text
stringlengths
0
2.93k
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
புத்தம் புது பாட்டு வந்தா
மேற்கே மேற்கே
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
சுடும் வெயில் கோடைக் காலம்,
கடும் பனி வாடைக் காலம்,
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து,
எழுந்திடும் மண்ணின் வாசம்,
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?
லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
கோபம் கொள்ளும் நேரம்,
வானம் எல்லாம் மேகம்,
காணாமலே போகும் ஒரே நிலா.
கோபம் தீரும் நேரம்,
மேகம் இல்லா வானம்,
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!
இது நீரின் தோளில் கைப்போடும்,
ஒரு சின்னத் தீயின் கதையாகும்,
திரைகள் இனிமேல் தேவை இல்லையே!
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
வாசல் கதவை யாரோ,
தட்டும் ஓசைக் கேட்டால்,
நீதானென்று பார்த்தேனடி சகி.
பெண்கள் கூட்டம் வந்தால்,
எங்கே நீயும் என்றே,
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ,
காற்றே சிறகாய் விரிந்திடுமோ,
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ?
அட தேவைகள் இல்லை என்றாலும்,
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்,
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ?
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே!
மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
தள்ளிப் போகாதே..
நெஞ்சோரமா ஒரு காதல்
உனக்கென்ன வேணும் சொல்லு...
ஜூன் போனால்
ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)
அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)
இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)
(நேற்று என்பதும்)
(நேற்று என்பதும்
தள்ளிப் போகாதே..
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
தங்கமே உன்னத்தான்
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்...
என் வீட்டுத் தோட்டத்தில்