text
stringlengths
0
2.93k
நீளமாகின்றது
கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்
உன் பாதம்
பட்ட நீரோ
என் பாதம்
தொட சிதறி
சிணுங்குதே
வெள்ளி கொலுசாய்
வெட்கத்தில்
உறக்கத்தை
தொலைப்பதும்
உன்னால்
உறக்கத்தில்
தொலைவதும்
உன்னால்
திறக்குமுன்
கதவை
மன அறைக்குள்
நுழைந்து விட்டாய்
அன்பெனும்
சாவி கொண்டு
இமைக்கா விழிகள்
உனக்காய் காத்திருக்கு
பல கவிதை பேச
விலகிய போதும்
விரட்டி வந்தே
வீழ்த்தி விட்டாய்
மீள முடியா
அன்பு கடலில்
அடைக்கப்பட்ட அறைக்குள்
அகப்பட்ட பறவையாய்
சிக்கி கொண்டாலும்
மனம் சிறகடித்தே
பறக்குது
மறைந்து கொண்டு
தேட சொல்லும்
குறும்பு குழந்தையாய்
உன் தேடலுக்காக
நான்
உன் மூச்சிலும்
உயிரிலும்
யார் வேண்டுமானாலும்
இருக்கலாம்
யாரும் இல்லாத
போது நான் இருப்பேன்
உனக்காக
நினைவுகளால்
கிள்ளி அழ வைத்து
கனவுகளால் தாலாட்டி
மகிழ வைக்க
உன் காதலால்
மட்டுமே முடியும்
முகம் தெரியாத
உன்னை காதலிக்கிறேன்
நீ என் முகவரியாய்
வருவாய் என
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல
என் சோகத்தில்
உன் மனம்
வாடுவதால்
அணிந்து கொள்கின்றேன்
புன்னகையெனும்
கவசத்தை
உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓர் சுகமே
உயிருக்குள் உனை
தினமும் சுமந்திருப்பேன்
ஒரு தாய் போல
உன் அழைப்புக்கு
காத்திருக்கும் ஒவ்வொரு
நொடியும் எனக்கு
அழகான தருணங்கள் தான்
காலங்கள் காத்திருப்பதில்லை
ஆனால் உன்னை
நேசிக்கும் உண்மையான
இதயம் உனக்காக
நிச்சயம் காத்திருக்கும்
கண்ணாடியில்