text
stringlengths
0
2.93k
சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
என் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்
இரு கை நீட்டி
சிறு தலையாட்டி
இரு விழியாலே
புது ஒளி கூட்டி
நான் வாழ வந்ததின்
அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
வைரமணிகளை சிரித்துத் தெளிக்கிறாய்
மழலைப் பூவே வா
புதியது குழந்தை உலகம்
நுழைந்திட வழிகள் வேண்டும்
குழந்தையின் வயதும் மனதும்
கிடைத்திட வரங்கள் வேண்டும்
ஒரு தீவில் பூக்கும்
சிறு பூவைப் போலே
இதழை திறந்து பேசும்
உனது மழலை போதும்
உன் மொழி தேன்மொழி
என் மொழி வீண்மொழி
உன்னிடம் உள்ளது தெய்வத்தின் தாய்மொழி
அந்த ஆகாயம் இந்த பூலோகம்
அதைப் பிஞ்சுவிரல்களால் தாங்கிப் பிடிக்கிறாய் எப்படி?
நடைவண்டி பழகும் வயதில்
நடந்திட நானும் முயன்றேன்
நடந்திட கடந்த தூரம்
உனக்கது தொடர வேண்டாம்
இந்த உலகின் அழகை
நீ அழகு செய்தாய்
உன் சிரிப்பின் ஒளியில்
இரவை வெளிச்சம் செய்தாய்
உன்னிடம் பாடல்கள் எத்தனை உள்ளது
என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளது
சிறுகை தீண்டி என் மெய் தீண்டி
என் கர்வம் யாவையும் தீர்த்துப் போகிறாய் எப்படி?
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..
கிட்ட தட்ட கரைய வைத்தாய்..
கிட்டாமல் அலைய வைத்தாய்..
திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்..
ரயில் வரும் பாலமாய் அய்யோ எந்தன் இதயம்
தடதடதடவென துடிக்க..
நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே..
விழிப்பார்கும்போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே..
அட இனி என்ன நடக்கும்.. மனம் நடந்ததை நடிக்கும்..
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே..
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பார்க்குதே..
பார்க்குதே.. பார்க்குதே.. தோற்குதே..
அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி..
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி..
இந்த மௌனத்தின் மயக்கம், ரொம்ப பிடிக்குது என்னக்கும்..
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே..
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே..
கொண்டதே.. கொண்டதே.. வென்றதே..
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..
டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா
ஊரு கண்ணு ஒறவு கண்ணு சுத்தி போடணும்
ஏழு எட்டு மாசத்துல பெத்து போடணும்
என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல
டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா...
சந்திரன் வந்து சூரியன் வந்து
வாழ்துப் பாட்டு பாடணுங்க
நட்சத்திரப் பூப் பறிச்சு
அட்சதையா தூவுங்க
சந்தனம் எங்க குங்குமம் எங்க
மாத்தி மாத்தி பூசணுங்க
பள்ளியற போகும் முன்னே
பாடம் சொல்லி அனுப்புங்க