category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை
புதுடில்லி:  பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரூன், முதன் முதலாக இன்று இந்தியாவிற்கு, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வருகை தருகிறார். அவரது அமைச்சரவையின் ஏழு அமைச்சர்களும் உடன் வருகின்றனர். பிரிட்டனின் பிரதமராக டேவிட் கேமரூன் , கடந்த மே மாதம் 11ம் தேதி பதவியேற்ற பின், முதன் முதலாக பெங்களூருக்கு இன்று வருகை தருகிறார்...
தமிழகம்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்கிளையில் முகவர் பிரிவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளையில், முகவர் தனிப்பிரிவு துவக்கப்பட்டது. விழாவுக்கு, அந்நிறுவனத்தின் கிளை மேலாளர் ராம் மோகன்ரெட்டி தலைமை வகித்தார். மண்டல மேலா ளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கோவை மண்டல முதன்மை மேலாளர் கண்ணன்பாபு, முகவர்களுக்கான தனிப்பிரிவை துவக்கி வைத்து பேசுகையில், ""நியூ ...
தமிழகம்
அரசு துவக்கப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
குறிச்சி:சுந்தராபுரத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளியில் இளைஞர் காங்., மற்றும் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கே.ஜி., கண் மருத்துவமனை சார்பில், கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மதுக்கரை மார்க்கெட் ரோட்டிலுள்ள அரசு துவக்கப்பள்ளியில் நடந்த முகாமுக்கு, கிணத்துகடவு சட்டசபை தொகுதிக்கான இளைஞர் காங்., செயலா...
தமிழகம்
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
பொன்னேரி : பழவேற்காடு கடலோர பகுதியில் 13 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், வடசென்னை அனல்மின்நிலைய பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ராணுவ தளம், கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. மேற்கண்ட மீனவ கிராம மக்கள், கடலோர பகுதியில் அமைந்து வரும் தொழில் நிறுவனங்களில், ...
தமிழகம்
மேட்டுப்பாளையத்தில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு: நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, இன்று நடக்கிறது. போக்குவரத்து சீரமைப்பு பணிகளை போலீசார் திறம்பட மேற்கொண்டால், வாகன நெரிசலில் இருந்து மக்களை பாதுகாத்து, எளிதான பயணத்துக்கு வழிபிறக்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து காட்டூர் ரயில்வே கேட் வழியாக கோவிலுக்கு அதிகளவில் வாகனங்கள் வரவ...
தமிழகம்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா இன்று விமரிசையாக நடக்கிறது.மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி நடந்த கொடியேற்றத்தில் தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். இன்று காலை 6.00 மணிக்கு குண்டம் இறங்கும...
தமிழகம்
பல்கலைக்கழக சேவை மைய கட்டடம் ஆவணங்கள், கணக்குகளை பெற்றார் சென்னை பல்கலை துணைவேந்தர்
சென்னை : கோர்ட் உத்தரவையடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான உலக பல்கலைக் கழக சேவை மைய கட்டடத்தின் ஆவணங்கள் மற்றும் கணக்குகளை,  சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் பெற்றார். டென்மார்க், தமிழக அரசுகள் மற்றும் நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன், சென்னை சேத்துப்பட்டில் உலக பல்கலைக்கழக சேவை மையம்  என்ற பத்து மாடிக் கட்...
தமிழகம்
இலவச வேட்டி, சேலை உற்பத்தி ஸ்தம்பிப்பு
சோமனூர்:இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஊடை நூல் வழங்கப்படா ததால், விசைத்தறி கூடங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வேறு துணிகளை உற்பத்தி செய்யவும் வழியில்லாமல் விசைத்தறியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. இதற்கான உற்பத்திக் குறியீடுகள் மாவட்ட ...
தமிழகம்
நஷ்டஈடு வழங்காததால் இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி! நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் அவதி
செங்கல்பட்டு : விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததால், இரண்டு அரசு விரைவு பஸ்கள், செங்கல்பட்டில் ஜப்தி செய்யப்பட்டன. பஸ் பயணிகள், நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால், அடுத்த பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர். செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்(38). இவர், 1997, அக்டோபர் 26ம் தேதி,...
தமிழகம்
விமானப்படை பள்ளியில் விளையாட்டு விழா
கோவை:கோவை விமானப்படை பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள விமானப்படை பயிற்சி மைதானத்தில் நடந்த விழாவில், மாணவ மாணவியர் அணிவகுப்பு நடத்தினர்; கமாடோர் அஜய் மேசன் ஏற்றுக் கொண்டார். மாணவ, மாணவியருக்கு 100 மீ.,ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, விமானப்படை முதன்மை ...
தமிழகம்
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கென இயக்குனரகம் அமைக்க வலியுறுத்தல்
மதுரை : பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கென, தனி இயக்குனரகம் அமைக்க தொழில்நுட்பத் துறை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. 350 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் இயக்குனராக பாலிடெக்னிக் கல்லூரி அல்...
தமிழகம்
அடுத்தடுத்து தீக்குளிப்பு மிரட்டல்; இரு பெண்கள் கைது
கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று அடுத்தடுத்து தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் மீட்டு கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் தடுக்க, போதிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை போலீசார் பலப்படுத்துவது அவசியம். இல்லாவிடில், தீக்குளிப்பு முயற்சிகள் உயிரிழப்பில் முடியும் அபாயமுள்ளத...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு பணமில்லாத கவர் : ஊராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் ஊராட்சி தலைவர், பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக, தமிழக முதல்வர் மற்றும் கலெக்டருக்கு துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். ஊராட்சி துணைத் தலைவர் தேன்மொழி மற்றும் 7 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: அய்யங்கார்குளம் ஊ...
தமிழகம்
புகைப்படத்துடன் சான்றிதழ் தமிழக அரசு ஆலோசனை
சென்னை : போலி மதிப்பெண் சான்றிதழ் ஊடுருவலை தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில், பலர், போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்த விவகாரம், பெரிய சர்ச்சையை ...
தமிழகம்
பாக்ஸ்கான் தொழிற்சாலையில் விரிவான ஆய்வு : தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் மயக்கமடைந்த காரணத்தை அறிந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பாக்ஸ்கான் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் நேற்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர். சங்கத் தலைவர் எழிலரசன், செயலர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அலு...
தமிழகம்
மதுரை காமராஜ் பல்கலையில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் சில முதுநிலை படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன. எம்.ஏ., வரலாறு, பொருளியல், மொழியியல், மலையாளம் மொழி மற்றும் இலக்கியம், திராவிட இலக்கியங்களின் ஒப்பிலக்கணம், கன்னடம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சமூகவியல், தத்துவம் மற்றும் சமயம், நாட்டுப்புறவியல், ஆங்கிலம் மொழி ...
தமிழகம்
கார்கில் போரில் இறந்தவர்களுக்கு மாணவர்கள் மலர் அஞ்சலி
செங்கல்பட்டு : கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு, நினைவஞ்சலி செலுத்தும் வகையில் செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி.,மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். முதலில் பள்ளி இறைவழிபாடு கூட்டத்தில், பள்ளி முதல்வர் இருதயம் கார்கில் போரில் இறந்த வீரர்கள் படத்திற்கு மாலை அணிவித்தார். மாணவர்கள் ...
தமிழகம்
மலைப்பகுதிகளில் நக்சலைட் ஆதிக்கம்
திண்டுக்கல் : மலைப்பகுதியில் நக்சலைட்களின் ஆதிக்கம் ஏற்படாமல் தடுக்க நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், தொடர் ஆய்வு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்வங்கம், ஜார்கன்ட், பீகார் உட்பட பல மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அந்த பகுதியில் ரயில் கவிழ்ப்பு, போலீஸ் ஸ்டேஷன் சூறை, போலீசார் மீது தாக்குதல் உட்பட...
தமிழகம்
சட்டக்கல்புதூரில் இரண்டு அரசு பஸ்கள் சிறைபிடிப்பு: சாலை, பஸ், தண்ணீர் வசதி செய்து தர மறியல்
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள சட்டக்கல்புதூர் கிராமத்திற்கு சாலை வசதி, தண்ணீர் மற்றும் பஸ் வசதி செய்து தரக்கோரி நேற்று பொதுமக்கள் இரண்டு அரசு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கிணத்துக்கடவு சொக்கனூர் ஊராட்சி சட்டக்கல்புதூரில் இரண்டாயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் பொள்ளாச்சி ...
தமிழகம்
சென்சஸ் படிவங்கள் ஆய்வுப்பணி ஆகஸ்டில் சிறப்பு குழு துவக்கம்
திண்டுக்கல் : மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) படிவங்களை ஒப்படைக்க ஜூலை 31 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் முதல் தேதி சென்சஸ் 2011 பணி துவங்கியது. ஜூலை 15 வரை சர்வே நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. படிவ பற்றாக்குறை உட்பட பல காரணங்களால் கணக்கெடுப்பாளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை மேற்பார்வையாளரிடம் ஒப்படை...
தமிழகம்
பராமரிப்பு இல்லாத பள்ளிக்கட்டடம்: அச்சத்தில் மாணவர்கள்
உடுமலை:பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையிலுள்ள அபாய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி சுங்காரமுடக்கு கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் எஸ்.எஸ்.ஏ., மற்றும் இதர திட்டங்களின் கீழ் மாணவர்களின் வசதிக்காக வகுப்பறைகள...
தமிழகம்
சென்னை பல்கலைக்கழக துபாய் மையம் : பணம் கட்டாததால் மாணவர்கள் பாதிப்பு
சென்னை : சென்னை பல்கலைக்கழக துபாய் மையம், மாணவர்களிடம் வசூலித்த பணத்தை பல்கலைக்கழகத்திற்கு கட்டாததால், அம்மாணவர்கள் தேர்வு  எழுத முடியாமலும், சான்றிதழ் பெற முடியாமலும் தவிக்கின்றனர். ""பணம் கட்டிய மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் ...
தமிழகம்
பெண் ஊராட்சி தலைவர்கள் சுற்றுலா
மதுரை : மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த, பெண் ஊராட்சி தலைவர்கள் சுற்றுலா சென்றனர். மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து சென்ற இந்த குழுவில் 72 பேர் இடம் பெற்றிருந்தனர்.  ஜூலை 26 முதல் 30 வரை அவர்கள் மதுரை விவசாய கல்லூரி, செக்கானூரணி...
தமிழகம்
ஜெயபால் எம்.எல்.ஏ., உடல் அடக்கம்
நாகர்கோவில் : ரத்த புற்றுநோயால் சென்னையில் காலமான குளச்சல் எம்.எல்.ஏ., ஜெயபால் உடல், அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், காங்., எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, வசந்தகுமார், விடியல் சேகர், ஜான்...
தமிழகம்
பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்
பொள்ளாச்சி: தென்சங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பண்ணாரி அம்மன் குழுமம் சார்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஆனைமலை ஒன்றியம் தென்சங்கம்பாளையம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் 233 மாணவ, மாணவிகளுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.மாவட்ட காங்க...
தமிழகம்
மேற்படிப்புக்கு உதவி கேட்டு ஆதரவற்ற மாணவி மனு
திருப்பூர் : பெற்றோரை இழந்த மாணவி, பாதுகாவலரையும் இழந்ததால், அவரின் மேற்படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், கல்வி உதவித்தொகை கோரி, கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளார். மடத்துக்குளம் தாலுகா, கணியூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (17); ஒரு கையில் விரல்கள் இல்லாத மாற்றுத் திறனாளி. இவர், நான்காவது வயதில் தந்தையையும், 14வது ...
இந்தியா
பிரதமர் மன்மோகனுடன் ஆந்திர குழுவினர் சந்திப்பு
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை ஆந்திர முதல்வர் ரோசய்யா தலைமையில், அம்மாநில அனைத்துக் கட்சி குழுவினர் சந்தித்துப் பேசினர். கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்லி என்ற இடத்தில், மகாராஷ்டிரா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டனர். கோதாவரி ஆற்றின் குறுக்கே, பாப்லி என்ற இடத்தில் மகாராஷ்டிர அரசு அணை க...
இந்தியா
விலைவாசி உயர்வு அமீத்ஷா விவகாரம்; எதிர்க்கட்சிகள் கூச்சல் ; பார்லி., அவைகள் ஒத்திவைப்பு
சபையில் நடக்கும் ஏனைய பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ., பகுஜன்சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதாதளம் , இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பியதால் பார்லி.,யில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. ராஜ்யசபாவில் முதலில் அ.தி.மு.க., உறுப...
தமிழகம்
மாநகராட்சி பூங்காவிற்குள் வீட்டு சுற்றுச்சுவர் நகரமைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர்
கோவை:மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டுச்சுற்றுச்சுவரை மாநகராட்சி நகரமைப்பு துறையினர் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர். தடாகம் ரோடு ஏ.கே.எஸ்., நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு திடலும் ஒருங்கிணைந்த பூங்காவும் உள்ளது. இப்பூங்காவின் ஒரு பகுதியில் ...
இந்தியா
சென்னை விமான பார்சலில் தீ : விதிமுறைகளை மீறியதாக தகவல்
கொச்சி : தனியார் நிறுவனத்தின் சென்னை விமானத்தில் ஏற்றப்பட்ட பார்சலில், திடீரென தீப்பிடித்த சம்பவத்தில், விதிமுறைகளுக்கு மாறாக விமானத்தில் பார்சல் ஏற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் காலை 9.10 மணிக்கு, சென்னைக்கு கிங் பிஷர் நிறுவனத்தின் ஐ.டி 2482 விமா...
இந்தியா
கொங்கன் ரயில் பாதையில் மழை ரயில்கள் அனைத்தும் ரத்து
மங்களூர் : பலத்த மழை காரணமாக, கொங்கன் ரயில் பாதையில் ரத்தினகிரி அருகே ரயில் பாதை தாழ்ந்து விட்டதால், அவ்வழியே இயக்கப்படும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். மகாராஷ்ட்ரா மற்றும் கோவா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொங்கன் ரயில் பாதையில் ரத்தினகிரி அருக...
General
பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை
புதுடில்லி :   பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரூன், முதன் முதலாக இன்று இந்தியாவிற்கு, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வருகை தருகிறார். அவரது அமைச்சரவையின் ஏழு அமைச்சர்களும் உடன் வருகின்றனர்.பிரிட்டனின் பிரதமராக டேவிட் கேமரூன் , கடந்த மே மாதம் 11ம் தேதி பதவியேற்ற பின், முதன் முதலாக பெங்களூருக்கு இன்று வருகை தருகிறார...
இந்தியா
திருமலை கோவிலுக்கு தொடரும் தங்க காணிக்கை
திருமலை : திருப்பதி, திருமலை வெங்கடாஜலபதி கோவில் சுவற்றில் தங்கத் தகடுகளை பதிப்பதற்கு ஆந்திர ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் தங்கம் காணிக்கை தொடர்கிறது. பெங்களூருவை சேர்ந்த மோகன் அண்டு பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மூன்று கிலோ தங்கத்தை "ஸ்வர்ணமயம்' திட்டத்திற்காக   கோவிலுக்கு ...
இந்தியா
ஏவுகணை சோதனை வெற்றி
பாலாசூர் : எதிரி ஏவுகணையை வானில் மறித்து தாக்கி அழிக்க வல்ல ஏவுகணை சோதனை, ஒரிசாவில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒரிசாவின் சண்டிப்பூர் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று காலை  ஏவப்பட்ட பிருத்வி ஏவுகணையை, 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் இருந்து சீறிக் கொண்டு கிளம்பிய ஏ.ஏ.டி., எனப்படும் ஏழு மீட்டர் நீளமுள்ள...
இந்தியா
தொடர்கிறது அமர்நாத் யாத்திரை
ஜம்மு : காஷ்மீரில் நேற்று, 1,950 பேர் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் அமைந்துள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, கடந்த 1ம் தேதி ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் பயணத்தை துவக்கினர். காஷ்மீரின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை காரணமாக, இந்த யாத்திரை சில நாட்கள் நிறுத்தி வைக்கப...
தமிழகம்
சவர தொழிலாளர்கள் கோரிக்கை
பொள்ளாச்சி: பெள்ளாச்சியில், நகர சவர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார். தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் ரமேஷ், கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சாதி வாரியான கணக்கெடுப்பினை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். சவர தொழிலாளர்களுக்கு உள் ஒதுக்கீ...
தமிழகம்
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லிபர்டி லயன்ஸ் கிளப் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கவர்னர் மதனகோபால் தலைமை வகித்தார். புதிய தலைவராக கேசவன், செயலாளராக சுந்தர்ராகவன், பொருளாளராக செந்தில்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.இதில், இரண்டு பள்ளிகள் உட்பட 54 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி...
தமிழகம்
அரசு காப்பீட்டுத்திட்டத்தில் அருண் மருத்துவமனை சிறப்பிடம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருண் மருத்துவமனை, அரசின் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் கோவை புறநகர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.அருண் மருத்துவமனை டாக்டர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:டாக்டர் கிருஷ்ணராஜ் மெடிக்கல் பவுண்டேஷன் கீழ் இயங்கும் பொள்ளாச்சி அருண் மருத்துவமனையில் அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆய...
தமிழகம்
ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், புதிதாக சேர்ந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஐ.எஸ்.ஓ., தரக்கட்டுபாடுத்துறை நிர்வாக பிரதிநிதி பத்ரி நாராயணன் பேசும் போது, "ஆசிரியர்கள் முறையான பாடத்திட்டங்கள் வகுத்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தேவையை உணர்ந்து, அதை ...
தமிழகம்
மரம் விழுந்துபோக்குவரத்து பாதிப்பு
வால்பாறை:வால்பாறை அருகே அட்டகட்டி கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்ததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வால்பாறையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.வால்பாறையிலிருந்து அட்டகட்டி வழியாக பொள்ளாச்சி செல்லும் மெயின் ரோட்டில் 14 வது கொண்டை ஊசி வளைவுக்...
தமிழகம்
கொப்பரை ஏலம் கிலோ ரூ.32.60
பொள்ளாச்சி:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 32.60 ரூபாய் விலை கிடைத்தது.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 57 பேர் 105 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரையை ஐந்து வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்திரச...
தமிழகம்
பொள்ளாச்சியில் பருவமழை தீவிரம்: அணைகளில் நீர்மட்டம் உயர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி உள்ளிட்ட சமவெளிப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது.வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இடை...
இந்தியா
தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு
ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பலரும் நேற்று பதவியேற்றனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ், தி.மு.க., எம்.பி.,க்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பதவியேற்கவில்லை. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, புதிய ...
தமிழகம்
நிலுவை நிவாரணத்தொகை வழங்க கோரி வாலிபர் மனு
பொள்ளாச்சி: நார் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு கைகளை இழந்த வாலிபர் நிவாரண தொகை வழங்கக்கோரி, மனு கொடுத்தார்.பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:பொள்ளாச்சி அடுத்துள்ள ஊஞ்சவேலாம்பட்டியில் செல்லப்பம்பாளையம் பிரிவில் உள்ள நார் தொழிற்சாலையில் வேலை பார்த்த போது ஏற்பட்ட ...
தமிழகம்
வ.புதுப்பட்டியில் கடை அடைப்பு, பதட்டம்
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, வ.புதுப்பட்டியில் இருபிரிவினரிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று 2வது நாளாக பதட்டம் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குற்றவாளிகளை தேடி மேலக்கோபாலபுரம் கிராமத்திற்கு சென்ற போலீசாரை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் வத்திராய...
தமிழகம்
கோர்ட்டில் ஆஜரான இன்ஸ்பெக்டருக்கு கோவை நீதிபதி கடும் எச்சரிக்கை
கோவை : கிராஸ் பெல்ட் அணியாமல் சாட்சி சொல்ல கோர்ட்டில் ஆஜரான இன்ஸ்பெக்டர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகும்போதும், கோர்ட்டில் சாட்சி சொல்ல நீதிபதி முன்னிலையில் ஆஜராகும்போதும் போலீஸ் அதிகாரிகள் கிராஸ்பெல்ட் அணிய வேண்டும் என்பது விதி. ஆனால், நேற்று கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிம...
இந்தியா
சிபுசோரனுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
புதுடில்லி : கொலை வழக்கில் சிபுசோரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன். இவரது தனிச் செயலராக பணியாற்றிய சசிநாத் ஜா, கடந்த 1994ல் கொலை செய்யப்பட்டார். வழக்கில், சிபுசோரன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்...
தமிழகம்
தனியார் ஆலையை மூடக்கோரி போராட்டம்
தூத்துக்குடி : தனியார் தாமிர ஆலையை மூடக்கோரி, நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை போராட்டக்காரர்கள் இழுத்து மூடினர். இதனால் அதிகாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். தூத்துக்குடி "ஸ்டெர்லைட்' தாமிர ஆலையில், கடந்த வாரம் சோதனை நடத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், அந்த தனியார் ஆலை 3 ஆண்டுகளாக ...
தமிழகம்
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
புதுடில்லி : மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மனுக்களை, 2011, ஜனவரி 11ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. மும்பையில் 1993ல் நடந்த குண்டு வெடிப்பில், 257 பேர் பலியாயினர்; 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட, ...
தமிழகம்
திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சல் 9 மாத குழந்தை பலி
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சலால் 9 மாத ஆண் குழந்தை இறந்தது. திண்டுக்கல் ஒன்றியம் தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மகன் நரேன் (9 மாதம்). இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  திண்டுக்கல்லில் முதல் கட்ட சிகிச்சைக்கு பின், மேல்சி...
தமிழகம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆபத்தானது : ராமகோபாலன் பேச்சு
நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் சொத்தான ஆனையடி எஸ்டேட்டை ஆக்கிரமிப்போருக்கு சில கட்சியினர் ஆதரவாக செயல்படுவதற்கு இந்து முன்னணி நிறுவனரும் அமைப்பாளருமான ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்து முன்னணி நிறுவனரும், அமைப்பாளருமான ராமகோபாலன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...
General
ஆப்கானிஸ்தானில் விபத்து 26 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.மேலும் 2 பேர் காயமடைந்தனர்.தெற்கு காந்தகார் மாகாணத்திலிருந்து, தலைநகர் காபூல் நோக்கி பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. தமான் மாவட்டம் அருகில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், பஸ்சில் ...
தமிழகம்
எம்.எல்.ஏ., ஜெயபால் மறைவு: அனைத்து கட்சி தலைவர்கள் அஞ்சலி
நாகர்கோவில்: குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயபால் உடலுக்கு தமிழக காங்., தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மத தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயபால் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஜூன் 2ம் தேதி உடல்நிலை மோசமானதா...
தமிழகம்
ஏகாம்பரத்திற்கு மூன்று நாட்கள் காவல்
சென்னை : போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் கைதான ஏகாம்பரத்தை மூன்று நாள் போலீஸ் காவலில்  விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து நேற்றே விசாரணை துவங்கியுள்ளது. மிரட்டிய மர்ம நபர்கள் குறித்த தகவல் விசாரணையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது போலி மதிப்பெண் ...
தமிழகம்
கண்டெடுத்த வெண்கல சிலைகளை வீட்டில் வைத்திருந்தவர்கள் கைது
தேனி : தேனியில், கிணற்றில் கிடந்த வெண்கல சிலைகளை எடுத்து, தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.  தேனி சேல்ஸ் சொசைட்டி தெருவை சேர்ந்தவர்கள் சேதுக்கண்ணன் (29), தென்னரசு (40). இவர்களுக்கு சொந்தமான கிணறு தேனி சடையாள் கோவில் பகுதியில் உள்ளது. இருவரும் சேர்ந்து தங்கள் கிணற்றை தூர்வாறும் பணியில் ஈடுபட்...
தமிழகம்
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் : பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பால் குடங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளுக்கு, தமிழக அரசு செவி சாய...
தமிழகம்
நெய்யாறு பிரச்னையில் தமிழக அரசு அலட்சியம்
மார்த்தாண்டம்: நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் குழுவை அனுப்ப கேரளா அரசு, தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஜாண்ஜோசப் எம்.எல்.ஏ., கூறினார்.குமரி மாவட்டம் மற்றும் கேரள விவசாயிகள் நலன்கருதி நெய்யாறு அணை அமைக்கப்பட்டத...
தமிழகம்
குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான கணவரை மீட்டுத்தரக் கோரி கலெக்டரிடம் மனைவி மனு
கடலூர் : குவைத்தில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ள கணவரை மீட்டுத் தரக்கோரி, கலெக்டரிடம் மனைவி மனு கொடுத்துள்ளார். கடலூர் வில்வநகர் ஆனந்தஜோதி, கலெக்டர் சீத்தாராமனிடம் அளித்துள்ள மனு:விருத்தாசலம் ஜாகீர்பாய், மணிமாறன் ஆகியோர் உதவியுடன் ஆடுதுறை அடுத்த பண்டாரஓடையைச் சேர்ந்த சபி மற்றும் அவரது தாயாரும் சேர்ந்து எனது கணவர் ராமு...
தமிழகம்
சரக்கு ரயில் மோதி அக்கா- தம்பி பலி
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, ஆளில்லா ரயில்வே கேட்டை  பைக்கில் கடக்க முயன்ற அக்கா-தம்பி இருவரும் ரயில் மோதி இறந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தை சேர்ந்தவர்  வெள்ளிமலை மகன் மணிகண்டன்(26). இவரது அக்கா வள்ளி(36).  இருவரும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூரில் உள்ள உறவினர் ...
தமிழகம்
மத்திய படை பாதுகாப்பு கேட்டு உமாசங்கர் மனு
சென்னை : மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கக் கோரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய கமிஷனுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு அனுப்பியுள்ளார். அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், சுடுகாடுகளுக்கு கொட்டகை அமைப்பதில் முறைகேடு நடந்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ்.,  அதிகாரி உமாசங்கர். சிறுசேமி...
தமிழகம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் பூவரசி மீது குற்றப்பத்திரிகை
சென்னை : சிறுவனை கொன்று சூட்கேசில் வைத்தனுப்பிய பூவரசி மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு அடிப்படையாக சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், ஆனந்தி தம்பதியினரின் மூன்றரை வயது மகன் ஆதித்யா. ஜெயக்குமாரின் கள்ளக்காதலியான பூவரசி, ஆதித்யாவை கட...
தமிழகம்
காலாவதி மருந்து விவகாரம்: விரைவில் குற்றப்பத்திரிகை
சென்னை : காலாவதி மருந்து விவகாரத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் சி.பி.சி.ஐ.டி., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னையில் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்திற்கு முன், போலி மருந்து விவகாரம் பரபரப்பாக இருந்தது. சென்னை, கொடுங்கையூர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டுமிடத்தில் இருந்து காலாவதியான...
தமிழகம்
ஆப்கன் இந்திய தூதரக தாக்குதல் முன்பே எச்சரித்தது போலந்து உளவுத் துறை
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது, 2008ல் தலிபான்கள் நடத்திய தாக்குதல் குறித்து போலந்து நாட்டு உளவுத்துறை, தாக்குதலுக்கு ஒருவாரம் முன்பே எச்சரிக்கை விடுத்ததாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கன் தலைநகர் காபூலிலுள்ள இந்திய தூதரகம் மீது, 2008 ஜூலை 7ம் தேதி, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்...
இந்தியா
விதான் சவுதாவுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பெங்களூரு : கர்நாடக மாநில தலைமைச் செயலகத்திற்கு (விதான் சவுதா) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். கைதானவரின் பெயர் பிரசன்னா; பெங்களூரு கங்காநகரைச் சேர்ந்தவர். மிரட்டல் இ-மெயில் அனுப்ப அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றில் பணிபுரியும் பிரசன...
தமிழகம்
மூன்று முறை முயன்றும் தோல்வி நான்காவது தடவை கை போச்சு
ஆலுவா : கல்லூரி பேராசிரியரை தாக்க மூன்று முறை முயன்றும் தோல்வி அடைந்த நிலையில், நான்காவது முறை அவரது வலது கை வெட்டப்பட்டது என, கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான யூனுஸ் தெரிவித்தார். கேரள மாநிலம் தொடுபுழா நியுமேன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டி.ஜெ.ஜோசப். இவர் தயாரித்த வினாத்தாளில் குறிப்பிட்ட சமுதாயத்தின...
இந்தியா
ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு
ஸ்ரீநகர் : காஷ்மீரின் ஸ்ரீநகரில், ஆற்றிலிருந்து வாலிபர் பிணம் கண்டெடுக்கப்பட்டதால் பதட்ட நிலையை தவிர்க்க, அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கலவரம் வெடித்ததில், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். ஸ்ரீநகரின் மத்திய பகுதியில் உள்ள பட்மலுவைச் சேர்ந்த பருக் அகமது பட் என்ற...
தமிழகம்
போலி பாஸ்போர்ட்டில் வந்த இலங்கை இளைஞர் கைது
கொச்சி : போலி பாஸ்போர்ட்டில் பிரிட்டன் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர், கொச்சி விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். இலங்கை ஜாப்னா பகுதியைச் சேர்ந்த ராஜரத்னம் என்பவரது மகன் நந்தகுமார்(23). இவர், இலங்கையிலிருந்து பிரிட்டன் செல்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்தார். இவரது ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதி...
இந்தியா
கார் மோதி நான்கு பேர் பலி
புதுடில்லி :   மேம்பாலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது, வேகமாக வந்த கார் மோதியதில் நான்கு பேர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். டில்லியின் சப்தர்ஜங் பகுதியிலுள்ள மேம்பாலத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பணியாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று, அவ...
General
பிளாஸ்டிக் கழிவுகளில் உருவாக்கப்பட்ட படகு ஆஸ்திரேலியாவில் நிறுத்த முடிவு
சிட்னி: பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம், மீண்டும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன படகு, ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு நேற்று வந்தது. இக்கப்பல் சிட்னியில் ஒரு மாதம் வரை இருக்கும்.உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...
தமிழகம்
மாணவிகளுக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்
உடுமலை: உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழிப்பிரிவில், அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு தமிழக அரசின் லேப்-டாப் கம்ப் யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் வழிப்பிரிவில், மாநில அளவில் ஆயிரம் தர வரிசைக்குள் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்க...
தமிழகம்
ராக்கெட் வீசி தாக்குதல் ஆப்கனில் 45 பேர் பலி
காபூல்: ஆப்கனில் கிராமம் ஒன்றில் ராக்கெட் வீசி தாக்கியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவிகள் 45 பேர் பலியாயினர்.  தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் குறித்து ஹேமந்த் மாகாணம் சாங்கின் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ...
தமிழகம்
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை: பாதுகாப்பு கேள்விக்குறி
உடுமலை:உடுமலை அருகேயுள்ள தினைக்குளம் தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டி ஊராட்சி தினைக்குளத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் போதிய வசதிகள் இல்ல...
தமிழகம்
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கூட்டு உடற்பயிற்சி அளிக்கஉத்தரவு
திருப்பூர்: வாரந்தோறும் வெள்ளிக் கிழமை, பள்ளி மாணவ, மாணவியருக்கு கூட்டு உடற் பயிற்சி அளிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், ஆண்டு தோறும் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டு போட்டியை, இந்தாண்டு திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் எட்டு குறு மையங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நட...
தமிழகம்
பேரவை தேர்தல் கோரி மாணவர்கள் போராட்டம்
உடுமலை:உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் மாணவர் பேரவை தேர்தல் நடத்த கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். ஆசிரியர்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வகுப்புகளுக்கு திரும்பினர்.உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு தோறும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் பேரவைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர் பேரவை நிர்வாகிகள் தவறான வழிய...
தமிழகம்
குழந்தைகள் காப்பகங்களுக்கு கலெக்டர் "திடீர்' எச்சரிக்கை
திருப்பூர்: குழந்தையை விற் பனை செய்தது தொடர் பாக, கிராமப்புற மக்கள் மேம்பாட்டு மைய நிர்வாகி பிரபாவதி கைது செய்யப்பட்டுள்ளார். அக்காப்பகத்தில் குழந்தைகளை விட்ட பெற்றோர் மற்றும் பாது காவலர்கள், திருப்பூர் சமூக நலத்துறை அலு வலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.கிராமப்புற மக்கள் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் குழந...
தமிழகம்
நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கதிட்டம்: திருப்பூரில் துவக்கவும் முடிவு
திருப்பூர்: நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில் மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல் முறையாக, திருப்பூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வழங்கப்பட உள்ளது. கிராமப்புறங்களில் ஆடு, மாடு வளர்ப்பது போல் நாட்டுக்கோழி வளர்ப்பையும் அதிகரிக்க, கால்நடை ஆராய்ச்சி மற்றும் ...
தமிழகம்
அமிர்தா வித்யாலயத்தில் குரு பூர்ணிமா விழா
திருப்பூர்: மங்கலம், வேட்டுவ பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குரு பூர்ணிமா விழா நடந்தது.ஆடி மாத பவுர்ணமி நாள், குரு பூர்ணிமா விழாவாக கொண்டாடப் படுகிறது. இத்தினத்தை யொட்டி, மங்கலம் அமிர்தா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குரு பூர்ணிமா விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பல்வேறு...
தமிழகம்
நடிகர் மீது வழக்கு
தேனி: மத்திய அமைச்சர் அழகிரி யை அவதூறாக பேசியதாக, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டில், ஜூலை 18 ல் தி.மு.க., சார்பில் நடந்த மருத்துவ முகாமில் பேசிய மத்திய அமைச்சர் அழகிரி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேச...
தமிழகம்
மாணவர்கள் களப்பயணம்
திருப்பூர்:செங்கப்பள்ளியில் உள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் பள்ளியில் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் களப்பயணம் மேற் கொண்டனர்.ஸ்ரீகுமரன் பள்ளி மாணவர்கள் 128 பேர், சேமந் தம்பாளையத்தில் மண் பாண்டம் செய்யும் இடத்துக்கு களப்பயணம் சென்றனர்.மண்பாண்டங்கள் செய்யும் விதம் குறித்தும்; இதற்கு தேவையான மூன்று வகையான மண் குறித்தும...
தமிழகம்
சர்வதேச கால்பந்து மாணவன் பங்கேற்பு
திருப்பூர்:செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் கவுசிக், சர்வதேச அளவிலான கால்பந்து போட்டியில் சாதனை படைத்துள்ளான்.இந்திய தேசிய உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மையம் சார்பில், திருப்பூர் மாணவன் கவுசிக் சர்தேச போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றார். இந்தியா சார்பில் மலேஷியாவில் உள்ள என...
தமிழகம்
சிலம்ப போட்டி; சபரி முதலிடம்
திருப்பூர்:மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி, திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பார்க் பள்ளி மைதானத்தில் நடந்தது. மாவட்ட சிலம்ப கழக தலைவர் தங்கராஜன் துவக்கி வைத்தார்.  வீரர்களின் அணிவகுப்பை சிலம்ப கழக துணை தலைவர் ரமேஷ் ஏற்றுக் கொண்டார். நான்கு பிரிவுகளாக நடந்த போட்டியில், 98 பெண்கள் உட்பட 380 பேர் விளையாடினர். த...
தமிழகம்
ரூ.6.5 கோடிக்கு வளர்ச்சி பணி: நல்லூர் நகராட்சியில் தீர்மானம்
திருப்பூர்:நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.6.50 கோடி மதிப்பில், ரோடு, குடிநீர், வடிகால் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நல்லூர் நகராட்சி கூட்டம், தலைவி விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, துணை தலைவர் நிர்மலா முன்னிலை வகித்தனர். தார் ரோடு அமைத்தல், வடிகால் ...
தமிழகம்
வாரிய உறுப்பினர் சேர்க்கை: தாராபுரத்தில் நாளை முகாம்
திருப்பூர்:அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம், தாராபுரத்தில் நாளை நடக்கிறது.கோவை தொழிலாளர் துணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுடைய குழந்தைகளின் கல்வி, திருமண உதவித்தொகை, உறுப்பினர...
தமிழகம்
மாணவர் மன்ற துவக்க விழா
திருப்பூர்:செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா நடந்தது; கல்லூரி முதல்வர் நிம்பா தலைமை வகித்தார்.பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு மாணவி ஜீவமணி மாணவியர் தலைவியாகவும்; பி.காம்., இரண் டாம் ஆண்டு மாணவி சுருதி உப தலைவியாகவும்; பி.காம்., மூன்றாம் ஆண்டு மாணவி நர்ஜீஸ் பானு செயலாளராகவும்; பி.பி.எம்., இரண்டாம் ஆண்டு...
தமிழகம்
மாறுவேடபோட்டி
திருப்பூர்:பெரியாண்டிபாளையம் பிளாட்டோஸ் அகாடமி மெட்ரிக் பள்ளியில் மாறுவேட போட்டி நடந்தது.தமிழ் ஆசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். இரண் டாம் வகுப்பு மாணவ, மாணவியர் பல்வேறு வேடங்களில் வந்து கலக்கினர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகி ஹரிகிருஷ்ணன் பரிசு வழங் கினார். தலைமை ஆசிரியர் மீராதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
ஜெயபால் எம்.எல்.ஏ., உடல் அடக்கம்
நாகர்கோவில்: ரத்த புற்றுநோயால் சென்னையில் காலமான குளச்சல் எம்.எல்.ஏ., ஜெயபால் உடல், அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், காங்., எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, வசந்தகுமார், விடியல் சேகர், ஜான்ஜ...
தமிழகம்
பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: நல வாரியத்தில் அனைத்து பூசாரிகளையும் இணைக்கக்கோரி, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந் தது; மாவட்ட அமைப் பாளர் மாணிக்கம் தலை மை வகித்தார்."கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் அனைத்து பூசாரிகளையும் இணைத்து அடையாள அட்டை வழங்க வேண் டும். அரசு க...
தமிழகம்
கண்டியன்கோவில் பள்ளி தரம் உயர்வு
பொங்கலூர்:கண்டியன்கோவில் அரசு துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதற்கான விழா நடந்தது. பொங்கலூர் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அரிச்சந்திரன் வரவேற்றார். பொங்கலூர் ஒன்றிய தலைவர் சவுந்திரம்மாள், கண்டியன்கோவில் ஊராட்சி தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர். கண்டியன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் செ...
தமிழகம்
பொய்யூர் மருதையாற்று பாலம் கட்டுமான பணி; எம்.எல்.ஏ., ஆய்வு
அரியலூர்: கிராம சாலை மேம்பாடு திட்டத்தின்கீழ், அரியலூர்-பொய்யூர் சாலையில் 5 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில், பொய்யூர் அருகே மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் கட்டுமான பணியை அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலம் கட்டுமான பணியின் போது மக்களின் நடைபாத...
தமிழகம்
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் பேரவைக்கு தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் தவறான வழியில் நடப்பதாகவும், முறைகேடாக வசூலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வந்தது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டு முதல் பேரவை தேர்தல் நடத்த முடியாது என கல்லூரி நிர்வாகம் அறி...
தமிழகம்
மக்கள் நீதிமன்றம் கூடியது
பல்லடம்:பல்லடம் மாஜிஸ்திரேட் பத்மா உத்தரவுப்படி, பல்லடம் கோர்ட் வளாகத்தில் பி.எஸ்.என்.எல்., தொலைபேசி சந்தாதாரர்களின் பிரச்னை தொடர்பான மக்கள் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி பழனி சிவகுருநாதன் தலைமையில் நடந்தது. பல்லடம் மூத்த வக்கீல் சிவசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.மன்றத்தில் 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 56 ஆயிரத்...
தமிழகம்
பெண் ஊராட்சி தலைவர்கள் சுற்றுலா
மதுரை : மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த, பெண் ஊராட்சி தலைவர்கள் சுற்றுலா சென்றனர். மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து சென்ற இந்த குழுவில் 72 பேர் இடம் பெற்றிருந்தனர். ஜூலை 26 முதல் 30 வரை அவர்கள் மதுரை விவசாய கல்லூரி, செக்கானூரணி ...
தமிழகம்
வருமான வரம்பு உயர்வு
திருப்பூர்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் குடும்பங்களுக்கு ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெறும் ...
தமிழகம்
நிலக்கடலை விலை "ஜிவ்'
அவிநாசி:சேவூரில் நடந்த நிலக்கடலை ஏலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு விலை அதிகரித்தது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக் கடலை ஏலம் நேற்று நடந்தது; 30 மூட்டைகளே வரத்தாக இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வரத்து குறைவு என்றாலும் கூட, நல்ல விலைக்கு ஏலம் போனது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வரலாற்றில், ரூ...
தமிழகம்
கலையரங்கம் கட்டும் பணி துரிதம்
திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் இட வசதியுடன் கூடிய, ரூ.1.10 கோடி மதிப்புள்ள கலையரங்கம் கட்டும் பணி துரிதகதியில் நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போது, ஜெய்வாபாய் மாநகாரட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.10 கோடியில் கலையரங்கம், ரூ....
தமிழகம்
ரிங் ரோட்டில் கொட்டப்படும்"செப்டிக்' டேங்க் கழிவுகள்
திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் இருந்து கூலிபாளையம் செல்லும் ரோட்டில், கழிவு நீர் அகற்றும் லாரிகள் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருப்பூர் சுற்றுப்பகுதியில் 60க்கும் அதிகமான கழிவு நீர் அகற்றும் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவு...
தமிழகம்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பா.ம.க., ஆர்ப்பாட்டம்
சென்னை: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, பா.ம.க., தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்தவுள்ளது. பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ளதால், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டுமென பா.ம.க., போராட்டம் நடத்தியது. 21 உயிர்கள் பலி கொடுத்து, ...
தமிழகம்
இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
திருப்பூர்:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, திருப்பூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச கான்கிரீட் வீடு திட்டத்துக்கான, 45 நாட்களுக்கான கொத்தனார் பயிற்சி, முன்னணி நிறுவனங்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ...
தமிழகம்
மன்னை அருகே வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் அட்டூழியம்
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இரண்டு வீடுகளில் பின்கதவை உடைத்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். மன்னார்குடி பைபாஸ் ரோட்டில் வசிப்பவர் ஆஸ்வெல்ட் (42). கம்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி தனது மனைவி விஜயாவுடன்,...
தமிழகம்
இந்து முன்னணி கூட்டம்
பல்லடம்: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்லடத்தில் 51 விநாயகர் சிலைகள் வைக்க, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. பல்லடம் நகர இந்து முன்னணி செயற்குழு கூட் டம், மாவட்ட செயலாளர் மணி தலைமையில் நடந் தது. "செப்., 11ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் பல்லடத்தில் நடத்த வேண்டும்; நகரப்பகுதி களில் 51 விநாயகர் ச...