text
stringlengths
0
2.93k
எண்ணத்தின்
ஓசை நீயாக
கண்களுக்குள்
வண்ண கனவாய்
நாமே
சிறு இடைவெளிக்கு
பின் சந்தித்தாலும்
ஏனோ
நம் முதல்
சந்திப்பை போலவே
நாணம் கலந்த
தவிப்பு
என் எல்லா
செயல்களிலும்
நீயே பிம்பமாகிறாய்
நீயின்றி நானில்லை
காற்றாய் வீசுகிறாய்
காதோடு பேசுகிறாய்
விழியலே
மொழி பகிர்ந்து
தென்றலாய் வருடியே
விழி பேசும்
பாஷைகளை
மனம் அறிந்தாலும்
மொழி வரவில்லை
விடைகூற
உன் சுவாச
காற்றின் தீண்டலில்
குறும்பு
குழந்தையாய் துள்ளித்திரிந்த
மனமும் ஓரிடத்தில்
நிலைத்து விட்டது
இதயம் உன்னிடத்தில்
இடம்மாற
இருளான
இதய அறையிலும்
ஒளி பரவியது
நீ குடியேறியதால்
உன் பார்வை
மட்டுமல்ல
நீ விட்டு
செல்லும்
பாத சுவடும்
ரசிக்க தூண்டுதே
என் மனதை
அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை
உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்
உன்னிதழ்
சுவைத்த தேனீர்
என்னிதழை
நனைக்க கரைந்தது
ஊடலும்
விடுபட நினைத்தும்
விடைபெற முடியாமல்
தொடர் கதையாய்
தொடருது
உன் நினைவு
முடிவுரை புரியாமல்
வலிகளை
நீ கொடுத்தாலும்
விழிகளில்
உனை சுமப்பேன்
சுகமாய்
வாட்டம்
என்பதும்
ஏது நீ
மனதோடு மலராய்
இணைந்திருக்கும்
போது
சத்தமின்றி கூந்தல்
கலைத்து செல்லும்
காற்றாய் மனதை
கலைத்து செல்கிறாய்
நினைவில் தீண்டி
உன் எதிர்பார்பில்
யாருமிருக்கலாம்
என் எதிர்பார்பில்
நீ மட்டுமே