text
stringlengths
0
2.93k
ஒரு பெண்
தன்னை ரசித்து கொள்ளும்
அழகை விட
காதலோடு தனக்கு
பிடித்தமான ஒருவர்
அவளை ரசித்து சொல்லும்
அழகு பேரழகு
காத்திருத்தல்
காதலில் சுகம் தான்
அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க வைத்துவிட்டாயே
கோடை காலத்தில்
திடீர் மழை போல்
நீயும் வர
நனைகின்றேன்
நானும் சந்தோஷ
சாரல்களில்
கண்ணால் பேசாதே
வார்த்தைகளும்
மறைந்து
கொள்கிறது
வெட்கத்தில்
இரவுக்கு
நிலவழகு போல்
என் நினைவுக்கு
அழகு நீ
சுவை இருந்தும்
பருக முடியாத
ஆறிய தேநீராய்
மனம் அருகில்
நீ இல்லாததால்
என்
எண்ணம்
நீயாகிப்போக
எழுதுகோலும்
கிறுக்குகின்றது
ஓய்வின்றி
மையலை மையில்
கலந்து கவிதையாக
உன் அன்பின்
முன் சற்று
பிரகாசம்
குறைவுதான்
இவ் விளக்கின்
ஒளியும்
நிறமாலையாய்
நிழலாடுகிறாய்
மனமும் நிலைத்து
விடுகின்றது
உன் நினைவுக்குள்
காணாத போது
காண தவித்த
கண்கள்
உனை கண்டபின்
ஏனோ விழி
காண தயங்குது
கவிதைக்கு பொய்யழகு
என்பதும் பொய்பாகி
போகின்றது
நம் மெய்
காதல் கவிதையாகும்
போது
உன் நினைவின்றி
என் நொடிகள்
நகர்வதில்லை
தொலைதூரம்
போனாலும்
மனதோரம்
ஆடுகின்றாய்
ஊஞ்சலாய்
மௌனமும்
பேசும்
என்றுணர்ந்தேன்
காதல் மொழி
உன்னருகில்
மொழியறியா
காற்றும்
கவி பேசுது
உன் வருகை
அறிந்து
காயத்தின் வலிகூட
சுகமான காதலாகும்
காயப்படுத்துவது
நீயென்றால்