text
stringlengths
0
2.93k
காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்கயே
ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரும்பிய உன்னை தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ...
(காதல்)
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுது உன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியுதுன்னாலே
உனது வலையாடும் அழகான
கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழா வேன்டுமே
குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்த்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
வானத்தின் மறு புறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப் புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே
கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் அனல் தரும் வெயிலா?
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?
இந்த காதல் வனம் தரும் மகிலா?
மறைந்திடும் திகிலா? மாயம் தானா?
காதல் மின்னலின் துகளா?
மிரட்டும் இருளா? மாயவன் செயலா?
இந்த காதல் மலர்களின் திடலா?
முட்களின் தொடலா? காயம் தானா?
கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?
காதல் ஒரு தேவதையின் கனவா?
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?
காதல் கனவதன் கனவா?
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
இந்த காதல் கடவுளின் இனமா?
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
காதல் பிறவியின் பயனா?
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?