text
stringlengths
0
2.93k
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம்கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்துக் கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின் உயிரே)
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்திச்செல்ல
கனவு வந்து கண்ணைக்கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரைத் தேடும்
விலகிப்போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
(உயிரின் உயிரே)
இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணைமுறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
நீ நீ நீ
(உயிரின் உயிரே)
(நகரும் நெருப்பாய்)
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
வாசமில்லா மலரிது
நெஞ்சுக்குள் பெய்திடும்
என்ன சொல்ல, ஏது சொல்ல...
சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
மெல்லினம் மார்பில் கண்டேன்,
வல்லினம் விழியில் கண்டேன்,
இடையினம் தேடி இல்லை என்றேன்.
தூக்கத்தில் உலறல் கொண்டேன்,
தூரலில் விரும்பி நின்றேன்,
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்.
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்.
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
மரங்கொத்திப் பறவை ஒன்று,
மனங்கொத்தி போனதின்று,
உடல் முதல் உயிர் வரை தந்தேன்.
தீ இன்றி திரியும் இன்றி,
தேகங்கள் எரியும் என்று,
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்.
மழை அழகா? வெயில் அழகா?
கொஞ்சும் போது மழை அழகு.
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.