text
stringlengths 11
513
|
|---|
காப்பியம் , பெண்ணின் பெருமை பேசும் காப்பியம் , குடிமக்கள் காப்பியம். கதைக்களஞ்சியக் காப்பியம். இயற்கை இகழ்ந்த காப்பியம். கதைமாந்தர் : மணிமேகலை , மாதவி , மாசாத்துவான் , மதுராபதி , துச்சயன் , இராகுலன் , உதயணன் முதலாக 89 பேர்.. எளிய நடை , கதை சொல்லும் திறன் சமய அறங்களைத் தெளிவாக எடுத்துக்கூறல் மாதவி ( கணிகை ) மணிமேகலை சிறந்த துறவி 172 பிறப்பினால் மேல் கீழ் போக்கு எதிரானது முதற்சமயக் காப்பியம் மணிமேகலைத் துறவு வேறுபெயர் இந்திர விழாச் சிறப்பு O சிறைச்சீர்திருத்தம் , பரத்தமை ஒழிப்பு , பசிப்பிணி அகற்றல் , உடல்
|
வானமுற்றோர்க்கு உதவல் , மது ஒழிப்பு , சிறை ஒழிப்பு. 15 % வடமொழிச்சொற்கள் ( பாலி , சமஸ்கிருதம் ) அறக்கருத்தை விரிப்பதால் அறக்காப்பியம். கதை மூன்று நகரங்களில் நிகழல் ஆபுத்திரன் கதை , முற்பிறப்புக்கதை , ஆதிரை வரலாறு கிளைக்கதைகள் பல தமிழகத்தில் நடந்த கதை நகர் அமைப்பு , விழாக்கள் , மக்கள் வாழ்க்கை , கலைகள் பண்பாட்டு வரலாற்றுக் காப்பியம். குண்டலகேசி , நீலகேசி போன்ற சமயத்தருக்கக் காப்பியங்கள் கொண்ட வழிகாட்டி. பெண்களைத் தலைமாந்தராக முதன்மைப்படுத்தியதில் முன்னோடி. நியதில் சமயக்கருத்துக்களை விளக்குதலே
|
காப்பியக்குறிக்கோள். திரைகடல் ஓடி திரவியம் தேடல் , கணிகையர் கலைகளில் சிறந்திருத்தல் , புகாரின் கடல்கோள் , குலத்தால் பயனின்மை , பெண்ணும் வீடுபேறு எய்தும் உரிமை. சிறைச்சீர்திருத்தம் , பரத்தமை ஒழிப்பு , பசிப்பிணி அகற்றல் , உடல் ஊனமுற்றோர்க்கு உதவுதல் , மது ஒழிப்பு , சிறை ஒழிப்பு போன்ற சீர்திருத்தக்கருத்துக்களை வலியுறுத்துவதால் சமுதாயச் சீர்திருத்தங்களின் களஞ்சியம் அறிஞர் - சமய வேறுசிலவற்றையும் இடத்திற்கேற்ப இவர் மொழிபெயர்த்து அமைத்திருத்தல் மிகப்பாராட்டிற்கு உரியதொன்றாம். ( உ.வே.சா ) சொற்களை லம் தொடர்களையும் பல
|
நயமிக்க வரிகள் " இளமை நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது ' மாண்எழில் சிதைக்கும் பூண்அணி மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி ' ( மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே ) 173 3. கம்பராமாயணம் ஆசிரியர் : கம்பர் காலம் - கி.பி.9 நூ.கி.பி.12 நூ ( குலோத்துங்கன் III ) , கி.பி. 13 நூ. பா : 10 , 500 , 6 காண்டம் , 113 படலம். கம்பர் இட்ட பெயர் " ராமாவதாரம் ” , “ இராமகாதை ” , என்று பெயர்
|
சூட்டப்பட்டிருக்க வேண்டும் எனப் பாயிரம் கூறுகிறது. காசில் கொற்றத்து இராமன் காதை " இராமாவதாரப்பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை. ” o வ.வே.சு. அவர்கள் கம்பராமாயணம் இலியாது , ஏனீது , துறக்க நீக்கம் , மகாபாரதம் , போன்றவற்றை வெல்லும் சிறப்புடையது என்பது மட்டுமன்றி தனக்கு முதல் நூலான வால்மீகி இராமயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும். சுருங்கச் சொல்லின் " கங்கைக் கரைச்சீதைக்குக் காவிரிச் சீலை உடுத்தி அழகு பார்த்திருக்கிறார் கம்பர் ' கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க கம்பன் பிறந்த தமிழ்நாடு " கல்வியிற் பெரியவர்
|
கம்பர் கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் கம்ப நாடகம் " கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே " இப்பாடல் வரிகள் கம்பரின் கவிப்புலமை ய்மையே வெல்லு காட்டுகின்றன. கம்பர் ஏகம்பன் முதல் குறைந்து - கம்பன் கம்பங்கொல்லை காத்தல் கம்பர் காளிகோயில் கீழ்க் கண்டெடுத்தல் 1 கம்பர் கவிபாடும் புலமையில் அறிவற்றுக் கம்பம்போல் நின்றதால் - கம்பர் என்றாயிற்று. 4. பெரியபுராணம் ஆசிரியர் - குன்றத்தூர்ச் சேக்கிழார். ஆதரித்தவன் அநபாயன் ( 10 இடம் ) குலோத்துங்கச் சோழன். பொன்வேய்ந்தவன் ( தில்லை ) 63 சைவ அடியார்
|
வரலாறு. 174 தருமிக்கருளினோன் காண் எனத் தமிழ்ச் சங்கத்தைப் பாடுகிறார். ஆற்றிய அற்புதங்கள் 1. பாம்பு கடித்து மாண்ட அப்பூதியடிகளின் மைந்தனைப் பதிகம் பாடி எழுப்பினார். 2. மறைக்காட்டுக் கதவம் திறந்தார். 3. உழவாரப்படை கொண்டு ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார். 4. மகேந்திர பல்லவனைச் சைவராக்கினார். 5. கைலாயக் காட்சியைக் கண்டார். 6.81 - வது வயதில் திருப்புகலூரில் சித்திரைத்திங்கள் சதய நாளில் இறைவனோடு கலந்தார். பாடல்கள் ந " மாசில் வீணையும் ' குனித்த புருவமும் ' அத்தா உன்னடியேனை சுந்தரர் பிறந்த ஊர் -திருநாவலூரில்
|
குலம் ஆதி சைவ அந்தணர் ஆதி 2 பெற்றோர் சடையனார் - இசைஞானியார் சிறப்புப் பெயர் ஆரூரர் , திருநாவலூரர் , வன்தொண்டர் 8 ஆம் நூ ( அ ) காலம் - 9 நூற்றாண்டு தொடக்கம் பாடிய பதிகங்கள் 38000 , 7 ஆம் திருமுறை 100 பதிகம் 1026 பாடல்கள் இறைவனை நோக்கி " பித்தா பிறைசூடி எனப் ப பேயோடாயினும் பிரிவு வெல்லுது இன்னாது " பழமொழி பாரியின் பெருமையாக அ பாடின்று ' கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை " ஆற்றிய அற்புதங்கள் 1. திருப்புகலூரில் செங்கல் தங்கக் கல்லாகக் கண்டு வியந்தார். 2. 12000 பொன்னை மணி முத்தாற்றில் போட்டுக்
|
கமலாயத்தில் எடுத்தார். 3. இருகண் பார்வையிழந்து , காஞ்சி , ஆரூரில் ஒவ்வொரு கண் பெற்றார். 4. அவிநாசியில் முதலையுண்ட பாலனை எழுப்பினார். 5. சேரமான் பெருமாள் நாயனாரொடு வெள்ளை யானை மீதமர்ந்து கயிலை சென்றார். 178 மூவர் தேவாரம் அப்பர் , சுந்தார , சம்பந்தர் எனப்பட்டனர். பாண்டியநாட்டு திருவாதவூர் சம்புபாதசாரியார் - சிவஞானவதியார் மாணிக்கவாசகர் பிறந்தஊர் - திருவாதவூர் பெற்றோர் பெயர் - சம்புபாதசாரியார் , சிவஞானவதியார் பெர் வாதவூபூடிகள் பட்டம் தென்னவன் பிரம்மராயன் பாடியவை திருவாசகமும் , திருக்கோவையாரும் சிவபுராணம் தொடங்கி
|
அச்சோப்பதிகம் வளர 51 பிரிடை 652 விருத்தம் , 4 அகவல் , 656 பாடல் பாடினார். திருக்கோவை 25 பகுதியில் 400 கட்டளைக் கலித்துறை காலம் டாக்டர் ராஸ்ட் கி.பி. சமயக் குரவர் மூவர் , மூவர் முதலிகள் கருத்து. 3 நூ கி.பி. முதல் நூ சிவக்கொழுந்துப் பிள்ளை கி.பி. 5 ம மறைமலை. கா. சு. பிள்ளை , கி.பி 9 நூ பிற்பகுதி பலர் திருமுறை 8 ஆம் திருமுறை ஆற்றிய அற்புதங்கள் ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார். வெள்ளம் திரண்டு வந்தபோது தடுத்தார். திருக்கோவையார். 1. முதலில் தோன்றியது. கோவைப் பிரபந்தங்களில் ஆரணம் , ஏரணம் , எழுத்து காமநூல் என்றெல்லாம்
|
ஏத்தப்பெறுவது திருச்சிற்றம்பலக் கோவை ) எனப்படும். மாணிக்கவாசகர் பாடலில்லை என்ற கருத்தும் உண்டு திருவாசகம் இதன் பெருமையுணர்த்தும். வல்லும் திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் , கருங்கல மனமும் கரைந்து என 13. 14 நூ 9 ஆம் திருமுறை ( ஒன்பதின்மர் பாடியது ) பாடியவை திருவிசைப்பாவும் , திருப்பல்லாண்டும் 179 2.6 வைணவம் பன்னிரு ஆழ்வார்களைக் குறிக்கும் பாடல் பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்தன் பொருநால் வரும் குருகேசன் விட்டுசித்தன் துய்யருல சோன்றம் பாண நாதன் தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி வய்யமெலாம் மறை விளங்க வாள் வேல்
|
ஏந்து மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே ! பள்ளிரு ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் பொய்கையாழ்வார். - முதல் திருவந்தாதி -100 பாசுரங்கள் பூதத்தாழ்வார் - 2 ஆம் திருவந்தாதி - 100 பாசுரங்கள் பேயாழ்வார் - 3 ஆம் திருவந்தாதி 100 பாசுரங்கள் - 96 திருமழிசையாழ்வார் 4 ஆம் திருவந்தாதி திருச்சதக விருத்தம் 120 216 பாசுரங்கள். நம்மாழ்வார் - திருவிருத்தம் , திருவாசிரியம் பெரியதிருவந்தாதி , திருவாய்மொழி மதூர்கவியாழ்வார் - கண்ணிநுண் சிறுதாம்பு
|
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி ஆண்டாள் திருப்பாவை , நாச்சியார் திருமொழி பெரிய திருமொழி , திருக்குறுந்தாண்டகம் , திருநெடுந்தாண்டகம் , திருவெழுகூற்றிருக்கை , சிறிய திருமடல் கண்ணி பெரிய ய்மையே பொல்கையாழ்வார் காஞ்சிபுரம் , மாதம் ஐப்பசி , திருவோண நட்சத்திரம் திருவோணத்தில் திருவெட்டில் போற்றாமரையில் பிறந்தார் - கருத்து ( 1 ) பொற்றாமரைப் பொய்கையில் திருமங்கையாழ்வார் திருமடல் கண்ணி கச்சியம்பதியில் பொய்கையார் ( 2 ) தோன்றியதால் திருமால் / சங்கின் அம்சம் இவர் தம்பாடல்களை சொல்மாலை என்கின்றார். வையம்
|
தகளியா வார்கடலே நெய்யாக வெப்பக் கதிரோன் விளக்காகச் செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று வினை , நோய் , 183 பாவம் ஆகியவற்றிலிருந்து நீங்கி உய்வடைய இறைவனிடம் சரண்டைவது பொய்கையாழ்வார். இப்பாடல்கள் அத்தாதித் தொடையாய் அமைந்தவையாகும். பூதத்தாழ்வார் ஊர் - திருக்கூடல் மல்லை , ஐப்பசி மாதம் , சதய நட்சத்திரம் கதாயுதத்தின் அம்சம். திருமாலை இவர் மதம் என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதால் பூதம் என்று அழைக்கப்படுகிறார். திருமால் படைத்தலைவர் , சேனைமுதலியார் எனப்படுகிறார். திருமால் பத்து
|
அவதாரங்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். பாடிய தளங்கள் திருவேங்கடம் , தஞ்சை , திருவரங்கம் , திருக்கோவிலூர். இவர் பாடல்களை ஞானத்தமிழ் என்கிறார். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். பேயாழ்வார் மைலாப்பூர் ஐப்பசி மாதம் / சதய நட்சத்திரம் ( தொண்டை நாடு ) திருமால் வேண்டால் குக தவம் / வாளின் அம்சம். பக்திப் பெருக்கால் பேய்போல் ஆடியதால் இப்பெயர் பெற்றார். திருவேங்கடத்தில் ! காணும் இறைவனை / திருமால் சிவனாக / சமாச் ஞானம்.
|
தூயமலர்களை அர்சிப்பதின்மூலம் தீவினை அகலும் என்கிறார். பொறுப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்புடைய வெஃகாவே சேர்ந்தாளை மெய்ம்மலர் துய்க் கைதொழுதால் அஃவே தீவினைகள் ஆய்ந்து. மூவரும் நரசிம்மவர்மன் காலம் / கருத்து / கி.பி. 640-668 மூவரும் சந்தித்தது / திருக்கோவலூர் / இறைவனைக் கண்டது. திருமழிசை ஆழ்வார் எய்மையே வெல் சென்னை அடுத்த திருமழிசை / மகம்நட்சத்திரம் / தைமாதம். சக்கரத்தின் அம்சம் பெற்றோர் / கனகவல்லி , பாரதவ முனிவர் / வளர்த்தவர் திருவாளர். இவர் பாடல்களில் "
|
சங்கப்பாடல்களின் சாயல் சைவ , சமண பௌத்த மதங்களை வெளிப்படையாகவே கண்டிக்கிறார். திருமாலே முழுமுதல் தெய்வம் என்கிறார். நெறி / அன்பே இறைவனை அடையும் வழி. இவர் பாடல்கள் / உயர்வு நவிர்ச்சி இல்லை வாழ்க்கை நிகழ்ச்சிகளை பாடியுள்ளார். இவர் பாகரங்கள் முழுவதும் / திருமால் பரத்தத்துவம் கணிகண்ணன் / இவருடைய தோழர் / பக்தி பூண்டவன். திருவல்லிக்கேணியில் / நெடுங்கால யோகம் / பாடல்களினூடே தம இராசமாணிக்கனார் / காலம் / 8 ஆம் நூற்றாண்டு அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் 184 அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன்பாவை கேள்வர் ' ! கினார்
|
ஒளிஎன கேசவலே ! கேடின்றி ஆள்வாய்க்கு அடியேனே நான் ஆள். 2.7 சிற்றிலக்கிய வரலாறு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சோழராட்சிக் காலம் போன்று காப்பியங்களும் புராணங்களும் தோன்ற வில்லை. ஆயினும் பள்ளு , உலா , தூது , கலம்பகம் சிறு பிரபந்தங்களும் , கோயில்களைப் பற்றிய சிறு தல புராணங் களும் தோன்றின. பிரபந்தம் என்பது வடமொழிச் சொல் ; தமிழில் சிற்றிலக்கியங்கள் என்று செய்யுள் , யாப்பு எனும் சொற்களைப் போன்றே பிரபந்தம் என்ற சொல்லும் நன்கு கட்டப் பட்டது என்ற பொருளுடையதாகும். பிரபந்தங்கள் வழங்கப்படுகின்றது. நன்குய் ளுடை , 96 என்பது
|
வழக்கு. இதனை ஒட்டி வீரமாமுனிவர் தனது சதுரகராதியில் ' பிரபந்தம் அ 96 வகை ' என்று குறிப்பிடுவர். இப்பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிப் பிற்காலத்தில் தோன்றிய பன்னிரு பாட்டியல் , வச்சணந்தி மாலை என வழங்கும் வெண்பாப் பாட்டியல் , சிதம்பரப் பாட்டியல் , நவநீதப் பாட்டியல் , இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்கள் விரித்துரைக்கின்றன. ஆனால் இவற்றுள் கூறப்படாத சிற்றிலக்கியங்கள் சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. பாட்டியல் நூல்கள் ஆலும் ' விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே ' எனும் தொல்காப்பிய
|
சூத்திரம் குறிப்பிடும் விருந்து என்னும் வனப்பு அறிஞர்களின் கற்பனை மற்றும் படைப்புத்திறனுக்கு ஏற்றவாறு புதிய புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அவ்வகையில் தமிழிலுள்ள ஐம்பெரும் இலக்கணப் பிரிவுகளுள் ஒன்றாக விளங்கும் யாப்பு என்னும் இலக்கணவகையிலிருந்து கிளைத்தெழுந்த உட் பிரிவு பாட்டியல் என்னும் இலக்கணமாகும். பாட்டின் இயல்புகளை வரையறை செய்வதால் பாட்டியல் எனப் பெயர் பெற்றுள்ளது. இது தமிழில் வழங்கும் இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறுகின்றது. அதிலும் சிறப்பாகச் பல்வகை சிற்றிலக்கிய
|
வகைகளுக்கு இலக்கணம் வரையறுத்துள்ளது. வேறுபாடுகளோடு பல்கிப் பெருகிய பல்வேறு புதிய இலக்கியங்களின் வகை 185 வரையறை இலக்கணத்தை செய்யும் முயற்சியில் முகிழ்த்தவையே இப்பாட்டியல் நூல்கள் , பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது பன்னிரு பாட்டியல் , முழுமையாகக் கிடைக்கும் பாட்டியல் நூல்களுள் ஒன்றான இது 62 பிரபந்த வகைகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. 12 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குணவீர பண்டிதரால் இயற்றப்பட்ட வெண்பாப் பாட்டியல் எழுந்தது. இது 55 பிரபந்தங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. வகை 14 - ஆம் நூற்றாண்டில் 53
|
வகை பிரபந்தங்கள் பற்றிக் குறிப்பிடும் நவநீதப் பாட்டியல் நவநீதநாடன் என்பவரால் இயற்றப்பட்டது. 16 - ஆம் நூற் றாண்டில் பரஞ்சோதி முனிவரின் சிதம்பரப் பாட்டியலும் , பிரபந்த மரபியலும் தோன்றின. 17 ஆம் நூற்றாண்டில் வைத்தியநாத தேசிகரால் இலக்கண விளக்கம் இயற்றப் பட்டது. இது பாட்டியலை யாப்பின் ஒரு பகுதியாக ஏற்றுக் கூறியது. 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் , சதுரகராதி ஆகியவை தோன்றின. சதுரகராதியில் பாட்டியல் இலக்கணம் , அகராதி றையில் அமைந்துள்ளது. பிரபந்த மரபியல் , பிரபந்த தீபிகை , சதுரகராதி , தொன்னூல்
|
விளக்கம் ஆகியவை 90 வகை பிரபந்தங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. 19 ஆம் காலம் ' என்றும் இடைக்காலச் சோழர் காலத்தைக் ' காப்பிய காலம் ' என்றும் அவ்வக்கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களின் மேலோங்கிய தன்மையால் சிறப்பித்துக் கூறுவதுபோலீ கி.பி 1350 முதல் ஆட்சிபுரிந்த நாயக்கர் காலத்தைச் ' சிற்றிலக்கிய காலம் ' என்று கூறலாம். 1 பிரிவுகளாகப் சிற்றிலக்கியங்கள் அகம் பற்றியன , புறம் பற்றியன , பத்தி பற்றியன எனப் நோக்கத்தக்கன. இவற்றுள் தலைமை வாய்ந்தவையாய்க் காணப்படுவன அந்தாதி , பிள்ளைத்தமிழ் , பரணி , கலம்பகம் , கோவை , உலா ,
|
மாலை தூது பள்ளு , குறவஞ்சி என்பனவாம். இச்சிற்றி a லக்கியங்கள் அடங்கும். எல்லாம் தொல்காப்பியம் கூறும் விருந்து ' எனும் வனப்பினுள் தூது பகுத்து பல தொல்காப்பியர் காலத்திலும் இலக்கியப் பிரிவாக விளங்கிய ஒன்று தூது எனும் சிற்றிலக்கியம். ( தன் கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக ' தூது ' இத்தூது அகத்தூது , புறத்தூது என இருவகைப்படும். புறத்தூதிற்குச் சிறந்த சான்றாகத் திகழ்வது புறநானூற்றில் , அதியமான சார்பாகத் தொண்டைமானிடம் தூது சென்ற ஔவையாரின் தூதாகும். அகத்தூதாவது காமம் மிக்க
|
கழிபடர் கிளவியால் தலைவி தலைவனிடம் தூது 186 அனுப்புவதாகும். பேசும் ஆற்றலும் , கேட்கும் ஆற்றலும் அற்ற பொருட்களையும் தூதாக அனுப்புதல் வழக்கமாகும். இதனை இலக்கண அறிஞரும் ஏற்றுக் கொண்டனர். ' சொல்லா மரபின்அவற்றொடு கெழீஇச் செய்யா மரபில் தொழில் படுத் தடக்கியும் ' என்று தொல்காப்பியமும் , போலவும் கிளக்குந போலவும் இயக்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப் படுமே. என்று நன்னூலும் கேட்குந " பயில் தருங் கலிவெண்பாவினாலே உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் சந்தியில் விடுத்தல் முந்துறு தூது ' என்று இலக்கண
|
விளக்கமும் கூறும். அகத் தூது தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி , தனது காதல் துன்பத்தைத் தனது தலைவனுக்கு உரைத்து வா என்றோ , தூது உரைத்து மாலை வாங்கி வா என்றோ உயர்திணை அல்லது அஃறிணைப் பொருளைத் தூதாக அனுப்புவது தலைவி அகத்தூது இலக்கணமாகும். அது பெரும்பாலும் தலைவனிடம் தூது அனுப்புவதாகவே அமைந்திருக்கும். மிக அரிதாகத் தலைவன் தலைவியிடத்துத் தூது அனுப்புவதும் அமைந் திருக்கும். ' விறலிவிடு தூது ' என்ற தூது தலைவன் தன் மனைவியிடத்து அனுப்பும் தூதாகும். முன்பு ' அன்னம் , மயில் , கிளி , மேகம் , பூவை , தோழி , குயில் , நெஞ்சு ,
|
தென்றல் , வண்டு எனும் பத்துமே தூதுவிடும் தகுதியுடைய பொருள்களாகக் கருதப்பட்டன. காலப் போக்கில் பணம் , தமிழ் , புகையிலை , நாரை , நெல் , மான் , செருப்பு என்பனவும் தூதுப் பொருள்களாக இடம் இதுவரைத் தோழி பெறத் தொடங்கின. ஆனால்வாயே அெல்லது பாங்கி விடு தூது நூல் எதுவும் கிடைக்கவில்லை. இலக்கியத்தில் தூது பெறும் இடம் சிற்றிலக்கிய வகையாகச் சிறந்து காப்பியங்களிலும் ஒரு பகுதியாக இது இடம் பெற்றுள்ளது. நளவெண்பா அன்னத்தின் தூதினைச் சிறப்பாகக் கூறுகின்றது. இது அகத்தூது இராமாயணத்தில் அனுமன் தூதும் , அங்கதன் தூதும் இடம்
|
பெற்றுள்ளன. பாரதத்தில் கண்ணன் தூதும் , கந்த புராணத்தில் ' வீரவாகுத்தேவர் ' தூதும் புறத்தூதிற்குச் சிறந்த சான்று களாகும். கலம்பகம் , அந்தாதி ஆகிய சிற்றி லக்கியங்களிலும் பெற்றுள்ளது. ஓர் உறுப்பாகத் தூது இடம் பக்தி இலக்கியமும் தூதினைக் கையாண்டிருப்பதைத் திருஞான சம்பந்தர் , மணிவாசகர் ஆகியவர்களின் பாடல்களில் காணலாம். வளர்ந்துள்ள தூது புராண 187 வைணவப் பெரியாரான சடகோபரும் தனது திருவாய் மொழிப் பாசுரங்களில் தலைமகள் தூதுவிடும் துறையமைந்த பாசுரங்களில் பூவை , குயில் , அன்னம் , நாரை ஆகிய பொருட்களைத் தூது அனுப்புவது
|
சிறந்து விளங்கக் காணலாம். சிறந்து விளங்கும் சில தூது நூல்கள் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் பாடிய நெஞ்சுவிடு தூது ' பலபட்டடைச் சொக்கநாதப் புலவரின் ' அழகர் கிள்ளை விடு தூது ' சுப்ரதீபக்கவிராயரின் ' கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது ' கச்சியப்ப முனிவர் இயற்றிய ` வுண்டுவிடுதூது 19 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமிர்தம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட ' தமிழ்விடு தூது ' முதலியன. இவை தவிர ஆசிரியர் பெயர் தெரியாத நிலையில் ' தமிழ்விடு தூது ' ஒன்று வழக்கிலிருந்து வருகிறது. தமிழ்விடு தூது இதன்
|
ஆசிரியர் யார் என்பதும் , இவரது காலம் எது என்பதும் தெரியவில்லை. ஆனால் நூலின் கருத்தினைக் கொண்டுநோக்கும்பொழுது இதன் ஆசிரியரின் தமிழ்ப் பற்றும் , பக்தியும் புலனாவதோடு , சைவத்தையும் , தமிழையும் தனது இரு கண்களாகக் கொண்டிருந்த உண்மையும் புலனாகின்றது. தமிழ் வளர்த்த மதுரையில் குடிகொண்டிருக்கும் சொக்க நாதர் மீது காதல் கொண்ட தலைவி , தன் காதலைச் சொக்கருக்கு எடுத்துரைக்கத் தமிழைத் தவிர வேறெதனைத் தேர்ந்தெடுக்க முடியும் ? இவ்வாறு தமிழ் வளர்த்த மதுரைவாழ் தலைவனிடத்துத் தமிழைத் தூதாக அனுப்பு வதே ' தமிழ்விடுதூது '. தலைவி
|
தமிழின் பெருமையையும் சிறப்பையும் விளக்கிக் கூறும் ' இருந்தமிழே உன்னால்இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் " போன்ற ஆல்லும் என்பது தமிழறிஞர்களின் தமிழின் பாடல்களுக்கெல்லாம் அடிப்படையாய் எனலாம். அமைந்தது பெருமையைக் கூறுமுகமாகத் தமிழின் வர லாற்றையே இதில் வடித்துக் கொடுத்துள்ளார். அந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். அதாவது ஒரு பாடலடியின் ஈற்றடி சொல் , அசை , சீர் , எழுத்து ஆகியவற்றுள் ஒன்று அடுத்த பாடல் அல்லது அடியின் தொடக்கமாக வரப் பாடுவது. இது சொற்றொடர். நிலை என்றும்
|
கூறப்படும். ஒலியந்தாதி , பதிற்றந்தாதி , நூற்றந்தாதி , நிரோட்டயமக அந்ததாதி போன்ற பலவகை அந்தாதிகள் காணப்படுகின்றன. வெண்பா , கட்டளைக் கலித்துறை ஆகியவற்றால் இயற்றப்படுவது அந்தாதி என்பதை 188 ' வெண்பா கலித்துறை வேண்டிய பொருளில் பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே ' என வரும் பன்னிரு பாட்டியல் நூற்பாவினால் அறியலாம். இதில் இன்ன பொருள்தான் பாடவேண்டும் என்ற வரையறை இல்லை. பெரும்பாலும் விருத்தமே இதன் யாப்பு வடிவ மாகும். சங்க இலக்கியங்களாகிய ஐங்குறு நூற்றில் பதினெட்டாம் பத்தும் , பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தும் அந்தாதித்
|
தொகையில் அமைந்துள்ளன. அந்தாதியின் பழமையைப் புலப்படுத்தும் பக்தி இலக்கிய காலத்தில் அந்தாதிப் திருவாசகம் , பாடல்கள் பல தோன்றின. தேவாரம் , திவ்வியப் பிரபந்தங் களில் அந்தாதி அமைப்பைக் காணலாம். 63 நாயன்மார்களில் ஒருவரான தூரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியே முதல் அந்தாதி நூல் என்பர். கி.பி. 5 , 6 நூற்றாண்டுகளில் இவ்விலக்கிய வகை முகிழ்த்து மலர்ந்து ஆம் மணம் பரப்பியது. முதலாழ்வார்கள் மூவரும் பாடிய மூன்று நூற்றந்தாதிகளும் திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியும் வைணவ இலக்கியத்தில் சிறந்து விளங்கும்
|
அந்தாதிகளாகும். சேரமான் பெருமாள் நாயனாரின் பொன் வண்ணத்தந்தாதி , நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத் தொண்டர் பாடிய திருவந்தாதி , பிள்ளைப் ஐயங்கார் பெருமாள் திருவரங்கத்தந்தாதி , கம்பரின் சடகோபரந்தாதி , சரசுவதி அந்தாதி , வரதுங்கராம் பாண்டியன் பாடிய குட்டித் திருவாசகம் எனப் போற்றப்படும் திருக்குருவைப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மட்டுமே எட்டு அந்தாதிகள் இயற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்னும் பக்தர்களால் பெரிதும் பக்தியுடன் ஓதப்பட்டு வருவது
|
அபிராமிபட்டரின் – அபிராமியந்தாதி. கவிச் சக்கரவர்த்தி என்ற போற்றப்படும் கம்பரையே சிந்திக்க வைத்த ஏற்றப்பாட்டான நாடோடிப் பாடல் ' மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ' வ என்று கூறப்படுகிறது. இதனைத் தனியந்தாதிக்கு எடுத்துக் காட்டாகக் கூறுவர். பிள்ளைத் தமிழ் குழவி மருங்கினும் கிழவதாகும் ' என்னும் தொல்காப்பிய நூற்பா , பிள்ளைத் தமிழ் இலக்கியத் தோற்றத்திற்குச் சான்றாக விளங்குகின்றது. " ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப ' எனும் தொல்காப்பிய நூற்பா , தொல்காப்பியனார் காலத்திலேயே
|
பிள்ளைத்தமிழ் நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதை உணர்த்தும். இவ்வாறு தொல்காப்பியர் காலத்திலேயே சிற்றிலக்கிய விதை 189 விதைக்கப்பட்டு விட்ட போதிலும் , அதனைச் சிறப்பாகத் தழைத்து வளரச் செய்த பெருமை பக்தி இலக்கியங்களுக்கே பெருவழக்குப் பெற்றுச் உரியதாகும். பிற்காலத்தில் சிறந்த இச்சிற்றிலக்கிய வகையினைத் தோற்றுவித்தவர். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரே ஆவார். இவர் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் கண்ணனைக் பாடல்களைப் பாடியுள்ளார். இப்பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் கழி நெடிலாசிரியச் சந்த விருத்தங்களால்
|
ஆனவையாகும். பிள்ளைத் தமிழ் இலக்கணம் புலவர்கள் தாம் விரும்பும் தெய்வத்தையோ , அரசனையோ , வள்ளலையோ , சான்றோரையோ குழந்தையாகப் பாவித்துப் பாடப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். இதனைப் பிள்ளைக்கவி வெண்பாப்பாட்டியலும் , பிள்ளைப்பாட்டு என பன்னிருபாட்டியலும் கூறுகின்றன. இது குழந்தையின் மூன்றாம் துங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் வகுத்துக் என கொண்டு , பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவது. இதனைப் ' பிள்ளைப்பாட்டே தெள்ளிதின் கிளப்பின் மூன்று முதலாமூவேழ் அளவும் ஆன்ற திங்களின்
|
அறைகுவர் நிலையே ' என்று பன்னிரு பாட்டியல் கூறும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற்பிள்ளைத் தமிழ் , பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும். ' சாற்றரியகாப்புதால் செங்கீரை சப்பாணி மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே பம்பு சிறு தேரொடும் பத்து யே வெல்லும் என்னும் ( வெண்பாப்பாட்டியல் செய்யுளியல் -7 ) பாடலின் மூலம் ( காப்பு தால் , செங்கீரை , சப்பாணி , முத்தம் , வாராணை , அம்புலி , சிறுபறை , சிற்றில் , சிறுதேர் எனப்
|
பத்து பிரிவுகள் அடங்கிது என்பது புலனாகும். இப்பத்துப் பருவங்களும் அடங்கியது ஆண்பாற் பிள்ளைத் தமிழ் ஆகும். இப்பத்துப் பருவங்களுள் முதல் ஏழு பருவங்கள் பெண்பாற்பிள்ளைத் பொதுவாகும். கடைசி மூன்று பருவங்களான சிறுபறை , சிற்றில் ; சிறுதேர் என்பனவற்றிற்குப் பதிலாகக் கழங்கு , அம்மானை , ஊசல் என்னும் மூன்று பருவங்களைச் சேர்த்துக் கூறுவது மரபு. இதனைப் " பின்னைய மூன்றும் பேதையர்க் காகா 190 ஆடும் கழங்கம் மானை ஊசல் பாடுங் கவியால் வகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாற் கினையனவாம் ' என்னும் இலக்கண விளக்கப் பாட்டியல் மூலம்
|
அறியலாம் பிள்ளைத் தமிழ் அமைப்பு முதற்பருவமான காப்புப் பருவத்தில் பாட்டுடைத் தலைவனைக் காத்தருளுமாறு இறைவனை வேண்டுவர். பெரும்பாலும் திருமலைக் காப்புக் கடவுளாகக் கூறுவது மரபு இது குழந்தையின் 3 - ஆம் மாதத்திற்குரியது. தாலப்பருவம் தால் - நாக்கு , குழந்தையின் 5 - ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுவர். செங்கீரை செங்கீரை ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போல் ஆடுதல். 7 ஆம் மாதத்திற்குரியதான இஃது குழந்தையைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. ன இது
|
9 ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுவது. முத்தம் சப்பாணி இப்பருவம் 11 ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது. மையே வெல் வருகை அல்லது வாரானை குழந்தையின் 13 - ஆம் மாதத்தின் நிகழ்ச்சியைக் கூறும் இப்பருவத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது. அம்புலி மாதத்திற்குரிய இப்பருவத்தில் பாட்டுடைத் 15 - ஆம் நிலவைப் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பர். இப்பருவத்தைச் சாம , பேத , தான , தண்டம் எனும் நான்கு வழிகளால் பாடுவர். இப்பருவம்
|
பாடுதற்குக் கடினமான பருவம் என்பர். இதனால் புலவர்கட்கு அம்புலி புலியாம் எனும் வாக்கு அம்புலி புலியாம் எனும் எழுந்துள்ளது. 191 சிற்றில் 17 - ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண்குழந்தை சென்று சிதைப்பதாகக் கூறப்படும். சிறுபறை 19 - ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும். சிறுதேர் 21 - ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும். இம் மூன்று பருவங்களும் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்கே உரியன. நீராடல் -
|
குழந்தையை அம்மானை / கழங்கு யை நீரில் நீரில் குளிக்கும்படி வேண்டுதல். கழங்கினை மேலே வீசி ஆடும்படி வேண்டுதல். ஊசல் ஊஞ்சலில் ஆடும்படிக் குழந்தையை வேண்டுதல். பிள்ளைத்தமிழ் நூல்கள் கிபி. 12 - ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது பாடப்பட்டுள்ள குலோத்துங்கன் பிள்ளைத் தமிழே '. முதல் பிள்ளைத் தமிழ் நூலாகக் கிடைத்துள்ளது. இது சோழர்களின் வரலாற்றினைக் கூறும் சிறந்த இலக்கியமாகும். கி.பி 7 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் பாடிய மீனாட்சி யம்மை பிள்ளைத்தமிழ் , ஆகிய இரண்டும் பக்தி வரலாற்றில்
|
பெரும்புகழ் படைத்தவையாகும். முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் தமிழ் பிள்ளைக்மிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் பெரிய தமிழ் ' என்று பாராட்டப்படும் பெருமையுடையது. ' கத்தும் தரங்கம் எடுத்தெறிய ' எனும் பாடலில் செந்தில் குமரனின் முத்தந் தனக்கு விலையில்லை ' என்று போற்றிப் பாடும் திறம் கற்போர் நெஞ்சை நெகிழ் வைப்பதாகும். சொற்சுவை , பொருட்சுவை , கற்பனை , அலங்காரம் முதலிய சுவைகள் ஒருசேர அமையப் பெற்ற அரிய நூல் இது. கி.பி. 18 - ஆம் நூற்றாண்டில் தமிழாயினும் 19 - ஆம் நூற்றாண்டில் அழகிய சொக்கநாதர் பாடிய
|
காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் , மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் , முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் ஆகியவை சிறப்பானவை. செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் , திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் , திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் , சுந்தரமூர்த்தி பிள்ளைத்தமிழ் , மாணிக்கவாசகர் 192 பிள்ளைத்தமிழ் தோன்றியுள்ளன. போன்ற வண்ணம் உள்ளன. பிள்ளைத்தமிழ் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தற்காலத்தில் பாரதிதாசன் பிள்ளைத் தமிழ் , மறைமலை யடிகள் பிள்ளைத்தமிழ் , காமராசர் பிள்ளைத்தமிழ் என பிள்ளைத்தமிழ்
|
நூல்கள் தோன்றிய நூல்களும் மீது ஐந்தாண்டுக்காலம் இளமையாயிருந்து பின் திருச்செந்தூர் முருகன் திருவருனால் பேசும் திறன் பெற்ற தெய்வக் கவியான குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடியருளினார். " இதனைத் திருமலைநாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அவ்வமயம் மீனாட்சி அம்மையே அர்ச்சகர் மகள் வடிவில் சிறு குழந்தையாக வந்து மன்னன் மடியில் வீற்றிருந்து இந்நூலைக் கேட்டு தன் கழுத்திலிருந்த முத்து மாலையை எடுத்துப் புலவருக்குப் பரிசாக அளித்ததாகக் கூறுவர். அம்மையின் இச் செயலுக்குக் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
|
காரணமாக விளங்கியது வாரானைப் பருவத்தில் காணப்படுகின்ற தொடுக்கும் கடவுட் பழப்பாடல் எனத் தொடங்கும் பாடலே என்பர். பிற்காலத்தில் ம்குமரகு இந்நூலும் குமரகுருபரர் பாடியருளியதே ஆகும். நம். தன் ஆசிரியரான மாசிலாமணி தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குருபரர் , வழியில் வைத்தீஸ்வரன் கோயிலில் எழுந்தருளியுள்ள முத்துக் குமரனைக் கண்டு மனம் பறிகொடுத்து அவர் மீது " முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ’ பாடினார். இதில் முத்துக்குமரன் தந்தை சிவபெருமானுடன் ஆசிரியர் விளையாடும் போது செய்யும் குறும்புகளாக கூறுவது
|
களிப்பூட்டுவதாக உள்ளது. மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்துகில் மடித்தலம் நனைப்ப அம்மை மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான் மார்பினில் குரவையாடி முழவுமுதிர் துடியினில் சிறுபறை முழக்கியனல் மோலிநீர்பெய்தவித்து முளைமதியை நெளியரவின் வாய் மடுத்து இளமானின் முதுபசிக்கு அறுகருத்தி விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு துகந்தெழ மிகப் புழுதியாட்டயர்ந்து விரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு 193 வெள்ளநீர்த் துளையம் ஆடிக் குழவு முதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு குறும்பு செய்தவன் வருகவே குரவுகமழ் தருகந்த புரியில் அருள்
|
குடிகொண்ட குமரகுருபரன் வருகவே சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மகாமகோபாத்தியாய டாக்டர் உவே.சாமிநாத ஐயர் போன்ற சிறந்த தமிழ்ச் சான்றோர்களை உருவாக்கிய நல்லாசிரியரான மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அம்பிகையின்மேல் பிள்ளைத்தமிழ் நூல்களும் , முருகன்மேல் ஏழு ஒரு பிள்ளைத்தமிழும் , பாடியுள்ளதோடு இறையடியாரது வரலாற்றினை உரைத்த தொண்டர் தம் தொண்டரான சேக்கிழார் பெருமான் மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடி பிள்ளைத் தமிழ் வரலாற்றில் ஒன்பது பிள்ளைத் தமிழ் நூல்கள் பாடிய சிறப்பிடத்தைப் பெற்றார். பெருங்காப்பியம் கண்ட
|
சேக்கிழார் பெருமானின் புலமைச் சிறப்பிலும் பக்திச் செழிப்பிலும் மனம் பறி கொடுத்த பிள்ளையவர்கள் பெருஞ்சுவை பயக்கும் சேக்கிழார் பிள்ளைத் தமிழை இயற்றியுள்ளார். இதில் சேக்கிழார் பெரியபுராணம் பாடிய நோக்கம் , அப் புராணத்தைக் கேட்டு அவருக்குச் செய்த மகிழ்ந்த அநபாய சோழன் மரியாதை , சேக்கிழார் பிறந்த குன்றத்தூரின் வளம் ஆகிய அனைத்தும் அழகுற விளக்கப் பட்டுள்ளன. பிறப்பு இறப்பற்றவராதலின் சிவபெருமானுக்குப் பிள்ளைத்தமிழ் பாடப்படுவதில்லை. கலம்பகம் பல்வகை வண்ணமும் , மணமும் கொண்ட ர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை
|
உறுப்புக்களைக் அகம் , புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ' கலம்பகம் ' எனப் பெயர் பெற்றது என்பர். இது தெய்வங்களையோ , மக்களுள் சிறந்து விளங்குபவரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பல்வகை உறுப்புக்களைப் பெற்று வருவதாகும். திபொருள் / ல்மரம் இதனைக் கலம் + பகம் எனப்பிரித்து கலம் என்றால் 12 என்றும் , பகம் என்றால் அதில் பாதி அதாவது 6 என்றும் கொண்டு கலம் ( 12 ) + பகம் 6 கலம்பகம் = 18 எனக்கொண்டு , 18 உறுப்புக்களையுடையது கலம்பகம் என்பது ஒரு சாரார் கூற்று. கலம்பகத்தின் இலக்கணத்தைப் பன்னிரு
|
பாட்டியல் தெளிவாகக் கூறும் இதன் உறுப்புக்கள் புய வகுப்பு , தவம் , வண்டு , அம்மானை , வாண் , மதீங்கு , கைக்கிளை , சித்து , ஊசல் , களி , மடக்கு , ஊர் , மறம் , காலம் , தழை. 194 இரங்கல் , சம்பிரதம் , கார் , தூது , குறம் , பிச்சியார் , கொற்றியார் முதலியன். இவற்றுள் புற வகுப்பு , களி , மறம் ஆகியவை புறப் பொருள் உறுப்புக்கள் எனவும் ஏனையவை அகப் பொருள் உறுப்புக்கள் எனவும் கூறப்படும். ஆனால் இவ்வுறுப்புக்கள் நூல்தோறும் மிக்கும் குறைந்தும் வருகின்றன , அந்தாதித் தொடையால் 100 பாடலகள் வரை பாடப்படும் இந்நூலில் ஆசிரியப்பா ,
|
கலிப்பா , வஞ்சிப்பா , மருட்பாக்களும் , தாழிசை , துறை , விருத்தங்களும் , மடக்கும் ஆகிய பல்வகை யாப்புகள் விரவி வரும். எண்ணிக்கை : கலம்பகத்தின் செய்யுள் கடவுளர்க்கு 100 , முனிவர்க்கு 95 , அரசர்க்கு தொகை 90 , அமைச்சர்க்கு 70 , வணிகர்க்கு 50 , வேளாளர்க்கு 30 எனும் அளவில் அமைய வேண்டும் என்பது விதி. இந்த அளவினை மீறி திருக்கலம்பகம் செய்யுட்களைக் கொண்டு விளங்குகின்றது. ஆளுடைப் பிள்ளைக் கலம்பகம் - 49 செய்யுட் களையே பெற்று விளங்குகிறது. 110 கலம்பகங்கள் அகம் , புறம் ஆகிய அவற்றுள் அமையப்பெற்றபோதிலும்
|
பெரும்பான்மையினதாகவும் , புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுதல் இயல்பு. துறைகள் அகத்திணைச் கலம்பக நூல்கள் 5 இலக்கியத்தின் கலம்பகம் எனும் ஆம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்பர். கலம்பக இலக்கியங்களிலேயே காலத்தால் 13 தோற்றமே கி.பி. முற்பட்டது நந்திக் கலம்பகமாகும். இதனைத் தொடர்ந்து பல கலம்பக நூல்கள் தோன்றியுள்ளன. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்பது சம்பந்தர் மீது நம்பியாண்டார் நம்பிகள் பாடியதாகும். இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் ஆ ! ப கலந்து வர செய்திகள் 9 கண்பாய் கலம்பகத்திற்கு இரட்டையர்
|
என்று சிறப்பிக்கப்படுகின்ற இரட்டையர் மதுரை பாடியவை திருவாமாத்தூர்க் கலம்பகமும் தில்லைக் கலம்பகமும். சோமசுந்தரக் கடவுள் மீது குமரகுருபரர் பாடியது மதுரைக் வீரமாமுனிவர் பாடியது - கலம்பகம் , திருக்காவலூர்க் கலம்பகம் , மேலும் திருவெங்கைக் கலம்பகம் , கச்சிக் கலம்பகம் அழகர் கலம்பகம் , திருக் கலம்பகம் என்று பல்வேறு கலம்பக நூல்களும் தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வர்மனைப் பாராட்டிப் போற்றுவதே கலம்பகமாகும். இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் நந்திக் முற்பட்டு விளங்குவதாகும். இந்
|
நந்திவர்மனின் காலம் கி.பி 825 எனப்படுவதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டே ஆகும். 850 195 என்று யோசித்ததில் , அறம் வைத்துப் பாட முடிவு செய்தனர். அறம் பை இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. சிறந்த சொற்சுவை , பொருட்சுவையோடு கற்பனைவளமும் செறிந்த இனிய நூல். நந்தி வர்மனின் மாற்றாந்தாய் மக்கள் இவனைக் கொல்வதற்காக முயன்றபோது என்ன செய்வது வைத்துப் பாடப் பெற்ற நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திவர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறி கொடுத்து நூல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும்
|
கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தணியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது , எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் துறந்தான் என்று கூறப்படுகிறது. ந்தி , கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும் ' , என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா வரிகளும் , ' கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு , காயம் விட்ட தெள்ளாறை நந்தி " என்னும் தொண்டைமண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை வலியுறுத்துவனவாக உள்ளன. இதற்கேற்ப நூலிலும் பல வகைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் 144 பாடல்கள் காணப்படுகின்றன.
|
ஆனால் அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் 100 பாடல்களுடையதாக இருத்தல் வேண்டும். என்பது நியதி , எனவே இதில் உள்ள அதிகப்படியான 44 பாடல்களும் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கருதப்படுகிறது. ‘ ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர் தம் வீட்டிருந்து பாடவிடிவளவும் கேட்டிருந்தோம் பேயென்றாள் அன்னை பிறர் நரி யென்றார் தோழி நாயென்றாள் நீ என்றேன் நான் " இது பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவன் , பாணன் ஒருவனைத் தூதுவனாகத் தலைவியிடம் அனுப்பிய போது பாணனின் தூதுரை கேட்டுச் சினம் கொண்ட தலைவி. அவனை
|
இழித்துரைப்பதாக அமைந்துள்ளது. வி அவனை பிரிவினைத் தாளாது தமிழுக்காகத் தன்னுயிரீந்த நந்தியின் கையறுநிலையாகப் பாடப்பட்டுள்ள பாடல் புலவரின் புலமைக்குச் சான்றாகத் திகழ்வதோடு நந்தியின் சிறப்பையும் செப்புவதைக் காணலாம். ' வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல்புகுந்ததுன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம் ம் 196 நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயா பரனே ! " திருவரங்கக் கலம்பகம் வைணவ சமயத்தைச் சார்ந்த நூல்களில்
|
இது சிறந்து விளங்குவதாகும். இதன் ஆசிரியர் , பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இந்நூலின் காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் கலம்பகம் , அந்தாதி , ஊசல் , மாலை போன்ற எட்டு நூல்களை எழுதியுள்ளார். இவ்வெட்டினையும் தொகுத்து அஷ்டப் பிரபந்தம் என்று இயம்புகின்றனர். அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் என்னும் வழக்கு இதன் பெருமையை விளக்கும். அஷ்டப் பிரபந்த நூல்களுள் ஒன்றே இத்திருவரங்கக் கலம்பகமாகும். இக்கலம்பகத்தின் பாடல்கள் திருமாலிடம் ஆசிரியர் கொண்டிருந்த மாறாக் ா விளக்குவனவாகும். குறவஞ்சி இலக்கியம் ந
|
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலவாழ் குறிஞ்சிநிலப் மக்கள் பெண்கள் குறத்தியின் செயல் குறவர் எனப்பட்டனர். குறத்தியர் எனப்பட்டனர். தலைமை பெற்றுத் திகழ்வதால் இந்நூல் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது. குறம் வஞ்சி குறவஞ்சி ஆயிற்று. குறக்குலத்துப் பெண் என்பது இதன் பொருள். மன குறவஞ்சி இலக்கணம் ' இறப்பு நிகழ் வெதிர் வென்னுமுக் காலமும் திறம்பட வுரைப்பது குறத்திப்பாட்டே ' காதலை என்பது குறவஞ்சிக்குப் பன்னிரு பாட்டியல் கூறும் இலக்கணம். இக்குறவஞ்சி இலக்கியம் குறத்திட்டபாட்டு ஆசிரியப்பா , பின்னாளில் என்றும்
|
வழங்குவதாயிற்று. இது தரவு , கொச்சகம் முதலியவற்றுடன் சிந்து , கண்ணி ஆகிய பாவினங்களும் கலந்துவருமாறு பாடப்பெறும். திருமறு சகம். நூல் அமைப்பு அரசனையோ , தெய்வத்தையோ தலைவ னாகக் கொண்டு இது பாடப்படும். தலைவன் உலா வரல் , தலைவி பந்தடித்து விளையாடுதல் , உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொள்ளுதல் , காதல் மேலீட்டால் வருந்தும் தலைவி திங்கள் , தென்றல் முதலியவற்றைப் பழித்தல் , குறத்தி வருதல் , குறத்தி தனது மலைவளம் கூறல் , தலைவியின் கையைப் பார்த்து நீ விரும்பிய அடைவாய் என்று குறிகூறுதல் , குறி கேட்டு மகிழ்ந்த தலைவி ,
|
குறத்திக்குப் பரிசளித்தல் , குறவன் குறத்தியைத் தேடி வருதல் , அணிகலன்களைக் கண்டு கணவனை 197 ஐயுறல் , குறத்தி ஐயம் குறத்தியின் உள்ளடக்கியதாகக் குறவஞ்சி நூல் அமையும். சேரி மொழியும் , செந்தமிழ் வழக்கும் கலந்து வர , நாடகப் பாங்குடன் அமைந்துள்ள இசை , நாடகத் தமிழ்க் காப்பிய மான இதற்குக் காப்பியத் தலைவன் / தலைவி பெயரை ஒட்டியும் தலைவனது ஊரை ஒட்டியும் , பெயரிடுவது மரபு. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி தலைவனின் பெயராலும் , திருக்குற்றாலக் குறவஞ்சி , திருவாரூர்க் குறவஞ்சி , பெத்லகேம் குறவஞ்சி முதலியன தலைவனின் ஊர்ப் பெயராலும்
|
பெயர் பெற்றன. இவை தவிர கும்பேசர் குறவஞ்சி , அர்த்த நாரீசுவரக் குறவஞ்சி , மீனாட்சியம்மை குறம் போன்ற பல குறவஞ்சி நூல்கள் தோன்றியுள்ளன. குறவஞ்சி நூலின் தோற்றம் பற்றிக் குமரகுருபரரின் மீனாட்சியம்மை குறத்திலே காணலாம். திருக்குற்றாலக் குறவஞ்சி தெளிவித்தல் , ஆகிய பகுதிகளை சேர்ந்த குற்றாலத்திற்கருகிலுள்ள மேலகரம் என்னும் கிராமத்தைச் திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரது காலம் - மதுரையை ஆண்ட முத்து விசயரங்க சொக்கலி சொக்கலிங்க நாயக்கரின் காலமான 18 - ஆம் நூற்றாண்டாகும். குற்றாலக் குறவஞ்சி அரங்கேற்றம்
|
செய்யப்பட்ட போது குறவஞ்சிமேடு " எனும் நிலப்பகுதியை இனாமாக அளித்ததுடன் , மிகுதியான பொருளும் பரிசளித்துப் பாராட்டினார். இதன் ஆசிரியர் இதனைக் குறவஞ்சித் தமிழ் , குறவஞ்சி நாடகம் எனும் பெயர்களால் வழங்குவர். இதுவே குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்த நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலாசிரியர் குற்றாலத் தலபுராணம் , குற்றால மாலை போன்ற வேறு நூல்களும் இயற்றியுள்ளார். இந்நூலில் எளிய இனிய சொற்களையும் , கற்பனை வளத்தையும் , கவிதைச் சுவையையும் துகை மோனை எழிலையும் , சுவைத்து மகிழலாம். இதன் கதைத் தலைவனாக திருக்குற்றாலத்தில்
|
எழுந்தருளியிருக்கும் குற்றாலநாதர் விளங்க ' வசந்தவல்லி ' எனும் வஞ்சிக் கொடியாள் தலைவியாக வருகிறாள். இதில் குற்றால நாதரின் சிறப்பு , குற்றாலமலையின் வளமும் , எழிலும் , வசந்தவல்லி , பந்தடித்தல் , குறத்தி மலை வளங்கூறல் குறத்தி குறிகூறல் , குறவன் குறத்தி உரையாடல் ஆகிய பகுதிகளும் இன்பம் தருவனவாக அமைந்துள்ளன. இதன் ஆசிரியர் எண்களை வைத்துச் சொற்சிலம்பம் செய்திருப்பதைக் காணலாம். முருகனைப் பற்றிப் பாடும் பொழுது பன்னிரண்டில் தொடங்கி , ஒன்று முடிய எண்கள் இடம் பெறுமாறு பாடிஇருப்பதும் , ' அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் -
|
எனது மனதில் 198 அஞ்சு தலைக்கோர் ஆறுதலை வையார் ' என்று வரும் பகுதியும் எண்களை வைத்து சொல்லின்பம் படைத்துள்ள பகுதிகளாகும். வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் ' என்பது பள்ளிப் பருவப் பிள்ளைகள் முதல் பாடிக்களிக்கும் திருக்குற்றால மலையின் வளமுரைக்கும் பாடலாகும். 2.8 இசுலாமிய இலக்கிய வரலாறு சங்ககால முதலே அராபியரின் தொடர்பு தமிழகத்தில் நிலவி வந்துள்ளது. அரபு அரபு நாடுகளும் , தமிழகமும் வாணிபத்தால் இணைந்திருந்தன. அரபு நாட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் தோன்றி இசுலாம் மதத்தைத் தோற்றுவித்தார். அரபு
|
நாட்டவர் தமிழகம் வந்து இசுலாத்தைப் பரப்பினர். இசுலாம் தமிழக மக்களையும் ஈர்த்தது. மதம் மாறினாலும் மொழி மாறாது தமிழுக்குத் தொண்டு செய்து வந்தனர். அராபியரின் செல்வாக்கினால் தமிழர்களின் சொல்வாக்கிலும் பல அராபிய , உருதுச் சொற்கள் கலந்து இணைந்து விட்டன. சபாஷ் , சலாம் போன்ற சொற்களை அருணகிரிநாதர் , குமரகுருபரர் போன்றோரின் பாடல்களில் காணலாம். இவை தவிர , வக்கீல் , தாலுகா , ஜில்லா , முன்சீப் போன்ற 400 க்கும் மேற்பட்ட பிற மொழிச் சொற்கள் தமிழில் கலந்து தமிழாகவே மாறிப் போய்விட்டன. கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு முதலே
|
முகமதியர் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தனர். வீரபாண்டிய வேந்தனின் படைத் தளபதியாகத் திகழ்ந்தவர் முகமதியரே. கி.பி 13 ஆம் நற்றாண்டில் பாண்டியர் வலிமை இழந்தபோது முகமதியர் தமிழகத் தில் பாண்டியரின் தலைநகரான மதுரையைக் கைப்பற்றினர். இவ்வரசியல் மாற்றம் முகமதியப் புலவர்களுக்குச் சாதகமாக இருந்தது. இசுலாமியப் புலவர்கள் பலர் தோன்றினர். இசுலாமிய நூல்களையும் தமிழாக்கினர். பதினேழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய இலக்கியம் தழைத்து ஓங்கி வளர்த்துள்ளது. மிழகவரசி புராணங்களும் , முகமதியர்களும் பிற சமயத்தவரைப்
|
போலவே படைத்துள்ளதோடு தாயுமானவர் போன்று தத்துவ நூல்களும் ( பாமர இலக்கி யங்களும் , புதிய இலக்கியங்களும் ) படைத் துள்ளனர். இவ்வாறு நூல் படைத்த புலவர்களைப் போற்றிப் பாதுகாத்த புரவலர் சீதக்காதி வள்ளலாவார். சிற்றிலக்கியங்களும் , 199 உமறுப்புலவர் வேண்டுகோளுக் கி.பி. 17 - ஆம் நூற்றாண்டில் பிறந்த உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் நெஞ்சையள்ளும் சீறா ' என்று போற்றப்படுகின்றது. இவர் எட்டயபுரம் அரசவைக் கவிஞ ரான கடிகை முத்துப்புலவரிடம் பாடம் கேட்டவர். தனது 16 ஆம் வயதிலேயே வாலைவாரிதி எனும் செருக்குமிக்க வட நாட்டுப்
|
புலவனுடன் , வாதிட்டு வென்று , தன் ஆசிரியருக்குப் பின் எட்டயபுர சமஸ்தானப் புலவரானார். இரகுநாத சேதுபதியிடம் அமைச்சராய் விளங்கிய. வள்ளல் தீதக்காதியால் ஆதரிக்கப்பட்டார். சீதக்காதியின் கிணங்கவே ' வாழ்க்கை வரலூறு ' எனும் பொருள்படும் சீறாப்புராணத்தைப் பாடியருளினார் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு உரைக்கும் இந்நூல் இதுறத்து காண்டம் , விலாதத்து காண்டம் , நுபுவத்து எனும் மூன்று காண்டங்களையும் 5026 செய்யுட்களையும் கொண்டது நாட்டுப்படலம் , நகரப்படலம் எனும் சிறந்த படலங்களை அமைத்துக் கற்பனைத் திறனும் வருணனை அழகும் பொருந்த
|
கம்பர் , திருத்தக்க தேவரின் கருத்துக்கள் , சொற்களைக் கையாண்டு கற்போர்க்கு இதயம் களிக்கும் வண்ணம் இதனைப் படைத்துள்ளார். இது சீதக்காதி வள்ளலின் மறைவிற்குப் பின் அவரது நண்பர் அப்துல் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்து. வண்ணக்களஞ்சியப் புலவர் நாகூரைச் சேர்ந்த ஹமீது இப்ரகீம் எனும் இயற்பெயர் கொண்ட வண்ணக்களஞ்சியப் புலவரால் முகைதீன் புராணம் இயற்றப்பட்டது. சந்தப்பாக்களும் வண்ணப் பாக்களும் பாடுவதில் வல்லமை பெற்றுத் திகழ்ந்ததால் வண்ணக் களஞ்சியப் புலவர் என வழங்கப்பட்டார். நாகூர் தர்க்காவில் வாழ்ந்த சாது ஒருவரின்
|
அருமை பெருமைகளை விளக்கி , முகையதீன் புராணம் என்னும் இந்நூலை எழுதி , நாகூரில் அரங்கேற்றினார். இந்நூலின் இனிமையில் மகிழ்ந்த LOG DO அன்பர் இவர் விரும்பிய தன் மகளை இவரைத் தேடிப் பிடித்து மணமுடித்து வைத்தார். சுலைமான் ரபியின் கதையைக் கூறும் ' இராசநாயகம் ' என்னும் 2240 பாக்கள் கொண்ட காவியச் சுவை ததும்பும் நூலையும் ' தீன் விளக்கம் ' என்னும் புராணமும் இயற்றியுள்ளார். 200 2.9 கிறித்தவ இலக்கிய வரலாறு கிறிஸ்துவமும் தமிழும் கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டு அயல் நாட்டுக் கிறிஸ்தவர்கள் தத்துவ போதகர் வீரமா முனிவர் போப்பையர் (
|
G.U. Pope ) கால்டுவெல் சீகன்பால்கு ஐயர் எல்லிஸ் துரை கிரேனியஸ் தமிழ்க்கிறிஸ்தவர்கள் முத்துசாமிப் பிள்ளை தஞ்சை அபிரகாம் பண்டிதர் வேதநாயகம் பிள்ளை வேதநாயக சாஸ்திரி H.A. கிருட்டினப்பிள்ளை - சாமுவேல் பிள்ளை. தமிழகம் சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே யவனர் எனும் ஐரோப்பிய நாட்டவருடன் வாணிக உறவு இலக்கியங்கள் கொண்டு " விளங்கியதைச் வலியுறுத்து தொடர்ந்து இசுலாமியர் சங்க கின்றன. யவனரைத் அரபு நாடுகளிலிருந்து வாணிபம் செய்து பெரும் செல்வம் குவித்தனர். இதுகண்டு போர்ச்சுக்கல் , டச்சு , ஆங்கிலேயர் , டேனிஷ் ,
|
ஃபிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாட்டவரும் தமிழகத்தோடு தொடர்புகொள்ள விழைந்தனர். இவர்கள் வெறும் வணிகத் தொடர்போடு நில்லாமல் தம் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். சமயப் பிரசாரத் திற்காகக் கிறிஸ்துவ மதப் பாதிரிமார்களையும் உடன் அழைத்து வந்தனர். பாதிரிமார்கள் கிறிஸ்தவத்தைப் பரப்பும் தொண்டினைச் செய்தனர். காலத்தில் களப்பிரர் வருகையால் சிறப்புக் குன்றிப்போக , சங்ககாலத்தில் சிறந்திருந்த சமயங்கள் , சங்கம் சைவ , வைணவ மருவிய சமண பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. மீண்டும் பக்தி இயக்கத்தினால் பல்லவர்கால பாக ,. முதல் நாயக்கர்
|
காலம் வரை சைவ , வைணவ மிகுந்திருந்தது. இசுலாமியர் சமயங்களின் செல் வாக்கு ஆட்சியால் இசுலாம் சமயமும் பரவியது. அடுத்து ஐரோப்பியர் வருகையால் கிறிஸ்தவம் பரவி வேரூன்றியது. வாணிகத்திற்காக வந்தவர்கள் நாட்டை ஆளவும் தலைப்பட் ஆளத அடிமைப்படுத்தி சாதுரியமாக இந்தியாவையே ஆளத் தலைப்பட்டனர். தமக்கு ன்றியத் அதிலும் ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவில் தம் சமயத்தைப் பரப்ப முயன்றனர். சிறப்பாகத் தமிழகத்தில் தம் பணியைச் செய்தனர். இப்பணியில் மொழியின் முக்கியத் துவத்தை உணர்ந்து முதலில் தமிழைப் பயின்றனர். பயிலப்பயில பைந்தமிழின்
|
இனிமையில் தம்மை மறந்து மனதைப் பறிகொடுத்து தமிழ்த் தொண்டு செய்யத் தலைப் பட்டனர். ஐரோப்பியர் வருகையால் தமிழ் பெற்ற நலன்கள் பல இவ்வைரோப்பியர் தம்மை மறந்த நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்கிறோம் என்பதை அறியாமல் தமிழுக்குத் தொண்டு செய்தனர். ஆனால் ஐரோப்பியப் பாதிரிமார்களால் மதமாற்றம் செய்யப் பெற்ற தமிழ்க் கிறிஸ்தவர்கள் அறிந்தே தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று உணர்ந்தே தொண்டு 201 செய்தனர். இவ் வாறாகக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தமிழ்த்தொண்டு செய்து அழியாப் புகழ் பெற்றனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் -
|
ராபர்ட் - டி " நொபிலி ( Robert - de - Nobili ) வீரமாமுனிவர் ; சீகன் பால்குஐயர் , எல்லீஸ்துரை , கால்டுவெல் போன்ற அயல் H.A கிருட்டினப்பிள்ளை , வேதநாயகம் பிள்ளை , வேதநாயக சாஸ்திரி , சாமுவேல் பிள்ளை ) போன்ற உள்நாட்டுக் கிறிஸ்தவர்களும் ஆவர் , தத்துவ போதகர் ( 1577-1656 ) ( Robert - de - Nobili ) : இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் 1606 - ல் தமிழகம் வந்தார். இயேசுசபைக் குருவான இவரது இயற்பெயர் இராபர்ட் - டி - நொபிலி ( Robert - de - Nobili ) ஆகும். உயர்குல இந்துக்களைக் கிறிஸ்தவராக்கும் நோக்கத்தோடு வந்ததால் தனது நடை உடை
|
பாவனைகளிலும் மாற்றம் ) தேவை என்பதை உணர்ந்து , அந்தணர்களைப் போன்று தானும் உடையுடுத்துப் பூணூல் அணிந்து வாழத் தொடங்கினார். மதுரையில் சபை நிறுவி 45 ஆண்டுகள் சமயப்பணி புரிந்தார். தத்துவ போதகர் தம் மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டுத் துறவி போல் வாழ்ந்து வந்தார். மதச் சார்புடைய வடமொழி கலந்த பல தமிழ் உரைநடை நூல்கள் இயற்றியுள்ளர். மதுரையில் வாழ்ந்த இவர் 1656- ல் மைலாப்பூரில் காலமானார். தமிழ் உரை நடையைச் செப்பம் செய்த சிறப்புக்குரியவர். இயற்றிய நூல்கள் சேசுநாதர் சரித்திரம் , மந்திரமாலை , தத்துவக் கண்ணாடி , புனர்ஜென்ம
|
ஆட்சேபம் , ஞானதீபிகை , நீதிச் சொல் , ஞானோபதேச காண்டம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட உரைநடை நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் இவற்றுள் பல அச்சேறாத காரணத்தால் அழிந்துபட்டன. தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதி ஒன்றும் தொகுத்துள்ளார். இவர் ஒரு முறை துறைமங்கலம் சமயவாதம் செய்ததாகவும் தெரிகிறது.ய யே வீரமாமுனிவர் ( 1680-1746 ) வெ 16 வப்பிரகாச சுவாமிகளுடன் இவரும் இத்தாலி நாட்டவரே. இவரது இயற்பெயர் கான்ஸ்டண்டின் ஜோசப் பெஸ்கி ( Constantine Joseph Beschi ). இவர் கி.பி. 1700 ல் தமிழகம் வந்து மதுரையில் தங்கி அங்கு சுப்ரதீபக் கவிராயரிடம்
|
20 ஆண்டுகள் தமிழ் பயின்றார். தமிழோடு தெலுங்கு , வடமொழி ஆகிய மொழிகளையும் பயின்றார். தனது முப்பதாவது வயதில் தமிழ்நாடு வந்து ஏறக்குறைய 37 ஆண்டுக் காலம் தமிழகத்தில் தங்கி , மதப் பணி புரிந்து ஏசுசபைக் குரு ஆவார். இத்தாலி நாட்டவரான இவர் தனது தாய் மொழியான இத்தாலி மொழியோடு ஏனைய கிரேக்கம் , ஃப்ரென்ச் , பாரசீகம் , இலத்தீன் , எபிரேயம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். சந்தா 202 சாகிப் அவர்களால் பெரிதும் பெருமைப்படுத்தப்பட்டவரான இச் சான்றோர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் அநேகமாகும். எழுத்துச் சீர்திருத்தம்
|
' எ ' கர ' ஓ ' கரக் குற்றெழுத்துக்கள் மேலே புள்ளி யிட்டும் நெட்டெழுத்துக்கள் புள்ளி இடாமலும் எழுதப் பட்டு வந்தன. இதனால் வந்த தடுமாற்றத்தை மாற்ற இவரே ' எ'கர , ' ஒ ' கரங்களுக்குக் கீழே கோடிட்டும் , சுழித்தும் ' ஏ ' ' ஓ ' நெட்டெழுத்துக் களை உருவாக்கித் தந்தார். ஒற்றைக் கொம்பு என வழங்கப்படுகின்ற எெழுத்து ஒன்றே முதலில் பழக்கத்தில் இருந்தது. இக் கொம் பெழுத்துக்களின் மீது க் ௦ெ , ச்ெிெ , ட் > என்று புள்ளி வைத்து எதினால் குற்றெழுத்துக்களாகவும் , புள்ளி பெறாமல் , கெ , செ , டெ , என்று எழுதப்படின்
|
நெட்டெழுத்துக்களாகவும் கொள்ளப்பட்டன. இதனால் ஏற்பட்ட குழப்பத்தையும் இவரே நீக்கினார். குற்றெழுத்துக்களுக்குக் கொம்பிடும் போது புள்ளி இடாமலும் , கொம்பின் மேலே சுழித்து லே என்று எழுதுவதன் மூலம் நெடிலையும் வேறுபடுத்திக் காட்டினார். இம்முறையே இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது என்பது இவரின் தமிழ்த் தொண்டிற்குச் சிறந்த சான்றாகும். : ண்ணி ர நூலான ' தொன்னூல் விளக்கம் ' என்னும் இலக்கண நூலை யாத்தளித்தார். இதன் சிறப்பு நோக்கி இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்று அனைவரும் பாராட்டிக் கூறினர். இலக்கண நூல் ஐந்திலக்கண உலக
|
வழக்கிலும் , செய்யுள் வழக்கிலும் காணப்படும் தமிழ் மொழி இலக்கணத்தை முறையே ' கொடுந்தமிழ் இலக்கணம் ' , ' செந்தமிழ் இலக்கணம் " என்று எழுதி அதனை இலத்தீன் மொழியிலும் , ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்தளித்துள்ளார். இவரது இவ்வாராய்ச்சித் பெரிதும் பாராட்டப் பட்டுள்ளது. டாக்டர். கால்டுவெல் ஒப்பிலக்கண ஆராய்ச்சிக்கு இவரது இம்முயற்சி பெரிதும் அவர்களின் துணை புரிந்துள்ளது. உல்வாா சித் திறம் போப் அவர்களால் மொழிபெயர்ப்பு நூல் G.U. திருக்குறளில் அறத்துப்பாலையும் , பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்துள்ளார். இது உலகப்
|
புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது. 203 அகராதி நூல்கள் சதுரகராதி எனும் அகராதி நூலை வெளியிட்டுப் பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார். இதில் பெயர் , பொருள் , தொகை , தொடை எனும் நான்கு அதிகாரங்களை அமைத்துச் சதுரகராதி என்று பெயரிட்டழைத்தார். தமிழ் இலத்தீன் அகராதி இந்நூலில் 900 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் தந்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி ஒன்றும் எழுதியுள்ளார். இவரது இவ்வகராதிகள் போர்த்துகீசியர் மற்றும் இத்தாலியரும் தமிழைக் கற்கப் பேருதவி புரிந்தன.
|
உரைநடை நூல் - பராமார்த்த குரு கதை | ளன நயமும் , நகைச்சுவையும் நிரம்பிய இந்நூல் சிறந்த கதை நூலாகும். தமிழில் முதன்முதலாகத் தோன்றிய தலைசிறந்த ஏளன ( Satire ) இலக்கியமாக இது திகழ்கின்றது. கற்றோரும் , மற்றோரும் ஒருசேரப் போற்றும் பெருமைக்குரியது. இந்நூல் தெலுங்கு , கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும் , ஆங்கிலம் , ஃபிரெஞ்சு , ஜெர்மன் ஆகிய அயல்மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை இதன் பெருமையைப் புலப்படுத்தும். மேலும் வேதியர் ஒழுக்கம் , வேதவிளக்கம் , பேதகம் மறுத்தல் , லூத்தர் இனத்தியல்பு போன்ற பல உரைநடை நூல்கள் எழுதி
|
உரைநடைத் தமிழை வளர்த்தார். செய்யுள் நூல்கள் - தேம்பாவணி மாற்றைக் தேவரின் சிந்தாமணி போன்று கிறிஸ்துவமதச் சார் புடைய காப்பியம் ஒன்று செய்ய விழைந்தார். இதன் விளைவே இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரின் வரலாற்றைக் கூறும் ' தேம்பாவணி ” ஆகும். கம்பரது கவிநலம் செறிந்த இந்நூலைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார். அவ்வமயம் இந்நூலின் சிறப்பும் பெருமையும் கண்டு மகிழ்ந்த சான்றோர் இவருக்கு ' வீரமாமுனிவர் ' என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர். தேம்பாவணி நூல் மூன்று காண்டங்களையும் 3615 விருத்தப் பாக்களையும்
|
காவியமாகும். இக்காப்பியத்தின் கொண்ட கவிச்சுவையிலும் , கருத்துச் சுவையிலும் மனம் பறிகொடுத்த சான்றோர் பலர் இதனைப் பலபடப் பாராட்டியுள்ளனர். கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் ' சாரமாம் தேம்பாவணி யினைத் தொடினும் , தமிழ் மணம் கமழும் என்கரமே ' என்று பாராட்டியுள்ளார். ஆறு படலங்களையும் 204 திரு பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் சிந்தாமணிக்கு இணையான காவியமாகும் இது சீவக என்று போற்றுகின்றார். பிஷப் கால்டுவெல் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த நான்கு காவியங்களுள் தேம்பாவணியும் ஒன்று என்று கூறுகின்றார். திருக்காவலூர்க்
|
கலம்பகம் திருக்காவலூரில் எழுந் சந்த தருளியுள்ள தேவமாதாவின் மீது பாடப்பட்ட இன்பம் செறிந்த நூலாகும். இதில் 101 அடங்கியுள்ளன. பாக்கள் கித்தேரி அம்மாள் அம்மானை போர்த்துகீசிய நாட்டு வேதசாட்சியான கித்தேரி அம்மாள் மீது பாடப்பட்டுள்ள இந்நூல் , இனிய எளிய நடையில் பாமரரும் படித்தின்புறக் கூடிய தன்மையதாக அமைந்துள்ளது. அடைக்கல நாயகி வெண்பா தஞ்சையை ஆட்சிபுரிந்து வந்த மராட்டிய மன்னனால் துரத்தப்பட்ட கிறித்தவர் களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த திருக்காவலூர் தேவ மாதாவின் பேரில் பாடப்பட்டதாகும். தமிழ்ச்செய்யுள் தொகை இது
|
தமிழிலுள்ள நயமான நீதி நூல்களின் தொகுப்பு ஆகும். இவை தவிர , தேவாரப் பதிகம் போன்று கருணாகரப் பதிகம் எனும் நூலையும் , அன்னை அழுங்கல் அந்தாதி என்ற நூலையும் எழுதிச் செய்யுள் துறையிலும் பெருந் தொண்டாற்றியுள்ளார். ' தேம்பாவணி தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் பொன்னூலாக இலங்குகின்றது ; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது ; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களில் விளங்குகிறார் ' என்று சொல்லின் செல்வர் திரு ஒருவராக காட்சியளிக்கிறது ; தொன்னூல் ரா.பி.சே.இவரைப் பாராட்டி
|
யுள்ளார். போப்பையர் ( 1820-1870 ) ( Rev. G.U.Pope ) ஆங்கில நாட்டைச் சேர்ந்த இவர் திருநெல்வேலி , தஞ்சாவூர் , உதகமண்டலம் முதலிய இடங்களில் தங்கித் தமிழ்த் தொண்டு புரிந்தார். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் , பள்ளிக் கூடங்களையும் , சமயப்பள்ளி ( Mission ) களையும் நிறுவினார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணி புரிந்து மேலை நாட்டவர்க்கும் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தினார். திருக்குறள் , திருவாசகம் , நாலடியார் நூல்களை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த் ஆகிய துள்ளார். இவரது திருவாசக
|
மொழிபெயர்ப்பினைக் கண்ட பேராசிரியர் சூலியன் வின்சன் அவர்கள் , ' இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை யெல்லாம் வருவிளை யாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர் " என்று பாராட்டியுள்ளார். மேலும் புறநானூறு , புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 205 தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றைத் திரட்டி , ' தமிழ்ச் செய்யுள் கலம்பகம் * என்னும் நூலாக வெளியிட்டார். இங்கிலாந்து தேச சரித்திரம் எனும் சிறந்த உரைநடை எழுதியுள்ளார். Elementary Tamil Grammar எனும் எளிய இலக்கண நூலையும்
|
Poets of the Tamil Lands , Extracts from Purananooru & Purapporul Venbamalai , The Lives of the Tamil Saints Curre இலக்கிய நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மணிமேகலைக் கதையை ஆங்கிலத்தில் உரை நடையாக எழுதியுள்ளார். Royal Asiatic Quarterly. The Indian Magazine போன்ற ஆங்கில இலக்கிய இதழ்களில் தமிழின் பெருமையை விளக்கும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தனது இனிய சொற்பொழிவுகளின் மூலமும் வெளிநாட்டில் தமிழன்னையின் சிறப்பைப் பரப்பினார். ஆங்கில நாட்டில் பிறந்தவராயினும் தமிழ் மாணவ னாகவே இறுதிவரை
|
வாழ்ந்து மறைந்த பெரியார் , தனது கல்லறையிலும் ' நான் ஒரு தமிழ் மாணவன் ' என்று குறிக்கச் செய்தார். தமிழில் மொழிபெயர்ப்புத் நாட்டியவர் இவரே. Royal Asiatic Society இவருக்கு வேத சாஸ்திரி எனப் பட்டம் வழங்கியது. புத்து துறைக்கு அடிக்கல் கால்டுவெல் ( 1815-1891 ) அயர்லாந்து நாட்டினரான இவர் 1889 - ல் சமயத் தொண்டாற்றத் தமிழகம். வந்தார். தனது தமிழ்ப் பணியைத் திருநெல்வேலியில் தங்கித் தொடங்கினார். மதுரையிலும் திருநெல்வேலியிலும் அரிய தமிழ்ப் பணியோடு சமயப் பணியும் புரிந்தார். திருநெல்வேலி சரித்திரம் என்னும் ஆங்கில நூலையும்
|
, ' நற்கருணைத் தியானமாலை ' , தாமரைத் தடாகம் , பரதகண்ட்புராதனம் முதலிய தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளார். இலத்தீன் , கிரேக்கம் , ஹீப் ஜெர்மானியம் , துளு போன்ற பல மொழிகளைக் இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( A Comparative Grammar of the Dravidian Family of Languages ) என்னும் நூல் இவரது புகழை உலகிற்குப் பறைசாற்றி வருகின்றது. இதில் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , துளு முதலான திராவிட மொழிகள் அனைத்தும் ஓரினத்தைச் சார்ந்தவை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார். 8 கற்றறிந்த மொழியறிஞர் ப் ம்
|
திருநெல்வேலியில் இடையன்குடியில் தங்கித் தான் ஒருவராகவே இலட்சம் பேரைக் கிறிஸ்துவராக்கி வரலாறு படைத்த பெருமைக்குரியவர். இவ்வாறு சமயப்பணியும் , இலக்கியப் பணியும் புரிந்த இவரே , தமிழகத்தில் இன்று வளர்ந்து செழித்துள்ள மொழியியல் ஆராய்ச்சிக்கு வித்திட்ட வித்தகராவார். இவரது ஒப்பிலக்கணப் பணிக்காகச் சென்னைப் பல்கலைக் கழகமும் ராயல் 206 ஏசியாடிக் சொசைடியும் இணைந்து இலக்கிய வேந்தர் , வேத விற்பன்னர் என்னும் பட்டங்களை வழங்கின. சீகன் பால்கு ஐயர் ( Ziegen Balg ) ( 1683-1719 ) ஜெர்மன் நாட்டு டேனிஷ் மிஷனைச் சேர்ந்த இவர் 1709-
|
ல் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். அங்கு எல்லப்பா என்பவரிடம் தமிழ் பயின்றதுடன் அங்கேயே தங்கி தன் மதப் பணியைச் சிறப்புறச் செய்து வந்தார். இவரே தமிழ்நாட்டில் முதன் முதலாக புரோட்டஸ்டண்டு கிறிஸ்துவ மதத்தைப் போதித்த குரு ஆவார். தமிழகத்தில் முதன் முதலாக ஒரு அச்சுக் கூடம் நிறுவி யவர் இவரே. இதன் மூலம் ஏழை எளியவரும் படித்துப் பயன் பெறத்தக்க வகையில் அச்சுப் புத்தகங்களை அச்சிட்டுக் கொடுத்தார். அவ்வமயம் காகிதத் தட்டுப்பாடு ஏற்பட அதையும் சரிகட்ட பொறையாறு எனுமிடத்தில் பெரும் பொருட்செலவில் ஒரு காகிதத் தொழிற்சாலையும்
|
நிறுவினார். இவ்வாறு முதன்முதலில் காகிதத் தொழிற்சாலை நிறுவிய பெருமைக்குரியவர் இவர். கிறிஸ்துவ வேதமான பைபிளைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். தமிழ் / இலத்தீன் ஆகிய இரு மொழிகளுக்கும் பொதுவாக வழங்கும் பல சொற்களை விளக்கும் தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு ( Comparative Study of Tamil and Latin Grammar ) என்னும் ஆய்வு நூலையும் , தமிழ் இலத்தீன் அகராதி ஒன்றும் எழுதியுள்ளார். இந்தியாவிலேயே எல்லிஸ் துரை ( Francis Whyte Ellis ) எல்லிஸ் துரை ( Francis Whyte Ellis ) தமிழிலும் , இவர் வடமொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்று விளங்கிய
|
ICS பட்டம் பெற்று சென்னை நகரக் கலெக்டராகப் பணிபுரிந்து வந்தார். அரியதும் சிறந்ததுமான தமிழ்ச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாப்பதில் பேரார்வம் உடையவராய்த் திகழ்ந்தார். திரு முத்துசாமிப் பிள்ளை அவர்களைக் கொண்டு ஏடு சேர்க்கும் பணியைச் செவ்வனே செய்து வந்தார். இவரைக் கொண்டே தமிழ்த் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழிலும் , ஆங்கிலத்திலும் எழுதி வெளியிடச் செய்தார். மேலும் வீரமா முனிவரின் தேம்பாவணியை முயன்று தேடி வெளியிடச் செய்தார். ன வ்வ திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கட்குப்
|
பண்டைத் தமிழ் நூல்களிலிருந்து பல மேற்கோள்கள் காட்டி ஆங்கிலத்தில் அரிய உரை ஒன்று எழுதியுள்ளார். ராமச்சந்திரக் கவிராயரிடம் கல்வி பயின்ற சிறந்த கல்வியாளரான இவர் , வள்ளுவருக்கு , வள்ளுவர் உருவம் காசு வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். பொறித்த தங்கக் வீரமாமுனிவரின் நூல்களுக்கு மறு பதிப்பு போட்டார். தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட நீருக்காக குடிநீருக்காகப் கிணறுகள் தோண்டி அதில் பல ' வான்சிறப்பு ' எனும் அதிகாரத்திலிருந்து குறள்கள் வெட்டி வைத்தார். 207 இரேனியஸ் ( 1790-1838 ) இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் , டாக்டர் ,
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.