text
stringlengths
0
2.93k
சுத்தி சுழலும் போதும்
அக்கரைக்கு போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டும் மழையில் பொறுமையும் கொண்டு
தொலை தூரம் சேரத்தானே தள்ளாடும்
தன்னோட வழி எல்லாம் தன்னைத்தவிர துணையுண்டா
திசையெல்லாம் வழியாகும் ஒருவழிதான் உனக்காகும்
எப்போது கரையைச்சேரும் ஓடம் ஓடம்?
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.
கட்டுமரம் என்றால் என்ன
வெட்டுப்பட்ட மரங்கள்தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே
பட்டபாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப்பார்க்கும்
எட்டி நிற்கத் திரும்பத்திரும்ப விளையாடும்
கடலிருந்தும் கட்டுமரம் ஆழத்தை அறியாது
கடல்சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு?
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.
கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம் போல் தாவிப்பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...
என் தாய்முகம் அன்பே...
உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்...
என்னாகுமோ இங்கே...
முதன் முதலாய் மயங்குகிறேன்...
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா...
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
யார் இவன்... யார் இவன்...
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
நான் உனக்காக பேசினேன்
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி
வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா
நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா
ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது
நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்
சாயா நாணற் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே
பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ