text
stringlengths
0
2.93k
தாமரையைபோல்
மன ஓடையில்
நீந்துகின்றது
உன் நினைவு
உன்
தோள்சாய
சோகங்களும்
சொப்பனமாய்
கலையும்
வில்லின்றி
எய்தாய்
விழி அம்பை
துளைத்தது சுகமாய்
இதயத்தை
அடம்பிடிக்கும்
குழந்தையாய்
அடங்க மறுக்கின்றது
உன் நினைவு
தாமதித்து
தவிக்கவிடாதே
தாங்காது
இதயம்
எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
காத்திருந்த
கனமான நிமிடமெல்லாம்
காணாமல் போனது
கண்கள் உனைக்காண
விலகாத அணைப்பு
மௌனங்கள் பேசும்
காதல் கரைகின்ற இரவில்
தொடர்ந்திட வேண்டும்
இரவை
பல வண்ணங்கள்
அழகாக்கி
கொண்டிருந்தாலும்
உன்னை காணும்வரை
என்மனம் இருளே
கரு மையும்
கவிதையாகும்
உன் கண்கள்
ரசித்தால்...!
பேச வந்த
வார்த்தையெல்லாம்
ஓசையின்றி போனது
உன் விழிமொழியில்
மயங்கி...!
என்னில் நீயாகி
உன்னில் நானாகி
நம்முள் நாமானோம்
எண்ணமெல்லாம்
நீயாக
வண்ணவுலகில்
நான்...!
நெற்றியில் நீ
திலகமிட
கண்ணங்களும்
சிவந்தது நாணத்தில்
உன்னில்
தொலைந்தபின்னே
புன்னகைக்கவும்
கற்றுக்கொண்டேன்
விண்ணில்
உலாவரும்
நிலவாய்
என்னுள் உலாவருகின்றாய்
நீ...!
என்னுலகமும்
முழுமையாகிறது
உன்னை அள்ளிக்கொள்ளும்
போது...!
மூச்சுமுட்டும்
நெருக்கத்தில்
இல்லாவிட்டாலும்
பார்வைபடும்
தூரத்திலேனுமிரு
என்னுயிர் வாழ...!
எதையும்