text
stringlengths 11
513
|
|---|
செம்மைப்படுத்தும் வகையில் கொள்கைகளையும் சட்டத்திட்டங்களையும் கொண்டு வந்தார். பயன்பாட்டு சார்ந்த பாதுகாப்பு புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ( renewable resources ) தீர்ந்து போகாத வகையில் பயன்படுத்தப்படவேண்டும் என்கிறது. அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் ப்ளாரிடாவின் பெலிகன் தீவில் வனவிலங்குகளுக்கான முதல் சரணாலயத்தை நிறுவுகின்றார். பின்னர் 1909 ரூஸ்வெல்டின் அரசு 200000 சதுர கி.மீட்டர் அளவிலான தேசீயக் காடுகளையும் , 51 தேசீய வனவிலங்குச் சரணாலயங்களையும் 18 சிறப்புப் பாதுகாப்புப் பரப்புகளையும் அத்துடன் கிராணட் கென்யான் என்ற
|
பள்ளத்தாக்கையும் படைத்தார். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் , புவிச்சூழலின் தவறானப் பயன்பாடு அதிகரிக்கவும் , மக்களுக்கு அதன் உண்மை தெரிய வருகையிலே தான் சூழல் இயக்கஙகள் தொடங்கின. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பல முக்கியமான பாதுகாப்பு மற்றும் சூழல் பரிந்துரை நிகழ்வுகள் கீழே காலவரிசையாகத் தரப்பட்டுள்ளன. 1940 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் , ஐக்கியநாடுகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் உலகச் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சார்ந்து கவலை கொண்டன. 1951 இவ்வருடம் இயற்கைப்பாதுகாப்பு நிறுவப்பெற்றது. 1950 ஆம் , 1960
|
ஆம் வருடங்களில் இராசயனக் தொழிற்களை மெர்குரி மாசடைவால் மைனமாட்டா , ஜப்பான் பகுதியை தாக்கின. 1960 ஆம் ஆண்டுகளில் துணி துவைக்கப் பயன்படும் சோப்பிலிருந்து வெளிப்பட்ட நுரை பல ஆறுகளை மூடிற்று. 1960 ஆம் 1970 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் புகழ்பெற்ற வழுக்கைக் கழுகுகள் ( bald eagles ) வாழிட இழப்பினாலும் , வேட்டையாடுதலாலும் பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலாலும் எண்ணிக்கையில் வெகுவாக குறையத் தொடங்கின. 1961 உலக வனவிலங்கு நிதி தொடங்கப்பெற்றது. 1962 ராச்சேல் கார்சன் “ சைலன்ட் ஸ்பிரிங்க் ” ( Silent spring ) என்ற
|
நூலினை பதிப்பித்தார். இந்நூல் பொதுமக்களுக்கு பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் அபாயங்களை , குறிப்பாக மனிதர்களுக்கு ஏற்படும் அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 1963 – நியூயார்க் நகரத்தின் வளிமண்டலம் மாசடைந்ததால் கிட்டத்தட்ட 300 பேர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 1967 ஆம் ஆண்டு டேரியி கால்வாய் ( Torrey canyon ) உடைந்து ஆயில் கசிந்து சுற்றுச்சூழலைப் பாதித்ததை உலக மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர். 1960 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர்தான் , அறிவியலாளர்கள் சுற்றுச்சூழலின் நிலைமையினைப் பற்றிய
|
கவலையினை வெளிப்படுத்தினர். ( எடுத்துக்காட்டு பால் , எரிலிச் , பேரி காமனர் , லாமண்த்கால் , யூஜின் ஓடம் , கெனித் வாத் , காரத் ஹார்டின் ஆகியோரது படைப்புகள். 1967 சூழிட பாதுகாப்பு நிதி தொடங்கப்பட்டது. 1968 பாரிஸ் நகரில் உயிர்க்கோள மாநாடு நடந்தது. இதில் உலக சுற்றுச் சூழலின் நிலைமை சோதிக்கப்பட்டது. 1968 இல் காரட் ஹார்டின் பொதுமக்களின் துயரம் ( Tragedy of the commons ) என்ற ஒரு கட்டுரையை அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டார். 1970 -ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே அமில மழையின் வீழ்ச்சியில் வடஅமெரிக்கா மற்றும்
|
ஐரோப்பாவின் ஏரிகள் அனைத்தும் திக்குமுக்காடி , திணறியதாக அறிவியல் சான்றுகள் கூறுகின்றன. 1970 , ஏப்ரல் 22 அன்று முதன் முதலாக புவி நாள் ( Earth Day ) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டது. 1970 , தேசிய வள பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது. 1971 , கனடாவில் சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1971 , பசுமை அமைதி ( Green Peace ) நிறுவப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வளர்ச்சியின் எல்லைகள் ( Limits to Growth ) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் , எதிர்காலத்தில் புவி வாழிடத்தின் நிலைமை மற்றும்
|
வளங்கள் குறைந்து வருவதை அறிதல் ஆகியவைகள் சம்மந்தமான செய்திகளை கணிப்பொறி மாதிரிகள் ( Computer models ) மூலம் எடுத்துச் சொல்லப்பட்டன. உலக மக்கள்தொகை , தொழில்மயமாதல் , மாசடைதல் , உணவு உற்பத்தி மற்றும் வளம் குறைதல் ஆகியவைகளின் வளர்ச்சிப் போக்குகள் தற்போது உள்ளபடியே இருந்தால் சிலவேலையில் அடுத்த நூறு ஆண்டுகளில் வளர்ச்சி எல்லைகளைத் தொடக்கூடும் என்ற கருத்து தெரிவிக்கப்பெற்றது. 1972 , அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை நிக்ஷான் ( Nixon ) ஏற்படுத்தினார். 1972 , அமெரிக்க ஐக்கிய நாடுகள் “
|
நாடுகளின் கூட்டமைப்பு சுற்றுக்சூழல் திட்டம் ” என்ற ஒன்றினை உருவாக்கி உள்ளது. 1972 , அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை ஸ்டாக்கோம் நகரில் மனித சூற்றுச்சூழலுக்கான மாநாடு ஒன்றை நடத்தியது இந்த மாநாட்டில் மனித வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டது ; மேலும் பல முக்கியமான உலக கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. 1972 , அமெரிக்க ஐக்கிய நாடுகளில் டிடிடீ ( DDT ) பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. காரணம் , வாழும் உயிரனங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டதே. 1973 எண்ணெய் போன்ற வளங்களைப் பாதுகாப்பதற்கு
|
ஒ.பி.இ.சி. ( OPEC ) என்ற என்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் வாணிபம் செய்வதைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தைத் தெரிவித்தது. 1973 , கூஸ்டோ ( Cousteau ) அமைப்பு நிறுவப்பட்டது. 1977 லவ் கால்வாய் ( Love Canal Newyork ) நிகழ்ச்சி கழிவுகளின் ஆபத்தை பொதுமக்களுக்கு விளக்கியது. 1979 மூன்று மைல் தீவு அனுமின்சக்தி நிலையம் கிட்டத்தட்ட அழிந்து போயிற்று. 1980 , புவி 2000 என்ற அறிக்கை ( Global 2000 Report ) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 1980 , ஜேம்ஸ் லவ்லாக் ( James Lovelock ) கேயா :
|
புவி வாழ்வின் ஒரு புதிய பார்வை ( Gaia : A New Look at Life on Earth ) என்ற புத்தகத்தை எழுதுகின்றார். அவர் தன் புத்தகத்தில் புவியானது உயிரினங்கள் வாழ போதுமான சூழலை அளித்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பொதுவாக கயா ’ ( Gaia Hypothesis ) அனுமானம் என்று அழைக்கப்படுகின்றது. புவிக்கோளின் தன்மையை மனிதர்கள் மாற்றி வருகின்றனர். புவியின் தன்மை எப்பகுதியில் மாற்றப்பட்டுள்ளதோ அப்பகுதியில் உள்ள உயிரினங்களால் இழந்த புவியின் தன்மைக்கு ஈடுகட்ட முடியாது என்று சில அறிவியலாளர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர். 1980-1990
|
ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அண்டார்ட்டிகாவின் வளிமண்டல கண்காணிப்பு தொகுப்பின்படி படுகை அடுக்கில் உள்ள ஒசோனின் பருவகாலக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1981 லாயிஸ் கிப்ஸ் ( Lois Gibbs ) என்பவர் ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அகற்றுதல் ” என்ற அமைப்பை உருவாக்கினார். லவ் கால்வாய் பிரச்சனைகளைத் தீர்க்க இந்த அமைப்பு உதவி வருகின்றது. லவ் கால்வாய் தற்பொழுது நலவாழ்வு சூழல் மற்றும் நீதி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 1983 , ஜூனியன் சைமன் மற்றும் ஹெர்மன் காண் ஆகியோர் “ வளமான
|
புவி : உலகம் 2000 – க்கான பொறுப்பு ” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைத்தலுக்கும் , வளங்களை பயன்படுத்துதலுக்கும் , சுற்றச்சூழல் தேவை என்பதற்கு எதிராக இந்த புத்தகத்தில் எடுத்துச்சொல்லப்பட்டுள்ளது. 1983 இன் தொடக்கத்தில் , பசுமை கட்சிகள் ( Green Parties ) சில ஐரோப்பிய நாடுகளில் தேர்வு செய்யப்பட்டன. 1985 , அயனமண்டலக் காடுகள் அழிப்பதைக் கட்டுப்படுத்த மழைக்காட்டு செயல் வளையம் ( Rainforest Action Network ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1986 , செர்னோபில் அணுமின் சக்தி நிலையம் வெடித்து
|
பெரும் பாதிப்பை ஏற்படுத்தின வெப்பக்கதிர்கள் வளிமண்டலத்திற்குச் சென்றன. 1986 மழைக்காட்டு கூட்டமைப்பு ( Rain forest alliance ) நிறுவப்பட்டது. 1987 சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான உலக குழு ( World commission on Environment and development ) நம்பொதுவான எதிர்காலம் ( Our Common Future ) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடானது “ பேணத்தகுந்த மேம்பாட்டு ” ( Sustainable development ) என்ற கருத்தினை உலகுக்கு அறிமுகம் செய்தது. 1987 மாண்ட்ரியால் வழக்கு 24 நாடுகள் படுகை அடுக்கில் உள்ள ஓசோன் படலம் பாதிப்பை தடுக்கக்
|
கையொப்பம் இட்டன. 1990 இல் லண்டனிலும் 1992 இல் கோபன்ஹேகனிலும் மற்றும் சமீபத்தில் 1997 இல் மாண்ட்ரியாவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1988 , ஜேம்ஸ் ஹான்சன் என்பவர் நாசா ( Nasa ) விலிருந்து , உலக வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்தல் , உணவு அளிப்பு நீர் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை அமெரிக்க ஐக்கிய பாராளுமன்றத்தில் விளக்கினார். 1988 , புவிப் பங்கு ( Earth Share ) நிறுவப்பட்டது. 1989 எக்ஸான் வால்டெஸ் ( Exxon Valdez ) 1 மில்லியன் கெலன் எண்ணெய்யை அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுன்ட்ல் வெளியேற்றியது. 1990 ஆம்
|
ஆண்டுகளில் பெரும்பாலான மீன் வளர்ப்பு பகுதிகள் மூடப்பட்டன. வள மேலாண்மையில் ஏற்பட்ட பிரச்சனைகளே இதற்குக் காரணம். 1940 , 141 நாடுகளில் உள்ள 200 மில்லியன் மக்கள் 20 ஆவது வருட புவி நாள் ( Earth Day ) கொண்டாடினர் 1991 , இணையத்தில் சூழலிணைப்பு ( Envirolink ) செய்யப்பட்டது. 1992 , பிரேசிலில் ஐக்கிய நாடுகள் ரியோ மாநாடு நடந்தது. 1992 கால நிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகளின் கூட்ட வரைவு செய்து ஆண்டு கதிர் தவிர்ப்பானிலிருந்து வெளியேரும் வாயு மற்றும் காலநிலை மாற்றத்தின் அச்சுருத்தல் சம்மந்தமானவைகளுக்கு நாடுகளிடையே
|
உடன்படிக்கைச் செய்யப்பட்டது. 1998 கியோடோ புரட்டகல் , 67 நாடுகள் கையொப்பம் இட்டனர். இந்த உடன்படிக்கை , கதிர்தடுப்பானிலிருந்து வெளியேரும் வாயு ( Green house gas ) வளி மண்டலத்திற்குச் செல்வதைக் குறைக்கச் செய்யப்பட்டதாகும். 2002 , பேணத்தகுந்த மேம்பாடு , ஜொகன்னஸ்பர்கில் ஐக்கியநாடுகளின் மாநாடு நடந்தது. நிகழ்ச்சிநிரல் 21 -லிருந்து நடவடிக்கை 21 ( Agenda 21 to Action 21 ) வரை தெளிவாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. நீர் வளமேலாண்மை மற்றும் பாதுகாப்பு மனிதனின் நீர் தேவையானது இரண்டு முக்கிய காரணத்திற்காக அதிகரித்துக்
|
கொண்டே வருகின்றது. முதலாவதாக , மக்கள்தொகை அதிகரிப்பு , இரண்டாவதாக , உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உயர புதியதாகத் தோன்றும் தொழிற்சாலை , வேளாண்மை மற்றும் வீட்டு உபயோகம் ஆகியவைகளுக்கு நீரின் தேவையும் அதிகரித்து வருகின்றது. இருப்பினும் புவியியல் ஒரு குறிப்பிட்ட அளவு நன்னீரே உள்ளது ; பல நாடுகளில் நீர் பற்றாக்குறையும் நிலவுகின்றது. ஆனால் சில நாடுகளில் எடுத்துக்காட்டாக கனடா மற்றும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் ஆகியவைகளில் நீர் தட்டுப்பாடு இல்லாமல் நீர் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த
|
நீர் வளத்தைச் சிறந்த முறையில் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு செய்யாவிடின் நீரின் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீரின் தேவைகள் வீட்டு உபயோகம் , தொழிற்சாலை மட்டும் அல்லாமல் மற்ற துறைகளான மீன் வளர்ப்பு , வனவிலங்கு , பொழுதுபோக்கு போன்றவைகளுக்கும் நீர் தேவைப்படுகின்றது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். நீரின் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்த பல நாடுகள் பல்வேறு நீர் வள மேம்பாட்டுத் திட்டங்களைத் தீட்டி உள்ளன. தரமான நீரை போதுமான அளவு அளிப்பதும் சூழல் மேம்பாடு அடையச் செய்வதும் இவற்றின் நோக்கங்களாகும்.
|
நீர்ப்பாதுகாப்பு நுட்பங்கள் ( Water conservation Techniques ) சில நுட்பங்களைப் பயன்படுத்தி , வேளாண்மை , தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரைத் திறமையாக பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட துறைகளில் பல நுட்பங்களைப் பயன்படுத்தி நீர் வீணாவதைத் தடுக்கலாம். வேளாண்மைக் கழிவினை குறைத்தல் உலகில் பயன்படுத்தப்படும் நீரில் 70 விழுக்காடு நீர்ப்பாசனத்திற்காகப் பயன்படுத்தப் படுகின்றது. பெரும்பாலான நீர்ப்பாசன முறைகள் பயிர்கள் உள்ள நிலத்தில் நீரைப் பாய்ச்சுகின்றன ; நீரை கால்வாய்கள் மூலம் வயல்களுக்குத்
|
திருப்பி விடுகின்றன ; அல்லது நீர் தெளித்தல் முறைகளைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக இம்முறைகள் சிறந்த முறைகள் அல்ல காரணம் 50 விழுக்காடு நீர் மட்டுமே தாவரங்கள் எடுத்துக்கொள்கின்றன ; மீதி உள்ளவை ஆவி ஆகி வளிமண்டலத்தை அடைந்து விடுகின்றது. சிறிய அளவிளான ( Micro irrigation ) நீர்ப்பாசன நுட்பங்களைப் பயன்படுத்தும்பொழுது பயிர்களுக்கு அளிக்கப்படும் நீரில் 40-60 விழுக்காடு குறைந்து விடுகின்றது. மேலும் சில முறைகளைப் பயன்படுத்தி வேளாண்மைக்குப் பயன்படுத்தப்டும் நீரை குறைக்கலாம். அவைகள் குறைவான அளவு நீர் தேவைப்படும் உணவுப்
|
பயிர்களைப் பயிர் செய்தல். ஆவியாதைலைக் குறைக்கவும் , நிலத்திற்குள் செல்லும் நீரைக் குறைக்கவும் பைப் வழியாக அல்லது மூடப்பட்ட நீர்ப்பாசன முறைகளைக் கையாளுதல். இரவு அல்லது அதிகாலை நேரத்தில் , அதாவது ஆவியாதலின் அளவு குறைவாக இருக்கும் பொழுது , பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல். நீருக்காகக் கொடுக்கப்படும் சலுகைகளைக் குறைத்தல் மற்றும் நீர் வளத்திற்குக் சரியான மதிப்பை அளிக்கத் தூண்டுதல். தொழிற்சாலைக் கழிவுகளைக் குறைத்தல் நீரை அதிகமாக உபயோகப்படுத்துவதில் இரண்டாவதாக விளங்குவது தொழிற்சாலை ஆகும். தொழிற்சாலைகளில் நீரின் அளவைக்
|
குறைவாக உபயோகப்படுத்துவதனால் மற்ற உபயோகத்திற்கு அதிக நீர் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல் மாசுபடுதலின் அளவும் குறையும் கீழ்க்கண்ட முறைகளினால் தொழிற்சாலைகளில் நீர் உபயோகத்தைக் குறைக்கலாம். நீரைத் திரும்பப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தொழிற்சாலைகளில் வடிவமைத்தல் ; எடுத்துக்காட்டாக தொழிற்சாலைகளில் குளுமையை உண்டாக்கப் பயன்படுத்தப்படும் நீரினை குளிர்கலன்களில் ( Cooling tower ) தேக்கி மீண்டும் உபயோகப்படுத்துதல் ஆகும். நீரைத்திரும்ப உபயோகப்படுத்துதலை தொழிற்சாலைகளில் ஊக்குவித்தால் நீருக்காக செலவிடப்படும் தொகை அதிகமாகும்.
|
பொருட்களைத் திரும்பப் பயன்படுத்தித் தயாரித்தலுக்கு நீர் குறைந்த அளவே தேவைப்படுகின்றது. உதாரணமாக , 1 டன் அலுமினியத் தாதுவிலிருந்து தயாரிக்க ஆகும் நீரின் அளவைவிட 97 விழுக்காடு குறைகிறது. வீடுகளில் உபயோகப்படுத்தும் நீரின் அளவைக் குறைத்தல் : வீடுகளில் உபயோகப்படுத்தும் நீரின் அளவைக் குறைக்க கீழ்க்கண்ட உத்திகளைக் கடைபிடிக்கலாம். வறண்ட மற்றும் அரை வறண்ட நகரப் பகுதிகளில் ( arid and semi arid urban area ) புல்வெளிகளை அகற்றவேண்டும். வீட்டுத் தோட்டத்திற்கும் , புல்வெளிக்கும் நீர்ப்பாய்ச்ச சிறப்பு நீர்ப்பாசன முறையை
|
ஊக்குவிக்கவேண்டும். நல்ல திறமையான பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் , துணி துவைக்கும் இயந்திரம் , குளியலறை மற்றும் கழிவறைகளில் குறைவான நீர் செலவாக தேவையானதைத் தயாரிக்க சட்டம் இயற்றவேண்டும். நீர் பகிர்ந்தளிப்புத் தொகுதிகளின் கசிவைக் கண்டறிந்து சரி செய்யத் தூண்டுதல் ; உலகத்தில் பெரும்பாலும் நகர்ப்பகுதிகளில் நீர் பகிர்ந்தளிக்கும் பொழுது நீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளினால் 25 முதல் 50 விழுக்காடு நீர் சேதமடைகின்றது. வீட்டு உபயோக நீருக்கு சரியான விலையை நிர்ணயித்தல் : இந்த விலை சுற்றுச்சூழல் மதிப்பை அதிகம்
|
உபயோகப்படுத்துதல் மற்றும் வளங்கள் குறைந்து போதலின் பிரதிபலிப்பு ஆகும். நீருக்கு அதிக விலை கொடுப்பதால் தான் மக்கள் நீரை பாதுகாக்கிறார்கள். ( குறைந்த அளவு உபயோகிக்கிறார்கள் ) என்று பல ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. போல்டர் ( Boulder ) கொலரேடோ ( Colorado ) போன்ற நகரங்களில் மீட்டர் அறிமுகப்படுத்தி இருப்பதனால் நீர் உபயோகித்தல் 30 விழுக்காடு குறைந்துள்ளது. கனடாவில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி நகராட்சிகளில் நீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. கல்வியின் மூலம் மக்களுக்கு தன் சொந்த உபயோகத்திற்கு எவ்வாறு
|
குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தலாம் என்பதை தெரிவித்து அவ்வாறே நடக்க ஊக்குவிக்க வேண்டும். நீர் அளிப்பை அதிகரித்தல் நீர் அளிப்பை அதிகரிக்க மனிதர்கள் வெவ்வேறு மாறுபட்ட முறைகளை பயன்படுத்துகின்றார்கள். அதில் சில தொழில் நுட்பங்களைப் புகுத்தி ஓடும் நீர் நிகழ்வுகளில் மாற்றம் செய்துள்ளார். அணைகளும் , நீர்த்தேக்கங்களும் ஓடும் நீரின் குறுக்கே சிமெண்ட் சுவர்களால் ( கான்கீரிட் ) கட்டி பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகளவில் தற்பொழுது 3,60,000 அணைக்கட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சில மின்சாரம் உற்பத்தி
|
செய்யப்பயன்படுகின்றன. நீர் தேக்கப்பட்டிருக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகளில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. சில நீர்த் தேக்கங்களில் படிவுகள் அதிகம் தேங்கி விட்டதால் அதனை நீர்த்தேக்கவும் , நீர் மின்சக்தி உற்பத்தி செய்யவும் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. மற்ற நீர்த்தேக்கங்களில் அதிகமான நீர் ஆவியாதல் அல்லது கசிவு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. எகிப்தில் உள்ள அஸ்வான் அணைக்கட்டில் வருடந்தோறும் ஏரளமான அளவு நீர் ஆவியாகி வீணாகின்றது. இந்த அணையில் உள்ள நீரில் ஒரு பாதியை திட்டமிட்ட அளவு
|
நீர்ப்பாசனத்திற்கு முறையாக அளிப்பதன் மூலம் ஆவியாதல் பிரச்சனை குறைக்கப்பட்டு உள்ளது. சமீபகாலமாக , நிறைய நாடுகள் நிலத்திற்கு அடியில் உள்ள நீரை எடுத்து நன்னீர் அளிப்பை அதிகப்படுத்தியுள்ளன. நீர்க்கோளத்தில் உள்ள நன்னீர் 10 விழுக்காட்டிற்கு மேல் நிலத்தடி நீரில் உள்ளது. சவூதி அரேபியா 75 விழுக்காடு நீரை நிலத்தடி நீர் மூலம் பெறுகின்றது. நிறைய இடங்களில் இயற்கையாக புதுப்பிக்கும் நீரின் அளவை விட வெளியே எடுக்கும் நீரின் அளவு அதிகமாக உள்ளது. நிலத்திற்கடியில் நீர்த்தேக்கங்களில் அளவு குறைந்து வருவதால் நிலம் இறங்குதல். புவி
|
அதிர்ச்சி , புவியில் அமிழ்துளை ( Sinkhole ) ஏற்படுதல் மற்றும் உப்பு நீர் ஊடுருவுதல் ஆகிய பிரச்சனைகள் உண்டாகின்றன. ஊ மழைநீர் அறுவடை மற்றும் நுட்பங்கள் ( Rainwater Harvests and Techniques ) பல நாடுகளில் குறிப்பாக பருவக்காற்று காலநிலை மற்றும் நீண்ட வறட்சி பருவங்களை கொண்டுள்ள நாடுகளில் நீர்ப் பற்றாக்குறை மழை பெய்யாததால் ஏற்பட்டவை அல்ல ; சமனற்ற பருவ மழையே காரணம். வருட மழைப்பொழிவு சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் இருப்பதால். நீரை சேமிப்பது கடினம். எடுத்துக்காட்டாக , இந்தியாவில் வருடத்திற்கு 2.1 ட்ரில்லியன் கன
|
மீட்டர் நன்னீர் கிடைக்கின்றது. இந்நீரில் மூன்றில் ஒரு பங்கு ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்திலேயே பொழிந்து விடுகின்றது. எனவே ஓடுகின்ற நீரின் அளவு அதிகமாக காணப்பட்டு , அது நாட்டிலுள்ள ஆறுகளில் கலந்து கடலை சென்றடைகின்றது. ஆயிரக்கணக்கான அணைகள் இந்தியாவில் காணப்படலாம். அவைகள் குறைந்த அளவு மழை நீரை பெறுகின்றன. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வருடம் முழுவதுமாக பெறப்படும் நன்னீரின் அளவு 2.5 ட்ரில்லியன் கன அளவு ஆகும். சென்ற நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பில் மழை பொழிவின் பொழுது ஓடுகின்ற
|
நீரை பெரிய அணைக்கட்டுகள் கட்டி அதில் தேக்கி வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அணைக்கட்டுகள் அமைந்துள்ள இடத்தில் மழை அளவு குறைந்திருத்தல் , அணைக்கட்டுகள் அமைய வேண்டிய இடங்கள் மேடு பள்ளமாக காணப்படுதல் , அப்பகுதியில் உள்ள மக்களை இடம் பெயரச் செய்தல் , தல சூழ் தொகுதிகளில் மாற்றம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்நூற்றாண்டிலும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் தற்பொழுது போதுமான நீரைப் பெற தல நீர் சேகரிப்பில் ( Local Water Harvesting ) ஈடுப்பட்டுள்ளன.
|
இராஜஸ்தானில் , நீர் பற்றாக்குறையினால் முன்னேற்றம் அடைய இயலாமல் ஏழ்மையில் இருக்கும் மக்களை வெளியே கொண்டு வர கிராமமக்கள் ஓர் இயக்கத்தின் கீழ் இணைந்து செயல்பட்டு தல நீர் தேக்க வசதிகளை செய்துக் கொண்டனர். நீர் தேக்க அமைவிடத்தை கிராம மக்கள் தெரிவு செய்ததும் , இந்த இயக்கமானது மண் அணைக்கட்டு ( Earthern Dam ) கட்ட ஏற்பாடு செய்வர். அனைத்து கற்கள் , மண் போன்ற பொருட்கள் உள்ளூர் பகுதிகளிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். மேலும் கட்டுமானப் பணிக்கு தேவையான தொழிலாளர்களையும் கிராமமே அனுப்பி வைக்கும். இந்த இயக்கத்தின் தலைவர்
|
பொறியியல் வடிவமைப்பு உதவிகளை மட்டும் செய்துகொடுப்பார். தேக்கி வைக்கப்படும் நீரானது கிராம மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு , நிலநீர் மட்டமும் உயர துணை புரிகின்றன. முதலில் உள்ளூரில் அரசாங்கம் சாரா அமைப்பானது 45 முழு நேர தொழிலாளர்கள் மற்றும் 230 பகுதிநேர தொழிலாளர்களை கொண்டு 4500 உள்ளூர் நீர் தேக்கங்களை இராஜஸ்தானில் அமைத்துள்ளனர். இதனால் கிராம மக்களின் வருமானம் உயரவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைத் தரமும் உயருகின்றது. இந்நீர் தேக்க வசதிகளை ஏற்படுத்த பண உதவியை ஃபோர்டு அமைப்பும் ( Ford Foundation ) மற்றும் மற்ற
|
அமைப்புகளும் செய்துள்ளன. தலநிலப்பகுதியில் சிறிய நீர்த்தேக்க அமைப்புகளை ஏற்படுத்த காரணிகள் சாதகமாக இருந்தால் அங்குள்ள மக்களுக்கு அது ஒரு வரப்பிரசதமாக இருக்கும். இந்த அணுகு முறை பருவக்காற்று கால நிலையுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல் பாலை வனப்பகுதிகளில் பயன்படுத்தி நீர் வளத்தை பெருக்கிக் கொள்ளலாம். குறைவான பொறியியல் உதவியோடு உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சமூகங்கள் இந்த நீர்த் தேக்க பணியை செய்து பலன் அடையலாம். மலையின் எப்பகுதியில் மழை அதிகமாக பொழிகின்றதோ அப்பகுதியில் திட்டுகள் அல்லது படிக்கட்டுகள் அமைத்து
|
மழைநீரை தேக்க வைத்துக் கொள்வது மற்றொரு நுட்பமாகும். திட்டுகள் / படிகட்டுகள் அமைக்க அங்குள்ள விவசாயிகளே அப்பகுதியினை உழுது அமைத்துக் கொள்ளலாம். ஆனால் நில அளவையாளர்களின் ( Surveyors ) ஆலோசனைப்படி இவைகளை அமைத்தால் அதிக பயனை பெறுவர். திட்டுகளின் பக்கங்களில் உள்ள ஈரப்பதமானது தாவரங்கள் , மரங்கள் , பழவகைகள் மற்றும் சமையல் செய்ய தேவைப்படும் விறகுகளை கொடுக்கும் மரங்கள் ஆகியவைகள் வளரவும் , திட்டுகள் கடின தன்மையைப் பெற்று நிலையாக இருக்க உதவுகின்றது. இந்தியாவில் மலைப்பகுதிகளில் உள்ள அரைப் பாலைவனத்தில் இது நடைமுறையில்
|
உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள விவசாயிகள் மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு செய்வதால் நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. மழைநீர் சேகரிக்கும் பழக்கம் , சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பாலைப் பகுதியில் எங்கு நீர் பற்றாக்குறை உள்ளதோ அங்கு உள்ள மக்கள் திறந்த தொட்டிகளிலும் திறந்த கிணறுகளிலும் மற்றும் கட்டிடங்களின் கூரைகளிலிருந்து நீரை சேகரிக்கும் பழக்கமும் சில நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. உயர்நுட்பங்களான , துல்லியமான நிலத்தடி நீர் கண்டறிதல் முறை ஆராய்ச்சி சாதனங்கள்
|
ஆகியவற்றின் பயன்பாடுகளினால் கைக்குழாய்களும் குழாய் வழி நீர் வழங்கல் திட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் மக்கள்அறிந்த நுட்பங்களும் சமூகத் தீர்வுகளுக்கான முக்கியத்துவத்தின் மதிப்பும் தாழ்ந்துள்ளது. எனவே சென்ற காலங்களில் மக்கள் எவ்வாறு மழைநீரை சேகரித்து நீர்ப் பிரச்சனைகளை தீர்த்தார்கள் என்பதை நாம் அறிந்து அதனைப் பின்பற்ற வேண்டும். நகர்புறங்களில் மழைநீர் அறுவடை செய்யும் முறைகள் ( Methods of Rain water Harvesting in Cities ) இருமுறைகளில் மழைநீரானது அறுவடைச் செய்யப்படுகின்றன : 1. நிலத்துக்குள் அல்லது
|
நிலத்திற்கு மேல் தொட்டிகள் அமைத்து மழைநீர் சேகரித்தல் ; மற்றும் 2. நிலத்தில் நீரை நிரப்பி நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்துதல் நீர் அறுவடை செய்ய தேவைப்படும் பொருட்கள் எந்த மழைநீர் அறுவடை முறையாக இருந்தாலும் அது நான்கு முக்கியமான கூறுகளை கொண்டிருக்கின்றது. நீர்ப் பிடிப்பு பகுதி குழாய்கள் குடியிருப்பு தொட்டி நீர் நிரப்பும் வசதி / தேக்க வசதி படங்கள் 10.1. 10.2 மற்றும் 10.3 ஆகியவைகள் மழைநீர் அறுவடைச் செய்யும் நுட்பங்கள் மற்றும் அவைகளின் கூறுகளை குறிக்கின்றன. மழைநீர் அறுவடை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ள நுட்பங்கள்
|
எளிமையானதும் , தொழிலாளர்களைச் சார்ந்தும் மற்றும் குறைந்த பயனுள்ள பணச்செலவும் உடையதாக இருக்கின்றன. அ ) நாட்டுப்புற தொடக்கப்பள்ளிகளில் நிலத்தடி தொட்டிகள் அமைத்தும் , ஆ ) செயற்கை குளங்கள் வெட்டியும் மற்றும் இ ) பயன்படுத்தாத திறந்தவெளிகிணறுகளுக்கு மழைநீரை வாய்க்கால்கள் வழியாக திருப்பிவிட்டும் மழைநீரை மாநிலங்களுக்கு இடையே உள்ள ஆறுகளை இணைத்தல் : ( Interstates River Linkages ) இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் மழையில்லா காலங்களில் எங்கு வற்றும் ஆறுகள் மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுகின்றதோ அங்கு உள்ள
|
மக்களின் விருப்பமாகவும் ஆர்வாத்தோடும் எதிர்ப்பார்ப்பது மாநிலங்களுக்கு இடையே உள்ள ஆறுகளை இணைத்தலே ஆகும். இதே நிலை தான் உலகின் உள்ள அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றது. இந்தியாவின் மிகவும் முக்கியமான தலைப்பாக இது அமைந்து சென்ற சில மாதங்களாகவே அனைவராலும் விறுவிறுப்பாக பேசப்பட்ட வருகின்றது. உங்களுக்குத் தெரியுமா ? உயிர்ப்பன்மையில் சில தெரிவு செய்யப்பட்ட உயிரினங்களின் பண மதிப்பு ஒரு ஆண் சிங்கம் தன்னுடைய 7 ஆண்டுகள் வாழ்நாளில் பிரமிக்கக்கூடிய தனது மதிப்பினால் $ 515,000 வரை சுற்றுலாப் பயணிகளினால் சம்பாதித்துத்
|
தருகிறது. ஆனால் அதனுடைய தோலுக்குக்காக கொல்லும்பொழுது $ 1000 மட்டுமே கிடைக்கிறது. ருவாண்டா நாட்டில் உள்ள மலைக் கொரில்லாக்கள் இயற் சுற்றலாவின் மூலமாக 4 மில்லியன் டாலர் பணத்தை ஈட்டித் தருகின்றன. ஒரு குறிப்பிட்ட மரம் மூலமாக கிடைக்கப்பெறும் சூழியியல் சேவைகளாக உயிர்க்காற்று , சுத்தமான காற்று , வளமான மண் , மண் அரிப்பைத் தடுத்தல் , நீரைத் திரும்பப் பயன்படுத்துதல் , வனவிலங்குகள் இருப்பிடம் போன்றவைகளின் மதிப்பு $ 196,2150 ஆனால் அந்த மரத்தைச் சந்தையில் விற்றால் அதன் மதிப்பு $ 590 மட்டுமே. இந்தியாவில் நீர்வளத் துறையானது
|
தற்போது ஆபத்தான மற்றும் சோகமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்குபகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பை எற்படுத்துகின்றது. மற்ற பெரும்பாலானப் பகுதிகளில் வறட்சி நிலை வருகின்றது. பெருவாரியான மாநிலங்கள் ஆறுகள் இணைக்கப்படுவதை எதிர்க்கின்றன. பஞ்சாப் மாநிலமானது ஒரு படி உயரே சென்று அருகில் உள்ள மாநிலங்களுக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு அளிக்கும் நீர் ஒப்பந்தத்தை தடை செய்து விட்டு புதிதாக ஒரு மசோதவை நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப்பின் நடவடிக்கை இந்தியா முழுவதும் ஒரு முக்கிய பிரச்சனையாக
|
உருவெடுத்ததோடு மட்டுமல்லாமல் , தீவிர எதிர்ப்பும் எழுந்துள்ளது. எதிர்காலத்தில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆற்றுநீரைப் பயன்படுத்துபவர்கள் தன் தேவைக்காக சண்டையிட்டுக் கொள்வது இயல்பானதாகும். இது சிக்கலானது மற்றும் சங்கிலித் தொடர் போன்று பிரச்சனையை எழுப்புவதுதான். ஆனால் வேறுபாடுகளை களைவதற்கு பதிலாக , நீர் ஆஸ்திப் பெற்ற மாநிலங்கள் சட்டப்பூர்வமாக தன் மாநிலங்களின் வழியாகச் செல்லும் ஆற்று நீரையும் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் கேரள மாநிலமானது இது
|
சம்பந்தமாக ஒரு மசோதவை நிறைவேற்றியுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிரச்சனைக்கு அவசரச் சட்டம் இயற்றியுள்ளது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது மாநில ஆட்சி உரிமை வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டமேயாகும். நீர் அதிகம் உள்ள மற்ற மாநிலங்கள் எவையேனும் மத்தியஸ்தர்களாக செயல்பட்டால் , அதன் விளைவுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடுகின்றது. எனவே ‘ நீர் ’ வளத்தை மாநில பட்டியலிருந்து மத்திய பட்டியலுக்கு அல்லது மாநில – மத்திய பட்டியலுக்கு ( Concurrent List ) மாற்றி நீர் பிரச்சனைகளுக்கு
|
முற்றுப் புள்ளி வைக்க அதிகமானோர் குரல் கொடுக்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா ? சோட்டா நாக்புரி பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் மறைந்து வருகின்றன. சோட்டா நாக்புரி மலைச் சரிவுகளில் மாலை நேர மழைப்பொழிவானது தேயிலை பயிர் செய்ய சாதகமாக இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தது. காடுகள் அழிக்கப்பட்டதனால் மழைப்பொழிவு குறைந்தது. எனவே தேயிலைத் தோட்டங்கள் அந்தப்பகுதியில் இருந்து மறைந்து விட்டன. அரசியல் அமைப்புச் சட்டத்தில் “ நீர் ” அதாவது நீர் அளிப்பு , நீர்ப்பாசனம் , கால்வாய்கள் , வடிகால்கள் , திட்டுகள் , நீர்த்தேககங்கள்
|
மற்றும் நீர்சக்தி போன்றவைகள் குறிப்பு / பதிவு 17 , பட்டியல் – II இல் ( Entry 17 , List II - State List ) கொடுக்கப்பட்டுள்ளன. எனவே , இதனை பயன்படுத்தி மாநில சட்டசபை உறுப்பினர்கள் நீர் சம்பந்தமான நீர்வரத்துக் கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சட்டங்கள் இயற்றுகின்றனர். எனினும் மத்திய பட்டியலில் பதிவு 56 பட்டியல் | இன் படி மாநிலங்களுக்கிடையே உள்ள ஆறுகள் பள்ளத்தாக்குகள் ஆகியவைகளின் மேம்பாடு மற்றும் நீர்வரத்துக் கட்டுப்பாடு செய்ய பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்பதை விளக்குகின்றது.
|
அதாவது : பதிவு 56 ( மத்திய பட்டியல் ) கீழ்க்கண்டவாறு கூறுகின்றது. " மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு உரித்தான ( நீர் ) வரத்துக் கட்டுப்பாடு மற்றும் மேம்பாடுகள் பொதுநலனை கருத்தில் கொண்டு சட்டப்படி பாராளுமன்ற அறிவிப்பின் படி மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன ". சென்ற காலங்களில் மாநில பட்டியலில் உள்ள தொழிற்சாலை உத்தியோகம் போன்ற குறைகள் சட்டத்திற்கு மாறாக செயல்படும்பொழுது மைய அரசானது தலையிட்டு அதனை கட்டுப்படுத்தியும் ஆலோசனை கூறியும் வந்துள்ளது. தற்பொழுது நீர் சம்பந்தமாக எந்த
|
விதமான சட்டத்திருத்தமும் கொண்டு வருவதாக தோன்றவில்லை. பதிவு 56 , பட்டியல் I இன் படி , மைய அரசங்காமனது எந்த விதமான சட்டத்திருத்தமும் கொண்டு வராமல் மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் இணைப்பு பிரச்சனையை தீர்க்க இதற்கு முழு அதிகாரம் உண்டு. மேற்கண்ட நிகழ்வுகளின் பின்னனிக்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வந்து நாட்டின் மொத்த நீர்வளத்தில் 85 விழுக்காட்டிற்கு மேல் மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரலாம். இதைதான் தேசிய நீர்வள
|
மேம்பாட்டு ஒருங்கிணைப்பு திட்டக்குழுவும் பரிந்துரை செய்யப்படுகின்றது ( செப்டம்பர் 1999 ). கலந்தாய்வு முறை மாநிலங்களுக்கு இடையிலான நீர் வரத்துக் கட்டுபாடு மற்றும் மேம்பாட்டிற்காக மைய அரசின் சட்டத்திற்கு அதிகாரம் மேலும் வழங்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் , மைய – மாநில அரசுகள் கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்து நீர் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கலாம். பிரச்சனைகள் மற்றும் அதற்கான முக்கிய காரணிகளை ஆராய்ந்து நுட்பங்கள் மற்றும் பிரச்சனை தீர்வுகள் ஆகியவைகளை பயன்படுத்தி மாநிலங்களுக்கு இடையே சுமுக உறவு முறையினை
|
உருவாக்குவதே கலந்தாய்வு முறையின் முக்கிய நோக்கமாகும். மேலும் ஆஸ்திரேலியா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளது போல மாநிலங்களுக்கு இடையிலான ஒவ்வொரு ஆற்றின் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கு ஆற்றுப்படுகை அமைப்பு ( River Basin organisation ) ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். இவை தேசிய நீர் உரிமை குழுவிற்கு உதவியாக இருந்து மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகளின் மேம்பாடு மற்றும் மேலாண்மை செய்து வரவேண்டும். ஆற்று நிர்வாகச் சட்ட குழுவானது ( River Boards Act- 1956 ) இவ்வாறான நிறுவனங்களை உருவாக்க சட்டம் கொண்டு வரவேண்டும். அதிகாரம்
|
உள்ளவர்களே நீர் பிரச்சனைக்கு பயனுள்ள தீர்வினை காணமுடியும் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். எனவே மைய அரசானது மாநிலங்களுக்கிடையே உள்ள ஆறுகளை தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து நீர்வரத்துக் கட்டுப்பாடு மேலாண்மை தானே செய்து மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். என்னை விட்டு விடுங்கள் என்னை இங்கே விட்டு விடுங்கள் புவியின் ஆழத்தில் அவ்விருட்டின் சுகத்தில் என்னைத் தொடாதே. தொட்டால் , நீ பலி விதிகள் எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியாது தயவுடன் , கடவுளுக்காக. வளமேலாண்மை
|
அணுகுமுறை கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக வள மேலாளர்கள் மற்றும் அறிவியலார்கள் வள மேலாண்மை செய்ய நான்கு வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டுள்ளனர். 1. சுரண்டுதல் ( Exploitation ) கொடுக்கப்பட்ட கிடைத்த வளங்களை அதிமிகுதியாக பயன்படுத்தி அதிகமான பலனை அடைதலாகும். 2. இழப்பு தவிர்க்க பாதுகாப்பு அளித்தல் ( Preservation ) வளங்களை ஆபத்திலிருந்தும் இழப்பிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். 1880 ஆம் ஆண்டு ஜான் மூர் ( John Muir - Sierra Club ) அவர்கள் சில நிலப்பகுதிகளை தேசிய பூங்காவாக அறிவிக்க வேண்டும் என்று கூறியதால் தேசிய பூங்காக்கள்
|
நிறுவப்பட்டன. 3. பயன்பாட்டு அணுகு முறை ( Utilitarian Approach ) புதுப்பிக்கப்படும் வளங்களை நல்லமுறையில் நிர்ணயித்தல் வேண்டும். அப்போது தான் அது தீர்ந்து விடாமல் அதிக காலங்களுக்கு பயன் அளிக்கும். 4. இயற்தொகுதி அணுகு முறை ( Ecological Approach ) இம்முறையானது பல்நோக்கு பயன்பாடுகளை குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக காடுகள் , மரங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மற்றப் மதிப்புகளையும் கொண்டுள்ளன. குழப்பம் மற்றும் வள மேலாண்மை 1993 வது வெளியீட்டில் ( அறிவியல் 260 : 17 : 36 ) லுட்விக் , கில்பொர்ன் மற்றும் வால்டர்ஸ் (
|
Ludwig , Hilborn and Walters ) ஆகியோர் இயற்தொகுதி வளங்களை மேலாண்மை செய்வதில் இயற்கை வள மேலாளர்கள் பொதுவாக தோல்வியைத்தான் கண்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்தத் தோல்விக்கு காரணம் எவ்வாறு வளத்தொகுதிகள் வேலை செய்கின்றன என்பதை அறிவியல் ரீதியாக குறைவான அளவிலேயே அறிந்திருப்பதாகும். வளத் தொகுதிகள் அடிப்படையிலேயே குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையும் கொண்டுள்ளன. பெரும்பாலான மேலாண்மைகள் கொள்கைகளையும் நீள் இயக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளனர். எனவே வள மேலாளர்கள் இயற்த் தொகுதியின் தன்மையை
|
புரிந்து செயல்படவேண்டும் என்று முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கற்றல் அடைவுகள் மாணவர்கள் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மழைநீர் அறுவடை செய்யும் நுட்பங்களை அறிந்து கொண்டனர். மேலும் இயற்கை வளப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அவைகளின் மேம்பாட்டையும் புரிந்து கொண்டனர். 3. கோடிட்ட இடத்தை நிரப்புக 1. உயிரினப் பன்மை மற்றும் காட்டுத் தலங்களின் இழப்புகள் 2. காட்டு விலங்கினங்களைப் பொருத்தமட்டில் , பாதுகாப்பு அறிவியல். ஆகிய இரண்டு வகைகளுக்குள் அடங்கும். பத்தாம் நூற்றாண்டில் வீழ்ச்சி மக்கள் தொகை
|
மிகுதியாலும் வளக் குறைவாலும் ஏற்பட்டது என்ற நம்பிக்கை நிலவுகிறது. 4. சூழல் தத்துவம் மற்றும் பாதுகாப்பு என்பவைகளுல் ஏற்பட்ட முதல் முக்கிய மேம்பாடுகள் நூற்றாண்டில் நிகழ்ந்தன. பயிற்சிகள் பெறவேண்டும் என்று கூறியுள்ளார். 6. உலகில் பயன்படுத்தப்படும் நீரில் பயன்படுத்தப்படுகின்றது. சார்ந்தவையல்ல என்பவர் மனிதர்கள் சூழல் அறிவு முதிர்ச்சியை பெரு முயற்சியால் மற்றும் விழுக்காடு நீர்பாசனத்திற்காகப் நாட்டில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி நகராட்சிகளில் நீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. அலகு 5 நிலவரைபட விவரணம் மற்றும்
|
அளவை செய்தல் பாடம் 11 நிலவரைபட விவரணம் கற்றலின் நோக்கங்கள் நிலவரைபடத்தை எவ்வாறு படிக்கவேண்டும் என்பதற்கான அடிப்படைகளை மாணவர்கள் கற்று , புரிந்து கொள்ளல் ; 2. நிலவரைபடத்தின் பயன்பாடுகள் , அதில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மற்றும் மாணவர்களே எவ்வாறு சொந்தமாக குறியீடுகள் வரையலாம் என்பதை அறிந்து , திறனை வளர்த்து கொள்ளல் ; 3. புவியின் தோற்றங்களை புரிந்து கொள்ளும் திறனை வளர்த்தல். சில அடிப்படை கொள்கைகளை பயன்படுத்தி நிலவரை படத்தை படிப்பதற்கான திறன்களையும் , ஆற்றல்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளலாம். மாணவரோ
|
அல்லது மாணவியோ தான் படிக்கும் நிலவரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை ( Symbols ) மிக கவனமாகப் பார்த்து மனதில் பதிய வைத்தல் வேண்டும். மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் குறியீடுகள் அவர்களுக்கு தெரிந்த அல்லது கற்பனையில் உள்ள நிலத்தோற்றக் கூறுகளை குறிப்பனவாக இருக்கவேண்டும். புவியியல் ஆசிரியர் , மாணவர்கள் குறியீடுகளை உண்மையான நிலத்தோற்றக் கூறுகளுடன் சரியாக தொடர்புபடுத்தி பார்க்கின்றார்களா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் நான்காம் வகுப்பிலேயே முறையான நிலவரைபடங்களை
|
அறிமுகப்படுத்துவர். எனவே , இந்த வயதில் தான் குழந்தை தான் இருக்கும் இடம் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளை அறிந்து கொள்ள நிலவரைபடங்களை முதன் முதலில் பயன்படுத்த தொடங்குகிறது. அவ்வாறு நிலவரைபடத்தை பயன்படுத்துவதற்கு முன்பு முக்கியமான திசைகளை அக்குழந்தை அறிந்திருக்க வேண்டும். நமக்கு வழிக்காட்டியாகவும் புவியின் மேற்பரப்பில் உள்ள இடங்களை அறிந்து கொள்ள உதவுவதே நிலவரைபடத்தின் முக்கிய அடிப்படை பணிகளில் ஒன்றாகும். ஒரு குழந்தைக்கு திசைகள் தெரியாமல் இருந்தால் , நிலவரைபடத்தினை சிறப்பாக பயன்படுத்த இயலாது. உயர்நிலை
|
வகுப்பான +2 அல்லது 12 ஆம் வகுப்பிலும் இந்த அடிப்படை கொள்கைகளைத்தான் நிலவரை படத்தில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ள பின்பற்றப்படுகின்றனர். இவ்வகுப்பில் மாணவர்கள் நிலவரைபடத்தை மட்டும் படிக்காமல் ( அ ) தலவரைபடங்கள் மற்றும் ( ஆ ) வானிலை நிலவரைபடங்கள் மற்றும் பதிமங்கள் ஆகியவை பற்றியும் படிக்கின்றார்க நிலவரைபடத்தை படிக்கும் திறனை வளர்க்க , தொடர்ச்சியான பயிற்சி , திரும்ப கற்பித்தல் , திரும்ப கற்றல் போன்ற சில நுட்பங்களைக் கையாளவேண்டும். நிலவரைபடங்கள் நிலவரைபடம் என்றால் என்ன ? இந்த வினாவிற்கு பல வரையறைகள் உள்ளன. அதில்
|
ஒன்று : ஹார்லி மற்றும் வுட்வொர்ட் என்பவரது ( Harley and Woodward ) ( நிலவரைபடகலை , 1987 ) நிலவரைபடத்தின் முக்கிய பாகங்கள் ( Basic Map Components ) இயற்கை மற்றும் மனித நிலத்தோற்றங்களை பகுப்பாய்வு செய்ய நிலவரைபடங்களின் முக்கிய பாகங்கள் என்னென்ன , மற்றும் அவற்றை எவ்வாறு படிக்கவேண்டும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். நிலவரைபடத்தின் முக்கிய பாகங்கள் யாவன ? அ ) தலைப்பு ( Title ) நிலவரைபடம் எதைப்பற்றி கூறுகிறது மற்றும் புவியின் எந்தப் பகுதியினை விளக்குகிறது என்பதை அடையாளம் காட்டுவது தலைப்பாகும். ஆ ) குறிப்பு (
|
Legend ) நிலவரைபடத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் , குறியீடுகள் , கடல் மட்டத்தின் உயரம் போன்றவைகளை விளக்கவும் அறிந்து கொள்ளவும் குறிப்புகள் பயன்படுகின்றன. இ ) திசைக்காட்டி ( Direction Indicator ) நிலவரைபடத்தின் திசைகளைக் காட்டுகிறது. ஈ ) நிலவரைப்பட அளவைகள் ( Map Scales ) தூரத்தை அளக்க இது பயன்படுகிறது. நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கு அல்லது இடங்களுக்கு இடையே உள்ள தூரத்திற்கும் மற்றும் புவியில் அதே இரு புள்ளிகளின் உண்மையான தூரத்திற்கும் உள்ள விகிதமே நிலவரைபட அளவை எனப்படும். உ ) அட்சதீர்க்க சட்டங்கள் ( Grid
|
) இச்சட்டங்கள் புவியில் உள்ள இடங்கள் அல்லது பொருட்களை நிலவரைபடத்தில் குறிப்பதற்கு பயன்படுகின்றன. Reading ) நிலவரைபடங்களின் அளவைகளைப் பயன்படுத்தி நிலப்பரப்புகளை அளக்கலாம். நிலவரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் எண்ணிக்கை அதில் உள்ள அளவையினை பொருத்து இருக்கும். நிலவரைபடத்தினைப் படித்தலில் உள்ள அடிப்படை விதிகள் ( Basic Principles of Map நிலவரைபடத்தை படிப்பவர் சில அடிப்படை விதிகளைப் பின்பற்றி , அதில் உள்ள குறியீடுகளை உண்மையான நிலத்தோற்றத்தை பதிமங்களுக்கு ( Landscape Image ) மாற்றவேண்டும். நிலவரைபடத்தை
|
படிப்பவர்களுக்கு குறியீடுகள் மற்றும் அக்குறியீடுகள் உண்மை உலகில் எந்தெந்தப் பொருட்களை குறிக்கின்றன என்பதைப் பற்றி தெரிந்திருக்கவேண்டும். இதனையே உண்மையான உலகம் மற்றும் குறியீடுகளின் பாவனை ( Perception ) என்று அழைக்கின்றோம். குறியீடுகள் மற்றும் உண்மை உலகம் ஆகிய இரண்டையும் சரியாக எவ்வாறு பொருத்துவது என்பதை தெரிந்து கொண்டிருந்தால் நிலவரைபடங்களை மாணவர் நன்றாகப் புரிந்துக் கொண்டார் என்பது பொருள். விதி 2 : முறையானக் குறியீடுகள் மற்றும் சொற்கள் ( Conventional Symbols and Terms ) 1. தேவைக்கேற்ப குறியீடுகளை
|
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் ( +1/11 ஆம் வகுப்பில் புவியியல் பாடப்புத்தகத்தில் பாடம் 12 இல் குறிகளும் மற்றும் குறியீடுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது ). பெரும்பாலான பள்ளிகளில் கீழ்நிலையிலேயே முறையான நிலவரைபடங்களை பாடப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வயதில் உள்ள குழந்தைகள் இடங்களை கண்டறியவும். மற்றும் தன்னைச் சுற்றியுள்ள பகுதியினை அறிந்துக்கொள்ளவும் நிலவரைபடத்தை பயன்படுத்துகின்றன. உயர்நிலை வகுப்பில் அறிமுகப் படுத்தப்படும் குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தினைப் பூர்த்தி செய்யும்
|
படியுள்ளன. நிலவரைபடத்தில் உள்ள கிளை ஆற்றினை ( tributary ) எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைப் படம் மற்றும் விவாதத்துடன் விவரிக்கலாம். சொற்களாலான ஆற்றின் மூலாதாரம் ( source ) ஆற்றின் முகத்துவாரம் ( estuary ) போன்றவைகளுக்கு படத்துடன் கூடிய விளக்கம் அளித்தல் வேண்டும். ஆசிரியர் படிப்படியாக குறியீடுகளையும் சொற்களையும் அதிகரித்து மாணவர்களுக்கு அவைகளை அறிமுகப்படுத்த வேண்டும். விதி 3 : திசைகளை அறிதல் ( Determining Directions ) மாணவர்கள் முக்கியமான திசைகளை அறிந்திருக்க வேண்டும். புவியின் மேற்பரப்பில் உள்ள இடங்களை
|
நிலவரைபடத்தில் குறிப்பது அடிப்படை பணிகளில் ஒன்றாகும். திசைகள் , மாணவர்களுக்குத் தெரியாமல் இருந்தால் , நிலவரைபடங்களை பயன்படுத்த இயலாது. சூரியனின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு கீழ் வகுப்புகளுக்கு திசைகளை கற்பிக்கலாம். உயர்வகுப்புகளிலும் இதனையே திரும்பக் கற்பித்தல் தேவையாக இருக்கின்றது. நிலவரைபடத்தில் நிலத்தோற்றக் கூறுகளின் அமைவிடத்தை காண்பதற்கு முன்பு வடக்கு திசை எப்பகுதியில் உள்ளது என்பதைத் தீர்மானிக்க மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும். அடுத்ததாக , நிலவரைபடத்தில் உள்ள கூறுகளை தொடர்புபடுத்தி சாலைகளின்
|
திசைகளை அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.. ஆசிரியர் மேற்கண்ட மூன்று விதிகளையும் நிலவரைபட குறியீடுகளை கற்பிக்க பின்பற்றி தொடர்ச்சியான பயிற்சிகள் அளிக்கும் பொழுது உண்மையில் மாணவர் நிலவரைபடத்தை நன்றாக வாசிக்கும் திறனை அடைகின்றார். வரிசையாக கற்றல் செய்யப்பட்ட சிபாரிசு நிலவரைபட ( Suggested Sequential Learning of Map Skills ) திறன்களை 1. முன்பு படித்த வகுப்பில் நிலவரைபடம் படித்தலில் உள்ள செயல்பாடுகளை புவியியலில் படித்திருப்பீர்கள். இதனை அடிப்படையாகக் கொண்டும் , மேலும் தன் அனுபவத்தை கொண்டும் மாணவர்கள் நிலவரைபடத்தை
|
படிக்கலாம். 2. நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ( VI - VIII ) நிழல்களை அடிப்படையாகக் கொண்டு திசைகளை எவ்வாறு அறிவது என்பதை ஆசிரியர் கற்பிக்கலாம். 3. உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடிக்கும் பொழுது முக்கிய திசைகள் மற்றும் இவைகளுக்கு இடையில் உள்ள திசைகள் ( எ.கா. வடகிழக்கு ) நிழலைப் பயன்படுத்தி திசையறிதல் மற்றும் புவியில் உள்ள பொருட்களை குறிக்கும் குறியீடுகள் போன்றவைகளை மாணவர்கள் அறிந்திருக்கவேண்டும். 4. மேல்நிலைப்பள்ளியில் நிலவரைபடத்தை பயன்படுத்துவது எளிது. இந்நிலையில் மாணவர்கள் சில குறியீடுகளையும்
|
மற்றும் வண்ணங்களையும் எவ்வாறு புவிப்பொருட்களுக்கு ஏற்ப பயன்படுத்தவேண்டும் என்பதையும் அறிகின்றனர். நீலம் - நீர்நிலைகள் , பழுப்பு - நிலத் , தோற்றம் , மஞ்சள் மற்றும் பச்சை – நிலம். இந்த மேல்நிலை வகுப்பிலேயே மூன்று வகையான நிலவரைபட அளவைகளையும் ( பிரதி பின்னம் , அளவைக்கோடுகள் , சொல்லால் விவரித்தல் ) மேலும் அவற்றை பயன்படுத்தி தன் வீட்டிற்கும் ஒரு பெரிய நகரத்திற்கும் இடையே உள்ள தூரம் அல்லது எல்லைக்கோடு போன்றவையினை அளந்தறியும் திறன்களை மாணவர்கள் அடைந்திருக்க வேண்டும். 5.மேல்நிலை வகுப்பில் உள்ள மாணவர்கள் ,
|
நிலவரைபடத்தை படிக்க போதுமான அறிவினைப் பெற்றிருக்க வேண்டும். புவியின் , விரிவான விவரங்களையும் அறிந்து கொள்ள போதுமான பயிற்சியும் மற்றும் நிலவரைபடம் சார்ந்த சொற்களும் அதிகமாக தெரிந்திருத்தல் நலம். மேலும் நிலத்தோற்றங்களை கற்பனை செய்து அதன் குறியீடுகளை சரியாக பொருத்தும் திறன்களை , ஆசிரியரின் உதவியின்றியே வளர்த்துக் கொள்ளவேண்டும். இடைவிடாது பயிற்சி அளித்தல் , தொடர்ந்து திரும்பத் திரும்ப கற்பித்தல் மற்றும் திரும்ப கற்றல் ஆகியவைகள் நிலவரைபடத்தை படிக்கும் திறன்களை வளர்க்க தேவைப்படுகின்றன. நிலவரைபடத்தை படிக்கும்
|
திறன்களை வளர்க்க துவக்க நிலையில் ஆரம்பித்து மேல்நிலை வகுப்பு வரை தொடர்ந்து பயிற்சிகள் அளித்தல் வேண்டும். அப்போதுதான் உலகில் உள்ள பல்வேறு கலாச்சார வளர்ச்சியில் புவியியலின் முக்கியத்துவம் மற்றும் புவியின் பரப்பு சார்ந்த இடைத்தொடர்புகள் போன்றவற்றை மாணவர்கள் புரிந்துக் கொள்வர். வானிலை மற்றும் பதிம விவரணம் ( Weather Maps and Image Interpretation ) ஓர் இடத்தின் வானிலை மற்றும் காலநிலை , அந்த இடத்தில் உள்ள அட்சம் , தீர்க்கம் , உயரம் , நீர்நிலைகளின் அமைவிடம் , நிலம் மற்றும் நீர்ப் பரவல் , மண்ணின் அமைப்பு மற்றும் அதன்
|
தன்மை , மனிதனின் செயல்பாடுகள் , சூரியனிடமிருந்து வரும் ஒளி மற்றும் புவி அச்சின் சாய்வு ஆகிய காரணிகளைச் சார்ந்தே இருக்கின்றன. வானிலை மற்றும் காலநிலையின் அடிப்படைக் கூறுகளாக இவைகளே இருக்கின்றன. இருப்பினும் , வெப்பம் , ஈரப்பதம் , மழைவீழ்ச்சி , மேகமூட்டம் , சூரிய ஒளி , அழுத்தம் , காற்றின் திசை மற்றும் வேகம் ஆகியவைகள் மிகவும் முக்கியமான கூறுகளாகும். இக்கூறுகள் , அழுத்தம் , காற்று மற்றும் உயர்காற்று ஓட்டம் , கடலிலிருந்து தூரம் , நிலத்தோற்றம் , மண்வகை மற்றும் தாவரங்கள் ஆகியவைகளின் கலப்புத்தன்மையினால்
|
தீர்மானிக்கப்பட்ட கூறுகளாகும். வானிலை மற்றும் காலநிலையை பற்றி கருதாத இடத்தில் உயிரினங்கள் எதுவும் காணப்படுவதில்லை. உணவு , உடை , வீடு , போக்குவரத்து , தொலைத்தொடர்பு , விளையாட்டு , பொழுதுபோக்கு , மதவழக்கங்கள் போன்றவைகளில் வானிலை மற்றும் காலநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தம் பணியை செய்கின்றன. ஆனால் இதனை நாம் உணரும் போதுதான் இதன் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்கிறோம். வானிலை , காலநிலை மற்றும் நிலசுற்றுப்புற சூழ்நிலை ஆகிய மூன்றையும் சார்ந்துதான் உயிர்க்கோளம் இருக்கிறது. இவைகளுக்கிடையே இடைச்செயல்கள் ( interaction
|
) நடக்கின்றன. வானிலை மற்றும் காலநிலையின் தாக்கம் காலத்திற்கேற்ப வேறுபடுகின்றது. குறைந்த கால ( short - term ) திட்டங்களைத் தீட்ட வானிலை பற்றிய அறிவு தேவைப்படுகின்றது. ஆனால் நீண்டகால ( long term ) திட்டத்திற்கு காலநிலை பற்றிய அறிவு தேவை. அழிந்த நகரங்கள் , சின்னங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவைகள் பழைய நினைவுச் சின்னங்களாக இருந்து பல வருடங்களுக்கு முன்பாக உருவாகியதற்கு சாட்சியாக இருக்கின்றன. காலநிலை மற்றும் மாற்றம் ( Variability ) என்ற சொற்களை நாம் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றோம். மேலும் , இவைகளின்
|
முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமுதாயம் மற்றும் சூழியல் ஆகியவைகளில் தீர்வு காண முடியாத புரியாத இடத்தில் இது உள்ளது. காலநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது அது சமூகம் மற்றும் விவசாயம் ஆகியவைகளை மோசமான நிலைக்கு தள்ளிவிடுகின்றது. அது மட்டுமல்லாமல் , அதனுடன் தொடர்புடைய உரங்கள் , உணவு பொருட்கள் , போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் போன்றவைகள் குறிப்பாக வளரும் நாடுகளில் பாதிக்கப்படுகின்றன. வானிலை நிலவரைப்படங்கள் ( Weather Maps ) வானிலை நிலவரைபடம் ஒரு பகுப்பாய்வு வரைபடம் ( Analysis Chart )
|
அல்லது செய்திச்சுருக்க வரைபடம் ( Synoptic chart ) ஆகும். இது ஓர் இடத்தின் சம அழுத்தம் , அதிக மற்றும் குறைவு அழுத்தம் , காற்றுத் தொகுப்பின் போக்கு , திசை , மேகமூட்டம் , மேகத்தின் வகை , வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி போன்ற காரணிகளின் புள்ளிவிவரத்தை நமக்கு கொடுக்கின்றது. வானிலை நிலவரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அளவு அதில் பயன்படுத்தப்பட்ட அளவையினை ( scale ) பொருத்தே இருக்கும். ஆனால் , ஒரு சாதாரண வானிலை நிலவரைபடமே அதிகமான அல்லது போதுமான புள்ளி விவரங்களை நமக்கு கொடுக்கும். இதனை மேலும் நன்றாக புரிந்து
|
கொள்ள குறிபிடத்தக்க அளவில் பயிற்சிகள் தேவை. நம்மை சுற்றியுள்ள வளிமண்டலத்தின் வானிலையின் தன்மையை விளக்குவதோடு குறிப்பிட்ட காலத்தில் , குறிப்பிட்ட இடத்தில் வானிலைக் கூறுகளின் தன்மை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கும் வண்ணமும் உள்ளது. ஆனால் எதிர்கால நிகழ்ச்சிகளை இந்த பகுப்பாய்வு வரைப்படம் காண்பிக்காது. வானிலை மற்றும் மேகங்களை குறிக்கும் குறியீடுகள் ( Map Symbols for Weather and Clouds ) வளிமண்டலத்தில் அடிக்கடி மாற்றத்தை ஏற்படுத்தும் வானிலைக் கூறுகளின் குறியீடுகள் +1 அல்லது 11 - ஆம் வகுப்பு புவியியல்
|
பாடப்புத்தகத்தில் ( பாடம் 13 ) கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய ‘ S ’ ஆனது மணல் அல்லது புழுதிகளைக் குறிக்கும். இதில் குறுக்காக ஒரு அம்புக்குறி வெட்டிச் சென்றால் அது கடும் புழுதிப் புயலை ( Dust storm ) குறிக்கும். அம்புக்குறி இல்லாமல் இருந்தால் காற்று வீசாமல் , புழுதி காற்றுடன் கலந்துவிட்டது என்பது பொருள். செங்குத்தாக அம்புக்குறி வரைந்திருந்தால் காற்றானது புழுதியை வளிமண்டலத்தில் மேல்நோக்கி எடுத்துச்செல்கிறது என்பதாகும். முடிவில்லாத ( ( Infinity - ∞ ) குறியீடு லேசான வறண்ட மூடுபனியைக் ( Haze ) குறிக்கும். அடர்
|
மூடுபனி ( Fog ) குறியீடானது வானத்தை மறைக்கும் மூடுபனியைக் குறிக்கும் ; இரண்டு கோடுகள் இருந்தால் , அது லேசான அடர் மூடு பனியையும் , இந்தக்கோடுகள் விட்டுவிட்டு வரைந்திருந்தால் அடர்மூடுபனி இங்குமங்குமாக இருப்பதாக பொருள் கொள்ளப்படும். புகை போன்ற குறியீடுகள் பார்வையினைக் குறைக்கும் புகை மண்டலத்தைக் குறிக்கும். தூறல் மழை மற்றும் உறைபனி ( snow ) ஆகியவைகளைக் குறிக்க பல குறியீடுகளைச் சேர்க்க குறிப்பிடுகின்றோம். ஒன்றாக இருந்தால் இலேசாக இருக்கிறது என்றும் நான்காக இருந்தால் கனத்து மற்றும் தொடர்ச்சியாக உள்ளது என்றும்
|
பொருள்படும். குறியீட்டுக்குக் கீழ் வளைவாக ஒரு கோடு சென்றால் , மழைவீழ்ச்சி தரையை வந்தடையாது என்பதாகும். மழைவீழ்ச்சி Page 113 of 204 குறியீட்டுடன் சாரல் குறியீடும் சேர்ந்து வந்தால் மழை அல்லது உறைபனி ஏற்படும். கல்மழைக் ( Hail ) குறியீடானது இடியுடன் கூடிய புயல் குறியீட்டுடன் சேர்ந்தே இருக்கும். எடுத்துக்காட்டாக , முக்கோணத்தில் ஒரு புள்ளி இருந்தால் அது பனிக்கட்டியும் , மழைப்பொழிவும் கலந்த மழையை குறிக்கும். எல்லா இடங்களிலும் இது கல்மழை அல்லது உறை பனியுடன் கூடிய மழையாக இருக்கின்றது. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
|
மட்டும் தெளிவான பனி படிகத்துடன் கூடிய உறை மழையாக இருக்கிறது. இடியுடன் கூடிய புயலின் குறியீட்டின் மேல் ஒரு புள்ளி அல்லது நட்சத்திரக் குறி இருக்குமேயானால் அது மழையுடன் அல்லது உறைபனி மழையுடன் கூடிய இலேசான அல்லது மிதமான புயல் மழை பொழியும் என்பதாகும். மேலும் இதில் வளைவுவளைவான கோடு கொடுத்திருந்தால் , அது மின்னலையும் மற்றும் கனத்த இடியுடன் கூடிய புயலையும் குறிக்கும். இடியுடன் கூடிய புயல் தூசுக்களையும் கடத்திச் செல்லுமேயானால் மணலுடன் கூடிய புயல் குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். தூறல் ( drizzle ) என்பது மிகச் சிறிய
|
மழைத்துளிகள். இதனைப் பார்த்து வேறுபடுத்துவது கடினம். ஆனால் , மழை என்பது சற்று பெரிய நீர்த்துளிகள். இதனை பார்க்கவும் , வேறுபடுத்தவும் இயலும். அடர் மூடுபனியில் நீர்த்துளிகள் காணப்பட்டாலும் அதனையும் அடர் மூடுபனியாகத்தான் எடுத்துக் கொள்கிறோம். எல்லாவகையான பனிப்படிகங்கள் ( Ice Crystals ) விழுந்தாலும் அதனை உறைபனி ( snow ) என்றே அழைக்கிறோம். ஆனால் கல்மழை இடியுடன் கூடிய புயலில் தான் உருவாகின்றது. கல்மழையைக் குறிக்க சமபக்க முக்கோணம் வரையப்படுகின்றது. இம்முக்கோணத்தில் புள்ளி ஒன்று இருந்தால் அது உறைமழைப் பொழிவினைக்
|
குறிக்கும். சாதாரண “ S " ஆனது உறைகின்ற மழை அல்லது உறைகின்ற தூறலைக் குறிக்கும். மேலும் நீர்த்துளியாக விழுகின்ற நீரானது புவியின் மேற்பரப்பை அடைந்ததும் உறைய ஆரம்பித்துவிடுகின்றது. ஓர் இடத்தின் மேக மூட்டத்தினை ஒரு சிறிய வட்டமிட்டு காண்பிக்கின்றோம். அதிலிருந்து ஒரு அம்புக்குறி செல்வது போல் குறியீடு இருந்தால் அது காற்றின் திசையைக் குறிக்கும். மேகமூட்டத்தினை 0 லிருந்து 10 வரை குறிப்பிடுகிறோம் 0/10 என்றால் தெளிவான வானத்தையும் 10/10 என்றால் மேகத்திரளால் மூடப்பட்ட வானத்தையும் ( Overcast sky ) குறிக்கும். ‘ வானம்
|
இருண்டு விட்டது ’ ( obscured ) என்றால் புகை , அடர் மூடுபனி மற்றும் உள்ள காரணிகளால் வானம் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் என்பதாகும். பார்வை நிலை என்பது ஒரு தெளிவற்ற கருத்தாக இருக்கிறது. பொதுவாக நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ , அதனை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து பார்த்து அறிவதே பார்வை நிலை. பகல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கருப்பு வடிவப் பொருளை எவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கின்றோம் என்பதே பார்வை நிலைக்கு சரியான வரையறை ஆகும். வானிலை ஆய்வாளர்கள் பொதுவாக மேக மூட்டம் அதன் உயரம் மற்றும் பார்வை நிலை
|
ஆகியவற்றிற்கு அதிக அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அனுபவ ரீதியில் சிலர் இக்காரணிகளின் தன்மைகளை நன்றாகவே அறிந்துள்ளனர். பெரும்பாலான வானிலை அறிக்கைகள் , உயரத்தை அடிப்படையாகக் ண்டு , மேகத்தை மூன்று வகைகளாக பிரித்துள்ளதை குறிப்பிடுகின்றன. உயரத்தில் உள்ள மேகங்கள் மற்றும் மித உயரத்தில் உள்ள மேகங்களைக் குறிக்க மேகமூட்டத்தைக் குறிக்கும் வட்டத்திற்கு மேல் குறியீடுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் தாழ்வான உயரத்தில் உள்ள மேகங்களைக் குறிக்க வட்டத்திற்குக் கீழேதான் குறியீடுகள் கொடுக்கப்படும். தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு
|
பொதுவாக மேகங்களை படுகை வடிவ மேகங்கள் ( stratiform ) , கூம்பு வடிவ மேகங்கள் ( Cirriform ) மற்றும் சிறகு வடிவ மேகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இதுவே மிகச் சிறந்த முறையாகும். படுகை வடிவ மேகங்கள் எந்தச் சலனத்தையும் காண்பிக்காமல் ஈரப்பதமுள்ள காற்று குளிர்ச்சி அடையும் பொழுது உருவாகுபவை. ஆனால் கூம்பு வடிவ மேகமானது தரைமட்ட அளவிலோ அல்லது உயர்மட்ட அளவிலோ சலனத்தை ஏற்படுத்தும். மேலும் அதிக உயர் மட்டத்தில் இது இங்குமங்குமாக அலை அலையாக நகர்ந்து கொண்டும் , மற்ற மேகத்துடன் மோதியும் அமைதியற்ற நிலையை அல்லது கொந்தளிப்பை
|
ஏற்படுத்துகின்றது. சிறகு வடிவ மேகங்கள் பனித்துகள்களால் ஆனது என்ற ஒரு தனிச்சிறப்பினைப் பெற்றுள்ளது. இது அதிக உயரத்தில் தோன்றும். வெண்மையாகவும் , பட்டுபோன்றும் காணப்படும். மேகங்கள் ஒன்று சேர்க்கப்பட்ட நீர்த்துளிகள் அல்லது பனித்துகள்களால் ஆனது. இக்காரணத்தினால் தான் அவை வெள்ளை நிறத்தில் உள்ளன. மித உயர் மட்டத்தில் ( Middle Level Clouds ) உள்ள மேகங்கள் நன்றாக குளிர்ச்சியான நீர் மற்றும் சில நேரங்களில் பனித் துகள்களையும் கொண்டிருக்கும். அதிக உயர் மட்ட மேகத்தில் உள்ள நல்ல குளிர்ச்சியான நீரானது பெரிய பனித்துகள்கள்
|
அல்லது படிகங்களாகக் காணப்படும். இவை கீழே விழும்பொழுது , காற்று வீசுவதால் அது சிறகு வடிவத்தை அடைகின்றது. எந்த மட்டத்திலும் நீர் குளிர்ச்சியடையும். ஆனால் , ஏறக்குறைய -40 ° C வெப்பநிலையில் அது பனிக்கட்டியாக மாறிவிடுவதை தடுக்க இயலாது. தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட மேகங்கள் , வளிமண்டலத்தின் நிலை , ஈரப்பதம் , நிலையற்றதன்மை , கொந்தளிப்பு மற்றும் வெப்பச் சலனம் ஆகியவைகளைப் பற்றி கூறுவோமானால் அது பயனுள்ள வகையில் இருக்கும். உயரத்தை அடிப்படையாகக் கொண்டு மேகங்களை வகைப்படுத்துவதிலும் தவறுகள் நிகழ்கின்றன.
|
காரணம் , மேகங்கள் உருவாக உயரம் மட்டுமே முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. காற்று ( Winds ) வானிலை நிலவரைப்படத்தில் காற்றின் திசையையும் மற்றும் அதன் வேகத்தையும் குறியீடுகளால் காட்டப்படுகின்றன. ஒரு சிறிய வட்டம் நிலையத்தை குறிக்கின்றது. மேலும் இந்த வட்டத்திலேயே மேக மூட்டத்தையும் குறிக்கப்படுகின்றது என்பதை திசைக்காட்டியில் உள்ள அம்பின் நுனி ( Wind vane ) காட்டுகின்றது. காற்று அமைவி ( Wind barb ) என்ற குறியீட்டினை பயன்படுத்தி காற்றின் வேகம் மற்றும் திசையினை குறிக்கின்றோம். ஒவ்வொரு நீளமான காற்று அமைவி 10 கடல்
|
மைல்கள் ( knots ) ( ஏறக்குறைய 15 மீட்டர் / நொடி அல்லது 1.1 மைல் / மணி ) மேலும் அரை அமைவி ( Half barb ) மட்டும் இருந்தால் 5 கடல் மைல் வேகத்தில் காற்று வீசுகின்றது என்பதைக் குறிக்கும். மேற்குக் காற்று மேற்கிலிருந்து வீசுவது என்பது அனைவரும் அறிந்ததே. உயர் வளிமண்டலத்தின் வரைபடத்தை உற்றுநோக்கிப் பார்த்தால் காற்றின் வேகம் குறைவான வளிமண்டல உயரத்தில் குறைந்து காணப்படுகிறது. அமைதியான காற்றை குறிப்பிட வட்டக் குறியீட்டைப் பயன்படுத்துகிறோம் ( படங்கள் 11.2 மற்றும் 11.3 ). பருவக் காற்றானது ஒரு பருவகால காற்றாகும். இது
|
கோடைகாலத்தில் நீர்பகுதியிலிருந்து நிலப்பகுதியினை நோக்கி வீசுகின்றது. இயல்பாகவே ஈரப்பதத்தை இத்துடன் கொண்டிருக்கின்றது. இந்தக் காற்று குளிர் காலத்தில் பின்னடையும் போது நிலப்பகுதியிலிருந்து வருவதால் வறண்ட குளிர்ச்சியான காற்றாக வீசுகிறது. பருவக்காற்று என்ற பெயருக்கு பருவம் என்பது அரேபிய பொருள். இந்தியாவின் பருவக்காற்று இந்திய மக்களுக்கு வாழ்க்கையைக் கொடுக்கும் மழையாக ( life giving rain ) இருப்பதால் , இது மக்களிடத்தில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கின்றது. பருவக்காற்று அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் வீசுகின்றது. குளிர்
|
காலத்தில் நிலப்பகுதியில் அதிக உயர்வு மற்றும் தாழ்வு ( Highs and Lows ) வானிலை நிலவரைபடத்தில் அடுத்ததாகக் காணப்படுவது தாழ்வு மற்றும் உயர் அழுத்தங்களாகும். தாழ்வு அழுத்தம் ‘ L ' -என்றும் உயர் அழுத்தம் ' H ' என்றும் வட்டத்திற்கு நடுவில் எழுதப்பட்டிருக்கும் , மேலும் அழுத்தம் எவ்வளவு என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும். தல வரைபடத்தைப் பார்ப்போமானால் , ஒரு பகுதியில் உயர் அழுத்தமும் , மற்றொரு பகுதியில் தாழ்வு அழுத்தமும் இருப்பதைக் காணலாம். தாழ்வு அழுத்தப் பகுதியில் காற்று கடிகாரம் சுற்றும் திசைக்கு எதிர் திசையிலும் ,
|
உயர் அழுத்தப் பகுதயில் கடிகாரத் திசையிலும் வட்டமாக சுற்றிச் சென்று அழுத்தத்தை சமநிலை செய்கின்றது. தாழ்வு அழுத்தப் பகுதியில் உள்ள காற்று உயர் அழுத்தப் பகுதியில் வீசும் காற்றைவிட , அதிக தீவிரமானதாகும். இது அதிக அழுத்த வேறுபாட்டை உருவாக்குகின்றது ; இருந்தபோதிலும் இது இலேசான காற்றேயாகும். தாழ்வு அழுத்தம் அல்லது புயல் ( Cyclones ) ஆனது மேகத்துடன் தொடர்பு கொண்டதாகும். ஆனால் உயர் அழுத்தம் அல்லது எதிர்ப் புயலானது ( ( Anti - cyclones ) தெளிவான வானத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக காற்றானது தாழ்வு அழுத்தப் பகுதியினை
|
நோக்கி நேராக வீசாது. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். 1. அழுத்தச் சரிவு ( Pressure gradient ) மற்றும் 2. புவியின் சுழற்சி ( Earth's rotation ) புவி மாதிரியை எடுத்து , கிழக்கு திசையை நோக்கி சுற்றி வட துருவத்திலிருந்து சாக்கு கட்டியால் கோடு ஒன்று நேராக புவியிடைக் கோட்டை நோக்கி சாதாரணமாக வரைந்தால் அக்கோடு வலதுபுறமாக சென்றிருப்பதை நாம் பார்க்கலாம். இது போலவே வட கோளத்தில் அதிக அழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வு அழுத்தப்பகுதியினை நோக்கி காற்று வீசும் பொழுது அதன் திசை வலதுபுறம் நோக்கியே வீசுகின்றது. இதற்குக் காரணம்
|
புவியின் சுழற்சியே ஆகும். அயன மண்டல தாழ்வு அழுத்தம் , அயன மண்டல புயல் அல்லது சூறாவளி ஆகியவைகள் ஒரு தனி வகையினைச் சார்ந்தவை. இவை மித வெப்பமுள்ள கடல் பரப்பிலிருந்து ஈரப்பதத்தைப் பெறுவதால் , அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. வானிலை நிலவரைபட விவரணம் ( Weather Map Interpretations ) வானிலை நிலவரைபடங்கள் தினந்தோறும் ஒரு சுருக்கமான தொகுப்பு ( Synoptic Report ) அறிக்கையை நமக்கு அளிக்கின்றன. வானிலை அறிக்கையானது ஒன்று அல்லது இரண்டு மையக் கருத்துக்களைக் கொண்டுள்ள பல வரைபடங்களிலிருந்து திரட்டப்பட்ட அறிக்கை ஆகும்.
|
நிலவரைபடத்தில் உள்ள அதிகமான குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட நாளின் , ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானிலையின் நிலைமையை குறிப்பிடுபவை ஆகும். வானிலை நிலவரைபடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகள் எவற்றை குறிக்கின்றன என்பதனை அறிந்தவர்களால் வானிலை விளக்கம் அளிப்பது எளிது. சம அழுத்தக் கோட்டினால் காட்டப்படும் அழுத்தப் பரவல் மற்றும் எழுத்துக் குறியீடுகள் உள்ள வானிலை நிலவரைபடமே மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதிலேயே காற்றின் திசை , வேகம் மற்றும் மேக மூட்டம் ( தெளிவான , முழுமையான மற்றும் பாதியான ) ஆகியவைகள்
|
குறிக்கப்பட்டிருக்கும். வெப்பப் பரவலைக் காட்டும் சமவெப்பக்கோடுகள் மற்றும் மழைப் பரவலைக் குறிப்பிடுவதற்கு சம மழையளவுக் கோடு போன்றவைகளை குறிக்கும் நிலவரைபடங்களும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நாளின் வானிலை நிலவரத்தைத் தொகுத்து அளிப்பதற்கு வானிலை நிலவரைபடங்கள் பயன்படுகின்றன. கொடுக்கப்பட்ட அறிக்கை மற்றும் வானிலை நிலவரைபடங்களை கொண்டு இரண்டு அல்லது மூன்று நா ; டகளில் ஏற்படும் வானிலை மாற்றத்தையும் கண்டு அறியலாம். வானிலையை முன்கூட்டியே அறிவிப்பது மிகக் கடினமானதாகும். அயன மண்டலப் பகுதியில் வானிலை நிலவரத்தை முன்னாதாகக்
|
கூறுவது கடினமானது. ஏனெனில் வளிமண்டலம் நிரந்தரமாக ஒரே தன்மையில் இருப்பதில்லை. முதன் முதலில் செய்யப்படும் வானிலை விவரணங்கள் மிகக் கடினமானதாகவும் , தெளிவில்லாமலும் இருக்கும். ஆனால் போதுமான பயிற்சி அளிப்பதன் மூலம் வானிலையை விவரணம் செய்வது எளிதாகி விடும் மற்றும் அது பயனுள்ளதாகவும் இருக்கும். வானிலை முன்னறிவிப்பு ( Weather forecasting ) புவியினைச் சுற்றி உள்ள வாயுக் கோளத்தை வளிமண்டலம் என்று அழைக்கிறோம். இந்த வளிமண்டலத்தை நம்பியே தாவரங்களும் மற்றும் விலங்கினங்களும் வாழ்ந்து வருகின்றன. வளிமண்டலத்தில் நிலவும் வானிலை
|
இவைகளின் வாழ்க்கையினை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கின்றது. எனவே , புவியின் மேற்பரப்பில் வாழும் ஒவ்வொரு மனிதரும் வானிலை முன்னறிவிப்பினை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் அதிக அக்கறை செலுத்தி உள்ளனர். ஆனால் வளிமண்டலத்தில் பல்வேறு பௌதிக செயல்களினால் வானிலையினை முன்னறிவிப்பு செய்வதில் குறைந்த அளவிலேயே வெற்றியும் கண்டு உள்ளனர். வானிலை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முறைகளை கண்டுபிடித்து , அவற்றைப்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.