text stringlengths 0 2.93k |
|---|
தாலியே தேவ இல்ல |
அய்யய்யோ என் |
நினைத்து நினைத்து |
வெண்ணிலவே வெண்ணிலவே |
காத்திருந்து காத்திருந்து காலங்கள் |
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி |
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி |
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி |
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி |
(காத்திருந்து) |
முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே |
முத்தெத்டுது நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே |
வச்ச இடம் காணாம நானே தேடுறேன் |
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன் |
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே |
தேன் வடிக்கும் பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே |
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு |
(காத்திருந்து) |
நீரு நெலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும் |
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீதானே |
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற |
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற |
ஆணையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச |
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் ஒன் மனச |
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு |
(காத்திருந்து) |
உயிரிலே என் |
கண்கள் இரண்டால் |
விழி மூடி யோசித்தால் |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
சொல்லாமல் தொட்டுச் |
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் |
என் காதல் தேவதையின் கண்கள் |
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல் |
கண்ணோரம் மின்னும் அவள் காதல் |
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல |
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல |
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன் |
(சொல்லாமல்) |
ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் |
நரக சுகம் அல்லவா |
அமிலம் அருந்திவிட்டேன் |
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன் |
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் |
மருந்தை ஏனடி தர மறந்தாய் |
வாலிபத்தின் சோலையிலே |
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே |
(சொல்லாமல்) |
ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன் |
விழுந்து எழுந்தவன் யார் |
ஆழம் அளந்தவன் யார் |
ஓ கரையைக் கடந்தவன் யார் |
காதல் இருக்கும் பயத்தினில்தான் |
கடவுள் பூமிக்கு வருவதில்லை |
மீறி அவன் பூமி வந்தால் |
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே |
(சொல்லாமல்) |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
அடடா அடடா |
யாருமில்லா தனியரங்கில் |
உன்னோடு வாழாத வாழ்வென்ன |
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு |
என் உள்நெஞ்சு சொல்கின்றது |
பூவோடு பேசாத காற்றென்ன காற்று |
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது |
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் |
எந்தன் பெண்மை பூப்பூக்குதே |
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன் |
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் |
என்னை ஏந்தத்தான் |
(உன்னோடு வாழாத) |
மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது |
முரடா உனை ரசித்தேன் |
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது |
கர்வம் அதை மதித்தேன் |
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ |
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ |
உன்னைப் போலே ஆணில்லையே |
நீ போனால் நான் இல்லையே |
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையெ |
ஆம் நமக்குள் ஊடலில்லை |
(உன்னோடு வாழாத) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.