text
stringlengths
0
2.93k
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!
உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர..
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!
பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் என்னக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?
நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..
நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்..
உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர..
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
அழகோ அழகு
அழகோ அழகு
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
அழகோ அழகு