text
stringlengths
0
2.93k
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!
தேவதையைக் கண்டேன்
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
(தேவதையை)
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்தரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
(தேவதையை)
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்
சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.
(தேவதையை)
(ஒரு வண்ணத்துப்பூச்சி)
உசுரே போகுதே உசுரே போகுதே ...
அழகு குட்டி
உயிரிலே என்
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன்
ஏதோ நினைக்கிறேன்
பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் (4)
ஆண் : பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை
பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை!
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்(2)
ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)
பெண்:ஊரைச் சுற்றிப்பார்த்தாலும்
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என்னன்பே
ஆண்:யாரைப்பற்றிக்கேட்டாலும்
உன்னைப்பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே
பெண்: உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே!
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே
ஆண்: இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம்
இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்!
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்!
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)
பெண்:கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா?
ஆண்: கண்மூடீயும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா?
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்
ஆண்: நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை!
பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பெண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
ஆண்: பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை
பெண்:அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்