text
stringlengths
0
2.93k
மறைந்து போன
பாத சுவடை
புதுப்பிக்கின்றேன்
நீ தொடர்வாயென
பல நேரங்களில்
ஒளியாய்
சில நேரங்களில்
தூசியாய்
என் விழிகளில்
மாற்றத்தை
ஏற்படுத்துகிறாய்
உன் பார்வை
வெப்பத்தில்
நானுமொரு
மெல்ல உருகும்
மெழுகுதான்
தனிமையின்
கொடுமையும்
இனிமையானது
நீ தென்றலாய்
மனதை தீண்ட
பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது
நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவில்
அவ்வப்போது
சிக்கி கொள்கிறது
என் நாணமும்
பொய்யுரைக்கா
உன் விழிகளை
கண்டு
மையும் கரைகிறது
சந்தோஷ துளிகளாய்
கப்பலில்லா
துறைமுகத்தில்
பயண கைதியானேன்
வந்தாய் நீயும்
கரைசேர்க்க
வாழ்க்கை படகாய்
கொல்லும் இருளில்
மெல்ல துளிர்விடுகிறது
உன் நினைவு
விடியலை நோக்கி
ஒரு விழிக்கு
தடை போட்டாலும்
மறு விழியில்
ரசிப்பேன்
இருவரி கவிதையாய்
உன் விழிகளை
ஓசையில்லா
பாஷையில்லா
நீண்ட மௌனமும்
பிடித்துதானிருக்கு
உன் சுவாச
தீண்டலில்
தொடர்பில்
உன் குரல்
ஓய்ந்ததும்
செயலற்ற
செல்போனாய் மனம்
மீண்டும்
உன் அழைப்பு
வரும் வரை
எனை ஆளும்
அன்பு நீயென்றால்
ஆயுள் முழுதும்
அடிமையே
நான் உனக்கு
உறங்கும் போது
கனவிலும்
விடிந்தவுடன்
நினைவிலும்
வாழும் வரை
உயிரிலும் நீயே..
(இப்படிக்கு உன்னவள்)
நீ
வானவில்லாய்
இரு நான்
அதில் இருக்கும்
ஏழு நிறமாய்
இருப்பேன்..!
என்றும்
இணைப்பிரியாமல்...