text
stringlengths
0
2.93k
(பூங்காற்று)
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி (2)
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானல் நீ எந்தன் உயிரன்றோ
(பூங்காற்று)
விழி மூடி யோசித்தால்
எங்கேயோ பார்த்த
தள்ளிப் போகாதே..
உன் பார்வையில்
நானும் உந்தன் உறவை
நானும் உந்தன் உறவை
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை
வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி
குருதியில் நனைந்ததடி
உயிரே உயிரே
(நானும் உந்தன் உறவை......
இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா
வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன்
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில்
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில்
துவைத்து சிதைப்பது சதியம்மா
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா
(நானும் உந்தன் உறவை......
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகு செலுத்துகிறேன் வாராயோ
எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும்
தீபம் போல் மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன்
(நானும் உந்தன் உறவை...
கல்யாண மாலை
மெல்லினமே மெல்லினமே
காதல் வைத்து
முதன் முதலில்
இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
(இதழில்)
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
(இதழில்)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது