id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
5722
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
சிவனொளிபாத மலை
சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை (Adam's Peak; சிங்களம் சிறிபாத, அராபியம் Al-Rohun) கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சபரகமுவா, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது, இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை பாவா ஆதம் மலை - ஆதாம் ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர். காலநிலை மற்றும் வானிலை. பட்டாம்பூச்சியின் சராசரி சராசரி மழை 5000 மில்லி மீட்டர் ஆகும். ஆறு மாதங்களுக்கு ஒரு நல்ல மழை உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் மே - ஜூன் - ஜூலை மாதங்களில் அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது. டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான மழை - பிப்ரவரி மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இந்த காலப்பகுதியில் காலநிலை நிலைமைகள் இல்லாததால், உண்டவாப் இருந்து ஸ்ரீ பாடா யாத்திரை புனித சந்திர கிரகணத்திற்கு சென்றது. பட்டாம்பூச்சி தளத்தில் தென்மேற்கு பருவக்காற்று பருவத்தில் ஒரு காரமான, இருண்ட சவாரி உள்ளது. எனவே, சமனலா மிலே மற்றும் ஸ்ரீ பாடாவில் உள்ள ஒரு குளிர்ந்த வானிலை இருக்கும். ஆண்டு வெப்பநிலை 15 டிகிரி சென்டிகிரேட் ஆகும். ஆனால் மே முதல் ஜூன் வரை - ஜூலை, வெப்பநிலை 5-10 டிகிரி கூட, கைவிட முடியாது. சூழல் நட்பு மற்றும் வனவிலங்கு. வருமானம் காரணமாக, இலங்கையில் நிலமற்ற மலைகள் நிறைந்த மழைக்காலங்கள் பாதுகாக்கப்பட்டன. இது ஒரு உயிர்க்கோள ரிசர்வ் மற்றும் ஒரு உலக பாரம்பரிய தளமாக இருக்கும் மற்றொரு காரணம். சப்பிரகமுவ மலைத்தொடரில் பல மலைக் கொத்தாக உள்ளன. இவை சமனலா, சாந்தா ராக், கோலோமொலிடியா, தட்டானகலா, தோத்தலகலா மற்றும் சுபாட்கானின் முக்கிய மலைப்பகுதிகளாக உள்ளன. இந்த ஸ்ட்ரீம் முழுவதும் பிறந்து, பல ஓட்டைகள் உள்ளன. இது தடிமனான சரிவுகளில் ஏராளமான நீர்வீழ்ச்சிகளை நீக்குவதற்கு காரணமாக அமைந்தது. பிளாக், களனி மற்றும் வால்வெ ஆறுகள் நேரடியாக மவுண்ட் மீது தெளிக்கப்படுகின்றன. இந்த ஆறுகளில் 295 நீர்வீழ்ச்சிகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இந்த காரணத்திற்காக, ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீலங்காவின் 246 மிக உயர்ந்த காடுகளுக்கு நீர்வீழ்ச்சியின் மதிப்பை அளிக்கும் என கருதுகின்றனர். வெள்ளவத்த கட்டுப்பாட்டு, மண் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் 269 காடுகளை பெற்றுக்கொள்வதன் மூலமும் இந்த காடுகள் முதன்மையானது. மலையின் உச்சியில் இருந்து காளவாவாவா, மகாவலி களனி தந்தை நங்கா பட்டாம்பூச்சி தளம் ஸ்டோன்ஸ் சேர்த்து நீண்டுள்ளது. 45 கிலோமீட்டர் நீளமுடைய நீளம் 18 கிலோமீட்டர் நீளம். குறைந்தபட்ச அகலமான 106 கிமீ கொண்ட Makatenna ஒரு குறுகிய இடத்தில் உள்ளது. பட்டாம்பூச்சி தளம் 457 முதல் 2243 மீ வரையான பரப்பளவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் இலங்கையின் மிக உயர்ந்த சிகரம் இலங்கையின் நான்காவது இடமாகும். ஒரு பரபரப்பான நிகழ்வாக, பறவைகள் பெரும்பாலும் உணவு சேகரிக்க சேகரித்த ஆடுகளாக செயல்படுகின்றன. இத்தகைய கூட்டம் பெரும்பாலும் பெரிய பறவை மற்றும் சிவப்பு குள்ளர்கள் கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு மந்தையில் முன்னணி வகிக்கும் முக்கிய போராளிகள் ஒரு வன்முறை பறவை என பிரபலமாக உள்ளனர் மற்றும் ஒரு சத்தமாக பறவையாக சிவந்து போகிறார்கள். கூடுதலாக, இலங்கையின் பல காலங்களில், அன்னாசிப்பழங்கள் பல்வேறு வகையான இனங்கள் காணப்படுகின்றன, அதே நேரத்தில் பல வண்ணத்துப்பூச்சிகள் அலைபாய்கின்றன என்று பலர் கூறுகின்றனர். மேற்கோள்கள் Sri Pada or Adam's Peak web site Sri pada: Buddhism's most sacred mountain Adams Peak or Sri Pada இலங்கையின் மலைகள் இந்து யாத்திரைத் தலங்கள் பௌத்த யாத்திரைத் தலங்கள் இலங்கையில் பௌத்தம் இலங்கையில் இசுலாம்
5723
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
போபால்
போபால் (; ), மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமுமாகும். போபால் இந்தியாவின் 16-ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134-ஆவது பெரிய நகரமாகும். இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது. மேற்கோள்கள் இவற்றையும் காண்க போபால் பேரழிவு போபால் மாவட்டம் நகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் மத்தியப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள் போப்பால் போபால் மாவட்டம்
5725
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். அமைவிடம் பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற, சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள, காஞ்சிபுரத்தில், நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் புத்தேரி தெரு வழியாக சென்று சற்றுத் தொலைவிலுள்ள இக்கோயிலை அடையலாம். இக்கோயில் காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். வரலாற்றுப் பின்னணி தென்னிந்திய கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற்கோயில்களை அமைத்துத் தென்னிந்திய கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இக்கோயில் பொ.ஊ. 700ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டது. இங்கே அமைந்துள்ள பல கால கட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் தென்னிந்திய கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழைமை மிக்க கோயிலாகும். இதைக் கல்வெட்டுக்கள் ’இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. தொடக்கத்தில் இக்கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. கட்டுமானக் கோயில்கள் கட்டும் தொழில் நுட்பம், பல்லவ மன்னனான இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பாறையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட கோயிலாகும். இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட இக்கோயில் சிற்பக் கலையழகு வாய்ந்ததாகும். தான் மட்டுமின்றி தன் மகனையும், தன் மனைவியையும்கூட இந்த கட்டிடப்பணியில் இராஜசிம்மன் ஈடுபடுத்தியுள்ளார். பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டளவில், விஜயநகர பேரரசின் காலத்தில், இக்கோயில் மீண்டும் சிறப்பு பெற்றது. கட்டிட அமைப்பு காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நெருங்கும்போது ஓர் அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பினை உணர முடியும். பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயில் வெளிச்சுற்று, உள்சுற்று, மூலவர் கட்டடப்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. விமானம் இறைவனது கருவறை மீதுள்ள விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது. துணைக் கோயில்கள் பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. வாயிலில் அமைந்துள்ள கோயில் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். சுற்றியுள்ள 58 சிறு கோயில்களில் ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகளையும், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகளையும் காணமுடியும். இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோயில் உள்ளது. மகேந்திரவர்மேச்வரகிரகம் என்றழைக்கப்படுகிறது. புனர் ஜனனி கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும். மூலவர் சன்னதி கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது. பல்லவர் கால ஓவியங்கள் பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. பட்டடக்கல் இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (பொ.ஊ. 740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் கர்நாடகாவில் உள்ள பட்டடக்கலுக்கு கொண்டு சென்றார். அங்கு விருப்பாட்ஷா கோயிலைக் கட்டினார். அரசி லோகமாதேவியின் தெய்வமான விருப்பாட்ஷாவை அங்கு அமைத்தார். அக்கோயில், கைலாசநாதர் கோயிலுக்கும், அதைக்கட்டிய ராஜசிம்மனுக்கு அவருடைய எதிரி உருவாக்கிய நினைவுச்சின்னமாக இப்போதும் திகழ்கிறது. அக்கோயில் லோகமாதேவிசபுரம் என்றும் விருபார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. விழாக்கள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேற்கோள்கள் உசாத்துணைகள் சந்திரமூர்த்தி. மா., தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி-1, மணிவாசகர் பதிப்பகம், 2003 Percy Brown, Indian Architecture (Buddhist and Hindu), D.B.Taraporevala & co. Private Ltd.,Bombay, 1971 தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006 வெளியிணைப்புகள் GeoHack - காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் வரலாறு மாத மின்னிதழில் வெளிவந்த கட்டுரை காஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம். படத்தொகுப்பு மேற்கோள்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலை இந்து யாத்திரைத் தலங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் தேவார வைப்புத் தலங்கள் தமிழ்நாட்டிலுள்ள தொல்லியற்சின்னங்கள்
5728
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன. இவை நிலத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப் பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ளக் கோயில்களாகும். இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல. இரதக் கோயில் விபரங்கள் இரதக் கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை. அத்துடன், இவை திராவிடக் கட்டிடக்கலையின் வெவ்வேறு வகைகளைக் காட்டுவனவாக உள்ளன. தர்ம இரதம் (சிவன் கோயில்) இவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். ஆதிதளம் என அழைக்கப்படும் நிலத் தளத்துடன் சேர்த்து இக் கோயில் மூன்று தளங்கள் கொண்டது. நிலத் தளம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. இதன் மேல் தளங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல் தளங்களுக்குச் செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை. வீம இரதம் (திருமால் கோயில்) வீம இரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இது நீண்ட செவ்வக வடிவான தள அமைப்பைக் கொண்டுள்ளது. இத் தள அமைப்பு, இதன் மேற் காணப்படும் நீண்ட சாலை விமான அமைப்புக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தர்மராஜ இரதம், அருச்சுனன் இரதம் போலன்றி இக்கோயிலில் சிற்பங்கள் எதுவும் காணப்படாமை குறிப்பிடத் தக்கது. அர்ச்சுன இரதம் (முருகன் கோயில்) அருச்சுன இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர். திரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்) சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும். நகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்) இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப் படுகின்றது. இது சிற்ப நூல்களில் கஜபிருஷ்டம் (யானையின் பின்பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது. கட்டிடக்கலை அடிப்படையில் இக் கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டிட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் ஒரு சிறப்பாகும். குறிப்புகள் வெளியிணைப்புக்கள் Mahabalipuram – The Workshop of Pallavas – Part III in Indian History of Archiecture Pancha Rathas, Mamallapuram Arhaeological Survey of India Archaeological Survey of India Dravidian Temple Architecture மாமல்லபுரம் தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டிலுள்ள தொல்லியற்சின்னங்கள் பல்லவர் கட்டிடக்கலை
5730
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு
இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். திட்டத்திற்கான காரணங்கள் வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. வரலாறு நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது. 1955 ஆம் ஆண்டு மார்ச் 27ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ. து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார். பின்னர் இந்த மதிய உணவு திட்டம் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபணைகளையும் சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும், முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறியதாவது: "அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்." எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அதிமுக ஆட்சியில் சத்துணவில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேற்கோள்கள் தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் தமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை) இந்தியாவில் கல்வி
5735
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
கட்டுமானக் கோயில்
செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுகின்ற கோயில்களே கட்டுமானக் கோயில்களாகும். குடைவரை மற்றும் ஒற்றைக் கற்றளி என்பவற்றைவிட அமைப்பதற்கு இவை இலகுவானவை. வசதியான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ள முடியும். முன்னைய வகைகளில் பாறையின் ஓரிடத்தில் தொடங்கி வடிவமைப்புக்கு அமையச் சரியானபடி முடிப்பதென்பது மிகவும் சிரமமான காரியம். செதுக்கும் போது பாறையில் வெடிப்பு எதுவும் ஏற்பட்டால் முழு வேலையையும் கைவிட வேண்டியதுதான். இத்தகைய சிக்கல்கள் கட்டுமானக் கோயில்களில் இல்லை. சிறிய பகுதிகளாகச் செதுக்குவதால் கையாளுவதும் இலகு. இதன் காரணமாகத் தமிழ் நாட்டில் கட்டுமானக் கோயில்கள் அறிமுகமானதின் பின்பு குடைவரைகளோ அல்லது ஒற்றைக் கற்றளிகளோ கட்டப்படவேயில்லை. தமிழ் நாட்டில் முதல் முதலாகக் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலாகும். இக்கோயிலைக் கட்டியவன் பல்லவ மன்னனான இராஜசிம்மன். இவன் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உட்பட மேலும் பல கட்டுமானக் கோயில்கள் கட்டப்பட்டன. திராவிடக் கட்டிடக்கலை இந்துக் சமய கோயில் வகைகள்
5738
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945 வரை நடைபெற்ற ஓர் உலகப் போர் ஆகும். அனைத்து உலக வல்லமைகள் உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும்பாலானவை இதில் பங்கெடுத்தன. இவை அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரண்டு எதிரெதிர் இராணுவக் கூட்டணிகளை உருவாக்கின. இரண்டாவது உலகப் போரானது ஓர் ஒட்டுமொத்தப் போர் ஆகும். இதில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். இப்போரில் பங்கெடுத்த முக்கிய நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, தொழில்துறை மற்றும் அறிவியல் செயலாற்றலைப் போர் வெற்றிக்குப் பயன்படுத்தின. இதனால் இராணுவம் மற்றும் குடிசார் வளங்களுக்கு இடையேயான வேறுபாடானது மறைந்து போனது. இப்போரில் விமானங்கள் ஒரு முக்கியப் பங்காற்றின. மக்கள் தொகை மிகுந்த மையங்கள் மீது குண்டு வீசவும், எக்காலத்திலும் போரில் பயன்படுத்தப்பட்ட 2 அணு ஆயுதங்களை வீசவும் பயன்படுத்தப்பட்டன. மனித வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய சண்டையாக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. 7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குடிமக்களாக இருந்தனர். இனப்படுகொலை (பெரும் இன அழிப்பு உட்பட), பட்டினி, படுகொலைகள் மற்றும் நோய் காரணமாக கோடிக்கணக்கானோர் இறந்தனர். அச்சு நாடுகளின் தோல்விக்குப் பிறகு செருமனி மற்றும் சப்பான் ஆக்கிரமிக்கப்பட்டன. செருமானிய மற்றும் சப்பானியத் தலைவர்களுக்கு எதிராகப் போர்க் குற்றத் தீர்ப்பாயங்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் விவாதத்திற்குரியதாக உள்ளன. ஆனால், இரண்டாம் இத்தாலிய-எத்தியோப்பியப் போர், எசுப்பானிய உள்நாட்டுப் போர், இரண்டாம் சீன-சப்பானியப் போர், சோவியத்-சப்பானிய எல்லைச் சண்டைகள், ஐரோப்பாவில் பாசிசத்தின் வளர்ச்சி மற்றும் முதலாம் உலகப் போர் முதல் ஐரோப்பாவில் அதிகரித்து வந்த பதட்டங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக விளங்கின. இரண்டாம் உலகப் போரானது பொதுவாக 1 செப்டம்பர் 1939 அன்று தொடங்கியதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. அன்று தான் இட்லர் தலைமையிலான நாசி செருமனியானது போலந்து மீது படையெடுத்தது. இதைத் தொடர்ந்து, 3 செப்டம்பர் அன்று செருமனி மீது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு போர்ப் பிரகடனம் செய்தன. ஆகத்து 1939இன் மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் கீழ் செருமனி மற்றும் சோவியத் ஒன்றியம் போலந்தைப் பிரித்துக் கொண்டன. பின்லாந்து, எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா மற்றும் உருமேனியா ஆகிய பகுதிகள் முழுவதும் தங்களது தாக்கம் கொண்ட பகுதிகளைக் குறிப்பிட்டன. 1939இன் பிற்பகுதி முதல் 1941ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் செருமனி பெரும்பாலான ஐரோப்பியக் கண்டப் பகுதியை வென்றோ அல்லது கட்டுப்பாட்டின் கீழோ கொண்டு வந்தது. இத்தாலி மற்றும் சப்பானுடன் (பிற நாடுகளுடன் பின்னர்) அச்சு நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது. வட மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் படையெடுப்புகள், மற்றும் 1940இன் நடுப்பகுதியில் பிரான்சின் வீழ்ச்சிக்குப் பின் போரானது முதன்மையாக ஐரோப்பிய அச்சு நாடுகளுக்கும், பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் பால்கன்களில் போர், பிரிட்டன் வான் சண்டை, ஐக்கிய இராச்சியம் மீதான த பிளிட்ஸ் மற்றும் அத்திலாந்திக் யுத்தம் ஆகியவையாகத் தொடர்ந்தது. 22 சூன் 1941இல், ஐரோப்பிய அச்சு நாடுகள் சோவியத் ஒன்றியம் மீது படையெடுப்பதற்குச் செருமனி தலைமை தாங்கியது. இதன் மூலமாகக் கிழக்குப் போர்முனையைத் திறந்தது. இதுவே வரலாற்றின் மிகப் பெரிய நிலப் போர் முனையாகும். ஆசியா மற்றும் பசிபிக் பகுதியை ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருந்த சப்பான் 1937இல் சீனக் குடியரசுடன் போரைத் தொடங்கியது. திசம்பர் 1941இல் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நிலப்பரப்புகளைத் தாக்கியது. அதே நேரத்தில், தென்கிழக்காசியா மற்றும் நடு பசிபிக் பகுதிகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியது. முத்துத் துறைமுகத்திலிருந்த ஐக்கிய அமெரிக்கக் கப்பல் குழு மீதான தாக்குதலும் இதில் அடங்கும். இது சப்பான் மீது ஐக்கிய அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்வதற்கு இட்டுச் சென்றது. தங்களது ஆதரவைத் தெரிவிப்பதற்காக ஐரோப்பிய அச்சு நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன. சீக்கிரமே, சப்பான் மேற்கு பசிபிக் பகுதிகளைக் கைப்பற்றியது. 1942ஆம் ஆண்டின் மிக முக்கியமான மிட்வே யுத்தத்தில் தோற்றதற்குப் பிறகு, சப்பானின் முன்னேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பிறகு, செருமனி மற்றும் இத்தாலி முறையே வட ஆப்பிரிக்காவிலும், சோவியத் ஒன்றியத்தின் சுடாலின்கிராட் யுத்தத்திலும் தோற்கடிக்கப்பட்டன. 1943இல் குறிப்பிடத்தக்கப் பின்னடைவுகளைச் சந்தித்தன. இதில் செருமனி கிழக்குப் போர் முனையில் அடைந்த ஒரு தொடர்ச்சியான தோல்விகள், சிசிலி மற்றும் இத்தாலியக் கண்டப் பகுதி மீது நேச நாடுகளின் படையெடுப்பு, பசிபிக் பகுதியில் நேச நாடுகளின் தாக்குதல்கள் ஆகியவையும் அடங்கும். இது அச்சு நாடுகள் தங்களது தன் முனைப்பை இழப்பதற்கு இட்டுச் சென்றது. அனைத்துப் போர் முனைகளிலும் பின் வாங்கும் கட்டாய நிலைக்கு அவற்றைத் தள்ளியது. 1944இல் செருமனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீது மேற்கு நேச நாடுகள் படையெடுத்தன. அதே நேரத்தில், தான் இழந்த நிலப்பரப்புகளைச் சோவியத் ஒன்றியம் மீண்டும் பெற்றது. தனது கவனத்தைச் செருமனி மற்றும் அதன் கூட்டு நாடுகளின் மீது திருப்பியது. 1944-45இல் ஆசியக் கண்டப்பகுதியில் சப்பான் புதிதாக வென்ற பகுதிகளை இழக்க ஆரம்பித்தது. அதே நேரத்தில், நேச நாடுகள் சப்பானியக் கடற்படைக்குச் சேதம் விளைவித்தன. மேற்கு அமைதிப் பெருங்கடலின் முக்கியமான தீவுகளை நேச நாடுகள் கைப்பற்றின. செருமனி ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்புகள் விடுதலை செய்யப்பட்டது மற்றும், மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் செருமனி மீது படையெடுத்தது ஆகியவற்றுடன் ஐரோப்பாவில் போரானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சோவியத் துருப்புகளிடம் பெர்லின் வீழ்ந்தது. இட்லர் தற்கொலை செய்து கொண்டார். 8 மே 1945 அன்று செருமனி நிபந்தனையற்ற சரணடைவை ஏற்றது. 26 சூலை 1945இன் போதுசுதாம் அறிவிப்பின் நிபந்தனைகளுக்கு சப்பான் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கா சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது முறையே 6 மற்றும் 9 ஆகத்து மாதத்தில் முதல் அணு குண்டுகளை வீசியது. சப்பானியத் தீவுக்கூட்டம் மீது ஏற்படப்போகும் படையெடுப்பை எதிர்கொள்ளும் நிலை, மேற்கொண்ட அணுகுண்டு வீச்சுகளுக்கு ஆளாகும் நிலை மற்றும் மஞ்சூரியா மீது படையெடுப்பதற்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சப்பானுக்கு எதிராகப் போருக்குள் நுழைவதாக அறிவித்தது ஆகியவை காரணமாகச் சரணடையும் தனது எண்ணத்தை 10 ஆகத்து அன்று சப்பான் அறிவித்தது. 2 செப்டம்பர் 1945 அன்று ஒரு சரணடையும் ஆவணத்தில் கையொப்பமிட்டது. இரண்டாம் உலகப்போரானது உலகின் அரசியல் சார்பு மற்றும் சமூக அமைப்பை மாற்றியது. பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும், எதிர்காலச் சண்டைகளைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் அவையானது நிறுவப்பட்டது. வெற்றி பெற்ற உலக வல்லமைகளான சீனா, பிரான்சு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாக உருவாயின. சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் எதிரெதிர் வல்லரசுகளாகத் தோன்றின. இது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலப் பனிப்போருக்கான தளத்தை அமைத்தது. ஐரோப்பிய அழிவை ஒட்டி ஐரோப்பாவின் பெரிய சக்திகளின் தாக்கமானது குறைந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் குடியேற்ற விலக்கத்தைத் தொடங்கி வைத்தது. தொழில்துறை சேதமடைந்த பெரும்பாலான நாடுகள் பொருளாதார மீட்சி மற்றும் விரிவை நோக்கி நகர்ந்தன. குறிப்பாக ஐரோப்பாவில், எதிர்காலச் சண்டைகளை முன்னரே தடுத்து நிறுத்தும் முயற்சியாகவும், போருக்கு முந்தைய எதிர்ப்பை நிறுத்தவும், ஒரு பொதுவான அடையாள உணர்வை உருவாக்கவும் அரசியல் மற்றும் பொருளாதார இணைப்பானது தொடங்கப்பட்டது. தொடக்கம் மற்றும் முடிவுத் தேதிகள் ஐரோப்பிய இரண்டாம் உலகப் போரானது 1 செப்டம்பர் 1939 அன்று தொடங்கியதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இது போலந்து மீதான செருமானியப் படையெடுப்பில் தொடங்கியது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு செருமனி மீது போரை அறிவித்தன. பசிபிக்கில் போர் தொடங்கிய தேதிகளாக, இரண்டாம் சீன-சப்பானியப் போர் தொடங்கிய 7 சூலை 1937ஆம் தேதி அல்லது முந்தைய தேதியான 19 செப்டம்பர் 1931 அன்று மஞ்சூரியா மீது சப்பான் படையெடுத்தது ஆகிய தேதிகள் குறிப்பிடப்படுகின்றன. மற்றவர்கள் பிரித்தானிய வரலாற்றாளர் ஏ. ஜே. பி. டெய்லரைப் பின்பற்றுகின்றனர். அவர் சீன-சப்பானிய போர் மற்றும், ஐரோப்பா மற்றும் அதன் காலனிகளில் போரானது ஒரே நேரத்தில் நடந்தது என்று குறிப்பிடுகிறார். இந்த இரண்டு போர்களும் 1941 இரண்டாம் உலகப் போராக உருவாயின என்கிறார். இரண்டாம் உலகப் போருக்குக் குறிப்பிடப்படும் பிற தேதிகளாக, சில நேரங்களில் 3 அக்டோபர் 1935 அன்று அபிசீனியா மீதான இத்தாலியப் படையெடுப்பு குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய வரலாற்றாளர் அந்தோணி பீவோரின் பார்வைப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கமானது சப்பானுக்கும், மங்கோலியா மற்றும் சோவியத் ஒன்றியப் படைகளுக்கும் இடையே 1939இல் மே முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற கல்கின் கோல் யுத்த ஆரம்பத் தேதி என்று குறிப்பிடுகிறார். மற்றவர்களின் பார்வைப்படி, எசுப்பானிய உள்நாட்டுப் போரானது இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் நிகழ்வாக அமைந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த சரியான தேதி குறித்தும் பொதுவான கருத்து எட்டப்படவில்லை. 14 ஆகத்து 1945இன் போர் நிறுத்தத்துடன் போரானாது நிறுத்தப்பட்டது என பொதுவாக அந்நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2 செப்டெம்பர் 1945 சப்பான் அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்ததைத் தவிர்த்து இத்தகைய தேதியானது ஒப்புக்கொள்ளப்பட்டது. சப்பானின் சரணடைவு அதிகாரப்பூர்வமாக ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1951இல் சப்பான் மற்றும் நேச நாடுகளுக்கு இடையில் ஓர் அமைதி ஒப்பந்தமானது கையொப்பமிடப்பட்டது. செருமனியின் எதிர்காலம் குறித்த 1990ஆம் ஆண்டு ஒப்பந்தமானது செருமானிய மீளிணைவை அனுமதித்தது. பெரும்பாலான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய விவகாரங்களைத் தீர்த்தது. சப்பான் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையில் எந்த ஓர் அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தமும் எப்போதுமே கையப்பமிடப்படவில்லை. எனினும், இரு நாடுகளுக்கு இடைப்பட்ட போரின் நிலையானது 1950ஆம் ஆண்டின் சோவியத் சப்பானியக் கூட்டு அறிவிப்பின் மூலம் முடித்து வைக்கப்பட்டது. இதன்மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான முழு அளவிலான தூதரக உறவுகளும் மீண்டும் கொண்டு வரப்பட்டன. பின்னணி ஐரோப்பா ஆத்திரியா-அங்கேரி, செருமனி, பல்கேரியா மற்றும் உதுமானியப் பேரரசு உள்ளிட்ட மைய சக்திகளின் தோல்வி, சோவியத் ஒன்றியத்தின் தோற்றுவிப்புக்கு இட்டுச் சென்ற உருசியாவில் 1917ஆம் ஆண்டு போல்செவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆகிய முதல் உலகப் போர் விளைவுகள் ஐரோப்பிய அரசியல் வரைபடத்தைத் தீவிரமாக மாற்றின. அதே நேரத்தில், முதல் உலகப் போரில் வென்ற நேச நாடுகளான பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, உருமேனியா மற்றும் கிரேக்கம் ஆகியவை நிலப்பரப்புகளைப் பெற்றன. ஆத்திரியா-அங்கேரி, உதுமானிய மற்றும் உருசியப் பேரரசுகளின் வீழ்ச்சியில் இருந்து புது நாடுகள் உருவாக்கப்பட்டன. ஓர் எதிர்கால உலகப் போரைத் தடுப்பதற்காக 1919ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாட்டின்போது உலக நாடுகள் சங்கமானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் முதன்மையான குறிக்கோள்களானவை ஒட்டுமொத்த பாதுகாப்பு, இராணுவ மற்றும் கடற்படை ஆயுதக் குறைப்பு மூலம் ஆயுதச் சண்டைகளைத் தடுப்பதும், அமைதியான பேச்சு வார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் பன்னாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதும் ஆகும். முதல் உலகப் போருக்குப் பிறகு, வலிமையான அமைதிவாத உணர்வுகள் இருந்தபோதும், தாங்கள் முன்னர் இழந்த பகுதிகளை மீட்பதையும், முன்னர் இழந்த பகுதிகளுக்காகப் பழி வாங்குவதையும் அடிப்படையாக கொண்ட தேசியவாதமானது பல ஐரோப்பிய நாடுகளில் இதே காலகட்டத்தில் தோன்றியது. இந்த உணர்வுகள் குறிப்பாகச் செருமனியில் காணப்பட்டன. ஏனெனில், வெர்சாய் ஒப்பந்தத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க நிலப்பரப்பு, காலனி மற்றும் நிதி இழப்புகளின் காரணமாக இந்த உணர்வு காணப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தனது சொந்த நிலப்பரப்பில் சுமார் 13% செருமனி இழந்தது. தன் வெளிநாட்டுக் கையிருப்பு நிலங்கள் அனைத்தையும் இழந்தது. மற்ற நாடுகளைச் செருமனி இணைத்துக் கொண்டது அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டது. இழப்பீடுகள் வழங்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. செருமனியின் இராணுவப் படைகளின் அளவு மற்றும் திறன் மீது வரம்புகள் விதிக்கப்பட்டன. 1918-1919இல் செருமானியப் புரட்சியின் போது செருமனியப் பேரரசானது கலைக்கப்பட்டது. பிற்காலத்தில் வெய்மர் குடியரசு என்று அறியப்பட்ட ஒரு சனநாயக அரசாங்கமானது உருவாக்கப்பட்டது. போர்களுக்கு இடைப்பட்ட காலத்தின் போது, புதிய குடியரசின் ஆதரவாளர்களுக்கும், வலது மற்றும் இடது ஆகிய இரு பிரிவுகளின் சமரசம் செய்து கொள்ள மறுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பூசல்கள் காணப்பட்டன. அதிகாரப்பூர்வமற்ற கூட்டாளியான இத்தாலி போருக்குப் பிறகு சில நிலப்பரப்புகளைக் கைப்பற்றியது. எனினும், இத்தாலியைப் போருக்கு வரவழைப்பதற்காக ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சால் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் அமைதி ஒப்பந்தத்தில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் இத்தாலியத் தேசியவாதிகள் கோபம் கொண்டனர். 1922 முதல் 1925 வரை ஒரு தேசியவாத, சர்வாதிகார மற்றும் உயர் வகுப்பினருடன் இணைந்து செயல்படும் கொள்கை கொண்ட பெனிட்டோ முசோலினியால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பாசிச இயக்கமானது இத்தாலியில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது சனநாயகப் பிரதிநிதித்துவம், சமதர்மம், இடது சாரி மற்றும் மிதவாதப் படைகளை ஒடுக்கியது. இத்தாலியை ஓர் உலக வல்லமையாக்கும் குறிக்கோளைக் கொண்ட ஆக்ரோஷமான நிலப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் அயல்நாட்டுக் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தது. ஓர் "இத்தாலியப் பேரரசை" உருவாக்குவோம் என உறுதி கொடுத்தது. 1923ஆம் ஆண்டு செருமனி அரசாங்கத்தைப் பதவியில் இருந்து தூக்கி எறியும் வெற்றிகரமாக அமையாத ஒரு முயற்சிக்குப் பிறகு இட்லர் இறுதியாக 1933ஆம் ஆண்டு செருமனியின் ஆட்சித்தலைவரானார். பால் வான் இன்டன்பர்க் மற்றும் ரெயிக்ஸ்டக் இவரை நியமித்தனர். இட்லர் சனநாயகத்தை ஒழித்தார். ஒரு தீவிர, இனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு திருத்தப்பட்ட உலக நிலையை அடிப்படையாகக் கொண்ட கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தார். சீக்கிரமே ஒரு பெரிய ஆயுத உற்பத்தி நடவடிக்கையைத் தொடங்கினார். அதே நேரத்தில், பிரான்சு தனது கூட்டணியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எத்தியோப்பியாவில் இத்தாலிக்கு அதன் எண்ணம் போல் செயல்பட அனுமதி அளித்தது. எத்தியோப்பியவை ஒரு காலனியாக இத்தாலி கருதியது. 1935ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த நிலைமையானது இன்னும் மோசமானது. அப்போது செருமனியுடன் சட்டபூர்வமாக சார் பாசின் நிலப்பரப்பானது மீண்டும் இணைந்தது. இட்லர் வெர்சாய் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனது ஆயுத உற்பத்தி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். கட்டாயப்படுத்திக் குடிமக்களை இராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தினார். ஐக்கிய இராச்சியம், பிரான்சு மற்றும் இத்தாலி ஏப்ரல் 1935இல் செருமனியைக் கட்டுப்படுத்துவதற்காக இசுதிரேசா முன்னணியை உருவாக்கின. உலகளாவிய இராணுவக் கூட்டணியை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இது இருந்தது. எனினும், அந்த ஆண்டு சூனில், ஐக்கிய இராச்சியமானது ஒரு தனித்தியங்கும் கடற்படை ஒப்பந்தத்தைச் செருமனியுடன் செய்து கொண்டது. முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் செருமனியின் இலக்குகளால் கவலை கொண்ட சோவியத் ஒன்றியம் பிரான்சுடன் பரஸ்பர ஆதரவுக்காக ஒரு உடன்படிக்கையைத் தயார் செய்தது. ஆனால், இது நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பிராங்கோ-சோவியத் உடன்படிக்கையானது உலக நாடுகள் சங்கத்தின் சிக்கல் நிறைந்த பணித்துறை விதிகளின் முறையொழுங்கு வழியாக அனுப்பப்பட வேண்டியிருந்தது. இது அந்த உடன்படிக்கையைச் செயல்திறன் அற்றதாக்கியது. ஐரோப்பா மற்றும் ஆசியாவின் நிகழ்வுகளால் கவலை கொண்ட ஐக்கிய அமெரிக்கா அதே ஆண்டு ஆகத்து மாதம் நடு நிலைச் சட்டத்தை இயற்றியது. வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கைகளை மீறிய இட்லர் மார்ச் 1936இல் ரைன்லாந்தில் இராணுவத்தைக் குவித்தார். இட்லரின் கோபத்தைத் தணிப்பதற்காக அவருக்கு நிலப்பரப்பை இசைந்தளிக்கும் கொள்கை காரணமாக இட்லர் சிறிதளவே எதிர்ப்பைச் சந்தித்தார். அக்டோபர் 1936இல் செருமனி மற்றும் இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியை உருவாக்கின. ஒரு மாதத்திற்குப் பிறகு செருமனி மற்றும் சப்பான் பன்னாட்டுப் பொதுவுடைமை எதிர்ப்பு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டன. இந்த ஒப்பந்தத்தில் அடுத்த ஆண்டு இத்தாலி இணைந்தது. ஆசியா சீனாவில் குவோமின்டாங் கட்சியானது வட்டாரப் போர்ப் பிரபுக்களுக்கு எதிராக சீனாவை ஒருங்கிணைக்கும் ஓர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. 1920களின் மத்தியில் பெயரளவுக்குச் சீனாவை ஒன்றிணைத்தது. எனினும், சீக்கிரமே தன் முந்தைய சீனப் பொதுவுடமைக் கட்சிக் கூட்டாளிகள் மற்றும் புதிய வட்டாரப் போர்ப் பிரபுக்களுடன் ஓர் உள்நாட்டுப் போரில் பங்கெடுக்க வேண்டிய நிலை அதற்கு வந்தது. 1931இல் அதிகரித்து வந்த இராணுவ கொள்கையைக் கொண்ட சப்பானியப் பேரரசு நீண்ட காலமாகச் சீனாவில் தாக்கத்தை வேண்டி வந்தது. ஆசியாவை ஆட்சி செய்ய சப்பானுக்கு இருக்கும் உரிமையின் முதல் படியாக இதை சப்பான் அரசாங்கம் கருதியது. மஞ்சூரியா மீது படையெடுப்பதற்குச் சாக்குப்போக்காக முக்தேன் நிகழ்வை நடத்தியது. பிறகு, அங்கு கைப்பாவை அரசான மஞ்சுகோவை நிறுவியது. மஞ்சூரியா மீதான சப்பானின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் சங்கத்திடம் சீனா முறையிட்டது. மஞ்சூரியாவுக்குள்ளான அதன் ஊடுருவலுக்காகக் கண்டிக்கப்பட்ட பிறகு உலக நாடுகள் சங்கத்தில் இருந்து சப்பான் விலகியது. இந்த இரு நாடுகளும் பிறகு, 1933ஆம் ஆண்டு தாங்கு அமைதி ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் வரை சாங்காய், ரெகே மற்றும் கீபே ஆகிய இடங்களில் பல யுத்தங்களைப் புரிந்தன. இதற்குப் பிறகு, மஞ்சூரியா மற்றும் சாகர் மற்றும் சுயியுவானில் சப்பானிய ஆக்ரோஷத்திற்கு எதிராகச் சீனத் தன்னார்வப் படைகள் எதிர்ப்பைத் தொடர்ந்தன. 1936ஆம் ஆண்டின் சியான் நிகழ்வுக்குப் பிறகு, குவோமின்டாங் மற்றும் பொதுவுடமைவாதப் படைகள் சப்பானுக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகச் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. போருக்கு முந்தைய நிகழ்வுகள் எத்தியோப்பிய மீதான இத்தாலியப் படையெடுப்பு (1935) இரண்டாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் என்பது அக்டோபர் 1935இல் தொடங்கி மே 1936இல் முடிந்த ஒரு குறுகிய காலனிப் போராகும். எத்தியோப்பியப் பேரரசு (அபிசீனியா என்றும் அறியப்படுகிறது) மீது இத்தாலிய இராச்சியத்தின் (ரெக்னோ டி இத்தாலியா) இராணுவப் படைகள் படையெடுத்ததன் மூலம் இப்போர் தொடங்கியது. இத்தாலிய இராச்சியமானது இத்தாலிய சோமாலிலாந்து மற்றும் எரித்ரியாவிலிருந்து இப்போரில் இறங்கியது. எத்தியோப்பியா மீதான இராணுவ ஆக்கிரமிப்புக்கு இப்போர் இட்டுச் சென்றது. புதிதாக உருவாக்கப்பட்ட காலனியான இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் (ஆப்பிரிக்கா ஓரியன்டல் இத்தாலியானா) எத்தியோப்பியா இணைக்கப்பட்டது. மேலும், அமைதியை நீடிக்கச் செய்யும் ஒரு சக்தியாக இருந்த உலக நாடுகள் சங்கத்தின் பலவீனத்தையும் இது வெளிக்காட்டியது. இத்தாலி மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரண்டுமே உலக நாடுகள் சங்கத்தின் உறுப்பினர் நாடுகளாக இருந்தன. ஆனால், சங்கத்தின் கூட்டு ஒப்பந்தமான 10வது பிரிவை இத்தாலி வெளிப்படையாக மீறிய போது, அதைத் தடுக்க சங்கமானது மிகக் குறைவான செயல்களையே செய்தது. படையெடுப்பு காரணமாக இத்தாலி மீது தடைகளை விதிக்க ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு ஆதரவளித்தன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இத்தாலியப் படையெடுப்பை நிறுத்துவதில் தோல்வி அடைந்தன. ஆத்திரியாவை தன் வசப்படுத்தும் செருமனியின் இலக்குக்கு எதிரான கண்டனங்களை இறுதியாக இத்தாலி கைவிட்டது. எசுப்பானிய உள்நாட்டுப் போர் (1936–1939) எசுப்பானியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது இட்லர் மற்றும் முசோலினி ஆகியோர் அரசுக்கு எதிராக படைப் பெருந் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோவால் தலைமை தாங்கப்பட்ட தேசியவாதிகளுக்கு இராணுவ ஆதரவு அளித்தனர். நாசிக்களை விட தேசியவாதிகளுக்கு மிகுந்த அளவு ஆதரவை இத்தாலி அளித்தது. மொத்தமாக முசோலினி எசுப்பானியாவுக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைத் துருப்புகளையும், 6,000 வான் படை வீரர்களையும், மேலும் சுமார் 720 விமானங்களையும் அனுப்பினார். எசுப்பானியக் குடியரசின் ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்குச் சோவியத் ஒன்றியம் ஆதரவளித்தது. பன்னாட்டுப் படையணிகள் என்று அறியப்பட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுத் தன்னார்வப் படை வீரர்களும் தேசியவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டனர். செருமனியும், சோவியத் ஒன்றியமும் இந்தச் சார்பாண்மைப் போரைத் தங்களது மிகுந்த முன்னேறிய ஆயுதங்கள் மற்றும் உத்திகளை, போரில் சோதனை செய்யும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தின. ஏப்ரல் 1939இல் தேசியவாதிகள் உள்நாட்டுப் போரை வென்றனர். தற்போது சர்வாதிகாரியான பிராங்கோ இரண்டாம் உலகப் போரின் போது அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தார். ஆனால், பொதுவாக அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்தார். செருமனியுடனான இவரது மிக முக்கியமான இணைவானது கிழக்குப் போர்முனையில் போரிடுவதற்காகத் தன்னார்வலர்களை அனுப்பியது ஆகும். சீனா மீதான சப்பானியப் படையெடுப்பு (1937) சூலை 1937இல் முன்னாள் சீன ஏகாதிபத்தியத் தலைநகரான பீகிங்கை, மார்க்கோ போலோ பாலச் சம்பவத்தைத் தூண்டியதற்குப் பிறகு, சப்பான் கைப்பற்றியது. இச்செயலானது இறுதியாக சீனாவின் அனைத்துப் பகுதிகள் மீதும் சப்பான் படையெடுப்பதில் முடிவடைந்தது. சோவியத்துகள் சீக்கிரமே சீனாவுடன் ஒரு போர் எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு உபகரண உதவியை வழங்கியது. செருமனியுடனான சீனாவின் முந்தைய ஒத்துழைப்பை முடித்து வைத்தது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை சப்பானியர்கள் தையுவானைத் தாக்கினர். சிங்கோவுக்கு அருகில் குவோமின்டாங் இராணுவத்துடன் சண்டையில் ஈடுபட்டனர். பிங்சிங்குவானில் பொதுவுடமைவாதப் படைகளுடன் போரிட்டனர். சாங்காயின் தற்காப்பிற்காகத் தன்னுடைய சிறந்த இராணுவத்தைப் படைப் பெருந்தலைவர் சங் கை செக் தயார் நிலையில் வைத்தார். ஆனால், மூன்று மாதச் சண்டைக்குப் பிறகு சாங்காய் வீழ்ந்தது. சீனப் படைகளைத் தொடர்ந்து சப்பானியர்கள் தள்ளிக்கொண்டு முன்னேறினர். திசம்பர் 1937இல் தலைநகரம் நாங்கிங்கைக் கைப்பற்றினர். நாங்கிங் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான சீனக் குடிமக்களும், ஆயுதத்தைக் கைவிட்ட போர் வீரர்களும் சப்பானியர்களால் கொல்லப்பட்டனர். மார்ச் 1938இல் தேசியவாத சீனப்படைகள் தையேர்சுவாங்கில் தங்களது முதல் முக்கிய வெற்றியைப் பெற்றன. ஆனால், பிறகு மே மாதத்தில் சுசோவு நகரமானது சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது. சூன் 1938இல் மஞ்சளாற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியதன் மூலம் சப்பானியப் படைகளின் முன்னேற்றத்தைச் சீனப் படைகள் தடுத்தன. இந்தச் செயலானது, ஊகானில் தங்களது தற்காப்பைத் தயார் செய்ய சீனர்களுக்கு நேரத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், நகரமானது அக்டோபரில் கைப்பற்றப்பட்டது. சப்பான் நம்பியது போல் சப்பானின் இராணுவ வெற்றிகள் சீனாவின் எதிர்ப்பின் வீழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. பதிலாக, சீன அரசாங்கமானது நிலப்பகுதிக்கு உட்புறமாகச் சோங்கிங்கிற்குத் தனது இடத்தை மாற்றியது. அங்கிருந்து போரைத் தொடர்ந்தது. சோவியத்-சப்பானிய எல்லைச் சண்டைகள் 1930களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை மஞ்சுகோவில் இருந்த சப்பானியப் படைகள் சோவியத் ஒன்றியம் மற்றும் மங்கோலியாவுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த எல்லைச் சண்டைகளில் ஈடுபட்டன. கோகுசின்-ரான் என்ற சப்பானியக் கொள்கையானது சப்பானின் வடக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. அந்நேரத்தில் ஏகாதிபத்திய இராணுவத்தால் இது விரும்பப்பட்டது. 1939இல் கல்கின் கோல் யுத்தத்தில் சப்பான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அப்போது நடந்து கொண்டிருந்த இரண்டாவது சீன-சப்பானியப் போர், சோவியத்துடன் சப்பானின் கூட்டாளியான நாசி செருமனி நடுநிலையைப் பின்பற்றியது ஆகியவை இந்தக் கொள்கையைப் பின்பற்றுவதைக் கடினமாக்கின. இறுதியாக, ஏப்ரல் 1941இல் சப்பான் மற்றும் சோவியத் ஒன்றியம் ஒரு நடுநிலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. நான்சின்-ரான் என்ற கொள்கையை சப்பான் பின்பற்றியது. இதற்கு சப்பானியக் கடற்படை ஆதரவளித்தது. சப்பான் கவனத்தைத் தெற்கு நோக்கித் திருப்பியது. இது இறுதியாக, ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு இட்டுச் சென்றது. ஐரோப்பிய ஆக்கிரமிப்புகளும், ஒப்பந்தங்களும் ஐரோப்பாவில் செருமனியும், இத்தாலியும் மிகுந்த ஆக்ரோஷ மிக்கவையாக உருவாயின. மார்ச் 1938இல் செருமனி ஆத்திரியாவை இணைத்துக் கொண்டது. மற்ற ஐரோப்பிய சக்திகளிடமிருந்து சிறிதளவே எதிர்வினையைப் பெற்றது. இதனால் ஊக்கம் பெற்ற இட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் செருமானிய இனத்தவரை முக்கிய மக்கள் தொகையாகக் கொண்ட சுதேதென்லாந்து மீது செருமானிய உரிமை கோரலை அழுத்தமாகத் தெரிவிக்க ஆரம்பித்தார். சீக்கிரமே, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு, கோபத்தைத் தணிப்பதற்காக நிலப்பரப்புகளை இசைந்தளிக்கும் பிரித்தானியப் பிரதமர் நெவில் சேம்பர்லேனின் கொள்கையைப் பின்பற்றின. மியூனிச் ஒப்பந்தத்தில் செருமனிக்கு இந்த நிலப்பரப்பை விட்டுக் கொடுத்தன. இது செக்கோஸ்லோவாக்கிய அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு எதிராக நடைபெற்றதது. மேற்கொண்டு எந்தவொரு நிலப்பரப்பு உரிமைகளும் கோரப்படமாட்டாது என்ற உறுதிக்குப் பதிலாக இது நடத்தப்பட்டது. சீக்கிரமே, அங்கேரிக்கு மேற்கொண்ட நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க செக்கோஸ்லோவேகியாவை செருமனி மற்றும் இத்தாலி கட்டாயப்படுத்தின. போலந்து செக்கோஸ்லோவாக்கியாவின் சாவோல்சி பகுதியை இணைத்துக் கொண்டது. செருமனியால் கூறப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் இந்த ஒப்பந்தமானது பூர்த்தி செய்த போதும், அனைத்து செக்கோஸ்லாவாக்கியாவையும் ஒரு போர் நடவடிக்கையின் மூலம் அபகரிப்பதைச் சேம்பர்லேனின் தலையீடானது தடுத்துவிட்டதாகத் தனிமையில் இட்லர் கோபம் கொண்டார். இதற்குப் பிறகான பேச்சுக்களில் இட்லர் பிரித்தானிய மற்றும் யூதப் "போர் விரும்பிகளைத்" தாக்கினார். பிரித்தானியக் கடற்படையின் தனி முதன்மை நிலைக்குச் சவால் விடுக்க சனவரி 1939இல் செருமானியக் கடற்படை வலிமையை ஒரு முக்கிய அளவுக்குப் பெருக்க இட்லர் இரகசியமாக ஆணையிட்டார். மார்ச் 1939இல் செருமனி செக்கோஸ்லாவாக்கியா மீது படையெடுத்தது. இறுதியாக அதை செருமானியப் பாதுகாப்பு பகுதிகளான பொகேமியா மற்றும் மோராவியாவாகவும், ஒரு செருமானிய ஆதரவு அரசான சுலோவாக் குடியரசாகவும் பிரித்தது. 20 மார்ச் 1939 அன்று லித்துவேனியாவுக்கும் இட்லர் இறுதி எச்சரிக்கை விடுத்தார். முன்னர் செருமானிய மீம்லாந்து என்று அழைக்கப்பட்ட கிலைபேதா பகுதியை விட்டுக் கொடுக்கும் நிலைக்கு லித்துவேனியா தள்ளப்பட்டது. தான்சிக் சுதந்திர நகரம் மீது மேற்கொண்ட உரிமைக் கோரல்களை இட்லர் கூறிய போது மிகுந்த மனக் கலவரமடைந்த ஐக்கிய இராச்சியமும், பிரான்சும் போலந்து விடுதலைக்குத் தங்களது ஆதரவை உறுதி செய்தன. ஏப்ரல் 1939இல் அல்பேனியாவை இத்தாலி வென்ற போது இந்த உறுதியானது உருமேனியா மற்றும் கிரேக்க இராச்சியங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. பிராங்கோ-பிரித்தானிய உறுதியானது போலந்துக்குக் கொடுக்கப்பட்ட சிறிது காலத்தில், செருமனி மற்றும் இத்தாலி தங்களது சொந்தக் கூட்டணியான இரும்பு ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக்கின. செருமனியைச் சுற்றி வளைக்கும் முயற்சியை மேற்கொள்வதாக இட்லர் ஐக்கிய இராச்சியம் மற்றும் போலந்து மீது குற்றம் சாட்டினார். ஆங்கிலோ-செருமானியக் கடற்படை ஒப்பந்தத்தையும், செருமானிய-போலந்து போர் எதிர்ப்பு ஒப்பந்தத்தையும் இட்லர் கைவிட்டார். போலந்து எல்லையில் செருமனி தொடர்ந்து துருப்புகளைக் குவித்த போது இறுதியில் இந்த நிலைமையானது ஒரு பொதுவான பிரச்சனையாக உருவெடுத்தது. 23 ஆகத்து அன்று பிரான்சு, ஐக்கிய இராச்சியம் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான ஓர் இராணுவ கூட்டணியை உருவாக்கும் மும்முனைப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட போது, சோவியத் ஒன்றியம் செருமனியுடன் சண்டைத் தூண்டுதலுக்கு எதிரான ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஓர் இரகசிய விதிமுறை இருந்தது. அது செருமனி மற்றும் சோவியத் தாக்கப் பகுதிகளை (மேற்குப் போலந்து மற்றும் லித்துவேனியா செருமனிக்கும்; கிழக்குப் போலந்து, பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா மற்றும் பெச்சராபியா சோவியத் ஒன்றியத்துக்கும்) வரையறுத்திருந்தது. போலந்தின் தொடர்ந்த சுதந்திர நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது. போலந்துக்கு எதிரான போர் நடவடிக்கைக்குச் சோவியத் எதிர்ப்புத் தெரிவிக்கும் வாய்ப்பை இந்த ஒப்பந்தமானது மட்டுப்படுத்தியது. முதல் உலகப் போரின் போது செருமனியானது இரு முனைப் போரைச் சந்திக்கும் நிலையை எதிர் கொள்வதைப் போல் இம்முறை இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே 26 ஆகத்து அன்று தாக்குதலைத் தொடங்க இட்லர் ஆணையிட்டார். ஆனால், போலந்துடன் ஓர் அதிகாரப்பூர்வப் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐக்கிய இராச்சியம் ஏற்படுத்தியதையும், இத்தாலி நடு நிலை வகிக்கும் என்பதையும் கேட்டதற்குப் பிறகு இட்லர் இந்தத் தாக்குதலைத் தாமதப்படுத்த முடிவு செய்தார். போரைத் தவிர்ப்பதற்காக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டன் விடுத்த கோரிக்கைகளுக்குப் பதிலாக போலந்து மீது கோரிக்கைகளைச் செருமனி வைத்தது. இது உறவு முறைகளை மோசமாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்காகவே இருந்தது. 29 ஆகத்து அன்று சுதந்திரமாக முடிவெடுக்கும் முழு அதிகாரமுடைய ஒரு போலந்துத் தூதரை பெர்லினுக்குப் பயணிக்க வைத்து தான்சிக்கை விட்டுக் கொடுக்கவும், போலந்து இடைவழியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி அதில் செருமானியச் சிறுபான்மையினர் பிரிவினைக்கு வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை நடத்த இட்லர் கோரினார். செருமனியின் கோரிக்கைகளுக்கு உடன்படப் போலந்துக்காரர்கள் மறுத்தனர். 30-31 ஆகத்து இரவில் பிரித்தானியத் தூதுவர் நெவில் என்டர்சனுடன் ஒரு ஆக்ரோஷமான சந்திப்பில் ரிப்பன்டிராப் தன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகச் செருமனி கருதுவதாக அறிவித்தார். போரின் போக்கு ஐரோப்பாவில் போர் வெடித்தது (1939–40) 1 செப்டம்பர் 1939 அன்று படையெடுப்பைத் தொடங்குவதற்குப் பல போலி எல்லை நிகழ்வுகளை ஏற்படுத்தியதற்குப் பிறகு, அதைச் சாக்குப் போக்காக வைத்து போலந்து மீது செருமனி படையெடுத்தது. வெசுதர்பிலேத்தில் இருந்த போலந்துத் தற்காப்புக்கு எதிராகப் போரின் முதல் செருமானியத் தாக்குதலானது நடத்தப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு செருமனிக்கு ஓர் இறுதி எச்சரிக்கையை ஐக்கிய இராச்சியம் பதிலாகக் கொடுத்தது. செப்டம்பர் 3 அன்று எச்சரிக்கையைப் பொருட்படுத்தாதற்குப் பிறகு பிரிட்டன் மற்றும் பிரான்சு செருமனி மீது போரை அறிவித்தன. இதற்குப் பிறகு ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடாவும் போரை அறிவித்தன. போனிப் போர் காலத்தின்போது, சார்லாந்துக்குள்ளான ஒரு கவனமான பிரெஞ்சுப் படையெடுப்பைத் தவிர்த்து கூட்டணியானது போலந்துக்கு எந்த ஒரு நேரடி இராணுவ உதவியையும் அளிக்கவில்லை. மேற்கு நேச நாடுகள் செருமனி மீது ஒரு கடற்படை முற்றுகையையும் தொடங்கின. அதன் பொருளாதார மற்றும் போர் முயற்சியைச் சேதப்படுத்துவதை இலக்காக கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்குப் பதிலாக நேச நாடுகளின் வணிக மற்றும் போர்க்கப்பல்களுக்கு எதிராக நீர் மூழ்கி யூ படகு போர் முறைக்குச் செருமனி ஆணையிட்டது. இது பிறகு அத்திலாந்திக் யுத்தமாகப் பெரிதானது. 8 செப்டம்பர் அன்று வார்சாவின் புறநகர்ப் பகுதிகளை செருமானியத் துருப்புகள் அடைந்தன. மேற்குப் பகுதியில் போலந்தின் பதில் தாக்குதலானது செருமானிய முன்னேற்றத்தைப் பல நாட்களுக்குத் தடுத்தது. ஆனால், அது வேர்மாக்ட்டால் பக்கவாட்டில் பயணித்துச் சுற்றி வளைக்கப்பட்டது. முற்றுகையிடப்பட்ட வார்சாவிலிருந்து எஞ்சிய போலந்து இராணுவத்தினர் முற்றுகையை உடைத்துத் தப்பித்தனர். 17 செப்டெம்பர் 1939 அன்று சப்பானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் போலந்து மீது படையெடுத்தது. போலந்து அரசானது பெரும்பாலும் நடைமுறையிலிருந்து அழிந்து விட்டது என்பதைக் காரணமாகக் கூறிப் படையெடுத்தது. 27 செப்டம்பர் அன்று வார்சா நகர்ப் படையினர் செருமனியிடம் சரணடைந்தனர். போலந்து இராணுவத்தின் கடைசி பெரிய திட்டப் பிரிவானது 6 அக்டோபர் அன்று சரணடைந்தது. இராணுவத் தோல்வி அடைந்த போதும் போலந்து என்றுமே சரணடையவில்லை. மாறாக, நாடு கடந்த போலந்து அரசாங்கத்தை அது உருவாக்கியது. ஓர் இரகசிய அரசுச் சாதனமானது ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் தொடர்ந்தது. போலந்து இராணுவ வீரர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் உருமேனியா மற்றும் லாத்வியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களில் பலர் பிறகு போரின் மற்ற முனைகளில் அச்சு நாடுகளுக்கு எதிராகச் சண்டையிட்டனர். செருமனி மேற்குப் போலந்தை இணைத்துக் கொண்டது. போலந்தின் நடுப் பகுதியை ஆக்கிரமித்தது. சோவியத் ஒன்றியம் கிழக்குப் பகுதியை இணைத்துக் கொண்டது. போலந்து நிலப்பரப்பின் சிறிய பகுதிகள் லித்துவேனியா மற்றும் சுலோவாக்கியாவுக்குக் கொடுக்கப்பட்டன. 6 அக்டோபர் அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சுக்கு ஒரு பொது அமைதி முயற்சியை இட்லர் மேற்கொண்டார். ஆனால், போலந்தின் எதிர் காலமானது செருமனி மற்றும் சோவியத் ஒன்றியத்தால் மட்டுமே முடிவெடுக்கப்படும் என்றார். இந்த முன்மொழிவானது நிராகரிக்கப்பட்டது. பிரான்சுக்கு எதிராக உடனடித் தாக்குதலுக்கு இட்லர் ஆணையிட்டார். ஆனால், மோசமான காலநிலை காரணமாக 1940ஆம் ஆண்டின் இளவேனிற் காலம் வரை இந்தத் தாக்குதல் தாமதப்படுத்தப்பட்டது. போலந்தில் போர் வெடித்ததற்குப் பிறகு எசுத்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியா இராணுவப் படையெடுப்புக்கு உள்ளாக்கப்படலாம் என்ற எச்சரிக்கையைச் சுடாலின் விடுத்தார். இந்த நாடுகளில் சோவியத் இராணுவத் தளங்களை உருவாக்கக் காரணமான ஒப்பந்தங்களில் கையொப்பமிட மூன்று பால்டிக் நாடுகளும் கட்டாயப்படுத்தப்பட்டன. அக்டோபர் 1939இல் குறிப்பிடத்தக்க அளவிலான சோவியத் இராணுவப் படைப் பிரிவுகள் அங்கு இடம் பெயர்ந்தன. இதே போன்றதொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப் பின்லாந்து மறுத்தது. சோவியத் ஒன்றியத்துக்குத் தன் நிலப்பரப்பில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கும் கோரிக்கையை நிராகரித்தது. நவம்பர் 1939 அன்று சோவியத் ஒன்றியம் பின்லாந்து மீது படையெடுத்தது. உலக நாடுகள் சங்கத்தில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. பெரும் எண்ணிக்கையில் வீரர்களைக் கொண்டிருந்த போதிலும் பனிக்காலப் போரின் போது சோவியத் இராணுவ வெற்றியானது குறைவாகவே இருந்தது. பின்லாந்து-சோவியத் போரானது மார்ச் 1940இல் முடிவுக்கு வந்தது. தன் நிலப் பரப்பில் சிலவற்றைப் பின்லாந்து விட்டுக் கொடுத்தது. சூன் 1940இல் எசுத்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியாவின் மொத்த நிலப்பரப்புகளையும், உருமேனியப் பகுதிகளான பெச்சராபியா, வடக்கு புகோவினா மற்றும் கெர்தசா பகுதிகளைச் சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்தது. ஆகத்து 1940இல் உருமேனியா மீது இரண்டாவது வியன்னா விருதை இட்லர் கட்டாயப்படுத்தி அளித்தார். இதன் காரணமாக வடக்கு திரான்சில்வேனியவை அங்கேரிக்குக் கொடுக்க வேண்டிய நிலை உருமேனியாவுக்கு ஏற்பட்டது. செப்டம்பர் 1940இல் செருமானிய மற்றும் இத்தாலிய ஆதரவுடன் உருமேனியாவிடம் இருந்து தெற்கு தோப்ருசா பகுதியைப் பல்கேரியா கேட்டது. இது கிரையோவா ஒப்பந்தத்திற்கு இட்டுச் சென்றது. 1939ஆம் ஆண்டின் உருமேனியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை இழந்தது மன்னர் இரண்டாம் கரோலுக்கு எதிராக ஒரு புரட்சிக்குக் காரணமானது. மார்சல் இயோன் அந்தோனெசுகுவின் தலைமையிலான ஒரு பாசிச சர்வாதிகார அரசாக உருமேனியா மாறியது. ஒரு செருமானிய உத்தரவாதத்தைப் பெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அச்சு நாடுகளை நோக்கி அதன் போக்கு இருந்தது. அதே நேரத்தில், நாசி-சோவியத் அரசியல் மீள் இணக்கமும், பொருளாதார ஒத்துழைப்பும் படிப்படியாக நின்று போனது. இரண்டு நாடுகளும் போருக்கு ஆயத்தமாகத் தொடங்கின. மேற்கு ஐரோப்பா (1940–41) ஏப்ரல் 1940இல் சுவீடனிலிருந்து வரும் இரும்புத்தாதுச் சரக்குகளைப் பாதுகாப்பதற்காக டென்மார்க் மற்றும் நார்வே மீது செருமனி படையெடுத்தது. இந்தச் சரக்குப் போக்குவரத்தை வெட்டிவிட நேச நாடுகள் முயன்றன. நேச நாடுகள் உதவி அளித்த போதும் சில மணி நேரத்திலேயே டென்மார்க் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. இரண்டு மாதத்துக்குள்ளாகவே நார்வே வெல்லப்பட்டது. நார்வே படையெடுப்பு குறித்த பிரித்தானியப் பொதுமக்களின் அதிருப்தியானது பிரதமர் நெவில் சேம்பர்லேனின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது. 10 மே 1941இல் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராகப் பதவிக்கு வந்தார். அதே நாளில் பிரான்சுக்கு எதிராக ஒரு தாக்குதலில் செருமனி இறங்கியது. பிராங்கோ-செருமானிய எல்லையில் இருந்த வலிமையான மசினோ கோட்டுப் பாதுகாப்புகளைச் சுற்றிச்செல்ல நடு நிலை வகித்த நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் மீது தனது தாக்குதலைச் செருமனி திருப்பியது. ஆர்டென் காடு பகுதி வழியாகச் செருமானியர்கள் சுற்றி வளைக்கும் நகர்வை மேற்கொண்டனர். ஆர்டென் காட்டை கவச வாகனங்களால் ஊடுருவ இயலாத இயற்கைத் தடையென என நேச நாடுகள் தவறாகக் கருதின. வெற்றிகரமாக புதிய மின்னலடித் தாக்குதல் உத்திகளைச் செயல்படுத்திய பிறகு வேர்மாக்டானது கால்வாயை நோக்கி வேகமாக முன்னேறியது. பெல்ஜியத்தில் இருந்த நேச நாட்டுப் படைகளை வெட்டிவிட்டது. லில்லேவுக்கு அருகில் இருந்த பிராங்கோ-பெல்ஜிய எல்லையில் பெரும்பாலான நேச நாட்டு இராணுவங்களைக் கொப்பரையில் பிடித்தது போல் ஆக்கியது. சூன் ஆரம்பம் வாக்கில் கண்டப்பகுதியில் இருந்த ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நேச நாட்டுத் துருப்புகளை ஐக்கிய இராச்சியத்தால் வெளியேற்ற முடிந்தது. எனினும், கிட்டத்தட்ட அனைத்து உபகரணங்களையும் அவர்கள் விட்டுச் சென்றனர். 10 சூன் அன்று பிரான்சு மீது இத்தாலி படையெடுத்தது. பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளின் மீதும் போரை அறிவித்தது. பலவீனமடைந்த பிரெஞ்சு இராணுவத்திற்கு எதிராகத் தெற்கு நோக்கிச் செருமானியர்கள் திரும்பினர். அவர்களிடம் 14 சூன் அன்று பாரிசு வீழ்ந்தது. எட்டு நாட்களுக்குப் பிறகு செருமனியிடம் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரான்சு கையொப்பமிட்டது. பிரான்சானது செருமானிய மற்றும் இத்தாலிய ஆக்கிரமிப்புப் பகுதிகளாகவும், தேர்ந்தெடுக்கப்படாத விச்சி அரசின் கீழ் ஆக்கிரமிக்கப்படாத ஒரு பின் பகுதி அரசாகவும் பிரிக்கப்பட்டது. விச்சி அரசானது அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்த போதும், பொதுவாக செருமனியுடன் இணைந்து செயல்பட்டது. பிரான்சு தனது கடற்படையை வைத்துக் கொண்டது. பிரெஞ்சு கடற்படையைச் செருமனி அபகரிப்பதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக 3 சூலை அன்று ஐக்கிய இராச்சியமானது பிரெஞ்சு கடற்படையைத் தாக்கியது. பிரிட்டன் வான் சண்டையானது சூலையின் ஆரம்பத்தில் தொடங்கியது. லூப்டுவாபே கப்பல் வழிகள் மற்றும் துறைமுகங்களைத் தாக்கியது. இட்லரின் அமைதி வாய்ப்பளிப்பை ஐக்கிய இராச்சியம் நிராகரித்தது. செருமானிய வான் தனி முதன்மைப் படையெடுப்பானது ஆகத்து மாதத்தில் தொடங்கியது. ஆனால், பிரித்தானிய தேசிய மதிப்பு வாய்ந்த விமானப்படையின் தாக்குதலைத் தோற்கடிப்பதில் தோல்வி அடைந்தது. இதனால் முன்மொழியப்பட்டிருந்த பிரிட்டன் மீதான செருமானியப் படையெடுப்பானது காலவரையின்றி தள்ளி வைக்கப்படும் நிலைக்கு ஆளானது. பிளிட்ஸ் முறையில் இலண்டன் மற்றும் பிற நகரங்கள் மீதான இரவுத் தாக்குதல்கள் மூலம் செருமானிய முக்கியக் குண்டு வீச்சுத் தாக்குதலானது தீவிரமடைந்தது. ஆனால், பிரித்தானியப் போர் முயற்சிக்கு முக்கியச் சேதம் ஏற்படுத்துவதில் தோல்வி அடைந்தது. இத்தாக்குதல்கள் பெரும்பாலும் மே 1941இல் முடிந்து போனது. புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரெஞ்சுக் கோட்டைகளைப் பயன்படுத்திச் செருமானியக் கடற்படையானது விரிவாகப் பரவி இருந்த அரச கடற்படைக்கு எதிராக, அத்திலாந்திக்கில் பிரித்தானியக் கப்பல்களுக்கு எதிராக நீர்மூழ்கி யூ படகுகளைப் பயன்படுத்தி வெற்றிகளைப் பெற்றது. 27 மே 1941 அன்று செருமானியப் போர்க் கப்பலான பிஸ்மார்க்கை மூழ்கடித்ததன் மூலம் பிரித்தானிய மையக் கப்பல் குழுவானது ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றது. நவம்பர் 1939இல் சீனா மற்றும் மேற்கு நேச நாடுகளுக்கு உதவி செய்ய நடவடிக்கைகளை ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்டது. நடு நிலைச் சட்டத்தை நேச நாடுகளால் "பணம் மூலம் உபகரணங்களை வாங்குவதற்கு" அனுமதி அளிக்கக் கொண்டு வந்தது. 1940இல் பாரிசை செருமனி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் அளவானது பெருமளவு அதிகரித்தது. செப்டம்பரில் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்தும் அனுமதிக்குப் பதிலாக அமெரிக்கத் தாக்குதல் போர்க் கப்பல்களைக் கொடுக்க ஐக்கிய அமெரிக்கா மேலும் ஒப்புக்கொண்டது. எனினும், 1941 வரை ஒரு பெருமளவிலான அமெரிக்கப் பொதுமக்கள் இந்தச் சண்டையில் எந்த ஒரு நேரடி இராணுவத் தலையீட்டையும் அமெரிக்கா செய்வதைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். திசம்பர் 1941இல் உலகை வெல்வதற்குத் திட்டமிடுவதாக இட்லர் மீது ரூசவெல்ட் குற்றம் சாட்டினார். எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பயனற்றது என தவிர்த்தார். ஐக்கிய அமெரிக்கா ஒரு "சனநாயகப் படைக்கலமாக" உருவாக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பிரித்தானியப் போர் முயற்சிக்கு ஆதரவளிக்க, உதவி தொடர்பான கடன்-குத்தகை ஒப்பந்தக் கொள்கைகளை ஊக்குவித்தார். செருமனிக்கு எதிராக ஒரு முழு அளவிலான தாக்குதலுக்குத் தயாராவதற்காக ஐக்கிய அமெரிக்கா உத்தித் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது. செப்டம்பர் 1940இன் இறுதியில் மும்முனை ஒப்பந்தமானது சப்பான், இத்தாலி மற்றும் செருமனியை அதிகாரப்பூர்வமாக அச்சு நாடுகளாக ஒன்றிணைத்தது. மும்முனை ஒப்பந்தமானது தெளிவாக, சோவியத் ஒன்றியத்தை தவிர்த்து எந்தவொரு நாடும் எந்தவொரு அச்சு சக்தியையும் தாக்கினால் மூன்று நாடுகளுக்கு எதிராகவும் போருக்குக் கட்டாயப்படுத்தப்படும் என்று கூறியது. நவம்பர் 1940இல் அங்கேரி, சுலோவாக்கியா மற்றும் உருமேனியா இணைந்த பிறகு அச்சு நாடுகள் விரிவடைந்தன. உருமேனியா மற்றும் அங்கேரி சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அச்சு நாடுகளின் போரின்போது முக்கிய ஆதரவை அளித்தன. சோவியத் ஒன்றியத்துக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பை மீண்டும் பெற வேண்டும் என்ற உருமேனியாவின் எண்ணமும் இதற்கு ஒரு பகுதிக் காரணமாகும். நடு நிலக்கடல் (1940–41) 1940 சூனின் ஆரம்பத்தில் இத்தாலிய ரெகியா ஏரோநாட்டிகா ஒரு பிரித்தானியக் கையிருப்பு நிலமான மால்டாவைத் தாக்கி முற்றுகையிட்டது. கோடைக்காலத்தின் பிற்பகுதி முதல் இலையுதிர் காலத்தின் ஆரம்பம் வரை இத்தாலியானது பிரித்தானிய சோமாலிலாந்தை வென்று, பிரித்தானியார் வசம் இருந்த எகிப்துக்குள் ஓர் ஊடுருவலையும் நடத்தியது. அக்டோபரில் இத்தாலி கிரேக்கத்தைத் தாக்கியது. ஆனால், இத்தாலியர்களுக்கு பெருமளவு உயிரிழப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. இந்த படையெடுப்பானது மாதங்களுக்குள்ளாகவே முடிந்தது. இப்படையெடுப்பால் நிலப்பரப்பில் சிறிதளவு மாற்றங்களே ஏற்பட்டன. இத்தாலிக்கு உதவுவதற்காகவும், பால்கன் பகுதியில் பிரிட்டன் காலூன்றுவதைத் தடுப்பதற்காகவும் பால்கன் பகுதி மீது ஒரு படையெடுப்புக்கான ஆயத்தப் பணிகளைச் செருமனி தொடங்கியது. ஏனெனில், பிரிட்டன் அங்கு காலூன்றினாள் அது உரோமானிய எண்ணெய் வயல்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும். மேலும், நடு நிலக் கடலின் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தாக்கவும் செருமனி இதனைத் தொடங்கியது. திசம்பர் 1940இல் எகிப்து மற்றும் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் இத்தாலியப் படைகளுக்கு எதிராகப் பிரித்தானியப் பேரரசின் படைகள் பதில் தாக்குதல்களைத் தொடங்கின. இந்தத் தாக்குதல்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்தன. 1941 பெப்ரவரியின் ஆரம்பத்தில் கிழக்கு லிபியாவின் கட்டுப்பாட்டை இத்தாலி இழந்தது. பெரும் எண்ணிக்கையிலான இத்தாலியத் துருப்புகள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இத்தாலியக் கடற்படையும் முக்கியமான தோல்விகளை அடைந்தது. தரந்தோவில் நடத்தப்பட்ட ஒரு விமானம் தாங்கி கப்பல் தாக்குதலின் மூலம் தேசிய மதிப்பு வாய்ந்த கடற்படையானது மூன்று இத்தாலியப் போர்க்கப்பல்களைப் பயன்படுத்த இயலாதவையாக ஆக்கியது. மதபன் முனை யுத்தத்தில் மேலும் பல போர்க்கப்பல்களைப் பயனற்றதாக்கியது. இத்தாலியத் தோல்விகள் வடக்கு ஆப்பிரிக்காவுக்குத் தளங்களிலிருந்து தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று போர் புரியும் படையைச் செருமனி இறக்குவதற்குத் தூண்டியது. 1941 மார்ச் இறுதியில் பாலைவன நரி ரோமெலின் ஆப்பிரிக்கத் துணைப் பிரிவானது தாக்குதலில் இறங்கியது. பொதுநலவாயப் படைகளைப் பின்வாங்க வைத்தது. ஒரு மாதத்திற்குள்ளாகவே அச்சு நாட்டுப் படைகள் மேற்கு எகிப்துக்கு முன்னேறின. துப்ருக் துறைமுகத்தை முற்றுகையிட்டன. 1941 மார்ச்சின் இறுதியில் பல்கேரியா மற்றும் யுகோஸ்லாவியா மும்முனை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. எனினும், பிரித்தானிய ஆதரவுத் தேசியவாதிகளால் இரண்டு நாட்களுக்குப் பிறகு யுகோஸ்லாவிய அரசாங்கமானது தூக்கி எறியப்பட்டது. இதற்குப் பதிலாக, ஒரே நேரத்தில் யுகோஸ்லாவியா மற்றும் கிரேக்கம் ஆகிய இரு நாடுகளின் மீதும் செருமனி 6 ஏப்ரல் 1941 அன்று படையெடுத்தது. ஒரு மாதத்திற்குள்ளாகவே இரு நாடுகளும் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மே இறுதியில், கிரேக்கத் தீவான கிரீட் மீதான வான்வழிப் படையெடுப்புடன் செருமனி பால்கன் பகுதியை முழுவதுமாக வென்றது. அச்சு நாடுகளின் வெற்றியானது விரைவாக இருந்தபோதும், அவர்களுக்கு எதிரான கசப்பான உணர்வுடைய பெரிய அளவிலான ஒரு சார்புப் போர் முறையானது யுகோஸ்லாவியாவை ஆக்கிரமித்திருந்த அச்சு நாட்டுப் படைகளுக்கு எதிராக இறுதியாக வெடித்தது. இப்போர்முறை போரின் இறுதி வரை நீடித்தது. மே மாதத்தில் மத்திய கிழக்கில் ஈராக்கில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியைப் பொதுநலவாயப் படைகள் ஒடுக்கின. இந்தக் கிளர்ச்சிக்கு விச்சியின் கட்டுப்பாட்டிலிருந்த சிரியாவுக்குள் இருந்த தளங்களில் இருந்து வந்த செருமானிய விமானங்கள் உதவி புரிந்தன. சூன் மற்றும் சூலைக்கு இடையில் சிரியா மற்றும் லெபனானில் இருந்த பிரெஞ்சுக் கையிருப்பு நிலங்களைச் சுதந்திர பிரெஞ்சு உதவியுடன் இவர்கள் படையெடுத்து ஆக்கிரமித்தனர். சோவியத் ஒன்றியம் மீது அச்சு நாடுகளின் தாக்குதல் (1941) ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஒப்பீட்டளவில் நிலைமை நிலையாக இருந்தபோது, செருமனி, சப்பான் மற்றும் சோவியத் ஒன்றியம் போருக்கு ஆயத்தமாயின. செருமனியுடனான பதட்டம் அதிகரித்துக் கொண்டு வந்ததையும், தென்கிழக்கு ஆசியாவின் வளமிக்க ஐரோப்பியக் கையிருப்பு நிலங்களைக் கைப்பற்றுவதன் மூலம் ஐரோப்பியப் போரைத் தனக்குச் சாதகமாக்க சப்பான் திட்டமிடுவதையும் அறிந்த சோவியத்துகள் சப்பானுடன் ஏப்ரல் 1941இல் சோவியத்-சப்பானிய நடுநிலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இதற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் மீது ஒரு தாக்குதலுக்குப் படிப்படியாகச் செருமானியர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். சோவியத் எல்லையில் படைகளைக் குவித்தனர். ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் செருமனிக்கு எதிராகப் போரில் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ இறங்குவார்கள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே, போரை ஐக்கிய இராச்சியமானது முடிவுக்குக் கொண்டு வர மறுக்கிறது என இட்லர் நம்பினார். 31 சூலை 1941 அன்று சோவியத் ஒன்றியம் நீக்கப்பட வேண்டும் எனவும், உக்ரைன், பால்டிக் நாடுகள் மற்றும் பைலோ உருசியாவை வெல்லும் இலக்கிற்கும் இட்லர் முடிவெடுத்தார். எனினும், ரிப்பன்டிராப் போன்ற மற்ற மூத்த செருமானிய அதிகாரிகள் சோவியத் ஒன்றியத்தை மும்முனை ஒப்பந்தத்திற்கு அழைப்பதன் மூலம் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக ஒரு ஐரோவாசியக் கூட்டமைப்பை உருவாக்க ஒரு வாய்ப்பாகக் கண்டனர். நவம்பர் 1940இல் ஒப்பந்தத்தில் சோவியத் ஒன்றியம் இணையுமா என்பதை முடிவு செய்யப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. சோவியத்துகள் ஓரளவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்தினர். ஆனால், பின்லாந்து, பல்கேரியா, துருக்கி மற்றும் சப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து நிலப்பரப்புகள் வேண்டும் என்று கேட்டனர். இதை ஏற்க இயலாததாகச் செருமனி கருதியது. 18 திசம்பர் 1940 அன்று சோவியத் ஒன்றியம் மீதான ஒரு படையெடுப்புக்குத் தயாராகுமாறு பணி முறைச் செயல் கட்டளையை இட்லர் வெளியிட்டார். 22 சூன் 1941 அன்று இத்தாலி மற்றும் உருமேனியாவின் ஆதரவுடன் செருமனி பார்பரோசா நடவடிக்கை மூலம் சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்தது. தங்களுக்கு எதிராகச் சதி திட்டம் தீட்டியதாகச் சோவியத்துகள் மீது செருமனி குற்றம் சாட்டியது. செருமனியுடன் சீக்கிரமே பின்லாந்து மற்றும் அங்கேரி இணைந்தன. இந்த எதிர்பார்க்கப்படாத தாக்குதலின் முதன்மை இலக்குகள் பால்டிக் பகுதி, மாஸ்கோ மற்றும் உக்ரைன் ஆகும். 1941ஆம் ஆண்டுப் படையெடுப்பை ஆர்க்கேஞ்சல்ஸ்க்-அசுதிரகான் கோட்டுக்கு அருகில் காசுப்பியன் முதல் வெள்ளைக் கடல்கள் வரை நிறுத்த வேண்டும் என்பது இறுதி இலக்காக இருந்தது. ஓர் இராணுவ சக்தியான சோவியத் ஒன்றியத்தை அகற்றுவது, பொதுவுடமைவாதத்தை பூண்டோடழிப்பது, உள்ளூர் மக்களின் நிலத்தைப் பறிப்பதன் மூலம் லெபென்சரவுமை ("செருமானியர்களுக்கான வாழுமிடம்") உருவாக்குவது மற்றும் செருமனியின் எஞ்சிய எதிரிகளைத் தோற்கடிக்கத் தேவையான முக்கிய வளங்களுக்கான வழியை உறுதி செய்வது ஆகியவையே இட்லரின் குறிக்கோள்கள் ஆகும். செஞ்சேனையானது போருக்கு முன்னர் ஒரு முக்கியப் பதில் தாக்குதலுக்குத் தயாராகி வந்த போதிலும், பார்பரோசா நடவடிக்கையானது சோவியத் முதன்மை தலைமையை ஒரு உத்தி ரீதியிலான தற்காப்பைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளியது. கோடை காலத்தின்போது, சோவியத் நிலப்பரப்புக்குள் அச்சு நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றன. வீரர்கள் மற்றும் உபகரணங்கள் மீது கடுமையான சேதத்தை விளைவித்தன. எனினும், ஆகத்து நடுப்பகுதியில், குறிப்பிடத்தக்க அளவு இழப்பைச் சந்தித்த இராணுவக் குழு மையத்தின் தாக்குதலை நிறுத்த செருமானிய இராணுவ உயர் தலைமையானது முடிவு செய்தது. நடு உக்ரைன் மற்றும் லெனின்கிராட் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த துருப்புகளுக்கு வலுவூட்டுவதற்காக இரண்டாவது பான்செர் குழுவை வழிமாற்றி விட்டது. கீவ் தாக்குதலானது மிகவும் வெற்றிகரமாக இருந்தது. இதன் விளைவாக, நான்கு சோவியத் இராணுவங்கள் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கிரிமியாவுக்குள்ளும், தொழில்துறை ரீதியாக வளர்ச்சிபெற்ற கிழக்கு உக்ரைனுக்குள்ளும் (முதலாம் கார்க்கோவ் சண்டை) முன்னேறும் வாய்ப்பையும் உருவாக்கியது. அச்சு நாட்டுத் துருப்புகளில் முக்கால் பங்கினரையும், பிரான்சு மற்றும் நடு நிலக் கடல் பகுதியில் இருந்த அவர்களது பெரும்பாலான விமானப்படைகளைக் கிழக்குப் போர்முனைக்கு வழிமாற்றி விட்டது, ஐக்கிய இராச்சியத்தை ஒரு பெரும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தலாமா எனக் கருதுவதற்குத் தூண்டியது. சூலையில் ஐக்கிய இராச்சியமும், சோவியத் ஒன்றியமும் செருமனிக்கு எதிராக ஓர் இராணுவக் கூட்டணியை ஏற்படுத்தின. ஆகத்து மாதத்தில் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து அத்திலாந்திக் சாசனத்தை வெளியிட்டன. போருக்குப் பிந்தைய உலகில் பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் குறிக்கோள்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகத்தின் பிற்பகுதியில், பிரிட்டனும், சோவியத்துகளும் நடு நிலை வகித்த ஈரான் மீது படையெடுத்தனர். ஈரானியக் குறுகிய வழி, ஈரானின் எண்ணெய் வயல்கள் மற்றும், பக்கு எண்ணெய் வயல்களையோ அல்லது இந்தியாவை நோக்கியோ ஈரான் வழியாக அச்சு நாடுகள் எந்த வித முன்னேற்றத்தையும் நடத்தக் கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கைத் தாக்குதலாக இப்படையெடுப்பை நடத்தினர். அக்டோபர் இறுதியில் உக்ரைன் மற்றும் பால்டிக் பகுதியில் அச்சு நாடுகளின் திட்டக் குறிக்கோள்கள் அடையப்பட்டன. லெனின்கிராட் மற்றும் செவசுதபோல் முற்றுகைகள் மட்டுமே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. மாஸ்கோவுக்கு எதிரான ஒரு பெரும் தாக்குதலானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதிகரித்து வந்த கடுமையான காலச்சூழ்நிலையில் இரண்டு மாத ஆக்ரோஷமான யுத்தங்களுக்குப் பிறகு மாஸ்கோவின் வெளி புறநகர்ப் பகுதிகளைச் செருமானிய இராணுவமானது கிட்டத்தட்ட அடைந்து விட்டது. ஆனால், அங்கு சோர்வடைந்த துருப்புகள் தங்களது தாக்குதலை இடைநிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அச்சு நாடுகளின் படைகள் பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றின. ஆனால், அவர்களது போர்ப் பயணமானது அதன் முதன்மை இலக்குகளை அடைவதில் தோல்வி அடைந்தது: இரண்டு முக்கிய நகரங்கள் சோவியத் கைகளில் தொடர்ந்து இருந்தன, எதிர்ப்புக்காட்டும் சோவியத் செயலாற்றல் உடைக்கப்படவில்லை மற்றும் சோவியத் ஒன்றியம் தனது இராணுவ ஆற்றலின் பெரும் பகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. ஐரோப்பாவில் போரின் பிளிட்ஸ்கிரைக் பகுதியானது முடிவடைந்தது. திசம்பர் ஆரம்பத்தில் புதிதாகத் திரட்டப்பட்ட சேமைப் படையினரைச் சேர்த்து சோவியத்துகள் அச்சு நாட்டுத் துருப்புகளுக்கு இணையான எண்ணிக்கையைப் பெற்றனர். இது மற்றும் சப்பானியக் குவாந்துங் இராணுவத்தால் நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலையும் முறியடிக்கக் கிழக்கில் எண்ணிக்கையில் மிகக் குறைவான சோவியத் துருப்புகளே போதும் என்ற உளவியல் தகவல் ஆகியவற்றைக் கொண்டு 5 திசம்பர் அன்று தொடங்கிய ஒரு பெரிய பதில் தாக்குதலைச் சோவியத்துகள் போர் முனை முழுவதும் நடத்தினர். செருமானியத் துருப்புகளை 100 முதல் 250 கிலோ மீட்டர்கள் மேற்கு நோக்கித் தள்ளினர். பசிபிக்கில் போர் வெடித்தது (1941) 1931இல் சப்பானியப் போலி முக்தேன் நிகழ்வு, 1937இல் அமெரிக்கத் துப்பாக்கிப் படகான யு. எஸ். எஸ். பனாய் மீது சப்பானியர்கள் வெடிக்கும் உலோகக் கலங்களால் சுட்டது மற்றும் 1937-38இன் நாங்கிங் படுகொலைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து சப்பான்-அமெரிக்க உறவானது மோசமடைந்தது. 1939இல் தனது வணிக ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என சப்பானிடம் ஐக்கிய அமெரிக்கா அதிகாரப் பூர்வமாகத் தெரியப்படுத்தியது. சப்பானிய விரிவாக்கத்திற்கு எதிராக அமெரிக்கப் பொது மக்களிடையே நிலவிய எண்ணமானது ஒரு தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. ஏற்றுமதி கட்டுப்பாடுச் சட்டங்கள் ஐக்கிய அமெரிக்க வேதிப் பொருட்கள், கனிமங்கள் மற்றும் இராணுவப் பாகங்களை சப்பானுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தன. முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத சப்பானிய அரசின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகப்படுத்தின. 1939ஆம் ஆண்டின்போது ஒரு முக்கியமான சீன நகரமான சாங்சாவிற்கு எதிராக யாப்பான் தனது முதல் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால், செப்டம்பர் இறுதியில் இந்தத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. இருபக்கமும் இருந்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் 1940இன் இறுதியில் சீனா மற்றும் சப்பானுக்கு இடையிலான போரானது யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தது. வணிக வழிகளை அடைப்பதன் மூலம் சீனா மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவும், மேற்குலக நாடுகளுடன் ஒரு வேளை போர் ஏற்பட்டால் சப்பானியப் படைகள் வலுவான நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் செப்டம்பர் 1940இல் சப்பான் வடக்கு இந்தோசீனா மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்தது. 1940இன் ஆரம்பத்தில் சீன தேசியவாதப் படைகள் ஒரு பெரிய அளவிலான பதில் தாக்குதலைத் தொடங்கின. ஆகத்து மாதத்தில் சீனப் பொதுவுடமைவாதிகள் நடு சீனாவில் ஒரு தாக்குதலைத் தொடங்கினர். பதிலடியாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பொதுவுடமைவாதிகளுக்கான மனித வளம் மற்றும் பொருள் வளங்களைக் குறைப்பதற்காகக் கடுமையான நடவடிக்கைகளை சப்பான் தொடங்கியது. சீனப் பொதுவுடமைவாத மற்றும் தேசியவாதப் படைகளுக்கு இடையிலான தொடர்ந்து வந்த பகைமையானது சனவரி 1941இன் ஆயுதச்சண்டையில் உச்ச நிலையை அடைந்தது. அவர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. மார்ச்சில் சப்பானிய 11வது இராணுவம் சீன 19வது இராணுவத்தின் தலைமையகத்தைத் தாக்கியது. ஆனால் சாங்காவோ யுத்தத்தில் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது. செப்டம்பரில் சாங்சா நகரத்தைக் கைப்பற்ற சப்பான் மீண்டும் முயன்றது. சீனத் தேசியவாதப் படைகளுடன் சண்டையில் ஈடுபட்டது. ஐரோப்பாவில் செருமானிய வெற்றிகள் தென்கிழக்காசியாவில் இருந்த ஐரோப்பிய அரசாங்கங்கள் மீது அழுத்தத்தை அதிகப்படுத்த சப்பானை ஊக்குவித்தன. டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் இருந்து சில எண்ணெய் வழங்கல்களை சப்பானுக்குக் கொடுக்க டச்சு அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால், அவர்களது வளங்களுக்கான மேற்கொண்ட வழிக்கான பேச்சுவார்த்தைகள் சூன் 1941இல் தோல்வியில் முடிந்தன. சூலை 1941இல் தெற்கு இந்தோசீனாவிற்கு சப்பான் துருப்புகளை அனுப்பியது. தூரக் கிழக்கிலிருந்து பிரித்தானிய மற்றும் டச்சுக் கையிருப்பு நிலங்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற மேற்கு அரசாங்கங்கள் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக சப்பானியச் சொத்துக்களை முடக்கியும், சப்பானுக்கு எண்ணெய் கிடைப்பதன் மீது முழுமையான தடையையும் விதித்தன. அதே நேரத்தில், சோவியத் தூரக்கிழக்கு மீது படையெடுப்பை நடத்த சப்பான் திட்டமிட்டது. மேற்கில் செருமானியப் படையெடுப்பின் விளைவுகளைச் சாதகமாக்கிக் கொள்ள நினைத்தது. ஆனால், பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கையைக் கைவிட்டது. 1941ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தங்களது மோசமான உறவுகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவும், சீனாவில் போரை முடிவுக்கு கொண்டு வரவும் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சப்பான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது சப்பான் சில குறிப்பிட்ட முன்மொழிவுகளை முன்னெடுத்தது. இவை போதியதாக இல்லை என அமெரிக்கர்களால் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவை தங்களில் ஏதாவது ஒரு நாட்டின் மீது சப்பானியத் தாக்குதல் ஏற்பட்டால் தங்களது நிலப்பரப்புகளை ஒன்றிணைந்து தற்காப்பதற்காக இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. ஓர் அமெரிக்கப் பாதுகாப்புப் பகுதியும், 1946இல் விடுதலைக்குத் தயாராக இருந்த பிலிப்பீன்சுக்கு ரூசவெல்ட் படைகளை அனுப்பினார். எந்த ஒரு "அண்டை நாடுகளுக்கு" எதிராகவும் சப்பானியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் ஐக்கிய அமெரிக்கா எதிர்வினையாற்றும் என்று சப்பானுக்கு எச்சரிக்கை விடுத்தார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் பொறுமை இழப்பு மற்றும் அமெரிக்க-பிரித்தானிய-டச்சு தடைகளால் உணரப்பட்ட அழுத்தம் ஆகியவை காரணமாக சப்பான் போருக்குத் தயாரானது. பேரரசர் இறோகித்தோ வெற்றி பெறுவதற்கு சப்பானின் வாய்ப்புகள் குறித்து ஆரம்பத்தில் தயங்கியதற்குப் பிறகு, போரில் சப்பான் நுழைவதற்கு விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்தார். இதன் விளைவாகப் பிரதமர் புமிமரோ கொனோயே பதவி விலகினார். அவர் இடத்தில் இளவரசர் நருகிகோ கிகாசிகுனியைப் பரிந்துரைக்க மறுத்து அதற்குப் பதிலாக போர்த்துறை அமைச்சர் இடாக்கி தோஜோவை இறோகித்தோ தேர்ந்தெடுத்தார். 3 நவம்பர் அன்று பேரரசருக்கு முத்துத் துறைமுகத் தாக்குதல் திட்டத்தை விரிவாக நகனோ விளக்கினார். 5 நவம்பர் அன்று ஏகாதிபத்தியக் கலந்தாய்வுக் கூட்டத்தில் போருக்கு ஆயத்தத் திட்டங்களுக்கு இறோகித்தோ அனுமதி வழங்கினார். 20 நவம்பர் அன்று புதிய அரசாங்கமானது ஒரு இடைக்கால முன்மொழிவைத் தனது இறுதிப் பரிந்துரையாக வழங்கியது. சீனாவுக்கான அமெரிக்க உதவியை நிறுத்துவதற்கும், சப்பானுக்கு எண்ணெய் மற்றும் பிற வளங்கள் கிடைப்பதன் மீதிருந்த தடையை நீக்குவதற்கும் இது அழைப்பு விடுத்தது. இதற்குப் பதிலாக, தென்கிழக்கு ஆசியாவில் எந்த ஒரு தாக்குதலையும் சப்பான் நடத்தாது என்றும், தெற்கு இந்தோசீனாவிலிருந்து தன் படைகளைப் பின்வாங்க வைக்கவும் உறுதியளித்தது. 26 நவம்பர் அன்று இதற்குப் பதிலான ஓர் அமெரிக்க முன்மொழிவானது, அனைத்து சீனப் பகுதிகளிலிருந்தும் நிபந்தனையின்றி சப்பான் வெளியேற வேண்டும் எனவும், அனைத்து அமைதிப் பெருங்கடல் சக்திகளுடன் போர் எதிர்ப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. சீனாவில் தனது குறிக்கோள்களைக் கை விட்டு விடுதல் அல்லது டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் தனக்குத் தேவையான இயற்கை வளங்களைப் படை மூலம் கைப்பற்றுவது ஆகியற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய நிலை சப்பானுக்கு ஏற்பட்டது என்பதே இதன் பொருள். இதில் முதல் வழியை சப்பானிய இராணுவம் தேர்ந்தெடுக்க கருதவில்லை. எண்ணெய் இறக்குமதித் தடையானது கூறப்படாத போர் அறிவிப்பு எனப் பல அதிகாரிகள் கருதினர். ஆசியாவிலிருந்து ஐரோப்பியக் காலனிகளைக் கைப்பற்றுவதன் மூலம் நடு பசிபிக் வரை நீண்ட ஒரு பெரிய தற்காப்புச் சுற்று வட்டத்தை உருவாக்க சப்பான் திட்டமிட்டது. தென்கிழக்காசியாவில் இருந்த வளங்களை சப்பானியர்கள் இதற்குப் பிறகு சுதந்திரமாகச் சுரண்டலாம். அதே நேரத்தில், பல இடங்களில் அளவுக்கு மீறிப் பரவி இருந்த நேசநாடுகளை ஒரு தற்காப்புப் போரில் எதிர் கொண்டு சோர்வடையச் செய்யலாம். இந்தச் சுற்றுவட்டத்தைப் பாதுகாப்பாக வைக்கும் அதே நேரத்தில் அமெரிக்கத் தலையீட்டைத் தடுப்பதற்காக ஐக்கிய அமெரிக்க பசிபிக் கப்பல் குழுவைச் செயல்திறன் அற்றதாக ஆக்குவதற்கு மேலும் சப்பான் திட்டமிட்டது. எடுத்த எடுப்பில் பிலிப்பீன்சில் இருந்த அமெரிக்க இராணுவ இருப்பைச் செயலற்றதாக்க திட்டமிட்டது. 7 திசம்பர் 1941 (ஆசிய நேர வளையங்களில் 8 திசம்பர்) அன்று தென்கிழக்காசியா மற்றும் நடு பசிபிக்கில் இருந்த பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவ இடங்கள் மீது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சப்பான் தாக்குதலைத் தொடங்கியது. முத்துத் துறைமுகத்திலிருந்த அமெரிக்க கப்பல் குழுக்கள் மீதான தாக்குதல் மற்றும் பிலிப்பீன்சு, குவாம், வேக் தீவு, மலாயா படையிறக்கம், தாய்லாந்து மற்றும் ஆங்காங் யுத்தம் ஆகியவை இந்தத் தாக்குதல்களில் அடங்கியவை ஆகும். தாய்லாந்து மீதான சப்பானியப் படையெடுப்பானது சப்பானுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் முடிவைத் தாய்லாந்து எடுப்பதற்கு இட்டுச் சென்றது. மற்ற சப்பானியத் தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, ஆத்திரேலியா மற்றும் பல பிற அரசுகள் சப்பான் மீது அதிகாரபூர்வமாகப் போரை அறிவிப்பதற்கு வழிவகுத்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய அச்சு நாடுகளுடன் பெருமளவிலான சண்டையில் கடுமையாக ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியம் சப்பானுடனான தனது நடுநிலை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைபிடித்தது. மற்ற அச்சு நாடுகளைத் தொடர்ந்து, சப்பானுக்கு ஆதரவாகச் செருமனி ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது. செருமானிய போர்க் கலங்கள் மீது ரூசவெல்ட்டால் ஆணையிடப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களை இதற்குக் காரணமாகக் கூறியது. அச்சு நாடுகளின் முன்னேற்றம் தடைபடுதல் (1942–43) 1 சனவரி 1942 அன்று நான்கு பெரிய நேச நாடுகளான சோவியத் ஒன்றியம், சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா மற்றும் 22 சிறிய அல்லது நாடு கடந்த அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக அறிவிப்பை வெளியிட்டன. இவ்வாறாக அவை அத்திலாந்திக் சாசனத்தை மீண்டும் உறுதிப்படுத்தின. அச்சு நாட்டுச் சக்திகளுடன் ஒரு தனிப்பட்ட அமைதி உடன்படிக்கையில் கையொப்பம் இடுவது இல்லை என்பதை ஒப்புக் கொண்டன. 1942ஆம் ஆண்டின்போது நேச நாட்டு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய பொருத்தமான பெரிய உத்தி குறித்து விவாதித்தனர். செருமனியைத் தோற்கடிப்பதே முதன்மையான இலக்கு என அனைவரும் ஒப்புக் கொண்டனர். பிரான்சு வழியாகச் செருமனி மீது ஒரு பெரிய அளவிலான நேரடித் தாக்குதலை நடத்த அமெரிக்கர்கள் விரும்பினர். சோவியத்துகளும் ஓர் இரண்டாவது போர் முனையைத் தொடங்க வேண்டும் எனக் கோரினர். மற்றொரு புறம், பிரிட்டன் இராணுவ நடவடிக்கைகளானவை வெளிப்புறப் பகுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டு, செருமானிய வலிமையைச் சோர்வடையச் செய்ய வேண்டும் என்று வாதிட்டது. இது நெறி பிறழ்வை அதிகரித்தலுக்கும், எதிர்ப்புப் படைகளை வலிமையாக்குதலுக்கும் இட்டுச் செல்லும் என வாதிட்டது. இதன்படி, செருமனியே ஒரு கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். பிறகு, செருமனிக்கு எதிராக ஒரு தாக்குதலானது முதன்மையாக நேச நாட்டுக் கவச வாகனங்களைக் கொண்டு, பெரிய அளவிலான இராணுவங்களைப் பயன்படுத்தாது நடத்தப்படும். இறுதியாக, 1942இல் பிரான்சில் படைகளை இறக்குவது என்பது செய்யத்தக்கது அல்ல என அமெரிக்கர்களைப் பிரிட்டன் இணங்க வைத்தது. மாறாக, நேச நாடுகள் வட ஆப்பிரிக்காவிலிருந்து அச்சு நாடுகளை வெளியேற்றுவதைக் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என இணங்க வைத்தது. 1943இன் ஆரம்பத்தில் நடந்த கசப்லங்கா கூட்டத்தில் 1942ஆம் ஆண்டு அறிவிப்பில் வெளியிடப்பட்ட விவரங்களைக் நேச நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின. தங்களது எதிரிகளின் நிபந்தனையற்ற சரணடைவைக் கோரின. நடு நிலக்கடல் பொருள் வழங்கும் வழிகளை முழுவதுமாக பாதுகாப்பானதாக ஆக்க, சிசிலி மீது படையெடுத்து நடுநிலக்கடலில் தங்களது முன்னெடுப்பை அழுத்தமாகத் தொடர வேண்டும் எனப் பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஒப்புக் கொண்டனர். பால்கன் பகுதியில் மேற்கொண்டு நடத்தப்படும் போர் நடவடிக்கைகள் மூலம் துருக்கியைப் போருக்குள் இழுக்க வேண்டி பிரித்தானியர்கள் வாதிட்ட போதும், மே 1943இல் இத்தாலிய முதன்மை நிலப்பகுதி மீது படையெடுப்பதற்காக நடு நிலக் கடல் பகுதியில் நேச நாட்டு நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், 1944இல் பிரான்சு மீது படையெடுப்பதற்குமான ஒரு பிரித்தானிய ஒப்புதலை அமெரிக்கர்கள் வலிந்து வெளிக்கொணர்ந்தனர். அமைதிப் பெருங்கடல் (1942–43) ஏப்ரல் 1942இன் இறுதியில் சப்பானும், அதன் கூட்டாளி தாய்லாந்தும் பர்மா, மலாயா, டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள், சிங்கப்பூர் மற்றும் ரபௌலை கிட்டத்தட்ட முழுவதுமாக வென்றன. நேச நாட்டுத் துருப்புகளுக்குக் கடுமையான இழப்புகளையும் ஏற்படுத்தின. ஒரு பெரும் எண்ணிக்கையிலான கைதிகளைப் பிடித்தன. பிலிப்பீன் மற்றும் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிடிவாதமான எதிர்ப்பைக் காட்டிய போதும், மே 1942இல் பிலிப்பீன் பொதுநலவாயமானது இறுதியாகக் கைப்பற்றப்பட்டது. அதன் அரசாங்கம் நாடு கடந்து செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 16 ஏப்ரலில் பர்மாவில் சப்பானிய 33வது பிரிவால் எனங்யாவுங் யுத்தத்தின்போது, 7,000 பிரித்தானிய இராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். பிறகு சீன 38வது பிரிவால் மீட்கப்பட்டனர். சப்பானியப் படைகள் தென் சீனக்கடல், சாவகக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கடற்படை வெற்றிகளையும் அடைந்தன. ஆத்திரேலியாவின் டார்வினில் இருந்த நேச நாட்டுக் கடற்படைத் தளம் மீது குண்டுகளை வீசின. சனவரி 1942இல் சப்பானுக்கு எதிரான ஒரே ஒரு நேச நாட்டு வெற்றியானது சாங்சாவில் சீனா பெற்ற வெற்றியே ஆகும். ஆயத்தமாகாத ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய எதிரிகளுக்கு எதிராகப் பெற்ற இந்த எளிதான வெற்றிகள் சப்பானை அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொள்ளச் செய்தன. மேலும், சப்பானியர்கள் அளவுக்கு மீறிப் பரவி இருந்தனர். மே 1942இன் ஆரம்பத்தில் நீர்நிலத் தாக்குதல் மூலம் மார்சுபி துறைமுகத்தைக் கைப்பற்ற சப்பான் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இவ்வாறாக, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியாவுக்கு இடையிலான பொருட்கள் வழங்கும் வழிகள் மற்றும் தொலைத் தொடர்பைத் துண்டிக்க முயன்றது. பவளப்பாறை கடல் யுத்தத்தில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களை அடிப்படையாகக் கொண்ட நேச நாட்டு இடுபணிப் படையானது சப்பானியக் கடற்படைகளுடன், யாருக்கும் வெற்றி தோல்வியின்றிப் போரிட்டபோது இந்தத் திட்டமிடப்பட்ட படையெடுப்பானது முறியடிக்கப்பட்டது. சப்பானின் அடுத்த திட்டம் முந்தைய டூலிட்டில் ஊடுருவலால் ஊக்குவிக்கப்பட்டது. அது மிட்வே தீவுகளைக் கைப்பற்றுவது, அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களை யுத்தத்திற்கு இழுத்து அவற்றை அழிப்பது, மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அலாஸ்காவிலுள்ள அலேயூதியன் தீவுகளையும் ஆக்கிரமிக்க சப்பான் படைகளை அனுப்புவதை அடிப்படையாகக் கொண்டதாகும். மே மாதத்தின் நடுப்பகுதியில் சீனாவில் செசியாங்-சியாங்சி படையெடுப்பை சப்பான் தொடங்கியது. டூலிட்டில் ஊடுருவலில் எஞ்சிய அமெரிக்க விமானப்படையினருக்கு உதவி செய்த சீனர்களுக்குத் தண்டனை கொடுப்பதை இலக்காகக் கொண்டு இதை சப்பான் நடத்தியது. சீன விமானத் தளங்களை அழித்தலையும், சீன 23வது மற்றும் 32வது இராணுவக் குழுக்களுக்கு எதிராகச் சண்டையிடுவதையும் இது இலக்காகக் கொண்டிருந்தது. சூன் ஆரம்பத்தில் தன்னுடைய திட்டங்களுக்கு சப்பான் செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கியது. ஆனால், மே மாதத்தின் இறுதியில் சப்பானியக் கடற்படை சமிக்ஞைகளைக் கண்டறிந்த அமெரிக்கர்கள் இந்தத் திட்டங்கள் மற்றும் யுத்த வரிசை குறித்து முழுவதுமாக அறிந்திருந்தனர். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய சப்பானியக் கடற்படைக்கு எதிராக மிட்வேயில் ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்தனர். மிட்வே யுத்தத்தின் விளைவாகத் தன் ஆக்ரோஷச் செயலாற்றல் பெருமளவு குறைந்ததால் பப்புவா நிலப்பகுதியில் நில வழிப் படையெடுப்பு மூலம் மார்சுபி துறைமுகத்தைக் கைப்பற்ற ஒரு கால தாமதமான முயற்சி மீது கவனம் செலுத்த சப்பான் முடிவு செய்தது. தெற்கு சொலமன் தீவுகளில், முதன்மையாக கௌதல்கானலில் இருந்த சப்பானிய இலக்குகளுக்கு எதிராக ஒரு பதில் தாக்குதலை நடத்த அமெரிக்கர்கள் திட்டமிட்டனர். தென்கிழக்காசியாவில் இருந்த முதன்மையான சப்பானியத் தளமான ரபௌலைக் கைப்பற்றுவதை நோக்கிய முதல் படியாக இது இருந்தது. இரு திட்டங்களும் சூலையில் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், செப்டம்பரின் நடுப்பகுதியில் சப்பானியர்கள் முதன்மையானதாகக் கௌதல்கானல் யுத்தத்தைக் கருதினர். மார்சுபி துறைமுகத்திலிருந்து பின் வாங்கி தீவின் வடக்குப் பகுதிக்கு வருமாறு நியூ கினியாவில் இருந்த துருப்புகளுக்கு ஆணையிடப்பட்டது. அங்கு அவர்கள் புனா-கோனா யுத்தத்தில் ஆத்திரேலிய மற்றும் ஐக்கிய அமெரிக்கத் துருப்புகளை எதிர்கொண்டனர். இரு தரப்பினருக்கும் கௌதல்கானலானது சீக்கிரமே ஒரு முக்கியக் கவனம் செலுத்த வேண்டிய இடமாக உருவானது. கௌதல்கானல் யுத்தத்திற்காகப் பெருமளவில் துருப்புகள் மற்றும் கப்பல்களை இரு தரப்பினரும் ஈடுபடுத்தினர். 1943இன் ஆரம்பத்தில் தீவில் சப்பானியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். தங்களது துருப்புகளைப் பின்வாங்கச் செய்தனர். பர்மாவில் பொதுநலவாயப் படைகள் இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன. முதல் நடவடிக்கையானது, 1942இன் பிற்பகுதியில் அரகான் பகுதிக்குள் நுழைந்த ஒரு தாக்குதலாகும். அது சேதம் ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. மே 1943இல், இந்தியாவுக்கு மீண்டும் பின் வாங்கும் ஒரு நிலைக்குப் படையினர் தள்ளப்பட்டனர். இரண்டாவது திட்டமானது, சப்பானியப் போர் முனை வரிசைப் படைகளுக்குப் பின்புறமாக ஒழுங்கமைக்கப்படாத படைகளை புகுத்துவதாகும். இது பெப்ரவரியில் தொடங்கப்பட்டது. ஏப்ரல் முடிவில் இது கலவையான முடிவுகளையே பெற்றுத் தந்தது. கிழக்குப் போர்முனை (1942–43) பெருமளவில் இழப்புகளைச் சந்தித்த போதும், 1942இன் ஆரம்பத்தில் செருமனியும் அதன் கூட்டாளிகளும் நடு மற்றும் தெற்கு உருசியாவில் ஒரு பெரிய சோவியத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தின. முந்தைய ஆண்டின்போது தாங்கள் அடைந்த பெரும்பாலான நிலப்பரப்புகளைத் தக்க வைத்துக் கொண்டன. மே மாதத்தில், கெர்ச் மூலந்தீவு மற்றும் கார்கோவில் சோவியத் தாக்குதல்களைச் செருமானியர்கள் தோற்கடித்தனர். பிறகு, சூன் 1942இல் தெற்கு உருசியாவுக்கு எதிரான தங்களது முதன்மையான கோடைக்காலத் தாக்குதலில் இறங்கினர். காக்கேசியாவிலிருந்த எண்ணெய் வயல்களைக் கைப்பற்றவும், குபன் புல்வெளிகளை ஆக்கிரமிக்கவும், அதே நேரத்தில் போர்முனையின் வடக்கு மற்றும் நடுப் பகுதிகளில் உள்ள தங்களது இடங்களைப் பராமரிப்பதற்காகவும் இந்தத் தாக்குதலில் இறங்கினர். செருமானியர்கள் தெற்கு இராணுவக் குழுவை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். முதல் இராணுவக் குழுவானது தொன் ஆற்றின் கீழ் பகுதியை நோக்கி முன்னேறியது. தென்கிழக்கே காக்கேசியாவைத் தாக்கியது. அதே நேரத்தில், இரண்டாவது இராணுவக் குழுவானது வோல்கா ஆற்றை நோக்கிப் பயணித்தது. வோல்காவின் கரையிலிருந்த சுடாலின்கிராட்டில் தங்களது நிலைப்பாட்டை ஏற்படுத்த சோவியத்துகள் முடிவு செய்தனர். நவம்பரின் நடுப்பகுதியில் கடுமையான வீதி யுத்தத்தில் செருமானியர்கள் சுடாலின்கிராடைக் கிட்டத்தட்டக் கைப்பற்றினர். சோவியத்துகள் தங்களது இரண்டாவது குளிர்காலப் பதில் தாக்குதலைத் தொடங்கினர். சுடாலின்கிராடில் இருந்த செருமானியப் படைகளைச் சுற்றி வளைத்ததன் மூலமும், மாஸ்கோவுக்கு அருகில் இருந்த முதன்மையான ரிசேவ் என்ற இடத்தின் மீதான தாக்குதலின் மூலமும் தொடங்கினர். எனினும், இரண்டாவது தாக்குதலானது கடுமையான தோல்வியை அடைந்தது. 1943இன் பெப்ரவரி ஆரம்பத்தில் செருமானிய இராணுவத்திற்குக் கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. சுடாலின்கிராடில் இருந்த செருமானியத் துருப்புகள் தோற்கடிக்கப்பட்டன. கோடைக்காலத் தாக்குதலுக்கு முன்னதாக அது இருந்த இடத்தில் இருந்து போர் முனை வரிசையானது பின்னோக்கித் தள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, சோவியத் உந்துதலானது வலுவிழந்து போனது. கார்கோவ் மீது மற்றொரு தாக்குதலில் செருமானியர்கள் இறங்கினர். சோவியத் நகரமான குர்சுக்கைச் சுற்றி தங்களது முனை வரிசையில் ஒரு கிள்ளல் போன்ற அமைப்பை உருவாக்கினர். மேற்கு ஐரோப்பா/அத்திலாந்திக் மற்றும் நடு நிலக்கடல் (1942–43) குறைபாடுடைய அமெரிக்கக் கடற்படைத் தலைமையின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் செருமானியக் கடற்படையானது, அமெரிக்க அத்திலாந்திக் கடற்கரையையொட்டிய நேச நாட்டுக் கப்பல் போக்குவரத்துக்கு மோசமான சேதத்தை உண்டாக்கியது. நவம்பர் 1941இன் இறுதியில் பொதுநலவாயப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் குரூசேடர் நடவடிக்கை என்று அழைக்கப்பட்ட ஒரு பதில் தாக்குதலில் இறங்கின. செருமானியர்கள் மற்றும் இத்தாலியர்களால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலப்பரப்புகளையும் மீண்டும் கைப்பற்றின. வட ஆப்பிரிக்காவில் சனவரியில் செருமானியர்கள் ஒரு தாக்குதலில் இறங்கினர். பெப்ரவரியின் ஆரம்பத்தில் கசாலா கோட்டில் இருந்த இடங்களுக்குப் பிரித்தானியர்களைத் தள்ளினர். இதற்குப் பிறகு, ஒரு தற்காலிக மந்தமான போர் நிலைமை இருந்தது. இதைத் தங்களது எதிர்வரும் தாக்குதலுக்கு ஆயத்தமாகச் செருமனி பயன்படுத்தியது. விச்சி கட்டுப்பாட்டில் இருந்த மடகாசுகரின் தளங்களை சப்பானியர்கள் பயன்படுத்துவார்கள் என்ற எண்ணம், 1942 மே ஆரம்பத்தில் மடகாசுகர் தீவின் மீது பிரித்தானியர்கள் படையெடுப்பதற்குக் காரணமானது. லிபியாவில் நடந்த ஒரு அச்சு நாட்டுத் தாக்குதலானது நேச நாடுகளை எகிப்துக்குள் தொலைவுப் பகுதிக்குப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளியது. இறுதியாக, அல் அலமைனில் அச்சுநாட்டுப் படைகள் தடுக்கப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது. கண்டப் பகுதியில் முக்கிய இலக்குகள் மீது நேச நாட்டு அதிரடிப்படை வீரர்களின் ஊடுருவலானது மோசமான தியப் திடீர்த் தாக்குதலில் முடிந்தது. மிகச்சிறந்த ஆயத்தம், உபகரணங்கள் மற்றும் நடவடிக்கைப் பாதுகாப்பின்றி ஐரோப்பியக் கண்டப் பகுதி மீது ஒரு தாக்குதலைத் தொடங்குவதற்கு நேச நாடுகளின் இயலாமையை இது காட்டியது. ஆகத்து 1942இன் அல் அலமைன் மீதான ஓர் இரண்டாவது தாக்குதலை முறியடிப்பதில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. மிகுந்த இழப்புக்குப் பிறகு, முற்றுகையிடப்பட்ட மால்டாவுக்கு மிகவும் தேவைப்பட்ட பொருட்களை வழங்குவதில் வெற்றி கண்டன. சில மாதங்களுக்குப் பிறகு, எகிப்தில் தங்களது ஒரு சொந்தத் தாக்குதலை நேச நாடுகள் தொடங்கின. அச்சு நாட்டுப் படைகளை அவர்களின் இடத்தில் இருந்து தள்ளின. லிபியா வழியாக மேற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கின. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, சீக்கிரமே பிரெஞ்சு வட ஆப்பிரிக்காவில் ஆங்கிலோ-அமெரிக்கப் படையிறக்கம் நடைபெற்றது. இப்பகுதி நேச நாடுகளுடன் இணைவதற்கு இது இட்டுச் சென்றது. பிரெஞ்சு காலனி கட்சி தாவியதற்கு எதிர்வினையாக விச்சி பிரான்சை ஆக்கிரமிக்க இட்லர் ஆணையிட்டார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இந்தச் செயலை விச்சி படைகள் எதிர்க்காத போதும், தங்களது கப்பல் குழுவை செருமானியப் படைகள் கைப்பற்றுவதைத் தடுத்துக் காப்பாற்றியதில் வெற்றி பெற்றன. ஆப்பிரிக்காவில் இருந்த அச்சுநாட்டுப் படைகள் தூனிசியாவுக்குப் பின்வாங்கின. 1943 மேயில் நேச நாடுகளால் தூனிசியா வெல்லப்பட்டது. சூன் 1943இல் பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் செருமனிக்கு எதிராக அதன் போர்ப் பொருளாதாரத்தை முடக்கவும், மனப்பான்மையைக் குறைக்கவும், குடிமக்களின் வீடுகளை அழிப்பதையும் இலக்காகக் கொண்ட ஒரு முக்கியக் குண்டு வீச்சுப் படையெடுப்பைத் தொடங்கினர். இந்தப் படையெடுப்பின் முதல் தாக்குதல்களில் ஒன்றாக அம்பர்க்கு மீதான குண்டு வீச்சும் இருந்தது. இந்த முக்கியத் தொழில்துறை மையத்தின் உட்கட்டமைப்பு மீது குறிப்பிடத்தக்க அளவுக்கு சேதத்தையும், குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளையும் இது ஏற்படுத்தியது. நேச நாடுகள் உத்வேகம் பெறுதல் (1943–44) கௌதல்கானல் படையெடுப்புக்குப் பிறகு அமைதிப் பெருங்கடல் பகுதியில் சப்பானுக்கு எதிராக நேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கின. மே 1943இல் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கப் படைகள் அலேயூதியன்களில் இருந்து சப்பானியப் படைகளை நீக்க அனுப்பப்பட்டன. இதற்குப் பிறகு சீக்கிரமே, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுப் படைகளின் உதவியுடன் சுற்றியிருந்த தீவுகளைக் கைப்பற்றுவதன் மூலம் ரபௌலைத் தனிமைப்படுத்தவும், கில்பர்ட் மற்றும் மார்ஷல் தீவுகளில் சப்பானிய நடு பசிபிக் சுற்றுவட்டத்தை உடைக்கவும் பெரிய நில, நீர் மற்றும் வான் நடவடிக்கைகளை ஐக்கிய அமெரிக்கா தொடங்கியது. மார்ச் 1944இன் முடிவில் இந்த இரண்டு இலக்குகளையுமே நேச நாடுகள் முடித்தன. மேலும், கரோலின் தீவுகளில் துருக்கில் இருந்த பெரிய சப்பானியத் தளத்தை செயலற்றதாக ஆக்கின. ஏப்ரலில் மேற்கு நியூ கினியாவை மீண்டும் கைப்பற்ற ஒரு நடவடிக்கையில் நேச நாடுகள் இறங்கின. சோவியத் ஒன்றியத்தில் 1943ஆம் ஆண்டில் இளவேனிற்காலம் மற்றும் கோடை கால ஆரம்பத்தைச் செருமானியர்கள் மற்றும் சோவியத்துகள் ஆகிய இருவருமே நடு உருசியாவில் பெரிய தாக்குதலுக்காக ஆயத்தமாகச் செலவழித்தனர். 5 சூலை 1943இல் குருசுக் புல்கேவைச் சுற்றி இருந்த சோவியத் படைகளை செருமனி தாக்கியது. ஒரு வாரத்திற்குள்ளாகவே சோவியத்துகளின் ஆழமாக படியணி அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த மற்றும் நன்றாக கட்டமைக்கப்பட்டிருந்த தற்காப்புக்கு எதிராகச் சண்டையிட்டு செருமானியப் படைகள் தாமாகவே சோர்வடைந்தன. போரில் முதல் முறையாக ஒரு நடவடிக்கை உத்தி ரீதியிலோ அல்லது திட்ட வெற்றியைப் பெறுவதற்கு முன்னதாகவோ இட்லர் அதை இரத்து செய்த நிகழ்வு நிகழ்ந்து. 9 சூலை அன்று சிசிலி மீது மேற்கு நேச நாடுகளின் படையெடுப்பும் இந்த முடிவு மீது ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிசிலி படையெடுப்பும், முந்தைய இத்தாலியத் தோல்விகளும், அந்த மாதத்தின் பிந்தைய நாட்களில் முசோலினி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, கைது செய்யப்படுவதற்கு இட்டுச் சென்றது. 12 சூலை 1943 அன்று சோவியத்துகள் தங்களது சொந்த பதில் தாக்குதல்களில் இறங்கினர். செருமானிய வெற்றி அல்லது சம நிலைக்குக் கூட கிழக்கில் எந்த ஒரு வாய்ப்பையும் இல்லாமல் செய்தனர். செருமானிய முதன்மை நிலையின் முடிவாக குருசுக்கில் சோவியத்துகள் பெற்ற வெற்றி அமைந்தது. கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியத்திற்குத் தொடக்கத்தைக் கொடுத்தது. அவசர அவசரமாக அரண்களால் கட்டமைக்கப்பட்ட பான்தர்-வோடான் கோட்டுக்குப் பக்கவாட்டில் தங்களது கிழக்கு முனையை நிலைப்படுத்த செருமானியர்கள் முயன்றனர். ஆனால், கீழ் தினேப்பர் தாக்குதல் மூலம் ஸ்மோலென்ஸ்க்கில் கோட்டை உடைத்துச் சோவியத்துகள் முன்னேறினர். 23 செப்டம்பர் 1943 அன்று இத்தாலிய முதன்மை நிலப்பகுதி மீது மேற்கு நேச நாடுகள் படையெடுத்தன. இதைத் தொடர்ந்து இத்தாலி நேச நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தது. இறுதியாக இத்தாலியைச் செருமனி ஆக்கிரமித்தது. பாசிசவாதிகளின் உதவியுடன் செருமனி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர் வினையாக உயரதிகாரிகளின் ஆணைகள் இன்றி பல இடங்களில் இருந்த இத்தாலியப் படைகளை ஆயுதமற்றவர்கள் ஆக்கினர். இத்தாலியப் பகுதிகளின் இராணுவக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். ஒரு தொடர்ச்சியான தற்காப்புக் கோடுகளை உருவாக்கினர். பிறகு, செருமானிய சிறப்புப் படையினர் முசோலினியை மீட்டனர். முசோலினி இத்தாலிய சமூகக் குடியரசு என்று பெயரிடப்பட்ட ஒரு புது செருமானிய ஆதரவு அரசை செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட இத்தாலியில் நிறுவினார். இது ஓர் இத்தாலிய உள்நாட்டுப் போருக்குக் காரணமாகியது. பல கோடுகள் வழியாக மேற்கு நேச நாடுகள் சண்டையிட்டு முன்னேறின. இறுதியாக நவம்பர் நடுப்பகுதியில் முதன்மையான செருமானியத் தற்காப்புக் கோட்டை அடைந்தன. அத்திலாந்திக்கில் இருந்து நடத்தப்பட்ட செருமானிய நடவடிக்கைகளும் பாதிப்படைந்தன. 1943 மே இறுதியில் நேச நாடுகளின் பதில் நடவடிக்கைகள் தொடர்ந்து பலனை அதிகரித்து வந்தபோது, குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் இழப்புகள் செருமானிய அத்திலாந்திக் கடல் படையெடுப்பை ஒரு தற்காலிக நிறுத்தத்துக்குக் கொண்டு வந்தன. நவம்பர் 1943இல் பிராங்க்ளின் ரூசவெல்ட் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் கெய்ரோவில் சங் கை செக்குடனும், பிறகு தெகுரானில் யோசப்பு சுடாலினுடனும் சந்தித்தனர். முந்தைய சந்திப்பில், போருக்குப்பின் சப்பானிய நிலப்பரப்பைத் திரும்பிக் கொடுத்தலையும், பர்மா படையெடுப்புக்கான இராணுவத் திட்டங்களையும் நடத்த உறுதி பூணப்பட்டது. அதே நேரத்தில் பிந்தைய சந்திப்பில் 1944இல் ஐரோப்பா மீது மேற்கு நேச நாடுகள் படையெடுக்கும் எனவும், செருமனி தோற்கடிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் சப்பான் மீது சோவியத் ஒன்றியம் போரை அறிவிக்கும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நவம்பர் 1943 முதல் ஏழு வார சங்டே யுத்தத்தின் போது சப்பானியர்களை ஓர் இழப்பை ஏற்படுத்திய தேய்மானச் சண்டையில் ஈடுபடுமாறு சீனர்கள் கட்டாயப்படுத்தினர். அதே நேரத்தில் சீனர்கள் நேச நாடுகளின் உதவிக்காகக் காத்திருந்தனர். சனவரி 1944இல் நேச நாடுகள் இத்தாலியில் மோண்ட்டி கசீனோ கோட்டுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களில் இறங்கின. அன்சியோவில் படைகளை இறக்கியதன் மூலம் எதிரியின் பக்கவாட்டில் பயணித்து அவர்களுக்கு முன் தோன்ற முயற்சித்தனர். 27 சனவரி 1944 அன்று லெனின்கிராட் பகுதியில் இருந்து செருமானியப் படைகளை வெளியேற்றிய ஒரு பெரிய தாக்குதலில் சோவியத் துருப்புகள் இறங்கின. இவ்வாறாக வரலாற்றின் மிகுந்த அழிவார்ந்த முற்றுகையை முடித்து வைத்தன. மீண்டும் தேசிய விடுதலையை நிறுவலாம் என்று நம்பிக்கையில் இருந்து எசுதோனியர்களால் ஆதரவளிக்கப்பட்ட செருமானிய வடக்கு இராணுவக் குழுவால், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோவியத் தாக்குதலானது போருக்கு முந்தைய எசுதோனிய எல்லையில் நிறுத்தப்பட்டது. இந்தத் தாமதமானது இதற்குப் பின்னர் பால்டிக் கடல் பகுதியில் நடக்கவிருந்த சோவியத் நடவடிக்கைகளையும் தாமதமாக்கியது. 1944 மே பிற்பகுதியில் கிரிமியாவை விடுதலை செய்தும், உக்ரைனிலிருந்து அச்சு நாட்டுத் துருப்புகளை பெரும்பாலும் வெளியேற்றியும் சோவியத்துகள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். உருமேனியாவுக்குள் ஊடுருவல்களையும் மேற்கொண்டனர். ஆனால், அச்சு நாட்டுத் துருப்புகளால் முறியடிக்கப்பட்டனர். இத்தாலியில் நேச நாடுகளின் தாக்குதல்கள் வெற்றியடைந்தன. ஓர் இழப்பாகப் பல செருமானியப் பிரிவுகளைப் பின் வாங்க அனுமதி அளித்த பிறகு, 4 சூன் அன்று உரோம் கைப்பற்றப்பட்டது. ஆசிய முதன்மை நிலப்பகுதியில் நேச நாடுகள் கலவையான வெற்றியைப் பெற்றன. மார்ச் 1944இல் சப்பானியர்கள் தங்களது இரண்டு படையெடுப்புகளில் முதல் படையெடுப்பில் இறங்கினர். இது அசாமில் இருந்த நேச நாட்டு இடங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை ஆகும். இம்பால் மற்றும் கோகிமாவில் இருந்த பொதுநலவாய இடங்கள் மீது சீக்கிரமே முற்றுகையிட்டனர். மே 1944இல் பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் ஒரு பதில் தாக்குதலைத் தொடுத்தன. சூலையின் இறுதியில் சப்பானியத் துருப்புகளை பர்மாவுக்குத் துரத்தின. 1943இன் இறுதியில் வடக்கு பர்மா மீது படையெடுத்த சீனப்படைகள் மியீச்சினாவில் இருந்த சப்பானியத் துருப்புகளை முற்றுகையிட்டன. சீனாவின் முதன்மை யுத்தப் படைகளை அழிப்பதையும், சப்பானியக் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட நேச நாட்டு வானூர்தித் தளங்களுக்கு இடையில் இருப்புப்பாதையை பாதுகாப்பாக வைப்பதையும் இலக்காகக் கொண்டு சீனா மீதான இரண்டாவது சப்பானியப் படையெடுப்பானது நடத்தப்பட்டது. சூனின் இறுதியில் சப்பானியர்கள் ஹெனன் மாகாணத்தைக் கைப்பற்றினர். சாங்சா மீது ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கினர். நேச நாடுகள் வெற்றியை நெருங்குதல் (1944) 6 சூன் 1944 அன்று மூன்றாண்டு சோவியத் அழுத்தத்திற்குப் பிறகு மேற்கு நேச நாடுகள் வடக்கு பிரான்சு மீது படையெடுத்தன. இத்தாலியில் இருந்த பல நேச நாட்டுப் பிரிவுகளை இடமாற்றியதற்குப் பிறகு, நேச நாடுகள் தெற்கு பிரான்சையும் தாக்கின. இந்தப் படையிறக்கங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இவை பிரான்சில் இருந்த செருமானிய இராணுவப் பிரிவுகளின் தோல்விக்கு இட்டுச் சென்றன. தளபதி சார்லஸ் டி கோலால் தலைமை தாங்கப்பட்ட சுதந்திர பிரெஞ்சுப் படைகளால் ஆதரவளிக்கப்பட்ட உள்ளூர் எதிர்ப்பால் 25 ஆகத்து அன்று பாரிசு விடுதலை செய்யப்பட்டது. ஆண்டின் பிற்பகுதியின் போது மேற்கு ஐரோப்பாவில் மேற்கில் நேச நாடுகள் தொடர்ந்து செருமானியப் படைகளைப் பின்னுக்குத் தள்ளின. நெதர்லாந்தில் ஒரு முக்கிய வான் வழி நடவடிக்கையை முதன்மையாகக் கொண்டு வடக்கு செருமனிக்குள் முன்னேறும் ஒரு முயற்சியானது தோல்வியில் முடிந்தது. இதற்குப் பிறகு மேற்கு நேச நாடுகள் மெதுவாக செருமனிக்குள் முன்னேறின. ஆனால், ஒரு பெரிய தாக்குதல் மூலம் உருர் ஆற்றைக் கடப்பதில் தோல்வியடைந்தனர். இத்தாலியில் நேச நாடுகளின் முன்னேற்றமானது கடைசி முக்கிய செருமானியத் தற்காப்புக் கோட்டின் காரணமாகத் தாமதமானது. 22 சூன் அன்று பெலாரசில் சோவியத்துகள் ஒரு முக்கிய தாக்குதலைத் ("பாக்ரேசன் நடவடிக்கை") தொடங்கினர். இது செருமானிய இராணுவக் குழு மையத்தைக் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே, மற்றொரு சோவியத் முக்கிய தாக்குதலானது மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்குப் போலந்தில் இருந்த செருமானியத் துருப்புகளை வெளியேறும் நிலைக்குத் தள்ளியது. போலந்தில் நிலப்பகுதியைக் கட்டுப்படுத்தவும், போலந்து ஆர்மியா கிரசோவாவுடன் சண்டையிடுவதற்கும் சோவியத்துகள் போலந்தின் தேசிய விடுதலைக்கான குழுவை உருவாக்கினர். விச்துலா ஆற்றின் மறுபக்கத்தில் பிரகா மாவட்டத்தில் சோவியத் செஞ்சேனையானது தங்கியிருந்தது. ஆர்மியா கிரசோவாவால் தொடங்கப்பட்ட வார்சா எழுச்சியைச் செருமானியர்கள் ஒழித்துக் கட்டியதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. சுலோவாக்கியாவில் ஏற்பட்ட தேசிய எழுச்சியையும் செருமானியர்கள் ஒழித்துக் கட்டினர். கிழக்கு உருமேனியாவில் சோவியத் செஞ்சேனையின் முக்கியத் தாக்குதலானது அங்கிருந்த செருமானியத் துருப்புகளைத் துண்டித்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை அழித்தது. இதன் காரணமாக உருமேனியா மற்றும் பல்கேரியாவில் வெற்றிகரமான புரட்சிகள் ஏற்பட்டன. இதற்குப் பிறகு இந்த நாடுகள் நேச நாடுகளின் பக்கம் அணி மாறுவதற்கும் இது காரணமாக அமைந்தது. செப்டம்பர் 1944இல் சோவியத் துருப்புகள் யுகோஸ்லாவியாக்குள் முன்னேறின. கிரேக்கம், அல்பேனியா மற்றும் யுகோஸ்லாவியாவில் இருந்த செருமானிய இராணுவக் குழுக்களான ஈ மற்றும் எஃப்பின் ஆகியவை துண்டிக்கப்படாமல் மீட்கப்படுவதற்காக வேகமாகப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளின. இந்த நேரத்தில், மார்ஷல் யோசப்பு பிரோசு டிட்டோ தலைமையிலான பொதுவுடைமைவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட ஆதரவாளர்கள் யுகோஸ்லாவியாவின் நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மேலும் தெற்கே, செருமானியப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். யோசப்பு பிரோசு டிட்டோ 1941 முதலே ஆக்கிரமிப்புக்கு எதிராக அதிகமாக வெற்றி பெற்று வந்த கரந்தடிப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கினார். வடக்கு செர்பியாவில் சோவியத் செஞ்சேனை பல்கேரியப் படைகளிடம் இருந்து வந்த ஓர் அளவான ஆதரவுடன் 20 அக்டோபர் அன்று தலை நகரமான பெல்கிரேடை விடுவிக்கும் ஒரு கூட்டு முயற்சியை ஆதரவாளர்களின் உதவியுடன் நடத்தியது. சில நாட்களுக்குப் பிறகு, செருமனியின் ஆக்கிரமிப்பிலிருந்த அங்கேரி மீது ஒரு பெரிய தாக்குதலை சோவியத்துகள் தொடங்கினர். 1945இல் புடாபெஸ்டு வீழ்ந்தது வரை இந்தத் தாக்குதல் தொடர்ந்தது. பால்கன் பகுதியில் போற்றத்தக்க சோவியத் வெற்றிகளைப் போல் இல்லாமல் கரேலியன் இசுத்துமசில் சோவியத் தாக்குதலுக்கு எதிராகக் கடுமையான பின்லாந்து எதிர்ப்பானது, பின்லாந்தைச் சோவியத்துகள் ஆக்கிரமிப்பதைத் தடுத்தது. கூட்டாளியான செருமனியை எதிர்த்துப் போர் புரியும் நிலைக்கு பின்லாந்து கட்டாயப்படுத்தப்பட்ட போதும், இது ஒப்பீட்டளவில் மிதமான நிபந்தனைகளை உடைய ஒரு சோவியத்-பின்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இட்டுச் சென்றது. சூலை 1944இன் ஆரம்பத்தில் தென்கிழக்காசியாவில் இருந்த பொதுநலவாயப் படைகள் அசாமில் சப்பானிய முற்றுகைகளை முறியடித்தன. சப்பானியர்களை மீண்டும் சிந்த்வின் ஆற்றுக்குத் தள்ளின. அதே நேரத்தில், சீனர்கள் மியித்கியினாவைக் கைப்பற்றினர். செப்டம்பர் 1944இல் சீனப்படைகள் சாங் மலையைக் கைப்பற்றின. பர்மா சாலையை மீண்டும் திறந்தன. சீனாவில் சப்பானியர்கள் அதிக வெற்றிகளைப் பெற்றனர். சூனின் நடுப்பகுதியில் சங்சாவை இறுதியாகக் கைப்பற்றினர். ஆகத்து மாத ஆரம்பத்தில் கெங்யாங் நகரத்தைக் கைப்பற்றினர். இதற்குப் பிறகு சீக்கிரமே குவாங்ஷி மாகாணத்தின் மீது அவர்கள் படையெடுத்தனர். நவம்பர் இறுதியில் குயிலின் மற்றும் லியுசோவு ஆகிய இடங்களில் சீனப் படைகளுக்கு எதிராக முக்கியமான சண்டைகளை வென்றனர். திசம்பர் நடுப்பகுதியில் சீனா மற்றும் இந்தோசீனாவில் இருந்த தங்களது படைகளை வெற்றிகரமாக இணைத்தனர். பசிபிக்கில் சப்பானியச் சுற்றுவட்டத்தை ஐக்கிய அமெரிக்கப் படைகள் தொடர்ந்து அழுத்திப் பின்னோக்கித் தள்ளின. 1944 சூன் நடுப்பகுதியில் மரியானா மற்றும் பலாவு தீவுகளுக்கு எதிராக அவர்கள் தங்களது தாக்குதலைத் தொடங்கினர். பிலிப்பீன் கடல் யுத்தத்தில் சப்பானியப் படைகளைத் தீர்க்கமாகத் தோற்கடித்தனர். இந்தத் தோல்விகள் சப்பானியப் பிரதமர் இடாக்கி தோஜோவின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றன. சப்பானியத் தாயகத் தீவுகள் மீது அதிகப்படியான கடும் குண்டு வீச்சு விமானத் தாக்குதல்களை நடத்த ஐக்கிய அமெரிக்காவிற்கு வானூர்தித் தளங்களை இந்தத் தோல்விகள் கொடுத்தன. அக்டோபரின் இறுதியில் அமெரிக்கப்படைகள் பிலிப்பினோ தீவான லெய்டே மீது படையெடுத்தன. பிறகு சீக்கிரமே, லெய்டே வளைகுடா யுத்தத்தில் நேச நாட்டுக் கடற்படைகள் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றன. இது வரலாற்றின் பெரிய கடற்படை யுத்தங்களில் ஒன்றாகும். அச்சு நாடுகளின் வீழ்ச்சியும், நேச நாடுகளின் வெற்றியும் (1944–45) 16 திசம்பர் 1944 அன்று மேற்கு முனையில் ஒரு கடைசி முயற்சியாக செருமனி எஞ்சியிருந்த தனது அனைத்து சேமப் படை வீரர்களையும் பயன்படுத்தி அர்தென்னேசிலும், பிரெஞ்சு-செருமானிய எல்லையின் நெடுகேயும் மேற்கு நேச நாடுகளைப் பிரிப்பதற்காகவும், மேற்கு நேச நாட்டுத் துருப்புகளில் பெரும்பாலான பங்கினரைச் சுற்றிவளைப்பதற்காகவும் மற்றும் நேச நாடுகளின் முதன்மையான இராணுவப் பொருட்கள் வழங்கும் துறைமுகமான ஆண்ட்வெர்ப்பைப் பிடித்து ஒரு அரசியல் உடன்படிக்கைக்குக் கொண்டு வருவதற்காகவும் ஒரு பெரிய பதில் தாக்குதலைத் தொடங்கியது. 16 சனவரி 1945இல் இந்தத் தாக்குதலானது எந்த ஒரு முக்கியக் குறிக்கோள்களையும் நிறைவேற்றாமல் முறியடிக்கப்பட்டது. இத்தாலியில் மேற்கு நேச நாடுகள் செருமானியத் தற்காப்புக் கோட்டில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தன. 1945ஆம் ஆண்டின் சனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சிவப்பு இராணுவமானது போலந்தில் தாக்குதலை நடத்தியது. விசுதுலா ஆற்றிலிருந்து செருமனியின் ஓதெர் ஆறு வரை முன்னேறியது. கிழக்கு புருசியா மீது தாக்குதல் ஓட்டம் நடத்தியது. 4 பெப்ரவரியில் சோவியத்து, பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தலைவர்கள் யால்ட்டா மாநாட்டிற்காகச் சந்தித்தனர். போருக்குப் பிந்தைய செருமனியை ஆக்கிரமிப்பது மற்றும் சப்பானுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் எப்போது போரில் இறங்கும் ஆகியவை குறித்து ஒப்புக் கொண்டனர். பெப்ரவரியில் சோவியத்துகள் சிலேசியா மற்றும் பொமரேனியாவுக்குள் நுழைந்தனர். அதே நேரத்தில், மேற்கு நேச நாடுகள் மேற்கு செருமனிக்குள் நுழைந்தன. ரைன் ஆற்றை மூடின. மார்ச் இறுதியில், ரூருக்கு வடக்கு மற்றும் தெற்கே இருந்த ரைன் ஆற்றை மேற்கு நேச நாடுகள் கடந்தன. செருமானிய இராணுவத்தின் பி அணியைச் சுற்றி வளைத்தன. மார்ச்சின் ஆரம்பத்தில் அங்கேரியில் உள்ள தனது கடைசி எண்ணெய்க் கையிருப்பைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும், புடாபெஸ்டை மீண்டும் கைப்பற்றவும் சோவியத் துருப்புகளுக்கு எதிராகத் தனது கடைசி முக்கியமான தாக்குதலைச் செருமனி பலதோன் ஏரிக்கு அருகில் தொடங்கியது. இரண்டே வாரங்களில் இந்தத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. சோவியத்துகள் வியன்னாவை நோக்கி முன்னேறினர். நகரத்தைக் கைப்பற்றினர். ஏப்ரலின் ஆரம்பத்தில், சோவியத் துருப்புகள் கோனிக்சுபெர்க்கைக் கைப்பற்றின. அதே நேரத்தில், மேற்கு நேச நாடுகள் இறுதியாக இத்தாலியில் முன்னேறின. மேற்கு செருமனி முழுவதும் பரவின. அம்பர்க்கு மற்றும் நியூரம்பர்க் ஆகிய நகரங்களைக் கைப்பற்றின. 25 ஏப்ரல் அன்று அமெரிக்க மற்றும் சோவியத்துப் படைகள் எல்பே ஆற்றில் சந்தித்தன. தெற்கு செருமனி மற்றும் பெர்லினைச் சுற்றிலும் ஏராளமான ஆக்கிரமிக்கப்படாத தனித்தனி இடங்கள் இருந்தன. சோவியத் துருப்புகள் ஏப்ரலின் இறுதியில் புயலெனப் புகுந்து பெர்லினைக் கைப்பற்றின. இத்தாலியில் 29 ஏப்ரல் அன்று செருமானியப் படைகள் சரணடைந்தன. 30 ஏப்ரல் அன்று ரெய்க்ஸ்டாக் கைப்பற்றப்பட்டது. நாசி செருமனியின் இராணுவத் தோல்விக்கு அறிகுறியாக இது அமைந்தது. 2 மே அன்று பெர்லின் நகரக் காவல் படையினர் சரணடைந்தனர். இக்காலத்தில் இரு பக்கங்களிலும் தலைமைத்துவத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 12 ஏப்ரல் அன்று அமெரிக்க அதிபர் ரூசவெல்ட் இறந்தார். அவருக்குப் பிறகு அவரது துணை அதிபரான ஹாரி எஸ். ட்ரூமன் அதிபராகப் பதவிக்கு வந்தார். 28 ஏப்ரல் அன்று இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தவர்கள் பெனிட்டோ முசோலினியைக் கொன்றனர். 30 ஏப்ரல் அன்று தனது தலைமையகத்தில் இட்லர் தற்கொலை செய்து கொண்டார். இட்லருக்குப் பிறகு கடற்படைத் தலைவரான கார்ல் தோனித்சு மற்றும் யோசோப்பு கோயபெல்ஸ் ஆகியோர் பதவிக்கு வந்தனர். முழுமையான மற்றும் நிபந்தனையற்ற சரணடைவானது ஐரோப்பாவில் 7 மற்றும் 8 மேயில் கையொப்பமிடப்பட்டது. 8 மேயின் முடிவிலிருந்து இது நடைமுறைக்கு வந்தது. செருமானிய இராணுவ அணி மையமானது பிரேகுவில் 11 மே வரை எதிர்த்துத் தாக்குப் பிடித்தது. பசிபிக் போர்முனையில் அமெரிக்கப் படைகள், பிலிப்பீன்சு பொதுநலவாயப் படைகளுடன் இணைந்து பிலிப்பீன்சில் முன்னேறின. ஏப்ரல் 1945இன் முடிவில் லெய்தே யுத்தத்தில் வென்றன. சனவரி 1945இல் லூசோனில் இறங்கின. மார்ச்சில் மணிலாவை மீண்டும் கைப்பற்றின. போர் முடியும் வரை பிலிப்பீன்சின் லூசோன், மிந்தனாவோ மற்றும் பிற தீவுகளில் சண்டையானது தொடர்ந்தது. அதே நேரத்தில், சப்பானியப் போர்த் தொழில்துறை மற்றும் குடிமக்களின் மனப்பான்மையை அழிக்கும் பொருட்டு சப்பானின் முக்கியமான நகரங்கள் மீது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் விமானப் படைகள் ஒரு பெரிய குண்டு வீச்சுப் படையெடுப்பைத் தொடங்கின. டோக்கியோ மீது 9 – 10 மார்ச்சில் நடத்தப்பட்ட மிகுந்த அழிவுகரமான குண்டு வீச்சு ஊடுருவலானது வரலாற்றில் பொதுவான ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதல்களில் மிகவும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியதாகும். மே 1945இல் ஆத்திரேலியத் துருப்புகள் போர்னியோவில் இறங்கின. அங்கிருந்த எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் ஓட்டம் நடத்தின. பிரித்தானிய, அமெரிக்க மற்றும் சீனப் படைகள் மார்ச்சில் வடக்கு பர்மாவில் சப்பானியர்களைத் தோற்கடித்தன. மே 3க்குள் இரங்கூனை அடைவதற்காகப் பிரித்தானியப் படைகள் முன்னேறின. 6 ஏப்ரல் மற்றும் 7 சூன் 1945க்கு இடையில் சீனப் படைகள் மேற்கு கூனான் யுத்தத்தில் ஒரு பதில் தாக்குதலை நடத்தின. அமெரிக்கக் கடல் மற்றும் நீர்நிலப் படைகளும் சப்பானை நோக்கி முன்னேறின. மார்ச்சில் இவோ ஜீமாவைக் கைப்பற்றின. சூன் இறுதியில் ஒகினவாவைக் கைப்பற்றின. அதே நேரத்தில், நீர்மூழ்கிக் கப்பல்களால் நடத்தப்பட்ட கடல் முற்றுகையானது சப்பானின் பொருளாதாரத்தின் கழுத்தை நெருக்கின. அயல் நாட்டில் இருந்த சப்பானியப் படைகளுக்குப் பொருட்கள் வழங்கும் அதன் திறனைப் பெருமளவு குறைத்தன. 11 சூலை அன்று நேச நாடுகளின் தலைவர்கள் செருமனியின் போதுசுதாமில் சந்தித்தனர். செருமனி குறித்த முந்தைய ஒப்பந்தங்களை அவர்கள் உறுதி செய்தனர். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சீன அரசாங்கங்கள் சப்பானின் நிபந்தனையற்ற சரணடைவைக் கோரின. குறிப்பாக, சப்பானுக்கு "மாற்று வழியானது உடனடி மற்றும் முழுமையான அழிவு" என்பதைக் குறிப்பிட்டனர். இந்த மாநாட்டின் போது ஐக்கிய இராச்சியம் தனது பொதுத்தேர்தலை நடத்தியது. பிரதம மந்திரியாக சர்ச்சிலுக்குப் பதிலாக கிளமெண்ட் அட்லீ பதவிக்கு வந்தார். நிபந்தனையற்ற சரணடைவுக்கான அழைப்பானது சப்பானிய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. அது தன்னால் மிகுந்த விருப்பத்திற்குரிய நிபந்தனை விதிமுறைகளுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நம்பியது. ஆகத்து ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கா சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு குண்டு வீச்சுகளுக்கு இடையில் யால்ட்டா ஒப்பந்தத்தின் பங்கெடுப்பாளர்களான சோவியத்துகள் சப்பானியர் ஆக்கிரமிப்பில் இருந்த மஞ்சூரியா மீது படையெடுத்தனர். சப்பானின் மிகப்பெரிய சண்டையிடும் படையாக இருந்த குவாந்துங் இராணுவத்தை உடனடியாகத் தோற்கடித்தனர். முன்னர் பிடிவாதமாக இருந்த ஏகாதிபத்திய இராணுவத் தலைவர்களைச் சரணடைவு விதிமுறைகளுக்கு ஒப்புக் கொள்ள இந்த இரண்டு நிகழ்வுகளும் இணங்க வைத்தன. சிவப்பு இராணுவமானது சக்காலின் தீவின் தெற்குப் பகுதி மற்றும் குரில் தீவுகளைக் கைப்பற்றியது. 9 – 10 ஆகத்து 1945இன் இரவில் பேரரசர் இறோகித்தோ போதுசுதாம் அறிவிப்பில் நேச நாடுகளால் கோரப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளும் தனது முடிவை அறிவித்தார். 15 ஆகத்து 1945இல் பேரரசர் வானொலியில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையில் ("கியோகுவோன்-கோசோ", பொருள்: "ஆபரணக் குரல் ஒளிபரப்பு") தனது முடிவை சப்பானிய மக்களுக்குத் தெரிவித்தார். 15 ஆகத்து 1945 அன்று சப்பான் சரணடைந்தது. 2 செப்டம்பர் 1945இல் டோக்கியோ வளைகுடாவில் அமெரிக்கப் போர்க் கப்பலான யு. எஸ். எஸ். மிசோரியின் தளத்தில் சரணடைவு ஆவணங்கள் இறுதியாகக் கையொப்பமிடப்பட்டன. போரை முடித்து வைத்தன. பிறகு ஆத்திரியா மற்றும் செருமனியில் ஆக்கிரமிப்பு நிர்வாகங்களை நேச நாடுகள் நிறுவின. ஆரம்பத்தில் இவை இரண்டுமே மேற்கு மற்றும் கிழக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை முறையே மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. எனினும், இவற்றின் பாதைகள் சீக்கிரமே வெவ்வேறு திசையில் பிரிந்தன. செருமனியில் மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மேற்கு மற்றும் கிழக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகாரப்பூர்வமாக 1949இல் முடிவடைந்தன. இப்பகுதிகள் தனித்தனி நாடுகளாக முறையே மேற்கு செருமனி மற்றும் இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு எனப் பிரிந்தன. இருந்தும் ஆத்திரியாவில் ஆக்கிரமிப்பானது 1955இல் மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான ஒரு கூட்டு உடன்படிக்கைப்படி ஆத்திரியாவானது மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நடு நிலை சனநாயக அரசாக அனுமதி வழங்கப்பட்டது வரை தொடர்ந்தது. இது அலுவல்பூர்வமாக எந்த ஓர் அரசியல் குழுவுடனும் அணி சேராமல் இருந்தது. எனினும், நடைமுறையில் மேற்கு நேச நாடுகளுடன் மேம்பட்ட உறவுகளைக் கொண்டிருந்தது. செருமனியில் ஒரு நாசி ஒழிப்பு முறையானது நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் நாசிப் போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும், அதிகாரத்திலிருந்து முன்னாள் நாசிக்களை நீக்குவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தக் கொள்கையானது மன்னிப்பு வழங்குவதை நோக்கியும், மேற்கு செருமானியச் சமூகத்தில் முன்னாள் நாசிக்களை மீண்டும் இணைத்துக் கொள்வதையும் நோக்கி நகர்ந்தது. போருக்கு முந்தைய (1937) தனது நிலப்பரப்பில் கால் பகுதியைச் செருமனி இழந்தது. கிழக்கு நிலப்பரப்புகளில் சைலீசியா, நியூமார்க் மற்றும் பெரும்பாலான பொமரேனியாவானது போலந்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கிழக்கு புருசியாவானது போலந்து மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பிரித்துக் கொள்ளப்பட்டது. இந்த மாகாணங்களில் இருந்து 90 இலட்சம் செருமானியர்கள் செருமானிக்குள் தள்ளப்பட்டனர். செக்கோஸ்லோவாக்கியாவின் சுதேதென்லாந்தில் இருந்த 30 இலட்சம் செருமானியர்களும் செருமானிக்குள் தள்ளப்பட்டனர். 1950களின் இறுதியில் மேற்கு செருமானியர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கிழக்கிலிருந்து வந்த அகதிகளாக இருந்தனர். குர்சோன் கோட்டுக்குக் கிழக்கே இருந்த போலந்து மாகாணங்களைச் சோவியத் ஒன்றியம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அங்கிருந்து 20 இலட்சம் போலந்துக் காரர்களும் வெளியேற்றப்பட்டனர். வட மேற்கு உருமேனியா, கிழக்கு பின்லாந்தின் பகுதிகள் மற்றும் மூன்று பால்டிக் நாடுகள் சோவியத் ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. உலக அமைதியைப் பேணும் ஒரு முயற்சியாக நேச நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கின. ஐக்கிய நாடுகள் அவையானது அதிகாரப்பூர்வமாக 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பொதுவான தரமாக 1948இல் உலக மனித உரிமைகள் சாற்றுரையைப் பின்பற்ற ஆரம்பித்தது. போரின் வெற்றியாளர்களாகத் திகழ்ந்த உலக வல்லமைகளான பிரான்சு, சீனா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாயின. இந்த ஐந்து நாடுகள் மட்டுமே இன்றும் நிரந்தர உறுப்பு நாடுகளாகத் தொடர்கின்றன. எனினும், இரண்டு முறை நாடுகளின் உறுப்பினர் பதவியானது மாற்றப்பட்டது. 1971இல் சீனக் குடியரசு மற்றும் சீன மக்கள் குடியரசுக்கு இடையிலும், 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் மற்றும் அதற்குப் பின் வந்த உருசியக் கூட்டமைப்புக்கு இடையிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. போர் முடிவுக்கு முன்னரே மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான கூட்டணியானது மோசமடைய ஆரம்பித்தது. நடைமுறையில் செருமனியானது பிரிக்கப்பட்டு விட்டது. இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கப்பட்டது. அவை செருமானியக் கூட்டமைப்புக் குடியரசு (மேற்கு செருமனி) மற்றும் செருமானிய சனநாயகக் குடியரசு (கிழக்கு செருமனி). இவை இரண்டுமே நேச நாடுகள் மற்றும் சோவியத்து ஆக்கிரமிப்புப் பகுதிகளின் எல்லைகளுக்குள் உருவாக்கப்பட்டன. எஞ்சிய ஐரோப்பாவானது மேற்கு மற்றும் சோவியத் தாக்கம் கொண்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பெரும்பாலான கிழக்கு மற்றும் நடு ஐரோப்பிய நாடுகள் சோவியத் தாக்கம் கொண்ட பகுதிகளுக்குள் விழுந்தன. பொதுவுடமைவாத அரசுகளின் நிறுவுதலுக்கு இது இட்டுச் சென்றது. இவை சோவியத் ஆக்கிரமிப்பு அரசுத் துறைக்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியளவாகவோ ஆதரவளித்தன. இதன் விளைவாக இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு, போலந்து, அங்கேரி, உருமேனியா, செக்கோஸ்லாவாக்கியா மற்றும் அல்பேனியா ஆகியவை சோவியத்தின் தொலைதூர அரசுகளாயின. எனினும், பொதுவுடமைவாத யுகோஸ்லாவியாவானது ஒரு முழுவதுமான சுதந்திரமான கொள்கையைக் கடைபிடித்தது. இது சோவியத் ஒன்றியத்துடன் பதற்றமான நிலைக்கு இட்டுச் சென்றது. போருக்குப் பிந்தைய உலகின் பிரிவானது அதிகாரப்பூர்வமாக இரண்டு பன்னாட்டு இராணுவக் கூட்டணிகளாக உருவானது. அவை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு மற்றும் சோவியத் தலைமையிலான வார்சா உடன்பாடு ஆகியவையாகும். பனிப்போர் எனப்படும் நீண்டகால அரசியல் பதற்றங்கள் மற்றும் இராணுவ போட்டி ஆகியவை இவற்றுக்கு இடையே ஏற்பட்டது. இதனுடன் இதற்கு முன்னர் இருந்திராத அளவுக்கான ஆயுதப் போட்டியும், உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சார்பாண்மை போர்களும் நடைபெற்றன. ஆசியாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கு ஐக்கிய அமெரிக்கா தலைமை தாங்கியது. மேற்கு அமைதிப் பெருங்கடலில் இருந்த சப்பானின் முந்தைய தீவுகளை நிர்வாகம் செய்தது. அதே நேரத்தில், சோவியத்துகள் தெற்கு சாக்கலின் மற்றும் கூரில் தீவுகளை இணைத்துக் கொண்டனர். முன்னர் சப்பானின் ஆட்சியின் கீழிருந்த கொரியாவானது பிரிக்கப்பட்டது. 1945 மற்றும் 1948க்கு இடையில் கொரியாவின் வடக்குப் பகுதி சோவியத் ஒன்றியத்தாலும், தெற்குப்பகுதி ஐக்கிய அமெரிக்காவாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. 1948இல் 38வது இணைக் கோட்டுக்கு இரு பக்கமும் வெவ்வேறு குடியரசுகள் தோன்றின. ஒட்டு மொத்த கொரியாவுக்கும் நியாயமான அரசாங்கம் என இரு அரசுகளும் உரிமை கோரின. இது இறுதியாகக் கொரியப் போருக்கு இட்டுச் சென்றது. சீனாவில் தேசியவாத மற்றும் பொதுவுடமைவாதப் படைகள் சூன் 1946இல் உள்நாட்டுப் போரை மீண்டும் தொடங்கின. பொதுவுடமைவாதப் படைகள் வெற்றி பெற்றன. முதன்மை நிலத்தில் சீன மக்கள் குடியரசை நிறுவின. அதே நேரத்தில், தேசியவாதப் படைகள் 1949இல் தைவானுக்குப் பின் வாங்கின. மத்திய கிழக்கில், ஐக்கிய நாடுகள் வழங்கிய பாலத்தீனப் பிரிவுத் திட்டத்தை அரபு நாடுகள் நிராகரித்ததும், இசுரேலின் உருவாக்கமும் அரபு-இசுரேல் முரண்பாடு தீவிரமாகுவதைக் குறித்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய சக்திகள் தங்களது காலனிப் பேரரசில் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ மீண்டும் வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டன. போரின்போது அவை மதிப்பு மற்றும் வளங்களை இழந்தது இம்முயற்சியை வெற்றிகரமாக அமையவிடாமல் தடுத்தது. இது குடியேற்ற விலக்கத்துக்கு இட்டுச் சென்றது. உலகப் பொருளாதாரமானது போரின் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. எனினும், இதில் பங்கெடுத்த நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறாகப் பாதிக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவானது மற்ற எந்த ஒரு நாட்டையும் விட மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க நாடாக உருவானது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐக்கிய அமெரிக்காவில் ஒரு குழந்தைப் பெருக்கக் காலத்திற்கு இட்டுச் சென்றது. 1950ஆம் ஆண்டின் முடிவில் இதன் தனிநபர் வருமானமானது மற்ற எந்த பெரிய நாடுகளையும் விட மிக அதிகமாக இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் ஐக்கிய அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. 1945–1948 ஆகிய ஆண்டுகளில் மேற்கு செருமனியில் தொழில்முறை ஆயுதக்குறைப்பு என்ற ஒரு கொள்கையை ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா பின்பற்றின. பன்னாட்டு வணிகச் சார்பு நிலை காரணமாக ஐரோப்பியப் பொருளாதாரமானது வளர்ச்சியற்ற நிலைக்கு உள்ளானது. பல ஆண்டுகளுக்கு இது ஐரோப்பிய மீட்சியைத் தாமதித்தது. 1944இல் பிரெட்டன் உட்சு மாநாட்டில் போருக்குப் பிந்தைய உலகத்திற்காக ஒரு பொருளாதார உருவரைச் சட்டத்தை நேச நாடுகள் உருவாக்கின. இந்த ஒப்பந்தமானது அனைத்துலக நாணய நிதியத்தையும், பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியையும் உருவாக்கியது. பிரெட்டன் உட்சு முறைமை 1973ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது. 1948இன் நடுப்பகுதியில் மேற்கு செருமனியில் பண மறுசீரமைப்புடன் இந்த மீட்சியானது தொடங்கியது. மார்ஷல் திட்டம் (1948–1951) நேரடியாகவும், மறைமுகமாகவும் விளைவித்த ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கையின் தாராளமயமாக்கமானது வேகப்படுத்தப்பட்டது. 1948க்குப் பிந்தைய மேற்கு செருமனியின் பொருளாதார மீட்சியானது செருமானியப் பொருளாதார அதிசயம் என்று அழைக்கப்பட்டது. இத்தாலியும் பொருளாதார விரைவு வளர்ச்சியைப் பெற்றது. பிரெஞ்சுப் பொருளாதாரமும் மீண்டது. ஆனால் மாறாக, ஐக்கிய இராச்சியமானது பொருளாதாரச் சீர் குலைவு நிலையில் இருந்தது. மொத்த மார்ஷல் திட்ட உதவியில் கால் பங்கைப் பெற்ற போதும் இவ்வாறான நிலை இருந்தது. இது மற்ற எந்த ஓர் ஐரோப்பிய நாட்டையும் விட அதிக உதவித் தொகையாகும். தசாப்தங்களுக்கு ஒப்பீட்டளவில் பொருளாதார வீழ்ச்சியை ஐக்கிய இராச்சியமானது தொடர்ந்து சந்தித்தது. சோவியத் ஒன்றியமானது பெருமளவிலான மனித வள மற்றும் பொருள் இழப்பைச் சந்தித்த போதும், போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் ஆரம்பக் காலத்தில் உற்பத்திகள் திடீர் அதிகரிப்பைச் சந்தித்தது. சப்பான் மிகத் தாமதமாக மீண்டது. போருக்கு முந்தைய தொழில் துறை உற்பத்தி நிலையை 1952ஆம் ஆண்டில் சீனாவானது அடைந்தது. விளைவு இறப்புகளும், போர்க் குற்றங்களும் போரில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையின் மதிப்பீடுகளானவை வேறுபடுகின்றன. ஏனெனில், பல இறப்புகள் பதியப்படவில்லை. போரில் சுமார் 6 கோடி மக்கள் இறந்தனர் எனப் பெரும்பாலானவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் 2 கோடி இராணுவ வீரர்களும்,4 கோடி குடிமக்களும் அடங்குவர். பெரும்பாலான குடிமக்கள் வேண்டுமென்றே நடத்தப்பட்ட இனப்படுகொலை, படுகொலைகள், மொத்தமான குண்டுவீச்சுகள், நோய் மற்றும் பட்டினியால் இறந்தனர். போரின் போது சோவியத் ஒன்றியம் மட்டுமே சுமார் 2.7 கோடி மக்களை இழந்தது. இதில் 87 இலட்சம் இராணுவ வீரர்களும், 1.9 கோடி குடிமக்களும் அடங்குவர். சோவியத் ஒன்றியத்தில் இருந்த மொத்த மக்கள் தொகையில் ஒரு கால் பங்கினர் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். செருமனிக்கு 53 இலட்சம் இராணுவ வீரர்களின் இழப்பு ஏற்பட்டது. கிழக்குப் போர்முனை மற்றும் செருமனியில் கடைசி யுத்தங்களின் போது இந்த இறப்புகள் பெரும்பாலும் ஏற்பட்டன. இட்லரின் இனவெறிக் கொள்கைகளின் நேரடி அல்லது மறைமுக விளைவாக 1.1 முதல் 1.7 கோடி வரையிலான குடிமக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 இலட்சம் யூதர்களின் மொத்தமான இனப்படுகொலை, இவர்களுடன் உரோமா, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் குறைந்தது 19 இலட்சம் போலந்து இனத்தவர்கள், இசுலாவியர்களில் (உருசியர்கள், உக்ரைனியர்கள் மற்றும் பெலாருசியர்கள்) பல இலட்சம் பேர் மற்றும் பிற இன மற்றும் சிறுபான்மையினக் குழுக்களின் கொலையும் அடங்கும். 1941 மற்றும் 1945க்கு இடையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட செர்பியர்கள், நாடோடி இனத்தவர் மற்றும் யூதர்களுடன் சேர்த்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு யுகோஸ்லாவியாவில் அச்சு நாடுகளுடன் இணைந்திருந்த குரோசிய உசுதசேவால் கொலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், செர்பியத் தேசியவாதச் செத்னிக்குகளால் முஸ்லிம்களும், குரோசிய இனத்தவர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 50 முதல் 68 ஆயிரம் (இதில் 41 ஆயிரம் குடிமக்கள்) வரையிலான பாதிக்கப்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1943 மற்றும் 1945க்கு இடையில் வோலினியப் படுகொலைகளில் உக்ரைனியக் கலகக்கார இராணுவத்தால் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட போலந்துக்காரர்களும் படுகொலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், இதற்குப் பதில் தாக்குதலாகப் போலந்து குடி இராணுவம் மற்றும் பிற போலந்துப் பிரிவுகளால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டனர். ஆசியா மற்றும் அமைதிப் பெருங்கடல் பகுதியில் சப்பானியத் துருப்புகளால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையானது இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. ஆர். ஜே. ரம்மல் என்பவரின் கூற்றுப்படி, சப்பானியர்கள் 30 இலட்சம் முதல் 1 கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கைக்கு இடையிலான மக்களைக் கொன்றிருக்கலாம் என்கிறார். மிகுந்த நிகழ்வாய்ப்புள்ள எண்ணிக்கையாகக் கிட்டத்தட்ட 60 இலட்சம் மக்களைக் குறிப்பிடுகிறார். பிரித்தானிய வரலாற்றாளர் எம். ஆர். டி. பூட்டின் கூற்றுப்படி, 1 முதல் 2 கோடிக்கு இடைப்பட்ட குடிமக்கள் இறந்தனர். அதே நேரத்தில், சீன இராணுவ இறப்புகள் (கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்) 50 இலட்சத்துக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளன. மற்ற மதிப்பீடுகள், பெரும்பாலும் குடிமக்களாக இருந்த 3 கோடி வரையிலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றன. இதில் மோசமான சப்பானிய அட்டூழியமானது நாங்கிங் படுகொலைகள் எனக் கருதப்படுகிறது. இதில் 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் சீனக் குடிமக்கள் இழிவுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். சான்கோ சகுசேனின் போது 27 இலட்சம் இழப்புகள் ஏற்பட்டதாக மித்சுயோசி கிமேட்டா குறிப்பிட்டுள்ளார். தளபதி யசுசி ஒகமுரா இந்தக் கொள்கையை கீபே மற்றும் சாண்டோங்கில் செயல்படுத்தினார். அச்சுப் படைகள் உயிரி மற்றும் வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தின. சீனா மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு, மற்றும் சோவியத்துகளுக்கு எதிரான ஆரம்பச் சண்டைகளின் போது இத்தகைய பல்வேறுபட்ட ஆயுதங்களை ஏகாதிபத்திய சப்பான் இராணுவமானது பயன்படுத்தியது. குடிமக்களுக்கு எதிராக மற்றும் சில நேரங்களில் போர்க் கைதிகள் மீது இத்தகைய ஆயுதங்களைச் செருமானியர்களும், சப்பானியர்களும் சோதனை செய்தனர். 22,000 போலந்து அதிகாரிகள் கொல்லப்பட்ட கதின் படுகொலைக்குச் சோவியத் ஒன்றியம் காரணமாக அமைந்தது. என். கே. வி. டி.யால் கைதுசெய்யப்பட்ட அல்லது மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள், சைபீரியாவுக்கு குடிமக்கள் மொத்தமாக நாடு கடத்தப்பட்டது, சிவப்பு இராணுவத்தால் இணைத்துக் கொள்ளப்பட்ட பால்டிக் அரசுகள் மற்றும் கிழக்குப் போலந்தில் நடைபெற்ற இறப்புகளுக்கும் சோவியத் ஒன்றியம் காரணமாக அமைந்தது. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த நகரங்களின் மீதான மொத்தமான குண்டுவீச்சுகளானவை பெரும்பாலும் ஒரு போர்க் குற்றமென அழைக்கப்படுகின்றன. எனினும், இரண்டாம் உலகப் போருக்கு முன்னரோ அல்லது போரின் போதோ வான் போர் தொடர்பான அல்லது குறித்த அனைத்துலக மனிதாபிமானச் சட்டமானது அதற்கு முன்னர் கிடையாது. ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் விமானப்படையானது, இரோசிமா நாகசாகி அணுகுண்டு வீச்சு உள்பட மொத்தமாக 67 சப்பானிய நகரங்கள் மீது குண்டுகளை வீசியது. இதில் 3,93,000 குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதில் 65% சதவீத கட்டடப் பகுதிகள் அழிந்தன. இனப்படுகொலை, வதை முகாம்கள் மற்றும் அடிமைத் தொழில்முறை அடால்ப் இட்லரின் சர்வாதிகாரத்தின் கீழ் நாசி செருமனியானது பெரும் இன அழிப்பு (சுமார் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது), 27 இலட்சம் போலந்து இனத்தவரின் கொலை மற்றும் "வாழத் தகுதியற்றவர்கள்" (மாற்றுத்திறனாளிகள் மற்றும் உளப் பிறழ்ச்சி அடைந்தோர், சோவியத் போர்க் கைதிகள், உரோமானி, நேர்பாலீர்ப்பாளார்கள், விடுதலைக் கட்டுநர்கள், மற்றும் யெகோவாவின் சாட்சிகள்) என நாசி செருமனியால் கருதப்பட்ட 40 இலட்சம் பிறரையும் வேண்டுமென்ற அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக அழித்ததற்குக் காரணமாக அமைந்தது. நாசி செருமனியானது நடைமுறை ரீதியாக ஒரு "இனப்படுகொலை அரசாக" உருவானது. குறிப்பாக சோவியத் போர்க்கைதிகள் வாழத் தகுதியற்ற சூழ்நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர். போரின் போது நாசி முகாம்களில் 57 இலட்சம் சோவியத் போர்க்கைதிகளில் 36 இலட்சம் பேர் இறந்தனர். வதை முகாம்களுடன், தொழில் துறை அளவில் மக்களைக் கொல்வதற்காகக் கொலை முகங்களும் நாசி செருமனியால் உருவாக்கப்பட்டன. நாசி செருமனி விரிவாக அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது. செருமனி ஆக்கிரமித்திருந்த நாடுகளிலிருந்து சுமார் 1.2 கோடி முதல் 2 கோடி வரையிலான ஐரோப்பியர்கள் கடத்தப்பட்டு செருமானியத் தொழில்துறை, விவசாயம் மற்றும் போர்ப் பொருளாதாரத்தில் அடிமைப் பணியாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். சோவியத் கைதி முகாம்கள் 1942-43இன் போது இறப்பைக் கொடுக்கக்கூடிய முகாம்களின் ஒரு நடைமுறை ரீதியிலான அமைப்பாக மாறியது. போரின்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை மற்றும் பட்டினியானது அங்கிருந்த கைதிகளின் பெரும்பாலானவர்களின் இறப்புக்குக் காரணமாகியது. இதில் சோவியத் ஒன்றியத்தால் 1939-40இல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்து மற்றும் பிற நாடுகளின் அயல் நாட்டுக் குடிமக்கள் மற்றும் மேலும் அச்சு நாடுகளின் போர்க் கைதிகளும் அடங்குவர். போரின் முடிவின்போது, நாசி முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெரும்பாலான சோவியத் போர்க் கைதிகளும், சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட பல குடிமக்களும் தடுக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் என். கே. வி. டி.யின் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டனர். உண்மையாகவோ அல்லது நாசிக்களுடன் இணைந்து செயல்பட்டவர்களாகவோ கருதப்பட்ட 2,26,127 பேர் முகாம்களுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். சப்பானியப் போர்க் கைதிகளின் முகாம்களில் பெரும்பாலானவை தொழிலாளி முகம்களாகப் பயன்படுத்தப்பட்டன. அங்கும் இறப்பு விகிதமானது அதிகமாக இருந்தது. தூரக் கிழக்கிற்கான பன்னாட்டு இராணுவத் தீர்ப்பாயமானது மேற்கு நாடுகளின் கைதிகளின் இறப்பு விகிதமானது 27%மாக இருந்தது எனக் கண்டறிந்தது. இதுவே அமெரிக்கப் போர்க் கைதிகளுக்கு 37%மாக இருந்தது. செருமானியர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் போர்க் கைதிகளாக இருந்தவர்களின் இறப்பு விகிதத்தை விட இது 7 மடங்கு அதிகமாகும். சப்பான் சரணடைந்த பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் 37,583 கைதிகளும், நெதர்லாந்தின் 28,500 கைதிகளும், ஐக்கிய அமெரிக்காவின் 14,473 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், விடுதலை செய்யப்பட்ட சீனர்களின் எண்ணிக்கையானது வெறும் 56 மட்டுமே. கிழக்காசிய முன்னேற்ற சங்கம் அல்லது கோயினால் சுரங்கங்கள் மற்றும் போர்த் தொழில் முறைகளில் பணியாற்றுவதற்காக 1935 முதல் 1941 வரை வடக்கு சீனா மற்றும் மஞ்சுகோவைச் சேர்ந்த குறைந்தது 50 இலட்சம் சீனக் குடிமக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். 1942க்குப் பிறகு இந்த எண்ணிக்கையானது 1 கோடியை அடைந்தது. சாவகத்தில் 4 இலட்சம் முதல் 1 கோடிக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான ரோமுசா (சப்பானியப் பொருள்: "கைத்திறன் சார்ந்த தொழிலாளர்கள்") சப்பானிய இராணுவத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுப் பணி செய்ய வைக்கப்பட்டனர். தென்கிழக்கு ஆசியாவில் இருந்த சப்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிற பகுதிகளுக்கு இந்தச் சாவகத் தொழிலாளர்களில் 2,70,000 பேர் அனுப்பப்பட்டனர். இதில் சாவகத்திற்கு வெறும் 52,000 பேர் மட்டுமே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆக்கிரமிப்பு ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பானது இரண்டு வடிவங்களில் வந்தது. மேற்கு, வடக்கு மற்றும் நடு ஐரோப்பாவில் (பிரான்சு, நார்வே, டென்மார்க் மற்றும் கீழ் நாடுகள், மற்றும் செக்கோஸ்லோவியாவின் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகள்) செருமனியானது பொருளாதாரக் கொள்கைகளை நிறுவியது. இதன்மூலம், அது சுமார் 6,950 கோடி ரெயிச் மார்க்குகளை (2,780 கோடி ஐக்கிய அமெரிக்க டாலர்கள்) போரின் முடிவில் சேகரித்தது. இந்த அளவானது தொழில் பொருட்கள், இராணுவ உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற பொருட்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கொள்ளையடித்ததை உள்ளடக்கியிருக்கவில்லை. இவ்வாறாக, இந்த ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருந்து பெற்ற வருவாயானது செருமனி வரி மூலம் சேகரித்ததின் 40%க்கும் அதிகமாகும். போர் அதன் போக்கில் சென்று கொண்டிருந்த நேரத்தில், மொத்த செருமானிய வருவாயில் கிட்டத்தட்ட 40%மாக இந்த அளவு அதிகரித்தது. கிழக்கில் லெபென்சரவுமால் எதிர்பார்க்கப்பட்ட அனுகூலங்களை என்றுமே கிடைக்கவில்லை. ஏனெனில், சோவியத் நில எரிப்புக் கொள்கைகள் செருமானியப் படையெடுப்பாளர்களுக்கு வளங்கள் கிடைப்பதைத் தடுத்தது. மற்றும் போர் முனைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக மேற்கில் போல் இல்லாமல் இசுலாவிய வழித்தோன்றல்களைத் "தாழ்த்தப்பட்ட மக்களாகக்" கருதிய நாசி இனவெறிக் கொள்கையானது அவர்களுக்கு எதிராக அளவுக்கதிகமான மிருகத்தனத்தை ஊக்குவித்தது. பெரும்பாலான செருமானிய முன்னேற்றங்களுக்குப் பிறகு மொத்தமான படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. பெரும்பாலான ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பரப்புகளில் எதிர்ப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்ட போதும், 1943ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை கிழக்கிலோ அல்லது மேற்கிலோ இவை செருமானிய நடவடிக்கைகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிக்கவில்லை. ஆசியாவில் தனது ஆக்கிரமிப்புக்குக் கீழ் இருந்த நாடுகளை பெரிய கிழக்காசியச் செழிப்பு மண்டலத்தின் பகுதி எனக் குறிப்பிட்டது. இவை சப்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த மக்களை விடுதலை செய்வது தமது நோக்கமென சப்பான் கூறியது.ஐரோப்பிய ஆதிக்கத்தின் கீழ இருந்து விடுதலை செய்தவர்களாக சப்பானியப் படைகள் சில நேரங்களில் வரவேற்கப்பட்ட போதும், சப்பானியப் போர்க் குற்றங்கள் அடிக்கடி உள்ளூர் மக்களின் எண்ணங்களை சப்பானியர்களுக்கு எதிராகத் திருப்பியது. சப்பானின் ஆரம்பப் படையெடுப்பின்போது, பின்வாங்கிய நேச நாடுகளின் படைகளால் விட்டுச்செல்லப்பட்ட 40 இலட்சம் பீப்பாய் எண்ணெயைக் கைப்பற்றியது. 1943ஆம் ஆண்டின் இறுதியில் டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளில் 5 கோடி பீப்பாய் எண்ணெய் உற்பத்தியைப் பெற அதனால் முடிந்தது. இது 1940ஆம் ஆண்டின் உற்பத்தி விகிதத்தில் 76% ஆகும். உள்நாட்டுப் போர் முனைகளும், உற்பத்தியும் ஐரோப்பாவில் போர் தொடங்குவதற்கு முன்னர் மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் நேச நாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தன. 1938இல் மேற்கு நேச நாடுகள் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, போலந்து மற்றும் பிரித்தானியப் பகுதிகள்) 30% அதிக மக்கள் தொகையையும், 30% அதிக உள்நாட்டு உற்பத்தியையும் ஐரோப்பிய அச்சு சக்திகளைக் (செருமனி மற்றும் இத்தாலி) காட்டிலும் கொண்டிருந்தன. காலனிகளையும் இதனுள் சேர்த்துக்கொண்டால் நேச நாடுகள் 5:1 சாதகத்தை மக்கள் தொகையிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2:1 சாதகத்தையும் கொண்டிருந்தன. இதே நேரத்தில், ஆசியாவில் சப்பானைப் போல் சீனா ஆறு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால், சப்பானை விட வெறும் 89% அதிகமான உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருந்தது. சப்பானியக் காலனிகளை இதனுடன் இணைக்கும் போது, இது 3:1 மக்கள் தொகையாகவும், வெறும் 38% அதிகமான உள்நாட்டு உற்பத்தியாகவும் குறைந்தது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் பயன்படுத்திய அனைத்துப் படைக்கலங்களில் சுமார் 3இல் 2 பங்கை ஐக்கிய அமெரிக்கா உற்பத்தி செய்தது. இதில் போர்க்கப்பல்கள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், சேணேவிகள், பீரங்கி வண்டிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவையும் அடங்கும். நேச நாடுகளின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை சாதக அம்சங்களின் பயனானது செருமனி மற்றும் சப்பானின் ஆரம்ப வேகமான தாக்குதலின் போது பெரும்பாலும் குறைவாக இருந்தபோதும், 1942ஆம் ஆண்டு வாக்கில் அவை மிக முக்கியமான காரணிகளாக விளங்கின. ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் 1942இல் நேச நாடுகளுடன் இணைந்தபோது, போரானது பெரும்பாலும் ஒரு உராய்வுப் போராக மாறியது. நேச நாடுகளுக்கு இயற்கை வளங்கள் அதிகமாகக் கிடைத்ததால் அச்சு நாடுகளை விட பெரும்பாலும் நேச நாடுகளால் அதிக உற்பத்தியைச் செய்ய முடிந்தது எனக் கூறப்பட்டாலும், மற்ற காரணிகளான பெண்களைப் பணிக்கு அமர்த்த செருமனி மற்றும் சப்பானின் தயக்கம், நேச நாடுகள் முக்கிய இடங்களைக் குறிவைத்து வெடிகுண்டு வீசியது, செருமனி தாமதமாகவே ஒரு போர்ப் பொருளாதாரத்துக்கு மாறியது ஆகியவையும் இதில் மிக முக்கியப் பங்காற்றின. மேலும், செருமனியோ அல்லது சப்பானோ எதிர்பார்த்ததை விட ஒரு நீண்ட காலப் போரைச் செய்வதற்கான திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. அவர்களிடம் அதற்கான உபகரணங்களும் குறைவாக இருந்தன. தங்களது உற்பத்தியை அதிகப்படுத்த செருமனி மற்றும் சப்பான் இலட்சக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தின. பெரும்பாலும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெறப்பட்ட சுமார் 1.2 கோடி மக்களை செருமனி இதற்காகப் பயன்படுத்தியது. அதே நேரத்தில், தூரக் கிழக்காசியாவில் இருந்து பெறப்பட்ட 1.8 கோடி மக்களை சப்பான் பயன்படுத்தியது. தொழில்நுட்பத்திலும், போர் முறையிலும் முன்னேற்றங்கள் உளவு பார்க்கவும், சண்டையிடுவதற்கும், குண்டு வீச்சிலும், தரைப்பகுதிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் இந்த ஒவ்வொரு பங்கும் குறிப்பிடத்தக்களவுக்கு முன்னேற்றப்பட்டன. வான்வழி எடுத்துச் செல்லலும் (அதிக முக்கியத்தும் வாய்ந்த பொருட்கள், உபகரணங்கள் மற்றும் வீரர்களை ஓர் அளவுக்கு வேகமாக நகர்த்தும் ஆற்றல்) மற்றும் முக்கியக் குண்டுவீச்சு (எதிரி தொழில்துறை மற்றும் மக்கள் தொகை மையங்கள் மீது குண்டு வீசுவதன் மூலம் போரை நடத்தும் எதிரியின் ஆற்றலை அழிப்பது) ஆகியவற்றில் புதுமைகள் புகுத்தப்பட்டன. விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஆயுதங்களும் முன்னேற்றப்பட்டன. கதிரலைக் கும்பா மற்றும் தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் சேணேவி உள்ளிட்ட தற்காப்பு ஆயுதங்களும் முன்னேற்றப்பட்டன. தாரை வானூர்தியின் பயனும் முன்னோடியாக இதில் பயன்படுத்தப்பட்டது. எனினும், இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டதால் குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்தின. உலகம் முழுவதும் உள்ள விமானப்படைகளில் தாரை வானூர்திகள் பொதுவானவையாக மாறுவதற்கு இது இட்டுச் சென்றது. போரின் போது வழிகாட்டிகளைக் கொண்ட ஏவுகணைகள் முன்னேற்றப்பட்ட போதும் வானூர்திகளைத் துல்லியமாக இலக்காக்கும் அளவுக்கு அவை முன்னேற்றப்படவில்லை. போருக்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகே இவை அத்தகைய திறனை அடைந்தன. கடற்படைப் போர் முறையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் புதுமைகள் ஏற்படுத்தப்பட்டன. முக்கியமாக வானூர்தி தாங்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வானூர்திப் போர் முறையானது போரின் ஆரம்பத்தின்போது ஒப்பீட்டளவில் சிறிதளவே வெற்றியைக் கொடுத்த போதிலும் தரந்தோ, முத்துத் துறைமுகம் மற்றும் பவளக் கடல் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சண்டைகள் போர்க்கப்பலின் இடத்தில் வானூர்தி தாங்கிக் கப்பல்களை முதன்மையான தலைமைக் கப்பலாக நிறுவின. அத்திலாந்திக்கில் நேச நாட்டுக் கப்பல் கூட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக காவல் தாங்கிக் கப்பல்கள் தங்களை நிரூபித்தன. ஆற்றல் வாய்ந்த பாதுகாப்பு ஆரத்தின் அளவை அதிகரித்தன. விமானப்படையின் தரைத் தளங்களுக்கும், கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட நடு அத்திலாந்திக்கு இடைவெளியைக் குறைப்பதில் பயன்பட்டன. போர்க்கப்பல்களை விட பொருளாதார ரீதியாகவும் தாங்கிக் கப்பல்கள் பயனுள்ளவையாக இருந்தன. ஏனெனில், ஒப்பீட்டளவில் விமானங்களின் விலையானது குறைவாக இருந்தது, அவை கனரகக் கவசங்களையும் வேண்டிய தேவையைக் கொண்டிருக்கவில்லை. முதல் உலகப் போரின் போது தாக்கத்தை ஏற்படுத்திய ஆயுதமாக நிரூபிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டாம் உலகப் போரிலும் அனைத்துத் தரப்பினராலும் முக்கியமானவையாக எதிர்பார்க்கப்பட்டன. நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகளை முன்னேற்றுவதில் பிரித்தானியர்கள் கவனம் செலுத்தினர். இதில் ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு மற்றும் கப்பல் கூட்டங்களும் அடங்கும். அதே நேரத்தில், தன்னுடைய தாக்குதல் ஆற்றலில் 7ஆம் வகை நீர்மூழ்கி மற்றும் ஓநாய்க் கூட்ட உத்திகள் போன்ற வடிவமைப்புகளை முன்னேற்றுவதன் மூலம் செருமனி கவனம் செலுத்தியது. படிப்படியாக, லெயிக் ஒலி, முள்ளம் பன்றி ஆயுதம், கணவாய் ஆயுதம் மற்றும் நீர்மூழ்கிகளை நோக்கிச் செல்லும் குண்டுகள் ஆகியவை செருமானிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக வெற்றியடைந்தவை என நிரூபிக்கப்பட்ட நேச நாட்டுத் தொழில்நுட்பங்களை படிப்படியாக முன்னேற்றினர். முதல் உலகப் போரின் பதுங்கு குழிப் போர் முறையின் நிலையான முன் கோடுகளிலிருந்து நிலப் போர் முறையானது மாற்றமடைந்தது. இது காலாட்படை மற்றும் குதிரைப்படை ஆகிய இரண்டையும் விட வேகத்தில் அதிகமாக இருந்த முன்னேற்றப்பட்ட சேணேவியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மேலும், வேகம் மற்றும் ஒட்டுமொத்த ஆயுதங்களின் பங்கையும் முன்னேற்றி இருந்தது. முதல் உலகப் போரில் காலாட்படையினருக்கு உதவி அளிப்பதற்காக முதன்மையாகப் பயன்படுத்தப்பட்ட பீரங்கி வண்டிகள் இப்போரில் ஒரு முதன்மையான ஆயுதமாகப் பரிணாமம் அடைந்தன. 1930களின் இறுதிப்பகுதியில் முதல் உலகப் போரின் போது இருந்ததை விட பீரங்கி வண்டி வடிவமைப்பானது குறிப்பிடத்தக்க அளவு மிகுந்த முன்னேற்றம் அடைந்திருந்தது.வேகம், கவசம் மற்றும் சுடு திறனில் முன்னேற்றங்கள் மூலம் போர் முழுவதும் இவை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்தன. போரின் ஆரம்பத்தில் எதிரிப் பீரங்கி வண்டிகள் தமது அதிக நுணுக்க விவரங்களுடன் கூடிய பீரங்கி வண்டிகளால் சந்திக்கப்பட வேண்டும் எனப் பெரும்பாலான தளபதிகள் எண்ணினர். ஒப்பீட்டளவில் இலகு ரக ஆரம்பப் பீரங்கித் துப்பாக்கிகள் கவசங்களுக்கு எதிராகக் குறைவாகவே பலனைத் தந்ததும், பீரங்கி வண்டிகளை பீரங்கி வண்டிகளுக்கு எதிராகப் போரில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற செருமானியக் கொள்கை காரணமாகவும் இந்த எண்ணமானது மாற்றப்பட்டது. இதுவும், ஒன்றிணைந்த ஆயுதங்களைச் செருமனி பயன்படுத்தியதும் போலந்து மற்றும் பிரான்சு முழுவதும் செருமானியர்களின் மிகுந்த வெற்றிகரமான பிளிட்ஸ்கிரைக் உத்திகளின் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன. மறைமுகச் சேணேவி, பீரங்கி வண்டி எதிர்ப்புத் துப்பாக்கிகள் (ஊர்தியில் இணைக்கப்பட்ட மற்றும் தனியான ஆகிய இரண்டுமே), கண்ணி வெடிகள், குறுகிய தொலைவு காலாட்படை பீரங்கி வண்டி எதிர்ப்பு ஆயுதங்கள், மற்றும் பிற பீரங்கி வண்டிகள் பீரங்கி வண்டிகளை அழிக்கும் பலவகை முறைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பெரிய அளவிலான எந்திரமயமாக்கல் நடைபெற்ற போதும் கூட அனைத்துப் படைகளின் முதுகெலும்பாகக் காலாட்படையே தொடர்ந்தது. போர் முழுவதும் முதல் உலகப் போர் ஆயுதங்கள் காலாட்படைக்குப் பயன்படுத்தப்பட்டன. எளிதில் நகர்த்தக்கூடிய இயந்திரத் துப்பாக்கிகளின் பயன்பாடு பரவியது. இதில் குறிப்பிடத்தக்க உதாரணமானது செருமானிய எம். ஜி. 34 இயந்திரத் துப்பாக்கியாகும். நகர்ப்புற மற்றும் காட்டுப் பகுதிகளில் சண்டையிடும் சூழ்நிலைக்குப் பல்வேறு துணை இயந்திரத் துப்பாக்கிகளும் தகுந்தவையாக அமைந்தன. புரிகுழல் சுழல் துமுக்கி மற்றும் துணை இயந்திரத் துப்பாக்கிகளின் பல அம்சங்களை ஒன்றிணைத்துப் போரின் பிற்பகுதியில் முன்னேற்றப்பட்ட தாக்குதல் மரைகுழல் துப்பாக்கியானது பெரும்பாலான இராணுவப் படைகளின் போருக்குப் பிந்தைய காலாட்படை ஆயுதமாக உருவானது. போரில் ஈடுபட்ட பெரும்பாலான முக்கிய நாடுகள் சிக்கல் பிரச்சினைகள் மற்றும் குறியாக்கவியலுக்கான பெரிய குறிப் புத்தகங்களைப் பயன்படுத்துவதில் சம்பந்தப்பட்டிருந்த பாதுகாப்பைத் தீர்க்கும் முயற்சிக்காக மறை குறியீடிடும் எந்திரங்களை வடிவமைத்தனர். இதில் மிகுந்த பரவலாக அறியப்பட்டது செருமானியப் புதிர் எந்திரம் ஆகும். சிகின்ட் (சமிக்ஞைகள் உளவுச் செய்தி) மற்றும் மறை குறியீடு பகுப்பாய்வுவின் முன்னேற்றமானது மறையீடு நீக்கச் செய்முறைக்கு எதிராக உதவியது. குறிப்பிடத்தக்க உதாரணங்களாக சப்பானியக் கடற்படை மறை குறியீடுகளை நேச நாடுகள் மறையீடு நீக்கம் செய்ததையும், பிரித்தானிய அல்ட்ராவையும் குறிப்பிடலாம். போலந்து பூச்சிய தகவல் செய்தி அமைப்பால் ஐக்கிய இராச்சியத்திற்குக் கொடுக்கப்பட்ட தகவல்களின் மூலம் புதிரை மறையீடு நீக்கம் செய்து அனுகூலங்களைப் பெற்று வந்த ஒரு முன்னோடி முறையாக அல்ட்ரா திகழ்ந்தது. போருக்கு முன்னர் புதிரின் ஆரம்பத் தலுவல்களைப் போலந்து பூச்சிய தகவல் செய்தி அமைப்பானது மறையீடு நீக்கம் செய்து வந்தது. இந்த இராணுவ உளவுச் செய்தியின் மற்றொரு அம்சமானது உண்மையற்ற ஒன்றை உண்மையென நம்பவைப்பதின் பயன்பாடு ஆகும். இதை நேச நாடுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் பயன்படுத்தின. இவை மின்சுமீட் மற்றும் பாடிகார்ட் போன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டன. போரின் போதோ அல்லது போரின் விளைவாகவோ எட்டப்பட்ட மற்ற தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சாதனைகளாக உலகின் முதல் கட்டளை நிரல்களைச் செயல்படுத்தக்கூடிய கணினிகள் (இசட் 3, கொலோசஸ் மற்றும் எனியாக்), வழிகாட்டிகளைக் கொண்ட ஏவுகணைகள் மற்றும் நவீன ஏவூர்திகள், அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கிய மன்காட்டன் திட்டம், செய்பணி ஆய்வியல் மற்றும் செயற்கைத் துறைமுகங்கள் மற்றும் ஆங்கிலக் கால்வாயின் கீழ் எண்ணெய்க் குழாய்கள் அமைத்தது ஆகியவற்றைக் கூறலாம். பெனிசிலின் மருந்தானது முதல் முறையாகப் பெருமளவில் மொத்தமாகத் தயாரிக்கப்பட்டு, போரின் போது பயன்படுத்தப்பட்டது. இவற்றையும் பார்க்க முதலாம் உலகப் போர் அன்சாக் நாள் 11.11.11. நூற்றாண்டு நினைவு குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணைகள் Copy in 3 volumes. ; comprehensive overview with emphasis on diplomacy வெளி இணைப்புகள் West Point Maps of the European War West Point Maps of the Asian-Pacific War Atlas of the World Battle Fronts (July 1943 to August 1945) Records of World War II propaganda posters are held by Simon Fraser University's Special Collections and Rare Books Maps of World War II in Europe at Omniatlas போரியல் நேபாளப் போர்கள் இந்தியப் போர்கள்
5739
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
முதலாம் உலகப் போர்
முதலாம் உலகப் போர் என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. ஐரோப்பா முழுவதும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் ஆசியாவின் பகுதிகளில் சண்டைகள் நடைபெற்றன. சண்டைகளில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2.3 கோடி இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அதே நேரத்தில் இராணுவ நடவடிக்கை, பட்டினி, மற்றும் நோய் ஆகியவற்றின் விளைவாக 50 இலட்சம் குடிமக்கள் இறந்தனர். உதுமானியப் பேரரசுக்குள் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் 1918 இன்புளுவென்சா தொற்றுப் பரவல் ஆகியவற்றின் காரணமாகத் தசம இலட்சங்களில் மேலும் பலர் இறந்தனர். போரின் போது இராணுவ வீரர்களின் பயணம் காரணமாக நோய்த் தொற்றானது கடுமையானது. 1914க்கு முன்னர் ஐரோப்பிய உலக வல்லமைகள் முந்நேச நாடுகள் (பிரான்சு, உருசியா மற்றும் பிரிட்டன்) மற்றும் முக்கூட்டணி நாடுகள் (செருமனி, ஆத்திரியா-அங்கேரி மற்றும் இத்தாலி) ஆகிய இரு பிரிவாகப் பிரிந்து இருந்தன. ஆத்திரியா-அங்கேரியின் இளவரசரான பிரான்சு பெர்டினான்டைக் காவ்ரீலோ பிரின்சிப் என்ற ஒரு போசுனிய செர்பிய இளைஞன் அரசியல் கொலை செய்ததைத் தொடர்ந்து, பால்கன் குடாவில் இருந்த பதட்டங்கள் 28 சூன் 1914 அன்று போராக உருவெடுத்தன. ஆத்திரியா-அங்கேரி செர்பியாவை இதற்குக் குற்றம் சாட்டியது. இது சூலை பிரச்சினைக்கு இட்டுச் சென்றது. சண்டையைத் தவிர்ப்பதற்காக ஒரு வெற்றியடையாத முயற்சியாக நடந்த பேச்சுவார்த்தையே சூலைப் பிரச்சினை என்று அழைக்கப்படுகிறது. 28 சூலை 1914 அன்று ஆத்திரியா-அங்கேரி செர்பியா மீது போரை அறிவித்தது. செர்பியாவின் தற்காப்பிற்காக உருசியா வந்தது. ஆகத்து 4ஆம் தேதி வாக்கில் செருமனி, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகியவை அவற்றின் காலனிகளுடன் போருக்குள் இழுக்கப்பட்டன. நவம்பர் 1914இல் உதுமானியப் பேரரசு, செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி ஆகியவை மைய சக்திகள் என்ற அமைப்பை உருவாக்கின. 26 ஏப்ரல் 1915இல் பிரிட்டன், பிரான்சு, உருசியா மற்றும் செர்பியாவுடன் இத்தாலி இணைந்தது. இவை முதலாம் உலகப் போரின் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன. 1914இல் செருமானிய உத்தியானது தனது படைகளைப் பிரான்சை ஆறு வாரங்களில் தோற்கடிப்பதற்குப் பயன்படுத்தி, பிறகு அவற்றைக் கிழக்குப் போர்முனைக்கு நகர்த்தி உருசியாவையும் அதே போல் தோற்கடிப்பது ஆகும். எனினும், செப்டெம்பர் 1914இல் மர்னே என்ற இடத்தில் செருமானியப் படை தோற்கடிக்கப்பட்டது. மேற்குப் போர் முனையின் பக்கவாட்டில் இரு பிரிவினரும் எதிர்கொண்டதுடன் அந்த ஆண்டு முடிவடைந்தது. மேற்குப் போர்முனை என்பது ஆங்கிலேயக் கால்வாய் முதல் சுவிட்சர்லாந்து வரையில் தோண்டப்பட்டிருந்த ஒரு தொடர்ச்சியான பதுங்கு குழிகள் ஆகும். 1917 வரை மேற்கிலிருந்த போர் முனைகளில் சிறிதளவே மாற்றம் நிகழ்ந்து. அதே நேரத்தில், கிழக்குப் போர் முனையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டன. ஆத்திரியா-அங்கேரி மற்றும் உருசியா ஆகிய இரண்டு நாடுகளுமே பெரும் அளவிலான நிலப்பரப்பை வென்றும் இழந்தும் வந்தன. மற்ற முக்கியமான போர் அரங்குகளானவை மத்திய கிழக்கு, இத்தாலி, ஆசியா பசிபிக் மற்றும் பால்கன் பகுதி ஆகியவை ஆகும். பால்கன் பகுதியில் பல்கேரியா, உருமேனியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் போருக்குள் இழுக்கப்பட்டன. 1915ஆம் ஆண்டு முழுவதும் உருசியா மற்றும் ஆத்திரியா-அங்கேரி ஆகிய இரு நாடுகளுமே பெரும் அளவிலான உயிரிழப்புகளைக் கிழக்கில் சந்தித்தன. அதே நேரத்தில், கலிப்பொலி மற்றும் மேற்குப் போர் முனையில் நேச நாடுகளின் தாக்குதல்கள் தோல்வியில் முடிந்தன. 1916இல் வெர்துனில் நடைபெற்ற செருமானியத் தாக்குதல்கள் மற்றும் சொம்மேயின் மீது நடத்தப்பட்ட பிராங்கோ-பிரித்தானியத் தாக்குதல் ஆகியவை சிறிதளவே பலனைக் கொடுத்து, ஏராளமான இழப்புகளுக்கு இட்டுச் சென்றன. அதே நேரத்தில், உருசியப் புருசிலோவ் தாக்குதலானது ஆரம்பத்தில் வெற்றிகரமாக அமைந்த போதும் பிறகு நிறுத்தப்பட்டது. 1917இல் உருசியாவில் புரட்சி ஏற்படும் நிலை இருந்தது. பிரெஞ்சு நிவெல் தாக்குதலானது தோல்வியில் முடிந்தது. பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் செருமானியப் படைகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்தன. இது பங்கெடுத்த அனைத்து நாடுகளுக்கும் வீரர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. கடுமையான பொருளாதார அழுத்தத்தின் கீழ் கொண்டு வந்தது. நேச நாடுகள் கடல் முற்றுகை நடத்தியதன் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறைங்கள் செருமனியைக் கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர் முறையைத் தொடங்குவதற்கு இட்டுச் சென்றன. இதனால் 6 ஏப்ரல் 1917 அன்று முன்னர் நடுநிலை வகித்த ஐக்கிய அமெரிக்கா போருக்குள் இழுக்கப்பட்டது. உருசியாவில் 1917 அக்டோபர் புரட்சியில் போல்செவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மார்ச் 1918இல் பிரெசுது-லிதோவ்சுகு ஒப்பந்தத்துடன் போரில் இருந்து வெளியேறினர். பெருமளவு எண்ணிக்கையிலான செருமானியத் துருப்புகளை விடுதலை செய்தனர். இந்த மேற்கொண்ட வீரர்களைப் பயன்படுத்திச் செருமனியானது மார்ச் 1918இல் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால், பிடிவாதமான நேச நாடுகளின் தற்காப்பு, கடுமையான இழப்புகள் மற்றும் இராணுவப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை காரணமாக இத்தாக்குதல் நிறுத்தப்பட்டது. நேச நாடுகள் ஆகத்து மாதத்தில் நூறு நாட்கள் தாக்குதலைத் தொடங்கிய போது ஏகாதிபத்தியச் செருமானிய இராணுவமானது தொடர்ந்து கடுமையாகச் சண்டையிட்டது. ஆனால், நேச நாடுகளின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்த மட்டுமே அவர்களால் முடிந்தது. அதைத் தடுக்க இயலவில்லை. 1918இன் இறுதியில் மைய சக்திகள் சிதைவுறத் தொடங்கின. 29 செப்டெம்பர் அன்று பல்கேரியாவும், 31 அக்டோபர் அன்று உதுமானியர்களும், பிறகு 3 நவம்பர் அன்று ஆத்திரியா-அங்கேரியும் போர்நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. தாய் நாட்டில் செருமானிப் புரட்சியை எதிர் நோக்கி இருந்தது, கிளர்ச்சியில் ஈடுபடத் தயாராக இருந்த தனது இராணுவம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டது ஆகியவை காரணமாக 9 நவம்பர் அன்று இரண்டாம் வில்லியம் தனது பதவியைத் துறந்தார். புதிய செருமானிய அரசாங்கமானது 11 நவம்பர் 1918இல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இது போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தத் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் மீது 1919-20ஆம் ஆண்டின் பாரிசு அமைதி மாநாடானது பல்வேறு ஒப்பந்தங்களை விதித்தது. இதில் பலராலும் அறியப்பட்ட ஒன்று வெர்சாய் ஒப்பந்தமாகும். 1917இல் உருசியப் பேரரசு, 1918இல் செருமானியப் பேரரசு, 1920இல் ஆத்திரியா-அங்கேரியப் பேரரசு மற்றும் 1922இல் உதுமானியப் பேரரசு ஆகியவற்றின் கலைப்புகள் பல்வேறு மக்கள் எழுச்சிகளுக்கு இட்டுச் சென்றன. போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யுகோசுலாவியா உள்ளிட்ட சுதந்திர நாடுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றன. இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ள ஒரு சில காரணங்கள், போருக்கு இடைப்பட்ட காலங்களின் போது இந்த எழுச்சி மூலம் ஏற்பட்ட நிலையற்ற தன்மையைக் கையாள்வதில் அடைந்த தோல்வி ஆகியவை செப்டெம்பர் 1939இல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பில் முடிந்தது. பெயர்கள் உலகப் போர் என்ற சொற்றொடரானது முதன் முதலில் செப்டெம்பர் 1914இல் செருமானிய உயிரியலாளர் மற்றும் தத்துவவாதியான ஏர்ன்ஸ்ட் ஹேக்கலால் முதலில் பயன்படுத்தப்பட்டது. 20 செப்டெம்பர் 1914 அன்று த இன்டியானாபொலிஸ் ஸ்டார் பத்திரிகையில், "'ஐரோப்பியப் போர்' என்று அனைவரும் பயந்த இந்தப் போரின் போக்கு மற்றும் தன்மையானது … முழுவதும் பொருள் படக்கூடிய வகையில் முதலாம் உலகப் போர் என்றாகும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் எழுதினார். முதலாம் உலகப் போர் என்ற சொற்றொடரானது சார்லசு ஏ கோர்ட் ரெபிங்டன் என்கிற ஒரு பிரித்தானிய இராணுவ அதிகாரியால் அவரது நினைவுக் குறிப்புகளுக்குத் தலைப்பாகப் பயன்படுத்தப்பட்டது. இக்குறிப்புகள் 1920இல் பதிப்பிக்கப்பட்டன. தனது நாட்குறிப்பில் 10 செப்டெம்பர் 1918 அன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அதிகாரியான ஜான்ஸ்டோனுடன் இதைப் பற்றி விவாதித்ததற்காக இவர் குறிப்பிடப்படுகிறார். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் 1914-1918இன் நிகழ்வுகள் பொதுவாகப் பெரிய போர் அல்லது எளிமையாக உலகப் போர் என்று அறியப்பட்டன. 1914 ஆகத்து மாதத்தில் த இன்டிபென்டன்ட் என்ற பருவ இதழானது, "இது தான் அந்தப் பெரிய போர். இப்போர் இப்பெயரைத் தனக்குத் தானே கொடுத்துக் கொண்டது" என்று எழுதியது. அக்டோபர் 1914இல் கனடா நாட்டுப் பருவ இதழான மெக்லீன் இதே போன்று, "சில போர்கள் தங்களுக்குத் தாமே பெயரைக் கொடுத்துக் கொள்கின்றன. இது தான் அந்தப் பெரிய போர்" என்று எழுதியது. அக்கால ஐரோப்பியர்கள் இப்போரை, "போரை நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு போர்" என்று குறிப்பிட்டனர். மேலும், "அனைத்துப் போர்களையும் நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு போர்" என்றும் விவரித்தனர். அதற்கு முன்னர் நடந்திராத அளவில் இது நடைபெற்றது, அழிவு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றின் காரணமாக இது இவ்வாறு அழைக்கப்பட்டது. 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதற்குப் பிறகு இச்சொற்றொடர்கள் தரப்படுத்தப்பட்டன. பிரித்தானியப் பேரரசின் கனடா நாட்டவர் உள்ளிட்ட வரலாற்றாளர்கள் "முதலாம் உலகப் போர்" என்ற பெயரை விரும்பிப் பயன்படுத்தினர். அமெரிக்கர்கள் "உலகப் போர் ஒன்று" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினர். பின்னணி அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணிகள் 19ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலத்தில் முக்கிய ஐரோப்பியச் சக்திகள் தங்களுக்கு மத்தியில் ஒரு திடமற்ற அதிகாரச் சம நிலையைப் பேணி வந்தன. இது ஐரோப்பிய இசைக் கச்சேரி என்று அறியப்படுகிறது. 1848க்கு பிறகு இந்நிலைக்கு, மிகச்சிறந்த தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்று அழைக்கப்பட்ட பிரித்தானியப் பின்வாங்கல், உதுமானியப் பேரரசின் இறங்கு முகம், ஓட்டோ வான் பிஸ்மார்க்கின் கீழ் புருசியாவின் வளர்ச்சி ஆகிய பல்வேறு காரணிகள் சவால் விடுத்தன. 1866இல் ஆத்திரிய-புருசியப் போரானது செருமனியில் புருசியாவின் ஆதிக்கத்தை நிறுவியது. 1870-71இன் பிராங்கோ-புருசியப் போரில் பெற்ற வெற்றியானது புருசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு செருமானியப் பேரரசாக செருமானிய அரசுகளை ஒருங்கிணைக்கப் பிஸ்மார்க்குக்கு அனுமதி வழங்கியது. 1871 தோல்விக்குப் பழிவாங்க அல்லது இழந்த அல்சேசு-லொரைன் மாகாணங்களை மீட்டெடுப்பது ஆகியவை அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிரெஞ்சுக் கொள்கையின் முதன்மையான பகுதிகளாக உருவாயின. பிரான்சைத் தனிமைப்படுத்தவும், இருமுனைப் போரைத் தவிர்க்கவும் ஆத்திரியா-அங்கேரி, உருசியா மற்றும் செருமனி ஆகிய நாடுகளுக்கு இடையில் மூன்று பேரரசர்களின் குழுமத்துடன் பிஸ்மார்க் பேச்சுவார்த்தை நடத்தினார். 1877-1878இன் உருசிய-துருக்கியப் போரில் உருசியா வெற்றி பெற்றதற்குப் பிறகு, பால்கன் குடாவில் உருசிய ஆதிக்கம் குறித்து எழுந்த ஆத்திரிய ஐயப்பாடுகள் காரணமாக இந்தக் குழுமமானது கலைக்கப்பட்டது. ஏனெனில், பால்கன் பகுதியைத் தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆத்திரியா-அங்கேரி கருதியது. பிறகு செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி 1879இல் இரட்டைக் கூட்டணியை ஏற்படுத்தின. 1882இல் இதில் இத்தாலி இணைந்த போது இது முக்கூட்டணியானது. மூன்று பேரரசுகளும் தங்களுக்கு மத்தியிலான எந்த ஒரு பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்வதன் மூலம் பிரான்சைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தங்களின் குறிக்கோளாகப் பிஸ்மார்க்குக்கு இருந்தது. உருசியாவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு முயற்சிகள் 1880இல் பிஸ்மார்க்கின் இந்த நிலைக்கு அச்சுறுத்தலை உள்ளாக்கிய போது, 1881இல் அவர் குழுமத்தை மீண்டும் உருவாக்கினார். இது 1883 மற்றும் 1885இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1887இல் இந்த ஒப்பந்தம் காலாவதியான போது, பழைய ஒப்பந்தத்துக்குப் பதிலாக மறு காப்பீட்டு ஒப்பந்தம் என்ற ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பிஸ்மார்க் ஏற்படுத்தினார். பிரான்சு அல்லது ஆத்திரியா-அங்கேரியால் செருமனி அல்லது உருசியா ஆகிய இரு நாடுகளில் ஏதாவது ஒன்று தாக்கப்பட்டால் இரு நாடுகளுமே நடு நிலை வகிக்க வேண்டும் என்பதே இந்த இரகசிய ஒப்பந்தமாகும்.செருமனி அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படையாக உருசியாவுடனான அமைதியைப் பிஸ்மார்க் கருதினார். ஆனால், 1890இல் இரண்டாம் வில்லியம் கைசராகப் பதவிக்கு வந்த பிறகு அவர் பிஸ்மார்க்கை ஓய்வு பெறும் நிலைக்குக் கட்டாயப்படுத்தினார். அவரது புதிய வேந்தரான லியோ வான் கேப்ரிவி மறு காப்பீட்டு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டாமென அவரை இணங்க வைத்தார். கூட்டணிக்கு எதிராகச் செயலாற்றப் பிரான்சுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கியது. பிரான்சு 1894இல் உருசியாவுடன் பிராங்கோ-உருசியக் கூட்டணி, 1904இல் பிரிட்டனுடன் நேசக் கூட்டணி மற்றும் இறுதியாக 1907ஆம் ஆண்டு ஆங்கிலேய-உருசியக் கூட்டத்தில் முந்நேச நாடுகள் கூட்டணி ஆகியவற்றில் கையொப்பமிட்டது. இவை அதிகாரப்பூர்வமான கூட்டணியாக இல்லாத போதும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் நீண்டகாலமாக இருந்த காலனிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததன் மூலம் பிரான்சு அல்லது உருசியா தொடர்பான எந்த ஒரு எதிர்காலச் சண்டையிலும் பிரிட்டன் நுழையும் என்ற வாய்ப்பை இது உருவாக்கியது. 1911ஆம் ஆண்டின் அகதிர் பிரச்சினையின் போது, செருமனிக்கு எதிராகப் பிரான்சுக்குப் பிரித்தானிய மற்றும் உருசிய ஆதரவானது இவர்களின் கூட்டணியை மீண்டும் வலுவுடையதாக்கியது. ஆங்கிலேய-செருமானிய நட்பற்ற நிலையை அதிகமாக்கியது. நாடுகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளை அதிகமாக்கியது. இது 1914இல் போராக வெடித்தது. ஆயுதப் போட்டி 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு செருமானியத் தொழில்துறை வலிமையானது, ஓர் ஒன்றிணைந்த அரசின் உருவாக்கம், பிரெஞ்சு இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் அல்சேசு-லொரைன் பகுதி இணைக்கப்பட்டது ஆகியவற்றால் பெருமளவு அதிகரித்தது. இரண்டாம் வில்லியமால் ஆதரவளிக்கப்பட்ட கடற்படைத் தளபதி ஆல்பிரெட் வான் திர்பித்சு பொருளாதார சக்தியின் இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியச் செருமானியக் கடற்படையை உருவாக்க விரும்பினார். உலகக் கடற்படை முதன்மை நிலைக்குப் பிரித்தானிய அரச கடற்படையுடன் இது போட்டியிடலாம் என்று கருதினார். உலகளாவிய அதிகாரத்திற்கு ஓர் ஆழ்கடல் கடற்படையை வைத்திருப்பது என்பது முக்கியமானது என்று ஐக்கிய அமெரிக்கக் கடற்படை உத்தியாளர் ஆல்பிரெட் தாயெர் மாகனின் வாதத்தால் இவரது எண்ணங்கள் தாக்கத்துக்கு உள்ளாயின. திர்பித்சு இவரது நூல்களையும் செருமானியத்திற்கு மொழி பெயர்த்தார். அதே நேரத்தில், வில்லியம் தனது ஆலோசகர்கள் மற்றும் மூத்த இராணுவத்தினருக்கு இதைப் படிப்பதைக் கட்டாயமாக்கினார். எனினும், இது ஒரு உணர்ச்சிப் பூர்வமான முடிவாகவும் இருந்தது. அரச கடற்படையை வில்லியம் மதிக்கவும் செய்தார். அதை விட முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதன் கடற்படை முதன்மை நிலை தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும் வரை ஐரோப்பாவில் பிரிட்டன் தலையிடாது என பிஸ்மார்க் கணித்தார். ஆனால், 1890இல் அவரது பதவி நீக்கம் செருமனியில் கொள்கை மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. ஆங்கிலேய-செருமானிய கடற்படை ஆயுதப் போட்டிக்குக் காரணமாகியது. திர்பித்சு பெருமளவிலான பணத்தைச் செலவழித்த போதும், 1906இல் எச். எம். எஸ். திரெத்நாட் போர்க்கப்பலின் அறிமுகமானது பிரித்தானியர்களுக்கு அவர்களது செருமானிய எதிரிகளுடன் ஒப்பிடும் போது ஒரு தொழில்நுட்ப அனுகூலத்தை வழங்கியது. இந்த தொழில்நுட்ப இடைவெளியைப் பிரித்தானியர்கள் என்றுமே இழக்கவில்லை. இறுதியாக, இந்த ஆயுதப் போட்டியானது பெருமளவிலான வளங்களை ஒரு செருமானியக் கடற்படையை உருவாக்குவதற்கு வழி மாற்றியது. பிரிட்டனுக்குச் சினமூட்டக்கூடிய அளவுக்குச் செருமானிய கடற்படை உருவாகியது. ஆனால் அதை தோற்கடிப்பதற்காக அல்ல. 1911இல் வேந்தர் தியோபால்டு வான் பெத்மன் கோல்வெக் தோல்வியை ஒப்புக்கொண்டார். இது 'இராணுவத் தளவாடத் திருப்பு முனைக்கு' இட்டுச் சென்றது. அப்போது அவர் செலவுகளை கடற்படையிடமிருந்து இராணுவத்திற்கு வழி மாற்றினார். அரசியல் பதட்டம் குறைந்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, 1905இன் உருசிய-யப்பானியப் போரில் அடைந்த தோல்வியில் இருந்து உருசிய மீளும் என்ற செருமானியக் கவலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த புரட்சி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரெஞ்சு நிதியுதவியால் ஆதரவளிக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் 1908ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ஒரு பெருமளவிலான தொடருந்து மற்றும் உட்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. குறிப்பாக, செருமனியின் மேற்கு எல்லைப் பகுதிகளில் இந்த விரிவாக்கம் நடைபெற்றது. உருசியாவுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கையில் குறைவாக இருந்த தங்களது இராணுவத்தைச் சரி செய்ய செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரி தங்களது துருப்புகளை வேகமாக நகர்த்துவதில் கவனம் செலுத்தின. அரச கடற்படையுடன் போட்டியிடுவதை விட உருசியாவுடனான இந்த இடைவெளி அச்சுறுத்தலைச் சரி செய்வது மிக முக்கியமானதாகச் செருமனிக்கு இருந்தது. 1913இல் செருமனி தன் நிரந்தர இராணுவத்தினரின் அளவை 1,70,000 துருப்புகள் அதிகப்படுத்தியதற்குப் பிறகு, பிரான்சு அதன் கட்டாய இராணுவச் சேவையை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டித்தது. இதே போன்ற நடவடிக்கைகள் பால்கன் பகுதி நாடுகளாலும், இத்தாலியாலும் எடுக்கப்பட்டன. இது உதுமானியர்கள் மற்றும் ஆத்திரியா-அங்கேரி அதிகரிக்கப்பட்ட செலவினங்களை மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றது. செலவீனங்களைப் பிரித்துக் குறிப்பிடுவதில் உள்ள வேறுபாடுகள் காரணமாக சரியான அளவு செலவினங்கள் கணிப்பதற்கு கடினமானவையாக உள்ளன. இந்தச் செலவினங்கள் தொடருந்து போன்ற குடிசார் உட்கட்டமைப்புத் திட்டங்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், தொடருந்துகள் இராணுவத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், 1908 முதல் 1913 வரை ஆறு முக்கிய ஐரோப்பியச் சக்திகளின் இராணுவச் செலவினமானது நேரடி மதிப்பில் 50%க்கும் மேல் அதிகரித்தது. பால்கன் சண்டைகள் 1914க்கு முந்தைய ஆண்டுகளில், மற்ற சக்திகள் உதுமானிய இறங்கு முகத்தில் இருந்து அனுகூலங்களைப் பெற விரும்பியதன் காரணமாகப் பால்கன் பகுதியில் ஒரு தொடர்ச்சியான பிரச்சனைகள் ஏற்பட்டன. சிலாவிய சார்பு மற்றும் மரபு வழி உருசியாவானது தன்னை செர்பியா மற்றும் பிற சிலாவிய அரசுகளின் பாதுகாப்பாளராகக் கருதிய அதே நேரத்தில், உத்தியியல் ரீதியாக மிக முக்கியமான பொசுபோரசு நீர் இணைப்பை, குறிக்கோள்களை உடைய ஒரு சிலாவிய சக்தியான பல்கேரிய கட்டுப்படுத்துவதை விட ஒரு பலவீனமான உதுமானிய அரசாங்கம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்பியது. கிழக்குத் துருக்கியில் உருசிய தனக்கென சொந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. பால்கன் பகுதியில் உருசியச் சார்பு நாடுகள் தங்களுக்கிடையே பிரச்சனைகளைக் கொண்டிருந்தன. இதை சமநிலைப்படுத்துவது என்பது உருசியக் கொள்கை உருவாக்குபவர்கள் இடையே பிரிவை உண்டாக்கியது. இது பிராந்திய நிலையற்ற தன்மையை அதிகப்படுத்தியது. தங்களது பேரரசு தொடர்ந்து நிலை பெற்றிருக்கப் பால்கன் பகுதி மிக முக்கியமானது எனவும், செர்பிய விரிவாக்கமானது ஒரு நேரடியான அச்சுறுத்தல் எனவும் ஆத்திரிய அரசியல் மேதைகள் கருதினர். 1908-1909க்கு முந்தைய உதுமானிய நிலப்பரப்பான போஸ்னியா மற்றும் எர்செகோவினாவை ஆத்திரியா இணைத்த போது போஸ்னியா பிரச்சனையானது தொடங்கியது. ஆத்திரியா 1878ஆம் ஆண்டிலிருந்து போஸ்னியா மற்றும் எர்செகோவினாவை ஆக்கிரமித்திருந்தனர். பல்கேரியா உதுமானியப் பேரரசில் இருந்து சுதந்திரம் அடைந்ததாக இதே நேரத்தில் அறிவித்தது. ஆத்திரியாவின் இந்த ஒரு சார்புச் செயலானது ஐரோப்பிய சக்திகளால் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இதை எவ்வாறு சரி செய்வது என்ற ஒத்த கருத்து ஏற்படாததால் ஐரோப்பிய சக்திகள் இதை ஏற்றுக்கொண்டன. சில வரலாற்றாளர்கள் இது ஒரு முக்கியமான பிரச்சனை அதிகரிப்பாகக் கருதுகின்றனர். பால்கன் பகுதியில் உருசியாவுடன் எந்த ஒரு ஆத்திரிய ஒத்துழைப்புக்கான வாய்ப்பையும் இது முடித்து வைத்தது. அதே நேரத்தில் பால்கன் பகுதியில் தங்களது சொந்த விரிவாக்கக் குறிக்கோள்களைக் கொண்டிருந்த செர்பியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளுடனான ஆத்திரியாவின் உறவையும் மோசமாக்கியது. 1911-1912இல் நடந்த இத்தாலிய-துருக்கியப் போரானது உதுமானியப் பலவீனத்தை வெளிப்படுத்திய போது பதட்டங்கள் அதிகரித்தன. இது செர்பியா, பல்கேரியா, மான்டினீக்ரோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் இணைந்து பால்கன் குழுமம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கு இட்டுச் சென்றது. 1912-1913இல் நடந்த முதலாம் பால்கன் போரில் பெரும்பாலான ஐரோப்பியத் துருக்கி மீது இந்தக் குழுமமானது தாக்குதல் ஓட்டம் நடத்திச் சீக்கிரமே கைப்பற்றியது. இது வெளிப்புறப் பார்வையாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்திரியாத்திக்கில் இருந்த துறைமுகங்களைச் செர்பியா கைப்பற்றியதால், 21 நவம்பர் 1912 அன்று ஆத்திரியா பகுதியளவு படைத் திரட்டலை ஆரம்பித்தது. கலீசியாவில் இருந்த உருசிய எல்லையின் பக்கவாட்டில் இராணுவப் பிரிவுகளைத் திரட்டியதும் இதில் அடங்கும். அடுத்த நாள் நடந்த ஒரு சந்திப்பில் இதற்குப் பதிலாகத் துருப்புகளைத் திரட்ட வேண்டாம் என உருசிய அரசாங்கம் முடிவெடுத்தது. தாங்கள் இன்னும் தயாராகாத ஒரு போரில் வலுக்கட்டாயமாக ஈடுபட உருசியர்கள் விரும்பவில்லை. 1913ஆம் ஆண்டு இலண்டன் ஒப்பந்தத்தின் வழியாக மீண்டும் கட்டுப்பாட்டை நிலை நாட்ட பெரிய சக்திகள் விரும்பின. இந்த ஒப்பந்தப்படி சுதந்திர அல்பேனியா உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் பல்கேரியா, செர்பியா, மான்டினீக்ரோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்புகள் விரிவடைந்தன. எனினும், வெற்றியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் 33 நாட்கள் நடைபெற்ற இரண்டாம் பால்கன் போருக்குக் காரணமாயின. 16 சூன் 1913 அன்று செர்பியா மற்றும் கிரேக்கம் மீது பல்கேரியா தாக்குதல் நடத்தியது. இதில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டது. செர்பியா மற்றும் கிரேக்கத்திடம் பெரும்பாலான மாசிடோனியாவையும், உருமேனியாவிடம் தெற்கு தோப்ருசாவையும் பல்கேரியா இழந்தது. இதன் விளைவானது பால்கன் போரில் அனுகூலங்களைப் பெற்ற செர்பியா மற்றும் கிரேக்கம் போன்ற நாடுகள் கூட "தங்களுக்குரிய ஆதாயங்களைப்" பெறுவதில் ஏமாற்றப்பட்டதாகக் கருதும் நிலையில் இருந்தது. இதில் தனது வேறுபட்ட நிலையையும் ஆத்திரியா வெளிக்காட்டியது. செருமனி உள்ளிட்ட மற்ற சக்திகள் இதைத் தங்களது மனக் கலக்கத்துடன் கண்டன. கலவையான மற்றும் சிக்கலான இந்த மனக்குறை, தேசியவாதம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆகியவை 1914க்கு முந்தைய பால்கன் பகுதி "ஐரோப்பாவின் வெடிமருந்துக் கொள்கலம்" என்று பின்னர் அறியப்பட்டதற்குக் காரணமாயின. முன் நிகழ்வுகள் சாராயேவோ அரசியல் கொலை 28 சூன் 1914 அன்று ஆத்திரியாவின் பேரரசர் பிரான்சு யோசோப்பின் வாரிசாகக் கருதப்பட்ட இளவரசர் பிரான்சு பெர்டினான்டு புதிதாக இணைக்கப்பட்ட மாகாணங்களான போஸ்னியா எர்செகோவினாவின் தலைநகரான சாரயேவோவுக்கு வருகை புரிந்தார். இளவரசரின் வாகனங்கள் செல்லும் வழிக்குப் பக்கவாட்டில் இளம் போஸ்னியா என்று அறியப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஆறு அரசியல் கொலைகாரர்கள் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களது எண்ணம் இளவரசரைக் கொல்வதாகும். செர்பிய கருப்புக் கை உளவு அமைப்பில் இருந்த தீவிரப் போக்குடையவர்களால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை இவர்கள் கொண்டிருந்தனர். இளவரசரின் இறப்பானது போஸ்னியாவை ஆத்திரிய ஆட்சியில் இருந்து விடுதலை செய்யும் என்று அவர்கள் நம்பினர். எனினும், அதற்குப் பிறகு ஆட்சி யாரிடம் இருக்குமென்பதில் அவர்களிடம் சிறிதளவே கருத்தொற்றுமை இருந்தது. நெதெல்சுகோ கப்ரினோவிச் இளவரசரின் சிற்றுந்து மீது ஒரு கையெறி குண்டை வீசினான். இளவரசரின் உதவியாளர்கள் இருவருக்குக் காயம் ஏற்படுத்தினான். உதவியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரத்தில் ஊர்திகள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தன. மற்ற கொலைகாரர்களும் வெற்றியடையவில்லை. ஆனால், 1 மணி நேரத்திற்குப் பிறகு காயமடைந்த அதிகாரிகளைப் பார்த்துத் திரும்பிக் கொண்டிருந்த பெர்டினான்டின் சிற்றுந்தானது ஒரு தெருவில் தவறான முனையில் திரும்பியது. அங்கு காவ்ரீலோ பிரின்சிப் நின்று கொண்டிருந்தான். அவன் முன்னோக்கி நகர்ந்து கைத் துப்பாக்கி மூலம் இரண்டு குண்டுகளைச் சுட்டான். பெர்டினான்டு மற்றும் அவரது மனைவி சோபியாவுக்கு ஆபத்தான காயம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சீக்கிரமே அவர்கள் இருவரும் இறந்தனர். பேரரசர் பிரான்சு யோசப்பு இந்நிகழ்வால் அதிர்ச்சி அடைந்து இருந்த போதிலும், அரசியல் மற்றும் தனி மனித வேறுபாடுகள் காரணமாக பேரரசருக்கும், இளவரசருக்கும் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை. அவரது முதல் குறிப்பிடப்பட்ட கருத்தானது, "நம்மை மீறிய சக்தியானது அதன் பணியைச் செய்துள்ளது. ஐயோ! இதில் என்னால் நன்னிலையில் வைத்திருக்க எதுவும் கிடையாது" என்பது எனப் பேரரசர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வரலாற்றாளர் சபைனெக் செமனின் கூற்றுப்படி, பேரரசரின் எதிர்வினையானது மிகப்பரவலாக வியன்னாவில் எதிரொலித்தது. அங்கு "இந்நிகழ்வானது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஞாயிறு 28 சூன் மற்றும் திங்கள் 29 அன்று மக்கள் கூட்டங்கள் எதுவுமே நடைபெறாதது போல இசையைக் கேட்டுக்கொண்டிருந்தன." எவ்வாறாயினும், அரியணைக்கான வாரிசின் கொலையின் தாக்கமானது முக்கியத்துவமானதாக இருந்தது. வரலாற்றாளர் கிறித்தோபர் கிளார்க் இதை "வியன்னாவின் அரசியல் சூழ்நிலையை மாற்றிய, 9/11 விளைவு போன்ற வரலாற்றில் முக்கியத்துவமுடைய ஒரு தீவிரவாத நிகழ்வு" என்று குறிப்பிட்டுள்ளார். போஸ்னியா எர்செகோவினாவில் வன்முறை பரவுதல் இதைத் தொடர்ந்து சாராயேவோவில் இறுதியாக நடந்த செர்பியர்களுக்கு எதிரான கலவரங்களை ஆத்திரியா-அங்கேரிய அதிகார அமைப்புகள் ஊக்குவித்தன. இதில் போஸ்னியா குரோசியர்கள் மற்றும் போஸ்னியாக்குகள் இரண்டு போஸ்னிய செர்பியர்களைக் கொன்றனர். செர்பியர்களுக்குச் சொந்தமான ஏராளமான கட்டடங்களை சேதப்படுத்தினர். சாராயேவோவுக்கு வெளிப்புறம், ஆத்திரியா-அங்கேரியின் கட்டுப்பாட்டிலிருந்த போஸ்னியா எர்செகோவினாவின் மற்ற நகரங்கள், குரோசியா மற்றும் சுலோவேனியாவிலும் செர்பிய இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் நடத்தப்பட்டன. போஸ்னியா மற்றும் எர்செகோவினாவில் இருந்த ஆத்திரியா-அங்கேரிய அதிகார அமைப்புகள் சுமார் 5,500 முக்கியமான நபர்களைக் கைது செய்து, விசாரணைக்காக ஆத்திரியாவுக்கு அனுப்பினர். இதில் 700 முதல் 2,200 வரையிலான செர்பியர்கள் சிறையில் இறந்தனர். மேலும், 460 செர்பியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெரும்பாலும் போஸ்னியாக்குகளைக் கொண்டிருந்த சுத்சோகார்ப்சு என்ற ஒரு சிறப்பு படைத்துறை சாராப் பிரிவினர் உருவாக்கப்பட்டு, செர்பியர்களுக்கு எதிரான கொடுமைகளைச் செயல்படுத்தினர். சூலை பிரச்சினை அரசியல் கொலையானது சூலை பிரச்சினையைத் தொடங்கி வைத்தது. ஆத்திரியா-அங்கேரி, செருமனி, உருசியா, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு மாத தூதரக நடவடிக்கைகளே சூலை பிரச்சினை என்று அழைக்கப்படுகின்றன. செர்பிய உளவு அமைப்பினர் பிரான்சு பெர்டினான்டின் கொலையைச் செயல்படுத்த உதவினர் என்று நம்பிய ஆத்திரிய அதிகாரிகள் போஸ்னியாவில் செர்பியர்களின் தலையீட்டை முடித்து வைக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்பினர். போர் ஒன்றே இதை அடைய ஒரு சிறந்த வழி என்று கருதினர். எனினும், செர்பியாவின் தொடர்பு சம்பந்தமாக உறுதியான ஆதாரங்கள் எதுவும் ஆத்திரிய வெளியுறவு அமைச்சகத்திடம் இல்லை. செர்பியத் தொடர்பு இருந்தது என்று குறிப்பிட்ட கோப்பானது பல தவறுகளை உள்ளடக்கி இருந்தது. 23 சூலை அன்று செர்பியாவுக்கு ஆத்திரியா இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஏற்கத்தகாத 10 கோரிக்கைகளை செர்பியாவிடம் பட்டியலிட்டு, சண்டையைத் தொடங்க அதை ஒரு சாக்கு போக்காக ஆத்திரியா பயன்படுத்தியது. சூலை 25 அன்று இராணுவத்தை ஒருங்கிணைக்கும் பொது ஆணையை செர்பியா வெளியிட்டது. ஆனால் செர்பியாவுக்குள் உள்ள, இரகசியமாக அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு வாய்ப்புள்ள காரணிகளை ஒடுக்குவதற்கும், அரசியல் கொலையுடன் தொடர்புடைய செர்பியர்கள் மீதான புலனாய்வு மற்றும் நீதி விசாரணையில் ஆத்திரிய பிரதிநிதிகள் பங்கெடுப்பதற்குமான அதிகாரத்தை வழங்கும் இரு நிபந்தனைகள் தவிர மற்ற அனைத்து நிபந்தனைகளுக்கும் செர்பியா ஒப்புக்கொண்டது. இது நிராகரிப்புக்கு நிகரானது என்று கூறிய ஆத்திரியா தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. மறுநாள் பகுதியளவு இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது. சூலை 28 அன்று செர்பியா மீது போரை ஆத்திரியா அறிவித்தது. பெல்கிறேட் மீது வெடிகலங்களை செலுத்த ஆரம்பித்தது. சூலை 25 அன்று போருக்கான ஆயத்தங்களை தொடங்கிய உருசியா 30ஆம் தேதி அன்று செர்பியாவுக்கு ஆதரவாக பொது இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது. உருசியாவை வலிய சென்று தாக்குதல் நடத்தும் நாடாக உருவப் படுத்தி அதன் மூலம் செருமனியின் எதிர்க்கட்சியான பொதுவுடமை ஜனநாயக கட்சியின் ஆதரவை பெரும் நோக்கத்தில் பெத்மன் கோல்வெக் சூலை 31 வரை போருக்கான ஆயத்தங்களை தொடங்கவில்லை. 12 மணி நேரத்திற்குள் "செருமனி மற்றும் ஆத்திரியா-அங்கேரிக்கு எதிரான அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு" உருசிய அரசாங்கத்திடம் ஒரு குறிப்பு பிற்பகலில் செருமனியால் வழங்கப்பட்டது. பிரான்சு நடுநிலை வகிக்க வேண்டும் என்ற செருமனியின் மேற்கொண்ட கோரிக்கையானது பிரான்சால் நிராகரிக்கப்பட்டது. பிரான்சு பொது இராணுவ ஒருங்கிணைப்புக்கு ஆணையிட்டது. ஆனால் போரை அறிவிப்பதை தாமதப்படுத்தியது. இரு பக்கங்களில் இருந்தும் போரை எதிர்பார்த்து இருப்பதாக செருமானிய இராணுவ தலைமையானது நீண்ட காலமாக கருதி வந்தது; சிலியேபென் திட்டமானது 80% இராணுவத்தை பயன்படுத்தி மேற்கே பிரான்சை தோற்கடித்து விட்டு, பிறகு அதே இராணுவத்தை கிழக்கே உருசியாவுக்கு எதிராக போரிட பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தியலை கொண்டிருந்தது. இதற்கு படையினரை வேகமாக நகர்த்த வேண்டிய தேவை இருந்ததால் அதே நாள் பிற்பகலில் இராணுவ ஒருங்கிணைப்புக்கான ஆணைகள் செருமனியால் வெளியிடப்பட்டன. சூலை 29 அன்று நடந்த ஒரு சந்திப்பில் 1839ஆம் ஆண்டின் இலண்டன் ஒப்பந்தத்தின் கீழ் பெல்ஜியத்திற்கு பிரிட்டன் கொடுத்த உறுதிமொழிகளின் படியான, பெல்ஜியம் மீதான செருமனியின் ஒரு படையெடுப்புக்கான எதிர்ப்பை இராணுவப்படை மூலம் வெளிப்படுத்துவது என்பது தேவையில்லை என பிரித்தானிய அமைச்சரவை குறுகிய வேறுபாட்டுடன் முடிவெடுத்தது. எனினும் இது பெரும்பாலும் பிரிட்டன் பிரதமர் அசுகுயித்தின் ஒற்றுமையை பேணும் விருப்பத்தாலேயே நடந்தது. அவரும் அவரது மூத்த அமைச்சர்களும் பிரான்சுக்கு ஆதரவளிக்க ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். அரச கடற்படையானது ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. தலையிடுவதற்கு பொதுமக்களிடையே நிலவிய கருத்தும் வலிமையாக ஆதரவளித்தது. சூலை 31 அன்று பிரிட்டன் செருமனி மற்றும் பிரான்சுக்கு குறிப்புகளை அனுப்பியது. பெல்ஜியத்தின் நடு நிலைக்கு மதிப்பளிக்குமாறு அவற்றிடம் கோரியது. பிரான்சு மதிப்பளிப்பதாக உறுதி கொடுத்தது. செருமனி பதிலளிக்கவில்லை. ஆகத்து 1 அன்று காலையில் உருசியாவுக்கு செருமனி விடுத்த இறுதி எச்சரிக்கையானது ஒரு முறை காலாவதியான பிறகு இரு நாடுகளும் போரில் ஈடுபட்டன. அதே நாள் பிறகு இலண்டனில் இருந்த தனது தூதர் இளவரசர் லிச்னோவ்சுகியின் தகவலின் படி செருமனியின் வில்லியமுக்கு கொடுக்கப்பட்ட தகவலானது, பிரான்சு தாக்கப்படாவிட்டால் பிரிட்டன் தொடர்ந்து நடுநிலை வகிக்கும், மேலும் அயர்லாந்தில் அப்போது நடந்து கொண்டிருந்த தாயக ஆட்சி பிரச்சனையில் பிரிட்டன் ஈடுபட்டிருந்ததால் போரில் கூட ஈடுபடாது என்பதாகும். இந்த செய்தியால் மகிழ்ச்சி அடைந்த செருமனியின் வில்லியம் செருமனியின் முப்படை தளபதியான தளபதி மோல்ட்கேவுக்கு "ஒட்டு மொத்த இராணுவத்தையும் கிழக்கு நோக்கி அணிவகுக்க செய்" என ஆணையிட்டார். மோல்ட்கேவுக்கு கிட்டத்தட்ட நரம்பியல் பிரச்சினை வரும் அளவுக்கு இது அழுத்தத்தை கொடுத்தது என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோல்ட்கே "இதை செய்ய முடியாது. தசம இலட்சங்களில் இராணுவ வீரர்களை திடீரென ஆயத்தம் செய்து களமிறக்க இயலாது" என்றார். தன்னுடைய உறவினர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜிடமிருந்து தந்திக்காக காத்திருக்கலாம் என செருமனியின் வில்லியம் அறிவுறுத்திய போதும் தான் தவறாக புரிந்து கொண்டதை லிச்னோவ்சுகி சீக்கிரமே உணர்ந்தார். தகவலானது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டதை அறிந்த பிறகு வில்லியம் மோல்ட்கேயிடம் "தற்போது நீ உன் விருப்பப்படி செய்" என்றார். பெல்ஜியம் வழியாக தாக்குவதற்கான செருமானிய திட்டங்களை அறிந்த பிரெஞ்சு தலைமை தளபதியான யோசப்பு சோப்ரே அத்தகைய ஒரு தாக்குதலை முறியடிக்க எல்லை தாண்டிச் சென்று பிரான்சு முன்னரே தாக்குதற்கான அனுமதியை தனது அரசாங்கத்திடம் கேட்டார். பெல்ஜியத்தின் நடுநிலை மீறப்படுவதை தவிர்ப்பதற்காக அத்தகைய எந்த ஒரு முன்னேற்றமும் ஒரு செருமானியப் படையெடுப்புக்குப் பின்னரே வரும் என்று அவருக்கு கூறப்பட்டது. ஆகத்து 2 அன்று செருமனி இலக்சம்பர்க்கை ஆக்கிரமித்தது. பிரெஞ்சு பிரிவுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. ஆகத்து 3 அன்று செருமனி பிரான்சு மீது போரை அறிவித்தது. பெல்ஜியம் வழியாக சுதந்திரமாக செல்வதற்கான வழியைக் கோரியது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகத்து 4 காலை அன்று செருமானியர்கள் படையெடுத்தனர். இலண்டன் ஒப்பந்தத்தின் கீழ் உதவ வருமாறு பெல்ஜியத்தின் முதலாம் ஆல்பர்ட் வேண்டினார். பெல்ஜியத்தில் இருந்து பின்வாங்குமாறு செருமனிக்கு ஓர் இறுதி எச்சரிக்கையை பிரிட்டன் விடுத்தது. எந்த ஒரு பதிலும் பெறப்படாமல் நள்ளிரவு இந்த எச்சரிக்கை காலாவதியான பிறகு, இரு பேரரசுகளும் போரில் ஈடுபட்டன. போரின் போக்கு எதிர்ப்பு தொடங்குதல் மைய சக்திகள் நடுவே குழப்பம் மைய சக்திகளின் உத்தியானது போதிய தொடர்பின்மை காரணமாக பாதிப்புக்கு உள்ளானது. செர்பியா மீதான ஆத்திரியா-அங்கேரியின் படையெடுப்புக்கு உதவுவதாக செருமனி உறுதியளித்தது. ஆனால் இது குறித்த விளக்கத்தின் பொருளானது வேறுபட்டது. முன்னர் சோதனை செய்யப்பட்ட படையிறக்கும் திட்டங்கள் 1914ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் இந்த திட்டங்கள் அதற்கு முன்னர் பயிற்சிகளில் என்றுமே சோதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆத்திரியா-அங்கேரிய தலைவர்கள் உருசியாவிடம் இருந்து தங்களது வடக்கு முனையை செருமனி தாக்கும் என நம்பினர். ஆனால், ஆத்திரியா-அங்கேரியானது அதன் பெரும்பாலான துருப்புகளை உருசியாவுக்கு எதிராக பயன்படுத்தும் என்றும், அதே நேரத்தில் தான் பிரான்சை கையாளலாம் என்றும் செருமனி எண்ணியது. இந்த குழப்பமானது ஆத்திரியா-அங்கேரியானது அதன் படைகளை உருசிய மற்றும் செர்பிய முனைகளுக்கு இடையில் பிரித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளியது. செர்பியா மீதான படையெடுப்பு 12 ஆகத்தில் தொடங்கி, ஆத்திரியர் மற்றும் செர்பியர் செர் மற்றும் கோலுபரா ஆகிய யுத்தங்களில் சண்டையிட்டனர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆத்திரியாவின் தாக்குதல்கள் அதற்கு கடுமையான இழப்புகளை கொடுத்ததுடன் முறியடிக்கவும் பட்டன. ஒரு விரைவான வெற்றியை பெரும் ஆத்திரியாவின் நம்பிக்கையை இது குலைத்தது. போரில் நேச நாடுகளின் முதல் பெரும் வெற்றியை இது குறித்தது. இதன் விளைவாக ஆத்திரிய தன்னுடைய படைகளில் குறிப்பிடத்தக்க அளவை செர்பிய போர் முனையில் நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. இதனால் உருசியாவுக்கு எதிரான ஆத்திரியாவின் முயற்சிகள் பலவீனம் அடைந்தன. 1914ஆம் ஆண்டு படையெடுப்பில் செர்பியா ஆத்திரியாவைத் தோற்கடித்ததானது 20ஆம் நூற்றாண்டின் சிறிய நாடு பெரிய நாட்டை வீழ்த்திய முக்கியமான வெற்றிகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது. 1915ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தரையில் இருந்து வானத்தில் சுடுவதன் மூலம் ஓர் ஆத்திரிய போர் விமானமானது சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இந்த படையெடுப்பானது விமான எதிர்ப்பு போர் முறையின் முதல் பயன்பாட்டைக் கண்டது. மேலும், 1915ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் செர்பிய இராணுவமானது வீரர்களின் காயங்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக அவர்களை பத்திரமாக மீட்ட முதல் செயல் முறையையும் இப்போர் கண்டது. பெல்ஜியம் மற்றும் பிரான்சில் செருமானிய தாக்குதல் 1914ஆம் ஆண்டு படைகளை ஒருங்கிணைத்த பிறகு செருமானிய இராணுவத்தின் 80% பேர் மேற்குப் போர் முனையில் நிறுத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் கிழக்கே ஒரு மறைப்பு திரையாக செயல்படுவதற்காக நிறுத்தப்பட்டனர். இந்த திட்டத்தின் அலுவல் பூர்வமான பெயரானது இரண்டாம் ஔப்மார்ச் மேற்கு என்பதாகும். இது பொதுவாக சிலியேபென் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 1891ஆம் ஆண்டு முதல் 1906ஆம் ஆண்டு வரை செருமானிய தலைமை தளபதியாக இருந்த ஆல்பிரட் வான் சிலியேபென் என்பவர் உருவாக்கியதன் காரணமாக இத்திட்டம் இவ்வாறு அறியப்பட்டது. தங்களது பகிரப்பட்ட எல்லை தாண்டி ஒரு நேரடித் தாக்குதலை நடத்துவதற்குப் பதிலாக, செருமானிய வலது பிரிவானது நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் வழியாக வேகமாக முன்னேறிச் செல்லும். பிறகு தெற்கு நோக்கி திரும்பி பாரிசை சுற்றி வளைக்கும். சுவிட்சர்லாந்து எல்லைக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தை பொறியில் சிக்க வைக்கும். இது ஆறு வாரங்கள் எடுக்குமென சிலியேபென் மதிப்பிட்டார். இதற்குப் பிறகு செருமானிய இராணுவமானது கிழக்கு நோக்கி திரும்பி உருசியர்களைத் தோற்கடிக்கும். இந்த திட்டமானது அவருக்கு பின் வந்த இளைய எல்முத் வான் மோல்ட்கேயால் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டது. சிலியேபென் திட்டப்படி மேற்கில் இருந்த 85% செருமானிய படைகள் வலது பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தன. எஞ்சியவை எல்லையை தற்காத்துக் கொண்டிருந்தன. தன்னுடைய இடது பிரிவை வேண்டுமென்றே பலவீனமாக வைத்ததன் மூலம் "இழந்த மாகாணங்களான" அல்சேசு-லொரைனுக்குள் பிரெஞ்சுக்காரர்களை ஒரு தாக்குதல் நடத்த இழுக்க முடியும் என இவர் நம்பினார். இது உண்மையில் அவர்களது திட்டமான 17இல் குறிப்பிடப்பட்ட உத்தியாக இருந்தது. எனினும் பிரெஞ்சுக்காரர்கள் இவரது இடது பிரிவின் மீது மிகுந்த அழுத்தத்துடன் முன்னேறுவார்கள் என்று இவருக்கு கவலை ஏற்பட்டது. மேலும் செருமானிய இராணுவமானது அதன் 1908 அளவிலிருந்து 1916 அளவில் அதிகரித்திருந்ததால் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான படைகளின் பகிர்ந்தளிப்பை 85:15 என்பதிலிருந்து 70:30 என்று இவர் மாற்றியமைத்தார். செருமானிய வணிகத்திற்கு டச்சு நடுநிலையானது தேவையானது என்று இவர் கருதினார். நெதர்லாந்து வழியாக ஊடுருவுவதை நிராகரித்தார். இதன் பொருளானது பெல்ஜியத்தில் ஏதாவது தாமதங்கள் ஏற்பட்டால் ஒட்டு மொத்த திட்டத்தையும் அது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பதாகும். வரலாற்றாளர் ரிச்சர்டு கோம்சின் வாதத்தின்படி இந்த மாற்றங்களின் பொருளானது வலது பிரிவானது தீர்க்கமான வெற்றியை பெறுவதற்கு போதிய அளவு பலம் உடையதாக இல்லை என்பதாகும். இது அடைய இயலாத இலக்குகள் மற்றும் கால அளவுக்கு இட்டுச் சென்றது. மேற்கில் தொடக்க செருமானிய முன்னேற்றமானது மிகுந்த வெற்றிகரமாக இருந்தது. ஆகத்து மாத இறுதியில் நேச நாடுகளின் இடது பிரிவானது முழுமையாக பின் வாங்கிக் கொண்டிருந்தது. இந்த பிரிவில் பிரித்தானிய சிறப்பு படையும் இருந்தது. அதே நேரத்தில் அல்சேசு-லொரைனில் பிரெஞ்சு தாக்குதலானது அழிவுகரமான தோல்வியாக இருந்தது. இதில் பிரஞ்சுக்காரர்களுக்கு 2.60 இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இழப்பு ஏற்பட்டது. இதில் எல்லைப்புற யுத்தத்தின்போது ஆகத்து 22 அன்று கொல்லப்பட்ட 27,000 வீரர்களும் அடங்குவர். செருமானிய திட்டமிடலானது பரந்த உத்தி அறிவுறுத்தல்களை கொடுத்தது. அதே நேரத்தில் போர்முனையில் இந்த உத்திகளை செயல்படுத்த இராணுவ தளபதிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான சுதந்திரத்தையும் வழங்கியது. இது 1866 மற்றும் 1870இல் நன்றாக பலன் அளித்தது. ஆனால் 1914இல் வான் குலுக் தனது சுதந்திரத்தை ஆணைகளை மீறுவதற்கும், பாரிசை நெருங்கிக் கொண்டிருந்த செருமானிய இராணுவங்களுக்கு இடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தினார். பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்கள் இந்த இடைவெளியை பாரிசுக்கு கிழக்கே செருமானிய முன்னேற்றத்தை முதலாம் மர்னே யுத்தத்தில் செப்டெம்பர் 5 முதல் 12 வரை தடுத்து நிறுத்துவதற்கு அனுகூலமாக பயன்படுத்தினர். செருமானியப் படைகளை சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு பின்னோக்கி தள்ளினர். 1911இல் உருசிய இராணுவ தலைமையான இசுத்தவுக்காவானது இராணுவத்தை ஒருங்கிணைத்து 15 நாட்களுக்குள் செருமனியை தாக்குவதென பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்புக்கொண்டது. இது செருமானியர்கள் எதிர்பார்த்ததை விட 10 நாட்கள் முன்னர் ஆகும். 17 ஆகத்து அன்று கிழக்கு புருசியாவுக்குள் நுழைந்த இரண்டு உருசிய இராணுவங்கள் அவர்களது பெரும்பாலான ஆதரவு காரணிகள் இன்றி இதை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்த போதும் இவ்வாறாக திட்டமிடப்பட்டது. 26 முதல் 30 ஆகத்துக்குள் தன்னன்பர்க்கு யுத்தத்தில் உருசிய இரண்டாவது இராணுவமானது நிறைவாக அழிக்கப்பட்ட போதும் உருசிய இராணுவத்தின் முன்னேற்றமானது செருமானியர்கள் அவர்களது 8வது கள இராணுவத்தை பிரான்சிலிருந்து கிழக்கு புருசியாவுக்கு மாற்றுவதற்கு காரணமாக அமைந்தது. இது மர்னே யுத்தத்தில் நேச நாடுகள் பெற்ற வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தது. 1914இன் இறுதியில் பிரான்சுக்குள் வலிமையான தற்காப்பு நிலைகளை செருமானிய துருப்புக்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. பிரான்சின் உள்நாட்டு நிலக்கரி வயல்களில் பெரும்பாலானவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. தாங்கள் இழந்ததை விட 2,30,000 மேற்கொண்ட இராணுவ இழப்புகளை பிரான்சை அடையச் செய்தன. எனினும் தொடர்பு பிரச்சினைகள் மற்றும் தலைமையின் கேள்விக்குரிய முடிவுகள் ஒரு தீர்க்கமான முடிவானது செருமனிக்கு சாதகமாக ஏற்படுவதை வீணாக்கின. அதே நேரத்தில் ஒரு நீண்ட, இருமுனை போரை தவிர்க்கும் முதன்மை இலக்கை அடைவதிலும் செருமனி தோல்வி அடைந்தது. ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான செருமானிய தலைவர்களுக்கு தெரிந்தபடி, இது ஒரு முக்கிய தோல்விக்கு சமமானதாக இருந்தது. மர்னே யுத்தத்திற்கு பிறகு சீக்கிரமே பட்டத்து இளவரசரான வில்லியம் ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளரிடம் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் போரில் தோல்வியடைந்து விட்டோம். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் நாங்கள் தற்போதே தோல்வியடைந்து விட்டோம்." ஆசியா பசிபிக் 30 ஆகத்து 1914 அன்று நியூசிலாந்து செருமானிய சமோவாவை ஆக்கிரமித்தது. இதுவே தற்போதைய சுதந்திர நாடான சமோவா ஆகும். 11 செப்டெம்பர் அன்று ஆத்திரேலிய கடற்படை மற்றும் இராணுவ சிறப்புப்படையானது நியூ பிரிட்டன் தீவில் இறங்கியது. இந்த தீவானது அந்நேரத்தில் செருமானிய நியூ கினியாவின் பகுதியாக இருந்தது. 28 அக்டோபர் அன்று செருமானிய விரைவுக் கப்பலான எஸ்எம்எஸ் எம்டன் உருசிய விரைவு கப்பலான செம்சுக்கை பெனாங் யுத்தத்தில் மூழ்கடித்தது. செருமனி மீது சப்பான் போரை அறிவித்தது. பசிபிக்கில் இருந்த நிலப்பரப்புகளை கைப்பற்றியது. இந்த நிலப்பரப்புகளே பின்னாளில் தெற்கு கடல்கள் உரிமைப் பகுதிகள் என்று அழைக்கப்பட்டன. திசிங்தாவோவில் இருந்த சீன சாண்டோங் மூவலந்தீவில் அமைந்திருந்த செருமானிய ஒப்பந்த துறைமுகங்களையும் சப்பான் கைப்பற்றியது. தன்னுடைய விரைவு கப்பலான எஸ்எம்எஸ் கெய்செரின் எலிசபெத்தை திசிங்தாவோவில் இருந்து திரும்ப அழைத்துக்கொள்ள வியன்னா மறுத்தபோது சப்பான் ஆத்திரியா-அங்கேரி மீதும் போரை அறிவித்தது. இந்த கப்பலானது திசிங்தாவோவில் நவம்பர் 1914 அன்று மூழ்கடிக்கப்பட்டது. சில மாதங்களுக்குள்ளாகவே அமைதிப் பெருங்கடலில் இருந்த அனைத்து செருமானிய நிலப்பரப்புகளையும் நேச நாடுகள் கைப்பற்றின. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வணிக பகுதிகள் மற்றும் நியூ கினியாவில் இருந்த சில தற்காப்பு பகுதிகள் மட்டுமே இதில் எஞ்சியவையாக இருந்தன. ஆப்பிரிக்க படையெடுப்புகள் ஆப்பிரிக்காவில் போரின் சில முதன்மையான சண்டைகள் பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் செருமானிய காலனி படைகளை ஈடுபடுத்தியதாக இருந்தன. ஆகத்து 6 முதல் 7 வரை செருமானிய பாதுகாப்பு பகுதிகளான தோகோலாந்து மற்றும் கமேரூன் ஆகியவற்றின் மீது பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய துருப்புக்கள் படையெடுத்தன. 10 ஆகத்து அன்று தென் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த செருமானிய படைகள் தென் ஆப்பிரிக்காவை தாக்கின. அங்கொன்றும் இங்கொன்றுமான மற்றும் வன்மையான சண்டையானது எஞ்சிய போர் முழுவதும் தொடர்ந்தது. முதலாம் உலகப்போரின்போது செருமானிய கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்த கர்னல் பால் வான் லோட்டோவ்-ஓர்பெக் தலைமையிலான செருமானிய காலனி படைகள் கரந்தடிப் போர்முறையை பின்பற்றின. ஐரோப்பாவில் போர் நிறுத்த ஒப்பந்தமானது செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் அவை சரணடைந்தன. நேச நாடுகளுக்கு இந்தியாவின் உதவி போருக்கு முன்னர் இந்திய தேசியவாதம் மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியமயத்தை தனது அனுகூலத்திற்கு செருமனி பயன்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. 1914ஆம் ஆண்டுக்கு பின்னரும் தொடர்ந்த இந்த கொள்கையானது இந்தியாவில் எழுச்சிகளை தூண்டியது எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நியேதர்மயர்-கென்டிக் பயணமானது மைய சக்திகளின் பக்கம் போரில் இணையுமாறு ஆப்கானித்தானை தூண்டியது. எனினும் இந்தியாவில் எழுச்சி ஏற்படும் என பிரிட்டன் அஞ்சியதற்கு மாறாக போரின் தொடக்கமானது இந்தியாவில் தேசியவாத நடவடிக்கைகளில் குறைவு ஏற்பட்டதை கண்டது. பிரித்தானிய போர் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது என்பது இந்திய சுயாட்சியை விரைவுபடுத்தும் என காங்கிரசு மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பெரும்பாலும் நம்பியதே இதற்குக் காரணம் ஆகும். இந்த உறுதிமொழியானது 1917இல் இந்தியாவுக்கான பிரிட்டனின் செயலாளராக இருந்த மாண்டேகுவால் அப்பட்டமாக கொடுக்கப்பட்டது என குறிப்பிடப்படுகிறது. 1914இல் பிரித்தானிய இந்திய இராணுவமானது பிரிட்டனின் இராணுவத்தை விடவும் பெரியதாக இருந்தது. 1914 மற்றும் 1918க்கு இடையில் 13 இலட்சம் இந்திய வீரர்களும், பணியாளர்களும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் சேவையாற்றினர் என மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய அரசாங்கமும் அதன் சமஸ்தான கூட்டாளிகளும் பெரும் அளவிலான உணவு, நிதி மற்றும் வெடி மருந்தை பிரிட்டனுக்கு அளித்தன. ஒட்டு மொத்தமாக மேற்குப் போர்முனையில் 1.40 இலட்சம் வீரர்களும், மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட 7 இலட்சம் பேரும் சேவையாற்றினர். இதில் 47,746 பேர் கொல்லப்பட்டனர். 65,126 பேர் காயமடைந்தனர். போரால் ஏற்பட்ட இழப்புகள், போர் முடிந்ததற்குப் பிறகு இந்தியாவிற்கு சுயாட்சி வழங்குவதில் பிரித்தானிய அரசாங்கம் அடைந்த தோல்வி ஆகியவை காந்தி மற்றும் பிறரால் தலைமை தாங்கப்பட்ட முழுமையான சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது. மேற்கு முனை (1914 - 1916) பதுங்கு குழி போர் தொடங்கியது வெட்ட வெளி போர் மீது முக்கியத்துவத்தை கொடுத்த போருக்கு முந்தைய இராணுவ உத்திகளும், தனி நபர் துப்பாக்கி வீரர் போர் முறையும் 1914இல் வெளிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்ட போது அவை வழக்கொழிந்தவை என நிரூபணமாயின. முள்கம்பி, இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற ஒட்டு மொத்த காலாட்படையின் முன்னேற்றத்தை தடுக்கும் வல்லமை கொண்ட வலிமையான தற்காப்பு அமைப்புகளின் உருவாக்கத்திற்கு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மிகுந்த சக்தி வாய்ந்த சேணேவி ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனுமதியளித்தன. சேணேவியானது யுத்தகளத்தில் ஆதிக்கம் செலுத்தியது. வெட்ட வெளி நிலப்பரப்பை கடப்பது என்பதை இராணுவங்களுக்கு மிகவும் கடினமாக்கியது. கடுமையான இழப்புகளை சந்திக்காமல் பதுங்கு குழி அமைப்புகளை உடைத்து முன்னேறுவதற்கான உத்திகளை உருவாக்குவதில் இரு பிரிவினரும் கடுமையாக போராட்டத்தை சந்தித்தனர். எனினும் தகுந்த நேரத்தில் வாயு போர்முறை மற்றும் பீரங்கி வண்டி போன்ற புதிய தாக்குதல் ஆயுதங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை தொடங்க தொழில்நுட்பம் உதவியது. செப்டெம்பர் 1914இல் முதலாம் மர்னே யுத்தத்திற்கு பிறகு நேச நாட்டு மற்றும் செருமானிய படைகள் ஒன்றை மற்றொன்று சுற்றி வளைப்பதில் முயற்சி செய்து தோல்வி அடைந்தன. இந்த தொடர்ச்சியான நகர்வுகள் பின்னர் "கடலை நோக்கிய ஓட்டம்" என்று அறியப்பட்டன. 1914இன் முடிவில் ஆங்கிலேய கால்வாய் முதல் சுவிட்சர்லாந்து எல்லை வரை இருந்த தடையற்ற பதுங்கு குழி நிலைகளின் கோட்டின் பக்கவாட்டில் இரு எதிரெதிர் படைகளும் ஒன்றை மற்றொன்று எதிர்கொண்டன. எங்கு தங்களது நிலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனபதில் செருமானியர்கள் பொதுவாக வெற்றியடைந்த காரணத்தால் அவர்கள் எப்பொழுதுமே உயரமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதே நேரத்தில் அவர்களது பதுங்கு குழிகளும் நன்றாக கட்டமைக்கப்பட்டவையாக இருந்தன. பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பதுங்கு குழிகள் ஆரம்பத்தில் "தற்காலிகமானவையாக" கருதப்பட்டன. செருமானிய தற்காப்பை நொறுக்கும் ஒரு தாக்குதல் வரையிலுமே அவை தேவைப்பட்டன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி போரின் வெற்றி தோல்வியற்ற நிலையை மாற்ற இரு பிரிவு நாடுகளுமே முயற்சித்தன. 22 ஏப்ரல் 1915 அன்று இரண்டாம் இப்பிரேசு யுத்தத்தில் செருமானியர்கள் கேகு மரபை மீறி மேற்குப் போர்முனையில் முதல் முறையாக குளோரின் வாயுவை பயன்படுத்தினர். சீக்கிரமே பல்வேறு வகைப்பட்ட வாயுக்கள் இரு பிரிவினராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன. எனினும் இவை என்றுமே ஒரு தீர்க்கமான, யுத்தத்தை வெல்லும் ஆயுதமாக நீடிக்கவில்லை. போரின் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய மற்றும் நன்றாக நினைவு படுத்தப்பட்ட கோரங்களில் ஒன்றாக இது உருவானது. பதுங்கு குழி போர் தொடருதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு பிரிவினரும் ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்த இயலாமல் இருந்தனர். 1915 முதல் 1917 முழுவதும் பிரித்தானிய பேரரசும், பிரான்சும் செருமனியை விட அதிகப்படியான உயிரிழப்புகளை சந்தித்தன. இதற்கு காரணம் இரு பிரிவினரும் தேர்ந்தெடுத்த முடிவுகளே ஆகும். உத்தி ரீதியில் செருமனியானது ஒரே ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது, நேச நாடுகள் செருமானிய கோடுகள் வழியாக உடைத்து முன்னேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்தன. 1916 பெப்ரவரியில் வெர்துன் யுத்தத்தில் பிரெஞ்சு தற்காப்பு நிலைகள் மீது செருமானியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலை திசம்பர் 1916 வரை நீடித்தது. செருமானியர்கள் ஆரம்பத்தில் முன்னேற்றங்களை பெற்றனர். ஆனால் பிரெஞ்சு பதில் தாக்குதல்கள் நிலைமையை மீண்டும் கிட்டத்தட்ட தொடக்க புள்ளிக்கு கொண்டு வந்து நிறுத்தின. பிரெஞ்சுக்காரர்கள் பக்கம் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால் செருமானியர்களும் அதிகமான இழப்பை சந்தித்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் 7 முதல் 9.75 இலட்சம் வரை உயிரிழப்புகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. பிரெஞ்சு மன உறுதி மற்றும் தியாகத்தின் ஓர் அடையாளமாக வெர்துன் கருதப்படுகிறது. சொம்மே யுத்தம் என்பது 1916ஆம் ஆண்டின் சூலை முதல் நவம்பர் மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆங்கிலேய-பிரெஞ்சு தாக்குதலாகும். பிரித்தானிய இராணுவத்தின் வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த ஒற்றை நாளாக1 சூலை 1916 கருதப்படுகிறது. பிரித்தானிய இராணுவமானது 57,470 பாதிப்புகளை சந்தித்தது. இதில் 19,240 பேர் இறந்ததும் அடங்கும். ஒட்டு மொத்தமாக சொம்மே தாக்குதலானது 4.20 இலட்சம் பிரித்தானியர்கள், 2 இலட்சம் பிரெஞ்சு மற்றும் 5 இலட்சம் செருமானியர்கள் இறப்பதற்கு இட்டுச் சென்றது என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தியதில் துப்பாக்கி குண்டுகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை. பதுங்கு குழிகளில் பரவிய நோய்களே இரு பிரிவினருக்கும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய காரணிகளாக அமைந்தன. பதுங்கு குழிகளின் இருந்த மோசமான வாழ்வு நிலை காரணமாக எண்ணிலடங்காத நோய்களும், தொற்றுக்களும் பரவின. இவற்றில் பதுங்கு குழி கால் நோய், வெடிகல அதிர்ச்சி, சல்பர் மஸ்டர்டால் ஏற்பட்ட கண்பார்வை இழப்பு அல்லது எரிகாயங்கள், பேன், பதுங்கு குழி காய்ச்சல், கூட்டிகள் என்று அழைக்கப்பட்ட உடல் பேன் மற்றும் எசுப்பானிய புளூ ஆகியவையாகும். கடற்போர் போரின் தொடக்கத்தில் செருமானிய விரைவு கப்பல்கள் உலகம் முழுவதும் சிதறிக்கிடந்தன. இறுதியில் இவற்றில் சில, நேச நாடுகளின் வணிக கப்பல்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. பிரித்தானிய அரச கடற்படையானது அமைப்பு ரீதியாக இத்தகைய விரைவு கப்பல்களை வேட்டையாடியது. அதே நேரத்தில் நேச நாடுகளின் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதில் பிரித்தானிய அரச கடற்படைக்கு இயலாமை இருந்த காரணத்தால் சில அவமானங்களையும் ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக இலகுரக விரைவு கப்பலான எஸ். எம். எஸ். எம்டன் செருமானிய கிழக்கு ஆசிய கப்பல் குழுவின் ஒரு பகுதியாக கிங்தாவோவில் நிறுத்தப்பட்டிருந்தது. இது 15 வணிக கப்பல்கள், மேலும் ஓர் உருசிய விரைவு கப்பல் மற்றும் ஒரு பிரெஞ்சு போர்க் கப்பல் ஆகியவற்றை பறிமுதல் செய்தது அல்லது மூழ்கடித்தது. செருமனியின் பெரும்பாலான குழுக் கப்பல்கள் செருமனிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது எம்டன் நவம்பர் 1914இல் கோரோனெல் யுத்தத்தில் இரண்டு பிரித்தானிய கவச விரைவு கப்பல்களை மூழ்கடித்தது. இறுதியில் திசம்பரில் நடைபெற்ற பால்க்லாந்து தீவு யுத்தத்தில் கிட்டத்தட்ட முழுவதுமாக எம்டன் அழிக்கப்பட்டது. செருமனியின் எஸ். எம். எஸ். திரெசுதன் போர்க்கப்பலானது அதன் சில துணைக் கப்பல்களுடன் தப்பித்தது. ஆனால் மாசா தியேரா யுத்தத்திற்கு பிறகு அவையும் அழிக்கப்பட்டன அல்லது சிறைப்படுத்தப்பட்டன. சண்டை தொடங்கிய பிறகு சீக்கிரமே செருமனிக்கு எதிராக ஒரு கடல் முற்றுகையை பிரிட்டன் தொடங்கியது. இந்த உத்தியானது பலனளிக்க கூடியது என நிரூபணம் ஆகியது. இது முக்கியமான இராணுவ மற்றும் குடிமக்களுக்கு தேவையான பொருட்களின் வழியை வெட்டி விட்டது. முந்தைய இரண்டு நூற்றாண்டுகளின் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களால் குறிப்பிடப்பட்டு சர்வதேச சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தவற்றை இந்த முற்றுகையானது மீறியிருந்த போதும் இது பலனளிக்கக் கூடியதாக இருந்தது. பெருங்கடலின் ஒட்டு மொத்த பகுதிகளுக்கும் எந்த ஒரு கப்பலும் நுழைவதை தடுப்பதற்காக பிரிட்டன் சர்வதேச நீர்ப்பரப்பில் கண்ணி வெடிகளை பதித்தது. இது நடு நிலை வகித்த நாடுகளின் கப்பல்களுக்கும் கூட ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது. பிரிட்டனின் இந்த உத்திக்கு சிறிதளவே எதிர்ப்பு கிளம்பியதால், தன்னுடைய வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறைக்கும் இதே போன்று சிறிதளவே எதிர்ப்பு இருக்கும் என செருமனி எதிர்பார்த்தது. சூட்லாந்து யுத்தம் (செருமானிய மொழி: ஸ்காகெராக்ஸ்லாக்ட், அல்லது ஸ்காகெராக் யுத்தம்) என்பது 1916 மே அல்லது சூன் மாதத்தில் தொடங்கியது. போரின் மிகப்பெரிய கடற்படை யுத்தமாக மாறியது. போரின்போது முழு அளவில் போர் கப்பல்கள் மோதிக்கொண்ட ஒரே ஒரு யுத்தமாக இது திகழ்ந்தது. வரலாற்றில் மிகப்பெரிய யுத்தங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. செருமனியின் உயர் கடல் கப்பல் குழுவானது துணைத்தளபதி ரெயினார்டு சீரால் தலைமை தாங்கப்பட்டது. இது தளபதி சர் யோவான் செல்லிக்கோவால் தலைமை தாங்கப்பட்ட பிரிட்டனின் அரச கடற்படையின் பெரும் கப்பல் குழுவுடன் சண்டையிட்டது. இந்த சண்டையானது ஒரு நிலைப்பாடாக இருந்தது. செருமானியர்களை அளவில் பெரியதாக இருந்த பிரித்தானியக் கப்பல் குழுவானது பக்கவாட்டில் சென்று சுற்றி வளைத்தது. ஆனால் தாங்கள் சந்தித்த இழப்புகளை விட பிரித்தானிய கப்பல் குழுவுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி விட்டு செருமானியக் கப்பல் குழுவானது தப்பிச்சென்றது. எனினும் உத்தி ரீதியாக பிரித்தானியர்கள் கடல் மீதான தங்களது கட்டுப்பாட்டை நிலை நாட்டினர். போர் காலத்தின் போது பெரும்பாலான செருமானிய கடற்பரப்பு குழுவானது துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இடைப்பட்ட வணிக கப்பல் வழிகளை வெட்டிவிட செருமானிய நீர்மூழ்கி யு கப்பல்கள் முயற்சித்தன. நீர்மூழ்கி போர்முறையின் இயல்பு யாதெனில் அவற்றின் தாக்குதல்கள் பெரும்பாலான நேரங்களில் எச்சரிக்கை கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டன. இதனால் வணிக கப்பல்களின் மக்கள் உயிர் பிழைப்பதற்கு சிறிதளவே வாய்ப்பு இருந்தது. ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. செருமனி தனது போர்முறை விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்தது. 1915இல் பயணிகள் கப்பலான ஆர். எம். எஸ். லூசிதனியாவின் மூழ்கடிப்புக்குப் பிறகு பயணிகள் கப்பல்களை இலக்காகக் கொள்ள மாட்டோம் என செருமனி உறுதியளித்தது. அதே நேரத்தில் பிரிட்டன் தனது வணிகக் கப்பல்களில் ஆயுதங்களை பாதுகாப்புக்காக பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக "விரைவு கப்பல் சட்டங்களின்" பாதுகாப்புக்குள் வணிகக் கப்பல்கள் வர இயலாமல் போனது. விரைவு கப்பல் விதிகளானவை எச்சரிக்கையையும், கப்பலில் உள்ளவர்கள் "ஒரு பாதுகாப்பான இடத்திற்கு" செல்வதையும் உறுதி செய்ய வலியுறுத்தின. அதே நேரத்தில் கப்பல் மூழ்கினால் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் படகுகள் இத்தகைய தரத்தை பூர்த்தி செய்யவில்லை. இறுதியாக 1917ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறை என்ற ஒரு கொள்கையை செருமனி பின்பற்ற ஆரம்பித்தது. அமெரிக்கர்கள் இறுதியாக போருக்குள் நுழைவார்கள் என்பதை உணர்ந்த பிறகு அது இதைச் செய்தது. ஒரு பெரிய இராணுவத்தை அயல்நாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா நகர்த்துவதற்கு முன்னர் நேச நாடுகளின் கடல் வழிகளை அழிக்க செருமனி முயற்சித்தது. இதில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், இறுதியாக செருமனி தோல்வியடைந்தது. யு வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தலானது 1917ஆம் ஆண்டு குறைந்தது. அந்நேரத்தில் வணிகக் கப்பல்கள் போர்க் கப்பல்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு குழுவாக பயணித்தன. இந்த உத்தியானது யு கப்பல்களுக்கு இலக்குகளை கண்டுபிடிப்பதை கடினமாக்கியது. இது இழப்புகளை பெருமளவு குறைத்தது. நீருக்கடியில் உள்ள அதிர்வுகளை கண்டுபிடிக்கும் கருவி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மேல் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்யும் நுட்பம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்த போர்க்கப்பல்கள் நீரில் மூழ்கியிருந்த நீர்மூழ்கிக் கப்பல்களை வெற்றிகரமாக ஓரளவு தாக்குவதற்கு வாய்ப்பு உருவானது. பொருட்கள் கப்பல்களில் கொண்டு செல்லப்படுவதை இந்த கப்பல் குழுக்கள் மெதுவாக்கின. ஏனெனில் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படும் வரை வணிகக் கப்பல்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த காத்திருப்புகளுக்கு தீர்வாக புதிய வணிகக் கப்பல்களை உருவாக்கும் ஒரு விரிவான திட்டமானது செயல்படுத்தப்பட்டது. துருப்புக்களை கொண்டு செல்லும் கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை விட மிகுந்த வேகத்தில் பயணித்தன. வட அத்திலாந்திக்கு பெருங்கடலில் இவ்வகை துருப்பு கப்பல்கள் குழுக்களாக பயணிக்கவில்லை. யு கப்பல்கள் 5,000க்கும் மேற்பட்ட நேச நாடுகளின் கப்பல்களை மூழ்கடித்தன. அதே நேரத்தில் 199 நீர்மூழ்கி யு கப்பல்களும் இந்த நடவடிக்கைகளின் போது மூழ்கின. யுத்தத்தில் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டதையும் முதலாம் உலகப்போர் கண்டது. எச். எம். எஸ். பியூரியசு வானூர்தி தாங்கிக் கப்பலானது சோப்வித் கேமல் எனும் போர் விமானங்களை பயன்படுத்தி சூலை 1918இல் தொண்டெர்ன் என்ற இடத்தில் செப்பலின் வான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு எதிராக ஒரு வெற்றிகரமான ஊடுருவல் தாக்குதல்களை நடத்தியது. மேலும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான ரோந்துக்காக பிலிம்ப் எனப்படும் வான் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதையும் முதலாம் உலகப் போர் முதன் முதலாக கண்டது. தெற்கு போர் அரங்குகள் பால்கன் பகுதியில் போர் உருசியாவை கிழக்கில் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்ததால் செர்பியாவை தாக்குவதற்கு தன் இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே ஆத்திரியா-அங்கேரியால் பயன்படுத்த முடிந்தது. கடுமையான இழப்புகளை சந்தித்ததற்குப் பிறகு செர்பியாவின் தலைநகரான பெல்கிறேடை ஆத்திரியர்கள் குறுகிய காலத்திற்கு ஆக்கிரமித்திருந்தனர். கோலுபரா யுத்தத்தில் நடத்தப்பட்ட ஒரு செர்பிய பதில் தாக்குதலானது ஆத்திரியர்களை செர்பியாவிலிருந்து 1916ஆம் ஆண்டின் இறுதியில் துரத்துவதில் வெற்றியடைந்தது. 1915ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கு ஆத்திரியா-அங்கேரியானது அதன் இராணுவ சேம கையிருப்பு படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் சண்டையிடுவதற்கு பயன்படுத்தியிருந்தது. எனினும் செர்பியா மீதான தாக்குதலுக்கு தங்களுடன் இணைவதற்கு பல்கேரியாவை இணங்க வைத்ததன் மூலம் செருமானிய மற்றும் ஆத்திரியா-அங்கேரிய தூதர்கள் எதிர் தரப்பினருக்கு அதிர்ச்சி அளித்தனர். ஆத்திரியா-அங்கேரிய மாகாணங்களான சுலோவீனியா, குரோவாசியா மற்றும் பொசுனியா ஆகியவை செர்பியா, உருசியா மற்றும் இத்தாலியுடனான சண்டையில் ஆத்திரியா-அங்கேரிக்கு துருப்புக்களை வழங்கின. அதே நேரத்தில் மான்டினீக்ரோ செர்பியாவுடன் இணைந்தது. செர்பியா மீது 14 அக்டோபர் 1915 அன்று பல்கேரியா போரை அறிவித்தது. மக்கென்சென் தலைமையிலான 2.50 இலட்சம் வீரர்களைக் கொண்ட ஆத்திரியா-அங்கேரிய இராணுவம் ஏற்கனவே நடத்திக் கொண்டிருந்த தாக்குதலில் தன்னை இணைத்துக் கொண்டது. தற்போது பல்கேரியாவையும் உள்ளடக்கியிருந்த மைய சக்திகள் ஒட்டு மொத்தமாக 6 இலட்சம் துருப்புகளை செர்பியாவுக்கு அனுப்பியிருந்தன. செர்பியாவானது ஒரு மாதத்திற்கும் சற்றே அதிகமான காலத்தில் வெல்லப்பட்டது. இரு முனைகளிலும் போரில் சண்டையிட்டு கொண்டிருந்த மற்றும் தோல்வியடையும் நிலையை எதிர் நோக்கி இருந்த செர்பிய இராணுவமானது வடக்கு அல்பேனியாவுக்குள் பின் வாங்கியது. கொசோவா யுத்தத்தில் செர்பியர்கள் தோல்வியடைந்தனர். 6-7 சனவரி 1916இல் மோச்கோவக் யுத்தத்தில் அத்திரியாத்திக் கடற்கரையை நோக்கி பின்வாங்கிக் கொண்டிருந்த செர்பியர்களுக்கு மான்டினீக்ரோ படையினர் பக்கவாட்டு பாதுகாப்பை அளித்தனர். ஆனால் இறுதியாக ஆத்திரியர்கள் மான்டினீக்ரோவையும் வென்றனர். உயிர் பிழைத்திருந்த செர்பிய வீரர்கள் கப்பல் மூலம் கிரேக்கத்திற்கு இடம் பெயரச் செய்யப்பட்டனர். இந்த வெற்றிக்கு பிறகு செர்பியாவானது ஆத்திரியா-அங்கேரி மற்றும் பல்கேரியாவால் பிரித்துக் கொள்ளப்பட்டது. 1915ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு பிரெஞ்சு-பிரித்தானிய படையானது கிரேக்கத்தின் சலோனிகாவில் உதவி அளிப்பதற்காகவும், கிரேக்க அரசாங்கத்தை மைய சக்திகளுக்கு எதிராக போரை அறிவிக்கச் செய்ய அழுத்தம் கொடுப்பதற்காகவும் வந்திறங்கியது. எனினும் செருமனிக்கு ஆதரவான கிரேக்க மன்னர் முதலாம் கான்சுடன்டைன் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்த எலெப்தெரியோசு வெனிசெலோசின் அரசாங்கத்தை நேச நாடுகளின் சிறப்பு படை வருவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்தார். கிரேக்க மன்னர் மற்றும் நேச நாடுகளுக்கு இடையிலான உரசலானது கிரேக்கம் பிரிக்கப்படும் நிலை வரை தொடர்ந்து அதிகரித்தது. மன்னருக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்த பகுதிகள் மற்றும் சலோனிகாவில் நிறுவப்பட்ட வெனிசெலோசின் புதிய மாகாண அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் இறுதியாக கிரேக்கம் பிரிக்கப்பட்டது. தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏதென்சில் நேச நாட்டு மற்றும் கிரேக்க அரசு படைகளுக்கு இடையிலான ஓர் ஆயுதச் சண்டைக்கு பிறகு கிரேக்க மன்னர் பதவி விலகினார். இந்த சண்டையானது நோவம்விரியானா என்றும் அறியப்படுகிறது. கிரேக்க மன்னருக்கு பிறகு அவரது இரண்டாவது மகன் அலெக்சாந்தர் அவரது பதவிக்கு வந்தார். சூன் 1917 அன்று நேச நாடுகள் பக்கம் கிரேக்கம் அலுவல் பூர்வமாக போரில் இணைந்தது. மாசிடோனிய போர் முனையானது தொடக்கத்தில் பெரும்பாலும் மாறாததாக இருந்தது. கடுமையான இழப்புகளை தந்த மொனசுதிர் தாக்குதலைத் தொடர்ந்து 19 நவம்பர் 1916 அன்று மீண்டும் பிதோலாவை கைப்பற்றியதன் மூலம் மாசிடோனியாவின் சில பகுதிகளை பிரெஞ்சு மற்றும் செர்பிய படைகள் கைப்பற்றின. இது இப்போர் முனைக்கு ஒரு நிலைத் தன்மையை கொடுத்தது. பெரும்பாலான செருமானிய மற்றும் ஆத்திரியா-அங்கேரிய துருப்புக்கள் பின் வாங்கியதற்கு பிறகு செப்டெம்பர் 1918இல் வர்தர் தாக்குதலில் செர்பியா மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் இறுதியாக ஒரு முன்னேற்றத்தை அடைந்தன. தோபுரோ உச்சி யுத்தத்தில் பல்கேரியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பல்கேரிய இராணுவம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொழுது 25 செப்டெம்பருக்குள் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் எல்லையை தாண்டி முதன்மை பல்கேரியாவுக்குள் நுழைந்தன. நான்கு நாட்களுக்கு பிறகு 29 செப்டெம்பர் 1918 அன்று பல்கேரியா தோல்வியை ஒப்புக் கொண்டது. செருமானிய உயர் தலைமையானது இதற்கு எதிர்வினையாக எல்லை கோட்டை தற்காப்பதற்காக துருப்புகளை அனுப்பியது. ஆனால் ஒரு போர் முனையை மீண்டும் நிறுவுவதற்கு இந்த துருப்புகள் மிகவும் பலவீனமானவையாக இருந்தன. மாசிடோனிய போர் முனையானது மறைந்து விட்டதன் பொருள் யாதெனில் புடாபெசுட்டு மற்றும் வியன்னாவுக்கான வழியானது நேச நாடுகளின் படைகளுக்கு தற்போது திறந்து விடப்பட்டது என்பதாகும். இன்டன்பர்க்கு மற்றும் லுதென்தோர்பு ஆகியோர் உத்தி மற்றும் திட்ட சமநிலையானது தீர்க்கமாக மைய சக்திகளுக்கு எதிராக முடிவானதை குறிப்பிட்டனர். பல்கேரியா வீழ்ச்சியடைந்து ஒரு நாளுக்குப் பிறகு உடனடி அமைதி உடன்படிக்கைக்கு வலியுறுத்தினர். உதுமானியப் பேரரசு உருசியாவின் காக்கேசிய நிலப்பரப்புகள் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவுடனான பிரிட்டனின் தொடர்புகளுக்கு உதுமானியர்கள் அச்சுறுத்தலாக விளங்கினார். சண்டையானது தொடர்ந்த போது போரில் ஐரோப்பிய சக்திகள் கவனம் கொண்டிருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உதுமானியப் பேரரசு பூர்வகுடி ஆர்மீனிய, கிரேக்க மற்றும் அசிரிய கிறித்தவ மக்களை ஒழிக்கும் ஒரு பெரிய அளவிலான இனப் படுகொலையை நடத்தியது. இவை ஆர்மீனிய, கிரேக்க மற்றும் அசிரிய இனப் படுகொலைகள் என்று அறியப்படுகின்றன. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் தம் அயல் நாட்டு போர் முனைகளை கலிப்பொலி (1915) மற்றும் மெசொப்பொத்தேமிய (1914) படையெடுப்புகளின் மூலம் தொடங்கினர். கலிப்பொலியில் உதுமானியப் பேரரசானது வெற்றிகரமாக பிரித்தானிய, பிரெஞ்சு, மற்றும் ஆத்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவ பிரிவினரை வெற்றிகரமாக முறியடித்தது. மெசொப்பொத்தேமியாவில் மாறாக உதுமானியர்களின் கூத் முற்றுகையில் (1915-16) பிரித்தானிய தற்காப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு, மார்ச் 1917இல் பிரித்தானிய ஏகாதிபத்திய படைகள் மீண்டும் ஒருங்கிணைந்து பகுதாதுவை கைப்பற்றின. மெசொப்பொத்தேமியாவில் பிரித்தானியர்களுக்கு உள்ளூர் அரேபிய மற்றும் அசிரிய வீரர்கள் உதவி செய்தனர். அதே நேரத்தில் உதுமானியர்கள் உள்ளூர் குர்து மற்றும் துருக்கோமன் பழங்குடியினங்களை பயன்படுத்தினர். மேலும் மேற்கே 1915 மற்றும் 1916இல் சூயஸ் கால்வாயானது உதுமானிய தாக்குதல்களில் இருந்து தற்காக்கப்பட்டது. ஆகத்து மாதத்தில் ஒரு செருமானிய மற்றும் உதுமானியப் படையானது உரோமானி யுத்தத்தில் ஆத்திரேலியா-நியூசிலாந்து காலாட் படை பிரிவு மற்றும் பிரித்தானிய இராணுவத்தின் 52வது (தாழ்நில) காலாட் படை பிரிவால் தோற்கடிக்கப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு எகிப்திய சிறப்பு படையானது சினாய் தீபகற்பம் முழுவதும் முன்னேறியது. திசம்பரில் மக்தபா யுத்தம் மற்றும் சனவரி 1917இல் எகிப்திய சினாய் மற்றும் உதுமானிய பாலத்தீனம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எல்லையில் நடந்த இராப்பா யுத்தத்தில் உதுமானியப் படைகளை உந்தித் தள்ளியது. உருசிய இராணுவங்கள் காக்கேசிய படையெடுப்பில் பொதுவாக வெற்றி பெற்றன. உதுமானிய ஆயுதப்படைகளின் உச்ச தளபதியான என்வர் பாஷா வெற்றி மற்றும் அதிகாரம் மீது உயரவா உடையவராக இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. உருசியாவிடம் முன்னர் இழந்த பகுதிகள் மற்றும் நடு ஆசியாவை மீண்டும் வெல்வது குறித்து கனவு கண்டார். எனினும், இவர் ஒரு பலவீனமான தளபதியாக இருந்தார். 1 இலட்சம் வீரர்களைக் கொண்டு திசம்பர் 1914இல் காக்கேசியாவில் உருசியர்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை இவர் தொடங்கினார். மலைப்பாங்கான பகுதிகளில் இருந்த உருசியர்களின் நிலைகளுக்கு எதிராக குளிர்காலத்தில் ஒரு தாக்குதலை நடத்துவதற்கு இவர் வலியுறுத்தினார். சரிகமிசு யுத்தத்தில் இவர் தனது படைகளில் 86 சதவீதத்தை இழந்தார். உதுமானியப் பேரரசானது செருமானிய உதவியுடன் திசம்பர் 1916இல் பாரசீகம் (தற்போதைய ஈரான்) மீது படையெடுத்தது. காசுப்பியன் கடலுக்கு அருகில் இருந்த பக்கூவை சுற்றியிருந்த எண்ணெய் வளங்களுக்கான பிரித்தானிய மற்றும் உருசிய தொடர்பை வெட்டிவிடும் முயற்சியாக அது இதைச் செய்தது. வெளிப்படையாக பாரசீகமானது நடுநிலை வகித்து வந்தது. எனினும், நீண்ட காலமாக பிரித்தானிய மற்றும் உருசிய செல்வாக்கு பகுதியாக இருந்தது. உதுமானியர்கள் மற்றும் செருமானியர்களுக்கு குர்து மற்றும் அசேரி படைகளும், கசுகை, தங்கிசுதானிகள், லுர்கள் மற்றும் கம்சே போன்ற முதன்மையான ஈரானிய பழங்குடிகளின் ஒரு பெரும் அளவிலான எண்ணிக்கையுடையவர்களும் உதவி புரிந்தனர். அதே நேரத்தில் உருசியர்கள் மற்றும் பிரித்தானியர்களுக்கு ஆர்மீனிய மற்றும் அசிரிய படைகள் உதவி புரிந்தன. பாரசீக படையெடுப்பானது 1918ஆம் ஆண்டு வரை நீடித்தது. உதுமானியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு ஒரு தோல்வியாக இது முடிவடைந்தது. எனினும், 1917இல் போரில் இருந்து உருசியா பின்வாங்கிய நிகழ்வானது உதுமானியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் படைகளுக்கு ஒரு தொடர்ச்சியான தோல்விகளை கொடுத்த ஆர்மீனிய மற்றும் அசிரிய படைகள் இராணுவ பொருட்கள் வழங்கும் வழிகள் துண்டிக்கப்பட்டது, எண்ணிக்கை குறைவு, ஆயுதம் குறைவு மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால் பாதிப்படைந்தன. இதன் காரணமாக அப்படையினர் வடக்கு மெசபத்தோமியாவில் இருந்த பிரித்தானிய கோடுகளை நோக்கி சண்டையிட்டவாறே தப்பித்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 1915 - 1916இல் உருசிய தளபதியாக இருந்த தளபதி யுதேனிச்சு ஒரு தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் பெரும்பாலான தெற்கு காக்கேசியாவில் இருந்து துருக்கியர்களை துரத்தி அடித்தார். 1916ஆம் ஆண்டின் படையெடுப்பின் போது எருசுரும் தாக்குதலில் உருசியர்கள் துருக்கியர்களை தோற்கடித்தனர். மேலும் திராப்சோனையும் ஆக்கிரமித்தனர். 1917இல் உருசியாவின் மாட்சி மிக்க கோமான் நிகோலசு காக்கேசிய போர்முனைக்கான தலைமையை ஏற்றார். வெற்றி பெற்ற நிலப்பரப்புகளுக்கு உருசிய ஜார்ஜியாவில் இருந்து ஒரு தொடருந்து வழித்தடத்தை ஏற்படுத்த நிகோலசு திட்டமிட்டார். இதன் மூலம் 1917ஆம் ஆண்டுக்கான ஒரு புதிய தாக்குதலுக்காக இராணுவ பொருட்கள் கொண்டு வரப்படலாம் என எண்ணினார். எனினும், மார்ச் 1917 (இது புரட்சிக்கு முந்தைய உருசிய நாட்காட்டியில் பெப்ரவரி என்று குறிப்பிடப்படுகிறது) பெப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து ஜார் மன்னர் பதவி விலகினார். புதிய உருசிய காக்கேசிய இராணுவமானது சிதைவுற ஆரம்பித்தது. பிரித்தானிய அயல்நாட்டு அலுவலகத்தின் அரேபிய பிரிவால் தூண்டப்பட்ட அரபுக் கிளர்ச்சியானது சூன் 1916இல் தொடங்கியது. இதன் முதல் சண்டையாக மெக்கா யுத்தம் நடைபெற்றது. மெக்காவைச் சேர்ந்த சரீப் உசைன் இதற்கு தலைமை தாங்கினார். திமிஷ்குவை உதுமானியர்கள் சரணடைய வைத்ததுடன் இது முடிவடைந்தது. மதீனாவின் உதுமானிய தளபதியான பக்ரி பாஷா மதீனா முற்றுகையின் போது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தாக்குப் பிடித்தார். பிறகு சனவரி 1919இல் சரணடைந்தார். இத்தாலிய லிபியா மற்றும் பிரித்தானிய எகிப்து ஆகிய நாடுகளின் எல்லையின் பக்கவாட்டில் அமைந்திருந்த செனுச்சி பழங்குடியினமானது துருக்கியர்களால் தூண்டப்பட்டு ஆயுத உதவி பெற்றது. இப்பழங்குடியினம் நேச நாட்டு துருப்புகளுக்கு எதிராக ஒரு சிறு அளவிலான கரந்தடிப் போர் முறையை தொடுத்தது. செனுச்சி படையெடுப்பில் இப்பழங்குடியினத்தை எதிர்ப்பதற்காக 12,000 துருப்புகளை அனுப்பும் நிலைக்கு பிரித்தானியர்கள் தள்ளப்பட்டனர். 1916ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த கிளர்ச்சியானது இறுதியாக நொறுக்கப்பட்டது. உதுமானிய போர் முனைகளில் ஒட்டு மொத்த நேச நாட்டுப் போர் வீரர்களின் இழப்பானது 6.50 இலட்சம் வீரர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த உதுமானிய இழப்பானது 7.25 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3.25 இலட்சம் பேர் இறந்தனர். 4 இலட்சம் பேர் காயமடைந்தனர். இத்தாலிய போர் முனை 1882இலேயே முக்கூட்டணியில் இத்தாலி இணைந்திருந்த போதும், இதன் பாரம்பரிய எதிரியான ஆத்திரியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தமானது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. பின் வந்த அரசாங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தன. 1915ஆம் ஆண்டு தான் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டன. திரெந்தினோ, ஆத்திரிய கரைப் பகுதி, ரிசேகா மற்றும் தால்மேசியா ஆகியவற்றில் இருந்த ஆத்திரிய-அங்கேரிய நிலப்பரப்பு மீது இத்தாலிய தேசியவாதிகளுக்கு விருப்பம் இருந்தது. 1866ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எல்லைகளை பாதுகாப்பதற்கு இப்பகுதிகள் மிகவும் இன்றியமையாதவை என கருதப்பட்டன. 1902ஆம் ஆண்டு பிரான்சுடன் உரோம் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது. இந்த உடன்படிக்கைப் படி பிரான்சை செருமனி தாக்கினால் இத்தாலி நடுநிலை வைக்கும் என்பதாகும். முக்கூட்டணியில் இத்தாலியின் பங்கை இந்த உடன்படிக்கை ஒன்றுமில்லாததாக்கியது. 1914ஆம் ஆண்டு போர் தொடங்கிய போது முக்கூட்டணியானது இயற்கையில் தற்காப்புத் தன்மை உடையது என இத்தாலி வாதிட்டது. செர்பியா மீதான ஆத்திரியாவின் தாக்குதலுக்கு உதவுவதற்கு தான் உடன்படாது என்றும் கூறியது. செப்டெம்பரில் துருக்கி மைய சக்திகளின் ஒர் உறுப்பினரான போது மைய சக்திகளின் பக்கம் இத்தாலி இணைவதற்கு எதிர்ப்பானது மேலும் அதிகரித்தது. 1911ஆம் ஆண்டு முதல் லிபியா மற்றும் தோதேகனீசு தீவுகளில் இருந்த உதுமானிய பகுதிகளை இத்தாலி ஆக்கிரமித்திருந்தது. இத்தாலிய நடுநிலைமையை மாற்றுவதற்காக மைய சக்திகள் இத்தாலிக்கு பிரெஞ்சு பாதுகாப்பு பகுதியான துனீசியாவை கொடுக்க முன் வந்தன. இதற்கு பதிலாக போரில் உடனடியாக இத்தாலி நுழைய வேண்டும் என்றும் வலியுறுத்தின. அதே நேரத்தில் ஆத்திரிய நிலப்பரப்பு மீதான இத்தாலியின் கோரிக்கை மற்றும் தோதேகனீசு தீவின் மீதான இறையாண்மை ஆகியவற்றுக்கு நேச நாடுகள் ஒப்புக் கொண்டன. இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் இந்த பிரிவுகள் ஏப்ரல் 1915இன் இலண்டன் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன. இத்தாலி முந்நேச நாடுகள் பக்கம் இணைந்தது. 23 மே அன்று ஆத்திரியா-அங்கேரி மீது போரை அறிவித்தது. 15 மாதங்கள் கழித்து செருமனி மீதும் போரை அறிவித்தது. 1914க்கு முந்தைய கால கட்டத்தில் இத்தாலியின் இராணுவமானது ஐரோப்பாவிலேயே பலவீனமானதாக இருந்தது. அதிகாரிகள், பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் ஆகியவற்றில் பற்றாக்குறை இருந்தது. போதிய அளவு போக்குவரத்து வசதிகள் மற்றும் நவீன ஆயுதங்களும் இதனிடம் இல்லாமல் இருந்தன. ஏப்ரல் 1915ஆம் ஆண்டு வாக்கில் இந்த குறைகளில் சில சரி செய்யப்பட்டன. ஆனால் இலண்டன் ஒப்பந்தத்தால் கோரப்பட்ட ஒரு பெரும் தாக்குதலுக்கு இத்தாலி இன்னும் தயாராகாமலேயே இருந்தது. அதிகப்படியான எண்ணிக்கையில் இருந்த வீரர்களை கொண்டிருந்த இத்தாலியின் அனுகூலத்தை கடுமையான நிலப்பரப்பானது குறைத்தது. பெரும்பாலான சண்டையானது கடல் பரப்பில் இருந்து 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்த ஆல்ப்ஸ் மற்றும் தோலோமைத்து மலைப் பகுதிகளில் நடைபெற்றது. அங்கு பதுங்கு குழிகளை அமைக்க பாறைகளையும், பனிக் கட்டிகளையும் வெட்ட வேண்டியிருந்தது. மேலும், துருப்புகளுக்கு இராணுவ பொருட்களை வழங்குவதும் ஒரு முதன்மையான சவாலாக இருந்தது. நன்றாக வகுக்கப்படாத உத்திகள் இந்த பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கின. 1915 மற்றும் 1917க்கு இடையில் இத்தாலிய தளபதியான லுயிகி கதோர்னா இசோன்சோவுக்கு பக்கவாட்டில் ஒரு தொடர்ச்சியான முன் கள தாக்குதல்களை மேற்கொண்டார். எனினும், இதில் சிறிதளவே முன்னேற்றம் கண்டார். ஏராளமான வீரர்களை இழந்தார். போரின் முடிவில் சண்டையில் இழந்த ஒட்டு மொத்த இத்தாலிய வீரர்களின் எண்ணிக்கையானது சுமார் 5.48 இலட்சமாக இருந்தது. 1916ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தங்களது இசுதிராபே படையெடுப்பில் ஆத்திரியா-அங்கேரியர்கள் அசியாகோவில் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் சிறிதளவே வெற்றி பெற்றனர். அவர்கள் இத்தாலியர்களால் தைரோலுக்கு மீண்டும் உந்தித் தள்ளப்பட்டனர். மே 1916இல் தெற்கு அல்பேனியாவை இத்தாலிய படைப் பிரிவினர் ஆக்கிரமித்து இருந்த போதும், அவர்களது முதன்மையான இலக்காக இசோன்சோ போர் முனை திகழ்ந்தது. ஆகத்து 1916இல் கோரிசியா கைப்பற்றப்பட்டது. பிறகு இந்த போர் முனையானது அக்டோபர் 1917 வரை யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தது. கபோரெட்டோவில் ஓர் ஒன்றிணைந்த ஆத்திரியா-அங்கேரியப் படையானது ஒரு பெரும் வெற்றியை பெற்றதற்கு பிறகு, இத்தாலிய தளபதி பதவியானது கதோர்னாவிடம் இருந்து ஆர்மாண்டோ தயசிடம் கொடுக்கப்பட்டது. அவர் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பின் வாங்கி பியாவே ஆற்றின் பக்கவாட்டில் தனது நிலைகளை அமைத்து தற்காக்க ஆரம்பித்தார். சூன் 1918இல் ஓர் இரண்டாவது ஆத்திரிய தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. அக்டோபர் மாத இறுதியில் மைய சக்திகள் தோல்வியடைந்து விட்டது தெளிவாக தெரிய ஆரம்பித்தது. 24 அக்டோபர் அன்று விட்டோரியோ வெனெட்டோ யுத்தத்தை தயசு தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் பிடிவாதமான எதிர்ப்பை சந்தித்தார். ஆனால் ஆத்திரியா-அங்கேரி வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காரணத்தால் இத்தாலியிலிருந்து அங்கேரிய படைப் பிரிவினர் தாங்கள் குடும்பங்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, மேலும் பலரும் இவ்வாறு கூற ஆரம்பித்தனர். ஏகாதிபத்திய இராணுவமானது சிதைவுற ஆரம்பித்தது. இத்தாலியர்கள் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை பிடித்தனர். 30 நவம்பர் அன்று வில்லா கியுசுதி போர் நிறுத்த ஒப்பந்தமானது ஆத்திரியா-அங்கேரி மற்றும் இத்தாலிக்கு இடையிலான சண்டைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. அத்திரியாத்திக்கு கடலுக்கு பக்கவாட்டில் திரியேசுதே மற்றும் பிற பகுதிகளை ஆக்கிரமித்திருந்த இத்தாலிக்கு அப்பகுதிகள் 1915இல் கொடுக்கப்பட்டன. உருமேனிய பங்கெடுப்பு 1883ஆம் ஆண்டு முக்கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக இரகசியமாக ஒப்புக்கொண்ட போதும் 1912 - 1913 பால்கன் போர்களில் பல்கேரியாவிற்கு மைய சக்திகள் ஆதரவளித்ததன் காரணமாக உருமேனியாவுக்கும், மைய சக்திகளுக்கும் கருத்து வேறுபாடானது அதிகரித்து வந்தது. அங்கேரியால் கட்டுப்படுத்தப்பட்ட திரான்சில்வேனியாவில் உருமேனிய இன சமூகங்களின் நிலை குறித்தும் உருமேனியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மொத்த மக்கள் தொகையான 50 இலட்சத்தில் 28 இலட்சம் உருமேனிய இனத்தவரை திரான்சில்வேனியா உள்ளடக்கி இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உருமேனியாவின் ஆளும் வர்க்கத்தினர் செருமானிய ஆதரவு மற்றும் நேச நாட்டு ஆதரவு பிரிவுகளாக இருந்தனர். 1914இல் உருமேனியா தொடர்ந்து நடு நிலை வகித்தது. உருமேனியாவும் இத்தாலியைப் போலவே, செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் பிரகடனம் செய்தால் அப்போரில் உருமேனியாவும் இணைய வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை என்று கூறியது. இந்நிலையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உருமேனியா பேணி வந்தது. அதே நேரத்தில் இராணுவ பொருட்கள் மற்றும் ஆலோசகர்களை உருமேனிய நிலப்பரப்பு வழியாக எடுத்துச் செல்வதற்கு செருமனி மற்றும் ஆத்திரியாவுக்கு உருமேனியா அனுமதி அளித்து வந்தது. செப்டெம்பர் 1914இல் திரான்சில்வேனிய மற்றும் பனத் உள்ளிட்ட ஆத்திரியா-அங்கேரிய நிலப்பரப்புகளுக்கு உருமேனியா கொண்டிருந்த உரிமையை உருசியா ஒப்புக்கொண்டது. இப்பகுதிகளை உருமேனியா வாங்கியது பரவலான பொது மக்களின் ஆதரவை பெற்றது. ஆத்திரியாவுக்கு எதிராக உருசியாவின் வெற்றியானது ஆகத்து 1916இன் புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் நேச நாடுகள் பக்கம் உருமேனியா இணைவதற்கு இட்டுச் சென்றது. கருதுகோள் இசட் என்று அறியப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் உருமேனிய இராணுவமானது திரான்சில்வேனியாவுக்குள் ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டது. அதே நேரத்தில், தெற்கு தோபுருசா மற்றும் கியூர்கியூ ஆகிய பகுதிகள் மீது ஒரு வேளை பல்கேரியா பதில் தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் திட்டமிட்டது. 27 ஆகத்து 1916 அன்று உருமேனியர்கள் திரான்சில்வேனியாவை தாக்கினர். அம்மாகாணத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான பகுதிகளை ஆக்கிரமித்தனர். பிறகு, முன்னாள் செருமானிய தலைமை தளபதி பால்கன்கயனால் தலைமை தாங்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட செருமானிய 9ஆம் இராணுவத்தால் மீண்டும் அங்கிருந்து உந்தித் தள்ளப்பட்டனர். ஓர் ஒன்றிணைந்த செருமானிய-பல்கேரிய-துருக்கிய தாக்குதலானது தோபுருசா மற்றும் கியூர்கியூ பகுதிகளை கைப்பற்றியது. எனினும், பெருமளவிலான உருமேனிய இராணுவமானது சுற்றி வளைக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. புக்கரெஸ்டுக்கு பின் வாங்கியது. புக்கரெஸ்ட் 6 திசம்பர் 1916 அன்று மைய சக்திகளிடம் சரண் அடைந்தது. போருக்கு முந்தைய ஆத்திரியா-அங்கேரியின் மக்கள் தொகையானது உருமேனியர்களை சுமார் 16 சதவீதமாக உள்ளடக்கி இருந்தது. போர் தொடர்ந்த நேரத்தில் ஆத்திரியா-அங்கேரிக்கான அவர்களது விசுவாசமானது மங்க ஆரம்பித்தது. 1917ஆம் ஆண்டு வாக்கில் ஆத்திரிய ஏகாதிபத்திய இராணுவத்தில் இருந்து விலகிச் சென்ற 3 இலட்சம் வீரர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் உருமேனிய இனத்தவர்களாக இருந்தனர். உருசிய பேரரசால் பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளில் இருந்து உருமேனிய தன்னார்வ பிரிவானது உருவாக்கப்பட்டது. இப்பிரிவினர் 1917இல் உருமேனியாவிற்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். இவர்களில் பலர் மரசுதி, மரசெசுதி மற்றும் ஒயிதுசு ஆகிய இடங்களில் சண்டையிட்டனர். அங்கு உருசிய ஆதரவுடன் உருமேனிய இராணுவமானது மைய சக்திகளின் ஒரு தாக்குதலை தோற்கடித்தது. சில நிலப்பரப்புகளையும் கூட மீண்டும் கைப்பற்றியது. அக்டோபர் புரட்சியானது போரில் இருந்து விலகும் நிலைக்கு உருசியாவை தள்ளியதற்கு பிறகு, உருமேனியா தனித்து விடப்பட்டது. 9 திசம்பர் 1917 அன்று உருமேனியா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதற்கு பிறகு சீக்கிரமே, அருகில் இருந்த உருசிய நிலப்பரப்பான பெச்சராபியாவில் போல்செவிக்குகள் மற்றும் உருமேனிய தேசியவாதிகளுக்கு இடையில் சண்டை ஆரம்பித்தது. உருமேனிய தேசியவாதிகள் தங்கள் நாட்டினரிடமிருந்து இராணுவ உதவியை வேண்டினர். உருமேனிய நாட்டினரின் தலையீட்டுக்குப் பிறகு பெப்ரவரி 1918இல் சுதந்திரமான மால்தோவிய சனநாயக குடியரசானது உருவாக்கப்பட்டது. இக்குடியரசு உருமேனியாவுடன் இணைவதற்கு 27 மார்ச் அன்று வாக்களித்தது. 7 மே 1918 அன்று மைய சக்திகளுடன் உருமேனியா புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. பெச்சராபியா மீதான உருமேனிய இறையாண்மையை அங்கீகரித்ததற்கு பதிலாக, கார்பேதிய மலைகளில் இருந்த கணவாய்களின் கட்டுப்பாட்டை ஆத்திரியா-அங்கேரிக்கு அளிப்பதற்கும், செருமனிக்கு எண்ணேய் சலுகைகளை கொடுப்பதற்கும் இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் இருந்தன. பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட போதும், உருமேனியாவின் முதலாம் பெர்டினான்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார். அவர் நேச நாடுகளின் ஒரு வெற்றிக்காக நம்பிக்கை கொண்டிருந்தார். 10 நவம்பர் 1918 அன்று நேச நாடுகளுக்கு ஆதரவாக உருமேனியா போரில் மீண்டும் நுழைந்தது. 11 நவம்பர் 1918இன் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி புக்கரெஸ்ட் ஒப்பந்தமானது அலுவல் பூர்வமாக ஏற்பதற்கு உரியதல்ல என்று அறிவிக்கப்பட்டது. 1914 மற்றும் 1918க்கு இடையில் ஆத்திரியா-அங்கேரிய இராணுவத்தில் 4 - 6 இலட்சம் வரையிலான உருமேனியா இனத்தவர்கள் சேவையாற்றினர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1.50 இலட்சம் பேர் யுத்த களத்தில் கொல்லப்பட்டனர். தற்போதைய உருமேனிய எல்லைகளுக்குள் உட்பட்ட ஒட்டு மொத்த இராணுவ மற்றும் குடிமக்களின் இறப்பானது 7.48 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கிழக்குப் போர் முனை ஆரம்ப நடவடிக்கைகள் பிரான்சுடன் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, போரின் ஆரம்பத்தில் உருசியாவின் திட்டமானது ஆத்திரிய கலீசியா மற்றும் கிழக்கு புருசியாவுக்குள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஒரே நேரத்தில் முன்னேறுவது ஆகும். கலீசியா மீதான உருசியர்களின் தாக்குதலானது பெரும்பாலும் வெற்றிகரமாக இருந்த போதிலும், படை வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வேகம் காரணமாக உருசியர்கள் பெரும்பாலான தங்களது கனரக உபகரணங்கள் மற்றும் உதவி செயல்கள் இல்லாமல் இதை செய்தனர். மேற்குப் போர் முனையில் இருந்து செருமனி அதன் துருப்புகளை இடமாற்றுமாறு கட்டாயப்படுத்தும் உருசியர்களின் குறிக்கோளானது இந்த படையெடுப்புகளால் அடையப்பட்டது. எனினும், கனரக உபகரணங்கள் மற்றும் உதவி செயல்கள் இல்லாத காரணங்களானவை தன்னென்பர்க்கு மற்றும் மசூரிய ஏரிகளில் முறையே ஆகத்து மற்றும் செப்டெம்பர் 1914இல் உருசிய தோல்விகளுக்கு காரணமாயின. இதன் காரணமாக கிழக்கு பகுதியில் இருந்து கடுமையான இழப்புகளுடன் பின் வாங்கும் நிலைக்கு உருசியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1915ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் கலீசியாவில் இருந்தும் அவர்கள் பின் வாங்கினர். மே 1915இன் கோர்லிசு-தர்னோவு தாக்குதலானது உருசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்து மீது படையெடுக்க மைய சக்திகளுக்கு வாய்ப்பளித்தது. 5 ஆகத்து அன்று வார்சாவாவை இழந்த நிகழ்வானது உருசியர்கள் அவர்களது போலந்து நிலப்பரப்புகளை அப்படியே விட்டு விட்டு செல்லும் நிலைக்கு தள்ளியது. கிழக்கு கலீசியாவில் ஆத்திரியர்களுக்கு எதிராக வெற்றிகரமான சூன் 1916 புருசிலோவ் தாக்குதல் நடைபெற்ற போதும், இராணுவ பொருட்களின் பற்றாக்குறை, கடுமையான இழப்புகள் மற்றும் தலைமைத்துவ தோல்விகள் ஆகியவை உருசியர்கள் தங்களது வெற்றியில் இருந்து முழுவதுமாக மிகு நலன் பெறுவதிலிருந்து தடுத்தன. எனினும், போரின் மிக முக்கியமான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். வெர்துனில் இருந்து செருமானிய வீரர்களை இடமாற்றியது, இத்தாலியர்கள் மீது இருந்த ஆத்திரியா-அங்கேரிய அழுத்தத்தை விடுவித்தது மற்றும் 27 ஆகத்து அன்று நேச நாடுகளின் பக்கம் உருமேனியா போரில் நுழைவதற்கு இணங்க வைத்தது ஆகியவற்றுக்கு இது காரணமானது. ஆத்திரியா மற்றும் உருசியா ஆகியவற்றின் இரு இராணுவங்களுக்கும் இடரார்ந்த பலவீனத்தை ஏற்படுத்த இந்த தாக்குதல் காரணமானது. இவர்களது இழப்புக்களின் காரணமாக இரு இராணுவங்களின் தாக்குதல் ஆற்றலும் பெருமளவு பாதிக்கப்பட்டது. போர் மீதான நல்லெண்ணமும் உருசியாவில் படிப் படியாக தகர்க்கப்பட்டது. இறுதியாக இது உருசிய புரட்சிக்கு வழி வகுத்தது. போர் முனையில் ஜார் மன்னர் தொடர்ந்து இருந்ததால் உருசியாவில் மக்களிடையே அமைதியின்மை அதிகமானது. உருசிய போர் முனையானது பேரரசி அலெக்சாந்திராவால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இவரது அதிகரித்து வந்த ஆற்றலற்ற ஆட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஆகியவை 1916இன் இறுதியில் பரவலான போராட்டங்களுக்கு வழி வகுத்தது. மைய சக்திகளின் அமைதி முயற்சிகள் 12 திசம்பர் 1916 அன்று வெர்துன் யுத்தம் மற்றும் உருமேனியாவிற்கு எதிரான ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த ஒரு மிருகத் தனமான 10 மாதங்களுக்கு பிறகு நேச நாடுகளுடன் ஓர் அமைதியை ஏற்படுத்த செருமனி முயற்சித்தது. எனினும், ஒரு "போலித் தனமான போர் சூழ்ச்சி" என எந்த வித யோசனையும் இன்றி இந்த முயற்சியானது நிராகரிக்கப்பட்டது. இதற்கு பிறகு சீக்கிரமே ஐக்கிய அமெரிக்க அதிபரான ஊட்ரோ வில்சன் ஓர் அமைதி ஏற்படுத்துபவராக தலையீடு செய்ய முயற்சித்தார். இரு பிரிவினரும் தங்களது கோரிக்கைகளை ஒரு குறிப்பேட்டில் குறிப்பிட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு வேண்டினார். பிரித்தானிய பிரதமர் லாய்ட் ஜார்ஜின் போர் தொடர்பான அமைச்சரவையானது செருமனி அளிக்க வந்த வாய்ப்பை நேச நாடுகளுக்கு இடையில் பிரிவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி என கருதியது. ஆரம்ப சீற்றம் மற்றும் பெருமளவு விவாதத்திற்குப் பிறகு வில்சனின் குறிப்பை ஒரு தனி முயற்சி என எடுத்துக் கொண்டது. "நீர்மூழ்கி சீற்றங்களை" தொடர்ந்து செருமனிக்கு எதிராக போருக்குள் நுழையும் தருவாயில் ஐக்கிய அமெரிக்கா இருக்கிறது என்ற சமிக்ஞையை இது காட்டியது. வில்சனின் வாய்ப்பளிப்பிற்கு அளிக்க வேண்டிய ஒரு பதில் கொடுத்து நேச நாடுகள் விவாதித்த அதே நேரத்தில் கருத்துகளை "நேரடியாக பரிமாறிக் கொள்ளும்" ஒரு முயற்சிக்கு ஆதரவாக செருமானியர்கள் வில்சனின் வாய்ப்பளிப்பிற்கு மட்டம் தட்டும் முறையில் மறுப்பு தெரிவித்தனர். செருமானிய பதில் குறித்து அறிந்த நேச நாட்டு அரசாங்கங்களுக்கு 14 சனவரி அன்று வெளியிடப்பட்ட அவற்றின் பதிலில் தெளிவான கோரிக்கைகளை கேட்க சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பாதிப்புகளை மறு சீரமைப்பு செய்தல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் இருந்து வெளியேறுதல், பிரான்சு, உருசியா மற்றும் உருமேனியா ஆகியவற்றுக்கு நிவாரண தொகை அளித்தல், ஒவ்வொரு தேச குடிமகன்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் கொள்கை ஆகியவற்றை கோரின. இத்தாலியர்கள், இசுலாவியர்கள், உருமேனியர்கள், செக்கோஸ்லோவாக்கியர்கள் ஆகியோரை விடுவித்தல் மற்றும் ஒரு "சுதந்திரமான மற்றும் ஒன்றிணைந்த போலந்தை உருவாக்குதல்" ஆகியவற்றையும் இந்த கோரிக்கைகள் உள்ளடக்கி இருந்தன. பாதுகாப்பு குறித்த கேள்வியை பொறுத்த வரையில் எதிர் கால போர்களை தடுக்கும் அல்லது தாக்கத்தை குறைக்கும் பொருளாதார தடைகளுடன் கூடிய உத்தரவாதங்களை எந்த ஓர் அமைதி உடன்படிக்கைக்கும் ஒரு நிபந்தனையாக நேச நாடுகள் கோரின. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. எந்த ஒரு குறிப்பிட்ட கோரிக்கைகளையும் செருமனி முன்வைக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு நேச நாடுகள் செருமனியின் வாய்ப்பளிப்பை நிராகரித்தன. 1917; முதன்மை நிகழ்வுகளின் காலவரிசை மார்ச் முதல் நவம்பர் 1917: உருசியப் புரட்சி 1916இன் இறுதியில் போரில் இழந்த ஒட்டு மொத்த உருசியர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 50 இலட்சமாக இருந்தது. இவர்களில் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் அல்லது கைது செய்யப்பட்டும் இருந்தனர். முதன்மை நகரப் பகுதிகள் உணவு பற்றாக்குறைகள் மற்றும் விலைவாசியால் பாதிக்கப்பட்டிருந்தன. மார்ச் 1917இல் ஜார் மன்னர் நிக்கலாசு பெத்ரோகிராதில் நடந்த ஓர் அலை போன்ற வேலை நிறுத்தங்களை கட்டாயப்படுத்தி ஒடுக்குமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார். ஆனால் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்த துருப்புகள் மறுத்தன. புரட்சியாளர்கள் பெத்ரோகிராது சோவியத் என்ற மன்றத்தை உருவாக்கினர். இடது சாரிகள் அரசை கைப்பற்றும் நிலை வரலாம் என்று அச்சமடைந்த உருசியாவின் துமா அவையானது பதவியிலிருந்து விலகுமாறு நிக்காலசை கட்டாயப்படுத்தியது. உருசிய இடைக்கால அரசை நிறுவியது. இடைக்கால அரசானது போரை தொடரும் உருசியாவின் ஒப்புதலை உறுதி செய்தது. எனினும், பெத்ரோகிராது சோவியத் மன்றமானது கலைக்கப்பட மறுத்தது. போட்டி அதிகார மையங்களை உருவாக்கியது. குழப்பம் மற்றும் அமளிக்கு காரணமானது. இதன் காரணமாக முன் கள வீரர்கள் மன உறுதி குலைந்து போரிட மறுக்கும் நிலை அதிகரித்தது. 1917இன் கோடை காலத்தில் உருமேனியாவை போரில் இருந்து வெளியேற்றுவதற்காக மைய சக்திகள் அகத்து வான் மக்கென்சென் தலைமையில் உருமேனியாவில் ஒரு தாக்குதலை தொடங்கின. இதன் காரணமாக ஒயிதுசு, மரசுதி மற்றும் மரசெசுதி ஆகிய இடங்களில் யுத்தங்கள் நடைபெற்றன. இதில் மைய சக்திகளின் 10 இலட்சம் துருப்புகள் பங்கெடுத்தன. இந்த யுத்தங்கள் 22 சூலை முதல் 3 செப்டெம்பர் வரை நடைபெற்றன. இறுதியாக உருமேனிய இராணுவமானது வெற்றி பெற்றது. துருப்புகளை இத்தாலியப் போர் முனைக்கு மாற்ற வேண்டியிருந்ததால் மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிட அகத்து வான் மக்கென்செனால் இயலவில்லை. ஜார் மன்னர் பதவி விலகியதற்கு பிறகு செருமானிய அரசாங்கத்தின் உதவியுடன் விளாதிமிர் லெனின் தொடருந்து மூலம் சுவிட்சர்லாந்தில் இருந்து உருசியாவுக்குள் 16 ஏப்ரல் 1917 அன்று அழைத்துச் செல்லப்பட்டார். அதிருப்தி மற்றும் மாகாண அரசாங்கத்தின் பலவீனங்கள் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சியின் பிரபலம் அதிகரிப்பதற்கு வழி வகுத்தது. இக்கட்சி போரை உடனடியாக நிறுத்த கோரியது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு திசம்பரில் செருமனியுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. முதலில் செருமானிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள போல்செவிக்குகள் மறுத்தனர். ஆனால் உக்ரைன் வழியாக செருமானிய துருப்புக்கள் எந்த வித எதிர்ப்பும் இன்றி அணி வகுத்து வந்த போது புதிய அரசாங்கமானது பிரெசுது-லிதோவுசுக் ஒப்பந்தத்திற்கு 3 மார்ச் 1918 அன்று ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தமானது பின்லாந்து, எசுதோனியா, லாத்வியா, லித்துவேனியா, மற்றும் போலந்தின் பகுதிகள் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்புகளை மைய சக்திகளுக்கு அளித்தது. இந்த மிகப் பெரிய செருமானிய வெற்றி நிகழ்ந்த போதும், செருமானியர்களின் இளவேனிற்கால தாக்குதல் தோல்வியில் முடிந்ததற்கு, பிடிக்கப்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமிக்க தேவைப்பட்ட மனித வளமானது செருமானியர்களிடம் இல்லை என்பதும் ஒரு பங்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மைய சக்திகளின் போர் முயற்சிக்கு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவே உணவு அல்லது பிற பொருட்களை இந்த ஒப்பந்தம் பெற்றுத் தந்தது. உருசியப் பேரரசு போரில் இருந்து விலகிய பிறகு கிழக்குப் போர் முனையில் உருமேனியா தான் தனித்து விடப்பட்டதை உணர்ந்தது. மே 1918இல் மைய சக்திகளுடன் புக்கரெஸ்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. உருமேனியா மற்றும் மைய சக்திகளுக்கு இடையிலான போரானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் படி நிலப்பரப்புகளை ஆத்திரியா-அங்கேரி மற்றும் பல்கேரியாவிற்கும், எண்ணெய் சேமக் கையிருப்புகளை செருமனிக்கு குத்தகைக்கும் உருமேனியா விட வேண்டியிருந்தது. எனினும், உருமேனியாவுடன் பெச்சராபியா ஒன்றிணைவதை மைய சக்திகள் அங்கீகரித்ததையும் இந்த நிபந்தனைகள் உள்ளடக்கி இருந்தன. ஏப்ரல் 1917: ஐக்கிய அமெரிக்கா போரில் நுழைகிறது ஐக்கிய அமெரிக்கா நேச நாடுகளுக்கு போர் பொருட்கள் வழங்குவதில் ஒரு முதன்மை வழங்குனராக திகழ்ந்தது. ஆனால், 1914இல் தொடர்ந்து நடு நிலை வகித்தது. இதற்கு பெரும் பகுதி காரணம் போரில் ஐக்கிய அமெரிக்கா ஈடுபடுவதற்கு உள்நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு ஆகும். போருக்கான ஆதரவை உருவாக்க வில்சனுக்கு தேவைப்பட்டத்தில் செருமானிய நீர்மூழ்கி தாக்குதலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக திகழ்ந்தது. இதில் அமெரிக்க உயிரிழப்புகள் மட்டும் ஏற்படாமல் கப்பல்கள் கடலுக்குள் செல்ல மறுத்ததால் வணிகமும் முடங்கியது. 7 மே 1915 அன்று ஒரு செருமானிய நீர்மூழ்கி கப்பலால் பிரித்தானிய பயணிகள் கப்பலான லூசிதனியா மூழ்கடிக்கப்பட்ட போது 128 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். அதிபர் ஊட்ரோ வில்சன் செருமனி மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார். வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறையை ஐக்கிய அமெரிக்கா சகித்துக் கொள்ளாது என்று எச்சரித்தார். ஆனால், போருக்குள் உள்ளிழுக்கப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆகத்து மாதத்தில் எஸ் எஸ் அரபிக் என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டு, மேலும் அமெரிக்கர்கள் இறந்ததற்கு பிறகு செருமனியின் வேந்தர் பெத்மன் கோல்வெக் இத்தகைய தாக்குதல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். எனினும், பிரித்தானிய தடை வளைப்புகளுக்கு எதிர் வினையாக 1 பெப்ரவரி 1917 அன்று வரம்பற்ற நீர் மூழ்கி போர் முறையை பயன்படுத்துவதை செருமனி மீண்டும் தொடங்கியது. 24 பெப்ரவரி 1917 அன்று ஊட்ரோ வில்சனிடம் சிம்மர்மன் தந்தியானது அளிக்கப்பட்டது. இந்த தந்தி சனவரி மாதத்தில் செருமானிய வெளிநாட்டு அமைச்சர் ஆர்தர் சிம்மர்மனால் உருவாக்கப்பட்டிருந்தது. இதை பிரித்தானிய உளவுத்துறையினர் வழிமறித்து பொருள் அறிந்தனர். இத்தந்தியை தங்களது அமெரிக்க ஒத்த நிலையினருடன் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே உருசிய போல்செவிக்குகள் மற்றும் பிரிட்டனுக்கு எதிரான அயர்லாந்து தேசியவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வந்த சிம்மர்மன், பஞ்சோ வில்லா போர் பயணத்தின் போது அமெரிக்க ஊடுருவல்களால் மெக்சிக்கோவில் எழுந்த தேசியவாத எண்ணங்களிலிருந்து தான் மிகு நலன் பெற முடியும் என நம்பினார். ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான ஒரு போரில் உதவி வழங்குவதாக மெக்சிகோ அதிபர் கரன்சாவுக்கு அவர் உறுதிமொழி அளித்தார். மேலும், டெக்சஸ், நியூ மெக்சிகோ, மற்றும் அரிசோனா ஆகிய பகுதிகளை மீண்டும் மெக்சிகோ கைப்பற்றுவதற்கு உதவுவதாக உறுதிமொழி அளித்தார். எனினும், இந்த வாய்ப்பானது உடனடியாக கரன்சவால் நிராகரிக்கப்பட்டது. 6 ஏப்ரல் 1917 அன்று நேச நாடுகளின் ஒரு "தோழமை சக்தியாக" செருமனி மீது ஐக்கிய அமெரிக்க பேரவையானது போர் பிரகடனம் செய்தது. ஐக்கிய அமெரிக்க கடற்படையானது இசுகாட்லாந்தின் இசுகாபா நீரிணைப்புக்கு ஒரு போர்க்கப்பல் குழுவை பெரிய கப்பல் குழுவுடன் இணைவதற்காக அனுப்பியது. கப்பல்களுக்கு என பாதுகாப்பை கப்பல்களையும் அனுப்பியது. ஏப்ரல் 1917இல் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையானது 3 இலட்சத்துக்கும் குறைவான வீரர்களையே கொண்டிருந்தது. இதில் தேசிய காவலர் பிரிவுகளும் அடங்கும். அதே நேரத்தில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு இராணுவங்கள் முறையே 41 மற்றும் 83 இலட்சம் வீரர்களை கொண்டிருந்தன. 1917ஆம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை சட்டமானது 28 இலட்சம் வீரர்களை இராணுவத்தில் சேர்த்தது. இவ்வளவு எண்ணிக்கையிலான வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதும், ஆயுதம் வழங்குவதும் ஒரு பெரிய இராணுவ உபகரண சவாலாக இருந்த போதிலும் இவ்வாறு சேர்த்தது. சூன் 1918 வாக்கில் 6.67 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க சிறப்பு படையின் உறுப்பினர்கள் பிரான்சுக்கு கப்பல் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டனர். நவம்பர் மாத இறுதியில் இந்த எண்ணிக்கையானது 20 இலட்சத்தை எட்டியது. எனினும், அமெரிக்காவின் செயல் உத்தி கொள்கையானது 1914க்கு முந்தைய கொள்கைகளை அடிப்படையாக கொண்டே இன்னும் இருந்தது. 1918ஆம் ஆண்டு வாக்கில் பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த ஆயுதங்கள் எனும் உத்தியிலிருந்து கிட்டத்தட்ட ஓர் உலகம் தொலைவில் இது அமைந்திருந்தது. ஐக்கிய அமெரிக்க தளபதிகள் ஆரம்பத்தில் இத்தகைய யோசனைகளை ஏற்றுக் கொள்வதில் மெதுவாகவே செயல்பட்டனர். இது ஐக்கிய அமெரிக்கா கடுமையான இழப்புகளை சந்திப்பதற்கு இட்டுச் சென்றது. போரின் கடைசி மாதத்திலேயே இத்தகைய குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. செருமனி நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தனது உள்ளார்ந்த நம்பிக்கையையும் தாண்டி, அமைதியை உருவாக்குவதில் ஐக்கிய அமெரிக்கா ஒரு முன்னணி பங்கை ஆற்றுவதை உறுதி செய்வதற்காக வில்சன் போரில் ஈடுபட்டார். இதன் பொருள் யாதெனில், இவரது நேச நாடுகள் விரும்பியதைப் போல பிரித்தானிய அல்லது பிரெஞ்சு பிரிவுகளுடன் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு மாறாக, அமெரிக்க சிறப்பு பிரிவானது ஒரு தனியான இராணுவ படையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். 1914ஆம் ஆண்டுக்கு முந்தைய "வெட்டவெளி போர் முறையின்" ஓர் ஆதரவாளராகிய அமெரிக்க சிறப்புப் படை தளபதி யோவான் ஜே. பெர்சிங்கால் இது வலிமையாக ஆதரிக்கப்பட்டது. பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர் சேணேவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை, தவறாக வழி நடத்தப்பட்ட மற்றும் அமெரிக்க "தாக்குதல் உத்வேகத்துடன்" பொருந்தாத ஒன்று என பெர்சிங் கருதினார். 1917இல் கடுமையான இழப்புகளைச் சந்தித்த இவரது நேச நாடுகளின் விருப்பத்திற்கு எதிராக அமெரிக்க துருப்புக்களின் கட்டுப்பாட்டை அமெரிக்காவே வைத்திருப்பதற்கும், தனியான பிரிவுகளாக இயங்கும் வரையில் அமெரிக்க துருப்புகளை முன் கள கோட்டிருக்கு அனுப்புவதற்கு இவர் மறுப்பும் தெரிவித்தார். இதன் விளைவாக போரில் முதல் முக்கிய ஐக்கிய அமெரிக்க ஈடுபாடானது 1918இன் செப்டெம்பர் இறுதியில் நடைபெற்ற மியூசே-அர்கோன் தாக்குதல் இருந்தது. ஏப்ரல் முதல் சூன்: நிவெல்லேயின் தாக்குதலும், பிரெஞ்சு இராணுவம் கலகம் செய்தலும் வெர்துன் யுத்தமானது பிரெஞ்சு காரர்களுக்கு கிட்ட தட்ட 4 இலட்சம் வீரர்களின் இழப்பைக் கொடுத்தது. கொடுமையான சூழ்நிலையானது வீரர்களின் மனப்பான்மையை பெரிதும் பாதித்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஒழுங்கீன நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றது. இந்நிகழ்வுகள் சிறிதளவே நடைபெற்ற போதும், தங்களது தியாகங்கள் தங்களது அரசாங்கம் அல்லது உயரதிகாரிகளால் பாராட்டப்படவில்லை என வீரர்கள் மத்தியில் இருந்த ஓர் எண்ணத்தை இது பிரதிபலித்தது. ஒட்டு மொத்த போரின் உளவியல் ரீதியாக மிகுந்த சோர்வை ஏற்படுத்தக் கூடியதாக வெர்துன் யுத்தம் இருந்ததாக போரிட்ட இரு பிரிவினருமே கூறினர். இதையறிந்த பிரெஞ்சு தளபதி பிலிப் பெதைன் இராணுவ பிரிவுகளை அடிக்கடி இடம் மாற்றினார். இந்த செயல்முறையே நோரியா முறைமை என்று அறியப்படுகிறது. பிரிவுகளின் சண்டையிடும் ஆற்றலானது பெருமளவுக்கு குறையும் முன்னரே அவை யுத்தத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதை இது உறுதி செய்த அதே நேரத்தில், இதன் விளைவு யாதெனில், பிரெஞ்சு இராணுவத்தின் ஒரு பெரும் அளவிலானோர் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர் என்பதாகும். 1917ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வீரர்களின் மனப்பான்மையானது, நல்ல சண்டை வரலாறுகளை கொண்ட இராணுவ பிரிவுகளிலும் கூட, நொறுங்கக் கூடியதாக இருந்தது. திசம்பர் 1916இல் மேற்குப் போர் முனையில் பிரெஞ்சு இராணுவங்களின் தளபதியாக பெதைனுக்கு பதிலாக இராபர்ட்டு நிவெல்லே நியமிக்கப்பட்டார். ஒரு கூட்டு பிரெஞ்சு-பிரித்தானிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாம்பெயின் மாகாணத்தில் ஓர் இளவேனிற்கால தாக்குதலுக்கு திட்டமிடத் தொடங்கினார். தன்னுடைய முதன்மை இலக்கான செமின் தேசு தேம்சு சாலையை கைப்பற்றுவது ஒரு பெரும் திருப்பு முனையை கொடுக்கும் என்றும், 15 ஆயிரத்திற்கும் மேலான வீரர் இழப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினார். எனினும், சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் செருமானிய உளவுத்துறையினர் இதன் உத்தி மற்றும் கால குறிப்புகள் குறித்து நன்றாக தகவல் அளிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், இவ்வாறாக இருந்த போதிலும் 16 ஏப்ரல் அன்று தாக்குதல் தொடங்கிய போது பிரெஞ்சுக்காரர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கான அனுகூலங்களைப் பெற்றனர். பிறகு இன்டன்பர்க்கு கோட்டின் புதிதாக கட்டப்பட்ட மற்றும் மிகுந்த வலிமையான தற்காப்புகளால் பிரெஞ்சுக்காரர்களின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டது. நிவெல்லே முன் கள தாக்குதல்களை தொடர்ந்தார். 25 ஏப்ரல் வாக்கில் பிரெஞ்சுக்காரர்கள் கிட்டத்தட்ட 1.35 இலட்சம் வீரர்களை இழந்தனர். இதில் 30,000 வீரர்கள் இறந்ததும் அடங்கும். இதில் பெரும்பாலானோர் முதல் இரண்டு நாட்களில் இழக்கப்பட்டனர். அர்ரசு என்ற இடத்தின் மேல் இதே சமயத்தில் நடத்தப்பட்ட பிரித்தானிய தாக்குதல்கள் இதை விட வெற்றிகரமாக இருந்தன. எனினும், ஒட்டு மொத்தமாக போரில் இது சிறிதளவே தாக்கத்தை அளிப்பதாக இருந்தது. முதல் முறையாக ஒரு தனிப்பிரிவாக செயல்பட்ட கனடா நாட்டு பிரிவினர் விமி மலைச்சரிவை யுத்தத்தின் போது கைப்பற்றினர். கனடா நாட்டவருக்கு ஒரு தேச அடையாள உணர்வை உருவாக்கியதில் ஒரு திருப்பு முனை தருணமாக பல கனடா நாட்டவர்களால் இது பார்க்கப்படுகிறது. நிவெல்லே தனது தாக்குதலை தொடர்ந்த போதிலும் 3 மே அன்று வெர்துனில் சில மிக கடினமான சண்டைகளில் ஈடுபட்டிருந்த 21வது பிரிவானது யுத்தத்திற்கு செல்ல கொடுக்கப்பட்ட ஆணைகளுக்கு மறுப்பு தெரிவித்தது. இது பிரெஞ்சு இராணுவ கலகங்களை தொடங்கி வைத்தது. சில நாட்களுக்குள்ளாகவே "கூட்டு ஒழுங்கீன" செயல்களானவை 54 இராணுவ பிரிவுகளுக்கு பரவின. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இராணுவத்திலிருந்து விலகினர். இந்த கொந்தளிப்பானது கிட்டத்தட்ட முழுவதுமாக காலாட்படையினர் மத்தியில் மட்டுமே நடைபெற்றது. அவர்களது கோரிக்கைகள் பெரும்பாலும் அரசியல் சார்பற்றவையாக இருந்தன. தாயகத்தில் இருக்கும் தங்களது குடும்பங்களுக்கு நல்ல பொருளாதார உதவி, வாடிக்கையான இடைவெளிகளில் விடுமுறை ஆகியவற்றையும் இது உள்ளடக்கியிருந்தது. இதை நிவெல்லே ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தார். பெரும்பாலான வீரர்கள் தங்களது சொந்த நிலைகளை தற்காக்க தொடர்ந்து எண்ணம் கொண்டிருந்த போதிலும், தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுக்க அவர்கள் மறுத்தனர். இராணுவ தலைமை மீது இருந்த நம்பிக்கையானது ஒட்டு மொத்தமாக இல்லாமல் போனதை இது பிரதிபலித்தது. 15 மே அன்று நிவெல்லே தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பெதைன் தளபதியானார். கடுமையான தண்டனை கோரிக்கைகளை தடுத்தார். இராணுவ வீரர்களுக்கான சூழ்நிலையை முன்னேற்றுவதன் மூலம் அவர்களது மனப்பான்மையை மீண்டும் நிலைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். சரியான எண்ணிக்கையானது தற்போதும் விவாதிக்கப்படும் அதே நேரத்தில், உண்மையில் வெறும் 27 வீரர்கள் மட்டுமே கலகத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிற 3,000 பேர் பல்வேறு வகையான காலங்களைக் கொண்ட சிறை வாசத்துக்கு அனுப்பப்பட்டனர். எனினும், இந்நிகழ்வின் உளவியல் தாக்கங்களானவை நீண்ட காலத்துக்கு தொடர்ந்தன. "பெதைன் ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தூய்மைப்படுத்தினார்...ஆனால் அவர்கள் பிரெஞ்சு போர் வீரனின் இதயத்தை பாழாக்கி விட்டனர்" என்று ஒரு மூத்த இராணுவ வீரர் இந்நிகழ்வைப்பற்றி குறிப்பிட்டார். திசம்பரில் மைய சக்திகள் உருசியாவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இவ்வாறாக மேற்கில் பயன்படுத்த ஒரு பெரும் எண்ணிக்கையிலான செருமானிய துருப்புகளை விடுதலை செய்ய வைத்து பெற்றன. செருமானிய வலுவூட்டல் படைகள் மற்றும் புதிய அமெரிக்க துருப்புகள் போருக்குள் கொட்டப்பட்ட போது, போரின் முடிவானது மேற்குப் போர்முனையில் தீர்மானிக்கப்படும் என்பது உறுதியானது. ஒரு நீண்டகாலம் இழுக்கக்கூடிய போரை தங்களால் வெல்ல முடியாது என மைய சக்திகள் அறிந்திருந்தன. ஓர் இறுதியான திடீர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட வெற்றிக்கு அவை அதிகப்படியான நம்பிக்கையைக் கொண்டிருந்தன. மேலும், ஐரோப்பாவில் சமூக கொந்தளிப்பு மற்றும் புரட்சி குறித்து இரு பிரிவினரின் அச்சமானது அதிகரித்து கொண்டு வந்தது. இவ்வாறாக, இரு பிரிவினரும் ஒரு தீர்க்கமான வெற்றியை சீக்கிரமே பெற வேண்டும் என விரும்பினர். 1917இல் ஆத்திரியாவின் பேரரசர் முதலாம் சார்லசு பெல்ஜியத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் சகோதரரான சித்துசுவை ஓர் இடையீட்டாளராக பயன்படுத்தி பிரெஞ்சு பிரதமர் கிளமென்சியேவுடன் தனியான அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு இரகசியமாக முயற்சித்தார். இதை செருமனிக்கு தெரியாமல் இவர் செய்தார். இத்தாலி இந்த முன்மொழிவுகளை எதிர்த்தது. பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த போது இவரது முயற்சியானது செருமனிக்கு தெரிய வந்தது. இது ஒரு தூதரக அழி செயலுக்கு இட்டுச் சென்றது. உதுமானியப் பேரரசு சண்டை, 1917-1918 1917 மார்ச் மற்றும் ஏப்ரலில் முதலாம் மற்றும் இரண்டாம் காசா யுத்தங்களில் எகிப்திய சிறப்புப் படையின் முன்னேற்றத்தை செருமானிய மற்றும் உதுமானியப் படைகள் நிறுத்தின. எகிப்திய சிறப்புப் படையானது உரோமானி யுத்தத்தில் ஆகத்து 1916இல் தங்களது நடவடிக்கையை தொடங்கி இருந்தது. அக்டோபர் மாத இறுதியில் சினாய் மற்றும் பாலத்தீன படையெடுப்பானது மீண்டும் தொடரப்பட்டது. இப்படையெடுப்பில் தளபதி எட்மன்ட் ஆலன்பேயின் 20வது பிரிவு, 21 ஆவது பிரிவு மற்றும் பாலைவன குதிரைப்படை பிரிவானது பீர்சேபா யுத்தத்தை வென்றது. முகர் மலைச்சரிவு யுத்தத்தில் ஒரு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு உதுமானிய இராணுவங்கள் தோற்கடிக்கப்பட்டன. திசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் எருசேல போரில் மற்றொரு உதுமானிய தோல்விக்குயை தொடர்ந்து எருசேலமானது கைப்பற்றப்பட்டது. இதே நேரத்தில் 8வது இராணுவத்தின் தளபதியாக தனது பணியில் இருந்து பிரியேட்ரிச் பிரேய்கர் கிரெஸ் வான் கிரெசென்ஸ்டெயின் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பிறகு தேசாவத் பாஷா தளபதியானார். ஒரு சில மாதங்களுக்கு பிறகு பாலத்தீனத்தில் உதுமானிய இராணுவத்தின் தளபதியாகிய எரிக் வான் பால்கன்கயனுக்கு பதிலாக ஓட்டோ லிமன் வான் சாண்டர்ஸ் தளபதியானார். 1918இன் தொடக்கத்தில் முன் கள போர் கோடானது நீட்டிக்கப்பட்டது. 1918 மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பிரித்தானிய பேரரசின் படைகளால் நடத்தப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் திரான்ஸ் யோர்தான் தாக்குதல்களை தொடர்ந்து யோர்தான் பள்ளத்தாக்கானது ஆக்கிரமிக்கப்பட்டது. மார்ச்சில் எகிப்திய சிறப்பு படையின் பெரும்பாலான பிரித்தானிய காலாட்படை மற்றும் சேம கையிருப்பு குதிரைப் படையினர் இளவேனிற்கால தாக்குதலின் விளைவாக மேற்குப் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர். பிறகு அவர்களுக்கு மாற்றாக இந்திய இராணுவ பிரிவுகள் அனுப்பப்பட்டன. பல மாதங்கள் மறு ஒருங்கிணைப்பு மற்றும் கோடை கால பயிற்சியின் போது உதுமானிய முன் கள போர் கோட்டின் பகுதிகள் மீது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு தாக்குதலுக்கு தயாராகுவதற்காகவும், புதிதாக வருகை புரிந்த இந்திய இராணுவ காலாட்படைக்கு புதிய சூழலைப் பழக்கப்படுத்துவதற்காகவும் நேச நாடுகளுக்கு மிகுந்த அனுகூலத்தை தரக் கூடிய நிலைகளை பெறும் வகையிலே, இந்த தாக்குதல்கள் போர் கள கோட்டினை வடக்கே இன்னும் உந்தித் தள்ளியது. செப்டெம்பர் மாத நடுப் பகுதி வரை பெரிய அளவிலான நடவடிக்கைகளுக்கு இவ்வாறாக இணைக்கப்பட்ட படையானது தயாராகாமல் இருந்தது. மறு ஒருங்கிணைக்கப்பட்ட எகிப்திய சிறப்புப் படையானது ஒரு மேற்கொண்ட குதிரைப்படை பிரிவுடன் செப்டெம்பர் 1918இல் மெகித்தோ யுத்தத்தில் உதுமானியப் படைகளின் அமைப்பை உடைத்தது. இரண்டு நாட்களில் மெதுவாக குண்டு மாரி பொழிந்த பீரங்கிகளால் ஆதரவளிக்கப்பட்ட பிரித்தானிய மற்றும் இந்திய காலாட் படையினர் உதுமானிய முன்கள போர் கோட்டினை உடைத்தனர். துல்கர்மில் இருந்த உதுமானியப் பேரரசின் 8வது இராணுவத்தின் தலைமையகத்தை கைப்பற்றின. மேலும், தபுசோர், அரரா ஆகிய இடங்களிலிருந்த தொடர்ச்சியான பதுங்கு குழி கோடுகளையும், நபுலுசுவில் இருந்த உதுமானிய பேரரசின் 7வது இராணுவத்தின் தலைமையகத்தையும் கைப்பற்றின. காலாட்படையினரால் உருவாக்கப்பட்ட முன்கள கோட்டின் உடைப்பின் வழியாக பாலைவன குதிரைப்படை பிரிவானது பயணம் செய்து. கிட்டத்தட்ட ஓய்வின்றி தொடர்ச்சியாக, ஆத்திரேலிய இலகுரக குதிரைப் படை, பிரித்தானிய சேம கையிருப்பு குதிரைப்படை, இந்திய ஈட்டியாளர்கள் மற்றும் நியூசிலாந்து குதிரைப்படை துப்பாக்கியாளர்களின் பிரிவு ஆகியோரால் செசுரீல் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது, இவர்கள் நாசரேத், அபுலா மற்றும் பெய்சன், செனின், மத்திய தரைக்கடல் கரையிலிருந்த அய்பா, எசசு தொடருந்து இருப்புப் பாதையில் யோர்தான் ஆற்றுக்கு கிழக்கே இருந்த தரா ஆகிய இடங்களை கைப்பற்றின. திமிஷ்குவுக்கு வடக்கே செல்லும் வழியில் கலிலேயக் கடலில் அமைந்திருந்த சமக் மற்றும் திபேரியு ஆகிய இடங்களும் கைப்பற்றப்பட்டன. அதே நேரத்தில், நியூசிலாந்து தளபதி சய்தோரின் படையான ஆத்திரேலிய இலகுரக குதிரைப் படை, நியூசிலாந்து குதிரைப்படை துப்பாக்கி வீரர்கள், இந்திய, பிரித்தானிய மேற்கிந்திய தீவுகள் மற்றும் யூத காலாட்படையினர் யோர்தான் ஆற்று பாதைகள், எஸ் சால்ட் அம்மான் மற்றும் சிசா எனும் இடத்தில் உதுமானியப் பேரரசின் பெரும்பாலான 4வது இராணுவத்தை கைப்பற்றின. அலெப்போவுக்கு வடக்கே சண்டையானது தொடர்ந்து கொண்டிருந்த போது, அக்டோபர் இறுதியில் கையொப்பமிடப்பட்ட முத்ரோசு போர் நிறுத்த ஒப்பந்தமானது உதுமானியப் பேரரசுடன் இருந்த சண்டைகளை நிறுத்தியது. 1918: முதன்மை நிகழ்வுகளின் காலவரிசை செருமானிய இளவேனிற்கால தாக்குதல் மேற்குப் போர் முனையில் 1918ஆம் ஆண்டு தாக்குதலுக்காக திட்டங்களை (குறிப்பெயர் மைக்கேல் நடவடிக்கை) லுதென்தோர்பு உருவாக்கினார். ஒரு தொடர்ச்சியான, தோற்று ஓடுவது போல் நடித்தால் மற்றும் முன்னேற்றங்களை கொண்ட இளவேனிற்கால தாக்குதலானது பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு படைகளை பிரிப்பதற்காக நடத்தப்படும் என திட்டமிடப்பட்டது. பெருமளவிலான ஐக்கிய அமெரிக்க கப்பல்கள் வருவதற்கு முன்னரே போரை முடிக்க செருமானிய தலைமைத்துவமானது எண்ணியது. 21 மார்ச் 1918 அன்று செயின் குயின்டினுக்கு அருகில் உள்ள பிரித்தானிய படைகள் மீதான தாக்குதலுடன் நடவடிக்கையானது தொடங்கியது. அதற்கு முன்னர் கண்டிராத 60 கிலோமீட்டர் முன்னேற்றத்தை செருமானியப் படைகள் சாதித்தன. பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய பதுங்கு குழிகள் உண்மையான ஊடுருவல் உத்திகளான குதியேர் உத்திகளை பயன்படுத்தி உட்புகப்பட்டன. செருமானிய தளபதி ஆசுகார் வான் குதியேரின் உத்திகளான இவற்றுக்கு இவ்வாறான பெயர் கொடுக்கப்பட்டது. தனித்துவமாக பயிற்சி அளிக்கப்பட்ட புயல் துருப்பு வீரர்களின் பிரிவுகளை பயன்படுத்தி இவை நடத்தப்பட்டன. முன்னர், தாக்குதல்களானவை நீண்ட தூர சேணேவி வெடிகல வீச்சு மற்றும் ஏராளமான படை வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் என அமைந்திருந்தன. எனினும், 1918ஆம் ஆண்டில் இளவேனிற்கால தாக்குதலில் லுதென்தோர்பு சேணேவியை குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தினார். எதிரிகளின் பலவீனமான நிலைகள் மீது காலாட்படையினரின் சிறிய குழுக்களை ஊடுருவச் செய்ததன் மூலம் தன்னுடைய நடவடிக்கையை செய்தார். இவர்கள் ஆணை வழங்கும் மற்றும் பொருட்களை வழங்கும் பகுதிகளை தாக்கினர். கடுமையான எதிர்ப்பை கொடுத்த நிலைகளை தவிர்த்து விட்டு முன்னேறினர். பிறகு மிகுந்த கனரக ஆயுதங்களை உடைய காலாட்படையினர் இந்த தனித்துவிடப்பட்ட நிலைகளை அழித்தனர். இந்த செருமானிய வெற்றியானது பெருமளவுக்கு திடீர் தாக்குதல்களை சார்ந்திருந்தது. போர் களமானது பாரிசிலிருந்து 120 கிலோ மீட்டர்களுக்குள் வந்தது. மூன்று கனரக குருப் தொடருந்து துப்பாக்கிகள் 183 வெடிகலங்களை தலைநகரம் மீது வீசின. இது ஏராளமான பாரிஸ் குடிமக்கள் தப்பித்து ஓடுவதற்கு காரணமானது. தொடக்க கால தாக்குதலானது மிகவும் வெற்றிகரமாக இருந்ததால் இரண்டாம் கெய்சர் வில்லியம் 24 மார்ச் நாளை ஒரு தேசிய விடுமுறையாக அறிவித்தார். ஏராளமான செருமானியர்கள் வெற்றி நெருங்கி விட்டதாக எண்ணினர். எனினும், கடுமையான சண்டைக்குப் பிறகு தாக்குதலானது நிறுத்தப்பட்டது. பீரங்கி வண்டிகள் அல்லது இயந்திர சேணேவிகள் இல்லாத காரணத்தால் செருமானியர்களால் தங்கள் பெற்ற நிலப்பரப்புகள் மீது தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்த இயலவில்லை. வெடி கலங்களால் துளைக்கப்பட்டிருந்த மற்றும் பெரும்பாலும் வாகனங்களால் கடக்க இயலாத நிலப்பரப்பு மீது அமைந்திருந்த நீண்ட தொலைவுகளாலும் செருமானிய இராணுவத்திற்கு உதவி பொருட்கள் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. மைக்கேல் நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு ஆங்கிலேயக் கால்வாய் துறைமுகங்களுக்கு எதிராக ஜார்ஜ் நடவடிக்கையை செருமனி தொடங்கியது. சிறிய அளவு நிலப்பரப்புகளை செருமனி பெற்றதற்கு பிறகு நேச நாடுகள் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தின. பிறகு தெற்கே இருந்த செருமானிய இராணுவமானது புளுச்சர் மற்றும் யோர்க் ஆகிய நடவடிக்கைகளை நடத்தியது. பரந்த அளவில் பாரிசை நோக்கி உந்தித் தள்ளியது. ரெயிம்சு நகரத்தை சுற்றி வளைக்கும் ஒரு முயற்சியாக 15 சூலை என்று மர்னே (இரண்டாவது மர்னே யுத்தம்) நடவடிக்கையை செருமனி தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக நடந்த பதில் தாக்குதலானது நூறு நாட்கள் தாக்குதலை தொடங்கி வைத்தது. போரில் நேச நாடுகளின் முதல் வெற்றிகரமான தாக்குதலை இது குறித்தது. 20 சூலை வாக்கில் தாங்கள் தொடங்கிய இடத்திற்கே மர்னே வழியாக செருமானியர்கள் பின்வாங்கினர். சிறிதளவே சாதித்து இருந்தனர். இதற்குப் பிறகு செருமானிய இராணுவமானது என்றுமே போரில் முன்னேற்றத்தை பெறவில்லை. 1918 மார்ச் மற்றும் ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில் செருமானிய இழப்பானது 2.50 இலட்சமாக இருந்தது. இதில் மிகுந்த அளவு பயிற்சி அளிக்கப்பட்ட செருமானிய புயல் துருப்பு வீரர்களும் அடங்கியிருந்தனர். இதே நேரத்தில், செருமனி அதன் சொந்த நாட்டில் சிதைவுற்றுக் கொண்டிருந்தது. போர் எதிர்ப்பு போராட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன. இராணுவத்தின் உற்சாக மனப்பான்மையானது வீழ்ச்சி அடைந்தது. தொழில் துறை உற்பத்தியானது 1913ஆம் ஆண்டில் இருந்த நிலையைப் போல் பாதியளவாக இருந்தது. நூறு நாட்கள் தாக்குதல் நூறு நாட்கள் தாக்குதல் என்று அறியப்படும் நேச நாடுகளின் பதில் தாக்குதலானது 8 ஆகத்து 1918 அன்று அமியேன்சு யுத்தத்துடன் தொடங்கியது. இந்த யுத்தத்தில் 400க்கும் இருக்கும் மேற்பட்ட பீரங்கி வண்டிகள், 1.20 இலட்சத்துக்கும் மேற்பட்ட பிரித்தானிய, பிரித்தானிய மேலாட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பிரெஞ்சு துருப்புகள் பங்கெடுத்தன. முதல் நாள் முடிவில் செருமானிய கோட்டுப் பகுதியில் 24 கிலோமீட்டர் நீளமுடைய ஓர் இடைவெளி உருவாக்கப்பட்டது. தற்காப்பாளர்கள் தங்களது மனப்பான்மை வீழ்ச்சியடைந்ததை வெளிக்காட்டினர். இந்த நாளை "செருமானிய இராணுவத்தின் கருப்பு நாள்" என்று செருமனியின் லுதென்தோர்பு குறிப்பிட்டார். நேச நாடுகள் 23 கிலோ மீட்டர் வரை முன்னேறியதற்குப் பிறகு, செருமானிய எதிர்ப்பானது அதிகரித்தது. 12 ஆகத்து அன்று யுத்தமானது முடிவுக்கு வந்தது. முற்காலத்தில் பலமுறை நடைபெற்றதைப் போல தங்களது ஆரம்பகால வெற்றியை தொடர்ந்ததைப் போல், அமியேன்சு யுத்தத்தை தொடர்வதற்கு பதிலாக நேச நாடுகள் தங்களது கவனத்தை வேறுபக்கம் திருப்பின. எதிர்ப்பு வலிமையானதற்கு பிறகு ஒரு தாக்குதலை தொடர்வது என்பது உயிர்களை வீணாக்கும் என்று நேச நாட்டுத் தலைவர்கள் தற்போது உணர்ந்தனர். ஒரு போர்க்கள கோட்டை தாண்டிச் செல்வதற்கு பதிலாக மற்றொரு பக்கம் திரும்புவது நன்மை பயக்கும் என்று உணர்ந்தனர். பக்கவாட்டு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட வெற்றிகரமான முன்னேற்றங்களிலிருந்து அனுகூலம் பெறுவதற்காக நேச நாட்டுத் தலைவர்கள் தொடர்ச்சியான திடீர் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் தொடக்க உந்துதலை ஒவ்வொரு தாக்குதலும் இழக்கும் போதும், அத்தாக்குதலில் இருந்து பிறகு பின்வாங்கினர். இத்தாக்குதல் தொடங்கியதற்கு பிறகு அடுத்த நாள் லுதென்தோர்பு கூறியதாவது: "நம்மால் இனி மேல் போரை வெல்ல முடியாது. ஆனால் இப்போரில் நாம் தோல்வியும் அடையக்கூடாது". 11 ஆகத்து அன்று கெய்சரிடம் தன்னுடைய இராஜினாமா கடிதத்தை லுதென்தோர்பு கொடுத்தார். கெய்சர் இராஜினாமாவை நிராகரித்தார். கெய்சர் கூறியதாவது, "நாம் நிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். எதிர்ப்புக்கான நமது சக்தியின் எல்லையை கிட்டத்தட்ட நாம் அடைந்த விட்டோம். போர் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்". 13 ஆகத்து அன்று பெல்ஜியத்தின் இசுபா என்ற இடத்தில் இன்டன்பர்க்கு, லுதென்தோர்பு, வேந்தர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்சு ஆகியோர் இராணுவ ரீதியாக போர் முடிவுக்கு கொண்டு வரப்பட இயலாது என்பதை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அடுத்த நாளில் செருமானிய முடியரசு மன்றமானது களத்தில் வெற்றி என்பது நிகழ தற்போது வாய்ப்பில்லை என்று முடிவு செய்தது. திசம்பர் வரை மட்டுமே தங்களால் போரை தொடர இயலும் என ஆத்திரியா மற்றும் அங்கேரி எச்சரித்தன. உடனடி அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு லுதென்தோர்பு அறிவுறுத்தினார். பவாரியாவின் இளவரசர் ரூப்ரெக்து பதேனின் இளவரசர் மாக்சிமிலியனுக்கு பின்வருமாறு எச்சரித்தார்: "நமது இராணுவ நிலைமையானது மிகவும் வேகமாக மோசமடைந்து விட்டது. குளிர் காலத்தை தாண்டி போரை நம்மால் நடத்த இயலும் என என்னால் இனி மேலும் நம்ப இயலவில்லை. ஓர் அழிவு அதற்கு முன்னரே நமக்கு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது". ஆல்பெர்ட் யுத்தம் பிரித்தானிய மற்றும் அதன் மேலாட்சிக்குட்பட்ட நிலப்பரப்புகளின் படைகள் இந்த படையெடுப்பின் அடுத்த கட்டமாக 21 ஆகத்து அன்று ஆல்பெர்ட் யுத்தத்தை தொடங்கின. பின் வந்த நாட்களில் இந்த தாக்குதலானது பிரெஞ்சு மற்றும் பிறகு மேற்கொண்ட பிரித்தானிய படைகளால் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆகத்து மாதத்தின் கடைசி வாரத்தின் போது எதிரிக்கு எதிரான ஒரு 110 கிலோமீட்டர் போர் முனையில் நேச நாடுகளின் அழுத்தமானது கடுமையானதாகவும், உறுதியானதாகவும் இருந்தது. செருமானிய பதிவுகளின் படி, "ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வந்துகொண்டிருந்த மற்றும் புயலென புகுந்த எதிரிகளுக்கு எதிரான குருதி தோய்ந்த சண்டையில் கழிந்தது. புதிய போர் கள கோடுகளுக்கு ஓய்வெடுக்க செல்லாமல், ஓய்வறைகளில் உறக்கமின்றி இரவுகள் கழிந்தன." இத்தகைய முன்னேற்றங்களை எதிர் கொண்ட போது 2 செப்டெம்பர் அன்று செருமானிய ஒபெர்ஸ்தே கீரேஸ்லெயிதுங் ("உச்சபட்ச இராணுவ தலைமை") தெற்கே இன்டன்பர்க்கு கோட்டிற்கு பின் வாங்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட்டது. முந்தைய ஆண்டு ஏப்ரலில் தாங்கள் சுற்றி வளைத்து கைப்பற்றிய நிலப்பரப்பை சண்டையிடாமல் செருமானியர்கள் விட்டுக் கொடுத்தனர். லுதென்தோர்பு பின்வருமாறு கூறினார், "நாம் தற்போதைய தேவையை ஒப்புக் கொண்டாக வேண்டும் ... ஒட்டு மொத்த போர் முனையையும் இசுகார்பேயிலிருந்து வெசுலேவுக்கு பின்வாங்கச் செய்ய வேண்டும்." 8 ஆகத்து அன்று தொடங்கிய கிட்டத்தட்ட 4 வார சண்டையில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட செருமானியர்கள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். செருமானிய உயர் தலைமையானது போரில் தோல்வி அடைந்ததை உணர்ந்தது. திருப்திகரமான ஒரு முடிவை எட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது. 10 செப்டெம்பர் அன்று இன்டன்பர்க்கு ஆத்திரியாவின் பேரரசர் சார்லசுக்கு அமைதி முயற்சிகளை செய்யுமாறு வற்புறுத்தினார். சமரசம் செய்து வைக்குமாறு நெதர்லாந்திடம் செருமனி முறையிட்டது. 14 செப்டெம்பர் ஒன்று அனைத்து எதிரி நாடுகள் மற்றும் நடு நிலை வகித்த நாடுகளுக்கு ஆத்திரிய ஒரு குறிப்பை அனுப்பியது. நடு நிலை வகிக்கும் நாட்டின் நிலப்பரப்பில் அமைதி பேச்சு வார்த்தைகளுக்காக சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைத்தது. 15 செப்டெம்பர் அன்று பெல்ஜியத்திடம் அமைதி உடன்படிக்கை செய்ய செருமனி முன்வந்தது. இரண்டு அமைதி வாய்ப்பளிப்புகளும் நிராகரிக்கப்பட்டன. இன்டன்பர்க்கு கோட்டை நோக்கி நேச நாடுகளின் முன்னேற்றம் செப்டெம்பரில் இன்டன்பர்க்கு கோட்டின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் நேச நாடுகள் முன்னேறின. வலிமையான பின்புற காவல் நடவடிக்கைகள் மூலம் செருமானியர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர். ஏராளமான பதில் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் இன்டன்பர்க்கு கோட்டின் நிலைகள் மற்றும் காவல் நிலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தன. செப்டெம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் பிரித்தானிய சிறப்புப் படை மட்டுமே 30,441 போர்க் கைதிகளை பிடித்தது. 24 செப்டெம்பர் அன்று பிரித்தானியர் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு நாட்டவராலும் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலானது வடக்கு பிரான்சின் செயின். குவேன்டின் நகரத்திற்கு 3 கிலோமீட்டர் தொலைவுக்குள் வந்தது. தற்போது இன்டன்பர்க்கு கோட்டின் பக்கவாட்டில் அல்லது பின்புறம் இருந்த நிலைகளுக்கு செருமானியர்கள் பின்வாங்கினர். இதே நாளில் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தவிர்க்க இயலாதவை என பெர்லினில் இருந்த தலைவர்களுக்கு செருமனியின் உச்சபட்ச இராணுவ தலைமையானது தகவல் அளித்தது. இன்டன்பர்க்கு கோட்டின் மீதான இறுதி தாக்குதலானது 26 செப்டெம்பர் அன்று அமெரிக்க மற்றும் பிரெஞ்சு துருப்புக்களால் தொடங்கப்பட்ட மியூசு-அர்கோன் தாக்குதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்த வாரத்தில் பிளாங்க் மான்ட் மலைச்சரிவு யுத்தத்தில் சாம்பெயின் என்ற நகரத்தின் வழியாக இணைந்து செயல்பட்ட அமெரிக்க மற்றும் பிரெஞ்சு இராணுவ பிரிவுகள் செருமானிய போர்க்கள கோட்டை உடைத்து கொண்டு முன்னேறின. வலிமையான உயர் நிலைகளில் இருந்து கீழிறங்கிச் செல்லும் நிலைக்கு செருமானியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இத்துருப்புக்கள் பெல்ஜிய போர் முனையை நோக்கி முன்னேறின. 8 அக்டோபர் அன்று இன்டன்பர்க்கு கோடானது மீண்டும் பிரித்தானிய மற்றும் அதன் மேலாட்சிக்குட்பட்ட நிலப்பரப்புகளின் துருப்புகளால் கம்பரை யுத்தத்தில் துளைக்கப்பட்டது. செருமானிய இராணுவமானது அதன் போர் முனையை சுருக்கியது. செருமனியை நோக்கி தாங்கள் பின்வாங்கிக் கொண்டிருந்த போது டச்சு போர் முனையை பின்புற காவல் நடவடிக்கைகளை சண்டையிடுவதற்காக ஒரு நங்கூரத்தை போல பயன்படுத்தியது. 29 செப்டெம்பர் அன்று பல்கேரியா ஒரு தனி போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட போது, மாதக் கணக்கில் கடுமையான அழுத்தத்தில் இருந்த லுதென்தோர்பு கிட்டத்தட்ட நொடிந்து போகும் நிலைக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. செருமனியால் இனி மேல் ஒரு வெற்றிகரமான தற்காப்பை நடத்த இயலாது என்பது உறுதியாகி போனது. பால்கன் பகுதியின் வீழ்ச்சியானது தன்னுடைய முதன்மையான எண்ணெய் மற்றும் உணவு வழங்கலை செருமனி இழக்க போகிறது என்பதின் அறிகுறியாக இருந்தது. ஒரு நாளைக்கு 10,000 என்ற விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க துருப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்திலும் கூட செருமனியின் சேம கையிருப்புகள் படைகள் பயன்படுத்தி முடிக்கப்பட்டிருந்தன. மாசிடோனிய போர் முனையில் முன்னேற்றம் 15 செப்டெம்பர் அன்று இரண்டு முக்கியமான நிலைகளில் நேச நாடுகளின் படைகள் வர்தர் தாக்குதலைத் தொடங்கின. அந்த நிலைகள் தோபுரோ முனை மற்றும் தோசுரன் ஏரிக்கு அருகில் இருந்த பகுதி ஆகியவையாகும். தோபுரோ முனை யுத்தத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த உயிரிழப்புகளையே கொடுத்த ஒரு 3 நாள் நீடித்த யுத்தத்திற்குப் பிறகு செர்பிய மற்றும் பிரெஞ்சு இராணுவங்கள் வெற்றியடைந்தன. இறுதியாக போர் முனையை உடைத்து கொண்டு முன்னேறின. இது போன்ற ஒரு நிகழ்வு முதலாம் உலகப் போரில் அரிதாகவே நேச நாடுகளுக்கு நடந்தது. போர் முனை உடைக்கப்பட்ட பிறகு செர்பியாவை விடுவிக்கும் பணியை நேச நாட்டுப் படைகள் தொடங்கின. 29 செப்டெம்பர் அன்று ஸ்கோப்ஜேவை அடைந்தன. இதற்கு பிறகு 30 செப்டெம்பர் அன்று நேச நாடுகளுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பல்கேரியா கையொப்பமிட்டது. செருமானியப் பேரரசர் இரண்டாம் வில்லியம் பல்கேரியாவின் ஜார் மன்னரான முதலாம் பெர்டினான்டுக்கு ஒரு தந்தியை பின் வருமாறு அனுப்பினார்: "அவமானம்! 62,000 செர்பியர்கள் போரின் முடிவை தீர்மானித்து விட்டனர்!". செர்பியாவை விடுவிக்கும் பணியை நேச நாட்டு இராணுவங்கள் தொடர்ந்தன. அதே நேரத்தில் உருமேனியாவில் இருந்து துருப்புக்களை அனுப்பியதன் மூலம் நீசு என்ற இடத்திற்கு அருகில் புதிய போர் முனைகளை நிறுவ செருமனி வெற்றியடையாத முயற்சிகளில் ஈடுபட்டது. 11 அக்டோபர் அன்று செர்பிய இராணுவமானது நீசுவுக்குள் நுழைந்தது. பிறகு பால்கன் போர் முனையை ஒருங்கிணைக்கும் பணியை செருமனி ஆத்திரியா-அங்கேரியிடம் விட்டு விட்டது. 1 நவம்பர் அன்று செர்பியப் படைகள் பெல்கிறேடை விடுவித்தன. ஆத்திரியா-அங்கேரியுடனான தமது எல்லையை தாண்ட தொடங்கின. அரசியல் ரீதியாக ஆத்திரியா-அங்கேரியானது சிதைவுற்று கொண்டிருந்தது. 3 நவம்பர் அன்று இத்தாலியுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஆத்திரியா-அங்கேரி கையொப்பமிட்டது. இவ்வாறாக ஐரோப்பாவில் செருமனியை தன்னந்தனியாக ஆத்திரியா-அங்கேரி விட்டது. 6 நவம்பர் அன்று செர்பிய இராணுவமானது சாராயேவோவை விடுவித்தது. 9 நவம்பர் அன்று நோவி சாத்தை விடுவித்தது. ஆத்திரியா-அங்கேரியின் நிலப்பரப்பில் ஆத்திரியா-அங்கேரியின் செருமானியர் அல்லாத மக்கள் தங்களுக்கென சுதந்திர அரசுகளை உருவாக்க தொடங்கினர். இதை ஆத்திரியா-அங்கேரியால் தடுக்க இயலவில்லை. செருமானிய புரட்சி 1918-1919 நிகழப்போகும் செருமனியின் இராணுவ தோல்வி குறித்த செய்தியானது செருமானிய ஆயுதப்படைகள் முழுவதும் பரவியது. இராணுவ கிளர்ச்சி ஏற்படும் அச்சுறுத்தலானது அதிகமாக இருந்தது. கடற்படை தளபதி ரெயினார்டு சீர் மற்றும் லுதென்தோர்பு ஆகியோர் செருமானிய கடற்படையின் "வல்லமையை" மீண்டும் நிறுவும் ஒரு கடைசி முயற்சியில் இறங்க முடிவு செய்தனர். 1918ஆம் ஆண்டின் அக்டோபர் மாத இறுதியில் வடக்கு செருமனியில் செருமானிய புரட்சியானது தொடங்கியது. தாங்கள் தோல்வி அடைந்து விட்டதாக நம்பிய ஒரு போரில் ஒரு கடைசி மற்றும் பெரும் நடவடிக்கை தொடங்குவதற்கு கடலுக்குள் செல்ல செருமானிய கடற்படையின் பிரிவுகள் மறுத்துவிட்டன. கிளர்ச்சியைத் தொடங்கின. வில்கெல்ம்சேவன் மற்றும் கீல் ஆகிய கடற்படை துறைமுகங்களில் தொடங்கிய மாலுமிகளின் கிளர்ச்சியானது ஒட்டு மொத்த நாடு முழுவதும் சில நாட்களுக்குள்ளாகவே பரவியது. 9 நவம்பர் 1918 அன்று ஒரு குடியரசு அமைவதாக பிரகடனப்படுத்தப்படவதற்கு இது வழி வகுத்தது. கெய்சர் இரண்டாம் வில்லியம் பதவி விலகியதற்கு சிறிது காலத்திலேயே இந்த குடியரசு அறிவிக்கப்பட்டது. செருமனி போரில் சரணடைவதற்கும் இது வழி வகுத்தது. புதிய செருமானிய அரசாங்கம் சரணடைகிறது இராணுவம் வீழ்ச்சியடைந்து கொண்டிருத்தல் மற்றும் கெய்சர் மீதான பரவலான நம்பிக்கை இழப்பு ஆகியவை கெய்சர் பதவி விலகுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் வழி வகுத்தது. செருமனி சரணடைதலை நோக்கி நகர்ந்தது. பதேனின் இளவரசரான மாக்சிமிலியன் 3 அக்டோபர் அன்று செருமனியின் வேந்தராக நேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பெற்றார். ஐக்கிய அமெரிக்க அதிபர் வில்சனுடன் பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கின. பிரித்தானியர் மற்றும் பிரஞ்சுக்காரர்களை விட வில்சன் செருமனிக்கு ஒப்பீட்டளவில் நல்ல நிபந்தனைகளை அளிப்பார் என்ற நம்பிக்கையில் இப்பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி மற்றும் செருமானிய இராணுவத்தின் மீது பாராளுமன்றத்தின் அதிகாரம் ஆகியவற்றுக்கு வில்சன் கோரிக்கை விடுத்தார். 9 நவம்பர் அன்று செருமனியை ஒரு குடியரசாக சமூக சனநாயகக் கட்சியின் பிலிப் செதேமன் அறிவித்த போது எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. கெய்சர், மன்னர்கள் மற்றும் பிற மரபு வழி ஆட்சியாளர்கள் அனைவரும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டனர். செருமனியின் பேரரசர் இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். இது ஏகாதிபத்திய செருமனியின் முடிவாகும். ஒரு புதிய செருமனியானது வெய்மர் குடியரசு என்ற பெயரில் உருவானது. போர் நிறுத்த ஒப்பந்தங்களும், பணிதல்களும் மைய சக்திகளின் வீழ்ச்சியானது உடனடியாக நடந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட முதல் நாடு பல்கேரியா ஆகும். 29 செப்டெம்பர் 1918 அன்று சலோனிகா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அது கையொப்பமிட்டது. பல்கேரியாவின் ஜார் மன்னரான முதலாம் பெர்டினான்டுக்கு அனுப்பிய தன் தந்தியில் செருமானியப் பேரரசர் இரண்டாம் வில்லியம் இச்சூழ்நிலையை பின்வருமாறு விளக்கியிருந்தார்: "அவமானம்! 62,000 செர்பியர்கள் போரின் முடிவை தீர்மானித்து விட்டனர்!". அதே நாள் செருமானிய உச்சபட்ச இராணுவ தலைமையானது இரண்டாம் கெய்சர் வில்லியம் மற்றும் ஏகாதிபத்திய வேந்தர் கோமான் ஜார்ஜ் வான் கெர்த்லிங் ஆகியோருக்கு செருமனி எதிர் கொண்டுள்ள இராணுவ சூழ்நிலையானது நம்பிக்கையளிப்பதாக இல்லை என்று தகவல் அளித்தது. 24 அக்டோபர் அன்று கபோரெட்டோ யுத்தத்திற்குப் பிறகு இழந்த நிலப்பரப்புகளை வேகமாக மீட்டெடுத்த ஒரு முன்னேற்றத்தை இத்தாலியர்கள் தொடங்கினர். இது விட்டோரியோ வெனட்டோ யுத்தத்தில் முடிவடைந்தது. ஓர் ஆற்றல் வாய்ந்த சண்டை படையாக ஆத்திரியா-அங்கேரிய இராணுவத்தின் முடிவை இது குறித்தது. இந்த தாக்குதலானது ஆத்திரியா-அங்கேரிய பேரரசின் சிதைவுறுதலையும் தொடங்கி வைத்தது. அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தின் போது புடாபெஸ்ட், பிராகு மற்றும் சக்ரெப் ஆகிய நகரங்களில் சுதந்திர அறிவிப்புகள் செய்யப்பட்டன. 29 அக்டோபர் அன்று செருமானிய ஏகாதிபத்திய அதிகார மையங்கள் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இத்தாலியிடம் வேண்டின. ஆனால் இத்தாலியர்கள் தங்களது முன்னேற்றத்தை தொடர்ந்தனர். திரெந்தோ, உதினே மற்றும் திரியேத் ஆகிய நகரங்களை அடைந்தனர். 3 நவம்பர் அன்று ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை வேண்டி வெள்ளைக் கொடியை ஆத்திரியா-அங்கேரி அனுப்பியது. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பாரிசிலிருந்த நேச நாட்டு அதிகார மையங்களுடன் தந்தி மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இவை ஆத்திரிய தளபதிக்கு அனுப்பப்பட்டன. இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆத்திரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தமானது பதுவா என்ற நகரத்துக்கு அருகில் உள்ள வில்லா சியுசுதியில் 3 நவம்பர் அன்று கையொப்பமிடப்பட்டது. ஆப்சுபர்கு முடியரசு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதை தொடர்ந்து ஆத்திரியா மற்றும் அங்கேரி ஆகிய நாடுகள் தனித்தனியாக போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. இதைத் தொடர்ந்து வந்த நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர் வீரர்களை பயன்படுத்தி இன்சுபுருக்கு மற்றும் ஒட்டு மொத்த தைரோல் ஆகிய பகுதிகளை இத்தாலிய இராணுவமானது ஆக்கிரமித்தது. 30 அக்டோபர் அன்று உதுமானியப் பேரரசு பணிந்தது. முத்ரோசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 11 நவம்பர் 1918 அன்று காலை 5:00 மணிக்கு கம்பியேக்னே நகரத்தில் ஒரு தொடருந்து பெட்டியில் செருமனியுடனான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமானது கையொப்பமிடப்பட்டது. அதே நாள் காலை 11:00 மணிக்கு - "பதினோராவது மாதத்தின் பதினோராவது நாளில் பதினோராவது மணியில்" - ஆயுத சண்டையானது முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது மற்றும் அது பயன்பாட்டுக்கு வந்தது ஆகியவற்றுக்கு இடைப்பட்ட 6 மணி நேரத்தில் மேற்கு முனையில் இருந்த இரு எதிரெதிர் பிரிவு இராணுவங்களும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்கத் தொடங்கின. ஆனால் சண்டையானது போர் முனையின் பக்கவாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்தது. ஏனெனில் போர் முடிவதற்கு முன்னதாக தளபதிகள் நிலப்பரப்புகளை கைப்பற்ற விரும்பினர். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு ரைன்லாந்து ஆக்கிரமிப்பானது நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்பு இராணுவங்களில் அமெரிக்க, பெல்ஜிய, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் உள்ளடங்கியிருந்தன. நவம்பர் 1918இல் செருமனி மீது படையெடுக்க தேவையான அளவுக்கு மிகுதியான வீரர்களையும், உபகரணங்களையும் நேச நாடுகள் கொண்டிருந்தன. எனினும் போர் நிறுத்த ஒப்பந்த நேரத்தில் செருமானிய எல்லையை எந்த ஒரு நேச நாட்டுப் படையும் கடக்கவில்லை. மேற்குப் போர்முனையானது பெர்லினில் இருந்து இன்னும் சுமார் 720 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தது. கெய்சரின் இராணுவங்கள் போர்க்களத்திலிருந்து நன்முறையில் பின்வாங்கின. இத்தகைய காரணிகள் இன்டன்பர்க்கு மற்றும் பிற மூத்த செருமானிய தலைவர்கள் தங்களது இராணுவங்கள் உண்மையில் தோற்கடிக்கப்படவில்லை என்ற கதை பரவுவதை சாத்தியமாக்கின. இது முதுகில் குத்தி விட்டார்கள் என்ற கதையை பரப்ப வழி வகுத்தது. செருமனியின் தோல்விக்கு அதன் சண்டையை தொடர இயலாத தன்மை (இன்புளுவென்சா தொற்றுப்பரவல் மூலம் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டு சண்டையிட திறனற்றவர்களாக இருந்த போதும் இவ்வாறாக கூறப்பட்டது) காரணமல்ல என்றும், செருமனி "தேசப்பற்றுடன் அழைத்த அழைப்பிற்கு" பொது மக்கள் நன்முறையில் பங்களிப்பதில் அடைந்த தோல்வியே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும் போர் முயற்சிக்கு எதிராக நடத்தப்பட்ட நாச வேலைகளும் காரணம் என்று குறிப்பிடப்பட்டது. இந்த நாச வேலைகளை யூதர்கள், பொதுவுடைமைவாதிகள் மற்றும் போல்செவிக்குகள் செய்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டது. போரில் செலவழிக்க போதுமான அளவு செல்வத்தை நேச நாடுகள் கொண்டிருந்தன. 1913ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க டாலர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதிப்பீட்டின் படி போரில் நேச நாடுகள் யை செலவழித்தன. மைய சக்திகள் வெறும் யையே செலவழித்தன. நேச நாடுகளில் ஐக்கிய இராச்சியம் யையும், ஐக்கிய அமெரிக்கா யையும் செலவழித்தன. மைய சக்திகளில் செருமனி யை செலவழித்தது. பிறகு போருக்குப் பிறகு நான்கு பேரரசுகள் மறைந்தன. அவை செருமானிய, ஆத்திரியா-அங்கேரிய, உதுமானிய மற்றும் உருசியப் பேரரசு ஆகியவையாகும். தங்களது முந்தைய சுதந்திரத்தை ஏராளமான நாடுகள் திரும்பப் பெற்றன. புதிய நாடுகள் உருவாக்கப்பட்டன. தங்களது துணை உயர்குடியினருடன் நான்கு அரச மரபுகள் போரின் விளைவாக வீழ்ச்சி அடைந்தன. அவை உருசியாவின் ரோமனோ, செருமனியின் கோகென்செல்லெர்ன், ஆத்திரியா-அங்கேரியின் ஆப்சுபர்கு மற்றும் துருக்கியின் உதுமானிய அரசமரபு ஆகியவையாகும். பெல்ஜியம் மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் கடுமையாக சேதமடைந்தன. பிரான்சுக்கும் இதே நிலைமை ஆனது. 14 இலட்சம் பிரெஞ்சு வீரர்கள் இறந்தனர். இதில் காயம் அடைந்தவர்கள், பிற இழப்புகள் சேர்க்கப்படவில்லை. செருமனி மற்றும் உருசியாவும் இதே போல் பாதிப்புக்கு உள்ளாகின. அதிகாரப்பூர்வமாக போர் முடிக்கப்படுதல் இரு பிரிவினருக்கும் இடையிலான அதிகாரப் பூர்வ போரிடும் நிலையானது மேலும் ஏழு மாதங்களுக்கு நீடித்திருந்தது. 28 சூன் 1919இல் செருமனியுடன் வெர்சாய் ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் வரை இந்நிலை நீடித்தது. பொது மக்கள் ஆதரவு அளித்த போதும் இந்த ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்க செனட் சபையானது அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. 2 சூலை 1921இல் ஐக்கிய அமெரிக்க அதிபர் வாரன் கமலியேல் ஆர்டிங்கால் கையொப்பமிடப்பட்ட நாக்சு-போர்ட்டர் தீர்மானம் வரை போரில் தன் பங்கை அதிகாரப் பூர்வமாக ஐக்கிய அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வரவில்லை. ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய பேரரசைப் பொறுத்த வரையில் போரானது 1918ஆம் ஆண்டின் நிகழ்கால போர் முடிவு சட்டத்தின் தீர்மானங்களின் படி முடிவுக்கு வந்தது. இச்சட்டத்தின் படி பின்வரும் நாடுகளும், அவற்றுடனான போர் முடிவுக்கு வந்த தேதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன: செருமனி - 10 சனவரி 1920. ஆத்திரியா - 16 சூலை 1920. பல்கேரியா - 9 ஆகத்து 1920. அங்கேரி - 26 சூலை 1921. துருக்கி - 6 ஆகத்து 1924. வெர்சாய் ஒப்பந்தத்திற்குப் பிறகு ஆத்திரியா, அங்கேரி, பல்கேரியா மற்றும் உதுமானியப் பேரரசுடன் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. உதுமானியப் பேரரசானது சிதைவுற்றது. அதன் பெரும்பாலான லெவண்ட் நிலப்பரப்பானது பல்வேறு நேச நாட்டு சக்திகளுக்கு பாதுகாப்பு பகுதிகளாக அளிக்கப்பட்டது. அனத்தோலியாவில் இருந்த துருக்கிய மையப் பகுதியானது மறு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு துருக்கி குடியரசானது. 1920ஆம் ஆண்டின் செவ்ரேசு ஒப்பந்தத்தால் உதுமானியப் பேரரசானது பிரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சுல்தான் என்றுமே உறுதிப்படுத்தவில்லை. துருக்கிய தேசிய இயக்கத்தால் இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது. இது துருக்கி வெற்றி பெற்ற துருக்கிய விடுதலைப் போருக்கும், இறுதியாக ஒப்பீட்டளவில் கடுமை குறைவான 1923ஆம் ஆண்டின் லௌசன்னே ஒப்பந்தத்திற்கு வழி வகுத்தது. சில போர் நினைவுச் சின்னங்கள் போரின் முடிவுத் தேதியாக வெர்சாய் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 1919ஆம் ஆண்டை குறிப்பிடுகின்றன. அப்போது தான் அயல் நாடுகளில் சேவையாற்றிய பெரும்பாலான துருப்புக்கள் இறுதியாக தாயகம் திரும்பின. மாறாக போரின் முடிவு குறித்த பெரும்பாலான நினைவு விழாக்கள் 11 நவம்பர் 1918 அன்று கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீது கவனம் கொள்கின்றன. சட்ட பூர்வமாக கடைசி ஒப்பந்தமான லௌசன்னே ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் வரை அதிகார பூர்வ அமைதி ஒப்பந்தங்கள் முடிவு பெறவில்லை. லௌசன்னே ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் படி 23 ஆகத்து 1923 அன்று நேச நாட்டுப் படைகள் கான்சுடான்டினோபிளிலிருந்து விலகின. அமைதி ஒப்பந்தங்களும், தேசிய எல்லைகளும் போருக்கு பிறகு, போருக்கான காரணங்கள் மற்றும் அமைதியை செழிப்படையச் செய்யும் காரணிகள் மீதான கல்வி சார்ந்த கவனமானது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. பொதுவாக அமைதி மற்றும் போர் சார்ந்த ஆய்வுகள், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பன்னாட்டு உறவு முறைகள் ஆகியவை நிறுவனப்படுத்தப்படுத்தலுக்கு வழி வகுத்ததற்கு இது ஒரு பகுதி காரணமாக இருந்தது. மைய சக்திகள் மீது ஒரு தொடர்ச்சியான அமைதி ஒப்பந்தங்களை கட்டாயப்படுத்தி ஏற்கும் படி செய்ததன் மூலம் பாரிசு அமைதி மாநாடானது அலுவல் பூர்வமாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது. 1919ஆம் ஆண்டின் வெர்சாய் ஒப்பந்தமானது செருமனியுடனான உறவு முறையை கையாண்டது. அதிபர் வில்சனின் 14வது நிபந்தனையை விரிவாக்கி 28 சூன் 1919 அன்று உலக நாடுகள் சங்கமாக அதைக் கொண்டு வந்தது. மைய சக்திகளின் ஆக்ரோஷத்தால் "தங்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட போரின் விளைவாக நேச நாட்டு மற்றும் அது தொடர்புடைய அரசாங்கங்களும், அவற்றின் குடிமக்களும் அடைந்த அனைத்து இழப்பு மற்றும் சேதங்களுக்கான பொறுப்பை" மைய சக்திகள் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. வெர்சாய் ஒப்பந்தத்தில் இந்த வரியானது பிரிவு 231இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான செருமானியர்கள் அவமானப்படுத்தப்பட்டதாகவும், வெறுப்புணர்ச்சியும் கொண்டதால் இந்த பிரிவானது போர் குற்றவுணர்வு பிரிவு என்று பிற்காலத்தில் அறியப்பட்டது. பரவலாக செருமானியர்கள் தாங்கள் "வெர்சாய் திணிப்பு" என்று அழைத்த நிகழ்வு மூலம் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எண்ணினர். செருமானிய வரலாற்றாளர் ஆகன் சுல்சே இந்த ஒப்பந்தமானது "செருமனியை சட்டப்பூர்வ பொருளாதார தடைகளின் கீழ் கொண்டு வந்தது, இராணுவ சக்தியை குறைத்தது, பொருளாதார ரீதியாக பலவீனமாக்கியது மற்றும் அரசியல் ரீதியாக அவமானப்படுத்தியது" என்றார். பெல்ஜிய வரலாற்றாளர் லாரன்சு வான் இபெர்செலே 1920கள் மற்றும் 1930களில் செருமானிய அரசியலில் போரின் நினைவு மற்றும் வெர்சாய் ஒப்பந்தத்தால் ஏற்படுத்தப்பட்ட மையப் பங்கு மீது பின்வருமாறு கவனத்துடன் குறிப்பிடுகிறார்: செருமனியில் போர் குறித்த குற்றவுணர்வை பரவலாக மறுத்தது, இழப்பீட்டு தொகைகள் மற்றும் நேச நாடுகள் ரைன்லாந்தை தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தது ஆகிய இரு காரணங்கள் மீதான செருமானிய வெறுப்புணர்ச்சி ஆகியவை போரின் பொருள் மற்றும் நினைவு ஆகியவற்றை பரவலாக திருத்தம் செய்வதை சிக்கலாக்கியது. "முதுகில் குத்தி விட்டார்கள்" என்ற கதை மற்றும் வெர்சாய் திணிப்பை திருத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், மற்றும் செருமானிய தேசத்தை அகற்றுவதைக் குறிக்கோளாக கொண்ட ஒரு சர்வதேச அச்சுறுத்தலின் மீது இருந்த நம்பிக்கை ஆகியவை செருமானிய அரசியலின் மையப் பகுதியாக தொடர்ந்து நீடித்தது. அமைதியை விரும்பிய குஸ்தாவ் இசுதிரேசுமன் போன்ற மனிதர்கள் கூட செருமானிய குற்றவுணர்வு என்பதை பொது இடங்களில் நிராகரித்தனர். நாசிக்களை பொறுத்த வரையில் செருமானிய தேசத்தை பழி தீர்க்கும் உத்வேகத்தை நோக்கி தூண்டும் ஒரு முயற்சியாக உள் நாட்டு துரோகம் மற்றும் சர்வதேச கூட்டு சதி திட்டம் ஆகியவை குறித்த கருத்துகளை ஏற்படுத்தினர். பாசிச இத்தாலியைப் போலவே, நாசி செருமனியும் தன்னுடைய சொந்த கொள்கைகளுக்கு அனுகூலம் விளைவிப்பதற்காக போர் குறித்த நினைவை மாற்று வழியில் பயன்படுத்த விரும்பியது. அதே நேரத்தில் செருமானிய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட புதிய தேசங்கள் இந்த ஒப்பந்தத்தை ஒப்பீட்டளவில் பெரிய ஆக்ரோஷமான அண்டை நாடுகள் சிறிய நாடுகளுக்கு எதிராக செய்த அட்டூழியங்களுக்கான அங்கீகரிப்பாக கருதின. குடிமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீட்டுத் தொகைகள் வழங்குவது என்பதை அனைத்து தோற்கடிக்கப்பட்ட சக்திகளுக்குமான தேவையாக அமைதி மாநாடானது மாற்றியது. எனினும், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் செருமனி மட்டுமே தோற்கடிக்கப்பட்ட சக்திகளில் சேதமடையாத பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது ஆகியவை காரணமாக அனைத்து சுமைகளும் பெரும்பாலும் செருமனி மீதே விழுந்தன. ஆத்திரியா-அங்கேரியானது பல்வேறு அரசுகளாக பிரிக்கப்பட்டது. இவை முழுவதுமாக இல்லா விட்டாலும் பெரும்பாலும் இனங்களை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டன. ஆத்திரியா மற்றும் அங்கேரி தவிர்த்து, செக்கோஸ்லோவாக்கியா, இத்தாலி, போலந்து, உருமேனியா மற்றும் யுகோஸ்லாவியா ஆகியவை இரட்டை முடியரசில் (முன்னர் தனியாக மற்றும் தன்னாட்சியுடையதாக இருந்த குரோசியா-ஸ்லவோனியா இராச்சியமானது யுகோஸ்லாவியாவுடன் இணைக்கப்பட்டது) இருந்து நிலப்பரப்புகளை பெற்றன. இந்த விளக்கங்கள் செயின்-செருமைன்-என்-லாயே மற்றும் திரியனோன் ஒப்பந்தங்களில் உள்ளடங்கியிருந்தன. இதன் விளைவாக அங்கேரி அதன் மொத்த மக்கள் தொகையில் 64 சதவீதத்தை இழந்தது. அதன் மக்கள் தொகையானது 2.09 கோடியிலிருந்து 76 இலட்சமாக குறைந்தது. மேலும், அதன் அங்கேரிய இன மக்களில் 36% (1.07 கோடியில் 33 இலட்சம்) மக்களை இழந்தது. 1910ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, அங்கேரிய மொழியை பேசியவர்கள் அங்கேரிய இராச்சியத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 54 சதவீதமாக உள்ளடங்கியிருந்தனர். நாட்டிற்குள் ஏராளமான இன சிறுபான்மையினரும் இருந்தனர். அவர்கள் 16.1% உருமேனியர்கள், 10.5% ஸ்லோவாக்கியர்கள், 10.4% செருமானியர்கள், 2.5% ருதேனியர்கள், 2.5% செர்பியர்கள் மற்றும் 8% பிறர் ஆகியோர் ஆவர். 1920 மற்றும் 1924க்கு இடையில் உருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யுகோஸ்லாவியாவுடன் இணைக்கப்பட்டிருந்த முந்தைய அங்கேரிய நிலப்பரப்புகளில் இருந்து 3.54 இலட்சம் அங்கேரியர்கள் வெளியேறினர். அக்டோபர் புரட்சிக்கு பிறகு 1917இல் போரில் இருந்து விலகிய உருசியப் பேரரசானது, புதிய சுதந்திர நாடுகளான எஸ்தோனியா, பின்லாந்து, லாத்வியா, லித்துவேனியா மற்றும் போலந்து ஆகியவை உருசிய நிலப்பரப்பிலிருந்து உருவாக்கப்பட்டதன் காரணமாக அதன் மேற்கு எல்லையில் பெரும்பாலானவற்றை இழந்தது. ஏப்ரல் 1918இல் பெச்சராபியாவின் கட்டுப்பாட்டை உருமேனியா பெற்றது. தேசிய அடையாளங்கள் 123 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து மீண்டும் ஒரு சுதந்திர நாடாக உருவானது. ஒரு "சிறிய நேச நாடாக" செர்பியா இராச்சியம் மற்றும் அதன் அரசமரபானது ஒரு புதிய பல தரப்பட்ட தேசங்களை உள்ளடக்கிய அரசின் முதன்மை பகுதியாக உருவானது. செர்பியர்கள், குரோசியர்கள் மற்றும் ஸ்லோவேனியர்களின் இராச்சியம் என உருவானது. இது பிற்காலத்தில் யுகோஸ்லாவியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சதவீதத்தின் அடிப்படையில் அதிக இழப்புகளை சந்தித்த நாடாக செர்பியா இருந்தது. அங்கேரிய இராச்சியத்தின் பகுதிகளுடன் பொகேமியா இராச்சியத்தை இணைத்து செக்கோஸ்லோவாக்கியா என்ற ஒரு புதிய தேசம் உருவானது. அனைத்து உருமேனிய மொழி பேசிய மக்களையும் ஓர் ஒற்றை அரசின் கீழ் ஒன்றிணைத்ததன் மூலம் உருமேனியாவானது பெரிய உருமேனியா என்ற பெயரைப் பெற்றது. உருசியா சோவியத் ஒன்றியமானது. பின்லாந்து, எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாத்வியா ஆகியவை சுதந்திர நாடுகளாக உருவானதால், அவற்றை உருசியா இழந்தது. மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசானது துருக்கி மற்றும் பல பிற நாடுகளாக உருவானது. பிரித்தானிய பேரரசில் போரானது தேசியவாதத்தை புதிய வடிவங்களில் உருவாக்கியது. ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கல்லிப்போலி யுத்தமானது அந்த நாடுகளின் "நெருப்பால் நடைபெற்ற ஞானஸ்நானம்" என்று அறியப்பட்டது. புதிதாக நிறுவப்பட்ட இந்த நாடுகள் சண்டையிட்ட முதல் பெரிய போராக இது இருந்தது. வெறுமனே பிரித்தானிய முடியாட்சியின் குடிமக்களாக இல்லாமல் ஆத்திரேலியர்களாக ஆத்திரேலியத் துருப்புக்கள் முதன் முதலாக சண்டையிட்ட தருணங்களில் ஒன்றாக இது இருந்தது. சுதந்திரமான தேசிய அடையாளங்கள் இந்த நாடுகளில் வலிமையானது. ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து இராணுவ பிரிவுகளின் நினைவு விழாவாக, இந்த முக்கியமான தருணமானது அன்சாக் நாள் என கொண்டாடப்படுகிறது. விமி மலைச் சரிவு யுத்தத்திற்குப் பிறகு கனடா நாட்டு பிரிவுகள் முதல் முறையாக ஓர் ஒற்றை பிரிவாக ஒன்றிணைந்து சண்டையிட்டன. கனடா நாட்டவர் தங்களது நாட்டை "நெருப்பிலிருந்து வார்க்கப்பட்ட" ஒரு தேசம் என்று குறிப்பிட ஆரம்பித்தனர். "அன்னை நாடுகள்" முன்னர் தோல்வியடைந்த அதே யுத்த களங்களில் வெற்றி அடைந்ததற்கு பிறகு அவர்களது சொந்த சாதனைகளுக்காக பன்னாட்டு அளவில் முதல் முறையாக கனடா நாட்டவர்கள் மதிக்கப்பட்டனர். பிரித்தானிய பேரரசின் ஒரு மேலாட்சிக்குட்பட்ட பகுதியாக போரில் நுழைந்த கனடா, அதற்குப் பின்னரும் அவ்வாறே தொடர்ந்தது. எனினும், ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான சுதந்திரத்தையும் அது பெற்றது. 1914இல் பிரிட்டன் போரை அறிவித்த போது மேலாட்சிக்குட்பட்ட பகுதிகள் தாமாகவே போருக்குள் வந்தன. போர் முடிவுற்ற போது கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை வெர்சாய் ஒப்பந்தத்தில் தனித் தனியாக கையொப்பமிட்டன. உருசியாவில் பிறந்த யூதரும், இசுரேலின் முதல் அதிபருமான சைம் வெயிசுமனின் ஆதரவு திரட்டும் முயற்சி மற்றும் செருமனிக்கு ஆதரவளிக்க ஐக்கிய அமெரிக்காவை அமெரிக்க யூதர்கள் வலியுறுத்துவார்கள் என்ற அச்சம் ஆகியவை 1917ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தின் பால்போர் சாற்றுதல் அறிவிக்கப்படுதலில் முடிவடைந்தது. இதன் படி, பாலத்தீனத்தில் ஒரு யூத தாயகத்தை உருவாக்குவதற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஒட்டு மொத்தமாக நேச நாடுகள் மற்றும் மைய சக்திகளின் பக்கம் 11.72 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத வீரர்கள் பணியாற்றினர். இதில் ஆத்திரியா-அங்கேரியில் பணியாற்றிய 2.75 இலட்சம் பேர் மற்றும் ஜார் ஆட்சிக் கால உருசியாவில் பணியாற்றிய 4.50 இலட்சம் பேரும் அடங்குவர். நவீன அரசான இசுரேலின் நிறுவுதல் மற்றும் தொடர்ந்து இருக்கும் இசுரேல்-பாலத்தீன பிணக்கின் வேர்கள் ஆகியவை முதலாம் உலகப் போரின் விளைவாக உருவாகிய மத்திய கிழக்கின் நிலைத் தன்மையற்ற அதிகார முறைகளில் பகுதியளவு காணப்படுகின்றன. போர் முடியும் முன்னர் மத்திய கிழக்கு முழுவதும் ஓரளவுக்கு அமைதி மற்றும் நிலைத் தன்மையை உதுமானியப் பேரரசு பேணி வந்தது. உதுமானிய அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு பிறகு அதிகார வெற்றிடங்கள் உருவாயின. நிலப்பகுதி மற்றும் தேசியவாதங்களுக்கான முரண்பட்ட கோரிக்கைகள் எழத் தொடங்கின. முதலாம் உலகப் போரின் வெற்றியாளர்களால் வரையப்பட்ட அரசியல் எல்லைகள் சீக்கிரமே திணிக்கப்பட்டன. சில நேரங்களில் உள்ளூர் மக்களுடன் அவசரமாக செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அவை திணிக்கப்பட்டன. தேசிய அடையாளங்களுக்கான 21ஆம் நூற்றாண்டு போராட்டங்களிலும் இப்பிரச்சனைகள் தொடர்கின்றன. அரபு-இசுரேல் முரண்பாடு உள்ளிட்ட மத்திய கிழக்கின் நவீன அரசியல் நிலைமைக்கு திருப்பு முனையாக அமைந்ததில், முதலாம் உலகப் போரின் முடிவில் உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்டது உள்ளடங்கும். அதே நேரத்தில், உதுமானிய ஆட்சியின் முடிவானது நீர் மற்றும் பிற இயற்கை வளங்கள் மீதான பரவலாக அறியப்படாத சண்டைகளுக்கும் காரணமாக அமைந்தது. இலத்தீன் அமெரிக்காவில் செருமனியின் பெருமை மற்றும் செருமானிய கருத்துக்களானவை போருக்கு பிறகு உயர்வாகவே இருந்தன. ஆனால், போருக்கு முந்தைய நிலைகளை அவை மீண்டும் பெறவில்லை. உண்மையில், சிலியில் போரானது தீவிரமான அறிவியல் மற்றும் பண்பாட்டு தாக்க காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இதை சிலி எழுத்தாளர் எடுவார்டோ டீ லா பர்ரா இகழ்ச்சியுடன் "செருமானிய மயக்கம்" () என்று அழைத்தார். செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவானது நேச நாடுகளின் பக்கம் சண்டையிட்டது. ஒரு சுதந்திரமான செக்கோஸ்லோவாக்கியாவுக்கான ஆதரவை பெற விரும்பியது. 14 செப்டெம்பரில் உருசியாவிலும், 1917 திசம்பரில் பிரான்சிலும் (அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வலர்களையும் உள்ளடக்கிய), 1918 ஏப்ரலில் இத்தாலியிலும் செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவுகள் உருவாக்கப்பட்டன. செக்கோஸ்லோவாக்கியா பிரிவு துருப்புகள் ஆத்திரியா-அங்கேரிய இராணுவத்தை உக்ரைனின் கிராமமான சிபோரிவில் சூலை 1917இல் தோற்கடித்தன. இந்த வெற்றிக்கு பிறகு செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவுகளின் எண்ணிக்கையும், சக்தியும் அதிகரித்தது. பக்மச் யுத்தத்தில் இந்த இராணுவ பிரிவானது செருமானியர்களை தோற்கடித்தது. தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்து நிலைக்கு செருமானியர்களை தள்ளியது. உருசியாவில் இவர்கள் உருசிய உள்நாட்டுப் போரில் அதிகமாக பங்கெடுத்தனர். போல்செவிக்குகளுக்கு எதிராக வெள்ளை இயக்கத்தினருடன் இணைந்து போரிட்டனர். சில நேரங்களில் பெரும்பாலான தெற்கு சைபீரிய தொடருந்து பாதையை கட்டுப்படுத்தினர் மற்றும் சைபீரியாவின் அனைத்து முக்கியமான நகரங்களையும் கைப்பற்றினர். சூலை 1918இல் ஜார் மன்னர் மற்றும் அவரது குடும்பத்தை மரண தண்டனைக்கு போல்செவிக்குகள் உட்படுத்துவதற்கு உந்திய காரணிகளில் ஒன்றாக, எக்கத்தரீன்பூர்க்குக்கு அருகில் செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவு இருந்ததும் குறிப்பிடப்படுகிறது. ஒரு வாரத்துக்குள்ளாகவே செக்கோஸ்லோவாக்கியா இராணுவ பிரிவினர் நகருக்கு வந்தனர். நகரத்தை கைப்பற்றினர். உருசியாவின் ஐரோப்பிய துறைமுகங்கள் பாதுகாப்பாக இல்லாத காரணத்தால் இந்த இராணுவ பிரிவினர் நீண்ட சுற்று வழியில் விளாதிவோஸ்தாக் துறைமுகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இவர்களை கடைசியாக வெளியேற்றியது செப்டெம்பர் 1920இல் எப்ரோன் என்ற அமெரிக்கக் கப்பல் ஆகும். போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட திரான்சில்வேனிய மற்றும் புகோவினியாவைச் சேர்ந்த உருமேனியர்கள் உருசியாவில் உருமேனிய தன்னார்வல இராணுவ பிரிவினராக சண்டையிட்டனர். சைபீரியா மற்றும் இத்தாலியில் உருமேனிய இராணுவ பிரிவினராக சண்டையிட்டனர். உருசிய இராணுவத்தின் ஒரு பகுதியாக கிழக்குப் போர் முனையில் பங்கெடுத்தனர். 1917ஆம் ஆண்டின் கோடைக் காலம் முதல் உருமேனிய போர் முனையில் உருமேனிய இராணுவத்தின் பகுதியினராக சண்டையிட்டனர். செக்கோஸ்லோவாக்கிய இராணுவப் பிரிவினருடன் வெள்ளை இயக்கத்தவர்களுக்கு ஓர் ஆதரவாளர்களாக செஞ்சேனைக்கு எதிராக உருசிய உள்நாட்டு போரிலும் இவர்கள் சண்டையிட்டனர். மோன்டெல்லோ, விட்டோரியோ வெனட்டோ, சிசேமொலேட், பியாவே, சிமோன், மான்டே கிராப்பா, நெர்வேசா மற்றும் பான்டே டெல்லே அல்பி ஆகிய யுத்தங்களிலும் இத்தாலிய இராணுவத்தின் ஒரு பகுதியினராக ஆத்திரியா-அங்கேரிக்கு எதிராக சண்டையிட்டனர். 1919ஆம் ஆண்டு அங்கேரிய-உருமேனிய போரில் உருமேனிய இராணுவத்தின் ஒரு பகுதியினராக சண்டையிட்டனர். 1918ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தின் பிற்பகுதியில் தெற்கு காக்கேசியாவில் மூன்று புதிய அரசுகள் உருவாக்கப்பட்டன. அவை ஆர்மீனியாவின் முதலாம் குடியரசு, அசர்பைஜான் சனநாயக குடியரசு மற்றும் ஜார்ஜியாவின் சனநாயக குடியரசு ஆகியவையாகும். இவை மூன்றுமே உருசியப் பேரரசில் இருந்து தங்களது சுதந்திரத்தை அறிவித்து இருந்தன. இரண்டு பிற சிறிய அரசுகளும் நிறுவப்பட்டன. அவை நடு காசுப்பிய சர்வாதிகார அரசு மற்றும் தென்மேற்கு காக்கேசிய குடியரசு ஆகியவையாகும். இதில் முதல் அரசை அசர்பைஜான் 1918ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் இணைத்துக் கொண்டது. இரண்டாவது அரசானது 1919ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க-பிரித்தானிய கூட்டு சிறப்பு படையால் வெல்லப்பட்டது. 1917-18ஆம் ஆண்டின் குளிர் காலத்தில் காக்கேசிய போர் முனையில் இருந்து உருசிய இராணுவங்கள் பின் வாங்கிய போது, மூன்று பெரிய குடியரசுகளும் தவிர்க்க முடியாத உதுமானிய முன்னேற்றத்தை எதிர் நோக்கி இருந்தன. உதுமானிய முன்னேற்றமானது 1918ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் தொடங்கியது. 1918ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் தெற்கு காக்கேசிய ஒன்றிய குடியரசானது உருவாக்கப்பட்ட போது நேச நாடுகளுக்கு சாதகமான சார்பு நிலையானது குறுகிய காலத்திற்கு பின்பற்றப்பட்டது. ஆனால், இந்நிலை மே மாதத்தில் மாறியது. அம்மாதத்தில் ஜார்ஜியர்கள் செருமனியிடமிருந்து பாதுகாப்பு வேண்டினர். அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. ஓர் இராணுவ கூட்டணியை பெரும்பாலும் ஒத்த ஓர் ஒப்பந்தத்தை உதுமானியப் பேரரசுடன் அசர்பைஜானியர்கள் ஏற்படுத்தினர். ஆர்மீனியா தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வதற்காக தனியாக விடப்பட்டது. உதுமானிய துருக்கியர்களால் ஒரு முழு வீச்சிலான ஆக்கிரமிப்பு ஏற்படும் என்று அச்சுறுத்தலை ஐந்து மாதங்களுக்கு எதிர் நோக்கி போராடிக் கொண்டிருந்தது. இறுதியாக சர்தராபாத் யுத்தத்தில் உதுமானியர்களைத் தோற்கடித்தது. சுகாதார விளைவுகள் 1914 முதல் 1918 வரை ஒருங்கிணைக்கப்பட்ட 6 கோடி ஐரோப்பிய இராணுவ வீரர்களில் 80 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 70 இலட்சம் பேர் நிரந்தர மாற்றுத்திறனாளி ஆயினர். 1.50 கோடி பேர் படு காயமடைந்தனர். செருமனி பணிக்கு தயாராக இருந்த அதன் மொத்த ஆண்களில் 15.1 சதவீதத்தை இழந்தது. இதே போல், ஆத்திரியா-அங்கேரி 17.1 சதவிகிதத்தையும், பிரான்சு 10.5 சதவீதத்தையும் இழந்தன. பிரான்சு 78 இலட்சம் வீரர்களை போருக்காக ஒருங்கிணைத்தது. இதில் 14 இலட்சம் பேர் இறந்தனர். 32 இலட்சம் பேர் காயமடைந்தனர். உடலுறுப்புகளை இழந்து பதுங்கு குழிகளில் தப்பிப் பிழைத்த வீரர்களில் சுமார் 15,000 பேர் கோரமான முக காயங்களை பெற்றனர். இதன் விளைவாக அவர்கள் சமுதாயத்தில் அவமதிக்கப்படும் நிலைக்கும், ஒதுக்கப்படும் நிலைக்கும் ஆளாயினர். இவர்கள் கியுலேசு கசீசு என்று அழைக்கப்பட்டனர். செருமனியில் போரற்ற காலத்தை விட குடிமக்களின் இறப்பானது 4.74 இலட்சம் அதிகமாக இருந்தது. இதற்கு பெரும் பகுதி காரணம் உணவுப் பற்றாக்குறை மற்றும் நோய்க்கான எதிர்ப்பை பலவீனமாக்கிய ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவையாகும். இந்த மிகைப்படியான இழப்புகள் 1918இல் 2.71 இலட்சம் எனவும், 1919ஆம் ஆண்டின் முதல் பாதியில் மற்றுமொரு 71,000 பேர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1919ஆம் ஆண்டின் முதல் பாதியில் கடல் முற்றுகையானது இன்னும் செருமனியை சுற்றி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. போரின் முடிவில் பஞ்சத்தால் ஏற்பட்ட பட்டினி லெபனானில் சுமார் 1 இலட்சம் மக்களைக் கொன்றது. 1921ஆம் ஆண்டின் உருசிய பஞ்சத்தின் போது 50 இலட்சம் முதல் 1 கோடி வரையிலான மக்கள் இறந்தனர். முதலாம் உலகப் போர், உருசிய உள்நாட்டு போர் மற்றும் இறுதியாக 1920-1922ஆம் ஆண்டின் தொடர்ச்சியான பஞ்சம் ஆகியவற்றால் ஏற்பட்ட கிட்டத்தட்ட ஒரு தசாப்த அழிவின் விளைவாக 1922ஆம் ஆண்டு வாக்கில் உருசியாவில் 45 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை வீடற்ற குழந்தைகள் இருந்தனர். உருசியப் புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான மன நிலை கொண்ட உருசியர்கள் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறினர். 1930களில் வட சீன நகரமான கார்பின் 1 இலட்சம் உருசியர்களை கொண்டிருந்தது. மேற்கொண்ட ஆயிரக்கணக்கான உருசியர்கள் பிரான்சு, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். குழப்பமான போர்க் கால சூழ்நிலைகளில் நோய்கள் பல்கிப் பெருகின. 1914ஆம் ஆண்டில் மட்டும் பேன்களால் ஏற்படும் கொள்ளை நோயான டைபசு செர்பியாவில் 2 இலட்சம் பேரை கொன்றது. 1918 முதல் 1922 உருசியாவில் 2.50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 30 இலட்சம் பேர் டைபசால் இறந்தனர். 1923இல் 1.30 கோடி உருசியர்கள் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டனர். போருக்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து இது ஒரு அதிகப்படியான அளவாகும். 1918ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய ஒரு பெரும் இன்புளுவென்சா கொள்ளை நோயானது உலகம் முழுவதும் பரவியது. பெருமளவிலான வீரர்கள் இடம் மாற்றப்பட்டதால் இது மேலும் அதிகமானது. இந்த வீரர்கள் பெரும்பாலும் முகாம்களில் குறுகிய இடைவெளியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் சரியான தூய்மையற்ற துருப்புக்களை இடம் மாற்றும் கப்பல்களாலும் இந்த நோய் அதிகமாகியது. ஒட்டு மொத்தமாக எசுப்பானிய நோயானது குறைந்தது 1.70 முதல் 2.50 கோடி வரையிலான மக்களைக் கொன்றது. இதில் ஐரோப்பியர்கள் 26.4 இலட்சம் பேரும், அமெரிக்கர்கள் 6.75 இலட்சம் பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1915 மற்றும் 1926க்கு இடையில் மூளை அழற்சி கொள்ளை நோயானது உலகம் முழுவதும் பரவியது. கிட்டத்தட்ட 50 இலட்சம் மக்களை பாதித்தது. 1917ஆம் ஆண்டில் உருசியப் புரட்சியின் சமூக சீர்குலைவு மற்றும் பரவலான வன்முறை மற்றும், அதைத் தொடர்ந்து வந்த உருசிய உள்நாட்டுப் போர் ஆகியவை முந்தைய உருசியப் பேரரசில் 2,000க்கும் மேற்பட்ட படு கொலைகளை தொடங்கி வைத்தது. இவற்றில் பெரும்பாலானவை உக்ரைனில் நடைபெற்றன. இந்த அட்டூழியங்களில் 60 ஆயிரம் முதல் 2 இலட்சம் வரையிலான யூத குடிமக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் உலகப் போருக்கு பிறகு முஸ்தபா கெமாலால் தலைமை தாங்கப்பட்ட துருக்கிய தேசியவாதிகளுக்கு எதிராக கிரேக்கம் சண்டையிட்டது. லௌசன்னே ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையில் பெருமளவிலான மக்கள் இடமாற்றம் செய்யப்படும் நிலைக்கு இறுதியாக இப்போர் இட்டுச் சென்றது. பல்வேறு நூல்களின் படி, இக்காலத்தில் பல இலட்சக்கணக்கான கிரேக்கர்கள் இறந்தனர். இக்காலம் கிரேக்க இனப் படுகொலையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் போர் வீரர்களின் நாட்குறிப்புகள் முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன.அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜெம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது. இவற்றையும் பார்க்கவும் இரண்டாம் உலகப் போர் அன்சாக் நாள் 11.11.11. நூற்றாண்டு நினைவு குறிப்புகள் மேற்கோள்கள் போரியல்
5744
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (Shore Temple) என்பது தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் ஆகும். இது இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாசுகந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர். மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் உருவாக்கத்தின் போது இந்த இடம் துறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது இந்த இடத்தைப் பல்லவ அரசமரபின் முதலாம் நரசிம்மவர்மன் ஆண்டு கொண்டிருந்தார். இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும். வரலாறு மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் ஆசியாவிற்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு தூபிகளில் ஒன்று இந்தக் கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல ஒருவேளை செயல்பட்டிருக்கலாம். இக்கோயிலானது அடுக்கு தூபி போல காணப்படுவதால், அடுக்கு தூபி எனும் பெயர் கப்பல் மாலுமிகளுக்கு நன்றாக அறிந்த பெயராகி போனது. பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் குகைக் கோயில்கள் மற்றும் ரதங்கள் உள்ளிட்ட பல கட்டடக் கலை படைப்புகளை ஆரம்பித்து வைத்தார். அந்த கட்டடக்கலை படைப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்பு கோயில் வளாகம் கருதப்படுகிறது. குடைவரை கோயில் அமைப்புகளை செதுக்கும் கட்டடக்கலை படைப்பானது பின்வந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனை நாம் அதிரனசந்த குகை, பிடாரி இரதங்கள் மற்றும் புலிக்குகை ஆகியவற்றின் மூலம் அறியலாம். கடற்கரை கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் வளாகத்தின் நேர்த்தியான கட்டமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு, மன்னன் ராஜசிம்மன் (பொ.ஊ. 700–28) என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மனையே சாரும். கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோயில் வளாகம் என்று இது இப்போது ஊகிக்கப்படுகிறது; 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்த கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கடற்கரைக் கோயிலின் கட்டட அமைப்பானது அவர்களை வெற்றிகொண்டு தமிழகத்தை ஆண்ட சோழர்களாலும் சோழர்கள் கட்டிய கோயில்களில் பின்பற்றப்பட்டது. சோழமண்டல கடற்கரையை தாக்கிய 2004 ஆம் ஆண்டு சுனாமி முழுவதுமாக கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சிதைந்துபோன ஒரு பழைய கோயிலை வெளிக்காட்டியது. இந்நிகழ்வு ஐரோப்பியர்கள் தங்களது டைரிகளில் ஏழு அடுக்கு தூபிகள் என்று குறிப்பிட்ட பகுதியின் ஒரு பகுதியே மகாபலிபுரம் என்ற ஊகத்தை புதுப்பித்தது அந்த ஏழு அடுக்கு தூபிகளில் 6 கோயில்கள் கடலுக்குள் மூழ்கியே இருக்கின்றன. சுனாமியானது மேலும் சில பண்டைய சிங்கங்கள், யானைகள் மற்றும் மயில்களின் கற்சிற்பங்களை வெளிக்காட்டியது. இச்சிற்பங்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்தின் போது சுவர்கள் மற்றும் கோயில்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியானது கோயில் மற்றும் அதனை சுற்றி இருந்த தோட்டத்தை தாக்கிய போதும் கடற்கரைக் கோயிலானது பெரிய அளவிற்கு சேதத்திற்கு உள்ளாகவில்லை. ஏனெனில் நீர் மட்டமானது சில நிமிடங்களிலேயே சாதாரண நிலைக்குத் திரும்பியது. கோயிலின் அடித்தளமானது கடினமான கருங்கற்களால் கட்டப்பட்டிருந்ததால் சுனாமியால் உருவான அலைகளை தாக்குப் பிடித்தது. கோயிலைச் சுற்றி கடற்கரையில் எழுப்பப்பட்டிருந்த தடுப்பு அமைப்புகளும் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருந்தன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Group of Monuments Mahabalipuram (1984), Tamil Nadu www.shoretemple.com தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் தமிழக தொல்லியற்களங்கள் இந்தியக் கட்டிடக்கலை மாமல்லபுரம் இந்துக் கோயில்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலை பல்லவர் கட்டிடக்கலை
5746
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
விசயகாந்து
விசயகாந்து (Vijayakanth, பிறப்பு: 25 ஆகத்து 1952) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார்.2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார். இளமைக்காலம் விசயகாந்து என்னும் விசயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விசயகாந்து தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார். மண வாழ்க்கை விசயகாந்து, 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இருமகன்கள் உள்ளனர். அரசியல் வாழ்க்கை 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார். அரசியல் கட்சி 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டு தேர்தல் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். 2011 ஆம் ஆண்டு தேர்தல் பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 2016 ஆம் ஆண்டு தேர்தல் பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இவர் அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்தேர்தலில் இவர் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் திரைப்பட வாழ்க்கை இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது. நடித்த திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்பு விஜயகாந்த் - ஜெயலலிதா மோதல் விஜயகாந்த் - முழு விவரம் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் தமிழக அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1952 பிறப்புகள் மதுரை மக்கள் இந்திய நடிகர்-அரசியல்வாதிகள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தெலுங்கு மக்கள் தேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள் 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரைத் திரைப்பட நடிகர்கள் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
5751
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
திருவருட்பா
திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு.) தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார். எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர். வெளி இணைப்புகள் திருவருட்பா பாடல் தேடுபொறி திருவருட்பா பாடல்கள் தரும் வலைப்பக்கம் வள்ளலார்.ஆர்க் திருவருட்பா பாடல்கள் pdf வடிவில் தரும் வலைப்பக்கம் தமிழ் இலக்கியம் 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் en:Thiruvarutpa
5755
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எதிரொளிப்பு
எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு அல்லது ஒளித்திருப்பம் (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும். நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும். ஒலியியலில், இதனை எதிரொலிப்பு என்பார்கள். எதிரொலிப்பு உருவாக்கும் ஒலிக்கு எதிரொலி (echo) என்று பெயர். இதனை ஒலி மாற்றுணரியில் பயன்படுத்துகின்றனர். நிலவியலில் , நிலநடுக்க அலைகளைப் பற்றிய பாடங்களில் இது முக்கியமானவை . நீர்நிலைகளில் உள்ள மேற்பரப்பு அலைகளில் எதிரொலிப்பு (எதிரொளிப்பு) கண்டறியப்படுகிறது . காண்புறு ஒளிக்கிடையில் , பல வகையான மின்காந்த அலைகள் காணப்படுகின்றன . உயர் அதிர்வெண்ணும் , அதி உயர் அதிர்வெண்களின் எதிரொளிப்புகள் வானொலி சேவையிலும் , ரேடாரிலும் முக்கியமானவையாகும் . ஏன் காமா கதிர்களும் , ஊடுகதிர் அலைகளும் சில கோணங்களில் தனிரக கண்ணாடிகளில் எதிரொளிக்கப்படுகிறது. ஒளியின் தெறிப்பு இவ்வொளி எதிர்வுகளை நன்றாக ஆய்ந்து பல உண்மைகளை நிறுவியிருக்கிறார்கள். இதில் சிநெல் (Snell) என்பாரின் விதிகள் எளிதாக அறியவல்லவை. ஒளி எதிரக்கூடிய ஒரு சமதளத்தில் ஒளியானது அச்சம தளத்தின் செங்குத்துக் கோட்டுக்கு ஒரு குறிப்பிட்ட கோணத்திலே சென்று மோதினால், எதிர்ந்து செல்லும் ஒளியும் அதே கோணத்தில் அச்செங்குத்துக்கு கோட்டிலிருந்து விலகி எதிர்த் திசையில் செல்லும். இதனை படத்தின் உதவியால் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். படத்தில், ஒளிக்கதிர் PO நிலைக்குத்துக் கண்ணாடியொன்றை O என்ற புள்ளியில் மோதி, OQ என்ற காதிராகத் தெறிக்கிறது. கண்ணாடியின் தளத்துக்குச் செங்குத்தாக O என்ற புள்ளியில் இருந்து ஒரு நேர்கோட்டை வரைந்தால் படுகோணம் θi, தெறிகோணம் θr ஆகியவற்றைக் கணக்கிடலாம். தெறிப்பு விதியின் படி, θi = θr, அதாவது, படுகோணம் தெறிகோணத்துக்குச் சமனாக இருக்கும். கண்ணாடி எதிர்வு விதிகள் எதிரொளிக்கும் மேற்பரப்பு வழமையாக அல்லது கண்ணாடி போன்று இருந்தால் , அந்த ஒளியின் எதிரொளிப்பை ஒழுங்கான எதிரொளிப்பு அல்லது கண்ணாடி எதிரொளிப்பு (Specular reflection)என்று கூறுவர் . அவ்வொளி எதிர்வு விதிகள் பின் வருமாறு : 1. எதிர்வு பரப்பில் உள்ள ஒளிப்படு புள்ளிக்கு செங்குத்தும் , படுகின்ற கதிரும் , எதிர்கின்ற கதிரும் ஒரே தளத்தில் இருக்கும் . 2. எதிர்வு பரப்பின் செங்குத்துக்கும் படுகின்ற கதிருக்கும் உள்ள கோணமும் , அச்செங்குத்துக்கும் எதிர்கின்ற கதிருக்கும் உள்ள கோணமும் சமம் ஆகும் . 3. ஒளியின் பாதைகள் மீளக்கூடியவை (reversible). பிற வகை எதிரொளிப்பு பரவல் எதிரொளிப்பு ஒளி ஒரு சமதளமற்ற பகுதியில் மோதும் பொழுது , அந்த தளத்தில் உள்ள நுண்ணிய மேடுகளினால் ஒளி பல திசைகளில் தெறித்து ஓடும் . இவ்வகையான எதிரொளிப்பை பரவல் எதிரொளிப்பு அல்லது ஒளிச் சிதறல் என்று கூறலாம். இவ்வாறு , எந்த ஒளிபிம்பமும் தானாக உருவாகுவது இல்லை . மேலாக அவை ஒவ்வொரு பொருளும் எதிரொளிக்கின்றது அல்லது பிரதிபலிக்கின்றது . ஒளியின் உருவமானது அவை எதிரொளிக்கும் மேற்பரப்பை சார்ந்ததாகும் . ஒரு பொதுவான பரவல் எதிரொளிப்பு உதாரணம் என்னவென்றால் அது லம்பெர்தியர் எதிரொளிப்பு (Lambertian reflectance) ஆகும் . லம்பெர்தியர் எதிரொளிப்பு என்றால் ஒரு ஒளியானது ஒரே ஒளியூட்டத்திலோ அல்லது ஒரே கதிரலையிலோ பல திசைகளில் தெறித்து ஓடுவதாகும் ; இதனை லம்பெர்தியர் கோசைன் விதியில் விவரிக்கப்பட்டுள்ளது .படுகோணமும் மீள் கோணமும் சமம், படுதானம், மீள்தானம், படுதானத்தில் இருந்து வரையப்படும் லம்பம் ஆகியவை ஒரு நேர்கோட்டில் அமையும். நொதுமி தெறிப்பு நொதுமிகள் தெறிக்கும் பொருட்களை அணுகுண்டிலும் , அணுக்கரு உலையிலும் பயன்படுத்துகின்றனர் . ஒரு பொருளுக்குள்ளேயே அணுவின் நொதுமிகள் தெறிப்பதை இயற்பியலிலும் , உயிரியலிலும் , அதன் அக அமைப்புகளை விளக்குவதற்கு பயன்படுத்துவர் . எதிரொலிப்பு ஒரு தட்டையான மேற்பரப்பில் நீளவாக்கில் ஒளியானது மோதுகையில் , ஒளியின் அலையகலத்தை விட அதிக எதிரொலிப் பரப்பு அளவு அடையுமாறு சீராக ஒலி எதிரொலிக்கிறது . கேட்கக்கூடிய ஒலியானது மிகவும் பரந்த அதிர்வெண் வீச்சை கொண்டனவாகும் என்பதை கவனிக்க வேண்டும் ஆகையால் அவை பரந்த அலையகலங்களையும் கொண்டனவை ஆகும் . நிலநடுக்க எதிரலைகள் நிலநடுக்க எதிரலைகள் நிலநடுக்கம் அல்லது நிலவெடிப்புகள் போன்ற வேறு சில ஆதாயங்கள் அனைத்தும் பூமியின் அடுக்குகளின் எதிரலைகள் ஆகும் . இது போன்று நிலநடுக்கத்தினால் ஏற்படும் அலைகளின் எதிர்வுகளை பற்றி படிப்பதினால் நில அதிர்வு ஆய்வாளர்கள் பூமியின் அடுக்கு அமைப்பினை விவரிக்க உதவுகின்றது . ஆழமான எதிரலைகள் நில அதிர்வு ஆய்வினில் புவியோடினை ( Earth Crust ) பற்றி அறிவதற்கு பயன்படுகின்றது . மேலும் இவை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு இருப்பினை அறிய உதவுகிறது . இவற்றையும் பார்க்கவும் ஒளி முறிவு ஒளியிழை மேற்கோள்கள் ஒளியியல் வடிவ ஒளியியல் இயற்பியல் கோட்பாடுகள்
5756
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
மின்தடையம்
மின்தடையம் (Resistor), மின்தடையி, அல்லது மின்தடையாக்கி என்பது மின்னோட்டத்தை எதிர்க்கும் ஒரு மின் உறுப்பு ஆகும். மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் பொழுது இவ்வுறுப்பில் வெப்பம் உண்டாகிறது. மின் தடையமானது, மின்னோட்டத்தைத் தடுக்க அல்லது நெறிப்படுத்த மின் சுற்றுக்களில், இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுகின்றது. ஒருபொருள் மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் தடையானது மின்தடைமம் என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் மின்தடைமம் அப்பொருளின் நீளம், அப்பொருளின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, மற்றும் அப்பொருளின் அடிப்படையான மின்தடைமை ஆகியவற்றை பொறுத்தது ஆகும். இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளான நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்தது. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு ஆகும். மின்சார வலையமைப்புகள், மின்னணுச் சுற்றமைப்புகள், தொகுப்புச் சுற்றுகள், பிற மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றில் ஓர் பிரிக்கவியலா அங்கமாய் மின்தடையங்கள் திகழ்கின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் சில சேர்மங்கள், படலங்கள், உயர் மின்தடை கொண்ட நிக்கல்-குரோம் போன்ற உலோகக்கலவைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் தூய மின்தடைகளாக ஒருபோதும் செயல்படுவது இல்லை. இவை தொடரிணைப்பில் சிறிய அளவிலான மின்தூண்டமும் பக்க இணைப்பில் சிறிய அளவிலான மின்தேக்குத்திறனும் கொண்டதாக உள்ளன. ஆனால் இது போன்ற விவரக்கூற்றுகள் உயர்-அதிர்வெண் கொண்ட பயன்பாடுகளில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.மின் தடையத்தில் காணப்படும் தேவையற்ற மின்தூண்டம், அளவிற்கு மீறிய இரைச்சல் , மின்தடை வெப்பநிலை எண்(temperature co-efficient of resistance) போன்றவை அம்மின்தடையங்கள் தயாரிக்கப்படுகின்ற விதத்தினைப் பொருத்தே அமைகின்றன. மின்தடையாக்கியின் இலத்திரனியல் குறியீடு மின்சுற்றுகளில் மின்தடையங்களின் இலத்திரனியல் குறியீடானது, தரநிலைகளைப் பொருத்தும் நாட்டைப் பொருத்தும் மாறுபடுகின்றன. தொழிற்பாடு தொடர்பான கொள்கைகள் ஓமின் விதி மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டமானது தடையத்தின் இரு முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்தத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். ஓமின் விதிப்படி இது பின்வருமாறு கூறப்படுகிறது. மின் தடைமம்(R) = மின் அழுத்தம்(V) / மின்னோட்டம்(I) இங்கே மின்னோட்டம் I ஆனது ஆம்பியரிலும் (ampere), மின்னழுத்தம் 'V ஆனது வோல்ட்டிலும் (volt), மின்தடை R ஆனது ஓமிலும் (ohm) கூறப்படும்.R என்ற மின்தடையம் கொண்ட ஒரு மின் கடத்தியின் (எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, V என்ற அளவு மின்னழுத்தம்(voltage) கொடுக்கும் போது, I என்ற அளவு மின்னோட்டம்(current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்: . தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் தொடரிணைப்பு மின்தடையாக்கிகள் படத்திலுள்ளது போலத் தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே(I) பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்(V) அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது. தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம். பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் இப்படத்திலுள்ளது போலப் பக்கவிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , ஒவ்வொரு மின் தடையாக்கியின் குறுக்கிலும் உள்ள மின்னழுத்த வேறுபாட்டின்(V) மதிப்பு ஒன்றே. ஆனால் மொத்த மின்னோட்டமனது(I) மின்தடைகளின் மதிப்பைப் பொருத்துப் பிரிந்து செல்கிறது. ஆக, ஒவ்வொரு மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு முறையே அம்மின்தடையத்தைப் பொருத்து வேறுபடுகிறது. பக்கவிணைப்பில் உள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடையின் தலைகீழியானது, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் தலைகீழிகளின் கூட்டுத் தொகைக்குச் சமம். மின்திறன் விரயம் ஒரு மின்தடையாக்கியின் மின்திறன் விரயமானது(power dissipation) கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது. இங்கு முதலில் உள்ளது ஜூல் விதியின் மறுக்குறிப்பீடே ஆகும். பின்னர் இருப்பவை, ஓமின் விதியிலிருந்து பெறப்பட்டதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மின்தடையாக்கியின் மொத்த வெப்ப ஆற்றல் விரயமானது கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது. தடையத்தின் வகைகள் 1. மாறாத்தடை (fixed resistor) மாறாத்தடை என்பது முன்பே அதன் மதிப்பு நிலையாக இருக்கும் படி அமைக்கப்பட்ட மின் தடையகம் ஆகும். அதாவது இதன் வரையறுக்கப்பட்ட மதிப்பை நாம் மாற்றவோ, குறைக்கவோ முடியாது. 2. மாறும்தடை (variac அல்லது variable resistor) மாறும் தடை அல்லது variable resistor என்பதற்கு உதாரணமாக potentiometer மற்றும் Rheostat ஐ சொல்லலாம். அதவாது இந்த வகையிலான மின் தடையத்தின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக பழைய வானொலி, மற்றும் தொலைக்காட்சிகளில் volume ஐ control செய்ய மிகவும் பயன்படுத்தப்பட்டது. 3. ஒளி உணரித்தடை (light dependent resistor) மின் தடையத்தில் ஒளியைப் பொறுத்து மின் தடையத்தின் மதிப்பு (Resistance value) அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஆனால், அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடு வரையில் தான் செய்யமுடியும் . 4. முற்றுணிந்ததடை (preset resistor) முற்றுணிந்ததடை என்பது மின் தடையகத்தின் ஒரு வகை தான். இதனை மிகச் சிறிய PCB Board களில் பார்க்கலாம். அத்துடன் இதன் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக : தெருவோரத்தில் வாங்கப்படும் pocket size Radio களின் circuit board இல் volume ஐ மாற்றி அமைக்கபயன்படும் 5. வெப்பத்தடை (thermistor) மின் தடையங்களில் வெப்பத்தை பொறுத்து இதன் மதிப்பு அதுவாகக் குறையும் அல்லது அதிகரிக்கும். பொதுவாக, fire alarm களில் இது மிகவும் பயன் படுகிறது. ஓமின் விதிப்படி மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தை இவ்வாறும் கணக்கிடலாம் :- மின் தடைமம் (R), மின் அழுத்தம் (V), மின்னோட்டம் (I) ஆயின், தொடரிணைப்பு மின்தடையாக்கி மின் தடையாக்கிகளை இணைக்கும் போது, ஒவ்வொரு தனிப்பட்ட மின் தடையாக்கியின் மதிப்பை பொறுத்து இதன் மின்னோட்டத்தை எதிர்க்கும் தன்மை உயரும்அதாவது இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே(I) பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் அதுவே டையோடு, டிரான்சிஸ்டர், ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) போன்றவை செயலில் கூறுகள் (active components) என்று அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அவைகள் ஒரு எலெக்ட்ரானிக் மின்சுற்றின் இதயம் போலச் செயல்படுகின்றன. தேவைப்படும் இடத்தில், கிடைக்கும் மின் அலைகளை பெருக்கியும் தருகின்றன.இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்(V) அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம். குறிப்பிட்ட சில பொருட்களின் மின்தடுதிறன்கள் எந்த ஒரு பொருளுக்கும் ஒரு மின்தடைமை (Resistivity'') உண்டு. வெவ்வேறு பொருள்களின் மின் தடைமைகளை அட்டவணை 1 தருகின்றது. நிறப் பரிபாடை மின்தடையாக்கிகளின் மின் தடை மதிப்புகள், அவற்றின் மீது நிறக்குறியீடு இட்டுக் குறிக்கப்படும். தற்காலத்தில் நான்கு நிறக் குறியீடு கொண்ட மின்தடையாக்கிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. மின்தடையாக்கிகளில் ஒரு முனையில் உள்ள வெள்ளி அல்லது தங்க வளையம் , மின்தடையின் மாறுபடும் அளவைக்(tolerance) குறிக்கும். வெள்ளி, தங்கம், சிவப்பு, பழுப்பு நிற வளையங்களின் மாறுபாட்டு அளவுகள் முறையே 10%, 5%, 2%, 1% ஆகும். இவ்வாறான மாறுபாட்டு வளையம் ஏதும் இல்லையேனில், அம்மின்தடையத்தின் மாறுபாட்டளவு 20% எனப் பொருள்படும். அடுத்த முனையில் உள்ள முதல் இரண்டு வளையங்கள் , மின்தடை மதிப்பின் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். இதனுடன் பெருக்க வேண்டிய 10-இன் அடுக்கினை மூன்றாவது வளையம் குறிக்கிறது. இந்நிறப்பரிபாடையைக் கீழுள்ள சட்டகம் தெளிவாகத் தருகிறது. நுட்பியல் சொற்கள் மின்தடை – Resistance மின்தடைமை – Resistivity மின் தடைம அளவின் நிறக் குறியீடு – Resistor Colour Code மின் சுற்று – Electric Circuit மின் சாதனங்கள் மிகச்சரியாகப் பணியாற்ற, அதற்குத் தேவையான எல்லா சிறு பகுதிகளையும் ஒன்றோடு ஒன்றை இணைப்பதற்கு உரிய மின் இணைப்புகள் தேவை. இந்த மின் இணைப்புகள், தந்திகளைச் (wires) சூட்டுக்கோலால் பற்ற வைத்து (soldering) உருவாக்க்கப்பட்டன. இப்போது, இந்தத் தந்திகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட மின் சுற்றுப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் தந்திகளின் இணைப்புகளுக்கான பாதைகள் வரையப்பட்டிருக்கும்.சிறப்பு வகைப் பலகை ஒன்றில் ஒளிப்படம் எடுக்கப்பட்டு மெல்லிய செப்பு உலோகத்தால் (copper) மூடப்படும். வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி மிக மென்மையான செப்புப் படலம் மட்டுமே தங்கி இருக்கும் வகையில் தேவையற்ற செப்பு கரைக்கப்படுவதுடன், இப்படலத்தில் எல்லா உறுப்புகளும் இணைக்கப்படுகின்றன. மின் சுற்றுப் பலகைகள் இலேசானவை, கையடக்கமானவை மற்றும் செலவு குறைவானவை.மின்னணுச் சுற்றுகளைக் கொண்ட மின்னணுச் சாதனங்கள் மிகச் சிக்கலான செயல்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியவை. கணினி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது . மின்னோட்டம் – Electric Current மின்னழுத்தம் – Voltage இலத்திரனியல் – Electronics வெளி இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் தமிழ்ச்சொற் தேடல்கள் மின்னியல் மின்சுற்று மின் உறுப்புகள்
5757
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
ஒளி முறிவு
ஒளி முறிவு அல்லது ஒளி விலகல் என்பது ஒளியின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தோன்றும் ஒளி செல்லும் திசையிலிருந்தான விலகல் ஆகும். இது பொதுவாக ஓர் ஊடகத்தில் இருந்து வேறான அடர்த்தியுடைய பிறிதோர் ஊடகத்துள் ஒளி செல்லும் போது பார்க்கக்கூடியதாக இருக்கும். ஒளி முறிவுகளைப் பொதுவாகப் பார்க்கக்கூடியதாக இருப்பினும், எந்தவொரு அலையும் ஓர் ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்துள் செல்லும்போது முறிவடையும். எடுத்துக்காட்டாக ஒலி அலைகள். ஒருவர் நேரான பென்சிலோ அல்லது பேனை போன்ற நேரான பொருள் ஒன்றை பகுதியா நீர் உள்ள கண்ணாடி அல்லது ஒளிபுகக்கூடிய கிண்ணமென்றில் வைத்தால் அப்பொருளானது நீர் உள்ள இடத்தில் வளைந்து காட்சியளிக்கும். இது நீரில் இருந்துவரும் ஒளிக்கதிர்களானது முறிவடைவதால் ஏற்படுவதாகும். இது உண்மையாக இருப்பதை இட பார்வைக்கு குறைந்த ஆழத்தில் இருந்து வருவதைப் போன்று தோற்றமளிக்கும். இவ்வாறு தோன்றுவது தோற்ற ஆழம் என்றழைக்கப்படும். வரையறை ஒளியானது ஒரு ஊடகத்திலிருந்து அதனிலும் வேறான அடர்த்தியுடைய இன்னொரு ஊடகத்துள், இரண்டு ஊடகங்களினதும் (எல்லைக்கு) இடை முகத்துக்குச் செங்குத்தாக அல்லாமல் இன்னொரு கோணத்தில் நுழையும்போது அதன் நேர்கோட்டுப் பாதையை விட்டுத் திசை மாறிச் செல்வது ஒளி முறிவு (refraction) அல்லது ஒளிவிலகல் எனப்படும். ஒளித்தெறிவே வானவில்லின் தோற்றத்திற்கு ஆதாரம் ஆகும், இங்கு சூரிய ஒளிக்கதிர்களை அரியம் போன்று பிரிப்பதனாலேயே அழகிய நிறங்கள் வானத்தில் தோன்றுகின்றன. பார்க்கப்படும் நிறங்களின் வேறுபாடே அதிர்வெண்ணின் வேறுபாட்டால் ஏற்படுவதாகும். வானவில் போன்றே பல்வேறு விசித்திரமான சம்பவங்களும் ஒளிமுறிவினால் ஏற்படுகின்றது. இவற்றுள் கானல் நீர் குறிப்பிடத்தக்கது. இவை வளியின் ஒளிமுறிவுச் சுட்டியானது வெப்பத்துடன் மாறுபடுவதால் ஏற்படுவதாகும். ஒளிவிலகல் எண் μ காற்று அல்லது வெற்றிடத்திலிருந்து பிறிதொரு ஊடத்துத்துள் ஒளி செல்லும் போது, அதன் திசைவேகம் எவ்வளவு குறைகின்றது என்பதன் குறியீடாக அவ்வூடகத்தின் ஒளிவிலகல் எண் அமைகின்றது. ஒளியியலில் ஒளிக்கற்றைகளானது ஓர் ஒளிமுறிவுச் சுட்டெண் அல்லது ஒளிவிலகல் எண் உடைய ஊடகத்தில் இருந்து பிறிதோர் ஒளிமுறிவுச் சுட்டெண்ணுடைய ஊடகத்தினுள் ஓளிமுறிவானது ஏற்படுகின்றது. ஓர் ஒளிக்கதிரின் அதிர்வெண்ணானது ஒருபோதும் மாற்றமடையாது; ஒளிமுறிவின்போது ஒளியலையின் வேகமானது மாறுவதால் அதற்கொத்த அலைநீளமானது மாற்றமடையும். எடுத்துக்காட்டாக ஒளியலையானது கண்ணாடிக்குள் புகும்போதும் வெளிவரும்போதும் ஓளித்தெறிப்பானது நிகழ்கின்றது. இதை அடிப்படைய்யாகக் கொண்டே வில்லைகளும் ஒளித்தெறிப்புத் தொலைக்காட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. வரையறை ஒரு ஊடகத்தைப் பொருத்து (ஊடகம் 1 என்க) பிறிதொரு ஊடகத்தின் (ஊடகம் 2 என்க) ஒளிவிலகல் எண் என்பது காற்று அல்லது வெற்றிடத்தைப் பொருத்து ஊடகம் 2-இன் ஒளிவிலகல் எண்ணிற்கும் காற்று அல்லது வெற்றிடத்தைப் பொருத்து ஊடகம் 1-இன் ஒளிவிலகல் எண்ணிற்கும் இடையேயான தகவு ஆகும். அதாவது, 1 μ 2 = காற்று μ 2 / காற்று μ 1 காற்று அல்லது வெற்றிடத்தைப் பொருத்து ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் காற்று μ ஊடகம் காற்று μ ஊடகம் = காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் ÷ ஊடகத்தில் ஒளியின் திசைவேகம். எடுத்துக்காட்டு ஒளிமுறிவானது கிண்ணமொன்றில் இருக்கும் நீரைப்பாப்பதன் காணமுடியும். காற்றின் ஒளிவிலகல் எண் ஏறத்தாழ 1.0003 (அநேகமான கணித்தல்களிற்கு 1 என்றே எடுக்கலாம்). நீரினது ஒளிமுறிவுச் சுட்டெண் 1.33 (ஏறத்தாழ 4/3). இவற்றையும் பார்க்கவும் வில்லை கானல் நீர் வெளியிணைப்புக்கள் ஒளிமுறிவு பற்றிய ஜாவாவூடான விளக்கம் ஒளிமுறிவு பற்றிய ஜாவாவூடான விளக்கம் டென்னசி பல்கலைக்கழகம் ஒளியியல் வடிவ ஒளியியல் இயற்பியல் கோட்பாடுகள்
5759
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
மின்தேக்கி
மின்தேக்கி (Capacitor) என்பது மின்புலத்தில் மின் ஆற்றலைச் சேமிக்கப் பயன்படும் இருமுனை மின்கூறு ஆகும். இதனை மின் கொண்மி என்றும் மின்கொள்ளளவி (இலங்கை வழக்கு) என்றும் கூறுவர். இது மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மின்கூறு. இரண்டு மின்கடத்திகளை ஒரு மின்காப்புப் பொருள் கொண்டு பிரித்தால் அது ஒரு மின்தேக்கியாகச் செயல்படும். எடுத்துக்காட்டாக, இரண்டு உலோகத் தகடுகளுக்கிடையே ஒரு தடிமனான காகிதத்தை வைத்து ஒரு மின்தேக்கியை உருவாக்கலாம். மின்பகுளி-மின்தேக்கி (Electrolytic Capacitor) மற்றும் சுட்டாங்கல்-மின்தேக்கி (Ceramic Capacitor) ஆகியவை பொதுவாக மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின்தேக்கிகளாகும். தற்காலத்தில் நெகிழி-மின்தேக்கியின் (Plastic Capacitor) பயனும் அதிகரித்து வருகிறது. மின் தேக்கி வகைகள் இன்றைய காலத்தில் பலவகையான மின் தேக்கிகள் பயன்படுத்தப்படுகிறது . அவற்றில் 1. எலெக்ட்ரோலைட் மின் தேக்கி 2. செரமிக் மின் தேக்கி 3. நெகிழி-மின்தேக்கி 1. எலெக்ட்ரோலைட் மின் தேக்கி மின்தேக்கி வகைகளில் ஒரு பெரிய மின்தேக்கத்தை அடைவதற்கு எலக்ட்ரோலைட்டியைப் பயன்படுத்துவர். எலக்ட்ரோலைட் என்பது ஒரு திரவம் அல்லது ஜெல் ஆகும். எலெக்ட்ரோலைட் மின்தேக்கியின் இணைப்புக்கள் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் துருவங்கள் பார்த்து இனைக்க வேண்டும் அதாவது இணைப்புக்காக வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் இரு கம்பிகளில் அதன் உடல் பகுதியில் குறிக்கப்பட்டுள்ள – அல்லது + குறியை பார்த்து மின் இணைப்பை தர வேண்டும் மாற்றி இணைப்புக்கொடுத்தால் அவை பழுதாகிவிடும். 2. செராமிக் மின் தேக்கி ஒரு சிறிய பீங்கான் வட்டின் இரண்டு பக்கங்களை வெள்ளியுடன் இணைத்து தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அவை ஒரு மின்தேக்கி செய்ய ஒன்றாக அடுக்கப்பட்டு, மிக குறைந்த அளவிலான கொள்ளளவு மதிப்புகள் 3-6 மிமீ ஒரு ஒற்றை பீங்கான் வட்டு பயன்படுத்தப்படுகிறது. செராமிக் மின்தேக்கிகள் அதிக மின்கடத்தா மாறிலியை கொண்டிருக்கும், மேலும் அவை சிறிய அளவிலான அளவைக் கொண்டிருக்கும். எலெக்ட்ரோலைட் மின் தேக்கியை +, - துருவம் பார்த்து இணைக்கவேண்டியது போல் . செரமிக் கெபாசிட்டர்களுக்கு அந்த தொல்லை இல்லை, எப்படி வேண்டுமானாலும் இணைப்பு கொடுத்துக்கொள்ளலாம். 3. நெகிழி-மின்தேக்கி மின்தேக்கியின் மின்முனைகளைத் தயாரிப்பதற்கு ,மின்கடத்தா அலுமினியம் அல்லது துத்தநாகம் பயன்படுத்தப்படுகிறது . நெகிழி மின்தேக்கிகளை பயன்படுத்துவதன் மூலம் மின் சாதனங்களுக்கு குறைவான இழப்பு தான் ஏற்படும் . அதனால் இன்றைய காலத்தில் அதிகமாக நெகிழி மின் தேக்கிகள் அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது . செயல்பாடு ஒரு மின்தேக்கியில் இரண்டு மின்தகடுகளும் அவற்றின் இடையே மின்கடத்தாப் பகுதியும் இருக்கும். இந்த மின்கடத்தாப் பகுதி வெற்றிடமாகவோ அல்லது ஒரு மின் கடத்தாப் பொருளால் ஆனதாகவோ இருக்கும். மின்கடத்தாப் பொருட்களாக கண்ணாடி, வளிமம், காகிதம் அல்லது ஒரு குறைகடத்தியின் மின் கடத்தாப் பகுதியோ இருக்கலாம். இரண்டு மின்தகடுகளிலும் எதிர் எதிர் வகை மின்மம் சேர்ந்து, தகடுகளுக்கு இடையே உள்ள கடத்தாப் பொருளில் மின்புலம் உண்டாக்கும். இந்த மின்புலத்தில் மின்னாற்றலானது, தகடுகளில் மின்மங்கள் இருக்கும் வரை “தேங்கி”, “சேமிப்பாக” நிற்கின்றது. இக் கடத்தாப் பொருளை வன்கடத்தி அல்லது இருமுனைப்படும் மின்பொருள் என்றும் கூறுவர். இரு தகடுகளிலும் எதிர் எதிர் வகை மின்மத்தைத் தேக்கி வைத்திருப்பதால் இதனை மின்மத்தேக்கி என்றும் கூறலாம். ஒரு மின்தேக்கிக்கு ஒரு குறிப்பிட்ட மின்தேக்கம் (capacitance) இருக்கும். இந்தத் தேக்கத்திறன் இணை தகடுகளின் வடிவமைப்பில் அமைந்துள்ளது. ஒரு முறையான மின்தேக்கி ஒரு மாறா மின்தேக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த மின்தேக்கமானது ஒவ்வொரு மின்கடத்தியிலும் இருக்கும் நேர் அல்லது எதிர் மின்னூட்டத்திற்கும் Q, அவற்றுக்கிடையிலான மின்னழுத்ததிற்குமான விகிதமாகும். ஏனெனில் கடத்திகள் (அல்லது தட்டுக்கள்) மிக அருகருகில் இருப்பதால், மின்புலம் காரணமாக, கடத்திகளில் இருக்கும் எதிர் மின்னூட்டமானது, கடத்திகளை ஒன்றையொன்று கவரச்செய்யும். இதனால் கடத்திகள் தனித்தனியாக இருப்பதைவிட மிக அதிகமான மின்னூட்டத்தைக் கடத்திகள் தேக்கி வைக்க முடியும். அலகு பொதுவாக இதனை பாரட் (ஃபாரட்) (F) என்ற அலகால் குறிப்பிடுவர். பெரும்பாலான மின்தேக்கிகள் மைக்ரோ பாரட் அல்லது மில்லி பாரட் (µF அல்லது mfd) அல்லது பிக்கோ பாரட் (pF) என்ற அலகால் குறிக்கப்படும். மைக்ரோ பாரட் (µF) என்பது பாரட்டில் ஒரு மில்லியன் (10−6 F). பக்கோ பாரட்(pF) என்பது மைக்ரோ பாரட்டில் ஒரு மில்லியன் (10−12 F). கணித விபரிப்பு மின்தேக்கத்திறன் = (தேக்கிய) மின்மம் / மின்னழுத்தம் மின்னோட்டம் = மின்மத்தின் மாற்றம் / நேர மாற்றம் நேரத்தால் மின்மம் மாறும் விகிதம் = மின்தேக்கதிறன் x நேரத்தால் மின் அழுத்தம் மாறும் விகிதம் பக்க மின் சுற்று முறையில் மின்தேக்கி பக்க மின் சுற்று முறையில் இணைக்கும் பொழுது மின்தேக்கிகளின் இடையே ஒரே மின்னழுத்தம் இருக்கும். அவற்றின் மின்தேக்கதிறன் கூடும். தொடர் மின் சுற்று முறையில் மின்தேக்கி தொடர் மின் சுற்று முறையில் இணைக்கும் பொழுது எல்லா மின்தேக்கிகளின் ஊடாகவும் ஒரே மின்னோட்டம் பாயும். மின்னழுத்த நிலைகுலைவு மின்காப்பு வலிமை (Eds) எனப்படும் ஒரு குறிப்பிட்ட மின்புலத்திற்கு மேல், மின்தேக்கியிலுள்ள மின்காப்புப் பொருள் மின் கடத்தியாக செயல்படும். எந்த மின்னழுத்தில் இது நடக்கிறதோ அதுவே நிலைகுலைவு மின்னழுத்தம் எனப்படும். அதன் மதிப்பு மின்காப்பு வலிமை மற்றும் இரு தகடுகளின் இடையே உள்ள தூரத்தின் பெருக்கல் ஆகும். ஒரு மின்தேக்கியில் சேமித்து வைக்க கூடிய சக்தி/மின் ஆற்றல் நிலைகுலைவு மின்னழுத்ததினால் வரையறுக்கப்படுகிறது. Q காரணி ஒரு மின்தேக்கியின் Q காரணியானது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதன் எதிர்வினைப்பு (Reactance) மற்றும் மின்தடை இடையே உள்ள விகிதம் ஆகும். இது மின்தேக்கியின் திறனை குறிக்கும். Q காரணியை கணக்கிடும் சூத்திரம்: இங்கு என்பது அதிர்வெண் [ரேடியன்/நொடியில்] (Frequency in radians per second), என்பது மின்தேக்கத்திறன் (Capacitance), என்பது கொள்ளளவு மறுப்பு (Capacitive Reactance), என்பது மின்தேக்கியின் தொடர் மின்தடை (Series Resistance of the Capacitor). மின்தேக்கக் குறியீடு மின்தேக்கத்திறனைக் கண்டறியப் பெரும்பாலான மின்தேக்கிகளின் மீது அதன் மதிப்புப் பொறிக்கப்பட்டிருக்கும். அளவில் பெரிதான மின்பகுளி-மின்தேக்கிகளில் (Electrolytic Capacitor) மின்தேக்கத்திறன் அலகுடன் குறிப்பிடப்பட்டிருக்கும் (உதாரணம், 220 μF).. சிறிய மின்தேக்கிகளான சுட்டாங்கல்-மின்தேக்கிகளில் (Ceramic Capacitor) மூன்று எழுத்துகளும் ஒரு எண்ணும் கொண்ட குறியீடு காணப்படும். அதன் மூலம் மின்தேக்கத்திறனைப் பிக்கோ பாரட் (pF) அலகில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அந்த எண் அதன் சகிப்புத்தன்மையைக் குறிக்கும். (±5%, ±10% அல்லது ±20%) சில சமயம் செயல்படும் மின்னழுத்தம், வெப்பம் போன்றவையும் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணம் ஒரு மின்தேக்கியின் மீது 473K 330V என குறிப்பிடப்பட்டிருப்பின் அதன் மின்தேக்கத்திறன் 47 × 103 pF = 47 nF (±10%). அதன் மின்னழுத்தம் 330 V ஆகும். பயன்பாடு மின் ஆற்றல் சேமிப்பு இன்றைய காலத்தில் மின்சார சிக்கனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது . அதனால் , மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் . மின் சாதனங்கள் பழுது ஏற்படாமல் இருக்கவும் மின் தேக்கிகள் பயன்படுகின்றன . மின்தேக்கி மின்சுற்றில் இருந்து பிரிக்கும் பொழுது மின் ஆற்றலை சேமித்து வைத்து கொள்வதால், ஒரு தற்காலிக மின்கலனாக பயன்படுத்தலாம். துடிப்பு ஆற்றல் அளிக்கும் ஆயுதம் மின்திறன் பதப்படுத்துதல் திறன் காரணி (Power Factor) திருத்தம் இரைச்சல் வடிகட்டிகள் மின்னோடி துவக்கி ஒத்தியைந்த மின்சுற்று உணர்வுறுப்பாக ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்பட்டையில் இருந்து செய்தியை பிரித்து எடுக்க மின்தேக்கி மற்றும் மின்தூண்டி பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு, வானொலி வாங்கிகள் ஒரு குறிப்பிட்ட வானொலி நிலையத்தில் இருந்து குறிப்பலைகளை பெற மாறி மின்தேக்கியை பயன்படுத்துகின்றன. ஒத்தியைந்த மின்சுற்றின் ஒத்ததிர்வு அதிர்வெண்ணை கணக்கிடும் சூத்திரம்: இங்கு L என்பது மின்தூண்டுதிறன் (அலகு - ஹென்றி). C என்பது மின்தேக்கத்திறன் (அலகு - பாரட்). மின் தூண்டி (Inductor) மின்தூண்டி என்பது மின்காந்த சக்தியை காந்த புலத்தில் தேக்கி மின்னழுத்தை அல்லது மின்னோட்டத்தை தூண்ட வல்ல ஒரு மின் கருவி ஆகும் . குறிப்பாக நேரடி தொடர்பின்றி மின்னழுத்தத்தை தூண்டவும், மின்காந்த சக்தியை தற்காலிகமாக தேக்கி மின்னோட்டத்தை பேணவும் மின்தூண்டி பயன்படுகின்றது. மின்தூண்டி சுருள் கம்பங்களால் ஆனது. மின் தூண்டல் விளைவு இவ் சுருள் கம்பங்களில் இருக்கும் ஆடல் மின்னோட்டங்களின் ஒருமித்த விளைவுதான். ஆடல் மின்னோட்டம் (AC) அல்லது மாறும் மின்னோட்டம் (DC) மாறும் காந்த புலத்தை உற்பத்திசெய்கிறது . மாறும் காந்த புலம் மின்னழுத்தத்தை உற்பத்திசெய்கிறது அல்லது தூண்டுகின்றது. இந்த மின்னழுத்தம் ஒரு மாறும் மின்னோட்டத்தை எதிர் திசையில் உற்பத்திசெய்கிறது.அதாவது மாறும் அல்லது ஆடல் மின்னோட்டத்தை செலுத்தும் போது இந்த மின் தூண்டியில் ஒரு மின் காந்த அலை ஏற்பட்டு அந்த ஆடல் மின்னோட்டத்தை முற்றிலும் எதிர்த்து நிற்கிறது நுட்பியல் சொற்கள் மின்தேக்கி - Capacitor மின்தேக்கதிறன் - Capacitance இரண்டு இணைகடத்திகள் (இரண்டு இணைதட்டுகள்) குறிப்பிட்ட இடைவெளியால் பிரிக்கப்பட்டு, அந்தக் கடத்திகளில் மின்னூட்டம் (மின்னேற்றம்) இருக்குமானால், அந்தத் தட்டுகளுக்கு இடையே ஒரு மின்புலம் அமையும். அந்த மின்புலத்தில் தேக்கப்படமுடிந்த மொத்த மின்னூட்ட அளவே கொண்மம் அல்லது கொள்ளளவம் அல்லது மின் தேக்குதிறன் (Capacitance) எனப்படும். தகடு - Plate இணைத் தகடுகள் - Parallel Plates மின்காந்த சக்தி - Electromagnetic Energy மின்சுற்று - Electric Circuit மின்புலம் - Electric Field மின் புலம் (Electric Field) மின் தன்மைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் கொண்டு இருக்கும். இப்புலத்தைத்தான் மின் புலம் (Electric Field) என்கிறோம் மின்மம் - Electric Charges மின்னழுத்தம் - Voltage கணினி நினைவகம் - Computer Memory மின்னழுத்த சீர்படுத்தி - Voltage Regulator கை மின்விளக்குகள் - Flash Lights படத் தொகுப்பு மேற்கோள் மின் உறுப்புகள் 18-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
5760
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
மின்தூண்டி
மின்தூண்டி என்பது ஒரு செயலறு நிலை இருமுனை மின் சாதனமாகும். மின்னோட்டம் இதனூடாகப் பாயும்போது இது மின்சக்தியை காந்தப்புல வடிவில் சேமித்து வைக்கும். கம்பி போன்ற மின்கடத்தி ஒன்றை சுருளாகச் சுற்றுவதன் மூலம் இது உருவாக்கப்படும். மின்தூண்டியொன்றினூடான மின்னோட்டம் நேரத்தோடு மாறுகையில், மின்தூண்டியில் உருவாகும் மாறும் காந்தப்புலமானது பரடேயின் தூண்டல் விதிப்படி ஒரு மின்னழுத்தத்தைத் தோற்றுவிக்கும். லென்சின் விதிப்படி தூண்டிய மின்னியக்கவிசையானது அதனை உருவாக்கும் மின்னோட்டத்தின் திசைக்கு எதிராக இருக்கும். இதன் விளைவாக, மின்தூண்டியானது தன்னூடு செல்லும் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்க்கும். மின்தூண்டியானது அதன் மின்தூண்டல் அளவினால் வகைகுறிக்கப்படும். இது மின்தூண்டியால் உருவாக்கப்படும் மின்னழுத்தத்துக்கும் அதனூடு பாயும் மின்னோட்டத்தின் மாறல் வீதத்துக்குமிடையிலான விகிதத்தினால் தரப்படும். பன்னாட்டு அளவீட்டு முறைமையின்படி மின்தூண்டலின் அலகு என்றி (H) ஆகும். வழமையாக மின்தூண்டிகளின் அளவுகள் 1 µH (10−6H) யிலிருந்து 1 H வரை மாறுபடும். பல மின்தூண்டிகள் இரும்பு அல்லது பெரைட்டு போன்றவற்றாலான காந்த அகணியைக் கொண்டிருக்கும். இதன்மூலம் மின்தூண்டியின் காந்தப்புல அளவு அதிகரித்து மின்தூண்ட அளவும் அதிகரிக்கும். தடையி மற்றும் கொள்ளளவி ஆகியவற்றைப் போல் மின்தூண்டியும் மின்னணுச் சுற்றுக்களை உருவாக்கப் பயன்படும் செயலறுநிலை நேரியல் மின்சுற்று மூலமாகும். மின்தூண்டிகள் பெரும்பாலும் ஆடலோட்ட மின்னணு உபகரணங்களிலும், குறிப்பாக வானொலி உபகரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை மின்சுற்றுக்களில் ஆடலோட்ட மின்னோட்டத்தை தடுத்து நேரோட்ட மின்னோட்டத்தை மட்டும் உள்வாங்க அனுமதிக்கும். இவை மின் வடிகட்டிகளில் வெவ்வேறு மீடிறன் கொண்ட சமிக்கைகளைப் பிரித்தெடுக்கும் தேவைக்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி வாங்கிகளில் இசைவாக்கல் சுற்றுக்களில் மின்தூண்டிகளும் கொள்ளளவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கணித விவரிப்பு கடத்தியொன்றினூடாகப் பாயும் மின்னோட்டமானது அதனைச் சூழ ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும். எனவே, மின் தூண்டியொன்றின் குறுக்குவெட்டுப்பரப்புக்கு ஊடான ஏதேனுமொரு மின்னோட்ட மாறல் அக் கடத்தியில் ஒரு எதிர் மின்னியக்கவிசையை உருவாக்கும். மின்தூண்டியின் செயற்பாட்டை வரையறுக்க மின்தூண்டம் (L) பயன்படுத்தப்படுகிறது. இது எதிர்மின்னியக்கவிசை அல்லது அதற்குரிய காந்தப்பாய மாற்றம் () மற்றும் அதற்குரிய மின்னோட்டம் (i) என்பவற்றினால் தரப்படும். மின்சுற்றொன்றின் மின்தூண்டமானது அதன் மின்னோட்டப் பாதையின் வடிவ கணித அமைப்பிலும் அருகிலுள்ள பொருட்களின் காந்த உட்புகவிடுமியல்பிலும் தங்கியுள்ளது. மின்தூண்டியானது கம்பி அல்லது வேறு ஏதேனுமொரு கடத்தியொன்றினைப் பயன்படுத்தி, சுற்றினூடான காந்தப்பாயத்தை அதிகரிக்கும் விதமாக பெரும்பாலும் சுருளி வடிவில் உருவாக்கப்படும் சாதனமாகும். கம்பியினை சுருளாகச் சுற்றும்போது காந்தப்பாயக் கோடுகள் சுற்றோடு ஒன்றிக்கும் அளவு அதிகரித்து, காந்தப்புல வலிமை அதிகரித்து, மின்தூண்டல் அளவும் அதிகரிக்கும். முறுக்குகளின் எண்ணிக்கையோடு மின்தூண்டமும் அதிகரிக்கும். மேலும், சுருளின் வடிவம், முறுக்குகளின் வேறுபடுத்தல் போன்ற பல்வேறு காரணிகள் மின்தூண்டத்தின் அளவைப் பாதிக்கின்றன. இரும்பு போன்ற அயக்காந்த மூலப்பொருட்களாலான காந்த அகணியொன்றை சுருளினுள் இடுவதன் மூலமும் காந்தப்பாய அளவைக் கூட்டலாம். சுருளினால் வழங்கப்படும் காந்தப்புலத்தினால் அம்மூலப்பொருளில் தூண்டப்படும் காந்தமாக்கல் செயன்முறை காந்தப்பாய அளவை அதிகரிக்கக் காரணமாகிறது. அயக்காந்த அகணியின் உயர் உட்புகவிடுமியல்பு காரணமாக சுருளின் மின்தூண்டம் கிட்டத்தட்ட ஆயிரம் மடங்காக அதிகரிக்கும். இயைபுச் சமன்பாடு மின்தூண்டியொன்றினூடான மின்னோட்ட மாற்றம் காந்தப்பாய மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அக்கடத்திக்குக் குறுக்கே மின்னழுத்தமொன்றைத் தூண்டும். பரடேயின் மின்தூண்டல் விதியின்படி, மின்சுற்றொன்றில் ஏற்படும் காந்தப்பாய மாற்றத்தினால் தூண்டப்படும் மின்னழுத்தமானது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும். மேலே (1) இலிருந்து       (2) எனவே, மின்தூண்டம் என்பது ஒரு குறித்த மின்னோட்ட மாற்றுவீதத்துக்கு உருவாகும் மின்னியக்கவிசையை அளக்கப் பயன்படும் ஒரு கணியமாகும். எடுத்துக்காட்டாக, 1 என்றி மின்தூண்டமுடைய மின்தூண்டியொன்று, தன்னூடே செக்கனுக்கு 1 அம்பியர் எனும் வீதத்தில் மின்னோட்டம் மாறுகையில், 1 வோல்ற்று மின்னியக்கவிசையை உருவாக்கும். இது பொதுவாக மின்தூண்டியொன்றை வரையறுக்கப் பயன்படும் சமன்பாடாகும். மின்தூண்டியின் இருமைச்சாதனம் கொள்ளளவியாகும். மின்தூண்டி சக்தியை காந்தப்புலத்தில் சேமிக்கும் அதேவேளை, கொள்ளளவி சக்தியை மின்புலத்தில் சேமிக்கும். கொள்ளளவியின் மின்னோட்ட-மின்னழுத்தத் தொடர்பானது, மின்தூண்டியின் தொடர்பில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தத்தை இடமாற்றுவதன் மூலமும், கொள்ளளவம் Cயை மின்தூண்டம் Lஇனால் பிரதியிடுவதன் மூலமும் பெறப்படும். லென்சின் விதி தூண்டிய மின்னியக்கவிசையின் திசையானது லென்சின் விதியினால் தரப்படும். இதன்படி தூண்டிய மின்னியக்கவிசையானது மின்னோட்ட மாற்றத்துக்கு எதிரான திசையில் தொழிற்படும். எடுத்துக்காட்டாக, மின்தூண்டியினூடான மின்னோட்டம் அதிகரிக்கையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை எதிர்க்கும். இம்மின்னியக்கவிசையை எதிர்க்கும் சக்தி மின்தூண்டியின் காந்தப்புலத்தில் சேமிக்கப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னேற்றப்படுவதாகக் கூறப்படும். மின்னோட்டம் குறைகையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை ஆதரிக்கும். காந்தப்புலத்திலுள்ள சக்தியானது மின்சுற்றுக்கு திருப்பப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னிறக்கப்படுவதாகக் கூறப்படும். இலட்சிய மற்றும் உண்மை மின்தூண்டிகள் மின்சுற்றுக் கொள்கையில், மின்தூண்டிகள் மேலுள்ள கணிதத்தொடர்பு (2)ஐ சரியாகப் பின்பற்றும் சாதனமாகக் கருதப்படும். ஒரு இலட்சிய மின்தூண்டியானது, மின்தூண்டத்தை மட்டுமே கொண்டிருக்கும். அது மின்தடையையோ கொள்ளளவத்தையோ கொண்டிருக்காது. எனவே, இது சக்தியை விரயமாக்காது. எனினும், உண்மை மின்தூண்டிகள் இலட்சிய நடத்தையிலிருந்து விலகிச்செல்லும். அவை தடையையும் (கம்பியின் தடை மற்றும் அகணியின் சக்தி விரயம் காரணமாக), கொள்ளளவத்தினையும் (கம்பிச்சுற்றுக்களுக்கிடையிலான மின்புலம் காரணமாக) கொண்டிருக்கும். உயர் மீடிறன்களில், இக்கொள்ளளவம், மின்தூண்டியின் நடத்தையைப் பாதிக்கும். குறித்த சில மீடிறன்களில் இம் மின்தூண்டிகள் பரிவுச் சுற்றுக்களாகத் தொழிற்பட்டு சுயபரிவுச் சுற்றுக்களாக மாறும். பரிவு மீடிறனுக்கு மேலுள்ள மீடிறன்களில் கொள்ளளவ மாறுமின்னெதிர்ப்பு செல்வாக்கு மிகுந்ததாக மாறும். உயர் மீடிறன்களில், புறணி விளைவு மற்றும் அண்மை விளைவு போன்றவற்றால், சுருளின் தடை விரயம் அதிகரிக்கும். அயக்காந்த அகணியுடனான மின்தூண்டிகள், அகணியில் உருவாகும் பின்னிடைவு மற்றும் சுழிப்போட்டம் என்பன காரணமாக மேலதிக சக்தி விரயத்தைக் கொண்டிருக்கும். இவ் விளைவு மீடிறனுடன் அதிகரிக்கும். உயர் மின்னோட்டங்களில், அகணியில் காந்த நிரம்பல் ஏற்படுவதனால் உருவாகும் ஒருபடியல்லாத்தன்மை காரணமாக, மின்தூண்டியின் இலட்சிய நடத்தை மாறுபடும். மின்தூண்டியானது, அதன் அருகிலுள்ள வெளி அல்லது மின்சுற்றுக்கு மின்காந்த சக்தியை கதிர்ப்பதன் மூலமோ அல்லது, ஏனைய சுற்றுக்களிலிருந்து வரும் மின்காந்தக் கதிர்ப்பை உறிஞ்சுவதன் மூலமோ மின்காந்தத் தலையீட்டை உருவாக்கும். ஆகவே, பிரயோகப் பயன்பாடுகளில் இக்காரணிகள் முக்கியத்துவமிக்கதாக விளங்கும். பயன்பாடுகள் மின்தூண்டிகள் தொடர்குறிமுறை சுற்றுக்களிலும் சமிக்ஞைச் செயன்முறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மின்தூண்டிகள் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நேரோட்ட மின்னோட்ட மின் வழங்கிகளில் ஊசலாட்டத்தை அகற்றுவதற்கு கொள்ளளவிகளுடன் பயன்படும் பெரிய மின்தூண்டிகளிலிருந்து, கம்பி வடங்களில் வானொலி மீடிறன் இடையீட்டை அகற்றுவதற்காக அதனைச்சுற்றி காணப்படும் மெல்லிரும்புக் குமிழில் பயன்படும் சிறிய மின்தூண்டிகள் வரை இவை வேறுபடுகின்றன. நேரோட்ட வழங்கிகளாகப் பயன்படும் தொடர்மாற்றி மின் வழங்கிகளில் சக்திச் சேமிப்புக் கருவியாக மின்தூண்டி பயன்படுத்தப்படுகிறது. ஆளி தொடர்பறுக்கப்படும் காலப்பகுதியில் மின்னோட்டத்தைத் தொடர்ந்து பேணும் வகையில் மின்சுற்றுக்கு மின்தூண்டி சக்தியை வழங்கும். கொள்ளளவியொன்றுக்குத் தொடுக்கப்படும் மின்தூண்டியானது ஒரு இசைவாக்கல் சுற்றை உருவாக்கும். இது அலைவு மின்னோட்டத்துக்கான பரிவுச் சுற்றாகப் பயன்படும். இசைவாக்கிச் சுற்றுக்கள் வானொலி அலை உபகரணங்களான வானொலி அலைபரப்பிகள் மற்றும் அலைவாங்கிகளில் கூட்டுச் சமிக்ஞையிலிருந்து குறித்த ஒரு மீடிறனுடைய சமிக்ஞையை மட்டும் தெரிவுசெய்யும் செயன்முறையில் குறுகிய பட்டை அனுமதிப்பு வடிகட்டியாகவும், இலத்திரனியல் அலை இயற்றிகளில் சைன் சமிக்ஞைகளை உருவாக்குவதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. காந்தப்புலத்தினால் இணைக்கப்பட்டு அருகருகே அமைந்திருக்கும் இரு மின்தூண்டிகள் மின்மாற்றியொன்றை உருவாக்கும். மின்மாற்றியானது ஒவ்வொரு மின் வலு நிலையத்திலும் காணப்படும் அடிப்படைச் சாதனமாகும். மீடிறன் அதிகரிக்கையில் அகணியில் உருவாகும் சுழிப்போட்டம் மற்றும் சுருளில் ஏற்படும் தோல் விளைவு என்பன காரணமாக மின்மாற்றியின் பயன்திறன் குறைவடையலாம். உயர் மீடிறன்களில் அகணியின் அளவு குறைக்கப்படலாம். இக்காரணம் பற்றி, விமானங்கள் ஆடலோட்ட மின்னோட்டத்தில் வழமையாகப் பயன்படுத்தப்படும் 50 அல்லது 60 Hz மீடிறனுக்கு மாறாக 400 Hzஐப் பயன்படுத்துகின்றன. இதன்மூலம் மின்மாற்றிகளின் அளவு பெருமளவில் குறைவதனால் மின்மாற்றியின் நிறையும் குறைக்கப்படுகிறது. மின் கடத்து முறைமைகளில் மாறு மின்னோட்டம் மற்றும் வழு மின்னோட்டங்களைக் குறைப்பதற்காக மின்தூண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, மின்தூண்டிகள் பொதுவாக மாறுமின்னெதிர்ப்பி என அழைக்கப்படுகின்றன. மின்தூண்டிகளில் பக்கவிளைவுகள் அதிகம் காணப்படுவதால் அவை இலட்சிய நடத்தையிலிருந்து மாறுபடுவதாலும், மின்காந்தத் தலையீட்டை உருவாக்குவதாலும், மின்தூண்டிகளின் பௌதிக அளவு காரணமாக அவற்றை ஒருங்கிணை சுற்றுக்களில் பயன்படுத்த முடியாமையினாலும் நவீன இலத்திரனியல் சாதனங்களில், குறிப்பாக கையடக்கக் கருவிகளில் மின்தூண்டிகளின் பயன்பாடு வீழ்ச்சியடைந்து வருகிறது. மின்தூண்டிகளுக்குப் பதிலாக, கொள்ளளவிகளிலிருந்து மின்தூண்டத்தைப் பெறத்தக்க சுழலி போன்ற செயல்நிலைக் கருவிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மின்தூண்டிக் கட்டமைப்பு வழமையாக ஒரு மின்தூண்டியானது கடத்து பொருளினாலான, பொதுவாக காவலிடப்பட்ட செப்புக்கம்பியிலாலான, சுருளினையும், அதன் நடுவே நெகிழி அல்லது அயக்காந்தப் பொருளினாலான அகணியையும் கொண்டிருக்கும். அயக்காந்த அகணியின் உயர் உட்புகவிடுமியல்பு காரணமாக மின்தூண்டியின் காந்தப்புலம் அதிகரிப்பதோடு, அவை மின்தூண்டிக்கு மிக நெருக்கமாகவும் அமைந்திருக்கும். இதனால் மின்தூண்ட அளவு அதிகரிக்கும். தாழ் மீடிறன் மின்தூண்டிகள், மின்மாற்றிகள் போல உருவாக்கப்படும். இங்கு சுழிப்போட்டத்தைக் குறைக்கும் வகையில் அகணியிலுள்ள உருக்கு தகடுகளாகப் பயன்படுத்தப்படும். மெல்லிரும்பு அகணிகள் கேள் மீடிறன் அலைகளுக்கு அதிகமான மீடிறனுடைய சமிக்ஞைச் சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், உயர் மீடிறன்களில் சாதாரண இரும்புக் கலப்புலோகப் பொருட்கள் அதிக சக்தி இழப்பை ஏற்படுத்தும் அதேவேளை இவை ஒப்பீட்டளவில் குறைந்த சக்தி இழப்பையே ஏற்படுத்துகின்றன. மின்தூண்டிகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு இரும்பு அகணியைச் சூழ காவலிட்ட கம்பியைச் சுற்றுவதன் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. சில மின்தூண்டிகளில் கம்பி வெளித்தெரியுமாறு காணப்படும் அதேவேளை, ஏனையவை கம்பியை அகணியினுள் மறைத்துக் காணப்படும். இவை காப்பிடப்பட்டவை எனப்படும். சில மின்தூண்டிகளில் மாற்றக்கூடிய அகணி காணப்படும். இதன்மூலம் அம்மின்தூண்டியின் மின்தூண்ட அளவை மாற்ற முடியும். அதியுயர் மீடிறன்களை தடைசெய்யும் வகையில் பயன்படுத்தப்படும் மின்தூண்டிகள் கம்பியொன்றின் மீது இரும்பு குமிழை இழைப்பதன் மூலம் உருவாக்கப்படும். சிறிய மின்தூண்டிகள், மின்சுற்றுப் பலகைகளில் நேரடியாக சுருளி வடிவில் வரைவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. சில தள மின்தூண்டிகள் தள அகணியைப் பயன்படுத்துகின்றன. சிறிய பெறுமதியுடைய மின்தூண்டிகள் ஒருங்கிணை சுற்றுக்களிலும் உருவாக்கப்பட முடியும். மூவாயிகளை உருவாக்கம் அதே செயன்முறை இங்கும் பயன்படுத்தப்படுகிறது. சுருளி வடிவிலான அலுமினியம் தொடுப்பிணைப்பிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். எனினும், சிறிய அளவு காரணமாக மின்தூண்டத்தின் அளவும் குறைவடையும். எனவே, பொதுவாக சுழலி எனப்படும் சுற்று மூலமாக கொள்ளளவி மற்றும் செயல் நிலைக் கருவிகளைப் பயன்படுத்தி மின்தூண்டிகள் போலச் செயற்படும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நுட்பியல் சொற்கள் மின்தூண்டி - Inductor மின்தூண்டுதிறன், மாறுமின் தூண்டு தடை, மின் தூண்டம் - Inductance தூண்டு புலம் - Inductive Field தூண்டு சுருள் - Induction Coil தூண்டல் விளைவு - Inductive Effect மின்காந்த சத்தி - Electromagnetic Energy ஆடல் மின்னோட்டம், மாறும் மின்னோட்டம் - Alternating Current மின்சுற்று - Electric Circuit மின்புலம் - Electric Field மின்காந்த சத்தி மூலம் - Electromagnetic Energy Source மின்னூட்டம் - Electric Charge Flow மின்னோட்டம் - Electromagnetic Current மின்னழுத்தம் - Voltage காந்த புலம் - Magnetic Field காந்த பாயம் - Magnetic Flux மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் தமிழ்ச்சொற் தேடல்கள் மின் உறுப்புகள்
5761
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
இருமுனையம்
இருமுனையம் (Diode) அல்லது இருமுனையி (இலங்கை வழக்கு: இருவாயி) என்பது ஒரு திசையில் மட்டும் கடத்தும் மின்னனியல் உறுப்பாகும். இன்று இது பெரும்பாலும் அரைக்கடத்திப் பொருள்களால் ஆன ஒரு நுண்மின்னணுக் கருவி. இது ஒரு திசையில் மின்னழுத்தம் தந்தால் மிக்க் குறைவான மின்தடை தந்து எளிதாக கடத்தி அதிக மின்னோட்டம் தருகின்றது. ஆனால் எதிர் திசையில் மின்னழுத்தம் தந்தால் பேரலவு மின் தடை தந்து அரிதில் கடத்தியாக மிகக்குறைவான மின்னோட்டமே தருகிறது. எனவே இக்கருவியை ஒருவழிக் கடத்தி அல்லது ஒருபால் கடத்தி எனச் சுருக்கமாகக் கூறலாம். இச் சிறப்புப் பண்பின் பயனாக மாறுமின்னோட்டத்தை ஒரே திசையில் பாயும் நேர்மின்னோட்டமாக நெறிப்படுத்த இது பயன்படுகின்றது. இருமுனையம் மிகப்பெரும்பாலான இலத்திரனியல் அல்லது மின்னனியல் கருவிகளில் பயன்படுகின்றது. மின்னழுத்தச் சீர்படுத்தி, எண்ம உறுப்புக் கருவிகள், அலைத்திருத்திகள், குறிப்பலைப் பிரிப்பிகள், மின்னனியல்அலைவிகள் ஆகியவற்றின் மின்னணுவியல் சுற்றுக்களில் இருமுனையம் சிறப்பாகப் பயன்படுகின்றது. அரைக்கடத்தி இருமுனையம் இன்று மிகப் பரவலாக வழக்கில் உள்ள படிக க் கட்டமைப்புள்ள அரைக்கடத்தி பொருளால் செய்யப்பட்ட மின்னனியல் உறுப்பாகும். இதில் உள்ள p–n சந்திகள் இரு மின்புள்ளிகளில் இணைக்கப்படுகின்றன. வெற்றிடக் குழல் இருமுனையம் ஒரு தட்டு, நேர்முனை, வெப்பமூட்டிய எதிர்முனை ஆகியவை அமைந்த இரு மின்முனையங்களால் ஆகிய மின்னனியல் உறுப்பாகும். இவற்றில் முன்னவையே முதலில் கண்டுபிடிக்கப்பட்டன படிகத்தின் அலைசீராக்கும் இயல்பு 1874 இல் பெர்டினாண்டு பிரவுன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பூனைமீசை எனும் முதல்வகை அரைக்கடத்தி இருமுனையங்கள்1906 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கலினா எனும் கனிமப் படிகத்தால் ஆனவை. இன்று பெரும்பாலான இருமுனையங்கள் மணலகத்தாலோ (சிலிக்கான்) சிலவேளைகளில், ஜெர்மேனியம், செலினியம் ஆகிய படிகப் பொருள்களாலோ செய்யப்படுகின்றன. முதன்மைப் பயன்பாடுகள் இருமுனையத்தின் வழக்கமான செயல் மின்னோட்டத்தை ஒருதிசையில் மட்டும் கடத்துவதாகும். இந்தத் திசை இருமுனையத்தின் முன்னேகும் திசை எனப்படும்.இது எதிர்த்திசையில் மின்னோட்டத்தைத் தடுக்கும். இருமுனையத்தின் இந்தத் திசை எதிர்திரும்பல் அல்லது எதிரோட்டத் திசை எனப்படும். எனவே இருமுனையத்தைச் சரிபார்ப்புக் கவாடத்தின் (ஓரதரின்) மின்னனியல் வடிவமாகக் கருதலாம். இந்த ஒருதிசை இயக்கம் சீராக்கம் எனப்படுகிறது. இது மாறுதிசை மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்ற உதவுகிறது. மேலும் வானொலி அலைவாங்கிகளில் வானொலி அலைகளில் இருந்து குறிகைகளைப் பிரிக்க உதவுகிறது. இந்த இருமுனையங்கள் அலைசீராக்கிகளாகச் செயல்படுகின்றன. இவை அலையொற்றிகள் (Detectors) எனப்படுகின்றன. முன்னேகு திசையில் அரைக்கடத்தி இருமுனையங்கள் ஒரு குறிப்பிட்ட வாயில்நில மின்னழுத்தம் தரபட்டால் மட்டுமே மின்னோட்டத்தைக் கடத்தத் தொடங்கும். இந்நிலையில் இருமுனையம் முன்னேகும் மின்னழுத்தநிலையில் உள்ளதாகக் கூறப்படும். முன்னேகும் மின்னழுத்தமூட்டிய நிலையில் இருமுனையத்தின் குறுக்கே அமையும் மின்னழுத்தம் மின்னோட்டத்தைப் பொறுத்து மிகவும் அருகியே மாறும்.அன்னல் வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்து இம்மின்னழுத்தம் மாறுகிறது; இந்த விளைவு அல்லது பான்மை மின்னழுத்தத்தை மேற்கோளாக்க் கொண்டு வெப்பநிலையை அளக்க உதவுகிறது. இது வெப்பநிலை உணரியாகவோ மின்னழுத்த மேற்கோளாகவோ இருமுனையத்தைப் பயன்கொள்ள உதவுகிறது. அரைக்கடத்தி இருமுனையத்தின் மின்னோட்ட-மின்னழுத்தப் பான்மைகளை அரைக்கடத்திப் பொருள்களின் தேர்வாலோ அப்பொருள்களுக்குத் தரும் மாசூட்டிகளாலோ வேண்டிவண்னம் மாற்றலாம். இந்நுட்பங்கள் பலவகைப் பயன்பாடுகளைக் கொண்ட சிறப்புவகை இருமுனையங்களை வடிவமைக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக, மின்னழுத்தஞ் சீராக்கும் சீனர் இருமுனையங்களையும் உயரழுத்த மின்னலையெழுச்சிகளில் இருந்து மின்சுற்ரதர்களுக்குப் பாதுகாப்புதரும் தொடர்பாய்வு இருமுனையங்களையும் வானொலி, தொலைக்கட்சி அலைவாங்கிகளை மின்னனியலாக இசைவிக்கும் மாறுஞ்செயல் இருமுனையங்களையும், வானொலி அலைவெண் அலைகளை உருவாக்கும் அலைவிகளைப் படைக்க உதவும் சுருங்கை இருமுனையங்களையும் குன்வகை இருமுனையங்களையும் இம்பேட் (IMPATT) இருமுனையங்களையும் ஒளிதரும் ஒளியுமிழ் இருமுனையங்களையும் கூறலாம்.சுருங்கை, குன்வகை, இம்பேட்வகை இருமுனையங்கள் எதிர்மத் தடையைக் கொண்டுள்ளதால் இவை நுண்ணலை, நிலைமாற்றச் சுற்றதர்களில் பயன்படுகின்றன. வெற்றிட, அரைக்கடத்தி இருமுனையங்களை இரைச்சல் ஆக்கிகளாகவும் பயன்படுத்தலாம். p-n சந்தி உருவாக்கம் தூய மணலகம்(சிலிக்கான்) அல்லது சாம்பலகம்(ஜேர்மானியம்) அரைக்கடத்தியின் ஒற்றைப்படிகம் ஒன்றின் ஒருபுறம் ஏற்பான் மாசு அணுக்களாலும் மறுபுறம் கொடை மாசு அணுக்களாலும் மாசூட்டப்படுவதால் PN சந்தி உருவாக்கப்படுகிறது. P-பகுதி அதிகளவில் மின்துளைகளையும் , N-பகுதி அதிகளவில் மின்னன்களையும் பெற்றுள்ளன ஊட்டம் அருகிய பகுதி சந்தி உருவாக்கப்பட்டவுடன் விரவல் நிகழ்வதால் , மின்துளைகளும் கட்டுறா எதிர்மின்னிகளும் சந்தியைக் கடக்கின்றன. இந்நிகழ்வின் போது N-பகுதியிலிருந்து P-பகுதிக்குச் சந்தியைக் கடந்து செல்லும் எதிர்மின்னிகள் சந்திக்கு அருகில் P-பகுதியில் உள்ள துளைகளுடன் ஒன்றிணைகின்றன. இதுபோன்று மின்துளைகள் சந்தி வழியே P-பகுதியிலிருந்து N-பகுதிக்குச் சென்று சந்திக்கு அருகில் N-பகுதியில் உள்ள எதிர்மின்னிகளுடன் ஒன்றிணைகின்றன. இதனால் சந்திக்கு இருபுறமும் இயக்க மின்னூட்டங்கள் அருகிய பகுதி உருவாக்கப்படுகிறது. இப்பகுதி ஊட்டம் அருகிய பகுதி (depletion region) என்று அழைக்கப்படுகிறது. ஆகவே சந்திக்கு இடதுபுறம் உள்ள ஏற்பான் அணுக்கள் எதிர்மின்னணுக்களாகவும் வலது புறம் உள்ள கொடை அணுக்கள் நேர்மின்னணுக்களாகவும் மாறுகின்றன. மின்னழுத்த அரண் இயக்கமில்லாப் பகுதியில், கொடை மற்றும் ஏற்பான் அயனிகளுக்கிடையே ஒரு மின்புலம் உருவாக்கப்படுகிறது. N-பகுதியின் மின்னழுத்தம் P-பகுதியின் மின்னழுத்தத்தை விட அதிகம். எனவே எதிர்மின்னிகள் N-பகுதியிலிருந்து குறைந்த மின்னழுத்தம் உள்ள P-பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இதே போல், P-பகுதியில் மின்துளைகள் குறைந்த மின்னழுத்தத்தில் அமைவதால் N-பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. ஆகவே பெரும்பான்மை மின்னூட்டஙளின் இயக்கத்தை எதிர்க்கும் ஒரு தடை , சந்தியில் உருவாகிறது. தடையின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் இடையிலான மின்னழுத்த வேறுபாடே 'மின்னழுத்த அரண்' (potential barrier) ஆகும். மண்ணியத்தினாலான PN-சந்திக்கு ஏறத்தாழ 0.7V ஆகவும் , சாம்பலியத்தினாலான PN-சந்திக்கு ஏறத்தாழ 0.3V ஆகவும் மின்னழுத்த அரண் அமைகிறது. தடையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு உள்ள தொலைவு மின்னழுத்த அரணின் அகலம் என்றழைக்கப்படுகிறது. இயக்க நிலைகளும் முனைய இயல்புகளும் இருமுனையத்தின் (Diode) இயக்க இயல்புகளை மின்னோட்ட-மின்னழுத்த இயல்புப் படம் எடுத்துரைக்கின்றது. எந்த திசையில் மின்னழுத்தம் தருகிறோம் என்பதைப் பொறுத்து இரண்டு இயக்க நிலைகளைக் கொண்டது. இது தவிர அத்துமீறிய ஒரு முறிவியக்க நிலையும் உண்டு. அவையானவை: நேர் அழுத்த முறை இயக்கநிலை எதிர் அழுத்த முறை இயக்கநிலை அத்துமீறிய எதிர் அழுத்த முறிவியக்கநிலை நேர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தரும் பொழுது இருமுனையம் மின்னோட்டத்தை அனுமதிக்கும். இந்நிலையில் இருமுனையம் ஒரு எதிர்ப்பற்ற சுற்று (முழுக்கடத்தி இழை) போல் செயல்படும். எதிர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தரும் பொழுது இருமுனையம் மின்னோட்டத்தை அனுமதிக்காது. இந்நிலையில் இருமுனையம் ஒரு விடு்பட்ட சுற்று (அறுந்த சுற்று) போல் செயற்படும். எதிர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தந்தால் இருமுனையம் அதிகம் கடத்தாது என்பது ஒரு குறிப்பட்ட அளவு எதிர் மின்னழுத்தம் வரையிலும் தான். அக் குறிப்பிட்ட எதிர்ம மின்னழுத்தத்தை மீறினால், கட்டின்றி அதிக அளவு மின்னோட்டத்தை எதிர் திசையிலும் கடத்தும். இந்நிலைக்கு முறிவியக்கம் என்று பெயர். இந்நிலையிலும் இருமுனையம் சிறப்பாக பயன்படுகின்றது. ஏனெனில், இருமுனையத்தின் இடையே உள்ள மின்னழுத்தம் அதிகம் மாறாமல் இருமுனையம் வழியே வேண்டிய அளவு மின்னோட்டம் பாய முடியும். அதன் மின்னாற்றல் திறனின் எல்லை அளவை மீறாதிருந்தால் போதுமானது. இவ்வகை பயன்பாட்டிற்காகவே சீனர் இருமுனையங்கள் (Zener Diodes) உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலே விளக்கப்பட்ட இருமுனைய தொழிற்பாடுகள் கருத்தியல் (ideal) இருமுனையங்களுக்கே பொருந்தும். பயன்பாட்டிலுள்ள இருமுனைய தொழிற்பாடுகள் சற்று வேறுபடும். குறிப்பாக நேர் அழுத்த முறையில் மின்னழுத்த அளவு 0 V அல்லாமல் சுமார் 0.7 V ஆக அமைந்திருக்கும். இருமுனையம் வழியே பாயும் மின்னோட்டம் இருமுனையம் வழியே பாயும் மின்னோட்டம் என்றும், இருமுனையத்தின் இருமுனைக்கும் இடையே உள்ள மின்னழுத்தம் என்றும் கொண்டால், இருமுனையத்தின் ஊடே பாயும் மின்னோட்டம்: மேலே உள்ள சமன் பாட்டில் என்பது எதிர் அழுத்த முறையில் பாயும் மிக மிகச் சிறிதளவான மின்னோட்டம். மேலே உள்ள சமன்பாட்டை (ஈடுகோளை) இன்னும் சுருக்கமாக எழுத, என்றும் என்றும் கொண்டால் இருமுனையத்தின் மின்னோட்ட-மின்னழுத்த உறவை கீழ்க்காணுமாறு எழுதலாம்: மேலுள்ளதில் அறை வெப்பநிலையில் (300 K) என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மாறா ஒரு நிலையெண்.. நுட்பியல் சொற்கள் இருமுனையம் - Diode கருத்தியல் இருமுனையம் - Ideal Diode நடைமுறை இருமுனையம் - Practical Diode எண்ணக்கூறு கருவிகள், ஏரணக் கருவிகள் - Logic Elements, Logic Gates மின்னழுத்தச் சீர்படுத்தி - Voltage Controller அலைப்பி - Oscillator இயக்க நிலை - Operational State மின்னோட்ட-மின்னழுத்த இயல்புப் படம் - I-V Characteristic Graph நேர் அழுத்த முறை - Forward Bias எதிர் அழுத்த முறை - Reversed Bias நேர்ம மின்னோட்டம் - Positive Current எதிர்ம மின்னோடம் - Negative Current எதிர்ப்பற்ற சுற்று, முழுக்கடத்திச் சுற்று - Short Circuit விடுபட்ட சுற்று, அறுபட்ட சுற்று, திறந்த சுற்று - Open Circuit மின்காந்த ஆற்றல் - Electromagnetic Energy மாறு மின்னோட்டம் - Alternating Current மின்சுற்று - Electric Circuit மின்புலம் - Electric Field மின்மம், மின்னூட்டம் - Electric Charge மின்னோட்டம் - Electric Current மின்னழுத்தம், வோல்ட்டழுத்தம் - Voltage உசாத்துணை இருமுனையம் இருமுனையம் வெளி இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் தமிழ்ச்சொற் தேடல்கள் மின்னணுவியல் மின் உறுப்புகள்
5766
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
குறும்பரப்பு வலையமைப்புகள்
குறும்பரப்பு வலையமைப்பு (Local Area Network) அல்லது அகக்கணினி வலையமைப்பு என்பது ஒரு வீடு, அல்லது ஒரு கல்லூரியின் சில கட்டிடங்கள் போன்று சிறு பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும். ஆரம்பத்தில் குறும்பரப்பு பிணையம் ஒரு மையக் கணினியையும் பிற dumb terminals கொண்டிருந்தது. இதன் நோக்கம் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பயன்களுக்கு அல்லது வெவ்வேறு பயனர்களுக்கு சேவை வழங்குவதாகும். இவை பெரும்பாலும் ஈதர்நெட் தொழில்நுட்பத்தில் காவலிடாத முறுக்கான வயர்களூடாகவும் வைபை தொழில்நுட்பத்தூடாகவும் வடிவமைக்கப்பட்டன. பின்னர் workstations ஒரு குறும்பரப்பாகப் பிணைக்கப்பட்டன. இதன் நோக்கம் பல கணினிகள் நினைவகம், அச்சியந்திரங்கள் போன்ற பொது வசதிகளை பகிர்ந்து கொள்வதும் கணினிகளுக்கிடையான தொடர்புகளை ஏற்படுத்துவதாகும். இங்கு வலையமைப்பு பாதுகாப்பாக பேணுவது முக்கியம். வரலாறு 1970களில் ஒரே இடத்தில் உள்ள கணினிகளை ஒன்றாக வேகமாக இணைக்கும் பொருட்டு முதலாவது வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் ஈதர்நெட் மற்றும் ஆர்க்நெட்- ARPANET(American Research Project Agancy - DoD USA மிகப்பிரபலமானவை. CP/M மற்றும் டாஸ் இயங்குதளங்களில் வளர்ச்சியானது ஒரே இடத்தில் பல கணினிகள் முதல் பன்னூற்றுக்கணக்கான கணினிகள் வரை வைத்திருக்க வழிவகை செய்தது. வலையமைப்புக்களில் ஆரம்ப இலக்குக்களாக லேசர் அச்சியந்திரங்களைப் பகிருதல், கோப்புக்களை சேமிக்கும் இடங்களைப் பகிர்தல் ஆகியனவையே ஏனெனில் அக்காலகட்டத்தில் இவையிரண்டும் விலைமதிப்பானவையாக இருந்தது. 1983 இல் கணினிப் பண்டிதர்கள் கிரமமாக வரும் வருடத்தை வலையமைப்பு வருடமாகப் பிரகடனப்படுத்தினர். எனினும் உண்மையில் பௌதீக லேயர்(Physical Layer) மற்றும் அதை அணுகுவதற்கான வழிமுறைகள் ஒத்திசைவாக இல்லாதிருந்ததால் எவ்வாறு கணினி வழங்களை வினைத்திறனாகப் பகிர்வது என்பதில் மயக்கங்கள் ஏற்படுத்துத் தயக்கங்களை உண்டுபண்ணியது. பொதுவாக அக்காலத்தில் வலையமைப்புக் அட்டைகளைத் (நெட்வேர்க் காட்) தயாரித்தோர் தமக்கெற்றேற்றமாதிரி தாம் உருவாக்கிய வலையமைப்பு இயங்குதளம், நெட்வேர்க் காட், அதை அணுகுவதற்கான முறை, கேபிள் முறைகள் போன்ற இருந்தன. இதற்கு ஓர் தீர்வாக நாவல் நெட்வேர் வெளிவந்து வெற்றிகண்டது. இது 40 இற்கும் மேற்பட்ட கணினி வலையமைப்பு அட்டைகள்/மற்றும் கேபிள் முறைகளை ஆதரித்து இதன் போட்டியாளர்களை விட மேம்பட்டதாக விளங்கியது. நாவல் நெட்வேர் கணினி வலையமைப்பு வர்தகத்தை 1983 இன் ஆரம்பத்தில் இருந்து 1990 களில் மைக்ரோசாப்டின் வினைத்திறனான வின்டோஸ் என்டி சேவர் மற்றும் விண்டோஸ் பொ வேர்க்குறூப்ஸ் போன்றவை வெளிவரும்வரை ஆதிக்கம் செலுத்தியது. இக்காலகட்டத்தில் யுனிக்ஸ் இயங்குதளத்தைத் தயாரித்து விநியோகித்த சண் மைக்ரோ சிஸ்டம், ஹூயூவ்லெட் பக்காட், சிலிக்கான் கிராபிக்ஸ், இண்டகிராப், நெக்ஸ்ட் மற்றும் அப்போலோ TCP/IP இல் அமைந்த வலையமைப்பைப் பாவித்தன. இத்தொழில்நுட்பமானது இணையத்திலும் லினக்ஸ் மற்றும் ஆப்பிள் மாக்ஓஎஸ் இயங்குதளங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதோடு நாவல் நெட்வேர் ஆரம்பத்தில் 5ஆம் பதிப்புவரை விரும்பிப் பாவித்த ஐபிஎஸ், ஆப்பிள்டோக், என்பிஎவ் போன்றவற்றையும் மாற்றீடு செய்துள்ளது. கணினிப் பிணையமாக்கம்
5767
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பெரும்பரப்பு வலையமைப்புகள்
பெரும்பரப்பு வலையமைப்பு என்பது பூமியின் பரந்த பிரதேசத்தில் பலநூறு கணினிகளை கொண்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும். இவ்வகை வலையமைப்புக்களானது ரவுட்டர் ஊடாக பொதுத் தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பாவிக்கும் ஓரே பரந்த வலையமைப்பு ஆகும். இவை நாடுகடந்த பன்னாட்டு வலையமைப்புகளாகவும் இருக்கலாம் எடுத்துக்காட்டாக உலக உணவுத் திட்டம் இன் பெரும்பரப்பு வலையமைப்பு. இவ்வகை இணைப்புகளை ஏற்படுத்துவதற்காக குத்தகைக்கு எடுக்கப்படும் இணைப்புக்கள் (லீஸ்ட் லைன்), வீசட் இணைப்புக்கள் மற்றும் வைமக்ஸ் தொழில் நுட்பத்தையே பயன்படுத்துவார்கள். பெரும்பரப்பு வலையமைப்பிற்கு இணையம் இதற்கு உதாரணமாகும். கணினிப் பிணையமாக்கம் கணினியியல்
5768
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பெருநகர் பரப்பு வலையமைப்புகள்
பெருநகர் பரப்பு வலையமைப்புகள் ஒரு வளாகத்திலோ அல்லது ஒரு நகரத்திலோ பரந்திருக்கும் ஒரு பெரிய கணினி வலையமைப்பு ஆகும். இவ்வலையமைப்பில் கணினிகளை இணைக்க கம்பியில்லாத் தொலைத்தொடர்புத் தொழில்நுடபம் அல்லது ஒளியிழை (கண்ணாடிநார்) இணைப்பு பயன்படுகிறது. மேலும் காண்க திசைவி திசைவித்தல் மிகக்குறுகிய பாதையை முதலில் திறத்தல் கணினிப் பிணையமாக்கம்
5770
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.விஜயகாந்த் இதன் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார். கட்சிக் கொள்கைகள் தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு: “அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம். அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே எங்களின் லட்சியம். தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது. தீவிரவாதத்தை தூண்டுபவர்களையும், தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும், ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் நாட்டில் இருந்து அடியோடு ஒழித்து எம்மதமும் சம்மதம் எனும் நிலையை உருவாக்குவது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுடன் உள்ள நதி நீர் பிரச்சினைகளை சுமூகத் தீர்வு கண்டு நட்புறவை வளர்த்து அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் நதிகளை இணைப்பதற்கு அடித்தளமிடுவது. தமிழகத்தில் கல்வியையும், அதன் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் பண்டைய கால வரலாறும், பண்பாடும் மாறாமல் அதே நேரத்தில் நவீன காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ப நடைமுறை கல்வியையும், தொழிற்கல்விக்கு முக்கியதுவம் அளித்து தரமான கல்வியை தமிழகத்திற்கு அளித்து மாணவர்கள், மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றுவது. இந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது. விவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது. நெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் காத்திட புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு பாடுபடுவது. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம். 2006 சட்டமன்றத் தேர்தல் இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர். 15வது மக்களவைத் தேர்தல் 15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது . 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். 16ஆவது மக்களவைத் தேர்தல் இத்தேர்தலில் பாசக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.. தொகுதிப் பங்கீடு: 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தேமுதிக தலைமைக்கழக இணையதள அணி 2006 தமிழக தேர்தலின் கட்சிவாரியான முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள் 2005இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் புதுச்சேரி அரசியல் கட்சிகள்
5771
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஒளியமைப்பு
பார்வை மனித வாழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதனால் பார்வைப் புலனுக்கு அவசியமான ஒளி மனிதனுக்கு மிகவும் அடிப்படையான, அவசியமான ஆற்றல்களுள் ஒன்றாகிறது. மனிதனுடைய பல்வேறு வகையான தேவைகளுக்காக ஒளியை வழங்குவதற்கான தொழில் நுட்பமே ஒளியமைப்பு ஆகும். ஒளியின் முதன்மையான மூலம் சூரியன் ஆகும். தொடக்கக்கால மனிதர்கள் ஒளி தேவைப் படக்கூடிய தமது செயற்பாடுகளை எல்லாம் பகலிலேயே வைத்துக்கொண்டனர். தீயைக் கட்டுப்பாடாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பின்னர் இரவிலும் ஒளியை பெறக்கூடிய செயற்கை முறைகள் உருவாக்கப்பட்டன. மிக அண்மைக்காலம் வரை தீப் பந்தங்கள், மெழுகு திரி, எண்ணெய் விளக்குகள் என்பவையே இரவு நேர ஒளி மூலங்களாகப் பயன்பட்டு வந்தன. மின் விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இரவையும் பகல் போலக் கருதிச் செயற்படக்கூடிய வல்லமை மனிதருக்குக் கிடைத்தது. தற்காலத்தில் இரவில் மட்டுமன்றிப் பகலிலும் கட்டிடங்களுக்குள் சூரிய ஒளி போதிய அளவு கிடைக்காத பகுதிகளிலும், சிறப்பான காட்சி விளைவுகளை உருவாக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒளியைப் பயன்படுத்தவேண்டிய இடங்களிலும் மின் ஒளியே பயன்படுத்தப்படுகின்றது. நவீன ஒளியமைப்பை இரண்டு வகைகளாகக் கருத்தில் எடுக்கலாம். இயற்கை ஒளியமைப்பு செயற்கை ஒளியமைப்பு இயற்கை ஒளியமைப்பு பொதுவாகப் பலரும் இயற்கை ஒளியை விரும்புகின்றனர். குறைந்த செலவில் மனிதருடைய தேவைகளை நிறைவு செய்யக்கூடியது இயற்கை ஒளி. சூரிய ஒளியை உள்ளக ஒளியமைப்புக்குப் பயன்படுத்தும் போது, கட்டிடத்தின் அமைவுத் திசை, சாளரங்களின் அளவும் வடிவமும் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இது மட்டுமன்றிச் சாளரங்களூடாக அளவுக்கு அதிகமான ஒளியும், அதனுடன் சேர்ந்து வெப்பமும் நுழைவதையும் கவனிக்க வேண்டும். இயற்கை ஒளி ஒரு நாளின் எல்லா நேரங்களிலுமோ அல்லது ஒரு ஆண்டின் எல்லா நாட்களிலுமோ ஒரே சீராகக் கிடைப்பதில்லை. இதனால் அளவுக்கு கூடுதலான ஒளி இருக்கும் நேரங்களில் அதனைக் கட்டுப்படுத்தி அளவாக உள்ளே விடவும், போதிய ஒளி இல்லாத நேரங்களில் செயற்கை ஒளி மூலங்களிலிருந்து ஒளி பெறும் வகையிலும் ஒளியமைப்பை வடிவமைக்க வேண்டும். செயற்கை ஒளியமைப்பு செயற்கை ஒளியமைப்பு இக்காலத்தில் மின்னொளியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதற்காகப் பலவகையான ஒளிக் குமிழ்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான விளக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக் குமிழ் வகைகள் ஒவ்வொன்றும் அவ்வவற்றுக்கு உரிய சாதக பாதக அம்சங்களைக் கொண்டுள்ளன. தேவைகளைக் கருத்திலெடுத்துப் பொருத்தமான குமிழ்களும் விளக்குகளும் தெரிவு செய்யப்படுகின்றன. இவற்றையும் பார்க்கவும் மேடை ஒளியமைப்பு வெளிப்புற ஒளியமைப்பு ஒளியமைப்பு nl:Verlichtingstechniek simple:Floodlight
5773
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
திரிதடையம்
திரிதடையம் (Transistor, இலங்கை வழக்கு: மூவாயி) அல்லது திரான்சிஸ்டர் என்னும் மின்னனியல் கருவி ( இலத்திரனியல் கருவி); இது அடிப்படையான மின் குறிப்பலை பெருக்கியாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் நிலைமாற்றிகளாகவும் (switches) பயன்படும் ஓர் அரைக்கடத்திக் கருவி ஆகும். இன்றைய கணினிகள், அலைபேசிகள் முதல் கணக்கற்ற மின்னனியல் கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் இந்தத் திரிதடையங்களால் பின்னிப் பிணைந்த மின்சுற்றுகளால் ஆனவை. இதனைக் கண்டுபிடித்தவர்களுக்கு 1956இல் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாறு வெப்ப மின்னணு மும்முனையம் 1907 இல் புதிடாகப் புனையப்பட்டது. இதனால் வானொலித் தொழில்நுட்பமும் நெடுந் தொலைவுத் தொலைபேசித் தொழிநுட்பமும் கிளைத்து வளரலாயின. அனால், இந்த மும்முனையன் கணிசமான மின்னாற்றலை உறிஞ்சியது. வில்லியம் எக்கிளெசு படிக இருமுனைய அலையாக்கியைக் கண்டுபிடித்தார். செருமானிய இயற்பியலாளர் 1925 இல் ஜூலியசு எட்கர் இலில்லியன்பெல்டு புல விளைவு திரிதடையத்துக்கான (புவிதி) பதிவுரிமம் கோரி விண்னப்பித்தார். இது வெற்றிடக்குழல் மும்முனையத்துக்கு ஈடான திண்மநிலை அல்லது மின்னனியல் பதிலியாக விளங்கியது. இவரே அமெரிக்காவிலும் இதற்கான பதிவுரிமத்துக்கு 1926 இல் விண்ணப்பித்தார். and 1928. என்றாலும், இவர் இதற்கான ஆய்வுக் கட்டுரை ஏதும் வெளியிடவில்லை. மேலும் இவரது கருவிகளுக்கான இயக்கத்திக் காட்டும் முன்வகைமைப் படிமம் எதையும் பதிவுரிம விண்னப்பங்களில் குறிப்பிடவில்லை. இதற்கான அரைக்கடத்திப் பொருள்களும் பத்தாண்டுகளாகச் சந்தைக்கு விற்பனைக்கு வெளியாகவில்லை; எனவே, இவரது திண்மநிலை மிகைப்பி எண்ணக்கருக்கள் 1920 களிலும் 1930 களிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை. ஆசுகர் கைல் 1934 இல் செருமனியில் இதையொத்த கருவியைப் புதிதாக தானும் தனியே புனைந்துள்ளார். ஜான் பர்தீனும் வால்டேர் பிரட்டைனும் 1947 நவம்பர் 17 முதல் 1947 திசம்பர் 23 வரை அமெரிக்கா, நியூஜெர்சி முரேகில்லில் அமைந்த AT&T தொழில்குழுமத்தின் பெல் ஆய்வகத்தில் பல் செய்முறைகளைச் செய்து, செருமானியப் படிகத்தின் இரு பொன்னாலான புள்ளிகளுக்கு இடையில் மின்வழங்கலைத் தரும்போது உள்ளீட்டி தரும் குறிகையை விட வெளியீட்டில் பேரளவு குறிகை உருவாதலை நோக்கிப் பதிவு செய்தனர்.> திண்மநிலை இயற்பியலின் தலைவராகிய வில்லியம் சாக்ளே இதன் மின்னழுத்த்த்தைக் கண்டறிந்தார் அடுத்த சில மாதங்களில் அரைக்கடத்திகள் (ஒருபால் கடத்திகள்) பற்றிய அறிவுத்தளத்தை பெரிதும் விரிவுபடுத்தினார். திரிதடையம் (transistor) என்ற சொல்லை ஜான் ஆர். பியர்சு திரிதல்தடையம் (transresistance) என்ற சொல்லுக்கான சுருக்கமான வடிவமாக அறிமுகப்படுத்தினார். பர்தீன் சாக்ளேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இலில்லியன் ஓடெசனும் விக்கி தாயிட்சியும், திரிதடையப் புலவிளைவு வகைக்கான முதல் உரிமத்தைப் பெற சாக்ளே முன்மொழிந்த்தாகவும் அதில் சாக்ளேவின் பெயரை புதுமைபுனைவாளராக குறிப்பிடச் சொன்னதாகவும் கூறுகின்றனர். சில ஆண்டுகளாக கிடப்பில் அறியப்படாமல் இருந்த இலில்லியன்பெல்டுவின் கண்டுபிப்பும் பதிவுரிமங்களும் வெளிக்கொணரப்பட்டதும், பெல் ஆய்வகச் சட்ட அறிவுரையாளர்கள் சாக்ளே முன்மொழிவுக்கு எதிராக வாதிட்டனர். ஏனெனில், புலவிளைவு திரிதடைய எண்ணக்கரு புதிதல்ல; மேலும் பர்தீனும் பிரட்டைனும் சாக்ளேவும் 1947 இல் புள்ளித் தொடுகைத் திரிதடையத்தை தான் உண்மையில் வடிவமைத்துள்ளனர். சாக்ளே, பர்தீன், பிரட்டைன் ஆகியோரின் இந்த புதிய வடிவமைப்புக்காக இவர்கள் மூவரும்1956 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை அரைக்கடத்திகளின் ஆய்வுக்காகவும் திரிதடையவிளைவைக் கண்டறிந்ததற்காகவும் பெற்றனர். திரிதடையத்தின் தனிச்சிறப்புகள் திரிதடையம் நிகழ்கால மின்னனியலில் அனைத்துக் கருவிகளிலும் பரவலாக பயன்படும் உறுப்பாகும். பலர் இதை 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புதுமைபுனவாக கருதுகின்றனர். இதன் பெருந்திரள் ஆக்கத்தால் அமையும் வியப்பூட்டும் மிகக் குறைந்தவிலை இன்றைய சமூகத்தின் தனிச்சிறப்பாக மாற வாய்ப்பளித்து விட்டது. பெல் ஆய்வகத்தில் திரிதடையத்தின் புதுமைபுனைவு 2009 இல் IEEE சாதனைப் பட்டியலின் மைல்கற்களில் ஒன்றாக வரையறுக்கட்டுள்ளது. பல குழுமங்கள் ஒவ்வொன்றும் பில்லியன் கணக்கில் திரிதடையங்களை உருவாக்கினாலும், இன்று பெரும்பாலான திரிதடையங்கள் ஒருங்கிணைந்த சுற்றமைப்புகளிலேயே உருவாக்கப்படுகின்றன. இவை ஒசு, நுண்சில்லுகள் அல்லது எளிதாக சில்லுகள் என வழங்குகின்றன. இவற்ரில் இருமுனையங்களும் தடையங்களும் கொண்மிகளும் பிற மின்னனியல் உறுப்புகளும் அமைந்து குறிப்பிட்ட மின்ன்ன் சுற்றமைப்பை உருவாக்குகின்றன. ஓர் ஏரண வாயிலில் இருபதுக்கும் மேற்பட்ட திரிதடையங்கள் அமைய, ஒரு உயர்நிலை நுண்செயலியில், 2009 இல், 3 பில்லியன் அளவு திரிதடையங்கள் அமைகின்றன(பொ ஆ அ புவிதிகளில்). "புவியில் வாழும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏறத்தாழ, 60 மில்லியன் திரிதடையங்கள், 2002 இல், செய்யப்படுகின்றன." திரிதடையத்தின் குறைந்த விலையும் நம்பகத்தன்மையும் நெகிழ்தகவான இயல்பும் இதை ஒரு சிறந்த கருவியாக்கி உள்ளன. திரிதடையங்கள் பொதிந்த எந்திரமின்னனியல் சுற்றமைப்புகள்மின்னெந்திரக் கருவிகளுக்கு மாற்றாக கட்டுபாட்டு பயன்கருவிகளிலும் எந்திரங்களிலும் அமைகின்றன. ஒரு செந்தர நுண்கட்டுபடுத்தியைப் பயன்படுத்தி கணினி நிரல் எழுதி கட்டுபடுத்துவது அதெ செயலைச் செய்ய சம எந்திரவியல் அமைப்பை வடிவமைப்பதைவிட எளிமையானதாகவும் விலைகுறைந்ததாகவும் உள்ளது. எளிமைப்படுத்திய இயக்கம் இருவகை திரிதடையங்கள் திரிதடையங்களில் பற்பல வகைகள் இருந்தபொழுதினும் இரு பொது வகைகள் உண்டு.அவையாவன, இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையம் (இமிதி) (பைப்போலார் டிரான்சிஸ்டர், Bipolar transistor), மின்புல விளைவுத் திரிதடையம் (மிவிதி) (Field Effect Transistor) என்பன ஆகும். முன்னதில் மூன்று மின்முனைகள் உண்டு, பின்னதில் நான்கு மின்முனைகள் உண்டு. இமிதியில் எதிர்மின்னி, மற்றும் நேர்ம மின்மம் கொண்ட புரைமின்னி ஆகிய இருவகை மின்னிகளும் அடிப்படியான இயக்கித்தில் பங்குகொண்டு தொழிற்படும். ஆகவே இதனை இருவகை (bipolar) மின்னிக் கடத்தித் திரிதடையம் என அழைக்கின்றனர். இமிதி இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையத்தில் (இமிதி) மூன்று குறைக்கடத்திப் பகுதிகள் உள்ளன. இம்மூன்று பகுதிகளில், நடுவே உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான குறைக்கடத்திப் பகுதி, வேறொரு வகையான இரண்டு குறைக்கடத்திப் பகுதிகளுக்கும் இடையே இருக்குமாறு அமைந்திருக்கும். எனவே இரு சந்திகள் (நே-எ சேர்முகங்கள், p-n junctions) உள்ளன. அந்த நடுவே இருக்கும் பகுதிக்கு அடிமனை (பேஸ், base) என்று பெயர். மற்ற இரு பகுதிகளில் ஒன்றுக்கு உமிழி (எமிட்டர், emitter) அல்லது உமிழ்முனை என்றும், இன்னொன்றுக்கு திரட்டி அல்லது பெறுதி (collector) என்றும் பெயர். உமிழிக்கும் அடிமனைக்கும் இடையே தரும் மின் அழுத்தத்தால், அடிமனை வழியாகப் பாயும் மின்னோட்டம் பல மடங்காக திரட்டி மின்முனையில் மிகைப்புற்றுப் பாயும். இவ்விளைவால் இத் திரிதடையத்தை குறிப்பலைகளின் மிகைப்பியாக பயன்படுத்துகிறார்கள். இந்த இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையத்தில் இரு வகைகள் உள்ளன. நடுவே இருக்கும் பகுதி நேர்வகை (p-type) குறைக்கடத்தியாக இருக்கலாம் அல்லது எதிர்வகை (n-type) குறைக்கடத்தியாக இருக்கலாம். எனவே இவற்றை p-n-p வகை இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையம் (இமிதி) அல்லது n-p-n வகை இமிதி என அழைக்கப்படும். இமிதிகளில் n-p-n (எ-நே-எ) வகைத் திரிதடையம், p-n-p (நே-எ-நே) வகை திரிதடையத்தை விட விரைவாக இயங்க வல்லது, ஏனெனில் அடிமனையாகிய நேர்வகைக் குறைக்கடத்திப் பகுதியில், அருகில் உள்ள உமிழி முனையில் இருந்து செலுத்தப்பெறும் சிறுபான்மை மின்னியாகிய எதிர்மின்னிகள் மிக விரைவாக நகரவல்லன. மாறாக p-n-p (நே-எ-நே) வகை திரிதடையத்தில் நடுவே உள்ள எதிர்வகை குறைக்கடத்திப் (n-type) பகுதியில், அதன் சிறுபான்மை மின்னியாகிய நேர்மின்மம் கொண்ட புரைமின்னிகள் எதிர்மின்னியைக் காட்டிலும் மெதுவாகவே நகரவல்லன. மிவிதி மின்புல விளைவுத் திரிதடையத்தில், மொத்தம் நான்கு மின்முனைகள் உண்டு. இதில் அடித்தளம் அல்லது உடல் எனப்படும் பகுதியை இணைக்க ஒரு மின்முனை உண்டு. இக்கருவி இந்த அடித்தளத்தின் மீது உருவாக்கப்படுவதால், இப்பெயர் பெற்றது. இந்த அடித்தளம் ஒரு வகையான குறைக்கடத்தியால் செய்யப்பட்டிருக்கும், இந்த அடித்தளப் பகுதிக்கு மேலே வன்கடத்தியால் (கடத்தாப் பொருளால்) ஆன வன்கடத்திப் படலம் ஒன்று இருக்கும். இதன் தடிப்பு தற்காலக் கருவிகளில் ஒரு சில நானோமீட்டர் அளவே இருக்கும். இதற்கு வன்கடத்திக் கதவம் (gate insulator) என்று பெயர். இந்த வன்கடத்திப் படலத்தின் மேலே, நன்றாகக்கடத்தும் நன்கடத்திப் படலம் (gate metal) இருக்கும். இது கதவு முனை (gate terminal) என்று அழைக்கப்படும். இந்த அடித்தளம் தவிர மற்ற மூன்று மின்முனைகள் பின்வருவன ஆகும்: கதவுமுனை (gate), வழங்கி முனை (வழங்குவாய், source), திரட்டி முனை (drain). வழங்கிப் பகுதியும், திரட்டிப் பகுதியும், ஒரே வகையான குறைக்கடத்தியினால் (எ.கா நேர்வகை குறைக்கடத்தி) செய்யப்பட்டிருக்கும். இடையே உள்ள அடித்தளப்பகுதி நேர்மாறான வேறொரு வகையான குறைக்கடத்தியால் (எ.கா எதிர்வகை குறைக்கடத்தியால்) செய்யப்பட்டிருக்கும். இதனால் வழங்கி முனைப் பகுதியில் இருக்கும் மின்னிகள் அடித்தளப்பகுதியின் வழியாக திரட்டி முனைக்குச் செல்லல் இயலாது. கதவுமுனைக்கும் வழங்கி முனைக்கும் இடையே தகுந்த மின்னழுத்தம் தந்தால், இதனால் வழங்கிப் பகுதிக்கும் அதனை அடுத்து உள்ள அடித்தளத்தின் பகுதிக்கும் இடையே உள்ள ஆற்றல் மேடு குறையும் (தணியும்), இதனால் வழங்கியில் இருந்து மின்னிகள் அடித்தளத்தில், வன்கடத்திப் படலத்திற்கு கீழே நீரோடை போல ஓடி திரட்டியை அடையும் (திரட்டியின் மின் அழுத்தம் அதற்கேற்றார்போல இருத்தல் வேண்டும்). கதவு முனையில் தகுந்த மின்னழுத்தம் தருந்தால், வன்கடத்திக்குக் கீழே வழங்கி-திரட்டிக்கு இடையே ஓடும் மின்னிகளின் பாதையை மின்னி வாய்க்கால் (channel) என்று அழைப்பர். கதவு முனையில் தரும் மின்னழுத்தத்திற்கு ஏற்றவாறு கூடுதலாகவோ, குறைவாகவோ மின்னிகள் வாய்க்கால் வழியாகப் பாயும். இப்படி திரட்டி-வழங்கி இடையே பாயும் மின்னோட்டத்தை கதவுமுனை-வழங்கிக்கு இடையே உள்ள மின்னழுத்தம் கட்டுப்படுத்துவதால், இதுவும் மிகைப்பியாகவும், கட்டுப்படுத்தும் குறிப்பலைத் தொடுக்கியாகவும் பயன்படுகின்றது. இந்த மின்புல வகைத் திரிதடையங்களில் பற்பல வகைகள் உண்டெனினும், வாய்க்காலில் பாயும் மின்னியின் வகையைப் பொருத்து, இருவகைகள் உண்டு. மின்னிகள் எதிர்மின்னிகளாக இருந்தால் அவற்றை எ-வாய்க்கால் (n-channel) திரிதடையம் என்றும், நேர்மின்மம் கொண்ட புரைமின்னிகளாக இருந்தால் நே-வாய்க்கால் (p-channel) திரிதடையம் என்றும் அழைக்கப்படும். அட்டவணை 1 பலவகை திரிதடையங்களைக் காட்டுகின்றது. இமிதிகளின் நான்கு இணைப்பு முறைகள் இருமின்னிவகைத் திரிதடையம் மின்சுற்றுகளில் பொதுவாக நான்கு வகையான இணைப்புகளில் இயங்க வல்லது, ஆனால் இவை பெரும்பாலும் மூன்று வகையான (முதல் மூன்று) அமைப்பிலேயே பயன்படுத்தப்படுகின்றது. எந்த நிலையில் இயங்கும் என்பது முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தங்களைப் பொருத்தது. இமிதியில் இரண்டு சந்திகள் (சேர்முகங்கள்) உள்ளதால், அவை ஒவ்வொன்றும் நேர்முறை அழுத்தம்(forward bias), எதிர்முறை அழுத்தம் (reverse bias) பெறவல்லதால் மொத்தம் 4 இணைப்பு முறைகள் உண்டு. உமிழி-அடிமனை நேர்முறை, அடிமனை-திரட்டி எதிர்முறை - வழக்கமான இயக்கம் உமிழி-அடிமனை நேர்முறை, அடிமனை-திரட்டி நேர்முறை - நிரப்பு நிலை/தெவிட்டு இயக்கம் உமிழி-அடிமனை எதிர்முறை, அடிமனை-திரட்டி எதிர்முறை - கடத்தா நிலை உமிழி-அடிமனை எதிர்முறை, அடிமனை-திரட்டி நேர்முறை - எதிர்வழக்கமான இயக்கம் தொகுப்பு முறைகள் தனித் திரிதடையங்கள் என்பவை தனித்தனியாக தொகுத்த திரிதடையங்கள் ஆகும். திரிதடையங்கள் பலவேறான அரைக்கடத்தித் (செங்கடத்தித்) தொகுப்புகளில் வருகின்றன (படிமத்தைப் பார்க்க). இரு முதன்மைவகைகளாவன கம்பித்தலைப்பில் பூட்டியவகை, மேற்பரப்பில் நிறுவியவகை என்பனவாகும். பெரிய ஒருங்கிணைந்த சுற்றதர்களுக்கான மிக அண்மைய மேற்பரப்பு நிறுவல் தொகுப்பு பந்து வலை அணி (BGA) ஆகும். இது கம்பித்தலைப்புக்கு மாறாக தட்டின் கீழே அமைந்த பந்துகளை பற்றவைக்கிறது. இவை சிறிய குற்றிணைப்புகளாக அமைவதால், இவை சிறந்த உயர் அலைவெண் பான்மைகளைக் கொண்டுள்ளன. இதன் திறன் வரையளவும் குறைவாகவே உள்ளது. திரிதடையத் தொகுப்புகள் கண்ணாடியிலோ பொன்மத்திலோ (உலோகத்திலோ) வெங்களியிலோ நெகிழியிலோ செய்யப்படுகின்றன. தொகுப்புக்குப் பயனாகும் பொருள் திறன் வரையளவையும் அலைவெண் பான்மைகளையும் தீர்மானிக்கிறது. திறன் திரிதடையங்கள் பெருதொகுப்புகளாக அமைதலால், அவை வெப்பத்தணிப்பிக்குக் குளிர்த்தலைக் கூட்ட இணைக்கப்படுகின்றன. கூடுதலாக பெரும்பாலான திறன் திரிதடையங்கள் வெப்பத் திரட்டியுடன்அமைகின்றன அல்லது வெப்ப வடிகாலாக அமையும் பொன்ம (உலோக) உறைக்கு நேரடியாக இணைக்கப்படுகின்றன. சில நுண்ணலைத் திரிதடையங்கள் மணலினும் சிறிய பரலாக அமைகின்றன. குறிப்பிட்டவகைத் திரிதடையமே பல்வேறு தொகுப்புகளில் கிடைக்கிறது. முதன்மையாக தொகுப்புகல் செந்தரப்படுத்தப்பட்ட அளவுக்கு அவற்ரின் ஈறுகள் அல்லது முனைகளின் செயல் குறிப்புகள் தரப்படுத்தப்படவில்லை: வேறுவகைத் திரிதடையம் தொகுப்பு முனைகளுக்கு வேறு செயலைத் தரலாம். மேலும் ஒரேவகைத் திரிதடையத்துக்கும் கூட முனைக்கான செயல் தரவுகள் வேறுபடலாம் (வழக்கமாகபகுதியின் எண்ணுக்குத் தரப்படுக் பின்னொட்டு எழுத்து செயல் தரவைக் குறிக்கிறது. எடுத்துகாட்டாக, BC212L, BC212K என்பவற்றைக் கூறலாம்). இக்காலத்தில் பெரும்பாலான திரிதடையங்கள் அகல்வான நெடுக்கத்தில் மேற்பரப்பு நிறுவல் தொகுப்புகளாக வருகின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் கம்பித்தலைப்பு பூட்டல் தொகுப்புகள் மிகக் குறைவாகவே அமைகின்றன. கீழே ஆங்கில நெடுங்கணக்கு ஒழுங்கிலான கம்பித்தலைப்புவகைத் திரிதடையங்களின் தொகுப்புகள் தரப்படுகின்றன: ATV, E-line, MRT, HRT, SC-43, SC-72, TO-3, TO-18, TO-39, TO-92, TO-126, TO220, TO247, TO251, TO262, ZTX851 நெகிழ்தகவு திரிதடையங்கள் ஆய்வாளர்கள் கரிமப் புல விளைவுத் திரிதடையம் உட்பட, பலவகை நெகிழ்தகவுள்ள திரிதடையங்களை உருவாக்கியுள்ளனர்]]. இவை நெகிழ்தகவுக் காட்சித்திரைகளிலும் நெகிழ்தகவு மின்னனியலிலும் பயன்படுகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் மின் உறுப்புகள் அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் 20-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
5786
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
பூட்டான்
பூட்டான் (Bhutan, திஃசொங்கா துரூ ஊ), அல்லது பூட்டான் இராச்சியம் (Kingdom of Bhutan) தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும். பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. பூட்டான் போக்குவரத்துக் கழகம் சிலிகுரியிலிருந்து வழக்கமான பேருந்து சேவையை நடத்துகிறது. டாக்சிகளையும் வாடகைக்கு எடுக்கலாம். பரோ விமான நிலையம் பூட்டானின் ஒரே சர்வதேச விமான நிலையமாக சேவை செய்கிறது. பரோ விமான நிலையம் இருந்து புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, குவஹாத்தி, பாக்டோகிரா, காத்மாண்டு, டாக்கா, சிங்கப்பூர் போன்றவை இணைக்கிறது. இது தலைநகரத்திலிருந்து சாலை வழியாக சுமார் 54 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ளது. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது. பூட்டானின் அரச சமயம் வச்சிராயண பௌத்தம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஏனையோர் இந்துக்கள். திம்பு இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை மார்ச் 2008 இல் நடத்தியது. பூட்டான் ஐக்கிய நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது. மேற்கோள்கள் தெற்காசிய நாடுகள் நிலம்சூழ் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
5788
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
பகல்
பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் பகல் (daylight) எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் மேற்கில் மறையும் நேரம் வரையான காலப்பகுதியே இது. ஒரு பகலும், ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள். பகல் நேரம் எப்பொழுதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஓர் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் பகல் நேரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கின்றது. அத்துடன் புவி மையக் கோட்டுக்குத் தொலைவிலுள்ள இடங்களில் இவ்வேறுபாடு அதிகமாக இருக்கும். பூமி தன்னுடைய அச்சில் தன்னைத் தானே சுற்றுவதனாலேயே பகலும் இரவும் உருவாகின்றன. பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அரைப் பகுதி சூரியனை நோக்கியிருக்க, மற்றப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும். சூரியனை நோக்கியிருக்கும் பகுதியில் சூரிய ஒளி விழுவதனால் அப்பகுதி பகலாக இருக்கும். காலம் ஒரு நாளின் பகுதிகள்
5789
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
இரவு
புவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதி இரவு அல்லது இருட்சூழ்வு எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு பகலும் கொண்டது ஒரு நாள் ஆகும். பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப்பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப்பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும். வெளி இணைப்புகள் மேற்கோள்கள் காலம் ஒரு நாளின் பகுதிகள்
5791
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
எண்ணெய் விளக்கு
எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள், தாவர எண்ணெய்கள் விலங்கு நெய்கள் மண்ணெண்ணெய் முதலிய பெற்றோலிய எண்ணெய்கள். என்பன பரவலான பயன்பாட்டிலுள்ளவை. எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும். அகல் விளக்கு குத்து விளக்கு சட்ட விளக்கு நாகாசு குத்துவிளக்கு நந்தி அடுக்கு விளக்கு பாவை விளக்கு (சிற்பம்) அஷ்டோத்திர விளக்கு கிளை விளக்கு கேரள விளக்கு தொங்கு விளக்கு தூண்டாமணி விளக்கு போன்ற பல விளக்கு வகைகள் இந்தியாவிலும் வேறு பல கீழை நாடுகளிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். இந்து சமய / இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இவற்றையும் பார்க்கவும் ஆர்கண்ட் விளக்கு அகல் விளக்கு விளக்குகள்
5794
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
இளையபெருமாள்
இலட்சுமணன் இளையபெருமாள் (L. Ilayaperumal, 26 சூன் 1924 - 9 செப்டம்பர் 2005) பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், இருபது வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய மனித உரிமைக்கட்சி துவக்கி மக்களுக்காக போராடியவர். வாழ்க்கை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் பறையர்களுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்து வந்த இரட்டைக்குவளை முறை நீக்கப்பட்டது. சாதிய எதிர்ப்பு போராட்டம் இளையபெருமாள் 1945ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1946ல் காட்டுமன்னார்கோவிலுக்குத் திரும்பும் போது ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு இரு நாள் செல்லாத பறையர் ஒருவர், பண்ணையார் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர். பட்டியலின மக்களை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். துன்புறுத்திய அந்த பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதம் பெற்று தரும்வரை இளையபெருமாள் ஓயவில்லை. நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், சூத்திர சாதியினர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக மட்டுமே பறையர்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். சூத்திர சாதி மக்களால் போலிக்குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைபட்டார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு இவருடைய சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பணி இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார். இவர் 1962 முதல் 1967 வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரிவின் தமிழக தலைவராக 1979ல் பதவியேற்று பணியாற்றினார். 1980ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி திமுகவுடன் கூட்டணி அமைத்தார். முன்னதாக 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், இந்திராகாந்தியும் ஒரே மேடையில் பேசினர். இந்திரா காங்கிரஸ் மாநில தலைவர் இளையபெருமாளும் உடன் இருந்தார். கருப்பையா மூப்பனார், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரும் அந்த மேடையில் இருந்தனர். அந்த மேடையில் தான் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக என்று கருணாநிதி பேசினார். 1980இல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். 1980ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 6ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட்ட 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21-ஐ கைப்பற்றியது. வெற்றிபெற்றவர்களில் விழுப்புரம் ராமசாமி படையாச்சி, ஆர். வெங்கட்ராமன், ஆர். வி. சுவாமிநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திரா காங்கிரஸ் - திமுக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்றதால், எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இளையபெருமாள் வலியுறுத்தினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1989இல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். 2003இல் காங்கிரஸ் கட்சியில் சோனியாகாந்தி முன்னிலையில் மீண்டும் இணைந்தார். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி உருவாக்கம் (ம) இளையபெருமாள் கமிட்டி அறிக்கை இந்தியாவில் 1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1976 இல் பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் இளைய பெருமாள் தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. காந்தி பிறந்த ஊரில், பிரதமர் இந்திராகாந்தி தொகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது” என்று 1969 இல் இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டியது. ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் அவருடைய காலத்திலேயே புறக்கணிக்கப்பட்டது பட்டியலின தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989இல் பட்டியல் இன மக்களை காப்பதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் மிகவும் தாமதமாக கடந்த 1995ல் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இளையபெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய தற்போது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குடும்பம் மனைவி தையல்முத்து, மகன்கள் வெற்றி வீரமணி, ஜோதி மணி, நந்தகுமார் ஆகியோர். மனைவி தையல்முத்து, உடல்நலக்குறைவால் காலமாகி ஐந்தாவது மாதத்தில் இளையபெருமாள் காலமானார். மகன் பல் மருத்துவர் நந்தகுமார் சிறுநீரக கோளாறால் உயிரிழந்தார். நந்தகுமார் சில காலம் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்து பணியாற்றினார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி எஸ்தர்ரூபி மகள்கள் அனோஷ்கா தெரசா மற்றும் மகன் இளையபெருமாள் உள்ளனர். தலைவர்களிடம் நன்மதிப்பு பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர். 1998 இல் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருது கொடுத்து, அவரின் சமூக உழைப்பைக் கவுரவித்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திண்ணை இதழில் பாஸ்டன் பாலாஜி எழுதிய கட்டுரை பயனீர் நாளிதழில் ரவிகுமார் எழுதிய இரங்கலுரை கீற்று இணைய இதழில் பூவிழியன் எழுதிய கட்டுரை 1924 பிறப்புகள் 2005 இறப்புகள் கடலூர் மாவட்ட நபர்கள் தமிழக அரசியல்வாதிகள் 2ஆவது மக்களவை உறுப்பினர்கள் 3வது மக்களவை உறுப்பினர்கள்
5799
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
நிறக்குருடு
நிறக்குருடு (Colour blindness) என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல். காரணம் இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய நிறங்களின் பார்த்தல் உணர்வைப் பற்றிய சிறப்பு உண்மைகள் என்ற தலைப்பிட்ட ஒரு அறிவியல் கட்டுரையில் இதுபற்றி எழுதினார். இவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயரால் இந்நோய் டால்டனிஸம் என்று நெடுநாள் வழங்கப்பட்டது. எனினும் தற்போது இந்த பெயர் பச்சை நிறத்தை உணர இயலாமையாகிய டியூட்டெரனோபியா என்ற நோயை மட்டும் குறிக்கிறது. சில ஆய்வுகள் பொதுவாக, இது ஒரு குறைபாடாகவே கருதப்பட்டு வந்தாலும், சில சூழல்களில் இது உதவவும் செய்கிறது. பல நிறைங்களுக்கிடையே ஊடுருவிப் பார்ப்பதில் இந்த நிறக்குரு நோய் உள்ளவர்கள ஏனையவர்களை விடவும் சிறந்தவர்களாக இருப்பது சில ஆய்வுகள் மூலம் காட்டப்பட்டிருக்கிறது. குறியைச் சரியாக வைக்க முடிகின்றது எடுத்துக்காட்டாக, இந்நோய் உடைய வேடர்கள் சிலரால் பின்புலத்தில் உள்ளவற்றினால் வரும் குழப்பத்தைத் தவிர்த்து தங்கள் குறியைச் சரியாக வைக்க முடிகின்றது. இருட்டில் உடனடியாகப் பார்க்க முடியும் அதேபோல், இந்நோய் உடைய போர்வீரர்களில் சிலரால் மறைமுகத்திற்கான பலநிற சிறப்பு உடைகளில் உள்ள எதிரி வீரர்களையும் தளபாடங்களையும் எளிதில் அடையாளம் காண முடியும். ஒரே நிறத்தில் மட்டும் பார்க்க முடிகின்றவர்களால் இருட்டில் உடனடியாகப் பார்க்க முடியும்.wikipidia இவற்றையும் பார்க்கவும் நிறங்களின் பட்டியல் அடிக்குறிப்புகள் வெளி இணைப்புகள் நிறக்குருட்டைப் பற்றிய கலகரி பல்கலைக்கழக விளக்கம் நிறக்குருடுள்ளவர்கள் பார்ப்பதற்கு "தகவமை ஒளியியல்" (Adaptive optics) கண்டுபிடிப்புகள் உதவும் எனக் கூறும் பதிவு நிறப்புதிருக்கு விடை என்ன ? பார்வை நிறங்கள்
5802
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
ராகேஷ் சர்மா
ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma, பிறப்பு: சனவரி 13, 1949) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார். கல்வி பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார். விமானப்படை வீரராக இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார். விண்வெளி வீரராக நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது. விருதுகள் ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன், ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளைப் பெற்றார். குறிப்புகள் இந்திய விண்வெளித் திட்டங்கள் 1949 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய விண்வெளி வீரர்கள்
5807
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF
வருமான வரி
வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். வருமான வரி விதிப்பு முறைகள் வளர்விகித வரி தேய்விகித வரி விகிதமுறை வரி மேலும் காண்க இந்தியாவில் வருமான வரி வரிவிதிப்பு தனிநபர் நிதி
5809
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
தெற்கு ஆசியா
தெற்கு ஆசியா என்பது பொதுவாக இந்திய துணைக்கண்டத்தையே குறிக்கும். தெற்கு ஆசியா பின்வரும் நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய துணைக்கண்டம் - துணைக்கண்டத்தில் அமைந்த இந்தியக்குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியன. இமயமலைப் பகுதியில் உள்ள பூடான், நேபாளம் ஆகியன. தீவு நாடுகளான இலங்கை, மாலை தீவுகள் ஆகியன. இப்பகுதியிலுள்ள நாடுகள் அனைத்தும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும். ஆசியாவின் மற்ற மண்டலங்கள் கிழக்கு ஆசியா மத்திய ஆசியா தென்கிழக்கு ஆசியா தென்மேற்கு ஆசியா அல்லது மேற்கு ஆசியா வடக்கு ஆசியா வடக்கு யுரேசியா மத்திய யுரேசியா
5819
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
மைய இடக் கோட்பாடு
மைய இடக் கோட்பாடு (Central Place Theory) என்பது குடியிருப்புக்களினது (settlement) அளவு, அவற்றுக்கிடையேயுள்ள தூரம், பரம்பல் அவற்றின் படிநிலையமைப்பு என்பவை தொடர்பான கோட்பாடு ஆகும். இக் கோட்பாட்டை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புவியியலாளரான வால்டர் கிறிஸ்டலர் (Walter Christaller) என்பவர் அறிமுகப் படுத்தினார். இதனைப் பின்னர் அதே நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் லொஸ்ச் (August Losch) என்னும் பொருளியலாளர் மேலும் வளப்படுத்தினார். இவ்விருவரும் இக் கோட்பாட்டைத் தனித்தனியாக உருவாக்கியதாகவும் சிலர் கூறுகிறார்கள். மைய இடக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமானவை ஆகும். மாறுநிலை (Threshold) மையச் செயற்பாடு (Central Function) பொருட்களின் வீச்சு (Range of Goods) பொருட்களின் ஒழுங்கு (Order of Goods) மைய இடங்களின் ஒழுங்கு (Order of Central Place) மாறுநிலை: ஒரு விற்பனை நிலையம் அல்லது ஒரு சேவையை வழங்கும் நிலையம் அவற்றினுடைய செயற்பாடுக்குரிய செலவுகளையும், கூலி முதலிய செலவுகளையும் ஈடு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு விற்பனை இருத்தல் வேண்டும். இவ்வாறான மிகக் குறைந்த விற்பனை அளவே அவ்வுற்பத்திப் பொருள் அல்லது சேவைக்குரிய மாறுநிலை எனப்படும். இன்னொரு வகையில் இதனை, ஒரு குறிப்பிட்ட மையச் செயற்பாடொன்றை ஆதரிப்பதற்குத் (Support) தேவையான கேள்வி நிலை (Level of Demand) என்றும் கூறலாம். மையச் செயற்பாடு: மைய இடம் ஒன்றில், ஓர் உற்பத்திப் பொருள் அல்லது சேவையை விற்பனை செய்தல் மையச் செயற்பாடு ஆகும். பொருட்களின் வீச்சு: ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒரு கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திலிருக்கும் ஒருவருக்கு, அப்பொருளின் விலை, கடையில் அப்பொருளுக்கு அவர் செலுத்தும் பணத்தின் அளவுடன் போக்குவரத்துச் செலவையும் கூட்டிய தொகைக்குச் சமம் ஆதலால், கடையின் தூரம் அதிகரிக்கும் போது அவருக்கு அப்பொருளின் விலையும் அதிகரித்துச் செல்லும். விலை அதிகரிக்கும் போது கேள்வி (Demand) குறையும் என்பது பொருளியல் விதி. கடையிலிருந்து ஓரிடத்தின் தூரம் அதிகரித்துச் செல்லும்போது அவ்விடத்தில், அக் கடையிலிருக்கும் குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வியும் குறைவடையும். ஓரளவு தூரத்தில் அந்தக் கடையிலுள்ள குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வி எதுவுமே இல்லாத நிலை ஏற்படும். இந்தத் தூரமே அப்பொருளுக்கான வீச்சு எனப்படும். வெவ்வேறு வகையான பொருட்களுக்கு வீச்சு மாறுபடும். நில மேலாண்மை நகரப் புவியியல்
5824
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தோற்றப்பாடு
தோற்றப்பாடு (Phenomenon) என்பது பொதுவாக ஒரு கவனிக்கத்தக்க, உற்று உணரக்கூடிய சிறப்புபெற்ற நிகழ்வைக் குறிக்கும். நிகழ்வுகளின் அவதானிக்கக் கூடிய அமைவுகள் தோற்றப்பாடுகள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக புவி தன் அச்சில் சுழலுகின்ற புவிச் சுழற்சி காரணமாக இரவு பகல் தோன்றுவது, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது என்பன தோற்றப்படுகளாகும். அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும். பல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே: Anomalous phenomenon (parapsychology) உயிரியல் தோற்றப்பாடு (உயிரியல்) வேதியியல் தோற்றப்பாடு (வேதியியல்) மின் தோற்றப்பாடு (மின்சாரம்) நிலவியல் தோற்றப்பாடு (நிலவியல்) நீரியல் தோற்றப்பாடு (நீரியல்) வானிலை தோற்றப்பாடு (வானிலை) ஒளியியல் தோற்றப்பாடு (ஒளியியல்) இயற்பியல் தோற்றப்பாடு (இயற்பியல்) புள்ளியியல் தோற்றப்பாடு (புள்ளியியல்) வெப்பத் தோற்றப்பாடு (வெப்ப இயக்கியல்) தத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.
5834
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE.%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார் (Na. Muthukumar; 12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். கல்வி காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரைப் படித்துத் தேறினார். பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இயல்பியல் பயின்று 88% மதிப்பெண் பெற்று அறிவியல் இளவர் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இவர் எழுதிய தூர் என்ற கவிதையே முதுகலையில் இவருக்குப் பாடமாக இருந்தது. பின்னர் "தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 1990 முதல் 2000 வரை" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார். பணி தொடக்கத்தில் திரைப்பட இயக்குநராக சென்னை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் இணைய விண்ணப்பத்தார். ஆனால், இடங்கிடைக்கவில்லை. எனவே, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். இயக்குநர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007),வாரணம் ஆயிரம் (2008) ஆகியன போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் , 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார். இவர் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியில் ஜீவலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். மறைவு 2016 ஆகத்து 14 அன்று காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார். இயற்றிய பாடல்களில் சில {| class="wikitable sortable" |- ! ஆண்டு !! திரைப்படம் !! பாடல்கள் |- | rowspan="7"| 1999 || மலபார் போலீஸ் || கோலிவுட் முதல் |- | மின்சார கண்ணா || ஓ அங்கில் |- | ஹலோ || சலாம் குலாமு |- | மானசீக காதல் || ஆனந்த காற்றே & கந்தா கடம்பா |- | ஊட்டி || ஓ லில்லி & ஓ வெண்ணிலா |- | இறனியன் || சந்திரனே சாட்சி & என் மாமன் மதுரை |- | உன்னருகே நானிருந்தால் || சின்ன சின்ன பூவே |- | rowspan="5"| 2000 || வானத்தைப் போல || எங்கள் வீட்டில் எல்லா |- | ஏழையின் சிரிப்பில் || சக்கரவள்ளி |- | ஜேம்ஸ் பாண்டு || கண்ணென்ன மின்சாரமா |- | வீரநடை || காலையிலே & முத்து முத்தா |- | சபாஷ் || தேங்க் யூ & உலகைச் சுற்றி |- | rowspan="4"| 2001 || டும் டும் டும் || |- | கலகலப்பு || அம்முரத கடலே |- | நந்தா || ஓர் ஆயிரம் யானை |- | லவ் மேரேஜ் || கண்ணாலே கொல்லாதே & கீரவாணி |- | rowspan="6"| 2002 || விவரமான ஆளு || அடியே ஆரவள்ளி & ஏய் மாமா |- | உன்னை நினைத்து || சாக்லெட் சாக்லெட் |- | ரன் || தேரடி வீதியில் |- | சமஸ்தானம் || பெண்ணே பெண்ணே |- | பகவதி || சாயோ சாயோ |- | ஏப்ரல் மாதத்தில் || கனவுகள் பூக்கும் |- | rowspan="23"| 2003 || தூள் || கொடுவா மீசை |- | வசீகரா || ஒரு தடவை, பூப்போல தீப்போல & வேணா வேணா |- | அன்பு || மணப்பொண்ணு அழகா |- | ஜூலி கணபதி ||எனக்குப் பிடித்தப் பாடல் |- | ஸ்டூடண்ட் நம்பர் 1 || விழாமலே இருக்க முடியுமா, நா அழுக்கானாலும் அம்சமா, உன் குற்றமா, எங்கே செல்லும், சல்யூட் போடு, காலேஜ் கேன்டீன் & கடலோர கவிதையே |- | மிலிட்டரி || சிட்டுக்குருவி |- | சேனா || நாட்டுக்கோழி குழம்பு |- | வெல்டன் || இந்திய மேப்பை |- | அன்பே அன்பே || வாஸ்து சாஸ்திரம் |- | சாமி || திருநெல்வேலி அல்வாடா, பிடிச்சிருக்கு & வேப்பமரம் புளியமரம் |- | பார்த்திபன் கனவு || தீராத டும் |- | காதல் கொண்டேன் || தேவதையை கண்டேன், நெஞ்சோடு, தொட்டு தொட்டு & 18 வயதில் |- | விசில் || விசில் அடிக்கும் வதனா |- | ஆஹா எத்தனை அழகு || ஆட்டுக்குட்டி எல்லாம் |- | காதல் கிசு கிசு || ஆழும் வேலும் & அடடா |- | ஈர நிலம் || மேகம் கருக்குது |- | தென்னவன் || வினோதனே |- | திவான் || ஒரு தாலாட்டு |- | திருடா திருடி || ஆயுர்வேத அழகி |- | திருமலை || தாம்தக்க தீம்தக்க |- | பிதாமகன் || கொடி ஏத்தி வைப்போம் |- | ஜூட் || ஆடிவரும் அழகியே & கட்டபொம்மா கட்டபொம்மா |- | இன்று || பொன்மாலை, சோக்கா பாக்குற & சல்வார் பூவனம் |- | rowspan="17"| 2004 || கோவில் || காலேஜிக்கு போவோம் |- | புதுக்கோட்டையிலிருந்து சரவணன் || புதுக்கோட்டை சரவணன் |- | தென்றல் || பச்சைக்கிளி |- | வர்ணஜாலம் || மத மத மதன்னு |- | கில்லி || சூர தேங்கா |- | எதிரி || போடு நண்பா சக்க |- | அருள் || உக்கடத்து பப்படமே & புண்ணாக்குனு |- | ஜோர் || ஜோர் படா ஜோர் & மம்மி செல்லமா |- | சுள்ளான் || சண்டக்கோழி |- | அரசாட்சி || இப்படியே விட்டுவிடு |- | கிரி || அட்ரா சக்க, ரெண்டு காலுடா & ஒப்பனக்கார வீதியிலே |- | எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி || சென்னை செந்தமிழ்|- | போஸ் || நிஜமா நிஜமா|- | 7ஜி ரெயின்போ காலனி || அனைத்துப் பாடல்களும் |- | சத்திரபதி || ஒரே ஒரு ராத்திரிக்கு|- | மன்மதன் || வானமென்ன உயரங்காட்டு & காதல் வளர்த்தேன்|- | காதல் || அனைத்துப் பாடல்களும் |- | rowspan="21"| 2005 || ஐயா || அத்திரி பத்திரி, அய்யாத்துரை (சோகம்) & தினம் ஐயானு|- | தேவதையை கண்டேன் || மாமா பையா|- | ஜி || திருட்டு ராஸ்கேல்|- | மண்ணின் மைந்தன் || இது லேடீஸ் ஹாஸ்டல்|- | மாயாவி || காத்தாடி போலே|- | லண்டன் || கிமு கிபி|- | தக திமி தா || எத ஊத்தி செஞ்சேனோ, ராயல்சீம ராணி & சுலுக்கி சுலுக்கெடுக்கும்|- | சந்திரமுகி || கொக்கு பற பற|- | சச்சின் || கண்மூடி திறக்கும்போதே|- | ஜித்தன் || கோயமுத்தூர் பொண்ணு|- | அன்னியன் || காதல் யானை|- | இங்கிலீஸ்காரன் || அனைத்துப் பாடல்களும்|- | பிப்ரவரி 14 || லைலா மஞ்சு|- | ஏபிசிடி || யார் போட்ட கோலம்|- | தொட்டி ஜெயா || அச்சு வெல்லம் & தொட்டா பவரு டா|- | கஜினி || சுட்டும் விழி சுடரே|- | அன்பே வா || கால் கொலுசே, லொயலா & ஒலிப் லைலா|- | ஆணை || பிகருடன் ஒருநாள்|- | ஒரு கல்லூரியின் கதை || அனைத்துப் பாடல்களும்|- | ஆறு || சோடா பாட்டில், பாக்காதே என்ன, ஃப்ரியா விடு, நெஞ்சம் என்னும் & துரோகம்|- | சண்டக்கோழி || என்னமோ நடக்கிறதே & கும்தலக்கடி கும்|- | rowspan="21"| 2006 || பரமசிவன் || ஆசை தோசை|- | சரவணா || சா பூ த்ரி போட்டு|- | டிஷ்யூம் || கிட்ட நெருங்கிவாடி|- | கள்வனின் காதலி || ஏனோ கண்கள்|- | தம்பி || கனவா என்று, என் காதல், பூவனத்தில் மரம் & என்னம்மா தேவி ஜக்கம்மா|- | கோவை பிரதர்ஸ் || அனைத்துப் பாடல்களும் |- | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது || இலையுதிர் காலம் & காதலைப் பிரிப்பது|- | தலைநகரம் || ஏதோ நினைக்கிறேன் & மதி மதி|- | புதுப்பேட்டை || அனைத்துப் பாடல்களும் |- | பாரிஜாதம் || உன்னைக் கண்டனே|- | ஆச்சார்யா || அனைத்துப் பாடல்களும் |- | தொடாமலே || தொட்டு தொட்டு & வெண்ணிலவே|- | உனக்கும் எனக்கும் || ஆகாயம் இத்தனை நாள், கிளியே கிளியே & பூப்பறிக்க நீயும் போகாதே|- | திமிரு || மானா மதுர & தித்திக்கிற வயசு|- | எம் மகன் || கல்லூரி ஜெனரேசன்|- | ஜாம்பவான் || பன மரத்துல|- | ஈ || காதல் என்பது|- | நெஞ்சிருக்கும் வரை || காதலியே & புடிச்சிருக்கு|- | திருவிளையாடல் ஆரம்பம் || கண்ணுக்குள் ஏதோ|- | வெயில் || 'சேத்துவடம்' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் |- | குமரன் || கோ கோ சகோ & சொர்க்கத்தில் பூக்கும்|- | rowspan="22"| 2007 || போக்கிரி || வசந்த முல்லை|- | தாமிரபரணி || தாலியே தேவையில்லை பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களும் |- | தீபாவளி || டோலு பஜே, காதல் வைத்து காதல் வைத்து & போகாதே போகாதே நீ|- | சபரி || 'ஒசாமா ஒசாமா' பாடலை தவிர்த்து அனைத்து பாடல்களும் |- | மணிகண்டா || ஹே முகுந்தா, இஞ்சி மறுப்பா & மாமா மாமா|- | திரு ரங்கா || மதுரவீர, என்னை ஏதோ & தகதிமி|- | நீ நான் நிலா || டார்லிங் ஓ டார்லிங், என் காதல் தெய்வ & உன்னை சந்தித்தேன்|- | சிவாஜி || பல்லேலக்கா.. காவிரி ஆறும் & சிவாஜி தீம் |- | வியாபாரி || வெற்றியை கண்டவன்|- | கிரீடம் || அனைத்து பாடல்களும் |- | பள்ளிக்கூடம் || இந்த நிமிடம்|- | சத்தம் போடாதே || அனைத்துப் பாடல்களும் |- | பிறகு || |- | மலைக்கோட்டை || கந்தா கடம்பா|- | கற்றது தமிழ் || அனைத்துப் பாடல்களும் |- | அழகிய தமிழ் மகன் || நீ மரிலின் மன்றோ & வளையப்பட்டி தவிலே தவிலே|- | பொல்லாதவன் || மின்னல்கள் கூத்தாடும்|- | வேல் || இந்த ஊரில், உன்ன போல, ஆயிரம் ஜன்னல், கோவாக்காரக்கிளியே|- | ஓரம் போ || 'ஓரம் போ தீம்' தவிர்த்து அனைத்துப் பாடல்களும் |- | எவனோ ஒருவன் || உனது எனது |- | கல்லூரி || அனைத்துப் பாடல்களும் |- | புலி வருது || அனைத்துப் பாடல்களும் |- | rowspan="19"| 2008 || பீமா || முதல் மழை|- | வாழ்த்துகள் || அனைத்துப் பாடல்களும் |- | வெள்ளித்திரை || உயிரிலே என் உயிரிலே |- | சண்டை || போக்கிரினா விஐய்டா & ஆத்தாடி|- | யாரடி நீ மோகினி || அனைத்துப் பாடல்களும் |- | சந்தோஷ் சுப்பிரமணியம் || அடடா அடடா & உயிரே உயிரே பிரியாதே|- | சாது மிரண்டா || |- |- | அறை எண் 305-இல் கடவுள் || காதல் செய்|- | குருவி || ஹேப்பி நியூ இயர் & குருவி குருவி|- | பாண்டி || உன் கண்கள்|- | தாம் தூம் || ஆழியிலே முட்குளிக்கும் & அன்பே என் அன்பே|- | ஜெயம் கொண்டான் || சுற்றிவரும் பூமி|- | பொய் சொல்லப் போறோம் || அனைத்துப் பாடல்களும் |- | சக்கரக்கட்டி || ஏலே, ஐ மிஸ் யூ & டேக்சி டேக்சி|- | சேவல் || கண்ணம்மா கண்ணம்மா, நம்ம ஊரு நல்லாருக்கு, ஒடமரத்து முள்ளபோல & பார்வையிலே ஒரு ஏக்கம்|- | வாரணம் ஆயிரம் || ஏத்தி ஏத்தி|- | தெனாவட்டு || அனைத்துப் பாடல்களும் |- | மகேஷ், சரண்யா மற்றும் பலர் || காற்றே காற்றே|- | சிலம்பாட்டம் || மச்சான் மச்சான்|- | rowspan="13"| 2009 || சிவா மனசுல சக்தி || அனைத்துப் பாடல்களும் |- | தநா-07-அல 4777 || ஐ போன் & கண்ணீரைப் போலே|- | 1977 || வங்க கடல்|- | அயன் || ஓ சூப்பர் நோவா, பலபலக்கிற பகலாநீ & விழி மூடி யோசித்தால்|- | மரியாதை || யார் பார்த்தது|- | மாசிலாமணி || நாக்க ரொம்ப நாக்க & ஓடி ஓடி விளையாட|- | முத்திரை || ஓம் சாந்தி ஓம் & ஜுலை மாதத்தில்|- | நாடோடிகள் || யக்கா யக்கா|- | வாமனன் || அனைத்துப் பாடல்களும் |- | ஐந்தாம் படை || 'ஓரம்போ'பாடல் தவிர அனைத்து பாடல்களும் |- | சொல்ல சொல்ல இனிக்கும் || சகியே சகியே & ராஜாத்தி|- | ஆதவன் || டமுக்கு டமுக்கு|- | கண்டேன் காதலை || சுத்துது சுத்துது & ஒரு நாள் இரவில்|- | rowspan="17"| 2010 || ஜக்குபாய் || வா... தினம் தினம்|- | அவள் பெயர் தமிழரசி || பாளையங்கோட்டை|- | கச்சேரி ஆரம்பம் || கடவுளே கடவுளே & வித்தை வித்தை|- | அங்காடித் தெரு || அனைத்துப் பாடல்களும் |- | பையா || அனைத்துப் பாடல்களும் |- | சுறா || தஞ்சாவூர் ஜில்லாக்காரி|- | சிங்கம் || என் இதயம் & சிங்கம் சிங்கம்|- | களவாணி || அனைத்துப் பாடல்களும் |- | மதராசபட்டினம் || அனைத்துப் பாடல்களும் |- | தில்லாலங்கடி || பட்டு பட்டு பட்டாம்பூச்சி & சொல் பேச்சு|- | தம்பி அர்ச்சுனா || ஹஜரே ஹஜரே & மழை மேகம் மழை|- | பாணா காத்தாடி || என் நெஞ்சில் & ஒரு பைத்தியம் பிடிக்குது|- | காதல் சொல்ல வந்தேன் || 'ஓ சாலா'பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் |- | நான் மகான் அல்ல || வா வா நிலவு & ஒரு மாலை நேரம்|- | பாஸ் என்கிற பாஸ்கரன் || அனைத்துப் பாடல்களும் |- | இரத்தசரித்திரம் (மறுஉருவாக்கம்) || அனைத்துப் பாடல்களும் |- | அய்யனார் || அனைத்துப் பாடல்களும் |- | rowspan="19"| 2011 || சிறுத்தை || நான் ரொம்ப ரொம்ப & செல்லம் வாடா செல்லம்|- | அவர்களும் இவர்களும் || என்ன தவம் செஞ்சுபுட்டேன்|- | வானம் || வானம், வூ யம் ஐ & நோ மணி நோ மணி|- | நர்தகி || அனைத்துப் பாடல்களும் |- | எங்கேயும் காதல் || திமு திமு|- | எத்தன் || |- | சபாஷ் சரியான போட்டி || வந்துட்டான்யா & ஓடு மாமே|- | அவன் இவன் || அனைத்துப் பாடல்களும் |- | தேநீர் விடுதி || "ஒரு மாலை பொழுதில்" |- | தெய்வ திருமகள் || அனைத்துப் பாடல்களும் |- | வெப்பம் || அனைத்துப் பாடல்களும் |- | புலி வேசம் || பாய் பிரண்ட் & வாரேன் வாரேன்|- | வந்தான் வென்றான் || நகருதே நகருதே|- | வெடி || இப்படி மழை|- | ரா ரா || Ethotho Ethotho|- | 7ஆம் அறிவு || முன் அந்தி & எல்லேலம்மா|- | போராளி || யார் இவன் & எங்கிருந்து |- | மம்பட்டியான் || மலையூரு. ரீமிக்ஸ் & ஏதோ ஆகுதே|- | மகாராஜா || |- | rowspan="17"| 2012 || விளையாட வா || "வானம் எந்தன்" |- |நண்பன் || ஹார்ட்டிலே பேட்டரி & நல்ல நண்பன்|- | வேட்டை || அனைத்துப் பாடல்களும் |- | மெரினா || வணக்கம் சென்னை, காதல் ஒரு தேவதை & மெரினா தீம்|- | அரவான் || 'ஊரே ஊரே என்ன பெத்த' பாடலை தவிர்த்து அனைத்துப் பாடல்களும் |- | கொண்டான் கொடுத்தான் || "தஞ்சாவூரு கோபுரம் அழகு" |- | கழுகு || ஆத்தாடி மனசுதான் |- | உள்ளம் || கண்ணை திறந்து|- | ஒரு கல் ஒரு கண்ணாடி || அனைத்துப் பாடல்களும் |- | வழக்கு எண் 18/9 || அனைத்துப் பாடல்களும் |- | மறுபடியும் ஒரு காதல் || மே மாதம்|- | பில்லா II || அனைத்துப் பாடல்களும் |- | மாற்றான் || ரெட்டை கதிரே|- | துப்பாக்கி || வெண்ணிலவே|- | அம்மாவின் கைபேசி || என்ன செஞ்சு போற & ராஜபாட்டை|- | நீதானே என் பொன் வசந்தம் || அனைத்துப் பாடல்களும் |- | சட்டம் ஒரு இருட்டறை || ஆதாம் ஏவல், திரும்ப திரும்ப & உயிரே உயிரே|- | rowspan="17"| 2013 || சமர் || அனைத்துப் பாடல்களும் |- | வத்திக்குச்சி || குரு குரு|- | கேடி பில்லா கில்லாடி ரங்கா || ஒரு பொரம்போக்கு & தெய்வங்கள் எல்லாம்|- | சேட்டை || லைலா லைலா|- | ஆதலால் காதல் செய்வீர் || ஆராரோ பாட இங்கு|- | மூன்று பேர் மூன்று காதல் || அனைத்துப் பாடல்களும் |- | சோக்காலி || ஹே சக்கரகட்டி|- | தில்லுமுல்லு || ஆஜா ஆஜா|- | துள்ளி விளையாடு || வா மச்சி ஊத்துக்கோ & யார் இவளோ|- | பட்டத்து யானை || என்ன ஒரு, பூசணிக் காய் & தலகால் புரியல|- | தலைவா || அனைத்துப் பாடல்களும் |- | தங்க மீன்கள் || அனைத்துப் பாடல்களும் |- | மத்தாப்பு || அனைத்துப் பாடல்களும் |- | வணக்கம் சென்னை || ஓ பெண்ணே & ஹே|- | ஆல் இன் ஆல் அழகு ராஜா || அனைத்துப் பாடல்களும் |- | தலைமுறைகள் || அனைத்துப் பாடல்களும் |- | புதிய திருப்பங்கள் || அனைத்துப் பாடல்களும் |- | rowspan="11" | 2014 || பிரம்மன் || வானத்திலே|- | டமால் டுமீல் || ஓடி ஓடி|- |நான் தான் பாலா || உயிரே உனக்காகே, அம்மா ரொம்ப, அறியாம, கண்மணி|- | என்னதான் பேசுவதோ || |- | அதிதி || சொல்ல சொல்ல உள்ளமெங்கும்|- | சைவம் || அனைத்துப் பாடல்களும் |- | அஞ்சான் || ஏக் தோ தீன் சார் பாஞ்ச்|- | பூஜை || அனைத்துப் பாடல்களும் |- | நெருங்கி வா முத்தமிடாதே || அனைத்துப் பாடல்களும் |- | திருடன் போலீஸ் || 'மூடுபனிக்குள்' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் |- | அழகிய பாண்டிபுரம் || கடவுளிடம்|- | rowspan="14"| 2015 || டார்லிங் || 'வந்தா மலை' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் |- | டூரிங் டாக்கீஸ் || |- | காக்கி சட்டை || காக்கி சட்டை|- | நண்பேன்டா || தேனே தேனே செந்தேனே|- | சோன்பப்டி || ஹே சாக்லெட்ஸ்|- | காக்கா முட்டை || |- | நண்பர்கள் நற்பணி மன்றம் || கட்டழகி, பாக்கெட்டில் காசு & உன்னை என்னை|- | பாபநாசம் || அனைத்துப் பாடல்களும் |- | ஆவி குமார் || அனைத்துப் பாடல்களும் |- | இது என்ன மாயம் || அனைத்துப் பாடல்களும் |- | சகலகலா வல்லவன் || புஜிமா புஜிமா & பல்பு வாங்கிட்டேன்|- | வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க || |- | திரிஷா இல்லனா நயன்தாரா || முத்தம் கொடுத்த|- | ஈட்டி || உன் சுவாசம் & குய்யோ முய்யோ|- | rowspan="11"| 2016 || சாகசம் || ஏங்ரி பேர்ட், ஓ மது & சாயங்க கு|- | அஞ்சல || நக்கலு மாமா & யாரைக் கேட்பது|- | சேதுபதி || அனைத்துப் பாடல்களும் |- | புகழ் || |- | ஒன்பது குழி சம்பத் || பங்காளி, என்னென்ன இதயத்திலே, & ஒப்பாரி|- | கோ 2 || |- | தெறி || என் ஜீவன்|- | எனக்கு இன்னொரு பெயர் இருக்கு || |- | அம்மா கணக்கு || |- | தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் || மாயா ஓ மாயா|- | மீண்டும் ஒரு காதல் கதை || |- | rowspan="3"| 2017 || யாக்கை || நீ என் கண்கள்|- | தரணி || அனைத்துப் பாடல்களும் |- | திட்டிவாசல் || அனைத்துப் பாடல்களும் |- | rowspan="2"| 2018 || 2.0 || புல்லினங்கால்|- | யாகன் || |- | rowspan="3" | 2019 || சர்வம் தாளமயம் || மாயா மாயா|- |பெட்டிக்கடை|சுடலமாட சாமிக்கிட்ட|- | ஜூலை காற்றில் || மேற்கிலே மேற்கிலே & கண்களின் ஓரமாய்|} படைப்புகள் இவர் பாட்டெழுதிய சில திரைப்படங்கள்: மாற்றான் 7ஜி ரெயின்போ காலனி நந்தா வெயில் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) புதுப்பேட்டை சந்திரமுகி சிவாஜி த பாஸ் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) கற்றது தமிழ் கஜினி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது தம்பி காதல் கொண்டேன் காதல் மன்மதன் சண்டக்கோழி தீபாவளி போக்கிரி பீமா வாழ்த்துகள் அழகிய தமிழ் மகன் சத்தம் போடாதே கல்லூரி வேல் சக்கரக்கட்டி சந்தோஷ் சுப்பிரமணியம் ஆறு வாரணம் ஆயிரம் சிவா மனசுல சக்தி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) அயன் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) நாடோடிகள் வாமனன் ஆதவன் சுறா யாரடி நீ மோகினி பையா அங்காடித் தெரு சிங்கம் களவாணி மதராசப்பட்டினம் நான் மகான் அல்ல வானம் ரத்த சரித்திரம் போராளி எத்தன் வேட்டை எங்கேயும் காதல் அவன் இவன் பொய் சொல்லப் போறோம் நர்த்தகி தெய்வத் திருமகள் வந்தான் வென்றான் நண்பன் அரவான் மன்னா வழக்கு எண் 18/9 பில்லா 2 நீதானே எந்தன் பொன்வசந்தம் முருகா இவரது நூல்கள் கவிதைத்தொகுப்புகள் நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு) பட்டாம்பூச்சி விற்பவன் ஆணா ஆவண்ணா என்னை சந்திக்க கனவில் வராதே குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ) தூசிகள் புதினம் சில்க் சிட்டி கட்டுரைத் தொகுப்புகள் கிராமம் நகரம் மாநகரம்'' பால காண்டம் வேடிக்கை பார்ப்பவன் அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரைத்தொடர்) விருதுகள் 2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது 2006: வெயில் திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது 2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது. 2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது. 2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கிராமம் நகரம் மாநகரம் - நூல் அறிமுகம் நா. முத்துக்குமார் படைப்புகள் 1975 பிறப்புகள் 2016 இறப்புகள் கவிஞர்கள் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் நா. முத்துக்குமார் எழுதிய பாடல்கள் காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழகப் பாடலாசிரியர்கள்
5835
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D
பா. விஜய்
பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார். வாழ்க்கை குறிப்பு கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தை வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் சரஸ்வதி மிகவும் கண்டிப்பான ஆசிரியர் (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துவந்தார்). இவரின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பா. விஜய் நடித்த படங்கள் பா. விஜய் பெற்ற விருதுகள் பா விஜய்-ன் படைப்புகள் பிரபலமான பாடல்களில் சில... மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - தமிழ்திரையுலகத்தில் பா. விஜய் பற்றி கவிஞர்கள் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் 1974 பிறப்புகள் வாழும் நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள் கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்
5837
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
அஜித் குமார்
அசித்து குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அசித்து குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அசித்து குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம் அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திரை வாழ்க்கை தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 2003–05 2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான என்னை தாலாட்ட வருவாளா திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார். நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்த ஜனா திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் சரண் இயக்கத்தில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மட்டுமே. இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், " தல தீபாவளி" பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது. ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், அட்டகாசம் திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. 2010–தற்போது வரை 2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அசல் திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது. இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார். 2017 ஆவது ஆண்டில் சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்ததாக சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சிவா இயக்கத்தில் விசுவாசம் எனும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அஜித் குமார், சிவா கூட்டணியின் நான்காவது திரைப்படமாகும். சர்ச்சைகள் பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. உதவி பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார். அறுவை சிகிச்சை ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அரசியல் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார். விருதுகள் அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புத்தகம்) பரத்முனி ஆர்ட் அகாதமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார். 2002ஆம் ஆண்டு வில்லன் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். சிறந்த தென்னிந்திய நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் விருதுகளின் சிறந்த எதிர்நாயகன் மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். தமிழக அரசு திரைப்பட விருதுகள் வென்றவை தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது - பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - வரலாறு (2006) பிலிம்பேர் விருதுகள் வென்றவை சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி (1999) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வில்லன் (2002) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வரலாறு (2006) பரிந்துரைக்கப்பட்டது சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பில்லா (2007) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - மங்காத்தா (2011) விஜய் விருதுகள் வென்றவை விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - வரலாறு (2006) விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) - மங்காத்தா (2011) விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - மங்காத்தா (2011) பரிந்துரைக்கப்பட்டது விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - பில்லா (2007) விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஏகன் (2008) விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - அசல் (2010) விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஆரம்பம் (2013) பிற விருதுகள் வென்றவை சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - வாலி (1999) சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சிட்டிசன் (2001) சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது - மங்காத்தா (2011) திரைப்பட விபரம் நடித்துள்ள திரைப்படங்கள் குறிக்கப்பட்ட இரண்டு திரைப்படங்களைத் தவிர அனைத்தும் தமிழ்த் திரைப்படங்கள். வர்த்தக விளம்பரங்கள் அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்ற இணையத்தளம் அஜித் ரசிகர்கள் இயக்கம் தலநகரம் ரசிகர்கள் இணையத்தளம் திரை நிலா அஜித் - அஜித் ரசிகன் மாத இதழ் எம்ஜிஆரும் அஜீத்தும் - சிறப்புக்கட்டுரை தமிழ்த் திரைப்பட நடிகர்கள் 1971 பிறப்புகள் வாழும் நபர்கள் பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் இந்தியத் திரைப்பட நடிகர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழக விளையாட்டு வீரர்கள்
5839
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
விக்ரம்
விக்ரம் (17 ஏப்ரல் 1966) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), ஐ (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர். விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இளமைக் காலம் விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1965 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர். விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர். விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார். திரைப்பட வாழ்க்கை விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. கலைப் பணி விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "தந்துவிட்டேன் என்னை" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும். திரைப்படங்கள் பின்னணிக் குரல் கொடுத்தவை பாடிய பாடல்கள் தொலைக்காட்சித் தொடர்கள் இசை ஒளிக்காட்சிகளித் தோற்றங்கள் வர்த்தக தோற்றங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் விக்ரமின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் 1966 பிறப்புகள் வாழும் நபர்கள் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் சென்னை நடிகர்கள் சென்னைப் பாடகர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள் தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் இந்தித் திரைப்பட நடிகர்கள் மலையாளத் திரைப்பட நடிகர்கள் தெலுங்குத் திரைப்பட நடிகர்கள் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள் தமிழ் குரல் நடிகர்கள்
5841
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%28%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%29
சூர்யா (நடிகர்)
சூர்யா (பிறப்பு: 23 சூலை 1975) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வேல் (2007) , வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். தனிப்பட்ட வாழ்க்கை சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். திரைப்பட வாழ்க்கை இவரின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை வசந்த் இயக்கிருந்தார். ஆனால் இதன் பிறகு வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998),பெரியண்ணா (1999), பூவெல்லாம் கேட்டுப்பார் (1999). இந்தத் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஜோதிகாவை இவர் மணந்துகொண்டார். 2001 ஆம் ஆண்டில் பாலாவின் (இயக்குனர்) இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார். இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2003 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன , வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார். மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததற்காக பரிந்துரை செய்யப்பட்டது. பின் பேரழகன் திரைப்படத்தில் கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிலிம்பேர் விருது பெற்றார். 2004 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து (திரைப்படம்) நடித்தார். இவர் இதில் மாணவ தலைவர் வேடத்தில் நடித்திருந்தார். 2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி, கஜினி ,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். கஜினியில் மறதிநோய் உள்ளவராக நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (கஜினி (2008 திரைப்படம்) அதே பெயரில் வெளியானது. மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது. 2006 இல் சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்), 2007 இல் வேல் (திரைப்படம்) போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2008 இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்தார். இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். 2009 இல் அயன் (திரைப்படம்), ஆதவன் (திரைப்படம்) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். இதில் அனுசுக்கா செட்டி உடன் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சிங்கம் 2 , சி3 (திரைப்படம்) ஆகியவை வெளியாகின. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்தார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தருமன் வேடத்தில் நடித்தார். இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே எனும் திரைப்படத்தை தயாரித்தார். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கிய மாற்றான் என்ற திரைப்படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிங்கம் 2 என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்தார். இது 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்பட சிங்கம் தொடரின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த திரைப்படம் 5 ஜூலை 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 2014 ஆம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் என்ற திரைப்படம் 15 ஆகஸ்ட் 2014 அன்று வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது. அதே ஆண்டில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படமும் வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது. பொதுச்சேவை மற்றும் தொண்டு அகரம் என்ற ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் சிறந்த பங்காற்றி வருகிறது. திரைப்படங்களின் பட்டியல் தொலைக்காட்சி தயாரிப்பாளராக மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சூர்யா-ஜோதிகா திருமணப் புகைப்படங்கள் 1975 பிறப்புகள் வாழும் நபர்கள் கோவை மக்கள் சென்னை நடிகர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ் குரல் நடிகர்கள்
5844
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலத்திரனியல் கலைச்சொற்கள்
மின் உறுப்புகள் - Components மின்கம்பி, வடம் - Wire ஆளி, சாவி, நிலைமாற்றி - Switch (தொடுப்பி, தொடுக்கி) மின்தடையம் - Resistor (Resistor = மின்தடை; Resistance = மின் தடையம்; Resistivity = மின் தடைமை) மின்தூண்டி - Inductor மின்தேக்கி - Capacitor (மின்கொண்மி, கொள்ளளவி) இருமுனையம், இருவாயி - Diode திரிதடையம், மூவாயி - Transistor அலைக்கம்பம் - Antenna மின்மாற்றி, நிலைமாற்றி - Transformer பெருக்கி - Amplifier (மிகைப்பி) செயல்படு பெருக்கி, [[செயல்பாட்டுப் பெருக்கி - Operational Amplifer (வினைபடு மிகைப்பி) அலை இயற்றி, அலைவுக் காட்டி - Oscillator (அலைவி) Connectors (இணைப்பி) உருகிழை, உருகி Fuse (துண்டி) தொகுப்புச் சுற்று Integrated circuit (ஒருங்கிணைச் சுற்று, மின் தொகுசுற்று, நுண் தொகுசுற்று)) LCD (படிகச்சீர் நீர்மத் திரை) அல்லது (சீருறு நீர்மத் திரை) Printed circuit board (வழிபதி மின்சுற்று அட்டை (/தட்டை)) வ.மி.த; மின் சுற்றட்டை) Thermocouple (வெப்ப மின் இரட்டை, வெப்ப இரணை) Phased array (சீர்முக அலை வீசு அடுக்கு; அலைமுகத் திருப்படுக்கு) Ground (மின் நிலப்புதை) அல்லது (மின் ஒப்படி); மண்ணடி காந்தலைப்பி Magnetron சீர்முக நுண்ணலை ஆக்கி உணரி - sensor கோட்பாடுகளும் விதிகளும் ஓமின் விதி கிர்ச்சாஃபின் மின்சுற்று விதிகள் லென்சின் விதி ஆம்ப்பியர் விதி பாரடே விதி இலத்திரனியல் சாதனங்கள் (எதிர்மின்னிக் கருவிகள்) கணினி - Computer தொலைக்காட்சி - Television வானொலி - Radio தொலைபேசி - Telephone செல்பேசி, அலைபேசி, கைபேசி,நகர்பேசி - Cellphone ஒளிப்படக்கருவி - Camera நிகழ்படக்கருவி - Camcorder மின்னடுப்பு - Electric Cooker மின் குமிழ்/மின் விளக்கு - Electric Bulb மின் விசிறி - Fan மின்னோடி தடங்காட்டி, தடஞ்சுட்டி navigator மாற்றவல்ல நிலை நினைவகம் portable hard drive இலத்திரனியல் சுற்றுக்கள் மின்சுற்று அலைத்திருத்தி Rectifier (AC to DC) (Diode Rectifier (Half Bridge, Full Bridge, ஈரி திருத்தி (அரையலை திருத்தி, முழுவலை திருத்தி), Thyristor/SCR Rectifiers (கதவ நாலி/சிலிக்கான் கட்டுப்பாட்டுக் கடத்தி (சிகக) திருத்தி), Three Phase SCR Full Bridge Rectifier மூன்று-கட்ட சிகக முழுவலைத் திருத்தி) மின்னழுத்தச் சீரமைப்பான் - Voltage Regulator பெயர்ப்பி Converter (DC to DC, நேர்மின்னோட்டம் - நேர்மின்னோட்டம்; நேமி-நேமி) (Buck Converter, 1Q, 2Q Choppers, Buck Converter, Forward Converter, Flyback Converter) Inverter (DC to AC) - அலைதோற்றி (நேர்மின்னோட்டத்தை மாறுமின்னோட்டமாக மாற்றுவது) (Single Phase Inverter (Half bridge, Full Birdge) (ஒற்றைமுக தோற்றி, Three Phase Inverter மும்முகத் தோற்றி, Square Mode Operated Inverter, PWM Inverter (துடிப்பு அகலம் மாற்றும் (து.அ.மா) அலைதோற்றி. துடிப்பலை அல்லது கட்டவலை = pulse, ) மின்னியல் மின் இயற்றி(மின்னாக்கி) - Generator இலத்திரனியல் பொது (எதிர்மின்னியல் பொது) ஆற்றல், சக்தி - Energy மின் திறன் - Power விசை - Force புலநிலை ஆற்றல் வேறுபாடு (நிலை ஆற்றல் வேறுபாடு) - (potential energy difference) வேலை - work மின்னிலை - electrical potential நிலையாற்றல் - potential energy மின்மம், மின்னூட்டு - Charge எதிர்மின்மம் - negative charge நேர்மின்மம் - positive charge நேர்மின்னி, புரோத்தன் - proton எதிர்மின்னி, இலத்திரன் - electron நொதுமி, நியூத்திரன் - neutron மின்மி, மின்மவணு ion Electronics - இலத்திரனியல்/எதிர்மின்னியியல்/மின்னணுவியல் Voltage - மின்னழுத்தம் (வோல்ட்டழுத்தம்) Current - மின்னோட்டம் Resistance - மின் தடைமம் Impedance - மறிமம், மாறுமின் மறிமம் Reactance- கிளர்மம் Inductance -தூண்டம் Capacitance -கொண்மம்/தேக்கம் Gain - மிகைமம் மின்காந்த அலை அதிர்வெண் - Frequency அலைமுகம் - Phase வீச்சு - Amplitude திசை - Direction செறிவு - Intensity அலைவீச்சு பண்பேற்றம் - Amplitude Modulation தொகுப்புச் சுற்று (தொகுசுற்று), (நுண் தொகுசுற்று)- Integrated Circuit நடுத்தர அதிர்வெண் - பின்னிய வரிக் கண்ணோட்டம் - உமிழ்ப்பான்(உமிழி) - Emitter எண்ணி - Counter மின்வீச்சு இடர்பாடுகள் - Electric Amplitude Disturbances உறைப்பகுப்பான் (சரியல்ல ??)- Envelope Detector முன்னோக்கு சார்பு மின்னழுத்தம் - Forward Bias Voltage பின்னூட்டம் - Feedback பின்னூட்டச் சுற்று - Feedback Circuit பின்னூட்டத் தகவு - Feedback Ration கம்பிச்சுருள் - Filament ஏற்பான் (திரட்டி)- Collector ஊர்தி அலைகள் (அலைதாங்கி, தாங்கி, ஊர்தி) - Carrier Waves தெவிட்டிய நிலைப் பகுதி (மிகுபெய் பகுதி) - Saturation Region கலக்கிப் பிரித்தல் - Super Heterodyne குறைக்கடத்தி - SemiConductor அரம்பப்பல் - Sawtooth இலத்திரனியல் அளவிடும் கருவிகள் (எதிர்மின்னி அளவிகள்) அழுத்தமானி (அழுத்த அளவி) - Voltage Measure அம்பியர்மானி (மின்னோட்டமானி, மின்னோட்ட அளவி)- Current Measure அலைவுகாட்டி (அலைகாட்டி) - Osscillascope நிறமாலை பகுப்பாய்வி - Spectrometer மின்காந்தபுல அளவுமானி - Electromagnetic Meter இயல்கள் மின்காந்தவியல் மின்னியல் இலத்திரனியல் இயந்திரவியல் கணினியியல் தகவல் தொழில்நுட்பம் பொறியியல் வானொலி தொழில்நுட்பம் தொலைக்காட்சி தொழில்நுட்பம் கைபேசி தொழிலில்நுட்பம் இணையம் துணை நூல்கள் சூ. றெ. ஜெயக்குமார், சு. நிமலன், பு. ரவிராஜன். (2000). அடிப்படை இலத்திரனியல். குளோபல் பதிப்பகம்: கொழும்பு. (2002). நர்மதாவின் தமிழ் அகராதி. சென்னை: நர்மதா. வெளி இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் Basic Electrical in மின்னியல் தமிழில்...! தமிழ்ச்சொற் தேடல்கள் மின்னணுவியல் தொழில்நுட்பம் தலைப்புகள் பட்டியல் தமிழ் கலைச்சொற்கள்
5849
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
விழுமியம்
மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் (Value) எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, நம்பிக்கை, கருத்து, எண்ணம் என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம். விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம். தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய வாழ்வை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனலாம். ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற ஆக்கங்களிலும், பழமொழிகளிலும் தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம். இவற்றையும் பார்க்கவும் நெறிமுறை குடிவழக்கு மரபாண்மை வழக்கங்கள் பழக்கங்கள் பண்பாட்டு மானிடவியல்
5850
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
நெறிமுறை
நெறிமுறை (Protocol/ Norm) என்பது சமுதாயத்தில் மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அச் சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விதிகளாகும். இந்த சமூக நடைமுறைப் படுத்தல் என்ற அம்சமே நெறிமுறைகளை விழுமியம் போன்றவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. தவிரவும் விழுமியம் கருத்தியல் அடிப்படையைக் கொண்டது, நெறிமுறை குறிப்பிட்ட விடயங்களில் மக்கள் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் போன்ற நெறிப்படுத்தல் தன்மை கொண்டது. நெறிமுறைகளின் தாக்கம் பல்வேறு வகையான மனித நடத்தைகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எல்லாச் சமுதாயங்களிலும் நெறிமுறைகள் ஒன்றுபோல் இருப்பதில்லை. நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் சமுதாயங்களுக்குள் வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருமணம், கணவன் - மனைவி தொடர்பு, பிள்ளைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் எனப் பலவகையான நெறிமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுவது மட்டுமின்றி முற்றிலும் எதிர் மாறானவையாகவும் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாகச் சில சமுதாயங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டைத் திருமணத்தில் கடைப்பிடிக்க, வேறு சில சமுதாயங்களில் பலதார மணம் வழக்கில் உள்ளது. இவற்றையும் பார்க்கவும் குடிவழக்கு மரபாண்மை மேற்கோள்கள் பண்பாட்டு மானிடவியல்
5851
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
குடிவழக்கு
ஒரு சமுதாயத்தில் உள்ள பொதுமைத் தன்மை கொண்ட நடத்தைகள் குடிவழக்குகள் (folkways) எனப்படுகின்றன. இது பழக்கத்தால் வருவதும், இயல்பாக வெளிப்படுவதுமாக இருப்பதுடன், சிந்திக்காமல் நிகழக்கூடியது. குடிவழக்கு குறித்த சமுதாய மக்களுக்கு உரிய பாங்காகக் காணப்படுவது. குறித்த சமுதாய வரம்புக்கு உள்ளேயே பலவாறாகக் காணப்படும் வழக்கம் (custom), பழக்கம் (habbit) போன்றவற்றிலிருந்து குடிவழக்கு வேறானது. இது சமுதாயத்தின் அனைத்துப் பரப்பிலும் பரவலாகக் காணப்படுவதாகும். கைகூப்பி வணங்கி வரவேற்றல், மூன்று வேளை உணவு உண்ணல், காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல் போன்றவை குடிவழக்குகளைச் சார்ந்தவை. இது தொடர்பான இன்னொரு கருத்துரு வழக்கடிபாடு (mores). இது ஒரு பரந்த பகுதியில் அல்லது சமுதாயத்தில் எல்லா மக்களிடமும் காணப்படுவதுடன், பெரிய அளவில் ஒழுக்கம் சார்ந்த முக்கியத்துவமும் கொண்டது. இது தகாப் புணர்ச்சி, இயற்கைக்கு மாறான பாலுறவு போன்ற விலக்குகள் தொடர்பில் வெறுப்புக் கொண்டதாகவும் உள்ளது. இதன் விளைவாகச் சமூகத்தின் விழுமியங்களும், வழக்கடிபாடுகளும், இத்தகைய விலக்குகளுக்குத் தடை விதிக்கின்றன. வழக்கடிபாடு சரி, பிழை; நியாயம், அநியாயம் என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பது. இதற்கு மாறாக, குடிவழக்கு, சரி என்பதற்கும், மரியாதைக் குறைவானது என்பதற்கும் இடையே வேறுபாடு காண்கிறது. குறிப்புகள் பண்பாட்டு மானிடவியல்
5853
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE
பைசா
பைசா என்பது ரூபாய் அல்லது வங்கதேச இட்டாக்காவின் மதிப்பில் நூற்றில் ஒரு பங்கு மதிப்புடைய பண அலகு ஆகும். பைசா வங்க தேசம், இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 1950 வரை பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் (அதற்கு முந்தைய பிரித்தானியர் ஆண்ட இந்தியாவிலும்) பைசா என்பது 3 pieகளுக்கும் கால் அணாவுக்கும் ரூபாயில் 64ல் ஒரு பங்குக்கும் சமமாக இருந்தது நாணய முறை
5860
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
திருமணம்
திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இருவரிடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஒரு மனிதனும், இன்னொரு மனிதனும் (ஆண் - பெண்) இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதி படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஓர் உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும். திருமணம்- சொல்லும் பொருளும் மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருள்களை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப்பல. திருமணத்தைக் குறிக்கும் 'மணம்' என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது தெரியவில்லை. மண் இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு. இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு' என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது. மணம் குறித்த பிற சொற்கள் மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத் தமிழரால் பயன்படுத்தப்பட்டன. அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் பெயர் பெற்ற சொற்களாக உள்ளன. சில சொற்கள் பிற மொழியாளர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றதென்று அறியலாம். சான்றாகக் "கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம். கடி-மணம் 'கடி' என்பது பல பொருள் தரும் உரிச்சொல் ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம். கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும், மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்து திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம். கரணம் கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்யாத்தனர்கரணமென்ப'' என்று தொல்காப்பியத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை. மன்றல் 'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. வதுவை வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வரைவு வரை என்பதற்கு மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் இது பின்னர் வழக்கொழிந்துள்ளது. பழந்தமிழரும் திருமணமும் பண்டைத் தமிழர் தம் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது. மணமுறைகள் பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல், தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மணமுறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத் திருமணம், கலப்பு மணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தெரியவரும் தமிழரின் மணமாக மரபு வழி மணம் சேவை மணம் போர் நிகழ்த்தி மணம் துணங்கையாடி மணம் பரிசம் கொடுத்து மணம் ஏறு தழுவி மணம் மடலேறி மணம் ஆகிய மண முறைகளைக் காணலாம். மரபு வழி மணம் இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர். பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது ஏறு தழுவுதல் தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது கலித்தொகையில் முல்லைக்கலியில் ஆயர் மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கித் தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் புலி முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின் ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதை அறியலாம். மடலேறுதல் பனை மடலைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மடலேறுதல் இல்லை. ஏனெனில் நாணம் துறந்து மடலேறுதல் என்பது காமம் மிக்க கழிபடர் தலைவனுக்கு உரிய ஒன்றாகும். மடலூரும் தலைவனே இச்செயலை நாணமிக்க செயலாகக் கருதுவதாக குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. இவ்வழக்கு தற்போது இல்லை. போர் நிகழ்த்தி மணமுடித்தல் தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை தொல்காப்பியம் சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப் புறநானூறு என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன. துணங்கையாடி மணத்தல் துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக் காலங்களில் துணங்கையும், மன்னர்ப் போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. பரிசம் கொடுத்து மணத்தல் மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும். மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு " உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர். தற்காலத்தில் பரிசம் கொடுத்து மகளை மணத்தல் சில சமூகத்தாரிடம் காணப்படுகிறது. அதோடு பொருள் பெற்று மணத்தல் என்பதும் உள்ளது. திருமண வகைகள் திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன. ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம். ஒருதுணை மணம் பலதுணை மணம் பலமனைவி மணம் பலகணவர் மணம் குழு மணம் பலதார மணம் ஓர் ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறாது. சங்க இலக்கியங்களில் காமக்கிழத்தி, பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மக்கட் பேறு மட்டும் கருதி மட்டுமே இப்பலதார மணம் நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம். உறவு முறைத் திருமணம் உறவு முறைத் திருமணம் மணிமேகலை காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலை காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர். திணைக் கலப்பு மணம் சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை அகநானூறுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெறவில்லை. சேவை மணம் மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மணத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணி யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மணந்ததும், பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும். தமிழரின் திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது. பொருத்தம் பார்த்தல் மணநாள் குறித்தல் திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்கட்கு உணர்த்துதல் மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல் சிறப்பு இறைவழிபாடு செய்தல் மங்கல ஒலி எழச்செய்தல் மணமேடை ஒப்பனை ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது. பொருத்தம் பார்த்தல் பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம் நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி சிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். திருமணத்திற்குரிய பொருத்தங்களாக " பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு,நிறுத்த காமவாயில், நிறையே, அருளே, உணர்வோடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை இளமை வனப்பு வளமை தறுக்கண் வரம்பில் கல்வி நிறைந்த அறிவு தேசத்தமைதி காத்தல் குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது. சீவக சிந்தாமணியில் குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட்ட பின்பே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம் பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது. மண நாள் குறித்தல் தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் வல்லவரிடம் கேட்டு முடிவு செய்தனர். " மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண்டிங்கள்" மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோவலன் – கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய" கம்ப ராமாயணத்திலும் வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம். இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும் பின்பற்றப்பட்டது. நகருக்கு உரைத்தல் மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில் இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில் பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக் கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்" என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண் செய்தியை நகருக்கு உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து அறிவித்தனர். பெருங்கதையில் மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச் சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து, மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின் மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில் மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும், திலகமும் அணிவித்தனர் என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, ( காரைக்கால் அம்மையார் )பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது. மனன்ர் மண வினையில் மக்கள் பங்கு அதிகம் இருந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தம் கடமை ஆற்றிய நிலையைக் காண முடிகிறது. மேலும் முரசறைவோன் மக்களை அணிகலண்கள் பலவற்றை அணிந்து கொள்ளும்படியும்அவைஅரசகட்டளைஆகையால் இனிய பால் சோற்றாஇயல்லாமல் பிறாவற்றை ஏழு நாட்கள் உம் மனம் விரும்பினும் உண்ணாதிருப்பீராக " என்று அறிவுருத்தி, பின்பு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செய்தியையும் கூறுகிறான். இதனால் மன்னருக்கும் மக்களுக்கும் இடையே இருந்த உறவும் மக்களின் மகிழ்ச்சியை நல்ல நாளில் விரும்பி கொல்லாமை முதலிய நோன்பு வலியுறுத்தப்ப்டுதலையும் அறியலாம். மண நாளின் போது இன்னா செயல்கள் எவையும் இடம் பெறாமல் அறவாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் புலனாகிறது. மணவினை நிகழும் இடம் பழந்தமிழர் திருமணத்தை பெண்வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டிருந்தன்ர்.களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வது மரபாக இருந்தது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இதனை "நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும் எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச் சொல்லி னெவனோ மற்றே வெண்வேல் வையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே" என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளி வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின் படி பரிசம் போடுதலும் பெண்வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்தது. இன்று அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், பொதுமன்றில்கள், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது. மணப் பந்தல் அமைத்தல் தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம் பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல் அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து கால்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇய கைபுனை வனப்பின் கான்முதல் தோறும் ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்" என்ற பெருங்கதை ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் கூலமுளைகளையுடைய நிறை குடங்கள் அழகுற அமைக்கப்பட்டது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முழுத்தம் பார்த்து, மங்கல இசை முழங்க நடுதல் வழக்கம். இறை வழிபாடு நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல் அமைப்பர். இவை தமிழரிடம் பிற மொழியினரின் தொடர்பு காரணமாக இடம் பெற்ற செயல்கள் எனலாம். இறைவழிபாட்டிற்குரிய பொருள்கள் தக்கோலம் , ஏலக்காய், கிராம்பு(லவங்கம்), சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மணப் பொருள்களுடன், வெற்றிலையையும் வலப்பக்கம் வைத்து, சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி, ' தேவீர் நீர்மலையிடத்திருந்தாலும்,மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று தேவர்களை வேண்டினர். பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுள் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த இடங்களை செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகளில் அடக்கிக் கொண்டு, காந்தள் இதழ் போன்ற தம் மெல்லிய கரம் குவித்து எல்லீரும் இங்கணம் ஏழு முறை வணங்குமின் என உளுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டுவர். அக்கன்னியரும் அவ்வாறே வணங்கித் தெய்வங்கட்கு மடை கொடுப்பர். சங்க இலக்கியங்களில் பந்தல் காலில் உறையும் தெய்வங்களின் பெயர் சுட்டப்படவில்லை. இடைக்காலத்தில் நான்முகக்கடவுள் எனக் குறிப்பிடப்படுதலைக் காணலாம் தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள் பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு மலர் தூவி வழிபட்டனர். மங்கல ஒலி திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின. கம்பராமாயணம் இதனை "மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன; சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின; மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும் மாகடலும் போன்றதே" எனக் குறிப்பிடுகிறது. நகரை அழகு செய்தல் மன்னர் மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாக அரண்மனை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் கோலமிடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டனர். மணமேடை ஒப்பனை மணவறை எனப்படும் நிலத்தை திருமகளின் இடை போலப் புனைந்தனர். வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை (இருக்கை) இட்டனர். பொற்காசும், மணியும், முத்தும் குவிக்கப்பட்டன. மங்கலகரமாக விளக்குகள் எழுந்தன. புகைகள் எழுந்தன. பெண்கள் கவரி ஏந்தி நின்றனர். இச்செயல்கள் மன்னரின் மணமேடைகளில் இடம் பெற்றன. புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள் பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம் மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது. காப்பு நூல் கட்டுதல் மங்கல நீர் கொண்டு வருதல் மண மக்கள் ஒப்பனை மணமகன் அழைப்பு வேள்வித்தீ அம்மி மிதித்தல் பாத பூசை செய்தல் அருந்ததி காட்டல் அறம் செய்தல் மங்கல அணி சீதனம் கொடுத்தல் இது போன்று புதியனவாக தமிழர்களின் திருமணத்தில் புதிதாக இடம் பெற்றன. உலகில் வினோத திருமணங்கள் சீனா நாட்டில் உகூர் கலாசார மக்கள் மணமகள் மீது அம்பு எய்து அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆப்பிரிக்காவின் மரிட்டானியா பகுதியில் மணப்பெண் உணவு உண்டு உண்டாக வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஸ்காட்லந்து நாட்டில் திருமணத்திற்கு முதல் நாள் மணமகளை அழுகிய பழங்களைக்கொண்டு கறுப்பாக மாற்றுகிறார்கள். சீனா நாட்டின் துஜியா இனத்தில் மணமகள் ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் அழ வேண்டும். இது அங்கு கட்டாயம் ஆகும். கொரியா நாட்டில் முதலிரவிற்கு செல்லும் மணமகனை இரண்டு கால்களையும் கட்டி உள்ளங்காலில் அடிக்கிறார்கள். இந்திய நாட்டில் ஜாதகத்தில் தோசம் இருக்கும் பெண்கள் வாழைக்கன்றையோ, தென்னை மரத்தையோ முதலில் திருமணம் செய்த பின் கல்யாணத்திற்கு ஆயத்தப்படுத்துகிறார்கள். அயர்லாந்து நாட்டில் திருமணப்பெண் நடனமாடும்போது காலை தரையிலிருந்து தூக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஸ்பார்ட்டன் கலாசாரத்தில் மணப்பெண்னை மொட்டை அடித்து, ஆணின் உடையை உடுத்தச் செய்து அலங்கோலப்படுத்துகிறார்கள். ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள். சாதியும், திருமணமும் இந்தியாவில் சராசரி 89 சதவிகிதம் திருமணங்கள் சொந்த சாதிக்குள்ளேயே நடக்கின்றன. தமிழகத்தில் 2.59 சதவிகிதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. தமிழக மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவு 97.41 சதவிகிதம் அகமணமுறை திருமணங்கள் நடப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. உசாத்துணை முனைவர் சீ. வசந்தா, காப்பியங்களில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், ஸ்ரீ வித்யா பதிப்பகம். 2001 சிலப்பதிகாரம்,'புகார்க்காண்டம் மூலமும் உரையும்',புதுமலர் நிலையம். 1946 திருமணநாள் நிச்சயிப்பது எப்படி? இவற்றையும் பார்க்க திருமணச் சடங்கு காதல் திருமணம் மேற்கோள்கள் தமிழர் பழக்க வழக்கங்கள் குடும்பம் பாலினம் தமிழர் திருமணமுறை
5861
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
சிந்துவெளி மொழி
சிந்துவெளி மொழி என்பது, கிமு 1,500 ஆண்டுக் காலப்பகுதிக்கு முன்னர் இன்றைய பாகிசுத்தான், இந்தியா ஆகிய நாடுகளுள் அடங்கியுள்ள பகுதிகளில் செழித்திருந்த சிந்துவெளி நாகரிக மக்கள் பேசிய மொழியைக் குறிக்கும். இந்த நாகரிகத்தின் முக்கிய நகரங்களான அரப்பா, மொகெஞ்சதாரோ என்பவற்றின் பெயர்களைத் தழுவி இம் மொழியை அரப்பா மொழி அல்லது மொகெஞ்சதாரோ மொழி என்றும் குறிப்பிடுவது உண்டு. சிந்துவெளி நாகரிகம் அதன் காலத்தில் ஒரு பரந்த நிலப்பரப்பில் உன்னத நிலையில் இருந்த ஒரு நாகரிகமாக இருந்தும், நகர அமைப்பு முதலியவற்றை நோக்கும்போது அவர்கள் அறிவிற் சிறந்து விளங்கியிருப்பர் என்று சொல்லக்கூடியதாக இருந்தும், குறிப்பிடத்தக்க அளவில் எழுத்துவடிவில் எந்தத் தகவல்களையும் இந்த நாகரிகம் விட்டுச் செல்லவில்லை. எழுத்து என்று சொல்லக்கூடிய அளவுக்குக் கிடைத்தவை பெரும்பாலும், வணிக முத்திரைகள் என்று அடையாளம் காணப்பட்ட முத்திரைகளில் காணப்படுபவை மட்டுமே. இந்த முத்திரைகளில் காணப்படும் குறியீட்டுத் தொடர்கள் மிகவும் நீளம் குறைந்தவை. ஆகக் கூடிய நீளம் கொண்டது 14 குறியீடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இவை தவிரச் சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சிறிய அளவினதாக இருந்தும், பெரும் எண்ணிக்கையில் கிடைத்த இந்த முத்திரைகளை ஆதாரமாகக் கொண்டு சிந்து வெளி மக்களின் மொழிபற்றிய ஆய்வுகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு இந்த மொழியின் இயல்புகளை அறிந்து கொள்வதற்கு அவர்கள் முயன்று வருகிறார்கள். சிந்து வெளி முத்திரைகளை படிப்பதில் பூர்ணசந்திர ஜீவா அவர்களின் ஆய்வு முக்கிய மானது. அவர் சிந்துவெளி எழுத்து தமிழே எனவும் அது சித்திர எழுத்து மட்டுமே அல்ல என்றும் அது ஒலி நிலையான தனி எழுத்து மற்றும் கூட்டெழுத்துகள் சித்திர எழுத்துக்களை கொண்டது எனக் கூறி படித்து காட்டியுள்ளார்.அவரது ஆய்வுகள் நூலாகவும் Poornachandra jeeva எனும் முகநூல் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகம்
5862
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
உறவுமுறை
தனி மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் உறவுமுறை ஆகும். ஆரம்பத்தில் இது உயிரியல் மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது. மனிதர்கள் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும் ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன. உருவாகும் விதத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள் ஒருவருடைய தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, ஓட்டன், ஓட்டி பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சகோதரர் ஆகியோர் உயிரியல் முறையில் தொடர்பானவர்கள். இவர்களுடைய உறவுகள் இரத்த உறவு எனப்படுகின்றது. ஏற்கனவே இரத்த உறவினரல்லாத ஒருவரை மணம் செய்யும் போது அவருடைய கணவன் அல்லது மனைவியுடன் ஏற்படும் புதிய உறவு முறை மண உறவு ஆகும். அது மட்டுமன்றி மனைவி அல்லது கணவனுடைய உறவினர்களும் இவருக்கு உறவினராகின்றார்கள். இதுவும் மண உறவின் வகைப்பட்டதே. தவிர ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய உறவுகள் புனைவியல் உறவு எனப்படும். நாம் முதல் தலைமுறை தந்தை/தாய்-இரண்டாம் தலைமுறை பாட்டன்/பாட்டி- முன்றாம் தலைமுறை பூட்டன்/பூட்டி- நான்காம் தலைமுறை ஒட்டன்/ஒட்டி- ஐந்தாம் தலைமுறை சேயோன்/சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்/பரை-ஏழாம் தலைமுறை 'தடித்த எழுத்துக்கள்'பரன்+பரை=பரம்பரை. நெருக்கத்தின் அடிப்படையில் உறவின் வகைகள் இன்னொருவர் வழியாக அல்லாது ஒருவருடன் நேரடியாக உறவு உள்ளவர்கள் முதல் நிலை உறவினர்கள் ஆவர். பெற்றோர், உடன் பிறந்தோர், பிள்ளைகள் என்போர் முதல் நிலை உறவினர் தகுதியைப் பெறுகின்றனர். இந்த முதல் நிலை உறவினரின் முதல் நிலை உறவினர் ஒருவருக்கு இரண்டாம் நிலை உறவினராவர். எடுத்துக்காட்டாகப் பேசுனரின் தந்தையின் முதல் நிலை உறவினரான அவருடைய தந்தை பேசுனருக்கு இரண்டாம் நிலை உறவினராகும். இம் முறையில் பெற்றோரின் பெற்றோர், பிள்ளைகளின் பிள்ளைகள், உடன் பிறந்தோரின் பிள்ளைகள் போன்றோர் பேசுனருக்கு இரண்டாம் நிலை உறவினர் ஆகின்றார்கள். இவ்வாறே பேசுனரின் இரண்டாம் நிலை உறவினரின் முதல் நிலை உறவினர் பேசுனருக்கு மூன்றாம் நிலை உறவினர் ஆவர். இவ்வாறே உறவுமுறையில் நான்காம், ஐந்தாம் நிலைகளும் ஏற்படுகின்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொதுவாகத் தூரத்து உறவினர்கள் என்று குறிப்பிடப் படுவார்கள். மரபு முறைமையும், உறவுமுறையும் மேலே கண்டவாறு பல் வேறு விதமாகவும், பல மட்டங்களிலும் உறவுகள் அமைந்தாலும், இத்தகைய உறவுகளின் முக்கியத்துவம் வேறு பல அடிப்படைகளையும் சார்ந்துள்ளது. வெவ்வேறு சமுதாயங்களில் நிலவும் பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் குறிப்பிட்ட சில உறவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மரபு முறைமைகள் வழக்கத்தில் உள்ளன. இம் மரபு முறைகள் பொதுவாக நான்கு வகைகளாக வகுக்கப் படுகின்றன. இருவழி மரபு முறைமை (Bilateral Descent System) ஒருவழி மரபு முறைமை (Unilineal Descent System) ஈரியல் மரபு முறைமை (Ambilineal Descent System) இணை மரபு முறைமை (Parallel Descent System) இருவழி மரபைப் பின்பற்றும் சமுதாயங்களில், தாய்வழியையும், தந்தைவழியையும் சேர்ந்த உறவினர் அனைவருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒருவழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழியில் அல்லது தந்தைவழியில் மட்டுமே தங்களை இணைத்து இனங்காண்கிறார்கள். தாய்வழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழி உறவினருக்கும், தந்தைவழிச் சமுதாயங்கள் தந்தைவழி உறவினருக்கும் கூடிய சிறப்பை அளிக்கின்றன. ஈரியல் மரபுச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் இரண்டில் ஒரு வழியில் தங்களை இனங்கண்டுகொள்வர். இணை மரபு முறையைக் கைக்கொள்ளும் சமுதாயத்தவர்களில் ஆண்கள் தங்கள் குடிவழித் தொடர்புகளைத் தந்தைவழியிலும், பெண்கள் தாய்வழியிலும் இனங்காண்பர். இவற்றையும் பார்க்கவும் உறவுமுறைச் சொற்கள் சேய்வழிப் பெயரீடு உறவுமுறை
5863
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
அலைக்கம்பம்
அலைவழிப்படுத்தி அல்லது அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது. மின் கம்பத்தின் துணையுடன், அல்லது அலைவழிபடுத்தி ஊடாக பயணிக்கும் மின்காந்த அலைகள் வெறுவெளிக்கு வீசப்படுவதற்கு சில காரணிகள் ஏதுவாக வேண்டும். அதாவது எல்லாவித மின்காந்த அலைகளும் மின் கம்பத்தின் வழிப்படிதலில் இருந்தோ அல்லது அலைவழிப்படுத்தியிலிருந்தோ வெறுவெளிக்கு தாவுவதில்லை. மின்காந்த அலைகள் மின் கம்பத்தில் இருந்து அலைக்கம்பம் ஊடாக ஏன், எப்படி, எவ்வாறு வெறுவெளிக்கு வீசப்படுகின்றன, மற்றும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைகளை அலைக்கம்பம் எவ்வாறு உள்வாங்குகின்றது என்பதை மக்ஸ்வெல் சமன்பாடுகளை அடிப்படையாக வைத்து இயற்பியல் கோட்பாடுகள் விளக்குகின்றன. அடிப்படையில் அலைக்கம்பம் சாதாரண மின் கடத்தியே ஆகும். மின் சுற்று பகுப்பாய்வில் அலைக்கம்பம் ஒரு இருமுனை கருவியாகும். மேலும் இதற்கு ஏற்றெதிர் தன்மையும் உண்டு. அலைக்கம்ப கூறளவுகள் கதிர்வீச்சு செலுத்தி அல்லது அலை பெறுவி தேவைகளுக்கு ஏற்ப அலைக்கம்ப வடிவமைப்பு கூறுகள் வேறுபடும். பல கூறளவுகள் உள்ளன, எட்டு கூறளவுகள் கீழே தரப்படுள்ளன. அவற்றுள் கதிர்வீச்சு உருபடிமம், மின் எதிர்ப்பு ஆகியவை முக்கியமானதாகும். வடிவமைப்பு (உருவ அளவு, கடத்தி தன்மை) அலைநீளம் பொறுத்து அலைக்கம்ப நீளம், உருவம், கடத்தி தன்மைகள் வேறுபடும். கதிர்வீச்சு உருபடிமம் அலைக்கம்பத்தின் மின்காந்த அலை வீச்சு எப்படி பரவும் என்பதை எடுத்துரைக்கும். மின் கதிர்வீச்சே கணிக்கப்படுகின்றது. அதை வைத்து காந்த வீச்சையும், ஆற்றலையும் பின்வரும் சமன்பாடுகள் வைத்து கணித்து கொள்ளலாம். தேவையேற்படின் கட்டம் உருபடிமம், முனைவாக்க உருபடிமமும் அலைக்கம்ப பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுவதுண்டு. மின் எதிர்ப்பு வீச்சு திறன் திசைவு பெருக்கம் கற்றையகலம் கதிரகலம் முனைவாக்கம் அடிப்படை அலைக்கம்ப வகைகள் எளிய இருமுனை அலைக்கம்பம் அரை அலைநீள இருமுனை அலைக்கம்பம் கால் இருமுனை அலைக்கம்பம் சுருள் அலைக்கம்பம் நுட்பியல் சொற்கள் அலைக்கம்பம் - Antenna மின்கம்பம் – Wire, Transmission Line மின்தடம் – Transmission Line ராடர் – RADAR வழிகாட்டிகள் – Navigation Systems வானலை வானியல் – Radio Astronomy அலைவழிபடுத்தி – Waveguide மக்ஸ்வெல் சமன்பாடுகள் – Maxwell Equations மின்கடத்தி – Conductor ஏற்றெதிர் – Reciprocal கதிர்வீச்சு உரிபடிமம் – Radiation Pattern மின் எதிர்ப்பு – Impedance வீச்சு திறன் – Radiation Resistance கற்றையகலம் – Bandwidth கதிரகலம் – Beamwidth முனைவாக்கம் – Polorization/polarized துணை நூல்கள் Edward A. Wolff. (1966). Antenna Analysis. New York: John Wiley & Sons, Inc. Lamont V. Blake. (1966). Antennas. New York: John Wiley and Sons. H. Page. (1966). Principles of Aerial Design. New Jersey: Iliffe books ltd. Matthew N. O. Sadiku. (2001). Elements of Electromagnetics. New York: Oxford Press. வெளி இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் தமிழ்ச்சொற் தேடல்கள் மேற்கோள்கள் மின் உறுப்புகள்
5867
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
மின்மாற்றி
அறிமுகம்: மின்மாற்றி என்பது ஒரு மின்சுற்றிலிருந்து மற்றொரு சுற்றுக்கு அல்லது பல சுற்றுகளுக்கு மின் ஆற்றலை மாற்றும் செயலற்ற கூறு ஆகும். மின்மாற்றியின் எந்தச் சுருளிலும் மாறுபடும் மின்னோட்டம், மின்மாற்றியின் மையத்தில் மாறுபட்ட காந்தப் பாய்ச்சலை உருவாக்குகிறது, இது அதே மையத்தைச் சுற்றிலும் வேறு எந்த சுருள்களிலும் மாறுபடும் எலக்ட்ரோமோட்டிவ் ஃபோர்ஸை (EMF) தூண்டுகிறது. இரண்டு சுற்றுகளுக்கு இடையே உலோக (கடத்தும்) இணைப்பு இல்லாமல் தனித்தனி சுருள்களுக்கு இடையே மின் ஆற்றலை மாற்ற முடியும். 1831 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஃபாரடேயின் தூண்டல் விதி, சுருளால் சுற்றியிருக்கும் மாறிவரும் காந்தப் பாய்வு காரணமாக எந்தச் சுருளிலும் தூண்டப்பட்ட மின்னழுத்த விளைவை விவரிக்கிறது. மின்மாற்றிகள் AC மின்னழுத்த நிலைகளை மாற்றப் பயன்படுத்தப்படுகின்றன, அத்தகைய மின்மாற்றிகள் முறையே மின்னழுத்த அளவை அதிகரிக்க அல்லது குறைக்க ஸ்டெப்-அப் அல்லது ஸ்டெப்-டவுன் வகை என அழைக்கப்படுகின்றன. மின்மாற்றிகள் சுற்றுகளுக்கு இடையே கால்வனிக் தனிமைப்படுத்தலை வழங்குவதற்கும், சமிக்ஞை-செயலாக்க சுற்றுகளின் இரண்டு நிலைகளுக்கும் பயன்படுத்தப்படலாம். 1885 இல் முதல் நிலையான-சாத்தியமான மின்மாற்றி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, மாற்று மின்னோட்ட மின்சாரத்தின் பரிமாற்றம், விநியோகம் மற்றும் பயன்பாட்டிற்கு மின்மாற்றிகள் இன்றியமையாததாகிவிட்டன. மின்னணு மற்றும் மின்சார ஆற்றல் பயன்பாடுகளில் மின்மாற்றி வடிவமைப்புகளின் பரவலானது காணப்படுகிறது. மின்மாற்றிகளின் அளவு RF மின்மாற்றிகளில் இருந்து ஒரு கன சென்டிமீட்டருக்கும் குறைவான அளவிலும், நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள அலகுகள் வரை மின் கட்டத்தை ஒன்றோடொன்று இணைக்கப் பயன்படுகிறது. வரலாறு மின்னோட்டத்தின் காந்த தூண்டலைக் கண்டறிந்த போது, மாறுதிசை மின்னோட்ட இயற்றி அமைப்புகள் அதனுடைய எளிமையான வடிவத்தில் அறியப்பட்டன. ஆரம்பகால இயந்திரங்கள் மைக்கெல் ஃபாரடே மற்றும் ஹிப்போலைட் பிக்ஸி போன்ற அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. ஃபாரடே ஒரு "சுழலும் ரெக்டிஃபையரை" உருவாக்கினார், அதன் செயல்பாடு ஆன்டிபோலார் வகையைச் சேர்ந்தது - அதாவது இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு கடத்தியும் எதிர் திசைகளில் காந்தப்புலங்கள் வழியாக தொடர்ந்து நகர்த்தப்பட்டது. 1886 ஆம் ஆண்டில், அதிக ஸ்திரத்தன்மையுடன் கூடிய "மின்மாற்றி அமைப்பு" பொதுவில் நிரூபிக்கப்பட்டது. பெரிய, இரட்டை-எலக்ட்ரோடு ரெக்டிஃபையர்களை பிரிட்டிஷ் எலக்ட்ரீஷியன், ஜே.இ.எச். 1882 இல் கோர்டனால் உருவாக்கப்பட்டது. லார்டு கெல்வின் மற்றும் செபாஸ்டியன் ஃபெர்ராண்டி ஆகியோரும் ஆரம்பகால மாறுதிசை மின்னியற்றிகளை உருவாக்கினர், இவர்கள் 100 மற்றும் 300 Hz அதிர்வெண் கொண்டவற்றை உருவாக்கினார்கள். 1891 ஆம் ஆண்டில், நிகோலா டெஸ்லா என்பவர் நடைமுறை "உயர் அதிர்வென்" மின்மாற்றிக்கு காப்புரிமை பெற்றார் (அது 15 kHz வரையிலான அதிர்வெண்ணைக் கொண்டிருந்தது). 1891 ஆம் ஆண்டுக்கு பின்னர், பல மின்முனை மின்மாற்றிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பலவகையான கட்டங்களைக் கொண்ட மின்னோட்டங்களை வழங்கத் தொடங்கின. பின்னாட்களில், பதினாறு முதல் நூறு வரையிலான வேறுபடக்கூடிய ஹெர்ட்ஸ்களில் மாறுதிசை மின்னோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை மின்னிழை, மின் ஒளிர்வு ஒளியூட்டல் மற்றும் மின்சாரா மோட்டார்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டன. வேலை செய்யும் தத்துவம் மின்மாற்றிகள், மின்மாற்றிகள் போன்ற அதே கொள்கையில் மின்சாரத்தை உருவாக்குகின்றன, அதாவது ஒரு கடத்தியைச் சுற்றியுள்ள காந்தப்புலம் மாறும்போது, ​​அந்தக் கடத்தியில் மின்னோட்டம் தூண்டப்படுகிறது. பொதுவாக, ரோட்டார் எனப்படும் சுழலும் காந்தம், ஸ்டேட்டர் எனப்படும் இரும்பு மையத்தில் சுற்றப்பட்ட நிலையான கடத்திகள் மூலம் சுழலும். இயந்திர உள்ளீடு காரணமாக ரோட்டார் திரும்பும்போது, ​​காந்தப்புலம் கடத்திகளை வெட்டுகிறது, அதன் மூலம் ஒரு எலக்ட்ரோமோட்டிவ் ஃபோர்ஸ் (EMF) தூண்டுகிறது. சுழலும் காந்தப்புலம் ஒரு மாறுதிசை மின்னழுத்தத்தை ஸ்டேட்டார் சுற்றுக்களில் தூண்டுகிறது. பொதுவாக மூன்று வகையான ஸ்டேட்டார் சுற்றுகள் காணப்படுகின்றன, இதனால் காந்தப்புலமானது, மூன்று கட்ட (three phase) மின்னோட்டத்தை உருவாக்குகிறது, இவை ஒன்றிலிருந்து ஒன்று மூன்றில் ஒரு பங்கு கால அளவு தள்ளியிருக்கின்றன. சுழலி காந்தப்புலம் தூண்டல் ("பிரஷ்லெஸ்" மின்மாற்றிகளில்), நிரந்தர காந்தங்கள் (மினியேச்சர் மெஷின்களில்) அல்லது ஸ்லிப் மோதிரங்கள் மற்றும் தூரிகைகள் மூலம் வழங்கப்படும் நேரடி மின்னோட்டத்தால் சுழலி சுற்று மூலம் உருவாக்கப்படலாம்.சுழலி காந்தப்புலம் சுழலியில் நகரும் துருவங்களைக் கொண்ட நிலையான புல சுற்றுகளால் உருவாக்கப்படலாம். ஆட்டோ டிரான்ஸ்பார்மர்கள் அதிகளவில் ரோட்டார் சர்க்யூட்களைப் பயன்படுத்துகின்றன, இது மின்மாற்றியில் உருவாகும் மின்னழுத்தத்தை ரோட்டார் ஃபீல்ட் சர்க்யூட்டில் மின்னோட்டத்தை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.நிரந்தர காந்த இயந்திரங்களில், காந்தப் பாய்வு காரணமாக சுழலியில் ஏற்படும் இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன, ஆனால் இவை காந்தப் பொருளின் விலை காரணமாக சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.நிலையான காந்தப்புலம் நிலையானதாக இருப்பதால், மின்மாற்றியின் வேகத்துடன் நேரடி தொடர்பில் முனைய மின்னழுத்தம் மாறுபடும். தூரிகை இல்லாத மின்மாற்றிகள் பொதுவாக பெரிய இயந்திரங்கள், பொதுவாக தானியங்கி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுவதை விட பெரியது. ஒத்திசைவு வேகங்கள் ஒரு மின்மாற்றியின் வெளியீட்டு அதிர்வெண் ஆனது, அதிலுள்ள துருவங்களின் எண்ணிக்கை மற்றும் சுழற்சி வேகம் ஆகியவற்றைச் சேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன் தொடர்புடைய சுழற்சிவேகமானது, அந்த அதிர்வெண்ணுக்கான ஒத்திசைவு வேகம் என்றழைக்கப்படுகிறது. இந்த அட்டவணை சில எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது: இன்னும் பொதுவாக கூறுவதானால், ஒரு முழுச்சுற்று மாறுதிசை மின்னோட்டமானது, ஒரு ஜோடி புல முனைகள் நிலையான கம்பிச்சுருளின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை கடந்து செல்லும்போது உருவாகிறது. வேகம் மற்றும் அதிர்வெண்ணுக்கு இடையேயான தொடர்பு ஆகும், இதில் அதிர்வெண்ணானது ஹெர்ட்ஸ் அளவில் (ஒரு விநாடிக்கான சுழற்சிகள்) அளக்கப்படுகிறது. என்பது முனைகளின் எண்ணிக்கையாகும் (2,4,6...) மற்றும் என்பது, நிமிடத்துக்கான சுழற்சிகளில் (RPM) சுழற்சி வேகமாகும். மாறுதிசை மின்னோட்ட அமைப்புகளைப் பற்றிய மிகவும் பழமையான விளக்கங்கள் சிலவற்றில், அதிர்வெண் என்பது, ஒரு நிமிடத்தில் நடைபெறும் அசைவுகளின் அடிப்படையில் தரப்பட்டது, அதாவது ஒரு அசைவு என்பது, ஒரு அரைச் சுற்றாகும்; அதாவது நிமிடத்துக்கு 12,000 அசைவுகள் என்றால் 100 ஹெர்ட்ஸ் என்று பொருள். தானியங்கிகளின் மின்மாற்றிகள் மின்மாற்றிகள் நவீன கால தானியங்கிகளில் மின்கலத்தை சக்தி ஏற்றவும் (சார்ஜ்), எஞ்சின் இயங்கிக் கொண்டிருக்கும்போது காரின் மின்சார அமைப்புகளுக்கு திறனளிக்கவும் பயன்படுகிறது. மின் திசைமாற்றிகள் எதையும் பயன்படுத்தாததால் நேர்திசை மின்னியற்றிகளை விடவும் மின்மாற்றிகள் சிறப்பான சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கின்றன, இதனால் இவை எளிமையானவையாகவும், எடையற்றவையாகவும், மலிவானவையாகவும் மற்றும் நேர்திசை மின்னியற்றியை விட அதிக கடினமானவையாகவும் இருக்கின்றன. மேலும் இவற்றில் உள்ள நழுவு வளையங்கள் காரணமாக இவை கூடுதலான ப்ரஷ் ஆயுளைப் பெற்றிருக்கின்றன. வலுவான மின்மாற்றிகள், தானியங்கிகளில் உள்ள இவற்றைக் கட்டமைக்கவும் சிறிய கப்பியைப் பயன்படுத்தி எஞ்சின் ஓய்வு நிலைக்கு வரும்போதும் கூட அதை விட வேகமாக மின்மாற்றி சுற்றுவதற்கும் ஏற்றவாறு அமைகிறது. 1960ஆம் ஆண்டுக்கு பின்பு கிடைத்து வந்த மலிவான, திண்ம நிலை இருமுனையம் (டையோடு)களின் காரணமாக, கார் உற்பத்தியாளர்கள், நேர்திசை மின்னியற்றிகளுக்கு பதிலாக மின்மாற்றிகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தானியங்கிகளில் உள்ள மின்மாற்றிகள், மின் திருத்திகளின் தொகுப்பைப் (டையோடு பிரிட்ஜ்) பயன்படுத்தி, மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றுகின்றன. குறைவான சிதைவுகளுடன் தானியங்கி மின்மாற்றிகள் நேர்திசை மின்னோட்டத்தை வழங்க அவற்றில், மூன்று கட்ட கம்பிச்சுருள்கள் இருக்கின்றன. பொதுவான பயணியர் வண்டி அல்லது மிதமான எடையிழுக்கும் ட்ரக் போன்றவை, லண்டில் அல்லது குளம்பு வடிவ புல கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இதில் வட மற்றும் தென் துருவ முனைகள் ஒரே சுற்றால் திறனளிக்கப்படும், இவற்றின் காந்த முனைகள் இரண்டு கைகளின் விரல்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். பெரிய வண்டிகளில், சிறப்பு-துருவ மின்மாற்றிகள் காணப்படும். தானியங்கிகளின் மின்மாற்றிகள் பொதுவாக பெல்ட்டால் இயக்கப்பட்டு எஞ்சினின் வேகத்தை விடவும் 2-3 மடங்கு அதிக வேகத்தில் சுழலுமாறு அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி மின்மாற்றிகள் எந்தவொரு நிமிடத்திற்கான சுழற்சி கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதல்ல, ஏனெனில் அவற்றின் மாறுதிசை மின்னோட்டமானது திருத்தப்பட்டு நேர்திசை மின்னோட்டமாக மாற்றப்படுகிறது, மேலும் எந்தவொரு நிலையான அதிர்வெண்ணின் அவசியமும் இல்லை. நவீனகால தானியங்கி மின்மாற்றிகளில் ஒரு மின்னழுத்த சரிப்படுத்தியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னழுத்த சரிப்படுத்தியானது, சிறிய புல மின்னோட்டத்தை மாற்றியமைப்பதன் மூலமாக ஸ்டேட்டார் வெளியீட்டில் நிலையான மின்னழுத்தம் உருவாக உதவுகிறது. இந்த புல மின்னோட்டமானது, மின்மாற்றியின் வெளியீட்டு மின்னோட்டத்தை விடவும் மிகவும் சிறிய அளவினுடையது; எடுத்துக்காட்டாக, ஒரு 70-ஆம்ப் மின்மாற்றிக்கு, வெறும் 2 ஆம்ப்கள் அளவிற்கு மட்டும் புல மின்னோட்டம் தேவைப்படும். புல மின்னோட்டமானது, ரோட்டார் சுற்றுகளுக்கு, நழுவு வளையங்கள் மற்றும் ப்ரஷ்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. குறைந்த மின்னோட்டமும், நழுவு வளையங்களும், ஒரு நேர்திசை மின்னியற்றியை விட நீண்டகால நம்பகத்தன்மையையும் ஆயுளையும் வழங்குகின்றன, நேர்திசை மின்னியற்றியில் உள்ள மின் திசைமாற்றியும் அதன் ப்ரஷ்கள் வழியே செல்லும் உயர் மின்னோட்டமும் இவற்றைக் குறைக்கக்கூடியவை. ஆனால் ஒரு நேர்திசை மின்னியற்றியில் உள்ள ப்ரஷ்களை அணுகுவதும், பரமாரிப்பதும் இடமாற்றுவதும் எளிதானது, ஆனால் மின்மாற்றியின் ப்ரஷ்களை அவ்விதம் அணுக முடியாது. ப்ரஷ்களை அணுகவும் அவற்றை மாற்றவும், மின்மாற்றியைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும். ஆனாலும், நழுவு வளையங்களின் காரணமாக இது மின்மாற்றியின் ஆயுள் முழுவதுமே தேய்மானம் அடைவதில்லை என்று கூறப்படுகிறது. தானியங்கி மின்மாற்றிகளின் பயனுறுதிறன், அவற்றின் குளிர்வித்தல் இழப்பு, பியரிங் இழப்பு, இரும்பு இழப்பு, தாமிர இழப்பு மற்றும் பகுதி சுமையின்போது டையோடு பிரிட்ஜ்களில் உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது, மின்மாற்றியின் அளவைப் பொறுத்து பயனுறுதிறன் 50-62% க்கு இடையே காணப்படுகிறது, மேலும் இது மின்மாற்றியின் வேகத்தைப் பொறுத்து மாறக்கூடும். ஒப்பீட்டளவில், மிகச் சிறிய உயர் செயல்திறன் நிலைத்த காந்த மின்மாற்றிகள் 60% வரையிலான பயனுறுதிறனை அடைகின்றன, அதாவது மிதிவண்டி விளக்கு அமைப்புகள் போன்றவை. பெரிய அளவிலான நிலைத்த காந்த மின்மாற்றிகள் இன்னும் மேம்பட்ட பயனுறுதிறனை அடைய முடியும். ஆனால், மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள மாறுதிசை மின்னியற்றிகள் மிகவும் கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் இவை அளவு அல்லது எடையைச் சார்ந்து எந்தவித கட்டுப்பாடுகளையும் பெற்றிருப்பதில்லை. அதேநேரத்தில், அவை மிகவும் உயர்ந்த பயனுறுதிறன்களைக் கொண்டிருக்கின்றன, அவற்றின் மாறுதிசை வெளியீட்டு திறனின் அளவு 98% என்ற அளவில் இருக்கிறது. புல சுற்றுகள் தொடக்கத்தில், இக்னிஷன் ஸ்விட்ச் மூலமாக இயக்கப்படுகின்றன, இவை எச்சரிக்கை விளக்கை ஒளிரவைக்கின்றன. இதனால்தான் இக்னிஷன் தரப்பட்டு எஞ்சின் இயங்காத நிலையில் அந்த விளக்கு ஒளிர்கிறது. எஞ்சின் இயங்க ஆரம்பித்து, மின்மாற்றி மின்னாற்றலை உருவாக்க தொடங்கிய பின்னர், டையோடு மின்மாற்றியிலிருந்து முதன்மை வெளியீட்டிற்கு புல மின்னோட்டத்தை வழங்குகிறது. இதனால் எச்சரிக்கை விளக்கில் உள்ள மின்னழுத்தம் சமப்படுத்தப்பட்டு அது அணைந்து விடுகிறது. புல மின்னோட்டத்தை வழங்கும் கம்பி, பொதுவாக "தூண்டி" கம்பி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அமைப்பின் முக்கியமான பின்னடைவு என்னவென்றால், எச்சரிக்கை விளக்கு தோல்வியடைந்தால் அல்லது தூண்டுதல் கம்பி துண்டிக்கப்பட்டால், தூண்டுதல் மின்னோட்டம் எதுவும் மின்மாற்றியின் புல சுற்றுக்களை அடைவதில்லை எனவே, மின்மாற்றி ரோட்டாரில் உள்ள எச்ச காந்தத்தன்மையின் காரணமாக எந்த ஆற்றலையும் உருவாக்காமல் போகிறது. ஆனாலும், சில மின்மாற்றிகள், எஞ்சின் குறிப்பிட்ட வேகத்தில் சுற்ற ஆரம்பித்ததும், தானாகவே தூண்டுதலைப் பெறுகின்றன. எஞ்சின் நிறுத்தப்பட்ட நிலையில் எச்சரிக்கை விளக்கு எரிகிறதா என்பதை உறுதிசெய்வதன் மூலம் ஓட்டுநர் தவறான தூண்டுதல் மின்சுற்று எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கலாம். பேருந்துகள், கனரக கருவிகள் அல்லது அவசரகால ஊர்திகள் போன்ற பெரிய அளவிலான தானியங்கிகளின் மின்மாற்றிகள் 300 ஆம்பியர்கள் மின்னோட்டம் வரை உருவாக்கக்கூடும். குறைவான ஒளியூட்டுதல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் மட்டுமே கொண்டிருந்த பழங்கால தானியங்கிகளில், 30 ஆம்பியர் மின்மாற்றிகளே இருந்தன. பொதுவான பயணியர் கார் மற்றும் மித எடை ட்ரக் போன்றவற்றின் மின்மாற்றிகள் பொதுவாக 50-70 ஆம்பியர்கள் வரையிலான அளவீடுகளைக் கொண்டுள்ளன, ஆனாலும் அதிக மதிப்பீடுகள் பொதுவாக தற்போது வரத்தொடங்கியுள்ளன. மிகப்பெரிய தானியங்கி மின்மாற்றிகள் நீரால் அல்லது எண்ணெயால் குளிர்விக்கப்படுபவையாக இருக்கலாம். பல மின்மாற்றிகளின் மின்னழுத்த சரிப்படுத்திகள், தற்போது வண்டியின் கணினி அமைப்புடன் இணைக்கப்படுகின்றன. சமீப காலத்தில், காற்றின் வெப்பம் (பல நிலைகளில் மொத்த காற்று போக்கு உணர்வியின் மூலம் அறியப்படுகிறது) மற்றும் எஞ்சின் மேலுள்ள சுமை ஆகியவையும் மின்மாற்றி அனுப்பும் மின்கலத்தைச் சார்ஜ் செய்யும் மின்னழுத்தத்தை மாற்றுகின்றன. கப்பல்களில் உள்ள மின்மாற்றிகள் கப்பல்களில் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளும், தானியங்கிகளின் மின்மாற்றிகளைப் போன்றவையே, ஆனால் அவற்றில் உப்புநீர் சூழல்களுக்கு ஏற்றவாறு முறையான பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கப்பல் மின்மாற்றிகள் வெடிக்காதவாறு வடிவமைக்கப்படுகின்றன, இதனால் அவற்றின் பிரஷ்களில் ஏற்படும் தீப்பொறிகளால் எஞ்சின் அறை சூழலில் இருக்கக்கூடிய வெடிக்கக்கூடிய வாயுக்கள் தூண்டப்படாது. நிறுவப்பட்ட அமைப்பைப் பொறுத்து இவை 12 முதல் 24 வோல்ட் அளவு கொண்டவையாக இருக்கலாம். பெரிய கப்பல்களில் இரண்டு அல்லது அதற்கு மேம்பட்ட மின்மாற்றிகள் இருக்கக்கூடும், இவை நவீனகால கப்பல்களின் அதிக மின் திறன் தேவையை சமாளிக்க உதவுகின்றன. ஒற்றை மின்மாற்றி சுற்றுகளில், ஆற்றலானது, எஞ்சினை தொடங்கும் மின்கலம் மற்றும் வீட்டுப் பயன்பாடு மின்கலம் (அல்லது மின்கலங்கள்) ஆகியவற்றுக்கு இடையே பிரித்து தரப்படுகிறது. இதற்கு பிரிப்பு டையோடு அல்லது இயந்திர ஸ்விட்ச் போன்றவைப் பயன்படுத்தப்படுகிறது. இயங்கும் போது மட்டுமே மின்மாற்றிகள் ஆற்றலைத் தருவதால், எஞ்சினின் கட்டுப்பாட்டு பேனல்களுக்கு, ஒரு துணை மின்முனையின் வழியாக மின்மாற்றியிலிருந்து ஆற்றல் தரப்படுகிறது. பிற சாதாரண இணைப்புகளுக்கு, சார்ஜ் கட்டுப்பாட்டு சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. தூரிகை இல்லாத மின்மாற்றிகள் கட்டமைப்பு தூரிகை இல்லாத மின்மாற்றியில், இரண்டு மின்மாற்றிகளும் ஒரே மைய அச்சுடன் இரு முனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய தூரிகை இல்லாத மின்மாற்றியில் இவை ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் பெரிய ஒன்றில் பிரித்தலை எளிதாகக் காணலாம். இரண்டில் பெரியது மின்மாற்றியாகவும், சிறியது மின்தூண்டியாகவும் செயல்படுகிறது. ஒரு தூண்டல் ஒரு நிலையான புல சுற்று மற்றும் சுழலும் ஆர்மேச்சர் (பவர் சர்க்யூட்கள்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.ஒரு முதன்மை மின்மாற்றியில், சுழலும் காந்தப்புலம் மற்றும் முன்னோக்கி எதிர்ப்பில் ஒரு நிலையான ஆர்மேச்சர் உள்ளது. ரோட்டரி ரெக்டிஃபையர் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது, பாலம் திருத்தி, ரோட்டருடன் இணைக்கப்பட்ட ஒரு தட்டில் ஏற்றப்பட்டது. தூரிகைகள் அல்லது ஸ்லிப் மோதிரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை, இதனால் தேய்மானம் குறைகிறது. முதன்மை மின்மாற்றி ஒரு முதன்மை மின்மாற்றி ஒரு சுழலும் காந்தப்புலம் மற்றும் ஒரு நிலையான ஆர்மேச்சர் (மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சுற்றுகள்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கட்டுப்பாட்டு அமைப்பு நிலையான மின்தூண்டி வழியாக செல்லும் மின்னோட்டத்தை மாற்றுவதன் மூலம், தூண்டியிலிருந்து 3 கட்ட வெளியீடு மாற்றப்படுகிறது. இந்த வெளியீடு ஒரு சுழலும் ரெக்டிஃபையர் அமைப்பு மூலம் சரி செய்யப்படுகிறது மற்றும் இதன் விளைவாக வரும் நேரடி மின்னோட்டம் முதன்மை மின்மாற்றியின் சுழலும் காந்தப்புலத்திற்கு செலுத்தப்படுகிறது மற்றும் அதன் விளைவாக மின்மாற்றி வெளியீடு பெறப்படுகிறது.இவை அனைத்தின் விளைவாக, ஒரு சிறிய முன்னோக்கி தூண்டுதல் மின்னோட்டம் முதன்மை மின்மாற்றியின் வெளியீட்டை மறைமுகமாக கட்டுப்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். தானியங்கி மின்னழுத்த சீராக்கி (AVR) ஒரு தானியங்கி மின்னழுத்த கட்டுப்பாட்டு சாதனம் என்பது மின்னழுத்த கட்டுப்பாட்டு சாதனமாகும், இது வெளியீட்டு மின்னழுத்தத்தை நிலையானதாக வைத்திருக்க புல மின்னோட்டத்தை கட்டுப்படுத்துகிறது. கலக்கும் இயந்திரங்கள் கூட்டு ஆட்டோமேட்டிக்ஸில், தனித்தனி மின்மாற்றி மற்றும் தொடக்க மோட்டார் இரண்டு செயல்பாடுகளையும் செய்யக்கூடிய ஒருங்கிணைந்த மோட்டார்/ஸ்டார்ட்டர் அமைப்புகளால் மாற்றப்படுகின்றன. வாகனம் சீரான வேகத்தில் இயங்கும் போது, ​​உள் எஞ்சினைத் தொடங்குதல், முடுக்கத்திற்கான கூடுதல் இயந்திர சக்தியை வழங்குதல் மற்றும் பெரிய அக்குமுலேட்டர் பேட்டரியை சார்ஜ் செய்தல் போன்ற பணிகளை இது செய்கிறது.இந்த சுழலும் இயந்திரங்கள் மேலே விவரிக்கப்பட்ட தானியங்கி மின்மாற்றிகளைக் காட்டிலும் அவற்றின் கட்டுப்பாட்டின் காரணமாக கணிசமாக அதிக திறன் கொண்டவை. ரேடியோ அதிர்வெண் மின்மாற்றிகள் உயர் அதிர்வெண் மாறி மின்மறுப்பு மின்மாற்றிகள் குறைந்த அதிர்வெண் ரேடியோ அலைவரிசைகளின் ரேடியோ பரிமாற்றத்திற்காக வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மோர்ஸ் குறியீடு மற்றும் குரல் மற்றும் இசையை அனுப்ப சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன. நுட்பியல் சொற்கள் மின்னழுத்தம் - Voltage குறைந்த மின்னழுத்தம் - low Voltage உயர் மின்னழுத்தம் - High Voltage மின்காந்த சக்தி - Electromagnetic Energy காந்த புலம் - Magnetic Field மின்கருவி - Electronic Device, Electric Device மின்செலுத்து கம்பிகளில், மின்காவு கம்பிகள், மின்பரப்புத் தடம் - Transmission Line திருகு சுருள் - Spiral Coil உள்ளகம் - core குறிப்புகள் வெளிப்புற இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் தமிழ்ச்சொற் தேடல்கள் How Car Alternators Work - Video Lesson "Alternators ". Integrated Publishing (TPub.com). "Wooden Low-RPM Alternator ". ForceField, Fort Collins, Colorado, USA. "Understanding 3 phase alternators ". WindStuffNow. "Alternator, Arc and Spark. The first Wireless Transmitters ". The G0UTY Homepage. மின் உறுப்புகள் கூகுள் தமிழாக்கம்-மின்னியல் 19-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
5868
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%202005
செப்டெம்பர் 2005
செய்தித் துளிகள் செப்டெம்பர் 28, 2005 செப்டெம்பர் 23, 2005 செப்டெம்பர் 21, 2005 செப்டெம்பர் 19, 2005 செப்டெம்பர் 17, 2005 செப்டெம்பர் 13, 2005 செப்டெம்பர் 12, 2005 செப்டெம்பர் 11, 2005 செப்டெம்பர் 10, 2005 செப்டெம்பர் 09, 2005 செப்டெம்பர் 07, 2005 செப்டெம்பர் 06, 2005 2005 2005 செய்திகள்
5871
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சில பாடல்கள் ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஒட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றிக் கூறும் 56-ஆவது பாடல் பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையைச் சொல்லும் 6-ஆவது பாடல் வெளி இணைப்புகள் திரிகடுகம் மூலம் திரிகடுகம், ஆறுமுக நாவலரின் உரையுடன் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் அற நூல்கள்
5877
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
குடியிருப்புப் படிநிலையமைப்பு
குடியிருப்புப் படிநிலையமைப்பு (Settlement hierarchy) என்பது, மனிதக் குடியிருப்புக்களை மக்கள்தொகையையும் வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து அவற்றை ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறையாகும். மக்கள்தொகை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்றவாறு குடியிருப்பின் பரப்பளவு பெரிதாகவும், படிநிலையமைப்பில் உயர்ந்த நிலையிலும் இருப்பதுடன், குடியிருப்பில் கிடைக்கக்கூடிய வசதிகள் கூடுதலாகவும் இருக்கும். குடியிருப்புப் படிநிலையமைப்பில் ஒரு குடியிருப்பின் இடம் அதன் செல்வாக்கு மண்டலத்திலும் தங்கியுள்ளது. வசதிகள் கூடுதலாக இருக்கும்போது தொலைவிடக் குடியிருப்புக்களில் இருந்து மக்கள் இங்கே வருவர். அதனால் அக்குடியிருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், அப்பகுதியின் குடியிருப்புப் படிநிலையமைப்பில் உயர்ந்த இடத்தையும் பெறும். குடியிருப்புப் படிநிலையமைப்புக்கான எடுத்துக்காட்டு இந்த எடுத்துக்காட்டில், தனியாக அமைந்துள்ள வீடுகள் படிநிலையின் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. உலகநகரத்தொகுதி (ecumenopolis) மிகக்கூடிய மக்கள்தொகையுடன் மிகவுயர்ந்த நிலையில் உள்ளது. (இந்தக் குடியிருப்புப் படிநிலைகள் கான்சுடன்டினோசு அப்போசுட்டலோசு டொக்சியாடிசு என்பவரின் நூலைத் தழுவியது.) உலகநகரத்தொகுதி (Ecumenopolis) - இது ஒரு கோட்பாட்டு அமைப்பு. இதில் உலகம் முழுவதிலும் உள்ள, குறைந்தது ஒன்றோடொன்று இணைந்து பல ஆயிரம் கிலோமீட்டர்களை அடக்கும் ஒரு மிகப்பெரிய நகர்ப்புறத் தொடரியம் ஒன்றை இது குறிக்கும். பெருநகரக் குழுமம் (Megalopolis) - பல நகரத்தொகுதிகளின் சேர்க்கையால் அமைந்தது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டது. நகரத்தொகுதி (Conurbation) - பல பெரிய மாநகரங்களினதும் அவற்றின் புறநகர்ப் பகுதிகளினதும் சேர்க்கை. 3 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான மக்கள்தொகையைக் கொண்டது. பெருநகரப் பகுதி (Metropolis) - ஒரு பெரிய மாநகரத்தையும் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இதற்குள் பல சிறிய மாநகரங்களும் நகரங்களும் அடங்கியிருக்கலாம். 1 மில்லியன் முதல் 3 மில்லியன் வரையான மக்கள்தொகை கொண்டது. பெரிய மாநகரம் (Large city) - கூடிய மக்கள்தொகையையும், பல வசதிகளையும் கொண்ட ஒரு மாநகரம். ஒரு மில்லியனுக்கும், 3 இலட்சங்களுக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது. மாநகரம் (City) - பெரிய மாநகரத்திலும் குறைவான வசதிகளையும், 1 இலட்சத்துக்கும் 3 இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகையையும் கொண்டது. பெரிய நகரம் (Large town) - 20 ஆயிரத்துக்கும், ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது. நகரம் (Town) - ஆயிரத்துக்கும், 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது. ஊர் (Village) - சிறிய கடை, ஒரு அஞ்சல்நிலையம் போன்ற குறைவான வசதிகளைக் கொண்டது. 100 முதல் ஆயிரம் வரையான மக்கள் வாழக்கூடியது. சிற்றூர் (Hamlet) - மிகக்குறைவான வசதிகளையும், 100க்குக் குறைந்த மக்கள்தொகையையும் கொண்டது. தனித்த வீடுகள் (Isolated dwelling) - ஓரிரு வீடுகளையும், குடும்பங்களையும் கொண்டது. குடியிருப்புப் படிநிலையமைப்புக் கருத்துரு தொடர்பான சிக்கல்கள் குடியிருப்பின் அளவைப் படிநிலைப்படி வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்துதல் எல்லா வேளைகளிலும் சரியாக அமைவதில்லை. சில மாநகரங்கள், சில நகரங்களிலும் குறைவான மக்கள்தொகை கொண்டனவாக இருக்கின்றன. அத்துடன் குடியிருப்புப் படிநிலையமைப்பில் எத்தனை படிநிலைகள் இருக்கவேண்டும் என்பது குறித்தோ அவற்றை எவ்வாறு அழைக்கவேண்டும் என்பது குறித்தோ இணக்கப்பாடு கிடையாது. குடியிருப்புக்களைக் குறிக்கும் பல சொற்களுக்குச் (எ.கா: ஊர், நகரம்) சட்ட அடிப்படையிலான வரைவிலக்கணங்கள் இல்லை, அல்லது வேறுபட்ட ஆட்சியெல்லைகளுக்குள் முரண்பாடான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. படிநிலையமைப்பும் தகுதிநிலையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றில், படிநிலையானது தகுதிநிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது. இது படிநிலையமைப்பில் குடியிருப்பொன்றின் நிலையை வலுவாக்குகின்றது. ஒரு குடியிருப்பின் தகுதிநிலை பல காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். அரசர் அல்லது ஒரு உயர்நிலைப் பிரபு ஒருவரின் இருப்பிடமாக அமைவதனால், அல்லது ஒரு முக்கிய மத நிறுவனம் ஒன்றின் அமைவிடமாக அமைவதன் மூலம் அக்குடியிருப்புக்களுக்கு உயர் தகுதிநிலை ஏற்படுவதுண்டு. மேற்கோள்கள் சமூகநிலைகள்
5878
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
மாநகரம்
மாநகரம் என்பது ஒப்பீட்டளவில் பெரிய, நிரந்தரமான குடியிருப்பு ஆகும்.<ref name="Goodall">Goodall, B. (1987) The Penguin Dictionary of Human Geography. London: Penguin.</ref> இதை மாநகர், பெருநகரம், பெருநகர் போன்ற பெயர்களாலும் குறிப்பது உண்டு. பெரிய நகரமே பொதுவாக மாநகரம் (city) என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. மாநகரத்தை, நகரத்திலிருந்து வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இணக்கப்பாடு இல்லை. இது நகரத்தின் வளர்ச்சியடைந்த ஒரு வகை எனலாம். மாநகரம் என்ற சொல் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வரைவிலக்கணங்களுடன் பயன்பாட்டிலுள்ளது. பொதுவாக வரலாற்று, நிர்வாக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள் ஒரு நகரம் மாநகரமாக சட்டப்படி அறிவிக்கப் படுவதற்கான அடிப்படையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க மாநிலமான மசச்சூசெட்சில் உள்ளூர் சட்டவாக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டிணைப்பு விதிகள் மாநகரத்தை, நகரத்தில் இருந்து வேறுபடுத்துகின்றன. ஐக்கிய இராச்சியத்திலும், சில பொதுநலவாய நாடுகளிலும் மாநகரம் என்பது அரச பட்டயத்துடன் கூடிய ஒரு குடியிருப்பு ஆகும். முற்காலத்தில் ஐரோப்பாவில் பேராலயம் ஒன்றுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பு மாநகரம் எனக் கருதப்பட்டது. மநகரங்கள் பொதுவாகச் சுற்றுப்புறத்தூய்மை, பயன்படுசேவைகள், நிலப்பயன்பாடு, வீடமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான சிக்கலான முறைமைகளைக் கொண்டவை. மாநகரங்களில் காணும் செறிவான வளர்ச்சி மக்களிடையேயும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயுமான ஊடாட்டங்களை ஊக்குவித்து இரு பகுதியினருக்கும் நன்மை விளைவிக்கிறது. பெரிய மாநகரம் பொதுவாக புறநகர்கள், கூடுதல்நகர்ப் பகுதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மாநகரங்கள், தலைமைநகரங்களுடனும், நகர்ப்புறப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டவையாக, வேலைக்காக நகர்ப்புற மையங்களை நோக்கிச் செல்லும் தொழில்சார்ந்த போக்குவரத்துச் செய்பவர்களை பெருமளவில் உருவாக்குகின்றன. மாநகரங்கள் இன்னொரு நகரத்தைத் தொடுமளவுக்கு வளர்ந்தால் அந்நகரங்களை உள்ளடக்கிய பகுதி நகரக்கூட்டம் (conurbation) எனப்படும். தோற்றம் முதல் மாநகரங்கள் தோன்றியமைக்கான நிலைமைகளை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மாநகரங்கள் தோன்றியமைக்கான முன்நிபந்தனைகள், இவ்வுருவாக்கத்துக்கு உந்து விசையாக இருந்திருக்கக்கூடிய அடிப்படையான பொறிமுறைகள் என்பன குறித்துப் பல்வேறு கோட்பாட்டாளர்கள் தமக்குச் சரியெனத் தோன்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கோட்பாடுகள் வேளாண்மை முதன்மை புதியகற்காலப் புரட்சிக்குப் பின்பே முதல் மாநகரங்கள் தோன்றின என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. புதியகற்காலப் புரட்சியின்போது வேளாண்மை அறிமுகமானது. இது மக்கள் அடர்த்தியாக வாழ்வதைச் சாத்தியமாக்கியதன் மூலம் மாநகரங்கள் வளர்வதற்கு உதவியது. வேளாண்மையின் அறிமுகம், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த மக்களைத் தமது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு வேளாண்மையைக் கைக்கொண்ட மக்களுக்கு அருகில் நிரந்தரமாக வாழ்வதற்கு ஊக்குவித்தது. வேளாண்மையினால் மக்கள்தொகை அடர்த்தி கூடியதும், ஓரலகு நிலத்தில் இருந்து பெறக்கூடிய உணவு உற்பத்தி அளவு கூடியதும் மாநகரங்களில் இடம்பெறுவன போன்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கின. "மாநகரங்களும் பொருளாதார வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதிய பால் பைரோச் என்பார் மேற் சொன்ன நிலைப்பாட்டை ஆதரிப்பவராக இருந்தார். இந்நூலில், உண்மையான மாநகரங்கள் உருவாவதற்கு முன் வேளாண்மை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வாதித்தார். ஒரு குடியிருப்பு மாநகரம் என்னும் தகுதியைப் பெறுவதற்கு, அது வணிகத்தை ஆதரிப்பதற்கான மிகையான மூலப்பொருட்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது வேரே கோர்டன் சில்டே என்பவரது கருத்து புதிய கற்காலத்துக்கு முன்னர், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த சமுதாயங்களில், பெருமளவிலான மக்கள்தொகையைத் தாங்குவதற்குத் தேவையான உணவை வழங்குவதற்கு பெரிய நிலப்பரப்புத் தேவைப்பட்டது. இது வணிக ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதை இயலாதது ஆக்கியிருக்கும் என்கிறார் பைரோச். இதை விளக்குவதற்கு பைரோச் ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்துள்ளார்: "மேற்கு ஐரோப்பாவில், முன்-புதியகற்காலத்தில் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 0.1 ஆக இருந்திருக்கும்". இந்த மக்கள்தொகை அடர்த்தியைக் கணிப்புக்கான அடிப்படையாகக் கொண்டும், உணவு உற்பத்தியில் 10% வணிகத்துக்காக உபரியாக இருக்கும், மாநகரக் குடிமக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதில்லை என்னும் கருதுகோள்களின் அடிப்படையிலும், பின்வருமாறு கணிப்பிட்டார். "1000 பேரைக்கொண்ட ஒரு மாநகரைப் பேணுவதற்கு, போக்குவரத்துச் செலவைக் கருத்தில் கொள்ளாமல், 100,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புத் தேவைப்பட்டிருக்கும். போக்குவரத்துச் செலவையும் எடுத்துக்கொண்டால் தேவையான நிலப்பரப்பு 200,000 சதுர கிலோமீட்டர் ஆக இருக்கும்......". இது ஏறத்தாழ பெரிய பிரித்தானியாவின் பரப்பளவுக்கு ஈடானது என்று பைரோச் எடுத்துக் காட்டினார். நகர்ப்புற முதன்மை யேன் யாக்கோப் என்னும் கோட்பாட்டாளர் நகர உருவாக்கம், வேளாண்மையின் அறிமுகத்துக்கு முந்தியது என்றும் அதனால் வேளாண்மை நகர உருவாக்கத்துக்கு உதவவில்லை என்றும் கூறுகிறார். தனது கோட்பாட்டை விளக்கும்போது மாநகரம் என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொடுக்கவில்லை. ஆனால், அவரது விளக்கத்தின்படி, தொடக்ககால நகர்சார்ந்த நடவடிக்கை பற்றிய பொதுவான புரிதலுக்கும், யேன் எடுத்துக்காட்டும் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்வோரின் சுற்றாடலில் இடம்பெறக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. தன்னுடைய கருத்தை விளக்குவதற்காக, யேன் ஒரு கற்பனையான நிலைமை ஒன்றை எடுத்துக்கொள்கிறார். இதன்படி பெறுமதி வாய்ந்த இயற்கை வளம் ஒன்று தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கைகள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றது. எரிமலைக் கண்ணாடியை இவ்வாறான இயற்கை வளத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் கொள்கிறார். எரிமலைக் கண்ணாடியைப் பயன்படுத்தி மிகவும் கூர்மையான ஆயுதங்களைச் செய்யமுடியும் என்பதால், இப்பொருள் கிடைக்கும் இடத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனைப் பண்டமாற்றுமூலம் பெற்றுக்கொள்வதற்குத் தொலை தூரங்களிலிருந்தும் பலர் வருவர். இது அவ்விடத்தில் பல வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி வணிகத்தையும் விரிவடையச் செய்வதால் மேலும் பலர் அவ்விடத்தை நோக்கி வருவர். இவ்வாறு விற்பனையாகும் பண்டங்களுள் பல்வேறு வகையான விதைகளும் இருக்கும். இவ்விதைகள் பல வழிகளில், சில சமயம் எதிர்பாராத விதமாகவும், விதைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தியளவு கவனிக்கப்படும். காட்டுப் பயிராகத் தானே வளரும்போது கவனிப்பதை விட இது இலகுவாக இருக்கும். இது நல்ல விதைகளைத் தேர்வு செய்து விற்பனை செய்வதற்கும் வழி வகுக்கும். உருவானதற்கான காரணங்கள் மக்கள் ஏன் தொடக்கத்தில் ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்து அடர்த்தியாக வாழத் தலைப்பட்டனர் என்பதற்கு, கோட்பாட்டாளர்கள் பலவகையான காரணங்களை முன்வைத்துள்ளனர். பிரெண்டன் ஓ'பிளகேர்ட்டி என்பவர் தான் எழுதிய நகரப் பொருளியல் (City Economics)'' என்னும் நூலில், "அவற்றினது சாதகத் தன்மைகள், பாதகத் தன்மைகளைவிடக் கூடுதலாக இருந்தால் மட்டுமே, பல ஆயிரம் ஆண்டுகள் இருந்ததைப்போல, நகரங்கள் நிலைத்திருக்கும்" என்றார். ஓ'பிளகேர்ட்டி, கவரத்தக்க இரண்டு சாதக நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஒன்று, economies of scale மற்றது, உயரும் விகித அளவு விளைவு (increasing returns to scale). இக்கருத்துருக்கள் பொதுவாக நிறுவனங்களுடன் தொடர்புள்ளவை. எனினும், மிக அடிப்படையான பொருளாதார முறைமைகளில் கூட இவற்றின் பயன்பாட்டைக் காணலாம். எல்லா உள்ளீடுகளையும் இரண்டு மடங்காகக் கூட்டும்போது, விளைவு இரண்டு மடங்குக்கும் மேலாகக் கூடுமானால் அங்கே "உயரும் விகித அளவு விளைவு ஏற்படுவதாகக் கூறலாம். அதே வேளை விளைவு இரண்டு மடங்காகும்போது செலவு இரண்டு மடங்கிலும் குறைவாக இருக்குமானால் அந்நடவடிக்கை economies of scale ஐக் கொண்டிருக்கிறது எனக் கூறமுடியும். இந்தக் கருத்துருக்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதற்காக, ஓ'பிளகேர்ட்டி, நகரங்கள் உருவானதற்கான மிகப் பழைய காரணங்களுள் ஒன்றான "பாதுகாப்பு" என்பதைப் பயன்படுத்துகிறார். இந்த எடுத்துக்காட்டில், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுவும் எதுவும் (எகா. மதில் சுவர்) உள்ளீடு ஆகும். பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியும், அங்கேயுள்ள பெறுமதியானவை அனைத்தும் ஒருங்கே "விளைவு" என்பதற்குள் அடங்கும். பாதுகாக்கப்பட வேண்டிய நிலப்பகுதி சதுரமானது என்றும், அதிலுள்ள ஒவ்வொரு எக்டெயர் நிலமும் ஒரேயளவு பாதுகாப்புப் பெறுமானம் கொண்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பின் சாதக விளைவு பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியின் பரப்பளவுக்கு விகித சமனாக இருக்கும். எனவே, இதைப் பின்வருமாறு குறிக்கலாம்: (1) , இங்கே O, விளைவு. இது பாதுகாக்கப்பட்ட நிலத்துக்குச் சமமாகக் கொள்ளப்பட்டுள்ளது. s, நிலத்தின் ஒரு பக்கத்தின் நீளம். உள்ளீடு மதிற் சுவரின் நீளத்தில் தங்கியுள்ளது: (2) , இங்கே I உள்ளீடுகளின் அளவைக் குறிக்கிறது. இது நிலத்தில் நான்கு பக்கங்களிலும் எழுப்பப்படும் சுவரின் மொத்த நீளத்துக்கு விகித சமமாகக் கொள்ளப்படுகிறது. இவற்றின்படி இதில் "உயரும் விகித அளவு விளைவு" உள்ளது: (3) . சமன்பாடு (1) ல் க்கான பெறுமதியைக் கண்டு அதைச் சமன்பாடு (2)ல் பதிலீடு செய்வதன் மூலம் ஊள்ளீடுகளின் சார்பில் விளைவின் பெறுமதி கிடைத்தது. இதன்படி உள்ளீடு இரண்டு மடங்காகும்போது விளைவு 4 மடங்காக உயர்வதைக் காணலாம். அத்துடன் economies of scale உம் இதில் காணப்படுகிறது. இதனால் நகரங்கள் பாதுகாப்பில் செலவுகளைக் குறைக்கின்றது. எனவே மக்கள் தம்மையும், தமது செல்வத்தையும் சூறையாடும் காட்டுமிராண்டிப் படைகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கான தேவை, நகரங்கள் உருவானதற்கான ஒரு காரணம் எனலாம். பொருட்கள், மக்கள், எண்ணக்கருக்கள் போன்றவற்றுக்கான போக்குவரத்துச் செலவு குறைவது நகர உருவாக்கத்துக்கான காரணம் என்பதை எட்வார்ட் கிளீசர் என்பாரும் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். தூரம் குறைவதன் நன்மைகள் பற்றி விளக்கிய கிளீசர், மாநகரின் அளவு இரட்டிக்கும்போது, தொழிலாளர் 10% கூடுதலான கூலியைப் பெறுகின்றனர் என்கிறார். பெரிய மாநகரங்கள் ஒரே உற்பத்தித் திறனுக்கு சிறிய நகரங்களிலும் கூடுதலான கூலி கொடுப்பதில்லை எனக் கூறும் கிளீசர், தொழிலாளர்கள் பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது அவர்களுடைய செயற்றிறன் அதிகமாவதாலேயே அவர்களது வருமானம் கூடுகிறது என விளக்குகிறார். எனினும், இரண்டு மடங்கு பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது கிடைக்கும் 10% கூலி அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு அதிக பயனைக் கொடுப்பதில்லை. உயர்ந்த வாழ்க்கைச் செலவு கூடுதல் வருமானத்தை அவர்களிடன் இருந்து எடுத்துக்கொள்கிறது. ஆனாலும், நகரத்தில் வசிப்பதால் வேறு பயன்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. புவியியல் நகரங்கள் எவ்வாறான வடிவங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதிலாக நகரத் திட்டமிடலில் பல்வேறு வகையான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. பொதுவாகப் பரவலாக அறியப்பட்ட வடிவங்களுள் ஒன்றாக "வலையமைப்புத் தளக்கோலம் கொண்ட நகரங்கள் விளங்குகின்றன. இத்தகைய நகருக்கான தளக் கோலம் சீனாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வருகின்றது. பேரரசர் அலெக்சாண்டரின் நகரத் திட்டமிடலாளரும், இவ்வாறான தளக்கோலத்தைத் தனியாக உருவாக்கினார். இவரது வடிவமைப்பை, உரோமர் விரும்பி ஏற்றுக்கொண்டனர். அயர்லாந்தின் திட்டமிடப்பட்டு 1613 இல் வேலைகள் துவக்கப்பட்ட முதல் நகரம் டெர்ரி ஆகும், இந்த நகர் கட்டுமானப் பணிகளில் சுவர்களை கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. நகரத்தைச் சூழ்ந்த இந்தச் சுவர்களில் நான்கு வாயில்களைக் கொண்டதாக மைய வைரம் போன்ற பாதுகாப்புமிக்க ஒரு நல்ல வடிவமைப்பு என்று கருதப்பட்டது. இவ்வடிவமைப்புகொண்ட கட்டடங்கள் பிரித்தானிய வட அமெரிக்காவின் காலனிகளில் பரவலாக பரவியது. பண்டைய கிரேக்கர்கள் பெரும்பாலும் மத்தியதரைக் கடல் பகுதியில் தங்கள் குடியிருப்பு கட்டங்களை திட்டமிட்ட வகையில் அமைத்தனர். இதற்கு பிரையன் நகரமானது ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நகரம் இன்றைய திட்டமிடப்பட்ட நகரங்களைவிட பல வகைகளில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது, பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முற்காலத்திய, சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் மொகெஞ்சதாரோ போன்ற நகர கட்டுமானங்களைப் பயன்படுத்தி வழ்ந்துவந்தனர். மத்திய காலங்களில் சிறந்த திட்டமிடலோடு கட்டப்பட்ட நகரங்கள் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. பிரான்சின் தெற்கே பல்வேறு ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட நகரங்களும், பழைய டச்சு மற்றும் பிளெமெய்ஷு நகரங்களின் நகர விரிவாக்கங்களும் இவற்றிர்க்கு நல்ல உதாரணங்கள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் திட்டமிடப்பட்ட நகரங்கள், குறிப்பாக பாரிஸ் நகரத்தின் மறுவடிவமைப்புக்குப் பிறகு இவ்வாறான திட்டங்கள் பிரபலமாக உருவாயின. இவற்றின் காரணமாக பழைய பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவில் தனது புதிய நிலப்பகுதிகள் மற்றும் நகரங்களில் திட்டமிடப்பட்ட கட்ட அமைப்புகளை கட்டாயப்படுத்தியது, அமெரிக்காவின் மேற்குப்பகுதிகளான சால்ட் லேக் நகரம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்களில் இவ்வாறு கட்டமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன. மற்ற வடிவங்களில் ஆரக்கால் கட்டமைப்பை உள்ளடக்கியிருக்கலாம், இதில் பிரதான சாலைகள் ஆரக்கால் போன்று மையப் புள்ளியில் இணைகின்றன. இது பெரும்பாலும் ஒரு வரலாற்று வடிவம் ஆகும், நகரம் வளரவளர நகர கட்டுமானம் நீண்ட காலமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்ததில் விளைவு ஆகும். அண்மைக்கால வரலாற்றில், இத்தகைய வடிவங்கள் நகரத்தின் புறநகர்பகுதிகளை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின. பல டச்சு நகரங்கள் இவ்வாறான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன: செறிவான சாலைகளால் சூழப்பட்ட ஒரு மையச் சதுரம். அதிலிருந்து நகரத்தின் ஒவ்வொரு விரிவாக்கமும் ஒரு புதிய வட்டமாக (நகர சுவர்கள் கொண்ட சாலை) குறிக்கப்படும். ஆம்ஸ்டர்டாம், ஹார்லெம் மற்றும் மாஸ்கோ போன்ற நகரங்களில், இந்த மாதிரியான இன்னும் தெளிவாக தெரியும் எடுத்துக்காட்டுகளாகும். குறிப்புகள் இவற்றையும் பார்க்கவும் நகராக்கம் மாநகரசபை (இலங்கை) குடியிருப்புகள் மாநகரம் மாநகரங்கள்
5879
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D
ஊர்
ஊர் அல்லது கிராமம் என்பது மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சி நிலையில் குடிசைகள் அல்லது வீடுகள் அமைத்து வாழும் ஒரு நிலப்பரப்பை அல்லது மக்கள் குடியிருப்பைக் குறிக்கும். அவ்வாறான ஊர்களில் சிறிய ஊர்கள் சிற்றூர் என்றும் பெரிய ஊர்கள் பேரூர் என்றும் அழைக்கப்படும். ஊர்களின் வளர்ச்சி நிலையே காலவோட்டத்தில் நாடுகளாகின. வணிகத் தொடர்பாடுகளை தொடர்ந்து ஊர்களின் நடுவே வணிக மையங்களாக வளர்ச்சி பெற்ற இடங்கள் நகரங்களாக மாற்றம் பெற்றன. ஊர்கள் பெரும்பாலும் சிற்றூர்களுக்கும், நகரங்களுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டவை. புறநடையாக சில பெரிய ஊர்கள் சிறிய நகரங்களிலும் அளவிற் பெரியவையாக இருப்பதுண்டு. ஊர்கள் பொருளாதார இயல்புகளின் அடிப்படையில் நகரங்களினின்றும் வேறுபடுகின்றன. அதாவது ஊர்கள் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விவசாயப் பொருளாதாரம் என்னும்போது, மீன்பிடித்தல் போன்ற அடிப்படையான தொழில் முயற்சிகளையும் உள்ளடக்கும். இலங்கையின் வரலாற்றின் முதல் ஊர் இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் நாயும் இருந்ததாகவும், அங்கே ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் போன்ற தகவல்கள், விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை தம்பபண்ணியில் மக்கள் குடியிருப்பு இருந்தது எனும் தகவலை தருகிறது. சான்றுகோள்கள் இவற்றையும் பார்க்கவும் நாட்டுப்புறம் நகர்ப்புறம் நகரவியல் நகரப் புவியியல்
5880
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
நாட்டுப்புறம்
நாட்டுப்புறம் (rural) என்பது மிகக் குறைந்த குடியடர்த்தி கொண்ட, நகரப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கும். நாட்டுப்புறப் பகுதிகள் பெரும்பாலும் விவசாய நிலங்களையும், வெற்று நிலங்களையும், கட்டாந் தரைகளையும் மற்றும் காடுகளையும் கூடக் கொண்டிருக்கக் கூடும். இவற்றையும் பார்க்கவும் நகர்ப்புறம் ஊரியல் மாந்த வாழிடங்கள் மாநகரம் சூழலியல்
5881
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
நகர்ப்புறம்
மாநகரம், நகரம், புறநகரப் பகுதிகள் போன்ற நகரத் தன்மை கொண்ட பகுதிகள் நகர்ப்புறங்கள் (urban) எனப்படுகின்றன. இப்பகுதிகள் கூடிய குடித்தொகை அடர்த்திகளைக் கொண்டிருப்பதுடன், வர்த்தகம், கைத்தொழில், பல்வேறு சேவைத் தொழில்கள் ஆகியவற்றைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவற்றையும் பார்க்கவும் நகராக்கம் நகராக்கம் நில மேலாண்மை de:Ortschaft pl:Miejscowość
5884
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
மின்கம்பி
மின்கம்பி மின்காந்த சத்தியை எடுத்துசெல்ல மின்சுற்றுகளில் பயன்படுகின்றது. மின்சுற்றுக்களில் உள்ள கூறுகள்|கூறுகளை இணைப்பது மின்கம்பி ஆகும். மின்கம்பி நீள் உருளை வடிவில் மின்கடதும் தன்மை உள்ள பொருள் கொண்டு உருவாக்கப்படுகின்றது. அடிப்படையில் மின்கம்பி ஒரு மின்கடத்தி ஆகும். ஓரச்சு வடம், இரு கம்பி வடம், நுண்கீற்று தடம் என பல வகை மின்கம்பிகள் மின்சுற்றுக்களில் பயன்படுகின. நுட்பியல் சொற்கள் மின்காந்த சத்தி - Electromagnetic Energy மின்சுற்று - Electric Circuit, Electronic Circuit கூறுகள் - Components நீள் உருளை - Cylinder மின்கடத்தி - Conductor வடம் - Cable ஓரச்சு வடம் Coaxial Cable நுண்கீற்று தடம் - Microstrip Line வெளி இணைப்புகள் தொழில்நுட்பம்.காம் தமிழ்ச்சொற் தேடல்கள் மின் உறுப்புகள்
5885
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை
தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை என்பது கணினி சார் தேவைகளுக்கு தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட, எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க ஒரு எழுத்து குறிமுறை நியமமாகும். இக்குறிமுறையின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக (திஸ்கீ) TSCII (Tamil Standard Code for Information Interchange) என்றவாறு குறிப்பிடப்படுகிறது. தமிழில் திசுகி எனவும் தகுதரம் (தமிழ் குறியீட்டுத் தரம்) எனவும் வழங்கப்படும் இதுவே முதன்முதல் தமிழில் உலகம் தழுவிய திறந்த இணைய உரையாடல் மூலம் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமமாகும். ASCII குறிமுறையில் அமைந்த ஆங்கில எழுத்துக்களின் மேலாக, எழுத்துரு ஒன்றினை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை கணினியில் பயன்படுத்திவந்த காலத்தில், தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்தி ஆவணமொன்றினை தொகுப்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. தமிழ் எழுத்து குறிமுறை வரலாற்றில், இவ்வாறான சிக்கல்மிக்க ஒருமொழி ASCII குறிமுறையின் போதாமையை களைந்து உருவாகிய அடுத்தக்கட்ட படிமுறை வளர்ச்சியே தகுதரம். ASCII குறிமுறை அட்டவணையில் ஆங்கில எழுத்துக்கள், இன்றியமையாக் குறியீடுகள் தவிர்ந்த ஏனைய இட ஒருக்கீடுகளில் தமிழ் எழுத்துக்களை பிரதியீடு செய்தலே தகுதரம் குறிமுறையின் அடிப்படையாகும். தொடக்கத்தில் ஆங்கில எழுத்துக்களுக்கான ஒதுக்கீட்டிலேயே தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்த முறைமையைக் காட்டிலும் இது முன்னேற்றகரமானதாகவும், இருமொழி கையாட்சிக்கு எளிமையானதாகவும் இருந்தது. இந்த இட ஒதுக்கீட்டினை கீழ்க்காணும் படம் தெளிவாக விளக்குகிறது. பல்வேறு தொழிநுட்ப சிக்கல்களையும் களைந்து தற்போது இக்குறிமுறையின் நடப்பு வெளியீடான பதிப்பு 1.7 புழக்கத்திலிருக்கிறது. இக்குறிமுறையை பயன்படுத்தி தமிழை கணினியில் உள்ளிடுவதற்கு சிறப்பான உள்ளீட்டு முறைகளும் மென்பொருட்களும் தேவைப்படும். பின்வரும் உள்ளீட்டு மென்பொருட்கள் இதற்குப் புகழ்பெற்றவை: GNU/Linux இயங்குதளத்துக்கானவை தமிழ் GTK IM SCIM Windows இயங்குதளத்துக்கானவை ஈ கலப்பை முரசு அஞ்சல் நளினம் இக்குறிமுறைக்கான பல்வேறு வடிவங்களில் அமைந்த எழுத்துருக்களும் தற்போது இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. இவ்வகை எழுத்துருக்கள் TSC_ என்ற முன்னொட்டுடன் ஆரம்பிக்கும். பன்மொழி குறிமுறையான ஒருங்குறியின் வருகைக்குபிறகு இருமொழி குறிமுறையான தகுதரத்தின் பயன்பாடு அருகி வருகிறது. ஒருங்குறி முறையைக் கையாள முடியாத இயங்குதளங்கள், மென்பொருட்கள் போன்றவற்றில் தமிழை வினைத்திறனுடன் கையாள்வதற்கு இன்றும் தகுதரமே உதவி செய்து வருகிறது. தற்போது ஒருங்குறி முறைக்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடிய தகுதரம் எழுத்துருக்கள் கிடைப்பிலுள்ளன. இவ்வகை எழுத்துருக்கள் TSCu_ என்ற முன்னொட்டுடன் தொடங்கும். ஆவணங்களின் குறியீடை மாற்றுதல் கனூ iconv கருவி வழியாக TSCII ஆவணங்களின் குறியீடை மாற்றுதல் எப்படி என்பதை கீழே காணலாம் $ iconv -f utf-8 -t tscii input_file.utf8 > output_file.tscii எதிர் திசையில் குறியீடை மாற்ற -f <-> -t இடம் மாற்றவும். வெளி இணைப்புகள் tscii இணையம் tscii விவாதங்கள் தமிழ் எழுத்து குறிமுறைகள் தமிழ்க் கணிமை ஒருங்குறி
5886
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
பருப்பொருள்
பருப்பொருள் 3 வகைப்படும். பருப்பொருள் நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் அனைத்தையும், இப்பொருள்களில் உண்டாகிற யாந்திரிக, பௌதிக, இரசாயன, உடலியல் வகைப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொருள்வகைப் புலப்பாடு (Material phenomena) என்றும், அல்லது வெறுமே பருப்பொருள் (Matter) என்றும் சொல்வது வழக்கம். இந்த அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் பொருட்களால் ஆனவை. பொருள் அல்லது பொருள்கள் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வண்டத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் தனிமங்களாலும்ம் அவற்றின் சேர்வைகளாலும் ஆனவை. ஒவ்வொரு தனிமமும் வேறுபட்ட அணுக் கட்டமைப்புகளைக் கொண்ட அணுக்களால் ஆனது. அணுக்கள் இலத்திரன், புரோத்தன், நியூத்திரன் ஆகிய கூறுகளால் ஆனவை. அக்கூறுகள் குவார்க் எனப்படும் அடிப்படைக் கூறுகளால் ஆனவை. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு விசை அரங்கு செயற்படுகின்றது. வரையறை பொருள் என்பது நிறை மற்றும் அளவை(இடங்களையும் நிரப்பும்) உடையவையாகும். விஞ்ஞான விளக்கம் எதற்குத் திணிவும் கனவளவும் இருக்கின்றதோ அது பொருள். பொருளை அணுக்களாகவும், அணுவை அணுக் கூறுகளாகவும், அணுக் கூறுகளை விசையாகவும் பகுத்தாயலாம். பொருளும் வலுவும் ஒன்றையே வெவ்வேறு நிலைகளிற் சுட்டி நிற்கின்றன. நிறை கொண்டவையே பொருட்களாகும். இயற்பியலில் பலவற்றைப் பொருள்கள் என்று அழைக்கிறோம்.நாம் வெறுங்கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்துமே பொருட்களாகும். இயற்பியல் கூற்றுப்படி நிலையான நிறையும், அளவு உடையதுமே பொருட்களாகும். இவ்வணுக்கள் எப்போதும் நகர்ந்து கொண்டும், அதிர்ந்து கொண்டும் இருக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் ஆற்றலாக மாற்றமுடியும் என்று ஐன்ஸ்டின் கண்டுபிடித்தார். ஐன்சுரைனின் சமன்பாடு அவற்றின் ஒற்றுமைப் பண்பைப் பின்வருமாறு விளக்குகின்றது. E = வலு m = பொருளின் திணிவு c = ஒளியின் கதி விஞ்ஞான நிலைப்பாட்டிற் பொருள் அல்லாத ஒன்று இல்லை. அது தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அப்படி இருந்தால் மட்டுமே பொருள் அடிப்படையிலேயே அதை நாம் அறிய முடியும். குவாண்டம் இயற்பியல் நிறை கொண்டவையே பொருள்கள் எனும் நிலையைக் குவாண்டம் இயற்பியலின் வளர்ச்சி தடை செய்தது. குவாண்டம் இயற்பியலின்படி எலக்தரான், புரோட்டான் ஆகியவும் பொருள்கள் பட்டியலில் இணைந்தன.இதன்படி ஐன்ஸ்டின், அனைத்துப் பொருட்களையும் ஆற்றலாக மாற்றமுடியும், சிறிய பொருளையும் மிகப் பெரிய ஆற்றலாக மாற்ற முடியும், எலக்தரான், புரோட்டான் ஆகியவற்றை ஒளித் துகளாக மாற்ற முடியும் போன்ற சில முடிவுகளையும் வெளியிட்டார். குவாண்டம் இயற்பியலின்படி பொருள்கள் அனைத்திற்கும் நிறை இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போனது.இதன் அடிப்படையில் பொருள் என்பது ஒரு மூடப்பட்ட பகுதியில் இருக்கும் பொழுது நேரத்தைப் பொருத்து மாறாத்தே ஆகும். வரலாறு ஆரம்ப கால வரலாறு தாலஸ் (பொ.ஊ.மு. 624–546) என்பவர் முதன் முதலாக நீரே உலகத்திற்கு அடிப்படை பொருள் என்ற முடிவை வெளியிட்டார். அனெக்சிமென் (பொ.ஊ.மு. 585, பொ.ஊ.மு. 528) என்பவர் காற்றே அடிப்படை பொருள் என்று கூறினார்.ஹெராக்லிடஸ் (பொ.ஊ.மு. 535–475) நெருப்பே அடிப்படை பொருள் என்று கூறினார். ஏனெனில் நெருப்பே அனைத்தையும் மாற்றும் திறன் உடையது என நம்பினார். எம்பிடோகில்ஸ் (பொ.ஊ.மு. 490–430) நீர், நிலம்,காற்று, நெருப்பு ஆகிய நான்கே அடிப்படை பொருள் என்று கூறினார். இதே வேலையில் டெமாக்ரிட்டஸ் என்பவர் இவ்வுலகில் உள்ள அனைத்தும் அணு என்னும் கண்ணுக்குத் தெரியாத பொருட்களால் உருவானவை என்றார். மேலும் அவர் ஆட்டமிஸம் எனும் தத்துவத்தையும் வெளியிட்டார். பிந்தைய வரலாறு ரெனெ டெஸ்கார்ட்ஸ் (1596–1650) என்பரே நவீன பொருள்கள் பற்றிய தத்துவங்களை வெளியிட்டவர் ஆவார். பின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவற்றை விரிவுபடுத்தினார். பத்தொண்பதாம் நூற்றாண்டிலேயே இவற்றைப் பற்றிய ஆய்வுகள் விரிவாகின. தனிம அட்டவணை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அணுக்களே பொருள்களின் அடிப்படை என்று கண்டறிந்தனர். மூலக்கூறுகள் பற்றியும் அவற்றின் பிணைப்பு பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருபதாம் நூற்றண்டுகளில் குவாண்டம் அளவில் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகள் விரிவடையத் தொடங்கின. இவற்றின் விளைவாகப் பொருள்கள் பற்றிய வகைகள் அதிகமாகின. அடர் பொருள், பருப்பொருள், அடிப்படை பொருள் என்று பல வகைகளில் பிரிக்கப்பட்டுவிட்டன. பொருட்களின் பண்புகள் பொருள்கள் கீழ்காணும் பண்புகளைக் கொண்டிருக்கும்: நிறை (Mass), அளவு (Volume), அடர்த்தி (Density) பொருள்கள் நிறம்,சுவை,மணம் போன்ற பண்புகளையும் கொண்டிருக்கும். பொருட்களுக்கு உதாரணங்கள் பிரபஞ்சத்தில் உள்ள மண்டலங்கள், நட்சத்திரங்கள் ,கிரகங்கள், பாறைகள், தண்ணீர் மற்றும் காற்று ஆகிய உயிரற்ற பொருட்களும் தாவரங்கள், விலங்குகள் மனிதர்கள் போல வாழும் உயிரினங்கள் அனைத்துமே பொருட்களால் ஆனவையே ஆகும். இயற்பியலின்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொருட்களில் அடங்காது.நிலையான நிறையற்றவை பொருட்களில் சேரா. இதற்கு ஒளித்துகளே (Photon) ஓர் உதாரணம் ஆகும்.ஏனெனில் ஒளித்துகளில் நிலையான நிறை, அளவு ஆகிய இரண்டுமே இடம்பெறவில்லை. இயக்க ஆற்றல் உள்ளவையும் பொருட்களுள் சேரா.இதற்கு வெப்பம், ஒலி, ஒளி ஆகியன உதாரணங்களாகும். உயிருள்ள பொருட்களின் கலவை பொருட்களின் கலவையை அறிய அவற்றைச் சிறு சிறு பகுப்புகளாக மாற்ற வேண்டும். உயிருள்ள பொருள்கள் உயிரணுக்களால் ஆனவையாகும். அவற்றைச் சிறிதாகப் பகுத்தால் மூலக்கூறுகள் தோன்றும். மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை ஆகும். பொருட்களின் நிலை பொருட்களின் பண்புகளில் நிலைகளும் முக்கிய பண்பாகும்.நான்கு வகையான நிலைகள் பொருட்களுக்கு உண்டு. அவை, திடநிலை வாயு நிலை திரவ நிலை பிளாசுமா நிலை. ’’திடநிலை’’ என்பது பொருட்களின் மூலக்கூறுகள் ஒன்றாக பிண்ந்திருப்பது ஆகும். இப்பொருள்கள் கடுமையான அழுத்தத்திற்கு உட்படுத்தும் போதும் தன் நிலையிலிருந்து மாறாதது ஆகும்.பாறை போன்றவை இந்திலையில் உள்ள பொருட்களே ஆகும். ‘’திரவ நிலை’’ என்பது அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் ஆகியவை பலவீனமாக பிணையப்பட்டிருக்கும் பொருட்களாகும். இவற்றிற்கு சரியான வடிவங்கள் இருப்பதில்லை, இவை இருக்கும் திடப் பொருட்களின் வடிவத்தினை இவை பெரும்.திரவ நிலை பொருட்களில் இரண்டு வகைகள் உள்ளன. ‘’நீர்மநிலை’’ என்பது திரவ நிலை பொருட்களின் ஒரு வகையாகும். இவை அருகிலிருக்கும் மூலக்கூறுகளுடன் பலவீனமாக பிணைந்துக்கொள்ளும். இவற்றை பெற்றுக்கொள்ளும் திடப்பொருள்களின் வடிவத்தினை இப்பொருள்கள் பெரும். இப்பொருள்கள் ஆவற்றின் அளவினுக்கேற்ப இடத்தை பிடித்துக்கொள்ளும். உதாரணங்கள்:நீர், எண்ணெய், எரிமலை குழம்பு, குளிர்பானங்கள். ‘’வாயு நிலை’’, இவ்வகை பொருள்கள் தன்னை பெற்றுக்கொள்ளும் திடப்பொருட்களின் முழு அளவிலும் பரந்து விரிந்துக் கொள்ளும்’’. நீர்ம நிலையினை விட இவை மிகவும் பலவீனமாக மூலக்கூறுகளுடன் பிணைந்து இருக்கும். உதாரணம்: வாயு, நீராவி, ஹீலியம். ‘’பிளாசுமா நிலை’’ என்பது அயனியாக்கம் செய்யப்பட்ட பொருட்களின் தொகுப்பு ஆகும். பூமியின் அயனி மண்டிலம், சூரியனின் ஒளிவளைவு ஆகியன பிளாசுமா நிலக்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்நிலையில் உள்ள பொருள்கள் நீர்ம நிலைக்கும்,வாயு நிலைக்கும் இடப்பட்ட பதத்தில் இருக்கும். இவற்றிற்கு அணுக்களை ஈர்க்கும் சக்தி குறைவாக இருக்கும். பொருட்களின் தன்மை ஒவ்வொரு நிலைக்கும் மாறுபடும். இவை அப்பொருள்கள் இருக்கும் இடத்தில் உள்ள தட்ப வெட்ப நிலையையும், அழுத்தத்தினையும் பொருத்து மாறுபடும். உதாரணமாக நீர் இப்புவியின் வெவ்வேறு இடங்களில், திட நிலை (பனிக்கட்டி), திரவ நிலை (நீர்), வாயு நிலை(நீராவி) ஆகிய வெவ்வேறு நிலையில் ஒரே நேரத்தில் காணப்படுகிறது. தற்போது அடிப்படை துகள்களைப் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் குவார்க்குகள், குலுவான்களும் பொருட்களின் ஒரு நிலையாக இருக்கலாம் என ஆராயப்படுகிறது. சான்றாவணம் இயற்பியல்
5892
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
துவாரகாதீசர் கோயில்
துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. தல வரலாறு தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் பொ.ஊ.மு. 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன், இறைவி இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் காட்சியளிக்கிறார். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. சிறப்புகள் இத்தலம் உலகப்பாரம்பரிய களமாக அறிவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவரது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும். சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது. இதனையும் காண்க துவாரகை தேவபூமி துவாரகை மாவட்டம் பேட் துவாரகை மேற்கோள்கள் UNESCO World Cultural Heritage Site status, report on Indian Express newspaper website Underwater remains near Dwarakadheesh temple, on website of National Institute of Oceanography குறிப்புகள் . வெளியிணைப்புகள் Dwarakadhish temple, Official website துவாரகை கோயில் வரலாறு http://www.dwarkadhish.org/jagad-mandir.aspx துவாரகை கோயில் திருவிழாக்கள் http://www.dwarkadhish.org/festival-calender.aspx துவாரகை நகர வரலாறு http://www.dwarkadhish.org/the-surverna-nagari.aspx சுற்றுலா பயணிகளுக்கான குறிப்புகள் http://www.dwarkadhish.org/tour-guide.aspx 108 திவ்ய தேசங்கள் குஜராத்திலுள்ள இந்து கோயில்கள் இந்து யாத்திரைத் தலங்கள் குசராத்தில் சுற்றுலாத்துறை தேவபூமி துவாரகை மாவட்டம் கிருஷ்ணர் கோயில்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலை
5895
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
து. உருத்திரமூர்த்தி
துரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (9 சனவரி 1927 – 20 சூன் 1971) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன், முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். வாழ்க்கை துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மஹாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார் ஆகஸ்ட் 30, 1954இல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் சேரன் ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார். நவம்பர் 20, 1945 இல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967இல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971இல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார். மஹாகவியின் காவியங்கள் கல்லழகி எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை. சடங்கு எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974இல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது. தகனம் 1962இல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971இல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது. கண்மணியாள் காதை எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967இல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968இல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது. கந்தப்ப சபதம் எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974இல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது. இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள் வள்ளி ('மஹாகவி' கவிதைகள்), முதற்பதிப்பு: ஆடி 1955, வரதர் வெளியீடு, விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம். மஹாகவியின் குறும்பா முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966, அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு- 13. மஹாகவியின் கண்மணியாள் காதை, (வில்லுப்பாட்டு) எழுதியது: நவம்பர் 1966 முதல் வானொலி ஒலிபரப்பியது: மே 1967 முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 - கலைஞர் லடிஸ் வீரமணி முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968, அன்னை வெளியீட்டகம், 89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம். மஹாகவியின் கோடை(பா நாடகம்) எழுதியது: பெப்ரவரி 1966 முதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969 - நாடகர் தாசிசியஸ் இயக்கத்தில் முதல் பதிப்பு: செப்டெம்பர் 1970 இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988 மூன்றாம் பதிப்பு: ஜூன் 1990 வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம். ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971) வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூன் 1973, வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6 மஹாகவியின் இரண்டு காவியங்கள் கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம் சடங்கு முதற்பதிப்பு: ஜூலை 1974 பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7. பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1. மஹாகவி கவிதைகள் (1984) புதியதொரு வீடு (1989) முதல் மேடையேற்றம்- நாடகர் தாசீசியஸ் இயக்கத்தில் மஹாகவியின் ஆறு காவியங்கள் கல்லழகி சடங்கு ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் கண்மணியாள் காதை கந்தப்ப சபதம் தகனம் முதற்பதிப்பு: மார்ச் 2000 வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். மஹாகவியின் மூன்று நாடகங்கள் கோடை புதியதொரு வீடு முற்றிற்று முதற்பதிப்பு: ஜூன் 2000 வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன் பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான் பொருள் நூறு நூறு குறும்பாக் கவிதைகள் முதற்பதிப்பு: அக்டோபர் 2008 வெளியீடு: மித்ர வெளியீடு, சென்னை பதிப்பாசிரியர்: எஸ்பொ மஹாகவி காவியங்கள் முதற்பதிப்பு: ஜூன் 2021 பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான் மஹாகவி நாடகங்கள் முதற்பதிப்பு: ஜூன் 2021 பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான் மஹாகவி கவிதைகள் முதற்பதிப்பு: ஜூன் 2021 பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான் வெளி இணைப்புகள் என்னைக் கவர்ந்தவர்கள் - 4 கவிஞர் மஹாகவி - (கே.எஸ்.பாலச்சந்திரனின் நினைவுப் பதிவு) தேர்த்திருவிழாக் கவிதைகள் - முனைவர் நா. கணேசனின் பதிவு 'மஹாகவி'யின் பொருள் நூறு வெளியீட்டு விழா, சென்னை 1927 பிறப்புகள் 1971 இறப்புகள் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்துக் கவிஞர்கள்
5898
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
பிரம்மா
பிரம்மா (சமஸ்கிருதம்: ब्रह्मा) இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனும் ஆவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகாதி முனிவர்கள் என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது. இந்த தெய்வத்தை வேதாந்தத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் பிரம்மத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. பெயர்க் காரணம் நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார். படைப்பு பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சனையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்தரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது. பிரம்மாவின் ஆயுள் கிரேத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் இந்த நான்கு யுகங்களும் கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் (43,20,000) மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது பிரம்மாவிற்கு பேராயுள் இந்த பேராயுள் நூறு சென்றால் பிரம்மாவிற்கு ஆயுள் முடியும். இல்லறம் திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதி தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. பிற கடவுள்களுடன் தொடர்பு சிவன் விஷ்ணுவுக்கும், பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவனும் லிங்கோத்பவர் என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிரம்ம தேவரோ, அன்னப் பறவை வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவானது அதன் பயணத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை. சில கதைகளில் முடிகாணாத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக, சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் பிரம்மஹத்தி தோசம் பற்றியதால், பிட்சாடனார் என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார். பிரம்மா தன்னைப்போலவே ஒரு மகனைப் படைக்கவிரும்பியதாகவும், அவருக்கு பிறந்தமகன் தனக்குப் பெயரிட வேண்டுமென அழுததாகவும், அதனால் பிரம்மா ருத்திரன் என்று பெயரிட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ருத்திரன் அழுகை நிற்காததால், பிரம்மா ருத்திரன், பாவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என அஷ்ட பெயர்களை ருத்திரனுக்கு சூட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன. மகாபுராணங்களில் ஒன்றான பிரம்ம புராணம் பிரம்மாவின் தலையை சிவபெருமான் கொய்தமைக்கு வேறொரு கதையை கூறுகிறது. அதில் பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்று கழுதை முக வடிவில் இருந்தாக கூறப்பட்டுள்ளது. அந்த தலையானது தேவர்கள் மற்றும் அரக்கர்கள் போரில் அரக்கர்களுக்கு உதவி செய்வதாக கூறியதைக் கண்டு தேவர்கள் திருமாலிடம் அத்தலையை நீக்க வேண்டினர். ஆனால் திருமாலோ, அத்தலையானது பூலோகத்திலோ அல்லது வேறெங்கோ விழுந்தால் விபரீதம் நேரிடும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை சிவபெருமானிடம் கோரிக்கை வைக்கும்படி கூறினார். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் பிரம்மாவின் கழுதை தலையை நீக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார். கிருஷ்ணன் ஒரு சமயம் கிருஷ்ணர் கன்றுகளை மேய்துக்கொண்டு தமது நண்பர்களுடன் (கோபலர்கள்) யமுனை நதி கரையில் உணவருந்தி கொண்டிருந்தார். பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை சோதிப்பதற்காக அவருடைய கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். கன்றுகளை காணாது கோபாலர்கள் தேடிய பொழுது கிருஷ்ணர் தாம் தேடிவருவதாகப் புறப்பட்டார். அந்த சமயம் பிரம்மா அவருடைய நண்பர்களையும் திருடிப்போய் விட்டார். இதையறிந்த கிருஷ்ணர் தாமே கன்றுகளாகவும், இடை சிறுவர்களாகவும் மாறி சிறிது காலம் கோகுலத்தில் இருந்து வந்தார். இதையறிந்த பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை அறிந்து கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டு கோபாலர் களையும் கன்றுகளையும் திருப்பிக் கொடுத்தார். முருகன் சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக பிரம்மா கயிலை வரும்பொழுது, முருகனை வணங்க தவறிவிட்டார். இவரை முருகன் அழைத்து யார் என வினவெழுப்பிய பொழுது, தான் பிரணவ மந்திரத்தினை கூறி படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார். முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க, தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறைச்செய்தார். அத்துடன் படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா தனது எட்டுக்கண்களைக் கொண்டு சிவபெருமானை வணங்கினார். அதனால் முருகனிடமிருந்து பிரம்மாவிற்கு படைக்கும் தொழில் மீண்டும் கிடைத்ததாக எண்கண் (பிரம்மபுரம்) தல வரலாறு கூறுகிறது. தாணுமாலயன் அத்திரி முனிவரின் மனைவியான அனுசுயா கற்புக்கரசியாக திகழ்ந்தாள். அவளுடைய கற்பினைப் பற்றி மும்மூர்த்திகளிடமும் நாரதம் முப்பெரும்தேவியரைவிடவும் உயர்ந்தவள் என்று கூறினார். அதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் அவளை சோதிக்க துறவிகள் வேடத்தில் அனுசுயா குடிலுக்கு வந்தனர். துறவிகளை வரவேற்ற அனுசுயா, அவர்களுக்கு உணவினை தந்தாள். அதனை ஏற்காத மூன்றுதுறவிகளும், ஆடையில்லாமல் பெண்தருகின்ற உணவினையே ஏற்பதாக கூறினர். இதனைக் கேட்டு அனுசுயா திகைத்தாள். தன்னுடைய கற்புநெறியின் காரணமாக வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அறிந்தாள். அவர்களை குழந்தைகளாக்கி தான் தாயாக உணவமுதம் படைத்திட்டாள். முப்பெரும் தேவியர்கள் அனுசுயாவினை வணங்கி தங்களுடைய கணவன்களை திருப்பிதருமாறு கேட்டனர். மும்மூர்த்திகளுக்கும் பழைய உருவம் கொடுத்த அனுசுயாவிற்கும், அவளது கணவர் அத்திரி முனிக்கும் மூவரும் ஒருவராக இணைந்து காட்சியளித்தனர். இந்த மூர்த்தி தாணுமாலயன் எனப்படுகிறார். படைப்பு தொழில் பிரம்ம புராணத்தின் படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி, பூமியையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் ஆகியவற்றை பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர், சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என்று அறியப்படுகிறார். மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர்(அ) மானவர் என்றும் பெயர் வந்ததாக கூறுவர். வரம் கொடுத்தல் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். தேவலோகத்தில் ஆயிரம் அழகிகள் இருந்தும், நிகும்பன் என்ற அரக்க மன்னனின் மகன்களான சுந்தன், உபசுந்தன் ஆகியோரைக் கொல்ல, திலோத்தமை என்ற அழகியை பிரம்மா படைத்தார். அதனால் திலோத்தமையை அடைய முயன்று இருவரும் இறந்தார்கள். இராவணனின் தம்பியான கும்பகர்ணன், சாகா வரம் கேட்க நினைத்து, நித்திரை வரம் வாங்கிய கதை பரவலாக அறியப்பட்டுள்ளது. இக்கதை இராமாயணத்தில் வருகிறது. பிரம்மாஸ்திரம் இந்து தொன்மவியலில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக பிரம்மாஸ்திரம் கருதப்பெறுகிறது. இந்த அஸ்திரத்தினை பிரம்மாவை நோக்கி தவமிருந்து அரக்கர்களும், தேவர்களும் பெற்றுக் கொள்வதாகவும், மந்திரத்தினை உச்சரித்து, பிரம்மாஸ்திரம் எய்துவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்துக்காலக்கணிப்பின் படி, ஆயிரம் யுகங்களைக் கொண்ட கல்பம் என்பது பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். அடுத்த கல்பம் பிரம்மாவின் இரவாக கருதப்பெறுகிறது. ராஜசிக புராணங்கள் மகாபுராணங்களான பதினெட்டு புராணங்களில் பிரம்மாவினை புகழ்ந்துரைப்பவை ராஜசிக புராணம் எனப்படுகின்றன. பிரம்ம வைவர்த்த புராணம் மார்க்கண்டேய புராணம் பவிசிய புராணம் வாமன புராணம் பிரம்ம புராணம் பிரம்மாண்ட புராணம் ஆகியவை பிரம்மாவை புகழ்கின்றன. பிரம்மன் கோயில்கள் இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன. இராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற புஷ்கரணி ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையானதும் முதன்மையானதுமான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை. குசராத் மாநிலத்தில், சோமநாதபுரம் கோயில் அருகில், இரண்யநதி- கபிலநதி-சரசுவதி நதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், கடற்கரையில் அமைந்திருந்த பிரம்மன கோயில், தற்போது கடலில் மூழ்கி விட்டது. தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமுடி என்னும் ஊரில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் பிரம்மா கோயில் உள்ளது. கும்பகோணம் நகரில் சரசுவதி-காயத்ரீ சமேதராக பிரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மட்டும் தான் இந்தியாவில், பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது. இதனை ’பிர்மன்’ கோயில் என்று உள்ளூரில் கூறுவர். குருவன் என்ற குருவனம்-நாபிக் கமல தீர்த்தம் என்ற பெயரில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் பிரம்மனுக்கு பூசை இல்லை. பீகார் மாநிலம், கயாவிற்கு அருகில் பிரம்மயோனிகிரி எனுமிடத்தில் ’கயாஸ்நீத்’ என்ற பெயரில் பிரம்மனுக்கு கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை. குசராத் மாநிலத்தில் நருமதை ஆற்றாங்கரையில் பிரம்மசீலா எனும் இடத்தில் உள்ள பிரம்மன் கோயிலுக்கு பூசை இல்லை. தமிழ்நாடு, திருப்பட்டூர் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை. தமிழ்நாடு, நாகப்பட்டினம், நாகப்ஷேத்திரம் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. மகாராட்டிர மாநிலத்தில், பேக்வா எனுமிடத்தில் பிருத்தாக் என்ற பிரம்மன் கோயில் உள்ளது. இராஜ்குரூக் பகுதியில் வைபார் கிரி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. பேக்வா மாவட்டத்தில், பிருத்தாக் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. வசந்த காட் எனும் ஊரில் பிரம்மன் கோயில் உள்ளது. கோமக்தக் என்ற பகுதியில் காரம்லி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. இந்தோனேசியா நாட்டில், யோக்கியகர்தா நகரில் பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இங்கு பிரம்மனுக்கு பூசை இல்லை. தாய்லாந்து நாட்டில் ஒரு பிரம்மன் கோயில் உள்ளது. பௌத்த மதத்தில் பிரம்மா கடவுள் அல்லது பிரம்மம் குறித்த நிலைப்பாட்டை புத்தர் காலத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னாட்களில் புத்தரின் அவதாரங்களாக சில இந்துக் கடவுளர்கள் தேவதைகளாக வழிபட்டனர். அத்தேவர்களில் பிரம்மாவும் ஒருவர். இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பௌத்த கோயில்களில் பிரம்மாவிற்கு தனிச் சன்னதிகள் அமைத்து வழிபடுகிறார்கள். மேற்கோள்கள் ஆதார நூல்கள் பிரம்ம புராணம் பிரம்மன் கோயில்கள் குறித்தான, மேற்கு வங்கத்தை சார்ந்த பரசுராம் ராஜ் எழுதிய “பரம் ஹொதிஹி” எனும் நூல். இவற்றையும் காண்க புஷ்கர் பிரம்மன் கோயில் திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில் இந்துக் கடவுள்கள் மும்மூர்த்திகள்
5902
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
திறந்த ஆவண வடிவம்
திறந்த ஆவண வடிவம் (OpenDocument Format/ ODF) என்பது, அலுவலகப்பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் ஆவணங்களான உரைக்கோப்புக்கள், விரிதாட்கள், அளிக்கைகள் போன்றனவற்றை சேமிக்கவும் பரிமாறவும் பயன்படுத்தப்படும் ஆவண வடிவமாகும் ( File Format) . இது ஓப்பன் ஆபீஸ் மென்பொருள் செயற்றிட்டத்தினரால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட XML ஐ அடிப்படையாக கொண்ட ஆவண வடிவத்திலிருந்து விருத்தி செய்யப்பட்டது. இவ்வடிவம் 2005 ம் ஆண்டு மே 1 இல் OASIS நிறுவனத்தால் நியமப்படுத்தப்பட்டது. இவ் ஆவண வடிவத்தின் மூல நிரல்கள் திறந்த ஆணைமூலமாக அமைவதோடு, இவ்வாவண வடிவத்தை எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி எவரும் பயன்படுத்த முடியும். இவ்வடிவத்தில் சேமிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்துவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனத்திலும் தங்கியிருக்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் பொதுவான, தளைகள் அற்ற, திறந்த ஆவண வடிவம் ஒன்றின் தேவை கருதி, OASIS என்கிற அமைப்பு இவ்வாவணத்தை உருவாக்கி அளித்துள்ளது. ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் மூடிய, உரிமச்சிக்கல்கள் உள்ள ஆவண வடிவங்களான மைக்ரோசொஃப்ட்அலுவலக ஆவண வடிவங்கள் (.doc, .rtf, .xls .ppt) pdf, ஏனைய தனியார் ஆவண வடிவங்கள், பயனர்களினதும், தொழிநுட்பத்தினதும் சுதந்திரத்தை பறிப்பதுடன், இலாப, மேலாதிக்க நோக்கங்களுக்காக தொழிநுட்ப வளர்ச்சி, சுதந்திரம் என்பவற்றுக்கு எதிராக செயல்படுவதாக தொழிநுட்பவியல் விமர்சகர்களும், சிந்தனையாளர்களும் நம்புகின்றனர். இக்காரணத்தினாலேயே, மாற்றுவடிவமான திறந்த ஆவண வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நியமத்தில் வெவ்வேறு வகையான ஆவணங்களை கையாள்வதற்கு அவற்றுக்கேயுரிய சிறப்பான கோப்பு அமைப்புக்கள் உண்டு. இத்துணை அமைப்புக்கள் அனைத்தும் திறந்த ஆவண வடிவ நியமத்தினுள் அடங்கும். ODT - இது உரை கோப்புக்களுக்கானது ODS - விரிதாட்களுக்கானது ODP - அளிக்கைகளுக்கானது ODG - வரைகலைக்கானது தற்போது திறந்த ஆவண வடிவத்தை ஆதரிக்கும் மென்பொருட்கள் உரை ஆவணம் (.odt) Abiword 2.4 (reading from 2.4, reading and writing from 2.4.2) eZ publish, supports import and export of writer documents via extension — Content management system IBM Workplace Documents 2.6+ KWord 1.4+ NeoOffice 1.2 Writer (import only) OpenOffice.org Writer (full support from 2.0, import only 1.1.5) Scribus 1.2.2+ imports ODT StarOffice 8 Writer, proprietary commercially-supported product that reads and writes OpenDocument; based on OpenOffice.org TEA text editor (in the read-only mode) TextMaker 2005 (import only; in beta as of 2005) Visioo Writer 0.6 — Document viewer [Writely], a web-based word processor, can read/write OpenDocument word processing (ODT) format Ajaxwrite விரிதாட்கள் (.ods) Gnumeric IBM Workplace Documents 2.6+ KSpread NeoOffice 1.2 Calc (import only) OpenOffice.org Calc 2.0 StarOffice 8 Calc அளிக்கைகள் (.odp) IBM Workplace Documents 2.6+ KPresenter NeoOffice 1.2 Impress (import only) OpenOffice.org Impress 2.0 StarOffice 8 Impress வரைகலை (.odg) NeoOffice 1.2 Draw (import only) OpenOffice.org Draw Scribus 1.2.2+ (import only) — Desktop publishing application தேடு பொறிகள் Beagle 0.1.4, Gnome project desktop search engine. Indexes and searches multiple file formats, including OpenDocument files. Google Desktop Search has an unofficial OpenDocument plug-in available, supporting ODT, OTT, ODG, OTG, ODP, OTP, ODS, OTS, and ODF OpenDocument formats. Kat Desktop Search Environment , the KDE desktop search engine, supporting ODT, ODP, ODS, ODF, and ODC Copernic, Desktop Search Engine for the Windows Platform supporting OpenOffice.org documents (ODT, OTT, ODM, OTH, ODS, OTS, ODP, OTP) (versions: 1.1, 2.0) Windows Desktop Search , indexes OpenOffice.org documents using an IFilter included in the installation of the Windows version of OpenOffice.org. An alternative IFilter that does not require OpenOffice.org to be installed can be found here. மேலும் காண்க ஓப்பன் ஆபிசு திறந்த மூல மென்பொருள் கோப்பு வடிவங்கள் ஆரக்கிள் மென்பொருட்கள்
5905
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%29
சேரன் (கவிஞர்)
உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன். 1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. எனினும் 70களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கவியரசன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளர். சிறுகதைகளும் எழுதிவரும் இவர், இலக்கிய விமர்சன ஈடுபாடும் உள்ளவர். ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். பலருடைய நூல்கள் இவரது அட்டை ஓவியத்துடன் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது நூல்கள் இரண்டாவது சூரிய உதயம் (1983) யமன் (1984) கானல் வரி (1989) எலும்புக் கூடுகளின் ஊர்வலம் (1990) எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993) நீ இப்பொழுது இறங்கும் ஆறு (2000) உயிர் கொல்லும் வார்த்தைகள் "மீண்டும் கடலுக்கு" (காலச்சுவடு பதிப்பகம்) "காடாற்று" (காலச்சுவடு பதிப்பகம்) விருதுகள் ஓ.என்.வி. குருப்பு அவர்களின் நினைவாக வழங்கப்படும் ஓஎன்வி சர்வதேச இலக்கிய விருது (ONV International Literary Award), 2016 மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் இரண்டாவது சூரிய உதயம் - நூலகம் திட்டம் யமன் - நூலகம் திட்டம் நீ இப்பொழுது இறங்கும் ஆறு - நூலகம் திட்டம் மீண்டும் கடலுக்கு - நூலகம் திட்டம் உயிர் கொல்லும் வார்த்தைகள் - நூலகம் திட்டம் எருமைகளும், ஐ.நா. அவையும் கவிஞன் கவிதை: நிலம், போர், காதல்| The Hindu - 23.08.2015 ஈழத்து எழுத்தாளர்கள் கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் சமூகவியலாளர்கள் ஈழத்துக் கவிஞர்கள்
5906
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
சுபத்திரன்
சுபத்திரன் (ஏப்ரல் 16, 1935 - அக்டோபர் 30, 1979, மட்டக்களப்பு) இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில், தன்னை முற்போக்கு இலக்கிய கவிஞராக அடையாளப்படுத்திக்கொண்ட கவிஞர் இவர். வாழ்க்கைக் குறிப்பு தங்கவடிவேல் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். தகப்பனார் பெயர் கந்தையா, தாயார் தெய்வானைப்பிள்ளை. ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்றுப் பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். ஆரம்பத்தில் கொழும்பிலும் பின்னர் மட்டக்களப்பிலும் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். மாக்சியவாதி சுபத்திரனுடைய இலக்கிய ஆளுமை அவரை மட்டக்களப்பின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக ஆக்கியது. சாதி, ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து அதன் போராட்டங்களில் தானும் ஒரு பங்காளியாக நின்று உழைத்தார். இந்தியாவில் இருந்து மட்டக்களப்பில் தங்கியிருந்த கிருஷ்ணர் குட்டியின் நட்பு சுபத்திரனுக்குக் கிடைத்தது. அவரின் உந்துதலால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மார்க்சிய சித்தாந்தங்களின் மூலம் அடக்குமுறைக்கெதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வைப் பெற்றார். போராட்டக் கவிஞர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்து நின்று கவிதைகளைப் படைத்தார். `இரத்தக்கடன்' (சாதியத்திற்கு எதிரான கவிதைத் தொகுப்பு), `சுபத்திரன் கவிதைகள்' அதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு `கவிஞர் சுபத்திரன் கவிதைகள்' வெளிவந்தன. ஒடுக்குமுறைக்கெதிராக - ஆத்திரம், கோபம், கிண்டல் என்பவற்றை முன்னிறுத்திக் கவிதைகளை யார்த்தார். கருத்து நிலையில் ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்து எழுகின்றார். வெகுஜனப் போராட்டங்களில் உத்வேகத்துடன் ஈடுபட்டார். வன்முறைக்கு வன்முறை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். மார்க்சிய எண்ணம் கொண்ட சுபத்திரன் ஆயுதப் புரட்சியை ஆதரித்தார். மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வெகுஜனப் போராட்டங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு அவற்றின் தாக்கத்தால் பல கவிதைகளை எழுதினார். 1969 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற `தீண்டாமை ஒழிப்பு வெகுஜன மகாநாட்டில்' வைத்து முழுக்க முழுக்க சாதிய எதிர்ப்புக் கவிதைகள் அடங்கிய சுபத்திரனின் `இரத்தக் கடன்' என்னும் கவிதைத்தொகுதி வெளியிட்டு வைக்கப்பட்டது. சுபத்திரன் ஏற்றுக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தமே இதற்குக் காரணமாக அமைந்தது. சொல்லிலும் செயலிலும் பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து காட்டினார். தான் இணைந்திருந்த கொம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள போலி இடதுசாரிகளுக்கு எதிராக அவருடைய அரசியல் கவிதைகள் 1970 களில் வெளிவருவதைக் காணலாம். மறைவு சுபத்திரன் 1979 இல் அகால மரணமாகும் வரை கவிதைகளை எழுதினார். கொம்யூனிஸ்டாகவே இறக்கும் வரை பற்றுறுதியுடன் இருந்தார். வெளியான நூல்கள் இரத்தக்கடன், கவிதைத்தொகுப்பு, 1969 சுபத்திரன் கவிதைகள், 2002 இவற்றையும் பார்க்க சங்கானைக்கு என் வணக்கம் வெளி இணைப்புகள் கவிஞர் சுபத்திரன் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்துக் கவிஞர்கள் 1935 பிறப்புகள் 1979 இறப்புகள்
5907
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
ஜெனீவா உடன்படிக்கை
ஜெனீவா உடன்படிக்கை என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறது வரலாறு. இதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற் (Jean Henri Dunant) 1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள் பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. 1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்கள் விரிவாக்கப் பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது'''. இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்பு வந்த குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சிகள், விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக 1977 ஜூன் 8 ல் 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் அமேரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகள் 1977 உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன. அங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள் 1864 ல் முதலாவது உடன்படிக்கை 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது. 2. எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும். 3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும். 4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும். 1929 ல் மூன்றாவது உடன்படிக்கை 1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும். 2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும். 3. கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது. 1949 ல் நான்காவது உடன்படிக்கை 1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது. 2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது 3. யுத்த கைதிகளை நடத்தும் விதம் பற்றியது 4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது. 1977 உடன்படிக்கையின் சாரம் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது. நடைமுறை படுத்தல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம் ஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும். அதிகாரங்களை பாதுகாத்தல் இந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது. போர் குற்றங்கள் உடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது கல்லறை மீறப்படுதல்''(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை வேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல் வேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல் எதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல் வேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல் நான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை பிணைய கைதிகளாக பிடித்தல் தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல் இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும். மேற்கோள்கள் மனித உரிமைக் கருவிகள் ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகள் பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கம்
5922
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE
நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தியதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடிஇன மக்கள் தலைவர் ஆவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் படுகிறார்.1937ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு,மாடு,மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா,லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941 ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டம்சட்டக்கல்வி படித்தார். தங்கச்] சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார். அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்துகொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அரசியல் அறப் போராட்டங்கள் தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றிக் கண்டார். 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்பிவில் நகரில் நடத்தினார். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு திசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆயுதப் போராட்டங்கள் இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். 1961 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார். 1961, திசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை சூலை, 2008 வரை நடைமுறையில் இருந்தது. 1962, ஆகத்து 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress) தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு சூன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. சிறை மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார். மண்டேலாவின் விடுதலைக்கான போராட்டங்கள் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. "மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. பேச்சு வார்த்தைகள் மண்டேலா தனது கோரிக்கைகள் தொடர்பாக டெக்ளார்க் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் இருந்து தனது பல கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டார். தென்னாப்பிரிக்கா ஒரு மக்களாட்சி நாடாகப் பின்னர் மலர்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்தன. விடுதலை அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பெப்ரவரி 11, 1990 அன்று விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.. 1990ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்..விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே பெப்ரவரி 11, 1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலைச் செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:- மக்களாட்சி, தேர்தல், தென்னாப்பிரிக்காவின் அதிபராதல் 1994, மே 10 ஆம் தியதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனப்பின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடுச் செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். உண்மைக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான செயற்பாடுகள் நீண்ட போராட்டத்தின் பின், அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் மண்டேலா ஈடுபட்டார். அவற்றில் முக்கியமானது உண்மையும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக் குழுவை (Truth and Reconciliation Commission) அமைத்து பழிவாங்கலைத் தவிர்த்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது ஆகும். உலக வரலாற்றுக்கே, ஆண்டைகள், அடிமைகள் உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை கருதப்படுகிறது. உடல்நலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 சூன் மாதம் 8 ஆம் தியதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 சூன் 23 ஆம் தியதி அறிவித்தது. மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 சூன் 27 ஆம் தியதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை இரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர். மறைவு 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார். விருதுகள் நேரு சமாதான விருது உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். பாரத ரத்னா விருது 1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசு‍ 1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் தியதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுருவச்சிலை ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகத்து 2007 இல் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா நாடாளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார். நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காட்சியகம் இவற்றையும் பார்க்கவும் நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வல்லிக்கண்ணன், நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா சரித்திர புருசன் நெல்சன் மண்டேலா மண்டேலா புகைப்படங்களின் காட்சியகம் டைம் இதழில் மண்டேலா குறித்த விவரிப்பு மண்டேலா வீடியோ ஆப்பிரிக்க அரசுத்தலைவர்கள் தென்னாப்பிரிக்க அரசியல்வாதிகள் அறப் போராளிகள் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 1918 பிறப்புகள் காந்தியவாதிகள் 2013 இறப்புகள் லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள் காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள் சாகரவ் பரிசு பெற்றவர்கள்
5927
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D
விக்கிமேற்கோள்
விக்கி மேற்கோள் (Wikiquote), விக்கிப்பீடியாவை நடத்தும் விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் விக்கி மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது புகழ்பெற்ற மக்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களஞ்சியமாகும். இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது. தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள் விக்கிப்பீடியா விக்கிப்பீடியா விக்சனரி விக்கி மேற்கோள் விக்கிநூல்கள் விக்கி செய்திகள் விக்கியினங்கள் விக்கிமீடியா பொதுவகம் மேல்-விக்கி விக்கிப்பயணம் விக்கிமீடியா பொதுவகத்தில் மேற்கோள்கள் விக்கிமீடியா திட்டங்கள்
5931
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
நகராக்கம்
நகர்ப்புறத் (urban) தன்மையின் அளவு அல்லது அதன் அதிகரிப்பு நகராக்கம் எனப்படுகின்றது. இது ஒரு குறிக்கப்பட்ட பகுதி குறைந்த நகர்ப்புற இயல்பைக் கொண்டிருந்து கூடிய நகர்ப்புற இயல்புடையதாக மாற்றம் பெறுவதைக் குறிக்கும் அதே நேரம், கூடிய நாட்டுப்புறத் (rural) தன்மைகளைக் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதி ஒரு நகர்ப்புறப் பகுதியுடன் இணக்கப்படுவதன் மூலம் நகர்ப்புறமாகக் கருதப்படுவதையும் குறிக்கும். பொதுவாக நகராக்கத்தை அளவிடும்போது மொத்தக் குடித்தொகையின் எத்தனை விழுக்காடு நகர்ப்புறப் பகுதிகளில் வாழுகின்றனர் என்று குறிப்பிடப் படுகின்றது. உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 2050 ஆம் ஆண்டில் நகரமயமாதலால் நகரங்களில் வசிப்பர் என ஒரு நிபுனர்க்குழு ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் பார்க்க காடழிப்பு தொழில்மயமாதல் மேற்கோள்கள் நகராக்கம் நில மேலாண்மை நகரப் புவியியல் மனிதப் புலப்பெயர்வு
5932
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88
பைஞ்சுதை
பைஞ்சுதை (அ) சீமந்துக் கொங்கிறீற்று (அ) கற்காரை (Concrete; காங்கிரிட்) என்பது சிமெண்ட், நுண் சேர்பொருள், பருமனான சேர்பொருள், நீர் மற்றும் பிற மூலப் பொருட்களைக் கொண்டு குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படும் ஒரு கட்டிடபொருள் ஆகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது மணலையும், பருமனான சேர்பொருள் என்பது சரளை அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது. காங்கிரிட் உடன் நீரை சேர்க்கும் போது வேதிவினையின் காரணமாக அது திடப்பொருளாகவும் மற்றும் கடினத்தன்மை உடையதாகவும் மாறுகின்றது. பார்க்கவும்  சீமந்துக் கொங்கிறீற்று (cement concrete)  திடம் குறை கற்காரை (lean concrete)  கற்காரை உறுப்பு (concrete member)  காற்றூட்டக் கற்காரை (aerated concrete) கற்காரைத் தரம் (grade of concrete)  பரற்கொங்கிறீற்று (gravel concrete)  கற்காரைக் கலக்கி (concrete mixer)  கற்காரைப் பிணைப்பு (bond in concrete) கொங்கிறீற்றுருக்கு (concrete steel)  கொங்கிறீற்று முளைத்தூண் (concrete pile) வெளி இணைப்புகள் http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Voc-DC-TM.pdf http://www.valaitamil.com/tho-paramasivam-culture-life_12160.html http://tamildictionary.org/english_tamil.php?id=12502 கட்டிடப் பொருட்கள் சிற்பக்கலைப் பொருட்கள்
5933
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5.%20%E0%AE%85.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
வ. அ. இராசரத்தினம்
வ. அ. இராசரத்தினம் (5 சூன் 1925 - 22 பெப்ரவரி 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக "வ. அ." என அறியப்படுபவர். "ஈழநாகன்", "கீழக்கரை தேவநேயப் பாவாணர", "வியாகேச தேசிகர்" என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். வாழ்க்கைக் குறிப்பு திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் இரோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 இல் மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார். இலக்கியப் பயணம் 1946 இல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றார். அங்குதான் அவர் தனது மழையால் இழந்த காதல் என்ற சிறுகதையை எழுதினார். இது 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இவரது முதற் கவிதை திருகோணமலையில் இருந்து அ. செ. முருகானந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த எரிமலை என்ற பத்திரிகையில் 1948 இல் வெளிவந்தது. இவர் தனது இலக்கியப் பயணத்தை சுய வரலாற்று நூலாக இலக்கிய நினைவுகள் என்ற பெயரில் எழுதியுள்ளார். அரசியலில் வ. அ. இராசரத்தினம் 1959 மூதூர் கிராமசபைத் தேர்தலில் பிரதேச சுயாட்சியை வலியுறுத்திப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிற்கால வாழ்க்கை ஈழப்போரில் இராசரத்தினத்தின் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது சேகரிப்பிலிருந்த பெறுமதியான நூல்களும் அவரது வீட்டுடன் தீக்கிரையாகின. வீடிழந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அதனால் அவரது வீட்டிலிருந்த அவரது சொந்த அச்சுக்கூடமும் அழிந்தது. போரில் மனைவியை இழந்தார். வேறொரு தாக்குதல் சம்பவத்தில் தனது மகளையும், மருமகனையும் இழந்தார். இராசரத்தினம் 2001 பெப்ரவரி 22 வியாழக்கிழமை தனது 75-ஆவது அகவையில் மூதூரில் காலமானார். விருதுகள் அகில இலங்கை சாகித்திய மண்டல விருது வட-கிழக்கு மாகாண சாகித்திய விருது இலங்கை அரசின் 'தமிழ்மணி' பட்டம் வடகிழக்கு மாகாண ஆளுநர் விருது இவரது நூல்கள் துறைக்காரன் (நாவல்) கொழுகொம்பு (நாவல்) கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்) ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி) ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்) தோணி (சிறுகதைத் தொகுதி) பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை) மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்) இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள், அன்பர் வெளியீடு, திருக்கோணமலை, 1995) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஒரு காவியம் நிறைவு பெறுகிறது - நூலகம் திட்டம் காவிய எழுத்தாளன் இராசரத்தினம் - மலைநாடானின் பதிவு துறைக்காரன் & ஒரு காவியம் நிறைவு பெறுகிறது - தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு ஈழத்து எழுத்தாளர்கள் 1925 பிறப்புகள் 2001 இறப்புகள் மூதூர் நபர்கள் இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்
5942
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பெரு வெடிப்புக் கோட்பாடு
பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே. அடிப்படைகள் பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருள்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருள்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை. வரலாறும் கண்டறிந்த விதமும் இந்தப் பெரு வெடிப்புக் கோட்பாட்டுக்குப் பல முந்து கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து ஒண்முகில்களும் (இவை விண்மீன் பேரடைகள் அல்ல. விண்மீன் உருவாக்கத்துக்கான ஒளிவிடும் வளிம முகில்களே. அக்காலத்தில் ஒண்முகில் (நெபுலா) என்பது விண்மீன் பேரடைகளையே குறித்தது. இப்போது இவை ஒண்முகில்கள் எனப்படுகின்றன). தொலைவாக நகர்ந்து செல்கின்றன என்பதை டாப்ளர் விளைவு மூலம் அறிந்தார். ஆனால் இவர் நமது பால் வழியின் உள்ளே உள்ள ஒண்முகில்களுக்கு மட்டுமே இந்த நிலைமையைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், அல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து பிரீடுமன் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார். அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார். அதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார். கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிகப் பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டுமென் சமன்பாட்டைத் தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களைக் கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன எனக் கண்டறிந்தார். விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார். அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால்வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால்வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார். விண்மீன் பேரடைகளுக்கான நகர்வைக் கணிக்கும் போது அப்பேரடை பால்வழியை நெருங்கினால் ஊதா நிறமும் விலகினால் சிவப்பு நிறமும் ஆய்வுக்கருவியில் வரும். ஆனால் இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும்போது எல்லாப் பேரடைகளுமே கருவியில் சிவப்பு நிறத்தையே காட்டின. அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே உப்புகிறது என்னும் உப்பற் கோட்பாட்டை முன் வைத்தார். இதன்படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும். அந்த அனைத்துப் பொருள்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும். அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்துப் பெருவெடிப்புக்குக் காரணமானது என முடிவுக்கு வந்தார். பெரு வெடிப்பு பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல்14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப்படுகின்றது. ஆரம்பத்துக்குப் பின் பெருவெடிப்பு தொடங்கியதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருள்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றன என்பதைப் பின்வரும் வரிசை குறிக்கின்றது. வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின. அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின. மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தம்முடைய வெப்பத்தைத் தணித்ததால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும் உருவாகின. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின. பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின. இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின. இவை தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தற்காலமானது ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது. பெருவெடிப்புக்கான தொடக்க நிலைமைகள் கோட்பிரீடு இலைப்னிசு ஒரு கேள்வியை எழுப்பிப் பேசுகிறார்: "இன்மைக்கு மாற்றாக, ஏன் ஏதோவொன்று இருக்க வேண்டும்? தன் இருப்பிற்கான காரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பொருளின் இருப்பே இதற்கான போதுமான அறிவார்ந்த பதிலைத் தரும். " இயற்பியல் மெய்யியலாளராகிய டீன் இரிக்கிள்சு எண்களும் கணிதவியலும் அவற்றோடு அவற்றைச் சார்ந்த விதிகளும் கட்டாயமாக இருக்கின்றன என்கிறார். பெரு வெடிப்பின் தொடக்கத்தில் ஏற்பட்ட குவைய அலைவுகளோ அல்லது பிற இயற்பியல் விதிகளோ, பொருண்மம் தோன்றுதலுக்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கலாம். புடவியின் அறுதி கதி கருப்பு ஆற்றலைக் கண்டுபிடிப்பதற்கு முன், புடவியின்வருங்காலம் பற்றி அண்டவியலாளர்கள் இருவகைக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர். புடவியின் பொருண்மை அடர்த்தி, உய்யநிலைப் பொருண்மை அடர்த்தியை விட கூடுதலாக அமைந்தால், அப்போது புடவி தன் பெரும உருவளவை அடைந்ததும் குலைய தொடங்கும். மீண்டும் அது மேலும் அடர்ந்து மேலும் வெப்பம் கூடித் தொடக்கத்தில் இருந்த நிலைமைக்குச் செல்லும். இந்நிகழ்வு பெருங் குறுக்கம் எனப்படுகிறது. சமய, மெய்யியல் விளக்கங்கள் புடவித் தோற்றத்தின் விளக்கமாக அமையும் பெரு வெடிப்புக் கோட்பாடு சமயத்திலும் மெய்யியலிலும் கணிசமான இடத்தை வகிக்கிறது. இதனால், இது சமய அறிவியல் உறவு பற்றிய விவாதத்தில் உயிர்ப்புள்ள பகுதியாக விளங்குகிறது. சிலர் பெரு வெடிப்பு படைப்போன் இருப்பினைக் காட்டுகிறது என வாதிடுகின்றனர். எனவே பெரு வெடிப்பைத் தங்கள் புனித நூல்களில் குறிப்பிடுகின்றனர். ஆனால் பிறரோ பெரு வெடிப்பு அண்டவியலில் படைப்போனுக்கான இடம் வெறுமையாகிறது என வாதிக்கின்றனர். மேலும் காண்க அண்டவியல் குறிப்புகள் மேற்கோள்கள் நூல்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் The Story of the Big Bang - STFC funded project explaining the history of the universe in easy-to-understand language Big Bang Cosmology WMAP The Big Bang - NASA Science Big bang model with animated graphics Evidence for the Big Bang புறநிலை அண்டவியல் வானியற்பியல் கோட்பாடுகள் முதன்மைக் கட்டுரை புறநிலைப் புடவி
5943
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
அண்டம்
அண்டம் அல்லது பிரபஞ்சம் அல்லது புடவி (universe, ) என்பது பரவெளி, நேரம், மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பிற அனைத்து வகையான பொருள் மற்றும் ஆற்றல்களையும் உட்கொண்டது. பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது அண்டத்தின் வளர்ச்சியைப் பற்றிய தற்போதைய அண்டவியல் விளக்கமாகும். இந்தக் கோட்பாட்டின் மதிப்பீட்டின்படி, 13.799±0.021 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியிடமும் நேரமும் ஒன்றாக வெளிவந்தன, அத்துடன் அண்டம் அன்றிலிருந்து விரிவடைந்து வருகிறது. முழு அண்டத்தின் இடஞ்சார்ந்த அளவு தெரியவில்லை என்றாலும், காட்சிக்குட்பட்ட பேரண்டம் குறைந்தபட்சம் 93 பில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்டிருக்க வேண்டும் என்பதை அளவிடக்கூடியதாக உள்ளது. அண்டத்தின் ஆரம்பகால அண்டவியல் மாதிரிகள் பண்டைய கிரேக்க மற்றும் இந்திய மெய்யியலாளர்களால் உருவாக்கப்பட்டன. அத்துடன் அவை புவிமையமாக இருந்து புவியை மையத்தில் வைத்தன. பல நூற்றாண்டுகளாக, மிகவும் துல்லியமான வானியல் அவதானிப்புகள், நிக்கோலசு கோப்பர்நிக்கசை சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியனை வைத்து சூரியமைய மாதிரியை உருவாக்க வழிவகுத்தது. உலகளாவிய ஈர்ப்பு விதிகளை வளர்ப்பதில், ஐசக் நியூட்டன் கோப்பர்நிக்கசின் படைப்புகளையும், யோகான்னசு கெப்லரின் கோள் இயக்க விதிகளையும் டைக்கோ பிராகியின் அவதானிப்புகளையும் கட்டமைத்தார். மேலும் பல அவதானிப்பு மேம்பாடுகள், பால்வீதியில் உள்ள நூற்றுக்கணக்கான பில்லியன் நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று என்பதை உணர வழிவகுத்தது, இது பிரபஞ்சத்தில் சில நூறு பில்லியன் விண்மீன் திரள்களில் ஒன்றாகும். விண்மீன் மண்டலத்தில் உள்ள பல நட்சத்திரங்கள் கிரகங்களைக் கொண்டுள்ளன. மிகப்பெரிய அளவில், விண்மீன் திரள்கள் ஒரே மாதிரியாகவும் எல்லா திசைகளிலும் ஒரே மாதிரியாகவும் விநியோகிக்கப்படுகின்றன, அதாவது பிரபஞ்சத்திற்கு ஒரு விளிம்போ மையமோ இல்லை. சிறிய அளவுகளில், விண்மீன் திரள்கள் கொத்துகள் மற்றும் சூப்பர் கிளஸ்டர்களில் விநியோகிக்கப்படுகின்றன, அவை விண்வெளியில் மகத்தான இழைகளையும் வெற்றிடங்களையும் உருவாக்குகின்றன, இது ஒரு பரந்த நுரை போன்ற கட்டமைப்பை உருவாக்குகிறது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த கண்டுபிடிப்புகள், பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருப்பதாகவும், அதன் பின்னர் விண்வெளி விரிவடைந்து வருவதாகவும் அதிகரித்து வரும் விகிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு வெடிப்புக் கோட்பாட்டின் படி, ஆரம்பத்திலிருந்து இருக்கும் ஆற்றலும் பொருளும் பிரபஞ்சம் விரிவடைவதால் ஆரம்பத்தை விட குறைந்த அடர்த்தியாகிவிட்டன. சுமார் 10−32 வினாடிகளில் நடந்த பணவீக்க சகாப்தம் எனும் ஆரம்பகட்ட வேகமான விரிவாக்கம், மற்றும் அறியப்பட்ட நான்கு அடிப்படை சக்திகளைப் பிரிப்புக்குப்பின், பிரபஞ்சம் படிப்படியாக குளிர்ந்து, தொடர்ந்து விரிவடைந்து, முதல் துணைத் துகள்கள் மற்றும் எளிய அணுக்கள் உருவாக அனுமதித்தது. இருண்ட விஷயம் படிப்படியாக சேகரிக்கப்பட்டு, ஈர்ப்பு விசையின் தாக்கத்தின் நுரை போன்ற வெற்றிடம் மற்றும் இழைகள் (foam-like filaments and voids) போன்ற அமைப்பை உருவாக்குகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தின் ராட்சத மேகங்கள் படிப்படியாக அடர்த்தியான இருண்ட விஷயம் இருக்கும் இடங்களுக்கு இழுக்கப்பட்டு, முதல் விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள் மற்றும் இன்று காணப்பட்ட அனைத்தையும் உருவாக்கின. விண்மீன் திரள்களின் இயக்கத்தைப் படிப்பதில் இருந்து, கணக்கிடப்பட்டதை விட பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், நெபுலாக்கள் மற்றும் விண்மீன் வாயு ஆகிய காணக்கூடிய பொருட்களை விட அதிகமான விஷயங்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது; இந்த கண்ணுக்கு தெரியாத விஷயம் கரும்பொருள் (dark matter) என்று அழைக்கப்படுகிறது (கரும்பொருள் என்றால், அது இருப்பதற்கு பலவிதமான வலுவான மறைமுக சான்றுகள் உள்ளன, ஆனால் நாங்கள் அதை நேரடியாகக் கண்டறியவில்லை). கரும்பொருள் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபஞ்ச மாதிரி ஆகும். பிரபஞ்சத்தில் உள்ள நிரை மற்றும் ஆற்றலில் சுமார் 69.2% ± 1.2% [2015] ஒரு அண்டவியல் மாறிலி (cosmological constant) (அல்லது, ΛCDM நீட்டிப்புகளில், அளவிடக்கூடிய புலம் (scalar field) போன்ற பிற இருண்ட ஆற்றல்) இதுவே விண்வெளி விரிவாக்கத்திற்கு காரணம், மற்றும் சுமார் 25.8% ± 1.1% [2015] கரும்பொருள். எனவே சாதாரண ('பேரியோனிக்') விஷயம், பிரபஞ்சத்தின் 4.84% ± 0.1% [2015] மட்டுமே. நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் புலப்படும் வாயு மேகங்கள் அனைத்தும் சாதாரண பொருட்கள் 6% மட்டுமே உருவாகின்றன. பிரபஞ்சத்தின் இறுதி விதியைப் பற்றியும், பிக் பேங்கிற்கு முந்தையது எதுவாக இருந்தாலும், மற்ற இயற்பியலாளர்கள் மற்றும் தத்துவவாதிகள் ஊகிக்க மறுக்கிறார்கள், முந்தைய மாநிலங்களைப் பற்றிய தகவல்களை எப்போதும் அணுகமுடியுமா என்று சந்தேகிக்கிறார்கள். சில இயற்பியலாளர்கள் பல்வேறு பல்லண்டம் (multiverse) கருதுகோள்களை பரிந்துரைத்துள்ளனர், இதில் நமது பிரபஞ்சமும் இதேபோன்று இருக்கும் பல பிரபஞ்சங்களில் ஒன்றாக இருக்கலாம் அதனால் தான், அறியப்பட்ட அண்டத்தின் விட்டம் 27.46 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக 92 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்றாகி இருக்கின்றது. அண்டம் இப்படித்தான் தோன்றி இருக்க வேண்டும் என்று இப்போது பல அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த கோட்பாட்டுக்கு big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு) என்று பெயரிட்டு உள்ளனர். அண்டம் தோன்றிய போது அது மிகப் பெரிய ஆற்றலோடு (energy) தோன்றியது. அப்போதுதான் காலம் (time) என்ற ஒரு கோட்பாடே உருவாகியது; அதுவே காலத்தின் தொடக்கம். அப்போது அண்டத்தின் ஆற்றல் அடர்த்தி (energy density) மிக மிக அதிகமாக இருந்தது. அண்டத்தின் இந்த நிலை 10−43 நொடிகள் (seconds) நீடித்தது. அண்டம் இவ்வாறு இருந்த காலக் கட்டத்தை Planck epoch (ப்ளாங்க் காலக் கட்டம்) என்று கூறுவர். இந்த ப்ளாங்க் காலக் கட்டத்தில் அண்டத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது புவி ஈர்ப்பு (gravity) என்ற விசை (force) மட்டுமே. அதற்குப் பிறகு, அண்டம் திடுமென, 10−32 நொடிகளில் மிகப் பெரிதாக ஆயிற்று. இந்த நிகழ்வுக்கு cosmic inflation (அண்ட வீக்கம்)என்று பெயர். அண்ட வீக்கம் என்ற ஒன்று உண்மையில் நடந்ததே என்று பல செய்முறை ஆய்வுகளில் (experimental research) தெரிய வந்துள்ளது. அண்ட வீக்கத்துக்குப் பிறகு, அன்று தொடங்கி இன்று வரை அண்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஊது பை (balloon) போன்று விரிவடைந்து கொண்டிருக்கின்றது. பல செய்முறை ஆய்வுகள் அண்டம் விரிவடைந்து கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன. அண்டத்தில் உள்ள விண்மீன் குழுக்கள் (galaxy) மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. நமக்கு அருகில் உள்ள விண்மீன் குழுக்களை விட மிகத்தொலைவில் உள்ள குழுக்கள் மிக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றன. இது மட்டுமன்றி, இந்த விண்மீன் குழுக்களின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதை எட்வின் அபள் (Edwin Powell Hubble) என்ற அமெரிக்க வானியல் ஆய்வாளர் கண்டு பிடித்தார். விண்மீன் குழுக்கள் மிக வேகமாகப் போவதைப் பார்த்துத்தான் எட்வின் அபள் நம் அண்டம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னார். விண்மீன் குழுக்களின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதற்குக் காரணம் என்ன? அண்டம் வெடித்துச் சிதறும் போது விண்மீன் குழுக்களின் வேகம் நாள் தோறும் குறைந்து கொண்டே போக வேண்டுமே அல்லாது வேகம் அதிகரித்துக் கொண்டு போவது ஏன்? இதற்குக் காரணம் அண்டத்தில் மறைந்து கிடக்கும் ஒருவகையான dark energy எனப்படும் மறை ஆற்றல் (கருப்பு ஆற்றல்) காரணமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதைப் பற்றி சரிவரத் தெரியாததால், அண்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கு விரிவடைந்து கொண்டு போகும், இறுதியில் அதன் முடிவுதான் என்ன, என்பன போன்ற கேள்விகட்கு இன்னும் விடை கிடைக்காமலேயே இருக்கின்றது. நம் அண்டத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகளையும் நான்கு அடிப்படை விசைகளை வைத்துக்கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த நான்கு அடிப்படை விசைகளாவன: பொருள் ஈர்ப்பு விசை (gravitational force), மின்காந்த விசை (electromagnetic force), மென்விசை (weak interactions), அணுவின் கருப் பெருவிசை (strong nuclear force) (பார்க்க: அடிப்படை விசைகள்). இதில் அண்டத்தின் இயக்கத்தைப் பேரளவில் கட்டுப் படுத்துவது gravitational force எனப்படும் பொருள் ஈர்ப்பு (புவி ஈர்ப்பு) விசையே. அண்டமானது அதன் அளவு மற்றும் வரலாறு முழுவதும் ஒத்த இயற்பியல் விதிகளாலும் மாறிலிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என சோதனைகளும் ஆய்வுகளும் கூறுகின்றன. அண்டவியல் தொலைவில் ஈர்ப்பு விசையே முதன்மையான விசையாகும், மேலும் தற்போது பொது சார்பு கொள்கையே புவியீர்ப்புக் கோட்பாடுகளுக்கான மிகத்துல்லியமானது ஆகும். மீதமுள்ள மூன்று அடிப்படை விசைகள் மற்றும் அவ்விசைகள் செயல்படும், அறியப்பட்ட அனைத்துத் துகள்கள் ஆகியவை தரநிலை மாதிரியின் மூலம் விவரிக்கப்படுகின்றன. அண்டமானது, குறைந்தபட்சம், வெளியின் மூன்று பரிமாணங்களையும் காலத்தின் ஒரு பரிமாணத்தையும் கொண்டுள்ளது, இருந்தபோதிலும் மிகச்சிறிய கூடுதல் பரிமாணங்களையும் கருத்தில் கொள்ளாமல் விட இயலாது. காலவெளி அமைப்பு, மென்மையாகவும் எளிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் தோன்றுகிறது. விண்வெளி மிகச்சிறிய சராசரியான வளைவைக் கொண்டுள்ளது. ஆகவே அண்டம் முழுமைக்குமான சராசரியை யூக்ளிடியன் வடிவவியல் துல்லியமாகக் கணக்கிடுகிறது. மாறாக, குவாண்டம் அளவில் காலவெளி அமைப்பு மிகவும் சீரற்றதாக உள்ளது. அண்டம் என்ற சொல்லானது, பொதுவாக அனைத்தையும் கொண்டுள்ளது என்று வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், மாறுபட்ட வரையறையைப் பயன்படுத்தி, "அண்டம்" என்பது மொத்தமாக பல்லண்டம் என்று அழைக்கப்படும் பல தொடர்பற்ற "அண்டங்களில்" ஒன்று என நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குமிழ் அண்டக் கொள்கையில், எண்ணிலா வெவ்வேறுவிதமான "அண்டங்கள்" உள்ளன, அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட இயற்பியல் மாறிலிகளைக் கொண்டிருக்கின்றன. இதேபோல், பல உலகங்கள் கருதுகோளில், ஒவ்வொரு குவாண்டம் அளவீட்டிலும் புதிய "அண்டங்கள்" தோற்றுவிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த அண்டங்கள் நமது அண்டத்திலிருந்து முழுமையாக தொடர்பில்லாமல் இருப்பதாகக் கருதப்படுவதால், அவற்றை சோதனையின் மூலம் கண்டறிய இயலாது. பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதிலும், சில அண்டவியல்கள் மற்றும் அண்டவியலாளர்கள் அண்டம் பற்றிய கருத்துக்களைக் கூற முயன்று வந்துள்ளனர். முந்தைய அளவுசார்ந்த புவிமைய மாதிரிகளை பண்டைய கிரேக்கர்கள் உருவாக்கியிருந்தனர். அவர்கள் அண்டமானது முடிவிலா வெளியை எப்போதும் கொண்டிருக்கிறது, ஆனால் ஒரு பொதுமையம் கொண்ட அளவிடமுடிந்த கோளங்களை உள்ளடக்கியது எனவும் – நிலையான நட்சத்திரங்களைப் பொறுத்து சூரியன் மற்றும் பல்வேறு கோள்கள் – சுற்றி வருகின்றன ஆனால் பூமி நிலையானது, நகராமல் உள்ளது எனவும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக, மேலும் துல்லியமான ஆய்வுகளும் மேம்படுத்தப்பட்ட புவியீர்ப்புக் கொள்கைகளும் வந்ததன் காரணமாக, முறையே கோபர்நிக்கஸின் சூரியமைய மாதிரியும் நியூட்டனின் சூரியக்குடும்ப மாதிரியும் உருவாகின. வானவியலில் குறிப்பிட்ட முன்னேற்றங்கள் பால்வழித்திரளின் பண்புரு விளக்கத்திற்கும், விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்புக்கும் மேலும் நுண்ணலை பின்புலக் கதிரியக்கத்திற்கும் வழிகோலியது; விண்மீன் திரள்கள் மற்றும் அவற்றின் நிறமாலை வரிகளின் பரவல் பங்கீடு பற்றிய கவனமான ஆய்வுகள் நவீன அண்டவியல் வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியது. சொற்பிறப்பு, பொருள்கள் மற்றும் வரையறைகள் யுனிவெர்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லானது பழைய ஃப்ரெஞ்சு சொல்லான யுனிவெர்ஸ் என்பதிலிருந்து வருகிறது, மேலும் இந்த ஃப்ரெஞ்சு சொல்லானது இலத்தீன் சொல்லான யுனிவெர்ஸம் என்ற சொல்லிலிருந்து உருவாகியுள்ளது. இந்த இலத்தீன் சொல்லானது சைசுரோ மற்றும் பின்னர் பல ஆசிரியர்களால் தற்கால ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படும் அதே பொருளில் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலத்தீன் சொல்லானது செய்யுள் சேர்ப்பான யுன்வோர்ஸம் என்பதிலிருந்து உருவாகியுள்ளது — இச்சொல் லுக்ரிடியஸ் என்பவரின் De rerum natura (பொருட்களின் இயல்பு பற்றி ) என்ற புத்தகத்தின் தொகுதி IV (வரி 262) இல் பயன்படுத்தப்பட்டுள்ளது — இது யுன், யூனி (யூனுஸ் அல்லது "ஒன்" ஆகிய சொற்களின் சேர்ப்பு வடிவம்) ஆகிய சொற்களையும் வோர்ஸம், வெர்ஸம் ("சுழலும், உருளும், மாறும் ஒன்று எனப் பொருள்படும்" வெர்டெர் என்ற சொல்லின் இறந்தகாலப் பெயரடைச் செயப்பாட்டு வினை) என்ற சொற்களையும் இணைக்கிறது. லுக்ரீஷஸ் இந்தச் சொல்லை "ஒன்றாகச் சுழலும் அனைத்தும், ஒன்றாகச் சேர்ந்த அனைத்தும்" என்ற பொருளில் பயன்படுத்தினார். யுன்வோர்ஸம் என்ற சொல்லுக்கு மாற்றுப் பொருள் புரிதல், "ஒன்றாக சுழலும் அனைத்தும்" அல்லது "ஒன்றால் சுழற்றப்படும் அனைத்தும்" என்பதாகும். இந்தப் பொருளில், அண்டம் என்ற பொருள் தரும் முந்தைய கிரேக்கச் சொல்லான περιφορα என்பதன் "வட்டத்தில் பயணிக்கும் ஒன்று" என்ற மொழிபெயர்ப்பைக் கருதலாம், உண்மையில் இது உணவு உட்கொள்ளும் நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது, அதாவது உணவு உண்ண அமர்ந்திருக்கும் விருந்தினர்களிடையே வட்ட வடிவில் உணவானது எடுத்துச் செல்லப்படுவதைக் குறிக்கப் பயன்பட்டது. இந்தக் கிரேக்கச் சொல்லானது அண்டத்தின் பண்டைய கிரேக்க மாதிரி ஒன்றைக் குறிக்கிறது. இந்த மாதிரியின் படி அனைத்துப் பொருள்களும் பூமியை மையமாகக் கொண்ட சுழலும் கோளங்களில் உள்ளன எனக் கருதப்பட்டது; அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி, வெளியில் இருக்கும் கோளத்தின் சுழற்சியே உள்ளிருக்கும் அனைத்தின் சுழற்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாக உள்ளது. பூமி நிலையாகவும் சொர்க்கங்கள் பூமியைச் சுற்றி வருவதாகவும் கிரேக்கர்கள் நம்பியது இயல்பானதே, ஏனெனில் அப்படி இல்லை என்பதை நிரூபிக்க கவனமிக்க விண்வெளி மற்றும் இயற்பியல் அளவீடுகள் (ஃபோகால்ட் பெண்டுலம் போன்றவை) தேவைப்பட்டன. "யுனிவெர்ஸ்" என்ற சொல்லுக்கு, பழம் கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் பித்தாகோரஸிலிருந்து தொடர்ந்து பலர் பயன்படுத்திய சொல், το παν (அனைத்தும்) என்பதாகும், இது அனைத்துப் பொருட்கள் (το ολον) மற்றும் அனைத்து வெளி (το κενον) ஆகியவற்றைக் குறிக்கிறது. பழம் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் கருத்துப்படி, யுனிவெர்ஸ் என்ற சொல்லின் பொருள்களில் κοσμος (உலகம், அகிலம் எனப் பொருள்படும்) மற்றும் ஃபிஸிக்ஸ் என்ற சொல்லின் வேர்ச்சொல்லான φυσις (இயற்கை எனப் பொருள்படும்) ஆகியன அடங்கும். இதே பொருள் இலத்தீன் ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர் (டாட்டம், முண்டுஸ், நேச்சுரா ), மேலும் அண்டம் என்ற சொல்லுக்கான பொருள் கொண்ட சொற்கள் தற்கால மொழிகளிலும் உள்ளன, எ.கா., ஜெர்மன் மொழியிலுள்ள டாஸ் ஆல், வெல்டால் மற்றும் நேச்சுர் ஆகியன. எவெரிதிங் (theory of everything என்பதில் உள்ளதைப் போல), காஸ்மோஸ் (cosmology என்பதில் உள்ளதைப் போல), வேர்ல்ட் (many-worlds hypothesis என்பதில் உள்ளதைப் போல) மற்றும் நேச்சுர் (natural laws அல்லது natural philosophy என்பதில் உள்ளதைப் போல) போன்ற, இதே பொருள் கொண்ட சொற்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. பரந்த வரையறை: உண்மை நிலையும் நிகழ்தகவும் அண்டத்தைப் பற்றிய பரந்த வரையறை, இடைக்கால தத்துவ அறிஞர் ஜொஹான்னெஸ் ஸ்காட்டஸ் எர்யுஜெனா என்பவரின் De divisione naturae என்ற பிரபலமான புத்தகத்தில் காணப்படுகிறது, அவர் அதை, அனைத்தும் என வரையறுக்கிறார்: இருக்கும் அனைத்தும் மற்றும் இல்லாத அனைத்தும். எர்யுஜெனாவின் வரையறையில் காலம் கருத்தில் கொள்ளப்படவில்லை; எனவே அவரது வரையறையில், இப்போது இருக்கும் அனைத்தும், இதுவரை இருந்த அனைத்தும் மற்றும் இனி இருக்கப்போகும் அனைத்தும் மற்றும் அதே போல, இப்போது இல்லாத அனைத்தும், இதுவரை இல்லாத அனைத்தும் மற்றும் இனி எதிர்காலத்திலும் இல்லாதவை அனைத்தும் என அனைத்தும் அடங்கும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வரையறையை, பின்னாளில் வந்த தத்துவ அறிஞர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் முழுவதும் வேறுபடாத ஒன்று குவாண்டம் இயற்பியலில் மீண்டும் உருவானது, அது பெரும்பாலும் ஃபெய்மெனின் பாதை-தொகுப்பு சமன்பாட்டில் உள்ளதாகும். அந்தச் சமன்பாட்டின் படி, அமைப்பின் தொடக்க நிலை முழுமையாக வரையறுக்கப்பட்ட நிலையில் நிகழ்த்தப்படும் சோதனைகளின் பல முடிவுகளின் நிகழ்தகவு வீச்சுகளானது, அந்த அமைப்பானது தொடக்க நிலையிலிருந்து இறுதி நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ள அனைத்துப் பாதைகளின் கூடுதலால் நிர்ணயிக்கப்படுகிறது. இயல்பாக, ஒரு சோதனைக்கு ஒரு முடிவே இருக்க முடியும்; வேறு விதமாகக் கூறுவதானால், இந்த அண்டத்தில் அலைச் சார்பின் தொகுப்பு எனப்படும் குவாண்டம் அளவீட்டின் மூலம் உண்மையான ஒரு முடிவே கிடைக்கச் சாத்தியக்கூறுள்ளது (ஆனால் கீழே பல்லண்டம் பகுதியில் உள்ள பல உலகங்கள் கருதுகோள் என்பதைப் பார்க்கவும்). நன்கு வரையறுக்கப்பட்ட இந்தக் கணித விளக்கப்படி, இல்லாத ஒன்றும் கூட (சாத்தியக்கூறுள்ள அனைத்துப் பாதைகள்) இறுதியில் என்ன இருக்கும் (சோதனையின் முடிவு) என்பதைத் தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பிடும்படியான எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு எலக்ட்ரானும் மற்ற அனைத்து எலக்ட்ரான்களுடன் உள்ளார்ந்தப் பண்பில் ஒத்தவையாக உள்ளன; இதனால், சமச்சீர் பரிமாற்றம் எனப்படுகின்ற, அவை தங்கள் நிலையைப் பரிமாறிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டே நிகழ்தகவு வீச்சுகள் கணக்கிடப்பட வேண்டும். அண்டம் பற்றிய இக்கருத்து, இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் ஒருங்கே முன்வைக்கிறது, இது புத்த மதத்தின் தத்துவங்களான ஷூன்யத்தா, மெய்ம்மையின் சார்பற்ற உருவாக்கம், காட்ஃப்ரைட் லெய்ப்னிஸின் தற்செயல் நிகழ்வு மற்றும் உணர முடியாதவற்றின் அடையாளம் போன்ற நவீனக் கருத்துக்களுக்கும் இணையாக உள்ளது. உண்மையான வரையறை பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தின் படி, அண்டம் என்பது இருக்கும், இருந்த மற்றும் இருக்கப் போகும் அனைத்தையும் உள்ளடக்கியது என வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறை மற்றும் நமது தற்காலப் புரிதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அண்டமானது பின்வரும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது: வெளி மற்றும் காலம், இரண்டும் சேர்த்து கால-வெளி அல்லது வெற்றிடம் என அழைக்கப்படும்; பருப்பொருள் மற்றும் ஆற்றலின் பல வடிவங்கள் மற்றும் கால-வெளியை நிரப்பிக்கொள்ளும் உந்தம்; மற்றும் முதல் இரண்டையும் நிர்வகிக்கும் இயற்பியல் விதிகள். இந்தக் கூறுகளை பின்னர் கீழே உள்ள பகுதிகளில் விளக்கமாகக் காணலாம். அண்டம் என்ற சொல்லின் மற்றொரு தொடர்புடைய வரையறை, தற்போது என்பது போன்ற அண்டவியல் காலத்தின், ஒரு கணத்தில் இருக்கும் அனைத்துமாகும், அதாவது "அண்டம் இப்போது மைக்ரோ அலைகள் கதிர்வீச்சில் சீராகக் குளித்தது" என்ற சொற்றொடரில் உள்ளதைப் போன்று. அண்டத்தின் முன்று கூறுகளும் (காலவெளி, பருப்பொருள்-ஆற்றல் மற்றும் இயற்பியல் விதிகள் ஆகியவை) ஓரளவு அரிஸ்டாட்டில் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. அரிஸ்டாட்டிலின் The Physics ("பிசிக்ஸ்" என்ற சொல்லை நாம் பெற்றது Φυσικης என்னும் இந்தச் சொல்லிலிருந்தே) என்ற புத்தகத்தில், அவர் το παν ஐ (அனைத்தையும்) ஒத்த மூன்று கூறுகளாகப் பிரித்துள்ளார் அவை: பருப்பொருள் (அண்டம் உருவாக்கப்பட்டிருக்கும் பொருள்), வடிவம் (வெளியில் அந்தப் பருப்பொருளின் அமைப்பு) மற்றும் மாற்றம் (பருப்பொருளானது எவ்வாறு உருவாகிறது, அழிக்கப்படுகிறது அல்லது அதன் குணங்கள் எவ்வாறு மாறுகிறது மற்றும் அதேபோல் வடிவமானது எவ்வாறு மாற்றப்படுகிறது). இயற்பியல் விதிகள் எனப்படுபவை, பருப்பொருளின் பண்புகள், வடிவம் மற்றும் அவற்றின் மாற்றங்களை நிர்வகிக்கும் விதிகள் என அறியப்படுகின்றன. பிற்கால தத்துவ அறிஞர்களான லுக்ரிடியஸ், அவரோயீஸ், அவிசென்னா மற்றும் பேரக் ஸ்பினோஸா போன்றோர், இந்தப் பகுப்பை மாற்றியமைத்தார்கள் அல்லது சீர்ப்படுத்தினார்கள்; எடுத்துக்காட்டாக, அவரோயீஸும் ஸ்பினோஸாவும் நேச்சுரா நேச்சுரன்ஸ் (அண்டத்தை நிர்வகிக்கும் தற்போதைய கொள்கைகளை) முந்தைய செயலிலாக் கூறுகளின்மீது செயல்படும் நேச்சுரா நேச்சுராட்டா எனப்படும் கூறுகளை வேறுபடுத்தினர். இணைக்கப்பட்ட கால-வெளியாக வரையறை இருக்கின்ற, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள முடியாத, தொடர்பில்லாத கால-வெளிகளைக் கருதுவது சாத்தியமானதே. எளிதான உருவகப்படுத்தலுக்கு, தனித்தனி சோப்புக் குமிழ்களின் தொகுப்பைக் கருதுவது எளிதாகும், இதில் ஒரு சோப்புக் குமிழின் மேல் இருக்கும் பார்வையாளரால் பிற குமிழ்களின் மீது இருக்கும் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது, கொள்கையளவிலும் கூட. ஒரு பொதுவான சொல்லியலின் படி, கால-வெளியின் ஒவ்வொரு "சோப்புக் குமிழும்" ஒரு அண்டமாகக் குறிக்கப்படுகிறது, இதில் நமது குறிப்பிட்ட கால-வெளியானது அண்டம் எனக் குறிக்கப்படுகிறது, இது நாம் நமது நிலாவை நிலா என அழைப்பது போலவே. இந்தத் தனித்தனி கால-வெளிகளின் மொத்தத் தொகுதியானது பல்லண்டம் எனக் குறிக்கப்படுகிறது. கொள்கையின் படி, தொடர்பில்லாத பிற அண்டங்கள் கால-வெளியின் வேறுபட்ட பரிமாணவியல்களையும் பிரதேசவியல்களையும், பருப்பொருள் மற்றும் ஆற்றலின் பல்வேறு வடிவங்களையும் மற்றும் வேறுபட்ட இயற்பியல் விதிகளையும் மற்றும் இயற்பியல் மாறிலிகளையும் கொண்டிருக்கலாம், எனினும் இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது உண்மையின் அடிப்படையில் இல்லை. அறியக்கூடிய உண்மையைப் பொறுத்த வரையறை இன்னுமொரு கட்டுப்படுத்தப்பட்ட வரையறையின் படி, அண்டம் என்பது நமது இணைக்கப்பட்ட கால-வெளியில் உள்ள அனைத்துமாகும், இதில் அதுவும் நாமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள முடியும். பொது சார்பு கொள்கையின் படி, வெளியின் சில பகுதிகள் நமது பகுதிகளுடன் அண்டத்தின் ஆயுள் முழுவதிலும் கூட எப்போதும் தொடர்பு கொள்வதில்லை, இதற்கு வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகமும் தொடர்ச்சியாக நிகழும் வெளியின் விரிவாக்கமுமே காரணம். எடுத்துக்காட்டுக்கு, அண்டமானது எப்போதும் அழியாமல் இருந்தாலும் கூட, பூமியிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ செய்திகள் வெளியின் சில பகுதிகளை ஒருபோதும் அடையாது; ஒளியானது வெளியில் பயணிக்கும் வேகத்தை விட மிக அதிகமான வேகத்தில், வெளியானது விரிந்துகொண்டே இருக்கலாம். இங்கு, வெளியின் அந்தக் குறிப்பிட்ட பகுதிகள் இருப்பவையாகவும் மேலும் நமது இருப்பைப் போலவே உண்மையாகவே இருப்பதன் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்; ஆனாலும் நாம் அவற்றோடு என்றும் தொடர்பு கொள்ள முடியாது என்பதை அழுத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெளியில், நம்மால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் நம்மைப் பாதிக்கக்கூடிய பகுதியே காணக்கூடிய அண்டம் எனக் குறிக்கப்படுகிறது. சரியாகக் கூறினால், காணக்கூடிய அண்டமானது பார்வையாளரின் இருப்பிடத்தைப் பொறுத்தது. பயணிக்கும் ஒரு பார்வையாளர், நிலையாக இருக்கும் பார்வையாளரை விட அதிகமான கால-வெளிப் பகுதியோடு தொடர்பு கொள்கிறார், இதனால் பயணிப்பவர் காணக்கூடிய அண்டமானது நிலையானவர் காணக்கூடிய அண்டத்தை விடப் பெரியதாக இருக்கும். இருப்பினும், அதி வேகமாகப் பயணிக்கும் பயணரால் கூட வெளியின் அனைத்துப் பகுதிகளுடனும் தொடர்பு கொள்ள முடியாது. உண்மையில், காணக்கூடிய அண்டம் என்பது நமது பால்வெளி விண்மீன் திரளில் உள்ள, காண்பதற்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து நம்மால் அறியக்கூடிய அண்டத்தையே குறிக்கிறது. அளவு, வயது, உள்ளடக்கம், கட்டமைப்பு மற்றும் விதிகள் அண்டமானது மிகப் பெரியதும் அளவில் முடிவிலாததுமாகும்; நாம் காணக்கூடிய பருப்பொருளானது குறைந்தபட்சம் 93 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிற்குப் பரவியுள்ளன. இதனுடன் ஒப்பிடுகையில், ஒரு சராசரி விண்மீன் திரளின் விட்டம் வெறும் 30,000 ஒளியாண்டுகளே, மேலும் அடுத்தடுத்துள்ள உள்ள இரு விண்மீன் திரள்களுக்கிடையே உள்ள தொலைவு வெறும் 3 மில்லியன் ஒளியாண்டுகளே. எடுத்துக்காட்டில் உள்ளது போல நமது பால்வழித் திரளானது தோராயமாக 100,000 ஒளியாண்டுகள் விட்டத்தைக் கொண்டுள்ளது, மேலும் நமது அருகாமையிலுள்ள விண்மீன் திரளான ஆந்திரோமெடா விண்மீன் திரளானது, தோராயமாக நமது விண்மீன் திரளிலிருந்து 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நமது காணக்கூடிய அண்டத்தில், தோராயமாக 100 பில்லியன் (1011) விண்மீன் திரள்கள் உள்ளன . இவற்றில், தோராயமாக பத்து மில்லியன் (107) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் குள்ளர்கள் எனப்படும் திரள்கள் முதல் ஒரு டிரில்லியன் (1012) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் பூதங்கள் எனப்படும் திரள்கள் வரையிலான அளவில் மாறுபடும் பல விண்மீன் திரள்கள் உள்ளன, இவை அனைத்தும் விண்மீன் திரளின் நிறை மையத்தைச் சுற்றி வருகின்றன. நாம் காணக்கூடிய பருப்பொருள், அண்டம் முழுவதும் சீராக (ஒருபடித்தானதாகப் ) பரவியுள்ளது, இந்தப் பரவலின் சராசரித் தொலைவு 300 மில்லியன் ஒளியாண்டுகளுக்கும் அதிகம். இருப்பினும் குறைந்த நீள-அளவீடுகளில் பருப்பொருளானது "தொகுப்புகளாக" இருப்பதாக அறியப்படுகிறது, அதாவது வரிசைவாரியான தொகுப்பாக உள்ளது; பல அணுக்கள் சேர்ந்து நட்சத்திரங்களாகவும் பல நட்சத்திரங்கள் சேர்ந்து விண்மீன் திரள்களாகவும், பல விண்மீன் திரள்கள் சேர்ந்து தொகுப்புகளாகவும், மீத்தொகுப்புகளாகவும் மேலும் இறுதியாக மிகப் பெரிய அளவிலான அமைப்பான விண்மீன் திரள் பெருஞ்சுவராகவும் அமைந்துள்ளன. அண்டத்தின் காணக்கூடிய பருப்பொருள், திசை ஒருமியதாகவும் பரவியுள்ளது, அதாவது நாம் காணக்கூடிய எந்த ஒரு திசையும் பிற திசையிலிருந்து வேறுபடுவதில்லை; விண்வெளியின் ஒவ்வொரு பகுதியும் தோராயமாக ஒரே உள்ளடக்கத்தையே கொண்டுள்ளது. அண்டமானது தோராயமாக 2.725 கெல்வின் வெப்பநிலையிலுள்ள ஒரு வெப்பச் சமநிலையிலுள்ள கரும்பொருள் நிறமாலையைச் சார்ந்து, மிக அதிக அளவில் திசை ஒருமிய நுண்ணலைக் கதிர்வீச்சிலும் குளித்துள்ளது . இவ்வாறு பெரிய அளவீட்டைப் பொறுத்த அண்டமானது ஒருபடித்தானதாகவும் திசை ஒருமியதாகவும் இருக்கிறது என்ற கருதுகோள், அண்டவியல் கொள்கை, எனப்படுகிறது, இது விண்ணியல் ஆய்வுகளாலும் ஆதரிக்கப்படுகிறது. அண்டத்தின் தற்போதைய ஒட்டுமொத்த அடர்த்தி மிகவும் குறைவானது, தோராயமாக இதன் அளவு 9.9 × 10−30 கிராம்கள்/கன செண்டிமீட்டர் ஆகும். இந்த நிறை-ஆற்றலானது 73% அறியப்படாத ஆற்றலையும் 23% குளிர்ந்த அறியப்படாத பருப்பொருளையும் 4% இயல்பான பருப்பொருளையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு, அணுக்களின் அடர்த்தியானது ஒவ்வொரு நான்கு கன மீட்டர் பருமனுக்கும், ஒற்றை ஹைட்ரஜன் அணுவின் மடங்கின் வரிசையில் உள்ளது. அறியப்படாத பருப்பொருள் மற்றும் அறியப்படாத ஆற்றலின் குணங்கள் பெரும்பாலும் அறியப்படாததாகவே உள்ளது. அறியப்படாத பருப்பொருளும் இயல்பான பருப்பொருள் போலவே ஈர்ப்பு விசைக்குட்படுகிறது. மேலும் இது அண்டத்தின் விரிவாக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது; மாறாக அறியப்படாத ஆற்றலானது அதன் விரிவாக்கத்தை முடுக்குகிறது. அண்டமானது மிகப் பழமையானது மற்றும் வளர்ந்துகொண்டே இருப்பது. அண்டத்தின் வயதைக் கூறும் அதிகபட்சத் துல்லியமான மதிப்பீடு 13.73±0.12 பில்லியன் ஆண்டுகளாகும், இது அண்டவியல் நுண்ணலைப் பின்புலக் கதிர்வீச்சின் அடிப்படையிலானது. தனிச்சார்புள்ள மதிப்பீடுகள் (ரேடியோக் கதிர்வீச்சு வயது கணிப்பு போன்ற முறைகளின் அடிப்படையில்) அதிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும், அவை அண்டத்தின் வயது 11–20 பில்லியன் ஆண்டுகள்[51] முதல் 13–15 பில்லியன் ஆண்டுகள் வரை என ஒப்புக்கொள்கின்றன. அண்டமானது வரலாறு முழுவதும் ஒரே விதமாக இருக்கவில்லை; எடுத்துக்காட்டுக்கு, குவாசார்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஆகியவை மாறிவிட்டன மேலும் வெளியும் விரிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. 30 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீன் திரளிலிருந்து வரும் ஒளியானது 13 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே பயணித்திருந்தாலும் பூமியிலுள்ள விஞ்ஞானிகள் அதை எப்படி அறிய முடியும் என்பதை இந்த விரிவாக்கமே விளக்குகிறது; அவற்றுக்கிடையே உள்ள வெளியானது விரிவடைந்துள்ளது. தொலைவிலுள்ள விண்மீன் திரள்களிலிருந்து வரும் ஒளியானது சிவப்பு நகர்வுக்குட்படுகிறது; அதாவது ஒளியின் பயணத்தின் போது, உமிழப்பட்ட போட்டான்களின் அலை நீளங்கள் அதிகரிக்கின்றது மற்றும் அதிர்வெண் குறைகின்றது என்ற கருத்தின் படி, இந்த விரிவாக்கமானது இசைவுள்ளதாக அறியப்படுகிறது. இந்த வெளியின் விரிவாக்கமானது முடுக்கப்படும் வீதமானது, டைப் லா சூப்பர் நோவா பற்றிய ஆய்வுகளின் அடிப்படையிலும் பிற தரவுகளின் ஆதரிப்பிலும் உள்ளது. வெவ்வேறு வேதியியல் தனிமங்களின் குறிப்பாக ஹைட்ரஜன், டியூட்டிரியம் மற்றும் ஹீலியம் போன்றவற்றின் ஒப்புமை விகிதங்கள் அண்டம் முழுவதும், அதே வேளையில் அவற்றின் அறியக்கூடிய வரலாறு முழுவதும் ஒரே சீராக ஒத்தவையாக உள்ளன. அண்டமானது எதிர்ப்பொருளை விட அதிக அளவு பருப்பொருளையே கொண்டுள்ளது இது CP மீறலின் ஆய்வுகளுக்குத் தொடர்புடைய சாத்தியக்கூறுள்ள ஒரு சமச்சீரின்மையாகும். அண்டத்திற்கு நிகர மின்னேற்றம் இல்லை என அறியப்படுகிறது, மேலும் இதனால் அண்டவியல் நீள அளவீடுகளில் ஈர்ப்பு விசையே முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அண்டத்திற்கு நிகர உந்தமும் கோண உந்தமும் இருப்பதாகத் தெரிகிறது. அண்டமானது வரையறுக்கப்பட்டதெனில், நிகர மின்னேற்றம் இல்லாமல் இருப்பதும், உந்தமும் ஒப்புக்கொள்ளப்பட்ட இயற்பியல் விதிகளைப் (முறையே காஸ் விதி மற்றும் தகைவு-ஆற்றல்-உந்த சூடோபண்புருவின் விரிவற்றக் கொள்கை) பின்பற்ற வேண்டும். அண்டமானது மென்மையான காலவெளித் தொடர்பத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, இது வெளி சார்ந்த மூன்று பரிமாணங்களையும் காலம் சார்ந்த ஒரு (காலப்) பரிமாணத்தையும் கொண்டுள்ளது. சராசரியாக வெளியானது மிகத் தட்டையானதாக இருப்பதாக அறியப்படுகிறது (கிட்டத்தட்ட பூச்சிய வளைவு கொண்டுள்ளது), அதாவது யூக்ளிடியன் வடிவியலே அண்டத்தின் பெரும்பாலான அளவீடுகளில் சோதனை முறைகளில் அதிகபட்சத் துல்லியமான கொள்கையாக உள்ளது. காலவெளியும், குறைந்தது காணக்கூடிய அண்டத்தின் நீள அளவீட்டில் ஒரு எளிதாக இணைக்கப்பட்ட பிரதேசவியலைக் கொண்டுள்ளது. இருப்பினும், தற்கால ஆய்வு முடிவுகள், அண்டம் பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதற்கும் அதன் காலவெளியானது உருளை அல்லது முடிவிலாச் சுருளின் இரு பரிமாண வெளியின் அமைப்பை ஒத்து, பலப்படித்தான இணைக்கப்பட்ட ஒட்டுமொத்த பிரதேசவியலைக் கொண்டிருப்பதற்குமான சாத்தியக்கூறுகளைப் புறக்கணிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. அண்டமானது முழுவதும் ஒத்த இயற்பியல் விதிகள் மற்றும் இயற்பியல் மாறிலிகளால் நிர்வகிக்கப்படுகிறதாகத் தெரிகிறது. பெரும்பாலான இயற்பியலின் நிலையான மாதிரிகளின் படி, அனைத்துப் பருப்பொருளும் லெப்டான்கள் மற்றும் குவார்க்குகள் மற்றும் அவற்றைக் கொண்டுள்ள ஃபெர்மியான்கள் ஆகிய மூன்று கூறுகளால் ஆனது. இந்த அடிப்படைத் துகள்கள் அதிகபட்சம் அடிப்படைத் தொடர்புகளின் மூலம் தொடர்பு கொள்கின்றன: அவை மின்காந்தவியல் மற்றும் வலிகுறை இடைவினை ஆகியவற்றை உள்ளடக்கிய மின்-வலுவிலா தொடர்பு; குவாண்டம் குரோமோடைனமிக்ஸ் விவரிக்கும் வலுவான அணுக்கரு விசை; மற்றும் தற்காலத்தில் பொது சார்பு கொள்கையின் மூலம் சிறப்பாக விவரிக்கப்படும் ஈர்ப்பியல் ஆகியனவாகும். முதல் இரண்டு தொடர்புகளும் மறு-சீர்ப்படுத்தப்பட்ட குவாண்டம் புலக் கொள்கையால் விவரிக்கப்படக்கூடும், மேலும் குறிப்பிட்ட வகை காஜ் சமச்சீர்மைக்குரிய காஜ் போஸோன்கள் இவற்றுக்கு இடை ஊடகமாக இருக்கக்கூடும். சரக் கொள்கையின் பல வடிவங்கள் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தினாலும், பொது சார்பு கொள்கையின் மறு-சீர்ப்படுத்தப்பட்ட குவாண்டம் புலக் கொள்கை ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை. வெளி மற்றும் காலம் சார்ந்த நீள அளவீடுகள் போதுமான அளவு சிறியதாக இருக்கும்பட்சத்தில் சிறப்பு சார்பியல் கொள்கையானது அண்டம் முழுமைக்கும் பொருந்துவதாக நம்பப்படுகிறது; அவ்வாறு இல்லாவிட்டால் பொது சார்பியல் கொள்கையின் பொதுவான கொள்கையே பயன்படுத்தப்பட வேண்டும். பிளாங்கின் மாறிலியான h அல்லது புவியீர்ப்பு மாறிலியான G போன்ற இயற்பியல் மாறிலிகள் அண்டம் முழுவதிலும் கொண்டிருக்கும் குறிப்பிட்ட மதிப்புகளுக்கான விளக்கம் ஏதும் இல்லை. மின்சுமை, உந்தம், கோண உந்தம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அழிவின்மை விதிகள் போன்ற பல அழிவின்மை விதிகள் காணப்படுகின்றன; பெரும்பாலும் இந்த அழிவின்மை விதிகள் சமச்சீர் அல்லது கணிதவியல் ஒப்புமைகள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை எனக் கூற முடியும். வரலாற்று மாதிரிகள் அண்டம் (அண்டவியல்) மற்றும் அதன் தோற்றம் குறித்து பல மாதிரிகள் முன்மொழியப்பட்டுள்ளன, அந்த மாதிரிகள் அவை உருவான காலத்தில் கிடைத்த தரவு மற்றும் அண்டத்தின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தன. வரலாற்றின் படி அண்டவியல் மற்றும் அண்ட உற்பத்தியியல் ஆகியவற்றின் கொள்கைகள் பல விதமான கடவுள்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தன. இயற்பியல் விதிகளால் நிர்வகிக்கப்படும், அண்டத்தின் நடுநிலையான கொள்கைகளை முதலில் கிரேக்கர்களும் இந்தியர்களும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற விண்வெளி ஆய்வுகள் மற்றும் இயக்கம் மற்றும் ஈர்ப்பியல் கொள்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நமக்கு அண்டத்தின் மிகத் துல்லியமான விளக்கங்கள் கிடைத்துள்ளன. அண்டவியலின் நவீன சகாப்தம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 1915 இல் வெளிவந்த பொது சார்புக் கொள்கையுடன் தொடங்கியது, அது மொத்த அண்டத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் முடிவு ஆகியவற்றை அளவிடும் தன்மையில் கணிப்பதைச் சாத்தியமாக்கியது. ஒப்புக்கொள்ளப்பட்ட மிக நவீன அண்டவியல் கொள்கைகள் பொது சார்புக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தவை, அதிலும் குறிப்பாக, கணிக்கப்பட்ட பெரு வெடிப்புக் கொள்கை; இருப்பினும் எந்தக் கொள்கை சரியானது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் கவனமான அளவிடுகள் தேவை. தோற்றம் குறித்த புராணங்கள் பல கலாச்சாரங்களில் உலகத்தின் தோற்றத்தை விளக்கும் கதைகள் உள்ளன அவற்றை பொதுவான சில வகைகளில் பிரிக்கலாம். அப்படி ஒரு வகைக் கதையில் உலகமானது ஒரு உலக முட்டையிலிருந்து (ஹிரண்யகர்பன் - தங்கமுட்டை) தோன்றியதாகக் கூறப்படுகிறது; இது போன்ற கதைகளில் ஃபின்லாந்தின் காப்பியச் செய்யுளான கலேவாலா , சீனாவின் பாங்குவின் கதை அல்லது இந்தியாவின் பிரம்மானந்த புராணம் ஆகியவை அடங்கும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதைகளில், உலகின் தோற்றமானது ஒற்றை முழுமையிலிருந்து தோற்றுவிக்கப்படுகிறது அல்லது உருவாக்கப்படுகிறது. திபெத்தின் ஆதி புத்தா என்ற கருத்திலும், பண்டைய கிரேக்கத்தின் கையா (பூமித் தாய்) என்ற கதையிலும், ஆஜ்டெக் கடவுளான கோட்ளிக்கியூ அல்லது பண்டைய எகிப்திய கடவுள் ஆட்டம் ஆகிய கதைகளிலும் உலகின் தோற்றம் இவ்வாறே விளக்கப்பட்டுள்ளது. மற்றொரு வகைக் கதையில், உலகமானது மாவோரி கதையில்வரும் ராங்கியும் பாப்பாவும் போன்ற ஆண் மற்றும் பெண் கடவுளின் சேர்க்கையால் உண்டானது எனக் கூறப்படுகிறது. பிற கதைகளில், அண்டமானது கடவுளின் பிணம் போன்ற, அதற்கு முன்பே இருந்த பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, பாபிலோனியக் காப்பியமான எனுமா எலிஷ் என்பதில் உள்ள டயாமட் என்னும் கடவுளிடமிருந்து அல்லது ஸ்காண்டிநேவிய புராணத்தில் ஈமிர் என்ற பூதத்திடமிருந்து அல்லது ஜப்பானிய புராணத்தில் உள்ள இஸனாகீ மற்றும் ஈஸனாமி போன்ற தெய்வங்களிடமிருந்து உருவானது. மற்றொரு வகைக் கதை ஒன்றில், ஒரு தெய்வத்தின் கட்டளையால் உலகம் உருவாக்கப்பட்டது எனக்கூறப்படுகிறது. இக்கருத்து, ப்டா என்ற பழங்கால எகிப்தியக் கதையிலும் விவிலியத்தின் ஆதியாகமத்தில் உள்ள விளக்கங்களிலும் உள்ளதைப் போன்றது. பிற கதைகளில் அண்டமானது பிரம்மன் மற்றும் ப்ரக்ருததி அல்லது தாவோ மார்க்கத்தின் இயின் மற்றும் யாங் போன்ற அடிப்படைக் கொள்கைகளிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. தத்துவவியல் மாதிரிகள் அண்டத்தின் முற்கால தத்துவவியல் மாதிரிகள் இந்தியத் தத்துவம் மற்றும் இந்து சமயத் தத்துவம் ஆகியவற்றின் நூல்களான வேதங்களில் காணப்படுகின்றன. இவை கடந்த கி.மு. 2 ஆம் ஆயிரமாண்டைச்(வெண்கலக் காலத்தின் இடைக் காலம் முதல் இறுதிக்காலம் வரை) சேர்ந்தவை. அவை விவரிக்கும் பண்டைய இந்து அண்டவியலில், அண்டமானது உருவாவதும் அழிவதும் தொடர்ந்து ஒரு சுழற்சியாக நிகழ்ந்துகொண்டே உள்ளது, மேலும் இந்த ஒவ்வொரு சுழற்சிக்குமான காலம் 4,320,000 ஆண்டுகளாகும். பழங்கால இந்து மற்றும் புத்தமதத் தத்துவவாதிகளும் ஐந்து பூதங்களின்(அடிப்படைக் கூறுகள்) அடிப்படையிலான கொள்கையை வழங்கினர் அவை, வாயு (காற்று), அப் (நீர்), அக்னி (நெருப்பு), ப்ரித்வி/பூமி (புவி) மற்றும் ஆகாஷா (வெளி) ஆகியவனவாகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டில், வைஷேஷிகா பள்ளியின் நிறுவனரான கானடா என்பவர்அணுவியல்(ஆட்டோமிசம்) என்ற கொள்கையை உருவாக்கினார், அதில் ஒளி மற்றும் வெப்பம் ஆகியவை ஒரே பொருளின் இரு வகைகளே என முன்மொழிந்தார். கி.பி. 5ஆம் நூற்றாண்டில், புத்த அணுவியல் தத்துவவாதியான டிக்னாகா என்பவர் அணுக்கள் புள்ளியளவிலானவை, காலவரம்பற்றவை மற்றும் ஆற்றலால் ஆனவை என முன்மொழிந்தார். அவர்கள் உண்மையான பருப்பொருள் இருப்பதை மறுத்தனர், மேலும் இந்த நகர்வானது தொடர்ச்சியான ஆற்றலின் கண நேரப் பிரவாகத்தால்தான் நிகழ்கிறது என முன்மொழிந்தனர். கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்ரட்டீஸிற்கு முந்தைய கிரேக்கத் தத்துவவாதிகள், மேற்கத்திய உலகில் முற்காலத்தில் அறியப்பட்ட அண்டத்தின் தத்துவவியல் மாதிரிகளை உருவாக்கினர். முற்கால கிரேக்கத் தத்துவவாதிகள் நாம் காணும் தோற்றம் தவறாக இருக்கலாம் என்று கருதினர், ஆகவே தோற்றத்திற்குப் பின்னாலுள்ள அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தனர். குறிப்பாக, பருப்பொருளானது வடிவம் மாறக்கூடிய (எ.கா., பனிக் கட்டியிலிருந்து நீர், நீரிலிருந்து நீராவி என) திறனைப் பெற்றுள்ளதை அவர்கள் கவனித்தனர், மேலும் சில தத்துவவாதிகள் உலகிலுள்ள (மரம், உலோகம் போன்ற) அனைத்துப் பொருள்களும் தோற்றத்தில் வெவ்வேறு போலத் தெரிந்தாலும் அவை அனைத்தும் ஆர்ச்சே எனப்படும் ஒற்றைப் பொருளின் பல்வேறு வடிவங்களே ஆகும் என முன்மொழிந்தனர். முதலில் இவ்வாறு செய்தவர் தாலேஸ் என்பவராவார் அவர் அந்தப் பொருளை நீர் என அழைத்தார். அவரைத் தொடர்ந்து, அனாக்ஸிமெனீஸ் அதைக் காற்று என அழைத்தார், மேலும் ஆர்ச்சே துகளானது பல்வேறு வடிவங்களில் ஒன்றுபட்டு வேறுபட்டு இருப்பதற்குக் காரணமாக கவர்ச்சி மற்றும் விலக்கு விசைகள் இருக்க வேண்டும் எனக் கூறினார். எம்படாக்ளீஸ் என்பவர், அண்டத்தின் வேறுபட்ட தன்மையை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்படைப் பொருள்களின் கருத்து அவசியம் என முன்மொழிந்தார், மேலும் அனைத்து நான்கு அடிப்படைக் கூறுகளும் (பூமி, காற்று, நெருப்பு மற்றும் நீர்) இருந்ததாகவும் ஆனாலும் அவை வெவ்வேறு சேர்க்கை மற்றும் வடிவங்களில் இருந்ததாகவும் முன்மொழிந்தார். இந்த நான்கு-பூதக் கொள்கையை அவரைத் தொடர்ந்த பல தத்துவவாதிகளும் ஏற்றுக்கொண்டனர். எம்படாக்ளீஸுக்கு முந்தைய சில தத்துவவாதிகள் ஆர்ச்சேவானது குறைவான பொருள்களைக் கொண்டுள்ளது எனப் பரிந்துரைத்தனர்; ஹிராக்ளிட்டஸ் லோகோஸ் என்ற கருத்தை வலியுறுத்தினார், பித்தாகோரஸ் அனைத்துப் பொருள்களும் எண்களால் ஆனவை என்றும், தாலேஸின் மாணவாரன அனாக்ஸிமண்டர் எல்லாப் பொருளும் அப்பெய்ரான் எனும் கண்ணுக்குப் புலப்படாத பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என முன்மொழிந்தார், இது ஓரளவு குவாண்டம் ஃபோம் என்ற தற்காலக் கருத்தை ஒத்துள்ளது. அப்பெய்ரான் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் முன்மொழியப்பட்டன, அவற்றில் பிரபலமானது அனாக்ஸகோரஸ் என்பவரின் கொள்கையாகும், அது உலகிலுள்ள பல்வேறுபட்ட பொருள்கள் அனைத்தும் வேகமாகச் சுழலும் அப்பெய்ரானிலிருந்து தோற்றுவிக்கப்பட்டன, அதன் இயக்கமானது நவுஸ் (மனம்) கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என முன்மொழிந்தது. இன்னும் சில பிற தத்துவவாதிகள் — குறிப்பாக லியூஸிப்பஸ் மற்றும் டிமாக்ரிட்டஸ் போன்றோர் — அண்டமானது வெற்றிடம் எனப்படும் வெளியில் நகரக்கூடிய மற்றும் பகுக்க முடியாத அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது; இயக்கத்திற்கான தடையானது அடர்த்திக்கு நேர் விகிதத்திலிருக்கும், ஆகவே வெற்றிடத்தில் இயக்கத்திற்குத் தடை எதுவும் இருக்காது, எனவே முடிவிலா வேகத்தில் பொருட்கள் நகரும் என்ற கருத்தின் அடிப்படையில் இக்கருத்தை ("இயற்கையானது வெற்றிடத்தைப் புறக்கணிக்கிறது") அரிஸ்டாட்டில் எதிர்த்தார். ஹிராக்ளிட்டஸ் ஒரு உள்ளார்ந்த மாற்றத்தைக் குறித்து விவாதித்தாலும், அவரது சம காலத்தவரான பார்மெனிடீஸ், புரட்சிகரமான ஒரு கருத்தை முன்வைத்தார், அதில் அனைத்து மாற்றங்களும் தோற்றமே, அடிப்படை உண்மையானது மாறாமலும் ஒற்றை இயல்புள்ளதாகவுமே உள்ளது என கூறினார். பார்மெனிடீஸ், இக்கருத்தை το εν (ஒன்று) எனக் குறிப்பிட்டார். பார்மெனிடெஸின் கொள்கை பல கிரேக்கர்களுக்குக் உண்மையற்றதாகத் தோன்றியது, ஆனால் அவரது மாணவரான ஜெனோ ஆஃப் இலீ பல பிரபலமான முரண்பாடுகளை முன்வைத்து அவர்களுக்குச் சவால் விடுத்தார். இந்த முரண்பாடுகளை அரிஸ்டாட்டில், முடிவிலா பகுப்புக்குட்படும் தொடர்பகத்தை விளக்கி, அதனை வெளிக்கும் காலத்திற்கும் பொருத்தி விளக்கினார். அண்டமானது தொடக்கமற்ற முடிவிலாக் கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என நம்பிய கிரேக்கத் தத்துவவாதிகளுக்கு முரணாக, இடைக்கால தத்துவவாதிகளும் சமயவியலாளர்களும் அண்டமானது தொடக்கத்துடன் கூடிய ஒரு வரையறுக்கப்பட்ட கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தை உருவாக்கினர். இந்தக் கருத்தானது யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியம் ஆகிய மூன்று ஆப்ரஹாமிய சமயங்களின் உருவாக்கக் கருத்துக்களிலிருந்து உருவானவை. கிறிஸ்தவ தத்துவவாதியான ஜான் ஃபிலோப்பனஸ் என்பவர், முடிவிலாக் கடந்த காலம் என்ற பண்டைய கிரேக்கக் கருத்துக்கு எதிரான இப்படிப்பட்ட முதல் விவாதத்தை முன்வைத்தார். இருப்பினும், முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிரான நுட்பமான விவாதங்கள் பண்டைய இஸ்லாமிய தத்துவவாதி, அல்-கிண்டி (அல்கிண்டஸ்); யூத தத்துவவாதி, சாடியா கோன் (சாடியா பென் ஜோஸப்); மற்றும் இஸ்லாமிய சமயவியலாளர், அல்-கஸாலி (அல்கஸேல்) போன்றோரால் உருவாக்கப்பட்டன. அவர்கள் முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிராக இரண்டு தர்க்கரீதியான விவாதங்களை உருவாக்கினர், முதலாவது "உண்மையில் முடிவிலாததான ஒன்றின் இருப்பு சாத்தியமற்றது என்பதை அடிப்படையாகக் கொண்ட விவாதம்", அது இவ்வாறு கூறுகிறது: "உண்மையில் முடிவிலா ஒன்று இருக்க முடியாது." "நிகழ்வுகளின் வரையறுக்கப்படாத உலகியல்ரீதியான எதிர்-நிலைமாற்றமே உண்மையான முடிவிலியாகும்." " நிகழ்வுகளின் உலகியல் எதிர்-நிலைமாற்றம் இருக்க முடியாது." இரண்டாவது விவாதம், "ஒரு உண்மையான முடிவிலியை தொடர்ச்சியான கூடுதலின் மூலம் நிறைவு செய்வது சாத்தியமற்றது என்பதை அடிப்படையாகக் கொண்ட விவாதம்", அது இவ்வாறு கூறுகிறது: "ஒரு உண்மையான முடிவிலியை தொடர்ச்சியான கூடுதலின் மூலம் நிறைவு செய்ய முடியாது." "கடந்த கால நிகழ்வுகளின் உலகியல்ரீதியான தொடர்ச்சிகள், அடுத்தடுத்த கூடுதலாலே நிறைவடைந்துள்ளன." " கடந்த கால நிகழ்வுகளின் உலகியல் ரீதியான தொடர்ச்சிகள் ஒரு முடிவிலியாக இருக்க முடியாது." இவ்விரண்டு விவாதங்களுமே பிந்தைய கிறிஸ்தவ தத்துவவாதிகள் மற்றும் சமயவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன, மேலும் இரண்டாவது விவாதத்தை இம்மானுவேல் காண்ட் என்பவர் காலம் பற்றிய தனது ஒன்றுக்கொன்று முரணான இரு நியாயமான கருத்துக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்திய பின்னர், அது மிகவும் பிரபலமானது. வானவியல் மாதிரிகள் பாபிலோனிய வானியலாளர்கள், அண்டமானது கடலில் மிதக்கும் தட்டையான வட்டுப் போல உள்ளது என நம்பினர். இந்தக் கருத்தே அனாக்ஸிமண்டர் மற்றும் ஹெக்காட்டெஸ் ஆஃப் மிலேட்டஸ் போன்றோரின் பண்டைய கிரேக்க வரைபடங்களுக்கான அடிப்படையாக இருந்தது. இவ்வானியலாளர்களின் காலத்திய வானியலுக்குப் பிந்தைய வெகு குறுகிய காலத்தில், அண்டத்தின் பல வானியல் மாதிரிகள் முன்வைக்கப்பட்டன. விண்ணில் காணப்படும் பொருட்களின் இயக்கங்களைக் கண்ட பிற்கால கிரேக்கத் தத்துவவாதிகள் கூடுமான வரை உறுதியான சோதனை முடிவுகளின் அடிப்படையிலான அண்டத்தின் மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர். தெளிவான நிலையான மாதிரியானது எடோக்ஸஸ் ஆஃப் ஸ்னிடோஸ் என்பவரால் முன்மொழியப்பட்டது. இந்த மாதிரியின் படி, காலமும் வெளியும் முடிவிலாததும் தொடர்ச்சியானதுமாகும், பூமியானது கோள வடிவிலானது மற்றும் நிலையானது, மேலும் மற்ற அனைத்துப் பருப்பொருளும் ஒற்றை மையக் கோளப் பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த மாதிரியானது கால்லிப்பஸ் மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரால் மேலும் சீர்ப்படுத்தப்பட்டு தாலமியின் வானியல் ஆய்வு முடிவுகளுடன் முழுமையான ஒத்தத் தன்மையுடன் இருக்கும் வகையில் மாற்றப்பட்டது. இந்த மாதிரியின் வெற்றிக்கு பெரும்பாலும் காரணமாக அமைந்தது, (ஒரு கோளின் நிலை போன்ற) எந்த ஒரு சார்பையும் வட்ட இயக்கச் சார்புகளின் (ஃபோரியர் வகைகள்) தொகுப்பாகப் பிரிக்க முடியும் என்ற கணிதவியல் விதியே ஆகும். இருப்பினும், அண்டத்தின் புவிமைய மாதிரியை கிரேக்க விஞ்ஞானிகள் அனைவரும் ஏற்க வில்லை. கிரேக்க வானியலாளர் அரிஸ்டாச்சஸ் ஆஃப் சாமோஸ் என்பவரே முதன் முதலில் ஒரு சூரியமையக் கொள்கையை முன்மொழிந்தவராவார். சூரியமையக் கொள்கைக்கான புத்தகத்தின் அசல் உரை கிடைக்காவிட்டாலும், ஆர்க்கிமிடீஸின் த சாண்ட் ரெக்கோனர் என்ற புத்தகத்தில் அரிஸ்டாச்சஸின் சூரியமையக் கொள்கையைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஆர்க்கிமிடீஸ் எழுதியுள்ளதாவது: (ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பொருளின் படி) கெலான் ராஜாக்களே, பெரும்பாலான வானியலாளர்கள் "யுனிவெர்ஸ்" என்ற பெயரால் குறிப்பிடுவது பூமியின் மையத்தை தன் மையமாகக் கொண்டிருக்கும் கோளத்தையே என்பதையும் அதன் ஆரமானது பூமியின் மையம் மற்றும் சூரியனின் மையத்தை இணைக்கும் நேர்க்கோட்டின் நீளத்திற்குச் சமம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வானியலாளர்கள் கூற்றிலிருந்து நீங்கள் அறிந்துள்ள பொதுவான விளக்கம் இதுவே. ஆனால், அரிஸ்டாச்சஸ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார், அதில் உருவாக்கப்பட்ட கருதுகோள்களின் அடிப்படையில் அண்டமானது "யுனிவெர்ஸ்" என்ற சொல் குறிக்கும் அண்டத்தைக் காட்டிலும் பன்மடங்குப் பெரியது எனத் தெரிகிறது. அவரது கருதுகோள்களாவன: நிலையான விண்மீன்களும் சூரியனும் நகராமலும் பூமியே ஒரு வட்டத்தின் சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றுவதாகவும், சூரியன் ஒரு நீள்வட்டப் பாதையின் மையத்தில் இருப்பதாகவும், நிலையான விண்மீன்கள் அமைந்துள்ள கோளமும் சூரியனின் மையத்தையே மையமாகக் கொண்டுள்ளதாகவும், பூமி சுற்றிவரும் வட்டத்திற்கும் நிலையான விண்மீன்களுக்கும் இடையே உள்ள தொலைவுக்குமான விகிதம் அக்கோளத்தின் மேற்பரப்புக்கும் அதன் கோள மையத்திற்கும் உள்ள விகிதத்தின் அளவுக்கு உள்ளது. விண்மீன்கள் மிக மிகத் தொலைவில் உள்ளதாக அரிஸ்டாச்சஸ் நம்பினார், விண்மீன்களின் அறியப்பட்ட நகர்வானது பூமி சூரியனைச் சுற்றுவதைப் போல ஒன்றையொன்று சார்ந்தது என விளக்கும், கண்ணுக்குப் புலப்படும் இடமாறு தோற்றம் இல்லாததற்கு, அவை வெகு தொலைவில் இருப்பதே காரணம் எனக் கருதினார். பழங்காலத்தில் பொதுவாக விண்மீன்கள் இருப்பதாகக் கருதப்பட்ட தொலைவை விட உண்மையில் அவை மிக அதிகத் தொலைவில் உள்ளன, சூரியமைய நகர்வை தொலைநோக்கிகளைக் கொண்டே கண்டறிய முடியும் என்பதே, அவ்வாறு பண்டைய காலத்தில் கணித்தது தவறாக இருந்ததற்குக் காரணமாகும். புவிமைய மாதிரியானது கோள்களின் நகர்வைப் பொறுத்து இசைவுள்ளதாக உள்ளது, மேலும் அது கோள்களின் நகர்வை ஒத்த நிகழ்வான சூரியமைய நகர்வை அறிய முடியாததற்கான விளக்கமாகவும் உள்ளது. சூரியமையக் கொள்கையின் நிராகரிப்பு வலுவானதாக இருந்தது, பின்வரும் வரிகளில் (ஆன் த அப்பேரண்ட் ஃபேஸ் இன் தி ஆர்ப் ஆஃப் த மூன் என்ற புத்தகத்தில்) ப்ளூடார்ச் விளக்குவதைப் போல: அண்டத்தின் தீ மையத்தை [அதாவது பூமியை] நகர்வாதாகக் கூறி, தெய்வத்திற்கு எதிரான கருத்தைப் பரப்பியதற்காக அரிஸ்டாச்சஸ் ஆஃப் சாமோஸ் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டியது கிரேக்கர்களின் கடமை என, கிளியாந்தஸ் [அரிஸ்டாச்சஸின் சமகாலத்தவரும் ஸ்டோயிக்ஸின் (உணர்வாய்வாளர்கள்) தலைவருமானவர்] நினைத்தார், . . . அவர் சொர்க்கமானது நிலையானதாகவும் பூமியே சரிவான வட்டப் பாதையில் அதனைச் சுற்றி வருவதாகவும் அதே நேரத்தில் அது தன்னைத் தானே அதன் அச்சைப் பற்றியும் சுழல்வதாகவும் கருதினார். [1] அரிஸ்டார்ச்சஸின் சூரியமைய மாதிரியை ஆதரித்த மற்றொரு பழங்கால பிரபல வானியலாளர், அரிஸ்டார்ச்சஸுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் வாழ்ந்த கிரேக்க நாகரீகவியல் வானியலாளரான செலியூகஸ் ஆஃப் செலியூஷியா என்பவரே. ப்ளூடார்ச்சைப் பொறுத்தவரை, செலியூகஸ் மட்டுமே முதன் முதலில் சூரியமைய அமைப்பை பகுத்தறிவுரீதியாக விளக்கியுள்ளார், ஆனால் அவர் பயன்படுத்திய சார்பின் மாறிகள் எவை என்பது தெரியாமலே உள்ளது. சூரியமையக் கோட்பாட்டிற்கு ஆதரவான செலியூகஸின் விவாதங்கள் சிறிதளவு அலைகள் ஏற்படும் நிகழ்வை ஒத்ததாகவே இருந்தது. ஸ்ட்ராபோவைப் (1.1.9) பொறுத்தவரை, அலைகள் உருவாகக் காரணம் நிலவின் ஈர்ப்பு விசையே எனவும் சூரியனைப் பொறுத்து நிலா இருக்கும் நிலையைப் பொறுத்தே அலைகளின் உயரம் இருக்கும் எனவும் கூறியவர் செலியூகஸ் மட்டுமே. மாறாக அவர், சூரியமையக் கோட்பாட்டுக்கான வடிவியல் மாதிரியின் மாறிலிகளைத் தீர்மானித்தும், பின்னர் 16ஆம் நூற்றாண்டில் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் செய்ததைப் போல இந்த மாதிரியைப் பயன்படுத்தி கோள்களின் நிலையைக் கணக்கிடுவதற்கான முறைகளை உருவாக்கியும் இந்த சூரியமையக் கோட்பாட்டை நிரூபித்திருக்கலாம். இடைக் காலத்தில், இந்திய வானியலாளர், ஆரியப்பட்டா, மற்றும் பாரசீக வானியலாளர்களான, அல்புமசார் மற்றும் அல்-சிஜ்ஜி ஆகியோராலும் சூரிய மைய மாதிரிகள் முன்மொழியப்பட்டது. கோப்பர்நிக்கஸ் அரிஸ்டாட்டிலின் மாதிரியை மறு ஆய்வு செய்து, பூமியானது தனது அச்சைப் பற்றிச் சுழல்வதாகவும் சூரியன் அண்டத்தின் மையத்தில் இருப்பதாகவும் கொண்டால் இந்த அண்டவியல் தரவை நம்பக்கூடிய வகையில் விவரிக்க முடியும் எனக் கூறும் வரை, அரிஸ்டாட்டிலின் மாதிரி மேற்கத்திய உலகில் ஒருவாறு ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. கோப்பர்நிக்கஸ் குறிப்பிட்டவாறு, பூமி சுழல்கிறது என்ற கருத்து மிகப் பழமையானது, குறைந்தது அது ஃபிலோலஸ் (c. 450 கி.மு.), ஹெராக்ளிடஸ் போண்ட்டிகஸ் (c. 350 BC) மற்றும் எக்ஃபாந்தஸ் த பித்தோகோரியன் ஆகியோர் காலத்தின் கருத்தாகும். தொராயமாக கோப்பர்நிக்கஸுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், நிக்கோலஸ் ஆஃப் கஸ்ஸா என்ற ஒரு கிறித்தவ அறிஞரும் அவரது On Learned Ignorance (1440) என்ற புத்தகத்தில், பூமி அதன் அச்சில் சுழல்கிறது என முன்மொழிந்துள்ளார். ஆர்யபட்டா (476–550), பிரம்மகுப்தா (598–668), அல்புமசார் மற்றும் அல்-சிஜ்ஜி, ஆகியோரும் பூமி அதன் அச்சில் சுழல்கிறது என முன்மொழிந்துள்ளனர். வால் நட்சத்திரங்களின் நிகழ்வின் மூலம் முதன் முதலில் பூமி அதன் அச்சைப் பற்றிச் சுழகிறது என்பதற்கான சோதனையியல் நிரூபணத்தை டூஸி (1201–1274) மற்றும் அலி குஸ்கு (1403–1474) ஆகியோர் வழங்கினர். இருப்பினும் டூஸி தொடர்ந்து அண்டம் பற்றிய அரிஸ்டாட்டில் கொள்கையையும் ஆதரித்து வந்தார், இவரே கோப்பர்நிக்கஸ் பின்னாளில் எவ்வாறு பூமியின் சுழற்சியை நிரூபித்தாரோ அவ்வாறு அரிஸ்டாட்டிலின் பூமி நிலையானது என்ற கருத்தை ஆய்வுகளின் அடிப்படையில் பொய்யென முதலில் நிரூபித்தார். கலிலியோ கலிலேய் நிரூபித்ததைப் போலவே அல்-பிர்ஜாண்டி (d. 1528) என்பவர், பின்னர் பூமியின் சுழற்சியை "வட்ட நிலைமம்" என்ற கருத்தைப் பயன்படுத்தி விளக்கினார். முதலில் தாமஸ் டிக்கஸ் (1576) முன்மொழிந்து பின்னர் கோபர்நிக்கஸ் மறு ஆய்வு செய்து வடிவியல் விளக்கங்கள் ஏற்கப்பட்ட பெர்ஃபிட் டிஸ்க்ரிப்ஷன் ஆஃப் த கேலெஸ்டியல் ஆர்ப்ஸ் அக்கார்டிங் டு த மோஸ்ட் ஆன்ஷியண்ட் டாக்டரின் ஆஃப் பித்தோகோரியன்ஸ் , என்ற கட்டுரையில் உள்ளது போல், விண்மீன்கள் (முடிவிலா) வெளி முழுவதும் பரவியுள்ளது என்ற கருத்தை கோப்பர்நிக்கஸின் சூரியமைய மாதிரி ஏற்கிறது. வெளியானது முடிவிலாதது மற்றும் நம் சூரியக் குடும்பத்தைப் போலவே பல சூரியக் குடும்பங்கள் அதில் உள்ளன ஆகிய கருத்துக்களை ஜியோர்டனோ ப்ரூனோ ஒப்புக்கொண்டார்; இவர் தனது கருத்தை வெளியிட்டதைக் குற்றம் எனக் 1600ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 17ஆம் தேதியன்று ரோமிலுள்ள கேம்போ டி ஃபியோரி என்ற இடத்தில் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த அண்டவியலில் பல முரண்பாடுகள் இருந்தன, அவை பின்னாளில் வந்த பொது சார்பியல் கொள்கையால் தான் தீர்க்கப்பட்டன எனினும், தற்காலிகமாக அதை ஐசக் நியூட்டன், கிறிஸ்டியன் ஹைகென்ஸ் மற்றும் பின்னர் வந்த விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். இவற்றில் முதல் கருத்துபடி, காலமும் வெளியும் முடிவிலாதன மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன எனப்படுகிறது; இருப்பினும், தொடர்ந்து இவை ஆற்றலை உமிழ்கின்றன எனில், ஒரு முடிவுள்ள நட்சத்திரம், முடிவிலாமல் ஆற்றலைத் தொடர்ந்து உமிழ முடியாது என்றாகிறது. இரண்டாவதாக, எட்மண்ட் ஹேல்லி (1720) மற்றும் ஜீன்-ஃபிலிப்பீ டி செஸியாக்ஸ் (1744) ஆகியோர், வெளியானது முடிவிலாதது எனக் கொண்டால் அது இரவிலும் பகலைப் போலவே நட்சத்திரங்கள் தோன்ற வேண்டும் என்ற முடிவை எடுக்க வழிவகுக்கும் எனக் கண்டனர்; இதை 19ஆம் நூற்றாண்டில் ஆல்பர்ஸ் முரண்பாடு என அழைத்தனர். மூன்றாவதாக நியூட்டனும், வெளியானது பருப்பொருள் சீராக நிரப்பப்பட்டு முடிவிலாததாக இருந்தால் முடிவிலா விசைகள் மற்றும் நிலையற்ற தன்மை ஆகிய காரணங்களால் பருப்பொருளானது தனது சொந்த ஈர்ப்பு விசையாலேயே அழிந்து போயிருக்கக்கூடும் என உணர்ந்தார். இந்த நிலையற்ற தன்மைச் சிக்கலானது 1902 இல் ஜீன்ஸ் நிலையற்ற தன்மைத் தேர்வளவையின் மூலம் தீர்க்கப்பட்டது. இந்த இரண்டு முரண்பாடுகளுக்குமான ஒரு தீர்வாக சார்லியர் அண்டக் கொள்கையே இருந்தது, இதில் அண்டத்தின் மொத்த அடர்த்தி புறகணிக்கத்தக்க அளவு குறைவாக இருக்கும்படி, பருப்பொருளானது வரிசைப்படி (தாமே சுழலும் பொருட்கள் தாமும் ஒரு பெரிய அமைப்பில் முடிவிலா அமைப்பில்) பின்ன அமைப்பில் உள்ளது; இது போன்ற ஒரு அண்டவியல் மாதிரி முன்னர் 1761ஆம் ஆண்டிலும் ஜோஹன்னன் ஹெயின்ரிச் லாம்பெர்ட் என்பவரால் முன்மொழியபட்டது. 18ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தது தாமஸ் ரைட், இம்மானுவேல் காண்ட் மற்றும் பிறர் நட்சத்திரங்கள் வெளி முழுவதும் சீராகப் பரவியில்லை; மாறாக விண்மீன் திரள்களாகத் தொகுதிகளாகவே உள்ளன என்பதை உணர்ந்ததே ஆகும். 1917 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதலில் அண்டத்தின் இயக்கவியல் மற்றும் கட்டமைப்பை விளக்க பொது சார்புக் கொள்கையைப் பயன்படுத்தியபோது இயல் அண்டவியலின் நவீன யுகம் தொடங்கியது. இந்தக் கொள்கை மற்றும் அதன் பயன்பாடு ஆகியவை பின்வரும் பிரிவில் விவரமாக விவாதிக்கப்படும். கருத்தியல் மாதிரிகள் நான்கு அடிப்படை தொடர்பு விசைகளில், ஈர்ப்பியல் விசையே அண்டவியல் தொலைவுகளில் மிகுந்த பலமுள்ளது; அதாவது கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பெரிய அமைப்புகளின் கட்டமைப்பைத் தீர்மானிப்பதில் மற்ற பிற மூன்று விசைகளும் சிறிதளவே பங்களிக்கின்றன. அனைத்துப் பாருப்பொருளும் ஆற்றலும் ஈர்ப்பியல் விசையைக் கொண்டுள்ளதால், அதன் விளைவு குவியல் பண்புள்ளது; மாறாக, நேர் மற்றும் எதிர் மின்சுமைகள் ஒன்றின் விளைவை மற்றொன்று நடுநிலையாக்குகின்றன, இதனால் மின்காந்தவியலானது அண்டவியல் தொலைவுகளுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்க அளவே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மீதமுள்ள இரண்டு தொடர்பு விசைகளாவன, வலுவிலா மற்றும் வலுவான அணுக்கரு விசைகள் ஆகும் இவை தொலைவு அதிகமாக அதிகமாக மிக விரைவாகக் குறைபவை; இவற்றின் விளைவுகள் அணு அளவீடுகளில் மட்டுமே பாதிப்புள்ளவையாக இருக்கும். பொது சார்பியல் கொள்கை அண்டவியல் கட்டமைப்பை உருவாக்குவதில் ஈர்ப்பியல் விசையே மிக முக்கியக் காரணியாக உள்ளது என்ற நிலையில், அண்டத்தின் கடந்த கால மற்றும் எதிர்கால துல்லியக் கணிப்புக்கு ஈர்ப்பியல் விசைக்கான துல்லியமான கொள்கை தேவைப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள கொள்கைகளில் சிறப்பானதாகக் கருதப்படுவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கையே ஆகும், இது அனைத்து சோதனைகளிலும் வென்றதும் ஆகும். அண்டவியல் அளவீடுகளில் பெரிய சொதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் பொது சார்பியல் கொள்கையானது துல்லியமானதாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இக்கொள்கை வழங்கும் அண்டவியல் தீர்மானங்களும் கணிப்புகளும் சோதனை முடிவுகளுடன் இசைவுள்ளதாகவே இருப்பதால், வேறு கொள்கை தேவைப்படுவதற்கு முக்கியக் காரணம் எதுவும் இல்லாமல் போகிறது. பொது சார்பியல் கொள்கையானது காலவெளி அளவீட்டுக்கான (ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகள்) பத்து பகுதி வகைச் சமன்பாடுகளின் தொகுதியை வழங்குகிறது, இவை அண்டத்தின் மொத்த நிறை-ஆற்றல் மற்றும் உந்தம் ஆகியவற்றின் பரவலிலிருந்து தீர்க்க வேண்டியவை. இவை மிகத் துல்லியமாகத் தெரியாதவை என்பதால், அண்டவியல் மாதிரிகள் அண்டவியல் கொள்கைகளின் அடிப்படையில் இருந்தன, இக்கொள்கைகள் அண்டமானது ஒருபடித்தானதும் திசை ஒருமியதாகவும் உள்ளது எனக் கூறுகின்றன. இதன் விளைவாக இந்தக் கொள்கை, அண்டத்திலுள்ள பல்வேறு விண்மீன் திரள்களின் மொத்த ஈர்ப்பியல் விளைவானது அண்டம் முழுவதும் பரவியுள்ள மொத்தத் தூசுப்பொருட்களின் சராசரி அடர்த்திக்குச் சமமாக உள்ளது எனக் கூறுகிறது. ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாட்டைத் தீர்க்கவும் அண்டவியல் கால அளவீடுகளின் அடிப்படையில் அண்டத்தின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைக் கணிக்க, இந்த சீராகப் பரவியுள்ள தூசுப் பொருட்களின் கருத்து உதவுகிறது. ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாட்டில் ஒரு அண்டவியல் மாறிலி (Λ) பயன்படுத்தப்படுகிறது, அது வெற்றிடத்தின் ஆற்றல் அடர்த்தியைக் குறிக்கிறது. அதன் குறியைப் பொறுத்து, அந்த அண்டவியல் மாறிலியானது அண்டத்தின் விரிவாக்கத்தை மட்டுப்படுத்தவோ (எதிர்க்குறி Λ ) அல்லது முடுக்கவோ (நேர்க்குறி Λ) முடியும். ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகள் Λ என்பது பூச்சியம் என நினைத்தனர், இருப்பினும் சமீபத்திய சூப்பர் நோவா பற்றிய வானியல் ஆய்வுகள் அதிக அளவிலான "அறியப்படாத ஆற்றல்" அண்டத்தின் விரிவாக்கத்தை முடுக்குவதை உறுதிப்படுத்தியுள்ளன. முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இந்த அறியப்படாத ஆற்றலானது நேர்க்குறி Λ கொண்டது எனக் கூறினாலும், எதிர்க் கருத்துடைய கோட்பாடுகளையும் புறக்கணிக்க முடியாது. ரஷ்ய இயற்பியலாளரான ஸெல்'டோவிச், Λ என்பது குவாண்டம் புலக் கொள்கையின் மாயத் துகள்களுக்கான பூச்சியப் புள்ளி ஆற்றலின் அளவாகும், இது எங்கும், அதாவது வெற்றிடத்திலும் கூட நிறைந்திருக்கும், வெற்றிட ஆற்றலாகும் எனக் கூறினார். இது போன்ற புச்சியப் புள்ளி ஆற்றலுக்கான ஆதாரங்கள் காஸ்மிர் விளைவில் காணப்படுகின்றன. சிறப்பு சார்பியலும் கால-வெளியும் அண்டத்திற்கு குறைந்தது மூன்று வெளி சார்ந்த பரிமாணங்களும் ஒரு காலம் சார்ந்த (கால) பரிமாணமும் உள்ளது. நீண்ட காலமாக, இந்த காலம் சார்ந்த பரிமாணமும் வெளி சார்ந்த பரிமாணங்களும் ஒன்றையொன்று சாராத தனிப்பட்டவை எனக் கருதப்பட்டது. இருப்பினும், சிறப்பு சார்பியல் கொள்கையின்படி, இந்த காலம் சார்ந்த மற்றும் வெளி சார்ந்த பரிமாணங்கள் இரண்டில் ஒன்றின் இயக்கத்தை மாற்றுவதன் மூலம் இவை இரண்டும் பரிமாற்றக்கூடியவை (எல்லைக்குள்). இந்தப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்ள, மூன்று வெளி சார்ந்த பரிமாணங்களில் உள்ள ஒத்த வெளி சார்ந்த பரிமாற்றங்களைக் கருதுவது உதவியாக இருக்கும். L நீளமுள்ள ஒரு கம்பியின் இரு இறுதி முனைகளைக் கருதுக. பைதகரசின் தேற்றத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட ஆய்வு சட்டகத்திற்குள், Δx, Δy மற்றும் Δz என்ற மூன்று ஆய அச்சுக்களுக்கான இரண்டு இறுதி முனைகளின் வேறுபாடுகளைக் கொண்டு அதன் நீளத்தைக் கணக்கிடலாம் சுழலும் ஆய்வு சட்டகத்திற்குள், ஆய அச்சுக்களின் வேறுபாடு வேறுபடும், ஆனால் ஒரே நீளத்தையே தரும். இவ்வாறு, ஆய அச்சுக்களின் வேறுபாடுகள் (Δx, Δy, Δz) மற்றும் (Δξ, Δη, Δζ) ஆகியவை கம்பியின் உள்ளார்ந்தப் பண்புகளல்ல, மாறாக அதை விவரிக்கப் பயன்படுத்தும் ஆய்வு சட்டகத்தையே பொறுத்தது; மாறாக கம்பியின் நீளமான L என்பது அதன் உள்ளார்ந்தப் பண்பாகும். ஆய்வு சட்டகத்தை மட்டும் சுழற்றுவதன் மூலம், கம்பியைப் பாதிக்காமல் ஆய அச்சுக்களின் வெறுபாட்டை மாற்ற முடியும். காலவெளியில் உள்ள இந்த ஒப்புமையே இரு நிகழ்வுகளுக்கிடையே உள்ள இடைவெளி எனப்படுகிறது; ஒரு நிகழ்வு எனப்படுவது காலவெளியில் ஒரு புள்ளியாகவும், வெளியில் ஒரு குறிப்பிட்ட இடமாகவும் காலத்தில் குறிப்பிட்டக் கணமாகவும் வரையறுக்கப்படுகிறது. இரண்டு நிகழ்வுகளுக்கிடையே உள்ள காலவெளி இடைவெளியானது இச்சமன்பாட்டினால் வழங்கப்படுகிறது இதில் c என்பது ஒளியின் வேகமாகும். சிறப்பு சார்பியலின் படி, மாற்றத்தின் காலவெளி இடைவெளியான s இன் மதிப்பு மாறாமல் இருக்கும்பட்சத்தில் ஒருவரின் ஆய்வு சட்டகத்தை மாற்றுவதன் மூலம் ஒரு வெளி மற்றும் காலப் பகுப்பை (L 1, Δt 1) மற்றொரு வெளி மற்றும் காலப் பகுப்பாக (L 2, Δt 2) மாற்ற முடியும். ஆய்வு சட்டகத்தின் இப்படிப்பட்ட மாற்றமானது ஒன்றின் இயக்கத்தின் மாற்றத்தைப் பொறுத்தது; நகரும் ஒரு சட்டகத்தின் காலமும் நீளங்களும், நிலையாக உள்ள சட்டகத்தின் காலம் மற்றும் நீளங்களிலிருந்து வேறுபடும். இயக்கத்தைப் பொறுத்து ஆய அச்சுக்களும் கால வேறுபாடுகளும் மாறுவதைத் துல்லியமாக விளக்குவது லாரன்ஸ் நிலைமாற்றமாகும். ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகளைத் தீர்த்தல் சுழலும் விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ள தொலைவானது, காலம் அதிகரிக்கையில் அதிகரிக்கிறது. ஆனால் ஒவ்வொரு விண்மீன் திரளிலும் உள்ள விண்மீன்களுக்கிடையே உள்ள தொலைவு தோராயமாக மாறாமலே உள்ளது. அவற்றுக்கிடையே உள்ள ஈர்ப்பியல் விசையே இதற்குக் காரணமாகும். இந்த அசைவூட்டம் ஒரு மூடிய ஃப்ரைட்மேன் அண்டத்தை விளக்குகிறது, இதில் பூச்சிய அண்டவியல் மாறிலி Λ இடம்பெறுகிறது; இதுபோன்ற அண்டமானது பெருவெடிப்பு மற்றும் அண்டச் சுருக்கம் ஆகிய நிகழ்வுகளுக்கிடையே அலைகிறது. கார்ட்டீசியன் அல்லாத (சதுரவடிவற்ற) அல்லது வளைவான ஆய அச்சு அமைப்புகளில், பித்தாகோரியன் தேற்றமானது மிக மிகச் சிறிய நீள அளவுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது, ஆகவே அது இடத்திற்கு இடம் மாறும் மற்றும் குறிப்பிட்ட ஆய அச்சு அமைப்பில் அக வடிவியலை விவரிக்கும் பொதுவான அளவீட்டுப் பண்புருவான g μν ஐக் கொண்டு மேலும் விரிவாக்கப்பட வேண்டும். இருப்பினும், அண்டமானது ஒருபடித்தானதும் திசை ஒருமியதாகவும் உள்ளது என்னும் அண்டவியல் கொள்கையைக் கருதினால், வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் மற்றொரு புள்ளியைப் போன்றதே; ஆகவே அளவீட்டுப் பண்புருவானது எங்கும் மாறாமல் ஒரே மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கருத்து, அளவீட்டுப் பண்புருவின் ஒற்றை வடிவத்திற்கு வழி வகுத்தது, அது பிரீட்மேன்-லேமைட்ரீ-ராபர்ட்சன்-வாக்கர் அளவீடு எனப்பட்டது இதில் (r , θ, φ) ஆகியவை ஒரு கோள ஆய அச்சு அமைப்பைக் குறிக்கின்றன. இந்த அளவீட்டில் இரண்டு தீர்மானிக்கப்படாத அளவுருக்களே உள்ளன: காலத்தைப் பொறுத்து மாறக்கூடிய ஒட்டுமொத்த நீள அளவு R மற்றும் ஒரு தட்டையான யூக்ளிடியன் வடிவியல் அல்லது நேர்க்குறி அல்லது எதிர்க்குறி வளைவின் வெளியைப் பொறுத்து 0, 1, அல்லது -1 என்ற மூன்று மதிப்புகளையே கொண்டிருக்ககூடிய வளைவு எண் k ஆகியவையே. அண்டவியலில், அண்டத்தின் வரலாற்றைக் கணக்கிடுவதற்கு R என்பதை நேரத்தின் சார்பாகக் கணக்கிடுகின்றனர், இதில் k மற்றும் ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகளில் வரும் சிறிய அளவுருவான அண்டவியல் மாறிலி Λ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. R என்பது காலத்தைப் பொறுத்து எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கும் சமன்பாட்டை, அதைக் கண்டறிந்தவரான அலெக்ஸாண்டர் ஃப்ரைடுமேன் அவர்களின் பெயரால் பிரீட்மேன் சமன்பாடு என அழைக்கின்றனர். R(t) க்கான தீர்வானது k மற்றும் Λ ஆகியவற்றைச் சார்ந்துள்ளது, ஆனால் அது போன்ற தீர்வுகளின் பண்பியல் அம்சங்கள் பொதுவானவை. முதலும் முக்கியமுமாக, முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதைப் போல, அண்டமானது முழுமையாக திசை ஒருமியதும், நேர்க்குறி வளைவைக் (k =1) கொண்டதுமாகவும் இருந்து அனைத்து இடங்களிலும் ஒரே துல்லியமான அடர்த்தியைக் கொண்டிருந்தால் மட்டுமே அண்டத்தின் நீள அளவான R மாறிலியாக இருக்க முடியும். இருப்பினும் இந்தச் சமநிலையானது நிலையற்றது, பொது சார்பியலின் படி, அண்டமானது அதன் மிகச் சிறிய அளவீடுகளில் ஒருபடித்தானதாக இல்லாததால் R இன் மதிப்பு மாறக்கூடியதாக உள்ளது. R இன் மதிப்பு மாறும் போது, அண்டத்தின் வெளி சார்ந்த அனைத்துத் தொலைவுகளுமே மாறக்கூடும்; வெளியானது தானே ஒட்டு மொத்த விரிவாக்கம் மற்றும் சுருக்கத்துக்குட்பட்டுள்ளது. விண்மீன் திரள்கள் தனித்தனியாக அந்தரத்தில் மிதப்பதாகத் தோன்றுவதை இது விளக்குகிறது; அவற்றுக்கிடையே உள்ள வெளியானது விரிவடைகிறது. இரண்டு விண்மீன் திரள்கள் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே புள்ளியில் தொடங்கினாலும், மேலும் ஒரு போதும் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் அவை பயணித்ததில்லை எனினும், அவை இரண்டும் ஒன்றுக்கொன்று 40 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் விந்தையையும் இந்த வெளி விரிவாக்கக் கருத்து விளக்குகிறது. இரண்டாவதாக, அனைத்து முடிவுகளுமே R இன் மதிப்பு பூச்சியமாக இருந்து பருப்பொருளும் ஆற்றலும் வரையறுக்கப்படாத அளவு அடர்த்தியைக் கொண்டிருந்த கடந்த காலத்தில் ஈர்ப்பியல் ஒருமைத்தன்மை ஒன்று இருந்ததாகக் கூறுகின்றன. இந்தக் கருத்தானது முழுமையான ஒருபடித்தான தன்மை மற்றும் திசை ஒருமிய தன்மை (அண்டவியல் கொள்கை) மற்றும் ஈர்ப்பியல் விசை மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கருத்து, ஆகிய கேள்விக்குட்பட்ட கருத்தியல்களின் அடிப்படையில் அமைந்திருந்ததால், இந்தக் கருத்து உறுதியற்றதாகத் தோன்றலாம். இருப்பினும், பென்ரோஸ்-ஹாகிங் ஒருமைத்தன்மை தேற்றங்கள் படி, மிகவும் பொதுவான நிபந்தனைகளுக்கு மட்டுமே ஒருமைத்தமையானது இருக்க வேண்டும். இதனால், ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகளின் படி, R இன் மதிப்பானது, (R இன் மதிப்பு மிகச் சிறியதும் வரையறுக்கப்பட்டதுமாக இருந்த) இந்த ஒருமைத்தன்மையிலிருந்த நிலையை அடுத்து, கற்பனைக்கும் எட்டாத வெப்பமான அடர்த்தியான நிலையிலிருந்து மிக அதிவேகத்தில் அதிகரித்துள்ளது; இதுவே அண்டத்தின் பெருவெடிப்பு மாதிரியின் அடிப்படையாகும். பருப்பொருளும் ஆற்றலும் காலம் மற்றும் வெளியின் ஒரு புள்ளியிலிருந்து வெடித்து உருவானது என்றே பெருவெடிப்பு மாதிரி கூறுகிறது என்பது ஒரு பொதுவான தவறான கருத்தாகும். இருப்பினும், வெளியானது பெரு வெடிப்பில் தோன்றி குறிப்பிட்ட அளவு பருப்பொருள் மற்றும் ஆற்றலால் நிரம்பியுள்ளது; வெளியானது விரிவடைவதால் ( அதாவது R(t) இன் மதிப்பு அதிகரிப்பதால்), பருப்பொருள் மற்றும் ஆற்றலின் அடர்த்தி குறைகிறது. மூன்றாவது, ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கும் அதிகமான நீள அளவீடுகளின் சராசரியான காலவெளியின் வெளி சார்ந்த வளைவின் சராசரியின் குறியை வளைவு எண் k இன் மதிப்பே தீர்மானிக்கிறது. k =1 எனில், வளைவு நேர்க்குறி கொண்டதாகும், மேலும் அண்டத்திற்கு வரையறுக்கப்பட்ட பருமனுள்ளது. இது போன்ற அண்டங்களை சில நேரம், நான்கு பரிமாணங்கள் கொண்ட வெளியில் பொதிக்கப்பட்ட முப்பரிமாணக் கோளமாக S3 காட்சிப்படுத்துகின்றனர். மாறாக, k என்பது பூச்சியம் அல்லது எதிர்க்குறி மதிப்பெனில், அண்டமானது அதன் ஒட்டு மொத்த பிரதேசவியலைச் சார்ந்து முடிவிலாப் பருமனைக் கொண்டிருக்கலாம் . முடிவிலாததும் முடிவிலா அடர்த்தி கொண்டதுமான அண்டமானது R =0 என்ற நிலையில் பெரு வெடிப்பின் போது ஒரு குறிப்பிட்ட கணத்தில் உருவாகியிருக்க முடியும் என்பது உண்மைக்கு எதிரானதாகத் தோன்றலாம், ஆனால் k இன் மதிப்பு 1 க்குச் சமமாக இல்லாதபட்சத்தில் கணிதவியலின் படி இவ்வாறே கணக்கிடப்படுகிறது. ஒப்பீட்டுக்கு, முடிவிலாத் தளமானது பூச்சிய வளைவும் முடிவிலாப் பரப்பும் கொண்டுள்ளது, முடிவிலா உருளையானது ஒரு திசையில் முடிவுள்ளதும் முடிவிலாச் சுருளானது இரு திசையிலும் முடிவுள்ளதுமாகவும் உள்ளது. முடிவிலாச் சுருள் அண்டமானது, ஆஸ்டிராய்ட்ஸ் போன்ற "உலகப் பயண" வீடியோ கேம்களில் உள்ளதைப் போன்ற கால இடைவெளிக்குட்பட்ட எல்லை நிபந்தனைகளைக் கொண்டு இயல்பான அண்டத்தைப் போலவே இருக்கும்; வெளிநோக்கிச் செல்லும் "எல்லையைக்" கடக்கும் ஒரு பயணி, உள்நோக்கிச் செல்லும் மற்றொரு எல்லையின் ஒரு புள்ளியில் மீண்டும் தோன்றுவார். அண்டத்தின் முடிவான விதியை இதுவரை அறிய முடியவில்லை, ஏனெனில் அது வளைவு எண் k மற்றும் அண்டவியல் மாறிலிΛ ஆகியவற்றையே வெகுவாகச் சார்ந்துள்ளது. அண்டமானது போதுமான அளவு அடர்த்தியுள்ளதாக இருப்பின், k இன் மதிப்பு +1 க்குச் சமமாக இருக்கும், அதாவது அதன் சராசரி வளைவானது நேர்க்குறி கொண்டது, மேலும் அண்டமானது மீண்டும் ஒரு அண்டச் சுருக்கத்தில் சுருங்கிவிடும் வாய்ப்புள்ளது, பின்னர் ஒரு பெருந்துள்ளல் நிகழ்வில் மீண்டும் ஒரு புதிய அண்டம் உருவாக வாய்ப்புள்ளது. மாறாக, அண்டத்தின் அடர்த்தி போதுமானதாக இல்லை எனக் கொண்டால், k இன் மதிப்பு 0 அல்லது −1 க்குச் சமமாகும், அதாவது அண்டமானது தொடர்ந்து விரிந்துகொண்டே செல்லும், அது குளிர்ந்து திடம் குறைந்து எந்த உயிரும் வாழ முடியாமல் சென்று, விண்மீன்களெல்லாம் அழிந்து பருப்பொருள் அனைத்தும் மீண்டும் கருந்துளையால் விழுங்கப்படும் (பேருறைவு மற்றும் அண்டத்தின் வெப்ப இழப்பு). மேலே குறிப்பிட்டது போல் அண்டத்தின் விரிவானது எதிர்பார்த்தபடி குறையவில்லை என சமீபத்திய தரவு கூறுகிறது, மாறாக முடுக்கப்படுகிறது; இது முடிவின்றித் தொடர்ந்தால், அண்டம் தானகவே உடைந்து சிதறும் (பெரு உடைப்பு). சோதனைகளின் படி, அண்டமானது அதன் மீண்டும் சுருங்கும் நிலைக்கும் உயர் விரிவாக்கத்திற்கும் இடைப்பட்ட ஒரு குறிப்பிட்ட அடர்த்தி மதிப்பைக் கொண்டுள்ளது; இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மேலும் கூடுதல் கவனமான வானியல் ஆய்வுகள் தேவை. பெரு வெடிப்பு மாதிரி பெரு வெடிப்பு மாதிரி மேற்குறிப்பிட்டுள்ள பெரும்பாலான ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்குகின்றது, அதாவது விண்மீன் திரள்களின் தொலைவு மற்றும் சிவப்புநகர்வு ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்பு, ஹைட்ரஜன்: ஹீலியம் அணுக்களின் ஒட்டுமொத்த விகிதம், எங்கும் பரவியுள்ள திசைஒருமிய மைக்ரோ அலை கதிரியக்கப் பின்புலம் ஆகிய கருத்துகளை விளக்குகிறது. மேற்குறிப்பிட்டது போல, சிவப்புநகர்வு வெளியின் அளவியல் விரிவாக்கத்தினால் ஏற்படும் விளைவாகும், விண்வெளி தானாக விரிவடைவதனால், விண்வெளியில் பயணிக்கும் போட்டானின் அலைநீளம் அதிகமாகின்றது, இதனால் இதன் ஆற்றல் குறைகின்றது. போட்டான் பயணம் செய்யும் தொலைவுக்கேற்ப, அது அதிக விரிவடைதலுக்கு உள்ளாகிறது, மிக தொலைவிலுள்ள விண்மீன் திரள்களிலிருந்து வரும் பழமையான போட்டான்கள் அதிகமாக சிவப்புநகர்வுக்கு உள்ளாகின்றன. சிவப்புநகர்வு மற்றும் தொலைவுக்கிடையேயான தொடர்பைக் கண்டறிவது இயற்பியல் அண்டவியலில் மிக முக்கிய சிக்கலாக உள்ளது. விண்வெளியின் ஒட்டுமொத்த விரிவடைதலை, அணுக்கரு மற்றும் அணு இயற்பியல் ஆகியவற்றோடு இணைத்து, வேறு சில சோதனைகளின் மூலம் விளக்க முடியும். அண்டம் விரிவடைவதனால், மின்காந்தக் கதிர்வீச்சின் ஆற்றலின் அடர்த்தி, பருப்பொருள் ஆற்றலின் அடர்த்தி குறைவதைவிட மிக வேகமாக குறைகிறது, போட்டானின் ஆற்றலானது அதன் அலைநீளம் அதிகரிக்கையில் குறைவதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு அண்டத்தின் ஆற்றலின் அடர்த்தி பருப்பொருட்களால் ஆதிக்கம் செய்யப்படுகிறது, ஒரு காலத்தில் இது கதிர்வீச்சினால் ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தது; அழகாகச் சொன்னால், எல்லாமே ஒளியாகத்தான் இருந்தது. அண்டம் விரிவடைந்ததனால், அண்டத்தின் ஆற்றலின் அடர்த்தி குறைந்து, அது குளிர்ந்தது; இதனால் பருப்பொருளின் நுண்ணிய துகள்கள் ஒன்றிணைந்து நிலைத்தன்மையுள்ள மிகப் பெரும் தொகுதியாயின. இவ்வாறு பருப்பொருட்களின்-ஆதிக்க காலத்தில், நிலையான புரோட்டன்கள் மற்றும் நியூட்ரன்கள் தோன்றின, பின்பு இவை ஒன்றிணைந்து அணுக்கருவாக உருவாகின. இந்நிலையில், அண்டத்திலுள்ள பருப்பொருளானது, எதிர்ம எலக்ட்ரான்கள் நடுநிலையான நியூட்ரான்கள் மற்றும் நேர்ம- உட்கருக்கள் ஆகியவை கலந்த அதி வெப்பம் மற்றும் அடர்த்தி கொண்ட பிளாஸ்மாவாக இருந்தது. அணுக்கருகளுக்கு இடையே ஏற்படுகின்ற அணுக்கரு வினைகளால் லேசான அணுக்கருக்கள் அதிக அளவில் உருவாகியிருந்தன, முக்கியமாக ஹைட்ரஜன், டியூட்டிரியம் மற்றும் ஹீலியம் ஆகியன. இறுதியாக, எலக்ட்ரான்கள் மற்றும் அணுக்கருக்கள் இணைவதனால், நிலையான அணுக்கள் உருவாயின, இவ்வணுக்கள் கதிர்வீச்சுகளின் பெரும்பாலான அலைநீளங்களினால் ஊடுருவக்கூடியவையாக இருந்தன; இந்நிலையில் கதிர்வீச்சு பருப்பொருட்களிலிருந்து பிரிந்து, இன்று நாம் காணக்கூடிய, எங்கும் பரவும் தன்மையுள்ள, திசைஒருமிய பின்புலம் கொண்ட மைக்ரோஅலை கதிர்வீச்சாக உருவாகிவுள்ளது. நாம் அறிந்த இயற்பியலில், பிற ஆய்வுகள் யாவும் சரியாக விவரிக்கப்படவில்லை. மேலோங்கியிருக்கும் கொள்கையின் படி, அண்டம் உருவாகும்போதோ அல்லது அண்டம் உருவானவுடனேயோ, பருப்பொருள் மற்றும் எதிர்பருப்பொருள் அகியவற்றிற்கிடையே சமநிலையின்மை இருந்தது, இதற்கு CP மீறலே காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று துகள் இயற்பியல் வல்லுனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பருப்பொருளும், எதிர்ப்பொருளும் ஒன்றுடன் ஒன்று மோதி அழித்துக்கொண்டு போட்டான்களை உருவாக்குகின்றன, இந்த பருப்பொருளின் எஞ்சிய போட்டானே பருப்பொருள் அதிகமுள்ள அண்டத்தைக் கொடுக்கின்றது. அண்டத்தின் வேகமான அண்ட வீக்கம், அதன் வரலாற்றில் மிகவும் ஆரம்பகாலத்திலேயே, அதாவது அண்டம் தோன்றி (தோராயமாக 10−35 வினாடிகளில் நடந்திருந்தது) என பல்வேறு வகையான ஆதாரங்கள் தெரியப்படுத்துகின்றன. அண்டவியல் மாறிலி (Λ ) இன் மதிப்பு பூச்சியமில்லை என்றும், அண்டத்தின் நிகர நிறை-ஆற்றல் உள்ளடக்கத்தில், அறியப்படாத ஆற்றலும் அறியப்படாத பருப்பொருளுமே மேலோங்கி இருப்பதாகவும், இவை இன்னும் அறிவியல்பூர்வமாக விளக்கப்படவில்லை என்றும், அண்மையில் நடந்த பல்வேறு ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. அவை தமது ஈர்ப்பியல் விளைவுகளில் வேறுபடுகின்றன. சாதாரண பருப்பொருளைப் போலவே அறியப்படாத பருப்பொருளும் ஈர்ப்பியல் விசை விளைவைக் கொண்டுள்ளன, இவ்வாறு அண்டம் விரிவடைதலின் வேகத்தை இவை குறைக்கின்றன; மாறாக அறியப்படாத ஆற்றல் அண்டம் விரிவடைதலின் வேகத்தை அதிகப்படுத்துகின்றது. பல்லண்டம் சில ஊகத்தின் அடிப்படையிலான கொள்கைகள், அண்டம் என்பது, பல்லண்டம் என்று குறிப்பிடப்படுகின்ற, வெவ்வேறாக பிரிந்திருந்த அண்டங்களின் தொகுப்பு என்று கூறின, இது அண்டம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்ற கருத்தை மாற்றுவனவாக இருந்தன. இதை வரையறுக்கையில், ஒரு அண்டத்தில் உள்ள எதுவும் மற்றொரு அண்டத்தைப் பாதிக்க எந்தவொரு வாய்ப்பும் இல்லை; அப்படி இரண்டு "அண்டங்கள்" ஒன்றை ஒன்று பாதிக்க முடிந்தால், அவை ஒரே அண்டத்தின் பகுதிகளாகவே இருக்கக்கூடும் எனவும் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு, மேலும் சில கதைகளில் வரும் பாத்திரங்கள் கற்பனை உலகங்களிடையே பயணிப்பதாகக் கூறப்படும், சரியாகச் சொன்னால், அண்டம் என்னும் வார்த்தை இங்கு முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரிந்திருந்த அண்டங்கள் இயற்பியல்ரீதியாக, ஒவ்வொன்றும் அதற்கே உரிய வெளி மற்றும் நேரத்தையும், பருப்பொருள் மற்றும் ஆற்றலையும் மற்றும் அதற்கே உரிய இயற்பியல் விதிகளையும் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அவை ஒவ்வொன்றும் இந்த அண்டங்கள் (அவற்றுக்கே உரிய தனி காலத்தைக் கொண்டிருப்பதால்) ஒத்திசைவில் இல்லாததால் அல்லது இவற்றுக்கிடையே (வெவ்வேறு அண்டங்களின் வெளி சார்ந்த நிலைகளுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பதால்) வடிவியல்ரீதியாக இணைத் தன்மையுள்ளதாக இல்லாததாலும், அவற்றின் இணைத் தன்மைக்குச் சவாலாக அமைந்தன. இத்தகைய இயற்பியல் ரீதியாகப் பிரிந்திருக்கும் அண்டங்கள், அறிநிலையின் வெவ்வேறு தளங்கள் என்னும் மெட்டா இயற்பியலின் கருத்திலிருந்து வேறுபடுத்தப்படவேண்டும், இவை இயல்பான இடங்களைக் குறிப்பவையல்ல, இவை தகவல்கள் மூலமாக ஒன்றிணைக்கப்பட்ட தளங்கள். பிரிந்திருந்த அண்டங்களான பல்லண்டம் பற்றிய கருத்து மிகப் பழமையானது; எடுத்துக்காட்டாக, 1277ஆம் ஆண்டில் பாரிசின் தலைமை குருவான ஈடீனி டெம்பயர் என்பவர், கடவுளால் அவர் விரும்புமளவு பல அண்டங்களை உருவாக்க முடியும் என்று கூறினார், இதைப் பற்றி பிரான்சு சமய அறிஞர்களிடையே சூடான விவாதங்கள் எழுந்தன. பல்லண்டங்களைப் பற்றிய விளக்கத்தை வழங்கும் இரண்டு விதமான அறிவியல் கோணங்கள் உள்ளன.முதலில், துண்டிக்கப்பட்ட காலவெளித் தொடர்பமானது இருந்திருக்கலாம்; அனைத்து நிலைகளிலுள்ள பருப்பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவை ஒன்றிணைந்து அண்டத்தில் இருக்கலாம் மற்றும் அவை ஒன்றை ஒன்று "துளைக்க" முடியாது. முந்தைய அண்டத்தின் முறையற்ற வீக்க மாதிரி, இது போன்ற கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும். இரண்டாவது, பல உலகங்கள் கருதுகோளின்படி, ஒவ்வொரு குவாண்டம் அளவிலும் ஒரு இணை அண்டம் பிறக்கிறது; அண்டம் பல நகல்களாகப் "பிரிகிறது", அவை ஒவ்வொன்றும் குவாண்டம் அளவின் வெவ்வேறு வெளியீடுகளுக்கு உரியன. இருப்பினும், "பல்லண்டம்" என்ற இந்தச் சொல்லின் இரண்டு புரிதல்களுமே ஊகத்தின் அடிப்படையிலானவை மேலும் அவற்றை அறிவியலடிப்படையற்றவை என்றே கருதலாம்; ஓர் அண்டத்தில் நிகழ்த்தப்படும் எந்த சோதனையும் அதனோடு தொடர்பில்லாத மற்றோர் அண்டம் இருப்பதையோ அல்லது அதன் குணங்களையோ உறுதிப்படுத்த முடியாது. குறிப்புகள் மேற்கோள்கள் கூகுள் தமிழாக்கம்-அண்டவியல்
5949
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%20%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D
புற ஊதாக் கதிர்
புற ஊதாக் கதிர் (ultraviolet light) என்பது கண்களால் பார்த்து பெரும்பாலும் உணரமுடியாத மின்காந்த ஒளி அலைகள் ஆகும். சூரிய ஒளியின் நிறமாலையில் (Spectrum) கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா வரையான கதிர்களின் ஒழுங்கில், ஊதாக்கதிர்களுக்கு அப்பால் இருப்பதால் இது புற ஊதாக் கதிர் எனப்படுகின்றது. புற ஊதாக்கதிர் 10 நா.மீ முதல் 400 நா.மீ வரையிலான அலைநீளத்தைக் கொண்டுள்ளது. கண்களுக்குப் புலனாகும் ஓளி அலைகளைக் காட்டிலும் இது அதிகமாகவும் எக்சு கதிர்களைக் காட்டிலும் குறைவானதாகவும் உள்ளது. சூரியனிலிருந்து வரும் ஒட்டு மொத்த ஒளியில் 10% ஒளி புற ஊதாக்கதிரினால் ஆனதாகும். மின் விற்பொறி மற்றும் பாதரச ஆவி விளக்குகள், தோல் பதனிடு விளக்குகள், நீளலை புறஊதா விளக்குகள் போன்ற சிறப்பு விளக்குகளைப் பயன்படுத்தியும் புற ஊதாக்கதிர்களை உருவாக்கலாம். அணுக்களை அயனியாக்கும் ஆற்றல் இதன் ஒளியணுக்களுக்கு இல்லை என்பதால் ஓர் அயனியாக்கக் கதிர்வீச்சாக புற ஊதாக்கதிர் கருதப்படுவதில்லை. ஆனாலும் நீளலை புற ஊதா கதிர்வீச்சு இரசாயன வினைகளில் பங்கேற்கிறது. பல பொருட்களை ஒளிர அல்லது உடனொளிரச் செய்கிறது. இதன் விளைவாக, எளிமையான வெப்ப விளைவுகளைக் காட்டிலும் புற ஊதாக்கதிரின் உயிரியல் விளைவுகள் அதிகமானவையாக உள்ளன. மற்றும் இக் கதிர்வீச்சின் பல நடைமுறை பயன்பாடுகள் கரிம மூலக்கூறுகளுடன் கொண்ட தொடர்புகளிலிருந்து பெறப்படுகின்றன. தோலின் நிறம் கருத்தல், முகச்சுருக்கங்கள் வேனிற்கட்டிகள் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவை புற ஊதாக்கதிர் பாதிப்புகளாகும். பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வரும் புற ஊதாக்கதிர் வடிகட்டப்படாவிட்டால், சூரியனின் புறஊதா கதிர்வீச்சால் வாழும் உயிர்னங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன . 121 நானோமீட்டருக்கும் குறைவான அலைநீளம் கொண்ட விளிம்புநிலை புற ஊதாக்கதிர் அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது. இது பூமியை அடைவதற்கு முன்னரே ஈர்க்கப்படுகிறது மனிதர்கள் உட்பட பெரும்பாலான முதுகெலும்பிகளின் எலும்பு வலுவடைவதற்கு காரணமான வைட்டமின் டி உருவாகுவதற்கு புற ஊதாக்கதிரும் காரணமாகும். புற ஊதாக்கதிர்களால் நமக்கு நன்மை, தீமை ஆகிய இரண்டு விளைவுகளும் ஏற்படுகின்றன. புற ஊதாக் கதிர்கள் பெரும்பாலான மனிதர்களின் கண்களுக்குத் புலப்படுவதில்லை. மனித கண்களில் உள்ள லென்சு பொதுவாக 320 முதல் 290 வரை அதிர்வெண் கொண்ட ஒளியலைகளை வடிகட்டுகின்றன. மேலும் மனிதர்களின் கண்களில் புற ஊதாக் கதிர்களின் வண்ணமேற்பு தகவமைப்புகள் இல்லை . குழந்தைகள் மற்றும் இளைஞர்களால் சில சிறப்பு நிகழ்வுகளில் சுமார் 310 நானோ மீட்டர் அலைநீள புற ஊதாக்கதிர்களை காணமுடிகிறது . விழிவில்லை இல்லாத மனிதர்கள் அல்லது மாற்று விழிவில்லை பொருத்தப்பட்ட மனிதர்களால் இக்கதிர்களைக் காணமுடிகிறது.. சில பூச்சிகள், பறவைகள், பாலுட்டிகளின் கண்களுக்கும் புற ஊதாக் கதிர்கள் புலப்படுகின்றன . கண்டுபிடிப்பு சூரிய ஒளி படும்போது வெள்ளி உப்புக்கள் கருமையாக மாறின. புற ஊதா கதிர்வீச்சு கண்டுபிடிப்பு அந்த கவனிப்பு தொடர்புடையதாக இருந்தது. 1801 ல் , செருமன் இயற்பியலாளர் யோகன் வில்லெம் ரிட்டர் வெள்ளி குளோரைடு நனைத்த காகிதத்தை ஊதா நிறத்திற்கு அப்பால் உள்ள கதிர்கள் ஊதா நிறக்கதிரை விட வேகமாக கருமையாக்குவதாக கண்டுபிடித்தார். இவற்றின் வேதியியல் கூறுகளை வலியுறுத்த மற்றும் " வெப்ப கதிர்களில் " இருந்து வேறுபடுத்த இவற்றை அவர் "ஆக்சிசனேற்றக் கதிர்கள்" என்று அழைத்தார். எளிமையான " இரசாயன கதிர்கள் " என்ற பதம் விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது 19ஆம் நூற்றாண்டு முழுவதும் பிரபலமாக இருந்தது. பின்னர் இரசாயன மற்றும் வெப்ப கதிர்களுக்கு பதிலாக முறையே, புற ஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர் ஆகிய பதங்கள் உபயோகப்படுத்தப்படலாயின. 200 நானோமீட்டருக்கும் கீழே அலைநீளம் கொண்ட புற ஊதா கதிரின் கண்டுபிடிப்பு செருமன் இயற்பியலாளர் விக்டர் சூமானால் 1893 ல் செய்யப்பட்டது. இது கடுமையாக காற்று மூலம் உறிஞ்சப்படுவதால் வெற்றிட புற ஊதா என்று அழைக்கப்பட்டது. சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் மனித உடல்நலனில் பல்வேறு விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும் ஒளிரும் விளக்குகளால் உண்டாக்கும் ஆரோக்கியக் கேடுகளுடனும் இது தொடர்பு கொண்டுள்ளது. அதிகப்படியான சூரிய வெளிச்சம் உடலின் மீது விழுவது தீங்கு விளைவிக்கும், ஆனால் இவ்வொளியை மிதமாக அளவுக்கு உடல் பெற்றால் நன்மை விளைகிறது. வகைகள் புற ஊதாக்கதிரின் மின்காந்த நிழற்பட்டையை பல்வேறு வகைகளில் பிரிக்கலாம். solar irradiances கண்டறிவதற்கான ஐ.எசு.ஓ (ISO-21348) பின்வரும் வரம்புகளை விவரிக்கிறது: காற்று மூலம் கடுமையாக உறிஞ்சப்படுவதால் வெற்றிட புற ஊதா கதிர்களுக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. இதனால் இது வெற்றிடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கதிர்களின் அலைநீளமான 150 – 200 நானோமீட்டரில் முக்கியமான உறிஞ்சி காற்றிலுள்ள ஆக்சிசன் தான். அதனால் ஆக்சிஜன் இல்லா சூழலில் (பொதுவாக சுத்தமான நைட்ரசன்), இது பயன்படுத்தப்படுகிறது. பயன்பாடுகள் இரசாயன எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாலும் பொருட்களில் ஒளிர்வை தூண்டுவதாலும் புற ஊதா ஒளி, நவீன சமூகத்தில் பல பயனுள்ள பயன்பாடுகளை கொண்டுள்ளது. படமெடுத்தல் வானவியல் நெருப்பு கண்டறிதல் ஒளிவட்ட வெளியேற்றத்தை (corona discharge ) கண்டறிதல் மூலம் உயர் மின்னழுத்த காப்பு சோதனை ஒளி மூலங்களின் பயன்பாடுகள் உடனொளிர்வு விளக்குகள் *லேசர்கள் ஒளிரும் சாயம் தொடர்பான பயன்பாடுகள் ஃப்ளோரசன்ட் ஒளியியல் வெளுப்பான் வண்ணப்பூச்சுகள் பாதுகாப்பு பகுப்பாய்வு பயன்பாடுகள் தடய அறிவியல் அங்கீகரிப்பதற்கு தெளிவற்ற கையெழுத்து பிரதிகளை படித்தல் இரசாயன குறிப்பான்கள் சுகாதார இணக்கதிற்கு நிறமாலை ஒளிமானியியல் கனிம ஆய்வு பொருளறிவியல் பயன்கள் வேதிக் கட்டமைப்பு , கனிமங்கள், இரத்தினக்கற்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்வதில் புற ஊதாக் கதிர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நியூக்ளிக் அமிலங்கள் அல்லது புரதங்களின் அளவறி பகுப்பாய்விலும் இக்கதிர்கள் பயன்படுகின்றன. மாசு கட்டுப்படுத்தும் செயல்முறையில் நைட்ரசன் ஆக்சைடு உமிழ்வு, கந்தக சேர்மங்கள், பாதரசம், அமோனியா போன்றவை கண்டறிவதில் புற ஊதாக்கதிர் பயன்படுகிறது.கார்பனீராக்சைடு மற்றும் ஆவியாகும் கரிமச்சேர்மங்ககளின் அளவை காற்றில் இருந்து குறைக்கவும் இக்கதிர்கள் பயனாகின்றன. ஒளி கல்லச்சு வரைவியல் (Photolithography) மைகள், பசைகள், வார்னிஷ் மற்றும் பூச்சுகள் பதப்படுத்துதல் பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளைக் கொல்லவும் பயன்படுகின்றன. இந்த வகைக் கதிர்கள் போலி பத்திரங்களைக் கண்டறியவும், கைரேகை பதிவுகளைக் கண்டறியும் தடயவியல் ஆய்வகங்களிலும் பயன்படுகின்றன. உணவுப் பொருள்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன. அணுவின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. இரத்தம், உமிழ்நீர், விந்தணு போன்ற உடல் திரவங்களை கண்டறிவதற்கான தடய அறிவியல் துறையில் புற ஊதாக்கதிர்கள் பயன்படுகின்றன. தொடக்கக்கால இனப்பெருக்க புரதங்கள் மற்றும் நொதிகளின் பரிணாம வளர்ச்சி, பரிணாம கோட்பாட்டின் நவீன மாதிரிகளுக்கு புற ஊதா கதிர்வீச்சு காரணமாகிறது. இவற்றையும் பார்க்கவும் ஓசோன் படை தேய்வின் விளைவுகள் மேற்கோள்கள் மின்காந்த அலைகள் மின்காந்த நிழற்பட்டை
5960
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
அடர்த்தி
இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி () (density) என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும். SI அலகுகள்: ρ = (ரோ அல்லது றோ) பொருளின் அடர்த்தி (அலகு: கி.கி/மீ-3, kg·m-3} m = பொருளின் நிறை அல்லது திணிவு (அலகு: கி.கி, kg) V = பொருளின் பரும அளவு (கன அளவு) (அலகு: மீ3) நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ3 என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ3 என எழுதுவது வழக்கம். பல்வேறு பொருள்களின் அடர்த்திகள்: வெளி இணைப்புகள் கண்ணாடியின் அடர்த்தியைக் கணக்கிடுதல் அடர்த்தியின் அடிப்படையில் தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் வரிசைப்படுத்துதல் மேற்கோள்கள் இயற்பியல் கணியங்கள்
5963
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
மில்லிமீட்டர்
மில்லிமீட்டர் (மில்லிமீற்றர்) என்பது நீள அலகுகளில் ஒன்றாகும். ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 அங்குலத்துக்குச் (inch) (துல்லியமாக 5/127) சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத்துக்காட்டாகக் கண்ணாடித் தகடுகளின் தடிப்பு 6 மில்லிமீட்டர், 10 மில்லிமீட்டர் என்றும் சுவர்களின் தடிப்பைக் குறிப்பிடும்போது 100 மில்லிமீட்டர், 200 மில்லிமீட்டர் எனவும், அறைகளின் நீள அகலங்களைக் குறிப்பிடும்போது 4000 x 5000 மில்லிமீட்டர் எனவும் குறிப்பிடுவது உண்டு. மில்லிமீட்டரைச் சுருக்கமாக மிமீ. என்று எழுதுவது வழக்கம். மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ 2 (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ 3 (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம். தொடர்புகள் மீட்டர் அளவை முறையில் மில்லிமீட்டருக்கும் பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு: 1 செண்டிமீட்டர் =10 மில்லிமீட்டர் 1 சதமமீட்டர் = 10 மில்லிமீட்டர் 1 மீட்டர் = 1,000 மில்லிமீட்டர் 1 கிலோமீட்டர் = 1,000,000 மில்லிமீட்டர். மில்லிமீட்டருக்கும் இம்பீரியல் அளவை முறையில் உள்ள பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு: 1 அங்குலம் = 25.4 மில்லிமீட்டர் 1 அடி = 304.8 மில்லிமீட்டர் 1 யார் = 914.4 மில்லிமீட்டர் 1 மைல் = 1,609,300 மில்லிமீட்டர் சில தர அளவுகள் மில்லிமீட்டரில் தரப்பட்டுள்ள சில தர அளவுகள் வருமாறு: A4 தாள் அளவு - 297 x 210 A3 தாள் அளவு - 420 x 297 குறுவட்டு (CD) அளவு - விட்டம் = 120 மில்லிமீட்டர், தடிப்பு = 1.2 மில்லிமீட்டர், நடுத்துளை விட்டம் = 15 மில்லிமீட்டர். சாதாரண செங்கல் அளவு = 225 x 112.5 x 75 மில்லிமீட்டர். அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் SI சார் அலகுகள் நீள அலகுகள்
5972
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
சுவர்
சுவர் என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். சரிவான நிலையில் அமைந்த சுவர்களும் இருந்த போதிலும் சுவர்கள் பொதுவாக நிலைக்குத்து அமைப்புகளாகும். மிகப் பொதுவாக, சுவர்கள் கட்டிடங்களினுள் இடத்தைப் பல்வேறு அறைகளாகப் பிரிப்பதுடன், கட்டிடத்தின் உட்பகுதிகளை வெளிப்புறப் பகுதிகளினின்றும் பிரிக்கின்றது. கட்டிடங்களுக்குரிய அல்லது வேறு நடவடிக்கைகளுக்குரிய நிலப் பகுதிகளை வரையறுத்துப் பாதுகாப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. பெரிய நாடுகளின் பாதுகாப்புக்காக ஊடுருவல்களைத் தடுப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுவதும் உண்டு. புகழ் பெற்ற சீனப் பெருஞ் சுவர், இப்பொழுது அகற்றப்பட்டுவிட்ட பெர்லின் சுவர் என்பன இவ்வாறான சுவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். சுவர் வகைகள் சுவர்களைப் பலவகைகளாகப் பிரிக்கலாம். கட்டிடங்களுக்குரிய சுவர்கள் எல்லைச் சுவர்கள் அல்லது சுற்று மதில்கள் அணை சுவர்கள் என்பன இவற்றுள் முக்கியமானவை. கட்டிடச் சுவர்கள் கட்டிடங்களில் சுவர்கள் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகக் கட்டப்படுகின்றன. கூரைகள் மற்றும் மேல் தளங்களினால் சுமத்தப்படும் சுமையைத் தாங்குதல், பல்வேறு செயற்பாடுகளுக்கான இடங்களைப் பிரித்து வேறுபடுத்துதல், மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்து கட்டிடங்களின் உட்பகுதிகளைப் பாதுகாத்தல், வெளியார் மற்றும் விலங்குகள் உட்புகுவதைத் தடுத்தல் என்பன அவற்றுட் சில. இவ்வாறு அவை நிறைவு செய்ய வேண்டிய தேவைகளைப் பொறுத்து அவற்றைக் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள், மற்றும் வடிவமைப்புகள் வேறுபடுகின்றன. சுமை தாங்குமாறு வடிவமைக்கப்படும் சுவர்கள் செங்கற்கள், காங்கிறீற்றுக் கற்கள், வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று என்பவற்றைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. பாதுகாப்புத் தேவைகளுக்கும் இத்தகைய சுவர்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. உள்ளக வெப்பக் கட்டுப்பாடு மற்றும் சக்தி மூலங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இக் காலத்தில் வெப்பத்தை அரிதிற் கடத்தும் தன்மையுள்ள வெளிச் சுவர்களுக்கான சிறப்புக் கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமை தாங்காத உள்ளகச் சுவர்கள் மற்றும் அறைகளுக்கிடையேயான பிரிசுவர்கள் என்பன வெளிச் சுவர்களைப் போன்ற பலம், வெப்பம் கடத்தும் தன்மை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எனினும் இன்றைய கட்டிடங்கள் பல்வேறு சிக்கல் தன்மை வாய்ந்த செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டியிருப்பதன் காரணமாக உட்புறச் சுவர்களும் பல்வேறு விதமான தேவைகளை நிறைவு செய்ய வேண்டியவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் சத்தம் கடத்தப்படுவதைத் தடுத்தல், தீத் தடுப்பு என்பன இன்று முக்கியத்துவம் பெறுகின்ற சில அம்சங்களாகும். உள்ளகச் சுவர்கள் பல தற்காலத்தில் உருக்குச் சட்டக அமைப்புக்களின் மீது இரண்டு பக்கமும் ஜிப்சம் தகடுகள் போன்றவற்றைப் பொருத்துவதன் மூலம் அமைக்கப்படுகின்றன. இவை உலர் சுவர்கள் என அழைக்கப்படுகின்றன. கட்டிடங்களில் அமையும் சுவர்கள் பல சந்தர்ப்பங்களில் அழகியற் கூறுகளாக அமைவதும் உண்டு. நவீன கட்டிடக்கலையின் அறிமுகத்துக்கு முன்னர் கட்டிடங்களின் வெளிச்சுவர்கள் பெருமளவு அழகியல் அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டன. நவீன கட்டிடங்கள் பெரும்பாலும் இத்தகைய மேலதிக சுவர் அலங்காரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனினும், கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்தும் விதத்திலும், அழகூட்டும் மேற் பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலமும், பல்வேறு முடிப்புப் பொருட்களால் போர்த்துவதன் மூலமும் சுவர்கள் அழகு படுத்தப்படுகின்றன. உள்ளகச் சுவர்கள் சுவரோவியங்கள் போன்ற கலைப் படைப்புக்களைத் தாங்கியிருப்பதும் உண்டு. எல்லைச் சுவர்கள் கட்டிடங்கள் அமைந்துள்ள நிலப்பகுதியின் எல்லைகளில் எல்லைச் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றைச் சுற்று மதில்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை பொதுவாக வெளியார் ஊடுருவலைத் தடுப்பதற்காகவே கட்டப் படுகின்றனவாயினும், சுற்று மதில்கள் அழகியல் கூறுகளாகவும் அமைவதுண்டு. நீண்ட தூரம் சென்று தாக்கும் கனரக ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரு முன்னர் உலகின் பல நகரங்களைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்படி ஆயுதங்களின் அறிமுகம் சுற்று மதில்களின் பாதுகாப்புப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கியதனால், பிற்காலத்தில் நகரங்கள் சுவர்களுக்கு வெளியே விரிவடையத் தொடங்கியதுடன் பழைய சுவர்கள் பலவும் அழிந்து போய்விட்டதையும் காண முடியும். அணைச் சுவர்கள் நிலத்துக்குக் கீழ் கட்டப்படும் அமைப்புக்களிலோ அல்லது நிலத்துக்கு மேலுள்ள அமைப்புக்களிலோ மண், கற்கள், நீர் முதலியவற்றின் நகர்வைத் தடுக்கும் விதத்தில் கட்டப்படும் சுவர்கள் அணை சுவர்கள்(Retaining wall) ஆகும். வெளிப்புறத்தில் நில மட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் காணப்படும் இடங்களில் அணை சுவர்கள் தேவைப்படுகின்றன. இதைவிட நிலக்கீழ் அறைகள், நீர்த் தாங்கிகள், பெரிய அணைகள் போன்றவைகள் கட்டப்படும்போதும் அணை சுவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையும் பார்க்கவும் சுவர்களின் பட்டியல் உலர்-கற்சுவர் கட்டுமானம் வேலி கட்டிடக் கூறுகள்
5975
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88
கூரை
மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்தும், விலங்குகள், பறவைகள், வெளி மனிதர்கள் ஆகியோரின் ஊடுருவல்களிலிருந்தும் கட்டிடத்தின் உட் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகக் கட்டிடத்தின் மேற்பகுதியை மூடி அமைக்கப்படும் கட்டிடக் கூறே கூரை எனப்படுகின்றது. கூரைகள் இன்று பல வடிவங்களிலும் பல்வேறு கட்டிடப் பொருள்களைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. மழை மற்றும் பனிமழைகள் பெய்யும் இடங்களில் கட்டப்படும் மரபு சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் சரிவான கூரை அமைப்புக்களைக் கொண்டுள்ளன. இது கூரையில் விழும் மழை நீர் மற்றும் பனிக்கட்டிகள் முதலானவை இலகுவில் வழிந்தோடுவதற்கு இலகுவானது. கூரையின் வகைகள் கூரையின் வடிவம், பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருட்கள், அமைப்புத் தொழில் நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம். தட்டையான கூரைகள் (flat roofs) சாய்வான கூரைகள் (pitch roofs) கூடாரங்கள் (tents) குவிமாடக் கூரைகள் (domes) வளை கூரைகள் (vaults) Shells தொங்கல் அமைப்புக் கூரைகள் (suspension structures) Geodesic Domes என ஏராளமான கூரை வகைகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இவற்றுட் சில பல்லாயிரம் ஆண்டுகளாகவே பயன்பாட்டில் உள்ளவை. சில வகைகள் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவுகள். சிலவகையான கட்டிடங்களில் கூரை, சுவர் ஆகியவற்றுக்கு இடையே வேறுகாடு காண முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, சில வகைக் கூடாரங்கள், [[இக்லூ] போன்றவற்றில் கூரைகளே நிலம் வரை நீள்வதனால் சுவர் என்று தனியாக அடையாளம் காணப்படக்கூடிய எதுவும் கிடையாது. கூரைக் கான கட்டிடப்பொருள்கள் கூரைக்கான கட்டிடப் பொருட்களை அமைப்புச் சட்டகங்களுக்கான கட்டிடப் பொருட்கள், அவற்றின் மேல் மூடுவதற்குப் பயன்படும் பொருட்கள் என வகைப்படுத்த முடியும். மிகவும் அடிப்படையான புற்கள், இலை குழைகள், மண், கற்பலகைகள் என்பன தொடக்கம் காங்கிறீற்று, உருக்குத் தகடுகள், அலுமீனியம், ஈயம் வரையான பல்வேறு வகையான பொருட்கள் கூரையின் வெளிப்புற மூடல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமைப்புச் சட்டகங்களில், காட்டுத்தடிகள் மற்றும் மரங்கள், செம்மைப் படுத்தப்பட்ட மரம், உருக்கு, அலுமீனியம் போன்ற பொருட்களைக் காண முடியும். சிலவகைக் கூரை அமைப்புக்கள் அமைப்புச் சட்டகம், மூடல் எனத் தனித்தனியாக அமையாமல் இரண்டும் ஒன்றாகவே அமைகின்றன. எடுத்துக்காட்டாக, குவிமாடங்கள், வளை கூரைகள்(Vaults), shells முதலியவற்றில் அமைப்புக் கூறும், மூடற் கூறும் ஒன்றே. கட்டிடக்கலை கட்டிடக் கூறுகள்
5979
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20%28%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%29
வேலி (எல்லை)
வேலி என்பது ஒரு நில அளவைக்கான அலகாகவும் தமிழ் நாட்டில் பயன்படுத்தப் படுகின்றது. ஆனால் இக்கட்டுரை நிலப் பகுதிகளைச் சுற்றி அமைக்கப்படும் வேலிகள் பற்றியதாகும். வேலி என்பது கட்டிடங்களுக்கு உரிய நிலம், பயிர்ச் செய்கைக்குரிய நிலம் மற்றும் பலவகையான நிலப் பகுதிகளைச் சுற்றியும், சில வேளைகளில் ஒரே நிலப்பகுதிக்குள் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் அல்லது செயற்பாடுகளுக்கான பகுதிகளைப் பிரித்து ஒதுக்கும் வகையிலும், மறைப்புக்காகவும் அமைக்கப்படுவதாகும். எல்லைகளில் அமைக்கப்படும் வேலிகள் எல்லை வேலிகள் என அழைக்கப்படுகின்றன. வேலியும், மதிலும் மதில் அல்லது மதில் சுவர் என்பதும் எல்லைகளில் பாதுகாப்புக்காகக் கட்டப்படும் அமைப்பினைக் குறித்தாலும், நிரந்தரமான, திடப் பொருளால், அதனூடு பார்க்க முடியாதவாறு உள்ளவற்றையே இவ்வாறு அழைப்பது வழக்கம். வேலி பெரும்பாலும் நீடித்து உழைக்காத பொருட்களால் அமைக்கப்படுவதுடன், பொதுவாக இலகுவான கட்டுமானங்களாகவும், ஊடாகப் பார்க்கக்கூடிய தன்மை கொண்டவையாகவும் இருக்கும். வேலிகள் அமைப்பதற்கான செலவும், மதில்களோடு ஒப்பிடும் போது குறைவே. வேலியும் செயற்பாட்டுத் தேவைகளும் வேலிகள் பல்வேறுவகையான தேவைகளுக்காக அமைக்கப்படுகின்றன. வெளி ஊடுருவல்களிலிருந்து பாதுகாப்புக் கொடுத்தல் முக்கியமான தேவையாகும். வேலியே பயிரை மேய்வது போல என்ற பழமொழி பயிர்ச் செய்கை நிலங்களில் வேலியின் செயற்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்ற வேலிகள் ஆடு, மாடு மற்றும் அந்நிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவல்களைத் தடுப்பதுடன், பல சமயங்களில் வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதைத் தடுக்கும் மறைப்புகளாகவும் செயற்படுகின்றன. இலங்கையின் யாழ்ப்பாணக் கிராமங்கள் இத்தகைய வேலிகளுக்குப் பெயர் பெற்றவை. யாழ்ப்பாணத்தைப் பற்றி எழுதிய வெளிநாட்டார் பலர் அங்கிருந்த வேலிகள் பற்றிக் குறிப்பிடாமல் விட்டதில்லை. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இவை பொதுவாக மனிதர் ஏறி உள்ளே புகமுடியாதபடி உயரமானவையாக அமைவதுடன், இவ்வாறு செய்வதற்குச் சிரமமான முள்ளுக் கம்பிகள் போன்ற பொருட்களையும் பயன் படுத்துவார்கள். காட்டுப் பகுதிகளில் யானைகள் போன்ற பெரிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் அழுத்தம் குறைந்த மின்சாரம் பாய்ச்சப்படும் மின்சார வேலிகளையும் அமைப்பதுண்டு. வேலியடைப்பதற்கான பொருட்கள் காய்ந்த இலை குழை பனையோலை தென்னோலை / கிடுகு காய்ந்த குச்சி இரும்புத் தகடு முள்ளுக் கம்பி இரும்புக் கம்பிகள்/சட்டங்கள் மரக்குற்றி இவற்றையும் பார்க்கவும் பனை மட்டை கதியால் (அல்லது கதிகால் ) மதில்களும் வேலிகளும்
5984
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
குவிமாடம்
குவிமாடம் (dome) என்பது பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலைக் கூறுகளில் ஒன்று. இது ஒரு வகைக் கூரை அமைப்பு ஆகும். இது ஏறத்தாழக் கவிழ்த்து வைக்கப்பட்ட உள்ளீடற்ற அரைக் கோள வடிவத்தை உடையது. எனினும் குவிமாடங்களின் வடிவங்களில் வேறுபாடுகளையும் அவதானிக்கமுடியும். சில கட்டிடங்களில் குவிமாடங்கள் அரைக்கோள வடிவில் அல்லாது அதனிலும் உயரம் குறைந்த கோளத் துண்டு வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. வெங்காய வடிவம் கொண்ட குவிமாடங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. மாஸ்கோவிலுள்ள புனித பசில் தேவாலயத்திலுள்ள குவிமாடங்கள் இவ்வகைக் குவிமாடங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. இஸ்லாமியக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களிலும் இவ்வகைக் குவிமாடங்களைக் காண முடியும். கூரை தொடங்கும் இடத்திலிருந்து அமையும் குவிமாடங்களும், இவ்விடத்திலிருந்து உயர்த்தி அமைக்கப்படும் குவிமாடங்களும் உள்ளன. குவிமாடங்கள் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்ட கட்டட அமைப்பாக உள்ளன அவை சேறு, பனி, கல், மரம், செங்கல், கான்கிரீட், உலோகம், கண்ணாடி நெகிழி ஆகியவற்றால் பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன. குவிமாடக்கோபுரமானது அடக்குமறை, தெய்வீகம், வானக்கோளம் அரசாங்க மரபுகள் போன்றவற்றுடன் தொடர்படையவையாகக் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. துவக்கக்கால மெசொப்பொத்தேமியாவிலிருந்து குவிமாடங்கள் காணப்படுகின்றன, இவை இங்கிருந்தே பரவி இருக்கலாம். இவை பண்டைய பாரசீகம், ஹெலனியர், ரோமன், சீனக் கட்டிடக்கலை போன்றவற்றில் காணப்படுகின்றன, அத்துடன் பல நவீனகால கட்டிட வளாகங்களில் இவை காணப்படுகின்றன. இவை பைசண்டைன் மற்றும் இடைக்கால இஸ்லாமிய கட்டிடக்கலையில் பிரபலமாக இருந்தன என்பதற்கு, நடு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இருந்து பல உதாரணங்கள் உள்ளன. துவக்க நவீன காலத்தில் இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி பாணி பிற பகுதிகளுக்குப் பரவியது. கணிதத்தில் முன்னேற்றங்கள், பொருட்கள் மற்றும் உற்பத்தி நுட்பங்கள் வளர்ச்சி ஆகியவற்றால் புதிய குவிமாட வகைகள் உருவாயின. நவீன உலகின் கோபுரங்கள் சமயக் கட்டிடங்கள், சட்டமன்றக் கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற பல்வேறு செயல்பாட்டு கட்டமைப்புகளில் குவிமாடங்களைக் காணலாம். பெயராய்வு குவிமாடத்தைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான "டோம்" என்ற சொல் லத்தீன் மொழியின் டோம்ஸில் ("வீடு") என்ற சொல்லில் இருந்து வந்தது. அதன் கூரை வடிவத்தைப் பொருட்படுத்தாமல், டோமஸ் டீ அல்லது "கடவுளின் வீடு" போன்ற புகழ்பெற்ற வீட்டின் பெயரில் இருந்து தோன்றியது. இது இத்தாலிய மொழியில் டூமொமோ (duomo) என்றும், ஜெர்மன் / ஐஸ்லாண்டிக் / டேனிஷ் மொழிகளில் dom ("கதீட்ரல்") என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் 1656 ஆம் ஆண்டின் பிற்பகுதிவரை dome என்ற ஆங்கிலச் சொல்லானது, நகரத்தில் உள்ள "டவுன்-ஹவுஸ், கில்ட்-ஹால், ஸ்டேட் ஹவுஸ், மீட்டிங் ஹவுஸ்" ஆகியவற்றை குறிக்கும் பொருளில் வழங்கப்பட்டது. பிரெஞ்சு மொழியில் 1660 வரை dosme என்ற சொல் கோபளா வால்ட் என்ற கட்டட அமைப்பைக் குறிப்பிடும் பொருள் பெற்று வந்தது, பதினேழாம் நூற்றாண்டில் இந்த பிரெஞ்சில் இச்சோல் படிப்படியாக ஆங்கிலத்தில் குறிப்பிடும்படக்கூடிய குவிமாடத்தை குறிப்பிடக்கூடிய சொல்லாக ஆனது, இவ்மைப்பில் மிகவும் சிறப்பு மிக்கதாக கடவுளுக்கான நினைவுச்சின்னங்கள் கோபுரங்களுடன் கட்டப்பட்டன,   மேலும் தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றம் தேவையின் அறிவியல் பிரதிபலிப்பாக ஆனது. சொல் குவிமாடம் என்பது வளைந்த பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வட்டவடிவ வளைவு ஆகும், அதாவது அதன் மையச் செங்குத்து அச்சு சுற்றிய வட்டமாக இருக்கும். சில நேரங்களில் "தவறான" குவிமாடங்கள் என்று அழைக்கப்படுபவை, கட்டுமானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றும் கிடைமட்ட அடுக்குகளாக மேல்நோக்கி கட்டப்பட்டவையாக இருக்கும். "தவறான" குவிமாடம் மரக் குவிமாடம் என்றும் குறிப்பிடப்படுகிறது. "உண்மையான" குவிமாடங்கள் என்பவை ஆப்பு வடிவ கற்களை உறுப்புக் கூறுகளாகக் கொண்டு கட்டப்பட்டவை. குவிமாடமானது அதன் உயரம் செல்லச்செல்ல உள்ளபக்கமாக வளைந்து இறுதியில் கூடும். குவிமாடத்தின் உச்சிப்பகுதி "மகுடம்" (crown) எனப்படும். குவிக்கட்டுமானத்தின் உள் பக்கம் "கவானகம்" (intrados) என்று அழைக்கப்படுவதுடன் வெளிப்புறம் "கவான்புறம்" (extrados) என்றும் அழைக்கப்படுகிறது.   "விதான இடுப்பு" (haunch) என்பது குவிமாடத்தின் அடிப்பகுதி மற்றும் மேல்வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் ஒரு வளைவுப் பகுதியின் பெயராகும். குப்போலா என்ற சொல் "குவிமாடம்" என்பதற்கான மற்றொரு சொல்லாகும், இது பொதுவாக ஒரு கூரை அல்லது கோபுரத்தின் மீது உள்ள ஒரு சிறிய குவிமாடத்தைக் ( சிறுகோபுரம்) குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.   "கும்போலா" என்ற சொல்லானது உள் குவிமாடத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. "பறை" (Drums) அல்லது டோலோபேட் (Tholobate) என்று அழைக்கப்படுவது, குவிமாடத்தைத் தாங்கி நிற்கும் சன்னல்களைக் கொண்டோ அல்லது இல்லாமலோ உள்ள உருளை வடிவிலோ அல்லது பலகோண வடிவிலோ உள்ளச் சுவர்களைக் குறிப்பதாகும். டம்போர் அல்லது லாந்தரின் குவிந்தப் பகுதியை தாங்கியபடி உள்ள சமமான கட்டமைப்பைக் குறிப்பது ஆகும். குவிமாடத்தின் அமைப்பு குவிமாடத்தின் வளைந்த வடிவமே அதற்கு உறுதியைக் கொடுக்கிறது. இரு பரிமாண அமைப்பான கவானின் உறுதிக்கான அதே தத்துவத்தின் அடிப்படையிலேயே முப்பரிமாண அமைப்பான குவிமாடம் உறுதியுள்ளதாக இருக்கின்றது. கவான் அமைப்பை அதன் நிலைக் குத்து அச்சில் சுழற்றுவதன் மூலம் குவிமாட அமைப்புப் பெறப்படுவதாகக் கொள்ளலாம். தட்டையான கூரை அமைப்புக்களைப் போலன்றி, குவிமாடங்களின் வடிவம் காரணமாக, அவற்றின் எல்லாப் பகுதிகளிலும் அழுத்த விசையே தொழிற்படுவதனால் செங்கற் கட்டுமானத்தின் மூலம் கூடக் குவிமாடங்களை அமைக்க முடிந்தது. ஆரம்பகாலங்களில் குவிமாடக் கூரைகளைத் தாங்குவதற்காகச் சுவர்களை வட்டமாக வளைத்துக் கட்டவேண்டியிருந்தது அல்லது வட்டவடிவமாகத் தூண் நிரைகளை அமைக்க வேண்டியிருந்தது. இதனால் குவிமாடங்களுக்குக் கீழ் அமையும் இடம் அல்லது அறைகளின் தள வடிவம் வட்டமாகவே அமைய வேண்டியிருந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வாக பைசண்டைன் காலப் பகுதியில் புதிய அமைப்பு முறையொன்று அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் மூலம் சதுரமான அறைகள், கூடங்கள் முதலியவற்றுக்குக் குவிமாடக் கூரைகளை அமைக்க வழியேற்பட்டது. இத்தகைய அமைப்பு பெண்டெண்டிவ் (pendentive) எனப்படுகிறது. பல விளையாட்டு அரங்கங்கள் குவிமாடங்கள் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக மாறுகின்ற தட்பவெட்ப சூழலைக் கொண்ட இடங்களில் இவை அமைக்கப்படுகின்றன. இவ்வகையில் கட்டப்பட்ட முதல் அரங்கம் ஒன்டோரியோவின் டொரென்டோ நகரில் கட்டப்பட்ட திறந்து மூடும் வசதி கொண்ட "ஸ்கை டோம்" ஆகும். பிரபலமான குவிமாடங்கள் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது: 27 BC – பந்தியன் (Pantheon), ரோம், இத்தாலி. 537 – ஹேகியா சோபியா, கொன்ஸ்டண்டினோப்பிள் , துருக்கி. 691 – பாறைக் குவிமாடம் (Dome of the Rock), ஜெரூசலெம். 1312 – சொல்தானியே குவிமாடம் (Dome of Soltaniyeh), ஈரான். 1436 – புளோரன்ஸ் பேராலயம், இத்தாலி 1502 - டோனடோ பிராமன்டேல்,ரோம்,இத்தாலி 1593 – புனித பேதுரு பேராலயம், வத்திக்கான். 1616 – நீல மசூதி, இஸ்தான்புல், துருக்கி. 1653 – தாஜ் மகால், ஆக்ரா, இந்தியா. 1659 – கொல் கும்பாஸ், பிஜப்பூர், கர்நாடகம், இந்தியா 1708 - லெஸ் இன்வாளிடேஸ்,பாரிஸ்,பிரான்ஸ் 1708 – புனித பவுல் பேராலயம், இலண்டன், இங்கிலாந்து. 1749 - ராட்கிளிப் காமேரா,ஆக்ஸ்போர்ட்,இங்கிலாந்து 1858 – சென். ஐசாக் தேவாலயம், சென். பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யா. 1850கள் - ஐக்கிய அமெரிக்க தலைமையகம்,வாஷிங்டன் டி.சி,அமெரிக்கா 2000 மில்லெனியம் டோம், இலண்டன், இங்கிலாந்து. பொதுவான வகைகள் குலோய்ஸ்டர் அறை குவிமாடம் இவை கிடைமட்டமாக பல்கோண வடிவத்தை கொண்ட குவிமாடமாகும் மேலும் இவை பகுதி குவிமாடம் அல்லது பலகோண குவிமாடம் என்று அழைக்கப்படும்.இந்தவகையில் புளோரன்ஸ் கதீட்ரல் மீது ஃபிலிப்போ ப்ருன்செலிசி என்ற இடத்தில் உள்ள எண்கோண குவிமாடம் மற்றும் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் அவரது தோட்ட வீட்டில் நிறுவப்பட்ட எண்கோண குவிமாடம். கோளப்பரப்பு குவிமாடம் கோளப்பரப்பு குவிமாடங்களின் புவிப்பரப்பு கோளங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ளது.அது வேறுபட்ட முக்கோணங்களை கொண்ட ஒரு கட்டமைப்பாகும். வெங்காயம் குவிமாடம் வெங்காயம் குவிமாடம் அல்லது குமிழ்க்கும்மட்டம் அதிகமாக ரஷ்யா, துருக்கி, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.பொதுவாக உருசிய மரபுவழி தேவாலயங்கள் இத்தகைய குவிமாடத்தின் மீது அமைக்கப்படுகிறது.இதன் உயரம் பொதுவாக அதன் அகலம் அதிகமாக கொண்டுள்ளது. இதற்கு சிறந்த எடுத்துகாட்டு செயிண்ட் பசில் மாஸ்கோ கதீட்ரல் மற்றும் தாஜ் மஹால் ஆகும். 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நெதர்லாந்து நாடுகளில் இவை அதிகமாக உருவாக்கப்பட்டன. முட்டை வடிவ குவிமாடம் முட்டை வடிவ குவிமாடங்கள் கி.மு. 4000 ஆம் முதலே ஆசியா மைனர் பகுதியில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது.இவை மறுமலர்ச்சி மற்றும் பரோக் பாணியில் மிக பிரபலமானதாகும்.இம்முறையில் பிரான்செஸ்கோ மார்க் பசிலிக்கா இம்முறையில் கட்டப்பட்டது. பரவளைய குவிமாடம் பரவளைய குவிமாடம் ஒரு தனிப்பட்ட அமைப்பாகும் அதன் வளைவு அழுத்தமானது சமமாக பரவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அது வலிமையான அமைப்பாக உள்ளது. எனவே அது பரவலாக பண்டைய காலத்தில் பயன்பட்டது. தட்டு வடிவ குவிமாடம் ஒரு தட்டு குவிமாடமானது வடிவியல் ஒரு வட்ட அடித்தளத்தையும் உயரம் குறைந்த ஒரு அரைக்கோளத்தைக் கொண்டதாக உள்ளது.இவ்வமைப்பின் மூலம் குறைவான எதிரொலிப்பே உருவாகிறது.மேலும் மிகப்பெரிய குவிமாடங்கள் இந்த வகையைச் சேர்ந்ததாகவே உள்ளது. இவைபெரும்பாலும் பைசண்டைன் தேவாலயங்கள் மற்றும் ஒட்டோமான் மசூதிகளில் அரிதாக வெளிப்புறமாகக் காணப்படும்.மற்றும் இந்தியா, பாக்கிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள பெரும்பாலான மசூதிகள் இவ்வகையைச் சேர்ந்ததாக உள்ளது. குடை குவிமாடம் இவ்வகை பூசணிவடிவம்,முலாம்பழ வடிவம், பாராசூட் வடிவம் மற்றும் பிரிவுகளையுடைய வடிவம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த வகையில் குவிமாடமானது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அப்பிரிவுகளில் அதன் எடையை தாங்குவதற்கான அமைப்பை உடையதாக கட்டப்பட்டுள்ளது. "ஹேகியா சோபியா" குவிமாடத்தில் இந்த அமைப்புகளுக்கிடையே ஜன்னல்கள் உடையதாக இதன் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் செயின்ட் பீட்டர் பசிலிக்காவின் மத்திய குவிமாடம் இந்த முறை பயன்படுத்தி கட்டப்பட்டதாகும். இவற்றையும் பார்க்கவும் கோளப்பரப்புக் குவிமாடம் காங்கிறீற்றுக் குவிமாடம் குவிமாடத் தொழில் நுட்பம் வெளியிணைப்புகள் The Dome of Brunelleschi, Florence virtual reality movie and pictures மேற்கோள்கள் கட்டிடக்கலைக் கூறுகள்
5989
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
ஆப்கானித்தான்
ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான், Afganistan; பசுதூ மொழி/தாரி மொழி: , ) தெற்கு ஆசியாவிற்கும் நடு ஆசியாவிற்கும் குறுக்கே அமைந்துள்ள நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஓர் ஆசிய நாடாகும். இதன் கிழக்கிலும், தெற்கிலும் பாக்கித்தான், மேற்கில் ஈரான், வடக்கில் துருக்மெனித்தான், உசுபெக்கிசுத்தான், வடகிழக்கில் தசிகித்தான், சீனா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. பாக்கித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. 652,864 சதுர கிலோமீட்டர்கள் (252,072 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்ட இந்நாடு, பெரும்பாலும் மலைத்தொடர்களையும், வடக்கிலும், தென்மேற்கிலும் சமவெளிகளையும் கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டின்கணக்கெடுப்பின் படி, இங்கு 31.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பசுதூன், தசிக்கு, கசாரா, உசுபெக் இனத்தவராவர். காபுல் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். ஆப்கானித்தானில் மனிதக் குடியேற்றம் இடைக்காலப் பழைய கற்காலத்திற்கு முந்தையது. அத்துடன் பட்டுப் பாதையில் இந்நாடு அமைந்திருந்ததால், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுடனான தொடர்புகளுக்கு மூலோபாய இடமாக அமைந்துள்ளது. இந்நிலம் வரலாற்று ரீதியாக பல்வேறு மக்களுக்கு தாயகமாக இருந்து வருகிறது. பேரரசர் அலெக்சாந்தர், மௌரியர், முசுலிம் அராபியர்கள், மங்கோலியர்கள், பிரித்தானிய, சோவியத், மற்றும் 2001 இல் நேட்டோ-நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உட்படப் பல இராணுவ நடவடிக்கைகளை இந்நாடு கண்டது. வரலாற்றின் பல்வேறு காலங்களில் இது ஆக்கிரமிக்கப்பட்டு வந்திருந்தாலும், இது "வெல்ல முடியாதது" என்றும், "பேரரசுகளின் கல்லறை" என்றும் அழைக்கப்படுகிறது. கிரேக்க பாக்திரியர், குசான்கள், எப்தலைட்டுகள், சமானிதுகள், சஃபாரிதுகள், காசுனவிதுகள், கோரி, கில்சி, முகலாயர், ஓட்டாக்கு, துரானி போன்றோர் பெரிய பேரரசுகளை உருவாக்குவதற்கு இந்த நிலம் ஆதாரமாக இருந்து வந்தது. இன்றைய ஆப்கானித்தான் 18-ஆம் நூற்றாண்டில் ஒட்டாக்கு, துரானி வம்சங்களுடன் தொடங்கியது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆப்கானித்தான் பிரித்தானிய இந்தியாவிற்கும் உருசியப் பேரரசிற்கும் இடையிலான "பெரும் போட்டியில்" ஒரு இடையக மாநிலமாக மாறியது. 1919 இல் நடந்த மூன்றாம் ஆங்கிலோ-ஆப்கானியப் போரைத் தொடர்ந்து, அந்நாடு வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, இறுதியில் 1926 சூன் மாதம் மன்னர் அமானுல்லாவின் கீழ் ஆப்கானித்தான் இராச்சியமாக மாறியது. இந்த இராச்சியம் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் வரை நீடித்தது. 1973 சூலையில் மன்னர் முகம்மது சாகிர் சா பதவியில் இருந்து அகற்றப்பட்டு ஒரு குடியரசு நிறுவப்பட்டது. 1978 இல், இரண்டாவது இராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆப்கானித்தான் ஒரு சோசலிச நாடாக மாறியது, 1980 களில் முசாகிதீன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சோவியத்–ஆப்கான் போரைத் தூண்டியது. 1996ஆம் ஆண்டிற்குள் ஆப்கானித்தானின் பெரும்பகுதி இசுலாமிய அடிப்படைவாதக் குழுவான தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது, அவர்கள் நாட்டின் பெரும்பகுதியை ஒரு சர்வாதிகார ஆட்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். 2001-இல் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டாலும், நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். 2021 தாலிபான் தாக்குதல், அதன் விளைவாகக் காபூலின் வீழ்ச்சி ஆகியவற்றுடன் தாலிபான்கள் மீண்டும் நாட்டை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நாட்டில் பயங்கரவாதம், வறுமை, குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு, ஊழல் அதிக அளவில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் அவை, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, 77 குழு, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அணிசேரா இயக்கம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஆப்கானித்தானின் பொருளாதாரம் உலகில் 96-வது நிலையில் உள்ளது. கொள்வனவு ஆற்றல் சமநிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) 72.9 பில்லியன் டாலர்கள் ஆகும்; தனிநபர் விகிதத்தில் மொ.உ.உ அடிப்படையில் 2018 இல் 186 நாடுகளில் 169 வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது. பெயரின் பின்னணி "அஃப்கான்" என்ற வேர்ச் சொல், சில அறிஞர்களின் கூற்றுப்படி, இந்து குஃசு பிராந்தியத்தின் பண்டைய குடிமக்களான அசுவாகன் அல்லது அசாகன் என்ற சமற்கிருதப் பெயரிலிருந்து பெறப்பட்டது. அசுவாகன் என்பதன் பொருள் "குதிரை வீரர்கள்", "குதிரை வளர்ப்பவர்கள்" அல்லது "குதிரைப் படையினர்" ("குதிரை" க்கான சமற்கிருத, அவெசுதான் சொற்களான ஆசுவா அல்லது அசுப்பாவில் இருந்து) ஆகும். வரலாற்று ரீதியாக, ஆஃப்கான் என்ற இனப்பெயர் பசுதூன் மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அஃப்கான் என்ற பெயரின் அரபு, பாரசீக வடிவம், ஊதுத் அல்-ஆலம் என்ற 10 ஆம் நூற்றாண்டின் புவியியல் நூலில் முதன் முதலில் சான்றளிக்கப்பட்டது. பெயரின் கடைசி பகுதி, "-இசுத்தான்" என்பது "இடம்" என்பதற்கான பாரசீக பின்னொட்டு ஆகும். எனவே, "ஆப்கானித்தான்" வரலாற்று ரீதியில் "ஆப்கானியர்களின் நிலம்" அல்லது "பஷ்தூன்களின் நிலம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறை 18-ஆம் நூற்றாண்டில் அகமது ஷா துரானி என்பவர் துராணிப் பேரரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் "அப்துர் ரகுமான் கான்" என்பவரால் இது அரச ஏற்புடைய பெயராக அறிவிக்கப்பட்டது. வரலாறு கி. மு ஆப்கானித்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானித்தானில் பல நாகரிகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானித்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல்வேறு ஆக்கிரமிப்புக்குக்களுக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்), கிரேக்கர், மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் (Mauryans, Kushans, Hepthalites), அரேபியர், மொங்கோலியர் போன்றவர்களாலும் , துருக்கி, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பலநாடுகளாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. கி. மு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அக்கேமெனிடு (Achaemenid) பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தது. கி.மு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். கி.மு 323 இல் இவனது மரணத்திற்குப் பின்னர் செலூச்சியப் பேரரசு, பக்திரியா (Seleucids, Bactria), அத்துடன் இந்தியாவின் மௌரியப் பேரரசுபோன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மௌரியப் பேரரசினால் இந்நிலப்பகுதியினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது. கி.பி கிபி முதலாம் நூற்றாண்டில தொசேரியன்,குசானர்கள் (Tocharian Kushans) போன்றோர், இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னர் பாரசீகர், சித்தியர் (Parthians, Scythians), மற்றும் மொங்கோலியரான ஃகூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும் (Eurasian tribes), சாசானியர்கள் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாஃகிகள் (Hindu Shahis) போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர். ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானித்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானித்தானுக்கு 652 இல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706–709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முசுலிம்களாக மாறினர். ஐக்கிய இராச்சிய ஆட்சி 19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் (பேரரசின்) வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானித்தானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919 இல் அரசர் `அமனுல்லா கான்' அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானித்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானித்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. அப்போது பிரித்தானிய இந்தியாவிற்கும், ஆப்கானித்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது. சாஃகிர் சாவின் ஆட்சி நட்புக்கொண்டவர்.ஆப்கானித்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாஃகிர் சாவின் ஆட்சிக் காலமே ஆகும். எனினும் 1973 இல் சாஃகிர் சாவின் மைத்துனன் சர்தார் தாவூத் கான் புரட்சிமூலம், பதவியைக் கைப்பற்றிக்கொண்டான். ஆயினும் தாவூத் கானும் அவரது மொத்த குடும்பமும் 1978இல் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை இடதுசாரிகளான ஆப்கானித்தான் மக்கள் மக்களாட்சிக்கட்சி (People's Democratic Party of Afghanistan) ஆல் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, இக்குழுவினர் பட்டாளப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். இது (Great Saur Revolution) "மாபெரும் சவுர் புரட்சி" என்று அழைக்கப்படுகின்றது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த இடது சாரி அரசும் உட்பிரச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு கடுஞ்சிக்கல்களை எதிர்கொண்டது. உருசியா – அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் ஆப்கானித்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 இல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு, அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் "சிக்னீவ் பிரசின்கி" (Zbigniew Brzezinski) – அவர்களின் ஆலோசனையினால் பாக்கித்தானின் ஐ. எசு. ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முச்சாகதீன்களுக்கு உதவி அளித்தது. பல்வேறு பன்னாட்டு அழுத்தங்களினாலும், சுமார் 15,000 துருப்புக்களை முச்சாகதீன்களுடனான போரில் இழந்ததனால், சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 இல் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களுக்குப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அமெரிக்காவிற்கு ஆப்கானித்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதைந்துபோன ஆப்கானித்தானைச் சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும், அதிபர் நச்யிபுல்லாவிற்குத் தமது ஆதரவை வழங்கியது; ஆயினும் 1992 இல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகள் வெளியேறியமை, இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும், போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது. பல சிறுபான்மையினரும், அறிவுஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானித்தானைவிட்டு வெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும், முச்சாகதீன்களின் பல உட்பிரிவுகளுக்கிடையில் போர்கள் மூளலாயின. இதன் உச்ச கட்டமாக 1994 இல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தாலிபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் எல்மான்ட், கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த பட்டாணியர்கள் (Pashtuns) ஆவர். தாலிபான் ஆட்சி தாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை "வடக்கு முண்ணனி" எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தாலிபான்கள், ஷரீஆ எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், "அல்-காயிதா" தீவிரவாதியான உசாமா பின் லாதினைப் பாதுகாத்தனர். தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்லநிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் "ஆப்கானின் அபின்" எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும். 2001 அமெரிக்க நடவடிக்கை செப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. தாலிபானைத் தோற்கடிக்க வடக்கு முன்னணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. 2001 டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் "பொன்" நகரில் கூடி ஆராய்ந்து, ஓர் இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பட்டாணிய (பாஸ்துன்) இனத்தவருமான "ஹமீது கர்சாய்" ஆப்கானிய இடைக்கால அரசின் இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார். இடைக்கால அரசு 2002 இல் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர்க், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 இல் நாட்டுக்குப்ப புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 இல் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்தலின் மூலம் ஹமீது கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 இல், சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 1973ஆம் ஆண்டுக்குப்பின்னர்ச் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட "சட்டவாக்க சபை" இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும். நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும், கணிசமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம்குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, அபின் வியாபாரம் போன்றவற்றைக்குறிப்பிடலாம். இதைவிட அந்நாட்டில் மிஞ்சியிருக்கும் அல்-காயிதா உறுப்பினர்கள் மற்றும் தாலிபான் போராளிகளின் தாக்குதல்கள் வேறு தொடர்ந்து நடக்கின்றன. மேலும், வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை கொடுத்து வருகின்றனர். அரசாங்கமும் கொள்கைகளும் ஆப்கானித்தானின் அரசியலானது வரலாற்று ரீதியாகப் பல்வேறுபட்ட குழப்பங்கள் நிறைந்தது. உதாரணமாக, பல்வேறுபட்ட அரசியல் பதவிச் சண்டைகள், இராணுவப் புரட்சிகள், நிலையற்ற ஆட்சி அதிகார மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த நாடு இராணுவ ஆட்சி, அரசாட்சி, குடியரசு, சமவுடைமை அரசு என்று பல்வேறு பட்ட ஆட்சிமுறைகளின்கீழ் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் அரசியல் சட்டம், லோயா ஜிர்காவால் மீள் அமைக்கப்பட்டது. இதன்படி ஆப்கானித்தான் ஓர் இசுலாமியக் குடியரசாக மாற்றப்பட்டது. இதில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன; அவை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவாகும். ஆப்கானின் தற்போதைய அதிபராக ஹமீது கர்சாய் உள்ளார். இவர் 2004 அக்டோபரில் தெரிவுசெய்யப்பட்டார். இவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும் இன்னமும் அடக்கப்படாமல் உள்ள பழைய இராணுவத் தலைமைகளால் கொஞ்சம் கெட்ட பெயரும் உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றம் 2005 இல் தெரிவுசெய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் உள்ளடங்குவர். இவர்களுள் 28% பெண்கள் ஆவர்; இதன் மூலம் தாலிபான் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்துள்ளதுடன், "அதிகளவு பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்ட நாடுகளில் ஆப்கானித்தானும் ஒன்று" என்ற நிலையையும் பெற்றது. ஆப்கனிஸ்தான் நாட்டின் "மீயுயர் நீதிமன்றம்" (Supreme Court of Afghanistan) தற்போது தலைமை நீதிபதி "அப்துல் சலாம் அசினி"யால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அதிபரின் சட்ட ஆலோசகரும் ஆவார். முன்பிருந்த நீதி மன்றம், இடைக்கால அரசின்போது நியமனம் செய்யப்பட்டது. ஆயினும் இதில் பைசல் அஹமட் ஷின்வாரி போன்ற பழமைவாதிகள் இருந்தனர். அதனால், அப்போதைய நீதிமன்றம் பல்வேறு தனிநபர் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்களை உருவாக்கியது; உதாரணமாகக் கேபிள் தொலைக்காட்சியைத் தடைசெய்தமை, பெண்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றமை, மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதன்அதிகார வரம்புக்கு அப்பால் பாவிக்க முயன்றமை என்பவற்றைக் கூறலாம். ஆயினும் தற்போதைய நீதிமன்றம் சரியான நபர்களால் வழிநடத்தப்படுகின்றது. நிர்வாக அலகுகள் முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் ஆப்கானித்தான், முப்பத்தொரு (31) மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்கள் மேலும், மாவட்டங்கள் என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் ஆப்கானித்தான் உலகில் மிக வறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு (2) அமெரிக்க டொலர் பண மதிப்புக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசின் நிலையற்ற தன்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பெருளாதார ரீதியாக செயலூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆயினும் வேலையில்லாதோர் வீதம் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் அந்த நாட்டில் வேலையில்லாதோர் விழுக்காடு(%) மிக உயர்வு என்பதே உண்மை. தொழில்சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட மூன்று (3) மில்லியன் அளவினர் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 இனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆப்கானித்தானிய மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அபின், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப்பொருள்கள் மூலமே கிடைக்கின்றது. அனைத்துலக உதவி மறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானித்தானைக் கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு, ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 இல் உருவாகிய பின் "டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில்" 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், லண்டன் மாநாட்டின் மூலம் 2006 இல் ஆப்கானுக்குக் கிடைத்தது. வளர்ச்சித்திட்டத்தில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயிர்ச் செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொடர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மீள்கட்டுமானம் 2004 ஆம் ஆண்டுக்கான 'ஆசிய அபிவிருத்தி வங்கி'யின் அறிக்கையின்படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு முக்கிய கிளைகளைக் கொண்டுள்ளன. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும், இரண்டாவதாக நவீன பொதுக் கட்டமைப்பை (Modern Public Sector) ஏற்படுத்துவதும் அடங்கும். 2006 இல் இரண்டு அமெரிக்கக் கம்பெனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காகத் தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன. தற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீளவும் இங்கு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் ஆண்டுதோறும் கிடைத்து வருவதும், பொருளாதாரத்திற்குச் சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார்துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். துபாயில் வசித்துவரும் ஆப்கானியக் குடும்பம் ஒன்று, ஆப்கானில் ஒரு கொக்கா – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும். நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியே உள்ளது. மிகச் சிறிய பகுதியே அதாவது, 15% அளவே உள்ளுர் அரசின் மூலம் "வரவுசெலவு திட்டப்" பணிக்குக் கிடைக்கின்றது. மீதி ஐக்கிய நாடுகள் அவையின் மூலமும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 இல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 இல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது. மக்களின் பரவல் பற்றிய விபரம் நாட்டின் சனத்தொகை பல்வேறு இனக்குழுக்களாக உள்ளது. நாட்டில் முறையான சனத்தொகைக் கணக்கெடுப்பு பல பத்தாண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆகவே, ஆப்கானிய மக்கள் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தோராயமாக மதிப்பிட்ட எண்ணிக்கையேயாகும். 2006 இல் பிபிசி செய்தி நிறுவனம், சிஐஏ புத்தகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பற்றில் இருந்து மக்கள்தொகைக் கணக்கை கீழே உள்ளபடி இருக்கலாம் என்று கணிக்கப்டுகின்றது. சிஐஏ புத்தகத்தின் தகவலின்படி கீழுள்ளவாறு மக்களின்பரவல் உள்ளது. கலைக்களஞ்சியம் பிருட்டானிகா பின்வருமாறு, சிறிது வேறுபட்ட தகவலைத் தருகின்றது. 49% – விழுக்காடு பட்டாணியர்கள் 18% – விழுக்காடு Tajik தாஜிக் 9% – விழுக்காடு Hazara ஹசரா 8% – விழுக்காடு Uzbek உசுபெக் 4% – விழுக்காடு Aimak அய்மக் 3% – விழுக்காடு Turkmen துர்க்மென் 9% – விழுக்காடு other பிறர் 1960 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதியில் எடுத்த உத்தியோக பூர்வ சனத்தொகைக் கணக்கெடுப்பு பின்வரும் முடிவைக்காட்டுகின்றது. இது இரானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள முடிவு, பின்வருமாறு. 36.4 – விழுக்காடு% Pashtun பட்டாணியர்கள் 33.6% – விழுக்காடு Tajik (including Farsiwan and Qezelbash) தாஜிக் 8.0% – விழுக்காடு Hazara ஹசரா 8.0% – விழுக்காடு Uzbek உசுபெக் 3.2% – விழுக்காடு Aimak அய்மக் 1.6% – விழுக்காடு Baloch பாலாக் 9.2% – விழுக்காடு other பிறர் மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளினதும், பாரசீக மொழிக் குடும்பத்தின் உப பகுதியுமான பாஷ்தூ 35% விழுக்காடும், பாரசீக மொழி (தாரி) 50% விழுக்காடும் பேசப்படுவதாக சி.ஐ.ஏ தரவுப் புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிடத் துருக்கி மொழிகளான உஸ்பெக், துர்க்மெனி 9% விழுக்காடும், அவி 30 சிறுபான்மை மொழிகள் (பிரதானமாக பலோச்சி, பசானி, நுரிஸ்டானி) 4% விழுக்காடு வீதமும் பேசப்படுகின்றன. இரு மொழி பேசும் தன்மையை இங்கே பரவலாக அவதானிக்கலாம். மதங்கள் மத ரீதியாக, 99% விழுக்காட்டினர் இசுலாமியர் ஆவர், கிட்டத்தட்ட 74-89 விழுக்காடு வரையானோர் 'சுன்னி' முஸ்லிம்களாகவும் 9-25 விழுக்காட்டினர் "சியா" முஸ்லிம்களாகவும் உள்ளனர். அங்குக் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களும், எண்ணிக்கை தெரியாத அளவில் சீக்கியர் இனத்தவரும் காபூல், கந்தகார், காஸ்சி மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சிறிய அளவில் யூத இனத்தவர் வாழ்ந்து வந்த போதும், ரசிய ஆக்கரமிப்புக்குப் பின்னர் 1979 இல் நாட்டைவிட்டு வெளியேறினர். ஒரு தனி நபரான 'சப்லோன் சிமின்டோவ்' மீதமாக அந்நாட்டில் உள்ளார். பெரிய நகரங்கள் ஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான "காபூல்" ஆகும். ஏனைய முக்கிய நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹெரத், மசார்-ஏ-ஷரீஃப், ஜலாலாபாத், கஸ்னி மற்றும் குந்துஸ் ஆகும். பண்பாடு ஆப்கானியர் தமது மதம், நாடு, தம்முடைய பழைமை, தம் முன்னோர்கள், இவற்றிற்கு மேல் அவர்களது சுநத்திரம் போன்றவற்றில் பெருமை கொள்கின்றனர். இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட நடத்தை காரணமாகவே வெளிநாட்டுச் சக்திகளால் அந்நாட்டைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை. ஆப்கானித்தான் குழப்பமான வரலாற்றை உடைய ஒருநாடு. அதன் வரலாறு, தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள், அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச் சின்னங்களில்தான் எஞ்சி உள்ளது. ஆனால், நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த போர்களினால் அழிந்துபோயின; பாமியான் மாகாணத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகள் தாலிபான்களால் அழிக்கப்பட்டன. கந்தகார், ஹீரத், கஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக் காணலாம். 'முகம்மது நபி' அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று, இன்றும் கந்தகார் நகரில் உள்ள "கால்கா ஷரிஃபா"வில் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள "மின்னரட் ஒப் ஜாம்" யுனெஸ்கோவினால், உலகின் முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானியர், பெரும்பகுதியினர் குதிரை ஓட்டிகள்; இந்த நாட்டின் தேசிய விளையாட்டு புஸ்காசி, இது ஒரு வகையில் போலோ விளையாட்டை ஒத்ததாகும். ஆனால், பந்துக்குப் பதிலாக ஓர் இறந்த ஆட்டின் உடலை வைத்து விளையாடுவர். கல்வியறிவு வீதம் மிகக் குறைவாக இருந்தபோதும், பாரசீக கவிதைகள் நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கவிதையானது, ஈரானிலும் ஆப்கானித்தானிலும் கல்வியின் தூண்களாக இருந்துள்ளது. பாரசீகத்தின் கலாச்சாரங்களின் தாக்கம் இன்றும் ஆப்கானில் தொடர்வதை அவதானிக்கலாம். “முஸ்ரா எரா” என்ற பெயரில் அழைக்கப்படும் கவிதைப்போட்டி நாட்டில் மிகச் சாதாரணமாக நடைபெறுவதாகும். கிட்டத்தட்ட வீடுகள் எல்லாவற்றிலும், தம் வீட்டில் உள்ளோர் வாசிக்காவிட்டாலும் ஏதாவது ஒரு வகையான கவிதைத் தொகுதி வீட்டில் கட்டாயம் இருக்கும். தாரி என்பது கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும். இன்றய ஆப்கானித்தான், அன்று "குராசான்" என்று அழைக்கப்பட்டது; அங்கு 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக "மெளலானா றூமி" என்பவரைக் கூறலாம். இவர் 13 ஆம் நூற்றாண்டில் பல்க் நகரில் பிறந்ததுடன் அங்கேயே கல்வி கற்றார்; பின்னர் இவர் "கோன்யா" (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சனாயி கஸ்வானி (12ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் கஸ்னி மாகாணம்), ஜாம்-ஏ-ஹீரத் (15ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் Jam-e-Herat, மேற்கு ஆப்கானித்தான்), Nizām ud-Dīn Alī Sher Navā'ī, நிசாம்-உத்-தீன் அலி சேர் நவாஇ என்பவர் (15ம் நூற்றாண்டு, ஹீரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர் ஆவர். (தாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள்; இவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட உசுதாத் பிதாப், கலிலுல்லா கலிலி, சூஃபி குலாம் நபி அஷ்காரி, ககார் ஆசே, பர்வீன் பசுவாக் போன்ற பாரசீக எழுத்தாளர்கள் (Ustad Betab, Khalilullah Khalili, Sufi Ghulam Nabi Ashqari, Qahar Asey, Parwin Pazwak) ஈரான், ஆப்கானித்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 இல் காலித் ஹுசைனி என்பவர் பதிப்பித்த புத்தகம் ஒன்று 1930 இல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானித்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கவிஞர்கள், எழுத்தாளர்களைவிடப் பல பாரசீக விஞ்ஞானிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான "அவிசென்னா" என மேலை நாடுகளில் அறியப்பட்ட அபு அலி ஹூசைன் இப்னு சினா பல்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இப்னு சினா, இஸ்பகானில் மருத்துவக் கல்லூரி அமைத்தவரும், இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான Noah Gordon இன் The Physician இல் கூட இவர் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றும் முன்னர் அந்த நகரில் பல இசையறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாரம்பரிய இசையிலும், நவீன இசையிலும் தேர்ந்து விளங்கினர். பழங்குடியினரின் முறைப்படி, ஆண்கள் அவர்களது இனத் தலைவருக்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தலைவர் கோரினால் ஆயுதமேந்த வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது. உட்கட்டுமானம் தொடர்பாடலும், தொழில் நுட்பமும் ஆப்கானித்தான் தொடர்பாடற் துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இணையம், வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் என்பன விரிவடைந்து வருகின்றன. ஆப்கானித்தானின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஆப்கான் வயர்லெஸ், றோசான், அறீபா போன்றன செல்லிடத் தொலைபேசிப் பாவனையை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளன. 2006 இல் ஆப்கானித்தானிய அரசு ZTE என்ற நிறுவனத்துடன் 64.5 அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், நாடுமுழுவதும் பரந்துபட்டதான ஒளியிழைத் தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஆப்கானித்தானிய உள்நாட்டுத் தொலைக்காட்சிச் சேவைகள். ஐனா டிவி அரியானா டிவி அரியானா ஆப்கானித்தான் டிவி லாமர் டிவி ஷாம்ஷாட் டிவி டோலோ டிவி போக்குவரத்து ஆப்கானின் வர்த்தக நோக்கிலான விமான சேவை நிறுவனமான 'அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ்' இப்போது லண்டன் ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், துபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. இது காபூல் மற்றும் ஹீரத் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானித்தானில் டொயோட்டா, லேண்ட் ரோவர், பி. எம். டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வரத் தொடங்கியுள்ளன. அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாவி்த்த வாகனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகின்றன. ஆப்கானித்தான் தற்கால நவீன தொழில் நுட்ப வசதிகளை அனுபவிக்காவிட்டாலும் அந்த இலக்கு நோக்கி விரைவாகப் பயனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கல்வி ஆப்கானித்தானின் 7000 பாடசாலைகளில் 30% விழுக்காடு பாடசாலைகள், இரண்டு பதின்ம ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்தனவாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி பெற்றுள்ளன. தாலிபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவற்றின் மத்தியிலும், அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்வி கற்பதாக "சேவ் த சில்ரன் நிதியம்" எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 2003 இல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானித்தான் வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும். நாட்டின் எழுத்தறிவு வீதம் 36%விழுக்காடு ஆகும்; இதில் ஆண்கள் 51% விழுக்காடும், பெண்கள் 21% விழுக்காடும் ஆகும். உயர்கல்வி ஆப்கானினிஸ்தானில் புதிய வடிவம் எடுத்து வளர்ந்து வருகின்றது. தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர்க் "காபூல் பல்கலைக்கழகம்" மீளத் திறக்கப்பட்டதுடன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் இங்குக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன 2006 இல் ஆப்கானித்தானின் "அமெரிக்கப் பல்கலைக்கழக"மும் இங்கே அதன் கதவுகளைத் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகமானது ஆங்கில மொழி மூலமாக உலகத்தரம் வாய்ந்த கற்கைநெறிகளை வழங்குவதை இங்குக் குறிப்பிட வேண்டும். பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது. மசார்-ஏ-ஷரீப் இல் புதிதாக அமைய உள்ளதான பல்க் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொறியியல் திணைக்களத்திற்காக 600 ஏக்கர் நிலத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றையும் பார்க்க முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் ‎மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் துராந்து எல்லைக்கோடு மூன்றாம் பானிபட் போர் ஆப்கானிசுத்தானில் பெண்கள் உரிமைகள் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரபூர்வ அரசு இணைப்புகள் Islamic Republic of Afghanistan: Office of the President Afghanistan National Development Strategy (ANDS) Afghanistan Investment Support Agency (AISA) முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் தெற்காசிய நாடுகள் நிலம்சூழ் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
5990
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
பிரான்சு
பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "அறுகோணி" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது. கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்சு விளங்கி வருகிறது. 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பெரும் பகுதிகளைப் பிரான்சு தனது குடியேற்றவாத ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய குடியேற்றவாதப் பேரரசைப் பிரான்சு கட்டியெழுப்பியது. அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றவாதப் பேரரசாக விளங்கியது. பிரெஞ்சுக் குடியரசானது, ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. இந் நாட்டின் முக்கியமான குறிக்கோள்கள் மனிதரினதும் குடிமக்களதும் உரிமைகள் சாற்றுரையில் அடங்கியுள்ளன. பிரான்சின் அரசியலமைப்பு, அந்நாட்டைப் பிரிக்கமுடியாத, மதச் சார்பற்ற, மக்களாட்சிச் சமூகவாதக் குடியரசு என்கிறது. உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. வாங்கு திறன் சமநிலை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது நிலையில் உள்ள இதன் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரியது. திரட்டிய வீட்டுச் செல்வ அடைப்படையில் பிரான்சே ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்சு உள்ளது. பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று. பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பெயர் பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் ஏற்பட்டது. பிரான்சு என்பது, "பிராங்க் மக்களின் நாடு" என்னும் பொருள்தரும் பிரான்சியா (Francia) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. பிராங்க் என்னும் சொல்லின் பிறப்புக் குறித்துப் பல்வேறு கொள்கைகள் நிலவுகின்றன. ஒரு கொள்கையின்படி, பிராங்க் மக்கள் பயன்படுத்தியதும் முன்-செருமானிய மொழியில் பிராங்கோன் என்று வழங்கியதுமான எறிகோடரியின் பெயரில் இருந்து பிராங்க்குகளுக்குப் பெயர் ஏற்பட்டது. பண்டைச் செருமானிய மொழியில் பிராங்க் என்பது அடிமைகள் அல்லாத விடுதலை கொண்ட மக்களைக் குறித்தது என்றும், இதுவே பிராங்குகளுக்கு அப்பெயர் ஏற்படக் காரணமாகியது என்றும் இன்னொரு கொள்கையின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். புவியியல் பிரான்சு அகலக்கோடுகள் 41° வ, 51° வ என்பவற்றுக்கும், நெடுங்கோடுகள் 6° மே, 10° கி ஆகியவற்றுக்கும் இடையில் ஐரோப்பாவின் மேற்குப்பகுதி விளிம்போரமாக அமைந்துள்ளது. இது வட மிதவெப்ப வலயம் ஆகும். பிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதி (பிரான்ஸ் பெருநிலப்பரப்பு) மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள போதும், பிரான்ஸ் வடக்கு அமெரிக்கா, கரிபியா, தென் அமெரிக்கா, தெற்கு இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல், அந்தார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஆட்சிப் பகுதிகள் பல்வேறு அரசு முறைகளை கொண்டு இயங்குகின்றன. ஐரோப்பாவில் 547,030 ச. கிலோமீட்டர் (211,209 ச. மைல்) பரப்பளவு கொண்ட பிரான்சின் பெருநிலப்பரப்பு பலவேறுபட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும், வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான பிளாங்க் மலை (4810 மீட்டர்) பிரெஞ்சு அல்ப்சில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நெருக்கமான ஆற்றுத்தொகுதியொன்றையும் கொண்டுள்ளது. பிரான்சின் வெளி ஆட்சிப்பகுதிகள் காரணமாக உலக தரைப்பரப்பில் 0.45 சதவீதத்தை). மட்டுமே அடைக்கும் பிரான்ஸ் உலகின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடற் காலநிலை நிலவுகிறது. மேற்கில், கடும் மழைவீழ்ச்சியுடனும், மிதமான மாரி, குளிர் முதல் மிதமான வெப்பம் கொண்ட கோடையுடனும் கூடிய பெருங்கடற் காலநிலை காணப்படுகின்றது. உட்பகுதிகளில், கொந்தளிப்பான வெப்பத்துடன் கூடிய கோடையையும், குறைவான மழையுடன் கூடிய குளிரான மாரி காலத்தையும் கொண்ட கண்டக் காலநிலை உள்ளது. ஆல்ப்சுப் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள் வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும். சூழல் சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றாகப் பிரான்சு விளங்குகிறது. பிரான்சின் சூழல் அமைச்சு 1971 ஆம் ஆண்டில் உருவானது. பிரான்சு பெருமளவு தொழில்மயமானதும், வளர்ச்சியடைந்ததுமான நாடாக இருந்தும், காபனீரொட்சைடு வெளியேற்றுவதில் இது 17 ஆவது நிலையிலேயே உள்ளது. இது, கனடா, சவூதி அரேபியா, ஆசுத்திரேலியா போன்ற குடித்தொகை குறைவான நாடுகளைவிடக் குறைவான காபனீரொட்சைடையே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர், அணுவாற்றலில் முதலீடு செய்வதற்குப் பிரான்சு அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணம். தற்போது பிரான்சின் 78% மின்சாரம் அணுவாற்றல் மூலமே கிடைக்கிறது. இதனாலேயே பிரான்சு, அதனோடு ஒப்பிடத்தக்க பல நாடுகளைவிடக் கூடிய அளவு சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது. பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் போலவே, பிரான்சும், 2020 ஆம் ஆண்டளவில், காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டின் நிலையில் 20% ஐக் குறைப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா 4% குறைப்பதற்கே சம்மதித்து உள்ளது. 2009 ஆம் ஆண்டில், ஒரு தொன் காபனீரொட்சைடு வெளியேற்றத்துக்கு 17 யூரோக்கள் வீதம் கரிம வரி ஒன்றை விதிப்பதற்கும் பிரான்சு திட்டமிட்டு இருந்தது. இதன் மூலம் 4.3 பில்லியன் யூரோக்கள் வருமானமாகக் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவ்வரியினால், பிரான்சு நாட்டு நிறுவனங்கள் பிற அயல் நாட்டு நிறுவனங்களுடன் சமநிலையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் பிற காரணங்களினாலும் இந்த வரி விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக் கழகத்திலும், கொலம்பியாப் பல்கலைக் கழகத்திலும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கூடிய சூழல் உணர்வு கொண்ட நாடுகள் வரிசையில் பிரான்சுக்கு ஏழாவது இடம் கிடைத்தது. பிரான்சின் நிலப்பரப்பில் காடுகள் 28% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் கூடிய காடுகளைக் கொண்ட நாடுகளில் பிரான்சு இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரான்சின் காடுகளிற் சில ஐரோப்பாவில் கூடிய பல்வகைமை கொண்ட காடுகளுள் அடங்குகின்றன. இவற்றில் 140க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மர வகைகள் உள்ளன. பிரான்சில் 9 தேசியப் பூங்காக்களும், 46 இயற்கைப் பூங்காக்களும் உள்ளன. வரலாறு பிரான்சின் எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணளவாக ஒத்துப்போகிறது. கவுல் இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும் (இலத்தீன், இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது) கலாச்சாரத்தையும் தழுவிக்கொண்டனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய கிறிஸ்தவம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார். ஐரோப்பிய மத்திய காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தி தமது நாட்டை "அதி கிறிஸ்தவ இராச்சியம் பிரான்ஸ்" என அழைத்தனர். இவற்றையும் பார்க்கவும் பிரான்சு ஜெர்மனி உறவு குறிப்புகள் வெளியிணைப்பு பிரான்சு பிபிசி செய்திகள் France பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வானிலை முன்னறிவிப்பு பிரஞ்சு தொலைபேசி புத்தகத்தின் அதிகாரப்பூர்வ தளம் பிரான்சு ஐரோப்பிய ஒன்றியத்தில்* பிரான்சு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
5992
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பன்னாட்டு அணுசக்தி முகமையகம்
பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency) என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் ஐசனோவர் அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1953-ஆம் ஆண்டு ஆற்றிய அமைதிக்கான அணுக்கள் எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார்.இது ஐக்கிய நாடுகளின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு மட்டும் பதிலளிக்க கடமைப்பட்டது. 2005-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் மொகம்மது எல்பரதேய் என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் வியன்னா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ளது.மேலும் இது ஜப்பானின் டோக்கியோ மற்றும் கனடாவின் டொராண்டோ நகரங்களில் இரண்டு பிராந்திய பாதுகாப்பு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.இதன் இரண்டு தகவல் தொடர்பு அலுவலகல் நியூயார்க் மற்றும் ஜெனீவா நகரங்களில் அமைந்துள்ளது.மேலும் இதற்கு வியன்னா, செய்பர்ஸ்டோர்ப், ஆஸ்திரியா மற்றும் மொனாகோ நகரில் ஆய்வகங்களை கொண்டுள்ளது. வரலாறு பன்நாட்டு அணு ஆற்றல் முகைமை (International atomic energy agency-IAEA ) ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1957 சூலை மாதம் 29 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட அழிவினைக் கண்ட மக்கள் அணு ஆற்றலைப் பற்றி பெரிதும் அச்சம் கொண்டனர். இந்நிலையில் தான் ஆக்கத்திற்கே அணு (ATOM FOR PEACE ) எனும் கோட்பாட்டுடன் IAEA தொடங்கப் பெற்றது.இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அணு ஆற்றறலை அமைதி, மருத்துவம், வளமை முதலியவைகளை உலகம் முழுவதும் பரவலாக்கவும் அதனை விரைவுபடுத்தவும் விரிவு படுத்துவதுமாகும். இவ்வமைபின் உறுப்பு நாடுகள் அணு ஆற்றலை இராணுவத்திற்காக பயன் படுத்துவதை கட்டுப்படுத்துவதுமாகும். UNO, WHO போன்று இது ஒரு பன்நாட்டு நிறுவனம்.தன்னாடச்சிப் பெற்ற அமைப்பாக இருந்தாலும் இது தனது வருட வரவு செரவு மற்றும் நடவடிக்கைப் பற்றி UNO விற்கும் பொதுசபைக்கும் அனுப்புகிறது. 35 நாடுகள் கொண்ட குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்ட இயக்குனர்,அனைத்து உறுப்பு நாடுகளின் பொதுசபையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.செலவுகளை உறுப்பு நாடுகள் ஏற்கின்றன. உள்ளமைப்பு பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (ப.அ.மு) செயலகமானது ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள வியன்னா பன்னாட்டு மையத்தில் தலைமை கொண்டுள்ளது. இத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா, அமெரிக்க ஒன்றியத்தின் நியு யார்க், கனடா நாட்டின் டொரொன்டோ மற்றும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ ஆகிய நகர்களில் இவ்வமைப்பின் துணை அலுவலகங்கள் குடிகொண்டுள்ளன. மேலும் இவ்வமைப்பின் பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் மொனாகோ அரசகத்திலும், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா மற்றும் சைபெர்ஸ்டோர்ஃப் நகரங்களிலும், இத்தாலி நாட்டின் திரெஸ்தே நகரிலும் உள்ளன. ப.அ.மு செயலகத்தில் 2200 பல்தொழில் வல்லுனர்களைக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் தலைமை இயக்குனரான மொகம்மது எல்பரதேய்-இன் கீழ் ஆறு துணை இயக்குனர்கள் பல்வேறு துறைகளை தலைமை தாங்கி வருகின்றனர். பணிகள் பன்னாட்டு அணுசக்தி முகமையகமானது அணுத்தொழில்நுட்பத்தை அமைதிவழியில் பயன்படுத்தும் பொருட்டு அரசுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் மன்றமாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் முப்பெரும் தூண்கள் என்று போற்றப்படும் முதன்மை கடமைகள் இவைகளே: 1. வரைமுறைகளை பேணுதல் மற்றும் சோதித்தல்: ப.அ.மு. கிட்டத்தட்ட 140 நாடுகளுடன் கொண்டுள்ள வரைமுறை உடன்பாடுகளின்படி அந்நாடுகளின் அணு மற்றும் அணு சார்ந்த நிலையங்களில் சோதனை மேற்கொள்கிறது. ஏறத்தாழ அனைத்து உடன்பாடுகளும் அணு ஆயுதங்களைப் பெறோம் என்று உறுதி பூண்ட நாடுகளுடனேயே உள்ளன. 2. காவல் மற்றும் பாதுகாப்பு பேணுதல்: உலக நாடுகளின் அணு கட்டுமானம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் காவலை மேம்படுத்தவும், இடர் வருங்கால் சரியான முறையில் எதிர்கொள்ளவும் ப.அ.மு. உதவுகிறது. கேடு விளைவிக்கும் அணுக்கதிர் வீச்சிலிருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் காப்பது முதன்மைக் குறிக்கோளாகும். 3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பேணுதல்: வளரும் நாடுகளின் இன்றியமையா தேவைகளுக்கு அமைதிவழியில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உலகின் முன்னோடியாக ப.அ.மு. திகழ்கிறது. இப்பணியானது வறுமை, நோய்நொடிகள், சுற்றுச்சூழற்கேடு போன்றவற்றை எதிர்த்து போரிடவும் நிலையான வளர்ச்சியை பெருக்கவும் பங்களிக்கிறது. உறுப்பு நாடுகள் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்துடன் இணைந்துகொள்வது ஓரளவு இலகுவாகும். இதில் உறுப்பினராக சேர்வதற்கு முதலில் அதன் பொது செயலாளரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.அவரின் பரிசீலனைக்கு பின்னர் அது பாதுகாப்பு சபையின் வாக்களிப்பிற்கு அனுப்பப்படும் அதில் ஏற்ற்று கொள்ளப்பட்டால் அந்நாடு அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NPT) கையோப்பமிடல் வேண்டும் அதன் பின்னர் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அந்நாடு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும். இதில் மொத்தம் 159 உறுப்பு நாடுகள் உள்ளன.பெரும்பாலான ஐ.நா. உறுப்பினர்கள் இதிலும் உறுப்பினராக உள்ளனர். இதுவரை 2 நாடுகள் விலக்கப்பட்டுள்ளன அவை வட கொரியா மற்றும் கம்போடியா ஆகும். இதில் வட கொரியா 1974 இருந்து 1994 வரை உறுப்பினராக இருந்தது ஆனால் அது பாதுகாப்பு ஒப்பந்ததின் படி நடக்காததால் விலக்கப்பட்டது. கம்போடியா 1958 இல் ஒரு உறுப்பினராக இணைந்த அது 2003 இல் விலக்கிகொண்டது எனினும் 2009 இல் மீண்டும் உறுப்பினராக இணைந்தது. இயக்குனர்களின் பட்டியல் மேற்கோள்கள் குறிப்புகள் மேற்கோள் நூல்கள் Board of Governors rules IAEA Primer Pillars of nuclear cooperation 2005 Radiation Protection of Patients வெளியிணைப்புகள் International Atomic Energy Agency Official Website NUCLEUS – The IAEA Nuclear Knowledge and Information Portal Agreement on the Privileges and Immunities of the International Atomic Energy Agency, 1 July 1959 IAEA Department of Technical Cooperation website Programme of Action for Cancer Therapy (PACT) – Comprehensive Cancer Control Information and Fighting Cancer in Developing Countries International Nuclear Library Network (INLN) The Woodrow Wilson Center's Nuclear Proliferation International History Project or NPIHP is a global network of individuals and institutions engaged in the study of international nuclear history through archival documents, oral history interviews and other empirical sources. ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள் பன்னாட்டு அமைப்புகள்
5996
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கோளப்பரப்புக் குவிமாடம்
கோளப்பரப்புக் குவிமாடம் (geodesic dome) என்பது கோள மேற்பரப்பு ஒன்றின் பெரு வட்டங்களின் மேல் கிடக்கும்படி ஒழுங்கமைக்கப்பட்ட, ஏறத்தாளக் கோளவடிவமான, உதைகால்களின் வலையமைப்பு ஆகும். இவ் வலையமைப்பில் ஒன்றையொன்று வெட்டுகின்ற பல பெரு வட்டங்களினால் உருவாக்கப்படும் முக்கோண அமைப்புகள் முழுக் கோள வடிவ அமைப்பினதும் உறுதிக்குப் பங்களிப்புச் செய்கின்றன. அளவு அதிகரிக்கும்போது மேலும் பலமுள்ளதாக அமையும், மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரே அமைப்பு இது என்று சொல்லப்படுகிறது. மனிதரால் அறியப்பட்ட எல்லா அமைப்புக்களுடனும் ஒப்பிடும் போது கோள வடிவக் குவிமாடமே ஒரு குறிப்பிட்ட நிறைக்கான அதி உயர்ந்த கன அளவைத் தருகிறது. இவ்வமைப்பை உருவாக்கும் தனித்தனி உதைகால்களிலும் பார்க்க மொத்த அமைப்பாக நோக்கும்போது இக் குவிமாடங்கள் அதிக பலம் கொண்டவையாக விளங்குகின்றன. இவற்றையும் பார்க்கவும் ஃபுலரின் வெளியிணைப்புகள் The R. Buckminster Fuller FAQ: Geodesic Domes Geodesic Dome Notes: 57 dome variants featured (1V to 10V) of various solids (icosa, cube, octa, etc.) Article about the Eden Domes (PDF file 5.1 MB) Geodaetische Kuppeln (Geodesic Domes) by T.E. Dorozinski 3D Warehouse - Geodesic Collection Catalog(s) of free 3D digital models for Google SketchUp and Google Earth A meta-geodesic dome - made of quads instead of triangles, by F. Tuczek கட்டிடங்கள் வீட்டு வகைகள்
5997
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று
இழுவிசைகளின் கீழ் கூடிய பலம் கொண்ட உருக்குக் கம்பிகள் முதலானவற்றை உரிய முறையில் சாதாரண காங்கிறீற்றுக்குள் வைத்துக் கட்டுவதன் மூல காங்கிறீற்றின் இழுவைப் பலம் அதிகரிக்கப் படலாம். இவ்வாறான காங்கிறீற்றே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று (reinforced concrete) எனப்படுகின்றது. சாதாரண காங்கிறீற்று அதிக அழுத்த விசைகளைத் (compression force) தாங்கும் வலிமை பெற்றது. ஆனால் இழுவிசைகளைத் (tensile force) தாங்கும் வலிமை குறைந்தது. இதனால் பெரும் இழுவிசைகளைத் தாங்கவேண்டிய கட்டிடக் கூறுகளில் சாதாரண காங்கிறீற்றைப் பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று உருவாக்கப்பட்டது. மரத்தினால் செய்யப்பட்ட ஒரு உத்தரமொன்று அதன் இரண்டு முனைகளில் தாங்கப்பட்டால், அது கீழ்முகமாகச் சிறிது தொய்ந்த நிலையில் ஓய்வடையும். இந் நிலையில் உத்தரத்தின் மேற்பகுதியின் நீளம் குறுக்கமடைவதையும், கீழ்ப்பகுதியின் நீளம் அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்கலாம். இது அதன் மேற்பகுதியில் அழுத்தவிசையும், கீழ்ப்பகுதியில் இழுவிசையும் தொழிற்படுவதைக் குறிக்கிறது. மர உத்தரத்தின் இடத்தில் சாதாரண கொங்கிறீற்றினால் செய்யப்பட்ட உத்தரமொன்று இருப்பதாக வைத்துக்கொண்டால், உத்தரத்தின் கீழ்பகுதிகளில் உருவாகும் இழுவிசை அப்பகுதிகளில் வெடிப்பை ஏற்படுத்தி, உத்தரம் முறிந்து விழ ஏதுவாகும். வலுவூட்டப்பட்ட காங்கிறீற்றுக் கூறுகளில், உருக்குக் கம்பிகளோ, அல்லது கண்ணாடி இழைகள் முதலிய இழைப் பொருட்களோ வைத்துக் கட்டபடுவதன் மூலம் காங்கிறீற்றின் இழுவைப்பலம் அதிகரிக்கப் படுகின்றது. இவற்றையும் பார்க்கவும் கண்ணாடியிழைக் காங்கிறீற்று முன்தகைப்புக் காங்கிறீற்று பின்தகைப்புக் காங்கிறீற்று கட்டிடப் பொருட்கள்
5998
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88
கலித்தொகை
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர், தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம். பதிப்பு வரலாறு கலித்தொகை நூலை முதன்முதலில் சி. வை. தாமோதரம்பிள்ளை 1887-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக " நல்லந்துவனார் கலித்தொகை" என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன் பின்னர் பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும் வேறு நூல்களை ஆராய்ந்தும் உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ. வை. அனந்தராமையர் 1925-ஆம் ஆண்டு பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும் கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம். தொகுப்பு கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது எனக் கீழ் வரும் இரு பாடல்களின் உதவியுடன் அறியலாம். பாடல் 1 இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது: பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி, மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன் நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல் கல்விவலார் கண்ட கலி. கலித்தொகை நூலில் உள்ள பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ ( 35 பாடல்கள்) குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர் (29 பாடல்கள்) மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் மருதன் இளநாகனார் (35 பாடல்கள்) முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் (17 பாடல்கள்) நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவன் (33 பாடல்கள்) இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை. பாடல் 2 ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல் புல்லும் கலிமுறைக் கோப்பு. இதில் சொல்லப்பட்டவை: தலைவன், தலைவி பிரிதல் போக்கு - பாலை புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம் நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை இரங்கிய போக்கு - நெய்தல் பாடல் தொகைகள் கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும் குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும் மருதக்கலியில் 35 பாடல்களும் முல்லைக்கலியில் 17 பாடல்களும் நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன. குறிஞ்சிக்கலி புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும். குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அமைந்து படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளன. "சுடர்த்தொடீஇ கேளாய்" என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் 51-ஆம் பாடல் ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்து இன்பம் பயப்பதாகும். இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின் முன்னோடியாகக் கூறப்படுகிறது. முல்லைக்கலி முல்லைக்கலிப் பாடல்கள், தலைவனோடு மனத்தால் ஒன்றுபட்டு இருந்த தலைவி தலைவன் பிரிந்து சென்ற போது இல்லிருந்து தன்மனதை ஆற்றியிருத்தலைக் கூறுகின்றன. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச் சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. மருதக்கலி பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும் அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும் தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும். நெய்தற்கலி பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும் பாலைக்கலி 'உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந்துயரம் கண்ணீா் நினைக்கும் கடுமை காடு' எனப் பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும் தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கிய கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும். கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.<blockquote> ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல் செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை நிறைவு எனப்படுவது மறைபிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் (கலி ,133) கலித்தொகை காட்டும் சமூகம் களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றிச் செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது. வரலாற்று, புராணச் செய்திகள் கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையைப் பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது. வெளி இணைப்புகள் பாடல்கள் அடிக்குறிப்புகள் எட்டுத்தொகை
5999
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
பதிற்றுப்பத்து
பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை . ஏனைய எட்டுப் பத்துகளும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாறு நமக்கு பதிற்றுப்பத்தின் 80 பாடல்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது. வகை இந்நூல் பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் குடியோம்பல் முறை, படை வன்மை, போர்த்திறம், பகையரசர்பால் பரிவு, காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்திரிக்கின்றன. காலம் இந்நூலின் காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவோரும் உண்டு. ஆயினும் அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை எனலாம். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்குக் கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரியப்பா நடையில் உள்ளது. இந்தப் பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது. இப்பதிகங்கள் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.முதன்முதலாக பொ.ஊ. 989-இல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்களைக் கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும் மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துகளின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும் அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், [[முதுமொழிக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது. நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி அடி அடுத்த பாட்டின் முதல் அடியாக வருவதே அந்தாதியாகும். எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி அடி போர்மிகு குருசில் நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32-ஆவது பாடல் முதல் அடி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. பாடல் தொகுதிகளின் பட்டியல் அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்) வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள் இமையவரம்பன் (58) இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25) இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25) இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55) இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38) கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள் செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17) குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16) பதிற்றுப்பத்து - பதிகம் தரும் செய்திகள் பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை. இரண்டாம் பத்து இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது இமையத்தில் வில் பொறித்தான். இச்செய்தியைப் பத்துப்பாட்டு நூல்களுல் மூன்றவதான சிறுபாணாற்றுப்படையில் அதன் ஆசிரியர் அடிக்குறிப்பில் கண்டவாறு புகழ்ந்து கூறுகிறார். ஆரியரை அடக்கினான் யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான் பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான் மூன்றாம் பத்து பல்யானைச் செல்கெழு குட்டுவனை பாலைக்கோதமனார் பாடியது உம்பற் காட்டைக் கைப்பற்றினான் அகப்பா நகரின் கோட்டையை அழித்தான் முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான் அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான் நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான் நான்காம் பத்து களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது பூழி நாட்டை வென்றான் நன்னனை வென்றான் ஐந்தாம் பத்து கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது ஆரியரை அடக்கினான் கண்ணகி கோட்டம் அமைத்தான் கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான் வியலூரை அழித்து வெற்றி கண்டான் கொடுகூரை எறிந்தான் மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான் சோழர் ஒன்பதின்மரை வென்றான் படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான் ஆறாம் பத்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காககை பாடினியார் நச்செள்ளையார் பாடியது தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான். பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான். வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான் மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான் கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான். ஏழாம் பத்து கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி) செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது பல போர்களில் வென்றான் வேள்வி செய்தான் மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான் அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான் பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான் எட்டாம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான் தகடூர்க் கோட்டையை அழித்தான் ஒன்பதாம் பத்து இளஞ்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான். பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான். வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான் வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான். மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான் தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான் சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான் அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான் பாடல் தலைப்புகள் இந்நூலிலுள்ள பாடல்களின் தலைப்பாக விளங்குவன அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களேயாவன. இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு புண்ணுமிழ் குருதியாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு மறம் வீங்கு பல்புகழ் என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு பூத்த நெய்தல் ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14ம் பாட்டின் தலைப்பு சான்றோர் மெய்ம்மறை. இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு நிரைய வெள்ளம். இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன. உரையாசிரியர்கள் பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. இவ்வுரையாசிரியர் நேமிநாதம் இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் என்பது இவ்வுரையில் காணப்படும் குறிப்பிலிருந்து தெரிகிறது. இந்த பழையவுரை குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் அளவில் இடைப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வுரை பாடல்களின் தலைப்புப் பொருத்தம் குறித்து பேசுகின்றது. முக்கியமான இலக்கணக் குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன். ஔவை துரைசாமிப்பிள்ளை உரை யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் உரை புலியூர் கேசிகன் உரை பரிமளம் உரை நடை பதிற்றுப்பத்து பாடல்களில் சில சொற்களின் பயன்பாடுகள்: கசடு = சேறு, வஞ்சகம் 'கசடு இல் நெஞ்சம்' காணியர் காணலியரோ = பார்க்கட்டும் அல்லது பார்க்காமல் போகட்டும் 'ஆடுநடை அண்ணல் நிற் பாடுமகள் காணியர் காணலியரோ நிற் புகழ்ந்த யாக்கை' துளங்கு = ஆடு, துள்ளிக் குதித்து ஆடும் நீர், அலைமோது. 'துளங்குநீர் வியலகம்' நுடங்கல் = ஆடல், 'கொடி நுடங்கல்' மேவரு = விரும்பும்(நம்பும் மேவும் நசை யாகுமே-தொல்காப்பியம்) \ மேவு + வரு \ மேவு = விரும்பு \ வரு - துணைவினை \ 'மேவரு சுற்றம்' பதிப்பு வரலாறு சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்." அடிக்குறிப்பு வெளி இணைப்புகள் பதிற்றுப்பத்து மின்பதிப்பு (மதுரைத் திட்டத்தில்) பாடல்கள் சங்க இலக்கியம் முழுமையாகக் கிடைக்காத தமிழ் நூல்கள் எட்டுத்தொகை
6001
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%20%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
வாஸ்கோ ட காமா
வாஸ்கொடகாமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 டிசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார். பொது வாஸ்கோ ட காமா 1460இலோ அல்லது 1469இலோ போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும். ஆரம்பகால வாழ்க்கை வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார். டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லது அல்காய்டெ-மாராக நியமிக்கப்பட்டு வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டார். எஸ்டெவா ட காமா டோனா இசபெல் சாட்ரெவை மணந்தார். இவர் ஜாவோ சாட்ரெவின் மகள் ஆவார். ஜாவோ சாட்ரெ இங்கிலாந்து அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார். வாஸ்கோ ட காமாவின் ஆரம்ப கால வரலாறு மிகவும் குறைவாக மட்டுமே தெரிந்திருக்கிறது. போர்ச்சுக்கீசிய வரலாற்றறிஞர் டெய்க்செய்ரா டி அரகாவோவின் கூற்றுப்படி வாஸ்கோ ட காமா உள்ளூர் நகரான எவோராவில் கணிதவியலும் பயணவியலும் படித்ததாகக் கூறுகிறார். இது காமாவிற்கு வானியல் நன்றாகத் தெரிந்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே வானியலாளர் ஆபிரகாம் சாகுட்டோவிடம் வாஸ்கோ ட காமா வானியல் பயின்றிருக்ககூடும். முந்தைய தேடல்கள் 1492இல் போர்ச்சுகல் அரசர் ஜான் II காமாவை செட்டுபால் துறைமுகத்திற்கும், லிஸ்பனின் தென்பகுதிக்கும் அல்கார்வேக்கும் ஃபிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்றுவதற்காக அனுப்பி வைத்தார். இப்பயணத்தின் போது காமா சிறப்பாகச் செயலாற்றினார். பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஹென்றி த நேவிகேட்டரின் கடல்சார் பள்ளி (Nautical school) ஆப்பிரிக்கக் கடற்கரைப்பகுதியைக் குறித்த தனது பார்வையை அதிகரித்து வந்தது. 1460களில் இருந்து இதன் முதன்மைக் குறிக்கோளானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையைத் தாண்டி இந்தியாவின் வளங்களை (முதன்மையாக மிளகு இதர பிற மசாலா வகைகள்) எளிமையாக அணுகுவதே ஆகும். நம்பக்கத்தகு கடல் வழி மேலும் அதற்கேற்றாற்போல் ஒரு நம்பக்கத்தகு கடல் வழியைக் கண்டறிவதிலேயே கவனம் செலுத்தினர். ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் பெரும் கட்டுப்பாட்டை வெனிஸ் குடியரசே பெற்றிருந்தது. போர்ச்சுக்கல் பார்த்தலோமியா டயாசின் மூலம் கண்டறியப்பட்ட வழியை வெனிசின் ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தத் திட்டமிட்டது. வாஸ்கோ ட காமா பத்து வயதாக இருந்த பொழுது இந்த நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பார்த்தலோமியா டயாஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்து மீண்டும் ஐரோப்பா திரும்பினார். அவர் அங்கு மீன் ஆற்றையும் நவீன கால தென்னாப்பிரிக்காவையும் கண்டறிந்து தெரியாத மற்றொரு கடற்கரை வடகிழக்காகச் செல்வதை அறிந்து வந்தார். மேலும் இந்தியாவை அட்லாண்டிக் கடல் மூலம் அடைய முடியும் என்ற கொள்கை ஜாவோ IIஇன் ஆட்சிக்காலத்தில் ஆதரிக்கப்பட்டது. பெரோ ட கோவில்காவும் அஃபோன்சோ டி பைவாவும் பார்சிலோனா, நேப்பிள்ஸ், ரோட்ஸ் வழியாக அலெக்சாண்டிரியாவிற்கும் பிறகு ஏடெனுக்கும் ஆர்மசு துறைமுகத்திற்கும் பின் இந்தியாவிற்கும் அனுப்பப்பட்டனர். அது அவர்களது கொள்கைக்கு மேலும் வலுவூட்டியது. இந்தியப் பெருங்கடல் ஆனால் பார்த்தலோமியா டயாஸ் கண்டறிந்த வழித்தடத்திற்கும் மேற்குறிப்பிட்ட இருவர் கண்டறிந்த வழித்தடத்திற்கும் இடையிலிருந்த தொடர்பை இந்தியப் பெருங்கடல் வழியே கண்டறிவதிலேயே அனைவரும் முனைப்புடன் இருந்தனர். அப்பணியானது உண்மையில் வாஸ்கோ ட காமாவின் தந்தைக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மானுவெல் I இப்பணியை வாஸ்கோ ட காமாவிற்கு வழங்கினார். இதனை அவர் ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையில் போர்ச்சுக்கீசிய வர்த்தக மையங்களை ஃப்ரெஞ்சுக் காரர்களிடமிருந்துக் காப்பதில் காமாவின் சிறந்த பணியைக் கருத்தில் கொண்டு வழங்கினார். = வாஸ்கோட காமாவின் முதல் இந்தியப் பயணம் 1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ ட காமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் அடைந்தார் வாஸ்கோ ட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைந்தார். மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் வணிகக் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று.வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கோடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அவர் திரும்பிச் செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார். இதனால் கவரப்பட்ட மற்ற ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா வர விரும்பினர். வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. வாஸ்கோடகாமா 1501-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்தியா வந்தார். அப்போது இந்தியாவில் கண்ணனூர் என்ற இடத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தலம் ஒன்றை நிறுவினார். இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது. விளைவுகள் வாஸ்கோ ட காமாவின் இந்தியப் பயணத்தின் விளைவாக,ஐரோப்பா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளுக்கிடையேயான ஒரு நேரடி கடல்வழித் தடம் அமைந்தது.இதன் காரணமாக,எண்ணற்ற நாடுகள் பெரும் பயனடைந்தன.இதுவே வாஸ்கோ ட காமா கடல்வழிப் பயணத்தின் அடிப்படை முக்கியத்துவமாக இருந்தது. இந்தப் பயணத்தால் போர்ச்சுக்கல் நாட்டிற்கு குறுகிய காலத்தில் அதிகம் பயன் கிடைத்தது.கீழை நாடுகளுக்கான புதிய கடல் வாணிக வழித் தடத்தைப் போர்ச்சுகல் கட்டுப்படுத்தியது.அதன் மூலம், நாகரிக உலகின் எல்லையோரத்தில் மிகவும் ஏழை நாடாக இருந்துவந்த இந்த நாடு, ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக மிக விரைவில் முன்னேறியது. அத்துடன் இந்தியப் பெருங்கடலைச் சுற்றிக் கணிசமான எண்ணிக்கையில் குடியேற்றங்களையும் துரிதமாகப் போர்ச்சுக்கல் நிறுவியது. இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும், மடகாஸ்கரிலும், ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலும், வேறு பல பகுதிகளிலும் போர்ச்சுக்கலுக்குப் புறக் காவற்படைத் தளங்களும் நிறுவப் பெற்றன. இவை தவிர, பிரேசிலும் மேற்கு ஆப்ரிக்காவிலும் போர்ச்சுகலுக்குக் குடியேற்றங்கள் இருந்து வந்தன. இக்குடியேற்றங்களை இவரது பயணங்களுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர் நிறுவியிருந்தார். இந்தக் குடியேற்றங்களில் பெரும்பாலானவற்றை இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதி வரையிலும் போர்ச்சுகல் விடாது வைத்திருந்தது. இந்தியாவுக்கு வாஸ்கோ ட காமா புதிய கடல் வாணிக வழித் தடத்தை ஏற்படுத்தியதன் விளைவாக,இந்தியப் பெருங்கடலின் வாணிக வழித்தடங்களில் அதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்லாமியர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.இஸ்லாமிய வாணிகர்கள் ஒடுக்கப்பட்டனர். மேலும்,அவர்களுடைய இடத்தைப் போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றி கொண்டனர். அது மட்டுமின்றி,இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நிலவழி வாணிகத் தடங்கள் பயனற்றுப் போயின.ஏனெனில்,ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லும் போர்ச்சுக்கீசிய கடல் வழித்தடம் எளிதாகவும் மலிவாகவும் இருந்தது. இது, கீழை நாடுகளுக்கான வாணிக வழித் தடங்களைக் கட்டுப்படுத்தி வந்த ஆட்டோமான் துருக்கியர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. ஏனென்றால், எஞ்சிய ஐரோப்பியப் பகுதிகளுக்குப் புதிய கடல் வாணிக வழித்தடம் மூலம் தூர நாடுகளிலிருந்து சரக்குகள் வருவது முன்பை விட மலிவாக இருந்தது. எனினும்,வாஸ்கோ ட காமாவின் பயணத்தினால்,இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.1498 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா ஐரோப்பாவின் தொடர்பின்றி தனிமைப்பட்டுக் காணப்பட்டது.உண்மையைக் கூறின், வரலாற்றின் பெரும் பகுதியில் ஓரளவு தன்னிறைவுடைய ஒரு தனி நாடாகவும் இந்தியா இயங்கிவந்தது. அவ்வப்போது,வடமேற்கிலிருந்து மட்டுமே சில அயல்நாட்டுப் பாதிப்புகள் ஏற்பட்டன.ஆயினும்,வாஸ்கோ ட காமாவின் பயணத்தால் ஏற்பட்ட கடல்வழித்தடத்தின் வாயிலாக, ஐரோப்பிய நாகரிகத்துடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு உண்டாயிற்று. ஐரோப்பியரின் செல்வாக்கும், வலிமையும், இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதிக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பிரிட்டிஷ் குடியரசின் கீழ் அடிமைப்பட்டது.(வரலாற்றில் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சியாளரின் கீழ் ஒரு குடையில் இருந்தது.இந்தக் காலத்தின்போதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). இந்தோனேசியாவைப் பொறுத்த வரையில் முதலில் அது ஐரோப்பியச் செல்வாக்குக்கு ஆட்பட்டது.பிறகு,அது முழுமையாக ஐரோப்பிய் ஆதிக்கத்தின்கீழ் வந்தது.இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இந்தப் பகுதிகள் யாவும் சுதந்திரம் பெற்றன. இறப்பு 1524 இல் இந்தியாவின் வைசிராயாக ஆக்கப்பட்ட பின்பு தனது மூன்றாவது கடல் பயணத்தை இந்தியாவுக்குத் துவக்கினார். 1524 செப்டம்பரில் கொச்சிக்கு வந்தார். அச்சமயத்தில் கழுத்தைச் சுற்றிக் கொப்புளங்கள் உண்டாகி தலையை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். 1524 திசம்பர் 25 இல் கொச்சியில் இறந்தார். மேற்கோள்கள் நாடுகாண் பயணிகள் மலேரியாவால் இறந்தவர்கள் இந்தியாவின் போர்த்துக்கேய ஆளுநர்கள் 1524 இறப்புகள் கோவாவின் வரலாறு
6002
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பட்டகம்
ஒளியியலில், பட்டகம் அல்லது அரியம் என்பது ஒளியை அதனுள் அடங்கியிருக்கும் பல நிறங்களாக முறிவடையச் செய்வதற்கு, அல்லது அதனைத் தெறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். பொதுவாகப் புழங்கும் பட்டகம் முக்கோணப் பட்டகம் அல்லது முப்பட்டகம் எனப்படும். இது முக்கோண அடியையும் நீள்சதுரப் பக்கங்களையும் கொண்டது. சில பட்டகங்கள் மேற்படி வடிவத்தில் இருப்பதில்லை. இலங்கைப் பாடசாலைகளில் பட்டகம் என்ற சொல்லுக்குப் பதிலாக அரியம் என்ற கலைச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள். ஒளி ஒரு ஊடகத்திலிருந்து (எகா: வளி) இன்னொரு அடர்த்தி கூடிய ஊடகத்துக்குள் அதன் மேற்பரப்புக்குச் செங்குத்தாக இல்லாத கோணத்தில் நுழையும்போது அது முறிவடைகிறது அல்லது தெறிக்கப்படுகிறது. ஒளிக்கதிர் மேற்கூறிய இரண்டு ஊடகங்களினதும் இடைமுகத்துடன் ஆக்கும் கோணத்திலும் (படு கோணம்), இரண்டு ஊடகங்களினதும் முறிவுக் குணகங்களினது அளவிலுமே ஒளி தெறிக்கப்படுமா அல்லது முறிவடையுமா என்பதும், எவ்வளவு முறிவு அல்லது தெறிப்பு நடைபெறும் என்பதும் தங்கியுள்ளது.முப்பட்டகம் , துருவப்படுத்துவதினால் ஒளிக்கதிர்களைச் சிதறச்செய்கிறது. தெறிப்புப் பட்டகம் ஒளியைத் தெறிப்படையச் செய்யப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆடிகளை விடப் பட்டகங்கள் இலகுவாகத் தயாரிக்கப்படக் கூடியவை என்பதனால் தூர நோக்கிகளில் (binoculars) பயன்படுத்தப்படுகின்றன. பரவச் செய்யும் பட்டகங்கள் ஒளியை அது கொண்டிருக்கும் பல்வேறு நிறங்களாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. வெண்ணிற ஒளி பல்வேறு அதிர்வெண்களைக் கொண்ட அலைகளின் கலவையாக இருக்கின்றது. பட்டகத்தினால் ஒளி முறிவடையும் அளவு வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட ஒளிக் கூறுகளுக்கு வெவ்வேறாக இருப்பதால் பட்டகத்தினால் ஒளிக்கூறுகள் அவற்றின் அதிர்வெண்களுக்கு ஏற்பப் பிரிக்கப் படுகின்றன. நீல ஒளியில் சிவப்பு ஒளியிலும் கூடுதலாக வேகக் குறைவு ஏற்பட்டுக் கூடுதல் முறிவு ஏற்படுகின்றது. முனைவாக்கும் பட்டகங்கள் என அழைக்கப்படும் பட்டகங்களும் உள்ளன. இவை ஒளிக் கற்றைகளை வெவ்வேறு முனைவாக்கம் கொண்ட கூறுகளாகப் பிரிக்கின்றன. பட்டகம் வேலை செய்யும் முறை ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குள் செல்லும் பொழுது அதன் வேகம் குறைக்கப்படுகின்றது.அப்போது அவ்வொளியானது ஹய்ஜன் கோட்பாட்டின்படி தனது வழியிலிருந்து விலகி வேறு ஒரு கோணத்தில் பட்டகத்தினுள் புகும். ஒளியின் விலகல் கோணம் , ஒளி பட்டகத்தில் படும் கோணத்தைப் பொருத்து மாறுபடும்.வெள்ளொளி பல வண்ண ஒளிகளின் கலவையாகும்.ஒவ்வொரு ஒளிக்கும் வேவ்வேறு அலைநீளங்கள் இருப்பதால் அவை ஒளி பட்டகத்தில் படும் கோணமும் மாறுபடுகின்றது.அதனால் ஒளி முறிவு ஏற்படுகின்றது. பட்டகமும் ஒளியும் ஐன்ஸ்டினுக்கு முந்தய அறிஞர்கள் யாவரும் வெள்ளொளி நிறமற்றது எனவே நம்பிக்கொண்டிருந்தனர்.மேலும் வெள்ளொளி நிறமற்றது பட்டகத்தில் உள்ள ஒளிகளே அவற்றை உருவாக்குகின்றன என்று நம்பினர்.ஐன்ஸ்டின் தனது ஒளியின் இரட்டைத்தன்மை கோட்பாட்டை வெளியிட்ட பின் ஹைஜன் ஒளியிணை ஆராய்ந்து , வெள்ளொளி பல நிறங்களையுடைய ஒளிகளின் கூட்டு ஒளி என நிறுபித்தார்.அதன் பின் பட்டகம் ஒளியிணைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. பட்டகத்தின் வகைகள் தெறிக்கும் பட்டகங்கள் ஐம்பட்டகம் (Pentaprism) போரோ பட்டகம் (Porro prism) போரோ-அபே பட்டகம் (Porro-Abbe prism) அபே-கொயேனிக் பட்டகம் (Abbe-Koenig prism) புறாவால் பட்டகம் (dove prism) dichroic prism அமிசி கூரைப் பட்டகம் (Amici roof prism) பரவலாக்கும் பட்டகங்கள் முப்பட்டகம் அபே பட்டகம்(Abbe prism) பெல்லின்-புரோக்கா பட்டகம் (Pellin-Broca prism) அமிசி பட்டகம் (Amici prism) முப்பட்டக வகைகள் முப்பட்டகத்திலும் சில வகைகள் உள்ளன.அவை, வெற்று முப்பட்டகம்-கண்ணாடியின் வழியே செல்லும் ஒளியினை ஆராய இது உதவுகின்றது. நீர் முப்பட்டகம்-இதில் நீரை நிரப்பி ,நீரினால் ஏற்படும் நிறமுறிவினைப்பற்றி படிக்க உதவுகின்றது. திட முப்பட்டகம்-இவை முழுவது கண்ணாடியினால் செய்யப்பட்டது ஆகும்.கண்ணாடியின் வழியே செல்லும் ஒளியினை ஆராய இது உதவுகின்றது. ஒளிக்கற்றை பிளக்கும் கனப்பட்டகங்கள் சில பிரதிபலிப்பு கனப்பட்டைகள் ஒளியிணை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒளிவீச்சுகளாக பிரிக்க பயன்படுத்தப்படுகின்றன.அவை, பீம் ஸ்ப்ளிட்டரின் கனப்பட்டகம் டைகுரோனிக் முப்பட்டக கண்ணாடி முனைவாக்கும் பட்டகங்கள் நிக்கோல் பட்டகம் (Nicol prism) வொலாஸ்ட்டன் பட்டகம் கிளான்-போகோல்ட் பட்டகம் (Glan-Foucault prism) கிளான்-தொம்சன் பட்டகம் (Glan-Thompson prism) துருவமுனைப்படும் கனப்பட்டகங்கள் துருவமுனைப்படும் கனப்பட்டைகளும் ஒளியிணை சிதறச் செய்யும்.அவை, நிகோல் முப்பட்டை கண்ணாடி வோல்ஸ்டன் முப்பட்டக கண்ணாடி நோமர்ஸ்கி முப்பட்டக கண்ணாடி - மைக்ரோஸ்கோப்பி நன்மைகள் Wollaston முப்பட்டை கண்ணாடி ஒரு மாறுபாடு ரோஹன் முப்பட்டக கண்ணாடி செனர்மொன்ட் முப்பட்டக கண்ணாடி கிலன்-ஃபூக்கோ முப்பட்டக கண்ணாடி கிலன்-டெய்லர் முப்பட்டக கண்ணாடி கிலன்- தாம்சன் முப்பட்டக கண்ணாடி பயன்பாடுகள் பட்டகங்கள் கண்பரிசோதனைகளுக்கு பயன்படுகின்றன்.பார்வைக் கோளாறுகளை கண்டரியவும், சரி செய்யவும் பட்டகங்கள் பயன்படுகின்றன.ஒளியின் அளவை பெறுக்க பட்டகங்கள் பெரிதும் உபயோகப்படுகின்றன.இக்காரணத்திணால் இவை தொலைநோக்கி உட்பட பல சாதனங்களில் பயன்படுகின்றன.பட்டகம் ஆய்வுக்கூடங்களில் ஒளியினைப்பற்றி ஆராயவும்,அவற்றின் இயல்புகள் பற்றி படிக்கவும் உதவுகின்றன.பட்டகம் வெள்ளொளியில் உள்ள நிறங்களின் அலைநீளங்கள் ஆகியவற்றை கணக்கிட பெரிதும் உதவுகின்றன. மேற்கோள்கள்
6003
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஐம்பட்டகம்
ஐம்பட்டகம் என்பது ஐந்து பக்கங்கள் கொண்ட தெறிக்கும் பட்டகம் ஆகும். இது ஒளிக் கதிர் ஒன்றைத் 90° ஆல் திசை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஒளிக்கதிர் பட்டகத்தினுள் இரு முறை தெறிப்பதன் மூலம் ஒரு ஒரு பொருளின் விம்பத்தை,அதன் பக்கத்தை மாற்றாமல் செங்கோணத்தால் (right angle) திருப்பிவிடுகிறது. ஒளிக்கதிர் அவதிக் கோணத்திலும் (critical angle) குறைவான கோணமொன்றில் இடைமுகத்தில் படுவதன் காரணமாக, பட்டகத்துள் நடைபெறும் தெறிப்பு முழுவுட் தெறிப்புக் (total internal reflection) காரணமாக ஏற்படுவதில்லை. தெறிப்பு ஏற்படும் பக்கங்கள் இரண்டும் பூச்சுக்கள் மூலம் தெறிக்கும் மேற்பரப்புகளாக ஆக்கப்படுவதனாலேயே தெறிப்பு உண்டாக்கப்படுகிறது. தேவையற்ற தெறிப்ப்பைத் தடுப்பதற்காக, ஒளியை உட்செல்லவிடும் பக்கங்கள் இரண்டிலும், வழக்கமாக தெறிப்புத் தடுப்புப் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். ஐந்தாவது பக்கம் ஒளியியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஒற்றை வில்லைத் தெறிப்பு நிழற்படக் கருவிகளில் (single-lens reflex camera) பயன்படும் கூரை ஐம்பட்டகம், இந்தப் பட்டகத்தின் ஒரு வேறுபாடு ஆகும். இங்கே நிழற்படக் கருவியிலுள்ள தெறிக்கும் ஆடி மூலம் கருவியின் குவியத் திரையில் உருவாக்கப்படும் விம்பமே பட்டகத்தினூடாகத் தெறிக்கப்படுவதால் விம்பம் இடம் வலமாக மாற்றப்படவேண்டியுள்ளது. பட்டகத்தின் தெறிக்கும் பக்கமொன்றை ஒன்றுக்கொன்று 90° கோணத்தில் அமைந்த இரண்டு பக்கங்களாக மாற்றுவதன் மூலம் இந்த நோக்கம் அடையப்படுகிறது. ஒளியியல்
6006
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
போரோ பட்டகம்
ஒளியியலில் போரோ பட்டகம் என்பது, இதனை உருவாக்கிய இக்னாஸியோ போரோ (Ignazio Porro) என்பவரின் பெயரால் அறியப்படும் ஒரு வகைத் தெறிப்புப் பட்டகம் ஆகும். இது ஒரு விம்பத்தின் திசையை மாற்றுவதற்கு, ஒளியியல் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது, செங்கோண முக்கோண வெட்டுமுகத்துடன் கூடிய, செங்கோண வடிவவியல் பட்டகத்தின் (geometric prism) வடிவில் அமைந்த ஒரு கண்ணாடிக் குற்றியாகும். பட்டகத்தின் பெரிய நீள்சதுரப் பக்கத்தின் வழியாக உட்செல்லும் ஒளி, ஏனைய இரண்டு பக்கங்களில் முழுவுட் தெறிப்படைந்து (total internal reflection) மீண்டும் உட்புகுந்த பக்கம் வழியாக வெளியேறும். ஒளி பக்கத்துக்குச் செங்குத்தாகவே உட்புகுந்து, வெளியேறுவதன் காரணமாகப் பட்டயம் ஒளியைச் சிதறச் செய்வதில்லை. போரோ பட்டகத்தினூடாகச் செல்லும் விம்பம்மொன்று 180° ஆல் சுழற்றப்படுவதுடன், உட்புகுந்த திசைக்கு எதிர்த் திசையாகச் சென்று புகுந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியுள்ள புள்ளியூடாக வெளியேறுகிறது. விம்பம் இருமுறை தெறிக்கப்படுவதனால் விம்பம் பக்கம் மாறாமல் இருக்கும். போரோ பட்டகங்கள் பெரும்பாலும் இரட்டைப் போரோ பட்டக வடிவில் சோடியாகவே பயன்படுத்தப் படுகின்றன. முதலாவது பட்டகத்துக்குச் சார்பாக 90° ஆல் சுழற்றப்பட்ட இரண்டாவது பட்டகம், ஒளி இரண்டு பட்டகங்களின் ஊடாகவும் செல்லத்தக்க வகையில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கூட்டுப் பட்டகத்தின் இறுதி விளைவானது, ஒளி உள்ளே சென்ற அதே திசையில் அதற்குச் சமாந்தரமாக ஆனால் சற்று விலகிச் செல்லும். அத்துடன் விம்பம் முன்னைப் போலவே பக்கமாற்றம் இல்லாமல் 180° சுழற்றப்பட்டிருக்கும். இரட்டைப் போரோ பட்டயங்கள் சிறிய ஒளியியல் தொலை நோக்கிகளில் தலைகீழான விம்பமொன்றை தலைமேலாகச் செய்வதற்குப் பயன்படுகிறது. பொதுவாக இரட்டைப் போரோ பட்டகத்தின் இரண்டு கூறுகளும் ஒன்றுடனொன்று பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் அளவையும் நிறையையும் குறைப்பதற்காக தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டிருக்கும் போரோ - அபே பட்டகம், இரட்டைப் போரோ பட்டகத்தின் ஒரு வேறுபாடாகும். ஒளியியல் இத்தாலியக் கண்டுபிடிப்புகள்
6012
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பாலைவனம்
புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை. வரையறை பொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங்களை விட அதிகமாக நீர் வெளியேறும் புவியியற் பிரதேசங்களே பாலைவனம் எனக் கருதப்படும். தனியே மழைவீழ்ச்சியை மாத்திரம் கொண்டு பாலைவனங்களை வரையறுக்க முடியாது. இவ்வரையறை வெப்பநிலையாலும் ஈரப்பதத்தாலும் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது. வகைகள் சில வேளைகளில் பாலைவனங்களை குளிர்ப் பாலைவனங்கள் என்றும் வெப்பப் பாலைவனங்கள் என்றும் பாகுபடுத்துவர். குளிர்ப் பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். 1961 இல் பெவெரில் மேக்ஸ் பாலைவனங்களை மழை வீழ்ச்சியின் அடிப்படையில் வகைப்படுத்தினார். தற்போது அங்கீகரிக்கப்படும் பாகுபாடு யாதெனின் வறண்ட வலயம், அரையுலர் வலயம் எனப் பிரிக்கும் பாகுபாடாகும். வறண்ட பாலைவனங்களில் குறைந்தது 12 மாதங்களாவது மழைவீழ்ச்சி அற்றுக் காணப்படுவதோடு அது 250 mm (10 அங்குலங்கள்) விடக் குறைந்ததாகக் காணப்படும். அரையுலர்ப் பாலைவனங்களில் மழை வீழ்ச்சி 250–500 mm (10–20 அங்குலங்கள்) வரை இருக்கும். சொல்லிலக்கணம் புவியியல் தன்மை புவியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (33%) பாலைவனங்களாகும். சூடான பாலைவனங்களின் பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். இவற்றின் குளிர்கால-கோடைகால வெப்பநிலை வேறுபாடும் அதிகமாகக் காணப்படும். சூடான பாலைவனங்களின் கோடைக்கால வெப்பநிலை 45 °C/113 °F வரை உயரும் அதே வேளை குளிர்கால வெப்பநிலை 0 °C/32 °F அல்லது அதை விடக் குறைவடையும். இங்கு ஈரப்பதம் குறைவென்பதால் இதனைச் சுற்றியுள்ள வளி சூரியனால் பகலில் வேகமாக சூடாக்கப்படுவதுடன் இரவு வேளையில் வேகமாகக் குளிர்வடைந்து விடும். எனவே இங்கு பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். பாலைவன அம்சங்கள் தாவரங்கள் பாலைவனங்களின் காலநிலை தாவரங்களுக்கு ஏற்றதல்லவென்றாலும், உண்மையில் பாலைவனங்களின் உயிர்ப்பல்வகைமை அதிகமாகும். இங்கு வாழும் தாவரங்கள் ஆவியுயிர்ப்பைக் குறைக்கும் வகையில் இசைவாக்கமடைந்துள்ளன. கள்ளி போன்ற தாவரங்கள் இங்கு நன்றாக வளரக் கூடியன (அடகாமா, அன்டார்க்டிக்கா போன்றவற்றைத் தவிர்த்து). இவற்றின் வேர்த்தொகுதி அரிதாகக் கிடைக்கும் நீரை சரியான முறையில் விநியோகிக்கக் கூடியவாறு விருத்தியடைந்துள்ளன. விலங்குகள் தாவரங்களைப் போலவே விலங்குகளிலும் பாலைவனச் சூழலுக்கு சிறப்பாக இசைவாக்கம் அடைந்தவை உள்ளன. பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். நீர் கிடைப்பனவு புவியிலே வரண்ட இடமாக அட்டகாமா பாலைவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஏனைய பாலைவனங்களில் சிறிதளவேனும் மழை பொழியும். இங்கு சிலவேளைகளில் அடைமழை கூடப் பொழிந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும். மனிதனுடனான தொடர்பு பாலைவனங்களிலுள்ள தாதுப்பொருட்களையும், அதன் ஆற்றலையும் வெளிக்கொண்டு வர, அங்கு மனிதன் தான் வாழ நன்கு பழக்கப்படுத்திக் கொண்டான். இவ்வாறாக மனித கலாச்சாரத்தில் பாலைவனங்கள், ஓர் விரிவான இலக்கியத்தைக் கொண்டுள்ளது. வரலாறு மனிதன் பல நூற்றாண்டுகளாக பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான். கலஹாரி பாலைவனப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள், வட அமெரிக்க பழங்குடிகள் மற்றும் பலதரப்பட்ட இன மக்கள் பாலைவனத்தில் வாழ்கின்றனர். விலங்குகளின் தடங்களை அறியவும், அதனை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கவும், தண்ணீரைத் தேடி அலையவும், உண்ணக் கூடியவைகளை தரம் பிரிக்கவும், அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். இச்செயல்களும் திட்டங்களும் வாய் மொழியாகவே அவர்களுள் பரவியது. மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஆடுகள், மாடுகள், கால்நடைகள் ஒட்டகங்கள், காட்டெருதுகள், கலைமான் ஆகியவற்றிலிருந்து வளர்த்துக் கொண்டனர். மழைக்காலங்களில் வளரும் தாவரங்களைத் தேடி கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தனர். குடிபெயரும் போது தங்களுடன், துணிகள் அல்லது தோல்களால் ஆன கூடாரங்கள், குடிக்க பால் அல்லது இரத்தம், உண்ண இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர். பாலைவன நாடோடிகளும் வணிகர்களும் இருந்தனர். சஹாரா பாலைவனமானது அட்லாண்டிக் விளிம்பிலிருந்து எகிப்து வரை நீண்டு பரந்த பரப்பளவு கொண்டதாக உள்ளது. சகாராவின் வடக்கில் உள்ள வளமான மத்தியதரைக் கடல் பகுதியுடன் தெற்கில் சஹெலை இணைக்கும் வணிக பாதைகள் வளர்ச்சியடைந்தன இவற்றின் வழியாக, பாலைவத்தில் மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச்செல்ல பெருமளவிலான ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. துவாக்கு வணிகர்களால் வழக்கமாக பாரம்பரியமாக அடிமைகள், தந்தம், தங்கம் போன்றவற்றை வடக்கு நோக்கி எடுத்துச் சென்றும், தெற்குநோக்கி உப்பை வணிகத்துக்காக கொண்டு சென்றனர். இந்த வணிகர்களால் பல்வேறு பாலைவனச் சோலைகள் மற்றும் கிணறுகளுக்கு இடையில் பயணிக்க ஏதுவாக வழிகாட்டுவதற்கு இப்பகுதியின் நிலவியல் அறிவைக் கொண்ட பெர்பர்கள் பயன்படுத்தப்பட்டனர். 8 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சஹாரா முழுவதும் பல மில்லியன் அடிமைகள் வடக்கு நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். மோட்டார் வாகனங்கள், கப்பல் மற்றும் வான் சரக்கு போக்குவரத்து சாதனங்களின் வருகைக்குப்பின் பாரம்பரிய தரைவழிப் போக்குவரத்துகள் குறைந்துவிட்டன, ஆனால் வணிகர்கள் இன்னும் அகடெஸ் மற்றும் பில்மாவிற்கும், பாலைவனத்திற்கு உள்பகுதியில் உள்ள சமூக மக்களுக்கு உப்பு கொண்டு செல்ல திம்புக்டுவிற்கும் டவுடுனிக்கும் இடையில் செல்லும் வழிகளிலும் பயணம் செய்கின்றனர். பாலைவனப் பகுதி விளிப்புப் பகுதிகள் சிலவற்றில், மழைப்பொழிவு ஏற்பட்டும் பொருத்தமான சூழல்கள் ஏற்படும்போது, சில குழுக்கள் பயிர்களை பயிரிட்டன. கால்நடை மந்தைகள் வறட்சியால் இறந்து இழப்புகளைச் சந்தித்தபோது, மேய்ச்சலுடன் சாகுபடி செய்யவும் நிர்பந்தம் ஏற்பட்டு, இது நடந்தது இருக்கலாம். அவர்கள் பயிரிடப்பட்ட நிலப்பகுதியால், நாடோடி மேய்பர்களுக்கு மேய்சலுக்கான இடப் பகுதி குறைத்து, அதனால் நிலப்பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்தது. பாலைவனத்தின் அரை வறண்ட நிலப்பகுதிகள் 1930 களில் அமெரிக்க டஸ்ட் பவுல் பகுதியில் நடந்தது போல, மண் அரிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து நிறைந்த மண் வகைகள் இவையாகும். புற்கள் உள்ள இடத்தின் தரைமண் அரித்துசெல்லப்படுதல், மற்றும் தொடர்ச்சியான வறண்ட ஆண்டுகளில் பயிர் விளைச்சல் தோல்வியடைதல், பிரமாண்ட தூசுப் புயல்களால் மேல் மண் பறத்தல் போன்ற பேரழிவில் பாதி மில்லினுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற சேதங்களால் அரை வறண்ட பகுதிகளில் ஆண்டுக்கு பன்னிரண்டு மில்லியன் ஹெக்டேர் நிலப் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாக மாறி வருகின்றன. காலநிலை மாற்றங்கள், விவசாய உழவு, மிகையான மேய்ச்சல், காடழிப்பு, வறட்சி போன்ற காரணிகளால் பாலைவனம் உருவாகிறது. மண்ணின் நிலையைத் தீர்மானிப்பதில் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன. பல சூழ்நிலைகளில், மண் அரிப்பு விகித்த்தை தாவரங்களின் பரப்பளவு குறைக்கின்றன. தாவரங்கள் இல்லாததால் பாதுகாப்பற்று உள்ள வறண்ட மேற்பரப்பு மண் காற்றால் வீசியடிக்கப்படுகின்றன அல்லது வெள்ளப் பெருக்குகளால் அரிக்கப்பட்டு விடுகின்றன, இதனால் கீழே மிஞ்சும் வளமற்ற மண் அடுக்குகள், சூரிய வெப்பத்தால் மோசமான நிலப்பகுதியாக மாறும். அதிகப்படியான மேய்சலே வரலாற்று ரீதியாக நிலம் பாலைவனம் ஆவதற்கான காரணம் எனக் கருதப்பட்டாலும், காட்டு விலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகள் போன்றவை தாவர வளர்ப்பு மேம்படுத்துவதற்கு காரணம் என்று சில சான்றுகள் உள்ளன, வேறு கோள்களில் உள்ள பாலைவனங்கள் புவியைத் தவிர சூரியக்குடும்பத்தில் செவ்வாயிலேயே பாலைவனம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உள்ள பாலைவனங்கள் புவி யில் உள்ளவற்றை விடப் பெரியனவாகும். பாலைவனமாதல் பாலைவனமாதல் என்பது, வறண்ட, ஓரளவு வறண்ட அல்லது ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இது வழமையாக மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும். உயிரியற் பல்வகைமை இழக்கப்படுதலும், உற்பத்தித் திறன் இழப்பும் பாலைவனமாதலின் முக்கிய தாக்கங்களில் ஒன்றாகும். மடகாஸ்கரில், அதன் மத்திய உயர்நிலப் பகுதிகளில், உள்ளூர் மக்களின் வெட்டி எரித்தல் முறைப் பயிர்ச்செய்கையின் காரணமாக நாட்டின் 10% அளவுக்கு ஈடான நிலம் பாலைவனமாதல் மூலம் இழக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான நிலை உள்ளது. இலக்கியங்களில் பாலைவனங்களை பற்றி விரிவாகக் கூறும் இலக்கியங்களும் உள்ளன. சில நாடுகாண் பயணிகளால் நேரடியாக பார்த்து எழுதப்பட்டவையாகும். அவற்றில் 1888ல் சார்லசு மொன்டகு தௌடி எழுதிய "எனார்மசு டிராவல்சு இன் அராபியன் டெசர்டா", மத்திய கிழக்கு பாலைவனங்களில் அதிக பயணங்களை மேற்கொண்ட ஃப்ரேயா சுடார்கு எழுதிய இருபது நூல்களும் முக்கியமானவை. மேலும் செர்மானிய இயற்கை ஆர்வலர் எழுதிய ஆய்வுக்கட்டுரையான "இன் தி டெசர்ட் ஆஃப் திசு எர்த்", ரால்ப் பேக்னால்டு இரண்டாம் உலகப்போரின் போது செய்த ஆய்வுக் குறிப்புகள் போன்றவையும் முக்கியமானவை. மேலும் மார்க்கோ போலோ மத்திய ஆசியாவில் இருந்து சீனா செல்லும் போது எழுதிய குறிப்புகளும் பாலைவனங்களை பற்றிக் குறிப்பிடுகின்றன. தமிழ் தமிழில் சங்ககால நூல்களில் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர மன்னன் கலித்தொகை நூலில் தொகுத்த பாலைக்கலி என்னும் பிரிவில் வரும் 35 பாடல்களும் மற்ற சங்க நூல்களில் வரும் பாலைத் திணை பற்றிய பாடல்களும் சங்க கால பாலை நில மக்களின் வாழ்வியலையும் சேர்த்தே கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பாலை நிலமானது தற்காலிக பாலைவனங்களே ஆகும். பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" – சிலப்பதிகாரம். சான்றுகள் மேலும் பார்க்க பாலைவனமாதல் பாலைவனங்களின் பட்டியல் பாலைவனங்கள் சூழல் மண்டலம்
6013
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B
மார்க்கோ போலோ
மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் சனவரி 8–9, 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகமே சீனாவைப் பற்றியும் அதன் தலைநகரான பெய்கிங் பற்றியும், பிற ஆசிய நாடுகள், நகரங்கள் பற்றியும் ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒரு இத்தாலிய வணிகரான இவர். மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்றார். இவருடைய கதைகள் ஐரோப்பியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. தந்தை, மாமா நிக்கோலோ மற்றும் மாஃபியோ ஆகியோரிடமிருந்து போலோ வர்த்தக வியாபாரத்தை கற்றுக்கொண்டார். இவர்கள் ஆசியா வழியாகப் பயணம் மேற்கொண்டு குப்ளாய்கானை சந்தித்தனர். 1269 ஆம் ஆண்டில் அவர்கள் வெனிசுக்குத் திரும்பி வந்து முதன்முறையாக மார்கோபோலோவைச் சந்தித்தனர். ஆசிய சாதனைப் பயணத்திற்காக கப்பல் ஏறிய இவர்கள் 24 ஆண்டுகள் கழித்து வெனிசு திரும்பியபோது அந்நகரம் கெனோவாவுடன் போருக்கு ஆளாகியிருந்தது. சிறையில் அடைபட்டிருந்த மார்கோபோலோ சிறைத்தோழரிடம் தன்னுடைய கதைகளைக் கூறிக்கொண்டிருப்பார். 1299 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர் மிகப்பெரிய வியாபாரியாக வளர்ச்சி கண்டார். திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். 1324 இல் மரணமடைந்த போலோ வெனிசு நகரிலுள்ள சான் லொரென்சோ பேராலயத்தில் புதைக்கப்பட்டார். குடும்பம் இவரின் பிறப்பிடமான வெனிசு நகரத்தில் இவரின் குடும்பம் மிகுந்த செல்வாக்கினை அக்காலத்தில் பெற்றிருந்தது. அதன் காரணம் இவரின் தந்தையான நிக்கோலோ போலோவும், சிறிய தந்தையான மஃபெயா போலோவும் வெனிசு நகரின் முக்கிய வணிகர்களாவர். மேலும் வெனிசு நகர பெருஞ்சபையில் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தனர். மார்க்கோ போலோவின் மற்றொரு சிறிய தந்தை கான்சுடன்டீனோபிலிலும் கிரிமியாவிலும் முக்கிய வணிகராய் இருந்தவர். பயணக் குறிப்புகள் கிழக்கு நோக்கிய பயணம் 1271 இல் இவர் தனது தந்தை நிக்கோலா, உறவினர் மாப்பியோ ஆகியோருடன் பட்டுப் பாதை வழியே மத்திய கிழக்கு, மத்திய ஆசியா கடும் பாலைவனங்கள் மலைகள் போன்றவற்றைக் கடந்து சீனா சென்று செங்கிசுக்கானின் பேரனான குப்ளாய் கான் மன்னனைச் சந்தித்தார். அங்கு 17 ஆண்டுகள் குப்ளாய் கானுக்கு உதவியாக இருந்தார். குப்ளாய் கானின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்கோ போலோ பேரரசின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர அரச முத்திரை வழங்கப்பட்டது. ஏனையோருக்குச் செப்பு, இரும்பு போன்ற உலோகங்களினால் முத்திரை வழங்கப்பட்டாலும் மார்க்கோ போலோவிற்குக் குப்ளாய்கான் தங்கத்திலான அரச முத்திரையை வழங்கினான். இந்த முத்திரையின் உதவியுடன் மார்க்கோ போலோ மங்கோலியப் பேரரசின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருந்தது. மீண்டும் வெனிசு நோக்கிய பயணம் பெரும் செல்வம் ஈட்டிய மார்க்கோ போலோ மற்றும் அவர் தந்தையார் முதலியவர்கள் மொங்கோலியப் பேரரசில் இருந்து புறப்பட்டு தமது நகரமான வெனிசிற்குச் செல்ல முற்பட்டாலும் இவர்கள் மீண்டும் அவர்களது ஊருக்குச் செல்வதை மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கான் விரும்பவில்லை. ஆயினும் 1292 ம் ஆண்டு அரைமனதுடன் இவர்களை தமது நாட்டிற்கே திரும்பிச் செல்ல அனுமதி வழங்கினான். பேரரசனின் ஆணைப்படி இவர்களுடன் ஒரு இளவரசியும் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவளை ஈரான் நாட்டில் திருமணத்திற்காக ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது. இவர்களின் தாய் நாடு நோக்கிய பயணம் மிகவும் சிரமமானதாக அமைந்ததுடன் இவர்களுடன் பயணித்த பலரும் வழியிலேயே மாண்டு போயினர். இதைவிட மங்கோலியப் பேரரசின் எல்லையைத் தாண்டி ட்ரிபிசாண்ட் பேரரசின் எல்லையில் வழிப்பறிக் கொள்ளையரிடமும் வசமாக மாட்டிக் கொண்டனர். தாம் மங்கோலியப் பேரரசில் சேகரித்த செல்வத்தில் அனேகமானவற்றை இந்த வழிப்பறிக் கொள்ளையரிடம் பறிகொடுத்தனர். இவர்கள் தாம் பயணித்த பாதையில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தனர். இதன் படி இலங்கையின் இரத்தினக் கற்களைப் போற்றும் மார்க்கோ போலோ இலங்கையின் அரசனிடம் மிகவும் பெரிய உள்ளங்கை அளவான இரத்தினக் கல் இருந்ததாகக் கூறுகின்றார். பாண்டி நாட்டில் மார்க்கோ போலோ அதன் பிறகு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் நியமித்த இலங்கையின் இளவரசனான சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு பாண்டிநாட்டிற்கு வந்தார். இவர் பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் இக்குலசேகரனே ஐந்து பாண்டியர்களில் மூத்தவன் எனவும், இவனது ஆட்சியில் பாண்டி நாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதைவிட இந்தியாவின் கோரமண்டல் கரையில் உள்ள மக்கள் தமது வலக்கையாலே எந்த வொரு சுத்தமான செயலையும் செய்வதாகவும் இடக்கை அசுத்தமான காரியங்களைச் செய்யப்பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார். மேலும் தற்போதைய குஜராத் பகுதியில் உள்ள யோகிகள் பற்றியும் கூறுகின்றார். இவர்கள் சுமார் 150 -200 ஆண்டுகள் உயிர் வாழும் வல்லமை உடையவர்கள் என்றும் இவர்கள் மிகவும் சிறிதளவான உணவையே உண்பதாகவும் கூறியிருக்கின்றார். சிறையில் புத்தகம் உருவாக்கம் 1298 இல் நடந்த போர் ஒன்றின் விளைவாக மார்க்கோ போலோ சிறை பிடிக்கப்பட்டார். இந்தப் போர் இவரின் நகரமான வெனிசிற்கும் வெனிசின் வர்த்தகத்தில் போட்டி நகரமான ஜினோவா விற்கும் இடையில் நடைபெற்றது. இவர் தான் சிறையில் வாழ்ந்த காலத்தில் தனது சிறை அறையைப் பகிர்ந்த ஒரு எழுத்தாளர் மூலம் தான் உலகைச் சுற்றிய கதையை எழுதினார். பலரும் இவரின் பயணக் கதைகளை நம்பவில்லை ஆனாலும் மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது. பலரும் இந்தப் புத்தகத்தால் கவரப்பட்டனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிரிஸ்தோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார். மீண்டும் வெனிசு நகருக்கு வருகை இறுதியாக 1295 இல் தனது சொந்த பூமியான வெனிஸ் நகரத்தை மார்க்கோ போலோ அடைந்தார். இவர் வெனிசை வந்தடைந்த போது இவரது உறவினர் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தனர். மொத்தம் 24 வருடங்கள் பல நாடுகளைத் தரிசித்த மார்க்கோ போலோ சுமார் 24,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பதையும் குறிப்பட வேண்டும். விடுதலையின் பின்னர் 1299 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மார்க்கோ போலோ தனது நகரமான வெனிசிற்கு மீண்டு வந்தார். அவர் வெனிசில் பின் நாட்களின் பெரும் செல்வந்த வணிகராக இருந்தார். பல்வேறு நாடுகாண் பயனங்களை ஊக்குவித்தார் ஆயினும் அவர் அதன் பின்னர் எந்தவொரு பயண நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சிறையில் இருந்து நாடு திரும்பிய மார்க்கோ போலோ 1300 இல் பிரபல வணிகர் ஒருவரின் மகளான டொஆண்டா எனும் பெண்ணை மணம் செய்துகொண்டார். அத்துடன் அவரிற்கு மூன்று பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றது. 1323 இல் நோய்வாய்ப்பட்ட மார்க்கோ போலோ சனவரி 8, 1324 இல் ஒரேயடியாகப் படுக்கையில் வீழ்ந்தார். வைத்தியர்கள் இவரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் மரணப் படுக்கையில் இருந்து மார்க்க போலோவைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதி நாட்களில் தனது அடிமையாக இருந்த தட்டார் இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் மார்க்க போலோ விடுதலை செய்தார். தனது வணிகத்தை மகள் மற்றும் மனைவியிடம் ஒப்படைத்ததுடன் தேவாலயத்திற்கும் தனது செல்வத்தில் கணிசமான பங்கை வழங்கினார். மார்க்க போலோவின் இறுதி நாள் சரியாகக் கணிக்கப்படாவிட்டாலும் சூரியன் மறைந்த பின்னர் சனவரி 8 மற்றும் 9, 1324 இடையில் அவர் மறைந்ததாக கூறப்படுகின்றது. பெருமைகள் கியோவானி டா பியன் டெல் கார்பைன் போன்ற பிற சிறிய அளவில் அறியப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே சீனாவுக்குப் பயணம் செய்திருந்தனர். ஆனால் போலோவின் புத்தகமே பரவலாக அறியப்பட்ட முதல் பயணமாக இருந்தது. தூர கிழக்கு பற்றி போலோவின் விவரங்களை அறிந்த கிறிசுடோபர் கொலம்பசு அந்த நிலங்களை பார்வையிட விரும்பினார். கிழக்கில் கிறித்துவ பேரரசு என்ற போலோவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெண்டோ டி கோய்சு மத்திய ஆசியா முழுவதும் மூன்று ஆண்டுகளில் 4,000 மைல்கள் (6,400 கி.மீ) பயணம் செய்தார். அவர் அப்பகுதியை ஒருபோதும் கண்டுபிடித்துவிடவில்லை என்றாலும் 1605 இல் சீனப்பெருஞ் சுவருடன் அவரது பயணம் முடிவுக்கு வந்தது. கத்தாய் என்று அறியப்பட்டிருந்த பகுதியைத்தான் மத்தேயோ ரீச்சி (1552-1610) சீனா என்று அழைத்தார் என்பது தெளிவு படுத்தப்பட்டது . 1721 இல் போலோ பாமீரைக் கடந்த பொழுது விவரித்த சிற்றினமான ஓவிசு அம்மான் மார்கோ போலோ செம்மறியாடு எனப்பெயரிடப்பட்டது. 1851 ஆம் ஆண்டில், செயிண்ட் சான், நியூ பிரன்சுவிக் நகரில் கட்டப்பட்ட ஒரு மூன்று முனைக் கப்பலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ; ஆறு மாதங்களுக்குள் உலகெங்கிலும் பயணம் செய்த முதல் கப்பல் இதுவாகும் வெனிசு நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு வெனிசு மார்க்கோ போலோ விமான நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது . நிலப்படவியல் மார்கோ போலோவின் பயணமானது ஐரோப்பிய வரைபடத்தின் வளர்ச்சியில் சிறிதளவு தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கலாம், ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆராய்ச்சிகளுக்கு இவரது பயணம் வழிவகுத்திருப்பதாகக் கொள்ளலாம். 1453 இல் உருவாக்கப்பட்ட வரைபடத்தின் ஒரு பகுதி கத்தாயில் இருந்து மார்க்கோ போலோவால் வரையப்பட்ட ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது ஆகும். மார்கோ போலோ தனது பயணத்தை விவரித்துக் காட்டிய ஒரு வரைபடத்தை ஒரு போதும் அவர் தயாரிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பம் தூர கிழக்குக்கு தொடர்பான பல வரைபடங்களை கொடுத்து உதவியது. இந்த வரைபடங்களின் தொகுப்பை போலோவின் மூன்று மகள்களான பேண்டினா, பெல்லிலா மற்றும் மோர்ட்டா ஆகியோர் கையெழுத்திட்டனர் இத்தொகுப்பில் போலோவின் பயண வழிகள் மட்டுமின்றி சப்பான், சைபீரியாவின் கம்சட்கா தீபகற்பம், பேரிங் நீரிணை மற்றும் அலாசுகாவின் கரையோரப் பகுதிகளுக்குகான கடல் வழிகளும் காணப்பட்டன. மூலம் </ref> மேற்கோள்களும் குறிப்புகளும் உசாத்துணைகள் வெளி இணைப்புகள் குற்றன்பேக் திட்டத்தில் மார்க்கோ போலோவின் பயணங்கள் National Geographic Marco Polo: Journey from Venice to China In the Footsteps of Marco Polo: A Journey through the Met to the Land of the Great Khan வணிகர்கள் 1254 பிறப்புகள் 1324 இறப்புகள் நாடுகாண் பயணிகள் இத்தாலியர் தமிழர் பற்றி உள்ள அயல்நாட்டார் ஆவணங்கள் வெனிசியப் பயணிகள்
6017
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D
முகம்மது அல்-பராதிய்
முனைவர் முகமது முசுதபா எல்பரதேய் (Mohamed ElBaradei, , எழுத்துப்பெயர்ப்பு: ) (பிறப்பு சூன் 17, 1942, கெய்ரோ, எகிப்து) பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (IAEA) நான்காவது தலைமை இயக்குநர் ஆவார். 2005-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியரான இவருக்கும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்திற்கும் கூட்டாக வழங்கப்பட்டது. பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் இந்தியா அணு சக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தை 2008ஆம் ஆண்டு மேற்கொண்டபோது எல்பராதே மிக முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டது.அணுசக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் உலக நாடுகள் பயன்படுத்துவதற்காக அயராமல் உழைத்து வருபவர் என எல்பரதேயுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா 2008ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசை அவருக்கு அளித்தது. அரசுத்தலைவர் ஆகும் வாய்ப்பு 2009ஆம் ஆண்டிலிருந்தே ஹொஸ்னி முபாரக்கிற்கு மாற்றாக எகிப்தின் ஆட்சித்தலைவர் பதவிக்கு எல்பரதேயின் பெயர் எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டது. எல்பரதேய் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாவிட்டாலும், நியாயமான முறையில் தேர்தல்கள் நடந்தேற சில விதிமுறைகளும் அரசியல் சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சுயேட்சை வேட்பாளர்கள் சுதந்திரமாகப் போட்டியிடும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலே தாம் வேட்பாளராக நிற்பது குறித்து சிந்திக்க முடியும் எனவும் கூறினார். பல எதிர்கட்சிகளும் அமைப்புகளும் நடுநிலையான எல்பரதேய் மக்களாட்சிக்கு வழியமைக்கும் ஓர் இடைக்கால அரசிற்கு தலைமை ஏற்கக்கூடியவராக ஏற்றுக்கொண்டுள்ளன. 24 பிப்ரவரி 2010 அன்று எல்பரதேய் கெய்ரோவில் உள்ள தம் வீட்டில் பல அரசியல் கட்சித்தலைவர்களையும் குறிப்பிடதக்க அறிவுசீவிகளையும் அழைத்து உரையாடினார். இதன் முடிவில் புதிய கட்சியமைப்பில்லாத அரசியல் இயக்கமாக மாற்றத்திற்கான தேசிய சங்கம் அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முதன்மை குறிக்கோளாக அரசியல் நிலையில் பொது சீர்திருத்தங்களையும் குறிப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் உண்மையான, சுதந்தரமான முறையில் நடைபெறுவதை தடுக்கும் எகிப்து அரசியல்சட்டத்தின் 76வது பிரிவை நீக்குவதையும் கொண்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள முசுலிம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) கட்சி சார்பாக முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டனர்; இருப்பினும் தங்கள் கட்சி உறுப்பினரல்லாத ஒருவரை வேட்பாளராக அக்கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பதில் தெளிவில்லை. மேலும் இந்தச் சந்திப்பிற்கு முதல்நாள் எல் பரதேயைச் சந்தித்த அராபிய அணி (அரப் லீக்)கின் தலைவர் அமர் மௌசாவின் ஆதரவும் இந்த இயக்கத்திற்கு உள்ளதா எனத் தெரியவில்லை. ஆர்வர்டில் கென்னடி அரசாளுமைப் பள்ளியில் 27 ஏப்ரல் 2010 அன்று பேசும்போது தான் "ஓர் வேலையைத் தேடு"வதாகவும், எகிப்திய அரசியலில் "மக்களாட்சிக்கான வழக்கறிஞராகவும் மாற்றத்திற்கான முகவராகவும்" இருக்க முற்படுவதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். அதேநேரம் தமது மனைவிக்கு தாம் எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதில் விருப்பமில்லையென்றும் விளக்கினார். முப்பதாண்டுகளில் கண்டிராத வண்ணம் எகிப்து போராட்டம் உச்சமடைந்த நேரத்தில் 27 சனவரி 2011 அன்று தாய்நாடு திரும்பினார். மக்களின் விருப்பம் ஓர் இடைக்கால அரசு அமைய வேண்டுமென்றால் தாம் அதனை முன்னின்று நடத்தத் தயங்கவில்லை எனக் கூறினார். வெள்ளி தொழுகையில் போராட்டக்காரர்களுடன் அவர் இணைந்திருந்தபோது அவர்மீது தண்ணீர் பீரங்கி செலுத்தப்பட்டது. அவரைக் காக்கும்விதமாக சுற்றியிருந்த ஆதரவாளர்களின் மேல் தடியடி நடத்தப்பட்டது. 28 சனவரி 2011 அன்று எல்பரதேய் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. ஆயினும் அடுத்தநாள், அல் ஜசீராவிற்கு கொடுத்த நேர்முகத்தில் தாம் கைது செய்யப்படவில்லை எனக் கூறினார். மேற்கோள்கள் வெளியிணைப்புகள் IAEA official Website biography Full transcript of BBC's interview with Dr ElBaradei - May 2007 CASMII Washington intercepts ElBaradei phone calls for information to displace him IAEA - Director General's Corner Nobel Peace Prize Lecture video and transcript The Nobel Lecture The Nobel Lecture given by The Nobel Peace Prize Laureate 2005, Mohamed ElBaradei The 2005 Nobel Peace Prize - A Photoessay by Scott London http://www.law.nyu.edu/pubs/magazine/autumn2006/documents/ElBaradei.pdf New York Times: An Indispensable Irritant to Iran and Its Foes, 17 Sept 2007. Article that discusses the controversial role ElBaradei plays between a possibly nuclear Iran and a suspicious West. நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள் எகிப்திய அரசியல்வாதிகள் எகிப்தியர்கள் 1942 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்
6024
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
செப்பு
செப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இத்தனிமம் செம்பு எனவும் தாமிரம் எனவும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu ஆகும். இதன் அணு எண் 29 ஆகும். மிகவும் மென்மையானதாக, தகடாக அடிக்கக்கூடியதாகவும், கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துத்திறன் கொண்டதாகவும் தாமிரம் விளங்குகிறது. இந்த மாழையின் புத்தம்புதிய மேற்பரப்பு சிவந்த நிறத்தில் இருப்பதால் இதைச் செம்பொன் என்றும் அழைக்கிறார்கள். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் ஒரு கடத்தியாக மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்துகின்றனர். கட்டுமானப் பொருளாகவும் பல்வேறு கலப்புலோகங்களின் பகுதிப் பொருளாகவும், நாணயங்கள் தயாரிப்பிலும் வெப்ப மின்னிரட்டை போன்ற வெப்ப அளவீட்டுக் கருவிகள் தயாரிப்பிலும் தாமிரம் பயன்படுகிறது. தாமிரம் இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது. தாதுவிலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய அவசியமேதுமில்லாமல் நேரடியாகவே இது கிடைக்கிறது. அதன் கனிமங்களிலிருந்தும் மிக எளிதாக இதைப் பிரித்தெடுக்க முடியும். இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். 3500 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரத்தைப் பயன்படுத்தி வெண்கலம் என்ற கலப்புலோகம் செய்யவும் மக்கள் அறிந்திருந்தனர். உரோமானிய காலத்தில் தாமிரம் சைப்பிரசு எனப்படும் தீவுநாட்டில் வெட்டி எடுக்கப்பட்டது. சைப்பிரசின் உலோகம் என்ற பொருள் கொண்ட ஏயிசு சைப்பிரியம் என்ற சொல் பின்னாளில் குப்ரம் என்றானது. இதிலிருந்து காப்பர் என்ற ஆங்கில சொல்லும், கியுவர் என்ற பிரஞ்சு மொழி சொல்லும், கோபெர் என்ற டச்சு மொழி சொல்லும், குப்பெர் என்ற செருமானிய மொழி சொல்லும் உருவாகின. பொதுவாக தாமிரம்(II) உப்புகள் பரவலாகக் கிடைக்கின்றன. அசுரைட்டு, மாலகைட்டு, டர்கியோயிசு போன்ற கனிமங்களில் நீலம் அல்லது பச்சை வண்ணங்களில் இவை காணப்படுகின்றன. வரலாற்றில் இவை நிறமிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளுக்கு கூரை வேயவும், இதன் ஆக்சைடுகள் பசுங்களிம்பாகவும் பயன்படுகின்றன. தனிமநிலை தாமிரம் சில வேளைகளில் அலங்கரிக்கும் கலைப் பொருளாகவும், இதன் சேர்மங்கள் நிறமிகளாகவும் , பாக்டீரியா தடுப்பிகளாகவும், பூஞ்சைக் கொல்லிகளாகவும், மரப்பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒரு தனிமம் ஆகும். ஏனெனில் உணவுப் பட்டியலில் உள்ள கனிமங்களில் தாமிரத்தின் சுவடுகள் இருப்பதால் இது அவசியமான கனிமமாகிறது. சுவாச நொதித் தொகுப்பான சைட்டோகுரோம் சி ஆக்சிடேச்சின் முக்கியமான பகுதிப்பொருள் தாமிரமாகும். மெல்லுடலிகளிலும், கணுக்காலிகளிலும் தாமிரம் ஏமோசயனின் என்ற இரத்த நிறமியின் பகுதிப்பொருளாக உள்ளது. மீன் மற்றும் முதுகெலும்பிகளில் உள்ள ஈமோகுளோபின் என்ற இரத்தநொதியிலுள்ள இரும்பு இங்கு தாமிரத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களில் கல்லீரல், தசைகள், எலும்புகள் போன்றவற்றில் தாமிரம் காணப்படுகிறது . நன்கு வளர்ச்சியடைந்த மனித உடலில் ஓர் கிலோகிராம் உடல் எடைக்கு 1.4 முதல் 2.1 மில்லி கிராம் வரை தாமிரம் காணப்படுகிறது . அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும், உருசியாவில் சில இடங்களிலும், ஆத்திரேலியாவின் தென் பகுதிகளிலும், பொலிவியா நாட்டிலும் செம்பு தனித்த வடிவில் கிடைக்கின்றது. உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது. குப்ரைட், மாலகைட்டு, அசுரைட், சால்கோ பைரைட்டு, டெனொரைட்டு, போர்னைட்டு போன்றவை சில முக்கியமான கனிமங்களாகும். பண்புகள் இயற்பியற் பண்புகள் தனிமவரிசை அட்டவனையின் 11 ஆவது தொகுதியில் தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று தனிமங்களும் ஒரு எசு ஆர்பிட்டால் எலக்ட்ரானுடன் டி எலக்ட்ரான் கூடு நிரப்பப்பட்ட மேல் வரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை கடினமானவை, தகடாக்கத்தக்கவை, கம்பியாக நீட்டப்படும் தன்மை உடையவை ஆகும். இந்த உலோகங்கள் மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்கு கடத்தும். டி-கூடுகள் நிரம்பியுள்ள இத்தனிமங்கள் அணுக்களிடையிலான செயல்பாட்டிற்கு சிறிதளவே பங்களிக்கின்றன. இவற்றில் எசு- எலக்ட்ரான்கள் உலோகப்பிணைப்பு வழியாக ஆதிக்கம் செலுத்துகின்றன. டி-கூடுகள் நிரப்பப்படாத தனிமங்கள் போலன்றி, தாமிரத்தில் உள்ள உலோகப் பிணைப்புகளில் சகப்பிணைப்புத் தன்மை குறைவாகவும் ஒப்பீட்டளவில் வலிமை குறைந்தும் காணப்படுகின்றன. தாமிரத்தின் உயர் கம்பியாக நீளும் தன்மைக்கும் குறைவான கடினத்தன்மைக்கும் இதுவே காரணம் ஆகும். படிக அணிக்கோவையின் பரல் எல்லைகள், அழுத்தத்தின் கீழ் பொருட்களின் ஓட்டம் போன்ற பேரளவு அளவீடுகளில், நீட்டிக்கப்பட்ட குறைபாடுகளை அறிமுகப்படுத்தும் போது அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, செப்பு வழக்கமாக நுண்பல்படிக வடிவத்தூளாக வினியோகிக்கப்படுகிறது. ஒற்றைப்படிகங்களை விட பல்படிக வடிவம் அதிக வலிமை கொண்டதாக உள்ளது. தாமிரத்தின் உயர் மின்கடத்துத் திறனையும் (59.6×106 வி/மீ), உயர் வெப்பக் கடத்துத் திறனையும் அதன் மென் தன்மை சிறிதளவு விளக்குகிறது. அறை வெப்பநிலையில், தூய உலோகங்கள் வெளிப்படுத்தும் இப்பண்பில் வெள்ளி உலோகம் முதலிடத்தையும் தாமிரம் இரண்டாம் இடத்தையும் பிடிக்கின்றன. ஏனென்றால், அறை வெப்பநிலையில் எலக்ட்ரான் போக்குவரத்துக்கான எதிர்ப்பானது, அணிக்கோவையின் வெப்ப அதிர்வுகளால் எலக்ட்ரான்கள் சிதறல் அடைவதிலிருந்து உருவாகிறது. மென் உலோகங்களில் இவ்வெதிர்ப்பு பலவீனமாக இருக்கிறது. திறந்த வெளியில் தாமிரத்தின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட மின்னோட்ட அடர்த்தி குறுக்குவெட்டு பகுதியின் அளவில் தோராயமாக 3.1×106 A/m2 ஆகும். அதற்கு மேல் அது அதிகமாக வெப்பமடையத் துவங்குகிறது. தாமிரத்தில் அதிகபட்சமாக அணுமதிக்கத்தகு மின்சார அடர்த்தி தோராயமாக அதன் குறுக்கு வெட்டுப் பரப்புக்கு 3.1×106 ஆ/மீ2 ஆகும். இதற்கும் அதிகமான அளவெனில் தாமிரம் சூடேற்றம் அடைகிறது. சாம்பல் அல்லது வெள்ளி நிறம் தவிர வேறு சில இயற்கை நிறத்தில் காணப்படும் தனிமங்களில் ஒன்று தாமிரமாகும். தூயநிலையிலுள்ள தாமிரம் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் இருக்கும். காற்றில் படும்போது செந்நிறமாக மங்குகிறது. நிரம்பியுள்ள 3டி மற்றும் பாதியாக நிரம்பியுள்ள 4எசு அணுக்கூடுகள் இடையே நடைபெறும் எலக்ட்ரான் பரிமாற்றமே தாமிரத்தின் இத்தனித்துவ நிறத்திற்கான காரணமாகும். இவ்விரு கூடுகளுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு ஆரஞ்சு நிற ஒளிக்கு காரணமாகிறது. தாமிரம் மற்ற உலோகங்களுடன் இணைக்கப்படும்போது கால்வானிக் அரித்தல் உண்டாகிறது. வேதியியல் பண்புகள் தாமிரம் தண்ணிருடன் வினைபுரிவதில்லை. ஆனால் வளிமண்டல ஆக்சிசனுடன் வினைபுரிந்து கரும்பழுப்பு நிறத்திலான தாமிர ஆக்சைடு அடுக்காக உருவாகிறது. ஈரக்காற்றில் இரும்பு துருப்பிடித்தலைப் போல அல்லாமல் இவ்வடுக்கு தாமிரம் மேலும் அரித்தலுக்கு உட்படாமல் பாதுகாக்கிறது. சுதந்திரச் சிலை போன்ற பெரும்பாலும் பழமையான கட்டிடங்களின் கூரைப் பகுதிகளில் தாமிரக் கார்பனேட்டின் பசுமை நிற அடுக்கு தாமிரப்பைந்துருவாக காணப்படுகிறது. மங்கிய தாமிரம் சில கந்தக சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவற்றுடன் வினைபுரிந்து தாமிர சல்பைடுகளை உருவாக்குகிறது. ஐசோடோப்புகள் தாமிரம் உலோகத்திற்கு 29 ஐசோடோப்புகள் உள்ளன. 63Cu மற்றும் 65Cu ஐசோடோப்புகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். 63Cu ஐசோடோப்பில் தோராயமாக இயற்கையாகத் தோன்றும் தாமிரம் 69% அளவில் உள்ளது. இரண்டுமே 3⁄2. சுழற்சிகளைக் கொண்டவையாக உள்ளன. மற்ற ஐசோடோப்புகள் யாவும் கதிரியக்கத்தன்மை கொண்டவை. இவற்றில் 67Cu ஐசோடோப்பு 61.83 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்டு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாக உள்ளது. சிற்றுறுதி ஐசோடோப்புகளாக ஏழு ஐசோடோப்புகள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் 68mCu ஐசோடோப்பு 3.8 நிமிடங்கள் அளவிற்கு நீண்ட நேரம் நிலையாக இருந்துள்ளது. அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு அதிகமான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β− என்ற அலவுக்கு சிதைவடைகின்றன, அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு குறைவான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β+.அளவுக்கு சிதைவடைகின்றன. 12.7 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்ட ஐசோடோப்பு இவ்விரு முறைகளிலும் சிதைவடைகிறது. 62Cu மற்றும் 64Cu ஐசோடோப்புகள் இரண்டும் குறிப்பிடத்தக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. 62Cu-PTSM (தாமிர-பைருவால்டிகைடு-பிசு(என்4-மெத்தில்தயோசெமிகார்பசோன்) இல் பாசிட்ரான் உமிழ்வு கணிணிவழி வரைவியலுக்கான ஒரு கதிரியக்க சுவடறிவானாக 62Cu ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது. தோற்றம் பெரிய நட்சத்திரங்களில் தாமிரம் காணப்படுகிறது. புவியின் மேலோட்டில் மில்லியனுக்கு 50 பகுதிகள் என்ற அளவில் தாமிரம் காணப்படுகிறது. இயற்கையில் இது சால்கோபைரைட்டு, சால்கோசைட்டு என்ற தாமிர சல்பைடாகவும், அசூரைட்டு, மாலகைட்டு என்ற தாமிர கார்பனேட்டுகளாகவும், குப்ரைட்டு என்ற தாமிர(1) ஆக்சைடு சேர்மமாகவும் தாமிரம் காணப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கீவீனாவ் தீபகற்பத்தில் 420 டன்கள் எடையுள்ள தனிமநிலை தாமிரம் 1857 இல் கண்டறியப்பட்டது. 4.4×3.2×3.2 செ.மீ அளவுள்ள மிகப்பெரிய ஒற்றைப் படிகத்துடன் பல்படிகமாக இயற்கைத்தாமிரம் விவரிக்கப்படுகிறது. உற்பத்தி அதிக அளவிலான தாமிரம் தாமிர சல்பைடுகளாக வெட்டியெடுக்கப்படுகிறது அல்லது பிரித்து எடுக்கப்படுகிறது. 0.4 முதல் 1.0% தாமிரத்தைக் கொண்ட கலவைப் பாறை படிவுகள் திறந்தவெளி பள்ளங்களில் இவை வெட்டப்படுகின்றன. சிலி நாட்டிலுள்ள சுகுயிகாமட்டா, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள பிங்காம் கேன்யோன் சுரங்கம், புது மெக்சிகோவிலுள்ள எல் சினோ சுரங்கம் போன்ற தளங்களில் இம்முறையில் தாமிரம் கிடைக்கிறது. பிரித்தானிய நிலவியல் அளவைத் துறையின் 2005 ஆம் ஆண்டு கருத்துப்படி, தாமிர உற்பத்தியில் சிலி உலகின் மூன்றாவது பெரிய நாடாக திகழ்கிறது. அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் பெரு ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலக மொத்த தாமிரத் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கை சிலி நாடு உற்பத்தி செய்கிறது. கள ஊடுறுவல் செயல்முறையிலும் தாமிரம் நிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசோனா மாநிலத்தின் பல தளங்களில் இம்முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. பயன்பாட்டில் தாமிரத்தின் அளவு அதிகரித்து வந்தாலும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தக் கூடிய வகையில், உலக அளவிலான பயன்பாட்டை அனுமதிக்கும் அளவுக்கு தாமிரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காப்பு இருப்பு குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகளாக தாமிரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் பயன்படுத்தப்பட்ட தாமிரத்தின் அளவில் 95% தாமிரம் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாதிக்கு மேலான தாமிரம் கடந்த 24 ஆண்டுகளில் வெட்டப்பட்டுள்ளது. பல இயற்கை வளங்களைப் போலவே, பூமியிலுள்ள செப்பின் அளவும் மொத்தத்தில் பரவலாக உள்ளது, பூமியின் மேற்பரப்பில் சில கிலோமீட்டருக்கு அடியில் 1014 டன் அளவுக்கும் அதிகமாக புதைந்துள்ளது. தற்போதைய வெட்டியெடுக்கும் விகிதத்தில் நோக்கினால் ஏராளமான மதிப்புள்ள தாமிரம் இருப்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இருப்புக்களின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இன்றைய விலை மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ரீதியாக வெட்டியெடுப்பது சாத்தியமாக உள்ளது. வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் 25 முதல் 60 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கும் அளவுக்கு தாமிரத்தின் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மறுசுழற்சி முறையில் தாமிரம் தயாரிப்பது நவீன உலகில் ஒரு பெரும் மூலமாக கருதப்படுகிறது. இவ்வகையான மற்றும் பிற காரணிகளின் காரணமாக, தாமிர உற்பத்தி மற்றும் விநியோகித்தல் என்பது விவாதத்திற்கு உட்படுகிறது. உச்ச எண்ணெய் தத்துவத்தை ஒத்த உச்ச தாமிரம் உள்ளிட்ட தத்துவமும் இவ்விவாதத்தில் இடம் பெறுகிறது. வரலாற்றில் தாமிரத்தின் விலை நிலையாக இல்லாமல் அவ்வப்போது மாறுபட்டு வருகிறது. தயாரிப்பு முறைகள் தாதுக்களில் சராசரியாக தாமிரத்தின் அடர்த்தி 0.6% மட்டுமே ஆகும். பெரும்பாலான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தாமிரத் தாதுக்கள் சல்பைடுகளாகும். குறிப்பாக சால்கோபைரைட்டு (Cu2S) என்னும் தாது சல்பைடு தாதுவேயாகும். நன்றாகத் தூளாக்கப்பட்ட தாதுவிலிருந்து நுரைமிதப்பு முறை அல்லொஅது உயிரினப் பிரிப்பு முறைகளால் 10-15% தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இம்முறையில் பிரிக்கப்பட்ட தாமிரத்துடன் சிலிக்காவைச் சேர்த்து சூடுபடுத்துகிறார்கள். சல்பைடுகளை ஆக்சைடுகளாக மாற்றுவதன் மூலம் இரும்பு மாசுக்கள் அகற்றப்படுகின்றன. மேற்புறத்தில் மிதக்கும் சிலிக்கா கசடும் நீக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் கலவையை வறுத்தல் மூலமாக அனைத்து சல்பைடுகளும் ஆக்சைடுகளாக மாற்றப்படுகின்றன: 2 Cu2S + 3 O2 → 2 Cu2O + 2 SO2 குப்ரசு ஆக்சைடு சூடுபடுத்தப்படுவதால் கொப்பள தாமிரமாக மாற்றப்படுகிறது. 2 Cu2O → 4 Cu + O2. இச்செயல்முறையில் ஆக்சைடாக மாற்றப்படாத சல்பைடு, இதில் உருவான ஆக்சைடைப் பயன்படுத்தி கந்தகம் முழுவதையும் ஆக்சைடாக மாற்றுகிறது. பின்னர் மின்னாற் பகுப்பு முறையில் தாமிரமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கை வாய்வை கொப்பள தாமிரத்தின் வழியாகச் செலுத்தும் போது ஆக்சிசன் முழுவதுமாக நீக்கப்பட்டு தூய்மையான தாமிரம் பெறப்படுகிறது: Cu2+ + 2 e− → Cu. மறுசுழற்சி அலுமினியம் உலோகத்தைப் போலவே தாமிரத்தையும் மறுசுழற்சி முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம். இதுவரை தயாரிக்கப்பட்ட தாமிரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தாமிரம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. சர்வதேச உலோக இருப்பு ஆதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமுதாயத்தில் பயன்படுத்தும் செப்பு அளவின் உலக தனிநபர் மதிப்பு 35-55 கிலோ ஆகும். இது மிகவும் வளர்ந்த நாடுகளில் குறைந்தது 140-300 கிலோவாகவும், அவ்வளவாக வளர்ச்சியடையாத நாடுகளில் ஒரு நபருக்கு 30-40 கிலோவாகவும் உள்ளது. தாமிரத்தை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே முறைகளே மறுசுழற்சி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட உயர்-தூய்மையான தாமிர துண்டுகளை உலைகளில் இட்டு உருக்கி, பின்னர் கட்டிகளாகவும் பாளங்களாகவும் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட குறைந்த-தூய்மை தாமிரத்துகள்களை கந்தக அமிலக் குளியல் மூலம் மின்னாற்பகுப்பு செய்து சுத்திகரிக்கப்படுகிறது. உலோகக் கலவைகள் முக்கிய பயன்பாடுகளுடன் கூடிய பல செப்பு உலோகக் கலவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. செம்பு மற்றும் துத்தநாகம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவது பித்தளை என்ற உலோகக் கலவை ஆகும். வெண்கலம் பொதுவாக செப்பு-வெள்ளீயம் கலந்து உருவாக்கப்படும் உலோகக் கலவைகளை குறிக்கிறது, ஆனால், அலுமினிய வெண்கலம் போன்ற தாமிர உலோகக் கலவைகள் எதையும் வெண்கலம் என்றே கருதுகிறார்கள். வெள்ளி மற்றும் தங்க அணிகலன்கள் தயாரிப்பில் கடினத்தன்மையையும் உருகுநிலையையும் மாற்ற தாமிரம் ஒரு முக்கியமான பகுதிப் பொருளாக உள்ளது. ஈயம் இல்லாத பற்றவைப்புகளில் வெள்ளீயத்துடன் தாமிரமும் வேறு சில உலோகங்களும் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப் படுவதுண்டு. தாமிரமும் நிக்கலும் கலந்து தயாரிக்கப்படும் குப்ரோநிக்கல் உலோகக் கலவை நாணயங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க நாணயங்கள் 75% தாமிரமும் 25% நிக்கலும் கலந்து தயாரிக்கப்படுகின்றன. 90% தாமிரமும் 10% நிக்கலும் கலந்த உலோகக் கலவை கடல்நீரால் உண்டாகும் அரித்தலை எதிர்க்கும் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன. 7% அலுமினியத்துடன் தாமிரம் சேர்த்து தயாரிக்கும் கலவை பொன் நிறத்துடன் அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 4-10% தங்கம் கலக்கப்பட்டு உருவாக்கப்படும் உலோகக் கலவையை அடர் நீல அல்லது கருப்பு நிற பசுங்களிம்பாக சப்பானில் பயன்படுத்துகிறார்கள். சேர்மங்கள் தாமிரம் பல்வேறு வகையான ஏராளமான சேர்மங்களை உருவாக்குகிறது, பொதுவாக ஆக்சிசனேற்ற நிலை எண் +1 மற்றும் +2 மதிப்புள்ள சேர்மங்களாக இவை உருவாகின்றன. இவற்றை முறையே குப்ரசு சேர்மங்கள் என்றும் குப்ரிக் சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள். இரட்டைச் சேர்மங்கள் மற்ற தனிமங்களுடன் சேர்ந்து தாமிரம் இரண்டு தனிமங்கள் கொண்ட எளிய இரட்டை சேர்மங்களாக உருவாகிறது, ஆக்சைடுகள், சல்பைடுகள், ஆலைடுகள் என்பவை முதன்மையான உதாரணங்களாகும். ஆக்சைடுகளில் குப்ரசு ஆக்சைடுகள் மற்றும் குப்ரிக் ஆக்சைடுகள் இரண்டும் அறியப்படுகின்றன. பல்வேறு தாமிர சல்பைடுகளில் தாமிர(1) சல்பைடும் தாமிர(II) சல்பைடும் முக்கியமானவையாகும். குளோரின், புரோமின், அயோடின் தனிமங்களுடன் தாமிரம் சேர்ந்து உருவாகும் குப்ரசு ஆலைடுகள் அறியப்படுகின்றன. தாமிர(II) அயோடைடு தயாரிக்கும் முயற்சியில் தாமிர(I) அயோடைடும் அயோடைடும் மட்டுமே உருவாகின்றன. 2 Cu2+ + 4 I− → 2 CuI + I2. = அணைவுச் சேர்மங்கள் ஈனிகளுடன் சேர்ந்து தாமிரம் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. நீரிய கரைசல்களில் தாமிரம்(II) ஆனது, [Cu(H2O)6]2+ ஆகக் காணப்படுகிறது. விரைவான நீர் மாற்று விகிதத்தை (வேகமாக நீர் ஈனிகளை இணைத்தல் மற்றும் நீக்குதல்) இந்த அணைவுச் சேர்மம் வெளிப்படுத்துகிறது : Cu2+ + 2 OH− → Cu(OH)2. நீரிய அம்மோனியா அதே வீழ்படிவில் விளைகிறது. மேலும் அதிகமான அமோனியாவை சேர்த்ததன் பின்னர், டெட்ராமீன்தாமிரம்(II) உருவாகிறது Cu(H2O)4(OH)2 + 4 NH3 → [Cu(H2O)2(NH3)4]2+ + 2 H2O + 2 OH−, தாமிர(II) அசிட்டேட்டு, தாமிர(II) நைட்ரேட்டு, தாமிர(II) கார்பனேட்டு உள்ளிட்ட ஆக்சோ எதிர்மின் அயனி அணைவுச் சேர்மங்களும் உருவாகின்றன. தாமிர(II) சல்பேட்டு நீலநிற படிகங்களாக ஒரு ஐந்து நீரேற்றாக உருவாகிறது. ஆய்வகங்களில் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் மயில்துத்தம் என்ற சேர்மம் இதுவாகும். இதைப் பயன்படுத்தி போர்டோக் கலவை எனப்படும் பூஞ்சைக் கொல்லி தயாரிக்கப்படுகிறது. . ஒன்றுக்கு மேற்பட்ட ஆல்ககால் தொகுதிகளைக் கொண்டு ஆல்ககால்கள் (பல்லால்ககால்கள்) பொதுவாக குப்ரிக் உப்புகளுடன் வினைபுரிகின்றன. உதாரணமாக தாமிர உப்புகள் ஒடுக்கும் சர்க்கரைகளின் சோதனையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பென்டிக்டு வினைபொருள் மற்றும் பெய்லிங்கு கரைசல் போன்றவை இச்சொதனையில் பயன்படுத்தப்படும் போது சர்க்கரையின் இருப்பு நிறமாற்றத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. நீலநிறமான Cu(II) சிவப்பு நிற தாமிர(I) ஆக்சைடாக மாறுகிறது. எத்திலீன்டையமீனும் பிற அமீன்களும் சேர்ந்த இசுகீவர் வினைப்பொருளும் அதனுடன் தொடர்புடைய பிற அணைவுச் சேர்மங்களும் செல்லுலோசைக் கரைக்கின்றன. அமினோ அமிலங்கள் தாமிர(II) உப்புகளுடன் சேர்ந்து மிகவும் நிலையான இடுக்கி இணைப்பு அணைவுச் சேர்மங்களைத் தருகின்றன. தாமிர அயனியின் இருப்பைக் காண பல ஈர வேதியியல் சோதனைகள் உள்ளன. உதாரணமாக பொட்டாசியம் பெர்ரோசயனைடுடன் தாமிர(II) உப்புகளுடன் சேர்கையில் பழுப்பு நிறமான வீழ்படிவு உருவாகிறது. கரிமத்தாமிரம் சேர்மங்கள் கார்பன்-தாமிரம் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்கள் யாவும் கரிமத்தாமிர சேர்மங்கள் எனப்படும். இவை ஆக்சிசனுடன் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு தாமிர(I) ஆக்சைடை உருவாக்குகிறது. வேதியியலில் இச்சேர்மம் பல பயன்களைத் தருகிறது. தாமிர(I) சேர்மங்களை கிரிக்னார்டு வினைப்பொருள், விளிம்புநிலை ஆல்க்கைன்கள் அல்லது கரிம இலித்தியம் வினைப்பொருள்கள் சேர்த்து சூடுபடுத்துகையில் கரிமத்தாமிர சேர்மங்கள் உண்டாகின்றன; அதிலும் குறிப்பாக இவ்வகை வினையில் கில்மான் வினைப்பொருள் உற்பத்தியாகிறது. இவை ஆல்க்கைல் ஆலைடுகளுடன் பதிலீட்டு வினைகளில் பங்கேற்கின்றன. இதனால் கரிமத் தொகுப்பு வினைகளில் கரிமத்தாமிரப் பொருள்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. தாமிர(I) அசிடிலைடு ஓர் உயர் அதிர்வு உணரியாகும். ஆனால் கேடியோட்டு-சோட்கிவிக்சு பிணைப்பு வினை, சோனோகாசுகிரா பிணைப்பு வினைகளில் இடைநிலையாக உள்ளது. மேலும் கரிமத்தாமிர சேர்மங்களைக் கொண்டு ஈனோன் கூட்டு வினைகள், கார்போதாமிர ஏற்றவினை போன்றவற்றையும் அடைய முடிகிறது. ஆல்க்கீன்கள் மற்றும் கார்பன் ஓராக்சைடுகளுடன் அமீன் ஈனி முன்னிலையில் தாமிர(I) உப்புகள் வினைப்பட்டு பலவீனமான அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன. தாமிர(III) மற்றும் தாமிர(IV) சேர்மங்கள் தாமிரம்(III) பெரும்பாலும் ஆக்சைடுகளில் காணப்படுகிறது. நீலகருப்பு நிறத்தினாலான பொட்டாசியம் குப்ரேட்டு, KCuO2 திண்மம் ஒர் எளிய உதாரணமாகும். குப்ரேட்டு மீக்கடத்திகள், இட்ரியம்பேரியம்தாமிர ஆக்சைடு (YBa2Cu3O7) போன்றவை விரிவாக ஆராயப்பட்ட தாமிரம்(III) சேர்மங்களாகும். ஆக்சைடு போலவே புளோரைடும் உயர்கார எதிர்மின் அயனியாகும். இவை உலோகங்களை உயர் ஆக்சிசனேற்ற நிலைக்கு நிலைப்படுத்துகின்றன. K3CuF6 மற்றும் Cs2CuF6, போன்ற தாமிர(III) மற்றும் தாமிர(IV) புளோரைடுகள் அறியப்படுகின்றன. சிலவகையான தாமிர புரோட்டீன்கள் ஆக்சோ அணைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. இவையும் தாமிர(III) சேர்மங்களாகும். டெட்ராபெப்டைடுகளுடன் தாமிர(III) உப்புகளின் செவ்வுதா நிற அணைவுச் சேர்மங்களை புரோட்டாஅன் நீக்க ஈனிகள் நிலைப்படுத்துகின்றன. கரிமத்தாமிர வினைகளில் இடைநிலை விளைபொருளாகவும் தாமிர(III) உப்புகள் காணப்படுகின்றன. வரலாறு செப்புக் காலம் செப்புக் காலம் என்பது, மனித பண்பாட்டு வளர்ச்சியில், தொடக்ககால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். செப்பு இயல்பாகவே இயற்கையில் தோன்றுகிறது, மிகப்பழமையான நாகரிகங்கள் சில செப்பை அறிந்திருந்ததாக பதிவுகள் வழியாக அறியப்படுகின்றன. வரலாற்றில், மத்திய கிழக்கில் பொ.ஊ.மு. 9000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே செம்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது . வட ஈராக்கில் பொ.ஊ.மு. 8700 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது . தங்கம் மற்றும் இரும்பு மட்டுமே தாமிரம் உலோகத்திற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன . தாமிரத்தின் உலோகவியல் இங்கு தரப்பட்டுள்ள தொடர்ச்சி முறையைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது: 1) இயற்கையான செப்பு, 2) பதனாற்றல் 3) உருக்கிப் பிரித்தல் 4) இழந்த-மெழுகு வார்ப்பு. தென்கிழக்கு அனடோலியாவில், இந்த நுட்பங்கள் அனைத்தும் புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் பொ.ஊ.மு. 7500 இல் இருந்ததாக அறியப்படுகின்றது . ஆங்காங்கே விவசாயம் கண்டறியப்பட்டது போல தாமிரத்தை உருக்கிப் பிரித்தலும் ஆங்காங்கே தனிநபர்களால் கண்டறியப்பட்டது. அநேகமாக இக்கண்டுபிடிப்பு பொ.ஊ.மு. 2800 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் சுமார் பொ.ஊ.மு. 600 மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொ.ஊ.மு. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்திருக்கலாம். இழப்பு மெழுகு வார்ப்பு செயல்முறை பொ.ஊ.மு. 4500–4000 காலப்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டுள்ளது . இங்கிலாந்தில் பொ.ஊ.மு. 2280- 1890 காலகட்டத்தில் தாமிரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கதிரியக்கக்கரிம காலக்கணிப்பு தெரிவிக்கிறது. பொ.ஊ.மு. 3300–3200 கால இறந்த ஆண் உடலின் கையிலிருந்த கோடாலியின் முனையில் இருந்த வெட்டி 99.7% தூய்மையான தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவ்வுடலின் தலையிலிருந்து முடியில் அதிக அளவு ஆர்சனிக் கலந்திருப்பது அவன் செப்பை உருக்கிப் பிரித்தலில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் கூற முடிகிறது. செப்பு உருக்குப் பிரித்தல் தொழில் நுட்ப அனுபவம் இதர தனிமங்களைப் பிரித்தெடுக்கவும் வழிவகுத்தது. இதனால் இரும்பு பிரித்தெடுத்தல் தொழில் நுட்பமும் கண்டறியப்பட்டது. செம்பு தனித்த வடிவில் அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் பொ.ஊ.மு. 6000–3000 காலத்திலேயே கண்டறியப்பட்டிருக்கலாம். பொ.ஊ.மு. 5700-4500 காலகட்டம் விங்கா கலாச்சாரக் காலத்தை வெண்கலக் காலம் என்பர் . சுமேரியர்களும் எகிப்தியர்களும் செப்பு, வெண்கலம் போன்றவற்றை பொ.ஊ.மு. 3000 ஆண்டிலேயே பயன்படுத்தியுள்ளனர் . வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டமாக இருந்திருக்கலாம். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலத்திற்கும், மூன்றாவது இரும்புக் காலத்திற்கும் இடையில் இந்த வெண்கலக் காலம், புதிய கற்காலமாக வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. வெண்கலக் காலத்தில் உலோகவேலைத் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. செப்பு, தகரம் போன்றவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்தனர். உரோமானியர்கள் காலத்தில் உருக்குதல், உலோகங்களைக் கலத்தல் முறையில் வெண்கலம் என்ற உலோகக் கலவை தயாரிக்கப்பட்டது . தொல்பழங்காலமும் இடைக்காலமும் கிரேக்கத்தில் செப்பு சால்கோசு (χαλκός) என்ற பெயரால் அறியப்பட்டது. உரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் பிற பண்டைய மக்களுக்கு செப்பு ஒரு முக்கிய ஆதாரப் பொருளாக இருந்தது. உரோமானியக் காலங்களில், ஏயிசு சைப்ரியம் என்ற பெயரில் அவர்களால் அறியப்பட்டது, ஏயிசு என்ற சொல் செப்பு உலோகக்கலவைகளுக்கான பொதுவான இலத்தீன் வார்த்தையாகும், மற்றும் சிரியாவின் சைப்ரசில் இருந்து செப்பு வெட்டியெடுக்கப்பட்டது என்பதைக் குறிக்க சைப்ரியம் என்ற சொல்லும் சேர்ந்துள்ளது. நாளடைவில் இந்த சொற்றொடர் கப்ரம் என்று சுருங்கி எளிமையானது, எனவே ஆங்கிலத்தில் அஃப்ரோடைட் (உரோமில் வீனசு) என்ற சொல்லிலும், இதன் பளபளப்பான அழகு மற்றும் கண்ணாடியை உற்பத்தி செய்வதில் இதன் பழமையான பயன்பாடு காரணமாக இரசவாதத்திலும் செம்பு என்ற சொல் பயன்பாடு இருந்தது. பண்டைய காலங்களில் அறியப்பட்ட ஏழு பரலோக உடல்கள், பழங்காலத்தில் அறியப்பட்ட ஏழு உலோகங்களோடு தொடர்புபடுத்தப்பட்டன, வீனசு செம்புடன் தொடர்பு படுத்தப்பட்டது . தாமிரம் முதன்முதலாக பண்டைய பிரிட்டனில் பொ.ஊ.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்கர்களால் தாமிர சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. 800 மற்றும் 1600 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பழமையான கல் கருவிகளைக் கொண்டு இசுல் ராயல் என்ற தளத்திலிருந்து தாமிரம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது . தென் அமெரிக்காவில், குறிப்பாக பெருவில் தாமிரத் தொழில்நுட்பம் தழைத்திருந்தது. எனினும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இவ்வுலோகத்தின் வர்த்தக உற்பத்தி தொடங்கவில்லை. செப்புகளின் கலாச்சார பங்களிப்பு குறிப்பாக நாணயப் பயன்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. உரோமானியர்கள் பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் செப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தியுள்ளனர். முதலில் செப்பு மதிப்பு மிக்க ஒரு பொருளாக கருதப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் வடிவம் மற்றும் தோற்றம் முக்கியத்துவம் பெற்றது. யூலியசு சீசர் வெண்கலத்தால் ஆன நாணயங்களை சொந்தமாக வைத்திருந்தார். அதே வேளையில் அகசுடசு சீசர் செப்பு. ஈயம், தகரம் ஆகியவற்றின் உலோகக்கலவையால் ஆன நாணயங்களைப் பயன்படுத்தினார். தொழிற்புரட்சிக்கு முன்னரே உரோமானியர்கள் ஆண்டுக்கு 15000 டன்கள் செப்பை உற்பத்தி செய்கின்ற அளவுக்கான நடவடிக்கைகளில் இசுபானியா, சைப்ரசு, மத்திய ஐரோப்பா பொன்ற நாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் . பண்டைய இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிப்பில் தாமிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பண்டைய எகிப்தியர்களும் காயங்களை ஆற்றவும், குடிநீர் அருந்தவும், தலைவலி, தீக்காயங்கள், சிகிச்சைக்காக தாமிரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். நவீன காலம் 10 ஆம் நூற்றாண்டு முதல் 1992 வரை சுவீடனில் இருந்த ஒரு சுரங்கத்திலிருந்து தாமிரம் வெட்டியெடுக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் செப்பு நுகர்வுகளில் மூன்றில் இரண்டு பங்கை இச்சுரங்கம் அளித்தது. அந்த நேரத்தில் நடைபெற்ற பல போர்கள் பலவற்றிற்கும் இது நிதி உதவியை அளித்தது. சுவீடன் நாட்டின் தேசியக் கருவூலமாக இச்சுரங்கம் கருதப்பட்டது. செப்பு பூசப்பட்ட நாணயங்கள் சுவீடனில் வழக்கில் இருந்தன. கூரை வேய்வதற்கும், நாணயமாகவும் டேகியுரியோவகை புகைப்பட நுட்பத்திலும் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்கும், அமெரிக்காவின் சுதந்திர சிலை உருவாக்கத்திற்கும் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. கட்டிடக் கலையின் பல்வேறு அம்சங்களில் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. நீருக்கடியில் கப்பலைப் பாதுகாக்க தாமிர முலாம் பூசுதல் மற்றும் சூழுறையிடல் போன்ற முன்னோடித் திட்டங்களை பிரித்தானிய ஆட்சிக்குழு 18 ஆம் நூற்றாண்டில் செயல்படுத்தியது 1876 இல் முதலாம் மின்முலாம் பூசும் தொழிற்சாலை செருமனியில் தோற்றுவிக்கப்பட்டது.. 1830 இல் செருமனி விஞ்ஞானியால் தூள் உலோகவியலும், 1949 இல் பின்லாந்தில் விரைவு உருக்கிப் பிரித்தல் செயல்முறையும் கண்டுபிடிக்கப்பட்டதால் தாமிர உற்பத்தியின் வேகம் மேலும் அதிகரித்தது. நாடுகளிடை தாமிர ஏற்றுமதி நாடுகளின் கழகம் 1967 இல் உருவாக்கப்பட்டது. சிலி, பெரு, சாம்பியா, சாயிர் போன்ற நாடுகள் இதை தொடங்கின. தாமிர உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான அமெரிக்கா இக்கழகத்தில் உறுப்பினராக சேராத காரணத்தால் 1988 இல் கலைக்கப்பட்டது . பயன்பாடுகள் மின்சார கம்பியாக (60%), கூரை மற்றும் குழாயமைத்தல் (20%), மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் (15%). பித்தளை மற்றும் வெண்கல உலோகக் கலவையாக பயன்படுவது தாமிரத்தின் முக்கியப் பயன்பாடுகள் ஆகும். சமையல் பாத்திரங்கள், கொதிகலன்கள், நீராவிக் குழாய்கள், மின்கம்பி, மின்வடம், மின்வாய், போன்றவைகள் செய்யவும் செம்பு பயன்படுகின்றது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது பெரும்பாலும் தாமிரம் தூயநிலை உலோகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கடினத்தன்மை மாற்றம் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கலப்புலோகமாக பயன்படுத்தப்படுகிறது. படகுகளின் அடிப்பகுதியைப் பாதுகாக்க தாமிரச் சாயம் பூசி பாதுகாக்கிறார்கள். உணவு கூட்டுப்பொருளாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது . மின்கம்பி மற்றும் மின்வடம் செம்பின் மின்கடத்துத் திறன் இரும்பை விட 5 மடங்கும், அலுமினியத்தை விட 1.5 மடங்கும், துத்தநாகத்தை விட 3 மடங்கும், டைட்டானியத்தை விட 35 மடங்கும் அதிகமுள்ளது. இதனால் செம்பு மின்துறை வளர்ச்சியின் நெம்புகோலாக விளங்குகின்றது. பிற தனிமங்களைக் காட்டிலும் தாமிரம் சிறந்த மின்கடத்தியாக தேர்வு செய்யப்பட்டு அனைத்து வகையான மின் விநியோகத்திற்குமான மின் கம்பிகளிலும் பயன்படுத்தப்படுகிறது . தலைக்குமேல் வான்வழியாக செல்லும் மின்கம்பி, மின்சுற்றுகளுக்கு மட்டும்அலுமினியம் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன . மாங்கனின், கான்சுடன்டன் போன்ற செம்பின் சில கலப்பு உலோகங்கள் உயர் மின்தடை கொண்டுள்ளன. இவை மின்னுலை, மின்னடுப்பு போன்ற கருவிகளுக்கு மின் கம்பியாகப் பயன் தருகின்றது. மின் மாற்றிகள், மின் மோட்டார்கள், மின்னியற்றிகள், மின் காந்தங்கள் போன்றவைகளுக்கான வரிச் சுற்றுகளுக்கு செம்புக் கம்பி இணக்கமானது. செம்பின் மின்தடை குறைவாக இருப்பதால் வெப்ப இழப்பும் குறைந்து மின்சாரம் கணிசமாக மிச்சமாகின்றது. மின்கருவிகளைக் குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை . 1960 களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் பிற்பகுதி வரையிலான குறுகிய காலத்தில்,அமெரிக்க வீடுகளில் மின் விநியோகத்திற்கான செப்பு பயன்பாடு அலுமினியத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அலுமினியப் பயன்பாட்டால் பல வீடுகளில் தீவிபத்துகள் ஏற்பட்டதால் மீண்டும் அவர்களும் செப்புக்கு திரும்பினர் . செம்பு அசிடேட் பிரகாசமான பச்சை வண்ணத்திற்குப் பயன் தருகின்றது. 'வோல்டாமானி' போன்ற மின்னாற்பகுப்பு மின்கலங்களுக்கு செம்பு ஒரு முக்கிய மூலப் பொருளாகும். செம்பை முதல் நிலை மின்னாற்பூச்சாக இரும்புத் தகடுகளில் பூசுகின்றார்கள். மின் முலாம் பூச்சிற்கு மிகவும் அனுகூலமான மூலங்களில் ஒன்று செம்பு ஆகும். செம்பு முலாம் பூச்சிற்கான மின்னாற்பகு நீர்மத்தை காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ வைத்துக் கொள்ளமுடியும். மின்னணு மற்றும் தொடர்புடைய சாதனங்கள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் போன்றவற்றில் அலுமினியத்திற்குப் பதிலாக தாமிரம் இதனுடைய மீக்கடத்துத்திறனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப ஈர்ப்பிகள் மற்றும் வெப்ப பரிமாற்றிகளும் தாமிரத்தின் மீக்குறை ஆற்றலிழப்பு பண்பினால் இதைப் பயன்படுத்துகின்றன. மின்காந்தங்கள், வெற்றிடக் குழாய்கள், நேர்மின் கதிர்க் குழாய்கள், நுண்ணலை அடுப்புகள் போன்ற கருவிகள் நுண்ணலைக் கதிவீச்சு தன்மைக்காக தாமிரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்மோட்டார்கள் தாமிரத்தின் உயர்ந்த கடத்துத்திறன் மின்சார மோட்டார்களின் செயல்திறனை அதிகரிக்கிறது . அனைத்து உலகளாவிய மின்சார நுகர்வு மற்றும் 69% மின்சாரத்தில் பயன்படுத்தப்படும் மின்சக்தி அமைப்புகளும் மோட்டார்கள் மற்றும் மோட்டார் உந்துதல் அமைப்புகள் 43% -46% அளவிற்குப் பயன்படுத்துகின்றன . மோட்டார் செயல்திறனை அதிகரிக்க ஆற்றல் சேமிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு மின்மோட்டார்கள் வடிவமைக்கப்படுகின்றன . தேசிய மின்சார உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்திறன் தரங்களைக் கண்காணிக்கிறது . கலப்புலோகப் பயன்கள் செம்பிலிருந்து பலதரப்பட்ட கலப்பு உலோகங்களைப் பெறலாம். செம்பும்(99-70%) தகரமும் (1-30%) கலந்த கலப்பு உலோகம் வெண்கலமாகும். இதில் சில சமயம் ஈயம் அல்லது துத்தநாகம் சேர்க்கப்படும். இது கடினமானதாகவும் எளிதில் வார்த்தெடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அதனால் சுழல் வட்டுக்கள், ஒருவழிச்செலுத்திகள் இயந்திர உறுப்புக்கள், அணிகலன்கள் ,உலோக ஆடிகள், சிலைகள், கோயில் மணிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றது. சிலிகானும் செம்பும் 20:80 என்ற வீதத்தில் கலந்த சிலிகான் வெண்கலம், அலுமினியமும் செம்பும் கலந்த அலுமினிய வெண்கலம் இவற்றில் சிறிதளவு வெள்ளீயத்தை சேர்த்து நாணயங்கள், உலோகச் சிலைகள் செய்யவும் பற்றவைப்புக்கான இடு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக் கலப்பு உலோகங்கள் விமானங்களுக்கான இயந்திரங்கள், சுழலிகளுக்கான விசிறிகள் போன்றவைகள் செய்யவும் பயன்படுகின்றன. பெல் கலப்பு உலோகம் பாசுபரசு வெண்கலம், துப்பாக்கி உலோகம் செருமானிய வெள்ளி, பித்தளை போன்ற பல சிறப்புக் கலப்பு உலோகங்களிலும் செம்பு சேர்ந்துள்ளது. பித்தளையில் செம்பும் துத்தநாகமும் முறையே 60-80 % 40-20 % என்ற விகிதத்தில் இருக்கும். அதற்கேற்ப நிறமும் செம்பின் சிவப்பிலிருந்து பொன்னிற மஞ்சள் வரை மாற்றமிருக்கும். துத்தநாகத்தின் செறிவு தாழ்வாக இருந்தால் அதை ஆல்பாபித்தளை என்றும் அதிகமாக இருந்தால் அதை பீட்டாபித்தளை என்றும் கூறுவர். இது பட்டறைப் பயன்களுக்கு இணக்கமானது என்பதால் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றது. ஒரு நீடித்த, அரிப்பு எதிர்ப்பியாகவும், தட்பவெப்ப மேற்கூரைப் பூச்சாகவும் தாமிரம் ஒரு கட்டிடக்கலைப் பொருளாக பண்டைய காலங்களில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது . தாழ்வாரம், கூரை, மழைப்பாதுகாப்பு, கோபுரங்கள், மற்றும் கதவுகள் போன்ற கட்டிடக்கலைப் பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்துள்ளன. உட்புற மற்றும் வெளிப்புற சுவர் உறைப்பூச்சு, கட்டிட விரிவாக்கம், இணைப்புகள், ரேடியோ அதிர்வெண் பாதுகாப்பு, மற்றும் கவர்ச்சிகரமான கைவேலைப்பாடுகள், குளியலறை சாதனங்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அலங்கார உட்புற பொருட்கள் ஆகியனவற்றை உள்ளடக்கி செப்புக் கட்டடக்கலை நவீன காலபகுதியில் விரிவடைந்தவண்ணம் உள்ளது. கட்டிடக் கலைப்பொருள், குறைந்த வெப்ப இயக்கம், இலேசான எடை, மின்னல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி முதலானவை தாமிரத்தின் மற்ற முக்கிய நன்மைகள் ஆகும். இவ்வுலோகத்தின் தனித்துவமான பச்சைக்களிம்பு நிறம் நீண்ட காலமாக வடிவமைப்பாளர்களாலும்,கட்டிடக் கலை வல்லுநர்களாலும் விரும்பப்படுகின்றது. பசுக்களிம்பின் நீடித்துழைக்கும் அடுக்கு வளிமண்டல அரிப்பை மிகவும் எதிர்க்கும் தன்மையுடையது ஆகும். இதன் மூலம் இவ்வடுக்கு தொடர்ந்து உலோகத்தைப் பாதுகாக்கிறது. கந்தகம் அடங்கிய அமில மழை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து தாமிரம் பல்வேறு அளவுகளில் கார்பனேட் மற்றும் சல்பேட் சேர்மங்களின் கலவையாகக் காணப்படுகிறது. கட்டடக்கலைக்குரிய செப்பும் அதன் உலோகக் கலவைகளும் குறிப்பிட்ட ஒரு தோற்றம், நிறம், உணர்தல் ஆகியவற்றை எதிர்நோக்கியே தொடங்கப்பட்டு முடிவை எட்டுகின்றன. இம்முடிவுகள் பெரும்பாலும் இயந்திர மேற்பரப்பு சிகிச்சைகள், இரசாயன வண்ணம் மற்றும் இரசாயண பூச்சுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. தாமிரம் மிகச்சிறந்த பற்றவைத்தல் பண்புகளைப் பெற்றுள்ளது. வாயு உலோக வில்சுடர் பற்றவைப்பு சிறந்த முடிவுகளைத் தருவதாக தெரிவிக்கப்படுகிறது . நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்கள் பாக்டீரியா மற்றும் பல வகையான உயிரினங்கள் எதுவும் தாமிரத்தின் மீது வளர்வதில்லை. இந்த காரணத்திற்காகவே நீண்ட காலமாக கப்பல்களின் அடிப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. மீன்பிடி தொழிலில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் மீன்வலைகள் செய்யப் பயன்படுகின்றன . பிற பயன்கள் தாமிரத்தின் கரைசல்கள் மரப்பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிர் பாதுகாப்புப் பொருள்களை உருவாக்குவதற்காக சில நூலிழை இழைகளுடன் தாமிரம் கலக்கப்படுகின்றது. சில இசைக்கருவிகளில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல் முலாம் பூசுகையில் தாமிரம் ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. அருங்காட்சியகங்களில் ஈயம், வெள்ளி உலோகங்களுடன் சேர்த்து பரிசோதனையின் மூலம் குளோரைடு, சல்பைடு, ஆக்சைடு போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. தாமிரம் தரம் குறைதல் கோளவடிவ பாக்டீரியாவும், சூடோமோனாசு புளூரசன்சு என்ற குச்சிவடிவ பாக்டீரியாவும் திண்ம நிலையிலுள்ள தாமிரத்தை சயனைடு தாமிரமாக தரம் குறைக்கின்றன . தாமிரம் கலந்துள்ள மண்ணில் சில வகை பூஞ்சைககள் வளர்கின்றன. இளம் பைன் மரங்களை தாமிர நச்சிலிருந்து சில வகைப் பூஞ்சைகள் காக்கின்றன . தங்கம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கங்களில் உள்ள கரைசல்களில் ஆசுபெர்கில்லசு போன்ற பூஞ்சைகள் காணப்படுகின்றன. மேலும் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களின் சயனோ அணைவுச் சேர்மங்களைக் இக்கரைசல் கொண்டுள்ளது. கன உலோகங்களை இப்பூஞ்சைகள் கரைத்துவிடுகின்றன . உயிரியல் பங்களிப்பு உயிரியல் எலக்ட்ரான் போக்குவரத்திலும், ஆக்சிசன் போக்குவரத்திலும் தாமிரப் புரோட்டீன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. தாமிரம் (I) வகை சேர்மங்களை தாமிரம்(II) வகை சேர்மங்களாக இவை இடைமாற்றுகின்றன . பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசனைத் தோற்றுவிப்பதன் மூலம் செப்புக்கான உயிரியல் பங்களிப்பு தொடங்குகிறது . மைட்டோகாண்டிரியாவிலுள்ள சகல யூகாரியோட்டுகளின் காற்றுச் சுவாசத்திற்கு தாமிரம் அவசியமாகும். ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற வினையில் கடைசி புரதமான சைட்டோகுரோம் சி ஆக்சிடேசில் இது காணப்படுகிறது. இப்புரதம் ஆக்சிசனை தாமிரம் இரும்பு போன்ற தனிமங்களுடன் இணைக்க உதவுகிறது. மேலும் இப்புரதம் எட்டு எலக்ட்ரான்களை ஆக்சிசன் மூலக்கூற்றுக்கு இடம் மாற்றுகிறது. பல மிகை ஆக்சைடுகளில் காணப்படும் தாமிரம் அவை சிதைவடைவதற்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது. இச்சிதைவு வினையில் ஆக்சிசனும் ஐதரசன் பெராக்சைடும் உருவாகின்றன. 2 HO2 → H2O2 + O2 விலங்கினங்களுள் ஆக்டோபசு, கணவாய் மீன், சிப்பிகள், நண்டுகள், நத்தைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இரத்தத்தில் செம்பு ஈமோசையனின் எனும் நிறமியாக உள்ளது. இதில் செம்பு 0.33-0.38 % அடங்கியுள்ளது. ஈமோகுளோபினில் இரும்பு எங்ஙனம் செயல்படுகின்றதோ அது போல இவற்றில் செம்புச் செயல்படுகின்றது. வளி மண்டலத்திலுள்ள ஆக்சிசனுடன் சேரும் போது இந்த நிறமி நீல நிறம் பெறுகின்றது. இதனால் நத்தைகள் நீல நிற இரத்தம் கொண்டவை எனச் சொல்லப்படுகின்றன. உட்கவர்ந்த ஆக்சிஜனை உடலிலுள்ள திசுக்களுக்கு ஆற்றலாகக் கொடுத்த பின் அவற்றின் இரத்தம் நிறமற்றதாகி விடுகின்றது . பொதுவாக நகைகள் செய்வதற்கு தாமிரம் பயன்படுத்தப்படுகிறது, செம்பு வளையல்கள் கீல்வாதம் அறிகுறிகளைத் தடுக்கின்றன என்று சில நாட்டுப்புற மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இச்சிகிச்சையால் கீல்வாதம் குணமடைந்ததாக நிருபணம் ஏதும் ஆகவில்லை. மருத்துவக் குணம் எதுவும் தாமிரத்திற்கு இருப்பதாக மருத்துவத்துறையின் பரிந்துரைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. உணவுத் தேவைகள் சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செம்புச் சத்துக் குறைவினால் இரத்தச் சோகை, சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பலர் செம்புக்கு மருத்துவ குணமுண்டு என்று சொல்வார்கள். சில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்ளும் செம்பு வேறுசில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. சுறா மீன்களுக்கு செம்பு சல்பேட்டுக்கள் தீங்கானது. இதை எதிர் சுறாப் பொருள் என்று குறிப்பிடுகின்றார்கள். கடலில் சிக்கிக் கொண்டவர்கள் சுறாக்களிடமிருந்து தப்பிக்க இவ்வேதிப் பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தோலின் வழியாக தாமிரம் ஈர்க்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை அவ்வாறு ஈர்க்கப்பட்டால் அது ஒரு நச்சு ஆக செயல்படும் . தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்துக்கும் தாமிரம் இன்றியமையாத ஒரு கனிமமாக உள்ளது ஆனால் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இதன் அவசியம் இருப்பதில்லை. மனித உடலில் அவன் உடல் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு 1.4 முதல் 2.1 மில்லி அளவு தாமிரம் காணப்படுகிறது . மனிதக்குடலால் ஈர்க்கப்படும் தாமிரம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது , கல்லீரல் செயல்முறைகளைத் தொடர்ந்து தாமிரம் பல்வேறு திசுக்களும் அனுப்பப்படுகிறது. தேவைக்கு அதிகமான தாமிரம் உடலில் இருந்தால் அது கல்லீரலை விட்டு வெளியேற்றப்படுகிறது . தாமிரக் குறைபாடு நோய்கள் செப்பு குறைபாடு காரணமாக இரத்த சோகை, எலும்பு அசாதாரண மாறுபாடுகள், மயக்கம், வளர்ச்சிக் குறைபாடு , தொற்றுநோய்கள், எலும்பு இயக்கக் குறைபாடுகள் மற்றும் குளுக்கோசு மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரணங்கள் ஆகியவவை உருவாகின்றன. வில்சன் நோய் காரணமாக உடல் திசுக்களில் தாமிரம் கூடுகிறது. மேலும் பார்க்க பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல் ஆவர்த்தன அட்டவணை மேற்கோள்கள் புற இணைப்புகள் Copper at The Periodic Table of Videos (University of Nottingham) Copper and compounds fact sheet from the National Pollutant Inventory of Australia CDC–NIOSH Pocket Guide to Chemical Hazards – Copper (dusts and mists) from the Centers for Disease Control and Prevention's National Institute for Occupational Safety and Health CDC–NIOSH Pocket Guide to Chemical Hazards – Copper fume from the Centers for Disease Control and Prevention's National Institute for Occupational Safety and Health Copper.org - official website of the Copper Development Association with an extensive site of properties and uses of copper Brass.org - also operated by the Copper Development Association; dedicated to brass, a copper alloy. Price history of copper, according to the IMF தனிமங்கள் உலோகங்கள் தாண்டல் உலோகங்கள் மின் கடத்திகள் உணவுப் பட்டியல் கனிமங்கள் கனசதுரக் கனிமங்கள் தாயகத் தனிமக் கனிமங்கள்
6025
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தொழில்களின் பட்டியல்
இது தொழில்களின் பட்டியல் ஆகும். __NoTOC__ A தேவாலயத்தலைமை அதிகாரி பௌத்த மத ஆலயத் தலைமை அதிகாரி கணக்காளர் (Accountant) நடிகர் காப்பீட்டு நிதி கணக்காளர் நிர்வாகி (Administrator) வான்வெளி பொறியாளர் (Aerospace engineer) முகவர் (Agent) விவசாயி வேளாண் நிபுணர் அறிவியல் விவசாயி (Agricultural science, Agronomist) விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (Air traffic controller) ஏர்மேன் (Airman) இரசவாதத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்Alchemist Alderman Alewyfe Almoner தூதுவர் (Ambassador) மயக்க மருந்து மருத்துவர்(Anesthesiologist) பகுப்பாய்வாளர் (Analyst) விலங்குகள் பயிற்சியாளர் (Animal trainer) அரும்பொருள் விற்பனையாளர் (Antique dealer) தேனீ வளர்ப்பவர் (Beekeeper) air hostess Arbiter (also Arbitrator) Arborist பேராயர் வில்லாளர் அல்லது வில்லாளிArcher தொல்பொருள் ஆராய்ச்சியாளர் (Archaeologist) கட்டிடக் கலைஞர் (Architect) Archivist Armourer கலை இயக்குனர் (Art director) கலைஞர் (Artist) உலோக மதிப்பீட்டாளர் (Assayer) மதிப்பீட்டாளர் (Assessor) சோதிடர் (Astrologer) விண்வெளி வீரர் (Astronaut) வானியலாளர் (Astronomer) வான் இயற்பியலாளர் (Astrophysicist) விளையாட்டு வீரர் (Athlete) சட்டத்தரணி (Attorney at law) கணக்காய்வாளர் (Auditor) Au pair எழுத்தாளர் Aviator B பின்னணிக் கலைஞர் (Background artist) பக்டீரியவியலாளர் (Bacteriologist) Bagger Bailiff வெதுப்பர் Balancemaker Balloonist (Bandit) வங்கியாளர் (Banker) முடி திருத்துபவர் (Barber) Bard Bargeman Barker Bartender (also Bartender, Barkeeper, Barman, Barmaid) Basinbeater கூடை முடைவோர் (Basket maker) Bather Beader Beadle அழகு திருத்துபுவர் (Cosmetologist|Beautician) தேன் சேகரிப்பவர் (Beekeeper) பிச்சைக்காரர் – (Beggar) மணி செய்பவர் (Bellmaker) உயிரியலாளர் (Biologist) ஆயர் (Bishop) கொல்லர் (Blacksmith) ஓடம் கட்டுபவர் (Boatbuilder) ஓடக்காரர் (Boatman) Boatswain Boatwright Bodger மெய்க்காப்பாளர் (Bodyguard) Bondbroker Bonecarver புத்தகம் கட்டுபவர் (Bookbinder) கணக்குப் பதிவாளர் (Bookkeeper) புத்தகம் விற்பவர் (Bookseller) Bowyer Brewer செங்கல் சூளை வைத்திருப்பவர் (Bricker) (also Brickbaker, Brickmaker) கொத்தனார்(Bricklayer) தரகர் (Broker) Bronzefounder Brushbinder Budget Analyst கட்டிடம் கட்டுபவர் (Builder) அதிகாரி (Bureaucrat) கன்னகோல் திருடர்Burglar வணிகப் பகுப்பாய்வாளர் (Business analyst) முதலாளி (Business owner) Busker கசாயி (Butcher) பரிமாறுபவர்Butler C வாடகை வண்டி ஒட்டுனர்(Cab driver) Cabinet-maker Caddy வனப்பெழுத்து புகைப்படக் கலைஞர் (Cameraman) Canaller Cannoneer Capper கப்பல் தலைவன்(Caption) Cardinal இருதய மருத்துவர் (Cardiologist) மரத்தச்சர் (Carpenter) நிலப்படவரைவியல் Cartwright Carver செல்லோ Censor Chamberlain பல்கலைகழக வேந்தர் (Chancellor) Chandler (candles) Chandler (provisions) Chaplain Chapman Cheesemaker வேதியியல் பொறியாளர் (Chemical engineer) Chemist Chicken sexer தலைமைக் காவல் அதிகாரி (Chief of Police) Chimney-sweeper Chiropodist Doctor of Chiropractic அடவுகாரர் (Choreographer) Circuit preacher கட்டிடக் கலை பொறியாளர் (vil engineer) Clarinettist துப்புரவு பணியாளர் (Cleaning staff) Clergymen குமாஸ்தா (Clerk) Clockmaker Clothier கோமாளி (Clown) பயிற்சி அளிப்பவர் (coaching|Coach) Coachmaker Coachman கடல் பாதுகாவலர் (Coast guard) சக்கிலியர் (Cobbler) Cofferer Combmaker நகைச்சுவை நடிகர் (Comedian) Compasssmith Composer கணிப்பொறியாளர் (Computer engineer) கணினி வடிவமைப்பாளர் (Computer programmer) Conductor (music) நடத்துனர் (Conductor (transportation)) மிட்டாய் செய்பவர் (Confectioner) Conferencier காவலர் (Constable) கட்டிடத் தொழிலாளிConstruction worker [(Consul)] ஆலோசகர் Consultant Controller Copyist சமையற்காரர் (Cooking|Cook) Cooper செப்பு தச்சர் (Coppersmith) நகலெடுப்பவர் (Copywriter) Cordwainer மரண விசாரனை அதிகாரி (Coroner) தலைமை செயல் அதிகாரி (Corporate executive officer) Corporate librarian அச்சு திருத்துபவர் (Proof Reader|Corrector) Correspondent Cosmetologist Cosmonaut Costermonger விரைதூதர் சேவை Court jester Cowboy இடையர் (Animal husbandry|Cowherd) கைத்தொழில் நிபுணர் (Crafter) Crammer Crier Crofter Crossbowyer Cryptanalyst மறையீட்டியல் Cryptologist Cuillerer Culinary cooker தொல் பொருள் பாதுகாப்பு நிலைய அதிகாரி (Curator) Currier பாதுகாவலர் (Custodian) சுங்க அதிகாரி (Customs officer) Cutler D நடனம் ஆடுபவர் (Dancer) Delver பல் மருத்துவர் (Dentist) Deputy (law enforcement) Deputy (parliamentary) வடிவமைப்பாளர் (Designer) துப்பறியும் நிபுணர் (Detective) உணவு நிபுணர் (Dietician) Diplomat Disc jockey பாத்திரம்கழுவி Dispatcher வடித்திறக்கல் Ditcher Diver Dock labourer Documentalist மருத்துவர் (Doctor) நாய் பிடிப்பவர் ( Dogcatcher) Dominatrix Doorman நாடகாசிரியர் Draper Drayman தையற்காரர் (Dressmaker) Dressman ஓட்டுநர் (Driver (profession)|Driver) தோல் இசை கலைஞர் (Drummer) Drycooper சிப்சம் பலகை Dustman சாயக் கலை நிபுணர் (Dyer) E பொருளாதர நிபுணர் (Economist) பத்திரிக்கை ஆசிரியர் (Editor) கல்வி மின் பொறியியலாளர் (Electrical engineer) மின்வினைஞர் Elevator girl Embalmer Embroiderer கருவியல் Engine-driver Engine fitter பொறியியலாளர்(Engineer) Engraver மகிழ்கலை பூச்சியியல் தொழில் முனைவு சுற்றுசூழல் அறிவியியலாளர் (Environmental scientist) Ergonomists இன ஒப்பாய்வியல் விலங்கின நடத்தையியல் சொற்பிறப்பியல் Evangelist சோதிப்பவர் (Examiner) Exchequer Executioner நிர்வாக அதிகாரி (Executive) Executor துகிலுரி நடனம் Explorer Executioner Estate Agent Exterminator Extra F Fabricshearer ஆலைத்தொழிலாளி (Factory worker) Falconer விவசாயி (Farmer) Farrier Fashion designer Felmonger Feltmaker Fence Ferryman நிதி ஆய்வாளர் (Financial Analyst) Financial Planner Financier தீயணைப்பு அதிகாரி (e officer) தீயணைப்பவர் (Firefighter) Fishmonger [[மீனவர்] (Fisherman) Fitter புல்லாங்குழல் Fletcher Flight attendant Flight engineer Flight technician Flight instructor Fluffer Floor manager Florist புல்லாங்குழல் Footman Forester Fortuneteller Fowler Fraudster Friar Fruiterer Furbisher Furrier Fuster G Game show host Garbage collector Garbler Gardener Gate-keeper Gemcutter Genealogist General Geographer Geologist Geometer புவி இயற்பியல் Gigolo கிளாடியேட்டர் Glazier Glover Goatherd Gofer Goldsmith கொண்டோலா Governess Government agent ஆளுநர் Grammarian கணினி வரைகலைஞர் Gravedigger Grenadier Greengrocer Grinder மளிகைக் கடை Groom (horses) Groom (manservant) Guard Guide Guitarist Gunsmith Gunstocker குரு Gynecologist H Haberdasher Hairdesser Harnessmaker Harper Hatter Hawker Hayward தலைமையாசிரியர் Heaumer Herald மூலிகை மருத்துவம் Herder Historian Hornere Hosier Host (also Hostess) Hotelier House painter வேட்டையாடுதல் நீர்ம பொறியியல் அறிதுயில் நிலை I Illuminator மாய வித்தை Illustrator இமாம் Impersonator Importer உற்பத்திப் பொருள் வடிவமைப்புer தொழிலகப் பொறியியல் Industrialist Inker Innkeeper Instrumentmaker (musical) Instrumentmaker (scientific) Instructor காப்பீடு Intelligence officer உட்புற வடிவமைப்புer Internist Interpreter Interrogator கண்டுபிடிப்பு Investment Analysts முதலீட்டு வங்கியியல் Investment Broker Invigilator Ironmonger J Jailer அணிகலன் Jockey Joiner செய்தியாளர் நீதிபதி Juggler Jurist K அரசன் King Knifegrinder Knifesmith கோனார்[யாதவ்] [பால்பண்ணைத் தொழில்] [பசு வளர்ப்பு] L Laboratory worker Ladeler Lady-in-waiting Landlord (also Landlady) Lanternmaker latheman Lauderer Laundress (also Lavendar) காவல்துறை வழக்குரைஞர் (வழக்கறிஞர்) Latener Leadworker தோல்சரக்கு நுட்பியல் பேராசிரியர் (Lecturer) Lens grinder நூலகம் (நூலகர்) Librettist Lifeguard Lighthouse-keeper Light technician Limner Linesman மொழியியல் Linkman Loan officer பூட்டு Loriner Lord Chamberlain Lorist Lumberjack பாடலாசிரியர் (Lyricist) M Macer [Lathman] நீதித் துறை நடுவர் Mailmaker Mailman Make-up artist Management Analyst Management Consultant மேலாளர் Manicurist (also Manicure) Manservant Manual therapist உற்பத்தி Marbler Marine சந்தைப்படுத்தல் Market gardener மறைசுடுவீரன் Marshal தற்காப்புக் கலைகள் கொத்தனார் உடற்பிடிப்பு (also Masseuse) Master of hounds Matador Materials engineer கணிதவியலாளர் Matron Mayor கைவினைஞர் இயந்திரப் பொறியியல் Mechanician Mediator Medic கூலிப்படை Mercer Merchant Mesmerist Messenger வானிலையியல் Midwife Milkman (also யாதவர்) MILK BUSSINES[KONAR-TAMILNADU] Miller Miner Mintmaster Minister Mirrorer Missionary Model Molecatcher Moldmaker (also Mouldmaker) Moneychanger Moneylender துறவி Moonlighter Mortagager Mortician Music director Musician N Nailor Nanny Navigator Needler Négociant Netmaker Notary எண் சோதிடம் அருட்சகோதரி Nurse Nursemaid O Oboist Obstetrician Occupational therapist பல் மருத்துவம் செக்கு Operator Ophthalmologist Optician (also பார்வை அளவையியல்) ஆரக்கிள் Organist Organizer பறவையியல் Orthodontist Orthopaedist Otorhinolaryngologist P ஓவியக் கலை Paleoseismologist Paperer Paramedic Parchmenter பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை) Pargeter Parker Park ranger Party-leader Pasteler Pastor Patent attorney Patent clerk நோயியல் Paviour (also Pavior) வட்டிக்கடை Peddlar Pediatrician Pedologist (soil study) Pedology (children study) Pepperer தாள இசைக்கருவி பியூட்டர் Pharmacist Philanthropist Philologist Philosopher Photographer Physician இயற்பியலறிஞர் Physiognomist உடலியங்கியல் Physiotherapist Pianist Piano tuner Pickler Pickpocket Pilot (shipping) Pilot (see வானோடி) Pinner Plasterer நாடகாசிரியர் குழாய்நுட்பர் கவிஞர் Police officer காவல் ஆய்வாளர் அரசியல்வாதி அரசறிவியல் Poll-taker திருதந்தை(திருத்தந்தை) Porcilinist Potter Poulterer Premier Presenter குடியரசுத் தலைவர் Press officer பங்குதந்தை(Priest) பிரதமர் (பிரதமர்) Principal Printer Private detective Proctologist Procurator (also Proctor) தயாரிப்பாளர் (திரைப்படம்) பேராசிரியர் Programmer பால்வினைத் தொழில் Psychologist Public relations officer பதிப்பகம் Q Quarreler Quartermaster அம்பறாத் தூணி Queen R Rabbi தானுந்து விளையாட்டுக்கள் கதிரியக்க வல்லுநர்Radiologist Rat-catcher இணைப்பேராசிரியர்Reader Real Estate Agent Real Estate Broker Real Estate Investor Real Estate Developer Receptionist Rector Redsmith Reeve Referee பதிவாளர்Registrar Remedial Teacher நிருபர்Reporter ஆய்வாளர்researcher Retailer Rivener Ropemaker (also Roper) Roofer S Sacker Saddler Sage Sailmaker Sailor விற்பனை (also Salesman, Saleswoman) Saltboiler Salter Sapper Sarariman சாக்சபோன் Sawyer Scabbardmaker Scale mechanic அறிவியலாளர் Scout Screenwriter Scribe (also Scrivener) சிற்பம் Scythesmith Seamstress பொது செயலர் செயலர் Security guard Senator Servant பாலியல் Sexton Sheepshearer இடையர் Shaman Sheriff Shingler Shipwright Shoemaker Shrimper Siever Signalman Silversmith பாடுதல் Skinner அடிமை முறை அடிமை முறை Slaver Smelter Smith குறிசுடுனர் சமூகப்பணி மென்பொருள் பொறியாளர்(Software engineer) Soil scientist படைவீரர் Solicitor Sommelier Sound technician Special agent Speech therapist Spelunker Spin doctor Sponman Spurrier (also Spurrer) உளவாளி Stage designer Steersman Steward (also Stewardess) Stock-breeder Stockbroker Stonecutter Street artist Street musician Street vendor Stringer Stuffer Stuntman அறுவைசிகிட்சை நிபுணர் Surveyor Swineherd Swimmer நீச்சல் பயிற்சியாளர் Switchboard operator Swordsmith Systems designer Systems analyst T விண்ணோடி Tailor -தையல்காரர் Tallowchandler Tanner Tapicer (also Tapestrymaker, Tapester) Tattooer Taxidermist Taxi-driver ஆசிரியர் – ஆசிரியர் தொழில்நுட்ப பொறியாளர் Technician Telegraphist (also Telegraph operator) Telephone operator Teller – காசாளர் Tentsman Test developer Test pilot Thatcher Theatre director இறையியல் Therapist Thief – திருடன் Thimbler Thresher தரை ஓடுகள் Tinker Tinner Tinsmith Toolmaker சித்திரவதை Trademark attorney Trader – வணிகர் Tradesman மொழிபெயர்ப்பு – மொழி பெயர்ப்பாளர் Trapper Treasurer Troubador Tumbler Tuner Turner Tutor Tyler Typefounder U குடை சரி செய்பவர் (Umbrella repairer) Urban planner வெட்டியான் (Undertaker) Upholder Upholsterer V Valet மாயக்குரல் Verger Veterinarian Vibrafonist Victualler Video-editor Vintner வயலின் W Wagoner Wainwright Waiter (also Waitress) காவலர் (Watchman) Weaponsmith நெசவாளி (Weaver) வெப் மாஸ்டர் Welder Wet nurse Wheelwright (also Wheeler) Whitesmith White-tawer Window-dresser Wine connoisseur Wiredrawer Wiremonger Woodcarver Wood-cutter Woodturner Wooler Wrangler வானொலி எழுத்தாளர் – எழுத்தாளர் X Xylophonist Y யாதவர்[dairy business]- யாதவர்-கோனார் [பால்பண்ணைத் தொழில்] Z உயிரியல் பூங்கா காப்பாளர் (Zookeeper) உயிரியாளர் (Zoologist) வெளியிணைப்புகள் http://www.state.ma.us/reg/boards/dirprofs.htm தொழில்கள்
6026
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சொற்பிறப்பியல்
சொற்பிறப்பியல் (etymology) என்பது சொற்களின் மூலம் பற்றிய படிப்பாகும். சில சொற்கள் பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. பழைய எழுத்து மூலங்களிலிருந்தும், பிற மொழிகளுடன் ஒப்பிடுவது மூலமும் சொற்பிறப்பியலாளர்கள், குறிப்பிட்ட சொற்கள் எப்பொழுது ஒரு மொழிக்கு அறிமுகமாயின, எந்த மூலத்திலிருந்து அறிமுகமாயின, எவ்வாறு அவற்றின் வடிவமும் பொருளும் மாற்றமடைந்தன போன்ற கோள்விகளுக்கு விடைகாண்பதன் மூலம், சொற்களின் வரலாற்றை மீளமைக்க முயல்கிறார்கள். நீண்டகால எழுத்து வரலாறு கொண்ட மொழிகளில், சொற்பிறப்பியலானது மொழிநூலைத் (காலப்போக்கில், பண்பாட்டுக்குப் பண்பாடு சொற்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறியும் ஆய்வு) துணையாகக் கொள்கிறது. நேரடியான தகவல்களைப் பெற முடியாத அளவுக்குப் பழைய மொழிகள் தொடர்பில், அவை பற்றிய தகவல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சொற்பிறப்பியலாளர், ஒப்பீட்டு மொழியியல் முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தித் தொடர்புடைய மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் அம் மொழிகளின் பொது மூலமொழி பற்றியும் அதன் சொற்றொகுதி பற்றியும் ஊகித்து அறிய முடியும். இதன் மூலம் வேர்ச் சொற்கள் அறியப்படுவதுடன் அம்மொழிக் குடும்பத்தின் மூல மொழியிலிருந்து அச்சொற்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்க முடியும். சொல் மூலங்களின் வகைகள் சொற்பிறப்பியல் கோட்பாட்டின்படி சில வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பொறிமுறைகள் மூலமே சொற்கள் உருவாகின்றன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு: கடன்பெறுதல்: பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல். சொல் உருவாக்கம்: இன்னொன்றிலிருந்து வருவிக்கப்பட்ட சொற்கள், வேறு சொற்களின் சேர்க்கையினால் உருவானவை. ஒலிக்குறிப்புச் சொற்கள், ஒலிக் குறியீடுகள் என்பன. புதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள், ஒலி மாற்றம் சொற்பொருள் மாற்றம் என்பனவாகும். பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் கூட்டாக அமைவது வழக்கம். ஒலிமாற்றமும், சொற்பொருள் மாற்றமும் கூட்டாக நிகழ்வது தற்காலச் சொல் வடிவங்களை மேலோட்டமாகப் பார்த்து மூலங்களை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன. வெளி இணைப்புகள் தென் திராவிட சொற்பிறப்பியல் தரவகம் உருசிய மொழி சொற்பிறப்பியல் மொழியியல் சொற்பிறப்பியல்
6027
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
அகராதியியல்
'அகராதியியல் என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும். செயல்முறை அகராதியியல் (Practical lexicography) என்பது அகராதிகள் எழுதுகின்ற கலையாகும். கோட்பாட்டு அகராதியியல் (Theoretical lexicography) என்பது மொழியொன்றின் சொற் தொகுதிக்குள் அடங்கும் சொற்பொருளியல் தொடர்புகளை ஆராய்ந்து விளக்கும் கற்கைசார் துறையாகும். இது சில சமயம் metalexicography எனவும் அழைக்கப்படுகிறது. அகராதியியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அகராதிக் கலைஞர் ஆவார். பொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது. அகராதியியலின் கூறுகள் சொற்களைத் தெரிவு செய்தல் சொற்களுக்குப் பொருள் கொடுத்தல் பொருளை ஒழுங்குபடுத்தல் சொற்களின் உச்சரிப்புக்களைத் தருதல் வாசிப்புக்கான பரிந்துரை அகராதியியல் தொடர்பான ஆரம்பநிலை நூல்கள்: Landau, Sidney, Dictionaries: The Art and Craft of Lexicography, 2nd ed., 2001 Bergenholtz, Henning/Tarp, Sven (eds.): Manual of Specialised Lexicography, 1995 Bejoint, Henri, Modern Lexicography: An Introduction, 2000 Hartmann, R. R. K., Teaching and Researching Lexicography, 2001 Hartmann, R. R. K., Dictionary of Lexicography, 1998 Nielsen, Sandro: The Bilingual LSP Dictionary, 1994 Ooi, Vincent, Computer Corpus Lexicography, 1998 http://www.fas.nus.edu.sg/ell/Vincent/ Jonathon Green, "Chasing the Sun - Dictionary-Makers and the Dictionaries They Made," Pimlico, இவற்றையும் பார்க்கவும் Monolingual learner's dictionary வெளியிணைப்புகள் ஆங்கில தமிழ் அகராதி Centre for Lexicography International Journal of Lexicography Dictionary Society of North America Euralex - European Association for Lexicography Afrilex - African Association for Lexicography Australex - Australasian Association for Lexicography Nordic Federation for Lexicography நூலின் பெயர் : அகராதியியல் ஆசிரியர் : பெ . மாதையன் பதிப்பு : முதற்பதிப்பு 1997 வெளியீடு : தமிழ்ப் பல்கலைக்கழகம், வெளியீட்டு எண் . 194 இந்நூல் தமிழ் அகராதியியல் கலைச்சொல் உருவாக்க வரலாறு , அகராதி வரலாறு , அகராதி வகைகள் , சொல் வகைகள் , சொற் பொருள் உறவுகள் பற்றி கூறுகின்றது . மேற்கோள்கள் அகராதியியல் பயன்பாட்டு மொழியியல்
6028
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
பண்பாட்டுப் பரிணாமம்
'பண்பாட்டுப் பரிணாமம்' (Cultural Evolution) எனப்படுவது, 'உயிரினப் பரிணாமத்திற்கு ' (Biological Evolution) ஒப்பான ஒரு பண்பாட்டு வளர்ச்சி, மாற்றம், அல்லது மருவலைப் பண்பாடும் கொண்டிருக்கின்றது எனும் ஒரு உத்தேசக் கோட்பாடு.ஆகும். பண்பாட்டுப் பரிணாமம், வளர்ச்சி பாதையில் அமைந்திருக்கிறதா அல்லது மாற்றங்களுக்கு உட்பட்டு வெறும் மருவலுடன் நிற்கிறதா என்பது பண்பாட்டுப் பரிணாமவியலில் ஒரு முதன்மையான கேள்வியாகும். கலைச்சொற்கள் பண்பாடு - Culture பரிணாமம் - Evolution உத்தேசக் கோட்பாடு - Hypothesis வெளி இணைப்புகள் Explaining Tradition in Hayek’s Theory of Cultural Evolution: Cognitive Game Theory, Imitation, and Best Reply Behavior Korotayev A., Malkov A., Khaltourina D. Introduction to Social Macrodynamics: Compact Macromodels of the World System Growth. Moscow: URSS, 2006 . Korotayev A., Malkov A., Khaltourina D. Introduction to Social Macrodynamics: Secular Cycles and Millennial Trends. Moscow: URSS, 2006 . Korotayev A. & Khaltourina D. Introduction to Social Macrodynamics: Secular Cycles and Millennial Trends in Africa. Moscow: URSS, 2006 . பண்பாடு தமிழர் பண்பாடு மானிடவியல் மாந்தரினப் படிமலர்ச்சி
6029
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பல்லினப்பண்பாடு
பல்லினப் பண்பாடு (multiculturalism) எனப்படுவது, பல பண்பாட்டுக் கூறுகளின் பேணலிலும் பகிர்தலிலும் உருவாகும் ஒரு பண்பாட்டுச் சூழலைக் குறிப்பதாகும். தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி மற்றும் அறிவில வளர்ச்சி, தொலைத் தொடர்புத் துறைகளீன் பெருக்கம், கட்டுப் பாடற்ற வர்த்தகம், சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறைகளின் வளர்ச்சி, அயல்நாடுகளில் ப்ணியேற்றல் பெருக்கம் ஆகியவையும் பல்வேறு நாட்டு மக்களிற்கிடையேயான நல்லுறவு நிலைகளும் நாடுகளின் அரசாங்கங்களின் நல்லிணக்க மனப் பான்மையும் இந்தப் பல்லினப் பண்பாடு உருவாவதற்கும் பேணபபடுவட்தற்கும் மிக அதிகமாக உத்வுகின்றன. அதனால் பல்லினப் பண்பாடுள்ள சமூகம் உருவாவது தவிர்க்க இயலாததாகி உள்ளது. இதற்கு 'உலகமயமாதல்' பெருந்துணை புரிகிறது. பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உள்ளது. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவுப் பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும். பல்லினப் பண்பாட்டின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணம் 'உலகமயமாதல்' ஆகும். பல்லினப் பண்பாடு உலகப் பண்பாட்டின் ஒரு கூறு அல்லது அதன் வெளிப்பாடாகவும் விளங்குகிறது. பல்லினப் பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடு மிக்க இடங்களாக ரொறன்ரோ, மும்பாய், நியு யோர்க் முதலிய பெரு நகரங்கள் விளங்குகின்றன. கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, அமேரிக்கா ஆகிய நாடுகளின் அரசாங்கக் கொள்கைகள் பலவும் பல்லினப் பண்பாட்டைப் பேணுபவையாக உள்ளன. பண்பாடு மனிதவள மேலாண்மை