text
stringlengths
0
2.93k
கொலுசுதான் மெளனமாகுமா
மனசுதான் பேசுமா
மேகந்தான் நிலவை மூடுமா
மவுசுதான் கொறயுமா
நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா
முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
காலிலே போட்ட மிஞ்சிதான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாடுதே
நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே
அத்திமரப் பூவும் அச்சப்படுமா?
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற
முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
உள்ளத்துல நீதானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
அது ஒரு காலம் அழகிய காலம்
மின்னல்கள் கூத்தாடும்
வளையோசை கலகலகல
முதன் முதலில்
நான் மலரோடு தனியாக
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
சொல்லி தரவா
என்னை தாலாட்டும்
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
எனதுயிரே எனதுயிரே
தோல்வி நிலையென
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிரை வளர்த்த
கனவை மறக்கலாமா?
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
முன் பனியா? முதல் மழையா?
முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!
(முன் பனியா)
மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!