id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
|---|---|---|---|
4533
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
மயமதம்
|
மயமதம் என்பது மிகப் பழைய காலத்தில் மயன் என்பவரால் எழுதப்பட்ட சிற்பசாஸ்திர நூலாகும். இது தென்னிந்தியாவில் ஆக்கப்பட்டது, பழம்பெரும் மொழியானா தமிழில் இயற்றப்பெற்றது. இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை, அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன், விக்கிரகக் கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது.
அமைப்பு
சிற்ப நூல்கள்
இந்தியக் கட்டிடக்கலை
மயன்
|
4534
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
என். எஸ். கிருஷ்ணன்
|
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (N. S. Krishnan) என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன் (Nagercoil Sudalaimuthu Pillai Krishnan, நவம்பர் 29, 1908 - ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால், குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பண உதவி வழங்கியவர்.
காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.
கொலைக் குற்றச்சாட்டு
அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.
குடும்பம்
கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளுக்கு 18-2-1948 இரவு 10.50 மணிக்கு பெண்மகவு ஒன்று பிறந்தது. கலைச்செல்வி எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை 1948 மே 18 அன்று இறந்தது. மனைவி டி. ஏ. மதுரம் 1974 இல் காலமானார்.
இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்
அலிபாபாவும் 40 திருடர்களும் (1941)
பைத்தியக்காரன் (1947)
நல்ல தம்பி (1949)
அமரகவி (1952)
பணம் (1952)
டாக்டர் சாவித்திரி (1955)
நம் குழந்தை (1955)
முதல் தேதி (1955)
காவேரி (1955)
மதுரை வீரன் (1956)
நன்னம்பிக்கை (1956)
கண்ணின் மணிகள் (1956)
ஆசை (1956)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
புது வாழ்வு (1957)
அம்பிகாபதி (1957)
தங்கப்பதுமை (1959)
தோழன் (1960)
67-ல் என். எஸ். கிருஷ்ணன் (1967) (என்.எஸ்.கே.நடித்த படங்களின் தொகுப்பு)
இவர் இயக்கிய படங்கள்
பணம் (1952)
மணமகள்
இவர் பாடிய பாடல்கள்
ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
ஆரவல்லியே (ஆர்ய மாலா)
கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
கண்ணனெந்தன் (கண்ணகி)
இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
சந்திர சூரியர் (அம்பிகாபதி)
தீனா...மூனா...கானா...(பணம்)
உன்னருளால் (ரத்னமாலா)
என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
நாலுக் கால் குதிரை (ஆசை)
தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
நல்ல பெண்மணி (மணமகள்)
ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)
மறைவு
என். எஸ். கிருஷ்ணன் 1957 ஆகத்து 30 அன்று தனது 49வது வயதில் காலமானார்.
கலைவாணர் அரங்கம்
தமிழ்நாடு அரசு என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இன்று 29/11/2008 கலைவாணர் நூற்றாண்டு விழா
சிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே! -விகடன்
கலைவாணரின் வள்ளல் தன்மை
Laughter, his medicine - நினைவலைகள்... பாகம் 1
Comedian by destiny - நினைவலைகள்... பாகம் 2
When NSK met Mathuram - நினைவலைகள்... பாகம் 3
How he tweaked Anna's story - நினைவலைகள்... பாகம் 4
Message in a song - நினைவலைகள்... பாகம் 5
1908 பிறப்புகள்
தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
வில்லிசைக் கலைஞர்கள்
இந்தியத் தமிழ் நாடகத் துறையினர்
1957 இறப்புகள்
தமிழ் நகைச்சுவை நடிகர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்
தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்
|
4538
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D
|
வாஸ்து புருஷன்
|
வாஸ்து புருஷன் பற்றிய எண்ணக்கரு வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியமான ஒரு அம்சமாகும். இந்துக்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டிடத்துக்குரிய நிலம் அல்லது மனை ஒரு சடப் பொருளாக அன்றி உயிர்ப்புச் சக்தி கொண்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு ஒரு கட்டிட நிலத்தின் உயிர்ப்புச் சக்தியே வாஸ்து புருஷனாக குறியீடாக உருவகப் படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இக்குறியீடு வாஸ்து புருஷனை ஆண் பால், மனித உருவம் கொண்டவனாகச் சித்தரிக்கின்றது. வாஸ்து புருஷ மண்டலத்தில் முழு இடத்தையும் பிடித்துக்கொண்டு, வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு வாஸ்து புருஷன் குப்புறக் கிடப்பதாகச் சொல்லப்படுகின்றது (படிமம் 1).
தோற்றம்
வாஸ்து புருஷனுடைய தோற்றம் பற்றிக் கூறும் பழங்கதை ஒன்று வாஸ்து நூல்களிலே காணப்படுகின்றது. இதன்படி, பூமியையும், வான் வெளியும் தன்னுடைய உடம்பினால் வியாபித்துக்கொண்டு பூதமொன்று உருவானது. இதனைக் கண்ட பிரம்மா முதலிய தேவர்கள் பயந்து, எல்லோரும் கூடி அப் பூதத்தை முகம் குப்புறப் படுத்த நிலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்யும்போது எந்தெந்தத் தேவர்கள் அப் பூதத்தின் எப் பகுதியைப் பிடித்துக் கொண்டார்களோ அவர்களே உடலின் அப்பகுதிக்கு அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். இக்கதை, வாஸ்து புருஷ மண்டலத்தில் பல்வேறு கட்டங்கள் 45 தேவர்களுக்கு அதிபதித் தானங்களாகக் கருதப்படுவதற்கான காரணத் தொடர்பையும் விளக்குகிறது.
கட்டிட மனையும், வாஸ்து புருஷனும்
கட்டிட நிலம் அல்லது மனைக்கும், வாஸ்து புருஷனுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கூறும் சிற்பநூல்கள், ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு திசைகளில் தலையை வைத்துக்கொண்டு, இடது கை மேலாகவும், வலது கை கீழேயும் இருக்கப் படுத்து இருப்பதாக உருவகப்படுத்துகின்றன.
இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பார்த்து அந்த வாஸ்து நேரத்தில் கட்டிடப் பணிகளைத் தொடங்குகின்றனர்.
வாஸ்து புருசன்
வாஸ்து புருசன் இடது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை. குறிப்பிட்ட எட்டு மாதங்களில் விழித்திருப்பார். அந்த நாட்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார். அதில் 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில்தான் (36 நிமிடம்) வாஸ்து செய்வது சிறந்தது என்கிறார்கள்.
வாஸ்து புருசன் பணிகள்
வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரங்களில் அவர் செய்யக்கூடிய பணிகள்
பல் துலக்குகிறார்.
நீராடுகிறார்
பூஜை செய்கிறார்
உணவு உண்கிறார்
தாம்பூலம் தரிக்கிறார்.
இதில் கடைசி 36 நிமிடங்களில் வாஸ்து செய்தால் வீடு சிறப்புடன் நிலைத்து நிற்கும்
வாஸ்து நேரம்
வாஸ்து வருடத்தில் எட்டு மாதங்களில் கீழ்காணும் அட்டவணைப்படி உள்ள நாள், நேரத்தில் வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரம் வாஸ்து நேரம் எனப்படுகிறது.
கட்டிடக்கலை
இந்து சமய நம்பிக்கைகள்
|
4541
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D
|
விஸ்வநாத தாஸ்
|
எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் (16 சூன் 1886 – 13 திசம்பர் 1940) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடகக் கலைஞரும் ஆவார்.
விஸ்வநாத தாஸ் சூன் 16, 1886 ஆம் ஆண்டு சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக சிவகாசியில் பிறந்தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரசு பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார்.
"கதர்கப்பல் தோணுதே', "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.
இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனைப் பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர்.
குடும்பம்
மனைவி-சண்முகத்தாய் ; மகன்- முத்தையா தாஸ்
மறைவு
1940 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் தேதி, தனது 54ஆவது வயதில், முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
சுதந்திர போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பிறந்த தினம் சூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
நினைவு இல்லம்
தமிழ்நாடு அரசு தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் - நூலகம் அமைத்துள்ளது. இங்கு தியாகி விஸ்வநாததாஸின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
விஸ்வநாததாஸ் நாடகக் கலைஞர்கள் வரலாறு கீற்று இணையதளம்
தியாகி விஸ்வநாததாஸின் வரலாறு -திருமங்கலம் புகைப்படங்கள்-முழுத்தொகுப்பு
தியாகி விஸ்வநாததாஸ் பற்றிய கட்டுரை - கீற்று மின்னிதழில்
நாளிதழில் தியாகி விசுவநாததாசு குறித்த செய்தி
தியாகி விஸ்வநாததாசின் 125 வது பிறந்த தினவிழா
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
இந்தியத் தமிழ் நாடகத் துறையினர்
1886 பிறப்புகள்
1940 இறப்புகள்
திருமங்கலம்
மதுரை மக்கள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
4543
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
திருப்பூர் குமரன்
|
திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இளமைப்பருவம்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ஆம் தேதி, செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார் ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 இல் ராமாயியை என்பாரைத் திருமணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு
காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1932 ஜனவரி 10 அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். கீழே விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட தேசிய கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் "கொடிகாத்த குமரன்" என்று அறியப்படுகிறார்.
இறப்பு
சனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் சனவரி 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கில் கொள்ளி வைத்தனர்.
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார் .
துணைவியார்
இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.
நினைவகம்
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தபால் தலை
இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
செயற்கைக்கோள் புகைப்படத்தில் தியாகி குமரன் பிரிட்டிஷ் காவல்துறையால் அடிபட்ட இடம்
1904 பிறப்புகள்
1932 இறப்புகள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
ஈரோடு மாவட்ட நபர்கள்
இந்தியப் புரட்சியாளர்கள்
|
4551
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA.%20%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
ப. ஜீவானந்தம்
|
ப. ஜீவானந்தம் (P. Jeevanandham, 21 ஆகத்து 1907 – 18 சனவரி 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகத்து 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.
இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார்.
ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில் இருந்த காமராசரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரத்திற்குப் பிற்காலங்களில் உடுத்த மாற்றுடை இல்லாத வறுமை நிலையிலும் வாழ்ந்தவர்.
ஒத்துழையாமை இயக்கத்தில் இணைதல்
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.
சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.
ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.
வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை(1927) உருவாக்கினார்.
கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
இதழாசிரியராக
ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கம் என்று கூறமுடியும் (1961). கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959 இல் தொடங்கினார். அதில், பொதுவுடமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார். 1933 இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.
அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
பொதுவுடமைக் கட்சியில் இணைதல்
ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரித்தானிய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
ஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).
சட்டமன்றத்தில் ஜீவா
சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியவில்லை.
மதுவிலக்கு பற்றிய விவாதம்
1952 ஜூலையில் மதுவிலக்கு பற்றிய விவாதம் சபையில் நடந்தது. மது அருந்தக் கூடாது என்று காந்திஜி கூறினார் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். ஜீவாவோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியிருக்கிறார் என்றார். நஞ்சுண்பார்கள் உண்பவர் என்கிற குறளைக் கையாண்டார். அதே நேரத்தில், பிரச்சனையை தர்க்க ரீதியாகவும், நடைமுறை சார்ந்தும் அலசினார். பல நூற்றாண்டுகளாக இப்படி மதுவிலக்கு வற்புறுத்தப்பட்டும் ஏன் அதை ஒழிக்க முடியவில்லை என்கிற கேள்வியை எழுப்பினார். இவ்வளவு காலமாக முடியாதது ஒரு சட்டத்தால் மட்டும் முடிந்து விடுமா என்றார். முடியவில்லை என்பதற்கு அரசு தரப்பில் தரப்பட்டிருந்த புள்ளி விபரங்களைச் சுட்டிக் காட்டினார். மதுவிலக்கு சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடி வருவதை எடுத்துக் காட்டினார்.
பிச்சைக்காரர்கள் பற்றி
ராஜாஜி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, பிச்சைக்காரர்கள் பெருகிப் போனார்கள். இது பற்றி சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது தலையிட்டு பேசிய ராஜாஜி தனது ஆட்சிக்கு முன்பு ஊரில் பிச்சைக்காரர்களே இல்லையோ என்று கேலியாகக் கேட்டார். அதற்கு ஜீவா கூறியது -
எம்.ஆர். ராதாவுக்கு ஆதரவாக
குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலக, 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சபையில் தாக்கல் செய்தது. குறிப்பாக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம்என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது .
ஜீவாவின் நூல்கள்
இலக்கியச்சுவை
ஈரோட்டுப் பாதை சரியா?
கலை இலக்கியத்தின் புதிய பார்வை
சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
சமதர்மக் கீதங்கள் 1934
சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
சோஷலிஸ்ட் தத்துவங்கள்
தேசத்தின் சொத்து (தொகுப்பு)
நான் நாத்திகன் ஏன்? - பகத்சிங் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு; 1934; அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுமைப்பெண்
பெண்ணுரிமைக் கீதங்கள் (கடலூர்ச் சிறையில் இயற்றியவை) 1932
மதமும் மனித வாழ்வும்
மேடையில் ஜீவா (தொகுப்பு)
மொழியைப்பற்றி
ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
ஜீவாவின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
ஜீவாவின் கூற்றுகள்
நான் ஒரு நாத்திகன் - ஜீவா
நினைவகங்கள்
தமிழ்நாடு அரசு ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தம் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது.
இவரின் பெயரால் புதுச்சேரியில் ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை, மேற்கு தாம்பரத்தில், இரயில்வே நிலையம் எதிரில் முழு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 08-05-1995 ல் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தோழர் ஜீவானந்தம் பற்றி தமிழருவி மணியன் - காணொலி
தோழர் ஜீவா - வலைப்பதிவு
தேசத்தின் சொத்து ஜீவா , கலைமாமணி விக்கிரமன், தினமணி, ஆகத்து 8, 2010
தோழர் ப. ஜீவானந்தம் பற்றிய இணையதள பக்கம்
தமிழக அரசியல்வாதிகள்
தமிழ் பொதுவுடமைவாதிகள்
1907 பிறப்புகள்
1963 இறப்புகள்
தமிழ்நாட்டு இறைமறுப்பாளர்கள்
தமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்
நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்
பொதுவுடமைவாதிகள்
தொழிற்சங்கவாதிகள்
கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்
|
4553
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81.%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
மு. பக்தவத்சலம்
|
மு. பக்தவத்சலம் (9 அக்டோபர் 1897 – 13 பிப்ரவரி 1987) சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு மதராஸ் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.
1960ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.
நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எழுதிய நூல்கள்
குடியரசும் மக்களும்
சமுதாய வளர்ச்சி
வளரும் தமிழகம்
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Stamps in memory of Bakthavatsalam, Bismilah Khan
1897 பிறப்புகள்
1987 இறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டு அமைச்சர்கள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
திருவள்ளூர் மாவட்ட நபர்கள்
1 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
தமிழக அரசியல்வாதிகள்
காந்தியவாதிகள்
தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
|
4560
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
இமாச்சலப் பிரதேசம்
|
இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மணாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் ராம்போசி வசிக்கின்றனர்.
புவியியல்
இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.
மாவட்டங்கள்
இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவைகள்;
உணா மாவட்டம்
காங்ரா
கினௌர்
குல்லு
சம்பா
சிம்லா
சிர்மௌர்
சோலன்
பிலாஸ்பூர்
மண்டி
லாஹௌஸ் & ஸ்பிதி
ஹமீர்பூர்
முக்கிய நகரங்கள்
நஹான், நைனா தேவி, பிலாஸ்பூர், மணாலி, சிம்லா, டல்ஹவுசி, காங்கிரா மற்றும் தர்மசாலா ஆகும்.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.80% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 6,532,765 (95.17%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 149,881 (2.18%) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 79,896 (1.16%) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 12,646 (0.18%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 79,896 ஆகவும் (1.16%), சமண சமய மக்கள் தொகை 1,805 (0.03%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 78,659 (1.15%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 856 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,805 (0.03%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், திபெத்திய மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
இமாசலப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
|
4561
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
மத்தியப் பிரதேசம்
|
மத்தியப் பிரதேசம் என்பது மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை இம்மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்கள் ஆகும். இந்தி மொழி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி ஆகும்.
புவியியல்
இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்ததால் இம்மாநிலம் மத்தியப் பிரதேசம் எனப் பெயர் பெற்றது. மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வந்தது. 2000ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் இம்மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதால் இச்சிறப்பை இழந்தது. மத்திய பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகியவை. விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கிறது. நர்மதை நதி மத்திய பிரதேசத்தின் வழியாகப் பாய்கிறது.
வரலாறு
பண்டைய வரலாறு
பொ.ஊ.மு. 6ஆம் நூற்றாண்டில் பண்டைய உஜ்ஜைன் பெரு நகரம், மால்வா எனப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக விளங்கியது. அவந்தி நாட்டின் வடக்கில் சேதி நாடு இருந்தது.
சந்திரகுப்த மௌரியர் ஆட்சிக் காலத்தில் மகதப் பேரரசின் கீழ் மத்திய பிரதேசம் சென்றது.
பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டில் சகர்களும், குசானர்களும், உள்ளூர் ஆட்சியாளர்களும் மத்திய பிரதேசத்தை ஆண்டனர்.
பொ.ஊ. 1 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை, வடக்கு தக்காணத்தின் சாதவாகனப் பேரரசு மற்றும் சகர் குல மேற்கு சத்ரபதிகள் மத்தியப் பிரதேசத்தை கைப்பற்றி ஆளும் போரில் ஈடுபட்டனர்.
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் சாதவாகனர் குல மன்னர் கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர், மத்திய பிரதேசத்தின் மால்வா மற்றும் தற்கால குசராத்து பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த சகர்களை வெற்றி கொண்டார்.
பொ.ஊ. 4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசு காலத்தில் மத்திய பிரதேசம் குப்தர்கள் ஆட்சியின் கீழ் சென்றது.
பொ.ஊ. 5ஆம் நூற்றாண்டு முடிய தக்காணத்தின் வடக்கில், குப்தப் பேரரசின் அருகில் அமைந்த வாகாடகப் பேரரசு வங்காள விரிகுடா முதல் அரபுக் கடல் வரை பரந்திருந்தது. மத்திய பிரதேசமும் வாகாடகப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது.
மத்திய கால வரலாறு
தானேசுவரம் நகரத்தை தலைநகராகக் கொண்ட ஹர்ஷவர்தனர், தான் 647இல் இறக்கும் முன்னர், மத்திய பிரதேசத்தை உள்ளடக்கிய வட இந்தியா முழுவதையும் ஹர்சப் பேரரசில் கொண்டு வந்தார்.
பொ.ஊ. 8 முதல் 10 நூற்றாண்டு முடிய, மத்தியப் பிரதேசத்தின் மால்வா எனும் அவந்தி பகுதிகளைக் கைப்பற்றி, தென்னிந்தியாவின் இராஷ்டிரகூடர்கள் ஆண்டனர்.
மத்திய காலத்தில் இராஜபுதனத்தின் இராசபுத்திர குலத்தின் பரமாரப் பேரரசு மத்திய இந்தியாவின் அவந்தி பகுதியிலும், புந்தேல்கண்ட் பகுதியில் சந்தேலர்களும் கைப்பற்றி ஆண்டனர்.
சந்தேலர்கள், கஜுராஹோ கோயில்களை கட்டினர். விந்திய மலைத் தொடரில் உள்ள கோண்டுவானா இராச்சியமும், மகாகோசல இராச்சியமும் உருவெடுத்தது.
பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் வடக்கு மத்திய பிரதேசம் தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது.
நவீன வரலாறு
அக்பர் (1556–1605) ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளும் முகலாயப் பேரரசில் வீழ்ந்தது.
1707இல் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசை, மராத்தியர்களும், இராசபுத்திரர்களும் கடுமையாக தாக்கி நலிவுறச் செய்தனர்.
பொ.ஊ. 1720–1760 இடைப்பட்ட காலத்தில், மராத்தியர்கள் மத்தியப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்கள் எனப்படும் மராத்தியப் படைத் தலைவர்கள் கைப்பற்றி பிரித்துக் கொண்டு ஆண்டனர்.
1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர், மராத்தியப் பேரரசின் விரிவாக்கம் நின்று விட்டது. மத்தியப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா அரசின் நேரடி ஆட்சியின் வந்தது.
1853இல் மத்திய பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி, மற்றும் மகாரஷ்டிராவின் கிழக்குப் பகுதிகள், மற்றும் சத்தீஸ்கர்|சத்தீஸ்கரின்]] பெரும் பகுதிகளை கொண்டிருந்த நாக்பூர் சுதேச சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தனர்.
இந்திய விடுதலைக்குப் பின்னர்
இந்தியப் பிரிவினைக்கு பிறகு 1950இல் நாக்பூரை தலைநகராகக் கொண்ட மத்திய இந்தியா முகமையின் பகுதிகள், புந்தேல்கண்ட், சத்தீஸ்கர், போபால் சமஸ்தானம், விதர்பா என்ற பேரர் சமஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கொண்டு மத்திய பாரதம், விந்தியப் பிரதேசம் உருவானது.
பின்னர் 1956இல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தானங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
நவம்பர் 2000ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளைக் கொண்டு, சத்தீஸ்கர் எனும் புதிய மாநிலம் துவக்கப்பட்டது.
மாவட்டங்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்தை நிர்வாக வசதிக்காக போபால் கோட்டம், சம்பல் கோட்டம், குவாலியர் கோட்டம், இந்தூர் கோட்டம், ஜபல்பூர் கோட்டம், நர்மதாபுரம் கோட்டம், ரேவா கோட்டம், சாகர் கோட்டம், ஷாடோல் கோட்டம் மற்றும் உச்சையினி கோட்டம் எனப் பத்து கோட்டங்களில் பின் வரும் 52 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.
போபால் கோட்டம்
போபால் மாவட்டம்
ராய்சென் மாவட்டம்
ராஜ்கர் மாவட்டம்
செஹோர் மாவட்டம்
விதிஷா மாவட்டம்
சம்பல் கோட்டம்
முரைனா மாவட்டம்
சியோப்பூர் மாவட்டம்
பிண்டு மாவட்டம்
குவாலியர் கோட்டம்
அசோக்நகர் மாவட்டம்
சிவபுரி மாவட்டம்
ததியா மாவட்டம்
குனா மாவட்டம்
குவாலியர் மாவட்டம்
இந்தூர் கோட்டம்
அலிராஜ்பூர் மாவட்டம்
பர்வானி மாவட்டம்
புர்ஹான்பூர் மாவட்டம்
தார் மாவட்டம்
இந்தூர் மாவட்டம்
ஜாபூவா மாவட்டம்
கண்ட்வா மாவட்டம்
கார்கோன் மாவட்டம்
ஜபல்பூர் கோட்டம்
பாலாகாட் மாவட்டம்
சிந்த்வாரா மாவட்டம்
ஜபல்பூர் மாவட்டம்
கட்னி மாவட்டம்
மண்ட்லா மாவட்டம்
நர்சிங்பூர் மாவட்டம்
சிவனி மாவட்டம்
நர்மதாபுரம் கோட்டம்
பேதுல் மாவட்டம்
ஹர்தா மாவட்டம்
ஹோசங்காபாத் மாவட்டம்
ரேவா கோட்டம்
ரேவா மாவட்டம்
சத்னா மாவட்டம்
சித்தி மாவட்டம்
சிங்கரௌலி மாவட்டம்
சாகர் கோட்டம்
சத்தர்பூர் மாவட்டம்
தமோ மாவட்டம்
பன்னா மாவட்டம்
சாகர் மாவட்டம்
டிக்கம்கர் மாவட்டம்
நிவாரி மாவட்டம்
ஷாடோல் கோட்டம்
அனூப்பூர் மாவட்டம்
ஷட்டோல் மாவட்டம்
உமரியா மாவட்டம்
டிண்டோரி மாவட்டம்
உச்சையினி கோட்டம்
அகர் மால்வா மாவட்டம்
தேவாஸ் மாவட்டம்
மண்டசௌர் மாவட்டம்
நீமச் மாவட்டம்
ரத்லாம் மாவட்டம்
சாஜாபூர் மாவட்டம்
உஜ்ஜைன் மாவட்டம்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மத்திய பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 72,626,809 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 72.37% மக்களும், நகரப்புறங்களில் 27.63% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.35% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 37,612,306 ஆண்களும் மற்றும் 35,014,503 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 931 பெண்கள் வீதம் உள்ளனர். 308,252 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 236 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 69.32% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.73% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.24% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,809,395 ஆக உள்ளது.
இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 46,19,068 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 66,007,121 (90.89%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 4,774,695 (6.57%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 213,282 (0.29%) ஆகவும் சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 151,412 (0.21%) ஆகவும் சமண சமய மக்கள் தொகை 567,028 (0.78%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 216,052 (0.30%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 599,594 (0.83%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 97,625 (0.13%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் பழங்குடி மக்களால் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
போக்குவரத்து
சாலைகள்
மத்தியப் பிரதேச மாநிலம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகள் மாநிலத்தின் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் தரைவழியாக இணைக்கிறது.
வானூர்தி நிலையம்
அகில்யாபாய் பன்னாட்டு விமான நிலையம் நாட்டின் மற்றும் பன்னாட்டு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது. ஜபல்பூர், குவாலியர், கஜுரஹோ, ரட்லம், உஜ்ஜைன், சட்னா மற்றும் ரேவாவில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் இந்தியாவின் பிற நகரங்களை இணைக்கிறது.
தொடருந்து
போபால் தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை வழியாக இணைக்கிறது.
எரிசக்தி
தனியார், இந்திய அரசு மற்றும் மத்திய பிரதேச அரசுகள், அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 16678.67 மெகாவாட் (செப்டம்பர் 2015) மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கொண்டுள்ளது.
அரசியல்
இம்மாநிலம் 230 சட்டமன்றத் தொகுதிகளும், இருபத்து ஒன்பது நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளும் கொண்டது.
பொருளாதாரம்
இம்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013-2014-ஆம் ஆண்டில் 4,509 பில்லியனாக இருந்தது. 2013-2014-ஆம் ஆண்டில் தனிநபர் வருவாய் ஆண்டிற்கு 871.45 அமெரிக்க டாலராக இருந்தது. இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் துறையே சார்ந்துள்ளது. இங்கு கோதுமை, சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், கரும்பு, நெல், நவதானியங்கள், பருத்தி, ஆமணக்கு, கடுகு, சோளம் பயிரிடப்படுகிறது. மேலும் காடுகளில் கிடைக்கும் மூலிகைச் செடி கொடிகள், பீடி இலைகள், எண்ணெய் வித்துக்கள், தேக்கு மர விதைகள் மற்றும் மரக்கட்டைகள் பழங்குடி மக்களின் மற்றும் கிராமியப் பொருளாதாரத்திற்கு வழு சேர்க்கிறது.
இம்மாநிலம் ஐந்து சிறப்பு பொருளாதா மண்டலங்களைக் கொண்டுள்ளது. அதில் இந்தூர் மற்றும் குவாலியரில் செயல்படும் மூன்று தகவல் தொழில் நுட்ப நிலையங்களும், ஜபல்பூரில் ஒரு கனிம வள தொழில் நுட்ப நிறுவனமும் மற்றும் ஒரு வேளாண்மை சார்ந்த தொழில் நுட்ப நிறுவனமும் அடங்கும். இந்தூர் மாநிலத்தின் மிகப்பெரிய வணிகச் சந்தையாக உள்ளது.
செம்பு மற்றும் வைர உற்பத்தியில் நாட்டில் முதன்மை மாநிலமாக உள்ளது. நிலக்கரி, மீத்தேன் எரிவாயு, மங்கனீசு, தோலமைட் போன்ற கனிம வளங்கள் கொண்ட மாநிலம்.
இம்மாநிலத்தின் ஜபல்பூர் மற்றும் கட்னி மாவட்டங்களில் ஆறு இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது.
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
உலகப் பாரம்பரியக் களங்களான சாஞ்சி, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் மற்றும் கஜுராஹோ இம்மாநிலத்தில் அமைந்துள்ளது. 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் மற்றும் ஓங்காரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. ஓர்ச்சா குனோ வனவிலங்கு சரணாலயம் மற்றும் கன்ஹா தேசியப் பூங்கா பார்க்க வேண்டியவைகளாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மத்திய பிரதேச வலைத்தளம்
மத்திய பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
மத்திய பிரதேச சுற்றுலா துறை
மத்திய பிரதேச காவல் துறை
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
4563
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE
|
ஒடிசா
|
ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)), இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள செகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா. ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன.
மாவட்டங்கள்
ஒரிசா 30 வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவையாவன:
அனுகோள்
பாலேஸ்வர்
பர்கட்
பத்ரக்
பலாங்கீர்
பௌத்
கட்டக்
தேபகட்
டேங்கானாள்
கஜபதி
கஞ்சாம்
ஜகத்சிங்பூர்
ஜாஜ்பூர்
ஜார்சுகுடா
களாஹாண்டி
கந்தமாள்
கேந்திராபடா
கேந்துஜர்
கோர்தா
கோராபுட்
மால்கான்கிரி
மயூர்பஞ்சு
நபரங்பூர்
நயாகட்
நூவாபடா
புரி
ராயகடா
சம்பல்பூர்
சுபர்ணபூர்
சுந்தர்கட்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.87% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 39,300,341 (93.63%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 911,670 (2.17%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 21,991 (0.05%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 9,420 (0.02%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 13,852 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 478,317 (1.14%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஒரியா மொழியுடன், வங்காளம், தெலுங்கு, இந்தி மற்றும் உருது மொழிகளும் பேசப்படுகிறது.
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
ஒரிசாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்; கொனார்க் சூரியக் கோயில், புரி செகன்நாதர் கோயில் மற்றும் லிங்கராசர் கோயில்
விழாக்கள்
ஒரிசாவின் புரி நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நடைபெறும் புரி செகன்நாதர் தேரோட்டம் புகழ் வாய்ந்தது.
கலை
ஒரிசா மாநிலத்தின் சிறப்பான நடனம் ஒடிசி ஆகும்.
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் நாட்டின் பிற பகுதிகளுடன் புவனேசுவரம் மற்றும் புரி நகரங்களுடன் சாலை வழியாக இணைக்கிறது.
புவனேசுவர் தொடருந்து நிலையம் அனைத்து இந்திய நகரங்களுடன் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது.
புவனேசுவர் பிசு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையம் இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களுடன் இணைக்கிறது.
பாராதீப் துறைமுகம் இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.
மேலும் பார்க்க
ஒடிசா அரசு
ஒடிசா மாவட்டங்களின் பட்டியல்
ஒடிசா வரலாறு
ஒடிசா முதலமைச்சர்களின் பட்டியல்
ஒடிசாவின் சட்டமன்றம்
ஒடிசா ஆளுநர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
4568
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
|
சத்தீசுகர்
|
சத்தீஸ்கர் (Chhattisgarh), இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். இது ஏழு மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளது - வடக்கில் உத்தரப் பிரதேசம், வடமேற்கில் மத்தியப் பிரதேசம், தென்மேற்கில் மகாராட்டிரம், தெற்கில் தெலுங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம், கிழக்கில் ஒடிசா வடகிழக்கில் சார்க்கண்டு.
வரலாறு
பண்டைக்கால மற்றும் இடைக்கால வரலாறு
பண்டைய காலங்களில், இந்த பகுதியில் தட்சிண கோசலம் (தென் கோசலை) என அறியப்பட்டது. மேலும் இப்பகுதி மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவது மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இப்பகுதியில் ஷரப்புரியர், பாண்டுவன்சி, சோமவன்சி, கலாச்சூரி, நாகவன்சி போன்ற ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் மீது சோழப் பேரரசின் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் படையெடுத்தனர்.
காலனிய மற்றும் விடுதலைக்குப் பிந்தைய காலம்
சத்தீசுகர் மராத்தா ஆட்சியாளரின்கீழ் (நாக்பூர் பான்லே) பொ.ஊ. 1741 முதல் 1845 வரை இருந்தது. பின்னர் 1845 முதல் 1947 வரை பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் மத்திய மாகாணத்தின் சத்தீஸ்கர் பிரிவாக இருந்தது. 1905 ஆம் ஆண்டில், சம்பல்பூர் மாவட்டம் ஒடிசாவுடன் இணைக்கப்பட்டது மேலும் சுர்குஜா பாளையம் வங்கத்திடமிருந்து சட்டீஸ்கருக்கு மாற்றப்பட்டது.
இந்தப் பகுதி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 1 நவம்பர் 1956 அன்று புதிய மாநிலத்துடன் இணைக்கப்பட்டது, இதன்பிறகு ஒரு மாநிலத்தின் பகுதியாக 44 ஆண்டுகள் இருந்தது. இப்பகுதி மத்தியப் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆவதற்கு முன்னர், நாக்பூரைத் தலைநகராக கொண்ட, பழைய மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியின்கீழ் மத்திய மாகாணம் மற்றும் பெராரின் (மமா மற்றும் பெரார்) பகுதியாக இருந்தது. சத்தீஸ்கர் அரசு சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சில சுதேச அரசுகளும் இருந்தன, ஆனால் பின்னர் அவை மத்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன.
சத்தீஸ்கர் பிரிப்பு
தற்போதைய சத்தீஸ்கர் மாநிலம் 2000 நவம்பர் அன்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது, என்றாலும் தனி மாநிலக் கோரிக்கை 1920களிலேயே எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது என்றாலும், தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம் தொடங்கப்பட்டாமல் இருந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூடி மனுக்கள் அளிப்பது, பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள், வேலை நிறுத்தங்கள் போன்றவை நடத்தப்பட்டன. தனி சத்தீஸ்கர் ஒரு தேவை குறித்து 1924 இல் ராய்ப்பூர் காங்கிரஸ் அலகு மூலம் எழுப்பப்பட்டது. மேலும் திரிபுராவில் நடந்த இந்திய காங்கிரஸின் வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் சத்தீஸ்கர் பிராந்திய காங்கிரஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1954 ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்ட போது, தனி சத்தீஸ்கர் மாநிலத்தின் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது, ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டு, தனி மாநில கோரிக்கை நாக்பூரில் உள்ள மத்திய பாரதத்தின் மாநில சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.
1990களில் புதிய மாநிலத்தின் தேவைக்கான செயல்பாடுகள் அதிகரித்தன, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அரசியல் அமைப்புகள் உருவாக்கம் பெற்றன. குறிப்பாக சத்தீஸ்கர் ராஜ்ஜிய நிர்மாண் மன்ச் நிறுவப்பட்டது. சந்துலால் சந்திரகர் என்பவர் கோரிக்கைக்கான இயக்கத்துக்கு தலைமை வகித்தார் இந்த இயக்கத்தின் தலைமையில், பல வெற்றிகரமான பிராந்தியம் தழுவிய வேலை நிறுத்தங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. இதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவும் இருந்தது,
தில்லியில் புதியதாக பதவியேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தால், மத்தியப் பிரதேச சட்டசபை ஒப்புதலுக்கான தனி சத்தீஸ்கர் மாநில மசோதா அனுப்பப்பட்டது. அங்கு அது மீண்டும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் அது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கரில் தனி மாநிலம் உருவாக்க வழி வகுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய சனாதிபதி ஆகஸ்ட் 2000 26 இல் மத்தியப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம், 2000 க்கு தனது ஒப்புதலை வழங்கினார். 2000 நவம்பர் 1 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவானது,
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,545,198 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,832,895 மற்றும் பெண்கள் 12,712,303 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 991 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,661,689 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.28% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.27% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.24% ஆகவும் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.11% ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 23,819,789 (93.25%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 514,998 (2.02 %)ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 490,542 (1.92 %) ஆகவும், பௌத்த சமயத்தவர்களின் மக்கள் தொகை 70,467 (0.28 %) ஆகவும், சமண சமயத்தவரின் மக்கள் தொகை 61,510 (0.24 %), சீக்கிய சமய மக்கள்தொகை 70,036 (0.27 %) ஆகவும்
61,510 0.24 % சமயம் குறிப்பிடாதவர்கள் 23,262 (0.09 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 494,594 (1.94 %) ஆக உள்ளனர்.
புவியியல்
அரசியல்
பொருளாதாரம்
சத்தீஸ்கர் மாநிலத்தின் 2010-ஆம் வருடத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 60,079 கோடி ரூபாய் ஆகும்.
2009 - 2010 ஆம் ஆண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 11.49% உயர்ந்தற்கு வேளாண்மைத் தொழிலும், தொழில் வளர்ச்சியுமே முக்கிய காரணிகள் ஆகும்.
வேளாண்மை
வேளாண்மைத் தொழில் மாநிலத்தின் 4.828 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. மாநிலத்தின் 80% மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மைச் சார்ந்த சிறு தொழிலையே நம்பியுள்ளனர்.
நெல், நவதாணியங்கள், எண்ணெய் வித்துக்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்கள் ஆகும்.
மாநிலத்தின் மொத்த பரப்பில் 41.33% பகுதிகள் வளமிக்க காட்டுப் பகுதிகள் கொண்டது.
தொழில் துறை
இரும்பு ஆலைகள், மின்சாரம் உற்பத்தி தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், அலுமினியம், இரும்பு, சுண்ணாம்பு, தோலமைட், பாக்சைட், படிகக்கற்கள், பளிங்கு கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலம்.
இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் 20% சத்தீஸ்கர் மாநிலம் கொண்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள்
தொடருந்து
ராய்ப்பூர் தொடருந்து நிலையம் மாநிலத்தின் மற்றும் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இருப்புப்பாதையால் இணைக்கிறது.
விமான நிலையம்
ராய்ப்பூர் விமான நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களை வானூர்தி மூலம் இணைக்கிறது.
நெடுஞ்சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பகுதிகளையும் மற்றும் மாநிலங்களையும் தரை வழியாக இணைக்கிறது.
சுற்றுலா
அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம்
இந்திராவதி தேசியப் பூங்கா
நிர்வாகம்
சத்தீசுகர் மாநிலம் நிர்வாக வசதிக்காக 5 கோட்டங்களாகவும், 33 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க
சத்தீசுகர் அரசு
சத்தீசுகர் மாவட்டப் பட்டியல்
சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல்
சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல்
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சத்தீசுகர் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
சத்தீசுகர் நபர்கள்
சத்தீசுகர் சட்டமன்றம்
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் அரசு
சத்தீஸ்கர் மாவட்டங்கள்
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
சத்தீஸ்கர் தொடர்புடைய பட்டியல்கள்
|
4570
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88
|
பிருஹத் சம்ஹிதை
|
பிருஹத் சம்ஹிதை என்பது வராஹமிஹிரரால் எழுதப்பட்ட சோதிட நூலாகும். கி.பி 505 ல் உருவானதாகக் கருதப்படும் இந்த நூல், சோதிடத்துடன் பல்வேறு விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறுகின்றது. கோள்களின் இயக்கம், கிரகணங்கள், நில நடுக்கம், மழை, வாஸ்து சாஸ்திரம் என்பன போன்ற விடயங்களையும் இந் நூல் விரிவாக எடுத்தாளுகின்றது. இந்நூலில் நூற்றியாறு (106) அத்தியாயங்கள் உள்ளன.
சோதிடம்
நூல்கள்
|
4580
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88
|
பொதுவுடைமை
|
கம்யூனிஸ்ட் கட்சி என்பது கம்யூனிசத்தின் சமூக-பொருளாதார இலக்குகளை அடைய முயலும் ஒரு அரசியல் கட்சியாகும் . கம்யூனிஸ்ட் கட்சி என்ற சொல் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோரால் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (1848) என்ற தலைப்பில் பிரபலப்படுத்தப்பட்டது . ஒரு முன்னணி கட்சியாக , கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தின் (பாட்டாளி வர்க்கத்தின்) அரசியல் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது . ஆளும் கட்சியாக, கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் மூலம் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது . விளாடிமிர் லெனின்ஏகாதிபத்திய ரஷ்யாவில் சோசலிச இயக்கம் சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் பிரிவுகளாக, போல்ஷிவிக் பிரிவு ("பெரும்பான்மையினர்") மற்றும் மென்ஷிவிக் பிரிவு ("சிறுபான்மையினர்") எனப் பிரிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சியை புரட்சிகர முன்னணிப் படையாக உருவாக்கியது . அரசியல் ரீதியாக திறம்பட செயல்பட, லெனின் ஜனநாயக மத்தியத்துவத்துடன் நிர்வகிக்கப்படும் ஒரு சிறிய முன்னணி கட்சியை முன்மொழிந்தார், இது தொழில்முறை புரட்சியாளர்களின் ஒழுக்கமான கேடரின் மையப்படுத்தப்பட்ட கட்டளையை அனுமதித்தது . ஒரு கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், அரசியல் இலக்குகளை அடைய ஒவ்வொரு போல்ஷிவிக்கின் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைக்கு முழு அர்ப்பணிப்பு தேவைப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, ஆரம்பத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியை உள்ளடக்கிய மென்ஷிவிக் பிரிவு, கம்யூனிசப் புரட்சியை அடைவதில் வெகுஜன மக்களின் முக்கியத்துவத்தை கட்சி புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. புரட்சியின் போக்கில், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியாக (CPSU) மாறிய போல்ஷிவிக் கட்சி 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொண்டது . கம்யூனிஸ்ட் அகிலத்தின் உருவாக்கத்துடன்(Comintern) 1919 இல், கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை என்ற கருத்து உலகளவில் பல புரட்சிகர கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தை கருத்தியல் ரீதியாக தரப்படுத்தவும், உறுப்புக் கட்சிகளின் மையக் கட்டுப்பாட்டை பராமரிக்கவும், Comintern அதன் உறுப்பினர்கள் தங்கள் பெயர்களில் "கம்யூனிஸ்ட் கட்சி" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரியது.
CPSU இன் தலைமையின் கீழ், மரபுவழி மார்க்சியத்தின் விளக்கங்கள் ரஷ்யாவிற்குப் பயன்படுத்தப்பட்டு , உலகம் முழுவதும் லெனினிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட்-லெனினிச அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது . லெனினின் மரணத்திற்குப் பிறகு, ஜோசப் ஸ்டாலினின் ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் லெனினிசம் (1924) என்ற புத்தகம் லெனினிசத்தின் அதிகாரப்பூர்வ விளக்கமாக இருந்தது .
வெகுஜன அமைப்புகள்
ஆரம்பகால பொதுவுடைமை
லெனினின் கோட்பாட்டில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்துவம் செயலில் உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் , கட்சிக்கு வெகுஜன ஆதரவைத் திரட்ட தனி அமைப்புகளின் வலைப்பின்னல்கள் தேவைப்பட்டன. பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பல்வேறு முன்னணி அமைப்புகளை கட்டமைத்தன, அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களுக்குத் திறந்தனர். பல நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிக முக்கியமான முன்னணி அமைப்பு அதன் இளைஞர் பிரிவு ஆகும். கம்யூனிஸ்ட் அகிலத்தின் காலத்தில் , இளைஞர் கழகங்கள் ' இளம் கம்யூனிஸ்ட் லீக் ' என்ற பெயரைப் பயன்படுத்தி வெளிப்படையான கம்யூனிஸ்ட் அமைப்புகளாக இருந்தன . பின்னர் பல நாடுகளில் யூத் லீக் கருத்து விரிவடைந்தது, மேலும் 'ஜனநாயக இளைஞர் கழகம்' போன்ற பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சில தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமாக, இந்த வெகுஜன அமைப்புகள் பெரும்பாலும் அரசியல் ரீதியாக கட்சியின் அரசியல் தலைமைக்கு அடிபணிந்தன. 1990 களில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த பிறகு, வெகுஜன அமைப்புகள் சில நேரங்களில் தங்கள் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர்களை விட அதிகமாக வாழ்ந்தன.
சர்வதேச அளவில், கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் பல்வேறு சர்வதேச முன்னணி அமைப்புகளை (தேசிய வெகுஜன அமைப்புகளை ஒன்றோடொன்று இணைக்கிறது), யங் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் , ப்ரோஃபின்டர்ன் , க்ரெஸ்டின்டர்ன் , இன்டர்நேஷனல் ரெட் எய்ட் , ஸ்போர்ட்டிர்ன் போன்றவற்றை ஏற்பாடு செய்தது. இவற்றில் பல அமைப்புகள் கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் கலைப்பு. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு , மாணவர்களின் சர்வதேச சங்கம் , உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு , போன்ற புதிய சர்வதேச ஒருங்கிணைப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.பெண்கள் சர்வதேச ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உலக அமைதி கவுன்சில் . சோவியத் யூனியன் Cominform என்ற புதிய அமைப்பின் கீழ் அதன் கிழக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே Comintern இன் அசல் இலக்குகளில் பலவற்றை ஒருங்கிணைத்தது.
வரலாற்று ரீதியாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசு அதிகாரத்தை அடைய போராடும் நாடுகளில், கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகள் மற்றும் போர்க்கால குழுக்களுடன் போர்க்கால கூட்டணிகளை உருவாக்குவது ( அல்பேனியாவின் தேசிய விடுதலை முன்னணி போன்றவை) இயற்றப்பட்டது . அரசு அதிகாரத்தை அடைந்தவுடன், இந்த முன்னணிகள் பெரும்பாலும் பெயரளவிலான (மற்றும் பொதுவாக தேர்தல்) "தேசிய" அல்லது "தந்தையர்" முன்னணிகளாக மாற்றப்பட்டன, இதில் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு டோக்கன் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது ( பிளாக்பார்டே என அழைக்கப்படும் நடைமுறை ), இவற்றின் மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டுகள். கிழக்கு ஜெர்மனியின் தேசிய முன்னணி (ஒரு வரலாற்று உதாரணம்) மற்றும் சீன மக்கள் குடியரசின் ஐக்கிய முன்னணி(ஒரு நவீன உதாரணம்). மற்ற நேரங்களில் யூகோஸ்லாவியா உழைக்கும் மக்களின் சோசலிஸ்ட் கூட்டணி மற்றும் ஆப்கானிஸ்தானின் தேசிய முன்னணி போன்ற பிற கட்சிகளின் பங்கேற்பின்றி இத்தகைய முன்னணிகளின் உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது , நோக்கம் ஒன்றுதான் என்றாலும்: கம்யூனிஸ்ட் கட்சியை பொதுவாக அல்லாதவற்றுக்கு மேம்படுத்துவது. கம்யூனிஸ்ட் பார்வையாளர்கள் மற்றும் முன்னணியின் கீழ் நாட்டிற்குள் பணிகளைச் செய்ய அவர்களை அணிதிரட்ட வேண்டும்.
வரலாற்று புவியியல் முழுவதும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை ஆய்வு செய்வதன் மூலம் உலகளாவிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒப்பீட்டு அரசியல் ஆய்வை சமீபத்திய புலமைப்பரிசில் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, புரட்சிகரக் கட்சிகளின் எழுச்சி, அவை சர்வதேச அளவில் பரவியது, கவர்ச்சியான புரட்சிகர தலைவர்களின் தோற்றம் மற்றும் உலகளாவிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சி மற்றும் வீழ்ச்சியின் போது அவர்களின் இறுதி மறைவு அனைத்தும் விசாரணைக்கு உட்பட்டவை.
நவீனப் பொதுவுடைமை
1917இல் இரசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சி, விளாதிமிர் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சி, எழுச்சியடையும் வாய்ப்பை உருவாக்கியது. இதுவே பகிரங்கமாக பொதுவுடைமைக் கட்சியொன்று, பெரும் அரசியல் இடத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது சம்பவமாகக் கருதப்படுகின்றது. இச்சம்பவம், மார்க்கசிய இயக்கம் மீது, நடைமுறை சார்ந்த மற்றும் கருத்துச் சார்ந்த உரையாடல்கள் நிகழக் காரணமானது. முன்னேறிய முதலாளித்துவ அபிவிருத்திகளின் அடிப்படையில் சமூகவுடைமையும் பொதுவுடைமையும் கட்டியெழுப்பப்படலாம் என்பதைஇ மார்க்ஸ் முன்மொழிந்தார். எவ்வாறெனினும் உருசியாவானது, பெரும் எண்ணிக்கையிலான படிப்பறிவற்றவர்களையும் சிறுபான்மை தொழில்துறைப் பணியாளர்களையும் கொண்ட வறியநாடாக அப்போது விளங்கியது. உருசியாவால் முதலாளித்துவ ஆட்சியை இலகுவாகக் கவிழ்க்கமுடியும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
லெனினின் போல்செவிக் கட்சியின் பொதுவுடைமைப் புரட்சிக்கான திட்டத்தை, மிதவாதப் போக்குடைய சிறுபான்மை மென்செவிக் கட்சி எதிர்த்தது. "நிம்மதி, உணவு, நிலம்" என்ற கோஷங்களுடன் ஆதிக்கசக்தியாக வளர்ந்த போல்செவிக், முதலாம் உலகப்போரில் இருசியாவின் பங்களிப்பை நிறுத்துவதற்கான பொதுமக்களின் பெருவிருப்பை தடைபோட்டதுடன், குடிமக்களின் நிலச்சீர்திருத்தம் மற்றும் சோவியத் சபைகளுக்கான ஆதரவைப் பெற்றுக்கொண்டது.
லெனினின் சனநாயக மையவாதத்துக்கமைய, லெனினியக் கட்சிகள், ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகள், 1937 முதல் 1938 வரை இசுடாலினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் துப்புரவாக்கம் மூலம் முடிவுக்குக் கொணரப்பட்டன. இருசியப் புரட்சியில் பெரும்பங்காற்றிய முக்கிய புள்ளிகள் உட்பட்ட பலர், அச்செயற்பாட்டின் போது, குற்றம் சுமத்தப்படு மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.
பனிப்போர்
இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பாகங்கள் மீது செலுத்திய ஆதிக்கம், அதை வல்லரசாக உயர்த்தியது. ஐரோப்பாவும் சப்பானியப் பேரரசும் சிதைந்துபோனதுடன், பொதுவுடைமைக் கட்சிகள் விடுதலை இயக்கங்களை முன்னின்று நடத்தலாயினர். சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, மார்க்கசிய, லெனினிய அரசாங்கங்கள், பல்காரியா, செக்கோசிலோவாக்கியா, இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு, போலந்து, அங்கேரி, உருமேனியா, அல்பேனியா முதலான நாடுகளில் ஆட்சிக்கு வந்தன. யுகோசுலாவியாவிலும் யோசேப்பு தித்தோ தலைமையில் ஒரு மார்க்கசிய - லெனினிய அரசு உருவானது. எனினும், தித்தோவின் விடுதலைக் கொள்கைகள், யொகோசுலாவியாவை பொதுவுடைமை நாடுகளின் ஒன்றிணைப்பிலிருந்து அந்நாட்டை விலகச்செய்ததுடன், தித்தோவின் கொள்கைகள், பொதுவுடைமையாளர்களால், வழுவுடையவை என்று வர்ணிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு போட்டியாகவும் எதிர்த்தரப்பாகவும் பொதுவுடைமை, அறிஞர்களால் நோக்கப்படலாயிற்று.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு
சோவியத் ஒன்றியத்தின் அதியுயர் சட்டமன்றத்தின் பிரகடனத்தின் கீழ், சோவியத் ஒன்றியம் 1991 டிசம்பர் 26இல் கலைக்கப்பட்டது. இப்பிரகடனமானது, முந்தைய சோவியத் குடியரசுகளின் விடுதலையை உறுதிசெய்ததுடன், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (CIS) உருவாகவும் காரணமானது. , எட்டாவது மற்றும் இறுதியான சோவியத் ஒன்றியத் தலைவராக விளங்கிய மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியம் கலைவதற்கு முந்திய நாள் பதவிவிலகியதுடன், சோவியத்தின் அணுசக்தி ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சினிடம் ஒப்படைத்தார். அன்று மாலை, கிரெம்லின் மாளிகையில் ஏற்றப்பட்டிருந்த சோவியத் கொடி இறக்கப்பட்டதுடன், புரட்சிக்கு முந்தைய உருசியக் கொடி ஏற்றப்பட்டது. ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே, சோவியத்தில் இருந்த உருசியா உள்ளிட்ட எல்லாக் குடியரசுகளும் தனித்தனியே பிரிந்துவிட்டிருந்தன. ஒன்றியத்தின் உத்தியோகபூர்வமான கலைப்புக்கு ஒரு வாரம் முன்பு, விடுதலை பெற்ற நாடுகளின் சமவாயத்துக்காக, பதினொரு குடியரசுகள் ஒப்பமிட்டு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்பதை மறைமுகமாக அறிவித்தன.
சமகால நிலை
சமகாலத்தில், சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பொதுவுடைமை நாடுகளாக விளங்குகின்றன. வடகொரியா தன்னை, மார்க்கசிய - லெனினியத்தின் அடுத்தபடி என்று சொல்லிக்கொள்கின்ற யுச்சேயை தனது அரசியல் கோட்பாடாக ம்முன்வைக்கின்றது. பொதுவுடைமைக் கட்சிகள், இன்றும் பெரும்பாலான நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தோடு உள்ளனர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசின் பங்காளியாக விளங்கும் பொதுவுடைமைக் கட்சி, தென்னாபிரிக்காவில் ஆட்சியில் பங்குவகிக்கின்றது.இந்தியாவில், அதன் மூன்று ஆட்சிப்பகுதிகளில், பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிசெலுத்துகின்றன. நேபாளம், பொதுவுடைமைவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தைக் கொண்டது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, அந்நாட்டின் சனநாயக சமூகவுடைமைத் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியில் பங்கேற்கிறது.
சீன மக்கள் குடியரசானது, மாவோயியக் கொள்கைகளின் பல அம்சங்களை மறுபரிசீலனைக்குட்படுத்தி இருக்கின்றது. லாவோஸ்,வியட்நாம் முதலான நாடுகளைப் போலவே, மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பரவலாக்கி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்துவதில் முயன்றுவருகிறது. டங் சியாவுபிங்கின் ஆட்சியில் 1978இல் ஆரம்பமான சீன பொருளாதார சீராக்கங்கள், மாவோ காலத்தில் 53% ஆக இருந்த வறுமையை, 2001இல் வெறும் 6% ஆகக் குறைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன.
பொதுவுடைமைக் கோட்பாடுகள்
மார்க்கசியம்
காரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் முன்மொழியப்பட்ட மார்க்சியம், பொதுவுடைமைக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். மார்க்கசியம் தன்னை, அறிவியல்பூர்வமான சமூகவுடைமையாக இனங்காண்கின்றது. அறிவுய்திகள் முன்வைக்கும் இலட்சியவாத சமூகம் ஒன்றைக் கருத்திற்கொள்ளாமல், சமூக வரலாற்றுக் காரணிகளைப் புரிந்துகொண்ட எதார்த்தபூர்வமான கோட்பாடாக மார்க்கசியம் விளங்குகின்றது. மார்க்கசியம் பொதுவுடைமையை, நிறுவப்படவேண்டிய அரசியல் விவகாரங்கள்என்ற கண்ணோட்டத்தில் காணாமல், வெற்று அறிவுபூர்வம் சாராத நடைமுறைச்சாத்தியமான சமூகம் சார்ந்த வெளிப்பாடாகவே கருதுகின்றது. எனவே மார்க்கசியம், பொதுவுடைமைச் சமூகத்தின் எதிர்காலத் திட்டமிடல் கோட்பாடாக அமையாமல், அக்கோட்பாட்டை செயலாக்கும் மற்றும் அடிப்படை இயல்புகளை நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு கண்டறிய உதவும் அரசியல் சித்தாந்தமாகவே விளங்குகின்றது.
வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்று முன்பு அறியப்பட்ட மார்க்சியப் பொருள்முதல் வாதம், மார்க்கசியத்தின் வேராகத் திகழ்கின்றது. பொருளாதாரத் தொகுதிகளின் அடிப்படை இயல்புகளை, உற்பத்திமுறை, வகுப்புவாதச் சிக்கல்கள் என்பவற்றின் வழியே வரலாற்றினூடாக அது புரிந்துகொள்ளமுயல்கின்றது. இப்பகுப்பாய்வு மூலம் தொழிற்புரட்சி உலகுக்கு புதிய உற்பத்திமுறையொன்றை அறிமுகம் செய்தது. அதுவே முதலாளித்துவம். முதலாளித்துவத்துக்கு முன்பு, தொழில்சார்ந்த வகுப்புகள், உற்பத்தியில் பயன்பட்ட உபகரணங்களுக்கு உரித்தானவர்கலாக இருந்தனர். ஆனால் இயந்திரங்கள் அவ்வுபகரணங்களின் இடத்தைப் பெற்றுக்கொண்ட சமகாலத்தில், அவை பயனற்றுப்போயின. தொழிலாலர் படையானது, அதன் பின்னர் தன் உழைப்பை விற்பதன் மூலம், அல்லது வேறொருவரின் இயந்திரத்தில் தங்கியிருப்பதன் மூலம் மட்டுமே ஆதாயத்தை ஈட்டி வாழமுடிந்தது.இதனால், உலகம் பாட்டாளி - முதலாளி எனும் இருபெரும் வகுப்புகளாக பிளவுண்டது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. உற்பத்திகளில் முதலாளிகள் தனியார் உரிமம் கோரி இலாபமீட்டிய அதேவேளை, உற்பத்தியில் உரிமைகோர முடியாத பாட்டாளிகள், முதலாளிகளுக்கு அவற்றை விற்பது தவிர வேறு வழியில்லாதவர்கள் ஆயினர்.
இவ்வாறு செல்லும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம், முதலாளிகள் நிலக்கிழாரியம் மூலம் வளர்ந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, ஆளும் வர்க்கமாக வளர்ந்தனர் என்கின்றது. இந்நிலையில் பாட்டாளிகள், அரச அதிகாரத்தைப் பெற்று தனியார் உரிமத்துக்கெதிராக பொதுவுரிமத்தை நிலைநாட்டும்போதே, பாட்டாளி - முதலாளி எனும் பேதத்தை ஒழிக்கமுடிவதுடன், உலகை பொதுவுடைமை எனும் கோட்பாட்டின் கீழ் கொணரமுடியும். முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையிலேயே தொழிலாளர் சர்வாதிகாரம் இருக்கின்றது. இதன்மூலமே பொது வாக்குரிமை மூலம் பொது அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு மீளளிக்கப்படுகின்றது. இது முதலாளிகளைத் தோற்கடித்தாலும், முதலாளித்துவத்தைத் தோற்கடிக்காது. எனவே அதன்பிறகு சாத்தியமான ஒரே உற்பத்திமுறை முதலாளித்துவ உற்பத்திமுறையாகவே காணப்படும்.
மார்க்கசியத்தின் கோட்பாட்டின் படி, தேசியமயமாதல் என்பது, செழிப்பை அரச உடைமை ஆக்குதல். ஆனால் சமூகமயமாதல் என்பது, சமூகமே அவ்வுடைமையின் உண்மையான மேலாண்மையாக விளங்குதல். தேசியமயமாதலை கவனமாகக் கையாளவேண்டிய சிக்கலாகக் கொண்ட மார்க்கசியம், அரசுடைமையில் தொடர்ந்தும் முதலாளித்துவ உற்பத்திமுறை விளங்குவதை பரிந்துரைக்கிறது. இந்த யுக்தியால், சில மார்க்கசிய குழுமங்களை ஒன்றிணைத்து, சோவியத் ஒன்றியம் முதலான தேசியமயப்படுத்தப்பட்ட பேரரசுகள் உருவாக வழிகோலப்பட்டது.
லெனினியம்
லெனினியம் என்பது, விளாடிமிர் லெனினால் முன்னெடுக்கப்பட்ட, உருசியப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் சித்தாந்தம் ஆகும். பொதுவுடைமையிலிருந்து நீட்சிபெற்ற லெனினியம், சமூகவுடைமையின் நிலைநிறுத்தலுக்காக ஒரு குடியரசு அமைப்பு நிறுவுதலையும், பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தையும் முன்வைத்தது. ஐந்து ஆண்டுகளாக மார்க்கசியத்தின் நடைமுறைப் பிரயோகமாக விளங்கிய லெனினியம், 1917இல் போல்செவிக் கட்சியின் கீழ் உழைக்கும் வர்க்கம் அதிகாரம் பெற்று சோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமானது.
ஏனையவை
மார்க்கசியமும் லெனினியமும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம், ஜோசப் ஸ்டாலின் மூலம் மார்க்கசிய -லெனினியமாக முன்வைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி மூலம் சோவியத் ஒன்றியத்தில் இவற்றை செயன்முறைப்படுத்திய ஸ்டாலின், பொதுவுடைமை அனைத்துலகம் என்ற அமைப்பின் கீழ், பரவலான உலகக் கவனத்தைப் பெற்றுக்கொண்டார். மார்க்கசு மற்றும் லெனினின் கோட்பாடுகளை ஸ்டாலின் உண்மையிலேயே கைக்கொண்டாரா என்பதில் இன்றும் அறிஞர் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. மார்க்கசிய - லெனினியம் ஸ்டாலினின் கொள்கையாகவும், இசுடாலினியம் அவரது நடைமுறையாகவும் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய - லெனினியத்தில் இல்லாத தனிமனித வழிபாடு, அரச ஒடுக்குமுறை என்பன இசுடாலினியத்தில் காணப்பட்டன. சீனத்தலைவர் மா சே துங்கின் ஆட்சிக்கொள்கையான மாவோவியம், மார்க்கசிய - லினினியத்தின் இன்னொரு வடிவமாகக் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய- லெனினிய இணைவான இசுடாலினியம், மாவோயியம் முதலானவை சமூகவுடைமையை நிறுவுவதற்குப் பதில், அரச முதலாளித்துவத்தையே நிறுவியதாக, ஏனைய பொதுவுடைமை - மார்க்கசியர்கள் விமர்சித்தனர்.
தம்மை மார்க்கசிய - லெனினியத்தின் நீட்சிகள் என்று உரிமைகோரிய இன்னும் பல பொதுவுடைமைக் கோட்பாடுகள் உலக அரங்கில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. ஸ்டாலினுக்கு எதிராக அதிகாரத்துக்குப் போட்டியிட்ட லியோன் திரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும், மார்க்கசிய - லெனினியத்துக்கு எதிராக திரொட்ஸ்கியியம் எனும் சித்தாந்தத்தை முன்மொழிந்தனர். நான்காம் அனைத்துலகம் அமைப்பு, ஸ்டாலினின் பொதுவுடைமை அனைத்துலகம் அமைப்புக்கு எதிராக 1938இல் திரொட்ஸ்கியால் நிறுவப்பட்டது. இன்னும் கட்டுப்பாடில்லா மார்க்கசியம் (Libertarian Marxism),, மன்றுசார் பொதுவுடைமை (Council communism), இடது பொதுவுடைமை, முதலான பல்வேறு பொதுவுடைமைக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன. மார்க்கசியத்துக்கு எதிராக,அரசிலாப் பொதுவுடைமை, கிறித்துவப் பொதுவுடைமை என்பன அதேகாலத்தில் உருவாகின.
விமர்சனம்
பொதுவுடைமை மீதான விமர்சனம் இருவகைப்படும். ஒன்று, இருபதாம் நூற்றாண்டு பொதுவுடைமை அரசுகளின் செயன்முறை அம்சங்களோடு கருத்தில் கொள்ளப்படுபவை. அடுத்தது, பொதுவுடைமைக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளோடு தொடர்பானவை. பொதுவுடைமைக் கொள்கைகளுள் ஒன்றான மார்க்சியப் பொருள்முதல் வாதம், தாராண்மை மக்களாட்சியின் உரிமைகளை நசுக்கும் ஒன்றாக நோக்கப்படுகின்றது.
மார்க்சிய மறுமலர்ச்சியாளரும், சமூகவியலாளரும் ஆன எட்வர்டு பெர்ன்சுடைன் முந்தைய மார்க்சிய கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கல்சும் கொள்கையின் ஆரம்பக்கட்டத்தின் போது இளையவர்களாய் இருந்ததால் அக்கொள்கை வன்முறைப் பாதையை தூண்டுவதாக சாடி இருக்கிறார். மேலும் அது முதிர்ச்சி அடையாத கொள்கை எனவும் இவரால் கூறப்பட்டது. ஆனால் பிற்கால மார்க்கியக் கொள்கையில் கார்ல் மார்க்சு சமூக புரட்சியின் மூலமாக காண முடியும் எனக் கூறியதால் பிற்கால மார்க்சிய கொள்கை முதிர்ச்சி அடைந்த கொள்கை என்று வழிமொழிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், வட கொரியா. பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. பொதுவுடைமைக் கொள்கைகளை கொண்டிருக்கும் நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக முடக்கம் செய்யப்பட்டுள்ளன. சீனா போன்ற நாடுகளின் நடக்கும் பல்வேறு அநியாயங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன. மனிதவுரிமைகள் தொடர்பான மக்கள் புரிதலுக்கோ தேடலுக்கோ கூட வழிகள் இல்லை. இணையத்திலும் கூட மனிதவுரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் மக்களுக்கு எட்டாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் காண
சோசலிசக் குடியரசு
பண்பாட்டுப் பரிணாமம்
அடிக்குறிப்புகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Libcom.org Extensive library of almost 20,000 articles, books, pamphlets and journals on libertarian communism
The Radical Pamphlet Collection at the அமெரிக்கக் காங்கிரசு நூலகம் contains materials on the topic of communism.
Communism by country
பொதுவுடைமை
பொருளாதார முறைமைகள்
அரசியல் மெய்யியல்
|
4583
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
பாசிசம்
|
பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என மார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.
அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிசம் முதலாம் உலக மகா யுத்தத்தின் போது இத்தாலியில் தோன்றியது.பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.
பாசிஸ்டுகளின் நம்பிக்கை
போர், சமுதாயம், அரசு மற்றும் தொழில்நுட்பத்தின் இயல்பில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும் பாசிசவாதிகள், ஒட்டுமொத்த போர் மற்றும் மக்கள் அணிதிரட்டல் ஆகியவற்றின் வருகையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போர் வீரர்களிடையே உள்ள வேறுபாட்டை உடைத்துவிட்டனர். போர் முயற்சி, பொருளாதார உற்பத்தி, இதனால் "குடிமக்கள் குடியுரிமை" உருவானது, அதனால் அனைத்து குடிமக்களும் போரின்போது இராணுவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாராளவாத ஜனநாயகம் முற்றுமுழுதாக இருக்காது என்று பாசிஸ்டுகள் நம்புகின்றனர், மற்றும் ஆயுத சண்டையில் ஒரு தேசத்தை உருவாக்கவும், பொருளாதார சிக்கல்களுக்கு திறம்பட பதிலளிப்பதற்காகவும், சமுதாயத்தை ஒரு சர்வாதிகாரமான ஒரு கட்சி அரசின் கீழ் முழுமையாக அணிதிரட்டுவதே சரி என்று அவர்கள் கருதுகின்றனர். அத்தகைய அரசு ஒரு வலுவான தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும்.ஒரு சர்வாதிகாரி மற்றும் ஆளும் பாசிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இராணுவ அரசாங்கம் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கும், ஒரு நிலையான மற்றும் ஒழுங்கான சமுதாயத்தை பராமரிப்பதற்கும் தேவை. வன்முறை தானாக இயற்கையில் எதிர்மறையானது என்று வலியுறுத்துவதை பாசிசம் நிராகரிக்கிறது. அரசியல் வன்முறை, போர் மற்றும் ஏகாதிபத்தியம் போன்ற கருத்துக்களைக் கொண்டு தேசிய மறுசீரமைப்பை அடைய முடியும் என்று பாசிசம் நம்புகிறது.
முதலாம் உலகப் போரில் பாசிசம்
ஆகஸ்ட் 1914 ல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, இத்தாலிய அரசியல் இடதுகள் போரில் அதன் நிலைப்பாட்டை கடுமையாக பிரித்தனர். இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி (PSI) போரை எதிர்த்தது, ஆனால் பல இத்தாலிய புரட்சிகர சிண்டிகலிஸ்டுகள் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியோருக்கு எதிராக போருக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் பிற்போக்குத்தன ஆட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் சோசலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.
ஏஞ்சலோ ஒலிவியேரோ ஒலிவேட்டி அக்டோபர் 1914 ல் சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் என்றழைக்கப்படும் ஒரு சார்பு-தலையீடு குழுவை அமைத்துள்ளார். பெனிட்டோ முசோலினியின் ஜேர்மனிய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக PSI இன் பத்திரிகையான அவந்தியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்."பாசிசம்" என்ற வார்த்தை முதன் முதலில் 1915 இல் முசோலினியின் இயக்கமான சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டது.1917 அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றினர். இது பாசிசத்தின் வளர்ச்சியை பெரிதும் அதிகரித்தது.1917 ல், முசோலினி, புரட்சிகர நடவடிக்கை பாசிச தலைவர், அக்டோபர் புரட்சியை பாராட்டினார். ஆனால் பின்னர் அவர் லெனினுடன் ஒத்துப் போகவில்லை, அவரை ஜார் நிக்கோலஸின் ஒரு புதிய பதிப்பாக மட்டுமே கருதினார்.
நாம் சோசலிசத்திற்கு எதிரான போரை அறிவிக்கின்றோம், ஏனென்றால் அது சோசலிசம் என்பதற்காக அல்ல, மாறாக அது தேசியவாதத்தை எதிர்க்கிறது என்பதற்காகவே.சோசலிசம் என்னவென்பது பற்றி விவாதிக்கலாம் என்றாலும், அதன் வேலைத்திட்டம் என்ன, அதன் தந்திரோபாயங்கள் என்னவென்றால், ஒன்று தெளிவாக உள்ளது: அதிகாரபூர்வ இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி பிற்போக்குத்தனமாகவும் முற்றிலுமாகப் பழமைவாதமாகவும் உள்ளது. அதன் கருத்துக்கள் நிலவியிருந்தால், இன்றைய உலகில் நம் உயிர் பிழைத்திருப்பது சாத்தியமற்றது.
-பெனிட்டோ முசோலினி
பாசிஸ்டுகளின் அறிக்கை
1919 ஆம் ஆண்டில், அல்கெஸ்ட் டி ஆம்பிரீஸ் மற்றும் ஃபுயூச்சரிஸ்ட் இயக்க தலைவர் ஃபிலிப்போ டோமாசோ மரினெட்டி ஆகியோரால் இத்தாலிய காம்பாட் படையின் அறிக்கை (பாசிச அறிக்கை) உருவாக்கப்பட்டது.இந்த அறிக்கையானது ஜூன் 6, 1919 அன்று பாசிச செய்தித்தாள் Il Popolo d'Italia இல் வழங்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பிராந்திய அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான உலகளாவிய வாக்குரிமை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்த அறிக்கை ஆதரித்தது;தொழில், போக்குவரத்து, பொது சுகாதாரம், தகவல்தொடர்புகள் போன்றவை உட்பட, அந்தந்த பகுதிகளில் சட்டமியற்றும் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நடத்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களாலும் வர்த்தகர்களிடமிருந்தும் தேர்வு செய்யப்பட்ட நிபுணர்களின் "தேசிய கவுன்சில்களின்" ஒரு கூட்டு நிறுவன அமைப்பு மூலம் அரசாங்க பிரதிநிதித்துவம்; மற்றும் இத்தாலிய செனட்டின் ஒழிப்பு ஆகியவற்றை இந்த அறிக்கை ஆதரித்தது.
சிவப்பு ஆண்டுகள்
1920 ல், தொழில்துறைத் தொழிலாளர்கள் மேற்கொண்ட போர்க்குணமிக்க வேலைநிறுத்தம் இத்தாலியில் உச்சத்தை அடைந்தது; 1919 மற்றும் 1920 ஆகியவை "சிவப்பு ஆண்டுகள்" என்று அறியப்பட்டன. முசோலினி மற்றும் பாசிஸ்டுகள் ஆகியோர் நிலைமைகளைப் பயன்படுத்தி தொழிற்துறை தொழிலதிபர்களுடன் இணைந்து, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இத்தாலியில் உள்ள ஒழுங்கு மற்றும் உள்நாட்டு சமாதானத்தை காப்பாற்றுவதாகக்கோரி தாக்கினர்.
முதலாம் உலகப் போரில் தலையிட்டதை எதிர்த்த இடதுசாரிகளின் பெரும்பான்மையான சோசியலிஸ்டுகளை பாசிசவாதிகள் தங்கள் முக்கிய எதிரிகளாக அடையாளம் கண்டனர்.பாசிஸ்டுகளும் இத்தாலிய அரசியல் உரிமையும் பொதுவான நிலையைக் கொண்டிருந்தன: இருவரும் மார்க்சிசத்தை அவமதித்தனர், வர்க்க நனவை கருத்தில் கொள்ளவில்லை மற்றும் பிரமுகர்களின் ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பாசிச இத்தாலி
முசோலினி அதிகாரத்தில்
இத்தாலியின் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், முசோலினி ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் பாசிஸ்ட்டுகள் இத்தாலிய பாராளுமன்றத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.முசோலினியின் கூட்டணி அரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரத் தாராளவாத கொள்கைகளை பொருளாதார மந்திரி அல்பர்ட்டோ டி ஸ்டீபனி (மையக் கட்சியின் உறுப்பினர்) தலைமையின் கீழ் தொடர்ந்து கொண்டது. இதில் பட்ஜெட் சமநிலைப்படுத்தப்பட்டது உட்பட உள்நாட்டுச் சேவைக்கு ஆழமான வெட்டுக்கள் இருந்தன. ஆரம்பத்தில், அரசாங்க கொள்கைகளில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது, அடக்குமுறையான போலிஸ் நடவடிக்கைகள் குறைவாக இருந்தன.
பாசிஸ்டுகள் இத்தாலியில் பாசிசத்தை ஏசர்போ சட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியைத் தொடங்கினர், இது நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி பட்டியலில் 25% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது என்று வாக்குறுதி அளித்தது. கணிசமான பாசிச வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம், பெரும்பாலான வாக்குகள் பாசிஸ்டுகளுக்கு செல்வதற்கு பல இடங்களை அனுமதித்தன. 3 ஜனவரி 1925 அன்று, முசோலினி பாசிச மேலாதிக்க இத்தாலிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மற்றும் அவர் என்ன நடந்தது என்பதை தனிப்பட்ட முறையில் பொறுப்பாளராக அறிவித்தார், ஆனால் அவர் தவறு எதுவும் செய்யாததாக வலியுறுத்தினார். அவர் தன்னை சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தினார். அரசாங்கத்தின் மீது முழு பொறுப்பையும், நாடாளுமன்றத்தை பதவி நீக்கம் செய்வதையும் அறிவித்தார். 1925 முதல் 1929 வரை, பாசிசம் சீராக வளர்ந்தது: எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
தீவிரமான வெளியுறவுக் கொள்கை
1920 களில் பாசிச இத்தாலி கடுமையான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தது, இது கிரேக்கத் தீவான கோர்ஃபூ மீதான தாக்குதலை உள்ளடக்கியத. பாசிஸ்டுகள் பால்கன் பகுதியில் இத்தாலிய எல்லையை விரிவுபடுத்த நோக்கம் கொண்டனர், துருக்கி மற்றும் யூகோஸ்லாவியாவிற்கு எதிரான போரை நடத்துவதற்கான திட்டம் தீட்டினர், யூகோஸ்லாவியாவை உள்நாட்டு யுத்தத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்தனர், மற்றும் இத்தாலியின் தலையீட்டை சட்டபூர்வமாக்குவதற்கு மாசிடோனிய பிரிவினைவாதிகள் மற்றும் அல்பேனியாவை இத்தாலியின் ஒரு உண்மையான பாதுகாப்பாளராக உருவாக்கி, 1927 வாக்கில் இராஜதந்திர வழிமுறைகளால் இவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்துமுடித்தனர்.
லிபியாவின் எழுச்சிக்கு பதிலிறுப்பாக (லிபியா, அந்த காலப்பகுதியில் ஒரு இத்தாலிய காலனி நாடு) பாசிச இத்தாலி, லிபிய உள்ளூர் தலைவர்களுடன் ஒத்துழைக்கும் முந்தைய தாராளவாத காலனித்துவக் கொள்கையை கைவிட்டது. அதற்கு பதிலாக, இத்தாலியர்கள் ஆப்பிரிக்க இனங்களை விடவும் ஒரு உயர்ந்த இனம் என்று கூறியது மற்றுமின்றி இதனால் இத்தாலியர்கள் "தாழ்ந்த இனமான" ஆபிரிக்கர்களை கைப்பற்றுவதற்கும் ஆட்சி செய்வதற்கும் உரிமையுண்டு என்றனர். அதற்கு ஏற்ப லிபியாவில் 10 முதல் 15 மில்லியன் இத்தாலியர்கள் குடியேற முற்பட்டனர். இது லிபியாவில் உள்ள பூர்வீக மக்களுக்கு எதிரான லிபிய இனப்படுகொலை என்று அழைக்கப்படும் ஒரு தீவிரமான இராணுவ நடவடிக்கையில் விளைந்தது. இதில் வெகுஜனக் கொலைகள், சித்திரவதை முகாம்களின் பயன்பாடு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாயப்படுத்தப்பட்ட பட்டினியும் அடங்கும்.
இரண்டாம் உலகப் போர்
பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜேர்மனியில் முசோலினி மற்றும் ஹிட்லர் இருவரும் 1930 - 1940 களில் பிராந்திய விரிவாக்க மற்றும் வெளியுறவு கொள்கை தலையீட்டுவாத நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்தனர். இத்திட்டங்களின் மூலம் இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
முசோலினி இத்தாலிய கோரிக்கைகள் மீட்கப்பட வேண்டும், மத்தியதரைக் கடலின் இத்தாலிய மேலாதிக்கத்தை நிறுவுதல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இத்தாலிய அணுகலைப் பெறுதல், மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடலில் உள்ள இத்தாலிய ஸ்பேசியோ வைடால் ("முக்கிய இடம்") ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று கோரினார். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளான ஜேர்மனியர்களால் காலனித்துவப்படுத்தப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மன் லெபென்ஸ்ராம் ("வாழும் இடம்") உருவாக்கப்பட வேண்டும் என்று ஹிட்லர் கோரினார்.
1935 முதல் 1939 வரையான காலப்பகுதியில், ஜேர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் தங்கள் கோரிக்கைகளை பிராந்திய கூற்றுக்கள் மற்றும் உலக விவகாரங்களில் பெரும் தாக்கத்தை அதிகப்படுத்தியது. 1936 இல் ஜெர்மனி தொழில்துறை ரைன்லேண்ட் மறுமதிப்பீடு செய்யப்பட்டது; வெர்சாய் உடன்படிக்கையால் இந்த பிராந்தியத்தை தளர்த்தப்பட்டது. 1938 ம் ஆண்டு ஜெர்மனியை சுடபென்லாந்துக்கு வழங்கிய முனிச் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் செக்கோஸ்லோவாக்கியா மீது பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையேயான இராஜதந்திர நெருக்கடியை தீர்ப்பதில் ஜேர்மனிக்கு உதவிய ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகியவை ஜேர்மனிக்கு உதவியதுடன், அந்த நேரத்தில் ஒரு ஐரோப்பிய போரைத் தடுத்தது.இரண்டாம் உலகப் போரின் போது, நாசி ஜெர்மனியின் தலைமையில் ஐரோப்பாவில் உள்ள ஆக்சஸ் அதிகாரங்கள் மில்லியன் கணக்கான போலந்து, யூதர்கள், ஜிப்சீஸ் மற்றும் இதர இனப்படுகொலைகள் ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்டன.
1942 க்குப் பிறகு, அச்சுப் படைகள் புதையுண்டன. இத்தாலியில் பல இராணுவத் தோல்விகளை எதிர்கொண்டபின்னர், இத்தாலியின் நேச நாடுகள் படையெடுப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச அவமானம், முசோலினி அரசாங்கத்தின் தலைவராக அகற்றப்பட்டு, கிங் விக்டர் இம்மானுவல் III இன் கட்டளையால் கைது செய்யப்பட்டார், அவர் பாசிச அரசை அகற்றுவதற்காகவும், கூட்டணி படைக்கு விசுவாசத்தை நிலைநிறுத்தியது.
முசோலினி கைது செய்யப்பட்டு ஜேர்மன் படைகளால் காப்பாற்றப்பட்டு 1943 முதல் 1945 வரை ஜேர்மனிய அரசான இத்தாலிய சமூகக் குடியரசை வழிநடத்தினார். 1943 முதல் 1945 வரை நாஜி ஜேர்மனி பல இழப்புக்கள் மற்றும் நிலையான சோவியத் மற்றும் மேற்கத்திய நட்புரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டது.ஏப்ரல் 28, 1945 அன்று, முசோலினி இத்தாலிய கம்யூனிஸ்ட் பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 30 ஏப்ரல் 1945 அன்று ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கோள்
அரசியல்
பொருளாதார முறைமைகள்
|
4593
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AE%A9
|
ஜன கண மன
|
சன கண மன... (Jana Gana Mana; ) இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.
பாடல்
சன கண மன அதிநாயக செய கேபாரத பாக்கிய விதாதா.பஞ்சாப சிந்து குசராத்த மராட்டாதிராவிட உத்கல வங்கா.விந்திய இமாச்சல யமுனா கங்காஉச்சல சலதி தரங்கா.தவ சுப நாமே சாகே,தவ சுப ஆசிச மாகே,காகே தவ செய காதா.சன கண மங்கள தாயக செயகேபாரத பாக்கிய விதாதா.செய கே, செய கே, செய கே,செய செய செய, செய கே.
தமிழாக்கம்
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்
எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு
வெற்றி! வெற்றி! வெற்றி!
வரலாறு
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
சனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் "சன கன மண" இந்தியாவின் தேசிய கீதமாகவும், "வந்தேமாதரம்" தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.
பாடும் முறை
தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.
மரியாதை
இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.
தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது.
திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்த நடைமுறை இல்லை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஜன கண மன - ஒலி வடிவில்
ஜன கண மன - ஆங்கில விளக்கம்
இந்தியா
நாட்டுப்பண்கள்
மேற்கு வங்காளத்தின் வரலாறு
|
4594
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88
|
தோசை
|
தோசை என்பது அரிசி மற்றும் உளுந்து சேர்த்து அரைத்த மாவில் தயாரிக்கப்படும். தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். வெந்தயம் - தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும் .
பெயர்த் தோற்றம்
தோய்தல் என்றால் மாப்புளித்தல்; தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது.
தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது என்போரும் உள்ளனர்.
அது போக, தென்னிந்தியர்களின் இந்த உணவு பதார்தத்தை சமைக்கும் போது 1.மாவு எடுத்து ஊத்துகையில் "ஸ்ஸை" என்று சப்தமும்
2. மேலும் ஊத்தப்பட்ட மாவை கடாய் முழுவதும் பரப்புகையில் "ஸ்ஸை" என்று சப்தமும்
இப்படி இரண்டு முறை சப்தங்கள் வருவதால் "தோஸை" என்று வடஇந்தியர்கள் பெயரிட்டிருக்கலாம். ஏனெனில், "தோ" என்றால் இந்தியில் இரண்டு என்று பொருள் எனும் கருத்தும் உண்டு.
உடன் பரிமாறுவன
தோசையினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன.
சட்னி
சாம்பார்
இட்லி பொடி
தோசை வகைகள்
தோசையில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:
சாதா தோசை (ரோஸ்ட்)
கல் தோசை
வெங்காய தோசை/ஆணியன் ரோஸ்ட்
மசாலா தோசை/ரோஸ்ட் - பொதுவாக இவ்வகை தோசைக்குள் உருளைக் கிழங்கு மசாலாவை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது.
நெய்தோசை/ரோஸ்ட்
வெண்ணெய் தோசை
பொடி தோசை
பேப்பர் ரோஸ்ட்
தக்காளி ரோஸ்ட்
முட்டை தோசை (ஆம்ப்லெட்)
கறி தோசை - தோசைக்குள் வெந்த இறைச்சியை வைத்து செய்யப்படும் தோசை.
ரவா தோசை/ரோஸ்ட்
நெய் ரவா ரோஸ்ட்
குண்ணுத்தோசை
செய்முறுக்கல்
அடை தோசை (அடை)
கீரை அடை தோசை
கிழங்கு அடை தோசை
கேழ்வரகு அடை தோசை
கேழ்வரகு இனிப்பு அடை
ஆப்பம்
சாதா ஊத்தாப்பம்
தக்காளி ஊத்தாப்பம்
வெங்காய ஊத்தாப்பம் (ஆணியன் ஊத்தாப்பம்)
செட்தோசை - வடைகறி மிகவும் பிரபலமான ஒரு உணவு. பெரும்பாலும் இந்த செட்தோசை மாவில் மஞ்சள் கலந்து தோசை தயார் செய்யப்படும்.
வெந்தய தோசை - இந்த தோசை சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரிது விரும்பி உண்ணும் ஒரு தோசை வகை. வெந்தய தோசை பார்க்க மஞ்சள் நிறமாக கட்சி அளிக்கும்.
மரவள்ளி கிழங்கு தோசை - அரிசியுடன் மரவள்ளிக் கிழங்கை சமபங்காக இட்டு அரைத்துக் கொள்வார்கள்.
பருத்தித்துறைத் தோசை
பருத்தித்துறைத் தோசை பெரும்பாலான ஈழத்தவர்களால் பேசப்படும், விரும்பி உண்ணப்படும் தோசையாகும். இத்தோசை உளுந்து, அரிசி, கோதுமை மாவு என்பன கலந்து செய்யப்படும். இத் தோசைக்கு வெந்தயம் கண்டிப்பாகச் சேர்க்கப்படும். இதற்கான கலவை தென்னங்கள்ளோ அன்றி பனங்கள்ளோ விட்டுப் புளிக்க விடப்படும். பருத்தித்துறையில் இருக்கும் ஓடக்கரை வீதிகளில் விற்கப்படும் இத் தோசைக்கு மவுசு அதிகம். பல்வேறு நகரங்களில் இருந்தும் பலர் இத்தோசைக்காகவே பருத்தித்துறைக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள்.
தோசை பல்வேறு பெயர்களில் தென்னிந்திய மொழிகளில் அழைக்கப்படுகின்றது. அதன் ஒலிபெயர்ப்பும், உச்சரிப்பும் பின்வருமாறு:
காட்சியகம்
மேலும் காண்க
இட்லி
தாக்கோ
வடை
நாச்சோ
மேற்கோள்கள்
சுட்டிகள்
அறுசுவை.காம்
ரவா தோசை செய்யலாம் வாரீங்களா?
இந்திய உணவுகள்
ஆந்திர சமையல்
கேரள சமையல்
தமிழர் சமையல்
|
4596
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
|
ஆண்டாள்
|
ஆண்டாள் தமிழகத்தில் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்
மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ் அந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.
இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துகள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாகத் தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர்த் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றிக் கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.
ஆண்டாளின் பக்தி
வட இந்தியாவில் ராதாவின் பக்தி பிரபலமாகப் போற்றப்படுகிறது. பெண் பக்தியாளர்களில் மீராபாய் கண்ணனிடம் கொண்ட அர்பணிப்புடன் கூடிய பக்தியைப் போலத் தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் தொகுப்பு, ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு, கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் இலட்சியமாக எண்ணிப் பாடியுள்ளதைக் குறிப்பதாக உள்ளது.
ஆண்டாளின் மலர் மாலைகளும் திருப்பதி வெங்கடேச பெருமாளும்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்குச் சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. இவ் வைபவம், தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவம் விழாவில், குறிப்பாகக் கருட சேவை அன்று நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிய மலர் மாலையைப் பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டதாக உள்ளது. மேலும், திருப்பதி பெருமாளின் மலர்மாலை, வருடந்தோறும் நடைபெறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்காக அனுப்பப்படுகிறது.
கள்ளழகர்
மதுரையில் நடைபெறும் பிரசித்தமான சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.
ஆண்டாள் சிகையலங்காரம்
ஆண்டாள் கொண்டை தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது. இந்தச் சிகையலங்காரம், கேரள மாநில நம்பூதிரிகளின் சிகை அலங்காரத்திற்கு ஒத்ததாக உள்ளது.
ஆண்டாளின் கிளி
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் இடக்கையில் கிளி இருக்கிறது. இது தினமும் புதியதாக இன்றளவும் செய்யப்படுகிறது. இந்தக் கிளியைச் செய்வதற்குத் தோராயமாக நான்கிலிருந்து நாலறை மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும், வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.
திருவிழாக்கள்
திருவில்லிப்புத்தூர் திருத்தலம் இரண்டு கோவில்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஒன்று ஆண்டாள் கோவில். பொதுவாக அனைத்து வைணவக் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. நிறைய திருவிழாக்கள் ஆண்டாள் நினைவாகத் தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது "பாவை நோன்பு" ஆகும். இது தமிழ் மாதம் மார்கழி ஒன்றாம் தேதியிலிருந்து முப்பதாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் "ஆண்டாள் திருக்கல்யாணம்", பகல்பத்து, இராப்பத்து, மற்றும் ஆடிப் பூரம், ஆடித் திருவிழா போன்றவை சில முக்கிய விழாக்களாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில், ஒருவராக ஆண்டாள் இருந்தாலும், தமிழகத்தில் ஆண்டாள் ஒரு பெண் தெய்வமாகவே வழிபடப்படுகிறார். ஆடிப் பூரத் திருவிழா, திருவில்லிப்புத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ் விழாவில் பங்கேற்கின்றனர்.
ஆண்டாள் இயற்றிய பாடல்கள்
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாகக் காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இது சில தமிழ் திரைப்படங்களில் பாடல் காட்சியாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாகத் திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலும் வைணவர்களின் இல்லவிழாவிலும் வடமொழி மறைகளுக்கு நிகராகத் தவறாமல் ஓதப்படுகின்றது.
கோதை மண்டலி
கோதை மண்டலி என்னும் அமைப்பு 1970-இல் தொடங்கப்பட்டு, 1982-இல் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக விளங்குகிறது. இதன் முக்கிய நோக்கம் ஆண்டாள் இயற்றிய பாடல்களைத் தொலைக்காட்சியிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பரப்புவதே ஆகும்.
மேலும் பார்க்க
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
360டிகிரி கோணத்தில் ஆண்டாள் கோயில் தரிசனம் தினமலர்
திருப்பாவை விளக்கம்
வாரணம் ஆயிரம்-நாச்சியார் திருமொழி எளிய விளக்கம்
ஆழ்வார்கள்
தமிழ்ப் பெண் புலவர்கள்
திருமாலின் மனைவிகள்
வைணவ அடியார்கள்
இந்து சமயப் பெரியார்கள்
நூலாசிரியர்கள்
பக்தி இயக்கம்
தமிழ் மெய்யியலாளர்கள்
|
4599
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
|
மில்லியன்
|
மேற்கத்திய எண்முறையில் மில்லியன் என்பது ஆயிரம் ஆயிரத்தைக் (1000 X 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஓரளவு பெரிய கணியங்களின் அளவீடுகள் மில்லியன் கணக்கிலேயே குறிப்பிடப்படுகின்றன.
SI அளவை முறையில் மெகா என்னும் முன்னடைவு மில்லியனைக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் பிக்சல்கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன.
ஒரு மில்லியன் 1,000,000 (10,00,000 இந்திய எண்முறைப்படி)என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 106 என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை மேல்வாய் எண்கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற பிள்வ எண்களைக் (பின்ன எண்களைக்), கீழ்வாய் எண்கள் என்றும் கூறுவர்.
எண்கள்
அளவை
முழு எண்கள்
|
4601
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
நிலநடுக்கம்
|
நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.
பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் நிலத்தட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு நிலத்தட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது பன்னிரண்டு சிறிய நிலத்தட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் நிலத்தட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய பெருங்கடல் பகுதிகளும் அடக்கம்.
இந்தப் நிலத்தட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப் நிலத்தட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த நிலத்தட்டுகளின் லேசான உராய்வும் கூட பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சிலசமயம் எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்.
ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை ஏதுமில்லை என்றாலும் வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள், 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். இத்தகைய மிக அன்மையின் நிகழ்ந்த நிலநடுக்கமானது 2011ஆம் ஆண்டு செண்டாய், சப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கமாகும். பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களுல் சப்பானில் பதிவான வலுவான நிலநடுக்கம் இதுவாகும். ஆழமற்ற நிலநடுக்கங்களே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும்.
கண்டங்கள், துணைக் கண்டங்கள்
ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி ஆசிய தட்டில் இல்லாமல் தனித்தட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது.
மேலும் இந்திய நிலத்தட்டு, ஆசிய நிலத்தட்டு ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய தட்டை விட இந்திய தட்டு வேகமாக நகர்வதால், இந்திய தட்டு ஆசிய தட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு நிலத்தட்டுகளின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது யூரேசியா என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால் தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.
வகைகள்
நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பனவே அவையாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். இவ் அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலேயாகும்.
புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிக்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிச்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும்.
நிகழ்வுத் தரவுகள்
ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90%இற்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பசுபிக் பெருங்கடலை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன.
கண்டறிதலும் அளவிடலும்
நிலநடுக்கத்தின் வீரியத்தை நிலநடுக்கப் பதிவுக் கருவி மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும்.
நிலநடுக்கத்தின் தாக்கங்கள்
நிலம் நடுங்குதலும் பிளத்தலும்
இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது.
மண்சரிவு, பனிச்சரிவு
நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் நிலத்தினதும் பனிப்பாறைகளினதும் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம்.
தீ அனர்த்தம்
நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பாரிய தீ அனர்த்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906 ஆம் ஆண்டில் சான் பிரான்சிசுகோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும்.
ஆழிப்பேரலை
நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும்.பொதுவாக கடலடியில் ஏற்படும் 7.5 க்கும் குறைவான ரிக்டர் அளவு நிலநடுக்கங்கள் ஆழிப்பேரலைகள் உருவாவதில்லை. ஆனால் ரிக்டரில் 7.5 க்கும் அதிகமான நிலநடுக்கங்களே ஆழிப்பேரலை உருவாவதற்கும் அதனால் ஏற்படும் பெருஞ்சேதங்களுக்கும் காரணங்களாக அமைகின்றன. உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.
வெள்ளம்
நீர்நிலைகளிலிருந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து நிலத்தை அடைவது வெள்ளம் எனப்படுகிறது . நீர்நிலைகளான ஆறு, குளம், போன்றவற்றின் மொத்த கொள்ளளவைத் தாண்டி நிரம்பும் போது நீர் வெளியேறி வழக்கமாக வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால் பூகம்பம் அல்லது நிலநடுக்கத்தின் போது நீர் நிலைகளின் தடுப்பணைகள் உடைந்து சேதமுறுவதால் அதிகப்படியான நீர் வெளியேறி பெருத்த சேதத்தை உண்டாக்கலாம்.நிலநடுக்கத்தின் போது அணைகள் உடைந்து வெள்ளம் ஏற்படுவது இரண்டாம் நிலை பாதிப்பாகும். சில நேரங்களில் நிலநடுக்கம் ஏற்படும் போது உண்டாகும் நிலச்சரிவுகள் ஆற்றின் குறுக்கே விழுந்து தற்காலிக நீர்த்தேக்கம் உருவாகி பின்னர் அது வலுவிழந்து உடைந்து தண்ணீர் வெளியேறினாலும் வெள்ளம் உண்டாகக்கூடும்
தஜிகிஸ்தான் நாட்டின் சரெசு ஏரிக்கு கீழே உள்ள நிலப்பகுதி பெருங்கேடு விளைவிக்கும் வெள்ளத்தால் பாதிக்கும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் பாயும் ஆற்றுக்கு குறுக்கே நிலச்சரிவினால் உருவாகிய உசோய் அணை உள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்த வலுவற்ற அணை உடைந்து பெருவெள்ளம் ஏற்படும் என்றும் அதனால் சுமார் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.
உயிர்ச் சேதங்கள்
நிலநடுக்கத்தின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் உறுப்பு சேதங்கள் மரணத்தை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் அடிந்து நாசமாகின்றன அல்லது பெருஞ்சேதமுறுகின்றன (பொதுவாக நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு ஏற்படும் சேதங்கள் இடிந்து விழுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன). அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கத்தால் நோய்களும் அடிப்படைத் தேவை குறைபாடுகளும் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீதி, உயிர் பிழைத்தவர்களுக்கு மன அழுத்தம் , மற்றும் அதிக காப்பீட்டு சந்தா போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
அளவும் எண்ணிக்கையும்
தற்போதைய நவீன கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படக்கூடிய நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 ஏற்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 100,000 மனிதர்களால் உணரக்கூடியவையாகும். சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மற்றும் அலாஸ்கா, மெக்சிக்கோ, குவாத்தமாலா, சிலி, பெரு, இந்தோனேசியா, ஈரான், பாக்கித்தான், போர்த்துகலின் சில பகுதிகள், துருக்கி, நியூசிலாந்து, கிரேக்கம், இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்படுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் நியூயார்க் நகரம், இலண்டன் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, கிட்டத்தட்ட உலகில் எங்கும் ஏற்படலாம். .
உலகின் நிலநடுக்கங்கள் (90% முதல் 81% வரையான பெரிய நிலநடுக்கங்கள் அடிக்கடி பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள எரிமலை வளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளன. இமய மலையின் அடிவாரத்திலும் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலநடுக்க பாதிப்பு (seismic risk) அதிகம் உள்ள இடங்களில் மெக்சிகோ நகரம், தோக்கியோ மற்றும் தெஹ்ரான் போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
நிலநடுக்கம் பற்றிய கட்டுரை
கற்கோளம்
|
4602
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
|
நிலநடுக்க அளவீடு
|
"நில நடுக்க "அதிர்வுகளின் வலுவை பலவகையான அளவீடுகளால் அறிகிறார்கள். அவற்றுள் "ரிக்டர் அளவீடு" (Richter Scale) என்ற மடிமை (லாகரிதமிக்) அளவீட்டால் அளக்கப்படுவது பரவலாக அறியப்படும் ஒரு அளவீடு. ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கில் நில அதிர்வுகள் பல்வேறு வலுவுடன் ஏற்படுவதாக நிலநடுக்க அளவீடு மூலம் அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் மிகச் சிறிய அதிர்வுகளாக இருப்பதால் நம்மால் அறிய முடிவதில்லை. எனவே நில உருண்டையின் மேல் ஓடானது (டெக்டானிக் தகடுகள்) தொடர்ந்து அதிர்ந்து கொண்டும் நகர்ந்து கொண்டும் இருக்கும் .
நில அதிர்வுகளை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலநடுக்கவியல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்படும் போது பல்வேறு நிலையங்களில் பதிவான அளவுகளைக் கொண்டு அந்த நிலநடுக்கத்தின் (பூகம்பத்தின்) நிலநடுக்க மையம் (epicenter.) எங்கு உள்ளது என்பதையும், நிலநடுக்கத்தின் வலு அளவையும் கணிப்பார்கள். பூமிக்குள் எந்த இடத்தில் பாறைப் படிமங்களின் உரசல் ஏற்பட்டதால் பூகம்பம் உண்டானதோ அது குவியம் (Focus) எனப்படும். அந்த இடத்திற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேற்பரப்பு புவி அதிர்ச்சி வெளிமையம் என்று அழைக்கப்படும்.
ஒரு நிலநடுக்கத்தின் குவியம் தரையிலிருந்து 70 கி.மீ. ஆழத்திற்குள் இருந்தால் அதனை ஆழமற்ற குவியம் (Shallow focus) என்பார்கள். இதனால் பூமியின் பரப்பில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். 70 கி.மீ.க்கு மேல் 700 கி.மீ ஆழத்திற்குள் பூகம்பம் உருவானால் ஆழமான குவியம் (Deep focus) என்று கருதப்படும்.
நிலநடுக்க அளவீடுகள் - வலுவை அளத்தல்
நிலநடுக்க அதிர்வுகளின் வலுவை வகைப்படுத்த 1780களில் டொமினிக்கோ பின்யாட்டாரோ (Domenico Pignataro) என்பார் ஏற்படுத்திய எளிய முறையை முதலில் பயன்படுத்தினர். பின்னர் நிலநடுக்க வலுவை, தற்கால புரிதலின் படி அளவிட 1828ல் பி.என்.ஜி ஈகன் (P.N.G. Egen) அவர்களால் உருவாக்கப்பட்ட அளவீடே முதன்முதல் பலராலும் அறியப்பட்ட அளவீடாகும். 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராஸ்ஸி-ஃவோரெல் (Rossi-Forel scale) அளவீட்டு முறையே முதன்முதல் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்.. அதன் பின்னர் பல வகையான நிலநடுக்க வீச்சு, வலு அளவீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் MM என்று குறிப்பிடப்படும் மாற்றம் செய்யப்பட்ட மெர்க்காலி அளவீடு (Modified Mercalli scale (MM) பயன்படுத்தப்படுகின்றது. ஐரோப்பாவில் ஐரோப்பிய மாக்ரோசைஸ்மிக் அளவீடு (European Macroseismic Scale) என்னும் முறைவழி அலவிடுகிறார்கள். யப்பானில்(ஜப்பான்) ஷிண்ட்டோ அளவீடு என்னும் முறையைக் கையாளுகிறார்கள். இந்தியா, இசுரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் MSK-64 என்னும் அளவுமுறையைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவீடுகளில் பெரும்பாலானவை நிலநடுக்க வலுவைக் குறிக்க சற்றேறக்குறைய 12-படி அளவுநிலைகளைக் கொண்டுள்ளது.
நிலநடுக்க மையத்தை கண்டுபிடித்தல்
குறைந்தது மூன்று நிலநடுக்கவியல் நிலையங்களில் பதிவான தகவல்களைக் கொண்டு நிலநடுக்க மையம் கண்டுபிடிக்கப்படும். கணிப்பின் துல்லியம் அதிர் மையத்திற்கு 10கி.மீ. அளவிற்குள்ளும், பூமியின் அடியில் உள்ள குவியம் 10 - 20 கி.மீ அளவிற்குள்ளும் அறியப்படுகிறது.
நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பு நிலஅதிர்வியல் நிலையங்களால் நிலநடுக்க மையத்தை மேலும் துல்லியமாக கணிக்க இயலும்.
நிலநடுக்கங்கள்
அளவை
|
4603
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81
|
ரிக்டர் அளவு
|
ரிக்டர் அளவு (Richter magnitude scale) என்பது நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும். அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.
ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.
இவற்றையும் பார்க்கவும்
பூகம்ப அளவுகள்
நிலநடுக்கம்
நிலநடுக்கங்கள்
அலகுகள்
|
4604
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81
|
அணு
|
அணு () (atom) என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும். ஒவ்வொரு திண்மம், நீர்மம், வளிமம், பிளாசுமாவும் நொதுமல்நிலை அல்லது மின்னூட்டமுடைய அணுக்களைக் கொண்டுள்ளது. அணுக்கள் மிகவும் சிறியவை; கட்டாக அவை அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்காகும். அதாவது ஆயிரம்கோடியில் ஒரு பங்காகும். என்றாலும் அணுக்களுக்கு நன்கு வரையறுத்த எல்லைகள் கிடையாது. அவற்றின் உருவளவை வரையறுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை வேறுபட்ட மதிப்புகளைத் தந்தாலும் மிக நெருக்கமான மதிப்புகளாக அமைகின்றன.
அணுக்கள் மிகச் சிறியவையாக உள்ளதால் செவ்வியற்கால இயற்பியல் சரியற்ற முடிவுகளையே தந்தது. இயற்பியல் வளர வளர, நன்கு விளக்கி முன்கணிக்கும் குவைய நெறிமுறைகள் உருவாகின.
ஒவ்வொரு அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும் அதோடு கட்டுண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மின்னிகளும் அமைந்துள்ளன. அணுக்கருவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மின்னிகளும் அதையொத்த எண்ணிக்கையில் நொதுமிகளும் உள்ளன. நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் அணுக்கருனி எனப்படுகின்றன. ஏறக்குறைய 99.94% பொருண்மை அணுக்கருவிலேயே (nucleus) அமைந்துள்ளது. நேர்மின்னிகள் நேர்மின்னூட்டம் கொண்டுள்ளன. எதிர்மின்னிகள் எதிர்மின்னூட்டம் கொண்டுள்ளன. நொதுமிகள் மின்னூட்டம் அற்றவை. நேர்மின்னிகளும், எதிர்மின்னிகளுன் எண்ணிக்கையில் சம்மாக இருந்தால் அணு மின்னியலாக நொதுமல்நிலையில் அமையும். ஒரு அணுவில் நேர்மின்னிகளைவிட எதிர்மின்னிகளின் அளவு கூடினாலும் குறைந்தாலும் அணுவின் ஒட்டுமொத்த மின்னூட்டம் நேர் அல்லது எதிர்மின்னூட்டத்துடன் இருக்கும். இத்தகைய அணுக்கள் அயனிகள் எனப்படும்.
எதிர்மின்னிகள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளால் மின்காந்த விசையால் ஈர்க்கப்படுகின்றன. அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளும் நொதுமிகளும் ஒன்றோடொன்று வேறுவகைப்பட்ட அணுக்கரு விசையால் ஈர்க்கப்படுகின்றன. இது மின்காந்த விசையைவிட வலிமையானது. இது நேர்மின்னூட்டம் உள்ள நேர்மின்னிகளை நெருங்கிவிடாமல் பிரித்து விலக்குகிறது. சிலவேளைகளில் விலக்கும் இயல்புள்ள மின்காந்த விசை அணுக்கரு விசையைவிட வலிமையுற்று அணுக்கருவில் இருந்து அணுக்கருவன்களை வெளியேற்றும். இவ்வகை அணுக்கருச் சிதைவு, தனிம மாற்றத்தால் வேறுபட்ட தனிமத்தை மிஞ்சவைக்கும்.
அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது: எடுத்துக்காட்டாக, அனைத்து செப்பு அணுக்களிளும் 29 நேர்மின்னிகளைக் கொண்டுள்ளன. நொதிமிகளின் எண்ணிக்கை அத்தனிமத்தின் ஓரிடத்தானை வரையறுக்கின்றன. எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுவின் காந்த இயல்புகளை முடிவு செய்கிறது. அணுக்கள் வேதியியற் பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறு எனும் வேதிச் சேர்மத்தை உருவாக்கலாம். அணுவின் பிணையும் அல்லது பிரியும் திறமே நாம் இயற்கையில் பார்க்கும் இயற்பியல்/புரநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது வேதியியலால் ஆயப்படுகிறது.
புடவியின் அனைத்துப் பொருண்மமும் அணுக்களால் அமைவதில்லை. புடவியின் பெரும்பகுதி பொருண்மத்தைவிட (வானியல்)கரும்பொருளாலேயே அமைந்துள்ளது. அதாவது அணுக்களால் அமையாமல் நம்மால் இதுவரை அறியப்படாத துகள்களாலேயே அமைந்துள்ளது.
அணுக் கோட்பாட்டின் வரலாறு
மெய்யியலில் அணுக்கள்
பொருண்மம் தனித்த அலகுப் பொருட்கூறுகளால் ஆயது எனும் எண்ணக்கரு மிகமிகப் பழையதாகும். இது இந்திய, கிரேக்கச் சிந்தனைகளில் பழம்பெரும் பண்பாடுகளில் உருவாகியதாகும். உண்மையில் "atom" என்ற சொல் கிரேக்க மெய்யியலாளர்களால் உருவாக்கப்பட்டது. என்றாலும் இந்த எண்ணக்கரு மெய்யியல் அல்லது இறையியல் கருத்தோட்டங்களல் உருவாக்கப்பட்டதே தவிர சான்றாலும் செய்முறையாலும் நிறுவப்படவில்லை. எனவே அவர்களது அணுக்காட்சியும் இயக்கமும் சரியற்றனவே. மேலும் இக்கருத்தை அனைவராலும் ஏற்கவைக்க அவர்களால் முடியவில்லை. இதனால் பொருண்மம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளில் ஒன்றாகவே அணுக் கோட்பாடு அக்காலத்தில் நிலவியது. 19ஆம் நூற்றாண்டின் வேதியியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகே, இக்கருத்து ஏற்கப்பட்டு அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கவும் நன்கு விளக்கவும் முடிந்தது.
முதல் சான்றுள்ள அணுக் கோட்பாடு
ஜான் டால்டன் 1800களில் அணு எனும் கருத்துப் படிமத்தை வேதித் தனிமங்கள் ஏன் குறிப்பிட்ட சிற்றெண் விகிதங்களில் வினைபுரிகின்றன என்பதை விளக்கப் பயன்படுத்தினார் (பன்மை விகிதங்கள் விதி). எடுத்துகாட்டாக, நடப்பில் இருவகை காரீய ஆக்சைடுகள் உள்ளன: ஒன்றில் 88.1% காரீயமும் 11.9% உயிரகமும் (oxygen) உள்ளன. மற்றொன்றில் 78.7% காரீயமும் 21.3% உயிரகமும் (oxygen) உள்ளன. இதன் பொருள் 100கி காரீயம் ஒன்று 13.5கி அல்லது 27கி உயிரகத்துடன் வினைபுரிகிறது. அதாவது 1:2 விகிதத்தில், ஒரு சிற்றெண் விகிதத்தில் வினைபுரிகிறது. வேதியியலின் இந்த பொது நடைமுறை தனிமங்கள் தன் தனி அலகுகளின் (அதாவது அணுக்களின்) முழு எண்ணிக்கைகளின் பன்மடங்கில் வினைபுரிகின்றன என்ற முடிவுக்கு வர வழிவகுத்தது. இந்த எடுத்துகாட்டில் ஒரு காரீய அணு ஒன்று அல்லது இரண்டு உயிரக அணுக்களோடு வினைபுரிகிறது.
டால்டன் தண்ணீர் ஏன் பல்வேறு வளிமங்களை பல்வேறு விகிதங்களில் உறிஞ்சுகிறது என்பதையும் அணுக்கோட்பாட்டால் விளக்கமுடியும் என நம்பினார். எடுத்துகாட்டாக, தண்ணீர் கரிம ஈராக்சைடு வளிமத்தை காலக (nitrogen)வளிமத்தைவிட நன்றாக உறிஞ்சுவதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம் அந்த வளிம மூலக்கூறுகளின் பொருண்மையும் சிக்கல்நிலையும் வேறுபடுவதே என டால்டன் விளக்கினார். உண்மையில் கரிம ஈராக்சைடு(CO2) காலக மூலக்கூறைவிட(N2) பெரியதும் எடைமிக்கதும் ஆகும். (N2).
பிரவுனிய இயக்கம்
இராபர்ட் பிரவுன் 1827இல் தண்ணிரில் மிதக்கும்/தவழும் தூசி மணிகளை நுண்ணோகி வழியாகப் பார்வையிட்டுள்ளார். அவை கண்டபடி தன்னியல்பில் இயங்குவதைக் கண்டுள்ளார். இப்போது இவ்வியடக்கம் "பிரவுனிய இயக்கம்" என அவரது பெயரால் வழஙப்படுகிறது. இது தண்ணீர் மூலக்கூறுகளால் தூசி மணிகள் தாக்கப்படுவதால் ஏற்படுவதாகக் கருதப்பட்டது. ஆல்பர்ட் அய்ன்சுடைன் 1905இல் முதன்முதலாகப் பிரவுனிய இயக்கத்தைக் கணிதவியலாக பகுப்பாய்வு செய்தார். பிரெஞ்சு இயற்பியலாளர்ழீன் பெரின் அய்ன்சுட்டீனின் ஆய்வைப் பயன்படுத்தி அணுக்களின் பொருண்மையையும் உருவளவையும் கண்டறிந்து அணுக் கோட்பாட்டை செய்முறை வழியாக உறுதிபட நிறுவினார்.
நேர்மின்னி
நேர்மின் தன்மை கொண்டது. அணுவின் மையத்தில் இருக்கும். எடை 1.0073 amu. இதன் இயல்புகள்:
நேர்க் கதிரின் e /m விகிதம் மாறிலி அன்று. ஆனால் குறித்த ஒரு நேர்க்கதிரை கருதும் போது அதன் e/m மாறிலி.
இக்கதிர் நேர் ஏற்றம் பெற்றவை .
நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் காந்தப் புலத்தை ஏற்படுத்தும் போது அவை கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதைக்கு எதிர் திசையிலும் காந்தபுலத்துக்கு செங்குத்தாக திரும்பலடையும்.
நேர்க் கதிர்களுக்கு அலை இயல்பு உண்டு. அதாவது நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட திரையை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை.
நேர்க் கதிர்களுக்கு துணிக்கை இயல்பு உண்டு. அதாவது நேர்க் கதிர்கள் பயணிக்கும் பாதையில் சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது சுழன்றமை.எனவே நேர்க் கதிர்களுக்கு திணிவு ,வேகம் ,உந்தம் ,இயக்கசக்தி என்பன உண்டு.
நேர்க் கதிர்கள்.(p)
ஒரு நடுநிலையான அணுவில் எதிர் ஏற்றம் பெற்ற துணிக்கைகள் காணப்படுவதால் நேர் ஏற்றம் பெற்ற துணிக்கைகளும் அணுக்களில் இருத்தல் வேண்டும் என்ற முடிவு Gold stein யினால் மேற்கொள்ளப்பட்டு கதோட்டுக் குழாய் பரிசோதிணை மீண்டும் செய்யப்பட்டது.இங்கு வழமையான கதோட்டுக்குப் பதிலாக hole cathode பயன்படுத்தப்பட்டது.
அவதானம்
hole cathode யினூடாக கதோட்டுக்கதிர்கள் செல்லும் திசைக்கு எதிரான திசையில் சமாந்திரமாக செந்நிறக்கதிர்கள் சென்றதுடன் அவை நேர் ஏற்றம் பெற்றிருந்தமையால் நேர்க் கதிர்கள் என்றும் hole cathode யினூடாக சென்றமையால் கால்வாய் கதிர் எனவும் அழைக்கப்பட்டது.
நேர்க் கதிர்களின் உருவாக்கம்
கதோடுக் கதிர்கள் கதோட்டில் ஆரம்பிப்பது போல் நேர்க் கதிர்கள் அனோட்டில் ஆரம்பிப்பது இல்லை.
உயர் வேகத்துடன் செல்லுகின்ற / உயர் சக்தியுடன் செல்லுகின்ற கதோடுக் கதிர்கள் வாயு நிலை அணுவை / வாயு நிலை மூலக்கூறை மோதி அடிக்கும் இடத்திலேயே நேர்க் கதிர்கள் தோற்றம் பெறுகின்றன.
நேர்க்கதிர்கள் எல்லாம் p கள் அல்ல. மின்னிறக்கக் குழாயினுள் ஐதரசன் வாயுவை எடுக்கும் போது பெறப்படும் நேர்த்துணிக்கை இலத்திரனின் ஏற்றத்திற்கு சமனாக அமைந்ததுடன் இந்த நேர்த்துணிக்கைகளின் மடங்குகளாகவே ஏனைய நேர்த்துணிக்கைகளின் திணிவுகள் அமைந்தமையால் இதுவே அடிப்படை துணிக்கையாக அமைய வேண்டும் என இரதபோர்ட் கண்டறிந்தவுடன் அதனை புரோத்திரன்கள் (p) எனவும் கண்டுபிடித்தார்.
எதிர்மின்னி
எதிர்மின் தன்மை கொண்டது. அணு மையத்தைச் சுற்றி சுழன்று வரும். புரோட்டானுக்கு சமமான மின்சக்தி இருந்தாலும், புரோட்டானை விட இரண்டாயிரம் மடங்கு எடை குறைவானது. எடை 0.000549 amu. இதன் இயல்புகள்:
மறை ஏற்றம் கொண்டவை. அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் மின்புலத்தை ஏற்படுத்தும் போது அவை மின்புலத்தின் நேர்த்தட்டு பக்கம் திரும்பியமை.
கதோட்டுக் கதிர்களுக்கு அலை இயல்பு உண்டு.அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட திரையை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை.
கதோட்டுக் கதிர்களுக்கு துணிக்கை இயல்பு உண்டு. அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது சுழன்றமை.எனவே கதோட்டுக்க கதிர்களுக்கு திணிவு ,வேகம் ,உந்தம் ,இயக்கசக்தி என்பன உண்டு.
கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் உலோகத்ததட்டை வைக்கும் போது அவை X-கதிர் உருவாக்கும்.
கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் வாயு நிலை அணுவை / மூலக்கூறை வைக்கும் போது கதோட்டுகதிர்கள் மோதும் போது அங்கு நேர்துணிக்கைகள் தோற்றம் பெறும்.
கதோட்டுக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் செஞ்சூடாக்கப்பட்ட உலோக இதழை வைக்கும் போது அது பிரகாசமாக ஒளிர்ந்தமை. எனவே கதோட்டுக்கதிர்களுக்கு உயர் சக்தி, வெப்பம் உண்டு.
கதோட்டுக்கதிர்கள் அலை இயல்பையும், துணிக்கை இயல்பையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும். அதாவது கதோட்டுக் கதிர்கள் பயணிக்கும் பாதையில் ZnS பூசப்பட்ட சுழலும் பற்சக்கரத்தை வைக்கும் போது அது ஒளிர்ந்து சுழன்றமை.
நொதுமின்னி
நேர்மின்னியும் , எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டத்தட்ட நியூட்ரானின் எடை 1.0087amu. இது இல்லாமல் புரோட்டான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணு உண்டு.
அணுவின் கருவுக்கான முதலாவது மாதிரியுரு (இரதபோர்ட்)
இம்மாதிரியுரு α கதிர் சிதறல் பரிசோதினை / பொற்தகட்டு பரிசோதினை விபரிக்கப்படுகிறது.
Rathaford ம் அவரது மாணவர்களான கைகர், மாஸ்டனும் தடித்த Pb குற்றியினுள் α துணிக்கையினை காலல் செய்யக்கூடிய ஒரு முதலை வைத்து வெற்றிடத்தினூடாக அவ் α கதிர்கள் நேர்க்கோட்டில் செல்ல அனுமதிக்கப்பட்டன.பின்னர் அவற்றின் பாதையில் ஒரு மெல்லிய பொற்தகடு வைக்கப்பட்டு தொடர்ந்து α கதிர்கள் பாதை ஒரு நகரக்கூடிய புளோரொளிர்வு திரையின் உதவியுடன் / நகருகின்ற நுணுக்குக்காட்டியின் உதவியுடன் அவதானிக்கப்பட்டது.
அவதானம் :-
பெரும்பாலான α துணிக்கை எதுவித விலகலுமின்றி நேர்கோட்டில் சென்றன. முடிவு - அணுவின் பெரும்பகுதி வெற்றிடம்.
அணுவின் அளவு
ஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மட்டும் கொண்ட மிகச்சிறிய அணுவான ஹைட்ரஜன் அணுவின் விட்டம் .,..,. உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும்.
0 டிகிரி செல்சியசிலும் ஒரு வளிமண்டல அழுத்ததிலும் எல்லா வளிமங்களும் 22.4136 லிட்டர் கன அளவில் ஒரே எண்ணிக்கையில் அணுக்களையோ மூலக்கூறுகளையோ கொண்டிருக்கும். இவ்வெண் அவகாட்ரோ எண் எனப்படும்.18 கிராம் நீரின் கன அளவு 18 கன செனடி மீட்டராகும். இந்த கன அளவில் ( அவகாட்ரோ எண்) நீர் மூலக்கூறுகள் உள்ளன. நீரின் மூலக்கூறுகள் சரியான செவ்வக வடிவம் கொண்டவை என எடுத்துக் கொண்டால் ,அவைகளை சீராக அடுக்கும் போது மூலக்கூறுகளுக்கிடையே வெற்றிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு தனி மூலக்கூறின் பருமனளவு சி.சி என்று கொளலாம். இதற்குக் காரணம் கோளங்களை அடுத்தடுத்து வைக்கும் போது சிறு வெற்றிடம் அவைகளுக்கிடையே உள்ளது என்பது தான். கோளத்தின் பருமனளவு 4/3 π r 3 சி.சி ஆகும்.இதிலிருந்து நீர் மூலக்கூற்றின் ஆரம் செ.மீ. என்று கொள்ளலாம்.அணுவின் ஆரம் எந்த அளவு இருக்கக்கூடும் என்பதனைக் காட்டுகிறது.
சில அணுக்களின் ஆரம்,
ஐட்ரசன் .053 நானோ மீட்டர்.
ஆக்சிஜன் .074 ;
கரி .077 ;;
ஆர்சனிக் .12 ; ;
தகரம் .14 ; ;
அலுமினியம் .145 ;;
ஈயம் .175 ;;
சோடியம் .19 ;;
பொட்டாசியம் .0225 ;;
என்று கணித்திருக்கிறார்கள்.
அணு எண்
அணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அணு எண் எனப்படுகிறது. இதுவே அணுக்களை வரிசைப்படுத்த உதவும் குணமாகும். ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் ஒரே அணு எண்ணைக் கொண்டிருக்கும்.
பண்புகள்
ஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்களின் கூட்டம் தனிமம் எனப்படும். உதாரணமாக தூய ஐதரசன் வாயு மாதிரியொன்றில் ஒரு நேர்மின்னியைக் கொண்ட அணுக்களே காணப்படும். ஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்கள் ஒரே விதமான இரசாயன இயல்பைக் காட்டுவதே இதற்குக் காரணமாகும். எனவே ஒரு அணுக்கூட்டத்தில் வெவ்வேறு எண்ணிக்கையில் நியூத்திரன்கள் காணப்பட்டாலும் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் காணப்படின் அவை ஒரே தனிம வகையைச் சேர்ந்தவையாகும். வெவ்வேறு நியூத்திரன் எண்ணிக்கையைக் கொண்ட ஒரே தனிம வகையைச் சேர்ந்த அணுக்கள் சமதானிகள்/ ஓரிடத்தான்கள் எனப்படும். உதாரணமாக ஐதரசனில் முறையே 0,1,2 என நியூத்திரன் எண்ணிக்கையுடைய புரோட்டியம், டியூத்திரியம், டிரைடியம் என்ற சமதானிகள் உள்ளன (இவை அனைத்திலும் ஒரு அணுவுக்கு ஒரு நேர்மின்னியே உள்ளது). இதுவரை ஐதரசனிலிருந்து அன்அன்ஆக்டியம் வரையான 118 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் அணு எண் 82க்கு மேற்பட்ட அணுக்கள் கதிரியக்கம் உடையவை.
புவியில் ஏறத்தாழ 339 இயற்கையான அணுக்கருக்கள் உள்ளன. இவற்றில் 254 அணுக்கருக்களில் கதிரியக்கம் அவதானிக்கப்படவில்லை. எனவே இவை நிலையான அணுக்கருக்கள் எனப்படுகின்றன. கதிரியக்கம் உள்ளவற்றில் 34 அணுக்கருக்கள் சிறிதளவான கதிரியக்கத்தையே உடையவை.
திணிவு
அணுக்களின் மொத்தத் திணிவில் பெரும் பங்கை நேர்மின்னிகளும் நொதுமிகளுமே (நியூத்திரன்) ஆக்கின்றன. எனவே ஒரு அணுவில் நேர்மின்னிகள் மற்றும் நொதுமிகளின் மொத்த எண்ணிக்கை திணிவெண் எனப்படுகின்றது. உதாரணமாக கார்பன்-14 இல் திணிவெண் 14 ஆகும் (6நேர்மின்னி+8நொதுமி). சாதாரண அலகுகளில் அணுவின் திணிவு மிகச் சிறியதாகும். எனவே அணுவின் திணிவு அணுத் திணிவலகு (u) அல்லது டால்டன்களில் (Da) அளவிடப்படுகின்றது. ஒரு அணுத்திணிவலகு கார்பன்-12 சமதானியின் பன்னிரண்டில் ஒரு பங்கு திணிவாகும். இது கிட்டத்தட்ட 1.66×10−27 kg (கிட்டத்தட்ட ஒரு ஐதரசன் அணுவின் திணிவு) ஆகும். எனவே கணிப்புகளின் போது கடினத்தன்மை குறைக்கப்படுகின்றது. உதாரணமாக ஈயத்தின் திணிவு அணுத் திணிவலகில் 207.9766521 u (கிட்டத்தட்ட 208 u) ஆகும். விஞ்ஞானத்தில் பரிசோதனைகளை இலகுவாக்க மூல் எனும் அலகு பயன்படுகின்றது. 6.022×1023 எண்ணிக்கையான அணுக்களின் திணிவே மூல் எனப்படும். உதாரணமாக 12u திணிவுடைய 6.022×1023 கார்பன் அணுக்களின் ஒரு மூல் 12 g ஆகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
—a guide to the atom for teens.
வேதியியல்
|
4606
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88
|
வானொலி அலை
|
நமக்கு கிடைக்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த வானொலி அலைகள் தான் தாங்கி வருகின்றன. இவை மின்காந்த அலைகள் ஆகும். அதாவது இந்த மின்காந்த அலை என்பது ஒரு தளத்தில் மின்புல வேறுபாடுகளும் அதற்குச் செங்குத்தான தளத்தில் காந்தப்புலத்தின் வேறுபாடுகளும் அமைந்து இவ்விரு தளங்களும் விரியும் திசைகளுக்குச் செங்குத்தான திசையில் பரவும் அலை ஆகும். இம்மின்காந்த அலைகள் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளம் முதல் 30 சென்ட்டி மீட்டர் நீளம் வரை அலைநீளம் உடையவை. மிக நெடுந்தொலைவு செல்லக் கூடியவை. மிகத் தொலைவிலுள்ள நட்சத்திரங்கள், அண்டங்கள் சிலவும் இவ்வகை அலைகளை வெளிவிடுகின்றன. அவைப பற்றி வானொலி தொலைக்கருவி் மூலமாகவே அறிகிறோம்.
அலை வீச்சில் ஒலியலைகளுக்கு ஏற்றார்போல மாற்றம் ஏற்படுத்தி அலைபரப்பப் படும் AM வானொலி நிலையத்தின் அலைவரிசை 750 Mega Hertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் அலைநீளம் கொண்டதாக இருக்கும். இங்கு அலைவரிசை என்பது அதிர்வெண் ஆகும். ஒரு எளிய சமன்பாடு இந்த அலைநீளத்திற்கும், அதிர்வெண்ணுக்கும் இடையேயான தொடர்பைக் காட்டும். அதாவது, அதிர்வெண் x அலைநீளம் = மின்காந்த அலை பரவும் விரைவு ஆகும். மின்காந்த அலைகள் ஒளியின் விரைவில் நகரும். ஒளியின் வேகம் சுமார் 3 மீட்டர். இதே போல 100 Mega Hertz அலைவரிசை FM நிலையமானால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM நிலையங்கள் அதிக சக்தியுடன் தெளிவாக இருந்தாலும் AM நிலையங்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை. FM என்பது ஒலியலைகளுக்கு ஏற்றார்போல அதிர்வெண் மாறும் அலைகளாகும்.
மின்காந்தவியல்
மின்காந்த நிழற்பட்டை
அலைகள்
|
4607
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%88
|
நுண்ணலை
|
நுண்ணலைகள் (microwaves) என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அதிர்வெண் எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும். இவ்வலைகள் நெடுந்தொலைவுத் தொலைபேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகின்றன.
பயன்கள்
ஒளியிழை தகவல் தொடர்பில் தொலைதூரத் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
புளூடூத்-ல் பயன்படுகிறது.
கம்பியில்லா நடமாடும் அகன்ற அலைவரிசையில் (Mobile Broadband Wireless Access) பயன்படுகிறது.
செயற்கைக் கோள் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.
ராடார்-ல் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
மின்காந்த நிழற்பட்டை
கம்பியற்ற தகவற்தொடர்பு
வானொலித் தொழில்நுட்பம்
|
4608
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D
|
அகச்சிவப்புக் கதிர்
|
அகச்சிவப்பு கதிர் (infrared rays) என்பது அதிக அலைநீளம் கொண்ட மின்காந்த அலையாகும். அலைநீளம் அதிகம் என்பதால் இக்கதிர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஒளியலைகளின் அலைநீளம் குறைவு என்பதால் ஒளி கண்களுக்குப் புலனாகிறது. அகச்சிவப்பு கதிர்கள் சில சந்தர்ப்பங்களில் அகச்சிவப்பு ஒளிக்கதிர் என்றும் அழைக்கப்படுகின்றன. வெள்ளொளியான சூரிய ஒளி ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறங்களைக் கொண்டது. இவற்றில் அலைநீளம் அதிகம் கொண்ட சிவப்பு நிறப்பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாத சில கதிர்கள் உள்ளன. இவற்றிற்கு 'அகச்சிவப்புக் கதிர்கள்' என்று பெயர். ஒளியலைகள் ஏறத்தாழ 400-700 நா.மீ அலைநீளம் கொண்டவையாகும். அகச்சிவப்புக் கதிர்கள், கண்ணுக்குப் புலனாகும் ஒளியலைகளை விடக் கூடுதலான அலை நீளம் கொண்டவை. அகச்சிவப்பு கதிர்களின் அதிர்வெண் நானூற்று முப்பது (430 THz) டெராகெர்ட்சு ஆகும் . 700 நா.மீ.(nm) முதல் 100 மை.மீ (µm) அலைநீளம் வரை கொண்ட, மின்காந்த அலைகள் கண்ணுக்குப் புலனாகாத அகச்சிவப்புக் கதிர்கள் ஆகும். சில பரிசோதனைகள் வழியாக நம்மால் அகச்சிவப்புக் கதிர்களையும் காணவியலும்).
ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகள் நகரும் போது அப்பொருள் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கவோ அல்லது வெளியிடவோ செய்யும். அறைவெப்பநிலைக்கு அருகில் உள்ள பெரும்பாலான பொருட்கள் வெளியிடும் வெப்பக் கதிர்வீச்சு அகச்சிவப்புக் கதிர்களேயாகும். மின்காந்த அலைகளைப் போலவே அகச்சிவப்புக் கதிர்களும் மின்காந்த ஆற்றலை சுமக்கின்றன. ஓர் அலை மற்றும் ஓர் ஒளியணு ஆகிய இரண்டின் பண்புகளையும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளிப்படுத்துகின்றன.
அகச் சிவப்புக் கதிர்களின் அலை நீளம்
நுண்ணலை(Microwave)களைவிட அகச் சிவப்புக் கதிர்களின் அலை நீளம் குறைவு. கண்ணுக்கு புலனாகும் ஒளி அலைகளில் மிக அதிக அலைநீளம் உடையது சிவப்பு நிறம். ஆனால், சிவப்பு அலை ஒளிக்கதிர்கள் தாங்கியுள்ள ஆற்றல், நீல ஒளிக்கதிர்கள் தாங்கி இருக்கும் ஆற்றலைவிடக் குறைவானது. கண்ணுக்குப் புலனாகா அகச்சிவப்புக் கதிர்கள் சிவப்பு ஒளியலைகளைவிடவும் குறைந்த ஆற்றல் தாங்கி இருப்பதால் அவை அகச்சிவப்புக் கதிர்கள் எனக் குறிக்கப்பெறுகின்றன.இக்கதிர் வீச்சுகளின் அலை நீளம் 106 மீ முதல் 103 மீ.வரை உள்ளது. இக்கதிர்வீச்சுகள் அண்மைக் அகச்சிவப்புப் பகுதி (Near infrared) சேய்மை அகச்சிவப்புப் பகுதி (Far infrared) என இரு வகைப்படும். முதல் வகை 3*106 மீ முதல் 25*106 மீ.வரை உள்ளது. சேய்மை அகச்சிவப்பு 25*106 மீ முதல் 103 மீ.வரை உள்ளது.
கண்டுபிடிப்பு
1800 ஆம் ஆண்டில் வானியல் நிபுணர் சர் வில்லியம் எர்செல் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டறிந்தார். ஒரு வெப்பநிலைமானியின் மீது உணரப்பட்ட கதிர்நிரலில் சிவப்பு ஒளியை விட ஆற்றல் குறைவாக உள்ள கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சின் வகையை இவர் கண்டுபிடித்தார். சூரியனிலிருந்து வரும் மொத்த ஆற்றலில் பாதிக்கும் சற்று அதிகமாக அளவு ஆற்றல் அகச்சிவப்புக் கதிர் வடிவில் பூமிக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சிற்கும் இடையே உள்ள சமநிலை பூமியின் காலநிலையில் ஒரு முக்கியமான விளைவைக் கொண்டிருக்கிறது.
மூலக்கூறுகள் அவற்றின் சுழற்சி-அதிர்வு இயக்கங்களை மாற்றிக் கொள்ளும்போது அகச்சிவப்புக் கதிர் அவற்றால் உறிஞ்சப்படுகிறது அல்லது உமிழப்படுகிறது. இருமுனைத் திருப்புத்திறனை மாற்றுவதன் மூலம் இது ஒரு மூலக்கூறின் அதிர்வு முறைகளைத் தூண்டுகிறது. முறையான சமச்சீர் மூலக்கூறுகளின் ஆற்றல் நிலைகளை ஆய்வு செய்வதற்கான பயனுள்ள அதிர்வெண் வரம்பையும் இது உருவாக்குகிறது. அகச்சிவப்பு வரம்பில் ஒளியணுக்களை உறிஞ்சுதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை அகச்சிவப்பு நிறமாளையியல் ஆய்வு செய்கிறது.
தொழில்துறை, அறிவியல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளில் அகச்சிவப்பு கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது. இரவுநேர பார்வை சாதனங்களில் அகச்சிவப்புக்கு அருகிலுள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி யார் பார்வையிடுகிறார்கள் என்பதை உணர்த்தாமலேயே மக்கள் அல்லது விலங்குகளைக் கவனிக்க முடியும். அகச்சிவப்பு வானியலில் பிரபஞ்சத்தின் தொடக்கக் கால மூலக்கூறு மேகங்கள், விண்மீன்கள் போன்ற பொருட்களை தூசுகளை ஊடுறுவி கண்டறிவதற்கு உணரிகள் பொருத்தப்பட்ட தொலைநோக்கிகள் பயன்படுத்துகின்றன .அகச்சிவப்பு வெப்ப-படமெடுக்கும் புகைப்படக் கருவிகளைக் கொண்டு காப்பிடப்பட்ட பொருள்களின் வெப்ப இழப்பு, தோலில் மாறுபடும் இரத்த ஓட்டம், மின்சாதனங்கள் அதிகமாக சூடுபடுத்தப்படுவது போன்றவற்றை கண்டறிய பயன்படுகிறது.
வெப்ப-அகச்சிவப்பு படமெடுத்தல் இராணுவம் மற்றும் குடிமைசார் நோக்கங்களுக்காகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இலக்கு சேகரிப்பு, கண்காணிப்பு, இரவுநேர கவனிப்பு, இலக்கை நோக்கி முன்னேறுதல், மற்றும் தடங்கண்காணிப்பு போன்ற இராணுவ நடவடிக்கைகளில் இம்முறை மிகவும் பயனாகிறது. சாதாரண உடல் வெப்பநிலையில் மனிதர்கள் பெரும்பாலும் 10 மை.மீ (மைக்ரோமீட்டர்கள்) அலைவரிசைகளில் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடுகிறார்கள். வெப்ப திறன் பகுப்பாய்வு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தொழில்துறை வசதி ஆய்வுகள், தொலை வெப்பநிலை உணர்வு, குறுகிய கம்பியில்லா தொடர்பு, நிறமாலை, மற்றும் வானிலை முன்னறிவிப்பு போன்ற செயல்பாடுகள் குடிமைசார் பயன்பாடுகளில் அடங்கும்.
அகச்சிவப்புக் கதிர்களை உண்டாக்கும் மூலங்கள்
அக்ச்சிவப்புக்கதிர்கள் இயற்கையில் சூரியனால் பெறப்படுகின்றன. செயற்கையில் நெர்ன்ஸ்ட் விளக்கு, குளோபார் விளக்கு, கார்பன் வில் விளக்கு, 1000 கெ. முதல் 1500 கெ. வரை சூடேற்றப்பட்ட திண்மங்கள் முதலியவை அகச்சிவப்புக் கதிர் வீச்சுகளை உண்டாக்கும் மூலங்கள் ஆகும்.
சூரியனில் இருந்து 5780 கெல்வின் ஆற்றல் வெளியெருகிறது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு கிலோ வாட் என்று பரவியிருக்கும் சூரிய ஒளியில் 527 வாட் அகச்சிவப்பு கதிர்களும் , 445 வாட் புலப்படும் ஒளியும் , 32 வாட் புற ஊதா கதிர்களும் இருக்கும்.
சூரியனில் இருந்து பூமிக்கு வரும் ஆற்றலில் அரை சதவீதத்திற்கு மேல் அகச்சிவப்பு கதிர்களாகவே பூமியை வந்து அடைகின்றன. எனவே பூமியின் தட்பவெட்ப மாறுபாடுகளிலும் , பருவ காலங்களின் மாறுபாடுகளிலும் அகச்சிவப்பு கதிர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
பூமியின் மேற்பரப்பு மற்றும் மேகங்கள் , சூரியனில் இருந்து வரும் புலப்படும் மற்றும் கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சுகளை உறிஞ்சும்.விண்வெளியில் தரையில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களின் ஒளி உறிஞ்சுதல் நடைபெறுகிறது. இதனால் விண்வெளியில் பூமியின் வெப்பம் தப்பிக்க தாமதப்படுகிறது. எனவே பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது.
கண்டறியும் முறை
அகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும், பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. நெருப்பு போன்ற அதிக வெப்பம் வெளியிடுவனவற்றிலிருந்து அகச்சிவப்புக் கதிர்கள் அதிக அளவில் வெளியாகும். நாம் சற்று நேரம் அமர்ந்து எழுந்து போனபின், இருக்கையில் நமது உடல் வெப்பத்தினால் ஏற்பட்ட அகச்சிகப்புக் கதிர்கள் கொஞ்ச நேரத்திற்கு மிச்சமிருக்கும். சிறப்பு கருவிகளைக்கொண்டு அகச் சிவுப்புக் கதிர்களை அவதானிக்கலாம். இச் சூடேற்றும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு வெற்றிடத்தில் செயல்படும் மின்னிரட்டை, போலோமீட்டர் ஆகிய உணர்விகள் மூலம் அகச்சிவப்புக் கதிர்கள் உணரப்படுகின்றன. அகச் சிவப்பு ஒளியை ஆராய இந்துப்பு போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
அகச்சிவப்பு கதிர்களின் வகைகள்
அருகே உள்ள அகச்சிவப்பு கதிர்,
குறுகிய அகச்சிவப்பு கதிர்,
மத்தி அகச்சிவப்பு கதிர்,
நீண்ட தூர அகச்சிவப்பு கதிர்,
தூர அகச்சிவப்பு கதிர் ஆகும்
அருகே உள்ள அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 0.75 மைக்ரோ மீட்டர் முதல் 1.4 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.குறுகிய அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 1.4 மைக்ரோ மீட்டர் முதல் 3.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.மத்திய அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 3.0 மைக்ரோ மீட்டர் முதல் 8.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.நீண்ட தூர அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 8.0 மைக்ரோ மீட்டர் முதல் 15.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.தூரமான அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 15.0 மைக்ரோ மீட்டர் முதல் 1000 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.
பயன்கள்
அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன.
வேதிப் பொருள்களை ஆராய்ந்து அவற்றின் மூலக்கூறு அமைப்பைக் கண்டறிய உதவுகின்றன.
மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளையும்,இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்தல், வலிகள், வீக்கங்களுக்கு சிகிச்சையளிதல் ஆகியவற்றுக்கும் உதவுகின்றன.
சிலர் தங்கள் உடலில் தசைப் பிடிப்பைக் குணமாக்கஅகச்சிகப்பு விளக்கு மூலமாக வெப்பச் செலுத்தம் பெறுவதால் இந்த அலையுடன் ஓர் அறிமுகம் ஏற்பட்டிருக்கும்.
சாயமேற்றும் தொழில்களில் வண்ணங்களை வேகமாக உலரவைக்க உதவுகிறது.
எந்திர உறுப்புகளில் விளையும் குறாஇபாடுகளை ஆராய உதவுகிறாது.
புலனாய்வுத் துறையில் கள்ளக் கையெழுத்துகளைக் கண்டறிய அகச்சிவப்புக் கதிர்கள் உதவுகின்றன.
அகச்சிவப்புக் கதிர்கள் காற்றி னாலோ, மூடுபனியாலோ உட்கவரப்படுவதில்லை. இவை நெடுந்தொலைவு வரை ஊடுருவும் தன்மை வாய்ந்தவை.எனவே, அகச் சிவுப்புப் பார்வை/படங்கள், இரவில் பார்ப்பதற்கு இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.
காட்டுத்தீ போன்ற பெரு விபத்துக்களில் புகை மண்டலத்தினூடே எரியும் இடங்களை அகச்சிகப்புக் பைனாகுலர்கள் வழியாக தெளிவாகக் காணலாம்.
கள்வர் எச்சரிக்கை ஓசை எழுப்பானிலும் , தீ எச்சரிக்கை ஓசை எழுப்பானிலும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுத்த படுகின்றன.
சென்சார் தொழில் நுட்பத்திலும் அகச்சிவப்பு கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன.
அகச்சிவப்பு நிறப்பிரிகை
அகச்சிவப்பு நிறமாலை ஸ்பெக்ட்ரத்தில் உள்ள அகச்சிவப்பு பகுதியை மட்டும் ஆராய உதவும்.அகச்சிவப்பு நிறப்பிரிகை கருவியின் மூலமாக அகச்சிவப்பு ஆற்றல் வரம்பில் நடக்கும் உறிஞ்சுதல் மற்றும் ஒளித்துகள்களின் பரிமாற்றம் ஆகியவற்றை ஆராயலாம்.
மேற்கோள்கள்
உசாத்துணை
அறிவியல் ஒளி, ஜனவரி 2011 இதழ்.
ஆங்கில விக்கி தளத்தின் மொழிப்பெயர்ப்பு.
புற இணைப்புகள்
Infrared: A Historical Perspective (Omega Engineering)
Infrared Data Association, a standards organization for infrared data interconnection
SIRC Protocol
How to build an USB infrared receiver to control PC's remotely
Infrared Waves : detailed explanation of infrared light. (NASA)
Herschel's original paper from 1800 announcing the discovery of infrared light
The thermographic's library, collection of thermogram
Infrared reflectography in analysis of paintings at ColourLex
Molly Faries, Techniques and Applications – Analytical Capabilities of Infrared Reflectography: An Art Historian s Perspective, in Scientific Examination of Art: Modern Techniques in Conservation and Analysis, Sackler NAS Colloquium, 2005
மின்காந்த நிழற்பட்டை
|
4614
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D
|
காம்மா கதிர்
|
காம்மா அலைகள் (Gamma Rays) மின்காந்த அலை வரிசையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதியாகும். அலைநீளம் மிகவும் குறுகியது. ஒரு மீட்டரில் 10 டிரில்லியனில் ஒரு பங்கை விட குறைவான அலைநீளத்தை உடையது. எக்ஸ்-ரே கதிர்களை விட அதிக ஆற்றலோடு ஊடுருவக் கூடியது. அணுக்களின் கதிரியக்கத்திலும், அணுக்கரு பிளவுபடும் போதும் இது வெளிப்படும். எக்ஸ்-ரே படங்களை விட நுணுக்கமாக உடல் கூற்றை அறியப் பயன்படுத்தப் படுகிறது.
அண்ட வெளியில் நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய நுட்பச்செய்திகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
கதிரியக்கம்
மின்காந்த நிழற்பட்டை
|
4619
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
|
ஒளிசார்வண்ண வில்லை
|
ஒளிசார்வண்ண வில்லை (photochromic lens) அல்லது ஒளிசார்வண்ணக் கண்ணாடி என்பது ஓர் ஒளியியல் வில்லை ஆகும், இது போதுமான அளவு அதிக அதிர்வெண் கொண்ட, பொதுவாக புற ஊதாக் கதிர்வீச்சின், ஒளியின் வெளிப்பாட்டின் போது கருமையாகிறது. செயல்படுத்தும் ஒளி இல்லாத நிலையில், இவை அவற்றின் தெளிவான நிலைக்குத் திரும்புகின்றன. ஒளிசார் வண்ண வில்லைகள் பொதுவாக கண்ணாடி, பாலிகார்பனேட்டு அல்லது வேறு நெகிழிகளால் செய்யப்படலாம். அவை முக்கியமாக வெளிச்சமான சூரிய ஒளியில் மூக்குக் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் தெளிவான, அல்லது மிகவும் அரிதாக, குறைந்த சுற்றுப்புற ஒளி நிலைகளில் இலேசாக நிறமிடப்படுகின்றன. பிரகாசமான ஒளியை வெளிப்படுத்திய ஒரு நிமிடத்திற்குள் அவை கணிசமாக கருமையாகின்றன, ஆனாலும் தெளிவான நிலைக்குத் திரும்ப சிறிது நேரம் ஆகும்.
ஒரு வகையான தொழில்நுட்பத்தில், ஒளிசார்வண்ணக் கண்ணாடிகளில் வெள்ளி குளோரைடு அல்லது வேறொரு வெள்ளி ஏலைடின் மூலக்கூறுகள் பதிக்கப்பட்டுள்ளன. அவை குறிப்பிடத்தக்க புறவூதாக் கூறுகள் இல்லாமல் புலப்படும் ஒளிக்கு ஒளிபுகு தன்மையைக் கொண்டிருக்கும், இத்தன்மை செயற்கை விளக்குகளுக்கு இயல்பானது. மற்றொரு வகையான தொழில்நுட்பத்தில், கரிம ஒளிசார்வண்ண மூலக்கூறுகள், நேரடி சூரிய ஒளியில் உள்ள புறவூதாக் கதிர்களுக்கு வெளிப்படும் போது, ஒரு வேதி செயல்முறைக்கு உட்பட்டு, அவை வடிவத்தை மாற்றுவதற்கும், புலப்படும் ஒளியின் குறிப்பிடத்தக்க சதவீதத்தை உறிஞ்சுவதற்கும் காரணமாகின்றன, அதாவது அவை கருமையாகின்றன. இந்த செயல்முறைகள் மீளக்கூடியவை; UV கதிர்களின் வலுவான மூலங்களிலிருந்து வில்லை அகற்றப்பட்டவுடன், ஒளிசார்வண்ணக் கலவைகள் அவற்றின் வெளிப்படையான நிலைக்குத் திரும்புகின்றன.
கண்டுபிடிப்பு
'கார்னிங் கிளாஸ் ஒர்க்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த இசுட்டான்லி டொனால்டு இசுட்டூக்கி என்பவர் 60களில் உருவாக்கிய கண்ணாடி செய்முறை இது. இவருடைய இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்க தேசிய தொழில்நுட்ப பதக்கம் 1986ம் ஆண்டு வழங்கப்பட்டது.
தொழில்நுட்பத் தகவல்கள்
இயங்குமுறை
இந்த வில்லைகளின் கண்ணாடிகள், ஒரு கண்ணாடி வினைவேதிமத்தில் நுண்பளிங்குருவமான வெள்ளி ஏலைடுகளை (பொதுவாக சில்வர் குளோரைடு) உட்பொதிப்பதன் மூலம் அவற்றின் ஒளிசார்வண்ணப் பண்புகளை அடைகிறது. நெகிழி ஒளிசார்வண்ண வில்லைகள், மீளக்கூடிய கருமையாக்கும் விளைவை அடைய ஆக்சசின்கள், நாப்தோபிரான்கள் போன்ற கரிம ஒளிச்சேர்க்கை மூலக்கூறுகளைப் பயன்படுத்துகின்றன. இந்த வில்லைகள் சூரிய ஒளியில் இருக்கும் புறஊதா ஒளியில் வெளிப்படும் போது கருமையாகின்றன, ஆனால் செயற்கை ஒளியில் இவ்விளைவு ஏற்படாது. புறவூதா-A ஒளியின் (320-400 nm அலைநீளங்கள்) முன்னிலையில், கண்ணாடியிலிருந்து இலத்திரன்கள் நிறமற்ற வெள்ளி அயனிகளுடன் இணைந்து அடிப்படை வெள்ளியை உருவாக்குகின்றன. மூலப்பொருள் வெள்ளி கண்ணுக்குப் புலப்படும் என்பதால், வில்லைகள் கருமையாகத் தோன்றும்.
AgCl + e^- <=> Ag + Cl^-
சூரிய ஒளி இல்லாத நிழலில், இந்த எதிர்வினை தலைகீழாக உள்ளது. வெள்ளி அதன் மூல அயனி நிலைக்குத் திரும்புகிறது, இதனால் வில்லைகள் தெளிவடைகின்றன.
Ag - e^- -> Ag^+
Ag^+ + Cl^- -> AgCl
ஒளிசார்வண்ணப் பொருள் கண்ணாடி அடி மூலக்கூறில் சிதறடிக்கப்படுவதால், இருட்டடிப்பு அளவு கண்ணாடியின் தடிப்பைப் பொறுத்தது. இது தடிப்பு மாறுபடும் பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நெகிழி வில்லைகள் மூலம், பொருள் பொதுவாக நெகிழியின் மேற்பரப்பு அடுக்கில் 150 µm வரை ஒரே மாதிரியான தடிமனில் பதிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
.
வில்லைகள்
|
4620
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF
|
காடி
|
ஓர் அமிலம் அல்லது காடி அல்லது புளிமம் (Acid)என்பது ஒரு புரோட்டானைக் கொடையாக வழங்கக்கூடிய மூலக்கூறு அல்லது அயனியைக் குறிப்பிடுகிறது. புரோட்டான் என்பது ஐதரான் அல்லது ஐதரச மின்மவணு H+ ஆகும் மாறாக, எலக்ட்ரான் இணையுடன் சேர்ந்து (இலூயிக் அமிலம்) சக பிணைப்பாக உருவாகும் திறன் கொண்டவற்றையும் காடி அல்லது அமிலம் எனலாம்.
புரோட்டான் வழங்கிகள் அல்லது புரோன்சிட்டெடு அமிலங்கள் முதலாவது வகை அமிலங்கள் எனப்படுகின்றன. நீர்த்த கரைசல்கள் எனப்படும் சிறப்பு சூழல்களில், புரோட்டான் வழங்கிகள் ஐதரோனியம் அயனிகளாக (H3O+) உருவாகின்றன. இவற்றை அறீனியசு அமிலங்கள் என்கிறோம். புரோன்சிட்டெடு மற்றும் மார்ட்டின் லோரி ஆகியோர் நீரியமில்லாத கரைப்பான்களுக்கும் அறீனியசு கோட்பாடு பொருந்தும் வகையில் கோட்பாட்டை பொதுமைப்படுத்தினர். ஒரு புரோன்சிட்டெடு அல்லது அறீனியசு அமிலம் வழக்கமாக வேதிக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு ஐதரசன் அணுவைக் கொண்டிருக்கும். இந்த ஐதரசன் அணுவை இழந்தபிறகும் வேதிக்கட்டமைப்பானது ஆற்றல் மிக்கதாகவே பிணைக்கப்பட்டிருக்கும்.
நீரிய அறீனியசு அமிலங்கள் அவற்றுக்கான தனிச்சிறப்பு மிக்க பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளன. இப்பண்புகள் ஓர் அமிலம் குறித்த நடைமுறை விளக்கத்தை வழங்குகின்றன .
அமிலங்கள் புளிப்புச் சுவையுடன் நீர்த்த கரைசல்களாக உருவாகின்றன. நீல லிட்மசு தாளை சிவப்பு லிட்மசு தாளாக மாற்றுகின்றன. காரங்களுடனும் கால்சியம் போன்ற உலோகங்களுடனும் வினைபுரிந்து உப்புகளை உருவாக்குகின்றன. இலத்தீன் மொழியில் புளிப்புச் சுவைக்கு அசிடசு/அசெர் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்துதான் அமிலம் என்ற சொல் உருவானது. ஓர் அமிலத்தின் நிர்த்த கரைசல் காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு (pH) 7 க்கும் குறைவாக உள்ளது. காரகாடித்தன்மைச் சுட்டெண் 0 வில் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 ° செ இல் 7.0 ஆகும், இதை நடுநிலை நீர்மம் என்று அழைக்கிறார்கள். காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் கீழ் இருந்தால் அக்கரைசலை அமிலம் என்றும் காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் மேல் அதிகமாக இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது. காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு குறைவு எனில் அக்கரைசலின் அமிலத்தன்மை அதிகம் என்றும் அதில் அதிக அடர்த்தியில் ஐதரசன் நேர்மின் அயனிகள் உள்ளன என்பது பொருளாகும். வேதிப்பொருட்கள் அல்லது பொருள்கள் அமிலங்கள் என்று அழைக்கப்பட்டால் அவை அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன என்பதும் அதன் பொருளாகும்.
ஐதரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், கந்தக அமிலம், சிட்ரிக் அமிலம் போன்றவை அமிலங்களுக்கு எளிய பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். இரைப்பை நீரில் காணப்படுவதும், செரிமானத்தை செயலூக்குவதும் ஐதரசன் குளோரைடின் கரைசலான ஐதரோகுளோரிக் அமிலமேயாகும். கரிம அமிலமான அசிட்டிக் அமிலம் வினீகர் என்றும் அழைக்கப்படுகிறது. கந்தக அமிலம் கார்களின் மின்கல அடுக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரிக் அமிலம் எலுமிச்சை போன்ற சிட்ரசு வகைப் பழங்களில் காணப்படுகிறது. இங்கு கூறப்பட்ட அனைத்து அமிலங்களுமே திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படும் தூய்மையான பொருட்களின் கரைசல்களில் இருந்து தருவிக்கப்பட்ட கரைசல்கள் ஆகும். வலிமையான அமிலங்களும். அடர்த்தி மிகுந்த ஆனால் வலிமை குறைந்த சில அமிலங்களும் அரிப்புத்தன்மை கொண்டுள்ளன. இப்பண்பிற்கு கார்போரேன்களும் போரிக் அமிலமும் விதிவிலக்குகளாகும்.
இலூயிக் அமிலங்கள் இரண்டாவது வகை அமிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்பாக உருவாகின்றன. போரான் முப்புளோரைடு இலூயிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாகும். இதிலுள்ள போரான் அணுவில் ஒரு காலியான ஆர்பிட்டால் உள்ளது. இந்த ஆர்பிட்டால் காரத்திலுள்ள அணுவின் தனி இணை எலக்ட்ரான்களுடன் காலியிடத்தைப் பகிர்ந்து கொண்டு சகப்பிணைப்பாக உருவாகின்றது. அமோனியாவில் உள்ள நைட்ரசன் காரத்திலுள்ள அணுவுக்கு உதாரணமாகும். புரோன்சிட்டெடு வரையறையை பொதுமைப்படுத்துதலின் ஒரு பகுதியாக இலூயிசு கருதினார். இதன்படி ஓர் அமிலமென்பது எலக்ட்ரான் இணைகளை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் அல்லது புரோட்டான்களை கரைசலில் வெளியிட்டு பின்னர் எலக்ட்ரான் இணைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு வேதிப்பொருள் என பொருள் கொள்ளப்படுகிறது. எனினும், ஐதரசன் குளோரைடு, அசிட்டிக் அமிலம் மற்றும் பெரும்பாலான அமிலங்கள் போன்ற புரோன்சிட்டெடு அமிலங்கள் எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்புகளாக உருவாவதில்லை. எனவே இவை இலூயிக் அமிலங்களாகக் கருதப்படுவதில்லை. மறுதலையாக, பல இலூயிக் அமிலங்கள் அறீனியசு அல்லது புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. நவீன சொல்லியலில் ஓர் அமிலம் என்பது முழுமைபெறாத புரோசிடெட்டு அமிலம் என்றும் மற்றும் இலூயிக் அமிலமாக இல்லாதது என்றும் கருதப்படுகிறது. எனவே வேதியியலர்கள் எப்போதும் இலூயிக் அமிலத்தை திட்டவட்டமாக இலூயிக் அமிலம் என்றே அழைக்கின்றனர்.
மாற்று விளக்கம்
காடிகள் எதிர்மின்னிகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை.
காடி நீரில் எப்படி கலக்கிறது?
காடிகள் நீரில் கரையும் போது ஐதரசன் மின்மவணுக்களை (அயனிகளை (H+)) உருவாக்குகிறது. அதாவது தன்னிடமுள்ள ஐதரசனின் எதிர்மின்னியை ஈர்த்துக் கொண்டு நேர்மின்னியை (புரோடானை) தனியாக விட்டுவிடுகிறது. (ஐதரசன் ஒரேயொரு நேர்மின்னியும் எதிர்மின்னியும் கொண்ட எளிய அணு. ஓர் எதிர்மின்னி பிரிந்தால் H+ என்னும் ஐதரசன மின்மவணுவாக மாறிவிடுகின்றது.
இதனால் காடி - 'கரைசலில் நேர்மின்னியை உருவாக்கும்' என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமான போதிலும், ஐதரசன் இல்லாத காடிகளும் உண்டென்பதால், மேற்ச் சொன்ன விளக்கமே பொதுவான விளக்கமாகிறது.
வரையறைகளும் கோட்பாடுகளும்
அமிலங்கள் தொடர்பான நவீன வரையறைகள் அனைத்தும், அனைத்து அமிலங்களுக்கும் பொதுவான அடிப்படை இரசாயன வேதிவினைகளில் அக்கறை செலுத்துகின்றன. பெரும்பாலான அமிலங்கள் யாவும் அன்றாட வாழ்வில் நீர்த்த கரைசல்களாக அல்லது தண்ணீரில் கரைந்த கரைசல்களாக பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, அறீனியசு மற்றும் புரோன்சிடெட்டு லோரி வரையறைகள் மிகப்பொருத்தமானவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக புரோன்சிடெட்டு லோரி வரையறை மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வேறுவகையில் சிறப்பாக எதுவும் குறிப்பிடப்படாத வரையில், அமில கார வினைகள் என்பவை அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டானை மாற்றுகின்ற ஒரு வேதிவினை என்றே அவை கருதப்படுகின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகையான வரையரைகளிலும் ஐதரோனியம் அயனிதான் அமிலம் என்ற கருத்து வலுப்பெறுகிறது. ஆல்ககால்களும் அமீன்களும் கூட புரோன்சிடெட்டு லோரி வரையறைகளின்படி அமிலங்களாக இருக்க முடியும் என்பது ஆர்வமூட்டும் செய்தியாகும். ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் அணுக்கள் மீதுள்ள தனி இணை எலக்ட்ரான்களால் இவை இலூயிசு காரங்களாகவும் செயல்பட இயலும்.
அறீனியசு அமிலங்கள்
சுவீடன் நாட்டு வேதியியலாளர் சுவாந்தே அறீனியசு 1884 இல் ஐதரசன் அயனிகளின் அல்லது புரோட்டான்களின் அமிலத்தன்மை இயற் பண்புகளை அறிவித்தார். தண்ணீரில் H+ அயனிகளின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருளே ஓர் அறீனியசு அமிலம் எனப்படுகிறது . அமிலக்கார வினைகளைக் குறித்து விவரிக்கும்போது வேதியியலர்கள் பெரும்பாலும் H+(நீர்) என்று எழுதுவது வழக்கமென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். ஆனால் தனி ஐதரசன் உட்கரு, அதாவது புரோட்டான் தண்ணிரில் தனியாக இருக்காது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது H3O+அயனியாகவே இருக்கும். எனவே அறீனியசு அமிலம் என்பதற்கான வரையறையை, எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு அமிலம் என்றும் கூறலாம். மூலக்கூற்று சேர்மங்களான ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியனவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதராக்சைடு அயனிகளின் (OH−) அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு காரம் என்று கூறலாம். இதனால் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி குறையும். ஏனெனில் அவை ஐதராக்சைடு எதிர்மின் அயனிகளுடன் வினைபுரிந்து நீர் மூலக்கூற்றை உருவாக்குகின்றன.
H3O+(aq) + OH−(aq) ⇌ H2O(l) + H2O(l)
சமநிலையின் காரணமாக, ஐதரோனியம் அயனியின் அடர்த்தி எப்பொழுதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம அதற்கிணையாக ஐதராக்சைடு அயனியின் அடர்த்தி குறைகிறது என்றும் பொருளாகும். இதனால், ஒர் அறீனியசு அமிலத்தால் குறைக்கப்படும் ஐதராக்சைடு அயனியின் அடர்த்தியானது ஓர் அறீனியசு காரத்தால் உயர்த்தப்படுகிறது என்பதை அறியலாம்.
அமிலக்கரைசல்களில் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி லிட்டருக்கு 10−7 மோல்கள் அதிகமாகும். ஏனெனில் காரக்காடித்தன்மை சுட்டெண் (pH) ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தியின் கழித்தல் மடக்கை அடிப்படையிலானது ஆகும். எனவேதான் அமிலக் கரைசல்களின் காரக்காடித்தன்மை சுட்டெண் மதிப்பு 7 க்கு குறைவாகக் காணப்படுகிறது.
புரோன்சிட்டெடு – லோரி அமிலங்கள்
அறீனியசு கோட்பாடு பல வேதி வினைகளைப் பற்றி விவரிக்கப் பயன்பட்டது என்றாலும் அதன் எல்லைகள் சுருக்கப்பட்டிருந்தன. அமிலக்கார வினைகள் என்பவை புரோட்டான் பரிமாற்றத்தால் நிகழக்கூடியவை என்பதை 1923 ஆம் ஆண்டில் இயோஃகானசு நிக்கோலசு புரோன்சிட்டெடு , மார்ட்டின் லோரி என்னும் வேதியியலாளர்கள் தனித்தனியாக அடையாளம் கண்டறிருந்திருந்தனர்.
ஒரு புரோன்சிட்டெடு லோரி அமிலம் (சுருக்கமாக புரோன்சிட்டெடு அமிலம்) என்பது ஒரு புரோன்சிட்டெடு லோரி காரத்திற்கு புரோட்டானை வழங்கக்கூடிய ஓரினமாகும் புரோன்சிட்டெடு லோரி அமிலக்காரக் கொள்கையானது அறீனியசு கோட்பாட்டைக் காட்டிலும் கூடுதலான அனுகூலங்களைக் கொண்டுள்ளது. அசிட்டிக் அமிலத்தின் பின்வரும் வினையைக் கருதுவோம். இந்தக்கரிம அமிலம் வினீகரை அதன் தனிச்சிறப்பு சுவையாகக் கொண்டுள்ளது.
CH3COOH + H2O ⇌ CH3COO− + H3O+
CH3COOH + NH3 ⇌ CH3COO− + NH+4
இரண்டு கோட்பாடுகளும் முதல் வினையை எளிதாக விவரிக்கின்றன. CH3COOH அறீனியசு அமிலமாகச் செயல்படுகிறது. ஏனெனில் இது தண்ணிரில் கரைந்து H3O+ அயனிக்கு ஆதார மூலமாகச் செயல்படுகிறது. மற்றும் இது ஒரு புரோட்டானை கொடையளிப்பதன் மூலம் ஒரு புரோன்சிட்டெடு அமிலமாக செயல்படுகிறது. இரண்டாவது உதாரணத்தில் CH3COOH இதே மாற்றத்தைக் காண்கிறது. இந்நிகழ்வில் புரோட்டானை அமோனியாவுக்கு (NH3) கொடையளிக்கிறது. ஆனால் இவ்வினையில் ஐதரோனியம் அயனி உற்பத்தி இல்லை என்பதால் அமிலம் என்பதற்கான அறீனியசு வரையறையுடன் தொடர்பு இல்லை. எப்படி இருப்பினும், CH3COOH ஒரு அறீனியசு மற்றும் புரோன்சிட்டெடு-லோரி அமிலம் ஆகும்.
நீரியமில்லா கரைசல்களில் அல்லது வாயுநிலையில் மூலக்கூற்று சேர்மங்களின் வினைகளை விளக்க புரோன்சிட்டெடு- லோரி கோட்பாடு பயன்படுகிறது. ஐதரசன் குளோரைடும் அமோனியாவும் பல்வேரு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமோனியம் குளோரைடாக (NH4Cl) உருவாகின்றன. நீரியக் கரைசலில் ஐதரசன் குளோரைடு வாயு ஐதரோகுளோரிக் அமிலமாக செயல்படுகிறது. மேலும் ஐதரோனியம் மற்றும் குளோரைடு அயனிகளாகவும் இங்கு காணப்படுகிறது. அறீனியசு வரையறையின் எல்லைகளை பின்வரும் வினைகள் காட்டுகின்றன.
H3O + Cl + NH3 → Cl + NH(aq) + H2O
HCl(benzene) + NH3(benzene) → NH4Cl(s)
HCl(g) + NH3(g) → NH4Cl(s)
அசிட்டிக் அமிலத்தின் வினைகளைப் போலவே, இரு வரையறைகளும் முதலாவது வினைக்கே பொருந்துகின்றன. இங்கு நீர் ஒரு கரைப்பானாகவும் ஐதரோனியம் அயனி HCl கரைபொருளினாலும் உருவாகிறது. அடுத்த இரண்டு வினைகளிலும் அயனிகள் உருவாக்கம் நிகழ்வதில்லை. ஆனால் அவை புரோட்டான்-பரிமாற்ற வினைகளாக உள்ளன. இரண்டாவது வினையில் ஐதரசன் குளோரைடு மற்றும் அமோனியா (பென்சீனில் கரைந்தது) இரண்டும் வினைபுரிந்து பென்சீன் கரைப்பானில் உள்ள திண்ம அமோனியம் குளோரைடு உருவாகிறது. மூன்றாவது வினையில் ஐதரசன் குளோரைடு வாயுவும் அமோனியாவும் இணைந்து திடப்பொருளாக உருவாகின்றன.
இலூயிசு அமிலம்
புரோட்டான் பரிமாற்றம் இல்லாத அமிலக்கார பண்புகள் கொண்ட வினைகளை உள்ளடக்கிய சற்றே தொடர்பான மூன்றாவது கோட்பாட்டை கில்பர்ட் என் இலூயிசு 1923-ம் ஆண்டு முன்மொழிந்தார். ஓர் இனத்திலிருந்து ஒரு சோடி இனை எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொள்ளும் மற்றொரு இனம் இலூயிசு அமிலம் எனப்படுகிறது. சுருங்கச் சொல்வதென்றால் இதுவொரு எலக்ட்ரான் இணை ஏற்பி எனலாம் புரோன்சிட்டெடு அமிலக்கார வினைகள் எல்லாம் புரோட்டான் பரிமாற்ற வினைகள் என்பது போல இலூயிசு அமிலக்கார வினைகள் எல்லாம் எலக்ட்ரான் இணை பரிமாற்ற வினைகளாகும். பல இலூயிசு அமிலங்கள் புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. மாறாக, அமிலக்கார வேதியியல் அடிப்படையில் பின்வரும் வினைகள் எப்படி விவரிக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.
முதல் வினையில் ஒரு புளோரைடு அயனி F− ஓர் எலக்ட்ரான் இணையை போரான் முப்புளோரைடுக்குக் கொடையளித்து விளைபொருளாக டெட்ராபுளோரோபோரேட்டு உருவாகிறது. புளோரைடு ஒரு சோடி இணைதிறன் எலக்ட்ரான்களை இழக்கிறது. ஏனெனில் B—F பிணைப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் எலக்ட்ரான்கள் இரண்டு அணுக்களின் உட்கருக்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளன. எனவே, அவை இருக்கும் தனி புளோரைடு அயனியில் இருப்பதைக் காட்டிலும் புளோரைடு உட்கருவிலிருந்து அதிக தொலைவில் உள்ளன.
BF3 ஒர் இலூயிசு அமிலமாகும். ஏனெனில் இது புளோரைடிலிருந்து எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்கிறது. புரோட்டான் பரிமாற்றம் ஏதுமில்லாததால், இவ்வினையை புரொன்சிட்டெடு கோட்பாடு மூலம் விளக்க இயலாது. இரண்டாவது வினையை இரண்டு கோட்பாடுகளாலும் விளக்க முடியும். குறிப்பிட்டு சொல்லப்படாத புரோன்சிட்டெடு அமிலத்திலிருந்து புரோன்சிட்டெடு காரமான அமோனியாவுக்கு ஒரு புரோட்டான் பரிமாறப்படுகிறது. மாற்றாக அமோனியா ஒரு இலூயிசு காரமாகச் செயல்பட்டு தனி இணை எலக்ட்ரான்களை ஐதரசன் அயனிக்குப் பரிமாற்றம் செய்து பிணைப்பை உருவாக்குகிறது. எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்ளும் இனம் இலூயிசு அமிலமாக கருதப்படுகிறது. உதாரணமாக, ஐதரோனியம் அயனியிலுள்ள (H3O+) ஆக்சிசன் ஒரு சோடி எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொள்கிறது. H—O பிணைப்புகளில் ஒன்று உடையும்பொழுது அதில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள எலக்ட்ரான்கள் ஆக்சிசனுக்குள் உள்ளடங்குகின்றன. சூழலைப்பொறுத்தும் இலூயிசு அமிலத்தை ஒர் ஆக்சிசனேற்றி அல்லது ஒரு மின்னணுகவரியாகவும் விவரிக்கமுடியும். கரிம புரோசிட்டெடு அமிலங்களான அசிட்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அல்லது ஆக்சாலிக் அமிலம் போன்றவை இலூயிசு அமிலங்கள் அல்ல . அவை தண்ணிரில் பிரிகையடைந்து இலூயிசு அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.(H+). ஆனால் அதே சமயத்தில் அதற்கு இணையான அளவுக்கு இலூயிசு காரத்தையும் (அசிட்டேட்டு, சிட்ரேட்டு அல்லது ஆக்சலேட்டு) உருவாக்குகின்றன.
பிரிகையும் சமநிலையும்
அமிலங்களின் வினைகள் யாவற்றையும் HA ⇌ H+ + A− என்ற சமன்பாட்டால் பொதுமைப்படுத்தலாம். இங்குள்ள HA அமிலத்தைக் குறிக்கிறது. அமிலத்திற்கு இணையான இணை காரத்தை A− குறிக்கிறது. புரோட்டான்பகுப்பு என்ற பெயரால் இவ்வினை அழைக்கப்படுகிறது. புரோட்டானேற்ற வடிவம் (HA) பெற்ற ஓர் அமிலம் சில சமயங்களில் தனி அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. அமிலத்தன்மை அளிக்கும் புரோட்டானை மட்டுமே கொண்ட அமிலம் அல்லது ஆக்சிசன் இடம்பெறாத அமிலம் தனி அமிலம் எனப்படுகிறது.
அமிலக்கார இணை இரட்டைகள் ஒரு புரோட்டானால் வேறுபடுகின்றன. இவற்றை புரோட்டானேற்றம் மற்றும் புரோட்டான் நீக்கம் செய்வதன் மூலமாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமுடியும். அமிலம் மின்சுமை ஏற்ற இனமாகவும் அதனுடைய இணை காரம் நடுநிலைமையுடனும் இருப்பதை HA+ ⇌ H+ + A. என்று பொதுமைப்படுத்திய சமன்பாடாக எழுதலாம். கரைசலில் அமிலத்திற்கும் அதன் இணை காரத்திற்கும் இடையில் ஒரு சமநிலை நிலவுகிறது. கரைசலில் உள்ள அயனிகள் அல்லது மூலக்கூறுகளின் அடர்த்திச் சமநிலையை சமநிலை மாறிலி K வால் அறியலாம். அடைப்புக்குறிகள் அடர்த்தியைக் குறிக்கின்றன. அதாவது [H2O] என்று குறிப்பிடப்பட்டால், தண்ணிரின் அடர்த்தி என்பது இதன் பொருள் ஆகும். அமிலக்கார வினைச்சூழலில் பொதுவாக காடித்தன்மை எண் அல்லது அமிலத்தன்மை எண்ணைக் குறிக்க Ka என்ற குறியீட்டைப் பயன்படுத்துவர். Ka மாறிலியின் எண்ணியல் மதிப்பை காணவேண்டுமென்றால், விளைபொருட்களின் அடர்த்திகளின் பெருக்கற்தொகையை வினையில் ஈடுபட்ட வினைபடு பொருளின் அடர்த்தியால் வகுத்துப் பெற வேண்டும். இங்கு வினைபடு பொருள் (HA) மற்றும் வினை விளைபொருட்கள் இணைகாரமும், புரோட்டானும் (H+) ஆகும்.
இரண்டு அமிலங்களில் Ka மதிப்பு எதற்கு அதிகமாக உள்ளதோ அந்த அமிலமே வலிமையான அமிலமாகும். வலிமையான அமிலங்களே புரோட்டானை இழப்பதில் அதிக நாட்டமுள்ள போக்கைக் கொண்டிருப்பதால் ஐதரசன் அயனிக்கும் அமிலத்திற்குமான விகிதம் வலிமையான அமிலங்களில் உயர்ந்த அளவாக இருக்கும். இந்த விகிதம் பல பதின்ம அடுக்குகளுக்கு ஏற்றவாறு மாறும் என்பதால் Ka மதிப்புகளை மடக்கை அளவில் குறிப்பது வழக்கம். மடக்கை காடித்தன்மை எண், pKa என்பது −log10 Ka என்பதற்கு ஈடாகும். வலிமையான அமிலங்கள் வலிமை குறைந்த அமிலங்களைக் காட்டிலும் pKa மதிப்பை குறைவாகக் கொண்டிருக்கும்.
மேற்கோள்களிலும் நூல்களிலும் கொடுக்கப்படும் pKa தரவுகள் நீரின் வெப்பநிலை 25;°செல்சியசில் இல் அளக்கப்பட்டு சோதிக்கப்பட்ட அளவுகளாகும்..
பெயரிடல்
மரபார்ந்த பெயரிடல் முறையில் எதிர்மின் அயனிகளின் அடிப்படையில் அமிலங்களுக்குப் பெயரிடப்பட்டது. பின்னர் அயனி பின்னொட்டுகள் கைவிடப்பட்டு கீழுள்ள அட்டவணையில் உள்ள ஒட்டுகள் பின்னொட்டாக சேர்க்கப்பட்டு பெயரிடப்பட்டன. சில சமயங்களில் முன்னொட்டாகவும் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணமாக HCl இல் குளோரைடு என்பது எதிர்மின் அயனியாகும். எனவே ஐடு என்ற பின்னொட்டை ஐயுபிஏசி பெயரிடும் முறையில் ஐதரோகுளோரிக் அமிலம் எனப் பெயரிட்டார்கள்.
மரபார்ந்த பெயரிடல் முறை:
அமிலங்களீன் வலிமை
ஒரு புரோட்டானை இழக்கும் திறன் அடிப்படையில் ஓர் அமிலத்தின் வலிமை அளவிடப்படுகிறது. தண்ணீரில் முழுமையாகப் பிரிகையடைக்கூடிய அமிலம் வலிமையான் அமிலம் எனக் கருதப்படுகிறது. ஒரு மோல் அளவுள்ள வலிமையான அமிலம் HA தண்ணிரில் கரைந்து ஒரு மோல் அளவுள்ள H+ மற்றும் ஒரு மோல் அளவுள்ள இணை காரம் A− மற்றும் சிறிதளவும் புரோட்டானேற்றம் பெற்ற HA இல்லாமல் போவது என்றும் அமிலத்தின் வலிமையைக் குறிப்பிடலாம். மாறாக வலிமை குன்றிய ஓர் அமிலத்தில் பகுதியாக பிரிகை நிகழ்ந்து, கரைசலில் அமிலமும் இணை காரமும் சமநிலையில் இருப்பதை குறைந்த வலிமை என்ற சொல் விளக்குகிறது. ஐதரோகுளொரிக் அமிலம் (HCl), ஐதரோ அயோடிக் அமிலம் (HI), ஐதரோ புரோமிக் அமிலம் (HBr), பெர்குளோரிக் அமிலம் (HClO4), நைட்ரிக் அமிலம் (HNO3), கந்தக அமிலம் (H2SO4) போன்றவை வலிமையான அமிலங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். தண்ணிரில் இவை ஒவ்வொன்றும் 100 சதவீதம் அளவுக்கு அயனியாகின்றன. எளிமையாக புரோட்டானை இழக்கும் பொருள் வலிமையான அமிலம் என்று கருதப்படுகிறது. H—A பிணைப்பின் முனைவுப் பண்பும், A அணுவின் உருவ அளவும் இரண்டு முக்கிய காரணிகளாக புரோட்டான் நீக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. இவையே H—A பிணைப்பின் வலிமையையும் உறுதிப்படுத்துகின்றன. இணை காரத்தினுடைய நிலைப்புத்தன்மையும் கூட அமிலங்களின் வலிமையை சிலநேரங்களில் நிர்ணயிக்கின்றன.
வலிமையான அமிலங்கள் உயர் Ka மதிப்பும் வலிமை குன்றிய அமிலங்களைக் காட்டிலும் குறைவான pKa மதிப்பும் கொண்டிருக்கும்.
கரிம ஆக்சி அமிலங்களான சல்போனிக் அமிலங்கள் வலிமையான அமிலங்கள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளன. தொலுயீன்சல்போனிக் அமிலம் இதற்கு எடுத்துக்காட்டாகும். கந்தக அமிலத்தைப் போலன்றி சல்போனிக் அமிலங்கள் திண்மங்களாகும். உண்மையில் பாலிசிடைரின் செயல்சார்புடைய பாலிசிடைரின் சல்போனெட்டு வலிமையான அமிலத்தன்மை கொண்ட வடித்தலுக்குட்பட்ட நெகிழி ஒரு திண்மமாகும்
மீவீரிய அமிலங்கள் 100% கந்தக அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவையாகும். புளோரோ ஆண்டிமோனிக் அமிலம், மந்திர அமிலம், பெர்குளோரிக் அமிலம் போன்றவை மீவீரிய அமிலங்களுக்கு உதாரணங்களாகும். மீவீரிய அமிலங்களால் நிரந்தரமாக தண்ணீரை புரோட்டானேற்றம் செய்து படிகநிலை ஐதரோனியம் உப்புகளை தரமுடியும்.
அமிலச் சேர்மத்தின் வலிமையை Ka அளவுகள் தெரிவிப்பது போல நீரிய அமிலங்களின் வலிமையை pH, அளவுகள் தெரிவிக்கின்றன.
வேதியியல் பண்புகள்
ஒற்றை புரோட்டிக் அமிலங்கள்
பிரிகைச் செயல்முறையின் போது ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒரு புரோட்டானை மட்டும் கொடையளிக்க வல்ல அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் எனப்படும். HA என்ற குறியீடு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
HA(நீரிய) + H2O(நீர்மம்l) ⇌ H3O+(நீரிய) + A−(நீரிய) Ka
கனிம அமிலங்களில் ஐதரோகுளோரிக் அமிலமும் (HCl), நைட்ரிக் அமிலமும் (HNO3) ஒற்றை புரோட்டிக் அமிலங்களுக்குப் பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். கரிம அமிலங்களைப் பொறுத்தவரையில் ஒரு கார்பாக்சிலிக் குழு இடம்பெற்ற அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை மோனோ கார்பாக்சிலிக் அமிலங்கள் அல்லது ஒற்றை கார்பாக்சிலிக் அமிலங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பார்மிக் அமிலம் (HCOOH), அசிட்டிக் அமிலம் (CH3COOH), பென்சாயிக் அமிலம் (C6H5COOH) உள்ளிட்ட அமிலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
பாலிபுரோட்டிக் அமிலங்கள்
ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புரோட்டான்களை கொடையளிக்க வல்ல அமிலங்களை பாலிபுரோட்டிக் அமிலங்கள் என்கிறார்கள். மேலும் இவற்றை பாலிக்கார அமிலங்கள் என்றும் அழைக்கிறார்கள். தனிச்சிறப்பு மிக்க பாலிபுரோட்டிக் அமிலங்கள் கூடுதலாக டைபுரோட்டிக் அமிலங்கள்ம் டிரைபுரோட்டிக் அமிலங்கள் போன்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளன.
இங்கு H2A என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளடைபுரோட்டிக் அமிலம் அதனுடைய pH தன்மையைப் பொறுத்து ஒரு முறை அல்லது இருமுறை பிரிகை அடைகிறது. ஒவ்வொரு பிரிகைக்கும் தனித்தனியான பிரிகை மாறிலிகள் உண்டு.
முதலாவது பிரிகை மாறிலி குறிப்பாக இரண்டாவது பிரிகை மாறிலியைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொண்டது. ( Ka1 > Ka2). உதாரணமாக கந்தக அமிலம் (H2SO4) பைசல்பேட்டு எதிரயனி (HSO−4) உருவாக ஒரு புரோட்டானை கொடையளிக்க முடியும். இதற்கான Ka1 மதிப்பு அதிகமாகும்; பின்னர் இது (SO2−4) எதிரயனியை உருவாக்க இரண்டாவது புரோட்டானை கொடையளிக்கிறது. இங்கு இதற்கான Ka2 மதிப்பு இடைநிலை வலிமை கொண்டது. உயர் Ka1 மதிப்பு கொண்ட முதலாவது பிரிகை கந்தக அமிலத்தை வலிமையான அமிலமாக அடையாளப்படுத்துகிறது. இதேபோல வலிமை குறைந்த நிலையற்ற கார்பானிக் அமிலம் (H2CO3) ஒரு புரோட்டானை இழந்து பைகார்பனேட்டு எதிரயனியையும் (HCO−3), இரண்டாவது புரோட்டானை இழந்து கார்பனேட்டு எதிரயனியையும் (CO2−3) கொடுக்கிறது. இரண்டுமே Ka மதிப்புகள் குறைவு என்றாலும் Ka1 > Ka2 ஆக கருதப்படுகிறது.
ஒரு டிரைபுரோட்டிக் அமிலத்தால் (H3A) ஒன்று, இரண்டு அல்லது மூன்று பிரிகைகள் அடைய முடியும். இவற்றுக்கான மூன்று பிரிகை மாறிலிகளும் இதற்கு உண்டு. இங்கு இவற்றின் மதிப்பு Ka1 > Ka2 > Ka3.ஆகும்.
கனிம அமிலங்களின் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு ஆர்த்தோபாசுபாரிக் அமிலத்தை (H3PO4), உதாரணமாகக் கூறலாம். வழக்கமாக இது பாசுபாரிக் அமிலம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்று புரோட்டான்களும் அடுத்தடுத்து இழக்கப்பட்டு H2PO−4, பின்னர் HPO2−4, மற்றும் இறுதியாக ஆர்த்தோபாசுப்பேட்டு அயனி PO3−4,உருவாகிறது. வழக்கமாக இதை பாசுப்பேட்டு என்றே அழைக்கின்றனர். பாசுபாரிக் அமில மூலக்கூறில் மூன்று புரோட்டான்களின் அமைவிடங்களும் சமமாக இருந்தாலும் அடுத்தடுத்த Ka மதிப்புகள் வேறுபடுகின்றன. கரிம வேதியியலில் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாக சிட்ரிக் அமிலம் இதேபோல மூன்று புரோட்டான்களை இழந்து சிட்ரேட்டு அயனியாக உருவாகிறது.
ஒவ்வொரு ஐதரசன் அயனியாக தொடர்ந்து இழப்பதற்கு குறைந்த சாத்தியம் என்றாலும், அனைத்து இணை காரங்களும் கரைசலில் உள்ளன. உதாரணமாக ஒரு டைபுரோட்டிக் அமிலத்தால் கரைசலில் H2A, HA-, மற்றும் A2-: என்ற மூன்று இனங்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு இனத்திற்குமான பின்ன செறிவுகளை α (ஆல்பா), இங்குள்ளவாறு கணக்கிட இயலும். pH மதிப்பும் இணைகாரங்களின் செறிவும் கொடுக்கப்பட்டால்,
:
கொடுக்கப்பட்ட K1 and K2 pH மதிப்பிற்கு எதிரான பின்னச் செறிவுகளை இத்திட்டத்தின் மூலம் கணக்கிட முடியும். இத்திட்டம் பெய்றம் திட்டம் எனப்படுகிறது. இத்திட்டத்தின் பாங்கை அவதானித்து பொதுவாக n புரோட்டிக் அமிலத்திற்கான i முறைகள் பிரிகை கணக்கீட்டிற்காக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இங்கு K0 = 1 மற்றும் இதர K-அளவுகள் அமிலத்தினுடைய பிரிகை மாறிலிகளாகும்.
நடுநிலையாக்கல்
ஓர் அமிலமும் ஒரு காரமும் வினைபுரிந்து ஓர் உப்பும் நிரும் உருவாகும் வினை நடுநிலையாக்கல் எனப்படும். உதாரணமாகம் ஐதரோகுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் வினைபுரிந்து சோடியம் குளோரைடும் தண்ணீரும் உருவாகின்றன. நடுநிலையாக்கல் வினைக்கு இது ஓர் எளிய எடுத்துக்காட்டாகும்.
HCl(aq) + NaOH(aq) → H2O(l) + NaCl(aq)
பருமனறிபகுப்பாய்வில் பயன்படும் தரம்பார்த்தல் சோதனைக்கு நடுநிலையாக்கல் வினையே அடிப்படையாகும். இவ்வினையில் பயன்படுத்தப்படும் pH காட்டி சமானப்புள்ளியைக் காட்டுகிறது. ஓர் அமிலத்தை நடுநிலையாக்க எத்தனை மோல் காரம் சேர்க்கப்படுகிறது என்பது இவ்வினையில் கண்டறியப்படுகிறது. நடுநிலையாக்கல் வினையால் பெரும்பாலும் pH மதிப்பு 7.0 உள்ள கரைசல் உருவாவதாக தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒரே வலிமை கொண்ட அமிலமும் காரமும் வினைபுரியும் நிகழ்வுகளில் மட்டுமே இத்தகைய கரைசல் உருவாகும்.
அமிலத்தைவிட வலிமை குறைந்த காரத்தை நடுநிலையாக்கும் போது வலிமை குறைந்த அமில உப்பு உருவாகிறது. உதாரணமாக, வலிய ஐதரோகுளோரிக் அமிலமும், வலிமை குறைந்த அமோனியாவும் நடுநிலையாக்கப்படும் போது வலிமை குறைந்த அமோனியம் குளொரைடு என்ற அமில உப்பு உருவாகிறது. இதேபோல ஒரு வலிமை குறைந்த அமிலம், வலிய காரத்துடன் நடுநிலையாக்கப்படும்போது வலிமை குறைந்த கார உப்பு உருவாகிறது. உதாரணமாக ஐதரோபுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் நடுநிலையாக்கப்பட்டால் சோடியம் புளோரைடு உருவாகிறது.
வலிமை குறைந்த அமிலம் – வலிமை குறைந்த காரம் சமநிலை
புரோட்டானேற்ற அமிலத்திலிருந்து ஒரு புரோட்டானை நீக்கும்போது அவ்வமைப்பின் pH மதிப்பானது அமிலத்தின் pKa மதிப்பைக் காட்டிலும் கண்டிப்பாக உயரும். இந்தக் காரக் கரைசலில் ஏற்படும் H+ இன் அடர்த்திக் குறைவு சமநிலையை இணை காரத்தை நோக்கி (புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட அமில வடிவம்) செலுத்துகிறது. தாழ் மதிப்பு கொண்ட pH கரைசல்களில் உயர் அடர்த்தி H+ அமிலத்தை புரோட்டானேற்ற வடிவத்திலேயே வைத்திருக்கிறது.
வலிமை குறைந்த அமிலக் கரைசலும் அவற்றின் இணை கார உப்புகளும் சேர்ந்து தாங்கல் கரைசல்களாக உருவாகின்றன.
பயன்கள்
அமிலங்கள் பல பயன்களைக் கொண்டுள்ளன.
உலோகங்களில் துரு மற்றும் பிற அசுத்தங்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
நீர்ம மின்கலத்தில் கந்தக அமிலம் மின்னாற்பகு பொருளாக பயன்படும்.
வலுவான அமிலங்கள் குறிப்பாக கந்தக அமிலம் பரவலாக கனிமங்களை பயன்படுத்தப்படுத்தி வினை பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பாசுபேட்டு தாதுவுடன் கந்தக அமிலம் சேர்த்து பாசுபேட்டு உரங்கள் மற்றும் பாசுபாரிக் அமிலம் முதலியன தயாரிக்கப்படுகின்றன. மற்றும் துத்தநாகத் தயாரிப்பின் போது, துத்தநாக ஆக்சைடு கந்தக அமிலத்தில் கரைத்து துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகிறது.
இரசாயன துறையில் உப்புக்களை உற்பத்தி செய்ய அமிலங்கள் நடுநிலையாக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நைட்ரிக் அமிலத்துடன் அம்மோனியா வினைபுரிந்து அம்மோனியம் நைட்ரேட் என்ற உரமாகப் பயன்படும் உப்பை உற்பத்தி செய்கிறது. மேலும் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆல்ககாலுடன் வினைபுரிந்து ஈதர் தயாரிக்கப்படுகிறது.
அமிலங்கள் பானங்கள் மற்றும் உணவுகளில் அவற்றின் சுவையை மாற்றவும் நிலைப்படுத்தும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக பாசுபாரிக் அமிலம் கோலா பானத்தின் ஒரு அங்கமாகும். அசிட்டிக் அமிலம் வினிகர் என்ற பெயரில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும். கார்பானிக் அமிலம் சில கோலா பானங்கள் மற்றும் சோடாவின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.
சிட்ரிக் அமிலம் சுவையூட்டிகள் மற்றும் ஊறுகாய்களில் நிலைப்படுத்தும் பொருளாகப் பயன்படுகிறது.
டார்டாரிக் அமிலம் மாம்பழம், புளி போன்ற உணவுகளில் ஒரு முக்கியமான பகுதிப்பொருள் ஆகும்.மேலும் இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளும் அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.
சிட்ரிக் அமிலம் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மற்ற சிட்ரசு பழங்களில் உள்ளது. ஆக்சாலிக் அமிலம் தக்காளி, கீரை போன்ற உணவுப்பொருட்களில் காணப்படுகின்றது.
அசுகார்பிக் அமிலம் (விட்டமின் சி) மனித உடலில் ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். நெல்லிக்காய், எலுமிச்சை, சிட்ரசு பழங்கள், கொய்யா போன்ற உணவுகளில் உயிர்சத்து சி இருக்கிறது.
மனித உடலில் அமிலங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. மனித வயிற்றில் சுரக்கும் ஐதரோகுளோரிக் அமிலம் பெரிய, சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து செரிமானத்தை எளிமையாக்குகின்றது.
அமினோ அமிலங்கள் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைக்கத் தேவையான புரதங்களின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்களும் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. சந்ததியினருக்கு மரபு பண்புகளை கடத்தும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ களை உருவாக்க நியூக்ளிக் அமிலங்கள் பயன்படுகின்றன. உடலில் கார சமநிலையை பராமரிக்க கார்பானிக் அமிலம் அவசியமாகும்.
அமில வினையூக்கிகள்
அமிலங்கள் தொழில்துறை மற்றும் கரிம வேதியியல் துறைகளில் அதிக அளவில் வினையூக்கியாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கந்தக அமிலம் பெட்ரோல் உற்பத்தியின் போது ஆல்க்கைலேற்ற செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. கந்தக, பாசுபாரிக் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற வலுவான அமிலங்கள் நீர்நீக்க மற்றும் ஒடுக்க எதிர்வினைகளில் முக்கிய பங்காற்றுகிம்றன. உயிர்வேதியியல் துறையில் பல நொதிகள் அமிலங்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்துகின்றன.
உயிரியல் நிகழ்வுகள்
அடிப்படைக் கட்டமைப்பு]].
உயிரியலின் பல முக்கிய மூலக்கூறுகளில் அமிலங்கள் உள்ளன. டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளிட்ட நியூக்ளிக் அமிலங்கள் அமில பாசுப்பேட்டு குழுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. நியூக்ளிக் அமிலங்கள் மரபணுக் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன. இவையே பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு அனுப்பப்பட்டு உயிரினத்தின் பண்புகள் பலவற்றை தீர்மானிக்கின்றன. மற்றும் அமினோ அமிலத் துணையலகுகளால் உருவாக்கப்பட்ட டிஎன்ஏ புரதங்கள் தொகுப்புக்கான இரசாயன செயல்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. செல் சவ்வுகளில் பாசுப்போலிபிடுகள் போன்ற கொழுப்பு அமில எசுத்தர்கள் உள்ளன.
ஓர் α-அமினோ அமிலத்தில் உள்ள ஒரு மைய கார்பன் அணு, சக பிணைப்பால் பிணைக்கப்பட்ட ஒரு கார்பாக்சில் தொகுதி (இவை கார்பக்சிலிக் அமிலங்கள் என்பதால்), ஒர் அமினோ தொகுதி, ஒரு ஐதரசன் அணு மற்றும் ஒரு மாறுபடும் தொகுதி ஆகியனவற்றை கொண்டுள்ளது. மாறுபடும் தொகுதி ஆர் தொகுதி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தின் பல பண்புகளை பக்கச் சங்கிலியான இதுவே உறுதிப்படுத்தி அடையாளப்படுத்துகிறது.
எளிய அமினோ அமிலமான கிளைசினில் ஐதரசன் அணுவே மாறுபடும் தொகுதியாக அதாவது ஆர் தொகுதியாக உள்ளது. ஆனால் மற்ற அனைத்து அமினோ அமிலங்களிலும் ஐதரசனுடன் பிணைக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்பன் அணுக்கள் மற்றும் கந்தகம், ஆக்சிசன், நைட்ரசன் போன்ற பிற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. கிளைசின் தவிர, ஏனைய இயற்கையாகத் தோன்றும் அமினோ அமிலங்கள் அனைத்தும் படியா மூலக்கூறு எனப்படும் கைரல் தன்மையும் மற்றும் மாறாத எல் கட்டமைப்பிலும் காணப்படுகின்றன. சில பாக்டீரியா செல் சுவர்களில் பெப்டிதோகிளைகேன் எனப்படும் டி- அமினோஅமிலங்கள் காணப்படுகின்றன. உடலியல் pH மதிப்பு பொதுவாக 7 என இருக்குமிடங்களில் தனி அமினோ அமிலங்கள் மின்சுமையேற்ற வடிவங்களில் உள்ளன. இங்கு அமில கார்பாக்சில் தொகுதி (-COOH) புரோட்டானை இழக்கிறது. (-COO-) மற்றும் கார அமீன் தொகுதி (-NH2) புரோட்டானை ஏற்கிறது (-NH + 3).
ஒட்டுமொத்த முழு மூலக்கூறும் நிகரமாக நடுநிலையுடன் ஓர் இருமுனை அயனியாக உள்ளது கார அல்லது அமில பக்கச் சங்கிலியுடன் கூடிய அமினோ அமிலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். உதாரணமாக அசுபார்டிக் அமிலம். இதில் புரோட்டனேற்றம் பெற்ற ஓர் அமீனும், புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட இரண்டு கார்பாக்சில் தொகுதிகளும் உள்ளன. உடலியல் pH மதிப்பின் நிகர மின்சுமை −1 ஆகும்.
உயிரியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கின்ற கொழுப்பு அமிலங்களும், கொழுப்பு அமிலவழிப்பொருட்களும் மற்றொரு தொகுதியாக அமைந்துள்ள கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆகும். இவை நீண்ட ஐதரோகார்பன் சங்கிலிகளையும், கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியை ஒரு முனையிலும் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களின் செல் சவ்வும் முதன்மையாக பாசுப்போலிபிடு ஈரடுக்கால் ஆக்கப்பட்டுள்ளன. சில செல் சவ்வுகளில் கூடுதலாக சில் கூறுகள் இடம்பெற்றுள்ளன. இவை சில அமில கார வினைகளில் பங்கேற்கின்றன.
மனிதர்கள் மற்றும் பல விலங்குகளில் வயிற்றில் சுரக்கும் இரைப்பை நீரில் ஐதரோகுளோரிக் அமிலம் ஒரு பகுதியாக உள்ளது. புரதங்கள் மற்றும் பாலிசாக்கரைடுகளை நீராற்பகுப்பு செய்யவும், அதே போல் செயலற்ற-நொதி, பெப்சினோகென் முதலியவற்றை நொதியாகவும், பெப்சினாகவும் மாற்ற உதவுகிறது. சில உயிரினங்கள் பாதுகாப்பு க்கான அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, எறும்புகள் பார்மிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. .
பாலூட்டிகளின் மூச்சை ஒழுங்குபடுத்துவதில் அமில கார சமநிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. உணவில் சேமிக்கப்பட்டுள்ள இரசாயன ஆற்றலை வெளியிடும் செயல்பாடான உயிரணு செல்களின் சுவாசம் ஆக்சிஜன் வாயுவால் (O2) நிகழ்கிறது. இச்செயல்முறையில் கார்பனீராக்டைடு உடன் விளைபொருளாக உருவாகிறது. ஆக்சிசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்கள் நுரையீரலில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஆற்றல் தேவைகளுக்கு ஏற்ப உடலின் காற்றோட்ட விகிதம் சரிசெய்யப்படுகிறது. உதாரணமாக உழைப்பு காலங்களில், சேமிக்கப்பட்டுள்ள கார்போவைதரேட்டு, கொழுப்பு முதலியவற்றை உடல் வேகமாக சிதைத்து இரத்த ஓட்டத்திலிருந்து CO2 வாயுவை வெளியிடுகிறது. இரத்தம் போன்ற நீரிய கரைசல்களில் கார்பானிக் அமிலம், பைகார்பனேட்டு அயனி ஆகியனவற்றுடன் CO2 சமநிலையுடன் காணப்படுகிறது.
CO2 + H2O ⇌ H2CO3 ⇌ H+ + HCO−
உடலின் pH அளவு குறையும்போது வேகமாகவும் ஆழ்ந்தும் சுவாசித்து கார்பனீராக்சைடை வெளியேற்றவும், ஆக்சிசனை மீண்டும் அனுப்பவும் மூளையிலிருந்து செய்திகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழுப்பு விரும்பி கொழுமிய அசைல் சங்கிலிகளால் உட்புறம் ஆக்கப்பட்டுள்ளதால் செல் சவ்வுகளில் பொதுவாக முனைவு மூலக்கூறுகள் போன்றவை எதுவும் உட்புகமுடியாது. உயிரியல் ரீதியான மருந்து முகவர் உட்பட பல முக்கிய மூலக்கூறுகள் புரோட்டானேற்ற வடிவில் சவ்வைக் கடந்து செல்கின்றன. இந்த காரணத்தினாலேயே பல மருந்துகளில் அவற்றின் செயல்பாடுகள் இரத்தத்தில் கரையுமாறு உயர்த்தப்படுகின்றன.
பொதுவான அமிலங்கள்
கனிம அமிலங்கள்
ஐதரசன் ஆலைடுகள் மற்றும் அவற்றின் கரைசல்கள்: ஐதரோகுளோரிக் அமிலம் (HCl), ஐதரோபுளோரிக் அமிலம் (HF), ஐதரோபுரோமிக் அமிலம் (HBr), ஐதரோ அயோடிக் அமிலம் (HI).
ஆலசன் ஆக்சோ அமிலங்கள்: ஐப்போகுளோரசு அமிலம் (HClO), குளோரசு அமிலம் (HClO2), குளோரிக் அமிலம் (HClO3), பெர்குளோரிக் அமிலம் (HClO4), மற்றும் இதேவரிசையில் அமைந்த புரோமின், அயோடின் அமிலங்கள்.
ஐப்போபுளோரசு அமிலம் (HFO)
கந்தக அமிலம் (H2SO4)
புளோரோகந்தக அமிலம் (HSO3F)
நைட்ரிக் அமிலம் (HNO3)
பாசுபாரிக் அமிலம் (H3PO4)
புளோரோ ஆண்டிமோனிக் அமிலம் (HSbF6)
புளோரோபோரிக் அமிலம் (HBF4)
எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம் (HPF6)
குரோமிக் அமிலம் (H2CrO4)
போரிக் அமிலம் (H3BO3)
சல்போனிக் அமிலங்கள்
RS(=O)2–OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் சல்போனிக் அமிலங்களாகும். இங்கு R என்பது கரிம இயங்குறுப்பு ஆகும்.
மெத்தேன்சல்போனிக் அமிலம் (CH3SO3H)
எத்தேன்சல்போனிக் அமிலம் (CH3CH2SO3H)
பென்சீன்சல்போனிக் அமிலம் ( C6H5SO3H)
பாரா-தொலுயீன்சல்போனிக் அமிலம் ( CH3C6H4SO3H)
டிரைபுளோரோமெத்தேன்சல்போனிக் அமிலம்
(CF3SO3H)
பாலிசிடைரின் சல்போனிக் அமிலம் [CH2CH(C6H4)SO3H]n)
கார்பாக்சிலிக் அமிலங்கள்
R-C(O)OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள் எனப்படும். இங்கு R என்பது கரிம வேதியியல் இயங்குறுப்பு ஆகும். கார்பாக்சில் தொகுதியில் (-C(O)OH) ஒரு கார்பனைல் தொகுதியும் C=O, ஒரு ஐதராக்சில் தொகுதியும் ( O-H) உள்ளன.
அசிட்டிக் அமிலம் (CH3COOH)
சிட்ரிக் அமிலம் (C6H8O7)
பார்மிக் அமிலம் (HCOOH)
குளுக்கோனிக் அமிலம் HOCH2-(CHOH)4-COOH
லாக்டிக் அமிலம் (CH3-CHOH-COOH)
ஆக்சாலிக் அமிலம் (HOOC-COOH)
டார்டாரிக் அமிலம் (HOOC-CHOH-CHOH-COOH)
ஆலசனேற்ற கார்பாக்சிலிக் அமிலங்கள்
ஆல்பா நிலையில் ஆலசனேற்றம் அடைந்த அமிலங்கள் அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவை ஆகும்.
புளோரோ அசிட்டிக் அமிலம்
டிரைபுளோரோ அசிட்டிக் அமிலம்
குளோரோ அசிட்டிக் அமிலம்
டைகுளோரோ அசிட்டிக் அமிலம்
டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம்
வினைலொத்தகார்பாக்சிலிக் அமிலங்கள்
சாதாரணமான கார்பாக்சிலிக் அமிலங்கள் நேரடியாக ஒரு கார்பனைல் தொகுதியையும் ஒரு ஐதராக்சில் தொகுதியையும் கொண்டிருக்கும். ஆனால் வினைலொத்த கார்பாக்சிலிக் அமிலங்களில் ஒரு கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு இவற்றைப் பிரித்திருக்கும்.
அசுகார்பிக் அமிலம்.
கரிமக் காடிகள் (Organic Acids)
இவை கார்பன் அணுக்களைக் கொண்டவை. பானங்கள், உடலழகுப் பொருட்கள், டிட்டர்ச்செண்ட், சோப்புகள், உணவு, மருந்துகள், நெகிழிகள் படைக்க உதவுபவை.
சிட்ரிக் காடி, அசுகார்பிக் காடி (விட்டமின் C), அசிட்டைல் சாலிசிலிக் காடி (ஆஸ்பிரின்) மற்றும் அமினோக் காடிகள் போன்றவை பரவலாக அறிந்த கரிமக் காடிகள்.
நியூக்ளிக் அமிலங்கள்
டீயாக்சிரிபோநியூக்ளிக் அமிலம் (டி.என்.ஏ)
ரிபோநியூக்ளிக் அமிலம் (ஆர்.என்.ஏ)
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Science Aid: Acids and Bases
Curtipot
A summary of the Properties of Acids for the beginning chemistry student
The UN ECE Convention on Long-Range Transboundary Air Pollution
Chem 106 - Acidity Concepts
|
4625
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
சுவர்ப்பந்து
|
சுவர்ப்பந்து (Squash) என்பது ஒரு மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம். இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள். எதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு மேல் படுவதற்குள் எதிராளி பந்தை அடிக்க வேண்டும்.
ஆடும் முறை
எதிர் சுவற்றின் அடிப்பாகத்தில் 48செ.மீ. உயரத்திற்கு "போர்ட்" (Board) எனப்படும் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். அடிக்கும் போது எதிர் சுவற்றில் இந்த போர்டில் படாமல் அடிக்க வேண்டும். எதிர் சுவரில் முதலில் பட்ட பின் பக்கவாட்டுச் சுவர்களில் பந்து படலாம். இதன் மூலம் எதிராளியை திணறடிப்பார்கள். இவ்வாறு சுவற்றில் பட்டு நேரடியாகவோ அதன் பின் தரையில் ஒரு முறை பட்டோ வரும் பந்தை மற்ற ஆட்டக்காரர் எதிர் சுவற்றை நோக்கி அடிக்க வேண்டும்.
எதிராளி அடிப்பதற்குள் பந்து இரு முறை தரையில் பட்டால் பந்தை அடித்தவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். பந்தை அடித்தவர் அந்த முறை சர்வ் (serve) செய்தவராக இருந்தால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும், இல்லாவிட்டால் எதிராளிக்கு அடுத்த சர்வ் வழங்கப்படும்.
ஒன்பது புள்ளிகள் பெற்றால் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறலாம். ஒரு போட்டியின் வெற்றி / தோல்வி, மூன்று அல்லது ஐந்து ஆட்டங்களைக் கொண்டு முடிவு செய்யப்படும்.
பந்து
பந்து 40 – 41 மில்லிமீட்டர் விட்டம் உடையதாக இருக்கும். பந்தின் இயல்பு வேகத்தை அதன் மேல் உள்ள வண்ணப்புள்ளியைக் கொண்டு அறியலாம். புதிதாக ஆடுபவர்கள் வேகப் பந்துகளை பயன்படுத்துவார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆட்டங்களில் ஒளிரும் பந்துகளை பயன்படுத்துவதுண்டு.
விளையாட்டுகள்
|
4626
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
அடிபந்தாட்டம்
|
அடிப்பந்தாட்டம் (Baseball) என்பது துடுப்பு மற்றும் பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் குழு விளையாட்டு. விளையாடும் ஒவ்வொரு
அணியிலும் 09 வீரர்கள் இருப்பர். வட அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அடிப்பந்தாட்ட விளையாட்டு உருவானது. ஐக்கிய அமெரிக்காவின் (USA) தேசிய விளையாட்டான இது ஹாலிவுட் படங்களினாலும், தொலைக்காட்சியினாலும் மற்றவர்களுக்கு சற்றேனும் அறிமுகமானதாக இருக்கிறது.
ஆடுகளம்
பந்துவீச்சு மற்றும் துடுப்பாடும் இடம் அகப்புலம் என்பர். அது சற்று கூர் உருளை (கூம்பு) வடிவிலிருக்கும். பந்துவீசும் இடம், வீச்சுத் தட்டு என்பர். இதன் குறுக்களவு சுமார் 18' இருக்கும். இந்த வீச்சுத்தட்டை மையப்பகுதியாக கொண்டு, வைர வடிவிலான சதுரம் அமைந்திருக்கும். இந்த சதுரங்கத்தின் ஒரு மூலையில் துடுப்பாடப்படும், இதனை வீட்டுத் தட்டு என்பர். வீட்டுத் தட்டுக்கும், வீச்சுத் தட்டுக்கும் இடையே உள்ள சுமார் 60' தூரமிருக்கும். மற்ற மூலைகளை, வீட்டுத் தட்டிலிருந்து இடஞ்சுழி முறையே 1ம் அடித்தளம், 2ம் அடித்தளம் மற்றும் 3ம் அடித்தளம் என்பார்கள். வீட்டுத் தட்டின் இருபுரத்திலும் இடக்கை மற்றும் வலக்கை துடுப்பாளர்கள் நிற்பதற்கான செவ்வகங்கள் இருக்கும். வீட்டு தட்டிற்குப் பின் கேட்சர் சதுரம் அமைந்திருக்கும்.
வீட்டுத் தட்டிலிருந்து விரிந்து செல்லும் முக்கோணத்தின் இருபக்க கோடுகளை பிழைக் கோடுகள் என்பனர். அகப்புலத்திற்கு அப்பார்பட்டு, பிழை கோடுகளுக்குள்ளே இருக்கும் ஆடுகளத்தை புறப்புலம் என்பர். வீட்டுத் தட்டிலிருந்து புறப்புலத்தின் எல்லை, சுமார் 290' முதல் 400' வரை இருக்கும்.
எல்லாப் போட்டிகளும், ஏதாவது ஒரு அணியின் சொந்த ஊரிலிருக்கும் ஆடுகளத்தில் நடக்கும். புறப்புலத்தின் பரிமாணங்கள் நிலையானதாய் இல்லாததால், எல்லா ஆடுகளங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக திகழும்.
விதிமுறைகள்
ஒரு போட்டியில் இரு அணிகள் பங்குப்பெறும். ஒவ்வொரு அணியிலும் 9 வீரர்கள் அந்தப் போட்டியில் விளையாடுவார்கள். ஒரு போட்டியில் 9 ஆட்டங்கள் நடைபெறும், ஒரு ஆட்டத்திற்கு இரு அணிகளும் மாறி மாறி, மட்டையாடல் மற்றும் பந்துவீச்சில் ஈடுப்படும். சொந்த ஊரில் விளையாடும் அணி பெரும்பாலும் முதலில் பந்துவீச்சில் ஈடுப்படும்.இரு அணியின் மேலாளர்களும், இந்த போட்டியில் விளையாடும் தங்கள் அணியின் வீரர்களின் பட்டியிலை எதிர் அணியிடமும் நடுவர்களிடமும் தர வேண்டும். இந்தப் பட்டியலில் மாற்று வீரர்களின் பெயர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மட்டையாடுதல்
போட்டியின் ஆரம்பத்தில், மட்டையாடும் அணியிலிருந்து ஒரு வீரர் முதலில் ஆடுவார். பின்னர் வரும் ஆட்டங்களில், முந்தைய ஆட்டத்தில் எவர் கடைசியாக வெளியேற்றப்படுகிறாரோ, வரிசையில் அவருக்கு அடுத்து உள்ள வீரர் புதிய ஆட்டத்தில் மட்டையாட தொடங்குவார். உதாரணதிற்கு, முதல் ஆட்டத்தில் 4ம் வீரர் வெளியேறும் போது அந்த அணியின் மூன்று வீரர்களும் வெளியேறி விட்டால், அடுத்த ஆட்டத்தில் 5ம் வீரர் ஆரம்பிப்பார்.
எல்லா மட்டையாடும் வீரர்களும் மட்டையாடும் செவ்வகத்தில் நின்றுதான் ஆட வேண்டும். மட்டை கொண்டு அடிக்கும் போது, வீட்டுத் தட்டின் மேலையும் அடிக்கலாம், அதற்கும் பின்னரும் அடிக்கலாம்.
ஒவ்வொரு மட்டையாடும் வீரருக்கும், பந்தை அடிப்பதற்கு மூன்று நியாயமான வாய்ப்புகள் தரப்படும். மூன்று வாய்ப்புகளில் அடிக்க இயலவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார்.
ஒரு வேளை, பந்தை அடித்து விட்டால், அவர் கட்டாயமாக 1ம் அடித்தளத்தை நோக்கி ஓட வேண்டும். பந்தை அடுத்த அடித்தளத்திலுள்ள வீரரிடம் வீசும்முன் அந்த அடித்தளத்திலுள்ள தட்டை தொட்டு விட வேண்டும்.
ஒரு ஆட்டம் முடிவதற்குள் எல்லா அடித்தளங்களையும் ஓடிவிட்டு 'வீட்டுத் தட்டை' மீண்டும் வந்தடைந்தால், ஒரு 'ஓட்டமாக' கணக்கெடுத்துக்கப்படும்.
பந்துவீச்சு
வீச்சாளர், பந்துவீச தயாரானவுடன் ஆட்டம் தொடங்கும். அணியில் ஒருவர் பந்தை வீசுவார், அவரை வீச்சாளர் என்பர், வீச்சாளர் தட்டிலிருந்து மட்டுமே பந்தை வீச முடியும். வீச்சாளால் ஸ்டிரைக் ஜோன்க்குள்ளே மட்டுமே பந்துகளை வீச முடியும். இல்லையென்றால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
மற்றொருவர் வீசும் பந்தைப் பிடிப்பார். இவரை கேட்சர் என்பர். இவர் 'கேட்சர் சதுர'த்தில் உட்கார்ந்திருப்பார். இவர் பந்தை பிடிக்க தவறினால், துடுப்பாளர் அடுத்த அடித்தளத்திற்கு ஓடுவார்.
மற்ற வீரர்கள் பந்தை அடித்தப்பின் அதை பிடிப்பதற்காக ஆடுகளத்தில் தயாராக இருப்பர். மூன்று வீரர்கள் அடித்தளத்தின் அருகிலும், மற்ற வீரர்கள் 'புறப்புலத்திலும் இருப்பர். பிடித்த பந்தை ஏதாவது ஒரு அடித்தளத்திற்கு வீச வேண்டும். இந்த வீரர்கள், மட்டையில் பட்ட பந்து தரையை தொடும் முன் பிடித்தால், பந்தை அடித்த, எதிரணி வீரரை வெளியேற்றலாம்.
ஓட்டம் எடுக்கும் விதிமுறைகள்
ஒரு வீரர் எல்லா அடித்தட்டுகளையும் தாண்டிய பின்னர், வீட்டுத் தட்டிற்கு மறுபடியும் வந்து சேர்ந்தால் மட்டுமே, ஒரு ஓட்டமாக கணக்கெடுக்கப்படும்
வீச்சாளர் வீசும் பந்தை அடித்து விட்டு, ஒன்று அல்லது அதற்கு மேல் அடித்தட்டுகளை நொக்கி ஓடலாம். அவ்வாறு ஓடும் போது, அடித்தள தட்டைத் தொட வேண்டும். இவர்களை ஓட்டக்காரர்கள் என்பர்.
வீச்சாளர் 'ஸ்டிரைக் ஜோன்' அல்லாமல் மற்ற பகுதியில் நான்கு முறை ஒரே வீரருக்கு வீசினால், அந்த வீரர் இலவசமாக அடுத்த அடித்தளத்திற்கு செல்லலாம்.
கேட்சர் பந்தை பிடிக்க தவறும் தருணத்தில், மட்டையாடுபவர் மற்றும் ஓட்டக்காரர்கள் ஓடலாம். எத்தனை அடித்தட்டுகளுக்கு வேண்டுமானாலும் ஓடலாம், அது அந்த வீரரின் திறமையைப் பொருத்தது.
தங்கள் அணியின் வீரர் மட்டையாடும் போது, மற்ற அடித்தளங்களில் இருக்கும் ஓட்டக்காரர்கள், எப்போது வேண்டுமானாலும் (பந்தை அடித்தாலும், அடிக்கவில்லை என்றாலும்) ஓடலாம். இவ்வாறு அடுத்த அடித்தளத்தை வெற்றிகரமாக சென்றடைந்தால், அதனை 'திருடப்பட்ட அடித்தளம்' என்பர்.
வீச்சாளர் வீசிய பந்தை அடித்தப் பின், பந்து புறப்புல எல்லையை தாண்டி, தரையில் படாமல் சென்றால், அடித்த வீரர் ஒரு முழு ஓட்டத்தை ஓடலாம். இதனை வீட்டுக்கு ஓட்டம் என்பர். இந்த தருணத்தில் மற்ற அடித்தளங்களில் ஓட்டக்காரர்கள் இருந்தால் அவர்களும் முழு ஓட்டம் ஓடலாம். எல்லா அடித்தளங்களிலும் ஓட்டக்காரர்கள் இருக்கும் தருணத்தில் இவ்வாறு 'வீட்டுக்கு ஓட்டம்' அடித்தால் அதனை, கிராண்ட் சிலாம் என்பர். அப்போது மட்டையாடும் அணிக்கு 4 ஓட்டங்கள் கிடைக்கும்
வெளியேற்ற விதிமுறைகள்
ஒரு அணி பந்துவீசும் போது எதிரணியின் மூன்று வீரர்களை வெளியேற்றினால், அந்த ஆட்டத்தின் ஒரு பாதி முடிவடையும்
பிட்சர் வீசிய பந்துகள், 'ஸ்டிரைக் ஜோனி'ல் மூன்று முறை தாண்டிச் சென்று 'கேட்சர்' பிடித்தால், அதை எதிர்கொண்ட வீரர் வெளியேற்றப்படுவார்.
அவ்வாறு மூன்றாம் முறை வீசப்பட்ட பந்து மட்டையில் பட்டு பிழைக் கோடுகளுக்கு அப்பால் சென்றால், மட்டையாடுபவர் வெளியேற்றப்படுவார்.
பந்தை மட்டையால் இருமுறை அடித்தால், மட்டையாடுபவர் வெளியேற்றப்படுவார்
வீச்சாளர் வீசிய பந்தை அடிக்கும் போது, மட்டையிலிருந்து எழும்பி தரையில் படுமுன், எதிரணி வீரர்கள் பந்தை பிடித்தால், மட்டையாடுபவர் வெளியேற்றப்படுவார்.
ஓட்டக்காரர்கள், எப்போது வேண்டுமானாலும் அடுத்த அடித்தளத்தை நோக்கி ஓடலாம். அப்போது பிட்சர், அடித்தளத்தை நோக்கி பந்தை வீசி, அதை வேறொரு வீரர் பிடிக்கும் தருணத்தில், ஓட்டக்காரர் அடித்தளத்தின் தட்டை தொடவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார். இவ்வாறு பந்தை பிடிக்கும் வீரர் தட்டை காலால் தொட்டிருக்க வேண்டும். இவ்வாறு கேட்சரும் பிடித்த பந்தை, அடித்தளத்தில் இருக்கும் வீரரிடம் வீசலாம்.
ஓட்டக்காரர்கள் ஓடும் போது, எதிரணி வீரர் பந்தை கையில் வைத்துக் கொண்டு அவரை தொட்டால், அப்பொழுதும் அவர் வெளியேற்றப்படுவார்.
ஒரே பந்துவீச்சில் எத்தனை வீரர்களை வேண்டுமென்றாலும் வெளியேற்றலாம். ஒரே சமயத்தில், இருவரை வெளியேற்றினால், அதனை 'இரட்டை ஆட்டம்' என்பர்.
குறிக்கோள்
மட்டையாடும் அணி அதிக ஓட்டங்களை எடுக்க முற்படுவர். பந்துவீசும் அணி அதை தடுக்க முற்படுவர். இரு அணிகளுக்கும் 9 வாய்ப்புகள், மட்டையாடுவதிலும் பந்துவீச்சிலும் தரப்படும். இந்த விளையாட்டின் குறிக்கோள், 9 ஆட்டங்களின் முடிவில் எதிரணியை விட அதிக பட்ச ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும்.
புள்ளி விபரங்கள்
அடிபந்தாட்டத்தில் பல வகையான புள்ளி விபரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்
மட்டையாடுபவர் புள்ளி விபரங்கள்
மட்டையாடும் போது ஏற்படும் புள்ளி விபரங்கள் கீழ் காணுங்கள்
ஒற்றை ஆட்டம் - அனைத்து போட்டிகளிலும் சேர்த்து முதலாம் அடித்தளத்திற்கு சென்ற மொத்த எண்ணிக்கை
இரட்டை ஆட்டம் - இரண்டாம் அடித்தளத்திற்கு சென்ற மொத்த எண்ணிக்கை
மூன்று ஆட்டம் - மூன்றாம் அடித்தளத்திற்கு சென்ற மொத்த எண்ணிக்கை
கிராண்ட் சிலாம் - அனைத்து போட்டிகளிலும் சேர்த்து எடுத்த மொத்த கிராண்ட் சிலாம்கள்
வீட்டு ஒட்டங்கள் - முழு வீட்டு ஓட்டத்தின் கூட்டு எண்ணிக்கை
ஸ்டிரைக் வெளியேற்றம் - மூன்று முறை வாய்ப்பிலும் பந்தை அடிக்காமல் வெளியேறிய மொத்த எண்ணிக்கை
ஓட்டக்காரர்கள் புள்ளி விபரங்கள்
திருடிய ஒட்டங்கள் - ஆட்டத்தின் போது திருடிய அடித்தளங்களின் மொத்த எண்ணிக்கை
திருடிய வெளியேற்றம் - அவ்வாறு திருடும் போது வெளியேற்றப்பட்ட மொத்த எண்ணிக்கை
திருடிய அடித்தள சதவீதம் - திருடிய அடித்தளங்களும், திருடாத அடித்தளங்களும் உள்ளே சதவீதம்
பந்துவீச்சு புள்ளி விபரங்கள்
மட்டையாளர்கள் எண்ணிக்கை - பந்துவீசும் போது எதிர்கொண்ட மொத்த மட்டையாளர்களின் எண்ணிக்கை
முழு ஆட்டம் - ஒரு போட்டி முழுவதும் தாமே பந்துவீசுய, மொத்த போட்டிகளின் எண்ணிக்கை
ஆட்டங்கள் - பந்துவீசிய மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை
ஆரம்ப பந்துவீச்சு - போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீசிய போட்டிகளின் எண்ணிக்கை
ஓட்டமின்மை - தாம் பந்துவீசும் போது, எந்த ஒட்டங்களும் எடுக்காத போட்டிகளின் எண்ணிக்கை
தடுப்பாளர்களின் புள்ளி விபரங்கள்
ஆடிகளத்தில் பந்தை மட்டையாளர்கள் அடித்தப்பின், பந்தை பிடித்து அடித்தளத்திற்கு வீசி, எதிரணி வீரர்களை வெளியேற்றும் வீரர்களே, தடுப்பாளர்கள்.
உதவிகள் - வீரர்கள் பந்தை பிடித்து/மடக்கி வீசும் போது, அடித்தளத்தில் நின்று பந்தை பிடிப்பது, உதவியாகும். அத்தகைய உதவிகளின் மொத்த எண்ணிக்கை
இரட்டை ஆட்டம் - இரட்டை ஆட்டங்களின் மொத்த எண்ணிக்கை
ஆட்டங்கள் - ஒரே இடத்தில் ஆடிய மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை
உபகரணங்கள்
மட்டை உருட்டுக் கட்டை போன்ற வடிவில் அதிகபட்சமாக் 106செ.மீ (42") வரை நீளம் கொண்டதாக இருக்கும். பெரும்பாலான மட்டைகள் சுமார், 34 (86 செ.மீ) இருக்கும். அதன் குறுக்களவு பந்து படும் இடத்தில் 2.5 (6.4 செ.மீ) இருக்கும்
பந்து மையத்தில் கார்க் கொண்டு, அதனை சுற்றி நூல் புரி மற்றும் வெள்ளை மாட்டுத் தோல் கொண்டிருக்கும். இதனை சிவப்பு தையல்கள் மூலம் தைத்திருப்பனர். இதன் அளவு சுமார் நம் கை முட்டி அளவிலிருக்கும், அதாவது 9"(23 செ. மீ) குறுக்களவு கொண்டிருக்கும்.
களத்தில் இருப்பவர்கள் பந்தைப் பிடிப்பதற்காக ஒரு கரத்தில் பெரிய அளவு கையுறை அணிந்திருப்பார்கள். மேலெழும்பி வரும் பந்தை பிடிக்க வசதியாக, இந்தக் கையுறையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் வலை பின்னப் பட்டிருக்கும்.
மட்டையாளர்கள் தலைக்கவசமும், மட்டையாளருக்கு பின் நின்று பந்தை பிடிப்பவர் தலை, மார்பு, கால் முதலியவற்றிற்கு கவசமும் அணிந்திருப்பார்கள்.
மேற்கோள்கள்
மேலும் காண்க
காற்பந்தாட்டம்
டென்னிஸ்
துடுப்பாட்டம்
அடிப்பந்தாட்டம்
|
4627
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
கைப்பந்தாட்டம்
|
கைப்பந்தாட்டம் (volleyball) என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அனுப்பப்படும் பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, பந்து அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். கைப்பந்தாட்ட விளையாட்டிற்கென பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன . கைப்பந்தாட்டத்தை கையுந்து பந்தாட்டம் அல்லது வாலிபால் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு விளையாட்டாக கைப்பந்தாட்டம் 1964 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகிறது.
கைப்பந்தாட்டத்திற்காக வகுக்கப்பட்டுள்ள முழுமையான விதிகள் விரிவானவையாகும். ஆனால் ஆட்டம் எளிமையாக பின்வருமாறு விளையாடப்படுகிறது.
ஆட்டத்தைத் தொடங்குகின்ற அணியிலிருக்கும் ஒரு வீரர் அவர் பக்க ஆடுகளத்திற்கு வெளியே நின்று பந்தை கைகளால் அடித்து வலைக்கு மேலாக அடுத்த அணியினரின் ஆடுகளப் பகுதிக்கு அனுப்புகிறார். பந்தைப் பெறுகின்ற எதிரணியினர் பந்தை அவர்கள் பக்க ஆடுகளத்தின் தரையில் விழவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் அணியில் உள்ள மூன்று வீரர்கள் பந்தை மூன்று முறை தட்டுகிறார்கள். ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறைகள் பந்தைத் தட்டக்கூடாது என்ற விதி இங்கு பின்பற்றப்படுகிறது. எதிரணியினரால் அனுப்பப்படும் பந்தை பெறும் முதல் வீரர் கீழ்க்கையால் அல்லது தலைக்கு மேலேயே விரல்களால் பந்தைப் பெற்று பந்து வந்தவேகத்தைக் கட்டுப்படுத்தி இரண்டாவது வீரருக்கு அனுப்புகிறார். மூன்றாவது வீரர் பந்தை விசையுடன் அடித்து அனுப்புவதற்கு தோதுவாக இரண்டாவது வீரர் பந்தை தலைக்கு மேலே உயர்த்தி நிறுத்துகிறார். தாக்குதலுடன் அனுப்பப்பட்ட பந்தை எதிரணியினர் தங்கள் பகுதிக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர். அல்லது முதல் அணியினர் பந்தை அனுப்பியது போல இவர்களும் பந்தைப் பெற்று , தலைக்கு மேல் நிறுத்தி, விசையுடன் அடித்து விளையாட்டைத் தொடர்கின்றனர். எதிரணியினரின் ஆடுகளத்தில் பந்து தரையைத் தொடும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியும்போது தவறு செய்தாலும், வலையைத் தொட்டுவிடுதல் போன்ற மற்ற தவறுகள் இழைத்தாலும் எதிர் அணிக்கு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியப்பட்ட பந்தை திரும்ப எதிர் அணிக்கு திருப்ப முடியாமல் போனாலும் எதிர் அணிக்குப் புள்ளிவழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 25 புள்ளிகளை எந்த அணியினர் முதலில் ஈட்டுகின்றனரோ அந்த அணி வெற்றி பெற்ற அணியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ஆடுகளத்திற்கு வெளியே இருந்து ஓரணியின் வீரரால் அடித்தெறியப்படும் பந்து, இரண்டு அணி வீரர்களாலும் மூன்று மூன்று தட்டல்களில் திருப்பி அனுப்பப்படும் தொடர் நிகழ்வு ராலி எனப்படும். ஓர் அணியின் ஆடுகளப்பகுதியில் பந்து தரையைத் தொடும்வரை, அல்லது மூன்று தட்டல்களால் அடுத்த பகுதிக்கு பந்தை அனுப்பமுடியாத நிலை தோன்றும் வரை இந்த ராலி தொடரும். அடித்தெறியும் அணி ராலியை வெற்றி பெற்று புள்ளிகள் ஈட்டினால் அந்த அணிக்கு மீண்டும் அடித்தெறியும் வாய்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் ராலி தொடரும்.
பொதுவாக கைப்பந்தாட்ட விளையாட்டின் போது பின்வரும் தவறுகள் வீரரகளால் இழைக்கப்படுகின்றன.
•எதிரணியினரின் ஆடுகளத்திற்கு வெளியே தரையைத் தொடுமாறு பந்தை அடித்து விடுதல்
•எதிரணியினரின் ஆடுகளத்திற்கு செல்ல முடியாதவாறு பந்தை வலையில் அடித்து விடுதல்
•பந்தை கைகளால் பிடித்து விடுதல்
•உந்தி தள்ளுவதற்குப் பதிலாக பந்தை பிடித்து எறிந்து விடுதல்
•ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை தட்டிவிடுதல்
•ஒரே அணியினர் நான்கு முறை பந்தை தட்டி அனுப்புதல்
•ராலியின்போது அணி வீரர்கள் வலையை கைகளால் தொட்டு விடுதல்
•தொடக்கத்தில் அடித்தெறியும் போது வீரரின் பாதம் ஆடுகளத்தின் எல்லையை தாண்டி விடுதல் போன்றவை தவறுகளாகக் கருதப்படுகின்றன.
பொதுவாக கைகளால் ஆடப்படும் இவ்விளையாட்டில் வீரர்களின் பிற உடல் பாகங்களில் பந்து படுவதும் தவறாகக் கருதப்படுகிறது.
கைப்பந்தாட்ட விளையாட்டில் பல்வேறு தேர்ந்த நுணுக்கங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. வலைக்கு மேல் பந்தை நிறுத்தி மேலெழும்பி தாக்கி அடித்தல், மேலெழும்பி வலைக்கு மேலேயே பந்தை தடுத்து திருப்பி அனுப்புதல், அடுத்தவருக்கு பந்தைக் கடத்துதல், தாக்குவதற்கு தோதாக பந்தை தலைக்கு மேலே உயர்த்திக் கொடுத்தல், தனிச்சிறப்பு ஆட்டக்காரருக்கு ஏற்றபடி இடம் அமைத்துக் கொடுத்தல், போன்ற ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்றன.
வரலாறு
தோற்றமும் வளர்ச்சியும்
1895 ஆம் ஆண்டின் மழைக்காலம் ஒன்றில் அமெரிக்காவின் மாசாச்சுசெட்சு மாநிலத்தின் ஓலியோக் நகரில் உடற்கல்வி இயக்குநராக இருந்த வில்லியம் கி. மார்கன் என்பவர் மிண்டோநெட்டி என்ற புதிய விளையாட்டை உருவாக்கினார். இப்பெயர் பேட்மிண்டன் என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உள்ளரங்க விளையாட்டாகவும் பலர் விளையாடும் விளையாட்டாகவும் இது உருவாக்கப்பட்டது. எறிபந்தாட்டம் மற்றும் டென்னிசு பந்தாட்டம் ஆகிய ஆட்டங்களின் சில கூறுகள் இவ்விளையாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கூடைப்பந்து என்ற ஒரு புதிய விளையாட்டும் இந்நகருக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த சிபிரிங்பீல்டு நகரில் உருவாக்கப்பட்டிருந்தது.
நடுத்தர வயது ஆட்டக்காரர்களை மையமாக வைத்து இவ்விளையாட்டு உருவாக்கப்பட்டது. கூடைப்பந்து விளையாட்டைக் காட்டிலும் மென்மையான விளையாட்டாக இது கருதப்பட்டது. சிறிதளவு தடகள முயற்சிகள் தேவைப்படும் இவ்விளையாட்டு உள்ளரங்கு விளையாட்டாகவே உருவாக்கப்பட்டது.
கைப்பந்தாட்டத்திற்கான தொடக்கக்கால விதிகளை வில்லியம் கி. மார்கன் உருவாக்கி எழுதினார்.
குறுக்கே கட்டப்படும் வலையின் உயரம் 6 அடி உயரம் எனவும் ஆடுகளத்தின் நீளம் 50 அடியாகவும் அகலம் 25 அடியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விதி செய்தார். ஓர் ஆட்டம் என்பது ஒன்பது இன்னிங்சு கொண்டதாக இருந்தது. ஒரு இன்னிங்சிற்கு ஒவ்வொரு அணிக்கும் மூன்று அடித்தெறிதல் அனுமதிக்கப்பட்டது. எதிரணியின் பக்கத்திற்கு பந்தை திருப்பி அனுப்புவதற்காக பந்தை தட்டும் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை. அடித்தெறியும் போது தவறிழைக்கப்பட்டால் மறு வாய்ப்பு வழங்கப்பட்டது. பந்தை வலையில் அடிப்பது தவறாகக் கருதப்பட்டது. முதல்முறையாக அடித்தெறியும் போது தவறிழைத்தல் தவிர பின்னர் நிகழும் தவறுகளுக்கு புள்ளி இழப்பும் பக்க மாற்றமும் கொடுக்கப்பட்டது.
1896 ஆம் ஆண்டு சிபிரிங் பீல்டு கல்லூரியில் இவ்விளையாட்டு ஒரு காட்சிப் போட்டியாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு வலைக்கு மேல் பந்து அங்குமிங்குமாக அனுப்ப்படுவதைக் கண்ட ஆல்பிரட் ஆல்சிடட்டு என்பவர் இவ்விளையாட்டை வாலிபால் என்று அழைத்தார். அன்றிலிருந்து இவ்விளையாட்டின் பெயர் வாலிபால் என்றானது. விதிகள் சிறிதளவு மாற்றப்பட்டன. பின்னர் இவ்விளையாட்டு பல்வேறு நாடுகளுக்கும் பரவியது
.
வளர்ச்சியும் சீராக்கமும்
இவ்விலையாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தொடர்பான அறிக்கைகள் விவாதத்திற்கு உட்பட்டவையாக உள்ளன. 1986 ஆம் ஆண்டில் அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தயாரிக்கப்பட்டது என்று சிலரும் 1900 ஆம் ஆண்டில்தான் அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தயாரிக்கப்பட்டது என்று சிலரும் வாதிடுகிறார்கள் . காலப்போக்கில் கைப்பந்தாட்டத்திற்கான விதிகளில் மாற்றங்கள் தோன்றின. வெற்றிக்குப் புள்ளிகளை ஈட்ட வேண்டும் என்ற விதி 1900 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. 21 புள்ளிகள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற விதி 1917 ஆம் ஆண்டு 15 புள்ளிகள் எடுத்தால் வெற்றி என்று மாற்றப்பட்டது. ஒரு குழுவிற்கு ஆறு ஆட்டக்காரர்கள் விளையாடலாம் என்ற விதி 2016 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஒரு குழு பந்தை மூன்று முறை தட்டி விளையாடலாம் என்ற விதி 1922 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 16000 கைப்பந்துகள் அந்நாட்டுப் படையினருக்கும் கூட்டணிப் படையினருக்கும் வழங்கப்பட்டன. இதனால் பல புதிய நாடுகளுக்கு இவ்விளையாட்டு பரவியது .
1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைப்பந்து விளையாடத் தொடங்கிய பிறகு கனடாவில்தான் இவ்விளையாட்டு முதன்முதலில் விளையாடப்பட்டது. சர்வதேச பைப்பந்து கூட்டமைப்பு 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, 1949 இல் ஆண்களுக்கான முதல் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான உலகக் கோப்பைப் போட்டி 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இந்த விளையாட்டானது பிரேசிலில் பிரபலமாக விளையாடப்படுகிறது. ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகள், உருசியா, சீனா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளிலும் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது.
வழக்கமாக விளையாடப்படும் கைபந்தாட்டம் சில மாறுதல்களுடன் கடற்கரை கைப்பந்து என்ற பெயரில் ஆடப்படுகிறது. மணலில் விளையாடப்படும் இவ்விளையாட்டில் ஒரு அணிக்கு இரண்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கைப்பந்து விளையாட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் கைப்பந்து போட்டிகள் இடம்பெறுகின்றன.
1920 களின் பிற்பகுதியில் நிர்வாண உடையில் இயங்கும் இயற்கைவாதிகள் இவ்விளையாட்டை ஏற்றுக் கொண்டு விளையாடத் தொடங்கினர். அவர்களின் சங்கம் மற்றும் கழக அமைப்புகளில் கைப்பந்து விளையாட்டுத் திடல் உருவாக்கப்பட்டது . 1960 களில் இத்தகைய அமைப்பின் அனைத்து சங்கங்களிலும் கைப்பந்து திடல் கண்டிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது .
ஆடுகளம்
சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Fédération Internationale de Volleyball – FIVB
USA Volleyball
AVP
American Volleyball Coaches Association
அணி விளையாட்டுகள்
|
4630
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
மேசைப்பந்தாட்டம்
|
19ம் நூற்றாண்டின் இறுதியில் பிங்-பாங் என்று அறியப்பட்ட மேசைப்பந்தாட்டம் (table tennis, டேபிள் டென்னிஸ்) தற்போது உலகம் முழுதும் பரவி ஏற்றுக்கொள்ளப்பட்டுளது. 1988ல் ஒலிம்பிக்சில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
ஒரு மேசையின் இருபுறமும் நின்று, சிறிய கைப்பிடியுள்ள வட்டமான மட்டையைக் கொண்டு மிக இலேசாக தக்கைபோல் உள்ள (பிளாஸ்டிக்) பந்தை எதிராளி தடுத்து அடிக்கமுடியாமல் முன்னும் பின்னுமாய் அடித்து ஆடும் விளையாட்டு. சரியாக மேசையின் நடுவில், உயரம் குறைவாக, சிறிய வலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ஆடுநர் பந்தை இவ்வலையைத் தாண்டி எதிராளியின் மேசைப்பகுதியில் விழுமாறு அடித்தல் வேண்டும். எதிராளியின் மேசையின் சரியான பகுதியில் பட்டு குதிக்கும் பந்தை, எதிராளி அவருக்கு எதிர்ப்புற மேசையில் படுமாறு திருப்பி அடிக்கத் தவறினால் அந்த பந்துக்கான புள்ளிக் கணக்கை இழப்பார். இப்படி எதிரெதிராக பந்தை இருவர் தனக்கு எதிராக இருப்பவர் பக்கம் பந்தை அடிக்கும் பொழுது பந்து ஒருமுறைதான் வேறு எங்கும் படாமல் எதிராளி மேசைமீது விழுந்து குதிக்க வேண்டும். எதிராளி மேசையின் மீது இருமுறையோ அதற்கு மேலோ குதிக்க விட்டுவிட்டால் எதிராளி புள்ளியிழப்பார். அதாவது யாரால் முறையாக விழுந்த பந்தை எதிர்ப்புற மேசையில் விழுமாறு திருப்பி அடிக்க முடியவில்லையோ அவர் புள்ளியிழப்பார். வலையில் தொட்டு எதிராளி மேசைப்புறம் விழுந்தாலும் அப்பந்து முறையாக விழுந்த பந்தாகும். ஒரு புதிய புள்ளிக்கான ஆட்டத்துவக்கத்தில் மட்டும் முதலாகப் பந்தை எதிராளிப்பக்கம் அடிப்பவர், தன்பகுதி் மேசை மீது பட்டுப் பின்னர் எதிராளியின் மேசை மீது விழுமாறும், நீளவாட்டில் மேசைமீது உள்ள நடுக்கோட்டுக்கு எதிராளியின் மேசையின் மாற்றுப்புறதில் (இட வலமாக அல்லது வல-இடமாக) பந்து விழுமாறும் அடிக்க வேண்டும். இல்லாவிடில், மீண்டும் ஒரேயொரு முறை முதல்பந்தடிக்கலாம். இருமுறையும் தவறு நிகழ்ந்தால் முதற்பந்தடிப்பவர் புள்ளியிழப்பார்.
மேசை
மேசை பரப்பு பச்சை அல்லது நீல நிறத்திலும், கோடுகள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேசை நடுவே நீளவாக்கில் போடப்பட்ட வெள்ளைக் கோடு இருவர் ஆட்டத்திற்கானது. ஒரு புள்ளிக்கான முதற்பந்து அடிப்பவர் மாற்றுப்புறத்தில் விழுமாறு அடிப்பதற்கும் பயன்படுவது.
ஒரு ஆட்டத்திற்கு 21 புள்ளிகள் (Points). வெற்றி பெறுபவர், மற்றவரை விட இரு புள்ளிகள் கூடுதல் பெற வேண்டும். ஆண்கள் போட்டிகளில் 5 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், பெண்கள் போட்டிகளில் 3 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், வெற்றியாளர் என அறிவிக்கப்படும்.
உலகக் கோப்பை
ஆண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, ஸ்வாதிலிங் கோப்பை (Swathyling Cup) எனவும், பெண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, கார்பில்லோன் கோப்பை (Corbillon Cup) எனவும் வழங்கப்படும்.
மட்டை
மட்டையின் பரப்பில் சொரசொரப்பான 2மி.மீ உருண்டைகள் கொண்ட இறப்பர் தாள் ஒட்டப்பட்டிருக்கும். புள்ளி துவக்கத்தில் சர்வ் செய்யும் போது பந்தை கையிலிருந்து உயரே தூக்கிப் போட்டு மட்டையால் நமது மேசை பகுதியில் முதலில் பட்டு எதிராளி பகுதிக்கு செல்லுமாறு அடிக்க வேண்டும்.
இவற்றையும் பார்க்கவும்
சரத் கமல் - இந்திய ஆண்கள் அணி மேசைப்பந்தாட்ட வீரர்
ஷாமினி குமரேசன் - - இந்திய பெண்கள் அணி மேசைப்பந்தாட்ட வீராங்கனை
விளையாட்டுகள்
|
4631
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
குழிப்பந்தாட்டம்
|
குழிப்பந்தாட்டம் அல்லது கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த அடிகோல் (கிளப்) கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஒரு ஆட்டமைதானம் (கோர்சு). இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர். ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார் அல்லது சமம் மதிப்பு உண்டு. இது 3 இலிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகளுள்ள ஒரு ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது குறை 3 ஆகும்.
கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வணிக உலகில் மிக மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.
இந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது. தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்.
வரலாறு
நவீன குழிப்பந்தாட்டமானது 15-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஸ்காட்லாந்தில் தோன்றியது. ஆனால் இதன் தொடக்க கால வரலாறானது தற்போது வரை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய இயலாத. விவாதத்திற்குரிய ஒன்றாகவும் உள்ளது. சில வரலாற்று ஆசிரியர்கள் உரோம் நாட்டில் இருந்த பகானிகா எனும் விளையாட்டின் மறுவடிவமாக உள்ளதாகக் கருதினர். ஏனெனில் இந்த விளையாட்டிலும் குனிந்துகொண்டு ஒரு குச்சியின் மூலமாக தோல்பந்தினை அடிப்பர்.கிமு 1-ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு உலகின் பெரும் பகுதிகளை வென்றதால் இந்த விளையாட்டானது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் வென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. மற்ற சிலர் ச்சூயிவன் என்றும் இதனை கருதினர். ("chui" என்றால் அடித்தல் மற்றும் "wan" என்றால் சிறிய பந்து ) சீன மூதாதையர்கள் சிலர் இந்த விளையாட்டினை 8-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை விளையாடினர்.
குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்பு
குழிப்பந்தாட்டத்தின் தொடக்கப் பகுதி
நீரோடைகள் அல்லது எல்லைக் கோடுகள்
கடினமான பகுதி
வரம்புகள்
குண்டு காப்பரண்
நீரோடைகள் அல்லது நீர் இடையூறு
சமதளப் பரப்பு
பசுமைப் பரப்பு
குழிப்பந்தாட்டத்தின் கொடியின் கீழ்ப் பகுதி
குழி
பார்(PAR)
குழிப்பந்தாட்டத்தில் பார் (PAR) என்பது பந்தானது குழிக்குள் செல்வதற்காக அடிக்கப்படும் எண்ணிக்கைகளைக் குறிக்கும்.
பெரும்பாலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் -3, -4, மற்றும் -5 குழிகள் கொண்டதாக இருக்கும். சில -6 கொண்டதாக இருக்கும். யப்பானில் -7 குழிகள் கொண்டதாக மட்டுமே உள்ளது. வழக்கமாக தொடக்கப் பகுதியிலிருந்து இருக்கும் குழிகளின் தூரங்கள் பின்வருமாறு
ஆண்கள்
குழி 3 – 250 கெஜம் (230 மீ) அல்லது அதற்கும் கீழ்
குழி 4 – 251-450 கெஜம் (230- 411 மீ)
குழி 5 – 451- 690 கெஜம் (412- 631 மீ)
குழி 6 – 691 கெஜம் (632 மீ) அல்லது அதற்கும் மேல்
பெண்கள்
குழி 3 – 210 கெஜம் (190மீ) அல்லது அதற்கும் கீழ்
குழி 4 – 211-400 கெஜம் (193-366 மீ)
குழி 5 – 401-575 கெஜம் (367-526 மீ)
குழி 6 – 575 கெஜம் (526 மீ) அல்லது அதற்கும் மேல்
விதிமுறைகள்
குழிப்பந்தாட்டம் விளையாடுவதெற்கென சில பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை மீறுபவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்படும். அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிக்கோ நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளின் குழிப்பந்தாட்ட விதிமுறைகளை வகுப்பதும், நிர்வகிப்பது போன்றவைகளை ஆர் அண்ட் ஏ R&A அமைப்பின் பணியாகும். அந்த இரு நாடுகளுக்கும் யு எஸ் ஜி ஏ (USGA) இந்த பணியினை மேற்கொள்ளும்.
வரலாறு
குழிப்பந்தாட்டத்திற்கான ஒரு பொதுவான விதிமுறைகள் வருவதற்கு முன்னர் குழிப்பந்தாட்டக் கழகங்கள் தங்களுக்கென தாங்களே சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையான சில விதிகளை தளர்வும் செய்தனர். உ.ம்: இலைகள் ,சிறிய கற்கள். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனித.ஆண்ட்ரூஸ் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் R&A என்று அழைக்கப்பட்டது) லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) ஆகியவை தாங்களாகவே இணைத்துக் கொண்டன.
மார்ச் 7 , 1744 இல் லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) குழிப்பந்தாட்டம் விளையாடுவதில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ற தலைப்பில் பதின்மூன்று விதிகள் காணப்பட்டன. இதனுடைய கையெழுத்துப் பிரதி இசுக்கொட்லாந்தின் தேசிய நூலகத்தில் உள்ளது.
குழிப்பந்தாட்ட சங்கத்தின் குழிகளின் நீளத்திற்கு தகுந்தாற்போல பற்றியினை(tee) வைக்க வேண்டும்.
பற்றியானது (tee) மைதானத்தின் மீது இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.
பற்றியில் வைக்கப்பட்ட பந்தினை மாற்றம் செய்தல் கூடாது.
மைதானத்தில் இருக்கக்கூடிய கற்கள் போன்றவற்றை நீக்கம் செய்தல்கூடாது.
மட்டைகள்
புட்டர் (Putter) என்று மூன்று வகை மட்டைகள் உபயோகப்படுத்தப்படும். இவற்றிலும் மட்டை நுனியின் தடிமன் மற்றும் கணம் பல வேறுபாடுகள் உண்டு. ஆட்டவீரர்கள் ஓர் ஆட்டத்தில் 14 மட்டைகள் வரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவர்.
மரம் - இவ்வகை மட்டைகளைப் பயன்படுத்தி முதல் சில த்ட்டுகளை அல்லது அடிகளை ஆடுவார்கள். இது பந்தை நீண்ட தொலைவு அடிக்க பயன்படுத்தப்படும். சாதாரணமாக 220 மீட்டர் முதல் 180 மீட்டர் வரை பந்தை செலுத்த இதனைப் பயன்படுத்தலாம்.
இரும்பு - இது 1 முதல் 10 வரை எண் கொண்ட வேறுபட்ட எடை கொண்டது. 175 மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை (Putting Green) வரை பந்தைச் செலுத்த இரும்பு அடிகோல்களைப் (கிளப்-களை) பயன்படுத்தலாம்.
புட்டர் - குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் இவ்வகை மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாக தட்டி பந்தை குழியை நோக்கி உருட்டுவார்கள்.
கோல்ஃப் மட்டை வீச்சு (Swing)
பந்தை நீண்ட தொலைவு செல்லுமாறு அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய ஆணியைத் தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது ஆணியிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள்.
புள்ளிகள்
குழிப்பந்தாட்டத்தில் வழங்கப்படும் புள்ளிகளானது குழிக்குள் பந்தினை செலுத்த ஒவ்வொரு வீரர்கள் எடுத்துக் கொள்ளும் பாரினைப் (par) பொறுத்து வழங்கப்படும். வீரர் ஒருவர் தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே பந்தினை குழிக்குள் செலுத்தினால் அது ஏஸ் எனப்படும். இதே போன்று மற்ற புள்ளிகளுக்கும் பெயர்கள் உண்டு.
விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொற்கள்
பார் (par)- காட்டாக 4 அடிக்குள் பந்தை குழிக்குள் தள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பெற்று இருந்தால், விளையாடுபவர் 4 அடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டால் அதற்கு பார் என்று பெயர்.
பேர்டி (birdie) - விளையாடுபவர் 3 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு பேர்டி என்று பெயர். அதாவது பார் என்பதற்கு ஓர் அடி குறைவாக தேவைப்படுமாறு அடித்தால்.
ஈகிள் (eagle) - விளையாடுபவர் 2 தட்டுகள் அல்லது அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு ஈகிள் என்று பெயர். அதாவது பார் என்பதற்கு இரண்டு அடிகள் குறைவாக எடுத்தல். பார்-உக்கு மூன்று அடி குறைவாக எடுத்துக்கொண்டால் அதை இரட்டை ஈகிள் (double eagle) என்பர்.
போகி (boggy)- விளையாடுபவர் 5 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு போகி என்று பெயர். அதாவது பார்-உக்கு அதிகமாக ஓர் அடி எடுத்தால். பார்-உக்கு அதிகமாக இரண்டு அடிகள் எடுத்தால் அதை இரட்டை போகி (double boggy) என்பர்.
புகழ்
2005 ஆம் ஆண்டில் கோல்ஃப் டைஜஸ்ட் -ன் அறிக்கையின் படி எந்தெந்த நாடுகளில் அதிகப்படியான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன என் கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு இசுக்கெட்லாந்து, நியூசிலாந்து, ஆத்திரேலியா, அயர்லாந்து, கனடா, வேல்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து.
மற்ற பிராந்தியங்களிலும் குழிப்பந்தாட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவில் பயிற்சிவகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு ஒரு உதாரணம் ஆகும். 1984 ஆம் ஆண்டில் முதன் முதலாக சீனாவில் குழிப்பந்தாட்ட பய்யிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் முடிவில் 600 பேர் இருந்தனர். 21-ஆம் நூற்றாண்டில் சீனாவில் குழிப்பந்தாட்டம் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனால் 2004 - 2009 ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட கால கட்டத்தில் இந்த எண்ணிக்க்கையானது மூன்று மடங்கு அதிகரித்தது. பின்பு மறைமுகமாக இந்த தடையினை சீன அரசாங்கம் தடைகளை விலக்கிக் கொண்டது.
சர்வதேச நிகழ்வுகள்
ஆசிய விளையாட்டுகளில் குழிப்பந்தாட்டம்
பான் அமெரிக்கன் விளையாட்டில் குழிப்பந்தாட்டம்
கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்களில்
ரைடர் கோப்பை
பிரசிடன்ஸ் கோப்பை
வாக்கர் கோப்பை
கர்டிஸ் கோப்பை
சோல்ஹீம் கோப்பை
சீவ் கோப்பை
யூரேசியா கோப்பை
உலக அளவிலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
டைகர் வூட்ஸ்
விஜய் சிங்
மேற்கோள்கள்
குழிப்பந்தாட்டம்
|
4636
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
|
மின்காந்தக் கதிர்வீச்சு
|
இயற்பியலில், மின்காந்தக் கதிர்வீச்சு (electromagnetic radiation) என்பது மின்காந்த புலத்தின் அலைகளை (அல்லது அவற்றின் குவாண்டம், அல்லது ஒளியணுக்களைக்) குறிக்கிறது. இவை மின்காந்தக் கதிரியக்க ஆற்றலாக வெறும் வெளியினூடாகப் பயணிக்கக் கூடியவை ஆகும். மின்காந்தக் கதிர்வீச்சு வானொலி அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர், (காணக்கூடிய) ஒளி, புற ஊதாக் கதிர், எக்சு-, காம்மா கதிர்கள் ஆகியவைகளாக இருக்கலாம்.
அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஒளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள். இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை.
அலைகள் பற்றி அடிப்படை கணித விபரிப்பு
அலைகள் பற்றி எண்ணுகையில் கடல் அலைதான் கண் முன் நிற்கும். கடல் அலையை எளிமைப்படுத்தினால் படத்தில் உள்ளது போன்ற sine wave வெளிப்படும். இவ் வரைபடத்தில் சில தகவல்கள் குறிப்பிடதக்கவை. அவையானவை:
1. அதிர்வின் வீச்சு (amplitude)
2. முகடு (crest)
3. அகடு (trough)
4. அலைநீளம் (wavelength)
மேலும், கிடைகோடு காலத்தையும் நிகழ்கோடு அதிர்வின் வீச்சையும் குறித்து நிற்பதையும் காணலாம். இச் சமயத்தில் ஒரு முக்கிய சமன் பாட்டையையும் குறித்து கொள்ளுதல் வேண்டும்.
அலை வேகம் = அதிர்வெண் X அலை நீளம்
அதிர்வெண், அலை நீளம், வீச்சு ஆகிய தகவல்களே அலை பற்றிய ஆழமான ஆய்வுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படை. கணித ரீதியாக அலையை பின்வருமாறு விபரிக்கலாம்.
உச்ச வீச்சு
அலையின் வடிவத்தை விபரிக்கும் சார்பு (function) பரிமான திசை
அலையின் கோண அதிர்வெண்
நேரம்
பரப்புகை மாறிலி-propagation constant
மின்காந்த அலை
அலைகளின் முக்கியத்துவம், வகைகள், அடிப்படை கூறுகள், கணித ரீதியிலான விபரிப்பு ஆகியவற்றை மேலே ஆராயப்பட்டது. இனி மின்காந்த அலை என்றால் என்ன என ஆராயப்படும்.
மின்காந்த அலை மூலம் மின்காந்த சக்தி பயணிக்கின்றது. பொதுவாக மின்காந்த சக்தியை மின் சக்தி என்றே கூறுவர். வீச்சு, அதிர்வு எண் மாற்றுவதன் மூலம் மின்காந்த அலைமூலம் தகவலையும் பரிமாறலாம். அதாவது தகவல் மின்காந்த அலையின் வடிவத்தில் உள்ளீடு செய்யப்பட்டு பரிமாறப்படும்.
பொதுவாக அலையை விபரிப்பது போலவே, மின்காந்த அலையையும் கணித சார்புகள் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த அலையின் வெளி அல்லது இடநிலை (space or position), காலம் (time) ஆகியவற்றில் தங்கி இருக்கின்றது.
பொதுவான மின்காந்த அலையின் சார்பு: , இவ் அலை எத்திசையிலும் செல்லலாம். ஆயினும், நாம் ஒரு பரிமாணத்தில் ஆராய்வதே இலகு, அப்படிப்பட்ட அலையின் சார்பு: .
இயற்கையில் மின்காந்த அலை என்ற ஒன்றே உண்டு. மின் அலை மற்றும் காந்த அலை மின்காந்த அலையின் கூறுகளே (components). மின் மற்றும் காந்தப் புலங்கள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைவதை பின்வரும் மக்ஸ் வெல் சமன்பாடுகள் விளக்குகின்றன.
மாக்ஸ்வெல் சமன்பாடுகள்
காந்த சத்தியிலிருந்து மின் சக்தி:
மின் சக்தியிலிருந்து காந்த சக்தி:
மேலும் இரு சமன்பாடுகளை குறித்துக்கொள்க:
- மின் பாய அடர்த்தி - Electric Flux Density (C/m2)
- மின் புலச் செறிவு - Electric Field Intensity (V/C)
- மின் பாயம் - Electic Flux (C)
- காந்த பாய அடர்த்தி - Magnetic Flux Density (Wb/m2)
- காந்த புலச் செறிவு - Magnetic Field Density (A/m)
- காந்த பாயம் - Magnetic Flux (T)
- கனவளவு மின்னோட்ட அடர்த்தி - Volume Current Density (A/m2)
- மின்னூட்ட அடர்த்தி - Electric Charge Density (C/m3)
நேரம்
சிறிய மாற்றம்
மேலே தரப்பட்ட நான்கு சமன்பாடுகளுமே மின் காந்த இயல்புகளை விபரிக்கும் முக்கிய நான்கு மாக்ஸ்வெல் சமன்பாடுகள் ஆகும். இச் சமன்பாடுகளின் அடிப்படையிலேயே மின் காந்த தொழில் நுட்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இயல்பியலின் பெரும் பகுதி இந் நான்கு சமன்பாடுகளின் விளக்கமே எனலாம்.
(மேலே உள்ள சமன்பாடுகளை எப்படி விளக்கி கொள்வது? இதற்கு ஆழமான கணித அறிவும், தரப்பட்டுள்ள கருதுகோள்களின் பரிச்சியமும் அவசியம். எனவே சில அடிப்படை கணித அறிவை நினைவு மீட்டிகொள்ளுதல் வேண்டும்.
டெல் இயக்கி என்பர்.
இவ் இயக்கி ஒரு புலம் எப்படி மாறுகின்றது என்பதை குறிக்கும். )
மின்காந்த புலம் இடத்திலும் காலத்திலும் தங்கியிருக்கும் ஒரு காவி புலம் (vector field) ஆகும். மின்காந்த புலம் எப்படி உருவாகுகின்றது அல்லது உருவாக்கலாம் என்பதை நோக்குக. எங்கு அசையும் மின்னூட்டுங்கள் (moving charges) இருக்கின்றதோ அங்கெல்லாம் மின்காந்த புலம் இருக்கும். மின்னூட்டம் அசைவின்றி (static/with out motion) இருக்குமானால் மின் புலம் மட்டுமே இருக்கும் எனலாம்.
மின் புலத்துக்கும் மின் பாயத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன? அதேபோல், காந்த புலத்துக்கும் காந்த பாயத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன?
மின் புலச் செறிவு, மின் பாய அடர்த்தி எப்படி வரையறை செய்யப்பட்டு பின் கணித்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதிலேயே தங்கியுள்ளது.
மின்னூட்டுங்கள் மின் புலத்தை தோற்றுவிக்கின்றன அல்லது மின்னூட்டுக்களின் இயல்பாக மின் புலம் இருக்கின்றது. மின் புலத்தின் பலம் ஒரு இடத்தில் எவ்வளவு என்பதை மின்புலச் செறிவுத் தரவின் மூலம் அறியலாம்.
மின் பாயமும் மின்னூட்டங்களின் அதே இயல்பைத்தான் சுட்டுகின்றன, ஆனால் அவை வேறு ஒரு விதமாக வரையறை செய்கின்றன. மின் பாயத்தை மின்னூட்டுங்கள் தோற்றுவிக்கும் கோடுகள் அல்லது வரிகள் (flux lines) மூலமாக விபரிக்கலாம். மின் பாய அடர்த்தி அப்படி எத்தனை மின் பாய கோடுகள் ஒரு குறிப்பிட்ட தளப்பரப்பளவு (surface area)ஊடாக செங்குத்தாக (orthogonally) செல்கின்றது என்பதை குறித்து நிற்கும்.
பொதுவாக, மின் புலச் செறிவுக்கும் மின் பாய அடர்த்திக்கும் இருக்கும் தொடர்பை பின்வரும் சமன்பாடு கொண்டு விளங்கலாம்:
அதேபோல் காந்தப் புலச் செறிவுக்கும் காந்தப் பாய அடர்த்திக்கும் இருக்கும் தொடர்பு:
இங்கே, மின்உட்புகுதிறன் (permittivity) ஆகும், மற்றும் காந்தவிடுதிறன் (permeability) ஆகும்.
மின்காந்த அலை பயண இயல்புகள்
மேலே, மின்காந்த அலைகளை விபரிக்கும் மக்ஸ் வெலின் கணித செயல் கூறுகள் தரப்பட்டன. இனி மின்காந்த அலைகள் எப்படி பயணிக்கின்றன, வெவ்வேறு ஊடகங்கள் அல்லது இடங்கள் ஊடாக பயணிக்கும் பொழுது அதன் இயல்புகள் எப்படி மாறுகின்றன என்பது பற்றி அலசப்படும்.
ஊடகங்கள் அனைத்தையும் நான்காக வகைப்படுத்தலாம். எந்த ஒரு ஊடகத்தையும் மூன்று காரணிகள் வருணிக்கின்றன. அவை, கடத்துதிறன், மின் உட்புகுதிறன், காந்த உட்புகுதிறன் ஆகும். ஊடகங்களும் அவற்றை விபரிக்கும் காரணிகளும் பின்வருமாறு:
1. வெற்றிடம் ()
2. இழப்பு இல்லா மின் கடவாபொருள் ()
3. இழப்புடைய மின் கடவாபொருள் ()
4. நல்ல கடத்திகள் ()
மின்காந்த அலைகள் பயணிக்கும் பொழுது கவனிக்கப்படவேண்டியது, அது எவ்வாறு எல்லையில் இயங்கும் என்பதை நோக்கித்தான். எல்லையில் மின்காந்த அலைகள் எப்படி இயங்கும் என்பதை நான்கு சமன்பாடுகள் சுட்டும். (இங்கே மின்காந்த அலையின் மின் அலை கூறு வேறாகவும், காந்த அலை கூறு வேறாகவும் விபரிக்கப்படுவதை குறிக்க.)
மின் அலையின் சமந்தர கூறுகள் ஊடகம் 1, ஊடகம் 2 இடையான பயணத்தில் ஒரே பெறுமதி கொண்டிருக்கும், அதாவது . அப்படியானால், செங்குத்தான கூறுகளின் கதி என்ன? இரண்டாவது சமன்பாட்டை நோக்குக. எல்லையில், வேறு மின்னூட்டுக்கள் இல்லை எனில், அதாவது , பிரதேசம் 2ல் இருந்து பிரதேசம் 1 நோக்கி செல்லும் மின் அலையின் செங்குத்து கூறு காரணியால் சமன்படும், அதாவது:
காந்த அலைகளின் இயல்பு எப்படி இருக்கும்? மேலே தரப்பட்ட மூன்றாவது சமன்பாடை நோக்குக, எல்லையில் பிற புறபரப்பளவு மின்னூட்டு அடர்த்திகளின் தாக்கம் இல்லாவின், அதாவது , சமன்பாடு இவ்வாறு மருவும் . மேலும், காந்த அலைகளின் செங்குத்தான கூற்றின் இயல்பை பின்வருமாறும் சமன்படுத்தலாம் .
சக்தி, வலு, பொயின்ரிங் நெறியம்
மின்காந்த அலைகள் மூலம் மின்காந்த சத்தி பரவுகின்றது. மின்காந்த சத்தியின் அளவை, மின்காந்த வலுவை மின் புல செறிவு, காந்த புல செறிவு, பொயின்ரிங் நெறியம் துணைகொண்டு விபரிக்கலாம். பொயின்ரிங் நெறியம் பின்வருமாறு வரையறுக்கப்படும்.
(W/m2)
மேலே தரப்பட்டது வரைவிலக்கணமே, சமன்பாடு அல்ல என்பதை குறிக்க. பொயின்ர்ங் நெறியம் மின்காந்த வலு எத்திசையில் பாய்கின்றது என்பதை சுட்டி நிற்கும். மின் புலமும், காந்த புலமும் ஒரே அலைவரிசையில் அல்லது ஒரே மாதிரி மாறும் அலைவரிசையில் இருந்தால் மேல் தரப்பட்ட வரைவிலக்கணம் பின்வருமாறு மருவும்:
complex (W/m2)
மின்காந்த அலை பரப்புகை (Wave Propagation)
மின்காந்த அலை பரவும் திசை (direction of propagation) மின்காந்த சக்தி எங்கே செல்கின்றது என்பதை சுட்டி நிற்கும். எப்பொழுதும் மின்காந்த அலையின் பரிமாணிக்கும் திசை அவ்வலையை விபரிக்கும் மின் புலம் பரவும் தளத்துக்கும், காந்த புலம் பரவும் தளத்துக்கும் செங்குத்தாகவே அமையும். உதாரணத்துக்கு, மின் புலம் x-அச்சிலும் காந்த புலம் y-அச்சிலும் பாயுமாறு விபரிக்கப்பட்டால் மின்காந்த அலை z-அச்சின் திசையில் பரவும். இத் திசை நோக்கியே பொயின்ரிங் நெறியம் சுட்டும்.
மின்காந்த அலையின் முனைப்பாக்கம் (Wave Polorization)
மின்காந்த அலையின் மின் புலத்தின் திசையை அலையின் முனைப்பாக்கம் எனப்படும். மின் புல முனைப்பாக்கத்தை கொண்டே மின்காந்த அலையின் முனைப்பாக்க தளத்தை (plane of polarization) விபரிப்பர். மின்காந்த அலையின் முனைப்பாக்க தளம் மின் புலத்தின் திசைக் கோட்டினாலும், மின்காந்த அலையின் பரவு திசைக் கோட்டினாலும் கட்டமைக்கப்பட்ட தளத்தை குறிக்கும். இத் தளம் இட கால காரணிகளின் ஒரு செயல்கூறு ஆகும். மிகவும் எளிய உதாரணம்: மின் புலம் x-அச்சு திசையிலும் மின்காந்த அலையின் பரவு திசை z-அச்சு திசையிலும் இருந்தால் அம் மின்காந்த அலையின் முனைப்பாக்க தளம் x-z தளம் ஆகும்.
மின்காந்த குறுக்கலைகள் (Transverse Electromagnetic Waves)
அலை பரவும் திசையும் அலையின் அதிர்வுகளும்/அசைவுகளும் செங்குத்தாக இருக்குமானால் அவ் வலைகள் குறுக்கலைகள் எனப்படும். மின்காந்த அலையின் அதிர்வும் அது பரவும் திசையும் செங்குத்தாக இருப்பதால் மின்காந்த அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
சீரான சமதள மின்காந்த அலைகள் (Uniform Plane TEM)
மின் புலம் ஒரு திசையில் மட்டுமே பயணிக்குமாய் இருந்தால், அதற்கு செங்குத்தாக காந்த புலமும், இவை இரண்டுக்கும் செங்குத்தாக மின்காந்த அலையின் பரவு திசையும் அமையுமாக இருந்தால், இம் மின் காந்த அலை சீரான சமதள முனைப்பாங்குடன் பயணிக்கும்.
மாறக, மின் புலத்தின் திசை மாறி மாறி அமைந்தும், அதற்கு அமைய காந்த புலமும், மின்காந்த அலையின் பரவு திசையும் அமையுமாக இருந்தால் அம் மின் காந்த அலை சீரான சமதள முனைப்பாங்குடன் பயணிக்க மாட்டாது.
மின்காந்த அலைகளை வகைப்படுத்தல்
மின்காந்த அலையை அலை எண்ணை கொண்டு பல வேறாக வகைப்படுத்தலாம். அவ்வாறு வகைப்படுத்தும் மின்காந்த அலைகள் வெவ்வேறு தன்மைகளை கொண்டிருக்கும்.
காம்மா அலைகள் (1010 - 1013 GHz)
ஊடு கதிர் அலைகள் (108 - 109 GHz)
புற ஊதா கதிர்கள் (106 - 108 GHz)
ஒளி அலைகள் (105 - 106 GHz)
அகச்சிகப்பு கதிர்கள் (103 - 104 GHz)(
மைக்ரோ வேவ் அலைகள் (3 – 300 GHz)
ரேடியோ அலைகள் (535 kHZ - 806 MHz)
பயன்கள்
ரேடியோ அலைகள்
இந்த அலைகள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது. 530 MHz முதல் 1710 MHz வரையுள்ள
அலைகள் AM வரிசையிலும், 54 MHz வரையுள்ள அதிக அதிர்வெண் அலைகள்
குறைந்த அலை வரிசையிலும் பயன்படுகின்றன.
தொலைக்காட்சி அலையின் நெடுக்கம் 54 MHz முதல் 890 MHz
வரையிலும் FM வரிசையில் 88 MHz முதல் 108 MHz வரையிலும் செல்போன்களில்
மிக உயர் அதிர்வெண் (ultra high frequency) வரிசையிலும் ரேடியோ அலைகள்
பயன்படுகின்றன.
நுண்ணலைகள்
மிகக் குறைந்த அலைநீளம் உள்ளதால் இந்த அலைகள்
கதிரலைக் கும்பா மற்றும் செய்தித் தொடர்புக்குப் பயன்படுகின்றன. வீட்டு உபயோகப்
பொருளான மைக்ரோ அலை சமையல்கலன்கள், இந்த அலைகளின் சிறந்த பயன்பாடு
ஆகும்.
அகச்சிவப்பு கதிர்கள்
அகச்சிவப்பு விளக்குகள் முடநீக்கு சிகிச்சைக்குப் பயன்படுகின்றன.
அகச்சிவப்பு ஒளிப்படவியல் வானிலை தட்பவெப்ப முன்னறிவிப்புக்கு பயன்படுகிறது.
காற்று, அடர்பனி, மூடுபனி போன்றவை அகச்சிவப்புக் கதிர்களை உட்கவர்வதில்லை. இதனால் தொலைவில் உள்ளவற்றை நிழற்படமெடுக்க இவை பயன்படுகின்றன.
அகச்சிவப்பு உட்கவர் நிறமாலை, மூலக்கூறு கட்டமைப்புகளை ஆய்வதற்கு பயன்படுகின்றன.
கண்ணுறு ஒளி
பொருள்களிலிருந்து உமிழப்படும் அல்லது
எதிரோளிக்கப்படும் கண்ணுறு ஒளியைக் கொண்டு நம்மைச் சுற்றி
நடைபெறுவனவற்றை பார்க்கவும் அறியவும் முடிகிறது. இதன் அலைநீள நெடுக்கம்
4000 A முதல் 8000 A உள்ளது
புற ஊதாக் கதிர்கள்
பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளைக் கொல்லவும் பயன்படுகின்றன.
இந்த வகைக் கதிர்கள் போலி பத்திரங்களைக் கண்டறியவும், கைரேகை பதிவுகளைக் கண்டறியும் தடயவியல் ஆய்வகங்களிலும் பயன்படுகின்றன.
உணவுப் பொருள்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன.
அணுவின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன.
வெளி இணைப்புகள்
ஒளி எனப்படுவது யாதெனில்
ஒளி மேல ஒளி அடிப்போம்
சங்கரின் "குவாண்டம் அறிவியல்" கட்டுரை/வலைப்பதிவுகளின் தொகுப்பு
இயற்பியல் 2005
கதிர்வீச்சு
|
4637
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
காற்பந்தாட்டம்
|
கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற (வெவ்வேறு கோணங்களில்) முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக வெறும் "கால்பந்து" அல்லது "சாக்கர்" என்று அறியப்படுகின்றது. இருப்பினும் கால்பந்து என்ற வார்த்தை கால்பந்து வடிவத்தில் உள்ள அனைத்து விளையாட்டிற்கும் பொருந்துகின்றது, இது உலகத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மிகவும் பிரபலமானது. ஆகவே ஆங்கில மொழி வார்த்தையான "ஃபுட்பால்", "கிரிட்அயர்ன் கால்பந்து" (இந்தப் பெயர் வட அமெரிக்க விளையாட்டுக்களுடன், குறிப்பாக அமெரிக்க கால்பந்து மற்றும் கனடிய கால்பந்து ஆகியவற்றுடன் தொடர்புடையது), ஆஸ்திரேலிய கால்பந்து, கேலிக் கால்பந்து, ரக்பி லீக், ரக்பி யூனியன் மற்றும் தொடர்புடைய விளையாட்டுகளுக்குப் பொருந்துகின்றது.
இந்த விளையாட்டுக்கள் உள்ளடக்கியது:
இரண்டு அணிகள் வழக்கமாக 11 முதல் 18 வரையிலான வீரர்களைக் கொண்டிருக்கின்றன; சில வீரர்கள் மட்டும் கொண்டவை(ஒரு அணியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர்)வேறுபட்ட அணிகளும் பிரபலமாக இருக்கின்றன
போட்டியை விளையாடுவதற்கென்று தெளிவாக வரையறுக்கப்பட்டப் பகுதி;
களத்தில் எதிரணியின் முனைக்குப் பந்தை நகர்த்திச் சென்று கோல் பகுதி அல்லது எல்லைக் கோடு வழியாக கோல்கள் அல்லது புள்ளிகளைப் பெறுதல் ;
வீரகள் பந்தை இரண்டு கோல்கம்பங்கள் இடையே தள்ளுவதன் விளைவாக கோல்கள் அல்லது புள்ளிகள் பெறப்படுகின்றன
கோல் அல்லது எல்லைக் கோடானது எதிரணியின் மூலம் தடுக்கப்படும் ;
வீரர்கள் உதைத்தல், கொண்டு செல்லுதல் அல்லது பந்தைக் கைமாற்றுதல்-போன்ற நெறிமுறையைப் சார்ந்து பந்தை நகர்த்தக் கோரப்படுகின்றனர்; மேலும்
வீரர்கள் அவர்களின் உடலை மட்டுமே பயன்படுத்தி பந்தை நகர்த்த வேண்டும்.
பெரும்பாலான நெறிமுறைகளில், வீரர்களின் ஆப்சைடு நகர்வை கட்டுப்படுத்துகின்ற விதிகள் உள்ளன, மேலும் வீரர்கள் கண்டிப்பாக கோல்கம்பங்களுக்கிடையே உள்ள கிராஸ்பாரின் கீழே அல்லது அதன் ஊடே பந்தைச் செலுத்தி கோலைப் பெறவேண்டும். பல கால்பந்து நெறிமுறைகளுக்குப் பொதுவான பிற அம்சங்களில் உள்ளடங்கியவை: புள்ளிகள் பெரும்பாலும் வீரர்கள் பந்தை கோல் எல்லைக்கோட்டிற்கு கொண்டுசெல்வதன் மூலம் பெறப்படுகின்றது; மேலும் வீரர்கள் மார்க் எடுத்த பின்னர் அல்லது பேர் கேட்ச் செய்த பின்னர் அவர்கள் ப்ரீ கிக் கைப் பெறுகின்றனர்.
பண்டைய காலம் தொட்டு, உலகம் முழுவதும் மக்கள் பந்தை உதைத்தல் அல்லது கொண்டு செல்லுதல் போன்ற செயல்பாடுகளைக் கொண்டு விளையாடி இருக்கின்றனர். இருந்தாலும் கால்பந்தின் பெரும்பாலான நவீன நெறிமுறைகள் அவற்றின் பிறப்பிடமான இங்கிலாந்தில் தோன்றியவை.
பெயர் வரலாறு
"football" (அல்லது "foot ball") என்ற வார்த்தையானது காலால் பந்தை உதைக்கும் செயலால் பிறந்தது என்று பெரும்பாலும் நம்பப்படுகையில், அந்த கால்பந்து (football) என்ற வார்த்தையானது உண்மையில் இடைக்கால ஐரோப்பாவில் கால்களைக் கொண்டு விளையாடப்படும் பல்வேறு விளையாட்டுக்களைக் குறித்தது என்ற எதிர் விளக்கமும் உள்ளது. இந்த விளையாட்டுக்கள், உயர்குடி மக்களால் பெரும்பாலும் விளையாடப்படும் குதிரை சவாரி விளையாட்டுக்களை எதிர்ப்பதற்காக வழக்கமாக உழவர்களால் விளையாடப்பட்டன. இருப்பினும் இந்த விளக்கத்திற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை, கால்பந்து என்ற வார்த்தையானது எப்போது காலில் விளையாடும் பல்வேறு விளையாட்டுக்களைக் குறிக்கின்றதேயன்றி, அது பந்தை உதைக்கும் தன்மையை உள்ளடக்கியனவற்றை மட்டுமே அவ்வாறு குறிப்பிடுவதில்லை. பல வகைளில், கால்பந்து (football) என்ற வார்த்தை குறிப்பாக பந்தை உதைத்துத் தள்ளுவதைத் தடைச் செய்த விளையாட்டுக்களுக்கும் பொருந்துகின்றது.
தற்போதைய நெறிமுறைகள் மற்றும் குடும்பங்கள்
சங்கக் கால்பந்து மற்றும் மரபினர்
சங்கக் கால்பந்து விளையாட்டானது கால்பந்து , சாக்கர் , பூட்டி மற்றும் பூட்டீ என்றும் அறியப்படுகிறது
உள்ளரங்க/கூடைப்பந்து திடல் வகைகளிலான கால்பந்து:
ஐந்து நபர் கால்பந்து — உலகம் முழுவதிலும் பின்வருவன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் படி விளையாடப்படுகின்றது:
புட்சல் — FIFA-அங்கீகரித்த அணிக்கு ஐந்து பேர் விளையாடும் உள்ளரங்க விளையாட்டு
மினிவோயட்பால் — அணிக்கு ஐந்து பேர் விளையாடும் உள்ளரங்க விளையாட்டு, கிழக்கு மற்றும் மேற்கு ப்ளாண்டர்ஸ்ஸில் மிகவும் பிரபலமாக விளையாடப்படுகின்றது
பாபி புட் அணிக்கு ஐந்து பேர் விளையாடும், மத்திய அமெரிக்காவில் கூடைப்பந்துத் திடலில் (கோல்கம்பங்கள் கட்டப்பட்டு) திறந்தவெளியில் விளையாடப்படுகின்றது.
உள்ளரங்க சாக்கர் — அணிக்கு ஆறு பேர் விளையாடும் உள்ளரங்க விளையாட்டு இலத்தீன் அமெரிக்காவில் நன்கு அறியப்படுகின்றது, அங்கு இது பெரும்பாலும் திறந்த வெளி மைதானங்களில் fútbol rápido ("விரைவுக் கால்பந்து") என்ற பெயரில் விளையாடப்படுகின்றது
மாஸ்டர்ஸ் கால்பந்து ஐரோப்பாவில் வயது முதிர்ந்த தொழில் முறை வீரர்கள் (35 வயதுகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினை உடையவர்கள்) விளையாடும் அணிக்கு ஆறு பேர் கொண்ட விளையாட்டு
பாராலிம்பிக் கால்பந்து — உடல் ஊனமுற்ற தடகள வீரர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட கால்பந்து. பின்வருவன உள்ளடங்கியது:
பார்வைக் குறைபாடான தடகள வீரர்களுக்கான - அணிக்கு 5 பேர் கொண்ட கால்பந்து
பெருமூளை வாதம் கொண்ட தடகள வீரர்களுக்கான - அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்து
ஊனமுற்ற தடகள வீரர்களுக்கான - ஊனமுற்றோர் கால்பந்து
காது கேளாமை கொண்ட தடகள வீரர்களுக்கான - காது கேளாதோர் கால்பந்து
மின் சக்கர நாற்காலி சாக்கர்
கடற்கரைச் சாக்கர் — மணலில் விளையாடப்படும் கால்பந்து, இது கடற்கரைக் கால்பந்து மற்றும் மணல் சாக்கர் என்றும் அழைக்கப்படுகின்றது
தெரு கால்பந்து — பல ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்ட கால்பந்தை ஒருங்கிணைத்தது
ரஷ் கோலி — இயல்பான கோல்கீப்பரை விட பல நெகிழ்வான அம்சங்களைக் கொண்ட கால்பந்தின் வேறுபட்ட வகை
ஹெட்டர்ஸ் அண்ட் வாலேஸ் — இங்கு குறிக்கோள் கோல்கீப்பருக்கு எதிராக தலை மற்றும் நிலத்தில் பந்துப் படாமல் கோல் போடமுனைவது ஆகும்
கிராப் கால்பந்து — வீரர்கள் தங்களது கைகளை ஊன்றி நின்றும் பாதங்களைப் பயன்படுத்தியும் மேலும் பின்புறமாக உருண்டு புரண்டு இயல்பான கால்பந்து போலவே விளையாடும் கால்பந்து
ஸ்வாம்ப் சாக்கர் — ஸ்வாம்ப் சாக்கர் அல்லது சேறு நிறைந்த இடத்தில் விளையாடும் விளையாட்டு
ரக்பி பள்ளி கால்பந்து மற்றும் மரபுகள்
ரக்பி கால்பந்து
ரக்பி லீக் — நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து ஆகிய ஆஸ்திரேலிய மாநிலங்களிலும் இங்கிலாந்தில் அந்த விளையாட்டை விளையாடும் பலராலும் வழக்கமாக "கால்பந்து" அல்லது "பூட்டி" என எளிதாக அழைக்கப்படுகின்றது. மேலும் அடிக்கடி "லீக்" என்றும் எளிதாகக் குறிப்பிடப்படுகின்றது
ரக்பி லீக் நைன்ஸ் (அல்லது செவன்ஸ்)
டச் கால்பந்து (ரக்பி லீக்) — ரக்பி லீக்குடன் தொடர்பற்றப் பதிப்பு. தென்னாப்பிரிக்காவில் இது சிக்ஸ் டவுன் என்று அறியப்படுகின்றது
டேக் ரக்பி — ரக்பி லீக்குடன் தொடர்பற்ற பதிப்பு, இதில் தடுப்பாட்டத்தைக் குறிக்க வெல்க்ரோ டேக் அகற்றப்பட்டு இருக்கின்றது
ரக்பி யூனியன்
ரக்பி செவன்ஸ்
டேக் ரக்பி — வெல்க்ரோ டேக்கைப் பயன்படுத்தும் ரக்பி யூனியன் வடிவம்
கடற்கரை ரக்பி — மணலில் விளையாடப்படும் ரக்பி
டச் ரக்பி — தடுப்பாட்ட அம்சங்கள் இல்லாத ரக்பி கால்பந்தின் பொதுப்பெயர்
கிரிட் அயர்ன் கால்பந்து
அமெரிக்க கால்பந்து — அமெரிக்காவிலும் கனடாவிலும் "கால்பந்து" எனவும், ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் "கிரிட் அயர்ன்" எனவும் அழைக்கப்படுகின்றது. டச் ஃபுட்பால் பதிப்புகளிலிருந்து வேறுபடுத்தி அறிய சிலநேரங்களில் அது "தடுப்பாட்டம் கால்பந்து" என்று அழைக்கப்படுகின்றது
உள்ளரங்க கால்பந்து, ஏரினா கால்பந்து — அமெரிக்க கால்பந்தின் உள்ளரங்கப் பதிப்பு
ஒன்பது நபர் கால்பந்து, எட்டு நபர் கால்பந்து, ஆறு நபர் கால்பந்து — தடுப்பாட்டம் கால்பந்தின் பதிப்புகள், முக்கியமாக களத்திற்கு 11 பேர் கொண்ட அணிக்கு வீரர்கள் கிடைக்காத சிறிய உயர்நிலைப் பள்ளிகளில் விளையாடப்படுகின்றது
டச் கால்பந்து (அமெரிக்கன்) — தடுப்பாட்டம் அமெரிக்க கால்பந்து
ப்ளாக் கால்பந்து — டேக்கிளற்ற அமெரிக்க கால்பந்து, டச் கால்பந்து போன்றே, வெல்க்ரோ வத்திருக்கும் இடுப்பைச் சுற்றி கட்டப்பட்ட கொடியை இதிலும் தடுப்பாட்டத்தைக் குறிக்கும் விதமாக எதிர் ஆட்டக்காரர்கள் இழுக்கின்றனர்
தெருக் கால்பந்து (அமெரிக்கன்) — உபகரணம் எதுவுமின்றி எளிதாக்கப்பட்ட விதிமுறைகளுடன் புழைக்கடைகளில் விளையாடப்படும் அமெரிக்கக் கால்பந்து
கனடிய கால்பந்து — கனடாவில் எளிதாக "கால்பந்து" என அழைக்கப்படுகின்றது; கனடாவில் "கால்பந்து" என்பது சூழ்நிலையப் பொருத்து கனடியன் அல்லது அமெரிக்க கால்பந்து இரண்டில் ஒன்றைக் குறிக்கும்
கனடிய ப்ளாக் கால்பந்து — தடுப்பாட்டமற்ர கனடிய கால்பந்து
ஒன்பது நபர் கால்பந்து — ஒன்பது நபர் அமெரிக்க கால்பந்தை ஒத்தது, ஆனால் கனடிய விதிமுறைகளைப் பயன்படுத்துகின்றது; களத்திற்கு 12 பேர் கொண்ட அணிக்கு போதுமான வீரர்கள் குறையும் சாஸ்கட்சுவானில் உள்ள சிறிய பள்ளிகளால் விளையாடப்படுகின்றது
ஐரிஷ் மற்றும் ஆஸ்திரேலிய வகைகள்
இந்த நெறிமுறைகள் பொதுவான ஆப்சைடு விதிமுறையைக் கொண்டிருக்கவில்லை, மேலும்,தேவையென்னவெனில் ஓடிக்கொண்டிருக்கும் போது பந்தை பவுன்ஸ் அல்லது சோலோ (டோய்-கிக்) மூலமாக , பந்தை தூக்கியெறிதலுக்குப் பதிலாக பந்தைக் குத்தியோ அல்லது தட்டியோ கைமாற்றுதல் செய்வது மற்றும் பிற மரபுகளைக் கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து — அதிகாரப்பூர்வமாக "ஆஸ்திரேலிய கால்பந்து" எனவும், இயல்பாக "கால்பந்து", "பூட்டி" அல்லது "ஆஸி விதிகள்" எனவும் அறியப்படுகின்றது. சில பகுதிகளில் (தவறுதலாக) "AFL" எனவும் குறிப்பிடப்படுகின்றது, இது முக்கிய ஏற்பாட்டு அமைப்பு மற்றும் போட்டியின் பெயர்
ஆஸ்கிக் — இளம்தலைமுறைக் குழந்தைகளுக்காக AFL வடிவமைத்த ஆஸ்திரேலிய விதிகளின் பதிப்பு
மெட்ரோ பூட்டி (அல்லது மெட்ரோ விதிகள் பூட்டி) — வட அமெரிக்க நகரங்களில் உள்ள கிரிட் அயன் மைதானங்களில் பயன்படுத்துவதற்காக (வழக்கமான ஆஸ்திரேலிய விதிகள் கொண்ட போட்டிகளுக்கு தேவையான மைதானங்கள் பெரும்பாலும் போதாததால்), USAFL கண்டுபிடித்த மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு
கிக்-டூ-கிக்
9 பேர் பூட்டி — மிகவும் திறந்த வேறுபட்ட ஆஸ்திரேலிய விதிகளில் விளையாடப்படுகின்றன, மொத்தத்தில் 18 வீரர்கள் தேவைப்படுகின்றது, மேலும் விகிதசமமாக சிறிய மைதானங்களில் (தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற வகைகள் உட்பட) விளையாடப்படுகின்றன
ரெக் பூட்டி — "பொழுதுபோக்கு கால்பந்து", தடுப்பாட்டங்களுக்குப் பதிலாக டேகுகளை மாற்றி ஆஸ்திரேலிய விதிகளின் தொடர்பற்ற டச் வகைகளை மாற்றியமைத்து, AFL உருவாக்கியது
டச் ஆஸி விதிகள் — இங்கிலாந்தில் மட்டுமே விளையாடப்படும் ஆஸ்திரேலிய விதிகளின் தொடர்பற்ற மாற்றம்
சமோவா விதிகள் — ரக்பி கால்பந்து களங்களின் பயன்பாடு போன்ற சமோவாவின் நிபந்தனைகளுக்கு ஏற்கக்கூடிய உள்ளூர்மயமாக்கப்பட்ட பதிப்பு
மாஸ்டர்ஸ் ஆஸ்திரேலிய கால்பந்து (சூப்பர் விதிகள் என்றும் அறியப்படுகின்றது) — 30 ஆண்டுகளுக்கு மேலான வயதுடைய வீரர்களுக்கான என்று வரையறுக்கப்பட்ட போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட குறைக்கப்பட்ட தொடர்புப் பதிப்பு
பெண்கள் ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து — சிறிய பந்தைக் கொண்டு விளையாடப்படுவது, மேலும் (சிலநேரங்களில்) பெண்கள் போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட குறைக்கப்பட்ட தொடர்புப் பதிப்பு
கேலிக் கால்பந்து — அயர்லாந்தில் பெரிதும் விளையாடப்படுவது. சிலநேரங்களில் "கால்பந்து" அல்லது "காஹ்" (கேலிக் தடகளச் சங்கம் என்பதன் சுருக்கப் பெயரிலிலிருந்து வந்தது) எனக் குறிப்பிடப்படுகிறது
மகளிர் கேலிக் கால்பந்து
சர்வதேச விதிகள் கால்பந்து — போட்டிகளுக்கு கேலிக் மற்றும் ஆஸ்திரேலிய விதிகளின் வீரர்களுக்கான இணக்கமான நெறிமுறைகளைப் பயன்படுத்துவது
எஞ்சியுள்ள இடைக்காலப் பந்து விளையாட்டுகள்
இங்கிலாந்தின் உள்ளே
ஹேக்ஸி ஹூட், ஹேக்ஸி, லின்கோல்ன்ஷையரில் உள்ள எபிபானியில் விளையாடப்படுவது
ஷரோவ் செவ்வாய் விளையாட்டுகள்
ஆல்ன்விக், நார்த்தம்பர்லேண்டில் ஸ்கோரிங் ஹேலஸ்
ஆஷ்போர்ன், டெர்பிஷையரில் ராயல் ஷ்ரோவெடிட் கால்பந்து
ஆதர்ஸ்டோன், வார்விக்ஷையரில் ஷ்ரோவெடிட் பந்து விளையாட்டு
கார்பே காஸ்ட்லே, டோர்செட்டில் பர்பெக் மார்ப்லெர்ஸின் ஷரோவ் ட்யூஸ்டே கால்பந்து விழா
கார்ன்வால்லில் செயிண்ட் கொலம்ப் மேஜர் எனுமிடத்தில் ஹர்லிங் த சில்வர் பால்
செட்ஜ்பீல்டு, துர்ஹாம் கவுண்டியில் பந்து விளையாட்டு
ஸ்காட்லாந்தில் பா கேம் ("பந்து விளையாட்டு") இன்னமும் கிறிஸ்துமஸ் மற்றும் ஹோக்மனாய் நேரங்களில் பின்வரும் இடங்களில் பிரபலமாக இருக்கின்றது:
டன்ஸ், பெர்விக்ஷையர்
ஸ்கோன், பெர்த்ஷையர்
ஆர்க்னே தீவுகளில் கிர்க்வால்
இங்கிலாந்துக்கு வெளியே
கால்சியோ பையோரென்டினோ — 16 ஆம் நூற்றாண்டு புளோரன்ஸ் இலிருந்து மறுமலர்ச்சிக் கால கால்பந்தின் நவீன மீட்பு.
எஞ்சியுள்ள இங்கிலாந்து பள்ளி விளையாட்டுக்கள்
இங்கிலாந்து பொது (தன்னாட்சி) பள்ளிகளில் இன்னமும் விளையாடப்படும் விளையாட்டுக்கள்:
எடோன் பீல்டு கேம்
எடோன் வால் கேம்
ஹாரோ கால்பந்து
வின்செஸ்டர் கல்லூரிக் கால்பந்து
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் கலப்பு விளையாட்டுகள்
கீப்பி அப்பி (குறிப்பிட்ட நிலையைக் கட்டிக் காத்தல்)
இது பாதம், முட்டிகள், மார்பு, தோள்கள் மற்றும் தலையைப் பயன்படுத்தி கால்பந்தைக் அந்தரத்தில் நிலையற்றுக் கையாளும் கலையாகும்.
கால்பை
ஹாக்கி சேக் (இது ஒரு ட்ரேட் மார்க்) உட்பட பல கீப்பி அப்பியின் பல வேறுபாடுகளில் சிறிய பீன் பை அல்லது மணல் பை பந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
கட்டற்ற பாணி கால்பந்து
நவீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட கீப்பி அப்பியின் கட்டற்ற பாணி வீரர்கள் தங்களது பொழுதுபோக்கு மதிப்பு மற்றும் திறன் வெளிப்பாடு ஆகியவற்றிற்கு தரமதிப்பைப் பெற்றுள்ளனர்.
ரக்பி அடிப்படையில்
ஸ்கப்பல்பால்
போர்ஸ் எம் பேக்ஸ் என்ற பின் தள்ளுதல் , போர்ஸ்மேன்பேக் மேலும்.
கால்பந்து
கலப்பு விளையாட்டுகள்
ஆஸ்டஸ்
இரண்டாம் உலகப்போரின் போது மெல்போர்னில் ஆஸ்திரேலிய விதிகள் மற்றும் அமெரிக்க கால்பந்து ஆகியவற்றுக்கு இடையே சமரசம் கண்டுபிடிக்கப்பட்டது.
போஸாபால்
சங்கக் கால்பந்து மற்றும் கைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் அகியவை கலந்தது; காற்று நிரப்பப்பட்டவைகளிலும் டிராம்போலைன்களிலும் விளையாடப்பட்டது.
பூட்வாலி
சங்கக் கால்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து ஆகியவை கலந்தது; மணலில் விளையாடப்படுகின்றது
கிக்பால்
சங்கக் கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆகியவறின் கலப்பின விளையாட்டாக 1942 வாக்கில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.
ஸ்பீடுபால் (அமெரிக்கன்)
அமெரிக்கக் கால்பந்து, சாக்கர் மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றின் இணைப்பாக, 1912 இல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.
யுனிவர்சல் கால்பந்து
ஆஸ்திரேலிய விதிகள் மற்றும் ரக்பி லீக் ஆகியவற்றின் கலப்பான இது, 1933 இல் சிட்னியில் முயற்சிக்கப்பட்டது.
வோலட்டா
சங்கக் கால்பந்து மற்றும் ஐரோப்பிய கைப்பந்து ஆகியவற்றை நினைவுகூறும் இந்த விளையாட்டை, இத்தாலிய பாசிச தலைவரான, ஆகஸ்டோ துராட்டி 1920களில் உருவாக்கினார்.
வீல்சேர் ரக்பி
மர்டர்பால் என்றும் அழைக்கப்படும் இது 1977 இல் கனடாவில் உருவாக்கப்பட்டது. ஐஸ் ஹாக்கி மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றின் அடிப்படையிலானது ரக்பி அடிப்படையில் இல்லை.
வீல்சேர் ரக்பி லீக்
டேபிள்டாப் விளையாட்டுகளும் பிற பொழுதுபோக்குகளும்
கால்பந்து (சாக்கர்) அடிப்படையில்
சுப்புடெயோ
ப்ளோ கால்பந்து
மேசை கால்பந்து — பூஸ்பால் , டேபிள் சாக்கர் , பேபிபூட் , பார் கால்பந்து அல்லது கெட்டோன் ) என்றும் அறியப்படுகின்றது.
பேண்டஸி கால்பந்து (சாக்கர்)
பட்டன் கால்பந்து — ப்யூட்போல் டே மேசா , ஜோகோ டே போடோஸ் என்றும் அறியப்படுகின்றது
பென்னி கால்பந்து
ரக்பி அடிப்படையில்
பென்னி ரக்பி
அமெரிக்கக் கால்பந்து அடிப்படையில்
காகிதக் கால்பந்து
ப்ளட் பவுல்
பேண்டஸி கால்பந்து (அமெரிக்கன்)
மேடன் NFL
ஆஸ்திரேலிய கால்பந்து அடிப்படையில்
[[ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்துவிளையாட்டுக்களின்ரேலிய க
வரலாறு
முந்தைய வரலாறு
பண்டைய விளையாட்டுக்கள்
பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் பல பந்து விளையாட்டுக்களை தெரிந்து வைத்திருந்தினர், அவற்றில் பல விளையாட்டுக்கள் கால்களைப் பயன்படுத்தி விளையாடுவது ஆகும்.ரோமானிய விளையாட்டான ஹார்பஸ்டம் , "επισκυρος" (எபிஸ்கைரோஸ் ) அல்லது பாய்னிந்தா என்று அறியப்பட்ட குழு விளையாட்டிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகின்றது, இது கிரேக்க கதாசிரியர் ஆண்டிபனேஸ் (388–311 BC) அவர்களால் குறிப்பிடப்பட்டு, பின்னர் கிறிஸ்துவ சமய இயலாளர் அலெக்ஸாண்ட்ரியாவின் கிளமெண்ட் (c.150-c.215 AD)டாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ரோமானிய அரசியல்வாதி சைசுரோ (106-43 BC), ஒரு மனிதன் சலூன்கடையில் சவரம் செய்கையில் பந்து அங்கு உதைக்கப்பட்ட போது கொல்லப்பட்டதாக விவரிக்கின்றார். இந்த விளையாட்டுக்கள் ரக்பி கால்பந்தை போல் தோற்றமளிக்கின்றன. ரோமன் பந்து விளையாட்டுக்கள் ஏற்கனவே காற்று நிரப்பப்பட்ட பந்தான போலிஸ் பற்றி அறிந்திருந்தன.
கால்பந்தைப் போன்ற செயல்பாட்டின் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம் BC 3ஆம் நூற்றாண்டு மற்றும் 1 ஆம் நூற்றாண்டு ஆகியவற்றுக்கு இடையே எழுதப்பட்ட சீன ராணுவ கையேடான ஜான் குயோ சே என்ற நூலில் உள்ளது. அது சுஜூ (蹴鞠, எழுத்துவடிவில் "கிக் பால்") என்று அறியப்பட்ட பயிற்சியை விவரிக்கின்றது, இது மூங்கில் பிரம்பில் பொருத்தப்பட்டு தரையிலிருந்து சுமார் 9 மீட்டர் வரை தொங்கவிடப்பட்ட பட்டு துணியின் ஒரு பகுதியில் உள்ள சிறிய ஓட்டையின் மூலமாக தோல் பந்தைத் உதைக்கும் செயலில் ஈடுபடுவதாகும். ஹான் பரம்பரை ஆட்சியின் போது (206 BC–220 AD), சுஜூ விளையாட்டுக்கள் தரநிலைப்படுத்தப்பட்டு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த விளையாட்டின் மாற்றங்கள் ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு முறையே கேமாரி மற்றும் சுக்-குக் என்ற பெயரில் பரவியது. சீன டாங்க் வம்ச (618–907) காலத்தில் பதிலாக சிறகு-அடைக்கப்பட்ட பந்துக்குப் பதிலாக காற்று நிரப்பப்பட்ட பந்து மாற்றப்பட்டது, மேலும் சுஜூ விளையாட்டுக்கள் தொழில்முறையாக்கப்பட்டது, பல வீரர்கள், சுஜூ விளையாடுவதன் மூலம் சம்பாதித்து வாழ்ந்தனர். மேலும், இரண்டு வேறுபட்ட வகையிலான கோல் கம்பங்கள் உருவாக்கப்பட்டன: அவற்றில் ஒன்று கம்பங்களை அமைத்து அவற்றுக்கு இடையே வலையை அமைத்து உருவாக்கப்பட்டது, மேலும் மற்றொன்று விளையாட்டுத் திடலுக்கு மத்தியில் ஓரே ஒரு கோல் கம்பம் மட்டுமே கொண்டிருந்தது.
சுஜூ வின் ஜப்பானியப் பதிப்பு கேமாரி (蹴鞠) ஆகும், மேலும் இது அசூகா காலத்தின் போது உருவாக்கப்பட்டது. இது ஜப்பானிய பேரரசுக்குரிய மைதானமான கீயோட்டோ இல் 600 AD இலிருந்து விளையாடப்பட்டதாக அறியப்படுகின்றது. கேமாரி யில் பல வீரர்கள் வட்டத்தில் நின்று ஒருவருக்கொருவர் பந்தை உதைத்து, பந்து தரையில் (கீப்பி அப்பி போன்று) விழாமல் இருக்க முயற்சிக்கின்றனர். இந்த விளையாட்டானது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அழிந்துவிட்டதாகத் தோன்றுகின்றது. இது 1903 இல் மீட்கப்பட்டு, தற்போது பல திருவிழாக்களில் விளையாடப்படுகின்றது.
]
பாரம்பரிய, பண்டைய , அல்லது வரலாற்றுக்கு முந்தைய பந்து விளையாட்டுக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த உள்நாட்டு குடிமக்களால்விளையாடப்பட்டதற்கான பல குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக 1586 இல், ஆங்கிலேய ஆய்வுப்பணி பயணி ஜான் டேவிஸ் தலைமையேற்று செலுத்திய கப்பலில் இருந்தவர்கள், கடற்கரைக்குச் சென்று கிரீன்லாந்தில் உள்ள இன்யூட் (எஸ்கிமோ) மக்களுடன் கால்பந்து வடிவிலான விளையாட்டை விளையாடினர். பின்னர் அங்கு ஒரு இன்யூட் விளையாட்டு பனிக்கட்டியில் விளையாடப்பட்டதாக விவரிக்கப்படுகின்றது, அவ்விளையாட்டு அக்சாக்டக் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியும், இரண்டு அணியும் ஒன்றுக்கு ஒன்று இணையான வரிசைகளில் சந்தித்தவுடன் தொடங்கின, பந்தை ஒவ்வொரு அணியும் மற்ற அணியின் வரிசையில் உதைக்கவும் பின்னர் கோல் கம்பத்தில் உதைக்கவும் முயற்சிக்கின்றனர். 1610 இல், ஜேம்ஸ்டவுன் செட்டில்மெண்ட், விர்ஜினியாவின் வில்லியம் ஸ்ட்ராச்சி அவர்கள், பூர்வீக அமெரிக்கர்கள் விளையாடிய பஹ்சாஹேமன் என்றழைக்கப்பட்ட விளையாட்டைப் பதிவுசெய்தார். விக்டோரியா, ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு மக்கள் மார்ன் குரூக் ("பந்து விளையாட்டு") என்றழைக்கப்பட்ட விளையாட்டை விளையாடினர். 1878 இல் ராபர்ட் ப்ரோக்-ஸ்மித் எழுதிய தி அபோரிஜினஸ் ஆப் விக்டோரியா என்ற நூலானது ரிச்சர்டு தாமஸ் என்றழைக்கப்பட்ட ஒரு நபர் 1841 இல் பழங்குடிமக்கள் விளையாடியதற்கு சாட்சியாக இருந்து கூறுவதாக மேற்கோளிடுகின்றது: "முதல்தர விளையாட்டு வீரர் போஸம் தோலில் உருவாக்கப்பட்ட பந்தை எவ்வாறு கீழே போட்டு உதைத்தார் என்பதையும் மற்ற வீரர்கள் அதைப் பிடிப்பதற்காக எவ்வாறு காற்றில் குதித்தனர் என்பதையும் திரு தாமஸ் அவர்கள் விளக்குகின்றார்." ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து மேம்பாட்டில் மார்ன் குரூக் விளையாட்டின் தாக்கம் இருந்தது என்று பரவலாக நம்பப்படுகின்றது (கீழே காண்க).
நியூசிலாந்து நாட்டின் மாவோரியில் கி-ஓ-ரஹி என்றழைக்கப்பட்ட விளையாட்டு விளையாடப்பட்டது, இதில் கலந்து கொள்ளும் அணிகளின் ஏழு வீரர்கள் சுற்றுவட்ட களத்தில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து விளையாடுகின்றனர், மேலும் 'பௌ'வை (எல்லைக்கோடு குறியீடுகளை) தொடுவதன் மூலமும் மைய 'டுபு' அல்லது இலக்கை அடிப்பதன் மூலமும் புள்ளிகளைப் பெறுகின்றனர்.
ரப்பர் பந்தைக் கொண்டு உள்ளூர் குடிமக்களால் மசோமெரிக்காவில் விளையாடப்பட்ட விளையாட்டுக்கள் இந்த காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்திருந்ததாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அவை பெரும்பாலும் கூடைப்பந்து அல்லது கைப்பந்து விளையாட்டின் பண்புகளை ஒத்திருந்தன, மேலும் நவீன கால்பந்து மீதான அவற்றின் தாக்கம் குறைவாக இருந்தது, அவற்றில் பெரும்பாலானவற்றை கால்பந்தாக வகைப்படுத்த முடியாது. வடகிழக்கு அமெரிக்க இந்தியர்கள், குறிப்பாக ஈர்க்கோயிஸ் கூட்டமைப்பு, வலைமட்டைகளை சிறிய பந்தை எறியவும் பிடிக்கவும் பயன்படுத்தும் விளையாட்டை விளையாடினர்; இருப்பினும் லக்ரோஸ் (அதன் நவீன பரம்பரை அழைப்பது) பந்து கோல்கால் பயன்படுத்தும் விளையாட்டாக இருந்தாலும் அதேபோன்று வழக்கமான "கால்பந்து" வடிவில் வகைப்படுத்தப்படவில்லை.
இந்த விளையாட்டுக்களும் மற்றவையும் பண்டையகாலத்திற்கும் பின் செல்கின்றன, அவை தேர்வாளர்களுக்கு வலியையும் அதிகரிக்கலாம் மேலும் அவற்றின் தாக்கம் கால்பந்து விளையாட்டுக்களையும் பின்னர் பாதிக்கலாம். இருப்பினும் நவீன கால்பந்தின் நெறிமுறைகளின் முக்கிய ஆதாரங்கள் மேற்கு ஐரோப்பா குறிப்பாக இங்கிலாந்தில் கிடப்பதாக தோன்றுகின்றன.
இடைக்கால மற்றும் நவீன காலத்திற்கு முந்தைய ஐரோப்பா
இடைக் காலம், ஆண்டுதோறும் நடைபெறும் ஷ்ரோவெடிட் கால்பந்து போட்டிகளின் பிரபலமானது ஐரோப்பா முழுவதும் குறிப்பாக இங்கிலாந்தில் மிகவும் அதிகரிப்பைக் கண்டது. இந்த நேரத்தில் இங்கிலாந்தில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு ரோமானிய ஆக்கிரமிப்புடன் வந்திருக்கலாம், ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டு ஹிஸ்டோரியா பிரிட்டோனத்தில் சிறுவர்கள் விளையாடும் "பந்து விளையாட்டுகளைப் பற்றிய" நார்மனுக்கு முந்தைய குறிப்பு இது மட்டுமே. பிரிட்டானி, நார்மண்டே மற்றும் பிகார்டி ஆகியவற்றில் விளையாடப்பட்ட விளையாட்டுக்களின் லா சோலே அல்லது சௌலே என்று அறியப்பட்ட செய்திகள், நார்மண் வெற்றியின் விளைவாக இங்கிலாந்தில் இந்த கால்பந்து விளையாட்டுகளில் பல வந்திருக்கக் கூடும் என்று சொல்கின்றன.
கால்பந்தின் இந்த வடிவங்கள் சில நேரங்களில் "கூட்டமான கால்பந்து" எனக் குறிப்பிடப்பட்டது, இது அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிடையே விளையாடப்படும், எதிரெதிதரப்பில் வரம்பற்ற வீரர்கள் கலந்துகொள்கின்றனர், அவர்கள் பெரிய மக்கள் கூட்டமாக முன்னோக்கி நகர்ந்து, காற்று நிரப்பட்ட பன்றியின் நீர்ப்பை போன்ற பொருட்களை போட்டியிட்டு நகர்த்திக்கொண்டு, எதிர்த்தரப்பின் திருச்சபை போன்ற குறிப்பிட்ட புவியியல் புள்ளிகளுக்கு கொண்டு செல்வர். ஷ்ரோவெடிட் விளையாட்டுக்கள் இங்கிலாந்தின் பல நகரங்களில் நவீன சகாப்தத்திலும் தொடர்ந்து இருந்து வருகின்றது (கீழே காண்க).
இங்கிலாந்தில் பெரும்பாலும் உண்மையில் எது கால்பந்து என்று இருந்தது என்பதற்கான முதல் விரிவான விளக்கமானது வில்லியம் பிட்ஸ்ஸ்டீபன் அவர்களால் சுமார் 1174-1184 இல் கொடுக்கப்பட்டது. ஷரோவ் செவ்வாயின் ஆண்டுத் திருவிழாவின் போது இலண்டன் இளைஞர்களின் செயல்பாடுகளாக அவர் விவரிப்பது:
மதிய உணவிற்குப் பின் நகரின் அனைத்து இளைஞர்களும் வெளியே சென்று பந்து விளையாட்டில் பங்குபெற களத்தில் குதிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள் தங்களது சொந்தப் பந்தைக் கொண்டிருப்பர்; ஒவ்வொரு நகரத்திலிருந்தும் கைவினைப் பணியாளர்களும் அவர்களின் பந்துகளைக் கொண்டுவருகின்றனர். மூத்த குடிமக்கள், தந்தைகள் மற்றும் செல்வந்தர்கள் குதிரைகளில் தங்களது இளையோர் போட்டியிடுவதைக் காண வருவர், மேலும் தங்களது சொந்த இளமை அனுபவத்தை பிரதிபலிக்கின்றனர்: அவர்களின் உள் உணர்வுகளை செயல்பாடுகளைப் பார்ப்பதன் மூலம் எழுப்பி, கவலையற்ற இளையோர்களின் மூலம் மகிழ்ச்சியைப் பெறுகின்றதையும் நீங்கள் பார்க்கலாம் .
விளையாட்டுக்கான பெரும்பாலான மிகவும் பழைய குறிப்புகள் "பந்து விளையாட்டு" அல்லது "பந்தில் விளையாடுதல்" என்று கூறுகின்றன. இந்த வலுவூட்டும் சிந்தனை அக் காலத்தில் விளையாட்டுக்களை விளையாடும் போது பந்தை உதைத்தல் தேவையில்லை என்பதைக் கூறியது.
இங்கிலாந்தின் உல்ஹாம், நார்த்தம்பர்லேண்ட் இல் 1280 இலிருந்து கால்பந்து வந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் பந்து விளையாட்டிற்கான ஒரு முந்தைய குறிப்பு: "ஹென்றி... பந்து விளையாடும் போது.. டேவிட்டை நோக்கி ஓடினான்". சௌதாம், நோர்போக், இங்கிலாந்தில் 1321 இல் வெளிவந்த கால்பந்து விளையாட்டிற்கான முதலில் வரையறுக்கப்பட்ட குறிப்பு: "பந்து விளையாட்டின் போது, அவன் பந்தை உதைத்தது, கீழிருந்த நண்பன் ... அவனுக்கு எதிராக ஓடி தனக்குத் தானே காயப்படுத்திக்கொண்டான்".
1314 இல், இலண்டன் மாநகரின் லார்டு மேயர் நிக்கோலஸ் டே பார்ண்டன், அந்நேரத்தில் ஆங்கிலேய உயர்குடிமக்கள் பயன்படுத்திய கால்பந்தை பிரெஞ்சில் தடைசெய்யும் விதியை வழங்கினார். இதனொரு மொழிமாற்றம் கூறுவது: " கடவுள் தடை செய்யும் பல தீயசக்திகள் உண்டாகக் கூடிய [rageries de grosses pelotes de pee ] பெரிய கால்பந்து ஆட்டங்கள் உள்ள களங்களில் மக்கள் எற்படுத்திய பரபரப்பால் நகரில் மிகப்பெரிய இரைச்சல் இருந்தது: எதிர்காலத்தில் நகரில் இது போன்ற விளையாட்டுக்களைத் தடுக்க சிறைப்படுத்தலை, ஓர் ஊழியராக, அரசருக்குக்காக நாம் கட்டளையிட்டுள்ளோம்." இது கால்பந்துக்கான முந்தைய குறிப்பாகும்.
1363 இல், இங்கிலாந்தின் எட்வர்டு III என்ற அரசன், "...கைப்பந்து, கால்பந்து, அல்லது ஹாக்கி; பந்தயம் மற்றும் சேவல் சண்டை, அல்லது அதுபோன்ற பிற விளையாட்டுக்கள்" மீது அதிகாரப்பூர்வ தடை அறிக்கையை வழங்கினார், இது "கால்பந்து" — இந்த வகையில் அது வந்திருந்தாலும் — இது கைப்பந்து மாதிரி உடலின் மற்ற பகுதிகளை ஈடுபடுத்தும் விளையாட்டுக்களிலிருந்து வேறுபட்டு இருந்தது என்பதைக் காட்டுகின்றது.
இங்கிலாந்தின் ஹென்றி IV என்ற அரசனும் ஆங்கில வார்த்தை "football" என்பதன் பண்டைய ஆவணமாக்கப்பட்ட பயன்பாடுகளில் ஒன்றையும் 1409 இல் வழங்கினார், அப்போது அவர் "போடேபால்" விளையாட்டுக்காக பணம் வசூலிப்பத்தைத் தடுக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காவ்ஸ்டன், நாட்டிங்ஹாம்ஷையர் என்ற இடத்தில் கால்பந்து விளையாடப்பட்டதற்கான குறிப்பும் இலத்தீனில் உள்ளது. "உதைக்கும் விளையாட்டும்" மற்றும் உந்திச்செல்லும் விளையாட்டுக்கான முதல் விளக்கக்குறிப்பு: "அவர்கள் பொதுவான மனமகிழ்ச்சியை சந்திக்கின்றனரோ அந்த விளையாட்டு கால்பந்து விளையாட்டு என்று அழைக்கப்படுகின்றது". அவற்றில் ஒன்றான நாட்டுப்புற விளையாட்டில் இளைஞர்கள், பெரிய பந்தை காற்றில் எறியாமல் உதைத்துத் தள்ளிக்கொண்டு மற்றும் கைகளால் அல்லாமல் கால்களால் அதை மைதானத்தில் உருட்டிக்கொண்டு செல்கின்றனர்... எதிர்த்திசையில் உதைக்கின்றனர்" வரலாற்று வல்லுநர் கால்பந்து தோன்றியதற்காக அளித்த பழமையான குறிப்பு, வலியுறுத்துவது: "எல்லைகள் குறிக்கப்பட்டது பின்னர் விளையாட்டு தொடங்கியது.
இடைக்கால மற்றும் முதல் நவீன சகாப்தங்களின் முதல் குறிப்புகள்:
"கால்பந்து", ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் 1486 இல் குறிப்பிடப்பட்டது. இந்தக் குறிப்பானது டேம் ஜூலியனா பெர்னர்ஸின் புக் ஆப் செயிண்ட் ஆல்பன்ஸ் என்ற நூலில் உள்ளது. அது குறிப்பது: "a certain rounde instrument to play with ...it is an instrument for the foote and then it is calde in Latyn 'pila pedalis', a fotebal."
1526 இல் இங்கிலாந்தின் அரசர் ஹென்றி VIII அவர்களால் ஒரு ஜோடி கால்பந்து பூட்ஸ் வாங்க ஆணையிடப்பட்டது.
1850 இல் பெண்கள் கால்பந்து வடிவிலான விளையாட்டை விளையாடினர், இதை சர் பிலிப் சிட்னி அவரது பாடல்கள் ஒன்றில் விவரிக்கும் போது: "[a] tyme there is for all, my mother often sayes, When she, with skirts tuckt very hy, with girles at football playes."
கோல்களுக்கான முதல் குறிப்புகள் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தன. 1584 மற்றும் 1602 ஆம் ஆண்டுகளில் முறையே, ஜான் நோர்டன் மற்றும் ரிச்சர்டு காரூ ஆகியோர் கார்னிஷ் ஹர்லிங் விளையாட்டில் "கோல்கள்" பற்றி குறிப்பிட்டனர். கோல்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை காரூ விவரித்தார்: "they pitch two bushes in the ground, some eight or ten foote asunder; and directly against them, ten or twelue [பன்னிரெண்டு] score off, other twayne in like distance, which they terme their Goales". அவர் கோல்கீப்பர்களையும் பந்தை வீரர்களுக்கிடையே மாற்றிக்கொள்வதையும் முதலில் விவரித்தார்.
கோலை ஸ்கோர் செய்வது பற்றி ஜான் டேயின் த பிளைண்ட் பெக்கர் ஆப் பெத்னல் கிரீன் என்ற நாடகத்தில் இருந்த நேரடி குறிப்பு (நிகழ்த்தப்பட்டது சுமார் 1600; வெளியிடப்பட்டது 1659): "I'll play a gole at camp-ball" (கால்பந்தின் ஒரு அதிகபட்ச வன்முறை வகை, இது கிழக்கு ஆங்கிலியாவில் பிரபலமானது).அதே போன்று 1613 இல் ஒரு பாடலில் மைக்கேல் டிரேட்டன் குறிப்பிடுவது, "when the Ball to throw, And drive it to the Gole, in squadrons forth they goe".
கால்சியோ பையோரென்டினோ
16 ஆம் நூற்றாண்டில் புளோரன்ஸ் நகரம் எபிபானி மற்றும் லெண்ட் இடைப்பட்ட காலத்தில் இன்று பியாஸ்ஸா டெல்லா நோவெரேவில் அல்லதுபியாஸ்ஸா சாண்டா க்ரோஸ்ஸில் "கால்சியோ ஸ்டோரிகோ " ("வரலாற்று கிக்பால்") என்று அழைக்கப்படும் விளையாட்டை விளையாடுவதன் மூலம் கொண்டாப்பட்டது. நகரின் உயர்குடி இளைஞர்கள் உயர்ந்த பட்டு ஆடைகளை உடுத்தி வன்முறை கால்பந்து வடிவத்தில் அவர்களுக்குள்ளாக ஈடுபடுவர். எடுத்துக்காட்டாக, கால்சியோ வீரர்கள் குத்து, தோள்பட்டையில் தாக்குதல் மற்றும் எதிர்ப்பாளர்களை உதைப்பர். பெல்ட்டிற்கு கீழாக அடிப்பது அனுமதிக்கப்பட்டது. அந்த விளையாட்டானது இராணுவ பயிற்சியைப் பிறப்பிடமாகக் கொண்டதாகக் கூறப்பட்டிருக்கின்றது. 1580 இல், கவுண்ட் ஜியோவன்னி டே பார்டி டி வெர்னியோ எழுதியது "Discorso sopra 'l giuoco del Calcio Fiorentino ". இது சிலநேரங்களில் முந்தைய கால்பந்து விளையாட்டு எதற்கும் நெறிமுறை விதிகளாக இருந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. இந்த விளையாட்டு ஜனவரி 1739 க்குப் பின்னர் (மே 1930 இல் மறுபரிசீலனை செய்யும் வரையில்) விளையாடப்படவில்லை.
அதிகாரப்பூர்வ மறுப்பும் கால்பந்தைத் தடை செய்வதற்கான முயற்சிகளும்
கால்பந்து விளையாட்டுகளைத் தடைசெய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, குறிப்பாக அதிகம் ரௌடி மற்றும் இடைஞ்சல் வடிவங்களில் இருந்தனவற்றை. இடைக்காலத்திலும் நவீனகாலத்தின் தொடக்கத்திலும் குறிப்பாக இங்கிலாந்திலும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் இது நிலவியது.1324 முதல் 1667 வரை, 30 அரசாங்க மற்றும் உள்ளூர் சட்டங்களால் இங்கிலாந்தில் கால்பந்து தடை செய்யப்பட்டது. பிரபல விளையாட்டுக்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளில் உள்ள கடினத்தை சட்டங்களைத் திரும்பத்திரும்ப அறிவிக்கப்படும் தேவையிருந்தது.
கிங் எட்வர்டு II இலண்டனில் விதிமுறையில்லாத கால்பந்தினால் மிகுந்த சிரமப்பட்டார், எனவே அவர் ஏப்ரல் 13, 1314 அன்று அதைத் தடைசெய்யும் அறிவிப்பை வழங்கினார்: "கடவுள் தடை செய்யும் பல தீயசக்திகள் உண்டாகக் கூடிய [[[இங்கிலாந்தின் எட்வர்ட் II|rageries de grosses pelotes de pee]]] பெரிய கால்பந்து ஆட்டங்கள் உள்ள களங்களில் மக்கள் எற்படுத்திய பரபரப்பால் நகரில் மிகப்பெரிய இரைச்சல் இருந்தது: எதிர்காலத்தில் நகரில் இது போன்ற விளையாட்டுக்களைத் தடுக்க சிறைப்படுத்தலை, ஓர் ஊழியராக, அரசருக்குக்காக நாம் கட்டளையிட்டுள்ளோம்."
எட்வர்டு III, ஜூன் 12, 1349 இல் விதித்த தடைக்கான காரணங்கள் வெளிப்படுத்துவது: கால்பந்து மற்றும் பிற பொழுதுபோக்குகள் போருக்குத் தேவையான வில்வித்தைப் பயிற்சியிலிருந்து மக்களைத் திசைத்திருப்பின. 1424 இல், ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் கால்பந்து சட்டம் ஒன்றை பிறப்பித்தது, அச்சட்டம் வலியுறுத்துவது, it is statut and the king forbiddis that na man play at the fut ball under the payne of iiij d - வேறு வார்த்தைகளில், கால்பந்து விளையாடுவது சட்டவிரோதமாக கருதப்படுகின்றது, அவ்வாறு விளையாடும் பட்சத்தில் நான்கு பென்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படும்.
1608 இல் மான்செஸ்டரில் உள்ளூர் அதிகாரிகள் புகாரளித்துக் கூறியது: "With the ffotebale...[there] hath beene greate disorder in our towne of Manchester we are told, and glasse windowes broken yearlye and spoyled by a companie of lewd and disordered persons ..." அதே ஆண்டு,
"football" என்ற வார்த்தையானது வில்லியம் ஷேக்ஸ்பியரால் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தப்பட்டது. ஷேக்ஸ்பியரின் நாடகமான கிங்க் லீயர் பின்வரும் வரிகளைக் கொண்டிருக்கின்றது: "நார் டிரிப்ப்டு நெய்தர், யூ பேஸ் புட்பால பிளேயர்" (ஆக்ட் I, சீன் 4).
ஷேக்ஸ்பியர் விளையாட்டை தனது எ காமெடி ஆப் எர்ரர்ஸ் (ஆக்ட் II, சீன் 1) நாடகத்திலும் குறிப்பிடுவது:
"Spurn" என்பதன் சரியான அர்த்தம் வெளியே உதைத்தல் என்பதாகும், இருந்தாலும் இவ்விளையாட்டானது வீரர்களிடையே பந்தை உதைத்தலில் ஈடுபடுகின்றது.
இங்கிலாந்தின் ஜேம்ஸ் I அரசனின் புக் ஆப் ஸ்போர்ட்ஸ் (1618), கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடவுளை வழிபட்ட பின்னர் கால்பந்து விளையாட அறிவுறுத்துகின்றது. இந்த நூலின் குறிக்கோள், சப்பாத்தைக் பாதுகாத்து வைக்கும் பொருட்டு நன்னெறியாளர்களின் கண்டிப்பை ஈடுசெய்ய முயலுவதாகத் தோன்றுகின்றது.
நவீன நெறிமுறைகளின் தொடக்கம்
ஆங்கிலப் பொதுப் பள்ளிகள்
கால்பந்தானது பிரிட்டன் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அதன் பொதுப் பள்ளிகள் (பிற நாடுகளில் உள்ள தனியார் பள்ளிகளானது) நவீன கால்பந்து நெறிமுறைகளை உருவாக்குவதில் நான்கு முக்கிய சாதனைகளுடன் பெரிதும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றன. முதலில், "கும்பல்" வடிவத்திலிருந்து அதை ஒழுங்கமைக்கப்பட்ட குழு விளையாட்டாக மாற்றியது முக்கியமானதாக இருந்ததாக ஆதாரங்கள் பரிந்துரைத்தன. இரண்டாவதாக, கால்பந்தின் முந்தைய விளக்கங்கள் மற்றும் குறிப்புகள் பெரும்பாலானவற்றை இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்களைக் கொண்டு பதிவு செய்தன. மூன்றாவது, இந்தப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து முதலில் கால்பந்து விளையாட்டுக்களை நெறிமுறைப்படுத்தி, பள்ளிகளுக்கு இடையே விளையாடும் போட்டிகளாக உருவாக்கின. இறுதியாக, அது ஆங்கில பொதுப் பள்ளிகளில் "உதைத்தல்" மற்றும் "ஓடுதல்" (அல்லது "கொண்டுசெல்லுதல்") விளையாட்டுக்களைத் தெளிவாகப் வகைப் பிரித்தது.
ஆங்கில பொதுப் பள்ளிகளில் விளையாடப்பட்ட விளையாட்டுக்கள் கால்பந்தைப் போன்று தோன்றியது — முக்கியமாக உயர்நிலை, மேல்நிலை மற்றும் தொழிற்படிப்புகளிலிருந்து மாணவர்கள் பங்கு பெற்றனர் — என்பதைக் கூறும் முந்தைய ஆதாரம் 1519 இல் வில்லியம் ஹார்மன் எழுதிய வல்கரியா என்ற நூலிலிருந்து வந்தது. ஹார்மன், ஏடன் மற்றும் வின்செஸ்டர் கல்லூரிகளில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார், மேலும் அவரது லத்தீன் உரைநூலானது "We wyll playe with a ball full of wynde" என்ற வாக்கியத்துடன் மொழி மாற்று பயிற்சிகளை உள்ளடக்கியது.
ரிச்சர்டு மல்காஸ்டர், 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏடன் கல்லூரியில் மாணவராக இருந்து, பின்னர் பிற ஆங்கில பள்ளிகளுக்கு தலைமையாசிரியராக மாறியவர், அவர் "பதினாறாம் நூற்றாண்டில் கால்பந்திற்கான மிகச்சிறந்த முறையில் வாதிட்டவர்" என்று விவரிக்கப்படுகின்றார். அவரது பங்களிப்புகளில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குழு கால்பந்தின் பழைய ஆதாரமாக உள்ளன. மல்காஸ்டரின் நூல்கள், அணிகள் ("இரு பக்கங்கள்" மற்றும் "தரப்புகள்"), நிலைகள் ("நிற்குமிடங்கள்"), நடுவர் ("தரப்புகளுக்கிடையே நடுவர்") மற்றும் பயிற்சியாளர் "(trayning maister)" ஆகியவற்றைக் குறிக்கின்றது. மல்காஸ்டரின் "பூட்டிபால்" நூலானது பாரம்பரிய கால்பந்தின் ஒழுங்கீனம் மற்றும் வன்முறைகளிலிருந்து மதிப்பிட்டது:
1633 இல், அபெர்டீன் இலிருந்து வந்த ஆசிரியர் டேவிட் வெட்டர்பர்ன், "வொக்கபுலா" என்றழைக்கப்பட்ட சிறிய இலத்தீன் உரைநூலில் நவீன கால்பந்தின் உறுப்புகளை குறிப்பிட்டுள்ளார். வெட்டர்பர்ன், எது நவீன ஆங்கிலத்திற்கு "keeping goal" என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறார், மேலும் அவர் பந்தை அனுப்புவதற்கு ("strike it here") ஒரு குறிப்பை உருவாக்குகின்றார். "பந்தைப் பிடித்து வைத்தல்" என்பதற்கான குறிப்பு, சில பந்தை கைகளால் கையாளும் முறைகள் அனுமதிக்கப்பட்டதாக பரிந்துரைக்கின்றது. எதிர்த்தரப்பு வீரர்களின் தாக்குதல் மற்றும் தக்கவைத்தல் உட்பட மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டன என்பது தெளிவாகின்றது ("அந்த வீரனை திரும்ப அனுப்பு").
சுமார் 1660 இல் பிரான்சிஸ் வில்லூக்பி எழுதிய புக் ஆப் கேம்ஸ் நூலில், கால்பந்திற்கான மேலும் விரிவான விளக்கக் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. வில்லூக்பி சுட்டன் கோல்டுபீல்டு பள்ளியில் பயின்றார், அவர் முதலில் கோல்கள் மற்றும் தெளிவான ஆட்டக்களம் பற்றி விவரித்தது: "அடுத்த முனையில் முடிவில் ஒரு வாயில் இருந்தது". வாயில்கள், கோல்கள் என்று அழைக்கப்பட்டன." அவரது நூல் கால்பந்துக் களத்தை விவரிக்கும் ஓர் வரைபடத்தைக் கொண்டுள்ளது. அவர், உத்திகளையும் ("கோலைப் பாதுகாக்க சில சிறந்த வீரர்களை விட்டுவைத்தல்"); ஸ்கோர் செய்தலையும் ("அவர்கள் பந்தை அவர்களது எதிரணியினர் ஊடே அடித்து முதல் கோலைப் போட்டு வென்றனர்") மற்றும் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழியையும் ("வீரர்கள் அவர்களின் வலிமை மற்றும் சுறுசுறுப்பு அடிப்படையில் சரிசமமாகப் பிரிக்கப்பட்டனர்") குறிப்பிடுகின்றார். அவர் கால்பந்தின் "சட்டத்தை" முதலில் விவரிப்பது: "அவர்கள் கண்டிப்பாக பந்தைவிட [எதிரணியினரின் காலை] உதைக்கக் கூடாது".
ஆங்கில பொது பள்ளிகள் முதலில் நெறிமுறைப்படுத்தப்பட்ட கால்பந்து விளையாட்டுக்களை (குறிப்பாக ஏடன் (1815) மற்றும் அல்டேன்ஹாம் (1825) ஆகியவற்றில்) விளையாடின, அவை 18 ஆம் நூற்றாண்டின் போது, முதல் ஆப்சைடு விதிகளையும் உருவாக்கின. இந்த விதிகளன் முந்தைய தெளிவான வடிவங்களின் வெளிப்பாடுகள், வீரர்கள் "அவர்களின் ஆப்சைடில்" இருப்பதானது அவர்களின் குறிக்கோளாக வெறுமனே பந்துக்கும் கோலுக்கும் இடையே நிற்பதுவேயாகும். வீரர்கள் காலை அல்லது கையைப் பயன்படுத்தி பந்தை முன்னோக்கி செலுத்துவது அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது கால்களைக் கொண்டு சிறிது சிறிதாக, அல்லது இணைந்துச் செல்லும் சிறு குழுக்களாக வோ அல்லது அதே போன்ற வடிவத்திலோ பந்தை முன்னேற்றிச் செல்ல முடியும். இருப்பினும், ஆப்சைடு சட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் வேறுபட்ட முறையில் மேம்படுத்தத் தொடங்கினர், இதை 1810–1850 காலகட்டத்தில் வின்செஸ்டர், ரக்பி, ஹாரோ மற்றும் செல்ட்டன்ஹாம் ஆகியவற்றிலிருந்த கால்பந்து விதிகள் மூலம் அறியப்படுகின்றது.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1850 இன் தொழிற்சாலைச் சட்டத்திற்கு முன்பு), பிரிட்டனில் பெரும்பாலான தொழிலாளர் வர்க்க மக்கள் வாரத்திற்கு ஆறு நாட்களும், ஒரு நாளில் பெரும்பாலும் பன்னிரெண்டு மணிநேரத்திற்கு மேலும் உழைக்க வேண்டியிருந்தது. அவர்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட்டில் ஈடுபட நேரமுமில்லை விருப்பமுமில்லை, மேலும் அதே நேரத்தில், பெரும்பாலான குழந்தைகள் தொழிலாளர் படையின் பகுதியாகவே இருந்தனர். வீதிகளில் விளையாடும் பீஸ்ட் தின கால்பந்தானது குறைந்துக் கொண்டிருந்தது. பொதுப் பள்ளி மாணவர்கள் வேலையிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ந்தனர், அவர்கள் முறையான நெறிமுறைக்களைக் கொண்ட ஒழுங்குபடுத்தப்பட்ட கால்பந்து விளையாட்டுக்களின் கண்டுபிடிப்பாளர்களாக மாறினர்.
போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் இளைஞர்களின் உடல்களை நேர்த்தியாக வைக்கவும் பல பொதுப் பள்ளிகளால் கால்பந்து விளையாட்டு ஏற்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியும் தங்களது சொந்த விதிமுறைகளை வரையறுத்தன, அவை பரவலாக வெவ்வேறு பள்ளிகளிடையே வேறுபட்டன, மேலும் அவை புதிய மாணவர்களின் கொள்திறனைக் கொண்டு வெவ்வேறு காலங்களில் மாறுபட்டன. விதிகளைப் பொறுத்து இரண்டு கோட்பாட்டு முறைகள் மேம்படுத்தப்பட்டன. பல பள்ளிகள் பந்தைக் கொண்டு செல்வதன் அடிப்படையில் விருப்பம் கொண்டன (அது ரக்பி, மால்பாரோ மற்றும் செல்டென்ஹாம் ஆகியவற்றில்), இருப்பினும் பிற பள்ளிகள் பந்தை உதைத்தல் மற்றும் மெதுமெதுவாக செலுத்துதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து வழங்கின (அவை ஏடன், ஹாரோ, வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் சார்ட்டர்ஹவுஸ்). இந்த இரண்டு கூடாரங்களிலிருந்து விளையாட்டுக்கள் விளையாடப்படும் சூழ்நிலைகளின் ஓர் காரணமாக விளைவாகப் உருவானப் பிரிவினையை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, சார்டென்ஹவுஸ் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அந்நேரத்தில் விளையாடும் பகுதிகளைக் கட்டுப்படுத்தின; மாணவர்கள் பள்ளியின் குளோயிஸ்டெர்ஸ்களில் அவர்களின் பந்து விளையாட்டை விளையாட வரைப்படுத்தப்பட்டனர், அவர்கள் கடினமாக மற்றும் பல்டியடித்து ஓடும் விளையாட்டுக்களை ஏற்பதில் கடினத்தை ஏற்படுத்துகின்றது.
1823 இல் ரக்பி பள்ளியில் மாணவரான வில்லியம் வெப் எல்லிஸ் கூறுவது "அவரது விளையாடும் நேரத்தில் கால்பந்தின் விதிகள் நன்றாக அலட்சியம் செய்யப்பட்டது [சொல்லழுத்தம் சேர்க்கப்பட்டது], முதலில் பந்தை அவனது கையில் எடுத்து அதனுடன் ஓடினான், இதுவே ரக்பி விளையாட்டு உருவாக்கத்தின் சிறப்புடைய அம்சமாகும்." இந்த விதியானது ரக்பி கால்பந்தின் தொடக்கமாகக் கூறப்பட்டது, ஆனால் அதற்கு குறைந்தளவே ஆதாரம் இருக்கின்றது, பெரும்பாலான விளையாட்டு வரலாற்று அறிஞர்கள் அக்கதைகள் வெறும் கட்டுக்கதைகளே என நம்பினர். 'கைகளில் பந்தை எடுத்தல்' சட்டமானது 'பந்தை பறித்து எடுத்தல்' என்று பெரும்பாலும் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு, இது வெப் எல்லிஸின் 'கிரைம்' பந்தைக் கையாண்டது போல் நவீன சாக்கரில் பரவலாக நம்பப்படுகின்றது, இருப்பினும் பந்தைக் கையாள அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சில வகைகளில் கட்டாயமானது, வெப் எல்லிஸ் காண்பித்த அலட்சியத்திற்கான விதியானது பந்தைக் கொண்டு முன்னோக்கி ஓடுவது ஆகும், அந்த விதிகளானது அவரது காலத்தில், ஒரு வீரரை பின்வாங்க அல்லது முன்னோக்கி உதைக்க மட்டுமே அனுமதித்தது.
1840களின் போது பிரிட்டனில் ரயில் போக்குவரத்து வளர்ச்சியின் பயனாக, மக்கள் முன் எப்போதும் சந்தித்திராத குறைந்த சௌகரியமின்மையுடன் பயணம்செய்ய முடிந்தது. பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற ஏதுவானது. இருப்பினும், ஒவ்வொரு பள்ளியும் தங்கள் சொந்த விதிமுறைகளுடன் விளையாடியதால், மற்றவர்களுடன் கால்பந்து விளையாட பள்ளிகளுக்குக் கடினமாக இருந்தது. இந்த பிரச்சினைக்குத் தீர்வாக போட்டியானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, அதன் ஒரு பகுதி விளையாட்டு "நடைபெறும்" பள்ளியின் விதிமுறைகளால் விளையாடப்பட்டது, மற்றொரு பகுதியானது "வெளியில்" இருந்துவந்த பள்ளியின் விதிகளால் விளையாடப்பட்டது.
ரக்பி கால்பந்தைத் தவிர, பொதுப் பள்ளி நெறிமுறைகள் ஒவ்வொரு பள்ளியின் வரையறுக்கப்பட்ட விளையாட்டு களங்களுக்கு அப்பால் அவ்வளவாக விளையாடப்படவில்லை. இருப்பினும், அவைகள் பல பள்ளிகளில் அவைளுக்காக உருவாக்கப்பட்ட களங்களில் விளையாடப்படுகின்றது ((கீழே வாழ்ந்துவரும் UK பள்ளி விளையாட்டுகள் காண்க).
முதன்முறைகள்
கிளப்புகள்
ஸ்போர்ட்ஸ் கிளப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டுகளிலிருந்து கால்பந்து விளையாடுவதற்கு அர்பணிக்கத் தொடங்கின, எடுத்துக்காட்டாக பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்பட்ட இலண்டன் ஜிம்னாஸ்டிக்ஸ் சொசைட்டி 1796 இல் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திக்கொண்டது. 1824-41 காலகட்டத்தில் ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க்கிலுள்ள ஒரு கிளப் "கால்பந்து கிளப்" என்ற பெயரை முதலில் ஆவணமாக்கப்பட்ட கிளப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த கிளப்பானது ட்ரிப்பிங்கை தடைசெய்தாலும், தள்ளுதல் மற்றும் தக்கவைத்தல் மற்றும் பந்தை எடுத்தல் போன்றவற்றை அனுமதித்தது.
இரண்டு கிளப்புகள், உலகின் பழமையான நடப்பிலுள்ள கால்பந்து கிளப்பாக, பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தின் பகுதியாக பங்குபெறாமல் ரக்பி கால்பந்தில் வலிமையானதாக உள்ளன: பார்னெஸ் கிளப், இது 1839 இல் நிறுவப்பட்டதாகக் கூறப்பட்டது மற்றும் 1843 இல் கேய்ஸ் ஹாஸ்பிட்டல் கால்பந்து கிளப். அன்றைய தேதியில் பல்வேறு வகையான கால்பந்து நன்கு ஆவணப்படுத்தப்பட்டு விளையாடப்படவில்லை என்றாலும், அதுபோன்ற கோரிக்கைகள் பிற நவீன நெறிமுறைகள் உருவாவதற்கு முன்னர் ரக்பியின் பிரபலத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன.
1845 இல், ரக்பி பள்ளியில் மூன்று மாணவர்கள் விதிகளை நெறிமுறைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர், பின்னர் அவை அப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டது. எந்த வடிவிலான கால்பந்திற்கும் இவையே முதல் எழுத்து வடிவிலான விதிகளின் (அல்லது நெறிமுறை) தொகுப்பாக இருந்தன. இது மேலும் ரக்பி விளையாட்டு பரவ உதவியது. எடுத்துக்காட்டாக, 1854 இல் டப்ளின் நகரின் டிரினிட்டி கல்லூரியில் டப்ளின் பல்கலைக்கழகம் கால்பந்து கிளப் தொடங்கப்பட்டது, பின்னர் ரக்பி பள்ளி விளையாட்டின் அரணாகப் பிரபலமானது—இது எந்த நெறிமுறையின் கீழும் உலகின் மிகப்பழமையான ஆவணப்படுத்தப்பட்ட கால்பந்து கிளப்பாக இருக்கின்றது.
போட்டிகள்
1858 முதல் ஒவ்வொரு ஆண்டும் மெல்போர்ன் கிராமர் பள்ளி மற்றும் மெல்போர்னின் ஸ்காட்ச் கல்லூரி இடையே நடத்தப்படும் கார்ட்னர்-எக்லெஸ்டன் கோப்பை போட்டியானது வெகுநாட்களாக நடைபெறும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று. இது ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து போட்டியின் முதல் போட்டியாக இருந்ததாக பெரும்பாலானோரால் நம்பப்படுகின்றது, என்றாலும் அதன் முதல் ஆண்டில் பரிசோதனை விதிமுறைகளின் கீழ் விளையாடப்பட்டது. முதல் கால்பந்துக் கோப்பைப் போட்டியான கலேடோனியன் சேலஞ் கோப்பை, மெல்போர்னின் ராயல் கலேடோனியன் சொசைட்டியால் வழங்கப்பட்டது, இது 1861 இல் மெல்போர்ன் விதிகளின் கீழ் விளையாடப்பட்டது. பழமையான கால்பந்து லீக்காக ஒரு ரக்பி கால்பந்து போட்டியான யுனைடேட் ஹாஸ்பிடல்ஸ் சேலஞ் கோப்பை (1874) இருந்தாலும், பழமையான ரக்பி கோப்பையாக ரக்பி லீக் சேலஞ் கோப்பை (1897) உள்ளது. தெற்கு ஆஸ்திரேலியன் கால்பந்து சங்கக்(30 ஏப்ரல் 1877) என்பது தற்போதிருக்கும் பழமையான ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து போட்டியாகும். தற்போதைய பழமையான சாக்கர் கோப்பைப் போட்டி யூதன் கோப்பை (1867) ஆகும், மேலும் பழமையான தேசிய சாக்கர் போட்டி இங்கிலீஷ் FA கோப்பை (1871) ஆகும். தி புட்பால் லீக் (1888) வெகுகாலமாக நடைபெறும் சங்கக் கால்பந்து லீக்காக ஏற்கப்பட்டிருக்கின்றது. முதல் சர்வதேச கால்பந்து போட்டி இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே மார்ச் 5 1870 அன்று ஓவல் மைதானத்தில் FA ஆணையத்தின் கீழ் நடைபெற்றது. முதல் சர்வதேச ரக்பி 1871 இல் நடைபெற்றது.
நவீன பந்துகள்
ஐரோப்பாவில், பழைய கால்பந்துகள் விலங்கு நீப்பைகளில், மிகவும் குறிப்பாக காற்றால் நிரப்பட்ட பன்றியின் நீர்ப்பைகளில் செய்யப்பட்டன. பின்னர் பந்தானது அதன் வடிவத்தைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்க தோலால் மூடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும் 1851 இல், ரக்பி (பள்ளி அருகில்) நகரிலிருந்து வந்த ரிச்சர்டு லிண்டன் மற்றும் வில்லியம் கில்பர்ட் என்ற இரண்டு ஷூ தயாரிப்பாளர்களும், இலண்டனில் உள்ல கிரேட் எக்சிபிஷனில் உருண்டையான மற்றும் நீள்வட்ட வடிவப் பந்துகளைக் காட்சிப்படுத்தினர். ரிச்சர்டு லிண்டனின் மனைவி பன்றியின் நீர்ப்பைகளை ஊதியதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு வியாதியால் இறந்ததாகக் கூறினார். லிண்டன் அவர்கள் "காற்று நிரப்பக்கூடிய ரப்பர் நீர்ப்பை" மற்றும் "பிராஸ் ஹேண்ட் பம்ப்" ஆகிய கண்டுபிடிப்புகளுக்காக பதக்கங்களையும் வென்றார்.
1855 இல் U.S. கண்டுபிடிப்பாளர் சார்லஸ் குட்யியர் — வல்கனைஸ் செய்த ரப்பரின் காப்புரிமை பெற்றவர் — பாரிஸ் எக்ஸிபிஷன் யுனிவர்செல்லே என்ற இடத்தில் வல்கனைஸ் செய்யப்பட்ட ரப்பர் வெளிப்பகுதியைக் கொண்ட கோளவடிவ கால்பந்தைக் காட்சிக்கு வைத்தார். இந்தப் பந்தானது, U.S.A. இல் முந்தைய கால்பந்து வடிவங்களில் பிரபலமானதாக நிரூபிக்கப்பட்டது.
நவீன பந்து கடத்தும் உத்திகள்
"அறிவியல்" கால்பந்து முதலில் 1839 இல் லன்காஷையரில் இருந்தும், பின்னர் 1862 இலிருந்து ரக்பி கால்பந்தில் நவீன விளையாட்டிலும், மேலும் வெகுவிரைவில் 1865 இல் ஷேப்பீல்டிலிருந்தும் பதிவுசெய்யப்பட்டது. 1869/70 இல் ராயல் என்ஜினியர்ஸ் AFC முதல் பந்தைச் கடத்திச் செலுத்தும் இணை விளையாட்டை விளையாடினர், 1869 இல் அவர்கள் "நன்றாக ஒன்றிணைந்து செயல்பட்டு", "பின் இடைவெளி" மற்றும் "கூட்டிணைப்பின்" மூலமாக நன்மையடைந்தனர். 1870 இல் இன்ஜினியர்கள் பந்தைச் கடத்திச் செலுத்தியது: "லையூட். கிரஸ்வெல், பந்தைப் பெற்றுக் கொண்டு அவரது மறுபக்கத்திற்கு பந்தின் மையத்தில் பந்தை உதைக்கின்றார், அவர் பந்தை நேரம் முடிவடைந்ததாக அழைக்கும் முன்னர் பந்தை கம்பங்கள் வழியே உதைத்தார்", பந்தைச் செலுத்துதல் அவர்களின் பாணியில் வழக்கமான அம்சம், 1872 இன் ஆரம்பத்தில் இன்ஜினியர்கள் பிரபலமான "அவர்களுக்குள் அழகாக விளையாடும்" முதல் கால்பந்து அணியாகத் திகழ்ந்தனர், 1872 மார்ச்சில் டெர்பி ஸ்கூலுக்கு எதிராக நாட்டிங்காம் ஃபாரெஸ்ட் விளையாடிய போட்டியிலிருந்து முதல் இரட்டைச் செலுத்தல் செய்யப்பட்டது செய்தியாக்கப்பட்டது, மறுக்க முடியாத முதல் குறுகிய செலுத்தல்: "திரு அப்ஸே பந்தை உருட்டிக் கொண்டு களத்தின் பாதி நீளத்திற்குச் சென்று வாலிஸிடம் வழங்கினார், வாலிஸ் கோலின் முன்பகுதியில் அதை புத்திசாலித்தனமாக உதைத்து, அணித் தலைவருக்கு அனுப்பினார், அதை அவர் நாட்டிங்காம் கம்பங்களுக்கிடையே ஒருமுறை செலுத்தினார்", முதல் மிகச்சரியான நவீன வடிவமைப்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் AFC இருந்தது, மேலும் அது 2-3-5 "பிரமிட்" வடிவமைப்பை அறிமுகப்படுத்தியது.
கேம்பிரிட்ஜ் விதிகள்
1848 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், திரு. எச். டி விண்டன் மற்றும் திரு. ஜே.சி. திரிங் ஆகியோர் முன்னதாக ஷ்ரூஸ்பரி ஸ்கூலில் இருந்தவர்கள், இவர்கள் இருவரும் ஏடன், ஹாரோ, ரக்பி, வின்செஸ்டர் மற்றும் ஷ்ரூஸ்பரி ஆகியவற்றிலிருந்து மற்ற 12 பிரதிநிதிகளை கேம்ப்ரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் ஒரு சந்திப்பிற்கு அழைத்தனர். ஒரு எட்டு மணிநேர சந்திப்பானது நவீன விதிகளின் முதல் தொகுப்பை உருவாக்கியது, அதுவே கேம்ப்ரிட்ஜ் விதிகள் என்று அறியப்பட்டன. இந்த விதிகளின் நகல்கள் தற்போது எதுவுமில்லை, ஆனால் திருத்தப்பட்ட பதிப்பானது சுமார் 1856 இலிருந்து ஷ்ரூஸ்பரி ஸ்கூலின் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த விதிகள் உதைக்கும் விளையாட்டிற்கு சாதகமாக இருப்பது தெளிவாகின்றது. கையாளுதல் வீரர் ஒரு தெளிவான கேட்சை பெறுவதற்காக மட்டுமே அனுமதிக்கின்றது இது அவர்களை ப்ரீ கிக்கிற்கு அனுமதிக்கின்றது, மேலும் அங்கு பழமையான ஆப்சைடு விதி இருந்தது, இது எதிரணியின் கோல்கம்பங்களைச் சுற்றி வீரர்கள் "நோக்கமின்றி சுற்றுவதை" அனுமதி மறுக்கின்றது. கேம்ப்ரிட்ஜ் விதிகள் ஆங்கில பொதுப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலாக ஏற்கப்படவில்லை (ஆனால் இது விவாதபூர்வமாக சங்கக்கால்பந்து வடிவமைப்பிற்கு முழுப்பொறுப்பான கால்பந்து சங்கக் குழு உறுப்பினர்களிடையே பெரும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது).
ஷெஃபீல்டு விதிகள்
1850களின் இறுதியில், ஆங்கிலம் பேசும் உலகின் முழுவதும், கால்பந்தின் வெவ்வேறு நெறிமுறைகளைக் கொண்டு விளையாட பல கால்பந்து கிளப்புகள் தோன்றியிருந்தன. ஷெஃபீல்டு கால்பந்து கிளப், 1857 இல் ஆங்கில நகரான ஷெஃபீல்டில் நாதனியல் க்ரேஸ்விக் மற்றும் வில்லியம் ப்ரெஸ்ட் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது, இது பின்னர் சங்கக்கால்பந்து விளையாடுகின்ற உலகின் பழமையான கிளப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும், அந்த கிளப் தொடக்கத்தில் தனது சொந்த கால்பந்து நெறிமுறையில் விளையாடியது: ஷெஃபீல்டு விதிகள் . அந்த நெறிமுறையானது பொதுப் பள்ளிகளின் விதிமுறைகளுடமிருந்து அதிக தன்னிசையானதாக இருந்தன, ஆப்சைடு விதி விடுபட்டது மிகவும் முக்கியமான வேறுபாடாக இருக்கின்றது.
இந்த நெறிமுறையானது பல கண்டுபிடிப்புகள் சங்கக்கால்பந்து பின்னர் பரவக் காரணமானது. அவற்றில் ஃப்ரீ கிக்கள், கார்னர் கிக்கள், கைப்பந்து, த்ரோ-இன்கள் மற்றும் கிராஸ்பார் ஆகியவை அடங்கும். 1870களில் இவை இங்கிலாந்தின் வடக்கு மற்றும் மத்திய நிலப்பகுதிகளில் ஆதிக்கம் நிறைந்த நெறிமுறையாக மாறின.இந்த நேரத்தில் லண்டன் மற்றும் ஷெஃபீல்டு FA களால் விதிகளின் வரிசையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 1877 இல் பொதுவான நெறிமுறை ஏற்கப்படும் வரை இரண்டு விளையாட்டுக்கள் இடையேயான வேறுபாடுகள் தேய்ந்துவந்தன.
[[படிமம்:--112.134.200.4 16:55, 23 ஏப்ரல் 2012 (UTC)மாதிரிப்படம்]]
ஆஸ்திரேலிய விதிகள்
விக்டோரியன் கோல்டு ரஷ்சின் போது ஆஸ்திரேலியாவில் வெவ்வேறு வடிவிலான கால்பந்து விளையாடப்பட்டன, இவற்றிலிருந்து மாறுபட்டு மற்றும் உள்ளூரில் பிரபலமான விளையாட்டாக வெளிப்பட்டது. இவ்வாறிருந்தாலும் இவற்றின் பிறப்பிடங்கள், தற்போது டாம் வில்ஸ்ஸிற்கு பெருமை சேர்க்கும் ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து என்றழைக்கப்படுகின்ற நெறிமுறைகளின் பிரபலத்திற்கு இன்னமும் மிகுந்த விவாதத்தை அளிக்கின்ற விஷயமாகும்.
பெல்ஸ் லைப் இன் விக்டோரியா & ஸ்போர்ட்டிங் குரோனிக்கல் என்ற பத்திரிக்கைக்கு ஜூலை 10, 1858 என்று வில்ஸ் எழுதிய கடிதத்தில், குளிர்காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் உடற் தகுதியை தக்க வைக்க "சட்ட நெறிமுறைகள்" கொண்ட "கால்பந்து கிளப்பிற்கு" அழைத்தார். இது வரலாற்று அறிஞர்களால் புதிய விளையாட்டு உருவாக்கத்தை வரையறைக்கும் நிகழ்வாகக் கருத்தப்பட்டிருக்கின்றது. விளம்பரப்படுத்தல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் மூலமாக வில்ஸ் கால்பந்து போட்டிகளை மெல்போர்ன் நகரில் ஒருங்கிணைக்க முடிந்தது, அது பல்வேறு விதிகளைக் கொண்ட சோதனையானது, முதன்முறையாகத் ஜூலை 31, 1858 இல் நிகழ்ந்தது பதிவுசெய்யப்பட்டது. 7 ஆகஸ்ட் 1858 இல் நன்கு ஆவணமாக்கப்பட்ட பள்ளிச் சிறுவர்களைக் கொண்ட மெல்போர்ன் கிராமர் பள்ளி மற்றும் ஸ்காட்ச் கல்லூரி இடையேயான போட்டிக்கு நடுவராக வில்ஸ் செயல்பட்டார். இந்தப் போட்டிகளைத் தொடர்ந்து, அமைப்புரீதியான கால்பந்து போட்டிகள் மிகவும் பிரபலமாக விரைவில் அதிகரித்தன.
மே 17, 1859 அன்று வில்ஸ்சும் மற்றவர்களும் இந்த பழமையான போட்டிகளைக் கொண்ட மெல்போர்ன் கால்பந்து கிளப் (நடப்பிலுள்ள பழமையான ஆஸ்திரேலிய கால்பந்து கிளப்) உருவாக்கத்தில் ஈடுபட்டனர். வில்ஸ், வில்லியம் ஹாம்மர்ஸ்லி, ஜே.பி. தாம்ப்சன் மற்றும் தாமஸ் எச். ஸ்மித் உள்ளிட்டோர் முதல் உறுப்பினர்களாவர். அவர்கள் பிற கிளப்புகளாலும் பரவலாக ஏற்கக்கூடிய விதிகளின் தொகுப்பை உருவாக்கும் எண்ணத்தில் சந்தித்தனர்.
உண்மையான விதிகள் உருவாக்குநர்களின் பின்புலங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் விதிகளை உருவாக்குவதன் மீதான தாக்கங்களைப் பற்றிய ஆர்வமூட்டும் வதந்திகளை உருவாக்குகின்றன. வில்ஸ், ஆஸ்திரேலிய குற்றப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரான இவர் இங்கிலாந்தில் கல்வி பயின்றார். அவர் ஒரு ரக்பி கால்பந்து வீரர், கிரிக்கெட் வீரர் மற்றும் உள்ளூர் ஆஸ்திரேலியர்களுடன் வலுவான தொடர்பைக் கொண்டவர். முதலில் அவர் ரக்பி பள்ளி விதிகளை அறிமுகப்படுத்த விரும்பினார். ஹாம்மர்ஸ்லி இங்கிலாந்திலிருந்து குடியேறிய கிரிக்கெட் வீரர் மற்றும் பத்திரிகையாளர். தாமஸ் ஸ்மித் அயர்லாந்திலிருந்து குடியேறிய பள்ளி ஆசிரியர். கமிட்டி உறுப்பினர்கள் இங்கிலாந்தின் பொதுப் பள்ளி விளையாட்டுகளில் உள்ளவை உள்ளிட்ட பல விதிகளை விவாதித்தனர். பிற வடிவிலான கால்பந்தை ஒத்த அம்சங்கள் உள்ளிட்டவைத் தவிர எந்த ஒரு தாக்கத்தையும் குறிப்பிடும்படியான இறுதியான ஆதாரம் எதுவுமில்லை. பதிலாக கமிட்டியானது ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான விளையாட்டை முடிவுசெய்தது, மேலும் வில்ஸ் அறிவிப்பை "இல்லை, நாம் நமது சொந்த விளையாட்டைக் கொண்டிருக்கலாம்" என்பதை ஆவணப்படுத்தியது. நெறிமுறையானது மதிப்பெண், ஃப்ரீ கிக், டேக்லிங், ஆப்சைடு விதியை விடுவித்தல் மற்றும் வீரர்கள் குறிப்பாக தண்டனை பெறும் பந்தை எறிதல் போன்ற குறிப்பிட்டவற்றில் வகைப்படுத்தப்பட்டது.
மெல்போர்ன் கால்பந்து விதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு மெதுவாக மற்ற விக்டோரியன் கிளப்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிற ஈடுபாடுள்ள விக்டோரியன் கால்பந்து கிளப்களின் விதிகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் 1860களில் பல முறை மறு வரைவை மேற்கொண்டனர். கீலாங் கால்பந்து கிளப் உருவாக்கிய விளையாட்டிலிருந்து விதிகளை ஏற்க 1866 இல் எச் சி ஏ ஹாரிஸனின் கமிட்டியால் தனிப்பட்டமுறையில் திருத்தி எழுதப்பட்டது, இது பிற நெறிமுறைகளிலிருந்து மாறுபட்டு "விக்டோரியன் விதிகள்" என்று அறியப்பட்டது.இது கிரிக்கெட் களங்கள், ரக்பி பந்து, தனிச்சிறப்பான கோல் மற்றும் பின்புறக் கம்பங்களைப் பயன்படுத்தியது, ஓடும்போது பந்தைக் குதிக்கச்செய்தது, பின்னர் கண்கவர் உயர் குறியீட்டையும் பயன்படுத்தியது. இந்த வடிவமான கால்பந்து விரைவில் பிற ஆஸ்திரேலிய குடியேற்றங்களுக்கும் பரவியது.முதலாம் உலகப் போரை தொடர்ந்து தெற்கு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் அந்நெறிமுறையானது குறிப்பிட்ட காலத்தில் வீழ்ச்சியடைந்தது உணரப்பட்டது, ஆனால் அதிலிருந்து உலகின் பிற பகுதிகளில் அது தொழில்முறையற்ற அளவில் வளர்ந்தது, மேலும் ஆஸ்திரேலிய கால்பந்து லீக் வலிமையான தொழில்முறை போட்டியாக உருவானது.
கால்பந்து சங்கம்
1860களின் ஆரம்பத்தில், இங்கிலந்தில் பல்வேறு பொதுப் பள்ளி விளையாட்டுகளை ஒருமுகப்படுத்தி சரிசெய்யும் முயற்சிகள் அதிகரித்தன. 1862 இல், ஜே. சி. திரிங், உண்மையான கேம்ப்ரிட்ஜ் விதிகளின் பின்னால் இருந்து இயக்கும் சக்திகளில் ஒருவரான இவர், உப்பிங்ஹாம் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், மேலும் "எளிதான விளையாட்டு" என்று அவர் அழைத்த தனது சொந்த விதிகளை வழங்கினார் (இவை உப்பிங்ஹாம் விதிகள் எனவும் அறியப்படுகின்றன). அக்டோபர் 1863 இன் தொடக்கத்தில் கேம்ப்ரிட்ஜ் விதிகளின் மற்றொரு புதிய திருத்தப்பட்ட பதிப்பானது ஹாரோ, ஷ்ரூஸ்பரி, ஏடன், ரக்பி, மால்பாரோ மற்றும் வெஸ்ட்மைன்ஸ்டெர் ஆகியவற்றிலிருந்து வந்த முன்னாள் மாணவர்களின் ஏழு நபர் கமிட்டியால் வரையப்பட்டது.
இலண்டன் நகரின் ஃப்ரீமேசன்ஸ் டவர்ன், கிரேட் குயீன் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் அக்டோபர் 26, 1863 அன்று மாலை நேரத்தில் இலண்டன் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு கால்பந்து கிளப்களின் பிரதிநிதிகள் கால்பந்துச் சங்க (FA) தொடக்கக் கூட்டத்திற்காகச் சந்தித்தனர். சங்கம் தொடங்கப்பட்டதற்கான நோக்கம் அதன் உறுப்பினர்களிடையே ஒரே சீரான நெறிமுறை மற்றும் ஒழுங்குமுறையைக் கொண்டுவருவதேயாகும். முதல் கூட்டத்தினைத் தொடர்ந்து, பொதுப் பள்ளிகள் சங்கத்தில் சேர அழைக்கப்பட்டன. சார்ட்டர்ஹவுஸ் மற்றும் உப்பிங்ஹாம் தவிர அனைத்தும் அதை நிராகரித்தன. மொத்தத்தில், FA இன் ஆறு கூட்டங்கள் 1863 ஆம் ஆண்டின் அக்டோபர் மற்றும் டிசம்பர் இடையே நடத்தப்பட்டன. மூன்றாவது கூட்டத்தின் பின்னர் விதிகளின் தொகுப்பு வரைவு வெளியிடப்பட்டது. இருப்பினும் நான்காவது கூட்டத்தின் தொடக்கத்தில், சமீபத்தில் வெளியிடப்பட்ட 1863 இன் கேம்பிரிட்ஜ் விதிகளின் மீது கவனயீர்ப்பு கொண்டுவரப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் விதிகள் இரண்டு குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வரைவு FA விதிகளிலிருந்து வேறுபட்டன; அவை பந்துடன் (கொண்டு) ஓடுதல் மற்றும் ஹேக்கிங் (எதிர்க்கும் வீரர்களைத் தாடையில் உதைத்தல்). இரண்டு தொடர்ச்சியான FA விதிகள் பின்வருகின்றன:
ஐந்தாவது கூட்டத்தில், இந்த இரண்டு விதிகளை நீக்க பரிந்துரைக்கப்பட்டது. பெரும்பாலன பிரதிநிதிகள் இதற்கு ஆதரவு வழங்கினர், ஆனால் பிளாக்ஹீத்திலிருந்து பிரதிநிதியாக வந்தவரும் FA இன் முதல் பொருளாளருமான எப். எம். சேம்பல் இதை எதிர்த்தார். அவர் கூறியது: "ஹேக்கிங் என்பது உண்மையான கால்பந்து". இருப்பினும், பந்தை கையில் வைத்துக்கொண்டு ஓடுதல் தடைசெய்யப்பட்டு ஹேக்கிங் தொடர்ந்தும் பிளாக்ஹீத் FA இலிருந்து வெளியேறியது. 8 டிசம்பரில் நடைபெற்ற இறுதி கூட்டத்தை அடுத்து, FA "கால்பந்து சட்டங்களை" வெளியிட்டது, அது விளையாட்டிற்கான முதல் முழுமையான விதிகளின் தொகுப்பான அது பின்னர் கால்பந்து எனப்பட்டது (பின்னர் பல நாடுகளில் சாக்கர் எனவும் அழைக்கப்பட்டது).
முதல் FA விதிகள் இன்னமும் கொண்டிருக்கும் கூறுகள் சங்கக் கால்பந்தின் பகுதியாக இல்லை, ஆனால் அவை இன்னுமும் பிற விளையாட்டுகளில் ஏற்கக்கூடியதாக உள்ளன (பெரும்பாலும் குறிப்பிடத்தக்கது ஆஸ்திரேலிய கால்பந்து): எடுத்துக்காட்டாக, ஒரு வீரர் பேர் கேட்ச் செய்து மதிப்பெண்ணை கோரலாம், அது அவருக்கு ஃப்ரீ கிக்கை வழங்குகின்றது; மேலும் ஒரு வீரர் எதிரணியின் கோல் வரிசையின் பின்னால் பந்தைத் தொட்டால், அவரது அணி கோல்வரிசையின் முன்னர் கோல் புள்ளியிலிருந்து 15 கெஜங்களில் (13.5 மீட்டர்கள்)ஃப்ரீ கிக் கைப் பெறுகின்றது.
ரக்பி கால்பந்து
1870 இல் பிரிட்டனில், சுமார் 75 கிளப்கள் பல்வேறு வகையான ரக்பி பள்ளி விளையாட்டை விளையாடின. அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றிலும் "ரக்பி" கிளப்கள் இருந்தன. இருப்பினும் 1871 வரையில் ரக்பி விளையாட்டிற்கு என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் எதுவுமில்லை, அப்பொழுது இலண்டனிலிருந்து 21 கிளப்கள் ரக்பி கால்பந்து யூனியன் (RFU) அமைப்பை உருவாக்க ஒன்றிணைந்தன. (இதற்கு எதிரிடையாக, இப்பொழுது பிளாக்ஹீத் ஹேக்கிங்கை தடைசெய்ய ஆதரவு கோரியது.) முதல் அதிகாரப்பூர்வ RFU விதிகள் ஜூன் 1871 இல் ஏற்கப்பட்டன. இந்த விதிகள் பந்தைச் செலுத்துவதை அனுமதித்தன. அவை, கோல் புள்ளியில் எல்லையின் மீது பந்ததைத் தொடுதலை கோல் முயற்சிக்கும் முயற்சி, எல்லைகள் மற்றும் பொது விளையாட்டு ஆகியவற்றிலிருந்து கோலைக் கைவிடுதல் மற்றும் இன்னமும் முக்கிய போட்டி வடிவில் இருந்த பெனால்ட்டி மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கின.
ரக்பி லீக்
1895 இல், அதன் சொந்த விதிகள் மற்றும் போட்டிகளை உருவாக்குதலில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு RFU உறுப்பினர்களிடையே பிரிவினை ஏற்பட்டு புதிய அணிசேர்தலுக்கு வழிவகுத்தது. அந்நேரத்தில் இது ரக்பி லீக் எனப்பட்ட தனிப்பட்ட நெறிமுறைகளுடன் கூடிய கால்பந்தாக உருவாக்கப்பட்டது.
வட அமெரிக்கக் கால்பந்து நெறிமுறைகள்
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது பிரிட்டனில் நிகழ்ந்த போது, வட அமெரிக்க பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மாணவர்களிடையே அணிகளை உண்டாக்கி தங்கள் சொந்த உள்ளூர் விளையாட்டுகளை விளையாடினர். நியூ ஹாம்ஷையரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் மாணவர்கள் ஓல்டு டிவிசன் கால்பந்து என்றழைக்கப்பட்ட விளையாட்டை விளையாடினர், இது 1820களின் ஆரம்பத்தில் சங்கக் கால்பந்து நெறிமுறைகளின் வகையாக இருந்தது.
]
கனடாவில் முதல் ரக்பி விளையாட்டு 1865 இல் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்றதாக பொதுவாகக் கூறப்படுகின்றது, அப்பொழுது பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள் உள்ளூர் குடிமக்களுடன் விளையாடினர். அந்த விளையாட்டு சீராக வளர்ச்சியடைந்து, 1868 இல் மாண்ட்ரீல் கால்பந்து கிளப் உருவாக்கப்பட்டது, இது கனடாவில் முதலில் பதிவுசெய்யப்பட்ட கால்பந்து கிளப் ஆகும்.
1869 இல், அமெரிக்காவில் FA நெறிமுறையை அடிப்படையாகக் கொண்ட விதிகளின் கீழ்,பிரின்ஸ்டன் மற்றும் ரட்ஜர்ஸ் இடையே முதல் போட்டி விளையாடப்பட்டது. இது முதல் U.S. கல்லூரிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டு என்ற ரீதியில் கல்லூரிக் கால்பந்து பெரும்பாலும் கருதப்படுகின்றது (இருந்த போதிலும் அமெரிக்க கால்பந்தின் இறுதிவடிவம் ரக்பியிலிருந்து வந்ததே தவிர, சங்கக் கால்பந்திலிருந்து இல்லை).
நவீன அமெரிக்க கால்பந்து வளர்ந்து 1874 இல் மாண்ட்ரீலின் மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இடையேயான போட்டியாக வெளிப்பட்டது. அந்த நேரத்தில், ஹார்வர்டு மாணவர்கள் போஸ்டன் கேம் விளையாடியதாக அறியப்பட்டது— இது ஒரு ஓட்ட நெறிமுறையாகும் — இது FA-அடிப்படையான கிக்கிங் விளையாட்டுகள் போல் அல்லாமல் U.S. பல்கலைக்கழங்களால் விரும்பப்பட்டன. இது ஹார்வர்டு பல்கலைக்கழகம் மெக்கில் பல்கலைக்கழகத்தால் விளையாடப்பட்ட ரக்பி அடிப்படையிலான விளையாட்டை எளிதில் ஏற்றுக்கொள்ளச் செய்தது, மேலும் அந்த இரண்டு அணிகளும் தங்களுக்கிடையே அவர்களது விதிகளை மாற்றியமைத்துக்கொண்டன. இருப்பினும் சில ஆண்டுகளில், ஹார்வர்ட் மெக்கில்லின் ரக்பி விதிகளையும் ஏற்றுக்கொண்டது மேலும் பிற U.S. பல்கலைக்கழக அணிகளையும் அதே போன்று ஏற்கச் செய்தது. 1876 இல் மசுசோயட் கன்வென்ஷன் எனுமிடத்தில் இந்த பல்கலைக்கழகங்கள் பெரும்பாலான ரக்பி கால்பந்து யூனியன் விதிகளை சில மாறுபாடுகளுடன் ஏற்றுக்கொள்வதாக ஒத்துக்கொள்ளப்பட்டது. பிரின்ஸ்டன், ரட்ஜர்ஸ் மற்றும் பிற பல்கலைகழகங்கள் ஹார்வர்ட் மற்றும் அதன் போட்டியாளர்களின் ரக்பி அடிப்படையிலான விதிகளுக்கு தாவும் முன்பு சில ஆண்டுகள் சாக்கர் அடிப்படையிலான விதிகளைப் பயன்படுத்தி போட்டியில் பங்குபெறுவதைத் தொடர்ந்தனர். U.S. கல்லூரிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் பொதுவாக சாக்கர் விளையாட்டுக்குத் திரும்பவில்லை.
1880 இல், யேல்லின் பயிற்சியாளர் வால்டர் கேம்ப், அமெரிக்க விளையாட்டில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டார். ரக்பி கால்பந்து விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க கால்பந்தை, அதிலிருந்து வேறுபடுத்தும் கேம்ப்ஸின் இரண்டு மிக முக்கிய விதி கண்டுபிடிப்புகள், ஸ்கிரிம்மேஜ் மற்றும் டவுன்-அண்ட்-டிஸ்டன்ஸ் விதிகள் ஆகியவை.
ஸ்கிரிம்மேஜ் என்பது பந்தை தரையிலிருந்து மற்றொரு வீரரின் கைக்கு வழங்கும் தொடக்கச் செயல்பாட்டின் வழக்கத்தைக் குறிக்கின்றது. கேம்ப்ஸின் அசல் விதியானது இதை காலைக் கொண்டு மட்டுமே வழங்க அனுமதிக்கின்றது; இந்த விதியானது விரைவில் கையைக் கொண்டு பந்தை மாற்ற அனுமதி வழங்குமாறு மாற்றப்பட்டது. இந்த விதியானது இரண்டு அணிகளை ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தனியாகப் பிரிக்கும் தனிப்பட்ட ஸ்கிரிம்மேஜ் வரிசையாகவும் விரிவுபடுத்தப்பட்டது. ஒரு வீரர் தடுக்கப்படும் போது, அவர் வெளியேற்றப்பட்டு, விளையாட்டு நிறுத்துப்படுகின்றது. அணிகள் ஒவ்வொரு அணியின் ஸ்கிரிம்மேஜ் வரிசையில் மறுபடியும் நிற்கின்றன. பந்து வழங்கப்பட்ட பின்னர் விளையாட்டு தொடர்கின்றது. குறிப்பிட்ட தூரத்தை அடைய அணிகளுக்கு வரம்பிடப்பட்ட வெளியேற்றங்களை அளிக்கப்படுகின்றது (எப்போதும்கெஜங்களிலேயே அளவிடப்படுகின்றன). அமெரிக்க கால்பந்தில், பந்தின் உரிமை மாறிய பின்னர் பந்தை பத்து கெஜங்கள் முன்நகர்த்த அணிகளுக்கு நான்கு வெளியேற்றங்கள் அளிக்கப்படுகின்றது. கனடிய கால்பந்தில், பத்து கெஜம்கள் முன்நகர்த்த அணிகள் மூன்று வெளியேற்றங்களைக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. இந்த விதிகள் வட அமெரிக்க நெறிமுறைகள் மற்றும் ரக்பி நெறிமுறைகள் ஆகியவற்றின் இடையேயான அடிப்படை வேறுபாட்டை உருவாக்கின. ரக்பி இன்னமும் அடிப்படையில் தொடர்ச்சியான செயல்பாட்டு விளையாட்டு, வட அமெரிக்க நெறிமுறைகள் வேறுபட்ட ஓட்ட"விளையாட்டுகளை" அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை, அது "ஸ்கிரிம்மேஜ்" வழங்கலில் தொடங்கி டவுன் "வெளியேற்றத்தில்" முடிவடைகிறது.
அமெரிக்க கால்பந்தானது அதன் ஆரம்ப காலங்களில் அதிகப்படியான வன்முறை விளையாட்டாக இருந்தது, பல இறப்புகளையும் மேலும் ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கையை மாற்றும் காயங்களினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. வன்முறையானது மிகவும் கடுமையாக இருந்ததால், 1905 இல் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் வன்முறை குறைய விதிகளை மாற்றியமைக்காவிட்டால் விளையாட்டை தடைசெய்வதாக அச்சுறுத்தினார். பல விதிகள் அந்த ஆண்டு மாற்றப்பட்டன, ஆனால் பார்வேர்டு பாஸ் சட்டத்தின் அறிமுகம் மிகவும் நீடித்திருந்தது, இது 1880களில் கேம்ப்ஸின் விதி மாற்றங்கள் விளையாட்டின் இயல்பை அடிப்படையில் மாற்றியதுபோல் இருந்தது. இது பந்தை முன்னோக்கி வீசுதல் சட்டமான போது, பந்தை முன்னகர்த்த முழுமையான புதிதாக வெளிப்பட்ட முறையானது. அதன் விளைவாக, அணிக்குத் தேவைப்படும் வேறுபட்ட தனித்திறமைகளில் வேறுபட்ட பொறுப்புகளில் வீரர்கள் அவர்களது பங்களிப்பில் மிகவும் சிறந்தவர்களாக மாறினர். எனவே, பல வீரர்கள் முக்கியமாக பந்தைக் கொண்டு ஓடுதலில் (ரன்னிங் பேக்) ஈடுபட்டனர், அவ்வேளையில் பிறர் எறிதலில் (குவாட்டர்பேக்), பிடித்தலில் (வைடு ரிசீவர்), அல்லது தடுத்தலில் (தாக்குதல் வரிசை) சிறந்து விளங்கினர். 1940கள் மற்றும் 1950களில் தடையற்ற ஈடுவைத்தல் விதிகளின் வருகையைக் கொண்டு, அணிகள் மிகவும் தனித்தன்மையை முன்னிறுத்தும் தனித்தனியான தாக்குதல் மற்றும் தற்காப்பு "வீரர் குழுக்களை" அமர்த்த முடிந்தது.
ஆண்டுகள் செல்லச்செல்ல கனடிய கால்பந்தானது அமெரிக்க கால்பந்தில் ஏற்பட்ட மேம்பாடுகளை எடுத்துக்கொண்டது, ஆனாலும் பல தனித்தன்மைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டது. கனடிய கால்பந்து பல ஆண்டுகள் அதிகாரப்பூர்வமாக ரக்பியில் இருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளாமலி ருப்பது அவற்றில் ஒன்று. எடுத்துக்காட்டாக, 1884 இல் நிறுவப்பட்ட கனடிய ரக்பி கால்பந்து யூனியன் , ரக்பி யூனியன் அமைப்பிற்குப் பதிலாக கனடியன் கால்பந்து லீக்கிற்கு முன்னோடியாக இருந்தது. (கனடிய ரக்பி யூனியன், இன்று ரக்பி கனடா என்று அறியப்படுகிறது, இது 1965 வரை உருவாக்கப்படவில்லை.) அமெரிக்க கால்பந்தானது பெரும்பாலும் 1880களில் "ரக்பி" எனவும் விவரிக்கப்பட்டது.
கேலிக் கால்பந்து
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், பல்வேறு பாரம்பரிய கால்பந்து விளையாட்டுகள் ஒன்றாகச் சேர்த்து கேய்டு என்று குறிப்பிடப்பட்டன, அவை அயர்லாந்தில் குறிப்பாக கவுண்டி கெர்ரியில் மிகவும் பிரபலமானவை. பாதர் டபள்யூ. பெர்ரிஸ் என்ற நோக்கர், அந்தக் காலகட்டத்தில் கேய்டு விளையாட்டின் இரண்டு முக்கிய வடிவங்கள் பற்றி விவரிப்பது: "கள விளையாட்டானது" இரண்டு மரங்களின் பெரிய கிளைகளிலிருந்து உருவாக்கப்பட்ட வில்போன்ற கோல்களில் பந்தைப் போடுதல் ஆகும்; மற்றும் காவிய இயல்புடைய "இரு கிராமங்களுக்கு இடையிலான விளையாட்டானது", ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பாலான பகல்நேரத்தை எடுத்துக்கொண்டு விளையாடப்பட்டது, திருச்சபை எல்லைக்கு பந்தை எடுத்துக்கொண்டுவரும் ஒரு அணியே வெற்றி பெற்றதாகும். "மல்யுத்தம்", எதிர்தரப்பு வீரர்களை "தக்கவைத்தல்" மற்றும் பந்தை கொண்டு செல்லுதல் அனுமதிக்கப்பட்டன.
1870களில், ரக்பி மற்றும் சங்கக் கால்பந்து ஆகியவை அயர்லாந்தில் பிரபலமடையத் தொடங்கியது. முன்பு டுப்ளினின் டிரினிட்டி கல்லூரி ரக்பியின் கோட்டையாக விளங்கியது (1850களில் வளர்ச்சிகள் பிரிவைக் காண்க, மேலே). இங்கிலீஷ் FA விதிகள் பரவலாக வழங்கப்பட்டுள்ளது. கேய்டின் பாரம்பரிய வடிவங்கள் இடறுவிக்கற அனுமதிக்கும் "ரப்-அண்ட்-டம்பிள் விளையாட்டிற்கு" வழிவிடத் தொடங்கின.
1884 இல் கேலிக் தடகள சங்கம்(GAA) தொடங்கப்படும் வரையில் ஐரிஷ் வகை கால்பந்தை ஒருமைப்படுத்தி நெறிமுறைப்படுத்த தீவீர முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. GAA, ஹர்லிங் போன்ற பாரம்பரிய ஐரிஷ் விளையாட்டுக்களை முன்னிறுத்தவும், ரக்பி மற்றும் சங்கக் கால்பந்து போன்ற இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டுக்களை மறுக்கவும் முயற்சித்தது. முதல் கேலிக் கால்பந்து விதிகள் மௌரிஸ் டேவின் அவர்களால் கொண்டுவரப்பட்டு, யுனைட்டேட் அயர்லாந்து பத்திரிக்கையில் 7 பிப்ரவரி 1887 அன்று வெளியிடப்பட்டது. டேவினின் விதிகள் ஹர்லிங்க் போன்ற விளையாட்டுகளின் தாக்கத்துடன் ஐரிஷ் நெறிமுறை கால்பந்தைத் தனிப்பட்ட முறையில் உருவாக்க முனைந்ததைக் காண்பித்தன. இந்த வேறுபாட்டின் முக்கிய உதாரணம் ஆப்சைடு விதி விடுபட்டது ஆகும் (இந்த பண்புக்கூறானது பல ஆண்டுகளாக ஹர்லிங் போன்ற பிற ஐரிஷ் விளையாட்டுக்களாலும் ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்தாலும் மட்டுமே பகிரப்பட்டு இருந்தன).
ரக்பி கால்பந்தில் பிளவு
மில்லர்: "ஆம், எல்லா விதத்திலும் நீங்கள்தான் காரணம்; ஒரு நல்ல அணியில் செல்வந்தர் அல்லாதவரின் மகன் அதிகம் விளையாட முடியாமல் செய்தது நீங்கள் தான். என் வழியில் நான் காண்பது, பணம் சம்பாதிக்கும் மனிதர்களில் அதை செலவளிப்பதில் ஏன் யாருக்கும் பங்கு இருப்பதில்லை என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை."]]
சர்வதேச ரக்பி கால்பந்துச் சங்கம் (IRFB) 1886 இல் நிறுவப்பட்டது, ஆனால் பிளவுகள் நெறிமுறையினால் வெளிப்படத் தொடங்கிவிட்டன. தொழில் முறையானது கால்பந்தின் பல்வேறு நெறிமுறைகளின் பக்கம் மெதுவாகச்சாயத் தொடங்கின.
1890களில் இங்கிலாந்தில் நீண்டகாலம் நிலைத்த ரக்பி கால்பந்து யூனியன்,தொழில்முறை வீரர்கள் மீது தடைவிதித்ததானது பகுதி ரீதியிலான பதற்றத்தை ரக்பி கால்பந்தில் ஏற்படுத்தியது. வடக்கு இங்கிலாந்தில் பெரும்பாலான வீரர்கள் தொழிலாளர் வர்க்கமாக இருந்தனர் மேலும் அவர்கள் ரயில், பயணம் விளையாட்டு மற்றும் காயத்திலிருந்து விடுபடுவதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை.பத்து ஆண்டுகள் முன்னதாக வடக்கு இங்கிலாந்தில் சாக்கர் விளையாட்டில் நிகழ்ந்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை, ஆனால் RFU இல் அதிகாரிகள் மிகுவும் வேறுபட்டு நடந்து கொண்டனர், வடக்கு இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்க ஆதரவைத் தனிமைப்படுத்த முயற்சிக்கப்பட்டது. 1895 இல், ரக்பி விளையாட்டினால் ஏற்படும் சம்பளம் இழப்பை ஈடுகட்ட, வீரர்களுக்கு அவர்கள் வேலையைவிட்டு வந்ததற்காக வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான சர்ச்சையினைத் தொடர்ந்து, வடக்கத்திய கிளப்புகளின் பிரதிநிதிகள் வடக்கு ரக்பி கால்பந்து யூனியன் (NRFU) என்ற அமைப்பை உருவாக்க ஹடர்ஸ்பீல்டில் கூடினர். புதிய அமைப்பு தொடக்கத்தில் பல்வேறு வகையான வீரர்கள் சம்பள மாற்றுக்களை மட்டுமே அனுமதித்தது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளில் NRFU வீரர்கள் சம்பளம் பெறமுடியும், ஆனால் அவர்கள் விளையாட்டு அல்லாமல் வேறு இடத்தில் பணிபுரிய வேண்டும்.
தொழில்முறை லீக்கின் தேவைகள் தூண்டியதால் ரக்பி சிறந்த "பார்வையாளர்" விளையாட்டாக மாறியது. சில ஆண்டுகளில் NRFU விதிகள் RFU இலிருந்து வேறுபடத் தொடங்கின, அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது லைன்-அவுட் ரத்துச் செய்யப்பட்டதாகும். இது ரக் ஆனது "பிளே-த-பால் ரக்" கொண்டு ஈடுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இருந்தது, இது மார்க்கரில் டேக்ளர் மற்றும் எதிர்த்து விளையாடும் வீரர் ஆகியோரிடையே இரண்டு வீரர் ரக் போட்டியை அனுமதித்தது. ஒருமுறை பந்தைக் கொண்டு வருபவரை வைத்து மௌல்கள் நிறுத்தப்பட்டன, அவற்றுக்குப் பதிலாக பிளே-த பால்-ரக் பதிலீடு செய்யப்பட்டிருக்கின்றன. NRFU இன் வேறுபட்ட லன்காஷையர் மற்றும் யார்க்ஷையர் போட்டிகள் 1901 இல் இணைக்கப்பட்டு வடக்கு ரக்பி லீக் உருவானது, இங்கிலாந்தில் ரக்பி லீக் என்ற பெயர் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில் RFU வடிவ ரக்பியானது, IRFB உடன் இணைந்த தேசிய கூட்டமைப்பின் மீதமிருந்த கிளப்களினால் விளையாடப்பட்டது, பின்னர் அது ரக்பி யூனியன் என்று மாறியது.
சங்கக் கால்பந்தின் உலகமயமாக்கல்
உலகளாவிய சங்கக் கால்பந்துக்கான ஒற்றை அமைப்புத் தேவையானது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சர்வதேச பந்தைய ஆட்ட ஏற்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் வெளிப்படையானது. இங்கிலீஷ் கால்பந்து சங்கக் சர்வதேச அமைப்பை உருவாக்குதல் தொடர்பான பல விவாதங்களை முன்னெடுத்தது, ஆனால் அவை எந்த முன்னேற்றத்தையும் உருவாக்காமல் முடிந்தது. இது சர்வதேச சங்கத்தை அமைக்க பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள சங்கங்களின் மீது அப்பொறுப்பு வீழ்ந்தது. Fédération Internationale de Football Association (FIFA) என்ற அமைப்பு பாரிஸில் மே 21, 1904 அன்று நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக ராபர்ட் கியூரின் இருந்தார். பிரெஞ்சு பெயரான இதுவும் அதன் சுருக்கப் பெயரும் பிரெஞ்சு பேசாத நாடுகளிலும் அப்படியே உள்ளது.
அமெரிக்கக் கால்பந்தின் சீர்திருத்தம்
ரக்பி மற்றும் அமெரிக்க கால்பந்து இரண்டின் வடிவங்களும், அந்நேரத்தில் ஆபத்தான காயங்களுக்காகவும் அதேபோன்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களின் சாவுக்காகவும் கவனத்தில் கொள்ளப்பட்டன. U.S.A. இல் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இது தேசிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் பல கல்லூரிகளில் அமெரிக்க கால்பந்து தடைசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1905–06 இல் 19 கல்லூரிகளால் முக்கியமான கூட்டம் நடத்தப்பட்டது. இது அதிபர் தியோடர் ரூஸ்வெல்டின் விருப்பத்தின் பேரில் பொதுவாக நடைபெற்றது. அவர் விளையாட்டின் ஆர்வலராக இருந்தார், ஆனால் இறப்பு எண்ணிக்கை மற்றும் ஊனங்களைக் குறைக்க விதிகளை மாற்றி அமைக்கும் வரை அதைத் தடை செய்வதாக அச்சுறுத்தினார். இந்தச் சந்திப்புகள் இப்பொழுது தேசிய கல்லூரிகள் தடகளக் கூட்டமைப்பின் மூலமாகக் கருதப்படுகின்றன.
விளையாட்டுக் களத்தினை அகலப்படுத்துதல் ஒரு மாற்றமாக முன்மொழியப்பட்டது. இருப்பினும், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு கான்கிரீட் ஸ்டேடியத்தை கட்டியது, எனவே பார்வேடு பாஸ் சட்டமாக்கலை முன்மொழிவதற்குப் பதிலாக அகலமாக்கத்தை எதிர்த்தது. அந்தக் கூட்டத்தின் அறிக்கையானது கையாளுதலில் பல கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி ரக்பியிலிருந்து விலகிச் செல்லும்படியான மேலும் இரண்டு வேறுபாடுகள்: பார்வேடு பாஸ் மற்றும் நெருக்கிக் கொண்டு விளையாடுவது தடை. இந்த மாற்றங்கள் உடனடியாக விருப்பப்பட்ட பலன் தரவில்லை, மேலும் 1908 இல் மட்டும் 33 அமெரிக்க கால்பந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் சாவு எண்ணிக்கையும் காயங்களும் மெதுவாகக் குறைந்தன.
இரண்டு ரக்பி நெறிமுறைகள் மேலும் விலகுதல்
1906 இல் ரக்பி யூனியனிலிருந்து ரக்பி லீக் விதிகள் குறிப்பிடத்தக்க முறையில் விலகி, அணியின் வீரர்கள் என்ணிக்கை 15 இலிருந்து 13 ஆக குறைந்தது. 1907 இல், நியூசிலாந்து தொழில்முறை ரக்பி அணி ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்து, மிகுந்த வரவேற்பைப் பெற்றது, மேலும் அடுத்த ஆண்டில் தொழில்முறை ரக்பி லீக்குகள் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டன. இருப்பினும், தொழில்முறை விளையாட்டுகளின் விதிமுறைகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றிற்கு வேறுபடுகின்றது, மேலும் ஒவ்வொரு சர்வதேச போட்டிக்குமான சரியான விதிகளை நிர்ணயிக்க பல்வேறு தேசிய அமைப்புகளிடையே பேச்சுவார்த்தை தேவைப்பட்டது. இந்த சூழ்நிலை 1948 வரை தொடர்ந்த போது, பிரெஞ்சு லீக்கின் தூண்டுதலினால் போர்டியாக்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் ரக்பி லீக் இண்டர்நேஷனல் பெடரேஷன் (RLIF) அமைக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் போது விதிமுறைகள் மேலும் மாற்றப்பட்டன. 1966 இல், ரக்பி லீக் அதிகாரிகள் அமெரிக்க கால்பந்தின் டவுன்ஸ் கருத்தை எடுத்துக்கொண்டனர்: ஒரு அணி பந்தை நான்கு தடுப்பாட்டங்களுக்கு மேல் மறுபடியும் வைத்திருக்க முடியாது. அதிகபட்ச தடுப்பாட்டங்களின் எண்ணிக்கை பின்னர் ஆறாக (1971 இல்) அதிகரிக்கப்பட்டது, மேலும் ரக்பி லீக்கில் இது சிக்ஸ் தடுப்பாட்ட விதி என்று அறியப்பட்டது.
1990களின் தொடக்கத்தில் முழுநேர தொழில்முறை வீரர்கள் மற்றும் விளையாட்டின் தொடர்ச்சியான வேகம் ஆகியவற்றால், இரு அணிகளுக்கு இடையேயான ஐந்து மீட்டர் ஆப்-சைடு தூரம் 10 மீட்டர்களாக மாறியது, பிற மாற்றங்களுடன், மாற்றப்பட்ட விதியானது பல்வேறு இடை மாற்ற விதிகளால் அதன் இடத்தில் நிரப்பப்பட்டது.
ரக்பி யூனியனின் விதிகளும் 20 ஆம் நூற்றாண்டின் போது குறிப்பிடும்படியாக மாற்றப்பட்டன. குறிப்பாக, மார்க் லிருந்து கோல்கள் போடுவது நீக்கப்பட்டது, 22 மீட்டர் எல்லைக்கு வெளியே இருந்து நேரடியாக தொடும்படியான கிக்குகள் தண்டிக்கப்பட்டன, ஒரு முடிவுறாத ரக் அல்லது மௌல் லை யார் வைத்திருந்தனர் என்பதைக் கண்டறிய புதிய விதிகள் இடப்பட்டன மேலும் லைன் அவுட்களிலிருந்து வீரர்கள் பந்தை எறிவது சட்டமாக்கப்பட்டது.
1995 இல் ரக்பி யூனியன், தொழில்முறை வீரர்களை அனுமதிக்கும் "திறந்த" விளையாட்டானது. இருப்பினும் இரண்டு நெறிமுறைகளுக்கும் இடையேயான துவக்கக்கால சர்ச்சை மறைந்துவிட்டது — ரக்பி கால்பந்தின் இரண்டு வடிவங்களின் அதிகாரிகள் மறு இணைப்பின் சாத்தியக்கூறுகளை சில நேரங்களில் குறிப்பிட்டனர் — இரண்டு நெறிமுறைகளின் விதிகள் மற்றும் அவற்றின் கலாச்சாரம் முன் அறியக்கூடிய எதிர்காலம் வரை அப்படியொரு நிகழ்வு ஏற்படாத அளவில் விலகியிருந்தன.
இன்றைய கால்பந்து
ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் "கால்பந்து" என்ற வார்த்தையின் பயன்பாடு
"கால்பந்து " என்ற வார்த்தையானது மேலே விவரிக்கப்பட்ட ஏதேனும் ஒன்றைக் குறிப்பதானது ஒரு குறிப்பிட்ட விளையாட்டைக் குறிப்பிடுவதில் பயன்படுகின்றது. இதனால், கால்பந்து என்ற வார்த்தையின் மீது மிகவும் நட்பு ரீதியிலான சர்சைகள் நிகழுகின்றன, முக்கியமாக அது ஆங்கிலம் பேசும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும், "கால்பந்து" என்ற வார்த்தையானது அந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படுகின்ற கால்பந்து நெறிமுறையைக் குறிக்கப் பயன்படுகின்றது. எனவே மிகச்சரியாகக் கூறினால் "கால்பந்து" என்ற வார்த்தையானது வழக்கமாக ஒருவர் கூறும் இடத்தைச் சார்ந்து பொருள்படுகின்றது.
"சாக்கர்" என்பது அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சங்கக் கால்பந்திற்கான பொதுவான வரையரையாக இருக்கின்றது, அங்கு பிற கால்பந்தின் நெறிமுறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, ஆனால் "சாக்கர்" (அல்லது "சாக்கர் கால்பந்து") என்ற பெயர் உண்மையில் "அசோசியேஷன்" என்ற வார்த்தையின் சுருக்கப்பெயரின் வழக்காகும் மேலும் FIFA உடன் இணைந்துள்ள 45 நாடுகளில் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ அல்லது முதன்மை மொழியாக இருந்தாலும், மூன்று நாடுகளில் (கனடா, சமோவா மற்றும் அமெரிக்கா) மட்டுமே அவற்றின் அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பெயர்களில் "சாக்கர்" என்பதைப் பயன்படுத்துகின்றன. எஞ்சியிருப்பவை கால்பந்து என்பதைப் பயன்படுத்துகின்றன (இருப்பினும் சமோவான் பெடரேஷன் இயல்பாக இரண்டையும் பயன்படுத்துகின்றது மேலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சாக்கர் அமைப்புகளால் "கால்பந்து" என்ற வார்த்தைப் பயன்பாடு சமீபத்திய மாற்றமாகும்).
ஆங்கிலம் பேசாத நாடுகளில் "கால்பந்து" என்ற வார்த்தையின் பயன்பாடு
பொதுவாக இன்று உலகம் முழுவதிலும் "கால்பந்து" என்ற வார்த்தை மற்றும் (ஸ்பானிஷில் fútbol மற்றும் ஜெர்மனில் Fußball/Fussball போன்று) அதன் நேரடி மொழியாக்கம் ஆகியவை சங்கக் கால்பந்துக்கான பெயராகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிராங்கோபோன் க்யூபெக்கில்,கனடிய கால்பந்து மிகவும் பிரபலமானது, சங்கக்கால்பந்து விளையாட்டு லீ சாக்கர் என்றும் கனடிய நெறிமுறையானது லீ கால்பந்து எனவும் அறியப்படுகின்றன.
குறிப்புகள்
மேற்கோள்கள்
மேண்டல்பம், மைக்கேல் (2004); த மீனிங் ஆப் ஸ்போர்ட்ஸ் ; பொது அப்பயர்ஸ்,
கிரீன், ஜியோஃப்ரி (1953); த ஹிஸ்டரி ஆப் த ஃபுட்பால் அசோசியேஷன் ; நால்ட்ரெட் பிரஸ், இலண்டன்
வில்லியம்ஸ், கிரஹாம் (1994); த கோட் வார் ; யோர் பப்ளிகாஷன்ஸ்,
புற இணைப்புகள்
காற்பந்தாட்டம்
கூகுள் தமிழாக்கம்-காற்பந்தாட்டம்
|
4638
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81
|
டென்னிசு
|
டென்னிசு (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.
டென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது. எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும். தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது. ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும்.
மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.
விதிகள்
இப்போட்டியின் முக்கிய நோக்கம் எதிரணியினர் அடிக்கும் பந்தை தவறவிடாமல் எதிராளியின் ஆடுகளப்பகுதிக்கு அனுப்புவதாகும்.
மேலும் பந்தை தவற விட்டாலோ அல்லது ஆடுகளப்பகுதிக்கு வெளியே பந்தை அடித்து அனுப்பினாலோ மேலும் அடிக்கும் பந்து வலையில் பட்டாலும் எதிர் போட்டியாளர்க்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
புள்ளிகள் வழங்கும் முறை
ஒரு "கேம்" எனப்படும் விளையாட்டில் வெற்றிபெற குறைந்தது நான்கு புள்ளிகளும் எதிராளியை விட இரு புள்ளிகள் அதிகமாகவோ பெற வேண்டும்.முதலில் ஆறு "கேம்களை" வெற்றிபெற்றவர் ஒரு "செட்" என்று அழைக்கப்படும் சுற்றில் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஒரு ஆட்டமானது 3 அல்லது 5 சுற்றை கொண்டிருக்கும் இதில் அதிகமான சுற்றுகளில் வெற்றியடைந்த போட்டியாளர் ஆட்டத்தில் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படுவார்.
கேம் (ஆட்டம்)
ஒரு கேம் என்பது பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரர்க்கு வழங்கப்படும் புள்ளிகளின் வரிசையாகும்.போட்டியில் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள் வென்ற முதல் வீரர் மற்ற எதிர் போட்டியாளரைக் காட்டிலும் குறைந்தது இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றால் ஒரு கேம் வென்றதாக கருதப்படுவார்.விளையாடப்படும் ஒவ்வொரு கேம்மிற்கும் (ஆட்டம்) வழங்கப்படும் புள்ளிகள் டென்னிசு விளையாட்டில் விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது:பூஜ்யம் முதல் மூன்று புள்ளிகள் வரை முறையே "(love)லவ்", "பதினைந்து", "முப்பது" மற்றும் "நாற்பது" என்று அழைக்கின்றனர். குறைந்த பட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொன்றும் ஆட்டக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டால், நாற்பது புள்ளிகள் முதலில் பெறும் வீரர் வெற்றி பெறுவார். ஆனால் சில சமயங்களில் நாற்பது புள்ளிகளுக்கு சமமான புள்ளிகளை இரு ஆட்டகாரர்களும் பெற்றால், ஸ்கோர் "நாற்பது நாற்பது" என்று அழைக்கப்படுவதில்லை, மாறாக "டியுஸ் (deuce)" என்று அழைக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொரு பக்கத்திலும் அடித்திருந்தால், ஒரு வீரர் தனது எதிர் வீரரை விட ஒரு புள்ளி அதிகம் கொண்டிருந்தால், இது அந்த முன்னணியில் உள்ள வீரருக்கு "சாதகமானது (advantage)" ஆகும்.
ஒரு டென்னிஸ் விளையாட்டின் புள்ளிகள் கணக்கை முதன்முதலில் பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரரின் புள்ளிகள் மூலம் வாசிக்கப்படுகிறது. போட்டியில் விளையாடுகையில், ஒவ்வொரு புள்ளிகளுக்கும் இடையில், நாற்காலி நடுவர் புள்ளியை (எ.கா., "பதினைந்து-லவ்") என்று அழைக்கிறார்.
ஒரு விளையாட்டின் முடிவில், நாற்காலி நடுவர் ஆட்டதின் ஒட்டுமொத்த புள்ளிகளையும் மற்றும் வெற்றிபெற்ற வீரரை பற்றியும் அறிவிக்கிறார்.
செட்(Set)
ஒரு செட்(Set) அல்லது தொகுப்பு என்பது பல கேம்களின் தொடர் வரிசையாகும்.இந்த தொடர் கேம்களில், சேவை (பந்தை அடித்து) ஆரம்பிக்கும் வாய்ப்பு இரு வீரர்களுக்கும் கேம்களுக்கு இடையே மாறி வரும். கேம்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை (புள்ளியை) எட்டும்போது முடிவடையும்.
பொதுவாக, ஒரு ஆட்டக்காரர் ஒரு செட்டை வெள்ள குறைந்தபட்சம் ஆறு கேம்களை(ஆட்டங்களை) வென்றும், எதிர் வீரரை காட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு கேம்களை அதிகம் வென்றிருக்கவேண்டும்.
ஒரு வீரர் ஆறு ஆட்டங்களையும்(கேம்கள்) , எதிர் வீரர் ஐந்து ஆட்டங்கள்(கேம்கள்) வென்றிருந்தால், ஒரு கூடுதல் (கேம்) ஆட்டம் விளையாடப்படும்.அந்த கூடுதல் ஆட்டத்தில் புள்ளிகளில் முன்னணி வகிக்கும் வீரர் வெற்றி பெற்றால், வீரர் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக கருதப்படுவார் மாறாக எதிர் வீரர் வென்றால் ஒரு டை-பிரேக் ஆட்டம் விளையாடப்படும்.
ஒரு தனிப்பட்ட விதிகளின் கீழ் விளையாடப்படும் ஒரு டை-பிரேக் என்பது, ஒரு ஆட்டக்காரர் இன்னும் ஒரு ஆட்டத்தை (கேம்) வென்றெடுக்க அனுமதிக்கிறது, இதனால் செட், 7-6 என்ற இறுதிப் புள்ளியை கொடுக்கிறது.
ஒரு "லவ் செட்" என்பது, தோல்வி பெற்ற வீரர் பூஜ்ய புள்ளிகளை பெற்றதை குறிக்கிறது, வழக்கமாக அமெரிக்காவில் 'ஜாம் டோனட் (jam donut)' என்று அழைக்கப்பட்டது.
போட்டியில் விளையாடும் போது, நாற்காலி நடுவர் செட் வென்ற வீரர் மற்றும் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகள் அறிவிக்கிறார். செட்டில் உள்ள இறுதிப் புள்ளியை முதன் முதலில் பெற்ற வீரர் மூலம் வாசிக்கப்படும், எ.கா. "6-2, 4-6, 6-0, 7-5".
போட்டிப்புள்ளி (Match score)
ஒரு போட்டிப்புள்ளி (Match score) என்பது பல செட்டுகளின் தொகுப்பாகும். போட்டியின் முடிவானது சிறந்த மூன்று அல்லது ஐந்து செட்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
பொழுதுபோக்கிற்காக விளையாடும் வீரர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரம் அல்லது அவர்களின் சக்தியை பொறுத்து, எத்தனை செட் விளையாடவது என்பதை ஒப்புக்கொள்ளவார்கள்.
தொழில்முறை விளையாட்டில், ஆண்கள் சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டியாக நான்கு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், டேவிஸ் கோப்பை, மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகள் இறுதிச் சுற்று போட்டிகளில் விளையாடுவார்கள் மற்றும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்டதாக மற்ற போட்டிகளில் விளையாடுவார்கள்,பெண்கள் அனைத்து போட்டிகளிலும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளை விளையாடுகின்றனர்.
ஒரு சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளில் இரண்டு செட் வென்ற முதலாவது வீரர், அல்லது சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டிகளில் ஐந்து-ல் மூன்று செட் வென்ற முதலாவது வீரர், போட்டியில் வெற்றி பெறுவார்.
ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன், ஒலிம்பிக் விளையாட்டுகள், டேவிஸ் கோப்பை (2015 வரை) மற்றும் பெட் கோப்பை ஆகியவைகளில் டை-பிரேக்கற்கள் விளையாடப்படவில்லை. இந்த நிகழ்வில், ஒரு வீரர் இரு கேம்கள் முன்னணிக்கு வரும் வரை, செட் காலவரையின்றி விளையாடப்படும்.
சிறப்பு புள்ளிகள் விதிமுறைகள்
கேம் புள்ளி
கேம் புள்ளி என்பது ஆட்டத்தில் முன்னணியில் உள்ள வீரர் விளையாட்டை வெல்ல ஒரே ஒரு புள்ளியை தேவைபடும்போது டென்னிஸ் விளையாட்டில் இதை ஒரு கேம் புள்ளி என்று அழைக்கின்றனர்.
இந்த சொற்களானது செட் (செட் புள்ளி), போட்டிகள் (போட்டிப் புள்ளி) மற்றும் சாம்பியன்ஷிப் (சாம்பியன்ஷிப் புள்ளி) ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது.
ஆடு தளம்
ஆடும் தளம் 23.8 மீ (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் புல்வெளி, களிமண், செம்மண், கற்காறை (கான்கிரீட்),
மரம்த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.
பந்து
டென்னிசுப் பந்து உள்புறம் காலியாக (உள்ளீடு அற்றதாக) உள்ள ரப்பர் பந்து. இதன் மேல் மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும். பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் வரை இருக்கலாம். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளை கோடு போட்ட பந்துகள் பொதுவாக பயன்படுத்தப் படும்.
சல்லடை மட்டை
சல்லடைக் கைமட்டைகளுக்குத் (ராக்கெட்டுகளுக்கு) தீர்மான வரையறை இல்லை. இவை பெரும்பாலும் நீள்வட்ட வடிவில் கைப்பிடியுடன் இருக்கும். அதன் நீள்வட்டப் பகுதியின் அளவைப் பொருத்து பொதுச்சீர் (இஸ்டாண்டர்டு, Standard), நடுவளவு (மிட்சைசு, Mid size), பெரிது (ஓவர்சைசு, Over size), மிகப்பெரிது (சூப்பர் ஓவர்சைசு, Super over size) என்று வழங்கப்படும். முந்தய காலகட்டங்களில் மட்டைகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை பலவகை உலோகங்கள்,கார்பன் கிராபைட்,டைட்டானியம் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது.
போட்டிகளில் பயன்படுத்தும் சல்லடை மட்டைகள் (ராக்கெட்) 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை. மேலும் இது போட்டியாளர்களுக்கு எந்த வகை செய்திகளை கொண்டதாகவோ அல்லது ஆற்றல் மூலங்களை உட்பொதிந்ததாகவோ இருக்க கூடாது.
சிறப்புப் போட்டிகள்
இவ்விளையாட்டுப் போட்டியில் விம்பிள்டன் டென்னிசு போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டி ஆகியவை சிறப்புப் போட்டிகளாகக் கருதப்படுகின்றன. விம்பிள்டன் டென்னிசு போட்டிகள் 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் எனும் இடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டிகள் 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டேவிஸ் கோப்பை போட்டியை டிலைட் எப் டேவிஸ் என்பவர் இதற்கான கோப்பையை வழங்கினார்.
மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டி பிரபலமானதாக உள்ளது. அவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகள் கடினமான தரையிலும்,பிரஞ்சு ஓபன் சிவப்பு களிமண் ஆடுகளத்தையும், விம்பிள்டன் போட்டிகள் புல்தரையை கொண்ட ஆடுகளத்திலும் நடைபெறும்.
* சர்வதேச போட்டிகள் 1925 முதல் நடைபெறுகிறது
மேலும் காண்க
சாக்கர்
இரக்பி
கிரிக்கெட்
விளையாட்டு
மேற்கோள்கள்
டென்னிஸ்
|
4641
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்
|
காற்பந்து உலகக் கோப்பைக்கான வெற்றிக் கிண்ணமானது பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பினரிடையே நடைபெறும் உலகளவிலான காற்பந்தாட்டப் போட்டியில் வெற்றியடையும் அணிக்கு வழங்கப்படும் ஒரு தங்கத்தினாலான வெற்றிக் கிண்ணமாகும். 1930 இல் உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் ஆரம்பித்த காலம்தொட்டு 1970 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்டு வந்த வெற்றிக் கிண்ணம் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை (Jules Rimet Trophy) என அழைக்கப்பட்டது. 1970ம் ஆண்டில் பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்தக் கோப்பை பிரேசிலிடம் நிரந்தரமாக தங்கி விட்டது. 1983-ஆம் ஆண்டில் திருடுபோன இக்கோப்பை மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.
1974ம் ஆண்டின் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக இத்தாலிய கலைஞரான 'சில்வியோ கஸ்சானிகா' வடிவமைத்த பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின், காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் (FIFA World Cup Trophy) தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை வெற்றியாளர்களின் பெயர்களை பொறித்து வைக்க இயலும்.
இக்கோப்பையை பன்னாட்டு கால்பந்து குழுமம் (FIFA) தன்னிடமே வைத்துக் கொள்ளும். வெற்றியடைந்த அணி இதே போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பிரதியை (replica) எடுத்துச் செல்லும். தற்போது இக்கோப்பையை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள், 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை வென்ற செருமானிய அணியினர் ஆவர்.
ஜூல்ஸ் ரிமெட் கோப்பை
இந்த உலகக் கோப்பையானது 1929இல் வடிவமைக்கப்பட்டது. கிரேக்கப் புராணத்தில் குறிப்பிடப்படும் வெற்றி தேவதையான நைக், சிறகுகளை விரித்தபடி, தன் இரு கைகளைத் தூக்கியிருப்பதுபோல, வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட சிலையே இக்கோப்பையாகும். இதனைத் தாங்கும் பீடமானது விலை மதிப்புமிக்க நிலப் படிகக் கற் பாறையால் செதுக்கப்பட்டிருந்தது.
1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக உலகக்கோப்பை (அ) கோபா டு முன்டே என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்டு திரும்பக் கிடைக்காமல் போனது.
உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்
1974 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை முன்னிட்டு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடை கொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.
வெற்றியாளர்கள்
ஜூல்ஸ் ரிமெட் கோப்பை
– 1930, 1950
– 1934, 1938
– 1954
– 1958, 1962, 1970
– 1966
உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்
– 1974, 1990, 2014
– 1978, 1986,2022
– 1982, 2006
– 1994, 2002
– 1998
– 2010
மேற்கோள்கள்
உலகக்கோப்பை காற்பந்து
|
4642
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
மாரத்தான்
|
மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 கிலோமீட்டர் ஆகும். இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்பட்டன. தடகள விளையாட்டுப் போட்டிகள் தவிர உலகின் பல நகரங்களில் 800க்கும் கூடுதலான, தீவிர விளையாட்டாளர்கள் அல்லாது உடல்நலம் பேணும் பொதுமக்களும் பங்கெடுக்கும், மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.பெரிய போட்டிகளில் ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பதும் உண்டு. முழுமையான தொலைவை ஓட முடியாதவர்களுக்காக அரை மாரத்தான் போட்டிகளும் உடன் நடைபெறும்.
வரலாறு
கி.மு. 490ல் நடந்த மாரத்தான் போரில் பாரசீகர்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க, பிலிப்பிடீசு என்ற கிரேக்க வீரன், மாரத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு, இடையில் எங்கும் நிக்காமல் தொடர்ந்து ஓடிச் சென்றான் என்றும் செய்தியைத் தெரிவித்த சிறிது நேரத்தில் மயங்கிச் செத்தான் என்றும் கூறப்படுகிறது. எனினும், இத்தகவலை உண்மையென உறுதிப்படுத்த தகவல் ஏதும் இல்லை. எரோடோட்டசு என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, பெய்டிபைட்ஸ் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கு ஓடிய ஒரு தூதுவன் ஆவார். பெய்டிபைட்ஸ் மாரத்தானுக்கும் ஏதென்சுக்கும் இடையில் ஓடினார் என்பது பிற்கால எழுத்தாளர்களால் புனையப்பட்டது என்றும் கருத வாய்ப்பிருக்கிறது. இது போன்ற குறிப்பு கி. பி. முதலாம் நூற்றாண்டில் புளூடார்ச்ச் என்பவரால் எழுதப்பட்ட "ஒன் தி குளோரி ஒவ் ஏதென்ஸ்" On the Glory of Athens என்ற நூலில் காணக்கிடைக்கிறது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கணிப்புப்படி மாரத்தான் போர்க்களத்தில் இருந்து ஏதென்சுக்கு உள்ள தொலைவு 34.5 கி.மீ அல்லது 21.4 மைல்கள் ஆகும்.
மாரத்தான் போட்டிகள் முதன்முதலில் 1896 நவீன ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொலைவு
தொடக்க காலத்தில், மாரத்தான் போட்டிகளின் ஓட்டத் தொலைவு தீர்மானிக்கப்படவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒரே தடத்தில் ஓடுகிறார்கள் என்பது தான் முக்கியமாக கருதப்பட்டது. தொடக்க கால ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளின் ஓட்டத் தொலைவு, போட்டி நடக்கும் இடத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருந்தது.
தற்போது உறுதியாக கடைப்பிடிக்கப்படும் 42.195 கி.மீ போட்டித் தொலைவு, 1921ஆம் ஆண்டில் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் என்ற அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இதனையும் காண்க
சென்னை மாரத்தான்
புனே பன்னாட்டு மாரத்தான்
மும்பை மாரத்தான்
பாஸ்டன் மாரத்தான்
வெளியிணைப்புகள்
Yearly marathon rankings (Association of Road Racing Statisticians)
List of marathons 1940–present (Association of Road Racing Statisticians)
A site entirely dedicated to the Olympic marathons
Marine Corps Marathon race director discusses why marathons have become so popular (video)
The History of the Marathon
மாரத்தான் சாம்பியன்களை தூண்டும் உணவு
தடகள விளையாட்டுகள்
மாரத்தான்கள்
|
4643
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
தடை தாண்டும் ஓட்டம்
|
தடை தாண்டும் ஓட்டம் என்பது தடைகளைத் தாண்டி ஓடும் ஒரு விளையாட்டுப் போட்டியாகும். எல்லா தடை தாண்டும் ஓட்டத்திற்கும் 10 தடைகள் அமைக்கப்படும். ஓடும் பொழுது இவைகள் தட்டி கீழே விழுந்தால் குற்றமில்லை. தடைதாண்டி ஓடுதலில் குறுந்தூர ஓட்டம், நெடுந்தூர ஓட்டம் என இருவகையுண்டு.
குறுந்தூரத் தடைதாண்டலில்,
ஆண்களுக்கான அளவுகள்: 110மீட்டருக்கு - 1.067மீட்டர்; 400மீட்டருக்கு - 0.914மீட்டர்
பெண்களுக்கான அளவுகள்: 100மீட்டருக்கு - 0.838மீட்டர்; 400மீட்டருக்கு - 0.762மீட்டர்
நெடுந்தூரத் தடை தாண்டலில் இரு பாலாருக்குமான தூரம் 400 மீட்டர் ஆகும்.
தடகள விளையாட்டுகள்
ஓட்ட வகைகள்
|
4645
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
|
நடைப்போட்டி
|
நடைப்போட்டி அல்லது நடையோட்டம் ஒரு தட கள விளையாட்டுப் போட்டி. ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடந்து அதி வேகமாக யார் சென்று முடிப்பதுதான் நடைப்போட்டி. நடக்கும் பொழுது எப்பொழுதும் பாதத்தில் ஏதாவது ஒரு பாகம் தரையில் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடிக்கும் கால் கணநேரம் நேராக நிற்க வேண்டும். நடைப்போட்டி பொதுவாக 10கி.மீ. முதல் 50 கி.மீ தூரம் வரை நடைபெறும். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.
வெளி இணைப்புகள்
Racewalk.com
High School Race Walking
Race Walking Record - News, photos and reports all about racewalking
World Masters Race Walking Rankings
Race Walk UK
Race Walk Australia
The Walking Site
D. Guebey walking pages
Swiss Walking Federation
தடகள விளையாட்டுகள்
தனிநபர் விளையாட்டுக்கள்
|
4646
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D
|
ஸ்டீபிள்சேஸ்
|
ஸ்டீப்பிள்சேஸ் (Steeplechase) என்பது குதிரை ஓட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். குதிரைகளைச் சரியாக வழிச்செலுத்தி பலவகைத் தடைகளைத் தாண்டச்செய்யும் இந்த விளையாட்டுப் போட்டியில் 3,000 மீட்டர் தூரப்போட்டி 7.5 சுற்றுக்களில் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மூன்று நிலையான தடைகள் இருக்கும். நீர்நிலையைத் தாண்டிக் குதிக்கும் தடை ஓடுகளத்திற்கு சற்று வெளிப்புறத்தில் அமைந்திருக்கும்.
விளையாட்டுகள்
|
4647
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
தடகள விளையாட்டரங்கு
|
தடகள விளையாட்டரங்கு (Athlectic Stadium) : 100 மீட்டர் முதல் 10,000 மீட்டர் முதலான ஓட்டப் பந்தயங்கள், ஒரு சுற்றுக்கு 400 மீட்டர் நீளம் கொண்ட நீள்வட்ட வடிவ தடத்தில் (Track) நடைபெறும். இந்த தடத்தின் நடுவில் களப்போட்டிகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்றவை நடைபெறும். தடத்தை சுற்றிலும் சாலையில் ஓடும் மாரத்தான் மற்றும் நடை போட்டிகள் விளையாட்டரங்கில் துவங்கி, சாலையில் தொடர்ந்து மீண்டும் விளையாட்டரங்கிலேயே முடிகிறது.
தடம்
தற்போது பன்னாட்டு போட்டிகள் எந்த பருவநிலையிலும் உபயோகப்படுத்தக்கூடிய செயற்கைத்தரை (synthetic) ஓடுகளங்களில் நடைபெறுகின்றன. ஓடுகளம் எட்டு வரிசைகள் கொண்ட ஒரு சுற்றுக்கு 400 மீட்டர் தூரம் உடைய நீள்வட்டப் பாதை. 100 மீட்டர், 110 மீட்டர் பந்தயங்கள் நேர்கோட்டிலேயே நடைபெற ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். எல்லா பந்தயங்களுக்கும் முடிவுறும் வெற்றிக் கோடு (Finishing line) ஓரே இடத்தில் வருமாறு போட்டிகள் நடத்தப்படும்.
தடகள விளையாட்டுகள்
விளையாட்டு அரங்குகள்
|
4650
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
பணம்
|
பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும்.
பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக பரிமாற்றத்திற்கான ஊடகம், கணக்கிற்கான அலகு மற்றும் சேமிப்பு மதிப்பு என வரையறுக்கப்படுகிறது. அரிதாக இது எதிர்கால பெறுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது
இந்த செயற்பாடுகளை நிறைவேற்றும் எந்தவொரு பொருளும் அல்லது சரிபார்க்கக்கூடிய பதிவும் பணமாக கருதப்படுகிறது. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.
ஒரு நாட்டின் பண வழங்கல் நாணயங்களும் (வங்கித்தாள்கள் மற்றும் காசுகள்) வங்கிப் பணமும் (வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மீதத்தொகை) சேர்ந்ததாகும். பெரும்பாலும் பதிவுகளில் உள்ள வங்கிப் பணம் (பெரும்பான்மையான வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன), வளர்ந்த நாடுகளின் பண வழங்கலில் பெரும்பங்காக உள்ளன.
வரலாறு
பண்டமாற்று முறையில் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெறுமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் சம்பளமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)
பண்டமாற்று போன்ற செயற்பாடுகள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளபோதிலும், எந்தவொரு சமூகமோ பொருளியல் அமைப்போ பண்டமாற்றை மட்டும் பயன்படுத்தியதற்கு சான்று எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
மாற்றாக, நாணயங்கள் ஏற்படாத சமூகங்களில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கொடையாகவோ அல்லது கடனாகவோ தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
பண்டமாற்று முறைகள் பெரும்பாலும் முழுவதும் தெரியாதவர்களிடமோ எதிரிகளிடமோதான் மேற்கொள்ளப்பட்டன.
பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாறப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. பல பண்பாடுகளிலும் பண்டமாற்றிற்கு மாற்றாக பண்டமதிப்பு பணம் செயற்பாட்டிற்கு வந்தது. வாற்கோதுமையை எடையிட பயன்படுத்தப்பட்ட செகல் என்ற அலகு பணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.
இந்த அலகு முதன்முதலாக கிமு 3000 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காக்கள்,ஆசியா,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய சமூகங்கள் சோழிகளைப் பணமாகப் பயன்படுத்தினர்.
தற்கால அறிஞர்கள் முதல் உலோக நாணயம் கிமு 650–600களில் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.
சங்ககாலத் தமிழ்நாடு
சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் கண்டறியப்படவில்லை. சங்க காலம் தொடங்கி கிடைத்துள்ள நாணயங்களில் சில பழம் பாண்டிய மன்னர்களுடையவை. அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. அவற்றின் ஒரு புறம் மீன் சின்னத்தையும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னத்தையும் பொறித்துள்ளனர். அவை கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையவை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவலன் பொட்டல் எனுமிடத்தில் சங்க காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.
பணத்தின் வகைகள்
முதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெறுமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெறுமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.
தாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.
உற்பத்தி
1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்யப்படும் பணத்திற்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு தங்க மாற்று என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே. பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.
இதனால் பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பாலான பணம் வெளியிட படுவது பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை (Money As Debt.) ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.
உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன் ஆகும். அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன். வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன்கள் ஆகும்.
பண வளர்ச்சி
நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கப்படும் முதலீட்டு வங்கிகள் (investment bank),(Shadow banking System) ஹெட்ஜ் முத்லீடு, வங்கி சாரா பொருளாதார அமைப்புகள் (Non banking financial institutions) மூலமும் பணத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் பணத்திற்கும் அதன் மூலம் ஏற்படும் அபாயத்திற்காகவும் வைப்பு தொகை எதுவும் வைக்க தேவையில்லை. கடன் கொடுத்தபின்னர் இவர்கள் சந்திக்கும் அபாயம் அதிகம் ஆகும். ஆனால் வங்கியானது கடன் கொடுக்கும்போது இந்த நிழல் வங்கி அமைப்புகளிடமே பணம் வசூலித்துக்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கி கடன்பெறுபவரின் தரம் பற்றி கவலைப்படாமல் கடன் கொடுக்கும்.
தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க -முயற்சி செய்வது போல் உள்ளது.
பிஷ்சரின் சமன்பாடு
MV=PQ
Money M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு
V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது.
P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை
Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.
ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.
பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.
உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.
மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.
Money இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது. இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.
மேலே சொன்ன சமன்பாட்டில் (MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.
பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது இழப்பு உண்டாகிறது. விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் பின்னர் நட்டம் அடைவது இயற்கை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பணம்
|
4651
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
|
ரக்சா பந்தன்
|
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.
ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணம்
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.
ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப்பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.
கிமு 326 ல் மாவீரர் அலக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து இந்தியாவின் ஏறக்குறைய வடக்குப் பகுதியனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலக்ஸாண்டரை விட்டு விட்டார்.
இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதற்கு கதை கதையாக சொல்லிக்கொண்டு போகலாம். தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பண்டிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
மேற்கோள்கள்
இந்து சமய விழாக்கள்
|
4652
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF
|
மரியா மாண்ட்டிசோரி
|
மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.
மாண்டிசோரி முறைக் கல்வி
இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child".
இத்தாலிய அறிஞர்கள்
புகழ்பெற்ற பெண்கள்
1870 பிறப்புகள்
1952 இறப்புகள்
கல்வியாளர்கள்
இத்தாலிய மெய்யியலாளர்கள்
|
4653
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
|
கின்டர்கார்ட்டின்
|
கின்டர்கார்ட்டின் (Kindergarten) என்பது இடாய்ச்சு மொழிச் சொல், இதற்கு "குழந்தைகளின் தோட்டம்" என்று பொருள். பிரெட்ரிக் புரோபல் என்ற செருமானிய கல்வியாளருக்கு குழந்தைப் பருவ அனுபவங்கள் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவர் மற்ற ஆசிரியர்களைத் தங்கள் குழந்தைப் பருவம் குறித்தும் அது அமைந்திருக்க வேண்டிய விதம் குறித்தும் சிந்திக்குமாறு தூண்டினார்.
அவர் 1837ம் ஆண்டு 'ப்ளாக்கென்பர்க்' நகரில் கிண்டர்கார்டென்னைத் துவக்கினார். பாடத்திட்டத்தில் பாடல்கள், கதைகள், விளையாட்டுக்கள், பரிசுகள், செயல்பாடுகள் ஆகியவை இருந்தன.
பாடல்களும், கதைகளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றலை ஊக்குவித்து, கலாசார மதிப்புகள், பழங்கால வீரர்களையும் அறிமுகப்படுத்தும். விளையாட்டுக்கள் குழந்தைகளின் சமுதாய மற்றும் உடல் திறமைகளையும், மற்றவரோடு இனைந்து செயல்படும் திறமையையும் வளர்க்கும். ப்ரோபெல்லின் பரிசுகள் உருண்டை, கனசதுரம், உருளை போன்ற வடிவங்களை அறிமுகப்படுத்தும். களிமண், மணல், அட்டை, குச்சிகள் ஆகியவற்றை வைத்து கோட்டைகள், நகரங்கள், மலைகள் உருவாக்குவார்கள்.
ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் தங்களுடன் கிண்டர்கார்டெனையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் மூலம் அமெரிக்கக் கல்வி முறையில் இது ஒரு பகுதியாகி விட்டது. அங்கிருந்து மற்ற நாடுகளிலும் ஆங்கில பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது.
கல்வி
குழந்தைப் பருவம்
|
4654
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF
|
சிட்னி
|
சிட்னி (Sydney) அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார்.
வரலாறு
குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து ஆஸ்திரேலியப் பழங்குடிகள் சிட்னி பகுதியில் வாழ்ந்து வருவதாக வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1788 இல் முதலாவது கப்பல் இங்கு வந்துறங்கிய போது 4000 முதல் 8000 வரையான பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். பிரித்தானியர்கள் இவர்களை ஈயோரா என அழைத்தனர். இங்கு முக்கியமாக மூன்று மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். அவை தாருக், தரவால் மற்றும் குரிங்காய் என்பனவாகும். இவர்கள் தனித்தனியே தமக்கென தனியான பிரதேசங்களைக் கொண்டிருந்தனர்.
1770இல் பிரித்தானிய கடற்படைத் தளபதி ஜேம்ஸ் குக் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினான். இங்குதான் அவன் குவேகல் என்ற பழங்குடியினருடன் முதன்முதலாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். பிரித்தானிய அரசின் ஆணைக்கமைய ஆர்தர் பிலிப் இங்கு பிரித்தானியக் குற்றவாளிகளைக் குடியேற்றினார். இவர்கள் 11 கப்பல்களில் 1788, ஜனவரி 20 இல் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினர். இவர்கள் வந்திறங்கிய இடம் தரக்குறைவான மண்ணையும், குறைந்தளவு குடிநீரையும் கொண்டிருந்ததால் குடியேறுவதற்குத் தகுதியானதாக இருக்கவில்லை. இதனால் பிலிப் மேலும் மேற்கே சென்று ஜாக்சன் துறையின் சிட்னி கோவ் என்ற இடத்தில் ஜனவரி 26 இல் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தார்.
புவியியல்
சிட்னியின் நகரப்பிரதேசம், கிழக்கே பசிபிக் பெருங்கடல், மேற்கே நீல மலைகள், வடக்கே ஹோக்ஸ்பரி ஆறு மற்றும் தெற்கே ரோயல் தேசிய பூங்கா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. சிட்னி பெருநகரப் பிரதேசத்தில் புகழ்பெற்ற பொண்டாய் கடற்கரை உட்பட சுமார் 70 துறைமுகங்கள் அல்லது கடற்கரைப்பிர்தேசங்கள் உள்ளன.
காலநிலை
சிட்னி 2000
2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ், நகரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நகரின் போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு எல்லாமே கிட்டத்தட்ட புதிதாய் அமைக்கப்பட்டன. ஏராளமான புதிய உணவு விடுதிகள், குடியிருப்பு மனைகள், நகரின் அழகையும் இயல்பையும் கெடுத்து விட்டது என்பது உள்ளூர்வாசிகளின் புகார். ஆம், நான்கு கோடி மக்கள் வாழும், பிரபலமான வர்த்தக நகராக இருந்தாலும், கவர்ச்சிகரமான, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு நகர இயல்பு இங்கு உண்டு.
சிட்னியின் சிறப்பு இடங்கள்
ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுகப் பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் சிட்னி ஓப்பரா மாளிகை ஆகியன உலகம் முழுவது அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கைத் துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுகக் கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இது போதாதென்று பாரமட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் (டிசம்பர் - ஜனவரி) சிட்னியின் கடற்கரை நிரம்பி வழியும்.
நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி. நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் நகர மண்டபம் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம். ஹைட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய அரும்பொருட் காட்சியகம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது.
ஒப்பரா மாளிகை அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் காணலாம்.
நகரிலிருந்து சிறிது நேரப் படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்ப் பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
கல்வி
1870 ஆம் ஆண்டில் பொதுப் பாடசாலைகள் நிறுவப்பட்டத்திலிருந்த காலத்திலிருந்தே சிட்னியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நகரில் வசிக்கும் அதிகமானோர் கல்வி கற்றோராவர். 90% ஆனோர் பாடசாலைக் கல்வி கற்றுள்ளதுடன், 57% ஆனோர் உயர்தரக் கல்வியையும் கற்றுள்ளனர்.
சிட்னியில் ஆஸ்திரேலியாவின் சில முதன்மைக் கல்வி மையங்கள் அமைந்துளன. 1850இல் நிறுவப்பட்ட சிட்னி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான பல்கலைக்கழகமாக கருதப்படுகின்றது. சிட்னியில் அமைந்துள்ள மற்ற அரசு பல்கலைக்கழகங்கள் - சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், மக்குவாரி பல்கலைக்கழகம், மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம். சிட்னியில் சிறிய வளாகங்கள் வைத்திருக்கும் மற்ற பல்கலைக்கழகங்கள் நொற்ரே டேம் பல்கலைக்கழகம், வல்லன்கொங் பல்கலைக்கழகம் மற்றும் கேர்ட்டின் பல்கலைக்கழகம் ஆகும்.
சிட்னியில் அரசாங்க, கிறிஸ்துவ மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன.
மக்கள் தொகையியல்
1788 ஆம் ஆண்டில் சிட்னியின் சனத்தொகை 1000த்தை விடவும் குறைவானதாகும். குற்றவாளிகள் இங்கு நாடுகடத்தப்பட்டதனால் பத்து வருடங்களில், மக்கள் தொகை மூன்று மடங்காக அதாவது 2,953 என அதிகரித்தது. ஒவ்வொரு தசாப்தங்களுக்குமாக 1961 வரை 250,000 ஆக சனத்தொகை அதிகரித்துவந்தது. 2011 ஆம் ஆண்டில், சிட்னியின் மக்கள் தொகை 4,391,674 ஆகும். இச்சனத்தொகை 2061 இல் 8 அல்லது 8.5 மில்லியனாக திகரிக்கும் என்று கணிகப்பட்டது.ref></ref> எனினும் 2053 இல் அதிக மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலிய நகரமான இதனை மெல்பேர்ன் முந்தும் என ஆஸ்திரேலிய புள்ளிவிபரச் சபை அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் அதிக அடர்த்தியான் நான்கு புறநகர்களும் சிட்னியிலேயே அமைந்துள்ளன. இவற்றில் ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கும் 13,000 உறைவிடங்கள் அமைந்துள்ளன.
சிட்னி வாசி ஒருவரின் சராசரி வயது 36 ஆகும். 12.9% ஆனோர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஆவர். 49.7% ஆனோர் மணமுடித்தோராயும், 34.7% ஆனோர் மணம் முடிக்காதோராயும் உள்ளனர். 48.9% தம்பதியினருக்கு குழந்தைகள் உள்ளதுடன் 33.5% ஆனோருக்கு குழந்தைகள் கிடையாது. 32.5% ஆன மக்கள் ஆங்கிலம் அல்லாத அரபு மொழி, மன்டரின், கண்டோனீயம், வியட்நாமிஸ், கிரேக்கம் ஆகிய பிற மொழிகளையும் பேசி வருகின்றனர்.
பழங்குடி மரபைச் சேர்ந்த 54,746 பேர் 2011இல் சிட்னியில் வசித்து வந்துள்ளனர். 1840 தொடக்கம் 1930 வரையான காலப்பகுதியில் சிட்னிக்கு வந்தோர் பெரும்பாலும் பிரித்தானியரும் ஐரிஷினரும், சீனரும் ஆவர்.
இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல இனக்குழுவினர் சிட்னியில் குடியேறினர். இடாய்ச்சு மக்கள், இலங்கையர், இந்தியர், அஸ்ரியர், துருக்கியர், தாய் நாட்டவர், உருசியர், வியட்நாமியர், பிலிப்பினோ, கொரியர்], கிரேக்கர், லெபனாசியர், இத்தாயர், யூதர், செக் மக்கள், போலந்து நாட்டினர், செருமானியர், சேர்பியர் ஆகியோரே இவ்வாறான இனக்குழுவினராவர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சிட்னி மாநகரசபை
சிறப்பு இடங்கள்
பவர் ஹவுஸ் நூதனசாலை
சிட்னி ஓபரா ஹவுஸ்
Royal Botanical Gardens
சிட்னிப் பல்கலைக்கழகம்
நகர புகையிரத சேவை
சிட்னியின் ஆதிகுடிகள்
ஆத்திரேலியத் தலைநகரங்கள்
|
4657
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
காடு
|
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு போன்ற பல சொற்களால் இது குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50% வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. காடுகளை, மரங்களை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்துவது வழமை எனினும், காட்டுச் சூழல்மண்டலம், பல்வேறு வகையான விலங்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல் சுற்றோட்டம், உணவு வட்டம் போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த செயற்பாடுகளும் இதற்குள் அடங்குவன. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகளின் சில வகைகளாகும்.
வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.
வரையறை
காடு என்று பொதுவாக குறிப்பிட்டாலும், அதற்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட துல்லியமான வரையறைகள் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் காடுகளுக்கு 800 க்கும் அதிகமான வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மரங்கள் இருக்கும் பகுதியை காடு என்று பொதுவாக வரையறுக்கப்பட்டாலும், பல வரையறைகளில் மரங்கள் இல்லாத ஒரு பகுதியாக இருந்தாலும், கடந்த காலத்தில் மரங்கள் இருந்த காரணத்தால், எதிர்காலத்தில் மரங்கள் வளர வாய்ப்பு உள்ள பகுதியாக உள்ளதால், இன்னும் காடாக கருதப்படுகிறது, அல்லது தாவர வகைகளைப் பொருட்படுத்தாமல் சட்டரீதியாக காடு என வகைப்படுத்தப்படுகிறது.
பரவலாக காடுக்கான மூன்று வரையறைகள் பயன்பாட்டில் உள்ளன அவை: நிர்வாகம், நில உபயோகம், நிலப்பரப்பு. நிலப்பகுதியின் சட்டபூர்வமான பெயர்கள் நிர்வாக வரையறைகளை அடிப்படையாகக் கொண்டது, பொதுவாக நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு இதில் சிறிதளவு உறவைக் கொண்டுள்ளன: எந்த விதமான மரங்களும் வளரவில்லை என்றாலும், காடுகளுக்காக சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட நிலம் காடு என வரையறுக்கப்படுகிறது. நிலப் பயன்பாட்டு வரையறைகளே நிலப்பகுதிக்கு முதன்மையான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக, மரங்களை உற்பத்தி செய்வதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் எந்த நிலத்தையும் காடு என வரையறுக்கப்படலாம். அத்தகைய நிலப் பயன்பாட்டு வரையறையின் கீழ், வனப்பகுதிக்கு பயன்படுத்தப்படும் ஒரு பகுதி, அல்லது மரங்களை வெட்டுதல், நோய் அல்லது நெருப்பு ஆகியவற்றால் மரங்கள் அழிக்கப்பட்ட பிராந்தியத்தில் உள்ள பகுதிகள் தற்போதைக்கு மரங்கள் இல்லாதபோதும் காடுகள் எனவும் கருதப்படுகின்றன. நிலப்பரப்பு வரையறைகள், நிலத்தில் வளர்ந்து வரும் தாவரங்களின் வகை மற்றும் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு காடுகள் வரையறுக்கப்படுகின்றன. இந்த வரம்புகள் பொதுவாக ஏராளமாக உள்ள மரங்களின் எண்ணிக்கை (அடர்த்தி), மரத்தின் கீழ், மரத்தின் அடித்தண்டுகள் (அடித்தள பகுதி) குறுக்குவெட்டு நிலத்தில் இருக்கும் நிலப் பகுதியும். அத்தகைய நிலப்பரப்பின் வரையறைகள் மற்றும் நிலத்தின் பரப்பளவில் மரங்கள் வளர்ந்து இருந்தால் மட்டுமே காடு என வரையறுக்கப்படும்.
நிலப் பயன்பாட்டு கையேட்டு வரையறைகளில், காடு மரக்காடு, புன்னிலம் (சவனா) ஆகியவற்றுக்கு இடையில் கணிசமான மாறுபாடுகள் உள்ளன. சில வரையறைகளில், காடுகளின் பரப்பளவில் அதிகப்படியான நெருக்கத்தில் மரங்களை, 60% முதல் 100% வரை உடையதாக இருக்கவேண்டும் எனப்படுகிறது, ஆனால் மரக்காடு, புன்னிலம் போன்றவற்றில் குறைந்த நெருக்கத்தில் மரங்கள் பரவி இருக்கலாம் எனப்படுகிறது. மற்ற வரையறைகளில் புன்னிலத்தை ஒரு தனி வகைக் காடு என கருதுகின்றனர், இந்த நிலப்பரப்பில் 10% க்கும் மேலாக மரங்கள் கொண்ட புல்வெளிகளுடன் கூடிய அனைத்து பகுதிகளும் அடங்கும்.
மரங்கள் சூழ்ந்து உள்ள சில நிலப்பகுதிகள் சட்டப்பூர்வமாக விவசாய நிலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது, எ. கா. ஆஸ்திரியா வனச் சட்டத்தில், கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குக் கீழே மரங்கள் வளரும் போது நோர்வே தளிர் தோட்டங்கள் என்று வறையரைக்கப்படுகின்றன.
பரிணாமம்
புவியின் முதல் அறியப்பட்ட காடுகள் லேட் டேவோனியன் (ஏறக்குறைய 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), ஆர்க்கியாபோடெரிஸின் பரிணாம வளர்ச்சியில் தோன்றின. ஆர்க்கியாபோட்டரிஸ் என்பது ஒரு தாவரமாகும், இது மரம் போன்றது மற்றும் பேரணி போன்றது, இதன் உயரம் 10 மீட்டர் (33 அடி) ஆகும். ஆர்சாயோப்ட்டரிஸ் நிலநடுக்கோட்டிலிருந்து விரைவில் உலகெங்கும் பரவியது. ஆர்கோபொப்டிரிஸ் முதன்மையான காடுகளை உருவாக்கியது, மற்றும் அதன் வேர்கள் மண்ணில் இறங்கி வளர்ந்து அதன் மூலம் மண்ணில் முதல் நிழலை உருவாக்கியது. ஆர்சாயோப்ட்டரிசின் சிதைந்த பாகங்கள், அதன் வனப்பகுதிக்குள் விழுந்தன. வீழ்ச்சியுற்ற பாகங்கள், அங்கிருந்த நிழல், மண்ணில் ஏற்பட்ட கரிமச் சிதைவு போன்றவற்றால் முதல் காடு உருவானது. சிதைந்த கரிம பொருள் நன்னீர் சூழலை மாற்றியது, அதனால் குறைத்து மீன்களுக்கான உணவை அளித்தன. இதனால் நன்னீர் மீன் வளர்ச்சி மேம்பட்டத்.
சூழலியல்
பூமியின் உயிர்க்கோளத்தின் மொத்த முதன்மை உற்பத்தித்திறனில் 75% காடுகள் கொண்டிருக்கின்றன, மற்றும் பூமியின் மொத்த உயிரினத்தொகுதியில் 80% ஐ கொண்டிருக்கின்றன. மரங்கள் வளர்ப்பதற்கு தேவையான அனைத்து பகுதிகளிலும் வன சூழலமைப்புகள் காணப்படுகின்றன, காடுகளில் உள்ள மரங்களின் வளர்ச்சியானது காட்டுத்தீ போன்ற இயற்கைக் காரணங்களைத் தவிர, மனிதத் தலையீடுகளாளேயே அதன் சூழலியல் பெரும்பாலும் மாற்றப்படுகிறது.
நிலநடுக்கோட்டின் 10 ° வடக்கு மற்றும் தெற்கு நிலப்பரப்புகளில் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளாக உள்ளன, 53 ° N மற்றும் 67 ° N க்கு இடையே உள்ள நிலப்பரப்புகள் தைகா காடுகளைக் கொண்டுள்ளன. ஒரு பொது விதியாக, காடுகளில் பூக்குந் தாவரங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன மேலும் வித்துமூடியிலிகளே மிகுதியாகவும் உள்ளன, இருப்பினும் விதிவிலக்குகள் உள்ளன.
வனப்பகுதிகளில் சில நேரங்களில் ஒரு சிறிய பரப்பளவில் பல மர இனங்களைக் கொண்டதாக உள்ளன (வெப்பமண்டல மழை மற்றும் மிதமான இலையுதிர் காடுகள் போன்றவை), அல்லது சில இடங்களில் பெரிய பரப்பளவில் சிலவகை மர இனங்களைக் கொண்டதாக (எ.கா., தைகா மற்றும் மான்ட்டேன் காடுகள்) உள்ளன. வனப்பகுதியில் பெரும்பாலும் பல்வேறு விலங்கு மற்றும் தாவர இனங்கள் என உயிரினத்தொகுதி நிறைந்தவையாக பிற நிலப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது உள்ளன.
அமைப்பு
காடுகள் பல்வேறு தளங்களால் ஆன அமைப்புக் கொண்டவை. இவற்றில் மரங்களின் மேல் பகுதிகளால் ஆன மேல்தளமும், உயரம் குறைந்த தாவரங்களினால் ஆன கீழ்த்தளமும் அடங்கும். சிக்கல்தன்மை கூடிய காடுகளில் ஐந்து தளங்கள்வரை இருக்கும். மிகவும் உயரத்தில் உள்ள மேல்தளம் உயர் மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது. அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது. அதற்கு அடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது. மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடிவகைகளைக் கொண்டிருக்கும். ஐந்தாவதான நிலத்தளம் புல், பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது தளங்கள் முறையே செடித்தளம், பூண்டுத்தளம் எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்ட ஒரு தளமும் இருப்பதுண்டு.
வளம் மிகுந்த நிலப்பகுதிகளில் அமைந்த பெருங்காடுகளிலேயே ஐந்து தளங்களைத் தெளிவாகக் காண முடியும். வளம் குறைந்த பகுதிக் காடுகளில் பெரும்பாலும் மேல்தளம், கீழ்த்தளம், நிலத்தளம் என மூன்று தளங்களையே இனங்காண முடியும். வளமற்ற வரண்ட பகுதிகளில் உள்ள காடுகள் சிலவற்றில் தளங்களைத் தெளிவாக இனங்கண்டுகொள்ள முடியாத வகையில் இடைப்பட்ட நிலைகளிலும் தாவரங்கள் இருப்பதைக் காணலாம்.
பரம்பல்
மரங்கள் வளர்வதற்கு உகந்த எல்லாப் பகுதிகளிலும் காடுகளைக் காண முடியும். அடிக்கடி தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள இடங்களையும், மனித நடவடிக்கைகளினால் மாற்றங்களுக்கு உள்ளான சூழல் கொண்ட இடங்களையும், வேறுவகையில் பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களையும் தவிர்த்து, மரம் வளர் எல்லைக்கோட்டுக்கு உட்பட்ட எல்லா உயரங்களிலும் காடுகள் உள்ளன. 10° வடக்கில் உள்ள குறுக்குக் கோட்டுக்கும், புவிமையக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள காடுகள் பெரும்பாலும் வெப்பவலய மழைக்காடுகளும், 53° வடக்கு 67° வடக்கு ஆகிய குறுக்குக் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள காடுகள் வடதுருவப்புலக் காடுகளும் ஆகும். பொது விதியாகப் பூக்கும் தாவர வகைகளைக் கொண்ட அகன்ற இலைக் காடுகளில், வித்துமூடியிலித் தாவர வகைகளைக் கொண்ட ஊசியிலைக் காடுகளில் இருப்பதிலும் பார்க்கக் கூடுதலான இனங்களைக் காணமுடியும். எனினும் இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன.
வகைப்பாடு
காடுகளைப் பல்வேறு வழிகளில் வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள் அமைந்துள்ள உயிர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. இந்த் வகைப்பாட்டில் அக் காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளின் இருப்பு நிலையும் (பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) கவனத்தில் கொள்ளப்படுகிறது. இன்னொரு முறையிலான வகைப்பாடு காட்டிலுள்ள முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்களா, ஊசியிலைத் தாவரங்களா என்பதை அடிப்படையாகக் கொண்டது.
பலரும் பல்வேறு வகைப்பாட்டு முறைகளை முன்மொழிந்திருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக எதுவும் அமையவில்லை. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், உலகக் காப்புக் கண்காணிப்பு மையம் என்பன இணைந்து உருவாக்கிய வகைப்பாடு பிற வகைப்பாடுகளை எளிமையாக்கி உருவாக்கியது ஆகும். இந்த முறை உலகின் காடுகளை 26 முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது, காலநிலை வலயங்களையும், மரங்களின் வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும், 6 பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை:
மிதவெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள்,
மிதவெப்ப மண்டல அகண்ற இலை மற்றும் கலப்புக் காடுகள்,
பசுமை மாறா காடுகள்,
இலையுதிர் காடுகள்,
அடர்த்தியற்ற காடுகள் மற்றும் புல் வெளிகள்,
வளர்ப்புக் காடுகள்.
என்பன.
மேலும் பார்க்க
மழைக்காடு
சதுப்பு நிலக்காடு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Forests in danger
Intact Forests with maps and reports
Global Forest Resources Assessment 2005 by the Food and Agriculture Organization
CoolForests.org – Conservation Cools the Planet
Google – public data "Forest area (sq. km)"
சூழல் மண்டலம்
|
4658
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
|
ராய்ப்பூர், சத்தீஸ்கர்
|
ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும்.
2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087. இதனருகில் புதிய தலைநகரான நயா ராய்ப்பூர் கட்டப்பட்டுவருகிறது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இராய்ப்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 10,27,264 ஆகும். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 1,28,665 ஆகயுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 85.95% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 87.62%, இசுலாமியர்கள் 7.17%, கிறித்தவர்கள் 1.51%, சீக்கியர்கள் 1.43%, சமணர்கள் 1.40%, பௌத்தர்கள் 0.71% மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.
இதனையும் காண்க
நயா ராய்ப்பூர்
சத்தீசுகர்
சத்தீசுகர் அரசு
சத்தீசுகர் மாவட்டப் பட்டியல்
சான்றுகள்
இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
சத்தீசுக்கரிலுள்ள மாநகரங்கள்
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
இராய்ப்பூர் மாவட்டம்
|
4665
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D
|
இராமகிருஷ்ணர்
|
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (Sri Ramakrishna Paramahamsa) (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
வாழ்க்கை
இளமை
கதாதர், க்ஷூதிராம் (பிறப்பு கி.பி.1775) - சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.
கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர்.
ராம்குமாரின் திருமணம் கி.பி.1820 இல் நடந்தது.கி.பி.1849ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே அதன் முகத்தைப் பார்த்தவாறு உயிர் நீத்தாள். அந்தக் குழந்தைக்கு அட்சயன் என்று பெயரிடப்பட்டது. அதன்பின் ராம்குமாரை வறுமையும், துயரமும் வாட்டின.
மனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை சகோதரர் ராமேசுவரரிடம்(பிறப்பு கி.பி.1826) ஒப்படைத்துவிட்டு
கல்கத்தா சென்றார். அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கலானார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீட்டில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியிலிருந்து மிகவும் குறைந்த வருவாய்தான் அவருக்குக் கிடைத்தது.
ராமேசுவரர், கதாதரனை மிகவும் நேசித்த போதிலும் அவனது படிப்பைப் பற்றி மட்டும் எந்தக் கவலையும் படவில்லை. கதாதரனும் தமது பள்ளி நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடகக்குழு அமைத்து நண்பர்களுக்கு பயிற்சி அளித்தான்.
கல்கத்தாவில்
கல்கத்தாவில் இருந்த ராம்குமாரின் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். வருடத்திற்கொரு முறை குடும்பத்தினருடன் தங்க வரும் ராம்குமார், கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டார். எனவே தாயுடனும் ராமேசுவரருடனும் கலந்து பேசி கதாதரனை கல்கத்தா அழைத்துச் சென்றார். கதாதரன் அவருடன் சென்றால் பாடசாலையை கவனிக்க உதவி செய்யலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பதினேழு வயதில் அவர் கல்கத்தா சென்றார். அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததுடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார் கதாதரர். இவ்வாறுஅங்கு கதாதரர் 1852 முதல் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். அடுத்த இரண்டு வருடங்களில் ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது.
தட்சிணேசுவரத்தில்
அச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த இராணி ராசமணி கட்டிய தட்சிணேசுவரம் காளி கோயிலில் அவர் அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், வேதபாடசாலையில் இருந்த ராம்குமார் பிரச்சனைக்கு தீர்வு கூறினார். இதன்பின் ராணி ராசமணி கட்டிய கோவிலில் ராணியின் வேண்டுகோளின்படி ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.
ராம்குமாரின் விருப்பப்படி தட்சிணேசுவரத்தில் இருந்து வந்தார் கதாதரர். ராணியின் மருமகனான மதுர்பாபு, கதாதரரைக் கண்டது முதலே ஈர்க்கப்பட்டு அவரிடம் அன்னை காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க எண்ணினார். ஒருமுறை மதுர்பாபு நேரடியாக பூஜைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆபரணங்களின் பொறுப்பை ஹிருதயர் ஏற்றுக்கொள்வதானால் தாம் பூஜைப் பணியை ஏற்றுக்கொள்வதாக கதாதரர் கூறினார். இது நிகழ்ந்த ஆண்டு 1855.ஏதோ வேலை நிமித்தமாக கல்கத்தாவின் வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற ஊருக்கு சென்ற ராம்குமார் அங்கேயே காலமானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் கதாதரர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
தட்சிணேசுவரம் காளி கோயில் பவதாரிணி காளிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னையை நேரில் காணும் ஏக்கமும் ஆவலும் தீவிரமாகி என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காட்சிக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
ராணி ராசமணி 1861ஆம் ஆண்டு இறுதியில் காலமானார். அதன் பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்தார். அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோருடைய காட்சி கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி நாட்கள்
ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தினக்குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகத்து 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகத்து 16 அன்று மகா சமாதி அடைந்தார்.
175 ஆவது ஜெயந்தி விழா
ராமகிருஷ்ணரின் 175 ஆவது ஜெயந்தி விழா, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது.
மேலும் பார்க்க
தக்சிணேசுவர் காளி கோயில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ராமகிருஷ்ணரைப் பற்றிய தமிழ் புத்தகங்கள்
ராமகிருஷ்ணர், அவர் கூற்றுகள் பற்றி மாக்ஸ் முல்லர் புத்தகம்
ராமகிருஷ்ண கதாம்ரிதம்
1836 பிறப்புகள்
1886 இறப்புகள்
அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்
வங்காள மக்கள்
பக்தி இயக்கம்
|
4668
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
அத்வைதம்
|
அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) (IAST ; சமஸ்கிருதம்: ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.
பொ.ஊ. 788-820-ம் காலத்தே வாழ்ந்த ஆதிசங்கரர் (இவரது காலம் பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை. இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சங்கரரின் குருவின் பரமகுருவாகிய கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.
அத்துவிதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.
2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப் பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.
3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பிரம்மம், ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.
4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) ( உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விள்க்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்) [உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.
இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்...
1. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை.
2. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.
3. உலகத்தின் உண்மையற்ற நிலை.
எனக் கூறலாம்.
ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்கள்
சமணம், பௌத்தம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே மகாவீரர் புத்தர் மத்வர் இராமானுஜர் ஆகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது.
துவைதம் விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் இந்து சமய தத்துவங்களாக இன்று அடையாளங் காணப்படுகின்றன. ஆன்மீகம் என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்துக் கலைக்களஞ்சியம் - தொகுதி 1 - பக்கம் 87
அத்வைதம், தினமலர் http://temple.dinamalar.com/news_detail.php?id=3473
அத்வைதம்
இந்துத் தத்துவங்கள்
இந்திய மெய்யியல்
வேதாந்தம்
|
4669
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
|
சிலம்பம்
|
சிலம்பம் (Silambam) என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருவள்ளூர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.
பொது நலம் மற்றும் மருத்துவப் பயன்கள்
பயிற்சியாளர் அல்லது சிலம்பம் மற்றும் கை சிலம்பம் (குத்துவரிசை) போன்ற தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், வேகம், தசை வலிமை மேம்படுத்த சுகாதார நலன்கள் பெறும் வழக்கமான பயிற்சி, சுற்றோட்டத் தொகுதி பொறுமை, தசை வலிமை.
வரலாறு
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை சத்திரியர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.
ஆய்வுகள்
சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.
சொல் பிறப்பு
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லப்படுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
இலக்கியக் குறிப்புகள்
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.
நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை
"கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை"
என்ற கும்மிப் பாடல் மூலம் அறியலாம்.
சிலம்பின் உட்கூறுகள்
மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம்.
மெய்ப்பாடம்
மெய்ப்பாடம் என்பது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம்.
உடற்கட்டுப்பாடம்
குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப் பாடம் ஆகும். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும்.
மூச்சுப்பாடம்
மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.. ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது.
குத்துவரிசை
சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்துவரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு, குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.
தட்டுவரிசை
ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.
பிடிவரிசை
எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது, யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.
அடிவரிசை
ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம். சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய்ச் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற வரிசை முறைகள் உள்ளன.
சிலம்பத்தடி
சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.
சிலம்பாட்ட வகைகள்
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்
அலங்காரச் சிலம்பம்
போர்ச் சிலம்பம்
பனையேறி மல்லு
நாகதாளி,
நாகசீறல்,
கள்ளன்கம்பு
நாகம் பதினாறு
ஆகியனவாகும்.
சிலம்பாட்டச் சுற்று முறைகள்
சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும்.
ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது,
இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது
என இரு முறைகளும் இதில் உண்டு.
ஆயுதப் பிரிவுகள்
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.
கராத்தேவும் சிலம்பமும்
கராத்தே என்ற வீர விளையாட்டின் "காட்டா" (kata) என்ற பயிற்சி, சிலம்பத்தின் கதம்பவரிசை ஆகிய இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றேபோல் இருக்கும்.
சிலம்பப் போட்டி
தமிழர்களின் போர் முறையாகவும் தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம்பாட்டம் மத்திய காலங்களில் திருவிழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. தற்போது இக்கலையானது வீர விளையாட்டாக மாறி போட்டிகளிலும் பங்கு பெறும் அளவில் வளர்ந்துள்ளது. சிலம்பம் தனி ஒருவராகவோ அல்லது இருவராகவோ அல்லது பலருடனோ ஆடப்படுகிறது. தனி ஒருவர் ஆடிக் காட்டுவது 'தனிச்சுற்று' எனப்படும். சிலம்பம் இருவர் போட்டியிடும் விளையாட்டாக நடைபெறுவதும் உண்டு. இது தற்காப்புக் கலை.
சிலம்பக் கலை பயிற்றுவித்தல்
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தைப் பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.
பயன்கள்
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.
புதிய உலக வரலாறு உருவாக்கப்பட்டது
ஜனவரி 21, 2019 அன்று ஐக்கிய நாடுகள் சபை (ஐநா சபை அல்லது யூ.என்) உலகின் பார்வையில் சிலம்பம் பெயர் வரலாற்றில் முதல் முறையாக விவாதிக்கப்பட்டது மற்றும் ஆசிய கண்டத்தின் நிலைக்கான சிலம்பம் ஆசியா நியமிக்கப்பட்டது. சீனா மற்றும் இந்தியா பாரம்பரிய கலைகளின் வரலாற்று பதிவு கடந்த ஆயிரம் நூற்றாண்டு பேரரசர் தலைமுறை கட்டுப்பாடு எல்லை பகுதி மற்றும் கடந்த காலங்கள் நாட்டின் எல்லை பிரச்சினைகள் கண்டறியப்பட்டது. கலை வளர்ச்சி மற்றும் வரலாற்று பயணம் தொடர்பான நாட்டின் எல்லை பிரச்சினைகள் தீர்ப்பதற்கு சீனா அரசாங்க பிரதிநிதி சிலம்பம் ஆசியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் (United Nations) தலைமையகத்தில் நடைபெற்றது. ஜனவரி 30, 2019 ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா சபை) சிறப்பு நிலைக்கு சிலம்பம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
உசாத்துணைகள்
ஜே. டேவிட் டேனியல் ராஜ், சிலம்பம் - அடிமுறைகளும் வரலாறும், காரைக்குடி அழகப்பர் கல்லூரி வெளியீடு, 1971
ஞா. தேவநேயப் பாவாணர், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், 1966
டாக்டர் இரா. நாகசாமி, கல்வெட்டுக் காலாண்டிதழ், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை வெளியீடு, ஏப்ரல் 1974
டாக்டர் ஏ. என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான 'அருவி' இதழில் வெளியான கட்டுரை பக். 3-4.
சேலம் சிலம்ப ஆசான் திரு. முருகேசன் அவர்களுடன் நேரடியாக உரையாடிப் பெற்ற செய்திகள்.
இவற்றையும் பார்க்க
அங்கப்போர்
களரிப்பயிற்று
தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)
தமிழர் தற்காப்புக் கலை
கைச்சிலம்பாட்டம்
மேற்கோள்கள்
சிலம்பம்
|
4674
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
|
வர்மக்கலை
|
வர்மக்கலை(Varma kalai) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக இது குருக்காளால் கற்பிக்கப்படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.
வர்மம்
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை. அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.
வர்ம முனைகள்
கழுத்துக்கு மேல் 25
கழுத்திலிருந்து தொப்புள் வரை 45
தொப்புள் முதல் மூலாதாரம் வரை 9
இரு கைகளிலும் 14
இரு கால்களிலும் 15
ஆக மொத்தம் 108
ஊடகங்களில்
வர்மக்கலையை மையமாகக் கொண்டு ஊழலுக்கு எதிராக சங்கரின் இயக்கத்தில் இந்தியன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் வர்மக் கலையை அறிந்தவராக கமலஹாசன் நடித்தார்.
தொலைக்காட்சி தொடரான மர்ம தேசம்|மர்ம தேசத்தில் இயந்திரப் பறவை என்ற பெயரில் வெளிவந்த பகுதியில் வர்மக் கலையின் ஒரு கலையான வளரியை மையமாக கொண்டு வெளிவந்தது.
மேலும் பார்க்க
வர்மக்கலை ஆய்வாளர்கள்
சூ ஃகிக்கோசக்கா
சுவடிகளும் நூல்களும்
வர்மசூத்திரம் (சுவடி) - போகர்
ஒடிமுறிவுசாரி (சுவடி) - அகத்தியர்
வர்மக்கண்ணாடி (சுவடி)
வர்ம பீரங்கி (சுவடி)
தொடுவர்மத்திரட்டு (சுவடி)
படுவர்மங்கள் (சுவடி)
சித்தமருத்துவத்தில் வர்மப் பரிகாரம்
வர்ம காண்டம் - புலிப்பாணி
படுவர்மத்திரட்டு (சுவடி)
வர்ம சூட்சம் (சுவடி)
வர்மகண்டி (சுவடி)
வர்ம சூடாமணி (சுவடி)
வரம பீரங்கித் திறவுகோல் (சுவடி)
வரம வைத்தியம் (சுவடி)
வர்ம அடங்கல் முறை
வர்ம அளவு நூல்
வர்ம சாத்திரம்
வாகட நிதானம்
வர்ம திறவு கோல்
வர்ம களஞ்சியம் - பதஞ்சலி
வர்ம சஞ்சீவி - தனிவந்திரி சித்தர்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
சூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.
வர்மக்கலை
|
4683
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
|
மேட்டூர் அணை
|
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன, முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்தியக் குடியரசிலும் கட்டப்பட்டது.
அணை கட்டுமான வரலாறு
அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி)1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கில அரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
1923இல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர். அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம்முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது) ஒவ்வொரு ஆண்டும் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும், மேட்டூரில் அணை கட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார். அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்
1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்
இக்காலபகுதியில் கர்நாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்படும் என மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பின்னர் கர்நாடக - தமிழ்நாடு தண்ணீர் பிரச்சினைக்கும் ஒரு காரணியாக அமைந்தது.
தமிழக மன்னர்கள் மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது வெள்ளையருக்கு ஒரு பகுதி வரி வசூல் தானே தவிர முழு ஆளுமையுமில்லை. மேலும், ஒரு இடத்தில் அணை கட்டினால் பல கிராமங்களுக்குப் பாதிப்பு வரலாம், மேட்டூர் நீர்த்தேக்கத்தில் பல கிராமங்களும் கோவில்களும் உள்ளன.
சரபங்கா நீரேற்று திட்டம்
சரபங்கா நீரேற்று திட்டம் அல்லது மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா பகுதியில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டமாகும். இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் 545 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டப்படி மேட்டூரில் இருந்து உபரி நீர் கால்வாய் மூலம் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
திப்பம்பட்டியில் நீரேற்றும் நிலையத்தில் 940 குதிரை திறன் கொண்ட 10 மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் 12 கி.மீ தொலைவில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரியிலும், 1080 குதிரை திறன் கொண்ட 6 மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் நங்கவள்ளி ஏரியிலும் நீர் நிரப்பப்படும். எம்.காளிப்பட்டி மற்றும் நங்கவள்ளி ஏரிகளின் நீர் திறப்பின் மூலம் மற்ற ஏரி மற்றும் குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.
எம்.காளிப்பட்டி ஏரியில் அமைக்கப்படும் மற்றொரு நீரேற்று நிலையத்தின் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு 5 கி.மீ தூரம் குழாய்கள் மூலம் கீழ் நிலை நீர்த்தொட்டிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மற்ற ஏரிகளில் நீர் நிரப்பப்படும். இந்தத் திட்டத்தால் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு 38 கிராமங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.
இந்த திட்டம், 2021 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
மேட்டூர் அணை தொடருந்து நிலையம்
சேலம் மற்றும் ஈரோடு நகரங்களிலிருந்து மேட்டூர் அணை தொடருந்து நிலையத்திற்கு இரண்டு பயணிகள் வண்டி செல்கிறது.
மேற்கோள்கள்
சேலம் மாவட்டத்திலுள்ள அணைகள்
தமிழ்நாட்டு நீர்மின்னாக்கத் திட்டங்கள்
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள்
|
4694
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE
|
ஆட்டோ ரிக்சா
|
ஆட்டோ (Auto) என்றழைக்கப்படும் ஆட்டோ ரிக்சா (auto rickshaw) வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனமாகும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆட்டோ திகழ்கிறது. மனித விசையில் இயங்கும் பாரம்பரியமான ரிக்சா வண்டியின் மோட்டார் பொருத்தப்பட்ட வடிவம் தான் ஆட்டோ. தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் டுக்-டுக்கும் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் பஜாஜும் ஆட்டோவை ஒத்தவை. இது டெம்போ, மோட்டார்டக்சி, மூவுருளி என அவை வளர்ந்து வரும் நாடுகளில் அழைக்கப்படுகிறது. இதைத் தமிழ்நாட்டில் தானி என்று தனித் தமிழில் வழங்குகிறார்கள்.
உசாத்துணை
மேற்கோள்கள்
ஊர்திகள்
சாலைப் போக்குவரத்து
|
4696
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF
|
நிலக்கரி
|
நிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும்.
நிலக்கரி ஓர் அடையற் பாறை வகையைச் சேர்ந்ததாகும். அது வழமையாக ஒரு சதுப்பு நில சூழலில் பாதுகாக்கப்பட்டு திரட்சியடைந்த தாவர உயிர்சுவடுகளினால் உருவாகியதாக காணப்படுகின்றது. இயற்கை வாயு, கனிய எண்ணெய் போன்றவற்றுடன் குறிப்பிடப்படும் முக்கியமான தொல்படிவ எரிபொருட்களுள் ஒன்றாகும். நிலக்கரி மின்உற்பத்தி போன்ற பல்வேறு பரந்த பயன்பாடுடையது. நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1983 லிருந்து உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.
நிலக்கரி வணிகம்
நிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும். நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன.
தோற்றம்
மிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது.
நிலக்கரியின் வகைகள்
நிலக்கரி பூமியில் பல வகைகளில் கிடைக்கிறது.நிலகக்ரியை வகைப்படுத்தலில் நாடுகளுக்கிடையே வேறுபாடு காணப்படுகிரது
முற்றா நிலக்கரி.
பழுப்பு நிலக்கரி.
அந்திரசைட் நிலக்கரி
கிராபைட்
உலகளாவிய நிலக்கரி இருப்பு
பெருமளவு நிலக்கரி உற்பத்தியாளர்கள்
இங்கு இருப்புக் காலம் என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பெருமளவு நிலக்கரி நுகர்வாளர்கள்
குறிப்பிட்ட மில்லியன் டன்களை விட கூடுதலாக ஆண்டு நுகர்வுள்ள நாடுகள் காட்டப்பட்டுள்ளன.
பெருமளவு நிலக்கரி ஏற்றுமதியாளர்கள்
ஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும்.
பெருமளவு நிலக்கரி இறக்குமதியாளர்கள்
20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர்.
மேற்கோள்கள்
எரிபொருட்கள்
நிலக்கரி
|
4702
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87
|
இந்திய இரயில்வே
|
இந்திய இரயில்வே (Indian Railways) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 12.54 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.
தொடர்வண்டி, 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டபோது, உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது. இந்திய இரயில்வேயால் தொலைதூர இரயில்கள், புறநகர் இரயில்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன.
அஸ்வினி வைஷ்னவ் தற்போதைய இரயில்வே அமைச்சராக இருந்து வருகிறார். இந்திய இரயில்வேயின் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது.
வரலாறு
இரயில் போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதலில் 1832-ல் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் முதல் ரயில் 1837 இல் செங்குன்றம் முதல் சிந்தாதிரிப் பேட்டை பாலம் வரை ஓடியது. இது ரெட் ஹில் ரெயில்வே என்று அழைக்கப்பட்டது, மேலும் வில்லியம் ஏவரி தயாரித்த ரோட்டரி நீராவி என்ஜினியரைப் பயன்படுத்தியது. இந்த இரயில்வே சர் ஆர்தர் கோட்டனால் கட்டப்பட்டது மற்றும் சென்னை நகரத்தில் சாலை-கட்டுமான பணிக்கான கிரானைட் கற்களை கொண்டுசெல்ல முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.
1844-ல் அப்போதைய கவர்னர்-ஜெனரலான ஹார்டிங்கே பிரபு என்பவர் தனியார் இரயில் போக்குவரத்தினை தொடங்க அனுமதித்தார். இரண்டு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பனியானது அவற்றுக்கு உதவக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆங்கிலேய முதலீட்டாளர்களின் ஈடுபாட்டினால் சில ஆண்டுகளிலேயே நிறைய இரயில் நிறுவனங்கள் தோன்றின.
1845 ஆம் ஆண்டில், கோதாவரி மீது அணை கட்டுவதற்கு கற்கள் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டது ராஜமுந்திரி இல் தவுலேஸ்வரம் கோடாரிய அணை கட்டடம் இரயில்வே கட்டப்பட்டது.
1851 ஆம் ஆண்டில் சோலனி அக்யுடுட் ரயில்வே கட்டப்பட்டது ரூர்கி, ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பெயரிடப்பட்ட தாம்சன் என்ற நீராவி என்ஜினியால் இழுக்கப்பட்டது. சோலனி ஆற்றின் மீது ஒரு நீர்வழி (பாலம்) நீர்வழங்கல் கட்டுமானத்திற்கான கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் பயணிகள் இரயில், 16 ஏப்ரல் 1853 அன்று மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது. அப்பாதையின் நீளம் 34 கிலோ மீட்டர்களாகும். ஆங்கில அரசு, தனியார் இரயில் போக்குவரத்தினை வணிக ரீதியாக ஊக்குவித்ததன் காரணமாக நிறைய நிறுவனங்கள் துவங்கப்பட்டன. திட்டம் நிறைவடைந்த பின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அது வரும். எனினும் நிர்வாகத்தினை தனியாரே நடத்தினர்.
1880-ஆம் ஆண்டு வாக்கில் இந்த வலையமைப்பானது சுமார் 14,500 கி.மீ. நீளம் கொண்டிருந்தது. இவற்றில் பெரும்பகுதியானது நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றிலிருந்து நாட்டின் உட்பகுதியை இணைத்தது. 1895-ல் இருந்து இந்தியா இரயில் எஞ்சின்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது. மேலும் 1896-ல் உகாண்டா இரயில்வேயினை தொடங்க இந்தியா பொறியாளர்களையும் இரயில் எஞ்சின்களையும் அனுப்பியது.
தற்போதுள்ள ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முன்பிருந்த இராச்சியங்கள் தங்களுக்கென இரயில் அமைப்புகளை ஆரம்பித்தன.
1901-ம் ஆண்டு இரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது எனினும் அதனுடைய அதிகாரங்கள் வைசிராய் கர்சன் பிரபுவிடமே இருந்தன. இந்த இரயில்வே வாரியம் அரசின் வணிக மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கியது. இதில் மூன்று உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய இரயில்வே ஊழியர் (தலைவர்), இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இரயில்வே மேலாளர், மற்றும் ஒரு இரயில்வே நிறுவனத்தின் முகவர் ஆகியோர் அவர்கள். வரலாற்றில் முதன்முறையாக இரயில்வே லாபம் ஈட்டியது.
1907-ம் ஆண்டு ஏறத்தாழ அனைத்து இரயில் நிறுவனங்களும் அரசினால் கையகப்படுத்தப் பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு மின்சார இரயில் அறிமுகப்படுத்தப் பட்டது. முதல் உலகப்போரின் காரணமாக ஆங்கில அரசு இந்தியாவிற்கு வெளியில் இரயில்வேயினை இயக்கியது. இதனால் போரின் முடிவில் இரயில்வே மோசமான நிலையில் இயங்கியது. இதனால் 1920-ல் அரசு, இரயில்வே நிதியினையும் அரசின் மற்ற வருவாயினையும் தனியாகப் பிரித்தது.
இரண்டாம் உலகப்போரின் போது இரயில்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டன. 1947-ல் இந்தியா விடுதலை அடைந்த போது இரயில்வேயின் பெரும்பகுதி, அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமானது. முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 32 இரயில் அமைப்புகள் உட்பட மொத்தம் 42 இரயில் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கு இந்திய இரயில்வே என்று பெயரிடப்பட்டது.
1951-ல் இரயில்வே அமைப்பு முறை கைவிடப்பட்டு அவை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. இந்திய இரயில்வேயில் 1952-இல் மொத்தம் 6 மண்டலங்கள் இருந்தன. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இரயில் இயந்திரங்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது. 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.
இந்திய இரயில்வே வாரியத்தின் அமைப்பு
இந்திய இரயில்வே மண்டலங்கள்
இந்திய இரயில்வே மண்டல விவரங்கள்
இந்திய இரயில்வே கீழ்க்காணும் 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வே மண்டல அமைப்புகளுக்கு பதிலாக ரயில் போக்குவரத்து பணிகளை செய்யும் இரயில்வே நிறுவனங்கள்
இந்திய இரயில்வே மண்டலம் பகுதிகளில் உள்ள கோட்டங்களின் விவரங்கள்
ஒவ்வொரு மண்டலமும் பல கோட்டங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கோட்டமும் அதற்கென ஒரு தலைமையிடத்தினை கொண்டிருக்கிறது. இந்திய இரயில்வேயில் மொத்தம் 67 கோட்டங்கள் உள்ளன.
இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகள்
கீழ்க்காணும் பட்டியல் இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளாகும்:
இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் துனை நிறுவனமாக இயங்கும் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்
பயணியர் சேவை
இந்திய இரயில்வே மொத்தம் 8,702 இரயில்களை இயக்குகிறது. ஆண்டுக்கு மொத்தம் 500 கோடி மக்களை இடம்பெயர்க்கிறது. இது 27 மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங்களையும் இணைக்கிறது. சிக்கிம் மட்டுமே இந்திய இரயில் வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை.
நாட்டில் நீண்டதூரப் பயணத்திற்கு இரயில் சேவையே மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் தென்னிந்தியா மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பேருந்தே பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.
ஒரு பயணிகள் இரயில் பொதுவாக 18 பெட்டிகளைக் கொண்டிருக்கும். சில முக்கியமான புகழ்பெற்ற இரயில்கள் 24 பெட்டிகள் வரை கொண்டுள்ளன. இரயில் பெட்டிகள் 18லிருந்து 72 பயணிகள் வரை செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப் படுகின்றன. ஆனால், பண்டிகைக் காலங்களிலும் சில முக்கியமான வழித்தடங்களிலும் கொள்ளளவை விட அதிகமான பயணிகள் பயணிப்பது வாடிக்கை.
இரயில் பெட்டிகள் பல்வேறு வகுப்புகளைக் கொண்டிருக்கும். அவற்றில் மிக முக்கியமானது படுக்கை வசதி கொண்ட வகுப்பாகும். இத்தகைய பெட்டிகள் மொத்தம் ஒன்பது இணைக்கப்படுகின்றன. மூன்றிலிருந்து ஐந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் வழக்கமாக இணைக்கப்படுகின்றன.
தற்போது இந்திய இரயில்வே எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை கூட்ட நெரிசலாகும். விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிக அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. பயணச் சீட்டு இன்றி பயணம் செய்தலும் இந்திய இரயில்வேயிற்கு நட்டம் ஏற்படுத்தும் மற்றொரு பிரச்சினையாகும்.
சரக்குப் போக்குவரத்து
இந்திய இரயில்வேயில் தாதுப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், பால், பெட்ரோலியம், மற்றும் வாகனங்கள் முதலியவை இடம் பெயர்க்கப்படுகின்றன. துறைமுகங்களும் மாநகரங்களும் தங்களுக்கென தனி இரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. இந்திய இரயில்வேயின் 70% வருமானம் மற்றும் அதன் லாபத்தின் பெரும்பகுதி சரக்குப் போக்குவரத்தின் மூலமே கிடைக்கிறது. நட்டமேற்படுத்தும் பயணியர் சேவைக்கு மானியம் இதன் மூலமே கிடைக்கிறது. மேலும் குறைவான வாடகைக்கு கிடைக்கும் லாரிகளினால் சரக்கு போக்குவரத்து சற்றே குறைந்துள்ளது.
1990- லிருந்து இரயில்வே சிறிய அளவினாலான சரக்குகளைக் கையாளாமல் பெரும் அளவினாலான சரக்குகளைக் கையாள்வதினால் அதனுடைய சேவையானது சற்று துரிதப்பட்டிருக்கிறது. சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் பெருமளவு வருமானம் நிலக்கரி, உணவு தானியங்கள், சிமெண்ட் மற்றும் இரும்புத்தாது போன்றவற்றின் மூலமே கிடைக்கிறது.
இந்திய இரயில்வேயில் வாகனங்களும் நீண்ட தூரம் இடம்பெயர்க்கப் படுகின்றன. மேலும் பெரிய சரக்கு லாரிகளை இரயிலின் மீது அமர்த்தி கொண்டு செல்வதன் மூலம் இந்த சரக்கு நிறுவனங்களின் எரிபொருள் செலவு பெருமளவு குறைக்கப்படுகிறது. குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டிகளும் பல பகுதிகளில் கிடைக்கின்றன. பச்சைப் பெட்டி என்றழைக்கப் படும் சிறப்புப் பெட்டி காய்கறிகளைக் கொண்டு செல்லப் பயன்படுகிறது. சமீபத்தில் இரயில்வே கான்ராஜ் எனப்படும் சரக்கு இராஜதானி இரயில் சேவையைத் தொடங்கியது. இதன் மூலம் சரக்கு இரயிலுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து விரைவாக இடம்பெயர்க்கப் படுகிறது. இச்சேவையின் மூலம் அதிக பட்சம் 100 கி. மீ. வேகத்தில் 4700 டன் சரக்கை இடம்பெயர்க்கப்பட முடியும்.
புறநகர் இரயில் சேவை
பல நகரங்கள் தங்களுக்கென தனியான புறநகர் ரயில் வலையமைப்புகளைக் கொண்டுள்ளன. புறநகர் இரயில் சேவை, தற்போது இந்தியாவில் தில்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா, புனே, மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இயக்கப்படுகிறது. புனேவும் ஹைதராபாத்தும் தங்களுக்கென தனி இரயில்பாதைகளைக் கொண்டிருக்காமல் நீண்டதூர இரயில்களின் இரயில்பாதைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. புது தில்லியில் புது தில்லி மெட்ரோ இரயிலும் கொல்கத்தாவில் கொல்கத்தா மெட்ரோ இரயிலும் இயங்கி வருகின்றன.
புறநகர் இரயில்கள் பொதுவாக 15 பெட்டிகளையும் மின்சார என்ஜின்களை இருபுறமும் கொண்டிருக்கும். மும்பை இரயில்கள் நேர் மின்சாரத்திலும் மற்றவை மறு மின்சாரத்திலும் இயங்குகின்றன. சாதாரணமாக ஒரு பெட்டியில் 96 பயணிகள் பயணிக்கலாம் எனினும் முக்கிய சமயங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கிறது.
மும்பையின் இரயில் போக்குவரத்து மேற்கு மற்றும் மத்திய இரயில்வேயினால் சேர்ந்து நிர்வகிக்கப் படுகிறது. இது மொத்தம் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று மேற்கு இரயில்வேயினாலும் மற்றவை மத்திய இரயில்வேயினாலும் நிர்வகிக்கப் படுகின்றன. கொல்கத்தா இரயில்வேயானது நிர்வாக ரீதியாக மண்டல இரயில்வேயின் தகுதியில் இருப்பினும் இது எந்த இரயில்வே மண்டலத்தின் கீழும் வருவதில்லை.
தில்லி புறநகர் இரயிலின் முதற்கட்டப்பணிகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது தற்போது விரிவாக்கப்பட்டு வருகிறது. பெங்களூர் நகரத்தில் இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது.
குறிப்பிடத்தக்க தொடர்வண்டிகளும் சாதனைகளும்
டார்ஜிலிங் இமாலய இரயில் யுனெஸ்கோவினால் உலகப்பிரசித்தி பெற்ற தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரயில்பாதை மேற்கு வங்காளத்தின் சமவெளியான சிலிகுரியில் தொடங்கி தேயிலை தோட்டங்களின் வழியாக டார்ஜிலிங் சென்றடைகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மலை இரயிலும் அத்தகைய சிறப்புப்பெற்ற மற்றொரு இரயிலாகும். இது இந்தியாவிலுள்ள பற்சக்கர அமைப்புக்கொண்ட ஒரே இரயில் பாதை ஆகும்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி இரயில் முனையமும் இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் இத்தகைய சிறப்பு பெற்ற இடமாகும்.
ராஜஸ்தானில் ஓடும் அரண்மனை இரயில் சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பாக வடிவமைக்கப் பட்ட இரயிலாகும். மகாராஷ்டிர அரசும் இதைப் போல டெக்கான் ஒடிஸி என்னும் இரயிலை இயக்கியது. எனினும் இதற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இது பின்னர் நிறுத்தப் பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கிடையே இயக்கப்பட்ட இரயிலின் பெயர் சம்ஜௌதா விரைவு வண்டி ஆகும். இது 2001-ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மற்றொரு புகழ்பெற்ற இரயில் சேவை மருத்துவமனை இரயில் ஆகும். இது ஒரு நடமாடும் மருத்துவமனை. இது நாட்டின் கிராமப்பகுதிகளுக்கு சேவை புரிய தொடங்கப்பட்டது. இது நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு இரண்டு மாதங்கள் தங்கி சேவை புரிகிறது. இதில் ஒரு பெட்டி செயல் அறையாகவும் மற்றொன்று பொருட்கள் வைக்கவும் மற்ற இரண்டு நோயாளிகளுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.
உலகிலேயே மிகப்பழமையான ஓடும் நிலையில் இருக்கும் நீராவி எஞ்சின் இந்திய இரயில்வேயின் ஃபெயரி குவீன் என்பதாகும். கரக்பூர் இரயில் நிலையமே உலகின் மிக நீளமான நடைபாதையைக் கொண்டுள்ள இரயில் நிலையமாகும். இதன் நீளம் 833 மீட்டர்களாகும். டாய் இரயில் பாதையிலுள்ள கும் இரயில் நிலையமே நீராவி எஞ்சின் செல்லும் மிக உயர்ந்த இரயில் நிலையமாகும்.
இந்திய இரயில்வேயில் மொத்தம் 7,566 இரயில் எஞ்சின்களும் 37,840 பயணியர் பெட்டிகளும் 222,147 சரக்குப் பெட்டிகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 6,853 இரயில் நிலையங்களும் 300 யார்டுகளும் 2,300 கூட்சு ஷெட்களும் 700 பழுதுபார்ப்பு மையங்களும் உள்ளன. இதில் மொத்தம் பணிபுரிபவர்கள் 1.54 மில்லியன் பேர்களாவர்.
மிகச் சிறிய பெயர் கொண்ட இரயில் நிலையம் இப்; மிகப்பெரிய பெயர் கொண்ட இரயில் நிலையம் ஸ்ரீ வெங்கடநரசிம்மராஜூவாரிபீடா. இந்திய இரயில்வேயிலேயே மிக நீண்ட தூரம், மற்றும் மிக நீண்ட நேரம் பயணிக்கும் இரயில் கன்னியாகுமரி, ஜம்முதாவி ஆகியவற்றுக்கிடையே ஓடும் ஹிம்சாகர் விரைவுவண்டியாகும். இந்த இரயில் 3,745 கி.மீ. தூரத்தினை மொத்தம் 74 மணி55 நிமிடங்களில் ஓடிக் கடக்கிறது. வதோதரா மற்றும் கோட்டாவிற்கிடையே உள்ள 528 கி. மீ தொலைவினை திருவனந்த புரம் ராஜதானி இரயில் 6.5 மணிகளில் இடையில் எங்கும் நிற்காமல் கடக்கிறது. இதுவே இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் நீண்ட இடைநில்லா சேவையாகும்.
ஃபரிதாபாத் திலிருந்து ஆக்ரா விற்கு ஓடும்பொழுது போபால் சதாப்தி விரைவு வண்டி மணிக்கு 140 கி. மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்தியாவில் இரயிலின் அதிகபட்ச வேகமான 184 கி. மீ/ மணியானது 2000-ம் ஆண்டு சோதனை ஓட்டத்தின் போது அடையப்பட்டது.
டிரெய்ன் 18
டிரெய்ன் 18 இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அதிவேக விரைவு வண்டி. சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்று சாதனை படைத்தது. இது 2019 பிப்பிரவரியில் இருந்து வந்தே பாரத் என்னும் பெயரில் காசிக்கும் தில்லிக்கும் இடையே இயக்கப்படுகின்றது.
நிர்வாக அமைப்பு முறை
இந்திய இரயில்வே, இந்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போதைய நிலையில் இத்துறைக்கான முக்கிய அமைச்சர் ஒருவரும், அவருடன் இணை அமைச்சர்கள் இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு கீழ் ஆறு உறுப்பினர்களும் ஒரு தலைவரையும் கொண்ட இரயில்வே வாரியம் செயல்படுகிறது.
மொத்தமுள்ள 16 மண்டலங்களும் தத்தம் பொது மேலாளர்கள் மூலம் இரயில்வே வாரியத்திற்கு நேரடியாக எடுத்துரைக்கின்றன. இந்த மண்டலங்கள் மேலும் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை கோட்ட மேலாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
மேலும் பொறியியல், இயந்திரவியல் போன்ற துறைகளின் அதிகாரிகள் கோட்ட மேலாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். மேலும் இவர்களே தொடர்புடைய துறையின் சொத்துக்களை நிர்வகிக்கின்றனர். இவர்களுக்கு கீழ் நிலைய அதிகாரிகள் இயங்குகின்றனர். நிலைய நிர்வாகமும் அந்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இரயில் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்துவதும் இவர்களின் பணியாகும்.
இரயில்வே மண்டலங்கள் மட்டுமின்றி இன்னும் பல பொதுத்துறை நிறுவனங்களும் இரயில்வே அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவையாவன:
இந்திய சமையல் மற்றும் சுற்றுலா நிறுவனம்
கொண்கன் இரயில்வே நிறுவனம்.
இந்திய இரயில்வே நிதி நிறுவனம்.
இரயில்வே தகவல் மையம்.
மும்பை இரயில் விகாஸ் மையம்.
இரயில்டெல் நிறுவனம்.
ரைட்ஸ் நிறுவனம்.
இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனம்.
இரயில்வே வரவு செலவு மற்றும் நிதி
இரயில்வே நிதிநிலை அறிக்கையில் புதிய இரயில்களை அறிமுகப்படுத்தல், பழைய வழித்தடங்களை மாற்றியமைத்தல், நவீனமயமாக்கல் மற்றும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் போன்றவை அறிவிக்கப்படுகின்றன. இரயில்வேயின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படுகின்றன. இரயில்வே அறிக்கையானது மக்களவையில் பெரும்பான்மையோரால் ஆதரிக்கப் படவேண்டும். மாநிலங்களவை ஆலோசனைகள் வழங்குமெனினும் அவை திட்டங்களைக் கட்டுப்படுத்தாது. அரசின் மற்ற வரவு செலவுகளைப் போலவே இரயில்வேயின் வருமானத்திற்கும் தணிக்கைக் கட்டுப்பாடு உள்ளது. இந்திய இரயில்வேயின் லாப, நட்டங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது.
1924-ல் ஏற்படுத்தப்பட்ட புதிய மரபின் படி இரயில்வே நிதி அறிக்கையானது பொது நிதியறிக்கக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே மத்திய இரயில்வே அமைச்சரால் ஃபிப்ரவரி 26-ம் தேதி வாக்கில் சமர்பிக்கப் படுகிறது. இவ்வறிக்கை பாராளுமன்றத்தில் தனியாக வழஙப் பட்டாலும் இதன் வரவு செலவுகளும் பொது நிதியறிக்கையில் சேர்க்கப் படுகின்றன. இது அரசின் ஒரு பகுதியாக இருப்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. மேலும் இது இரயில்வேயின் எதிர்காலத் திட்டங்களையும் உரைக்கிறது.
இரயில்வேயின் கொள்கை உருவாக்கம் மற்றும் கட்டுப்பாடு போன்றன இரயில்வே வாரியத்தால் செயல்படுத்தப் படுகின்றன. இவ்வாரியமானது Chairman, நிதி ஆணையர், பொறியியல், இயந்திரவியல், மற்றும் பல துறைகளில் செயல் உறுப்பினர்களால் இயக்கப்படுகிறது. 2005 நிதிநிலை அறிக்கையின் படி, இந்திய இரயில்வே 46,635 கோடி ரூபாய்களை வருவாயாகப் பெற்றுள்ளது. இது கணிக்கப்பட்ட தொகையை விட 1,838 கோடி ரூபாய் அதிகமாகும். கடந்த ஆண்டு சரக்கு போக்குவரத்தின் மூலம் கிடைத்த வருமானம் 28,745 கோடி ரூபாயிலிருந்து 30,450 கோடி ரூபய்களாக அதிகரித்துள்ளது. இயக்கச் செலவினங்கள் 400 கோடி உயர்ந்தன. நிதி இருப்பு 6,963 கோடி ரூபாயாக இருந்தது. சரக்குப் போக்குவரத்து 7.67% உயர்ந்து 580 மில்லியன்டன்னிலிருந்து 600 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
பயணிகள் வருவாயில் மொத்தம் 20% உயர்வகுப்புகளான குளிரூட்டப்பட்ட வகுப்புகளிலிருந்தே கிடைக்கின்றன. கடந்த ஆந்டு மொத்த பயணிகள் வருகை 7.5% அதிகரித்தது. 2005–2006 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி 10 சதவீதமும் வருவாய் வளர்ச்சி 12 சதவீதமும் வளர்ந்தது
இந்திய இரயில்வேயின் பிரச்சினைகள்
விபத்துகள்
விபத்துகள் இந்திய இரயில்வேயின் மிக முக்கியமான பிரச்சினையாகும். சராசரியாக ஆண்டுக்கு 300 விபத்துகள் ஏற்படுகின்றன. தடம் புரள்தல் அடிக்கடி ஏற்படுகிறது. சமீப காலங்களில் தடம்புரள்தல், ரயில்கள் மோதல் போன்ற விபத்துக்கள் குறைவாக இருப்பினும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் மனிதர்கள் அடிபட்டு இறக்கின்றனர். இந்திய இரயில்வேயின் அளவினைக் கருத்தில் கொள்ளும் போது விபத்துக்களை முற்றிலும் ஒழிப்பது கடினம் எனினும் முடிந்த அளவு குறைக்க இரயில்வே முயன்று வருகிறது. பெரும்பாலான விபத்துக்களுக்கு (83%) மனிதத்தவறுகளே காரணமாகும். கொங்கண் இரயில்வே பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் விபத்துக்களுக்கு காரணமாகின்றன. இரயில்வே எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளாவன நவீனமயமாக்கப்படாத தகவல் தொடர்பு முறைகள், சமிக்ஞைக்கருவிகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் ஆகியவை. இந்திய விடுதலைக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்களையும் நூற்றாண்டுப் பழமையான தண்டவாளங்களையும் அடிக்கடி பழுதுபார்க்க வேண்டியிருக்கிறது.
கூட்ட நெரிசல்
மக்கள் கூட்ட நெரிசல் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியானது எப்போதும் குறிப்பிடப்பட்ட அளவை மீறி பயணிகளை ஏற்றிச் செல்கிறது. திருவிழாக் காலங்களில் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்க்க இருக்கைகள் இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய சமயங்களில் முன்பதிவு இருக்கைகளில் மற்றவர்கள் அத்துமீறி நுழைவதும் நடக்கிறது.
அரசியல் காரணங்களுக்காகவும் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாகவும் பயணிகள் பயணச்சீட்டின் விலை உயர்த்தப்படுவதில்லை. அவை இரயில்வேயின் மற்ற வருவாய்களின் மூலம் சமன் செய்யப்படுகின்றன. இந்நிலை இரயில்வேயின் நவீன மயமாக்கலுக்குத் தடையாக உள்ளது.
சாலை - இரயில்பாதை சந்திப்புகள்
பல இடங்களில் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நடை பயணிகளும், வாகனங்கள், மிதிவண்டி ஓட்டிகளும் இரயில் வரும் நேரத்தில் இரயில் பாதையை கடப்பதால் விபத்துகள் ஏற்பட ஏதுவாகிறது. போதுமான பாலங்கள் இல்லாததும் மக்களுக்கு வசதியான இடத்தில் அவை இல்லாமலிருப்பதும் விபத்துக்கள் காரணங்களாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான இரயில் தடங்கள் வேலி இடப்படாததால் அத்துமீறி நுழைதல் சாதாரணமாக நடைபெறுகிறது. கிராமப்புறங்களில் கால்நடைகளும் மற்ற விலங்குகளும் தண்டவாளங்களில் கடந்து செல்வதால் வேகமாக வரும் வண்டிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
சுகாதாரம்
சுகாதாரம் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். இரயில்வே வலையமைப்பு மிகப்பரந்து இருப்பதும் இரயில்கள் குறைந்த வேகத்தில் நகர்வதும் பயணத்தினை மிக நீண்ட நேரம் தாமதப்படுத்துகிறது. இந்திய இரயில்களில் இருக்கும் கழிப்பறைகள் கீழே திறந்த வெளியாக இருக்கும் வகையினைச் சேர்ந்தவை. எனவே கழிவுகள் அதற்கென பெட்டிகள் ஏற்படுத்தப் பட்டு சேகரிக்கப் படாமல் தரையில் வீழ்கின்றன. இதனால் இரயில்கள் நிற்கும் இரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் அதிகமானோர் பயன்படுத்துவதால் கழிப்பறைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. தற்போது இரயில்வே சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கழிப்பறைகளை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது. இது நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த உதவும் காரணிகளில் ஒன்றாக விளங்கும்.
கோவிட்-19 இன் விளைவுகள்
முன்பில்லாத வகையில், மார்ச் 24 அன்று பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து, 13,523 தொடருந்துகளின் சேவையை, 21 நாட்களுக்கு இரயில்வே நிறுவனம் நிறுத்தியது. இருப்பினும் சரக்கு தொடருந்துகள், இந்த காலகட்டத்தில் தொடர்ந்து இயக்கப்பட்டன. 167 ஆண்டு வரலாற்றில் தொடருந்துகள் நிறுத்தப்படுவது, இதுவே முதல் முறையாகும்.
இதையும் காண்க
இந்தியாவிலுள்ள தொடருந்து நிலையங்கள்
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
இந்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
அனைத்திந்திய இரயில்வே வரைபடம்
இந்திய இரயில்வே ரசிகர் மன்றம்
IR. இணையவழி பயணச் சீட்டு வழங்கல் தளம்
தமிழ் இருப்புப்பாதை அருஞ்சொற்பொருள்/TAMIL RAILWAY GLOSSARY
இந்திய ரயில்வே PNR உதவி வலைத்தளம்
இந்திய ரயில்வே PNR ஐச் ஆதரவு வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இந்திய ரயில்வே PNR Status உதவி
இந்திய ரயில்வே PNR Status ஐச் ஆதரவு வலைத்தளம்
இந்திய இரயில்வே விசாரணை வலைத்தளம்
இரும்புவழிப் போக்குவரத்து
மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை
இந்திய இரயில்வே அமைச்சகம்
|
4707
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
|
கூவம்
|
கூவம் சென்னை நகரில் பாயும் மூன்று ஆறுகளில் ஒன்று, அடையாறு, கொற்றலை ஆறு ஆகியவை மற்ற இரு ஆறுகள். ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்றன. இன்று சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாக மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மொத்தம் 72 கி.மீ ஓடுகிறது. புறநகரில் 40 கிலோமீட்டரும், நகருக்குள் 18 கிலோமீட்டரும் ஓடுகிறது. 2004 திசம்பர் சுனாமியின் போது இந்த ஆறு ஒரு வடிகாலாகச் செயல்பட்டதால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது. சுனாமியின் போது ஆற்றின் கழிமுகப்பகுதியின் அசுத்தம் நீங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எப்போதும் கறுப்பாக தெரியும் தண்ணீர் கண்ணாடி போல் மின்னியது. ஆனால் சுனாமி முடிந்த சில வாரங்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பியது.
தோற்றம்
கூவம் ஆறு சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர். மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக உருவாகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான தக்கோலம் (திருவூறல்) அமைந்துள்ளது. இங்கு உருவாகும் இந்த ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுரகிலோமீட்டர். ஆற்றுப் படுக்கையின் அகலம் 40 முதல் 120 மீட்டர் வரை. ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு நொடிக்கு 22,000 கன அடி ஆகும். 2005 ஆண்டில் ஆற்றில் வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 21,500 கன அடி.
மேற்கோள்கள்
சென்னை ஆறுகள்
|
4708
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%28%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%29
|
அடையாறு (ஆறு)
|
அடையார் ஆறு (Adayar River) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் ஓடும் மூன்று ஆறுகளில் ஒன்று ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் உருவாகும் இந்த ஆறு சென்னையில் உள்ள அடையாறு பகுதில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 42.5 கிலோமீட்டர் அல்லது 26.4 மைல் நீளம் கொண்ட இந்நதி சென்னையின் சுற்றுச்சூழல் கழிமுக அமைப்புக்கு பங்களிக்கிறது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், படகு மற்றும் மீன்பிடித்தல் இந்த ஆற்றில் நடைபெறுகிறது. நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது. சுமார் 860 சதுர கிலோமீட்டர்கள் அல்லது 331 சதுரமைல் பரப்புள்ள நகரத்திலிருந்து பெரும்பாலான கழிவுகள் இந்த நதியில் வடிகட்டப்படுகின்றன.
தோற்றமும் பயணமும்
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மணிமங்கலம் கிராமத்திற்கு அருகிலுள்ள மலாய்பட்டு தொட்டியில் (80.00 ° தீர்க்கரேகை மற்றும் 12.93 ° அட்சரேகை) இந்நதி தொடங்குகிறது. சென்னையின் த்திற்கு அருகே மேற்கு திசையில் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த பகுதி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் ஆற்றில் சேரும் இடத்திலிருந்து மட்டுமே இது ஒரு நீரோடையாகத் தோன்றத் தொடங்குகிறது. இது காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டம் வழியாக சுமார் 42.5 கிலோமீட்டர்கள் (26.4 mi) ஆறாக ஓடி சென்னை ரில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இங்கே இது ஒரு முகத்துவாரத்தை உருவாக்குகிறது, இது அடையார் பாலத்திலிருந்து கடலின் விளிம்பில் உள்ள மணற்பிரதேசம் வரை நீண்டுள்ளது, இடையில் சில சிறிய தீவுகள் உள்ளன. இந்த முகத்துவாரம் பலவகையான பறவைகளை ஈர்க்கிறது. சுமார் 120 எக்டேர்கள் (300 ஏக்கர்கள்) கொண்ட இந்த முகத்துவாரம் 1987 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு காப்பகமாக மாற்றப்பட்டது. இந்த நதி தன் வாய்க்கு அருகே ஒரு சிறிய உபநதியை உருவாக்குகிறது, இது அடையார் நதி அழைக்கப்படுகிறது, இந்த சிற்றோடை ஒரு இயற்கை கால்வாயாகும். இக்கால்வாய் அலை நீரை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்கிறது.
புவியியல்
அடையாறு நதியின் ஆழம் மேற்புறப் பகுதிகளில் சுமார் 0.75 மீட்டர்கள் வரையும் கீழ்ப்புறப்பகுதிகளில் சுமார் 0.5 மீட்டர்கள் வரையும் மாறுபடுகிறது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 530 சதுர கிலோமீட்டர்கள் (200 சதுர மைல்) ஆகும். ஆற்றுப்படுகை 10.5 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை அகலம் கொண்டதாக உள்ளது. சென்னை பெருநகரப் பகுதியில் அடையாறு ஆறு சுமார் 24 கிலோமீட்டர் தொலைவுக்குப் பாய்கிறது. இதில் கடலுடன் சேர்வதற்கு முன் சென்னை மாவட்டத்திற்குள் பாயும் 15 கிலோமீட்டர் தொலைவும் அடங்கும். ஆண்டுதோறும் அடையாறு ஆறு 190 முதல் 940 மில்லியன் கனசதுர மீட்டர் தண்ணீரை வங்கக் கடலுக்குள் அனுப்புகிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆண்டு சராசரியை விட 7 முதல் 33 மடங்கு அதிகமான தண்ணீரை அடையாறு ஆறு வங்கக் கடலுக்குள் வெளியேற்றுகிறது. 40 குளங்களில் இருந்து பெறும் உபரி தண்ணீர் ஆற்றின் வழியாக ஓடுகிறது.
ஆற்றின் தற்போதைய தண்ணீர் வெளியேற்றம் நொடிக்கு 39000 கன அடியாகும். அதே நேரத்தில் எதிர்பார்க்கப்படும் வெள்ள வெளியேற்ற திறன் நொடிக்கு 60000 கன அடிகளாகும். 2005 ஆம் ஆண்டைய வெள்ளத்தின் போது அடையாறு ஆற்றில் நொடிக்கு 55000 கன அடி தண்ணீர் வெளியேற்றம் இருந்தது.
கழிமுகம்
ஐயர், பணிக்கர் ஆகிய இரு கடலியல் வல்லுநர்கள், இந்த ஆற்றின் கழிமுக ஏற்றத்தாழ்வுடைய உப்புத்தன்மையை ஆய்ந்து விளக்கியுள்ளனர். இவ்விடத்தில் காணப்படும் முக்கிய உயிரிகளாவன: பலவகைக் கடற்சாமந்திகள், வளை வாழ்வளைதசைப்புழுக்கள், வளை தோண்டும் வளைதசைப் புழுக்கள், நெப்டியுனஸ், வெருனா, நண்டுகள், கிளிபனோரியஸ், துறவி நண்டுகள், ஆஸ்ட்ரியா, மெரிட்ரிக்ஸ் மெல்லுடலிகள் மற்றும் சில மீன்கள் ஆகும். இங்கு நீரின் உப்புத் தன்மையும் மற்ற பண்புகளும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால் இங்கு வாழும் உயிரிகள் பல வகையான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. கழிமுகங்களில் மிகுதியாக வண்டல் படிகின்றது. ஒளி புகுதலும் குறைந்த அளவில் தான் காணப்படுகின்றது. இத்தகைய சூழலுக்கேற்ப இங்குள்ள தாவரங்களும், விலங்குகளும் பல தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
சூழலியல்
அடையாறு ஆற்றின் நதி முகத்துவாரம் உபநதி அவற்றின் தெற்குப் பகுதியில் உள்ள பிரம்மஞான சபை ஆகியவை பல ஆண்டுகளாக புலம்பெயர்ந்த மற்றும் தாயகப் பறவைகளுக்கு ஒரு புகலிடமாக உள்ளன. குறைந்த உப்புத்தன்மை, நல்ல தங்குமிடம் மற்றும் அடையர் சிற்றோடையில் அதிக மிதப்புகள் கிடைப்பது போன்ற நதி முகத்துவாரத்தின் சுற்றுச்சூழல் நிலைமைகள் மீன்களுக்கு ஒரு நல்ல நாற்றங்காலாக செயல்படுகின்றன. சிற்றோடைக்கு உள்ளேயும் வெளியேயும் அலை நீரின் ஓட்டம் படகுகளை எளிதில் பயணிக்க அனுமதித்தது. எனவே இது மீன்பிடித்தலை ஊக்குவிக்கிறது. இங்கு மீன் வர்த்தகத்தின் செழிப்பான பொருளாதாரம் இருந்தது. இருப்பினும், நகரத்தின் கழிவுநீர் மற்றும் அதன் பல்வேறு தொழில்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் சில காலம், ஆற்றில் கலந்து இப்பகுதியின் உயிரியல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மாசுபாடு மற்றும் மானுடவியல் நடவடிக்கைகள் காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், அவை மேலும் நூற்றுக்கணக்கான பறவைகளை ஈர்க்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மஞான சபை சுற்றுச்சூழல் கண்காணிப்பு தொடர்பான அதிரடி துவக்கமாக அறக்கட்டளையால் தொகுக்கப்பட்ட 'அடையாறு பறவைகள் பற்றிய ஒரு குறுவட்டை வெளியிட்டது. முன்மொழியப்பட்டுள்ள அடையாறு பூங்கா துடிப்பான சூழல் அமைப்பை மீட்டெடுப்பதில் முதன்மையானதாக இருக்கலாம்.
அடையாறு ஆறு சீரமைப்புப் பணிகள்
அடையாறு ஆற்றின் முதல் 25.4 கிமீ நீளம் வரையிலான இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிகள் 90 கோடி ரூபாய் செலவில் 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் முடிய உள்ளது.
முக்கிய இடங்கள்
பிரம்மஞான சபை, சென்னை படகு சங்கம், அண்ணா பல்கலைக்கழகம், தென்றல் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அடையாறு வரலாறு - காணொலி
சென்னை ஆறுகள்
தமிழக ஆறுகள்
|
4709
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
காஞ்சிபுரம்
|
காஞ்சிபுரம், அல்லது காஞ்சீபுரம் (Kancheepuram) அல்லது காஞ்சி, இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இது கோவில் நகரம், ஆயிரம் கோவில்களின் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இது பாலாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது.
முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சபேசுவரர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்களில் சாக்தர், சைவர், வைணவர் எனப் பலவேறு சமயப் பிரிவினரும் வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நகரமாகும். ஆகத்து 24, 2021 அன்று, காஞ்சிபுரத்தை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.
வரலாறு
காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலையிலும், தமிழ் மற்றும் சமற்கிருத மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்தது.
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேதவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின்படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்குப் பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டத் துவங்கிட, அவரது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார். அதே மன்னனே, தற்காலிகமாகச் சமணச் சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமணப் பாரம்பரியம் காஞ்சியில் வளரப் பங்காற்றினார். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவுபடுத்தலும் மேற்கொள்ளப்பட்டன. ஏகம்பரநாதர் கோயிலுக்குக் கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித் தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலைத் தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டார். இராபர்ட் கிளைவ், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும். இது சென்னைக்கு தென்மேற்கே 72 கிமீ (45 மைல்) தொலைவில் அமைந்துள்ளது, இது பாலாறு ஆற்றின் துணை நதியான வேகவதி ஆற்றின் கரையில் உள்ளது. இந்த நகரம் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (345 அடி) உயரத்தில் இருக்கின்றது. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள நிலம் தட்டையானது மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி சாய்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மண் பெரும்பாலும் களிமண் மற்றும் மணல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை கட்டுமானத்திற்கு பயன்படுத்த ஏற்றவை ஆகும்.
பொருளாதாரம்
காஞ்சிப்பட்டு
காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரைப் பரம்பரையாகப் பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை
பேரறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் 1969-இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974-இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1981-ஆம் ஆண்டு புற்றுநோயாளிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான ஆந்திரா, கருநாடகம் மற்றும் கேரளாவிளிருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம். எஸ். சி. மருத்துவ இயற்பியற் படிப்பு வழங்கப்படுகிறது. சனவரி 20, 2010 அன்று அன்றைய துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீனப் புற்றுநோய்ச் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.
அடிப்படை சுகாதாரம் வசதி இல்லாத 19 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையை ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் என்பவர் கட்டினர்.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 45 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41,807 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கட்தொகை 164,384 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.1% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15955 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். இவ்வூரில் செங்குந்த முதலியார், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் மிகுதியாக உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,833 மற்றும் 151 ஆகவுள்ளனர். 2011-ஆம் ஆண்டு மதவாரியானக் கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரத்தில் இந்துக்கள் 93.38%, முஸ்லிம்கள் 5.24%, கிறிஸ்தவர்கள் 0.83%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.4%, 0.11% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.
பாடற்றலம்
நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளைப் புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப் பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். மாணிக்கவாசகர் தமதுத் திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மற்றும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள்.
திவ்யதேசங்கள்
ஆழ்வார்களானத் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜ பெருமாள் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்தப் பெருமாட் கோயில்), அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்தப் பெருமாள் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் கோயில், வைகுந்தநாதப் பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ணப் பெருமாள் கோயில், பாண்டவதூதர்ப் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழ்ப் பாடல்களில் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகளானத் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
காஞ்சிபுரம் வழியாகச், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, என். எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. சென்னை, பெங்களூர், விழுப்புரம், திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டிவனம், மதுரை, திருச்சி, புதுச்சேரி, தஞ்சாவூர், வந்தவாசி, செய்யார், போளூர், படவேடு, செங்கல்பட்டு, தாம்பரம், மேல்மருவத்தூர், கல்பாக்கம், நெய்வேலி, கடலூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரிப் பேருந்துச் சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து சென்னை செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று பூந்தமல்லி வழியாகவும், மற்றொன்று தாம்பரம் வழியாகவும் செல்லலாம். உள்ளூர்ப் பேருந்துச் சேவைகளைத், தமிழ்நாட்டு மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்பட்டன.
தொடருந்துப் போக்குவரத்து
காஞ்சிபுரத்தில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையானது, காஞ்சிபுரம் வழியாக செல்கிறது. புதுச்சேரி மற்றும் திருப்பதிக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன, மேலும் மதுரைக்கு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் மற்றும் நாகர்கோயிலுக்கு வாரத்திற்கு இரண்டு விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.
வானூர்தி நிலையம்
இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆனது, அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
காஞ்சிபுரம் மாநகராட்சியானது காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த சி. வி. எம். பி. எழிலரசன் வென்றார்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த க. செல்வம் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரத்தின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் அவர்கள் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார்
வானிலை மற்றும் காலநிலை
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
காஞ்சிபுரம் நகராட்சியின் இணையதளம்
காஞ்சிபுரம் பற்றிய வலைப்பக்கம்
இந்து யாத்திரைத் தலங்கள்
தமிழர் இடையே பௌத்தம்
தொண்டையர்
இந்து புனித நகரங்கள்
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
பண்டைய இந்திய நகரங்கள்
இந்து புனிதத் தலங்கள்
|
4710
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
காஞ்சி
|
காஞ்சி என்னும் தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன:
காஞ்சி மரம் - ஒரு வகை மரம்
காஞ்சித் திணை - ஏழு புறத்திணைகளில் ஒன்று
காஞ்சிப்பாடல் - ஒருவர் இறந்தபின் இசை முழக்கத்துடன் பாடப்படும் பாடல்
காஞ்சி அணி - மகளிர் இடையில் அணியும் அணிகலன்
காஞ்சி ஆறு
காஞ்சிபுரம்- தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர்
காஞ்சிபுரம் மாவட்டம் -தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி - தமிழ்நாட்டில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி
காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ்நாட்டில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி
|
4711
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
ஆங்கிலம்
|
ஆங்கிலம் (English) என்பது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன்முதலில் முன்மத்திய கால இங்கிலாந்தில் பேசப்பட்டது. எனினும், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். இம்மொழி ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆத்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சில கரீபியன் நாடுகளில் பெரும்பாலான மக்களால் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மண்டாரின் சீனம் மற்றும் எசுப்பானிய மொழிக்கு அடுத்ததாக உலகின் மூன்றாவது பெரிய சுதேச மொழியாகவும் இது காணப்படுகிறது. மேலும் இது உலகம் முழுவதும் இரண்டாவது மொழியாகவும் பயிலப்படுகிறது. இம் மொழி ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு உலக அமைப்புக்களின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது.
ஆங்கில மொழி, இன்றைய தென்கிழக்கு சுகாட்டுலாந்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் ஆங்கிலோ-சாக்சன் அரசுகளில் உருவானது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை பரந்திருந்த பிரித்தானியப் பேரரசின் காரணமாகவும், பின் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினாலும் உலகெங்கும் பரவியதோடு, சர்வதேச அரங்கில் முன்னணி பெற்ற மொழியாகவும் உருவானது. மேலும் இம்மொழி பல்வேறு பகுதிகளில் பொது மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்று ரீதியாக, 5ம் நூற்றாண்டில் செருமானிய குடியேறிகளான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரால் பிரித்தானியாவின் கிழக்குக் கரைக்குக் கொண்டுவரப்பட்ட, பண்டைய ஆங்கிலம் எனப்பட்ட பல்வேறு தொடர்புடைய மொழிவழக்குகளில் இருந்து பிறந்ததாகும். ஆங்கிலம் எனும் சொல்லின் மூலம் ஏங்கில்சு எனும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இது அவ்வினத்தாரின் மூதாதையரின் தேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆங்கிலச் சொற்களில் குறிப்பிடத்தக்களவு லத்தீன் மொழியிலிருந்தே உருவாயின. ஏனெனில் லத்தீன் மொழியே கிறித்தவ தேவாலயத்தினதும் ஐரோப்பிய அறிஞர் சமுதாயத்தினதும் பொது மொழியாகக் காணப்பட்டது. மேலும், 9ம் மற்றும் 10ம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற வைக்கிங்குகளின் படையெடுப்பினால் ஆங்கிலத்தில் பண்டைய நோர்சு மொழியின் தாக்கமும் ஏற்பட்டது.
11ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மீது மேற்கொள்ளப்பட்ட நோர்மன் படையெடுப்பினால் நோர்மன் பிரெஞ்சு மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. மேலும், இதன் உச்சரிப்பும் சொல்வளமும் ரோமானிய மொழிகளுடன் நெருங்கிய உறவுடையன போன்ற தோற்றத்தை அளித்துள்ளன. இத்தாக்கங்களுக்கு உட்பட்ட ஆங்கிலம் மத்தியகால ஆங்கிலம் எனப்பட்டது. 15ம் நூற்றாண்டில் தெற்கு இங்கிலாந்தில் உருவான பாரிய உயிரெழுத்துத் திரிபு காரணமாக மத்திய ஆங்கிலத்திலிருந்து நவீன ஆங்கிலம் உருவானது.
வரலாறு முழுவதும் ஏனைய பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களை தன்னுள் வாங்கிக்கொண்டமையினால் நவீன ஆங்கிலம் பரந்த சொல்வளமும் சிக்கலான குழப்பமான உச்சரிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. நவீன ஆங்கிலம் ஐரோப்பிய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மொழிகளிலும் இருந்து சொற்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒக்சுபோர்ட் ஆங்கில அகராதி 250,000க்கும் அதிகமான வித்தியாசமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றில் பல தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் கொச்சைச் சொற்கள் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
சொற் பிறப்பு
ஆங்கிலம் எனும் சொல் இன்றைய வட செருமனியின் சூட்லாந்தில் அமைந்துள்ள ஏங்கல் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செருமானிய குழுவொன்றின் பெயரான ஏங்கல் என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.
முக்கியத்துவம்
நவீன ஆங்கிலம் சிலவேளைகளில் முதலாவது உலகப் பொது மொழி என அழைக்கப்படுகிறது. மேலும் தொலைத் தொடர்பு, விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், கடற்பயணம், வான் பயணம், பொழுதுபோக்கு, வானொலி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் மிகவும் செல்வாக்குமிக்க, இன்றியமையாத மொழியாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் வளர்ச்சியின் பின் இம்மொழி பிரித்தானியத் தீவுகளிலிருந்து உலகெங்கும் பரவத் தொடங்கியது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் பரவியது. 16ம் நூற்றாண்டு தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரையில் பிரித்தானியக் குடியேற்றங்களின் பின் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் முதன்மையான மொழியாக உருவானது. இரண்டாம் உலகப் போர் தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவின் வளரும் பொருளியல் மற்றும் பண்பாட்டு ஆதிக்கம் காரணமாகவும் உலக வல்லரசு எனும் அதன் நிலை காரணமாகவும் உலகம் முழுவதும் ஆங்கில மொழியின் பரவல் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் விஞ்ஞான நோபல் பரிசாளர்கள் அதிகமாக ஆங்கிலேயர்களாகவே உள்ளனர். செருமானிய மொழி பின்தள்ளப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து பிரெஞ்சு மொழியைப் பின்தள்ளி, ஆங்கிலம் அரசியலில் ஆதிக்கம் பெற்ற மொழியாக மாறியுள்ளது.
மருத்துவம் மற்றும் கணனியியல் போன்ற இன்னோரன்ன துறைகளில் ஆங்கிலப் பயன்பாட்டறிவு அடிப்படைத் தேவையாக உள்ளது. இதன் விளைவாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆங்கிலத்தில் அடிப்படை அறிவையேனும் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகளின் ஆறு உத்தியோகபூர்வ மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றாகும்.
ஆங்கில மொழியின் வளர்ச்சியால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சுதேச மொழிப் பல்வகைமையின் வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். மேலும் மொழித்தேய்வுக்கும் இது காரணமாக உள்ளது. இருப்பினும் மறுதலையாக, கிரியோல் மற்றும் பிட்சின் போன்ற ஆங்கிலத்தின் உட்பிரிவுகளினால் ஆங்கிலத்திலிருந்து வித்தியாசமான புதிய மொழிகளும் உருவாகி வருகின்றன.
வரலாறு
வடகடல் செருமானிய குழுக்களின் மொழிகளிலிருந்தே ஆங்கிலம் உருவானது. இம் மொழிப்பிரிவுகள் நெதர்லாந்து, வடமேற்கு செருமனி மற்றும் டென்மார்க் ஆகிய பிரதேசங்களிலிருந்து பிரித்தானியாவில் குடியேறியோரால் பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதுவரை, பிரித்தானியாவில் வாழ்ந்தோர் செல்டிக் மொழியாகிய பிரைத்தோனிக் எனும் மொழியைப் பேசியிருக்கலாமென நம்பப்படுகிறது. மேலும் 400 ஆண்டுகால ரோமானிய ஆட்சியினால் லத்தீன் மொழியின் தாக்கமும் இருந்திருக்கக் கூடும். இவ்வாறு குடியேறியோருள் ஒரு செருமானிய குழுவே ஏங்கில்சு ஆகும். இவர்களே பிரித்தானியா முழுவதும் பரவிய குழுவினராய் இருக்கக்கூடும் என பீட் நம்புகிறார். இங்கிலாந்து (ஏங்கிலா லாந்து "ஏங்கில்சுகளின் நாடு") மற்றும் ஆங்கிலம் (பண்டைய ஆங்கிலம் இங்லிசு) ஆகிய சொற்கள் இக்கூட்டத்தாரின் பெயரிலிருந்தே உருவாயின. எனினும், இக்காலப் பகுதியில் பிரிசியா, கீழ் சாக்சனி, சூட்லாந்து மற்றும் தென் சுவீடன் பகுதிகளில் வாழ்ந்த சாக்சன்கள், சூட்டர்கள் போன்ற பல்வேறு இனக்குழுக்களும் பிரித்தானியா நோக்கிக் குடிபெயர்ந்தனர்.
ஆரம்பத்தில் காணப்பட்ட பண்டைய ஆங்கிலமானது பெரிய பிரித்தானியாவில் இருந்த ஆங்கிலோ சாக்சன் அரசுகளின் பல்வேறு மொழிப்பிரிவுகளைக் கொண்டிருந்தது. எனினும், இம்மொழிப்பிரிவுகளில் ஒன்றான பின் மேல் சாக்சன் மொழிப்பிரிவு பெரிதும் செல்வாக்குச் செலுத்தத் தலைப்பட்டது.
இருவேறு படையெடுப்புக்களின் காரணமாகப் பண்டைய ஆங்கிலம் மாற்றமுற்றது. இவற்றுள் முதலாவதாக 8 ஆம் மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியத் தீவுகளின் வட பகுதிகளை கைப்பற்றிய எலும்பற்ற இவான் மற்றும் ஆல்ப்டான் ராக்னார்சன் ஆகியோரினால் கொண்டுவரப்பட்ட வட செருமானிய மொழி பேசும் கூட்டத்தினரால் உருவானதாகும். மற்றையது 11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பு மூலம் கொண்டுவரப்பட்ட, உரோமானிய மொழியாகிய பண்டைய நோர்மன் மொழி பேசும் கூட்டத்தினரால் ஏற்பட்டது. இம் மொழி ஆங்கிலோ-நோர்மன் எனவும் ஆங்கிலோ-பிரெஞ்சு எனவும் திரிபடைந்தது. அரசாங்கம் மற்றும் சட்டத் துறைகளில் பல்வேறு சொற்களை இம்மொழி அறிமுகப்படுத்தியது. மேலும் சுகண்டினேவிய மற்றும் நோர்மன் சொற்களை உள்வாங்கிக் கொண்ட ஆங்கிலம், ஒரு வாங்கல் மொழியாக (ஏனைய மொழிகளிலிருந்து இலகுவாகச் சொற்களைப் பெறும் தன்மை) மாறியதோடல்லாமல் இதன் இலக்கணமும் இலகுபடுத்தப்பட்டது.
நோர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட மொழிப் பெயர்ச்சியால், பண்டைய ஆங்கிலம், மத்திய ஆங்கிலம் எனும் புதிய உருவைப் பெற்றது. இக்காலப் பகுதியில் உருவான செஃப்ரி சோசரின் கன்டர்பெரி கதைகள் எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் ஐரோப்பிய சமூகத்தில் இலத்தின் மொழி ஒரு பொது மொழியாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் இது சமய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டலும் பின்பு மறுமலர்ச்சிக்காலத்தில் புத்துயிர் பெற்ற தொடர்பாடல் மொழியாக இது உருவானது. இவ்வாறு லத்தீன் மொழியில் எழுத்தாக்கங்களை உருவாக்கியோர் சுதேச ஆங்கிலத்தில் காணப்படாத சொற்களுக்குப் பதிலாக லத்தீன் மொழியிலிருந்து புதிய சொற்களைப் பயன்படுத்தினர்.
வில்லியம் சேக்சுபியரின் படைப்புக்கள் மற்றும் சேம்சு மன்னனின் விவிலியம் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன ஆங்கிலம், 1550க்குப் பின் உருவானது. பிரித்தானியா குடியேற்ற வல்லரசாகிய பின், பிரித்தானியப் பேரரசின் குடியேற்ற நாடுகளில் ஆங்கிலம் ஒரு பொது மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. குடியேற்ற காலத்தின் பின்னர் புதிதாக உருவாகிய, பல்வேறு சுதேச மொழிகளைக் கொண்டிருந்த சில நாடுகள் அரசியல் சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு ஆங்கிலத்தைத் பொதுமொழியாகத் தேர்ந்தெடுத்தன. பிரித்தானியப் பேரரசின் வளர்ச்சி காரணமாக வட அமெரிக்கா, இந்தியா, ஆபிரிக்கா, ஆத்திரேலியா மற்றும் பல பகுதிகளில் ஆங்கிலம் வேரூன்றியது.20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் எழுச்சியுடன் இப்போக்கு மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது.
புவியியல் பரம்பல்
அண்ணளவாக 375 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். ஒரு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோரின் எண்ணிக்கையில் ஆங்கிலம் மூன்றாம் இடத்திலுள்ளது. மண்டாரின் சீனமும் எசுப்பானிய மொழியும் முறையே முதலிரு இடங்களில் உள்ளன. எவ்வாறாயினும், மொத்த மொழி பேசுவோர் தொகையைப் பார்க்கும்போது ஆங்கிலம் முதலிடத்திலுள்ளது.
இரண்டாம் மொழியாகப் பேசுவோர் தொகை பற்றிய மதிப்பீடுகள் 470 மில்லியனிலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகை வரை மாறுபடுகிறது. மொழிப் பேராசிரியர் தாவிது கிறிசுடலின் கணிப்பின்படி, தாய்மொழிப் பேச்சாளர்களுக்கும் ஏனைய பேச்சாளர்களுக்குமிடையிலான விகிதம் 1க்கு 3 ஆக உள்ளது.
ஆங்கிலத் தாய்மொழிப் பேச்சாளர்களை அதிகளவில் கொண்ட நாடுகளின் பட்டியலில், 2006 கணிப்பீட்டின்படி, இறங்குவரிசைப்படி, ஐக்கிய அமெரிக்கா (226 மில்லியன்), ஐக்கிய இராச்சியம் (61மில்லியன்), கனடா (18.2மில்லியன்), ஆசுதிரேலியா (15.5 மில்லியன்), நைசீரியா (4 மில்லியன்), அயர்லாந்து (3.8மில்லியன்), தென்னாபிரிக்கா (3.7 மில்லியன்), மற்றும் நியூசிலாந்து (3.6 மில்லியன்) என்பன உள்ளன.
பிலிப்பைன்சு, செமைக்கா மற்றும் நைசீரியா போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கான தாய்மொழி ஆங்கிலப் பாவனையாளர்கள் உள்ளனர். இவர்கள் பேசும் மொழி, ஆங்கில அடிப்படையிலான கிரியோல் மொழியிலிருந்து தரப்படுத்திய ஆங்கிலம் வரை வேறுபடுகிறது. ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பேசும் நாடுகளில் அதிக பேச்சாளர்களை இந்தியா கொண்டுள்ளது. தாய்மொழிப் பேச்சாளர்களையும் தாய்மொழியல்லாத பேச்சாளர்களையும் சேர்த்துப் பார்க்குமிடத்து உலகின் ஏனைய நாடுகளிலும் பார்க்க ஆங்கிலத்தைப் பேசவும் புரிந்துகொள்ளவும் கூடியோரின் தொகை இந்தியாவிலேயே அதிகம் என கிறிசுடல் குறிப்பிடுகிறார்.
பேச்சாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலான ஆங்கில மொழி பேசும் நாடுகளின் பட்டியல்
ஆங்கிலம் முதன்மை மொழியாகப் பேசப்படும் நாடுகள்
ஆங்கிலம் முதன் மொழியாக உள்ள நாடுகள் வருமாறு: அங்கியுலா, அன்டிகுவா பர்புடா, ஆத்திரேலிய, பகாமாசு, பார்படோசு, பெலீசு மொழிகள், பெர்மியுடா, பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம், பிரித்தானிய கன்னித் தீவுகள், கனடா, கேமன் தீவுகள், டொமினிக்கா, போக்லாந்து தீவுகள், கிப்ரால்ட்டர், கிரெனடா, குவாம், குயெர்ன்சி, கயானா, அயர்லாந்து, மாண் தீவு, யமேக்கா, யேர்சி, மொன்செராட், நவூரு, நியூசிலாந்து, பிட்கன் தீவுகள், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்டு. வின்செண்ட் கிரெனேடின்சு, சிங்கப்பூர், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள், திரினிடாட் டொபாகோ, துர்கசு கைகோசு தீவுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு.
சில நாடுகளில் ஆங்கிலம் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இல்லாவிட்டாலும், அந்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. அத்தகைய நாடுகள் பின்வருமாறு: போட்சுவானா, கமரூன், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிசி, காம்பியா, கானா, இந்தியா, கென்யா, கிரிபட்டி, லெசோத்தோ, லைபீரியா, மடகாசுகர், மால்ட்டா, மார்சல் தீவுகள், மொரிசியசு, நமீபியா, நைசீரியா, பாக்கித்தான், பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, ருவாண்டா, செயிண்ட் லூசியா, சமோவா, சீசெல்சு, சியேரா லியோனி, சொலமன் தீவுகள், இலங்கை, சூடான், சுவாசிலாந்து, தான்சானியா, உகாண்டா, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே.
மேலும் காண்க
ஆங்கில இலக்கணம்
பிரித்தானிய ஆங்கிலம்
இடாய்ச்சு (செருமன்)
எசுப்பானியம் (சுபானிசு)
பிரெஞ்சு
எளிய ஆங்கிலம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
தமிழ் - ஆங்கில அகராதி
பழனியப்பா சகோதரர்கள்
ஆங்கில - தமிழ் அகராதி
இலவச ஆங்கில தமிழ் அகராதி
அகராதிகள்
freelang
Wordweb
ஆங்கில அகராதிகள்
Oxford English Dictionary
Cambridge dictionary
Ethnologue report for English
TEFL – Teaching English as a Foreign Language
BBC – Radio 4 – Routes of English
Short Discriptions of the English Tenses
English language learning and pronunciation
English Grammar Online – free exercises, explanations, games and teaching materials on English as a foreign language
Learning English Online – grammar, vocabulary, exercises, exams – English as a second language
LanguageMonitor – Watchdog on contemporary English usage
What Does That Mean? A wiki based lexicon of English idioms from around the world
American Languages: Our Nation's Many Voices Online
ஆங்கிலம் கற்பதற்கு
ஆங்கில பாடம்
ஆங்கிலம்
மொழிகள்
செருமானிய மொழிகள்
கயானாவின் மொழிகள்
இந்திய மொழிகள்
|
4719
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
|
சோழர் காலக் கட்டிடக்கலை
|
சோழர் காலக் கட்டிடக்கலை என்பது பல்லவர் காலக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாக, சோழர் தமிழ் நாட்டில் வலிமை பெற்றிருந்த கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பன்னிரண்டான் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும்.
ஆரம்ப காலம்
சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் அவை அளவிலும் சிறியவையாக உள்ளன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், கண்ணனூர், கலியபட்டி, திருப்பூர், பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.
இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முழுமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
மத்திய காலம்
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இராஜராஜ சோழன் பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் இந்தியாவில் கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில்.
இதைத் தொடர்ந்து பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராசேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டதே கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கோயில். இதன் விமானம் 150 அடி உயரமுள்ளது. தான் பெற்ற போர் வெற்றிகளுக்கான சின்னமாகத் தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டது இக் கோயில். கம்பீரமும்,பொலிவும் கொண்ட தஞ்சைக் கோயிலுடன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை ஒப்பிடமுடியாதெனினும், இங்கே அமைந்துள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சோழப்பேரரசின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
பிற்காலம்
சோழர்கள் கி.பி. 1279 வரை தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்தபோதும், கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பின்னர் முன் குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டிடங்களுடனும் ஒப்பிடக்கூடிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலும், தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலும், கம்பகரேஸ்வரர் கோயிலும் பிற்காலச் சோழர்காலக் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
இவற்றையும் பார்க்கவும்
திராவிடக் கட்டிடக்கலை
இந்தியக் கட்டிடக்கலை
மேற்கோள்கள்
வரலாறு டாட் காம்
தமிழர் கட்டிடக்கலை
சோழர் கலை
இந்துக் கோயில் கட்டிடக்கலை
சோழர்கள் கட்டிய சிவன் கோயில்கள்
இந்தியக் கட்டிடக்கலை
சோழர் கட்டிடக்கலை
|
4723
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%82%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
|
குனூ தளையறு ஆவண உரிமம்
|
குனூ தளையறு ஆவண உரிமம் (GNU Free Documentation License, GNU FDL அல்லது GFDL) என்பது கட்டற்ற ஆக்கங்களை உறுதி செய்வதற்கான அளிப்புரிமை தரும் உரிமம் ஆகும். இது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSF) குனூ திட்டத்திற்காக உருவாக்கியதாகும். தொடக்கத்தில் மென்பொருள் ஆவணப்படுத்தலில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டாலும் பிற படைப்புகளுக்கும் பயனாகிறது.
படைப்பாக்கத்தின் பயனைத் தடுக்காது மேலும் மேலும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதால் இது பொதுவாக அளிப்புரிமம் என வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு படைப்பாளி உரிமம் வழங்குகிறார் என்றால் குனூ தளையறு ஆவண உரிமம் வரையறைகளின் கீழ் எவரும் தனது ஆக்கத்தை மீண்டும் வெளியிடவோ, பகிரவோ, மாற்றவோ அவருக்கு ஒப்புதல் அளிக்கிறார். இந்த வரையறைகளில் முதன்மையானது எந்த ஓர் ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழ் உள்ள ஆக்கத்திலிருந்து பெறப்பட்டால் அந்த ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழேயே அமையும். தளையறு ஆவண உரிம ஆக்கங்களை மாற்றியமைத்து மாறுபட்ட பதிப்புரிமை உள்ள ஆக்கங்களை வெளியிட இயலாது. எனவே இந்த உரிமம் அந்தப் படைப்பின் உடனேயே தங்கியிருப்பதால் சிலநேரங்களில் இது நுண்ணுயிரி உரிமம் எனவும் அழைக்கப்படுகிறது.
மேலும் ஓர் படைப்பைப் பகிரவோ மாற்றவோ செய்கையில் பயனர் முந்தைய படைப்பாளிகளுக்கு ஆக்குநர்சுட்டு அளிப்பதுடன் மாற்றங்களைப் பட்டியலிடவும் வேண்டும் என குனூ தளையறு ஆவண உரிமம் வலியுறுத்துகிறது.
இறுதியாக, இந்த உரிமத்தின் கீழ் வெளியாகும் எந்தப் படைப்பும் ஏதாவது ஓரிடத்தில் இந்த உரிமத்தின் முழுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது அனைத்து நேரங்களிலும் இயலாது என விமரிசனங்கள் எழுந்துள்ளன. ஒரு நூலின் இறுதியில் முழு உள்ளடக்கத்தையும் வெளியிட முடியும்; ஆனால், ஓர் ஒளிப்படத்தில் அல்லது இசைத்துண்டில் வெளியிட இயலாது.
இவற்றையும் பார்க்கவும்
பதிப்புரிமை
அளிப்புரிமை
மென்பொருள் உரிமங்கள்
குனூ
|
4727
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
நியூசிலாந்து
|
நியூசிலாந்து (New Zealand) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஔதேயாரோவா (Aotearoa) என்பதாகும். இதற்கு நீளமான வெண்ணிற முகில் நிலம் என்று பொருள். குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு ஆகியனவும் நியூசிலாந்தின் ஆட்சி எல்லைக்குள் அடங்கியுள்ளன. புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து தாசுமான் கடலுக்குக் குறுக்காக ஆத்திரேலியா நாட்டுக்கு கிழக்கே 1,500 கிலோமீட்டர்களுக்கு (900 மைல்கள்) அப்பாலும், வடக்கே இதன் அண்மையிலுள்ளவை நியூ கலிடோனியா, பிசி, தொங்கா ஆகிய பசிபிக் தீவுகளுக்குத் தெற்கே ஏறத்தாழ 1000 கிமீ தூரத்துக்கப்பாலும் அமைந்துள்ளது. மனிதர் கடைசியாகக் குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இதன் நீண்டகாலத் தனிமையின் காரணமாக, நியூசிலாந்தில், பறவைகளை முக்கியமாகக் கொண்ட தனித்துவமான விலங்கினங்கள், மற்றும் பூஞ்சைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுள் பல இனங்கள் மனிதர்களும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலூட்டிகளும் நாட்டுக்குள் வந்தபின்னர் அழிந்துவிட்டன. நியூசிலாந்தின் மாறுபட்ட இட அமைப்பியல் மற்றும் கூர்மையான மலை உச்சிகள் காரணமாக நிலங்களின் கண்டத்தட்டுப் பெயர்வு, மற்றும் எரிமலைக் குமுறல்கள் இங்கு அடிக்கடி நிகழ்கின்றன. நியூசிலாந்தின் தலைநகரம் வெலிங்டன் ஆகும். ஆக்லாந்து மக்கள் அதிகமாக வாழும் நகரமாகும்.
கிபி 1250-1300 களில் பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவமான மாவோரி கலாசாரத்தைப் பேணி வந்தனர். 1642 ஆம் ஆண்டில் ஏபெல் தாசுமான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார். 1840 இல் பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி நியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர். இன்றுள்ள 4.5 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய வம்சாவழியினர் ஆவர். தாயக மாவோரி இனத்தவர் மிகப்பெரிய சிறுபான்மையினர். இவர்களுக்கு அடுத்ததாக ஆசியரும், பசிபிக் தீவு மக்களும் வாழ்கின்றனர். இதனால் நியூசிலாந்தின் கலாச்சாரம் முக்கியமாக மாவோரி மற்றும் ஆரம்ப கால ஐரோப்பிய கலாசாரங்களை மையப்படுத்தி உள்ளது. அண்மைக் காலத்தில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றம் தொடங்கியதில் இருந்து பல்கலாச்சாரம் பரவி வருகிறது.
ஐக்கிய இராச்சியத்தின் அரசர் என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு நியூசிலாந்தின் நாட்டுத் தலைவராக உள்ளார். இவரது சார்பில் ஆளுநர் ஒருவர் நியூசிலாந்தில் உள்ளார். அரசரிக்கு நடைமுறையில் எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஓரவையைக் கொண்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது. இதன் தலைவரான தலைமை அமைச்சரே அரசின் தலைவராக உள்ளார். திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று. நாடாளுமன்றத்தை விட நியூசிலாந்தில் 78 உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன. அத்துடன் நியூசிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் டோக்கெலாவ் (சார்பு மண்டலம்); குக் தீவுகள் மற்றும் நியுவே (சுயாட்சி அமைப்புடைய மாநிலங்கள்) ஆகியனவும், அன்டார்க்டிக்காவில் உள்ள ரொசு சார்பு மண்டலமும் உள்ளன. நியூசிலாந்து ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், அன்சஸ், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பசிபிக் தீவுகளின் ஒன்றியம், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது.
சொற்பிறப்பு
டச்சு நாடுகாண்பயணி ஏபெல் தாசுமான் 1642 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைக் கண்டு அதற்கு Staten Landt எனப் பெயரிட்டார். தென்னமெரிக்காவின் தென்முனையில் இதே பெயரைக்கொண்ட நிலப்பகுதி இதனை இணைப்பதாக அவர் கருதினார். 1645 இல் டச்சு நிலப்படவரைவாளர்கள் டச்சு மாகாணமான சீலாந்து (Zeeland) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு இந்நிலத்துக்கு நோவா சீலாந்தியா (Nova Zeelandia) எனப் பெயரிட்டனர். பிரித்தானியக் கப்டன் சேமுசு குக் இதே பெயரை ஆங்கிலப்படுத்தி நியூ சீலாண்ட் (New Zealand) என அழைத்தார்.
ஔதேயாரோவா (Aotearoa, "நீண்ட வெணிற முகிலின் நிலம்" எனப் பொருள்) என்பது நியூசிலாந்தின் தற்போதைய மாவோரி மொழிப் பெயராகும். ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னர் முழு நாட்டுக்கும் இதே மாவோரி பெயர் இருந்ததா என்பது அறியப்படவில்லை, ஆனாலும் ஆரம்பத்தில் வடக்குத் தீவு மட்டுமே ஆவோதேயாரோவா என அழைக்கப்பட்டு வந்தது. இரு முக்கிய தீவுகளும் மவோரி மொழியில் பாரம்பரியமாகப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வடக்குத் தீவு தே இகா-ஆ-மாவுய் (மாவுயின் மீன்), என்றும் தெற்குத் தீவு தே வைப்பவுனாமு (பச்சைக்கல்லின் நீர்நிலைகள்) எனவும் மவோரி மொழியில் அழைக்கப்படுகின்றன. ஆரம்பகால ஐரோப்பிய நிலவரைகள் இத்தீவுகளை வடக்கு (வடக்குத் தீவு), நடு (தெற்குத் தீவு), மற்றும் தெற்கு (ஸ்டூவர்ட் தீவு) எனக் குறிப்பிட்டன. 1830 இல், வடக்கு, தெற்கை மிகப்பெரிய இரண்டு தீவுகளாக வேறுபடுத்தி நிலவரைகள் வரையப்பட்டன. 1907 வாக்கில் இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் இவ்விரண்டு தீவுகளுக்கு வடக்குத் தீவு (தே இகா-ஆ-மாவுய்), தெற்குத் தீவு (தே வைப்பவுனாமு) என முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு பெயர்களில் ஏதாவது ஒன்றையோ, அல்லது இரண்டையுமோ அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம்.
வரலாறு
நியூசிலாந்து மிகவும் அண்மைக்காலத்தில் குடியேற்றம் நிகழ்ந்த மிகப்பெரிய நிலப்பகுதிகளுள் ஒன்று. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, காடழிப்புக்கான ஆதாரங்கள் மற்றும் மாவோரி மக்களிடையே காணப்படும் இழைமணிகளின் டிஎன்ஏ மாறுபாடுகள் போன்றவை கிழக்குப் பொலினீசியர்கள் 1250 - 1300 ஆம் ஆண்டுகளில் தெற்குப் பசிபிக் தீவுகளில் இருந்து தொடர்ச்சியான பல புலப்பெயர்வுகளின் இறுதியில் நியூசிலாந்தில் முதன்முதலில் குடியேறியவர்கள் என்பதைக் காட்டுகின்றன. இதற்குப் பிந்திய சில நூற்றாண்டுகளில் இவர்கள் தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட மாவோரி என்னும் இனத்தவராக வளர்ச்சியடைந்தனர். "ஐவி" (iwi) என்ற இனக்குழுவாகவும், "ஆப்பூ" (hapū) என்ற துணை இனக்குழுவாகவும் பிரிந்துள்ளனர். இவர்கள் சில சமயங்களில் கூட்டுறவுடனும், சிலவேளைகளில் போட்டியிட்டும், சண்டை செய்து கொண்டும் வாழ்ந்துள்ளனர். ஒரு காலகட்டத்தில் மாவோரி இனத்தின் ஒரு பிரிவினர் நியூசிலாந்தில் இருந்து 680 கிமீ தென்கிழக்கேயுள்ள சதாம் தீவுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். அத்தீவுகளுக்கு அவர்கள் ரெக்கோகு (Rēkohu) என்ற பெயரையும் சூட்டினர். அங்கே இவர்கள் தனித்துவமான மொரியோரி பண்பாடு ஒன்றை உருவாக்கினர். 1830களில் தரனாக்கி மாவோரி ஆக்கிரமிப்பு மற்றும் அடிமைப்படுத்தலாலும், ஐரோப்பிய நோய்களின் தாக்கங்களினாலும் 1835 - 1862 காலப்பகுதியில் மோரியோரி இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. 1862 இல் 101 மோரியோரிகளே எஞ்சியிருந்தனர். கடைசி மொரியோரி இனத்தவர் 1933 ஆம் ஆண்டில் இறந்தார்.
நியூசிலாந்தை அடைந்த முதல் ஐரோப்பியர் 1642 இல் தரையிறங்கிய டச்சு மாலுமி ஏபல் தாசுமன் மற்றும் அவரது குழுவினரும் ஆவர். மாவோரிகளுடன் இடம்பெற்ற சண்டையில் தாசுமனின் மாலுமிகள் நால்வர் கொல்லப்பட்டனர். குறைந்தது ஒரு மாவோரி இனத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் 1769 இல் பிரித்தானிய மாலுமி சேமுசு குக் கரையோரப் பகுதி முழுவதையும் சுற்றி வந்த போதே ஐரோப்பியர்கள் இரண்டாவது தடவையாக இங்கு வந்தனர். குக்கைத் தொடர்ந்து ஐரோப்பிய, வட அமெரிக்க திமிங்கில வேட்டையாளர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் இங்கு வந்து போயின. அவர்கள் உணவு, உலோகக் கருவிகள், ஆயுதங்கள் போன்றவற்றை மரம், கைவண்ணப் பொருட்கள், நீர் போன்றவற்றுக்காகப் பண்டமாற்றம் செய்தனர். உருளைக்கிழங்கு, மற்றும் துப்பாக்கிகளின் அறிமுகம் மாவோரிகளின் வேளாண்மை, மற்றும் போர்முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1801 முதல் 1840 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உள்ளூர் மாவோரிகளிடையே 600 இற்கும் அதிகமான போர்கள் இடம்பெற்றன. 30,000 முதல் 40,000 வரையான மாவோரிகள் கொல்லப்பட்டனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் நியூசிலாந்தில் குடியேற ஆரம்பித்தனர். இறுதியில் மாவோரி இனத்தவரின் பெரும்பாலானோர் மதம் மாறினர். 19ம் நூற்றாண்டில் மாவோரி இனத்தவரின் மகக்ள்தொகை 40% ஆகக் குறைந்தது. ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட நோய்களே இவர்களில் பெரும்பான்மையோரை அழித்தது.
1788 இல் ஆர்தர் பிலிப் நியூ சவுத் வேல்சு (இன்றைய ஆத்திரேலியாவின் ஒரு மாநிலம்) ஆளுனராகப் பதவியேற்ற போது நியூசிலாந்தை நியூ சவுத் வேல்சின் ஒரு பகுதியாக அறிவித்தார். 1832 இல் சேமுசு பசிபி என்பவர் நியூசிலாந்தின் பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1835 இல், சார்ல்சு டி தியேரி என்பவர் பிரெஞ்சுக் குடியேற்றத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அச்சுறுத்திய போது, நியூசிலாந்தின் ஐக்கியப் பழங்குடியினர் என்ற அமைப்பு நியூசிலாந்தின் விடுதலையை அறிவித்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னரைக் கேட்டுக் கொண்டது. இதனால் எழுந்த குழப்பநிலையை அடுத்து பிரித்தானிய அரசு நாட்டை தமது வசப்படுத்துவதற்காகவும் மாவோரி மக்களுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தவும் வில்லியம் ஓப்சன் என்ற கேப்டனை நியூசிலாந்துக்கு அனுப்பியது. 1840 பெப்ரவரி 6 இல் வைத்தாங்கி ஒப்பந்தம் பே ஒஃப் ஐலன்ட்சு (Bay of Islands) என்ற இடத்தில் கையெழுத்திடப்பட்டது. நியூசிலாந்து கம்பனி என்ற நிறுவனம் வெலிங்டனில் சுயாதீனமான ஒரு குடியேற்றத் திட்டத்தை அமைக்கவிருப்பதாக அறிவித்ததை அடுத்தும்,, பிரெஞ்சுக் குடியேறிகள் அக்கரோவா என்ற பகுதியில் நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததைத் தடுக்கவும், வில்லியம் ஓப்சன் 1840 மே 21 இல் நியூசிலாந்து முழுவதையும் பிரித்தானியாவுக்கு சொந்தம் என அறிவித்தார். வைத்தாங்கி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, குடியேற்றங்கள் மிக விரைவாக அதிகரித்தன.
நியூசிலாந்து தொடக்கத்தில் நியூ சவுத் வேல்சின் ஒரு குடியேற்றப் பகுதியாக இருந்து, பின்னர் 1841 சூலை 1 இல் தனியான பிரித்தானியக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 1852 இல் இங்கு பிரதிநிதித்துவ அரசு பதவியேற்று 1854 ஆம் ஆண்டில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.. 1856 இல் உள்நாட்டு விவகாரங்களுக்கான சுயாட்சி உரிமை நியூசிலாந்துக்குக் கிடைத்தது. தெற்குத் தீவு சுயாட்சி உரிமை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்பட்டமையால், நியூசிலாந்தின் அன்றைய பிரதமர் ஆல்பிரட் டோமெட் ஆக்லாந்தில் அமைந்திருந்த தலைநகரை தெற்குத் தீவுக்கு மாற்ற முடிவு செய்தார். வெலிங்டன் நகரம் துறைமுகம், மற்றும் தெற்கு, வடக்குத் தீவுகளின் நடுவில் அமைந்திருந்ததால் இந்நகரம் தலைநகராகத் தெரிவு செய்யப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் வெலிங்டனில் முதன் முறையாக நாடாளுமன்றம் கூடியது. குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, நிலம் தொடர்பான சர்ச்சைகளினால் 1860கள், 70களில் அங்கு போர் இடம்பெற்றது. மாவோரிகளின் பெரும் எணிக்கையானல் இதனால் பறி போனது. 1893 இல் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது.
1907 ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வேண்டுகோளின் படி, ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்ட் மன்னர் நியூசிலாந்தை பிரித்தானியப் பேரரசின் கீழ் மேலாட்சி அரசு முறையை அறிவித்தார். 1947 ஆம் ஆண்டில் நியூசிலாந்து வெசிட்மின்சுடர் இயற்றுச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, நியூசிலாந்து மக்களின் ஒப்புதல் இன்றி பிரித்தானிய நாடாளுமன்றம் அந்நாடு தொடர்பாக எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது. நியூசிலாந்து பிரித்தானியப் பேரரசுடன் இணைந்து முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் போரிட்டு, பெரும் பொருளியல் வீழ்ச்சியில் வீழ்ந்து துன்புற்றது. இதனால் அடுத்து வந்த தேர்தலில் தொழிற் கட்சி அரசு பதவிக்கு வந்து பாதுகாப்புவாத பொருளாதாரத்திட்டத்தை முன்னெடுத்தது. இரண்டாம் உலகப்போரின் பின்னர் நியூசிலாந்தின் வளம் பெரிதும் உயர்ந்தது. மாவோரி மக்கள் வேலை தேடி தமது பாரம்பரிய கிராமப் பகுதிகளை விட்டு நகரங்களுக்குக் குடி பெயரத் தொடங்கினர். மாவோரி எதிர்ப்பியக்கம் உருவாகி, ஐரோப்பிய மையவாதத்தை விமரிசித்தது, மாவோரி கலாச்சாரத்துக்கு அதிக அங்கீகாரம், வைத்தாங்கி ஒப்பந்தத்தை சரிவர நடைமுறைப் படுத்தல் போன்றவற்றுக்க்காகக் குரல் கொடுத்தது. 1975 ஆம் ஆண்டில், ஒப்பந்தம் மீறப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் வைத்தாங்கி தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு பெரும்பான்மையான மாவோரிகளுக்கு வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வு கண்டது.
புவியியல்
ஒரு தீவுக் கூட்டமான நியூசிலாந்து 268,680 சதுர கிலோ மீட்டர்கள் (103,738 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. இதில் பெரும்பகுதி, வடக்குத் தீவு, தெற்குத் தீவு எனப்படும் இரண்டு பெரிய தீவுகளுக்கு உரியது. குறைந்த அளவு அகலமாக 22 கிலோமீட்டரைக் கொண்ட குக் நீரிணை வடக்கு, தெற்குத் தீவுகளைப் பிரிக்கிறது. நியூசிலாந்து பரப்பளவு அடிப்படையில் சப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைவிடச் சற்றுச் சிறியதாகவும், ஐக்கிய இராச்சியத்தை விடச் சற்றுப் பெரிதாகவும் உள்ளது. இதன் வடக்கு-வடகிழக்கு அச்சில் இந்நாடு 1,600 கிமீ (1,000 மைல்கள்) நீளம் கொண்டது. இதன் கரைப் பகுதிகளின் மொத்த நீளம் 15,134 கிமீ (9,404 மைல்) ஆகும். வடக்குத், தெற்குத் தீவுகளை விட, மனிதர் வாழும் சிறிய தீவுகளில் முக்கியமானவை: சுடுவர்ட் தீவு, சதாம் தீவுகள், அவுராக்கி குடாவில் அமைந்துள்ள கிரேட் பேரியர் தீவு, டி'ஊர்வில் தீவு மற்றும் ஆக்லாந்தில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள வைகீக்கி தீவு ஆகியவை ஆகும். நியூசிலாந்து பெருமளவு கடல் வளங்களைக் கொண்டது. தனது நிலப்பரப்பிலும் 15 மடங்கு பெரிதான நான்கு மில்லியன் சதுர கிலோ மீட்டர் (1.5 மில்லியன் சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் ஏழாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் இந் நாட்டில் உள்ளது.
நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நிலப்பகுதி தெற்குத் தீவு ஆகும். இது இதன் நீள வாக்கில் தெற்கு ஆல்ப்ஸ் எனப்படும் மலைத் தொடரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மலைத் தொடரின் மிகவுயர்ந்த சிகரம் ஆவேராக்கி/குக் மலை 3,754 மீட்டர்கள் (12,320 அடிகள்) உயரமானது. தெற்குத் தீவில் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமான 18 மலைச் சிகரங்கள் உள்ளன. வடக்குத் தீவு தெற்குத்தீவிலும் குறைவான மலைகளைக் கொண்டது ஆயினும் எரிமலைச் செயற்பாடுகளைக் கொண்டது. வடக்குத் தீவில் மிக உயர்ந்த மலையான ருவாப்பேகூ மலை (2,797 மீ / 9,177 அடி) ஒரு இயக்கமுள்ள எரிமலையாகும்.
நியூசிலாந்தின் வேறுபட்ட நில அமைப்புக்கும், இது கடல் மட்டத்துக்கு மேல் வெளிப்பட்டதுக்கும் காரணம் பசிபிக் புவியோட்டுக்கும், இந்திய-ஆத்திரேலியப் புவியோட்டுக்கும் இடையே உள்ள இயங்கியல் எல்லை (dynamic boundary) ஆகும். நியூசிலாந்து, ஆத்திரேலியாவின் அரைப்பங்கு பரப்பளவு கொண்டதும், பெரும்பகுதி நீரில் முழுமையாக அமிழ்ந்துள்ளதுமான நியூசிலாந்தியா என்னும் கண்டம் ஒன்றின் ஒரு பகுதியாகும். சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தட்டுப் புவிப்பொறை இயக்கங்கள் காரணமாக நியூசிலாந்தியா இரண்டு பகுதிகளாக இழுக்கப்பட்டது. இதனை ஆல்ப்ஸ், தாவுப்போ எரிமலை வலயம் ஆகிய பகுதிகளிலுள்ள பிளவுகளிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
பண்பாட்டு அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும், நியூசிலாந்து பொலினீசியாவின் ஒரு பகுதியாகும். இது பொலினீசிய முக்கோணப் பகுதியின் தென்மேற்கு மூலையாக உள்ளது. நியூசிலாந்தின் அகலக்கோடு 47°தெ 34 ஆக அமைந்துள்ளது. இது வட அரைக் கோளத்தில் இத்தாலியின் அமைவிடத்துடன் பொருந்தி வருகிறது. எனினும் கண்டச் செல்வாக்கிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதும், தெற்கிலிருந்து வீசும் குளிர் காற்றுக்களாலும், கடல் நீரோட்டங்களாலும், இதன் காலநிலை மிதமானதாகவே உள்ளது. நாடு முழுதும் மித வெப்பக் காலநிலை நிலவுவதுடன் கடல் சார்ந்ததாகவும் உள்ளது. வெப்பநிலை மக்கள் குடியேற்றம் உள்ள இடங்களில் 0°ச (32°ப) க்குக் கீழ் செல்வதோ அல்லது 30 °C (86 °F) மேல் செல்வதோ கிடையாது. முக்கியமான நகரங்களில் கிறைசுட்சேர்ச்சே மிகவும் வரண்ட நகரமாகும். இது ஆண்டுக்கு 640 மிமீ (25 அங்) மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆக்லாந்து கூடிய ஈரலிப்பான நகரம். இது ஏறத்தாழ இரண்டு மடங்கு மழையைப் பெறுகிறது. கிறிட்சர்ச், வெல்லிண்டன், ஆக்லாந்து ஆகிய நகரங்கள் ஆண்டுக்குரிய சராசரியாக 2000 மணிநேரங்களுக்கும் மேலான சூரிய ஒளியைப் பெறுகின்றன. தெற்குத் தீவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் குளிர்ந்ததும், மேக மூட்டம் கொண்டதுமான காலநிலையைக் கொண்டுள்ளன. இப் பகுதிகள் ஆண்டுக்கு 1400 - 1600 மணிநேர சூரிய ஒளி பெறுகின்றன. தெற்குத் தீவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளே நாட்டில் அதிக சூரிய ஒளியைப் பெறும் பகுதிகளாகும். இவை ஆண்டுக்கு 2400 - 2500 மணிநேர சூரிய ஒளியைப் பெறுகின்றன.
அரசியல்
நியூசிலாந்தின் அரசியலமைப்பு சட்டமாக்கபடவிடினும், அது நாடாளுமன்ற முறையுடன் கூடிய அரசியல்சட்ட முடியாட்சி ஆகும். மூன்றாம் சார்லசு நாட்டின் அரசரும், நாட்டுத் தலைவருமாவார். பிரதமரின் ஆலோசனைக்கமைய அரசரால் நியமிக்கப்படும் தலைமை ஆளுநரே அரசரின் பிரதிநிதியாவார். தலைமை ஆளுநர் அரசரின் அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரமுடையவராக உள்ளார். அநீதி வழக்குகளை மீளாய்தல், அமைச்சர்கள், தூதர்கள், மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை நியமித்தல் போன்ற வழமையான செயற்பாடுகளையும் சில அரிதான நேரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்தல், சட்ட முன்வரைவை சட்டமாக்க அனுமதி வழங்க மறுத்தல் போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க வல்லவர்.
அரசரின் அதிகாரமும் தலைமை ஆளுநரின் அதிகாரமும் அரசியலமைப்பினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆய அமைச்சரவையின் பரிந்துரை இல்லாது இந்த அதிகாரங்களை வழக்கமாகச் செயல்படுத்த இயலாது.
நியூசிலாந்தின் பாராளுமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நாட்டின் இறைமையையும் கொண்டுள்ளது. இது அரசரையும் சுயாதீனமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மேலவையும் அங்கமாக இருந்தது; இது 1950இல் கலைக்கப்பட்டது. அரசர் மற்றும் பிற அரசு அமைப்புகளின் மீதான நாடாளுமன்றத்தின் மீயுயர்வு இங்கிலாந்தில் 1689ஆம் ஆண்டு சட்டத்தினால் நிறுவப்பட்டு நியூசிலாந்துச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கின்றது. பெரும்பான்மை இல்லையெனில் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமையக்கூடும். தலைமை ஆளுநர் பிரதமரின் பரிந்துரைப்படி அமைச்சர்களை நியமிக்கின்றார். பிரதமரின் தலைமையில் கூடும் அமைச்சர்கள் கூடும் ஆய அமைச்சரவை அரசின் மிக உயர்ந்த முடிவெடுத்துச் செயற்படும் அமைப்பாகும். ஆய அமைச்சரவையின் முடிவுகளுக்கு அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பொறுப்பாவர்.
நீதிபதிகளும் நீதிமன்ற அலுவலர்களும் அரசியல் சார்பற்று கட்டமைக்கப்பட்ட விதிகளின்படி நியமிக்கப்படுகின்றனர்; இவர்கள் அரசியல் அமைப்பின்படி அரசரிடமிருந்து முழுமையான விடுதலை பெற்று சுயாதீனமுடையவர்கள். இதனால் நீதிமன்றங்கள் சட்டத்தை மற்றவர்களின் தாக்கமின்றி தெளிவாக்க இயல்கின்றது. இலண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் மீயுயர் முறையீடு நீதிமன்றமாக இருந்தது; 2004ஆம் ஆண்டிலிருந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.
1853 முதல் 1993 வரை நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களுமே முதலில் கூடுதலாக வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெல்வதாக அமைந்திருந்தன. 1930 முதல் இந்த தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகள், நியூசிலாந்து தேசியக் கட்சி, நியூசிலாந்து தொழிலாளர் கட்சி முதன்மை வகித்தன. 1996ஆம் ஆண்டு முதல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் அமைந்த கலவை உறுப்பினர் விகிதாச்சாரம் (MMP) பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் தரப்படுகின்றன; ஒன்று தொகுதிக்கானது (சில மாவோரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன), மற்றது கட்சிக்கானது. 2005 முதல், 70 தேர்தல் தொகுதிகள் உள்ளன; மீதம் 50 இடங்கள் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு ஏற்ப பிரித்தளிக்கப்படுகின்றன. இந்த இடங்களைப் பெற ஒரு கட்சி ஒரு தேர்தல் தொகுதியிலாவது வென்றிருக்க வேண்டும், அல்லது கட்சிகளுக்கான மொத்த வாக்குகளில் 5% ஆவாது பெற்றிருக்க வேண்டும். மார்ச் 2005க்கும் ஆகத்து 2006க்கும் இடையிலான காலத்தில் நாட்டின் மிக உயரிய பதவிகள் (நாட்டுத் தலைவர், தலைமை ஆளுநர், பிரதமர், நாடாளுமன்ற அவைத்தலைவர், தலைமை நீதிபதி) அனைத்திலும் பெண்கள் பதவியிலிருந்த உலகின் ஒரே நாடாக நியூசிலாந்து இருந்தது.
நியூசிலாந்து உலகின் மிகவும் நிலைத்தத்தன்மை உடைய மற்றும் நன்கு அரசாளப்படும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகின்றது. 2011இல் நாட்டின் மக்களாட்சி அமைப்புக்களின் வலிமை கொண்டு தரபடுத்திய பட்டியலில் நியூசிலாந்து ஐந்தாவதாக உள்ளது. அரசின் தெளிவுத்தன்மை மற்றும் ஊழலற்ற ஆட்சிக்கு முதலாவதாக உள்ளது. அண்மைய தேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பு 79% ஆக உள்ளது.
பொருளாதாரம்
நியூசிலாந்து நவீன, வளமையான, வளர்ந்த சந்தைப் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. தனிநபர் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ US$28,250 ஆக உள்ளது. நியூசிலாந்தின் நாணயம் "கிவி டாலர்" என அறியப்படும் நியூசிலாந்து டாலர் ஆகும்; இது குக் தீவுகள், நியுவே, டோக்கெலாவ், மற்றும் பிட்கன் தீவுகளிலும் செல்லுபடியாகின்றது. 2013 மனித வளர்ச்சிச் சுட்டெண்படி ஆறாவதாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
காலந்தொட்டு, பிழிந்தெடுக்கின்ற தொழில்கள் நியூசிலாந்தின் பொருளியலில் முதன்மையாக இருந்துள்ளன; அடைத்தல், திமிங்கல வேட்டை, பார்மியம், தங்கம், கவுரி பிசின் மற்றும் உள்நாட்டு வெட்டுமரம் தொழில்களும் பல்வேறு காலங்களில் முதன்மை பெற்றுள்ளன. 1880களில் குளிரூட்டப்பட்ட கப்பல்கள் உருவாக்கத் தொடங்கிய பிறகு, இறைச்சியும் பால்பொருட்களும் பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியாயிற்று; இது நியூசிலாந்தின் பொருளியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வேளாண்மைப் பொருட்களுக்கு தேவை மிகுந்தநிலையில் நியூசிலாந்தின் பொருளியலும் வாழ்க்கைத்தரமும் உயரத் தொடங்கியது. 1950களிலும் 1960களிலும் நியூசிலாந்தின் வாழ்க்கைத்தரம் ஆத்திரேலியா, மேற்கு ஐரோப்பியர்களுடையதை விட உயர்ந்ததாக இருந்தது. 1973இல் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு நியூசிலாந்தின் ஏற்றுமதிச் சந்தை குறையத் தொடங்கியது. 1973 எண்ணெய் மற்றும் 1979 ஆற்றல் நெருக்கடிகளால் பெரும் பொருளியல் தாழ்வு ஏற்பட்டது. 1982இல் நியூசிலாந்தின் தனிநபர் வருமானம் உலக வங்கியால் மதிப்பிடப்பட்ட அனைத்து வளர்ந்த நாடுகளில் மிகவும் குறைந்ததாக இருந்தது. 1984 முதல் அடுத்தடுத்த அரசுகள் முதன்மை பருப்பொருளியல் சீரமைப்பை மேற்கொண்டு, நியூசிலாந்தை மிகவுயர்ந்த பாதுகாக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து தாராளமயமாக்கப்பட்ட கட்டற்ற பொருளியலுக்கு மாற்றி முன்னேற்றம் கண்டுள்ளன.
வணிகம்
நியூசிலாந்து பன்னாட்டு வணிகத்தை மிகவும் நம்பியுள்ளது; குறிப்பாக அதன் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. தேசிய உற்பத்தியில் 24% ஏற்றுமதியால் கிட்டுகின்றது; இதனால் பன்னாட்டு பொருட்சந்தை மற்றும் விலை மாற்றங்களும் உலகளாவிய பொருளியல் பின்னடைவுகளும் நியூசிலாந்தை பெரிதும் பாதிக்கின்றன. நியூசிலாந்தின் ஏற்றுமதிப் பொருட்களில் வேளாண்மை, தோட்டப்பயிர், மீன்பிடித் தொழில், வனத்துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவை பாதிக்கும் மேலாக பங்கேற்கின்றன. ஏற்றுமதியில் ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான், சீனா முதன்மைப் பங்கேற்கின்றன. பொருளியலில் சேவைத்துறை முதன்மை வகிக்கின்றது; தயாரிப்பு, கட்டமைப்பு, வேளாண்ண்மை, கனிமத்துறை அடுத்தநிலைகளில் உள்ளன.$15.0 பில்லியன் பெறுமதியுள்ள சுற்றுலாத்துறை 2010இல் நியூசிலாந்தின் மொத்த பணிவாய்ப்புகளில் 9.6 விழுக்காடாக உள்ளது.
19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பளி நாட்டில் ஏற்றுமதியாகும் முதன்மை வேளாண் பொருளாக இருந்தது. 1960கள் வரைகூட அனைத்து ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. ஆனால் தொடர்ந்து உலகச்சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது; இதனால் தற்காலத்தில் இது இலாபகரமானத் தொழிலாக இல்லை. மாறாக பால்பொருட்களின் ஏற்றுமதி கூடியுள்ளது. 2009ஆம் ஆண்டு தரவுகளின்படி பாற்பொருட்களின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 21 விழுக்காடாக ($9.1 பில்லியன்) இருந்தது. திராட்சைத்தோட்டங்களும் மது உற்பத்தியும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன.
கட்டமைப்பு
2008இல், நியூசிலாந்தின் ஆற்றல் தேவையில் 69% எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி மூலமாகப் பெறப்பட்டது. மீதம் நீர் மின் ஆற்றல் புவிவெப்ப மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைக் கொண்டு பெறப்பட்டது.
நியூசிலாந்தின் போக்குவரத்துப் பிணையம் நீளமுள்ள விரைவுச்சாலைகள் உட்பட நீளமுள்ள சாலைகளாலும் நீளமுள்ள தொடர்வண்டித் தடங்களாலும் ஆனது. முதன்மை நகரங்களும் ஊர்களும் பேருந்துச் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன; இருப்பினும் தனிநபர் தானுந்து முதன்மை போக்குவரத்தாக விளங்குகின்றது. தொடர்வண்டித் தடங்கள் 1993இல் தனியார்மயமாக்கப்பட்டன; ஆனால் 2004க்கும் 2008க்கும் இடையே படிப்படியாக இவை மீண்டும் அரசுடமையாக்கப்பட்டன. இத்தடங்களில் பெரும்பாலும் பயணியர் போக்குவரத்தை விட சரக்கு போக்குவரத்தே முதன்மையாக உள்ளது. நியூசிலாந்தில் ஆறு பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன.
1989 வரை நியூசிலாந்தின் அஞ்சல் அலுவலகம் தொலைத்தொடர்பு தன்னுரிமையாக இயக்கி வந்தது; 1990இல் தனியார் மயமாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நியூசிலாந்தை தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் 12வது இடத்தில் தரப்படுத்தியுள்ளது.
குறிப்புக்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
அரசு
New Zealand Government portal
Ministry for Culture and Heritage – includes information on flag, anthems and coat of arms
Statistics New Zealand
வணிகம்
World Bank Summary Trade Statistics New Zealand
சுற்றுலா
Official site of New Zealand Tourism
பிற
New Zealand from the BBC News
Te Ara, The Encyclopedia of New Zealand
NZHistory.net.nz New Zealand history website
New Zealand OECD
New Zealand, directory from UCB Libraries GovPubs
New Zealand at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
New Zealand weather
Key Development Forecasts for New Zealand from International Futures
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
தீவு நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
4729
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
வெண்கலச் சிலை வார்ப்பு
|
வெண்கலத்தை உபயோகித்து சிலைகள் செய்வது பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. வியக்க வைக்கும் நுட்ப வேலைப்பாடுகளும், உருவ வளைவுகளும் மிகப் பழங்காலச் சிலைகளிலேயே காணப்படுகின்றன.
சிலை வார்ப்பு
வெண்கலச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின்றன. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் 'மதுசிஷ்டவிதானா' என்று பெயர்.
செய்யப் போகும் சிலையின் வடிவத்தை முதலில் மெழுகில் தயாரித்து பின் அதைச் சுற்றி கவனமாக மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டு காய்ந்த பின் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு வெண்கலத்தை உருக்கி உள்ளே ஊற்றி சிலை தயாராகிறது.
மெழுகுச் சிலை
குங்கிலியம் எனும் தேன் மெழுகை எண்ணெய் கலந்து பிசைந்து சிலையாக வடிக்கிறார்கள். சிலை செய்யும் 'ஸ்தபதிகள்' உருவத்தின் நீளம், பருமன் ஆகியவை சரியாக இருக்குமாறும், வளைவுகள், ஆடை மடிப்புக்கள் தத்ரூபமாக தோன்றுமாறும் கலைநயத்துடன் வடிக்கப்படுகிறது.
ஒரு வகையில் பார்த்தால் இந்த மெழுகு பொம்மை தான் அசல், வெண்கலச் சிலைகள் நகல்கள் தான்.
சிலையின் சிறிய பகுதிகளுக்கு பலத்திற்காகவும், பின்னர் மோல்டு தயார் செய்த பின் வெண்கலக் கலவை இந்தப் பகுதிகளுக்கு எளிதாக ஓடிச் சேரவும் கீழிருந்து இணைப்புக்கள் கொடுக்கப்படுகிறது.
மோல்டு தயாரிப்பு
மிக நுண்ணிய களிமண் (எறும்புப் புற்றிலிருந்து எடுப்பது), பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றைக் கொண்டு மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டுக் கலவையை முதலில் குழம்பாக்கப்பட்டு மெழுகுச் சிலையின் மேல் பூசப்படுகிறது. நுணுக்கமான பகுதிகளும் விடுபட்டுப் போகாமல், காற்றுக் குமிழ்கள் உருவாகாமல் கவனத்துடன் மேலும் மேலும் பூசப்பட்டு தடிமனான மோல்டு தயாராகிறது.
மோல்டு நிழலில், வெடிப்புகள் ஏற்படாவண்ணம் உலர வைக்கப்படுகிறது.
உலோகச் சிலை
மோல்டு நன்றாகக் காய்ந்த பிறகு, நெருப்பில் பக்குவமாக சூடாக்கி, உள்ளிருக்கும் மெழுகு முழுவதும் உருகி வெளியேறிய பின், மோல்டை மேலும் சிறிது சூடாக்கி, தயாராக இருக்கும் உருக்கிய வெண்கலக் கலவையை மெலிதாகவும் ஒரே சீராகவும் மோல்டினுள் ஊற்றப்படுகிறது. மோல்டு முழுவதும் நிரம்பிய பின்னர் மெதுவாக குளிர்விக்கப்படுகிறது.
முழுவதும் குளிர்ந்த பின்னர் மோல்டை உடைத்து, சிலையைச் சுத்தம் செய்து, பிசிறுகளை நீக்கிய பின்னர், வெண்கலக் கலவை மோல்டினுள் எளிதாக செல்வதற்காக கொடுக்கப்பட்ட இணைப்புகளை நீக்கி, நகாசு வேலைகள் முடிந்த பின் சிலை முழுவதுமாக தயாராகிறது.
வெளி இணைப்புகள்
வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)
சிற்பக்கலை
|
4730
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
பஞ்சலோக சிலைகள்
|
சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.
ஆனால் அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வுகளிலிருந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை. பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட சிலைகளின் உலோகக் கலவை பற்றிய பட்டியல் கீழே.
பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்
<P align=center>பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்
உலோகங்கள்
கி.பி. 9ம் நூற்றாண்டு
கி.பி. 10-11ம் நூற்றாண்டு
கி.பி. 13ம் நூற்றாண்டு
கி.பி. 15ம் நூற்றாண்டு
கி.பி. 17ம் நூற்றாண்டு
செம்பு Copper
83 - 39
86 - 88
91 - 05
96 - 29
91 - 25
தகரம் Tin
16 - 61
10 - 44
2 - 86
2 - 58
6 - 66
ஆர்செனிக் Arsenic
Tr
Tr
Tr
Tr
Tr
ஈயம் Lead
Tr
1 - 48
6 - 09
1 - 9
2
இரும்பு Iron
Tr
1 - 19
Tr
0 - 06
0 - 07 (Source: The proceedings in the Indian Academy of Sciences, Vol. XIII, No.1, p 53 - 63, 1941)
சிலை செய்யும் முறை
முதலில் எந்த சிலையைச் செய்ய நினைக்கிறார்களோ அந்த சிலையைப் போல மெழுகில் கரு உருவாக்கப்படும். இதற்கென தனியாக மெழுகு உ்ளது. இந்த மெழுகு ஒருவகை மரத்தில் உருகி வழியும் மெழுகாகும். இதை பாலக்காட்டு மெழுகு என்பர். இந்த மெழுகில் சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொண்டு, தேவையான அளவுக்கு மெழுகில் ஒரு சிலை உருவாக்கப்படும். காவிரிக் கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து, அந்த மெழுகுச் சிலையின் மேல் பூசி வார்ப்பு செய்கிறார்கள். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது. மண் காய்ந்த பிறகு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி மெழுகை வெளியேற்றிவிடுவர். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் நன்கு உருக்கப்பட்ட ஐம்பொன்னை வார்ப்பில் உள்ள துளை வழியாக ஊற்றி, ஒருநாள் கழித்து மண்ணைத் தட்டி உடைத்து, உள்ளே உள்ள உலோகச் சிலையை எடுக்கின்றனர். பிசிறுகளோடு உ்ள இந்தச்சிலையை அதை அரம் கொண்டு தேய்த்து, சீவிளி கொண்டு சீவி, பின் நகாசு வேலை செய்கின்றனர். எல்லாம் முடிந்த பின்னர் சிலைக்குக் கண் திறக்கப்படுகிறது.
சிலை திருட்டு
இந்தியாவில் இருந்து இந்த வகை விலைமதிப்பில்லா புராதனச் சிலைகள் கடத்தப்பட்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இத்தகைய ஆயிரம் ஆண்டு பழைமையான உமாபரமேஸ்வரி சிலை 6,50,000 டாலருக்கு அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு நபருக்கு விற்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் (Asian Civilization Museum) வைக்கப்பட்டது. இது பற்றிய விசாரணையில்,இந்தியாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் மட்டுமே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. அமெரிக்க அரசும், சிங்கப்பூர் அரசும் இவ்வகைத் திருட்டில் ஈடுபட்ட சுபாஷ் கபூர் மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
அளவில் பெரிய மதிப்பில் உயர்ந்த இத்தகைய விக்கிரகங்கள் நாடு விட்டு நாடு கடத்தப்பட இந்திய காவல்துறை, சுங்கத்துறை, விமானநிலைய அதிகாரிகள் முதலானோர் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பதும் இதில் உள்ள அரசியல் மற்றும் ஊழல் முதலானவையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
சிற்பங்கள்
|
4731
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
ஆசிய நாடுகளின் பட்டியல்
|
இக்கட்டுரை ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளைப் பட்டியல் இடுகிறது.
ஐ.நா அங்கத்துவ நாடுகள்
ஐக்கிய நாடுகள் அவையின் ஆசிய உறுப்பு நாடுகள் 48 உள்ளன.
பிற நாடுகள்
சார்பு பிராந்தியங்களும் பிற பிராந்தியங்களும்
குறிப்புகள்
உசாத்துணை
நாடுகள் தொடர்பான பட்டியல்கள்
ஆசிய நாடுகள்
|
4732
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
|
மியான்மர்
|
மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா (Myanmar) ( , or (also with the stress on first syllable); ), என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர். வங்காளதேசம், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இந்நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த நாட்டின் 2014ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நாட்டின் மக்கள் தொகை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக 51 மில்லியன் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. Myanmar is 676,578 square kilometres (261,227 sq mi) in size. முன்னைய தலைநகராக ரங்கூன் இருந்தது. பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது. இதன் மிகப்பெரிய நகரம் யங்கோன் ஆகும்.
மியன்மாரின் மேல் பர்மாவின் பியு நகர மாநிலங்களிலும், கீழ் பர்மாவில் மொன் இராச்சியத்திலும் திபெத்திய-பர்மிய மொழியை பேசிய முற்கால குடியேற்றவாதிகள் காணப்பட்டனர். 9ம் நூற்றாண்டில், பாமர் மக்கள் மேல் ஐராவதி பள்ளதாக்கிற்குள் நுழைந்ததன் பின் 1050களில் பகன் இராச்சியம் உருவாக்கப்பட்டது. பின்னர் பருமிய மொழி, கலாச்சாரம் மற்றும் தேரவாத பௌத்தம் போன்றன மெல்ல மெல்லமாக நாட்டின் உரித்தானவையாக மாறின. மொங்கோலிய படையெடுப்பின் காரணமாகவும், பல போரிடக்கூடிய மாநிலங்கள் எழுந்ததன் காரணமாகவும் பகன் இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. 16ம் நூற்றாண்டில், துங்கு வம்சத்தினால் மியன்மார் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதன் பின், இந்த நாடு தெற்காசியாவின் வரலாற்றில் குறுகிய காலத்திற்கு மிகப்பெரிய பேரரசாக எழுச்சியடைந்தது. 19ம் நூற்றாண்டின் முற்காலத்தில் கொன்புங் வம்சம் நவீன மியன்மாரினை உள்ளடக்கிய ஒரு பகுதியையும், மணிப்பூர் மற்றும் அசாம் ஆகியவற்றையும் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தது. மியன்மாரை பிரித்தானியர் மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்களின் பின் 19ம் நூற்றாண்டில் கைப்பற்றினர். அதன் பின் மியன்மார் பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரித்தானிய குடியேற்ற நாடாக மாறியது. 1948 இல் மியன்மார் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாகியது. முதலில் சனநாயக நாடாக இருந்து பின்னர் 1962ல் இராணுவ சர்வாதிகாரமாகிய கோப் டேடட்டாக மாறியது .
மியான்மர் இந்தியர்கள் வெளியேற்றம்
ஜெனரல் நீ வின் ராணுவம் 1962 இல் ஆட்சியை கைப்பற்றி உடன் இந்தியர்களை வெளியேற்றும் வேலை ஆரம்பம் ஆனது .
தனியார் வசம் இருந்த வியாபார நிறுவங்கள் தேசியமயம் ஆக்கப்பட்டு நஷ்டஈடு தராமல் தேசியமயம் என்ற பெயரில் கொள்ளை
அடிக்கப்பட்டன, மூன்று லட்சம் இந்தியர்கள் தங்கள் சொத்து சுகங்களை இழந்து வெறும் 175 கியாட் பணத்துடன் உயிருக்கு அஞ்சி
வெளியேறினர்.
இதன் அதிகமான சுதந்திர ஆண்டுகளில், மியன்மார் பெருத்த இனக் கலவரத்திற்காளாகியிருந்தது. மியன்மாரின் எண்ணற்ற இனக் குழுக்கள் நீண்ட நடக்கும் உள்நாட்டு போர்களுள் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு பல அமைப்புக்களும் நாட்டில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக நிலையாகவும், ஒரு முறையாகவும் அறிக்கை வெளியிட்டன. 2011இல், இராணுவ ஆட்சிக் குழு அதிகாரப்பூர்வமாக 2010 பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, பெயரளவில் சிவிலிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் இராணுவ தலைவர்கள் நாட்டில் இன்னும் மகத்தான சக்தியை பிரயோகிக்க என்னும் பொது, பர்மிய இராணுவம் அரசாங்க ஆதிக்கத்தை அகற்றுவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். இதன் காரணமாக ஆங் சான் சூச்சி மற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், நாட்டின் மனித உரிமைகள் அறிக்கையும், வெளிநாட்டு உறவும் மேம்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார தடைகளும் தளர்த்தப்பட்டன. ஆயினும், அரசாங்கத்தின் முசுலிம் ரோகிஞ்சா சிறுபான்மை சிறுபான்மை சிகிச்சை பற்றியும், மத மோதல்கள்களைக் கருத்தில் கொள்வது குறைவு பற்றியும் தொடர்ந்தும் விமர்சனம் வெளியாகின்றன. 2015 தேர்தலில், ஆங் சான் சூச்சியின் கட்சி இரு இல்லங்களிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தது.
மியன்மார் ஜேட், இரத்தினங்கள், எண்ணெய், இயற்கை எரிவளி மற்றும் மற்ற கனியுப்பு வளங்களில் சிறந்து விளங்குகிறது. 2013ல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு) $56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) $221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றன. மியன்மாரில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகில் மிகப் பரந்தளவின் மத்தியில், பொருளாதாரத்தின் அதிகமான விகிதம் முன்னாள் இராணுவ அரசாங்க ஆதாவாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ல், மனித மேம்பாட்டுச் சுட்டெணின் (HDI) அடிப்படையில் மியன்மார் 187 நாடுகளில் 150 ஆவது இடத்தில், மிகவும் குறைந்த அளவிலான மனித மேம்பாட்டுடன் விளங்குகிறது.
12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.
பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது விகாரைகளின் பூமி ('Land of Pagodas') என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "[[சுவேதகோன் விகாரை]" மிகவும் புகழ் பெற்றது. மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.
பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.
தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி ஆறு படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.மணி வளங்கள் நிறைந்த நாடு. தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர். தற்போது இங்கு முஸ்லீம்களில் ஒரு பிரிவான ரோஹிங்கிய என்பவர்களுக்கும் மற்ற பிரிவினர்களுக்குகிடையே அடிக்கடி பிரச்சனை எழுகிறது.
சொற்பிறப்பு (பெயர் வரலாறு)
1989ல், இராணுவ அரசாங்கம் பர்மாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்ட பல பெயர்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை அதிகாரபூர்வமாக மாற்றியது. தனது நாட்டின் பெயரான "பர்மாவை" "மியன்மார்" என மாற்றியதும் இதற்குள் அடங்குகிறது. மிகுதி பெயர்மாற்றங்கள் போட்டியிட்ட சிக்கல்களாகவே விளங்குகின்றன. பல அரசியல் மற்றும் இன எதிர்புக் குழுக்களும், நாடுகளும் "பர்மா" என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன. ஏனென்றால், அவை ஆட்சி செய்கின்ற இராணுவ அரசாங்கத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்காமையினாலேயே ஆகும். அல்லது அதன் பெயர்மாற்றல் அதிகாரத்தினாலேயோ இருக்கலாம்.
மியன்மார் நாட்டின் அதிகாரபூர்வமான முழுப்பெயர் "மியன்மார் ஒன்றியக் குடியரசு" (ஆங்கிலம் : "Republic of the Union of Myanmar", , , ) ஆகும். மியன்மார் என்ற பெயரை பயன்படுத்த விரும்பாமல் பழைய காலத்து பெயரையே பயன்படுத்த விரும்பும் நாடுகள் "பர்மா குடியரசு" (ஆங்கிலம் : "Union of Burma" )என அழைக்கின்றன.
ஆங்கிலத்தில், இந்த நாடு பிரசித்தியாக "பர்மா" ("Burma") என்றோ அல்லது "மியன்மார்" ("Myanmar") அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பெயர்களும் பர்மியர்களின் பெரும்பான்மை இனக்குழுவான பாமர்களிடமிருந்தே பெறப்பட்டன. மியன்மார் என்ற பெயர் இந்த பாமர் இனக்குழுவின் எழுத்து வழக்கு பெயராகும். பர்மா என்ற பெயர் "பாமர்" என்பதில் இருந்து வந்ததாகும். இப்பெயர் பாமர் இனக்குழுவின் பேச்சு வழக்கு பெயராகும். பதிவின் படி பார்க்கையில், இவற்றின் உச்சரிப்பு () அல்லது () என்று வருகின்றன. 18ஆம் நூற்றாண்டிலிருந்து "பர்மா" என்ற பெயர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் முன்னைய இந்து, சமசுகிருதம் போன்றவற்றின் வேதங்கள் பர்மாவில் ब्रह्मावर्त / ब्रह्मदेश (பிரம்மவார்ட்/ பிரமதேசு, Brahmavart/Brahmadesh). இது 'இந்துக் கடவுள் பிரம்மாவின் பூமி' ('Land of Hindu god Bramha') எனக் குறிப்பிடுகிறது.
ஆத்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகளின் அரசாங்கம் ஆங்கிலத்தில் பர்மா என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன. அதிகாரபூர்வ ஐக்கிய அமெரிக்க நாடுகள் கொள்கை பர்மா என்ற பெயரையே இந்நாட்டிற்கு வைத்துள்ளது. இருப்பினும் ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் வலைத்தளம் இந்நாட்டின் பெயரை "பர்மா (மியன்மார்)" என்றே பட்டியலிட்டுள்ளது. பராக் ஒபாமா மியன்மார் நாட்டிற்கு இரண்டு பெயர்களையும் குறிப்பிட்டிருக்கின்றார். செக் குடியரசு அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது, இருப்பினும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது வலைத்தளத்தில் மியன்மார், பர்மா ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்தியுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, உருசியா, ஜெர்மனி, சீனா, இந்தியா, நோர்வே, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைப் போன்று ஐக்கிய நாடுகள் அவையும் மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது.
பிபிசி, சிஎன்என், அல் ஜசீரா, ராய்ட்டர்ஸ், மற்றும் ஆர்டி (ரசியா டுடே) உள்ளிட்ட அதிகமான ஆங்கில மொழி மூலமான செய்தி ஊடகங்கள் அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றன.
இசுப்பானியம், இத்தாலியன், உரோமானியன் போன்ற மொழிகளில் மியன்மார் "பிர்மானியா" ("Birmania") என்று அழைக்கப்படுகின்றது. "பிர்மானியா" என்பது பர்மா என்பதின் இசுப்பானிய மொழிபெயர்ப்பாகும். மியன்மார் போர்த்துக்கேய மொழியில் "பிர்மனியா" ("Birmânia") என்றும், பிரான்சிய மொழியில் "பிர்மனி" ("Birmanie") என்றும் அழைக்கப்படுகின்றது. பிரேசில், போர்த்துக்கல் போன்ற போர்த்துகேய மொழி பேசும் நாடுகளும், பிரான்சு போன்ற பிரெஞ்ச் மொழி பேசும் நாடுகளும் தற்போது பிரதானமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றன.
வரலாறு
முற்கால வரலாறு
மியான்மர் என அழைக்கப்படும் இப் பிரதேசத்தில் 400,000 ஆண்டுகளுக்கு முன் ஓமோ எரெக்டசு (') என்ற அழிந்த இனம் வாழ்ந்துள்ளதாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன. மியான்மரில் ஒமோ சபியென்சு (') இனம் வாழ்ந்ததற்கு முதல் ஆதாரமாக கி.மு. 11,000 ஆண்டளவில் அன்யதியன் எனும் கற்கால காலாசாரமும், கற்கால ஆயுதங்களும் மத்திய மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். மியான்மரில் புதிய கற்காலத்திற்கு ஆதாரமாக கி.மு. 10,000ற்கும் கி.மு. 6,000ற்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த மரங்கள் மற்றும் விலங்குகளை வீட்டில் வளர்த்தலும், கூராக்கப்பட்ட கல் ஆயுதங்களும் கொண்ட குகை ஓவியங்கள் படா-லின் குகைகளில் கண்பிடிக்கப்பட்டமை ஆகும்.
இதனையும் காண்க
ஆங்கிலேய-பர்மியப் போர்கள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
4735
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
பாக்கித்தான்
|
பாக்கித்தான் (Pakistan, பாகிஸ்தான், ), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (), ஆசியக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து. கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள இலாகூர் மற்றொரு முக்கிய நகரம்.
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095 கிமீ2 () பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது.
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.
பெயர்க்காரணம்
முன்னோரு காலத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பழமை பெயராக பாலகிருஸ்தானம் என்ற பெயரில் அழைக்கபெற்ற இவ்விடம் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு இஸ்லாமியர் ஆதிக்கம் மிக்க தனிநாடு சுதந்திரம் பெற்ற பிறகு பாலகிருஸ்தானம் என்ற பெயர் பால்கிஸ்தானம் என்று மறுவி காலப்போக்கில் பாகிஸ்தானம் என்றும் சுருக்கமாக பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது.
மேலும் இஸ்லாமிய முறைப்படி உருதுச் சொல்லுக்குப் பொருள் (பாக்+ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள் ஸ்தான் என்றால் இடம் என்று அர்த்தம் அதனால் பாகிஸ்தான் என்று தூய்மையான இடம் என்று பெயர் அர்த்தமாக உள்ளது.
வரலாறு
1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கிஸ்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது.
புவியியல்
பாக்கிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
மக்கள்
மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.
நிர்வாகப் பிரிவுகள்
பாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
மாகாணங்கள்:
பலூச்சிஸ்தான்
கைபர் பக்தூன்க்வா (NWFP)
பஞ்சாப்
சிந்து
பிரதேசங்கள்:
<li> இஸ்லாமாபாத் தலைநகரப்பகுதி
<li> நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்
பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்:
<li> ஆசாத் காஷ்மீரம்
<li> கில்கித் – பல்திஸ்தான்
அரசியல்
அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் – பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.
பொருளாதாரம்
பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பாக்கித்தான் அரசு வலைத்தளம்
பாக்கித்தான் பற்றி உலக வங்கி புள்ளிக் குறிப்புகள்
மனைவியை அடிப்பது: பாகிஸ்தான் மதக்குழுவுக்கு எதிராக சீறும் சமூக ஊடகங்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
தெற்காசிய நாடுகள்
ஆசிய நாடுகள்
ஆங்கிலம் பேசும் நாடுகளும் ஆள்புலங்களும்
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
|
4737
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
|
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா (United States of America / USA / US) ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இது பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. 3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கிமீ2) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும் மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது. இதன் தலைநகர் வாசிங்டன், டி. சி.. மிகுந்த மக்கள்தொகை கொண்டது நியூயார்க் நகரம். 48 மாநிலங்களும் தலைநகரம் உள்ள கூட்டரசு மாவட்டமும் வட அமெரிக்கா பெருநிலத்தில் கனடாவிற்கும் மெக்சிக்கோவிற்கும் இடையே தொடர்ச்சியாக உள்ளன. அலாசுகா மாநிலம் வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் கிழக்கில் கனடாவுடனும் மேற்கில் பெரிங் நீரிணையைக் கடந்து உருசியாவிடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. அவாய் மாநிலம் நடு-அமைதிப் பெருங்கடலில் உள்ள ஓர் தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்க ஆட்பகுதிகள் அமைதிப் பெருங்கடலிலும் கரிபியக் கடலிலும் சிதறியுள்ளன; இவை ஒன்பது அலுவல்முறை நேரவலயங்களில் பரந்துபட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் மிகவேறுபட்ட புவியியல், வானிலை, வனவுயிர்கள் காரணமாக உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாகவுள்ளது.
உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும். அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).
அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும். தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது..
19 ஆம் நூற்றாண்டில், பிரான்சு, எசுப்பானியா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் உருசியாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சசு குடியரசையும் மற்றும் அவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாயம் தெற்கிற்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி நாட்டின் பிரிவினையை தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. எசுப்பானியா - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் தகுதி உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.
பெயர் வரலாறு
1507 ஆம் ஆண்டில், செருமனியின் வரைபட நிபுணரான மார்டின் வாட்சுமுல்லர் தான் தயாரித்த உலக வரைபடத்தில், மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு, இத்தாலிய ஆய்வுப் பயணியும் வரைபட நிபுணருமான அமெரிகோ வெசுபுச்சியின் பெயரில் அமெரிக்கா எனப் பெயரிட்டார். முன்னர் பிரித்தானிய குடியேற்ற நாடாக இருந்தவை, நாட்டின் புதிய பெயரை சுதந்திரப் பிரகடனத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தின. சூலை 4, 1776 அன்று "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள்" கைக்கொண்ட "பதின்மூன்று அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்களின் கருத்தொருமித்த பிரகடனமாக" இது அமைந்தது. தற்போதைய பெயரை நவம்பர் 15, 1777 அன்று இறுதியாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் கண்டப் பேரவையில் நிறைவேறிய கூட்டமைப்பு விதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது, "இந்த கூட்டமைப்புப் பகுதி இனி 'யுனைடெட் சுடேட்சு ஆஃப் அமெரிக்கா' என இருக்கும்".யுனைடெட் சுடேட்சு என்னும் சுருக்க வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படும். யு.எசு., யு.எசு.ஏ, அமெரிக்கா ஆகியவை பிற பொது வடிவங்களில் அடக்கம். அமெரிக்க யுனைடெட் சுடேட்சு, தி சுடேட்சு ஆகியவையும் வழக்குப் பெயர்களில் அடக்கம். ஒரு சமயத்தில் அமெரிக்காவிற்கு பிரபல பெயராக இருந்த கொலம்பியா என்பது கிறித்தோபர் கொலம்பசிடம் இருந்து வரப்பெற்றதாகும். இது "வாசிங்டன், டி. சி." என்னும் பெயரில் தோன்றுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடிமகனைப் பொதுவாக அமெரிக்கர் என்று அழைக்கலாம். ஐக்கிய மாநிலங்கள் என்பது அலுவலக அடைமொழியாக இருந்தாலும் கூட, அமெரிக்கா மற்றும் யு.எசு. ஆகியவை தான் இந்நாட்டிற்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் பொதுவான அடைமொழிகளாக இருக்கின்றன.
ஆரம்பத்தில் "யுனைடெட் சுடேட்சு" (United States) என்கிற பதம், பன்மையில் பயன்பட்டது. பின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில், அதனை ஒருமையாகக் கருதுவது பழக்கத்தில் வந்தது. இப்போது ஒருமை வடிவம் தான் இயல்பானதாக இருக்கிறது, பன்மை வடிவம் "இந்த ஐக்கிய மாநிலங்கள்" என்னும் முதுமொழிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
வட அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்காக் கண்டத்தில் பலநாடுகள் இருந்தபோதும் அமெரிக்கர் என்ற சொல், பெரும்பாலான சமயங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் தொடர்புள்ள தலைப்புக்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது.
புவியியல்
ஐக்கிய மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1.9 பில்லியன் ஏக்கர்களாகும். தொடர்ச்சியான மாநிலங்களிலிருந்து கனடாவால் பிரிந்திருக்கும் அலாசுகா அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலமாகும், இதன் நிலப்பரப்பு 365 மில்லியன் ஏக்கர்கள். வட அமெரிக்காவின் தென்மேற்கில் மத்திய பசிபிக்கில் ஒரு தீவுக் கூட்டமாகவுள்ள அவாய் 4 மில்லியன் ஏக்கர்களுக்கு சற்று அதிகமான பரப்பைக் கொண்டுள்ளது. உருசியா மற்றும் கனடாவிற்கு பிறகு, மொத்த நிலப்பரப்பில் அமெரிக்கா சீனாவை விட சற்று மேலே அல்லது கீழே என உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நாடாக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைச்சிக்கல் பகுதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதுடன் அமெரிக்காவின் மொத்த பரப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பொறுத்து இவை வேறுபடுகின்றன: சி.ஐ.ஏ. வேர்ல்டு ஃபேக்ட்புக் குறிப்பிடுவது , ஐநா புள்ளிவிவரப் பிரிவு குறிப்பிடுவது அதே போல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா குறிப்பிடுவது . நிலப் பரப்பை மட்டும் அடக்கி பார்த்தால், அமெரிக்கா உருசியா, சீனாவுக்கு அடுத்ததாக கனடாவுக்கு சற்று மேலே மூன்றாவது இடத்தில் உள்ளது.
அட்லாண்டிக் கடலோர சமவெளி உள்ளமைந்த பகுதிகளில் இலையுதிர் காடுகள் மற்றும் பீட்மோன்ட்டின் தொடர்ச்சி குன்றுகளுக்கும் வழிவிடுகிறது. அமெரிக்கப் பேரேரிகள் மற்றும் நடுமேற்கு புல்வெளிப் பகுதிகளை கிழக்கு கடல்படுகையிலிருந்து அபலாசியன் குன்றுகள் பிரிக்கின்றன. உலகின் நான்காவது நீளமான நதியான மிசிசிபி-மிசௌரி ஆறுகள், முக்கியமாக வடக்கிலிருந்து-தெற்காக நாட்டின் மையப் பகுதி வழியே பாய்கிறது. பெரும் சமவெளிகளின் தட்டையான, பசும் புல்வெளி மேற்குப் பகுதி வரை நீள்கிறது, தென்கிழக்கில் உயர்ந்த மேட்டுப் பகுதி இதனை குறுக்கிடுகிறது. பெரும் சமவெளிகளின் மேற்கு விளிம்பில், ராக்கி மலைகள் வடக்கில் இருந்து தெற்காக நாடெங்கிலும் நீள்கிறது, கொலராடோவில் 14,000 அடிக்கும் (4,300 மீ) அதிகமான உயரங்களை இது எட்டுகிறது. இன்னும் மேற்கில் ராக்கி கிரேட் பேசின், மோகாவே ஆகியவை உள்ளன. சியரா நெவெடாவும் கேஸ்கேடு சிகரங்களும் பசிபிக் கடலோர பகுதியை ஒட்டி செல்கின்றன. 20,320 அடி (6,194 மீ) உயரத்தில், அலாசுகாவின் மெக்கென்லி சிகரம் இந்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் ஆகும். கொதிக்கும் எரிமலைகள் அலாசுகாவின் அலெக்சாண்டரிலும் அலெசியன் தீவுகள் முழுமையிலும் இருக்கின்றன, ஹவாயிலும் எரிமலை தீவுகள் உள்ளன. ராக்கி மலைப்பகுதியில் யெல்லோசுடோன் தேசியப் பூங்காவின் கீழ் அமைந்திருக்கும் இராட்சத எரிமலைகள் இந்த கண்டத்தின் மிகப்பெரும் எரிமலையாகும்.
தனது பெரும் பரப்பின் பூகோள பன்முகத் தன்மை காரணமாக, அமெரிக்கா பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. 100வது தீர்க்கரேகைக்கு கிழக்கே, காலநிலையானது வடக்கில் ஈரப்பதம் மிகுந்த கரைநிலப்பகுதி நிலையில் தொடங்கி தெற்கில் ஈரப்பதம் மிகுந்த துணை-வெப்பமண்டல பகுதி நிலை வரை மாறுபடுகிறது. புளோரிடாவின் தெற்கு முனை வெப்பமண்டலப் பகுதியாகும், அவாயும் இது போலவே. 100வது தீர்க்கரேகைக்கு மேற்கிலான பெரும் சமவெளிகள் பாதிவறண்ட காலநிலை கொண்டிருக்கிறது. மேற்கு மலைகளில் அதிகமானவை ஆல்பைன்கள். கிரேட் பேசினில் காலநிலை வறண்டும், தென்மேற்கில் பாலைவனமாகவும், கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் மத்தியதரைக்கடல் காலநிலையும், கடலோர ஓரிகான், வாசிங்டன், தெற்கு அலாசுகா ஆகிய பகுதிகளில் கடல்தட்பவெப்பநிலையுடனும் காணப்படுகிறது. அலாசுகாவின் அநேகப் பகுதிகள் ஆர்க்டிக் துணைப்பகுதி அல்லது துருவப்பகுதியாக இருக்கிறது. அதீத காலநிலை அரிதானதல்ல - மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள மாநிலங்கள் வெப்பமண்டல சூறாவளிகளுக்கு ஆட்படும், உலகின் சுழல்காற்றுகளில் பல இந்நாட்டிற்குள், குறிப்பாக மிட்வெசுட்டின் டொர்னாடோ நீர்ப்பாதை பகுதியில் நிகழ்கிறது.
அமெரிக்க உயிரினச் சூழல் பிரம்மாண்ட பன்முகத்தன்மை கொண்டதாகும்: குழல்வகை தாவரங்களின் சுமார் 17,000 இனங்கள் தொடர்ச்சியான அமெரிக்க நாடுகளிலும் அலாசுகாவிலும் காணப்படுகிறது, 1,800 க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள் அவாயில் காணப்படுகிறது, இவற்றில் சில நாட்டின் பிற முக்கியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. 400 பாலூட்டி வகைகள், 750 பறவை இன வகைகள், 500 வகை ஊர்வன, நீர்நில வாழ்வன வகைகளுக்கு தாயகமாக அமெரிக்கா விளங்குகிறது. சுமார் 91,000 பூச்சி இன வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அழியும் அச்சுறுத்தலுக்கும் அபாயத்திற்கும் ஆளாகியுள்ள உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் 1973 ஆம் ஆண்டின் அபாயமுற்றுள்ள உயிரினச் சட்டம் பாதுகாக்கிறது, இதனை அமெரிக்க மீன் மற்றும் காட்டு உயிரின சேவை அமைப்பு கண்காணிக்கிறது. மொத்தம் ஐம்பத்தெட்டு தேசிய பூங்காக்களும், நூற்றுக்கணக்கான பிற கூட்டரசு நிர்வாக பூங்காக்களும், காடுகளும், காட்டின பகுதிகளும் உள்ளன. மொத்தத்தில் நாட்டின் நிலப் பகுதியில் அரசின் வசம் 28.8 சதவீதம் உள்ளது. இவற்றில், சில பகுதிகள் எண்ணெய் தோண்டுவதற்கும், இயற்கை வாயு துளையிடுவதற்கும், மரம் வளர்ப்பதற்கும் அல்லது கால்நடை பண்ணைகளுக்கும் குத்தகைக்கு விடப்படுகிறது; 2.4% ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுகிறது என்றாலும் அநேக பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை ஆகும்.
வரலாறு
பூர்வீக அமெரிக்கர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும்
அலாசுகா பூர்வீக குடிகள் உள்ளிட, பிரதான அமெரிக்காவின் பூர்வீக மக்கள் ஆசியாவில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் குறைந்தது 12,000 பேர் 40,000 ஆண்டுகள் முன்னதாக வந்து குடியேறினர். கொலம்பியருக்கு முந்தைய மிசிசிபி கலாச்சாரத்தினர் போன்ற சிலர் முன்னேறிய விவசாயம், பிரம்மாண்ட கட்டிடக் கலை மற்றும் மாநில அளவிலான சங்கங்களை உருவாக்கினர். ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறத் துவங்கிய பின், பல பூர்வீக அமெரிக்கர்கள் சின்னம்மை போன்ற இறக்குமதியான நோய்த் தொற்றுகளுக்கு பலியானார்கள்.
1492 ஆம் ஆண்டில், செனோவாவின் ஆய்வுப் பயணியான கிறித்தோபர் கொலம்பசு, எசுப்பானிய மன்னரின் ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு கரீபியன் தீவுகளை எட்டினார், அங்கிருந்த பூர்வீக குடிகளுடன் முதல் தொடர்பு கொண்டார். ஏப்ரல் 2, 1513 அன்று ஸ்பெயினின் வெற்றியாளரான சூவான் போன்சு டி லியோன் அவர் "லா புளோரிடா" என்றழைத்த ஒரு பகுதியில் காலடி வைத்தார் - இவை யாவும் தற்போதைய அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன் முதலில் காலடி வைத்த பின் நடந்த நிகழ்வுகளின் முதன்மை ஆவணங்கள் ஆகும். பிராந்தியத்தில் சுபெயின் குடியேற்றங்களைத் தொடர்ந்து தற்போதைய நாளின் தென்மேற்கு அமெரிக்க பகுதியினர், இவர்கள் மெக்சிகோ வழியே ஆயிரக்கணக்கில் வந்தனர். பிரான்சின் விலங்குரோம வர்த்தகர்கள் புதிய பிரான்சு சாவடிகளை பேரேரிகளைச் சுற்றி நிறுவினர்; இறுதியில் வட அமெரிக்காவின் உள்பகுதியில் பெரும் பகுதியை மெக்சிகோ வளைகுடா வரைக்கும் பிரான்சு உரிமை கொண்டாடியது. முதல் வெற்றிகரமான ஆங்கிலக் குடியேற்றங்கள் 1607 ஆம் ஆண்டில் சேம்சுடவுனில் வர்சினியா குடியேற்ற நாடு மற்றும் 1620 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட யாத்ரீகர் பிளைமவுத் குடியேற்ற நாடு ஆகியவையாகும். மசாசூட்சு விரிகுடா குடியேற்ற நாட்டின் 1628 ஆம் ஆண்டு சட்ட வரைவு தொடர்ச்சியான குடியேற்ற அலையில் விளைந்தது; 1634 ஆம் ஆண்டு வாக்கில் நியூ இங்கிலாந்து பகுதியில் சுமார் 10,000 ப்யூரிடன்கள் குடியேறினர். 1610 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் அமெரிக்க புரட்சிக்கும் இடையில், சுமார் 50,000 குற்றவாளிகள் பிரித்தானியாவின் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பினர். 1614 ஆம் ஆண்டு தொடங்கி, டச்சு நாட்டினர் மன்காட்டன் தீவிலுள்ள நியூ ஆம்சுடர்டாம் உள்பட அட்சன் ஆற்றின் கீழ்முகத்துவாரப் பகுதிகளில் குடியேறினர்.
1674 ஆம் ஆண்டில், டச்சு நாட்டினர் தங்களது அமெரிக்கப் பகுதிகளை இங்கிலாந்தின் வசம் இழந்தனர்; நியூ நெதர்லாந்து மாகாணம் நியூ யார்க் என பெயர் மாற்றம் கண்டது. பல புதிய குடியேற்றவகையினர், குறிப்பாக தெற்கு பகுதிக்கு, ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைக் கூலிகளாக இருந்தனர்- 1630 மற்றும் 1680 ஆண்டுகளுக்கு இடையே வர்சீனியாவில் குடியேறியவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த வகையினரே. அந்த நூற்றாண்டு நிறைவுறும் காலத்திற்குள்ளாக, ஆப்பிரிக்க அடிமைகள் முதல் அடிமை தொழிலாளர்களாக இருந்தனர். இவ்வாறாக 1729 ஆம் ஆண்டுகளில் கரோலினாக்கள் பிரிவு மற்றும் 1732 ஆம் ஆண்டுகளில் சார்சியா குடியேற்ற நாடு அமைப்பு, இவற்றுடன், அமெரிக்கா என்று பின்னாளில் ஒன்றிணையவிருந்த பதின்மூன்று பிரித்தானிய குடியேற்ற நாடுகளும் நிறுவப்பெற்றன. இந்த குடியேற்ற நாடுகள் அனைத்தும் அனைத்து சுதந்திர மனிதர்களுக்கும் அணுக்கமுள்ள தேர்தல்களை கொண்டிருந்தன; பழைய ஆங்கிலேயர் உரிமைகளுக்கு பணிவும் குடியரசுவாத, சுயாட்சி ஆதரவு உணர்வுகளும் வளர்ந்தன. அனைத்துமே ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்கி வைத்திருந்தன. உயர்ந்த பிறப்பு விகிதங்கள், குறைவான இறப்பு விகிதங்கள் மற்றும் தொடர்ந்த குடியேற்றம் இவற்றின் காரணமாக குடியேற்ற நாடுகளின் மக்கள்தொகை வெகு துரிதமாய் வளர்ந்தது. 1730 முதல் 1740 ஆம் ஆண்டுகளில் பெரும் விழிப்பு என்ற கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் தோன்றி மதம் மற்றும் மத சுதந்திரத்தில் ஆர்வத்திற்கு உரமூட்டியது. பிரான்சு மற்றும் இந்திய போரில், பிரித்தானிய படைகள் கனடாவை பிரான்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர். ஆனால் பிரெஞ்சு பேசும் மக்கள் அரசியல் ரீதியாக தெற்கத்திய குடியேற்ற நாடுகளிடம் இருந்து தனிமைப்பட்டே இருந்தனர். அமெரிக்கத் தொல்குடியினர் (இவர்கள் "அமெரிக்க இந்தியர்கள்" என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்கள்) இடம் பெயர்ந்த சூழ் நிலையிலும், இந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் 1770 ஆம் ஆண்டிலேயே மொத்தம் 2.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தன, இது பிரித்தானிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் கறுப்பு அடிமைகளாவர். பிரித்தானிய வரிவிதிப்புக்கு ஆட்பட்டிருந்த போதிலும் கூட, அமெரிக்க குடியேற்ற நாட்டினருக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதிருந்தது.
விடுதலை மற்றும் விரிவாக்கம்
1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டத்திலும் 1770 ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது. இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. சூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில் கூடிய கண்டமாநாடு சார்ச்சு வாசிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தை அமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்ட அந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற வாசகத்துடன், இந்த மாநாடு அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை நிறைவேற்றியது, இந்த சாற்றுரை வரைவு ஜூலை 4, 1776 அன்று, தாமசு செபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1777 ஆம் ஆண்டில், கூட்டமைப்பு விதிகளின்படி உருவான ஐக்கிய அரசாங்கம் பலவீனமானதாக 1789 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.
பிரான்சின் உதவியோடு அமெரிக்க படைகளால் பிரித்தானிய படைகள் தோல்வியுற்ற பிறகு, பெரிய பிரித்தானியா அமெரிக்க சுதந்திரத்தையும், மிசிசிபி ஆற்றுக்கு மேற்கிலுள்ள அமெரிக்க நிலப்பகுதிகளின் மீதான அமெரிக்க அரசாங்கங்களின் இறையாண்மையையும் அங்கீகரித்தது. வரி அதிகாரங்களுடன் ஒரு வலிமையான தேசிய அரசாங்கத்தை நிறுவ விரும்பி ஒரு அரசியல்சட்ட சங்கத்தை 1787 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்தனர். அமெரிக்க அரசியல்சட்டம் 1788 ஆம் ஆண்டில் உறுதிசெய்யப்பட்டது, புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் முதல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சார்ச்சு-வாசிங்டன்-1789 ஆம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர். தனிநபர் சுதந்திரத்தின் மீதான கூட்டரசு கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது.
அடிமை முறையை நோக்கிய மனோநிலை மாறத் துவங்கியது; 1808 ஆம் ஆண்டு வரை மட்டுமே அரசியல்சட்ட சரத்து ஆப்பிரிக்க அடிமைகள் வர்த்தகத்தை பாதுகாத்தது. வடக்கு மாநிலங்கள் 1780 முதல் 1804 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அடிமைமுறையை ரத்து செய்தன, இதனையடுத்து தெற்கின் அடிமை மாநிலங்கள் மட்டுமே "விந்தையான சுதாபனத்தின்" பாதுகாவலர்களாக தொடர்ந்தன. சுமார் 1800 ஆம் ஆண்டு வாக்கில் துவங்கிய இரண்டாம் பெரு விழிப்பு, தடைவாதம் உள்ளிட்ட ஏராளமான சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு பின்னாலான சக்தியாக பைபிள் நற்செய்தி பரப்புரைவாதத்தை ஆக்கியது.
மேற்குநோக்கு விரிவடைவதற்கான அமெரிக்கர்களின் ஆர்வம் நெடுந்தொடர்ச்சியான இந்திய போர்கள் மற்றும் இந்தியர் நீக்குக் கொள்கையை தூண்டியது. இது தொல்குடி மக்களிடம் இருந்து அவர்கள் நிலத்தை பறிப்பதாக அமைந்தது. 1803 ஆம் ஆண்டுகளில் பிரான்சு உரிமை கொண்டாடிய பிரதேசத்தில் இருந்து வந்த செனாதிபதி தாமசு செபர்சன் கீழ் மேற்கொள்ளப்பட்ட லூசியானா கொள்முதல் நாட்டின் அளவை ஏறக்குறைய இருமடங்காக்கியது. பல்வேறு காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிராக அறிவித்த 1812 ஆம் ஆண்டு போரானது வெற்றி தோல்வியின்றி முடிந்தது, இது அமெரிக்க தேசியவாதத்தை வலிமைப்படுத்தியது. புளோரிடாவுக்குள் தொடர்ந்து அமெரிக்க ராணுவ ஊடுருவல்கள் நிகழ்ந்ததை அடுத்து அதனையும், பிற வளைகுடா பிராந்தியங்களையும் 1819 ஆம் ஆண்டுகளில் எசுப்பானியா அப்பகுதிகளை கைவிட வேண்டியதானது. டெக்சாசு குடியரசை 1845 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த சமயத்தில் வெளியாகும் தலைவிதி என்கிற கருத்தாக்கம் பிரபலமானது. 1846 ஆம் ஆண்டில் இங்கிலாந்துடனான ஓரிகான் ஒப்பந்தம், இன்றைய அமெரிக்க வடமேற்கு பகுதியை அமெரிக்க கட்டுப்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மெக்சிகோ-அமெரிக்க போரில் வென்று 1848 ஆம் ஆண்டுகளில் மெக்சிக்கோவின் நில அளிப்பு மூலம் கலிபோர்னியா மற்றும் இன்றைய அனைத்து தென்மேற்கு பகுதிகளையும் இணைத்துக் கொண்டது. 1848–1849 ஆம் ஆண்டுகளின் கலிபோர்னியா தங்க வேட்டை மேற்கத்திய புலம்பெயர்வை மேலும் தூண்டியது. புதிய ரயில்பாதைகள் குடியேறியவர்களின் இடப்பெயர்வை சுலபமாக்கி பூர்வீக அமெரிக்கர்களுடனான மோதலை அதிகப்படுத்தியது. ஒரு அரை நூற்றாண்டு காலத்தில், ரயில்பாதைகளின் பரவலை எளிதாக்குவதற்காக 40 மில்லியன் அமெரிக்க எருமைகள் அல்லது காளைகள், தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் கொல்லப்பட்டன. சமவெளி இந்தியர்களின் பிரதான ஆதாரமான எருமைகளின் இழப்பு, பல பூர்விக கலாச்சாரங்களுக்கு வாழ்வாதாரத்தின் மீதான அடியாக விழுந்தது.
உள்நாட்டுப் போர் மற்றும் தொழில்மயமாக்கம்
அடிமை மற்றும் சுதந்திர மாநிலங்களுக்கு இடையிலான பதற்றங்கள் மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மீதான விவாதங்களையும், புதிய மாநிலங்களில் அடிமைமுறை பரவுவதை ஒட்டிய கடுமையான வன்முறை மோதல்களையும் அதிகப்படுத்தியது. அடிமைஎதிர்ப்புக்கு ஆதரவு அதிகளவில் இருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டில் செனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சனாதிபதியாக பதவியேற்கும் முன்பே, ஏழு அடிமை மாநிலங்கள் தங்கள் பிரிவினையை அறிவித்திருந்தன; இதனை சட்டவிரோதமாக கூட்டரசு அறிவித்தது. இதனால் பிரிவினை அறிவித்த மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு உருவானது. சம்டர் துறைமுகத்தின் மீது இந்த கூட்டமைப்பு நடத்திய தாக்குதலில், அமெரிக்க உள்நாட்டு போர் துவங்கியது, மேலும் நான்கு அடிமை மாநிலங்கள் கூட்டமைப்பில் இணைந்தன. லிங்கனின் விடுதலை பிரகடனம் அடிமைமுறைக்கு முடிவு கட்டுவதற்கான வாக்குறுதியை ஒன்றியத்திற்கு அளித்தது. ஒன்றியம் 1865 ஆம் ஆண்டில் வென்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல்சட்டம் மேற்கொண்ட மூன்று சட்டதிருத்தங்கள் அடிமைகளாக இருந்த சுமார் நான்கு மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்ததோடு, அவர்களை குடிமக்களாக ஆக்கி , அவர்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. போரும் அதன் தீர்மானமும் கூட்டாட்சி அதிகாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.
போருக்கு பின், லிங்கன் படுகொலை சம்பவம் புதிதாக விடுதலை பெற்ற அடிமைகளின் உரிமைகளை உறுதி செய்து தெற்கு மாநிலங்களை மறுஒருங்கமைவு செய்து மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திலான குடியரசுக் கட்சியின் மறுகட்டுமான கொள்கைகளை தீவிரமயமாக்கியது. பிரச்சினைக்குள்ளான 1876 சனாதிபதி தேர்தலுக்கு 1877 ஆம் ஆண்டு சமரசம் மூலம் தீர்வு கண்டது. மறுகட்டுமானத்தை முடித்து வைத்தது; சிம் குரோ சட்டங்கள் விரைவில் பல ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை இல்லாது செய்தது. வடக்கில், நகரமயமாக்கமும் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரலாறுகாணாத குடியேற்ற புலம்பெயர்வும் நாட்டின் தொழில்மயமாக்கத்தை துரிதப்படுத்தியது. 1929 ஆம் ஆண்டு வரை நீடித்த குடியேற்ற அலை தொழிலாளர் கூட்டத்தை உருவாக்கியதோடு அமெரிக்க கலாச்சாரத்தை மாற்றியமைத்தது. உயர்ந்த விலை பாதுகாப்புகள், தேசிய உள்கட்டுமான எழுச்சி, புதிய வங்கி கட்டுப்பாடுகள் ஆகியவை வளர்ச்சியை ஊக்கப்படுத்தின. 1867 ஆம் ஆண்டில் உருசியாவிடம் இருந்தா அலாசுகா கொள்முதல் நாட்டின் பிரதான நில விரிவாக்கம் நிறைவுற்றது. 1890 ஆம் ஆண்டில் காயமுற்ற முழங்கால் படுகொலை இந்தியப் போர்களின் கடைசி பெரிய ஆயுத மோதலாகும். 1893 ஆம் ஆண்டில் அவாய் பசிபிக் இராச்சியத்தின் தனித்துவமான முடியாட்சியை அமெரிக்கவாசிகளின் தலைமையிலான ஒரு ராணுவப் புரட்சி தூக்கி எறிந்தது; அமெரிக்கா இந்த தீவுத் தொகுப்புகளை 1898 இல் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் சுபெயின்-அமெரிக்க போரில் வெற்றி பெற்று அமெரிக்கா தன்னை உலக சக்தியாக பறைசாற்றியது. பூர்டோ ரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸையும் இணைத்துக் கொள்ள வழிவகுத்தது. அரை நூற்றாண்டு காலம் தள்ளி பிலிப்பீன்சு விடுதலை பெற்றது, பூர்டோ ரிகோ மற்றும் குவாம் அமெரிக்க பிராந்தியங்களாகவே தொடர்கின்றன.
முதலாம் உலகப் போர், பெருமந்தம், மற்றும் இரண்டாம் உலகப் போர்
1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, அமெரிக்கா நடுநிலை வகித்தது. பல அமெரிக்கர்கள் தலையீட்டை எதிர்த்தார்கள் என்றாலும், அநேக அமெரிக்கர்கள் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அனுதாபம் காட்டினார்கள். 1917 ஆம் ஆண்டில், அமெரிக்கா நேச நாடுகள் பக்கம் இணைந்தது, மைய சக்திகளுக்கு எதிராக அலையைத் திருப்பியது. உலகப் போருக்கு பின், உலக நாடுகள் சங்கத்தை நிறுவிய வெர்சாய் ஒப்பந்தத்தை செனட் நிறைவேற்றவில்லை. தன்னிச்சைவாதத்தை நாடு தொடர்ந்தது, தனிமைப்படலின் விளிம்புக்கு அதனைத் தள்ளியது. 1920 ஆம் ஆண்டில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை அளிக்கும் ஒரு அரசியல்சட்ட திருத்தத் தொகுப்பை பெண்கள் உரிமை இயக்கம் வென்றது. உறுமும் இருபதுகளின் வளமையானது 1929 ஆம் ஆண்டின் வால் வீதி வீழ்ச்சி, பெருமந்த நிலைக்கு தூண்டியது. 1932 ஆம் ஆண்டில் சனாதிபதி பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட் புதிய ஒப்பந்தம் என்னும் பொருளாதாரத்தில் அரசாங்க தலையீட்டை அதிகரிக்கும் பல்வேறு வகை கொள்கைகளை செயல்படுத்தினார். 1930 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த டசுட் பவுல் என்னும் தொடர் சூறாவளி பல விவசாய சமூகங்களை ஏழ்மைப்படுத்தி ஒரு புதிய மேற்கத்திய குடியேற்ற அலையை ஊக்குவித்தது.
செப்டம்பர் 1939 இல் நாசி செருமனி போலந்து படையெடுப்பு இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் ஏறக்குறைய நடுநிலை வகித்த அமெரிக்கா, மார்ச் 1941 ஆம் ஆண்டில் லென்ட்-லீசு திட்டம் மூலமாக நேச நாடுகளுக்கு பொருட்கள் வழங்கத் துவங்கியது. திசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில், சப்பான் பேர்ல் ஆர்பர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் நடத்தியதின் பின் அச்சு நாடுகளுக்கு எதிராக நேச நாடுகளுடன் கைகோர்த்தது. இந்த போரில் பங்கேற்றது அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தியது, மூலதன முதலீடும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் அதிகரித்தது. யுத்தத்தில் பங்கேற்ற முக்கிய நாடுகளில், அமெரிக்கா மட்டும் உண்மையில் பணக்கார நாடாகியது, போரினால் ஏழ்மையுறுவதற்குப் பதில் செழுமையுற்றது. பிரெட்டன் வுட்சு மற்றும் யால்டாவில் நடந்த நேசநாடுகள் மாநாட்டில் புதிய சர்வதேச அமைப்புகளின் ஒரு அமைப்பை வரையறுத்தது, இது அமெரிக்கா]] மற்றும் சோவியத் ஒன்றியத்தை உலக விவகாரங்களின் மையத்தில் நிறுத்தியது. ஐரோப்பாவில் வெற்றி கிட்டியதால், சான் பிரான்சிசுகோவில் நடந்த 1945 சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் ஆவணத்தை உருவாக்கியது, இது போருக்கு பின் செயல்பாட்டிற்கு வந்தது. முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய அமெரிக்கா ஆகத்து மாதத்தில் சப்பான் நகரங்களான இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அவற்றை பிரயோகித்தது. சப்பான் செப்டம்பர் 2 அன்று சரணடைந்ததும், போர் முடிவுக்கு வந்தது.
பனிப் போர் மற்றும் ஆர்ப்பாட்ட அரசியல்
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் அதிகாரத்துக்காக போட்டியிட்டன, ஐரோப்பாவின் ராணுவ விவகாரங்களில் நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தம் மூலம் இவை ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்கா தாராளவாத சனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் ஊக்குவித்தது, சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தை மையமாகக் கொண்ட திட்டமிட்ட பொருளாதாரத்தையும் ஊக்குவித்தது. இரு தரப்பினரும் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்ததோடு மறைமுகப் போர்களிலும் ஈடுபட்டன. 1950–53 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க துருப்புகள் கொரிய யுத்தத்தில் கம்யூனிச சீன படைகளை எதிர்த்து போரிட்டன. இடதுரீதியான கவிழ்ப்பு நடவடிக்கை சந்தேகங்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை அமெரிக்க வகையல்லாத நடவடிக்கை ஆய்வு அவை கமிட்டி நடத்தியது, செனட்டர் யோசேப்பு மெக்கார்த்தி கம்யூனிச எதிர்ப்பு மனோநிலையின் முக்கிய பிரமுகராக இருந்தார்.
1961 ஆம் ஆண்டில், முதல் ஆளுடனான விண்கலத்தை சோவியத் அனுப்பியது, சனாதிபதி சான் எஃப். கென்னடியை "நிலவில் மனிதர் கால் பதிப்பதில்" முதலாவதாக அழைப்பு விடுக்க தூண்டியது, இது 1969 ஆம் ஆண்டில் நிறைவேறியது. கியூபாவில் சோவியத் சக்திகளுடான ஒரு பதற்றமான அணுசக்தி மோதல் அபாயத்தையும் கென்னடி எதிர்கொண்டார். இதனிடையே, அமெரிக்கா தொடர்ந்த பொருளாதார விரிவாக்கத்தை கண்டது. ரோசா பார்க்சு மற்றும் மார்ட்டின் லூதர் கிங், சூனியர். போன்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தலைமையில் மனித உரிமைகள் இயக்கம் வளர்ச்சியுற்று, நிறப்பாகுபாடு பேதங்களை எதிர்த்து போராடினார்கள். 1963 ஆம் ஆண்டில் கென்னடி படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகு, 1964 மனித உரிமைகள் சட்டம் மற்றும் 1965 வாக்களிக்கும் உரிமைகள் சட்டம் ஆகியவை சனாதிபதி லிண்டன் பி. சான்சன் தலைமையின் கீழ் நிறைவேறியது. சான்சன் மற்றும் அவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் நிக்சன், ஒரு பினாமி யுத்தத்தை தென்கிழக்கு ஆசியாவில் ஊக்குவித்து தோல்வியில் முடிந்த வியட்நாம் போராக விரிவுபடுத்தினர். போர் எதிர்ப்பு, கறுப்பு தேசியவாதம், பாலியல் புரட்சி ஆகியவற்றால் ஊக்கமடைந்து பரந்த மாற்றுகலாச்சார இயக்கம் வளர்ச்சியுற்றது. பெண்களுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் நாடும் மகளிர் இயக்கதின் ஒரு புதிய அலைக்கு பெட்டி ஃபீரிடன், குளோரியா சுடெனிம், மற்றும் பலர் தலைமையேற்றனர்.
1974 ஆம் ஆண்டில் வாட்டர்கேட் ஊழலின் விளைவாக, நீதிநடைமுறைகளுக்கு இடையூறு விளைத்தல், அதிகார முறைக்கேடு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்திற்கு ஆளான நிலையில், பதவி விலகிய முதல் அமெரிக்க சனாதிபதியாக நிக்சன் ஆனார். அவரைத் தொடர்ந்து துணை சனாதிபதி செரால்டு போர்டு சனாதிபதி ஆனார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் சிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் பொருளாதார தேக்கநிலையுடன் ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை நிகழ்ந்தன. 1980 ஆம் ஆண்டில் ரொனால்டு ரீகன் சனாதிபதி ஆனதும் அமெரிக்க அரசியல் வலது நோக்கி நகர்ந்ததன் தலைமை அடையாளமாக அமைந்தது, இது வரிவிதிப்புகள் மற்றும் செலவின முன்னுரிமைகளில் பிரதான மாற்றங்களாகப் பிரதிபலித்தது. இரண்டாவது முறையாக அவர் பதவியில் அமர்ந்தது ஈரான்-கான்ட்ரா ஊழல் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான ராசதந்திர உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகியவை நிகழ்ந்தன. தொடர்ந்து நிகழ்ந்த சோவியத் உடைவு குளிர் யுத்தத்தை முடித்து வைத்தது.
சமகால சகாப்தம்
ஐநா-ஒப்புதலளித்த வளைகுடாப் போர் சமயத்தில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஜனாதிபதி ஜார்ஜ் வாக்கர் புஷ் தலைமையில் ஆற்றிய பங்களிப்பும், ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையின் கீழ் நிகழ்ந்த யுகோசுலாவியா போர்களும் ஒரு வல்லரசாக அதன் நிலையைப் பாதுகாக்க உதவின. மார்ச் 1991 முதல் மார்ச் 2001 வரையான நவீன அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார விரிவாக்கமும் டாட்-காம் குமிழி ஆகியவையும் கிளிண்டன் நிர்வாகத்தில் நிகழ்ந்தன. ஒரு குடியியல் வழக்கும் பாலியல் மோசடிக் குற்றச்சாட்டும் 1998 ஆம் ஆண்டில் கிளிண்டன் மீது கண்டனத்தீர்மானத்திற்கு வழி வகுத்தாலும், அவர் பதவியில் தொடர்ந்தார். அமெரிக்க வரலாற்றில் மிக நெருக்கமான முடிவுக்கு காரணமான 2000 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து- ஜார்ஜ் டபிள்யூ. புஷ் - இவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் மகனாவார், ஜனாதிபதியானார்.
செப்டம்பர் 11, 2001 அன்று அல்-கெய்தா பயங்கரவாதிகள் நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மற்றும் வாசிங்டன், டி. சி. அருகிலுள்ள பென்டகன் அலுவலகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர், இதில் சுமார் மூன்றாயிரம் பேர் உயிரிழந்தனர். பதிலடியாக, புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" துவக்கியது. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை நிகழ்த்தி, தலிபான் அரசாங்கத்தையும் அல்-கெய்தா பயிற்சி முகாம்களையும் அகற்றின. தலிபான் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2002 ஆம் ஆண்டில், சர்ச்சைக்குரிய அடிப்படையில் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கு புஷ் நிர்வாகம் அழுத்தமளித்தது. நேட்டோ ஆதரவோ அல்லது ராணுவ தலையீட்டுக்கான வெளிப்படை ஐநா உத்தரவு இல்லாமல், புஷ் ஒரு விருப்பக் கூட்டணியை]] ஒருங்கமைத்தார்; கூட்டணி படைகள் தாமாகவே 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்து அங்கிருந்த சர்வாதிகாரியும் அமெரிக்க கூட்டாளியுமான சதாம் உசேனை அகற்றினர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஈராக் போரில் அமெரிக்கா மனித உரிமைகள் மீறியதாக பன்னாட்டு பொதுமன்னிப்பு மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டில் காத்ரினா சூறாவளி வளைகுடா கடலோரப் பகுதிகளில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி, நியூ ஆர்லியன்சை முற்றிலுமாய் சிதைத்தது. நவம்பர் 4, 2008 அன்று, உலகளாவிய பொருளாதார மந்தநிலை சூழ்நிலையில், அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
அரசியல்
அமெரிக்கா உலகின் பழமையான கூட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை ஆட்சியானது சிறுபான்மையினர் உரிமைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதன் மூலம் வலிமையூட்டிய அரசியல்சட்டக் குடியரசாகும். பிராந்தியங்களில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் ஐக்கிய அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் இருந்து விலக்கப்பட்டாலும், அடிப்படையாக ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகமாக இது கட்டமைந்துள்ளது. நாட்டின் உச்சபட்ச நீதி ஆவணமாக செயல்படும் அமெரிக்க அரசியல்சட்டத்தால் வரையறுக்கப்படும் சோதனைகள் மற்றும் சமநிலைகள் கொண்ட ஒரு அமைப்பினால் அரசாங்கம் கட்டுப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய அமைப்பில், குடிமக்கள் பொதுவாக ஐக்கிய, மாநில மற்றும் பிராந்திய என மூன்று அரசாங்க நிலைகளுக்கு கட்டுப்பட்டவர்களாகும்; பிராந்திய அரசாங்கத்தின் கடமைகளாவன நாட்டு மற்றும் முனிசிபல் அரசாங்கங்களுக்கு இடையே பொதுவாக பிரிந்து செயல்படுகிறது. ஏறக்குறைய அனைத்து வகைகளிலும், நிர்வாக மற்றும் சட்ட அதிகாரிகள் மாவட்டவாரியாக குடிமக்களின் பன்முக வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எண்ணிக்கைவாரி பிரதிநிதித்துவம் ஐக்கிய நிலையில் இல்லை, இது கீழ் நிலைகளிலும் வெகு அபூர்வமாக இருக்கிறது. ஐக்கிய மற்றும் மாநில நீதி மற்றும் கேபினட் அதிகாரிகள் பொதுவாக நிர்வாக பிரிவினர் பரிந்துரை செய்து சட்டமன்றம் மூலமாக ஒப்புதலளிக்கிறார்கள், சில மாநில நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் வாக்கெடுப்பு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐக்கிய அரசாங்கம் மூன்று கிளைகளாக உருவானது:
நாடாளுமன்றம்: இது இரு அவைகள் கொண்ட காங்கிரஸ், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையால் ஆனது, ஐக்கிய சட்டங்களை உருவாக்குகிறது, போரை அறிவிக்கிறது, ஒப்பந்தங்களுக்கு ஒப்புதலளிக்கிறது, நிதியாதார அதிகாரத்தை கொண்டுள்ளது, கண்டிக்கும் அதிகாரமும் உண்டு, அதன் மூலம் அரசாங்கத்தின் பதவியிலிருக்கும் உறுப்பினர்களை இது அகற்ற முடியும்.
நிர்வாகம்: ஜனாதிபதி தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஆவார், நாடாளுமன்ற மசோதாக்கள் சட்டமாகும் முன் அவற்றின் மீதான இறுதி முடிவு அதிகாரம் செலுத்த முடியும், ஐக்கிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்தும் கேபினட் மற்றும் பிற அதிகாரிகளை நியமனம் செய்கிறது.
நீதித்துறை: சுப்ரீம் கோர்ட்டும் மற்றும் பிற கீழ்நிலை ஐக்கிய நீதிமன்றங்களும், இவற்றின் நீதிபதிகள் ஜனாதிபதியால் செனட் ஒப்புதலுடன் நியமனம் செய்கிறார்கள், இவர்களை சட்டங்களை ஆராய்வதோடு அரசியல்சட்டத்தை மீறியதாகக் காண்பவற்றை மாற்றுகிறார்கள்.
பிரதிநிதிகள் அவை 435 உறுப்பினர்களைக் கொண்டது, ஒவ்வொருவரும் நாடாளுமன்ற மாவட்டங்களை இருவருட காலத்திற்கு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஒவ்வொரு பத்தாவது வருடத்திலும் அவை உறுப்பினர் எண்ணிக்கைகள் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஏழு மாநிலங்கள் குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதியையும், மிக அதிக மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியா ஐம்பத்தி மூன்று பிரதிநிதிகளையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்கள் கொண்டு செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர், பொதுவாக இவர்கள் ஆறு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், செனட்டின் மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்கான தேர்தல் ஒரு வருடம் விட்டு நடக்கிறது. ஜனாதிபதி நான்கு வருட காலம் பதவியில் இருக்கிறார், அவர் ஜனாதிபதி பதவிக்கு இருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்க முடியாது. ஜனாதிபதி நேரடி வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக தீர்மானிக்கும் வாக்குகள் மாநிலங்களுக்கு ஏற்ற பங்களிப்பை கொண்டிருக்கும் வகையிலான மறைமுக தேர்தல் அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அமெரிக்க தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்கும் சுப்ரீம் கோர்ட் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இவர்கள் ஆயுள் காலம் வரை பதவி வகிக்க முடியும். மாநில அரசாங்கங்கள் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன; நெப்ராஸ்கா மட்டும் பிரத்யேகமாக ஒற்றை அவை நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநரும் (தலைமை நிர்வாகி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மாநில மற்றும் ஐக்கிய அரசாங்கங்கள் என இரண்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் நடைமுறைகளும் மறுஆய்வுக்கு உட்பட்டவை; அரசியல்சட்டத்திற்கு மீறிய வகையில் நீதித்துறையால் உரைக்கப்படும் எந்த சட்டமும் செல்லாததாகும். அரசியல்சட்டத்தின் மூல உரை ஐக்கிய அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் பொறுப்புகளையும் மற்றும் தனித்தனி அரசாங்கங்களுடனான அதன் உறவினையும் நிலை நிறுத்துகிறது. முதலாவது சட்டப்பிரிவு ஆட்கொணர்வுக்கான "மகத்தான ஆணை" உரிமையைப் பாதுகாக்கிறது, சட்டப்பிரிவு மூன்று அனைத்து கிரிமினல் வழக்குகளிலும் நீதிபதிகள் குழுவின் விசாரணை உரிமையை உறுதி செய்கிறது. அரசியல்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம். அரசியல்சட்டம் இருபத்தி ஏழு முறைகள் திருத்தப்பட்டிருக்கிறது; முதல் பத்து திருத்தங்கள் உரிமைகள் மசோதாவுக்கு வடிவளித்தன, பதினான்காவது திருத்தம் அமெரிக்கர்களின் தனிநபர் உரிமைகளுக்கான மைய அடிப்படையை உருவாக்குகின்றது.
அரசியல் கட்சிகள்
அமெரிக்கா இரு கட்சி அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றது. அனைத்து நிலைகளிலும் தேர்தல் பதவிகளுக்கு, மாநில நிர்வாகத்தின் கீழ் முதன்மை தேர்தல்கள் மூலம் அடுத்து வரும் பொது தேர்தல்களுக்கான பிரதான கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 1856 பொதுத் தேர்தல் முதலே, பிரதான கட்சிகளாக 1824 ஆம் ஆண்டில் தொடங்கிய மக்களாட்சிக் கட்சியும், 1854 ஆம் ஆண்டில் தொடங்கிய குடியரசுக் கட்சியும் தான் இருந்து வருகின்றன. உள்நாட்டு போர் காலம் முதல், ஒரே ஒரு மூன்றாவது-கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தான் - 1912 ஆம் ஆண்டில் முற்போக்கு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் - மக்கள் வாக்களிப்பில் 20 சதவிகிதம் வரை பெற்றார்.
அமெரிக்க அரசியல் கலாச்சாரத்திற்குள், குடியரசுக் கட்சி மைய-வலதாக அல்லது "பழமைவாத" கட்சியாக கருதப்படுகிறது, ஜனநாயகக் கட்சி மைய-இடதாக அல்லது "தாராளவாத" கட்சியாகக் கருதப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களும் மற்றும் "நீல மாநிலங்கள்" எனப்படும் கிரேட் லேக்ஸ் மாநிலங்களில் சிலவும் ஏறக்குறைய தாராளவாத அடிப்படையிலானவை. தெற்கின் "சிவப்பு மாநிலங்கள்" மற்றும் பெரும் சமவெளி மற்றும் ராக்கி மலைகள் பகுதியின் அநேக மாநிலங்களும் ஒப்பீட்டளவில் பழைமைவாதமுடையவை.
2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மக்களாட்சிக் கட்சியின் பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியும் இப்பதவி வகிக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஆவார். முந்தைய ஜனாதிபதி அனைவரும் முழுக்க ஐரோப்பிய வம்சாவளியினர் ஆவர். 2008 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மக்களாட்சிக் கட்சி தனது கட்டுப்பாட்டை அவை மற்றும் செனட் (Senate) இரண்டிலும் வலிமைப்படுத்தியது. 111வது அமெரிக்க நாடாளுமன்றத்தில், செனட்டில் 57 மக்களாட்சிக் கட்சியினரும், மக்களாட்சிக் கட்சியினருடன் கருத்தொருமிப்பு கொண்ட இரண்டு சுயேச்சைகள், மற்றும் 40 குடியரசுக் கட்சியினரைக் கொண்டுள்ளது (ஒரு இடம் பிரச்சினையில் உள்ளது); அவையில் 250 மக்களாட்சிக் கட்சியினரும்; 178 குடியரசுக் கட்சியினரும் உள்ளனர் (ஒரு இடம் காலியாக உள்ளது (கலிபோர்னியாவின் 32வது நாடாளுமன்ற மாவட்டம்)).
அரசியல் பிரிவுகள்
அமெரிக்கா ஐம்பது மாநிலங்களின் ஒன்றியமாக உள்ளது. ஆரம்பத்தில் பதின்மூன்று மாநிலங்கள் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து போராடியதால் பதின்மூன்று நாடுகளாக உதித்தன. பிற மாநிலங்கள் போர் மூலமாகவும் அல்லது அமெரிக்காவின் பிராந்தியங்களில் இருந்து பிரித்தும் உருவானவையாகும். விதிவிலக்குகளாக வெர்மான்ட், டெக்சாஸ், மற்றும் ஹவாய் ஆகிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்கள் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்பு சுதந்திர குடியரசாக இருந்தவை. மற்றொரு வகை விதிவிலக்கில் தொடக்கத்தில் இருந்த பதின்மூன்று மாநிலங்கள் அடங்கும்.
நாட்டின் வரலாற்று துவக்கத்தில், மூன்று வகையில் மாநிலங்கள் உருவாயின: வர்ஜினியாவில் இருந்து கென்டக்கி; வடக்கு கரோலினாவில் இருந்து டென்னெஸ்; மசாசூட்ஸில் இருந்து மென். அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது, மேற்கு வர்ஜினியா வர்ஜினியாவில் இருந்து உடைந்தது. கடைசியாக ஹவாய் தனது மாநில அந்தஸ்தை ஆகத்து 21, 1959 அன்று பெற்றது. மாநிலங்களுக்கு ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல உரிமை இல்லை.
போர்டோ ரீகோ மற்றும் கரீபியனில் உள்ள அமெரிக்க வர்ஜின் தீவுகள், அமெரிக்கன் சமோவா, குவாம், மற்றும் பசிபிக்கில் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய ஐந்து கடல்கடந்த பிராந்தியங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த பிராந்தியங்களில் பிறப்பவர்கள் (அமெரிக்கன் சமோவா தவிர) அமெரிக்க குடியுரிமை கொண்டவர்களாவார்கள்.
ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. அவை:
{| border="0" cellspacing="30"
|- valign="top"
|
அலபாமா
அலாஸ்கா
அரிசோனா
ஆர்கன்சஸ்
கேலிஃபோர்னியா
கொலராடோ
கனெக்டிகட்
டெலவேர்' ஃபுளோரிடா
ஜார்ஜியா
ஹவாய்
இடாகோ
இலினாய்
இன்டியானா
ஐயோவா
கன்சாஸ்
கென்டகி
|
லூசியானா
மேய்ன்
மேரிலண்ட்
மசாசுசெட்ஸ்
மிஷிகன்
மினசோட்டா
மிசிசிப்பி
மிசெளரி
மான்டனா
நெப்ராஸ்கா
நெவாடா
நியூ ஹாம்ஷயர்
நியூ ஜெர்சி
நியூ மெக்சிகோ
நியூ யார்க்
வட கரோலினா
|
வட டகோட்டா
ஒஹாயோ
ஒக்லஹாமா
ஒரிகன்
பென்சில்வேனியா
இறோட் தீவு
தென் கரோலினா
தென் டகோட்டா
டென்னசி
டெக்சஸ்
உட்டா
வேர்மான்ட்
வெர்ஜீனியா
வாஷிங்டன் மாநிலம்
மேற்கு வெர்ஜீனியா
விஸ்கொன்சின்
வயோமிங்
|}
வெளியுறவு மற்றும் ராணுவம்
அரசியல் மற்றும் ராணுவ செல்வாக்கினைப் பயன்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ளது மேலும் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் தலைமையகம் அமைந்துள்ளது. அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை வாஷிங்டனில் கொண்டுள்ளன, பல நாடுகள் நாடெங்கிலும் தூதரக அலுவலகங்களை கொண்டுள்ளன. இதேபோல், ஏறக்குறைய அனைத்து நாடுகளுமே அமெரிக்காவுக்கென ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆயினும், கியூபா, ஈரான், வட கொரியா, பூட்டான், சூடான், மற்றும் சீனக் குடியரசு (தைவான்) ஆகியவை அமெரிக்காவுடன் முறையான ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.
அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளது, அத்துடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், மற்றும் சக நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் வலிமையான உறவுகளைக் கொண்டுள்ளது.அமெரிக்க அரசாங்கங்கள் அமைப்பு மூலமாகவும், கனடா மற்றும் மெக்சிகோவுடனான முத்தரப்பு வட அமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகிய சுதந்திர சந்தை ஒப்பந்தங்கள் மூலமும் இது தனது அண்டை நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. 2005 ஆம் ஆண்டில், அமெரிக்கா அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக்கென 27 பில்லியன் டாலர் தொகையை செலவிட்டது, இது உலகளவில் பெரும்பான்மையான பங்களிப்பாகும். ஆயினும், மொத்த தேசிய வருவாய் (GNI) பங்களிப்பில், அமெரிக்க பங்களிப்பான 0.22% இருபத்தி இரண்டு கொடை தேசங்களில் இருபதாவது இடத்தை பிடித்துள்ளது. தனியார் அறக்கட்டளைகள், பெருநிறுவனங்கள், மற்றும் கல்வி மற்றும் மத ஸ்தாபனங்கள் 96 பில்லியன் டாலர் தொகையை கொடையளித்துள்ளன. இந்த கூட்டு மொத்தமாக 123 பில்லியன் டாலர் என்பதும் உலகளாவிய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பு என்பதோடு GNI சதவீதத்தில் ஏழாவது இடமாகவும் அமைகிறது.
தேசத்தின் ராணுவப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை ஜனாதிபதி கொண்டிருக்கிறார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் படைவீரர்களுக்கான இணை தலைவர்கள் ஆகிய அதன் தலைவர்களையும் இவரே நியமிக்கிறார். அமெரிக்க பாதுகாப்பு துறை ஆயுதப் படையை நிர்வாகம் செய்கிறது, இராணுவம், கடற்படை, கப்பல்படை, மற்றும் விமானப் படை ஆகியவை இதில் அடக்கம். கடலோரப் பாதுகாப்பு படை அமைதிக் காலங்களில் ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை மூலமும் போர் சமயங்களில் கடற்படை துறை மூலமும் செயல்படுகிறது. 2005 ஆம் ஆண்டில், ராணுவம் 1.38 மில்லியன் வீரர்களைக் கொண்டிருந்தது, இத்துடன் பல நூறாயிரம் பேர் ரிசர்வ் மற்றும் தேசிய பாதுகாப்பு படையில் இருந்தனர், மொத்தம் 2.3 மில்லியன் துருப்புகள் இருந்தனர். பாதுகாப்பு துறை சுமார் 700,000 பொதுமக்களையும் பணியமர்த்தியுள்ளது, ஒப்பந்ததாரர்களைச் சேர்க்காமல்.ராணுவ சேவை தன்னார்வ அடிப்படையிலானது, போர் சமயங்களில் தேர்ந்தெடுத்த சேவை அமைப்பு மூலம் கட்டாய படை சேர்ப்பு நிகழலாம். விமானப் படையின் பெரும் எண்ணிக்கையிலான போக்குவரத்து விமானங்கள் மற்றும் விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், கடற்படையின் பதினொன்று இயங்குநிலை விமானம் தாங்கிகள், மற்றும் கடற்படையின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் தொகுப்புகளில் உள்ள கடல் பயண பிரிவுகள் ஆகியவை மூலம் அமெரிக்க படைகள் வெகு துரிதமாக குறிப்பிட்ட இடங்களில் அமைக்க இயலும். அமெரிக்காவுக்கு வெளியே, 770 தளங்கள் மற்றும் இடங்களில் அண்டார்டிகா தவிர ஒவ்வொரு கண்டத்திலும் ராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த அளவுக்கு உலகளாவிய இராணுவ இருப்பு கொண்டிருப்பது சில எழுத்தாசிரியர்களை அமெரிக்கா "தளங்களின் சாம்ராஜ்யத்தை" பராமரிப்பதாக சித்தரிக்க வைத்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் மொத்த அமெரிக்க ராணுவ செலவினமான, 528 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை, உலகளாவிய ராணுவ செலவினத்தில் 46% என்பதோடு அடுத்து வரும் பதினான்கு பெரும் தேசிய ராணுவ செலவினங்களை ஒன்றாக சேர்த்தாலும் அதனை விட மிகையானதாக இருக்கிறது. (கொள்முதல் திறன் இணை அளவுகளில், இது அடுத்து வரும் ஆறு இத்தகைய செலவினங்களை சேர்த்தாலும் அதிகமானதாகும்.) தனிநபர் செலவினமான 1,756 டாலர்கள் என்பது உலக சராசரியைக் காட்டிலும் சுமார் பத்து மடங்கு அதிகமானதாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.06% உடன், அமெரிக்க ராணுவ செலவினம் 172 நாடுகளில் 27வது இடத்தில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டிற்கான முன்மொழிந்த அடிப்படை பாதுகாப்பு துறை பட்ஜெட், 515.4 பில்லியன் டாலர்கள் என்பது 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 7% அதிகமாகும், 2001 ஐக் காட்டிலும் 74% அதிகமாகும். ஈராக் போர் அமெரிக்காவுக்கு வைத்திருக்கும் செலவு 2.7 டிரில்லியன் டாலர்களை என மதிப்பிட்டுள்ளது. மே 3, 2009 நிலமையின் படி, போரில் 4,284 பேர் ராணுவ காயத்தால் உயிரிழந்தார்கள், 31,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பொருளாதாரம்
அமெரிக்கா ஒரு முதலாளித்துவ கலப்பு பொருளாதாரம், இது அளவற்ற இயற்கை வளங்கள், நன்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு, மற்றும் உயர்ந்த உற்பத்திதிறன் ஆகியவை மூலம் வளப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றின் படி, அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 14.3 டிரில்லியன் டாலர் என்பது மொத்த உலக உற்பத்தியில் பரிவர்த்தனை விலைகளில் 23% பங்களிப்பும், கொள்முதல் திறன் இணையளவில் (PPP) மொத்த உலக உற்பத்தியில் ஏறக்குறைய 21% பங்களிப்பும் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆக, இது 2007 ஆம் ஆண்டில் கொள்முதல் திறன் இணையளவில் (PPP) இல் மொத்த ஐரோப்பிய ஒன்றியத்தினதை விட சுமார் 4% மட்டுமே குறைவானதாக இருந்தது. உலகளவில் சராசரி தனிநபர் GDP இல் உலகளவில் பதினேழாவது இடத்திலும் PPP இல் தனிநபர் GDP இல் ஆறாவது இடத்திலும் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா உலகின் மிகப் பெரும் இறக்குமதியாளராகத் திகழ்வதுடன் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது, தனிநபர் ஏற்றுமதியளவு ஒப்பீட்டளவில் குறைவு தான். கனடா, சீனா, மெக்சிகோ, ஜப்பான், மற்றும் ஜெர்மனி ஆகியவை இதன் தலைமை வர்த்தக கூட்டாளிகளாக இருக்கின்றன. ஏற்றுமதியாகும் பொருட்களில் தலைமையில் இருப்பது எலெக்ட்ரிகல் எந்திரப்பொருட்களாகும், வாகனங்கள் தான் இறக்குமதி பொருட்களில் தலைமையிடத்தில் இருக்கிறது. உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் அமெரிக்கா ஒட்டுமொத்த வரிசையில் முதலிடம் வகிக்கிறது. சுமார் ஆறு வருடங்களுக்கும் மேல் நீடித்த விரிவாக்க காலத்திற்குப் பிறகு, டிசம்பர் 2007 முதல் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது.
2009 ஆம் ஆண்டில், தனியார் துறை பொருளாதாரத்தில் 55.3% பங்களிப்பு கொண்டிருக்கும் என மதிப்பிட்டுள்ளது, ஐக்கிய அரசாங்க நடவடிக்கை 24.1% பங்களிப்பும் மாநில மற்றும் பிராந்திய அரசாங்க நடவடிக்கை (ஐக்கிய மாற்றங்கள் உள்பட) எஞ்சிய 20.6% பங்களிப்பையும் கொண்டிருக்கும். பொருளாதாரம் உற்பத்திக்கு பிந்தைய வகையாக இருந்தது, சேவை துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67.8% பங்களிப்பு செய்தது. மொத்த வர்த்தக பெறுகைகளில் தலைமை வர்த்தக பிரிவாக திகழ்வது மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்; நிகர வருவாயில் நிதி மற்றும் காப்பீடு. அமெரிக்கா ஒரு தொழில்துறை சக்தியாக திகழ்கிறது, ரசாயன தயாரிப்புகள் தலைமை உற்பத்தி பிரிவாக இருக்கிறது. அமெரிக்கா உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதோடு அதன் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் திகழ்கிறது. எலெக்ட்ரிக்கல் மற்றும் அணு எரிசக்தி, அத்துடன் நீர்ம இயற்கை எரிவளி, சல்பர், பாஸ்பேட்டுகள் மற்றும் உப்பு ஆகியவற்றில் இது உலகின் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கிறது. விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவாகவே பங்களிப்பு கொண்டிருக்கிற நிலையில், மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்ஸ் உற்பத்தியில் அமெரிக்கா உலகின் தலைமை உற்பத்தியாளராக இருக்கிறது. டாலர் வர்த்தகத்தில் நியூயார்க் பங்குச் சந்தை உலகின் மிகப் பெரியதாகும். கொக்கக் கோலாவும் மெக்டொனால்டும் உலகின் மிகவும் பிரபல வர்த்தகப் பெயர்களாக உள்ளன.
2005 ஆம் ஆண்டில், 155 மில்லியன் பேர் வருவாயுடன் பணியமர்ந்தனர். இவர்களில் 80% பேர் முழு நேர வேலைகள் கொண்டிருந்தனர். பெரும்பான்மையினர், 79%, சேவை துறையில் பணியமர்ந்தனர். சுமார் 15.5 பேருடன், சுகாதாரம் மற்றும் சமூக உதவி துறை வேலைவாய்ப்புக்கான முன்னணி துறைகளாக இருக்கின்றன. சுமார் 12% தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருக்கிறார்கள், மேற்கு ஐரோப்பாவில் இது 30% ஆக இருக்கிறது. வேலைக்கு பணியமர்த்துவது மற்றும் நீக்குவதில் எளிமை விஷயத்தில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருப்பதாக உலக வங்கி வரிசைப்படுத்துகிறது. 1973 மற்றும் 2003 க்கு இடையே, சராசரி அமெரிக்கருக்கான ஒரு வருட வேலையானது 199 மணி நேரங்கள் அதிகரிப்பை கண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக அதிக தொழிலாளர் உற்பத்தித் திறனில் தனது முதலிடத்தை அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது.ஆயினும், ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் 1950 ஆம் ஆண்டுகள் தொடங்கி 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை அது கொண்டிருந்த தலைமையிடம் இப்போது அதன் வசம் இல்லை; நார்வே, பிரான்ஸ், பெல்ஜியம், மற்றும் லக்சம்பர்க் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் இப்போது கூடுதல் திறம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் சொத்து மற்றும் கார்பரேட் வருவாய் வரி விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கின்றன, உழைப்பு மற்றும், குறிப்பாக, நுகர்வு வரி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன.
வருவாய் மற்றும் மனித மேம்பாடு
அமெரிக்க கணக்கெடுப்பு அமைப்பின் கூற்றுப்படி, வரிக்கு முந்தைய சராசரி வீட்டு வருமானம் 2007 ஆம் ஆண்டில் 50,233 டாலர்கள். இந்த சராசரி மேரிலாண்டில் 68,080 டாலர்கள் என்பதில் இருந்து மிசிசிபியில் 36,338 டாலர்கள் என்பது வரை பரவெல்லை கொண்டிருக்கிறது. கொள்முதல் திறன் இணை பரிவர்த்தனை விகிதங்களை பயன்படுத்தி, ஒட்டுமொத்த சராசரி காண்கையில் முன்னேறிய நாடுகளின் மிகவும் வசதியான பிரிவுக்கு ஒத்து இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடுமையாகச் சரிவுற்ற வறுமை விகிதங்கள் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு நிலைப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் 11-15% அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள், 58.5% பேர் தங்களது 25 முதல் 75 வயதுக்குள்ளான வாழ்க்கையில் குறைந்தது ஒரு வருடத்தையேனும் வறுமையில் கழிக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டில், 37.3 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள். அமெரிக்க வசதி நிலை என்பது முன்னேறிய நாடுகளில் மிகவும் கண்ணியமானதாகத் திகழ்கிறது, ஒப்பீட்டு வறுமை மற்றும் முழு வறுமை இரண்டுமே பணக்கார நாடுகளுக்கான சராசரியை விட மிகவும் குறைந்ததாக உள்ளது. அமெரிக்க வசதி நிலையானது வயது மூத்தவர்களுக்கு இடையில் வறுமையைக் குறைப்பதில் நன்கு செயல்படுகிற நிலையில், " இளைஞர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த உதவியையே பெறுகிறார்கள். இருபத்தியோரு தொழில்மய நாடுகளில் சிறுவர்களின் நலன் குறித்து ஆய்வு செய்த 2007 ஆம் ஆண்டு யூனிசெப் ஆய்வு ஒன்று அமெரிக்காவுக்கு கடைசிக்கு முந்தைய இடத்தை அளித்தது.
உற்பத்தித் திறனில் வலுவான அதிகரிப்பு, குறைந்த வேலைவாய்ப்பின்மை, மற்றும் குறைவான பணவீக்கம் ஆகியவை இருந்தபோதிலும் 1980 ஆம் ஆண்டு தொடங்கி வருவாய் லாபங்கள் முந்தைய தசாப்தங்களைக் காட்டிலும் மெதுவானதாக இருக்கிறது, குறைந்த பரவலுடையதாக இருக்கிறது, மற்றும் அதிகரித்த பொருளாதார பாதுகாப்பின்மை உடன் வருவதாக இருக்கிறது. 1947 ஆம் ஆண்டுக்கும் 1979 ஆம் ஆண்டுக்கும் இடையே, உண்மையான சராசரி வருவாய் அனைத்து தரப்பினருக்கும் 80%க்கும் மேல் அதிகரித்தது, ஏழை அமெரிக்கர்களின் வருமானம் பணக்காரர்களினதை விடவும் துரிதமாய் அதிகரித்தது. சராசரி வீட்டு வருமானம் 1980 ஆம் ஆண்டு தொடங்கி அனைத்து தரப்பினருக்கும் அதிகரித்தது, வீட்டில் இரண்டு பேரும் வேலைக்கு செல்வது, பாலின இடைவெளி குறைந்தது, நீண்ட வேலை நேரங்கள் ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன, ஆனால் வளர்ச்சி குறைந்து மேல் தட்டை நோக்கி சாய்வு கொண்டிருக்கிறது. (வரைபடத்தை காணவும்). 2005 ஆம் ஆண்டின் மொத்த அறிவித்த வருவாயில் மேலிருக்கும் 1%-21.8% பேரினது வருவாயின் பங்களிப்பு 1980 தொடங்கி இரட்டிப்பாகி இருக்கிறது, இது முன்னேறிய நாடுகளில் மிகப்பெரும் வருவாய் ஏற்றத்தாழ்வை கொண்டிருக்கும் நாடாக அமெரிக்காவை ஆக்கியிருக்கிறது. மேலிருக்கும் 1% 2005 பேர் மொத்த ஐக்கிய வரிகளில் 27.6% ஐ செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்; மேலிருக்கும் 10% பேர் 54.7% ஐ செலுத்துகிறார்கள். வருவாயைப் போலவே சொத்தும் அங்கங்கு குவிந்து காணப்படுகிறது: வயதுக்கு வந்தவர்களில் வசதி படைத்த 10% பேர் நாட்டின் வீட்டு சொத்துகளில் 69.8% ஐ கொண்டிருக்கிறார்கள், இது முன்னேறிய நாடுகளில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக இருக்கிறது. மேலிருக்கும் 1% மொத்த சொத்துகளில் 33.4% ஐ கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. 1876 ஆம் ஆண்டில் தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பெற்றார். தாமஸ் எடிசனின் ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. நிக்கோலா தெஸ்லா மாறுதிசை மின்னோட்டம், ஏசி மோட்டார், ரேடியோ ஆகியவற்றை உருவாக்கினார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ. ஓல்ட்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டின் தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை(Assembly Line) ஊக்கப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள், முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர். 1930 ஆம் ஆண்டுகளில் நாசிசத்தின் எழுச்சியானது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், என்ரிக்கோ பெர்மி உள்ளிட்ட பல ஐரோப்பிய விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்கு குடியேறச் செய்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மன்ஹாட்டன் திட்டம் அணு ஆயுதங்களை உருவாக்கி, அணு ஆயுதக் காலத்தை கொண்டுவந்தது. விண்வெளிப் போட்டியானது ராக்கெட் தொழில்நுட்பம், பொருளறிவியல், கம்யூட்டர்களில் துரித முன்னேற்றங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தது. ARPANET மற்றும் அதன் தொடர்ச்சியான இன்டர்னெட் ஆகியவற்றை அமெரிக்கா பெருமளவில் உருவாக்கியது. இன்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெருமளவு, 64%, தனியார் துறையில் இருந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் தாக்க காரணியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. உயர்ந்த நிலை தொழில்நுட்ப நுகர்வு பொருட்களை அமெரிக்கர்கள் கொண்டிருக்கிறார்கள், அத்துடன் ஏறக்குறைய பாதி அமெரிக்க வீடுகள் அகலக்கற்றை இணைய அணுகல் கொண்டிருக்கின்றன. மரபணு மாற்றிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் உருவாக்குவதிலும் இந்த நாடு முதன்மையானதாக இருக்கிறது; உயிரிதொழில்நுட்ப பயிர்கள் பயிரிட்டிருக்கும் நாடும் அமெரிக்கா ஆகும்.
போக்குவரத்து
2003 ஆம் ஆண்டில், 1000 அமெரிக்கர்களுக்கு 759 வாகனங்கள் இருந்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 1000 பேருக்கு 472 வாகனங்களே இருந்தன. தனிநபர் வாகனங்களில் சுமார் 40% வேன்கள், விளையாட்டு பயன்பாடு வாகனங்கள் (SUV) அல்லது இலகுரக டிரக்குகள். சராசரி அமெரிக்க மனிதர் (அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநரல்லாதவர்கள்) ஒவ்வொரு நாளும் சராசரியாக பயணத்தில் வாகனம் ஓட்டுவதில் பயணிக்கிறார்கள் . அமெரிக்காவின் நகரங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து ஒப்பீட்டளவில் பலவீனமானது. மொத்த அமெரிக்க வேலைப் போக்குவரத்திலும் வெறும் 9% மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள், இது ஐரோப்பாவில் 38.8% ஆக இருக்கிறது. மிதிவண்டி பயன்பாடு என்பது மிக குறைவாக, ஐரோப்பிய அளவுகளுக்கு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. பயணிகள் விமானத் துறை முழுக்க தனியார் வசமே இருக்கிறது, அதேசமயம் அநேக பெரிய விமானநிலையங்கள் அரசுக்கு சொந்தமானவை. சுமக்கும் பயணிகளின் அளவில் உலகின் ஐந்து மிகப்பெரிய விமானசேவை நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களே: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முதலிடம். உலகின் முப்பது பரபரப்பு மிகுந்த பயணிகள் விமானநிலையங்களில் பதினாறு அமெரிக்காவில் இருக்கின்றன, பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமானநிலையம் (ATL) உட்பட.
எரிசக்தி
அமெரிக்காவின் எரிசக்தி சந்தை ஒரு ஆண்டிற்கு 29,000 டெராவாட் அவர்ஸ் (Terawatthour) (ஆக்கசக்தி மணிகள்). தனிநபர் எரிசக்தி நுகர்வு என்பது வருடத்திற்கு 7.8 டன் கச்சா எண்ணெய்க்கு சமமானதாக இருக்கிறது. ஒப்பீட்டில் ஜெர்மனியில் 4.2 டன்களாகவும் கனடாவில் 8.3 டன்களாகவும் இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில், 40% எரிசக்தி பெட்ரோலியத்தில் இருந்தும், 23% நிலக்கரியில் இருந்தும், 22% இயற்கை எரிவாயுவில் இருந்தும் கிடைத்தது. எஞ்சியவை அணு சக்தி மூலமாகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகவும் கிடைக்கின்றது. அமெரிக்கா உலகின் மிகப்பெரும் பெட்ரோலிய நுகர்வு நாடாக இருக்கிறது. பல தசாப்தங்களாக, பல பிற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அணு சக்தி என்பது குறைவாகவே தயாரிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், பல்வேறு புதிய அணு உலைகளுக்கான ஆரம்பக் கட்ட வேலைகளை அரசு செய்தது.
மக்கள் வாழ்க்கை கணக்கியல்
அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 11.2 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று, அமெரிக்காவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவிக்கிறது. சீனா மற்றும் இந்தியாவை அடுத்து உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதன் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.89%, ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தினது 0.16%. பிறப்பு விகிதம் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 14.16, இது உலக சராசரியை விட 30% குறைவு, அல்பேனியா மற்றும் அயர்லாந்து தவிர்த்து வேறெந்த ஒரு ஐரோப்பிய நாட்டினதை விடவும் இது அதிகமாகும். அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை அட்டை 2008 நிதி ஆண்டில், 1.1 மில்லியன் குடியேற்றத்தினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமைவாசிகள்: 2008” இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மெக்சிகோ புதிய குடியேற்றவாசிகளுக்கான பிரதான மூலமாக இருக்கிறது; 1998 முதல் சீனா, இந்தியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அனுப்பும் நாடுகளில் தலைமை நான்கில் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமே மிக அதிக அளவிலான மக்கள்தொகை அதிகரிப்புகளை மதிப்பிடும் ஒரே தொழில்மய நாடாகும்.
அமெரிக்கா ஒரு பன்முக மக்கள்தொகை அமைப்பைக் கொண்டுள்ளது - முப்பத்தோரு பழமையான குழுக்கள் ஒரு மில்லியன் உறுப்பினர்களுக்கும் அதிகமாய்க் கொண்டுள்ளன. வெள்ளை அமெரிக்கர்கள்தான் மிகப்பெரிய இன குழு ஆவார்கள், ஜெர்மன் அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், மற்றும் ஆங்கில அமெரிக்கர்கள் ஆகியோர் நாட்டின் நான்கு மிகப்பெரும் பழமைக் குழுக்களில் மூன்றை கொண்டுள்ளார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய இன சிறுபான்மையினர் மற்றும் மூன்றாவது பெரிய பழைமை குழுவாவர். ஆசிய அமெரிக்கர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய இன சிறுபான்மையினராக இருக்கிறார்கள்; இரண்டு மிகப்பெரிய ஆசிய அமெரிக்க பழமைக் குழுக்களாக சீனர் மற்றும் பிலிப்பைன்சினர் உள்ளனர். 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் ஏதேனும் வகை அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பூர்வீக குலத்தை (முழுக்க இத்தகைய குலத்தில் இருந்து மட்டும் 2.9 மில்லியன் பேர்) சேர்ந்தவர்கள் சுமார் 4.5 மில்லியன் பேர் இருந்தனர் மற்றும் 1மில்லியன் பேருக்கும் அதிகமானோர் ஏதேனும் வகை ஹவாய் பூர்வீகத்தினராகவோ அல்லது பசிபிக் தீவு குலத்தை சேர்ந்தவர்களாகவோ (முழுக்க இவர்கள் மட்டும் 0.5 மில்லியன்) இருந்தனர்.
எசுப்பானிய மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் (இந்த பதங்கள் அதிகாரப்பூர்வமாக ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளலாம்.) மக்கள்தொகை வளர்ச்சி ஒரு பெரும் மக்கள் சமூகவியல் போக்காகும். எசுப்பானிய வம்சாவளியை சேர்ந்த 45.4 மில்லியன் அமெரிக்கர்கள் ஒரு தனித்துவமான "இனத்தை" பங்களிப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது; 64% ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மெக்சிகோ வம்சாவளியினர். 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில், நாட்டின் ஹிஸ்பானிக் மக்கள்தொகை 27% உயர்ந்தது, அதே சமயத்தில் ஹிஸ்பானியர் அல்லாத மக்கள்தொகை வெறும் 3.6% மட்டுமே வளர்ந்தது. இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி குடியேற்றத்தால் நிகழ்ந்ததாகும்; 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் 12.4% வெளிநாட்டில் பிறந்தவர்கள், அதில் 54% பேர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தவர்கள். குழந்தைப்பேறும் ஒரு காரணியாக இருக்கிறது; சராசரி ஹிஸ்பானிக் பெண் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒப்பீட்டளவு மகப்பேறு விகிதம் ஹிஸ்பானியர் அல்லாத கறுப்பின பெண்களிடையே 2.2 ஆகவும் ஹிஸ்பானியர் அல்லாத வெள்ளை இன பெண்களிடையே 1.8 சதவீதமாகவும் (இடப்பெயர்ச்சி விகிதமான 2.1 க்கு கீழே) இருக்கிறது. சிறுபான்மையினர் (மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, ஹிஸ்பானியர் அல்லாத, பல இன வெள்ளையர் அல்லாத அனைவரும்) மக்கள்தொகையில் 34% ஆக இருக்கிறார்கள்; இவர்கள் 2042 வாக்கில் பெரும்பான்மையினர் ஆகி விடுவர் என மதிப்பிட்டுள்ளது.
79% அமெரிக்கர்கள் நகர்ப்புற பகுதிகளில் (கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, புறநகர் பகுதிகளும் இதில் அடக்கம்) வாழ்கிறார்கள்; இதில் சுமார் பாதியளவினர் 50,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வசிக்கிறார்கள். மக்கள்தொகை வரிசையில் அமெரிக்க நகரங்களின் பட்டியல் 2006 ஆம் ஆண்டில், 254 இடங்கள் 100,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்டவையாக இருந்தன, ஒன்பது நகரங்களிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள், நான்கு உலக நகரங்கள் (நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, மற்றும் ஹவுஸ்டன் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ளன. அமெரிக்க மெட்ரோபொலிடன் புள்ளிவிவரப் பகுதிகளின் அட்டவணை 1 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகையுடன் ஐம்பது மெட்ரோபொலிட்டன் பகுதிகள் இருக்கின்றன. ஐம்பது வேகமாய் வளரும் மெட்ரோ பகுதிகளில், இருபத்தி-மூன்று மேற்கிலும் இருபத்தி ஐந்து தெற்கிலும் உள்ளன. அட்லாண்டா, டல்லாஸ், ஹவுஸ்டன், பீனிக்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் இன்லாண்ட் எம்பயர் ஆகிய மெட்ரோ பகுதிகள் அனைத்தும் 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே மில்லியனில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமாக மக்கள்தொகையில் உயர்வை கண்டுள்ளன.
மொழி
ஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும். ஐக்கிய மட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழி ஒன்றும் இல்லை என்றாலும், அமெரிக்க இயல்புபடுத்தும் அவசியப்பாட்டு சட்டங்கள் போன்ற சில சட்டங்கள் ஆங்கிலத்தை தரப்படுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டில், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, சுமார் 216 மில்லியன் பேர், அல்லது மக்கள்தொகையில் 81% பேர் வீடுகளில் ஆங்கிலத்தை மட்டும் பேசுபவர்களாக இருந்தனர். மக்கள்தொகையில் 12% பேர் வீடுகளில் பேசும் மொழியாக இருக்கும் ஸ்பானிய மொழி பொதுவான புழக்கத்தில் இருக்கும் இரண்டாம் பெரிய மொழியாகவும், பரந்த அளவில் பயன்படும் அந்நிய மொழியாகவும் இருக்கிறது. ஆங்கிலத்தை குறைந்தபட்சம் இருபத்தி எட்டு மாநிலங்களிலேனும் உள்ளபடியே அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கு அமெரிக்கர்கள் சிலர் பரிந்துரைக்கின்றனர். ஹவாய் அரசு சட்டத்தின் படி ஹவாயில் ஹவாய் மொழி மற்றும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன. நியூ மெக்சிகோ ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷையும், லூசியானா ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சையும் பயன்படுத்துவதற்கான சட்டங்களை கொண்டிருக்கின்றன என்றாலும் இரண்டு மாநிலங்களிலுமே அதிகாரப்பூர்வ மொழி என்று எதுவும் இல்லை. கலிபோர்னியா போன்ற பிற மாநிலங்கள் நீதிமன்ற படிவங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு ஆவணங்களை ஸ்பேனிஷ் வடிவத்திலும் வெளியிட கட்டாயமாக்கியிருக்கின்றன. பல தீவுக்குட்பட்ட பிராந்தியங்கள் ஆங்கிலத்துடன் சேர்த்து தங்களது பூர்வீக மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளன: சமோவ மொழி மற்றும் கமாரோ மொழி முறையே அமெரிக்க சமோ மற்றும் குவாம் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது; வடக்கு மரியானா தீவுகள் கரோலினியன் மற்றும் கமாரோவுக்கு அங்கீகாரமளித்துள்ளது; பூர்டோ ரிகோவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஸ்பேனிஷ் இருக்கிறது.
மதம்
அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு; அமெரிக்க அரசியல்சட்டத்தின் முதல் திருத்தம் மதத்தினை சுதந்திரமாய் பின்பற்ற பாதுகாப்பளிப்பதோடு எந்த மதரீதியான ஆட்சியை ஆமோதிபபதையும் தடை செய்கிறது. 2002 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், மதம் "தங்கள் வாழ்வில் ஒரு வெகு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியதாக" 59% அமெரிக்கர்கள் தெரிவித்ததார்கள், இது வேறு எந்த பணக்கார நாட்டினதை விடவும் மிக அதிக எண்ணிக்கையாகும். அமெரிக்காவில் கிறித்தவம் 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, வயதுக்கு வந்தோரில் 78.4% பேர் தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர், புரொட்டஸ்டன்ட்வாதம் இது 1990 இல் இருந்த 86.4% என்பதில் இருந்து சரிவு கண்டிருக்கிறது. ரோமன் கத்தோலிக்கர்கள் 23.9% ஆகவும், [[சீர்திருத்தத் திருச்சபை
|புரொட்டெஸ்டன்ட்கள்]] 51.3% ஆகவும் இருந்தனர். மக்கள்தொகையில் 26.3% ஆக இருக்கும் வெள்ளை எவாஞ்சலிகள் நாட்டின் மிகப்பெரும் மதக்குழு வகையினர் என்று இந்த ஆய்வு வகைப்படுத்துகிறது; மற்றுமொரு ஆய்வு அனைத்து இனங்களையும் சேர்ந்த மொத்த எவாஞ்சலிகல்கள் 30-35% இருப்பர் என மதிப்பிடுகிறது. 2007 ஆம் ஆண்டு கிறிஸ்தவரல்லாத மொத்த மதத்தினர் எண்ணிக்கை 4.7 சதவீதமாக உயர்வு கண்டிருந்தது, இது 1990 ஆம் ஆண்டில் 3.3% ஆக இருந்தது. கிறிஸ்தவ மதம் அல்லாதவற்றில் முன்னணியில் இருப்பது ஜூதாயிசம் (1.7%), புத்த மதம் (0.7%), இசுலாம் (0.6%), இந்து மதம் (0.4%), மற்றும் ஒன்றுபட்ட பிரபஞ்சவாதம் (0.3%). தங்களை கடவுள்மறுப்பாளர்களாக, நாத்திகர்களாக, அல்லது வெறுமனே தங்களுக்கு மதமில்லை என்பவர்களாக கூறிக் கொள்வோர் எண்ணிக்கை 1990 ஆம் ஆண்டில் 8.2% ஆக இருந்து, 2007 ஆம் ஆண்டில் 16.1% ஆக அதிகரித்துள்ளது, இங்கிலாந்து (2005: 44%) மற்றும் ஸ்வீடன் (2005: 85%) போன்ற தொழில்மயத்திற்கு பிந்தைய நாடுகளைக் காட்டிலும் இது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைவானதாகும், ஆனால் இது உலகளாவிய விகிதத்தை விட (2005: 12%) அதிகமானது.
கல்வி
அமெரிக்க பொதுக் கல்வி மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் மூலம் இயங்குகிறது, அமெரிக்க கல்வித் துறை மூலம் ஐக்கிய உதவிகள் மீதான கட்டுப்பாடுகள் வழியாக இது கட்டுப்படுத்துகிறது. அநேக மாநிலங்களில் சிறுவர்கள் ஆறு அல்லது ஏழு வயது தொடங்கி (பொதுவாக, கின்டர்கார்டன் அல்லது முதலாம் வகுப்பு) அவர்களுக்கு பதினெட்டு வயதாகும் வரை (பொதுவாக 12 ஆம் வகுப்பு, அவர்களது உயர்நிலைப் பள்ளியின் நிறைவு) பள்ளிக்கு செல்கிறார்கள்; சில மாநிலங்கள் சிறுவர்களை பதினாறு அல்லது பதினேழு வயதில் வெளியேற அனுமதிக்கின்றன. திருச்சபை பள்ளி சுமார் 12% சிறுவர்கள் திருச்சபை அல்லது பிரிவுகளினுடையதல்லாத தனியார் பள்ளிகளில் பயில்கின்றன. சுமார் 2% சிறுவர்களுக்கு அதிகமானவர்கள் மட்டும் வீட்டிலேயே கல்வி பயில்கிறார்கள். உயர்கல்விக்கான அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல் அமெரிக்கா பல போட்டித்திறன் மிகுந்த தனியார் மற்றும் அரசாங்கத்தினுடைய உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் திறந்த அனுமதிக் கொள்கைகளுடனான பிராந்திய சமுதாயக் கல்லூரிகளும் உள்ளன. இருபத்தி ஐந்து அல்லது அதை விட வயது மிகுந்த அமெரிக்கர்களில், 84.6% பேர் உயர்நிலைப் பள்ளியில் தேறியவர்கள், 52.6% ஏதேனும் கல்லூரி கல்வி பெற்றவர்கள், 27.2% ஒரு இளநிலைப் பட்டத்தையும் 9.6% பேர் பட்டதாரிகளாகவும் இருக்கிறார்கள். அடிப்படை எழுத்தறிவு விகிதம் சுமார் 99% ஆக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை அமெரிக்காவுக்கு 0.97 கல்விக் குறியீடை அளித்து உலகில் அதற்கு 12வது இடத்தை இணைந்து பெறச் செய்துள்ளது.
சுகாதாரம்
அமெரிக்காவின் சராசரி ஆயுள் காலமான பிறப்பு சமயத்தில் 77.8 வருடங்கள் என்பது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட ஒரு வருடம் குறைவானது, நார்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் கனடாவை விடவும் மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும். கடந்த இரண்டு தசாப்தங்களில், சராசரி ஆயுள்கால வரிசைப்பட்டியலில் நாட்டின் இடம் உலக அளவில் 11ம் இடத்தில் இருந்து 42வது இடத்திற்கு சரிந்துள்ளது. குழந்தை இறப்பு இதேபோல் ஆயிரம் பேருக்கு 6.37 என்கிற விகிதத்தில் உள்ளது. குழந்தை இறப்பு விகிதமும் அமெரிக்காவை 221 உலக நாடுகளில் 42வது இடத்தில் அனைத்து மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கும் பிந்தைய இடத்தில் நிறுத்துகிறது. அமெரிக்காவின் புற்றுநோயில் பிழைப்போர் விகிதம் உலகில் மிகப் பெரியதாக உள்ளது.
வயதுக்கு வந்த குடிமக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் குண்டாகவும், இன்னொரு பங்கினர் உடல் எடை மிகுந்தவர்களாகவும் உள்ளனர், தொழில்மய உலகப் பகுதிகளில் மிக அதிகமான அளவுகொண்ட உடல்பெருக்க விகிதம் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது. உடல்பெருக்கம் தொடர்பான இரண்டாம் வகை நீரிழிவு நோயானது அமெரிக்க சுகாதார வல்லுநர்களால் தொற்றுநோயாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் விடலைப் பருவ கர்ப்ப விகிதம் 1,000 பெண்களுக்கு 79.8 ஆக இருக்கிறது, இது பிரான்ஸ் அளவைக் காட்டிலும் ஏறக்குறைய நான்கு மடங்கும், ஜெர்மனி அளவைக் காட்டிலும் ஐந்து மடங்கும் அதிகமாகும். விருப்பத்தின் பேரில் கருத்தடை சட்டப்பூர்வமானதாகும், பெரும் சர்ச்சைக்குள்ளானதாகும். பல மாநிலங்கள் இந்த நடைமுறைகளுக்கு பொது நிதியை தடை செய்கின்றன, காலம் தள்ளிய கருத்தடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன, சிறுமிகளுக்கு பெற்றோர் அறிவிப்பை கோருகின்றன, காத்திருக்கும் காலத்தையும் கட்டாயமாக்குகின்றன. கருத்தடை விகிதம் வீழ்ச்சியுறுகிற சமயத்திலும், உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் விகிதம் 241, மற்றும் 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் 1,000 பேருக்கு 15 பேர் என்கிற கருத்தடை விகிதமும் அநேக மேற்கத்திய நாடுகளை விட அதிகமானதாகும்.
அமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பு வேறு எந்த நாட்டினை விட அதிகமான தொகை செலவிடுகிறது, தனிநபருக்கான செலவின அடிப்படையிலும் சரி மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகித அடிப்படையிலும் சரி. 2000 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பொறுப்புணர்வில் முதலிடத்தை அமெரிக்க சுகாதார அமைப்புக்கு அளித்தது, ஆனால் ஒட்டுமொத்த செயல்பாட்டில் 37வது இடமளித்தது. மருத்துவத்துறை புதுப்படைப்புகளில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது.2004 ஆம் ஆண்டில், உயிரிமருத்துவ ஆராய்ச்சியில் தனிநபருக்கான செலவினத்தில் ஐரோப்பாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக தொழில்துறை அல்லாத பிரிவு செலவளித்தது.
மற்ற அனைத்து முன்னேறிய நாடுகள் போல் அல்லாமல், அமெரிக்காவில் சுகாதார பாதுகாப்பு எல்லை உலகபரவல் இன்றி இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில், தனியார் காப்பீடு நிறுவனத்தினர் தனிநபர் சுகாதார செலவினங்களில் 36% செலவிட்டனர், தனியார் கைகளில் இருந்தான தொகை 15% செலவுக்கு உதவியது, ஐக்கிய, மாநில, மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் 44%க்கு செலவிட்டன. 2005 ஆம் ஆண்டில், 46.6 மில்லியன் அமெரிக்கர்கள், மக்கள்தொகையில் 15.9% பேர், காப்பீடு இன்றி இருந்தனர், இது 2001 ஆம் ஆண்டின் அளவைக் காட்டிலும் 5.4 மில்லியன் அதிகமாகும். இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணம் பணியமர்த்துபவர்கள் ஆதரவிலான சுகாதார காப்பீடு கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்த சரிவே ஆகும். காப்பீடு இல்லாத மற்றும் போதிய காப்பீடு இல்லாத அமெரிக்கர்கள் என்பது - இவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகள் பரந்த அளவில் வேறுபடுகின்றன - ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த சுகாதார காப்பீட்டை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக மசாசூட்ஸ் ஆனது.
குற்றம் மற்றும் சட்ட அமலாக்கம்
சட்ட அமலாக்கம் என்பது அமெரிக்காவில் பிராந்திய போலிசார் மற்றும் ஷெரிப் துறைகளின் பிரதான பொறுப்பாக உள்ளது, மாநில போலிசார் அகன்ற சேவைகளை வழங்குகின்றனர். ஐக்கிய பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) மற்றும் அமெரிக்க மார்ஷல்கள் சேவை ஆகியவை சிறப்பு கடமைகளை செயல்படுத்துகின்றன. ஐக்கிய மட்டத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலத்திலும், நீதி வழங்கல் ஒரு பொது சட்ட அமைப்பின் கீழ் நடைபெறுகிறது. அநேக குற்ற வழக்குகளை மாநில நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன; சில குறிப்பிட்ட வகை குற்றங்களையும் மற்றும் மாநில அமைப்புகளில் வரும் மேல்முறையீடுகளையும் ஐக்கிய நீதிமன்றங்கள் கையாளுகின்றன.
முன்னேறிய நாடுகளில், வன்முறைக் குற்ற அளவுகளில் சராசரிக்கும் அதிகமான அளவை அமெரிக்கா கொண்டுள்ளது, குறிப்பாக உயர்ந்த அளவு துப்பாக்கி வன்முறை மற்றும் கொலைக்குற்றங்கள் நிகழ்கின்றன. 2007 ஆம் ஆண்டில், 100,000 பேருக்கு 5.6 கொலைகள் நிகழ்ந்தன, இது அண்டை நாடான கனடாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான அளவாகும். 1991 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 42% வரை சரிவு கண்ட அமெரிக்க கொலைக்குற்ற விகிதம் பின் தொடர்ந்து ஏறக்குறைய சீராக இருக்கிறது. துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை என்பது சர்ச்சைக்குரிய அரசியல் விவாதமாய் இருக்கிறது.
ஆவணப்படுத்திய சிறைக்கைதிகள் விகிதம் மற்றும் மொத்த சிறைவாசிகள் எண்ணிக்கையில் உலகின் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா ஆகும். 2008 ஆம் ஆண்டு துவக்கத்தில், 2.3 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் சிறையிலிருந்தனர், இது வயதுக்கு வந்த 100 பேருக்கு 1 என்பதை விட அதிகமாகும். இப்போதைய விகிதம் 1980 ஆம் ஆண்டு அளவைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாகும். வெள்ளை இன ஆண்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகவும் ஹிஸ்பானிக் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாகவும் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் சிறைப்படுகிறார்கள். 2006 ஆம் ஆண்டில், அமெரிக்க சிறைவைப்பு விகிதம் அடுத்த உயர்ந்த விகிதத்தில் இருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடான போலந்தைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. நாட்டின் உயர்ந்த சிறைவைப்பு விகிதத்திற்கான முக்கிய காரணம் தண்டனையளித்தலும் மருந்துக் கொள்கைகளுமாகும். அநேக மேற்கு நாடுகளில் தடை செய்தபோதும், மரண தண்டனை என்பது அமெரிக்காவில் முப்பத்தி ஆறு மாநிலங்களில் குறிப்பிட்ட ஐக்கிய மற்றும் ராணுவக் குற்றங்களுக்கு அளிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நான்கு ஆண்டு நிறுத்திவைப்புக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை மறுகொணர்வு செய்த பின், 1,000 க்கும் அதிகமான முறை இத்தண்டனைகளை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் 2006 ஆம் ஆண்டில், உலகில் அதிகமாக மரணதண்டனை அளித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஆறாவது இடம் பிடித்தது, சீனா, ஈரான், பாகிஸ்தான், ஈராக், மற்றும் சூடான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து. நியூ ஜெர்சி 2007 ஆம் ஆண்டில், 1976 சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பிறகு சட்டப்பூர்வமாக மரண தண்டனையை தடை செய்யும் முதல் மாநிலமாக நியூ ஜெர்சி ஆனது, அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோ இதனை அமல்படுத்தியது.
கலாச்சாரம்
அமெரிக்கா ஒரு பல கலாச்சார தேசம், பரந்த வகையான இனக் குழுக்கள், மரபுகள், மற்றும் மதிப்பீடுகளின் தாயகமாக உள்ளது. "அமெரிக்க" இனம் என்ற ஒன்று இல்லை; இப்போது சிறு பூர்வீக அமெரிக்கர்கள் அல்லது பூர்வீக ஹவாய் தீவு மக்களைத் தவிர, ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்கள் அல்லது அவர்களது முன்னோர்களுமே கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் புலம் பெயர்ந்தவர்களே. அநேக அமெரிக்கர்கள் பின்பற்றும் கலாச்சாரமான - பிரதான அமெரிக்க கலாச்சாரம் - மேற்கத்திய கலாச்சாரம் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய புலம் பெயர்ந்தவர்களின் மரபுகளோடு சேர்ந்து, ஆப்பிரிக்காவில் இருந்தான அடிமைகள் மூலம் வந்த மரபுகள் போன்ற இன்னும் பல பிற ஆதாரங்களைக் கொண்டு தோன்றியது. ஆசியாவில் இருந்தான மிகச் சமீபத்திய புலம் பெயர்வு, குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் இருந்தானது, ஒருதன்மையுற்ற கொதிக்கும் பாத்திரம் என்றும் புலம் பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் தங்களின் தனித்துவ கலாச்சார பண்புகளை பாதுகாக்கும் இருதன்மைவாய்ந்த சாலட் பாத்திரம் என்று இரண்டு வகையாகவும் திரியும் ஒரு கலாச்சார கலப்புக் கோர்வையாக உள்ளது.
கீர்ட் ஹோப்ஸ்டீட் மேற்கொண்ட கலாச்சார பரிமாண ஆய்வின் படி, ஆய்வு செய்த அனைத்து நாடுகளிலும் அமெரிக்கா மிக உயர்ந்த தனித்தன்மைவாத மதிப்பெண்களைப் பெற்றதாகும். வர்க்கமற்ற சமுதாயம் முக்கியமான கலாச்சாரம் அமெரிக்கா ஒரு வர்க்கமற்ற சமூகம் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தாலும், சமூகமயமாக்கல் சமூகவயமாக்கம், மொழி, மற்றும் மதிப்பீடுகளைப் பாதிக்கும் நாட்டின் சமூக வர்க்கங்களுக்கு இடையே குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்களை அறிஞர்கள் அடையாளம் காண்கின்றனர். அமெரிக்க நடுத்தர வர்க்கம் அமெரிக்க நடுத்தர மற்றும் வல்லுநர் வர்க்கம் நவீன பெண்ணியம், சுற்றுச்சூழலியம், மற்றும் பன்முககலாச்சாரவாதம் போன்ற பல சமகால சமூக போக்குகளுக்கு துவக்கமளித்திருக்கின்றன. அமெரிக்கர்களின் சுய பிம்பங்கள், சமூக பார்வைகள், மற்றும் கலாச்சார எதிர்பார்ப்புகள் அவர்களின் பணிகளுடன் மிக நெருக்கமான அளவில் பிணைந்துள்ளது. சராசரி ஜோ அமெரிக்கர்கள் பெருமளவில் சமூகபொருளாதார மேம்பாட்டை மதிக்கிறவர்களாக இருக்கும் சமயத்தில், சாதாரணமானவராக அல்லது சராசரியாக இருப்பது பொதுவாக ஒரு நேர்மறை மனோநிலையாக காண்கிறது. அமெரிக்க கனவு அமெரிக்க கனவு, அல்லது அமெரிக்கர்கள் மிக உயர்ந்த சமூக செயல்பாட்டுத்திறன் கொண்டவர்கள் என்கிற புரிதலானது, புலம் பெயர்வோரை ஈர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது, சில ஆய்வாளர்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் கனடாவைக் காட்டிலும் அமெரிக்காவின் சமூக செயல்பாட்டுத் திறனை குறைவாகவே காண்கிறார்கள்.
பெண்கள் இப்போது பெரும்பாலும் வீட்டிற்கு வெளியில் வந்து வேலை பார்ப்பதோடு இளங்கலைப் பட்டங்களை பெற்ற பெருமையுடன் ஜொலிக்கிறார்கள்.. 2005 ஆம் ஆண்டில், 28% வீட்டினர் திருமணமான குழந்தையற்ற தம்பதிகளாக இருந்தனர், இது ஒரு மிக பொதுவானவொரு ஏற்பாடு. ஒரே பாலின திருமணம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. பல மாநிலங்களும் திருமணத்திற்கு பதிலாக மக்கள் சங்கமத்தை அனுமதிக்கின்றன. 2003 ஆம் ஆண்டு முதல், நான்கு மாநில சுப்ரீம் நீதிமன்றங்கள் ஓர்-பாலின திருமணம் மீதான தடைகளை அரசியல்சட்டத்தை மீறியதாக தீர்ப்பளித்த்துள்ளார்கள், பன்னிரண்டு மாநிலங்களுக்கும் அதிகமான இடங்களின் வாக்காளர்கள் இந்த பழக்கத்தின் மீதான அரசியல்சட்ட தடைகளுக்கு ஒப்புதலளித்திருக்கிறார்கள்.2009 ஆம் ஆண்டில், சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் ஓர்-பாலின திருமணத்தை அனுமதிக்கும் முதல் மாநிலங்களாக வெர்மான்ட் மற்றும் மெய்ன் ஆயின.
ஊடகத்துறை
திரைப்படத்துறை
தாமஸ் எடிசனின் கைனடோஸ்கோப்பைப் பயன்படுத்தி உலகின் முதல் வர்த்தகரீதியான நகரும் பட கண்காட்சி நியூயார்க் நகரத்தில் 1894 ஆம் ஆண்டு நடந்தது. அடுத்த ஆண்டு புரொஜெக்டரிலான படமும் அதே நியூயார்க்கில் முதல் வர்த்தகரீதியான திரையிடலைக் கண்டது, அடுத்து வந்த தசாப்தங்களில் ஒலிப் பட மேம்பாட்டில் அமெரிக்கா முன்னணி வகித்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், அமெரிக்க திரைப்படத் துறை பெருமளவில் கலிபோர்னியாவின், ஹாலிவுட்டைச் சுற்றியே இருந்தது. சினிமாவின் இலக்கணத்தை மேம்படுத்தியதில் இயக்குநர் டி.டபிள்யூ. கிரிப்த் மையமாகத் திகழ்ந்தார், மற்றும் ஓர்சன் வெல்ஸின் சிட்டிசன் கேன் (1941) என்னும் திரைப்படம் அனைத்து காலங்களிலுமான மிகச் சிறந்த படமாக பல சமயங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ஜான் வேன் மற்றும் மர்லின் மன்றோ போன்ற அமெரிக்க திரை நடிகர்கள் மக்கள் மனதில் அழியாத சித்திரங்களானார்கள், தயாரிப்பாளரும்/தொழில்முனைவோருமான வால்ட் டிஸ்னி அனிமேஷன் திரைப்படம் மற்றும் திரைப்பட விநியோகம் இரண்டிலுமே முன்னணியில் திகழ்ந்தார். ஹாலிவுட்டின் பெரும் சினிமா ஸ்டுடியோக்கள் ஸ்டார் வார்ஸ் (1977) மற்றும் டைட்டானிக் (1997), போன்ற வரலாற்றில் வர்த்தக ரீதியாக மிகப் பெரும் வெற்றிகளைக் குவித்த அநேக திரைப்படங்களை உருவாக்கியுள்ளன, இன்று ஹாலிவுட் தயாரிப்புகள் உலக சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தொலைக்காட்சித்துறை
அமெரிக்கர்கள் மிக அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களாக இருக்கிறார்கள், மேலும் சராசரியாக அன்றாடம் பார்க்கும் நேரமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2006 இல் ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் செலவழிப்பதாக ஓர் ஆராய்ச்சி கூரியது. அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக வானொலி கேட்கிறார்கள். வெப் போர்ட்டல்கள் மற்றும் வலை தேடல் பொறிகள் தவிர, மிகப் பிரபலமாய் இருக்கும் இணையத்தளங்களாய் இருப்பவை ஃபேஸ்புக், யூட்யூப், மைஸ்பேஸ், விக்கிப்பீடியா, கிரெய்க்ஸ்லிஸ்ட், மற்றும் இபே ஆகியவை.
இசை
ஆப்பிரிக்க அமெரிக்க இசையின் சந்தமிகு எழுத்துநடை பாணிகள் அமெரிக்க இசையை பெருமளவு ஆழமாய் பாதித்திருப்பதோடு அதனை ஐரோப்பிய மரபுகளில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றன. ப்ளூஸ் போன்ற கிராமியப் பதங்களில் இருந்தான கூறுகளும் இப்போது பழைய-இசை என்று கருதப்படும் இசையும் எடுத்து உலகளாவிய ரசிகர்களுடனான வெகுஜன வகைகளாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் ட்யூக் எலிங்டன் போன்ற புதுமையாளர்கள் மூலம் ஜாஸ் உருவானது. நாட்டு இசை, ரிதம் அன் ப்ளூஸ், மற்றும் ராக் அன் ரோல் ஆகியவை 1920 ஆம் ஆண்டுகள் மற்றும் 1950 ஆம் ஆண்டுகளுக்கு இடையே எழுந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் கிராமிய மறுமலர்ச்சியில் இருந்து எழுச்சியுற்ற பாப் டைலான் அமெரிக்காவின் மிகப்பெரும் பாடலாசிரியர்களில் ஒருவராக ஆனார், ஜேம்ஸ் பிரவுன் ஃபங்க் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றார்.ஹிப் ஹாப் மற்றும் வீட்டு இசை ஆகியவை சமீபத்திய அமெரிக்க படைப்புகள் ஆகும். எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், மற்றும் மடோனா ஆகிய அமெரிக்க பாப் பாடகர்கள் உலகளாவிய பிரபலங்களாக ஆகியிருக்கிறார்கள்.
இலக்கியம், தத்துவம், மற்றும் கலை
பதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்க கலை மற்றும் இலக்கியமானது பெரும்பாலும் ஐரோப்பியத் தாக்கத்துடன் இருந்தது. நதேனியல் ஹாதோர்ன், எட்கர் ஆலன் போ, மற்றும் ஹென்ரி டேவிட் தொரோ போன்ற எழுத்தாளர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு தனித்துவமான அமெரிக்க இலக்கிய மரபை நிறுவினார்கள். மார்க் ட்வெயின் மற்றும் கவிஞர் வால்ட் விட்மேன் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் பெரும் புள்ளிகளாக இருந்தார்கள்; தனது வாழ்நாளில் அடையாளமற்றராக இருந்த எமிலி டிகின்சன், இப்போது ஒரு அடிப்படையான அமெரிக்க கவிஞராக அறியப்படுகிறார். ஹெர்மன் மெல்வில்லியின் மோபி-டிக் (1851), ட்வெயினின் தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹகிள்பெரி ஃபின் (1885), மற்றும் எஃப்.ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் தி கிரேட் கேட்ஸ்பை (1925) - ஆகிய படைப்புகளைப் மகத்தான அமெரிக்க நாவல் எனக் கூறலாம்.பதினொரு அமெரிக்க குடிமக்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றனர். மிக சமீபமாக 1993 ஆம் ஆண்டில், டோனி மோரிசன் பெற்றார். 1954 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே, பல சமயங்களில் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவராய் அழைக்கப்படுகிறார். மேற்கத்திய மற்றும் குற்றப்பின்னணி கற்பனைக்கதைகள் ஒத்த இலக்கிய வகைகள் அமெரிக்காவில் வளர்ச்சியுற்றன. பீட் தலைமுறை எழுத்தாளர்கள், ஜான் பார்த், தாமஸ் பைன்கான், மற்றும் டான் டிலிலோ போன்ற பின்நவீனத்துவ எழுத்தாளர்கள், புதிய இலக்கிய அணுகுமுறைகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டார்கள்.
ரால்ப் வால்டோ எமர்சன் மற்றும் தொரோ தலைமையிலான எண்ணஇணைப்பு தத்துவவாதிகள் முதல் பெரும் அமெரிக்கத் தத்துவ இயக்கத்தை நிறுவினார்கள். உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சார்லஸ் சான்டர்ஸ் பியர்ஸ் மற்றும் அவருக்குப் பின் வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் டெவெ ஆகியோர் நடைமுறையியல் தத்துவத்தின் உருவாக்கத்தில் தலைமை வகித்தனர். 20 ஆம் நூற்றாண்டில், W.V.குவின் மற்றும் ரிச்சார்டு ரோர்டி ஆகியோரது படைப்புகள் அனலடிக் தத்துவத்தை அமெரிக்க தத்துவவியலாளர்களின் முன்னால் கொண்டுவந்தன. அய்ன் ரான்டின் புறநிலைவாதம் பரவலாக புகழ் பெற்றது.
காட்சிக் கலையில், ஹட்சன் ஆற்றுப் பள்ளி ஐரோப்பிய இயற்கைவாத வழி வந்த இயக்கமாக அமைந்தது. 1913 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடந்த ஐரோப்பிய நவீனக் கலைக் கண்காட்சியான ஆர்மரி ஷோ'' பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அமெரிக்க கலை உலகை மாற்றியமைத்தது. ஜார்ஜியா ஓ'கெபெ, மார்ஸ்டன் ஹார்ட்லி, மற்றும் பிறர் புதிய பாணிகளைப் பரிசோதித்து, ஒரு மிகவும் தனித்துவம் மிகுந்த உணர்திறனை வெளிப்படுத்தினார்கள்.ஜேக்சன் போலாக் மற்றும் வில்லியம் டி கூனிங்கின் பண்பியல் வெளிப்பாட்டியல் மற்றும் ஆன்டி வரோல் மற்றும் ராய் லிச்டென்ஸ்டீன் ஆகியோரின் பாப் கலை போன்ற பெரும் கலை இயக்கங்கள் பெருமளவு அமெரிக்காவில் உருவாகின. நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவத்தின் அலையானது பிராங்க் லாயிட் ரைட், பிலிப் ஜான்சன், மற்றும் பிராங்க் ஜெரி ஆகிய அமெரிக்க கட்டிட வல்லுநர்களுக்கு புகழ் சேர்த்தது.
அமெரிக்க நாடகக் கலையை வளர்த்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் இம்ப்ரசாரியோ பி.டி. பார்னம், இவர் 1841 இல் ஒரு குறைவான மன்ஹாட்டன் பொழுதுபோக்கு வளாகத்தை செயல்படுத்த துவங்கினார்.ஹாரிகன் மற்றும் ஹார்ட்டின் குழு 1870 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி துவங்கி நியூயார்க்கில் பல தொடர்ச்சியான பிரபல இசைக் காமெடி நிகழ்ச்சிகளை தயாரித்தது. 20 ஆம் நூற்றாண்டில், நவீன இசை வடிவம் பிராட்வேயில் எழுச்சியுற்றது; இர்விங் பெர்லின், கோல் போர்ட்டர், மற்றும் ஸ்டீபன் சோந்தீன் ஆகிய இசைக் குழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் பாப் தரநிர்ணயங்களாக ஆகியுள்ளன. நாடக ஆசிரியரான ஈஜென் ஓ'நெல் 1936 ஆம் ஆண்டில் நோபல் இலக்கிய பரிசை வென்றார், பல புலிட்சர் விருதுகளை வென்ற டென்னெஸ் வில்லியம்ஸ், எட்வர்டு ஆல்பி, மற்றும் ஆகஸ்டு வில்சன் ஆகியோரும் பிற புகழ்பெற்ற அமெரிக்க நாடகத்துறையினரில் அடக்கம்.
அந்த சமயத்தில் அதிகம் புகழ்பெறாது போனாலும், 1910 ஆம் ஆண்டுகளின் சார்லஸ் இவ்ஸ்யின் படைப்பு மரபுவழி இசையின் முதல் பெரும் அமெரிக்க இசைத்தொகுப்பாளராக அவரை நிறுவியது; ஹென்றி கோவெல் மற்றும் ஜான் கேஜ் ஆகிய பிற பரிசோதனையாளர்கள் மரபுவழி இசைத்தொகுப்புக்கு ஒரு அமெரிக்க அணுகுமுறையை அளித்தனர். ஆரான் காப்லேண்ட் மற்றும் ஜார்ஜ் கெர்ஷ்வின் ஆகியோர் வெகுஜன மற்றும் மரபு இசைக்கான ஒரு தனித்துவமான பகுப்பாய்வை அளித்தனர். இசடோரா டங்கன் மற்றும் மார்தா கிரஹாம் ஆகிய நடன இயக்குநர்கள் நவீன நடனத்தை உருவாக்க உதவினர், ஜார்ஜ் பலான்சின் மற்றும் ஜெரோம் ராபின்ஸ் ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டு பாலேயில் முன்னணி வகித்தனர். புகைப்படத்திற்கான நவீன கலை ஊடகத்தில் அமெரிக்கர்கள் வெகு காலமாகவே முக்கியத்துவம் பெற்றிருந்தனர், ஆல்பிரட் ஸ்டீகிளிட்ஸ், எட்வர்டு ஸ்டீசென் மற்றும் அன்செல் ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய புகைப்பட மேதைகளில் அடக்கம். செய்தித்தாளின் காமிக் துண்டு மற்றும் காமிக் புத்தகம் இரண்டும் அமெரிக்க கண்டுபிடிப்புகளே. காமிக் புத்தக சூப்பர்ஹீரோக்களில் முதன்மையானவரான சூப்பர்மேன் ஒரு அமெரிக்க அடையாளமாகவே ஆகியிருக்கிறார்.
உணவு
பிரதான அமெரிக்க சமையல் கலை பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளதை ஒத்து இருக்கின்றன. கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது. வான்கோழி, வெள்ளை-வால் மான் , உருளைக்கிழங்குகள், இனிப்பு உருளைக்கிழங்குகள், மக்காச்சோளம், ஸ்குவாஷ், மற்றும் மேபிள் சாறு ஆகியவற்றை மரபான அமெரிக்க சமையல்முறைகள் பயன்படுத்துகின்றன. இவை பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் ஆரம்பகால ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் தனித்துவமான உணவுவகைகளாகும். மெதுவாக சமைத்த பன்றி மற்றும் மாட்டுக்கறி பார்பெக்யூ, நண்டு கேக்குகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்கலேட் சிப் குக்கிகள் ஆகியவை சிறப்பு உணவுகள். ஆப்பிரிக்க அடிமைகள் உருவாக்கிய சோல் ஃபுட் தெற்கத்திய மற்றும் பிற இடங்கில் உள்ள பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடையே பிரபலமான உணவாக விளங்குகிறது. லூசியானா கிரியோல், கஜுன், மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் (Tex-Mex) ஆகிய கலப்பு சமையல் வகைகளும் முக்கியத்துவம் பெற்றவை. ஆப்பிள் பை, பொறித்த கோழி, பிட்சா, ஹம்பர்கர்கள், மற்றும் ஹாட் டாக் ஆகியவை பல்வேறு புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற சிறப்பு உணவுவகைகள். பிரெஞ்சு ஃபிரைஸ், பரிடோஸ் மற்றும் டகோஸ் போன்ற மெக்சிகன் டிஷ்கள் மற்றும் இத்தாலிய மூலங்களில் இருந்து சுதந்திரமாக பெற்ற பாஸ்தா வகை டிஷ்கள் ஆகியவை பெருமளவில் நுகரப்படுகின்றன.
அமெரிக்கர்கள் பெரும்பாலும் தேநீரைக் காட்டிலும் காபியையே விரும்புகிறார்கள். ஆரஞ்சு சாறு மற்றும் பாலை சர்வ இடங்களிலும் காலை உணவு பானங்களாக மாற்றியதில் அமெரிக்க தொழில்களின் விளம்பரம் தான் பெருமளவு பொறுப்பு வகிக்கிறது. 1980கள் மற்றும் 1990களில், அமெரிக்கர்களின் கலோரி அருந்துகை 24% ஆக உயர்ந்தது; துரித உணவு கடைகளில் அடிக்கடி உணவு அருந்துவது சுகாதார அதிகாரிகள் அமெரிக்க "உடல்பருமன் தொற்று" என்றழைப்பதுடன் தொடர்புபட்டதாய் இருக்கிறது. மிகவும் இனிப்பேற்றிய மதுபானம் பரவலாக பிரபலமுற்று இருக்கின்றன; சராசரி அமெரிக்கரின் கலோரி உள்ளெடுப்பில் 9% சர்க்கரை பானங்களின் பங்காக இருக்கிறது.
விளையாட்டு
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி துவங்கி, பேஸ்பால் தான் தேசிய விளையாட்டாகக் கருதப்படுகிறது; அமெரிக்கன் கால்பந்து, கூடைப்பந்து, மற்றும் ஐஸ் ஹாக்கி ஆகியவை நாட்டின் பிற முன்னணி தொழில்முறை குழு விளையாட்டுகளாகும். மேலும் கல்லூரி கால்பந்து மற்றும் கூடைப்பந்து பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் கால்பந்து தான் இப்போது பார்வையாளர்களிடம் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. குத்துச்சண்டை குதிரைப் பந்தயம் மற்றும் கோல்ப் ஆகியவை ஒரு சமயத்தில் மிகவும் பிரபல தனிநபர் விளையாட்டுகளாக இருந்தன, ஆனால் அவையெல்லாம் பந்தய வாகன போட்டி மற்றும் நாஸ்கார்(NASCAR) ஆகிய விளையாட்டுகளிடம் ஒளியிழந்து விட்டன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதை பரவலாக விரும்புகிறார்கள். டென்னிஸ் மற்றும் பல வெளிப்புற விளையாட்டுகளும் பிரபலமானதாகவே இருக்கின்றன.
பல பெரும் அமெரிக்க விளையாட்டுகள் ஐரோப்பிய வழக்கங்களில் இருந்து பிறந்தவையாக இருக்க, கூடைப்பந்து, கைப்பந்து, ஸ்கேட்போர்டிங், ஸ்னோபோர்டிங், மற்றும் சியர்லீடரிங் ஆகியவை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்களாகும். லெக்ராஸ் மற்றும் சர்பிங் ஆகியவை மேற்கத்திய தொடர்புக்கு முந்தைய காலத்தின் பூர்வீக அமெரிக்கர் மற்றும் பூர்வீக ஹவாய் நடவடிக்கைகளில் இருந்து பிறந்தவை. அமெரிக்காவில் எட்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. கோடை ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா 2,301 பதக்கங்களை வென்றுள்ளது, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், இது அதிகமாய் வென்ற பட்டியலில் இரண்டாவதாகும்.
காட்சிகள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
, Book
, Book
, Book
, Book
, Book
, Book
, Book
, Book
, Book
, eBook version
, Book
, Book
, Book
, PDF
, Book
eBook version
, Book
, Book
, Book
, Book
, E'Book
, Book
, Book
, Book
, Book
, Article
, Book
, Book
, Book
இணையத்தள மூலங்கள்
, Book
புற இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசாங்க இணையத்தள போர்ட்டல் அரசாங்க தளங்களுக்கான நுழைவாயில்.
அவை அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் அதிகாரப்பூர்வ இணையத் தளம்.
செனட் அமெரிக்க செனட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்.
வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ தளம்.
சுப்ரீம் கோர்ட் அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்.
InfoUSA அமெரிக்க தகவல் ஏஜென்சி ஆதாரங்களுக்கான போர்ட்டல்.
நாடாளுமன்ற நூலகம் அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்தின் அதிகாரப்பூர்வ தளம்.
மக்கள்தொகை கணக்கியல் சிறப்புஅம்சங்கள் மக்கள்தொகை குறிப்பு வாரியத்திடம் இருந்தான புள்ளிவிவரம்.
அமெரிக்காவின் 50 மாநிலங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சேகரிக்கப்பட்ட தகவல் இணைப்புகள்.
அமெரிக்கா என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தகவல்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அதிகாரப்பூர்வ அரசாங்க தளம்.
மாநில தகவல் தாள்கள் அமெரிக்க பொருளாதார ஆராய்ச்சி சேவையில் இருந்தான மக்கள்தொகை, வேலைவாய்ப்பு, வருவாய், மற்றும் விவசாய தரவு.
மாநில எரிசக்தி துறைகள் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத் துறையில் இருந்தான ஒவ்வொரு மாநிலத்துக்கான பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி தரவு.
அமெரிக்க தேசிய அட்லஸ் அமெரிக்க உள்துறையிடம் இருந்தான அதிகாரப்பூர்வ வரைபடங்கள்.
வட அமெரிக்க நாடுகள்
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
4739
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
ஆத்திரேலியா
|
ஆத்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தசுமேனியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆத்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன.
கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆத்திரேலியப் பழங்குடிகள் ஆத்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர், 1770 இல் ஆத்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, சுகொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக சனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்சு என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆத்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. சனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆத்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும்.
பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆத்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.
பெயர்க் காரணம்
ஆத்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆத்திரேலியா என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது. சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர்.
ஆத்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மேத்தியூ பிலிண்டர்சு என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆத்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்சு ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, திசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார். 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது.
ஆத்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" əˈstɹæɪljə, -liːə, -jə என்றவாறு பலுக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆத்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓசு (Oz) என்றும், ஆத்திரேலியர்களை "ஒசி" (Aussie) எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள்.
வரலாறு
ஆத்திரேலியப் பழங்குடிகள்
ஆத்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தற்போது ஆத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்சுலாந்தின் தூர-வடக்கிலும், டொரெசு நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை.
ஐரோப்பியரின் வருகை
ஆத்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் சான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து (Nova Hollandia) எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் சேம்சு குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆத்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்சு எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது.
நியூ சவுத் வேல்சு என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் சாக்சன் துறையில் சனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் ஆத்திரேலியா நாள் என்ற பெயரில் ஆத்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. வான் டியெமனின் நிலத்தில் (தற்போதைய தசுமேனியா) 1803 இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 1825 இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. ஆத்திரேலியாவின் மேற்குப் பகுதியை (சுவான் ஆற்றுக் குடியேற்றம்) 1829 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1832 இல் இப்பகுதி மேற்கு ஆத்திரேலியா எனப் பெயர் பெற்றது. 1836 இல் தெற்கு ஆத்திரேலியா, 1851 இல் விக்டோரியா, 1859 இல் குயின்சுலாந்து ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் தெற்கு ஆத்திரேலியாவில் இருந்து வட மண்டலம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. தெற்கு ஆத்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆத்திரேலியா ஆகியன பிரித்தானியக் குற்றவாளிகளின் குடியேற்றங்களாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆனாலும் விக்டோரியா, மேற்கு ஆத்திரேலியா ஆகியன பின்னர் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தன ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது 1848 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது அண்ணளவாக 350,000 பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொகை அடுத்த 150 ஆண்டுகளில் பெருமளவு குறைய ஆரம்பித்தது. தொற்று நோய், கட்டாய மீள்குடியேற்றம், பண்பாட்டு சீரமைப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகள் கட்டாய வெளியேற்றமும் இவ்வீழ்ச்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பை அடுத்து நடுவண் அரசு பழங்குடிகள் தொடர்பாக கொள்கை மாற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. தலைமுறைகளாக நிலஉரிமை (native title) 1992 வரை ஆத்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆத்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற மாபோ எதிர் குயின்சுலாந்து வழக்கை அடுத்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் முன்னர் terra nullius ("வெற்று நிலம்") ஆகக் கருதப்பட்டமை மாற்றப்பட்டு தலைமுறைகளாக நிலம் வைத்திருந்தோருக்கு நில உரிமை வழங்கப்பட்டது.
கூட்டாட்சி
1855 - 1890 காலப்பகுதியில், ஆறு குடியேற்றப் பகுதிகளும் தனித்தனியே தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டு பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்தவாறே தமது உள்ளூர் விடயங்களைத் தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கின. லண்டனில் அமைந்திருந்த காலனித்துவ நிர்வாகம் குறிப்பாக வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு, பன்னாட்டுக் கப்பற்துறை போன்றவற்றைக் கவனித்தது. 1901, சனவரி 1 இல், ஆத்திரேலியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய "பொதுநலவாய ஆத்திரேலியா" பிறந்தது. 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சு மாநிலத்தின் ஒரு பகுதி ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் என்ற பெயரில் தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு கூட்டமைப்பின் தலைநகரம் கான்பரா 1927 ஆம் ஆண்டில் இங்கு அமைக்கப்பட்டது. அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதியாக இருந்த வட மண்டலம் என்ற பிரதேசம் 1911 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது. கலிப்பொலி போரில் ஆத்திரேலியர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான ஆத்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெசிட்மின்சுடர் சட்டம் 1931 ஆத்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசிய்யலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அதிர்ச்சித் தோல்விகளும், சப்பானியப் பேரரசின் முற்றுகையும் ஆத்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது. 1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சசு என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஆத்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின.
ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 இல் ஆஸ்திரேலிய சட்டம் 1986 நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேலும் பிளவடைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர்.
அரசியல்
பொதுநலவாய ஆஸ்திரேலியா நடுவண் ஆட்சியைக் கொண்ட நாடாளுமான்ற மக்களாட்சி அமைப்பாகும். மூன்றாம் சார்லசு ஆஸ்திரேலியாவின் அரசர் ஆவார். நடுவண் ஆட்சியில் ஒரு பொது ஆளுநரையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியே ஆளுநர்களையும் அரசர் தனது சார்பில் நியமித்துள்ளார். அரசியலமைப்பின் படி பொது ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவர் பொதுவாக ஆஸ்திரேலிய பிரதமரின் ஆலோசனைக்கேற்பவே தனது அதிகாரங்களை நிறைவேற்றுகிறார். ஒரே ஒரு முறை மட்டும், 1975 ஆம் ஆண்டில் பொது-ஆளுநர் தன்னிச்சையாக அன்றைய விட்லமின் அரசை நீக்கியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் மூன்று அரசு சட்ட அமைப்புகள் செயற்படுகின்றன:
சட்டமன்றம்: பொதுநலவாய நாடாளுமன்றம். இதில் அரசர், செனட் அவை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசரின் சார்பில் பொது-ஆளுநர் பங்கு பற்றுகிறார்.
நிறைவேற்று அவை: நடுவண் நிறைவேற்றுப் பேரவை, இதில் பிரதமர், மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
சட்டம்: ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் நடுவண் நீதிமன்றங்கள். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்வது 1986 ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது.
இரு அவைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் (மேலவை) 76 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் (கீழவை) 150 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கீழவை உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவைக்கு ஒவ்வோர் மாநிலமும் 12 உறுப்பினர்களையும், ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசம், வட மண்டலம் ஆகிய இரு பிரதேசங்களிலும் இருந்து இருவருமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரு அவைகளுக்கும் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. கீழவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அரசை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மாநிலங்களும் பிரதேசங்களும்
அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும்.
மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.
ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் (Premier) எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் (Chief Minister) எனவும் அழைக்கப்படுகின்றனர். அரசர் தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார்.
ஆஸ்திரேலியாவில் சில சிறிய பிரதேசங்களும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஜேர்விஸ் குடா பிரதேசம் என்ற கடற்படைத் தளம் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றைவிட பின்வரும் பிரதேசங்கள் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன:
நோர்போக் தீவு
கிறிஸ்மஸ் தீவு
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்
ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்
பவளக் கடல் தீவுகள்
ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள்
ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்
புவியியல்
ஆஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு, ஆசியா கண்டத்தை அரபுரா, மற்றும் திமோர் கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 7,617,930 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்கள் ஆகும். ஆஸ்திரேலியாவின் பெரு நிலப் பரப்பு 34,218 கிமீ கரையோரப் பகுதியை (தீவுப் பகுதிகளைத் தவிர்த்து) கொண்டுள்ளது.
உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர் பெரும் தடுப்புப் பவளத்திட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இதன் நீளம் 2000 கிமீ விட அதிகமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆகுஸ்டஸ் மலை உலகின் பெரிய ஒருகற்பாறை (monolith) எனக் கருதப்படுகிறது. 2,228 மீ உயரமான கொஸ்கியஸ்கோ மலை ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள அதி உயரமான மலை ஆகும். பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தில் உள்ள மோசன் மலை 2,745 மீ உயரமானது.
ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள். நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும். இங்கு மழைக்காடுகள், மரநிலங்கள், புல்வெளிகள், அலையாத்திக் காடுகள், மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு.
அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நகரங்களில் மக்க்க்ள்தொகை அதிகரிப்பு, மற்றும் உள்ளூர் வரட்சி காரணமாக பல நகரங்களிலும் நீர்க்கட்டுப்பாடு அமலில் உள்ளது.
குடிமதிப்பியல்
தற்போதைய (2008) மதிப்பீட்டான 21.3 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் பெரும்பான்மையானோர் காலனித்துவக் காலத்திலும், கூட்டாட்சிக்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியத் தீவுகளில் இருந்து குடியேறியோராவர். இன்றும் ஆஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியரும் ஐரிய மக்களும் ஆவர்.
முதலாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை நான்கு மடங்காகவே உயர்ந்தது. இதனால் குடியேற்றத் திட்டத்துக்கு ஆதரவு வலுத்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்தும், அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரையும், கிட்டத்தட்ட 5.9 மில்லியன் மக்கள் புதிதாகக் குடியேறினார்கள். அதாவது கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களுக்கு இருவர் வெளிநாட்டில் பிறந்தவர்களாயினர். குடியேறியோரில் பெரும்பான்மையானோர் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர், ஆனாலும் குடும்ப உறுப்பினர்களும், அகதிகளும் குடியேற அனுமதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி, வெளிநாட்டில் பிறந்தோரில் பெரும்பான்மையானோர் ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, இத்தாலி, வியட்நாம், மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிறந்தோராவர். 1973 ஆம் ஆண்டில் வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை கைவிடப்பட்டதை அடுத்து, பல்கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க அரசு மட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
2005–06 காலப்பகுதியில், 131,000 பேருக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆசியா, மாற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2006–07 காலப்பகுதியில் குடியேற்றப்படுவோரின் எண்ணிக்கை 144,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
2008-9 காலப்பகுதியில் 300,000 பேர்களைக் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியேறிய எண்ணிக்கைகளில் மிகப் பெரியதாகும்.
2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை (ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை மக்கள்) 410,003 ஆக இருந்தது. இது நாட்டின் முழுத் தொகையில் 2.2% ஆகும். இது 1976 ஆம் ஆண்டில் இருந்ததை விட 115,953 பேர் அதிகமாகும். கைதுகள், வேலையில்லாமை, படிப்பறிவின்மை, போன்றவை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் ஏனைய பழங்குடியினரல்லாத ஆஸ்திரேலியர்களை விட 17 ஆண்டுகள் வரை குறைவாகும்.
ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். கூடுதலானோர் ஓய்வுதியம் பெறுவோராகவும், சிறிய அளவினரே தொழில் பார்ப்போராகக் காணப்படுகின்றனர். 2004 ஆண்டில் மக்களின் சராசரி வயது 38.8 ஆண்டுகளாக இருந்தது. ஆஸ்திரேலியர்களில் பெரும் எண்ணிக்கையானோர் (2002-03 காலத்தில் 759,849) தமது பிறந்த நாட்டை விட்டு வெளியே வசித்து வந்தனர்.
மொழி
ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும். பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியர்களுக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற்தொகுதியையும் கொண்டுள்ளது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 80 விழுக்காட்டினோரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), மற்றும் கிரேக்கம் (1.4%). இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரண்டு மொழி பேசுபவர்கள் ஆவர்.
ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. கிட்டத்தட்ட 50,000 (0.25%) மக்களின் முதல் மொழி ஒரு பழங்குடி மொழியாக உள்ளது.
சமயம்
ஆத்திரேலியாவில் அரச மதம் எதுவுமில்லை. 2006 கணக்கெடுப்பின்படி, 64% ஆஸ்திரேலியர்கள் தாம் கிறித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களில் 26% ரோமன் கத்தோலிக்கத்தையும், 19% ஆங்கிலிக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். 19% விழுக்காட்டினர் எம்மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என இனங்காட்டியுள்ளனர். 12% விழுக்காட்டினர் தம்மை மத ரீதியாக அடையாளம் காட்டவில்லை. கிறித்தவர்களுக்கு அடுத்த படியாக 2.1% பௌத்தர்களும், 1.7% இசுலாமியர்களும், 0.8% இந்துக்களும் 0.5% யூதர்களும் வாழ்கின்றனர். மொத்தமாக 6% இற்கும் குறைவானோரே கிறித்தவம் அல்லாத சமயத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய மேற்கத்தைய நாடுகளைப் போலவே இங்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்தளவினரே செல்கின்றனர். 1.5 மில்லியன் மக்கள் வாரந்தோறும் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 7.5% ஆகும்.
கல்வி
ஆஸ்திரேலியாவில் 6 வயதில் இருந்து 15 வயது வரை (தெற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் குயின்ஸ்லாந்தில் 17 வயது) பள்ளிப் படிப்பு கட்டாயம் ஆகும். இது வயது வந்தோரின் படிப்பறிவை 99% ஆகக் காட்டுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் கல்விமுறை உலக நாடுகளில் எட்டாவது இடத்தை வகிக்கின்றது. மொத்தம் 38 அரச பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. அத்துடன் அரச மானியத்தில் இயங்கும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றைவிட அவ்வவ் மாநிலங்களில் அரச தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. பல்வேறு தொழிற்துறை, மற்றும் தொழில் பழகுநர்களுக்கான கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. 25 முதல் 65 வயது வரையான ஆஸ்திரேலியர்களில் 58 விழுக்காட்டினர் தொழில்துறை அல்லது மேற்படிப்புக்கான சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
சுகாதாரம்
2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, ஆத்திரேலியர்களின் சராசரி வாழ்வுக் காலம் ஆண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 83.5 ஆண்டுகளாகவும் உள்ளன. உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆத்திரேலியாவே, அதேவேளை இறப்புகளையும் நோய்களையும் தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் காரணியாக அமைவது புகையிலை பிடித்தல் விளங்குகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகமான உடற் பருமன் உள்ளோர் ஆத்திரேலியாவிலேயே உள்ளனர்; அதே வேளை எயிட்ஸ் நோய் பரவாமல் வெற்றிகரமாகத் தடுத்த நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்று.
ஆஸ்திரேலியத் தமிழர்
ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆண்டில் இருந்து தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். 1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது. முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. இவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கின்றனர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
பண்பாடு
1788 ஆம் ஆண்டில் இருந்து, ஆஸ்திரேலியாவின் பண்பாடு அடிப்படையில் ஆங்கிலோ-கெல்ட்டியர்களை ஒத்திருந்தது. ஆனாலும் இயற்கை சுற்றுச் சூழல், மற்றும் பழங்குடிகளின் பண்பாடு ஆகியன ஆஸ்திரேலியாவிற்கெனத் தனியான சில பண்பாடுகளை வரையறுத்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆஸ்திரேலிய பண்பாட்டில் அமெரிக்காவின் பிரபலமான பண்பாடு (குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படம்), ஆஸ்திரேலியாவின் அயல் ஆசிய நாடுகள், ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்தான புலம்பெயர்வு ஆகியவற்றினால் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய ஓவியக்கலை வரலாறு பழங்குடியினரின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபு பெரும்பாலும் செவிவழியே கர்ணபரம்பரைக் கதைகளாலும், சடங்குகளினாலுமே பரப்பப்பட்டு வந்துள்ளன. பழங்குடியினரின் இசை, நடனம், ஓவியம் போன்றவை சமகாலத்தைய ஆஸ்திரேலியப் பண்பாட்டில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. எமிலி கிங்வாரேய், கோர்டன் பென்னெட் போன்ற பிரபலமான ஓவியர்கள் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய தேசிய கூடம் மற்றும் பல மாநிலங்களிலும் உள்ள கலைக்கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓவியத் திரட்டுகள் உள்ளன.
ஊடகங்கள்
ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் தொலைக்காட்சி சேவைகளும் (ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் பல்கலாச்சார சிறப்பு ஒலிபரப்புச் சேவை) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை (cable), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. எல்லைகளற்ற செய்தியாளர்களின் (Reporters Without Borders) 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் ஊடகச் சுதந்திரம் 25வது நிலையில் உள்ளது. நியூசிலாந்து 7வது நிலையிலும், ஐக்கிய அமெரிக்கா 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசன், மற்றும் ஜோன் ஃபெயார்பாக்ஸ் நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விளையாட்டு
ஆஸ்திரேலியாவில் 15 அகவைக்கு மேலானோரில் 23.5 விழுக்காட்டினர் ஏதாவதொரு குழு விளையாட்டுக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். துடுப்பாட்டம், ஹாக்கி, வலைப்பந்தாட்டம், ரக்பி லீக், மற்றும் துடுப்பு படகோட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1956, 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து பதக்கங்களைஇ வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஆறு நாடுகளுக்குள் ஆஸ்திரேலியா அடங்குகிறது. டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் சிலாம் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை.
உயிர்ப் பல்வகைமை
ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்கள் பகுதி-வரண்ட அல்லது பாலைவனங்களாக இருதாலும், இதன் வாழ்விடங்கள் மலைச்சாரல்கள் தொடக்கம் வெப்பவலய மழைக்காடுகளை உள்ளடக்கியது. கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி (biota) தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது. இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும். கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்களாகும்.
ஆஸ்திரேலியாவிலேயே உலகில் மிக அதிகமான ஊரும் விலங்குகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 755 வகையான ஊர்வன உள்ளன.
பொருளாதாரம்
ஆஸ்திரேலிய டாலர் ஆஸ்திரேலியாவின் நாணயம் ஆகும். இது ஆஸ்திரேலியா தவிர கிறிஸ்மஸ் தீவுகள், கொக்கோஸ் (கீலிங்) தீவுகள், நோர்போக் தீவு, மற்றும் பசிபிக் தீவுகளான கிரிபட்டி, நவூரு, துவாலு ஆகியவற்றிலும் அதிகாரபூர்வ நாணயம் ஆகும்.
அவுஸ்திரேலியா மேற்கு நாடுகளையொத்த கலப்புப் பொருளாதார அமைப்புடையது. ஐக்கிய நாடுகளின் 2007 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் மூன்றாவது இடத்திலும் தி எக்கணமிஸ்ட் இதழின் 2005 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைத்தரச் சுட்டெண்ணில் ஆறாமிடத்திலும் உள்ளது. 2007 இல் அவுஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் தொகை 4.6 % ஆகும். மொ.உ.உ (GDP) ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, மற்றும் பிரான்சை விட சற்று அதிகமாகும். அத்துடன் தி எக்கணமிஸ்ட் இதழின் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) மெல்பேர்ண் 2வது, பேர்த் 4வது, அடிலெயிட் 7வது, சிட்னி 9வது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
குறிப்புகள்
மேற்கோள்கள்
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
ஓசியானிய நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
4741
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%88
|
உயிர்ச்சத்து ஈ
|
உயிர்ச்சத்து E உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியது. கண்புரை ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் நினைவு இழப்பு நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெப்ரி ப்ளும்பெர்க் என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த உயிர்ச்சத்தை பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் மூளையிலுள்ள குருதி நாளங்களில் குருதிக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும்.
ஆதாரம்
உணவு எதிராக்சிகரணிகள்
|
4743
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF
|
உயிர்ச்சத்து பி
|
உயிர்ச்சத்து பி என்பது நீரில் கரையக்கூடிய எட்டுவகை உயிர்ச்சத்துக்கள் அடங்கிய கூட்டுக்குழுமம் ஆகும். வளர்சிதைமாற்றங்களின் தேவைக்கு உயிர்ச்சத்து பி குழுமம் இன்றியமையாத பங்கினை வழங்குகின்றது. ஒவ்வொரு "பி" உயிர்ச்சத்தும் தம்முடன் ஒரு சிறப்பு எண்ணைக் கொண்டுள்ளது (எ.கா.: பி1, பி6, பி12 ....). இது தவிர அவற்றை, ஒவ்வொன்றுக்குமுரிய வேதியியல் பெயர் மூலமும் அழைத்தல் வழமையில் உள்ளது. போதியளவு உயிர்ச்சத்து பி உணவில் கிடைக்காதவிடத்து, குறைநிரப்பு (supplements) குளிகைகள் (மாத்திரைகள்) உட்கொள்ளப்படுவது வழக்கம். எட்டு உயிர்ச்சத்து பி வகைகளும் சேர்த்து பெறப்படும் குளிகை உயிர்ச்சத்து பி தொகுதி (Vitamin B complex) என அழைக்கப்படும்.
பி உயிர்ச்சத்துக்களின் பட்டியல்
உயிர்ச்சத்து பி1 (தயமின்)
உயிர்ச்சத்து பி2 (இரைபோஃபிளவின்)
உயிர்ச்சத்து பி3 (நியாசின் or நியாசினமைட்)
உயிர்ச்சத்து பி5 (பன்டோதீனிக் அமிலம்)
உயிர்ச்சத்து பி6 (பிரிடொக்சின், பிரிடொக்சல், or பிரிடொக்சாமைன்)
உயிர்ச்சத்து பி7 (பயோட்டின்)
உயிர்ச்சத்து பி9 (போலிக் அமிலம் அல்லது இலைக்காடி)
உயிர்ச்சத்து பி12''' (பலதரப்பட்ட கோபாலமின்கள்; பொதுவாக உயிர்ச்சத்து மாற்றீடுகளில் சையனோகோபாலமின் எனும் வடிவத்தில்)
பி உயிர்ச்சத்துக்களின் பங்கு
வளர்சிதைமாற்ற தாக்கங்களுக்கு துணையாக இருக்கும்.
ஆரோக்கியமான தோல், முடி, தசை என்பவற்றைப் பேணுவதற்கு உதவும்.
நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, நரம்புத் தொகுதி தொழிற்பாட்டைக் கூட்டும்.
உயிரணு வளர்ச்சி, உயிரணுப்பிரிவு என்பவற்றை மேம்படுத்தும். குருதிச் சிவப்பணுக்களிலும் இம்மேம்படுத்துகை நிகழ்வதால், குருதிச்சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க உதவும்.
குளிகைகள் மூலமாக அன்றி, உணவுடன் உட்கொள்ளப்படும்போது ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றான கணைய புற்றுநோய்]] இடரைக் குறைக்கும்.
எல்லா உயிர்ச்சத்து பி க்களும் நீரில் கரைபவையாக இருப்பதனால், உடல்முழுவதும் பரந்து காணப்படும். மேலதிகமாக இருக்கும் உய்ரிச்சத்து பி, சிறுநீருடன் உடலிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவதனால், சீராக தொடர்ந்து மீள்நிறைவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும்.
உயிர்ச்சத்து பி குறைபாடு
போதியளவு உயிர்ச்சத்து பி கிடைக்காவிட்டால், பெயரிடப்படக் கூடிய பல குறைபாட்டு நோய்கள் தோன்றும்.
உயிர்ச்சத்து பி யின் நச்சுத்தன்மை
உயிர்ச்சத்து பி உடலின் தேவைக்கு மேலதிகமாக இருக்கையில், பொதுவாக அது சிறுநீருடன் அகற்றப்படும். இருந்தாலும், அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படும்போது, அது உடலுக்குத் தீங்கான விளைவுகளைத் தரும்.
உயிர்ச்சத்து பி கிடைக்கும் மூலங்கள்
பதனிடப்படாத முழுமையான தானியங்களில் உயிர்ச்சத்து பி பெறப்படும். கோதுமை, அரிசி போன்ற தானியங்களின் வெளிப்படலமான தவிடு நீக்கப்பட்டிருப்பின், அங்கே உயிர்ச்சத்து பி குறைந்த அளவிலேயே காணப்படும். இறைச்சி, இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஈரல் போன்றவற்றில் உயிர்ச்சத்து பி செறிவடைந்து காணப்படும். பதனிடப்படாத முழுமையான தானியம், உருளைக் கிழங்கு, பருப்பு, அவரை, வாழை, மதுவம் போன்றவற்றிலும், மற்றும் கரும்பு, திராட்சை, சக்கரைக்கிழங்கு (sugar beet) போன்றவற்றில் இருந்து சீனி தயாரிக்கும்போது கிடைக்கும் molasses எனப்படும் துணைப்பொருளிலும் உயிர்ச்சத்து பி அதிகளவில் கிடைக்கும்.
மதுவத்திலிருந்து பியர் தயாரிக்கப்படும்போது பியரிலும் உயிர்ச்சத்து பி இருந்தாலும், அதிலிருக்கும் எத்தனால் தயமின் (B1),, இரைபோஃபிளவின் (B2),, நியாசின் (B3), பயோட்டின் (B7), போலிக் அமிலம் (B9) ஆகியவற்றின் உறிஞ்சப்படும் தன்மையைப் நிரோதிப்பதனால், உடலுக்கு கிடைக்கும் தன்மை குறையும். மேலும், பியரோ அல்லது வேறு எத்தனோல் சேர்ந்த திரவங்களோ உயிர்ச்சத்து பி உறிஞ்சுவதை பொதுவாகவே நிரோதிப்பதனால், அதன் நிகர குறைபாடும், அது சார்ந்த உடநலக் குறைகளும் அதிகரிக்கும்.
உயிர்ச்சத்து பி12 ஆக தாவரங்கள் மூலம் கிடைப்பதில்லை. அதனால் அப்படியான உணவுகளை மட்டும் உண்பவர்களில் B12 குறைபாடு ஏற்படுவது அதிகம். ஆனாலும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உணவுகளைத் தயாரிப்பவர்கள் சிலர் B12 அங்கேயும் கிடைப்பதாகக் கூறுவது சில குழப்பங்களைத் தருகின்றது. காரணம் இந்த அளவை அளவிடும்போது US Pharmacopeia (USP) B12 நேரடியாகக் கிடைக்கவில்லை. B12 ஐ ஒத்த மாற்று வேதியியல் வடிவம் ஒன்று தாவரத்தில் இருப்பதாகவும், அது மனித உடலால் பயன்படுத்த முடியாதது எனவும் அறியப்படுகின்றது. இதே காரணத்தால், வேறு சில உணவுகளிலும் B12 அளவீடு உண்மையில் இருப்பதை விடவும் அதிகமாகவும் காட்டும்.
உயிர்ச்சத்து பி குறைபாட்டைப் போக்க ஊசி மூலமும் வழங்கலாம். உயிர்ச்சத்து பி ஐ உடலில் கூட்டிக் கொள்வதற்கு பொதுவாக அவற்றின் குறைநிரப்பும் குளிகைகளும் உட்கொள்ளப்படுவதுண்டு.
சந்தையில் 'ஆற்றல் பானங்கள்' (energy drinks) என்ற பெயரில் விற்கப்படும் பானங்களில், அதிகளவு பி உயிர்ச்சத்து காணப்படுகின்றது. இப்பானங்கள் பதற்றம், படபடப்பு, அழுத்தங்கள் எதுவுமின்றி நாளைக் கழிக்க உதவுவனவாக விளம்பரம் செய்யப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால் பேராசிரியர் Hope Barkoukis போன்ற உணவியல் வல்லுநர்கள், வணிகப்படுத்தலுக்கு இது உதவுமேயன்றி, இதில் உண்மையில்லை என்று சொல்லி இதனை மறுக்கின்றனர். உணவில் இருக்கும் ஆற்றல் தரும் பொருட்கள் இலகுவாக உடலால் பயன்படுத்தக் கூடிய நிலைக்கு வருவதற்கும் இந்த உயிரிச்சத்து பி உதவுகின்றது.
உயிர்ச்சத்து பி குறைநிரப்பு குளிகைகள்
உடலில் மேலதிகமாக இருக்கும் உயிர்ச்சத்து பி யானது உடனுக்குடன் அகற்றப்பட்டு விடுவதனால், உடல் நலத்தைப் பேணுவதற்காக, பொதுவாக உயிர்ச்சத்து பி குறைநிரப்பு குளிகைகள் உட்கொள்ளப்படுவது வழக்கமாக இருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதரிலும் உயிர்ச்சத்து பி உறிஞ்சப்படுமளவு, வெளியே அகற்றப்படும் அளவு என்பன வேறுபடுவதனால், ஒருவரின் தேவை என்ன என்பதை அறிவது இலகுவல்ல. முதியோர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் B12 உறிஞ்சப்படுவதில் உள்ள பிரச்சனைகளாலும், அவர்களுக்கான ஆற்றல் தேவை அதிகமாய் இருப்பதனாலும் அதனை குறைநிரப்பு குளிகைகளாக வழங்கலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் அவர்களது நோய் தொடர்பில் அதிகளவு தயமின் பயன்படுத்தப்படுவதனால், அவர்களுக்குத் தேவையான தயமினை ஈடுசெய்ய குறைநிரப்பு குளிகைகள் வழங்கலாம். அத்துடன் பிறக்கும் குழந்தைகளில் B9 குறைபாடானது, சில நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதனால், கருத்தரிக்க திட்டமிடும் பெண்கள் முதலிலேயே இதனை எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.. ஆனாலும் இக்குளிகைகளை உட்கொள்ளும் அனைவரும், இந்த தேவையின்றியே உட்கொள்வதாகவும், அது ஒரு வணிக நோக்கிலான விளம்பரமே என்ற கருத்தும் உண்டு.
மேற்கோள்கள்
உயிர்ச்சத்துக்கள்
மேற்கோள் வழு-Defined multiple times
|
4746
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BF
|
உயிர்ச்சத்து டி
|
உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2 அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் 'உயிர்ச்சத்து' எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் பொருந்தாது. இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது, மேலும் மாத்திரை வடிவிலும் இவ்வுயிர்ச்சத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். கொழுப்பு மீன்கள், முட்டைகள், சிவப்பு இறைச்சி வகை ஆகிய உணவுவகைகளில் மிகையான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதால் இவ்வுயிர்ச்சத்து குறைபாடானவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்யப்படுகின்றது. ஒளியில் வளரும் காளான் வகைகளை உணவாகப் பயன்படுத்தல் மூலம் நாளாந்த உயிர்ச்சத்தின் 100% பெற்றுக்கொள்ளலாம்.
உயிர்ச்சத்து டி3 குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக (calcidiol) மாற்றம் பெறுகின்றது, கல்சிடையோல் (வேறு பெயர்கள்: கல்சிபிடையோல், 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோல், 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி3, 25(OH)D3)பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நிர்ப்பீடனத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. கல்லீரலில் ஏர்கோகல்சிபெரோல் (உயிர்ச்சத்து டி2) 25-ஐதரொக்சி ஏர்கோகல்சிபெரோலாக (வேறு பெயர்கள்: 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி2, 25(OH)D2)மாற்றம் அடைகிறது. ஒரு நபரது உயிர்ச்சத்து டியின் நிலையை அறிவதற்கு இந்த இரண்டு உயிர்ச்சத்து 'டி'யின் வளர்சிதைக்கூறுகளின் அளவுகள் குருதித் தெளியத்தில் கணிக்கப்படுகின்றன.
தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்ட கல்சிடையோல் நிர்ப்பீடன அல்லது நோய்த்தடுப்புத் தொகுதியில் நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு பொருளாகத் தொழிற்படுகின்றது, அதேவேளை சிறுநீரகத்தில் ஒரு இயக்குநீராகத் தொழிற்படுகின்றது. வளரூக்கியாக கல்சியம், பொசுபேற்று வளர்சிதைமாற்றங்களில் பங்கெடுப்பதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியிலும் மீளஉருமாற்றத்திலும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. கல்சிரையோல் பொதுவாக உயிர்ச்சத்து என்று அழைப்பதை விட அதன் தொழிற்பாட்டுதன்மையால் வளரூக்கியாகவே கருதப்படுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. கல்சியத்துடன் சேர்ந்து எலும்புப்புரை நோய் உருவாகுதலைத் தடுக்கின்றது. இவைகளைத் தவிர, உயிர்ச்சத்து டி நரம்பு, தசைத் தொழிற்பாட்டைச் செம்மைபடுத்துகின்றது; அழற்சியைக் குறைக்கின்றது; உயிரணுவின் பெருக்கத்திற்கும் உருமாற்றத்திற்கும் முதிர் உயிரணு அகற்றலிற்கும் காரணமாக உள்ள மரபணுவுக்கு உறுதுணையாகின்றது.
விளைவுகள்
இறப்புவீதம்
குருதியில் குறைவான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுதல் இறப்பு வீதத்தைக் கூட்டுகின்றது. ஆய்வொன்றில் முதுமை வயதுடைய பெண்களுக்கு உயிர்ச்சத்து டி3 மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட போது இறப்புக்கான இடர்காரணி குறைவாகக் காணப்பட்டது. உயிர்ச்சத்து டி2, அல்பாகல்சிடோல், கல்சிட்ரயோல் என்பன ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கவில்லை.
எனினும் மிகையான அல்லது குறைவான உயிர்ச்சத்து டி அளவு அசாதாரண தொழிற்பாட்டுக்கும் இளவயதில் முதுமையடைதலுக்கும் காரணியாகின்றது.
வகைகள்
உயிர்ச்சத்து 'டி'க்களின் உயிர்ச்சத்துச் சமகூறுகள் (அட்டவணையைப் பார்க்கவும்) சில உள்ளன. இரண்டு பெரிய வகைகளுள் ஒன்று உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றையது உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்), இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து கல்சிபெரோல் என அழைக்கலாம். 1932இல் உயிர்ச்சத்து டி2இன் வேதியல் இயல்பு அறியப்பட்டது. 1936இல் உயிர்ச்சத்து டி3இன் வேதியல் கட்டமைப்பு அறியப்பட்டது.
வேதியல் கட்டமைப்பின்படி உயிர்ச்சத்து டி ஒரு செக்கோசுட்டீரோய்டு (secosteroid), அதாவது இசுட்டீரோய்டு மூலக்கூறில் ஒரு பிணைப்பு முறிந்து காணப்படும் அமைப்பு. உயிர்ச்சத்து டி2க்கும் உயிர்ச்சத்து டி3க்கும் இடையேயான கட்டமைப்பு வேறுபாடு அவற்றின் பக்கச் சங்கிலியில் உள்ளது. உயிர்ச்சத்து டி2இன் பக்கச்சங்கிலியில் 22வது, 23வது கரிமங்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்பும் 24வது கரிமத்தில் மெதையில் குழுமமும் காணப்படுகின்றது.
உயிர்ச்சத்து டி2, உயிரிகளின் மென்சவ்வில் உள்ள ஒருவகை இசுடீரோலான ஏர்கோசுடீரோலில் இருந்து உருவாகிறது, மேலும் தாவர மிதவைவாழிகள், முதுகெலும்பிலிகள், பூஞ்சைகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர்வீச்சால் ஏற்படும் வினைத்தாக்கம் மூலம் உற்பத்தியாகின்றது; உயிர்ச்சத்து டி2 நிலத்துத் தாவரங்களில் அல்லது முதுகெலும்பிகளில் உற்பத்தி ஆவது இல்லை. உயிர்ச்சத்து டி2யை உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் உயிர்ச்சத்து டி3இன் தேவையை முழுமையாக்கலாம் என்பது பற்றிய முரண்பாடான கருதுகோள்கள் நிலவுகின்றன.
உயிர்ச்சத்து டி பற்றாக்குறை
அனைத்துலகிலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாக உயிர்ச்சத்து டி பற்றாக்குறை திகழ்கின்றது. உணவில் உட்கொள்ளும் அளவு அல்லது கதிரவ ஒளிபடுதல் குறைவதனால் இக்குறைபாடு ஏற்படுகின்றது. பாலுணவு வகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், மரக்கறி உணவையே மட்டும் கடுமையாகக் கடைப்பிடிப்போர் மத்தியில் இப்பற்றாக்குறை ஏற்படலாம். குறிப்பாக வயதானவர்களில் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இடர்க்காரணி இருந்தாலும் பொதுவாக சிறுவர் உட்பட ஏனையவர்களிலும் பொதுவாக ஏற்படுகின்றது.
உண்ணும் உணவிலிருந்து கல்சியத்தை அகத்துறிஞ்ச உதவுவதன் மூலமும், கல்சியத்தின் வளர்சிதைமாற்றத்துக்கு உதவுவதன் மூலமும் உயிர்ச்சத்து டி எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ளுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் எலும்புகளின் தோற்றம், தன்மை என்பன பாதிக்கப்படுகின்றது. மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் அல்லது எலும்புநலிவு நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. எலும்புகளின் உருவாக்கத்துக்குத் தேவையான கனிமமாக்கல் செயன்முறையில் பாதிப்பு ஏற்படுவதால் இவ்விளைவுகள் ஏற்படுகின்றன.
இவற்றைவிட, உயிர்ச்சத்து டியின் செயற்பாடுகள் உடலில் உள்ள அநேகமான இழையங்களில் நடைபெறுகின்றன. தசைத்தொகுதி, நோய்த்தடுப்புத் தொகுதி, மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி போன்றவற்றில் உயிர்ச்சத்து டி இணைந்து தனது செயலை நிகழ்த்துவதற்காக உயிர்ச்சத்து டி ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் உயிர்ச்சத்து டி உடலின் ஏனைய பகுதிகளில் வகிக்கும் பங்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதய நோயால் பாதிப்படையும் இடர்க் காரணி, சிறுவர்களில் ஈழை நோய், புற்றுநோய், முதலாவதுவகை நீரிழிவு, மன உளைச்சல் போன்றன குருதியில் குறைந்த அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றது என்று அறியப்பட்டுள்ளது. தண்டுவட மரப்பு நோய், சில புற்றுநோய்கள், காசநோய், தடிப்புத் தோல் அழற்சி போன்ற சில நோய்களுக்குத் துணை மருந்தாக உயிர்ச்சத்து டியைப் பயன்படுத்துவது நன்மையைக் கொடுக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கரும்நிறத் தோலை உடையவர்களிலும் இக்குறைபாடு ஏற்படலாம். இவர்களில் கருநிறமி (மெலனின்) சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்களை உட்புகவிடாது தடுப்பது காரணமாகின்றது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் வேறு சில ஆய்வுகள் ஆபிரிக்க இனத்தவரிடையே குறைந்தளவு உயிர்ச்சத்து டி காணப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது. கொழுப்பு உடலில் அகத்துறிஞ்சப்படுவது பாதிக்கப்படுதலும் உணவினூடாக உயிர்ச்சத்து டி கிடைப்பதைக் குறைக்கிறது.
என்புருக்கி நோய்
என்புருக்கி நோய் எலும்புகள் மென்மையடைவதால் ஏற்படும் சிறுபிராயத்து நோயாகும். இந்நோயின் முக்கிய காரணி உயிர்ச்சத்து டி குறைபாடு. இருப்பினும், கல்சியம் அல்லது பொசுபரசு குறைபாட்டாலும் ஏற்படலாம். குழந்தைப்பருவத்தில் வறுமை, பசி காரணமாக தீவிர ஊட்டச்சத்துக் குறைவோடு காணப்படும் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்களில் இதன் அளவு குறைவதால், பிள்ளை பிறந்த பிற்பாடு பாலூட்டும் போது குழந்தைக்கும் குறைந்த அளவு செல்கிறது. எனினும், பொதுவாகவே தாய்ப்பாலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. குழந்தைகளுக்கு மரக்கறி வகைகள் மட்டுமே கொடுக்கப்படலும் இந்நோயுடன் தொடர்புடையதாக உள்ளது. உயிர்ச்சத்து டி செறிவூட்டப்பட்ட பால் வகைகள் சிறுவருக்கு கொடுப்பது இதன் குறைபாடு வருவதைத் தடுக்கின்றது.
இந்நோயில், கல்சியம் அல்லது பொசுபரசு குருதியில் சரியான அளவு பேணப்படுவது குழம்புவதால் இந்நோயில் எலும்புகளில் நடைபெறும் கனிமமாக்கல் செயற்பாடு பாதிக்கப்படுகிறது. குழந்தைகளில் எலும்பு வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது, எலும்புகள் நேரான உருவத்தை இழந்து வளைந்து காணப்படுகின்றன, இலகுவில் முறியக்கூடியதாக உள்ளன. வில் போன்று வளைந்த கால்கள், முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு குறைபாடுகள், மண்டை எலும்பு மென்மையுறுதல் போன்ற எலும்பு தொடர்புடைய அறிகுறிகளுடன் பல் சம்பந்தமான பிரச்சனைகள், தசைச்சோர்வு போன்ற அறிகுறிகளும் இந்நோயில் இடம்பெறுகின்றன.
என்புமென்மை நோய்
வளரந்தவர்களில் உயிர்ச்சத்து டி குறைபாட்டால் எலும்புகளில் மென்மையை ஏற்படுத்தும் நோய். எலும்புகளின் கனிமமாக்கலுக்கு போதியளவு கல்சியம் அல்லது பொசுபரசு இன்மையால் இந்நோய் உருவாகின்றது. இணைகேடயச் சுரப்பிகளின் மிகைத் தொழிற்பாட்டாலும் குருதியில் கல்சியத்தின் அளவு குறையும்போது இந்நோய் உண்டாகின்றது. முதுகெலும்பு வளைதல், கால் வளைதல், எலும்பு முறிவடைதல் இந்நோயால் ஏற்படும். எலும்பு நோ, தசைச்சோர்வு என்பன இதன் அறிகுறிகளாகும்.
மிகை உயிர்ச்சத்து டி
உயிர்ச்சத்து டியின் உள்ளெடுக்கப் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வரம்பளவு நாளாந்தத்துக்கு 4000 அனைத்துலக அலகுகள் (IU) ஆகும். இதைவிட அளவுக்கதிகமாக உள்ளெடுத்தால் நச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. எனினும், பொதுவாக உயிர்ச்சத்து டி நச்சுமை காணப்படுவது அரிது. உயிர்ச்சத்து டி நச்சுமை கதிரவ ஒளியினால் ஏற்படாது, ஆனால் உயிர்ச்சத்து டி மாத்திரைகளின் அளவு மிகைப்புப் பயன்பாடு கூடுவதால் அல்லது உயிர்ச்சத்து டி வலுவூட்டப்பட்ட உணவுப்பொருட்களை அளவுக்கதிகமாக நுகருவதால் ஏற்படக்கூடும். முதன்மிய இணைக் கேடயச்சுரப்பி இயக்க மிகைப்பு (Hyperparathyroidism) உள்ளவர்கள் உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள். இவர்களில் குருதியில் கல்சியத்தின் அளவு மிகையாகக் காணப்படும். மிகைக் கல்சியக்குருதி கொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் முதிர்மூலவுரு உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிப்படையும் இடர்த்தன்மை காணப்படுகின்றது. எனவே கர்ப்பிணித்தாய்மார் உயிர்ச்சத்து டி மாத்திரைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்றே உள்ளெடுத்தல் தேவையானது.
மிகைக் கல்சியக்குருதியுடன் அடிக்கடி சிறுநீர் வெளியேறல், தாகம் என்பன உயிர்ச்சத்து டி நச்சுமை உள்ளதென்பதற்கான உறுதியான சுட்டுமை ஆகும். மிகைக் கல்சியக்குருதி சிகிச்சை மூலம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படாவிடின் மெல்லிழையங்களிலும் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகளிலும் அதிகளவு கல்சியம் படியத்தொடங்கிவிடும். இவர்களில் பசியின்மை, குமட்டல், வாந்தி போன்ற நோய் அறிகுறிகளுடன் சிறுநீர்மிகைப்பு, தாகம், சோர்வு, தூக்கமின்மை, பதட்டம், தோல் அரிப்பு முதலியன ஏற்படும். இறுதியில் சிறுநீரகச் செயலின்மை, சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுதல், சிறுநீரகக்கல் ஆகியன உயிராபத்தை ஏற்படுத்தவல்லனவாகத் தோன்றும். உயிர்ச்சத்து டி நச்சுமையின் வேறு அறிகுறிகள்: சிறுவர்களில் மனவளர்ச்சிக்குறை, அசாதாரண எலும்பு உருவாக்கமும் வளர்ச்சியும், வயிற்றோட்டம், எரிச்சற்தன்மை, எடை குறைவு, மன உளைச்சல்.
உயிர்ச்சத்து டி, கல்சியம் உள்ளெடுப்பது தவிர்க்கப்படல் உயிர்ச்சத்து டி நச்சுமைக்கான சிகிச்சையாகும். சிறுநீரகப் பாதிப்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது.
செயற்பாட்டு இயக்கமுறை
உயிரியத் தொகுப்பு
உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) தோலில் காணப்படும் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோலில் (7-dehydrocholesterol) இருந்து ஒளிவேதியல் வினை மூலம் உருவாகுகின்றது. 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் மனிதன் உட்பட்ட பெரும்பான்மை முதுகெலும்பிகளின் தோலில் ஒப்பீட்டளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் இயல்பாகவே தோலிலும் பாலிலும் காணப்படுகின்றது. பாலை நேரடியாக புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாக்கும் போது பாலில் உயிர்ச்சத்து டியை உற்பத்தி செய்யமுடியும். உயிர்ச்சத்து டி வியாபார நோக்கில் உற்பத்தி செய்யப்படும் முறைகளில் இதுவும் ஒன்றாகும். எண்ணெய் மீன்களிலும் காட் மீன் ஈரல் எண்ணெய்களிலும் டி3 காணப்படுகின்றது.
உயிர்ச்சத்து டி2 ஏர்கோசுட்டிரோலில் இருந்து உருவானதாகும். ஏர்கோசுட்டிரோல் என்பது சிலவகை அலைதாவரங்கள் (தாவர மிதவைவாழிகள்), முதுகெலும்பிலிகள், மதுவங்கள், காளான்கள் ஆகியனவற்றின் கலமென்சவ்வில் காணப்படும் ஒருவகை இசுட்டிரோல் ஆகும். ஏர்கோசுட்டிரோல் புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உட்படும்போது ஏர்கோகல்சிபெரோல் உருவாகுகின்றது. காளான்களில் குறைந்தளவில் காணப்படும் உயிர்ச்சத்து டி2 அவற்றை புறஊதாக் கதிரின் வினைக்குட்படுத்தும் போது அதிகரிக்கின்றது.
தோலில் உற்பத்தி
தோல் இரண்டு முதன்மைப் படைகளைக் கொண்டுள்ளது: வெளிப்புறத்தில் உள்ள மெல்லிய படை மேற்றோல் எனவும் உட்புறத்தில் உள்ள பெரும்பான்மையாக தொடுப்பிழையத்தால் ஆக்கப்பட்டுள்ள அமைப்பு உட்தோல் எனவும் அழைக்கப்படுகின்றது. மேற்றோல் ஐந்து படைகளைக் கொண்டுள்ளது; அவை வெளிப்புறத்தில் இருந்து உட்புறமாக முறையே கொம்புப்படை, தெளிவுப்படை, சிறுமணிப்படை, முட்படை,
முளைப்படை அல்லது அடித்தளப்படை ஆகியனவாகும். உயிர்ச்சத்து டியின் உற்பத்தி மிகவும் உட்புறத்தில் உள்ள முட்படை மற்றும் அடித்தளப்படை ஆகியவற்றில் நடைபெறுகின்றது.
தோலில் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் அலைநீளம் 270 தொடக்கம் 300 வரையான நானோமீட்டர் (nm) கொண்ட புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாகும் போது உயிர்ச்சத்து டி3 உருவாகுகின்றது. மிகையான உற்பத்தி 295 - 297 nm இல் நடக்கின்றது. இத்தகைய அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்கள் கதிரவ ஒளியிலும் சூரியப்படுக்கைகளில் அமைந்துள்ள புறஊதா விளக்குகளிலும் இருந்து வெளிவிடப்படுகின்றன.
வளர்சிதை மாற்றமும் உயிரியற் செயற்பாடும்
உயிர்ச்சத்து டி குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக மாற்றம் பெறுகின்றது. குருதிச் சுற்றோட்டத்தில் உள்ள கல்சிடையோல் பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நோய் எதிர்ப்புத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்டு குருதியருவிக்குள் விடப்படுகின்றது. குருதியில் காணப்படும் உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதத்துடன் அல்லது அல்புமினுடன் இணைந்து கொண்டு வெவ்வேறு இலக்குறுப்புகளுக்கு காவிச்செல்லப்படுகின்றது. நோய் எதிர்ப்புத் தொகுதியின் ஒற்றைக்குழிய-பெருவிழுங்கிகளில் கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. தனித்திறனற்ற நோயெதிர்ப்புத் தொகுதியைத் தூண்டுவதன் மூலம் உடலில் நுண்ணுயிரிகள் நுழைவதைத் தடுக்கும் சைட்டோக்கைன் எனும் உயிரணுத் தொடர்பிகள் போன்று கல்சிரையோல் தொழிற்படுகிறது.
தோலில் உருவாகும் அல்லது உணவு மூலம் உள்ளெடுக்கப்படும் கோளிகல்சிபெரோல், கல்லீரலில் நிகழும் வேதியல் வினைமூலம் 25வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்பட்டு 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோலாக (25(OH)D3, கல்சிடையோல்) மாற்றமடைகிறது. இந்த வேதிவினை மைக்ரோசோமில் உள்ள உயிர்ச்சத்து டி 25-ஐதராக்சிலேசு எனும் நொதியத்தால் ஊக்குவிக்கப்படுகின்றது. கல்சிடையோல் சிறுநீரகத்துக்கு உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு 1வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்படுகின்றது. இதன் மூலம் கல்சிரையோல் என அழைக்கப்படும் 1,25-இரு ஐதரொக்சி கோளிகல்சிபெரோல் (1,25(OH)2D) உருவாகின்றது. இந்தத் தொழிற்படுவடிவ கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பிக்கான ஒரு ஏற்பிணைப்பியாகும். கல்சிடையோல் கல்சிரையோலாக மாற்றப்படுவதற்கு 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி3 1-அல்பா-ஐதராக்சிலேசு எனும் நொதியம் துணைபுரிகிறது.
கல்சிரையோல் தனது உயிரிய வினைகளை உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் (VDR) பிணைக்கப்படுவதன் மூலம் நடுவு செய்கின்றது. இலக்கு உயிரணுக்களின் கருவில் இந்த உயிர்ச்சத்து டி ஏற்பிகள் அமைந்துள்ளன. உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் பிணைக்கப்பட்ட கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பியை ஒரு படியெடுத்தல் காரணியாகச் செயற்பட அனுமதிக்கின்றது. குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சி, கல்சியத்தைப் பிணைத்துக்கொண்டு காவும் புரதங்களின் (கல்பைண்டின்) மரபணு வெளிப்பாட்டை இப்படியெடுத்தற் காரணி ஒழுங்குபடுத்துகின்றது. உயிர்ச்சத்து டி ஏற்பி பெரும்பான்மையான உறுப்புகளில் காணப்படுகின்றது: தோல், மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி, இதயம், இனப்பெருக்க உட்சுரப்பிகள். குடல், எலும்பு, இணைக்கேடய சுரப்பிகள் போன்றவற்றில் உயிர்ச்சத்து டி ஏற்பி செயற்படு நிலைக்குள்ளாவது குருதியில் கல்சியம் மற்றும் பொசுபரசு அயனிகளின் மட்டத்தை பேணுகின்றது. இது இணைக்கேடய வளரூக்கி, கல்சிடோனின் வளரூக்கி ஆகியனவற்றின் உதவியுடன் நிகழ்கின்றது.
உயிர்ச்சத்து டியின் முக்கிய பங்குகளுள் ஒன்று வன்கூட்டுத்தொகுதியில் எலும்புகளில் உள்ள கல்சியத்தின் சமநிலையைப் பேணுவதாகும். குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சுவது, எலும்புறிஞ்சிக் கலங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் எலும்புகளில் இருந்து குருதிக்கு கல்சியத்தை வெளியுறிஞ்சச் (resorption) செய்வது, இவற்றின் மூலம் கல்சியம் மற்றும் பொசுபரசின் சமநிலையைப் பேணுவது எலும்புகளின் ஆக்கத்துக்கும் மீளாக்கத்துக்கும் இன்றியமையாதது.
வரலாறு
அமெரிக்க ஆய்வாளர்களான எல்மர் மக்கலம் மற்றும் மார்கேரைட் டேவிசு ஆகியோர் 1914இல் காட் ஈரல் எண்ணெயில் இருந்து ஒரு பதார்த்தத்தைக் கண்டறிந்தனர். இது பின்னர் உயிர்ச்சத்து ஏ என அழைக்கப்பட்டது. பிரித்தானிய மருத்துவர் எட்வார்டு மெலான்பை, காட் ஈரல் எண்ணெய் கொடுக்கப்பட்ட நாய்களில் என்புருக்கி நோய் வரவில்லை என்பதை அவதானித்தார். இதிலிருந்து, உயிர்ச்சத்து ஏ அல்லது வேறொரு நெருங்கிய காரணி இந்நோயைத் தடுக்கின்றது என்பது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 1922இல் எல்மர் மக்கலம் உயிர்ச்சத்து ஏ அகற்றப்பட்ட காட் ஈரல் எண்ணெயை நோயுற்ற நாய்களுக்குக் கொடுத்துப்பார்த்தார். அப்போதும் இந்நோய் குணமாகியது. இதிலிருந்து குறிப்பிட்ட அந்தப் பதார்த்தத்துக்கு 'உயிர்ச்சத்து டி' எனப் பெயரிடப்பட்டது. ஏனெனில், இது நான்காவதாகப் பெயரிடப்பட்ட உயிர்ச்சத்து ஆகும். ஆரம்பகாலத்தில் மாந்தரால் உயிர்ச்சத்து டியை சூரிய ஒளி மூலம் தொகுத்துக்கொள்ள முடியுமென்பது பற்றிய அறிவு இருந்திருக்கவில்லை.
1923இல் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கரிமப் பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து 'டி'யின் அளவை புறவூதாக்கதிர் கூட்டுகிறது என்பதை அமெரிக்க உயிர்வேதியியலாளர் காரி இசுடீன்போக் விபரித்தார். கொறிணிகளின் உணவை புறவூதாக்கதிர் வினைக்குட்படுத்திய பிற்பாடு அவை என்புருக்கி நோயில் இருந்து குணமடைந்தது அவதானிக்கப்பட்டது. இவரது முறை பால் போன்ற உணவுப்பொருட்களில் உயிர்ச்சத்து டியைச் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
1925இல் 7-dehydrocholesterol ஒளியில் தாக்கமுறும்போது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்து (தற்போதைய உயிர்ச்சத்து டி3) ஒன்று உருவாகுகின்றது என்பதை அறியத்தொடங்கி இருந்தனர். அல்பிரெட் பாபியன் கெசு (Alfred Fabian Hess) ஒளி உயிர்ச்சத்து 'டி'க்குச் சமானமானது என அறியத்தந்தார். இசுடீரோலுக்கும் உயிர்ச்சத்துக்கும் இடையான தொடர்புகளை செருமனியில் கோட்டின்கேன் பல்கலைகழகத்தில் ஆய்ந்தறிந்த அடோல்ப் விண்டவுசு (Adolf Windaus), இச்சேவைக்கு 1928இல் நோபெல் பரிசு பெற்றார்.
1971-72இல் உயிர்ச்சத்து டியின் வளர்சிதை மாற்றம் பற்றிய மேலதிக விவரங்கள் அறியப்பட்டன.கல்லீரலில் உயிர்ச்சத்து டி கல்சிடையோலாக மாற்றப்படுகின்றது என்பது அறியப்பட்டது. கல்சிடையோல், கல்சிரையோல் என்பன மைக்கல் ஒளிக் என்பவரது தலைமையில் நடந்த ஆய்வில் அறியப்பட்டன.
நாளாந்தத்தேவை
வெவ்வேறு நாட்டினது துறைசார் நிறுவனங்கள் வெவ்வேறு அளவுகளைப் பரிந்துரை செய்கின்றன. கதிரவ ஒளி போதுமானதாக இருக்காவிடின் பொதுவாக பரிந்துரை செய்யப்படும் நாளாந்தத்தேவையின் அளவு போதாது.
அலகு மாற்றம் : 1 µg = 40 IU and 0.025 µg = 1 IU
உணவு மூலம்
சிலவகை உணவுப்பொருட்களில் இருந்து மட்டுமே உயிர்ச்சத்து டியைப் பெற்றுக்கொள்ள முடியும். கதிரவ ஒளி மூலம் பெற்றுக்கொள்ளப்படுவதே பெரும்பான்மையானவர்களுக்கு பிரதானமான உயிர்ச்சத்து டியின் மூலம் ஆகும்.
உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்)
பூஞ்சைகள், குறிப்பாக காளான் வகைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். காளான் வகைகளை புறவூதாக் கதிர் வினைக்குட்படுத்துவது மூலம் அவற்றில் உள்ள உயிர்ச்சத்து டி அளவைக் கூட்ட முடியும்.
புறவூதாக்கதிருக்கு உட்படுத்தப்பட்ட காளான் , போர்டோபெல்லோ, சமைக்காதது: உயிர்ச்சத்து டி2: 11.2 μg (446 IU)
புறவூதாக்கதிருக்கு உட்படுத்தப்பட்ட காளான் , போர்டோபெல்லோ, தீயில் வாட்டியது: உயிர்ச்சத்து டி2: 13.1 μg (524 IU)
காளான் , போர்டோபெல்லோ, சமைக்காதது: உயிர்ச்சத்து டி2: 0.3 μg (10 IU)
தாவரங்கள் - குதிரை மசால் (அல்ஃபல்ஃபா): 4.8 μg (192 IU) உயிர்ச்சத்து டி2, 0.1 μg (4 IU) உயிர்ச்சத்து டி3 (100 கிராமுக்கு)
உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்)
சில நாடுகளில் பால், பழச்சாறுகள், தயிர் (யோகர்ட்) போன்ற அன்றாடம் உட்கொள்ளப்படும் உணவுவகைகளில் உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகின்றது.
மரக்கறி மூலம்
இலைக்கன்
கிளடோனியா ஆர்பசுகுலா: உயிர்ச்சத்து டி3யின் அளவு 0.67 தொடக்கம் 2.04 μg வரை.
விலங்கு மூலம்
மீன் ஈரல் எண்ணெய் (காட் ஈரல் எண்ணெய்): 4.5 g (1 தேக்கரண்டி) இலிருந்து 450 IU (100 IU/g) உயிர்ச்சத்து டியைப் பெறலாம்
கொழுப்பு மீன் இனங்கள்:
சாமன் மீன், சமைத்தது, 85 g (3 oz) இலிருந்து 444 IU (5.2 IU/g)
மக்கரல், சமைத்தது, 85 g இலிருந்து 390 IU (4.6 IU/g)
தூனா, எண்ணெயில் கலனடை செய்யப்பட்ட மீன்கள், 100 g இலிருந்து 269 IU (2.7 IU/g)
முட்டையின் நிறை 61 g ஆக இருந்தால், சமைத்த முட்டை மஞ்சட்கருவில் 44 IU (0.7 IU/g)
சமைத்த மாட்டு ஈரல் 85 g இலிருந்து 42 IU (0.5 IU/g)
உசாத்துணைகள்
உயிர்ச்சத்துக்கள்
மேற்கோள் வழு-Defined multiple times
|
4747
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
மக்னீசியம்
|
மக்னீசியம் (Magnesium) ஒரு தனிமம் ஆகும். இது Mg என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 12. அணு நிறை 24.31. இதன் பொதுவான உயிர்வளியேற்ற எண்: +2. காரத்தன்மையுள்ள மக்னீசியம் புவியில் அதிகம் கிடைக்கும் தனிமங்களில் எட்டாவது ஆகும். புவி ஓட்டின் எடையில் இது 2% ஆகும்.
மனித உடலில் மக்னீசியத்தின் பங்கு
பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. மக்னீசியம் உலர் அத்திப் பழம், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது. ஒரு சராசரி பன்முக உயிர்ச்சத்து (multi-vitamin) மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350 மில்லிகிராமுக்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும் ஏற்படும்.
கண்டுபிடிப்பு
1808 ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார். இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார். நீர் மூலக்கூறு நீக்கப்பட்ட மக்னீசியம் குளோரைடை உருக்கி மின்னாற்பகுப்பு மூலம் மக்னீசியத்தை உற்பத்தி செய்ய முடியும். கார்பனை 2000 டிகிரி C வரை சூடு படுத்தி மக்னீசிய ஆக்சைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு உட்படுத்தி, வெளியேறும் மக்னீசிய ஆவியை ஹைட்ரஜன் வெளியில் சுருக்கி மக்னீசியத்தை உற்பத்தி செய்யலாம்.
பண்புகள்
பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் மக்னீசியம் 8 வது இடத்தில் உள்ளது. இது இலேசான, பளபளப்புடன் கூடிய வெள்ளி போன்ற உலோகமாகும். இது அலுமினியத்தைக் காட்டிலும் இலேசானது. இரும்பின் அடர்த்தியில் 9 ல் 2 பங்கும், அலுமினியத்தின் அடர்த்தியில் 3ல் 2 பங்கும் உள்ளது. இது கடல் நீரில் அதிகம் உள்ளது. கடல் நீரில் இது மக்னீசியம் குளோரைடாகவும் மக்னீசியம் சல்பேட்டாகவும் கரைந்துள்ளது. கடல் நீரில் அதிகமுள்ள சோடியம் குளோரைடுக்கு அடுத்து அதிகமாக உள்ளது மக்னீசியம் குளோரைடும் அடுத்ததாக மக்னீசியம் சல்பேட்டும் ஆகும். பொதுவாக பூமியில் கிடைக்கும் கடின நீரில் இந்த மக்னீசிய உப்புக்கள் கரைந்துள்ளன. கடின நீரில் சோப்பு நுரை வளம் தருவதில்லை. மெல்லிய கடின நீர் குடிப்பதற்குச் சுவையானது. கால்சிய உப்புக்களை விட மக்னீசிய உப்புக்கள் இரும்பை அரிக்கும் தன்மை கொண்டவை. மக்னீசியம் ஓரளவு மிதமாக வினை புரியக் கூடியது. வறண்ட காற்றில் நிலையானது. ஈரக் காற்றில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இதைக் காற்றில் எரிக்கும் போது கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் எரிகிறது. நைட்ரஜனுடன் நேரடியாக வினை புரியும் வெகு சில தனிமங்களுள் மக்னீசியமும் ஒன்று.
மக்னீசியம் பெரும்பாலான அலோகங்களுடன் வினை புரிகிறது. மக்னீசியம் ஆக்சிஜன் மீது கொண்டுள்ள நாட்டம் மிகவும் அதிகம். அதனால் கார்பன்டை ஆக்சைடு வளிமத்தில் கூட இது தொடர்ந்து எரிகிறது. மக்னீசியத்தை எரியச் செய்ய அதைப் பற்ற வைக்க வேண்டும் என்பதில்லை. ஒரு எரியும் தீக்குச்சியை அதனருகே வைத்திருந்தாலே போதும். குளோரின் நிறைந்த வெளியில் இது அறை வெப்ப நிலையிலேயே நிகழ்ந்து விடுகிறது. மக்னீசியம் எரியும் போது புற ஊதாக் கதிர்களையும், வெப்பத்தையும் தருகிறது. இந்த வெப்பம் மிகவும் அதிகமானது. 4 கிராம் மக்னீசியம் 250 மி.லி குளிர்ந்த நீரைக் கொதிக்க வைக்கப் போதுமானது. காற்று வெளியில் மக்னீசியம் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் அது பொலிவின்றி மங்கிப் போய் விடுகிறது. இந்த ஆக்சைடு படலம் மக்னீசியத்தின் உட்புறம் மேலும் ஆக்சிஜனேற்றம் பெறாமல் தடை செய்யும் ஒரு காப்பாக அமைகிறது. இதன் வேதிக் குறியீடு Mn. இதன் அணு எண் 12, அணு நிறை 24.31,அடர்த்தி 1740 கிகி/கமீ உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 923.2 K, 1373 K ஆகும். மக்னீசியத்தின் உருகு நிலை குறைவே என்றாலும் அதை உருக்குவது மிகவும் கடினம். ஏனெனில் உருகுவதற்கு முன்பாகவே இது எரிந்து சாம்பலாகி விடுகிறது. தாழ்ந்த அழுத்தத்தில் மந்த வளிம வெளியில் இதை உருக்கலாம்.
பயன்கள்
ஹில்மன் காரணி
மக்னீசியத்தின் உறுதியை கலப்பு உலோகங்கள் மூலம் உயர்த்திக் கொண்டு அதைக் கட்டுமானப் பொருளாக பயன்படுத்துகின்றார்கள். இதற்கு துத்தநாகம், அலுமினியம் மற்றும் மாங்கனீசு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அலுமினியமும் துத்தநாகமும் கலப்பு உலோகத்திற்கு வலுவூட்டுகின்றன. மாங்கனீசு உலோக அரிமானத்தை தடுக்கிறது. இக்கலப்பு உலோகத்தினால் எடை குறைவான ஆனால் வலிமை மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இது தானியங்கு வண்டிகள் கனரக மற்றும் ரயில் வண்டிகள், விமானங்களின் உதிரி பாகங்கள் செய்யவும் நெசவுத் தொழில், அச்சுத் தொழிலில் பயன்படவும் செய்கிறது. உயர் வெப்ப நிலையை ஏற்கும் தன்மை, அடித்து கம்பியாக நீட்டக் கூடிய தன்மைகளை அதிகரிப்பதற்கும், ஆக்சிஜனை உட்கவரும்
தன்மையைக் குறைப்பதற்கும் மக்னீசியக் கலப்பு உலோகம் பயன்படுகிறது
இரும்பு, சிலிகான், நிக்கல் போன்றவை மக்னீசியக் கலப்பு உலோகத்தின் பட்டறைப் பயன்பாட்டை மட்டுப்படுத்துவதுடன் அரிமானத்திற்குத் தரும் எதிர்ப்பையும் சீர்குலைத்து விடுகின்றன. உயர் வெப்ப நிலையில் ஆக்சிஜனிறக்கியாக மக்னீசியம் பல தனிமங்களின் உற்பத்தி முறையில் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வனேடியம், குரோமியம், டைட்டானியம் போன்றவற்றைச் சொல்லலாம். தூய சிலிகான் மற்றும் போரானை அவற்றின் நிலையான ஆக்சைடுகளிலிருந்து பிரித்தெடுக்க மக்னீசியத்தின் இப்பண்பு உதவியாயிருக்கிறது. உருகிய இரும்புக் குழம்போடு மக்னீசியத்தைச் சேர்க்க இரும்பின் பயன்பாடு மேம்படுகிறது. அதனால் இரும்பின் கட்டமைப்பு, பட்டறைப் பயன்பாடு மேலும் சிறப்படைகின்றன. மக்னாலியம் (மக்னீசியம் + அலுமினியம் ) எலெக்ட்ரான் (மக்னீசியம் + துத்தநாகம் ) போன்ற கலப்பு உலோகங்கள் இலேசானவை ஆனால் உறுதியானவை.
மக்னீசியம் ஆக்சைடு, உயர் வெப்பம் தாங்க வல்ல செங்கல், பீங்கான், இரப்பர் இவற்றின் உற்பத்தி முறையில் பயன்படுகிறது. அணு உலைகளின் உட்சுவர்களைக் கட்டமைக்கப் பயன்படுகிறது.மக்னீசியம் சல்பேட் அரிகாரமாகவும்,கெட்டிச் சாயமாகவும் துணி மற்றும் காகித ஆலைகளில் பயன்படுகிறது தோல் பதனிடவும் உறுதுணையாக உள்ளது.
மருத்துவம்
தூய மக்னீசியம் ஆக்சைடு, நெஞ்சரிப்பு, வயிற்றுப் புளிப்பு மற்றும் அமில நஞ்சுகளுக்கு மருந்தாகிறது. மக்னீசியம் பெர் ஆக்சைடு துணிகளை வெளுப்பூட்டப் பயன்படுகிறது. இது தொற்றுத் தடை மற்றும் நஞ்சுத் தடையாகப் பயன்தருகிறது. நீர் மூலக்கூறு ஏற்றப்பட்ட மக்னீசியம் சல்பேட்டை எப்சம் உப்பு என்பர். இது ஒரு சில வகை பத்துகளுக்கு(rashes) மருந்தாகப் பயன்படுகிறது. மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்தாகவும் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. மக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றிலுள்ள உபரி அமிலத்தை சமப்படுத்திவிடுகிறது என்பதால் நெஞ்சரிப்புக்கு உகந்த மருந்தாகக் கொள்கின்றனர்.
சர்க்கரைப் பாகிலிருந்து சர்க்கரை எடுக்கவும் இது பயன் தருகிறது. மக்னீசியம் கார்பனேட்,பற்பசை, முகப் பவுடர், வெள்ளி மெருகேற்றி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உயிர் வேதியியலில் பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்று தீர்மானிப்பதில் மக்னீசியத்திற்குப் பங்கிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பொட்டாசியம் நிறைந்த உணவைக் கூடுதலாக உட்கொண்டால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும், மக்னீசியம், கால்சியம் அதிகமாக இருந்தால் பெண்ணாகவும் இருக்கும் என்பது இவர்களுடைய ஆய்வு முடிவு.
கோழித் தீவனத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் கோழிகள் இடும் முட்டைகள் உறுதியாக இருக்கின்றன. இதனால் உடைவதினால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படுகிறது. எளிதில் கோபப்படுபவர்களுக்கும், உணர்ச்சி வயப்படுகின்றவர்களுக்கும் இதயத் தாக்கம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இதற்குக் காரணம் கிளர்வுற்ற நிலையில் உடலில் உள்ள மக்னீசியம் எரிந்து போவதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர். தாவரங்களில் ஒளிச் சேர்க்கையைத் தூண்டும் குளோரோபில் என்ற பச்சையத்தில் இந்த மக்னீசியம் பங்கு பெற்றுள்ளது.
உடலின் திசுக்களின் இயக்கங்களுக்கும் என்சைம்களுக்கும் இந்த மக்னீசியம் தேவை. மக்னீசியக் குறைவு தசை இசிப்பு, தசை முறுக்கு போன்ற பாதிப்புக்களைத் தருகிறது. எலும்புகளின் கட்டமைப்பில் மக்னீசியம் பங்கேற்றுள்ளது. நரம்புகளின் வழி சமிக்கைகளைக் கொண்டு செல்ல இது துணை புரிகிறது.
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
Chemistry in its element podcast (MP3) from the வேதியியலுக்கான வேந்திய சங்கம்'s Chemistry World: Magnesium
தனிமங்கள்
காரக்கனிம மாழைகள்
ஒடுக்கிகள்
உணவுப் பட்டியல் கனிமங்கள்
உணவுச் சேர்பொருட்கள்
|
4748
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
இரும்பு
|
இரும்பு ஒரு தனிமம் மற்றும் உலோகம் ஆகும். இரும்பே புவியில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே அண்டத்தில் பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு எண் 26 ஆகும். இரும்பின் பயன்பாடு வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது என்பதால் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறவியலாது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமை வரிசையில் இது நான்காவதாக உள்ளது. ஆனால் பூமியின் உள்ளகம்(Core) உருகிய இரும்பு, நிக்கல் போன்றவற்றால் ஆனது. பெரும்பாலான கோள்களின் உள்ளகங்களில் இரும்பு, நிக்கல் இருப்பதாக இன்றைக்குக் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையில் இரும்பு தனித்துக் கிடைப்பது மிகவும் அரிது. நம் முன்னோர்கள் கனிமத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்டுத்தியதில்லை என்றும், எரிகற்கள் மூலம் கிடைத்த இரும்பையே பயன்படுத்தினார்கள் என்றும் கருதப்படுகிறது. எரிகற்களில் இரும்பு தனித்துக் காணப்படுகின்றது.
நீர் மற்றும் காற்று இவற்றின் முன்னிலையில் இரும்பு உடனடியாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இதையே துருப்பிடித்தல் என்கிறோம். இரும்பின் முக்கியமான கனிமங்கள் ஹெமடைட், மாக்னடைட், லிமோசைட், சிடரைட் போன்றவைகளாகும். இரும்புக் கனிமத்தை பழுக்கச் சூடாக்கி அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, ஈரம், கரிமப் பொருட்களை வெளியேற்றிவிடுவார்கள். பின்னர் இதை நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் இவற்றுடன் கலந்து வெடிப்புலையில் 1500 டிகிரி C வரை சூடுபடுத்துவார்கள். உருகிய குழம்பில் மிதக்கும் கழிவுகளை அகற்றி விட்டு இரும்பை வார்த்து வார்ப்பிரும்பாகப் (Cast iron or Pig iron) பெறுவார்கள். வார்ப்பிரும்பில் 4 முதல் 5 விழுக்காடு கார்பன், 1 முதல் 2 விழுக்காடு சிலிகான் மற்றும் மாங்கனீசு போன்ற வேற்றுப்பொருட்கள் இருப்பதால் இரும்பு எளிதில் உடையக் கூடியதாக இருக்கிறது. இதனைப் பட்டறைப் பயனுக்கு உள்ளாக்க முடியாததால் இப்பொருட்களை அகற்றிப் பயன்படுத்துவர். ஆக்சிஜன்வளியில் இத்தாதுவினை எரித்து அதிலுள்ள கார்பனை அகற்றுவார்கள். ஓரளவு தூய்மைப்படுத்தப்பட்ட இரும்பைத் தேனிரும்பு (Wrought iron) மற்றும் எஃகு (Steel) என்பர். எஃகானது வார்ப்பிரும்பு மற்றும் தேனிரும்பு இவற்றின் பண்புகளை ஒருசேரக் கொண்டுள்ளது. ஏனெனில் வார்ப்பிரும்பைக் காட்டிலும் குறைவாக ஆனால் தேனிரும்பைக் காட்டிலும் கூடுதலாகக் கார்பனை எஃகு பெற்றுள்ளதே காரணமாகும். வெப்பத்தைக் கொண்டு கார்பனின் சேர்க்கை விகிதத்தை தேவையான அளவு மாற்றி எஃகிற்கு வேறுபட்ட கடினத் தன்மையை அளிக்கமுடியும். இதைப் பதப்படுத்துதல் என்பர்.
வரலாற்று நிறுவலில் இரும்பின் பங்கு
தொல்லியல் துறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கணிப்பதில் இரும்பின் பங்கும் முக்கியமானது. உலகத்தில் இரும்பு அறிமுகமான காலமாக கருதப்படும் காலத்தை இரும்புக் காலம் என்கின்றனர். இக்காலம் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் அமையப்படுகின்றன. இக்காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டு தொடங்கி கிருத்து சகாப்தம் தொடங்கும் வரையில் அமைந்தது. தமிழகத்திலுள்ள தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் மற்றும் இரவிமங்கலம் தொல்லியற்களம் போன்றவை மிகப்பரந்த பரப்பளவில் இரும்புக்காலத்தின் எச்சங்களை சுமந்து கொண்டிருக்கின்றன. இரும்பு பிரித்தெடுத்து பயன் படுத்தத் தொடங்கிய காலம் நாகரிக வளர்ச்சியில் ஒரு முக்கிய காலகட்டமாக இருந்ததால் அதை இரும்பு யுகம் (Iron age) என்பர் (1100 BC). இது வெண்கல யுகத்திற்குப் (Bronze age – 3000 BC) பிற்பட்டது. இரும்பு மக்களால் வெகுவாகப் பயன்படுத்தப்படும் உலோகமாகும். குண்டூசி முதல் பெரிய கப்பல் வரை இதனால் செய்யப்படாத பொருட்களே இல்லை எனலாம். இரும்பிற்கு வலிமையூட்டி பெறப்பட்ட எஃகு கலப்பு உலோகங்களினால் ஆன பயன்பாட்டை விரிவடையச் செய்தது
இரும்பின் பண்புகள்
இலத்தீன் மொழியில் பெர்ரம் என்றால் இரும்பு என்ற கடினத் தன்மைமிக்க பொருள். இதிலிருந்தே இத்தனிமத்திற்கு வேதிக் குறியீட்டையும் சேர்மங்களுக்கான பெயரையும் இத்தனிமன் பெற்றது. தூய இரும்பு வெள்ளி போன்ற பளபளப்புடன் கூடிய உலோகமாகும்.
இதன் அணு எண் 26 அணு எடை 53.85 அடர்த்தி 7860 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1812 K, 3073 K ஆகும்.இரும்பு விரைவில் துருப்பிடிக்கிறது. இது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து பெரிக் ஆக்ஸைடாக மாறி மேற்பரப்பில் காரையாகப் படிவதாகும்
செந்நிறமுடைய இது நுண்துளை உடையதாலும், புறப்பரப்பில் அழுத்தமாக ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதாலும் காலபோக்கில் இது உதிர்ந்து விடுகிறது. இதனால் அடித் தளங்கள் துருப் பிடிப்பதற்கு உள்ளாகின்றன. எனவே இரும்புப் பொருட்களைச் சரியாகப் பாராமரிக்காது விட்டால் அவை துருப் பிடித்துச் சிதைந்து விடும். எஃகோடு கலப்பு உலோகம் செய்வதற்கு நிக்கல், குரோமியம், வனேடியம், டங்ஸ்டன். மாங்கனீசு, சிலிக்கான், கோபால்ட், மாலிப்டினம் போன்ற உலோகங்கள் பயன்படுகின்றன. இவற்றின் சேர்மான விகிதத்தை கலப்பு உலோகத்தின் சிறப்புப் பயனுக்கு ஏற்ப தக்கவாறு மாற்றிக் கொள்கின்றனர்.
இயந்திரவியல் பண்புகள்
இரும்பின் வகைகள்
எஃகு – இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். இதில் இரும்புடன் சிறிதளவு கரிமமும் (0.2% முதல் 2.1% எடையில்) கலந்திருக்கும்.
தேனிரும்பு – எஃகை விட குறைந்த கரி சேர்ந்த இரும்பு கலவை மாழை ஆகும்.
வார்ப்பிரும்பு – இரும்பு அல்லது இரும்புக் கலவையை நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வார்ப்பு அல்லது அச்சுகளில் ஊற்றி திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் இரும்பு வகை ஆகும்.
இரும்பு தயாரித்தல்
இரும்பு அல்லது எஃகு உற்பத்தி இரண்டு முக்கிய கட்டங்களை உள்ளடக்கிய ஒரு செயல்முறை ஆகும். முதல் கட்டத்தில் கச்சா இரும்பு ஒரு ஊது உலையில் தயாரிக்கப்படுகிறது. மாற்றாக, இது நேரடியாக ஒடுக்க முறையிலும் தயாரிக்கப்படலாம். இரண்டாவது கட்டத்தில் இக்கச்சா இரும்பு வார்ப்பிரும்பாக மாற்றப்படுகிறது .
ஒரு சில வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும் போது தூய இரும்பு ஆய்வகங்களில் சிறிய அளவில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. முதலில் இரும்பு ஆக்சைடு அல்லது இரும்பு ஐதராக்சைடுடன் ஐதரசனைச் சேர்த்து இரும்பு பென்டாகார்பனைல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இதை 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கிச் சிதைத்து தூய இரும்புத்தூள் தயாரிக்கப்படுகிறது. பெர்ரசு குளோரைடு சேர்மத்தை மின்னாற்பகுப்பு செய்தும் தூய இரும்பு தயாரிக்கலாம்.
ஊது உலையில்
Fe2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஏமடைட்டு மற்றும் Fe3O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டமேக்னடைட்டு என்ற இரும்புத் தாதுக்களில் இருந்து தொழிற்சாலை இரும்பு உற்பத்தி தொடங்குகிறது. இத்தாதுக்களுடன் கார்பன் சேர்த்து சூடுபடுத்தப்படும் வினையான உயர்வெப்பக்கார்பன் வினையினால் தாதுக்கள் இரும்பாக ஒடுக்கப்படுகின்றன. இம்மாற்றம் ஊது உலையில் சுமார் 2000° செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது. கல்கரி வடிவக் கார்பன் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் முறையில் சுண்ணாம்புக்கல் இளக்கியாகச் சேர்க்கப்படுகிறது. இளக்கியின் மூலமாக சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன. கல்கரியும் சுண்ணாம்புக்கல்ல்லும் உலையின் மேற்புறமாக தாதுக்களுடன் சேர்க்கப்படுகின்றன. வெப்பக் காற்று ஊது உலையின் கீழ்ப்புறமாக வேகமாகச் செலுத்தப்படுகிறது.
ஊது உலையில் கல்கரி ஆக்சிசனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு உருவாகிறது.
2 C + O2 → 2 CO
கார்பன் மோனாக்சைடு தாதுக்களை உருகிய இரும்பாகக் குறைக்கிறது.
Fe2O3 + 3 CO → 2 Fe + 3 CO2
சிறிதளவு இரும்பு நேரடியாக கல்கரியுடன் வினைபுரிந்து இரும்பாக ஒடுக்கப்படுகிறது.
2 Fe2O3 + 3 C → 4 Fe + 3 CO2
உருகலில் இடம்பெற்றுள்ள சுண்ணாம்புக்கல், கால்சியம் கார்பனேட்டு, டோலமைட்டு போன்ற இளக்கிகள் கார்பன் மோனாக்சைடாக மாறுகின்றன. தாதுவின் தன்மைக்கேற்றப்ப இளக்கிகளும் மாறுபடுகின்றன.
CaCO3 → CaO + CO2
கால்சியம் ஆக்சைடு சிலிக்கன் டையாக்சைடுடன் சேர்ந்து கசடாக மாற்றப்படுகிறது.
CaO + SiO2 → CaSiO3
செயல்முறையில் உருவான இரும்பும், கசடும் தனித்தனியாக வெளியேற்றப்படுகின்றன.
நேரடி இரும்பு ஒடுக்கம்
நேரடியாக இரும்பு தயாரித்தல் சூழலுக்கு தகுந்தவாறு பின்பற்றப்படுகிறது. நேரடி இரும்பு ஒடுக்கம் முறை மாற்று முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை வாயு பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பன் மோனாக்சைடு உருவாக்க்கப்படுகிறது.
2 CH4 + O2 → 2 CO + 4 H2
இவ்வாயு இரும்புத்தாதுவுடன் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்படுவதால் இரும்பு உருவாகிறது.
Fe2O3 + CO + 2 H2 → 2 Fe + CO2 + 2 H2O
சுண்ணாம்புக்கல் இளக்கி சேர்க்கப்பட்டு சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன.
இவற்றுள் பல உட்பிரிவுகள் உள்ளன.
இரும்பின் பயன்கள்
இரும்பு மற்றும் எஃகு ஆகியவை உறுதியானவை என்பதால் இயந்திரங்கள், அவற்றின் கட்டுமானத்திற்குத் தேவையான உதிரி பாகங்கள், கடப்பாரை, உளி போன்ற வெட்டுங் கருவிகள், கட்டுமானப் பொருட்கள், கொள்கலன்கள், இயந்திரப் பொறிகள், குழாய்கள், கலப்பு உலோகங்கள் என இவற்றைக் கொண்டு செய்யப்படும் பொருள்களால் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாகும். அதனால் இரும்பின் தேவை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரிந்துக் கொண்டே வருகிறது. இன்றைக்கு உலோக உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இரும்பே.
இரும்பு நிலைக்காந்தம், மின்காந்தங்கள் செய்வதற்கு முதன்மைப் பொருளாக விளங்குகிறது. இரும்பு, நிக்கல், கோபால்ட் இவை மூன்றும் பெரோகாந்தப்(Ferro) பொருட்களாகும். இரும்பிலுள்ள் எலெக்ட்ரானின் தற்சுழற்சியும் சுற்றியக்கமும் இணைந்து அதற்கு உயரளவு காந்தத்தன்மையை வழங்கியுள்ளன. மேக்னடைட் கனிமம் இயற்கையில் கிடைக்கும் காந்தமாகும் இது பெரோ சோ பெரிக் ஆக்சைடாகும். இது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் மட்டும் கரைகிறது .
இரத்தத்திலுள்ள சிவப்பணுவில் ஹிமோகுளோபின் என்ற நிறமி உள்ளது .இதில் இரும்பு முக்கியப் பங்கேற்றுள்ளது .இது நுரையீரலிலிருந்து ஆக்சிஜனைப் பெற்று கடத்தி எடுத்துச் சென்று உடலில் தேவையான பாகங்களுக்கு அளிக்கிறது. ஆக்சிஜன் இல்லாவிட்டால் சத்துப் பொருட்களிலிருந்து ஆக்சிஜனேற்றம் மூலம் ஆற்றலைப் பெறமுடியாது. மேலும் அப்போது கிடைக்கும் கார்பன் மோனாக்சைடை வெளியேற்றவும் இது துணை செய்கிறது. ஹிமோகுளோபினில் உள்ள இரும்பு அணுவோடு இந்த கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜனை விட 200 மடங்கு வலுவாக இணைந்து கொள்வதால் இது இயலுவதாகின்றது. கார்பன் மோனாக்சைடு நஞ்சாக இருப்பதற்கு இதுவே காரணமாயிருக்கிறது. வெளியில் ஹிமோகுளோபின் கார்பன் மோனாக்சைடுடன் தெவிட்டி விடுவதால் ஆக்சிஜனைக் கடத்தி எடுத்துச் செல்ல ஹிமோகுளோபின் முனைவதில்லை.
பலவிதமான இரும்புச் சேர்மங்கள் பல்வேறு விதமாகப் பயன்படுகின்றன. பெரிக் ஆக்சைடு சிவப்பு நிறமியாக வண்ணங்களில் பயன்படுகிறது. பரப்பை மெருகூட்டவும், இரத்தினக் கற்களை பளபளப்பூட்டவும் இதைக் கையாளுகின்றார்கள் பெரிக் குளோரைடு உறைந்து கட்டியாகி இரத்தக் கசிவைத் தடுத்து நிறுத்த பயன்படுகின்றது. பெரஸ் சல்பேட் என்பது நீர்த்த கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட இரும்பாகும் இது மை தயாரிப்பதற்கும் தோல் பதனிடுவதற்கும் சாயப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றது ,
இரும்பின் அனுக்கருவே அதிகமான பினைவாற்றல் வீதத்தைப் பெற்றுள்ளது. அதனால் பிற எளிய மற்றும் கனமான அணுக்களின் அணுக்கருக்களை விட இரும்பு நிலைப்புத் தன்மை மிக்கது எனலாம். விண்மீன்களில் உயர் வெப்ப நிலையில் நிகழும் அணுக் கருப்பிணைப்பு வினைகள் அதற்கு ஆற்றல் மூலமாய் இருக்கின்றன .இந்த வினை, பிணைந்து விளையும் அணுக்கரு இரும்பாய் இருக்குமட்டும் தொடர்கிறது. அதாவது ஒரு விண்மீன் இரும்பாய் தொகுப்பாக்கம் செய்யப்படும் வரை ஆற்றலை வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அது அழியத் தொடங்குகிறது
உடல்நலத்தில் இரும்பின் பங்கு
குழந்தைகள், விடலைகள், குழந்தை பெறும் வயதையடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மாதவிடாய் நிறுத்தம்' கடந்த பெண்களுக்கும் இந்தக் குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களைப் பெறுவதையும் தடுத்துவிடும்.
உவமை கூறுதல்
மனதின் வீரத்தையும், உடலின் வலுவையும் இரும்போடு தொடர்புப்படுத்தி உவமைகள் கவிஞர்களால் கூறப்படுகின்றன. இரும்பு இதயம் படைத்தவள், இரும்பைப் போல் உடலுறுதி படைத்தவன், இரும்புத் திரை போல் அமைப்பைக் கொண்ட நாடுகள் போன்றவை இரும்பைத் தொடர்புபடுத்திய உவமைகளாகும்.
மேற்கோள்கள்
உலோகங்கள்
தனிமங்கள்
தாண்டல் உலோகங்கள்
கட்டிடப் பொருட்கள்
கனசதுரக் கனிமங்கள்
உணவுப் பட்டியல் கனிமங்கள்
|
4750
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
|
ஆந்த்ராக்ஸ்
|
ஆந்த்ராக்ஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு தீவிரத் தொற்று நோய் ஆகும். இது 'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus anthracis) எனும் கோலுரு நுண்ணுயிரால் ஏற்படுகிறது. இந்நோய் கால்நடைகளுக்கும், தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டிகளுக்கும் மட்டுமே ஏற்படக்கூடியது. நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புண்டு. இது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்படும்.
எனினும் இது எளிதில் பரவக்கூடிய நோய் அல்ல. காற்றின் மூலம் தானாக பரவுவது இல்லை. மேலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதும் இல்லை. தடுப்பூசி மூலம் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.
தற்போது உயிரிப் போர்முறை' எனும் நோய்க் கிருமிகளை ஏவி எதிரி நாடுகளைத் தாக்கும் முறையில் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் பயன்பாட்டைப் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
வரலாறு
ஆந்த்ராக்ஸ் மிகப் பழங்காலத்திலேயே அறியப்பட்ட நோய்களில் ஒன்று. ஒரு காலத்தில் பிளேக் போன்று பேரழிவை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. கோலுரு நுண்ணுயிர்களால் உண்டாகும் நோய்களில் ஆந்த்ராக்ஸ் உண்டாகும் கோலுரு நுண்ணுயிர் தான் முதன்முதலில் பிரித்து கண்டரியப்பட்டது.
1850ம் ஆண்டு ஆந்த்ராக்சால் பாதிக்கப்பட்ட ஆட்டின் இரத்தத்தை நுண்ணோக்கி மூலம் ஆராயும் போது சி.ஜெ. டவைன் (C.J. Davaine) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி உருட்டுக் கம்பி வடிவிலான இந்த கோலுரு நுண்ணுயிர்களைக் கண்டுபிடித்தார். புகழ்பெற்ற பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் லூயிஸ் பாஸ்டர் இந்தக் கிருமிகளால் தான் ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுகிறது என்பதை நிரூபித்ததோடு 1881ம் ஆண்டில் இந்த நோய்க்காக விலங்குகளுக்கு போடப்படும் தடுப்பூசியையும் உருவாக்கினார். இதற்கு சில வருடங்கள் முன்பாக 1877ல் ராபர்ட் கோச் எனும் ஜெர்மானிய விஞ்ஞானியும் எலிகளுக்கு இந்தக் கிருமிகளை ஊசி மூலம் செலுத்தினால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுவதை உறுதிப்படுத்தினார்.
1979ம் ஆண்டு ரஷ்யாவில் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் (தற்போதைய யெகாடெரின்பர்க் (Yekaterinburg)) என்னுமிடத்தில் 'உயிரியல் ஆயுதத் தொழிற்சாலை' என்று கருதப்படும் கட்டிடத்திலிருந்து விபத்து மூலம் காற்றில் இந்தக் கிருமிகள் பரவியதால் சுமார் 66 பேர் இறந்தார்கள் என்று கூறப்படுகிறது. இங்கு வெளிப்பட்ட கிருமிகள் சுமார் நான்கு புதிய ரகங்கள் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் 1998ல் அறிவித்தனர். இதனால் தடுப்பூசிகளால் தடுக்கப்படாத புதிய ரகங்கள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
1991ம் ஆண்டு நடந்த வளைகுடா போரில், ஈராக் நாடு உயிரியல் ஆயுதங்களால் தாக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டதால் சுமார் 150,000 வீரர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது. 2001ல் உலக வணிக மையம் மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை கடிதம் மூலம் அனுப்பினார்களா என்றும் ஆராயப்படுகிறது.
ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வாழும் விதம்
இது மண்ணில் பல நூற்றாண்டுகளாகக் கூட அழியாமல் நுண்ணிய பூஞ்சை கூடு கட்டி வாழக் கூடியது. இந்த கூடுகளை ஒரு வித திரவ முலாம் பூசுவதால் மிக அதிக வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும்.
விலங்குகளில் ஆந்த்ராக்ஸ்
ஆந்த்ராக்ஸ் பூஞ்சைக் கூடுகள் உள்ள மண்ணில் வடிந்து வந்த நீரைக் குடிக்கும் விலங்குகளுக்கு இந்த நோய் பரவுகிறது. நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் இது மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது.
நோயுற்ற விலங்குகளுக்கு தடுமாற்றம், இரத்தப் போக்கு, வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு உடனடியாக இறக்கவும் வாய்ப்புண்டு. தடுப்பூசி மூலமும், நோய் ஏற்பட்டவுடன் மருந்துகள் மூலமாகவும் விலங்குகளைக் காப்பாற்ற முடியும்.
மனிதர்களில் ஆந்த்ராக்ஸ்
மனிதர்களில் இந்த நோய் மூன்று விதங்களில் தோன்றக் கூடியது. தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு.
இதில் தோல் வியாதி, உடலில் காயங்கள், வெடிப்புகளில் நேரடியாக கிருமிகள் பட்டால் மட்டுமே ஏற்படக் கூடியது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல்கள், உரோமங்கள், மாமிசத்தைக் கையாளுபவர்களுக்கு வரக் கூடியது. தோலில் கருமையான கொப்புளங்கள் ஏற்பட்டு, முற்றிய நிலையில் வெடித்து நடுவில் கருநிறம் கொண்டதாக இருக்கும். இவைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவப் பராமரிப்பில் இல்லாதவர்களில் சுமார் 20 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது.
சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் சற்று அபாயகரமானது. இவ்வகை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் சளி அல்லது ஃப்ளு பாதிப்பை போன்று - உடல் வலி, காய்ச்சல், அசதி, இருமல் அல்லது இலேசான நெஞ்சுவலி ஆகியவை தென்படும். பாதிக்கப்பட்டவருக்கு தடுப்பூசி அல்லது மருந்துகள் உடனடியாக அளிக்கப்படாவிட்டால் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு தேவைப்படும் 'Ciproflaxacin', பெனிசிலின் போன்ற மருந்துகள் நாம் பொது மருத்துவத்திலேயே அதிகம் பயன்படுத்துவதால் எளிதில் கிடைக்கக் கூடியது.
பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும். இவ்வகையில் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதி ஆகியவை ஏற்படலாம். இவ்வகை பாதிப்பில் சுமார் 20 முதல் 60 சதம் வரை இறப்பில் முடிகிறது.
அஞ்சல் மூலம் ஆந்த்ராக்ஸ் - பாதுகாப்பு முறைகள்
தீவிரவாதிகளால் பொது மக்களிடையே ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை பரப்ப, இந்த கிருமிகள் அடங்கிய பூஞ்சைக் கூடுகள் (spores) பொடி வடிவில் கடித உறையில் வைத்து அனுப்பப்படுவதாக நம்பப்படுகிறது. உறையை பிரிக்கும் போது பொடி சிதறுவதால் காற்றில் கலந்து அருகில் இருப்போருக்கு சுவாசம் மூலம் பரவும் வாய்ப்பு ஓரளவுக்கு உண்டு.
பாதுகாப்பு அணுகுமுறைகள்
கடிதத்தை பாலிதீன் உறையில் பாதுகாப்பாக மூடி வைக்கவும்
கைகளை நீர் மற்றும் சலவைக்கட்டி பயன்படுத்தி கழுவவும்.
உங்கள் உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறையை நாடவும்.
பொடி வெளிப்புறமாக படிந்திருந்தால் அல்லது சிந்தியிருந்தால்:
பொடியை சுத்தப்படுத்த முயற்சிக்காதீர்கள். மற்றவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்
ஆடைகள் முதலியவற்றை தட்டாதீர்கள்.
கைகளை நீர் மற்றும் சலவைக்கட்டி பயன்படுத்தி கழுவவும்.
உடனடியாக உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
ஆடைகள் முதலியவற்றை உதறாமல் அகற்றி பாலிதீன் உறையில் மூடி வைக்கவும்.
நீர் மற்றும் சலவைக்கட்டி பயன்படுத்தி குளித்து விடுவது நல்லது. ப்ளீச்சிங், கிருமி நாசினி முதலியவற்றை உபயோகிக்காதீர்கள்.
பொடி, படக் கூடிய அளவில் யார் யாரெல்லாம் நின்றிருந்தார்கள் என்று பட்டியலிட்டு சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் முதலியவை ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட வேண்டும்.
பொதுவாக இந்தக் கிருமிகள் காற்றில் பரவுவதில்லை. இந்தப் பொடி காற்றில் வேகமாக உதறப்பட்டாலோ அல்லது தெளிக்கப்பட்டாலோ சுற்றியிருப்போரை நோய் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம். ஆகவே மிகச் சிறிய குண்டு வெடிப்பின் மூலம் இந்தக் கிருமிகள் காற்றில் தெளிக்கப்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்த இயலும். இவ்வகை குண்டுகளை தயாரிக்க தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
தொற்று நோய்கள்
|
4751
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
|
சித்த மருத்துவம்
|
சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அனுபவ அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டும், நவரத்தினம், நவலோகங்கள், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம் முதலிய தாதுப் பொருட்களைக் கொண்டும், சங்கு, பலகறை, நண்டு முதலிய சீவப் பொருட்களைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியன கொண்டும், தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்று விடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்றவற்றை ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.
சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)
மனித சரீரத்தை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்கக் காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது.
#"உண்டிமுதற்றே உணவின்பிண்டம்
#உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - புறநானூறு,18"
நாம் உண்ணும் உணவே உயிர் உடலிலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.
நம் உடலில் வளி, அழல் மற்றும் ஐயம் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.
வாதம் சம்பந்த பிணிகள்
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
பித்தம் சம்பந்த பிணிகள்
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
சிலேத்துமம் சம்பந்த பிணிகள்
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றி திருக்குறள் கூறுவது,
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்'
(நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.)
மருந்து
சித்த மருத்துவத்தில் உள் மருந்து 32, வெளி மருந்து 32 என 64 வகை மருந்து வடிவங்கள் (forms of medicine) உள்ளன.
மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்
மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்ப தினிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே
(-- திருமூலர் திருமந்திரம் --)
திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களைப் போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும், மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்கவும் வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.
அகமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன
“உள்மருந்து சுரசஞ்சாறு குடிநீர் கற்கம்
உட்களி அடை ஓர்சாமம்
உயர்சூரணம் பிட்டு வடகம் வெண்ணெய் நான்கின்
உயிர் மூன்று திங்களாகும்
விள் மணப்பாகு நெய் இரசாயனம் இளகம் நால்
மேவும் அறுதிங்கள் எண்ணெய்
விரலிடும் உயர்ந்த மாத்திரை கடுகு பக்குவம்
மிளிறும் தேனுாறல் தீநீர்
கொள்ளாறும் ஓராண்டு மெழுகோடு குழம்பு ஐந்து
கோப்பதங்கம் பத்தாகும்
குருதிபொடி எழுபானோடு ஐந்தாண்டு நீறு கட்டு
உருக்கு களங்கு நானுாறு
எள்ளிடாச் சுண்ணம் ஐநுாறு கற்பம் சத்து
குருகுளிகை மிக்க ஆயுள் என்று
எவரும் மகிழ்ச்சித்தர் முப்பத்திரண்டக மருந்து
இசைத்தவராய் உள்ளனவரோ”
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)
அகமருந்துகளும், அவற்றின் எடுத்துக்காட்டுகளும்:
1.சுரசம் - இஞ்சி சுரசம்
2.சாறு - கற்றாழைச்சாறு
3.குடிநீர் - ஆடாதோடைக்குடிநீர்
4.கற்கம் -கீழாநெல்லிக்கற்கம்
5.உட்களி -கடுகு உட்களி
6.அடை - துாதுவளை அடை
7.சூரணம் - அமுக்கிராச்சூரணம்
8.பிட்டு
9.வடகம் -தாளிசாதி வடகம்
10.வெண்ணெய்- குங்கிலிய வெண்ணெய்
11.மணப்பாகு - மாதுளை மணப்பாகு
12.நெய் - ஆடாதோடைநெய்
13.இரசாயனம் - இஞ்சிஇரசாயனம்
14.இளகம்- கேசரிஇளகம்
15.எண்ணெய்- பூரஎண்ணெய்
16.மாத்திரை-பாலசஞ்சீவிமாத்திரை
17.கடுகு -
18.பக்குவம்- பாவனக்கடுக்காய்
19.தேனுாறல் -இஞ்சி
20.தீநீர்- ஓமம்
21.மெழுகு - கிளிஞ்சல் மெழுகு
22.குழம்பு- சாதிஜம்பீரக்குழம்பு
23.பதங்கம் -சாம்பிராணிப்பதங்கம்
24.செந்துாரம்- இரசசெந்துாரம்
25.நீறு அல்லது பற்பம்- முத்துப்பற்பம்
26.கட்டு- இரசக்கட்டு
27.உருக்கு -
28.களங்கு
29.சுண்ணம்- வெடியுப்பச்சுண்ணம்
30.கற்பம்
31.சத்து- கடுக்காய் சத்து
32.குருகுளிகை- இரசமணி
வெளி அல்லது புறமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
“வெளிமருந்தே கட்டு பற்று ஒற்றடம் பூச்சு
வேது பொட்டணம் தொக்கணம்
மென்புகை மைபொடி திமிர்தல் கலிக்கம் நசியம் ஊதல்
மேவு நாசிகாபரணமும்
களிம்பு சீலை நீர்வர்த்தி சுட்டிகை சலாகை பசை
களி பொடி முறிச்சல் கீறல்
காரம் அட்டை அறுவை கொம்புறிஞ்சல் குருதி
கண்டு வாங்குதல் பீச்சு இவை
வெளிமருந்து முப்பத்திரண்டென்று கூறினார்
விண்ணுலவு சித்தராமால்
மேல்வர்த்தியும் புகை பீச்சு மை நசியமும்
மென்கலிக்கங்கள் ஓராண்டு
ஒளிவர்த்தி பொடி நீர் நாசிகாபரணம் இவை
ஒரு மூன்று திங்களாகும்
உயர்சீலை களிம்பு இவைகள் ஆறுதிங்கள் ஆகுமென்று
ஓதினாராய் உளருமரோ”
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)
வெளி அல்லது புறமருந்துகள்:
1.கட்டு - இலைகள் அல்லது பட்டைகளை நைய இடித்தோ அரைத்தோ வதக்கியோ புளித்தநீர் முதலியவற்றில் வேகவைத்தோ கட்டுதல்
2.பற்று- சரக்குகளை நீர்மப்பொருள் விட்டு அரைத்து சுடவைத்தோ சுடவைக்காமலோ நோயுள்ள இடங்களில் அப்புதல்
3.ஒற்றடம்-சரக்குகளை சூடுபடுத்தி துணியில் முடிந்து நோயுள்ள இடங்களில் ஒற்றுதல்
4.பூச்சு-நீர்மப்பொருட்கள் மற்றும் பசை குழம்பு நிலையில் உள்ளவற்றை நோயுள்ள இடங்களில் பூசுதல்
5.வேது- சரக்குகளை எடுத்து கொதிக்க வைத்து அதனின்று எழும் ஆவியை நவதுவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக இழுத்தல்
6.பொட்டணம்- சரக்குகளை துணியில் முடிந்து சுடவைத்த நெய்ப்புப் பொருட்களில் நனைத்து நோயுள்ள இடங்களில் ஒற்றடமிடுதல்
7.தொக்கணம்- இது மர்த்தனம் எனப்படும். இது வெறுங்கையால் பிடிப்பதும் தைலங்களை தடவிப்பிடிப்பதும் என இரு வகைப்படும்
8.புகை-சரக்குகளை நெருப்பிலிட்டு எழும் புகையைப்பிடித்தல் அல்லது குடித்தல் அல்லத புண் முதலியவற்றுக்கு தாக்கும் படி செய்தல்
9.மை- உ-ம் நீலாஞ்சனமை
10.பொடிதிமிர்தல்- உடம்பில் தேய்த்து உருட்டி உதிர்த்தல் உ-ம் மஞ்சள் பொடி
11.கலிக்கம் - சில சரக்குகளை சில சாறுகளால் அரைத்த உருட்டி மாத்திரையாக்கி தேனிலாவது வேறு சாற்றிலாவது உரைத்து கண்ணில் போடுதல்
12.நசியம்- இலைச்சாறு அல்லது தைலம் அல்லது மாத்திரைகளை தாய்ப்பாலுடன் உரைத்து மூக்கிலிடுதல்
13.ஊதல்- (ஆக்கிராணம்) சரக்குகளை வாயிலிட்டு மென்று காது முதலியவற்றில் ஊதல்
14.நாசிகாபரணம்-சரக்குகளை இடித்து மூக்கிலிடுவது
15.களிம்பு- உ-ம் வங்கவிரணக்களிம்பு வங்கக்களிம்பு
16.சீலை- குழம்பில் துணித்தண்டை தோய்த்து விரணங்களுக்கு உபயோகிப்பது
17.நீர்- விரணங்களை கழுவுவதற்கு உபயோகிக்கும் நீர்மப்பொருட்கள்
18.வர்த்தி - ஆறாத விரணங்களுக்கும் புரையோடும் விரணங்களுக்கும் வைப்பது
19.சுட்டிகை - சுடுகை எனப்படும்
20.சலாகை- கட்டிகள் புரைகள் சிலைப்புண் பவுத்திரம் போன்றவற்றின் நோய் நிலைமையை அறிய உதவும் உலோகக்கருவிகள்
21.பசை - உ-ம் கார்போகிப்பசை
22.களி - நீர் விட்டு அரைத்த சரக்குகளை கரண்டியிலிட்டு சுடவைத்தோ சுடவைக்காமலோ கட்டுதல்
23.பொடி - சரக்குகளை பொடித்து எடுத்து கொள்ளுதல்
24.முறிச்சல் - எலும்புகள் பிறழ்ந்து இருந்தால் அதனை சரியான நிலைக்கு மாற்றுதல்
25.கீறல் - கட்டி பரு கொப்புளம் ஆகியவற்றில் தங்கியுள்ள சீழ் இரத்தம் நீர் என்பவற்றை நீக்க கீறிவிடல்
26.காரம் - விரணத்தை ஆற்றுவதற்காக தோற்றவிப்பதற்காக பயன்படுத்தப்படும் சில நச்சுமருந்துகளும் அதன் கட்டுகளும்
27.அட்டை விடல்- நோயுற்று வீங்கின இடங்களில் தீய இரத்தத்தை அகற்றுவதற்காக அட்டை விடல்
28.அறுவை- தேவையில்லாதவற்றை அறுத்து நீக்கி தைத்து செம்மைப்படுத்தல்
29.கொம்பு கட்டல் - உடைந்த உறுப்புக்களை இணைத்து மீண்டும் ஒட்டும்படி மரச்சட்டம் கட்டி வடல்
30.உறிஞ்சல் - விரணங்களிலுள்ள சீழ் குருதி என்பவற்றை உறிஞ்சி எடுத்தல்
31.குருதி வாங்குதல்- இரத்தக்குழாயை கீறி இரத்தத்தை வெளிப்படுத்தல்
32.பீச்சு- மலம் வெளிப்படாவிடில் குழாய் மூலமாக நீர்மப்பொருட்களை உட்செலுத்துதல்
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)
பரிசோதனை
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் ஒரு சொட்டு நல்லெண்ணெயை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் அதிகரித்து உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.
அறிவியல் முறையாக்கமும், சீர்தரப்படுத்தலும்
சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துரைகளையும் அறிவியல் முறையில் கிளினிக்கல் சோதனைக்கு (clinical trials) உட்படுத்தி சீர்படுத்தும் பணியில் சித்த மருத்துவ ஆய்வுக்கான நடுவண் அரசு நடுவம் ஈட்பட்டுள்ளது. நீரழிவு நோய்க்கான D 5 சூரணம் மற்றும் காளாஞ்சக படை நோய்க்கான தயாரிப்பு 777 எண்ணெய் ஆகியன இவ்வாறு கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
இதையும் பார்க்க
சித்த ரகசியம் (நூல்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
2269 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் - மின்னூல்
சித்த மருத்துவமும் அறிவியலும்
சித்த மருத்துவம்
மாற்று மருத்துவ முறைகள்
இந்துத் தத்துவங்கள்
|
4752
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88
|
குருதிக் கொடை
|
இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5
முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு
கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள்
போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும்
உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.
இரத்ததானத்தின் தேவைகள்
அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் நமது தேசத்தின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
இரத்தம் மனிதனின் வாழ்க்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் 38,000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.
பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்
ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.
ஓர் ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்
இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.
இரத்த வங்கி
தானம் பெறப்பட்ட இரத்தத்தை சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், குருதிக் கொடையளிக்க விரும்புபவர்களிடம் குருதியைத் தானமாகப் பெறவும் குளிரூட்டப்பட்ட குருதி சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குற்றச்சாட்டுக்கள்
இந்தியாவில் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகளுக்காக இரத்தம் பெறுவதற்கு ஏஜென்டுகளை நியமிக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காக இரத்தம் கொடுப்பவர்களை வைத்திருக்கிறார்கள். நடைமுறைகளைப் பின்பற்றாமலும் இரத்தம் கொடுப்பவரின் கடைசியாக கொடுத்த தேதி, உடல் தகுதி போன்றவற்றையெல்லாம் பின்பற்றுவதில்லை என்று விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்தியது.
சில சமூக அமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அவற்றிலிருந்து பெறப்படும் இரத்தங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
உடல் தானம்
யெகோவாவின் சாட்சிகளும் குருதிக்கொடையும்
வெளி இணைப்பு
இரத்த தானம் குறித்த தகவலுடைய ஆங்கிலக் கட்டுரை
இரத்ததானம் ஒரு கண்ணோட்டம்
குருதி மாற்றீடு
மருத்துவக் கொடைகள்
|
4753
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
மருத்துவ மூலிகைகள்
|
மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.
வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.
மூலிகைகளை உபயோகிக்கும் முறைகள்
இந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.
பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற்பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.
மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.
மருத்துவத் தாவரங்கள் பெயர்கள்
இங்கு தமிழக மூலிகைகளின் வகைப்பாட்டியல் பெயர் பட்டியலைக் காணலாம்.
மூலிகை
மேற்கோள்கள்
மருத்துவம்
மூலிகைகள்
|
4757
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF
|
அம்மான் பச்சரிசி
|
அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. இது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.
பெயர் காரணம்
அம்மான் பச்சரிசியின் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விளக்கம்
இந்தத் தாவரத்தின் இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் இதன் தண்டை உடைத்தால், பால் வடியும். தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு.
மேற்கோள்கள்
இந்தியத் தாவரங்கள்
|
4758
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81
|
அறுகு
|
அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon'' புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும்.
அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.
விளக்கம்
அறுகம்புல்லானது கூர்மை மழுங்கிய இலை நுனியுடனும், குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படுவதாய் பல்லாண்டு வாழும் புல் வகையினமாக உள்ளது.
மேற்கோள்கள்
மூலிகைகள்
ஒருவித்திலையிகள்
புற்கள்
|
4760
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%20%28%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29
|
அவுரி (தாவரம்)
|
அவுரி () அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) இண்டிகோஃவெரா டின்க்டோரியா (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. இது பேபேசியே (Fabaceae) என்னும் குடும்பத்தில் இண்டிகோஃவெரா (Indigofera) என்னும் இனத்தைச் சேர்ந்த செடி. இதன் பொது ஆங்கிலப் பெயர் ட்ரூ இண்டிகோ (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் (ஊதாநிறம்) கொண்ட சாயம் எடுத்தனர். இச்செடி எங்கிருந்து தோன்றியது என்று உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இது வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. நெடுங்காலமாக உலகெங்கிலும் ஊதா நிறச் சாயத்திற்கு இச்செடியைப் பயன்படுத்தினர். இன்று செயற்கையாக வேதிப்பொருட்கள் வழி நீல நிறச் சாயம் பெற்றாலும், இன்றும் இதன்வழி பெறும் நிறம்தரும் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.
இச்செடி (புதர் வகையான செடி) ஏறத்தாழ 2 மீட்டர் வளரக்கூடியது. வானியல் சூழலைப் பொறுத்து இப்புதர்ச்செடி ஆராண்டுத் தாவரமாகவோ ஈராண்டுத் தாவரமாகவோ, நிலையாக இருக்கும் தாவரமாகவோ உள்ளது. இச்செடியின் இலைகள் சற்றே வெளிறிய பச்சை நிறத்துடன் கூட்டிலையாக உள்ளன. இதன் பூக்கள் நீலம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இணராக உள்ளன. இச் செடியின் இலைகளை நீரில் ஊற வைத்து புளிக்கச்செய்து சாயத்தை எடுக்கின்றனர். இப்படி புளிக்க வைப்பதால் அதில் உள்ள கிளைக்கோசைடு இண்டிக்கான் (glycoside indican) என்னும் பொருளை ஊதாச் சாயமாக மாறுகின்றது. இந்தச் சாயத்தின் பெயர் இண்டிகோட்டின் (indigotin) என்னும் ஊதாச்சாயம் ஆகும்.
அவுரி (Indigofera tinctoria) ஒரு மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றது.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அவுரி விவசாயம்
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சாதாரண விவசாயிகள் உணவு வகைகளை பயிரிட அனுமதி மறுத்து, தங்கள் சுயலாபத்திற்காக கட்டாயப்படுத்தி பயிரிடச் செய்த பொருள் வகைகளில் அவுரியும் ஒன்று.
வங்காளத்தில், சிரோமணிபூர், பரமானந்தபூர் என்ற இரண்டு ஊர்களில், ஆங்கிலேயர்கள் ஜமீன்தார்கள் மூலம் அவுரி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகள் அனைவரையும் வற்புறுத்தினார்கள். வேறு எந்த தொழிலும் செய்ய முடியாமல் போன விவசாயிகள், அனைத்திற்கும் ஆங்கிலேயரையும் ஜமீன்தாரையும் சார்ந்து, அவர்களின் அராஜகங்களையும் சகித்து வறுமையில் வாடவேண்டிய நிலை இருந்தது.இவர்களுக்கு, தமது புதிய வீட்டை ஜெயராம்பாடியில் கட்டியபோது அந்த வேலைகளைத் தந்து அன்னை சாரதாதேவி உதவியது வரலாற்றில் பதிந்த ஒன்று.
ஆரம்பகால கிறித்துவப் பிரச்சாரகரான டாக்டர் லாங் சாயத்திற்கான செடிகளை(Indigo) வளர்க்கும் பண்ணை முதலாளிகள் இந்தியாவில் செய்த கொடுமைகளை விளக்கும் நாடகத்தை மொழிபெயர்த்தார். அதற்காக ஆங்கிலேயர்கள் அவரைச் சிறையில் அடைத்தனர்.
வங்காளத்தில் பணியாற்றிய இ.டி. லதூர் எனும் ஆங்கிலேய நீதிபதி 1848 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வோர் இண்டிகோ பெட்டியின் மீதும் மனித ரத்தக்கறை படிந்திருக்கிறது என்று கூறும் அளவுக்கு கொடுமைகள் நடந்தேறின.
மேற்கோள்கள்
மூலிகைகள்
|
4761
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88
|
ஆடாதோடை
|
ஆடாதோடை () அல்லது ஆடாதொடை, வாசை ((தாவர வகைப்பாடு: Adhatoda zeylanica) என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.
பெயர்க் காரணம்
இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனப்படுகிறது.
விளக்கம்
இந்தத் தாவரம் முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். இது கைப்பு
சுவை கொண்டது. இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது எனக் கூறப்படுகிறது.
செய்கைகள்
கோழையகற்றி
நுண்புழுக்கொல்லி
சிறுநீர் பெருக்கி
வலிநீக்கி
முக்கிய வேதிப்பொருள்கள்
ஆடா தொடையில் இலைகளில் டானின், அல்கலாய்டுகள். சப்பொனின், பீனாலிக்சு, பிளாவநாய்டுகள், வாசிசின், வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ் முதலியன காணப்படுகின்றன.
மருத்துவ பயன்பாடுகள்
"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடினமிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்அகத்துநோய் போக்கு மறி.”
- (அகத்தியர் குணவாகடம்)
மேற்கோள்கள்
இவற்றையும் காணவும்
மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு)
மூலிகைகள்
மெய்யிருவித்திலையிகள்
சீனத் தாவரங்கள்
இந்தியத் தாவரங்கள்
இந்தோனேசியத் தாவரங்கள்
மலேசியத் தாவரங்கள்
இலங்கைத் தாவரங்கள்
|
4762
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88
|
ஆடுதீண்டாப்பாளை
|
ஆடுதீண்டாப்பாளை (Aristolochia bracteolata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு கொடியாகும். தரையில் ஒழுங்கற்ற கொடியாகப் படர்ந்து பல்லாண்டுகள் வாழும். தனித்த இலைகள் நீள் முட்டை வடிவின. இலைக்காம்படி உள்வளைவோடு கூடியதாக மொழுமொழுவென மாற்றடுக்கில் அமைதிருக்கும். இதன் வேரும் இலையும் மூலிகைப் பயன்பாடுடையன. இதன் தண்டுப் பகுதி மென்மையானது.
விளக்கம்
இது தரையில் படர்ந்து கிடக்கும் சிறு செடியாகும். பருத்தி விளையும் கரிசல் நிலத்தில் பெரிதும் தொல்லைதரும் களையாக இருக்கிறது. கிளைகள் தரைக்கு கீழேயிருக்கும். தண்டில் இருந்து வளரும். இந்தச்செடி தண்டில்லாத வேரிலிருந்து முளைக்கும். இலையின்மேல் நீலவெண்மை நிறமுள்ள பூசு படிந்திருக்கும். பூ ¾ அங்குல நீளம்; இலைக்கணுச் சந்தில் தனித்தனியாக உண்டாகும். இதழ் குழாய் வடிவமான கூட்டிதழ். குழாய்குள்ளே மயிர்கள் உண்டு. அவையெல்லாம் கீழ்நோக்கி வளர்ந்திருக்கும். கேசரங்கள் 6. சூல் முடிக்கு கீழே சூல்தண்டைச் சுற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். சூலறை பூவின் மற்ற வுறுப்புகளுக்கு கீழுள்ளது; 6 அறைகளுள்ளது. கனி வெடி கனி. வெடித்த கனி உறிபோலத் தோன்றும். விதைகள் எளிதில் காற்றில் அடித்துக்கொண்டு போகக் கூடியவை.
மகரந்த சேர்க்கை
இதில் மகரந்தச் சேர்க்கை நடப்பது வினோதமாக இருக்கின்றது. ஒரே பூவில் கேசரமும் சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்கின்றது. சூல் முடி முதலில் பக்குவப்பட்டுவிடுகின்றது. சிறு இதழ்க்குழாய் வழியாக உள்ளே போகும்போது அதிலுள்ள மயிர்கள் கீழ் நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையின்றிப் போகும். உள்ளே போனதும் இதன் உடம்பு சூல்முடியில் படும். இது கொண்டுவந்த மகரந்தம் பக்குவமாக இருக்கின்ற அந்தச் சூல்முடியில் ஒட்டிக்கொள்ளும். ஈ வெளியே வர முயன்றால் மயிர்கள் அதற்கு வழியில் ஈட்டிகள் போல நீட்டிக் கொண்டிருப்பதால் வர முடிவதில்லை. ஆதலால் அது உள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். இந்தக் காலத்துக்குள் சூலடியைச் சுற்றியுள்ள மகரந்தப் பைகள் முதிர்ந்து வெடிக்கும். தூள் அங்குச் சுழலும் ஈயினுடலில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். இதற்குள் முதலில் ஈ நுழைந்ததும் ஏற்பட்ட மகரந்தச் சேர்க்கையால் சூலில் கருத்தரித்தவுடன் இதழ்க் குழாயிலுள்ள மயிர்களெல்லாம் வாடிவிடும். பூவும் நிமிர்ந்திருந்தது சற்று வளையும். இப்போது ஈ வெளிவருவது எளிது. வந்து வேறொரு பூவுக்குப் போகும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை இந்தப் பூவில் நடக்கிறது.
இவற்றையும் பார்க்க
ஆடுதின்னாப்பாலை
மேற்கோள்கள்
மூலிகைகள்
|
4764
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88
|
ஆவாரை
|
ஆவாரை (), ஆவிரை அல்லது மேகாரி (Cassia auriculata) என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது ஒரு சங்க கால மலராகும்.
தீரும் நோய்கள்
நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும். ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.
தைப்பொங்கலில்
ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர்.
சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது.
சங்கநூல் குறிப்புகள்
தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும்போது ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ – என வரும் என்கிறார்
குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வானாம். அதற்கு ஆவிரம்பூ மாலை சூட்டுவானாம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்-தலைவியரைக் கூட்டுவிப்பார்களாம்.
மடல்மா மேல் வரும் ஒருவன் அக்குதிரைக்கு மயில்பீலி, பூளாப் பூ, ஆவிரை (ஆவாரம்பூ) ஆகியவற்றைச் சூட்டியிருந்தானாம்.
ஆவிரை மலரையும் எருக்க மலரையும் சேர்த்துக் கட்டிய மாலையை அவன் அணிந்திருந்தானாம்.
காதலர் இருவர் ஆவிரை மலர்மாலை அணிந்துகொண்டு பல ஊர் மன்றங்களில் இன்னிசை முழங்க ஆடினார்களாம்.
ஆவிரை மலர் காடு
அடிக்குறிப்பு
மூலிகைகள்
குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்
|
4765
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
இஞ்சி
|
இஞ்சி () (Zingiber officinale) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இது ஓராண்டுப் பயிராகும்.
பெயர் தோற்றம்
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.
பழம்பாடல்
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று.
இஞ்சித்துவையல்
இஞ்சிக்குழம்பு
இஞ்சிப்பச்சடி
இஞ்சிக்கஷாயம்
சுக்கு
உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.
மேலும் படிக்க
இந்திய வாசனைத் திரவியங்கள்
மேற்கோள்கள்
இஞ்சிக் குடும்பம்
மூலிகைகள்
மருத்துவத் தாவரங்கள்
|
4769
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
|
கரு ஊமத்தை
|
கரு ஊமத்தை (Datura metel) மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு தாவரமாகும். இது சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சீன மூலிகை மருத்துவத்தின் 50 முக்கிய மூலிகைகளுள் ஒன்றாகும். திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும்.
மருத்துவ குணங்கள்
தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, நீர் கடுப்பு உள்ளிட்டவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது
பாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு
பாங்கான தங்கத்தின் காசு வாங்கி
நேரப்பா கருமத்தின் இலையரைத்து
நெகிழவே கவசித்து சீலை செய்து
சீரப்பா கசப்புடமே இட்டாயானால்
சிறப்புள்ள பற்பமது என்ன சொல்வேன்
காரப்பா பற்மதை லேகியத்தில் உண்ணும்
பாங்கான மண்டலம்தான் பத்தியம்தான் பாரே
கார்க்கவே திரேகம்தான் சட்டை தள்ளும்
பாங்கான திரேகமது வச்சிரகாயம்
தீர்க்கவே இறைச்சி வகை யாவும் கூட்டு
தெளிவாக நண்டு கறி கூட்டு கூட்டு
ஆற்கவே சேத்துமங்கள் தொண்ணூற்றாரும்
அகன்றுபோம் கூடுவிட்டு காசரோகம்
வேர்க்கவே சமம் ஈளை சுவாசங்காசம்
மிரண்டே ஓடிப்போகும் எனப் பேசினோமே.
மேலும் பார்க்க
ஊமத்தம்
குறிப்புகளும் மேற்கோள்களும்
மெய்யிருவித்திலையிகள்
மூலிகைகள்
|
4771
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D
|
எள்
|
எள் (Sesamum Indicum) ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
எள்ளின் ஊட்டப்பொருள்களின் மதிப்பு
எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெயும் 16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது.
மேற்கோள்கள்
மூலிகைகள்
தானியங்கள்
மூவடுக்கிதழிகள்
கொட்டைகள்
மருத்துவத் தாவரங்கள்
|
4772
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29
|
ஏலம் (தாவரம்)
|
ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: சிறிய ஏலக்காய் எலெட்டாரியா (Elettaria), பெரிய ஏலக்காய் அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.
இத்தகை ஏலக்காய், இந்திய துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காயின் பயன்கள்
உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
சமையலின் நறுமணமாக
ஏலக்காய் எண்ணெய் பதப்படுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனைப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
வட இரோப்பாவில் இனியங்களில் ஓர் இன்றியமையாத உள் பொருளாக
மருத்துவ குணங்கள்
1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக
2. செரிமானத்தை தூண்டுவதாக
3. குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு
4. மலட்டுத்தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிப்படுதலை தீர்ப்பதற்கு
ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்
மிகையான உற்பத்தியை இந்தியத் துணைக்கண்டம் அண்மைவரை தக்க வைத்திருந்தாலும், ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை குவாத்தமாலா(Guatemala) விடம் இழந்துள்ளது. இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் நாடுகள்,
BUSCHNEGER
குவாத்தமாலா
தன்சானியா
இலங்கை
எல் சல்வடோர்
வியட்நாம்
லாவோசு
கம்போடியா
பப்புவா நியூ கினியா
தாய்லாந்து
ஹொண்டுராஸ்
நேபாளம்
பூட்டான்
ஏற்றுமதி
உலக நாடுகளின் இடையே ஒரு ஆண்டில் 35000 மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்:
1. கோஸ்ட்டா ரிக்கா
2. குவாத்தமாலா
3. இந்தோனேசியா
4. பிரேசில்
5. நைஜீரியா
6. இந்தியா
7. தாய்லாந்து
8. நிக்கராகுவா
9. தென் ஆபிரிக்கா
ஏலத் தாவரத்தைத் தாக்கும் தீ நுண்மம்
ஏல மொசைக் (mosaic) தீ நுண்மம், ஏலத் தாவரத்தைத் தாக்கி அதன் விளைச்சலைக் குறைக்கின்றது. இந்நுண்மம் ஓரிழை ஆர்.என்.ஏ கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை போட்டிவிரிடீ (Potyviridae) என்னும் செடிகொடி தீநுண்மக் குடும்பத்தில், மெக்ளாரா தீநுண்மம் (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே உள்ள வால்பாறையில் இருந்து கர்நாடகா வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதன் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக மதுரை காமராசர் பலகலைகழகத்தில் ஆய்வு செய்து வரும் பேராசிரியர் உசா அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது. இத்தீநுண்மதிற்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை மிக்க மரபணு மாற்றப்பட்ட பயிரை கொண்டு வருவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
இந்திய வாசனைத் திரவியங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஏலத் தாவர விவசாயம் குறித்த செய்தி
மூலிகைகள்
சுவைப்பொருட்கள்
இஞ்சிக் குடும்பம்
இந்தியத் தாவரங்கள்
|
4774
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
|
ஓமம்
|
ஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
மருத்துவ குணங்கள்
தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம் போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது.
வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது.
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
சத்துக்கள்
ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்புச்சத்து, கரோட்டின்,
தையாமின், ரிபோபுளேவின்
மற்றும் நியாசின் போன்ற
சத்துக்கள் அடங்கியுள்ளன.
பயன்பாடுகள்
ஓமம் (Carom Seeds), சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெற்று விளங்கும் இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிற ஒரு மூலிகைச் செடிவகையாகும். மருத்துவ குணங்கொண்ட இத்தாவரத்தை, வெதுப்பி (Bread), மாற்றும் அணிச்சல் (Cake) தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மணமூட்டவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
உசாத்துணை
Hill, Tony. (2004) "Ajwain" in The Contemporary Encyclopedia of Herbs and Spices: Seasonings for the Global Kitchen. Wiley. p. 21-23. .
வெளியிணைப்புகள்
Ajwain from The Encyclopedia of Spices
Ajwain page from Gernot Katzer's Spice Pages
மூலிகைகள்
சுவைப்பொருட்கள்
|
4776
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE
|
கசகசா
|
கசகசா () (Papaver somniferum) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.
மருத்துவ குணங்கள்
தீரும் நோய்கள்: பேதி. கசகசா ஊளைச் சதையினைப் போக்கி உடல் தசைகளை நன்றாக இறுக செய்கிறது. இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. மசாலா கறிகளில் கசகசாவை அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அது கொழுப்புத் தன்மையினை அகற்றிவிடும். கசகசாவை தண்ணீா் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல நீங்கிவிடும்
மேற்கோள்கள்
மூலிகைகள்
|
4777
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF
|
கண்டங்கத்தரி
|
கண்டங்கத்தரி () என்பது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய தரிசு நிலங்களில் வளரும் ஒரு மூலிகைச் செடி ஆகும். இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி ஆகும். காயானது கத்தரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும்.
பெயர்கள்
கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் உண்டு.
'கண்ட' எனும் சொல் முள்ளைக் குறிக்கும் (கண்ட = முள்) கண்டங்கத்தரி (முட்கத்தரி).
'கண்டம்' என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயர்
மூலிகைகளில் பங்கு
மூலிகை வகைகளில் கண்டங்கத்தரி ஆனது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தச மூலம் என்பது சித்த மருந்துகளில் புகழ் பெற்றதாகும். பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு இது தயாரிக்கப் படுவதால் தச மூலம் எனப் பெயர் பெற்றது. இப்பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும்.
இயற்கை மருத்துவம்
இளம் பிள்ளை வாத நோய் தாக்கிய சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.
ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி மற்றும் தூதுவளைத் தளைகளை இருமடங்கு நீருடன் அரை பங்காகும் அளவு சுண்டக் காய்ச்சி உட்கொண்டு வந்தால் குணமாகும்.
இவை பின் விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கண்டங்கத்தரி
மூலிகைகள்
கத்தரியினங்கள்
|
4778
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF
|
கல்யாணப் பூசணி
|
கல்யாணப் பூசணி (Cucurbita moschata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு செடியாகும். இப்பூசணிக் காய்கள் இனிப்புச் சுவையுடையவை. மஞ்சள் தோலும் செம்மஞ்சள் நிறச் சதையுமுடையவை. பழுக்கும்போது கரும் செம்மஞ்சள் நிறமாகும். இது உடல் பருக்க, உடல் சூட்டைக் குறைக்க உதவும்.
|
4779
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
கற்பூரவல்லி
|
கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகின்றது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
பெயர் காரணம்
மணம் மிக்க இலைகளைக் கொண்டதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு உண்டானது. பொதுவாக மணமுள்ள பொருட்களுக்கு ‘கற்பூர’ எனும் முன்மொழி சேர்க்கப்படுவது வழக்கம். ‘வள்ளி’ என்றால் ‘படைப்பு’ என்ற பொருளில், வாசனையுள்ள படைப்பாக ‘கற்பூர வள்ளி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். விரைவாக நோய்களை விரட்டுவதால், கற்பூர ‘வல்லி’ (வல்லி - விரைவு) என்றும் அழைக்கப்படுகிறது.
பாடல்களில் கற்பூரவள்ளி பற்றி
அகத்தியர் குணபாடம்
காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு
தேரையர் குணபாடம்
கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே
மேற்கோள்கள்
மூலிகைகள்
இந்தியத் தாவரங்கள்
இந்தோனேசியத் தாவரங்கள்
|
4780
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81
|
கடுகு
|
கடுகு () என்பது கடுகுத் தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும்.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.
கடுகுக்கு தன் சுவை கிடையாது . குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதியம்(enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திய சமையலில் சூடான எண்ணெயில் பொரித்து, அதன் மேல் தோலியை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள்.
கொண்டுள்ள சத்துக்கள்
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.
சமையலில் கடுகு
கடுகு தாளிதம் செய்வதற்கு ஒரு முக்கிய பொருள். தாளித்தலின் போது எண்ணெயில் முதலிடப்படும் பொருள் இதுவாகும். இது நல்ல சுவைதரும்.கடுகு வாசனையும் தரும்.
மேலும் படிக்க
இந்திய வாசனைத் திரவியங்கள்
மேற்கோள்கள்
மூலிகைகள்
சுவைப்பொருட்கள்
மூவடுக்கிதழிகள்
கொட்டைகள்
|
4783
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF
|
கரிசலாங்கண்ணி
|
கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
பெயர்கள்
இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.
காணப்படும் நாடுகள்
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை எனப் போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேசசுத்தி மூலிகை எனப் பாராட்டப் படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
மூலிகைகள்
கீரைகள்
|
4784
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
கறிவேம்பு
|
கறிவேம்பு (), கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை () (curry leaf) என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.
தோற்றம்
வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
மருத்துவ குணங்கள்
சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.
சொல் விளக்கம்
கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.
"கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.
இலங்கை மற்றும் பிறநாடுகளில்
கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை.
இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.
பேச்சு வழக்கில்
"கறிவேப்பிலை" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறிப்பில்லை, கருவேப்பிலை, கறிவேம்பு, கரிப்பிலை, காட்டு வேப்பிலை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது. கறிவேப்பிலை என்றே பேச்சு வழக்கிலும் பயன்படுத்துவோரும் உளர். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம்; இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு.
ஆதாரங்கள்
மூலிகைகள்
சுவைப்பொருட்கள்
மெய்யிருவித்திலையிகள்
|
4785
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D
|
கத்தூரி மஞ்சள்
|
கத்தூரி மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், Curcuma aromatica) என்பது பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பொதுவாகக் கிடைக்கக்கூடிய மஞ்சள் ஆகும்.
மருத்துவப் பயன்கள்
சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும் சாதனம்.
மேற்கோள்கள்
மூலிகைகள்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.