Dataset Viewer (First 5GB)
Auto-converted to Parquet Duplicate
category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மின் தடையை கண்டித்து கிராம மக்கள் மறியல் : போலீஸ் தடியடியால் பதட்டம்
புதுக்கோட்டை : மின்தடையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் மீது, போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் ஊராட்சி தலைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். ஆவேசமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல்வீசி எதிர் தாக்குதல் நடத்தியதில் போலீசார் ஐந்து பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்ற...
தமிழகம்
விஷத்தன்மையுடன் கோதுமை இறக்குமதி; மூவர் கைது
சென்னை : ஆஸ்திரேலியாவிலிருந்து விஷத் தன்மையுடன் சென்னை வந்த 1,250 டன் கோதுமையை, சுங்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். தரமானது தான் என போலி சான் றிதழ் கொடுத்து எடுத்துச் செல்ல முயன்ற சுங்கத்துறை ஏஜன்டுகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். கோதுமை இறக்குமதியில் சதிவேலை உள்ளதா எனவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள...
தமிழகம்
சாருலதாவுடன் தொடர்பு உதவி கமிஷனர் சஸ்பெண்ட்
சென்னை : போலி ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி சாருலதாவிடம் தொடர்பு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், உதவி கமிஷனர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை நகரில், சாருலதா என்பவர் தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி என்று கூறிக் கொண்டு, பல இளைஞர்களிடம், போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நகை, பணம் பெற்றுள்ளார். காவல் துறையிலேயே இ...
தமிழகம்
பழைய தலைமை செயலக ராணுவ குடோனில் தீ விபத்து
சென்னை : பழைய தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ குடோனில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய தலைமைச் செயலகத்தில் ராணுவ குடோன் உள்ளது. இந்த குடோனில் ராணுவத்தினர் பயன்படுத்திய தஸ்தாவேஜுகள், நோட்டு புத்தகங்கள், பொருட்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று இரவு 10.30 மணியளவில் ராணுவ குடோனில்...
இந்தியா
11 பேரை பலி வாங்கிய பஸ் ஆற்றில் பாய்ந்தது எப்படி?
கோட்டயம் : கேரள மாநிலம், சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி வந்த தனியார் பஸ் மின் கம்பத்தில் மோதி, ஆற்றில் விழுந்த விபத்தில் 11 பேர் இறந்தனர். ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றப் போனவரும் மூச்சுத் திணறி இறந்தார். கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி நேற்று முன்தினம் பிற்பகல், 40 பயணிகளுடன் தன...
இந்தியா
மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை
புவனேஸ்வர் : ஒரிசா, பீகார் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நேற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இங்கு நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், பாதுகாப்பு படையினர் மூவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் கோபமடைந்துள்ள மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு பட...
இந்தியா
கொலைக் குற்றத்தில் தொடர்பு பாலிவுட் நடிகர் ஹாஸ்மி கைது
புதுடில்லி : பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவன், கொலைக் குற்றத்தில் தொடர்புடையதால் போலீசார் நேற்று அவனை கைது செய்தனர். ரகீமுதீன் என்ற பால்லே என்ற இம்ரான் ஹாஸ்மி (26) என்பவன், டில்லியிலுள்ள வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டான். இவன், உத்தரபிரதேசத்தில் இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடையவன்...
இந்தியா
குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரி, திப்ராயப்பேட்டையில் அடுக்கு மாடி வீடுகளின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுச்சேரி உப்பளம் தொகுதி திப்ராயப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 12 அடுக்கு மாடி கட்டடங்கள் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 30 ஆண...
தமிழகம்
100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது வெயில்
சென்னை : தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாலை 4 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு, காலை 8 மணி வரை நீடித்தது. பருவ மழை...
தமிழகம்
கதர் வாரியத்தில் அவசியமாகி உபரியாகி போன ஊழியர்கள்
மதுரை : கதர் கிராமத் தொழில் வாரியத்தில் உபரி ஊழியர்கள் அவசியமானவர்களாகி, மீண்டும் உபரியாக மாறிய வினோதம் நடந்துள்ளது. கதர் கிராமத் தொழில் வாரியத்தில், 2001 முதல் 2005 வரை 1196 பதவிகள் நீக்கம் செய்யப்பட்டன. அதில் சில பதவிகள், பதவி உயர்வு பெற முடியாத அளவிற்கு இருக்கிறது. ""இதனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இல...
தமிழகம்
கருத்து கணிப்பு வெளியிட தடை மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை : பிரசாரம் ஓய்ந்த பின்னும், தேர்தல் நாளன்றும் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேர்தல் விதிகளின்படி, தேர்தல் நாளன்று (27ம் தேதி), ஓட்டு அளித்து விட்டு வெளியே வருபவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவதும், அதை ...
தமிழகம்
டெண்டர் விண்ணப்பங்களை இணையதளத்தில் எடுக்கலாம்
சென்னை : டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய டெண்டர்களில், கான்ட்ராக்டர்கள் விண்ணப்பம் பெறுவதே பெரும் சிக்கலாக இருந்தது. பல இடங்களில் அரசியல் முக்கிய புள்ளிகளின் தலையீட்டால், கான்ட்ராக்டர்களை விண்ணப்பம் வாங்க விடாமலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்க விடாமலும்...
தமிழகம்
மருந்துகளை திருப்பி அனுப்பிய மதுரை வணிகர்கள்
மதுரை : கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் காலாவதியானவை என தெரியவந்ததை தொடர்ந்து, 400 பாட்டில்களை மதுரை மருந்துக்கடை உரிமையாளர்கள் திருப்பி அனுப்பினர். சென்னையில் காலாவதியான மருந்துகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் உயிரோடு விளையாடியவர்களை போலீசார் கைது செய்தனர். மருந்துகளையும் பறிமுத...
தமிழகம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் புறக்கணிப்பு
திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் மாநில தலைவர் தம்பித்துரை கூறியதாவது: ஏப்ரலில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மு...
தமிழகம்
பென்னாகரத்தில் பட்டுவாடா சுறுசுறுப்பு இன்றுடன் பிரசாரம் முடிவு
தர்மபுரி:பென்னாகரம் தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பணம், பரிசுப் பொருட்கள் வினியோகம் சுறுசுறுப்பாக நடக்கிறது.துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் இன்று காலை முதல்...
தமிழகம்
கூடுதல் விலை அறிவிப்பால் இனித்த கரும்பு பாசனநீர் பற்றாக்குறையால் கசக்கிறது
தியாகதுருகம் : பருவமழை பொய்த்ததால் தியாகதுருகம் பகுதி கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கிணறுகளில் பாசனத்திற்கு போதுமான நீர் கிடைக்கும் என்று நம்பி கூடுதல் பரப்பில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்த...
தமிழகம்
இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்
சென்னை : திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் இளைஞர்களுக்கான பன்னாட்டு பயிற்சி முகாம் ஏப்., 20ல் துவங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ணா தபோவனத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில், ஒரு மாத பன்னாட்டு பயிற்சி முகாம் வரும் ஏப்., 20ம் தேதி துவங்கி, மே மாதம் 20ம் தேதி வரை நடை...
தமிழகம்
நெல்லை மாநகராட்சி பட்ஜெட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.திருநெல்வேலி மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் சுப்ரமணியன் நேற்று சமர்ப்பித்தார். கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வரவு 91.28 கோடி ரூபாயாகவும், செலவு 101.72 கோடி ரூபாயாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்...
தமிழகம்
தமிழகம் முழுவதும் முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாட புத்தகங்கள்
கடலூர் : தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 1 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திலிருந்து, அந்தந்த மா...
தமிழகம்
இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை
சென்னை:மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் அடங்கிய சட்டசபை தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஓட்டுப் பதிவு எண்ணிக்கை நேற்று மாலை வெளியானது. தோல்வி அடைந்த இளைஞர் காங்கிரசார் மறுதேர்தலை நடத்த வலியுறுத்தி, நாற்காலியை எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் ...
தமிழகம்
பத்து ஆண்டுகளாக புகை பிடிப்பவருக்கு காச நோய் வாய்ப்பு பத்து மடங்கு அதிகம்
தேனி : பத்து ஆண்டுகளாக தொடர்ந்து புகை பிடித்து வருபவருக்கு, காச நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. வளர்ச்சி செயலாக்க குழுமம் மற்றும் பங்குதாரர்கள் சார்பில், உலக காசநோய் தினம் குறித்த கருத்தரங்கம் தேனியில் நடந்தது. திட்ட இயக்குனர் வனஜா தலைமை வகித்தார். தேனி மருத்துவ கல்லூ...
தமிழகம்
தொழில் நுட்ப உதவியாளர் 2-வது பட்டியல் : மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கு
தேனி : மின்வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் இரண்டாவது பட்டியலை வெளியிடாமல், மின்வாரிய நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. தமிழக மின்வாரியத்தில் 2,600 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,200 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை பூர்த்தி செய்ய நடத்திய போராட்டங்களுக்கு பின...
தமிழகம்
சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்
சுற்றுச் சூழல்பாதிப்பால் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது. இதற்கு காரணம் இயற்கையை மனிதர்கள் சின்னா பின்னமாக்குவதே. இன்றைய அவசர உலகில் தம்வீட்டு குப்பையை அடுத்த வீட்டு வாசலில் குவிப்போரே அதிகம். நம்மை சுற்றியுள்ள பகுதியை, சுத்தமாக, ஆரோக்கியமாக, மாசுபடுவதில் இருந்து பாதுகாக்கும் பொதுநலம் உள்ளோர் வெகு சிலரே. சுற...
தமிழகம்
போராட தயாராகும் பள்ளி அலுவலர்கள்
மதுரை: தமிழ்நாடு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் துரைராஜ் அறிக்கை:சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. வேலை நியமன தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டு நான்காண்டுகளாகி விட்டது. அதன் பின்னும், பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், கா...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேச்சு :சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு கிடைக்காத வாய்ப்பான தமிழகத்தை ஆளும் வாய்ப்பை கருணாநிதிக்கு மக்கள் கொடுத்தனர். வீராணம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டதைப்போல ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டார். மீனுக்கு தூண்டில் போடுவதுபோல் கலர், "டிவி' உள்ளிட்...
தமிழகம்
பங்குனி உத்திர திருவிழா பழநிக்கு சிறப்பு பஸ்கள்
திண்டுக்கல்: பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்காக, பல் வேறு இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அறிக் கை:பழநி கோயிலில், மார்ச் 29ல் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற் காக மார்ச் 28 முதல் மார்ச் 30வரை, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப...
தமிழகம்
காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த காங்.,தொகுதி பொறுப் பாளர் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. தண்டபாணி எம்.எல்.ஏ., தலையிட்டு சமாதானப்படுத்தினார். திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய மூன்று சட்டசபை தொகுதிக்கு காங்., பொறுப்பாளர் கள் தேர்தல் நேற்று திண் டுக்கல் நாராயண அய்யர் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக...
இந்தியா
தேசிய நெடுஞ்சாலையாக 10 ஆயிரம் கி.மீ., மாநில சாலைகள் தரம் உயர்வு
புதுடில்லி : மாநில அரசின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 50 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தக் கோரி,...
இந்தியா
மின் திருட்டால் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு: கட்டண வசூலில் குளறுபடி
புதுடில்லி : இந்தியாவில், மின் திருட்டு மற்றும் சரியான கட்டண வசூலிப்பு நடைமுறை இல்லாமை போன்றவற்றால், மின் துறைக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மின்சாரத்தை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவு, கடந்த 2005-06ம் ஆண்டு யூனிட்டிற்கு 3.60 ரூபாயா...
தமிழகம்
மூணாறில் கட்டுமான பணிகள் நிறுத்தத்தால் தொழிலாளர் பாதிப்பு
மூணாறு: மூணாறில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கேரளா ஐகோர்ட் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்துள்ளதால், கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்காத நிலையில் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மூணாறில் அரசு நிலங்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்கப்படும், சட்ட விரோதமாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனால் மூணாறில் சுற்றுப்புற...
தமிழகம்
கேராள செல்லும் ஜீப்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது: அதிவேகம், கூடுதல் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் விபரீதம்.
கூடலூர்: கேரளாவில் உள்ள எஸ்டேட் வேலைக்கு தமிழகத்திலிருந்து பெண்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் அதிவேகமாகவும், கூடுதலான ஆட்களையும் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. கூடலூர், கம்பம் பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட் வேலைகளுக்கு செல்கின்றனர். இவர்களை...
இந்தியா
வரதட்சணை தண்டனையில் தப்ப புது சட்டம் வருகிறது
புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது...
தமிழகம்
தீயணைப்பு வீரர் தற்கொலை
போடி: போடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் (29). போடி தீயணைப்பு நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், மனைவி தாமரைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த முத்துச்செல்வம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிராந்தியில் பூச்சை மருந்தை கலந்து குடித்தார். தேனியில் தனியார் ஆஸ்பத்திரிய...
இந்தியா
குளுகுளு சிம்லாவில் வெயில் தலைதூக்குது
சிம்லா : கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 8 டிகிரி முதல் 10 டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, சிம்லா வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது: கடந்த 2004ம் ஆண்டு, மார்ச் மாதம் 7ம் தேதி வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியசை எட்டியது. இந்தாண்டு,...
தமிழகம்
அரசு இடத்தை அதிக தொகைக்கு வாடகை கேட்டும் குறைவாக விடுவது ஏன் : கவுன்சிலர்கள் கேள்வி
சிவகாசி: சிவகாசி நகராட்சி கூட்டம் தலைவர் ராதிகாதேவி தலைமையில், துணைத்தலைவர் அசோகன், கமிஷனர் விஜயராகவன் முன்னிலையில் நடந்தது.முனீஸ்வரன்: பஸ்ஸ்டாண்டில் காலியிடத்தை மாதவாடகைக்கு குத்தகை அடிப்படையில் விடுவதற்கு 1200, 1300 ரூபாய்க்கு அதிக தொகை என நிர்ணயம் செய்து தீர்மானம் வந்துள்ளது. ஆனால் அதே இடத்தை மாதம் ரூ.3000க்கு வாடக...
தமிழகம்
ஹர்கிஷன் சிங் பிறந்த நாள் பிரகாஷ் கராத் புது தகவல்
புதுடில்லி:விவசாய குடும்பத்தில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங்கின் உண்மையான பிறந்த தேதி தெரியாததால், தியாகி பகத் சிங் மறைந்த தினத்தை தனது பிறந்த தேதியாக அறிவித்துக் கொண்டார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் 94வது பிறந்த நாள், டில்லியில் உள்ள கட்சி தலைமையக...
இந்தியா
முஸ்லிம் வாரிய பதவிகளில் பெண்கள் பலம் அதிகரிப்பு
லக்னோ : அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் 21வது மாநாடு நடந்தது. இதன் உறுப்பினர்களில் பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே வாரியத்தின் நிறுவனரும் உறுப்பினரு...
தமிழகம்
கிராமங்களில் மின் தடை நேரம் அதிகரிப்பு: 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு
விருதுநகர்: கிராமப்புறங்களில் மின்தடை அதிகரிப்பு செய்திருப்பதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோடைகாலம் துவங்கி விட்டதால், மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் சப்ளை செய்ய முடியாமல் திணறும் மின்வாரியம் வருகின்றனர். அறிவிக்கப்படாமல் மின் தடை செய்கின்றனர...
தமிழகம்
ராணுவ வீரர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி அருகே வைத்தியலிங்காபுரத்தை சேர்ந்தவர் அக்னி ராஜ்(27). ராணுவ வீரரான இவரது மைத்துனி சாந்தி(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளி மாணவர் ராஜாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அ...
தமிழகம்
ராஜதானி எக்ஸ்பிரசை காப்பாற்றியவர்களுக்கு மம்தா பரிசு
புதுடில்லி:புவனேஸ்வரிலிருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில், மாவோயிஸ்ட்களால் தகர்க்கப்பட்ட தண்டவாளத்தில் வரும் போது தடம் புரண்டது. இச்சம்பவத்தில் ரயிலை திறமையாகக் கையாண்டு, பாதிப்பு ஏற்படாமல் காத்த அதன் பணியாளர்களுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பரிசு அறிவித்துள்ளார். சமீபத்தில், ஒரிசா தலைநகர் புவன...
தமிழகம்
ஏ.டி.எம்., மையங்களில் கள்ளநோட்டு ?
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், பரமக்குடி பகுதி ஏ.டி.எம்., களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக, வாடிக்கையாளர்கள் பீதியடைந்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேவைக்காக ஏ.டி.எம்., சேவை மையங் களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. இங்கு எடுக்கும் பணத்தில் சில நோட்டுக்கள் கள்ள நோட்டுகளாக உள்ளன. இது த...
தமிழகம்
அழிந்து வரும் தோட்டக்கலை பண்ணை ரூ. பல லட்சம் பொருட்கள் மாயம்
கமுதி: கமுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணை கட்டடம் பராமரிப்பின்றி அழிந்து வருவதோடு, இங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் மாயமாகி உள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மர கன்றுகள் வளர்த்து விற்பனை செய்ய ,கமுதியில் மாதிரி தோட்டக் கலை பண்ணை துவங்கப் பட்டது. இங்கு போதிய இடம் , தண்ணீர் வசதிகள் இருந...
தமிழகம்
புத்தக சுமையை குறைக்க புதிய வழி ஆராய்ந்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : மாணவர்களுக்கு பாடப் புத்தக சுமையை குறைக்கும் புதிய வழிமுறையை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க நான் புதிய வழியை கண்டுபிடித்துள்ளேன். ஒவ்வொரு பாடப் புத்தகத்...
தமிழகம்
மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வக்கீல்கள் வாதம்
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று நடந்த வழக்கு விசாரணைகளின் போது வக்கீல்கள் தமிழில் வாதாடினர். ஐகோர்ட்டில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும், தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், மதுரை ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வக்கீல்கள் துவக்கினர். பிறகு தமிழில் வாதாட...
தமிழகம்
மகளுடன் நர்ஸ் தற்கொலை வழக்கு : ஜாமீன் கேட்டு டாக்டர் மனு
கோவை : விஷ ஊசியால் மகளை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்ட நர்ஸ் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி (40). கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திர...
தமிழகம்
சிங்கப்பூரில் தமிழர்களுக்கு சித்ரவதை : தப்பி வந்தவர் ஐகோர்ட்டில் தகவல்
மதுரை : சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் சித்ரவதைக்குள்ளாவதாக, 12 ஆண்டுகளுக்கு முன் மாயமான வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை அருகே மேலப்பூங்குடியை சேர்ந்த சிட்டு தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் கணவர் கிருஷ்ணன், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். 1998ல் சொந்த...
தமிழகம்
வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன், மாமியாருக்கு சிறை
திருநெல்வேலி : வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்திய கணவர்,மாமியாருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்த பலவேசம் மகள் சங்கரிக்கும், அம்பாசமுத்திரம், வாகைகுளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கணேசனுக்கும் கடந்த 2007 டிச.,16ல் திருமணம் நடந்தது. பெண் வீ...
தமிழகம்
காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த வழக்கு : சரணடைந்த இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
சென்னை : காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளிகள் இருவர், இன்று கோர்ட் அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் காலாவதியான மருந்துகளை சேகரித்து, சென்னை நகர் முழுவதும் விற்பனை செய்த வழக்கில் கொடுங்கையூர் ரவி என்ற பிரபாகரன்(40),...
தமிழகம்
தந்தையுடன் செல்ல மைனர் பெண்ணுக்கு ஐகோர்ட் அனுமதி
மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடத்தல் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட மைனர் பெண்ணை தந்தையுடன் செல்ல அனுமதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரை சேர்ந்த சாமிநாதன் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் 14வயது மகள் பிப்ரவரி 26ம் தேதி பள்ளி சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என...
தமிழகம்
ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு இன்சூரன்ஸ்: ஐகோர்ட் யோசனை
மும்பை : ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வகையில், இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தை மும்பை ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2004ல் சமீர் ஜவேரி (39) என்பவர், புறநகர் ரயிலில் அடிபட்டு தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். ரயில்வே விபத்துக்களில் இறந்தோரின் குடும்பத...
தமிழகம்
காலாவதியான மருந்துகளுடன் உள்ள குடோன்களுக்கு சீல் : தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள், போலீஸ் தீவிரம்
சென்னை : தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகளை பதுக்கி வைத்துள்ள குடோன்கள் மற்றும் மருந்துக் கடைகளில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர சோதனை நடத்தி, "சீல்' வைத்து வருகின்றனர். சென்னையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், பல இடங்களில் உள்ள குடோன்கள்,"சீல்' வைக்கப்பட்டன. காலாவதியான மருந்துகளை...
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
4