text
stringlengths
11
513
மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் தலையாய பிரச்சனையாகவும் , அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ஏழை - பணக்காரர் என பிரிவினை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது என தெளிவுப்படுத்தினார். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் , ஏழ்மை , உடல் நலக்குறைவு போன்ற பிரச்சனைகள் எழக்கூடும் என வலியுறுத்தினார். கீழ்க்காணும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் கோட்பாட்டினை வெளியிட்டார். 1. மனித இனம் குழந்தைகளை உற்பத்தி செய்யும் திறன்பாட்டினை உடையது. 2. வேளாண்மையில் குறைந்து வரும் மகசூல் விதி செயல்படுகின்றது. 3. மனித இனம் உயிர்வாழ உணவு
அவசியமானது. 4. பெண் மற்றும் ஆண் இனங்களிடையே நெருங்கிய உறவுமுறை தவிர்க்க முடியாதது. மேற்கூறிய அனுமானங்களை மால்தஸ் விரிவாக விளக்கியுள்ளார். மனித வாழ்க்கையில் பிறப்பு , இறப்பு என்பது இயற்கை நியதி. பிறப்பினை தடுப்பது கடினமான ஒரு செயல். உலகில் மக்கள்தொகை பெருக்கம் எளிதான ஒன்று. ஆனால் மக்களுக்குத் தேவையான உணவுப் பெருக்கம் செய்வது அவ்வளவு இலேசானதல்ல. மக்கள் வளர்ச்சி 1 , 4 , 8 , 16 , 32 என்ற ஜியோமிதி விகிதத்திலும் , உணவு உற்பத்தி 1 , 2 , 3 , 4 , 5 என்ற கணித விகிதத்திலும் உயர்ந்து செல்கின்றன என்கிறார். அதாவது உணவு
உற்பத்தி 4 மடங்காக இருந்தால் மக்கள் தொகை வளர்ச்சி 8 மடங்காக இருக்கும் என மால்தஸ் விளக்கியுள்ளார். எனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் சார்பான தடைகள் எனக் கூறி அவற்றை இரு வகையாகப் பிரித்துள்ளார். அவையாவன : 1. இயற்கைத் தடைகள் 2 ) மனிதச் செயல்தடைகள். இயற்கைத் தடைகள் வறட்சி , கொள்ளை நோய்கள் போன்ற இயற்கைத் தடைகளே மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். நாமெல்லாம் மனமுடவர் ! இன்றும் சென்றகாலம் முடியவில்லை நீங்கள் நேற்று போன மாதம் சென்ற வருடம் பார்த்தவை உணர்ந்தவை கேட்டவை எல்லாம் இன்றையப் பொருள் அர்த்தம்
நீங்கள் பாதிப்புக்குள்ளானவர் முடிவனாய் உணர்பவர் நீங்கள் இன்று ஏற்பதும் தவிர்ப்பதும் உம்மை வடிவமைக்கும் நீங்கள் நேற்றால் இன்றையவர் செயல்களால் நாளையவர் ! மனிதச் செயல்தடைகள் ஏழ்மை , உணவு பற்றாக்குறை , குழந்தை பராமரிப்பின்மை , உலகப்போர்கள் ஆகியவை மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். கீழ்க்காணும் இரு முறைகளின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தலாம் என மால்தஸ் கூறுகின்றார். 1. இயற்கையில் பிறப்பு விகிதம் குறைய திருமண வயதை அதிகரித்தல். 2. மனிதர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தரும் திறனைச் சார்ந்தே
குழந்தை பிறப்பினை ஊக்கமளிக்க வேண்டும். எனவே சுயக்கட்டுப்பாடு , மற்றும் பிறப்பினை குறைக்க மனித முயற்சி தேவை என மால்தஸ் குறிப்பிட்டுள்ளார். “ பிறப்பு தடுப்பு முறை ” யின் அவசியத்தை அதிகமாக வலியுறுத்தியுள்ளார். உங்களுக்குத் தெரியுமா ? மக்கள் தொகை கடிகாரம் ஒவ்வொரு வினாடியும் சராசரியாக 4 5 குழந்தைகள் பிறக்கின்றன : 2 பேர்கள் இறக்கின்றனர். முடிவாக வினாடிக்கு 2.5 பேர்கள் அதிகரிக்கின்றனர் இதன் படி பார்த்தால் ஒவ்வொரு மணிக்கும் கிட்டத்தட்ட 9,000 பேர்களும். ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 2,14,000 பேர்களும் அதிகரிக்கின்றனர்.
மார்க்ஸின் மக்கள் தொகை கருத்து ஜெர்மானிய சமூக - தத்துவ அறிஞரான மார்க்ஸ் நவீன கம்யூனிசத்தின் தந்தை என அழைக்கப்பட்டார். இவர் மால்தஸ் கூறியபடி மக்கள்தொகை எண்ணிக்கையே துயரங்களுக்குக் காரணம் என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக , வளங்களின் சீர்க்கேடு , மற்றும் முதலாளித்துவ தீமைகளில் உருவாகும் சீர்கேடான சமுதாயமே துன்பங்களுக்குக் காரணம் எனக் கூறுகிறார். மேலும் முதலாளித்துவத்தினால் அனைத்து மக்களுக்கும் சமமான பணி கிடைப்பதில்லை. வறுமை , வேலையின்மை , செல்வம் சீரற்ற முறையில் பரவிக் கிடத்தலே துயரங்களுக்குக் காரணம்
என்ற கருத்தினை வலியுறுத்திக் கூறுகிறார். மால்தஸ் , மார்க்ஸ் இருவரின் கோட்பாடுகளும் மக்கள் தொகைப் பெருக்கம் , வளங்களின் சீரற்ற பரவல் , சமுதாய சீர்கேடுகள் நாடுகளின் பின்தங்கிய நிலைமைக்குக் காரணங்களாகின்றன எனக் குறிப்பிடுகின்றன. கற்றல் அடைவுகள் 1. மாணவர்கள் மனித திறன்பாட்டினை , மனிதப்பரிணாம வளர்ச்சி , பரவல் மற்றும் உலக அடர்த்தியைக் கொண்டு அறிதல். 2. மக்கள் தொகை கோட்பாட்டையும் மனிதத் திறன்பாட்டையும் குறித்த கருத்துக்களைக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அறிந்துக்கொள்ளல். கோடிட்ட இடங்களை நிரப்புக 1.
ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்த அறிவார்ந்த மனிதர்கள் கருவிகளையும் , ஆசியாவில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்தினர். பயிற்சிகள் 2. மத்திய ஆசியாவிலிருந்து வெளியேறிய நாடோடிகள் மாற்றி அமைத்தனர். 7. 4. பணித் திறன்பாட்டினைப் புரிந்து கொள்ள 5. ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. 8. 3. பணித்திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் பொழுது ஒரு நாடு துறைகளிலும் வளர்ச்சியடையும். ஆல் ஆன ஆல் ஆன கருவிகளையும் மற்றும் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடு 10. முன்னேறிய வயது பிரமிடு 11. பின்னடையும்
வயது பிரமிடு 12. இடைப்பட்ட வயது பிரமிடு 13. மால்தஸின் கோட்பாடு ஆ ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஈ ) ஜப்பான் முன்னேறியப் பொருளாதாரம் சரியும் பொருளாதாரம் மக்கட் பெருக்கம் முதலாளித்துவம் மற்றும் வளங்களின் சீர்கேடு வளரும் பொருளாதாரம் 14. மார்க்ஸின் கருத்து IV. சுருக்கமாக விடையளி 15. மக்கள் தொகைப் பரவல் சீரற்றிருக்க காரணங்கள் யாவை ? 16. முற்காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய இயற்கைத் தடைகள் யாவை ? 17. மனிதரின் தரமான வாழ்க்கைக்குத் தேவையானவைகள் யாவை ? 18. வயதின் அடிப்படையில் மனிதப் பணித்திறனை எத்தனைப்
பிரிவுகளாகப் பிரிக்கலாம் ? அவை யாவை ? 19. சென்ற 400 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியடைய முக்கியக் காரணம் யாது ? ஒரு பத்தியில் விடையளி. 20. நாகரீகங்கள் எவ்வாறு தோன்றி வளர்ச்சியடைந்தன ? 21. பதினாராம் நூற்றாண்டிற்குப்பின் நாகரீகங்களின் முன்னேற்றம் எவ்வாறு இருந்தது ? 22. மனிதப் பரிணாம வளர்ச்சியில் புதிய கருத்துக்களாகக் கூறப்பட்டவை யாவை ? 23. மார்க்ஸின் மக்கட்தொகை உட்கருத்தை விவரி. 24. பொதுவான அமைப்பு பிரமிடு - குறிப்பு வரைக. 25. உலக மக்கள் தொகை வளர்ச்சியை விவரி. VI. விரிவான விடையளி 26. முன்னேறும் வயதுப் பிரமிடு
பற்றியும் , பின்னடையும் வயதுப் பிரமிடு பற்றியும் விளக்குக. 27. மால்தஸின் மக்கள் தொகைக் கோட்பாட்டினை விளக்கமாக எழுதுக. அலகு 2 மனித இயற்தொகுதிகள் பாடம் 3 குடியிருப்புகள் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் மனித இயற்தொகுதிகளில் உள்ள மனித குடியிருப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் புவியியல் பண்புகளை அறிந்து கொள்ளல். நாம் நகரத்தின் உயரமான ஒரு இடத்தில் இருந்து இரவு நேரத்தில் அந்நகரத்தைப் பார்க்கும் பொழுது , அங்குள்ள வீடுகளிலிருந்தும் , தெருக்களிலிருந்தும் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தைக் காணலாம். இவ்வெளிச்சம்
குடியிருப்பின் வடிவமைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. விளக்குகளின் வெளிச்சம் பரவலாக இருப்பின் அது பெரிய நகரமாக இருக்கும். வெளிச்சங்கள் பரவலாகத் தெரியாப் பகுதிகள் கிராமங்களாகவோ , திறந்த வெளிகளாகவோ அல்லது வயல்வெளிகளாகவோ அமையும். பொதுவாக இந்த விளக்குகளின் ஒளி ஏதோ ஒருவித அமைப்பைக் கொண்டதாகக் காணப்படும். இத்தகைய அமைப்பினை புவியியலார் முறைப்படுத்தியுள்ளனர். குடியிருப்பின் அமைப்புகள் , செயல்பாட்டின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு குடியிருப்பின் வடிவமைப்பு , மலைகள் , நீர்நிலைகள் , சமவெளிகள் , ஏனைய
இயற்கைத் தோற்றங்களைச் சார்ந்து அமைகின்றது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் , ஒரே மாதிரியான குடியிருப்புகளைக்காண இயலாது. அவைகள் இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. குடியிருப்புகள் மாறுபட்டு காணப்படுவதற்குப் பல காரணிகள் உள்ளன. இக்காரணிகளை ஆராய்வதற்கு முன்னர் , குடியிருப்புகளின் தோற்றத்திற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். குடியிருப்பின் தோற்றம் ( Origin of settlements ) பழங்கால மனிதன் நாடோடியாகத் திரிந்திருந்த காலத்தில் நிலையாகத் தங்குவதற்கு சமயம் , கலாச்சாரம் , இராணுவம் , அரசியல் மற்றும் பொருளாதாரம்
போன்றவைகள் காரணங்களாக அமைந்தன. இறந்தவர்களை புதைப்பதற்காகவும் அவர்களுக்குரிய சடங்குகளை மேற்கொள்வதற்காகவும் , நிலையான ஒரிடத்தை ஏற்படுத்தினர். காலப்போக்கில் , அவ்விடங்கள் சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களாயின. ஆண்கள் உணவிற்காக இடம் விட்டு இடம் பெயரும்பொழுது , பெரியவர்களும் , பெண்களும் , குழந்தைகளும் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வீட்டிற்குத் தேவையானவைகளை உற்பத்தி செய்தனர். இவைகள் நாளடைவில் கலாச்சார முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புகளாக மாற்றமடைந்தன. நிலையாகத் தங்க ஆரம்பித்த மதத் தலைவர்கள் , ஆசிரியர்கள் , பெண்கள் ,
மற்றும் குழந்தைகள் ஆகியவர்களைக் காக்க பாதுகாப்பான சுவர்களை அமைத்தனர். வீரர்களை நியமித்து அவர்களுக்கானக் குடியிருப்புகளையும் அமைத்தனர். எனவே , அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் முதலில் தோன்றலாயின. குடியிருப்பில் நிலையாகத் தங்க ஆரம்பித்தவர்களுக்காகவும் மனிதர்கள் உணவினைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. எல்லாக் காலங்களிலும் தேவையான அளவு உணவு சேகரிக்க முடியவில்லை. எனவே உணவு கிடைக்கும் காலத்தில் அவற்றைச் சேகரித்து , சேமித்து வைக்க , சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய இடங்கள்
நாளடைவில் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புகளாயின. பிறகு படிப்படியாக அனைவரும் நாடோடி வாழ்க்கையை விட்டு ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் துவங்கினர். இவ்வாறாகத்தான் நிரந்தரமான குடியிருப்புகள் தோன்றலாயின. குடியிருப்பு ( Settlement ) மனிதனின் வாழ்விடங்களே குடியிருப்புகள் என அழைக்கப்படுகின்றன. குடியிருப்புகள் ஒவ்வொன்றும் புவி மற்றும் இயற்கைச் சூழலின் மீது மனிதனின் ஆதிக்கத்தினை வெளிப்படுத்தும் முத்திரையாக விளங்குகின்றன. குடியிருப்புகள் அனைத்திற்கும் அமைவிடங்கள் உண்டு. அந்த அமைவிடத்தின் பண்பு நலன்கள்
குடியிருப்புக்கு ஒரு வடிவமைப்பைத் தருகின்றன. தலமும் சூழலமைவும் ( Site and Situation ) குடியிருப்பின் அமைவிடம் இரண்டு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவையாவன : தலம் மற்றும் சூழலமைவு. தலமும் , சூழலமைவும் கொண்ட குடியிருப்புகள் அமைப்பிலும் பண்பிலும் ஒன்றாகவே இருக்கின்றன. அமைவிடங்களின் பண்பையும் , பரவலையும் தெரிந்துகொள்ள வகை செய்வது குடியிருப்புப் புவியியலின் நோக்கங்களில் ஒன்றாகும். மலைச்சரிவு , மலை உச்சி , குன்று , ஆற்றுப் பள்ளத்தாக்கு , ஆற்றுத் திடல் , நீருற்று , குளம் , சாலைகள் கூடுமிடம் மற்றும் சமய
கட்டுமானங்கள் ஆகியவைகள் குடியிருப்புகள் அமைகின்ற முக்கியத் தலங்களாகும். தலம் ( Site ) ஒரு குடியிருப்பு அமையும் இடம் ‘ தலம் ’ எனப்படும். குடியிருப்புத் தலங்களின் சிறப்பையும் அவற்றின் வசதிகளையும் அறிந்து கொண்டால் , அவைகள் அங்கு தோன்றியதற்கான காரணம் புரிந்து விடும். அக்காரணங்கள் , குடியிருப்புகள் தோன்றுவதற்கு மட்டுமே உதவியாக இருக்கின்றன. வளர்ச்சியடைந்த பிறகு , அவை முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக , நீர் கிடைப்பதால் ஒரு குடியிருப்பு ஒரு குளத்தைச் சுற்றி உருவாகலாம். ஆரம்பத்தில் முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருந்த ஒரு குளம் , காலப்போக்கில் மக்கள்தொகை பெருக்கத்தினால் முக்கியத்துவத்தை இழந்துவிடலாம். இருப்பினும் அக்குடியிருப்புகள் இடம் பெயர்வதில்லை. ஆனால் புதிய நீர்நிலைகளை உருவாக்கிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக , கிணறுகள் , குளங்கள் எனப்புதிய நீர்நிலைகள் தோன்றக்கூடும். வணிகத் தலம் ( Commercial Site ) தன்னிறைவு வேளாண் தொழிலில் விளைநிலங்களுக்கு அருகிலேயே உற்பத்திப் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டன. இதனால் , பண்ணைக் குடியிருப்புகள் விளைநிலங்களையே தலமாகக் கொண்டமைந்தன. பின்னர் , இயந்திர விவசாயத்தினால்
தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த தானியத்தை விற்கவேண்டி வந்தது. எனவே , தானிய மூட்டைகள் பண்ணையிலிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு பல பண்ணைகளிலிருந்து உபரி தானியங்கள் ஒரு கிராமத்தில் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் முறையான வணிகம் நடைபெறும்போது , அக்கிராமம் ஒரு வணிகத் தலமாக மாறிவிடுகின்றது. வணிகக் குடியிருப்புகளில் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்காக போக்குவரத்துச் சாலைகள் தேவைப்பட்டன. இதனால் உபரி உற்பத்தி உள்ள பகுதிகளில் வணிகத்தைப் பணியாகக்
கொண்ட பல குடியிருப்புகள் தோன்றலாயின. ஆற்றங்கரை ஓரங்களிலும் பெரிய சாலை ஓரங்களிலும் , பல முக்கிய சாலைகள் கூடுமிடத்திலும் , இருப்புப் பாதைகள் இணையுமிடத்திலும் வணிகத்தை ஆதாரமாகக் கொண்டு பல குடியிருப்புகள் தோன்றலாயின. சூழலமைவு ( Situation ) சூழலமைவு என்பது குடியிருப்பைச் சுற்றியுள்ள நிலத்தின் அமைப்பு மற்றும் சூழ்நிலையைக் குறிக்கும். நிலத்தோற்றம் மட்டுமன்றி சூரிய ஒளி , நீர் நிலத்தில் ஏற்படும் இடர்பாடுகள் , சமூகநிலை போன்றவைகளும் சூழலமைவினைக் குறிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் உயர் அட்ச மிதவெப்ப மண்டலத்தில் இருப்பதால் ,
அங்கு வாழும் மக்களுக்கு வெப்பம் மிகவும் தேவைப்படுகின்றது. எனவே , அவர்கள் தங்களுடைய வீடுகளை கிழக்கு நோக்கிக் கட்டிக் கொள்கிறார்கள். இந்தியா ஒரு பருவக்காற்று நாடாக இருப்பதினால் , தெற்குத் திசையை நோக்கி வீடுகள் அமைக்கப்படுகின்றன. இதேபோன்று , நீர்நிலைகளும் வீடுகள் அமையக் காரணமாக உள்ளன. இக்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ள பல பெரிய நகரங்கள் , நீர் நிலைகளுக்கு அருகே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக , தேம்ஸ் நதிக்கரை சூழலமைவிலுள்ள இலண்டன் மாநகரத்தைக் கூறலாம். ஆற்றுச் சமவெளிகளிலும் , வண்டல் விசிறிகளிலும் அடிக்கடி வெள்ளம்
வருகின்ற காரணத்தினால் குடியிருப்புகள் அவ்விடங்களை விட்டு சற்று உயரமான இடத்தில் அமைகின்றன. எடுத்துக்காட்டாக , இந்தியாவில் யமுனை , சம்பல் நதி வெள்ளச் சமவெளிகளில் பள்ளத்தாக்குகளுக்கு இடையிலுள்ள மேட்டு நிலத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. தலம் மற்றும் சூழலமைவு ஆகியவற்றின் தனித்தன்மையினால் குடியிருப்புகளுக்கு சிறப்புத் தோற்றங்கள் கிடைக்கின்றன. மலைகள் , பள்ளத்தாக்குகள் , ஆறு போன்ற இயற்கைச்சூழல் அமைப்புகளைப் போல மனிதனால் உருவாக்கப்பட்ட , கலாச்சாரத் தோற்றங்களும் நிலத்தோற்றத்தின் பகுதிகளாக விளங்குகின்றன. இதுவரை
தலமும் சூழலமைவும் எவ்வாறு குடியிருப்பின் வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன என்பதைப் படித்தோம். இவ்வாறே , குடியிருப்பின் செயல்பணிகளை அடிப்படையாகக் கொண்டு அவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன : நாட்டுப்புறக் குடியிருப்பு மற்றும் நகர்ப்புறக் குடியிருப்பு நாட்டுப்புறக் குடியிருப்பு - கிராமிய வடிவங்கள் நாட்டுப்புற குடியிருப்பில் பல வடிவங்கள் உள்ளன. தனித்த பண்ணைவீடுகள் மற்றும் குக்கிராமம் ஆகியவைகளும் நாட்டுப்புற குடியிருப்பினைச் சார்ந்தவை. எனினும் , நாட்டுப்புற குடியிருப்பின் முக்கியத் தோற்றமாகக் காணப்படுவது
கிராமங்களாகும். நமது இந்தியாவும் கிராமங்கள் நிறைந்த நாடு என்பது உங்களுக்குத் தெரிந்ததே. படம் ( 3.1 & 3.2 ) கிராமங்களை அவை அமைந்திருக்கும் தலம் , சூழல் , அளவு , மற்றும் வடிவம் ஆகியவைகளைக் கொண்டு பின்வருமாறு பிரிக்கலாம். நெருக்கமான கிராமம் ( Compact Villages ) வ இந்த வகை கிராம அமைப்பில் , கட்டிடங்களும் , வீடுகளும் அருகருகே காணப்படும். மக்கள்தொகைச் செறிவு இவ்வகை கிராமத்திற்கு மறைமுகக் காரணியாகும். சிறிய பரப்பில் மையக்கரு கிராமம் ( Nucleated Villages ) இவ்வகைக் கிராமங்கள் ஏதாவது ஒன்றை மையக்கருவாகக் கொண்டு
வளர்ச்சி பெறுவன ஆகும். மையக்கருவாகக் குளம் , ஏரி , கோவில் போன்றவை அமையலாம். இம்மையத்தைச் சுற்றி சாலைகளும் , கட்டிடங்களும் மிகவும் நெருக்கமாக அமைகின்றன. பாலைவனத்தில் காணப்படும் பாலைவனச் சோலையைச் சுற்றிலும் குடியிருப்புகள் காணப்படும். இக்குடியிருப்புகளுக்கு மையக்கருவாக விளங்குவது நீர்நிலையாகும். தமிழ்நாட்டில் கோயிலை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்த நகரம் மதுரையாகும். இதை போன்றே கோட்டையையும் , அரண்மனையும் மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்ற குடியிருப்புகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டு , செயின்ட் ஜார்ஜ்
கோட்டை சென்னை மாநகரத்திற்கு மையக்கருவாக இருந்தது பலருக்கு தெரிந்ததே. தொகுப்பு அல்லது கொத்தாக அமைந்த கிராமம் ( Grouped or Bunched Settlement ) ஒரு கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் பிரிந்து சென்று வேறொரு இடத்தில் தனது குடியிருப்பை அமைக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். காலப்போக்கில் , அதன் அருகில் பல வீடுகள் உருவாகி அது ஒரு கிராமமாகின்றது. இவ்வாறு ஒரு கிராமத்தின் அருகில் பல குடியிருப்புகள் தோன்றுகின்றன. நாளடைவில் அனைத்து குடியிருப்புகளும் கொத்தாக அமைந்த கிராமமாக மாறுகின்றன. இரட்டைக் கிராமங்கள் ( Twin Villages )
இவ்வகைக் குடியிருப்புகள் குழுமியதாகக் காணப்பட்டாலும் , இரண்டு பகுதிகளாகக் காணப்படும். இவை ஒரு பாலத்தின் இரண்டு பக்கங்களிலோ அல்லது செங்குத்துச் சரிவின் மேல்பகுதி , கீழ்ப்பகுதிகளிலோ காணப்படும். சில வேளைகளில் இவைகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்து இருக்கும். ஒரே பெயரைக் கொண்டு இந்த இரட்டை கிராமங்கள் கீழ் , மேல் , கிழக்கு , மேற்கு என்ற அடை மொழியுடன் காணப்படும். அல்லது இரண்டு வேறுப்பட்ட பெயர்களைக் கொண்டதாகக் காணப்படும். நகரக் குடியிருப்புகள் ( Urban Settlements ) நகரக் குடியிருப்புகள் நாட்டுப்புற
குடியிருப்புகளிலிருந்து மாறுபட்டவை. இவற்றில் உள்நாட்டில் முக்கியத்துவம் பெற்ற நகரங்களும் , உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற நகரங்களும் உள்ளன. பழைய நகரங்கள் , பழைய வேளாண் பகுதிகளிலிருந்து தோன்றியவை ஆகும். நவீன நகரங்கள் தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றியவை. நகரங்கள் பலவிதமானப் பொருளாதார , சமூக சேவைகளைத் தருகின்றன. இதனால் பலவகையான நகரங்கள் தோன்றலாயின. அவை சுரங்கத்தொழில் நகரங்கள் , கடற்கரை நகரங்கள் பொழுதுபோக்கு நகரங்கள் மற்றும் பல்கலைக் கழக நகரங்கள் போன்றவைகளாகும். பெரும்பாலான நகரங்கள்
நெருக்கமான தெருக்களையும் , உயரமானக் கட்டிடங்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. அவைகள் அதிக மக்கள் அடர்த்தியும் வேளாண்மையற்ற பிற செயல்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இருந்த போதிலும் மக்கள் பல்வேறு குழுக்களாக இணைந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்களிடையே நெருக்கமான சமூக உறவுகள் இல்லை. மனித நகர்வுகளும் , சமூக நிலைத்தன்மையும் , பல வகுப்பு அமைப்புகளும் , வேறுபட்ட செல்வ நிலையுடைய மக்களும் கொண்டவை தான் நகரங்களின் பண்புகளாகும். நகரங்களின் வகைப்பாடு ( Classification of Towns ) நகர்ப்புறத்தை வேறுபடுத்துவதற்கு உலகின் எல்லா
பகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய முறை எதுவுமில்லை. ஒவ்வொரு நாடும் தனித்தனி முறைகளைப் பின்பற்றி வகைப்படுத்துகின்றன. அவை ( 1 ) செயல்பாடுகள் , ( 2 ) மக்கள் எண்ணிக்கையின் அளவு , ( 3 ) நிர்வாக அமைப்புகள் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியா , இஸ்ரேல் , இத்தாலிபோன்ற நாடுகளில் நகர்புறங்கள் வேளாண்மையல்லாத வேறு தொழில்களை மேற்கொண்டிருக்கும். அதே சமயத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட டென்மார்க் , ஸ்வீடன் , பின்லாந்து போன்ற நாடுகளில் நகர்ப்புறங்களின் மக்கள் எண்ணிக்கை ச.கி.மீட்டருக்கு 250 பேர்களுக்கு குறைவாகவே உள்ளன.
ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியிருப்புகளை நகர்ப்புறம் என்றே அழைக்கின்றனர். எனவே நகரக் குடியிருப்புகளின் வகைகளும் , வரையறைகளும் இடத்திற்கிடம் அவற்றின் செயல்பாடுகளுக்குத் தக்கவாறு மாறுபடுகின்றன. மில்லியன் நகரங்கள் ( Million Cities ) ஒரு மில்லியன் அல்லது மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை ' மில்லியன் நகரங்கள் ’ என்று கூறலாம். 1800 ஆம் ஆண்டில் இலண்டனும் , 1850 இல் பாரிசும் , 1870 இல் நியூயார்க்கும் மில்லியன் நகரங்களாக இருந்தன. 1970 இல் 129 மில்லியன் நகரங்களும் தற்போது 180 மில்லியன் நகரங்களும் உலகில்
உள்ளன. மில்லியன் நகரங்கள் பெரும்பாலும் நாட்டின் தலைநகரங்களாகவும் , வணிகத் துறைமுகங்களாகவும் , மேலும் பல செயற்பணிகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. சில குடியிருப்புகள் பழைய தலைநகரங்களாகும். எடுத்துக்காட்டாக , லெனின் கிராடு , ரியோடி ஜெனிரோ மற்றும் கொல்கத்தா. நகரத்தின் வளர்ச்சியும் பிரச்சனைகளும் ( Urban Growth and Problems ) ஒரு நகரத்தின் வளர்ச்சி அந்நகர மக்கள்தொகைப் பெருக்கத்தையும் , அதன் விளைவாக ஏற்படும் நகர பரப்பளவின் அதிகரிப்பையும் பொருத்து அமையும். நகரங்களில் மக்கள்தொகை இரண்டு வழிகளில் பெருகுகின்றது.
முதலாவதாக , இயற்கையான மனித இனப்பெருக்கம் , இரண்டாவதாக கிராமங்களில் இருந்து வரும் குடியேற்றத்தால் , மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகின்றது. இதன் விளைவாக நகரின் எல்லைகளும் வெளிநோக்கி விரிவடைந்து வருகின்றன. இதனால் நகரில் வேலையில்லாத் திண்டாட்டம் , போக்குவரத்து நெரிசல் , காற்று மாசடைதல் மற்றும் சுற்றுப்புறம் மாசடைதல் என்பவற்றால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கிராம மக்களின் குடியேற்றம் ( Rural Migration ) கிராம மக்கள் வேலைவாய்ப்பைத் தேடியும் பல்வேறு காரணங்களுக்காகவும் நகரங்களில் குடியேறுகின்றனர். கிராம மக்களின்
நகரக்குடியேற்றம் எப்பொழுதும் பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைவதில்லை. இன்றைய தலைமுறையினர் கல்வி , நிர்வாகம் மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் குடிபெயருகின்றனர். குறிப்பாக மேற்படிப்பிற்காகவும் , வேலைவாய்ப்பிற்காகவும் நகரத்தை நோக்கி பெரும் எண்ணிக்கையில் நகருகின்றனர். சென்னை மாநகர மக்கள் எண்ணிக்கை இவ்வாறே நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. நகரப்பரவல் ( Urban Sprawl ) எந்த ஒரு நகரவளர்ச்சியிலும் புறநகர்பகுதியின் வளர்ச்சியும் இணைந்தே காணப்படுகின்றது. நகரத்திலிருந்து வெவ்வேறு திசைகளில் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டியே
புறநகர் ஆகியவை காற்றை மாசடையச் செய்கின்றன. தொழிற்சாலை கழிவுகளும். வீட்டுக் கழிவுகளும் , கடல் , ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் கலப்பதால் நீர் மாசடைகின்றது. மேலும் பலவிதமான வாகனங்களாலும் , தொழிற்சாலைகளாலும் ஏற்படும் ஓசைகள் அமைதியான சூழலைப் பாதிக்கின்றன. வாகனங்களிலிருந்து வரும் பல வகையான சப்தங்கள் மனித அமைதிக்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன. இதனால் , காது கேளாமை , மன உளைச்சல் , பய உணர்வு போன்றவைகள் நிகழ்கின்றன. குடியிருப்புகள் அமைவதில் வசதிகளும் சேவைகளும் மிக முக்கியமானவை. அவ்வாறே ஒரு குடியிருப்பு அமைந்த பின்னர்
ஒருசில வசதிகளையும் சேவைகளையும் தன்னுள் கொண்டதாக அமைகின்றது. ஆனால் , இம்மாதிரியான வசதிகளும் சேவைகளும் குடியிருப்பின் அளவு , மக்கள்தொகை , அவற்றின் தேவை , வருமானம் , பொருட்கள் வாங்கக் கூடிய திறன் என்பதான பல கூறுகளைச் சார்ந்து அமைகின்றன. ஒரு இடத்தின் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து குடியிருப்புகள் சார்ந்த ஒரு கோட்பாடுதான் மைய இடக் கோட்பாடு என்பதாகும். மைய இடக்கோட்பாடு ( Central Place Theory ) குடியிருப்பு ஒரு மைய இடம் : மைய இடக்கோட்பாட்டின் படி ஒரு மைய இடம் அங்குள்ள மக்களுக்கும் சுற்றுப்புறத்திலுள்ள
மக்களுக்கும் சேவைகளைச் செய்கின்றது. இம்மையத்தின் சேவைகளாகக் கடைகள் , சந்தைகள் , நிர்வாகங்கள் , கேளிக்கைக் கூடங்கள் ஆகியவை காணப்படும். ஒரு மைய இடத்தின் சேவைகளில் வேறுபாடுகள் இருப்பினும் பெரிய குடியிருப்புகள் யாவையும் மைய இடங்கள்தான். எடுத்துக்காட்டாக , பெங்களூர் , கோயம்புத்தூர் இரண்டும் ஏறக்குறைய ஒரே அளவான நகரங்களாக இருப்பினும் , பெங்களூர் சேவை அமைப்புகளினால் , கோயம்புத்தூரின் நகரச் சந்தையை விட முக்கியமானதாக இருக்கின்றது. எல்லாக் குடியிருப்புகளும் மைய இடங்கள் எனக் கூற இயலாது. தனித்த பண்ணைகள் , குக்கிராமங்கள்
, கிராமங்கள் ஆகிய குடியிருப்புகள் சேவைப்பணிகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே இவ்வகை குடியிருப்புகள் அருகில் உள்ள மைய டங்களைச் சார்ந்தே உள்ளன. குடியிருப்புகள் அதன் உருவத்திலும் முக்கியத்துவத்திலும் வேறுபடுகின்றன. இவ்வேறுபாடுகளைக் கண்டறிவதில் பிரச்சனைகள் உள்ளன. குடியிருப்புகளின் மக்கள் தொகையை அளவீடுகளைப் பயன்படுத்தி அறியலாம். இதைப்போன்றே , சேவைகளின் வகைகள் , எண்ணிக்கைகள் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அறிய அளவீடுகளைப் பயன்படுத்தலாம். இந்த அளவீடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமானது. அதிக மக்கள்தொகை கொண்ட
குடியிருப்புகளில் அதிக எண்ணிக்கையுள்ள பல வகையான கடைகளும் , ஏனைய சேவைகளும் , வேலை வாய்ப்புகளும் காணப்படும். குடியிருப்புகளை அவைகளின் அளவு மற்றும் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு படி நிலைகளாக வரிசைப்படுத்தலாம். இவ்வாறாக வரிசைப்படுத்தப்படும் குடியிருப்புகளில் பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் மேல் மட்டத்திலும் , சிறியதும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் கீழ்மட்டத்திலும் காணப்படும். இதனைக் குடியிருப்புகளின் படிநிலை என அழைக்கின்றார்கள். இந்த படிநிலையில் அதிக
எண்ணிக்கையில் குக்கிராமங்க கிராமங்களும் அடிமட்டத்தில் ( படிநிலை நான்கு ) காணப்படும். குறைந்த எண்ணிக்கையில் நகரங்களும் பெரிய நகரங்களும் கீழ்மட்டத்தில் ( படிநிலை மூன்று ) காணப்படும். சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் மத்தியில் ( படிநிலை இரண்டு ) காணப்படும். குடியிருப்புப் படிநிலையின் மேல்மட்டத்தில் மாநகரங்கள் காணப்படும். எடுத்துக்காட்டாக , சென்னை , டெல்லி , கொல்கத்தா , மும்பை ஆகிய குடியிருப்புகள் மேல்மட்டத்தைச் சார்ந்தவை ஆகும். செய்யப்படுகின்றன. இதனால் குறைவான வாடிக்கையாளர்களே காணப்படுகின்றனர். குறைந்த பட்ச
மக்கள்தொகையாக 200 அல்லது 300 நபர்களையே இக்குடியிருப்புகள் கொண்டமையும். இதே அடிப்படையில் அதிகபட்ச மக்கள்தொகை கொண்ட ஒரு குடியிருப்பின் சந்தைப் பரப்பு பெரியதாக இருத்தல் வேண்டும். இத்தகைய குடியிருப்பில் விற்கப்படும் பொருட்கள் தேவையானதும் விலை உயர்ந்ததுமான பொருட்களாகவும் , ஆடம்பரப் பொருட்களாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக , இம்மையங்களில் துணிகள் , காலணிகள் , மின்சாரக் கருவிகள் , மோட்டார் வாகனங்கள் ஆகியவைகள் விற்கப்படலாம். அத்தியாவசியப் பொருட்களோடு ஒப்பிடும் பொழுது , ஆடம்பரப்பொருட்கள் ஒரு சில சமயங்களில் மட்டுமே
வாங்கப்படுகின்றன. எனவே மிக முக்கியமான மேல்மட்ட குடியிருப்புகள் , கீழ்மட்ட குடியிருப்புகளுடன் ஒப்பிடும்பொழுது பல வகையான ஆடம்பரப் பொருட்களையும் சேவைகளையும் கொண்டிருப்பதுடன் , ஒரு பெரிய பரப்பைத் தனது சேவை அல்லது சந்தைப் பரப்பாகவும் கொண்டிருக்கும். எவ்வாறு ஒவ்வொரு மைய இடத்திற்கும் ஒரு குறைந்தபட்ச மக்கள் தொகை ( threshold ) தேவைப்படுகிறதோ , அவ்வாறே ஒவ்வொரு சேவைக்கும் ஒரு குறைந்த பட்ச தூரம் என்பதும் உண்டு. அதாவது ஒவ்வொரு பொருளும் வசதி அல்லது சேவை ஆகியவற்றின் தன்மைக்கேற்றவாறு ஒரு தூரத்திற்குள் மட்டுமே விலை
போகின்றது. எடுத்துக்காட்டாக , ஒரு புறநகர் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் உள்ள மக்களுக்கு வேண்டிய பொருட்களை விநியோகம் செய்கின்றது. இந்த தூரம் “ குறைந்தபட்ச உள்தூரம் ” ( inner range of a good ) என்று அழைக்கப்படும். வழக்கமாக இக்கடையில் பொருள் வாங்கும் ஒருவர் கடைக்குச் சென்று தமக்கு மிகவும் வேண்டிய ஒரு பொருளைக் கேட்பதாக வைத்துக் கொள்வோம். கடையின் நிர்வாகியோ , அப்பொருள் தற்போது கடையில் இல்லை எனக் கூறுகின்றார். அப்பொருள் மிகவும் தேவையானதாக இருந்தால் , பொருள் வாங்க வந்தவர் இன்னும்
சிறிது தூரம் சென்று இன்னொரு கடையில் வாங்குவதற்கு தயங்கவில்லை எனில் அந்தப் பொருளுக்கு அது ‘ குறைந்தபட்ச வெளிதூரம் ’ ( Outer range of a good ) என்ற முடிவுக்கு நாம் வரக்கூடும். இக்கருத்து மையவிடக் கோட்பாட்டின் முக்கியக் கருத்துக்களில் ஒன்றாக அமைகின்றது. மேலும் கிரிஸ்டாலரின் கோட்பாடு , சந்தைப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு , குடியிருப்புகளின் நிலையை வகைப்படுத்துகின்றது. இக்கோட்பாட்டினை முழுவதுமாக நகரங்களின் நிலைகளுடன் ஒப்பிடமுடியாது. ஏனெனில் அவர் கூறிய அறுங்கோண வடிவில் இயற்கையில் எந்த நகரச் சந்தைப் பரப்பும்
காணப்படவில்லை , மேலும் நிலப்பரப்பில் பலவித நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , மலை , ஆறு போன்ற இயற்கைத் தோற்றச் சூழ்நிலைகளில் மக்கள்பரவல் சீராக இருப்பதில்லை , இதுபோன்ற பல தோற்றங்களினால் கிறிஸ்டாலர் கோட்பாடு இயற்கையோடு ஒப்பிடும்போது முரண்படுகின்றது. இருப்பினும் கிறிஸ்டாலர் கோட்பாடு குடியிருப்புகளை வகைப்படுத்தப் பயன்படுகின்றது. உதாரணமாக , தமிழ்நாட்டில் காணப்படும் நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது எல்லா மாவட்டத் தலைநகரங்களும் முதல் மட் நகரமாகவும் ( மதுரை , திருச்சி , கோயம்புத்தூர் , சேலம்
) இன்னும் பிற , அதனைச் சுற்றி இரண்டாம் மட்ட நகரங்களாகக் காணப்படுகின்றன. இத்தொடரின் அடுத்த பகுதியில் எஞ்சிய கிராமங்கள் காணப்படுகின்றன. கற்றல் அடைவுகள் 1. மாணவர்கள் குடியிருப்பின் தோற்றம் அவை அமைவதற்கான காரணிகளை அறிந்து கொண்டனர். 2. மாணவர்கள் கிராமம் மற்றும் நகர குடியிருப்புகளையும் நகர வளாச்சியினால் ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்தனர். பயிற்சிகள் கோடிட்ட இடங்களை நிரப்புக 1. மனிதனின் வாழ்விடங்கள் 2. குடியிருப்பின் அமைவிடப் பண்புகள் குடியிருப்புக்கு 3. ஒரு குடியிருப்பு அமையும் இடம் 4. தேம்ஸ் நதிக்கரை சூழலில்
அமைந்துள்ள மாநகரம் 5. நாட்டுப்புறக் குடியமைப்பின் முக்கிய தோற்றமாகக் காணப்படுவது , 6. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நகரங்களை நகரங்கள் என்கிறோம். மைய இடக் கோட்பாட்டை புறநகர் வளர்ச்சிக்கு , தொழிலகத் தொகுதிகள் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் , தொழிலகத் தொகுதிகளின் தன்மை , வகைகள் மற்றும் பிரிவுகள் பற்றியும் அவை எப்படி மனிதச் சூழலின் நன்மைக்காக இயங்குகின்றது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளல். மனிதனின் அடிப்படைத் தேவையில் ஒன்று உணவு. இவ்வுணவினைப் பெற்றிட இவ்வுலகில் மனிதனால் பல்வேறு பயிர்வகைகள்
பயிரிடப்படுகின்றன. இது “ வேளாண் தொழில் ” எனப்படுகின்றது. அடுத்த அடிப்படைத் தேவையான உடைக்காக , பருத்தி , சணல் , பட்டு , கம்பளி போன்றவை தொழிற்சாலைகளின் மூலம் ஆடைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ‘ நெசவுத் தொழில் ' எனப்படுகின்றது. இருப்பிடத் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருட்களான செங்கல் , இரும்பு எஃகு பொருட்கள் , சிமென்ட் போன்றவையும் தொழிற்சாலைகளின் மூலமாகவே தயாரித்தளிக்கப்படுகின்றன. உண்ணத் தகுந்த பொருட்கள் பலவும் , அரவை மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. எனவே மனிதனின்
அனைத்துத் தேவைகளையும் இவ்வாறாக பூர்த்தி செய்து அளிப்பது ‘ தொழில் ’ எனப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் தேவைகள் குறைவாக இருந்தது. நாளடைவில் மக்கள் தொகை பெருக ஆரம்பித்தது. நாகரீக வளர்ச்சியும் அதிகரித்தது. எனவே பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்பவும் அவர்களின் தேவைக்கேற்பவும் பல்வகைத் தொழிற்சாலைகள் பெருகின. தொழில்களை உற்பத்தி நிலைகளின் அடிப்படையில் நான்கு
பெரும்பிரிவுகளாகப் 1. முதன்மை நிலைத் தொழில்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில்கள் 3. மூன்றாம் நிலைத் தொழில்கள் 4. நான்காம் நிலைத் தொழில்கள் முதன்மை நிலைத் தொழில்கள் இவை வேட்டையாடுதல் , மீன்பிடித்தல் , வேளாண் தொழில் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவனவாகும். இவை அனைத்தும் இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களைப் பெறும் தொழில்களாகும். இந்த முதன்மை நிலைத் தொழில்கள் யாவும் மனிதனின் அடிப்டைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்றன. மேலும் இவை இரண்டாம் நிலைத் தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் அளிக்கின்றன. இரண்டாம் நிலைத் தொழில்கள்
முதன்மை நிலைத் தொழிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி , மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற தொழில்களே இரண்டாம் நிலைத் தொழில்களாகும். எடுத்துக்காட்டாக , பருத்தியிலிருந்து ஆடை தயாரித்தல் , சுரங்கத் தொழிலிருந்து மனிதனுக்குத் தேவையான பொருட்கள் தயாரித்தல் போன்றவை ஆகும். மூன்றாம் நிலைத் தொழில்கள் முதலிரண்டு நிலைத் தொழில்கள் மூலமாக கிடைக்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு தேவைகளை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் போக்குவரத்து , வணிகம் , வங்கி , தொலைத் தொடர்பு , பொழுதுபோக்கு போன்றவை மூன்றாம் நிலைத்
தொழில்களாகும். நான்காம் நிலைத் தொழில்கள் இது மக்களுடன் தொடர்பு கொள்ளும் பணிகளான கல்வி , ஆராய்ச்சி , நிர்வாகம் , நிதி மேலாண்மை , வழக்காடுதல் , மருத்துவம் போன்ற தொழில்களை உள்ளடக்கியது. இத்தொழிலுக்கு உயர்தரத்திறமை , தேர்ச்சி மற்றும் சிறப்புத்தன்மை ஆகியன தேவையாகும். மேலும் இது முதல் மூன்று தொழில்களும் சிறப்புற நடைபெற உறுதுணையாக உள்ளதொன்றாகும். இந்நான்கு நிலைத் தொழில்களின் வாயிலாக உருவான ‘ மிதிவண்டி’யின் சிறப்பினைக் காண்போம். 1. முதன்மை நிலைத்தொழில் 2. இரண்டாம் நிலைத் தொழில் 3. மூன்றாம் நிலைத்தொழில் 4. நான்காம்
நிலைத் தொழில் சுரங்கத் தொழிலிருந்து இரும்புத் தாதுவும் மணற்பாறைகளும் ; இரப்பர் தோட்டத்திலிருந்து இரப்பரும் கிடைக்கின்றன. இவை எஃகு குழாய்களாகவும் , கண்ணாடிகளாகவும் , டயர்களாகவும் மாற்றப்பட்டு மிதிவண்டிகளாக இணைக்கப் படுகின்றன. போக்குவரத்து மூலம் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நிதி , மேலாண்மை , கல்வி , மருத்துவம் , வழக்காடுதல் போன்றவை திறம்பட செயல்பட உதவுகின்றன. செயற்பாட்டு பிணைப்பு மூலப்பொருட்கள் உற்பத்தி பொருட்களாகவும் , உற்பத்தி பொருட்கள் சந்தையில் விற்கப்பட்டு நுகர்ப்பொருட்களாகவும் பல்வேறு
செயல்பாடுகளில் மாற்றப்படுகின்றன. இவ்வித செயல்பாடுகள் நான்கு நிலைத் தொழில்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு நடைபெறுவது ‘ செயற்பாட்டு பிணைப்பு ' எனப்படுகின்றது. அத்தியாவசியமற்ற பிணைப்புகள் : ஒரு தொழிலுக்கு மற்ற தொழில்கள் பயன்பட்டாலும் , அவைகள் நிறுத்தப்பட்டால் மாற்று வசதியுடன் உற்பத்தியைத் தொடர இயலும். எடுத்துக்காட்டாக , எஃகுத் தொழிலுக்குத் தேவையான வங்கி தொடர்ந்து செயல்படாவிட்டாலும் , எஃகுத் தொழில் பாதிக்கபடாமல் தொடர்ந்து நடைபெற வழியுண்டு. இதுவே அத்தியாவசியமற்ற பிணைப்பு எனப்படுகிறது. பெரும்பாலும்
அத்தியாவசியப் பிணைப்பைப் பொறுத்தே தொழிலகங்களின் அமைவிடங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , கப்பல்கட்டும் தொழிலை கடற்கரை பெருநகரங்களிலும் , கண்ணாடித் தொழிலை சந்தைக்கருகிலும் மட்டுமே அமைக்க முடியும். தவிர , மூன்றாம் , நான்காம் நிலைத்தொழில்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே அமைவிடங்களைப் பெருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் தொழிலகங்கள் செறிந்து காணப்படும். இத்தகைய இடங்கள் தொழிலக வட்டங்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , தமிழ்நாட்டில் மதுரை , கோயம்புத்தூரும் , பீகார் , ஒரிஸ்ஸா , மேற்கு வங்காள மாநிலங்களிலுள்ள
சோட்டா நாகபுரி பீடபூமிப் பகுதியும் தொழிலக வட்டங்களாகும். அவ்வாறே ஜெர்மனியில் ரூர் , அமெரிக்கா ஐக்கிய நாட்டில் சுப்பீரியர் ஏரி பகுதிகளும் தொழிலக வட்டங்களாகும். தொழிலக அமைவிடக் காரணிகள் ஓரிடத்தில் தொழிலகங்கள் அமைக்கப்பட பல்வேறு காரணிகள் முக்கியமாகத் திகழ்கின்றன. ஏனெனில் காரணிகள் அமைவதின் அடிப்படையிலேயே தொழிலகங்களின் உற்பத்தியும் , லாபமும் நிர்ணயிக்கப்படுகின்றன. அடிப்படைக் காரணிகளாக நிலத்தோற்றமும் , காலநிலையும் அமைகின்றன. சமதளமான மற்றும் நீர்வளம் மிக்க இடங்கள் தொழிலகங்கள் அமைய ஏற்றவையாகும். தவிர மூலப்பொருட்கள்
, மூலதனம் , போக்குவரத்து , எரிசக்தி , பணியாட்கள் , அரசாங்கம் போன்றவையும் முக்கிய காரணிகளாகும். மூலப்பொருட்கள் இயற்கை வளங்களான இரும்புத் தாது , தோல் , இரசாயனப் பொருட்கள் , மரங்கள் போன்றவை தொழிற்சாலைகளுக்கான ஒரு சில மூலப்பொருட்களாகும். இம்மூலப்பொருட்களைச் சார்ந்தே தொழிலக அமைவிடங்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எவ்வாறெனில் , கனமான இரும்புத்தாது போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படும் தொழிற்சாலைகளும் , அதிகமான அளவு மூலப்பொருட்கள் தேவைப்படும் தொழிற்சாலைகளும் மூலப்பொருட்கள் கிடைக்குமிடத்திலேயே நிறுவப்படுகின்றன.
இத்தொழிலகங்களின் உற்பத்தியும் மூலப்பொருட்களின் அளிப்பைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றது. மூலப்பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டி இருப்பின் , தொழிலகங்கள் துறைமுகங்களுக்கருகில் நிறுவப்படலாம். இரண்டாம் நிலைத் தொழிலகங்கள் , தாது வளங்கள் , வேளாண் , காட்டு மற்றும் விலங்குகள் , கடல் சார்ந்த பொருட்கள் போன்றவை கிடைக்கப் பெறும் இடங்களிலேயும் , மற்றும் அழுகும் தன்மையுடைய பொருட்கள் , பதப்படுத்தவேண்டிய பொருட்கள் உள்ள இடங்களிலேயும் நிறுவப்படுகின்றன. மூலதனம் சிறுதொழில் , கனரகத் தொழில் என எத்தொழிலாயினும் மூலதனம் மிக மிக ,
அவசியமானதொன்றாகும். மூலப்பொருட்கள் பெறுவதற்கும் இயந்திரக் கருவிகள் வாங்கவும். ஊதியம் கொடுக்கவும் மூலதனம் இன்றியமையாததொன்றாகும். போக்குவரத்து தொழிலகங்களின் இரத்தநாளம் என போக்குவரத்தைக் கூறலாம். ஏனெனில் , மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை தொழிலகங்களுக்கும் , சந்தைக்கும் கொண்டு சென்று தொழிலகம் சிறப்புற நடைபெற வழிவகுப்பதே போக்குவரத்து ஆகும். எரிசக்தி தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி எனப்படுவது எரிசக்தியாகும். நிலக்கரி , பெட்ரோலியம் , நீர்ச்சக்தி , அணுமின்சக்தி போன்றவை எரிசக்திகளாகும். இச்சக்திகளில்
நிலக்கரி தவிர மற்ற எரிசக்திப் பொருட்கள் தொலைவான தூரத்திற்கும் அனுப்பக் கூடியவையானதால் , அவை உற்பத்தியாகும் இடங்களில் தொழிலகங்கள் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. பணியாட்கள் தொழிலகத்தின் உற்பத்திப் பெருக்கம் தொழிலாளர்களின் எண்ணிக்கை , நுட்பத்திறன் இவற்றையே அடிப்படையாக கொண்டுள்ளது. தொழில் நுட்பத் திறனுடைய மிகுதியான தொழிலாளர்கள் தொழிலக அமைவிடத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர். அரசாங்கம் தொழிற்சாலை நிறுவுவதற்கான இடம் , தொழில் நுட்ப வளர்ச்சி , விலை நிர்ணயம் , வரி நிர்ணயம் , ஏற்றுமதி இறக்குமதி மற்றும்
தொழிற் கொள்கைகள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் , தொழிலக அமைவிடத்தில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது. சில சமயங்களில் சில குறிப்பிட்ட காரணங்களால் தொழிற்சாலை இடமாற்றம் நேரிட்டால் தொழிலகம் மூடப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலக அமைவிடக்கோட்பாடுகள் உலகின் தொழில் மண்டலங்களைக் கொண்டு பலர் பல தொழிலகக் கோட்பாடுகளை வெளியிட்டுள்ளனர். இலாபத்தை மையமாகக் கொண்டு தொழிலக அமைவிடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்ற கருத்தினைக் கொண்ட கோட்பாட்டில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவையாவன : 1. உற்பத்தி
செலவு குறைப்பு 2. அதிக அளவு வருவாய் சில வல்லுனர்கள் இவ்விரு வழிகளை கருத்தில் கொண்டு 1 ) குறைந்த செலவில் அமையும் அமைவிடங்கள் , 2 ) உச்ச வருவாய் அமைவிடங்கள் என இருவித தொழிலக அமைவிடக் கோட்பாடுகளை விளக்கியுள்ளனர். வெபரின் கோட்பாடு ' குறைந்த செலவு ’ அமைவிடக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தொழிலக அமைவிட கோட்பாட்டினை வெபர் என்பவர் விளக்கியுள்ளார். இக்கோட்பாடு போக்குவரத்து செலவினங்களையும் வேறு சில அனுமானங்களையும் அடிப்படையாக வைத்து கூறப்பட்டுள்ளது. மூன்று வேறுபட்ட சூழ்நிலைகளில் எங்கு தொழில்கள் அமையும் என்பது
இவரது கோட்பாட்டில் இருந்து தெளிவாகின்றது. அனுமானங்கள் 1. சில மூலப்பொருட்கள் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. எனினும் நீர் போன்ற பொருட்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. 2. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சந்தைகள் காணப்படுகின்றன. 3. பொருட்களின் எடையையும் , தூரத்தையும் பொறுத்தே போக்குவரத்துச் செலவு கணக்கிடப்படுகின்றது. 4. தொழிலகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தையில் நிறைவான போட்டியே காணப்படுகின்றது. 5. உற்பத்திப் பொருட்களை நுகருவதற்கு மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுகிறார்கள்.
வெபரின் குறைந்த செலவு தொழிலக அமைவிடக் கோட்பாடு இது முக்கோண அமைவிட அமைப்பை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. முக்கோணத்தின் சமதள இருமுனைகள் இரு வகைமூலப்பொருட்கள் கிடைக்குமிடங்களை ( R ,, R2 ) குறிப்பனவாகவும் , மற்றொரு முனை சந்தையை ( M ) குறிப்பனவாகும் அமைக்கப்பட்டுள்ளது. P என்பது தொழிலக அமைவிடமாகும். வெபரின் தொழிலக அமைப்பில் 1 ) மூலப்பொருட்கள் 2 ) சந்தையின் அமைவிடம் 3 ) உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தன்மைகள் 4 ) போக்குவரத்து செலவுகள் போன்ற நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் ‘ குறைந்த செலவு தொழிலக
அமைவிடக் கோட்பாடு ’ வெளியிடப்பட்டுள்ளது. iv ) ஆனால் R , R , மூலப்பொருட்கள் கிடைக்கு மிடங்களுக்கும் M என்ற சந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் P என்ற தொழிலக அமைவிடம் இருக்குமேயானால் R , R , மூலப் பொருட்களைத் தொழிலகத்திற்கு கொண்டு வரும் போக்குவரத்து செலவு சமமாகின்றது. அதுபோலவே P என்ற தொழிலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் செலவும் குறைகிறது. குறைந்த செலவால் தொழிலகத்திற்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே , முக்கோண மையத்தில் அதாவது R , R , மூலப்பொருட்கள் M என்ற சந்தை
இவைகளுக்கு மையப்பகுதியில் P என்ற தொழிலகம் அமைவதே ஏற்புடையது என வெபர் தனது கோட்பாட்டில் விளக்குகிறார். எடை குறைந்த உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிலகங்களில் R , R2 மூலப்பொருட்களின் அருகில் P என்ற தொழிலகம் அமைந்துள்ளதால். மூலப்பொருட்களை அமைவிடத்துக்குக் கொண்டு செல்லும் செலவு குறைகின்றது. மேலும் , உற்பத்திப் பொருள் எடை குறைந்துள்ளதால் தூரமுள்ள M என்ற சந்தைக்கு கொண்டு செல்லும் செலவும் குறைகின்றது. எனவே வெபர் தனது கோட்பாட்டின்படி தொழிலகம் , மூலப்பொருட்கள் கிடைக்குமிடங்களுக்கு அருகில் அமைவதே லாபகரமானது எனக்
கருதுகின்றார். எடை அதிகரிக்கும் உற்பத்திப் பொருட்கள் எடை அதிகரிக்கும் உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிலகங்களில் R , R2 மூலப்பொருட்களின் எடை உற்பத்திப் பொருட்களின் எடையைக் காட்டிலும் குறைவாக உள்ளதால் , மூலப்பொருட்களை தொழிலகத்திற்குக் கொண்டு செல்ல ஆகும் செலவு குறைகின்றது. உற்பத்திப் பொருட்களின் எடை கூடுதலாக உள்ளதால் , உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு அதிகமாக இருக்கும். எனவே , தொழிலக அமைவிடம் சந்தைக்கு அருகில் அமைவதே லாபகரமானது என வெபர் கருதுகின்றார். கற்றல் அடைவுகள் வெபரின் குறைந்த
செலவு தொழிலக அமைவிடக் கோட்பாடு , போக்குவரத்து செலவை அடிப்படையாகக் கொண்டுள்ளதே இதன் குறைபாடாக இருப்பினும் , மற்ற கோட்பாடுகளை விட இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் வேறுபட்ட தொழிலகத் தொகுதிகள் , அமைவிடக் காரணிகள் மற்றும் புவியியலில் தொழிலக அமைவிட கோட்பாடுகள் ஆகியன பற்றி புரிந்து கொள்கின்றனர். I. கோடிட்ட இடங்களை நிரப்புக 1. ஒரு தொழில் அதற்குத் தேவையான பொருட்களை மற்றத் தொழிலிருந்து என்கிறோம். பெறுவதை.......... 2. பொருட்களின் அளிப்பும். அவற்றின் தேவையும் சந்திக்குமிடம் ……... ஆகும். 3. வெபரின் கோட்பாடு.
என்றழைக்கப்படுகிறது. 4. பொருட்களின் எடையும் கணக்கிடப்படுகின்றது. 5. எடை அதிகரிக்கும் பொருட்க அருகிலேயே பார்க்கிறோம். சரியான விடையைத் தேர்தெடுக்கவும் 6. இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களை பெறும் தொழில்கள் பொறுத்தே போக்குவரத்துச் செலவு -களை உற்பத்தி செய்யும் தொழிலகங்களை. அ ) முதன்மை நிலைத் தொழில்கள் ஆ ) இரண்டாம் நிலைத் தொழில்கள் இ ) மூன்றாம் நிலைத் தொழில்கள் ஈ ) நான்காம் நிலைத் தொழில்கள் நுகர்ப்பொருளை விற்பதற்காக ஏற்படுத்தும் பிணைப்பு அ ) இடுபொருள் பிணைப்பு ஆ ) வெளிபடுபொருள் பிணைப்பு அத்தியாவசியப் பிணைப்பு ஈ )
அத்தியாவசியமற்ற பிணைப்பு தொழிலக அமைவிடக் கோட்பாடு அ ) வெபர் கோட்பாடு ஆ ) கிறிஸ்டாலர் கோட்பாடு இ ) வான்தூனன் கோட்பாடு ஈ ) மால்தஸ் கோட்பாடு 9. நான்கு நிலைத் தொழில்களும் செயற்பாடுகளால் பிணைக்கப்பட்டுள்ளன : அ ) இடுபொருள் பிணைப்பு ஆ ) வெளிபடுபொருள் பிணைப்பு இ ) செயற்பாட்டு பிணைப்பு 10. தொழில்கள் அதிகமாகக் குழுமியுள்ள பகுதிகள் அ ) பாலைவனப்பகுதிகள் ஆ ) காட்டுப்பகுதிகள் இ ) மலைப்பகுதிகள் ஈ ) மூலப்பொருட்கள் கிடைக்கும் பகுதிகள் 11. வலிமையற்ற பிணைப்பு 12. அமைவிடக் கோட்பாடு 13. எடை இழக்கும் கச்சாப்பொருள்கள் 14. எரிசக்தி
15. மூன்றாம் நிலைத் தொழில்கள் IV. ஒரு பத்தியில் விடை தருக 16. மூலப் பொருட்கள் 17. நான்காம் நிலைத் தொழில்கள் 18. செயற்பாட்டு பிணைப்பு 19. தொழிலக வட்டங்கள் 20. பணியாட்கள் விரிவான விடையளி 21. தொழிலக அமைவிட காரணிகளை விவரி. 22. வெபரின் தொழிலக அமைவிட கோட்பாட்டினை படத்துடன் விவரி. VI. செய்முறைப் பயற்சி 23. தொழிலக அமைவிட காரணிகள் பற்றி கலந்துரையாடுக. 24. உலக நிலவரைப்படத்தில் உலகின் தொழிலக வட்டங்களை வரைக. 25. உங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள முதன்மை , இரண்டாம் , மூன்றாம் , நான்காம் நிலைத் தொழில்களை அடையாளம் கண்டு
அட்டவணைப்படுத்துங்கள். 26. பல்வேறு தொழிலகங்களின் படங்களைச் சேகரித்து நிலைகள் வாரியாக படத்தொகுப்பில் ஒப்பிடுக. 27. உனக்கு அருகாமையில் உள்ள தொழிற்சாலைக்கு சென்று ஆழ்ந்து நோக்கி அமைவிடக் காரணிகள் குறித்து அறிக்கை தயார் செய்க. அலகு 2 மனித இயற்தொகுதிகள் – 1 பாடம் 5 வணிகத் தொகுதிகள் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் உலகமெங்கிலும் நிகழ்கின்ற வணிகப் பரிமாற்றங்களை அறிந்து கொள்ளல். வணிக முன்னேற்றங்களை உருவாக்குகின்ற , ஊக்குவிக்கின்ற , தடையாக விளங்குகின்ற காரணிகளை அறிந்து கொள்ளல். ஒரு நாட்டின் தேவைகளை அந்நாடே பூர்த்தி செய்து
கொள்ளுதலைப் பொறுத்தே அதன் முன்னேற்றம் அமைகின்றது. ஆனால் , புவியியல் காரணிகளால் அது தன் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போகலாம். எனவே , சில பொருட்களை அதிகமாகவும் சில பொருட்களை குறைவாகவுமே உற்பத்தி செய்யலாம். தேவைக்கு அதிகமான உற்பத்தி ‘ உபரி ’ என்றும் குறைவான உற்பத்தி ‘ பற்றாக்குறை ’ என்றும் கருதப்படுகின்றது. பற்றாக்குறையை நிறைவு செய்ய , உபரியைப் பயன்படுத்த உதவும் பண்டமாற்று பணமாற்று முறையே ‘ வணிகம் ’ என்றழைக்கப்படுகிறது. வணிக வளர்ச்சி : ( Development of Trade ) பண்டைக்காலத்தில் வணிகம் பண்டமாற்று முறையில்
நடைபெற்றது. ஒரு பொருளை மற்றொன்றுக்கு மாற்றாகப் பெறுவதும் , கொடுப்பதுமே பண்டமாற்று முறை ஆகும். பன்னாட்டு வணிகத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டிற்குத் தேவையான பொருளை வழங்க இயலாச் சூழல் ஏற்பட்ட சமயங்களில் அப்பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளை ஈடாகக் கொடுக்க அவசியம் எழுந்தது. எனவே , தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. நவீன மயமாக்கலாலும் , மக்கள் தொகை பெருக்கத்தாலும் வணிகப் பொருட்களின் அளவும் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதன் விளைவாக , பரிமாற்றத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைப் பயன்படுத்துவதில்
நடைமுறையில் சிக்கல்கள் எழுந்தன. இதனைப் போக்கவே காகித நாணயம் அறிமுகமானது. வணிகத்தில் புவியியல் காரணிகள் ( Role of Geographical Factors in Trade ) ஒரு வட்டாரம் தன் தேவைகளுக்கான உணவையோ , பொருளையோ உற்பத்தி செய்து கொள்ள இயலாமலோ அல்லது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாமலோ போகலாம். அப்பொழுது மற்ற பகுதியிலிருந்து வாங்க வேண்டிய அவசியமேற்படுகின்றது. இவ்வாறாகத்தான் வணிகம் உருவாகின்றது. புவியியல் மற்றும் கலாச்சாரக் காரணிகளே வணிகத்தின் அடிப்படைகளாகின்றன. புவி அமைப்பியல் , தட்பவெப்ப நிலை , மக்கள் தொகை , தொழில் நுட்ப
வளர்ச்சி மற்றும் கலாச்சாரம் போன்றவைதான் வணிகத்தின் தேவையையும் , அளவையும் தீர்மானிக்கின்ற காரணிகளாகும். புவி அமைப்பியல் ( Geology ) ஒரு இடத்தின் பாறைகளது தன்மை மற்றும் கட்டமைப்பு , அவ்வட்டாரத்தின் புவி அமைப்பியலின் தன்மையைப் பொறுத்தது. அவ்வாறே புவிக்கடியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் தாதுப்பொருட்களும் எரிப்பொருட்களும் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. சில தாதுப்பொருட்கள் சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , பெட்ரோலியம் , நிலக்கரி , தங்கம் , வெள்ளி மற்றும் செம்பு முதலியவை சில நாடுகளிலே
உற்பத்திச் செய்யப்படுகின்றன. அவ்வாறே நில அமைப்புக்கு ஏற்றவாறு வேளாண் உற்பத்தியும் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக , காப்பியும் தேயிலையும் உயரமான மலைச்சரிவுகளில் வளர்க்கப்படுகின்றன. தட்பவெப்பநிலை ( Climate ) ஒவ்வொரு வேளாண் பொருள் உற்பத்திக்கும் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலை அவசியமாகிறது. தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போல் அவ்வேளாண் பயிர் வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக , கரும்பு அயனப்பகுதிகளிலும் ஓட்ஸ் , பார்லி மிதவெப்பமண்டலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதன்மூலம் எல்லாப்பயிர்களும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும்
வளருவதில்லை என்பது தெளிவாகின்றது. மக்கட் தொகை ( Population ) ஒரு நாட்டிலே உற்பத்தியாகின்ற விளைபொருட்கள் அந்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் கிடைக்கும் உபரி மட்டுமே வேறு நாட்டுக்கு ஏற்றுமதியாகின்றது. எனவேதான் , மக்கள்தொகை எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு விளைபொருள் உபரியாக உள்ளதா அல்லது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா என அறியமுடிகின்றது. எடுத்துக்காட்டாக மியான்மார் ( பர்மா ) நாட்டை விட இந்தியா அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்தாலும் தன்னிறைவு மட்டுமே அடைய முடிகிறது. எதிர்மாறாக மியான்மார் குறைந்த மக்கள்
தொகையினால் குறைவான அளவு அரிசி உற்பத்தி செய்த போதும் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சி நிலை ( Stage of Techonological Development ) ஒரு நாட்டில் உற்பத்தியாகின்ற பொருட்களின் தரமும் , அளவும் அந்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தே அமைகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள் உயர்தர இயந்திரங்களையும் , நுகர் பொருட்களையும் தயாரிக்கின்றன. வளரும் நாடுகளின் தொழில் நுட்பம் ஏற்றமடையாததால் , மூலப்பொருட்களை நுகர்பொருட்களாக மாற்றுவது கடினமாகின்றது. எனவேதான் , அவை மூலப் பொருட்களையே ஏற்றுமதி
செய்கின்றன. இந்நாடுகள் குறைந்த வருவாயையும் ஈட்டுகின்றன. ஒரு நாட்டின் உற்பத்திப் பொருட்கள் தொழில் நுட்பத்தால் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக , ஜப்பானில் அரிசி , ஒரு ஹெக்டேருக்கு 6,000 கிலோ கிராமாக உள்ளபோது. இந்தியாவில் 2,000 கிலோகிராம் மட்டுமே கிடைக்கின்றது. கலாச்சாரம் ( Culture ) ஒரு வட்டாரத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுரிமைகளைப் பொறுத்தே சில பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , சில முக்கியமான கைவினைப் பொருட்களைக் கூறலாம். அவை தஞ்சாவூர் தட்டு , கும்பகோண வெண்கல பாத்திரங்கள் மற்றும் காஞ்சீபுர
பட்டுத் துணிகள் இன்னபிறப் பொருட்கள் ஆகும். எனவே , பன்னாட்டுச் சந்தைகளில் அவை தங்களுக்கே உரிய தனிச்சிறப்பை பெறுகின்றன. இவ்வாறாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. உபரியானப் பொருட்கள் , பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு இடம் பெயர வணிகம் காரணமாயுள்ளது. இப்படியாக , வணிகம் தேவையானப் பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்து உதவுகிறது. போக்குவரத்து இச்செயல்களை எளிதாக்குகிறது. வணிகச் சமநிலை ( Trade Balance ) ஒரு நாட்டின் நாணய மதிப்பு அந்நாட்டின் வணிகச் சமநிலையை
பொறுத்தே அமைகிறது. ஒரு நாட்டில் ஏற்றுமதியாகும் உற்பத்திப்பொருளின் பணமதிப்பிற்கும் , இறக்குமதியாகும் உற்பத்தி பொருளின் பணமதிப்பிற்கும் இடையேயான வேறுபாடே ' வணிகச் சமநிலை ’ எனப்படும். இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைவிட ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு அதிகரித்திருந்தால் அது சாதகமான வணிகச் சமநிலை எனப்படும் , அல்லது நேர்மாறாக இருந்தால் பாதகமான வணிகச் சமநிலை எனப்படும். ஜப்பானிய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஏற்றுமதி , இறக்குமதியை விட மிக அதிகமாக இருப்பதால் அவைகள் சாதகமான வணிகச் சமநிலையைப் பெற்றுள்ளன. ஒரு
நாட்டின் உற்பத்திப் பொருட்கள் மறுநாட்டில் தேவைப்பட்டால் அந்நாடு அப்பொருளை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் அந்நாட்டின் நாணய மதிப்பு மேம்படுகிறது. எடுத்துக்காட்டாக , ஜப்பானிலும் , அமெரிக்காவிலும் உற்பத்தியான இயந்திர மற்றும் நுகர் பொருட்களுக்கு ஏனைய நாடுகளில் தேவை அதிகரிக்கின்றது. பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தாங்களாகவே பணக்கார நாடுகளாக உள்ளன. வணிக வகைகள் ( Trade Types ) புவியியல் ரீதியாக வணிக வகைககள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு வணிகம் ( Internal Trade ) ஒரு
நாட்டின் எல்லைக்குள் நிகழ்கின்ற வணிகம் ‘ உள்நாட்டு வணிகம் ’ எனப்படும். இதில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் , உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி , நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர். உள்நாட்டு வணிகம் மேலும் தல , ஊரக வணிகங்கள் என பிரிக்கப்படுகின்றது. தல வணிகம் ( Local Trade ) உள்ளூர் பகுதிகளிலேயே தினசரி மற்றும் வாரத்தில் குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் நடைபெறும் வணிகம் ‘ தல வணிகம் ' எனப்படும். எடுத்துக்காட்டாக , நகரங்களில் காணக்கூடிய தினசரி சந்தைகளும் , கிராமங்களில் காணக்கூடிய வாராந்திர சந்தைகளும்
ஆகும். இங்கு உற்பத்தியாளர்களே நேரடியாக நுகர்வோருக்கு பொருட்களை விற்கின்றனர். மலர்கள் , கனிகள் , காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய இன்னபிறபொருட்கள் இவ்வகையில் வணிகம் செய்யப்படுகின்றன. ஊரக வணிகம் ( Rural Trade ) ஒரு நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் , அவசியமான எல்லாப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே தான் , அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வணிகம் நடைபெறுகின்றது. எடுத்துக்காட்டாக , தென்னிந்தியாவில் பயிராகின்ற காப்பியும் , வட இந்தியாவில் மட்டுமே விளைகின்ற கோதுமையும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்
விற்பனையாகின்றன. பன்னாட்டு வணிகம் ( International Trade ) இது உலகின் பல நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகமாகும். எந்த நாடும் மற்ற நாடுகளின் உதவியின்றி வாழ இயலாது. தன்னால் உற்பத்தி செய்ய இயலாத பொருட்களை எப்படியாகிலும் ஒரு நாடு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. பொதுவாக விவசாய மற்றும் தாதுப்பொருட்களை வளரும் நாடுகள் , வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. பதிலாக அறிவியல் கருவிகள் , இயந்திரங்கள் மற்றும் மின்னணுக்கருவிகளை வளரும் நாடுகள் , வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. பன்னாட்டு வணிகத்தில்
இருபெரும் வகைகள் உள்ளன. நேரிணை வணிகம் ( Bilateral Trade ) இவ்வகையில் ஒரு நாடு தனக்குத் தேவையான பொருட்களை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றது. அதற்குப் பதிலாக தன்னிடம் உள்ள உபரி உற்பத்திப் பொருளை அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றது. இதுவே ' நேரிணை வணிகம் ’ எனப்படுகின்றது. பல்கிளை வணிகம் ( Multilateral Trade ) ஒரு நாடு தன்னிடம் உபரியாக உள்ள பொருளைத் தேவைப்படும் மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்துவிட்டு , வரும் வருவாயில் , வேறொரு நாட்டிடமிருந்து தனக்குத் தேவையான பொருளை இறக்குமதி செய்து கொள்ளுதல் ‘
பல்கிளை வணிகம் ’ எனப்படும். ஒவ்வொரு நாடும் தனது சொந்த நாணயத்தைக் கொண்டுள்ளதால் பன்னாட்டு வணிகத்தில் தொழில் நடவடிக்கையின் போது , எவ்வகை நாணயத்தை பயன்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. தொடக்க காலத்தில் , அமெரிக்க டாலரை வைத்தோ அல்லது ஆங்கில பவுண்டாலோதான் வணிகம் நடத்தப்பட்டது. பின்னர் வளர்ச்சியடைந்த நாடுகளான ஜப்பானின் யென் , ஜெர்மானிய டச்மார்க்ஸ் மற்றும் பிரான்சு பிராங்க் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த நாணயங்களின் மதிப்பில் பெரிய வித்தியாசங்கள் இல்லாமலிருந்ததால் அது சாத்தியமானது. சிறப்பு எடுப்பு உரிமைகளை (
Special Drawing Rights or SDR ) பன்னாட்டு நிதியத்தில் சலுகையாக அனுமதிக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் கீழ் , ஒரு பன்னாட்டு நிதி நிறுவனம் ( International Monetary Fund or IMF ) ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பன்னாட்டு நாணய நிதியத்தில் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தங்கள் பங்கு விகிதத்திற்கேற்றாற் போல் , தங்கள் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமையைப் பெறுகின்றன. இந்தச் சிறப்பு எடுப்பு உரிமையைப் பயன்படுத்தி ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளலாம். இவ்வாறாக இந்த பன்னாட்டு நாணய நிதியம் தன் உறுப்பு
நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அந்நாடு ஏற்றுமதி , இறக்குமதி செய்யும் பொருட்களை வைத்தே நாம் அறிந்து கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக , நாம் அறிந்துள்ளவாறு. வளரும் நாடுகள் தங்களின் மூலப்பொருட்களையும் , விவசாய உற்பத்தி பொருட்களையும் ஏற்றுமதி செய்து , விலை உயர்ந்த இயந்திர பொருட்களையும் , நுகர் பொருட்களையும் இறக்குமதி செய்து கொள்கின்றன. மறுபுறம் வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிகமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை இயந்திரங்களாகவும் , நுகர்பொருட்களாகவும் தயாரித்து வளரும்
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எனவே ஒவ்வொரு நாடும் ஒரு சாதகமான வணிகச் சமநிலையை அடையும் வண்ணம் இறக்குமதியைக் குறைக்கவும் , ஏற்றுமதியைப் பெருக்கவும் கடினமான முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஏற்றுமதியைக் கூட்ட வரிச் சலுகைகளையும் இறக்குமதியைக் குறைக்க சுங்க வரிகளையும் விதிக்கின்றன. இதன் விளைவாக , பன்னாட்டு வணிகம் பாதிப்புக்குள்ளாகின்றது. இக்குறையைப் போக்கத்தான் பல நாடுகள் வர்த்தகக் கூட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன. ஐரோப்பிய பொருளாதார சமுதாயம் ( European Economic Commnity ) 1948 இல் பெல்ஜியம் , நெதர்லாந்து ,
லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் , ‘ பெனலக்ஸ் ’ என்ற அமைப்பின் கீழ் ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பை நிறுவின. பின்னர் பிரான்ஸ் , இத்தாலி , மேற்கு ஜெர்மனி மூன்றும் இணைந்து , ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு நிறுவனம் என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர். தொடக்க காலத்தில் அது குறுகிய அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் நாளடைவில் அது ஐரோப்பியப் பொருளாதார கூட்டமைப்பு ( EEC ) என்ற அமைப்பிற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. எல்லாக் கூட்டமைப்புகளின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் ஒன்றேயாயினும் , அவைகள் தங்கள் பணிகளிலும் , வளர்ச்சிகளிலும்
மாறுபட்டிருக்கின்றன. இது 1957 இல் ரோமானிய ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்டது. தற்போது ( 2004 ) 25 உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இது அமைந்த உடனேயே இறக்குமதிக்காக தடைகள் மற்றும் சுங்க , கலால் வரிகளை நீக்கிவிடவில்லை. 1966 இல் தொழில் உற்பத்தி பொருட்களின் மீதான வர்த்தகத் தடைகளை நீக்கிவிட்டு ஒரு பொதுவான சுங்கவரி அமல்படுத்தப்பட்டது. இவ்வமைப்பிலுள்ள பெரும்பான்மையான நாடுகள் விவசாய நாடுகளே. இங்கு பாதுகாப்பான ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி காணப்படுகின்றது. விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு அதிகப் பட்ச
விலையைப் பெறுகின்றனர். உலக வணிக அமைப்பில் , இக்கூட்டமைப்பு மூன்றாவது நிலையில் உள்ளது. உலக வணிகத்தில் 45 சதவீதம் பொருட்களை ஐரோப்பியப் பொருளாதார சமுதாயம் உற்பத்தி செய்கின்றது. தென்கிழக்காசிய கூட்டமைப்பு ( ASEAN ) இது 1967 இல் தோற்றுவிக்கப்பட்டது. இது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். விரைவான முன்னேற்றமடைந்து வரும் நாடுகளான இந்தோனேசியா , மலேசியா , தாய்லாந்து , பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உறுப்பினராகக் கொண்டது ( படம் 5.1 ) இந்நாடுகளுக்கிடையேயும் , உலகின் பிற நாடுகளிலும்
இக்கூட்டமைப்பினால் வணிகம் விரைவாக நடைபெறுகின்றது. சிங்கப்பூர் நீங்கலாக ஏனைய நாடுகள் , விவசாய மற்றும் கனிப் பொருட்களை மேற்கு நாடுகளுக்கும் , ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. வணிகக் கூட்டமைப்புகளின் பயன்கள் ( Benefits from Trade Blocs ) 1. உறுப்பு நாடுகளுக்கு வரிக்குறைப்பும் , உறுப்பினரல்லாத ஏனைய நாடுகளுக்கு வணிக கட்டுபாடுகளும் நிலவுகின்றன. இதனால் உறுப்பு நாடுகளுக்கிடையே வணிகம் விரைவாக அதிகரிக்கின்றது. 2. உறுப்பு நாடுகள் ஒரு சக்தியாக உருவெடுப்பதால் , அவை பொருளாதார வலிமை பெற்று , விலை பேசும் தகுதியை
பெற்றுள்ளன. 3. வணிகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது ஒரு நாட்டிலிருந்து அடுத்த நாட்டிற்கு பொருட்கள் தாராளமாக வந்து குவிகின்றன. உற்பத்தி நாடுகள் விரிவான அங்காடி நலனைப் பெறுகின்றனர். எனவே அவை உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாது பிற நாடுகளுக்கும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகின்றன. 4. புவியியல் மற்றும் கலாச்சார பின்னணிகள் எங்கு சாதகமாக ஒரு பொருளுக்கு அமைகின்றதோ அப்பொருளுக்கு அங்கு உற்பத்தியில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. அவ்வாறே அப்பொருள்கள் மிகுதியான திறனோடும் குறைவான விலையிலும் உற்பத்தி
செய்யப்படுகின்றன. 5. வணிகக் கூட்டமைப்பை நிறுவுவதன் மூலமாக நாடுகளுக்கிடையே அரசியல் ஒற்றுமை வலுப்பெறுகின்றது. போர் தவிர்ப்பும் , பொருளாதார அரசியல் ஒத்துழைப்பும் சாதகமாகின்றன. வணிகப் பொறி மற்றும் சந்தை வீழ்ச்சி ( Trade Trap and the fall of markets ) வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் , நலிவுற்ற நாடுகளுக்கும் வணிகச் சமநிலை இல்லையென நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். நலிவுற்ற நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு மூலப்பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களை சார்ந்திருக்கின்றன. இந்த ஏற்றுமதியால் பெறும் வருமானத்தை உற்பத்திப் பொருட்கள்
வாங்கவும். தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துகின்றன. இந்த சூழ்நிலைகளில் இறக்குமதி மதிப்பு , ஏற்றுமதி மதிப்பைவிட அதிகமாகி விடும் நிலை உருவாகிவிடுகிறது. இதனால் தேவையும் அளிப்பு நிலையும் சமநிலையில் இல்லை. எனவே வணிகச் சமநிலை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சாதகமாகவும் , நலிவுற்ற நாடுகளுக்குப் பாதகமாகவும் உள்ளது. இந்நிலையில் நலிவுற்ற நாடுகள் தற்காப்பில்லா நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதுவே பொதுவாக “ வணிகப்பொறி ” என்று சொல்லப்படுகின்றது. இதன் தீவிரம் நாடுகளின் வளர்ச்சி நிலையைப் பொறுத்து அமைகின்றது. சந்தை
நடுக்கம் ( Market Tremors ) எந்த ஒரு நாடும் உலக வணிகத்தில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாது. ஒரு நாட்டில் தோன்றும் பொருளாதார மாற்றங்களும் , கொள்கை மாற்றங்களும் உலக வணிகத்தில் அந்நாட்டின் இடத்தை நிலையற்றதாக்கலாம். ஆகையால் உலக வணிகச் சந்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜப்பான் மற்றும் புதிதாக தொழில் மயமான நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளோடு போட்டியிடுகின்றன. சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் , பாதுகாப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு காரணமாகின்றன. ஆகையால் உலக வணிகம் படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது என