text
stringlengths
0
2.93k
வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா
சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில்
சிக்குதே சிக்குதே மனது பாவம் எனும் பொய் வலையில்
அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும்
இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும்
அன்பே உயரிய ஆவனம் செய்த அறம் நம்மை காத்திடும்
வினா வினா ஓர் வினா
விடாமலே எழும் வினா
நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா
கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே
புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே
பாறை மேலே தேரே போனால் பாத சுவடு இல்லையே
வேரைப் போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே
கூறா மனமே ரகசியம்
உலகில் உறவே அவசியம்
வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா
நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா
ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது
நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்
சாயா நாணல் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே
பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ
பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான்
என்னை கண்டேனே செந்தேனே...
(விழி மூடி..)
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும் மௌனம்
பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே.
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)
ஆசை என்னும் தூண்டில் முள்தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
எதோ புது மயக்கம்
இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
(விழி மூடி)
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இது வரையில் எனக்கு இது போல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை
புதியதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே ..
சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ