text
stringlengths 11
513
|
|---|
சால்வன் குப்பம் என்ற தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இவர் " செங்கோல் ” என்ற வார் இதழையும் " தமிழ் முரசு ” என்ற இதழையும் நடத்தினார். தமிழக மேலவையின் பகுதியில் 1906 , ஜூன் 26 - ல் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டி ருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப் பட்டார். இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற விருது , சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது. DT 1946 - ம்
|
ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 1954 - ம் ஆண்டு , ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது வடக்கு எல்லை போராட்டத்தை நடத்தி திருத்தணியை தமிழகத்துடன் இணைத்தார். இவர் கட்டபொம்மன் மற்றும் வ.உ.சிதம்பரம் ஆகியோரின் வரலாற்றை நூல்களாக எழுதியுள்ளார். பணியாற்றினார். இவர் எழுதிய " வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ” என்ற நூலுக்கு 1966 - ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர்
|
" எனது போராட்டம் ” என்ற பெயரில் தன் வரலாற்றை எழுதி யுள்ளார். 2006 - ம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக இவரது நூல்களை இவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டும் சிறப்பு செய்துள்ளது. அரசு நாட்டுடைமையாக்கியும் , தலைவராக ப.ஜீவானந்தம் வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் என்ற அழைக்கப்படும் ஜுவா மையே வெயிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டப் பெயர் சொரிமுத்து. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது “ சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன் ” என்ற நாவலை எழுதினார்.
|
வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில் , சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். ப.ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதம்பாண்டி என்ற கிராமத்தில் 1907 - ம் ஆண்டு ஆகஸ்ட் 21 - ம் தேதி பட்டப்பிள்ளை , உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ஜீவாவிற்கு உருவானது. “ சமதர்மம் ” , “ அறிவு ” , “ ஜனசக்தி ” ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும்
|
இக்காலங்களில் ஏற்றிருந்தார். ஈ.வெ.ராவோடு கருத்து முரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ.ராகவன் , நீலாவதி , இராமநாதன் உள்ளிட்டவர் களோடு இணைந்து “ சுயமரியாதை சமதர்மக்கட்சி ” யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே “ சமதர்மம் ” மற்றும் “ அறிவு ” ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின்முதல்மாநாடுதிருச்சியில் ( 1936 ). 1933 - ல்ஜீவா எழுதிய “ பெண்ணுரிமை கீதாஞ்சலி ” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூலாகும். தமது கொள்கையை பரப்ப 1937 - ல் “ ஜனசக்தி ” நாளிதழைத் தொடங்கியது. ஜீவா , " தாமரை ” என்ற இலக்கிய
|
இதழை 1959 - ல் தொடங்கினார். வைக்கம் சத்தியாகிரகம் , சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் , சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் பங்கேற்றார். தொழிலாளர் பாதுகாப்புக் கழகம் எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமை களுக்காகப் போராடினர். 1948 - ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். ஜீவா எழுதிய “ சோசலிசச்சரித்திரம் ” மற்றும் “ சோசலிசத் தத்துவம் ” எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த
|
சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம் , சுயமரியாதை சமதர்மக் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் கட்சி ஆகியவற்றில் மையே வெ நடைபெற்றது அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். டாங்கே எ.நேசமணி 1963 - ம் ஆண்டு ஜனவரி 18 - ம் தேதி ஜீவா மரணமடைந்தார். நேசமணி விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12 , ஜூலை 1895 - ம் ஆண்டு அப்பாவு ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில்
|
பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர் , பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921 - ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். நேசமணி இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர். தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அதன் விளைவாக 1956 நவம்பர் 1 - ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் மக்கள் இவரை “ குமரித் தந்தை ” என்றும் “ மார்ஷல் நேசமணி ” என்றும் சிறப்பிக்கின்றனர். உட்கார
|
நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர் உட்கார குந்துமனையும் ( Stool ) இடப்பட்டிருந்தது. முதல் நாளன்றே குந்து மனையை காலால் உதைத்து தள்ளிவிட்டு , நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தார். இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்களை இவர் தலைமையேற்று நடத்தினார். பொது பின்பு ஈடுபட்ட நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி
|
சட்டசபைக்கும் சென்றார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார். தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சுதந்திரத்திற்கு பின் தமிழக அரசியல் கட்சிகளின் ஆட்சி ந 1937 - ல் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 214 இடங்களில் 159 இடங்களை வென்ற காங்கிரஸ் , நீதிக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. படுத்தப்பட்டது. உலகப்போரில் 1937 ஜூலை 14 - ம் நாள் இராஜாஜி முதல்வராக ( பிரீமியரி பதவியேற்றார். 1937 - ல் விற்பனை வரி அறிமுகப் டி.பிரகாசம் இந்தியாவை
|
உட்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939 - ம் ஆண்டு அக்டோபர் 10 - ம் நாள் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட நெருக்கடி நிலையினால் 1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை சென்னை மாகாணத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்றது. ( 1946 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1946 ஏப்ரல் 30 - ம் நாள் டி.பிரகாசம் முதலமைச்சரானார். நம்பிக்கை யில்லாத தீர்மானம் நிறைவேற்றப் பட்டதையடுத்து 1947 மார்ச் 23 - ம்நாள் டி.பிரகாசம் தலைமையினலான அமைச்சரவை பதவியிழந்தது. சுதந்திரத்திற்கு பின்
|
யமையே ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947 மார்ச் 23 அன்றே காங்கிரஸ் கட்சியின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிரீமியராக முதலமைச்சர் ) பதவியேற்றார். அன்று முதல் 6 , 1949 வரை இவரே முதல்வராகத் தொடர்ந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புனித ஜார்ஜ் கோட்டையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இவரே சுதந்திரத் திருநாளைக் காமராஜர் கொண்டாடிய முதலாவது தமிழக முதல்வராவார். இவரது ஆட்சியில் 1949 - ல் ஜமீன்தாரி முறை
|
ஒழிக்கப்பட்டது. 1949 ஏப்ரல் 6 முதல் 1950 ஜனவரி 26 வரை பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு அதிகாரத்திலிருந்தது. இராஜாஜி தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியான முதல் பொதுத்தேர்தல் 1952 மார்ச் - ல் நடைபெற்றது. மாணிக்க வேலரின் பொதுநலக்கட்சி ( Commonweal Party ) மற்றும் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ராமசாமி படையாச்சி ஆகியோரது ஆதரவுடன் 1952 ஏப்ரல் 12 - ல் இராஜாஜி முதலமைச்சரானார். 1953 அக்டோபர் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் உதயமானது. ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் ஆந்திர மாநிலத்தின்
|
முதல் முதலமைச்சராகப் இராஜாஜிக்கு பிறகு 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2 - ம் நாள் வரை காமராஜர் தமிழக முதல்வராக அரும்பணியாற்றினார். பணியாற்றினார். 1953 - ம் ஆண்டு இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து 1954 ஏப்ரல் 13 - ல் இராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார். 1956 - ல் காமராஜர் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கினார். 1958 - ல்தொழிலாளர் கூலி நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டது. 1955 - ல் எட்டயபுரத்தில் இலவச மதிய உணவுத் திட்டத்தை துவக்கினார் காமராஜர் , மையே வெல் 958 - ல்
|
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது. நிர்வாக 1961 - ல் சென்னை நில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இது நில உச்ச வரம்பை 30 ஏக்கராக நிர்ணயித்தது. 1961 பிப்ரவரி 24 - ல் சட்டப்பேரவையில் அரசாங்க கடிதப் போக்குவரத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை இனி தமிழ்நாடு என்று எழுதப்படும்என அரசு அறிவித்தது. 1963 - ல்காமராஜர் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவற்காக “ காமராஜர் 1955 - ல் விவசாய வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டது. 1956 - ல் இயற்றப்பட்ட சென்னை குத்தகை சாகுபடியாளர்கள் ( நியாய மான குத்தகை செலுத்துதல் ) சட்டம் ,
|
நியாயமான குத்தகையை நிர்ணயம் செய்தது. 31 தமிழ்நாட்டின் வரலாறு , மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் வருகிறது என்று பெரியார் கூறினார். இதனால் தமிழ் மக்களின் முன்னேற்றம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும் என்று கூறினார். 1930 - ல் நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை நாட்டில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்ட்டது. 1936 - ல் பொப்பிலி ராஜா தலைமை யிலான நீதிக்கட்சி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்க ஆணை பிறப்பித்தது. திட்டம் ” ( K - Plan or Kamaraj Plan ) கொண்டு
|
வந்தார். அத்திட்டப்படி காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிக்கு திரும்பினார். பக்தவத்சலம் காமராஜருக்குப் பிறகு தமிழக முதலமைச் சராக பதவியேற்றவர் எம்.பக்தவச்சலம் ஆவார். இவர் 1963 அக்டோபர் 2 முதல் 1967 மார்ச் 6 வரை முதல்வரக பதவி வகித்தார். இவரே காங்கிரஸ் கட்சியின் கடைசி தமிழக முதலமைச்சராவார். இவரது ஆட்சிக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் சுதந்திரத்திற்கு முன்பு இந்தி எதிர்ப்பு பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவில் ,
|
ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் இயக்கம் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியது. 1918 மற்றும் 1922 - ம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பரப்புவதற்காக 40 மையங்கள் தொடங்கப்பட்டன. அதற்கு நீதிக் கட்சியின் ஆதரவும் கிடைத்தது. சென்னை மக்களின் மேல் பிராமணங்களின் பண்பாட்டு ஆதிக்கமே , மீண்டும் இந்தி வடிவில் மாகாண முதல் முறையாக இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937 - ம் ஆண்டு நடத்தப் பட்டது. இராஜாஜி தமிழக முதல்வராக பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 1937 ஆகஸ்ட் 11 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாய
|
பாடமாக்கப்படும் என்பதை சுவறிவித்தார். இராஜாஜியின் இந்த அறிவிப்பை எதிர்த்து முன் முதலாக மறைமலை அடிகள் , பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் ஆகியோர் திருச்சியில் முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ.டி. பன்னீர் செல்வம் மற்றும் ஈ.வெ.ரா பெரியார் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன , தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 1950 மே 2 - ல் அப்போதைய கல்வி அமைச்சர் மாதவராவ் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை இரண்டாம்
|
மொழியாக ஆங்கிலமும் / மூன்றாம் மொழியாக இந்தியும்கட்டாய பாடம் என்ற உத்தரவை பிறப்பித்தார். 1950 மே 10 - ம் நாள் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாளாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் 1950 , ஜூலை 18 - ல் அரசு தனது கட்டாய இந்தி திணிப்பை அகற்றியது. இந்த எதிர்ப்புகளுக்கிடையே இந்தியை கட்டாய பாடமாக்கும் அரசாணையை இராஜாஜி 1938 ஏப்ரல் 21 அன்று வெளியிட்டார். இராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளிவில் எதிர்ப்பு கிளம்பியது. 1938 டிசம்பர் 3 இந்தி எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. 1939 - ல் இந்தி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதால்
|
கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவலில் இருக்கும்போதே இறந்தனர். ( மொழிப்போர் தியாகிகள் என்று அழைக்கப்பட்டனர். இராஜாஜி தலைமையிலான பின்னர் இவர்கள் காங்கிரஸ் அரசு 1939 - ம் ஆண்டு பதவி விலகியது. அதைத் தொடர்ந்து சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு 1940 பிப்ரவரியில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கி அதை விருப்பப் பாடமாக்கினார். சுதந்திரத்திற்கு பிறகு இந்தி எதிர்ப்பு LITA 1952 முதல் திராவிடர் கழகமும் , திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து மொழிப் போராட்டத்தை துவங்கின. முதற்கட்டமாக பெயர்பலகை
|
யிலுள்ள இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் ஆரம்பமானது. 1963 - ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று இந்திய ஆட்சி மொழிச் சட்டத்தை மையே வெலிப்போதைய உள்துறை அமைச்சர் சாஸ்திரி தாக்கல் சுதந்திரத்திற்கு பிறகு ஓ.பி.ராமசாமி ரெட்டியர் தலைமையிலான அரசு சென்னை மாகாணத்தில் மீண்டும் இந்தியை கட்டாயப் பாடமாக்கியது. இதனால் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது. 1948 நவம்பர் 2 - ல் அண்ணாவைத் தளபதியாகக் கொண்டு திராவிடர் கழகம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியது. லால்பகதூர் செய்தார். இச்சட்டத்தின்படி 1965 ஜனவரி 26
|
- ம் நாள் இந்தியாவில் இந்தி ஆட்சி மொழி யாகும். இந்தி மொழிக்கு துணை மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப் படும் என்று அறிவிக்கப் பட்டது. இச்சட்டம் இந்தி பேசாத மக்களுக்கு இழைத்த அநீதி என்று கருதி இதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. 1967 மார்ச் 6 - ல் அண்ணாதுரை தமிழக முதல்வரானார். 33 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 1968 ஜனவரி 23 - ல் தமிழக அரசின் மொழிக் கொள்கையாக " தமிழ் , ஆங்கிலம் “ என்ற இருமொழி திட்டத்தை அறிவித்தார் அண்ணா. 1968 ஜனவரி 23 -ல் ஆங்கிலம் , தமிழ் ஆகிய இரு மொழிகளே
|
தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் என்று இரு மொழி கொள்கை திட்டத்தை அறிமுகம் செய்தவுடன் நீண்ட கால மாக நடைபெற்று வந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவடைந்துது. தி.மு.க. ஆட்சியல் தமிழகம் 34 1944 - ம் ஆண்டு தந்தை பெரியரால் திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் இடையே தோன்றிய கருத்து வேறுபாடு காரணமாக , அண்ணாதுரை திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949 - ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார். தி.மு.க. என்றழைக்கப்படும் திராவிட முன்னேற்றக்
|
கழகம் 1952 - ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. 1968 ஜனவரி 3 - ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அண்ணா அறிமுகப்படுத்திய சுய மரியாதைத் திருமண பாதுகாப்புச் சட்டம் 1968 , ஜனவரி 20 முதல் நடைமுறைக்கு வந்தது. 1969 - ல் அண்ணா இறந்ததும் நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பணியாற்றினார். பிப்ரவரி 10 - ல் கலைஞர் மு.கருணாநிதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார். 1971 ஜனவரி 31 அன்று ஆட்சி கலைக்கப்படும் வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். தி.மு.க. 1967 தேர்தலில் 1938 இடங்களை
|
வென்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 பிப்ரவரி 6 - ம் நாள் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். இவரது ஆட்சியில் 1969 - ம் ஆண்டு ஜனவரி 14 அன்று சென்னை மாநிலம் " தமிழ்நாடு ” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1969 மையே வெல் ? 2 14 - ல் கட்சிப் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இதுதி.மு.கவில்ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாகக் கருதப்பட்டது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்காக தனியாக
|
அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “ நீராடும் கடலுடுத்த ” என்ற பாடல் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் “ ஸ்டேட் எக்ஸ்பிரஸ் ” என்ற பெயரில் இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு “ தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ” என பெயர் மாற்றம் செய்யப் பட்டது. 1969 ஜுன் 13 - ல் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டம் இயற்றப்பட்டது. 1970 - ல் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1970 - ல்
|
உலக நிறுவனம் நிறுவப்பட்டது. 1971 - ல் கண்ணொளி வழங்கும் தமிழாராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது. 1973 - ல் இலவச சைச்சிள் ரிக்ஷா வழங்கும் திட்டம் துவக்கம். 1974 - ல் ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம் துவக்கம் 1974 - ல் அகர முதலியை பல தொகுதிகளாக வெளியிடுவதற்கான “ அகர முதலி திட்ட இயக்கத்தை ” நிறுவினார் கருணாநிதி. 1975 - ல் அனாதை சிறுவர் மற்றும் மகளிர் மறுவாழ்வுத் திட்டம் செயல் படுத்தப்பட்டது. 1974 ஏப்ரல் 20 - ல் " மாநில சுயாட்சி ” கோரும் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 1976 முதல் 1989 வரை அ.தி.மு.க.
|
ஆளுங்கட்சியாகவும் , தி.மு.க. எதிர்க் கட்சியாகவும் இருந்தது. 1989 - ல் டாகடர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் துவங்கப் பட்டது. மக்கள் நலன்களுக்கான குடிநீர் வடிகால் வாரியம் , குடிசை மாற்று வாரியம் ஆகியவை உருவாக்கப் பட்டன. 1989 டிசம்பர் 29 - ல் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. 1993 அக்டோபர் 11 - ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோபாலசாமி ( வைகோ ) கட்சியிலிருந்து பமையே வெளுக்கப்பட்டார். இதனால் தி.மு.க.வில் முறையாக பிளவு 1969 அக்டோபர் 2 அன்று மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான
|
உறவுகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டாக்டர் பி.வி. ராஜமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. வை. இரண்டாவது ஏற்பட்டது. 1996 - ல் மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1999 - ல் தமிழகத்தில் முதல் உழவர் சந்தை மதுரையில் துவக்கப்பட்டது. 2006 ஜுன் 3 - ம் தேதி “ 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை ” துவங்கினார் கருணாநிதி. 2006 - ல் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 “ கல்வி 35 36 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சமச்சீர்
|
பள்ளிக்கல்வி முறை சட்டம் ” இயற்றப்பட்டது. 2010 - ஜூன் 23 முதல் 27 வரை கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் எம்.ஜி.ராமச்சந்திரன் 1962 - ல் மேலவை உறுப்பினர். 1967 - ல் பரங்கிமலைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பின ரானார். தி.மு.க. 1972 அக்டோபர் 13 - ல் விலிருந்து வெளியேற்றம் 1977 முதல் 1987 வரை தமிழக முதல் வராக ஆட்சி புரிந்தார். புரட்சித் தலைவர் என்றும் மக்கள் தலைவர் என்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆர். ( மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் ) 1972 - ம் ஆண்டு
|
அக்டோபர் 18 - ம் நாள் “ அண்ணா வெதிராவிட முன்னேற்றக் கழகம் ” என்ற வளர்ச்சி நாளாக ” அறிவிக்கப் பட்டது. 2006 நவம்பர் 11 - ல் “ வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் ” துவக்கம். 2006 ஜனவரி 15 அன்று இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைகான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்காக 2006 ஜூலை 7 - ல் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்தில்
|
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 2007 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டு வரி அமலுக்கு வந்தது. 2008 செப்டம்பரில் இலவச அவசர கால மருத்துவ ஊர்தி திட்டம் “ 108 ” ( இலவச அம்புலன்ஸ் சேவை ) ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு பள்ளிகள் ( கட்டணம் வசூலிப்பு முறைப் படுத்துதல் ) சட்டம் 2009 - ம் ஆண்டு இயற்றப்பட்டது. 2010 மார்ச் 13 - ல் புதிய சட்டமன்ற வளாகம் திறக்கப்பட்டது. 2010 - ம் ஆண்டு “ தமிழ்நாடு கட்சியைத் தோற்றுவித்தார். பின்னர் அக்கட்சியின் பெயரை “ அனைத்து
|
இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ” என மாற்றம் செய்தார். 1973 - ல் இக்கட்சி முதன் முதலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டது. 1982 - ல் எம்.ஜி.ஆர் “ இலவச சத்துணவு திட்டத்தை ” துவக்கினார். 1983 - கிருஷ்ணா நதியிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக ஆந்திர அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர். 1983 - ல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு
|
திறக்கப் பட்டது. 1983 - ல் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்த்ப்பட்டது. 1984 - ல் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் அவர். ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் தமிழக மதல்ரானார். 1987 டிசம்பர் 24 - ம் தேதி எம்.ஜி.ஆர். உயிர் நீத்தார். இவருக்குப் பிறகு இவரது மனைவி ஜானகி அம்மை யார் 1988 ஜனவரி 7 முதல் 30 வரை தமிழக முதல்வராக பதவி வகித்தார். இவரே தமிழகத்தின்
|
முதலாவது பெண் முதலமைச்சராவார். அ.இ.அ.தி.மு.கவில் 1988 - ல் பிளவு ஏற்பட்டு மீண்டும் 1989 - ல் ஒன்றாக இணைந்தது. 1974 - ல் நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தது. 1977 - ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 131 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. 1977 ஜூன் 30 - ல் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அது முதல் 1987 தமிழக முதல்வராக ஆட்சிப்புரிந்தார். 1978 - ல் தமிழகத்தில் " 10 + 2 + 3 " எனும் கல்விமுறை அமலுக்கு வந்தது. சென்னையில் “ அண்ணாபல்கலைக்
|
கழகம் ” துவங்கப்பட்டது. 1980 - இல்பரம்பரையாக இருந்தகிராம ஊழிய முறை ஒழிக்கப்பட்டது. கர்ணம் , கிராம முன்சீப் போன்ற பதவிகளும் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக “ கிராம நிர்வாக அதிகாரிகள் ” நியமிக்கப் பட்டனர். 1980 - ல் நடைபெற்ற 7 வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானானர் எம்.ஜி.ஆர். மையே வெல் 1981 - ல் மதுரையில் " ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு ” நடை பெற்றது. 1981 செப்டம்பர் 15 - ல் “ தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ” உருவாக்கப்பட்டது. 1982 - ல் கோவையில் பாரதியார் பல் கலைக்கழகமும் , கொடைக்கானலில் 37
|
தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் டான்சி நில வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் அவர் முதல்வராக பதவியேற்றது செல்லாது என உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 21 , 2001 இல் தீர்ப்பளித்தது. டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் 38 1991 ஜுன் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.முக. வெற்றி பெற்றது. 1991 ஜூன் 24 அன்று செல்வி. ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றார். இவரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதலாவது பெண் முதலமைச்சராவார். பதவியேற்ற அன்று
|
முதன் முதலாக தமிழகத்தில் மதுக்கடைகளை டான்சி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிசம்பர் 4 , 2001 - ல் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். 1992 - ல் அனைத்து மகளிர் காவல் அதன் பிறகு ஜெயலலிதா 2002 பிப்ரவரி 21 - ல்ஆண்டிப்பட்டிதொகுதியில் நிலையம் தொடக்கம். 5. E 1992 - ல் பெண் குழந்தைகளை பாது காப்பதற்கான தொட்டில் குழந்தை திட்டம் துவங்கப்பட்டது. பாய் பரிந்துரைகள் அமலுக்கு வந்தன.யே வதைலமைச்சராகப் பதவியேற்றார். போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 ,
|
மார்ச் 2 - ல் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் 1994 - ல் மண்டல் கமிஷன் 2002 , மார்ச் 23 - ல் கோயில்களின் 1995 - ல் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. 1996 சட்டமன்ற தேர்தலில் தோல்வி யடைந்தது. அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. 2002 - ல் “ அனைவருக்கும் கல்வித் திட்டம் ” தொடங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி சேர்க்கையில் ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. மே , 2001 - ல் நடைபெற்ற 12 - வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று , மே 15 அன்று
|
ஜெயலலிதா இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். இதனால் ஜெயலலிதா பதவி விலக ஓ. பன்னீர் செல்வம் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதற்கிடையில் A தமிழகத்தின் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 4. மாநில சட்டமன்ற 1/3 பகுதி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பகுதி மேலவை கூடியது. இந்த மேலவையில் மொத்தம் 55 உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட மேலவை 1952 - ம் ஆண்டு ஏப்ரல் 21 - ம் நாள் முதல்
|
செயல்படத் தொடங்கியது. இதன் தலைவர் டாக்டர் பி.வி. செரியன் ஆவார். இவருக்குப் பின் எம்.ஏ.மாணிக்க வேலுவும் , அவரையடுத்து சி.பி. சிற்றரசுவும் மேலவைத்தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1978 - ம் ஆண்டு ஏப்ரல் 26 - ந் தேதி ம.பொ.சிவஞானம் மேலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1986 - ம்ஆண்டு அக்டோபர் 31 - ம் நாள் மேலவை கலைக்கப்படும் வரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலம் மேலவைத் தலைவராக விளங்கினார். மேலவை தேர்தல் உறுளுக்கான மேலவை தேர்தலை , இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் , மேலவை உறுப்பினர்கள்கீழ்கண்ட 5 வகைகளில்
|
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1. பட்டதாரி மூலம் 1/12 பகுதி உறுப்பினர்களும் , 2. ஆசிரியர்கள் மூலம் 1/12 பகுதி உறுப்பினர்களும் , 3. உள்ளாட்சி அமைப்பு மூலம் 1/3 பகுதி உறுப்பினர்களும் , 5. 1/6 வெ மூலம் உறுப்பினர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். கலை , இலக்கியம் , அறிவியல் , கூட்டுறவு , சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்தவர்கள் பரிந்துரைப்படி மேலவை ஆளுநரால் நியமிக்கப்படுவர். மேலவை கலைப்பு உறுப்பினர்களும் அமைச்சரவையின் உறுப்பினராக 1947 - ம் ஆண்டு சென்னை விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிடத் தடை செய்யும்
|
சட்டத்துக்கான முன்வடிவு மேலவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுவே சட்டமன்றத்தில் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட மேலவையின் சட்ட முன்வடிவாகும். எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1986 - ம் ஆண்டு மே மாதம் 14 - ம் நாள் சட்ட கலைப்பதற்கான மேலவையை தீர்மானம் , தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நிறைவேற்றப் பட்டது. இத்தீர்மானம் குறித்த சட்ட முன்வடிவு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு , 1986 செப்டம்பர் 1 - ல் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு இந்திய அரசுச் சட்டம் எண் 40 ஆக வெளியிடப்பட்டது.
|
இச்சட்டம் 1986 - ம் ஆண்டு நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்ததால் , அன்றைய தினமே மேலவை கலைக்கப்பட்டது.
|
பாடம் – 1 பொருளியலின் தன்மையும் எல்லையும் முன்னுரை பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல். இது மனித விருப்பங்களை பற்றியும் , அவை நிறைவு செய்யப்படுவது பற்றியும் ஆராய்கிறது. பல்வேறு பயன்பாடுகளை உடைய பற்றாக் குறையான வளங்களைப் பயன்படுத்தி , ஒரு சமுதாயம் நிகழ்கால மற்றும் எதிர்கால நுகர்விற்காகப் பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்கிறது என்பதைப் பற்றி பொருளாதாரம் ஆய்வு செய்கிறது. பொருளியல் , ' அரசியல் பொருளாதாரம் ’ என்றும் அழைக்கப்படுகிறது. பாலிஸ் ( Polis ) என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘ அரசு ’ ( State ) என்று பொருள். அரசு
|
நிர்வாகத்திற்குத் தொன்மை எழுத்தாளர்கள் ‘ அரசியல் பொருளாதாரம் ’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார்கள். தனி ஒரு மனிதன் தனது குடும்ப வருமானத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று அரசும் ஒரு சமுதாயத்திற்கு அதிக நலம் கிடைக்கச் செய்யவேண்டும். ஆகவே இது “ அரசியல் பொருளாதாரம் ” எனப்படுகிறது. எல்லா பொருளாதார நடவடிக்கைகளுக்கும் மனித விருப்பங்களே துவக்க நிலையாகும். முயற்சி எடுக்காவிடில் மனித விருப்பங்களை நிறைவு செய்ய முடியாது. எனவே , விருப்பம் , முயற்சி மற்றும் மனநிறைவு ஆகியவற்றை
|
மையமாகக் கொண்டது பொருளாதாரமாகும். மனித விருப்பங்களோடு தொடர்புடைய அறிவியலே பொருளியலாகும். ஆனால் நடைமுறையில் மனித விருப்பங்களே நிறைவுச் செய்யும் வளங்கள் வரையறைக்குட்பட்டன. மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பொருள்கள் பற்றாக்குறையாக ( Scarcity ) உள்ளன. தனி மனிதனுக்கும் , அரசுக்கும் கிடைப்பருமை பொதுவானதே. பற்றாக்குறை என்பது மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் நிலவுகின்ற அடிப்படை உண்மை. ஆகவே பொருளியல் “ பற்றாக்குறை குறித்த அறிவியலாகும் ”. நம்முடைய விருப்பங்கள் எண்ணிடலங்காதவை. ஆனால் அவற்றை நிறைவு செய்யும் வளங்கள் ,
|
பற்றாக்குறையானவை. இது ' தெரிவு செய்தலுக்கு ’ வழிவகுக்கின்றது. நமது விருப்பங்களை நிறைவு செய்யும் பொருட்களின் அளிப்பு அளவில்லாமலிருந்தால் ' தெரிவு செய்தல் ’ என்ற பிரச்சனை எழாது. மனித விருப்பங்கள் எண்ணற்றவை என்பது உண்மை. ஆனால் அனைத்து விருப்பங்களும் சமமான முக்கியத்துவம் உடையவை அல்ல. ஆகையால் நாம் மிக முக்கியமான , மிக அவசியமான விருப்பங்களைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே ‘ தெரிவு செய்தல் ' என்பது பொருளாதார நடவடிக்கையின் சாராம்சமாகும். பொருளியல் என்பது ‘ தெரிவு செய்யும் அறிவியல் ' என்றும் கருதப்படுகிறது.
|
நடைமுறையில் நாம் விரும்பும் பண்டங்களனைத்தும் ' கிடைப்பருமை ' உடையன அல்ல. இயற்கையில் கிடைக்கும் சில பண்டங்களான காற்று , சூரிய ஒளி போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன. இவை நமது வாழ்விற்கு இன்றியமையாதனவாக இருப்பினும் , அவற்றை நாம் விலைகொடுத்து வாங்குவது இல்லை. அவை இலவசப் பண்டங்கள் ( Free Goods ) எனப்படும். ஆனால் நாம் விரும்பும் பண்டங்களில் பெரும்பான்மையானவை கிடைப்பருமை மிக்கவை. அவைகளை விலைகொடுத்தே வாங்க வேண்டும். பொருளியலில் பண்டங்களின் விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்றும் பயிலுகிறோம். எனவே பொருளியல் , ஒரு '
|
விலைத் தீர்மானம் ’ பற்றிய அறிவியல். நவீன பொருளாதாரம் ஒரு ‘ பணவியல் பொருளாதாரம். ' விலைகள் , பணமாகச் செலுத்தப்படுகின்றன. இன்றைய சமுதாயத்தின் பொருளியல் வாழ்க்கையில் ‘ பணம் ' ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்டங்களை வாங்கவும் விற்கவும் , வாரம் , கூலி வட்டிவீதங்களைச் செலுத்தவும் பணம் பயன்படுத்தப்படுகின்றது. அன்றாட வாழ்க்கையில் பணத்தின் முக்கியப் பங்கினைப்பற்றி பொருளியல் பயிலுகிறோம். நமது விருப்பங்களை நிறைவு செய்யும் பற்றாக்குறையான பண்டங்களை நாம் ‘ செல்வமாக ’ கருதுகிறோம். எனவே தொன்மைக் காலங்களில் பொருளியல்
|
செல்வத்தைப் பற்றிய ஒரு அறிவியலே. மனித நலத்தை மேம்படுத்த செல்வம் அவசியம். ஆகையால் பொருளியல் , செல்வத்தைப் பற்றியும் அதனோடு நலத்தைப் பற்றியும் கூறுகிறது. மேலும் பொருளியலின் இயல்புகளைச் சுருக்கமாக காண்போம். பொருளியலின் இலக்கணங்கள் ‘ பொருளியலின் தந்தை ’ ஆதம் ஸ்மித் , ஆல்ஃபிரட் மார்ஷல் , இலயனல் - ராபின்ஸ் , பால் ஏ. சாமுவேல்சன் ஆகிய பொருளியல் அறிஞர்கள் அளித்த முக்கிய இலக்கணங்கள் பின்வருமாறு. செல்வ இலக்கணம் ( ஆதம் ஸ்மித் ) ( Adam Smith ) ஆதம் ஸ்மித் ( 1723 90 ) பொருளியலின் இலக்கணத்தை வரையறுத்துள்ளார். " பொருளியல்
|
என்பது செல்வத்தைப் பற்றிய ஒர் அறிவியல் " 1776 ஆம் ஆண்டில் " நாடுகளின் செல்வம் ” என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அவர் அரசியல் பொருளியலின் தந்தை எனப்படுகிறார். ஏனெனில் , இவரே முதன் முதலில் அனைத்துப் பொருளியல் கருத்துக்களையும் முறையாக ஒருங்கிணைத்தவர் ஆவார். அதம் ஸ்மித்துக்குப் பிறகே பொருளியலை நாம் முறைபடுத்தப்பட்ட அறிவியலாகப் பயில்கிறோம். பொருளியல் ‘ செல்வம் ‘ சிறப்பிடத்தைப் பெறுகிறது. பொதுவாக செல்வம் என்பது பணத்தைக் குறிக்கும். பொருளியல் மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் ' செல்வம் '
|
எனப்படும். ஆனால் , மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் செல்வமாகக் கருதப்பட மாட்டா என்பதை மனதில் கொள்ள வேண்டும். ( எ.கா ) காற்றும் சூரியஒளியும் நமக்கு அத்தியாவசியமானவை. அவையின்றி நாம் வாழ இயலாது. ஆனாலும் அவை செல்வமாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை அளவற்ற அளிப்பு கொண்டவை. ஓரளவு பற்றாக்குறையும் பணமதிப்பு உள்ள பண்டங்கள் அனைத்தும் செல்வமாகக் கருதப்படுகின்றன. நாம் செல்வத்தின் நுகர்வு , உற்பத்தி , பரிமாற்றம் , பகிர்வு என்பனவற்றைப் பயில்கிறோம். “ செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த
|
செயல்முறை அறிவியல் " என்று ஜே.எஸ். மில் பொருளியலை வரையறை செய்கிறார். செல்வத்தை அடைவதிலும் , அதனைப் பயன்படுத்துவதிலும் எற்படும் பிரச்சினைகள் பற்றி அறிவதே “ பொருளியல் “ என்னும் கருத்தை ஆதம் ஸ்மித் கொண்டிருந்தார். அனைத்து நாடுகளும் செல்வத்தை எவ்வெவ்வழியில் பெருக்கிக் கொள்வது என்பதைப் பற்றி அறிவதில் அவர் நாட்டம் கொண்டிருந்தார். குறைபாடுகள் ஆதம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தில் பல குறைபாடுகள் உள்ளன. பொருளியலுக்கு இவர் இலக்கணம் தரவில்லை. கார்லைல் , ரஸ்கின் போன்ற சமூக அறிவியலாளர்கள் பொருளியலை “ மகிழ்வற்ற அறிவியல் “
|
என்றும் “ இருண்ட அறிவியல் " என்றும் அழைத்தனர். ஆனால் அது நியாயமற்றது. ஏனெனில் பொருளியலின் தன்மையும் , எல்லையும் தவறாக உணரப்பட்டது. இவ்விலக்கணம் செல்வதத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை அவர்கள் பணத்தைப் பற்றிய கருத்தாக எண்ணிக் கொண்டார்கள். மக்கள் பணம் திரட்டுதல் மட்டுமே தலையாய நோக்கமென பொருளியல் விளக்கியதாக ரஸ்கின் மற்றும் கார்லைல் முடிவுக்கு வந்தனர். செல்வந்தர்களாவதையே குறியாகக் கொண்டிருந்ததால் - பொருளியலை இவர்கள் ஒரு ‘ சுயநல அறிவியல் ' என்று அழைத்தனர். மேற்கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. பொருளியலில் செல்வம்
|
என்பது பணத்தை மட்டும் குறிப்பது அன்று. இது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பற்றாக்குறையான பண்டங்களை குறிக்கும். அது மட்டுமின்றி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் ‘ செல்வம் ’ என்ற பதத்தை ' நலம் ' என்றே பொருள் கொண்டனர். செல்வத்திற்கு அதிக முக்கியத்வத்தை ஆதம் ஸ்மித் அளித்தார் என்பதே மிகப் பெரிய பொருளியலில் செல்வத்தைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆயினும் அதைவிடவும் முக்கியமானது மனிதனைப் பற்றி அறிந்து கொள்ளுதலே ! செல்வத்தைவிட , மனித இனத்தின் நடவடிக்கையைப் பற்றிப் பயிலுகின்ற அறிவியலே
|
பொருளியல். ஆதம் ஸ்மித்தின் பொருளியல் இலக்கணத்தைப் பற்றி விவாதிக்கும்போது அவர் வாழ்ந்த காலத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவர் , இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இந்நூலை எழுதியுள்ளார். இங்கிலாந்தில் தொழிற்புரட்சி பெருமளவு முதலீட்டினாலும் , பேரளவு இயந்திரங்களின் பயன்பாட்டினாலும் , பேரளவில் செல்வத்தை உற்பத்தி செய்ய வழிவகுத்தது. எனவேதான் ஆதம் ஸ்மித் செல்வத்தை முக்கியவத்துவப்படுத்தி “ நாடுகளின் செல்வமும் அதன் இயல்பும் காரணங்களும் ( Causes ) பற்றிய ஒர் ஆய்வு “ என்ற நூலை வெளியிட்டார். ஆல்ஃபிரடு
|
மார்ஷலின் ( 1842 – 1924 ) நல இலக்கணம் ( Welfare Economics ) 1890 ஆம் ஆண்டு ஆல்ஃபிரடு மார்ஷல் ' பொருளாதார கோட்பாடுகள் ' என்ற நுாலை வெளியிட்டார். அதில் அவர் அன்றாட வாழ்க்கையில் மனித இனத்தைப் பற்றிப் பொருளியல் ஆராய்கிறது என்று வரையறுத்துள்ளார். “ சாதாரண மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது ". பொருளியல் செல்வத்தைப் பற்றி ஆராய்கிறது என்பதை மார்ஷல் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் பொருளியல் செல்வத்தைப் பற்றி மட்டுமே ஆராய்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. பொருளியல் ஒரு பக்கம்
|
செல்வத்தைப் பற்றியும் , அதைவிட முக்கியமாக மற்றொரு பக்கம் மனிதனைப் பற்றி ஆய்வு செய்கின்ற இயல். அவருடைய மையக் கருத்து மனிதனைப் பற்றியதே. செல்வத்தைப் பற்றி ஆராய்வதைவிட மனிதனைப் பற்றி ஆராய்வதே இன்றியமையாததாக கருதுகின்றார். பொருளியல் மனித இனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆராயவில்லை. மனிதனை வாங்குபவர் - விற்பவராகவும் , உற்பத்தியாளர் - நுகர்வோராகவும் , முதலீட்டாளராகவும் , முதலாளி - தொழிலாளியாகவும் கெயின்கிராஸ் ( CainCross ) கூறுகின்றார். சேமிப்பாளர் ஆராய்வதாக Page 7 of 236 “ பொருளியல் " மக்கள் வருமானத்தை எவ்வாறு
|
பெறுகிறார்கள். அவற்றை பயன்படுத்துகின்றார்கள் , எவ்வாறு மிகச் வளங்களை சிறந்த உபயோகப்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது. எவ்வாறு முறையில் “ பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது ” என்பதைப் பற்றி ஆராய்கிறது. பொருள்சார் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் , பொருள்சார் நல இயலாக பொருளியல் ஆயிற்று. திறனாய்வு ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தைவிட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது என்றால் மிகையாகாது. சமூகப் பிரச்சனைகளுக்கு இது முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல் ஆகும். அது
|
மட்டுமின்றி , செல்வத்துக்கும் பொருள்சார் நலனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பொருளியல் ஓர் அறிவியல். அது பொருள்சார் நலனைப் பற்றியது என்ற மார்ஷலின் மையக் கருத்தை இலயன்ல் இராபின்ஸ் கடுமையாக குறை கூறினர். அரசியல் பொருளாதாரத்தை தவறாக கையாண்டுள்ளதாக மார்ஷலை இராபின்ஸ் குறை கூறுகின்றார். 1. முதலாவதாக பொருள்சார் நலனை உயர்த்தும் நடவடிக்கைகளை மட்டும் பொருளியல் ஆராய்கிறது. ஆனால் பல நடவடிக்கைகள் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. ஆனால் அவை பொருளியல் நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன. உதாரணமாக , மது , சிகரெட்டு உடல்
|
நலனுக்குத் தீங்கானது என்பதை நாம் அறிவோம். ஆனால் அப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அப்பொருளுட்களுக்கும் சந்தை உண்டு , வாங்குபவரும் , விற்பவரும் உண்டு. எனவே உற்பத்தி செய்வதும் , பகிர்வு செய்வதும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. மற்றொரு எடுத்துக்காட்டாக , ‘ போர் ’ , பொருள் சார் நலனை உயர்த்துவது இல்லை. ஆனால் போரைப் பற்றிய பொருளாதாரம் நமது இயலில் உண்டு. பொருளியலில் இது ஒரு முக்கிய பிரிவாகும். போருக்கு பல பொருளாதார பிச்சனைகள் காரணமாகும். அரசியல் , சமூக காரணங்களைவிட பொருளியல்
|
காரணமே மிகவும் முக்கியமானதாகும். ஆகவே பொருளியல் பொருள்சார் நலனை உயர்த்துவது என்பது பொருந்தாது. இரண்டாவதாக சில பொருளியல் நடவடிக்கைகள் நலனை உயர்த்துகின்றன. ஆனால் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. எடுத்துக்காட்டாக மருத்துவர்கள் , வழக்கறிஞர்கள் , நடிகர்கள் , இசைக் கலைஞர்கள் போன்றோரின் பணிகள் நமது நலனை உயர்த்துகின்றன. ஆனால் அவர்களுடைய பணிகள் பருப்பொருள்களை உற்பத்தி செய்வது இல்லை. பொருள்சார் நல இலக்கணத்தின்படி இவர்களுடைய நடவடிக்கைகள் பொருளியல் நடவடிக்கைகளாக கருதப்படுவது இல்லை. ஏனெனில் இவர்களுடைய பணிகள் பொருள்சார்
|
நலனை உயர்த்துவது இல்லை. இவர்களுடைய பணிகளைப் நாம் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் அதிக விலை கொடுத்து இவர்களது பணிகளைப் பெறுகிறோம். இவர்களது பணிகளுக்கு பொருளியலில் மதிப்பு உண்டு. பொருள்சார் நலனுக்கானக் காரணங்களைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறுவது தவறான வழிகாட்டுதலாகும். பொருளாதாரம் எதைச் சார்ந்து இருப்பினும் உறுதியாக , பருப்பொருள் நலன்பற்றிய செயல்களைச் சார்ந்தது அன்று என்பது ராபின்ஸின் அசைக்க முடியாத கருத்தாகும். மூன்றாவதாக மார்ஷலின் இலக்கணம் பகுப்புகளின் ( Classificatory ) அடிப்படையில் அமைந்துள்ளது.
|
இது பகுத்தாய்வின் ( analytical ) அடிப்படையில் அமையவில்லை. பருப்பொருள்களின் உற்பத்தி எடுத்துக்காட்டாக நாற்காலி , மேசை , மிதிவண்டி , ஊர்தி , இரு சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம் , ரொட்டி போன்றைவை மட்டுமே பொருளியல் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. ஆசிரியர் அல்லது நீதிபதி பணிகள் பருப்பொருட்களை உற்பத்தி செய்யாததால் இவர்களின் பணிகள் பொருளியல் நடவடிக்கையாக கருதப்படுவது இல்லை. இது தவறான கருத்தாகும். “ உருளைக்கிழங்கு உற்பத்தி பொருளியல் நடவடிக்கை என்றும் , தத்துவப்படைப்பு பொருளியல் நடவடிக்கை அல்ல என்றும் நாம்
|
கூறுவதில்லை " என்று இலயனல் ராபின்சன் கூறுகின்றார். இறுதியாக " நலம் " என்ற நீதிக்கருத்தினை அறிமுகப்படுத்தும்போது பொருளியல் ஒரு துல்லியதன்மையற்ற அறிவியலாகும். பொருள்சார் நலனை அளவிடுதல் கடினமாக ஒன்று. சில மக்களின் நலனை உயர்த்தும் பொருளாதார கொள்கைகள் பல மக்களின் நலனை பாதிக்கும். மேற்கண்ட குறைபாடுகள் இருந்தபோதும் , செல்வம் , மனிதன் , மனிதநலம் ஆகியவற்றின் தொடர்புகளை மார்ஷல் விளக்கியதன்மூலம் பொருளியலின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. நவீன பொருளியல் இலக்கணம் கிடைப்பருமை அல்லது
|
பற்றாக்குறை இலக்கணம் ( இலயன்ல் ராபின்ஸ் ) ( Lionel Robbins Scarcity Definition ). இலயனல் ராபின்ஸ் அவர்கள் பொருளியலுக்கு கீழ்கண்டவாறு இலக்கணம் வரையறுத்துள்ளார். " விருப்பங்களோடும் , கிடைப்பருமையுள்ள , மாற்று வழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயிலுகின்ற அறிவியலே பொருளியலாகும். ” பேராசிரியர் இலயனல் ராபின்சன் “ பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை ” என்ற தமது நுாலில் ( 1932 ) மேற்கண்டவாறு இலக்கணம் தந்துள்ளார். இராபின்ஸ் இலக்கணத்தின் எடுகோள்கள்
|
கீழ்க்கண்டவாறு. 1. இலக்குகள் பல வகைப்படும். இலக்குகள் என்றால் மனித விருப்பங்கள் என்று பொருள்படும் மனித விருப்பங்கள் எண்ணற்றவை. 2. வளங்கள் வரையறைக்குட்பட்டவை. காலம் , பணம் , வளங்கள் ஆகியவை வரையறைக்குட்பட்டவை. 3. காலம் , பணம் ஆகியவற்றை நாம் மாற்று வழிகளில் பயன்படுத்தலாம். ( உ.ம். ) நேரம் வரையறைக்குட்பட்டதாக இருப்பினும் அதை நாம் பல காரணங்களுக்குப் பயன்படுத்துகிறோம். பணம் ஈட்டுவதற்காகவோ அல்லது ஓய்வெடுக்கவோ நேரத்தை நாம் பயன்படுத்தலாம். 4. எல்லா விருப்பங்களும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. இங்கு சில
|
கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டும். நிறைய விருப்பங்களில் பொருளியல் அறிஞர்களே ஆர்வம் காட்டுவதில்லை. உதாரணமாக இருவகையான விருப்பங்களை நிறைவேற்ற தேவையான நேரமும் , வளங்களும் இருக்கும்பொழுது அவற்றை நாம் அரிதாக பயன்படுத்த வேண்டியதில்லை. வளங்கள் வரையறைக்குட்டதாக இருப்பினும் , அவை மாற்றுப் பயன்பாடு இல்லாதவையாக இருப்பின் நாம் அதையும் அரிதாக பயன்படுத்த வேண்டியது இல்லை. மேலும் எல்லா விருப்பங்களும் சம முக்கியத்துவம் உடையவையாக இருப்பின் எதையும் நாம் அரிதாகப் பயன்படுத்த வேண்டியது இல்லை. காலம் வரையறைக்குட்பட்டது. ஒரு
|
நாளைக்கு 24 மணி நேரமே உள்ளது. தொழிலாளி பணத்தைப் பெற மட்டுமே விரும்பினால் , அதிக நேரம் வேலை செய்ய வேண்டும். ஒய்வெடுப்பதைத் துறக்க வேண்டும். ஓய்வெடுக்க விரும்பினால் வருமானத்தை துறக்கவேண்டும் இரண்டையும் ஒரே நேரத்தில் பெறமுடியாது. மனித விருப்பத்தை நிறைவு செய்யும் அனைத்து வளங்களும் பற்றாக்குறையானவை அல்ல. ( உ.ம். ) காற்று , சூரிய ஒளி ஆகியவை மிக அதிக அளவில் கிடைக்கின்றன. அவைகள் இலவசப் பண்டங்கள் ஆகும். ஆனால் நாம் விரும்பும் பண்டங்கள் நமது விருப்பங்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும்பொழுது பற்றாக்குறையாக உள்ளது.
|
எண்ணற்ற விருப்பங்களோடும் , பற்றாக்குறைவான வளங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது என்பது தெளிவாகிறது. வளங்கள் வரையறைக்குட்பட்டு இருப்பதால் நாம் அவற்றிற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது. பற்றாக்குறையான பண்டங்களின் விலைகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பதைப் பொருளியலில் நாம் பயிலுகிறோம். பல வகையான விருப்பங்களில் ஒன்றைத் தெரிவு செய்தல் வேண்டும். ஆகவே பற்றாக்குறையும் , தெரிவு செய்தலும் பொருளியலின் மைய கருத்தாகும். எனவே பொருளியல் தெரிவு செய்யும் அறிவியல் ஆகும்.
|
மாற்றுப்பண்டங்களிடையே தெரிவு செய்தல் பொருளியலின் அடிப்படைக் கருத்தாகும். இது முதலாளித்துவம் , சமதர்மம் , கலப்புப் பொருளாதாரம் ஆகிய எல்லா பொருளாதார அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். முதலாளித்துவ பொருளாதாரம் அங்காடிப் பொருளாதாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நுகர்வோருக்கு சமதர்ம பொருளாதாரம் அல்லது கட்டளைப் பொருளாதாரத்தைவிட தெரிவு செய்யும் வாய்ப்புகள் அதிகம். சமதர்மம் பொருளாதாரம் திட்டமிட்ட பொருளாதாரமாகும். அனைத்து அடிப்படை தீர்வுகளும் அரசால் தீர்மானிக்கப்படுவதால் நுகர்வோருக்கு இங்கு தெரிவு செய்யும்
|
வாய்ப்பு குறைவாக இருக்கும். அடுத்து கலப்புப் பொருளாதாரம். இந்தியா கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கலப்புப் பொருளாதாரத்தில் அரசு / பொதுத் துறையும் , தனியார் துறையும் முக்கியப் பங்காற்றுகின்றன. சில துறைகளில் நுகர்வோருக்கு தெரிவு செய்வதில் வாய்ப்புகள் அதிகமாகவும் , அரசு அதிக கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள பல துறைகளில் நுகர்வோர் தெரிவு செய்யும் வாய்ப்புகள் குறைவாகவும் உள்ளது. அனால் எல்லா வகையான அமைப்புகளிலும் திட்டமிடுதல் உண்டு. அனால் திட்டமிடுதலின் தன்மையில் மாறுபாடு உள்ளது. திட்டமிடுதல்
|
என்பது குறிகோளுடன் தேர்ந்தெடுத்தலும் , தெரிவு செய்தலும் பொருளியல் நடவடிக்ககைளின் சாராம்சமுமாகும். குறைபாடுகள் மனித நடவடிக்கைகளைப் பொருளியல் சார்ந்த நடவடிக்கைகள் , பொருளியல் சாரா நடவடிக்கைகள் என்று இருவகையாக மார்ஷலின் இலக்கணம் வகைப்படுத்துகிறது. பொருள்சார் நலனை உயர்த்தும் நடவடிக்கைகள் பொருளியல் நடவடிக்கைகளாக மார்ஷல் கருதுகிறார். ஆனால் இராபின்சனின் இலக்கணம் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக ஆராய்கிறது. தேவையோடு ஒப்பிடும்போது ஒரு பொருள் பற்றாக்குறையாக இருப்பின் அதுவே பொருளியலின் பாடப் பொருளாகும். அந்த வகையில்
|
, வழக்குரைஞர் , மருத்துவர் , நடிகர்கள் ஆகியோர்களின் உழைப்பும் பொருளியலின் பாடப்பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இராபின்சனின் இலக்கணப்படி பொருளியல் ஒரு அறிவியலாகும். பொருளியலின் பிரச்சனைகளில் அறநெறிக் கருத்துக்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வேறு வகையில் கூறுவோமானால் இது ஒழுக்கநெறிக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டது. பொருளியலுக்கும் , நலத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்த இது முயற்சிக்கவில்லை. ஆனால் சில பொருளியல் அறிஞர்கள் சமுதாய் குறை இக்கருத்தை கூறியுள்ளனர். அவர்களின் கருத்துப்படி , இது சமூக
|
அறிவயலாக கருதப்படுவதால் , மனித நலத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும். இராபின்சின் இலக்கணத்தில் மனிதத்துவம் காணப்படவில்லை என்று குறை கூறுகின்றனர். விலைத் தீர்மானம் பற்றிய அறிவியலாகவே இது பொருளியலை காண்கிறது. ஆனால் , பொருளியலானது மதிப்புக் கோட்பாடு அல்லது வளங்களின் பங்கீட்டை விட கூடுதலானது. பொருளியல் பிரச்சனைகள் பற்றாக்குறையினாலேயே எழுகிறது என்பது இராபின்சனின் கருத்தாகும். ஆனால் இப்பிரச்சனைகள் பண்டங்களின் ஏராளமான அளிப்பினாலும் தோன்றும். எடுத்துக்காட்டாக 1930 ல் ஏற்பட்ட பொருளியல் மந்தம் ஏராளமான அளிப்பினால்
|
தோன்றியதே அன்றி பற்றாக்குறைவினால் அல்ல. எனவேதான் உலகப் பொருளாதார மந்தம் “ செழுமையில் வறுமை “ என்று வருணிக்கப்படுகிறது. மேற்கண்ட குறைபாடுகள் இருப்பினும் , இராபின்சனின் இலக்கணத்தைப் பல பொருளியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனெனில் இது பற்றாக்குறை , தெரிவு ஆகிய வாழ்க்கையின் இரு முக்கிய கருத்துக்களையும் வற்புறுத்துகிறது. தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக உற்பத்தி முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்பொழுதும் பற்றாக்குறை நம்மிடயே உள்ளது. எனவே தான் பொருளியல் பற்றாக்குறை அறிவயலாக கருதப்படுகிறது.
|
சாமுவெல்சனின் இலக்கணம் ( நவீன பொருளாதார இலக்கணம் ) சாமுவெல்சனின் இலக்கணம் நவீன பொருளாதார இலக்கணமாக கருதப்படுகிறது. மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி சமுதாயம் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பற்றியும் , பண்டங்களையும் , பணிகளையும் தற்கால , எதிர்கால நுகர்வுக்காக உற்பத்தி செய்கின்றது என்பது பற்றியும் பயிலும் ஒரு சமூக அறிவியலே பொருளியலாகும். இது ஒரு பொதுவான இலக்கணமாகும். இராபின்சன் , சாமுவெல்சனின் இலக்கணங்களில் பல பொதுவான கருத்துக்கள் காணப்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளையுடைய
|
பற்றாக்குறையான வளங்களை சமுதாயம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றிக் கூறும் சமூக அறிவியலே பொருளியல் ஆகும் என்று சாமுவெல்சன் இலக்கணம் வகுத்துள்ளார். இவை அனைத்தும் இராபின்சனின் இலக்கணத்திலும் காணப்படுகிறது. மனிதர்களும் , சமுதாயமும் பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு தற்கால , எதிர்கால நுகர்வுக்காகப் பண்டங்களையும் , பணிகளையும் உற்பத்தி Page 171 of 236 செய்கின்றனர் என்பதைப் பற்றி சாமுவெல்சன் ( கூடுதலாக ) கூறுகின்றார். எவ்வாறு சமுதாயம் பணத்தைப் பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ இத்தெரிவுகளை செய்கிறது
|
என்று இவர் கூறுகின்றார். நிகர பொருளாதார நலம் சாமுவேல்சன் நிகர பொருளாதார நலம் ( Net Economic Welfare ) என்ற புதிய கருத்தை உருவாக்கியுள்ளார். நாட்டு பொருளாதார நலத்தை உருவாக்கும் நுகர்வு , முதலீட்டுப் பண்டங்கள் , நாட்டின் மொத்த உற்பத்தியில் ( Gross National Product ) ஒரு பகுதியாகும். நாம் செல்வந்தராக மாறும்போது வருமானத்தைவிட ஓய்வை அதிகம் விரும்புகிறோம். ஓய்விற்காக அதிக நேரத்தை ஒதுக்கும்போது மொத்த நாட்டு உற்பத்தி குறையும். ஆனால் , நலம் உயரும். ஆகவே மொத்த நாட்டு உற்பத்தியை கணக்கிடும்போது ஓய்வில் கிடைக்கும்
|
மனநிறைவையும் சேர்த்துக் கணக்கிட நிகர பொருளாதார நலம் ( NEW ) கிடைக்கும். பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளின் மதிப்பும் மொத்த நாட்டு உற்பத்தியை கணக்கிடும்பொழுது சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு சரியான நிகர - பொருளாதார நலம் கிடைக்கும். எல்லா சமுதாயத்திலும் சில சட்டத்திற்குப் புறம்பான நிகழ்வுகள் உண்டு. ( உ.ம். ) ( போதைப்பொருள் விற்பனை ) இவை சமூக கேடாதலால் இவற்றை நிகர பொருளாதார நலத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சில நிழல் ( Undergorund ) நடவடிக்கைகள்
|
உண்டு. அதிக வருமானம் ஈட்டுபவர்கள் ( உ.ம். ) ( வழக்கறிஞர்கள் , கணக்கர்கள் , நடிகர்கள் , மருத்துவர்கள் ) வருமான வரி செலுத்தும் போது உண்மையான வருமானத்தைக் காட்டுவதில்லை. இந்த கணக்கில் வராத ( கறுப்புப் பணம் ) பணம் மொத்த நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் மொத்த நாட்டு உற்பத்தி குறைவானதாகவே இருக்கும். பொருளாதார வளர்ச்சி நிகழும் காலங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். இதற்கு ஆகும் செலவை மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து கழிக்க நமக்கு நிகர பொருளாதார நலம் கிடைக்கும். நாட்டு வருமானத்தில் , நிகர
|
பொருளாதார நலம் பற்றி பயிலுவது மிகவும் இன்றியமையாததாகும். பொருளியல் பிரிவுகள் ( Main Divisions of Economics ) பொருளியலில் நான்கு உட்பிரிவுகள் உண்டு. அவை நுகர்வு , உற்பத்தி , பரிமாற்றம் , பகிர்வு. நவீன காலத்தில் , பொருளியல் அறிஞர்கள் பொது நிதி என்ற புதிய பிரிவையும் கூடுதலாக சேர்த்துள்ளனர். இவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. மேலும் அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. நுகர்வு ( Consumption ) : மனித விருப்பங்களை நிறைவு செய்வதும் நுகர்வு எனப்படும். விருப்பங்கள் இருப்பதாலேயே பொருளியல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
|
விருப்பம் நிறைவேற்றப்படும் செயலே நுகர்வு என்று அழைக்கப்படுகிறது. நுகர்வு என்பது பயன்படுத்துதலைக் குறிக்கும். வழக்குரைஞர்களின் பணியைப் பயன்படுத்துவது என்பது பண்டங்களின் நுகர்வு போன்றே ஆகும். நுகர்வு பற்றிய உட்பிரிவில் நாம் , விருப்பங்களின் தன்மை ( Nature of Wants ) , விருப்பங்களின் வகைகள் , ( Classification of Wants ) நுகர்வு விதிகளான , குறைந்து செல் இறுதி பயன்பாட்டு விதி ( law of Diminishing Marginal Utility ) , ஏஞ்சலின் குடும்ப செலவு விதி ( Engel's Law of Family Expenditure ) , தேவை விதி ( Law of Demand )
|
ஆகியவற்றையும் பயலுகின்றோம். உற்பத்தி ( Production ) : உற்பத்தி என்பது செல்வத்தை உருவாக்குதல் , என்று பொருள்படும். இது பயன்பாட்டின் ஆக்கம் என்றும் பொருள்படும். பயன்பாடு என்பது விருப்பத்தை நிறைவு செய்யும் பண்டத்தின் ஆற்றல் ஆகும். பயன்பாடு மூன்று வகைப்படும். அவை வடிவ பயன்பாடு ( Form Utility ) , இடப் பயன்பாடு ( Place Utility ) , காலப் பயன்பாடு ( Time Utility ) எனப்படும். மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்களை உற்பத்தி செய்யும் பொருளியல் நடவடிக்கைகள் அனைத்தும் உற்பத்தி எனப்படும். நிலம் , உழைப்பு , மூலதனம் ,
|
தொழில் அமைப்பு ஆகிய நான்கும் உற்பத்திக் காரணிகள் ஆகும். உற்பத்தியின் உட்பிரிவில் நாம் , மால்தஸின் மக்கள் தொகைக்கோட்பாடு , விகித விளைவு விதி ( Returns to Scale ) , மாறும் விகித விளைவு விதி ( Law of Variable Proportions ) ஆகியவை தோன்றுகின்றன. மேலும் தொழில் மயமாதல் தொழில் அமைப்புகள் பற்றியும் பயிலுகின்றோம். பரிமாற்றம் ( Exchange ) இன்றைய உலகில் தனி மனிதனோ , நாடோ ஒன்றை ஒன்று சாராமல் வாழ முடியாது. இது பரிமாற்றத்திற்கு வழிகோலுகிறது ; பரிமாற்றத்தால் ஒன்றை கொடுத்து மற்றொன்றை பெற்றுக் கொள்கிறார்கள். பண்டங்கள் மற்றும்
|
பண்டங்களுக்காகவோ அல்லது பணத்திற்காகவோ மாற்றிக் கொள்ளப்படுகின்றன. பண்டமாற்று முறையில் பண்டங்கள் பண்டங்களுக்காக பரிமாற்றிக் கொள்ளப்படுகின்றன. பணப் பொருளாதாரமாகும். பண்டங்கள் பணத்திற்காக பரிமாற்றப்பட்டால் , நாம் பணத்தின் பணிகளைப் பற்றியும் , வங்கிகளின் பங்கு பற்றியும் மேலும் , விலைத் தீர்மானம் பற்றியும் பயிலுகிறோம். அயல் நாட்டு வாணிகத்தின் பல நோக்கு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இன்றைய பொருளாதாரம் ஒரு பகிர்வு ( Distribution ) நிலம் , உழைப்பு , மூலதனம் , தொழில் முனைவு ஆகிய உற்பத்தி காரணிகளைப் பயன்படுத்தி
|
செல்வம் உற்பத்தி செய்யப்படுகிறது. இச்செல்வமானது காரணிகளுக்குரிய ஊதியமான வாரம் , கூலி , வட்டி , இலாபம் ஆகியவற்றிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. பொருளியலில் தனி மனிதப் பகிர்வு பற்றியோ சமுதாயத்தில் செல்வம் வெவ்வேறு மனிதர்களிடையே எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது பற்றியோ ஆராய்வது இல்லை. செயல்முறை பகிர்வுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். நான்கு உற்பத்தி காரணிகளும் , வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதால் அவற்றிற்கு , காரணி ஊதியம் வழங்கப்படுகிறது. பொது நிதி பொது நிதியானது அரசின் பொருளாதாரப் பணிகளைப் பற்றி
|
ஆராய்கிறது. இதில் நாம் அரசின் வரவு - செலவு பற்றிப் பயிலுகிறோம். எனவே , இதில் நாம் , வரிவிதிப்பு , பொது செலவு , பொது கடன் ஆகியன பற்றி படிக்கின்றோம். முடிவுரை நாம் குறுகிய எல்லைக்குள்ளோ , வரையரைக்குட்படுத்தியோ இதைப் பார்க்கக் கூடாது. அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்ததும் , தொடர்புடையதும் ஆகும் ( உ.ம். ) உற்பத்தியில்லாமல் நுகர்வு இல்லை. உற்பத்தியின் நோக்கம் செல்வத்தை உற்பத்தி செய்வதே ஆகும். செல்வத்தைச் செல்வத்திற்காக உற்பத்தி செய்யாமல் மனித விருப்பங்களை நிறைவு செய்யவே உற்பத்தி செய்கிறோம். வேறு வகையாக கூறினால் ,
|
நுகர்வுக்காகப் பண்டங்களை உற்பத்தி செய்கின்றோம். மனித நலத்தை மேம்படச் செய்வதே உற்பத்தியின் இறுதியான நோக்கமாகும். உற்பத்தி என்பது தொடக்கம் , நுகர்வு என்பது முடிவாகும். பொதுவாக மக்கள் பண்டங்களை விற்பனைக்காக உற்பத்தி செய்கின்றனர். எனவே பரிமாற்றம் நடைபெறுகிறது. உற்பத்தியையும் நுகர்வையும் இணைப்பது பரிமாற்றமாகும். செல்வம் எவ்வாறு உற்பத்தி செயயப்படுகிறது , எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே நாட்டின் பொருளாதார நலம் அமைகிறது. சரியாகப் பகிர்ந்து அளிக்கப்படாவிட்டால் வருமானம் , செல்வம் ஆகியவற்றில்
|
ஏற்றத்ததாழ்வுகள் ஏற்படும். இவை உற்பத்தியையும் , நுகர்வையும் பாதிக்கும். எனவே பொருளியலின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை , சார்ந்தவை ஆகும். பொருளியல் இயல்புரை அறிவியலா ? நெறியுரை அறிவியலா ? ( Economics Positive Science or Normative Science ). பொருளியல் இயற்புரை அறிவியலா அல்லது நெறியுரை அறிவியலா என்ற கேள்வியே எழவேண்டிய அவசியமில்லை. அதற்குமாறாக , ஒரு பாடத்தின் இருபகுதிகளாக கருதவேண்டும். இயல்புரை அறிவியல் என்பது உள்ளதை உள்ளவாறு காணும் ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவுத் தொகுதியாகும். மாறாக “ நெறியுரை
|
பொருளியல் எதுவாக இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல் “ என்று ஆசிமாகாபுளஸ் ( Asimakopulos ) கூறுகின்றார். இயல்புரைப் பொருளியல் என்பது பொருளாதார நிகழ்வுகளை விவரிக்கும் ஒரு இயல் , பொருளியல் கோட்பாடுகளை விளக்க இது முயலுகின்றது. ஆனால் நெறியுரைப் பொருளியல் நீதிநெறி , ஒழுக்கநெறி கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நெறியுரைப் பொருளியல் நிகழ்வுகளை உள்ளவாறு ஆராயாமல் அவை எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றது. பொருளாதார கூற்றுகள் இயல்புரைக் கூற்று என்றும் நெறியுரைக் கூற்று என்றும்
|
இருவகைப்படும். இதில் கருத்து வேறுபாடு ஏற்படின் , விபரங்களைச் சரிபார்த்து , “ இக்கூற்று சரியா ? தவறா ? என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் நெறியுரைக் கூற்றில் கருத்து வேறுபாடு ஏற்படின் விவரங்களை சரிபார்த்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது. வேலையின்மையைக் குறைக்க அரசு என்ன கொள்கைகளை மெற்கொண்டது ? பணவீக்கத்தைக் குறைக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை ? போன்ற வினாக்கள் இயல்புரை பொருளியலில் தோன்றும். பணவீக்கத்தைவிட வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டுமா ? என்று கேட்டால் அது
|
நெறியுரையிலாகும். அரசியல் , நீதிநெறி தத்துவங்கள் போன்ற நெறியுரை வினாக்களைத் தவிர்க்க வேண்டும் என்று இராபின்சன் கூறுகின்றார். இயல்புரைக் கூற்றுகளை மட்டுமே நாம் ஆராயவேண்டும் என்று கூறுகின்றார். பொருளாதார நிகழ்வுகளைப் பற்றி நீதிநெறி அல்லது அறிவழியின் அடிப்படையில் அது மதிப்பீடு செய்வதில்லை. நெறியுரை அறிவியலின் அடிப்படையில் பொருளியல் ஒரு தூய அறிவியல் அல்ல. ஆனால் பல பொருளியல் அறிஞர்கள் இக்கருத்திலிருந்து மாறுபடுகின்றார்கள். அறநெறிக்கருத்துக்களைக் கருதில் கொண்டு , பொருளியல் சமூக அறிவியலாக இருப்பதால் மனித நலத்தை
|
மேம்படுத்த வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். இதிலிருந்து நாம் “ ஆக்க நல பொருளாதாரம் ” ( Welfare Economics ) என்று புதிய பிரிவைப் பெறுகிறோம். பொருளாதாரமும் பிற சமூக அறிவியல்களுடன் அதன் தொடர்பு ( Relation of Economics to other Social Sciences ) பொருளியல் , மனித விருப்பங்களை நிறைவு செய்வதைப் பற்றி ஆராயும் ஒரு சமூக அறிவயலாகும். இது மற்ற சமூக அறிவியல்களான சமூகவியல் , அரசியல் , வரலாறு , அறநெறிஇயல் , நீதிநெறியியல் , உளவியல் ஆகியவற்றோடு தொடர்புடையது. ( உ.ம். ) ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பொருளாதார
|
காரணங்களால் மட்டுமன்றி , அரசியல் , வரலாறு , சமூகவியல் காரணங்களாலும் ஏற்படும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நமது நாடு வரலாற்றுக் காரணங்களால் அதிக பொருளாதார வளர்ச்சி அடையவில்லை. அரசியலின் நிலையானதன்மை இருந்த காரணத்தால் , மெதுவான அதே நேரத்தில் நிலையான பொருளாதார வளர்ச்சியை நமது நாடு அடைந்துள்ளது. அரசியல் நிலையின்மை காரணமாக மற்ற நாடுகள் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை. ஒரு நாட்டில் தினமும் அரசு மாறினால் அந்த நாடு பொருளாதார முன்னேற்றத்தை அடையமுடியாது. பொருளியலும் சமுதாய இயலும் ( Economics and Sociology )
|
சமுதாய இயல் ஒரு சமுதாய அறிவியல் , அரசியலும் , பொருளியலும் சமூக இயல் பிரிவுகளென கருதப்படலாம். சமூகவியல் என்பது பொதுவான சமூக அறிவயலாகும். சமூக முழுமைக்கும் சமுதாய விதிகளையும் விபரங்களையும் உருவாக்க முயற்சிக்கிறது. சமுதாயத்தின் அனைத்து பகுதிகளை விளக்குகிறது. ஆனால் பொருளியல் சமுதாயத்தின் பொருளியல் பகுதிகளை மட்டுமே விளக்குகிறது. எனவே பொருளியல் சமுதாய இயலின் ஒரு பகுதியாகும். எண்ணற்ற விருப்பங்களுக்கும் பற்றாக்குறையான வளங்களுக்கும் இடையேயான தொடர்பை இது விளக்குகிறது. சமூக இயல் மாணவனுக்கு சமுதாய அமைப்புகளான திருமணம் ,
|
மதம் , அரசியல் நிருவாகம் , பொருளியல் சூழல் முதலியான முக்கியமான பாடப் பகுதிகளாகும். மேலே கூறப்பட்ட இயல்புகள் பொருளியல் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைப் பற்றி மட்டுமே நாம் கருத்தில் கொள்கின்றோம். சமூகவியலின் பண்புக்கூறுகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு சமுதாயத்தின் பொருளியல் நிலைபாடுகளை நாம் சரிவர புரிந்துகொள்ள இயலாது. ( எ.கா. ) பசுக்கள் இந்துக்களால் புனிதமானவையாக கருதப்படுகின்றன. கடுமையான எதிர்ப்பு காரணமாக , பசுக்கள் புரதச்சத்து மிகுந்தவையாக இருப்பினும் அவற்றை உணவுக்காக கொல்லமுடியாது. பொருளியல்
|
சமூகவியலின் பிரிவு என்றாலும் அதை நாம் தனியான , வேறுப்பட்ட பிரிவாக கருதவேண்டும். பொருளியலும் அரசியலும் ( Economics and Politics ) பொருளியலும் அரசியலும் சமூக அறிவியல்களாகும். அவைகளுக்குக்கிடையே நெருங்கிய தொடர்பு உண்டு. அரசியல் என்பது நாடு அல்லது சமுதாயம் பற்றிய அறிவயலாகும். இது அரசியலில் மனிதனுக்குள்ள உறவைப் பற்றிப் பயிலுகிறது. செல்வ உற்பத்தியிலும் பகிர்விலும் அரசின் செல்வாக்கு அல்லது பங்கு அதிகம். பொருளாதார திட்டமிடலை நம்நாடு பின்பற்றுகிறது. உற்பத்தியை அதிகரித்தல் மூலமும் சிறந்த முறையில் பகிர்வு செய்தல்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.