பின்வரும் கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு தொடு நாற்கரம் பட்டவடிவ நாற்கரமாக அமையும்:
மூலைவிட்டங்களின் பெருக்குத்தொகையில் பாதி நாற்கரத்தின் பரப்பாகும்.
மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து.
எதிரெதிர் தொடுபுள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் சமநீளமாக இருக்கும்.
ஒரு சோடி எதிரெதிர் தொடுகோட்டுத்துண்டுகளின் நீளங்கள் சமமாக இருக்கும்.
இருநடுக்கோடுகளின் (bimedians) நீளங்கள் சமமாக இருக்கும்.
எதிரெதிராக அமையும் சோடிப்பக்க நீளங்களின் பெருக்குத்தொகை சமமாக இருக்கும்.
உள்வட்ட மையம் இரு மூலைவிட்டங்களில் அதிக நீளமுள்ளதன் மீது அமையும்.
எனவே செங்குத்து மூலைவிட்ட நாற்கரமாகவும் தொடுநாற்கரமாகவும் ஒரு பட்டவடிவ நாற்கரம் அமையும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Kite definition and area formulae with interactive animations at Mathopenref.com
நாற்கரங்களின் வகைகள்
|
6248
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
எஸ்கிமோ உறவுமுறை
|
இம்முறை, எஸ்கிமோ இனத்தவரைத் தழுவிப் பெயரிடப்பட்டிருப்பினும், ஆங்கிலேயர் உட்படப் பல ஐரோப்பிய இனங்கள் மத்தியிலும், அமெரிக்கர்களிடமும் புழக்கத்தில் உள்ளது எஸ்கிமோ உறவுமுறைப் பெயரிடல் வகையே ஆகும்.
இம்முறையில் பேசுபவரின் நேரடி உறவினர்கள் மட்டுமே தனிச் சொற்களால் குறிப்பிடப்படுகின்றனர். ஏனைய உறவினர்களைக் குறிக்க வகைச்சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்தமுறையில் உறவுச் சொற்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
உறவுமுறை
|
6250
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
ஹவாய் உறவுமுறை
|
ஹவாய் உறவுமுறைப் பெயரிடல் குடும்பத்தின் உறவுமுறைகளைப் பெயரிடும் ஓர் முறையாகும். இது 1871ல் ஹென்றி லூயிஸ் மார்கன் என்பவரால் கண்டறியப்பட்டது. உள்ள உறவுமுறைகளில் இதுவே மிகவும் எளிய முறையாகும்.
ஹவாய் பெயரிடல் முறையில் பேசுபவரின் தந்தையும் அவருடைய தலைமுறையில் உள்ள அனைத்து ஆண்களும் ஒரே பெயராலும் தாயும் அவருடைய தலைமுறையில் உள்ள அனைத்து பெண்களும் ஒரே பெயராலும் அழைக்கப்படுகின்றனர். இதே போல் பேசுவரின் சகோதரனும் அவரது தலைமுறையில் உள்ள அனைத்து ஆண்களும் சகோதரியும் அனைத்து பெண்களும் ஒரே பெயராலும் அழைக்கப்படுகின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
உறவுமுறை
|
6252
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
இரோகுவாயிஸ் உறவுமுறை
|
ஆறு வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ள உறவுமுறை முறைமைகளுள் இராகுவாயிஸ் உறவுமுறை முறைமையும் ஒன்று. எஸ்கிமோ, ஹவாய், குரோ, ஒமஹா, சூடான் என்பன ஏனைய இந்து முறைமைகள் ஆகும். லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பவர், 1871 ஆம் ஆண்டில், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான இரோகுவோய்ஸ் மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தும்போது இம்முறையை முதன் முதலில் அறிந்து கொண்டதனால் இம் முறைமைக்கு அந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்டது.
இம் முறையில் தாய் தந்தையருடன் பிறந்த ஒத்த பாலினரைத் தாய் தந்தையரைக் குறிக்கும் உறவுமுறைப் பெயராலேயே அழைக்கும்போது, அவர்களுடன் பிறந்த எதிர்ப் பாலார் வேறு உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, தந்தையின் சகோதரர்களை, சிறிய தந்தை, பெரிய தந்தை, சித்தப்பா, பெரியப்பா எனத் தந்தை உறவு நிலையிலும், தாயின் சகோதரிகளை, சின்னம்மா, பெரியம்மா, சிற்றன்னை, பெரியன்னை எனத் தாய் உறவுநிலையிலும் வைத்துப் பார்க்கும் இம்முறை, தந்தையின் சகோதரிகளையும், தாயின் சகோதரர்களையும், அத்தை, மாமி, அம்மான், மாமா போன்ற உறவுப் பெயர்களினால் குறிப்பிடுகின்றது.
பெற்றோருடன் பிறந்த ஒத்த பாலாரின் மக்களையும், எதிர்ப் பாலாரின் பிள்ளைகளையும் வேறாகப் பிரித்துக் காண்பதும் இம்முறைமையின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்றாகும். அதவது, இம்முறையில், தந்தையின் சகோதரனின் பிள்ளைகளும், அவர் சகோதரியின் பிள்ளைகளும் வெவ்வேறு உறவுப் பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இதேபோல, தாயின் சகோதரனின் பிள்ளைகளும், தாயின் சகோதரியின் பிள்ளைகளும் வெவ்வேறு உறவுமுறைப் பெயர்களினால் குறிக்கப்படுகின்றனர். அதே சமயம், தாயின் சகோதரியினதும், தகப்பனின் சகோதரனதும் பிள்ளைகளும், பேசுனரின் சொந்தச் சகோதரர்களும் ஒரே உறவுப்பெயரால் (அண்ணன், தம்பி, அக்கா, தங்கை) குறிக்கப்பட, தாயின் சகோதரனினதும், தந்தையின் சகோதரியினதும் பிள்ளைகள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஒரே உறவுமுறைப் பெயரைக் (மச்சான், மச்சாள்) கொண்டுள்ளனர்.
பெற்றோரின் எதிர்ப் பால் உடன்பிறந்தோரின் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இம்முறையைக் கைக்கொள்ளும் இனத்தினர் மத்தியில் காணப்படுவதாலேயே இவ்வேறுபாடு காட்டப்படுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.
தமிழர் உறவுமுறையும், ஏனைய திராவிட இனத்தவர் உறவு முறைகளும், இரோகுவோயிஸ் முறையைச் சேர்ந்தவையே. இம்முறை, தென்னிந்தியா, [இலங்கை], பிஜித்தீவுகள், அமெரிக்காவின் சில பகுதிகள், ஆப்பிரிக்காவின் பகுதிகள் முதலிய பல பகுதிகளில் காணப்படுகின்றது.
தமிழர் உறவுமுறை
தனிக்கட்டுரை: தமிழர் உறவுமுறை
தமிழர் உறவுமுறையில் உள்ள பின்வரும் அம்சங்கள் அதனை இரோகுவோயிஸ் உறவுமுறையில் வகைப்படுத்தியுள்ளது.
தந்தையின் அண்ணன், தம்பி ஆகியோரையும் தந்தையின் உறவுநிலையிலேயே கருதுவதுடன் உறவுப் பெயர்களும் அதனை வெளிக்காட்டுவது,
தாயின் அக்கா, தங்கை ஆகியோரைத் தாய் உறவு நிலையில் பார்ப்பதும், அவர்களுக்கான உறவுப் பெயர்கள் அதைப் பிரதிபலிப்பதும்,
தந்தையின் அக்கா, தங்கை, தாயின், அண்ணன், தம்பி ஆகிய எதிர்ப்பால் உடன் பிறந்தாரின் உறவுப் பெயர்கள் வேறுபட்டிருப்பது,
தந்தையின் அண்ணன், தம்பி பிள்ளைகளும், தாயின் அக்கா, தங்கை பிள்ளைகளும், பேசுனரின் அண்ணன் தம்பி, அக்கா, தங்கை போலவே கருதப்படுவதும், அவர்களின் உறவுப்பெயர்களும் அவ்வாறு அமைந்திருப்பதும்,
தந்தையின் அக்கா, தங்கை, தாயின் அண்ணன், தம்பி ஆகியோரின் பிள்ளைகள் தனித்துவமான உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுதல்.
கீழே தரப்பட்டுள்ள தமிழர் உறவுப் பெயர் அட்டவணை இதனை விளக்குகிறது.
இவற்றையும் பார்க்கவும்
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
உறவுமுறைச் சொற்கள்
உறவுமுறை
உறவுமுறை
|
6253
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
இருசமபக்க சரிவகம்
|
இருசமபக்கச் சரிவகம் என்பது நாற்பக்க சரிவகத்தில் இணையாகா பக்கங்கள் இரண்டும் சமமாகவும் ஒரே கோணத்தில் இணையான பக்கங்களோடும் சேரும் ஒரு முற்றுப்பெறும் வரிவடிவம். பரவலாக அறியப்படும் செவ்வகமும் (நீள்சதுரம்), சதுரமும் குறிப்பிட்ட சிறப்பான இருசமபக்கச் சரிவகம் ஆகும் ஆனால் சரியும் பக்கங்கள் இணையான பக்கங்களுக்குச் செங்குத்தான கோணத்தில் அமைந்துள்ளன.
படத்தில் காட்டப்பட்டுள்ள இருசமபக்க சரிவகத்தில் ABD, ACD என்னும் இரு முக்கோணங்களும் முற்றீடான முக்கோணங்கள். BAD என்னும் கோணமும், CDA என்னும் கோணமும் இணையானது. எனவே இது இருசமபக்கச் சரிவகத்தில், இணையான இரு பக்கங்களிலும் சேரும் மற்ற இரு பக்கங்களும் இணையான கோணங்கள் கொண்டிருக்கும்.
நாற்கரங்களின் வகைகள்
|
6258
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
திறந்த பாடத்திட்டங்கள்
|
பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் எவ்வித கட்டணம், நிர்பந்தங்கள் இல்லாமல் இணையம் மூலம் வழங்கப்படும்பொழுது அவை திறந்த பாடத்திட்டங்கள் எனப்படும். அறிவியல் அனைவருக்கும் தடைகள் இன்றி கிடைப்பதே மனித மேன்பாட்டுக்கு உதவும் என்ற கோட்பாட்டின் செயல்பாட்டு வெளிப்பாடே திறந்த பாடத்திட்டங்கள். திறந்த பாடத்திட்டங்களின் முதன்மை எடுத்துக்காட்டு மாசற்சூசஸ் தொழிநுட்ப கல்லூரியின் திறந்த பாடத்திட்டம் ஆகும். அதன் முன்மாதிரியை பின்பற்றி யப்பான், சீனா, மற்றும் பல நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடங்களை திறந்த பாடத்திட்டங்களாக வழங்கிவருகின்றன.
திறந்த பாடத்திட்டங்கள் மூலம் பாடங்களுக்குரிய தகவல்கள், பயிற்சிகள் தொகுக்கப்பட்டு பகிரப்படுகின்றன. ஆசிரியர்களின் உரைகளும் ("lectures") தொகுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
பயனர்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் தரப்பட்ட வசதிகளை பயன்படுத்தலாம், ஆனால் பரீட்சையோ, சான்றிதழ்களோ, ஆசிரியர் பயனர் தொடர்பாடலோ தற்சமயம் திறந்த பாடத்திட்டங்கள் மூலம் வழங்கப்படுவதில்லை.
வெளி இணைப்புகள்
MIT OpenCourseWare
Japan OCW Allaiance
Other OCW Projects
திறந்த கல்வி அமைப்புகள்
ஆங்கில வலைத்தளங்கள்
|
6259
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
தொடர்பியல்
|
தகவல் பரிமாற்ற சாதனங்களையும், அவற்றுக்குரிய கருத்துப்பொருள் அடிப்படைகளையும் ஆயும் இயல் தொடர்பியல் (Communications) ஆகும். இயற்பியல், கணிதம், இலத்திரனியல், கணினியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய இயல்களுடன் நெருங்கிய தொடர்புடையது.
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தகவல் பரிமாற்றம். பேச்சு, மொழி, எழுத்து, அச்சு, தூது (மனிதன், புறா), புகை சைகை, முரசு, தொலைவரி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என பல நுட்ப முறைகளை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுகின்றன.
1948 ஆண்டு பெல் ஆய்வு கூட விஞ்ஞானியான கிளாட் ஈ. ஷானான் அவர்களின் தொடர்பியலின் கணிதவியல் கோட்பாடுகள் என்ற ஆய்வுக்கட்டுரை இவ் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது.
துணை நூல்கள்
க. அபிராமி. (2002). தகவல் தொழில் நுட்பம். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
வெளி இணைப்புகள்
தொடர்பியல்
|
6266
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
சூடானிய உறவுமுறை
|
சூடானிய உறவுமுறைப் பெயரிடல் வகை தற்காலத்தில் சூடானை அண்டியுள்ள ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகளில் காணப்படுகின்றது. இம்முறையைக் கடைப்பிடிக்கின்ற சமுதாயங்கள் பொதுவாகத் தந்தைவழி மரபுமுறைச் சமுதாயங்களாகவும், பெருமளவு படிமுறையமைப்பைக் கொண்டனவாகவும் உள்ளன. பண்டைய ஐரோப்பாவிலும் இன்று வேறு முறைகளைக் கடைப்பிடிக்கும் பல சமுதாயங்களில் சூடானிய முறை பயன்படுத்தப்பட்டு வந்ததையும் அறிய முடிகின்றது. இன்று இறந்த மொழியாக உள்ள இலத்தீன், பழைய ஆங்கிலம் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்த தந்தை, தாய், தந்தையின் சகோதரர்கள், தாயின் சகோதரர்கள், தந்தையின் சகோதரிகள், தாயின் சகோதரிகள் ஆகிய ஆறு வகை உறவுமுறைகளும், பேசுனரின் தலைமுறையைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் சகோதரர்களின் பையன்கள் (மகன்கள்}, தந்தையின் சகோதரரின் பெண்கள், தந்தையின் சகோதரியின் பையன்கள், (மகள்கள்), தந்தையின் சகோதரியின் பெண்கள், தாயின் சகோதரர்களின் பையன்கள் (மகன்கள்}, தாயின் சகோதரரின் பெண்கள், தாயின் சகோதரியின் பையன்கள், (மகள்கள்), தாயின் சகோதரியின் பெண்கள் ஆகிய 10 வகை உறவுமுறைகளும் சேர்ந்த 16 வித உறவுமுறைகளுக்கும் தனித்தனி உறவுப்பெயர்கள் இருப்பதே சூடானிய முறையின் சிறப்பு அம்சமாகும்.
இவற்றையும் பார்க்கவும்
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
உறவுமுறை
|
6269
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
ஒமஹா உறவுமுறை
|
ஒமஹா உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, ஒமஹா இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழுதிய லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பார், ஒமஹா என்னும் பெயரை இம்முறைமைக்கு இட்டார்.
செயற்பாட்டுத் தன்மையில் இது, குரோ உறவுமுறைக்கு மிகவும் நெருங்கியது. எனினும், குரோ உறவுமுறை தாய்க்கால்வழியைச் சார்ந்தது. ஒமஹா முறை தந்தைக்கால்வழியோடு ஒட்டியது. இம்முறையில், பேசுனரின் தந்தையும், அவர் சகோதரர்களும் ஒரே உறவுமுறைப் பெயரால் குறிக்கப்படுகின்றார்கள். அதேபோல, தாயும், தாயின் சகோதரிகளும் ஒரே உறவுப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.
எனைய பல உறவுமுறை முறைமைகளைப் போலவே ஒமஹா முறையிலும், பெற்றோரின், ஒத்த பால், எதிர்ப் பால் உடன்பிறந்தாரின் மக்களிடையே வேறுபாடு காட்டப்படுகின்றது. ஆனால், இங்கே தாயின் சகோதரனின் பெண் பிள்ளைகள், தாய், தாயின் சகோதரிகள் ஆகியோரைக் குறிப்பிடப் பயன்படும் பெயர் கொண்டே குறிப்பிடப்படுகின்றார்கள். அதேவேளை தாயின் சகோதரனின் ஆண்பிள்ளைகள், தாயின் சகோதரனின் உறவுப் பெயர்கொண்டே அழைக்கப்படுகின்றார்கள். இதன்படி இரண்டு பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே உறவுப் பெயர்கள் பயன்படுகின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால் தாயின் பக்கத்தில் உறவு முறையில் பால் வேறுபாடுகள் கட்டப்படுகின்றது, ஆனால் தலைமுறை வேறுபாடு காட்டப்படவில்லை.
தந்தையின் பக்கத்தில், தந்தையின் சகோதரியின் பிள்ளைகள் வேறு பெயர்கள் கொண்டே குறிக்கப்படுகிறார்கள். ஆகவே தந்தையின் பக்கத்தில் பால் வேறுபாடும், தலைமுறை வேறுபாடும் காட்டப்படுகின்றது. இது தந்தைவழி உறவினருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஒமஹா முறை, குரோ முறையின் ஒரு கண்ணாடி விம்பத்தைப் போன்றது.
இவற்றையும் பார்க்கவும்
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
உறவுமுறை
உறவுமுறைச் சொற்கள்
உறவுமுறை
|
6271
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
கணினியியல்
|
கணினியியல் தகவல் மற்றும் கணக்கிடுதல் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்துதல் ஆகும்
கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.
வரலாறு
கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான எண்சட்டம் போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின.
பிலைசு பாஸ்கல் 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார்.. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு சார்லச்சு சேவியர் தாமஸ் (Charles Xavier Thomas) அலுவலக பயன்பாட்டிற்கான நம்பத்தகுந்த அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.
சார்ல்ஸ் பாபேஜ் முதலில் இயந்திர கணிப்பானை வடிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் வித்தியாசப் பொறியின் கண்டுபிடிப்பு அவருக்கு பகுப்புப் பொறி எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது.. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி. மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது.
1843 ஆம் ஆண்டு அடா லவ்லேஸ் வித்தியாசப் பொறியை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது பெர்னோளி என்கள் கணக்கீடு செய்வதற்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது.
1885 ஆம் ஆண்டு வாக்கில் ஹெர்மன் ஹோலரித் என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார். 1924ல் இவருடைய நிறுவணம் ஐபிஎம் நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வடிவமைத்து நூறு வருடம் கழித்து அவார்டு அயிக்கன் என்பவர் ஆர்வர்டு மார்க் I பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்கு வடிவமைத்து காட்டினார். இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.
1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இணையாக அழைக்கப்பெற்றது.. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது. உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
கணினியியல் ஓரு படிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்பைப் பெற்றது.
உயர்படி நிலைகள்
ஒரு சாதாரண கல்வி துறையாக வரலாற்றை கொண்ட போதிலும், கணினி அறிவியல் துறை அறிவியல் மற்றும் சமூகத்திற்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளது.தொழிற் புரட்சி (1750-1850 CE) மற்றும் விவசாயப் புரட்சி (8000-5000 கி.மு.) க்கு பிறகு பின் மனித தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம்.
தற்கால தகவல் காலம் மற்றும் இணையத்தை உள்ளடக்கிய எண்ணிமப் புரட்சி.
நிரலாக்க மொழி ஒரு கருவியாக பல்வேறு மட்டங்களில் செயல்முறை தகவல்களை துல்லியமாக வெளியிடுவதற்காகவும் சுருக்கமாக பயன்படுத்தவும் வழிவகை உருவானது.
மறையீட்டியலில் எனிக்மா குறியீட்டை குறிவிலக்கு செய்தது இரண்டாம் உலக போரில் நேச நாடுகள் வெற்றி பெற ஒரு முக்கியமான காரணியாக இருந்தது
அறிவியல் கணிமை நடைமுறை செயல்முறைகள் மற்றும் பெரும் சிக்கலான சூழ்நிலைகளில் மதிப்பீடு, அத்துடன் பரிசோதனைகளை முற்றிலும் மென்பொருள் மூலம் செயல்படுத்த உதவியது.
அறிவியல் கணிமை மூலம் மனம் தொடர்பான ஆய்வு மற்றும் மரபணுத்தொகுதி பகுப்பாய்வுக்கான முகப்புதல்களை செய்வதற்கு மனித மரபணுத்தொகைத் திட்டம் பயன்பட்டது..
படிமுறையியல் வர்த்தகம் பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், புள்ளியியல் மற்றும் எண் நுட்பங்களை பயன்படுத்தி நிதி சந்தைகளின் திறன் மற்றும் எளிதில் பணமாக்கக்கூடிய தன்மையை அதிகரித்துள்ளது..
தத்துவம்
கணினியியலை மூன்று கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என்று பல கணிணி அறிவியலறிஞர்கள் கருதினர்.பீட்டர் வேக்னர் அவை அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் கணிதம் கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என வாதிட்டார்.பீட்டர் டென்னிங் தலைமையிலான குழு கோட்பாடு, சுருக்க (மாதிரியமைத்தல்), மற்றும் வடிவமைப்பு ஆகியவை எனக் கருதியது. .
துறையின் பெயர்
"கணினியியல்" (Computer Science) என்ற சொல் முதலில் 1959ல் கம்யூனிக்கேஷன்ஸ் ஆப் ஏசிம் (Commuincations of ACM) என்ற மாத நாளிதழில் ஒரு கட்டுரையில் வெளிவந்தது. இதில் லூயிஸ் பெயின் 1921 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினஸ் பள்ளி போன்று கணினி அறிவியலுக்கென ஒரு பட்டதாரி பள்ளி உருவாக்க வாதிடுகிறார்.
தமிழ் சொற்கள்
கணிப்பான் (calculator)
பகுப்புப் பொறி (analytical engine)
படிமுறைத் தீர்வு (algorithm)
கணினி (computer)
கணிமை (computing)
படிமுறையியல் வர்த்தகம்(Algorithmic Trading)
கணினியியல் பிரிவுகள்
கணினியியல் கருத்தியல்
கருத்தியல் கணினி அறிவியலின் பரந்த துறையில் கணிமையில் பாரம்பரிய கோட்பாடு மற்றும் கணினியில் சுருக்கத்திற்கான தருக்கம், மற்றும் கணித அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளடக்கப்பட்டுள்ளது.
கணிமையின் கருத்தியல்
பீட்டர் ஜே டென்னிங் படி அடிப்படை கணினியியல் "எதனை (திறமையாக) தானியங்கிப்படுத்த முடியும்?" என்பதற்கான பதிலை தரவேண்டும்.
கணிமை வரலாறு - computing history
கணினி பொறியியல் - computer engineering
கணினி கட்டுமானம் - Computer Architecture
பதிகணினியியல் - Embedded Systems
கணினி அறிவியல் - computer science
நிரல் மொழிகள் - Computer Languages
படிமுறைத் தீர்வு - Algorithms
இடைமுக வடிவமைப்பியல் - (Human - Computer) Interface Design
செயற்கை அறிவாண்மை - Artificial Intelligence
கணினி வலையமைப்பியல் - Computer Networking
இணையம் - internet
மேற்கோள்கள்
"Computer Software Engineer." U.S. Bureau of Labor Statistics. U.S. Bureau of Labor Statistics, n.d. Web. 05 Feb. 2013.
வெளி இணைப்புகள்
கணினிப் பயன்பாட்டால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படவில்லை: புதிய ஆய்வு
கணினியியல்
பயன்பாட்டு அறிவியல்
கணினி அறிவியல்
|
6272
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
கணினி கட்டுமானம்
|
கணினிச் செயலகக் கூறுகள் (மையச் செயலகம், நினைவகம், கடிகாரம், பாட்டை), புறக்கருவிகள் (காட்சித் திரை, விசைப் பலகை, சுட்டி, இயக்க அமைப்புகள்), மென்பொருள்கள் ஆகியவற்றின் கட்டமைப்பும் அவற்றின் இணைந்த செயல்பாட்டையும் ஆயும் துறை கணினிக் கட்டமைப்பு (Computer Architecture) ஆகும். கணினிக் கட்டமைப்பு கணிமை நோக்கிய அடிப்படை கோட்பாடுகளை அல்லது கருத்துப் படிமங்களை ஆய்ந்து, விவரித்து அதற்கு ஏற்ற வன்பொருள், மென்பொருள் கட்டுமானங்களைத் தேர்வு செய்ய உதவுகின்றது.
கணினிக் கட்டமைப்புப் படம்
நுட்பவியல் சொற்கள்
கட்டுப்பாட்டகம் - Control Unit
எண்ணியல் ஏரணவகம் - Arithmetic Logic Unit
நினைவகம் - Memory
உள்ளீடு - Input
வெளியீடு - Output
மையச் செயலகம் - Central Processing Unit
கணினிக் கட்டமைப்பு
|
6279
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
|
செல்வராகவன்
|
செல்வராகவன் (Selvaraghavan, பிறப்பு: 5 மார்ச்சு 1976) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.
குடும்பம்
செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்துகொண்டனர். 2011 ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் , ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:
இயக்குனர் மற்றும் எழுத்தாளராக
மேற்கோள்கள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
1976 பிறப்புகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
வாழும் நபர்கள்
சென்னை திரைப்பட இயக்குனர்கள்
சென்னை திரைக்கதை எழுத்தாளர்கள்
|
6280
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
|
அமீர்
|
அமீர் சுல்தான் அல்லது அமீர் ( Ameer Sultan பிறப்பு: ஏப்ரல் 2, 1966) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
இவர் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார். இவர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.
இயக்கியுள்ள திரைப்படங்கள்
மௌனம் பேசியதே (2002)
ராம் (2005)
பருத்திவீரன் (2007)
ஆதிபகவன் (2013)
பேரன்பு கொண்ட பெரியோர்களே (2015)
வெளி இணைப்புகள்
When risks reap results
ராமேஸ்வரம் பேச்சு: இயக்குநர்கள் சீமான், அமீர் கைது
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
1966 பிறப்புகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
மதுரை மக்கள்
வாழும் நபர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
மதுரைத் திரைப்பட நடிகர்கள்
தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
இந்திய முஸ்லிம்கள்
|
6281
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
|
விக்ரமன்
|
விக்ரமன் () தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன. இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திரைப்பட வரலாறு
புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்விக்ரமன் இயக்குநர்
1964 பிறப்புகள்
வாழும் நபர்கள்
தென்காசி மாவட்ட நபர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
|
6282
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
|
லிங்குசாமி
|
லிங்குசாமி (Lingusamy), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
பிறப்பு
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் என்னும் ஊரில் நம்மாழ்வார் – லோகநாயகி இணையருக்கு மகனாக 1969 ஆண்டில் லிங்குசாமி பிறந்தார். இராதாகிருட்டிணன், கேசவன், சுபாசுசந்திரபோசு ஆகியோர் இவருக்கு உடன்பிறந்தவர்கள்.
கல்வி
லிங்குசாமி தனது தொடக்கக் கல்வியை (முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) இலட்சுமிபுரத்தில் உள்ள எசு. ஆர். வி. எசு. நடுநிலைப் பள்ளியில் பெற்றார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் லிங்குசாமியின் குடும்பம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்னும் ஊருக்குக் குடிபெயர்ந்தனர். எனவே, லிங்குசாமி தனது நடுநிலைப் பள்ளிக் கல்வியை (6, 7, 8ஆம் வகுப்புகள்) மூலங்குடியில் உள்ள தூய வளனார் பள்ளியில் பெற்றார். பின்னர் மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலை (9, 10 வகுப்புகள்), மேல்நிலை (11, 12 வகுப்புகள்) கல்வியைப் பெற்றார். பின்னர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்று கலை இளவர் பட்டம் பெற்றார்.
இயக்கியுள்ள திரைப்படங்கள்
தயாரித்துள்ள திரைப்படங்கள்
மேற்கோள்கள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
வாழும் நபர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
|
6283
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF
|
தரணி
|
தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்பட விபரம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
வாழும் நபர்கள்
|
6284
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
ஞான ராஜசேகரன்
|
ஞான ராஜசேகரன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இந்திய நிர்வாக சேவையில் ஓர் உயர் அதிகாரியாக கேரளத்தில் பணியாற்றும் இவர் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் ஆர்வமுடையவர்.
இளம் வயதிலிருந்தே திரைப்படத்துறை மேல் மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்த இவர் குறும்படம் ஒன்றுடன் தான் இத்துறையில் பிரவேசித்தார். எழுதப்பட்ட காலத்தில் சற்று சர்ச்சைகளைத் தோற்றுவித்த தி. ஜானகிராமனின் மோகமுள் நாவலை இவர் முதலில் திரைப்படமாக்கியதும் குறிப்பிடற்குரியது. இத்திரைப்படம் இந்திராகாந்தி தேசிய விருதை தமிழுக்கு பெற்றுத்தந்தது. அடுத்து வில்லன் நடிகராக அறியப்பட்ட சிறந்த நடிகர் நாசர் மேல் நம்பிக்கை வைத்து அவரை கதாநாயகனாக 'முகம்' படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். மகாகவி பாரதியின் வரலாற்றை திரைப்படமாக்கப் போகிறோம் என்று இயக்குனர் பாலச்சந்தர், நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பலர் அறிவிப்புகள் விட்ட போதிலும் அதனைச் செய்தவர் இவர். தமிழின் மகாகவியான பாரதி பாத்திரத்தில் சாயாஜி சிண்டே என்ற ஒரு மராத்தி நாடக நடிகரை நடிக்க வைத்தார். பெரியாரின் வரலாற்றை நடிகர் சத்தியராஜ்(பெரியார்), குஷ்பூ(மணியம்மையாக) ஆகியோரை வைத்து திரைப்படமாக்கினார்.
நவீன நாடக எழுத்தாளர்
'வயிறு-1978, மரபு-1979, பாடலிபுத்திரம்-1980’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது மூன்று நாடகங்களை எழுதியவர். இம்மூன்று நாடகப் பிரதிகளும் வயிறு என்ற தொகுப்பாக 1980-இல் அகரம் வெளியீடாக வந்தது
இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்
மோகமுள் (திரைப்படம்)
முகம் (1999 திரைப்படம்)
பாரதி (திரைப்படம்)
பெரியார் (திரைப்படம்)
ராமானுசன் (திரைப்படம்)
வெளி இணைப்புக்கள்
ஞான ராஜசேகரனுட்ன் பாரதி படம் பற்றிய நேர்முகம் (ஆங்கிலத்தில்)
ஞான ராஜசேகரனுடன் திரைப்படங்கள் பற்றிய உரையாடல் (ஆங்கிலத்தில்)
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
1953 பிறப்புகள்
வாழும் நபர்கள்
வேலூர் மாவட்ட மக்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்
|
6285
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
தங்கர் பச்சான்
|
தங்கர் பச்சான் (Thangar Bachan) தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர். திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவர்.
தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன.
திரைப்பட வரலாறு
இயக்குநராக
ஒளிப்பதிவு இயக்குநராக
மலைச் சாரல் (1990)
தர்ம சீலன் (1991)
மதுமதி (1992)
மோகமுள் (1993)
ராசாதி ராச ராச மார்த்தான்ட ராச குலோத்துன்க.... (1993)
வீட்டை பார் நாட்டை பார் (1994)
மலப்புரம் ஹாஜி மகானாயா சோஜி (1994) (மலையாளத் திரைப்படம்)
வான்மதி (1995)
வாழ்க ஜனநாயகம் (1995)
காதல் கோட்டை (1996)
காலமெல்லாம் காதல் வாழ்க (1997)
கருவேலம்பூக்கள் (1997)
காதலே நிம்மதி (1998)
சிர்ப் தும் (1998) (இந்தி திரைப்படம்)
மறுமலர்ச்சி (1998)
கண்ணெதிரே தோன்றினாள் (1999)
கனவே கலையாதே (1999)
கள்ளழகர் (1999)
உன்னுடன் (1999)
பாரதி (2000)
கண்ணுக்குக் கண்ணாக (2000)
குட்டி - 2001
பாண்டவர் பூமி (2001)
மஜ்னு (2001)
பெரியார் (2007)
இவைகள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
நூற்பட்டியல்
நாவல்கள்
ஒன்பது ரூபாய் நோட்டு (புதினம்) - 1996.
அம்மாவின் கைப்பேசி (புதினம்) - 2009.
சிறுகதைத் தொகுப்புகள்
வெள்ளை மாடு - 1993
குடி முந்திரி - 2002
இசைக்காத இசைத்தட்டு - 2006
கட்டுரை
சொல்லத்தோணுது - 2015
விருதுகள்
1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது (வெள்ளை மாடு)
1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - திருப்பூர் தமிழ் சங்கம் இலக்கிய விருது (வெள்ளை மாடு)
1996 - சிறந்த நாவல் - தமிழ் நாடு அரசு விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
1996 - சிறந்த நாவல் - அக்னி அஷர விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
1996 - சிறந்த நாவல் - திருப்பூர் தமிழ் சங்கம் விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
1997 - சிறந்த ஒளிப்பதிவாளர் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது (திரைப்படம் - காலமெல்லாம் காதல் வாழ்க)
1998 - "கலைமாமணி" விருது - தமிழ் சினிமாவில் பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது
2002 - சிறந்த இயக்குநர் SICA விருது - (திரைப்படம் - அழகி )
2005 - சிறந்த நடிகர் ஜெயா தொலைக்காட்சி விருது (திரைப்படம் – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
2007 - திரைப்பட இயக்குநர் பங்களிப்பிற்காக தமிழ் நாடு மாநில ராஜா சான்டோ விருது.
2007 - சிறந்த இயக்குநர் சாந்தோம் விருது. (திரைப்படம் - ஒன்பது ரூபாய் நோட்டு)
2007 - சிறந்த தமிழ் இயக்குநர் சத்யன் நினைவுத் திரைப்பட விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)
2007 - சிறந்த கதை வசனங்களுக்கான SICA விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)
2007 - சிறந்த இயக்குநர் விருது (பள்ளிக்கூடம்) – தமிழ்நாடு அரசு
2015 - சிறந்த நூல் - தினத்தந்தி ஆதித்தனார் இலக்கிய விருது (தங்கர் பச்சான் கதைகள்)
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
சர்வதேச திரைப்படத் தரவுத்தளத்தில் தங்கர் பச்சான்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்
தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்
கலைமாமணி விருது பெற்றவர்கள்
வாழும் நபர்கள்
1962 பிறப்புகள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
கடலூர் மாவட்ட நபர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
|
6286
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D
|
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
|
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் (Radhakrishnan Parthiban, பிறப்பு: நவம்பர் 14, 1957) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராசிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.
இயக்கி நடித்த திரைப்படங்கள்
புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
உள்ளே வெளியே
ஹவுஸ்புல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
இவன்
குடைக்குள் மழை
வித்தகன்
ஒத்த செருப்பு
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
இவர் எழுதியுள்ள நூல்கள்
கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)
பங்கு கொண்ட திரைப்படம்
வெளி இணைப்பு
அதிகாரபூர்வ இணையதளம்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
1957 பிறப்புகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
வாழும் நபர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
சென்னை நடிகர்கள்
சென்னை திரைப்பட இயக்குனர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
|
6288
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
குரோ உறவுமுறை
|
குரோ உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, அமெரிக்காவில் வாழும் குரோ (Crow) இந்திய இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழுதிய லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பார், குரோ என்னும் பெயரை இம்முறைமைக்கு இட்டார்.
குரோ உறவுமுறை தாய்க் கால்வழியைத் தழுவியது. இதனால், தாய்வழியைச் சார்ந்த உறவினர்கள் இம்முறையில் முக்கியத்துவம் பெறுகின்றனர். பேசுனர் தாயின் உறவினர்களுடன் நெருங்கிய உறவைப் பேணுகின்றனர். இது தாய்வழி உறவினரின் உறவுமுறைப் பெயர்களிலும் வெளிப்படுகின்றது. தாயின் சகோதரனும், அவன் ஆண், பெண் மக்களும் தனித்தனி உறவுப் பெயர்களினால் குறிப்பிடப் படும் அதேவேளை, தந்தையின் சகோதரியின் மக்களில் ஆண்கள், தந்தையோடும், அவர் ஆண் சகோதரர்களோடும் பொதுவான உறவுமுறைப் பெயர்களையும், பெண் மக்கள் அவர்களுடைய தாய்மாருடன் ஒரே உறவுப் பெயரையும் பகிர்ந்து கொள்கின்றனர். இங்கே, ஆண், பெண் வேறுபாடுகள் மட்டுமே காட்டப்படுகின்றன. தலைமுறை வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
பெரும்பாலான உறவுமுறை முறைமைகளைப் போலவே குரோ முறையிலும், தாயின் சகோதரிகளும், தாயும் ஒரே உறவுப் பெயரால் குறிக்கப்பட, தந்தையின் ஆண் சகோதரரும், தந்தையும் ஒரே பெயரால் குறிக்கப்படுகின்றனர்.
எடுத்துக்காட்டு
கீழேயுள்ள அட்டவணை குரோ முறைக்கு எடுத்துக்காட்டான அக்கான் இன உறவுமுறைப் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
உறவுமுறைப் பெயரிடல் வகைகள்
உறவுமுறை
உறவுமுறைச் சொற்கள்
உறவுமுறை
|
6294
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D
|
நல்லெண்ணெய்
|
நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெயை உபயோகிக்கின்றனர்.
நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது பிடித்துவிடல், உருவுதல் போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது.
சமையல் எண்ணெய்கள்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.