text
stringlengths
0
2.93k
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ.. துகில்தானோ..
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள.. - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதி )
தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் நல்ல
முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதி )
ராஜாவின் பார்வை ராணியின்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்
(ராஜாவின்)
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்
(ராஜாவின்)
ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் மலர்ந்தேன்
(ராஜாவின்)
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்
(ராஜாவின்)
பறவையே எங்கு
ஒரு காதல் தேவதை
கல்யாண மாலை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
கண்ணுக்கு மைஅழகு
கண்ணுக்கு மைஅழகு, கவிதைக்கு பொயழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
(கண்ணுக்கு மைஅழகு)
மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு
அலை மீண்டும் போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமைகொட்டும் விண்மீன் கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எபோதும் நான் அழகு
(கண்ணுக்கு மைஅழகு)
ஆனந்த மஞ்cஅத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு
(கண்ணுக்கு மைஅழகு)
முகத்தை எப்போதும்
ரகசிய கனவுகள்
மின்னல்கள் கூத்தாடும்
முன்தினம் பார்த்தேனே
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூன்க்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக்
கொண்டு வரும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
(கண்ணன்)
உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும்தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தம்மம்மா
வாழ்ந்திருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா