id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
5412
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பிரேசில்
பிரேசில் (Brazil; ; ) அல்லது பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு (Federative Republic of Brazil, , ), தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது. பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு. பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு அட்டோல், செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம், டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் என்பன இவற்றுட் சில. பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா ஆகும். சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்களாகும். போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே. 1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் கால் வைத்ததிலிருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கலின் குடியேற்ற நாடாக இருந்தது. 1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனிலிருந்து இரியோ டி செனீரோவுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது. 1822 ஆம் ஆண்டில் பிரேசில் பேரரசின் உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது. இப் பேரரசு அரசியல் சட்ட முடியாட்சியுடன், நாடாளுமன்ற முறையும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது. 1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் சனாதிபதி முறைக் குடியரசு ஆனது. 1988ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும். கூட்டாட்சி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக்கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது. பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும். உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதார நாடுகளில் பிரேசிலும் ஒன்று ஆகும். ஐக்கிய நாடுகள் அவை, ஜி20, போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் தொடக்கக்கால உறுப்பினராகப் பிரேசில் உள்ளது. பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான பிரேசிலில், பல்வகைக் காட்டுயிர்கள், இயற்கைச் சூழல்கள், பரந்த இயற்கை வளங்கள், பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன. பிரேசில் இலத்தீன அமெரிக்காவில் மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும், பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது. சில மதிப்பீடாளர்கள் பிரேசிலை உலகளவில் செல்வாக்கு பெருகிவரும் நாடாக அடையாளப்படுத்துகின்றனர். பிரேசில் கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த காப்பி பயிராக்கும் நாடாக விளங்குகின்றது. வரலாறு போத்துக்கீசக் குடியேற்றம் தற்போது பிரேசிலென அழைக்கப்படும் தென்னமெரிக்கப் பகுதியை 1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தலைமையிலான போத்துக்கீசக் கப்பல்கள் அடைந்ததிலிருந்து, அப்பகுதி போத்துக்கீசர் வசமானது. அப்போது, அங்கே கற்காலப் பண்பாட்டைக் கொண்ட தாயக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்து காணப்பட்டனர். தூப்பி-குவாரானி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய அவர்கள் எப்பொழுதும் தமக்குள் சண்டையிட்டபடி இருந்தனர். முதலாவது குடியிருப்பு 1532 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதும், 1534 ஆம் ஆண்டில், டொம் யோவான் III அப்பகுதியைத் தன்னாட்சியுடன் பரம்பரைத் தலைமைத்துவம் கொண்ட 15 பிரிவுகளாகப் பிரித்த பின்னரே நடைமுறையில் குடியேற்றம் தொடங்கியது. எனினும் இந்த அமைப்பு ஒழுங்குப் பிரச்சினைக்கு வித்திட்டதால் முழுக் குடியேற்றத்தையும் நிர்வாகம் செய்வதற்காக 1549ல், அரசர் ஒரு ஆளுனரை நியமித்தார். சில தாயக இனக்குழுக்கள் போத்துக்கீசருடன் தன்மயமாகிவிட்டனர். வேறுசில குழுக்கள், அடிமைகள் ஆக்கப்பட்டனர் அல்லது நீண்ட போர்களில் அழிக்கப்பட்டனர். இன்னும் சில குழுக்கள் ஐரோப்பியர்மூலம் பரவியனவும், தாயக மக்கள் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிராதனவுமான நோய்களினால் மடிந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சர்க்கரை (சீனி) பிரேசில் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பண்டம் ஆகியது. அனைத்துலக அளவில் சர்க்கரைக்கான தேவை கூடியதனால், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் போத்துக்கீசர், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்தனர். பிரான்சுடனான போர்களின் மூலம் போத்துக்கீசர் மெதுவாகத் தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். 1567ல் தென்கிழக்குத் திசையிலான விரிவாக்கத்தின் மூலம் ரியோ டி செனரோவையும், 1615ல் வடமேற்குத் திசை விரிவாக்கத்தின் மூலம் சாவோ லூயிசையும் கைப்பற்றினர். அமேசான் மழைக்காட்டுப் பகுதிக்குப் படையெடுத்துச் சென்றுப் பிரித்தானியருக்கும் ஒல்லாந்தருக்கும் உரிய பகுதிகளைக் கைப்பற்றி, 1669 ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதியில் ஊர்களை உருவாக்கிக் கோட்டைகளையும் அமைத்தனர். 1680 ஆம் ஆண்டில் தெற்குக் கோடியை எட்டிய போத்துக்கீசர், கிழக்குக் கரையோரப் பகுதியில் (தற்கால உருகுவே), ரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் சாக்ரமெந்தோ என்னும் நகரை நிறுவினர். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. ஆனால், 1690களில் மாட்டோ குரோசோ, கோயாசு ஆகிய பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதனால் உடனடியான சீர்குலைவு தடுக்கப்பட்டது. 1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட சான் இல்டிபொன்சோ உடன்படிக்கையின்படி போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம்முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன. 1808ல், பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போர்த்துக்கலையும் பெரும்பாலான மைய ஐரோப்பாவையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, போத்துக்கீச அரச குடும்பமும், பெரும்பாலான உயர் குடியினரும் தப்பி வந்து ரியோ டி செனரோ நகரத்தில் குடியேறினர். இதனால், அந்நகரம் போத்துக்கீசப் பேரரசு முழுவதினதும் தலைமை இடமாக மாறியது. 1815 ஆம் ஆண்டில் தனது உடல்நலம் குன்றிய தாய்க்காக ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த ஆறாம் டொம் யோவான் (Dom João VI) பிரேசிலைக் குடியேற்ற நாடு என்னும் தரத்திலிருந்து இறைமையுள்ள இராச்சியமாகத் தரம் உயர்த்தினார். 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கயானாவைப் போத்துக்கீசர் கைப்பற்றினர். 1817ல் இது மீண்டும் பிரான்சிடம் வழங்கப்பட்டது. விடுதலையும் பேரரசும் போத்துக்கீசப் படையினர், நெப்போலியனுடைய ஆக்கிரமிப்பை முறியடித்தபின்னர், 1821 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அரசர் ஆறாம் யோவான் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அவரது மூத்த மகன் இளவரசர் பெட்ரோ டி அல்கந்தாரா பிரேசிலுக்கான ஆட்சிப் பொறுப்பாளராக ஆனார். 1820ன் தாராண்மைப் புரட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த புதிய போர்த்துக்கல் அரசாங்கம் பிரேசிலை மீண்டும் குடியேற்ற நாடாக ஆக்குவதற்கு முயற்சித்தது. பிரேசில் மக்கள் இதற்கு இடம் கொடுக்கவில்லை. இளவரசர் பெட்ரோவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர், 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பிரேசிலைப் போர்த்துக்கலிலிருந்து விடுதலை பெற்ற ஒரு இராச்சியமாக அறிவித்தார். பெட்ரோ, 1822 அக்டோபர் 12 ஆம் தேதி பிரேசிலின் முதல் பேரரசராக அறிவிக்கப்பட்டு அவ்வாண்டு டிசம்பர் முதலாம் திகதி முடிசூட்டப்பட்டார். பழங்குடிகள் பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரான மனாஸின் அருகில் உள்ள ரீயோ நீக்ரொ (Rio Negro (Amazon)) ஆற்றங்கரையோரத்தில் தாத்துயோ என்ற பழங்குடிமக்கள் வாழுகிறார்கள். இவர்கள் தற்சமயம் நாகரிகத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். புவியியல் பிரேசில் தென் அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தில் பெரிய நிலப்பகுதியை அடக்கி உள்ளது; இந்தக் கண்டத்தின் பேரளவு உட்பகுதியை பிரேசில் உள்ளடக்கி உள்ளது. இந்த நாட்டின் தெற்கில் உருகுவையும் தென்மேற்கில் அர்கெந்தீனாவும் பரகுவையும் மேற்கில் பொலிவியாவும் பெருவும் வடமேற்கில் கொலொம்பியாவும் வடக்கில் வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானாவும் எல்லைகளாக உள்ளன. எக்குவடோர் மற்றும் சிலி தவிர்த்துத் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளுடனும் பிரேசில் எல்லையைக் கொண்டுள்ளது. பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு பவழத்தீவு, செயின்ட் பீட்டர் மற்றும் பவுல் பாறைகள், மற்றும் டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் போன்ற பல பெருங்கடல் தீவுக்கூட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இதன் பரப்பளவு, வானிலை, மற்றும் இயற்கை வளங்கள் பிரேசிலை புவியியல் பல்வகைமை கொண்டதாகச் செய்கின்றன. அத்திலாந்திக்கு தீவுகள் உட்பட, பிரேசில் நிலநேர்க்கோடுகள் 6°Nக்கும் 34°Sக்கும் இடையேயும் நிலநிரைக்கோடுகள் 28°Wக்கும் 74°Wக்கும் இடையேயும் அமைந்துள்ளது. பிரேசில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாகவும், அமெரிக்காக்களில் மூன்றாவது பெரிய நாடாகவும் விளங்குகிறது. பரப்பளவிலான நீர்ப்பரப்பு உள்ளடக்கி இதன் மொத்தப் பரப்பளவு ஆக உள்ளது. இது மூன்று நேர வலயங்களை கொண்டுள்ளது; மேற்கு மாநிலங்களில் UTC-4 இலிருந்து கிழக்கு மாநிலங்களில் UTC-3 வரையும் பரந்துள்ளது; அத்திலாந்திக்குத் தீவுகள் UTC-2 நேர வலயத்தில் அமைந்துள்ளன. உலகிலேயே தன் நிலப்பகுதி வழியே நிலநடுக் கோடு செல்லும் ஒரே நாடாக பிரேசில் விளங்குகிறது. பிரேசிலிய நிலப்பகுதி பல்வகைமை கொண்டதாக, அமேசான் ஆறு, அமேசான் மழைக்காடுகள், குன்றுகள், மலைகள், சமவெளிகள், உயர் நிலங்கள் மற்றும் புதர் நிலங்கள் அடங்கியதாக உள்ளது. பெரும்பாலான நிலப்பரப்பு உயரத்திலிருந்து உயரம் வரை உள்ளது. உயரமான நிலப்பரப்பு நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் தென்கிழக்குப் பகுதி கரடுமுரடாகக் குன்றுகளும் மலைகளும் உடையதாக உள்ளது; இவற்றின் உயரங்கள் வரை எழும்புகின்றன. வடக்கில், குயானா உயர்நிலங்கள் ஆற்று வடிநீரை பிரிக்கின்றது; தெற்கே அமேசான் படுகைக்குப் பாயும் ஆறுகளை வடக்கே பாய்ந்து வெனிசூலாவின் ஓரின்கோ ஆற்று அமைப்பில் கலக்கும் ஆறுகளிலிருந்து பிரிக்கின்றது. பிரேசிலின் மிக உயரமான சிகரம் உயரமுள்ள பைக்கோ டா நெப்லினா ஆகும். பிரேசிலில் அடர்ந்த சிக்கலான ஆற்றுப் பிணையம் உள்ளது; உலகின் மிகவும் பரந்த ஆற்றுப்படுகைகள் உள்ளன. எட்டு பெரிய வடிநிலங்கள் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஆற்றுநீரை வடிக்கின்றன. பிரேசிலின் முதன்மையான ஆறுகளாக அமேசான் (உலகின் இரண்டாவது மிக நீளமானதும் நீர்க்கொள்ளளவில் மிகப் பெரியதுமானதும் ஆகும்), பரனா மற்றும் அதன் துணை ஆறான இகுவாசு ( இகுவாசு அருவி), ரியோ நீக்ரோ, சாவோ பிரான்சிஸ்கோ, இக்சிங்கு, மதீரா, டபாயோசு ஆறுகள் உள்ளன. அரசும் அரசியலும் பிரேசிலியக் கூட்டாட்சி மாநிலங்கள், நகராட்சிகள், கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் "கலைக்கமுடியாத ஒன்றியம்" ஆகும். ஒன்றியம், மாநிலங்கள், கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகள் "அரசின் கூறுகளாகும்." இந்தக் கூட்டமைப்பு ஐந்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: இறையாண்மை, குடிமை, மாந்தர் மேன்மை, தொழிலாளர் சமூக நலம் மற்றும் நிறுவன சுதந்திரம், அரசியல் பன்முகத்தன்மை. அரசின் மரபார்ந்த மூன்று கிளைகளை (கட்டப்படுத்தல்களும் சமநிலைகளும் முறைமையின் கீழான செயலாக்கம், சட்டவாக்கம், மற்றும் நீதியாண்மை) அரசியலமைப்பினால் முறையாக நிறுவப்பட்டுள்ளது. செயலாக்கமும் சட்டவாக்கமும் தனித்தனியே அரசின் மூன்று கூறுகளிலும் (ஒன்றியம்,மாநிலம்,நகராட்சி) வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும் நீதித்துறை ஒன்றிய, மாநில/கூட்டரசு மாவட்ட கூறுகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. செயலாக்க மற்றும் சட்டவாக்க உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நுழைவுத் தேர்வில் தேறிய நீதிபதிகளும் பிற நீதித்துறை அலுவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள். பிரேசிலின் பெரும்பான்மையான மக்களாட்சி வரலாற்றில் பல கட்சி முறைமையையே கொண்டுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. 18 அகவையிலிருந்து 70 அகவை வரை படித்த அனைவருக்கும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது;படிக்காதவர்களுக்கும் 16 முதல் 18 அகவை நிரம்பியவர்களுக்கும் 70 அகவையைத் தாண்டியவர்களுக்கும் வாக்களிப்பது விருப்பத்தேர்வாக உள்ளது. பல்வேறு சிறு கட்சிகளுடன் நான்கு அரசியல் கட்சிகள் முதன்மை பெறுகின்றன: தொழிலாளர் கட்சி (PT), பிரேசிலிய சோசலிச மக்களாட்சி கட்சி (PSDB), பிரேசிலிய மக்களாட்சி இயக்கக் கட்சி (PMDB), மற்றும் மக்களாட்சிக் கட்சி (DEM). பேராயத்தில் (நாடாளுமன்றத்தில்) 15 கட்சிகள் அங்கம் ஏற்கின்றன. அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளை மாற்றிக் கொள்வது வழமையாதலால் பேராயத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கை மாறிய வண்ணம் உள்ளது. செயலாக்கப் பிரிவில் உள்ள அதிகாரிகளாலும் அமைப்புக்களாலும் அரசுப் பணிகளும் நிர்வாகப் பணிகளும் நடத்தப்படுகின்றன. மக்களாட்சி குடியரசான அரசமைப்பு குடியரசுத் தலைவரை மையப்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். இவரது பணிக்காலம் நான்காண்டுகளாகும். இரண்டாம் முறை மறுதேர்வுக்கு வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவராக பிரேசில் சனவரி 1, 2023இல் பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களால் அரசு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அரசுக் கூறிலும் உள்ள சட்டவாக்க அவைகளால் பிரேசிலின் சட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. தேசியப் பேராயம் கூட்டாட்சியின் ஈரவை நாடாளுமன்றமாகும். கீழவை சாம்பர் ஆப் டெபுடீசு என்றும் மேலவை செனட் என்றும் அழைக்கப்படுகின்றன. நிர்வாகப் பிரிவுகள் பிரேசில் 26 மாநிலங்கள், (நாட்டுத் தலைநகர் பிரசிலியாவை உள்ளடக்கிய) ஒரு கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகளின் கூட்டமைப்பாகும். மாநிலங்களுக்குத் தன்னாட்சி உடைய நிர்வாக அமைப்பு உள்ளது; இவை தங்களுக்கான வரி விதித்தல், வசூலித்தல் அதிகாரங்களைக் கொண்டதோடன்றி கூட்டரசின் வரி வருமானத்திலிருந்தும் பங்கு பெறுகின்றன. மாநிலத்தின் ஆளுநரும் ஓரவை சட்டப்பேரவையும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொதுச்சட்டத்தை நிர்வகிக்கும் கட்டற்ற நீதி மன்றங்களும் உள்ளன. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களைப் போன்று இவற்றிற்கு சட்டமியற்றலில் முழுமையான சுதந்திரம் இல்லை. காட்டாகக் குற்றவியல் மற்றும் குடியியல் சட்டங்கள் ஈரவை உடைய கூட்டாட்சி பேராயத்தினால் மட்டுமே இயற்றப்பட்டு நாடு முழுமையும் சீரான சட்டம் நிலவுகிறது. மாநிலங்களும் கூட்டரசு மாவட்டமும் மண்டலங்களாகக் குழுப்படுத்தப் படுகின்றன: வடக்கு, வடகிழக்கு, மத்திய-மேற்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு. இந்த மண்டலங்கள் புவியியலைச் சார்ந்தவையே தவிர இவை அரசியல் அல்லது நிர்வாகப் பிரிவுகள் கிடையாது; இங்கு எந்த அரசமைப்பும் இல்லை. நகராட்சிகள், மாநிலங்களைப் போலவே, தன்னாட்சியான நிர்வாகத்தையும், வரி விதிக்கும்/வசூலிக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன; தவிர ஒன்றிய அரசும் மாநில அரசும் வசூலிக்கும் வரிகளில் பங்கு கிடைக்கிறது. இவை கூட்டாட்சியில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு இணையாக உள்ளன. இவற்றிற்கிடையே அடுக்கதிகாரம் கிடையாது. ஒவ்வொரு நகராட்சியின் மேயரும் நகர மன்ற உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நகராட்சிகளில் தனியான நீதி மன்றம் அமைக்கப்பட வில்லை. பொருளியல் நிலை இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரும் தேசியப் பொருளாதாரமாகப் பிரேசில் விளங்குகிறது. அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி அறிக்கைகளின்படி நாணயமாற்றுச் சந்தை வீதப்படி உலகின் ஏழாவது பெரிய பொருளியல் நாடாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலையில் (PPP) ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. ஏராளமான இயற்கை வளங்களை உடைய பிரேசிலில் கலப்புப் பொருளாதாரம் கடைபிடிக்கப்படுகிறது. வரும் பத்தாண்டுகளில் பிரேசிலியப் பொருளியல் உலகின் ஐந்தாவது நிலையை எட்டக்கூடும்; தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வளர்முகமாக உள்ளது. பிரேசிலின் தனிநபர் மொ.உ.உ (கொ.ஆ.ச) 2014இல் $12,528 ஆக இருந்தது. வேளாண்மை, சுரங்கத் தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் 107 மில்லியன் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தத் தொழிலாளர் எண்ணிக்கை உலகளவில் ஆறாவது ஆகும். வேலையில்லாதோர் விழுக்காடு 6.2% (உலகளவில் 64வது) ஆகும். பன்னாட்டு நிதிய மற்றும் பண்டச் சந்தைகளில் பிரேசில் தனது இருப்பை விரிவாக்கி வருகிறது. வளர்ந்து வரும் நான்கு பொருளாதாரங்களாகக் கருதப்படும் பிரிக் நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 150 ஆண்டுகளாகப் பிரேசில் உலகின் மிகப்பெரிய காப்பி தயாரிப்பாளராக விளங்குகிறது. தானுந்துச் சந்தையில் உலகில் நான்காவதாக உள்ளது. பிரேசிலின் முதன்மையான ஏற்றுமதிகளாக வானூர்தி, மின்னியல் கருவிகள், தானுந்துகள், எத்தனால் எரிபொருள், துணிகள், காலணிகள், இரும்புத் தாது, எஃகு, காப்பி, ஆரஞ்சுச் சாறு, சோயா அவரைகள் மற்றும் உப்பிட்ட மாட்டிறைச்சி உள்ளன. உலகளவில் ஏற்றுமதிகளின் மதிப்பின்படி 23வது நிலையில் உள்ளது. பிரேசிலின் உலக வணிகத்தை உயர்த்துவதற்கு தடையாக ஊழல் ஓர் முதன்மைக் காரணியாக இருப்பதாக 69.9% உள்நாட்டு நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன. ஆண்டுக்கு ஊழலின் மதிப்பு $41 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. எல்லைத்தாண்டிப் போனால்தான் வாக்காளர்கள் கவனிக்கும் அளவிற்கு உள்ளூர் அரசு ஊழல் இயல்பாக உள்ளது. அனைத்துலக வெளிப்படைத்துவ நிறுவனத்தின் ஊழல் மலிவுச் சுட்டெண் 2012இல் பிரேசிலை 178 நாடுகளில் 69வது இடத்தில் வரிசைப்படுத்தி உள்ளது. கட்டமைப்பு கூறுகளும் ஆற்றலும் வேளாண்மை, தொழிலகங்கள், மற்றும் பலவிதமான சேவைகளை உள்ளடக்கிய பன்முனைப்பட்ட பொருளியலை பிரேசில் கொண்டுள்ளது. 2007இல் வேளாண்மையும் தொடர்புடைய காட்டியல், மரத்துண்டு போக்குவரத்து, மீன் பிடித்தல் துறைகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆக இருந்தது. ஆரஞ்சு, காப்பி, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, தாழை நாரிழை, சோயாபீன்சு, பப்பாளி ஆகியவற்றின் தயாரிப்பில் பிரேசில் முதன்மை பெறுகிறது. தொழிற்துறை— தானுந்துகள், எஃகு, பாறைநெய் வேதிப்பொருட்கள், கணினிகள், வானூர்தி, மற்றும் நுகர்வோர் நிலைப்பொருட்கள்— மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.8% ஆக உள்ளது. தொழிலகங்கள் பெருநகரப் பகுதிகளான சாவோ பவுலோ, இரியோ டி செனீரோ, கேம்பினாசு, போர்ட்டோ அலெக்ரி, மற்றும் பெலோ அரிசாஞ்ச் போன்ற நகரங்களில் குவியப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் ஆற்றல் நுகர்வில் பிரேசில் பத்தாவது மிகப்பெரும் நுகர்வாளராக உள்ளது. இந்த ஆற்றலைப் புதுப்பிக்கத் தக்க வளங்களிலிருந்து, குறிப்பாக நீர் மின் ஆற்றல் மற்றும் எத்தனால், பெறுகிறது; மின் உற்பத்தியின் அடிப்படையில் இடைப்பு அணை உலகின் மிகபெரும் நீர் மின் ஆற்றல் நிலையமாகும். எத்தனாலில் ஓடும் முதல் தானுந்து 1978இல் தயாரிக்கப்பட்டது; எத்தனாலில் இயங்கும் முதல் வானூர்தி 2005இல் உருவாக்கப்பட்டது. அண்மைக்கால ஆய்வுகள் பாறைநெய் கிடைப்பதற்கான வாய்ப்புக்களை கூட்டியுள்ளன. போக்குவரத்து பிரேசிலின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் சாலைகள் முதன்மையாக உள்ளன. 2002இல் பிரேசிலில் 1.98 மில்லியன் கிமீ (1.23 மில்லியன் மைல்) சாலையமைப்பு இருந்தது. பாவப்பட்ட சாலைகள் 1967இல் (22,056 mi) ஆக இருந்தது 2002இல் (114,425 mi) ஆக வளர்ச்சியடைந்துள்ளது. நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் முதன்மை வளர்ந்த அதேநேரத்தில் தொடர்வண்டி அமைப்பின் வளர்ச்சி 1945இலிருந்து குறைந்து வருகிறது. 1970இல் ஆக இருந்த தொடர்வண்டித் தடங்கள் 2002இல் ஆகக் குறைந்துள்ளது. பெரும்பான்மையான தொடர்வண்டி அமைப்பின் உரிமையாளராகப் பொதுத்துறையில் இருந்த கூட்டரசு தொடர்வண்டித்தட நிறுவனம் ( RFFSA) 2007இல் தனியார்மயமாக்கப்பட்டது. பிரேசிலின் முதல் ஆழ்நில போக்குவரத்து அமைப்பாக சாவோ பவுலோ மெட்ரோ அமைந்தது. மெட்ரோ அமைப்புள்ள பிற நகரங்கள்: இரியோ டி செனீரோ, போர்ட்டோ அலெக்ரி, ரெசிஃபி, பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, டெரெசினா, போர்த்தலேசா ஆகும். பிரேசிலில் ஏறத்தாழ 2,500 வானூர்தி நிலையங்கள் உள்ளன. சாவோ பவுலோ-குவாருலோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மிகவும் பெரியதும் போக்குவரத்து மிக்கதுமான வானூர்தி நிலையமாகும். நாட்டின் பெரும்பான்மையான வணிகப் போக்குவரத்தைக் கையாளும் இந்த வானூர்தி நிலையத்தில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 20 மில்லியன் பயணிகள் கடந்து செல்கின்றனர். சரக்குப் போக்குவரத்திற்கு நீர்வழிகள் முக்கியமானவை; மனௌசு தொழிற்பேட்டையை அடைய குறைந்தளவு ஆறு மீட்டர் ஆழமுடைய, நீளமுடைய, சோலிமோசு - அமேசோனாசு நீர்வழி மட்டுமே உள்ளது. பரந்த கடலோரப் பகுதிகளை இணைக்கும் விதமாகக் கடலோரக் கப்பல் போக்குவரத்து அமைந்துள்ளது. பொலிவியாவிற்கும் பரகுவைக்கும் சான்டோசு கட்டற்ற துறைமுகங்களாக வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலின் 36 ஆழ்நீர் துறைமுகங்களில், சான்டோசு, இடாஜெய், ரியோ கிராண்டு, பரனகுவா, ரியோ டி செனீரோ, செபெடிபா, வைடோரியா, சுவாப்பெ, மனௌசு மற்றும் சாவோ பிரான்சிஸ்கோ டெ சுல் முக்கியமானவையாம். சிறை சீர்திருத்தம் பிரேசிலில் சிறைத்தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் ஒரு புத்தகத்தைப் படித்து அதன் தலைப்பிலிருந்து விலகாமல் அறிக்கை தயாரிப்பதன் மூலம் நான்கு நாட்கள் சிறைத்தண்டனையைக் குறைத்துக்கொள்ள முடியும் மேலும் இவர்கள் கார் பேட்டரியோடு இணைக்கப்பட்டுள்ள நிற்கும் மிதிவண்டியை 16 மணிநேரம் ஓட்டுவதன் மூலம் ஒருநாள் சிறை தண்டனையைக் குறைக்க முடியும். பண்பாடு அடிப்படையான பிரேசிலியப் பண்பாடு போர்த்துக்கேயப் பண்பாட்டிலிருந்து பெறப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர்கள் போர்த்துக்கேய மொழி, உரோமானிய கிறித்துவம் மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலைப் பாணிகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் ஆபிரிக்கர், உள்ளகப் பழங்குடியினர், மற்றும் பிற ஐரோப்பிய பண்பாடுகள் , மரபுகளின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளது. இசை பிரேசிலின் இசை ஐரோப்பிய ஆபிரிக்க கூறுகளின் ஒன்றிணைவாகும். பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை ஐரோப்பிய இசையின் தாக்கங்கள் நிறைந்திருந்தன. இருபதாம் நூற்றாண்டில் ஆபிரிக்கர்களின் தாளக் கட்டமைப்பும் நடனக் கூறுகளும் இசைக்கருவிகளும் பரவலான பிரேசிலிய பாப்பிசையில் முக்கியப் பங்காற்றுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மக்களிசையில் தனித்துவமான பிரேசிலியக் கூறு வெளிப்படத் துவங்கியது. இவற்றில் சாம்பா மிகவும் புகழ்பெற்றுள்ளது; யுனெசுக்கோவின் பண்பாட்டு பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மரக்காட்டு, அஃபோக்செ என்ற இரு ஆபிரிக்க-பிரேசிலிய இசை மரபுகளும் வருடாந்திர பிரேசிலிய கார்னிவல்களில் புகழ்பெற்றுள்ளது. கபோய்ரா விளையாட்டில் அதற்கான தனி நாட்டாரிசை கபோய்ரா இசை இசைக்கப்படுகிறது. போசா நோவா 1950களிலும் 1960களிலும் உருவாக்கப்பட்டுப் பரவலாகப் பாடப்பட்ட பிரேசிலிய இசைவடிவமாகும். "போசா யோவா" என்றால் "புதிய போக்கு" எனப் பொருள்படும். சாம்பா, ஜாஸ் வடிவங்களின் ஒன்றிணைவான போசா நோவா 1960களிலிருந்து புகழ்பெற்று வருகிறது. விளையாட்டுக்கள் இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். பிஃபா உலகத் தரவரிசையில் பிரேசில் தேசிய காற்பந்து அணி உலகில் மிகச் சிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை ஐந்து முறை வென்றுள்ளது. [[படிமம்:Confed.Cup2013Champions.jpg|left|thumb|பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற பிரேசில் தேசிய காற்பந்து அணியினரின் கொண்டாட்டங்கள். நாட்டின் மிகப் பரவலான உடற்றிறன் விளையாட்டாக காற்பந்தாட்டம் விளங்குகிறது. கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், தானுந்து விளையாட்டுக்கள், மற்றும் தற்காப்புக் கலைகள் மிகப் பரவலான பற்றுகையைக் கொண்டுள்ளன. பிரேசில் ஆடவர் தேசியக் கைப்பந்தாட்ட அணி உலகக் கூட்டிணைவு, உலக பெரும் சாதனையாளர் கோப்பை, உலக வாகையாளர் கோப்பை, கைப்பந்தாட்ட உலக்க் கோப்பை ஆகியவற்றில் தற்போதைய வாகையாளர்களாவர். சில விளையாட்டு வேறுபாடுகள் பிரேசிலில் தொடங்கியவை: கடற்கரை காற்பந்து, புட்சால் (உள்ளரங்க காற்பந்து) மற்றும் புட்வால்லி என்பன பிரேசிலில் காற்பந்தின் வேறுபாடுகளாக உருவானவை. தற்காப்புக் கலையில், பிரேசிலியர்கள் கப்போயீரா, வேல் டுடோ, பிரேசிலிய ஜியு-ஜிட்சு போன்ற விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளனர். தானுந்துப் பந்தயங்களில் மூன்று பிரேசிலிய ஓட்டுநர்கள் பார்முலா 1 உலக வாகையாளர்களாக எட்டு முறை வென்றுள்ளனர். பிரேசில் 1950 உலகக்கோப்பை காற்பந்து போன்ற பல முதன்மையான பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்று நடத்தி உள்ளது. 2014 உலகக்கோப்பை காற்பந்து பிரேசிலில் நடைபெறுகிறது. சாவோ பாவுலோவில் பிரேசிலிய கிராண்டு பிரீ பார்முலா 1 தானுந்துப் பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அக்டோபர் 2, 2009இல் இரியோ டி செனீரோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்களையும் 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களையும் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.தென்னமெரிக்க நகரமொன்றில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official Tourist Guide of Brazil Brazilian Federal Government Brazilian Institute of Geography and Statistics Brazil at UCB Libraries GovPubs Country Profile from the U.S. Library of Congress (1997) Video report on Brazil in 1961 Brazil from the BBC News Key Development Forecasts for Brazil from International Futures Democracy in Brazil from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives தென் அமெரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
5418
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
அரபிக்கடல்
அரபிக்கடல் () என்பது வட இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும், இதன் வடக்கே பாகிஸ்தான் மற்றும் ஈரான், மேற்கில் ஏடன் வளைகுடா, கார்டபூய் சேனல் மற்றும் அரேபிய தீபகற்பம், தென்கிழக்கில் இலட்சத்தீவுக் கடல், தென்மேற்கில் சோமாலிய கடல், மற்றும் கிழக்கில் இந்தியா அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 3,862,000   கிமீ 2 (1,491,000   சதுர   மைல்) மற்றும் அதன் அதிகபட்ச ஆழம் 4,652 மீட்டர் (15,262   அடி). மேற்கில் உள்ள ஏடன் வளைகுடா அரேபிய கடலை செங்கடலுடன் பாப்-எல்-மண்டேப்பின் நீரிணை வழியாக இணைக்கிறது. மேலும், வடமேற்கில் உள்ள ஓமான் வளைகுடா , அதை பாரசீக வளைகுடாவோடு இணைக்கிறது. கிமு மூன்றாம் அல்லது இரண்டாம் மில்லினியத்திலிருந்து அரேபிய கடல் பல முக்கியமான கடல் வர்த்தக வழிகளால் கடக்கப்பட்டுள்ளது. காண்ட்லா துறைமுகம், ஓகா துறைமுகம், மும்பை துறைமுகம், நவா ஷெவா துறைமுகம் (நவி மும்பை), மர்மகோவா துறைமுகம் (கோவா), புதிய மங்களூர் துறைமுகம் மற்றும் இந்தியாவின் கொச்சி துறைமுகம், கராச்சி துறைமுகம், துறைமுக காசிம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம் ஆகியவை முக்கிய துறைமுகங்கள் . சபாகர் துறைமுகம் உள்ள ஈரான் மற்றும் சலாலா துறைமுகம் உள்ள சாலலாஹ், ஓமான் . அரபிக் கடலில் மிகப்பெரிய தீவுகளில் சோகோத்ரா (யேமன்), மசிரா தீவு (ஓமான்), லட்சத்தீவு (இந்தியா) மற்றும் அஸ்டோலா தீவு (பாகிஸ்தான்) ஆகியவை அடங்கும். நிலவியல் அரேபிய கடலின் பரப்பளவு சுமார் கடலின் அதிகபட்ச அகலம் சுமார் , மற்றும் அதன் அதிகபட்ச ஆழம் . இக்கடலில் பாயும் மிகப்பெரிய நதி சிந்து நதி ஆகும். அரேபிய கடலில் இரண்டு முக்கியமான கிளைகள் உள்ளன   - தென்மேற்கில் உள்ள ஏடன் வளைகுடா, செங்கடலுடன் பாப்-எல்-மண்டேப்பின் நீரிணை வழியாக இணைகிறது. மற்றும் ஓமான் வளைகுடா வடமேற்கில், பாரசீக வளைகுடாவுடன் இணைகிறது . தென் மேற்கு இந்தியாவில் கம்பாட் மற்றும் கட்ச் வளைகுடாக்கள் உள்ளன. அரேபிய கடலில் கடற்கரைகளைக் கொண்ட நாடுகள் சோமாலியா, யேமன், ஓமான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் மாலத்தீவு .ஆகும். கடலின் கடற்கரையில் பல பெரும் நகரங்களும் உள்ளன. அவையாவன: மேல், கவரத்தி, கேப் கோமரின் (கன்னியாகுமாரி), குளச்சல், கோவளம், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூர், பட்கல், கார்வார், வாஸ்கோ, பானஜி, மால்வன், ரத்னகிரி, அலிபாக், மும்பை, டாமன், வல்சாடு, சூரத், பாருச்சில், காம்பாட், பவநகர், டையூ, சோம்நாத், மாங்க்ரோல், போர்பந்தர், துவாரகா, ஓகா, ஜாம்நகர், கண்ட்லா, காந்திதாம், முந்திரா, கோடேஷ்வர், கேத்தி பந்தர், கராச்சி, ஓர்மரா, பாஸ்னி, குவாடர், சபாஹர், மஸ்கத், டுக்ம், சாலலாஹ, அல் கெய்தா, ஏடன், பார்கல் மற்றும் ஹஃபூன் போன்றவை ஆகும். எல்லைகள் சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு அரேபிய கடலின் வரம்புகளை பின்வருமாறு வரையறுக்கிறது: மேற்கில்: ஏடன் வளைகுடாவின் கிழக்கு எல்லை [ கேப் கார்டபூயின் மெரிடியன் (ராஸ் ஆசிர், 51 ° 16'E)]. வடக்குப் பகுதியில் ராஸ் அல் ஹட், கிழக்கே அரேபிய தீபகற்பத்தில் (22 ° 32'N) மற்றும் ஜிவானி கடற்கரையில் (61 ° 43'E) பாக்கிஸ்தான் ஆகியவை எல்லைகளாக உள்ளது. தெற்கில்: தெற்கு உச்சநிலைக்கு அட்டு பவளத்தீவு உள்ள மாலத்தீவுகள் கிழக்கு உச்சநிலைக்கு, ராஸ் ஹஃபூன் (ஆப்பிரிக்காவின் கிழக்குக் புள்ளி, 10 ° 26'N) எல்லையாக உள்ளது. கிழக்கே: மேற்கு எல்லை இலட்சத்தீவுக் கடல் இருந்து ஒரு வரி இணைப்பாக சதாசிவகட், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் (மீது ) உள்ள கோரா தீவு ( ), அங்கேயிருந்து மேற்குப் பகுதியில் கீழே இலட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் ; தெற்கு புள்ளியாக மாலத்தீவில் உள்ள அட்டு பவளத்தீவு உள்ளது. மாற்று பெயர்கள் அரேபிய கடல் வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பல பெயர்களுடன் அரேபிய மற்றும் ஐரோப்பிய புவியியலாளர்கள் மற்றும் இந்தியக் கடல் உள்ளிட்ட பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.   சிந்து சாகர், அரபி சமுத்ரா, எரித்ரேயன் கடல், சிந்து கடல்,   மற்றும் அக்ஸர் கடல் போன்றவை சில பெயர்களாகும். வர்த்தக வழிகள் கி.மு. 3 மில்லினியம் முற்பகுதியில் இருந்தே கடலோரப் படகோட்டிகளின் காலத்திலிருந்து அரேபிய கடல் ஒரு முக்கியமான கடல் வணிகப் பாதையாக இருந்து வருகிறது, குறிப்பாக, கி.மு. 2-மில்லினியத்தின் பிற்பகுதியில் இக் கடல் ஏஜ் ஆஃப் செயில் என அழைக்கப்பட்டது . ஜூலியஸ் சீசரின் காலப்பகுதியில், பல நன்கு நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த நில-கடல் வர்த்தக வழிகள் அதன் வடக்கே கரடுமுரடான உள்நாட்டு நிலவமைப்பு அம்சங்களைச் சுற்றி கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை சார்ந்து இருந்தது. தெற்கு அரேபிய தீபகற்பத்தில் (இன்றைய யேமன் மற்றும் ஓமான் ) கரடுமுரடான நாட்டைக் கடந்த இந்த தெற்கு கடலோரப் பாதை குறிப்பிடத்தக்கதாக இருந்தது, மேலும் எகிப்திய பாரோக்கள் வர்த்தகத்திற்கு பல ஆழமற்ற கால்வாய்களைக் கட்டினர், இன்றைய சூயஸ் கால்வாயின் பாதையில் ஒன்று அல்லது அதற்கும் குறைவாகவும், இன்னொன்று செங்கடல் முதல் நைல் நதி வரை கட்டப்பட்டது. இவை பழங்காலத்தில் ஏற்பட்ட பெரும் மணல் புயல்களால் விழுங்கப்பட்டதாக அறியப்படுகிறது. பின்னர், அலெக்ஸாண்ட்ரியா வழியாக ஐரோப்பாவுடனான வர்த்தகத்தில் வேரூன்றிய ஒரு வணிக சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்ய எத்தியோப்பியாவில் ஆக்சம் இராச்சியம் எழுந்தது. முக்கிய துறைமுகங்கள் கராச்சி துறைமுகம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகமாகும். இது கராச்சி நகரங்களான கியமரி மற்றும் சடாருக்கு இடையே அமைந்துள்ளது. குவாடர் துறைமுகம்: பலூசிஸ்தான், பாக்கிஸ்தானில் உள்ள குவாடர் அரபிக்கடல் முகட்டில் மற்றும் பாரசீக வளைகுடா நுழைவாயிலில் சுமார் 460   கராச்சிக்கு மேற்கே கி.மீ மற்றும் சுமார் 75   கிமீ (47)   mi) ஈரானுடனான பாகிஸ்தானின் எல்லைக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு ஆழ்கடல் துறைமுகம் ஆகும் இந்த கடற்கரை ஒரு இயற்கை சுத்தியல் வடிவ தீபகற்பத்தின் கிழக்கு விரிகுடாவில் அமைந்துள்ளது. தீவுகள் அரேபிய கடலில் பல தீவுகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை லட்சத்தீவு தீவுகள் ( இந்தியா ), சோகோத்ரா ( ஏமன் ), மசிரா ( ஓமான் ) மற்றும் அஸ்டோலா தீவு ( பாகிஸ்தான் ). இறந்த மண்டலம் இறந்த மண்டலம் என்பது ஓமான் வளைகுடாவில் உள்ள ஒரு பகுதி ஆகும். இங்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் முற்றிலுமாக கிடைப்பதில்லை. இதன் விளைவாக கடல் வாழ் உயிரினங்கள் இல்லை. இது ஸ்காட்லாந்தை விட பெரிய பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய இறந்த மண்டலமாக உள்ளது. வெளி இணைப்புகள் Coordinates on Wikidata கடல்கள்
5423
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
தமிழ்நாட்டு ஓவியக் கலை
தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன. இலக்கியத்தில் ஓவியம் ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புக்கள் பல சங்கப் பாடல்களிலே காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும், ஓவியம் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் உள்ளன. "ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற சிலப்பதிகாரம் வரிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக்கூறியிருக்கின்றனர்". ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது. படம் என்னும் பெயர் இக்காரணத்தினாலேயே வந்தது என்பர் (படம் - வஸ்திரம்)[இதில் சேர நாட்டு ஒலி பதிவு இல்லை] பாண்டியர் கால ஓவியங்கள் முற்காலப் பாண்டியர் காலத்தைச் (கி.பி 550 - 950) சேர்ந்த குகை ஓவியங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இக்காலத்தைச் சேர்ந்த, சித்தன்னவாசல் என்னுமிடத்தில் உள்ள குடைவரைக் கோயில் ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது தவிர அரிட்டாபட்டி, திருமலைப்புரம், ஆனைமலை, கீழ்க்குயில்குடி, கீழவளவு, கரடிப்பட்டி ஆகிய இடங்களிலும் மேற்படி காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. பல்லவர் கால ஓவியங்கள் தமிழ் நாட்டு ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர் காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக் கலையில் சிறந்து விளங்கியதை அவனது பட்டப் பெயர்களான விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி ஆகிய பட்டப் பெயர்கள் மூலம் அறியலாம்.மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனைமலை, ஆர்மாமலை மற்றும் செஞ்சி அருகே உள்ள பாக்கம் மலையில் அமைந்துள்ள நீலகிரி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன. சோழர் கால ஓவியங்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியங்களோடு ஒப்பிடத்தக்க பெருமையுடைய ஓவியங்களை சோழர் காலம் தமிழ் நாட்டுக்கு வழங்கியது. தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயிலிலுள்ள ஓவியங்கள் இத்தகைய பெருமை வாய்ந்தவை. விசயநகர கால ஓவியங்கள் விஜய நகரப் பேரரசு காலத்திலும் ஓவியக்கலை தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. காஞ்சி கைலாச நாதர் கோவிலிலுள்ள ஓவியங்களைச் செப்பனிட்டதுடன், காஞ்சி வரதராஜபெருமாள் கோயில்,திருப்பருத்திக் குன்றம் சந்திரபிரபா கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவெள்ளறை புண்டரீகபெருமாள் கோயில், ஆகிய இடங்களிலும் ஓவியங்களை விஜயநகர அரசர்கள் வரைவித்தனர். நாயக்கர் கால ஓவியங்கள் நாயக்கர் காலத்து ஓவியங்கள் தமிழ் நாட்டில் செங்கம் வேணுகோபாலசாமி கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், அழகர் கோயில், திருகோகர்ணம் கோகர்ணேசுவரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆண்ட மராட்டியரும் தமிழ் நாட்டு ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். தற்காலத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணி என்று அறியப்படுவது இவர்கள் காலத்தில் உருவானதே. தமிழகக் கோயில்களும் ஓவியங்களும் தமிழகக் கோயில்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது குறித்த சில தகவல்களை டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் எனும் நூலில் 198 முதல் 201 வரை உள்ள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவை தமிழகத்தில் விசய நகர- நாயக்கரது ஓவியங்களை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவீழிமிழலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருவெள்ளறை, அழகர்கோயில், நத்தம் கோவில்பட்டி, கூடலழகர் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் , புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர் கோயில், திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில், திருநெல்வேலி மாவட்டம் இடைகால், திருப்புடை மருதூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் ஆகிய இடங்களில் காணலாம். இவற்றில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பருத்திக் குன்றத்தில் மகாவீரர் கோயிலின் சங்கீத மண்டபத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. இதில் சில காட்சிகளே மிஞ்சியுள்ளன. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் கருவறையின் முன்னுள்ள மண்டபத்திலும், ஆண்டாள் ஊஞ்சல் மண்டபத்திலும், நரசிம்மர் கருவறைக்கு முன்பாகவுள்ள மண்டபத்திலும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரதி - மன்மதன், வஸ்திர அபகர்ணன், காளியன் என்னும் அசுரன் ஆகியோரது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, சிவன் உமையம்மையைத் திருமணம் புரியும் காட்சிகள், கோபியருடன் கண்ணன், முருகன் - வள்ளி திருமணக் காட்சி ஆகியன காணப்படுகின்றன. திருவரங்கம் கோயில் வேணுகோபாலன் சந்நிதியின் முன்பாக உள்ள மண்டபத்தில் பாகவத புராணக் காட்சிகளும், ஸ்ரீரங்கமகாத்மியம் தொடர்பான காட்சிகளும் அமைந்துள்ளன. தஞ்சை - திருவீழிமிழலைச் சிவன் கோயிலில் கண்ணனது லீலைகளே காணப்படுகின்றன. திருவெள்ளறை புண்டரிகாட்சர் கோயில் சித்திர மண்டபவிதானத்தில் திருமாலின் தசாவதாரம் மற்றும் இராமாயண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருவிளையாடற் புராணக் காட்சிகளைத் தீட்டியிருந்தனர். இவை சமீபத்தில் நடந்த திருப்பணியின் போது அழிக்கப்பட்டு விட்டன. இதில் எஞ்சியிருப்பது மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண நிகழ்ச்சியை இராணிமங்கம்மாள் கண்டுகளிப்பது போன்ற ஓவியத் தொகுதி மட்டுமே. மதுரை கூடழலகர் கோயிலானது அஷ்டாங்க விமானக் கோயிலாதலால் மேலிரண்டு அடுக்குக் கருவறைகளிலும் திருமாலின் அவதாரங்கள், மும்மூர்த்திகள், திக்கு பாலகர்கள் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. "மதுரை அழகர்கோயில் வசந்த மண்டபத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. கி.பி.1700-ல் வரையப்பட்ட இந்த ஓவியத் தொகுதியில் தெலுங்கு இராமாயணம் இடம் பெறுகிறது. இடில் தெலுங்கிலும், தமிழிலும் விளக்கம் எழுதப்பட்டுள்ளன. வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் இடம் பெற்றுள்லது. இயக்க உத்திமுறை காணப்படுகிறது. ஆறுகளைக் காட்டும் போது வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதில் மீ, ஆமை முதலியனவும் வரையப்பட்டுள்ளன." .இதே போன்று இராமாயண ஓவியங்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணேசுவரர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன. மதுரைக்கருகிலுள்ள நத்தம் கோவில்பட்டியில் உள்ள சிவன் கோயிலில் சுந்தரபுராணம் தொடர்பாகவும், லிங்கமநாயக்கன் என்னும் மன்னன் செய்த சேத்திராடனம் என்னும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வந்த நிகழ்ச்சியையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். தஞ்சை பிருகதீசுவரர் கோயிலில் சோழர்கால ஓவியங்களுக்கு மேலே தீட்டப்பட்டிருந்த நாயக்கர் கால ஓவியங்களும் கருவறையின் மேற்பகுதி வெளிச்சுவரின் மேற்கு நோக்கிய சுவரில் இடம் பெற்றுள்ளன. அவை திசைக் காவலர்களது ஓவியம், அரம்பை, ஊர்வசி, அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, திருமால், போர்க்களக் காட்சி, துர்க்கை, சும்பன், நிசும்பனை அழித்தல் முதலான போர்க்காட்சிகளாகும்.". சிதம்பரம் நடராசர் கோயிலில் இடம் பெற்றுள்ள விசயநகர நாயக்கரது சிற்பங்கள் லெபாக்ஷி பாணியை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. அவற்றில் ரிசிபத்தினிகள் சிவபெருமானின் அழகில் மயங்கித் தமது ஆடைநெகிழ பின் தொடரும் காட்சி மிக அருமையாகத் தீட்டப்பட்டுள்ளது. கும்பகோணம் இராமசுவாமி கோயிலின் கருவறைப் பிரகாரச் சுவரில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் இவை மறு திருத்தம் செய்யப்பட்டது போலத் தோன்றுகின்றன. நார்த்தாமலை விசயாலய சோழீசுவரர் கோயிலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சோழர் காலத்தவை என்றும், நாயக்கர் காலத்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் புகைபடிந்து காணப்படுகின்றன. திருக்கோட்டியூர் சௌமிநாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானம் இடம் பெற்றுள்ளதால் மேலிரு கருவறைகளில் திசைக் காவலர்களது ஓவியங்களும் திருமாலின் பல்வேறு அவதாரங்களும் என ஓவியங்கள் அமைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரது வரலாறு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் கோயில் கருவறைப் பிரகாரத்தில் 108 திவ்ய தேசங்களில் உறைகின்ற திருமாலின் வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலனவை அழிந்து விட்டன. இக்கோயிலின் கொடிக்கம்ப மண்டபத்தில் உள்ள சிறு மண்டபத்தின் விதானத்தில் நவதிருப்பதிகளில் உறைகின்ற திருமாலின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இடைகால் மற்றும் திருப்புடைமருதூர் கோயில்களில் இடம் பெற்றுள்ள நாயக்கர் கால ஓவியங்கள் இன்றும் அழியாது மிகத் தெளிவாக அக்கால ஓவியங்களை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. தவிர பாகவத புராணமும் இங்கு முழுமையாகத் தீட்டப்பட்டுள்ளது. உசாத்துணை தமிழ்நாட்டின் கலைகள் தமிழ் ஓவியம்
5425
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
பாண்டவர்
பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கும், இவர்கள் பெரியப்பா திருதராஷ்டிரனின் மகன்களான கௌரவர்களுக்கும் நடந்த போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும். பாண்டவர்களின் பிறப்பு யமுனை நதிக்கரையில் யாதவ குழு ஒன்று செழிப்பான மதுரா எனும் நகரை அமைத்து யாதவகுழு ஆட்சி முறையை நடத்தி வந்தது. சூரசேனரின் மகள் பிரதை (பிருதை,பிரீதா), பிரதையை குந்தி நாட்டு மன்னர் குந்தி போஜன் தத்தெடுத்து குந்தி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். மண வயதையடைந்த குந்திக்கு சுயம்வரம் நடந்தது, சுயம்வரத்தில் கூடியிருந்தவர்களில் பாண்டுவை தேர்ந்தெடுத்தாள். பீஷ்மர், இரண்டாவதாக மத்திர நாட்டின் மன்னன் சல்யனின் சகோதரி மாதுரியை பாண்டுவிற்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். சல்லியனுக்கு, அவரது தங்கையின் நிச்சயத்திற்கு மணியும், முத்தும், பவளமும் சீராகத் தந்தார் பீஷ்மர், அவற்றை ஏற்றுக்கொண்டு மாத்ரியை பாண்டுவிற்கு மணம் முடித்துத் தந்தார் சல்யர். பல நாடுகளை வெற்றி கொண்டு கப்பத்தொகையைப் பெற்று வந்த பின் குந்தியாலும் மாத்ரியாலும் தூண்டப்பட்டு வனவாசத்தை நாடிச் சென்றார் பாண்டு. வேட்டையின் போது பாண்டுவின் அம்பு பெண்மானை முயங்கிக் கொண்டிருந்த ஆண் மானை தாக்கிவிடுகிறது. மானின் அருகில் சென்று பார்த்த போது பாண்டுவுக்கு உண்மை தெரிகிறது. கிண்டமா என்ற முனிவரும் அவரது மனைவியும் காட்டில் சுதந்திரமாக உலவி காதல் செய்யும் நோக்கில் தங்களது தவ வலிமையால் மான்களாக உருவம் மாறியிருந்தனர். இறக்கும் நேரத்தில் கிண்டமா முனிவர் "ஒரு ஆணும் பெண்ணும் காதல் புரிவதை ஆக்ரோசமாக தடுத்துவிட்டாய் உனக்கு காதல் சுகம் என்ன என்பது தெரியாமல் போகக் கடவது எந்த பெண்ணையும் காதல்கொண்டு தொட்டால் உடனே இறந்து போவாய்" என சாபமிட்டார். ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாதவன் அரசன் ஆகமுடியாது என வருந்தி பாண்டு அத்தினாபுரம் செல்ல மறுத்து சதஸ்ருங்க வனத்தில் முனிவர்களுடன் தங்கிவிடுகிறான். இச்செய்தி அத்தினாபுரம் எட்டுகிறது. பாண்டு இல்லாத நிலையில் அத்தினாபுரத்தின் ஆட்சியை பீஷ்மர் திருதராட்டிரனுக்கு வழங்குகிறார். சில மாதங்களில் காந்தாரி கருத்தரித்தாள் என்ற செய்தி பாண்டுவுக்கு தெரியவே ஆட்சியும் போய், ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆகமுடியாத நிலையில் மனழுத்தமும், சோர்வும், விரக்தியும் அடைந்து பாண்டு ஒரு முடிவெடுத்தான். சுவேதகேது முனிவரின் நியதிப்படி ஒரு பெண்ணின் கணவர் அவர் விரும்பும் ஒரு ஆணுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம், அதன்படி தன்னுடன் இருந்த குந்தியை அழைத்து, யாராவது ஒரு முனிவரின் மூலமாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள் என வேண்டினான். தேவர்களையே அழைக்க முடியும் போது ஏன்? முனிவர்களை அழைக்க வேண்டும் என கூறி, தர்மத்தின் தலைவன் யமன் மூலம் யுதிஷ்டிரன் (தர்மன்), மிகுந்த சக்தி படைத்த வாயு பகவான் மூலம் பீமன், தேவர்களின் தலைவனான இந்திரன் மூலம் அருச்சுனன், என மூன்று குழந்தைகளை குந்தி பெற்றாள். பாண்டு வேறு ஒரு தேவனை அழைக்க சொன்ன போது " மாட்டேன் மூவருடன் இருந்தாயிற்று நான்காவதாக ஒருவருடன் இருந்தால் என்னை வேசி என்று பெசுவார்கள் அப்படித்தான் தர்மம் சொல்கிறது" என மறுத்துவிடுகிறாள். "நீ வேறு எந்த ஆணிடமும் செல்ல முடியாது" என்பதால் மாத்ரிக்காக ஒரு தேவனை அழைக்கச் சொன்னான். மாத்ரியிடம் கேட்ட போது காலை, மாலை நட்சத்திரங்களான அஸ்வினி தேவர்களை அழைக்கச் சொன்னாள். அஸ்வினி தேவர்கள் எனும் இரட்டையர்கள் மூலம் உலகத்திலேயே மிக அழகான நகுலனும், உலகத்திலேயே எல்லாம் அறிந்த அறிவாளியான சகாதேவனும் பிறந்தார்கள். இப்படியாக பிறந்தவர்களை பாண்டவர்கள் என்று அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர். ஐந்து பாண்டவர்கள் தர்மன் பீமன் அர்ஜூனன் நகுலன் சகாதேவன் சான்றாவணம் மகாபாரதக் கதை மாந்தர்கள் பாகவத புராண மாந்தர்
5426
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
கௌரவர்
மகாபாரத காவியத்தில் வரும் மன்னனான திருதராஷ்டிரனின் நூறு மகன்கள் கௌரவர் எனப்படுவர். இவர்கள், "குரு வம்சத்தைச் சேர்ந்த சந்திர குலத்தவர் பார்வதியாம் மலைமகள் சிவபெருமானை எண்ணித் தவம் இயற்றியபோது, அம்மையின் கரங்களுக்கு வளையணிவித்ததால் இப்பெயர் பெற்றனர். கௌரவர்களின் பிறப்பு காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை அத்தினாபுரத்துக்கு அழைத்து வந்து திருதராஷ்டிரனுக்கு மணம் முடித்தனர். பார்வையில்லாத ஒருவருக்கு தன்னை மணம் முடித்ததை அறிந்த காந்தாரி தானும் பார்வை அற்று இருக்க கண்களை திரையிட்டுக் கட்டிக் கொண்டாள். மூத்தவராக இருந்தும் பார்வையற்று இருந்ததால் அவருக்கு அரியணை மறுக்கப்பட்டது. சாந்தனு தனது சகோதரன் தேவபியை பின்னுக்கு தள்ளியது போல இது நடந்தது. திருதராஷ்டிரனுக்கு சட்டம் தெரியும் ஆதலால் மறுப்பு தெரிவிக்கவில்லை,விசித்திரவீரியனின் மூத்தமகன் என சில விதிகள் ஏற்றுக் கொண்டாலும் சில விதிகள் மாறாக இருந்ததால் அமைதியானான். திருதராஷ்டிரனின் உள் மனம் பாண்டுக்கு முன் தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகிவிட வேண்டும், அப்பொழுதான் தனக்கு மறுக்கப்பட்ட உரிமையை தனது மகன் உரிமையோடு அடையமுடியும் என சபதமெடுத்தது. திருதராஷ்டிரனது மனம்போலவே காந்தாரி கர்ப்பமுற்றாள்.கர்ப்பம் இரண்டு வருடங்களுக்கு நீடித்தது. தனக்குப் பிறகு கர்ப்பமுற்ற குந்தி முதல் குழந்தையைப் பெற்றுவிட்டாள் என்பதை அறிந்து பொறுக்க முடியாமல் கருவிலிருந்து குழந்தையை வெளியே தள்ள முடிவெடுத்தாள்.தனதுப் பணிப் பெண்களை அழைத்து ஓர் இரும்பு உலக்கையால் வயிற்றில் ஓங்கி,ஓங்கி அடிக்கச் செய்தாள். முடிவில் அவள் வயிற்றிலிருந்து சதைப்பிண்டம் வெளியே விழுந்தது.குழந்தை அழவில்லையே ஆணா? பெண்ணா? என வினவினாள்.பணிப்பெண்கள் தயங்கினார்கள்,அதட்டினாள் காந்தாரி, பணிப்பெண்கள் உண்மையை கூறினார்கள். காந்தாரி அலறினாள், வியாசரை அழைத்தாள் "நான் நூறு குழந்தைக்கு தாயாவேன் என்று சொன்னீர்களே?" "எங்கே குழந்தைகள்?" காந்தாரியை சமாதானப்படுத்தி சேடிப்பெண்களை அழைத்து சதைப் பண்டங்களை நூறு துண்டங்களாக வெட்டி நூறு நெய் நிறைந்த குடங்களில் போட்டு வைக்கச் சொன்னார் வியாசரை. காந்தாரி எனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டுமென்றாள். வியாசர் மௌனமாய் சிரித்தார், பின் 101 நெய் குடங்களில் சதைப் பிண்டங்களை போட்டு வைத்தார்கள் பணிப்பெண்கள். 100 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 101 குழந்தைகள் பிறந்து கௌரவர்கள் ஆனார்கள். கௌரவர்கள் பெயர் பட்டியல் இவர்களுள் மூத்தவர் துரியோதனன், இரண்டாமவர் துச்சாதனன். பெண் மகள் துச்சலை. வெளி இணைப்பு தமிழில் முழு மஹாபாரதம் சான்றாவணம் மகாபாரதக் கதை மாந்தர்கள் பாகவத புராண மாந்தர்
5428
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88
பகவத் கீதை
பகவத் கீதை () (, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்ஷேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனர் அங்கே அவர் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவர் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனன் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும். இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது. பெயரிடல் பகவத் கீதையின் தலைப்பில் உள்ள கீதைக்கு "பாடல்" என்று பொருள். பகவத் என்ற சொல்லுக்கு மதத் தலைவர்களும் அறிஞர்களும் பல வழிகளில் விளக்கம் தருகிறார்கள். அதன்படி, தலைப்பு "கடவுளின் வார்த்தை" என்று தெய்வீக பள்ளிகளால் விளக்கப்பட்டுள்ளது, "இறைவனின் வார்த்தைகள்", "தெய்வீக பாடல்" மற்றும் "வானியல் பாடல்" என்று மற்றவர்கள் விளக்கினர். இந்தியாவில், அதன் சமஸ்கிருதப் பெயர் பெரும்பாலும் ஸ்ரீமத் பகவத் கீதை, श्रीमद् भगवद् गीता (பிந்தைய இரண்டு வார்த்தைகள் भगवद्गीता என அடிக்கடி எழுதப்படும்) என்று எழுதப்படுகிறது, அங்கு ஸ்ரீமத் முன்னொட்டு உயர் பட்டத்தை குறிக்கப் பயன்படுகிறது. இது ஸ்ரீமத் பாகவதத்துடன் குழப்பப்பட வேண்டியதில்லை, இது இந்துக் கடவுளான கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களைக் கையாளும் புராணமாகும். திருக்குறளில் முதல் குறளில் வள்ளுவர் கடவுள் என்ற பொருளைக் கொண்ட "பகவான்" என்று பயன்படுத்தியுள்ளார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். இந்த உரை ஈஸ்வர கீதை, அனந்த கீதை, ஹரி கீதை, வியாச கீதை அல்லது வெறுமனே கீதை என்றும் அழைக்கப்படுகிறது. தொகுப்பு தேதி ஜோதிடக் கணக்கீடுகளின்படி, மகாபாரதம் பொ.ஊ.மு. 800 முதல் 700 வரை துவாபர யுகத்தை சேர்ந்தது. கீதையின் தொகுப்பு தேதி பற்றிய கோட்பாடுகள் கணிசமாக வேறுபடுகின்றன. சில அறிஞர்கள் பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் நூற்றாண்டு வரையிலான தேதிகளை சாத்தியமான வரம்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து சமய அறிஞரான ஜீனே ஃபோலர், கீதையின் வர்ணனையில், பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டை இயற்றப்பட்ட தேதியாகக் கருதுகிறார். ஜேஏபி வான் பியூடெனென் கூட கீதை பொ.ஊ.மு. 200 இல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். இந்தியவியலாளர் அரவிந்த் சர்மாவின் கூற்றுப்படி, கீதை பொதுவாக பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டு உரையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முக்கியத்துவம் பகவத் கீதை மிகவும் பிரபலமான மற்றும் இந்து மத நூல்களில் மிகவும் செல்வாக்கு மிக்க நூல் ஆகும். இந்து மதம் அதன் பன்முகத்தன்மை மற்றும் அதன் தொகுப்புக்காக அறியப்பட்டாலும், பகவத் கீதை ஒரு தனித்துவமான அனைத்து சமய ஹிந்துக்களும் ஏற்கும் செல்வாக்கைக் கொண்டுள்ளது. இந்தியவியலாளரும் பாரம்பரிய இந்து தத்துவ அறிஞருமான ஜெரால்ட் ஜேம்ஸ் லார்சன் "ஒரு இந்துவாக இருக்க வேண்டும் என்பதன் முழுமையை உள்ளடக்கியதாக ஏதேனும் ஒரு உரை இருந்தால், அது பகவத் கீதையாக இருக்கும்" என்று கூறியுள்ளார். கண்ணனின் ஐந்து வாதங்கள் கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து. வேதாந்தப் பார்வை சுயதருமப் பார்வை கர்ம யோகப் பார்வை பக்தி யோகப் பார்வை ஞான யோகப் பார்வை வேதாந்த வாதம் “வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆத்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டாம்” என்கிறார். இந்த முதல் வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது. சுயதரும வாதம் “அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் சத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் சத்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48) ‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47). இந்த சுயதருமப் பார்வை மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப்படுகின்றது. கருமயோகப் பார்வை இது கர்ம யோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30). கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கர்ம யோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது. பக்திப் பார்வை ‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு. தத்துவப் பார்வை பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில் சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம். சரணாகதி என்ற முத்தாய்ப்பு ‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது. இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான். கீதையின் போதனை போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது. பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு. பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு. ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து. அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள். யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும். இதுவே உலக நியதியும் படைப்பின் சாரமாகும். பாடல்: பொருள்: பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், பக்தி யோகத்தாலும் மற்றும் ஞான யோகத்தாலும் பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில், (பகவத் தொண்டு தவிர) வேறொன்றை விரும்பாது, மிகவும் வைராக்யமுடையவர்கள், (கர்மஜ்ஞானவைராக்யங்களாலே யுண்டான) பக்தியோகத்தாலே அடையும் பரப்ரஹ்மமாகிற நாராயணனே பகவத்கீதைக்கு அறிவாளிகள் அங்கீகரித்து எண்‍ணும் பொருளாவான். - பகவத் கீதை வெண்பாவிலிருந்து. உரைகள் பகவத் கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் சிறந்த உரைகளை எழுதியிருக்கின்றனர். ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம்'' போன்றவை பகவத் கீதை உரைகளாகும். மொழிபெயர்ப்பு உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். பிற கீதைகள் கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை: உத்தவ கீதை ஹம்ச கீதை அவதூத கீதை உத்தர கீதை பிக்ஷு கீதை அஷ்டாவக்ர கீதை ராம கீதை சுருதி கீதை குரு கீதை சிவகீதை ஆத்ம கீதை குருசேத்ர போர் காலம் குறித்த ஆராய்ச்சிகள் சி.சி. சர்க்கார் கருத்துகள் இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர், அறிஞர் முனைவர். சி.சி. சர்க்கார் “குருச்சேத்திரப் போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல” என்று கூறுகிறார். அதற்கு அவர் கீழ் கண்ட காரணங்களை முன் வைக்கிறார். வேத சாகித்தியத்தில் எங்குமே பாரதப் போர் பற்றிக் கூறப்படவில்லை. பவுராணிகர்களுக்குக் கூட மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்னருள்ள எந்தவோர் இலக்கியத்திலும் மகாபாரதப் போர் பற்றிக் குறிப்பிடப் படவில்லை. மகாபாரதப் போர் நடந்த குருசேத்திரம் ஒர் போர்க்களமாக வேதங்களில் எங்கும் கூறப்படவில்லை. மொகஞ்சதாரோ அரப்பாவில் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை. பொ.ஊ.மு. 3000-விலோ பொ.ஊ.மு. 4000-த்திலோ பாரதப்போர் நடந்ததாக எடுத்துக் கொண்டால், அவர்கள் இரும்பாலான அயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிவருமென்று டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகிறார். பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில் பயன்படுத்தப் படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.குருசேத்திரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் இந்த மகாயுத்தத்தோடு சம்மந்தப்பட்ட எந்தவொன்றும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று குறிப்பிடுகின்றார். துணை நூல்கள் Swami Shivananda. Srimad Bhagavad Gita. 1967. Divine Life Society, Shivanandanagar, Aurobindo. Essays on the Gita. 1922. Aurobindo Ashram. Pondicherry. T. Subba Row. Notes on the Bhagavad Gita. 1978. Theosophical Society Press. Pasadena, California. பேராசிரியர் (பிலானி) கிருஷ்ணமூர்த்தி. கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி? 2001. அல்லயன்ஸ் கம்பெனி. சென்னை. இதனையும் காண்க பெருமுந்நூல் பகவத் கீதையின் சாரம் நிஷ்காம கர்மம் குருச்சேத்திரப் போர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழில் ஸ்ரீமத் பகவத்கீதை முழுவதும் தமிழில் பகவத் கீதை சாரத்தை கேட்க கீதையின் சாரம் பகவத் கீதை தமிழ் பதவுரையுடன் பகவத் கீதையை விரிவாக கேட்க பகவத் கீதை- பாரதியாரின் முன்னுரை தமிழில் பகவத் கீதை இந்துத் தத்துவங்கள் மகாபாரதம் இந்து சமய நூல்கள் இந்திய மெய்யியல் பண்டைய நூல்கள் கிருட்டிணன் கிழக்கின் புனித நூல்கள்
5437
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF
அய்யாவழி
அய்யாவழி, (அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு தர்ம சமயமாகும். அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை. அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக சமய ஆய்வலர்களும் அய்யாவழியை இந்துமதத்தில் ஓர் தனி பிரிவு சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றபடுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன. அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயத்துடன் ஒத்திருக்கின்றது. பெயர் காரணம் இச்சமயத்திற்கு அய்யாவழி என்ற பெயர் எப்போழுது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவு இல்லை. பெயர் காரணத்துக்கு பல கோணப்பார்வைகள் இருக்கின்ற போதும் அவைகளை பொருள் கொள்ளுமிடத்து பெரும்பாலும் அவையனைத்தும் ஒத்த கருத்துடையனவாகவே இருக்கின்றன. மிகவும் நுட்பமாக பொருள்கொள்ளும் போது வேறுபடுகின்றன. ஆவை: தந்தையின் பாதை - இச்சமயம் தோன்றிய சுவாமிதோப்பு பகுதியின் தமிழ் பேச்சு மொழியில், அய்யா (தந்தை) + வழி (பாதை). எனில், தந்தையை மிகவும் நேசத்தோடு அழைக்கும் 'ஐயா' என்னும் பதத்தை இறைவனை அழைக்க பயன்படுத்தி, 'அன்புத் தந்தையின் பாதை' என்று பொருள்கொள்ளப்படுகிறது. குருவின் வழிபாடு - அய்யா (குரு) + வழி (வழிபாடு) என கொள்ளப்படுகிறது. இறைவனின் பாதத்தை சேரும் வழி - அய்யா என்பது (இறைவன்) + வழி என்பது (சேரும் வழி) எனவும் பக்தி முறையாக பொருள் கொள்ளப்படுகிறது. வரலாறு அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும். தற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றது. புனித தலங்களும் நூல்களும் அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின் சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு-வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும். அய்யாவழி மக்களுக்கு ஐந்து முக்கிய புனிதத் தலங்கள் உள்ளன. அவைகள் ஐம்பதிகள், பஞ்சப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சுவாமிதோப்பு பதி தலைமைப் பதியாகும். இவையல்லாமல் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியனவும் அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெறுவதாலும் இவை ஏழும் முக்கிய புனிதத் தலங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவற்றை சில உட்பிரிவுகள், ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக தற்போதைய அவதாரப்பதி எனப்படுவது, வைகுண்டர் அவதாரம் எடுத்த இடத்தில் இல்லை என்பது அவர்கள் கணிப்பு. ஆனால் அவர்களும் திருச்செந்தூரை இரண்டாம் நிலை புனித நூலாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தலைமைப்பதி வெளியிடும் பதிகளின் பட்டியலில் பஞ்சப்பதிகள் தவிர்த்து மற்றவைகள் இடம்பெறவில்லை. அவதாரப்பதி தவிர பதிகள் அனைத்தும் குமரி மாவட்டத்துள்ளேயே இருப்பதால், மொத்த மாவட்டமே அகில இந்திய அளவில் உள்ள அய்யாவழியினரால் புனிதமானதாக கருதப்படுகிறது. சின்னம் அய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அகிலத்தின் கருத்தோட்டத்தின் கருவை ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து அய்யாவழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது. அய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு(மேல்) + ஏழு(கீழ்) என பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது. அகிலத்தின் புராணவோட்டம் கூறும் எட்டு யுகத்தை தத்துவ ரீதியாக மனித உடம்பின் எட்டு ஆதாரங்கள் எனவும் கூறுவர். முதல் நீடிய யுகம் விந்து எனவும், கடைசி மற்றும் பரிபூரண நிலையான சஹஸ்ராரம் என்பது தர்ம யுகம், எனவும் இத்தத்துவம் விளக்கம் பெறுகிறது. இக்கருத்தோட்டத்தில் குண்டலினி எனப்படும் தன்னுணர்வு (சக்தி) பரஞானத்தின் துவக்கமான விந்து எனப்படும் நீடியயுகத்திலிருந்து அது பரிபூரணமடையும் சஹஸ்ராரமெனப்படும் தர்ம யுகத்தை அடையவேண்டும். அங்கே ஏகம் எனப்படும் பரிபூரண ஒருமையுடன் ஜீவான்மா சங்கமித்து, தனக்கு இனமான தனி நாமரூபம் அழிந்து, தன்னிலை கெட்டு, அதுவும் ஏகமாகிறது. ஏகமென்பது வைகுண்டம் (வைகுண்டர்) ஆதலால் வைகுண்டர் தர்ம யுகத்தை ஆள்கிறார் அல்லது வைகுண்டர் சஹஸ்ராரத்தில் ஜீவாத்மாக்களால் முழுமையாக உணரப்படுகிறார். மேலும் இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின் இதழ்களின் எண்ணிக்கை 1000 ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008-ஆக கருதப்படுகிறது. காரணம் அகிலத்திலோ அருள் நூலிலோ '1000' என்பது காணப்படாத அதேபட்சத்தில் '1008' என்றவெண் திரும்பத்திரும்ப வருவதை காண முடியும். இவற்றுள் முக்கியமாக வைகுண்ட அவதார ஆண்டு கொ.ஆ 1008 ஆகும். அதனால் இப்புனித நூற்களின் குறிப்புகள் அடிப்படையில் 1008 இதழ்த்தொகுதி அய்யாவழி சின்னத்தின் பயன்படுத்தப்படுகிறது. வழிபாட்டுத்தலங்கள் பதிகளும் நிழல் தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், சுவாமிதோப்பு பதி சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல. பதிகள் பதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்களை போன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன் தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும். நிழல் தாங்கல்கள் நிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பதி - தாங்கல் அய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை, அது அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும். அது அய்யாவின் அவதார இகனையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். நாராயண சுவாமி (அய்யா) நிழல் தாங்கல் - வெள்ளையன் தோப்பு சுவாமி தோப்பு பதியில் இருந்து  சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த கோயிலானது சுமார் 100 ஆண்டு கால பழமையானது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இத்திருக்கோயில் 74 அடி உயர கோபுரம் மற்றும்  கொடி மரத்துடன் மிக கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. ஆண்டு தோறும் இங்கு பங்குனி மாத இறுதியில் 10 நாட்கள் அய்யாவின் திருக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றி திருவிழாவும், ஐப்பசி மாத இறுதியில் 18 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழாவும் நடைபெறுகின்றது. சட்டம் அய்யாவழியின் வாழ்வியல் மற்றும் இறையில் சட்டங்கள் அகிலம் முழுவதுமாக பரவலாக காணப்படுகிறது. இது இறைவனால் துறவிகளிடமோ, தேவர்களிடமோ, கீழ்நிலை கடவுளர்களிடமோ அவர்களின் கேள்விகளுக்கேற்றவாறு கூறப்படுவதாக புராணத்தொகுதியின் கூடே பின்னப்பட்டு இடையிடையே நூல் முழுவதும் சிதறுண்டு காணப்படுகிறது. அருள் நூல் இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான அகிலம் கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அருளாளர்களின் தீர்க்கதரிசனங்கள், அழிவு விபரங்கள், சமய-சமுக சட்டங்கள் ஆகியனவற்றை இந்நூல் உள்ளடக்குகிறது. நீதம் அய்யாவழி சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது. எட்டு யுகச்செய்திளை தொகுத்து விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால் கடைபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படுகிறது. அன்றைய சமுதாயம், அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள், தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது. மனு நீதம் – சமுதாயத்தில் தனிமனிதனின் கடமைகள். ராச நீதம் - ஆட்சி புரியும் மன்னனுக்கான கடமைகள். தெய்வ நீதம் – இறையியல் சட்டங்கள் மற்றும் கடமைகள். அக்காலத்து இந்த சிறப்பு நிகழ்வுகள் உவமையாக கூறப்பட்டு அதை சட்டவடிவாக கொண்டு வாழ்வியல் கோட்பாடாக இன்று இக்கலியுகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது. கலியுகத்தின் துவக்கத்திலும் வைகுண்ட அவதார துவக்கத்திலும் பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம் பெருகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன. விஞ்சை நாராயணரால் வைகுண்டருக்கு அளிக்கப்படும் உபதேசம் மற்றும் சட்டம் அகிலத்தில் விஞ்சை எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக கடலின் உள்ளாக கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி அவதாரம் எடுத்த உடனேயும், மற்ற இரண்டு பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக் கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள் மனிதனின் வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய திருச்செந்தூர் விஞ்சை அகிலத்தின் மிக நீளமான சட்டத்தொகுதியாகும். தர்மம் தர்மக் கோட்பாடு அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு சமுதாய உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் சீவன் பரநிலையடையும் இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல் நிலை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என்கிறது அகிலம். சமுதாய தர்மம் தர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை "தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்." என்கிறது. சமுதாயத்தில் நிலவும் எளியோர்-வலியோர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம் களையப்பட வேண்டுமென்கிறது அகிலம். அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன தர்மம் கருதப்படுகிறது. "பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ." என்கிறது அருள் நூல். இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல் தான-தருமங்களை செய்ய சமுதாயம் அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பிரபல இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை உறுதி செய்வதாக அமைகிறது. சமயப் பார்வை சமயப் பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான "முழுமுதல் உண்மை" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய அவதார நோக்கம் கலி என்னும் மாயையை அழித்து உலகில் தர்மம் என்னும் மெய் இயல்பை உருவாக்குவதேயாம். ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து காலம் இடம் என்னும் வரையறைக்கப்பாலான 'இருப்பதனைத்தும் ஒன்று' என்னும் மெய் நிலையேயாகும். ஏகம் என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில் அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது. அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால் ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருணாசிரம தர்மத்தை இவ்யுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை அகிலம், கீழ்க்கண்டவாறு கூறுகிறது. "சாதி பதினெட்டையும் தலையாட்டிப்பெய்களையும் வாரிமலை வன்னியில் தள்ளி அழித்துவிடு." நம்பிக்கைகள் அய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இந்து சமயத்தின் வருணாஸ்ரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாமார மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அய்யாவழியில் இறைவன் அமர்வதர்க்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில் அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது. அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வகையில் அய்யாவழி அத்வைதம் மற்றும் சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம் ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன. மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது. அய்யாவழி தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட குறோணி, பின்வரும் ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான். அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில் ராமன், கிருஷ்ணன் மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார். தற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன் வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி தற்பொது அழிந்துகொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது. அன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள். இறைவன் முக்கியக் கட்டுரை:அய்யாவழி மும்மை அய்யாவழியின் இறையியல் மற்ற ஏகத்துவ சமயங்களிலிருந்து வேறுபடுகிறது. அது ஏகம் என்னும் அடிப்படை ஒருமையையும், பல்வேறு மாற்றங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் கூறுகிறது. மேலும் பிரபஞ்சத்தை சிவம் என்றும் இதை இயக்கும் சக்தியை (force) சக்தி என்றும் கூறுகிறது. மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை பற்றியும் கூறுவதுடன் மேலும் பல கீழ்நிலை தெய்வ சக்திகளையும் கூறுகிறது. ஆனால் கலியன் கேட்ட கொடிய வரங்கள் காரணமாக நாராயணரால் குறோணியின் ஆறாவது துண்டான கலியை நேரடியாக அழிக்க இயலாது. அதனால், அனைத்து தெய்வ சக்திகளும் ஏகத்துள் ஒடுங்கி, அந்த ஏகம் உலகில் கலியை அழிக்கும் பொருட்டு மூன்றின் தொகுதியாக வைகுண்டம் என அவதரிக்கிறது. மேலும் வைகுண்டர் மறு மன்னர் எதிரியில்லாமல் ஆளும் எட்டாவது யுகமாக ஒரு தர்ம யுகத்தையும் அகிலம் கூறுகிறது. அனைத்து தெய்வ சக்திகளும் ஒடுங்கி வைகுண்டமாக அவதரிப்பதால் கலி யுகத்தில் அய்யா வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக அகிலம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டு சமயமாகவும் உருவம் பெறுகிறது. வைகுண்டர் - ஏகம் - மற்ற கடவுளர்கள் - ஆளுமை அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் ஒரே கடவுள் பற்பல இயல்புகளில் பல இறை சக்திகளாக வெவ்வேறு உருவங்களில் காட்சிகொடுக்கிறார் என்றும் அகிலம் கூறுகிறது. ஆனால் நாம ரூபங்களுக்கு அப்பால் ஒரே சக்தியாக அனைத்தையும் இயக்கி, அனைத்தும் தானான சுயம்புவாக இருப்பது, ஏகம் என்னும் ஒருமை என்கிறது. அகிலத்தின் முதல் பகுதி மும்மூர்த்தி, தேவர்கள் என பல கடவுளர்களையும் அவர்களின் ஆளுமை ஏற்றத்தழ்வுகளையும், பின்னர் இரண்டாம் பகுதியில் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கும் ஆளுமையுடன் வைகுண்டர் அவதாரம் எடுக்கின்ற போதும், அனைத்து தேவர்களும் தனித்தனியாக இருந்து இயங்கி வருகிறர்கள் (வைகுண்டரின் ஆளுமைக்கு உட்பட்டு) . அனைத்து தெய்வ சக்திகளும் வைகுண்டரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற போதும் வைகுண்டரின் அவதார காலகட்டம் முழுவது நாராயணர் வைகுண்டரின் உள்ளாகவும், வைகுண்டரின் தந்தையாகவும் இரட்டைத் தன்மையுடம் இயங்குகிறார். அதனால் அகிலம் பல கடவுளர்களின் இருப்பை ஒத்துக்கொள்கிறது. ஆனால் வைகுண்டரை அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவும், அனைத்து தெய்வ சக்திகளை உள்ளடக்கியவராகவும் காண்கிறது. ஆனால் கடவுள் மிக உயர்ந்த நிலையில் ஒன்றாகவும், ஒப்பற்றதாகவும், உருவமற்றதாகவும், மாறிலியாகவும், அனைத்தையும் இயக்குவதும் மறுமுனையில் அனைத்தாக இயங்குவதும், காலம் - இடம் என்னும் வரையறைக்கப்பற்பட்டவராகவும் இருக்கிறார் என ஆகிலம் கூறுகிறது. ஏகம் என்னும் பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அகிலத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கூறப்படுகிறது. ஆனால் மிக உயர்ந்த கருத்தியலாக கருதப்படும் இப்பத்திற்கு வேறு எந்த நேரடி தனி விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்பதம் அனைத்துக்கும் அப்பற்பட்டதாக மட்டும் அகிலம் முழுவதும் கூறப்படுகிறது. இப்பதம் தமிழில், "ஒன்று, ஒப்பற்றது" என்று விளக்கம் பெறுகிறது. ஆக, ஏகம் என்னும் இப்பயன்பாடு இறைசக்தி தொடர்பாக அய்யாவழியில் காணப்படும் ஒருமைக்கோட்பாட்டு விளக்கமாக கருதப்படுகிறது. இவ்வேகத்தின் கீழ்னிலை தெய்வசக்திகளாக பல கடவுளர்கள் கூறப்படுகின்ற அதேவேளையில், வைகுண்டர் அனைத்துக்குமப்பாற்பட்ட ஏகத்தின் அவதாரமாக அகிலம் கூறுகிறது. ஆனால் மறுமுனையில், வைகுண்டர் கலி மன்னனால் கைதுசெய்யப்படும் இடத்தில் அவர் சான்றோரை தேற்றும் விதமாக அமைந்திருக்கும் அடிகளில் வைகுண்டரே ஏகத்தை படைத்ததாக கூறுகிறார். இக்கோணத்தில் வைகுண்டர் ஏகத்துக்கும் அப்பற்பட்ட முழுமுதல் சக்தி எனப்படுகிறார். அவதார மும்மையை பொறுத்த வரையில் வைகுண்டரின் உள்ளே மூன்றில் ஒன்றாக ஏகம் இருப்பதால் ஏகத்தின் அனைத்து குணங்களும் வைகுண்டருக்கும் பொருந்தும். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அருள் நூலின் பல அடிகள் வைகுண்டரை முழுமுதலாக கூறுவதோடு அவரின் விஸ்வ-ரூபத்தினை வெளிப்படுத்துகிறது. அய்யாவழியில் இருபொருள் வாதம் நீடிய யுகத்தில் தோன்றிய குறோணி, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும் யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் கலியன் நடுத்தீர்வை செய்யப்பட்டு நரகத்தில் தள்ளி கதவடைக்கப்படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யாவழி இருபொருள் வாதத்தை வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் கலி என்பது மாயை என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அகிலம் தொடக்கம் முதலேயே அடிப்படை ஒருமையாகிய ஏகத்தை கூறி வருவதால், இது இருபொருள் வாதக் கோட்பாட்டை மங்கச்செய்கிறது. அது மட்டுமல்லாமல் அய்யாவின் சீடர்களாலோ அருளாளர்களாலோ எழுதப்பட்டவைகளாக நம்பப்படும் அருள் நூலின் பெருவாரியான பகுதிகளும் ஒருமைக்கோட்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதும் இருபொருள் வாதம் பற்றிய கூற்றுகளை அய்யாவழியிநின்று புறந்தள்ளுகிறது. எழுவாய் - சான்றோர் அய்யாவழியின் படி சான்றோரின் சகாப்தம் துவாபர யுகத்தின் நிறைவுடன் துவங்குகிறது. அயோத அமிர்தவனத்தில் சப்த கன்னியருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளும் அவர்களது வம்சாவளியினரும் இவ்வாறு சான்றோர் என அழைக்கப்படுகின்றனர். அகிலத்திரட்டின் படி இச்சான்றோர் என்னும் பதம் தற்போது அய்யாவழியில் சமய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இரு கோணத்தில் பயணிக்கிறது. இன்று பெரும்பாலும் அய்யாவழியினரின் பார்வை சான்றோர் விடயத்தில் சமய ரீதியாகவே இருக்கிறது. இப்பார்வை மூலம், தமிழ் இலக்கியங்களில் இப்பதத்தின் பயன்பாடுகளைக் கொண்டும், அகிலத்தின் சில அடிகளை மையமாகக் கொண்டும், "எவர் ஒருவர் நீதியாக வாழ்கிறாரோ", "எவர் ஒருவர் (அனுபவத்தில்) இறைவனை காணும் தகுதி பெறுகிறாரோ" அவர் சான்றவர் என்னும் பரந்த அடிப்படையினாலான உலகளாவிய பார்வையை முன்வைக்கப்படுகிறது. மறுபுறம், இப்பார்வையில் அய்யாவழியை பின்பற்றும் எவரும் சான்றவர் என்னும் கருத்தும் கொள்ளப்படுகிறது. ஆனால் அகிலத்தின் பரவலான பார்வை மேலோட்டமாக இவ்வாறல்லாமல் பெரும்பாலும், இப்பதத்தின் சமுதாய கோணத்தையே வலியுறுத்துவதாக தெரிகிறது. இதனிமித்தம் இப்பார்வை சாணார் இனத்தையே மையப்படுத்துகிறது. ஆனால் இச்சான்றோர் இவ்வுகத்தின் முதல் மக்களினம் என்னும் கருத்து அகிலத்தில் மேலோங்குவதால், இப்பார்வையில் சாணார் எனப்படுபவர்கள், தற்போது தமிழகத்தில் வாழும் நாடார் இனம் என்னும் பார்வை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் ஆதி காலத்தில் வாழ்ந்த, அரேபியர்களால் அல் ஹிந்த் என்றும் விவிலிய காலகட்டங்களில் பஞ்ச நதிகளின் மக்களினம் என்றும் அழைக்கப்பட்டவர்களும், 250 மேல் பிரிவுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் இன்று சிதறுண்டு கிடக்கும் மக்கள் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். அகிலத்தின் ஆதிச்சாதி போன்ற பயன்பாடுகள் இதற்குச் சான்று. ஆனால் மறுபுறம் அய்யாவின் போதனைகளும், அகிலத்தின் செய்திகளும் சாதி முறையை கடுமையாக கண்டிப்பதாலும் இக்கோணத்தாலான சமுதாய்ப் பார்வையை அகிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே பரவலாக கருதப்படுகிறது. தத்துவப் பின்புலம் அகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களை கதை ரூபத்தில் வளிப்படுத்தியிருக்கும் நூல் என்னும் கருத்தும் உள்ளது. அகிலத்திரட்டு முழுவதையும் - குறோணி முதல் தர்மயுகம் வரை அனைத்தையும், மனித உடலுக்குள்ளேயே விளக்கி அதை, யோக சித்தி அடையச் செய்யும் நூல் என்பது சில கல்வியாளர்கள் கணிப்பு. மேலும் அகிலம் சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். அகிலத்திரட்டில் காணப்படும் 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும். ஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யாவழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலம் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலம் மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது. புராணம் (முக்கிய கட்டுரை: அய்யாவழி புராணம்) அய்யாவழியின் புராண வரலாறு இந்து சமயத்தின் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கோட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது. அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்து சமயத்தில் இல்லை. இதைப்பற்றி கூறும் பொழுது அகிலத்திரட்டு அம்மானை, இவை சார்ந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் அதனால் அவை (பழைய புராணங்கள்) சாரம் கெட்டுவிட்டதாகவும் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதாததால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பாலான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. இதனிமித்தம் அகிலத்திரட்டின் இரண்டாம் பகுதி வரலாறு மற்றும் புராணச்செய்திகளின் கலப்பாக அமைந்துள்ளது. சமயச்சடங்குகள் முக்கியக் கட்டுரை:அய்யாவழி சமயச்சடங்குகள் புராணம் மற்றும் கோட்பாடுகளைப்போன்று சமயச்சடங்குகளிலும் அய்யாவழி, தனக்கு இனமான புதுப்பாதையிலேயே பயணிக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களையும், புறக்கணிக்கப்படுகிறவர்களையும் இறையியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும், வெகுவாக தேற்றி தைரியமளிப்பதாக உள்ளது. இதற்கு சான்றுகளாக; புற மற்றும் அகத்தூய்மையை உணர்த்தும் துவையல் தவசு, தீண்டாமையை துரத்தும் முறையான தொட்டு நாமம், சுயமரியாதை மற்றும் உறுதியை அளிக்கும் முறையான தலைப்பாகை அணிதல், சாதி முறைகளைக்களையும் விதமாக அமைக்கப்பட்ட முத்திரிக்கிணறு, ஆகிய சடங்குகள் விளங்குகின்றன. அய்யாவழியில் சமயச்சடங்குகளுக்கு இறையியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதும், அவை சமுதாய ரீதியாக ஜாதிப் பிரிவினைகளை புறந்தள்ளி, அனைத்து மக்களும் ஒன்று என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவற்றுள் மிகச்சில இந்து சமயச்சடங்குகளை ஒத்து இருக்கின்றன. புது வழிபாட்டு முறை அய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது. அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திவிட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவொடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னை தான நிலைபடுத்திக்கொண்டது. ஆதாரங்கள் அகிலத்திரட்டு அம்மானை, பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், ஒன்பதாம் பதிப்பு 1989 அருள் நூல், பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், பதிமூன்றாம் பதிப்பு 1990 வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், பாகம் 12 ஆ.அரிசுந்தர மணி, அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, அய்யா வைகுண்டர் திருக்குடும்ப வெளியீடு சாமுவேல் மாடீர், தி லான்ட் ஆப் சாரிட்டி பின்வரும் ஆண்டுகளுக்கான லண்டன் சமயப் பணிப்பரப்பு சமூகத்தின் ஆண்டறிக்கைகள்:1838, 1843, 1847, 1872, 1892. 1862, 1863, ஆகிய ஆண்டுகளுக்கான ஜெம்ஸ்டவுன் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள். 1858, 1859, 1863, 1864, ஆகிய ஆண்டுகளுக்கான சாந்தாபுரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள். 1864, 1866, 1871, 1880, ஆகிய ஆண்டுகளுக்கான நாகர்கோயில் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள். 1863, 1869, 1871, 1872, ஆகிய ஆண்டுகளுக்கான நெய்யூர் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள். 1867, 1869, ஆகிய ஆண்டுகளுக்கான திட்டுவிளை பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள். 1871, ஆண்டுக்கான கொட்டாரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கை. என்.அமலன், வைகுண்டர் பிள்ளைத் தமிழ், சாமிதோப்பு வைகுண்ட குருகுல சேவாதள வெளியீடு, 1984. அருணன், தமிழகத்தில் சமூக சீருதிருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு குறிப்புகள் இவற்றையும் பார்க்கவும் அய்யா வைகுண்டர் அய்யாவழி புராணம் அய்யாவழி மும்மை சுவாமிதோப்பு பதி பஞ்சப்பதி அகிலத்திரட்டு அம்மானை அருள் நூல் ஏகம் மும்மூர்த்தி புற இணைப்புகள் அய்யா வைகுண்டர் ஆன்மீக ஒளி அய்யா-வழி அய்யா வைகுண்டர் சான்றோர் வரலாறு இந்திய சமயங்கள் இந்து சமயப் பிரிவுகள் இந்திய சமயங்கள்
5442
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
அணுவியல்
அணுவியல் (Atomic physics) அல்லது அணு இயற்பியல் என்பது அணு, அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் இலத்திரன்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் ஆகும். இத்துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி இலத்திரன்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது. மேலும் இத்துறை பெரும்பாலும் அணுக்கரு ஆற்றல் மற்றும் அணுக்கரு ஆயுதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு அணுக்கரு இயற்பியல் என்ற தனிப்பிரிவு உள்ளது. பொதுவாக இயற்பியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை இத்துறை அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல் என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ளது. குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள் ஜான் டால்ட்டன் ஜே. ஜே. தாம்சன் இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் மேற்கோள்கள் அணுவியல் அணு இயற்பியல்
5445
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
ஒலியியல்
ஒலியியல் (Acoustics) என்பது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது இயற்பியலின் ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் அதிர்வுகள், ஒலி, மீயொலி, அகவொலி என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார். ஒலியியல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்களை ஒலியியல் பொறியாளர்கள் என அழைப்பதும் உண்டு. ஒலியியல் தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் பயன்பட்டு வருவதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாகக் கேட்பொலி, இரைச்சல் கட்டுப்பாடு போன்றவை தொடர்பில் ஒலியியல் பெரிதும் பயன்பட்டு வருகிறது. கேட்டல், விலங்கு உலகில், வாழ்வதற்குத் தேவையான முக்கியமான விடயங்களுள் ஒன்று. அத்தோடு ஒலியை அடிப்படையாகக் கொண்ட பேச்சு, மனிதகுல வளர்ச்சியினதும், மனிதப் பண்பாட்டினதும் சிறப்பியல்புகளுள் ஒன்று. இதனால், ஒலியியலானது இசை, மருத்துவம், கட்டிடக்கலை, கைத்தொழில் உற்பத்தி, போர் போன்ற பல துறைகளிலும் பரவலாக ஊடுருவியுள்ளது. ஒலியியலின் அடிப்படைக் கருத்துருக்கள் ஒலியியல் பற்றிய ஆய்வுகள் பொறிமுறை அலைகளின் அல்லது அதிர்வுகளின் பிறப்பு, அவற்றின் பரவுகை, அவற்றைப் பெறுதல் ஆகியவை தொடர்பானவையாகவே உள்ளன. மேலுள்ள படம் ஒலியியல் நிகழ்வு அல்லது வழிமுறை ஒன்றின் படிமுறைகளைக் காட்டுகிறது. ஒலியியல் நிகழ்வொன்றுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். இது இயற்கையானதாக அல்லது முனைந்து நிகழ்த்தப்படுவதாக இருக்கலாம். அதுபோலவே, ஏதோ ஒரு வடிவிலான ஆற்றலை ஒலியாற்றலாக மாற்றி ஒலியலைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒலியலைகளின் பரவுகையை விளக்குவதற்கு ஒரு அடிப்படையான சமன்பாடு உண்டு. ஆனால், இதிலிருந்து உருவாகும் தோற்றப்பாடுகள் பலவாறானவையாகவும், பெரும்பாலும் சிக்கலானவையாகவும் உள்ளன. ஒலியலைகள் அவற்றைக் கடத்தும் ஊடகங்களினூடாக ஆற்றலை எடுத்துச் செல்கின்றன. இவ்வாற்றல் இறுதியில் வேறு வடிவங்களிலான ஆற்றலாக மாற்றம் அடைகின்றது. இம்மாற்றமும் இயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே செய்யப்படுவதாகவோ இருக்கலாம். ஒரு புவியதிர்வு, எதிரிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒலியலைகளைப் பயன்படுத்துதல், ஒரு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி போன்ற எந்தவொரு நிகழ்விலும் முன்னர் குறிப்பிட்ட 5 படிமுறைகள் இருப்பதைக் காண முடியும். ஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. பாய்மங்களில், அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை நெடுக்கலை, குறுக்கலை அல்லது மேற்பரப்பலை ஆகிய வடிவங்களில் அமையக்கூடும். அலை பரவுகை: அழுத்த மட்டங்கள் நீர், வளி போன்ற பாய்மங்களில் சூழல் அழுத்த நிலையில் ஒலியலைகள் குழப்பங்களாகவே பரவுகின்றன. இக்குழப்பங்கள் மிகவும் சிறிய அளவினவாகவே இருந்தாலும் இவற்றை மனிதக் காதுகளால் உணர முடியும். ஒருவரால் கேட்டுணரக்கூடிய மிகவும் சிறிய ஒலி செவிப்புலத் தொடக்கம் (threshold of hearing) எனப்படும். இது சூழல் அழுத்தத்திலும் ஒன்பது பருமன் வரிசைகள் (order of magnitude) சிறியது. இக் குழப்பங்களின் உரப்பு ஒலியழுத்த மட்டம் எனப்படுகின்றது. இது மடக்கை அளவீட்டில் டெசிபெல் என்னும் அலகில் அளக்கப்படுகின்றது. அலை பரவுகை: அதிர்வெண் இயற்பியலாளரும், ஒலியியற் பொறியாளரும், ஒலியழுத்த மட்டத்தை அதிர்வெண் சார்பில் குறிப்பிடுவதுண்டு. மனிதருடைய காதுகள் ஒலிகளை இதே அடிப்படையில் புரிந்துகொள்வதும் இதற்கான ஒரு காரணமாகும். ஒலியில் உயர்ந்த சுருதி, தாழ்ந்த சுருதி என நாம் உணர்வது ஒரு செக்கனுக்குக் கூடிய அல்லது குறைவான சுற்று எண்ணிக்கைகளல் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளே ஆகும். பொதுவான ஒலியியல் அளவீட்டு முறைகளில், ஒலியியல் சைகைகள் நேர அளவில் மாதிரிகளாகக் குறிக்கப்படுகின்றன. இவை பின்னர் எண்மப் பட்டைகள் (octave band), நேரம் - அதிர்வெண் வரைபுகள் போன்ற வடிவங்களில் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு வடிவங்களும், ஒலியைப் பகுப்பாய்வு செய்யவும், ஒலியியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றன. ஒலி தொடர்பில் முழு அலைமாலையையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்க முடியும். இவை செவிப்புல ஒலி, மீயொலி, அகவொலி என்பன. செவிப்புல ஒலிகள் எனப்படும் மனிதச் செவிகளால் உணரக்கூடிய ஒலிகள் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையான அதிர்வெண் எல்லையுள் அடங்குவன. இவ்வெல்லையுள் அடங்கும் செவிப்புல ஒலிகள் பேச்சுத் தொடர்பு, இசை போன்றவற்றில் பயன்படுகின்றன. மீயொலி எனப்படுவது 20,000 ஹெர்ட்ஸ்களுக்கு மேற்பட்ட அதிர்வெண்களைக் கொண்ட குறைந்த அலைநீளம் கொண்ட ஒலியாகும். இவ்வொலி உயர் பிரிதிறன் (resolution) கொண்ட படமாக்கல் நுட்பங்களிலும், பல வகையான மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. குறைவான அதிர்வெண்களைக் கொண்ட அகவொலிகள் புவியதிர்ச்சி போன்ற நிலவியல் தோற்றப்பாடுகளை ஆய்வு செய்வதற்குப் பயன்படுகின்றன.
5446
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
ஒளியியல்
ஒளியியல் ஒளி, ஒளியின் தன்மைகள், பண்புகள், கொள்கைகள், ஒளியானது பொருட்களை தாக்கும் விதம், ஒளியை ஆராயப் பயன்படும் கருவிகள் போன்ற விடயங்களை ஆராயும் இயல். இது இயற்பியலின் ஒரு பிரிவாகும். பொதுவாக ஒளியியலில் கட்புலனாகும் ஒளி, புற ஊதா ஒளி மற்றும் அகச்சிவப்பொளி ஆகியவற்றை விளக்கும். ஒளி மின்காந்த அலைகளால் ஆக்கப்பெற்றெதென்பதால் x-கதிர்கள், நுண்ணலைகள் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டிருக்கும். ஒளி பற்றிய புதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் பழைய விளக்க முறைகளே பயன்படுத்த இலகுவானதாக உள்ளது. ஒளி பற்றிய அலைக் கொள்கையும் துணிக்கைக் கொளகையும் உள்ளன. துணிக்கை வடிவை எடுத்து நோக்கும் போது ஒளியானது ஆங்கிலத்தில் 'photon' எனப்படும் ஒளியணுக்களால் ஆனவை. ஒளியியல் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. வானியல், பொறியியல், ஒளிப்படமெடுத்தல், மருத்துவவியல் ஆகிய துறைகளில் ஒளி பற்றிய அறிவு அவசியமானது. அன்றாடம் பயன்படுத்தப்படும் கருவிகளான தொலைக்காட்டி, முகக்கண்ணாடி, மூக்குக் கண்ணாடி, நுணுக்குக்காட்டி, ஒளியியல் நார் ஆகியவை ஒளியியலின் விருத்தியின் விளைவுகளேயாகும். ஒளியின் தன்மை பார்வை என்ற புலன் உணர்ச்சி கண்ணின் வழியாக உண்டாகக் காரணி ஒளி ஆகும். ஒரு பொருளிலிருந்து புறப்பட்டு வரும் ஒளி, நமது கண்ணிலே படும்போது அப்பொருள் நமது கண்ணுக்குப் புலனாகிறது என்று சொல்லுகிறோம். சில பொருள்கள் தாமே வெளியிடும் ஒளியினால் புலப்படுகின்றன. இவை தாமே ஒளிரும் பொருள்கள் (Self-luminous bodies) என்றழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, விளக்குச்சுடர், சூரியன், பழுக்கக் காய்ச்சிய இரும்பு முதலியன இந்த வகை எனலாம். பெரும்பாலான மற்றப் பொருள்கள் தாமாக வெளியிடும் ஒளியில்லாதன ஆகும். எனவே, இவை வேறு பொருள்களிலிருந்து தம்மீது விழும் ஒளியைச் சிதறச் செய்து, அவ்வாறு சிதறின ஒளி, நமது கண்ணிலே படுவதால் நமக்குத் தெரிகின்ற. இவை ஒளிராப் பொருள்கள் (Non-luminous bodies) என்றழைக்கப்படுகின்றன. இத்தகைய ஒளிராப் பொருட்களே உலகில் அதிகம் இருக்கின்றன. அவை ஒளித் தெறிப்பு விளைவால், நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஒளியியல் வரலாறு அறிவியல் அறிவு வளர்ச்சியடையாத காலத்தில், நம் கண்களிலிருந்து ஒளி வெளிப்பட்டுப் பொருளை யடைவதாகவும், அதனால் இப்பொருள் நமக்குப் புலனாவதாகவும் எண்ணினர். பின்னர், அறிவியலாளர், ஒளியைப்பற்றி ஆராய்ந்தனர், 15-16ஆம் நூற்றாண்டில் வில்லை (ஒளியியல்), நூண்ணோக்கி, தொலைநோக்கி முதலியவற்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இக்கருவிகளைப் பயன்படுத்தி, வெகுதூரத்திலுள்ள பொருள்களையும், அண்மையிலுள்ள நுண்ணியப் பொருள்களையும் தெளிவாகக் கண்டு ஆராய்ந்தனர். 1666 ஆம் ஆண்டு ஐசக் நியூட்டன், பட்டகத்தின் மூலம் செலுத்தப்பட்ட வெண்ணிற ஒளிச் சிதறி, வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை உடைய நிறமாலையை உருவாக்கலைக் கண்டறிந்தார். சாதாரணமாக நாம் வெண்ணிற ஒளியெனக் கருதும் ஒளியானது, உண்மையில் ஏழு நிறங்களாலானதென நியூட்டன், தம் பரிசோதனை மூலம் தெளிவாக்கினார். ஒளியானது மிக நுண்ணிய துகள்களாலானது என்றும் கூறினார். ஒளி நேர்க்கோட்டில் செல்லுகிறது என்ற அடிப்படையைக்கொண்டு, அவர் தாம் கண்ட ஒளித்துகள் கொள்கையை (Corpuscular theory of light) வெளியிட்டார். பின்னர், ஒளி அலைக் கொள்கையை, இடச்சு இயற்பியல் அறிஞரான கிறிஸ்தியன் ஹைகன்ஸ் (Christian Huyghens) ஆராய்ந்து வெளியிட்டார். 1675 ஆம் ஆண்டு ஓலசு ரோமர் (Olaus Roemer) என்ற டேனிய அறிவியலாளர், ஒளியின் வேகத்தை அளக்க முயற்சி செய்தார். ஒளியின் வேகம் நொடிக்கு, சுமார் 1,92,000 மைல்களென கண்டுபிடித்தார். சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆல்பர்ட் ஏ, மைக்கல்சன் (Albert A. Michelson) பல ஆராய்ச்சிகளின் பயனாக ஒளியின் வேகம், நொடிக்கு 1,86,284 மைல்களெனக் கண்டுபிடித்தார். ஒளி அலையானது, ஒரு நொடியில் செல்லும் தூரமே, ஒளியின் வேகம் என்றழைக்கப்படுகிறது. இந்த வேகத்தில் பயணிக்கும் போது, சில பொருட்களின் வழியே உட்புகுந்து ஒளிப் பயணிக்கும். அத்தகையப் பொருட்களை, நாம் ஒளிபுகும் பொருள்கள் என்பர். எடுத்துக்காட்டாக கண்ணாடி, நீர், காற்று போன்றவற்றைக் கூறலாம். பெரும்பாலான மற்றப் பொருள்கள் ஒளியைத் தன்னூடே செல்ல தடுத்து விடும். இவை ஒளிபுகாப்பொருள்கள் (Opaque) எனப்படும். சில பொருள்கள் தம்மீது படும் ஒளியின் ஒரு பகுதியைத் தடுத்துவிட்டு, மற்றொரு பகுதியை மட்டும் தன்னூடே செல்லவிடும். இவை ஒளி கசியும் பொருள்கள் என அழைக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக, மூடுபனி, வெள்ளைக் காகிதம், சொரசொரப்பாகத் தேய்த்த கண்ணாடி போன்றவைகளைக் கூறலாம். 1861 ஆம் ஆண்டு, ஆங்கில அறிவியலாளர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்பார் ஒளியின் மின்காந்த அலைக் கொள்கையைக் கண்டறிந்தார். இதன்படி ஒளி அலைகள், ஒலி அலைகளைப் போலன்றி, மின்காந்த இயல்புடையன என்ற அறிவியல் தன்மையை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். 1900 ஆம் ஆண்டு, மாக்ஸ் பிளாங்க் என்பார் குவான்டம் கொள்கையை வெளியிட்டார். இவர் ஒளியானது துகள் பண்புடையது என்றும், ஆனால் அது அலைகளாகவே செல்லுகின்றது என்றும் கூறினார். ஆகவே இந்தக் கொள்கை நியூட்டன் கொள்கையையும், ஏகன்சு கொள்கையையும் இணைப்பதாக அறியப்படுகிறது. புதிதாகக் கண்டறியப்படும் அறிவியல் உண்மைகள் அனைத்தையும் ஏற்கத்தக்கவாறு, ஒரே கொள்கையை வகுக்கச் சோதனைகள், தொடர்ந்து நடந்து வருகின்றன. பாரம்பரிய ஒளியியல் கதிர் ஒளியியல் இக்கற்கையில் ஒளியானது நேர்பாதையில் செல்லும் கதிரென விளக்கப்படுகின்றது. இக்கதிர்களின் பாதை பல்வேறு ஒளி ஊடுபுக விடும் ஊடகங்களிடையிலான ஒளித் தெறிப்பும், ஒளி முறிவும் ஆகியவற்றால் மாற்றப்படும். ஒளித்தெறிப்பு ஒளி ஒரு ஊடகத்திலிருந்து ஒளி உட்புக விடாத பொருளொன்றில் பட்டு வேறு திசையில் (அதே ஊடகத்தில்) தன் பாதையை மாற்றிச் செல்லுதல் ஒள்த்தெறிப்பு எனப்படும். இவற்றையும் பார்க்கவும் ஒளித் தெறிப்பு ஒளி முறிவு சீரொளி ஒளி மேற்கோள்கள்
5447
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
பாய்ம இயக்கவியல்
பாய்ம இயக்கவியல் (Fluid dynamics) என்பது நீர்ம (திரவ) அல்லது வளிமப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன, அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆயும் இயல். பாய்மம் என்பது நீர்மம், வளிமம் (வாயு) ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். ஒரு குழாய் வழியே உயர்ந்த அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்குப் நீர்மப் பொருளும், வளிமப் பொருளும் பாய்ந்து செல்வதால், இப்பொருட்களுக்குப் பாய்மம் என்று பெயர். பாய்ம இயக்கவியலை நீர்ம இயக்கவியல் (Hydro dynamics), வளிம இயக்கவியல் (Pneumatics) என இருவகைப்படுத்தலாம். வெளி இணைப்புகள் Geophysical and Astrophysical Fluid Dynamics பாய்ம இயக்கவியல் காற்றியக்கவியல்
5450
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
அணுக்கருவியல்
அணுக்கருவியல் அல்லது அணுக்கரு இயற்பியல் (Nuclear physics) என்பது இயற்பியலின் ஒரு பிரிவாகும். இது அணுக்கரு, அணுவின் பிற கூறுகள், அணுவுக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பு போன்ற விடயங்களை ஆய்கிறது. பயன்பாடுகள் அணுக்கரு மருத்துவம் அணுக்கரு உலை அணுக்கரு ஆயுதம் அணுக்கருத் தொழில்நுட்பம் அணுக்கரு ஆற்றல் இவற்றையும் பார்க்கவும் அணுக்கருப் பிளவு அணுக்கரு இணைவு அணுக்கருத் தாக்கம் அல்லது அணுக்கரு வினை அணுக்கரு விசை அணுக்கரு தொடர்வினை கதிரியக்கத் தேய்வு மேற்கோள்கள் அணுக்கருவியல் இயற்பியல் கோட்பாடுகள்
5452
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
அண்டவியல்
அண்டவியல் (Cosmology) அண்டத்தின் தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, பரிணாமம் ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் நடைமுறை கோட்பாடுகள் பல உறுதிப்படுத்தப்படவில்லை. அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும். வகைகள் இயற்பு அண்டவியல்(physical cosmology) - வானியலாலர்களால் ஆராயப்பட்டு நிறுவப்பட்ட அல்லது கருதப்படும் கோட்பாடுகளைக் கொண்டது. மாயவியற்பு அண்டவியல்(metaphysical cosmology) - மதம், தொன்மங்கள் சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டது. மாறும் கொள்கைகள் அண்டவியல் கொள்கைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது இயல்பு. ஒரு விஞ்ஞானி கூறிய கொள்கை நெடு நாட்களாக ஏற்கப்பட்டு மீண்டும் வேறொருவரால் பல ஆண்டுகள் கழித்து மறுக்கப்படலாம். இது தற்போது பரவலாக ஏற்கப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடு போன்றவற்றுக்கும் பொருந்தும். மேற்கோள்களும் குறிப்புகளும் அண்டவியல்
5454
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
மின்காந்தவியல்
மின்காந்தவியல் (Electromagnetism) இயற்பியலின் கிளைப்பிரிவாகும். இது மின்காந்த விசை (electromagnetic force) பற்றிப் படிக்கிறது. மின்காந்தவிசை மின்னூட்டத் துகள்களிடையே நிகழும் ஊடாட்டம் அல்லது இடைவினை ஆகும். மின்காந்தவிசை மின்காந்தப் புலத்தைத் தருகிறது. மின்காந்தப் புலத்தில் மின்புலமும் காந்தப்புலமும் பின்னிப் பிணைந்துள்ளன.ஒளி ஒரு மின்காந்த அலையாகும். மின்காந்தவிசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். மற்ற மூன்று அடிப்படை இடைவினைகள் அல்லது விசைகள் வலிய இடைவினை, the மெலிந்த இடைவினை, ஈர்ப்பு விசை என்பனவாகும். மின்காந்தவியல் என்பது ἤλεκτρον ēlektron, "amber", and μαγνῆτις λίθος magnētis lithos எனும் இரண்டு கிரேக்கச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும். magnētis lithos என்றால் காந்தக்கல் என்று பொருள். காந்தக்கல் ஓர் இரும்புத் தாதுவாகும். மின்காந்த நிகழ்வு மின்காந்த விசையால் வரையறுக்கப்படுகிறது. மின்காந்த விசை இலாரன்சு விசை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் மின்சாரமும் காந்தமும் ஒரே நிகழ்வின் இருகூறுகளாகப் பின்னிப் பிணைந்துள்ளன. நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும்பாலான பொருள்களின் அக இயல்புகளைத் தீர்மானிப்பதில் மின்காந்த விசை பெரும்பங்கு வகிக்கிறது. இயல்பான பொருண்ம வடிவம் அதில் உள்ள தனி அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் உள்ள மூலக்கூற்று விசைகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது மின்காந்த விசைகளின் விளைவே ஆகும். எதிர்மின்னிகள் அணுக்கருவுடன் மின்காந்த விசையால் பிணைந்துள்ளன. குவைய இயக்கவியல் அவற்றின் வட்டணைகளின் வடிவங்களையும் அருகில் உள்ள மின்னன்களோடு அமைந்த அணுக்கள்பாலான விளைவையும் விவரிக்கிறது. மின்காந்த விசை அருகில் உள்ள அணுக்களின் மின்னன்களோடான இடைவினைகளால் ஏற்படும் வேதியியல் வினைகளையும் கட்டுபடுத்துகிறது. மின்காந்தப் புலத்துக்கான கணிதவியல் விவரிப்புகள் பல உள்ளன. செவ்வியல் மின்னியக்கவியலில், மின்புலங்கள் மின்னிலையாலும் மின்னோட்ட்த்தாலும் விவரிக்கப்படுகின்றன. பாரடேவின் மின் தூண்டல் விதியின்படி, மின்காந்தத் தூண்டலில் காந்தப்புலங்களும் இணைந்துள்ளன. மேக்சுவெல்லின் சமன்பாடுகள் காந்த, மின் புலங்கள் ஒன்றுக்கொன்றும் மின்னூட்டங்களாலும் மின்னோட்டங்களாலும் உருவாகின்றன என்பதை விவரிக்கின்றன. மின்காந்தவியலின் கோட்பாட்டு நெடுநோக்காலும் பரவல் ஊடக இயல்புகளைச் சார்ந்த, குறிப்பக மின் இசைமையையும் காந்த இசைமையையும் சார்ந்த, ஒளி விரைவின் நிறுவலும் ஆல்பர்ட் ஐன்சுட்டீன் சிறப்புச் சார்பியலை 1905 இல் உருவாக்க வழிவகுத்தன. மின்காந்த விசை நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாக இருப்பினும் உயர் ஆற்றல் நிலையில் மின்காந்த விசையும் மெல்விசையும் மின்மெல் விசையாக ஒருங்கிணைகின்றன. புடவியின் படிமலர்ச்சியின்போது குவார்க் ஊழியில் ஏற்பட்ட குளிர்ச்சியால் இந்த ஒருங்கமைந்த மின்மெல் விசை மின்காந்த விசையாகவும் மெல்விசையாகவும் பிரிந்தது. கோட்பாட்டு வரலாறு முதலில் காந்தமும் மின்சாரமும்Originally தனி விசைகளாகக் கருதப்பட்டன. அன்னல், 1973 இல் மேக்சுவெல்லின் A Treatise on Electricity and Magnetism என்ற நூல் வெளியிடப்பட்டதும் இந்தக் கண்ணோட்டம் மாறியது. இந்நூலில் நேர்மின்னூட்டம் எதிர்மின்னூட்டம் அகியவற்றின் ஊடாட்டம் ஒரே விசையால் இயங்குவதாக விளக்கப்பட்டது. இந்த ஊடாட்டம் அல்லது இடைவினையால் பின்வரும் நான்கு முதன்மையான விளைவுகள் ஏற்படுகின்றன. இவை செய்முறைகளாலும் நிறுவப்பட்டுள்ளன: ஒன்றையொன்று ஈர்க்கும் அல்லது விலக்கும் மின்னூட்டங்கள் இடையில் அமையும் விசை. மின்னூட்டங்களுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிடையே உள்ள தொலைவின் இருபடிக்கு தலைக்கீழ் விகிதத்திலும் அமைகிறது: எதிரெதிர் மின்னூட்டங்கள் ஈர்க்கின்றன. ஒத்த மின்னூட்டங்கள் விலக்குகின்றன. நேர், எதிர் மின்னூட்டங்களைப் போலவே காந்த முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன அல்லது விலக்குகின்றன. காந்த முனைகள் எப்போதும் இணைந்தே அமைகின்றன. அதாவது காந்த வட முனையும் தென் முனையும் ஒன்றோடொன்று இணைந்தே அமைகின்றன. ஒரு கம்பியில் உள்ள மின்னோட்டம் அதன் பருதியைச் சுற்றிலும் அதற்கு வெளியே ஒரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கிறது. கம்பி மின்னோட்டத்தின் திசையைப் பொறுத்து காந்தப்புலத் திசை வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ அமையும். காந்தப்புலத்தில் ஒரு கடத்தியை புலத்தை நோக்கியோ அல்லது எதிராகவோ நகர்த்தினால் கம்பியின் கண்ணிக்குள் மின்னோட்டம் தூண்டப்படும்; மின்னோட்ட்த்தின் திசை கடத்தி நகரும் திசையைப் பொறுத்து மாறும். ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடு 1820 ஏப்பிரல் 21 இல் ஒரு மாலை வகுப்பெடுக்க ஆயத்தமாகும்போது ஒரு வியப்புதரும் நிகழ்வைக் கவனித்துள்ளார். இவர் தன் செய்முறைப் பொருள்களை ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, மின்கல அடுக்கை சுற்றதரில் இணைக்கும்போதும் அதில் இருந்து துண்டிக்கும்போதும் காந்த வடமுனையில் இருந்து காந்த ஊசி எட்ட விலகுவதைக் கவனித்துள்ளார். இந்த காந்த ஊசியின் விலக்கம், மின்னோட்டம் உள்ள கம்பியைச் சுற்றிலும் அனைத்துப் பக்கங்களிலும் ஒளியையும் வெப்பத்தையும் போலவே காந்தப் புலம் அமைதலை அவருக்கு உறுதிபடுத்தியுள்ளது. அதன்வழி மினசாரத்துக்கும் காந்த்த்துக்கும் இடையில் உள்ள நேரடியான உறவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது ஆய்ர்சுடெடு இந்நிகழ்வுக்கான நிறைவுதரும் விலக்கமேதும் அளிக்கவில்லை. மேலும் கணிதவியலாகவும் அந்நிகழ்வை விளக்க முயல்வில்லை. என்றாலும், மூன்று மாதங்களுக்குப் பிறகு அதைப் பற்ரிய ஆழ்ந்த ஆய்வுகளில் ஈடுபடலானார். பின்னர் மின்னோட்டம் ஒரு கம்பியில் பாயும்போது கம்பியைச் சுற்றிலும் காந்தப் புலத்தை உருவாக்குகிறது எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவரது இந்த மின்காந்தவியல் பங்களிப்புக்காக மின்காந்தத் தூண்டலின் செமீ-கி-நொ முறையின் அலகான ஆய்ர்சுடெடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்பின் விளைவாக மின்னோட்டவியலில் செறிவான ஆய்வுகள் பல அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இவை பிரெஞ்சு இயற்பியலாளராகிய ஆந்திரே மரீ ஆம்பியரை ஆட்கொள்ளவே அவர் மின்னோட்டம் பாயும் கடத்திகளின் இடையில் அமையும் காந்த விசைகளுக்கான ஒற்றைக் கணிதவியல் வடிவத்தை உருவாக்கினார். ஆய்ர்சுடெடின் கண்டுபிடிப்பும் ஆற்றலின் ஒருங்கிணைந்த கருத்துப்படிமத்தை நோக்கிய பெரும்படியை உருவாக்கி வைத்தது. இந்த ஒருங்கிணைப்பையும் இதற்கான ஜேம்சு கிளார்க்கின் விரிவாக்கத்தையும் இவற்றை மேலும் ஆலிவர் எவிசைடும் என்றிச் எர்ட்சும் அளித்த மறுவடிவப்படுத்தலையும் கண்ணுற்ற மைக்கேல் பாரடே இவை 19 ஆம் நூற்றாண்டின் கணித இயற்பியலில் ஏற்பாட சீரிய சாதனைகளாகக் கருதினார். இவை பல பின்விளைவுகளை ஏற்படுத்தின. அவற்றில் ஒன்று ஒளியின் மின்காந்த அலைத்தன்மையைப் புரிந்துகொண்டதாகும். ஒளி பற்றியும் மின்காந்தக் கதிர்வீச்சு பற்றியும் அப்போது நிலவிய கண்ணோட்டத்துக்கு மாற்றாக இன்றளவில் அவை குவைய இயல்போடு தானே பரவும் மின்காந்தப் புல அலைவு குலைவுகளான ஒலியன்களாக்க் கருதப்படுகின்றன. இந்த அலைவின் பல்வேறு அலைவெண்கள், தாழ் அலைவெண் கொண்ட வானொலி அலைகளில் இருந்து, கட்புல ஒளி அலைகளின் ஊடாக, உயர் அலைவெண் கொண்ட காம்மாக் கதிர் வரை பல வேறு மின்காந்த அலை வடிவங்களை உருவாக்குகின்றன. மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் இடையில் உள்ள உறவை ஆய்ர்சுடெடு மட்டுமே நோக்கினார் என்க் கூறமுடியாது. 1802 இல் கியான் டொமெனிகோஉரோமகுனோசி எனும் இத்தாலியச் சட்டவியல் அறிஞரும் வோல்ட்டா அடுக்கால் காந்த ஊசியை விலகச் செய்துள்ளார். உண்மையில் நடந்தச் செய்முறையின் விவரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இச்செய்தி 1802 இல் ஓர் இத்தாலியச் செய்தித் தாளில் வெளியாகியுள்ளது. ஆனால் இவர் அறிவியல் துறையைச் சாராதவர் என்பதால் அக்கால அறிவியல் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அளவுகளும் அலகுகளும் மின்காந்தவியல் அலகுகள் (Electromagnetic units) மின் அலகுகளில் ஒரு பகுதியாகும். இவை மின்னோட்டங்களின் காந்த இயல்புகளைச் சார்ந்தவை. இதன் அடிப்படை செந்தரப் பன்னாட்டு அலகு ஆம்பியர் ஆகும். மின்காந்தவியல் அலகுகள் பின்வருமாறு: ஆம்பியர் (மின்னோட்டம்) கூலம்பு (மின்னூட்டம்) பாரடு (கொண்மம்) என்றி (தூண்டம்) ஓம் (தடை(யம்)) சீமன்சு (கடத்துமை) தெசுலா (காந்தப் பெருக்கு (பாய) அடர்த்தி) வோல்ட் (மின்னிலை (மின்னழுத்தம்)) வாட் (மின் திறன்) வெபர் (காந்தப் பெருக்கு) மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் மின்காந்தவியல் உந்துவிசை Electromagnetic Force - from Eric Weisstein's World of Physics Ties That Bind Atoms Weaker Than Thought - LiveScience.com Physics 221B notes – quantization Physics 221B notes – interaction Quarked Electromagnetic force - A good introduction for kids MIT OpenCourseWare 8.02: Electricity & Magnetism Free, independent study course with video lectures, homework help videos, assignments, course notes and more. The Deflection of a Magnetic Compass Needle by a Current in a Wire (video)
5455
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
வெப்ப இயக்கவியல்
வெப்ப இயக்கவியல் (Thermodynamics) என்பது வெப்பம், அதன் தன்மை, வெப்ப ஆற்றலுக்குப் பிற ஆற்றல் வடிவங்களுடான தொடர்பு போன்ற விடயங்களை ஆயும் இயல். இயற்பியலின் ஒரு கிளைத் துறையான இது, இயற்பியல் முறைமைகளில், வெப்பநிலை, அழுத்தம், கனவளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை ஆய்வு செய்கிறது. மேற்படி விளைவுகளைப் பெருநோக்கு (macroscopic) அடிப்படையில் துகள்களின் மொத்த இயக்கங்களையும், புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி இது ஆய்வு செய்கின்றது. அண்ணளவாக, வெப்பம் என்பது மாறுநிலையில் உள்ள ஆற்றல் ஆகும். எனவே வெப்ப இயக்கவியலின் பிழிவானது, ஆற்றலின் இயக்கம் பற்றியும், அவ்வாற்றல் எவ்வாறு இயக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் ஆய்வு செய்தல் ஆகும். இத்துறையை தெறுமத்தினவியல் என்றும் தமிழில் குறிப்பிடலாம் எனச் சிலர் பரிந்துரை செய்கின்றனர். தொடக்கத்தில் இத்துறையானது நீராவி எஞ்சினின் பயனுறு திறனை (efficiency) மேம்படுத்துவதற்காகவே உருவாக்கி வளர்க்கப்பட்டது. இயந்திர வெப்ப சுழற்சிகளுக்கு வெப்ப இயக்கவியல் ஆரம்ப பயன்பாடு இரசாயன கலவைகள் மற்றும் இரசாயன எதிர்வினைகள் ஆய்வு ஆரம்பத்தில் நீட்டிக்கப்பட்டது. ரசாயன எதிர்வினைகளை செயல்படுத்துவதில் எண்டிரோபியின் பங்கின் இயல்பை வேதியியல் வெப்பமானியியல் ஆய்வு செய்கிறது. அமைப்பு வெப்ப இயக்கவியலில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அமைப்பு (system) அல்லது தொகுதி என்கிறோம். அமைப்பைச் சுற்றி இருக்கும் ஏனைய அனைத்தும் சுற்றுப்புறமாகும் (சூழல்) (surrounding). அமைப்பும் சுற்றுப்புறமும் சேர்ந்த தொகுப்புக்கு அண்டம் (Universe) என்று பெயர். அமைப்பை அதன் தன்மையைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். திறந்த அமைப்பானது (open system) நிறையையும் ஆற்றலையும் தன்னுள் செல்ல அனுமதிக்கக் கூடியதாகும். உதாரணம்: காற்று அழுத்தி (compressor), சுழலி (turbine) மூடிய அமைப்பு (closed system) என்பது ஆற்றலை மட்டுமே அனுமதிக்கும். நிறையை அனுமதிக்காது. உதாரணம்: அழுத்த சமையற்கலன் (pressure cooker) தனித்த அமைப்பு (isolated system) நிறை மற்றும் ஆற்றல் இரண்டையுமே தன்னுள் செல்ல அனுமதிக்காது. அமைப்பின் வகைகளை எளிய உதாரணங்கள் வாயிலாக விளக்கலாம். நாம் மூடப்படாத பாத்திரத்தில் சமைக்கும் போது நீராவி (steam) கலனை விட்டு வெளியேறும். வெளியேறும் நீராவி வெப்ப ஆற்றலைக் கொண்டிருக்கும். இது திறந்த அமைப்பாகும். நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் அமைப்புகள் திறந்த அமைப்புகள் ஆகும். அழுத்த சமையற் கலனில் உணவு சமைக்கும் போது கலனை விட்டு நீராவி வெளியேறாது. ஆனால் வெப்பம் கலனுக்குள் செல்கிறது. இது மூடிய அமைப்பைக் குறிக்கிறது. சமைத்த பின் பொருளை வெப்பக் குடுவைக்குள் (Thermo flask) வைக்கும் போது நிறை மற்றும் ஆற்றல் இரண்டுமே வெளியேறுவது இல்லை. இது தனித்தஅமைப்பு ஆகும். ஆனால், தனித்த அமைப்பானது கருத்தளவில் மட்டுமே கூறப்படுகிறது. வெப்பக் குடுவையில் சிறிதளவாயினும் வெப்பப் பெயர்ச்சி நிகழும். புரிதலை எளிதாக்குவதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அமைப்பை அதன் சுற்றுப் புறத்தில் இருந்து பிரிப்பது எல்லை எனப்படும். எல்லை உண்மையானதாகவோ, கற்பனையாகவோ, நிலையானதாகவோ அல்லது நகரக் கூடியதாகவோ இருக்கலாம். நிலைமை (phase) என்றால் பொருள் முழுவதுமாக ஒரே மாதிரியான இயற்பியல் கட்டமைப்பும் வேதிக்கலவையும் கொண்டிருப்பதாகும். ஓர் அமைப்பில் ஒரே ஒரு நிலைமை மட்டும் இருந்தால் அதனை ஒருபடித்தான(homogeneous) அமைப்பு என்கிறோம். உதாரணம்: முழுவதும் கலக்கக் கூடிய திரவங்களின் கலவை, வாயுக்களின் கலவை. ஒன்றுக்கு மேற்பட்ட நிலைமைகளைக் கொண்டிருக்கும் அமைப்பை பலபடித்தான(heterogeneous) அமைப்பு எனலாம். உதாரணம்: ஒன்றுடன் ஒன்று கலக்காத திரவங்களின் கலவை, திரவம் மற்றும் வாயு சேர்ந்த தொகுப்பு அமைப்பின் பண்புகள் அமைப்பின் குணாதிசயங்களை அதன் பண்புகள் (properties) என்கிறோம். அழுத்தம்(pressure), வெப்பநிலை(temperature), கன அளவு(volume), நிறை(mass), பாகுநிலை(viscosity), வெப்பக் கடத்துதிறன்(thermal conductivity), மின்கடத்துதிறன்(electrical conductivity) என்பன சில பண்புகளாகும். அமைப்பின் பண்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். நிறையைச் சார்ந்திராத பண்புகள் பொருண்மை சாராப் பண்புகள் அல்லது அகப் பண்புகள் (intensive properties) எனவும், நிறை மற்றும் அளவைச் சார்ந்துள்ள பண்புகள் பொருண்மைசார் பண்புகள் அல்லது புறப் பண்புகள் (extensive properties) எனவும் அழைக்கப்படுகின்றன. வெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியவை நிறையைச் சார்ந்து மாறுவது இல்லை. இவை அகப் பண்புகளுக்கு உதாரணங்களாகும். மேலும் இவற்றை பாகங்களாகப் பிரிக்க இயலாது. நிறை மற்றும் கனஅளவு போன்றவை அமைப்பின் அளவைச் சார்ந்து இருப்பவை. இவற்றை பாகங்களாகப் பிரிக்க முடியும். இவை புறப் பண்புகள் ஆகும். ஓரலகு நிறைக்கான அல்லது ஓரலகு மோலுக்கான புறப்பண்புகள் அகப்பன்புகள் ஆகும். உதாரணமாக, நிறை மற்றும் வெப்பக் கொள்ளளவு புறப்பண்புகள் ஆகும். ஆனால், அடர்த்தி மற்றும் தன் வெப்ப ஏற்புத்திறன்(specific heat) போன்றவை அகப்பண்புகளாகும். வெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி ஒன்றுக்கொன்று வெவ்வேறான மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பானது முதல் மற்றும் இரண்டாவது அமைப்புகளுடன் தனித்தனியே வெப்பச் சமநிலையில் இருந்தால், முதல் மற்றும் இரணடாவது அமைப்புகளும் தங்களுக்குள் வெப்பச் சமநிலையில் இருக்கும். வெப்பநிலை என்னும் கருத்து வெளிவரக் காரணமாக இருந்தது இந்த வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி ஆகும். வெப்ப இயக்கவியலின் சமநிலை ஓர் அமைப்பு சமநிலையில் நேரத்தைப் பொறுத்து மாறாத பண்புகளைப் பெற்று இருந்தால் அதனை வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஓர் அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இருப்பதற்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பெற்று இருக்க வேண்டும். 1. எந்திரவியல் சமநிலை (Mechanical Equilibrium) ஓர் அமைப்பில் உள்ள அனைத்து விசைகளும் சமன் படுத்தப்பட்டு இருந்தால் அதனை எந்திரவியல் சமநிலை என்கிறோம். அதாவது அந்த அமைப்பானது மற்றோர் அமைப்புடன் எந்த வேளையிலும் ஈடுபடாது. மேலும் அதன் எல்லாப் பகுதிகளிலும் அழுத்தம் மாறாமல் இருக்கும். 2. வெப்பச் சமநிலை(Thermal Equilibrium) அமைப்பில் வெப்பப் பரிமாற்றம் நிகழவில்லை எனில் அத்தகைய சமநிலை வெப்பச் சமநிலை ஆகும். அதாவது அமைப்புக்கும் அதன் சுற்றுப் புரத்துக்கும் இடையே வெப்பநிலை வேறுபாடு இருக்காது. வெப்பநிலை வேறுபாடு இருந்தால் மட்டுமே வெப்பப் பரிமாற்றம் நிகழும். 3. வேதிச் சமநிலை (Chemical Equilibrium) அமைப்பானது எந்த ஒரு வேதிவினைக்கும் உட்படவில்லை எனின், அவ்வமைப்பு வேதிச் சமநிலையில் உள்ளது எனலாம். எந்த ஓர் அமைப்பும் மேற்கூறப்பட்ட மூன்று சமநிலைகளையும் பெற்று இருப்பின் அந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஏதேனும் ஒரு சமநிலை இல்லாதிருப்பின் அமைப்பினில் ஆற்றல் பரிமாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இல்லை என்பதாகும். வெப்ப இயக்கவியலின் செயல்முறைகள் ஒரு சமன்படுத்தப்பட்ட நிலையில் இருந்து மற்றோர் சமன்படுத்தப்பட்ட நிலைக்கு செல்வதே வெப்ப இயக்கவியலில் செயல்முறை எனப்படுவதாகும். வெப்ப இயக்கவியலில் கீழ்க்கண்ட செயல்முறைகள் உள்ளன. ஒரு செயல் முறையில் செய்யப்படும் வேலை = ʃP.dV 1. கன அளவு மாறாச் செயல்முறையில் செயல்முறையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கனஅளவு மாறாமல் இருக்கும். உதாரணம்: ஆட்டோ சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் மற்றும் வெப்பம் வெளியேற்றப்படும் செயல்முறைகள் 2. அழுத்தம் மாறாச் செயல்முறையில் செயல்முறை முழுவதும் அழுத்தம் மாறாமல் இருக்கும். உதாரணம்: டீஸல் சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் செயல்முறை அழுத்தம் மாறாச் செயல்முறையாகும். 3 வெப்பநிலை மாறாச் செயல்முறை என்பது செயல்முறையின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கு இடையே வெப்பநிலை மாறாமல் இருப்பதாகும். அமைப்பானது சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வதால் வெப்பநிலை மாறுவது இல்லை. 4. வெப்ப மாறாச்செயல்முறையில் அமைப்பு சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வது இல்லை. வெப்ப மாறச் செயல் முறைக்கு உதாரணம் ஆட்டோ சுழற்சியில் நடைபெறும் சுருக்கம் மற்றும் விரிவாக்கச் செயல்முறைகளாகும். வெப்ப இயக்கவியல் முதல் விதி வெப்ப இயக்கவியல் முதல் விதியின்படி ஆற்றலானது ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறக்கூடியது மற்றும் எந்த ஒரு செயல்முறையிலும் ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது. வெப்ப இயக்கவியல் முதல் விதியானது ஒவ்வொரு செயல்முறையின் போதும் நிகழும் வெவ்வேறு ஆற்றல் மாற்றங்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அத்தகைய ஆற்றல் மாற்றங்கள் பற்றி விளக்குவதில்லை. ஒரு செயல்முறை நிகழும் திசையானது தன்னிச்சையானதா அல்லது தன்னிச்சையற்றதா என்பதைப் பற்றிய கருத்தையும் வெப்ப இயக்கவியல் முதல் விதி கூறவில்லை. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி கெல்வின் பிளாங்க் கூற்று ஒரு முழுமையான சுற்றில் ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி, அந்த அமைப்பில் எத்தகைய சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், முழுவதுமாக வேலையாக மாற்றக் கூடிய இயந்திரத்தை வடிவமைக்க இயலாது. கிளாசியஸ் கூற்று எத்தகைய வேலையும் செய்யாமல் வெப்பத்தைக் குளிர்ந்த பொருளிலிருந்து சூடான பொருளுக்கு மாற்றுவது இயலாது. என்ட்ரோபியை அதிகரிக்கூடிய செயல்முறையானது தன்னிச்சையானதாகும். இக்கூற்று என்ட்ரோபி கூற்று எனப்படும். என்ட்ரோபி என்பது ஒழுங்கற்ற தன்மையை குறிக்கிறது.ஒர் இயந்திரத்தின் திறன் எப்பொழுதும் 100% அடையாது. ஓர் இயந்திரத்தின் திறன் என்பது வெளிப்படுத்திய ஆற்றலுக்கும் உறிஞ்சப்பட்ட ஆற்றலுக்கும் உள்ள விகிதத்தின் மதிப்பாகும். எனவே 100% திறனை ஒரு பொதும் அடைய இயலாது. என்ட்ரோபி மாற்றம் வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியால் அறிமுகப்படுத்தப்பட்ட என்ரோபி சார்பு என்பது உமிழப்படும் வெப்பத்ததிற்கும் (வ) செயல்முறையின் வெப்ப நிலைக்கும் உள்ள விகிதமாகும். 'இயற்கைச் செயல்முறை' என்பது தன்னிச்சைச் செயல்முறையாகும் இவை தாமாகவே நடைபெறுகின்றன. அண்டத்தின் என்ட்ரோபி மாற்றமானது பூச்சியமாகவோ அல்லது எதிர்க்குறியையோ பெற்றிருக்கும் போது, அமைப்பானது தன்னிச்சையற்ற செயல்முறையில் இயங்கும். ஒரு வேதிவினையில், வினைவிளை பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது வினைபடு பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது. (1) ஒரு திண்மம் நீர்மமாதல், ஒரு நீர்மம் ஆவியாதல் மற்றும் ஒரு திண்மம் ஆவியாதல் ஆகிய நிலைமை மாற்ற இயற்பியல் செயல்முறைகளின் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது. என்ட்ரோபி என்பது ஓர் அமைப்பில் நிகழும் நுண்ணிய ஒழுங்கற்ற தன்மையையும், தன்னிச்சைச் செயல்முறையையும் குறிக்கிறது. டிரவுட்டன் விதி (1) ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற குறைந்த கொதிநிலை கொண்ட நீர்மங்கள், இவற்றின் கொதிநிலை 0மு-ஐ விட மிகச் சிறிதளவே உயர்ந்திருக்கும். (2) நீர் மற்றும் ஆல்கஹால் போன்ற முனைவுற்ற சேர்மங்கள் ஹைட்ரஜன் பிணைப்பை கொண்டிருப்பதால் அதிகபட்ச ஆவியாதல் மதிப்பையும் பெற்றுள்ளன. எண்ட்ரோப்பியின் சிறப்பியல்புகள் எண்ட்ரோப்பி ஆனது வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியிலிருந்து வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பாக வருவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட செயல்முறையில் நிகழும் அமைப்பின் எண்ட்ரோப்பி மாற்றம் என்பது மாறாத வெப்பநிலையில் நிகழும் வெப்ப மாற்றத்திற்கும் அமைப்பின் வெப்பநிலைக்கும் இடையேயான விகிதமாகும். ஒரு தன்னிச்சை செயல்முறையின் போது ஒழுங்கற்ற தன்மை அல்லது எண்ட்ரோப்பி அதிகரிக்கிறது. எனவே எண்ட்ரோப்பியானது ஒரு அமைப்பின் ஒழுங்கற்ற தன்மை அல்லது மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற அமைப்பு ஆகியவற்றை அளவிடும் பண்பாகும். ஒரு மீளா செயல்முறையின்போது அண்டத்தின் எண்ட்ரோப்பி அதிகரிக்கிறது. அண்டத்தின் ஆற்றல் மாறாமல் இருந்தாலும், அண்டத்தின் எண்ட்ரோப்பி அதிகப்பட்ச அளவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு தன்னிச்சைச் செயல்முறையில் மாறாத வெப்பநிலையில், நேர்க்குறியைப் பெற்றுள்ளது(ள,0) ஒரு சமநிலை செயல்முறையில் ஆனது பூஜ்ஜியமாகும். ஒரு தன்னிச்சையற்ற செயல்முறையில் எதிர்க்குறியைப் பெற்றுள்ளது. இவற்றையும் பார்க்கவும் வளிமண்டல வெப்ப இயக்கவியல் உயிரியல் வெப்ப இயக்கவியல் கருங்குழி வெப்ப இயக்கவியல் வேதியியல் வெப்ப இயக்கவியல் சமநிலை வெப்ப இயக்கவியல் சமநிலையற்ற வெப்ப இயக்கவியல் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் வெப்பப்பொருளியல் வெப்ப வேதியியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Thermodynamics Data & Property Calculation Websites Thermodynamics Educational Websites Thermodynamics at ScienceWorld Biochemistry Thermodynamics இயற்பியல் கோட்பாடுகள்
5457
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இயக்கவியல்
இயக்கவியல் (Dynamics) விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர். இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன. இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும். வரலாறு இயக்கவியலின் அடிப்படை விதிகளை நீயூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிபியா மெதெமேட்டிகா (Principia Mathematica) என்னும் படைப்பு நூலை 1687இல் வெளியிட்டார். மேலும் ஆய்லர், மேக்சுவெல் போன்றோர் முறையே சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் குறித்து விதிகளை வகுத்தனர். விசை விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம். நியூட்டனின் இயக்க விதிகள் பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். பொருள் மற்றும் அவைகளின் மீது ஒரு விசை ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும். முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன. இவற்றையும் பார்க்க விசையியல் (mechanics) நிலையியல் (statics) இயங்கியல் (kinematics) மேற்கோள்கள் வெளி இணைப்புகள்
5458
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இயங்கியல்
அசைவு விபரியல் அல்லது இயங்கியல் (kinematics) என்பது மரபார்ந்த விசையியலின் ஒரு பிரிவாகும். இது ஒரு புள்ளி அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு பொருட்தொகுதியின் இயக்கத்தை, இயக்கத்துக்கான காரணத்தை நோக்காமல், அதன் நிலை, திசைவேகம், முடுக்கம் போன்ற கூறுகளால் விபரிக்கிறது. அசைவு விபரியல் வானியற்பியலில் வான் பொருட்களின் இயக்கத்தை அறியவும், மற்றும் இயந்திரப் பொறியியல், தானியங்கியல், உயிர்விசையியல் ஆகியவற்றில் தொகுதிகளின் அசைவைக் கண்டறியவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, விசைப்பொறிகள், தானியங்கி கைகள், மனித உடம்பின் எலும்புக்கூடு ஆகியவற்றின் அசைவுகளை அறியப் பயன்படுகிறது. திசைவேகமும் வேகமும் திசைவேகம் (velocity) என்பது துணிக்கையொன்றின் இடப்பெயர்ச்சி மாற்றத்தின் அளவு மற்றும் திசையைக் காட்டும் காவிக் கணியமாகும். வேகம் அல்லது கதி (speed) என்பது பொருள் நகர்ந்த தூரத்தின் மாற்றத்தின் அளவாகும் (திசை இல்லை). பொதுவாக அசைவு விபரியலில் திசையைக் காட்டும் காவிக் கணியமான திசைவேகமே கணிப்பிடப்படுகின்றது. சராசரி வேகமானது மாற்ற இடப்பெயர்ச்சியை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும். இங்கு ΔP என்பது இடப்பெயர்ச்சியையும் Δt என்பது நேரத்தையும் குறிக்கின்றது. ஆர்முடுகல் இது வேகத்தை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும். மேற்கோள்கள்
5460
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF
ஜூனிசிரோ கொய்சுமி
ஜூனிசிரோ கொய்சுமி (小泉 純一郎 Koizumi Jun'ichirō, பிறப்பு: ஜனவரி 8, 1942) ஜப்பான் நாட்டின் ஒரு முன்னாள் பிரதமராவார். ஜப்பானிய அரசியல்வாதிகள் 1942 பிறப்புகள் வாழும் நபர்கள்
5463
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88
கோதுமை
கோதுமை (டிரிடிகம் இனம்) என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோளம் (844 மில்லியன் தொன்) மற்றும் அரிசி (672 மில்லியன் தொன்) என்பவற்றுக்கு அடுத்தத்தாக அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியமாகவும் இருந்தது. 2009ல் கோதுமை இரண்டாமிடத்தில் (682 மில்லியன் தொன்) காணப்பட்டதோடு சோளம் (817 மில்லியன் தொன்) முதலிடத்திலும், அரிசி (679 மில்லியன் தொன்) மூன்றாமிடத்திலும் காணப்பட்டது. ஏனைய எந்தப் பயிர்களைக் காட்டிலும் அதிக பரப்பளவில் இது பயிரிடப்படுகிறது. உலக வாணிகத்தில் கோதுமை வாணிகம் ஏனைய அனைத்துப் பயிர் வாணிகங்களின் மொத்தத் தொகையிலும் அதிகமாகும். உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது. இது மற்றைய முக்கிய பயிர்களான அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலும் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. சோளத்தின் அதிகளவில் விலங்குணவாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவுப் பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நகர்ப்புறச் சமுதாய வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் பரந்தளவில் இலகுவாகப் பயிரிடக்கூடிய தானியமாக கோதுமை இருப்பதாலும், நீண்டகாலத்துக்குக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாகவும் கோதுமை இருக்கிறது. வளர்பிறையில் (Fertile Cresent) உருவான பாபிலோனிய மற்றும் அசிரியப் பேரரசுகளின் எழுச்சிக்கும் கோதுமையே காரணமாகும். கோதுமை ஒரு நிறையுணவாகும். கோதுமையை மாவாக்கிப் பாண், பிஸ்கட், குக்கிஸ், கேக்குகள், காலைத் தானிய ஆகாரம், பாஸ்தா, நூடுல்ஸ், கோஸ்கோஸ் போன்றன ஆக்கப்படும். மேலும், இதனைப் புளிக்கச்செய்து பியர், ஏனைய மதுபானங்கள் மற்றும் உயிரிஎரிபொருள் என்பனவும் உருவாக்கப்படும். கால்நடைகளுக்கான தீவனப் பயிராகவும் சிறியளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. மேலும், இதன் வைக்கோல் கூரை வேயவும் பயன்படுகிறது. இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது. இதன் உப பொருட்கள் மேற்தோலும் முளையும் ஆகும். கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன. எனினும் சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் பெரும்பாலும் மாவுப்பொருட்கள் மட்டுமே உள்ளன. வரலாறு கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன்மகரந்தச் சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு வித்தியாசமான இனங்கள் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள், கோதுமைச் சாகுபடி முதன்முதலில் வளர்பிறை (Fertile Cresent) மற்றும் நைல் கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. எனினும் அண்மைய ஆய்வுகள் இது தென்கிழக்குத்துருக்கியின் சிறு பகுதியொன்றில் முதலில் பயிரிடப்பட்டதாகக் கூறுகின்றன. இது கிமு 9000த்தில் துருக்கியிலுள்ள கொபேக்லி தெபே எனுமிடத்திலிருந்து வடமேற்கே தொலைவிலுள்ள நெவாலி கோரி எனுமிடத்தில் பயிரிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வாற்கோதுமை பயிரிடப்பட்ட கிமு 23,000 ஆண்டுகளிலேயே கோதுமையும் பயிரிடப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். பயிரிடல் நுட்பங்கள் பயிரிடும் போதான மண் தயார்செய்கை மற்றும் விதைத்தல் நுட்பங்கள் ஆகியன காரணமாகவும், பயிரின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான பயிர் சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் உரப்பயன்பாடு என்பன காரணமாகவும், அறுவடை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாகவும் கோதுமை சிறப்பாகப் பயிரிடக்கூடிய பயிராக விளங்குகிறது. குதிரையைப் பயன்படுத்தி உழும் முறை (3000 BCE அளவில்) காரணமாக உற்பத்தித் திறன் வளர்ச்சியடைந்தது. 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விதைக் கலப்பைகளின் உதவியால் பரந்தளவிலான விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனாலும் கோதுமையின் உற்பத்தித் திறன் வளர்ச்சி பெற்றது. பயிர்ச்சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான உரப்பயன்பாடு ஆகியன காரணமாக ஓரலகுப் பரப்பிலிருந்து அறுவடை செய்யக்கூடிய கோதுமையின் அளவு அதிகரித்தது. சூடடிப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் போன்ற புதிய இயந்திரங்களின் வருகையும், புதிய கோதுமை ரகங்களின் கண்டுபிடிப்பும் கோதுமைப் பயிர்ச்செய்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காக்களில் புதிய விளைநிலங்களில் கோதுமைப் பயிரிடலோடு கோதுமை உற்பத்தியும் விரிவடைந்துள்ளது. கோதுமையின் போசாக்குத் தகவல்கள் கோதுமை பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இது ஏனைய எந்தப் பயிருக்கான பயிரிடல் பரப்பளவிலும் அதிகமாகும். உலகின் மிக விரும்பப்படும் நிறையுணவுகள் அரிசியும் கோதுமையுமேயாகும். ஏனைய எந்த உணவுப் பொருள்களிலும் பார்க்க அதிக போசணையை கோதுமை மனிதனுக்கு வழங்குகிறது. கோதுமை ஆர்ட்டிக் பகுதிகளிலிருந்து மத்தியகோட்டுப் பகுதிகள் வரையிலும், கடல் மட்டத்து நிலங்கள் முதல் கடல் மட்டத்திலிருந்து உயரமுள்ள திபத் மேட்டுநிலங்கள் வரையிலும் பயிரிடக்கூடியதாக உள்ளதால் இது உலகளவில் ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. இது தவிர, கோதுமையைக் களஞ்சியப் படுத்தலும், மாவாக்கலும் இலகுவானதாகும். மேலும் இதிலிருந்து உண்ணத்தக்க, சுவையான பல்வேறு உணவுப்பொருட்களையும் ஆக்கமுடியும். பெரும்பாலான நாடுகளில் மாப்பொருளின் முக்கிய ஆதாரமாகக் கோதுமை விளங்குகிறது. கோதுமைப் புரதம் மாவடிவில் உள்ளதால் 99%மான மனிதர்களால் இலகுவாகச் சமிபாடடையச் செய்ய முடியும். மேலும் கோதுமையில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் கொழுப்பு ஆகியன உள்ளன. கோதுமை உணவுகள் மிகவும் சத்து மிக்கன. கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என்பன இரு முக்கியமான வகைகளாகும். ஆயினும், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய உயர்நிலங்களில் விளையும் ஊதாக் கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற சத்துமிக்க ஆயினும் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படாத கோதுமை வகைகளும் உள்ளன. ஊட்டச்சத்து வர்த்தகப் பயன்பாடு அறுவடை செய்யப்பட்ட கோதுமைத் தானியம் பண்டச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கேற்ற விதத்தில் வகைப்படுத்தப்படும். இவ் ஒவ்வொரு வகைக் கோதுமையும் வெவ்வேறு பயன்களைக் கொண்டிருப்பதால் கோதுமை கொள்வனவாளர்கள் தமக்கு வேண்டிய கோதுமையைக் கொள்வனவு செய்வர். இத்தகவல்களைப் பயன்படுத்தி கோதுமை உற்பத்தியாளர்கள் இலாபமீட்டக்கூடிய உரியவகைக் கோதுமை வகைகளைப் பயிரிடுவர். கோதுமை ஒரு பணப்பயிராகப் பரந்தளவில் பயிரிடப்படுகிறது. அலகுப் பரப்பளவில் அதிக விளைச்சல் தருதல், மித வெப்ப வலயத்தில நன்றாக வளரக் கூடியதாய் இருத்தல், வெதுப்புதலுக்கான உயர் தரம்மிக்க மாவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருத்தல் போன்றன இதற்கான காரணங்களாகும்.பாண் வகைகளில் பெரும்பாலானவை கோதுமையைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. ராய் மற்றும் ஓட் பாண் வகைகள் பெரும்பாலும் அவ்வத் தானியங்களையே கொண்டிருப்பினும் அவற்றில் கோதுமையும் கலக்கப்படும். கோதுமை மா உணவுப்பண்டங்கள் மிகவும் பிரபலம் மிக்கவையாக உள்ளதால் கோதுமைக்கு நல்ல கேள்வி உருவாகியுள்ளது. அண்மைக் காலங்களில் கோதுமை விலை உலகச்சந்தையில் குறைவடைந்து வருவதால் ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான விவசாயிகள் வேறு இலாபமீட்டக்கூடிய பயிர்வகைகளில் நாட்டம் காட்டுகின்றனர். 1998ல், ஒரு புசல் கோதுமையின் விலை 2.68 டொலராக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையொன்றின்படி, 1998ல், கோதுமைக்கான இயக்குச் செலவினம் புசலுக்கு 1.43 டொலராகவும், மொத்தச் செலவு புசலுக்கு 3.97 டொலராகவும் உள்ளது. பயிர் நிலமொன்றின் ஏக்கருக்கான சராசரி விளைச்சல் 41.7 புசலாகவும், (2.2435 மெற்றிக் தொன்/எக்டேயர்) விவசாயப் பண்ணையொன்றில் கோதுமையால் பெறப்படும் வருமானம் 31,900 டொலராகவும் உள்ளது. இங்கு பண்ணையொன்றின் மொத்த வருமானம் (ஏனைய பயிர்களையும் சேர்த்து) 173,681 டொலரும், அரசாங்க உதவிப் பணம் 17402 டொலரும் ஆகும்.எனினும், அறுவடை அளவு, அமைவிடம் மற்றும் பண்ணையின் அளவு என்பவற்றிலுள்ள வேறுபாடுகள் காரணமாக இலாபம் பெறுவதில் சிறிதளவு வேறுபாடுகள் உள்ளன. 2007ல் வடவரைக் கோளம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் குளிர் காலநிலை என்பவற்றாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வரட்சியாலும் கோதுமை விலையில் அதீத உயர்ச்சி ஏற்பட்டது.2007 டிசம்பர் மற்றும் 2008 மார்ச் மாதங்களில் இதுவரை கண்டிராத அளவுக்கு கோதுnnbnbnbமை விலை புசலுக்கு 9 டொலருக்கும் கூடுதலாக அதிகரித்தது. பாஸ்டா விலை அதிகரிப்புக்கு எதிராக இத்தாலியில் அதிக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. உயிரி எரிபொருள் பாவனை மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வருமான உயர்வு போன்ற காரணிகளும் கோதுமை விலையில் பாதிப்புச் செலுத்துகின்றன. இதன் காரணமாக அரிசி மற்றும் இறைச்சியுணவுகளை உணவாகக் கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. உற்பத்தியும் நுகர்வும் 2003ல், உலகளவில் நபருக்கான கோதுமை நுகர்வு ஆகக் காணப்பட்டதோடு, நபர்வரி கோதுமை நுகர்வில் முதலிடத்தில் கோதுமை நுகர்வுடன் கிர்கிசுத்தான் காணப்படுகிறது. 1997ல், உலகளாவிய நபர்வீத கோதுமை நுகர்வு ஆகக் காணப்பட்டதோடு, அதிகளவு கோதுமை நுகர்வை டென்மார்க் கொண்டிருந்தது. டென்மார்க்கின் நபர்வீத கோதுமை நுகர்வு ஆகும். எனினும், இதில் பெருமளவு (81%) விலங்குணவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கோதுமை, வட அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் முக்கிய உணவாக உள்ளது. மேலும் ஆசியாவிலும் இது பிரபலம் பெற்று வருகிறது. அரிசியைப் போலல்லாது கோதுமை உற்பத்தி உலகெங்கும் பரவியுள்ளது. எனினும், உற்பத்தியில் ஆறிலொரு பங்கை சீனா உற்பத்தி செய்கிறது. "1990ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருடாந்த கோதுமை உற்பத்தியில் சிறிய அதிகரிப்புக் காணப்படுகிறது. இது பயிரிடல் பரப்பு அதிகரிப்பினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, சராசரி அறுவடையில் ஏற்பட்ட அதிகரிப்பேயாகும். 1990களின் முதல் அரைப்பகுதியில், எக்டேயரொன்றுக்கு 2.5 தொன் கோதுமை அறுவடை செய்யப்பட்டது. ஆயினும் 2009ல் இது 3 தொன்னாக இருந்தது. உலக சனத்தொகை அதிகரிப்புக் காரணமாக, 1990க்கும் 2009க்கும் இடையில் நபருக்கான கோதுமை உற்பத்தி நிலப்பரப்பு தொடர்ச்சியாக குறைவடைந்துள்ளது. இக்காலப்பகுதியில், கோதுமை உற்பத்தி நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், சராசரி அறுவடையிலுள்ள முன்னேற்றம் காரணமாக, நபருக்கான கோதுமை உற்பத்தியில் ஒவ்வொரு வருடமும் சிறு தளம்பல்கள் காணப்படுகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. 1990ல் நபர்வரி உற்பத்தி 111.98 kg/நபர்/வருடம் ஆகக் காணப்பட்டது. எனினும் 2009ல், இது 100.62 kg/நபர்/வருடம் ஆக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி தெளிவாக உள்ளதோடு, 1990ன் நபர்வரி உற்பத்தி மட்டம் சாத்தியமானதாகவும் இல்லை. இதற்குக் காரணம், உலக சனத்தொகை ஏற்பட்டுள்ள அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில், மிகக் குறைந்த நபர்வரி உற்பத்தி 2006ல் பதிவாகியுள்ளது." 20ம் நூற்றாண்டில், உலகளாவிய கோதுமை உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரித்தது. எனினும், 1955 வரை, கோதுமைப் பயிர்ச்செய்கைப் பரப்பு அதிகரிப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இக்காலப்பகுதியில், பரப்புக்கான கோதுமை உற்பத்தி சிறியளவிலான (20%) அதிகரிப்பையே கொண்டிருந்தது. எவ்வாறாயினும், 1955ன் பின்னர் வருடத்துக்கான கோதுமை உற்பத்தி பத்து மடங்காக அதிகரித்தது. இது உலக கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கியது. செயற்கை நைதரசன் உரப்பாவனை, நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் மற்றும் விஞ்ஞான முறை பயிர் முகாமைத்துவம் மற்றும் புதிய கோதுமை இனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானமுறை பயிர் முகாமைத்துவம் என்பன இந் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு வழிகோலின. வட அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் கோதுமைப் பயிரிடல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. சிறந்த விதை களஞ்சியப்படுத்தல் மற்றும் நாற்று உற்பத்தி (இதனால் அடுத்த வருட விதைப்புக்கான விதை ஒதுக்கீடு குறைவடைந்தமை) என்பனவும் 20ம் நூற்றாண்டின் இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாகும். மத்தியகால இங்கிலாந்தில், விவசாயிகள் தமது கோதுமை உற்பத்தியின் கால் பங்கினை அடுத்த வருட விதைப்புக்காக ஒதுக்கினர். இதனால் பாவனைக்கான கோதுமையின் அளவு உற்பத்தியின் முக்கால் பங்காக இருந்தது. 1999ல், விதைக்கான ஒதுக்கீடு உற்பத்தியின் 6%மாக இருந்தது. கோதுமை உற்பத்தியின் உலகளாவிய பரவல் சில காரணிகளால் தற்போது குறைவடைந்து செல்கிறது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் வீழ்ச்சியடையும் அதேவேளை, கோதுமை அறுவடை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. மேலும் சோயா அவரை மற்றும் சோளம் போன்ற ஏனைய பயிர்களின் சிறந்த பொருளாதார இலாபம் மற்றும் நவீன மரபியல் தொழில்நுட்பங்கள் மீதான முதலீடுகள் காரணமாக ஏனைய பயிர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. "எவ்வாறாயினும், அதிகரித்துவரும் சனத்தொகை கோதுமை உற்பத்தியில் அதிகரிப்பை வேண்டி நிற்கிறது. மேலும், வளரும் நாடுகளில் இறைச்சி நுகர்வும் இதற்கு ஒரு காரணமாகும். இரண்டாவதற்கான காரணம், அதிக இறைச்சி உற்பத்திக்கு அதிக கால்நடைத் தீவனம் அவசியமாக உள்ளமையாகும். இதனால் சில நாடுகளில் கோதுமை தன்னிறைவடைதல் மாற்றமடைகிறது. ஒரு சிலர் சிறப்பாக வாழ்தல் ஏனையோரின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையாத ஒரு சிறந்த நிலையை மனித சமுதாயம் அடையும்போது, கோதுமை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பன ஒவ்வொருவரினதும் மிக முக்கிய கடமையாக மாறும். மேலும், தற்போதைய நுகர்வு கொள்கைரீதியில் நிலைத்திருக்கக்கூடியதாயிருப்பினும், நாம் முகங்கொடுக்க வேண்டிய இன்னொரு முக்கிய பிரச்சினை உள்ளது: இப் பிரச்சினையைத் தவிர்த்தாலும், இன்று மக்கள் பட்டினியால் சாகின்றனர். உலகளாவிய ரீதியில் சராசரி நுகர்வு மட்டத்தைப் பார்க்கும் போது உலகின் வெவ்வேறு பகுதிகளில் நுகர்வு மட்டத்தில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கிடையில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிகையான அதேவேளை வீணாகும் உணவு நுகர்வு உள்ளது. ஆயினும், வறிய நாடுகளில், உணவுப் பற்றாக்குறை அல்லது குறைவழங்கல் நிலை காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளில், மக்கள் அதிக நிறை மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும்போது, உலகின் மற்றைய பாகத்து மக்கள் உணவுப்பற்றாக்குறை, குறையூட்டம் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்." பயிரிடல் முறைமைகள் இந்திய மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளிலும் வடக்குச் சீனப் பகுதிகளிலும் சிறப்பான நீர்ப்பாசன வசதிகளால் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில் உரப்பயன்பாட்டின் வளர்ச்சியும் புதிய கோதுமை வகைகளின் கண்டுபிடிப்பும் எக்டேயரொன்றுக்கான அறுவடை அளவை அதிகமாக்கியுள்ளன. அபிவிருத்தியடந்துவரும் நாடுகளில் இக்காலப் பகுதியில் உரப்பயன்பாட்டின் அளவு 25 மடங்காக அதிகரித்துள்ளது. எனினும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதில் உரப்பயன்பாடு மற்றும் புதிய வகை விதைகள் என்பவற்றிலும் பார்க்க பயிரிடல் முறைமைகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. இதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் நடைபெறும் கோதுமை வேளாண்மையைக் குறிப்பிடலாம். இங்கு மழைவீழ்ச்சி குறைவாயிருந்தாலும், சிறிதளவு நைதரசன் உரப் பயன்பாட்டுடன் வெற்றிகரமான அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. அவரைக் குடும்பத் தாவரங்களைச் 'சுழற்சிமுறை'ப் பயிர்களாகப் பயன்படுத்தியமையே இவ் வெற்றிக்குக் காரணமாகும். மேலும், சென்ற பதிற்றாண்டில், கனோலா வகைத் தாவரத்தை சுழற்சிமுறைப் பயிராகப் பயன்படுத்தியதின் விளைவாக கோதுமை விளைச்சல் 25% அதிகரித்துள்ளது. மழைவீழ்ச்சி குறைந்த இப்பிரதேசங்களில் அறுவடையின் பின் அடிக்கட்டைகளை அகற்றாது விடுவதன் மூலமும் நிலம் பண்படுத்தலைக் குறைப்பதன்மூலமும் நிலத்தடி நீர் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. (மேலும் மண்ணரிப்பும் தடுக்கப்படுகிறது) 2009ல், மிகச்சிறந்த உற்பத்தியுடைய நாடாக பிரான்சு உள்ளது. இதன் உற்பத்தித் திறன் எக்டேயருக்கு 7.45 மெற்றிக் தொன்னாகும். 2009ல் அதிக கோதுமை உற்பத்தியுடைய நாடுகளாக சீனா (115 மில்லியன் மெற்றிக் தொன்கள்), இந்தியா (81 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ரசியா (62 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ஐக்கிய அமெரிக்கா (60 மில்லியன் மெற்றிக் தொன்கள்) மற்றும் பிரான்சு (38 மில்லியன் மெற்றிக் தொன்கள்) என்பன திகழ்கின்றன. எனினும், இந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவான அறுவடைக்குப் பின்னான இழப்புகள் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பயிரிடல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப அறிவின்மையேயாகும். இதற்கு மேலதிகமாக, மோசமான வீதியமைப்பு, போதுமான களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, வழங்கல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதியின்மை போன்றனவும் காரணங்களாக உள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, கோதுமை உற்பத்தியில் 10% பயிர்நிலங்களில் இழக்கப்படுகின்றன. மேலும் 10% மோசமான களஞ்சியப்படுத்தல் மற்றும் வீதியமைப்புக்களினால் வீணாகின்றன. மேலும் சிறுபகுதி சில்லறைச் சந்தைகளில் இழக்கப்படுகின்றது. சிறந்த உட்கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சில்லறை வலையமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் 70இலிருந்து 100 மில்லியன் மக்களுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான உணவை இந்தியாவிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. படக்காட்சி மேற்கோள்கள் தானியங்கள் கோதுமை
5464
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
மக்காச்சோளம்
மக்காச்சோளம் அல்லது சோளம் (maize , அறிவியல் பெயர்/தாவரவியல் பெயர் - Zea mays) உலகம் முழுவதும் பயிரிடப்படும்  ஓர் உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலின் தென் பகுதியில் வாழ்ந்த அமெரிக்க முதற்குடிமக்கள் (பூர்வகுடிகள்) முதன் முதலாக உணவுக்காக மக்காச்சோளத்தைப் பயிரிடத் தொடங்கினர். உலகின் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுதவிர இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். சில வகை மக்காச்சோள வகைகளி்ல் இருந்து சோள எத்தனால்,கால்நடைத் தீவனங்கள் மற்றும் மற்ற மக்காச்சோளத் தயாரிப்புகளான சோள மாவுசத்து (corn starch) மற்றும் சோளச் சாறு (corn syrup) ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் குழி மக்காச்சோளம் (dent corn), சோளப்பொறி மக்காச்சோளம், மாவு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம் உள்ளிட்ட ஆறு முக்கிய மக்காச்சோள வகைகள் உள்ளன. இது முதலில் நடு அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்காக் கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் மக்காச்சோளம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 270 மில்லியன் தொன்கள் எடைகொண்ட மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைவைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. எனினும் பெரும்பாலான வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகைகள் பிற மக்காச்சோள வகைகளிலும் குட்டையானவை. பெயர்க்காரணம் "மக்காத சோளம்" என்ற பொருளில் அமைந்த பெயர் உடற்தோற்றம் மற்றும் உடற்செயலியல் மக்காச்கோளமானது 3 மீட்டர் (10 அடி) நீளத்தில் வளர்கிறது. மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் பொதுவாக 20 கணுவிடைப்பகுதிகள் காணப்படும். இவை 18 செ.மீ (7.1 அங்குலம்) நீளம் கொண்டவையாக உள்ளன. மக்காச்சோளம் தனித்துவமான வடிவம் கொண்டதாக வளர்கின்றது. கீழ்ப்பகுதி இலைகள் 50-100 சதமமீட்டர் (சமீ) நீளமும், 5-10 சமீ அகலமும் கொண்டவை. தண்டுப் பகுதி நிமிர்ந்த நிலையில் 2-3 மீட்டர்கள் வரை வளர்கின்றது. மக்காச்சோளக் கதிரானது சில இலைகளுக்கு மேல் தாவரத்தின் மத்திய பகுதியில் இலையடி மடலுக்கும் தண்டிற்கும் இடையே தோன்றுகிறது. இது தோன்றியதிலிருந்து ஒவ்வொரு நாளும் 3 மில்லி மீட்டர் (0.12 அங்குலம்) நீளம் நீட்சியடைகிறது. இக்கதிரானது முற்றிய நிலையில் 18 சென்டி மீட்டர் நீளத்தை அடைகிறது. சில சிற்றினங்களில் கோளக்கதிரானது 60 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இவை மக்காச்சோளத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகும். உண்மையில் இது பல பெண் மலர்கள் நெருக்கமாக அமைந்த மஞ்சரி ஆகும்.நெருக்கமாக இணைந்த அனைத்து மலர்களின் பூத்தளம் கதிர் முற்றிய நிலையில் சோளச்சக்கையாக (உமி) மாறுகிறது. இக்கதிருடன் கூடுதலாக சில கதிர்கள் தோன்றுகின்றன. சில நாட்களான பிஞ்சு நிலையில் இளஞ்சோளக்கதிர் (Baby Corn) என்ற பெயரில் ஆசிய சமையல் பாணியில் முக்கிய சமையற் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தண்டின் நுனியில் பூந்துக் குஞ்சம் தோன்றுகிறது. இது ஆண் மலர்கள் அடங்கிய மஞ்சரியாகும். ஆண் மலர்களில் உள்ள மகரந்தபை முற்றியவுடன் வெடித்து மகரந்தத்தூளினை வெளியேற்றுகின்றன. மக்காச்சோளத் தாவரத்தில் காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் கீழே அமைந்திருக்கும் பெண் மஞ்சரியான சோளக்கதிரில் உள்ள பெண் மலர்களின் சூல் முடியை அடைகின்றன. அங்கு சூலுடன் கருவுறுதல் நடைபெற்று பிக் சூல்கள் விதையாக மாறுகின்றன. கோளக்கதிரில் குறு இலைகளுக்கு வெளியே சூல் தண்டுகள் நீளமாக வெளியே மெல்லிய முடி போன்ற வளரிகள் காணப்படுகின்றன. இது கூலப்பட்டு என அழைக்கப்படுகிறது. கூலப்பட்டு என்பது சோளக்கதிர் நுனியிலிருந்து கற்றையாக அல்லது குஞ்சம் போன்று வெளித்தள்ளியிருக்கும் பளப்பளப்பான, பலவீனமான பட்டுப் போன்ற இழை அமைப்பாகும். சோளக்கதிர் மாற்றுரு அடைந்த இலைகளால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நார் போன்ற அமைப்பும் ஒரு சூலகத்துடன் இணைந்த நீண்ட சூல்முடியாகும். சோள விதையானது உலர் வெடியா கனி வகையாகும். சோள மணிகளானது பட்டாணி அளவில் 2.5 செ.மீ (1 அங்குலம்) நீளத்தில் உள்ளன. மேலும் சீரான வரிசையில் சோள மணிகள் அமைந்திருக்கின்றன. அசாதாரண மலர்கள் சில வேளைகளில் மக்காச்சோள தாவரங்களில் சடுதி மாற்றம் தென்படுகின்றன. அதாவது பெண் மலர்கள் தாவரத்தின் உச்சியில் ஆண் மலர் அமைந்திருக்கும் குஞ்சத்துடன் சேர்ந்து உருவாகிறது. இத்தகைய திடீர் மாற்றங்கள் ts4 மற்றும் Ts6 ஆகிய ரகங்களில் அதிகம் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆண் மலர் மற்றும் பெண் மலர்கள் இணைந்து இருபால் மஞ்சரியாக உருமாறி காட்சியளிக்கின்றன. மரபியல் மக்காச்சோளத்தின் பல வடிவங்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் மக்காச்சோளத்தில் இருக்கும் மாவுச்சத்தின் அளவைப் பொறுத்து துணை இரககங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. மாவு மக்காச்சோளம்: சியா மேஸ் வர். அமிலேசியா சோளப்பொறி மக்காச்சோளம் (Popcorn): சியா மேஸ் வர். எவர்டா குழி மக்காச்சோளம் (Dent corn) : சியா மேஸ் வர்.இன்டென்டேட்டா கடின மக்காச்சோளம் (Flint corn): சியா மேஸ் வர். இன்டுரேட்டா இனிப்பு மக்காச்சோளம் (Sweet corn): சியா மேஸ் வர். சச்சராட்டா மற்றும் சியா மேஸ் வர். ருகோசா மெழுகு மக்காச்சோளம் (Waxy corn): சியா மேஸ் வர். செரட்டினா அமைலோ மக்காச்சோளம் (Amylomaize): சியா மேஸ் உறைய மக்காச்சோளம் (Pod corn): சியா மேஸ் வர். டியூனிகேட்டா வரி மக்காச்சோளம் Striped maize: சியா மேஸ் வர். ஜப்போனிக்கோ மரபணு மாற்றம் 25 மரபணு மாற்றப்பயிற்களில் ஒன்றான மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிரும் 2011 ஆம் ஆண்டு வனிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது. 1997 முதல் ஐக்கிய மாகானம் மற்றும் கனடாவில் இவை பயிரிடப்பட்டு வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு வாக்கில் மரபணு மாற்றம் செய்யப்ப்ட மக்காச்சோளத்தின் அளவு 86 சதவீதம் ஆகும். 2011 ஆம் ஆண்டைய புள்ளிவிபரப்படி உலக அளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் 32% மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஆகும். 2011 ஆண்டு களைக்கொள்ளி சகிப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, எல் சால்வடோர் , ஐரோப்பிய ஒன்றியம், ஹொண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், உருசிய கூட்டமைப்பு, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தாய்வான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டன. மேலும் பூச்சி எதிர்ப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், ஹோண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ருமேனியா, உருசியக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, தைவான் , அமெரிக்கா, மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் பயிரிடப்பட்டன. தீவன மக்காச்சோளம் கால்நடைகளுக்கான தீவனங்களில் முதலாவதாகக் கருதப்படுவது தீவன மக்காச்சோளம் ஆகும். இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும் ஊட்டச்சத்து உற்பத்தி மக்காச்சோளமானது உலகளவில் பரவலாகப் பயிரிடப்படும் ஒரு தானியப்பயிராகும். ஒவ்வொரு வருடமும் மற்ற தானியங்களை விட மக்காச்சோளமே அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. 2014 ல் உலக அளவில் 1.04 பில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டடியலில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 35 சதவீதம் ஆகும். மொத்த உலக உற்பத்தியில் சீனா 21 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சோளத்தில் இருந்து எத்தனால் - சீன வானொலிக் கட்டுரை Maize Genetics and Genomics Database Maize Genetics Cooperation Stock Center தானியங்கள்
5479
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88
வாற்கோதுமை
வாற்கோதுமை (Barley, Hordeum vulgare) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 2007ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி உலகில் அதிகமாக பயிர்விக்கப்படும் ஐந்தாவது தானியமாக வாற்கோதுமை இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இதன் பயிர்க்கொள்ளளவு பதிமூன்று கோடியே அறுபது இலட்சம் தொன்களாகும். உயிரியல் வாற்கோதுமை புல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தன் மகரந்தைச் சேர்கை செய்யக்கூடிய இத்தாவர இருமய உயிரணுவில் 14 நிறமூர்த்தங்கள் (chromosomes) காணப்படுகின்றன. தற்போது உணவுப் பயன்பாட்டிற்காக விளைவிக்கப்படும் வாற்கோதுமை (Hordeum vulgare) அதன் காட்டு மூதாதையரான ஸ்பொண்டனியத்தின் (spontaneum) துணைபிரிவினம் ஆகும். இது பரவலாக மேற்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆபிரிக்காவின் வளமான செழிப்பு பகுதி முழுவதும் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் ஏராளமாக வளர்கின்றன . மேலும் நெரிசலான வாழ்விடங்கள், சாலைகள் மற்றும் பழத்தோட்டங்களில் கூட சாதாரனமாக வளர்கின்றன. இருப்பினும், மரபணு பரவல் மற்றும் பன்முகத்தன்மையை குறித்த ஒரு ஆய்வில், திபெத் பயிரிடப்பட்ட வாற்கோதுமையின் கூடுதல் மையமாகக் கண்டறியப்பட்டது மனிதப் பயன்பாடு வனங்களில் காணப்பட்ட வாற்கோதுமையில் எளிதில் உடையக்கூடிய நுனிவளர் பூந்துணர்கள் காணப்பட்டன. முதிர்ச்சியடையும்போது, அவற்றிலிருந்து சிதறும் சிறு பூக்கள் (spikelets) விதை பரவுதலுக்கு துணை புரிகின்றன. ஆனால் விளைவிக்கப்படும் வாற்கோதுமையில் எளிதில் உதிராத பூந்துணர்கள் காணப்படுகின்றன. இதனால் பயிர் முற்றியவுடன் எளிதாக அறுவடை செய்ய முடிகிறது. இந்த எளிதில் உதிராத தன்மை இத்தாவர நிறமூர்த்தத்தில் காணப்படும் இரண்டு பிணைந்த மரபணுக்களான Bt1 மற்றும் Bt2 ஆகியவற்றில் மரபணு திடீர்மாற்றம் அடைந்ததால் உண்டாக்கப்பட்ட பண்பாகும். அனேகமான பயிரிடும்வகைகளில் இரு மரபணுக்களிலும் இம்மாற்றம் காணப்பட்டது. இப்பண்பு மரபணுவின் ஒரு பின்னடைவான தன்மையுள்ளதாக இருப்பதனால், மாற்றுருக்கள் ஒத்தினக் கருவணு அல்லது சமநுகத்துக்குரியதாக (homozygous) இருக்கும் நிலைமையில் மட்டுமே வெளிப்படும். வரலாறு பயிரிடப்படும் வாற்கோதுமை தற்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் காட்டின வாற்கோதுமையிலிருந்து வழி வந்தது. இவ்விரு வகைகளுமே இருபடை மரபுத்தாங்கிகள் (2n=14 chromosomes; diploid) கொண்டவை. கலப்பினம் செய்யின் எல்லா வகை வாற்கோதுமை தாவரங்களுமே வளரும் விதை கொடுக்கும் தன்மை உள்ளனவாய் இருப்பதால், இவ்வெல்லா வகைகளும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன. பயிரடப்படும் வாற்கோதுமைக்கும் காட்டின வாற்கோதுமைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் பூங்கொத்துக்காம்பு தான். காட்டின வாற்கோதுமையின் பூங்கொத்துக்காம்பு எளிதில் உடையக்கூடியது அதன் சுய விருத்திக்கு உதவும் வகையில் அமைகிறது. வாற்கோதுமை பற்றிய முதல் ஆதாரங்கள் பழங்கற்கால லெவான்ட் பகுதியின் நட்டுஃபியன் கலாசார எச்சங்களில் கானப்படுகின்றன. பயிரடப்பட்ட வாற்கோதுமையின் எச்சப்படிமங்கள் சிரியாவிலுள்ள பழங்கற்காலத்தின் டெல் அபு குரெஇராவில் காணப்பட்டன. வாற்கோதுமையும் கோதுமையும் சம காலகட்டத்தில் பயிர் செய்யத் துவங்கப்பட்டதாகத் தெரிகிறது. பூமியின் பண்டைய மற்றும் முக்கிய அரும்பரிசாகக் கருதப்பட்டதால் வாற்கோதுமைக்கு, எலூசீனிய மர்மங்களின் ஆரம்ப நிலைகளிலிருந்து மதக்கலாசார முக்கியத்துவம் காணப்பட்டிருந்தது. இம்மர்மங்களின் கடவுளான டெமெட்டரின் வழிபாட்டு பாடல்களில் காணப்படும் கைகியான் எனப்படும் பானகம், வாற்கோதுமை மற்றும் மூலிகைகள் கலந்து செய்யப் பட்டதாகும். குறிப்பாக டெமெட்டெர் "வாற்கோதுமைத்தாய்" என்றும் அழைக்கப்பட்டார். வாற்கோதுமை மணிகளை வறுத்து கூழ் காய்ச்சுவது கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டதாக கையஸ் ப்லினியுஸ் செகுன்டஸின் "இயற்கை வரலாறு" தெரிவிக்கிறது. இம்முளைக்கூழ் நுண்ணுயிர் பகுப்பு மூலமாக சற்றே சாராயமுள்ள பானமாகிறது. இரகங்கள் மேற்கு ஆசியாவிலும் வடகிழக்கு ஆப்ரிக்காவிலும் காட்டு வாற்கோதுமை வகை அதிகமாக விளைகிறது. உலகின் மற்ற பகுதிகளில் இந்த வாற்கோதுமை அதிகமாக விளைவதில்லை. திபெத்து நாட்டில் வாற்கோதுமை வீட்டுத் தானியமாக விளைவிக்கப்படுகிறது. மேலும் பயிரிடப்படும் வாற்கோதுமை இரகங்களை முன்பனிக்கால வகைகள், வசந்தகால வகைகள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றுடன் கரடி என்றழைக்கப்படும் ஒரு மூலமறியப்படாத இரகத்தையும் சேர்க்கலாம். இந்த இரகம் மற்ற இரு இரகங்கள் அளவே மகசூல் கொடுப்பினும் குறைவான குண நலங்களே பெற்றுள்ளது. முன்பனிக்கால இரகம் கோதுமை போலவும், வசந்த கால இரகம் ஓட் போலவும் பயிரிடப்படுகின்றன. பிரிட்டனில் முன் காலத்தில் வாற்கோதுமை கோடைத்தரிசு நிலங்களில் பல்வேறு பெயர்களுடன் பயிரடப் பட்டு வந்தது. வசந்தகால வாற்கோதுமை பயிரிட சிறந்த பருவம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களாகும் (பின் மாசி முதல் முன் சித்திரை வரை). இருப்பினும், மிகத்தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களும் நல்ல மகசூல் தந்துள்ளன. வாற்கோதுமை சிற்றினங்கள் பூங்கொத்தின் மணி வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் பிரிக்கப் பட்டுள்ளன. இரு வரிசை வாற்கோதுமை (Hordeum distichum), நால் வரிசை வாற்கோதுமை (Hordeum tetrastichum) மற்றும் அறு வரிசை வாற்கோதுமை (Hordeum vulgare) என இவை தொன்றுதொட்டு அறியப்பட்டுள்ளன. இவ்வெல்லா சிற்றினஙளிலும் பாதி எண்ணிக்கை மலர்களே விருத்தி செய்யும் தகுதி படைத்தவையாய் உள்ளன. தற்கால வாற்கோதுமை பெரும்பாலும் Hordeum vulgare சிற்றினமாகும். இவற்றுள் இரு வரிசை வாற்கோதுமை மிகப் பழமையானது; காட்டின வாற்கோதுமை வகைகள் இருவரிசை வாற்கோதுமையாகவே காணப்படுகின்றன. இரு வரிசை வாற்கோதுமை அறுவரிசை வாற்கோதுமையை விடக் குறைவான புரதமும், அதிக உருமாற்றப்புரதக்காரணியும் (enzyme) கொண்டுள்ளது. அறுவரிசை வாற்கோதுமை தீவனமாகவும், பிற பொருள் கலந்த முளைக்கூழ் உருவாக்கவும் உகந்ததாகும். இரு வரிசை வாற்கோதுமை தூய முளைக்கூழ் உருவாக்க உகந்ததாகும். நால் வரிசை வாற்கோதுமை நுண்ணுயிர் பகுப்புக்கு உகந்ததல்ல. தற்கால மரபின ஆய்வு இருவரிசை வாற்கோதுமையில் மியூட்டேசன் நடப்பதால் அவை ஆறு வரிசை வாற்கோதுமையாக மாறுவதாக காட்டுகின்றன. மேலும், தீட்டப்பட வேண்டிய (கூடுள்ள) மற்றும் கூடற்ற வாற்கோதுமை எனவும் பார்லியை வகைப்படுத்தலாம். இவற்றுள் கூடுள்ள வகைகள் தொன்மையானவை. உற்பத்தி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய வாற்கோதுமை விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:. அதிகளவில் வாற்கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகள் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 144 மில்லியன் டன் வாற்கோதுமை உற்கத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் உருசிய நாட்டின் பங்கு மட்டும் 14 சதவீதமாகும். அட்டவணையில் இரண்டு மற்றும் மூன்றாமிடத்தில் முறையே பிரான்சு மற்றும் செருமனி ஆகிய நாடுகள் உள்ளன. 2010ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேல் வாற்கோதுமை உற்பத்தி செய்த நாடுகள் வேதியியல் வாற்கோதுமையில் (H. vulgare) பீனாலிக் காபிக் அமிலம் (phenolics caffeic acid) மற்றும் பீனாலிக் கவுமாரிக் அமிலம் ( p-coumaric acid), பெரூலிக் அமிரம் (the ferulic acid), 8, 5' டிபிருலிக் அமிலம் (8,5'-diferulic acid) , பிளேவினாய்டு கேட்டச்சின்-7-0-குளுகோசைடு (flavonoids catechin-7-O-glucoside) , சபோனாரின் (saponarin), கேட்டச்சின் catechin, புரோசயனடின் பி3 procyanidin B3, புரோசயனடின் சி2 ( procyanidin C2), மற்றும் புரோடெல்பினிடின் பி3 (prodelphinidin B3) , மற்றும் காரப்போலி ஹோர்டீனின் ( alkaloid hordenine) ஆகிய வேதிய பொருட்கள் உள்ளன. பயன்கள் வாற்கோதுமை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான உணவு தானியமாகும். வாற்கோதுமை உவர்மண்ணில் கோதுமையைக் காட்டிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இதனாலேயே கி.மு இரண்டாயிரத்தில் மெசபடோமியாவில் வாற்கோதுமை பயிரிடுதல் அதிகரித்திருக்கலாம். அதே போல ரை பயிரைக்கட்டிலும் அதிக குளிர் தாங்கும் சக்தியும் வாற்கோதுமைக்கு உண்டு. வாற்கோதுமை முளைக்கூழ் பியர் மற்றும் விஸ்கி தயாரிப்பில் ஒரு முக்கிய இடுபொருளாகும். மேற்கோள்களும் குறிப்புகளும் தானியங்கள்
5480
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B
மாஸ்கோ
மாசுகோ (Moscow, (உருசிய மொழி: Москва́, [mɐˈskva]) உருசியா நாட்டின் தலைநகரமாகும். இது மசுகுவா ஆற்றுக்கரையில் அமைந்துள்ளது. உருசிய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரம் உருசியாவிலும் ஐரோப்பாவிலும் முதன்மையான அரசியல், பொருளியல், பண்பாடு, அறிவியல் மையமாக விளங்குகிறது. இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாசுகோ உருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. உருசிய பேரரசர்கள் அல்லது சார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்சுபேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் 1918 ல் உருசியாவின் தலைநகராக்கப்பட்டது. 1922 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் தலைநகராகவும் மாசுகோவே விளங்கியது. ஃபோர்ப்சு இதழ் வெளியிடும் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் 2012இல் மிகக் கூடுதலான பில்லியனர்களைக் கொண்ட இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ளது. புவியின் மிகவும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெருநகரமாகவும் ஐரோப்பாவிலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் உலகின் ஆறாவது மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகிறது. 1960 ல் மாசுகோவின் பரப்பளவு 885 சதுர கிலோமீற்றராக அதிகரிக்கப்பட்டது. 1980 களில் மீண்டும் புறநகர் பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது. 2012இல் தென்மேற்கில் மேலும் விரிவாக்கப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு ஆக மேலும் 2.5 மடங்கு கூடியுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு மாசுகோவின் மக்கள்தொகை 233,000 ஆக உள்ளது. வரலாற்றுச் சுவட்டில் பல இராச்சியங்களின் தலைநகராக மாசுகோ விளங்கியுள்ளது. நடுக்காலத்தில் மாசுகோ குறுநில மன்னராட்சிக்கும் தொடர்ந்து சார் மன்னர்களாட்சிக்கும் பின்னர் எழுந்த சோவியத் ஒன்றியத்திற்கும் தலைநகரமாக விளங்கியது. மாசுகோவில்தான் நடுக்காலத்தில் கோட்டையாகவும் தற்போதைய அரசுத்தலைவர் மாளிகையாகவும் உள்ள கிரெம்லின் உள்ளது. கிரெம்லின் நகரில் உள்ள பல உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக உள்ளது. உருசிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், டூமா மற்றும் கூட்டாட்சி அவை, இங்குதான் கூடுகின்றன. நகரின் போக்குவரத்துத் தேவைகளுக்காக நான்கு பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் ஒன்பது தொடர்வண்டி முனையங்களும் உலகின் மிகுந்த ஆழத்தில் செல்லும் புவியடி விரைவுத் தொடருந்து பிணையமும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாசுகோவின் மெற்றோ தோக்கியோ, சியோல் மெற்றோக்களை அடுத்து மிக் கூடுதலான பயணிகள் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. இந்தப் பிணையத்தின் 188 நிலையங்களும் அவற்றின் கட்டிட வடிவமைப்பிற்காக நகரத்தின் முதன்மைக் குறியீடுகளாக விளங்குகின்றன. காலவோட்டத்தில் மாசுகோவிற்கு, அதன் அளவையும் அதிகார மையத்தையும் கொண்டு, பல பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன: மூன்றாம் உரோமை (), வையிட்சுடோன் ஒன்று (), முதல் அரியாசனம் (), நாற்பது நாற்பதுகள் (). வரலாறு மாஸ்கோ என்பதற்கு " மசுகுவா ஆற்றினை அடுத்த நகரம்" என்று பொருளாகும். முதன்முதலில் மாஸ்கோ என்ற பெயரை பயன்படுத்தியதற்கான சான்றை பொ.ஊ. 1147இல் காணலாம்: நோவ்கார்டு-செவர்சுக்கியின் இளவரசனை யூரி டோல்கோருக்கி மாஸ்கோவிற்கு வருமாறு அழைக்கிறார். ஒன்பதாண்டுகளுக்குப் பின்னர், 1156 இல், உரோசுத்தோவின் இளவரசர் யூரி டோல்கொருக்கி வளர்ந்து வந்த நகரைச் சுற்றிலும் மரத்தினால் ஆன சுவரை, கிரெம்ளின், எழுப்ப ஆணையிட்டார்; இது பலமுறை மீளவும் கட்டப்பட்டுள்ளது. 1237–1238 இல் மங்கோலியர்கள் நகரத்தை முழுமையாக தீக்கிரையாக்கினர்; குடிமக்களைக் கொன்றனர். இதன் பிறகு 1327இல் நகரம் மீண்டெழுந்து தன்னாட்சி பெற்ற விளாடிமிர்-சுசுதால் ஆட்சிப்பகுதியின் தலைநகராயிற்று. வோல்கா ஆற்றின் தலைமுனையில் அமைந்திருந்ததால் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. மாஸ்கோ ஆட்சிப்பகுதி நிலையான வளமிகு ஆட்சிப்பகுதியாக (மாஸ்கோ பெரிய குறுநாடு என அழைக்கப்பட்டது) மாறியது. பலவேறு பகுதிகளிலிருந்தும் அகதிகள் இங்கு வந்து குடியேறினர். மாஸ்கோவின் முதலாம் இவான் காலத்தில் அரசியல் மையம் திவெரிலிருந்து மாஸ்கோவிற்கு மாற்றப்பட்டது. மங்காலிய தாதார் மன்னர்களுக்கு வரிகளை வசூலித்து சேகரிக்கும் நகரமாக மாஸ்கோ விளங்கியது. வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு மாஸ்கோவில் எதிர்ப்பு வளர்ந்தது. 1380இல் இளவரசர் திமித்ரி டோன்சுகோய் கோல்டன் ஹோர்டு எனப்படும் டாடார்களுக்கு எதிராக போரிட்டு குளிகோவோ என்றவிடதில் வென்றான். ஆனால் இரண்டாண்டுகளில் மீண்டும் டோக்டமிஷ் கானால் பிடிக்கப்பட்டது. 1480இல் உருசியாவின் மூன்றாம் இவான் உக்ரா ஆற்றின் கரையில் டாடார்களிடமிருந்து இறுதியாக விடுதலை பெற்றுத் தந்தார். மாஸ்கோ மீண்டும் உருசியாவின் அதிகார மையமானது. மூன்றாம் இவானின் கீழ் நகரம் உருசியப் பேரரசின் தலைநகரமாயிற்று. பொ.ஊ. 1571இல் கிரிமிய டாடார்கள் மாஸ்கோவைத் தாக்கி கொள்ளையடித்தனர்; கிரெம்ளினைத் தவிர அனைத்தையும் தீக்கிரையாக்கினர். 1609இல் சார் மன்னர் நான்காம் வாசிலிக்கு உதவ கிரேட் நோவ்கோரொடிலிருந்து சுவீடியப் படை அணிவகுத்து வந்தது. 1610இல் மாஸ்கோவை அடைந்த இப்படை சாருக்கு எதிரான எழுச்சியை அடக்கியது; 1611இல் அவர்கள் வெளியேறிய பின்னர் போலந்து–லித்துவேனியா படையெடுத்தது. அப்போது குளுசினோவில் நடந்த போரில் உருசியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 17வது நூற்றாண்டில் பல மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன. உருசியாவின் சிக்கலான காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் போலந்து-லித்துவேனியாவிடமிருந்து விடுதலை (1612), உப்புக் கலவரம் (1648), செப்புக் கலவரம் (1662), மற்றும் 1682 ஆண்டு மாஸ்கோ கலவரங்கள் நடைபெற்றன. பொ.ஊ. 1570–1571, 1592, மற்றும் 1654–1656 காலங்களில் பிளேக்கு கொள்ளைநோய்க்கு மாஸ்கோ ஆட்பட்டது. 1712இல் உருசியாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பால்டிக் கடலோரத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டர் கட்டியிருந்த சென் பீட்டர்ஸ்பேர்க்குக்கு மாற்றப்பட்டது. 1771இல் ஏற்பட்ட பிளேக்கு தாக்குதல் மாஸ்கோவில் மட்டும் 100,000 உயிர்களை பலிகொண்டது. 1812இல் பிரெஞ்சு படையெடுப்பின்போது நெப்போலியனின் படைகள் செப்டம்பர் 14இல் நகரத்தை அண்மித்தபோது, மாஸ்கோ நகரத்தவர் தங்கள் நகருக்குத் தாங்களே தீ வைத்து விட்டு காலி செய்தனர். . நெப்போலியனின் படைகள், பசி, குளிர் மற்றும் உணவு வழங்கலில் தடை காரணமாக பின்வாங்க நேரிட்டது. உருசியக் குளிரில் பலர் மடிந்தனர்; அவ்வப்போது தாக்கிய உருசியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.இந்தப் போரில் 400,000 வீரர்கள் இறந்ததாக மதிப்பிடப்படுகின்றது. சோவியத் காலத்தில் சோவியத் அரசு கைத்தொழில் பேட்டைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டது. 90 வீதமான வீட்டுதொகுதிகள் 1955 க்குப்பின்னரே கட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலான வீட்டுத்தொகுதிகள் பல அடுக்குகளை கொண்ட் அடுக்குமாடிகளாகவே காணப்பட்டது. இதன் மூலம் அரசு மக்களின் வீடு இல்லா பிரச்சனைக்கு தீர்வுகண்டது. 1992 ஜனவரியில் அரசு சிறு தொகையை செலுத்துவதன் மூலம் இந்த அடுக்கு மாடிகளை குடியிருப்பாளர் அதனை சொந்தமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே குறித்த மக்களிற்கான கடைகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் அளவுகளிற்கான அரச கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள்தொகை மாஸ்கோ சுமார் 8,304,600 அளவான மக்கள் தொகையை கொண்டுள்ளது. நகர மக்கள்தொகையில் பெரும்பான்மையாக ருசியர்களே உள்ளனர், இதைவிட யூதர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக இருந்த போதும் யூத மதம், இஸ்லாம் போன்ற மதங்களும் பின்பற்றப்படுகின்றன. 1970-1990 இடைப்பட்ட காலத்தில் நகரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் சுமார் 1.21 இல் இருந்து 0.26 வீதமாக வீழ்ச்சி அடைந்தது. இரண்டாம் உலகப்போரில் 1939 – 1945 வரை சோவித் படைகளின் தலமைப்பீடமாக மாஸ்கோ விளங்கியது. 1941 அக்டோபரில் நாசி ஜேர்மன் மாஸ்கோ நகரை நெருங்கியபோதும் ருசியப்படைகளின் எதிர் தாக்குதலால் பின்வாங்கிச்சென்றனர். காலநிலை இவற்றையும் காணவும் ரஷ்யா லெனின் மேற்சான்றுகள் மேலதிக தகவலிற்கு Brzezinski, Matthew. Casino Moscow: A Tale of Greed and Adventure on Capitalism's Wildest Frontier. Free Press, 2001 Dutkina, Galina. Moscow Days: Life and Hard Times in the New Russia. Trans. Catherine Fitzpatrick. Kodansha America, 1995, ஒரு ஊடகவியலாளனின் பார்வையில் Richardson, Paul E. Moscow Business Survival Guide. 3rd ed. Rough Guides, 2001. வெளி இணைப்புகள் Moscow.ru – Official Moscow Site Official Moscow Administration Site Moscow - at the Marshrut-Turista.Ru ஐரோப்பியத் தலைநகரங்கள் உருசிய நகரங்கள் ஆசியத் தலைநகரங்கள் உருசியாவின் தன்னாட்சி நகரங்கள்
5481
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29
பால் (பானம்)
பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் மஞ்சள் நிறப்பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் தாயிடமிருந்து குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றது. பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன. பாலின் வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உபப்பொருட்களைப் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், தோய்த்து (அ) கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும் சுவையும் மிக்க நெய்யையும் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதின் மூலம் பாலாடைக்கட்டியையும் பெற இயலும். 2011ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால் பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும். அதுமட்டுமல்லாது கொழுப்பு நீக்கிய பதனிட்ட பால் பொடி ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பாலும், அதன் உபப்பொருட்களின் உள்நாட்டு தேவை இந்தியாவில் அதிகரிப்பதால் எதிர்வரும் காலங்களில் பால் இறக்குமதி செய்யப்படலாம். ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா, மற்றும் பிரேசில் போன்றவை உலகின் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஆகும். 2016ஆம் ஆண்டு வரையிலும் சீனா, உருசியா நாடுகள் தங்கள் பால் தேவையில் தன்னிறைவு அடையும் வரையிலும் உலகின் பாலிறக்குமதி நாடுகளில் முன்னிலை வகித்தன. உலகளவில், பால் மற்றும் பால் பொருட்களை 6 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 750 மில்லியன் மக்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். பால் பற்றிய இலக்கியக் குறிப்புகள் திருக்குறளில் பாலின் பண்பு ஒப்புமை : பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.-(குறள்: 1000) பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்.-(குறள்: 1121) வரலாறு மனிதன் அல்லாத மற்ற பாலூட்டிகளிடத்திலிருந்து உணவுக்காக பால் பெறும் வழக்கம் புதிய கற்காலத்தில் அல்லது விவசாயம் தொடங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டது ஆகும். இதன் வளர்ச்சி கி.மு 7000 முதல் 9000 ஆண்டுகள் வாக்கில் தென்கிழக்கு ஆசியாவிலும், கி.மு 3500 முதல் 3000 காலங்களில் அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கின்றன. கறவை மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப காலங்களில் பால் எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளிலிருந்தே ஆரம்ப கால தெற்காசியாவில் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள் தோல் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பின் கி.மு நான்கு முதல் பாலூட்டிகளை வளர்த்து அதனிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது. கி.மு ஏழு ஆகிய காலங்களிளிருந்து பாலூட்டிகளிடமிருந்து பால் பெறும் வழக்கம் தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவியது. பின் அங்கிருந்து அரேபியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு பரவியுள்ளது. பால் உற்பத்தி மூலம் வேளாண்மைப் பொருட்களின் பட்டியலிலுள்ள பாலானது மனிதனல்லாத கால்நடைகளிடமிருந்து அவற்றின் கருத்தரிப்பு கடந்த சமயம் முதல் கறந்து எடுக்கப்படுகிறது. காது மடல் வெளியில் இருக்கும், தோலின் மீது உரோமங்களையும் கொண்டு, பாலௌஉட்டும் சுரப்பிகளைக் கொண்ட அனைத்து உயிரினங்களும் பாலூட்டிகளாகும். இவற்றில் சில மிருகங்களின் பாலினையே மனிதன் உணவாகப் பயன்படுத்துகின்றான். பின் வரும் விலங்குகளின் பால் மனிதனால் உணவிற்குப் பயன்படுத்தப் படுகின்றது. ஆ (பசு) ஆடு எருமை குதிரை ஒட்டகம் தொழில்மயமாக்கல் பால்வளத் தொழில் நுட்பம் பால் குழந்தைகளுக்கு இன்றியமையாத எளியவகை ஊட்டச்சத்தாகும். பால் ஒரு முக்கிய உணவுப்பொருளாகவும், தொழில்துறையில் பாலின் பங்கு அளப்பறியது. பால் உற்பத்தி, சேமிப்பு, சேகரித்தல் (அ) கொள்முதல், நுகர்தல், மற்றும் விற்பனை போன்றவை பற்றி அறிந்து பால்வளத்தைப் பெருக்கும் தொழில்நுட்பம் பால்வளத்தொழில் நுட்பம் ஆகும். உலகம் முழுவதிலும் பால் உற்பத்தி உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 2010 இல் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலாவதாகவும் அதன் பின் அமெரிக்காவும் அதனைத்தொடர்ந்து சீனாவும் பின் செருமனியும் பின் பிரேசிலும் அதன் பின் உருசியாவும் உள்ளன. 2011இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக சுமார் 138 மில்லியன் டன்கள் அளவு பாலை உற்பத்தி செய்தன. உலகம் முழுவதிலும் உள்ள முதல் 10 தரவரிசையிலுள்ள ஆடு, எருமை, மாட்டு பால் உற்பத்தி நிலவரம் 2013 வரையிலுமான தகவல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பால் தர நிர்ணயம் பாலின் தரம் பொதுவாக அதிலுள்ள கொழுப்பு, தூய்மை, நுண்ணுயிர் நீக்கம், நீரின் அளவு, திரியும் காலம் ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். அமெரிக்காவில் பால் இரு வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. தரம் ஏ (Grade A), கடைகளில் நேரடி நுகர்வுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தரம் பி (Grade B), பால் உபப்பொருட்கள் உற்பத்திக்காக பயன் படுத்தப்படுகிறது (சான்றாக : பாலாடைக்கட்டி உற்பத்தி). தரம் பி பொதுவாக பால் கொள்கலனில் அடைக்கப்பட்டு அதிகம் குளிர்விக்கப்படுகிறது. பின்னர் பால் பொருட்கள் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தோடல்லாது, நியூசிலாந்து நாட்டில் பாலில் மேலும் A1, A2, என்ற தரவகைகளும் உண்டு. ஏ1 பாலானது கலப்பின மாடுகளிலிருந்தும், ஏ2 பாலனது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பசுக்களிடமிருந்தும் பெறப்படுகின்றன. ஏ2 பசுக்களின் பால் அதிக நோயெதிர்ப்பு ஆற்றல் மற்றும் நோய் பெற்றிருப்பதாகவும் அறியப்படுகிறது. பாலின் புரத வகையுள் 80% கேசின் எனும் புரத்தால் ஆனது. ஏ2 பசுக்களின் பாலில் பீட்டா (β) கேசின் புரதத்தின் அமினோ அமிலமான புரோலின் உள்ளது. ஆனால் மரபுப்பரிமாற்றம் (அ) கலப்பினம் செய்யப்பட்ட ஏ1 பாலில் புரோலின் புரதம் ஹிஸ்டிடின் ஆக கலப்பினத்தால் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் கலப்பினப் ப்சுக்களிடமிருந்து பெறும் பாலில் நோயெதிற்பாற்றல் குறைவாக உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஏ1, ஏ2 பால் தரப்பிரிப்பு சட்ட சிக்கல்களுக்கும், வர்த்தக ரீதியாக அமெரிக்கா, ரஸ்யா, மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அரசியலாக்கப் பட்டுள்ளது. பால் இயற்பியல், வேதியற் பண்புகள் பாலின் இயற்பியற் பண்புகள் நிலை பாலின் இயற்பியற் பண்பு நிலை அதன் அடர்த்தி மற்றும் எடையைப் பொருத்து திரவ கூழ்ம நிலை ஆகும். அமில, கார நிலை காரகாடித்தன்மைச் சுட்டெண் (அ) pH - 6.4 - 6.8 (மாற்றத்திற்குரியது) பாலின் வேதிய உட்பொருட்கள் கொழுப்புகள் பாலில் உள்ள கொழுப்புகள் கொழுப்புப்படலம் சூழப்பட்ட முட்டை போன்ற அமைப்புகளால் ஆனது ஆகும். உட்பகுதி ட்ரைக்லிசரல்ஸாலும், வெளிப்படலம் புரதங்களுடன் கூடிய பாஸ்போலிபிடுகளாளேயும் உருவாக்கப்பட்டது ஆகும். கொழுப்பைக் கரைக்கக் கூடிய உயிர்ச்சத்துக்களான ஏ, டி, இ, கே ஆகியவை லினோலிக் மற்றும் லினோலினிக் ஆகிய அமிலங்களுடன் சேர்ந்து பாலின் கொழுப்பில் காணப்படுகின்றது. புரதம் ஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கலந்துள்ள முக்கிய புரதவகை கேசின் எனப்படும். உப்புகள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள் பாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடக்கின்றன. பொதுவாக இவை அனைத்தும் பாலில் 5-40 mM அளவில் கலந்திருக்கின்றன. பாலில் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி 12, சி, டி, கே ஆகிய வைட்டமின்களும், மின், தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின், ஃப்ளோட்ஸ் மற்றும் பேண்டோதெனிக் ஆகிய அமிலங்களும் பாலில் கலந்துள்ளன. கார்போஹைட்ரேட்டுகள் பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.லாக்டோஸ், குளுக்கோஸ், காலக்டாஸ் மற்றும் பிற ஒலிகோசகரைடுகள் உள்ளன. இதில் லாக்டோஸ் பாலிற்கு இனிப்பு சுவையினைத் தருகின்றது. இவை அனைத்தும் தவிர கறக்கப்பட்ட பாலில் வெள்ளை இரத்த அணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் காணப்படுகின்றன. பால் பதனிடல் பால் உற்பத்திப் பொருட்கள் பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே பால் உற்பத்திப் பொருட்களாகும்.இவை அனேகமாக பாலை பதப்படுத்தி செய்யப்படுகின்றது. பால் உற்பத்திப் பொருட்களாவன: தயிர் வெண்ணெய் மோர் பால் பை பால் கோவா பனீர் நெய் பாலின் பயன்கள் பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. பால் சரும பளபளப்பைக் கொடுக்கின்றது. அதிகப்படியான கால்சிய சத்தினைக் கொண்டுள்ளதால் எலும்பினை வலுவுறச்செய்கின்றது. இருதய நோய் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான ஆபத்தை பால் குறைக்கின்றது. உடல் எடையைக் குறைப்பதற்கும் பால் பயன்படுகின்றது. குறிப்புகளும் மேற்கோள்களும் வெளியிணைப்புகள் Virtual Museum Exhibit on Milk, Cream & Butter இவற்றையும் காணவும் பால் கறக்கும் எந்திரம் டெவில் இன் தி மில்க் பானங்கள் பால் பால் பண்ணை தொழில் விலங்குப் பொருட்கள்
5485
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8.%20%E0%AE%AE%E0%AF%81.%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944) 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது. பிறப்பு 2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் கள்ளர் இனத்தில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர். கல்வி அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம்ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம்(1906), பண்டிதம் (1907)ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார். பணி தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டு பணியாற்றினார். திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 23 ஆண்டுகள் பணிபுரிந்தார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக எட்டு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பினார். தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார். தமிழறிஞர்கள் தொடர்பு 1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார். ஆக்கங்கள் வேளிர் வரலாறு (1915) நக்கீரர் (1919) இந்நூல் இலண்டன் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது) கபிலர் (1921) கள்ளர் சரித்திரம் (1923) சமுதாய வரலாறாகக் கருதப்படும் இந்நூல், "கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது" என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பட்டது. மு. கருணாநிதி, தனது தென்பாண்டிச் சிங்கம் நூலின் முன்னுரையில்,‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று எழுதியுள்ளார். கண்ணகி வரலாறும் - கற்பும் மாண்பும் (1924) சோழர் சரித்திரம் (1928) கட்டுரைத் திரட்டு சில செய்யுள்கள் காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது உரைகள் எட்டுத்தொகை நூல்கள் அகநானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னா நாற்பது களவழி நாற்பது கார் நாற்பது காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை அறநூல்கள் மேலே கண்ட ஏழுநூல்களும் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிநூற்கொத்து என்னும் தலைப்பில் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் நிறுவனத்தால் தொகைநூலாக வெளியிடப்பட்டது புராணங்கள் திருவிளையாடற் புராணம் (அ.ச.ஞானசம்பந்தன் அவர்தம் தந்தையார் அ.மு.சரவண முதலியாருடன் இணைந்து தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்டது) உரை திருத்தம் (1) அகத்தியர் தேவாரத் திரட்டு, (2)தண்டியலங்காரப் பழைய உரை, (3) யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றிற்குத் தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க உரைத்திருத் தங்களும் எழுதினார். பட்டம் வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது. இவரின் சொற்பொழிவு என்பது புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வுக் குறிப்போ இல்லாது அமையாதாதலின் அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல தமிழன்பர்கள் தொலை தூரத்திலிருந்து நடந்தே வந்து கேட்டு இன்புறுவர். கனவு நனவானது தமிழ் தமிழர் வளர்ச்சி குறித்து இன்றைக்கு எண்பது ஆண்டுக்கு முன்னரே தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து உரைத்த பெருமகனார் நாவலர். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிப்படையாகக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் அதனைத் திருவருள் கல்லூரி என்ற பெயரில் அமைக்கவும் 1922-23ஆம் ஆண்டுகளில் கல்லல் ஸ்ரீ குகமணிவாசக சரணாலயம் நிறுவிய வேப்பங்குளம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் உதவியுடன் முயன்றார்.மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் தனது சொத்துக்களிலிருந்து 200 ஏக்கர் நிலம் கல்லூரி நிர்மாணிப்பதற்காக ஒதுக்கினார்.பிற்காலததில் அது பலரால் கையகப்படுத்தப்பட்டு விட்டது. 1980களில் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம். கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் நாவலர் கனவு கண்ட திருவருள் கல்லூரியையும் அதே பெயரில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் தனித்தமிழ்க் கல்லூரியாக நிறுவி நடத்தி வருகிறார்கள். வேற்று மொழிச்சொல் பயன்பாடு தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார். ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும். புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும்.கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும்.ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது. மணிவிழா இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார். நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். நாட்டாரய்யா அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தி (1984இல்) அவர்க்குச் சிலை எடுக்க எடுத்த முயற்சிகள் தடங்கலும் தாமதமும் ஆகி, அவரின் பெயர்த்தி திருமதி அங்கயற்கண்ணி செயதுங்கன் அவர்களைத் தலைவராகக் கொண்ட அறக்கட்டளையினரால் (13.02.2005) அன்று நாட்டாரின் பெயரால் இயங்கும் கல்லூரி வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டது. ஆக்கங்கள் நாட்டுடமை அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின. 1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது. மரபுரிமைப் பேறுகள் இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது. சான்றடைவு வெளி இணைப்புகள் 1.நாவலர் எழுதி உலக தமிழாராய்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மின் புத்தகங்களின் தொகுப்பு தமிழக எழுத்தாளர்கள் 1944 இறப்புகள் 1884 பிறப்புகள் தமிழறிஞர்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
5487
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
இந்தியப் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து மகா சமுத்திரம் (Indian Ocean) உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆப்பிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா) ஆகியன இதன் எல்லைகள். மகா சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது. இக்கடல் அகுல்ஹஸ் முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. மடகாஸ்கர், கொமொறோஸ், சிசிலீஸ், மாலத்தீவு, மோரீஷியஸ், ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன. சுற்றுச்சூழல் ஆப்பிரிக்கா, இந்தியா, அன்டார்டிக தட்டுகள் இந்திய பெருங்கடலில் ஒன்று சேர்கின்றன. இவைகளின் சந்திப்பு மும்பையின் அருகிலுள்ள செங்குத்தான கண்டத் திட்டிலிருந்து, தண்டுப்பொருத்து தெற்காக ஓடும் தலைகீழ் 'Y' வடிவக் கடல்-நடு மலைமுகட்டின் பிரிவுகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இவற்றால் உருவாகும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு படுக்கைகள் மேலும் சிறிய படுக்கைகளாக ஆழ்-கடல் இடைவரைமேடுகளால் பிரிக்கப்படுகின்றன. இக்கடலின் கண்டவிறுதிப்பாறைகள் குறைவான அகலமுடையனவாக இருக்கின்றன. இதன் சராசரி அகலம் 200 கி.மீ ஆகும். ஒரு விதிவிலக்காக ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் இதன் அகலம் 1000 கி.மீ - ஐ தாண்டுகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 3890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி 50° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்காக உள்ள ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7450 மீ, அதாவது 24,442 அடியாக கணக்கிடப்படுகிறது. இப்படுக்கையின் 86% பீலாஜிக் படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. ஏனைய 14% சதம் பகுதிகள் மட்படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர தென் பகுதிகள் பனிப்படலங்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன. தட்ப வெப்ப நிலை நில நடுக்கோட்டின் வடபகுதியின் தட்பவெப்ப நிலை பருவக்காற்று முறையால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு காற்று கடுமையாக வீசும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தெற்கு மற்றும் மேற்கு காற்றின் ஆதிக்கம் நீடிக்கும். அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக் காற்று இந்தியத் துணைக்கண்டத்துக்கு மழையை வரவழைக்கிறது. தென்னக அத்தகோளத்தில் காற்று மென்மையாக வீசினாலும் வேனில் காலங்களில் மொரீஷியஸ் பகுதியில் கடுமையான காற்று வீசுகிறது. நீர்வள இயல் இந்திய பெருங்கடலில் கலக்கும் நதிகளில் சாம்பெசி, சட்-அல்-அரபு, சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி ஆறு, ஆகியன முக்கியமானவை. நீர் ஓட்டங்கள் பெரும்பாலும் பருவக்காற்றினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு பெரிய வட்ட- நீரோட்டங்கள், ஒன்று வடவத்தகோளத்தில் கடியாரப் பாதையாகவும் (வலமிருந்து இடம்) மற்றொன்று நில நடுக்கோட்டின் தெற்கில் எதிர்-கடியாரப் பாதையாகவும் (இடமிருந்து வலம்), ஓடும் இவை இரண்டும் இக்கடலின் முக்கிய கடலோட்ட வரைவுகளாகும். குளிர் கால பருவாக்காற்றின் போது, வடக்கு நீரோட்டங்களின் நிலை எதிர்பதமாக இருக்கும். ஆழ்கடல் ஓட்டங்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் பெருங்கடல், செங்கடல், அன்டார்டிக் நீரோட்டம், ஆகிய நீர் உட்புகல்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. 20° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்கில் குறைந்தபட்ச மேல்பரப்பு வெப்பநிலை 22° செல்ஷியஸாக (72 °F), இருக்கும் அதேவேளையில், கிழக்கில் 28° செல்ஷியஸை (82 °F) தாண்டுகிறது. 40° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் வெப்பநிலை சட்டென்று இறங்குகிறது. மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை 1000 - க்கு 32 முதல் 37 பகுதிகள். இது அரபிக்கடல் மற்றும் தெற்கு அப்பிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ஒரு மண்டலத்தில் காணப்படும் மிகப் பெரிய அளவாகும். பனித் தொகுதிகள் மற்றும் பனிப் பாறைகள் 65° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. பொதுவாக இவைகளின் புழக்கத்தின் வடக்கு எல்லை 45° தெற்கு அட்ச ரேகையாகும். பொருளாதாரம் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்ப்பாதையை இந்தியப் பெருங்கடல் தந்திருக்கிறது. எரிஎண்ணை வர்த்தகத்தில், குறிப்பாக இந்தோனேசியா, பாரசீக வளைகுடா பகுதிகளின் எண்ணைக் கிணறுகளிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பங்கிடப்படும் எண்ணைப்பொருட்கள் இப்பாதை மூலம் கொண்டு செல்லப்படுவதால் , இக்கடற்பாதைகளுக்கு பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு உண்டு. பெரும்பகுதி ஹைட்ரொ-கார்பன்கள் சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்; இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கரைப்பகுதிகளிலிருந்தே பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும் உலகின் 40% எரிஎண்ணேய் இக்கடலின் கரைப்பகுதிகளிலிருந்து எடுக்கப்படுவதாக கணக்கிடப்படுகிறது. தாது வளம் மிக்க கடற்கரை மணல்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் படிமங்கள் ஆகியன இக்கடலை ஒட்டிய நாடுகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளால் முழுமூச்சில் கைவசப்படுத்தப்படுகின்றன. இக்கடலின் வெப்பத்தன்மை காரணமாக பைட்டொபிளாங்டன் உற்பத்தி; சில வடபகுதிகளின் ஓரம் மற்றும் சில இதர பகுதிகள் நீங்கலாக பெருமளவில் குறைகின்றன. அதனால் இக்கடலில் உயிர்வாழ்க்கை பெருமளவில் குறைகின்றன. இக்கடலிலிருந்து கிடைக்கும் மீன் வகைகள் இதை ஒட்டிய நாட்டுகளின் பயன்பாட்டுக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவில் பயன்படுகின்றன. மேலும் ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் மீன்பிடிக் கப்பல்களும் (குறிப்பாக சில வகை மீன்களுக்காக) இக்கடல் பகுதியை முற்றுகை இடுகின்றன. வரலாறு உலகின் மிகப் பழமையான நாகரீகங்களான சுமேரியா, எகிப்து, சிந்து வெளி ஆகிய டைக்ரிஸ்-யூப்ரடெஸ், நைல், சிந்து நதிகளின் சமவெளிகளில் உருவான நாகரீகங்களும் தென்கிழக்கு அசியாவில் உருவான நாகரீகமும் இந்தியப் பெருங்கடலின் சுற்று வட்டார பகுதிகளிலேயே வளர்ச்சியடைந்தன. புன்ட் பகுதிக்கு (தற்போதைய சொமாலியாவாக கருதப்படுகிறது) செல்லும் பொருட்டு இக்கடலில் அனுப்பப்பட்ட எகிப்தியர்களின் முதல் தலைமுறையினரின் (ஏறக்குறைய பொ.ஊ.மு. 3000) மாலுமிகள் அனுப்பப்பட்டார்கள். பின்னர், திரும்பச்சென்ற கப்பல்கள் நிறைய தங்கமும், நறுமணப்பொருட்களும் கொண்டு சென்றார்கள். அறியப்பட்டவைகளுள் மிகப்பழமையான கடல் வணிகம், மெசப்பொட்டாமியாவுக்கும் சிந்து வெளிக்குமிடையே இந்தக் கடல் வழியாகத்தான் நடந்தது. பொனீசியர்கள் ஏறக்குறைய பொ.ஊ.மு. 3000 அளவில் இப்பகுதியில் கால்வைத்திருக்கலாம். ஆனால் குடியேற்றங்கள் இல்லை. இந்திய பெருங்கடல் மிக அமைதியாகவும், அதனால் வர்த்தகத்துக்கு ஏற்ற இடமாக அட்லாண்டிக் மற்றும் பெசிபிக் கடல்களுக்கு முன்பே திகழ்ந்தன. சக்திவாய்ந்த பருவக்காற்றுகள், அப்பருவத்தின் முதல் கட்டத்தில் கப்பல்களை எளிதில் மேற்கு நோக்கி செலுத்தவும், பின் சில மாதங்கள் கழித்து அடுத்தகட்டத்தில் மீண்டும் கிழக்குக்கு திரும்பவும் உறுதுணையாக இருந்தன. இதுவே இந்தொனேசிய மக்கள் இந்திய பெருங்கடலைக் கடந்து மடகாஸ்கர் பகுதிகளில் குடியேற ஏதுவாக அமைந்தது. பொ.ஊ.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் (Cyzicus) சிசீக்கஸ் இன் (Eudoxus) யுடோக்சஸே இந்தியக் கடலைக் கடந்த முதல் கிரேக்கராவார். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் கிப்பாலஸ் அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடிப் பாதையை கண்டுபிடித்தார் என கருதப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் ரோமர், எகிப்தியர் மற்றும் தென் இந்தியாவின் தமிழ் அரசாட்சிகளான சேர சோழ பாண்டியர்களுக்கிடையில் ஆழ்ந்த வர்த்தக உறவுகள் வளர்ந்தது. இந்தொனேசிய மக்களைப்போன்று மேற்கத்திய மாலுமிகளும் இந்த பருவக்காற்றை பயன் படுத்தி இந்து மகா சமுத்திரத்தை கடந்தனர். மேலும் "தி பெரிப்லஸ் ஆப் தி எரித்ரயென் சீ " என்ற புத்தகம் பொ.ஊ. 70 கால கட்டத்திலிருந்த இக்கடல் பாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது. வாஸ்கோ ட காமா 1497-ல் குட் கோப் முனையைச் சுற்றி இந்தியாவுக்கு கப்பலில் வந்தார். இதைச் செய்யும் முதல் ஐரோப்பியர் இவராவார். அதன் பின் ஐரோப்பிய கப்பல்கள் பெரும் ஆயுதங்களுடன் வேகமாக வர்த்தகத்தை பெருக்க வந்தது. பின்னர் டச்சு கிழக்கிந்தியா கம்பெனி (1602-1798) இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தின் பெரும்பான்மை சக்தியாக திகழந்தது. அதன் பின் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் தங்கள் கம்பெனிகளை நிறுவினர். பின்னர் ஏறக்குறைய 1815 - ல் ஆங்கிலேயர்கள் கைவசமாகியது. 1869 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர்களுக்கு கிழக்கு மீதான ஆவல் அதிகரித்தது. ஆனால் யாரும் வர்த்தகத்தில் பெருமளவு வெற்றிகொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் இப்பகுதியிலிருந்து பின்வாங்கிய பின்னரும் அத்தகைய ஒரு ஆதிக்கத்தை இந்துக் கடலின் பால் இந்தியா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஆகிய நாடுகளால் செலுத்த முடியவில்லை. இருந்தபோது யு.எஸ்.எஸ்.ஆரும், ஐக்கிய அமேரிக்காவும் இக்கடல் பகுதிகளில் கப்பற் படை தளங்களை அமைக்க பல முயற்சிகள் எடுத்தன. ஆனால் இந்தியக் கடலை ஒட்டிய வளரும் நாடுகள் இந்தியக் கடற் பகுதியை 'அமைதிப் பகுதியாக' ஆக்க முயன்றன. இதன் மூலம் இக்கடலை அனைவரும் சாதாரணமாக வர்த்தகத்துக்கு பயன்படுத்த முயர்ச்சித்தன. இருந்தாலும் இக்கடலின் மையப்பகுதியில் டீகோ கார்சியா என்னும் இடத்தில் ஆங்கிலேயர்களும், ஐக்கிய அமேரிக்காவும் தற்போதும் கப்பற்படை தளம் அமைத்துள்ளது. மேலும் டிசம்பர் 26, 2004 அன்று சுமத்திரா தீவுக்கு அருகாமையில் கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக எழுந்த சுனாமிப் பேரலை இந்து மகா சமுத்திரத்தை ஒட்டிய அனைத்து நாடுகளையும் தாக்கியதுடன் 226,000 பேரின் உயிரையும் பத்து லட்சம் பேரின் வீடுகளையும் நாசம் செய்தது. தகவல்கள் சர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு இந்தியப்பெருங்கடலின் தென் பகுதியப் பிரித்து அன்டார்டிக் கடலை உருவாக்கியது. இப்புதிய கடல் அன்டார்டிகாவின் கடற்கரையிலிருந்து துவங்குகிறது. இது அன்டார்டிகா ஒப்பந்தத்தோடு இணைந்ததாகும். இதன் பிறகும் இந்தியப் பெருங்கடல் உலகின் ஐந்து கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாக விளங்குகிறது. மேலும் அந்தமான் கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா, ஆஸ்திரேலியப் பெரும் விரிகுடா, ஏதென் வளைகுடா, ஓமன் வளைகுடா, லட்சத்தீவு கடல், மொசாம்பிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மலாக்கா நீரிணைவு, மற்றும் பல துணை நீர் நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து மகா சமுத்திரம் 66,526 கி.மீ கரைப்பகுதியை உடையதாகும். தட்ப வெப்பம்: வடகிழக்கு பருவக்காற்று (டிசம்பர் முதல் ஏப்ரல் வரை), தென்மேற்கு பருவக்காற்று (ஜூன் முதல் அக்டோபர்) ; மேலும், பரவலாக மே/ஜூன் மற்றும் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் வடக்கு-இந்தியப் பெருங் கடலிலும், ஜனவரி/பெப்ரவரி ஆகிய மாதங்களில் தெற்கு-இந்தியப் பெருங்கடலிலும் வெப்பமண்டல சூறாவளி தாக்கும். முக்கியத் துறைமுகங்கள் கோல்கத்தா (இந்தியா) சென்னை (இந்தியா) கொழும்பு (இலங்கை) டர்பன் (தென் ஆப்பிரிக்கா) ஜகார்த்தா (இந்தோனேசியா) கராச்சி (பாகிஸ்தான்) பிரமாந்தில் (ஆஸ்திரேலியா) மும்பை (இந்தியா) ரிச்சார்ட்ஸ் பே (தென் ஆப்பிரிக்கா) விசாகப்பட்டினம் (இந்தியா) கொச்சி (இந்தியா) இவற்றையும் பார்க்கவும் கடல் புவியியல் சர்வதேச நீர்வள அமைப்பு வெளி இணைப்புகள் மேற்கோள்கள் கிழக்கு ஆப்பிரிக்கா
5488
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
திருகோணமலைக் கோட்டை
திருகோணமலை கோட்டை (பிரட்ரிக் கோட்டை) திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் (பிரான்சியர் இதனை பிடித்து மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தனர்), மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் (படையாட்களின்) பலமான முகாமாக விளங்குகின்றது. தற்போது இங்கு கட்டுப்பாடுகள் இன்றி சென்று வர முடியும். திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும். வரலாறு 1623 ல் இந்தக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. 1639 ல் பேர்த்துக்கேயர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்பு மீள்கட்டுமானம் போன்ற பெருமளவான மாற்றங்களுக்குக் கோட்டை உள்ளானது. 1672 இல் பிரான்சியர் இந்தக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர். ஜனவரி 8 , 1782 இல் பிரித்தானியர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதே ஆண்டு ஆகஸ்ட் 29 ல் பிர்ரான்சியர் (பிரெஞ்சுக்காரர்) இந்தக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1783 ல் பிரான்சு இதை najla கையளிக்க பிரித்தானியர் ஒல்லாந்தரிடம் கையளித்தனர். இருந்தாலும், 1795 இல் பிரித்தானியர் மீள இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் 1948 ல் இலங்கை விடுதலை அடையும் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பலரும் இந்த பிரட்ரிக் கோட்டையில் கவனம் செலுத்தக் காரணமாக அமைந்தது திருகோணமலையின் இயற்கைத் துறைமுகமே. இலங்கையில் உள்ள கோட்டைகள் திருகோணமலையிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும் இலங்கையின் தொல்லியற்களங்கள்
5489
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
இலங்கைச் சோனகர்
இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன. இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர். பெயர்க் காரணம் மக்கள்தொகை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் இலங்கை முசுலிம்கள் ஆங்கிலத்தில் "மூர்" (Moor) என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போது 'இசுலாமியர்' அல்லது 'முசுலிம்கள்' என்று குறிக்கப்படுகின்றனர். தமிழில் சோனகர் என்ற சொல் சுன்னா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக நம்பப்பபடுகிறது. மூர் என்னும் பெயர் போர்த்துக்கேயரினால் வைக்கப்பட்ட பெயராகும். போர்த்துக்கீசர் ஐபீரியாவில் தாம் சந்தித்த முசுலிம் மூர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைச் சோனகர்களை மூர்கள் என அழைத்தனர். சோனகர் என்ற தமிழ்ச் சொல்லும், யோனக்கா என்ற சிங்களச் சொல்லும் யவனர் அல்லது யோனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவும் கொள்ளப்படுகிறது. யவனர் என்ற இச்சொல் கிரேக்கர்களைக் குறித்தாலும், சில வேளைகளில் அரபுக்களையும் குறிப்பிடுகிறது. யவனர் என்ற சொல் சமசுக்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் 'யொன்ன' அல்லது 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வரலாறு ஆரம்பகாலக் கொள்கைகள் இலங்கைச் சோனகர் தென்னிந்தியாவில் உள்ள மரைக்காயர், மாப்பிளமார்கள், மேமன்கள், பத்தான்கள் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என கருத்தைப் பல கல்வியாளர்கள் முன்வைத்துள்ளனர். வெளி இணைப்புகள் முஸ்லீம்களும் தமிழகமும்/சோனகர் மேற்கோள்கள் இலங்கை முசுலிம்கள் தமிழ் முசுலிம்கள் இலங்கையில் இசுலாம்
5490
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
இலங்கைத் தமிழர்
இலங்கைத் தமிழர் அல்லது ஈழத்தமிழர் (Sri Lankan Tamils) என்னும் தொடர், இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத்தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவளித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட இந்திய பரம்பரைத் தமிழரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் பொருட்டே வம்சாவளித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் இலங்கையின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். பொதுப் பொருளில் இலங்கையில் குடியுரிமையுடைய, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே இலங்கைத் தமிழர் ஆதல் வேண்டும் எனினும், இலங்கையைப் பொறுத்தவரை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை முசுலிம்கள் மொழிவழியே தம்மை அடையாளம் காண்பதில்லை. அவர்களை இலங்கை முசுலிம்கள் என வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் தமிழ் பேசும் முசுலிம்களும், முன்னர் குறிப்பிட்ட அண்மையில் இலங்கையைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட மலையகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர் என்னும் வகைப்பாட்டினுள் அடங்குவது இல்லை. பிரதேசம், சாதி, சமயம் முதலியன உள்ளிட்ட பல்வேறு கூறுளில், இலங்கைத் தமிழரிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மொழியாலும், வேறு பல கூறுகளின் அடிப்படையிலும் ஒரே குழுவாக இலங்கையின் பிற இனத்தவரிடம் இருந்து தனித்துவமாகக் காணப்படுகின்றனர். 1948ல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற காலத்தில் இருந்து, தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே சிக்கல் இருந்து வருகிறது. அரசியல் உரிமைக்கான அமைதிவழிப் போராட்டங்கள் 1983க்குப் பின்னர் உள்நாட்டுப் போராக மாறியதால், இலங்கைத் தமிழர் பலர் இலங்கையை விட்டு வெளியேறி, இந்தியா அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ இலங்கைத் தமிழரில் மூன்றிலொரு பங்கினர் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் வாழ்கின்றனர். 800,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் இவ்வாறு வெளிநாடுகளில் வாழ்வதாகச் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர உள்நாட்டுப் போரில் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழந்தும் உள்ளனர். 2009 ஆம் ஆண்டின் இறுதிகட்டப் போர் இலங்கைத் தமிழரின் பாரிய உயிரிழப்புகளுக்கும் உடமை இழப்புகளுக்கும் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துப் போரை நிறுத்திய போதிலும், இலங்கைத் தமிழரின் அடிப்படைச் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன. வரலாறு இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. முறையான சான்றுகள் இல்லாததே இதற்கு முக்கியமான காரணம். இன உணர்வுகளின் பாற்பட்ட அரசியல் பின்னணியில் அறிஞர்கள் நடு நிலை நின்று சிந்திக்கத் தவறுவதும் இன்னொரு குறிப்பிடத்தக்க காரணம். இது தவிர அரசியல் காரணங்களுக்காக இலங்கைத் தமிழர் பகுதிகளில் முறையான அகழ்வாராய்ச்சிகளுக்கு இலங்கை அரசாங்கங்கள் இடந்தருவதில்லை என்ற குற்றச் சாட்டுகளும் உள்ளன. இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூலான மகாவமிசம் இலங்கை மரபுவழித் தமிழருடைய தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் எதையும் தரவில்லை. அடிப்படையில் மகாவமிசம் பௌத்த மதத்தையும், சிங்களவர் பற்றியுமே கவனம் செலுத்தியுள்ளது. அதன் மேற்படி குறிக்கோளுடன் சம்பந்தப்பட்ட அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மட்டுமே தமிழர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சிங்கள இனத்தின் ஆதிபிதாவாக மகாவமிசம் குறிப்பிடும் விசயன் காலத்தில் கூட திருமணத் தொடர்புகள் காரணமாகப் பாண்டிநாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் இவர்கள் சிங்கள இனத் தோற்றத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருப்பார்கள் என்று கருதுவதே பொருத்தம். எனினும் இத்தகைய குறிப்புக்களிலிருந்து, இலங்கை பற்றித் தமிழ்நாட்டினருக்கு நல்ல பரிச்சயம் இருந்ததென்பதுவும், இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகள் மக்கள் எளிதாகப் போக்குவரத்துச் செய்யக் கூடிய அளவில் இருந்தது என்பதையும் தெளிவாக்குகின்றது. இது மட்டுமன்றிக் கிறித்துவுக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே அனுராதபுரத்தைக் கைப்பற்றிப் பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவமிசம் தரும் குறிப்புகளிலிருந்து அறிய வருகின்றது. பண்டைக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய மாதோட்டத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும் என்பதும் பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை இலங்கையின் தலைநகரமாயிருந்த அனுராதபுரத்தில் மிக முற்பட்ட காலங்களிலேயே தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. கிறித்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடுமென்பது யாழ்ப்பாண வரலாறு எழுதிய செ. இராசநாயக முதலியார் அவர்களுடைய கருத்து. எனினும், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தமிழர் பரவலாக வாழ்ந்து வந்தபோதிலும், அனுராதபுரம், பொலநறுவை ஆட்சிகளின் வீழ்ச்சியுடன் சிங்களவர் அதிகாரம் தெற்கு நோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல் முறையில் தமிழ், சிங்கள முனைவாக்கம் தீவிரப்பட்டிருக்கக் கூடும். இதுவே 12ஆம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாண அரசின் தோற்றத்துக்கும் வித்திட்டது எனலாம். இதன் பின்னரும் பெருமளவில் தமிழர் குடியேற்றம் இடம் பெற்றது பற்றிய செய்திகளைப் பிற்காலத்தில் யாழ்ப்பாண வரலாறு கூற எழுதப்பட்ட வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிற் காணலாம். ஆரம்பத்தில் வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர் குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இந்நூல்கள் மூலம் தெரிய வருகின்றது. இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர் குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. வரலாற்றுக்கு முந்திய காலம் இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பில் பல அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையின், வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளும் ஒரே தன்மையானவையாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அடக்கக் களங்களை ஒத்த களங்கள் இலங்கையின் வடமேற்குக் கரையோரம் பொம்பரிப்பிலும், கிழக்குக் கரையோரம் கதிரவெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்ககாலப் பாண்டிய இராச்சியப் பகுதியில் காணப்படும் அடக்கக் களங்களோடு குறிப்பிடத் தக்க வகையில் ஒத்துள்ள இக்களங்கள் முறையே கிமு 5ஆம் நூற்றாண்டையும், கிபி 2 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை. இவற்றோடு பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய கூறுகள் இலங்கையில் மன்னார், கந்தரோடை, ஆனைக்கோட்டை, வேலணை, காரைத்தீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மாமடு, பறங்கியாறு, அனுராதபுரம் ஆகிய இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அரிக்கமேட்டில் காணப்பட்டதை ஒத்த கிமு 1300ஐச் சேர்ந்த மட்பாண்ட வரிசைகள் யாழ்மாவட்டத்தில் கந்தரோடையில் கண்டறியப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நடத்திய ஆய்வில் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் ஒருவனுடைய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழியில் காணப்பட்ட முத்திரை ஒன்றில் இரண்டு வரியில் எழுத்துக்கள் காணப்பட்டன. ஒரு வரி தமிழ் பிராமியிலும், மற்றது சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்தும் அமைந்திருந்தன. இதை கோவேந்த, கோவேதன், கோவேதம், தீவுகோ எனப் பல்வேறு வகையில் திராவிட மொழிச் சொல்லாக வாசித்துள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு இது ஒரு தலைவனுடைய புதைகுழியாக இருக்கலாம் என்கின்றனர். வேலணை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்ககாலம் தொட்டு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்ததாக அறிய முடிகின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்களின் இனத்தவரே என்னும் கருத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் பரவி வாழ்ந்த இடைக் கற்கால மக்களின் வழித் தோன்றல்களே இன்றைய இலங்கைத் தமிழரும், சிங்களவரும் என்பதும், தமிழ் பேசுவோரோ அல்லது பிராகிருத மொழி பேசுவோரோ பெருமளவில் இலங்கையில் குடியேறி அங்கிருந்த மக்களை அகற்றவில்லை என்பதும் இந்திரபாலாவின் கருத்து. கிறித்துவ ஆண்டுக்கணக்கின் தொடக்கத்தை அண்டிய காலப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர, கருநாடக மாநிலங்களின் தெற்குப் பகுதிகள், இலங்கை என்பன ஒரே பண்பாட்டு வலயமாக இருந்தன என்றும், தமிழும், பிராகிருதமும் மக்களின் இடப் பெயர்வினால் அன்றிப் பண்பாட்டுப் பரவலினாலேயே இலங்கைக்கு வந்தன என்றும் அவர் கூறுகிறார். வரலாற்றுக் காலம் வடக்கே பூநகரியில் இருந்து தெற்கே திசமகாராமை வரை எழுத்துக்களோடு கூடிய மட்பாண்டத் துண்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றுள் குடிப்பெயரான வேள என்பதும் காணப்படுகின்றது. இது பண்டைத் தமிழ் நாட்டில் இருந்த வேளிர் குடியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பண்டைத் தலைநகரமான அனுராதபுரத்திலும், இலங்கையின் பிற பகுதிகளிலும், கிமு 2 ஆம் நூற்றாண்டில் இருந்தே தம்மை தமேலா அல்லது தமேதா (பிராகிருத மொழியில்) என அழைத்துக்கொண்டவர்கள் (தமிழர்) வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இவ்வாறான ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்திலும், ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவிலையிலும், ஒன்று அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்னும் இடத்திலும், இன்னொன்று பண்டைய தலைநகரமான அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்டவை. இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திசமகாராமையில் நடந்த அகழ்வாய்வுகளின்போது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட உள்ளூர் நாணயங்கள் கிடைத்தன. இவற்றில் சிலவற்றில் தமிழர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரத்தில் தமிழ் வணிகர்கள் முனைப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது. விசாகா என்னும் தமிழ் வணிகனின் பெயரும், உள்ளூரில் வாழ்ந்த சமன என்னும் தமிழன் ஒருவனின் பெயரும், கரவா என்னும் தமிழ் மாலுமி ஒருவனின் பெயரும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. கிமு இரண்டாம் நூற்றாண்டில் தமிழர் தோணிகளில் இலங்கைக்குக் குதிரைகளைக் கொண்டு வருவது குறித்த இலக்கியச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலும், இக்குதிரைகள் குதிரைமலை என இன்று அழைக்கப்படும் இடத்தில் இறக்கப்பட்டிருக்கலாம். வரலாற்றுப் பதிவுகளின்படி, கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் நாட்டில் இருந்த தமிழ் இராச்சியங்கள் இலங்கை விடயங்களில் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்தமை தெரிய வருகின்றது. கிறித்துவுக்கு முந்திய சில நூற்றாண்டுகள் இலங்கையின் வட பகுதியில் இருந்த குதிரைமலை, கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய நகரங்களுக்கும், தமிழ் நாட்டு நகரங்களுக்கும் இடையே தமிழ் வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலமும், தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டு இருப்பதில் இருந்தும், யாழ்ப்பாணக் குடாநாடு, முத்து, சங்கு போன்ற கடல்படு பொருட்களுக்கான பன்னாட்டுச் சந்தையாக இருந்ததும், தமிழ் வணிகர்கள் இங்கே வணிகத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவருகிறது. சிங்களவர்களின் வரலாறு கூறும் நூலான மகாவமிசம், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே பல தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமை குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சேன, குத்தக என்னும் இரு தமிழர்கள் கிமு 177 தொடக்கம் கிமு 155 வரை 22 ஆண்டுகால ஆட்சி புரிந்துள்ளனர். சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளன் என்பவன் கிமு 145 காலப்பகுதியில் இலங்கையைக் கைப்பற்றி 44 ஆண்டுக்காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளான். பின்னர் கிமு 104ல் ஏழு தமிழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிமு 87 வரை இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். கிமு 47ஐ அண்டிய காலத்திலும் இரண்டு தமிழர்கள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகாலம் இலங்கையை ஆண்டுள்ளனர். இவற்றை விட, கிபி முதலாம் நூற்றாண்டுக்குப் பின்னர், சிங்கள அரச குடும்பங்களில் ஏற்பட்ட வாரிசுப் போட்டிகள் காரணமாக அரசிழந்தவர்கள் தமிழ் நாட்டில் இருந்து படை திரட்டி வந்து ஆட்சியைப் பிடித்தமை பற்றிய குறிப்புக்களும் உண்டு. மத்திய காலம் கிபி 10 ஆம் நூற்றாண்டிலும், 11 ஆம் நூற்றாண்டிலும், முதலாம் இராசராச சோழன் காலத்திலும், அவனது மகனான இராசேந்திர சோழன் காலத்திலும் இரண்டு முறை ஏற்பட்ட சோழர் படையெடுப்புக்களின் மூலம், இலங்கை முழுவதும் சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது. சோழர்கள் 77 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தனர். கிபி 1215ல் தமிழ் நாட்டில் வலுவான நிலையில் இருந்த பாண்டியர்கள் இலங்கை மீது படையெடுத்து அதன் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர். மேற்படி ஆட்சிக் காலங்களில் ஏற்கெனவே இருந்தவர்களுடன் படைவீரர்களாகவும் தமிழர்கள் வந்திருப்பர். சோழ, பாண்டிய ஆட்சிகள் முடிந்த பின்னரும் இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே தங்கிவிட்டனர். தவிர, இக்காலங்களில் தமிழ் வணிகர்களின் வணிக நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்பட்டன. சோழரின் தலையீடுகளைத் தொடர்ந்து தலைநகரம் அனுராதபுரத்தில் இருந்து தெற்கு நோக்கிப் பொலநறுவைக்கு நகர்ந்தது. 1215 ஆம் ஆண்டில் கலிங்க நாட்டைச் சேர்ந்த மாகன் என்பவன் தென்னிந்தியாவில் இருந்து பெரும் படை திரட்டி வந்து பொலநறுவையைக் கைப்பற்றினான். ஆனாலும், அவனால் அதை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சிங்கள அரசனின் தாக்குதல்களைத் தொடர்ந்து மாகன் வடக்கு நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டதாகத் தெரிகிறது. அதே வேளை, சிங்கள அரசர்களும் பாதுகாப்புக் கருதி மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து தம்பதெனியா என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினர். அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பழைய நகரங்களை உள்ளடக்கிய பெரும் பரப்பு கைவிடப்பட்டு வட பகுதிக்கும், தென் பகுதிக்கும் இடையே வலுவான தடுப்பாக அமைந்தது. இது, தீவின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த தமிழர்களும், தெற்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த சிங்களவர்களும் தனித்தனியாக வளர வாய்ப்பளித்தது. இதனால்,13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தனியானதும், வலுவானதுமான யாழ்ப்பாண இராச்சியம் உருவானது. தனித்துவமான இலங்கைத் தமிழர் சமுதாயத்தின் உருவாக்கத்துக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது எனலாம். யாழ்ப்பாண இராச்சியக் காலம் 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 1619 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 370 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாண இராச்சியம் நிலைத்திருந்தது. இடையில் ஒரு குறுகிய காலம் கோட்டே இராச்சியத்தின் சார்பில் சப்புமால் குமாரயா என்பவனால் ஆளப்பட்டு வந்தது. 1590 இல் இருந்து 1619 வரை தமிழ் அரசர்களே ஆண்டுவந்த போதும், போர்த்துக்கேயருக்குத் திறை செலுத்தும் ஒரு அரசாகவே இருந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துக்கு முன்னர், தமிழர் இலங்கையில் பரவலாக வாழ்ந்து வந்ததனால் தமக்கெனத் தனியான சமூக நிறுவனங்களை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துடன், இலங்கைத் தமிழர் இலங்கையில் ஒரு தனித்துவமான சமூகமாக ஒழுங்கமைக்கப்பட்டது மட்டுமன்றி ஓரளவுக்குப் பொதுவான வழக்கங்களையும், சமூக நடைமுறைகளையும் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது. வன்னிப் பகுதி, திருகோணமலை என்பன யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்தபோதும் சிறுசிறு பகுதிகளாக வன்னியத் தலைவர்களினால் ஆளப்பட்டு வந்தது. மட்டக்களப்பு பல வேளைகளில் கண்டி இராச்சியத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் செயற்படவேண்டி இருந்தது. இதனால், மொழி, மதப் பொதுமைகள் இருந்தபோதும் வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதிக தொலைவில் இருந்ததாலும், ஓரளவுக்கு வேறுபாடான புவியியல் நிலைமைகள், சமூகக் கூட்டமைவு என்பவற்றாலும் மட்டக்களப்புப் பகுதியில் பல தனித்துவமான வழக்கங்கள், நடைமுறைகள் என்பன நிலை பெறுவதும் சாத்தியம் ஆயிற்று. குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான மரபுவழிச் சட்டமாக உருவான தேசவழமை, யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலேயே பல்வேறு வழக்கங்களை உள்வாங்கி உருவானது எனலாம். ஆனாலும் மட்டக்களப்புப் பகுதியில் வேறு வழமைகள் நடைமுறையில் இருந்தன. இவற்றின் தொகுப்பே பிற்காலத்தில் முக்குவர் சட்டம் எனப்பட்டது. குடியேற்றவாதக் காலம் 1540களில் போர்த்துக்கேயரின் கவனம் யாழ்ப்பாண இராச்சியத்தின் பக்கம் திரும்பியது. 1544இலும், பின்னர் 1560இலும் அவர்களுடைய படையெடுப்புகள் முழு வெற்றி பெறவில்லை. ஆனால், 1590இல் நிகழ்ந்த படையெடுப்பின் மூலம் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு இன்னொரு இளவரசனை அரசனாக்கிச் சென்றனர். அது முதல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் செல்வாக்கு வட்டத்துக்குள் வந்தது. இறுதியாக 1619இல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இதன் பின்னர் இலங்கைத் தமிழர் பகுதிகளைப் போர்த்துக்கேயர் 38 ஆண்டுகளும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் முறையே 138, 152 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். பரம்பல் முன்னர் கூறிய வரைவிலக்கணத்துக்கு அமைய இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை பரம்பரைத் தமிழர் என்போர் இலங்கையின் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தலைநகரமான கொழும்பிலும் சில பகுதிகளில் செறிவாக வாழுகின்றனர். ஏனைய பகுதிகளில் மிகவும் சிறுபான்மையினராக உள்ளனர். வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையினராக உள்ள இலங்கைத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றில் மட்டுமே தற்போது பெரும்பான்மையினராக உள்ளனர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இலங்கைத் தமிழரின் மொத்த மக்கள்தொகை 2,270,924 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 11.2%. இது 1981 ஆம் ஆண்டில் 12.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1981க்கும் 2011க்கும் இடையில் நாட்டின் மொத்த மக்கள் தொகை 36.49% கூடியிருக்கும் அதே வேளை இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 20.35% 9 காட்டுகிறது. உள்நாட்டுப் போர் காரணமாக ஏராளமான இலங்கைத் தமிழர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதாலும், பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 1911 இலும் அதற்குப் பின்னருமே இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என இரண்டு பிரிவாகத் தமிழர் கணக்கெடுக்கப்பட்டனர். துணைப் பண்பாட்டுக் குழுக்கள் இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் ஒரே கூறாக எடுத்துக்கொள்ளும் போக்கு பல்வேறு மட்டங்களிலும் இருந்து வருகிறது. மொழி அடிப்படையிலும், ஓரளவுக்கு சமய அடிப்படையிலும் பிரதேசங்களை ஊடறுத்த ஒருமைத் தன்மை இருந்த போதிலும், 1948க்குப் பின்னான அரசியல் நெருக்கடிகள் இந்த ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் போக்குக்கு வலுவூட்டின என்று கூறலாம். ஆனாலும், இலங்கைத் தமிழர் சமூகத்தில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையிலும், சமூக, வரலாற்றுப் பின்புலங்களின் அடிப்படையிலும், பல வேறுபாடுகள் இருப்பதைக் காணமுடியும். இந்த வேறுபாடுகளைப் பிரதேச வேறுபாடுகளுடன் ஒத்திசைவாகப் பார்க்கும் போக்கே பெரிதும் காணப்படுகிறது. சிவத்தம்பி, இலங்கைத் தமிழர் துணைப் பண்பாட்டுச் சமூகங்களைப் பகுதிகளின் அடிப்படையில் ஒன்பது பிரிவுகளாக இனங்காண்கிறார். இவற்றுள், தென்மாகாணம், மலையகம் என்பன முறையே முசுலிம்கள், இந்தியத் தமிழர் குழுக்களையே குறித்து நிற்கின்றன. இதனால் இக்கட்டுரையின் வீச்செல்லைக்குள் அடங்குவன பின்வரும் ஏழு பகுதிகளே. யாழ்ப்பாணம் வன்னி மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு வடமேல் மாகாணம் கொழும்பு சமூகப் பண்புகள் இலங்கைத் தமிழர் எனப்படுவோர் ஒரேதன்மைத்தான சமூகப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இலங்கைத் தமிழரிடையே காணப்படும் பல்வேறு குழுக்கள் வேறுபட்ட சமூகப் பண்புகளை உடையவர்களாக இருப்பதைக் காண முடியும். குடியேற்ற வாதக் காலத்துக்கு முன்னர் நடைமுறையில் இருந்த வழமைகளை ஆராய்வதன் மூலம் வரலாற்று நோக்கில் இவ்வாறான சமூகப் பண்புகள் குறித்து ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆய்வுகளில் தேசவழமைச் சட்டமும், முக்குவர் சட்டமும் முக்கிய இடம் பெறுகின்றன. தேசவழமைச் சட்டத்தை இந்தியாவில் உள்ள பிற மரபுவழிச் சட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிலர் தேசவழமைச் சட்டத்தின் தொடக்கத்தின் அடிப்படைகள் பிராமணியச் செல்வாக்குக்கு முந்திய திராவிட மரபான தாய்வழி மரபை அடிப்படையாகக் கொண்ட மலபார் பகுதியின் மருமக்கட்தாயம் எனப்படும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்கின்றனர். கோரமண்டல் என அழைக்கப்படும், தென்னிந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் ஆரிய செல்வாக்குக் காரணமாக தந்தைவழி மரபு நிலைபெற்றது. யாழ்ப்பாணப் பகுதியில் தமிழ்நாட்டின் தொடர்புகள் அதிகரித்த காலத்தில் தாய்வழி மரபுக் கூறுகளையும் தந்தைவழி மரபுக் கூறுகளையும் ஒருங்கே கொண்டதொரு கலப்பு முறைமை உருவானதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலேயே, யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாகவே இருந்த போதும், நடைமுறையில் இருந்த வழக்கங்களில் தாய்வழி மரபுக் கூறுகளும் இருந்தன. எடுத்துக்காட்டாக, சொத்துரிமை தொடர்பில், அக்காலத்துச் "சீதனம்" தாய்வழிச் சொத்துரிமையின் எச்சமாகக் காணப்பட, "முதுசொம்" தந்தைவழிச் சொத்துரிமையாக உள்ளது. ஆனாலும், பெண்களுடைய வழிவருகின்ற சீதனச் சொத்து தொடர்பில் கணவனின் சம்மதம் இன்றிப் பெண் தீர்மானம் எடுக்கக்கூடிய வழி இல்லாது இருப்பதானது அக்காலத்தியேயே யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாக நிலை பெற்றுவிட்டதைக் குறிக்கிறது. காலப்போக்கில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது கூடிய அளவு சீதனம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது மிகப் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் முதுசொச் சொத்தின் மீது தமக்கிருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டியவர்கள் ஆனார்கள். போர்த்துக்கேயர் காலத்திலேயே இந்த நிலை ஏற்படத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. இதனால், தற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வீடுகளும், நிலங்களும் பெண்களின் பெயரிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தற்காலத்துச் சீதன முறையின் விளைவாக ஏற்பட்டதேயொழிய, யாழ்ப்பாணச் சமுதாயம் இன்றும் ஒரு ஆணாதிக்கச் சமுதாயமாகவே இருந்து வருகிறது. சாதி அமைப்பு இலங்கைத் தமிழர் சமுதாயம் ஒரு சாதியச் சமுதாயம் ஆகும். சங்க இலக்கியத்தில் ஐந்து திணைகள் தொடர்புடைய ஐந்து பழங்குடிகள் குறிப்பிடுகிறது. காலனித்துவமும் சாதி முறையை பாதித்தது. எனினும், முழுச் சமுதாயமுமே ஒரே மாதிரியான சாதி அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. கிழக்கு மாகாணத் தமிழர் மத்தியில், குறிப்பாக மட்டக்களப்புப் பகுதியில் காணப்படும் சாதி அமைப்பு, யாழ்ப்பாணப் பகுதிச் சாதி அமைப்பினின்றும் பெருமளவுக்கு மாறுபட்டது. மட்டக்களப்பில் சாதி அமைப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ளதுபோல் மிகவும் இறுக்கமானது அல்ல. மேலும் விவசாய மற்றும் கடலோர சமூகங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. காலனித்துவ ஆட்சியின் காரணமாக, பல சாதி முக்கிய சாதிகளாக இணைந்த பிற ஆக்கிரமிப்புகளை எடுத்துக் கொண்டது. வடக்கு பகுதியில் வெள்ளாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர். அவர்கள் இலங்கையின் தமிழ் மக்களில் பாதிக்கும் பங்களித்துள்ளனர். அவர்கள் வேளாண்மையில் மற்றும் பெரிய நில உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ள ஒரு சாதி. சடங்கு வடிவமைப்பு மூலம் ஆதிக்கத்தை அடைந்த சைவ சித்தாந்தம் வணக்கத்தார் கடுமையான பின்பற்றுபவர்கள். யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் வெள்ளாளர் சமுதாயத்தில் பிற இனத்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வெள்ளாளர் மக்கள் தொகை அதிகரித்தது. இதில் அகம்படையார் (அரண்மனை ஊழியர்கள்), செட்டியார்கள் (வணிகர்கள்), தனக்காரர் (கோவில் மேலாளர்கள்), மடைப்பள்ளியர் (கோவிலின் காரியதரிசிகள்) மற்றும் மலையாளிகள். கோவியர், வெள்ளாளருடன் தொடர்புடைய சாதி, விவசாயத்தில் மற்றும் கோவில் வேலைக்காரராக ஈடுபட்டுள்ளனர். வடக்கு கரையோரப் பகுதியிலுள்ள கரையார்கள் ஆதிக்கம் செலுத்தும் சாதி. அவர்கள் பாரம்பரியமாக கடற்றொழிலில் மற்றும் கடற்படைப் போரில் ஈடுபட்டனர். அவர்கள் அரச படையினர்களாகவும் மற்றும் தளபதிகளாகவும் பணியாற்றினர். தேவர் என்று அழைக்கப்படும் மறவர்கள், மற்றொரு படைத்துறைக்குரிய சாதி, கரையார் சாதியை சேர்ந்தன. முக்குவர் கிழக்கு கடலோரப் பகுதியில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் சாதியும் ஆகும். அவர்கள் பாரம்பரியமாக சோனகர்ளுடன் வரலாற்று அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முத்துக்குளித்தல் மற்றும் காயல் மீன்பிடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். திமிலர்கள் வடக்கு கரையோரப் பகுதிகள் பெரும்பாலும் கிழக்கிலுள்ள வரலாற்று அடிப்படையில் காணப்படுகின்றன. அவர்கள் பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. பஞ்சமர் என்று அழைக்கபடவர்கள் அம்பட்டர், பள்ளர், நளவர், பறையர் மற்றும் வண்ணார். அம்பட்டர்கள் பாரம்பரியமாக நாவிதராக இருந்தனர், பண்டைய காலங்களில் பரிகாரி (மருத்துவர்) என்றும் அழைக்கபடவர்கள். பள்ளர்கள் வேளாண்மை தொழிலாளர்கள், அவர்கள் வேளாண்மையில் முக்கியமானவர்கள். நளவர் பனை ஏறுதல் மற்றும் கள்ளு இறக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். பறையர்கள் பறையடித்தல் மற்றும் கோயில்களில் சடங்குகளில் முக்கியத்துவம் அளித்தனர், மேலும் வள்ளுவர் என்றழைக்கப்பட்டனர். ஐந்து திறமையான கைவினைஞர்கள் கம்மாளர் என அறியப்பட்டனர், மேலும் கொல்லர், தட்டார், தச்சர், கருமான் மற்றும் கன்னார் மற்றும் போன்றவற்றை உள்ளடக்கியது. பிராமணர்கள் எண்ணிக்கையில் சிறியவர்களாகவும், கோவிலுக்குரிய குருமார்களாகவும் பங்களிக்கிறார்கள். கம்மாளர், பஞ்சமர்கள் மற்றும் பிராமணர்கள் குடிமக்கள் என அறியப்பட்ட சாதிகளை, அவர்கள் வெள்ளாளர்கள் மற்றும் கரையார்கள் போன்ற பெரிய சாதிகளின் கீழ் பணியாற்றினர். அவர்கள் தொழிலில் முக்கிய காரணிகளாக இருந்தனர், மற்றும் அவர்கள் திருமண மற்றும் இறுதி சடங்கு களத்தில் சிறப்பாக முக்கியத்துவம் பெற்றனர். கட்டுண்ட சாதிகள் வகை சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுண்ட சாதிகள், உயர் அதிகாரப் படிநிலையில் உள்ள சாதிகளுடன் பொருளாதார அடிப்படையில் கட்டுண்ட நிலையில் இருப்பவர்கள். யாழ்ப்பாணச் சாதி வேறுபாடுகளுக்குத் தொழிலே அடிப்படையாக அமைகிறது. தொழில் சார்ந்த பொருளாதாரத் தொடர்புகளே யாழ்ப்பாணச் சாதியத்தில் அதிகாரப் படிநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணச் சாதிகளைப் பின்வருமாறு இரு பிரிவுகளாகப் பார்க்கும் வழக்கமும் உண்டு. மட்டக்களப்புப் பகுதியில் சாதி முறை பல விதங்களில் யாழ்ப்பாணச் சாதி முறையில் இருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. சில சாதிகள் இவ்விரு பகுதிகளுக்கும் பொதுவானவையாகக் காணப்பட்ட போதிலும், சில சாதிகள் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன. இது தவிர மட்டக்களப்பில் வெள்ளாளருக்கு அதிகார மேலாண்மை கிடையாது. அப்பகுதியில் முக்குவச் சாதியினரே அதிகார மேலாண்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர். மக்கள்தொகை அடிப்படையிலும் கூடிய பலம் கொண்டவர்களாக இருப்பவர்கள் இச்சாதியினரே. மட்டக்களப்புச் சாதியமைப்பில் "குடி" முறைமை முக்கியமான ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இக் குடி முறைமை கோயில் ஆதிக்கம் போன்றவற்றினூடாக நிறுவனப்படுத்தப்பட்டு உள்ளது. சமயம் இலங்கைத் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களின் மரபுவழிப் பகுதிகளான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களில் 83% இந்துக்கள், 13% கத்தோலிக்கர், மிகுதியானோர் பிற கிறித்தவர்கள். இப் பகுதிக்கு வெளியே வாழும் தமிழர்களில் (இலங்கையின் இந்தியத் தமிழர்களும் உட்பட) ஏறத்தாழ 81.5% இந்துக்களே. இலங்கைத் தமிழ் இந்துக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள். குறிப்பாக வட பகுதியில் சைவசித்தாந்த அடிப்படையிலேயே வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. அதே வேளை சிறு தெய்வ வணக்கங்களும் இடம்பெற்று வருவதைக் காணலாம். தமிழ்நாட்டில் பௌத்தம் வேரூன்றி இருந்த காலத்தில் இலங்கையில் இருந்த தமிழர் பலரும் பௌத்தர்களாக இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், யாழ்ப்பாண அரசுக் காலத்தில் இலங்கைத் தமிழர் அனைவரும் இந்துக்களாகவே இருந்தனர். 1540 களில் யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளில் போர்த்துக்கேயப் பாதிரிமார்களின் நடவடிக்கைகள் தொடங்கியபோது கத்தோலிக்க மதம் இலங்கைத் தமிழர் மத்தியில் அறிமுகமானது. 1560 இல் போர்த்துக்கேயர் கைப்பற்றிக்கொண்ட பின்னர் அப்பகுதியில் இலங்கைத் தமிழர் பலர் கத்தோலிக்கர் ஆயினர். 1590 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் போர்த்துக்கேயரின் தயவுடன் அரசாண்ட காலங்களில் யாழ்ப்பாண அரசின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் கத்தோலிக்க மதத்துக்கு மாறினர். 1619 இக்குப் பின்னர் யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்தது. அதன் பின்னர் மதமாற்ற வேலைகள் அரசாங்க ஆதரவுடன் இடம்பெற்றன. இந்துக் கோயில்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டன. வற்புறுத்தலின் பேரிலும் மதமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிகிறது. போர்த்துக்கேயரின் 38 ஆண்டு நேரடி ஆட்சிக் காலத்துக்குள்ளேயே யாழ்ப்பாண மக்கள் எல்லோரும் கத்தோலிக்கர் ஆகிவிட்டதாக அக்காலத்துப் போர்த்துக்கேயப் பாதிரிமார்களில் எழுத்துக்களில் இருந்து தெரிய வருகிறது. எனினும், பெரும்பாலான இலங்கைத் தமிழர் இந்து மதத்தை மறைவாகக் கைக்கொண்டிருந்தனர். தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் ஆட்சியில் இந்து மதத்துடன், கத்தோலிக்க மதமும் அடக்குமுறைக்கு உள்ளானதுடன், புரட்டசுதாந்து கிறித்தவம அரச ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 138 ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் இந்து மதமும், கத்தோலிக்க மதமும் மீண்டும் எழுச்சிபெற வாய்ப்புக்கள் கிடைத்தன. இந்துக் கோயில்களும், கத்தோலிக்கத் தேவாலயங்களும் ஆங்காங்கே மீண்டும் எழலாயின. பின்னர் பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டபோது, புரட்டசுத்தாந்த கிறித்துவ மதத்துக்கு முன்னுரிமைகள் இருந்த போதும், பிற மத விடயங்களில் ஓரளவு சுதந்திரம் கிடைத்தது. இந்து மதமும் கத்தோலிக்க மதமும் மீண்டும் வெளிப்படையாகவே வளர்ச்சியுற வாய்ப்புக் கிடைத்தது. பண்பாடு மொழி இலங்கைத் தமிழ் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், பேச்சு வழக்கைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழும் பல வட்டார வழக்குகளை உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. இலங்கைப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தமிழ்நாட்டுத் தமிழரின் பேச்சு வழக்குகளில் இருந்து ஒலியியல், உருபனியல், சொற்றொடரியல், சொற்பயன்பாடு போன்ற பல கூறுகளில் வேறுபாடுகளைக் கொண்டதாக அமைந்திருப்பதையும் காண முடியும். ஆனாலும், திரைப்படங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றினூடாக தமிழ் நாட்டின் பொதுவான பேச்சு வழக்குகள் இலங்கைத் தமிழருக்குப் பரிச்சயமாக உள்ளன. அதேவேளை, இவ்வாறான ஊடகத் தொடர்புகள் ஒருவழிப் பாதையாக இருப்பதனால், தமிழக மக்களுக்கு, இலங்கைத் தமிழ் வழக்குகள் அவ்வளவு பழக்கப்பட்டதாக இல்லை. இலங்கைத் தமிழர் வழக்கில் பொதுவாகப் பயன்படும் சில சொற்களைத் தமிழ் நாட்டினர் எளிதில் புரிந்து கொள்வது இல்லை. எடுத்துக்காட்டாக, பெடியன் (ஆண் பிள்ளை), பெட்டை (பெண் பிள்ளை) (பெண்), கதைத்தல் (பேசுதல்), விளங்குதல் (புரிதல்) போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். தமிழகத்தில் இருந்து பிரிந்து நீண்டகாலம் தனியாக வளர்ந்ததனால், மிகப் பழைய காலத்துக்குரிய கூறுகளை இன்றும் இலங்கைத் தமிழில் காண முடிகிறது. தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கில் பல சொற்களில் உகரம் ஒகரமாகவும் (உடம்பு > ஒடம்பு), இகரம் எகரமாகவும் (இடம் > எடம்) திரிபடைகிறது. இலங்கைத் தமிழரது பேச்சு வழக்கில் இத்தகைய திரிபு கிடையாது. இது போன்றே மெய்யெழுத்துக்களில் முடியும் சொற்கள் சில தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் மெய்யெழுத்துக் கெட்டு முதல் எழுத்து மூக்கொலியுடன் உச்சரிக்கப்படுகின்றன (மகன் > மக(ன்), காகம் > காக(ம்)). இலங்கைத் தமிழில் இவ்வகைத் திரிபு இல்லை. எழுத்துக்கள் சிலவற்றின் ஒலிப்பிலும் இலங்கைத் தமிழ் தமிழ்நாட்டுத் தமிழில் இருந்து வேறுபடுகிறது. "ற்ற்", "ர" ஆகிய எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கையில் "ற்ற்" முதல் "ற"கரமும் இரண்டாவது "ற"கரமும் வெடிப்பொலியாகவே ஒலிக்கப்பட, தமிழ்நாட்டில் இரண்டாவது "ற"கரம், உருளொலியாக ஒலிக்கப்பட்டுகிறது. இவற்றின் ஒலிப்பு வேறுபாட்டினால், பிற மொழிப் பெயர்கள், சொற்களை ஒலிபெயர்க்கும் போதும் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இலங்கையில் "Newton" ஒலிபெயர்க்கும்போது "நியூற்றன்" என்று எழுதுகிறார்கள். தமிழ் நாட்டில் "நியூட்டன்" என்று எழுதப்படுகிறது. இலங்கைத் தமிழ் வழக்குகளில் யாழ்ப்பாணத் தமிழ் வழக்குக் குறிப்பிடத்தக்க ஒன்று, யாழ்ப்பாணத் தமிழ் வழக்கில் பழந்தமிழுக்கு உரிய தனித்துவமான பல கூறுகளை இன்றும் காண முடியும். எடுத்துக்காட்டாக, பழந்தமிழில் வழக்கில் இருந்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்த இடைநிலைச் சுட்டுப் பெயர்களான உவன், உவள், உது போன்றவை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இன்றும் பயன்படுகின்றன. மட்டக்களப்புத் தமிழும் பல தனித்துவமான கூறுகளைக் கொண்ட ஒரு பேச்சு வழக்காக உள்ளது. இப்பேச்சு வழக்கிலும், பழந் தமிழுக்குரிய பல கூறுகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளதைக் காண முடியும். இலங்கையில் தமிழ் வட்டார வழக்குகளில், கூடிய பழந்தமிழ் தொடர்பு கொண்டது மட்டக்களப்பு வழக்கே என்ற கருத்தும் உண்டு. போதிய ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக மொழி வழக்கின் புதிய கூறுகளான கலைச்சொல் ஆக்கம் போன்றவற்றிலும் இலங்கைத் தமிழ், தமிழ்நாட்டுத் தமிழில் இருந்து வேறுபடுவதைக் காணலாம். எழுத்து, சொல், அகராதியியல், பொருள் ஆகிய நான்கு நோக்கிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலக்கியம் இலங்கைத் தமிழரின் இலக்கியம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசுபவர்கள், சங்ககாலத்தில் இருந்து தொடங்குவது வழக்கம். சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது பொதுவான கருத்து. இதைத் தவிர யாழ்ப்பாண இராச்சியக் காலத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழரின் இலக்கியம் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. 13 ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி பரம்பரையினர் தமிழ் வளர்ச்சியில் அக்கறை காட்டினர். பரராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர் கொண்ட மன்னன் ஒருவன் காலத்தில் நல்லூரில் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்ததாகவும், சரசுவதி மகால் என்னும் பெயரில் நூலகம் ஒன்று அமைத்துப் பழைய நூல்களைப் பாதுகாத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்து அரசர்களிற் சிலரும், அரச குடும்பத்தவர் சிலரும் தமிழில் புலமை கொண்டவர்களாக விளங்கினர். சமயம், தமிழ் ஆகியவை தொடர்பில் மட்டுமன்றி சோதிடம், மருத்துவம், ஆகிய துறைசார்ந்த நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்னும் நூல்கள் இத்தகையவை. கைலாயமாலை, வையாபாடல் ஆகிய நூல்களும் யாழ்ப்பாண இரச்சியக் காலத்தில் எழுதப்பட்டவையே. அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசகேசரி என்பவர் காளிதாசர் வடமொழியில் எழுதிய இரகுவமிசம் என்னும் நூலைத் தழுவி, தமிழில் அதே பெயரில் ஒரு நூலை எழுதினார். 1619 முதல் 1796 வரையிலான போர்த்துக்கேச, ஒல்லாந்த ஆட்சிக் காலங்களிலும், கூழங்கைத் தம்பிரான், இணுவில் சின்னத்தம்பிப் புலவர், முத்துக்குமாரக் கவிராயர், சிலம்புநாதபிள்ளை போன்ற பல புலவர்கள் வாழ்ந்து தமிழ் நூல்களை ஆக்கியுள்ளனர். இக்காலத்தில் போர்த்துக்கேயக் குருமாரும், தமிழ் கிறித்தவரும் கூட சமயப் பரப்புரைக்கான தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான மதப் பரப்புரைகளுக்குச் சார்பாகவும், எதிராகவும் மாறிமாறி ஞானக் கும்மி, இயேசுமத பரிகாரம், அஞ்ஞானக் கும்மி, அஞ்ஞானக் கும்மி மறுப்பு எனப் பல நூல்கள் இக்காலத்தில் உருவாயின. பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது. ஆறுமுக நாவலர் சைவப் பரப்புரைகளுக்காக நூல்களை எழுதியதோடு அமையாது, அழியும் நிலையில் இருந்த பழந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தேடி பதிப்பித்துப் பாதுகாத்தார். இவரது இந்த முயற்சி உலகத் தமிழரிடையே ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது. தமிழில் உடைநடை இலக்கியத்தை வளர்த்து எடுத்ததிலும், ஆறுமுக நாவலரின் பணி முக்கியமானது. இக்காலத்தில் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த பல தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், உலகம் முழுவதிலும் ஏற்பட்ட இடதுசாரிச் சிந்தனை வளர்ச்சி, இலங்கையில் இலவசக் கல்வியின் அறிமுகம் போன்றவை இலங்கைத் தமிழ் இலக்கியத்தைச் சமூகத்தின் அடி மட்டம் வரை எடுத்துச் சென்றன. கலையும், இலக்கியமும் மக்களுக்காகவே என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், சாதிப் பாகுபாடு, இனப் போராட்டம், பெண்ணுரிமை போன்ற பல விடயங்கள் இலக்கியத்துக்குக் கருப்பொருள்களாயின. இலக்கியம் படைப்போரும் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் உருவாகினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இந்த மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்தன. உடொமினிக்கு சீவா, இடானியல், செ. கணேசலிங்கன், செங்கை ஆழியான் போன்றோர் இக்காலம் உருவாக்கிய படைப்பாளிகள். இக்காலப் பகுதியில் சிலர் இனப்பிரச்சினையை மையமாக வைத்தும் இலக்கியம் படைத்தனர் ஆயினும், இவை பொதுவாகப் பிற்போக்கு இலக்கியங்கள் என முத்திரை குத்தப்பட்டன. 1983க்குப் பின்னர் இனப்பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர் இது இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய கருப்பொருளானது. இது, உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன் எப்பொழுதும் கண்டிராத ஒன்று. இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பெரும்பகுதி தமிழ் விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில், இந்த அடிப்படையில் தமிழ் இலக்கியம் கவிதை, கதை, நாடகம் எனப் பல்வேறு முனைகளிலும் வளர்ந்தது. இலங்கையில் இடம் பெற்ற இனப்போரின் விளைவாக ஏற்பட்ட உலகம் தழுவிய புலப் பெயர்வுகளினால், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, தமிழுக்குப் புதிய பல கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் உருவாகின்றன. கல்வி ஐரோப்பியர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் மத்தியில் மரபுவழிக் கல்வி முறை இருந்தது. இது பொதுவாக, தமிழ், வடமொழி, சமயம் சார்ந்த விடயங்கள் என்பவற்றைத் தழுவியதாகவே இருந்தது. தொழில்கள் சாதி அடிப்படையிலேயே அமைந்திருந்ததால், தொழிற்கல்வி குலவித்தையாகவே பயிலப்பட்டு வந்தது. பொதுக் கல்வியிலும் சாதி முக்கிய பங்கு வகித்தது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்பதற்கு மரபுவழிக் கல்வி முறையில் இடம் இருக்கவில்லை. கல்வி உயர் சாதியினருக்கு உரியதாகவே கருதப்பட்டு வந்தது. மாணவர்கள், மொழியையும் சமயத்தையும் கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களை அணுகிக் குருகுலவாச முறையில் கல்வி பெற்று வந்தனர்.. போர்த்துக்கேயர் தமிழர் பகுதிகளைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பின்னர், தேவாலங்களையும் அவற்றின் அருகே பள்ளிகளையும் உருவாக்கினர். தீவிர மதமாற்றக் கொள்கையைக் கடைப்பிடித்த போர்த்துக்கேயக் குருமார் மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கிறித்துவத்தைக் கற்பிப்பதற்காகத் தமிழ் கற்று அம்மொழி மூலமே சமயத்தையும் கற்பித்து வந்தனர். இக்காலத்தில், எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் கல்வி பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும், நிருவாகத் தேவைகளை முன்னிட்டு போர்த்துக்கேயர் சாதி முறையை மாற்ற விரும்பாததால், தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை அக்காலக் கல்வியும் சமூக முன்னேற்றத்துக்கான ஒன்றாக இருக்கவில்லை. ஒல்லாந்தர் காலத்திலும் ஏறத்தாழ இதே நிலையே நிலவியது. பரந்துபட்ட அளவில் கல்விக்கான வாய்ப்புக்கள் பிரித்தானியர் காலத்திலேயே ஏற்பட்டன. கிறித்துவ மிசன்கள் பள்ளிக்கூடங்களை நிறுவிக் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டின. இந்த வகையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசனின் நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்கவை. பட்டப்படிப்புவரை கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. அமெரிக்க மிசனைச் சேர்ந்த மருத்துவர் கிறீன் உள்ளூர் மாணவர்களுக்கு மேல் நாட்டு மருத்துவத்தையும் கற்பித்து வந்தார். இவர் பல மருத்துவப் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் மொழி மூலமே மருத்துவம் கற்பித்தது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அச்சகம் ஒன்றை நிறுவி நூல்களை வெளியிடுவதிலும் ஈடுபட்டது, தமிழர் கல்வி வளர்ச்சியில் முக்கியமான ஒரு மைல் கல்லாகும். ஆனாலும், இத்தகைய கல்வி நடவடிக்கைகள், கிறித்துவ மதம் பரப்பும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், இந்துக்கள் மத்தியில் இது எதிர்ப்புணர்வைத் தோற்றுவித்தது. இது ஒரு தேசிய எழுச்சியின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டாலும், அடிப்படையில், ஒரு பழமைவாதச் சமூகம் சாதி முறையை அடிப்படையாகக் கொண்ட தனது சமூகக் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவும் இது இருந்தது எனலாம். இந்த எதிர்ப்பின் முன்னணியில் ஆறுமுக நாவலர் இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் சைவப் பாடசாலைகளை நிறுவி மாணவர்களுக்குச் சைவ முறையில் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்தார். இவரது முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், இவரைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பல இந்துப் பாடசாலைகள் நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கின. இலங்கைத் தமிழர்களைச் செறிவாகக் கொண்ட யாழ்ப்பாணக் குடா நாடு வேளாண்மைப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டது எனினும், ஆறுகள் எதுவும் அற்ற வரண்ட நிலத்தில், கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலை இருந்தது. இதனால், கல்வி மூலம் கிடைத்த வாய்ப்புக்களை யாழ்ப்பாண மக்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் எனலாம். பிள்ளைகளுக்குச் சிறப்பான கல்வியை அளிப்பதே பெரும்பாலான யாழ்ப்பாணத்துப் பெற்றோர்களின் அடிப்படையான நோக்கம். இதனால், இப்பகுதியின் படிப்பறிவு மட்டம் நீண்டகாலமாக உயர்வாகவே இருந்து வந்துள்ளதுடன், உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் யாழ்ப்பாண மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்து வந்தது. இது சிங்களவர்களுக்குப் பாதகமானது என்ற கருத்து உருவானதன் காரணமாக, அரசாங்கம் மொழிவாரித் தரப்படுத்தல், மாவட்ட அடிப்படையிலான இட ஒதுக்கீடு போன்ற நடைமுறைகளை உருவாக்கிப் பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் யாழ்ப்பாண மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினர். மொழிவாரித் தரப்படுத்தல் இலங்கைத் தமிழ் மாணவர்கள் எல்லோரையும் பாதித்த அதேவேளை, மாவட்ட ஒதுக்கீட்டு முறையின் மூலம், கல்விக்கான வசதிகள் குறைவாக இருந்த தமிழ் மாவட்டங்களான வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் ஓரளவு பயன் பெற்றனர் எனலாம். ஆனாலும் ஒட்டுமொத்தமாகத் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சி கண்டது. உணவு இலங்கைத் தமிழரின் உணவு பெரும்பாலும் தென்னிந்திய செல்வாக்குடன் கூடியது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் உணவுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. அத்துடன், இலங்கையை ஆண்ட ஐரோப்பியர்களின் செல்வாக்கும் உண்டு. மரபு வழியாக இலங்கைத் தமிழரின் முக்கிய உணவுகள் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. தினை, சாமை, குரக்கன், வரகு போன்ற சிறு தானிய வகைகளும் பயன்படுகின்றன. இலங்கைத் தமிழர் அனைவரும் ஒரு நாளுக்கு ஒரு தடவையாவது, பொதுவாக மதிய உணவுக்குச் சோறும் கறியும் உணவாகக் கொள்கின்றனர். சில பகுதிகளில் இரவிலும் சோறு சாப்பிடுவது உண்டு. பழங்காலத்தில், முதல் நாட் சோற்றைத் தண்ணீரூற்றி வைத்து பழஞ்சோறு என அடுத்தநாட் காலைச் சாப்பாடாக உட்கொள்ளும் வழக்கம் இருந்தது. யாழ்ப்பாணத் தமிழர் பெரும்பாலும், குத்தரிசி எனப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே விரும்பிச் சாப்பிடுவர். உள்ளூரில் கிடைக்கக்கூடிய மரக்கறிகள், இறைச்சி, மீன் முதலிய கடலுணவு வகைகள் கறி சமைப்பதற்குப் பயன்படுகின்றன. கத்தரி, வாழை, வெண்டி, பூசணி, அவரை, முருங்கைக்காய், கிழங்கு வகைகள் போன்ற பாரம்பரியமான மரக்கறிகள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்காலத்தில் மேற்கத்திய மரக்கறி வகைகளான கரட், பீட்ரூட், லீக்சு போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர். தவிர, முளைக்கீரை, பசளி, வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளும் சமையலுக்குப் பயன்படுகின்றன. இலங்கையில் தமிழர் பகுதிகள் நீண்ட கடற்கரையைக் கொண்டவை இதனால், மீன், சுறா, நண்டு, கணவாய், இறால், திருக்கை போன்ற பலவகைக் கடலுணவுகள் கிடைக்கின்றன. கறிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பொதுவாகப் பயன்படுகின்ற சாம்பார் இலங்கைத் தமிழரிடையே முக்கியமான இடத்தைப் பெறவில்லை. இதற்குப் பதிலாக தேங்காய்ப் பால், மிளகாய்த் தூள் என்பவற்றுடன் மரக்கறி, மீன், இறைச்சி அல்லது பிற கடலுணவு வகை கலந்து சமைக்கப்படும் குழம்பு பயன்படுகிறது. தமிழ் நாட்டில் அதிகம் காணப்படாத இன்னொரு துணைக் கறி வகை சொதி. இது தேங்காய்ப் பாலில் செய்யப்படுகிறது. சோற்றுடன் சாப்பிடும்போது கடைசியாகச் சொதி ஊற்றிச் சாப்பிடுவது வழக்கம். இலங்கையில், கறிகளில் அதிகமான தேங்காய் சேர்ப்பது வழக்கம். இதுவும் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படாத ஒரு வழக்கம் ஆகும். சோறு சாப்பிடாத வேளைகளில் இலங்கைத் தமிழர் இடியப்பம், பிட்டு போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவர். இட்டிலி, தோசை, அப்பம் போன்றவற்றையும் அவ்வப்போது சாப்பிடுவது உண்டு. இட்டிலி, தோசை போன்றவற்றுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் முக்கியத்துவம் இலங்கைத் தமிழர் மத்தியில் இல்லை. மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்குகளை அவித்து மிளகாய்ச் சம்பலுடன் சாப்பிடும் வழக்கமும் உண்டு. பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகளைப் பெரும்பாலும் அரிசி மாவில் செய்வது வழக்கம். குரக்கன் மாவிலும் பிட்டு அவிப்பது உண்டு. யாழ்ப்பாணத்தில், ஒடியல் மாவைப் பயன்படுத்தியும் பிட்டு அவிப்பர். இரண்டாவது உலகப் போர்க் காலத்தில் இலங்கையில் கோதுமை மாவு அறிமுகமானது. அக்காலத்தி இருந்து பிட்டு, இடியப்பம் முதலியவற்றுக்கு அரிசி மாவுடன், கோதுமை மாவையும் கலந்து, அல்லது தனிக் கோதுமை மாவில் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இக்காலத்திலேயே இலங்கைத் தமிழர் பாணை (ரொட்டி) உணவாகக் கொள்ளும் வழக்கமும் உருவானது. தற்காலத்தில் இலங்கைத் தமிழரிடையே பாணும் ஒரு முக்கிய உணவாக உள்ளது. முற்காலத்தில், யாழ்ப்பாணப் பகுதியின், குறிப்பாக ஏழை மக்களின், உணவுத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதில் பனம் பொருட்கள் முக்கிய பங்கு வகித்தன. பனம் பழம், பனாட்டு, பனங் கிழங்கு, ஒடியல், ஒடியல் மாவிலிருந்து செய்யப்படும் உணவு வகைகள் என்பவற்றை மக்கள் உணவாகப் பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில் பனம் பொருட்கள் முக்கிய உணவாகப் பயன்படுவது இல்லை. ஒடியல் மாவு, கடலுணவு வகைகள் போன்றவற்றைக் கலந்து செய்யப்படும் ஒரு வகைக் கூழ் யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்துவமான ஒரு உணவு ஆகும். பெரிய பானைகளில் இக்கூழைக் காய்ச்சி, உறவினர்கள், அயலவர்கள் எனப் பலரும் ஒன்றாகக் கூடியிருந்து, பிலாவிலையைக் கோலிக்கொண்டு அதில் கூழை ஊற்றிக் குடிப்பர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தவரின் மனத்தில் நீங்காது இடம்பெறக்கூடிய ஒரு விடயம் இது எனலாம். உள்ளூரில் விளையும் பல பழவகைகளையும் இலங்கைத் தமிழர் உணவாகக் கொள்ளுகின்றனர். மா, பலா, வாழை போன்றவை இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாகவே செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. தோடை போன்ற பழவகைகள் வன்னிப்பகுதியில் செய்கை பண்ணப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தப்பட்ட திராட்சையும் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக விளைவிக்கப்பட்டது. அரசியல் இலங்கைத் தமிழர் தொடர்பான அண்மைக்கால வரலாறு, குறிப்பாக இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றதற்குப் பிந்திய காலப்பகுதி, பல்வேறு வடிவங்களில் சிங்களவருக்கும், தமிழருக்குமான போராட்ட வரலாறாகவே இருந்து வந்திருக்கிறது எனலாம். விடுதலைக்கு முந்திய காலத்தில், தமிழ்த் தலைவர்களுக்கும், சிங்களத் தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது போல் காணப்பட்டது ஆயினும், இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் விடுதலைக்கு முந்திய ஆண்டுகளிலேயே உருவாகிவிட்டன. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைக்கு முன் யாழ்ப்பாண இராச்சியம் உருவான காலத்தில் இருந்து பெரும்பாலான தமிழர் பகுதிகள் தொடர்ச்சியாக ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆண்ட காலங்களிலும் யாழ்ப்பாண இராச்சியம் தனியான ஒன்றாகவே கருதப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1815 ஆம் ஆண்டில் இலங்கையின் கடைசிச் சுதந்திர இராச்சியமான கண்டி பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னர், 1833 ஆம் ஆண்டில் அமுல் செய்யப்பட்ட அரசியல், நிர்வாகச் சீர்திருத்தத்தின் கீழ் முழுத்தீவும் ஒன்றாக்கப்பட்டு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு இலங்கைத் தமிழரின் பிற்கால அரசியல் போக்கைத் தீர்மானித்த ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இந்தச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்ட நிரூபண சபையில் உத்தியோக அடிப்படையில் இல்லாத ஆறு உறுப்பினர்களுக்கு இடம் இருந்தது. இதில் தமிழருக்கும், சிங்களவருக்கும் இன அடிப்படையில் ஒவ்வொரு இடம் வழங்கப்பட்டது. 1889ல் இன்னொரு சிங்களவருக்கும், ஒரு முசுலிமுக்கும் இடம் கிடைத்து. இந்தச் சபையில் ஒருவர் பின் ஒருவராகத் தமிழர் பிரதிநிதிகளாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர் பகுதிகளை விட்டுக் கொழும்பில் குடியேறிய பணம்படைத்த உயர்குடியினராக இருந்தனர். இவர்களது, தொழில், முதலீடுகள் என்பன தமிழர் பகுதிகளுக்கு வெளியிலேயே இருந்தன. இதனால், இலங்கைத் தமிழர் பகுதிகளை இலங்கையின் ஒரு பகுதியாக இணைத்தது இவர்களுக்கு வாய்ப்பாகவே இருந்தது. எனவே, இது குறித்து எவருமே அக்கறை காட்டவில்ல. அரசாங்க சபையில் இலங்கையருக்குக் கூடிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதே இவர்களது இலக்காக இருந்தது. 1910 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மக்கலம் சீர்திருத்தம், சட்டநிரூபண சபையில், உத்தியோக அடிப்படையில் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பத்தாக அதிகரித்தது. தமிழரும் சிங்களவரும் அரசின் சம பங்காளிகளாகக் கருதப்பட்டமையால், இதன் பின்னரும் தமிழர் சிங்களவருக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஏறத்தாழச் சம அளவாகவே இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் அதிக எண்ணிக்கையான பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், கூடிய அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகவும் சிங்கள தமிழ்த் தலைவர்கள் முயற்சி எடுத்தனர். சிங்களவர்களுக்குக் கூடிய உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், பிரதேச அடிப்படையிலேயே பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும் எனச் சிங்களத் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், யாழ்ப்பாணச் சங்கம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. நடைமுறையில் இருந்த இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தையே அவர்கள் வேண்டி நின்றனர். ஆனாலும், இலங்கையின் தன்னாட்சிக்காக ஒன்றுபட்ட இயக்கமொன்றைக் கட்டி எழுப்புவதற்காகச் செல்வாக்கு மிக்க கொழும்புத் தமிழ்த் தலைவராக இருந்த பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து இயங்கி வந்தார். சிங்களத் தலைவர்கள் கொழும்பில் தமிழருக்கு ஒரு உறுப்பினரை அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிங்களவருடன் சேர்ந்து இயங்க யாழ்ப்பாணச் சங்கம் உடன்பட்டது. தொடர்ந்து, சிங்களவரையும் தமிழரையும் உட்படுத்திய இலங்கைத் தேசிய காங்கிரசு என்னும் இயக்கம் உருவானது. 1920 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தம், கண்டிச் சிங்களவருக்குச் சாதகமாக அமைந்தது, இதனால் கரையோரச் சிங்களவர் தமிழருக்கு அளிந்திருந்த உறுதி மொழியில் இருந்து பின்வாங்கினர். இதனால், ஏமாற்றம் அடைந்த அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகித் தமிழர் மகாசன சபை என்னும் அமைப்பை உருவாக்கினார். இந்தப் பிளவு இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மனிங் சீர்திருத்தத்தின் அடிப்படையில் உருவான சபையில், தமிழர் சிங்களவருக்கு இடையில் இருந்த உறுப்பினர் சமநிலை இல்லாது போய்த் தமிழருக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் 1931ல் டொனமூர் சீர்திருத்தத்தின் அடிப்படையில் இன்னொரு புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இது சிங்களவரின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மக்கள் வாக்குரிமையுடன், பிரதேச அடிப்படையில், அரசாங்க சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வழி வகுத்தது. இலங்கை 9 மாகாணங்களாகவும், மொத்தம் 50 தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் 7 தொகுதிகளை மட்டுமே இலங்கைத் தமிழர் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய இடதுசாரிச் சிந்தனை கொண்ட இளைஞர் இயக்கமான யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு டொனமூர் அரசியல் சட்டத்துக்கு அமைய இடம்பெற்ற முதல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பரப்புரை செய்தது. தமிழர் பிரச்சினையைக் கருத்தில் கொள்ளாது இலங்கை மக்களுக்குப் போதிய தன்னாட்சி அதிகாரம் வழங்கவில்லை என்ற அடிப்படையிலேயே இந்தப் புறக்கணிப்பை அது கோரியது. அத்துடன் வட மாகாணத்தின் 4 தொகுதிகளில் போட்டியிட இருந்தவர்களையும் போட்டியிடாதிருக்கச் சம்மதிக்க வைத்தது. இதன் அடிப்படையில் அரசாங்க சபையில் சிங்களவரோடு ஒப்பிடுகையில் தமிழருக்கான உறுப்பினர் எண்ணிக்கை 38க்கு 3 என்ற அளவுக்குக் குறைந்து விட்டது. நிலைமையை உணர்ந்துகொண்ட பலர் தேர்தலை நடத்தக் கோரிக்கை வைத்ததனால், பின்னர் இடம்பெற்ற தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு எதிரானவர்கள் வெற்றி பெற்றனர். அரசாங்க சபையில் தமிழர் பலம் 38க்கு 7 என்ற அளவு இருந்தது. அப்போது அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழர்கூட அமைச்சராக இருக்கவில்லை. ஜீ. ஜீ. பொன்னம்பலம் உட்பட மூன்று தமிழருக்குத் துணை அமைச்சர் பதவியும், டபிள்யூ. துரைச்சாமிக்குச் சபாநாயகர் பதவியும் தரப்பட்டன. இலங்கையின் அரசியல் யாப்பைத் திருத்துவதற்காக 1934ல் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவைப் பிரித்தானிய அரசு அமைத்தது. அப்போது, ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஈ. எம். வி. நாகநாதன் போன்ற கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தலைவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது என அக்காலத்தில் அறியப்பட்ட சமபல பிரதிநிதித்துவ அமைப்பு ஒன்றுக்கான கோரிக்கையை முன்வைத்தனர். அதே வேளை யாழ்ப்பாணத்தில் சிலர் கூட்டாசி முறையொன்றுக்கான கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், இக்கோரிக்கைகள் எதையுமே கவனத்தில் கொள்ளாத சோல்பரி ஆணைக்குழுவும், சிங்களப் பெரும்பான்மையினருக்குச் சாதகமாக அமைந்த அரசியல் யாப்பை உருவாக்கியது. ஆனால், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்த்துச் சில ஒழுங்குகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. குறிப்பாக 29 ஆவது சரத்து எனப் பரவலாக அறியப்பட்ட பிரிவு, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப் படுவதைத் தடுக்கும் எனக் கருதப்பட்டது. சோல்பரி அரசியல் திட்டத்தின் அடிப்படையில் 1947ல் இடம்பெற்ற தேர்தலில் 68 சிங்கள உறுப்பினர்களுக்கு எதிராக 13 இலங்கைத் தமிழ் உறுப்பினர்களே தெரிவாகினர். ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை தோல்வி அடைந்த பின்னர், வேறு மாற்றுத் திட்டம் எதையும் கொண்டிருக்காத ஒரு நிலையில், தமிழ்த் தலைவர்கள் டீ. எஸ். சேனாநாயக்காவின் அரசுடன் ஒத்துழைக்கத் தீர்மானித்தனர். சுயேச்சை உறுப்பினரான சி. சுந்தரலிங்கம், தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டன. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைக்கு பின் பிரித்தானியர், 1948 ஆம் ஆண்டில் விடுதலை வழங்கி இலங்கை முழுவதையும் சிங்களப் பெரும்பான்மை அரசின் பொறுப்பில் ஒப்படைத்தனர். இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பிரச்சினைகள் உருவாகின. இந்தியர் பிரசாவுரிமைச் சட்டம், தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டும் சட்டம் போன்றவை தமிழர்களின் உரிமைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கின. இந்தியர் பிரசாவுரிமைச் சட்டத்தை அமைச்சராக இருந்த பொன்னம்பலம் ஆதரித்ததால், தமிழ்க் காங்கிரசுக் கட்சி இரண்டாக உடைந்தது. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பலர் கட்சியில் இருந்து விலகி இலங்கைக் கூட்டாட்சிக் கட்சியைத் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) தொடங்கினர். இக்கட்சி, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி முறையை முன்வைத்தது. விடுதலைக்கு முன்பிருந்தே பல சிங்களத் தலைவர்கள் சிங்கள மொழியை மட்டுமே அரசாங்க மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 1956ல், பௌத்த, சிங்கள உணர்வுகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, சிங்களத்தை மட்டும் அரச மொழி ஆக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழரசுக் கட்சியினர் கொழும்பில் இதற்கு எதிராக அமைதிவழிப் போராட்டம் நடத்தினர். இது வன்முறையால் அடக்கப்பட்டது. நாடு முழுவதும் இனக்கலவரம் உருவாகித் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பண்டாரநாயக்கா தமிழ் மொழிக்கும் ஓரளவு உரிமை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை செல்வநாயகத்துடன் செய்துகொண்டார். இது பண்டா-செல்வா ஒப்பந்தம் என அறியப்பட்டது. ஆனால் சிங்களத் தலைவர்களின் கடுமையான எதிப்பின் காரணமாகப் பண்டாரநாயக்கா ஒருதலையாக இவ்வொப்பந்ததைக் கைவிட்டார். பண்டாரநாயக்கா இறந்த பின்னர் பதவிக்கு வந்த அவரது மனைவி சிரிமா பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். 1965ல் டட்லி சேனாநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மாவட்ட அடிப்படையிலான ஓரளவு அதிகாரப் பரவலாகத்துக்கான வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, தமிழரசுக் கட்சியினர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்காததால், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அக்கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. 1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய சிரிமா பண்டாரநாயக்கா, இலங்கையைப் பிரித்தானியாவில் இருந்து முற்றாகத் துண்டித்துக்கொண்டு குடியரசு ஆக்குவதற்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கினார். நாடு முழுவதும் சிங்களமே அரச மொழியாகவும், பௌத்த மதம் முன்னுரிமை கொண்ட மதமாகவும் இருக்கும் வகையில் யாப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் இலங்கை குடியரசு ஆக்கப்பட்டது. அத்துடன், கல்வித்துறையில் தரப்படுத்தல் போன்றவை தமிழ் மாணவர்களை விரக்திக்கு உள்ளாக்கின. இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்குத் தலைதூக்கத் தொடங்கியது. மிதவாதத் தமிழ்த் தலைவர்களுக்கு இளைஞர்களிடம் இருந்து அழுத்தங்கள் ஏற்பட்டன. இதனால், இதுவரை எதிரெதிராக இயங்கிவந்த இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு என்பனவும், தொண்டமான் தலைமையில் இந்தியத் தமிழருக்காக இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் அமைப்பை உருவாக்கிச் சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர். இது எவ்வித பயனும் அளிக்காததைத் தொடர்ந்து, 1976 இல் இலங்கையில் தமிழருக்குத் தனிநாடு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனவும் மாற்றப்பட்டது. அமைதிவழியில் தமது இலக்கை அடைவதையே இம்முன்னணி நோக்கமாகக் கொண்டிருந்தது. போராட்ட எழுச்சி 70 களின் பிற்பகுதியிலும், 80 களின் முற்பகுதியிலும் அமைதி வழியில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் சிலர் சிறுசிறு குழுக்களாக இயங்கிவந்தனர். 1983 இல் இடம்பெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து படிப்படியாக மிதவாத அரசியல் கட்சிகளின் செல்வாக்குத் தளர்ந்து வந்தது. பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் வளர்ச்சிபெற்று வந்தன. இவற்றுக்கிடையே உள் முரண்பாடுகளும் அடிக்கடி வெளிப்பட்டன. காலப்போக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்குக் கிழக்கின் பெரும் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்தது. 1987 இல் இலங்கைத் தமிழரின் பங்களிப்பு எதுவும் இன்றி இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஒன்று உருவானது. இதன் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கத்துக்காக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், தமிழ் தேசிய மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அமைதி காப்பதற்காக வடக்குக் கிழக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டது. தொடர்ந்து இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி இரு தரப்பினரிடையே போர் ஏற்பட வழிவகுத்தது. 1989 இல் ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறாமலேயே இந்திய அமைதிப்படை விலகவேண்டி ஏற்பட்டது. மீண்டும் வடக்குக் கிழக்கின் பல பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வெளிநாட்டு நடுவர்களுடன் பல அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்றனவாயினும் எவ்வித பயனும் விளையவில்லை. உள்நாட்டுப் போரின் முடிவு உலக அரங்கில் இடம்பெற்ற சில நிகழ்வுகளையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொள்கை மாற்றங்களையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசு, பல நாடுகளின் உதவிகளைப் பெற்று, விடுதலைப் புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிழக்கு மாகாணத்தில் தொடங்கி புலிகளிடம் இருந்த பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிய இலங்கை இராணுவம், முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது. போர் நிறுத்தப்பட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. அதே வேளை இலங்கைத் தமிழரின் அரசியல் தலைமைத்துவம் மீண்டும் மிதவாத அரசியல்வாதிகளின் கைக்கு மாறியுள்ளது. இதைவிடப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர் பலரும் பல்வேறு மட்டங்களில் இப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இதற்கிடையில் இங்கு போரின் போது காணாமல் போன தமிழர்களின் பட்டியலை தயார் செய்ய அரசு கல்முனையிலிருந்து துவங்கியுள்ளது இவற்றையும் பார்க்கவும் இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை புகழ்பெற்ற இலங்கைத் தமிழர்கள் குறிப்புகள் மேற்கோள்கள் தகவல் வாயில்கள் Mendis, G.C. (1957, 3rd ed. 1995). Ceylon Today and Yesterday, Colombo, Lake House. வெளி இணைப்புகள் இலங்கைத் தமிழர்
5493
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
நீர்
நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும், நெடியற்றும், ஓர் ஒளிபுகும் தன்மையுடனும் உள்ளது இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. தட்பவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமாக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்கு, ஆவி ஒடுக்கம், வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டே கடலைச் சென்றடைகிறது. புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டல நீரின் 0.001% பகுதி வாயு வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் மேகங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் நீர்க்கோர்வைகளிலும் காணப்படுகிறது. நில மேலோட்ட நீரின் 97% பகுதி உவர்நீர்ச் சமுத்திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பனிக்கவிகைகளிலும், ௦0.6%பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக்கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர் கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றன. நீரானது ஆவியாதல், நீராவிப்போக்கு, ஆவிஊட்டளவு, குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல் மற்றும் தல ஓட்டம் எனும் நிலைகளின் தொடர் சுழற்சிக்குப் பின் பெரும்பாலும் கடலை அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இருக்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியாதலும், நீராவிப்போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன. மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும்இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர். பல்வேறு வேதியற் பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத நன்னீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வேதியியல், இயற்பியல் பண்புகள் நீர் என்பது H2O எனும் வேதியியற் குறியீட்டைக் கொண்ட ஓர் இரசாயனப் பொருளாகும்: நீரின் ஒரு மூலக்கூற்றில் இரண்டு ஐதரசன் அணுக்கள் ஓர் ஆக்சிசன் அணுவோடு பிணைப்பில் உள்ளன. நீர் இயற்கையில் திண்ம, திரவ, வாயு ஆகிய மூன்று சடப்பொருணிலைகளில் காணப்படுகிறது. பூமியில் பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறது: விண்ணில் நீராவி, மேகங்களாகவும், சமுத்திரங்களில் கடல்நீர், பனிப்பாறைகளாகவும், மலைகளில் பனியாறுகள், நதிகளாகவும், நிலத்தடியில் நீர்கொள் படுகைகளாகவும் நீர் காணப்படுகிறது. நீரின் முக்கிய வேதியியற் மற்றும் பௌதிக பண்புகள் கீழ்வருமாறு: இயல்பான தட்ப வெட்ப சூழ்நிலையில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும். குறைந்த அளவுகளில் நீர் நிறமற்று தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. பனிக்கட்டி நிறமற்றதாகவும், நீராவி வாயு வடிவத்தில் இருக்கும் போது கண்ணுக்குத் தெரியாததாகவும் இருக்கிறது. நீர் தெள்ளத் தெளிந்த வண்ணம் இருப்பதால் நீர்த் தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. நீர் புறஊதா (அல்ட்ரா வயலட்) கதிர் வீச்சை கிரகிக்கும் தன்மையுடையது. ஐதரசனை விட ஆக்சிசனுக்கு மின்னெதிர்த்தன்மை அதிகமாக உள்ளதால், நீர் ஒரு முனைவு மூலக்கூறாகும். ஆக்சிசன் வாயு மெல்லிய எதிர் மின்னூட்டமும், ஐதரசன் வாயுவிற்கு மெல்லிய நேர் மின்னூட்டமும் உள்ளதால், நீரின் உட்கூறு வலிமையான இருமுனைவு திருப்புதிறன் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மூலக்கூற்றிலுமுள்ள மாறுபட்ட இருமுனைகளின் (டைபோல்) இடையீட்டால் உண்டாகும் ஈர்ப்பு சக்தியே, நீரின் சீரிய புறப்பரப்பு இழுவிசைக்குக் (சர்ஃபேஸ் டென்ஷன்) காரணமாகும். நீரின் பல தனித்தன்மையான பண்புகளுக்குக் காரணமான நீரின் மூலக்கூறுகள் ஒன்றாகப்பிணைவதற்கு இந்த இருமுனைப்பண்பு உதவுகிறது. இந்தப் பண்பு நீர் மற்ற பொருட்களுடன் பிணையவும் உதவுகிறது. நீரின் இணக்கத்தன்மைக்கு காரணமான ஐதரசன் பிணைப்புக்கள் உருவாவதற்கு அதனுடைய மூலக்கூற்றின் இருமுனை பண்பு உதவுகிறது. முனைவு மூலக்கூறாக இருப்பதினிமித்தம், நீரின் மூலக்கூறுகளுக்கிடையேயான பலகீனமான இடையீடுகளான வேன் டர் வால்ஸ் விசைகளினால், நீரானது சீரிய புறப்பரப்பு விசையைப் பெற்றதாய் இருக்கிறது. இப்புறப்பரப்பு விசையால் ஏற்படக்கூடிய தோற்ற மீள்திறன் நுண்ணலைகளைத் தூண்டுகிறது. நீரின் முனைவு பண்புகளால் அது ஒட்டும் தன்மையுள்ளதாய் இருக்கிறது. புவியீர்ப்பு விசைக்கெதிராக குறுகிய குழாய் வழி மேல் செல்லும் பண்பே புழை இயக்கம் எனப்படுகிறது.இந்த பண்பு மரங்கள் உட்பட அனைத்து கலன்றாவரங்களாலும் சாரப்பட்டிருக்கிறது. நீர் ஒரு வலிமையான கரைப்பானாதலால் அது உலகளாவிய கரைப்பான் என குறிப்பிடப்படுகிறது. நீரில் கரையும் பொருட்கள், எ.கா. உப்புக்கள்,சர்க்கரைகள்,அமிலங்கள்,காரங்கள்,சில வாயுக்கள்-குறிப்பாக ஆக்சிசன் வாயு,கரியமில வாயு (கார்பனேற்றம்) போன்றவை நீர்நாட்டமுள்ள பொருட்கள் எனவும், நீரில் சரிவரக் கரையாத பொருட்கள் (எ.கா.கொழுப்புக்கள் மற்றும் எண்ணெய்கள்) நீர் வெறுப்புள்ள பொருட்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. புரதங்கள், டிஎன்ஏ, கூட்டுச்சர்க்கரைகள்(பாலிசேக்கரைடுகள்) உட்பட செல்களின் அனைத்து கூறுகளும் நீரில் கரையக் கூடியவை. தூய்மையான நீர் குறைந்த மின் கடத்துதிறனையே கொண்டிருந்தாலும், அத்திறன் சிறிய அளவு சோடியம் குளோரைடு போன்ற அயனிப்பொருட்களின் கரைதலால் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக் கூடியது. நீரின் கொதிநிலை(அல்லது ஏனைய திரவங்களின் கொதிநிலை) பாரமானியமுக்கத்தைப் ( பேரோமெட்ரிக் பிரஷ்ஷர்) பொறுத்ததாகும். எடுத்துக்காட்டாக, நீரின் கொதிநிலை கடல் மட்டத்தில் 100 °C யாக இருப்பதற்கு [20] மாறாக, எவெரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் 68 °C யாக உள்ளது [19]. இதற்கு நேர்மாறாக புவிவெப்பசக்தித் துளைகளுக்கருகே காணப்படும் ஆழ்கடல் நீர் நூற்றுக்கணக்கான டிகிரி செலிசியஸ்களை (°C)எட்டும் போதிலும் திரவமாகவே காணப்படுகிறது. மூலக்கூறுகளுக்கிடையேயான விரிவான ஐதரசன் பிணைப்புகளால், நீரானது அமோனியாவிற்கு அடுத்தபடியாக வேறெந்த பொருளையும் விட அதிகமான வெப்ப ஏற்புத் திறன் எண் மற்றும் ஆவியாதல் வெப்பத்தைக்(40.65 kJ·mol−1) கொண்டுள்ளது. இவ்விரு அசாதாராண பண்புகளும் புவி வெப்பத்தின் ஏற்றவிறக்கங்களைத் தாங்கி புவி வெப்பத்தை மட்டுப்படுத்துகிறது. நீரின் உச்சவரம்பு அடர்த்தி 4 °C யில் காணப்படுகிறது [21] .மீளவும் உறைதலுக்குட்படும் போது 9% விரிதலினிமித்தம், நீரின் அடர்த்தி குறைகிறது. இது ஒரு அசாதாரண நிகழ்விற்கு வித்திடுகிறது. நீரின் திட வடிவமான உறைபனி நீரின் மேலே மிதந்து கொண்டிருந்தாலும், பகுதி-உறைந்த நிலையிலிருக்கும் உட்பகுதி நீரின் அடிமட்ட வெப்பம், நீரின் அடர்ந்த செறிவு காரணமாக 4 °C யாக நிலைநிறுத்தப்படுவதால் நீர்வாழ் பிராணிகள் உறைந்த நீர்நிலைகளிலும் வாழும் திறன் பெற்றிருக்கின்றன.. நீர் பல்வேறு திரவங்களோடு (எ.கா.எத்தனால்)அவற்றின் பலதரப்பட்ட விகிதாச்சாரங்களிலும் ஓரினமாகக் கலக்குமியல்புடையது. அதே நேரம் நீரும் பெரும்பாலான எண்ணெய்களும் கலக்குமியல்பற்ற வைகளாக இருப்பதால், மேலிருந்து கீழாக அதிக செறிவுள்ள அடுக்குகளை ஏற்படுத்துகின்றன. வாயுவாக இருக்கும் போது நீராவி காற்றுடன் முழுமையாகக் கலக்குமியல்புடையதாய் இருக்கிறது. இன்னும் பல கரைப்பான்களுடன் நீர் கொதிநிலைமாறிலிகளை உருவாக்குகிறது. நீரினை மின்னாற்பகுப்பின் மூலம் ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிளவுபடுத்தலாம். ஹைட்ரஜனின் ஆக்சைடாக இருப்பதனால் ஹைட்ரஜன் அல்லது ஹைட்ரஜனை உடைய சேர்மங்கள், ஆக்சிஜன் அல்லது ஆக்சிஜனை உடைய சேர்மங்களுடன் எரியும் பொழுதோ அல்லது வேதி வினைபுரியும் பொழுதோ நீர் உருவாகிறது. நீர் என்பது ஹைட்ரஜன் எரிதலினால் உருவாகும் இறுதி விளை பொருளே தவிர எரிபொருள் அல்ல. நீரை மின்னாற்பகுப்பின் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிளக்கத் தேவையான ஆற்றல் அவ்விரு மூலக்கூறுகளும் மீளச்சேரும் போது வெளியாகும் ஆற்றலை விட வலிமையானது. ஹைட்ரஜனை விட அதிக மின்நேரான தனிமங்களான லித்தியம், சோடியம், கால்சியம், பொட்டாசியம், சீஸியம் போன்றவை நீரிலிருந்து ஹைட்ரஜனை வெளியேற்றி ஹைட்ராக்ஸைடுகளை ஈகின்றன. வெளியேற்றப்பட்ட ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவாக இருக்கும் காரணத்தால் அதிக மின்நேரான தனிமங்களுடனான நீரின் வேதி வினைகள் ஆபத்தானதாகவும், பயங்கரமாக வெடிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. மிகப்பெரிய கிரகங்களான யுரேனஸ், நெப்ட்யுன் போன்றவைகளின் உட்பகுதியிலிருக்கும் அதீத அழுத்தங்களில் நீர் உலோகமாக உருமாறி இக்கோளங்களின் காந்தப் புலங்களின் உருவாக்கத்திற்கு இன்றியமையாத காரணமாயிருக்கிறது. சுவையும் மணமும் நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது.உண்மையில் மனிதர்களும், விலங்குகளும், நீரின் அருந்துதரத்தைக் கணிக்கும் தங்களது புல விருத்தியால் உப்பு நீரையோ, அசுத்த நீரையோ தவிர்த்து விடுகின்றனர். மேலும் மனிதர்கள் வெதுவெதுப்பான நீரை விட குளிர்ந்த நீரையே பருக விளைகின்றனர்; குளிர்ந்த நீரானது சொற்ப கிருமிகளையே கொண்டிருக்கக் கூடும். ஊற்று நீர் மற்றும் கனிம நீரில் விளம்பரப்படுத்தப்படும் சுவையானது அதில் கரைந்திருக்கும் தாதுக்களிலிருந்து பெறப்படுவது. தனி H2O சுவையோ மணமோ அற்றது. ஊற்று நீர் மற்றும் கனிம நீரின் தூய்மையென குறிப்பிடப்படுவது அவற்றின் நச்சற்ற, மாசற்ற, கிருமிகளற்ற நிலையேயாகும். பிரபஞ்சத்தில் நீரின் பங்கீடு உலகத்தில் நீர் உலகத்தின் நீரில் பெருமளவு விண்மீன்கள் உருவாதலின் துணைப் பொருளாக விளைந்திருக்கலாம். விண்மீன்களின் தோற்றத்தின் போது, அவற்றின் பிறப்பு வலிமையான வெளிநோக்கு வளிக்காற்று மற்றும் புழுதிப் புயலால் சூழப்பட்டிருக்கிறது. இத்தகைய வெளியேற்றம் நாளடைவில் சூழ்ந்திருக்கும் வாயுக்களைத் தாக்குவதனால் உருவாகும் அதிர்வலைகள் வாயுக்களை அழுத்தி வெப்பமேறச் செய்கிறது. அவ்வமயம் தென்படுகிற நீரானது இந்த வெப்பச் செறிவான வாயுக்களால் அதிவேகமாக உற்பத்தி செய்யப்பட்டதாகும். பால்வெளியெனும் நமது விண்மீன் மண்டலத்தினுள் காணப்படும் நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்களில் தண்ணீர் கண்டறியப்பட்டுள்ளது. நீரின் கூறுகளான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை பிரபஞ்சத்தில் மிகுதியாகக் காணப்படும் தனிமங்களாதலால், ஏனைய விண்மீன்மண்டலங்களிலும் தண்ணீர் மலிந்திருக்கிறதென நம்பப்படுகிறது. நட்ச்த்திரங்களுக்கிடையேயான மேகங்கள் நாளடைவில் சூரிய ஒளிமுகிலாகவும், சூரிய மண்டலமாகவும் சுருங்குகின்றன. நீராவியளவு கீழ்காணும் விகிதங்களில் அமைந்துள்ளது: புதன் - வளிமண்டலத்தில் 3.4% நீரும், புறவழி மண்டலத்தில் பெருமளவு நீரும் வெள்ளி - வளிமண்டலத்தில் 0.002% நீர் பூமி - வளிமண்டலத்தில் நீரின் சுவடுகளே உள (கால நிலையுடன் மாறக் கூடியது) செவ்வாய் - வளிமண்டலத்தில் 0.03% வியாழன் - வளிமண்டலத்தில்0.0004% சனி - உறை பனி படலங்களில் மட்டும் என்ஸெலேடஸ் (சனியின் சந்திரன்) - வளிமண்டலத்தில் 91% நீர் வெளிக்கோள்கள் HD 189733 b மற்றும் HD 209458 bஎன்பன. திரவ நீர் கீழ்காணும் விகிதங்களில் காணப்படுகிறது: பூமி- மேற்பரப்பில் 71% நீர் சந்திரன் - 1971 ஆம் ஆண்டு, அப்பல்லோ 15 விண்வெளி வீரர்களால் பூமிக்குக் கொணரப்பட்ட நிலவின் எரிமலைக் காயல் முத்துக்களில் 2008-ல் நீர் கண்டறியப்பட்டுள்ளது. சனிக் கிரகத்தின் சந்திரனான என்ஸெலேடஸின் மேற்பரப்புக்கு சிறிது கீழேயும், வியாழனின் சந்திரனான ஐரோப்பாவிலும் திரவ நீர் காணப்படுவதாக உறுதியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. உறை பனிநீர் கீழ்க்கண்டவாறு காணப்படுகிறது: பூமி -முக்கியமாக உறைபனி விரிப்புகளில் செவ்வாயின் துருவ பனிக்கவிகைகளில் டைட்டன் ஐரோப்பா என்ஸெலேடஸ் எரிவிண்மீன்கள் மற்றும் எரிவிண்மீன் மூலங்களில் (கய்பர் பெல்ட்(கய்பர் தினை மண்டலம்) மற்றும்{ 2}ஊர்ட் மேகத்துகள்களில்). உறைபனி நீர் சந்திரன், செரஸ், டேதிஸ் போன்றவைகளில் இருக்கலாம். நீரும் ஏனைய ஆவியாகும் பொருட்களும் யுரேனஸ் மற்றும் நெப்ட்யுனின் பெரும்பாலான உள்ளமைப்புகளின் பிரதான மூலங்களாகும். நீரும், வசிக்கத்தக்க மண்டலமும் புவியின் உயிர்களது ஜீவாதாரமாக தண்ணீரும், ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்தனவாக நீரின் வாயு மற்றும் திட வடிவங்களும் திகழ்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பூமி சூரிய மண்டலத்தின் வசிக்கத்தக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. ஒருவேளை பூமியானது சூரியனுக்கு சிறிது அருகாமையிலோ (5 % அல்லது 8 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில்), அல்லது தொலைவிலோ இருக்கும் பட்சத்தில் நீரின் மூன்று வடிவங்களும் தற்போதிருப்பது போல் ஒருசேர காணப்படுவதற்கான வாய்ப்புகள் கடினம். புவியின் ஈர்ப்பு சக்தி அதற்கொரு வளிமண்டலத்தை அளித்திருக்கிறது. வளிமண்டலத்தின் நீராவியும், கரியமில வாயுவும் வெப்பவிடைத்தாங்கு பொருளாகத் திகழ்ந்து, பைங்குடில் விளைவை( கிரீன் ஹவுஸ் இஃபெக்ட்) ஏற்படுத்தி இயல்பை விட நிதானமான மேற்பரப்பு வெப்பம் நிலவச் செய்கிறது. பூமி ஒருவேளை சிறியதாக இருக்குமானால், ஒரு மெல்லிய வளிமண்டலம் அமையப்பெற்று அதீத வெப்பத்திற்கு உள்ளாவதினிமித்தம், துருவ பனிக்கவிகைகளைத் தவிர ஏனைய இடங்களில் நீரின் தேக்கத்தைத் தவிர்த்திருக்கும்.(செவ்வாய் கிரகத்தைப் போல) உயிரானது தனது நித்திய சஞ்சாரத்துக்குத் தேவையான நிர்ணயங்களை தானே வகுத்துக் கொள்கிறது என முன்மொழியப்பட்டுள்ளது. மாறுபட்ட அளவுகளில் உள்வரும் சூரியக் கதிர் வீச்சு (பெற்ற வெயில்-இன்சொலேஷன்)க்குப் பின்னும் புவியின் மேற்பரப்பு வெப்பம் நிலவரலாற்றுக் காலம் முழுவதும் ஒரே சீராக இருந்து வந்துள்ள விதம், பைங்குடில் விளைவு மற்றும் மேற்பரப்பு அல்லது வளிமண்டல ஒளி பிரதிபலிப்புகளின் கூட்டு விளைவுகளை உள்ளடக்கிய திறமையான புவி வெப்ப நிர்வாகச் செயல்பாட்டை உணர்த்துகிறது. இந்த முன்மொழிவு கையா கருதுகோள் எனக் குறிப்பிடப்படுகிறது. கோள்களில் இருக்கும் நீரின் வடிவம் அதன் புவியீர்ப்பு சக்தியால் தீர்மானிக்கப்படும் வளிமண்டல அழுத்தத்தைப் பொறுத்தே அமைகிறது. கோளானது போதுமான அளவு பெரியதாயிருக்கும் பட்சத்தில் அதன் புவியீர்ப்பு சக்தியால் நிர்ணயிக்கப்படும் அழுத்தமானது அதிக வெப்பங்களில் கூட அதன் நீர் திட நிலையிலிருக்கும்படி செய்கிறது. பூமியில் நீர் தோன்றிய விதத்தைப் பற்றி பல கோட்பாடுகள் நிலவுகின்றன. புவியில் நீர் நீரியல் என்பது புவியனைத்திலும் உள்ள நீரின் போக்கு, பரவல், மற்றும் தரத்தைப் பற்றிய கல்வியாகும். ஹைட்ரோகிராஃபி என்பது நீரின் விநியோகத்தைக் குறித்த கல்வியாகும். நிலத்தடி நீரின் பரவலையும், போக்கையும் குறித்த கல்வி ஹைட்ரோஜியாலஜி எனவும் உறைபனி ஆறுகளைக் குறித்த கல்வி கிளேஸியாலஜி எனவும் உள்நாட்டு நீர் நிலைகளைக் குறித்த கல்வி லிம்னாலஜி எனவும் சமுத்திரங்களின் பரவலைக் குறித்த கல்வி ஒஷியனோகிராஃபி எனவும் அழைக்கப்படுகிறது. நீரியலின் அங்கமான சூழ்நிலை நிகழ்வுகள் ஈகோ ஹைட்ராலஜியின் கீழ் வருகிறது. கிரகங்களின் பரப்பிலும், அவற்றின் மேற்பரப்புக்கு மேலும், கீழும் காணப்படும் மொத்த நீர்த்தொகுதி நீர்ம மண்டலம் என்றழைக்கப்படுகிறது. பூமியின் உத்தேச மொத்த நீர்க் கொள்ளளவு (உலக தண்ணீர் விநியோகம்) 1,360,000,000 கி.மீ 3 (326,000,000 மில்லியன் 3)கன அடிகள். இம் மொத்தக் கொள்ளளவில்: 1,320,000,000 கி.மீ3 (316,900,௦௦௦000 ௦௦௦ மில்லியன்3கன அடிகள் அல்லது 97.2%) சமுத்திரங்களில் உள்ளது . 25,000,000 கி.மீ3 (6,000,000 மில்லியன்3 அல்லது 1.8%) உறை பனி ஆறுகளிலும், பனிக் கவிகைகளிலும் and பனிப் படலங்களிலும் உள்ளது. 13,000,000 கி.மீ3 (3,000,000 மில்லியன்3 அல்லது 0.9%) நிலத்தடி நீராகும். 250,000 கி.மீ3 (60,000 மில்லியன்3 அல்லது 0.02%) ஏரிகள், உள்நாட்டு கடல்கள் மற்றும் நதிகளின் நன்னீராகக் காணப்படுகிறது. 13,000 கி.மீ3 (3,100 மில்லியன்3 அல்லது 0.001%) குறித்த கால வளிமண்டல நீராவியாகக் காணப்படுகிறது. நிலத்தடி நீரும், நன்னீரும், மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக சாத்தியமுள்ள நீராதாரங்களாகும். தண்ணீரானது சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், நதிகள், நீரோட்டங்கள், கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் காணப்படுகிறது.பூமியில் பெருமளவு காணப்படும் நீர் கடல்நீர் ஆகும். வளிமண்டலத்தில் திட, திரவ மற்றும் வாயு வடிவங்களிலும், நீர் காணப்படுகிறது. நிலத்தடி நீர்கொள் படுகைகளாகவும் நீர் காணப்படுகிறது. நிலவியல் நிகழ்வுகள் பலவற்றில் நீர் முக்கியமானதாக இருக்கிறது. நிலத்தடி நீர் பாறைகளெங்கும் காணப்படுவதால், இந்நிலத்தடி நீரின் அழுத்தம் பிளவுப் பெயர்ச்சியடைதலின் மாதிரிகளை நிர்ணயிக்கிறது. பூமியின் மூடகத்தில் காணப்படும் நீரே எரிமலைகள் உருவாகக் காரணமான உருகுநிலையை ஏற்படுத்துகிறது. பூமியின் மேற்பரப்பில் நடக்கும் பௌதீக மற்றும் வேதியியற் பாறைச் சிதைவு நிகழ்வுகளில் நீர் முக்கிய பங்காற்றுகிறது.நீரும், அற்பமாயிருந்தாலும் முக்கியமான காரணியான பனிக்கட்டியும் பூமியின் மேற்பரப்பில் நடக்கும் மிகப் பெரிய அளவிலான படிவக் கடத்துமைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. கடத்தப்பட்ட வண்டலின் படிதல் பல்வேறு வகையான படிவுப்பாறைகளைத் தோற்றுவித்து புவிவரலாற்றின் நிலவியல் பதிவேடுகளாகத் திகழ்கின்றன. நீரின் சுழற்சி நீரின் சுழற்சி என்பது (விஞ்ஞானப்பூர்வமாக நீரியற் சுழற்சி என்றழைக்கப்படுகிறது) நீர்க்கோளத்தினுள், வளிமண்டலம், நிலநீர், மேலோட்ட நீர், நிலத்தடி நீர், மற்றும் தாவரங்கள் ஆகியவற்றிற்கிடையேயான நீரின் தொடர் பரிமாற்றமாகும். இப்பகுதிகளினூடே நீர் இடைவிடாமல் ஓடி நீர் சுழற்சி யின் கீழ்க்கண்ட பரிமாற்ற நிகழ்வுகளை விளைவிக்கிறது. சமுத்திரங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளிருந்து, வளிமண்டலத்தினுள் ஆவியாகும் நீர் மற்றும் நிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து காற்றினுட் செல்லும் நீராவிப்போக்கு. காற்றிலுள்ள நீராவி குளிர்விக்கப்பட்டு பூமியிலோ அல்லது சமுத்திரங்களிலோ விழும் போது ஏற்படும் குளிர்ந்து சுருங்கிய நீர்க்கோர்வைகள். நிலத்தினின்று கடலுக்குள் வழிந்தோடும் தள ஓட்டம். சமுத்திரங்களின் மேலுள்ள நீராவியில் பெருமளவு கடலுக்கே திரும்பிச் செல்லுகிறதென்றாலும் நிலத்தின் மேற்பகுதிக்குக் காற்றினால் எடுத்துச் செல்லப்படும் நீராவியின் அளவு, நிலத்தினின்று கடலுக்குள் வழிந்தோடும் தள ஓட்டத்துக்கு, வருடத்திற்கு தலா 36 Tt(டெட்ரா டன்கள்) என்ற அளவில் சமமாயிருக்கிறது. நில மேற்பகுதியின் ஆவியாதலும், நீராவிப்போக்கும் வருடத்திற்கு 71 Tt (டெட்ரா டன்கள்) நீரை எடுத்துக்கொள்கின்றன.நில மேற்பகுதியின் மேல் நீராவி குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க்கோர்வை, வருடத்துக்கு 107 Tt என்ற அளவில் பல வடிவங்களில் வெளிப்படுகிறது: பொதுவாக மழை, உறைபனி, ஆலங்கட்டி மழை, போன்றவைகளாலும் சில நேரங்களில் மூடு பனி மற்றும் பனித்துளிகளாக இது தோன்றலாம். குளிர்விக்கப்பட்ட நீரானது சூரிய ஒளிக்கற்றைகளை ஒளி விலகலுக்குட்படுத்துவதன் மூலம் வானவில்லைத் தோற்றுவிக்கிறது. தள ஓட்டம் பெரும்பாலும் நதிகளுக்குள் பாயும் நீர்ப் பிரி முகடுகளுக்குள் சேகரிக்கப்படுகிறது. நதியின் ஓட்டத்தையோ, ஓடைகளின் ஓட்டத்தையோ ஒத்து நீர்த் தர கூரளவுகளைக் கணிக்க உதவும் செயற்கை கணித மாதிரி, நீரியற் கடத்தல் மாதிரி (ஹைட்ராலஜிகல் டிரான்ஸ்போர்ட் மாடல்) என்று அழைக்கப்படுகிறது. சிறிதளவு நீர் விவசாய நீர்ப்பாசனத்துக்கு மாற்றி விடப்படுகிறது. நதிகளும், கடல்களும் பயணத்திற்கும், வாணிபத்திற்கும் வாய்ப்பளிக்கின்றன.அரிப்பின் வாயிலாகத் தள ஓட்டமானது சுற்றுப்புறத்தைச் சீர்படுத்தும் விதமாக, ஆற்றுப்பள்ளத்தாக்குகளையும், கழிமுகங்களையும் வடிவமைத்து மண்வளத்தையும், சம மட்ட தளத்தையும் உருவாக்கி, அவற்றை மக்கள் தொகை மையங்களாக அபிவிருத்தி செய்கிறது.ஒரு நிலப் பரப்பு தாழ்வானதாக இருப்பதினிமித்தம் தண்ணீரால் சூழப்படும் பொழுது வெள்ளம் ஏற்படுகிறது. நதி பெருக்கெடுத்து கரைகளைத் தாண்டி ஓடும் பொழுதோ சமுத்திர மார்க்கமாகவோ வெள்ளம் ஏற்படலாம். பல மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஒரு பகுதி அனுபவிக்கும் நீண்ட கால தண்ணீர் தட்டுப்பாடு வறட்சி எனப்படுகிறது. ஒரு பகுதியானது வாடிக்கையாக சராசரிக்குக் கீழேயான மழையளவைப் பெறும்பொழுது வறட்சி ஏற்படலாம். நன்னீர் சேமிப்பு தள ஓட்டத்தில் சிறிதளவு காலங்காலமாக சிக்கிக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஏரிகளின் நீரைக் கூறலாம். குளிர் காலங்களில் உயரமான இடங்களிலும் மற்றும் பூமியின் வட மற்றும் தென் கோடியின், துருவ முகடுகள்,பனிப்பாதைகள் மற்றும் பனியாறுகளில் பனி மண்டுகிறது. நீரானது நிலத்தினுள் ஊடுருவி நிலத்தடி நீர்கொள் படுகைகளுக்குள் செல்லக் கூடியது.இந்நிலத்தடி நீர் பின்னர் நீரூற்றுக்கள், வெந்நீரூற்றுக்கள் மற்றும் உஷ்ண ஊற்றுக்கள் வாயிலாக மீண்டும் கிளர்ந்தெழுந்து, மேற்பரப்பிற்கு வரலாம். நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் செயற்கையாகவும் இறைத்துக் கொள்ளலாம். மனிதர்களுக்கும், நிலத்தில் வாழும் ஏனைய உயிர்களுக்கும் நன்னீர் இன்றியமையாததாதலால், இவ்விதமான நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று. ஆனால், உலகத்தின் பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது. அலைகள் புவிப்பெருங்கடல்களின் மேற்பரப்பில் சந்திர சூரிய ஆகர்ஷண சக்தியால் ஏற்படுத்தப்படும் சுழற்சியான ஏற்றவிறக்கக் கணிமுறையே அலைகள் உருவாகக் காரணம். அலைகள் கடல் மற்றும் நதி முகத் துவாரங்களின் ஆழங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி கடனீரோட்டங்களின் வற்றுப்பெருக்க வளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. குறிப்பிட்டதொரு இடத்தின் அலையானது பூமியுடன் ஒப்பிடும்பொழுதான சந்திர சூரியனின் இடமாற்றத்தாலும், புவிசுழற்சி விளைவுகளாலும், அப்பகுதியின் கடலாடி இயலாலும் நிர்ணயிக்கப்படுகிறது. உயர்மட்ட அலையில் மூழ்கியும், தாழ் அலையில் தெரிவதுமான அலையிடை மண்டலம், ஆழிப்பெருங்கடல் அலைகளின் முக்கிய சூழ்நிலை விளைவாகும். வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் உயிரியற் நிலையிலிருந்து நோக்கும் பொழுது நீர் உயிர்களின் விருத்திக்குத் தேவையான இன்றியமையாத பல சிறப்புப் பண்புகளைப் பெற்றிருப்பதால் ஏனைய பொருட்களிலிருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது. கரிமச்சேர்மவினைகள் மூலம் பல்பிரிவாக்கத்திற்கான வழிகளைத தூண்டுவதால் நீர் இச்சிறப்பினைப் பெறுகிறது. உயிர்களனைத்தும் நீரைச் சார்ந்துள்ளன.உடலின் கரைபொருட்கள் பலவற்றைக் கரைக்கும் கரைப்பானாகவும், உடலின் வளர்சிதைமாற்ற நிகழ் முறைகள் பலவற்றின் முக்கிய அங்கமாகவும் திகழ்வதால் நீர் அதிமுக்கியமானதாகும். வளர்சிதைமாற்றம் என்பது வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றத்தைக் கொண்டது. வளர்மாற்றத்தில் மூலக்கூறுகளிலிருந்து நீர் அகற்றப்பட்டு (ஆற்றலுடனான நொதி வேதிவினைகள் மூலம்) எரிபொருள் மற்றும் தகவற் சேமிப்பிற்குதவும் மாவுச்சத்துக்கள், டிரைக்ளிசரைடுகள், புரதங்கள் போன்ற பெரிய மூலக்கூறுகளை அளிக்கிறது. சிதை மாற்றத்தில், நீர் பிணைப்புகளை உடைத்து ஆற்றலுபயோகத்துக்கும் ஏனைய விளைவுகளுக்கும் தேவையான குளுகோஸ்,கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளை ஏற்படுத்துகிறது.ஆகவே நீரானது இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகளுக்கு இன்றியமையாததாகவும், மையமாகவும் திகழ்கிறது. நீர் இல்லாதிருந்தால், இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகள் இல்லாமல் போய் அதற்கு பதிலாக வேறுபல நிகழ்வுகளான வாயு உட்கவர்தல், புழுதி சேகரிப்பு போன்றவை இருந்திருக்கக் கூடுமோவென்று நம்மை எண்ண வைக்கிறது. நீர் ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும்.ஒளிச்சேர்க்கை செய்யும் செல்கள் சூரியனின் ஆற்றலை பயன்படுத்தி நீரின் ஹைட்ரஜனை ஆக்சிஜனிலிருந்து பிரிக்கின்றன.ஹைட்ரஜன் காற்றிலிருந்தோ, நீரிலிருந்தோ உட்கவரப்பட்ட கரியமில வாயுவுடன் CO2 இணைந்து குளுகோஸை உருவாக்கி ஆக்சிஜனை வெளிவிடுகிறது.அனைத்து உயிரணுக்களும் இத்தகைய எரிபொருள் பிரயோகத்தின் மூலம் ஹைட்ரஜனையும், கார்பனையும் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்வதன் மூலம் சூரிய ஒளியைக் கவர்ந்து செல் சுவாசத்தில் நீரையும், கரியமில வாயுவையும் (CO2) மீட்டு சீரமைக்கின்றன. அமில கார நடுவுநிலைமைக்கும், நொதி செயல்பாட்டுக்கும் நீர் முக்கியமானதாகும். ஹைட்ரஜன் அயனி(H+)அதாவது புரோத்தன் வழங்கியான ஒரு அமிலம், ஹைட்ராக்சைடு அயனி (OH−) அதாவது புரோத்தன் வாங்கியான ஒரு காரத்துடன் நடுநிலையாக்கல் வினைக்குட்படும் பொழுது நீர் உருவாகிறது. ஹைட்ரஜன் அயனிச் செறிவின் எதிர்மறை மடக்கை(pH), 7 ஆக இருப்பதினால், நீர் நடுவுநிலைமையுள்ளதாகக் கருதப்படுகிறது. அமிலங்கள் pH மதிப்பு 7 ஐ விட குறைவாகப் பெற்றதாயும் காரங்கள் pH மதிப்பு 7 ஐ விட அதிகமாகப் பெற்றதாயும் திகழ்கின்றன. வயிற்றின் அமிலம் ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆயினும் செரிமான எதிர்க்களிப்பின் பொழுது வெளிக்காட்டப்படும் அதன் உணவுக்குழாய் அரிக்கும் தன்மையை, அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்களை உட்கொள்வதினால் உருவாகும் நீர் மற்றும் அம்மோனியம் குளோரைடு உப்பினால் தற்காலிகமாக சரிகட்டிவிடலாம். பொதுவாக நொதிகளை உள்ளடக்கிய மனித உயிர்வேதியியல் செயல்பாட்டுக்கு உயிரியற் நடுநிலை pH ஆன 7.4 உகந்ததாகும். எடுத்துக்காட்டாக, எஷ்ஷெறீஷியா கோலையின் ஒரு செல்லில் 70% நீரும், மனித உடலில் 60–70% நீரும், தாவரங்களில் 90% நீரும், முழு வளர்ச்சியடைந்த சொறி மீனில் (ஜெல்லி ஃபிஷ்)94–98% நீரும், உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. நீர் வாழ் உயிர்கள் பூமியின் தண்ணீர்கள் உயிர்களால் நிறைந்துள்ளன.கற்கால உயிர்கள் நீரிலிருந்தே தோன்றின; மீன்கள் அனைத்தும் நீரில் மட்டுமே உயிர்வாழ்கின்றன என்றால் டால்ஃபின்கள், திமிங்கலங்கள் ஆகியவைகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான கடல்வாழ் பாலூட்டிகளும் நீரில் வாழ்கின்றன. ஈரூடக வாழிகள் (ஆம்ஃபிபியன்ஸ்) தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீரிலும் ஏனையவற்றை நிலத்திலும் களிப்பன. கடற்பாசிகள், ஆல்காக்கள் போன்றவை நீரில் வளர்ந்து நீரடி சூல்மண்டலங்களின் ஆதாரமாக இருக்கின்றனமிதவை நுண்ணுயிரிகள் ஆழி உணவுத் தொடரின் அஸ்திவாரமாகும். நீர்வாழ் விலங்குகள் உயிர்வாழத் தேவையான பிராணவாயுவை பல வழிகளில் பெற்றுக்கொள்கின்றன. மீன்களுக்கு நுரையீரலுக்குப் பதிலாகச் செவுள்கள் இருக்கின்றன. நுரையீரல் மீன்(லங்ஃபிஷ்), நுரையீரலையும் செவுளையும் கொண்டது. கடல் பாலூட்டிகளான, டால்ஃபின்கள், திமிங்கலங்கள், நீர் நாய்கள், கடல் சிங்கங்கள் போன்றவை அவ்வப்போது வெளிக்காற்றை சுவாசிக்க நீருக்கு வெளியே தலைகாட்டவேண்டும். சிற்றுயிர்கள் பிராணவாயுவைத் தங்கள் தோலின் வழியாக உட்கவரக் கூடியவை. மனித நாகரீகத்தில் நீரின் பங்கு நாகரீகம் நதிகள் மற்றும் முக்கிய நீர்வழிகளை அடுத்து செழுமையாக இருந்ததாக வரலாற்றுவழி அறிகிறோம். நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மெஸொப்படாமியா இரு முக்கிய நதிகளான டைக்ரிஸ் மற்றும் இயுஃப்ரட்டீஸ் இடையே அமையப் பெற்றிருந்தது; எகிப்தியர்களின் பண்டைய சமூகங்கள் நைல் நதியை முழுமையாக நம்பியிருந்தன. பெருநகரங்களான ராட்டர்டேம், லண்டன், மாண்ட்ரீல், பாரிஸ், நியுயார்க் நகரம், பியுனோஸ் அயர்ஸ், ஷாங்கய், டோக்கியோ, சிகாகோ, ஹாங்காங் போன்றவை தாங்கள் பெற்ற வெற்றியைத் தங்களது நீர்வழி அணுக இயலுந்தன்மைக்கும், அதனால் விளைந்த வியாபார விருத்திக்கும் உரித்தாக்குகின்றன. பாதுகாப்பான துறைமுகங்களையுடைய சிங்கப்பூர் போன்ற தீவுகளும் அதன் காரணமாகவே வளம் பெற்றன.தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில், சுத்தமான குடிநீர் மனித வள மேம்பாட்டுக்கு தேவைப்படும் முக்கிய காரணியாய் இருக்கிறது. உடல்நலமும், சுற்றுப்புறத் தூய்மைக் கேடும் மனிதர்கள் உட்கொள்ளத் தகுந்த நீர் குடிநீர் அல்லது அருந்தத்தக்க நீர் என்றழைக்கப்படுகிறது. அருந்த்தத்தகாத நீர் வடிகட்டுதல் அல்லது காய்ச்சிவடித்தல்(நீர் ஆவியாகும் வரைச் சூடுபடுத்தியப்பின் வெளியாகும் நீராவியை மாசற சிறைப்படுத்தி குளிர்வித்துப் பெறுதல்)மூலமாகவும், வேதியியல் வினைகளுக்குட்படுத்துதல் அல்லது ஏனைய முறைகளாலும் (வெப்பத்திற்குள்ளாக்கிக் கிருமிகளைக் கொல்வது போன்றவை) அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. குறைந்த தர மாறுபாட்டைக் கொண்ட நீர் பாதுகாப்பான நீர் என்றழைக்கப்படுகிறது (நீர் சுத்திகரிப்பு நடைமுறைகளுக்கருகில் இல்லாத மனிதர்களுக்கு சிறப்பாக வழங்கப்படும் நீரான இது, கெடுதலை விட அதிகமாக நன்மையே விளைவிக்கிறது). அருந்தத் தகாததாயினும், நீந்தவும், நீராடவும் பயன்படுகிறதான மனிதருக்கு கெடுதல் விளைவிக்காத நீர் அருந்தத்தக்க நீர் அல்லது குடிநீர் எனப்படாமல் பாதுகாப்பான நீர் என்றோ "நீராடப் பாதுகாப்பான நீர்", என்றோ அழைக்கப்படுகிறது. நீரை நீராடுதற்கும், அருந்துவதற்கும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும் குளோரின் ஒரு தோல் மற்றும் படர்சவ்வு படல உறுத்தியாகும். அதன் உபயோகம் மிகுந்த தொழில்நுட்பம் வாய்ந்ததாகவும் அரசு நெறிமுறைகளால் கண்காணிக்கப்படுவதாகவும் இருக்கிறது.(குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன்(ppm) என்ற அளவிலும் நீராடுவதற்குரிய நீரில், மாசுகளோடூடாத 1–2 ppm குளோரின் என்ற அளவிலும் பொதுவாக பிரயோகிக்கப்படுகிறது). இந்த இயற்கைவளம் சில இடங்களில் கிடைப்பதற்கரியதாய் இருப்பதால், இதன் இருப்பு சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.தற்பொழுது உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் வாடிக்கையாக ஆரோக்கியமற்ற நீரை உட்கொள்கின்றனர். பாதுகாப்பான குடிநீரும் சுகாதாரமும் கிடைக்காத உலக மக்கள் தொகையை 2015 க்குள் பாதியாக்க வேண்டும் என்ற 2008 ஆம் ஆண்டைய G8 ஈவியன் உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழியை பல நாடுகள் ஏற்றுக்கொண்டன. இந்த கடினமான சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும் கூட பின்னும் நிர்ணயிக்கப்பட்ட பாதி பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காதவர்களாகவும் ஒரு பில்லியன் பேருக்கு மேலான மக்கள் போதுமான சுகாதார வசதியற்றவர்களாயும் இருக்கும் நிலையே உள்ளது. மோசமான நீரின் தரம் மற்றும் சுகாதாரமின்மை பயங்கரமானது. மாசுபட்ட குடிநீரால் வருடத்திற்கு 5 மில்லியன் இறப்புகள் நேரிடுகின்றன.பாதுகாப்பான நீர் வருடத்திற்கு 1.4 மில்லியன் வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தை மரணங்களைத் தடுக்க வல்லதென உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. இருப்பினும் நீரானது முடிவுறும் ஆதாரமல்ல.குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க் கோர்வை களின் மூலம் அது மறுசுழற்சிக்குட்பட்டு, மனிதர்கள் உட்கொள்வதை விடப் பன்மடங்கு அதிகமான அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. எனவே பூமியினடியில் காணப்படும் சிறிதளவு நீர் மட்டுமே புதுப்பிக்க முடியாத ஆதாரமாக இருக்கிறது (நிலத்தடி நீர் கொள் படுகைகளிலிருந்து நமக்கென எடுக்கப்படும் குடிநீர் விநியோகத்தில் 1 சதவீதம் நிறைவு செய்யப்பட 1 முதல் 10 வருடங்கள் ஆகிறது). புவி நீரின் எதார்த்த அளவு அதிகமாய் தென்பட்டாலும், அதற்கு மாறாக அருந்ததக்க மற்றும் பாசன நீரின் விநியோகம் அரிதானதாகவே இருக்கிறது. நீர் வளமற்ற நாடுகள் நீரை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தயாரிப்பு முழுமை பெற்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன. (இதனால் மனிதர்கள் உட்கொள்வதற்கு போதிய அளவு தண்ணீர் மிஞ்சுகிறது) ஏனெனில் பொருட்களின் உற்பத்திக்கு அப்பொருட்களின் எடையை விட 10 முதல் 100 மடங்கு அதிக எடையுள்ள நீர் தேவைப்படுகிறது. வளரும் நாடுகளில், 90% கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளூர் நதிகளுக்கும் ஓடைகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறது. உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள 50 நாடுகள் மிதமான அல்லது மிகுதியான நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன.இவற்றில் 17 நாடுகள் நீர் சுழற்சியினால் வருடமுழுவதும் தங்களுக்குக் கிடைக்கும் நீராதாரத்திற்கும் மேலாக செயற்கையாக நீரைப் பிரித்தெடுப்பனவாய் இருக்கின்றன. இத்தகைய இழுபறி நன்னீர் நிலைகளான நதிகளையும் ஏரிகளையும் பாதிப்பதோடல்லாமல், நிலத்தடி நீராதாரங்களையும் குறைக்கிறது. மனித உபயோகம் விவசாயம் விவசாயத்தில் நீர்ப்பாசனத்துக்கே நீர் முக்கியமாகப் பயன்படுகிறது. போதுமான உணவு உற்பத்திக்கு பாசனமே முக்கிய காரணியாகும்.வளரும் நாடுகள் சிலவற்றில் பாசனத்துக்காக உபயோகப்படுத்தப்படும் நீர் 90 % ஆக உள்ளது. நீரின் விஞ்ஞான தர நிர்ணய பண்புகள் ஏப்ரல் 7,1795 ல் பிரான்சு நாட்டில் ஒரு கிராம் என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டது."ஒரு மீட்டர் நீளத்தில் நூற்றில் ஒரு பங்கின் நான்கின் கனத்துக்கு சமமான, உருகு நிலையிலுள்ள பனிக்கட்டியின் தட்பவெப்பத்தைக் கொண்ட நீரின் சார்பிலாத பொருண்மை." ஆனால் நடைமுறை வழக்கிற்கு ஆயிரம் மடங்கு பெரிய அளவிலான, கிலோகிராம் எடையிலான உலோக ஆதாரம் தேவைப்பட்டது. எனவே 1 லிட்டர் நீரின் நிறையை சரியாக நிர்ணயிக்குமாறு பணிக்கப்பட்டது.வரையறுக்கப்பட்ட கிராமில் நிர்ணயிக்கப்பட்ட நீரின் வெப்பமான 0 °C—பிரதிசெய்யப்படத்தக்கதொரு வெப்பநிலை யாகக் கருதப்பட்டதால் விஞ்ஞானிகள் தரத்தை மறுவரையறுத்தலுக்கு உட்படுத்த விழைந்து நீரானது அதிக அடர்த்தி யானதாயிருக்கும் வெப்பநிலையான 4 °C ல் தங்கள் அளவுகளை எடுக்க முற்பட்டனர். [58] எஸ்ஐ முறைமையின் கெல்வின் வெப்ப அளவுகோல் நீரின் மும்மைப்புள்ளியை அடிப்படையாகக் கொண்டு 273.16 K அல்லது 0.01 °C என்று வரையறுக்கப்பட்டது. இந்த அளவுகோல் ஏற்கனவே கொதிநிலை (100 °C), மற்றும் உருகுநிலை (0 °C) ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட செல்சியஸ் அளவுகோலை விட நுட்பமானதாகக் கருதப்படுகிறது. இயற்கை நீர் பெருமளவு ஹைட்ரஜன்-1 மற்றும் ஆக்ஸிஜன்-16 எனும் ஐசோடோப்புகளைக் கொண்டிருந்தாலும்,சிறிதளவு ஹைட்ரஜன்-2 ஐசோடோப்புகளையும் கொண்டிருக்கக் கூடும்.(டியுடீரியம்)டியுடீரியம் ஆக்சைடுகள் அல்லது கன நீர் சிரிதளவேயிருந்தாலும் அது நீரின் இயல்பினை வெகுவாகப் பாதிக்கிறது. நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் கடல்நீரை விட டியுடீரியத்தை குறைவாகப் பெற்றிருக்கின்றன. எனவே தரமான நீர் என்பது வியென்னா சராசரி ஆழி நீர் நிர்ணயத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளது. பருகுவதற்காக உடல் பருமனுக்கேற்றவாறு மனித உடம்பு 55% முதல் 78% நீராலானது. வறட்சியை ஈடுசெய்து சரிவர செயல்பட உடலுக்கு நாள் ஒன்றிற்கு 1 முதல் 7 லிட்டர்கள் நீர் தேவைப்படுகிறது. உடல் இயக்கம், வெப்பநிலை, ஈரப்பதம், மற்றும் ஏனைய காரணிகளைப் பொறுத்து நீரின் தேவை மாறுபடுகிறது. இதில் பெருமளவு நேரடி நீர் உட்கொள்ளுதல் என்றில்லாமல் உணவின் வாயிலாகவோ, பானங்கள் வாயிலாகவோ உட்கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான மக்களுக்காகும் நீரின் அளவு தெளிவாகக் கணிக்கப்படவில்லையென்றாலும், சரியான நீரேற்றத்தைத் தக்கவைக்க குறைந்தது 6 முதல் 7 டம்ளர் நீர் (சுமார் 2 லிட்டர்கள் நீர்)அவசியமென வல்லுனர்கள் கருதுகின்றனர். மருத்துவ இலக்கியங்கள் இதை விட குறைந்த அளவில், அதாவது உடற்பயிற்சியினாலோ, வெப்ப வானிலையாலோ நிகழும் நீரிழப்பை சரிகட்ட கூடுதலாகத் தேவைப்படும் அளவு நீங்கலாக, சராசரி ஆணுக்கு 1 லிட்டர் நீர் என்ற அளவில், என பரிந்துரைக்கின்றன. ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடையவர்களுக்கு அதிக நீர் உட்கொள்ளுதல் கடினமாயிருந்தாலும், தேவையை விட (குறிப்பாக வெப்பமான ஈரபதமான வானிலையின் பொழுதும்,உடற்பயிற்சியின் பொழுதும்) குறைவாக நீர் உட்கொள்ளுதல் ஆபத்தானது.எனினும் உடற்பயிற்சியின் பொழுது தேவையை விட அதிகமான அளவு நீர் உட்கொள்ளுதல் நீர் நச்சுப்பொறுண்மையாக்கல் அல்லது உடல் நீர் மிகைப்பு போன்ற ஆபத்துக்களுக்கு உட்படுத்தி மரணத்தை விளைவிக்கலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர்கள் நீர் அருந்த வேண்டும் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. உடல் எடைக் குறைவு மற்றும் மலச்சிக்கலின் மீதான நீரின் விளைவுகள் உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டன என்பன போன்ற கட்டுக் கதைகளும் நிலவுகின்றன. நீர் உட்கொள்ளுதலுக்கான ஆரம்பகால பரிந்துரை தேசிய ஆய்வு மன்றத்தின், அங்கமான உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் கீழ்கண்டவாறு அமைக்கப்பெற்றிருந்தது: "பலதரப்பட்ட மனிதர்கள் சாதாரண அளவு உட்கொள்ளும் உணவின் 1 கலோரிக்கு தேவை 1 மில்லிலிட்டர் நீர் என்பதே.தயாரிக்கப்பட்ட உணவுகள் இவ்வளவின் பெரும்பகுதியை கொண்டுள்ளன." அண்மைக்கால உணவாதார உட்கொள்தல் அறிக்கை ஐக்கிய நாடுகள் தேசிய ஆய்வு மன்றத்தால் கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு 2.7 லிட்டர்களும் ஆண்களுக்கு 3.7 லிட்டர்களும். குறிப்பாக கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் பெண்களும் நீரேற்றத்தைத் தக்கவைக்க அதிக நீர் உட்கொள்தல் அவசியம். இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிசின் பரிந்துரைப்படி சராசரியாக பெண்கள் 2.2 லிட்டர்களும் ஆண்கள் 3லிட்டர்களும் குடிப்பதும், இது இழக்கப்படும் நீரினிமித்தம் , கருத்தரித்துள்ள பெண்களுக்கு 2.4 லிட்டர்களாகவும்,(10தம்ளர்கள்) பாலூட்டும் பெண்களுக்கு 3 லிட்டர்களாகவும் (12 தம்ளர்கள்) அதிகரிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. மேலும் 20 % நீர் உணவிலிருந்து வருவதாகவும் மீதம் குடிநீர் மற்றும் பானங்களிலிருந்து வருவதாகவும் இது தெரிவிக்கிறது.(கஃபினையும் சேர்த்து) உடலிலிருந்து நீர் சிறுநீர் மற்றும் மலம் வழியாக, வியர்வை வழியாக, சுவாசித்தலின் பொழுது நீராவியை வெளிவிடுதல் வழியாக என பல வழிகளில் வெளியேற்றப்படுகிறது.உடல் உழைப்பின் போதும் வெப்பத்திற்காட்படும் போதும் நீரிழப்பு அதிரிப்பதினால், தினசரி திரவ தேவைகளும் அதிகரிக்கக் கூடும். மனிதர்களுக்கு அதிக அசுத்தங்களில்லாத நீர் தேவைப்படுகிறது.உலோக உப்புக்களும், ஆக்சைடுகளும் (தாமிரம், இரும்பு, கால்சியம், காரீயம் உட்பட) இத்தகைய பொதுவான அசுத்தங்கள் சில. இவற்றோடு சேர்ந்தோ அல்லது தனியாகவோ தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களான விப்ரியோ போன்றவை காணப்படலாம். சுவையை மேம்படுத்துவதுக்கும் தேவையான மின்பகுளிகளை பெறவும் சில கரைபொருட்கள் அனுமதிக்கப்படத்தக்கவை. தனிப்பெரும் நன்நீராதாரமாகத் திகழும் சைபீரியாவின் பய்கால் ஏரி குறைந்த உப்பையும், கால்சியத்தையும் கொண்டிருப்பதனால் மிகுந்த சுத்தமானதாகக் கருதப்படுகிறது. கரைக்கும் பொருளாக அல்லது கரைப்பானாக கரைப்பது (அல்லது மிதக்கச்செய்வது )ஆகிய இதன் பண்புகள் தினமும் மனித உடல், ஆடைகள், தரைகள், வாகனங்கள், உணவுபொருட்கள், மற்றும் செல்லப்பிராணிகள் போன்றவற்றை கழுவி சுத்தப்படுத்த பயன்படுகிறது. மேலும் மனித கழிவுகள் நீரால் கழிவு நீர் மண்டலத்தில் கடத்தப்படுகின்றன.சுத்தப்படுத்தும் கரைப்பானாக திகழும் அதன் இயல்பு தொழில் வளமிக்க நாடுகளில் அதன் நுகர்தலை பெருக்கியிருக்கிறது. நீரானது கழிவுநீரின் வேதியியல் சுத்திகரிப்புக்குப் பயன்படுகிறது. நீரிருப்புச் சூழல் கழிவுடனான தனது ஓரின கரைசலாகும் தன்மையால்,கழிவினை எளிதில் ஏற்றி சுத்தப்படுத்தக் கூடியதாகத் திகழ்ந்து மாசுக்களை அழிப்பதற்கு வழிசெய்கிறது.வளி வழி சுத்திகரிப்பென்பது, கரைசலுக்குள் காற்று அல்லது ஆக்சிஜனை செலுத்தி அதனுள் இருக்கும் பொருட்களின் வினைபுரிதலைக் குறைக்கிறது. நீரானது கழிவுநீரில் உள்ள கசடுகளை கரைப்பதின் மூலம் அதன் உயிரியற் பதப்படுத்துதலுக்கும் வழிகோலுகிறது.நீரினுள் வாழும் கிருமிகள் கரைக்கப்பட்ட கசடுகளை அடைந்து, அவற்றை உட்கொண்டு சிதைத்து குறைந்த மாசு அபாயமுள்ள பொருட்களாக மாற்றுகின்றன.நாணல் படுக்கைகளும் வளியற்ற செரிமானிகளும் கழிவு நீர் சுத்திகரிப்புக்குதவும் உயிரியற் முறைகளாகும். வேதியற் சுத்திகரிப்பிலும், உயிரியற் சுத்திகரிப்பிலும் பெரும்பாலான நேரங்களில் திண்ம படிவோ அல்லது கட்டியோ சுத்திகரிப்புக்குப் பின் மிஞ்ச நேர்கிறது.அதன் கூறுகளுக்கேற்ப இந்த கட்டியானது நன்மை பயப்பதாயின் உலர்த்தப்பட்டு நிலத்தின் மேல் உரமாகப் பரப்பப்படவோ, அல்லது தீயதாயின் குழியமைத்து புதைக்கப்படவோ அல்லது எரிக்கப்படவோ செய்யப்படக் கூடியதாக இருக்கிறது. வெப்ப கடத்து திரவமாக எளிதிற் கிடைப்பதாயும், அதிக வெப்ப ஏற்புத் திறன் பெற்றதாயும் இருப்பதால், நீரும் நீராவியும் பலதரப்பட்ட வெப்ப பரிமாற்ற முறைமைகளில் வெப்ப கடத்து திரவங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குளிர்ந்த நீர் ஏரிகள் அல்லது கடல்களில் இயற்கையாகவே பெறக் கூடியதாய் இருக்கிறது.அதிக ஆவியாதலின் வெப்பத்தைக் கொண்டிருப்பதால் குளிர்விக்கப்பட்ட நீராவி சிறந்த வெப்ப கடத்து திறனுள்ள திரவமாய் இருக்கிறது.இதன் எதிர் விளைவாகக் கருதப்படுவது நீர் மற்றும் நீராவியின் அரிக்கும் இயல்பே.அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் குளிர்ப்பியாகப் பயன்படுத்தப்படும் நீர் ஆவியாகி நீராவிச் சுழலியை இயக்கி மின்னாக்கியை ஒட்டுகிறது. அணு மின் நிலையங்களில் நீர் நியுட்ரான் தணிப்பியாகப் பயன்படுகிறது. அழுத்த நீர் உலைகளில் , நீர் குளிர்ப்பியாகவும், தணிப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.உலையிலிருந்து நீரை அகற்றுவதன் மூலம் இது அணு வினை வேகத்தைக் குறைப்பதால் இது மறைமுக பாதுகாப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது. தீயணை கருவியாகப் பயன்படுதல் நீரானது அதிக ஆவியாதல் வெப்பத்தைக் கொண்டிருப்பதாலும் அதன் வினைபுரியா தன்மையாலும் சிறந்த தீயணை கருவியாகப் பயன்படுகிறது. நீராவியாதல் நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கிறது.எனினும் சுத்தமற்ற நீரின் மின் கடத்தும் பண்பால் மின்னுபகரணங்களில் பற்றிய நெருப்பை அணைக்க நீரை பயன்படுத்த இயலாது.அதை போல எண்ணெய் அல்லது கரிமக் கரைசல்களின் தீயையும் நீரினால் அணைக்க முற்படுவது அவற்றின் மிதக்கும் பண்பால் கட்டுங்கடங்காத கொதித்தலையும், அதன் வாயிலாக எரியும் திரவத்தின் பரவலையும் ஏற்படுத்தக் கூடும். குறுகலான இடங்களில் பற்றிய மிகுந்த வெப்பமுள்ள தீயை அணைக்க நீரைப் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் நீராவி வெடித்தலையும், நீரோடு வினைபுரியும் சில உலோகங்கள் அல்லது சூடான கிராஃபைட் போன்றவை நிறைந்த இடங்களில் பற்றிய தீயை அணைக்க முற்படும் பொழுது, நீரின் சிதைவால் சாத்தியப்படக் கூடிய ஹைட்ரஜனின் வெடித்தலையும் கணக்கில் கொள்ள வேண்டும். தீயணைக்கப் பயன்படுத்தப்பட்ட நீரினால் இல்லாமற் போனாலும் உலையின் சொந்த நீர் குளிர்விப்பு வசதியால் ஏற்பட்ட இத்தகைய வெடித்தலின் வேகம் செர்நோபில் பேரழிவின் பொழுது உணரப்பட்டது.உள்மையப் பகுதி அதீத வெப்பத்துக்குட்படுத்தப் பட்டபோது நீரானது நீராவியாகத் தெறித்ததினால் நீராவி வெடித்தல் ஏற்பட்டது.மேலும் நீராவியுடன் சூடான ஸிர்கோனியம் வினை புரிந்தததன் விளைவாக ஹைட்ரஜன் வெடித்தலும் ஏற்பட்டிருக்கலாம் என்றெண்ணப்பட்டது. வேதியியற் பயன்கள் கரிம வினைகள் நீரினாலோ அல்லது வேறு உகந்த அமில கார அல்லது நடுப்பி நீர்க்கரைசல்களினாலோ தணிக்கப்படுகின்றன.கனிம உப்புக்களை அகற்றுவதில் நீர் பெரும் பங்கு வகிக்கிறது. கனிம வினைகளில் சாதாரணமாக நீர் கரைப்பானாகப் பயன்படுகிறது.கரிம வினைகளில், நீர் வினைபொருட்களை சரிவர கரைக்காமலிருப்பதாலும்,அமில மற்றும் கார ஈரியல்புகளைப் பெற்றதாயிருப்பதாலும், அணுக்கரு கவர் பொருளாகவிருப்பதாலும், வினைக் கரைப்பானாக உபயோகப்படுத்தப்படுவதில்லை. இருந்தபோதும் இப்பண்புகள் சிலநேரங்களில் விரும்பத்தக்கவையாய்க் கருதப்படுகின்றன. மேலும் டீல்ஸ்-ஆல்டர் வினை உந்து பண்பு நீரில் கண்டறியப்பட்டுள்ளது. மேம்பட்ட பிறழ் நிலை நீர் அண்மைக் காலங்களில் ஆய்வுக்குரிய தலைப்பாயிருக்கிறது.ஆக்ஸிஜன்- நிரம்பிய மேம்பட்ட பிறழ் நிலை நீர் கரிம மாசுக்களைத் திறமையாக எரிக்கிறது. பொழுதுபோக்கு மனிதர்கள் பொழுதுபோக்கிற்காகவும் உடற் பயிற்சிகளுக்காகவும், விளையாட்டுகளுக்காகவும் நீரைப் பயன் படுத்துகின்றனர். இவற்றுள் சில நீச்சல், நீர்ச்சறுக்கு, படகோட்டம், அலையாடல், நீர் மூழ்குதல் போன்றவை. இத்துடன் உறைபனி ஹாக்கி, உறை பனிச்சருக்கு போன்றவை உறைபனியில் விளையாடப்படுபவை. ஏரிக்கரைகள், கடற்கரைகள், மற்றும் நீர்ப்பூங்காக்கள் ஆகியனவற்றிற்கு மக்கள் சென்று இளைப்பாறி, புத்துணர்ச்சியடைகின்றனர். பாய்ந்தோடும் நீரின் சத்தம் மனதுக்கு இதமாயிருப்பதாகப் பலர் கருதுகின்றனர். சிலர் மீன்காட்சியகங்களிலும், குளங்களிலும் மீன்களையும் ஏனைய நீர்வாழ் உயிர்களையும் பார்வைக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், தோழமைக்காகவும் வைத்துள்ளனர். மனிதர்கள் நீரை பனிச்சருக்கு, பனிவழுக்குதல் போன்ற உறைபனி விளையாட்டுகளில் ஈடுபட பயன்படுத்துகின்றனர். இவை நீரை உறையச் செய்து விளையாடப்படுபவை. மக்கள் பனி பந்துகள், நீர்த் துப்பாக்கிகள், நீர் பலூன்கள் ஆகியனவற்றை வைத்து பொழுதுபோக்கிற்காக விளையாட்டு சண்டைபோன்ற நிகழ்வுகளிலும் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் நீரூற்றுக்கள் மற்றும் ஏனைய நீராலான அலங்காரங்களைத் தங்களது பொது அல்லது தனியார் இடங்களில் அமைத்துக் கொள்கின்றனர். நீர்த் தொழில் நீர்த் தொழிலானது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் விநியோகத்துக்கும், கழிவு நீர் சுத்திகரிப்பிற்கும் பயன்படுகிறது. நீர் விநியோக வசதிகள் கிணறுகள் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் விநியோக வலைப்பின்னல்கள், நீர் சுத்திகரிப்பு வசதி, நீர்த் தொட்டிகள், நீர்க் கோபுரங்கள், நீர்க் குழாய்கள், பழைய நீர்க்கட்டுக் கால்வாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வளிமண்டல நீர் மின்னாக்கி ஆராய்ச்சி நிலையிலுள்ளது. நிலத்தையோ கிணறுகளையோ செயற்கையாகத் துளையிடுதல் மூலம் நீரூற்றுகள் உருவாக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.நிலத்தடி நீர் கொள் படுக்கைகள் போதுமான நீரைத் தர வல்லதாயிருப்பின் தேவைப்படுமளவிற்கு கிணறுகளை அமைத்தல் அதிக நீரைப் பெரும் வழியாகும். ஏனைய நீராதாரங்கள் மழை நீர் மற்றும் நதி அல்லது ஏரிநீராகும்.ஆனாலும் மேலோட்ட நீரை மனித உபயோகத்துக்குப் பயன்படுத்தும் பொழுது சுத்திகரிப்பு செய்தல் அவசியமானது. கரையாத மற்றும் கரையக்கூடிய பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் ஆகியனவற்றை அகற்றுவதாக இது அமையலாம்.இதற்கான வழியாகக் கருதப்படும் மணல் வடிகட்டு முறையில் கரையாத பொருட்கள் மட்டுமே அகற்றப்படுகின்றன.ஆனால் குளோரினேற்றம் மற்றும் கொதிக்க வைத்தல் ஆகியன தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அளிக்க வல்லதாய் இருக்கின்றன.நீரை காய்ச்சி வடிகட்டுதல் மேற்கூறிய மூன்று பணிகளையும் செய்கிறது.இன்னும் முன்னேறிய தொழில் நுட்பங்களான தலைகீழ் சவ்வூடுபரவல் போன்றவைகளும் நடைமுறை வழக்கில் உள்ளன.வறண்ட கடற்கரை காலநிலையுடைய பகுதிகளில் வற்றாத சமுத்திர அல்லது கடல் நீரை உப்புநீக்கம் செய்து பயன்படுத்துவது மிகுந்த செலவை உள்ளடக்கிய ஒரு முயற்சியாகும். குடிநீர் விநியோகம் நகராட்சி நீர் விநியோக முறைகளாலும் பாட்டிலிலிடப்பட்ட தண்ணீராகவும் நடக்கிறது. பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் தேவைப்படுவோருக்கு இலவசமாக நீரை விநியோகிக்க பல திட்டங்களை வகுத்துள்ளன.சந்தை முறைமைகளும் இலவச நிறுவனங்களுமே இவ்வரிய வளத்தின் சிறந்த நிர்வாகத்திற்கு ஏற்றதாயும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டத் தேவையான நிதியை அளிப்பதாயும் உள்ளன என ஏனையோர் வாதிடுகின்றனர். குடிநீரைக் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் சேதாரத்தைக் குறைப்பதும் மற்றொரு யுத்தியாகும். நன்னீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஹாங்காங் போன்ற நகரங்களில் கழிப்பிடங்களைத் தூய்மைப்படுத்த கடல்நீரே பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நீரை மாசுபடுத்துதல் அதன் உபயோகத்தில் நடக்கும் தனிப்பெரும் தவறாகும்; மாசானது மாசுபடுத்துவோருக்கு நன்மை பயப்பதாயிருந்தாலும் கூட நீரின் அனைத்து உபயோகங்களையும் தடுத்து, நீர்வளத்தை அழிக்கிறது.ஏனைய சுற்றுப்புறத் தூய்மைக் கேடுகளைப் போலல்லாது இது நியம சந்தைவிலை கணக்கில் சேராமல் வெளிபிரச்சனைகளாகக் கருதப்பட்டு சந்தைநல பாதிப்பாக அஞ்சப்படுவதில்லை. ஏனைய மக்கள் இதனால் பாதிக்கப்படும்பொழுது, இத்தகைய மாசுபடுத்துதலுக்குக் காரணமான தனியார் நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் லாபத்தை நஷ்ட ஈடாக வழங்குவதில்லை.உயிரினக் கழிவு மாசுபடுத்திகளாக (பயோ டிக்ரேடபிள் பொல்யுடன்ட்ஸ்) இல்லாத பட்ச்த்தில் மனிதர்களால் உட்கொள்ளப்படும் மருந்துக ளின் உயிரியற் சேர்மானத்தால் நீர்நிலைகளின் நீர்வாழ் உயிர்களுக்கு பெரும் சேதங்கள் விளைகின்றன. கழிவு நீர் வசதிகளாவன கழிவு நீரகற்றிகளும்(ஸ்டார்ம் சியுயர்ஸ்)மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுமே. மேற்பரப்பு தல ஓட்டத்தின் மாசை அகற்றும் மற்றொரு வழி பயோஸ்வேல்(சதுப்பு பாதை) என்பதாகும் தொழிற்சாலை பயன்கள் நீரானது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.நீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும் ,மாசுபடுத்தாததாயும்,புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது.சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது. அழுத்தத்திற்குள்ளான நீர்,நீர் வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பா னாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,பாதுகாப்பானதாகவும், சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது.இயந்திரங்கள் மற்றும் அறங்களின் சூட்டைத் தணிக்கும் குளிர்ப்பியாக நீர் பயன்படுகிறது. நீரானது நீராவிச் சுழலி, வெப்ப பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.தொழிற்சாலை உபயோகத்திற்குப் பின் மாசுநீக்கம் செய்யப்படாமல் வெளியேற்றப்படும் நீர், ஒருதூய்மைக்கேடாகும் சுற்றுப்புறத் தூய்மைக்கேடு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியற் மாசு), வெளியேற்றப்பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன. உணவு பதனிடுதல் உணவியலில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தங்களது தயாரிப்புகளின் வெற்றியை நிலைநிறுத்த உணவு பதனிடுதலில் நீரின் பங்கை உணவியல் விஞ்ஞானி நன்குணர்ந்தவராய் இருத்தல் வேண்டும். நீரில் காணப்படும் கரைபொருட்களான உப்புக்கள், சர்க்கரைகள் போன்றவை நீரின் பௌதீக பண்புகளை பாதிக்கலாம். இக்கரைபொருட்கள் நீரின் கொதிநிலை மற்றும் உறைநிலையில் மாற்றம் கொண்டு வரலாம். ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் சுக்ரோஸ் நீரின் கொதிநிலையை 0.51 °C அதிகரிப்பதாயும் ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் உப்பு நீரின் கொதிநிலையை 1.02 °C அதிகரிப்பதாயும் உள்ளது; அதே போல் கரை பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீரின் உறை நிலையைக் குறைப்பதாய் உள்ளது. நீரின் கரை பொருட்கள் அதன் செயல்பாட்டை பாதித்து, அதன் மூலம் பல வேதியியற் வினைகளையும் நுண்ணுயிர் பலுகிபெருகுதலையும் ஏற்படுத்தவல்லதாய் இருக்கிறது. கரைசலின் ஆவி அழுத்தத்திற்கும் தூய நீரின் ஆவி அழுத்தத்திற்கும் உள்ள விகிதமே நீரின் செயல்பாடு எனப்படுகிறது. நீரின் கரைபொருட்கள் நீரின் செயல்பாட்டைக் குறைக்கின்றன. குறைந்த நீர் செயல்பாட்டின் பொழுது அநேக கிருமிகளின் வளர்ச்சி ரத்து செய்யப்பட்டு விடுமாதலால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நுண்ணுயிர் வளர்ச்சி உணவின் பாதுகாப்பை பாதிப்பதோடல்லாமல் அதன் பதப்படுத்துதலையும், அதன் வைப்புக் கால அளவையும் பாதிக்கிறது. உணவு பதனிடுதலில் நீரின் கடினத்தன்மை முக்கிய காரணியாகும். அது தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளின் தரத்தை பாதிப்பதோடல்லாமல் சுகாதாரத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு காலன் நீரில் இருக்கும் அகற்றப்படக்கூடிய கால்சியம் கார்பனேட் அளவை வைத்து நீரின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. நீரின் கடினத் தன்மை கிரேய்ன் அளவைகளால் அளக்கப்படுகிறது; 0.064 கி கால்சியம் கார்பனேட் ஒரு கிரேய்ன் கடினத்தன்மைக்கு ஒப்பானது. நீரானது 1 முதல் 4 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது மென் நீராகவும், 5 முதல் 10 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது மிதமான கடின நீராகவும் 11 முதல் 20 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது கடினமான நீராகவும் வகைப்படுத்தப்படுகிறது. வேதியியற் அயனிப் பரிமாற்ற முறைமைகளால் நீரின் கடினத்தன்மையைக் குறைக்கவோ அகற்றவோ கூடும்.நீரின் கடினத்தன்மை அதன் pH நிலையை மாற்றுவதால் உணவுப் பதனிடுதலில் முக்கிய பங்காற்றுகிறது. எடுத்துக்காட்டாக கடின நீர் தெள்ளத் தெளிவான பானங்களின் தயாரிப்பைத் தடுக்கிறது.நீரின் கடினத்தன்மை சுத்தப்படுத்தும் திரவத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் சுகாதாரத்தையும் பாதிக்கிறது. கொதிக்க வைத்தல், ஆவியில் வேக வைத்தல், மென்மையாகக் கொதிக்க வைத்தல் போன்றவை உணவை நீருடனோ அல்லது நீராவியுடனோ கலந்து வைத்து செய்யப்படும் பிரதான சமையல் நடைமுறைகளாகும். சமையலின் பொழுது பாத்திரங்களைக் கழுவவும் நீர் பயன்படுகிறது. நீரின் மீதான அரசியலும் தண்ணீர் பிரச்சினைகளும் நீரின் மீதான அரசியல் என்பது நீர் மற்றும் நீராதாரங்களால் பாதிக்கப்படும் அரசியல் ஆகும்.இதன் காரணமாக நீர் உலக முக்கியத்துவம் வாய்ந்த வளமாகவும் பல அரசியல் சண்டைகளின் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.அது உடல் நல பாதிப்பையும், பல்லுயிர் விருத்தியையும் பாதிக்கக்கூடியது. 1990 ல் இருந்து 1.6 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கின்றனர். http://mdgs.un.org/unsd/mdg/Resources/Static/Products/Progress2008/MDG_Report_2008_En.pdf#page=44. வளரும் நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கும் மக்கள் விகிதம் 1970 ல் 30 சதவீதமாயிருந்ததிலிருந்து 1990 ல் 79 சதவீதமாகவும் 2004 ல் 84 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.இந்த நடைமுறையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [89] 2015 க்குள், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப்பெறாத மக்கள் தொகையை பாதியாக மாற்றுவதே ஓராயிரமாண்டு வளர்ச்சி குறிகோள்களுள் ஒன்று.இந்த குறிக்கோள் அடையப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது . 2006 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி "அனைவருக்கும் போதுமான அளவு நீருள்ளது.", ஆனால் அதனைக் கிடைக்காமல் செய்வது தவறான நிர்வாகமும், நேர்மையின்மையுமேயாகும். யுனெஸ்கோ வின் உலக நீர் மேம்பாட்டுத் திட்டம் (WWDR, 2003) அதன் உலக நீர் மதிப்பீட்டு திட்டத்தின்படி அடுத்த 20 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்ககூடிய நீரின் அளவு 30 சதவீதம் வரைக் குறையலாமென தெரிவிக்கிறது. தற்சமயம் உலக மக்களில் 40 சதவீதம் பேர் குறைந்த பட்ச சுகாதாரத்திற்குத் தேவையான நீரை போதுமான அளவு பெறாதவர்களாவர் . 2000 ல் 2.2 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் நீரால் வரும் நோய்களாலோ (கிருமி பாதித்த நீரை அருந்துவதன் மூலம்) அல்லது வறட்சியாலோ மரணமடைந்துள்ளனர். 2004 ல் வாட்டரெய்ட் எனப்படும் இங்கிலாந்தின் தர்ம ஸ்தாபனம் எளிதில் தடுக்கக்கூடிய நீருடன் தொடர்புள்ள நோய்களால் ஒவ்வொரு 15 வினாடிகளிலும் ஒரு குழந்தை இறப்பதாகக் கூறியுள்ளது. இதன் காரணம் பொதுவாக கழிவு அகற்றப்படாமையே; பார்க்க கழிப்பிடங்கள் . நீர் பாதுகாப்போடு தொடர்புடைய நிறுவனங்கள் இண்டெர்நேஷனல் வாட்டர் அசோஷியேஷன் (IWA), வாட்டரெய்ட், வாட்டர் 1st, போன்றவை. நீர் தொடர்பான கூட்டமைப்புகள் யுனைடட் நேஷன்ஸ் கன்வன்ஷன் டு காம்பேட் டெஸெர்டிபிகேஷன் (UNCCD), இண்டெர்நேஷனல் கன்வன்ஷன் ஃபார் தி ப்ரிவன்ஷன் ஆஃப் பொல்யுஷன் ஃபிரம் ஷிப்ஸ் , யுனைடட் நேஷன்ஸ் கன்வன்ஷன் ஆண் தி லா ஆஃப் தி ஸீ மற்றும் ரம்சார் கன்வன்ஷன் ஆகியன. 22 மார்ச் உலக நீர் நாள் எனவும் 8 ஜூன் உலக சமுத்திர நாள் எனவும் அழைக்கப்படுகிறது. பொருட்களின் தயாரிப்பிலோ அல்லது சேவையிலோ உபயோகப்படுத்தப்படும் நீர், மாய நீர் வெர்சுவல் வாட்டர் என்றழைக்கப்படுகிறது. மதம், தத்துவம் மற்றும் இலக்கியம் பெரும்பாலான மதங்களில் நீர் தூய்மைப்படுத்து பொருளாகக் கருதப்படுகிறது.கிறிஸ்துவம், இந்துமதம், ராஸ்டஃபரியானிஸம், இஸ்லாம், ஷிண்டோ, டாயிஸம், ஜூடாயிஸம் போன்ற முக்கிய மதங்கள் பல அப்ல்யூஷன் எனப்படும் கழுவுதல் சடங்கைக் கொண்டுள்ளன. ஒரு நபருக்களிக்கப்படும் முழுக்கு (or அஸ்பெர்ஷன் அல்லதுஅஃப்யுஷன்) கிறிஸ்துவத்தின் முக்கியதிருவருட்சாதனமாகும் (அங்கு அது ஞானஸ்நானம்) என்று அழைக்கப்படுகிறது; ஜூடாயிஸம் (மிக்வா ), சீக்கியம்(அம்ரித் சன்ஸ்கார் ), போன்ற ஏனைய மதங்களிலும் இந்நடைமுறை காணப்படுகிறது. அதோடு, இறந்தோருக்கு செய்யப்படும் கழுவும் சடங்கும் ஜூடாயிஸம், இஸ்லாம் உட்பட பல மதங்களில் நடத்தப்படுகிறது. இஸ்லாமில் அநேக தருணங்களில் உடலின் சில பகுதிகளை சுத்தமான நீரினால் கழுவிய பின்னரே ஐந்து தினசரி பிரார்த்தனைகளைச் செய்வது வழக்கம்.(இது வுடு என்றழைக்கப்படுகிறது.). ஷிண்டோவில், மனித உடலையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ கழுவுவதற்காக அனைத்து சடங்குகளிலும் நீர் உபயோகப்படுத்தப்படுகிறது. (எ .கா., மிசொகி சடங்கின் போது). விவிலியத்தின் நியு இண்டெர்நேஷனல் வெர்ஷன் ல் 442 முறைகளும், கிங் ஜேம்ஸ் வெர்ஷன் ல் 363 முறைகளும் நீர் குறிப்பிடப்பட்டுள்ளது: 2 ம் இராயப்பர் 3:5(b) இவ்வாறு கூறுகிறது , "பூமியானது நீரிலிருந்து நீரினால் உருவாக்கப்பட்டுள்ளது"(NIV). மத சடங்குகளை நிறைவேற்றவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட நீரை சில மதங்கள் உபயோகப்படுத்துகின்றன.(சில கிறிஸ்துவ பிரிவினரால் உபயோகப்படுத்தப்படும் புனித நீர், சீக்கியத்திலும், இந்து மதத்திலும் உபயோகிக்கப்படும் அமிர்த நீர் போன்றவை). பல மதங்கள் குறிப்பிட்ட சில ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட நீரை புனிதத்தன்மை வாய்ந்ததாகவும், ஐஸ்வர்யாமானதாகவும் கருதுகின்றன. எடுத்துக்காட்டாக ரோமன் கத்தோலிக்கத்தில் லூர்தும் சில கிறிஸ்த்துவ சபைகளில் யோர்தானும், இஸ்லாமில் சம்சம் கிணறும் இந்து மதத்தில் கங்கை நதியும் (ஏனையவைகளும்)கூறலாம். நீர் தெய்வ சக்தியுடையதாய் நம்பப்படுகிறது.செல்டிக் புராணத்தில் , ஸ்யுலிஸ் என்பவள் வெந்நீர் ஊற்றுக்களின் உள்ளூர் தேவதையாவாள் ; இந்து மதத்தில்,கங்கை தேவதையாகக் கருதப்படுவதோடு,சரஸ்வதி வேத புராணத்தில்தேவதையாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள். மேலும் நீர் பஞ்சபூதங்களுள் ஒன்றாகும். ( 5 இயற்கைக் காரணிகளுள் ஒன்று, நெருப்பு , பூமி , ஆகாயம் , காற்று)ஆகியன மற்றவை. மாறாக தேவர்கள் குறிப்பிட்ட ஊற்றுக்கள், நதிகள், அல்லது ஏரிகளின் காவல் தெய்வமாகக் கருதப்படலாம்:எடுத்துக்காட்டாக கிரேக்கமற்றும் ரோமானிய புராணத்தில் ,ஒசியனஸ் கடல் தேவதையின் சந்ததியரான மூவாயிரம் ஒசியானிடுகளுள் ஒருவராக நம்பப்பட்ட பெநியஸ் ஆறுகளின் கடவுளாகக் கருதப்பட்டார். இஸ்லாமில் நீரானது வாழ்கையை கொடுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு உயிரும் நீராலேயே ஆக்கப்பட்டிருக்கிரதென நம்பப்படுகிறது. "நாம் நீரிலிருந்தே அனைத்து உயிரையும் படைத்தோம்". பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானியான எம்பெடோகிள்ஸ் நீரானது, நெருப்பு, பூமி, காற்று, ஆகியவைகளை உள்ளடக்கிய நான்கு மரபார்ந்த காரணிகளுள் ஒன்றாகவும் ஐலம் எனப்படும் அகிலத்தின் அடிப்படை பொருளெனவும் குறிப்பிட்டுள்ளார். நீர் குளிர்ச்சியானதாகவும், ஈரமானதாகவும் கருதப்படுகிறது.நன்கு உடல் திரவங்கள் கருதுகோளில் நீர் சளியுடன் தொடர்புடையது.பாரம்பரிய சீன தத்துவத்தில் பூமி, நெருப்பு , மரம், உலோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து காரணிகளுள் ஒன்றாக நீர் கருதப்படுகின்றது. இலக்கியத்திலும் நீர் தூய்மையின் அடையாளமாக முக்கிய பங்காற்றுகிறது.நதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வில்லியம் ஃபாக்னரின் ஏஸ் ஐ லே டையிங் மற்றும் ஹேம்லட் டில் ட்ரவ்னிங் ஆஃப் ஒஃபீலியா என்பவைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வாறு கூறுகிறார்."நீரின் ஒரு துளியிலிருந்து ஓர் அட்லாண்டிக் அல்லது ஒரு நயாகரா வின் சக்தியை அவற்றைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம்." பாரம்பரிய மற்றும் புகழ் பெற்ற ஆசிய தத்துவத்தின் சில பகுதிகளிலும் நீர் முன்மாதிரியாகக் கருதப்பட்டுள்ளது.ஜேம்ஸ் லெக்கின் 1891 ம் ஆண்டைய டா டே ஜிங் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது. "மிகப் பெரும் சிறப்பு நீரைப் போன்றது.அனைத்து பொருட்களுக்கும் நன்மை விளைவிப்பதிலும், அனைத்தையும் ஆட்கொள்வதிலும், தொய்வில்லாது அனைவரும் வெறுப்பதையும் ஆதரிப்பதிலும், நீரின் சிறப்பு வெளிப்படுகிறது.எனவே அதன் வழி 'டா' வுக்கருகில் இருக்கிறது.நீரைவிட மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் உலகில் எதுவும் இல்லாத போதிலும், பலம் வாய்ந்த வலிமையான பொருட்களை அழிப்பதில் அதற்கு நிகர் வேறு யாருமில்லை;--அதன் போக்கை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது வேறு எதுவுமிருக்கமுடியாது." இன்று ப்ரூஸ் லீ யின் கீழ் காணும் கூற்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. "மனதை வெறுமையாக்கு, வடிவமற்று, உருவமற்று நீரைப்போல் இரு. நீரை கோப்பைக்குள் ஊற்றும் போது அது கோப்பையாகிறது. குடுவைக்குள் விடும் போது குடுவையாகிறது.தேநீர்க்கோப்பைக்குள் விடும் போது தேநீர்க் கோப்பையாகிறது. தற்பொழுது நீரால் வழிந்தோடவும் முடியும் அல்லது மோதவும் முடியும். நீர் எனது நண்பனாய் இருக்கட்டும்." குறிப்புகள் புற இணைப்புகள் OECD வாட்டர் ஸ்டேடிஸ்டிக்ஸ் 2050ல் இந்தியாவின் தனிநபர் தண்ணீர் தேவை எவ்வளவு இருக்கும்? இயற்கை வளங்கள் கனிமக் கரைப்பான்கள் ஐதரசன் சேர்மங்கள் ஆக்சைடுகள் ஆக்சிசன் சேர்மங்கள் மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம் கூகுள் தமிழாக்கம்-இயற்கை
5496
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
உணவு
உணவு () (Food) என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும். உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசியமான சத்துகளை உணவு பெற்றுள்ளது. உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு அவ்வுயிரினத்தின் உடல் செல்களால் தன்வயமாக்கப்பட்டு, வளர்ச்சியடையவும் உயிர்வாழவும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. வரலாற்று ரீதியாக, மனிதர்கள் இரண்டு முறைகளில் உணவு சேகரித்துக் கொண்டனர்: வேட்டை மற்றும் விவசாயத்தின் மூலம் சேகரித்தல் என்பன அவ்விரு வகைகளாகும். உலகில் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்குத் தேவையான, இன்றியமையாத உணவின் பெரும்பகுதியை இன்று உணவுத் தொழில்கள் வழங்கி வருகின்றன. அனைத்துலக உணவு பாதுகாப்பு நிறுவனம், உலக வள மையம், உலக உணவு திட்டம் அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அனைத்துலக உணவு தகவல் கவுன்சில் போன்ற அனைத்துலக அமைப்புகள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் முதலியனவற்றை கண்காணிக்கின்றன. நிலைத்தன்மை, உயிரியற் பல்வகைமை, காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து பொருளாதாரம், மக்கள்தொகை வளர்ச்சி, நீர் வழங்கல் மற்றும் உணவுக்கான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவ்வமைப்புகள் விவாதித்து வருகின்றன. உணவுக்கான உரிமை என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு மனித உரிமையாகும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான பசிதீர்க்க போதுமான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது. உணவுக்கான மூலங்கள் பெரும்பாலான உணவுகள் தாவரங்களில் இருந்து தோன்றுகின்றன. சில உணவுகள் நேரடியாக தாவரங்களிடமிருந்தும் சில உணவுகள் மறைமுகமாகத் தாவரங்களைச் சார்ந்தும் பெறப்படுகின்றன. உணவு ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற விலங்குகள் கூட தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவை உண்ணுவதன் மூலம் வளர்கின்றன. தானிய வகை தானியங்கள் ஒரு முக்கிய உணவுவகை ஆகும், இவையே உலகளாவிய அளவில் எந்தவொரு வகை பயிரையும் விட ஆற்றலை அதிகமாக வழங்குகின்றன . உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தானியத்தின் பெரும்பகுதி கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. பூஞ்சைகள், காளான்கள் போன்ற சில உணவுகள் விலங்கு அல்லது தாவர ஆதாரங்கள் அல்லாத உணவுகளாகும். ரொட்டி, மது பானங்கள், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் தயாரிக்க நீலப்பச்சைப் பாசி போன்ற பூஞ்சைகளும் சுற்றுப்புற பாக்டீரியாக்களும் பயன்படுத்தப்படுகின்றன. உப்பு, சமையல் சோடா முதலான கனிம வேதியியல் பொருட்கள் உணைவைப் பாதுக்காக்கவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. தாவரங்கள் பல தாவரங்கள் மற்றும் தாவர பகுதிகள் உணவாக உண்ணப்படுகின்றன. சுமார் 2,000 தாவர இனங்கள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. இவற்றில் பல தாவர இனங்கள் பல மாறுபட்ட பயிர் வகைகளாக உள்ளன . தாவரங்களின் விதைகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆதாரமான உணவாக விளங்குகின்றன. ஏனெனில் விதைகளில் உள்ள ஒமேகா கொழுப்பு போன்ற பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் உயிரினங்களின் ஆரம்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. உண்மையில், மனிதர்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் அனைத்தும் விதை அடிப்படையிலான உணவுகளே ஆகும். சோளம், கோதுமை, அரிசி போன்ற தானிய உணவுகள், பீன்சு, பட்டாணி போன்ற பருப்புகள், மற்றும் சூரியகாந்தி, நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்கள் போன்றவை யாவும் தாவர உணவு வகைகளாகும் . குறிப்பாக விதைகள் நிறைவுறாத கொழுப்புகள் அதிகம் கொண்டவையாகவும், சாதாரணமாக இவை ஒர் ஆரோக்கியமான உணவு என்றும் கருதப்படுகின்றன. எல்லா விதைகளும் சாப்பிடக்கூடிய உணவுகளாக இருப்பதில்லை. எலுமிச்சை விதைகள் மூச்சடைப்பையும், ஆப்பிள், செர்ரி போன்றவற்றின் விதைகளில் சயனைடு நச்சும் காணப்படுகின்றன. இவ்விதைகளை அதிகமான அளவில் உட்கொண்டால் நச்சின் பாதிப்பு உண்டாகலாம் . விதைகள் உள்ளிட்ட பழங்கள் யாவும் தாவரங்களின் பழுத்த சூலகங்கள் ஆகும். பல தாவரங்களும் விலங்குகளும் பழங்கால உணவாக இருக்கின்றன. பழங்களை சாப்பிடும் விலங்குகள் தொலைவில் வேறெங்காவது விதைகளை வெளியேற்றுகின்றன. எனவே, பெரும்பாலான கலாச்சாரங்களின் உணவுகளில் பழம் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. தக்காளி, தர்பூசணி போன்ற சில தாவரவியல் பழங்கள் காய்கறிகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன . காய்கறிகளானது இரண்டாவது வகை தாவர உணவுகளாக பொதுவாக உட்கொள்ளப்படுகின்றன. இவற்றில் வேர் காய்கறிகள் (உருளைக்கிழங்கு மற்றும் கேரட்), வேர்மூண்டுகள் (வெங்காயம் குடும்பம்), இலை காய்கறிகள் (கீரைகள்), தண்டு காய்கறிகள் (மூங்கில் தளிர்கள்) மற்றும் மஞ்சரி காய்கறிகள் முட்டைக்கோசு, காலிஃபிளவர் போன்றவை சில காயகறிகளாகும் . விலங்குகள் விலங்குகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை உற்பத்தி செய்யும் பொருட்களால் உணவாகின்றன. உதாரணமாக மாமிச உணவானது விலங்குகளின் தசைகளிலிருந்து அல்லது அவற்றின் உறுப்புகளிலிருந்து நேரடியாக உணவாகக் கிடைக்கிறது. பாலூட்டிகளின் சுரப்பிகளிலிருந்து பால் உள்ளிட்ட சிலவகை உணவுகள் விலங்குகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலில் இருந்து பல்வேறு வகையான பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பறவைகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் உணவுப்பொருட்களாகப் பயன்படுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் ஒரு நல்ல மருந்துணவாகவும் பயன்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விலங்குகளின் இரத்தமும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உடல்நலம், நன்னெறி மற்றும் கருத்தியல் காரணங்களால் சில கலாச்சரத்தினர் இறைச்சி மற்றும் விலங்குணவுகளை உட்கொள்வதில்லை. தீவிர சைவர்கள் விலங்கு தொடர்பான பகுதிப்பொருட்கள் கலந்துள்ள உணவுகளைக் கூட தவிர்த்துவிடுகின்றனர். உற்பத்தி பெரும்பாலான உணவு எப்போதும் விவசாயம் மூலமாகவே பெறப்படுகிறது. அதிகரித்து வரும் தேவைகளால் நவீன தொழில்துறை வேளாண்மை முறைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்காக நிலையான விவசாய நடைமுறைகளை வளர்ந்து வருகின்றன இந்த அணுகுமுறை நுகர்வோர் தேவையைப் சிறிதளவு பூர்த்தி செய்கிறது. உயிரியற் பல்வகைமையையும், கரிம வேளாண்மை முறைகளைகளையும் ஊக்குவிக்கிறது.. உலக வணிக அமைப்பு மற்றும் பொதுவான வேளாண் கொள்கை, தேசிய அரசாங்க கொள்கை (அல்லது சட்டம்) மற்றும் போர் ஆகிய காரணிகள் உணவு உற்பத்தியில் முக்கிய தாக்கங்களை உண்டாக்குகின்றன . நடைமுறை கலாச்சாரத்தில், உணவுப் பொருட்களின் வெகுசன உற்பத்தியால், குறிப்பாக கோழி மற்றும் மாட்டிறைச்சி போன்றவை சாப்பிடப்படுவதாக பல்வேறு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் உணவுக்காக விலங்குகளின் படுகொலை மற்றும் விலங்குள் மோசமாக நடத்தப்படுதல் போன்ற கருத்துகள் பதிவு செய்யப்பட்டது. பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள் இலகுவாக வருவாய் ஈட்டுவதற்கு இத்தகைய முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கருதப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான தற்போதைய போக்குடன் சேர்ந்து, மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள மக்கள் மூலிகை மருந்து உணவுகள் மீது ஆர்வங்காட்ட முற்பட்டுள்ளனர். பெண்கள், விளையாட்டு வீரர்கள், உணவுக் கட்டுப்பாட்டிலுள்ளவர்கள் என தனித்தனியாக உணவு வகைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பலமான உணவுகளாகக் கருதப்படும் ஒமேகா -3 முட்டை போன்ற சத்துள்ள உணவுகள் இனரீதியாக பல்வகைமை உணவாகப் போற்றப்படுகின்றன. பல நிறுவனங்கள் வேளாண் கருவிகளைப் பயன்படுத்தி, உணவை உற்பத்தி செய்து வழங்கும் ஒரு புதிய வகை விவசாயத்திற்கு அழைப்பு விடுத்துவருகின்றன. மண் வளத்தையும், உயிரியற் பல்வகைமையையும் விட்டுக்கொடுக்காமல் சுற்றுச்சூழல் சேவைகளை மையமாகக் கொண்ட செயற்திட்டங்களை வகுக்கின்றன. நீர் மேலாண்மை நிறுவனமும், ஐ.நா வின் சுற்றுசூழல் திட்ட அமைப்பும் தெரிவிக்கின்ற கருத்துப்படி, நன்கு பராமரிக்கப்படும் வேளாண் அமைப்பியல் உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் நார் மற்றும் விலங்கு பொருட்களையும் வழங்குகின்றன. வெள்ளநீர் பாசனம், நிலத்தடி நீர் புதுப்பித்தல், அரிப்புக் கட்டுப்பாடு மற்றும் தாவரங்கள், பறவைகள், மீன் மற்றும் பிற விலங்குகளுக்கு வாழ்விடங்களை அமைத்துத்தருதல் ஆகிய சேவைகளையும் வழங்குகின்றன சுவை உணர்வு விலங்குகளால், குறிப்பாக மனிதர்களால் ஐந்து வகையான சுவைகளை அறிய இயலும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு மற்றும் கார்ப்பு என்பன அறுசுவைகளாகும். மிக அதிக சக்தி (சர்க்கரை மற்றும் கொழுப்பு) வழங்கும் சுவைகளே மிகவும் உற்சாகமாக உட்கொள்ளப்படுகின்றன. மற்ற சுவைகள் சுவாரசியமானவையாகக் கருதப்படுவதில்லை .நீர் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சுவை இல்லாமல் இருக்கிறது . மறுபுறத்தில், குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மதிப்போடும், சுவையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. இனிப்பு பொதுவாக இனிப்புச் சுவை மிகவும் இனிமையான சுவையாகக் அனைவராலும் கருதப்படுகிறது, எப்போதும் குளுக்கோசு அல்லது பிரக்டோசு, அல்லது சுக்ரோசு போன்ற வேதிப்பொருட்கள் எளிய சர்க்கரைகளாகக் கருதப்படுகின்றன. சுக்ரோசு என்பது ஓர் இரட்டைச் சர்க்கரையாகும். நீண்ட சங்கிலியைக் கொண்ட சிக்கலான கார்போவைதரேட்டுகள் இனிப்புச் சுவை அற்றவையாகும். சுக்ரலோசு போன்ற செயற்கைச் சர்க்கரைகள் சர்க்கரை மூலக்கூறை பிரதிபலிக்கின்றன, அதிகக் கலோரி அளவு இல்லாமல் இனிப்பு உணவை உருவாக்குகின்றன. நாட்டுச் சர்க்கரை போன்ற பதப்படுத்தப்படாத சர்க்கரை வகைகளும் அறியப்படுகின்றன. சர்க்கரையானது ஆற்றலுக்கும் உயிர்வாழ்க்கைக்கும் அவசியம் என்பதால், சர்க்கரையின் சுவை இனிமையானதாகக் கருதப்படுகிறது. புளிப்பு மதுபானங்களிலுள்ள வினிகர் போன்ற அமிலங்களால் புளிப்புச் சுவை தோன்றுகிறது. எலுமிச்சையிலும், ஆரஞ்சுப் பழத்திலும் உள்ள சிட்ரசு அமிலம் புளிப்புச் சுவை உணவுகளில் காணப்படுகிறது. உணவு கெட்டுப்போதல் அல்லது ஊசிப்போதல் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நச்சுத்தன்மையின் அறிகுறியாகும். புளிப்புச் சுவை பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பல உணவுகள் சற்றே அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன. சுவை மொட்டுகளைத் தூண்டுவதற்கும் சுவையை அதிகரிக்கவும் இச்சுவை உதவுகிறது. உவர்ப்பு சோடியம், பொட்டாசியம் போன்ற கார உலோக அயனிகளால் உவர்ப்புச் சுவை தோன்றுகிறது. உணவின் சுவையை அதிகரிப்பதற்காக மிதமான விகிதங்களில் குறைவாக எல்லா உணவிலும் உவர்ப்புச் சுவை காணப்படுகிறது, எனினும் தூய உப்பைச் சாப்பிடுவது மிகவும் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது.உவர்ப்புச் சுவையில் ஒவ்வொன்றும் சற்று வித்தியாசமாக உள்ள பல்வேறு உப்பு வகைகள் உள்ளன, கடல் உப்பு, சுரங்க உப்பு மற்றும் சாம்பல் உப்பு என்பன அவற்றில் சிலவாகும். சுவையை அதிகரிக்கச் செய்வதோடு உடலுக்கு தேவையான சமநிலையைப் பராமரிக்கவும் உவர்ப்புச் சுவை அவசியமாகிறது. எனவே சிறுநீரகத்தின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்ட ஒரு சுவையாக இது கருதப்படுகிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு தேவையான ஊட்டச்சத்து அயோடின் என்பதால் உப்பை அயோடினாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பாதுகாப்புக் கருதி அடைக்கப்பட்ட உணவுகளில் உவர்ப்புச் சுவை கூடுதலாக இருக்கும். அவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மையை அளிக்கும். வரலாற்றில் குறிப்பிடப்பட்டும் உப்பேற்ற மாமிசம் இதைப்போன்று உவர்ப்புச் சுவை மிக்க உணவாகும். நீண்ட நாட்களுக்கு மாமிசத்தைப் பாதுகாப்பதற்காக உப்பு அதிகமாக சேர்த்து அந்நாளில் பயன்படுத்தப்பட்டது. கசப்பு அதிகமாக விரும்பத்தகாத சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயப்பதும் கசப்புச் சுவையே ஆகும். மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. சில பழங்களும் காய்கறிகளும் கசப்புச் சுவையைக் கொண்டுள்ளன. துவர்ப்பு அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை துவர்ப்புச் சுவை ஆகும். குளுடாமேட்டுகளால் அதிலும் குறிப்பாக மோனோ சோடியம் குளூட்டாமேட்டு சேர்மத்தின் சுவை துவர்ப்புச் சுவையாகும். வாழை, மாதுளை அத்தி போன்ற தாவர வகைகளில் துவர்ப்புச் சுவை உள்ளது. உணவின் வகைகள் சைவ உணவுகள் செடிகொடிகளில் இருந்து பெறப் படும் உணவானது "சைவ உணவு" எனப் படுகின்றது. இதனை மரக்கறி உணவு என்பர். உலகில் கிட்டதட்ட இரண்டாயிரதிற்கும் அதிகமான தாவர இனங்கள் பயிர் செய்யப்படுகிறது. விதைகளில் இருந்து தானியங்கள்: நெல், கோதுமை, குரக்கன், சோளம் அவரையினங்கள்: சோயா, பருப்பு, கௌபீ, பயறு, உழுந்து எண்ணெய்: எள், சூரியகாந்தி, தேங்காய் மரக் காய்கறிகள் கிழங்கு வகை: மரவள்ளி, உருளைக்கிழங்கு இலைவகை: கீரைகள் பட்டியல், பொன்னாங்காணி, வல்லாரை, பசளி வேர் : முள்ளங்கி, காரட், வெங்காயம் தண்டு : வாழைத்தண்டு பழங்கள் காய்கறிகள் அசைவ உணவுகள் இறைச்சி கடல் உணவுகள் முட்டை இதர உணவு வகைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அல்லாத நுண்ணுயிர்களும் உணவில் பயன்படுத்தப்படுகிறது காளான். ரொட்டிகள், மது, தயிர் முதலியவற்றின் நொதித்தல் முறைகளுக்காக நுண்ணுயிர்களும், உணவு பதப்படுத்த உப்பு, ஆப்ப சோடா உப்பு முதலியவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன. உணவிலுள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள் மாச்சத்து புரதப் பொருட்கள் கொழுப்பு வகைகள் உயிர்ச்சத்துக்கள் கனியுப்புக்கள் நார்பொருட்கள் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் உணவு பழமொழிகள் 1.சீரகம் இல்லா உணவு சிறக்காது. 2.தன் காயம் காக்க வெங்காயம் போதும். 3.வாழை வாழ வைக்கும். 4.உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். 5.அவசர சோறு ஆபத்து. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Food Timeline Wikibooks Cookbook நல்வாழ்வுக்கான உணவு உட்கொள்ளல் பற்றிய, கனடா அரவு வழிகாட்டியின் தமிழர் தழுவிய ஒரு இயைபாக்கம் பழங்கள் பழங்கள் உணவு உண்ணும் முறைகள் குறித்த முத்தழிழ்மன்றம் என்ற வலைப் பக்கம் தமிழர் உணவு வகைகள் பற்றிய கட்டுரை முனைவர்.சி.சேதுராமன் எழுதிய “பண்டைய தமிழர் உணவுகள்” கட்டுரை தமிழ் உணவு வகைகள் சமையல் குறிப்புகள்
5497
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
ஓசியானியா
ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.. ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையியல் மேற்கோள்கள் கண்டங்கள்
5498
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B
ஐரோ
ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். "யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது. அதிகாரப்பூர்வ அமைப்பு யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும். இயல்பு நாணயங்கள் மற்றும் வங்கித்தாள்கள் ஒரு ஐரோ நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. சென்ட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக பிரான்ஸ் தேசத்தில் சென்டிமேஸ் என்றும் ஸ்பெயின் தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. நாணயத்தின் பொது பக்கத்தில் அதன் மதிப்பும் பின்புலத்தில் ஒரு வரைபடமும் இருக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் யூரோவை குறிக்க இலத்தீன் எழுத்தும் அரபி எண்களும் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு நிதி பரிமாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு நாட்டில் இருந்து மற்றொறு நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செய்யப்படும் அனைத்து பரிமற்றாங்களும் உள்ளூர் பரிமாற்றங்களாகவே கருதப்படும். இது ஐரோ வலய நாடுகளுக்கும் பொருந்தும். நாணய குறியீடு யூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட முன்புலம் மற்றும் பின்னணி வண்ணங்களுடன் சின்னத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கிறது. வரலாறு அறிமுகம் 1992 ம் ஆண்டு மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின் ஏற்பாடுகளால் யூரோ நிறுவப்பட்டது.நாணயத்தில் பங்கேற்க, உறுப்பு நாடுகள் பின்வரும் கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அறுபது சதவிகிதத்திற்கும் குறைவான கடன் விகிதம் (இரண்டும் இறுதியாக பரவலாக அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்), குறைந்த பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றிய சராசரிக்கு சமம்மாக அல்லது ஒத்து இருக்க வேண்டும்.மாஸ்ட்ரிச் உடன்படிக்கையில், ஐக்கிய இராச்சியம் மற்றும் டென்மார்க் ஆகியவை யூரோ அறிமுகப்படுத்தப்படும் விளைவாக பணவியல் சங்கத்தின் நிலைக்கு செல்லுமாறு தங்கள் கோரிக்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டன. யூரோவிற்கு உதவியது அல்லது பங்களித்த பொருளாதார வல்லுநர்கள்,ஃபிரெட் அர்டிட்டி, நீல் டோவ்லிங், விம் டூசென்ன்பெர்க், ராபர்ட் முண்டெல், டோம்ஸோ படோ-சியோப்பா மற்றும் ராபர்ட் டோலிசன் ஆகியோர் அடங்குவர். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று "யூரோ" என்ற பெயரை மாட்ரிட்டில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.பெல்ஜியன் எஸ்பெராண்ட்டிஸ்ட் ஜெர்மைன் பிர்லோட், பிரஞ்சு மற்றும் வரலாற்றின் முன்னாள் ஆசிரியரான இவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று "யூரோ" என்ற பெயரைக் குறிப்பிட்டு ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஜனாதிபதியிடம் ஒரு கடிதத்தை அனுப்பியதன் மூலம் யூரோ என்ற புதிய நாணயத்தை பெயரிடுவதில் பெருமை அடைகிறார். முலு இலக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க இலக்கங்களுக்கு தேசிய மரபுகளில் வேறுபாடுகள் இருப்பதால், தேசிய நாணயங்களுக்கு இடையில் அனைத்து மாற்றங்களும் யூரோ வழியாக முக்கோணத்தின் செயல்முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு,1998 டிசம்பர் 31 ஆம் தேதி சந்தை விகிதங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு ஐரோப்பிய நாணய அலகு (ECU) ஒரு யூரோவை சமன் செய்வதற்கு அவை அமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாணய அலகு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கணக்குப் பிரிவாகும், இது உறுப்பினர் நாடுகளின் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டது; அது ஒரு சொந்த நாணயமாக இல்லை. ECU நாணயங்களின் (முக்கியமாக பவுண்டு ஸ்டெர்லிங் இறுதி நாளான அந்நிய செலாவணி விகிதத்தை அந்நிறுவனம் நம்பியிருந்ததால், அவை முந்தைய காலத்தை நிர்ணயிக்க முடியாது. யூரோ நெருக்கடி 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க நிதி நெருக்கடிக்குப் பின், சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பழமைவாத முதலீட்டாளர்களிடையே 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இறையாண்மை கடன் நெருக்கடி பற்றிய அச்சங்கள், இது 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலைமை.இது யூரோப்பகுதி உறுப்பினர்கள் கிரீஸ்,அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் மற்றும் இந்த பகுதிக்கு வெளியிலுள்ள சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது.ஐஸ்லாந்து நாடு, மிகப் பெரிய நெருக்கடியை அனுபவித்த போதும், அதன் முழு சர்வதேச வங்கி முறை சரிந்தபோதும், அரசாங்கத்தின் வங்கிக் கடனை பிணைக்க முடியாததால், இறையாண்மை கடன் நெருக்கடியினால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில், குறிப்பாக வங்கி பிணை எடுப்புகளின் காரணமாக இறையாண்மைக் கடன்கள் பெருமளவில் அதிகரித்த நாடுகளில், பிணைப்பு, இலாபம் பரவுதல் மற்றும் அபாய காப்பீடு, இந்த நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையில் மிக முக்கியமாக ஜெர்மனிக்கு கடன் இயல்புநிலை இடமாற்று மூலம் நிதி நெருக்கடி சமாலிக்கப்பட்டது.யூரோப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய நாடுகள், சில யூரோ கூட்டிணைப்புக் கோட்பாடு, குவிப்புக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஆனால் அத்தகைய நிபந்தனைகளின் அர்த்தம், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடுமையான அதே அளவு உறுதியுடன் செயல்படவில்லை என்ற உண்மையால் குறைந்துவிட்டது. நேரடி மற்றும் மறைமுக புழக்கம் நேரடி புழக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 ஐரோ வலய நாடுகளுக்கு யூரோ ஒரே நாணயமாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 33.4 கோடி மக்கள் யூரோவை பயன்படுத்துவதாக தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் பயன்பபாடு அதிகரிக்கும். இருப்பு நாணயம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்க டாலருக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ விளங்குகிறது. இருப்பு நாணயமாக அதன் மதிப்பு 1999 ஆம் ஆண்டு 18 சதவிகிததிலிருந்து 2008 ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் டாலரின் மதிப்பு 71சதவிகிததிலிருந்து 64சதவிகிதமாகவும் ஜப்பானிய யென்னின் மதிப்பு 6.4சதவிகிததிலிருந்து 3.3சதவிகிதமாகவும் சரிந்தது. உலகில் அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ மாறுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள் யூரோ வலயத்திற்கு வெளியே 23 நாடுகள் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றன. இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளும் 2 ஆப்பிரிக்க தீவுகளும் அடங்கும். 2013 ஆம் ஆண்டின் படி 182 மில்லியன் ஆப்பிரிக்க மக்களும், 27 மில்லியன் ஐரோ வலயத்திற்கு வெளியே வாழும் ஐரோப்பியர்களும், 545,000 பசிபிக் தீவு வாழ் மக்களும் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றனர். பொருளாதாரம் உகந்த நாணய பகுதி பொருளாதாரத்தில், ஒரு பகுதியில் ஒற்றை நாணய முறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum currency area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி யூரோவின் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார். மேலும் பார்க்க யூரோ வலயம் நாணயக் குறியீடு குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நாணய முறை நாணயங்கள் ஐரோப்பிய ஒன்றியம்
5503
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D
யென்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும். யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே.  பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.  மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். உச்சரிப்பு மற்றும் சொல்லிலக்கண்ம் யென் ஜப்பானிய வார்த்தையிலிருந்து eigo|圓 en | eɴ; lit. "round", சீன யுவான், வட கொரிய வொன் மற்றும் [[தென் கொரிய வொன் உடன் தொடர்புடையது. முதலில், சைசெஸ் என்ற பெயரில் சீனர்கள் வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபட்டனர், ஸ்பேனிஷ் மற்றும் மெக்சிகன் வெள்ளி நாணயங்கள் வந்தபோது சீனர்கள், அவற்றின் வட்ட வடிவங்களாக இருந்ததால் "வெள்ளி சுற்றுகள்" 銀圓 என்று அழைத்தனர்.நாணயங்களும், பெயரும் ஜப்பானில் தோன்றின. no, c=元 ,p=yuán என்ற எளிமையான வடிவம் அல்ல,ஆனால் முற்றிலும் மாறுபட்ட தன்மை. மாற்றங்களுக்குரிய காரணங்களில் ஒன்று, முந்தைய பாத்திரத்தில் பல கோடுகள் இருந்தது என்று கூறப்படுகிறது.இரண்டு எழுத்துக்களும் (Standard Mandarin) மாண்டரின் மொழியில் அதே உச்சரிப்பைக் கொண்டுள்ளன, ஆனால் ஜப்பானில் இல்லை. 1695 ஆம் ஆண்டில், சில ஜப்பனீஸ் நாணயங்கள் வழங்கப்பட்டன, அதன் மேற்பரப்பு தன்மையைக் கொண்டிருந்தது ,ஆனால் இது சகாப்தத்தின் பெயரின் சுருக்கமாகும் 元禄|Genroku ஜப்பான் தொடர்ந்து அதே வார்த்தையைப் பயன்படுத்தியது, ஷின்ஜிட்டாய் வடிவம் இரண்டாம் உலகப் போரின் முடிவில் சீர்திருத்தங்களில் 円 கொடுக்கப்பட்டது. எழுத்து மற்றும் உச்சரிப்பு "யென்" என்பது ஆங்கிலம் மொழியில் தரநிலையாக உள்ளது. இது, எஜி காலத்தின் இறுதியில் ஜப்பானிய விஜயம் செய்த முதன்முதலாக மைஜி காலத்தின் இந்த வார்த்தைகளை வரலாற்று கனா எழுத்துக்கலையில் ゑん /wen/ உச்சரிக்கப்பட்டது.16 ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய /e/ え மற்றும் /we/ ゑ je போர்த்துகீசிய மிஷினரிகள் "நீங்கள்" என உச்சரித்தனர். பண்டைய ஜப்பானிய மொழிகளில் /e/ /we/ /je/. வால்டர் ஹென்றி மெதர்ஸ்ட், இவர் ஜப்பான் சென்றதும்மில்லை அல்லது எந்த ஜப்பனியரையும் சந்தித்துமில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமலெ முக்கியமாக ஜப்பானிய-டச்சு அகராதியின் அடிப்படையில், ஆங்கில மற்றும் ஜப்பானிய மொழிகளில் "e"s as "ye" என கள் ஆரம்பகால மீஜி காலத்தில் உச்சரிக்கப்பட்டது, மற்றும் ஜப்பானிய மற்றும் ஆங்கில சொற்களஞ்சியம் (1830). மேதர்ஸ்ட்ஸைத் தொடர்ந்து ஜேம்ஸ் கர்டிஸ் ஹெப்பர்ன், அவரது "ஜப்பானிய மற்றும் ஆங்கில அகராதி" (1867) இல் "ye"s to "e" களையும் எழுதினார்..இது ஜப்பானிய மொழியில் மேற்கத்திய மொழிகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய முதல் முழு-அளவிலான ஜப்பானிய-ஆங்கிலம் / ஆங்கிலம்-ஜப்பானிய அகராதி 3 வது பதிப்பில், ஒருவேளை "யென்" என்ற உச்சரிப்பிற்கு தூண்டியது. "யென்" தவிர, சமகால உச்சரிப்புக்கு பிரதிபலிக்க (1886) இல் "ye"s to "e" என்ற பெரும்பகுதியை ஹெப்பர்ன் திருத்தியமைத்தார். இது அநேகமாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது, அதுமுதல் இருந்து வருகிறது. வரலாறு யென்னின் அறிமுகம் 19 ஆம் நூற்றாண்டில், தென்கிழக்கு ஆசியா, சீனா கடற்கரை, மற்றும் ஜப்பான் முழுவதும் வெள்ளி ஸ்பானிஷ் நாணயங்கள் பொதுவாக புழக்கத்தில் இருந்தது.மெக்சிக்கோவில் ஆகுபுல்கோவிலிருந்து கப்பல்களில் வந்தது, இருநூற்று ஐம்பது வருட காலப்பகுதியில் மணிலாவில் இந்த நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த கப்பல்கள் மணிலா கலகீன் என அறியப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் வரை, இந்த வெள்ளி டாலர் நாணயங்கள் புதிய உலகில் அசாதாரண ஸ்பானிஷ் டாலர்கள், பெரும்பாலும் மெக்ஸிக்கோ நகரத்தில் இருந்தன.ஆனால் 1840 களில் இருந்து, அவர்கள் புதிய லத்தீன் அமெரிக்க குடியரசுகளின் வெள்ளி டாலர்களால் அதிகரித்தனர்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இப்பகுதியில் சில உள்ளூர் நாணயங்கள் மெக்சிக்கோ பெசோவின் ஒற்றுமையுடன் செய்யப்பட்டன.இந்த உள்ளூர் வெள்ளி நாணயங்களில் முதல் ஹாங்காங் வெள்ளி டாலர் நாணயம் 1866 மற்றும் 1869 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஹாங்காங்கில் பிரதிபலித்தது. சீன அறிமுகமில்லாத நாணயத்தை ஏற்க மறுத்தது மற்றும் பிரபலமான மெக்சிகன் டாலர்களை விரும்பியது, எனவே ஹாங்காங் அரசாங்கம் இந்த நாணயங்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் ஜப்பானுக்கு விற்றன. ஜப்பானியர்கள் பின்னர் 'யென்' என்ற பெயரில் ஒரு வெள்ளி டாலர் நாணயத்தை தத்தெடுக்க முடிவு செய்தனர், அதாவது 'ஒரு சுற்று பொருள்'. ஜூன் 27, 1871 இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சட்டத்தில் யென் நியமிக்கப்பட்டது.புதிய நாணயம் படிப்படியாக அந்த ஆண்டின் ஜூலை முதல் தொடங்கப்பட்டது.எவ்வாறாயினும், யென் அடிப்படையில் ஒரு டாலர் அலகு, அனைத்து டாலர்களைப் போலவும், எட்டு எட்டு ஸ்பானிய துண்டுகளிலிருந்தும், 1873 ஆம் ஆண்டு வரை உலகில் உள்ள அனைத்து டாலர்களையும் ஒரே அளவாகக் கொண்டது.யென் டோககுவா நாணயத்தை மாற்றியமைத்தது,ஏன்னென்றால் எடோ காலத்தின் சிக்கலான நாணய அமைப்பு mon அடிப்படையில் இருந்தது.1871 இன் புதிய நாணயச் சட்டம், யென் (1, 圓), சென் (1/100, 錢), மற்றும் ரின் (1/1000, 厘), நாணயங்களை சுற்றியும், மேற்கத்திய இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.1878 ஆம் ஆண்டில் பாரிஸில் உள்ள ஐரோப்பிய காங்கிரஸின் பொருளாதார வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, எஃகு 0.78 டிராய் அவுன்ஸ் (24.26 கிராம்) தூய வெள்ளி அல்லது 1.5 கிராம் தூய தங்கம் என யென் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது; 5-யென் நாணயம் அர்ஜென்டினா 5 பெஸோ ஃபூரெட்டிற்கு நாணயத்திற்கு சமமானதாகும்.),எனவே அது ஒரு இருமுனைய தரநிலையில் வைக்கிறது. (அதே அளவு வெள்ளி மதிப்பு 1181 நவீன யென்,அதே அளவு தங்கம் 4715 யென் மதிப்புடையது. அமெரிக்க டாலருக்கு யென்னின் நிலையான மதிப்பு டிசம்பர் 7, 1941 மற்றும் ஏப்ரல் 25, 1949 ஆகிய தேதிகளுக்கு இடையே உண்மையான நாணய மாற்று விகிதம் இல்லை; போர்க்கால பணவீக்கம் யெனை அதன் முந்தைய யுத்த மதிப்பின் ஒரு பகுதிக்கு குறைத்தது.1949, ஏப்ரல் 25 ம் தேதி, அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசாங்கம், ஒரு யென் மதிப்பை ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு 1 அமெரிக்க டாலருக்கு ஒரு யூனிட் மதிப்பில் ¥360, பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் பொருளாதாரத்தில் விலைகளை உறுதிப்படுத்துவதற்காக, உறுதிசெய்தது. 1971 ஆம் ஆண்டு வரை ஐக்கிய அமெரிக்க அரசுகள் பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்ததுடன், 1973 இல் இறக்குமதிகளில் 10 சதவிகிதம் கூடுதல் வருமானத்தை மாறும் விகிததில் நிர்நயம் செய்தது. யென்னின் குறைந்த மதிப்பீடு 1971 வாக்கில், யென் குறைமதிப்பிற்கு உட்பட்டது. ஜப்பானிய ஏற்றுமதிகள் சர்வதேச சந்தைகளில் மிகக் குறைவாகவே இருந்தன, வெளிநாட்டிலிருந்து இறக்குமதிகள் ஜப்பனியர்கள் அதிகம் செலவழிக்கப்பட்டனர். 1960 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட வரம்புகளிலிருந்து உயர்ந்து வந்த தற்போதைய கணக்கு சமநிலையில் இது 1971 ஆம் ஆண்டில் அமெரிக்க $ 5.8 பில்லியனுக்கும் அதிகமான உபரி மதிப்பிற்கு பிரதிபலித்தது. யென், மற்றும் பல பெரிய நாணயங்கள் குறைமதிப்பிற்கு உட்பட்டது என்ற நம்பிக்கை 1971 இல் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இருந்தன. யென் மற்றும் முக்கிய நாணயங்கள் சந்தைக்கு ஏற்ப மாற்றும் விகிதம் 1971 ம் ஆண்டு கோடையில் டாலரை குறைப்பதற்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஸ்மித்சோனியன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய, நிலையான பரிவர்த்தனை விகிதத்தை ஒப்புக்கொண்டது, அந்த ஆண்டின் இறுதியில் கையொப்பமிட்டது. இந்த உடன்படிக்கை பரிமாற்ற விகிதம் US $ 1 க்கு ¥308 இல் அமைக்கிறது. இருப்பினும், ஸ்மித்சோனியன் உடன்பாட்டின் புதிய நிலையான விகிதங்கள் வெளியுறவு பரிவர்த்தனை சந்தையில் விநியோக மற்றும் தேவை அழுத்தங்களை எதிர்கொள்ள கடினமாக இருந்தது. 1973 இன் ஆரம்பத்தில், விகிதங்கள் கைவிடப்பட்டன, மற்றும் உலகின் முக்கிய நாடுகள் தங்கள் நாணயங்களை மாறும் விகிதம் அனுமதித்தன. நாணய சந்தையில் ஜப்பானிய அரசாங்கத் தலையீடு 1970 களில், ஜப்பானிய அரசாங்கமும் வர்த்தகர்களும், ஜப்பானிய உற்பத்திகளை குறைவாக போட்டியிடுவதன் மூலமும், தொழிற்துறைத் தளத்தை சேதப்படுத்தியதன் மூலமும் யென் மதிப்பின் உயர்வு ஏற்றுமதி வளர்ச்சியை பாதிக்கும் என்று கவலை கொண்டனர். எனவே, 1973 ஆம் ஆண்டின் முடிவுக்குப் பின்னரும் கூட, யென் பங்குபெற அனுமதிக்க, அரசாங்கம் அந்நிய செலாவணி சந்தையில்(டாலர்களை வாங்குதல் அல்லது விற்பனை செய்வது) அதிக அளவில் தலையிட்டது. 1980 களின் முற்பகுதியில் யென் 1980 களின் முதல் பாதியில், தற்போதைய கணக்கு உபரிகள் திரும்பி வந்தாலும் கூட யென் மதிப்பு அதிகரிக்கத் தவறிவிட்டது மற்றும் விரைவாக வளர்ந்தது. 1981 ஆம் ஆண்டில் ¥ 221 இலிருந்து, யென் சராசரி மதிப்பு 1985 இல் ¥ 239 இல் கைவிடப்பட்டது. தற்போதைய கணக்கு உபரி அதிகரிப்பு அந்நிய செலாவணி சந்தைகளில் யெனின் வலுவான கோரிக்கையை உருவாக்கியது, ஆனால் இந்த வர்த்தக தொடர்பான தேவை யென் காரணிகள். வட்டி விகிதங்களில் ஒரு பரவலான வேறுபாடு, ஜப்பானில் இருந்ததை விட அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன, மற்றும் தலைநகரின் சர்வதேச ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகள், ஜப்பானில் இருந்து மூலதனத்தின் பெரிய நிகர வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது. வெளிநாட்டு முதலீடு செய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் தங்கள் நாணயங்களை பிற நாணயங்களுக்கு (முக்கியமாக டாலர்கள்) மாற்றிக்கொண்டதால் இந்த மூலதன ஓட்டம் வெளிநாட்டு நாணய சந்தைகளில் யென் அளிப்பு அதிகரித்தது. இது டாலருக்கு யென் பலவீனமான உறவைக் கொண்டிருந்தது மற்றும் 1980 களில் நடந்தது ஜப்பானிய வர்த்தக உபரி விரைவான வளர்ச்சியை ஊக்குவித்தது. பிளாசா உடன்படிக்கையின் விளைவு வரலாற்று ரீதியான நாணய மாற்று விகிதம் கீழே உள்ள அட்டவணை, 17:00 JST இல் அமெரிக்க டாலர்/யென் ஸ்பாட் வீதத்தின் (JPY ஒரு USD) மாதாந்திர சராசரியைக் காட்டுகிறது. மேற்கோள்கள் நாணய முறை
5516
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
ஏக்கர்
ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.ஒரு ஏர்ஸ் 2.47 சென்ட் ஆகும்.மேலும் 435.6 சதுர அடி ஒரு சென்ட் அல்லது 40.47 சதுரமீட்டர் ஒரு சென்ட் ,ஒரு ஏக்கர் 100 செண்ட் (அ) 4047 ச.மீ (அ) 43560 ச.அடி ஆகும்.ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கருக்கு சமம். ஐ.இ வரையறை ஏக்கர் குறித்த ஐக்கிய இராச்சிய வரையறை அளவீடு அலகுகள் கட்டுப்பாடுகள் 1995 சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ² ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள அடிக்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும். ஐ.அ வரையறை ஏக்கர் குறித்த ஐக்கிய அமெரிக்க வரையறை இங்கு இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43,560 சதுர அடிகளுக்கு சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா அடிக்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (அனைத்துலக அடி மற்றும் மதிப்பீடு அடி) ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன: அனைத்துலக ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது அனைத்துலக அடியான 0.3048 மீட்டரை அடிப்படையாக கொண்டது. ஐ.அ மதிப்பீடு ஏக்கர் என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ மதிப்பீடு அடியான 1200/3937 மீட்டரை அடிப்படையாக கொண்டது. தொடர்புடைய நீள அளவுகள் ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை, 1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம் 1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம் அலகு மாற்றம் ஒரு அனைத்துலக ஏக்கர் என்பது பின்வருவனவற்றுக்கு துல்லியமாக சமமாகும்: 4 046.856 422 4 மீ² (எஸ்.ஐ அலகு) 40.468 564 224 ஏர், 0.404 685 642 24 ஹெக்டேர், 43 560 சதுர அடிகள், 4840 சதுர முழங்கள், 160 சதுர பாகங்கள்,அல்லது “பேர்சஸ்கள்” 4 ரூட், 1/640 சதுர மைல், 1 பர்லாங் நீளமும் 1 சங்கிலி அகலமும் உடைய செவ்வகத்தின் 10:1 பாகம். 208.71 அடி (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக). ஒரு சதுர மைல் 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழான இதுவே வழமையான நிலப்பரப்பு. இவற்றையும் பார்க்கவும் அலகு மாற்றங்கள் ஏக்கர்-அடி வெளி இணைப்புகள் The Units of Measurement Regulations 1995 NIST Handbook 44 பரப்பளவு அலகுகள் இம்பீரியல் அலகுகள் பிரித்தானிய அலகுகள்
5518
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
கொலஸ்டிரால்
கொலஸ்திரால் அல்லது கொலசுட்ரால் (Cholesterol) என்பது உயிரணு மென்சவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள ஸ்டெராய்டு எனப்படும் ஒரு வகை கொழுப்புப் பொருள் ஆகும், இது அனைத்து விலங்குகளில் இரத்தத்தில் கலந்து அனைத்து உடல் பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்றது. இது உயிரணுக்களில் இருக்கும் உயிரணு மென்சவ்வின் ஊடுருவு திறன் மற்றும் மென்படல திரவத்தன்மை என்பவற்றைச் சீராக வைத்திருக்கத் தேவைப்படும் இன்றியமையாத பொருளாகும். மேலும் கொழுப்பு, பித்த அமிலங்களின் உயிரியல் சேர்க்கை, ஸ்டெராய்டு இயக்குநீர்கள் மற்றும் பல கொழுப்பில் கரையக்கூடிய உயிர்ச்சத்துக்கள் ஆகியவற்றிற்கு முக்கிய முன்னோடி மூலக்கூறு ஆகும். கொழுப்பு, உயிர்களில் முதன்மை ஸ்டெரால் தொகுப்பானாகவும், ஆனால் தாவரங்கள் மற்றும் பூஞ்சை போன்ற மற்ற மெய்க்கருவுயிரிகளில் (Eukaryote) சிறிய அளவில் தொகுப்பானாகவும் செயல்படுகிறது. இது பாக்டீரியா உள்ளிட்ட நிலைக்கருவிலிகளில் (Prokaryote) கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லை. கொலஸ்ட்ரால் என்ற பெயர், கிரேக்கத்தின் கொலெ- (பித்த நீர்) மற்றும் ஸ்டெராஸ் (திடமான), மற்றும் ரசாயன பின்னொட்டு -ஆல் என்பது ஆல்கஹாலைக் குறிக்கும் சொல் ஆகியவற்றிலிருந்து வந்தது, 1769 இல் ஃபிரான்சுவா புல்லெத்தியே தெ லா சால் (François Poulletier de la Salle) என்பவர் முதன் முதலில் பித்தப்பைக்கற்களில் திடப்பொருள் வடிவத்தில் இது இருப்பதைக் கண்டறிந்தார். எனினும், 1815 இல் தான் வேதியிலர் யூஜின் செவ்ரியுல் இந்த பொருளுக்கு "கொலஸ்டரின்" என்று பெயரிட்டார். உடலியக்கவியல் மேலோட்டமான பார்வை கொழுப்பு, உயிர்கள் வாழ்வதற்கு இன்றியமையாததாகும், இது உடலுக்குள் எளிமையான பொருட்களிலிருந்து முதன்மையாகத் தொகுக்கப்படுகிறது. எனினும் கொழுமியப்புரதங்களில் எப்படி கடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து, இரத்த சுழற்சியில் இது உயர் நிலையில் இருந்தால், பெருந்தமனித் தடிப்பு தீவிரமடைவதில் இது வலுவான தொடர்புடையதாக இருக்கிறது. சராசரியாக 68 கிலோ (150 பவுண்டுகள்) எடையுடைய ஒருவருக்கு, இயல்பு மாறா நிலையில் முழு உடலுக்கும் கொழுப்பின் தொகுப்பு ஒருநாளைக்கு சராசரியாக 1 கி (1,000மிகி) என்ற அளவிலும், முழு உடலை உள்ளடக்கிய அளவு சராசரியாக 35 கி ஆகவும் இருக்கும். அமெரிக்காவில் மற்றும் அதே போன்ற உணவு உட்கொள்ளும் முறை உடைய சமூகத்தில் வழக்கமாக தினமும் கூடுதலாக உணவு உட்கொள்ளும் அளவு, 200–300 மிகி ஆக உள்ளது. உடல், கொழுப்பு உட்கொண்டதை ஈடு செய்வதற்காக சேர்த்திணைப்பின் அளவைக் குறைக்கிறது. கொழுப்பு மறுசுழற்சி செய்யப்படும். இது கல்லீரலால் பித்த நீரின் மூலமாக செரிமானப்பாதைக்கு சென்று கழிவாக வெளியேற்றப்படுகிறது. குறிப்பிடத்தக்க முறையில் 50% கழிவாக வெளியேற்றப்பட்ட கொழுப்பு, சிறு குடலால் இரத்த ஓட்டத்தில் மீளுறிஞ்சப்படுகிறது. குடலுக்குரிய பாதை உறிஞ்சுதல் கொழுப்புக்காக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது, வெளியேற்றப்பட்ட பிளாண்ட் ஸ்டெனொல்ஸ் மற்றும் ஸ்டெரொல்ஸ் (இது பெருந்தமனித் தடிப்பு தீவிரமடைதலை கொழுப்பை விட அதிகமாகத் தீவிரப்படுத்தும்), குடலுக்குரிய உட்குடற்பகுதிக்கு வெளியேற்றத்திற்காக சென்றடையும். செயல்பாடு கொழுப்பு, மென்படலங்கள் உருவாக்க மற்றும் பராமரிக்க மிகவும் தேவையான ஒன்று; இது உடலின் வெப்பநிலை பரவலுக்கு ஏற்ப மென்படல திரவத்தன்மையை சீராக்குகிறது. கொழுப்பின் மேல் ஹைட்ராக்சில் குழுக்கள், மென்படல பாஸ்போக்கொழுமியங்கள் மற்றும் ஸ்பிங்கோகொழுமியங்கள் ஆகியவற்றின் முனைவு தலைமைக் குழுக்களுடன் வினைபுரிகின்றன, அதே நேரம் பருமனான ஸ்டெராய்டு மற்றும் ஹைட்ரோகார்பன் சங்கிலி மென்படலத்தில் பதிகின்றன. கூடவே மற்ற கொழுப்புகளில் முனைவற்ற கொழுப்பு அமிலச் சங்கிலி பதிகின்றன. இந்த அமைப்புக்குரிய பங்கில், பிளாஸ்மா மென்படலத்தின் ஊடுருவு திறனை கொழுப்பு, புரோட்டான்கள் (உறுதியான ஹைட்ரஜன் அயனிகள்) மற்றும் சோடியம் அயனிகளுக்குக் குறைக்கிறது. உயிரணு மென்படலங்களுக்குள், செல்லக போக்குவரத்து, செல் சமிக்ஞை மற்றும் நரம்பு கடத்துதல் ஆகியவற்றிலும் கொழுப்பு செயல்படுகிறது. கொழுப்பு, சிறுகுழிவு சார்ந்தவை மற்றும் கிளாத்ரின் சார்ந்த எண்டோசிடோசிஸ் உள்ளிட்ட உள்முகமடிப்புடைய சிறுகுழிவு மற்றும் கிளாத்ரின் மெல்லிய சிறு குழிகள் ஆகியவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. சில எண்டோசிடோசிஸ்சில்,மீத்தைல் பீட்டா சைக்லோடெஸ்ட்ரின் (MβCD) உதவியை பயன்படுத்தி பிளாஸ்மா மெண்படலத்திலிருந்து கொழுப்பை நீக்குவதற்கு கொழுப்பின் பங்கினை ஆராய முடியும். அண்மையில், செல் சமிக்ஞை முறைகளில், பிளாஸ்மா மென்படலத்தில் லிப்பிட் ராஃப்ட்ஸ் உருவாக்கத்தின் செய்முறையிலும் கொழுப்பிற்கு தொடர்பிருப்பதாக அறியப்பட்டுள்ளது. பல நரம்பணு நரம்புக்கொழுப்பு உறைகளில், ஸ்க்வான் உயிரணு மென்படலத்தினுடைய நெருக்கமான அடுக்குகளிலிருந்து அதிகப்படியான கொழுப்பு வருவிக்கப்பட்ட போதும், அதிக வினைத்திறனுள்ள தூண்டுதலின் கடத்தலுக்கு காப்புறை வழங்குகிறது. உயிரணுக்களுள், பல உயிரிரசாயன தடங்களில் கொழுப்பு முன்னோடி மூலக்கூறாக இருக்கிறது. கல்லீரலில், கொழுப்பு பித்த நீராக மாற்றமடைகிறது பின்னர் அது பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. பித்த நீர் பித்த உப்புகளை உள்ளடக்கியது, அது செரிமானப்பாதையில் கொழுப்பைக் கரைக்கிறது மேலும், கொழுப்பு மூலக்கூறுகளில் குடலுக்குரிய உறிஞ்சுதலிலும், அத்துடன் கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்களான, வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E மற்றும் வைட்டமின் K போன்றவற்றிலும் உதவுகிறது. வைட்டமின் D மற்றும் அட்ரினல் சுரப்பி ஹார்மோன்கள் கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரான், அத்துடன் பால் சுரப்பிகளான புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜென்கள், மற்றும் டெஸ்டோஸ்டிரோன் மற்றுமதன் வழித்தோன்றல்கள் உள்ளிட்ட ஸ்டெராய்ட் ஹார்மோன்களின் தொகுப்பிற்கு கொழுப்பு ஒரு முக்கிய முன்னோடி மூலக்கூறாக இருக்கிறது. கொழுப்பு ஒரு ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும் செயல்படலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு ஆதாரங்கள் மிகக்குறைந்த அளவிலான பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொழுப்புடன் கூடிய ட்ரைகிளிசரைடுகளுடைய சிக்கலான கலவையாக மிருகக் கொழுப்புகள் இருக்கின்றன. விளைவாக மிருகக் கொழுப்பு உள்ளடக்கிய உணவு வெவ்வேறான அளவுகளில் கொழுப்பினைக் கொண்டதாக இருக்கிறது. பாலாடைக்கட்டி, முட்டையின் மஞ்சள் கருக்கள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, வளர்ப்புப்பறவைகள் மற்றும் இறால் உள்ளிட்டவைகள் கொழுப்புள்ள முக்கிய உணவு ஆதாரங்களாகும். தாய்ப்பாலிலும் கூட குறிப்பிடும்படியான கொழுப்பு உள்ளது. உணவைத் தயாரிக்கும் போது சேர்த்தால் ஒழிய தாவரம் சார்ந்த உணவு ஆதாரங்களில் கொழுப்பு இருக்காது. எனினும், ஆளிவிதைகள் மற்றும் வேர்க்கடலைகள் போன்ற தாவர பொருட்களில் கொழுப்பைப் போன்ற பைட்டோஸ்டெரால்ஸ் என்று அழைக்கப்படும் பொருள் உள்ளது, அவை ஊனீர் கொழுப்பு மட்டங்களை கீலிறக்க உதவ தூண்டுகின்றன. உட்கொள்ளப்படும் மொத்த கொழுப்பு, குறிப்பாக நிறைவுக் கொழுப்பு மற்றும் மாறுபக்கக் கொழுப்பு, இரத்த கொழுப்பில், உட்கொள்ளப்பட்ட கொழுப்பைவிட பெரும்பங்கு வகிக்கிறது. பால் பொருட்கள், மிருகக் கொழுப்புகள், பலவகையான எண்ணெய் மற்றும் சாக்லேட் போன்றவற்றின் கொழுப்பில் முழுமையாக, நிறைவுக் கொழுப்பு அடங்கியிருக்கிறது. பொதுவாக நிறைவுறாக் கொழுப்பின் பகுதி ஹைட்ரஜன் ஏற்றத்திலிருந்து மாறுபக்கக் கொழுப்புகள் வருவிக்கப்படுகின்றன, மாறாக மற்ற வகை கொழுப்புகள் போல் இயற்கையில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுவதில்லை. மாறுபக்கக் கொழுப்புகள் அவற்றின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளால் உணவுகளிலிருந்து குறைக்க அல்லது நீக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி கொழுப்பு, பலவகையான துரித உணவுகள், சிற்றுண்டி உணவுகள் மற்றும் பொறித்த அல்லது உயர்வெப்பத்தில் வாட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றில் மாறுபக்கக் கொழுப்பு அதிகளவில் காணப்படுகிறது. உணவுப்பழக்கம், மேலும் மற்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை இரத்தக்கொழுப்பின் அளவைக் குறைக்க உதவலாம். உணவுப்பழக்கத்தில் கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் மிருக உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவுகள் குறையலாம், ஆனால் முதன்மையாக நிறைவுக் கொழுப்பு உட்கொள்ளுதலைக் குறைக்க வேண்டும். உணவுப்பழக்கத்தின் மூலம் தங்கள் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்கள் தினசரி உணவில் நிறைவுக் கொழுப்பிலிருந்து 7% இத்திற்கும் குறைவான கலோரிகள் மற்றும் ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமுக்கும் குறைவான கொழுப்பை உபயோகப்படுத்த வேண்டும். உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் (குறிப்பாக, உணவுப்பழக்கத்தின் மூலம் கொழுப்பைக் குறைத்தல்) இரத்தக் கொழுப்பு அளவுகள் குறையும் எனக்கருதப்படுவது, மேலும் அவ்வாறு குறைப்பது, மற்றவர்களுக்கு இடையில் கரோனரி இதய நோய் (CHD) வருவதற்கான நிகழ்வாய்ப்பைக் குறைக்கிறது என்பது மறுத்துக்கூறப்படுகிறது. மாறாக, உணவு உட்கொள்ளுதலின் மூலம் கொழுப்பைக் குறைப்பது கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்கு எதிர்வினையாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது, அதனால் இரத்தக்கொழுப்பின் அளவின் சீரான நிலைக்கு கொழுப்பைத் தயாரிப்பது அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். தொகுப்பு கல்லீரலில் தினமும் உருவாக்கப்படும் கொழுப்பின் அளவு சராசரியாக 20-25% இருக்கும்; குடல்கள், அட்ரினல் சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளிட்டவை கொழுப்பு அதிகமான விகிதாசாரத்தில் தொகுக்கப்படும் மற்ற இடங்களாகும். அசிட்டைல் CoAவின் ஒரு மூலக்கூறு மற்றும் அசிட்டோசிடைல்-CoAவின் ஒரு மூலக்கூறு ஆகியவற்றுடன் உடலுக்குள் கொழுப்புத் தொகுப்பு ஆரம்பமாகிறது, அவை 3-ஹைட்ராக்சி-3-மீத்தைல்க்ளூட்டரைல் CoA (HMG-CoA) வடிவத்திற்கு மாற்றமடைகிறது. இந்த மூலக்கூறு பின்னர் HMG-CoA ரிடக்டேஸ் என்ற என்சைமினால் மெவலனேட்டிற்குக் குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை கொழுப்புத் தொகுப்பில் ஒரு மாற்றமுடியாத ந்டவடிக்கையாக இருக்கிறது, மேலும் இது ஸ்டேடின்ஸ் (HMG-CoA ரிடக்டேஸ் மட்டுப்படுத்திகள்) செயலுக்குத் தளமாக இருக்கிறது. பின்னர் மெவலனேட், ATP தேவைப்படும் மூன்று எதிர்வினைகளில் 3-ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டாக மாற்றமடைகிறது. இந்த மூலக்கூறு கார்பாக்சில் நீக்கமடைந்து ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டாக மாறுகிறது, இவை பல உயிரிய விளைவுகளின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டின் மூன்று மூலக்கூறுகள், ஜெரனைல் டிரான்ஸ்ஃபரஸ் செயல்பாட்டின் மூலம் ஃபெர்னசைல் பைரோபாஸ்பேட் வடிவத்திற்கு சுருக்கப்படுகிறது. ஃபெர்னசைல் பைரோபாஸ்பேட்டின் இரண்டு மூலக்கூறுகள் பின்னர் எண்டோபிளாஸ்மிக் நுண்வலையில் ஸ்குவாலென் சிந்தாஸ் நடவடிக்கையால் ஸ்குவாலென் வடிவத்திற்கு சுருக்கப்படுகிறது. ஆக்சிடோஸ்குவாலென் சைக்லேஸ் பின்னர் மறுசுழற்சியடைந்து ஸ்குவாலெனிலிருந்து லனோஸ்டிரால் வடிவமெடுக்கிறது. பின்னர் இறுதியாக லனோஸ்டிரால் கொழுப்பாக மாற்றமடைகிறது. கோன்ராட் ப்லோக் மற்றும் ஃபியோடெர் லைனென் இருவரும் 1964 இல் தங்களது, கொழுப்பின் இயக்கமுறையும் ஒழுங்குமுறையும் மற்றும் கொழுப்பு அமில வளர்சிதை வினை மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசினை பங்கிட்டுக் கொண்டனர். கொழுப்புத் தொகுப்பின் ஒழுங்குமுறை கொழுப்பின் உயிரியல் சேர்க்கை அப்போதைய கொழுப்பின் அளவைப் பொருத்து நேரடியாக ஒழுங்குபடுத்தப்படுகிறது, எனினும் ஹோமியோஸ்டசிஸ் இயக்கமுறைகளின் தொடர்பு சிறிதளவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிகளவில் உட்கொள்ளப்படும் உணவினால் மிகைக் கொழுப்பேற்று உருவாக்கம் குறையும், மாறாக குறைந்த அளவில் உட்கொள்ளப்படும் உணவினால் அதற்கு எதிர்மறையான விளைவு ஏற்படும். SREBP (ஸ்டெரால் சீராக்கி தனிமம் கட்டமைப்புப் புரதம் 1 மற்றும் 2) புரதத்தால் எண்டோபிளாஸ்மிக் நுண்வலையில் செல்லகக் கொழுப்பினை உணர்வது முக்கிய ஒழுங்கு இயக்கமுறையாகும். கொழுப்பின் முன்னிலையில், SREBP மற்ற இரண்டு புரதங்களை கட்டமைக்கிறது அவை: SCAP (SREBP-பிளவு செயலூக்கும் புரதம்) மற்றும் இன்சிக்1 ஆகும். கொழுப்பின் நிலைகள் குறையும்போது, காம்ப்ளக்ஸிலிருந்து இன்சிக்-1 பிரிந்து செல்கிறது, இதனால் காம்ப்ளக்ஸ் கொல்கி உபகரணமாக மாற்றமடைகிறது, கொழுப்பின் நிலை குறைவாக இருக்கும் போது SCAP ஆல் S1P மற்றும் S2P (சைட்-1 மற்றும் -2 புரோட்டீஸ்) ஆகிய இரண்டு உயிர் வினையூக்கிகள் இயக்கப்பட்டு SREBP பிளவுருகிறது. பின்னர் பிளவுபட்ட SREBP நியூக்ளியஸாக மாற்றமடைகிறது, மேலும் இது SRE (ஸ்டெரால் சீராக்கி தனிமம்) உருவாக்கத்தில் படியெடுத்தல் காரணியாக செயல்படுகிறது, இது பல ஜீன்களின் படியெடுத்தலைத் தூண்டுகிறது. அவற்றினுள் LDL ஏற்பி மற்றும் HMG-CoA ரிடக்டேஸ் இருக்கும். இரத்த ஓட்டத்திலிருந்து முன்னால் குறிப்பிடப்பட்டது சுழற்சியிலுள்ள LDL லை கழித்து, அதேபோல் HMG-CoA ரிடக்டேஸ் கொழுப்பின் மிகை கொழுப்பின் தயாரிப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த சமிக்ஞை வழிமுறையின் பெரும்பகுதி, 1970 களில் டாக்டர் மைக்கேல் S. பிரவுன் மற்றும் டாக்டர் ஜோசப் L. கோல்ட்ஸ்டெயின் ஆகியோரால் விளக்கப்பட்டுள்ளது. 1985 இல் அவர்கள் அவர்களது பணிக்காக உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்றனர். அவர்களது அடுத்த பணியில், SREBP வழிமுறை லிப்பிட் உருவாக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் எரிதிறன் ஒதுக்கீடு ஆகியவற்றில் பல ஜீன்களின் வெளிப்பாட்டை எப்படி ஒழுங்குபடுத்துகிறது என விளக்கியிருந்தனர். கொழுப்பு நிலையின் அளவு அதிகரிக்கும் போது கொழுப்புத் தொகுப்பை நிறுத்தி வைக்க முடியும். HMG-CoA ரிடக்டேஸில் சைட்டோசோலிக் செயற்களம் (அதன் கேட்டலிடிக் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கிறது) மற்றும் மென்படல செயற்களம் இரண்டும் உள்ளடங்கியிருக்கிறது. மென்படல செயற்களம் அதன் படியிரக்கத்திற்காக புலன் சமிக்ஞைகளுக்குகாகச் செயல்படுகிறது. கொழுப்பின் (மற்றும் மற்ற ஸ்டெரால்கள்) செறிவு அதிகரிப்பதால் இந்த செயற்களத்தின் ஓலிகோமரைசேசன் நிலை மாற்றமடைவதற்குக் காரணியாகும், அது புரோட்டோசோம்களால் மிகவும் எளிதாக பாதிப்படைந்து அழியக்கூடும். இந்த உயிர் வினையூக்கிகளின் நடவடிக்கை AMP கிளர்த்தப்பட்ட புரதமான கிநெஸ்ஸால் பாஸ்ஃபோ ஏற்றத்தால் குறைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த கிநெஸ் AMP ஆல் செயல்படுத்தப்படுகிறது, அது ATP நீரேற்ற நிலையில் இருக்கும்போது உருவாக்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து ATP நிலைகள் குறைவாக இருக்கும்போது கொழுப்புத் தொகுப்பு தடைப்படுகிறது. பிளாஸ்மா போக்குவரத்து மற்றும் உறிஞ்சுதல் ஒழுங்குமுறை கொழுப்பு, தண்ணீரில் மிகவும் குறைந்த அளவே கரையும் தன்மை உடையது; இதனால் கரைய முடியும், மேலும் தண்ணீர் சார்ந்த இரத்த ஓட்டத்தில் மிகவும் சிறிய செறிவில் பயணிக்கும். இரத்தத்தில் கொழுப்பு கரையாத போதும், கொழுப்புப்புரதங்களுள் சுற்றோட்ட முறையில் அது பயணிக்கும், அது சிக்கலான கோளவடிவக் கூறுகள் உடையதாகவும், வெளிப்புறமாக கட்டப்பட்ட ஆம்பிபைலிக் புரதங்கள் மற்றும் வெளிப்புறப்பரப்பு தண்ணீரில் கரையக்கூடியதாகவும் உட்புறப்பரப்பு லிப்பிடில் கரையக்கூடியதாகவும் உள்ள லிப்பிடுகள் கொண்டதாகவும் இருக்கும்; ட்ரைக்லிசெரைடுகள் மற்றும் கொழுப்பு ஈஸ்டர்கள் உட்புறமாக எடுத்துச்செல்லப்படும். ஆம்பிபதியாக இருக்கும் பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொழுப்புகள், கொழுப்புபுரதத் துகளுடைய தனிப்படலத்தின் மேற்பரப்பில் கடத்தப்படுகிறது. கூடுதலாக இரத்தத்தில் வழியாக கொழுப்பு பயணிப்பதற்காக கரையும் திறன் வழிவகையை வழங்குகிறது, கொழுப்புப்புரதங்கள் செல்லை இலக்காகக்கொண்ட சமிக்ஞைகள் உடையவை, அவை சில திசுக்களை லிப்பிடுகள் எடுத்துச்செல்ல வழிகாட்டுகின்றன. இதன் காரணமாக, பலவகையான கொழுப்புப்புரதங்கள் கொழுப்பில் இருக்கின்றன, அதன் அடர்த்தி அதிகரிப்பதைப் பொருத்து அவை பின்வருமாறு அழைக்கப்படுகின்றன: நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள், மிகவும் அடர்த்தி குறைவாயுள்ள கொழுப்புப்புரதம் (VLDL), மிதமான அடர்த்தி உடைய கொழுப்புப்புரதம் (IDL), அடர்த்தி குறைவாயுள்ள கொழுப்புப்புரதம் (LDL), மற்றும் உயர் அடர்த்திக் கொழுப்புப்புரதம் (HDL). அதிகமான கொழுப்பு மற்றும் குறைவான புரதங்கள் கொண்ட கொழுப்புப் புரதம் குறைந்த அடர்த்தி உடையதாக இருக்கிறது. கொழுப்பிலுள்ள பல கொழுப்புப்புரதங்களும் அவற்றினுள் ஒத்த தன்மையில் இருக்கும், எனினும் சில கொழுப்புகள் "கட்டற்ற" ஆல்கஹால் அடங்கியதாகவும் சில கொழுப்பு ஈஸ்டர்கள் என அழைக்கப்படும் பருமனான அகைல் ஈஸ்டர்கள் அடங்கியதாகவும் இருக்கும். எனினும், மாறுபட்ட கொழுப்புப்புரதங்கள் அபோலிப்போப்புரதங்கள் கொண்டவையாக இருக்கும், அவை செல் மென்படலத்தில் குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு ஈந்தணைவியாகச் செயல்படும். இந்த வழியில், கொழுப்புப்புரதத்தின் துகள்கள், கொழுப்புப்பயணிப்பதற்கான தொடக்க மற்றும் முடிவுப்புள்ளிகளைத் தீர்மானிக்கும் மூலக்கூறு முகவரிகளாக இருக்கும். நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள், மிகவும் அடர்த்தி குறைந்த வகையைச் சார்ந்த கொழுப்புப் போக்குவரத்து மூலக்கூறுகள் ஆகும், அவை தங்கள் ஓடுகளில் அபோலிப்போப்புரதம் B-48, அபோலிப்போப்புரதம் C மற்றும் அபோலிப்போப்புரதம் E போன்றவற்றைக் கொண்டிருக்கும். குடலிலிருந்து தசைகளுக்கும், ஆற்றலுக்கான கொழுப்பு அமிலங்கள் அல்லது கொழுப்புத் தயாரிப்புக்கு தேவைப்படும் மற்ற திசுக்களுக்கு கொழுப்புகளை எடுத்துச்செல்லவும் நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள் கடத்திகளாகச் செயல்படுகின்றன. தசைகளால் உபயோகப்படுத்தப்படாத கொழுப்பு, கொழுப்பு வளமிக்க நுண் கோளக் கொழுப்புக் குமிழ்களில் எஞ்சிய கொழுப்புகள், கல்லீரலின் மூலம் இரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. VLDL மூலக்கூறுகள் கல்லீரலால் உருவாக்கப்படுகின்றன, மேலும் இவை மிகுதியான ட்ரைஅசில்கிளிசரால் மற்றும் பித்த அமிலங்களின் தொகுப்புக்கு கல்லீரலுக்கு தேவைப்படாத கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த மூலக்கூறுகள் தங்கள் ஓடுகளில் அபோலிப்போப்புரதம் B100 மற்றும் அபோலிப்போப்புரதம் E ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இரத்த ஓட்ட போக்குவரத்தின் போது, மேலும் அதிக சதவீத கொழுப்பு கொண்ட IDL மூலக்கூறுகளை வெளியிடுவதற்கு, இரத்தக்கலன்கள் அதிக ட்ரைஅசில்கிளிசராலை பிளவு படுத்துகின்றன மற்றும் உட்கிரகிக்கின்றன. IDL மூலக்கூறுகள் இரண்டு சாத்தியமுடைய விதிகளைக் கொண்டுள்ளன, அவை: மற்ற உயிர்மூலக்கூறுகளில் வளர்சிதை மாற்றத்திற்காக கல்லீரலால் பாதியளவு IDL மூலக்கூறுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, மீதி பாதியளவு IDL மூலக்கூறுகள், அதிக சதவீத கொழுப்பை தன்னுள் வைத்திருக்கும் LDL மூலக்கூறுகளாக மாற்றமடையும் வரை ட்ரைஅசில்கிளிசராலை இழப்பதற்கு இரத்த ஓட்டத்தில் தொடர்கின்றன. LDL மூலக்கூறுகள் இரத்தத்தில் கொழுப்பினைக் கடத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன, மேலும் ஒவ்வொரு மூலக்கூறும் தோராயமாக 1,500 கொழுப்பு ஈஸ்டர் மூலக்கூறுகளைக் கொண்டவையாக உள்ளன. LDL மூலக்கூறினுடைய ஓடு ஒரே ஒரு அபோலிப்போப்புரதம் B100 மூலக்கூறைக் கொண்டுள்ளது, அவை புறத்திசுக்களில் LDL ஏற்பியால் அங்கீகரிக்கப்படுகிறது. அபோலிப்போப்புரதம் B100 இன் கட்டமைப்பின் மீது, பல LDL ஏற்பிகள் கிளாத்ரின் குழிகளில் உள்ளடங்கியிருக்கின்றன. LDL மற்றும் அதன் ஏற்பி இரண்டும் எண்டோசிப்டசிஸ்ஸால் உள்ளீடடைந்து செல்லுக்குள் சிறுகுமிழ் வடிவத்திற்கு மாறுகிறது. சிறுகுமிழ் பின்னர் லைசோசோமுடன் உருகுகிறது, இது கொழுப்பு ஈஸ்டர்களால் நீர்பகுக்கப்பட்ட லைசோசோமல் அமில லிபாஸே என்றழைக்கப்படும் ஒரு என்சைமை உள்ளடக்கியது. இப்போது செல்லுக்குள், மென்படல உயிர்தொகுப்பால் அல்லது ஈஸ்ட்டராதலால் உபயோகப்படுத்த முடியக்கூடிய நிலையில் கொழுப்பு உள்ளது, மேலும் அது செல்லுக்குள் சேமிக்கப்படுகிறது, அதனால் அவை செல் மென்படலங்களுடன் தலையிடுவதில்லை. LDL ஏற்பியின் தொகுப்பு SREBP ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது, இதே ஒழுங்குபடுத்தப்பட்ட புரதம், செல்லில் கொழுப்பின் இருப்புக்கு பதிலளிப்பதில் தொடக்கத்தில் கொழுப்புத் தொகுப்பைக் கட்டுப்படுத்த உபயோகப்படுகிறது. செல் ஏராளமான கொழுப்பைக் கொண்டிருக்கும் போது, LDL ஏற்பித் தொகுப்பு அடைபடுகிறது, அதனால் LDL மூலக்கூறு வடிவத்தில் புதிய கொழுப்பு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் செல்லுக்குத் கொழுப்புத் தட்டுப்பாடு ஏற்படும் போது அதிக LDL ஏற்பிகள் உருவாகின்றன. இந்த முறை ஒழுங்கற்ற நிலையை அடையும் போது, புறத்திசுக்கலின் மேல் ஏற்பிகள் இல்லாமல் பல LDL மூலக்கூறுகள் இரத்தத்தில் தோன்றுகின்றன. இந்த LDL மூலக்கூறுகள் ஆக்சிஜனேற்றப்பட்டு நீர்மத்தால் விரிவடைந்து நுரைத்த செல்கள் வடிவத்திற்கு மாறி இரத்த விழுங்கணுக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அடிக்கடி இந்த செல்கள் இரத்த சிறுகுழல்களின் சுவர்களில் அடைபடுகின்றன, மேலும் இவை ஆர்த்ரோஸ்க்லரோடிக் இரத்த உறைகட்டி உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரத்த உறைகட்டிகள் "தீய" கொழுப்புடன் LDL கொழுப்பு (உண்மையில் ஒரு கொழுப்புப்புரதம்) என பொதுவாக அழைக்கப்படுவனவற்றின் சேர்க்கைக்கு வழியேற்படுத்துகிறது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மற்ற தீவிர மருத்துவப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாகின்றன. சொல்லப்போனால், HDL துகள்கள் வெளியேற்றத்திற்காக கல்லீரலுக்கு அல்லது ஹார்மோன் தொகுப்புக்கு கொழுப்பை உபயோகப்படுத்தும் மற்ற திசுக்களுக்கு கொழுப்பைத் திரும்ப எடுத்துச் செல்கிறது, இந்த செயல்பாடு கொழுப்பு திரும்பப் பயணித்தல் (RCT) எனப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் உள்ள பெரிய HDL துகள்கள் சிறந்த ஆரோக்கிய வெளிப்பாட்டிற்கு தொடர்புடையதாக உள்ளது. மாறாக, குறைந்த எண்ணிக்கையில் உள்ள பெரிய HDL துகள்கள் தமனிகளுக்குள் கூழ்மைக்கரடு நோய் தீவிரமடைவதில் சார்பற்ற நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்சிதை மாற்றம், மறுசுழற்சி மற்றும் வெளியேற்றம் கல்லீரலில் பலவகையான பித்த அமிலங்களால் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது. இவை கிளைசின், டாரைன், குளுக்ரோனிக் அமிலம் அல்லது சல்பேட் ஆகியவற்றுடன் இணைந்து மாற்றமடைகிறது. இணைந்த மற்றும் இணையாத பித்த அமிலங்களின் கலவை மற்றும் கொழுப்புடன் சேர்ந்து கல்லீரலிலிருந்து பித்தப்பைக்கு வெளியேற்றப்படுகிறது. தோராயமாக 95% பித்த அமிலங்கள் குடல்களிலிருந்து மறு உறிஞ்சல் செய்யப்படுகிறது மற்றும் மீதமுள்ளவை மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. வெளியேற்றம் மற்றும் பித்த அமிலங்கள் மறு உட்கொள்ளுதல், குடவீரல் சுற்றோட்டத்திற்கு அடிப்படையாக உள்ளன, இவை செரிமானம் மற்றும் உட்கொள்ளப்பட்ட கொழுப்புகள் உறிஞ்சுதலுக்கு இன்றியமையாததாகும். சில சந்தர்ப்பங்களில், பித்தப்பையின் அதிகமான செறிவூட்டத்தின் போது, கொழுப்புப் படிகங்கள் மற்றும் பெரும்பாலான பித்தப்பைக் கற்களின் இயைபுக்கூறுகள் உருவாகின்றன, ஆயினும் லெசித்தின் மற்றும் பைலிருபின் பித்தப்பைக் கற்கள் ஆகியவையும் குறைந்த அளவில் ஏற்படுகின்றன. மருத்துவச் சிறப்பு அதிகக்கொழுப்புள்ள இரத்தம் கொழுப்புக் கருதுகோளின் படி, அசாதாரணமான அதிக கொழுப்பு நிலைகள் (அதிகக்கொழுப்புள்ள இரத்தம்) ஏற்படும் அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், அதிக செறிவூட்டப்பட்ட LDL மற்றும் குறைந்த செறிவூட்டமடைந்த வினைசார் HDL ஆகியவை இதயக்குழலிய நோய் உருவாவதில் தீவிர பங்குவகிக்கின்றன, ஏனெனில் இவை தமனிகளில் கூழ்மைக்கரடு, (பெருந்தமனித் தடிப்பு) உருவாவதை ஊக்குவிக்கின்றன. இந்த நோய் இதயத் தசைத்திசு இறப்பு (மாரடைப்பு), வலிப்பு மற்றும் புற நாளாவட்ட நோய் ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக அமையும். அதிகளவிலான இரத்த LDL, குறிப்பாக செறிவான பெரிய LDL துகள் மற்றும் சிறிய அளவிலான LDL துகள், LDL துகள்களில் உள்ள கொழுப்புப் பொருட்களை விட அதிகளவில் அவை பங்குவகிக்கின்றன, LDL துகள்கள் பெரும்பாலும் "தீய கொழுப்பு" என வழங்கப்படுகின்றன, ஏனெனில் அவை கூழ்மைக்கரடு உருவாவதில் தொடர்புடையதாய் உள்ளன. அதே நேரத்தில், செல்கள் மற்றும் கூழ்மைக்கரடு ஆகியவற்றிலிருந்து கொழுப்பு வெளியேற்றப்பட அதிக செறிவான வினைசார் HDL பாதுகாப்பை வழங்குகின்றன, அவை சில நேரங்களில் "நல்லக் கொழுப்பு" எனவும் வழக்காக கூறப்படுகின்றன. இந்த சமப்படுத்துதல் பெரும்பாலும் மரபு ரீதியாக வரையறுக்கப்பட்டிருக்கும், ஆனால் உடல் வளரும் போது மருந்துகள், உணவுத் தேர்வுகள் மற்றும் மற்ற காரணிகளால் இது மாற்றமடையலாம். உயர்ந்த செறிவான ஆக்சிஜனேற்றப்பட்ட LDL துகள்கள் நிலையில், குறிப்பாக "குறை அடர்த்தி LDL" (sdLDL) துகள்கள் தமனிச் சுவர்களில் கூழ்மைக்கரடு உருவாக்கத்தில் தொடர்புடையன, மேலும் இதயச் சுவர்ச் சிறை நோய் மற்றும் இதயக்குழலிய நோயின் மற்ற வடிவங்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ள பெருந்தமனித் தடிப்பு நிலை ஏற்படலாம். மாறாக, HDL துகள்கள் (குறிப்பாக பெரிய HDL) கொழுப்பு மற்றும் அழற்சி விளைவிக்கின்ற கடத்திகளைக் கூழ்மைக்கரடிலிருந்து வெளியேற்ற உதவும் இயக்கமுறை உடையதாக இருக்கிறது. அதிகரித்த செறிவான HDL குறைந்த அளவிலுள்ள கூழ்மைக்கரடு தீவிரமடைதல் மற்றும் பின்னடைவிலும் கூட தொடர்புடையதாக இருக்கிறது. 2007 இல் 61 சம வயதுடைய குழுக்களில் கிட்டத்தட்ட 900,000 மக்களிடம் எடுக்கப்பட்ட கல்விசார் கணக்கெடுப்பு அறிக்கையில், இரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு நிலைகள், இதயகுழலிய தொடர் விளைவுகளில் மற்றும் இளம் மக்களிடம் மொத்த இறப்பு வீதத்தில் தொடர்புகொண்டிருப்பது தெரியவந்தது. எனினும், ஆரோக்கியத்தில் அதிகக் கொழுப்பின் தாக்கத்தால் இதயக்குழலிய நோய் ஏற்படுவதில், இளம் மக்களிடம் இதன் தொடர்பு குறைவாகவே காணப்பட்டது, ஆனால் வயதானோர் அதிகம் இதனால் பாதிக்கப்பட்டனர். கொழுப்புப்புரத பின்ன ஏற்ற நிலைகள், LDL, IDL மற்றும் VLDL ஆத்ரோஜெனிக் குக் (பெருந்தமனித் தடிப்புக்கான காரணி) காரணமாகின்றன. இந்த பின்னத்தின் நிலைகளைக் காட்டிலும் மொத்த கொழுப்பு அளவு, பெருந்தமனித் தடிப்பின் விரிவாக்கத்திற்கு மற்றும் தீவிரமடைதலுடன் அதிக தொடர்புடையதாக இருக்கிறது. மாறாக, எனினும் சிறிய LDL மற்றும் சிறிய HDL துகள்களில் முதலில் எந்த நிலையில் கூழ்மைக்கரடு வளர்ச்சி வீதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறதோ அதைப் பொருத்து மொத்த கொழுப்பு சாதாரண வரம்பில் இருக்கலாம். எனினும் மாறாக, LDL துகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் (பெரும்பாலும் பெரிய துகள்கள்) மற்றும் HDL பெரியத் துகள்களின் சதவீதத்தின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், எந்த மொத்தக் கொழுப்புச் செறிவிலும், கூழ்மைக்கரடு வளர்ச்சி வீதம் பொதுவாகக் குறைவாக இருக்கும், வளர்ச்சியே இல்லாமலும் இருக்கலாம். சமீபத்தில், IDEAL மற்றும் EPIC தொலைநோக்கு படிப்பின் பிந்தைய நிலை ஆய்வில், அதிக நிலையிலுள்ள HDL கொழுப்பு (அபோலிப்போப்புரதம் A-I மற்றும் அபோலிப்போப்புரதம் B ஆகியவற்றுக்காக சரிசெய்யப்பட்ட) மற்றும் அதிகரித்து வரும் இதயக்குழலிய நோய் அபாயம் ஆகியவற்றினிடையே உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் இதயத்தைப் பாதுகாப்பதில் "நல்ல கொழுப்பின்" பங்கில் சந்தேகம் எழுந்துள்ளது. பல மனிதச் பரிசோதனைகளில் ஸ்டேடின்ஸ் எனப்படும் HMG-CoA ரிடக்டஸ் மட்டுப்படுத்திகள் பயன்படுத்தப்பட்டன, கொழுப்புப்புரத போக்குவரத்து உருப்படிமங்களை ஆரோக்கியமற்றதிலிருந்து ஆரோக்கியமான உருப்படிமங்களாக மாற்றமடையச் செய்ததில், கொழுப்பின் மதிப்புகள் வயது வந்தோருக்குக் குறைவாகக் கணக்கிடப்பட்ட போதும் இதயக்குழலிய நோய் நிகழும் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது எனப் பல சோதனைகளில் திரும்பத் திரும்ப உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக, இதயக்குழலிய நோயின் தாக்கம் உள்ள மக்கள் தங்கள் கொழுப்பின் அளவைப் பொருட்படுத்தாமல் ஸ்டேடின்ஸிலிருந்து (இரத்தக் கொழுப்பு குறைப்பு மருந்து)பயன் பெற முடியும், மேலும் இதயக்குழலிய நோய் இல்லாத ஒரு ஆண் அசாதாரணமான அதிகக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் ("முதன்மைத் தடுப்புமுறை") மூலம் பயன் பெற முடியும். பெண்களில் முதன்மைத் தடுப்புமுறை, ஆண்களில் கண்டுபிடித்தவற்றின் நீட்சியாக மட்டுமே நடைமுறையில் இருக்கிறது, இன்னும் பெண்களில் ஒட்டு மொத்த இறப்பு வீதத்தைக் குறைக்கும் விதமான அல்லது இதயக்குழலியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான பெரியளவிலான ஸ்டேடின்ஸ் சோதனைகள் இல்லை. தேசிய கொழுப்புக் கல்வி நிகழ்ச்சியின் 1987 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, வயதுவந்தோர் சிகிச்சைக் குழுக்கள் பரிந்துரைத்த மொத்த இரத்தக் கொழுப்பின் அளவு பின்வருமாறு: < 200 மி.கி/டெ.லி சாதாரண ரத்தக் கொழுப்பு, 200–239 மி.கி/டெ.லி உச்ச வரம்புக்கோடு, > 240மி.கி/டெ.லி உயர்க் கொழுப்பு. அமெரிக்க இதயச் சங்கம் இதே போன்ற மொத்த (உணவருந்தாத போது) இரத்தக் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய நோய் அபாயங்களுக்காக வரையறுக்கப்பட்ட தொகுப்பை வழங்கியது: எனினும், இந்நாளைய சோதனை முறைகள் LDL ("தீய") மற்றும் HDL ("நல்ல") கொழுப்பைத் தனித்தனியாக வரையறுக்கிறது, இந்த சாதாரணமான முறை ஓரளவுக்கு காலாவதியானதாகக் கருதப்படுகிறது. விரும்பத்தகுந்த LDL அளவு, 100 mg/dL -க்கும் (2.6 mmol/L) குறைவாக இருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது, எனினும் புதிய இலக்கான < 70 mg/dL மேற்கண்ட சோதனைகளில் தனிப்பட்டமுறையில் அதிகபட்ச அபாயம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இன்னொரு உபயோகமான அளவீட்டில் HDLக்கு மொத்த கொழுப்பு விகிதாச்சாரம் 5:1 க்கு மிகவும் குறைவாக இருத்தலே ஆரோக்கியமானது எனக்கூறுகிறது. குறிப்பாக, சிறுவர்களுக்கான சாராசரி LDL மதிப்புகள் கொழுப்புக் கோடுகளுக்கு முன்பு, 35 mg/dL இல் உருவாக ஆரம்பிக்கும். பெரும்பாலான LDL சோதனை முறைகளில், உண்மையில் இரத்தத்தின் மிகவும் குறைவான துகள் அளவிலிருந்து, LDL கணக்கிடப்படுவதில்லை. செலவுக் காரணங்களுக்காக, LDL மதிப்புகள் நெடுங்காலமாக ஃபிரைட்வால்டு சூத்திரம் (அல்லது மாறி) பயன்படுத்தப்படுகிறது, அது: [மொத்த கொழுப்பு] − [மொத்த HDL] − 20% ட்ரைகிளிசரைடு மதிப்பு = உத்தேச LDL. இந்த முறையில் அடிப்படையாக, மொத்த HDL, LDL, மற்றும் VLDL ஆகியவற்றால் மொத்த கொழுப்பு வரையறுக்கப்படுகிறது. சாதாரணமாக மொத்தம், HDL மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவை உண்மையில் கணக்கிடப்படுகின்றன. VLDL உத்தேசமாக ட்ரைகிளிசரைடுகளில் ஐந்தில் ஒரு பங்காகக் கணக்கிடப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவெனில் இரத்தப் பரிசோதனைக்கு எட்டு மணிநேரங்களுக்கு முன்பே உணவருந்தி இருக்க வேண்டும், ஏனெனில் உணவு உட்கொண்டதிற்கேற்ப ட்ரைகிளிசரைடின் அளவு மாற்றமடையும். இதயக்குழலிய நோயில் கொழுப்பின் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பங்கு, கொழுப்பு அளவுகள் மற்றும் இறப்புவீதத்திற்கிடையேயான சில ஆய்வுகள் ஆச்சரியப்படும் விதமாக நேர்மாறானதாக இருக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட மக்களிடையே இறப்பு வீதம் ஒட்டுமொத்தமாக 11% அதிகரித்துள்ளது, மேலும் கொழுப்பு அளவுகள் ஒருவருக்கு 1 mg/dL ஒரு ஆண்டில் குறைவதால் CVD இறப்பு வீதம் 14% அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃப்ரமிங்கம் இதய ஆய்வில், குறைவான அல்லது சாதாரண கொழுப்பு அளவுகள் உடையவர்களுக்கு தீவிர நீண்டகால நோய்கள் அல்லது புற்றுநோய் பரவுவதற்கு ஆய்வாளர்கள் இந்த தோற்றநிலைக் கொள்கையை அடிப்படையாகக் கொள்கிறார்கள். இந்த விளக்கம், ஆரோக்கிய அறிகுறிகள் மற்றும் நிலை உயர்வு வோரல்பெர்க் ஆய்வால் ஆதரிக்கப்படவில்லை, அதில் கொழுப்பு குறைவாக உள்ள அனைத்து வயதிலும் உள்ள ஆண்கள் மற்றும் 50 வயதைக் கடந்த பெண்களில் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் மற்றும் மனநோய்கள் மூலமே அதிகளவில் இறப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுகள், இளம் மறுமொழியாளர்களுக்கிடையேயும் கொழுப்பின் அளவு குறைதல் விளைவு ஏற்படலாம் எனக் குறிக்கின்றன, இது உடல் பலவீனத்திற்கு, சம வயதுடைய வயதான மக்களை பிரதிநிதியாக அல்லது அடையாளமாக, வயதை வைத்து செய்திருந்த முந்தைய மதிப்பீட்டிற்கு முற்றிலும் நேர்மாறாயிருக்கிறது. அறிவியலர்களின் சிறு குழுவொன்று, த இண்டர்நேசனல் நெட்வொர்க் ஆப் கொலஸ்ட்ரால் ஸ்கெப்டிக்ஸில் ஒன்றிணைந்து, கொழுப்பு மற்றும் பெருந்தமனித் தடிப்புக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பினர். எனினும், பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அறிஞர்கள் இந்த தொடர்பு உண்மை என்றே ஏற்றுக் கொண்டனர். கொழுப்புக் குறைவான இரத்தம் அசாதாரணமான கொழுப்பின் அளவு குறைந்து விடுதல் கொழுப்பு குறைவான இரத்தம் எனப்படுகிறது. இந்த நிலைக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன, ஆனால் சில ஆய்வுகள் உளச்சோர்வு, புற்றுநோய் மற்றும் பெருமூளை இரத்த ஒழுக்கு ஆகியவற்றுடன் இதற்குத் தொடர்பிருப்பதாக அறிவுறுத்துகின்றன. பொதுவாக, கொழுப்பு அளவுகள் குறைவது அடிப்படை உடல்நலக் குறைவின் காரணமாகவும் பின் விளைவாக ஏற்படாததாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. கொழுப்புச் சோதனைகள் 20 வயதுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொழுப்புச் சோதனை செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க இதயச் சங்கம் பரிந்துரைக்கிறது. 12 மணி நேரம் உணவருந்தாமல் இருந்த பிறகு எடுக்கப்பட்ட இரத்த மாதிரி, மருத்துவரால் சோதிக்கப்பட்டோ அல்லது வீட்டிலேயே கொழுப்புத் புரத விவரங்களைக் கண்டறியும், கொழுப்புச் சோதனைக் கருவிகளின் மூலமோ சோதித்தறியலாம். இதில் மொத்த கொழுப்பு, LDL (தீய) கொழுப்பு, HDL (நல்ல) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். 200 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக மொத்த கொழுப்பு அளவு உடைய, 45 வயதுக்கு மேற்பட்ட ஆணாகவோ அல்லது 50 வயதுக்கு மெற்பட்ட பெண்ணாகவோ இருப்பவர்கள், HDL (நல்ல) கொழுப்பின் அளவு 40 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அல்லது மற்ற இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்புக் காரணிகள் உடையவர்கள் போன்றோர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லாமல் அடிக்கடி கொழுப்புச் சோதனை செய்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். கொழுப்பு நிரம்பிய நீர்மப் படிகங்கள் சில கொழுப்புக் கிளைப் பொருள்கள் (மற்ற சாதாரண கொழுப்பு நிரம்பிய லிப்பிடுகளுக்கிடையில்) நீர்மப் படிக கொழுப்பு நிரம்பிய பிரிவை உண்டாக்குகின்றன. கொழுப்பு நிரம்பிய பிரிவு உண்மையில் சமச்சீர் நூனிலைமையாக இருக்கிறது, மேலும் அதன் நிறம் அதன் வெப்பநிலை மாறுபாட்டிற்கேற்ப மாறுகின்றன. அதனால், கொழுப்பு வழிப்பொருள்கள் பொதுவாக நீர்மப் படிக வெப்ப நிலை மானிகள் மற்றும் வெப்பநிலை உணரும் வண்ணப்பூச்சுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் காண்க கண்களில் விழியின் மஞ்சள் விளிம்பு "கொழுப்பு வளையம்" பித்த உப்புகள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் இதய நோய் கொழுப்பைக் கண்டறியும் லைபர்மேன்-பர்சார்ட் சோதனை நீமன் பிக் நோய் C வகை ட்ரைகிளிசரைடுகள் வெர்ட்டிகல் ஆட்டோ புரொஃபைல் ஆக்சிகொலஸ்ட்ரால் கூடுதல் படங்கள் குறிப்புகள் புற இணைப்புகள் வயது வந்தோரில் இரத்தத்தில் அதிக கொழுப்பினைக் கண்டறிதல், மதிப்பிடுதல் மற்றும் சிகிச்சையளித்தல் US நேசனல் இண்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் அடல்ட் ட்ரீட்மண்ட் பேனல் III கொழுப்பு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம நோக்கங்கள் – UN/WHO அறிக்கை 1994 அமெரிக்க இதயச் சங்கம் – "கொழுப்பைப் பற்றி" ஸ்டெராய்டுகள் ஸ்டெரால்கள் லிப்பிட் சீர்குலைவுகள் ஊட்டச்சத்து கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்
5519
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
கான்பூர்
கான்பூர் (Kanpur) வட இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மிகுந்த நகரமாகும். இந்நகரம் கங்கையாற்றின் படுகையில் அமைந்துள்ளது. மேலும் இது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகும். இது உத்திரப்பிரதேசத்தின் அதிக மக்கள் தொகையுடைய நகராகும். இது இந்தியாவின் பத்தாவது பெரிய நகராகும். மேற்கோள்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் உத்தரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
5521
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
வங்காளதேசம்
வங்காளதேசம் (Bangladesh, ) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது. இந்நாட்டின் எல்லைகள் 1947-ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளதேச விடுதலைப் போருக்குப் பின் வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். இதன் நாடாளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991-இலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 உடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படுவதோடு, SAARC, BIMSTEC, OIC மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறுப்பினராகவும் விளங்குகிறது. புவியியல் ரீதியாக நாடு கங்கை பிரமபுத்திரா கழிமுகத்தின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இதனால், வருடாந்தம் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நாடு வறுமை, ஊழல், மிகைமக்கட்தொகை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், வங்காளதேசம் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், ஆயுள் எதிர்பார்ப்பை 23 வருடங்களால் உயர்த்திக் கொள்வதிலும், கல்வியில் பால்நிலைச் சமத்துவத்தை அடைவதிலும், மக்கட்தொகை அதிகரிப்பைக் குறைப்பதிலும், தாய்சேய் நலத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன. ஆட்சிப் பிரிவுகள் வங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்கள், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. குல்னா கோட்டத்தில் 10 மாவட்டங்களும், டாக்கா கோட்டத்தில் 13 மாவட்டங்களும், சிட்டகாங் கோட்டத்தில் 11 மாவட்டங்களும், மைமன்சிங் கோட்டத்தில் 4 மாவட்டங்களும், ரங்க்பூர் கோட்டத்தில் 8 மாவட்டங்களும், ராஜசாகி கோட்டத்தில் 8 மாவட்டங்களும், பரிசால் கோட்டத்தில் 6 மாவட்டங்களும் மற்றும் சில்ஹெட் கோட்டத்தில் 4 மாவட்டங்களும் உள்ளது. மாவட்டங்களின் விவரம்: குல்னா கோட்டம் 1 குல்னா மாவட்டம் 2 ஜெஸ்சூர் மாவட்டம் 3 சத்கீரா மாவட்டம் 4 நராய்ல் மாவட்டம் 5 மெகர்பூர் மாவட்டம் 6 மகுரா மாவட்டம் 7 குஸ்தியா மாவட்டம் 8 சௌதங்கா மாவட்டம் 9 ஜெனிதக் மாவட்டம் 10 பேகர்காட் மாவட்டம் டாக்கா கோட்டம் 1 கோபால்கஞ்ச் மாவட்டம் 2 டாக்கா மாவட்டம் 3 தங்காயில் மாவட்டம் 4 சரியத்பூர் மாவட்டம் 5 நரசிங்கடி மாவட்டம் 6 நாராயண்கஞ்ச் மாவட்டம் 7 முன்சிகஞ்ச் மாவட்டம் 8 மணிகஞ்ச் மாவட்டம் 9 பரித்பூர் மாவட்டம் 10 மதாரிபூர் மாவட்டம் 11 ராஜ்பாரி மாவட்டம் 12 காஜிபூர் மாவட்டம் 13 கிசோர்கஞ்ச் மாவட்டம் சிட்டகாங் கோட்டம் 1 நவகாளி மாவட்டம் 2 லெட்சுமிபூர் மாவட்டம் 3 ரங்கமதி மாவட்டம் 4 கொமில்லா மாவட்டம் 5 காக்ஸ் பஜார் மாவட்டம் 6 சிட்டகாங் மாவட்டம் 7 பிரம்மன்பரியா மாவட்டம் 8 சந்திரபூர் மாவட்டம் 9 கக்ராச்சாரி மாவட்டம் 10 பெனி மாவட்டம் 11 பந்தர்பன் மாவட்டம் மைமன்சிங் கோட்டம் 1 மைமன்சிங் மாவட்டம் 2 செர்பூர் மாவட்டம் 3 நேத்ரோகோனா மாவட்டம் 4 ஜமால்பூர் மாவட்டம் ரங்க்பூர் கோட்டம் 1 ரங்க்பூர் மாவட்டம் 2 தாகுர்காவ்ன் மாவட்டம் 3 தினஜ்பூர் மாவட்டம் 4 நீல்பமரி மாவட்டம் 5 பஞ்சகர் மாவட்டம் 6 குரிகிராம் மாவட்டம் 7 காய்பாந்தா மாவட்டம் 8 லால்முனிர்காட் மாவட்டம் ராஜசாகி கோட்டம் 1 ராஜசாகி மாவட்டம் 2 சிராஜ்கஞ்ச் மாவட்டம் 3 பப்னா மாவட்டம் 4 நத்தோர் மாவட்டம் 5 நவகோன் மாவட்டம் 6 சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம் 7 போக்ரா மாவட்டம் 8 ஜெய்பூர்ஹட் மாவட்டம் பரிசால் கோட்டம் 1 பிரோஜ்பூர் மாவட்டம் 2 போலா மாவட்டம் 3 பரிசால் மாவட்டம் 4 பர்குனா மாவட்டம் 5 ஜலோகட்டி மாவட்டம் 6 பதுவாகாளி மாவட்டம் சில்ஹெட் கோட்டம் 1 சில்ஹெட் மாவட்டம் 2 சுனாம்கஞ்ச் மாவட்டம் 3 மௌலிபஜார் மாவட்டம் 4 ஹபிகஞ்ச் மாவட்டம் வரலாறு பண்டைக்காலம் பெரும் வங்காளப் பகுதியிலுள்ள நாகரிகத்தின் எச்சங்கள் நாலாயிரம் வருட பழைமை வாய்ந்தவை. இக்காலப்பகுதியில், திராவிட, திபெத்தோ-பர்ம மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தனர். "பங்க்லா" அல்லது "பெங்கால்" என்ற சொல்லின் சரியான மூலம் அறியப்படவில்லை. இருப்பினும், இப்பகுதிகளில் கி.மு. 1000ம் ஆண்டு காலப்பகுதியில் குடியேறிய திராவிட மொழி பேசும் குழுவான "பாங்"இலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கி.மு. 7ம்நூற்றாண்டிலிருந்து கங்கரிதாய் ராச்சியம் உருவாகியது. இது பின்னர் சிசுநாக வம்சம், நந்தர், மௌரியப் பேரரசு, சுங்கர், சாதவாகனர் மற்றும் கண்வப் பேரரசுகளின் காலப்பகுதியில், பிகாருடன் இணைந்து அப்பேரரசுகளின் கீழ் காணப்பட்டது. கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டு வரை குப்தப் பேரரசு மற்றும் ஹர்சப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் வீழ்ச்சிக்குப் பின், சசாங்கன் எனும் ஆற்றல் மிகு வங்காள தேசத்தவன் ஒரு சிறந்த, குறுகியகால அரசொன்றை நிறுவினான். சிறிதுகால, சர்வாதிகார ஆட்சியின்பின், வங்காள பௌத்த, பால வம்சம் நானூறு வருடங்கள் ஆட்சி புரிந்தது. இதன்பின், சிறிதுகாலம் இந்து சேன வம்சம் ஆட்சி புரிந்தது. மத்தியகால ஐரோப்பிய புவியியலாளர்கள் கங்கைக் கழிமுகப்பகுதியில், ஒரு சொர்க்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், 16ம் நூற்றாண்டு வரை இந்திய உபகண்டத்திலேயே செல்வச் செழிப்புமிக்க பகுதியாக வங்காளம் காணப்பட்டிருக்கக்கூடும். இப்பகுதியின் ஆரம்பகால வரலாறு, இந்துப் பேரரசுகள், உட்பூசல்கள் மற்றும் இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டி என்பவற்றால் நிரம்பியது. அராபிய முஸ்லிம் வணிகர்களால் 12ம் நூற்றாண்டளவில் வங்காளப்பகுதியில் இசுலாமிய சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. சூஃபி போதகர்கள், மற்றும் அதனையடுத்த முஸ்லிம் ஆட்சி ஆகியவை இப்பகுதி முழுவதும் இசுலாம் பரவ வழி செய்தன. துருக்கிய தளபதியான பக்தியார் கில்ஜி, 1204ல், சேன வம்சத்தின் லக்‌ஷ்மண் சேன் என்பவரைத் தோற்கடித்து, வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். இப்பகுதி அடுத்த சில நூறு வருடங்களுக்கு பல சுல்தான்களாலும், இந்து அரசர்களாலும், நிலப்பிரபுக்களாலும் (பரோ-புய்யான்கள்) ஆளப்பட்டன. 16ம் நூற்றாண்டளவில், முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, டாக்கா முகலாய நிர்வாகத்தின் முக்கிய நிலையமாக உருவானது. 1517இலிருந்து, கோவாவிலிருந்த போர்த்துக்கீச வியாபாரிகள் வங்காளத்துக்கான கடல்வழியைக் கண்டுபிடித்தனர். 1537ல் மட்டும் அவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டதோடு, சிட்டகொங்கில் சுங்கச் சாவடிகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டது. 1577ல், முகலாயப் பேரரசரான அக்பர், நிலையான குடியேற்றங்களை அமைக்கவும், தேவாலயங்கள் அமைக்கவும் போர்த்துக்கீசருக்கு அனுமதி வழங்கினார். ஐரோப்பிய வணிகர்களின் செல்வாக்கு அதிகரித்து, இறுதியில் 1757 பிளாசிப் போரின் பின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின், இதன் அதிகாரம் பிரித்தானிய முடியின் கீழ் வந்ததுடன், பிரித்தானிய வைஸ்ராய் இதன் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டார். காலனித்துவ ஆட்சியின்போது, தெற்காசியா முழுவதும் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டன. இவற்றுள் 1943ன் வங்காளப் பெரும் பஞ்சம் காரணமாக 3 மில்லியன் பேர் இறந்தனர். 18ம் நூற்றாண்டில் இந்துப் பேரரசான மராத்தியப் பேரரசு, முகலாயர்களைத் தோற்கடித்ததோடு, 1742க்கும் 1751க்கும் இடையில் வங்காளத்தின் நவாப்பின் கீழிருந்த பகுதிகளையும் அழித்தது. நவாபின் ஆட்சியின் கீழிருந்த வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளின் மீதான மராத்தியப் பேரசின் தொடர் தாக்குதல்களால் வங்காளப் பொருளாதாரம் அழிவடைந்தது. இதனால் மராத்தியப் பேரரசின் தொடர் தாக்குதல்களுக்கு அதனால் முகங்கொடுக்க முடியவில்லை. நவாப் அலி வர்தி கான் மராத்தியப் பேரரசுடன் சமாதான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு முழு ஒரிசாவையும், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளையும், மராத்தியப் பேரரசுக்கு அளித்தான். இதற்கு மேலதிகமாக வங்காளத்தின் ஏனைய பகுதிகளிலும் பீகாரிலும் வசூலிக்கப்படும் வரியில், கால்பங்கை திறையாக(சௌத்) அளிக்கவும் ஒப்புக்கொண்டான். இது அண்ணளவாக வருடத்துக்கு, வங்காளத்திலிருந்து 20 லட்சங்களும், பீகாரிலிருந்து 12 லட்சங்களும் ஆகும். பனிபட்டில் முசுலீம் கூட்டுப் படைகளுடனான போரில் மராத்தியப் பேரரசின் தோல்விக்குப்பின் இப்பேரரசு மராத்தியத் தளபதியான மாதோஜி சிந்தியாவிடம் கையளிக்கப்பட்டது. இவர் மீண்டும் வங்காளம் மீது படையெடுத்தார். 1760களில், வங்காளப் பகுதிகளை ஆக்கிரமித்த பிரித்தானிய இந்தியப் பேரரசு, சௌத் வரியை வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதனால் வங்காளம் மீதான மராத்தியரின் படையெடுப்பு தொடர்ந்தது. இறுதியில், 1777இலிருந்து 1818 வரை நடைபெற்ற மூன்று ஆங்கில-மராத்தியப் போர்களில் மராத்தியப் பேரரசு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டு 1905க்கும் 1911க்கும் இடையில், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்குப் பகுதியொன்றை உருவாக்கும் நிறைவேற்றப்படாத வங்காள மாகாணத்தை இரண்டு பகுதிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1947ல் பிரித்தானியப் பேரரசின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. இதன் மேற்குப்பகுதி இந்தியாவுடன் இணைய கிழக்குப்பகுதி (முசுலிம் பெரும்பான்மை) டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், பாகிஸ்தானுடன் இணைந்தது. 1950ல், கிழக்கு வங்காளத்தில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மானியமுறை ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது. பொருளாதார மற்றும் மக்கட்தொகை விகிதாசாரத்தில் கிழக்குப் பகுதி செல்வாக்குச் செலுத்தினாலும், பாகிஸ்தானின் அரசாங்கமும், ராணுவமும், மேற்குப்பகுதியின் உயர் வகுப்பினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. 1952ன் வங்காள மொழி இயக்கமே கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதல் விரிசலாக அமைந்தது. அடுத்த பத்தாண்டுகளில், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மத்திய அரசாங்கத்துடனான பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கின. இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. 1960களில், இது சுயாட்சிக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1966ல் அதன் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான் (முஜிப்) சிறையிலிடப்பட்டார். 1969ல், வரலாறு காணாத பிரபல்யமான கிளர்ச்சியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். 1970ல், ஒரு பாரிய சூறாவளி கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை அழித்ததோடு, ஐந்து லட்சம் பேரையும் கொன்றது. எனினும், மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1970 தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி ஆட்சியமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டமையால் வங்காள மக்களின் கோபம் அதிகரித்தது. முஜிபுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதைத் தொடர்ந்து, சனாதிபதி யாஹ்யா கான் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒப்பரேசன் சேர்ச்லைட் எனப்பட்ட ராணுவ நடவடிக்கையை கிழக்குப் பாகிஸ்தான் மீது நடத்தினர். இதன் மூலம், மார்ச்சு 26, 1971ல், அதிகாலை நேரத்தில், முஜிபுர் ரகுமானைக் கைது செய்தனர். யாஹ்யா கானின் இந்நடவடிக்கை மிகவும் கொடூரமானதாக இருந்ததோடு, போரின்போது இடம்பெற்ற வன்முறைகளால் பலர் இறந்தனர். இதில் முக்கிய இலக்குகளாக இருந்தோர் அறிஞர்களும் இந்துக்களுமாவர். மேலும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் அருகிலுள்ள இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர். போரின்போது படுகொலை செய்யப்பட்டோர் தொகை முப்பதினாயிரத்திலிருந்து, மூன்று மில்லியன் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நேரடித் தலையீடு காரணமாக சனவரி 8, 1972ல் முஜிபுர் ரகுமான் விடுதலை செய்யப்பட்டார். அவாமி லீக்கின் தலைவர்கள் இந்தியாவின் கல்கத்தாவில் நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டனர். ஏப்ரல் 17, 1971ல், அது கிழக்கு பாகிஸ்தானின் குஸ்தியா மாவட்டத்திலுள்ள மெஹெர்பூரில் முறையாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது. இதன்படி, தாஜுதீன் அஹமட் முதல் பிரதமராகவும், சையத் நஸ்ருல் இஸ்லாம் தற்காலிக சனாதிபதியாகவும் பதவியேற்றனர். வங்காளதேச விடுதலைப் போர் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வங்காளப் படைவீரர்களைக் கொண்ட தளபதி M.A.G. ஒஸ்மானியால் வழிநடத்தப்பட்ட, வங்காள தேசப் படைகள், 11 பகுதிகளாகப் பிரிந்து பாகிஸ்தானியப் படைகளுக்கெதிராக பாரிய கெரில்லாப் போரை தொடுத்தன. இதற்கு உதவியாக, இந்திய ராணுவத்தால் உதவி வழங்கப்பட்ட, மேஜர் ஜெனரல். சுஜித் சிங் உபன் தலைமையிலான, கதெரியா வாகினி, ஹெமாயத் வாகினி ஆகியவற்றைக் கொண்ட முக்தி வாகினி எனும் அமைப்பும் போரில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் டாகா பகுதியைச் சுற்றி வளைத்ததுடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. மார்ச் 19, 1972 வரை இந்திய ராணுவம் வங்காளதேசத்தில் தங்கியிருந்தது. சுதந்திரத்தின் பின், வங்காளதேசம் அவாமி லீக்கால் ஆளப்பட்டது. தேர்தல் நடத்தப்படாமல் முஜிப் பிரதமராக ஆனார். 1973 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அவாமி லீக் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 1973 மற்றும் 1974 காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் பஞ்சம் ஏற்பட்டது. மேலும் 1975ல் முற்பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட BAKSAL கட்சியை மட்டும் கொண்ட ஒருகட்சி சோசலிச ஆட்சியை ஏற்படுத்தினார். ஆகத்து 15, 1975ல், முஜிபும், அவரது குடும்பத்தினரும் இடைநிலை ராணுவத் தலைவர்களால், படுகொலை செய்யப்பட்டனர். உப- சனாதிபதி கன்டகெர் முஷ்டாக் அஹமட் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் முஜிபின் அமைச்சரவையில் பெரிய மாறுதல்கள் ஏற்படவில்லை. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7, 1975 ஆகிய இருதினங்களில் நடைபெற்ற ராணுவக் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பதற்காக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. முஷ்டாக் பதவி விலகியதுடன் நாட்டில் ராணுவ ஆட்சி அமுலாக்கப்பட்டது. புதிய சனாதிபதியாக முதன்மை ராணுவ நிர்வாகியும், நீதிபதியுமாகிய அபு சதம் பதவியேற்றார். இவரது பதில் நிர்வாகிகளாக மூன்று முதன்மை சேவை அதிகாரிகள் செயற்பட்டனர். 1977ல் நீதிபதி சாயெம் பதவி விலகியதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் சியாவுர் ரகுமான் சனாதிபதியாகப் பதவியேற்றார். இவர் பலகட்சி அரசியலை மீண்டும் கொண்டுவந்ததோடு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார். மேலும் வங்காளதேச தேசியக் கட்சி எனும் கட்சியையும் உருவாக்கினார். 1981ல் ராணுவ அதிகாரிகளால் சியாவுர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. மார்ச்சு 24, 1982ல் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் அடுத்த ஆட்சியாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஹொசைன் மொகமட் எர்சாத் பதவியேற்றார். திசம்பர் 6, 1990ல், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுடன் மேற்கத்தைய சக்திகளின் (சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட பாரிய கொள்கை மாற்றம்) அழுத்தம் காரணமாக இவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்பின், வங்காளத்தேசம் நாடாளுமன்ற சனநாயக ஆட்சிக்கு மாறியது. சியாவின் விதவை மனைவியான, காலிதா சியா வங்காளதேச தேசியக் கட்சியை வழிநடத்தி, 1991 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம், வங்காளதேச வரலாற்றிலேயே முதலாவது பெண் பிரதமரானார். எவ்வாறாயினும், முஜிபின் மகள்களில் ஒருவரான சேக் ஹசினாவால் வழிநடத்தப்பட்ட அவாமி லீக் கட்சி 1996ல் நடைபெற்ற அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றது. 2001ல் நடைபெற்ற தேர்தலில் வங்காளதேச தேசியக் கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தது. 21ம் நூற்றாண்டு சனவரி 11, 2007ல், அவாமி லீக்கினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பநிலையைத் தொடர்ந்து, வங்காளதேச ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புக்கள் ஒரு நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவு வழங்கின. இடைக்கால அரசாங்கமே, அடுத்த தேர்தலை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டது. நாடு பாரியளவிலான ஊழல், ஒழுங்கின்மை மற்றும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் காணப்பட்ட ஊழலை வேரோடு அழிப்பதை முதன்மையாகக் கொண்டு செயற்பட்டது. இதன்படி, பல குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஊழல் முறைகேட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். திசம்பர் 29, 2008ல் இடைக்கால அரசாங்கம் நீதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தலை நடத்தியது. அவாமி லீக்கின் சேக் ஹசீனா இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று, சனவரி 6, 2009ல் பிரதமராகப் பதவியேற்றார். எல்லை பிரிப்பு 2015 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி நள்ளிரவு பல நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லைப் பரிமாற்றம் தீர்க்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்குழு தலைவராக தீப்திமன் சென்குப்தா செயல்பட்டார். வங்கதேச நிலப்பகுதியில் வாழும் 14,000 மக்கள் முதல் 51,000 பேருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டது. அதேபோல் வங்க தேசப்பகுதில் அமைந்துள்ள இந்தியப்பகுதில் குடியிருக்கும் 1,000 பேர் வங்க தேச குடியுரிமை பெற்றார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 17,160 ஏக்கர் நிலம் வங்காள தேசத்திற்கும்,7,110 ஏக்கர் வங்காளப்பகுதி இந்தியாவிற்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மேற்கோள்கள் முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் தெற்காசிய நாடுகள் வங்காளம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
5528
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
தங்கம்
தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ளப் பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 79. இதன் சாரடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது. இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது. தங்கத்தின் தன்மை தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒருபங்கு நைத்திரிக் அமிலமும் மூன்று பங்கு ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும். தங்கம் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை வெகுவாகத் தெறிக்கவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்துடன் இது செங்கீழ்க்கதிர்களைத் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்தன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது. தங்கத்தின் வேதியியல் உயர் உலோகங்களில் தங்கம் ஒர் உன்னதமான உலோகமாக இருந்தாலும், அது பல வேறுபட்ட சேர்மங்களை உருவாக்குகிறது. தங்கத்தின் சேர்மங்களில் தங்கமானது -1 முதல் +5 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. ஆனால் Au(I) மற்றும் Au(III) சேர்மங்கள் தங்கத்தின் வேதியியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. Au(I) ஆரசு அயனி என்று அழைக்கப்படுகிறது. இதுவே தயோ ஈதர்கள், தயோலேட்டுகள், மூவிணைய பாசுபீன்கள் போன்ற மென்மையான ஈந்தணைவிகள் உடன் பொதுவாக காணப்படும் ஆக்சிசனேற்ற நிலையாகும். Au(I) சேர்மங்கள் குறிப்பாக நேர்கோட்டு அமைப்பில் உள்ள சேர்மங்களாகும். Au(CN)2− இதற்கு சரியான உதாரணமாகும். சுரங்கங்களில் காணப்படும் கரையும் நிலையில் உள்ள தங்கத்தின் சேர்மம் இதுவாகும். AuCl போன்ற தங்க ஆலைடுகள் கோணல் மாணலான பலபடி சங்கிலிகளாக உருவாகின்றன. இவையும் தங்கத்துடன் நேர்கோட்டு ஒருங்கிணைப்பை கொண்டுள்ளன. தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான மருந்துகள் Au(I) அயனியின் வழிப்பொருள்களாகும். Au(III) என்ற குறியீடு குறிக்கும் ஆரிக் என்பது பொதுவான ஒரு ஆக்சிசனேற்ற நிலையாகும். தங்கம்(III) குளோரைடைக் கொண்டு இது விவரிக்கப்படுகிறது. (Au2Cl6). Au(III) அணைவுச் சேர்மங்களில் மற்ற d8 சேர்மங்கள் போல தங்க அணு மையமாக இருக்கிறது. குறிப்பாக இவை சகப்பிணைப்புத் தன்மையும் அயனித் தன்மையும் கொண்ட சதுரதள கட்டமைப்பில் காணப்படுகின்றன. எந்த வெப்பநிலையிலும் தங்கம் ஆக்சிசனுடன் வினைபுரியாது. மற்றும் 100 ° செல்சியசு வெப்பநிலை வரை ஓசோன் தாக்குதலை இது எதிர்க்கும். சில தனி ஆலசன்கள் தங்கத்துடன் வினைபுரிகின்ரன. இளம் சிவப்பு வெப்பநிலையில் தங்கம் புளோரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு தங்கம்(III) புளோரைடு உருவாகிறது. . 180 ° செல்சியசு வெப்பநிலையில் தூளாக்கப்பட்ட தங்கம் குளோரினுடன் வினைபுரிந்து AuCl3 சேர்மத்தை உருவாக்குகிறது. 140 ° செல்சியசு வெப்பநிலையில் தங்கம் புரோமினுடன் வினைபுரிந்து தங்கம் (III) சேர்மத்தை உருவாக்குகிறது. ஆனால் அயோடினுடன் மிக மெதுவாக வினைபுரிந்து ஒற்றை அயோடைடை உருவாக்குகிறது. தங்கம் நேரடியாக கந்தகத்துடன் வினைபுரிவதில்லை. ஆனால் குளோரோ ஆரிக் அமிலத்தின் வழியாக அல்லது நீர்த்த தங்கம்(III) குளோரைடு வழியாக ஐதரசன் சல்பைடு வாயுவை செலுத்தினால் தங்கம்(III) சல்பைடு உருவாகிறது. அறை வெப்பநிலையில் தங்கம் உடனடியாக கரைந்து இரசக் கலவையையும், உயர் வெப்பநிலைகளில் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களையும் தருகிறது. இக்கலப்புலோகங்கள் கடினத்தன்மையை திருத்தவும், உலோகவியல் பண்புகளை மாற்றவும் உருவாக்கப்படுகின்றன. மேலும் இவை உருகுநிலையை கட்டுபடுத்தவும், கவர்ச்சிகரமான நிறங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. தங்கம் பொட்டாசியம், ருபிடியம், சிசியம், அல்லது டெட்ராமெத்திலமோனியம் போன்றவற்றுடன் வினைபுரிந்து அவற்றுடன் தொடர்புடைய ஆரைடு உப்புகளைக் கொடுக்கிறது. இவ்வுப்புகளில் Au− அயனி இடம்பெற்றுள்ளது. சீசியம் ஆரைடு அநேகமாய் ஒரு பிரபலமான ஆரைடு உப்பு ஆகும். பல அமிலங்களால் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், ஐதரோபுரோமிக் அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம், ஐதரோபுளோரிக் அமிலம், ஐதரோ அயோடிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் தங்கம் வினைபுரிவதில்லை.செலீனிக் அமிலத்துடனும் தங்கம் வினைபுரிவதில்லை. நைட்ரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் 1:3 என்ற விகிதத்தில் கலந்து உருவாகும் இராச திராவகத்தில் இது கரைகிறது. நைட்ரிக் அமிலம் மிகக் குறைவான அளவில் தங்கத்தை ஆக்சிசனேற்றம் செய்து +3 அயனியாக மாற்றுகிறது. வினையின் வேதிச்சமநிலை காரணமாக தூய அமிலத்தில் இதைக் கண்டறிய முடியாது. எனினும் சமநிலையிலிருந்து அயனிகள் ஐதரோ குளோரிக் அமிலத்தால் நீக்கப்படுகின்றன. AuCl4− அயனிகள் அல்லது குளோரோ ஆரிக் அமிலம் உருவாகி வினையை மேலும் தொடர்ந்து நடக்கத் துணைபுரிகிறது. பலவகையான காரங்களாலும் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. நீரிய, திண்ம அல்லது உருகிய சோடியம் அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடுகளுடன் இது வினைபுரிவதில்லை. இருப்பினும், கார நிபந்தனைகளுடன் ஆக்சிசனின் முன்னிலையில் சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிந்து கரையக்கூடிய அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. நன்கு வரையறுக்கப்பட்ட எண்ணற்ற தொகுதிச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. இது போன்ற இனங்களில் தங்கம் பின்ன ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. எண்முக இனமான {Au(P(C6H5)3)}62+இதற்கு சரியான எடுத்துக் காட்டாகும். தங்க சல்பைடு போன்ற தங்க சால்கோசனைட்டுகள் சம அளவில் Au(I) மற்றும் Au(III) அயனிகளைக் கொண்டுள்ளன. நச்சுத்தன்மை தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் தங்க இலை போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. and is sometimes used as a food decoration in the form of gold leaf. அதுமட்டுமன்றி கோல்ட்ச்லாஜர்., கோல்ட் ஸ்ரைக், கோல்ட் வாஜர் போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். தங்க உப்புகள் மற்றும் தங்கக் குளோரைட் ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். தங்கத்தின் மதிப்பு தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். 2015 ஆம் ஆண்டளவில் நிலத்தின் கீழ் 186,700 தொன் எடையான தங்கம் காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் "இவ்வருடத்தின் ஒவ்வாமையை ஏற்படுத்துவான்" எனும் தேர்தலில் தங்கமானது அதிக வாக்குகள் பெற்றது. தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் நிக்கல் போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். தங்கச் சுரங்கம் தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது. விலை 2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் ஒரு கிராம் தங்கத்தின் பெறுமதி 39 அமெரிக்க டொலர்கள் ஆகும். தங்கத்தை இறக்குமதி செய்வது குறைத்து இந்தியாவிற்குள்ளே இருக்கும் தங்கம் சுழற்சி செய்யப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையவும், குறிப்பாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையவும் வழி உருவாக்கும். ( தங்கத்தின் விலை ஏறுகிறதா, ஏமாற்றுகிறதா, க. மாரிக்கனி, ஓருலகம் பதிப்பகம், புதிய எண் 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33 ) நாணயச் செலாவணி ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது. பயன்பாடு தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. உற்பத்தி உலகத் தங்கச் சபையின் கூற்றுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டளவில் பூமிக்குக் கீழே 183,600 தொன் எடையுள்ள தங்கம் காணப்படுகின்றது. இது 21 மீற்றர் நீளமுள்ள சதுரமுகி ஒன்றின் கனவளவிற்குச் சமமானதாகும். இதன் மதிப்பு 6.3 ரில்லியன் அமெரிக்க் டொலர்கள் ஆகும். 2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக சீனா விளங்குகிறது. சீனா 430 தொன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும், உருசியாவும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன. இவை முறையே 274 மற்றும் 247 தொன் எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்துள்ளன. எனினும் தங்க உற்பத்தி மூலம் பாரிய ஆபத்தான மாசு சூழலில் இடம்பெறுகின்றது. அகழ்தல் 1880களிலிருந்து தென்னாபிரிக்காவே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாடாகவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, சீனா 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது. 2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும். நுகர்வு முக்கியத்துவம் தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். உசாத்துணை குழந்தைகள் கலைக் களஞ்சியம்- தொகுதி ஐந்து. - தமிழ் வளர்ச்சிக் கழகம் - 1986 இளையர் அறிவியல் களஞ்சியம் -.மணவை பப்ளிகேஷன் வெளியீடு -1995 வெளி இணைப்புகள் மேற்கோள்கள் தனிமங்கள் அரிய உலோகங்கள் தாண்டல் உலோகங்கள் மின் கடத்திகள் உயர் உலோகங்கள் கனசதுரக் கனிமங்கள் தாயகத் தனிமக் கனிமங்கள்
5533
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
ஆண்டுத் தாவரம்
ஆண்டுத் தாவரம் () அல்லது ஓராண்டுத் தாவரம் (Annual plant) எனப்படுவது ஒற்றை வளர் பருவத்திலேயே முளைத்து, வளர்ந்து, பூத்து, விதை உண்டாக்கி, மடிந்து தன் வாழ்க்கைச் சுற்றை முடித்துக்கொள்ளும் ஒரு தாவரமாகும். பொதுவாக, ஆண்டுத் தாவரங்கள் கோடை ஆண்டுத் தாவரம், குளிர்கால ஆண்டுத் தாவரமென இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கோடை ஆண்டுத் தாவரம் வசந்தத்திலோ கோடைத் தொடக்கத்திலோ முளைத்து, அவ்வாண்டின் இலையுதிர் காலத்துக்குள்ளாகவே முதிர்ச்சியடைந்துவிடும். குளிர்கால ஆண்டுத் தாவரம் இலையுதிர்காலத்தில் முளைத்து, அடுத்த வசந்தத்திலோ கோடையிலோ முதிர்ச்சியடையும். இத்தாவரங்கள் ஆண்டுத் தாவரங்களென அழைக்கப்பட்டாலும், இத்தாவரங்களின் வளர் பருவமும் அது நடைபெறும் காலமும் இடத்தையும் தாவர இனத்தையும் பொருத்தே அமைகிறது. நூல்கோல் கிழங்கு (Oilseed rapa) போன்ற சில ஆண்டுத் தாவரங்கள் ஒளிர் விளக்குகளின் கிழ் விதையிலிருந்து முளைத்து விதையாகத் திரும்புவதற்குச் சில வாரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. இத்தாவரங்கள் தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கின்றன. நெல், சோளம், பருத்தி, தர்ப்பூசணி போன்றவை ஆண்டுத் தாவர எடுத்துக்காட்டுகளாகும். இவற்றையும் பார்க்கவும் இருபருவத் தாவரம் -- தன் வாழ்க்கைச் சுற்றை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யும் தாவரமாகும் பல்லாண்டுத் தாவரம் -- இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழும் தாவரமாகும் மேற்கோள்கள் தாவர வகைகள்
5535
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
ஈராண்டுத் தாவரம்
12 முதல் 24 மாதங்கள் வாழ் நாளுடைய தாவரங்கள் ஈராண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். இத்தாவரங்கள், முதல் ஆண்டில் இலை மற்றும் தண்டுப்பகுதிகளில் வளர்ச்சி அடைந்து குளிர் காலத்தில் உறங்கு நிலை அடைகின்றன. அதற்கு அடுத்து வரும் கோடை அல்லது வசந்த காலத்தில் பூக்கள், கனிகள் மற்றும் விதைகளை உருவாக்கி விட்டு மடிகின்றன. (எடுத்துக்காட்டு-கேரட்) இவற்றையும் பார்க்கவும் ஆண்டுத் தாவரம் பல்லாண்டுத் தாவரம் தாவர வகைகள்
5539
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கலைக்களஞ்சியம்
கலைக்களஞ்சியம் () (Encyclopedia) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன. சமூக தலைமைப்பண்பு 18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: இயல்புகள் இன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை. மேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன. ஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்பன. கலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாக இருக்கலாம். இவை, ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைப்புக்களில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் (எ.கா: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்). கலைக்களஞ்சியங்கள் ஒரு குறிப்பிட்ட துறை எல்லைக்குள் அடங்கும் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது உண்டு. இவை மருத்துவக் கலைக்களஞ்சியம், மெய்யியல் கலைக்களஞ்சியம், சட்டத்துறைக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் அமையும். இவற்றில் உள்ளடக்கப்படும் ஆக்கங்களின் ஆழ அகலங்கள் அவற்றின் பயனர்களின் தன்மையைப் பொருத்து அமையும். கலைக்களஞ்சியங்கள் ஒரு சான்றுகோளாக அமையத்தக்க உசாத்துணை ஆக்கமாக அமைய வேண்டும் எனில் அது முறைப்படியான ஒழுங்கு ஒன்றில் அமைய வேண்டும். கடந்த காலங்களில் அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் இரண்டு தலைமையான முறைகளில் ஒன்றில் ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை அகரவரிசை முறை, வகைகளின் படிமுறையமைப்பு முறை என்பனவாகும். முதல் முறையே இன்று மிகப் பொதுவாகக் கையாளப்படும் முறையாகும். சிறப்பாகப் பொதுக் கலைக்களஞ்சியங்கள் இம்முறையிலேயே ஒழுங்கமைக்கப் படுகின்றன. தற்காலத்தில் மின்னணு ஊடகங்கள் ஒரே நேரத்தில் பல முறைகளில் உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்கும் வசதிகளை அளிக்கின்றன. அத்துடன் மின்னணு ஊடகங்கள் முன்னர் நினைத்தும் பார்த்திராத தேடல் வசதிகள், இணைப்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன. தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல்லூடகங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்தல், சரிபார்த்தல், ஒன்றாக்குதல், வெளிப்படுத்துதல் போன்றவைகளில் பெருமளவிலான தாக்கங்களை எற்படுத்தி வருகின்றன. எளிமையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த எவ்ரித்திங்2, என்கார்ட்டா, எச்2ஜி2, விக்கிப்பீடியா போன்றவை புதிய வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள இடைக்காலத்துக்கான அகரமுதலி (Dictionary of the Middle Ages), அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி (Dictionary of American Naval Fighting Ships), பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி (Black's Law Dictionary) என்பவற்றைக் கூறலாம். வரலாறு மூத்த பிளினி கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் நாட்சுராலிசு இசுட்டோரியா (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்: இயற்கை உலகம் அல்லது வாழ்க்கை என்னும் என்னுடைய தலைப்பு வரண்டது. மிகக் குறைந்த அளவுக்கு மதிக்கப்படும் ஒரு துறை. பட்டிக்காட்டுத்தனமான சொற்களையோ அந்நியமான காட்டுமிராண்டித் தனமான சொற்களையோ தான் வருத்ததுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதற்கான பாதை எழுத்தாளர்களால் ஏற்கனவே செழுமை ஆக்கப்பட்டதோ அல்லது எவராவது இவ்வழியில் செல்வதற்கு விருப்பப்பட்டதோ இல்லை. எங்களில் எவரும் இதற்கு முயன்றதும் இல்லை, அல்லது ஒரு கிரேக்கனாவது தனியாக இத் தலைப்பின் எல்லாப் பிரிவுகளையும் கையாண்டதும் இல்லை. இதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்ற துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது. இடைக் காலம் இடைக் காலத்தின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான எட்டிமோலொச்சியே (Etymologiae - கிபி 630) என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும். பார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது. இசுலாமும் பாரசீகமும் இடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. சீனா 11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான சோங்கின் பெரிய நான்கு நூல்கள் என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென் குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது. 17 – 19 ஆம் நூற்றாண்டுகள் பொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728), டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் என்சைக்கிளோபீடியே (Encyclopédie – 1751), பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், கான்வசேசன்ஸ் லெக்சிக்கன் (Conversations-Lexikon) என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன. பிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் சியூடோடாக்சியா எப்பிடமிக்கா (Pseudodoxia Epidemica) என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட "படைப்பின் அளவுத்திட்டம்" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது. (Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves). தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் "அறிவியல்" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம். இவற்றையும் பார்க்கவும் தமிழ்க் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Hindupedia, encyclopedia of Hindu Dharma CNET's encyclopedia meta-search (includes Wikipedia) Encyclopaedia and Hypertext Internet Accuracy Project – Biographical errors in encyclopedias and almanacs Encyclopedia – Diderot's article on the Encyclopedia from the original பிரெஞ்சு கலைக்களஞ்சியம். De expetendis et fugiendis rebus – First Renaissance encyclopedia Science Dictionary  – Online Comprehensive Science Encyclopedia Errors and inconsistencies in several printed reference books and encyclopedias Digital encyclopedias put the world at your fingertips – CNET article Encyclopedias online University of Wisconsin – Stout listing by category Chambers' Cyclopaedia, 1728, with the 1753 supplement Encyclopædia Americana, 1851, Francis Lieber ed. (Boston: Mussey & Co.) at the University of Michigan Making of America site Encyclopædia Britannica, articles and illustrations from 9th ed., 1875–89, and 10th ed., 1902–03. Encyclopædia Britannica, 11th ed., 1911, at the LoveToKnow site. Encyclopedia Sites list
5541
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
தேசவழமைச் சட்டம்
தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் காரணமாக ஒல்லாந்தரால் இது 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்ட மூலமாக்கப்பட்டது. இச்சட்டமானது பின்னர் 1869 இலும் பின் 1911 இலும் கடைசியாக 1947 இலும் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளை விபரிக்கின்றது. இலங்கையில் பொதுவான சட்டமான பொதுச் சட்டக் கோவைக்கு மேலதிகமாக உள்ள மூன்று சட்டங்களில் தேசவழமைச் சட்டமும் ஒன்று. ஏனையவை இரண்டும், கண்டிச் சட்டம், இசுலாமியச் சட்டம் ஆகியவையாகும். கண்டிச் சட்டமானது கண்டி வாழ் பெளத்தர்களுக்கும், இசுலாமியச் சட்டமானது இலங்கை வாழ் இசுலாமியர்களுக்கும், தேசவழமைச் சட்டமானது வட மாகாணத்தில் வாழும் மக்களுக்கும் மாத்திரமே இயல்புடையதாகிறது. வரலாறு கிபி 1620 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையின் வடபகுதியில், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியான நாடு இருந்தது. இதுவே யாழ்ப்பாண அரசு அல்லது யாழ்ப்பாண இராச்சியம் எனப்படுகின்றது. முடியாட்சி முறையின் கீழ் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாண இராச்சியத்தில், சட்டம் ஒழுங்கு முதலியவை எழுத்தில் இல்லாத ஆனால், குறைந்தது மூன்று, நான்கு நூற்றாண்டுகளாகவாவது நடைமுறையில் இருந்து வளர்ந்த ஒரு சட்டமுறை இருந்திருக்கிறது. கி.பி 1620 இல் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பின்னரும், அவர்கள், யாழ்ப்பாணத்தின் உள்ளூர் முதலிமார்கள் ஊடாகவே மக்களைக் கட்டுப்படுத்தி வந்தமையால் பழைய நடைமுறைகளே யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டன. ஒல்லாந்தர் ஆட்சியில் சட்டவாக்கல் 1658 இல் யாழ்ப்பாணம் போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் கைக்கு மாறியது. எனினும், முன்போலவே, மரபு வழியான விடயங்கள் எல்லாவற்றிலும் பழைய நடைமுறைகளே, அதாவது வழமைகளே பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாண இராச்சியத்தின் குடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை எழுத்து மூலமாகத் தொகுக்கும் பொறுப்பு, அன்றைய டச்சு ஆளுனர் கோர்னெலிஸ் ஜோன் சைமன்ஸ் (Cornelis Joan Simons) என்பவரால் யாழ்ப்பாணத்தில் திசாவை (Dessave) பதவி வகித்த கிளாஸ் ஈசாக்ஸ் (Class Issaksz) என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர், யாழ்ப்பாணத்து முதலியார்கள் 12 பேரின் உதவியுடன் நாட்டின் வழமைகளைத் தொகுத்தார். இதுவே தேசவழமைச் சட்டம் எனப்படுகின்றது. ஜூன் 4, 1707 ஆம் ஆண்டில் ஒல்லாந்த அரசினால் யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சட்டம் டச்சு மொழியில் எழுதப்பட்டுத் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முக்கிய அம்சங்கள் கிளாஸ் ஈசாக்ஸ், இத் தொகுப்புக்காகத் தான் எழுதிய முன்னுரையில் இத் தொகுப்பு தொடர்பான பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். தொகுப்பில் அடங்கியவை யாழ்ப்பாண நாயன் பட்டினத்தில் நடந்து வருகிற வழமைகள் என்பது. இத் தேசத்தவரின் சென்மசுபாவமான வழமைகளின்படி நியாயத் தலங்களில் நீதி செலுத்தப்பட்டு வருகிறது என்பது. ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை. "தேசவழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமையாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடு வைத்துள்ளவர்கள் விலைப்படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர்". சொத்துடைமைகள் தேச வழமைச் சட்டத்தின்படி சொத்துடைமைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் ஆகியனவாகும். முதுசொம் என்பது கணவர் வழிவந்த மரபுரிமைச் சொத்தாகும். சீதனம் என்பது மனைவியின் தாய் வழி வந்த மரபுரிமைச் சொத்தாகும். தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தங்கள் மண வாழ்வின் போது தேடிக் கொண்ட சொத்துக்களாகும். ஒரு குடும்பத்தின் புதல்வியர் தாயின் சீதனச் சொத்தையும், புதல்வர் தந்தையின் முதுசொச் சொத்தையும் அடைவர். தேடிய தேட்டமானது புதல்வரிடையேயும் புதல்வியரிடையேயும் சரி சமமாகப் பிரிக்கப்படுகின்றது. இவ்விதம் பரம்பரைச் சொத்தானது கணவனுடனும் மனைவியுடனும் தனித்தனியாக பேணப்படுகிறது. ஒரு விதவை மறுமணம் செய்யுமிடத்து அவருடைய சீதனச் சொத்தானது அவருடைய இருமண புதல்வியருக்கும் பங்கிடப்படுகின்றது. மனைவியை இழந்தவர் மறுமணம் செய்யுமிடத்து அவருடைய இறந்த மனைவியின் சீதனச் சொத்துக்களை அம்மனைவியின் பெண்பிள்ளைகளுக்கும், தனது முதுச சொத்துக்களில் பாதியை அம்மனைவியின் ஆண் பிள்ளைகளுக்கும், தேடிய தேட்டத்தில் பாதியை அம்மனைவியின் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தல் அவசியமாகிறது. மணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப்பட்ட சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருவதுடன் தேடிய தேட்டத்தில் ஐம்பது சதவிகிதமும் அவருக்கு வழங்கப்பட வேண்டும். பெண்ணின் சீதனத்தில் ஆண் செலவு செய்திருப்பின் அத்தொகையும் பெண்ணுக்கு வழங்கப்படல் வேண்டும். இச்சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பாக இருந்ததுடன், சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் அக்காலச் சமூகத்தில் விதவைக்கும் விவாகரத்தாகிய பெண்ணுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கும் அனுகூலமான சட்டமாக இதனைக் கருதலாம் இவற்றையும் பார்க்க முக்குவர் சட்டம் கண்டிச் சட்டம் இசுலாமியச் சட்டம் உசாத்துணை John H. Martyn, Notes on Jaffna'', American Ceylon Mission Press, Tellippalai, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அம்பலவாணர் சிவராஜா, இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் - நூலகம் திட்டம் தேசவழமைச் சட்டமும் சாதியமும், ராகவன் இலங்கைப் பண்பாடு
5542
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29, 1945) இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார். இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரிக்கா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டபடிப்பை முடித்தவர். இவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார். இலங்கை திரும்பிய சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார். 1974 இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1976 - 1977 காலப்பகுதியில், கொத்தணிப் பண்ணைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.1976- 1979 காலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட ஆலோசகராக பணியாற்றினார். 1978 இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார். குமாரணதுங்க 1988இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். 1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார். 1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார்..டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.. அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.. அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார். மேற்கோள்கள் சார்புடைய கட்டுரைகள் ஆட்சியாளர் பட்டியல், இலங்கை வெளியிணைப்புகள் பி.பி.சி.யில் தேடல் சந்திரிக்கா பற்றிய பி.பி.சி. செய்தி தேடல்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இலங்கை அரச தளத்தி சந்திரிக்கா பற்றிய பக்கம் சிங்கள அரசியல்வாதிகள் இலங்கை அரசியல்வாதிகள் பண்டாரநாயக்கா குடும்பம் இலங்கைப் பிரதமர்கள் 1945 பிறப்புகள் வாழும் நபர்கள் பெண் அரசுத் தலைவர்கள் இலங்கைப் பெண் அரசியல்வாதிகள் இலங்கையின் நிதி அமைச்சர்கள் இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
5554
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின்படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், ஜோதிடக்கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள் பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை: வாரம் திதி கரணம் நட்சத்திரம் யோகம் என்பனவாகும். வாரம் இங்கே வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை: ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை என்னும் ஏழுமாகும். ஒவ்வொரு நாளும் மேற் குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைக் கொண்டிருக்கும். இங்கே காட்டப்பட்ட ஒழுங்கின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் கிழமைப் பெயர்கள் சனிக்கிழமைக்குப் பின் மீண்டும் ஞாயிற்றில் தொடங்கிச் சுழற்சி முறையில் வரும். திதி திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு: கரணம் ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர். 11 கரணப் பெயர்களும் வருமாறு: பவம் பாலவம் கௌலவம் சைதுளை கரசை வனசை பத்திரை சகுனி சதுஷ்பாதம் நாகவம் கிமிஸ்துக்கினம் நட்சத்திரம் நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு: யோகம் சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம். யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது: (சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20' இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும். நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். தற்காலத்தில் இணையத்திலும், சோதிடம் சார்ந்த பல தளங்களில் குறித்த ஒரு நேரத்தின் யோகத்தை அறிந்து கொள்வதற்கான வசதிகள் உள்ளன. இராசி மேடம் (மேஷம்) இடபம் (ரிஷபம்) மிதுனம் கர்க்கடகம் (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி துலாம் விருச்சிகம் தனு (தனுசு) மகரம் கும்பம் மீனம் கோள்கள் சூரியன் (ஞாயிறு Sun) சந்திரன் (திங்கள் Moon) செவ்வாய் (Mars) புதன் (அறிவன் Mercury) குரு (வியாழன் Jupiter) சுக்கிரன் (வெள்ளி Venus) சனி (காரி Saturn) இராகு (நிழற்கோள்) கேது (நிழற்கோள்) பட்டியல் வருஷம் மாதம் கணக்கிடும் பஞ்சாங்க முறைகள் பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு முற்றிலும் வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 1 சௌரமான முறை 2 சந்திரமான முறை சௌரமான முறை இம்முறை சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை சௌர ஆண்டு கணக்கீடு முறை ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேஷ ராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஒரு வருடம் என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, மேற்கு வங்கம் சாயன ஆண்டு கணக்கீடு முறை சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: கேரளா (பஞ்சாங்கம்: கொல்லம் ஆண்டு) சந்திரமான முறை இம்முறை சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது. பூர்வப்க்ஷ பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகள் சந்திர மாதங்களாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு பஞ்சாங்கம்), கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் (கார்த்திக ஷுக்லாதி பஞ்சாங்கம்) பிற ஐந்திறன் முறைகள் திருவள்ளுவர் ஆண்டு திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. சக வருட பஞ்சாங்கம்: இந்திய அரசாங்கம் சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் கடைப்பிடிக்கும் பஞ்சாங்க முறை. ஆண்டு என்பது மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்த மார்ச்சு மாதம் 23 ஆம் தேதி வரை. பசலி வருஷ பஞ்சாங்கம்: வட இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆண்டுக் கணக்கு. முகலாயர் காலத்தில் அரசாங்க வரவு செலவுக் கணக்குகளை நிர்வகிக்க ஏதுவாகத் தோற்றுவிக்கப்பட்டது. கலியுகாப்தம் பஞ்சாங்கம் கலியுகம் தோன்றிய நாள் முதல் கணக்கிட்டு வரப்படுகிறது. விக்கிரம வருஷம் மகா வீரர் வருஷம் ஐந்திறன் வகைகள் பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது. திருக்கணித ஐந்திறன் (பஞ்சாங்கம்) சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனைத் தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும். வாக்கிய பஞ்சாங்கம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும். இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இவற்றையும் பார்க்க சோதிடம் இந்துக் காலக் கணிப்பு முறை சந்திரமானம் மேற்கோள்கள் சோதிடம் இந்தியக் காலக் கணிப்பு முறைகள் பஞ்சாங்கம்
5557
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
நிறம்
நிறம் (Colour) அல்லது வண்ணம் என்பது சிவப்பு, மஞ்சள், ஊதா, அல்லது நீலம் போன்ற வண்ண வகைகளால் விவரிக்கப்படும் மனிதனின் காட்சிப் புலனுணர்வுகளின் சிறப்பம்சமாகும். ஒளிநிறமாலையில் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதக் கண்களில் உள்ள கூம்பு செல்கள் தூண்டப்படுவதால் நிறங்கள் உணரப்படுகின்றன. நிறங்களின் பிரிவுகள் மற்றும் நிறங்களின் குறிப்பிட்ட உட் கூறுகள் போன்றவை பொருட்களின் மீது பட்டு அவை எதிரொளிக்கும் ஒளியின் அலைநீளத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. பொருட்களின் இயற்பியல் பண்புகளான ஒளி உறிஞ்சுதல், உமிழ்வு நிறமாலை போன்ற பண்புகள் இந்த எதிரொளிப்பை நிர்வகிக்கின்றன. நிறங்களின் இடைவெளியை வரையறுப்பதன் மூலம் ஆயத்தொலைவுகளால் எண்ணளவில் நிறங்களை அடையாளம் காண முடியும். உதாரணமாக, சிவப்பு பச்சை நீல நிறங்களின் வண்ண இடைவெளியானது, மனிதக் கண்களின் திரிபுராமைக்கு ஏற்றவாறு அவற்றிலுள்ள மூன்று கூம்பு செல் வகைகளும் மூன்று ஒளிப்பட்டைகளுக்கு எவ்வாறு தூண்டல்களை விளைவிக்கின்றன என்பதனை பிரதிபலிக்கிறது. நீண்ட அலைநீளம் 564-580 நானோ மீட்டர் (சிவப்பு) ; நடுத்தர அலைநீளம், 534-545 நானோ மீட்டர் (பச்சை); 420-440 நானோ மீட்டர் (நீலம்) குறுகிய-அலைநீளம் கொண்ட ஒளி போன்றவை அலை நீளவகைபாடுகளாகும் பிற வண்ண இடைவெளிகளில் மூவண்ண பரிமானங்களுக்கும் மேற்பட்ட மயில்நீலம், மெசந்தா, மஞ்சள், கருப்பு போன்ற நிற மாதிரிகளும் உள்ளன. மற்ற உயிரினக் கண்களின் ஒளியேற்பும் நம்முடைய கண்களின் ஒளியேற்பில் இருந்து வேறுபடுகின்றன. அதனால் வேறுபட்ட நிற வேறுபாடுகளும் காட்சிப் புலனுணர்வும் அவ்வுயிரினங்களில் மாறுபடும். உதாரணமாக தேனீக்கள் போன்ற சில உயிரினங்கள் புற ஊதா கதிர்வீச்சை உணர்கின்றன. புற ஊதா நிறத்தின் அலைநீளம் 10 நானோமீட்டரிலிருந்து 400 நானோமீட்டர் வரையாகும். இது கட்புலனாகும் ஒளியைவிட அலைநீளம் குறைவாகவும் ஆனால் எக்சு-கதிர்களைக் காட்டிலும் நீண்டும் இருக்கும். ஆனால் சிவப்பு நிறத்தை இவற்றால் உணர முடியாது. பேபிலியோ வகை பட்டாம்பூச்சிகள் ஆறு வகையான ஒளியேற்பிகளைக் கொண்டிருக்கின்றன, இதனால் இவை ஐவண்ண பார்வைத் திறனைக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர சில உயிரினங்கள் கூட்டு வண்ணப்பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. இவற்றில் 12 வகையான ஒளியேற்பிகள் காணப்படுகின்றன. வண்ணங்களின் விஞ்ஞானம் சில நேரங்களில் நிறவியல், நிற அளவியல், அல்லது வெறுமனே வண்ண அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. மனித கண் மற்றும் மூளை எவ்வாறு நிறத்தை உணர்கிறது, பொருள்களில் வண்ணத்தின் தோற்றம், கலையில் வண்னத்தின் கோட்பாடு மற்றும் காணக்கூடிய வரம்பில் மின்காந்தவியல் கதிர்வீச்சின் இயற்பியல் போன்றவற்றைக் குறிக்கிறது. மேலும் நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது எதிரொளிக்கப்படும் ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும். புவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும். நிறத்தின் இயற்பில் கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள். கதிரவனிலிருந்து புவியை நோக்கி வரும் கதிர் வீச்சின் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைய முடிகின்றது. அவற்றுள்ளும் ஒரு சிறிய பகுதி மட்டுமே கண்ணிற்குத் தெரியக்கூடிய ஒளியாகும். இவ்வாறு கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள் 400 தொடக்கம் 700 நானோ மீட்டர் அலை நீள வீச்சினுள் அடங்கியவை. இதனுள் அடங்கும் வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் வெவ்வேறு நிறப் புலனுணர்வுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தன. இந்த வீச்சின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையின் ஊதா நிறமும் உள்ளன. பெரும்பாலான ஒளி ஆதாரங்கள் பல்வேறு அலைநீளங்களில் வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன; ஒரு மூலத்தின் நிறமாலை என்பது ஒவ்வொரு அலைநீளத்திற்கும் அதன் செறிவை வழங்குவதாகும். கொடுக்கப்பட்ட திசையில் இருந்து கண்களை அடையும் நிறமாலையின் நிறமாற்றம் அந்த திசையின் வண்ண உணர்வைத் தீர்மானிக்கிறது. என்றாலும் வண்ண உணர்வைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் நிறங்களின் சேர்க்கைக்கு சாத்தியங்கள் உள்ளன. உண்மையில் அதே நிற உணர்ச்சியை உருவாக்கும் ஒரு நிறமாலையை நிறமென்று வரையறுக்கலாம், ஆனால் இத்தகைய பகுப்புகள் பல்வேறு வகைகளில் பரவலாக மாறுபடும். மேலும் அதே வகைகளில் உள்ளவர்களுக்கிடையேயும் குறைந்த அளவிற்கு வேறுபடும். நிறப் புலனுணர்வு I பொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது தெறிக்கின்ற ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் சென்று அங்குள்ள விழித் திரையில் விழுகின்றன. இத் திரை கட்புலன் உணர்வுக்குரிய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது. சுமார் --- மில்லியன்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ள இந் நரம்பு முனைகள் இரண்டு வகைப்படுகின்றன. இவை கூம்புகள் என்றும் கோல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் கூம்புகளே நிறப் புலனுணர்வுக்கு அடிப்படையானவை. பல்வேறு நிறங்களையும் வேறுபடுத்தி உணரும் வகையில் கூம்புகள் மூன்று வகைகளாக அமைந்துள்ளன. ஒரு வகை சிவப்பு நிறத்துக்குரிய ஒளியை உணரவல்லது. ஏனைய இரண்டு வகைகளும் பச்சை, நீலம் ஆகிய நிறங்களை உணரக்கூடியன. இதனால் இம் மூன்று வகைக் கூம்புகளுக்கும் சிவப்புக் கூம்பு, பச்சைக் கூம்பு, நீலக் கூம்பு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் உணரப்படுகின்ற அடிப்படையான மூன்று நிறங்களே முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. பொருளின் நிறம் ஒரு பொருளின் நிறம் அப்பொருள் இருக்கும் சூழலை பொருத்தும் நமது கண் உள் வாங்கும் ஒளியின் விகிதாச்சாரத்தை முன்னிட்டும் அமையும்.சில நேரங்களில் ஒரே நிறங்களும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்பிழையாக தோன்றும். நிறப்பார்வையின் கோட்பாடுகள் அரிஸ்டாட்டில் மற்றும் பிற பண்டைய விஞ்ஞானிகள் ஏற்கனவே ஒளி மற்றும் நிற பார்வை பற்றிய இயல்புகளை எழுதியிருந்த போதிலும், அதைஉணர்வின் ஆதாரமாக வண்ண ஒளி பிறக்கிறது என்றே நம்பினர். சர் ஐசக் நியூட்டன் , 1672ல் கோதே நிறங்கள் பற்றிய அவரது விரிவான கோட்பாட்டை பதிப்பித்தார்.அதுவே நிறங்கள் பற்றிய அடிப்படை அறிவியலுக்கு வழிவகுத்தது. நியூட்டன் கருத்தின்படி, வெள்ளை ஒளி, அனைத்து வண்ணங்கள் உள்ள கலவை ஆகும். அது ஒரு முப்பட்டை கண்ணாடி வழியாக கடந்து செல்லும் போது நிறங்கள் வெவ்வேறு கோணங்களில் கலைந்து நிறமாலை உறுவாகிறது, ஆகவே, நிறங்கள் வெள்ளை ஒளியில் மட்டுமே உள்ளன என்பதை அவர் நிரூபித்தார். முதன்மை நிறங்கள் சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று நிறங்களும் முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். நிறக்குருடு நிறக்குருடு என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்லாகும். இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய நிறங்களின் பார்த்தல் உணர்வைப் பற்றிய சிறப்பு உண்மைகள் என்ற தலைப்பிட்ட ஒரு அறிவியல் கட்டுரையில் இதுபற்றி எழுதினார். இவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயரால் இந்நோய் டால்டனிசம் என்று நெடுநாள் வழங்கப்பட்டது. எனினும் தற்போது இந்த பெயர் பச்சை நிறத்தை உணர இயலாமையாகிய டியூட்டெரனோபியா என்ற நோயை மட்டும் குறிக்கிறது. பட்டகமும் ஒளியும் ஐன்ஸ்டினுக்கு முந்தய அறிஞர்கள் யாவரும் வெள்ளொளி நிறமற்றது எனவே நம்பிக்கொண்டிருந்தனர்.மேலும் வெள்ளொளி நிறமற்றது பட்டகத்தில் உள்ள ஒளிகளே அவற்றை உருவாக்குகின்றன என்று நம்பினர்.ஐன்ஸ்டின் தனது ஒளியின் இரட்டைத்தன்மை கோட்பாட்டை வெளியிட்ட பின் ஹைஜன் ஒளியிணை ஆராய்ந்து , வெள்ளொளி பல நிறங்களையுடைய ஒளிகளின் கூட்டு ஒளி என நிறுபித்தார்.அதன் பின் பட்டகம் ஒளியிணைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவின.மழை பெய்யும் போது மழைத்துளி பட்டகமாக செயல்பட்டு வெள்ளொளியில் உள்ள நிறங்களைப் பிரிக்கின்றது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Bibliography Database on Color Theory, Buenos Aires University Why Should Engineers and Scientists Be Worried About Color? Robert Ridgway's A Nomenclature of Colors (1886) and Color Standards and Color Nomenclature (1912) – text-searchable digital facsimiles at Linda Hall Library Albert Henry Munsell's A Color Notation, (1907) at Project Gutenberg AIC, International Colour Association The Effect of Color | OFF BOOK Documentary produced by Off Book (web series) Study of the history of colors The Color of Consciousness பார்வை
5558
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சாதகக் குறிப்பு
சோதிடம் தொடர்பில், சாதகக் குறிப்பு (Horoscope) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அண்ட வெளியிலுள்ள சில கோள்களினதும், நட்சத்திரங்களினதும் சரியான நிலைகளைக் காட்டுகின்ற ஓர் ஆவணமாகும். இது பொதுவாக ஒரு வரைபட வடிவில் இருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் போது குறிக்கப்படும் சாதகம், அப்பிள்ளையின் சாதகக் குறிப்பு ஆகும். இது தவிர உலகில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் சாதகம் குறிக்க முடியும். சாதகக் குறிப்பின் அடிப்படையான உறுப்பு இராசிச் சக்கரமேயானாலும், பாவச் சக்கரம், நவாம்சச் சக்கரம், திசை, புத்தி முதலான பல்வேறு வகையான அம்சங்களைச் சாதகக் குறிப்பில் காண முடியும். ஒரு சாதகர் பற்றிய அல்லது ஒரு நிகழ்வு பற்றிய பகுப்பாய்வுகள் செய்யப்படும் போது சம்பந்தப் பட்ட சாதகக் குறிப்பே அடிப்படையாக அமைகின்றது. இன்னொரு வகையில், சோதிடப் பகுப்பாய்வு, பலன் சொல்லுதல் போன்றவற்றைப் பொறுத்தவரை, அறிவியல் சார்ந்த வானியலுக்கும், அறிவியல் சாராத சோதிடத்துக்கும் நடுவிலுள்ள இடைமுகமே சாதகக் குறிப்பு எனலாம். இது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கான வானியல் தரவுகளைத் தருவது மட்டுமன்றி இதன் வரைபட வடிவம் இத் தரவுகளின் சோதிட இயல்புகளைப் புரிந்து கொள்வதையும் இலகுவாக்குகின்றது. இராசிச் சக்கரம் சாதகக் குறிப்பில் காணும் இராசிச் சக்கர வரைபடங்கள் பல்வேறு வகையில் வரையப் படுகின்றன. மேற்கத்திய சோதிடர்கள் இதனை வட்டமாக வரைவார்கள். இந்தியாவில் சதுர வடிவில் வரைவதே வழக்கமானாலும் தென்னிந்திய, வட இந்திய வரைபடங்களிடையே வேறுபாடுகளைக் காணலாம். மேற் கூறப்பட்ட மூன்று வகையான இராசிச் சக்கர அமைப்புகளையும் கீழேயுள்ள படங்கள் காட்டுகின்றன. ஒரு குழந்தையின் பிறப்பைக் குறித்த சாதகக் குறிப்பொன்றிலிருந்து அறியக் கூடிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. பிறந்த இடம், நேரம், தாய் தந்தையர் விபரங்கள். குறிப்பிட்ட நேரத்தில் நட்சத்திரமும், இராசியும். இராசிச் சக்கரத்தில் கிரக நிலைகள் இலக்கினம் திசை - புத்தி விபரங்கள் சாதகத்தில் கிரகங்களின் உச்சம், நீசம் பற்றிய விபரங்கள் முதலியனவாகும். இவற்றில் கிரக நிலைகள், இலக்கினம் என்பன முன்னர் கூறிய வரைபடத்தில் காட்டப்படுகின்றன. இராசிச் சக்கர வரைபடத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் அதனைப் பார்த்து இவ்விபரங்களை அறிந்து கொள்ள முடியும். சாதகத்தில் கிரகங்களும் அவற்றின் நிலைகளும் பழைய காலத்தில் சூரியன், சந்திரன் என்பவற்றோடு கூட மேலும் 5 சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களையும் சேர்த்து ஏழு கிரகங்களுடன் இராகு, கேது ஆகிய இரண்டு நிழற் கிரகங்களும் இராசிச் சக்கரத்தில் காட்டப்படுவது வழக்கம். யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் அறியப்பட்ட பின்னர் சிலர் அவற்றையும் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். இராசிச் சக்கரத்தில் கிரகங்களின் பெயர்களை எழுதும் போது இரண்டு மூன்று எழுத்துக்களில் சுருக்கி எழுதுவதுண்டு. பழைய குறிப்புக்களில் வழக்கு மொழியிலில்லாத வட மொழிப் பெயர்களையே எழுதியிருப்பார்கள். இவற்றின் விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையிற் காணலாம். உள்ளிணைப்பு ஜாதக யோகங்கள் வெளி இணைப்பு இலவச ஜாதக ஆராய்ச்சித் தளம் சோதிடம் இந்தியாவில் மூடநம்பிக்கைகள்
5561
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
நகரம்
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனிதக் குடியிருப்பு ஆகும். நகரம் என்பதற்குச் சரியான வரைவிலக்கணம் கிடையாது. வெவ்வேறு நாடுகளில் இதற்கு வெவ்வேறு வகையான வரைவிலக்கணங்கள் கொடுக்கப்படுகின்றன. இவற்றையும் பார்க்கவும் மைய இடக் கோட்பாடு மைய இடம் தலைநகரம் மேற்கோள்கள்
5562
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மைய இடம்
மைய இடம் என்பது பலவிதமான பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக நிலையங்களைக் கொண்டதும், அக் குறிப்பிட்ட வழங்கல்களுக்கான கேள்வியைக் கொண்ட சந்தைப் பகுதியொன்றின் மத்தியில் அமைந்துள்ளதுமான ஒரு இடமாகும். இவற்றையும் பார்க்கவும் மைய இடக் கோட்பாடு வணிகவியல்
5563
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தமிழர் கலைகள்
தமிழர் கலைகள் எனப்படுபவை தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் ஆகும். தமிழர் கலைகள் பட்டியல் சிலம்பம் கோலாட்டம் பட்டிமன்றம் வில்லுப்பாட்டு ஆட்டங்கள் கும்மி மயிலாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் தெருக்கூத்து ஒயிலாட்டம் பாம்பாட்டம் உருமி ஆட்டம் புலி ஆட்டம் பறை ஆட்டம் கரகாட்டம் மாடு ஆட்டம் உறியடி ஆட்டம் கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம் சிலம்பாட்டம் குறவன் குறத்தி ஆட்டம் கைச்சிலம்பாட்டம் தேவராட்டம் தப்பாட்டம் காளியாட்டம் சேவையாட்டம் பேயாட்டம் சாமியாட்டம் கூத்துக்கள் சாந்திக் கூத்து சாக்கம் மெய்க் கூத்து அபிநயக் கூத்து நாட்டுக்கூத்து விநோதக் கூத்து குரவைக் கூத்து கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து' கரகம் என்னும் 'குடக் கூத்து' பாய்ந்தாடும் 'கரணம்' நோக்கு 'பார்வைக் கூத்து' நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து' 'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு' பொம்மலாட்டம் இவற்றையும் பார்க்க தமிழர் சிற்பக்கலை தமிழர் கட்டிடக்கலை தமிழர் கப்பற்கலை தமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை தமிழர் மட்பாண்டக்கலை தமிழர் மரவேலைக்கலை தமிழ் வரைகலை கலைகள் கலை வரலாறு கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள் துணை நூல்கள் ஜீவன், தமிழ் மரபு வழி நாடக மேடை, சென்னை: நர்மதா பதிப்பகம், 2000 வெளி இணைப்புகள் Folk Dances Of Tamil Nadu நுண்கலையும் சமுதாயமும் அறுபத்து நான்கு ஆயகலைகள் தமிழர் கலைகளைப் பற்றிய ஒலி-ஒளி படிமத் தொகுப்பு கலைகள்
5564
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
பாஞ்சாலங்குறிச்சி
பாஞ்சாலங்குறிச்சி தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும். வரலாறு ஆதியில் தூத்துக்குடி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலக்குறிச்சி கோட்டை என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. இந்த ஊருக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்த ஒட்டப்பிடாரம் உள்ளது. வெளி இணைப்புகள் விக்கிமேப் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு கதை சொல்லும் சித்திரங்கள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பாளையங்கள்
5568
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
ஆட்சியாளர் பட்டியல், இலங்கை
வரலாற்றுக்காலத்தில் இலங்கையில் இயக்கர் நாகர் ஆகிய இரு இனத்தவர்கள் வாழ்ந்து வந்ததாக அறிந்துகொள்ள முடிகின்றது. சிங்கள வரலாற்றுந் நூல்களின் படி, இலங்கையை கி.மு 543 இருந்து இன்றுவரை ஆட்சி செய்தவரின் பட்டியல் கீழ்வருமாறு: ஆட்சியாளர் பட்டியல் சத்தா திச்சன் கிமு 137 துலத்தன் கிமு 119 லன்ஜ திச்சன் கிமு 119 கல்லாட நாகன் – கிமு 109 வட்டகாமினி அபயன் கிமு 104 பாண்டியர் காலம் பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்) கிமு 103 மீண்டும் விசய வம்சம் வரலாற்றுக்காலம் மீண்டும் வட்டகாமினி அபயன் கிமு 88 மகசுழி மகாதீசன் கிமு 76 சோரநாகன் கிமு 62 குட்ட திச்சன் கிமு 50 முதலாம் சிவன் கிமு 47 வடுகன் கிமு 47 தருபாதுக திச்சன் கிமு 47 நிலியன் கிமு 47 அனுலாதேவி கிமு 47 (queen) குடகன்ன திஸ்ஸன் கிமு 42 ; 1st recital of Canon Pali பட்டிகாபய அபயன் கிமு 20 மகாதாதிக மகாநாகன் கிமு 9 அமந்தகாமினி அபயன் 21 கனிராஜனு திஸ்ஸன் 30 சூலபாயன் 33 சிவாலி (அரசி) 35 மூன்றாண்டு குழப்பம் இளநாகன் 38 சந்தமுகன் 44 யஸ்ஸலாலக திஸ்ஸன் 52 சுபகராஜன் 60 முதலாம் இலம்பகர்ண அரசர்களின் பட்டியல் வசபன் பொ.பி. 66 – 110 வங்கனசிக திச்சன் பொ.பி. 110 -113 முதலாம் கசபாகு பொ.பி. 113 – 135 மகல்லக்க நாகன் பொ.பி. 135 – 141 பதிக திச்சன் பொ.பி. 141 – 165 கனித்த திச்சன் பொ.பி. 165 – 193 குச்சநாகன் பொ.பி. 193 – 195 குடநாகன் பொ.பி. 195 – 196 முதலாம் சிறிநாகன் பொ.பி. 196 – 215 ஒகாரிக திச்சன் பொ.பி. 215 – 237 அபயநாகன் பொ.பி. 237 – 245 இரண்டாம் சிறிநாகன் பொ.பி. 245 – 247 விசயகுமாரன் பொ.பி. 247 – 248 முதலாம் சங்க திச்சன் பொ.பி. 248 – 252 சிறிகங்கபோதி பொ.பி. 252 – 254 கோதாபயன் பொ.பி. 254 – 267 முதலாம் சேட்டதிச்சன் பொ.பி.267 மகாசேனன் பொ.பி. 277 – 304 சிறிமேகவண்ணன் பொ.பி. 304 – 340 இரண்டாம் சேட்டதிச்சன் பொ.பி. 332 – 341 புத்ததாசன் பொ.பி. 341 – 370 உபதிச்சன் பொ.பி. 370 – 410 மகாநாமன் பொ.பி. 410 -428 மித்தசேனன் பொ.பி. 428 – 429 இராசராட்டிரப் பாண்டியர் வம்சம் மூலக்கட்டுரை - இராசராட்டிரப் பாண்டியர் இலங்கை மௌரிய வம்சத்தினர் பட்டியல் தாதுசேனன் (பொ.பி. 463 – 479) முதலாம் காசியப்பன் (பொ.பி. 479 – 497) முதலாம் மொக்கல்லானன் (பொ.பி. 497 -515) குமார தாதுசேனன் (பொ.பி. 515 – 524) கீத்திசேனன் (பொ.பி. 524) சிவ மௌரியன் (பொ.பி. 524 – 525) இரண்டாம் உபதிச்சன் (பொ.பி. 525 – 526) சிலாகாலன் (பொ.பி. 526 – 539) தாட்டாபூபதி (பொ.பி. 539 – 540) இரண்டாம் மொக்கல்லானன் (பொ.பி. 540 -560) குட்ட கீர்த்தி மேகன் (பொ.பி. 560 – 561) மகாநாகன் (பொ.பி. 561 – 569) முதலாம் அக்கபோதி (பொ.பி. 569 – 598) இரண்டாம் அக்கபோதி (பொ.பி. 598 – 608) இரண்டாம் சங்க திச்சன் (பொ.பி. 608 – 608) மூன்றாம் மொக்கல்லானன் (பொ.பி. 608 – 614) சிலாமேகவண்ணன் (பொ.பி. 614 – 623) மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 623 – 623) மூன்றாம் செகத்தா திச்சன் (பொ.பி. 623 – 624) மீண்டும் மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 624 – 640) முதலாம் தாதோப திச்சன்(பொ.பி. 640 – 652) இரண்டாம் காசியப்பன் (பொ.பி. 652 – 661) முதலாம் தப்புலன் (பொ.பி. 661 – 664) இரண்டாம் தாதோப திச்சன் (பொ.பி. 664 – 673) நான்காம் அக்கபோதி (பொ.பி. 673 – 689) உன்கங்கர ஹத்ததத்தன் (பொ.பி. 691 – 691) இரண்டாம் இலம்பகர்ண வம்சம் மானவண்ணன் 684 பல்லவர் கூட்டு ஐந்தாம் அக்கபோதி 718 மூன்றாம் காசியப்பன் 724 முதலாம் மகிந்தன் 730 ஆறாம் அக்கபோதி 733 ஏழாம் அக்கபோதி 772, பொலநறுவை ; அனுராதபுரம் கைவிடப்பட்டது. இரண்டாம் மகிந்தன் சீலமேகன் 777, அனுராதபுரம் இரண்டாம் தப்புலன் (அல்லது முதலாம் உதயன்) 797 மூன்றாம் மகிந்தன் 801 எட்டாம் அக்கபோதி 804 மூன்றாம் தப்புலன் 815 ஒன்பதாம் அக்கபோதி 831 முதலாம் சேனன் 833 ; அனுராதபுரத்தில் பாண்டியர் படையெடுப்பு. இரண்டாம் சேனன் 853 பல்லவரோடு இணைந்து பாண்டியருக்கு எதிராக. முதலாம் உதயன் 887 நான்காம் கசபன் 898 ஐந்தாம் கசபன் 914 நான்காம் தப்புலன் 923 ஐந்தாம் தப்புலன் 924 இரண்டாம் உதயன் 935 மூன்றாம் சேனன் 938 மூன்றாம் உதயன் 946 ; சோழர் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர். நான்காம் சேனன் 954 நான்காம் மகிந்தன் 956 ஐந்தாம் சேனன் 972 ஐந்தாம் மகிந்தன் 982 சோழர்களால் தமிழகத்துக்கு கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டான். ஆறாம் கசபன் 1019 மகலன கித்தி 1040 விக்கிரம பாண்டியன் 1042 ஜகதிபால 1043 பராக்கிரம பாண்டியன் 1046 திரிலோக பாண்டியன் 1048 ஏழாம் கசபன் 1054 விஜயபாகு வம்சம் விஜயபாகு I 1072 சோழரிடம் இருந்து நாட்டை மீட்டுப் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டான், இராசரட்டை இராச்சியம். முதலாம் ஜயபாகு 1110 முதலாம் விக்கிரமபாகு 1111 இரண்டாம் கஜபாகு 1132 முதலாம் பராக்கிரமபாகு 1153 இராசரட்டையைக் கைப்பற்றி நாட்டை ஒன்றாக்கினான் 1161 இரண்டாம் விஜயபாகு 1186 ஐந்தாம் மகிந்தன் 1187 கலிங்க வம்சம் நிசங்க மல்லன் 1187 முதலாம் வீரபாகு1196 விக்கிரமபாகு II 1196 ; period of dynastic trouble →1236 சோடகங்க 1196 லீலாவதி (1st reign) 1197 சாகசமல்லன் 1200 கல்யாணவதி 1202 தர்மாசோகன் 1208 அனிகங்க மகாதிபாத 1209 லீலாவதி (2nd reign) 1209 லோகிஸ்ஸாரன் 1210 லீலாவதி (3rd reign) 1211 இரண்டாம் பராக்கிரம பாண்டியன் 1212 taken prisonner in 1214 by Kalinga. Kings end up in குருணாகல். பொலன்னறுவை abandonned. Many local kingdoms quashed. Magha 1215 king Kalinga தம்பதனியா இராசதானி வம்சம் மூன்றாம் விஜயபாகு 1236 இரண்டாம் பராக்கிரமபாகு 1236 ; பொலன்னறுவை abndonned again, au profit de Dambadeniya. Une attaque malaise est repoussée en 1246. நான்காம் விஜயபாகு 1270 முதலாம் புவனேகபாகு 1272 தம்பதெனியாவைக் கைவிட்டு யாப்பகூவவுக்குச் சென்றான் Interrègne 1285–1286 : power vacuum மூன்றாம் பராக்கிரமபாகு 1287 returns to பொலன்னறுவை. மார்க்கோ போலோ pays a visit in 1292 இரண்டாம் புவனேகபாகு 1293 in Kurunagala, new capital. நான்காம் பராக்கிரமபாகு 1302 மூன்றாம் புவனேகபாகு 1326 ஐந்தாம் விஜயபாகு 1335 நான்காம் புவனேகபாகு 1341–1351, கம்பளை கம்பளை இராசதானி வம்சம் ஐந்தாம் பராக்கிரமபாகு 1344–1359, டெடிகமை. மூன்றாம் விக்கிரமபாகு 1357–1374, கம்பளை ஐந்தாம் புவனேகபாகு 1372–1408, கம்பளை. கோட்டே அரண் செய்யப்பட்டது. யாழ்ப்பாண இராசதானி வம்சம் கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி 1210–1246 குலசேகர சிங்கையாரியன் 1246–1256 குலோத்துங்க சிங்கையாரியன் 1256–1279 விக்கிரம சிங்கையாரியன் 1279–1302 வரோதய சிங்கையாரியன் 1302–1325 மார்த்தாண்ட சிங்கையாரியன் 1325–1348 குணபூஷண சிங்கையாரியன் 1348–1371 வீரோதய சிங்கையாரியன் 1371–1394 சயவீர சிங்கையாரியன் 1394–1417 குணவீர சிங்கையாரியன் 1417–1440 கனகசூரிய சிங்கையாரியன் 1440–1450 செண்பகப்பெருமாள் 1450–1467, 1450ல் கோட்டே அரசனின் வளர்ப்பு மகனான செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான். கனகசூரிய சிங்கையாரியன் 1467–1478, 1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது. (???) சிங்கையாரியன் 1478–1519 சங்கிலியன் 1519–1560 புவிராஜ பண்டாரம் 1561–1565 காசி நயினார் 1565–1570 பெரிய பிள்ளை 1570–1572 புவிராஜ பண்டாரம் 1572–1591 எதிர்மன்னசிங்கம் 1591–1615 அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) 1615–1617 சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) 1617–1620, 1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது. கோட்டே இராசதானி வம்சம் ஆறாம் பராக்கிரமபாகு 1412–1467, கோட்டே. இவனால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. சீனன் செங் ஹே இவனைப் பதவியிலிருந்து இறக்கி ரயிகமைக்குக் கைதியாகக் கொண்டு சென்றான். இரண்டாம் ஜயபாகு 1467, கோட்டே. ஆறாம் புவனேகபாகு 1470–1478 கண்டியை நிறுவினான். ஏழாம் பராக்கிரமபாகு 1480 எட்டாம் பராக்கிரமபாகு 1484–1508 ; போர்த்துக்கேயர் கொழும்பில் இறங்கினர். ஏழாம் புவனேகபாகு 1540ல் லிசுபனுக்குத் தூதுவர்களை அனுப்பினான். போர்த்துக்கேயரால் இவன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் இவனது பேரன் தர்மபாலனைப் போர்த்துக்கேயர் அரசனாக்கினர். தர்மபாலன் 1551–1597, 1557ல் இவன் கிறித்தவன் ஆனான். 1565ல் கோட்டேயைக் கைவிட்டு போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் தலைநகரத்தைக் கொழும்புக்கு மாற்றினான். சீதாவாக்கை இராசதானி வம்சம் மாயாதுன்ன 1521–1581 முதலாம் ராஜசிங்க 1554–1593 ராஜசூரிய 1593–1594 கண்டி இராசதானி ஜயவீர பண்டார கரலியத்தே பண்டார டொன் பிளிப் யமசிம்மா டொம் ஜாவோ தோனா கதரீனா கோணப்பு பண்டார வம்சம் முதலாம் விமலதர்மசூரியன் 1591–1604 செனரத் மன்னன் 1605–1635 இரண்டாம் இராஜசிங்கன் 1635–1687 இரண்டாம் விமலதர்மசூரியன் 1687–1707 வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 1707 கண்டி நாயக்கர் வம்சம் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739–1747 கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் 1747–1782 ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782–1798) ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798–1815) போர்த்துக்கீச மன்னர்களும், ஆளுனர்களும் முதலாம் பிலிப் 1580–1598 இரண்டாம் பிலிப் 1598–1621 பேரோ லொபேஸ் டி சூசா 1594 டி. ஜெரோனிமோ டி அசெவேடோ 1594–1613 டி. பிரான்சிஸ்கோ டி மெனெசெஸ் 1613–1614 மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம் 1614–1616 நூனோ அல்வாரெஸ் பெரெய்ரா 1616–1618 கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1618–1622 மூன்றாம் பிலிப் 1621–1640 ஜோர்ஜ் டோ அல்புகேர்க் 1622–1623 கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1623–1630 டி. பிலிப் மஸ்கரேனாஸ் 1630–1631 டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1631–1633 டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1633–1635 டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா 1635–1636 டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1636–1638 டி. அந்தோனியோ மஸ்கரேனாஸ் 1638–1640 பிரகான்சாவின் நான்காம் ஜோன் 1640–1645 டி. பிலிப் மஸ்காரேனாஸ் 1640–1645 மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம் 1645–1653 பிரான்சிஸ்கோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ 1653–1655 அந்தோனியோ டி சூசா கூட்டினோ 1655–1656 அந்தோனியோ டி அமரல் டி மெனெசெஸ் 1656–1658, யாழ்ப்பாணம் இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள் William J. Coster 1640 Jan Thyszoon Payart 1640–1646 Joan Maatzuyker 1646–1650 Jacob van Kittensteyn 1650–1653 Adriaan van der Meyden 1653–1660 and 1661–1663 Ryklof van Goens 1660–1661 and 1663 Jacob Hustaart 1663–1664 Ryklof van Goons 1664–1675 Ryklof van Goens Jr 1675–1679 Laurens Pyl 1679–1692 Thomas van Rhee 1692–1697 Gerrit de Heere 1697–1702 Cornelis Jan Simons 1702–1706 Hendrik Becker 1706–1716 Isaac Augustin Rumpf 1716–1723 Johannes Hertenberg 1723–1726 Petrus Vuyst 1726–1729 Stephanus Versluys 1729–1732 Jacob Christian Pielat 1732–1734 Diederik van Domburg 1734–1736 கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் 1736–1739 Willem Maurits Bruyninck 1739-1712 Daniel Overbeek 1742–1743 Julius V.S. van Gollenesse 1743–1751 Gerard Joan Vreeland 1751–1752 Johan Gideon Loten 1752–1757 Jan Schreuder 1757–1762 L.J. Baron van Eck 1762-1705 Iman Willem Falck 1765–1785 Willem J. van de Graaff 1785–1794 J.G. van Angelbeek 1794–1796 இலங்கையின் பிரித்தானிய ஆளுனர்கள் மட்ராஸ் ஆளுநர் 1796 பிரட்டிக் நோர்த் 1798 தோமசு மெயிற்லண்ட் 1805 பார்ட் ரொபேர்ட் பிரௌன்ரிக் (Bart Robert Brownrigg) 1812 எட்வர்ட் பாகே (Edward Paget) 1822 எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) 1824 பார்ட் ரொபேர்ட் டபிள்யூ ஹோர்ட்டன் (Bart Robert W. Horton) 1831 ஜே. ஏ. எஸ். மக்கென்சி (J.A.S. Mackenzie) 1837 கொலின் கம்பெல் (Colin Campbell) 1841 விஸ்கௌன்ட் ரொறிங்ரன் (Viscount Torrington) 1847 ஜி. டபிள்யூ அன்டர்சன் (G.W. Anderson) 1850 ஹென்றி ஜி வார்ட் (Henry G Ward) 1855 Charles Justin MacCarthy 1860 Hercules G.R. Robinson 1865 William H. Gregory 1872 James R. Longdon 1877 Arthur H. Gordon 1883 Arthur B. Havelock 1890 J. West Ridgeway 1896 Henry Arthur Blake 1903 Henry B. McCallum 1907 Robert Chalmers 1913 John Anderson 1916 William H. Manning 1918 Hugh Clifford 1925 H.J. Stanley 1927 Grame Thompson 1931 Reginald Edward Stubbs 1931 Andrew Caldecott 1937 இலங்கையின் பிரதமர்கள் டி. எஸ். சேனநாயக்கா டட்லி சேனநாயக்கா ஜோன் கொத்தலாவல எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சிறிமாவோ பண்டாரநாயக்காமுதன் முறை டட்லி சேனநாயக்கா சிறிமாவோ பண்டாரநாயக்கா இரண்டாம் முறை ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆர். பிரேமதாசா ரணில் விக்ரமசிங்க முதன் முறை சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இரத்னசிறி விக்கிரமநாயக்கா தி. மு. ஜயரத்ன ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் முறை இலங்கையின் ஆளுனர் நாயகர்கள் சர் என்றி மொங்க் மேசன் மூர் 1948 விஸ்கொட் சோல்பரி 1949 சர் ஒலிவர் குணதிலக 1954 வில்லியம் கொபல்லாவ 1962 இலங்கையின் சனாதிபதிகள் வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 – பெப்ரவரி 4, 1978) ஜே. ஆர். ஜெயவர்த்தனா (பெப்ரவரி 4, 1978 – ஜனவரி 2, 1989) ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 – மே 1, 1993) டிங்கிரி பண்டா விஜயதுங்க (மே 1, 1993 – நவம்பர் 12, 1994) சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005) மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005;2015 ஜனவரி 8) மைத்திரிபால சிறிசேன (ஜனவரி 8,2015) கோதாபய ராஜபக்ச (1நவம்பர் 18, 2019 - ஜூலை 14, 2022) ரணில் விக்கிரமசிங்க (ஜூலை 15, 2022 – ஜூலை 20, 2022, ஜூலை 21, 2022 – தற்போது வரை) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இலங்கை மன்னர்கள் இலங்கை அரசியல் இலங்கை தொடர்பான பட்டியல்கள் இலங்கை மன்னர்கள் இலங்கை வரலாறு
5573
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வீழ்ப்பு வரைபடங்கள்
பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு பொருள் அல்லது காட்சி பற்றிய விபரங்களைத் தரும் வகையில் அவற்றின் தோற்றங்களை இரு பரிமாணத் தளங்களில் காட்டும் வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்கள் (Projection Drawings) எனப்படுகின்றன. வீழ்ப்பு வரைபடங்கள் பலவகைப் படுகின்றன. அவற்றுட் சில பொருட்களினதும், காட்சிகளினதும் இயல்புகளை இரு பரிமாணத் தோற்றத்தில் வெளிப்படுத்த, வேறு சில அவற்றின் முப்பரிமாண இயல்புகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. கட்டுமான வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். வரலாறு வீழ்ப்பு வரைபட வகைகள் வீழ்ப்பு வரைபடங்களை அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இயலுறு தோற்ற வரைபடங்கள் சமாந்தர வீழ்ப்பு வரைபடங்கள் இயலுறு தோற்ற வரைபடங்கள் ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும் போது தோற்றமளிப்பதுபோல் வரையப் படுவதாகும். இவ்வகை வரைபடங்கள், தொலைவிலுள்ள பொருட்கள் அல்லது தூர அளவுகள் சிறியனவாகவும், அண்மையிலுள்ளவை பெரிதாகவும் தெரியும் தோற்றப்பாட்டை அண்ணளவாக வெளிப்படுத்த முனைகின்றன. இவ் வரைபடங்களில் காணும் காட்சியிலுள்ள சமாந்தரக் கோடுகள் அனைத்தும் ஒரே புள்ளியிலிருந்து ஆரம்பமாவது போல் தோற்றமளிக்கும். இப்புள்ளி வீழ்ப்பு மையம் எனப்படுகின்றது. இயலுறு தோற்றங்களின் வேறுபாடுகள் இவ் வீழ்ப்பு மையங்களின் எண்ணிக்கைகளினால் தீர்மானிக்கப் படுகின்றன. சமாந்தர வீழ்ப்பு வரைபடங்கள் ஒரு பொருளின் அல்லது காட்சியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வரையப்படும் கோடுகள் ஒரு கற்பனைத் தளத்தில் வீழ்த்தப்படும்போது உருவாகும் படங்களை ஒத்தவை ஆகும். இவ்வகையில் உள்ள பல வேறுபாடுகள் மேற்குறிப்பிட்ட தளங்களுக்குச் சார்பான வீழ்ப்புகளின் திசையினால் தீர்மானிக்கப் படுகின்றன. மேற்காட்டிய இரு வகைகளின் கீழ் பல துணை வகைகளும் உள்ளன. அவற்றைக் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இவற்றையும் பார்க்கவும் உசாத்துணைகள் வெளியிணைப்புகள் வரைபடங்கள்
5580
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88
புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை
எச்சரிக்கை: இத் தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, பூர்த்தி செய்யப்படவில்லை. இவற்றையும் காணவும் புலம்பெயர் தமிழர் புலம்பெயர் ஈழத்தமிழர் புலம்பெயர் இலங்கையர் மேற்கோள்கள் 2001 India Census 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை :en:Indian languages in Singapore கந்தையா, ஆ.. கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும் SBS census explorer – 2011 ABS census data New Zealand 2013 Census totals by topic "At the same time, 35% reported that their mother tongue was English and almost 1% reported that it was French. Among the non-official languages reported as mother tongue, the most common included Punjabi (29%), Tamil (10%), Urdu (9%), Gujurati (6%), Hindi (6%) and Bengali (3%)." Canada Stats This means that officially 100 000 of the 1 million South Asians are Tamils. Media often reports upto 250 000. http://www.diversitywatch.ryerson.ca/backgrounds/tamils.htm வெளி இணைப்புகள் Sri Lankan Gov Stats Sri Lankan Tamil Migration History of the Tamil Diaspora தமிழர் அட்டவணைகள் உலக நாடுகளில் தமிழர்
5587
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%20%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29
கொடி (சின்னம்)
கொடி (Flag) என்பது ஒரு தனித்துவமான வடிவமைப்பு மற்றும் வண்ணங்களைக் கொண்ட துணியாகும். பெரும்பாலும் இது செவ்வக அல்லது நாற்கர வடிவில் இருக்கும். ஒரு சின்னமாக, ஒரு தகவல்தொடர்புக் கருவியாக அல்லது அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ள வரைபடத்திற்கான வடிவமைப்பு விளக்கத்தை குறிக்கவும் கொடி என்ற சொல் பயன்படுகிறது. மேலும் கொடிகள் அடிப்படை சமிக்ஞை மற்றும் அடையாளங்களுக்கான பொதுவான கருவியாக உருவாகியுள்ளன, குறிப்பாக கடல் சூழல் போன்ற தகவல் தொடர்பு சவாலான சூழல்களில் கொடி பயன்படுத்தப்படுகிறது. இங்கு அணுகல் குறியீடாக கொடி பயன்படுத்தப்படுகிறது. கொடிகளை பற்றி படிக்கும் பிரிவு கொடியியல் எனப்படுகிறது. தேசியக் கொடிகள் என்பவை தேசபக்தியின் சின்னங்கள் ஆகும், அவை பரவலான மாறுபட்ட விளக்கங்களைக் கொண்டுள்ளன. பெரும்பாலும் வலுவான இராணுவக் குழுக்களின் தொடர்பை உள்ளடக்குகின்றன. ஏனெனில் அவற்றின் அசலான ஒரே நோக்கத்திற்காக தொடர்ந்து அவை பயன்படுத்தப்படுகின்றன. செய்தி அனுப்புதல், விளம்பரம் அல்லது அலங்கார நோக்கங்களுக்காகவும் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. கொடிகளைப் பயன்படுத்தும் சில இராணுவ அலகுகள் "கொடிகள்" என்று அழைக்கப்படுகின்றன. கொடி என்பது அரபு நாடுகளில் உள்ள ஒரு படைப்பிரிவுக்கு சமம். எசுப்பானியாவில் கொடி என்பது எசுப்பானிய படையணியில் ஒரு படைப்பிரிவுக்கு சமமானதாகும். கொடி வகை கொடிகள் பலவகைப்படும். ஒரு நாட்டின் அடையாளத்தை குறியீடாகக்கொண்டு அந்த நாட்டின் தேசியக் கொடியாக அந்தந்த நாட்டின் விதிமுறைப்படி பறக்கவிடப்படும். இதுதவிர அரசியல் கட்சிகள், தங்களது கட்சிகளை அடையாளப்படுத்தும் விதமாக தங்கள் கொடிகளைப் பயன்படுத்துவர். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிக்கான கொடியை ஒரே வண்ணத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் கட்சியின் கொடியை வடிவமைத்துப் பயன்படுத்துவார்கள். கட்சிக்கொடியில் தங்களது சின்னங்களையும் பொறித்து வடிவமைப்பதும் உண்டு. ஆனால் கொடியின் மூலம் (origin) குறித்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கொடி என்பது இப்படித்தான் என்று இன்று நாம் அடையாளப்படுத்துவது, ஒரு துண்டுத் துணியில் ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு கட்சியின் குறிக்கோளைப் பிரதிநிதிப்படுத்துவது போன்ற குறியீடுகளுடன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களுடன் திகழுவதைத்தான் கொடி என குறிப்பிடுகிறோம். இந்தியத் துணைக்கண்டத்தில் அல்லது பண்டைய சீனா காலத்தில் கொடிகள் அறிமுகப்படுத்தப்பட்டது என்பர். சீனாவில் கொடிகள் பல வண்ணங்களுடன் கூடிய விலங்குகளைக் கொண்டதாக கொடிகள் அமைந்திருந்தனை. பதினேழாம் நூற்றாண்டில் கடல் வாணிகம் செழிப்புற்றிருந்தபோது கப்பல்கள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதைக் குறிக்கும் வகையில் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று கடற்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் நாவாய்கள், கப்பல்கள் கொடியுடன் கடலில் வலம் வந்தன. கடலில்மிதக்கும் கப்பல்கள் இந்தக் கொடிகளைப் பறக்கவிட்டதன் மூலம், அது எந்த நாட்டுக் கப்பல், அது வணிகக் கப்பலா, பயணிகள் செல்லும் கப்பலா, சர்வதேசப் போக்குவரத்துக் கப்பலா என்ற தகவல்களை அறிந்துகொள்ளும் விதமாக அமைந்தது. இந்திய தேசியக் கொடி இந்திய நாட்டின் தேசியக் கொடி மூவர்ணங்களையுடையது. கிடைமட்டமாக மூன்று பட்டைகளைக் கொண்டு காவி வண்ணம் மேற்புறத்திலும், பச்சை வண்ணம் கீழ்ப் புறத்திலும் வெள்ளை வண்ணம் நடுவிலும் இருக்கும் வகையில் அமைந்துள்ளது. வெண்மை நிறத்தில் கடல் நீல வண்ணத்தில் 24 ஆரங்களையுடைய சக்கரம் தீட்டப்பட்டுள்ளது. காவி வண்ணமானது தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை, பசுமை, விவசாய செழிப்பு போன்றவற்றை குறிப்பதாகவும் கற்பிக்கப்படுகிறது. கொடியின் மையப் பகுதியில் உள்ள அசோகச் சக்கரம் வாழ்க்கைச் சுழற்சியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடி சூரியன் உதித்த பின் தான் ஏற்றப்பட வேண்டும். அதே போல சூரியன் மறைவதற்குள் இறக்கப்பட வேண்டும். தேசியத் தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு, அவமரியாதை ஏற்படாத வகையில் கொடியைக் கையாள வேண்டும். விதிமுறைகள் தேசியக் கொடியை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற முடியாத நிலை 2002 ஆம் ஆண்டு வரை இருந்தது. அதன் பின் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக்கொடியை ஏற்றிக் கொள்ளலாம் என இந்திய நடுவணரசு அனுமதி அளித்தது. தேசியக் கொடியை கையாளவும், அதற்கு உரிய மரியாதை செய்யவும் இந்திய தேசியக் கொடி சட்டம், 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பல்வேறு விதிமுறைகள் இதில் உள்ளன. தேசியக் கொடியை எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் தேசியக் கொடியினைக் கிழித்தல், எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். தேசியக் கொடியை நாம் அணியும் உடை, நாம் பயன்படுத்தும் கைத்துண்டுகள், நாம் பயன்படுத்தும் கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. தேசியக்கொடியை நைந்த, கிழிந்த நிலையிலோ, வண்ணம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது. மேற்கோள்கள் சின்னங்கள் கொடிகள் (சின்னம்)
5589
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AE%BF.
வாசிங்டன், டி. சி.
{{Infobox Settlement |official_name = கொலம்பியா மாவட்டம் |nickname = டிசி" |motto = Justitia Omnibus (எல்லோருக்கும் நீதி) |image_skyline = WashMonument WhiteHouse.jpg |image_flag = Flag of the District of Columbia.svg |image_seal = Seal of the District of Columbia.svg |image_map = DC_locator_map_with_state_names_w_usmap.png |mapsize = 260px |map_caption = வாசிங்டன் டிசி அமைவிடம்., மேரிலாந்துக்கும் வர்ஜீனியாவுக்கும் பக்கம் |subdivision_type = நாடு |subdivision_name = |subdivision_type1 = கூட்டாட்சி மாவட்டம் |subdivision_name1 = கொலம்பியா மாவட்டம் |leader_title = மாநகராட்சித் தலைவர் |leader_title1 = டி.சி. அவை |leader_name = ஏட்ரியன் ஃபென்ட்டி (D) |leader_name1 = தலைவர்: வின்சென்ட் சி. கிரே (D) |established = தோற்றம் |established_date = ஜூலை 16, 1790 |area_magnitude = 1 E8 |area_total_km2 = 177.0 |area_total_sq_mi = 68.3 |area_land_km2 = 159.0 |area_land_sq_mi = 61.4 |area_water_km2 = 18.0 |area_water_sq_mi = 6.9 |population_as_of = 2008 |population_total = 588,292 |population_metro = 5.30 மில்லியன் |population_footnotes = |population_density_km2 = 3481 |population_density_sq_mi = 9015 |timezone = EST |utc_offset = -5 |timezone_DST = EDT |utc_offset_DST = -4 |latd=38 |latm=53 |lats=42.4 |latNS=N |longd=77 |longm=02 |longs=12.0 |longEW=W |elevation_ft = 0–410 |elevation_m = 0–125 |Area_code = 202 |website = http://www.dc.gov/ }} வாசிங்டன், டி. சி. (வாஷிங்டன் டி. சி; Washington, D.C.), முழுப்பெயர் வாசிங்டன், கொலம்பியா மாவட்டம் (Washington, District of Columbia) ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப்பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது. அமெரிக்காவில் பல நகரங்கள் வாசிங்டன் என பெயரிடப்பட்டுள்ளதால் இதனைக் குறிக்க இந்த நகரத்தின் முந்தைய பெயரான கொலம்பியா மாவட்டம்'' (District Of Columbia) என்பதன் சுருக்க வடிவமாக (DC - டிசி) என்ற ஒட்டுடன் அறியப்படுகிறது. ஜார்ஜ் வாசிங்டன் அவர்களே இந்நகருக்கான நிலத்தை தேர்வு செய்தார். வாசிங்டன் டி.சி பொட்டாமக் நதியின் கரையில் அமைந்துள்ளது. வர்ஜீனியா & மேரிலாந்து மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட நிலங்களைக் கொண்டு இந்நகரம் அமைக்கப்பட்டது. எனினும் 1847 ல் பொட்டாமக் நதிக்கு தென்புறம் உள்ள வெர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வெர்ஜீனியா மீளப் பெற்றுக்கொண்டது. அவை ஆர்லிங்டன் கவுண்டி & அலெக்சாண்டரியா நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வாசிங்டன் டி.சி மெரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. மேற்கில் வெர்ஜீனியா & கிழக்கு, தெற்கு, வடக்கில் மெரிலாந்து மாநிலம் எல்லையாக உள்ளது. உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS) போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தலைமையிடங்கள் இங்கு உள்ளன. வரலாறு 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வரத்தொடங்கிய காலத்தில், தற்கால வாசிங்டனில் உள்ள அனகாஸ்தியா ஆற்றைச் சூழவுள்ள பகுதிகளில் அல்காங்குயிய இனத்தைச் சேர்ந்த நாகாட்ச்டாங் என அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அங்கு வாழ்ந்த பெரும்பாலான தாயக அமெரிக்க மக்கள் அங்கிருந்து வேறிடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். 1751 ஆம் ஆண்டில் பொட்டோமாக் ஆற்றின் வடக்குக் கரையில் மேரிலாந்து மாகாணத்தினால் ஜார்ஜ்டவுன் நகரம் அமைக்கப்பட்டது. இந் நகரம் 40 ஆண்டுகளுக்குப் பின் புதிதாக அமைக்கப்பட்ட நடுவண் அரசப் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டது. வர்ஜீனியாவின் அலெக்சாந்திரியா நகரமும் 1749 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1788 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வெளியான "ஃபெடரலிஸ்ட் எண்.43" என்னும் கட்டுரையில், நடுவண் அரசுக்குரிய பகுதியொன்றின் தேவை பற்றி ஜேம்ஸ் மடிசன் விளக்கினார். நடுவண் அரசைப் பேணுவதற்கும், அதன் பாதுகாப்புக்கும் தேசியத் தலை நகரம் மாநிலங்களிலிருந்து தனித்து இருக்கவேண்டும் என அவர் வாதிட்டார். 1783 ஆம் ஆண்டில் கோபமடைந்த போர்வீரர்களின் குழுவொன்று பிலடெல்பியாவில் இருந்த காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தியமை, நடுவண் அரசு தனது பாதுகாப்பைத் தானே கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டியது. இதனால், நடுவண் அரசுக்குரிய தலைநகரப் பகுதியொன்றை நிறுவுவதற்கான அதிகாரம், ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 1 பிரிவு 8 இன் கீழ் வழங்கப்பட்டது. தொடர்புள்ள மாநிலங்களினதும், காங்கிரசினதும் சம்மதத்துடன் உருவாக்கப்படும் 10 மைல் சதுர அளவுக்கு மேற்படாத ஒரு பகுதி ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் இருப்பிடமாக இருக்கும் என அது கூறுகிறது. எனினும், புதிய தலைநகரத்தின் அமைவிடம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 1790 இன் இணக்கம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட ஏற்பாடு ஒன்றின்படி மடிசன், அலெக்சாண்டர் ஹமில்ட்டன், தாமஸ் ஜெபர்சன் ஆகியோர், புதிய தேசியத் தலைநகரம் தென்பகுதியில் அமைய வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில், போர்ச் செலவுகளை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் என இணக்கப்பாட்டுக்கு வந்தனர். 1790 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நடுவண் அரசுக்கான அமைவிடத்தைத் தெரிவு செய்வது தொடர்பான சட்டமூலம் ஒன்றின்படி, புதிய நிரந்தரமான தலைநகரமொன்றை போட்டோமாக் ஆற்றுப் பகுதியில் அமைப்பதெனவும், சரியான இடம் சனாதிபதி வாசிங்டனால் தெரிவுசெய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டபடி தொடக்கத்தில் தலைநகரப் பகுதி, ஒரு பக்கம் 10 மைல் நீளம் கொண்ட சதுர வடிவினதாக இருந்தது. 1791 - 92 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆண்ட்ரூ எல்லிகொட் என்பவரும் அவரது உதவியாளர்களும் மேரிலாந்து, வர்ஜீனியா என்பவற்றை உள்ளடக்கித் தலைநகரப் பகுதிக்கான இடத்தை அளந்து எல்லை குறித்தனர். இவர்கள் எல்லையில் ஒரு மைலுக்கு ஒன்றாக எல்லைக் கற்களை நட்டனர். இவற்றில் பல இன்றும் காணப்படுகின்றன. புதிய நகரம் போட்டோமாக்கின் வட கரையில், ஏற்கெனவே இருந்த குடியேற்றமான ஜார்ஜ்டவுனுக்குக் கிழக்கே அமைக்கப்பட்டது. 1791 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் நாள் தலைநகரத்துக்கு, ஜார்ஜ் வாசிங்டனுக்கு மதிப்பளிப்பதற்காக அவரது பெயர் இடப்பட்டது. தலைநகரப் பகுதிக்கு கொலம்பியா என்ற பெயர் கொடுக்கப்பட்டது. புதிய தலைநகரில் அமெரிக்க காங்கிரசின் முதல் அமர்வு 1800 நவம்பர் 17 ஆம் நாள் இடம்பெற்றது. 1801 ஆம் ஆண்டின் சட்டமூலம் ஒன்றின்படி, வாசிங்டன், ஜார்ஜ்டவுன், அலெக்சாந்திரியா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய தலைநகரப் பகுதி முழுவதும் காங்கிரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நகரங்களுக்குள் அடக்கப்படாத தலைநகரப் பகுதியின் எஞ்சிய பகுதி இரண்டு கவுண்டிகளாக ஒழுங்கமைக்கப்பட்டன. போட்டோமாக் ஆற்றின் வட கரைப் பகுதிகள் வாசிங்டன் கவுண்டியாகவும், அவ்வாற்றின் தென்கரைப் பகுதிகள் அலெக்சாந்திரியா கவுண்டியாகவும் அமைந்தன. தற்போது டொரோண்டோ எனப்படும் அப்போதைய யோர்க் நகரம் எரிக்கப்பட்டதற்கு எதிர் நடவடிக்கையாக 1814 ஆகஸ்ட் 24-25 ஆம் தேதிகளில், பிரித்தானியப் படைகள், வாசிங்டன் எரிப்பு என அழைக்கபட்ட படையெடுப்பு மூலம் தலைநகரத்தைக் கைப்பற்றி எரித்தன. வெள்ளை மாளிகை உட்பட்ட பல அரசாங்கக் கட்டிடங்கள் எரிந்து அழிந்தன. பெரும்பாலான அரச கட்டிடங்கள் உடனடியாகவே திருத்தப்பட்டன. எனினும் அப்போது கட்டட வேலைபாடுகளில் இருந்த காங்கிரசு கட்டடம் 1868 வரை கட்டி முடிக்கப்படாமல் இருந்தது . 1830களில் செசப்பீக் ஓஹியோ கால்வாயை அண்டி, உள்நாட்டில் அமைந்திருந்த ஜார்ஜ்டவுன் துறைமுகத்தினால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாகத் தென்பகுதி கவுண்டியான அலெக்சாந்திரியா கவுண்டி பொருளாதார வீழ்ச்சி கண்டது. அக்காலத்தில் அலெக்சாந்திரியா அமெரிக்க அடிமை வணிகத்துக்கான முக்கிய சந்தையாக இருந்தது, ஆனால் அடிமைமுறை ஒழிப்புக்காக வாதிடுபவர்கள் நாட்டின் தலைநகரில் அடிமைமுறையை ஒழித்துவிட முயல்வதாக வதந்திகள் உலாவின. லாபமீட்டிவந்த அடிமை வணிகம் நிறுத்தப்படுவதைத் தடுப்பதைப் பகுதி நோக்கமாகக் கொண்டு அலெக்சாந்திரியாவை வர்ஜீனியாவுக்கு மீண்டும் அளிக்குமாறு கோரி பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 1846 ஜூலை 9 ஆம் தேதி போட்டோமாக் ஆற்றுக்குத் தெற்கேயிருந்த தலைநகரப் பகுதி முழுவதையும் வர்ஜீனியா மாநிலத்துக்கே திருப்பிக் கொடுப்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகரப் பகுதியில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது. எனினும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லை. 1861 ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கும்வரை வாசிங்டன் ஒரு சிறிய நகரமாகவே இருந்தது. போர் காரணமாக நடுவண் அரசு விரிவு பெற்றபோது நகரின் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்தது. அத்துடன் விடுதலையான அடிமைகளும் பெருமளவில் நகருக்குள் வந்தனர். 1870 ஆம் ஆண்டளவில், தலைநகரப் பகுதியின் மக்கள்தொகை சுமார் 132,000 ஐ எட்டியது . நகரம் விரிவடைந்தபோதும், அழுக்கான தெருக்களும், அடிப்படை நலவியல் வசதிகள் இன்மையும் நகரில் இருந்தன. நிலைமை படுமோசமாக இருந்ததால் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைநகரை வேறிடத்துக்கு மாற்றும் எண்ணத்தையும் முன்வைத்தனர் . 1871ல் நிறைவேற்றிய சட்டமூலம் ஒன்றின்மூலம் தலைநகரப் பகுதி முழுவதற்குமான அரசு ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியது. இச் சட்ட மூலம், வாசிங்டன் நகரம், ஜார்ஜ்டவுண், வாசிங்டன் கவுண்டி என்பவற்றை உள்ளடக்கி ஒரு மாநகர சபையை ஏற்படுத்தியது. இது அதிகாரபூர்வமாகக் கொலம்பியா மாவட்டம் என அழைக்கப்பட்டது . 1871 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாசிங்டன் என்னும் பெயர் சட்டப்படி இல்லாது போய்விட்டாலும், இப் பெயர் தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்ததுடன், முழு நகரமுமே வாசிங்டன் டி. சி. என அழைக்கப்பட்டது. 1871 ஆம் ஆண்டின் சட்டமூலத்தின் உதவியுடன், பொது வேலைகள் சபை ஒன்றை நிறுவி அதனிடம், நகரை நவீனமயப்படுத்தும் பொறுப்பையும் ஒப்படைத்தது. 1873 ஆம் ஆண்டில் சனாதிபதி கிராண்ட் மேற்படி சபையின் செல்வாக்கு மிக்க உறுப்பினரான அலெக்சாண்டர் ஷெப்பேர்ட் என்பரைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஆளுனராகத் தெரிவு செய்தார். அந்த ஆண்டில் ஷெப்பேர்ட் 20 மில்லியன் டாலர்களைப் பொது வேலைகளுக்காகச் செலவு செய்தார். இது வாசிங்டனை நவீனமயப் படுத்தினாலும் அதனை பொருளாதார முறிவு நிலைக்குத் தள்ளியது. 1874ல் ஆளுனர் பதவி ஒழிக்கப்பட்டு நகரம் காங்கிரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் மக்மிலான் திட்டம் (McMillan Plan) நடைமுறைக்கு வரும்வரை வரை நகரைப் புதுப்பிக்கும் வேறெந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. 1930ல் பெரும் பொருளாதாரத் தொய்வு ஏற்படும் வரை இம் மாவட்டத்தின் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் நிலையாக இருந்தது. 1933 - 1936 காலத்தில் அதிபர் பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் நடைமுறைக்குக் கொண்டுவந்த பல பொருளாதாரத் திட்டங்களால் வாசிங்டனில் அதிகார அமைப்பு விரிவடைந்தது. இரண்டாம் உலகப் போர் அரசின் நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கியது. இவற்றினால் 1950 ஆம் ஆண்டளவில் நடுவண் அரசின் அலுவலர்களின் எண்ணிக்கை தலைநகரில் பெருமளவு அதிகரித்தது. மாவட்டத்தின் மக்கள்தொகை 802,178 ஆனது. 1968 ஏப்ரல் 4 ஆம் தேதி மக்கள் உரிமைத் தலைவரான இளைய மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. இவ் வன்முறை மூன்று நாட்களுக்கு நீடித்தது. பல வணிக நிறுவனங்களும், கட்டிடங்களும் எரிக்கப்பட்டன. இவற்றுட் பல 1990கள் வரை திருத்தப்படாமல் அழிபாடுகளாகவே இருந்தன. 1973 ஆம் ஆண்டில் காங்கிரஸ், கொலம்பியா மாவட்ட உள்ளாட்சிச் சட்டமூலம் என்னும் சட்டமூலத்தை நிறைவேற்றியது. இதன்படி இம்மாவட்டத்துக்கு ஒரு தெரிவு செய்யப்பட்ட மேயர் பதவி ஏற்பட்டதுடன் ஒரு நகர அவையும் அமைக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டில் வால்ட்டர் வாசிங்டன் என்பவர் நகரின் முதல் மேயராகவும், முதல் கறுப்பு இன மேயராகவும் ஆனார். எனினும், தொடர்ந்து வந்த நகராட்சி நிர்வாகங்களில் மேலாண்மைக் குறைபாடுகளும், வீண் செலவுகளும் மிகுந்திருந்ததாகக் குறை காணப்பட்டது. 1995ல், கொலம்பியா மாவட்ட நிதிக் கட்டுப்பாட்டுச் சபையை நிறுவிய காங்கிரஸ் மாநகராட்சியின் செலவுகளை மேற்பார்வையிடவும், நகரை மறுசீரமைக்கவும் வழி செய்தது. 2001 ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம் தனது நிதி தொடர்பான கட்டுப்பாட்டை மீளவும் பெற்றதுடன் மேற்பார்வைச் சபையின் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. புவிஅமைவு இதன் மொத்த பரப்பளவு 68.3 சதுர மைல்கள் (177 கிமீ2) இதில் 61.4 சதுர மைல்கள் நிலத்திலும் 6.9 சதுர மைல்கள் நீரிலும் அமைந்துள்ளது . தற்போதய வாசிங்டன் டி.சி மேரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. 1847 ல் பொட்டாமக் ஆற்றுக்கு தென்புறம் உள்ள வர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வர்ஜீனியா மீளப்பெற்றுக்கொண்டது. தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு பகுதிகள் மேரிலாந்து மாநிலத்தாலும் தென்மேற்கு பகுதி வர்ஜீனியா மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. வாசிங்டன் மூன்று இயற்கையாக அமைந்த நீர்வழிகளை கொண்டுள்ளது. அவை பொட்டமாக் ஆறு, அதன் கிளைகளான அனகோச்டிகா ஆறு மற்றும் ராக் கிரீக் என அழைக்கப்படும் ராக் சிறுகுடாவும் ஆகும் . பலரும் நினைப்பது போல் இந்நகரம் சதுப்புநிலத்தை மீளப்பெற்று கட்டப்பட்டதல்ல . ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு இடைபட்ட பகுதி ஈரநிலமாக இருந்தபோதிலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களும் மரங்கள் அடர்ந்த மலைப்பகுதிகளும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 409 அடி (125 மீ) உயரத்திலுள்ள "பாய்ண்ட் ரேனோ" கொலம்பியா மாவட்டத்தின் (வாசிங்டன் டி சி) உயரமான பகுதியாகும். இது "டென்லேடவுன்" பகுதியிலுள்ள "போர்ட் ரேனோ" பூங்காவுக்கு அருகில் உள்ளது . தாழ்வான பகுதி கடல் மட்ட அளவுள்ள பொட்டாமக் ஆறு ஆகும். வாசிங்டன் நகரின் புவிமையம் 4வது மற்றும் L தெருக்களின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது . தோராயமாக 19.4% வாசிங்டன், டி. சி யின் நிலம் புல்தரைக்காடு ஆகும். அதிக மக்கள் அடர்த்தி உடைய நகரங்களில் நியுயார்க் நகரம் இதே அளவு விழுக்காடு புல்தரைக்காடு கொண்டதாகும். ஐக்கிய மாநில தேசிய பூங்கா சேவையமைப்பு வாசிங்டன், டி. சி யின் பெரும்பாலான இயற்கை இருப்பிடங்களை கவனித்துக்கொள்கிறது. ராக் கிரீக் பூங்கா, செசபிக் மற்றும் ஒகியோ கால்வாய் தேசிய வரலாற்று பூங்கா, தியோடர் ரூச்வெல்ட் தீவு, அனகோச்டியா பூங்கா, நேசனல் மால் ஆகியவையும் அவற்றில் அடங்கும். பொட்டாமக் ஆற்றில் வாசிங்டன் நகரின் வடமேற்கில் கிரேட் அருவி உள்ளது. 19ம் நூற்றாண்டில் சார்ச் டவுனில் தொடங்கும் செசபிக் மற்றும் ஒகியோ கால்வாய் அருவியை தவிர்த்து படகு போக்குவரத்து நடைபெற பயன்பட்டது. காலநிலை வாசிங்டன், டி. சி ஈரப்பதமுடைய கீழ்வெப்பமண்டல காலநிலையை கொண்டதாகும். வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமான வெப்பத்தையும் குறைந்த ஈரப்பதமும் கொண்டவை. குளிர் காலத்தில் வெப்பநிலையானது குறைவாக நீடித்து இருக்கும். ஆண்டு சராசரி பனிப்பொழிவு 16.6 அங்குலம் ஆகும். டிசம்பர் நடுவிலிருந்து பிப்ரவரி நடு வரை சராசரி குளிர் கால குறைந்த வெப்பநிலை 30 °F (-1 °C) ஆகும். நான்கிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பனிப்புயலானது வாசிங்டன் பகுதியை தாக்கும். கடும் மழை நார்ஈச்டர் என்று அழைக்கப்படும். இது பெருங்காற்று, பெரும்மழை மற்றும் அவ்வப்போது பனிப்பொழிவும் கொண்டது. இந்த கடும்மழையானது அமெரிக்காவின் பெரும்பாலான கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கும். கோடை காலத்தில் மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இருக்கும். சூலை ஆகஸ்ட் மாதங்களில் இதன் வெப்பம் சராசரியாக 80 °F அளவில் இருக்கும். மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இணைவதால் இங்கு அடிக்கடி இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யும். இந்த இடிமுழக்கம் சில நேரங்களில் சூறாவளியை இப்பகுதியில் உருவாக்கும். எப்பொழுதாவது புயல் இப்பகுதியை கடக்கும். எனினும் வாசிங்டன் கடற்கரையை ஒட்டி இல்லாமல் உள் இருப்பதால் புயல் வாசிங்டனை அடையும் முன்னர் வலு இழந்து விடும். எனினும் பொட்டாமக் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சொத்துகளுக்கு சேதாரம் விளைவித்துவிடும், குறிப்பாக ஜார்ஜ்டவுன் பகுதி அதிகமாக பாதிக்கப்படும் . அதிகபட்ச வெப்பமானது 106 °F (41 °C), இது சூலை 20, 1930 & ஆகஸ்ட் 6, 1918 இல் பதிவு செய்யப்பட்டது. குறைந்தபட்ச வெப்பமானது −15 °F (−26.1 °C), இது பிப்ரவரி 11, 1899 ல் பதிவு செய்யப்பட்டது. ஓர்ஆண்டில் சராசரியாக 36.7 நாட்கள் வெப்பம் 90 °F (32 °C) யை விட அதிகமாகவும், 64.4 இரவுகள் வெப்பம் உறைநிலையை (32 °F (0 °C)) விட குறைவாகவும் இருக்கும். நகரஅமைப்பு வாசிங்டன், டி. சி திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகராகும். பிரெஞ்காரரும் கட்டடக்கலை நிபுணரும், பொறியாளரும் நகரவடிவமைப்பாளருமான சார்லஸ் எல்ஃபேன்ட் (Charles L’Enfant) வாசிங்டன் நகர வடிவமைப்பில் பெரும்பாங்காற்றியவர். அமெரிக்க புரட்சியின் போது இங்கு இராணுவ பொறியாளராக மேஜர் செனரல் லெஃபாயட்டெ (Lafayette) உடன் வந்தார். 1971 ல் அதிபர் வாசிங்டன் புதிய தலைநகருக்கான திட்ட வரைபடம் உருவாக்குமாறு எல்ஃபேன்ட் அவர்களை நியமித்தார். இவர் பரோகியு பாணியில் மாதிரியை அமைத்தார். அதன்படி அகன்ற சாலைகள் வட்டம் மற்றும் செவ்வக பகுதியில் இருந்து பிரிந்து செல்லும்.. திட்டமிடுதலில் அணுக்க நிருவாக முறையை எல்ஃபேன்ட் வலியுறுத்தியதால், வாசிங்டன் அவரை இப்பொறுப்பிலிருந்து மார்ச், 1972 ல் நீக்கினார். எல்ஃபேன்டுடன் பணியாற்றிய ஆண்ரூ எலிகாட் என்பவரை இத்திட்டத்தை முடிக்க நியமித்தார். மூல திட்டத்திலிருந்து சிலவற்றை எலிகாட் மாற்றினாலும் வாசிங்டன் நகர வடிவமைப்புக்கான பெருமை எல்ஃபேன்ட் அவர்களையே சாரும் . வாசிங்டன் நகரமானது தற்போதய புளோரிடா நிழற்சாலையை வடக்கிலும், ராக் கிரீக்கை மேற்கிலும் அனகோச்டிகா ஆற்றை கிழக்கிலும் எல்லைகளாக கொண்டிருந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செனட்டர் ஜேம்சு மெக்மில்லன் தலைமையில் கூட்டு ஆணையம் வாசிங்டன் நகரை அழகுபடுத்த அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி சேரிகள் அப்புறப்படுத்தப்பட்டன, புதிய நடுவண் அரசு கட்டடங்களும், நினைவுச்சின்னங்களும் கட்டப்பட்டன, நகர பூங்கா அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக பணி அமர்த்தப்பட்ட வல்லுனர்கள் நகரின் மூல வரைபடத்தில் எந்த மாறுதலும் செய்யவில்லை. இவர்கள் லஃபாண்ட் அவர்களின் வடிவமைப்பை முழுமை செய்தவர்களாக கருதப்படுகிறார்கள். 1899 ஆம் ஆண்டு 12மாடிகள் கொண்ட கெய்ரோ குடியிறுப்பு வளாகம் கட்டப்பட்ட பின் நகரின் எந்த கட்டடமும் காங்கிரசு கூடும் கேபிடல் கட்டடத்தை விட உயரமாக இருக்கக்கூடாது என்று சட்டமியற்றப்பட்டது. 1910-ல் இந்த சட்டம் கட்டடங்களின் உயரம் அடுத்துள்ள தெருக்களின் அகலத்தைவிட 20 அடி கூடுதலாக இருக்கலாம் என மாற்றப்பட்டது. இதனால் இன்றும் வாசிங்டன் நினைவகமே உயரமானதாக உள்ளது. இந்த உயர கட்டுப்பாடில் இருந்து தப்பிக்க உயரமான கட்டடங்கள் விர்ஜீனியாவில் ரோசலின் பகுதியில் கட்டப்படுகின்றன. வாசிங்டன் டிசி சமமற்ற நான்கு பாகங்களாக (கால்வட்டம்) பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.இந்த கால்வட்டத்தின் எல்லைகள் அமெரிக்க கேபிடல் கட்டடத்தை அச்சாக கொண்டு தொடங்குகின்றன . அனைத்து சாலைகளும் கால்வட்டத்தின் சுருக்க குறியீட்டை கொண்டுள்ளதால் அவற்றின் இருப்பிடத்தை தெளிவாக அறியலாம். நகரின் பெரும்பகுதி தெருக்கள் கம்பிவலை ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு-மேற்கு தெருக்கள் எழுத்துக்களாலும் (எகா: ஐ தெரு வகி), வடக்கு-தெற்கு தெருக்கள் எண்களாலும் (எகா: 4வது தெரு தெமே) குறிப்பிடப்படுகின்றன. போக்குவரத்து வட்டங்களில் இருந்து தொடங்கும் நிழற்சாலைகளுக்கு மாநிலங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 50மாநிலங்கள், போர்ட்ட ரிகோ பெயர்களும் நிழற்சாலைகளில் இடம்பெற்றுள்ளன.பென்சில்வேனியா நிழற்சாலை வெள்ளை மாளிகை, அமெரிக்க கேபிடல், கே தெரு போன்றவற்றை இணைக்கிறது. கே தெருவில் பல ஆதரவு திரட்டும் குழுக்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. வாசிங்டனில் 174வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. அவற்றில் 59 மாசேசூசெட்டசு நிழற்சாலையில் உள்ளன. கட்டடக்கலை மக்கள் தொகை 2008ல் கொலம்பியா மாவட்டத்தில் 591,833 மக்கள் இருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை கணித்துள்ளது. வேலை நாட்களில் புறநகர்களில் இருந்து இங்கு பயணப்படுபவர்களின் எண்ணிக்கையால் மாவட்டத்தின் மக்கள்தொகை 2005ல் 71.8% அதிகரித்திருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். பகல் வேலைகளில் இதன் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்கள். அருகிலுள்ள மேரிலாந்து, வர்ஜீனியா கவுண்டிகளை இணைத்த வாசிங்டன் பெருநகர பகுதியின் மக்கள் தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும், இது ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது பெரியதாகும். 2007ல் மக்கள்தொகையில் 55.6% கறுப்பு இன மக்களும், 36.3% வெள்ளை இன மக்களும், 8.3% எசுப்பானிய (எல்லா இனமும்) மக்களும், 5% மற்றவர்களும் (அமெரிக்க பூர்வகுடிகள், அலாசுக்கா மக்கள், அவாய் மக்கள், பசிபிக் தீவு மக்கள் இதில் அடங்குவர்) 3.1% ஆசிய இன மக்களும், 1.6% கலப்பு இன மக்களும் வாழ்வதாக கணக்கிடப்பட்டனர். இங்கு 74,000 மக்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களாக கணிக்கப்பட்டுள்ளார்கள் . வாசிங்டன் நகரின் உருவாக்கம் முதலே இங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வசித்து வருகிறார்கள். தனித்துவமாக மற்ற நகரங்களை விட இங்கு அதிக அளவு விழுக்காடு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். பின் சீராக கறுப்பு இன மக்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது இதற்கு முதன்மையான காரணம் பலர் வாசிங்டனின் புறநகரங்களில் குடியேறியது . மேலும் பல வயதான மக்கள் குடும்பத் தொடர்பு மற்றும் குறைவான வீட்டுவிலை காரணமாக தென் மாநிலங்களுக்கு குடிபெயர்ந்ததும் ஆகும் . அதேவேளை வெள்ளை இன மக்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது . ஏழை கறுப்பின மக்களின் வெளியேற்றமும் அந்த பகுதிகளில் குடியேறிய வசதி படைத்த வெள்ளை இன மக்களின் எண்ணிக்கையும் இதற்கு காரணமாகும். 2000லிருந்து 7.3% குறைந்த கறுப்பினத்தவரின் தொகையும் 17.8% கூடிய வெள்ளை இனத்தவரின் தொகையும் இதற்கு சான்றாகும். 2000ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 33,000 வயது வந்தோர் ஓரின சேர்க்கை உள்ளோர் என தெரிவித்துள்ளனர். இது நகரின் வயது வந்தோர் தொகையில் 8.1% ஆகும். ஒரினச்சேர்க்கை உடையோர் அதிகமிருந்தாலும் இங்கு ஒரினச்சேர்க்கை மணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதில்லை. 2000ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பாதிக்கு மேற்பட்டவர்கள் கிறுத்துவ சமயத்தை பின்பற்றுகிறார்கள். 21% கத்தோலிக பிரிவையும் 9.1% அமெரிக்க பாப்டிசுட் பிரிவையும் 6.8% தென் பாப்டிசுட் பிரிவையும், 1.3% கிழக்கு பழமைவாத பிரிவையும் 13% மக்கள் மற்ற பிரிவுகளையும் பின்பற்றுகின்றனர். 10.3% மக்கள் இசுலாத்தையும் 4.5% மக்கள் யூத மதத்தையும் 26.8% மக்கள் மற்ற மதங்களை பின்பற்றுவோராகவும் அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாதவார்களாகவும் உள்ளனர். குற்றம் வன்முறை குற்றங்கள் மலிந்து இருந்த 1990ம் ஆண்டுகளில் வாசிங்டன் டிசி ஐக்கிய அமெரிக்காவின் கொலைக்குற்றங்களின் தலைநகரம் என அழைக்கப்பட்டது . உச்சமாக 1991ல் 482 கொலைக்குற்றங்கள் நடந்தது. 1990களின் பின் பகுதியில் இவை வெகுவாக குறைந்தன. 2006ல் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை 169ஆக குறைந்தது . 1995லிருந்து 2007வரையான காலகட்டத்தில் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கை 47% ஆக குறைந்தது. இதே காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் 48% குறைந்தது. மற்ற பெரிய நகரங்களை போல குற்றங்கள் போதை மருந்து மற்றும் போக்கிரி குழுக்கள் நிறைந்த பகுதிகளில் அதிக அளவில் இடம்பெற்றன. வசதியுள்ளவர்கள் வாழும் வடமேற்கு வாசிங்டன் பகுதியில் குற்றங்கள் குறைவாக இடம்பெற்றன. ஆனால் கிழக்கே போக போக குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகியது. ஒரு காலத்தில் வன்முறைக்குற்றங்கள் மலிந்திருந்த கொலம்பியா ஹைட்ஸ் , டூபாண்ட் சர்க்கிள் போன்ற பகுதிகளில் வசதிமிக்கவர்கள் குடியேறியதால் அப்பகுதி பாதுகாப்பானதாகவும் பரபரப்பானதாகவும் மாறியது. இதன் காரணமாக வாசிங்டன் டிசி நகரின் குற்றங்கள் மேலும் கிழக்கே மேரிலாந்தின் பிரின்ஸ் வில்லியம் கவுண்டி பக்கமாக நகர்ந்தன. 2006 ஜூன் 26 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கொலம்பியா மாவட்டத்துக்கும் கேளருக்கும் நடந்த வழக்கில் நகரின் 1976 கைத்துப்பாக்கி மீதான தடை துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை தொடர்பான 2 ஆவது சட்டதிருத்துக்கு எதிரானது என தீர்ப்பாகியது . இருந்த போதிலும் அத்தீர்ப்பு எல்லா வகையான துப்பாக்கி கட்டுப்பாடுகளையும் தடை செய்யவில்லை . பொருளாதாரம் வாசிங்டன் டிசி வளரும் பன்முக தன்மை கொண்ட பொருளாதாரத்தை கொண்டது. 2008ல் இதன் மொத்த உற்பத்தி 97.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் . 50 அமெரிக்க மாநிலங்களை ஒப்பிடும் போது இதன் நிலை 35 வது ஆகும் . 2008ல் வாசிங்டன் டிசியின் வேலைவாய்ப்புகளில் அமெரிக்க நடுவண் அரசினுடையது 27% ஆகும் . பொருளாதார பின்னடைவு காலங்களில் நடுவன் அரசு இயங்கும் என்பதால் தேசிய பொருளாதார சரிவு வாசிங்டன் டிசியை தாக்காது என்று நம்பப்பட்டது . எனினும் 2007ல் கணக்கின் படி அமெரிக்க அரசு பணியாளர்களில், நடுவன் அரசின் 14% மட்டுமே இங்கு வசிக்கின்றார்கள் . சட்ட நிறுவனங்கள், படைத்துறை மற்றும் பொதுத்துறை ஒப்பந்ததாரர்கள், லாபநோக்கில்லா அமைப்புகள், தொழிற் சங்கங்கள், தொழில் சார் வணிக குழுக்கள், அரசின் ஆதரவு பெற்று தரும் நிறுவனங்கள் போன்றவற்றின் தலைமையகங்கள் நடுவன் அரசுக்கு அருகாமையில் வாசிங்டன் டிசி மற்றும் அதன் சுற்றுபுறங்களில் அமைந்துள்ளன.. நிதி, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி போன்ற அரசாங்கத்துடன் நேரடி தொடர்பில்லாத தொழில்களும் இங்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஹோவர்ட் பல்கலைக்கழகம், வாசிங்டன் மருத்துவமனை மையம், ஃவேன்னி மே ஆகியவை அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கும் 5 நிறுவனங்களாகும் . 2006ல் வாசிங்டன் டிசி மக்களின் தனி நபர் ஆண்டு வருமானம் $55,755 அமெரிக்க டாலராகும், இது மற்ற 50 மாநிலங்களையும் விட அதிகமாகும் . எனினும் 2005 ஆண்டு 19% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர், இது மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். மிசிசிப்பி மாநிலத்தில் மட்டுமே வாசிங்டன் டிசியை விட அதிக மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இது நகர மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றதாழ்வை காட்டுகிறது. பண்பாடு தேசிய மால் என்பது நகரின் மையத்தில் அமைந்த பரந்த திறந்த வெளி பூங்காவாகும். மாலின் மையத்தில் வாசிங்டன் நினைவகம் அமைந்துள்ளது. மேலும் இதில் லிங்கன் நினைவகம், தேசிய இரண்டாம் உலகப்போர் நினைவகம், கொரிய போர் வீரர்கள் நினைவகம், வியட்னாம் வீரர்கள் நினைவகம், ஆல்பரட் ஐன்சுட்டின் நினைவகம் ஆகியவை அமைந்துள்ளன. தேசிய பெட்டகத்தில் அமெரிக்க வரவாற்றை சார்ந்த ஆயிரக்கனக்கான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. விடுதலை சாற்றுதல், ஐக்கிய மாநிலங்கள் அரசியலமைப்பு, தனி நபர் உரிமை போன்ற பல புகழ்பெற்ற ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மாலுக்கு தென் புறத்தில் டைடல் பேசின் அமைந்துள்ளது. டைடல் பேசினின் கரையை ஒட்டி யப்பான் நாடு அன்பளிப்பாக வழங்கிய செர்ரி மரங்கள் நடப்பட்டுள்ளன. பிராங்களின் ரூசுவெல்ட் நினைவகம், ஜெப்பர்சன் நினைவகம், கொலம்பியா மாவட்ட போர் நினைவகம் ஆகியவை டைடல் பேசினை சுற்றி அமைந்துள்ளன. சுமித்சோனியன் நிறுவனம் கல்வி சார் நிறுவனமாக காங்கிரசால் 1849 தோற்றுவிக்கப்பட்டது. இது இந்நகரின் பெரும்பாலான அரசாங்க அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் நிர்வகிக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இந்நிறுவனத்துக்கு பகுதியளவு நிதியுதவி அளிப்பதால் இதன் அருங்காட்சியகங்கள் நுழைவு கட்டணம் இல்லாமல் பார்வையாளர்களை அனுமதிக்கின்றன . தேசிய மாலை சுற்றி அமைந்துள்ள சுமித்சோனியன் அருங்காட்சியகங்கள்:- தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்; ஆப்பிரிக்க கலைகளுக்கான தேசிய அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க இந்தியன் அருங்காட்சியகம்; சாக்லர் பிரீர் காட்சியகம் கிரோசிமா அருங்காட்சியகம்; சிற்ப தோட்டம்; கலை மற்றும் தொழிலக கட்டடம்; தில்லான் ரிப்ளே மையம்; சுமித்சோனியனின் தலைமையகமாக செயல்படும் அரண்மனை என்றழைக்கப்படும் சுமித்சோனியன் நிறுவன கட்டடம் முன்பு தேசிய அமெரிக்க கலை அருங்காட்சியகம் என அறியப்பட்ட சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. , டோனல்ட் டபள்யு ரேநால்ட் மையம் வாசிங்டனின் சீனாடவுனுக்கு அருகில் அமைந்துள்ளது. ரேநால்ட் மையம் பழைய காப்புரிமை அலுவலக கட்டடம் என்றும் அறியப்படுகிறது . ரென்விக் காட்சியகம் சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகத்தின் பகுதியாக இருந்தபோதிலும் இது வெள்ளை மாளிகையை ஒட்டிய தனி கட்டடத்தில் இயங்கி வருகிறது. மற்ற சுமித்சோனியன் அருங்காட்சியகம் மற்றும் காட்சியகங்கள்: தென்கிழக்கு வாசிங்டனிலுள்ள அனகோச்டியா சமூக அருங்காட்சியகம், ; யூனியன் ஸ்டேசனிலுள்ள தேசிய அஞ்சலக அருங்காட்சியகம்; வுட்லி பார்க்கிலுள்ள தேசிய மிருக்காட்சி சாலை. தேசிய கலை காட்சியகத்தின் கிழக்கு கட்டடத்தில் நவீன கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கலை காட்சியகம் காப்பிடலுக்கு அருகிலுள்ள தேசிய மாலில் அமைந்துள்ளது, ஆனால் இது சுமித்சோனியன் நிறுவனத்துக்கு உட்பட்டதல்ல. இது அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்கத்துக்கு உரியது, அதனால் இதற்கும் நுழைவு கட்டணம் இல்லை. இக்காட்சியகத்தின் மேற்கு கட்டடத்தில் 19ம் நூற்றாண்டை சார்ந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன . சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை தேசிய கலை காட்சியகம் என பலர் தவறாக கருதுகிறார்கள். தேசிய கலை காட்சியகம் சுமித்சோனியன் நிருவாகத்தின் கீழ் வருவததில்லை ஆனால் மற்ற இரண்டும் சுமித்சோனியன் நிறுவனத்தை சார்ந்தவை. ஜூடிசியர் சொகயர் அருகில் பழைய ஓய்வூதிய கட்டடத்தில் தேசிய கட்டட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. காங்கிரசால் இது தனியார் நிறுவனமாக பட்டயம் அளிக்கப்பட்டுள்ளது. பல தனியார் கலை அருங்காட்சியகங்களும் இங்கு உள்ளன.தேசிய பெண்களின் கலை அருங்காட்சியகம்; கோர்கோரன் கலை காட்சியகம் இதுவே வாசிங்டன் பெரிய தனியார்அருங்காட்சியகம் ஆகும். டூபான்ட் சர்க்கலில் உள்ள பிலிப்பசு கலெக்சன், இது ஐக்கிய மாநிலங்களில் அமைந்த முதல் நவீன கலை அருங்காட்சியகம் ஆகும். வாசிங்டனில் மேலும் பல தனியார் அருங்காட்சியகங்கள் உள்ளன அவை நியுசியம், பன்னாட்டு வேவு அருங்காட்சியகம், தேசிய புவி சமூக அருங்காட்சியகம் மற்றும் மரியன் கோச்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம். ஐக்கிய மாநிலங்கள் ஹோலோகோஸ்ட் நினைவு அருங்காட்சியகம் தேசிய மாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ஹோலோகோஸ்ட் தொடர்பான காட்சிகள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன . ஊடகங்கள் வாசிங்டன் டி சி உள்நாட்டு, பன்னாட்டு ஊடகங்களுக்கு முக்கியமான மையம் ஆகும். 1877ல் தி வாசிங்டன் போஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது.இதுவே பழைய மற்றும் வாசிங்டன் வட்டாரத்தில் அதிகம் வாசிக்கப்படும் உள்ளூர் செய்தித்தாளாகும் . உள்நாட்டு, பன்னாட்டு அரசியல் செய்திகளை வெளியிட்டு அலசுவதில் இச்செய்தித்தாள் குறிப்பிடத்தக்கது. வாட்டர் கேட் இழிவை வெளிக்கொணர்ந்ததில் சிறப்பாக அறியப்பட்டது . தி போஸ்ட் என அறியப்படும் இந்நாளிதழ் கொலம்பியா மாவட்டம், மேரிலாந்து & வர்ஜீனியா ஆகியவற்றுக்கு தனியான (மொத்தம் மூன்று) அச்சு பதிப்புகளை வெளியிடுகிறது. தனி தேசிய பதிப்புகள் இல்லாத போதும் 2008 செப்டம்பர் எடுக்கப்பட்ட கணக்கின் படி இந்நாளிதழ் நாட்டின் செய்தி இதழ் விற்பனையில் ஆறாவது இடத்தில் உள்ளது. யுஎஸ்ஏ டுடே என்ற நாளிதழே அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் நாளிதழாகும். இதன் தலைமையகம் வாசிங்டனுக்கு அருகில் வர்ஜீனியாவில் மெக்லின் என்ற இடத்தில் உள்ளது . தி வாசிங்டன் போஸ்ட் நிறுவனம் தி எக்சுபிரசு என்ற இலவச பயணிகள் செய்தித்தாளை வெளியிடுகிறது. இதில் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவை சுருக்கமாக வெளியிடப்படுகின்றன. மேலும் எசுப்பானிய மொழி நாளிதழ் எல் டிம்போ லாட்டினோ என்பதையும் வெளியிடுகிறது. மற்றொரு உள்ளூர் நாளிதழான தி வாசிங்டன் டைம்சு, வாரமிரு முறை இதழான வாசிங்டன் சிட்டி பேப்பர் ஆகியவற்றுக்கு வாசிங்டன் பகுதியில் கணிசமான வாசகர்கள் உண்டு . வாசிங்டன் பிளேடு, மெட்ரோ வீக்லி, வாசிங்டன் இன்பார்மர், வாசிங்டன் ஆப்ரோ அமெரிக்கன் ஆகியவை மற்ற சில இதழ்களாகும். தி ஹில் மற்றும் ரோல் கால் ஆகிய நாளிதழ்கள் காங்கிரசு மற்றும் நடுவண் அரசாங்கம் குறித்த செய்திகளுக்கு சிறப்புத்துவம் கொடுத்து வெளிவருகின்றன. வாசிங்டன் பெருநகர பகுதியானது 2 மில்லியன் வீடுகளுடன் நாட்டின் ஒன்பதாவது பெரிய தொலைக்காட்சி ஊடக சந்தையாக உள்ளது . சி-செபான் (C-SPAN), பிளாக் எண்டர்டெய்ன்மென்ட் டெலிவிசன் (BET); தி நேசனல் ஜியோகிராபிக் சானல், சுமித்சோனியன் நெட்வொர்க், டிராவல் சானல் (செவிசேசு, மேரிலாந்து); டிஸ்கவரி கம்யூனிகேசன்சு (சில்வர் ஸ்பிரிங், மேரிலாந்து) பப்ளிக் பிராட்காஸ்டிங் சர்வீசு (PBS) (ஆர்லிங்டன், வர்ஜீனியா) ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன. நேசனல் பப்ளிக் ரேடியோ (NPR), எக்ஸ்எம் சாட்டிலைட் ரேடியோ, அமெரிக்க அரசின் பன்னாட்டு வானொலி சேவையான வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஆகிய வானொலி நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன விளையாட்டு ஐந்து தொழில்முறை ஆடவர் அணிகள் வாசிங்டன் டி சியில் உள்ளன. கூடைபந்தாட்ட அணி வாசிங்டன் விசார்ட்ஸ் மற்றும் பனி வளைதடிப் பந்தாட்ட அணி வாசிங்டன் காபிடல்ஸ் ஆகிய இரண்டும் உள்ளூர் போட்டிகளை சைனா டவுனிலுள்ள வெரிசான் மையத்தில் விளையாடுகின்றன. புகழ்பெற்ற கூடைபந்தாட்ட வீரர் மைக்கல் ஜார்டன் வாசிங்டன் விசார்ட்ஸின் சிறிய பங்குதாரராகவும் அதன் தலைவராகவும் இருந்தார். அடிபந்தாட்ட அணி வாசிங்டன் நேசனல்ஸ் உள்ளூர் போட்டிகளை தென்கிழக்கு டிசியில் புதிதாக கட்டப்பட்ட நேசனல்ஸ் பார்க் என்ற இடத்தில் விளையாடுகிறது. கால்பந்தாட்ட அணி டிசி யுனைட்டட் உள்ளூர் போட்டிகளை ஆர்எப்கே திடலில் விளையாடுகிறது. அமெரிக்கக் காற்பந்தாட்ட அணி வாசிங்டன் ரெட்ஸ்கின்ஸ் உள்ளூர் போட்டிகளை வஃடக்ஸ் களத்தில்(லாண்ட்ஓவர், மேரிலாந்து) விளையாடுகிறது. இந்த அணி மூன்று முறை சூப்பர் போல் எனப்படும் கோப்பையை கைப்பற்றியுள்ளது . மேலும் இங்கு இரண்டு தொழில் முறை பெண்கள் அணிகளும் உள்ளன. கூடைபந்தாட்ட அணி வாசிங்டன் மிஸ்டிக்ஸ் (WNBA) உள்ளூர் போட்டிகளை வெரிசான் மையத்திலும்; கால்பந்தாட்ட அணி வாசிங்டன் பிரீடம் உள்ளூர் போட்டிகளை ஜெர்மான்டவுன் (மேரிலாந்து) மற்றும் ஆர்எப்கே திடலிலும் விளையாடுகின்றன. அரசாங்கம் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பின் விதி ஒன்று பத்தி எட்டின்படி வாசிங்டன் டி சி மீதான உறுதியான முடிவான அதிகாரத்தை காங்கிரசிற்கு வழங்குகிறது. 1973 ஹோம் ரூல் சட்டம் நிறைவேற்றப்படும் வரை கொலம்பியா மாவட்டத்துக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட நகர மன்றம் கிடையாது. அச்சட்டம் காங்கிரசின் சில அதிகாரங்களை உள்ளூர் அரசுக்கு வழங்குகிறது. உள்ளூர் அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர தந்தை மற்றும் 13உறுப்பினர்களை கொண்ட நகர் மன்றத்தால் நிருவகிக்கப்படுகிறது. எனினும், காங்கிரசு நகர்மன்றம் இயற்றும் சட்டங்களை மறு ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் அவற்றை நீக்கக்கூடிய அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க சட்டமன்றமே கொலம்பியா மாவட்டம் (வாசிங்டன் டிசி) தொடர்புடைய நிகழ்வுகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டது. நகர தந்தையும் நகர் மன்றமும் வரவு செலவு திட்டத்தை முடிவு செய்வார்கள் ஆனால் அது காங்கிரசால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும். உள்ளூர் வருமானம், விற்பனை & சொத்து வரி 67% வருமானத்தை நகரஅரசாங்கத்துக்கு அளிக்கிறது. மற்ற 50மாநிலங்களைப்போலவே டிசிக்கும் நடுவண் அரசு பண உதவி செய்கிறது, அது இந்நகரின் வருவாயில் 26விழுக்காடு ஆகும். பாதுகாப்பு செலவினங்களை ஈடுகட்டுவதற்காக காங்கிரசு டிசி நகர அரசாங்கத்துக்கு பண உதவு செய்கிறது. 2007ல் பெறப்பட்ட தொகை $38 மில்லியன் ஆகும், அது நகர வரவு செலவு திட்டத்தில் 0.5% ஆகும் . வாசிங்டனின் நீதித்துறையை நடுவண் அரசாங்கம் நிர்வகிக்கிறது. நடுவண் அரசின் அனைத்து சட்டத்தை நிலைநிறுத்தும் அமைப்புகளுக்கும் இந்நகரத்தில் அதிகாரம் உண்டு, அவை நகரின் பாதுகாப்புக்கு உதவிசெய்கின்றன . உள்ளூர் குற்றங்களின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்க அரசின் கொலம்பியா மாவட்ட வழக்குரைஞர் கவனிப்பார். காங்கிரசில் வாக்குரிமை கொலம்பியா மாவட்ட குடிமக்களுக்கு அமெரிக்க காங்கிரசில் வாக்களிக்கும் உறுப்பினர் கிடையாது. கொலம்பியா மாவட்ட மக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர் காங்கிரசில் இருந்தாலும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. அவர் செயற்குழுக்களில் உறுப்பினராக கலந்து கொள்ளலாம், விவாதங்களில் கலந்துகொள்ளலாம், புதிய சட்ட வரைவுகளை அறிமுகப்படுத்தலாம், ஆனால் காங்கிரசின் அவையில் வாக்களிக்கமுடியாது. வாசிங்டன் டிசிக்கு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை எனப்படும் செனட்டிலும் உறுப்பினர் கிடையாது. அமெரிக்க ஆட்சிக்குட்பட்ட புவேர்ட்டோ ரிக்கோ, குவாம் ஆகியவற்றிற்கும் வாக்கு உரிமை இல்லாத காங்கிரசு உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் அப்பகுதிகளை போல் அல்லாமல் வாசிங்டன் டிசி மக்கள் நடுவண் அரசின் எல்லா வரிகளுக்கும் உட்பட்டவர்கள். 2007 நிதி ஆண்டில் வாசிங்டன் டிசி மக்கள் மற்றும் தொழில்கள் செலுத்திய நடுவண் அரசின் வரி $20.4 பில்லியன் ஆகும்.; இது 19 மாநிலங்களில் வசுலிக்கப்பட்ட வரியை விட அதிகமாகும். 2005ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின்படி 78% அமெரிக்கர்களுக்கு வாசிங்டன் டிசி மக்களின் உறுப்பினருக்கு காங்கிரசில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது தெரியவில்லை. இதைப்பற்றிய விழிப்புணர்வு உருவாக்க பரப்புரைகளை அடிமட்ட இயக்கங்கள் செயல்படுத்தின. இதன் ஒரு பகுதியாக வாசிங்டன் டிசியின் வாகன பதிவு பலகையில் "Taxation Without Representation" என்பதை அதிகாரபூர்வமற்ற குறிக்கோளுரையாக குறிப்பிடுகிறார்கள் . பல்வேறு கருத்து கணிப்புகள் 61 - 82% மக்கள் வாசிங்டன் டிசி க்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் ஆதரவு இருந்த போதிலும் வாசிங்டன் டிசிக்கு காங்கிரசில் வாக்குடன் உறுப்பினர், மாநில உரிமை போன்றவை இதுவரை வெற்றி பெறவில்லை. வாசிங்டன் டிசி-க்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் கூடாது என்போர் நாட்டின் ஆரம்பகால தலைவர்கள் வாசிங்டன் டிசி மக்களுக்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் வேண்டும் என்பதை கருதவில்லை என்றும் அத்தகைய உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தே வரவேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார்கள். இந்நகருக்கு மாநில தரம் தரக்கூடாது என்போர் அது நாட்டிற்கு தனி தலைநகரம் என்ற கருத்தாக்கத்தை அழித்துவிடும் என்றும் மேலும் மாநில தரம் தருவது நியாயமற்ற முறையில் ஒரு நகரத்துக்கு மேலவையான செனட்டில் உறுப்பினர் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள் . கல்வி & உடல்நலம் ஜியார்ஜ் டவுன் விசிட்டேசன் பிரிபரேடரி மகளிர் உயர் நிலைப் பள்ளி 1799ல் தொடங்கப்பட்டது. கொலம்பியா மாவட்ட பொது பள்ளிகள் (DCPS) என்ற அமைப்பு நகரின் அரசு சார்ந்த பள்ளிளை இயக்குகிறது. 167 பள்ளிகள் மற்றும் கற்கும் மையங்கள் இதில் அடங்கும். 1999ல் இருந்து நகர பொது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீராக குறைந்து கொண்டு வந்துள்ளது. நகர பொது பள்ளிகளை நிர்வகிக்க அதிக செலவு பிடித்தாலும் உள்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வி தரம் போன்றவற்றில் இதன் செயல்திறன் மிகக்குறைவாகும். நாட்டின் உயர் தர தனியார்பள்ளிகள் பல இங்கு உள்ளன. 2006ல் நகரின் 83 தனியார் பள்ளிகளில் தோராயமாக 18000 மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள் . குறிப்பிடத்தக்க பல தனியார் பல்கலைக்கழங்கள் இங்கு உள்ளன. ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (GW), ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் (GU), அமெரிக்கன் பல்கலைக்கழகம் (AU), அமெரிக்க கத்தோலிக பல்கலைக்கழகம் CUA), ஹோவார்ட் பல்கலைக்கழகம், கல்லுடெட் (Galludet) பல்கலைக்கழகம் மற்றும் மேம்பட்ட பன்னாட்டு கல்விக்கான தி ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பள்ளி (SAIS) ஆகியவை சில. இங்கு 16மருத்துவ மையங்களும் மருத்துவமனைகளும் உள்ளன. அதனால் இந்நகரை நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளின் தேசிய மையம் என்றழைக்கப்படுகிறது . நேசனல் இன்ஸ்டிடுயூட் ஆப் ஹெல்த் பெத்தஸ்டாவில்(மேரிலாந்து) அமைந்துள்ளது. வாசிங்டன் மருத்துவமனை மையம் (WHC), இந்நகரின் பெரிய மருத்துவமனை வளாகமாகும். இதுவே இப்பகுதியின் பெரிய தனியார் மற்றும் லாபநோக்கற்ற மருத்துவமனை ஆகும். WHC க்கு அருகில் குழந்தைகளுக்கான தேசிய மருத்துவ மையம் அமைந்துள்ளது. யுஎஸ் நியுஸ் & வேர்ல்ட் அறிக்கையின் படி இது நாட்டிலேயே தலைசிறந்த குழந்தைகளுக்கான மருத்துவமனையாகும் . நகரின் பல பல்கலைக்கழகங்கள் குறிப்பாக ஜார்ஜ் வாசிங்டன், ஜார்ஜ்டவுன், ஹோவர்ட் ஆகியவை மருத்துவ கல்வி வழங்குவதுடன் மருத்துவமனைகளையும் நிர்வகித்து வருகின்றன. வால்ட்டர் ரீட் இராணுவ மருத்துவ மையம் வடமேற்கு வாசிங்டனில் அமைந்துள்ளது. இங்கு பணியிலுள்ள படையினருக்கும், ஓய்வு பெற்ற படையினருக்கும் அவர்களின் மனைவி&குழந்தைகள் போன்ற சார்ந்துள்ளளோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2009 அறிக்கை ஒன்று இந்நகரில் உள்ள மக்களில் 3% எச்ஐவி அல்லது எய்ட்சு கொண்டுள்ளார்கள் என தெரிவித்தது. சில மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை விட இங்கு எச்.ஐ.வி தாக்கம் அதிகம் என நகர அலுவலர்கள் சிலர் கூறுகிறார்கள் . சுற்றுலா அருங்காட்சியகம் புகழ்பெற்ற சுமித்சோனியன் நிறுவனம் இங்குள்ளது. இது லாப நோக்கற்ற அமைப்பு, பல்வேறு அருங்காட்சியகங்களை இவ்வமைப்பு நடத்தி வருகின்றது. இவர்கள் எந்த அருங்காட்சியகத்துக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதில்லை. ஜெர்மனியின் நாஜிக்களால் யூத மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விளக்கும் ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகம் இங்கு உள்ளது. நினைவு மண்டபம் தலைவர்கள் மற்றும் போர் நடவடிக்கைகளுக்கான நினைவு மண்டபங்கள் இங்கு உள்ளன. அபரகாம் லிங்கன் நினைவகம் தாமஸ் ஜெப்பர்சன் நினைவகம் ஜார்ஜ் மேசன் நினைவகம் பிராங்களின் ரூஸ்வெல்ட் நினைவகம் கொரிய போர் வீரர்களுக்கான நினைவகம் வியட்னாம் போர் வீரர்களுக்கான நினைவகம் இரண்டாம் உலகப்போர் நினைவகம் வாசிங்டன் நினைவு தூண் போக்குவரத்து அருகில் உள்ள 3 விமான நிலையங்கள் மூலம் வாசிங்டன் பெருநகரத்தை அடையலாம். ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம். (IATA: DCA, ICAO: KDCA) வாசிங்டன் டல்லஸ் பன்னாட்டு விமான நிலையம். (IATA: IAD, ICAO: KIAD), பால்டிமோர்-வாசிங்டன் பன்னாட்டு தர்குட் மார்சல் விமான நிலையம். (IATA: BWI, ICAO: KBWI) ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் வெர்ஜீனியாவில் பொட்டாமக் ஆற்றின் கரையில் வாசிங்டன் டி.சி எல்லையில் உள்ளது. மெட்ரோ ரயில் மூலம் இங்கு செல்லலாம். உள்நாட்டு விமானங்களே இங்கு அனுமதிக்கப்படுகின்றன. சத்தம் மற்றும் பாதுகாப்பு காரணமாக அதிக அளவு கட்டுப்பாடுகள் இங்குண்டு. வெர்ஜீனியாவில் உள்ள வாசிங்டன் டல்லஸ் பன்னாட்டு விமான நிலையம் வாசிங்டன் டி.சி க்கு வரும் பன்னாட்டு விமானங்களை கையாளுகிறது. இது வாசிங்டன் டி.சி யிலிருந்து 42.3 கி.மீ (26.3 மைல்) தொலைவில் உள்ளது. மெரிலாந்தில் பால்டிமோர் அருகில் பால்டிமோர்-வாசிங்டன் பன்னாட்டு தர்குட் மார்சல் விமான நிலையம் உள்ளது, இது வாசிங்டன் டி.சி யிலிருந்து 51 கி.மீ (31.7 மைல்) தொலைவில் உள்ளது. வாசிங்டன் மெட்ரோ பாலிட்டன் ஏரியா டிரான்ஸிட் அதாரிட்டி என்ற அமைப்பு மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ பேருந்துகளை வாசிங்டன் டி.சி மற்றும் சுற்றுப்புற கவுண்டிகளில் இயக்குகிறது. 1976 மார்ச் 27அன்று மெட்ரோரயில் தொடங்கப்பட்டது. தற்போது 86 நிலையங்களையும் 106.3 miles (171.1 km) நீள தடத்தையும் கொண்டுள்ளது. [177] 2009ல் வாரநாட்களில் சராசரியாக ஒரு மில்லியன் பயணங்களை மேற்கொண்டு நியுயார்க்கின் சப்வேவிற்கு அடுத்து நாட்டின் இரண்டாவது சுறுசுறுப்பான ரயில் நிறுவனமாக உள்ளது.[178]. மெட்ரோ ரயில் 4 வண்ணம் (சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, நீலம்) கொண்ட பாதைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்லும் வண்ண பாதை வண்டியில் ஏறிக்கொள்ள வேண்டும். நீங்கள் ஆரஞ்சு பாதையில் இருந்து பச்சை பாதையிலுள்ள இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆரஞ்சு பாதையில் வரும் வண்டியில் ஏறி ஆரஞ்சு & பச்சை பாதைகள் சந்திக்கும் இடத்தில் இறங்கி பச்சை பாதை வண்டியில் ஏற வேண்டும். ஆம்டிராக் என்னும் நெடுந்தொலைவு தொடர்வண்டி வாசிங்டன் நகரத்தை நாட்டின் பல பெரிய நகரங்களுடன் இணைக்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்பு http://www.wmata.com/ http://www.metwashairports.com/ http://www.bwiairport.com/ http://www.si.edu/ வட அமெரிக்கத் தலைநகரங்கள்
5592
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%20%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%29
மாயாவி (சித்திரக்கதை)
மாயாவி 1939 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரக்கதையாகும். இது பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகி மே 1936 தொடக்கம் ஞாயிறு வண்ணக் கீற்றாகவும் வெளியாகிறது. மாயாவி சித்திரக் கதைகளையும் தாண்டி தொலைக்காட்சி திரைப்படங்கள் என்பவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாயாவியின் வரலாறு மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாகக் காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர். இவரது மனைவியின் பெயர் டயானா பால்மர் என்பதாகும். தமிழில் மாயாவி தமிழில் இந்திரஜால் முத்து காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் இதழ்களில் வேதாளர், வேதாள மாயத்மா என்றும் ராணி காமிக்ஸ் இதழில் மாயாவி எனும் கதை பாத்திரம் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் அடைந்தது. வரைகதை
5600
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
உயிர்ச்சத்து
உயிர்ச்சத்து (vitamin) என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், ஆனால் மிக இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை, உண்ணும் உணவுமூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை. சில உயிர்ச்சத்துகளைச் சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து ஏ (A)-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை இரிப்டோஃபான் என்னும் அமினோக் காடியில் இருந்தும், உயிர்ச்சத்து டி யை (D-யை) தோல் மீது விழும் புற ஊதா ஒளிக்கதிர் மூலமும் உருவாக்கிக் கொள்ள இயலும்; இருப்பினும், உடலுக்குத் தேவையான அளவு இவற்றைப் பெற நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் கட்டாயம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவிய நோக்கில் அறியப்பட்டுள்ளது. விட்டமின் (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தீன் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே அமைன் என அழைக்கப்படுகிறது. அமைன் எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது. உயிர்ச்சத்துச் சமகூறு உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர்வேதியல் செயற்பாடுகளுக்கமையவே பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் (vitamers) கொண்டிருக்கும். இவற்றின் தொழில், குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை (பி-12 இனை) எடுத்துக்கொண்டால் அதற்குச் சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெத்தைல்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும். உயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு வேதிய வினைத்தாக்கங்களுக்கு ஊக்கிகளாகவும், துணை நொதிகளாகவும், இயக்குநீராகவும் தொழிற்படுகிறது. வரலாறு முதன்மைக் கட்டுரை: உயிர்ச்சத்துக்களின் வரலாறு உடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால எகிப்தியர், மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துபற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து இசுகேவி (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று இசுக்காட்லாந்து நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு எலுமிச்சம்பழம் அல்லது தேசிக்காய் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1912இல் போலந்து நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தைப் பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார். 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது. மனிதர்களில் உயிர்ச்சத்து மனிதர்களுக்கு அடித்தேவையான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன, இவற்றுள் நான்கு கொழுப்பில் கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலிலிருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலிலிருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து நோய் (hypervitaminosis, ஐப்பர்விட்டமனோசிசு) என அழைக்கப்படுகிறது. உயிர்ச்சத்து அட்டவணை உயிர்ச்சத்துக்களின் முக்கியத்துவம் ஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது. பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்குவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்திலிருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் (மாம்பழம், பப்பாளி, காரட் போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் (முட்டை வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்) தொகுக்க முடியும். குறைபாட்டு நோய்கள் ஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது. குறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள் குடலில் அகத்துறிஞ்சாமை ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இதனைவிட சில மருந்து வகைகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல், குடிவயமை அல்லது குடிவெறி போன்றனவும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. அளவு மிகைப்பு விளைவும் பக்க விளைவும் நாளாந்த உட்கொள்ளல் அளவினை விட அதிகமாகப் பயன்படுத்தும் போது உயிர்ச்சத்துக்கள் பக்கவிளைவுகளைத் தருகின்றன, எனினும் உண்ணும் உணவின் மூலம் ஏற்படும் உயிர்ச்சத்தின் பக்கவிளைவு இல்லையெனவே கூறலாம், மாறாக, செயற்கை உயிர்ச்சத்து மாற்றீடுகளான மாத்திரைகள் போன்றவை அதிகம் பயன்படுத்துதல் நச்சுத்தன்மை உருவாக்கலாம். 'உயிர்ச்சத்து மாற்றீடுகள்' சிறந்ததொரு உயிர்ச்சத்து மாற்றீடு உணவாகும். எனினும் உணவின் மூலம் பெற முடியாத சூழ்நிலை உள்ளபோது அல்லது வேறு சில நோய்களின் பாதிப்பால் உடல் நலத்தை ஈடுசெய்வதற்கு மருத்துவர்களால் உயிர்ச்சத்து மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகிறது. உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள் உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையென்பதாலும் உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றமையாலும் ஆகும். செருமானிய அறிவியலர்களால் உயிர்ச்சத்து 'கே'யானது பிரித்தெடுக்கப்பட்டு விபரிக்கப்பட்டபோது உயிர்ச்சத்து 'கே'யின் இரத்தவுறைதல் இயல்பு காரணமாக 'Koagulation' என்னும் சொல்லிலிருந்து எழுத்து 'கே'யானது எடுக்கப்பட்டு உயிர்ச்சத்து 'கே' (உயிர்ச்சத்து K) என அழைக்கப்பட்டது, இதே வேளையில் ஏற்கனவே உயிர்ச்சத்துக்கள் 'J' வரையில் பெயரிடப்பட்டதால், இச்சம்பவம் தொடர்ச்சியான பெயரீட்டு முறைக்கு வாய்ப்பாக அமைந்தது. உயிர்ச்சத்து எதிரிகள் உயிர்ச்சத்து எதிரிகள் எனப்படும் வேதியற் கலவைகள் உயிர்ச்சத்துகளின் அகத்துறிஞ்சலை அல்லது தொழிற்பாட்டைத் தடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, முட்டையில் காணப்படும் அவிடின் எனும் புரதம் பையோட்டின் உயிர்ச்சத்தின் அகத்துறிஞ்சலைத் தடுக்கின்றது. தயமினை (உயிர்ச்சத்து பி1) ஒத்த பைரிதயமின் எனும் வேதியற் பொருள் தயமினுக்குத் தேவையான நொதியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தயமினின் வளர்சிதை மாற்றத்தைத் தடை செய்கின்றது. . உசாத்துணைகள் புற இணைப்புகள் USDA RDA chart in PDF format Health Canada Dietary Reference Intakes Reference Chart for Vitamins NIH Office of Dietary Supplements: Fact Sheets
5606
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
குடும்பம்
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்புபட்ட ஓர் உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஓர் உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது." நெருங்கிய குடும்பம் என்பது வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்கள், மகள்கள் ஆகியோரை உள்ளடக்கும். இவர்களோடு, பெற்றோரின் உடன்பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர், மருமக்கள் போன்றோரும் சேர்ந்து விரிந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர். பெரும்பாலான சமுதாயங்களில் பிள்ளைகள் சமூகமயமாவதற்கான முதன்மை நிறுவனமாகக் குடும்பம் விளங்குகிறது. உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் நோக்குகையில் குடும்பத்தின் முக்கியமான தொழிற்பாடுகளில் ஒன்று புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதாகும். இந்தத் தொழிற்பாடு, பகிர்தல், கவனிப்பு, பராமரிப்பு, பேணி வளர்ப்பு என்பவற்றைக் கொடுத்தல் / பெற்றுக்கொள்ளல், ஒழுக்கநல உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல், அறமுறையிலான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றால் பேணப்படுகிறது. ஆனாலும் புதிய உறுப்பினரை உருவாக்குவது மட்டுமே குடும்பத்தின் முக்கியமான பணியல்ல. இரு நபர்களுக்கிடையில் பிணைப்பின்மூலம், பொருளியல் அடிப்படையில், ஓர் ஆக்கபூர்வமான ஓர் அமைப்பை உருவாக்குவதுமாகும். பிள்ளைகளைப் பொறுத்த வரையில், குடும்பமானது, குடும்ப அமைப்புக்கான ஓர் அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. அதேவேளை பெற்றோரைப் பொறுத்த வரையில், குடும்பமானது, பிள்ளைகளை உருவாக்கி, சமூகத்துடன் அவர்களைப் பிணைக்கும் இடமாக இருக்கிறது. சொற்பிறப்பு குடும்பம் என்னும் சொல் கூடல் என்னும் பொருள் கொண்ட குல் என்னும் தமிழ் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. குல் > குள் > குழு என மாற்றம் பெறும். குழு என்பது கூட்டம் என்ற பொருள் தருவது. குழு > குழும்பு > குடும்பு > குடும்பம் என்றவாறு குடும்பம் என்னும் சொல் பெறப்படுகிறது. குடும்பம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் திருக்குறளில் (குறள்.1029) இடம்பெற்றுள்ளது. இது பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்த கூட்டம் என்ற பொருள் தருகிறது. குடும்ப வரையறை மனித சமுதாயத்தின் அடிப்படை அலகு, குடும்பம் ஆகும்.குடும்ப அமைப்பு,ஒழுங்கான முறையில் அமைந்தால் அது நல்ல குடும்பம் எனப்படும். குடும்பத்தின் வகைகள் கணவன் – மனைவி தொடர்பு, பெற்றோர் – பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையிலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன. அமைப்பு குடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை, மணவழிக் குடும்பம் (Conjugal Family) தனிக் குடும்பம் (Nuclear family) விரிந்த குடும்பம் (Extended Family) என வகைப்படுத்தலாம். மார்கனின் குடும்பம் குறித்த கருத்துகள் அமெரிக்க மானிடவியல் அறிஞர் லூவி ஹென்றி மார்கன்(1818–1881), மனிதப் பண்பாட்டில் குடும்பத்தின் ஐந்து படிமலர்ச்சி நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.அவை: 1.இரத்த உறவுக் குடும்பம்: இரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) எனப்படுவது,ஒரே தலைமுறையைச் சேர்ந்த அண்ணன் தம்பியர் அவர்தம் சகோதரிகளை மணமுடிப்பதாகும். 2.குழுமணக் குடும்பம்: ஓர் இரத்தக் குழுவைச் சேர்ந்த அண்ணன் தம்பியர்,பிறிதோர் இரத்தக் குழுவின் அக்காள் தங்கையரை மணந்து கொள்வது குழுமணக் குடும்பம் (Punaluan Family) ஆகும். 3.நிரந்தரமற்ற குடும்பம்: நிரந்தரமற்ற குடும்பம்(Syndiasmian Family) குழுமணமுறை, ஒரு துணை மணமுறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மணமுறையினைக் கொண்டது. இவ்வகைக் குடும்ப முறையில் கணவர் மனைவி இருவரும் அவர்கள் விரும்பும்போது மணவிலக்குப் புரிந்து கொண்டு வேறு துணையுடன் வாழ முற்படுவர். ஒரே துணையுடன் வாழும்போதும் இவர்களுக்கிடையில் பந்தம் இருப்பதில்லை. 4.தந்தைத் தலைமைவழிக் குடும்பம்(Patriarchal Family): தந்தைத் தலைமைவழிக் குடும்பத்தில் (Patriarchal Family) ஆண்களிடம் குடும்பத்தின் எல்லாவிதமான அதிகாரங்களும் பொறுப்புகளும் குவிந்திருக்கும். தொடக்கக் கால உரோமானியர்களும் எபிரேயர்களும் இம்முறையைப் பின்பற்றினார். 5.ஒரு துணைமணக் குடும்பம்(Monogamian Family): ஒரு துணைமணக் குடும்ப (Monogamian Family) மணமுறையானது, அண்மைக்கால தனிக்குடும்ப முறையை ஒத்ததாகும். கணவன்/மனைவி ஒரு துணையுடன் வாழும் குடும்ப முறையாகும். தொன்மைச் சமுதாயம் நூல் கி.பி.1877-இல் லூவி ஹென்றி மார்கன் தொன்மைச் சமுதாயம் எனும் நூலை வெளியிட்டார்.இந்நூல் மார்க்சியத்தின் இயக்கவியல் அணுகுமுறை (Dialectical Approach),வரலாற்றுப் பொருள் முதல்வாதம்(Historical Matetialism)ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.இந்நூலைப் படித்த எங்கெல்ஸ்,குடும்பம், தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலை உருவாக்கினார்.இந்த நூலானது மார்கன் எழுதிய நூலின் சுருக்கமாக அமைந்திருந்தது.மார்கன் எடுத்துக்கூறிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய கருத்தை எங்கெல்ஸ் ஏற்றுக்கொண்டார்.எங்கெல்ஸ் மூலமாக சோவியத்து இனவியலில் மார்கன் மதிப்புமிக்க கொள்கையாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். திருமணம்,குடும்பம் இவற்றிற்கிடையேயான தொடர்பு திருமணம் என்பது வழக்கமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள உறவின் நெருக்கமான,பாலுறவு அம்சத்தை,அவர்களுடைய,சாராம்சத்தில் உயிரியல்,பாலுணர்ச்சித் தேவைகளை நிறைவு செய்வதை வலியுறுத்துவதாகும். குடும்பம் என்பது திருமணத்துடன் தொடர்புடையது.பாலுணர்ச்சித் தேவைகள் மட்டுமல்லாமல் உணவு மற்றும் இதர அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகத் தனிநபர்கள் இடைச்செயல் புரிகின்ற நிகழ்ச்சிப் போக்கை முதன்மைப்படுத்துகிறது. குடும்ப அமைப்பு உருவாக,திருமணம் அடிப்படையாக உள்ளது. எனினும்,அது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை.மரபுவழி இணைப்பின் தொடர்ச்சியாகவும் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளின் மரபினை கோலோச்சுவதாகவும் அமைகிறது. திருமண-குடும்ப உறவுகள் ஆண்-பெண் இருவருக்கிடையில் நெருக்கமான உறவுகளை முன்னிலைப்படுத்துகின்றன.அவர்கள் குடும்பம் என்ற முறையில் இனப்பெருக்கத்திற்கும்,சமூக,பொருளாதார செயல்பாட்டிற்கும் அடிப்படை அலகுகளாக உள்ளனர்.இது உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றைப் பெருக்கும் கருவியாக இந்த அலகு காணப்படுகிறது. குழு மணம் பாலுறவை நிர்ணயித்தது.இணைக் குடும்பம் பெற்றோரைத் தீர்மானித்தது.ஒருதார மணமுறை சொத்தைப் பாரம்பரியமாகப் பெறும் உரிமை மற்றும் சமூக,பொருளாதார, உற்பத்தி நுகர்வு அலகாகத் தோன்றியது. பண்பாடற்ற காலகட்டத்தில் இணைக் குடும்பம் பெரிய தந்தைவழிக் குடும்பமாகப் பரிணமிக்கிறது.தந்தைவழிக் குடும்பம் ஒருதார மணத்தை நோக்கி வளர்ச்சி அடைகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.அந்த வளர்ச்சி உழைப்புப் பிரிவினையின் புதிய துறைகளையும் வடிவங்களையும் நிர்ணயிக்கிறது. ஒருதாரக் குடும்பங்களின் தோற்றத்திற்கு கைத்தொழில்கள் மற்றும் வாணிபம் காரணிகளாக அமைந்தன.குடும்பம் அரசு, அதிகார உறவுகளின் எதேச்சதிகாரத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. குடும்ப அமைப்பும் இருபாலர் நிலையும் எங்கெல்ஸ் கூறியதாவது,'பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ உள்ள பெண் அடிமைத்தனத்தின் அடிப்படையில்தான் நவீன காலத் தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது;நவீன காலச் சமுதாயம் என்பதும் தனிப்பட்ட குடும்பங்களைத் தனது மூலக்கூறுகளாகக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பே.இன்று, மிகப் பெரும்பான்மையான சமயங்களில், ஆண்தான் சம்பாதிக்கிறவனாக,சோற்றுக்கு வழி செய்கிறவனாக இருக்க வேண்டியிருக்கிறது.குறைந்தபட்சம் சொத்துள்ள வர்க்கங்களில் இப்படித்தான்;இது அவனுக்கு ஆதிக்க நிலையைத் தருகிறது. அதற்கொன்றும் விசேஷமான சட்டவகைச் சலுகை உரிமைகள் வேண்டியதில்லை.' குடும்பமும் குலவழிபாடும் குலம் தழைக்கவும்,முன்னோர் சாந்தி அடையவும்,பின்னோர் செழிக்கவும் குலவழிபாடு தொன்றுதொட்டு உள்ளது. ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வமுண்டு.இதுவே,இவர்களுக்குக் காவல் தெய்வமாகும்.அக் காவல் தெய்வம் குல தெய்வமாக வழிபடப்படுகிறது.பெற்றோர் பிறக்கும் தம் பிள்ளைகளுக்கு,முதல் முடியினைக் குல தெய்வம் கோயிலுக்குச் சென்று எடுப்பர்.மேலும், காதணியும் அணிவிக்கப்படும். குலதெய்வ வழிபாடு இந்து மதத்தைப் பின்பற்றுவோருக்கு முக்கியமான ஒன்றாகும்.குல தெய்வ வழிபாடு என்பது மனிதனின் லௌகீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. குல தெய்வத்தை வழிபடும் ஒரு சமூக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்,ஒத்த இனக்குழு ஆவார்கள்.இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதி வாழ்பவர்கள். இவர்களுக்குள் மணமுறை நிகழாது.மேலும், குடும்பத்தில் நிகழும் எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் தொடங்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அப்போதுதான் அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை.ஆண்டுதோறும் செய்யப்படும் குலதெய்வ வழிபாட்டால் குடும்பத்தில் அமைதியும் நன்மையும் விளையும் என்பது உண்மையாக உள்ளது. தாய்வழிக் குடும்பமும் தந்தைவழிக் குடும்பமும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய கருத்துகளின்படி தந்தை வழிக் குடும்பமே சமூக அமைப்பின் ஆதி வடிவமாகக் கருதப்பட்டது. இரத்த உறவுமுறையின் அமைப்புகள் மற்றும் உறவுமுறையைக் குறைக்கும் வார்த்தைகள் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராந்த முதல் நபரான மார்கன் தாயுரிமைக் குலமே சமூக அமைப்பின் ஆதி வடிவம் என்று கண்டுபிடித்தார்.ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரும் வழக்குரைஞருமான யோஹன் ஜாக்கப் பாஹொஃபென் தாயுரிமை என்னும் தனது நூலில் பெண்களின் பரிபூரண ஆட்சியை முதலில் தத்துவ ரீதியாக விவாதித்தார்.ஆனால்,மார்கன் அவருக்கு மாறாக தாயுரிமைக் குலத்தின் தோற்றம் மற்றும் இருத்தலை மாயை-மதக் காரணங்களால் அல்ல, யதார்த்தமான,பொருளாதார மற்றும் உற்பத்திக் கூறுகளைக் கொண்டு விளக்கினார்.<ref>எங்கெல்ஸின்'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல்',பக்.151-152. மேலும்,எங்கெல்ஸ் தன்னுடைய நூலில், குடும்பத்துக்கு முன்னர் குலம் இருந்தது. தந்தை வழி முறைக்கு முன்னர் தாய்வழி முறை இருந்தது என்னும் மார்கனுடைய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு தீவிரமாக ஆதரித்தார்."தமக்குள் மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கப்படாதிருக்கின்ற பெண் வழி இரத்த உறவினர்களைக் கொண்ட ஒரு குறுகிய வட்டமாக"குலம் உருவாகிக் கொண்டிருந்தது. <ref>ibid.pp.153-154.<ref> இவற்றையும் பார்க்கவும் உறவுமுறை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Family database, OECD, Family Research Laboratory, unh.edu Family Facts: Social Science Research on Family, Society & Religion (a Heritage Foundation site). familyfacts.org Families Australia – independent peak not-for-profit organisation. familiesaustralia.org.au FamilyPlatform – A consortium of 12 organisations providing input into the European Union's Socio-Economic and Humanities Research Agenda on Family Research and Family Policies. Unitedfamilies.org, International organisation UN.org, Families and Development Family, marriage and "de facto" unions, Vatican.va What Is a Family? குடும்பம்
5608
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D
நீரிழிவு நோய்
நீரழிவு (நீீர்+அழிவு)(diabetes mellitus) என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகக் கொள்ளலாம். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம். கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது. நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு "இன்சுலின்" (INSULIN)உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாதலால், இவற்றை எளிதாக முற்றிலும் குணமாக்க முடியாது. கணைய மாற்று சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் சரியாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டோர் விவர அறிக்கை உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், 422 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர். இப்பாதிப்பு 2013 இல் 382 மில்லியனாக இருந்தது. 1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியன் ஆகும். இவற்றுள் வகை 2 இன் பாதிப்பு விகிதம் 90 விழுக்காடாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளில் வகை 2 ஆல் அதிகம் பாதிக்கப்படவராக ஆண்கள் காணப்படுகின்றனர். இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிகக் கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன. நீரிழிவு நோயின் வகைகள் நீரிழிவில் மூன்று வகைகள் உண்டு. முதலாவதுவகை முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள். இரண்டாவது வகை இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம். மூன்றாவது வகை மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது. வகைப்பாடு நீரிழிவு நோய் பாதிப்படைவோர் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு வயது தடையல்ல. இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், மரபுவழி நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. நீரிழிவு நோயின் அறிகுறிகள் பல சமயங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமல் போகின்றன. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு: அடிக்கடி சிறுநீர் கழிப்பது அடிக்கடி தாகம் அதிக பசி மிக வேகமாக எடை குறைதல் அதிகமாக சோர்வடைவது கண்பார்வை மங்குதல் வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல் திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல் நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் இரண்டாம் வகை நீரிழிவு நோயால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு முதலான நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளாகும். நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள் நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும். விழிப்புணர்வு சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது. 7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர். தடுப்பு முறைகள் நீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும். அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது. அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன. சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும். புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது. வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன. நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை முறைகள் நீரிழிவு நோய்க்கான இரண்டு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஒன்று, இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வதாகும். நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான சிகிச்சை முறைகள் நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான அடிப்படைச் சிகிச்சை முறைகளாவன: ஒரு நாளில் இன்சுலின் மருந்தை பல முறைகள் எடுத்துக்கொள்ளுதல். உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல். தொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல். பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல். உடல்நலப் பராமரிப்புக்குழுக்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்தல். நீரிழிவு நோய் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள் ஆரோக்கியமான உணவு முறை மேற்கொள்ளுதல். நாள்தோறும் எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு வருதல். உடற்பருமனைக் குறைத்தல். கணையத்தை நன்கு முடுக்கிவிட்டு இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தவல்ல மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் முதல் வகை நீரிழிவு நோய்க்கான ஆய்வில் முன்னேற்றம் நீரிழிவு நோயை தடுக்கும் மஞ்சள், ஒமேகா 3 இவற்றையும் காண்க இரண்டாவது வகை நீரிழிவு நீரிழிவு விழித்திரை நோய் குளுக்கோஸை பொறுத்துக் கொள்ளும் சோதனை அகஞ்சுரப்பி நோய்கள் வளர்சிதை மாற்றக் குறைபாடுகள்
5614
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
மைசூர்
மைசூரு, அல்லது எருமையூர், இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூரு மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூரு நகரமே பண்டைய மைசூரு இராச்சியத்தின் தலைநகரமுமாகும். இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர். சங்கநூல் குறிப்புகள் எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூரு நாடு 'எருமை நன்னாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்) தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36) இக்கால மைசூரு மைசூரு அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூருவில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூரு மிருகக்காட்சிசாலை (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை. இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் உள்ளது. மேற்கோள்கள் கர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ கருநாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள் மைசூர் மாவட்டம் மைசூர்
5616
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
கண்டி
கண்டி (() (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும். கண்டி நகரம், கண்டி இராச்சியத்தின் அரச குலமான கண்டி நாயக்கர்களின் தலைநகரமாக விளங்கியது. காலநிலை மக்கள் கண்டி சிங்களவர்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் இங்கு ஓரளவிற்கு வாழ்கிறார்கள். மூலம்:statistics.gov.lk படக்காட்சியகம் இதனையும் காண்க கண்டி இராச்சியம் கண்டி நாயக்கர் மேற்கோள்கள் கண்டி இலங்கை மாவட்ட தலைநகரங்கள் கண்டி இராச்சியம்
5617
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்
இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே நிர்வாகத் தலைநகரமாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. சதுப்பு நிலமாக இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் மத்தியில் அமைக்கப்பட்ட தீவு ஒன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டது. இலங்கைக் கட்டிடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான ஜெப்ரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டது. வெளி இணைப்புகள் Sri Lankan Parliament Official Web Site History of Parliament of Sri Lanka A new Parliament கொழும்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்
5618
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
கணவன்
ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவ்விருவருக்கு இடையில் உருவாகின்ற புதிய உறவு முறையில், அக்குறிப்பிட்ட ஆண் அப்பெண்ணுக்குக் கணவன் () ஆகின்றான். சமுதாயங்களின் பண்பாடுகளை ஒட்டிக், கணவன் என்னும் உறவு முறைக்குரிய வகிபாகம் (role) வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாடுடையது தமிழ்ச் சமுதாயம், இதனை ஒருதாரம்("மோனொகேமி") என்கிறோம். ஆனாலும் பலதாரங்களைக் கொண்ட கணவர்களும் உள்ளனர். மாறிவரும் உலகில் திருமணமில்லாத ஒன்றி வாழும் முறையும் தமிழகத்தில் உள்ளது. பழமொழிகள் கணவனே கண்கண்ட தெய்வம் மணாளனே மங்கையின் பாக்கியம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் இவற்றையும் பார்க்கவும் மனைவி உறவுமுறை குடும்பம் பாலினம்
5619
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF
மனைவி
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண் அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய கடமைகளும், உரிமைகளும் சமுதாயங்களின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் வேறுபட்டு அமைகின்றன. மேலும் மனைவி என்பவள் அந்த ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். அவனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிப்பவள் ஆகிறாள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவள் இவற்றையும் பார்க்கவும் கணவன் உறவு வெளி இணைப்புகள் உறவுமுறை குடும்பம் பாலினம்
5620
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
மணவழிக் குடும்பம்
ஒரு குடும்பம் உருவாவதற்குரிய மிக அடிப்படையான தேவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகும். இவ்வாறு இருவரும் கணவனும் மனைவியும் ஆகி அமைக்கும் குடும்பமே மணவழிக் குடும்பம் (Conjugal Family) ஆகும். கணவன் மனைவியையும் அவர்களது சொந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையுங் கொண்டதாக இக்குடும்பம் அமையும். திருமண உறவு முக்கியத்துவமானதாக இருக்கும். குடும்பம்
5621
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
கருக் குடும்பம்
கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. தனிக் குடும்பத்தினுள் காணப்பெறும் உறவுகள் தனிக் குடும்பம் ┌───────────────────────┼─────────────────────┬─────────────────────────┬ ➊ ➋ ➌ ➍ அப்பா அம்மா மகன் மகள் ┌──────┴──────┐ ┌──────┴──────┐ ➊ ➋ ➊ ➋ அண்ணா தம்பி அக்கா தங்கை அப்பா தனிக்குடும்பத்தின் தலைவர். இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தந்தை, பிதா, தகப்பன், என்பனவாகும். அம்மா தனிக்குடும்பத்தின் தலைவி. இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தாய், மாதா, அன்னை என்பனவாகும். மகன் பிள்ளைகளில் ஆண் பிள்ளையை மகன் என்று அழைப்பர். மகள் பிள்ளைகளில் பெண் பிள்ளையை மகள் என்று அழைப்பர். பிள்ளைகளுக்குள் உறவுமுறை பிள்ளைகள் ┌─────────┴────────┐ ➊ ➋ சகோதரன் சகோதரி ┌──────────┴──────┐ ┌──────┴──────┐ ➊ ➋ ➊ ➋ அண்ணா தம்பி அக்கா தங்கை சகோதரன் உடன் பிறந்தோரில் ஆண் பிள்ளைகளை சகோதரன் என்று அழைப்பர். சகோதரன் என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும். அண்ணா சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அண்ணா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட அண்ணன்கள் இருக்கும் பட்சத்தில் பெரியண்ணன், சின்னண்ணன், குட்டியண்ணன் என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர். தம்பி சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தம்பி என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தம்பிகள் இருக்கும் பட்சத்தில் பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டித்தம்பி என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர். சகோதரி உடன் பிறந்தோரில் பெண் பிள்ளைகளை சகோதரி என்று அழைப்பர். சகோதரி என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும். அக்கா சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அக்கா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட பெண் சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் பெரியக்கா, சின்னக்கா, குட்டியக்கா என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர். தங்கை சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தங்கை என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தங்கைகள் இருக்கும் பட்சத்தில் பெரியதங்கை, சின்னத்தங்கை, குட்டித்தங்கை என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர் வெளி இணைப்புகள் The Nuclear Family from Buzzle.com Early Human Kinship was Matrilineal by Chris Knight. (Anthropological debates on the whether the nuclear family is natural and universal). இவற்றையும் பார்க்கவும் விரிந்த குடும்பம் உறவுமுறை சமூகவியல் மானிடவியல் குடும்பம் nl:Gezin#Kerngezin
5622
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
தகவல் வெளிப்படுத்தல்
தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்த பல வழிகள், சாதனங்கள் பயன்படுகின்றன. மொழி (பேச்சு, எழுத்து), ஓவியம், இசை, பிற கலைகள், செயல்கள், என பல பரிமாணங்களில் தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்தலாம். பின்வருவன தகவல்களை சேகரித்து பகிர உபயோகமான சில வழிமுறைகள். மேலும் காண்க கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் வெளி இணைப்புகள் http://www.cogs.susx.ac.uk/users/beateg/Cox&Grawemeyer_CR.pdf தகவல் தொழில்நுட்பம் சிக்கல் தீர்வு தகவல் வெளிப்படுத்தல்
5623
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
பிதுருதலாகலை
பிதுருதலாகலை (Pidurutalagala, சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இம்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையின் மலைகள் மத்திய மாகாணம், இலங்கை
5624
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE
அகர்தலா
அகர்தலா () என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். புவியியல் இவ்வூர் என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 33.73 மீட்டர் (110.70 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மக்கள் வகைப்பாடு 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 400,004 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அகர்தலா மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 88%; பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அகர்தலா மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிறப்புகள் ஆதாரங்கள் வெளி இணைப்புகள் GeoHack - அகர்தலா திரிபுரா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் திரிபுராவிலுள்ள மாநகரங்கள் மேற்கு திரிப்புரா மாவட்டம்
5625
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D
தேராதூன்
தேராதூன் (Dehradun; இந்தி: देहरादून; , தெஹ்ரா தூன்) அல்லது டேராடூன் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். இதுவே அம்மாநிலத்தின் பெரிய நகரமும் ஆகும். இது இமயமலைக்கும் சிவாலிக் மலைக்கும் இடையே டூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. புது தில்லியிலிருந்து 230 கிமீ தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பல புகழ் பெற்ற கல்வி நிலையங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன. வன ஆராய்ச்சி மையம் இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி இந்திய ராணுவ அகாடமி இந்திய வனவிலங்கு மையம் இந்திரா காந்தி தேசிய வன அகாடமி என்பன சில. இங்கு தனியார் நடத்தும் டூன் பள்ளி உள்ளது. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி, மணி சங்கர் ஐயர், கரண் சிங், கமல் நாத், நவீன் பட்நாய்க், அமரிந்தர் சிங், விக்ரம் சேத், பிரணாய் ராய், கரண் தபார் ஆகியோர் இங்கு படித்தவர்களே. போக்குவரத்து இலக்கியப்பதிவுகள் புகழ்பெற்ற எழுத்தாளரான ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) தமது பல கதைகளில் இப்பகுதிகளை மையமாக வைத்து எழுதியுள்ளார். வெளி இணைப்புகள் தேஹ்ராதுன் மாவட்ட இணையதளம் உத்தராகண்ட மாநில ஊர்களும் நகரங்களும் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் உத்தராகண்டிலுள்ள மாநகரங்கள் தேராதூன் மாவட்ட ஊர்களும் நகரங்களும் உத்தராகண்ட மாநில ஊர்களும் நகரங்களும் உத்தராகண்டத்திலுள்ள சுற்றுலாத் தளங்கள்
5629
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
தருமன்
தருமன் அல்லது யுதிட்டிரன் (Yudhishthira) மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர். குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராக இருந்தவர். இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றின் அரசர். இவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை பாண்டு முனிவர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு துருவாச முனிவர் செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு எம தருமராசன் மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர். தருமனின் இயற்பெயர் யுதிஷ்டிரன். திரெளபதி எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தினார். கௌரவர்களுடன் நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரௌபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரௌபதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு குருசேத்திரப் போரில் கௌரவர்களை வென்று சூதில் இழந்த இந்திரப்பிரஸ்தம் மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான். குருச்சேத்திரப் போரில் மத்திர நாட்டு அரசன் சல்லியனைக் கொன்றார். எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. மேற்கோள்கள் வெளி இணைப்பு தமிழில் முழு மஹாபாரதம் மகாபாரதக் கதை மாந்தர்கள்
5634
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
விரிந்த குடும்பம்
கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம். 1. நேர்வழி விரிந்த குடும்பம் 2. கிளைவழி விரிந்த குடும்பம் 3. தந்தைவழி விரிந்த குடும்பம் 4. தாய்வழி விரிந்த குடும்பம் 5. கூட்டுக் குடும்பம் என்பன இவ்வகைகளுள் சிலவாகும். அருஞ்சொற்பொருள் நேர்வழி விரிந்த குடும்பம் - Lineally Extended Family கிளைவழி விரிந்த குடும்பம் - Laterally Extended Family தந்தைவழி விரிந்த குடும்பம் - Patrilineal Extended Family தாய்வழி விரிந்த குடும்பம் - Matrilineal Extended Family கூட்டுக் குடும்பம் - Joint Family குடும்பம்
5635
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
பசுமைக் கட்டிடப் பொருள்
உற்பத்தி, காவிச் செல்லல், பயன்பாடு போன்ற அம்சங்களில் குறைந்த அளவு சூழலியல் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வகையில் அமைகின்ற கட்டிடப் பொருள்கள் பசுமைக் கட்டிடப் பொருள்கள் எனப்படுகின்றன. கட்டிடப் பொருட்களின் சூழலியல் தாக்கம் பற்றிக் கருதும்போது அது பயன் படுத்தப்படும் கட்டிடத்தின் முழு ஆயுட் காலமும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவதால், பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருள்கள் கட்டிடங்களின் நீண்ட காலச் சூழல் நட்புத் தன்மைக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். கட்டிடங்களும், கட்டுமான நடவடிக்கைகளும், உலகின் மூலப்பொருட் பயன்பாட்டின் 40% அளவைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மேற்படி நடவடிக்கைகள் உலக எரிபொருள் நுகர்வின் குறிப்பிடத்தக்க அளவுக்கும் காரணமாக உள்ளன. இதனால் சூழல் மாசடைவதிலும், பெருமளவில் வளங்கள் சுரண்டப்படுவதிலும் கட்டிடங்களுக்கும், கட்டுமானத் துறைக்கும் பெரும் பங்கு உண்டு. இயற்கை வளங்களை எதிர்காலச் சந்ததியினரும் அநுபவிக்கும் வகையில் அவற்றைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டுமென்ற உணர்வு மக்களிடையே வலுத்து வருவதன் காரணமாக, கட்டிடக் கலைஞர்கள் பசுமைக் கட்டிடப் பொருள்களின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கட்டிடப் பொருட்கள்
5640
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88
பொலன்னறுவை
பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்குமொரு அரணாகவிருந்த இந்நகரை, சோழர் இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது. இந்த நகரைச் சுற்றி, பல பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. பராக்கிரமபாகு மன்னரால் கட்டப்பட்டவை குறிப்பிடத்தக்கனவாகும். இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத் தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விகாரைகளும் , இந்து கோவில்களும் இருக்கின்றன. கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், மாளிகைகள், கோவில்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், மருத்துவமனைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன. இவற்றையும் பார்க்கவும் பொலன்னறுவை இராச்சியம் பொலன்னறுவை இந்துக்கோயில்கள் சிகிரியா வடமத்திய மாகாணம், இலங்கை பௌத்த யாத்திரைத் தலங்கள் இலங்கையின் தொல்லியற்களங்கள் இலங்கை மாவட்ட தலைநகரங்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்
5643
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
கலபதி
கலபதி என்பது கடலோடும் கப்பற்தலைவனின் சட்டபூர்வ தகுதியாகும். அனேக வர்த்தக ஆவணங்களில் தலைவன் என்றே இவர் குறிப்பிடப்படுகிறார். கலபதியானவர் குடிமகனாகவோ அல்லது கடற்படை உறுப்பினராகவோ இருத்தல் முடியும். ஒரு கப்பலின் கட்டளைத்தலைவர் என்னும் வகையில் அவருக்கு பரந்த சட்டவுரிமை உண்டு. இவ்வுரிமையானது கலகங்களை அடக்கும் பொருட்டும் கடற் கொள்ளைகளை எதிர்க்கும் பொருட்டும் உயிர்ச் சேதம் உண்டாகக்கூடிய நடவடிக்கைகளையும் ஆணையிடும் அனுமதியை அளிக்கிறது.கலகம் என்பது, முக்கியமாக, கப்பலை கைப்பறும் நோக்குடன் கலபதியின் சட்டபூர்வ கட்டளைகளுக்கு அடிபணியாமல் இருப்பதைக் குறிக்கும். எனினும், பரவலான நம்பிக்கைக்கு மாறாக, ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் சிறப்பு சட்டபூர்வ அதிகாரம் எதுவும் கலபதிக்கு கிடையாது. கடல் போக்குவரத்து en:Captain#Nautical no:Kaptein pl:Kapitan zh:上校
5645
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D
கப்பல்
கப்பல், ஒரு பெரிய கடலோடும் வாகனமாகும். சில வேளைகளில், கப்பலில் பல அடுக்குகளும் இருக்கக்கூடும். மேலும், கப்பலானது அதற்கு தேவையான அளவு பல்வேறு வகையான படகுகளையும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது. உயிர்காப்புப் படகுகள், திருப்புப்படகுகள், இழுவைப் படகுகள் போன்றன இவற்றுள் அடங்கும். "ஒரு படகை கப்பலில் உள்ளடக்க முடியும், ஆனால் கப்பலைப் படகில் உள்ளடக்க முடியாது". என்ற மரபுச் சொல் வழக்கானது ஒரு கப்பலுக்கும், படகுக்கும் இடையிலான அளவு வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்கும் என்பதற்கு இல்லை. பல்வேறு நாடுகளிலும் உள்ள உள்ளூர்ச் சட்டங்களும், விதிகளும் அளவு, பாய்மரங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு படகு, கப்பல் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கின்றன. கப்பல்கள் மற்றும் படகுகள் மனித வரலாற்றுடன் இணைந்து வளர்ந்தது. ஆயுத மோதல் மற்றும் அன்றாட வாழ்வில் அவை நவீன வணிக மற்றும் இராணுவ அமைப்புகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களால் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவ படைகள் போர் மற்றும் படைகளின் போக்குவரத்திற்காக இயங்குகின்றன. கிட்டத்தட்ட 35,000 வர்த்தக கப்பல்கள் 2007 ல் 7.4 பில்லியன் டன் எடையுள்ள சரக்கை ஏற்றிசென்றன. கப்பல்கள் எப்போதும் வரலாற்றின் கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணமாக இருந்தன. கடல்வழி பயணங்களால் தான் திசைகாட்டி, வெடிமருந்து போன்ற கண்டுபிடிப்புகள் பரவியது. கப்பல்கள் காலனித்துவம் மற்றும் அடிமை வர்த்தகம் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர், ஐரோப்பிய மாலுமிகள் வழியாக அமெரிக்காவிற்கு வந்த புதிய பயிர்களினால் கணிசமாக உலக மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது. கடல்வழி போக்குவரத்து இன்றைய உலக பொருளாதார முறையை உருவாக்கியுள்ளது. வரலாறு சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால காலகட்டத்திற்கு முன்பிருந்தே, மனிதன் கப்பல்களை அறிந்திருந்தான். ஆனால் அவற்றை முறையான கப்பல்கள் என்று கொள்ள முடியாது. முதலில் விலங்கு தோல்கள் அல்லது நெய்த துணிகளை sails பயன்படுத்த தொடங்கினர். ஒரு படகில் நிமிர்த்தியவாறு அமைக்கப்பட ஒரு கம்பின் மேல் முனையில் இவற்றை இணைத்து, நெடுந்தூரப்பயணங்களுக்கு பயன்படுத்தினான். மொகெஞ்சதாரோவில் காணப்பட்ட ஒரு பலகை மிதக்கும் படகோட்டத்தை சித்தரித்தது. கப்பல்கள் பல வகையாக இருந்தன; அவற்றின் கட்டுமானத்தை யுக்தி கல்ப தரு என்ற பண்டைய இந்திய உரை விவரிக்கிறது. இது கப்பல் கட்டும் நுட்பங்களை அறிய ஒரு தொழில்நுட்ப விளக்கத்தை கொடுக்கிறது. இது பல்வேறு கப்பல்களின் வகைகள், அவற்றின் அளவுகள், மற்றும் அவை கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது. 21 ஆம் நூற்றாண்டு 2007 ஆம் ஆண்டில், உலகிலுள்ள மொத்த கப்பல்களில் 1,000 டன்களுக்கும் அதிகமான வர்த்தக கப்பல்கள் 34,882 ஆகும். இவற்றின் மொத்த எடை 1.04 பில்லியன் டன்களாகும். இக்கப்பல்கள் 2006 ஆம் ஆண்டைய கணக்கின் படி 7.4 பில்லியன் சரக்குகளை ஏற்றிச்சென்றிருக்கின்றன. அது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8% வளர்ச்சியாகும்.2016 ஆண்டு புள்ளி விவரப்படி 1000 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள கப்பல்களில் 27.9 சதவீதம் எண்ணெய்க் கப்பல்கள் (tankers) , 43.1 சதவீதம் பேரளவு சரக்குக்கப்பல்கள் (bulk carriers), 13.5 சதவீதம் கொள்கலக் கப்பல்களாகும் (container ships). 4.2 சதவீதம் பொதுச் சரக்குக் கப்பல்கள் (general cargo) , 11.3 சதவீதம் மற்ற பயன்பாட்டுக் கப்பல்களாகும் (வாயு, வேதிப்பொருள் பயணிகள் கப்பல்கள் உட்பட). 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி சிறிய வகை ரோந்துக் கப்பல்கள் தவிர்த்து 1,240 போர்க்கப்பல்கள் உலகளவில் உள்ளன . ஐக்கிய அமெரிக்காவிடம் 3 மில்லியன் டன் எடை மதிப்புடைய கப்பல்களும், 1..35 மில்லியன் டன் ரசியாவிடமும், ஐக்கிய இராச்சியத்திடம் 504,660 டன் எடைமதிப்புள்ள கப்பல்களும், சீனாவிடம் 402,830 டன் மதிப்புள்ள கப்பல்களும் உள்ளன.இரண்டு உலகப்போர்களின் போதும், பனிப்போரிலும்,கடற்படை நடவடிக்கைகள் மூலம் இரண்டு பிராந்தியங்களுக்கிடையே ஏற்பட்ட கடற்படை அதிகாரப் போட்டிகளை 21 ம் நூற்றாண்டு பார்த்திருக்கிறது.சமீபத்தில் உலகின் பெரிய வல்லரசுகளான ஐக்கிய இராச்சியம் பாக்லாந்து தீவுகளிலும் அமெரிக்கா இராக்கிலும் தமது கடற்படை அதிகாரத்தை பயன்படுத்தியது. உலக மீன் பிடிக்கப்பல்களின் எண்ணிக்கையை கணிப்பதில் சிரமங்கள் உள்ளன.இவற்றுள் எண்ணக்கூடிய அளவில் பெருவணிக மீன்பிடி கலன்களும் மிகப்பெரும் எண்ணிக்கையில் சிறிய ரக மீன் பிடி கப்பல்களும் உள்ளன. பெரும்பாலான மீன் பிடி கப்பல்கள் கடற்கரைக் கிராமப்பகுதிகளில் இருப்பதால் அவற்றை எண்ணிக் கணிப்பதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 4 மில்லியன் மீன் பிடி கப்பல்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கணித்துள்ளது.மேலும் அதே வருடத்தில் உலகம் முழுவதும் 29 மில்லியன் மீனவர்களால் 85,800,000 டன்கள் மீன்கள் மற்றும் நண்டு இறால் வகை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது . நன்னீர் கப்பல் போக்குவரத்து நன்னீர் கப்பல் போக்குவரத்தானது ஏரிகளிளும், ஆறுகளிலும், கால்வாய்களிலும் நடைபெறுகிறது.நன்னீரானது கடல்நீரை விட அடர்த்தி குறைவு. ஆகையால் அதற்கேற்றவாறு கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நன்னீர் நீர்நிலைகளின் நிள அகலத்திற்கு ஏற்றவாறும் கப்பல்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன. உதாரணமாக தன்யூப் ஆறு, மிசிசிப்பி ஆறு, ரைன் ஆறு, யாங்சி ஆறு, அமேசான் ஆறு மற்றும் அமெரிக்கப் பேரேரிகளில் மிகப்பெரிய கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும் மற்றும் ஆழமாகவும் காணப்படுகின்றன. கப்பல்களின் வகைகள் வர்த்தக கப்பல்கள் வர்த்தக கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் - சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், மற்றும் சிறப்பு தேவை கப்பல்கள். சரக்கு கப்பல்கள் உலர் மற்றும் திரவ சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுகிறது. பயணிகள் கப்பல்களின் அளவு சிறிய ஆற்று படகுகளில் இருந்து மிக பெரிய கப்பல்கள் வரை செல்லும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிகளை கொண்டு செல்லும் கப்பல்கள், குறுகிய பயணங்களுக்கு பயணிகள் மற்றும் வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், இன்ப பயணங்கள் மேற்கொள்ளப்படும் கப்பல்கள் இந்த வகையில் அடங்கும். கடற்படை கப்பல்கள் கடற்படை கப்பல்கள், இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கப்பல்கள் ஆகும். கடற்படை கப்பல் பல வகையாக உள்ளன. கடலின் மேற்பரப்பில் போர் புரியும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், மற்றும் ஆதரவு மற்றும் துணை கப்பல்கள். பெரும்பாலான இராணுவ நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகும். இரண்டாம் உலக போரின் முடிவு வரை டீசல் / மின்சார நீர்மூழ்கிகளின் முதன்மை பணி கப்பல் எதிர்ப்பு போர், இராணுவ படைகளுக்கு உதவி மற்றும் உளவு பணிகள். சிறந்த சோனார் அமைப்புகள், அணு உந்துவிசை வளர்ச்சி போன்ற காரணிகளால் நீர்மூழ்கி கப்பல்கள் திறம்பட பணிபுரிய முடிந்தது. மீன்பிடி படகுகள் மீன்பிடி படகுகள் வர்த்தக கப்பல்களின் ஒரு துணைக்குழு, ஆனால் அளவு சிறியதாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் இருக்கும். அவற்றை பல விதங்களிலும் வகைப்படுத்த முடியும்: கட்டுமானம், அவற்றல் பிடிக்கப்படும் மீன்களின் வகை, பயன்படுத்தப்படும் மீன்பிடி முறை, புவியியல் தோற்றம், மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள். படகுகளும், கப்பல்களும் எண்ணெய்க் கப்பல் கொள்கலக் கப்பல் (Container ship) விமானம் தாங்கிக் கப்பல் தட்டையடிப் படகு (Barge) தலைமைக் கப்பல் (Capital ship) சரக்குக் கப்பல் (Cargo ship) கட்டுமரம் பாரந்தூக்கிக் கப்பல் (Crane ship) பயணிகள் கப்பல் (Cruise ship) தமிழர் கப்பற்கலை கப்பல் மணி (Ship's bell) நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம் கப்பல் கட்டுமானம் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறுகிறது. கட்டப்படும் கப்பலின் அளவை பொருத்து அது ஒரு சில மாதங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும். கப்பல் கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கப்பலின் அளவு போன்றவை கட்டுமான முறையை தீர்மானிப்பதில் ஒரு பெரிய பங்கு வகிக்கும். ஒரு கண்ணாடியிழை படகு மேலோடு அச்சிலிருந்தும், ஒரு சரக்கு கப்பல் எஃகு பாகங்களை ஒன்றாக பற்ற வைத்தும் கட்டப்படுகிறது. பொதுவாக, கப்பலின் கட்டுமானம் அதன் வெளிப்புற சுவர் கட்டப்படுவதுடன் தொடங்குகிறது. இது பெரும்பாலும் நிலப்பகுதியில் செய்யப்படுகிறது. வர்ணம் பூசப்பட்ட பின், அது மிதக்கவிடப்படுகிறது. மேல் பகுதிகளை கட்டுவதும் உபகரணங்களை நிறுவுவதும் பின்னர் செய்யப்படும். கப்பல் தொடங்குதல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக இருக்கிறது. வழக்கமாக கப்பல் அப்போது தான் முறையாக பெயரிடப்படும். கடல் வணிகக் கப்பல்கள் வர்த்தக கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களானது, மீன்பிடி கப்பல்கள் (fishing vessels), சரக்குக் கப்பல்கள் (cargo ships), பயணிகள் கப்பல்கள் ( passenger ships) மற்றும் சிறப்பு-நோக்க கப்பல்கள் (special-purpose ships) என நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பின் (UNCTAD) கடல் வழி வர்த்தகம் தொடர்பான ஆய்வறிக்கையில் (UNCTAD review of maritime transport ) கப்பல்களை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது . எண்ணெய்க் கப்பல்கள் (oil tankers) பெரும் கொள்கலக் கப்பல்கள் (bulk (and combination) carriers) பொதுச் சரக்குக் கப்பல்கள் (general cargo ships) கொள்கலக் கப்பல்கள் (container ships) மற்ற கப்பல்கள் (other ships) இதில் மற்ற கப்பல்கள் என்பதில் திரவ பெட்ரோலிய வாயு ,திரவ இயற்கை எரிவாயு , வேதியப் பொருட்கள் ஆகியவற்றை சுமந்து செல்லும் கப்பல்கள், தூர்வாரி (dredgers) , இழுவை, மரச்சட்டங்கள் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் (reefers),பயணிகள் கப்பல்கள், உல்லாசக் கப்பல்கள் (cruise) போன்ற சிறப்பு வகைக் கப்பல்களும் அடங்கும். சிறப்புப் பயன்பாட்டுக் கப்பல்கள் வானிலைக் கப்பல்கள் (weather ships) போன்ற சிறப்பு வகைக் கப்பல்கள் கடல் வளிமண்டலத்தில் புவி வெப்பமயமாதல் கணிப்புகள் மேற்கொள்ளவும் கடல் மேற்பரப்பு வானியல் ஆய்வுகளுக்கும் ஒரு தளமாக கடல் பரப்பில் நிறுத்திவைக்கப்படுகின்றன. கடற்படைக் கப்பல்கள் நாட்டின் இராணுவ மற்றும் கடற்படைப் பாதுகாப்பிற்காகவும், ரோந்துப் பணிக்காகவும் ஆயுதங்கள், விமானங்கள், சிறப்பு வகை பாதுகாப்பு உபகரணங்கள்,தொலைக்கண்டுணர்வி (radar) உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட கப்பல்கள் கடற்படைக்கப்பல்களாகும். இவை பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் காண்க வான்கப்பல் கடற்படை பாய்மரப் படகோட்டம் கப்பல் போக்குவரத்து விண்கலம் பட்டியல்கள் புகழ் பெற்ற கப்பல்கள் மேற்கோள்கள் கடல் போக்குவரத்து நீரூர்திகள் ml:കപ്പല്‍ sv:Skepp (fartyg)
5649
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
புவி சூடாதல்
புவி வெப்பமயமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மனித செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது. இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொறாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் வரை கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்ட்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும், மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம். பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும். புவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன. வெப்பநிலை மாற்றங்கள் புவி சூடாதலின் போது புவிக்கு அண்மித்த வெப்பநிலையின் உலகலாவிய சராசரியின் மாற்றம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 0.74 °C ±0.18 °C ஆல் கூடியுள்ளது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை கூடும் வீதத்தோடு ஒப்பிடுகையில் அதன் கடைசி 50 ஆண்டுகளில் வெப்பநிலை கூடும் வீதம் இரட்டிப்பாகியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C ±0.03 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.07 °C ± 0.02 °C என்பதை ஒப்பிடுக). நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு புவி சூடாதலுக்கு 1900 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு 0.002 °C என்ற வீத்ததால் புவி வெப்பநிலையைக் கூட்டியுள்ளது. செய்மதி அளவீடுகளின் படி 1979 ஆம் ஆண்டு முதல் அடிவளிமண்டலத்தின் கீழ் பகுதியில் வெப்பநிலை பத்து ஆண்டுகளுக்கு 0.12 தொடக்கம் 0.22 °C வரை கூடியுள்ளது (0.22 - 0.4 °F). 1850 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒன்று அல்லது இரண்டு ஆயிரம் ஆண்டுகளின் காலத்தில், இடைமத்திய கால வெப்பமான காலகட்டம் அல்லது சிறு பனி யுகம் ஆகிய உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் தவிர்ந்தவிடத்து ஒப்பீட்டளவில் சராசரி வெப்பநிலை கூடுதல் மாற்றம் இருந்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நாசாவின் கோடார்டு விண்வெளி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, 1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெப்பநிலை தொடர்பான நம்பகமான பரவலான கருவியியல் அளவீடுகள் கிடைக்கப் பெற்றதில் இருந்து 2005 ஆம் ஆண்டே வெப்பநிலைக் கூடிய ஆண்டாகும். இவ்வெப்பநிலை வெப்பநிலைத் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்த 1998 ஆம் ஆண்டினதை விட சில கீழ்நூறு பாகைகள் கூடுதலாகும். உலக வானிலையியல் அமைப்பும் தட்பவெப்பநிலை ஆராய்ச்சிப் பிரிவும் மேற்கொண்ட மதிப்பீடுகளின் படி 1998 ஆம் ஆண்டு முதலிடத்தையும் 2005 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வலிமையான எல் நீனோ 1998 ஆம் ஆண்டில் நடைபெற்றமையால் அவ்வாண்டின் வெப்பநிலைகள் சராசரி அளவைவிட கூடுதலாக காணப்பட்டன. வெப்பநிலை மாற்றம் உலகுமுழுவது ஒரே அளவில் நடைபெறவில்லை. 1979 ஆம் ஆண்டு முதல் நிலத்தின் வெப்பநிலை கடல் வெப்பநிலையைவிட இரண்டு மடங்கு வேகமாக கூடியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.25 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C என்பதை ஒப்பிடுக). நிலத்தைவிட கடல் கூடுதல் வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளமையும் கடல் ஆவியாதல் மூலம் நிலப்பரப்பை விடவும் வெகு துரிதமாக வெப்பத்தை இழக்கக் கூடியமையும் என்ற இரண்டு கரணியங்களால் கடல் வெப்பநிலைகள் நிலப்பரப்பினதை விடவும் மெதுவாகவே கூடுகின்றன வடக்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளத்தை விட கூடுதல் நிலப்பரப்பை கொண்டிருப்பதாலும் பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சக்கரத்துக்குள்ளாகும் கூடுதலான பருவ-தூவிப்பனியுள்ளநிலப் பகுதிகளும் கடல் பனியும் காணப்படுவதாலும் வடவரைக்கோளம் துரிதமாக வெப்பமடைகிறது. வெப்பம்சிக்குறுத்தும் வளிமங்கள் கூடுதலாக வடவரைக்கோளத்தில் கூடுதலாக உமிழப்பட்டாலும் அவ்வளிமங்கள் இரண்டு அரைக்கோளங்களின் வளிமங்கள் கலக்க எடுக்கும் நேரத்தை விட கூடிய நேரம் வளிமண்டலத்தில் இருப்பதால் வெப்பமடைதலில் எந்த வித்தியாசத்திற்கும் காரணமாவதில்லை. பெருங்கடல்களின் கூடுதலான வெப்பக்கொள்ளளவுக் காரணமாகவும் ஏனைய நேரில் விளைவுகளின் மெதுவான தாக்கம் காரணமாகவும் தட்பவெப்பநிலை சீராக பலநூற்றாண்டுகள் ஆகலாம். ஆய்வுகளின் படி வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களிம் உமிழ்வு 2000 ஆம் ஆண்டு அள்வுகளில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெப்பநிலை யினால் மேலும் கூடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. வெளிக் காரணியங்கள் தட்பவெப்பநிலையுடன் தொடர்பில்லாத காரணியங்களுக்கும் தட்பவெப்பநிலை மாற்றங்களைக் காட்டுகிறது. வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் அளவு, சூரிய ஒளிர்வில் உள்ள மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள், புவி சூரியனைச் சுற்றும் பாதையில் ஏற்படும் மாற்றங்கள் என்பன தட்பவெப்பநிலையில் செல்வாக்குச் செலுத்தும் வெளிக் கரணியங்களாகும். பொதுவாக இதில் முதல் மூன்று கரணியங்களே வெப்பநிலை மாற்றத்துக்கு ஏதுவாகிறது. நிலவுலகு சூரியனைச் சுற்றும் பாதை மிக மெதுவாகவே மாற்றமடைவதால் கடந்த நூற்றாண்டின் வேகமான வெப்பநிலை மாற்றங்களுக்கு இது கரணியமாகாது. வெப்பம் சிக்குறும் விளைவு வளிமண்டலத்திலுள்ள வளிமங்கள் அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சி மீண்டும் உமிழ்வதன் மூலம் கோள் ஒன்றின் கீழ் வளிமண்டலமும் அதன் மேற்பரப்பும் வெப்பமடைதல் வெப்பம் சிக்குறும் விளைவு எனப்படுகிறது. வெப்பம் சிக்குறும் விளைவை ஜோசப் ஃபோரியர் 1824 ஆம் ஆண்டு கண்டறிந்தார், 1896 ஆம் ஆண்டில் சிவாந்தே அரினியஸ் வெப்பம் சிக்குறும் விளைவின் அளவைக் கண்டறிந்தார். புவிசூடாதலுக்கு மாந்த நடவடிக்க்கைகள் ஒரு கரணியமல்லவென கருது அறிவியலாளர்கள் உட்பட் எவராலும் வெப்பம் சிக்குறும் விளைவின் இருப்பு மறுப்புக்குள்ளாகவில்லை. மாறாக மாந்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்கள் செறிவு மாறும் போது வெப்பம் சிக்குறும் விளைவு எவ்வாறு மாற்றமைடையும் என்பதே கேள்விகுள்ளாகியுள்ளது. இயற்கையாக வளிமண்டலத்திலுள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்கள் சுமார் 33 °C (59 °F) வரை சராசரியான வெப்பமாக்கும் விளைவைக் கொண்டுள்ளன. நீராவி (இது வெப்பம் சிக்குறும் விளைவில் 36-70 சதவீதத்திற்கு கரணியமாகிறது), கரியமில வளிமம்(CO2, இது வெப்பம் சிக்குறும் விளைவில் 9-26 சதவீதத்திற்கு கரணியமாகிறது), மீத்தேன் (CH4 இது வெப்பம் சிக்குறும் விளைவில் 4-9 சதவீதத்திற்கு கரணியமாகிறது), ஓசோன் ( இது வெப்பம் சிக்குறும் விளைவில் 3-7 சதவீதத்திற்கு கரணியமாகிறது) என்பன முக்கிய வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களாகும். கதிரியக்க சமநிலையில் முகில்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் இவை நீரை நீர்ம நிலையிலோ அல்லது திண்ம நிலையிலோ கொண்டிருப்பதால் இதன் வெப்பம் சிக்குறுத்தும் விளைவு நீராவியிலிருந்து வேறாக கணிக்கப்படுகிறது. தொழிற்புரட்சி முதல் மாந்தரின் நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் செறிவை கூட்டியது, இதன் மூலம் CO2, மீத்தேன், அடிவளிமண்டல ஓசோன், குளோரோபுளோரோகாபன், நைட்ரஸ் ஆக்சைடு வளிமங்களில் இருந்தான கதிர்வீச்சு திணிப்பிற்கு இட்டுச் செல்கிறது. 1700களின் நடு ஆண்டுகள் தொடக்கம் வளிமண்டலத்தில் CO2, மீத்தேனின் செறிவு முறையே 36% மற்றும் 148% ஆல் கூடியிருக்கிறது. பனிக் கருவங்களிலிருந்து நம்பகமான தரவுகள் பெறப்பட்டுள்ள கடந்த 650,000 ஆண்டுகளைவிட இந்த அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு கூடுதலானவையாகும். நேரில் புவியியல் தரவுகளின் படி வளிமண்டலத்தில் இந்த அளவு CO2 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே நிலவுலகில் காணப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மாந்த நடவடிக்கைகளின் போது எரிக்கப்பட்ட புதைபடிவ எரிபொருள் மூலமே கூடியிருக்கும் CO2 அளவில் சுமார் முக்கால் பங்கிகு உமிழப்பட்டுள்ளது. மிகுதி CO2 அளவில் பெருமளவு காடழிப்பை முதன்மையகக் கொண்ட நில-பயன்பாடு மாற்றத்தினால் உமிழப்பட்டுள்ளது. புதைபடிவ எரிமங்களின் எரிப்பு நில-பயன்பாடு மாற்றம் கரணியமாக CO2 செறிவு கூடிச்செல்கிறது. எதிர்காலத்தில் CO2 செறிவு கூடிச்செல்லும் வேகம் பொருளாதார, சமுக, தொழில்நுட்ப, இயற்கை துறைகளில் ஏற்படும் வளர்ச்சிகளில் தங்கியுள்ளது. தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் (IPCC) வளிம உமிழ்வு சூழல்கள் மீதான சிறப்பு அறிக்கையில் 2100 ஆம் ஆண்டில் CO2வின் செறிவுக்கு 541 ppm முதல் 970 ppm வரை ஒரு பரந்த வீச்சை கொடுத்துள்ளது. நிலக்கரி, தார் மணல், மீத்தேன் சோமம் ஆகியவை அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுமானால் புதைபடிவ எரிமங்களே குறித்த அளவை எட்டுவதற்கு போதுமானவை என்பதோடு 2100 ஆம் ஆண்டு தாண்டியும் உமிழ்வுகள் தொடரக் கூடும். குளோரோபுளோரோகாபன்களால் மேல் வளிமண்டல ஓசோன் படை அழிக்கப்படுதல் சிலவேளைகளில் புவிசூடாதலுக்குக்கு ஒரு கரணியமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஒசோன் படை அழிவிற்கும் புவிசூடாதலுக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. மேல் வளிமண்டல ஓசோன் அழிவு ஒரு குளிர்விக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது, ஆனால் 1970களின் பிற்பகுதி வரையில் ஓசோன் ஓட்டையின் பெரும்பகுதி ஏற்பட்டிருக்கவில்லை. கீழ் வளிமண்டலத்தில் ஓசோன் காணப்பட்டால் அது புவி சூடாதலுக்கு கரணியமாகிறது. வளிதொங்கல்களும் புகைக் கரியும் நிலவுலகின் மேற்பரப்பில் கிடைக்கப்பெறும் ஒளிக்கதிர்களின் அளவு குறந்துச் செல்லுதல் நிகழ்வான புவி மங்குதல் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புவி சூடாதலை பகுதியளவில் எதிரீடு செய்துவந்துள்ளது. மாசுக்களாலும் எரிமலைகளாலும் உற்பத்திச்செய்யப்படும் வளித்தொங்கல்கள் நிலவுகு மங்களுக்கும் முக்கிய கரணியமாகும். உள்வரும் சூரிய ஒளியின் தெறிப்பைக் கூட்டுவதன் மூலம் இவை ஒரு குளிர் விளைவை ஏற்படுத்துகின்றன. புதைபடிவ எரிமங்களின் எரிப்பின் போது வெளியாகும் கரியமில வளிமத்தால் (CO2) உண்டாகும் சூடாக்கும் விளைவை அதே எரிப்பில் வெளியாகும் வளித்தொங்கல்கள் இல்லாது செய்து விடுகின்றன, எனவே அண்மைய ஆண்டுகளில் உள்ள வெப்பநிலை கூடுதலுக்கு கரியமில வளிமமல்லாதா ஏனைய வெப்பசிக்குறுத்தும் வளிமங்களே கரணியம் என சேம்சு என்சன்னும் (James Hansen) அவரது சகாக்களும் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்திருக்க்கின்றனர். பல பத்தாண்டுகளாக புவி வெப்பமாதலை கட்டுப்படுத்த வேண்டும் எனில் கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதே வழி என்று அதிலேயே கவனமாக இருந்தார்கள். காடுகள் அழிப்பு, அனல் மின்சார உற்பத்தி போன்ற மனித நடவடிக்கைகளாலேயே கரியமில வாயு உற்பத்தி நிகழ்ந்தது. தொழிற்புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட புவி வெப்பநிலை உயர்வில் 70 சதவீதம் கரியமில வாயுவாலேயே நிகழ்ந்துள்ளது. தற்போது புவி வெப்ப நிலை அதிகரித்து வருவதற்கு பெருமளவுக்கு மீத்தேன் வாயு காரணமாக இருக்கிறது என்பது சமீபத்தில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டுக் குழு (ஐபிசிசி) ஆய்வறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. தற்போது நிகழும் புவி வெப்பநிலை உயர்வில் 30-50 சதவீதம் இந்த மீத்தேன் வாயுவால் நிகழ்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை. வேளாண்மை, எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் நடக்கும் கசிவு, குப்பை மேடுகள் போன்றவை மீத்தேன் வாயு உற்பத்திக்கு பெருமளவுக்கு காரணமாக அமைகின்றன. மீத்தேன் வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்தால், அது பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் புவிக்கு கொஞ்சம் கால அவகாசம் தருவதாக அமையும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். புவி வெப்பமாதலில் அணு ஆற்றலின் பங்கு சர்வதேச அணுசக்தி கழகம் (international atomic energy agency) அறிக்கையில் 2030ம் ஆண்டுவாக்கில் கார்பன் டை ஆக்சைட் உலகில் அதிகரிக்கும் என்கிறது. 2050ம் ஆண்டுக்குள் 50 முதல் 85 சதவிகிதம் வரை பசுமையில்ல வாயுக்களின் வெளியீட்டை அதிகரிக்க வேண்டும், இல்லையெனில் அதிக மோசமான விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியதிருக்கும் என அறிவித்துள்ளது. சூரிய வெளியீடு மாற்றம் சூரிய வெபியீட்டில் ஏற்படும் மாற்றங்கள் இறந்தகாலத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்து கரணியமாக இருந்துள்ளது. இருப்பினும் சூரிய வெளியீட்டில் உள்ள மாற்றம் அண்மைய நிலவுலகுச் சூடாதலுக்கு போதாது என்பது பொதுவான கருத்து. வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களும் சூரிய திணிப்புகளும் வெப்பநிலையை வெவ்வேறுவிதமாக பாதிக்கின்றன. இரண்டு கரணியங்களின் கூடுகையானது அடிவளிமண்டலத்தின் வெப்பநிலையைக் கூட்டும் அதேவேளை சூரிய திணிப்பின் கூடுகை அடுக்குமண்டலத்தை சூடாக்குவதோடு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் கூடுகை அடுக்குமண்டலத்தை குளிர்விக்க வேண்டும். 1979 இல் செயற்கைக்கோள் அளவீடுகள் கிடைக்கப்பெற்றது முதல் அடுக்குமண்டலத்தின் வெப்பநிலை சீராகவோ அல்லது குறைவதாகவோ உள்ளது.அதற்கு முன்னர் தட்பவெப்பநிலை பலூன் அளவீடுகளையும் உள்ளடக்கினால் 1958 ஆம் ஆண்டு முதல் அடுக்குமண்டலம் குளிர்வடைவதைக் காணலாம். பின்னூட்டங்கள் வெப்பமடையும் போக்கு தொடர்ந்து கூடுதலான வெப்பமடைதலுக்கு தூண்டும் விளைவுகளில் முடிகிற சமயத்தில், அது ஒரு நேர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது; விளைவுகள் குளிர்விப்பைத் தூண்டுவதானால், அந்த நிகழ்முறை எதிர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது. அடிப்படை நேர்மறை எதிரொலியில் நீராவி அடங்கியிருக்கிறது.அகச்சிவப்பு கதிர்வீச்சு உமிழ்வில் வெப்பநிலையின் விளைவே அடிப்படை எதிர்மறை எதிரொலியாகும்: ஒரு பொருளின் வெப்பநிலை உயரும்போது, அதன் தனிமுதல் வெப்பநிலையின் நான்காவது அடுக்கு அளவாக உமிழப்படும் கதிர்வீச்சு அதிகரிக்கிறது.' இது நாளடைவில் காலநிலை அமைப்பை ஸ்திரப்படுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த எதிர்மறை எதிரொலியை வழங்குகிறது. நீராவி பின்னூட்டம் வளிமண்டலம் வெப்பமடையும் போது, நிரம்பலாவியமுக்கம் கூடுகின்றது இதன் போது வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு கூடும். நீராவி ஒரு வெப்பம் சிக்குறுத்தும் வளிமமாகையால் நீராவியின் கூடுகை வளிமண்டலத்தை மேலும் வெப்பமடையச் செய்கிறது; இந்த வெப்பமடைதலானது வளிமண்டலம் இன்னும் கூடுதல் நீராவியைப் பிடித்துக் கொள்வதற்கு கரணியமாகிறது. மற்ற நிகழ்முறைகள் பின்னூட்டச் சுற்றை நிறுத்தும் வரையில் இது தொடரும். இதன் விளைவாக கரியமில வளிமத்தை விடக் கூடுதலான அளவு வெப்பம் சிக்குறுத்தப்படுகிறது.இந்த பின்னூட்டச் சுற்றிந் போது வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவு கூடினாலும் சாரீரப்பதன் ஒரே அளவில் காணப்படும் அல்லது சிறிது குறைவைக்காட்டும். முகில் பின்னூட்டம் சூடாதல் மூலம் முகிலின் வகையும் பரம்பலும் வேறுபடும். முகில்கள் அகச்சிவப்பு கதிர்களை மீண்டும் மேற்பரப்பு நோக்கிச் செலுத்துகின்றன எனவே ஒரு வெப்பமூட்டும் விளைவை செலுத்துகின்றன, அதே முகில்கள் சூரிய ஒளியைப் தெறிக்கச் செய்வதோடு விண்வெளிக்கு அகச்சிவப்பு கதிர்களையும் உமிழ்கின்றன, எனவே ஒரு குளிர்விப்பு விளைவை ஏற்படுத்துகின்றன. நிகர விளைவு வெப்பமூட்டுவதா அல்லது குளிர்விப்பதா என்பது, முகிலின் வகை, அதந் உயரம் போன்றவற்றில் தங்கியுள்ளது. இதன் விளைவு தட்பவெப்பநிலை மாதிரிகளில் குறிப்பதற்கு கடினமானதாக உள்ளது. உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதம் அடிவளிமண்டலத்தில் உயரம் கூடும் போது வளிமண்டலத்தின் வெப்பநிலை குறைகிறது. அகச்சிவப்பு கதிர்வீச்சு உமிழ்வானது வெப்பநிலையின் நான்காவது அடுக்கு தொடர்புடன் மாறுவதாய் இருப்பதால், மேல் மட்ட வளிமண்டல அடுக்குகளில் இருந்து விண்வெளி நோக்கி உமிழப்படும் நெட்டலை கதிர்வீச்சு கீழ்மட்ட வளிமண்டலத்திலிருந்து மேற்பரப்பு நோக்கி உமிழப்படுவதை விடவும் குறைவானதாய் இருக்கும். இவ்வாறாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமை வளிமண்டலத்தில் உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதத்தில் தங்கியுள்ளது. நிலவுலகு சூடாதல் உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிததைச் குறைப்பதாக தட்பவெப்பநிலை மாதிரிகளும் கோட்பாடுகளும் எடுத்துக்காட்டுகின்றன. நிலவுலகு சூடாதலின் போது உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதம் குறையும், இதன் போது வெப்பம் சிக்குறும் வலிமை குறையும். இது ஒரு மறை பீன்னூட்டச் சுற்றாகும். வெப்பநிலை அளவிடும் போதுள்ள சிறிய அளவிலான பிழைகள் உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யும். இதனால் மாதிரிகள் அளவீடுகளுடம் ஒத்திப்போகிறதா என்பதை அறிய முடியாதுள்ளது. பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சுற்று மற்றுமொரு முக்கிய எதிரொலி நிகழ்முறை பனி-அல்பீடோ எதிரொலியாகும். உலக வெப்பநிலைகள் அதிகரிக்கும்போது, துருவப்பகுதிகளில் இருக்கும் பனி அதிகமான வேகத்தில் உருகுகிறது.பனி உருகும்போது, நிலமோ அல்லது திறந்த நீர்ப்பரப்போ அதனிடத்திற்கு வருகிறது.நிலமோ அல்லது திறந்த நீர்ப்பரப்போ சராசரியாக பனியை விட குறைவான பிரதிபலிப்பு திறனுடனே இருக்கின்றன, எனவே கூடுதலான சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன.இது கூடுதலான வெப்பமூட்டலுக்கு காரணமாகி, அதன் விளைவாக பனி உருகுவதும் கூடுதலாக நிகழ்கிறது, இந்த சுழற்சி தொடர்கிறது.ஆர்க்டிக் சுருக்கம் ஏற்கனவே துரிதமாகி விட்டது, 2007 இல் தான் கடல் பனி பகுதி மிகவும் குறைவாக பதிவாகியிருக்கிறது. கரியமில வளிமத்தை உறிஞ்சும் அளவு குறைதல்கார்பனை பிரித்துவைப்பதற்கான கடல் சூழலமைப்புகளின் திறன் அது வெப்பமடையும் போது குறையலாம் எனக் கருதப்படுகிறது.இதன் காரணம் மீசோப்லஜிக் மண்டலத்தின் ஊட்டச்சத்து அளவு குறைந்து (சுமார் 200 முதல் 1000 மீ ஆழத்திற்கு) அது கடலடி டையடம் நுண்பாசிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதற்குப் பதிலாக கார்பனின் உயிரியல் பம்புகளாக செயல்படுவதில் திறன் குறைந்த அளவில் சிறிய பைட்டோபிளாங்க்டனின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. காலநிலை மாதிரிகள் விஞ்ஞானிகள் காலநிலை குறித்த கணினி மாதிரிகள் கொண்டு புவி வெப்பமடைதலை ஆய்ந்திருக்கிறார்கள்.இந்த மாதிரிகள் நீர்ம இயங்கியல், கதிர்வீச்சு வழி இடமாற்றம், மற்றும் பிற நிகழ்முறைகளின் இயற்பியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை, கணினியின் திறனில் உள்ள வரம்புகள் மற்றும் காலநிலை அமைப்பின் சிக்கலான வடிவம் இவற்றின் காரணமாக எளிமைப்படுத்தல்கள் அவசியமாயிருக்கிறது.அனைத்து நவீன காலநிலை மாதிரிகளும் ஒரு கடல் மாதிரி மற்றும் நீர் மற்றும் கடல் மீதான பனி உறைகளுக்கான மாதிரிகள் இவற்றுடன் பிணைந்த ஒரு வளிமண்டல மாதிரியை உள்ளடக்கி இருக்கின்றன.சில மாதிரிகள் வேதியியல் மற்றும் உயிரியல் நிகழ்முறைகளின் முறைகளையும் உள்ளடக்கி இருக்கின்றன. இந்த மாதிரிகள் எல்லாம் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதிகரித்துள்ள நிலைகளின் காரணமாய் காலநிலை வெப்பமுற்றுள்ளதைக் காட்டுகின்றன. இருந்தாலும், வருங்கால கிரீன்ஹவுஸ் வாயு அளவுகளுக்கான அதே அனுமானங்களை பயன்படுத்தினாலும் கூட, அங்கு தொடர்ந்து காலநிலை உணர்திறனின் ஒரு குறிப்பிடத்தக்க வரம்பு இன்னும் தொடர்ந்து இருக்கிறது. வருங்கால கிரீன்ஹவுஸ் வாயு செறிவுகள் மற்றும் காலநிலை மாதிரிகளின் நிச்சயமற்ற தன்மைகள் உள்ளடங்கிய நிலையில், 1980-1999 வரையான ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 21 ஆம் நூற்றாண்டின் நிறைவுக்குள் அளவு வெப்பமடைதலை IPCC மதிப்பிடுகிறது.சமீபத்திய காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை, கவனிக்கப்படுகிற மாற்றங்களை பல்வேறு இயற்கையான மற்றும் மனிதரால்-உருவாகும் காரணங்களினால் உருவாகக் கூடிய மாற்றங்களாக மாதிரிகளால் கணிக்கப்படுகிறவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து, ஆய்வு செய்வதற்கும் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பு காலநிலை மாதிரிகள் சென்ற ஆண்டின் உலகளாவிய வெப்பநிலை மாற்றங்கள் விஷயத்தில் நன்கு பொருந்தக் கூடியவையாக இருக்கின்றன, ஆனால் காலநிலையின் அனைத்து அம்சங்களையும் கணிக்கக் கூடியனவாய் இல்லை. இந்த மாதிரிகள் எல்லாம் சுமார் 1910 முதல் 1945 வரையான காலத்தில் நிகழ்ந்த வெப்பமடைதலுக்கு இயற்கை மாறுபாட்டையோ அல்லது மனித விளைவுகளையோ குழப்பமின்றி காரணமாய் காட்டவில்லை; என்றாலும் 1975 ஆம் ஆண்டில் இருந்தான வெப்பமடைதலுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடுகளின் காரணம் தான் மேலோங்கியதாக இருக்கிறது என்று அவை கருத்து தெரிவிக்கின்றன. வருங்கால காலநிலை மீதான புவி காலநிலை மாதிரி கணிப்புகள் எல்லாம் தவிர்க்கவியலாத கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு சூழ்நிலைகளால், பெரும்பாலும் IPCC உமிழ்வுகள் சூழ்நிலைகள் மீதான சிறப்பு அறிக்கையில் (SRES) இருந்தானவற்றால், நிர்ப்பந்திக்கப்படுகின்றன.சில சந்தர்ப்பங்களில், மாதிரிகள் கார்பன் சுழற்சியின் ஒரு செயற்கைத் தூண்டலையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்; பொதுவாக இந்த மறுமொழி நிச்சமயமற்றது என்றாலும் இது பொதுவாக ஒரு நேர்மறை எதிரொலியை காட்டுகிறது. சில பரிசோதனை ஆய்வுகளும் கூட நேர்மறை எதிரொலியைக் காட்டுகின்றன."வடக்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் வெப்பமண்டலப் பகுதிகளின் இயற்கை காலநிலை மாறுபாடுகள் கணக்கிடப்பட்ட ஆந்த்ரோபோஜெனிக் வெப்பமடைதலை தற்காலிகமாக தணிக்கும் என்பதால் புவிப் பரப்பு வெப்பநிலை அடுத்த தசாப்த காலத்தில் அதிகரிக்காது எனக் கருதலாம்" என்று பெருங்கடல் வெப்பநிலை பரிசோதனைகளை உள்ளடக்கியதன் அடிப்படையில், ஒரு சமீபத்திய ஆய்வறிக்கை கருத்து தெரிவிக்கிறது. மேகங்களின் பிரதிநிதித்துவம் என்பது நடப்பு-தலைமுறை மாதிரிகளில் நிச்சயமற்ற தன்மைக்கு முக்கிய மூலாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது, இந்த பிரச்சினையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என்றாலும் கூட. காரணம் கூறப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள் சுற்றுச்சூழல் ரீதியான குறிப்பிட்ட காலநிலை நிகழ்வுகளை புவி வெப்பமடைவதுடன் தொடர்புபடுத்துவது கடினம் என்றாலும் கூட, புவி வெப்பநிலைகளின் அதிகரிப்பானது பனியாறு பின்வாங்கல், ஆர்க்டிக் சுருக்கம், மற்றும் உலகளாவிய அளவில் கடல் மட்ட அதிகரிப்பு ஆகியவை உள்ளிட்ட பெரும் மாற்றங்களுக்கு காரணமாக முடியும்.வீழ்படிவு நிகழ்வின் அளவு மற்றும் தன்மையிலான மாற்றங்கள் வெள்ளம் மற்றும் வறட்சிக்கு காரணமாகலாம்.அதீத காலநிலை நிகழ்வுகள் நிகழும் எண்ணிக்கை மற்றும் தீவிரத்திலும் கூட மாற்றங்கள் இருக்கலாம்.விவசாய விளைச்சல்களில் மாற்றங்கள், புதிய வர்த்தக பாதைகளின் சேர்ப்பு, குறைந்து போகக் கூடிய கோடை ஓடைப்பாய்வுகள், உயிரினங்களின் அழிவுகள், மற்றும் நோய் வெக்டார்களின் வரம்பிலான அதிகரிப்புகள் ஆகியவை பிற விளைவுகளில் அடக்கம். இயற்கை சூழல் மற்றும் மனித வாழ்க்கை இரண்டின் மீதான சில விளைவுகளில், குறைந்தது ஒரு பகுதிக்கேனும், ஏற்கனவே புவி வெப்பமடைதல் தான் காரணமாகக் கூறப்படுகிறது.பனியாறு பின்வாங்கல், லார்சன் பனித் தட்டு போன்ற பனித் தட்டு இடையூறு, கடல் மட்ட அதிகரிப்பு, மழைப்பொழிவு தன்மைகளிலான மாற்றங்கள், மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எல்லாம் புவி வெப்பமடைதலும் ஒரு பகுதி காரணம் என்று IPCC இன் 2001 ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சில பிராந்தியங்களில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மற்ற பிராந்தியங்களில் வீழ்படிவு நிலை அதிகரிப்பு, மலை பனிமூடிய பகுதிகளிலான மாற்றங்கள், மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால் விளையும் சுகாதார பாதிப்புகள் ஆகியவையும் பிற எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் அடங்கும். புவி வெப்பமடைதலின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி அதிகரிப்பால் தீவிரமடையக் கூடும்.குளிர் தாக்குதல் இல்லாததால் இறப்பு விகிதம் குறைவது போன்ற சில அனுகூலங்களை வெப்ப பிராந்தியங்கள் அனுபவிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. சாத்தியமுள்ள விளைவுகள் மற்றும் சமீபத்திய புரிதல் குறித்த ஒரு சுருக்கத்தை IPCC மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கைக்காக செயல் குழு II தயாரித்த அறிக்கையில் காண முடியும். புதிய IPCC நான்காவது மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்கம் கூறுவது என்னவென்றால், கடல் பரப்பு வெப்பநிலை அதிகரித்ததுடன் தொடர்புபட்டு (அட்லாண்டிக் பலதசாப்த ஊசலாட்டம் என்பதைக் காணவும்) சுமார் 1970 முதல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிர வெப்பமண்டல சூறாவளி செயல்பாடு அதிகரித்திருப்பதற்கு பதிவாகியிருக்கும் சான்று இருக்கிறது, ஆனால் நீண்ட கால போக்குகளின் கண்டறிவு வழக்கமான செயற்கைக்கோள் பதிவு அளவீடுகளுக்கு முந்தைய பதிவேடுகளின் தரத்தினால் சிக்கற்பட்டதாக இருக்கிறது.உலகளாவிய வெப்பமண்டல சூறாவளிகளின் வருடாந்திர எண்ணிக்கையில் தெளிவான போக்கு எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த சுருக்கம் தெரிவிக்கிறது. கூடுதலாக எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் 1980-1999 உடன் ஒப்பிடும்போது 2090-2100 இல் கடல் மட்ட அதிகரிப்பு, விவசாயத்தின் மீதான தாக்கங்கள், தெர்மோஹலைன் சுழற்சியின் மந்த சாத்தியம், ஓசோன் அடுக்கில் தேய்வு, தீவிரம் அதிகமான (ஆனால் எண்ணிக்கை குறைவதாக) சூறாவளிப் புயல்கள் மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகள், பெருங்கடல் காரகாடித்தன்மைச் சுட்டெண் அளவு குறைவது, பெருங்கடல்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவது, மற்றும் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய நோய்களும், இதேபோல் லைம் நோய், ஹண்டாவைரஸ் தொற்றுகள், டெங்கு காய்ச்சல், புபோனிக் பிளேக், மற்றும் காலரா ஆகியவை பரவுவது ஆகியவையும் அடக்கம். 1,103 விலங்குகள் மற்றும் தாவர உயிரின வகைகளின் மாதிரி ஒன்றில் இருந்து 2050 ஆம் ஆண்டுக்குள் 18% முதல் 35% வரை அழிந்து போயிருக்கும் என்று வருங்கால காலநிலை கணக்கீடுகளைக் கொண்டு ஒரு ஆய்வு மதிப்பிட்டிருக்கிறது. இருப்பினும், சில இயக்கவியல் ஆய்வுகள் சமீபத்திய காலநிலை மாற்றத்தால் விளைந்த இனஅழிவுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றன, இனமழிவது குறித்து மதிப்பிடப்பட்டிருக்கும் விகிதங்கள் நிச்சயமற்றவை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பொருளாதாரத் தாக்கம் உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தினால் விளைந்த சேதாரங்களின் மொத்த பொருளாதார செலவுகளை மதிப்பிட சில பொருளாதார நிபுணர்கள் முயன்றிருக்கிறார்கள்.இத்தகைய மதிப்பீடுகள் இதுவரை எந்த ஒரு தீர்மானமான கண்டறிவுகளையும் வழங்கியிருக்கவில்லை; 100 மதிப்பீடுகளில் ஒரு கருத்தாய்வு செய்ததில், மதிப்புகள் கார்பன் ஒரு டன்னுக்கு (tC) US$-10, கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$-3 இல் தொடங்கி ஒரு tCக்கு அமெரிக்க டாலர் 350 (கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$95) வரை இருந்தது, சராசரி மதிப்பு கார்பன் ஒரு டன்னுக்கு US$43 (கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$12) ஆக இருந்தது. சாத்தியமுள்ள பொருளாதார தாக்கத்தின் மீது மிகவும் பரவலாக பிரபலமான அறிக்கைகளில் ஒன்று இந்த திட்டவட்ட மறுஆய்வு .அதீத காலநிலையானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு சதவீதம் குறைக்கக் கூடும் என்றும், மோசமான நிலைமைகளின் கீழ் உலகளாவிய தனிநபர்நுகர்வு 20 சதவீதம் குறையக் கூடும் என்று இது கருத்து தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின் வழிமுறைகள், ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் பல பொருளாதார வல்லுநர்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது, முக்கியமாக மறுஆய்வின் தள்ளுபடி செய்தல் மீதான அனுமானங்களையும் மற்றும் அதன் சூழல்கள் தேர்வையும் பற்றிய விஷயத்தில். மற்றவர்கள் பொருளாதார அபாயத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்ல முடியாவிட்டாலும் பொதுவாக அளவீடு செய்யும் முயற்சிக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். புவி வெப்பமடைதலை குறைப்பதற்கான செலவுகளும் ஆதாயங்களும் அளவில் அகன்ற அளவில் ஒப்பிடத்தக்கதாகத் தான் இருக்கிறது என ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் கூற்றின் படி (UNEP), காலநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களை சந்திக்க இருக்கும் பொருளாதார துறைகளில் வங்கிகள், விவசாயம், போக்குவரத்து மற்றும் மற்றவை அடக்கம். விவசாயத்தை சார்ந்திருக்கும் வளரும் நாடுகள் புவி வெப்பமடைதலால் குறிப்பாக பாதிக்கப்படும். தகவமைதலும் தணிதலும் உலகளாவிய வெப்பநிலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் காலநிலை விஞ்ஞானிகள் இடையே ஒரு அகன்ற உடன்பாடு நிலவுவது சில நாடுகள், அரசாங்கங்கள் , பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை மறுமொழிகளை அமல்படுத்த இட்டுச் சென்றுள்ளது.புவி வெப்பமடைதலுக்கான இந்த மறுமொழிகள் புவி வெப்பமடைதலின் விளைவுகளுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்வது மற்றும் புவி வெப்பமடைதல் நிகழ்வையே குறைப்பது அல்லது திரும்பச் செய்வது என இருவகைகளுக்கு இடையே அகன்று பிரிவதாக இருக்கிறது.இரண்டாவது தான் தணித்தல் எனக் குறிப்பிடப்படுகிறது, இது உமிழ்வைக் குறைப்பது மற்றும் யூக அடிப்படையில், புவிப் பொறியியல் இரண்டையும் அடக்கியதாகும். தணித்தல் பல சுற்றுச்சூழல் குழுக்கள் புவி வெப்பமடைதலுக்கு எதிராக பெரும்பாலும் நுகர்வோரின் தனிப்பட்ட நடவடிக்கையை ஊக்கப்படுத்துகின்றன, அத்துடன் சமூகம் மற்றும் பிராந்திய அமைப்புகளின் மூலமான நடவடிக்கைகளையும்.மற்றவர்கள் புதைபடிவ எரிபொருள் உற்பத்திக்கும் CO2 வெளியீடுகளுக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை காரணம் காட்டி உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் ஒரு ஒதுக்கீட்டு வரம்பிற்கு ஆலோசனை தெரிவிக்கிறார்கள். எரிசக்தி செயல்திறன் அதிகரிப்பு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டில் வரம்புக்குள்ளான நகர்வுகள் ஆகியவற்றுக்கான முயற்சிகள் உள்பட, காலநிலை மாற்றம் தொடர்பான வர்த்தக நடவடிக்கையும் இருக்கிறது.ஜனவரி 2005 இல் ஐரோப்பிய ஒன்றியம் தனது ஐரோப்பிய ஒன்றிய வாயு உமிழ்வு வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியது, நிறுவனங்களுடன் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களது வாயு வெளியீடுகளை வரம்புபடுத்துவதற்கு அல்லது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக வெளியிடும் நிறுவனங்களிடம் கடனாக அளவைக் கொள்முதல் செய்ய உதவும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு வர்த்தக திட்டமாகும் இது.ஆஸ்திரேலியா தனது கார்பன் மாசுபாடு குறைப்பு திட்டத்தை 2008 இல் அறிவித்தது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தான் ஒரு பொருளாதார ரீதியான வரம்பு மற்றும் வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். புவி வெப்பமடைதலுடன் போரிடுவதில் உலகின் முதன்மையான சர்வதேச உடன்பாடு தான் கியோடோ நெறிமுறை, இது 1997 இல் உடன்படிக்கையான UNFCCC இல் திருத்தம் செய்யப்பட்டதாகும்.இந்த நெறிமுறை இப்போது உலகளாவிய அளவில் 160 நாடுகளுக்கும் அதிகமாகவும் உலக கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடுகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமாகவும் எல்லை கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் கஜகஸ்தானும் மட்டும் தான் இந்த உடன்படிக்கைக்கு உறுதியளிக்காதவையாக இருக்கின்றன, அமெரிக்கா வரலாற்றுரீதியாக உலகின் இரண்டாவது பெரிய கிரீன்ஹவுஸ் வாயு வெளியீட்டாளராக இருக்கின்ற சூழ்நிலையில்.இந்த உடன்படிக்கை 2012 ஆம் ஆண்டில் காலாவதியாகிறது, தற்போதையதை தொடர்ந்த அடுத்த உடன்படிக்கைக்கான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் மே 2007 ஆம் ஆண்டில் துவங்கின. காலநிலை மாற்றத்துடன் போரிடுவதற்கான வழியாக மேம்பட்ட எரிசக்தி தொழில்நுட்பத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஊக்குவித்தார், அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு மாகாண மற்றும் நகர அரசாங்கங்கள் கியோடோ நெறிமுறைக்கு தங்களது இணக்கத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பிராந்திய கிரீன்ஹவுஸ் வாயு முன்முயற்சி போன்ற உள்ளூர் அடிப்படையிலான முன்முயற்சிகளைத் துவக்கியிருக்கின்றன. புவி வெப்பமடைவதைத் தணிப்பது மற்றும் பல்வேறு அணுகுமுறைகளின் செலவுகள் மற்றும் அனுகூலங்களை ஆராய்வது ஆகியவற்றை கையாளும் அறிக்கைகளை தயாரிப்பதற்கான பொறுப்பு IPCC இன் செயல் குழு III இன் வசம் உள்ளது.2007 ஆம் ஆண்டின் IPCC நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில், எந்த ஒரு தொழில்நுட்பம் அல்லது துறையும் வருங்கால வெப்பமடைதலைத் தணிப்பதற்கான முழுப் பொறுப்பாளியாக முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி வழங்கல், போக்குவரத்து, தொழில்துறை, மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளிலும் முக்கிய நடைமுறைகளும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன, உலகளாவிய வாயு உமிழ்வுகளைக் குறைக்க இவை அமலாக்கப்பட வேண்டும் என்று இவை கண்டிருக்கின்றன.2030 ஆம் ஆண்டுக்குள்ளாக கார்பன் டையாக்ஸைடு நிகரளவு 445 முதல் 710 ppm க்குள்ளாக ஸ்திரப்படும் பட்சத்தில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீத அதிகரிப்பு முதல் மூன்று சதவீத சரிவு வரை காணலாம் என்று அவை மதிப்பிடுகின்றன. செயல்பாட்டுக் குழு III இன் கருத்துப்படி, வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியசுக்குள் வரம்புபடுத்த வேண்டுமென்றால், வளர்ந்த நாடுகள் ஒரு குழுவாக செயல்பட்டு தங்களது வாயு உமிழ்வு அளவுகளை 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக 1990 அளவுகளுக்கு குறைவாக (கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் நாடுகளில் அநேகமானவற்றில் 1990 அளவுகளுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்த அளவான மட்டத்திற்கு) கொண்டுவரவும், 2050 வாக்கில் அதனை விடவும் குறைந்த அளவுகளுக்கு கொண்டு வரவும் (1990 அளவுகளை விட 40 சதவீதம் (Sic. 80 சதவீதம், பெட்டி 13.7, பக். 776) முதல் 95 சதவீதம் வரை குறைந்த அளவிற்கு) வேண்டும், வளரும் நாடுகளும் கூட குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்றாலும் கூட. கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளைக் குறைப்பதில் நடவடிக்கை மிக மந்தமாக இருப்பது கென் கல்டிரா மற்றும் நோபல் பரிசு பெற்ற பால் கிரட்சன் ஆகிய விஞ்ஞானிகளை புவிப் பொறியியல் தொழில்நுட்பங்களை ஆலோசிக்க இட்டுச் சென்றுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் விவாதம் புவி வெப்பமடைதல் குறித்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அதிக விளம்பரம் கிடைப்பது அரசியல் மற்றும் பொருளாதார விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. ஏழை பிராந்தியங்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா புவி வெப்பமடைதலினால் மதிப்பிடப்படும் விளைவுகளால் மிகப்பெரும் அபாயத்திற்குட்பட்டிருப்பதாய் தோன்றுகிறது, அவர்களின் வாயு உமிழ்வானது வளர்ந்த உலகுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருக்கின்ற நிலையில். அதே சமயத்தில் கியோடோ நெறிமுறை ஷரத்துகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதானது ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளதுடன், அமெரிக்கா தனது கையெழுத்திடாமைக்கு கற்பிக்கும் நியாயங்களில் இதுவும் ஒரு பாகமாக பயன்படுகிறது. மேற்கத்திய உலகில், காலநிலை மீதான மனித தலையீடு குறித்த சிந்தனை அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பரந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது. காலநிலை மாற்ற பிரச்சினையானது, தொழிற்துறையினரின் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளை வரம்புபடுத்துவதன் அனுகூலங்களையும் இத்தகைய மாற்றங்கள் கொணரக் கூடிய செலவுகளையும் அலசுவதற்கான விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.கார்பன் வெளியீடுகளைக் குறைக்கும் பொருட்டு மாற்று எரிபொருள் ஆதாரங்களை கைக்கொள்வதின் செலவுகள் மற்றும் அனுகூலங்கள் குறித்து பல்வேறு நாடுகளில் விவாதம் நடைபெற்று வருகிறது.போட்டித்திறன் ஸ்தாபன நிறுவனம் மற்றும் எக்ஸான்மொபில் போன்ற அமைப்புகளும் நிறுவனங்களும் கடுமையான கட்டுப்பாடுகள் கொணரக்கூடிய சாத்தியமான பொருளாதார செலவுகளை வலியுறுத்துகிற அதே நேரத்தில் கூடுதல் மரபார்ந்த காலநிலை மாற்ற சூழல்களை வலியுறுத்தியிருக்கின்றன. இதேபோல, பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களும், ஏராளமான பிரபலங்களும் காலநிலை மாற்றத்தின் சாத்தியமான அபாயங்களை வலியுறுத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளின் அமலாக்கத்தை ஊக்குவிப்பதற்குமான பிரச்சாரங்களை துவக்கியிருக்கின்றனர்.சில புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் சமீபத்திய வருடங்களில் தங்களது முயற்சிகளை மறுசீரமைப்பு செய்திருக்கின்றன, அல்லது புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. விவாதத்திற்கு உரிய மற்றொரு விஷயமாக இருப்பது, இந்தியா மற்றும் சீனா ஆகிய வளரும் பொருளாதாரங்கள் எந்த அளவிற்கு வாயு உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது.சமீபத்திய அறிக்கைகளின் படி, சீனாவின் மொத்த தேசிய அளவிலான CO2 உமிழ்வுகள் இப்போது அமெரிக்காவினுடையதை விட அதிகமாய் இருக்கலாம். தனது தனிநபருக்கான கார்பன் வெளியீடு அமெரிக்காவின் அளவில் ஐந்தில் ஒரு பங்கு தான் என்பதால் வாயு வெளியீடுகளைக் குறைப்பதற்கான கடமைப்பாடு தனக்கு குறைவாகவே இருப்பதாக சீனா வாதிட்டு வந்திருக்கிறது. கியோடோ கட்டுப்பாடுகளில் இருந்து விதிவிலக்கு பெற்று தொழில்துறை வாயு வெளியீடுகளின் பெரும் இன்னொரு ஆதாரமாகத் திகழும் இந்தியாவும் இதே மாதிரியான திட்டவட்டங்களையே செய்திருக்கிறது. தான் வாயு உமிழ்வுகளின் செலவை ஏற்க வேண்டும் என்றால், சீனாவும் அதனை செய்ய வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா வாதிடுகிறது. உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு 9 ஆகஸ்டு 2021 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்புள்ள காலநிலை நிகழ்வுகள் புவி வெப்பமடைதல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பல சமயங்களில் எழுப்பப்படுகின்றன.அதில் ஒன்று பெருங்கடல் அமிலமயமாக்கம்.வளிமண்டலத்தின் CO2 அதிகரிப்பானது பெருங்கடல்களில் கரைந்திருக்கும் CO2 அளவை அதிகப்படுத்துகிறது. கடலில் கரைந்திருக்கும் CO2 நீருடன் வினைபுரிந்து கார்பானிக் அமிலமாக மாறி அமிலமயமாக்கத்தில் விளைகிறது.கடல் மேற்பரப்பு காரகாடித்தன்மைச் சுட்டெண் ஆனது தொழில்துறை சகாப்தம் துவங்கிய காலத்தில் 8.25 ஆக இருந்ததில் இருந்து 2004 ஆம் ஆண்டுவாக்கில் 8.14 வரை குறைந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது, கடலில் கூடுதலான CO2 கரைவதால் 2100 க்குள்ளாக இது இன்னும் 0.14 முதல் 0.5 அலகுகள் வரை குறையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. உயிரினங்களும் சூழல்அமைப்புகளும் pH இன் குறுகிய வரம்புக்குள்ளாகத் தான் தகவமைத்துக் கொள்ள முடியும் என்பதால், இது உயிரின அழிவு கவலைகளை எழுப்புகிறது, அதிகரிக்கும் வளிமண்டல CO2 ஆனது உணவு வலைகளை இடையூறு செய்து, நீர்ப்புற சூழல்அமைப்பு சேவைகளை சார்ந்திருக்கும் மனித சமூகங்களின் மீது பாதிப்பு ஏற்படுத்துகிறது. புவி ஒளிமங்கல் என்பது பூமியின் மேற்பரப்பில் படுகிற பூகோள நேரடி ஒளிவீச்சின் அளவு கொஞ்சம் கொஞ்சமாய் குறைவதாகும், இது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புவி வெப்பமடைதலை ஒரு பகுதி தணித்திருக்கலாம்.1960 முதல் 1990 வரை மனிதரால் ஏற்பட்ட ஏரோசால்கள் இந்த விளைவு வீழ்படிவாகக் காரணமாகி இருக்கலாம்.மனிதரால் ஏற்பட்ட ஏரோசால்கள், எரிமலை செயல்பாட்டுடன் சேர்ந்து, புவி வெப்பமடைதலின் கொஞ்சத்தை இல்லாது செய்திருக்கலாம் என்பதை 66-90% உறுதியுடன் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள், இந்த மங்கலாக்கும் முகவர்கள் இல்லையென்றால் நிகழ்ந்ததை விட அதிகமான வெப்பமடைதல் கிட்டியிருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். புவியின் மீவளிமண்டலத்தில் இருக்கும் ஓசோனின் மொத்த அளவில் தொடர்ந்த சரிவு நிகழ்வதான ஓசோன் ஓட்டை நிகழ்வானது பல சமயங்களில் புவி வெப்பமடைதலுடன் தொடர்புபடுத்திக் காட்டப்படுகிறது. இணைப்புக்கான பகுதிகள் இருக்கின்றன என்றாலும், இரண்டுக்கும் இடையிலான உறவு வலிமையானதல்ல. வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேற்கோள்கள் குறிப்புகள் கூடுதல் வாசிப்பு (ஆன்லைன் பதிப்பு பதிவு செய்யக் கோருகிறது) (ஆன்லைன் பதிப்பு பதிவு செய்யக் கோருகிறது) வெளியிணைப்புகள் அறிவியல் சார்ந்தவை காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு ஐநா காலநிலை குழு அறிக்கையின் முக்கிய கண்டறிவுகள் இயற்கை அறிவிக்கும் காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் மனிதர்களையும், பூமியையும் எப்படி பாதிக்கும்? இங்கிலாந்து வானிலை அலுவலகம் ஹாட்லி மைய தளம் NOAA இன் புவி வெப்பமடைதல் தொடர்பான வினாவிளக்கங்கள் புவிவெப்பமடைதலின் கண்டுபிடிப்பு - இந்த தலைப்பின் மீதான ஒரு விரிவான அறிமுகம் மற்றும் அதன் கண்டுபிடிப்பின் வரலாறு, ஆசிரியர் ஸ்பென்சர் R.வேர்ட் (Spencer R. Weart). காலநிலை 'அபாயங்கள்' தொடர்பாக வலியுறுத்தப்படும் எச்சரிக்கை புவி வெப்பமடைதலில் கால்நடைகளின் தாக்கம் (ஐநா அறிக்கை) கரியமில வாயுவைக் கல்லாக மாற்றினால், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தலாம்? கல்வி சார்ந்த உலகளாவிய காலநிலை மாற்றம்: பூமி மீதான நாசாவின் கண்கள் - காலநிலை மாற்ற பார்வைகள், முக்கிய சுட்டிக்காட்டிகள், மல்டிமீடியா மற்றும் நடப்பு செய்திகள். புவி வெப்பமடைதல் என்பது என்ன? - நேஷனல் ஜியோகிரபிக் (National Geographic)கில் இருந்தான ஷாக்வேவ் விளக்கக்காட்சி EdGCM (கல்வித்துறை உலகளாவிய காலநிலை மாதிரியாக்கம்) திட்டப்பணி - மேஜைக் கணினிகளில் இயங்கக் கூடிய ஒரு பயனர்க்கு எளிய இடைமுகத்துடனான மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஒருங்கே உதவக் கூடிய ஒரு இலவச ஆராய்ச்சி-தர செயற்கைதூண்டல் மென்பொருள் 1979 முதல் நாசா (NASA)விலிருந்தான டிஸ்கவர் செயற்கைக்கோள் அடிப்படையிலான கடல் மற்றும் காலநிலை தரவு உலகளாவிய காலநிலை மாற்றம் மீதான ப்யூ மையம் புவி வெப்பமடைதல் கலை "புவி வெப்பமடைதல் அறிவியலின் பரிணாமம்: சிந்தனைகளில் இருந்து அறிவியல் உண்மைகள் வரை" என்கிற தலைப்பில் வாரன் வாஷிங்டன் (Warren Washington) பேசியதன் வீடியோ சிறந்த முயற்சி புவி வெப்பமடைதல் போக்குகள், ஆசிரியர் ஹார்வே லாம் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்), உல்ஃபிரம் விளங்கப்படுத்தல்கள் திட்டப்பணி (The Wolfram Demonstrations Project) மற்றவை இணையத்திலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூலங்கள் - இணைய வளஆதாரங்களின் விரிவான கருத்துரைக்களுடனான பட்டியல் அக்கறை கொண்ட விஞ்ஞானிகளின் ஒன்றியம் புவி வெப்பமடைதல் பக்கம் 'முனைப் புள்ளி' பார்க்க மற்றும் படிக்க, அபூர்வமான, பொதுவான மற்றும் அபாயத்திற்குள்ளாகியிருக்கும் காட்டுவாழ்க்கை மீது புவி வெப்பமடைதலின் விளைவுகள் குறித்த ஒரு ஆஸ்திரேலிய அறிவியல் ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் 'நமது உலகம் 2' காலநிலை மாற்ற வீடியோ சுருக்கங்கள் அணுகப்பட்டது 22 ஜனவரி 2009 ஐநா அமைப்பின் காலநிலை மாற்றம் மீதான வேலைக்கான பாதை சூழலியல் புவி வெப்பமயமாதல் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சனைகள் கூகுள் தமிழாக்கம்-அறிவியல்
5650
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
உயிரியல் வளம், இலங்கை
இலங்கை பெரும் இனச்செளுமை கொண்ட நாடு. இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர, விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல் பிராந்தியங்களுக்குத் தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்திய பருவப்பெயற்சிக் காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் தாழ்நில மழைக்காடுகள் அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக மாற்றம் பெறுகின்றன. இவ்விரு அயனமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன் நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரத்தொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரண்கள் எஞ்சியுள்ள வனப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மூன்று உயிரினமண்டல ஒதுக்கங்கள் உள்ளன. இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை. இலங்கைத் தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை. பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்தியத் தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய சிறப்புக் குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் சிறகமைப்பு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன. இலங்கை உயிரினங்கள் சூழலியல்
5654
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
மக்களாட்சி
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் (Democracy) என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறையை கூறினார். தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். மக்களாட்சியின் பண்புகள் மக்களாட்சியில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.. இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள குடிமக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது. தகுதிவாய்ந்த குடிமக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.. மக்களாட்சியின் கோட்பாடுகள் மக்களாட்சிக்கு மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் தேவைப்படுகிறது: 1) உயர்ந்த கட்டுப்பாடு, அதாவது அதிகாரத்தின் மிகக் குறைந்த அளவிலான இறையாண்மை. 2) அரசியல் சமத்துவம், 3) தனிநபர்களும் நிறுவனங்களும் உயர்மட்ட கட்டுப்பாட்டின் முதல் இரண்டு கொள்கைகள் மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்களை மட்டும் கருத்தில் கொள்ளும் சமூக நெறிகள். மக்களாட்சியின் வரலாறு உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று மிகப்பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மக்களாட்சி என்பது பொதுமக்கள் எனவும் பலம் எனவும் பொருள்கொள்ளப்பட்டது.. முற்காலம் பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. மக்களாட்சி என்பது ஏதென்ஸ் பாரம்பரிய நகரத்தில் உள்ள தத்துவ சிந்தனை குறிக்க பயன்பட்டது. ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி இருந்தது. தர நிர்ணய வாக்குப்பதிவு ஏதென்ஸ் ஸ்பார்ட்டாவில் கி.மு. 700-இல் நடைபெற்றது. இடைக்காலம் இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க விடுதலைப் போர், பிரெஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி மற்றும் இந்திய சுதந்திரப்போர் ஆகியவை மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது. 920-இல் தமிழகத்தின் சோழப் பேரரசு காலத்தில் குறைவால் முறை பயன்படுத்தப்படும் படுத்தப்பட்டது. தற்காலம் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகள் ஐக்கிய ராச்சியத்தின் முதல் நாடாளுமன்ற அவை 1707-இல் அமைக்கப்பட்டது. அந்த அவை இங்கிலாந்து மற்றும் சுகாட்லாந்து இணைப்பு நடவடிக்கை மூலம் அமைக்கப்பட்டது. சுமாராக 3 சதவீத உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் 18-ஆம் நூற்றாண்டில் சுவீடன் நாட்டின் நாடாளுமன்ற அவை அதிகாரம் பெற்ற அமைப்பாக மாறியது. 18-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க நாட்டில் ஆண்களுக்கு மட்டுமே வாக்களிக்க உரிமை இருந்தது. 1787-இல் அமெ‌ரி‌க்க அரசாங்கம் மனித உரிமைகளுக்கான சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்தது. ஆனால் கடைநிலை சேவை ஊழியர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வட அமெரிக்க அரசில் முழு மக்களாட்சி தத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகள் 20-ஆம் நூற்றாண்டில் மத ரீதியாகவும், மறு காலனியாக்கம் காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற புரட்சிகள் காரணமாகவும் பனிப்போர் காரணமாகவும் மக்களாட்சி முறை பல்வேறு நாடுகளில் வேரூன்றியது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆசியாவிலும் மக்களாட்சி முறை சிறப்பாக தொடங்கியது. உலகப்புகழ் காலத்தில் ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனியிலும் முசோலினி ஆட்சியில் இத்தாலியிலும் ஜப்பானிலும் மக்களாட்சி நசுக்கப்பட்டது. மக்களாட்சி நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் நாளை மக்களாட்சி நாளாக ஐக்கிய நாடுகள் அவை 2007-இல் அறிவித்தது. மக்களாட்சியின் பொருள் மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள். "மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்றும் கூறுகிறார்."மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார். மக்களாட்சியின் வகைகள் மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சி நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது. 20-ஆம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். மறைமுக மக்களாட்சி மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் சார்பாளிகளைத் (பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுக்கின்றனர். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது. மக்களாட்சி வெற்றி பெற அவசியமான காரணிகள் அரசியல் அறிவு படைத்த மக்கள் இருத்தல் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்துத் தமது வாக்கினைப் பயன்படுத்துவதனால் நாட்டிற்குப் பொருத்தமான ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு வாக்காளருக்குக் கிடைக்கின்றது. அத்துடன் அதிகாரத்திற்கு வந்தபின்பு ஆளும் கட்சியினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பது மக்களின் கடமையாகும். இதற்காக மக்கள் சிறந்த அரசியல் அறிவுடையோராக இருக்க வேண்டியுள்ளது. அதேபோன்று அரசியல் அறிவு படைத்த புத்திசாதுரியமான மக்களை கொண்ட சமூகத்தின் அங்கத்தவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதோடு பிறரது உரிமைகளுக்கும் மதிப்பளிப்பவர்களாகவும் விளங்குவர். இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கும், குற்றச் செயல்கள் துஷ்பிரயோகங்களற்ற சமூகமொன்றை உருவாக்குவதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. நேர்மையாக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய தலைவர்கள் இருத்தல் மக்களாட்சியில் பிரதேச மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை ஆட்சி நிர்வாகத்தை நடாத்துவதற்காக பிரதிநிதிகள் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் முக்கிய பணி தேசிய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஆட்சியை மேற்கொள்வதாகும். தலைவர்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பொறுப்பு வாய்ந்த விதத்திலும் செயற்படுவதே மக்களின் எதிபார்ப்பாகும். அத்துடன் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும், தேசிய அபிவிருத்திக்கும் காரணமாகலாம். சுதந்திரமாகச் செயற்படும் நீதித்துறை இருத்தல் நாட்டை ஆட்சி செய்வதற்குச் சட்டதிட்டங்கள் அவசியமானவை. அது போன்று சகலருக்கும் பொதுவான சட்ட ஒழுங்கொன்று செயற்படல் சட்டத்திற்குக் கீழ்ப்படிவுள்ள சமூகமொன்று உருவாகுவதற்கு அடிப்படையாக அமையும். சட்டத்தின் கீழ்ப்படிதல், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியன மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளாகும். சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் என்பன நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதிலும் மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலுமே தங்கியுள்ளன. மக்களாட்சிக்கு எதிரான வாதங்கள் திறமையின்மை மக்களாட்சி முறையில் சில அறிஞர்கள் குறைகளைக் கூறுகின்றனர். மக்களாட்சி முறை வாக்காளர்களின் பகுத்தறிவை பேணுவதில்லை எனவும் வாக்காளர்கள் பலதரப்பட்ட வேட்பாளர்களை பல வகையிலும் ஆராய்வதில்லை எனவும் வாதிடுகின்றனர். மக்களாட்சி முறையில்றை முடிவுகள் தாமதமாக எடுக்கப்படுவதாக கூறுகின்றனர். இல்லாத சீனா பொருளாதார முன்னேற்றத்தில் வேகமாக முன்னேறுவதாக வாதிடுகின்றனர். கூட்டாட்சி புகழ்பெற்ற தத்துவ ஞானி பிளேட்டோவின் கூற்றுப்படி "ஜனநாயகம் என்பது ஒரு அழகிய வடிவமான அரசாங்கமாகும். இது பல்வேறுபட்ட கோளாறுகள் நிறைந்தவையாகவும், சமமானவற்றுக்கு சமமானவையாகவும் உள்ளன". மேலும் பார்க்க அனைத்துலக மக்களாட்சி நாள் மக்களாட்சி தேர்தல் தொடர்பான தலைப்புகள் மேற்கோள்கள் அரசாட்சி முறைமைகள் தேர்தல் பாரம்பரிய கிரேக்கம்
5658
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
தொழில் முனைவு
தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தித் தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக் கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும். தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை முயற்சியாண்மை என்பதைப் பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்து நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும். முயற்சியாளர் ஃ தொழில் முனைவோன் முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்ப்புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார். முயற்சியாண்மை முக்கியத்துவம் வேகமாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு. போட்டி மிகுந்த வணிக உலகில் வணிக சந்தர்பங்களை இனம் காணவும், அவற்றை நடைமுறைபடுத்தக்கூடிய நிலைமையினை உருவாக்கவும். மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு. முயற்சியாண்மையின் நன்மைகள் தனிநபர்களுக்கான நன்மைகள் தனிநபர் திறனை பயன்படுத்தி நலன்களை பெறுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தல். கூடிய அர்பணிப்புக்கு ஏற்ப அதிக நன்மைகளைப் பெறலாம். சமூக அந்தஸ்து உருவாகுதல். தனிப்பட்ட ரீதியில் இலாபம் கிடைத்தல். சமூக, பொருளாதார நன்மைகள் புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படல். வருமானத்திற்கான சந்தர்ப்பம் தோன்றுதல். புதிய பொருட்கள், சேவைகளினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுதல். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைதல். நிறை தொழில் மட்டம் உருவாகுதல். பிரதேச வளங்கள் உற்பத்திக்குப் பயன்படல். புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல். முயற்சியாண்மையின் பண்புகள் புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் ஆகும். நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல் வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்கூடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்கக் கூடிய ஆற்றல் ஆகும். தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம் நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும். முன்னுணர்வு வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். கடின உழைப்பு வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும். நெகிழ்வுத் தன்மை சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;. வளங்களால் நிறைவுடையவர் வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதிய அளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும். ஊக்கமாகச் செயற்படுதல் வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும். பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல் முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திச் செயற்படும் தன்மையினைக் குறிக்கும். நல்லெண்ணமுடையவர் நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும். தூர நோக்குடையவன் குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும். சுதந்திரமானவன் நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும். முயற்சியாண்மை அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். தனி நபர் காரணிகள் சமூகக் காரணிகள் சூழல் காரணிகள் தனி நபர் காரணிகள் அனுபவம் ( கல்வி வயது ( 4 தலைமைத்துவம் நட்ட அச்சம் ஏற்றல் ( அர்ப்பணிப்பு கட்டுப்பாடு ( 8 ) இலக்கு அடையும் தன்மை தூர நோக்கு. தனியாள் மதிப்பு தொழில் வாய்ப்பு (12 அதிருப்தி/திருப்தி தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் / தனி நபர் முயற்சியாண்மைப் பண்புகள் (Pநசளழயெட யுவவசiடிரவநள) முயற்சியாண்மை தொடர்பான 10 னு கள் தூர நோக்கு / கனவு குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும். வணிக நடவடிக்கை தொடர்பாக விரைவாகவும் வினைத்திறனாகவும் தீர்மானமெடுக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கும் துரிதமான நடவடிக்கை ஃ விரைவான செயற்பாடு தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும். திடசங்கற்பம் ( னுநவநசஅiயெவழைn ) வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும். அர்பணசிந்தை ஃ அர்ப்பணிப்பு ( னுநனiஉயவழைn ) வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும். பற்றுறுதி ( னுநஎழவழin ) வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும். தகவளித்தல் ஃ விபரம் ( னுநவயடை ) வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும். விதி ஃ தன்னம்பிக்கை ( னுநளவiலெ ) முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும். பணம் ஈட்டுதல் ஃ இலாபம் உழைத்தல் ( னுழடடயசள ) முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும். பங்கீடு ஃ பகிர்ந்தளித்தல் ( னுளைவசiடிரவந ) முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும். சமூகக் காரணிகள் 1. குடும்ப பிண்ணனி 2. குடும்ப பொறுப்பு 3. வணிக வலையமைப்பு 4. சமூகத் தொடர்புகள் 5. தொழில்சார் தொடர்புகள் 6. சமூக இமைப்பு 7. பிறப்பாற்றல் முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் - வாடிக்கையாளர் - வழங்குனர் - வங்கி - முயற்சியாண்மை மூலதனக் கம்பனி - வழக்கறிஞர் - கணக்காளர் சூழல் தொடர்பான காரணிகள் (நுnஎசைழஅநவெயட குயஉவழசள) 1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் 2. தந்திரோபாயங்கள 3. முகாமைத்துவம் 4. வாய்ப்புக்கள் 5. வணிகப்போட்டி 6. வளக்கிடைப்பனவு 7. துணைச்சேவைகள் 8. பலமும் பலவீனமும் 9. அரசியல் கொள்கைகள் முயற்சியாண்மைகளில் பின்வரும் பண்புகளில் ஒன்றோ ஃ பலவோ காணப்படலாம். - இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் - சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் - பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் - பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல் முயற்சியாண்மைத்திறன் விருத்தி 1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள் அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும். 2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும் மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும். 3. வளம் (சுநளழரசஉந) முயற்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு வளங்களை திரட்டுதல் வேண்டும். முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத காரணிகள் ஃ வெற்றிகரமான வணிக உருவாக்கம் (ஏநவெரசந உசநயவழைn) 1. எண்ணம் (ஐனநயள) 2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) 3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) 4. வளங்கள் (சுநளழரசஉநள) 5. செயற்பாடு (ழுpநசயவழைn) 6. நிதி (குiயெnஉந) 7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ) முயற்சியாளரின் நிதி நடவடிக்கைகள் வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் 1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல் 2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் 3. வருமான செலவு மதிப்பீடு 4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல் 5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல் முயற்சியாண்மை தலைமைத்துவம் முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும் முயற்சியாண்மைத் தலைமைத்துவ வடிவங்கள் ஃ பாங்குகள் (டுநயனநச ளாip ளுவலடந) 01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும் 04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும் 05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும். முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள் முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. 1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. 2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. 3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. விளக்கம் - 1 - முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது. விளக்கம் - 2 - முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. விளக்கம் - 3 - கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம். அகத் தொழில் முயற்சியாளன் ஃ உள்ளக தொழில் முயற்சியாளன் (ஐவெசயிசநநெn ளூip) நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார். அகத் தொழில் முயற்சியாண்மையின் செயற்பாடுகள் ஃ வணிகங்களில் காணப்படும் அகத் தொழில் முயற்சியாளர்களின் கருமங்கள் 1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் 2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை வழங்கல் 3. உற்பத்தி திறனை உயர்த்துதல் 4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல் =முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? முயற்சியாளர்== - புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். - வணிகத்தை தலைமை தாங்குகின்றனர். - இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில் மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். முகாமையாளர் - புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார் - நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார். - சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை. ஒரு நாட்;டில் முயற்சியாண்மையின் உருவாக்கத்திற்கு ஃ அபிவிருத்திக்கு அவசியமான காரணிகள் ஃ பிண்ணனிகள் 1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் 2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வேண்டும் 4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும். 5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல் 6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல். 7. போதியளவு துணைச்சேவை வசதிகள். இலங்கையில் காணப்படும் பல்வேறு முயற்சியாளர்கள் ஃ முயற்சியாண்மையினை வகைப்படுத்தும் அடிப்படைகள் 1. நிறுவன அமைப்பு அடிப்படையில் தனிவியாபாரம் - தனிவியாபாரம் பங்குடமை - பங்காளர் கம்பனி - பங்குதாரர் கூட்டுறவு - அங்கத்தவர் கூட்டுத்தாபனம ; - அரசு 2. அளவு அடிப்படையில் சிறியளவு முயற்சியாளர் நடுத்தர அளவு முயற்சியாளர் பாரியளவு முயற்சியாளர். F 3. உடமை அடிப்படையில் பொதுத்துறை முயற்சிகள் தனியார்துறை முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்புகள் ஃ முயற்சியாண்மை அதிகரிப்பால் சமூகம் எதிர் நோக்கும் நன்மைகள் 1. முதலீடு அதிகரிக்கும் 2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும் 3. வளப்பயன்பாடு அதிகரிக்கும் 4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் 6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும் 7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் 8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும் 9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும் 10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் 11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கையின் வணிக அபிவிருத்திக்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்பு ஃ தற்போதைய உலகளாவிய வணிக சூழலின் முயற்சியாண்மைக்கான தேவையும் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளமைக்கான காரணங்கள் 1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் 2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல் 3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் 4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல் 5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு 6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு 7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு இலங்கையில் முயற்சியாண்மை பற்றாக்குறைக்கான காரணங்கள் ஃ முயற்சியாண்மை உருவாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஃ முயற்சியாளர்கள் வெற்றி காணத்தவறுவதற்கான காரணங்கள். 1. மூலதன பற்றாக்குறை 2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை 3. அரசின் ஊக்குவிப்பு குறைவு 4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள் 5. துணைச்சேவை பற்றாக்குறை 6. பயிற்சி குறைவு 7. தனியுரிமைப் பாதுகாப்பு 8. நேர அழுத்தம் 9. சந்தை பற்றிய அறிவின்மை 10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மை பற்றாக்குறையினால் ஏற்படும் தடைகள் பாதிப்புக்கள் 1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை 2. வளப்பயன்பாடு குறைவடையும் 3. வணிக விருத்தி குறைவடையும் 4. தேசிய உற்பத்தி குறைவடையும் 5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும் 7. வருமான சமமின்மை ஏற்படும் 8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும் முயற்சியாண்மை பிணக்குகளுக்கான தீர்வு ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும் =முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும் வணிக கருமங்களில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு முயற்சியாண்மையில் பின்பற்றப்படும் முறைகள்  நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும்  கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும்.  உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை முறைமை வுhந ழுறட) இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். “முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? 1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். 4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும். = முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் ஈடுபடுவார்கள் முயற்சியாளர் பல்வேறு வணிகங்கள் உருவாக்குவதனை ஊக்குவிக்கும் காரணிகள் ஃ இலக்கை அடைவதில் முயற்சியாளனை தூண்டும் காரணிகள். 1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். 2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். 3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு 4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் 5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல். 6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம். முயற்சியாண்மையின் சமூக பொறுப்புக்கள் எந்தவொரு நிறுவனதொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும். தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும். முயற்சியாளர் ஃ தொழில் முனைவோன் முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்;புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார். முயற்சியாண்மை முக்கியத்துவம் வேகமாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு. போட்டி மிகுந்த வணிக உலகில் வணிக சந்தர்பங்களை இனம் காணவும், அவற்றை நடைமுறைபடுத்தக்கூடிய நிலைமையினை உருவாக்கவும். மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு. முயற்சியாண்மையின் நன்மைகள் தனிநபர்களுக்கான நன்மைகள் தனிநபர் திறனை பயன்படுத்தி நலன்களை பெறுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தல். கூடிய அர்பணிப்புக்கு ஏற்ப அதிக நன்மைகளைப் பெறலாம். சமூக அந்தஸ்து உருவாகுதல். தனிப்பட்ட ரீதியில் இலபம் கிடைத்தல். சமூக, பொருளாதார நன்மைகள் புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படல். வருமானத்திற்கான சந்தர்ப்பம் தோன்றுதல். புதிய பொருட்கள், சேவைகளினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும். மக்களின் வாழ்கை தரம் உயர்வடைதல். நிறை தொழல் மட்டம் உருவாகுதல். பிரதேச வளங்கள் உற்பத்திக்கு பயன்படல். புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல். முயற்சியாண்மையின் பண்புகள் தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும். == தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை == முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும். == முயற்சியாளர் ஃ தொழில் முனைவோன் == முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்;புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார். == முயற்சியாண்மை முக்கியத்துவம் == வேகமாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு. போட்டி மிகுந்த வணிக உலகில் வணிக சந்தர்பங்களை இனம் காணவும், அவற்றை நடைமுறைபடுத்தக்கூடிய நிலைமையினை உருவாக்கவும். மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு. == முயற்சியாண்மையின் நன்மைகள் == === தனிநபர்களுக்கான நன்மைகள் === தனிநபர் திறனை பயன்படுத்தி நலன்களை பெறுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தல். கூடிய அர்பணிப்புக்கு ஏற்ப அதிக நன்மைகளைப் பெறலாம். சமூக அந்தஸ்து உருவாகுதல். தனிப்பட்ட ரீதியில் இலபம் கிடைத்தல். === சமூக, பொருளாதார நன்மைகள் === புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படல். வருமானத்திற்கான சந்தர்ப்பம் தோன்றுதல். புதிய பொருட்கள், சேவைகளினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும். மக்களின் வாழ்கை தரம் உயர்வடைதல். நிறை தொழல் மட்டம் உருவாகுதல். பிரதேச வளங்கள் உற்பத்திக்கு பயன்படல். புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல். == முயற்சியாண்மையின் பண்புகள் == புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும். நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல் வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும். தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம் நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும். முன்னுணர்வு வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். கடின உழைப்பு வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும். நெகிழ்வுத் தன்மை சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;. வளங்களால் நிறைவுடையவர் வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும். ஊக்கமாகச் செயற்படுதல் வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும். பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல் முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும். நல்லெண்ணமுடையவர் நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும். தூர நோக்குடையவன் குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும். சுதந்திரமானவன் நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும். == முயற்சியாண்மை அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். == தனி நபர் காரணிகள் சமூகக் காரணிகள் சூழல் காரணிகள் == தனி நபர்காரணிகள் == அனுபவம் ( கல்வி வயது ( 4 தலைமைத்துவம் நட்ட அச்சம் ஏற்றல் ( அர்ப்பணிப்பு கட்டுப்பாடு ( 8 ) இலக்கு அடையும் தன்மை தூர நோக்கு. தனியாள் மதிப்பு தொழில் வாய்ப்பு (12 அதிருப்தி/திருப்தி == தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் / தனி நபர் முயற்சியாண்மைப் பண்புகள் (Pநசளழயெட யுவவசiடிரவநள) முயற்சியாண்மை தொடர்பான 10 னு கள் == தூர நோக்கு / கனவு குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும். வணிக நடவடிக்கை தொடர்பாக விரைவாகவும் வினைத்திறனாகவும் தீர்மானமெடுக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கும் துரிதமான நடவடிக்கை ஃ விரைவான செயற்பாடு தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும். திடசங்கற்பம் ( னுநவநசஅiயெவழைn ) வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும். அர்பணசிந்தை ஃ அர்ப்பணிப்பு ( னுநனiஉயவழைn ) வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும். பற்றுறுதி ( னுநஎழவழin ) வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும். தகவளித்தல் ஃ விபரம் ( னுநவயடை ) வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும். விதி ஃ தன்னம்பிக்கை ( னுநளவiலெ ) முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும். பணம் ஈட்டுதல் ஃ இலாபம் உழைத்தல் ( னுழடடயசள ) முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும். பங்கீடு ஃ பகிர்ந்தளித்தல் ( னுளைவசiடிரவந ) முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும். == சமூகக் காரணிகள் == 1. குடும்ப பிண்ணனி 2. குடும்ப பொறுப்பு 3. வணிக வலையமைப்பு 4. சமூகத் தொடர்புகள் 5. தொழில்சார் தொடர்புகள் 6. சமூக இமைப்பு 7. பிறப்பாற்றல் முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் - வாடிக்கையாளர் - வழங்குனர் - வங்கி - முயற்சியாண்மை மூலதனக் கம்பனி - வழக்கறிஞர் - கணக்காளர் == சூழல் தொடர்பான காரணிகள் (நுnஎசைழஅநவெயட குயஉவழசள) == 1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் 2. தந்திரோபாயங்கள 3. முகாமைத்துவம் 4. வாய்ப்புக்கள் 5. வணிகப்போட்டி 6. வளக்கிடைப்பனவு 7. துணைச்சேவைகள் 8. பலமும் பலவீனமும் 9. அரசியல் கொள்கைகள் == முயற்சியாண்மைகளில் பின்வரும் பண்புகளில் ஒன்றோ ஃ பலவோ காணப்படலாம். == - இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் - சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் - பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் - பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல் == முயற்சியாண்மைத்திறன் விருத்தி == 1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள் அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும். 2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும் மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும். 3. வளம் (சுநளழரசஉந) முயற்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு வளங்களை திரட்டுதல் வேண்டும். == முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத காரணிகள் ஃ வெற்றிகரமான வணிக உருவாக்கம் (ஏநவெரசந உசநயவழைn) == 1. எண்ணம் (ஐனநயள) 2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) 3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) 4. வளங்கள் (சுநளழரசஉநள) 5. செயற்பாடு (ழுpநசயவழைn) 6. நிதி (குiயெnஉந) 7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ) == முயற்சியாளரின் நிதி நடவடிக்கைகள் == வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் 1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல் 2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் 3. வருமான செலவு மதிப்பீடு 4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல் 5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல் == முயற்சியாண்மை தலைமைத்துவம் == முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும் == முயற்சியாண்மைத் தலைமைத்துவ வடிவங்கள் ஃ பாங்குகள் (டுநயனநச ளாip ளுவலடந) == 01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும் 04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும் 05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும். == முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள் == முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. 1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. 2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. 3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. விளக்கம் - 1 - முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது. விளக்கம் - 2 - முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. விளக்கம் - 3 - கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம். == அகத் தொழில் முயற்சியாளன் ஃ உள்ளக தொழில் முயற்சியாளன் (ஐவெசயிசநநெn ளூip) == நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார். == அகத் தொழில் முயற்சியாண்மையின் செயற்பாடுகள் ஃ வணிகங்களில் காணப்படும் அகத் தொழில் முயற்சியாளர்களின் கருமங்கள் == 1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் 2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை வழங்கல் 3. உற்பத்தி திறனை உயர்த்துதல் 4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல் =முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? முயற்சியாளர்== - புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். - வணிகத்தை தலைமை தாங்குகின்றனர். - இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில் மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். முகாமையாளர் - புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார் - நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார். - சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை. == ஒரு நாட்;டில் முயற்சியாண்மையின் உருவாக்கத்திற்கு ஃ அபிவிருத்திக்கு அவசியமான காரணிகள் ஃ பிண்ணனிகள் == 1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் 2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வேண்டும் 4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும். 5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல் 6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல். 7. போதியளவு துணைச்சேவை வசதிகள். == இலங்கையில் காணப்படும் பல்வேறு முயற்சியாளர்கள் ஃ முயற்சியாண்மையினை வகைப்படுத்தும் அடிப்படைகள் == 1. நிறுவன அமைப்பு அடிப்படையில் தனிவியாபாரம் - தனிவியாபாரம் பங்குடமை - பங்காளர் கம்பனி - பங்குதாரர் கூட்டுறவு - அங்கத்தவர் கூட்டுத்தாபனம ; - அரசு 2. அளவு அடிப்படையில் சிறியளவு முயற்சியாளர் நடுத்தர அளவு முயற்சியாளர் பாரியளவு முயற்சியாளர். F 3. உடமை அடிப்படையில் பொதுத்துறை முயற்சிகள் தனியார்துறை முயற்சிகள் == இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்புகள் ஃ முயற்சியாண்மை அதிகரிப்பால் சமூகம் எதிர் நோக்கும் நன்மைகள் == 1. முதலீடு அதிகரிக்கும் 2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும் 3. வளப்பயன்பாடு அதிகரிக்கும் 4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் 6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும் 7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் 8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும் 9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும் 10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் 11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு == இலங்கையின் வணிக அபிவிருத்திக்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்பு ஃ தற்போதைய உலகளாவிய வணிக சூழலின் முயற்சியாண்மைக்கான தேவையும் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளமைக்கான காரணங்கள் == 1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் 2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல் 3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் 4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல் 5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு 6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு 7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு == இலங்கையில் முயற்சியாண்மை பற்றாக்குறைக்கான காரணங்கள் ஃ முயற்சியாண்மை உருவாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஃ முயற்சியாளர்கள் வெற்றி காணத்தவறுவதற்கான காரணங்கள். == 1. மூலதன பற்றாக்குறை 2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை 3. அரசின் ஊக்குவிப்பு குறைவு 4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள் 5. துணைச்சேவை பற்றாக்குறை 6. பயிற்சி குறைவு 7. தனியுரிமைப் பாதுகாப்பு 8. நேர அழுத்தம் 9. சந்தை பற்றிய அறிவின்மை 10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை == இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மை பற்றாக்குறையினால் ஏற்படும் தடைகள் பாதிப்புக்கள் == 1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை 2. வளப்பயன்பாடு குறைவடையும் 3. வணிக விருத்தி குறைவடையும் 4. தேசிய உற்பத்தி குறைவடையும் 5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும் 7. வருமான சமமின்மை ஏற்படும் 8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும் == முயற்சியாண்மை பிணக்குகளுக்கான தீர்வு == ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும் =முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும் == வணிக கருமங்களில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு முயற்சியாண்மையில் பின்பற்றப்படும் முறைகள் ==  நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும்  கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும்.  உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை முறைமை வுhந ழுறட) இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். “முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? 1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். 4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும். = முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் ஈடுபடுவார்கள் == முயற்சியாளர் பல்வேறு வணிகங்கள் உருவாக்குவதனை ஊக்குவிக்கும் காரணிகள் ஃ இலக்கை அடைவதில் முயற்சியாளனை தூண்டும் காரணிகள். == 1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். 2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். 3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு 4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் 5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல். 6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம். == முயற்சியாண்மையின் சமூக பொறுப்புக்கள் == எந்தவொரு நிறுவனமும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். 1. சூழலை பாதுகாத்தல் 2. சமூக ஒழுக்க நெறியை பேணல் 3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். 4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். 5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். 6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் 7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் 8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல். புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும். நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல் வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும். தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம் நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும். முன்னுணர்வு வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். கடின உழைப்பு வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும். நெகிழ்வுத் தன்மை சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;. வளங்களால் நிறைவுடையவர் வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும். ஊக்கமாகச் செயற்படுதல் வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும். பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல் முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும். நல்லெண்ணமுடையவர் நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும். தூர நோக்குடையவன் குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும். சுதந்திரமானவன் நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும். முயற்சியாண்மை அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். தனி நபர் காரணிகள் சமூகக் காரணிகள் சூழல் காரணிகள் தனி நபர்காரணிகள் அனுபவம் ( கல்வி வயது ( 4 தலைமைத்துவம் நட்ட அச்சம் ஏற்றல் ( அர்ப்பணிப்பு கட்டுப்பாடு ( 8 ) இலக்கு அடையும் தன்மை தூர நோக்கு. தனியாள் மதிப்பு தொழில் வாய்ப்பு (12 அதிருப்தி/திருப்தி தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் / தனி நபர் முயற்சியாண்மைப் பண்புகள் (Pநசளழயெட யுவவசiடிரவநள) முயற்சியாண்மை தொடர்பான 10 னு கள் தூர நோக்கு / கனவு குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும். வணிக நடவடிக்கை தொடர்பாக விரைவாகவும் வினைத்திறனாகவும் தீர்மானமெடுக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கும் துரிதமான நடவடிக்கை ஃ விரைவான செயற்பாடு தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும். திடசங்கற்பம் ( னுநவநசஅiயெவழைn ) வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும். அர்பணசிந்தை ஃ அர்ப்பணிப்பு ( னுநனiஉயவழைn ) வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும். பற்றுறுதி ( னுநஎழவழin ) வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும். தகவளித்தல் ஃ விபரம் ( னுநவயடை ) வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும். விதி ஃ தன்னம்பிக்கை ( னுநளவiலெ ) முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும். பணம் ஈட்டுதல் ஃ இலாபம் உழைத்தல் ( னுழடடயசள ) முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும். பங்கீடு ஃ பகிர்ந்தளித்தல் ( னுளைவசiடிரவந ) முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும். சமூகக் காரணிகள் 1. குடும்ப பிண்ணனி 2. குடும்ப பொறுப்பு 3. வணிக வலையமைப்பு 4. சமூகத் தொடர்புகள் 5. தொழில்சார் தொடர்புகள் 6. சமூக இமைப்பு 7. பிறப்பாற்றல் முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் - வாடிக்கையாளர் - வழங்குனர் - வங்கி - முயற்சியாண்மை மூலதனக் கம்பனி - வழக்கறிஞர் - கணக்காளர் சூழல் தொடர்பான காரணிகள் (நுnஎசைழஅநவெயட குயஉவழசள) 1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் 2. தந்திரோபாயங்கள 3. முகாமைத்துவம் 4. வாய்ப்புக்கள் 5. வணிகப்போட்டி 6. வளக்கிடைப்பனவு 7. துணைச்சேவைகள் 8. பலமும் பலவீனமும் 9. அரசியல் கொள்கைகள் முயற்சியாண்மைகளில் பின்வரும் பண்புகளில் ஒன்றோ ஃ பலவோ காணப்படலாம். - இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் - சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் - பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் - பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல் முயற்சியாண்மைத்திறன் விருத்தி 1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள் அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும். 2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும் மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும். 3. வளம் (சுநளழரசஉந) முயற்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு வளங்களை திரட்டுதல் வேண்டும். முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத காரணிகள் ஃ வெற்றிகரமான வணிக உருவாக்கம் (ஏநவெரசந உசநயவழைn) 1. எண்ணம் (ஐனநயள) 2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) 3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) 4. வளங்கள் (சுநளழரசஉநள) 5. செயற்பாடு (ழுpநசயவழைn) 6. நிதி (குiயெnஉந) 7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ) முயற்சியாளரின் நிதி நடவடிக்கைகள் வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் 1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல் 2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் 3. வருமான செலவு மதிப்பீடு 4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல் 5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல் முயற்சியாண்மை தலைமைத்துவம் முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும் முயற்சியாண்மைத் தலைமைத்துவ வடிவங்கள் ஃ பாங்குகள் (டுநயனநச ளாip ளுவலடந) 01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும் 04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும் 05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும். முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள் முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. 1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. 2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. 3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. விளக்கம் - 1 - முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது. விளக்கம் - 2 - முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. விளக்கம் - 3 - கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம். அகத் தொழில் முயற்சியாளன் ஃ உள்ளக தொழில் முயற்சியாளன் (ஐவெசயிசநநெn ளூip) நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார். அகத் தொழில் முயற்சியாண்மையின் செயற்பாடுகள் ஃ வணிகங்களில் காணப்படும் அகத் தொழில் முயற்சியாளர்களின் கருமங்கள் 1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் 2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை வழங்கல் 3. உற்பத்தி திறனை உயர்த்துதல் 4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல் முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? முயற்சியாளர்= - புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். - வணிகத்தை தலைமை தாங்குகின்றனர். - இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில் மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். முகாமையாளர் - புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார் - நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார். - சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை. ஒரு நாட்;டில் முயற்சியாண்மையின் உருவாக்கத்திற்கு ஃ அபிவிருத்திக்கு அவசியமான காரணிகள் ஃ பிண்ணனிகள் 1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் 2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வேண்டும் 4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும். 5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல் 6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல். 7. போதியளவு துணைச்சேவை வசதிகள். இலங்கையில் காணப்படும் பல்வேறு முயற்சியாளர்கள் ஃ முயற்சியாண்மையினை வகைப்படுத்தும் அடிப்படைகள் 1. நிறுவன அமைப்பு அடிப்படையில் தனிவியாபாரம் - தனிவியாபாரம் பங்குடமை - பங்காளர் கம்பனி - பங்குதாரர் கூட்டுறவு - அங்கத்தவர் கூட்டுத்தாபனம ; - அரசு 2. அளவு அடிப்படையில் சிறியளவு முயற்சியாளர் நடுத்தர அளவு முயற்சியாளர் பாரியளவு முயற்சியாளர். F 3. உடமை அடிப்படையில் பொதுத்துறை முயற்சிகள் தனியார்துறை முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்புகள் ஃ முயற்சியாண்மை அதிகரிப்பால் சமூகம் எதிர் நோக்கும் நன்மைகள் 1. முதலீடு அதிகரிக்கும் 2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும் 3. வளப்பயன்பாடு அதிகரிக்கும் 4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் 6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும் 7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் 8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும் 9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும் 10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் 11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கையின் வணிக அபிவிருத்திக்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்பு ஃ தற்போதைய உலகளாவிய வணிக சூழலின் முயற்சியாண்மைக்கான தேவையும் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளமைக்கான காரணங்கள் 1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் 2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல் 3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் 4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல் 5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு 6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு 7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு இலங்கையில் முயற்சியாண்மை பற்றாக்குறைக்கான காரணங்கள் ஃ முயற்சியாண்மை உருவாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஃ முயற்சியாளர்கள் வெற்றி காணத்தவறுவதற்கான காரணங்கள். 1. மூலதன பற்றாக்குறை 2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை 3. அரசின் ஊக்குவிப்பு குறைவு 4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள் 5. துணைச்சேவை பற்றாக்குறை 6. பயிற்சி குறைவு 7. தனியுரிமைப் பாதுகாப்பு 8. நேர அழுத்தம் 9. சந்தை பற்றிய அறிவின்மை 10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மை பற்றாக்குறையினால் ஏற்படும் தடைகள் பாதிப்புக்கள் 1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை 2. வளப்பயன்பாடு குறைவடையும் 3. வணிக விருத்தி குறைவடையும் 4. தேசிய உற்பத்தி குறைவடையும் 5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும் 7. வருமான சமமின்மை ஏற்படும் 8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும் முயற்சியாண்மை பிணக்குகளுக்கான தீர்வு ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும் =முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும் வணிக கருமங்களில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு முயற்சியாண்மையில் பின்பற்றப்படும் முறைகள்  நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும்  கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும்.  உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை முறைமை வுhந ழுறட) இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். “முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? 1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். 4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும். = முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் ஈடுபடுவார்கள் முயற்சியாளர் பல்வேறு வணிகங்கள் உருவாக்குவதனை ஊக்குவிக்கும் காரணிகள் ஃ இலக்கை அடைவதில் முயற்சியாளனை தூண்டும் காரணிகள். 1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். 2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். 3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு 4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் 5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல். 6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம். முயற்சியாண்மையின் சமூக பொறுப்புக்கள் எந்தவொரு நிறுவனமும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். 1. சூழலை பாதுகாத்தல் 2. சமூக ஒழுக்க நெறியை பேணல் 3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். 4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். 5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். 6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் 7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் 8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல். மும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். 1. சூழலை பாதுகாத்தல் 2. சமூக ஒழுக்க நெறியை பேணல் 3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். 4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். 5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். 6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் 7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் 8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல். தொழில் முனைவு ja:企業家 sk:Podnikanie
5659
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81
சந்தர்ப்பச்செலவு
நுண்பொருளியலில் பிறவாய்ப்புச் செலவு அல்லது பிறவாய்ப்பு இழப்பு அல்லது சந்தர்ப்பச்செலவு அல்லது அமையச்செலவு (Opportunity cost) என்பது ஒரு குறிப்பிட்ட தெரிவை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கடுத்த நிலையிலுள்ள தெரிவை இழப்பது ஆகும். அதாவது ஒரு தேர்வுக்காக இன்னொரு தேர்வை விட்டுக்கொடுப்பது எனலாம். இது தவறவிட்ட வாய்ப்புகளால் ஏற்படும் இழப்பினைக் குறிக்கிறது. ஒரு சூழ்நிலையில் ஒருவருக்குப் பல தெரிவுகள் உள்ளன. ஆனால் வளப்பற்றாக்குறை காரணமாக அவற்றுள் ஒன்றையே அவரால் தெரிவு செய்ய இயலும். எனவே அவர் அவற்றில் சிறந்ததாகக் கருதுவதையோ அல்லது மிகச் சாதகமானதையோ தெரிவு செய்வார். இதனால் மேலும் பல தெரிவுகளை / வாய்ப்புகளைத் தவற விடுகிறார். இப்படித் தவறவிட்ட வாய்ப்புகளால் அவருக்கு கிட்டக்கூடிய பலன்களை இழக்கிறார். இந்த இழப்பே பிறவாய்ப்பு இழப்பு எனப்படுகிறது. பொருளியலில் இது ஒரு முக்கியமான கூற்றாகும். பற்றாக்குறைக்கும் தெரிவுக்கும் இடையே உள்ள அடிப்படை உறவினை விளக்குகிறது. குறைவான வளங்களைத் திறம்படப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இலவசப் பண்டங்கள் அல்லாத பொருளாதாரப் பண்டங்களுக்கே அமையச்செலவு காணப்படும். காரணம், இவ் வகையான பண்டங்கள் அருமையாகக் காணப்படுவதும்,மாற்றுப்பயன்பாடு உடையனவாக இருப்பதுவேயாகும். மேற்கோள்கள் பொருளியல்
5660
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகள்
அடிப்படைப் பொருளியல் பிரச்சனை அல்லது அடிப்படை அல்லது மையப் பொருளியல் இடர்ப்பாடு அல்லது சிக்கல் () எனும் பதம் பொருளியல் கருத்தாகும். இக்கருத்து எண்ணிலடங்காத மனிதத்தேவைகளை நிறைவுசெய்யும் அளவிற்கு வளங்கள் காணப்படாமையினை அதாவது கிடைப்பருமையினை உறுதிப்படுத்துகின்றது. மனிதனின் எண்ணற்ற தேவைகள் மற்றும் விருப்பங்களைப் போன்று வளங்களும் எல்லையற்றுக் காணப்படுமாயின், பொருளாதாரச் சிக்கல்கள் தோற்றமெடுக்காது. ஆயினும் வளங்கள் அவ்வாறு காணப்படாமையினால் சில அடிப்படைரச் சிக்கல்களுக்கு சமூகங்கள், நாடுகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவை எதனை உற்பத்தி செய்வது - (தெரிவுச்சிக்கல்) எவ்வளவு உற்பத்தி செய்வது - (திட்டமிடற்சிக்கல்) எவ்வாறு உற்பத்தி செய்வது - (தொழில்நுட்பச்சிக்கல்) யாருக்காக உற்பத்தி செய்வது - (பகிர்வுச்சிக்கல்) இவற்றிக்கு விடையளிப்பதற்காக நாடுகள், சமூகங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள், சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார முறைமைகள் வேறானவை. இவற்றையும் பார்க்க பொருளியல் பண்டங்கள் சந்தர்ப்பச்செலவு கிடைப்பருமை பொருளாதார முறைமை வெளியிணைப்புகள் Biz/ed - Educational website with a summary of the page Basic Economic Concepts - Vocabulary list tt100.biz Stylised educational site from தி டைம்ஸ் மேற்கோள்கள் பொருளாதாரப் பிரச்சினைகள்
5663
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
தொலைக்காட்சி
தொலைக்காட்சி (Television, TV ) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. வழக்குமொழியில் தொலைக்காட்சி என்பது தொலைக்காட்சிப் பெட்டியையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பரப்புகையையும் சூழமைவுக்கேற்ப குறிக்கலாம். தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனப்படுகிறது. 1920களிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகள் புழக்கத்தில் வந்தமையால் இன்று வீடுகளிலும் வணிக மற்றும் பிற நிறுவனங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சாதாரணமாக உள்ளன. விளம்பரங்கள், மனமகிழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான ஊடகமாக பெரிதும் வளர்ந்துள்ளது. 1950களிலிருந்து மக்கள் கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி ஊடகம் முன்னிலை வகிக்கிறது. ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, 1970கள் முதல் ஒளிதப் பேழைகள், சீரொளி வட்டுக்கள், டிவிடிக்கள், அண்மையில் நீலக்கதிர் வட்டுக்கள் வந்தபிறகு பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயனாகின்றன. அண்மைக் காலங்களில் இணையத் தொலைக்காட்சி என இணையம் மூலமாகவும் தொலைக்காட்சி காணக்கூடிய வசதி வந்துள்ளது. மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) போன்ற மற்ற வகைகள் இருப்பினும் இந்த ஊடகத்தின் முதன்மைப் பயன்பாடு பரப்புகைத் தொலைக்காட்சிக்காகும். 1920களில் உருவான வானொலி ஒலிபரப்பினை ஒட்டி தொலைக்காட்சி ஒளிபரப்பும் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த ஆற்றல் மிக்க வானலைப் பரப்புனர்களால் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி குறிப்பலைகள் தனிநபர் தொலைக்காட்சிப் பெட்டிகளை எட்டுகின்றன. தொலைக்காட்சி பரப்புகை அமைப்பு பொதுவாக 54–890 மெகா ஏர்ட்சு அலைக்கற்றையில் வரையறுக்கப்பட்ட அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகிறது. தற்காலத்தில் பல நாடுகளிலும் ஒலிக் குறிப்பலைகள் முப்பரிமாண ஒலியாகவும் சூழொலியாகவும் பரப்பப்படுகின்றன. 2000-ஆம் ஆண்டுவரை தொலைக்காட்சி சேவைகள் பொதுவாக அலைமருவிய குறிப்பலைகளாக ஒளிபரப்பப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக பல நாடுகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றிலும் எண்ணிம வடிவத்திற்கு மாறி விட்டன. ஓர் வழமையான தொலைக்காட்சிப் பெட்டியில் பல மின்னணுவியல் சுற்றட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்; இவற்றில் முதன்மையானவை பரப்பப்பட்ட அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும் இசைவித்த வானலை அலைவெண் வாங்கியும் அந்த அலைவரிசையை அதே அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகளைப் பெறும் கலவைக்கருவியும் ஆகும். இத்தகைய இசைவியும் கலவைக்கருவியும் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒளிதக் காட்டிகள் எனப்படுகின்றன. தொலைக்காட்சி குறிப்பலைகள் பல சீர்தரங்களில் அமைந்துள்ளன. மேலும் ஒளிபரப்பு அமைப்புகளும் எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் உயர் வரையறு தொலைக்காட்சி (HDTV) என முன்னேறி வருகின்றன. தொலைக்காட்சி அமைப்புகள் பொதுவாக நேரடி கண்காணிப்பு கடினமானதாகவோ ஆபத்தானதாகவோ உள்ள இடங்களில் கடுங் கண்காப்பு, தொழிற்சாலை செயல்முறைக் கட்டுப்பாடு மற்றும் ஆயுத வழிசெலுத்துமை போன்ற செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகளின் சமூகத் தாக்கமாக சிறுவர்களின் தொலைக்காட்சிக் காணலுக்கும் கவனம்குறைந்த மிகு இயக்க பிறழ்வு (ADHD)க்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விளம்பரப்படுத்தல் தொலைக்காட்சியானது இன்று சக்திவாய்ந்த, மக்களைக்கவர்ந்திழுக்கும் சாதனமாக உள்ளமையால் விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களைக் காட்சிப்படுத்த அநேகமாகத் தொலைக்கட்சிகளையே நாடுகின்றனர். பல தொலைக்காட்சிகள் விளம்பரதாரர்கள் கொடுக்கும் பணத்தின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துகின்றன. விளம்பரம் தொலைக்காட்சியின் முக்கிய வருமானங்களில் ஒன்றாகவும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டி தொலைக்காட்சிப் பெட்டி (வழக்கில் தொலைக்காட்சி, TV set, TV, அல்லது ஐக்கிய இராச்சியத்தில் "இட்டெல்லி" ) என்பது தொலைக்காட்சியை காண்பதற்கான மின்னணுவியல் கருவியாகும். இதில் அதிர்வெண் இசைவி, காண்திரை மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பயனர் கருவியாக தொலைக்காட்சிப் பெட்டி விளங்குகிறது. முதல் தொலைக்காட்சிப் பெட்டிகள் 1923ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டன. துவக்கத்தில் வெற்றிடக் குழல்களையும் எதிர்முனைக் கதிர்க்குழல் காண்திரைகளையும் பயன்படுத்தினர். 1953ஆம் ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமான பிறகு இதன் பரவல் கூடுதலானது. பல சுற்றுப்புறப் பகுதிகளிலும் வீடுகளின் கூரைகளில் தொலைக்காட்சி அலைவாங்கிகளைக் காண முடிந்தது. முதல் தலைமுறை வீட்டுக் கணினிகளின் கணித்திரையாக தொலைக்காட்சிப் பெட்டிகளே விளங்கின. தற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய கம்பிவடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சிகளையும் எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒளிதங்களையும் காணலாம். காட்சித்தொழிநுட்பம் வட்டு (Disk) ஆரம்பகால கட்டத்தில் உருவங்களை உருவாக்கவும் மற்றும் உருவப்பெருக்கத்திற்கும் ஒரு சுழல் வட்டை பயன்படுத்தினர். இவை பொதுவாக குறைந்த தெளிவுத்திறன் மற்றும் திரை அளவு கொண்டிருந்தைமையால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. எதிர்மின் கதிர் குழாய் (CRT) எதிர்மின்னிகளை வெளியிடும் இலத்திரன் துப்பாக்கியையும், ஒளிரும் திரையையும் கொண்ட, வெற்றிடத்தாலான ஒரு குழாயே எதிர்மின் கதிர் குழாய் ஆகும் (cathode ray tube (CRT)). எதிர்மின்னியையும் ஏனைய அணுத் துணிக்கைகளையும் கண்டறிவதில் இவ்வுபகரணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. இது கடந்த தசாப்தத்தில் தொலைக்காட்சியிலும், கணினித் திரையாகவும் பயன்பட்டது. தற்போது புதிய தொழில்நுட்பங்களால் இது பின்தள்ளப்பட்டாலும் சில இடங்களில் இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் (DLP) இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் Digital Light Processing (DLP) என்பது ஒரு வகையான ஒளிப்படக்காட்டி தொழில்நுட்பத்திலமைந்த இலக்கமுறை நுண்ணாடிக் கருவியாகும். சில இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் தொலைக்காட்சி அலை வழிப்படுத்தியைக் கொண்டிருப்பதால் அது ஒரு தொலைக்காட்சித் திரை போல காட்சியளிக்கும். மின்மக் காட்சிச் சட்டம் (Plasma) மின்மக் காட்சிச் சட்டம் (plasma display panel) (PDP ) என்பது பெருந்திரைத் தொலைக்காட்சிகளில் பொதுவாக 30 இஞ்சு அளவுகளில் (76 செமீ அல்லது அதற்கும் பெரியது) பயன்படுத்தப்படும் தட்டையான காட்சி சட்டம் ஆகும்.அயனியாக்கப்பட்ட வாயுக்களின் கலவையைக் கொண்ட இரண்டு கண்ணாடியின் சட்டங்களுக்கு இடையில் பல சிறிய கலங்களைக் (cells) கொண்டிருக்கிறது. இந்த செல்களில் உள்ள வாயு மின்னியல் ரீதியாக மின்மமாக மாறுகிறது. மின்மமானது புறவூதா ஒளிகளை உமிழ்கிறது. மின்மக் காட்சிகளிலிருந்து (plasma) படிக நீர்மத் திரைகள் (LCD) மாறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்றொரு மெல்லிய எடை கொண்ட தட்டையான காட்சி வெளிப்பாடு ஆகும். அது நின்றொளிர்தல் சார்ந்ததல்ல. திரவப் படிகக் காட்சி (LCD) ஒரு திரவ படிக காட்சி (LCD) என்பது உரை, படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களைக் இலத்திரன் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான சட்டமாகும். இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கருவிகளின் உரைகள், மற்றும் பல வகையான வானூர்தி கருவிளின் திரைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கருவிகளாகிய ஒளிபரப்பி, விளையாட்டுக் கருவிகள், மணிக்காட்டிகள், கைக்கடிகாரங்கள், கணிப்பான்கள் மற்றும் தொலைபேசிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எளிதான கட்டமைப்பு, பெயர்திறன் மற்றும் எதிமின் கதிர் குழாய்(CRT) காட்சிகள் தொழில்நுட்பத்தை விட மிகப் பெரிய திரைகளிலும் காட்சிகளை உருவாக்கும் கட்டமைப்பு விதம் இவற்றின் மிகச் சிறந்த சிறப்புக்கூறுகளில் அடங்கும். இவற்றின் மிகக் குறைந்த மின்சாரத்தை நுகர்ந்து செயல்படும் விதத்தினால் மின்கலத்தினால்-இயக்கப்படும்} மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இது, திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக ஓர் ஒளி மூலம்(பின்னொளி) அல்லது எதிரொளிப்பியின் முன் வரிசையமைப்பில் வைக்கப்படும் பல படத்துணுக்கு அல்லது படவணுக்களாலான (Pixel), மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம் ஆகும். LCD தொழில்நுட்பம் உருவாவதற்கு வழிவகுத்த முந்தைய கண்டுபிடிப்பான திரவ படிகங்களின் கண்டுபிடிப்பு சுமார் 1888 ஆம் ஆண்டு காலத்தில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது. 2008 ஆம் ஆண்டு, உலகளாவிய LCD திரைகளுடன் கூடிய தொலைக்காட்சிகளின் விற்பனை CRT யின் விற்பனை எண்ணிக்கையை விட மிஞ்சியிருந்தது. கரிம ஒளிகாலும் இருமுனையம் (OLED) கரிம ஒளிகாலும் இருமுனையம் (OLED, organic light-emitting diode) என்பது ஒரு ஒளிகாலும் இருமுனையம் (LED), இதன் உமிழும் மின்னொளிர்வுப் பட்டை ஒரு கரிமச் சேர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந்த மின்னொளிர்வுப் பட்டை இரு மின்முனைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த மின்முனைகளில் ஒன்று ஒளிபுகு தன்மை கொண்டதாக இருக்கும். கரிம ஒளிகாலும் இருமுனையங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள், கணினித் திரைகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மத்துணைகள் போன்றவற்றில் எண்ணிமக் காட்சிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை வட அமெரிக்காவில் சராசரியாக ஏழுவருடங்களுக்கு ஒருமுறை ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டியொன்றை வாங்குகின்றார். ஒருவீட்டில் சராசரியாக 2.8 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டளவில் 48 மில்லியன் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்கப்பட்டன. அவற்றின் சராசரி விற்பனைத்தொகை 460 அமெரிக்க டொலர்களாகவும் சராசரி அளவு 38 அங்குலமாகவும் உள்ளது. Note: Vendor shipments are branded shipments and exclude OEM sales for all vendors தொலைக்காட்சி பார்ப்பதன் நன்மைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் நாம் உலகத்தில் நடக்கும் விடயங்களை அறியலாம். தொலைக்காட்சியில் சிறுவர்கள் கல்வி சம்பந்தமானவற்றை பார்க்கலாம். நாம் தொலைக்காட்சியில் பாட்டுக்களை கேட்டு மகிழலாம். விந்தைமிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் நாளுக்கு நாள் புதிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையை இன்பமயமாக்குவதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியன விஞ்ஞானத்தின் விந்தைமிகு வெளிப்பாடுகளிற் சிலவாகும். தொலைக்காட்சிகளால் கல்வி சார்ந்த பல விடயங்களை மாணவ்ர்கள், மற்றும் ஆர்வலர்கள் கன்டு மகிழ்கிரார்கள்.சில விடயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். உலகின் மிகவும் பலராலும் பார்க்கப்படும் சிறந்த் பொழுதுபோக்குச் சாதனமாகும். தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் தொலைக்காட்சியை ஒருவர் மிக அருகிலிருந்தோ அல்லது தொடர்ந்து அதிக நேரமாகவோ பார்த்தால் அவர் கண் பார்வை பாதிக்கப் பட வாய்ப்புண்டு. தொலைக்காட்சியை ஒருவர் அதிகமாக பார்ப்பதால் அது கல்வி போன்ற விடயங்களிலிருந்து அவர் கவனத்தைக் குறையச்செய்து விடவும் வாய்ப்புண்டு. தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் தீமைகளை தவிர்க்கும் வழிகள் தொலைக்காட்சியை பத்தடி தூரத்திற்கு பின்னிருந்து பார்க்க வேண்டும். தொலைக்காட்சியை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சான்றுகோள்கள் வெளி இணைப்புகள் உலகின் முதல் தொலைக்காட்சி எப்படி துவங்கியது? உலகில் மிக பெரிய தொலைக்காட்சி - சீன வானொலிக் கட்டுரை தொலைக்காட்சி சொல்லியல் ஊடக வடிவங்கள் ஒலிபரப்பு நுகர்வோர் மின்னணு எண்ணிமத் தொழில்நுட்பம் நிகழ்த்து கலை காணொளி வன்பொருள் 1925 இல் தொழில்நுட்பம் அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் பிரித்தானியக் கண்டுபிடிப்புகள் செருமானியக் கண்டுபிடிப்புகள் உருசியக் கண்டுபிடிப்புகள் தொலைக்காட்சித் துறை 1927 அறிமுகங்கள் 20-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
5664
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
தொடர்வண்டி
தொடர்வண்டி அல்லது தொடரி இலங்கை வழக்கு புகையிரதம் அல்லது தொடருந்துஆங்கிலம்: Train) என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் ஒரு போக்குவரத்து வாகனம் ஆகும். இவ்வகை வாகனங்கள் தண்டவாளங்கள் எனப்படும். இரயில் பாதைகளில், தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள பெட்டிகள் அல்லது கூண்டுகளை இழுத்துச் செல்லல் என்ற அடிப்படையில் இயங்குகின்றன. பெட்டிகள் அல்லது கூண்டுகள் சுயமாக நகர்வதற்கான ஆற்றல் தனியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் மூலம் அவற்றுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்றில் நீராவி உந்துவிசை ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், தற்போது டீசல் மற்றும் மின்னியந்திரங்கள் பொதுவாக இழுவை இயந்திரங்களாகப் பயன்படுகின்றன. மின்னியந்திரங்களுக்கான மின்சக்தி மேல்நிலை கம்பிகள் அல்லது கூடுதல் இரயில் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. குதிரைகள், நீருந்து கயிறு, இழுவைக்கம்பி, ஈர்ப்புவிசை, காற்றழுத்தம், மின்கலன்கள், மற்றும் வாயுச்சுழலிகள் போன்றவையும் இரயில் பெட்டிகல்ளை இழுப்பதற்கு ஆதாரமான சக்தி மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரயில் பாதைகள் வழக்கமாக இரண்டு இணையான தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மின்சாரம் கடத்துவதற்கென்றும், ஒற்றைத் தண்டூர்திகளுக்காகவும், காந்தமிதவுந்துகளுக்காகவும் தனியாக தண்டவாளங்கள் இணைக்கப்படுவதுண்டு. இழுத்தல் என்ற பொருள் கொண்ட trahiner என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லில் இருந்து டிரைன் என்ற சொல் உருவானதாகக் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இழுத்தலுக்கு trahere என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்வேறு வகையான இரயில்கள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுவாக இரயில்களில் ஒன்றுடன் ஒன்றாக பலபெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அவை சுயமாக இயங்கக்கூடியவையாக அல்லது இழுவிசையால் நகரக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன. தொடக்கக் கால இரயில்கள் கயிற்றால் கட்டி குதிரைகளால் இழுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் மூலம் இரயில்கள் இழுக்கப்பட்டன. 1910 களில் நீராவி இயந்திரங்களுக்குப் பதிலாக டீசல் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இவ்வகை இயந்திரங்கள் சிக்கனமானதாகவும், குறைவான ஆள்பலத் தேவையும் உள்ளவகையாக இருந்தன. பயணிகள் இரயில் என்பது பயணிகள் பயணம் செய்யும் இருப்புப் பாதை வாகனங்களை உள்ளடக்கியது ஆகும். மிக நீண்ட மற்றும் வேகமாக இயங்கும் இரயில்கள் இவ்வலை இரயில்களில் இருக்கும். ஒரு குறிப்பிடத்தக்க வேகத்துடன் நகரும் இரயில்கள் மற்றும் அதிகரித்து வரும் நீண்ட தூர இரயில் வகைகள் அதிவேக இரயில்கள் எனப்படுகின்றன, இவற்றின் வேகம் 500 கிமீ / மணி ஆகும். இச்செயல்பாட்டை அடைவதற்கு, புதுமையான காந்தத்தால் மிதக்கும் தொழில்நுட்பம் மூலம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் போன்ற பெரும்பாலான நாடுகளில், ஒரு டிராம்வே மற்றும் இரயில் இடையே உள்ள வேறுபாடு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒளி ரயில் என்பது சில நேரங்களில் நவீன டிராம் அமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. தொடர்வண்டிகளின் வகைகள் நீராவித்தொடர்வண்டி, நிலக்கரித்தொடர்வண்டி, அகலப்பாதை தொடர்வண்டி, மீட்டர் பாதை தொடர்வண்டி, எலக்ட்ரிக் தொடர்வண்டி, பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி, அதிவேக தொடர்வண்டி என பல வகைகள் உள்ளன. தொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி, நகரத்தொடர்வண்டி. தொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி, பயணிகள் தொடர்வண்டி. பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன. பயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் நிலக்கரி, பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன. ஐக்கிய இராச்சியத்தில், இரண்டு இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் "இரட்டை தலை" வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. கனடாவிலும் அமெரிக்காவிலும் இதேபோல மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் பொதுவாகவே காணப்படுவதுண்டு. தொடர்வண்டியின் இரண்டு முடிவிலும் இயந்திரங்கள் இணைக்கப்பட்ட வகையும் பயன்படுத்தப்படுகிறது. இயந்திரத்தை திசை திருப்பி மாற்றும் வசதியில்லா இடங்களில் இவ்வகை வண்டிகள் பயன்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்வண்டில் மையப்பகுதியிலும் இவ்வகை இயந்திரங்கள் இணைக்கப்படுகின்றன. உந்து ஆற்றல் தொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் குதிரைகளைக் கொண்டோ அல்லது புவியீர்ப்பு விசையினாலோ நகர்த்திச் செல்லப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி பயன்படுத்தப்பட்டது. 1920களில் இருந்து நீராவி வண்டிகளின் பயன்பாடு டீசல் அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் வண்டிகளின் அறிமுகத்தால் குறைந்து வந்தது. தற்காலத்தில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நீராவி வண்டிகள் வழக்கொழிக்கப்பட்டாலும் சில நாடுகளில் குறிப்பாக சீனாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இவையும் சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகளில் வரலாற்றுச் சின்னமாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீலகிரி மலை இரயில், டார்ஜிலிங் மலை இரயில் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. பயணியர் தொடர்வண்டி பயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாட்கணக்கு வரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன. நெடுந்தொலைவு வண்டிகள் – நாட்டின் இருவேறு பகுதிகளுக்கு இடையே ஓடுகின்றன. சில இரு வேறு நாடுகளையும் இணைக்கின்றன. அதிவிரைவு வண்டிகள் – இவை பகல் நேரங்களில் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இவை பொதுவாக மக்கள் தொகை மிகுந்த பெருநகரங்களை இணைக்கின்றன. பிரான்சில் உள்ள டிஜிவி (TGV) என்னும் மிகுவிரைவு தொடர்வண்டி, ஏப்ரல் 3, 2007 அன்று, மணிக்கு 574.8 கிலோ. மீ சராசரி விரைவில் ஓடி, உலகில் ஒரு புதிய அரியசெயல் நிகழ்த்தியுள்ளது நகரிடை வண்டிகள் – இடையில் நில்லாமல் குறிப்பிட்ட இரு நகரங்களை இணைக்கின்றன. பயணியர் இரயில்கள் – நகரங்களுக்கு உள்ளே மாணவர்கள், பணியாளர்கள் போன்ற மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகும். தரைவழி தொடர்வண்டிகளும் சில இடங்களில் பயன்படுத்தப்படுய்கின்றன. பெரிய சுரங்கங்களுக்குள் சரக்கு மற்றும் பணியாளர்களை அழைத்துச் செல்லும் சுரங்க இரயில் வண்டிகளும் பயன்பாட்டில் உள்ளன. தொகுப்பாக அமைந்துள்ள வளாக விமானநிலையங்களில் இரு முனையங்களுக்கிடையிலான போக்குவரத்திற்காகவும் தொடர்வண்டி வகைகள் இயக்கப்படுகின்றன. இரயில்வே துறையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் இரயில்வே துறையின் வரலாற்றை விளக்கும் காட்சி இரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒற்றைத் தண்டூர்தி வழக்கமாக இரட்டைத் தண்டவாளங்களில் இயங்குவதற்குப் பதிலாக ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் இருப்புவழி போக்குவரத்து வகை அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய செருமானியப் பொறியாளர் இதனை மோனோரெயில் என அழைத்தார். இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது. பொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும் எந்தவொரு பயணியர் போக்குவரத்து அமைப்பும் ஒற்றைத் தண்டூர்தி என அழைக்கப்பட்டாலும் முறையான வரையறைப்படி இது ஒரு தண்டவாளத்தில் இயங்கும் அமைப்புக்களை மட்டுமே குறிக்கிறது. சரக்குத் தொடர்வண்டி சரக்குத் தொடர்வண்டிகள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்கின்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து தொடர்வண்டிகள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட தொடர்வண்டியில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும். சில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளை ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது. இலங்கையில் தொடர்வண்டி இலங்கைக்கு ஆங்கிலேயரால் தொடர்வண்டி கொண்டுவரப்பட்டது. இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது. பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது. இந்தியாவில் தொடர்வண்டி இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் தொடர்வண்டி சேவை இந்தியாவில் பெரும் அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது. தொடர்வண்டி சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும், கிராமங்களையும் இணைக்கிறது. இந்தியாவில் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக மீட்டர் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உட்பட பெருநகரங்களில் பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் பெயரிடப்பட்ட சில தொடர் வண்டிகளும் பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இராச்தானி விரைவுவண்டி: நாட்டின் தலைநகரத்தில் இருந்து மாநில தலைநகரத்தை இணைக்கும் இரயில்கள் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன. தூராந்தோ விரைவுவண்டி: இடையில் எங்கும் நிற்காமல் ஏதாவது இரண்டு பெருநகரங்களை இணைக்கும் பயணிகள் இரயில் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன. சதாப்தி விரைவுவண்டி: குறுகிய தொலைவில் உள்ள இரண்டு பெருநகரங்களை இணைக்கும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்ற இவ்வண்டி, இரவில் மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடையும். மக்கள்சதாப்தி விரைவுவண்டி: குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரண பெட்டிகளுடன் இயங்கும். சிக்கனமான செலவில் பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்லும் வகை வண்டியாகும். அதிவிரைவு வண்டிகளின் வேகம் தடைபடாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டி இடைவண்டிகள் நிறுத்தப்பட்டு இத்தகைய விரைவு வண்டிகள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்தியாவின் ரயில்வே மண்டலம் நிர்வாக நலன்கருதி 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு இரயில்வே, வடகிழக்கு இரயில்வே, வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே, கிழக்கு இரயில்வே, தென்கிழக்கு இரயில்வே, தென்மத்திய இரயில்வே, தென்னக இரயில்வே, மத்திய இரயில்வே, மேற்கு இரயில்வே, தென்மேற்கு இரயில்வே, வடமேற்கு இரயில்வே, மேற்குமத்திய இரயில்வே, வடமத்திய இரயில்வே, தென்கிழக்குமத்திய இரயில்வே, கிழக்குக்கடற்கரை இரயில்வே, கிழக்குமத்திய இரயில்வே ஆகிய பதினாறு மண்டலங்கள் ஆகும். காட்சியகம் மேற்கோள்கள் குறிப்புகள் மேலும் பார்க்க இந்திய இரயில்வே புற இணைப்புகள் இரும்புவழிப் போக்குவரத்து தொடருந்துகள்
5666
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%20%28%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
கண் (உடல் உறுப்பு)
கண் () (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் கண்கள் உணர்த்துகின்றன. வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே); அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன (பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே). கண்ணோட்டம் கண் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். அதன் நிறம், வடிவமைப்பு, லென்சுகளின் அளவு ஆகியன மாறுபடும். அதிகப்படியான விலங்குகள் துணை விழிப்பார்வை கொண்டவையாகும். கண்களில் உள்ள லென்சுகள் காட்சிக்கு ஏற்ப தானாக மாறிக்கொள்ள்ளும் தன்மை கொண்டதாகும். மேலும் போதுமான வெளிச்சம் உள்ள இடங்களில் கண்ணின் பிறழ்ச்சி குறையும். மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால் விலங்குகள் இரவிலும் தெலிவாக காட்சிகளைக் காண முடியும். மீன்,பாம்பு உட்பட விலங்குகளுக்கு கண்களின் லென்சுகள் நிலையான வடிவத்தில் இருக்கும். எனவே அதன் கண்கள் புகைப்பட கருவியில் எப்படி உபயோகப்படுகிறதோ, அதேபோல் பயன்படுகிறது. கண்ணின் இயக்கம் நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண்மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’() எனப்படுகிறது. நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன. கண்ணின் வழியே ஒளி செல்லும்போது ஒளிச் சிதறலும் ஒளித்திசை மாறுதலும் ஏற்படுகின்றன. ஒளியானது விழித்திரையை அடையும் முன் கார்னியா, லென்சின் முன்பகுதி, லென்சின் பின்பகுதி ஆகிய மூன்று பரப்புகளில் ஒளிச்சிதறல் அடைகிறது. கார்னியா மற்றும் லென்சுக்கு இடையில் அக்குவசு இயூமர் என்ற பிளாசுமா போன்ற திரவம் உள்ளது. லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் விட்ரசு இயூமர் என்ற திரவம் உள்ளது. இது கூழ்மமான மீயூக்கோ புரதத்தினாலானது. இத்திரவங்கள் இரண்டும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதினால் ஒளி கண்ணின் விழித்திரையை தடையில்லாமல் அடைகிறது. மனிதனின் கண்ணில் உள்ள லென்சின் குவிந்த பகுதி பார்க்கும் பொருளின் தூரத்திற்கு ஏற்ப தானே குவித்தன்மையை மாற்றிக் கொள்ளும் தன்மையை கொண்டிருக்கிறது. இத்தன்மையை கண் தக அமைதல் அல்லது விழியின் ஏற்பமைவு என்பர். இவ்வேற்பமைவு, சிலியரி தசைகள், சிலியரி உறுப்புகள், மற்றும் தாங்கும் இழைகளால் நடைபெறுகிறது. கண் தூரத்திலுள்ள பொருளைப் பார்க்கும்போது சிலியரித்தசைகள் தளர்ந்து விடுகின்றன. பொருளிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. எனவே தெளிவான பிம்பம் தெரிகின்றது. பொருளை விழியின் அருகில் கொண்டு வரும்போது விழியின் ஏற்பமைவுத் தன்மை அதிகரிப்பதில்லை. மாறாக லென்சின் மேற்பகுதியின் வளைவுப்பகுதி அதிகரிப்பதினால் ஒளிச்சிதறல் தன்மை அதிகரிக்கிறது. இதனால் அருகிலுள்ள பொருட்களின் பிம்பம் நன்றாகத் தெரிகிறது. கண்ணின் குச்சி செல்களின் வெளிப்புறப்பகுதியில் காணப்படும் சிவப்புக் கலந்த ஊதா நிறமி, ரெடாப்சின் அல்லது பார்வை ஊதா என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரத ஆப்சினும் ஆல்டிகைடும் கலந்த வைட்டமின் ’ஏ’ வும் சேர்ந்த பகுதியினை ரெட்டினோ என்கிறார்கள். ஒளி ரெடாப்சின் மீது விழும்போது நிறமற்றுப் போகிறது. ஏனென்றால் இவை ரெட்டினே மற்றும் ஆப்சினாக உடைக்கப்படுகின்றன. ஒளி இல்லாத வேளையில் இவை மீண்டும் இணைகின்றன. குச்சி செல்கள் அதிக ஒளி உணர்வுத் தன்மை கொண்டவையாகும். எனவே குறைந்த ஒளியிலும் பார்ப்பதற்கு இவை உதவுகின்றன.. கூம்பு செல்களில் காணப்படும் பார்வை நிறமிகள் ரெட்டினேவுடன் சேர்ந்த புரத ஆப்சின்களால் ஆனவையாகும். கூம்பு செல்கள் நிறங்களை உணர்கின்றன. மனிதனின் கண்களில் வெவ்வேறு அலைநீளம் கொண்ட மூண்று நிறமிகள் காணப்படுகின்றன. அதிக அளவு ஒளிகொண்ட பார்வையின் செயலே நிறப்பார்வை எனப்படுகிறது. அதிக அளவு ஒளியின் நிறங்களை விழித்திரையிலுள்ள குச்சி செல்கள் இல்லாத போவியா பகுதி உணர்கிறது. குறைந்த ஒளி எனில் குச்சி செல்களும் அதிக ஒளி எனில் கூம்பு செல்களும் செயல்படுகின்றன. குச்சிசெல்கள் செயல்படும்போது நிறங்கள் உணரப்படுவதில்லை. விழித்திரையின் செயல்பாட்டில் ஒளிவேதிவினை மூலமாக ஒளிச்சக்தியானது நரம்புத் தூண்டலாக மாற்றப்படுகிறது. இச்செயல் மூலம் நரம்பிழைகள் தூண்டப்பட்டு கடத்தப்படுகின்றன. உணர் உறுப்புகளில் உருவாகும் தூண்டல்கள் கூம்பு செல்களில் உருவாகும் மின்னழுத்தத்தைப் பொறுத்து மூளையினால் சரியாக நிறமாகப் பகுக்கப்படுகிறது. நமது கண்களினால் பகுக்கப்படுகின்ற அல்லது காணப்படுகின்ற நிறமுள்ள படங்கள் மூளையின் ஒரு கடினமான செயல் தொகுப்பாகும். கண்ணின் வகைகள் Anatomy of the compound eye of an insect]] கலவை அல்லாத கண்கள், குழிக் கண்கள், கோளக் கண்கள், பல லென்ஸ் கண்கள், முறிவு கருவிழி கண்கள், ரிப்லேக்டார் கண்கள், கூட்டுக் கண்கள், அருகமைவாக கண்கள், மேற்பொருந்துதல் கண்கள் ஆகியன கண்ணின் வகைகளாகும் கலவை அல்லாத கண்கள் என்பது லென்சுடன் கூடிய சாதரண கண்களே ஆகும்.எடுத்துக்காட்டு மீன்களின் கண்கள். குழிகண்கள் ஒளியின் கோணங்களை குறைக்கவல்லதாகும்.ஒளியின் கோண அளவு கண்ணை பாதுகப்பாக வைத்துக்கொள்ளும். குழிகண்களின் லென்ஸில் உயர் ஒளி விலகல் தன்மையை கொண்டிருப்பின் அது கோள கண்களாகும். இவ்வகை கண்கள் கோள பிறழ்ச்சியை குறைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட லென்சுகளை கொண்ட கண்களே பல லென்ஸ் கண்களாகும்.பெரும்பாலும் இவ்வகை கண்கள் நீரில் வாழும் உயிரினங்களுக்கே காணப்படும். முறிவு கருவிழி கண்கள் பெரும் பாலும் பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகளுக்கு அமைந்து இருக்கும். ரிப்லேக்டார் கண்களில் இரு லென்சுகள் இருக்கும். அதில் ஒன்று கண்ணாடி பேழை போன்று செயல்படும். இவ்வகை கண்கள் சிறிய பூச்சிகள், பறவைகளுக்கு காணப்படும். கூட்டுக் கண்கள் என்பது ஆயிரக்கணக்கான ஒளி வாங்கிகள் பிம்மத்தை வாங்கி, மூளையில் பதிய வைத்து. காட்சியாகக் காட்டும் அதுவே கூட்டுக்கண்கள் ஆகும். பெரும்பாலும் ஈக்களுக்கு இதுபோன்ற கண்களே இருக்கும். பறக்கும் சிலந்திகளுக்கும் இது போன்ற கண்களே இருக்கும். அதாவது குறுகிய பார்வை கொண்ட எண்ணற்ற கண்கள் இருக்கும். அருகமைவாகக் கண்கள் சாதாரணக் கண்கள் ஆகும். மேற்பொருந்துதல் கண்கள், இது இறால் போன்ற மீன்களுக்கு இருக்கும் கண்கள் ஆகும். கண்களின் கூர்மை கண்களின் பார்வைக்கூர்மை கண்களின் வகையை பொறுத்து மாறும். பார்வைக்கூர்மையை நிர்ணயிப்பது கண்களில் உள்ள செல்களின் திறமே ஆகும். உயிர்கள் அனைத்தோடும் ஒப்பிட்டால் கழுகுகளுக்கே பார்வையின் கூர்மை அதிகம். குதிரைகளுக்கும் பார்வைத்திறன் அதிகமாகும். விலங்குகளின் கண்கள் மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால் விலங்குகள் இரவிலும் தெளிவாக காட்சிகளைக் காண முடியும். ஒவ்வொரு வகை விலங்குகளுக்கும் ஒவ்வொரு வகையில் கண்கள் அமைந்துள்ளன. நீரில் வாழ்பவனவற்றிற்கு ஒன்று போலவும், நிலத்தில் வாழ்பவனவற்றுக்கு வெறுபட்டும் இருக்கின்றன. மனிதர்களின் கண்கள் மனிதர்களின் பார்வை கூர்மையையும் செல்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணின் கருவிழி நிறத்தை உறுதி செய்வது அவனின் ஜீன்களாகும். நீலம், பச்சை, கருப்பு, பழுப்பு நிறம் ஆகியன மனித கருவிழியின் வண்ணங்களாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விழித்திரை மாறுபடும். உலகில் உள்ள எந்த இரு மனிதருக்கும் விழித்திரை ஒன்றாக இருப்பதில்லை (இரட்டைப்பிறவிகளுக்கு கூட அவை மாறும்). மனிதனின் கண் வெளிச்சம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒர் உறுப்பு ஆகும். ஒர் உணர்வு உறுப்பாக பாலூட்டிகளின் கண் பார்வையை அனுமதிக்கிறது. மனித கண்கள் முப்பரிமாண நகரும் உருவத்தை வழங்க உதவுகின்றன, பொதுவாக பகல் நேரங்களில் நிறங்களை உணர்த்துகின்றன. விழித்திரையில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்கள் ஒளி உணர்வு மற்றும் வண்ண வேறுபாடு ஆழ்ந்த கருத்து உள்ளிட்ட பார்வை செயல்பாஃடுகளுக்குக் காரணமாகின்றன.மனிதக் கண் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது . கண்ணின் படங்கள் மேற்கோள்கள் மேலும் காண்க உடல் உறுப்புக்கள் மனித மூளை முதுகு காது மூக்கு கை வயிறு வெளி இணைப்புகள் ‘ யுனைட் பார் ஸைட்’ ஆன்லைன் கண் நல கோர்ஸ் - DJO | விழியியல் குறித்த digital இதழ் கண் நிலைகள் குறித்த அகராதி கண்ணின் பரிணாம வளர்ச்சி கண் குறித்த தலைப்புகள் கண்ணின் வரைபடம் விழித்திரை மற்றும் பார்வை மண்டலத்திற்கான அமைப்பு Don’t let the tears dry! இமைகள் கண்களை எப்படி காக்கின்றன? பார்வைத் தொகுதி கண்ணின் உடற்கூறியல்
5670
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE
சகாரா
சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் (அரபு:الصحراء الكبرى) என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் மத்திய தரைக்கடல் கடற்கரையின் வளமான பகுதிகள், மக்ரேபின் அட்லஸ் மலைகள், எகிப்து மற்றும் சூடானில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் வளமான பகுதியைத் தவிர்த்து, வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. இது கிழக்கில் செங்கடலில் இருந்து நீண்டும், வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லைகளாக கொண்டு, இதன் நிலப்பரப்பு கடற்கரையை நோக்கிச் செல்லச்செல்ல படிப்படியாக பாலைவனத்திலிருந்து கடலோர சமவெளியாக மாறுகிறது. தெற்கில், இது நைல் நதி பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை சகாராவின் வெப்பமான பகுதிக்கு அருகிலுள்ள அரைப் பாலைவன வெப்பமண்டல சவன்னாவை பட்டாயாச சுற்றியுள்ளது. சகாராவை மேற்கு சஹாரா, நடு அஹாகர் மலைகள், திபெஸ்டிக் மலைகள், ஏய்ர் மலைகள், டெனெரெ பாலைவனம், லிபிய பாலைவனம் போன்ற பல பிரதேசங்களாக பிரிக்கலாம். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது. இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா () என்பதில் இருந்து எழுந்ததாகும். நிலவியல் சஹாரா பாலைவனத்திற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும், வட திசையில் அத்திலசு மலையும் மத்தியதரைக்கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோக்கோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மத்தியதரைக் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது. சஹாரா பாலைவனம் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் (3,500,000 சதுர மைல்) அளவு கொண்டது. இது ஆப்பிரிக்காவில் 31 சதவிகிதம் என்றாலும் இந்த பரப்பளவு காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. 250 மி.மீ க்கும் குறைவான சராசரி வருடாந்திர மழைப்பகுதி கொண்ட அனைத்து பகுதிகளும் சகாரா பாலைவனத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்தால், சகாரா 11 மில்லியன் சதுர கிலோமீட்டர் (4,200,000 சதுர மைல்) கொண்டதாக இருக்கும். பல ஆழ்ந்த சிதறல்களைக் கொண்ட மலைகள், பல எரிமலைகளும், இந்தப் பாலைவனத்திலிருந்து எழுந்தன, இதில் குறிப்பிடத்தக்கன அஹர் மலைகள், அஹாகர் மலைகள், சஹரன் அட்லஸ், திபீஸ்டிக் மலைகள், அட்ரார் டெஸ் இஃபோராஸ், செங்கடல மலை போன்றவை ஆகும். சகாராவின் மிக உயர்ந்த சிகரம் எமி குசீசி ஆகும், இது ஒரு கேடய எரிமலை ஆகும். சஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது. மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சஹாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட மற்றுமுள்ள நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன. நவீன சஹாராவில் நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை. சைத்தூன் மரம் போன்ற மத்திய தரைக் கடற் பகுதித் தாவரங்களே அங்கு இருந்தன. இந்நிலை கி.மு 1600 வரை இருந்தது. இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது. நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. நடு சகாராவின், கலப்பு பாலைப் பகுதியில், பெரும் பாலைவனத்தின் பல துணைப்பிரிவுகள் உள்ளன அவை: டேன்சுரூஃப், டெனெரெ, லிபிய பாலைவனம், கிழக்கு பாலைவனம், நுபியான் பாலைவனம் மற்றும் பல. இது மிகவும் வறண்ட பகுதிகளாக பல ஆண்டுகள் அடிக்கடி மழை இருக்காது. வடக்கு சகாரா என்பது எகிப்தில் மத்தியதரைக் கடல் மற்றும் லிபியாவின் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இது   மத்தியதரைக்கடல் வனப்பகுதி, மரக்காடு, மற்றும் வட ஆபிரிக்காவின் சூழல் மண்டலங்களை சுற்றிக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் வெப்பமான கோடைக்காலம் மற்றும் குளிர் மற்றும் மழையான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் (3.9 அங்குலம்) வருடாந்திர மழையைப் பெறுகின்றது. பருவகால அளவின் படி, சஹாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ (5.9 அங்குலம்) வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது (இது ஒரு நீண்ட கால சராசரி அளவீடு ஆகும், மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது). சகாராவில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள், மவுரித்தானியாவின் தலைநகரான நுவாக்சூத், அல்ஜீரியாவின் தாமன்ராஸெட், ஓர்குலா, பெச்சர், ஹாஸ்ஸி மெஸ்அௗத், கர்தாயா, எல் ஒய்யுட்; மாலிவில் உள்ள திம்புக்டு; நைஜரில் அகடெஸ்; லிபியாவில் காட்; சாத் நகரில் ஃபைஏ-லார்கோவ் போன்ற தகரங்களாகும். சுற்றுச் சூழல் கடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது. பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலைவனமாக மாறி விட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி 22o முதல் 24.5o சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து சஹாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது உலகிலேயே வெப்பம் மிகுந்த பகுதியாகும். ஆனாலும் இது வறண்ட பகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன. அவற்றிற் சில மலைகளில் கோடை காலங்களிலும் பனி படர்ந்திருக்கும். திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும். சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்து விடும். இதில் முக்கியமான மலைத் தொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன. எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புக்கள் உள்ளன.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்..சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடுமையாக வீசும். இங்கு இரும்புத் தாதுக்களும் பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும், அல்ஜீரியாவில் எண்ணெயும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடைக்கின்றன. தாவரங்களும் விலங்குகளும் சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர். இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பாலத்தீன மஞ்சள் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது. எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே. பல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப் பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறு மான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக் கூடியன. அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாராச் சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன. பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும். இங்கு வெள்ளி எறும்புகள் எனும் உயிரினமும் உள்ளது. இது பூமிக்கடியில் குழிகளில் வசிக்கும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்து விடும். இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொள்ளும். வரலாறு நூபியர் நவீன கற்காலத்தில், அஃதாவது பொ.மு. 9500 இல் பாலைவனமாக மாற தொடங்க முன், இங்கு மத்திய சூடான் பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத் தேவையான உணவை வழங்கும் காலநிலை நிலவி வந்தது. எகிப்தியர்கள் போனீசியர்கள் கிரேக்கர்கள் நகர நாகரீகம் இஸ்லாமிய விஸ்தரிப்பு ===துருக்கியர்களின் காலம்=== ஐரோப்பியர்களின் குடியேற்றவாதம் பேரரசுகளின் உடைவுகளும் அதன் பின்னான காலமும் மக்களும் மொழிகளும் caravan transporting black African slaves across the Sahara.]] சகாராவைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பூர்வீகத்தைக் கொண்டவர்களாயும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபபர்களாகவும் உள்ளனர். அரேபிய மொழிகளே அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளன. படங்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் About Sahara subsurface நீரியல் and planned usage of the நிலத்தடி நீர்ப்படுகை Sahara Overland பாலைவனங்கள் ஆப்பிரிக்கா அரபு மொழிச் சொற்கள்
5672
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
அமேசான் ஆறு
அமேசான் ஆறு (ஆங்கிலம்: Amazon River) (இலங்கை வழக்கு: அமேசன் ஆறு; பொதுவாக சுருக்கமாக: அமேசான் ( அல்லது ; எசுப்பானியம் மற்றும் ) தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. அமேசான் பாயும் நாடுகள் இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன. வடிநிலம் அமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது. அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது. அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது. தோற்றம் பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன. பெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன. வெள்ளம் அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும். மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம். கழிமுகம் இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும். காட்டு உயிர்கள் உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது. இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும். அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும். அமேசான் மழைக்காடுகள் முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது. மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால்,அந்நாடு உலகிலேயே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது. மேற்கோள்கள் தென் அமெரிக்க ஆறுகள்
5674
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
மகாவலி ஆறு
மகாவலி ஆறு அல்லது மகாவலி கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பீதுறுதாலகாலிருந்து ஊற்றெடுத்து திருகோணமலையில் கடலில் சேர்கின்றது. இது இலங்கையின் மிக நீளமான ஆறாகும், மேலும் நீரோட்டத்தின் படி முதலாவது பெரிய ஆறும் ஆகும். இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. மகாவலி கங்கை என்பது சிங்கள மொழியில் மணற்பாங்கான பெரும் ஆறு எனப் பொருள் தரும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 22282 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 40 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 10237 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் முதலாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும். இலங்கையின் முக்கிய நீர்மின் திட்டங்கள் மகாவலியை மறித்துக் கட்டப்பட்ட அணைகள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய நீர்மின் திட்டங்கள்: மேல் கொத்மலை நீர்மின் திட்டம் கொத்மலை நீர் மின் திட்டம் உக்குவளை நீர்மின் திட்டம் விக்டோரியா நீர் மின் திட்டம் இரந்தெனிகலை நீர்மின் திட்டம் இரந்தம்பை நீர்மின் திட்டம் போவதன்னை நீர்மின் திட்டம் உக்குவளை நீர்மின் திட்டம் இவற்றுக்கு மேலதிகமாக பல நீர்பாசனத் திட்டங்களும் இவ்வாற்றில் அமைக்கப்பட்டுள்ளன. அவை: மினிப்பே பொல்கொல்லை உல்கிட்டிய/ரக்கிந்தை மாதுரு ஓயா மேலும் பார்க்க இலங்கையின் ஆறுகள் ஆதாரங்கள் இலங்கையின் ஆறுகள்
5690
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF-
டெசி-
டெசி (சின்னம் d) எஸ்.ஐ முறைமை அலகுகளில் 10−1 (1/10) அளவுடைய காரணியை குறிக்கக்கூடிய எஸ்.ஐ முன்னொட்டு ஆகும். பத்தாவது (10ஆவது) எனப் பொருள் தரும் decimus என்ற இலத்தீன சொல்லில் இருந்து உருவான இச்சொல், 1795ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இவற்றையும் பார்க்கவும் எஸ்.ஐ முன்னொட்டு எஸ்.ஐ முன்னொட்டுக்கள்
5697
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
துறைமுகம்
துறைமுகம் (port) என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கி செல்வதற்குரிய இடம் ஆகும். இங்கே கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளருக்கு இருப்பிடம் போன்றவை வழங்கப்படும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப்படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ, பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்துவருகின்றன. துறைமுகங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பறைசாற்றும் முக்கிய அம்சமாக உள்ளது. இது மிகப் பெரும் சரக்குகள், பொருட்களை ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடல்வழிப் போக்குவரத்தின் மூலம் எடுத்துச் செல்லவும் உதவுகின்றன. செயற்கைத் துறைமுகம் - எடுத்துக்காட்டு - சென்னைத் துறைமுகம் இயற்கைத் துறைமுகம் - மும்பைத் துறைமுகம் சங்ககாலத் துறைமுகங்கள் நீர்ப்பெயற்று - சங்க காலக் கச்சி அரசன் இளந்திரையனின் நீர்ப்பெயற்று துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் இருந்தது. புகார் கொற்கை முசிறி தொண்டி பந்தர் அடிக்குறிப்பு
5699
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
நிலைமாற்று பொருளாதாரம்
நிலைமாற்று பொருளாதாரம் (switching economy) எனப்படுவது சமவுடமை நாடுகள் அண்மைக்காலமாக தங்கள் மத்திய திட்டமிடல் பொருளாதாரத்தை கைவிட்டு முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு மாற்றம் பெறும் செயற்பாடாகும். இதற்கு காரணமாக அமைவது திட்டமிடல், உற்பத்தி திறன், விலை, பொருளாதார வளர்ச்சி என்பவற்றால் இந்நாடுகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளாகும். நிலைமாறிக் கொண்டிருக்கும் சில நாடுகள்: ரஷ்யா சீனா வியட்நாம் பல்கெரியா போலந்து செக் குடியரசு கம்போடியா பொருளியல்
5700
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE
லூதியானா
லூதியானா இந்திய நட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் சட்லெஜ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது வட இந்தியாவில் ஒரு முக்கியமான தொழில் மையமாகும். குறிப்புகளும் மேற்கோள்களும் நகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள் பஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பஞ்சாபிலுள்ள மாநகரங்கள்
5701
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
எரிமலை
எரிமலை (Volcano) என்பது புவி போன்ற திண்மக் கோள்களின்உட்புறத்திலுள்ள பாரைக்குழம்பு அரையிலி இருந்து சூடான அனற்குழம்பு, சாம்பல், வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துளை அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக அனற்குழம்பை வெளியுமிழும் நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை தொடர்புள்ளது. "வால்கனோ" (volcano) என்ற சொல் இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக் கடவுளான வல்கன் (தொன்மம்) என்னும் பெயரிலிருந்து பெற்றதாகும். பொதுவாக கண்டத்திட்டு அடுக்குகள் விரிகின்ற அல்லது குவிகின்ற இடங்களில் எரிமலைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,கடல் நடுவண் முகடு. அட்லாண்டிக் நடுவண் முகடு, கண்டத்திட்டு அடுக்குகள் விரிவதால் ஏற்பட்ட எரிமலைகளுக்கு சான்றாக உள்ளது; பசிபிக் நெருப்பு வளையம்|] கண்டத்திட்டு அடுக்குகள் குவிவதால் உருவாகியதற்கான சான்றாக உள்ளது. முரண்பாடாக, கண்டத்திட்டு அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று படர்ந்திருக்கும் நிலையில் வழக்கமாக எரிமலைகள் உருவாவதில்லை. புவியோடு நீள்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் எரிமலைகள் உருவாகின்றன. இவை வெப்பப் பகுதி சாராத கண்டத்திட்டிடையிலான எரிமலை நிகழ்வுகள் எனப்படுகின்றன. இவை ஆப்பிரிக்கப் பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ள "வெல்ஸ்-கிரே கிளியர்வாட்டர் எரிமலைப் பகுதி", வட அமெரிக்காவில் உள்ள ரியோ பெரும்பிளவிலும் ஐரோப்பாவில் ஈஃபிள் எரிமலைகளிலும் உள்ள ரைன் கிரேபன் ஆகிய பகுதிகளைப் போன்றவையாகும். வெப்பப்பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உருவாகின்றன. இத்தகைய வெப்பப்பகுதிகள் எனப்படுபவை, உதாரணத்திற்கு ஹவாயில் உள்ளவை, அடுக்கு எல்லையின் அப்பாலிருந்து உருவாகக்கூடியவை. வெப்பப்பகுதி எரிமலைகள் சூரியமண்டலத்தில் உள்ள அனைத்து வான்பொருள்களிலும் காணப்படுகின்றன, குறிப்பாக பாறைக் கோள்களிலும் நிலவுகளிலும் இது காணப்படுகிறது. கண்டத்திட்டு அடுக்குகளும் வெப்பப் பகுதிகளும் விரிவுறும் கண்டத்திட்டு எல்லைகள் கடல் நடுவண் முகடுகளில் இரண்டு கண்டதிட்டு அடுக்குகள் விரிவுறும்போது, வெப்பமான உருகிய பாறையால் ஏற்படுகின்ற புதிய கடல் மேல்ஓடு மெதுவாக குளிர்ந்து கெட்டிப்படுகிறது. கண்டத்திட்டு அடுக்குகள் இழுப்பால் கடல் நடுவண் முகடுகளில் உள்ள மேல்அடுக்கு மிகவும் மெலிதாக இருக்கிறது. மேல்அடுக்கு மெலிதாக இருக்கும் காரணமாக, வெளிப்படும் அழுத்தம் வெப்பநிலை மாறாத நீட்டிப்பிற்கு வழிவகுக்கிறது, புவியின் அகட்டுக்கு மேலே அமைந்த மென்திரி அடுக்கின் ஒரு பகுதி உருகுவதும் மேலெழுவதும் கூட எரிமலை நிகழ்விற்கும் புதிய கடல் மேல்அடுக்கு உருவாவதற்கும் காரணமாகிறது. பெரும்பாலான விரிவுறும் கண்டத்திட்டு எல்லைகள் கடலின் அடிப்பகுதியில் இருக்கின்றன. எனவே பெரும்பாலான இத்தகைய எரிமலை நிகழ்வுகளும் கடலுக்கு கீழ்ப்புறம், புதிய கடல்தளத்தை உருவாக்குவதாகவே அமைகின்றன. அதிவெப்ப துளைகள் அல்லது ஆழ்கடல் துளைகள் என்பவை இவ்வகையான எரிமலை நிகழ்விற்கான எடுத்துகாட்டாகும். கடல் நடுவண் முகடு கடல்மட்டத்திற்கு மேல்பகுதி வரை எழும்போது ல் எரிமலைத் தீவுகள் உருவாகின்றன. எடுத்துகாட்டு: ஐஸ்லாந்து. குவியும் கண்டத்திட்டு எல்லைகள் ஒன்றின்மேல் ஒன்றுள்ள அடுக்குகள் என்பவை இரண்டு அடுக்குகள், வழக்கமாக கடல் அடுக்கு மற்றும் கண்டத்துக்குரிய அடுக்குகள் மோதிக்கொள்ளும் இடங்களாகும். இந்த நிகழ்வில், கடல் அடுக்கு ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்படுவது அல்லது கண்டத்துக்குரிய அடுக்கிற்கு கீழே ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதால் கடற்கரைக்கு அருகாமையில் ஆழ்கடல் அகழி ஒன்றை உருவாக்கிவிடுகின்றன. ஒன்றின்மேல் ஒன்றுள்ள அடுக்கால் வெளியேற்றப்படும் தண்ணீர் மேல்பகுதியில் இருக்கும் மெல்லிய குறுக்கு அடுக்கின் உருகும் வெப்பநிலையைக் குறைத்து கற்குழம்புகளை (மாக்மா) உருவாக்குகிறது. இந்த கற்குழம்பானது அதனுடைய உச்ச அளவு சிலிக்கான் காரணமாக தொடர்ந்து மிகவும் பி்சுபிசுப்பாகவே இருப்பதால் மேல்பகுதியை எட்டாமலும் அடிப்பகுதியை குளிர்விக்காமலும் இருந்துவிடுகிறது. இது மேல்பகுதியை எட்டும்போது எரிமலையாக உருவாக்கப்படுகிறது. இந்தவகையான எரிமலைக்கு எட்னா எரிமலை மற்றும் பசிபிக் நெருப்பு வளையத்தில் உள்ள எரிமலைகள் ஏற்ற உதாரணங்களாகும். வெப்பப் பகுதிகள் வழக்கமாக வெப்பப் பகுதிகள் கண்டத்திட்டு அடுக்குகளில் காணப்படுவதில்லை, ஆனால், பூமியின் இதர பகுதிகளைவிட மெலிதாகும் விதமாக மேல்அடுக்குப் பகுதியை எட்டும்வரை பூமியின் மெல்லிய அடுக்கினுடைய வெப்பச் சலனம் உருவாக்குகின்ற ஒரு வெப்பமான தூண் மேல்நோக்கி வரும் இடத்தில் காணப்படுகிறது. மேல்நோக்கி வரும் பாறைகள் மேல்ஓடு உருகுவதற்கு காரணமாக இருப்பதோடு மாக்மா வெளியேறும் துவாரங்களையும் ஏற்படுத்துகின்றன. டெக்டோனிக் அடுக்குகள் நகரும்போது மேல்நோக்கி வரும் பாறைகள் அதே இடத்தில் இருக்கும் நிலையில், அதன்பிறகு ஒவ்வொரு எரிமலையும் அப்படியே இருந்துவிடுகிறது, பின்னர் வெப்பப் பகுதிக்கு மேலாக அந்த அடுக்கு நகர நகர புதிய எரிமலை உருவாகிறது. இவ் வகையிலேயே ஹவாய் தீவுகள் உருவானதாக கருதப்படுகிறது, அதேபோல் தற்போது யெல்லோஸ்டோன் கால்டிராவுடன் உள்ள பாம்பு ஆற்றுப்படுக்கை வெப்பப் பகுதிக்கு மேல்புறமாக உள்ள தென் அமெரிக்க அடுக்கின் பகுதியாக உள்ளது. எரிமலையின் அம்சங்கள் எரிமலைகள் பொதுவாக கூம்புவடிவமுள்ள மலையாகவும், அதனுடைய சிகரத்திலுள்ள எரிமலை வாயிலிலிருந்து எரிமலைக்குழம்பு மற்றும் நச்சு வாயுக்களை உமிழ்வதாகவும் அறியப்படுகிறது. பலவகை எரிமலைகளுள் ஒன்றினை இது விவரிக்கிறது, எரிமலையின் அம்சங்கள் இன்னும் மிகச் சிக்கலானதாக இருக்கிறது. எரிமலைகளினுடைய அமைப்பும் செயல்பாடும் பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கின்றன. சில எரிமலைகள் சிகர எரிமலை வாயிலைவிட எரிமலைக்குழம்பு குவிமாடத்தினால் உருவாக்கப்பட்ட படுக்கைவடிவ உச்சியைக் கொண்டதாக அமைந்துள்ளன, அதேசமயம் மற்றவை பரந்த பீடபூமி போன்ற நிலவெளி அம்சங்களைக் கொண்டுள்ளவையாக இருக்கின்றன. எரிமலை பொருட்களை (எரிமலைக்குழம்பு, இது மேல்தளத்தையும், சாம்பலையும் விட்டு விலகிவிடுவதால் மாக்மா எனப்படுகிறது) மற்றும் வாயுக்கள் (முக்கியமாக நீராவி மற்றும் காந்தப்புல வாயுக்கள்) வெளியிடுகின்ற துளைகள் நிலவடிமெங்கும் காணப்படுகின்றன. இத்தகைய பல துளைகள், ஹவாயின் கேலாயினுடைய பக்கவாட்டில் உள்ள புயுஓஒ போன்ற சிறிய கூம்புகள் உருவாவதற்கு வழிச் செய்கின்றன. கிரையோ எரிமலைகள் (அல்லது ஐஸ் எரிமலைகள்), குறி்ப்பாக ஜூபிடர் சனி மற்றும் நெப்டியூன் கிரகங்களின் நிலவுகளில் உள்ளவை; மற்றும் புதைசேற்று எரிமலைகள் ஆகியவை பிற எரிமலை வகைகளாகும், இவற்றின் உருவாக்கம் தெரியவராத காந்தப்புல செயல்பாட்டோடு சமப்ந்தப்பட்டவையாகவே உள்ளன. புதைசேற்று எரிமலை உண்மையில் நெருப்புள்ள எரிமலையின் துவாரமாக இருப்பது தவிர்த்து, உமிழும் புதைசேற்று எரிமலைகள் நெருப்புள்ள ழ வெப்பநிலைகளைவிட குறைவானதாகவே உள்ளன. பிளவுற்ற துளைகள் எரிமலைக்குரிய பிளவுற்ற துளைகள் என்பது தட்டையான, நேர்க்கோட்டு வெடிப்புகளாகும் இவற்றின்மூலம் எரிமலைக்குழம்பு வெளியேறுகிறது கவச எரிமலைகள் கவச எரிமலைகள், பரந்த கவசம் போன்ற அம்சங்களுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள இவை, துளையிலிருந்து வெகு தூரத்திற்கு ஓடக்கூடிய குறைவான-பிசுபிசுப்புத் தன்மையுள்ள எரிமலைக்குழம்பினால் உருவாகின்றன. ஆனால் பொதுவாக இவை பயங்கரமான முறையில் வெடிப்பதில்லை. குறைவான பிசுபிசுப்புத் தன்மையுள்ள சிலிக்கானை குறைவான அளவில் பெற்றுள்ளதால், கவச எரிமலைகள் கண்ட அமைப்புளைவிட கடல் அமைப்புகளில் பெரும்பாலும் பரவலாக காணப்படுகின்றன. ஹவாய் எரிமலை தொடர் என்பது கவச கூம்புகளின் வரிசை என்பதோடு அவை ஐசுலாந்தில் பரவலாக இருக்கின்றன. எரிமலைக்குழம்பு குவிமாடங்கள் எரிமலைக்குழம்பு குவிமாடங்கள் அதிக பிசுபிசுப்புள்ள எரிமலைக்குழம்பு மெதுவாக உமிழப்படுவதால் உருவாகின்றன. இவை சிலநேரங்களில் முந்தைய எரிமலை உமிழ்வினால் உருவான எரிமலை வாயிளுக்குள்ளாக உருவாகின்றன (மவுண்ட் செயிண்ட் ஹெலனில் உள்ளதுபோல்), ஆனால் லாஸன் சிகரத்தில் உள்ளதுபோல் தனி்த்தும் உருவாகக்கூடியதாக இருக்கிறது. ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டுள்ள எரிமலைகளைப்போல், அவை மோசமான, எரிமலை வெடிப்பை உண்டாக்கக்கூடியவை, ஆனால் சாதாரணமாக அவற்றின் எரிமலைக்குழம்புகள் அவை உருவான துளையிலிருந்து வெகுதூரத்திற்கு ஓடுவதில்லை. எரிமலைக் கூம்புகள் (தழல் கூம்புகள்) எரிமலைக் கூம்புகள் அல்லது தழல் கூம்புகள் எனப்படுபவை, துளையைச் சுற்றி உருவாகியுள்ள ஸ்கோரியா மற்றும் பைரோகிளாஸ்டிக்ஸ் (இவை இரண்டும் எரிமலை வகைகள் என்பதால் தழல்களை ஒத்திருக்கின்றன) ஆகியவற்றின் மிகச்சிறிய துண்டுகள் உமிழப்படுவதன் காரணமாக உருவாகின்றன. 30 முதல் 400 மீட்டர்கள் வரையிலான கூம்பு வடிவ மலையை உருவாக்கக்கூடிய இவை குறுகிய காலமே நீடிக்கக்கூடியவை. பெரும்பாலான தழல் கூம்புகள் ஒரேயொரு முறை மட்டுமே உமிழும். தழல் கூம்புகள் பெரிய எரிமலைகளில் பக்கவாட்டு துவாரங்களாக உருவாகலாம் அல்லது அவற்றின் மீதே உருவாகலாம். மெக்சிகோவிலுள்ள பரீகுட்டீன் மற்றும் அரிஸோனாவிலுள்ள சன்செட் கிரேட்டர் ஆகியவை தழல் கூம்புகளுக்கான உதாரணங்களாகும். நியூ மெக்சிகோவிலுள்ள, கயா டெல் ரியோ 60 தழல் கூம்புகளுக்கும் அதிகமாக உள்ள எரிமலைப் பகுதியாகும். சுழல்வடிவ எரிமலைகள் (கலப்பு எரிமலைகள்) சுழல்வடிவ எரிமலைகள் அல்லது கலப்பு எரிமலைகள் என்பது எரிமலைக்குழம்பு வெளியேற்றமும், மாற்று அடுக்குகளில் உள்ள பிற உமிழ்வுகளும் கலந்த உயரமான கூம்புவடிவ மலைகளாகும், இதற்கு ஸ்ட்ராட்டா(strata) என்று பெயரிடப்பட்டுள்ளது. கலப்பு எரிமலைகள் என்றும் அறியப்படும் சுழல்வடிவ எரிமலைகள், வெவ்வேறுவிதமான உமிழ்வுகளின்போது பல்வேறு அமைப்புகளிலிருந்து உருவாகின்றன. சுழல்வடிவ/கலப்பு எரிமலைகள் தழல்கள், சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்பினால் உருவானவை. தழல்களும் சாம்பலும் உச்சியில் ஒன்றின்மேல் ஒன்று குவிகின்றன, அவை குளிர்ந்து கெட்டிப்படுகின்ற இடத்தில், எரிமலைக்குழம்பு சாம்பலுக்கு மேல் வழிகிறது, பின்னர் இந்த நிகழ்முறை மீண்டும் தொடங்குகிறது. ஜப்பானிலுள்ள மவுண்ட்.ஃபுயி, ஃபிலடெல்பியாவிலுள்ள மவுண்ட் மயன், மற்றும் இத்தாலியிலுள்ள மவுண்ட் வெசுவியஸ் மற்றும் ஸ்ட்ரோம்போலி ஆகியவை முதல்தர உதாரணங்களாகும். பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில், சுழல்வடிவ எரிமலைகளால் ஏற்பட்ட உமிழ்வுகள் நாகரிகங்களிடத்தில் பேரளவு அபாயத்தை விளைவித்துள்ளன. ராட்சத எரிமலைகள் ராட்சத எரிமலை என்பது பெரிய அளவிலான கால்டிராவைக் கொண்டிருப்பவை என்பதோடு, பெரிய அளவில், சில நேரங்களில் கண்டங்கள் அளவுக்கு சூறையாடக்கூடிய திறனுள்ளவை. மிகப்பெரும் அளவில் சல்ஃபர் மற்றும் சாம்பலை உமிழக்கூடியது என்பதால் இதுபோன்ற உமிழ்வுகள் அதன்பிறகு உலக அளவிலான வெப்பநிலையை தீவிரமாக குளிரச்செய்யும் திறனுள்ளவை. இவை மிக அபாயகரமான எரிமலை வகைகளாகும். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள யெல்லோஸ்டோன் கால்டிரா, நியூ மெக்சிகோவிலுள்ள வால்ஸ் கால்டிரா (இரண்டும் மேற்கத்திய ஐக்கிய நாடுகள்), நியூசிலாந்தில் உள்ள டாபோ ஏரி மற்றும் இந்தோனேசியா சுமத்ராவில் உள்ள டோபா ஏரி ஆகியவை இதற்கான உதாரணங்களாகும். சூப்பர் எரிமலைகள் எண்ணிலடங்கா பகுதிகளை ஆக்கிரமித்துவிடுவதால் பல நூற்றாண்டுகள் கழித்து அவற்றை அடையாளம் காண்பது சிரமம். பெரிய அளவிலான நெருப்புப் பிரதேசங்களும் சூப்பர் எரிமலைகளாக கருதப்படுகின்றன, ஏனென்றால் இவை பெருமளவிற்கு கருங்கல் குழம்பை வெளியிடக்கூடியவையாக இருக்கன்றன, ஆனால் இவை வெடிக்கக்கூடியவையாக இருப்பதில்லை. ஆழ்கடல் எரிமலைகள் ஆழ்கடல் எரிமலைகள் கடல்தளத்தில் உள்ள பொதுவான அம்சங்களாகும். சில உமிழ்கின்றவையாக, ஆழமில்லாத தண்ணீரி்ல் கடல்மட்டத்திற்கு வெளியே நீராவியையும், பாறைத் துகள்களையும் வெளியிட்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளும். அதிக ஆழத்தில் இருக்கின்ற மற்ற பலவற்றிற்கும் மேலுள்ள தண்ணீரின் எடை காரணமாக நீராவி மற்றும் வாயுக்கள் வெடித்துச் சிதறுவது தடுக்கப்படுகிறது, இருப்பினும் அவற்றின் எரிமலை வாயுக்கள் காரணமாக ஒலியலைக் கருவிகள் மற்றும் தண்ணீரை நிறம் மாற்றம் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். படிகக்கல் தொகுதிகளும் ஏற்படலாம். பெரிய அளவிலான ஆழ்கடல் உமிழ்வுகள்கூட கடல் மேல்தளத்தை பாதிக்காமல் இருக்கலாம். காற்றோடு ஒப்பிடுகையில் தண்ணீர் விரைவாக குளிர்ச்சியடைவது மற்றும் மிதக்கும்தன்மை அதிகரிப்பதன் காரணமாக, ஆழ்கடல் எரிமலைகள், மேல்தள எரிமலைகளோடு ஒப்பிடும்போது அவற்றின் எரிமலை துவாரங்களின் மீது செங்குத்தான தூண்களை உருவாக்குகின்றன எனலாம். அவை கடல் மேல்தளத்தைப் பிளந்து புதிய தீவுகளை உருவாக்குமளவிற்கு மிகப்பெரியதாக மாற்றமடையலாம். பருமனான எரிமலைக்குழம்பு ஆழ்கடல் எரிமலைகளின் பொதுவான உமிழ்வு உருவாக்கமாகும். உயர்வெப்ப துளைகள் இந்த எரிமலைகளுக்கு அருகாமையில் பொதுவாக காணப்படக்கூடியவை மேலும் இவற்றில் சில கரைந்துருகும் கனிமப்பொருளைச் சார்ந்து சில தனிச்சிறப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவுகின்றன. உறைபனி கீழுள்ள எரிமலைகள் உறைபனி கீழுள்ள எரிமலைகள் உறைபனிக் கட்டிகளுக்கு கீழே உருவாகின்றன. அவை உச்சியிலிருந்து ஓடும் விரிந்த பருமனான எரிமலைக்குழம்பு மற்றும் பலோகனைட்டினால் உருவாகின்றன. உறைபனிக்கட்டி உருகும்போது, உச்சியிலுள்ள எரிமலைக்குழம்பு குலைவுற்று தட்டையான உச்சிப்பகுதியுள்ள மலையை வி்ட்டுச்செல்கிறது. பின்னர், பருமனான எரிமலைக்குழம்பும் குலைந்து 37.5 டிகிரி கோணத்தைக் காட்டுகிறது. இந்த எரிமலைகள் டேபிள் மலைகள், டுயாக்கள் அல்லது (வழக்கத்திற்கு மாறாக) மொபர்க் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ் வகையான எரிமலைக்கான மிகச்சிறந்த உதாரணத்தை ஐசுலாந்தில் காணமுடியும், இருப்பினும், பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் டுயாக்கள் இருக்கின்றன. இந்தச் சொல்லின் மூலவேர், டுயா ஆற்றின் பகுதியில் உள்ள சில டுயாக்களின் காரணமாகவும், வட பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டுயா பிரதேசத்தின் காரணமாகவும் டுயா பியூட்டிலிருந்து வந்துள்ளது. டுயா பியூட்தான் முதலாவதாக பகுப்பாய்வு செய்யப்பட்ட நிலவமைப்ப், எனவேதான் அதன் பெயர் இவ் வகையான எரிமலை அமைப்புக்கான புவியியல் இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டது. டுயா மலைகள் மாகாண பூங்காவானது, டுயா ஏரியின் வடக்குப் பகுதியிலும், யுகோன் பகுதி எல்லைக்கு அருகாமையில் உள்ள ஜென்னிங்ஸ் ஆற்றின் அருகாமையிலும் அமைந்துள்ள இதன் வழக்கத்திற்கு மாறான நிலவெளியை பாதுகாக்கும் விதமாக நிறுவப்பட்டுள்ளது. புதைசேற்று எரிமலைகள் புதைசேற்று எரிமலைகள் அல்லது புதைசேற்று குவிமாடங்கள் என்பவை புவிக் கழிவு நீர்மங்கள் மற்றும் வாயுக்களின் உருவாக்கமாகும், இருப்பினும் இதுபோன்ற செயல்பாட்டிற்கு காரணமாக இருக்கக்கூடிய வேறுசில நிகழ்முறைகளும் இருக்கின்றன. 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கும் 700 மீட்டர் உயரத்திற்கும் உள்ளவை மிகப்பெரிய அமைப்புக்களாகும். உமிழப்படும் மூலப்பொருள் எரிமலைக்குழம்பு கலவை எரிமலைகளை வகைப்படுத்துவதற்கான மற்றொரு முறை உமிழ்ந்த மூலப்பொருள்களின் கலவையின் (எரிமலைக்குழம்பு) மூலமாகும், ஏனெனில் இது எரிமலையின் வடிவத்தை மாற்றியமைக்கிறது. எரிமலைக்குழம்பை நான்கு வெவ்வேறு வகை கலவைகளாக விரிவாக பிரிக்கலாம் (காஸ் & ரைட், 1987): உமிழப்பட்ட எரிமலைக்குழம்பு அதிக விகிதத்தில் (>63%) சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு ஃபெல்சிக் எனப்படுகிறது. ஃபெல்சிக் எரிமலைக்குழம்புகள் (டேசைட் அல்லது ரையோலைட்கள்) அதிக பிசுபிசுப்புத்தன்மை உள்ளவையாக இருக்கின்றன (மிகுந்த நீர்மமாக அல்லாமல்) குவிமாடங்களாகவோ அல்லது குறுகிய, தடித்த ஓட்டங்களாகவோ உமிழப்படுகின்றன. பிசுபிசுப்புள்ள எரிமலைக்குழம்பு சுழல்வடிவ எரிமலைகளையோ அல்லது எரிமலைக்குழம்பு குவிமாடங்களையோ உருவாக்குவனவாக இருக்கின்றன. கலிபோர்னியாவிலுள்ள லாஸன் சிகரம் ஃபெல்சிக் எரிமலைக்குழம்பிலிருந்து உருவானதற்கான ஒரு உதாரணமாகும், இது உண்மையிலேயே ஒரு பெரிய குவிமாடமாகும். சிலிக்கான் உள்ள மாக்மாக்கள் மிகவும் பிசுபிசுப்பாக இருப்பதால், அச்சமயத்தில் இருக்கின்ற ஆவியாதலை படிகமாக மாற்றக்கூடியவையாக இருக்கின்றன, அவை மாக்மா பயங்கரமாக வெடிப்பதற்கும், முடிவில் சுழல்வடிவ எரிமலைகளை உருவாக்குவதற்கும் காரணமாகின்றன. பைரோகிளாஸ்டிக் ஓட்ட இக்னிம்பிரைட்கள் இத்தகைய எரிமலைகளின் அதிக அபாயமுள்ள உருவாக்கங்களாகும், இவை உருகிய எரிமலைச் சாம்பலின் கலவை என்பதால் காற்றுமண்டலத்திற்குள் செல்ல மிக கனமானவையாக இருக்கிறது, இதனால் அவை எரிமலையின் சரிவுகளை தழுவியபடி பெரிய உமிழ்வுகளின்போது அவற்றின் துளைகளிலிருந்து வெகுதொலைவிற்கு பயணிக்கின்றன. 1,200 °Cக்கும் அதிகமாக உள்ள வெப்பநிலை பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தில் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது, அது அதன் தடத்திலுள்ள அனைத்தையும் எரித்து சாம்பலாக்குவதோடு சேகாரமாகியிருக்கும் வெப்பமான பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தின் அடுக்குகளை பல மீட்டர்களுக்கு கெட்டியாக்குகிறது. அலாஸ்காவின் பத்தாயிரம் புகைபோக்கிகள் உள்ள பள்ளத்தாக்கு, 1912 ஆம் ஆண்டில் காத்மைக்கு அருகாமையில் உள்ள நோவாரப்தாவின் உமிழ்வால் உருவானது, இது கெட்டியான பைரோகிளாஸ்டிக் ஓட்டம் அல்லது இக்னிம்பிரைட் சேகாரத்தின் உதாரணமாகும். போதுமான அளவிற்கு லேசானதாக உள்ள எரிமலைச் சாம்பல் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் உயர சென்று உமிழப்படுவது பல கிலோமீட்டர்களுக்கு பயணித்து சாம்பல்பாறையாக தரையில் விழுகிறது. உமிழப்பட்ட மாக்மா 52–63% சிலிக்காவைக் கொண்டிருந்தால், அந்த எரிமலைக்குழம்பு இடைநிலை கலவை எனப்படுகிறது. இத்தகைய "ஆண்டெசிடிக்" எரிமலைகள் சாதாரணமாக ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு மேல் மட்டுமே ஏற்படுகின்றன (எ.கா: இந்தோனேஷியாவில் உள்ள மவுண்ட் மெராபி). உமிழப்பட்ட மாக்மா 52% குறைவாக மற்றும் 45% க்கு கூடுதலாக சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு மாஃபிக் எனப்படுகிறது (ஏனெனில் இது அதிக அளவிலான மாக்னீசியத்தைக் கொண்டுள்ளது(Mg)) மற்றும் இரும்பு (Fe) அல்லது கருங்கல் வகை. இந்த எரிமலைக்குழம்புகள் சாதாரணமாக ரையோலிட்டிக் எரிமலைக்குழம்பைவிட மிகக்குறைந்த பிசுபிசுப்புத் தன்மையுடனே இருக்கும், அவற்றின் உமிழ்வு வெப்பநிலையைப் பொறுத்து ஃபெல்சி்க் எரிமலைக் குழம்புகளைவிட வெப்பமாகவும் இருக்கும். பரந்த அளவிலான அமைப்புக்களில் மாஃபிக் எரிமலைக் குழம்புகள் ஏற்படுகின்றன. இரண்டு கடல் அடுக்கு தனி்த்தனி துண்டுகளாக பிரியும் மத்திய கடல் முகட்டில் அந்த இடைவெளியை நிரப்ப பஸால்டிக் எரிமலைக் குழம்பு பெருத்த துண்டுகளாக உமிழப்படுகிறது; கடல் மற்றும் கண்ட மேல்ஓடு ஆகிய இரண்டிலும் உள்ள கவச எரிமலைகளில் (எ.கா: மானா லோவா மற்றும் கிலாயூ உள்ளிட்ட ஹவாய் தீவுகள்). கண்ட கருங்கல் வெள்ளமாக உள்ள இடத்தில். சில உமிழப்பட்ட மாக்மாக்கள் <=45% சிலிக்காவைக் கொண்டிருப்பதோடு அல்ட்ராசல்ஃபூரிக் எரிமலைக்குழம்பையும் உருவாக்குகிறது. கொமேடியாட் என்றும் அறியப்படுகிற அல்ட்ராசல்ஃபூரிக் ஓட்டங்கள் மிகவும் அரிதானவை; உண்மையில், கிரகத்தின் வெப்ப ஓட்டம் அதிகமாக இருக்கும்போது பூமி உருவான துவக்க காலத்திலிருந்து அதன் மேற்பரப்பில் மிகச்சிலவே உமிழ்ந்துள்ளன. அவை வெப்பமான எரிமலைக்குழம்புகள் என்பதுடன், சாதாரணமான மாஃபிக் எரிமலைக்குழம்புகளைவிட மிகவும் நீர்மத்தன்மை வாய்ந்தவையாக இருந்திருக்கக்கூடும். எரிமலைக்குழம்பு கட்டமைப்பு மேல்தள கட்டமைப்பின் அடிப்படையில் இரண்டு வகையான எரிமலைக்குழம்பிற்கு பெயரிடப்பட்டுள்ளது: [19]ஆ[20] ([21]) மற்றும் பஹோய்ஹோய்([22]), இவை இரண்டும் ஹவாய் வேர்ச்சொல்லிருந்து வந்தவையாகும். [23]ஆ[24] கரடுமுரடான சாம்பல் கட்டி மேல்தள பண்புகொண்டது, இது பிசுபிசுப்பான எரிமலைக்குழம்பு ஓட்டத்திற்கு வகைமாதிரி கட்டமைப்பு. இருப்பினும், கருங்கல் வகை அல்லது மாஃபிக் ஓட்டங்கள் [25]ஆ[26] ஓட்டங்களாக உமிழப்படலாம், குறிப்பாக உமிழப்படும் விகிதம் அதிகமாகவும், சரிவு செங்குத்தாகவும் இருந்தால் அவ்வாறு ஏற்படும். பஹோய்ஹோய் மென்மையான, கயிறுபோன்ற அல்லது சுருள் மேல்தள பண்பு கொண்டது, இது பொதுவாக அதிக நீர்மமான எரிமலைக்குழம்பு ஓட்டத்திலிருந்து உருவாகிறது. சாதாரணமாக, மாஃபிக் ஓட்டங்கள் மட்டுமே, உயர் வெப்பநிலையில் உமிழப்படுபவை அல்லது ஓடுவதற்கு பெருமளவில் நீர்மமாக இருப்பதற்கு முறையான வேதியியல் அம்சங்களைக் கொண்டுள்ளதால் பஹோய்ஹோய் ஆக உமிழப்படுகின்றன. எரிமலைச் செயல்பாடு உயிர்த்துடிப்புடையவை மாக்மாடிக் எரிமலைகளை வகைப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான முறை அவற்றின் உமிழ்வுத் தொடர்ச்சியை வைத்து பிரிப்பதாகும், அவற்றில் தொடர்நது உமிழ்பவை உயிர்த்துடிப்புடையவை என்றும், வரலாற்றுக் காலங்களில் உமிழ்ந்து தற்போது அமைதியாய் இருப்பவை உறங்குபவை என்றும், வரலாற்றுக் காலங்களிலும் உமிழாமல் இருப்பவை அழிந்தவை என்றும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தப் பிரபல வகைப்படுத்தல் - குறிப்பாக அழிந்தவை - அறிவியலாளர்களுக்கு நடைமுறையில் அர்த்தமற்றவையே. அவர்கள் மேலே குறிப்பிட்டபடி குறிப்பிட்ட எரிமலைகளின் உருவாக்கம், உமிழ்வு நிகழ்முறை மற்றும் அதன் காரணமாக ஏற்படும் வடிவங்களை வைத்தே வகைப்படுத்துகிறார்கள். எரிமலை ஆராய்ச்சியாளர்களிடையே "உயிர்த்துடிப்புடைய" எரிமலையை வரையறுப்பதில் ஒருமித்த கருத்து இல்லை. எரிமலையின் ஆயுட்காலம் சில மாதங்களிலிருந்து சில மில்லியன் ஆண்டுகள் வரை வேறுபடுபடுகிறது, இதுபோன்று வேறுபடுத்திப் பார்ப்பது சிலநேரங்களில் மனித இனத்தின் ஆயுள் அல்லது நாகரீகங்களோடு ஒப்பிடுகையில் அர்த்தமற்றதாகிறது. உதாரணத்திற்கு, பல எரிமலைகளும் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் டசன் கணக்கான முறைகள் உமிழ்ந்திருக்கின்றன ஆனால் அவை தற்போது உமிழ்வதறாகான அறிகுறிகளைக் காட்டுவதி்ல்லை. இதுபோன்ற எரிமலைகளின் நீண்ட ஆயுட்காலத்தில் அவை மிகவும் செயலாற்றுவதாக இருக்கின்றன. இருப்பினும் மனித ஆயுட்காலத்தில் அவை அவ்வாறு இல்லை. ஒரு எரிமலை செயலாற்று வதை, வழக்கத்திற்கு மாறான பூகம்பம் அல்லது குறிப்பிடத்தகுந்த புதிய வாயு வெளியேற்றம் போன்று, தற்போது உமிழ்கிறதா அல்லது செயலற்றிருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கொண்டே வழக்கமாக அறிவியலாளர்கள் பரிசீலனை செய்கின்றனர். ஒரு எரிமலை வரலாற்றுக் காலத்தில் உமிழ்ந்திருந்தாலே அதை உயிர்த்துடிப்புடைய எரிமலையாக பல அறிவியலாளர்களும் கருதுகின்றனர். பதிவுசெய்யப்பட்ட வரலாற்றுக் கால வரையறை பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமாகும்; மெடிட்டெரேனியனில் பதிவுசெய்யப்பட்ட வரலாறு 3,000 வருடங்களை எட்டுகிறது, ஆனால் ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவின் பசிபிக் வடகிழக்கு வரலாறு 300 ஆண்டுகளுக்கும் குறைவானதாக இருக்கிறது, ஹவாய் மற்றும் நியூசிலாந்தின் வரலாறு 200 ஆண்டுகளே ஆகும். ஸ்மித்ஸோனியன் குளோபல் எரிமலை திட்டத்தின் வரையறைப்படி 10,000 ஆண்டுகளுக்குள் ஒரு எரிமலை உமிழ்ந்திருந்தால் அது உயிர்த்துடுப்புடைய எரிமலை. அழிந்தவை அழிந்துவிட்ட எரிமலைகள் என்பவை, எரிமலையிடம் எரிமலைக்குழம்பு வரத்து இல்லாததால் மீண்டும் உமிழ வாய்ப்பில்லாதது என்று அறிவியலாளர்களால் கருதப்படுவையாகும். ஐக்கிய நாடுகளின் ஹவாய் தீவுகளில் உள்ள பல எரிமலைகள் (ஹவாய் வெப்பப்பகுதி பெரிய தீவுக்கு அருகில் மையம் கொள்வதால் அழிந்துவிட்டவை) மற்றும் மோனோஜெனடிக்காக உள்ள பரீகுட்டீன். மற்றபடி, ஒரு எரிமலை உண்மையிலேயே அழிந்துவிட்டதா என்பதைத் தீர்மானிப்பது சிக்கலாகவே இருக்கிறது. "சூப்பர் எரிமலை" கால்டிராக்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு உமிழ்வு ஆயுள்சுழற்சி உள்ளவை என்று அளவிடப்படுவதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒருமுறைக்கூட உமிழ்ந்திருக்கவில்லை என்றால் அவை அழிந்துவிட்டவை என்பதற்குப் பதிலாக உறங்குவை என்று கருதப்படலாம். உதாரணத்திற்கு, யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள யெல்லோஸ்டோன் கால்டிரா 2 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்பதோடு ஏறத்தாழ 640,000 ஆண்டுகளுக்கு மோசமான முறையில் உமிழ்ந்ததில்லை, இருப்பினும் சமீபத்தில் ஒரு சிறிய அளவிற்கான செயலாற்றல் இருந்தது, அதில் உயர்வெப்ப உமிழ்வு கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளுக்கு குறைவாகவும், எரிமலைக்குழம்பு ஓட்டம் ஏறத்தாழ எழுபதாயிரம் ஆண்டுகளாவும் இருந்தது. இந்தக் காரணத்தினால், யெல்லோஸ்டோன் கால்டிராவை அறிவியலாளர்கள் அழிந்துவிட்டதாக கருதுவதில்லை. உண்மையில், கால்டிரா தொடர்ச்சியான பூகம்பத்தையும், அதிக செயலாற்றுகிற புவிவெப்ப அமைப்பையும் (எ.கா: யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் முழுமையான புவிவெப்பச் செயல்பாடு கண்டுபிடிக்கப்பட்டது) மற்றும் தரைத்தளம் விரைவாக மேல்நோக்கி வருவதாலும் பல விஞ்ஞானிகள் இதை செயலாற்று எரிமலையாகவே கருதுகின்றனர். உறங்கும் எரிமலை யிலிருந்து அழிந்துவிட்ட எரிமலையை வேறுபடுத்திப் பார்ப்பது சிரமம். அதன் செயலாற்றுத்தன்மைகள் குறித்து எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் இருந்தால் அந்த எரிமலைகள் அழிந்துவிட்டவை என்றே கருதப்படுகின்றன. இருந்தபோதிலும், எரிமலைகள் நீண்ட காலத்திற்கு உறங்குகின்றவையாகவே இருக்கலாம், இது "அழிந்தவை" என்று அழைக்கப்படும் எரிமலை மீண்டும் உமிழலாம் என்பதற்கு பொதுவான பண்பு இல்லாமல் இல்லை. ஹெராகுலேனியம் மற்றும் பாம்பி நகரங்களை அழித்த வசூவியஸின் புகழ்பெற்ற 79 ஆம் ஆண்டு உமிழ்வுக்கு முன்னர் அது அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டிருந்தது. மிகச் சமீபத்தில் மாண்ட்சரேட் தீவிலுள்ள நீண்டநாள் உறக்கத்திலிருந்த சாஃபிரியர் மலைகள் எரிமலை 1995 ஆம் ஆண்டில் செயலாற்றத் தொடங்குவதற்கு முன்னர் அழிந்ததாகவே கருதப்பட்டிருந்தது. மற்றொரு சமீபத்திய உதாரணம், அலாஸ்காவி்ல் உள்ள ஃபோர்பீக்டு மலை கி.மு. 8000 முன்பிருந்து உமிழாதிருந்த இது செப்டம்பர் 2006 ஆம் ஆண்டில் உமிழ்வதற்கு முன்னர்வரை நெடுங்காலமாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்க எரிமலைகள் தற்போதுள்ள 16 பத்தாண்டு எரிமலைகள்: எரிமலையின் விளைவுகள் வெவ்வேறு விதமான எரிமலை உமிழ்வு வகைகளும் அதுசார்ந்த செயல்பாடுகளும் உள்ளன: ப (நீராவியால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகள்), உயர் அளவிலான சிலிக்கா எரிமலைக்குழம்பு வெடித்து உமிழ்தல் (எ.கா: ரையோலைட்), குறைவான சிலிக்கா எரிமலைக்குழம்பு பீறிட்டு உமிழப்படுதல் (எ.கா: கருங்கல் வகை), பைரோகிளாஸ்டிக் ஓட்டங்கள், லகர்கள் (கூளங்களாக ஓடுதல்) மற்றும் கரியமில வாயு வெளிப்பாடு. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் மனிதர்களுக்கு தீங்கானவையாக இருக்கின்றன. பூகம்பங்கள், வெப்ப ஊற்றுக்கள், நீராவிகள், புதைசேற்று ஊற்று மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் எரிமலைச் செயல்பாட்டோடு இணைந்திருப்பவை. வெவ்வேறு எரிமலை வாயுக்களின் செறிவுகளும் ஒரு எரிமலையிலிருந்து மற்றொன்றுக்கு குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுகிறது. நீர் ஆவியாதல் என்பது கரியமிலவாயு மற்றும் சல்பர் டையாக்ஸைடு ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் மிதமிஞ்சி இருக்கின்ற எரிமலை வாயு வகைமாதிரியாகும். ஹைட்ரஜன் சல்பைட், ஹைட்ரஜன் குளோரைடு மற்றும் ஹைட்ரஜன் ஃப்ளோரைடு ஆகியவை பிற முதன்மை எரிமலை வாயுக்கள். பெரிய அளவிலான சிறிய மற்றும் பீறிடும் வாயுக்கள் எரிமலை உமிழ்வுகளின்போது காணப்படுகின்றன, உதாரணத்திற்கு ஹைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு, ஹாலோகார்பன்கள், ஆர்கானிக் கலவைகள் மற்றும் ஆவியாகும் இயல்புள்ள உலோக குளோரைடுகள். பெரிய, வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் நீராவி (H2O), கார்பன் டையாக்ஸைடு (CO2), சல்ஃபர் டையாக்ஸைடு (SO2), ஹைட்ரஜன் குளோரைடு (HC1), ஹைட்ரஜன் ஃப்ளோரைடு (HF) மற்றும் சாம்பல் (தூளான மற்றும் மென்மையான பாறைகள்) ஆகியவற்றை வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் பூமியின் தளத்திற்கும் மேலே 16–32 கிலோமீட்டருக்கு (10–20 மைல்கள்) வீசியெறிகிறது. இவ்வாறு வீசப்படுவதிலிருந்து வரும் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள், செறிவான சல்பேட் சாரல்களை உருவாக்குகின்ற வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் விரைவாக கெட்டிப்படுத்துகின்ற சல்பர் டையாக்ஸைடு சல்பூரிக் அமிலமாக (H2SO4) மாற்றப்படுவதிலிருந்து வருகிறது. இந்தச் சாரல்கள் பூமியின் அல்பிடோவை - சூரியனிலிருந்து வரும் இதன் கதிரியக்க பிரதிபலிப்பு விண்வெளிக்கு திரும்புகிறது - அதிகரிக்கச் செய்கிறது, ஆகவே இது பூமியின் தாழ்வான காற்றுமண்டலம் அல்லது அடிவெளிப்பகுதியைக் குளிர்விக்கிறது; இருப்பினும், அவை பூமியிலிருந்து மேல்நோக்கிப் பரவும் வெப்பத்தை உறி்ஞ்சவும் செய்கின்றன, அவ்விடத்தில் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியை வெப்பப்படுத்துகிறது. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பல்வேறு உமிழ்வுகள், ஒன்றிலிருந்து இரண்டு வருட காலகட்டத்தில் அரை டிகிரி வரை (பாரன்ஹீட் அளவுகோலில்) பூமியின் மேல்தளத்தில் உள்ள சராசரி வெப்பநிலையின் வீழ்ச்சிக்கு காரணமானது - அநேகமாக ஹூவாய்நெப்பூட்டினாவின் உமிழ்விலிருந்து வந்த சல்பர் டையாக்ஸைடு 1601 - 1603 ஆம் ஆண்டின் ரஷ்ய பஞ்சத்திற்கு காரணமாக இருக்கலாம். இந்த சல்பேட் சாரல்கள், வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் உள்ள குளோரைன் மற்றும் நைட்ரஜன் ரசாயன உயிரினங்களை மாற்றுகின்றன அவற்றின் மேல்தளங்களில் உள்ள சிக்கலான இரசாயன மாற்றங்களை அதிகரிக்கிறது. இந்த விளைவு, குளோரோப்ளோரோகார்பன் மாசுபாட்டிலிருந்து அதிகரித்த வாயுமண்டலத்திற்கு மேலுள்ள குளோரின் உடன் சேர்ந்து, ஓஸோன் O3) பகுதியை அழிக்கின்ற குளோரின் மோனாக்ஸைடை உருவாக்குகிறது. சாரல்கள் அதிகரித்து கெட்டிப்படுகையில், அவை சுருள் இழை மேகங்களுக்கான பிளவாக செயல்படுகின்ற மேல் அடிவளியில் குடியேறிவிடுகின்றன, அதற்கும் மேல் பூமியின் கதிரியக்கச் சமநிலையை மேம்படுத்துகிறது. பெரும்பாலான ஹைட்ரஜன் குளோரைடு (HCl) மற்றும் ஹைட்ரஜன் ப்ளோரைடு (HF) ஆகியவை உமிழப்படும் மேகத்திலுள்ள நீர்த்திவலைகளில் கரைந்து அமில மழையாக விரைந்து தரையில் விழுகின்றன. தூண்டப்பட்ட சாம்பலும் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியிலிருந்து விரைவாக விழுகிறது; இவற்றில் பெரும்பாலானவை சில நாட்களிலிருந்து சில வாரங்களுக்குள்ளாக நீக்கப்படுகின்றன. இறுதியில், வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் பசுமையில்ல வாயுவான கார்பன் டையாக்சைடை வெளியிடுகிறது, இது பயோஜியோகெமிக்கல் சுழற்சிக்கான கார்பன் மூலாதாரத்தை வழங்குகிறது. எரிமலைகளிலிருந்து வெளிப்படும் வாயுக்கள் அமில மழைக்கு இயல்பான பங்களிப்பாளராக இருக்கின்றன. எரிமலைச் செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 130 முதல் 230 டெராகிராம்கள் (145 மில்லியன் முதல் 255 மி்ல்லியன் வரையிலான ஷார்ட் டன்கள்) வரையிலான கார்பன் டையைக்ஸைடை வெளியிடுகிறது. எரிமலை உமிழ்வுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள்ளாக சாரல்களை தூண்டக்கூடும். பெரிய தூண்டல்கள் வழக்கத்திற்கு மாறான வண்ண அஸ்தமனம் போன்ற காட்சி அம்சங்களுக்கு காரணமாகலாம் என்பதோடு உலகளாவிய தட்பவெப்பத்தை குளிர்வித்து பாதிக்கச் செய்யலாம். எரிமலை உமிழ்வுகள் எரிமலைப் பாறைகளின் தட்பவெப்பநிலை நிகழ்முறை மூலமாக மண்ணில் புரதங்களை அதிகரிக்கச் செய்யும் பலனை வழங்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. இத்தகைய உரமேற்றப்பட்ட மண் செடிகளும் பல்வேறு பயிர்களும் வளர்வதற்கு உதவுகின்றன. எரிமலை உமிழ்வுகள், மாக்மாக்கள் தண்ணீருடன் சேர்ந்து குளிர்வித்து கெட்டிப்படுத்துகையில் புதிய தீவுகளையும் உருவாக்கக்கூடும். பிற கோள் அமைப்புக்களில் உள்ள எரிமலைகள் பூமியின் நிலவில் பெரிய எரிமலைகள் எதுவுமில்லை என்பதுடன் தற்போது எந்த எரிமலை நிகழ்வும் இல்லை, இருப்பினும் சமீபத்திய ஆதாரங்கள் அதில் இன்னும் பாதியளவிற்கு உருகிய மையப்பகுதியைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. எப்படியாயினும், நிலவானது மரியா (நிலவில் காணப்படும் கருமையான பாதைகள் )பள்ளத்தாக்குகள் மற்றும் குவிமாடங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கலாம். வீனஸ் கோள் 90% கருங்கல் வகையைக் கொண்டிருக்கிறது, எரிமலை நிகழ்வு அதன் மேல்தளத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தக் கோளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய முழு மறுமேல்தளமாக்க நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம், இதை அறிவியலாளர்கள் மேல்தளத்தில் ஏற்பட்ட எரிமலை வாயு தாக்கத்தின் அடர்த்தி எனபதாகக் கூறுவர். எரிமலைக்குழம்பு ஓட்டங்கள் பரவலானவை என்பதுடன் எரிமலையின் வடிவங்கள் பூமியின் தோற்றத்தில் தற்போது இல்லை. கோளின் வாயுமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மின்னலின் ஆய்வும் நிகழ்ந்துகொண்டிருக்கும் எரிமலை செயலாற்றல்களுக்கு பங்களித்திருக்கலாம், இருந்தபோதிலும் வீனஸ் கோளில் எரிமலை நிகழ்வுகள் இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றனவா இல்லையா என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. மெகல்லன் விசாரணை மூலம் பெறப்பட்ட ரேடார் ஒலி, அதன் சிகரத்திலும் வடக்குப்பகுதி பக்கவாட்டிலும் சாம்பல் ஓட்ட வடிவத்தில் வீனஸின் உயரமான எரிமலையான மாட் மோன்ஸில் ஒப்பீட்டு ரீதியில் சமீபத்திய எரிமலை நிகழ்வு இருப்பதைக் காட்டுகிறது. மார்ஸ் கோளில் அழிந்துவிட்ட பல்வேறு எரிமலைகள் இருக்கின்றன, அவற்றில் நான்கு பூமியில் இருப்பதைவிட மிகவும் பெரியதான நீண்ட கவச எரிமலைகளாகும். இவை ஆர்ஸியா மோன்ஸ், ஆஸ்கிரேஸ் மோன்ஸ், ஹெகேட்ஸ் தோலஸ், ஒலிம்பஸ் மோன்ஸ் மற்றும் பவோனிஸ் மோன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த எரிமலைகள் பல மில்லியன் ஆண்டுகளாக அழிந்துபட்டவையாக இருந்திருக்கின்றன, ஆனால் ஐரோப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்வெளி ஓடம், மார்ஸில் சமீபத்திய கடந்த சில ஆண்டுகளில் எரிமலை நிகழ்வு ஏற்ப்ட்டதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. ஜூபிடரின் நிலவான இயோ, ஜூபிடருடனான டைடல் ஒருங்கிணைப்பின் காரணமாக சூரிய மண்டலத்திலுள்ள அதிக எரிமலைச் செயல்பாடுள்ள கோளாக இருக்கிறது. இது சல்பர், சல்பர் டையாக்ஸைடு மற்றும் சிலிகேட் ஆகியவற்றை உமிழும் எரிமலைகளைக் கொண்டிருக்கிறது, அதன் காரணமாக இயோ தொடர்ந்து மறுமேல்தளமாக்கல் செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. இதனுடைய எரிமலைக்குழம்பு சூரிய மண்டலத்தில் உள்ளவற்றிலேயே மிகவும் வெப்பமானவை, இதன் வெப்பநிலை 1,800 K (1,500 °C)-ஐத் தாண்டிச் செல்கிறது. பிப்ரவரி 2001 ஆம் ஆண்டில், சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை உமிழ்வு இயோவில் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஜூபிடரின் கலீலியன் நிலவுகளிலேயே சிறியதான யூரோப்பாவும், அதனுடைய விறைப்பான மேல்தளத்தில் பனிக்கட்டியாக உறையச்செய்கின்ற வகையில் முற்றிலும் தண்ணீரில் நிகழ்பவையாக இருப்பதைத் தவிர்த்து உயிர்த்துடிப்புடைய எரிமலை அமைப்பாகவே காணப்படுகிறது. இந்த நிகழ்முறை கிரையோவால்கோனிஸம் எனப்படுகிறது, அத்துடன் சூரிய மண்டலத்திலுள்ள வெளிப்புற கோள்களின் நிலவுகளில் மிகவும் பொதுவானதாகவும் காணப்படுகிறது. 1989 ஆம் ஆண்டில் வோயேஜர் 2 விண்வெளி ஓடம், நெப்டியூனின் நிலவான டிரைடனில் உள்ள கிரையோ எரிமலைகளை ஆராய்ந்துள்ளது, 2005 ஆம் ஆண்டில் டிரைடனில் கிரையோ எரிமலைகளை (பனிக்கட்டி எரிமலைகள்) கண்டுபிடித்திருக்கிறது, 2005 ஆம் ஆண்டில் காஸினி கயோஜென்ஸ் விசாரணை, சனி கோளின் நிலவான என்சைலடஸிலிருந்து உறைந்த பொருட்களை உமிழ்கின்ற ஊற்றுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த உமிழ்வு தண்ணீர், நீ்ர்ம நைட்ரஜன், தூசி, அல்லது மெதைன் உட்பொருட்களால் உருவாகியிருக்கிறது. சனிக்கோள் நிலவான டைட்டனில் உள்ள கிரையோ எரிமலை மெத்தைனை வெளியேற்றுவதற்கான ஆதாரத்தையும் காஸினி கயோஜென்ஸ் கண்டுபிடித்துள்ளது, அது அதன் காற்றுவெளியில் குறிப்பிடத்தக்க அளவு மெத்தைன் மூலாதாரத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இது கிரையோ எரிமலை கூபியர் பெல்ட் ஆப்ஜெக்டான குவெயரிலும் காணப்படுவதாக கருதப்படுகிறது. பெயர்வரலாறு வால்கனோ (Volcano) என்ற பெயர் வல்கேனோ அதாவது ரோமானிய புராணத்தி்ல் நெருப்புக் கடவுளின் பெயரான வல்கன் (புராணம்) என்பதிலிருந்து உருவான இத்தாலியின் இயோலியன் தீவுகளில் உள்ள எரிமலைத் தீவிலிருந்து பெறப்பட்டது. எரிமலைகளைப் பற்றிய ஆய்வு வால்கனோலஜி எனப்படுகிறது, சிலநேரங்களில் "வல்கோனோலஜி"' என்றும் உச்சரிக்கப்படுகிறது. இந்தத் தீவிற்கான ரோமானியப் பெயரான வல்கேனோ பெரும்பாலான நவீன ஐரோப்பிய மொழிகளில் உள்ள எரிமலை க்கான வார்த்தையை வழங்கியுள்ளது. கலாச்சாரத்தில் பழம் நம்பிக்கைகள் பெரும்பாலான புராதன பதிவுகள் எரிமலை உமிழ்வுகளை கடவுள் அல்லது கடவுள்தன்மை கொண்டவற்றின் செயல்பாடு போன்ற இயற்கை மீறியவற்றின் விளைவுகளாக குறிப்பிடுகின்றன. பழங்கால ரோமிற்கு, எரிமலைகளின் விருப்பம்போல் மாற்றமடையும் தன்மை கடவுளின் செயல்பாடுகளாக மட்டுமே இருந்து வந்துள்ளது, அதேசமயம் 16/17ஆம் நூற்றாண்டு வானியல் அறிஞர் ஜோகன்ஸ் கெப்லர் அவை பூமியின் கண்ணீர் கசிவு என்று நம்பியுள்ளார். இதற்கு நேர்மாறாக முதலில் சொல்லப்பட்ட கருத்தாக்கம், மவுண்ட் எட்னா மற்றும் ஸ்ட்ராம்போலி உமிழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தவரான ஜீஸூட்டைச் சேர்ந்த அதானேஸியஸ் கிர்ச்சர் (1602–1680) என்பவரால் முன்மொழியப்பட்டதாகும், இவர் வஸூவியஸ் மேல்ஓட்டைப் பார்வையிட்டு தனது பார்வையை பதிப்பித்துள்ளார், இதில் பூமியானது மையத்திலுள்ள நெருப்புடன் சல்பர், பிடுமன் மற்றும் நிலக்கரி ஆகியவை எரிவதன் காரணமாக பல்வேறுவிதமான இதரவற்றுடன் தொடர்புகொள்வதாக தெரிவித்துள்ளார். பூமியின் மெல்லிய அமைப்பு பாதியளவு கெட்டியான பொருளாக மாற்றமடைகிறது என்ற நவீன புரிதலுக்கு முன்னர் எரிமலைச் செயலுக்கான முன்மொழியப்பட்ட விளக்கங்களாக நிறைய இருந்துள்ளன. பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், அமுக்கமும் கதிரியக்க மூலப்பொருட்களும் வெப்ப மூலாதாரங்களாக இருக்கலாம் என்று தெரியவந்ததும் இவர்களுடைய பங்களிப்புகள் பலவும் குறிப்பிடத்தக்க அளவு தள்ளுபடி செய்யப்பட்டன. எரிமலை நடவடிக்கை வேதியியல் வினைகளுக்கும், மேல்தளத்திற்கு அருகாமையில் மெல்லிய அடுக்கிலான உருகிய பாறைக்குமே வழங்கப்பட்டு வந்துள்ளது. பாரம்பரியம் எரிமலைகள் பாரம்பரியமான முறையிலேயே தோன்றுகின்றன. பரந்தவெளி காட்சிகள் கூடுதல் பார்வைக்கு எரிமலை வெடிப்பு பூகோள அறிவியல் எரிமலைத் தளம் எரிமலை வாயு சுனாமி பட்டியல் எரிமலைகளின் பட்டியல் (பூவுலகு) பூவுலகு சாராத எரிமலைகளின் பட்டியல் புகழ்பெற்ற எரிமலை உமிழ்வு மரணப் பட்டியல் எரிமலை வெடிப்புக் குறியீடு (பெரும் உமிழ்வுகளின் பட்டியல் உள்ளிட்டது) உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இயற்கை பேரழிவுகளின் பட்டியல் குறிப்பிட்ட இடங்கள் ஐஸ்லேண்ட் வெப்பப்பகுதி அனஹிம் வெப்பப்பகுதி கெர்குலென் வெப்பப்பகுதி கிழக்கு ஆஸ்திரேலிய வெப்பப்பகுதி ஹவாய் வெப்பப்பகுதி பூயி வெப்பப்பகுதி ரியூனியன் வெப்பப்பகுதி கலபகஸ் வெப்பப்பகுதி புதிய இங்கிலாந்து வெப்பப்பகுதி கானரி வெப்பப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் இயோ (நிலவு) டிரைடன் (நிலவு) குறிப்புகள் கூகுள் தமிழாக்கம்-புவியியல் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு
5702
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கற்குழம்பு
மக்மா (Magma) எனப்படுவது புவியின் அடிப்பகுதியில் இருக்கும் உருகிய பாறைக்குழம்பைக் குறிக்கும். மக்மாவின் வெப்பநிலை 650 முதல் 1200 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். மக்மாவானது பூமியினுள்ளே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும். சில சமயங்களில் இது எரிமலைகளின் துளை வழியாக வெளிவருவதும் உண்டு. இவற்றையு பாக்க லாவா எரிமலைகள்
5710
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%20288
கிமு 288
நிகழ்வுகள் அனுராதபுரத்தில் புனித வெள்ளரசு மரக்கிளை நாட்டப்பட்டது. மனிதனால் நாட்டப்பட்ட மிக வயதுகூடிய மரமிதுவே. ஏபிறஸ் மன்னன் பைரஸ் தாக்கியதால், மசிடோனின், டேமிறியஸ் I மசிடோனியாவை விட்டு தப்பியோட்டம். மசிடோனியா பைரஸ், லைசிமசுஸ் எனுமிருவரிடையில் பிரிக்கப்பட்டது. Aristarchus is the first to say that the sun is the center of universe (see heliocentric theory) பிறப்புகள் இறப்புகள் சைறாகுஸ் நகரின் கொடுங்கோலன் அகாதோசிஸ் கிமு 3-ஆம் நூற்றாண்டு
5711
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
வளைதடிப் பந்தாட்டம்
வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி, ஹொக்கி, Hockey) என்பது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டாக பலரால் கருதப்படுகிறது. ஆடுகளம் வளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும். பந்து பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும். ஆட்டக்காலம் இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள். ஆட்டக்காரர்கள் விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.
5712
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
சப்பாத்தி
சப்பாத்தி (Chapati) எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு பொதுவான இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா, கரீபியன் தீவுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இந்திய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து பின்னர் தோசைக் கல்லின் மீது வைக்கப்பட்டு நெருப்பில் சூடுபடுத்தித் தயாரிக்கப்படுகிறது. இது மாலத்தீவுகளில் ரொசி என்றழைக்கப்படுகிறது. வரலாறு சப்பாத் (ஹிந்தி:चपत, chapat) என்பதன் ஹிந்தி அர்த்தம் "தட்டை", இது இரு உள்ளங்கைகளுக்கிடையே பிசைந்த மாவினை வைத்து அறைந்து, வட்டவடிவிலான தட்டையாக மாவினை உருவாக்கும் வழமையான முறையைக் கூறிக்கிறது. ஒவ்வொரு அறைக்கும் வட்டவடிவிலான அறைந்த மாவு சுற்றப்படுகின்றது. சப்பாத்தி பற்றி 16-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த அபுல் ஃபசல் எழுதிய அயினி அக்பரி மற்றும் முகலாய பேரரசர் அக்பரின் அமைச்சர் குறிப்புகளிலும் இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் பிரதான உணவாக இருக்கும் கோதுமையில் செய்யப்படும் உணவுகளில் மிகவும் பொதுவானதாக சப்பாத்தி உள்ளது. மொகெஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட கோதுமை தானியங்கள் இன்றும் இந்தியாவில் காணப்படுகின்ற ஒரு கோதுமை இனத்திற்கு ஒத்ததாக உள்ளது. சிந்து வெளி நாகரிக பகுதிகள் பயிரிடப்பட்ட கோதுமையின் மூதாதையர் நிலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. சப்பாத்தி என்பது ரோட்டி அல்லது ரோட்டா (ரொட்டி) போன்ற சொற்களால் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. சப்பாத்தி மற்றும் ரோட்டி போன்ற உணவு வகைகள் இந்திய வியாபாரிகளின் மூலமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் கரீபியன் தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. செய்முறை கோதுமை மாவுடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து கையால் பிசைந்து சப்பாத்தி மாவு தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில், சப்பாத்திமாவு மற்றும் சோறு(அரிசி) தயாரிக்கும்போது உப்பு சேர்ப்பதில்லை. ஏனெனில் காரமான பக்க உணவிற்கு ஏற்ப இவ்வாறு செய்வதுண்டு. சப்பாத்தி மாவு பிசைந்தவுடன், இக் கலவை 10 அல்லது 15 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை கலனில் வைத்து ஊற வைப்பதுண்டு. இதனால் மாவு மிருதுத் தன்மையுடன் இருக்கிறது. பின்னர் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி செய்வதற்கு பயன்படும் பலகை அல்லது இரு உள்ளங்கைகளை பயன்படுத்தி ஒவ்வொரு உருண்டையையும் சிறிது மாவில் தோய்த்து வட்ட வடிவமாக செய்து கொள்வர். தற்போது இவை அனைத்தையும் செய்வதற்கு எந்திரங்கள் வந்துவிட்டன. வட்ட வடிவமாக செய்த சப்பாத்திகள் சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் நன்றாக வேகவைக்கப்படுகின்றன. சில பகுதிகளில், சப்பாத்தி ஒரு பகுதி வெந்ததும் எடுத்து எரியும் தணலில் போடப்படுகிறது. இதனால் சப்பாத்தி உப்பலாகவும் அதிக மிருதுத்தன்மையுடனும் உள்ளது. இந்த செய்முறை வட இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் "பூஃல்கா" எனப்படுகிறது. தென்னிந்தியாவில் "புல்கா" என்ப்படுகிறது. தோசைக்கல்லில் சப்பாத்தியை வாட்டி எடுக்கும்போதும் உப்பலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சப்பாத்தி செய்தவுடன் அதன் மேல் வெண்ணெய் அல்லது நெய் தடவி வைக்கப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்குப் பகுதியில் சப்பாத்தி மாவு உருண்டைகளில் சிறிது எண்ணெய் சேர்த்து, மீண்டும் உருட்டி வட்ட வடிவமாகச் செய்து பின்னர் சூடான தோசைக்கல்லில் போடப்படுகிறது. இது பராத்தா எனப்படுகிறது. சப்பாத்தியின் வகைகள் இந்திய மாநிலங்களில் பலவகை சப்பாத்திகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சில வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பன்னீர் சப்பாத்தி: கோதுமை மாவுடன் துருவிய பன்னீர் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி பன்னீர் சப்பாத்தி எனப்படுகிறது. மேலும் இது 'பன்னீர் பராத்தா' எனவும் சொல்லப்படுகிறது. முள்ளங்கி சப்பாத்தி: கோதுமை மாவில் துருவிய முள்ளங்கி மஞ்சள் (மூலிகை) தூள் கலந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி பொதுவாக மெலிதாக இல்லாமல் சற்று அடர்த்தியாக இருக்கும். இது தொலை தூரம் பயணிக்கும் லாரி ஓட்டுநர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. தெருவோரக் கடைகளில் இது பிரபலமாக உள்ளது. இது "மூலி பராத்தா" எனவும் அழைக்கப்படுகிறது. வெஜிடபிள் சப்பாத்தி: இது மசித்த கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, வெந்தயம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து சமைத்த மசாலா கலவையினை தேவையான அளவில் சப்பாத்தி மாவில் வைத்து செய்யப்படுவதாகும். இது பொதுவாக உருளை வடிவில் பரிமாறப்படுகிறது. பல குடும்பங்களில் வீட்டில் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு இந்த சப்பாத்தி தயாரிக்கப்படுகிறது. ஆலு பராத்தா: இந்த வகை சப்பாத்தி வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வட இந்திய பகுதிகளான புது தில்லி, பஞ்சாப் மற்றும் சிம்லாவின் மலைப்பகுதிகளில் இந்த உணவு பிரபலமாக உள்ளது. இதனுடன் ஊறுகாய் மற்றும் தயிர் சேர்த்து உண்ணும் முறை வழக்கமாக உள்ளது. மேலும், குளிர் காலங்களில், காலி பிஃளவர் சேர்த்து தயாரிக்கும் "கோபி பராத்தா" வும், முள்ளங்கி சேர்த்து தயாரிக்கப்படும் "மூலி பராத்தா"வும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் இவற்றையும் பார்க்கவும் பூரி வெளி இணைப்புகள் சப்பாத்தி செய்ய உதவும் சமையல் குறிப்பு சான்றுகள் பீகாரி உணவுகள் இந்திய உணவுகள் ஆந்திர சமையல் தமிழர் சமையல்
5713
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%28%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%29
பூரி (உணவு)
பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் (கிட்டத்தட்ட 12 செ.மீ விட்டத்தில்) மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலாக பொரிக்கப்படும் பூரி, சோழா பூரி என்று அழைக்கப்படுகிறது. வகைகள் பட்டூரா என்றழைக்கப்படும் பெரிய அளவிலான பூரி, மைதா மாவினால் தயாரிக்கப்படும், இது பூரியை விட மும்மடங்கு அளவில் பெரியதாக இருக்கும். இந்திய மாநிலமான ஒரிசாவில் பாலியாத்ரா விழாவின் பொழுது பெரிய அளவிலான பூரி செய்யப்படுகின்றது, இது துங்காபூரி என்றழைக்கப்படுகிறது(). வட இந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மற்றொரு வகையான பூரி தயாரிக்கப்படுகிறது, இதன் பெயர் பேத்வி, இது சிறிது உப்பாகவும், விறைப்பாகவும் தயாரிக்கப்படுகின்றது, பொதுவாக இதனுள் பயறுகளை வைத்து அடைக்கப்படுகிற்து. பானிபூரி, அளவில் மிகச்சிறியதாகவும், இதில் பூரி மாவு மிருதுவாக்க ரவை சேர்க்கப்படுகிறது. மேற்கு வங்காளம், ஒரிசாவில் மற்றொரு பிரபலமான பூரி வகை லூச்சி என்றழைக்கப்படுகிறது. தெருவோர வியாபாரிகளால் சேவ் பூரி என்ற சிற்றூண்டி விநியோகிக்கப்படுகின்றது. பெயர் காரணம் பூரி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான पूरिका (pūrikā) என்பதிலிருந்து பெறப்பட்டன, இதன் அர்த்தம் पुर (pura) "நிரப்பட்ட" என்பதாகும். இது தெற்காசியாவின் பெரும்பாலான மொழிகளில் ஒத்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன, அவை பின்வருமாரு: குஜராத்தி: પૂરી, அசாமி পুৰি, (puri), (pūrī), (pūrī), (pūri), , (pūrī), (puri), (puri), (pūḍī), (pūri), (pūri), and (puri). இவற்றையும் பார்க்கவும் சப்பாத்தி சான்றுகள் பஞ்சாபி உணவு வகைகள் தமிழர் சமையல் ஒடியா உணவுகள் ஆந்திர சமையல் கர்நாடக சமையல்
5718
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
அகமதாபாது
அகமதாபாத் (, , Ahmedabad) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குசராத்து மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குசராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குசராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குசராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. அகமதாபாது இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. உலகின் பாரம்பரிய அறிவிப்பு அகமதாபாது நகரம் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அகமதாபாது மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது. மக்கள் தொகை பரம்பல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அகமதாபாது மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 55,77,940 ஆகும். அதில் ஆண்கள் 2,938,985 மற்றும் 2,638,955 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,21,034 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.29% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 45,94,895 (81.56%), இசுலாமியர் 7,60,920 (13.51%), சமணர்கள் 2,03,739 (3.62%), கிறித்தவர்கள் 47,846 (0.85%) மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர். இந்நகரத்தில் பெரும்பான்மையோர் குசராத்தி மொழி பேசுகின்றனர். போக்குவரத்து அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ் பேருந்து போக்குவரத்து வசதி இந்நகரத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர். சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள் அதீஸ்சிங் கோயில் அமிர்தவர்சினி படிக்கிணறு தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல் லோத்தல் சர்தார் படேல் விளையாட்டரங்கம் சான்றுகள் வெளி இணைப்புகள் GeoHack - அகமதாபாத் குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் குசராத்திலுள்ள மாநகரங்கள் அகமதாபாத் மாவட்டம் அகமதாபாத் இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்
5720
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
செய்ப்பூர்
செய்ப்பூர் (ஆங்கிலம்: Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது. அமைவிடம் மேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கிமீ தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கிமீ தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 1510 கிமீ தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கிமீ தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கிமீ தொலைவிலும் உள்ளது. வரலாறு மக்கள்தொகையியல் 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது. மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது. போக்குவரத்து செய்ப்பூர் தொடருந்து நிலையம் செய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, சம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விசயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, சான்சி, புவனேசுவர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது. செய்ப்பூர் வானூர்தி நிலையம் ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது. செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மசுகட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது. சாலைப் போக்குவரத்து 1428 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அச்சுமீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது. ஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 செய்ப்பூர் வழியாக செல்கிறது. சுற்றுலாத்தலங்கள் ஆம்பர் கோட்டை நாகர்கர் கோட்டை செய்கர் கோட்டை செய்ப்பூர் நகர அரண்மனை அவா மகால் சல் மகால் சந்தர் மந்தர் சாந்த் பௌரி படக்காட்சிகள் மேற்கோள்கள் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் இராஜஸ்தானிலுள்ள மாநகரங்கள் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் ஜெய்ப்பூர் இந்தியச் சுற்றுலாத் தலங்கள் ஜெய்ப்பூர் மாவட்டம் இராஜஸ்தானில் உள்ள சுற்றுலாத் தளங்கள்