text
stringlengths 11
513
|
|---|
எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். விளக்கம் : பொறாமை , ஆசை , சினம் , கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல் தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. விளக்கம் : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட , உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும். குழல்இனிது யாழ்இனிது
|
என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். விளக்கம் : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே , குழலின் இசை இனியது , யாழின் இசை இனியது என்று கூறுவர். எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். விளக்கம் : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. அன்புடைமை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. விளக்கம் : அன்பு
|
இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார் : அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. விளக்கம் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார் : அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. விளக்கம் : அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத்
|
தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும் என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம் : எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் , அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். விருந்தோம்பல் பாய்மையே வெல்லும் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. விளக்கம் : விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை ணை வேள்விப் பயன். விளக்கம் :
|
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று , விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும். பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் ( பின்பு இழந்து ) பற்றுக்கொண்டு இழந்தோமே என்று இரங்குவர். இனியவை கூறல் விளக்கம் : விருந்தினரை விளக்கம் : யாரிடத்திலும் ‘ தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
|
இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும். பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. விளக்கம் : வணக்கம் உடையவனாகவும் , இன்சொல் வழங்குவோனாகவும் ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல. செய்ந்நன்றி அறிதல் முடியாது. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. € 9 விளக்கம் : இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன் , அவற்றிற்கு மாறான என்ன பயன் கருதியோ ? வன்சொற்களை வழங்குவாய்மையே வெ ஆதலே செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்
|
அரிது. விளக்கம் : தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப , பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம் : இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' தினைத்துணை ணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். விளக்கம் : ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த
|
போதிலும் , அதன் பயனை ஆராய்கின்றவர் , அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். நடுவு நிலைமை நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். விளக்கம் : தீமை பயக்காமல் , நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும். கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. விளக்கம் : நடுவுநிலைமை நின்று , அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம் : முன்னே தான்
|
சமமாக இருந்து , பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து , ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். ாய்மையே வெல் அடக்கமுடைமை செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். விளக்கம் : அறிய வேண்டியவற்றை அறிந்து , நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால் , அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு , மேன்மை பயக்கும். நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. விளக்கம் : தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு , மலையின் உயர்வை விட மிகவும்
|
பெரிதாகும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து விளக்கம் : ஒரு பிறப்பில் , ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால் , அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. ஒழுக்கமுடைமை பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. விளக்கம் : ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும் ; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் , அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
|
அழுக்காறுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம் : பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல , ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். விளக்கம் : உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர் , பல அறிவில்லாதவரே ஆவர். நூல்களைக் கற்றிருந்த போதியே வெல் அரன் வலியுறுத்தல் அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல விளக்கம் : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன
|
எல்லாம் இன்பம் இல்லாதவை , புகழும் இல்லாதவை சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம் : அறம் சிறப்பையும் அளிக்கும் : செல்வத்தையும் அளிக்கும். ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது ? * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' பிறனில் விழையாமை பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் விளக்கம் : பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை , உலகத்தில் அறமும் , பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
|
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். விளக்கம் : தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல் , எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும் ? அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். நயவா , விளக்கம் : அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன் , பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே. 19 பொறையுடைமை 5. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. B o விளக்கம் : வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை தீங்கை நினைவிலும்
|
கொள்ளாமல் மறந்துபாதும் பொறுக்க வேண்டும் ; அத் பொறுத்தலை விட நல்லது. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. விளக்கம் : ( தீங்கு செய்தவரைப் ) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார் ; ஆனால் , பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல் விளக்கம் : செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும். அழுக்காறாமை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக -
|
அரசியல் இயக்கங்கள் ' ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. விளக்கம் : ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. விளக்கம் : பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து , பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர். வெஃகாமை அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். விளக்கம் : பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும்
|
உலகத்தில் இல்லை ; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். Ⓒ விளக்கம் : அறநெறியால் பெறும் இன்பத்தை விரும் வர் , நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார். அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். விளக்கம் : அருளை விரும்பி அறநெறியில் நின்றவன் , பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. விளக்கம் : அறம்
|
இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள். புறங்கூறாமை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும் , அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும். விளக்கம் : புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட ,
|
அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல் , அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும். அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. விளக்கம் : ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை , இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ ? பயனில சொல்லாமை நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. விளக்கம் : ஒருவன்பயனில்லா பொருள்களைப் பற்றி விரியாகச் சொல்லும் சொற்கள் , அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை
|
யுடையார் சொலின். விளக்கம் : பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால் , அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும். நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. விளக்கம் : சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக , அமையும் ; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது. ஒப்புரவறிதல் * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. விளக்கம் : ஒப்புரவாளன் தன்னால் இயன்ற
|
முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. விளக்கம் : ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம் , ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. ஒப்புரவி னால்வரும் கேட்டனின் அஃதொருவன் விளக்கம் : ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும். தீவினையச்சம் 9 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. விளக்கம் : தீயவை செய்தலாகிய செருக்கைத்
|
தீவினை உலும் இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். ] டைய பாவிகள் அஞ்சார் , தீவினை அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். விளக்கம் : தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை , அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர். இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. விளக்கம் : யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது , செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான். 11 ஈகை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் '
|
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. விளக்கம் : யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை , நல்ல குடிபிறப்பு உடையவனிடம் உண்டு. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை விளக்கம் : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை , ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். புகழ் உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். விளக்கம் : புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால்
|
இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. விளக்கம் : நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவும் ல புகழைச் செய்தால் , வானுலகம் அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல் தேவரைப் போற்றாது. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. விளக்கம் : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும் , அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது. அருளுடைமை அருள்சேர்ந்த
|
நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ விளக்கம் : அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை , அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். விளக்கம் : அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை , உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார். வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
|
மெலியார்மேல் செல்லு மிடத்து. விளக்கம் : அருள் இல்லாதவன் தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது , தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். புலால் மறுத்தல் € 97 விளக்கம் : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் ? தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். தவம் படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் PLOCHA GIGY உடல்சுவை உண்டார் மனம். விளக்கம் : ஓர் உயிரின் உடம்பைச்
|
சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. விளக்கம் : தவக்கோலமம் , தவாழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும் ; அக்கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். 13 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். விளக்கம் : விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் , செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் ( இல்லற வாழ்க்கையிலும் ) முயன்று செய்யப்படும். கூடா ஒழுக்கம் ‘
|
தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. விளக்கம் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம் , புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது. கள்ளாமை விளக்கம் : நேராகத் தோன்றினும் அம்பு கொடியது ; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும். கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். எள்ளாமை
|
வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு விளக்கம் : பிறரால் இகழப்படாமல் வாழ் விரும்புகிறவன் , எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். விளக்கம் : குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே , அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும். வாய்மை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' வாய்மை எனப்படுவது
|
யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். விளக்கம் : வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் , அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். விளக்கம் : குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும். தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். விளக்கம் : ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக் கூடாது , பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே
|
தன்னை வருத்தும். Ja மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. விளக்கம் : ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் , அவன் தவத்தொடு விடச் சிறந்தவன். தானமும் ஒருங்கே செய்வாமயே வெல்லும் இன்னா செய்யாமை சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். விளக்கம் : சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும் , பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம். அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. விளக்கம் : மற்ற உயிரின் துன்பத்தை ,
|
தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ. 15 கொல்லாமை அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். விளக்கம் : அறமாகிய செயல் எது என்றால் , ஒரு உயிரையும் கொல்லாமையாகும் , கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. விளக்கம் : தன்உயிர்உடம்பிலிருந்து நீங்கிச்செல்வதாக இருந்தாலும் , அதைத்தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை
|
நீக்கும் செயலைச் செய்யக்கூடாது. துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். விளக்கம் : ஒருவன் எந்தந்தப் பொருளிலிருந்து , பற்று நீங்கியவனாக அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. விளக்கம் : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றைபற்றிக் கொள்ள வேண்டும் , உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும். அவா அறுத்தல் இருக்கின்றானோ , வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். விளக்கம் : ஒருவன் ஒன்றை விரும்ப
|
வேண்டுமானால் , பிறவா நிலைமையை விரும்ப வேண்டும். அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. விளக்கம் : ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம் , ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டு கொடுத்து வஞ்சிப்பது அவாவே. இறைமாட்சி அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. விளக்கம் : அஞ்சாமை , ஈகை , அறிவுடைமை , ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் '
|
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு. விளக்கம் : இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும். கல்வி டு கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம் : கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும் , அவ்வாறு கற்ற பிறகு , கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. விளக்கம் : ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு
|
மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. கேள்வி கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. விளக்கம் : எண் ( கற்றவரின் அவையில் ) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல் , முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. விளக்கம் : செவியால் கேட்டறியும் செல்வம் , செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும் , அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். 17 * தமிழ்நாட்டின் வரலாறு ,
|
மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. விளக்கம் : கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார். அறிவுடைமை எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. விளக்கம் : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் ( கேட்டவாறே கொள்ளாமல் ) அப்பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். விளக்கம் : அறிவுடையவர்
|
( வேறொன்றும் இல்லாதிருப்பினும் ) எல்லாம் உடையவரேஆவர் , அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். பெரியாரைத் துணைக்கோடல் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். விளக்கம் : அறம் உணர்ந்தவராய்த் , தன்னை விரவல்லு மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை , கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். விளக்கம் : கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன் , தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும்
|
இல்லாவிட்டாலும் கெடுவான். தெரிந்து செயல்வகை செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ விளக்கம் : ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான் , செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு. விளக்கம் : தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது , உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். தெரிந்து தெளிதல் அறம்பொருள் இன்பம்
|
உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். விளக்கம் : அறம் , பொருள் , இன்பம் , உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் ஒரு தொழிலுக்கு உரியவனாகத் தெளியப்படுவான். கையால் தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். விளக்கம் : மற்றவனைஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் , அஃதுஅவனுக்குமட்டும் அல்லாமல் அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும். சுற்றந்தழால் பற்றற்ற ண்ணும் ப சுற்றத்தார் கண்ணே உள. விளக்கம் : ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
|
உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. ம் பழைமைபா ராட்டுதல் கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். விளக்கம் : பொருள் கொடுத்தலும் , இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால் , ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான். ஊக்கமுடைமை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். விளக்கம் : ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும். மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல்
|
நீங்கிவிடுவதாகும். உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. விளக்கம் : ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே , அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே , வடிவால் மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு. சொல்வன்மை நாடு நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று விளக்கம் : நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும். அந்த நாநலம் தனிச்சிறப்புடையது , ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுல்
|
வயப்படுத்தும் பண்புகளுடன் , சொல்வன்மையாகும். வினைத்தூய்மை ம 20 விளக்கம் : சொல்லும் போது கேட்டவரைத் தன் ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். விளக்கம் : மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும். இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். விளக்கம் : அசைவற்ற , தெளிந்த அறிவினையுடையவர் , துன்பத்தில் சிக்குண்டாலும் , அத்துன்பத்தைத் தீர்ப்பதற்க்காக இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார். வினைத்திட்பம் *
|
தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. விளக்கம் : ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது , ஒருவனுடைய மனதின் திட்பமே ( உறுதியே ) ஆகும் , மற்றவை எல்லாம் வேறானவை. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். விளக்கம் : இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம் , சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். வினைசெயல்வகை நாடு வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத்
|
தெறும். விளக்கம் : செய்யத்தொடங்கியச் செயல் , கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால் , தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும். செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். விளக்கம் : செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை , அச்செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. விளக்கம் : குறையாத விளைபொருளும் , தக்க அறிஞரும் , கேடில்லாத செல்வம் உடையவரும் , கூடிப்பொருந்தியுள்ள நாடே
|
நாடாகும். உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. விளக்கம் : மிக்க பசியும் , ஓயாத நோயும் ( வெளியே வந்து தாக்கி ) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும். 21 அரண் * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' விளக்கம் : படையெடுத்து போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும் , படையெடுத்தவர்க்கு அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். நட்பு ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். விளக்கம் :
|
தன்னிடம் ( உள்ளிருப்போர் ) எல்லாப் பொருளும் உடை டையதாய் , போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும். எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். ஒரு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு – விளக்கம் : நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன. அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. விளக்கம் : பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல் , நூலின் நற்பொருள் கற்கக்
|
கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். நட்பாராய்தல் ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். விளக்கம் : ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு , இறுதியில் தான் வதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும். குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. * தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ விளக்கம் : உயர்ந்த குடியில் பிறந்து , தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ள வேண்டும். தீ
|
நட்பு உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். விளக்கம் : கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும் , அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும் , கள்வரும் ஒரு நிகரானவர். ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். விளக்கம் : முடியும் செயலையும் , முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை , அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். கூடா நட்பு மியூ பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. U விளக்கம் : பல நல்ல நூல்களைக் கற்றுத்
|
தேர்ந்த போதிலும் , அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல் , உள்ளன்பினால் மாட்சியடையாதவர்க்கு இல்லை. மனத்தின் அமையாத தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. விளக்கம் : மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை , அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது. பேதைமை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். விளக்கம் : பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால் , தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். 23 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
|
பேணாமை பேதை தொழில் விளக்கம் : தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல் , தக்கவற்றை நாடாமலிருத்தல் , அன்பு ல்லாமை , நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். உட்பகை ‘ தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. விளக்கம் : வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை , ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். பகைமாட்சி வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. விளக்கம் : தம்மை
|
விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும் , தம்மை விட மெலியவர்மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. விளக்கம் : ஒருவன் அன்பு இல்லாதவனாய் , அமைந்த துணை இல்லாதவனாய் , தானும் வல்லு " வலிமை இல்லாதவனாய் இருந்தால் , அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். பெரியாரைப் பிழையாமை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. விளக்கம் : மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல் , காப்பவர்
|
செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது. ‘ தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ விளக்கம் : ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால் , அது அப்பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். கள்ளுண்ணாமை பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். சூது விளக்கம் : கள்ளை உண்ணக் கூடாது , சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம். உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். விளக்கம் :
|
உறங்கினவர்இறந்தவரைவிடவேறுபட்டவர்அல்லர் , அவ்வாறேகள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர். குடிமை துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. விளக்கம் : வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது , வென்ற வெற்றியும் , தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது. சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். விளக்கம் : ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக்
|
கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். விளக்கம் : உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் , வாய்மையும் , நாணமும் இம்மூன்றிலிருந்தும் வழுவாமல் , இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர். ஆகிய 25 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. விளக்கம் : உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம் , ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம் போல் பலரறியத் தோன்றும். மானம் * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு &
|
சமூக - அரசியல் இயக்கங்கள் ' பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. விளக்கம் : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும் , செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும். புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. விளக்கம் : மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை , ஒருவனுக்கு புகழும் தராது , தேவருலகிலும் செலுத்தாது , வேறு பயன் என்ன. சான்றாண்மை ணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம்
|
அன்று. விளக்கம் : சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே , மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை விளக்கம் : ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும் , அது சான்றோர் தம் பண்புடைமை பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும். எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. விளக்கம் : பண்பு உடையவராக வாழும் நல்வழியை , யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர். ‘
|
தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. விளக்கம் : ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும் , பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன. நாணுடைமை அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை விளக்கம் : சான்றோர்க்கு நாணுடைமை உழவு அணிகலம் அன்றோ , அந்த அணிகலம் ல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
|
உறைபதி என்னும் உலகு. விளக்கம் : பிறர்க்கு வரும் பழிக்காகவும் , தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் விளக்கள் உலகம் பழித்தும் உசெல தனமன்றாலும் வரத் அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. $ தொழிலின் பின் நிற்கின்றது , உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். விளக்கம் : உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர் , மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின்
|
செல்கின்றவரே. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் மிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு த காலத்தில் மதுரைக்கு கிருஷ்ண தேவராயரால் பொறுப்பாளராக நாயக்கரால் நியமிக்கப்பட்ட விஸ்வநாத பாளையக்காரர் முறை உருவாக்கப்பட்டது. பாளையம் ( அ ) பெரிய நிலப்பரப்பின் உரிமை யாளர்கள் பாளையக்காரர்கள். 5E திருநெல்வேலியின் மேற்குப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மறவர் பாளையக்காரர் எனவும் , கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் தெலுங்கு ( அ ) நாயக்கர் பாளையக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். பூலித்தேவன்
|
மேற்கு பாளையக்காரர் வகையையும் வீரபாண்டிய கட்டபொம்மன் கிழக்கு பாளையக்காரர் வகையையும் சேர்ந்தவர்கள். விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு கி.பி. 1792 ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காடு நவாப்புடன் " கர்நாடக உடன்படிக்கை " செய்து கொண்டு பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமை பெற்றது. தமிழகம் இதற்கு முன்பும் பின்பும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வெடித்தது. புரட்சி பூலித்தேவன் " மையே வெ மதுரையில் பிரிட்டிஷ் படைத்தளபதி மாபஸ்கான் முறையான கப்பம் கட்டாததால் பூலித்தேவன் மீது போர் அறிவித்தார். கி.பி. " 1755 ல்
|
நெற்கட்டும் சேவல் பகுதியில் நடந்த சண்டையில் கர்னல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேப்படை தோற்கடிக்கப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில் ஆங்கிலேய படையை எதிர்த்து இந்திய மன்னர் பெற்ற வெற்றி இதுவாகும். மேற்கொண்டு தன் வலிமையை பெருக்க பூலித்தேன் ஐதர் அலி மற்றும் பிரெஞ்சு உதவியை நாடினார். ஐதர் அலியில் மராட்டியரும் போரில் ஈடுபட்டிருந்தால் உதவ முடிய வில்லை. ஆங்கிலேயர் கான்சாகிப் ( எ ) யூசுப் கானுக்கு பூலித்தேவனை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். கி.பி. 1759 - ல் கான்சாகிப் தலைமை யில் திருவிதாங்கூர் மன்னர் மார்த் தாண்ட வர்மன்
|
மன்னர் உதவியுடன் நெற்கட்டும் செவ்வில் கோட்டை முற்றுகையிடப்பட்டது. பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டார். கி.பி. 1764 - ல் மீண்டும் பூலித்தேவன் கைப்பற்றினாலும் கோட்டையை 1. வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்றம் வருடம் தந்தை 3. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 1798 - ல் செப்.19 ம் தேதி இராமநாத புரத்தில் நடந்த சந்திப்பின் போது கட்டபொம்மன் அவமதிக்கப்பட்டார். கர்னல் கி.பி. 1767 ம் ஆண்டு கேம்பெல் என்பரால் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு கோட்டை முழுவது மாக கைப்பற்றப் பட்டது. யூசுப்கான் என்பவரே
|
பின்னாட்களில் அறியப்பட்ட மருதநாயகம் கி.பி. 17615 : ஜெகவீர மனைவி : சகோதரர் : ஊமைத்துரை தளபதி அமைச்சர் கட்டபொம்மன் ஐக்கம்மாளி ாய்மையே பாண்டிய : வெள்ளைத் தேவன் பிள்ளை சிவசுப்பிரமணியன் கி.பி. 1790 - ல் பாஞ்சாலகுறிச்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 2. கட்டபொம்மன் வரி கட்டாததன் காரண மாக 1798 மே 31 ' நாள்படி 3310 பகோடாக்கள் வரி பாக்கி விழுந்தது. இதனால் இராமநாதபுரம் ஆட்சியர் ஜாக்சன் தன்னை வந்து சந்திக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். கொல்லப்பட்டனர். கட்டபொம்மன் தப்பிவிட்டாலும் , அமைச்சர் சிவசுப்பிர மணிய பிள்ளை கைது
|
செய்யப்பட்டார். இச்சம்பவம்குறித்துசென்னைஆளுநர் எட்வர்ட் கிளைவால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முடிவின்படி கட்டபொம்மன் குற்றமற்றவர் நிரூபிக்கப்பட்டு சிவசுப்பிரமணிய பிள்ளை விடுவிக்கப்பட்டார். ஜாக்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டர். பின்னர் ஏற்பட்ட என 7 வனுக்கு தடை விதிக்கப்பட்டது. பாளையக்கார கட்டபொம்மன் கூட்டமைப்பில் சேருவதற்கும் , அது சம்மந்தமாக மருது சகோதர்களை சந்திக்கவும் கட்டபொம்ம உதவியை மறுக்கவே மீது கட்டபொம்மன் சிவகிரி பாளையக்காரர் நாடினர். கட்டபொம்மன் அவர்கள் சிவகிரி சிவகிரி ஆங்கிலேயருக்கு முறையாக
|
கப்பம் செலுத்தி வந்ததால் ஆங்கிலேயப் படை வெல்லெஸ்லி பிரபு உத்தரவுபடி திருநெல்வேலி மீது படையெடுத்தன. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றி படையெடுத்தார். இராமலிங்க முதலியார் வழங்கிய தகவல்கள் படி போர் வியூகத்தை வகுத்திருந்த மேஜர் பானர் மேன் 9. கோட்டையை செப்.4 , 1799 - ல் தோற்றம் முற்றுகையிற்றார். கட்டபொம்மன் சரணடைய மறுக்கவே 1799 செப் -5 போர் ஏற்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியின் கள்ளர்பட்டி ( கோளார்பட்டி ) என்ற இடத்தில் கட்ட பொம்மன் தோற்கடிக்கப்பட்டார் கட்ட பொம்மன் மற்றும் ஊமைத்துரை தப்பி விட்டாலும் சிவசுப்ரமணிய பிள்ளை
|
கைது செய்யப்பட்டார். கோட்டையும் கைப்பற்றப்பட்டது. 1799 செப். 13 ல் சிவ சுப்ரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். காட்டில் கட்டபொம்மனை தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தென்னிந்திப் புரட்சி மருது சகோதரர்கள் ஆங்கிலேய நடவடிக்கைகளால் வெறுப்புற்றிருந்த மக்கள் எதிர்ப்பாளர்கள் மன்னர் விஜயரகுநாத மான் சிறைபிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். கூட்டமைப்பு இராமநாதபுரம் / சிவகங்கை திருநெல்வேலி ஆங்கிலேயர் தீர்ப்பின்படி 1799. அக்டோபர் 16 அன்று திருநெல்வேலிக்கு திண்டுக்கல் அருகிலுள்ள
|
கயத்தாறு கோட்டையில் மலபார் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.மயே மைசூர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதால் தந்தை - மூக்கையா பழநியப்பன் தாய் – பொன்னாத்தாள் சிவகங்கையை புரட்சிக்கு ஆயத்தாமாயினர். ஒட்டுமொத்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கூட்டணி ஏற்படுத்தியவர்கள் மருது சகோதரர்கள். ஆட்சி செய்த முத்துவடுக நாதரிடம் இராணுவ வீரர்களாக பணியாற்றியவர்களே சின்னமருது , பெரிய மருது ஆவர் முத்து வடுகநாதரின் மனைவியே பின்னர் அறியப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார். பிற்காலத்தில் ஆட்சியாளர்களான சகோதரர்கள் ஆங்கில எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து
|
தென்னிந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். மருது லும் கன்னட மராத்தியர் தலைமை மருது சகோதரர்கள் கட்டபொம்மன் கோபால நாயக்கர் கேரள வர்மா கிருஷ்ண ப் ப நாயக்கர் தூண்டாஜி வாக் 1800 ஜீன் 3 - ம் தேதி எனத் திட்டமிடப்பட்டிருந்த கிளர்ச்சி 1800 மார்ச் 30 - ம் தேதியே மராத்திய மன்னர் தூண்டாஜியால் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியக் கூட்டணியின் வலுவான எதிர்ப்பால் புரட்சி நீடித்துக் கொண்டிருந்த சமயத்தில் மருது சகோதரர்களால் திருச்சி பிரகடனம் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 3. நவீன ஆயுதங்கள் இல்லாமல்
|
நேரடி மோதலில் ஈடுபட்டது. 4. பொதுமக்கள் 1801 ல் வெளியிடப்பட்டு நவாபின் கோட்டை சுவரிலும் , ஸ்ரீரங்கம் கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக அனைத்து இந்தியர்களையும் ஒருங்கிணைந்த முதல் பிரகடனம் இதுவாகும். கிளர்ச்சியின் முக்கிய கேந்திரமான காளையார் கோவிலின் சிறுவயல் பகுதியை கி.பி. 1801 ம் ஆண்டு மே -29 ம் நாள் கர்னல் அக்னுவின் தலையிைலான ஆங்கிலப்படை தாக்கியது. மருது தோற்கடிக்கப்பட்டனர். ஆங்கியலேயர்களால் பட்ட மருது சகோதரர்கள் சிங்கம்புணரி காட்டில் மறைந்து கொண்டனர். 1801 ஜீலை 31 - ல் ஏற்படுத்திக் கொண்ட
|
உடன்படிக்கைப்படி தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்தது. மருது சகோதரர்கள் புதுக்கோட்டை மன்னரால் காட்டிக் கொடுக்கப்பட்டு 1801 அக்.24 - ல்திருப்பத்தூர் கோட்டை யில் தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் புரட்சி செய்த ஊமைத்துரை நவம்பர் 16 , 1801 - ல் கழுவேற்றப்பட்டார். தோல்விக்கான காரணங்கள் 1. திட்டநாளுக்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே தொடங்கப்பட்டது. 2. ஒற்றுமையின்மை மற்றும் சில மன்னர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவு அளித்தது. புரட்சி மனதில் தப்பிய இராணுவத்தில் சேர்ந்து இரகசியமாக சந்தித்து தகவல்
|
பரிமாறிக் கொண்டனர். கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் வாரிசுகள் மைசூர் முடியாட்சியை மீட்க வேண்டும் என முடிவுற்றாலும் இருந்து ஆதரவு பூரணமாக 1801 ம் கருதினர். இந்திய நெவயை கிளர்ச்சியாளர்கள் ஆண்டு மக்கள் அழியவில்லை. சிப்பாய்கள் ஆங்கிலேய வீரர்களுக்கு சமமாக நடத்தப்படாததால் சிப்பாய்கள் மத்தியில் இது வேற்றுமை யை வளர்த்தது. அப்போதைய சென்னை ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபு அனுமதியுடன் படைத்தளபதி சர் ஜான் கிராடாக் கி.பி. 1806 - ல் அறிமுகப்படுத்திய தளபதி அக்னயூ என்பவரால் வடிவமைக்கப்பட்ட இராணுவச்
|
சீர்திருத்தங்கள் முக்கிய மற்றும் உடனடி தலைப்பாகை மற்றும் காரணமாக அமைந்தது. போக்கு இராணுவப் புரட்சிக்கு திப்புவின் மூத்த மகன் பதேக் ஹைதர் மற்றும் மொய்சுதீன் என்ற இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர். இரகசிய தகவல்கள் முகமது மாலிக் என்பவர் மூலம் பரிமாறப்பட்டது. 1806 ஜூலை 13 - ம்நாள்காலைகோட்டையை கைப்பற்றுவது என திட்டமிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 5. இராணுவப் படையுடன் வந்த கில் லெஸ்பியால் பியாஸ் கைப்பற்றப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர். ஜூலை 9 , 1806 அன்று இரவு
|
நடைபெற்ற மகன் திருமணத்தில் கொண்ட சிப்பாய்களில் 23 - ம் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் ஜுலை 10 விடியற் காலையில் கிளர்ச்சியை துவக்கினர். இராணுவ அதிகாரி கர்னல் பான்கோர்ட் புரட்சிக்கு முதல் பலியானார். அடுத்ததாக கர்னல் மிகேரல் சுட்டு கொல்லப்பட்டார். திப்புவின் கலந்து புரட்சி தொடங்கிய சில மணிநேரத்தில் இந்திய கோட்டை சிப்பாய்கள் கட்டுப்பாட்டில் வந்தது. பதேக் ஹைதர் சுல்தானாக அறிவிக்கப்பட்டு திப்புவின் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது. 4. இதுபற்றிதகவல் அறிந்தகோட்டையின் தளபதி மேஜர் கூட்ஸ் விரைந்து சென்று கர்னல்
|
கில்லெஸ்பியம் தெரிவித்தார். கோட்டை வீரர்கள் திப்புவின் குடும்பம் கொல்கத்தா சிறைக்கு மாற்றப் பட்டது. 6. வேலூர் புரட்சி தோல்வியில் முடிந்தது. தோல்விக்கான காரணங்கள் 1. திட்டமிட்டதற்கு முன்னரே தொடங்கப் பட்டது. 2. முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை. 3. உரிய காலத்தில் உதவி கிடைக்கவில்லை. 4. மக்கள் பங்கு கொள்ளவில்லை. 5. பல சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு அறிஞர்கள் கருத்து விசுவாசமாக இருந்தனர். 3. மையே வெ V.D. சவாக்கர் : " முதல் இந்திய சுதந்திர போருக்கு முன்னோடி ” ந. சஞ்சீவி : “ இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடி ” கே.
|
ராசய்யன் : “ மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சி ” கே.கே. பிள்ளை : “ வேலூர் கலகம்தான் 1857 - சிப்பாய் கலகத்துக்கு வழி வகுத்தது ” என்பதை மறுக்கிறார். தமிழ்நாட்டின் வரலாறு , மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சுதந்திர போராட்டத்தில் தமிழகம் சென்னை சுதேசி சங்கம் ( 1852 ) சென்னை சுதேசி சங்கம் வங்காள பிரிட்டிஷ் இந்தியக் கழகத்தின் கிளையாக துவக்கப்பட்டது. சென்னை மக்கள் முதல் மாகாணத்தில் உரிமைகளை நிலைநாட்ட மேற்கத்திய முறையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு சென்னை சுதேசி சங்கம். இதனை ஹார்லி , லட்சுமி
|
நரசுச் செட்டி , சீனிவாசப் பிள்ளை ஆகியோர் நிறுவினர். இச்சங்கம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்கை களை விமர்சனம் செய்தது. 1856 - ல் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்த சித்ரவதை பற்றி விசாரணை செய்ய வற்புறுத்தியது. 1858 - ல் ஏற்பட்ட சமயகலவரங்களை சரியாக கையாளவில்லை என அதிகாரிகள் மீது குறை கூறப்பட்டது. 1860 - ல் தஞ்சை மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த பாராளு மன்றத்திற்கு விண்ணப்பம் அளித்தது. திருநெல்வேலியில் சென்னை மகாஜன சபை ( 1884 ) 1884 - ம் ஆண்டு சென்னை மகாஜன சபைஉருவாக்கப்பட்து. எஸ். இராமசாமி அனந்தாசாருலு ,
|
நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தியவர்கள். இச்சபை முதலியார் , ரெங்கையா சென்னை அண்ணாசாலையில் அமைந்திருந்தது. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவரக பி.ரெங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். வெஇந்திய அரசப் பிரதிநிதி எல்ஜின் பிரபு , டிசம்பர் 1895 - ம் ஆண்டு சென்னைக்குப் பயணம் மேற்கொண்ட போது , சென்னை மகாஜன சபை வழங்கிய வரவேற்பை ஏற்க மறுத்தார். 1920 - ம் ஆண்டு உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ் டவுன் , யானைகவுனி , உயர்நீதி மன்றம் மற்றும் கடற்கரைப் பகுதியில் தலைமையேற்று நடத்தியது. இப்போராட்டத்தின் போது
|
இதன் உறுப்பினர்கள் கடுமையாகத் தாக்கப் பட்டனர். இந்நிகழ்வு குறித்து விசாரிக்க நீதிபதி , டி.ஆர். இராமச்சந்திர தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இந்திய தேசிய காங்கிரஸ் ( டப்ரின் பிரபு வைசிராயாக இருந்த கால கட்டத்தில் ) அய்யர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆங்கில அரசு காங்கிரஸ் கட்சிக்குத் தடை விதித்திருந்த போது , சென்னை மகாஜன சபை , சுதேசிப் பொருட்கள் கண்காட்சி , அனைத்திந்திய கைத்தறிக் கண்காட்சி பல்வேறு பொருட்கள் மூலம் மக்கள்
|
மனதில் நாட்டுப்பற்றை வளர்த்து வந்தது. தேசத்தந்தை மகாத்மா காந்தி , 1896 அக்டோபர் 24 - ல் சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார். இச்சபையின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார். சங்கங்களின் பெயர் கதர் , போன்ற கண்காட்சி இந்து இலக்கியச் சங்கம் சென்னை சுதேசி இயக்கம் ( Madras Native Assication ) தென்னாட்டுத் தமிழ்ச் சங்கம் திராவிட பாஷா சங்கம் சுயாட்சி இயக்கம் இந்து முன்னேற்ற மேன்மைச் சங்கம் யே 1853 ல ( Hindu Progressive Improvement Society ) மத்திய தேசிய முகமதிய சங்கம் மதராஸ் மகாஜன சபை நெல்லை
|
தேசாபிமானச் சங்கம் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தோற்றுவித்த ஆண்டு 1830 1852 ஓய்வு பெற்ற ஆங்கிலேய அதிகாரி யான ஆலன் ஹீயூம் ஆக்டேவியர் என்பவரால் 1885 - ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு 1885 , டிசம்பர் 28 அன்று பம்பாயில் கூடியது. இந்தியா முழுவதிலுமிருந்து அம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் 72 பேர். சென்னை மாகாணத்திலிருந்து பங்கேற்ற 21 தோற்றுவித்தவர் லெட்சுமி நரசு செட்டி சீனிவாசப் பிள்ளை அனந்தாச்சார்லு , ரெங்கையா நாயுடு அன்னிபெசன்ட் வ.உ.சி.
|
டி.எம். நாயர் , தியாகராஜ செட்டிார் 10 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் திறந்த வெளித் திடலில் அமைக்கப்பட்ட பந்தலில்நடைபெற்றது. பேரில் , தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து பங்கேற்றவர்கள் 16 பேர். தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் மகாஜன சங்கத்தின் சென்னை மாநாட்டுத் சார்பாகச் சென்றவர்கள் ஆவர். முதல் காங்கிரஸ் டபுள்யு.சி.பானர்ஜியின் தலைவராக பெயரை வழிமொழிந்து , மாநாட்டின் முன்மொழிந்த முதல்தீர்மானத்தை பெருமை தமிழ்நாட்டுப் பிரதிநிதியான அய்யருக்கே எஸ்.சுப்பிரமணிய கிடைத்தது. டேவிட்
|
அர்னால்டு “ காந்தி தனது ரௌலட் சத்யாகிரகத்திற்கு தமிழ்நாட்டு தீவிரவாதிகளின் ஆதரவை நாடினார். ” S 53 இந்தியதேசியகாங்கிரஸின்மாநாடுகள் 7 முறை நடைபெற்றுள்ளன. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887 டிசம்பரில் சென்னை நகரில் ஆயிரம் விளக்கு பகுதியில் மக்கள் தோட்டம் என்னுமிடத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் வினாவிடை அல்லது இத்தேசத்தில் வருஷா வருஷா கூடி வரும் காங்கிரஸ் சரித்திரம் நூலை இந்த ஆண்டில் முடும்பை வீர ராகவாச்சாரியார் வெளியிட்டார். ஜனசபையின் மிக மூன்றாவது மாநாட்டின் சிறப்பு அம்சம் : அதன் செலவின் பெரும்பகுதி பெரிது
|
மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அன்றைய சென்னை கவர்னரான கன்னிமாரா பிரபு இம்மாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவருக்கும் சிறப்பு விருந்தளித்துச் சிறப்பித்தார். 1920 , நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் சி.பி. விஜயராகவாச்சாரியும் , கௌகாத்தி 1926 , மாநாட்டின் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்காரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சென்னை மாகாணத்தின் சார்பில் 362 பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டிற்குப் பக்ருதீன் தியாப்ஜி தலைமைவகித்தார். முதன்முறையாகத் தலைமை பக்ருதீன் தியாப்ஜி ஆல்பிரட் வெப் ஆனந்த் மோகன் போஸ் லால்மோகன் கோஷ்
|
ராஷ்பிஹாரி கோஷ் எம்.ஏ. அன்சாரி தமிழ்நாட்டு மிதவாதிகள் கோபாலகிருஷ்ண பின்பற்றியவர்கள் காங்கிரசில் கோகலேயைப் மிதவாதிகள் என்றழைக்கப்பட்டனர். கோகலேயின் வலக்கரமாக திகழந்த வி.எஸ். சீனிவாச சாஸ்திரி மிதவாதி களுக்கெல்லாம் மித வாதியாக விளங்கினார். மேலும் பி.எஸ். சிவசாமி அய்யர் , வி.கிருஷ்ணசாமி அய்யார். டி.ஆர். வெங்கடராம சாஸ்திரி , ஜி.ஏ.நடேசன் , திரு.வி. கல்யாண தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சுந்தரனார் , டாக்டர்.பி. வரதராஜூலு தமிழ்நாட்டின் புரட்சி தேசியவாதிகள் நாயுடு , ஈ.வெ.ராமசாமி
|
நாயக்கர் , எஸ்.சீனிவாச அய்யங்கார் ஆகியோர் தமிழ்நாட்டின் மிதவாதிகளாவர். தமிழ்நாட்டுத் தீவிரவாதிகள் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கை தோல்வியுற்றபோது , விடுதி என்ற தீவிரவாதிகளின் சிலர் பயங்கரவாதிகள் ஆயினர். 1905 - ல் இலண்டனில் “ ஹோம்ரூல்லீக் ” என்றஅமைப்பையும் 1966 - ல் இந்தியா முகாமையும் அமைத்தனர். தமிழ்நாட்டைச் சேரந்த வ.வே. சுப்ரமணிய அய்யரும் , திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனும் , எம்.பி.டி. ஆச்சாரியாவும் அப்பயங்கரவாதப் பாசறையில் பயிற்சி பெற்றோர் ஆவர். ஆயுதப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதே
|
இவர்களது நோக்கம். புரட்சிவாதியான நீலகண்ட பிரம்மச்சாரி 1910 ஏப். 10 - ம் தேதி “ பாரத மாதா சங்கம் ” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவரின் சந்திப்பிற்கு பின்னரே வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி பயிற்சி சுப்பிரய வெலிபற்று வாஞ்சிநாதன் 1911- ஜூன் 17 - ம் தேதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துறையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றனர். தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் வங்காளத்தில் 1905 இல் தோன்றிய சுதேசி இயக்கம் தமிழக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. “ வந்தே மாதரம் ” என்ற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத்
|
துவங்கியது. தென்னாட்டுத் திலகர் அழைக்கப்பட்ட வ.உ. சிதம்பரனார் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் பாலகங்காதார திலகரைப் பின் பற்றியவர்கள் தீவிரவாதிகள் என்ற ழைக்கப்பட்டனர். திலகரின் தேசியக் கட்சி கொள்கைகளை விளக்கி 1907 - ம் ஆண்டு கல்கத்தாவில் அவர் பேசியதை புதிய கட்சியின் கொள்கைகள் என்ற நூலில் பாரதியார் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். தமிழ்நாட்டு 5 % தீவிரவாதத்தின் தந்தை என சேலம் விஜயராகவாச் சாரியைக் கூறலாம். அவரது பாசறையில் பயிற்சி பெற்றவர்களில் முக்கியமானவர் ராஜாஜி அழைக்கப்படும் சி.ராஜகோபாலச்சாரி. டி.எம். நாயார் ,
|
எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் , ஏ.ராமசாமி அய்யங்கார் , டி.ரெங்காச்சாரி , வ.உ. சிதம்பரம் பிள்ளை , அரவிந்தகோஷ் , மணியசிவா , சி. என சுப்பிரமணிய பாரதி , வ.வே. சுப்பிரமணிய அய்யர் நீலகண்ட பிரம்மச்சாரி , வாஞ்சிநாதன் , சுதேசி பத்மநாப அய்யர் ஆகியோர் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க காங்கிரஸ் தீவிரவாதிகளாவர். வ.உ. சிதம்பரனார் தமிழ்நாட்டுத் திலகர் என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் திலகரின் தளபதிகளாக வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் கருதப்பட்டனர். தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அய்யர்
|
பொதுச் செயலாளராகவும் , பி.பி. வாடியா பொருளாளராகவும பொறுப்பேற்றனர் சுதேசிக் கருத்துக்களைப் பரப்பி வந்தார். 1906 ல் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை நிறுவினார். கப்பலோட்டிய தமிழன் எனப்புகழ் பெற்றார். தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்துடன் பயங்கரவாதமும் ஓரளவு தலை தூக்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவரான சங்கரன் நாயர் , இந்தக் கொலை தேசிய விழிப்பின் எதிரொலி என்று குறிப்பிட்டார். = சுதேசி இயக்கத் தலைவர்களான
|
வ.உ சிதம்பரனார் , பாரதியார் , சுப்ரமணிய சிவா போன்றவர்களது பேச்சும் , எழுத்தும் எழுச்சியுறச் செய்தன. தன்னாட்சி இயக்கம் ( 1916 ) மக்களை வாய்மையே 1916 - ம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று , சென்னை கோகலே மண்டபத்தில் தன்னாட்சிக் கழகம் ( Home Rule League ) அன்னிபெசன்ட் அம்மை யாரால் துவக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக ‘ இந்திய புத்திரர்கள் சபையை அவர் நிறுவியிருந்தார். தன்னாட்சிக் கழகத்தின் தலைவராக அன்னிபெசன்ட் அம்மையாரும் , ஜி.எஸ். அருண்டேல் அமைப்புச் செயலாராகவும் , சி. பி. ராமசாமி பிரிட்டிஷ் பேரரசுக்குள் இந்தியா சுயாட்சி
|
பெற வேண்டும் என்பதே தன்னாட்சிக் கழகத்தின் குறிக்கோள். இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டு முடங்கிக் கிடந்த காலத்தில் தன்னாட்சி இயக்கம் தேசியப் போராட்டத்தைத் தீரத்துடன் வழிநடத்தியது. அன்னிபெசண்ட் அம்மையாரின் சுயாட்சி சங்கத்திற்குக் கிடைத்த பரிசு என 1917 , ஆகஸ்ட் 20 ல் வெளியான மாண்டேகு பிரகடனத்தைக் கூறலாம். அன்னிபெசண்டின் சாதனைகளைப் பாராட்டி அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 1917- டிசம்பரில் கல் கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரௌலட் சத்யாக்கிரகம் மகாத்மா காந்தி
|
தமிழ்நாட்டில் தங்கியிருந்த போதுதான் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து காந்தி ரௌலட் சத்தியாக்கிரகத்தைத் தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்கினார். காந்தியின் முதல் அகில இந்திய போராட்டம் இதுதான். தமிழ்நாட்டுக்கு 1919 , மார்ச் 17 அன்று வருகை தந்த காந்தி , கஸ்தூரிரங்க அய்யங்கார் வீட்டில் தங்கினார். அங்கு ரௌலட் சட்ட எதிர்ப்புத் சத்தியாக்கிரகப் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சென்னை மாகாண காங்கிரஸ் மாநாடு 1919. ஆகஸ்டில் கூடியது. அலி சகோதரர்களை விடுதலை செய்யக் கோரும்
|
தீர்மானத்த ராஜாஜி கொண்டு வந்தார். மேலும் , அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்பட்ட கிலாபத் தினத்துக்கு தமிழ்நாட்டு இந்துக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தார். சென்னை நகரில் , மௌலானா சவுகத் அலியின் தலைமையில் 1920 , ஏப்ரல் 20 - ல் கிலாபத் மாநாடு நடைபெற்றது. ராஜாஜி , கஸ்தூரிரங்க அய்யங்கார் , பிரகாசம் ஆகியோர் அம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். சென்னை மாநில கிலாபத் இயக்கத்தை ராஜாஜியின் ஆதரவுடன் யாகூப் ஹாசன் 1920 மே மாதத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். தமிழ்நாட்டுக்கு 1920 , ஆகஸ்டில் வருகை தந்த காந்தி
|
கிலாபத் இயக்கத்த செய்யப் அரசாங்கத்தினால் தடை பகுதியின் அவதரித்துப் பிரச்சாரம் செய்தார். அன்றுவடஆற்காடு ( இப்போதுவேலூர் ) திட்டம் உருவாக்கப்பட்டு , அதன் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக சபை உருவாக்கப்பட்டது. சத்தியாக்கிரக சபையின் காந்தி தலைவர் ; டி.பிரகாசம் ஆகியோர் தலைவர்கள் ; சி.ராஜகோபாலாச்சாரி , எம்.சி. நஞ்சுண்டராவ் , எ.கஸ்தூரிரங்க அய்யங்கார் , ஜி. அரிபுரவோத்தம் ராவ் , சேலம் டி. ஆதிநாராயண செட்டியார் ஆகியோர் செயலாளர்கள் நிர்வாகிகள் பொறுப்பேற்றிருந்தனர். தமிழ்நாட்டில் ரெளலட் சட்ட எதிர்ப்பு நாள் 1919 , ஏப்ரல் 6 -
|
அன்று துக்கதினமாக அனுசரிக்கப்பட்டது. பல பகுதிகளில் கண்டன ஊர்வலங்கள் நடைபெற்றன. அப்போது பத்திரிகைப் பதிவுச் சட்டத்தை மீறி சென்னை நகரில் “ சத்யாக்கிரகி ” என்ற பத்திரிகையும் வெளியிடப்பட்டது. சி.விஜயராகவாச்சாரி , கிலாபத் இயக்கம் துணைத் பட்டிருந்த நூல்களான “ சர்வோதயம் ” , " இந்திய சுயராஜ்யம் ” மற்றும் வீர சவாக்கரின் “ எரிமலை ” தமிழ்நாட்டுச் விற்பனை செய்தனர். என ஆகியவற்றைத் சத்தியாக்கிரகிகள் இந்திய முஸ்லீம்கள் , காந்தியின் ஒத்துழைப்புடன் தொடங்கிய கிலாபத் இயக்கத்தில் தமிழ்நாடு ஆர்வத்துடன் கலந்து கொண்டது.
|
மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி , கிலாபத் இயக்கத்தின் உயிர்நாடியாகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சியினரும் , சுயாட்சி அங்கத்தினரும் , லிபரல் கட்சியினரும் கிலாபத் இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கம் 1919 - ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 13 14 தமிழ்நாட்டின் வரலாறு , மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் பல்லாயிரக் கணக்கில் மக்கள் சிறை சென்றனர். தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் சி.ராஜகோபாலாச்சாரியின் தலைமையில் நடைபெற்றது. ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னைத் தொழிலாளர்
|
சங்கம்சார்பில்பக்கிங்காம் & கர்னாட்டிக் ( பிஅண்ட்சி ) தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டு வந்த சட்டமன்றப் புறக் கணிப்பு வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் , நீதிக்கட்சி தேசிய நீரோட்டத்திலிந்து விலகி அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று , ஒத்துழையாமை இயக்கத்தை ஒதுக்கிவிட்டு வாக்கைப்பயன்படுத்தி கைப்பற்றியதுதான். மக்களின் ன செல் ஆட்சியைக் இந்திய விடுதலைப் போராட்டம் தேக்க நிலையிலிருந்து போது சுயராஜ்ஜியக் கட்சியினர் சட்டமன்றத்துக்குள் இயக்கத்தைத் ஒத்துழையாமை
|
தொடங்குவதென முடிவு செய்தனர். தமிழ்நாட்டில் கஸ்தூரிரங்க அய்யங்கார் , சீனிவாச அய்யங்கார் , வரதராஜூலு கஸ்தூரி ரங்க அய்யங்கார் , சீனிவாசய வெதாயுடு , விஜயராகவாச்சாரி , ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆகியோர் சுயராஜ்ஜியக் அய்யங்கார் , சத்தியமூர்த்தி , வ.உ. கட்சியில் சேர்ந்து சட்டமன்ற நுழைவை ஆதரித்தனர். சிதம்பரனார் , சிங்காரவேலு செட்டியார் , டாக்டர் வரதராஜூலு நாயுடு போன்ற தலைவர்களின் முயற்சியால் ஒத்துழையாமை இயக்கம் பெரும் வீச்சுடன் நடைபெற்றது. மேலும் இந்து , சுதேசமித்திரன் , தேசபக்தன் , முகமதன் போன்ற பத்திரிகைகளும் இந்த
|
இயக்கம் வளர உதவின. தமிழகத்தில் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள் , 1921 ஜனவரி 10 - ம் தேதி சென்னைக்கு வருகை தந்த கானாட் கோமகனைப் புறக்கணித்தனர். ஒத்துழையாமை இயக்கத்தின் போது மலபாரில் நிகழ்ந்த மாப்ளா கலகம் தமிழ்நாட்டில்மோசமானவிளைவுகளை ஏற்படுத்தியது. அதனால் தமிழ்நாட்டில் கிலாபத் , ஒத்துழையாமை இயக்கங்கள் வலுவிழந்து போயின. சௌரி சௌராவில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியினால் காந்தியே ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்டார். ஊர்வலங்களும் , பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. சுயராஜ்ஜியக் கட்சி சட்டமன்றத்திற்கு 1892 , 13 அன்று
|
நடைபெற்ற தமிழ்நாட்டிலிருந்து சுயராஜ்யக் மத்திய நவம்பர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினருள்ஏ.ரங்கசாமிஅய்யங்கார் , ஆர்.கே. சண்முகம் செட்டியார் , என். சீனிவாச அய்யங்கார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் சென்னைக்கு வந்து அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இராஜாஜி முதல்வரான பின்னர் 1937 - ல் அச்சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. சைமன் குழு புறக்கணிப்பு சைமன் குழு , 1930 , பிப்ரவரி 3 - ல் பம்பாய்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.