text
stringlengths
0
2.93k
காணாத
அழகிய நிறம்
உன்னில் கண்டேன்
சிக்கெடுக்கும்போது
மனம் சிக்கிக்கொண்டது
நீ கூந்தல்
கலைத்து விளையாடும்
நினைவுகளில்...!
மொழியில்
பேசிடு விழியில்
பேசி வீழ்த்தாதே
உனக்கான காத்திருப்பில்
உணர்ந்தேன்
உன்னில் நான்
தொலைந்திருப்பதை
தூறல் போடும்
மழையில்
உன் நினைவின்
சாரலென்னை
நினைத்தே செல்கிறது
சேராது
இரு திசைகளென
தெரிந்தும்
தேடி தொலையுது
விழிகள்
கண்ணோடு
நீயிருப்பதால்
என்னோடு
நீயில்லையென்ற
எண்ணமே
எனக்கெழுந்ததில்லை
கற்பனையுலகும்
பிடித்துப்போனது
அதிலும்
நிலவைபோல்
நீயே உலா
வருவதால்
விட்டுவிட்டு துடிக்கும்
இதயமும்
விடாமல் துடிக்கின்றது
உன் தாமதத்தின்
காரணம் புரியாமல்
பூவோடு
சேர்ந்திருக்கும்
வாசத்தைபோல்
உன் நினைவோடு
சேர்ந்திருக்கு
என் சுவாசம்
மறக்க முடியாத
பிம்பம் நீ
தவிர்க்க முடியாத
நினைவும் நீ
நீயின்றி என் வாழ்க்கை
முடியப்போவது இல்லை
நீயின்றி வாழ்வு வந்தால்
நான் இருக்கப்போவதில்லை
என்னருகில்
நீயிருக்க
இருளேது
என் வாழ்வில்
பலமுறை துடித்தது
என் இமைகள்
உன்ணை பார்ப்பதற்கு
மட்டுமல்ல உன்ணை
என் விழிக்குள்
சேர்ப்பதற்கும்தான்
உன்
இம்சைகளும்
ரசணையே
நீயில்லா
நேரங்களில்
மெல்ல மெல்ல
சாய்கின்றது
மனம் உன்பக்கம்
உன் விழிகளென்னை
வீழ்த்த...
எண்ணற்ற கவிதைகள்
எழுதினாலும்
உனக்காக கிறுக்கும்போது
மட்டுமே மனமும்
மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கின்றது
குளத்தில் நீந்தும்